ராகுல் காந்தி தகுதிநீக்கம்: பாசிச முடியாட்சி நிறுவப்பட வெகுநாட்கள் இல்லை!
பாசிஸ்டுகள் எதிர்க்கட்சிகளை ஒழித்துக் கட்டுவதற்கோ மாநில அரசுகளை கலைப்பதற்கோ சிறு தயக்கத்தைக் கூட வெளிப்படுத்த மாட்டார்கள் என்பதையே இது காட்டுகிறது. பெயரளவிற்கு இருந்த ஜனநாயகமும் ஒழிக்கப்பட்டு பாசிச முடியாட்சி நிறுவப்பட்டு கொண்டிருப்பதையே இந்நிகழ்வு நமக்கு எடுத்துக்காட்டுகிறது.
கொலீஜிய பரிந்துரைகளை தணிக்கை செய்யும் பாசிச மோடி அரசு!
அரசையும் உளவுத்துறையும் பொறுத்தவரை பா.ஜ.க-வின் மகளிர் அணியான பா.ஜ.க மகிளா மோர்ச்சாவின் தேசிய பொதுச் செயலாளராக இருந்த விக்டோரியா கௌரி அரசியல் சார்பு உடையவர் அல்ல. மோடியை விமர்சனம் செய்த ஜான் சத்யனும் அரசின் கொள்கைகளை கேள்வி எழுப்பிய சுந்தரேசனும் தான் அரசியல் சார்புடையவர்கள்.
இந்தி மொழி திணிப்பிற்கு எதிராக மீண்டும் கிளர்ந்தெழுவோம்!
உண்மையில் 1965 ஆம் ஆண்டு போராட்டத்தை போல் மாணவர்களும் மக்களும் அமைப்பாக திரண்டு போராடுவதன் மூலம்தான் நமது உரிமைகள் காப்பாற்றிக்கொள்ள முடியும்.
புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!
இதற்கு முன்னர் செய்திகளை ‘போலி’ என்று மட்டுமே பி.ஐ.பி-ஆல் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் தற்போது செய்திகளை நீக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.
பண மதிப்பிழப்பு செல்லும்! | பாசிஸ்டுகளிடம் சரணடைந்த நீதிமன்றம்!
பணமதிப்பிழப்பு மேற்கொள்ளப்பட்டு ஆறு ஆண்டுகள் நிறைவடைந்த பின்பு தீர்ப்பு வழங்கப்பட்டு இருப்பது ஒரு பெரிய கேலிக்கூத்து. அதிலும், பணமதிப்பிழப்பு செல்லும் என்ற தீர்ப்பு அபத்தத்தின் உச்சகட்டம்.
“பீமா கோரேகானில் நடந்த நிகழ்ச்சிக்கும் வன்முறைக்கும் எவ்வித தொடர்புமில்லை” – மூத்த போலீசு அதிகாரி வாக்குமூலம்!
ஸ்டான் சுவாமி உள்ளிட்ட 16 சமூக செயற்பாட்டாளர்களை ஒடுக்குவதற்கு திட்டமிட்டு இந்த நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறார்கள் என்ற சித்திரத்தையே, தற்போதைய மூத்த போலீசு அதிகாரியின் ஒப்புதல் வாக்குமூலம் நமக்கு உணர்த்துகின்றது.
உலகளவில் அதிகரித்து வரும் பத்திரிகையாளர்கள் மீதான ஒடுக்குமுறை!
‘பொய் செய்தி’-யை தடுக்க சட்டம் இயற்றுகிறோம் என்ற பெயரிலும், கிரிமினல் அவதூறு வழக்குகள் தொடுப்பதன் மூலமும், பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களை உளவு பார்ப்பதன் மூலமும் பத்திரிகை சுதந்திரம் நசுக்கப்படுகிறது
சிற்பி திட்டம் – சீர்திருத்துவதற்கா? ஒடுக்குவதற்கா?
தமிழக அரசு மேற்கொள்ளும் ’சிற்பி’ திட்டத்தை கல்வியை தனியார்மயமாக்கும் அரசின் முன்தயாரிப்பாகப் பார்க்க வேண்டும். புதியக் கல்விக் கொள்கையை மறைமுகமாக நடைமுறைப்படுத்துவதாகும்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் தொடர்நிகழ்வாகி வரும் பத்திரிகையாளர் படுகொலைகள்!
பெர்சிவல் மபாசா படுகொலையில் இருந்து, அரசின் செயல்பாடுகளை விமர்சிக்கும் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை வெளிக்கொண்டுவரும் பத்திரிகையாளர்களை ஆளும் வர்க்க நபர்களே கூலிப்படைகளை வைத்து படுகொலை செய்வது அம்பலமாகி உள்ளது.
தமிழ்நாடு போலீசின் தீவிரவாதத் தடுப்பு பிரிவு; பாசிஸ்டுகளின் இன்னொரு ஆயுதம்!
பல்வேறு காரணங்களைக்காட்டி உருவாக்கப்படும் போலீசு படைப்பிரிவுகள் அரசுக்கு எதிராக கேள்வியெழுப்பும் ஜனநாயக சக்திகளையும் புரட்சிகர இயக்கங்களையும் ஒடுக்கவே பயன்படுத்தப்படும்.
அம்பேத்கரை இழிவுபடுத்திய அர்ஜுன் சம்பத்: ஓட ஓட விரட்டியடித்த தமிழ்நாடு!
அண்மையில், மனுநீதியை அம்பலப்படுத்திய ஆ.ராசாவுக்கு ஆதரவாக நின்று காவி கும்பலுக்கு பதிலடி கொடுத்தது; ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தை போராடி முறியடித்தது, இன்று அர்ஜுன் சம்பத்திற்கு காட்டப்பட்ட எதிர்ப்பு போன்ற தமிழகத்தின் பார்ப்பனிய எதிர்ப்புப் போராட்டங்கள் தொடரும், தொடர வேண்டும்.
குஜராத்: பாசிஸ்டுகளின் தேர்தல் வெற்றி தவிர்க்கவியலாதது!
இவர்களே கலவரங்களை திட்டமிட்டு உருவாக்கி, தங்களை இந்துக்களின் பாதுகாவலர்களாக மக்கள் மத்தியில் முன்னிறுத்திக் கொள்கிறார்கள். இதில்தான் பாசிஸ்டுகளின் யுக்தி அடங்கியுள்ளது.
தமிழ்நாடு போலீசின் இரண்டு நிமிட ஜனநாயகமும் மூச்சு விட மறந்த கதையும்!
பாசிசத்தை தேர்தல் மூலமாக வீழ்த்த முடியும் என்பதும் தேர்தலை பாசிசத்துக்கு எதிராக பயன்படுத்த முடியும் என்பது போன்ற சிந்தனைகள் நம்மை அதிகார வர்க்க, பாசிசத்துக்கு அறியாமலேயே கீழ்படிய செய்து வருகின்றது.
2022 குஜராத் சட்டமன்ற தேர்தல் களம்: குற்றப்பின்னணி கொண்ட வேட்பாளர்களின் ஆடுகளம்!
1,621 வேட்பாளர்களில் 330 வேட்பாளர்கள் மீது கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
விருப்ப ஓய்வு பெற்ற அருண் கோயலுக்கு அடுத்த நாளே தேர்தல் ஆணையர் பதவி!
அருண் கோயல் நவம்பர் 18 அன்று விருப்ப ஓய்வை அறிவிக்கிறார். நவம்பர் 19 அன்றே அவரது பெயர் தேர்தல் ஆணையர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டு ஜனாதிபதி ஒப்புதலும் அளிக்கப்படுகிறது!