மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசன் லாக்கப் படுகொலை
– உடலை வாங்க மறுத்த 100வது நாள்
– தமிழ்நாடு முழுவதும் மனு அளிப்பு
மானாமதுரை இளைஞர் ஆகாஷ் டெலிசனை லாக்கப் படுகொலை செய்த குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி, அவரது பெற்றோர் உறவினர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் 100 நாட்களுக்கும் மேலாக போராடி வந்த நிலையில், நீதிமன்றத்தின் துணையுடன் பெற்றோரின் விருப்பமின்றியே ஆகாஷின் போலீசு எரித்துள்ளது. இப்போராட்டத்தின் 100-வது நாளில் 16 குற்றவாளி போலீசுகளை கைது செய்யக்கோரி மக்கள் அதிகாரக் கழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் மனுக் கொடுக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டக் குழு ஒருங்கிணைப்பில், கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் மற்றும் சேலம் மாவட்ட ஆட்சியர்களிடம் ஜனநாயக சக்திகளை ஒருங்கிணைத்து மனு அளிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாவட்ட இணைச் செயலாளர் தோழர். அருண் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

கலந்து கொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் H.அஸ்கர், மாவட்டத் தலைவர், SDPI
தோழர் சுரேஷ்பாபு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, முன்னாள் ஒன்றிய செயலாளர்
தோழர் அர்ஷத், மக்கள் அதிகாரக் கழகம், மாவட்டப் பொருளாளர்
***
சேலம்:
சேலம் மாவட்ட நிகழ்வை கிருஷ்ணகிரி மாவட்டச் செயலாளர் தோழர். இரஞ்சித் ஒருங்கிணைத்தார்.
கலந்து கொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் மு.மாரியப்பன், மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிய லெனினிய மாவோ சிந்தனை)
தோழர் த.கண்ணன், ஒருங்கிணைப்பாளர், உழைப்போர் உரிமை இயக்கம்
தோழர் அ.வின்சென்ட், புரட்சிகர இளைஞர் முன்னணி
தோழர் வேல்முருகன் மற்றும் தோழர் சத்தியமூர்த்தி, திராவிடர் கழகம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தோழர் வீரமுத்து, தோழர் சுப்பிரமணி, தோழர் செல்வம், தோழர் சங்கீதா
தோழர் பா.செபாஸ்டின், மாநில ஒருங்கிணைப்பாளர், இந்திய குடியரசு கட்சி (பூலே)
அ.அருள், தமிழக வெற்றிக் கழகம்
தோழர் க.உதயபிரகாஷ், மண்டல பொறுப்பாளர், தமிழ்ப் புலிகள் கட்சி
தோழர் மா.இளங்கோவன், மாவட்டப் பொறுப்பாளர், தமிழ்ப்புலிகள் கட்சி
தோழர் மோகன், மாவட்டச் செயலாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

இந்நிகழ்வின் முக்கியத்துவத்தை உணர்ந்திருந்தாலும் வேலை நிலைமைகள் காரணமாக பிற கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்த சில தோழர்களால் கலந்து கொள்ள இயலவில்லை. அவ்வாறு கலந்து கொள்ள முடியாமல் போனதற்கு அத்தோழர்கள் வருத்தம் தெரிவித்தனர். அடுத்தடுத்து வரக்கூடிய மக்கள் பிரச்சினைகள் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வதாகத் தெரிவித்தனர்.
மனு கொடுக்கும் நிகழ்வில் உணர்வுப்பூர்வமாகப் பங்கெடுத்துக் கொண்ட அனைத்துத் தோழர்களுக்கும் மக்கள் அதிகாரக் கழகம் சார்பாக நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம். பாதிக்கப்படும் மக்களுக்காய் தொடர்ந்து ஒன்றிணைந்து களமாடுவோம்.
அதேசமயம், உடலை வாங்க மறுத்த இதே 100வது நாளில், ஆகாஷ் டெலிசனின் உடலை அவரது பெற்றோர்கள் வாங்கவில்லையென்றால், போலீசே அடக்கம் செய்யும் என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை கூறியிருப்பது கண்டனத்துக்குரியதாகும். ஏழை, எளிய மக்களுக்கான நீதி களப் போராட்டங்களை வலுவாக முன்னெடுத்துச் செல்வதில்தான் உள்ளது என்பதை பட்டவர்த்தனமாக இது உணர்த்துகிறது.
***
ஈரோடு:
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் அதிகாரக் கழக கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சங்கர் தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து மனுக் கொடுக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:
சு.சலீம் பாட்ஷா,
ஈரோடு மத்திய மாவட்டப் பொருளாளர்,
தமிழ்ப் புலிகள் கட்சி.
S.K.ஹரீஷ்
ஈரோடு மத்திய மாவட்டத் தொழிற்சங்கம்,
தமிழ்ப் புலிகள் கட்சி.
***
கரூர்:
மக்கள் அதிகாரக் கழக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:
தோழர் சுடர் வளவன்,
மாநில தொழிற்சங்க பேரமைப்பு,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
***
திருப்பூர்:
திருப்பூரில் மக்கள் அதிகாரக் கழக இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் ஜனநாயக சக்திகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் சுப்பையா,
மாவட்டச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் முகில் ராசு,
மாவட்டத் தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
தோழர் இசாக்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.
தோழர் ரிஸ்வான்,
வெல்ஃபேர் கட்சி.
***
கோவை:
கோவையில் மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் தலைமையில் ஜனநாயக சக்திகள் இணைந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது.

