தகுதி வாய்ந்த கிராமப்புற குழந்தைகளுக்காக மைய அரசு நடத்தும் உறைவிடப் பள்ளியான ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகளில் (Jawahar Navodaya Vidyalayas) கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 49 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் தெரிவித்துள்ளது.
தற்கொலை செய்த மாணவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தலித் மற்றும் பழங்குடியினர் மேலும் அவர்களில் பெரும்பான்மையானோர் ஆண் குழந்தைகள் என்ற தகவலை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் இந்தியன் எக்ஸ்பிரஸ் பெற்றுள்ளது. அவர்களில் எழுவரை தவிர அனைவரும் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளதாகவும் அவர்களது உடல் சக மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களால் கண்டெடுக்கப்பட்டதாகவும் அது கூறுகிறது.
1985-86-ம் ஆண்டில் தொடங்கப்பட்ட நவோதயா பள்ளிகள் பொதுத்தேர்வுகளில் மாணவர்கள் பெறும் அதிக மதிப்பெண்களுக்காக பெயர் பெற்றவை. இப்பள்ளிகளில் தேர்ச்சி விகிதம் 10-ம் வகுப்பில் 99 விழுக்காடாகவும் 12-ம் வகுப்பில் 95 விழுக்காடாகவும் இருக்கிறது. மேலும் இத்தேர்ச்சி விகிதம் தனியார் மற்றும் சி.பி.எஸ்.சி பள்ளிகளை விட மிக அதிகம் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது.
நுழைவுத் தேர்வு அடிப்படையில் இயங்கும் இப்பள்ளிகள் ஆறாவது வகுப்பு முதல் தொடங்குகின்றன. அதில் 75 விழுக்காடு இடங்கள் கிராமப்புற மாணவர்களுக்கு ஒதுக்கப்படுகிறது. போட்டி அடிப்படையிலான சேர்க்கையில் தேர்வு எழுதும் மாணவர்களில் வெறும் 3% மாணவர்களுக்கே இடம் கிடைக்கும். மைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான நவோதயா வித்யாலயா சமிதி (Navodaya Vidyalaya Samiti), நாடு முழுவதும் கிட்டதட்ட 635 பள்ளிகளை நடத்தி வருகிறது.
ஆனால் இப்பள்ளிகளில் உள்ள சூழ்நிலைகள் வெளியிலிருந்து பார்ப்பது போல அவ்வளவு சிறப்பானதாக இல்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்ந்த 46 பள்ளிகளில் 41 பள்ளிகளில் கடுமையான பிரச்சினைகளை மாணவர்கள் சந்தித்து வருவதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. இப்பள்ளிகளில் நடந்த கொடூரமான தற்கொலை புள்ளிவிவரங்களில் இப்பிரச்சினைகள் எதிரொலிக்கின்றன:
“..இப்பள்ளிகளில் படிக்கும் ஒவ்வொரு இலட்சம் மாணவர்களில் கிட்டத்தட்ட ஆறு மாணவர்கள் 2017-ல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இது 2015-ல் 6 முதல் 17 வயது வரம்பில் உள்ளோருக்கான தேசிய தற்கொலை விகிதமான ஒரு இலட்சத்திற்கு 3 தற்கொலைகள் என்பதை விட அதிகமானது”.
கடந்த ஐந்தாண்டுகளில் நவோதயா பள்ளிகளில் தற்கொலை செய்து கொண்ட 49 மாணவர்களில் 16 மாணவர்கள் அட்டவணைப்பிரிவை சேர்ந்தவர்கள். மொத்த எண்ணிக்கையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் (25 பேர்கள்) தலித் மற்றும் பழங்குடி வகுப்பை சேர்ந்தவர்கள்.
தற்கொலை செய்தவர்களில் 70 விழுக்காட்டினருக்கும் அதிமானோர் ஆண் மாணவர்கள் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறுகிறது. 49 தற்கொலைகளில் 43 மாணவர்கள் 9-ம் வகுப்பையும் அதற்கடுத்த வகுப்புகளையும் சேர்ந்தவர்கள். ஒருதலைக்காதல், குடும்ப சிக்கல்கள், பள்ளிகளில் வழங்கப்பட்ட உடல்ரீதியிலான தண்டனைகள் அல்லது ஆசிரியர்களால் இழிவுப்படுத்தப்படுதல், கல்வி தொடர்பான அழுத்தம், மன சோர்வு மற்றும் நண்பர்களுடனான சண்டை ஆகியவையே தற்கொலைக்கு காரணங்களாக செய்தித்தாள்கள் கூறுகின்றன. கோடை விடுமுறைக்கு அடுத்த மூன்று மாதங்களில் தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.
2016-ம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நவோதய வித்யாலயா சமிதி ஒரு அறிவிப்பை அதன் பள்ளிகளுக்கு அனுப்பியது. “எந்த அறிகுறியையும் காட்டாமல் எந்த ஒரு குழந்தையும் இது போன்ற தீவிர நடவடிக்கையில் ஈடுபடமாட்டார்கள். இந்த அறிகுறிகளை முன்கூட்டியே கண்டறிய வித்யாலயா நிர்வாகம் தவறிவிட்டது. ஏற்கனவே இந்த அறிகுறிகளை நிர்வாகம் அறிந்திருந்தாலும் மாணவர்களால் தெரிய வந்திருந்தாலும் எளிதாகவே நிர்வாகத்தால் அணுகப்பட்டிருக்கின்றன” என்று அனைத்து நவோதயா பள்ளிகளுக்கும், சமிதி சுற்றிக்கை அனுப்பியதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் கூறுகிறது.
நவோதயா பள்ளிகள் தமிழ்நாடு நீங்கலாக அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டு வருகின்றன. 2018-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் மைய அரசின் உதவியுடன் ஒரு நவோதயா பள்ளியை தொடங்க ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டது குறிப்படத்தக்கது.
ஆனால் கல்வி உரிமை சட்டத்தின் படி இந்தியாவில் அனைத்து மாணவருக்கும் நுழைவுத்தேர்வு இல்லாமல் கல்வியளிக்கப்பட வேண்டும். மாறாக நவோதயா பள்ளிகளில் ஆறாம் வகுப்பில் நுழைவுத்தேர்வு வைத்து வகுப்புக்கு வெறும் 80 மாணவர் மட்டுமே சேர்த்து கொள்ளப்படுவார்கள். இத்தகைய போட்டி மனப்பான்மை முதல் பிரச்சினை. அடுத்து ரோகித் வெமுலா முதல் பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களிலேயே ஒடுக்கப்படும் சாதிகளைச் சார்ந்த மாணவர்கள் சாதிரீதியிலான ஆதிக்கத்தை எதிர்கொள்கின்றனர். இன்னொரு புறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜக வின் இந்து ராஷ்டிர அரசியல்படியும் கல்வி நிறுவனங்களில் சாதி-மதத் துவேசம் காட்டப்படுகின்றது. ஜே என் யூ போன்ற உயர்கல்வி மாணவர்களே அவற்றை எதிர் கொள்ள முடியாத போது இந்த பள்ளி மாணவர்கள் என்ன செய்வார்கள்? ஒரு முன்மாதிரிப் பள்ளியிலேயே நமது மாணவர்கள் இப்படி தற்கொலை செய்வதை இந்த அரசு தடுக்க முடியவில்லை. இத்தகைய சூழலில் மாணவர்களுக்கு அரசியல் பிரச்சாரம் கொண்டு போவதை இடது சாரி முற்போக்கு அமைப்புகள் அதிகம் செய்ய வேண்டியது அவசியம்.
பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் காக்கைகளின் சத்தம் அதிகம் கேட்கிறது. மோடி பதவியேற்ற பிறகு தமிழக தொலைக்காட்சிகளின் விவாதங்கள், நேர்காணல்கள், அன்றாட செய்தி அறிக்கைகளின் காரணமாக பாஜக ‘மாபெரும்’ கட்சியாக ‘உருவெடுத்து’ விட்டது. கவுன்சிலர் தேர்தலில் கூட வெல்ல முடியாத கட்சி என தமிழக மீம்கள் அணியில் பெயரெடுத்த பாஜகவிற்கு தமிழக ஊடகங்கள் பெரும் பலம். இந்தக் காலத்தில் “என்ன நான் சொல்றது எச் ராஜா” தேசியக் கட்சியின் செயலாளர் என்று தமிழக ஊடகங்களால் பயந்து மதிக்கப்படும் ஆளாகி விட்டார்.
மறுபுறம் எச்ச, **** என்று யூடியூப் ஊடகங்களில் முன்னணி ரேட்டிங்கையும் அவர் பெறுகிறார். நடிகர் சிம்பு போன்றவர்கள் கூட என்ன ராசா என்று கேட்குமளவு யதார்த்தமிருந்தாலும், செய்தி சானல்களின் சித்தரிப்பு வேறு. இன்னும் தமிழிசை துவங்கி எஸ்.வி.சேகர் வரை மாபெரும் தலைவர்களாக மீடியாக உபயத்தால் மாற்றப்பட்டனர்.
இப்படியாக யதார்த்தத்தில் பாஜக தலைவர்கள் நடிகர் மயில்சாமி பேசினால் வரும் கூட்டத்தை விஞ்ச முடியாத நிலையிருக்கிறது. ஆனால் ஊடகங்களில் நேர் மாறான நிலை. தமிழக ஊடக முதலாளிகள் பார்ப்பனிய தாசர்கள் என்ற விதத்திலும், சிலர் ஊழல் முதலாளிகள் என்ற தகுதியிலும் பாஜகவின் புகழ் பாடுகிறார்கள். ஆகவே காக்கைகளின் இன்றைய ரேங்கிக் குறித்து நாம் அவ்வப்போது சர்வேக்கள் நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.
பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது ?
தந்தி டிவி
புதிய தலைமுறை
நியூஸ் 7 தமிழ்
நியூஸ் 18 தமிழ்நாடு
நியூஸ் ஜே
பாலிமர் நியூஸ்
(நிறைய பேரை தெரிவு செய்ய வேண்டிய குழப்பம் இருக்கிறதா? போனால் போகட்டும் இரண்டு பதில்களை தெரிவு செய்யலாம். சத்தியம், காவேரி போன்றவை அதிகம் பிரபலமில்லை என்பதாலும், கலைஞர், சன் டிவி, போன்றவை பாஜகவிற்கு எதிர்க்கட்சி வரிசையில் இருப்பதாலும் தவிர்க்கப்பட்டிருக்கின்றன.)
டிவிட்டரில் வாக்களிக்க :
பாஜக – மோடிக்கு பயப்படுவதில் நம்பர் 1 தமிழ் தொலைக்காட்சி எது ?
மாக்சிம் கார்க்கிஒரு நாள் மதியம் அவள் சிறைச்சாலை ஆபீசில் பாவெலுக்கு எதிராக உட்கார்ந்து தாடி வளர்ந்து மண்டிய அவனது முகத்தை நீர்த்திரை மல்கிய கண்களோடு பார்த்துக் கொண்டிருந்தாள். தன்னுடைய கைக்குள் கசங்கிச் சுருண்டு போயிருக்கும் அந்தச் சீட்டை அவன் கையில் ஒப்படைக்கும் சந்தர்ப்பத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தாள்.
“நான் செளக்கியம். எல்லோரும் அப்படித்தான்” என்று அமைதியாகச் சொன்னான். “நீ எப்படி இருக்கிறாய்?”
”நானும் சௌக்கியம். இகோர் இவானவிச் இறந்து போனான்” என்று யந்திரம் மாதிரி நிர்விசாரமாய்ச் சொன்னாள் அவள்.
“உண்மையாகவா?’ என்று வியந்து கேட்டான் பாவெல். அவன் மெதுவாகத் தன் தலையைத் தொங்கவிட்டான்.
