வினவு
கோவில்பட்டி சிலை உடைப்பு: தேவர் சாதிவெறி ரவுடித்தனம்!
தமிழகமெங்கும் ஈழ மக்களுக்காக எழுச்சியும் போராட்டங்களும் நடந்துவரும் இவ்வேளையில் மக்கள் கவனத்தை அதிலிருந்து திசை திருப்பும் வண்ணம் இராமேஸ்வரம், கோவில்பட்டி என திட்டமிட்டு கலவரச் சூழல் ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
மாணவர் முன்னணி : பத்திரிகையாளர் சந்திப்பு!
தொடர்ந்து பல்வேறு வடிவங்களிலான போர்க்குணமான போராட்டங்களாகப் பரிணமிக்க வேண்டுமென்ற அறைகூவலோடு கல்லூரி மாணவர்களை அணிதிரட்டி வரும் ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்தவிருக்கும் பத்திரிகையாளர் கூட்டம்.
மாலி ஆக்கிரமிப்பு: நொண்டிக் குதிரைக்குச் சறுக்கியதே சாக்கு!
இஸ்லாமியத் தீவிரவாதத்தை ஆப்பிரிக்கக் கண்டத்தில் வளர்த்துவிட்டுப் பயன்படுத்திக் கொண்டதும் இப்போது இஸ்லாமியத் தீவிரவாதத்தை முறியடிப்பது என்ற பெயரில் மாலியின் கனிம வளங்களைச் சூறையாடப் போர் தொடுப்பதும் அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியங்கள்தான்.
ஈழம் : ரங்கநாதன் தெருவில் பெண்கள் முன்னணி ஆர்ப்பாட்டம்!
அதிரடியாகவும் முன் அனுமதி பெறாமலும் பெ.வி.மு. தோழர்கள் நடத்திய இந்த பேரணி ஆர்ப்பாட்டத்தால், அரசியல் கோரிக்கைகளுக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களை மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதியாகத் தேர்ந்தெடுத்து அங்குதான் நடத்திக்கொள்ள வேண்டுமென்று நிர்ப்பந்திக்கும் போலீசின் முகம், கொஞ்சம் மாறித்தான் போயிருந்தது!
சாஸ்திரி பவன் முற்றுகை – படங்கள்!
ஈழ இனப்படுகொலையை நடத்திய இந்திய அரசை எதிர்த்து ஈழத்தமிழரின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி நடத்திய மத்திய அரசு அலுவலகங்கள் செயல்படும் சாஸ்திரிபவனை முற்றுகையிடும் போராட்டம்.
பகத்சிங் பாதை உன்னைத் தேடுது!
போராளிகள் ரத்தத்தால் கஞ்சிபோட்டு சலவை செய்த காங்கிரஸ் பொய்கள் … இன்னும் ‘ அரசை ’ நம்ப வைத்து கழுத்தறுக்கும் பல வண்ண காந்திகள் … இத்தனைக்கும் மத்தியில் , ஈழத்திற்காக உறுதியுடன் போராடும் மாணவர்களிடம் பகத்சிங்கின் பிடிவாதம் இலக்கு தேடி நீள்கிறது ….
காதல், தியாகம், மரணம்: பகத்சிங்கின் பார்வை
இன்று என்னுடைய பலவீனங்கள் மக்களின் முன்னிலையில் இல்லை. தூக்கிலேற்றப் படுவதினின்றும் ஒருக்கால் நான் தப்பித்தால், அந்தப் பலவீனங்கள் வெளிப்படலாம். புரட்சிச் சின்னம் ஒளியிழக்கலாம், ஏன்? அது அறவே அழிந்தும் போகலாம்.
நோக்கியாவின் பலே திருட்டு!
நோக்கியா பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைகளையும் பெற்றுக் கொண்டு 18,000 கோடி ரூபாய் அளவிற்கு வரி ஏய்த்திருப்பது மட்டுமல்ல; ஆறே ஆண்டுகளில் 25,000 கோடி ரூபாய் அளவிற்கு அதிரடி இலாபம் அடைந்து அதை பின்லாந்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறது.
மாணவர் எழுச்சி: போராடும் பண்பு வளரட்டும்!
நடைபெற்று வரும் இந்த மாணவர் போராட்டத்திலிருந்து, மக்கள் விடுதலையை நோக்கமாகக் கொண்ட, போராட்ட குணம் கொண்ட ஒரு புதிய தலைமுறை உருவாகவேண்டும். உருவாக்குவோம்.
சாஸ்திரி பவன் முற்றுகை: மாணவர் முன்னணி அறிவிப்பு!
தமிழகத்தில் மாணவர் போராட்டம் வீழாது என்பதை நிறுவும் முகமாக எமது மாணவர் முன்னணி தொடர்ந்து போராடும் என்பதையும் உறுதியோடு அறிவித்துக் கொள்கிறோம்.
ஈழம்: தமிழ்நாடு முழுவதும் புரட்சிகர அமைப்புகளின் ஆர்ப்பாட்டம்!
ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு ஆகிய அமைப்புகளின் சார்பில் தமிழகம் தழுவிய அளவில் தொடர் முழக்க ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.
பச்சையப்பன் கல்லூரி போலீஸ் தாக்குதல் – படங்கள்!
எவ்வளவு தான் அடக்குமுறை செலுத்தினாலும் எங்களது கோரிக்கை நிறவேறும் வரை போராரடுவோம்! எந்த ஒரு போராட்டமும் அடக்குமுறைகளினால் அடக்க முடியாது, என வரலாறு கூறுவதை நாங்கள் அறைந்து சொல்கிறோம்!
பச்சையப்பன் கல்லூரி: தொடங்கியது போலீஸ் அடக்குமுறை!
இந்தியாவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியும் மாணவர்கள் முழக்கமெழுப்பிக் கொண்டிருந்த போது, எந்த வித முகாந்திரமும் இன்றி மாணவர்கள் மீது தடியடி நடத்த தொடங்கியது போலீசு.
கவர்னர் மாளிகை முற்றுகை! வழக்கறிஞர்கள் போராட்டம்!
ஈழத்தமிழனின் விடுதலைக்கு மக்கள் கிளர்ந்து போராடாமல் குறுக்குவழி எதுவுமில்லை! இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் 65 தமிழகத்தை மீண்டும் இங்கே உருவாக்குவோம்!
தமிழகமெங்கும் பற்றி பரவட்டும் மாணவர் போராட்டத்தீ!
ஈழத்தமிழர்களின் தன்னுரிமைக்கான மாணவர் முன்னணி 21.03.2013 அன்று சென்னையில் நடத்தவிருக்கும் சாலைமறியல் போராட்டங்களைப் பற்றிய விபரங்கள்.