கலந்துகொண்ட ஜனநாயக சக்திகள்:
தோழர் இனியன்,
சி.பி.ஐ(எம்.எல்) ரெட் ஸ்டார்.
தோழர் ஆனந்தி,
விடுதலை தமிழ் புலிகள் கட்சி.
தோழர் பார்த்திபன்,
ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்.
தோழர் ரகுபதி,
திராவிட மக்கள் இயக்கம்.
தோழர் மலரவன்,
புரட்சிகர இளைஞர் முன்னணி.
தோழர் நேரு தாஸ்,
தமிழ்நாடு திராவிடர் சுயமரியாதைக் கழகம்.
ராஜுவ் காந்தி,
மக்கள் விடுதலை முன்னணி.
***
நீலகிரி:
மக்கள் அதிகாரக் கழக மாநில இணைச் செயலாளர் தோழர் மாறன் தலைமையில் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து உதகமண்டலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுக் கொடுக்கப்பட்டது.

பங்கேற்ற ஜனநாயக சக்திகள்:
தோழர் பெரியார் கார்த்திக்,
நீலகிரி கிழக்கு மாவட்ட செயலாளர்,
மனித நேய ஜனநாயக கட்சி.
***
திருவாரூர்:
திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மனு கொடுக்கும் நிகழ்வில் மக்கள் அதிகாரக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் ஆசாத், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டலத் துணைச் செயலாளர் தோழர் சீமா மகேந்திரன், தமிழக இயற்கை உழவர் இயக்கத் தோழர் ஜி.வரதராஜ், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சீனி செல்வம், கிராமிய நாடக இசைக்கலைஞர் தோழர் பக்ரீத் தாஸ், மக்கள் அதிகாரக் கழக இணைச் செயலாளர் தோழர் லெனின், மக்கள் அதிகாரக் கழக மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர் முரளி, தோழர் மோகன், தோழர் வாஞ்சிநாதன் மற்றும் அம்மையப்பன் போராட்டத் கமிட்டி தலைவர் தென்கால் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.

***
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியரிடம் மக்கள் அதிகாரக் கழகம் ஒருங்கிணைப்பில் ஜனநாயக சக்திகளை இணைத்துக்கொண்டு மனு அளிக்கப்பட்டது.

***
தஞ்சாவூர்:
மானாமதுரை ஆகாஷ் டெலிசன் அவர்களின் லாக்கப் படுகொலை செய்யப்பட்டு 100 நாட்கள் ஆகியும் 16 போலீசு குற்றவாளிகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிந்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. உடனே கைது செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கும் இயக்கம் மேற்கொள்ளப்பட்டது. அதன் ஒரு பகுதியாக தஞ்சாவூரில் மக்கள் அதிகாரக் கழக தோழர் காந்தி அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார்.

***
தகவல்,
மக்கள் அதிகாரக் கழகம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