“சவ அடக்கத்தின்போது போலீசார் ஒரு சண்டையைக் கிளப்பிவிட்டார்கள். ஒருவனைக் கைது செய்திருக்கிறார்கள்” என்று பரபரப்பின்றிச் சொன்னாள் அவள். சிறைச்சாலையின் உதவியதிகாரி நாக்கை மிக எரிச்சலோடு சப்புக் கொட்டிக்கொண்டே துள்ளியெழுந்தான்.
“இந்த மாதிரி விஷயங்களைப் பேசக்கூடாது என்று தெரியுமா, இல்லையா?” என்று முணுமுணுத்தான் அவன். “இங்கு அரசியலைப் பற்றிப் பேசக்கூடாது.”
தாயும் எழுந்து நின்று, தனது குரலில் குற்ற பாவத்தின் சாயை படரப் பேசினாள்.
”நான் ஒன்றும் அரசியலைப் பற்றிப் பேசவில்லை; ஒரு சண்டையைப் பற்றித்தான் பேசினேன். அவர்கள் சண்டை போட்டது உண்மை. ஒரு பையனுடைய தலையைக்கூட அவர்கள் நொறுக்கித் தள்ளிவிட்டார்கள்…..”
“எல்லாம் ஒன்றுதான். இனிமேல் பேசாமல்தான் இருக்க வேண்டும். உங்கள் சொந்த விஷயத்தைப் பற்றி, அதாவது பொதுவாக உங்கள் வீட்டு விஷயத்தையும் குடும்ப விஷயத்தையும் தவிர வேறு எதையுமே இங்கு பேசக்கூடாது.”
தனது பேச்சு குழம்பிக் குழறி ஒலிப்பதை அவன் கண்டுகொண்டான். அவன் மீண்டும் மேஜையருகே உட்கார்ந்து சில காகிதங்களைப் பரபரவென்று புரட்டத் தொடங்கினான்.
”இந்த மாதிரி நீ ஏதாவது பேசித் தொலைத்தால் அப்புறம் இதற்கு பதில் சொல்ல வேண்டியது நான்தான்” என்று சோர்ந்து போய்ச் சொன்னான் அவன்.
அவன்மீது பதிந்துநின்ற கண்களை அகற்றாமலே, தாய் தன் கையிலிருந்த துண்டுச் சீட்டை பாவெலின் கைக்குள் விறுட்டென்று திணித்தாள். அப்புறம் நிவர்த்தி நிறைந்த நிம்மதியுணர்ச்சியோடு பெருமூச்சு விட்டாள்.
”எதைப் பற்றித்தான் பேசுவது என்பதே எனக்குத் தெரியவில்லை…” என்றாள் தாய்.
“எனக்கும்தான் தெரியாது” என்று கூறிச் சிரித்தான் பாவெல்.
”அப்படியானால், இங்கு வருவதிலேயே அர்த்தமில்லை” என்று எரிச்சலோடு சொன்னான் அதிகாரி. “எதைப்பற்றிப் பேசுவது என்று தெரியாவிட்டால், இங்கு ஏன் வருகிறீர்கள்? வந்து, எங்கள் பிராணனை ஏன் வாங்குகிறீர்கள்?……..”
“விசாரணை சீக்கிரம் நடக்குமா?” என்று கேட்டாள் தாய்.
”பிராசிக்யூட்டர் சில நாட்களுக்கு முன் வந்திருந்தார். சீக்கிரமே நடக்குமென்று சொன்னார்…”
அவர்கள் இருவரும் அர்த்தமற்றுப் பேசிக்கொண்டிருந்தார்கள். அன்பும் பரிவும் நிறைந்த கண்களோடு பாவெல் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதை அவள் கண்டாள். அவன் முன்னிருந்ததைப்போல இப்போதும் மிகுந்த அமைதியும் நிதானமும் நிறைந்து விளங்குவதாக அவளுக்குத் தோன்றியது. அவனது தோற்றத்தில் அப்படியொன்றும் மாற்றமில்லை. கைகள் வெளுத்திருந்தன; தாடி வளர்ந்திருந்ததால், வயதில் அதிகமானவனாகத் தோன்றினான். அவ்வளவுதான். அவள் அவனிடம் இன்பகரமான விஷயம் எதையாவது சொல்ல விரும்பினாள். நிகலாயைப் பற்றித் தெரிவிக்க விரும்பினாள். எனவே சுவையற்ற தேவையற்ற விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்த தொனியிலேயே அவள் பேசத் தொடங்கினாள்.
“உன்னுடைய ஸ்வீகார புத்திரனை அன்றைக்கு நான் பார்த்தேன்….”
பாவெல் விஷயம் புரியாமல் அவளது கண்களையே பார்த்தான். நிகலாய் வெஸோவ்ஷிகோவின் முகத்திலுள்ள அம்மைத் தழும்புகளை அடையாளம் சொல்வதற்காக, அவள் தன் கை விரல்களால் தன் கன்னத்தில் தட்டிக் கொட்டிக் காட்டினாள்.
“அவன் இப்போது சரியாயிருக்கிறான். அவனுக்குச் சீக்கிரமே ஒரு வேலை பார்த்துவைக்க வேண்டும்.”
பாவெல் புரிந்து கொண்டான். தலையை ஆட்டியபடி மகிழ்ச்சி நிறைந்த கண்களோடு பதிலிறுத்தான்.
“அப்படியா? ரொம்ப நல்லது” என்றான் அவன்.
“ஆமாம், இவ்வளவுதான் விஷயம்” என்று முடித்தாள் அவள். அவனது மகிழ்ச்சி அவளது இதயத்தைத் தொட்டது. அதன் காரணமாகத் தன்மீது திருப்தி கொண்டாள்.
அவளது கரத்தை இறுகப்பற்றி அவளுக்கு விடை கொடுத்தான்.
”நன்றி. அம்மா!’’
அவர்கள் இருவரது இதயங்களும் ஒன்றையொன்று நெருங்கிப் பழகிக் கொண்டதால் ஏற்பட்ட ஆனந்த வெறி அவளது தலைக்குள் காரமான மதுவெறியைப்போல் மேலோங்கிக் கிறங்கியது. அவனுக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவனது கையை மட்டும் பற்றிப் பிடித்தாள் அவள்.
வீட்டுக்கு வந்தவுடன் சாஷா தனக்காகக் காத்துக் கொண்டிருப்பதைக் கண்டாள். தாய் பாவெலைப் பார்த்துவிட்டு வரும் நாட்களிலெல்லாம் அவளும் வந்து செல்வது வழக்கம். அவள் பாவெலைப் பற்றி எதுவும் கேட்பதில்லை; தாயாகவே. அவனைப் பற்றி எதுவும் சொன்னால் கேட்பாள். இல்லாவிட்டால் தாயின் கண்களையே வெறித்து ஆர்வத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதோடு திருப்தியடைந்து விடுவாள். ஆனால், இந்தத் தடவையோ அவள் ஆர்வத்தோடு வாய்விட்டுக் கேட்டுவிட்டாள்.
“சரி. அவன் எப்படி இருக்கிறான்?”
“நன்றாயிருக்கிறான்.”
“அவனிடம் அந்தச் சீட்டைக் கொடுத்துவிட்டீர்களா?”
“ஆமாம். அதை அவன் கையில் மிகுந்த சாமர்த்தியத்தோடு கொடுத்துவிட்டேன்…….”
“அவன் அதைப் படித்தானா?”
“அங்கேயா? அது எப்படி முடியும்?”
“ஆமாம் நான் மறந்துவிட்டேன்” என்று மெதுவாகக் கூறினாள் அந்தப் பெண். ”நாம் இன்னும் ஒரு வார காலம் சரியாக ஒரு வாரகாலம் — முழுவதும் காத்திருக்க வேண்டும். இல்லையா? சரி.. அவன் ஒத்துக்கொள்வான் என்று நினைக்கிறீர்களா?
”நான் எப்படிச் சொல்ல முடியும்?” என்றாள் தாய். “இதில் ஒன்றும் ஆபத்தில்லையென்றால் அவன் ஏன் சம்மதிக்கக் கூடாது!”
சாஷா தன் தலையை உலுக்கிக் கொண்டாள்.
“சரி. இந்த நோயாளிக்கு என்ன உணவு கொடுக்க வேண்டும் என்று உங்களுக்குத் தெரியுமா? அவனுக்குப் பசியெடுத்துவிட்டது” என்றாள் அவள்.
“அவன் எதுவும் தின்னலாம். இரு, இதோ நான் போய்……”
அவள் சமையலறைக்குள் சென்றாள். சாஷாவும் மெதுவாக அவளைப் பின்தொடர்ந்து சென்றாள்.
“நானும் உதவட்டுமா?”
“வேண்டாம், வேண்டாம்.”
தாய் அடுப்பின் பக்கமாகக் குனிந்து ஒரு பாத்திரத்தை எடுத்தாள்.
”பொறுங்கள்…” என்று அமைதியாகச் சொன்னாள் அந்தப் பெண்.
அவளது முகம் வெளுத்து, கண்கள் வேதனையுடன் விரிந்தன. அதே சமயம் அவள் நடுங்கும் உதடுகளோடு அவசர அவசரமாக முணுமுணுத்துப் பேசினாள்:
”நான் உங்களிடம் ஒன்று கேட்க நினைத்தேன். அவன் சம்மதிக்க மாட்டான் என்பது மட்டும் எனக்கு நிச்சயம் தெரியும். நீங்கள் அவ்னிடம் அது விஷயமாய் மன்றாடிக் கேட்டுக்கொள்ள வேண்டும். அவனது தேவை இப்போது இங்கு மிகவும் அத்தியாவசியமானது. எடுத்துக்கொண்ட கொள்கையின் வெற்றிக்காக, அவன் இதற்குச் சம்மதிக்கத்தான் வேண்டும் என்று சொல்லுங்கள். அவனது உடல் நலத்தைப் பற்றி நான் மிகவும் பயந்துகொண்டிருப்பதாகச் சொல்லுங்கள். உங்களுக்கே தெரியும் — இன்னும் விசாரணைக்குரிய நாளைக்கூட நிர்ணயிக்கவில்லையே…….”
அவள் மிகுந்த சிரமத்தோடு பேசுகிறாள் என்பது நன்றாகத் தெரிந்தது. அவள் ஏதோ ஒரு மூலையைப் பார்த்தவாறே நிமிர்ந்து நின்றாள். குரல் மட்டும் தடுமாறியது. சோர்ந்து போய் தன் கண்ணிமைகளை மூடி, உதடுகளைக் கடித்துக்கொண்டாள். இறுகப் பிடித்து மடக்கிய அவளது கைவிரல்கள் சொடுக்கு விட்டுக் கொள்வது கூடத் தாய்க்குக் கேட்டது.
இந்த மாதிரியான கொந்தளிப்பைக் கண்டு, பெலகேயா மனம் புரிந்து கொண்டு அவளைத் துக்கத்தோடு தழுவியணைத்துக் கொண்டாள்.
”அடி, என் கண்ணே!’’ என்று அவள் மிருதுவாகச் சொன்னாள். அவன் தன்னைத் தவிர வேறு யார் பேச்சையுமே கேட்க மாட்டான் – எவர் பேச்சையும் கேட்க மாட்டான்”
அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுகத் தழுவியவாறே மெளனமாக நின்றார்கள். பிறகு சாஷா தாயின் கரங்களைத் தன் தோள் மீதிருந்து மெதுவாக விலக்கிவிட்டு, நடுக்கத்துடன் சொன்னாள்:
“ஆமாம், நீங்கள் சொல்வது சரி. இதெல்லாம் வெறும் பைத்தியக்காரத்தனம், என்னவோ உணர்ச்சியில்…………”
திடீரென அவள் அமைதி பெற்று சாவதானமாகச் சொன்னாள்:
”ரொம்ப சரி, வாருங்கள். நோயாளிக்கு உணவு கொடுக்கலாம்.”
அவள் இவானின் படுக்கையருகே சென்று அமர்ந்தபோது, அவனை நோக்கித் தலையை வலிக்கிறதா என்பதைப் பரிவோடு கேட்டுக்கொண்டாள்.
”அதிகம் இல்லை. எல்லாமே கொஞ்சம் மங்கலாகத் தெரிகிறது. பலவீனமாய் இருக்கிறது’ என்று கூறிக்கொண்டே அவளது முன்னிலையில் ஏற்பட்ட உணர்ச்சிக் குழப்பத்தால் இன்னது செய்வதென்று தெரியாமல் போர்வையை மோவாய்க்குக் கீழாக இழுத்துவிட்டுக்கொண்டான் இவான். அமிதமான ஒளியைக் கண்டு கூசுவது மாதிரி கண்களைச் சுருக்கிக்கொண்டான். அவளது முன்னிலையில் சாப்பிடுவதற்கே அவனுக்கு வெட்கமாயிருக்கிறது என்பதை சாஷா உணர்ந்துகொண்டாள். எனவே அவள் எழுந்து வெளியே சென்றாள். இவான் எழுந்து உட்கார்ந்து அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான்.
”அ…ழ… கி தான்” என்று முணுமுணுத்துக் கொண்டான்.
களிப்பு நிறைந்த நீலக்கண்களும் நெருக்கமாக வளர்ந்திருந்த சிறு பற்களும் ஆண்மை குடிபுகாத பாலியக் குரலும் பெற்றிருந்தான் அவன்.
”உனக்கு என்ன வயதாகிறது?’ என்று ஏதோ நினைத்தவாறே கேட்டாள் தாய்.
“பதினேழு.”
“உன் பெற்றோர்கள் எங்கே?”
“கிராமத்தில். பத்து வயதிலிருந்து நான் இங்குதான் இருக்கிறேன். பள்ளிக்கூடப் படிப்பை முடித்தவுடனேயே நான் நகருக்கு ஓடி வந்துவிட்டேன். உங்கள் பேரென்ன. தோழரே!”
இந்த வார்த்தையைச் சொல்லி அவளை அழைக்கும்போது அந்த வார்த்தை எப்போதும் அவள் உள்ளத்தைத் தொடும். அவள் குழப்பமடைவாள்.
”நீ ஏன் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்?” என்று புன்னகையோடு கேட்டாள் அவள்.
சிறிது நேரம் தத்தளித்துத் தயங்கிவிட்டு, அவன் விளக்கினான்.
“கேளுங்கள். எங்களோடு கல்விக் குழாத்தில் பங்கெடுத்து வந்த ஒரு மாணவன் – அதாவது எங்களுக்கு வகுப்பு நடத்திய ஒரு மாணவன் பாவெல் விலாசவின் தாயைப் பற்றி எங்களுக்கு எடுத்துக் கூறினான். மே தினக் கொண்டாட்டம் ஞாபகமிருக்கிறதா?”
தாய் தலையை அசைத்துக்கொண்டே தன் காதுகளைக் கூர்மையாக்கிக் கேட்டாள்.
அவன் தான் முதன்முதல் நமது கட்சியின் கொடியைப் பகிரங்கமாக ஏந்திப் பிடித்தவன் என்று அந்தப் பையன் பெருமையோடு கூறினான். அந்தப் பெருமையுணர்ச்சி தாயின் உள்ளத்திலும் எதிரொலி எழுப்பியது.
“நான் அப்போது இல்லை. அந்த மாதிரி நாங்களும் தனியாகக் கொண்டாட விரும்பினோம். ஆனால் அது நடக்காமல் போய்விட்டது. நாங்கள் கொஞ்சம், பேர்தான் இருந்தோம். இருந்தாலும், வருகிற வருஷத்தில் நாங்கள் கட்டாயம் நடத்தித்தான் பார்க்கப் போகிறோம். பாருங்களேன்!”
எதிர்காலச் சம்பவங்களைக் கற்பனை செய்து பார்க்கும் உத்வேகத்தால் அவனுக்கு மூச்சுக்கூடத் திணறியது.
“சரி, நான் விலாசவின் தாயைப் பற்றித்தானே சொல்லிக் கொண்டிருந்தேன்” என்று கையிலிருந்த கரண்டியை ஆட்டிக்கொண்டே பேசத் தொடங்கினான் அவன்.” அவளும் அதன் பின்னர் கட்சியில் சேர்ந்துவிட்டாள். அது ஒரு பெரிய அதிசயம் என்று எல்லோரும் பேசிக்கொள்கிறார்கள்.”
தாய் வாய் திறந்து புன்னகை புரிந்தாள். அந்தப் பையனுடைய புகழுரையைக் கேட்பதில் அவளுக்கு ஆனந்தம் தோன்றியது. ஆனந்தத்துடன் கூச்சக் கலக்கமும் இருந்தது.
“நான்தான் விலாசவின் தாய் என்று அவள் அவனிடம் சொல்ல விரும்பினாள். என்றாலும் அந்த வார்த்தைகளை உள்ளடக்கிக்கொண்டு தனக்குத்தானே ஏளன பாவத்தோடு கூறிக்கொண்டாள்.
”நான் எவ்வளவு பெரிய முட்டாள்!”
திடீரென்று அவள் அவன் பக்கமாகக் குனிந்து உணர்ச்சிவசப்பட்டுப் பேசினாள்:
”இன்னும் கொஞ்சம் சாப்பிடு. நீ சீக்கிரமே குணமாகி எழுந்து நடமாட வேண்டும். நாம் எடுத்துக்கொண்ட கொள்கைப் போருக்காக!”
தெருக்கதவு திறந்தது. தெருவிலிருந்து குளிர்ந்த ஈரம் படிந்த இலையுதிர்காலக் காற்று உள்ளே வீசியது. செக்கச் சிவந்த கன்னத்தோடு சிரித்துக்கொண்டே சோபியா வாசலில் நின்று கொண்டிருப்பதை, தாய் கண்டாள்.
இந்த வேகத்தில் போனால் அவள் தன்னைத்தானே சீக்கிரம் முடித்துக்கொண்டுவிடுவாள். இதுதான் வீரம்! இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும், அவர்களோடு உழைப்பதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம், சாஷா!”
“நான் சொல்வதைக் கேள். துப்பறிபவர்கள் எல்லாம் என்னை மாப்பிள்ளை மாதிரி வட்டம் போட்டுத் திரிகிறார்கள். நான் சீக்கிரமே இங்கிருந்து போயாக வேண்டும்……. சரி. இவான், உனக்கு எப்படி இருக்கிறது? தேவலையா? நீலவ்னா, பாவெலிடமிருந்து ஏதாவது செய்தியுண்டா? சாஷா இங்கிருக்கிறாளா?”
சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டே ஏதேதோ கேள்விகள் கேட்டாள். அந்தக் கேள்விகளுக்கு அவள் பதிலை எதிர்நோக்கவில்லை. அவள் தாயையும் அந்தப் பையனையும் தனது சாம்பல் நிறக் கண்களால் பரிவோடு நோக்கித் தழுவினாள். தாய் அவளைக் கவனித்துப் பார்த்தவாறே தனக்குள்ளாக நினைத்துச் சிரித்துக் கொண்டாள்.
“நானும் நல்லவர்களில் ஒருவனாகக் கருதப்படுகிறேன்”
மீண்டும் அவள் இவானின் பக்கமாக குனிந்து பார்த்துச் சொன்னாள்.
“சீக்கிரமே குணம் அடைந்து, எழுந்து நடமாடு, மகனே!
பிறகு அவள் சாப்பாட்டு அறைக்குள் சென்றாள். அங்கு சோபியா சாஷாவுடன் பேசிக்கொண்டிருப்பதைக் கண்டாள்:
“அவள் இதற்குள்ளாகவே முன்னூறு பிரதிகள் எடுத்து முடித்துவிட்டாள். இந்த வேகத்தில் போனால் அவள் தன்னைத்தானே சீக்கிரம் முடித்துக்கொண்டுவிடுவாள். இதுதான் வீரம்! இந்த மாதிரி ஜனங்களோடு வாழ்வதும், அவர்களோடு உழைப்பதும் அவர்களது தோழர்களாயிருப்பதும் எவ்வளவு பெரிய பாக்கியம், சாஷா!”
“ஆமாம்” என்று அந்தப் பெண் மெதுவாகச் சொன்னாள்.
அன்று மாலை அவர்கள் தேநீர் அருந்திக்கொண்டிருந்தபோது சோபியா தாயை நோக்கிப் பேசினாள்:
”நீங்கள் இன்னும் ஒருமுறை கிராமப்புறத்துக்குச் சென்று வரவேண்டும், நீலவ்னா.”
“இந்தத் தடவை தபால் வண்டியை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு வேறு மார்க்கமாக, நிகோல்ஸ்கி பிரதேசம் வழியாகப் போகவேண்டும்’’ என்று போதித்தான் நிகலாய். அவன் முகத்தைச் சுழித்து உம்மென்று இருந்தான். அந்த பாவம் அவனது வழக்கமாக அன்பு நிறைந்த அமைதி பாவத்தைக் கெடுத்துக்கொண்டிருந்தது.
“உண்மையைச் சொல்வதென்றால், நான் இந்தப் பயணத்தை ஆதரிக்கவேயில்லை என்று பேசத் தொடங்கினான் நிகலாய். “அங்கு இப்போது நிலைமை சரியில்லை. பல பேரைக் கைது செய்திருக்கிறார்கள். யாரோ ஓர் உபாத்தியாயரைக் கூடக் கொண்டு போய்விட்டதாகத் தெரிகிறது. எனவே நாம் மிகுந்த ஜாக்கிரதையோடிருக்க வேண்டும். இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருந்தால்கூட நல்லதுதான்….”
“ஆனால் நாம் அவர்களுக்கு எந்தவிதத் தங்கு தடையுமின்றிப் பிரசுரங்களை அனுப்பியாக வேண்டுமே என்று மேஜை மீது விரலால் கொட்டிக்கொண்டே சொன்னாள் சோபியா. ”நீங்கள் போகப் பயப்படுகிறீர்களா, நீலவ்னா?” என்று அவள் திடீரெனக் கேட்டாள்.
அந்தச் செயல் தாயின் உள்ளத்தைச் சுட்டுவிட்டது. “நான் என்றாவது பயந்திருக்கிறேனா? முதல் தடவை போகும்போதே நான் பயப்படவில்லையே… இப்போது மட்டும், நீங்கள் இப்படித் திடீரென்று…” அவள் அந்த வாக்கியத்தை முடிக்காமலேயே தலையைக் குனிந்து கொண்டாள். நீ பயப்படுகிறாயா. உனக்குச் செளகரியமிருக்குமா. உன்னால் இந்தக் காரியத்தைச் செய்ய இயலுமா என்றெல்லாம் யாராவது அவளைக் கேட்கும்போது அவர்கள் அவளிடம் ஏதோ தயவு நாடிக் கேட்பதைப்போல் அவள் உணர்ந்தாள். மேலும் அந்தக் கேள்விகளாக அவர்கள் தம்முன் ஒருவரையொருவர் நடத்துகிற மாதிரி தன்னையும் நடத்தாமல் தன்னை ஒதுக்கி வைத்த மாதிரி வித்தியாசமாக நடத்துவதுபோலத் தாய்க்குத் தோன்றியது.
”நான் பயப்படுகிறேனா என்று ஏன் கேட்கிறீர்கள்?” என்று அடைத்துப்போன குரலில் கேட்டாள் அவள். “நீங்கள் மட்டும் ஒருவருக்கொருவர் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கக் காணோமே!”
நிகலாய் பதறிப் போய்த் தன் மூக்குக் கண்ணாடியைக் கழற்றினாள். மீண்டும் போட்டுக்கொண்டு, தனது சகோதரியை ஆழ்ந்து நோக்கினான். அங்கு நிலவிய அமைதியைக் கண்டு தாய் குழம்பிப் போனாள். அவள் மேஜையை விட்டு எழுந்து நின்று குற்றம் செய்துவிட்டவளைப் போல் ஏதோ சொல்ல விரும்பினாள். ஆனால் அதற்குள் சோபியா அவளது கரத்தைப் பற்றிப் பிடித்து மெதுவாகக் கூறினாள்.
“என்னை மன்னித்துவிடுங்கள். இனிமேல் நான் இப்படி நடந்து கொள்ளமாட்டேன்”
இந்த வார்த்தையைக் கேட்டதும் தாயின் முகத்தில் புன்னகை அரும்பியது. சில நிமிஷ நேரங்களில் மீண்டும் அவர்கள் மூவரும் அந்தப் பயணத்தைப் பற்றி உற்சாகத்தோடு விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
தமிழகத்தில் செயல்பட்டுவரும் மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் 15-ஆம் ஆண்டு விழா கடந்த டிசம்பர் 16 அன்று மதுரையில் நடைபெற்றது.
இந்திய ஜனநாயகத்திற்குப் பார்ப்பன இந்து மதவெறி பாசிச சக்திகளால் பேராபத்து ஏற்பட்டுள்ள இந்தச்சூழலில் அறிவுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள், கல்வியாளர்கள், ஊடகவியலாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், மக்களின் வாழ்வுரிமை காக்க என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்விக்கு விடையளிக்கும் விதமாக அமைந்திருந்தது இக்கருத்தரங்கம்.
“தூத்துக்குடி மக்களுக்காக போராடுவோம்” – மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், ஸ்டெர்லைட் எதிர்ப்பு தூத்துக்குடி மாவட்ட மக்கள் கூட்டமைப்பின் சட்ட ஆலோசகருமான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் உரை.
கடந்த டிசம்பர் 17-ம்தேதி (2018) ஆந்திரா – காக்கிநாடாவை பெய்ட்டி புயல் தாக்கியது. தமிழகத்தில் வந்த கஜாவின் அளவிற்கு இந்த புயல் பாதிப்போ, பரபரப்போ ஏற்படுத்தவில்லை என்பதால் ஓரிரு நாட்கள் மட்டுமே செய்தியாக வந்து மறைந்து விட்டது.
இயற்கைப் பேரிடரில் புயலோ, மழையோ எதுவாகினும் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் வறிய மக்கள்தான். இந்த விதிக்கு காக்கிநாடாவின் பர்லோபேட்டை மக்களும் தப்பவில்லை. புயல் ஓய்ந்து பத்து நாட்களுக்கு மேல் ஆனாலும் அவர்களின் துயரம் நீங்கிவிடவில்லை.
பர்லோபேட்டை பகுதியில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்கள், மதவேறுபாடின்றி ஒன்றாய் வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நகர்ப்புறத்தில் கூலிவேலை செய்பவர்கள். பட்டறை தொழில், வீட்டு வேலைகள் செய்து வாழ்க்கையை நடத்தி வரக்கூடியவர்கள்.
பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காதவர்கள் என்பதால் காக்கிநாடா ஒரு தொழிற்பேட்டை பகுதி என்றாலும்கூட ஒரு ஒப்பந்த தொழிலாளியாகக் கூட இவர்கள் பணிக்கு அமர்த்தப்படுவதில்லை. இவர்களுக்கு சொந்த வீடு என்பது நிறைவேறாத பெருங்கனவுதான்.
இவர்கள் குடியிருக்கும் இந்தப்பகுதி இவர்களுக்கு சொந்தமானது இல்லை. காங்கிரசு அரசால் இரண்டு முறையும், சந்திரபாபு நாயுடுவின் அரசால் ஒரு முறையும் விரட்டியடிக்கப்பட்ட ஆந்திர வாழ் குடியுரிமை பெற்ற நாடோடிகள்.
தற்போது இவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில்தான் சில ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்தார்கள். அந்த இடம் அரசுக்குச் சொந்தமான புறம்போக்கு நிலம். முன்னதாக ஆட்சியில் இருந்த காங்கிரசு அரசு “இந்த இடத்தில் குடிசை மாற்று வாரியம் வரப்போகிறது. இடத்தை காலி செய்யுங்கள். உங்களுக்கும் வீடு கொடுக்கிறோம்” என்று சொல்லி அவர்களை அருகிலேயே குடியமர்த்தினார்கள்.
முதல் குடியிருப்பு.
மாற்று குடியிருப்பு கட்டி முடிக்கப்பட்ட பின்னர் ஆளும் கட்சி மற்றும் அதிகாரிகளின் உறவினர்களுக்கு அதனை கொடுத்து விட்டதாக சொல்கிறார்கள். ஆனால் இவர்களுக்கு மட்டும் கொடுக்கவில்லை. பிறகு சில ஆண்டுகள் கழித்து இந்த இடத்திலும் வீடு வருகிறது என்று சொல்லி அம்மக்களை விரட்டி விட்டார்கள்.
அந்தசமயம் ஆளும் வர்க்கத்தின் ஆசை வார்த்தையை நம்பி எப்படியும் இந்த முறை வீடு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் மூன்றாவதாக மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்தார்கள். அந்த குடியிருப்பு கட்டி முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் அவர்களுக்கு வீடு ஒதுக்குவது குறித்து எதுவும் சொல்லப்படவில்லை.
இரண்டாவது குடியிருப்பு.
இந்த சூழலில் மேலும் இடம் வேண்டும் என்று சொல்லி கிட்டதட்ட எட்டு ஆண்டுகளாக வாழ்ந்த இடத்தையும் காலி செய்ய சொல்லி விரட்டி விட்டார்கள். அப்படி விரட்டப்பட்டு நான்காவதாக இந்த இடத்திற்கு வந்து 6 மாதம் ஆகிறது. மூன்றாம் கட்ட விரிவாக்கத்தில் கட்டிடம் கட்டுவதற்கான பணியும் நடைபெற்று வருகிறது. இந்த காலகட்டத்தில் இம்மக்கள் எதிர்கொண்ட இயற்கை பேரிடர்களின் ஆபத்துகள் ஏராளம்.
சந்திரபாபு நாயுடுவின் அரசு அம்மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் ஏற்படுத்திக் கொடுக்காமல் வெறுமனே ஒரு இடத்தை மட்டும் ஒதுக்கி அதில் குடிசை போட்டுக் கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு நகர்ந்து விட்டதோடு அவர்கள் கடமை முடிந்து விட்டது. அந்த மக்களில் பலர் குடிசை அமைத்து குடியேறி விட்டார்கள். சிலர் இப்பொழுதுதான் குடிசை போட்டு வருகிறார்கள். அதற்குள் இந்த பெய்ட்டி புயல் அனைத்தையும் காலி செய்து விட்டது என்று கதறும் மக்களுக்கு ஆதரவாக இதுவரை யாரும் இல்லை.
சந்திரபாபு நாயுடு ஆட்சிக்கு வந்த பிறகு 5 புயல்கள் – மழை, இரண்டு முறை தீ விபத்தை சந்தித்து இருக்கிறார்கள். “ஒவ்வொரு முறையும் மொத்தமும் அழிஞ்சி போயிடும். அதுல மிஞ்சின பாத்திரம், துணிமணி… எது எடுத்து வச்சாலும் அடுத்த புயலுக்கு அதுவும் போயிடுது. அழிவுன்னு எத சொல்லுறது?” என்கிறார்கள் விரக்தியாக.
“எங்களைப் பொருத்த வரைக்கும் புயல் – மழை என்பது நாங்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சனையில் கொஞ்சம் கூடுதல் அவ்வளவுதான்” என்கிறார்கள். சில ஆண்டுகளாக மின்சாரம் இல்லாமல் தண்ணீர் இல்லாமல் வாழ்ந்திருக்கிறார்கள். தற்போதுதான் அங்கு இருக்கக்கூடிய நியூ டெமாக்ரசி எனும் இடதுசாரி கட்சி அமைப்பின் உதவியோடு போராடி பெற்றிருக்கிறார்கள்.
தற்போதுதான் மின் கம்பங்கள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. நாட்டின் குடிமக்கள் எனும் உரிமையை வழங்கும் ரேசன் கார்டு முதல் ஆதார் கார்டு வரை அனைத்தும் இருந்தும் இவர்கள் அகதியைவிட மிகமோசமான முறையில் நடத்தப்படுகிறார்கள்.
இந்த பகுதிக்கு செல்ல இருப்பதோ ஒரேயொரு மண் ரோடு. அந்த சாலையிலும் கட்டிடம் கட்ட தேவையான பொருட்களை கொண்டு வரும் லாரிகள் குறுக்கும் நெடுக்குமாக சென்று வருவதால் மழைக்காலத்தில் சேறும் சகதியுமாகவும், வெயிலில் புழுதிக் காடாகவும் ஆகி விடுகிறது.
இந்த தாய்மார்களின் அவலம் நம் காதுகளை வண்டாக குடைந்தெடுக்கிறது. “குடிசைக்கு அருகாமையில் பொட்டல் காடு இருப்பதால் நாங்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஏராளம். பாம்பு தொல்லை, காட்டு எலி, சிறு நரி என்று எப்பொழுதும் பயத்தோடு வாழ வேண்டி உள்ளது. இதை விட்டு ஒழியலாம்னா எங்க போறது? அரசும் வீடு தரதில்ல. அப்படியே தருவதாக இருந்தால் ரூ 50,000 பணம் கேக்குது. நாங்க இந்த நிலையில இருக்கும்போது எப்படி தர முடியும் சொல்லுங்க?
“ஆண்கள் வேலைக்கு போறதுன்னா பல கிலோ மீட்டர் போக வேண்டி இருக்கு. விடிய விடிய எழுந்து ஓடினாதான் உண்டு. பேருந்து வசதியும் இல்லை. இந்த பகுதியில 2, 3 பேரிடம் பைக்கு இருந்தாலே பெரிய விஷயம்”
இங்க எங்கயும் பக்கத்துல ஆஸ்பித்திரி இல்ல. திடீர்னு உடம்பு முடியலனா, அரசு ஆஸ்பித்திரிக்கு போயிடுவோம். ரொம்ப அவசரம்னா தோள்ல தூக்கிட்டு போயி ஆட்டோ புடிச்சிப்போம். சாதாரண காய்ச்சல்னா மாத்திர வாங்கி போட்டுக்குவோம்.
எங்க பசங்கள அரசு பள்ளிகூடத்துல சேர்த்திருக்கோம். எல்லாரையும்போல பிள்ளைகள தனியார் பள்ளிகூடத்துல சேர்க்க எங்களுக்கும் ஆசதான்.. ஆனா சோத்துக்கே வழி இல்லாத போது எப்படி தனியார் பள்ளிகூடம் போக முடியும்? என்ற தங்களின் ஆதங்கத்தை கொட்டித் தீர்க்கிறார்கள்.
நரசிம்மசாமி (நடுவில் இருப்பவர்.)
இப்பகுதியில் வாழும் நரசிம்மசாமி சொல்கிறார், “எனக்கு ஒரு பையன் ஒரு பொண்ணு. கவர்மெண்ட் பள்ளி கூடத்துல படிக்கிறாங்க. நான் நாலாவது வரைக்கும் படிச்சிருக்கேன். மண் தோண்டுற கூலி வேலைக்கு போறேன். எனக்கு 500 ரூபா ஒரு நாள் கூலி. அதுல 50 ரூபா மேஸ்திரி புடிப்பாரு. 450 ரூபாதான். அதுல150 ரூபாய் சரக்கு அடிச்சிடுவேன். இல்லனா அடுத்த நாள் வேலைக்கு போக முடியாது.
என்னோட மனைவி வீட்டு வேலைக்கு போயிட்டு வாறாங்க.. ஒரு வீட்டுக்கு பத்து பாத்திரம் தேய்க்க மாசம் 300 ரூபா. ஒரு வீட்டுக்குத்தான் போவா. இன்னும் ஒரு சிலர் இரண்டு வீட்டுக்கு வேலைக்கு போறாங்க. அதுலதான் இங்க இருக்கவங்களோட வாழ்க்கையே இருக்கு.
இங்க வயசான பெண்கள் அதிகம். அவங்களுக்கு மாசம் 1000 ரூபா பென்சன் பணம் வருது. அதுவும் சரியா வரதில்லை. புதுப்பிக்கனும். அதுக்கு 50,100 ன்னு செலவாகும். போறது தொலைவு, போனாலும் காத்து கிடக்கனும். அதெல்லாம் இந்த வயசான காலத்துல முடியுமா? வீட்டுலயே இருந்துடுறாங்க. அதை கேன்சல் பண்ணிடுறானுங்க.
இந்த நெலமையில வேற வாடகை வீட்டுக்கு போகலாம்னா இந்த வருமானத்த வச்சி என்ன பண்ண முடியும். அதான் எந்த புயல் மழை வெள்ளம் வந்தாலும் இங்கயே இருந்துக்கிறோம்.
நியூ டெமாக்ரசி கட்சியின் AIKMS -அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் கொடியோடு பகுதி வாழ் மக்கள்!
இதுவரைக்கு எங்கள ஆண்ட காங்கிரசும், டி.எஸ்.ஆரும் எதுவும் பண்ணிடல. மோடி வந்த பிறகு மேல நல்லா இருக்கதா சொல்றாங்க. ஆனா எங்களுக்குத்தான் எதுவும் வந்த சேரல. எதுனாலும் போராட வேண்டி இருக்கு.
பக்கத்துலதான் இருக்கு காக்கிநாடா துறைமுகம். அதை தனியார்கிட்ட கொடுத்துட்டாங்க. அவனுங்களும் அடிக்கடி இங்க வந்து இந்த இடம் எங்களுக்கு சொந்தமானது. நீங்க கெளம்புங்கன்னு சொல்லி மிரட்டுறான். நாங்க அதுக்கு எதிரா போராடுனதால இப்ப அமைதியா இருக்கானுங்க.
“ஒரு பக்கம் அரசு, இன்னொரு பக்கம் தனியார். கூடுதலா இயற்கைப் பேரிடர்னு எல்லாம் சேர்ந்து எங்கள விடாம துரத்தினா நாங்க எங்கதான் போறது?
டிசம்பர் 2018-இல் துவங்கப்பட்ட வாசகர் புகைப்படம் பகுதியில் நண்பர்கள் பலரும் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர். இதுவரை கொடுக்கப்பட்ட மூன்று தலைப்புகளில் – காத்திருப்பு, உங்களுக்குப் பிடித்த தேநீர்க் கடை, ஆட்டோ இலக்கியம் – சிறப்பாக தங்களது படைப்புகளை அனுப்பித் தந்த வாசகர்களுக்கு நன்றி! மற்ற நண்பர்களும் வாசகர் புகைப்படம் பகுதியில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். குறிப்பாக வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருக்கும் நண்பர்களும் அதிகம் பங்கேற்பின் நல்லது.
இந்த மாதத்தில் மூன்று வாரங்களுக்கு நாங்கள் தந்த தலைப்பில் புகைப்படம் எடுத்த நண்பர்கள் இனி ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரத்தில் உங்களுக்கு விருப்பமுள்ள ஒரு தலைப்பில் புகைப்படங்களை எடுத்து அனுப்பலாம். அந்த தலைப்பு ஏதாவது ஒரு வகையில் சமூக அக்கறைக்குரியதாக இருக்க வேண்டும். அவ்வளவே.
இந்தவார வாசகர் புகைப்படம் பகுதியின் மற்றுமொரு சிறப்பு இது இந்த ஆண்டின் கடைசி வாசகர் புகைப்படம் பகுதியுமாகும். நீங்கள் எடுக்கும் புகைப்படத்தை அனுப்புகையில் அதற்கு கவிதை போன்றதொரு வரிகளையும் சேர்த்து அனுப்ப முயற்சி செய்யுங்கள்.
புகைப்படங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் : 1-1-2019
vinavu@gmail.com வினவு மின்னஞ்சல் அல்லது
வினவு வாட்ஸ்அப் எண்ணுக்கு (91) 97100 82506 உடன் அனுப்புங்கள்.
கூடவே உங்களைப் பற்றிய விவரங்களையும் மறவாமல் அனுப்புங்கள்!
தெரிவு செய்யப்படும் படங்கள் வரும் வார இறுதியில் வெளியிடப்படும்.
அடுத்த வாரம் இன்னொரு தலைப்பு!
காத்திருக்கிறோம். நன்றி!
நட்புடன்
வினவு
புகைப்படம் எடுப்பது தொடர்பான சில ஆலோசனைகள்:
♦ எந்த ஒரு இடம்/கருத்திற்காக புகைப்படம் எடுப்பதாக இருந்தாலும் அதன் முழுப் பரிமாணத்தை உணர்த்தும் வகையில் wild ஆக புகைப்படம் ஒன்று எடுக்க முயற்சிக்க வேண்டும். (உ-ம்) மார்க்கெட் கடைவீதியை மையப்படுத்தி கதை சொல்லப்போகிறோம் என்றால், அதன் தெரு அமைப்பு, வாடிக்கையாளர்களின் அடர்த்தி ஆகியவற்றை பதிவு செய்வது.
♦ தனிநபரை புகைப்படம் எடுக்கும் பொழுது, அந்த நபரை மையமாக வைத்து புகைப்படம் எடுப்பதை விட, அந்த நபர் வலது / இடது ஓரத்தில் இருப்பது போல எடுக்க வேண்டும். இதன் மூலம் அப்படத்தில் நிறைய Details கொண்டு வர முடியும். (உ-ம்) வியாபாரியை படம் எடுக்கும்பொழுது, அவரது முகம் இடது வலது ஓரத்தில் இருந்தால் மீதமுள்ள இடத்தில் அவரது கடை மற்றும் வாடிக்கையாளர்களின் நடமாட்டம் பதிவாகும்.
♦ எந்த ஒரு இடத்திற்கு சென்றதும் எடுத்தவுடன் புகைப்படம் எடுத்துத் தள்ளிவிடக்கூடாது. முதலில் அந்த இடத்தை அவதானிக்க வேண்டும். கண்ணால் முதலில் காட்சிகளை வகைப்படுத்திக்கொண்டு எந்த Frame இல் எடுக்கப் போகிறோம் என்பதை கூடுமான வரையில் முன்னரே தீர்மானித்து விட்டு அதன்பின்னர் புகைப்படங்களை எடுக்கப் பழக வேண்டும்.
♦ ஏற்கெனவே பல முறை ஒரு இடத்தைப் பலரும் பல விதமாக புகைப்படம் எடுத்திருந்தாலும் அவ்விடத்தில் நாம் புதுமையாக சில படங்களை எடுக்க முடியும். அல்லது அங்கேயே இதுவரை யாரும் செல்லாத புதிய இடம், அல்லது புதிய கோணம் நமக்கு தெரிய வரும். இதற்கு நாம் தேடி அலைய வேண்டும். மெனக்கெட வேண்டும். (உ-ம்) ரெங்கநாதன் தெருவைப் புகைப்படம் எடுக்க வேண்டுமெனில், குறுக்கு நெடுக்காக சிலமுறை சென்று வந்தால் புதிய கோணம் கட்டாயம் கிடைக்கும்.
♦ புகைப்படம் எடுப்பதில் நேரம் மிக முக்கியமானது. காலை 6 – 9 மற்றும் மாலை 4 முதல் இருட்டும் வரையிலான நேரம் பொருத்தமானது. கண்ணில் காண்பதை அப்படியே காமிராவில் கொண்டு வர முடியும். குறிப்பான சில இடங்களுக்கு இந்த நேரம் மாறுபடலாம். (உ-ம்) தி.நகர் கடை வீதியின் பிரம்மாண்டத்தை அதன் பளபளப்பை காட்ட வேண்டுமென்றால் இரவு 7 மணிக்கு மேல் எடுப்பதே பொருத்தமானது.
♦ ஒரு கதைக்கருவைத் தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ற படங்களை எடுக்கும் பொழுது, அதன் ஒட்டுமொத்த கதையையும் ஒரே படத்தில் சொல்வதைப்போல First Photo அமைய வேண்டும். (உ-ம்) காசிமேடு மீன் சந்தையை படமாக்குவது நமது கதைக்கரு என்றால், கடலில் நிறுத்தப்பட்டிருக்கும் படகில் நின்று கொண்டு கடற்கரையில் காணும் மக்கள் அடர்த்தியைக் காட்சிப் படுத்துவது.
♦ எதையும் நேரடியாக சொல்ல வேண்டும் என்பதில்லை. இதே இடத்தை இதற்கு முன்னர் பலரும் பலவிதமாக எடுத்த புகைப்படங்களைப் போலவே நாமும் முயற்சிக்க வேண்டும் என்பதில்லை. புதிய கோணத்தில் முயற்சிக்க வேண்டும்.
♦ சில்லவுட் (உருவங்கள் மட்டுமே தெரிவது போன்று) படங்களை எடுக்க முயற்சிக்க வேண்டும். எல்லா படங்களும் கலராக இருக்க வேண்டுமென்பதில்லை. உள்ளடக்கத்தைப் பொருத்து கருப்பு வெள்ளைப் படங்களாக இருப்பது சிறப்பு.
♦ இணையத்தில் புகைப்படக்கலையில் நிபுணத்துவம் பெற்றவர்களின் புகைப்படங்களை பார்க்க வேண்டும். ஒவ்வொரு புகைப்படத்தையும் ரசித்து உள்வாங்க வேண்டும். இந்தப் பயிற்சிதான் புதிய இடத்தில் புதிய கோணத்தில் புகைப்படங்களை எடுக்க நமக்கு கை கொடுக்கும்.
♦ எங்கும் எப்பொழுதும் விதியை மீற வேண்டும் (Break The Rule) . கடை வீதி என்றால் சடங்குத்தனமாக இப்படித்தான் எடுக்க வேண்டும் என்பதில்லை. Frame களை மாற்றிப் போட்டு முயற்சித்துப் பார்க்க வேண்டும்.
♦ சில இடங்களில் staging set பண்ணி புகைப்படம் எடுக்கலாம். அங்கு இருக்கும் நபரை நாம் சொல்லும் விதமாக நிற்க வைத்தோ, நமது frame க்குள் வர வேண்டிய பொருட்களை மாற்றியமைத்தோ எடுக்கலாம். தவறில்லை.
♦ போராட்டக்களத்தில் புகைப்படம் எடுக்கும்பொழுது, இந்த விதியை எல்லாம் பயன்படுத்திப் பார்க்க போகிறேன் என்று குறுக்கும் நெடுக்குமாக அலையக் கூடாது. போலீசார் குறுக்கீடு செய்ய நிறைய வாய்ப்பிருக்கிறது என்பதை கருத்திற் கொள்ள வேண்டும். ஆத்திரத்தில் காமிராவைத் தட்டிவிட்டாலோ, அல்லது புகைப்படம் எடுக்கக்கூடாதென்று தடுத்துவிட்டாலோ நமது நோக்கம் நிறைவேறாமல் போய்விடும். எனவே, இதுபோன்ற நேரங்களில் தூரத்தில் நின்று கொண்டே ஆவணப்படுத்தும் நோக்கில் ஒன்றிரண்டு புகைப்படங்களை எடுத்துக் கொள்ளலாம். அதன் பின்னர், அங்குள்ள நிலைமையை கணித்து பின்னர் தேவையான கோணத்தில் எடுக்கலாம். ஆனால், மிக முக்கியமாக மொபைலில் புகைப்படம் எடுக்கிறோம் என்பதால் மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். நமது உடல்மொழி அவற்றை படம்பிடிக்கிறோம் என்று காட்டிக்கொள்ளாத வகையில் சாமர்த்தியமாக புகைப்படம் எடுக்கப் பழகிக்கொள்ள வேண்டும்.
♦ சில இடங்களில், சிலரை புகைப்படம் எடுக்கும் பொழுது அவர்களது முன் அனுமதி பெற்று புகைப்படம் எடுக்க வேண்டும். நேர்காணலுக்காக செல்லும் பொழுது, எடுத்தவுடன் அவர்களை புகைப்படம் எடுத்துவிடக்கூடாது. முதலில் அவர்களுடன் நட்புமுறையில் பழகி, அவர்களின் நம்பிக்கையைப் பெற்ற பின்னர் புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா என்று கேட்டால் மறுப்பின்றி ஒப்புதல் தருவார்கள். நாம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக அமையும்.
♦ பாதிக்கப்பட்ட மக்களிடமோ, ஒரு குறிப்பிட்ட பிரச்சினையையொட்டி செல்லுமிடங்களிலும் மக்களிடம் மிகவும் அனுசரணையோடும் அமைதியாகவும் அணுக வேண்டும். நான் உங்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காகத்தானே வந்திருக்கிறேன் என்ற ரீதியில் மிதப்பாக அணுகக் கூடாது. (உ-ம்: வெள்ளம் புயல் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களை அணுகுவது).
புகைப்படங்களை எடுக்கப் போகும் மக்கள் பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்கள்! உங்கள் படங்களைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம்.
“ஒரு ஜூஸ் விலை இருபது ரூபா, நீங்க குடிக்காம பிள்ளைக்கி மட்டும் வாங்கி குடுக்குறதால விலை பத்துருவா… அம்மா அப்பா காசுல குடிக்கிற வரைக்கும் பிள்ளைங்க பாதி ஜூஸ்ச குடிக்கட்டும்… சம்பாரிக்க ஆரம்பிச்சதும் முழுசா வாங்கி குடிக்கட்டும்.” என்றார் ரோட்டோரம் தள்ளுவண்டியில் ஜூஸ்கடை நடத்தும் ராமச்சந்திரன்.
“ஜூஸ் விலைய கேக்கும் விதமே தெரிஞ்சுரும் யாருக்கு பாதி விலையில கொடுக்கனும் யாருக்கு முழு விலையில கொடுக்கனுமுன்னு… இத்தன வருச வியாபாரத்துல இதக்கூட கத்துக்கலன்னா எப்படி.
பெத்தவங்க.. கையில பணம் இருக்கா இல்லையான்னு தெரியாமெ பிள்ளைங்க கை நீட்டிட்டு நின்னுடும். சங்கடப்பட்டு பெத்தவங்க பைய துழாவிட்டு நிப்பாங்க.. விலைவாசி பத்தி குழந்தைக்கி தெரியுமா..? ஆசைபட்டதெல்லாம் சாப்பிட நெனைப்பாங்க. வெவரம் தெரிஞ்சா உலகம் புரிஞ்சிரும் அதுவரைக்கும் குழந்தைக்கி பாதிவிலை.”
ஹைதராபாத்தை பிறப்பிடமாகக் கொண்ட ராமச்சந்திரனுக்கு தென்மாவட்டத்து பரமக்குடிதான் சொந்த ஊரு. முப்பது வயசுல ஐதராபாத் வாழ்க்கைக்கு விடை கொடுத்தவர் அதன் பிறகு சென்னையில தள்ளுவண்டி கடை போட்டு பயணத்தை தொடங்கினார். இப்ப எழுவத்தஞ்சு வயசு கடந்தபின்னும் சோர்வடையா முகமலர்சியும் சுறுசுறுப்பும் நம்மை வெக்கப்படச் செய்யுங்கறதுல சந்தேகமில்ல.
“வாசமில்லா பூக்கடையுமில்ல.. ஈயில்லா ஜூஸ்கடையிமில்ல…” ன்னு யோசித்தேன். ஆனா இந்த ஜூஸ் கடையின் அடையாளமா தள்ளுவண்டி பக்கவாட்டுல கூட ஒரு ஈயக் காணோம்.
அவரும் அவர் தள்ளுவண்டி கடையும் எந்த பிசுபிசுப்பும் இல்லாமல் படு சுத்தமாக உழைப்பின் சாட்சியாக இருந்தது. கையிருப்பை புரிந்து கொண்டு மனிததன்மையோடு அவர் நடந்து கொண்ட விதம் கொஞ்ச நேரம் அவரிடம் பேசினால் இளைப்பாறுவதற்கு சமம் என தோன்றியது.
உங்க நல்ல மனசு வேற யாருக்கும் வாராதுண்ணே.
“அப்புடியெல்லாம் இல்லம்மா.. இரக்க குணம், நல்ல மனசெல்லாம் ஒடம்ப வருத்தி ஒழைக்கிற எல்லார்டையும் இருக்கு. அவங்களுக்கு தெரியும் பத்துரூவா சம்பாதிக்க எத்தன பாடுபடனுமுன்னு. இப்ப வியாபார ஒலகமா போச்சு… அதனால ஒன்னு வாங்கினா ஒன்னு இலவசம் ரெண்டு இலவசம்னு சனங்க மத்தியில இருந்த நல்ல மனச வியாபாரமா ஆக்கிப்புட்டாங்க.”
அடுத்து நான் வாய் திறக்கும் நேரம் பாத்து வேரு ஒருவர் வந்துட்டார்… வந்தவர் நண்பர் போலிருக்கு அவருடன் நெருக்கமாக பேசினார். ஜூசை குடித்துக் கொண்டே நலம் விசாரிப்பில் தொடங்கி அரசியல் வரை நீண்டது அவர்கள் பேச்சு.
வந்தவர் “என்னண்ணே நல்லாருக்கிங்களா. எடம் தரமாட்டேன்னு சொன்ன ஒங்காளு மூக்கறுக்குற மாறி கலைஞருக்கு எப்படி மெரினாவுல எடம் வாங்குனம் பாத்திங்கலா?”
“எங்காளுன்னு சொல்லாதிங்க தம்பி. நானு அ.தி.மு.க காரன் கெடையாது ஏஞ்சின்னம் ரெட்டை இலை அவ்ளதான்… இத பல தடவ உங்களுக்கு சொல்லிட்டேன் நான் எம்.ஜி.ஆர் ரசிகன். அதனால அந்த சின்னத்துக்கு ஓட்டு போடுறேன். கட்சி கிட்சியெல்லாம் எதுவும் கிடையாது.”
நான் போனது ஆதார் அட்டைக்கான அவசர வேலையா. சும்மாவே வாய் பாக்குற பழக்கம் எனக்கு. பேச்சு சுவாரஸ்யமா இருக்கவும் அவசர வேலைய அடுத்த நாள் தள்ளி வச்சுட்டு அங்கேயே பட்டறைய போட்டுட்டேன்.
“தம்பி! உங்களப்போல நானும் கலைஞருக்கு மெரினால எடம் கெடைக்கனும்ன்னு ஆசப்பட்டேன். அதுக்காக அவரு இறந்து போயிட்டாருன்னு ஒசத்தியா ஒத்துகிட்டேன்னு அர்தம் கெடையாது. கலைஞர் மேலையும் எனக்கு நெறையா கோபம் இருக்கு. “தேனு எடுக்குறவன் பொறங்கைய நக்காமெ இருக்க மாட்டான்”. அதுவும் அரசியல்ல வாய்ப்பு கெடைச்சா சொல்லவே வேண்டாம் மொழங்கை வரைக்கும் நக்குவாய்ங்க. இருந்தாலும் கலைஞர் அறிவும் அனுபவமும் வயசும் மக்களுக்கு கொஞ்சம் செஞ்சுருக்குன்னு ஒத்துக்கிட்டுதான் ஆகனும்.”
“எல்லாரையும் போல நீங்களும் அரசியல் ஒரு சாக்கடன்னு சொல்றீங்க அப்புடிதாணே?”
“அரசியல்வாதிங்களதான் சுத்தமில்லன்னு சொல்றேன் தம்பி. அரசியல்ல எது ஒழுங்கா நடக்குது. நான் போட்ட ‘முதல் ஓட்டே’ கள்ள ஓட்டுதான். அதுவும் அடுத்த மாநிலத்துல. இதுக்கு என்னா சொல்றீங்க.”
டிவி விவாதத்துல கோர்வையா பேசும் போது மைக்க நிறுத்திட்டாப் போல ஆச்சு ஜூஸ் கடைக்காரருக்கு. அவங்க பேச்ச கேட்ட எனக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது போல ஆச்சு.
என்ன செய்ய! விட்ட எடத்துலேருந்து தொடங்குனேன்.
“அது எப்படிண்ணே கட்சி கொள்கை எதுவும் இல்லாமெ ரெட்டலைக்கி ஓட்டு போடும் நீங்க அடுத்த மாநிலத்துல எந்த அடிப்படையில ஓட்டு போட்டிங்க.”
“நீங்களே பாக்கிறிங்க.., அந்தம்மா செத்த பிறகு அ.தி.மு.க -காரன் எந்தன தினுசுல அடிச்சுக்கிறான்னு. இவனுங்களுக்கு கட்சி விசுவாசமெல்லாம் கெடையாது. நம்ம போல மக்களுக்குதான் கட்சி, விசுவாசம் எல்லாம் இருக்கு.
ரசிகர் கூட்டத்தாலதான் அ.தி.மு.க கட்சியே தமிழ் நாட்டுல காலு ஊனுச்சு. அத பாத்துட்டு அடுத்தடுத்து எல்லாரும் சினுமாவுல இருந்தே வர ஆரம்பிச்சுட்டானுங்க. கொள்கை அரசியல் பேசி ஓட்டு வாங்கறத விட சினிமாவுல ஆடிப்பாடி வசனம் போசி சேத்து வச்சுருக்கும் ரசிகர்கள்ட ஈசியா ஓட்டு வாங்கிடலாமுன்னு நெனைக்கிறானுங்க.”
“நீங்க சொல்றத பாத்தா எம்.ஜி.ஆர்., தொடங்கி ரஜினி கமலு வரைக்கும் மக்கள ஆடிப்பாடி மயக்கிறலாங்கற நெனப்புல வாராப் போல சொல்றீங்க.”
“அண்ணே நீங்க கோபமும் விரக்தியும் கலந்து பேசுறாப்போல இருக்கு.”
“பின்னே என்னம்மா இந்த ஜூஸ் கடைய வைக்க ஆயிரத்தெட்டு ரூல்ஸ் போட்றாங்க. தள்ளுவண்டி கடையின்னு மாநகராட்சியில பதிஞ்சுருக்கனும். கடை சாமானெல்லாம் சுத்தபத்தமா இருக்குன்னு தர சான்றிதழ் வாங்கியிருக்கனும். வரி கட்டனும். இதுக்கே இத்தன கட்டுப்பாடு இருக்கு அதுக்கு உட்பட்டு நடக்குறேன். இதப்பாருங்க தர சான்றிதழ் எல்லாம் வச்சுருக்கேன்.
”ஆட்டோ இலக்கியம்” என்ற தலைப்பில் வாசகர்கள் அனுப்பியுள்ள புகைப்படங்களின் தொகுப்பு .
வெள்ளை என்பது அழகல்ல ஒரு நிறம்! ஆங்கிலம் என்பது அறிவல்ல ஒரு மொழி!
தமிழ்நாடு – மனதால் இணைவோம்!! இடம்: திருச்சி. படம் : செழியன்
போராடு ! நல்லதே நடக்கும்!! இடம்:திருச்சி. படம் : செழியன்.
எந்த நிலை வந்தாலும் வந்த நிலை மறவாதே!
விவசாயம் காப்போம்!!
இடம்: முனிசிபல் காலனி மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகே, தஞ்சை. படங்கள் : தமிழினி
இயற்கையை நாம் அழித்தால் இயற்கை நம்மை அழித்துவிடும்!
இன்று முயன்றாலும் வென்று காட்டலாம்! இடம்: திருச்சி. படம் : செழியன்
உன்னை கருவில் சுமந்தவளையும் உன் கருவை சுமப்பவளையும் கல்லறை செல்லும் வரை நேசி! (ஆட்டோவில் இடம்பெற்ற வாசகம்) இடம்: மானோஜிபட்டி, தஞ்சை. படம் : தமிழினி
குடிகாரன் சவகாசம் குலநாசம்!
தாய் தந்தை துணை! உழைத்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்!! இடம்: பாலாஜிநகர் மற்றும் அம்மாபேட்டை, தஞ்சை. படம் : தமிழினி
பேசினால் நல்லதையே பேசுங்கள் அல்லது மௌனமாக இருங்கள்!!
ஆட்டோவில் கேப்டன் பெயர் இருப்பது தற்செயலா, அவசியமா? இடம்: விளமல், திருவாரூர். படம் : தமிழினி
எல்லாரும் எல்லாமும் பெறவேண்டும். இல்லாமை இல்லாத நிலை வேண்டும். இடம்: ஈக்காட்டுத்தாங்கல் பேருந்து நிலையம், சென்னை.
படம் : தமிழன்பன்
படம்: செழியன்
படம்: தமிழினி.
வாய்ப்புக்காக காத்திருக்காதே! உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்!!
மாவீரன் பகத்சிங்! இடம்: திருச்சி மற்றும் இரயிலடி, தஞ்சை.
படங்கள் : செழியன் மற்றும் தமிழினி
கனவைக் கூட காதலித்த கலாம், என் கனவிலும் உண்டு உனக்கு இடம்,
உன் கனவெல்லாம் நினைவாகும், வருங்காலத்தில் விதையெல்லாம் பயிராகும்!
(பள்ளி முதல் பாடம் வரை எங்கும் நிறைந்திருக்கும் கலாம், ஆட்டோவில் மட்டும் இடம் பெறாமல் போய் விடுவாரா என்ன?)
இடம்: திருச்சி. படம் : பால் ராப்சன்
டெல்டா விவசாயி! (விவசாயி போல எளிமையாக இருக்கிறது) இடம்: திருவாரூர். படம் : தமிழினி
பங்காளி பாத்துவா… இவன நம்பிதான் என் குடும்பம்.
ஆட்டோவ போட்டோ எடுக்க எங்க வாசகர சேசிங் செய்ய வச்சிட்டியே… பங்கு.
இடம்: கோயம்பேடு, சென்னை. புகைப்படம் : சாக்ரடீஸ். (இனிமேல் சேசிங் செய்யாமல் சேஃபா எடுங்கள்)
மூளைக்குள் சுற்றுலா…! இடம்: சேப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விடுதி தோட்டம், சென்னை.
படம் : கடல்புறத்தான்
வரிகளே தேவையற்ற ஆட்டோ இலக்கியம்! இடம்: சிந்தாதிரிப்பேட்டை கூவம் கரையோரம், சென்னை.
படம் : கடல்புறத்தான்
அடுத்த பாகத்தில் இரு சக்கர வாகன இலக்கியம் இடம்பெறும் !
அரசியல் பொருளாதார வரலாற்றின் முக்கியமான மூன்று நூற்றாண்டுகளைப் பற்றிய அறிமுக உரையை முந்தைய பாகம் வரை பார்த்தோம். இனி நூலின் முதல் அத்தியாயம் எளிமையாக துவங்குகிறது. பண்டைய காலத்தில் பொருளாதாரத்தைப் பற்றி யாரும் எதுவும் பேசவில்லையா ? மனிதன் முதல் கோடாரியையும், வில் ஆயுதங்களையும் உருவாக்கிய நாள் தொட்டே அங்கு பொருளாதாரம் (பரிவர்த்தனை) தொடங்கினாலும் இது இன்றைய பொருளாதாரப் புரிதலில் வருமா என்பதை ஆசிரியர் விளக்குகிறார். ஆதிகாலத்தில் பொருளாதாரம் பற்றிய கருத்தை கருவடிவில் பேசிய முதல் நிபுணர் யார் ? படியுங்கள்.
இந்தப் பகுதியில் இருந்து வாசகர்களுக்கு வீட்டுப் பாடத்திற்கான கேள்விகளைத் தருகிறோம். பதில்களை மறுமொழியில் குறிப்பிடுங்கள். தெரிந்தவர்கள் அந்த பதில்கள் சரியா என்று விவாதியுங்கள். நன்றி
-வினவு
*****
அத்தியாயம் ஒன்று – தோற்றுவாய்கள்
அ.அனிக்கின்
பூர்வீக மனிதன் முதல் கோடரியையும் வில்லையும் செய்தபொழுது அது பொருளாதாரம் அல்ல; அதைத் தொழில் நுணுக்கம் என்றே சொல்ல வேண்டும்.
பிறகு ஒரு வேடர் குழு சில கோடரிகளையும் வில் ஆயுதங்களையும் கொண்டு ஒரு மானைக் கொன்றது. மான் இறைச்சியை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்; அநேகமாக, சமமாகத்தான் பகிர்ந்து கொண்டிருப்பார்கள். சிலர் அதிகமாக எடுத்துக் கொண்டிருந்தால், மற்றவர்கள் உயிர் பிழைத்திருக்க முடியாது, உயிரோடிருந்திருக்க முடியாது. அந்தக் குழுமத்தின் வாழ்க்கை மேலும் பன்முகப்பட்டதாக வளர்ச்சியடைந்தது.
ஒரு கைவினைஞன் தோன்றுகிறான்; அவன் வேடர்களுடைய உபயோகத்துக்கென்று நல்ல ஆயுதங்களைத் தயாரிக்கிறான். ஆனால் அவன் வேட்டையில் சேருவது கிடையாது. வேட்டையாடியவர்களும் மீன் பிடித்தவர்களும் இறைச்சி, மீன்களைப் பகிர்ந்து கொள்ளும் பொழுது தங்களோடு சேர்த்து அந்தக் கைவினைஞனுக்கும் ஒரு பாகத்தை ஒதுக்குகிறார்கள். பிறகு ஒரு கட்டத்தில் உழைப்பினால் ஏற்பட்ட பண்டங்களைக் குழுமங்களுக்கு இடையிலும் ஒரு குழுமத்துக்கு உள்ளேயும் பரிவர்த்தனை செய்வது ஆரம்பமானது.
இவை அனைத்தும் பூர்விகமாகவும் வளர்ச்சியில்லாமலும் இருந்த போதிலும் இவையே பொருளாதாரமாகும். ஏனென்றால் இவை பொருள்களோடு – வில், கோடரி அல்லது இறைச்சி – மக்கள் கொண்டிருந்த உறவுகள் சம்பந்தப்பட்டவை, மட்டுமல்ல; அவர்கள் சமூகத்தில் ஒருவரோடொருவர் கொண்டிருந்த உறவுகளுடனும் சம்பந்தப்பட்டிருந்தன. அதிலும் அவை பொதுவகையிலான உறவுகள் அல்ல; மக்களுடைய வாழ்க்கைக்குத் தேவையான பொருள்களின் உற்பத்தி, விநியோகத்தோடு சம்பந்தப்பட்ட பொருளாயத உறவுகள். மார்க்ஸ் இந்த உறவுகளை உற்பத்தி உறவுகள் என்று குறிப்பிட்டார்.
பொருள்வகைப் பண்டங்களின் சமூக உற்பத்தியும் பரிவர்த்தனையும், விநியோகமும், நுகர்வும், அந்த அடிப்படையில் ஏற்படுகின்ற உற்பத்தி உறவுகளின் கூட்டு மொத்தமுமே பொருளாதாரம் ஆகும். இந்தக் கருத்தின்படி பார்த்தால், பொருளாதாரம் மனித சமூகத்தைப் போலவே மிகப் பழமையானது.
பூர்விகக் குழுமத்தின் பொருளாதாரம் மிகவும் எளிமையாகவே இருந்தது. ஏனென்றால் மக்கள் உபயோகித்த கருவிகளும் மிகவும் எளிமையாக இருந்தன; அவர்களுடைய தொழில் திறனும் சுருங்கியதாகவே, குறைவானதாகவே இருந்தது. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், ஒரு சமூகத்தின் உற்பத்தி உறவுகளையும் அதன் பொருளாதாரத்தையும் வாழ்க்கையின் மற்ற அம்சங்களையும் நிர்ணயிக்கின்ற உற்பத்தி சக்திகள் பற்றாக்குறையாகவே வளர்ச்சியடைந்திருந்தன.
முதல் பொருளாதார நிபுணர் யார் ?
நெருப்பு எரிவது ஏன், இடி இடிப்பது ஏன் என்று ஆச்சரியப்பட ஆரம்பித்த முதல் மனிதன் யார்? ஒருவேளை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அது நடைபெற்றிருக்க வேண்டும். பூர்விக சமூகத்தின் பொருளாதார நிகழ்வுகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தவர்கள் யார்? அன்று அது அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் சமூகமாக, முதல் வர்க்க சமூகமாகப் படிப்படியாக மாறிக் கொண்டிருந்தது. ஆனால் இந்தச் சிந்தனைகள் ஒரு விஞ்ஞானம் அல்ல – இயற்கையையும் சமூகத்தையும் பற்றி முறைப்படி தொகுக்கப்பட்ட மனித அறிவு அல்ல; அது விஞ்ஞானமாகவும் இருக்க முடியாது.
அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் முதிர்ந்த சமூகத்தின் காலம் ஏற்படும் வரை விஞ்ஞானம் தோன்றவில்லை. அந்த சமூகம் அதிகமான வளர்ச்சியடைந்த உற்பத்தி சக்திகளை அடிப்படையாகக் கொண்டிருந்தது. நாலாயிரம் அல்லது ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சுமேரியா, பாபிலோனியா மற்றும் எகிப்து ஆகிய பண்டைக்கால அரசுகளில் வாழ்ந்த மக்கள் கணிதம் அல்லது மருத்துவத் துறையில் கொண்டிருந்த அறிவு சில சமயங்களில் நம்மை வியப்பில் மூழ்க வைக்கின்றது. பண்டைக் கால அறிவின் எச்சங்களாக நமக்குக் கிடைத்திருக்கும் மிகச் சிறந்த மாதிரிகள் பண்டைக் கால கிரேக்க, ரோமானிய மக்களுக்குச் சொந்தமானவை.
பதினேழாம் நூற்றாண்டில் அரசியல் பொருளாதாரம் என்ற பெயரோடு விஞ்ஞானத்தில் ஒரு புதிய துறை ஏற்படுவதற்கு வெகுகாலத்துக்கு முன்பே பொருளாதார வாழ்க்கையின் அம்சங்களைப் பற்றி உய்த்துணர்வதற்குத் திட்டவட்டமான முயற்சி ஆரம்பமாயிற்று. இந்த விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்த பல பொருளாதார நிகழ்வுகள் முன்பே பண்டைக்கால எகிப்தியர்களுக்கு அல்லது கிரேக்கர் களுக்குத் தெரிந்தவையே. இவை பரிவர்த்தனை, பணம், விலை, வர்த்தகம், லாபம், வட்டி ஆகியவையாகும். எல்லாவற்றுக்கும் மேலாக மக்கள் அந்தக் காலத்திலிருந்த உற்பத்தி உறவுகளின் முக்கியமான கூறுகளைப் பற்றி -அடிமை முறை பற்றி – சிந்திக்கத் தொடங்கினார்கள்.
முதலில் பொருளாதாரச் சிந்தனை என்பது சமூகத்தைப் பற்றிய சிந்தனையின் மற்ற வடிவங்களிலிருந்து தனியானதாக இருக்கவில்லை; எனவே அது முதலில் எப்பொழுது தோன்றியது என்று துல்லியமாகக் கூற முடியாது. பொருளாதார வரலாற்றுப் புத்தகங்களை எழுதியவர்கள் வெவ்வேறு முனைகளிலிருந்து எழுதத் தொடங்குவதும் ஆச்சரியமானதல்ல; சில வரலாறுகள் பண்டைக்கால கிரேக்கர்களிடமிருந்து தொடங்குகின்றன; மற்றவை பண்டைக்கால எகிப்திய கோரைப் புற்சுவடிகள், ஹாம்முராபியின் விதிகளின் ஆப்பு வடிவமுள்ள கல்லெழுத்துக்களிலிருந்து, இந்துக்களின் வேத நூல்களிலிருந்து தொடங்குகின்றன.
அரசர் ஹம்முராபி மற்றும் கல்மேல் எழுத்தாக அவரது காலத்தில் இயற்றப்பட்ட விதிகள்.
கிறிஸ்துவுக்கு முந்திய இரண்டாவது மற்றும் முதலாவது ஆயிரம் ஆண்டுகளில் பாலஸ்தீனத்திலும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களிலும் வசித்த மக்களின் பொருளாதார வாழ்க்கையைப் பற்றிய கருத்துக்களும் பொருளாதார நுண்காட்சிகளும் பைபிள் நூலில் காணப்படுகின்றன.
அமெரிக்க வரலாற்றாசிரியரான பேராசிரியர் ஜே. பேல் தமது புத்தகத்தில் பைபிளுக்கு மட்டும் ஒரு பெரிய அத்தியாயம் எழுதியிருப்பதற்கும் அந்தக் காலத்தைப் பற்றிய மற்ற எல்லா ஆதாரங்களையும் புறக்கணித்திருப்பதற்கும் அறிவுத்துறை ஆராய்ச்சிக்குச் சம்பந்தமில்லாத வேறு சூழ்நிலைகளே காரணம் என்று அறிவது அவசியம். அதாவது பைபிள் கிறிஸ்தவ மதத்தின் புனிதமான நூல்; பெரும்பான்மையான அமெரிக்க மாணவர்கள் தங்களுடைய குழந்தைப் பருவத்திலிருந்தே அதைத் தெரிந்திருப்பார்கள். எனவே நவீன வாழ்க்கையின் இந்த அம்சத்துக்கு ஏற்றவாறு ஆராய்ச்சி வளைந்து கொடுக்கிறது.
ஹோமரின் கவிதைகளில் பண்டைக்கால கிரேக்க சமூகத்தின் – பூர்விக சமூகத்தின் தேய்வு முற்றிய நிலையிலும் அடிமை உடைமைச் சமுதாயம் உருவாகிக் கொண்டிருக்கும் நிலையிலும் – மிகச் சிறப்பான இலக்கிய வர்ணனையைப் பார்க்கிறோம்.
மனிதகுலப் பண்பாட்டின் இந்த நினைவுச் சின்னங்கள் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏஜியன், அயோனியன் கடலோரங்களில் வசித்த மக்களின் வாழ்க்கை மற்றும் தத்துவஞானக் கலைக்களஞ்சியமாக இருக்கின்றன. டிராய் முற்றுகை, ஒடிசியஸின் பயணங்களைப் பற்றிய சுவை மிகுந்த கதையில் பலவிதமான பொருளாதார நுண்காட்சிகள் திறமையாகப் பின்னப்பட்டிருக்கின்றன. ஒடிசியஸ்பயணம் அடிமை உழைப்பின் குறைந்த உற்பத்தித் திறனுக்கு ஆதாரத்தைக் கொண்டிருக்கிறது:
ஆண்டை அகன்றால் அடிமை உழைப்பதில்லை கலகம் நடந்தால் மானுடம் இருப்பதில்லை ஜூபிடர் அன்றே விதித்தார்; என்றைக்கு மனிதன் அடிமை ஆனானோ அன்றைக்கே அவன் பலத்தில் பாதி மறைந்தது.(1)
ஹாம்முராபியின் விதிகள், பைபிள் மற்றும் ஹோமர் எழுதிய காவியத்தை பண்டைக்கால மக்களின் பொருளாதார வாழ்க்கையைப் பற்றிய செய்திகளைக் கூறும் ஆதார நூல்களாக வரலாற்றாசிரியரும் பொருளாதார நிபுணரும் கருதலாம். இரண்டாவதாகத்தான் அவற்றைப் பொருளாதாரச் சிந்தனையின் மாதிரிகளாகக் கருத முடியும். ஏனென்றால் பொருளாதாரச் சிந்தனை என்பது செய்முறை, தத்துவம், சூக்குமப்படுத்தல் ஆகியவற்றை பொதுவிதி வடிவத்துக்குக் கொண்டு வருவதை ஓரளவுக்கு முன்னூகிக்கிறது.
பண்டைய கிரேக்கத்தின் சமூதாய நிலைமையை தன் கவியில் பிரதிபலித்த ஹோமர்.
பிரபலமான முதலாளித்துவ அறிஞரான ஜோஸப் ஏ. ஷும் பீட்டர் (அவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர்; தன் வாழ்க்கையின் இரண்டாவது பாதியை அமெரிக்காவில் கழித்தவர்) தன து புத்தகத்தைப் பொருளாதார ஆராய்ச்சியின் வரலாறு என்று குறிப்பிட்டார்; மூலச்சிறப்புடைய கிரேக்க சிந்தனையாளர்களிடமிருந்து அதைத் தொடங்கினார்.
செனபோன்ட், பிளேட்டோ மற்றும் அரிஸ்டாட்டில் ஆகியோரது புத்தகங்கள் கிரேக்க சமுதாயத்தின் பொருளாதார அமைப்பைப் பற்றிய தத்துவ விளக்கத்துக்கான முதல் முயற்சிகளைக் கொண்டிருக்கின்றன என்பது உண்மையே. குறைவான எண்ணிக்கையிலிருந்த கிரேக்கர்களின் சிறப்பான நாகரிகத்தோடு நமது நவீன நாகரிகம் எவ்வளவு அதிகமான இழைகளினால் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை நாம் சில சமயங்களில் மறந்துவிடுகிறோம். நமது விஞ்ஞானமும் கலையும் மொழியும் பண்டைக்கால கிரேக்க நாகரிகத்தின் கூறுகள் பலவற்றை ஏற்றுக் கொண்டிருக்கின்றன.
கிரேக்கர்களின் பொருளாதாரச் சிந்தனையைப் பற்றி மார்க்ஸ் பின்வருமாறு எழுதினார்: “கிரேக்கர்கள் எப்பொழுதாவதுதான் இந்தத் துறையினுள் நுழைந்தனர் என்றாலும் மற்ற எல்லாத் துறைகளிலும் காட்டிய அதே மேதாவிலாசத்தையும் தற்சிந்தனையையும் இந்தத் துறையிலும் காட்டினர். எனவே வரலாற்று ரீதியில் அவர்களுடைய கருத்துக்கள் நவீன விஞ்ஞானத்தின் கொள்கை ரீதியான தொடக்க நிலைகளாக இருக்கின்றன.” (2)
முதலாளித்துவ அறிஞரான ஜோஸப் ஏ. ஷும் பீட்டர்
பொருளாதாரம்(வீடு, குடியிருப்பு என்பவற்றைக் குறிப்பிடுகின்ற வார்த்தையும் விதி, சட்டம் என்பவற்றைக் குறிக்கும் வார்த்தையும் சேர்ந்து பொருளாதாரத்தைக் குறிக்கும் வார்த்தை உருவாகியது) என்ற வார்த்தை செனபோன்ட் எழுதிய ஒரு சிறப்பான நூலின் தலைப்புப் பெயராகும். அதில் அவர் குடும்பம், பண்ணை ஆகியவற்றை நிர்வாகம் செய்யத் தேவையான புத்திசாலித்தனமான விதிகளை ஆராய்கிறார். அந்த வார்த்தை ‘குடும்ப நிர்வாகம் பற்றிய விஞ்ஞானம்’ என்ற பொருளைப் பல நூற்றாண்டுகள் வரை கொண்டிருந்தது.
குடும்ப நிர்வாகம் என்று சொல்லும் பொழுது நாம் தருகின்ற குறுகிய அர்த்தத்தை கிரேக்கர்கள் அதற்குக் கொடுக்கவில்லை என்பது உண்மையே. ஏனென்றால் ஒரு பணக்கார கிரேக்கரின் பண்ணை என்பது அடிமைகளை உடைமையாகக் கொண்ட மொத்தப் பொருளாதாரமாக, பண்டைக்கால உலகத்தின் நுண் மாதிரியாக இருந்தது.!
அரிஸ்டாட்டில் “பொருளாதாரம்” என்ற சொல்லை இதே பொருளில்தான் பயன்படுத்துகிறார். தம் காலத்திய சமூகத்தின் அடிப்படையான பொருளாதார நிகழ்வுகளையும் விதிகளையும் அவர்தான் முதன் முதலாக ஆராய்ந்தார். இந்த விஞ்ஞானத்தின் வரலாற்றில் முதல் பொருளாதார நிபுணர் என்று சொல்லப்படுகின்ற தகுதி அவருக்கே உண்டு.
(தொடரும்…)
அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு :முதல் தொடக்கம்: அரிஸ்டாட்டில்
அடிக்குறிப்பு:
(1) The Odyssey of Homer, London, 1806, p.256.
(2) பி.எங்கெல்ஸ், டூரிங்குக்குமறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ, 1979, பக்கம் 394 (இப்புத்தகத்தின் இரண்டாம் பகுதியின் பத்தாம் அத்தியாய்த்தை மார்க்ஸ் எழுதினார்).
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983 ஆசிரியர் : அ.அனிக்கின் மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
மாக்சிம் கார்க்கிசோபியா அதற்குள்ளாகவே வீடு வந்து சேர்ந்துவிட்டாள். அவள் உத்வேகமும் குழப்பமும் கொண்டவளாகத் தோன்றினாள். அவளது பற்களுக்கிடையில் ஒரு சிகரெட் இருந்தது.
அவர்கள் இந்தக் காயமுற்ற பையனை ஒரு சோபாவிலே படுக்கப் போட்டார்கள். பிறகு அவள் லாவகமாக அவனது கட்டை அவிழ்த்து சிகரெட் புகை கண்ணில் படியாதபடி கண்ணைச் சுருக்கி விழித்துக்கொண்டே உத்தரவிட்டுக்கொண்டிருந்தாள்:
“இவான் தனீலவிச்! அவனை இங்குக் கொண்டு வந்துவிட்டார்கள். நீலவ்னா, களைத்துப் போய்விட்டீர்களா? பயந்துவிட்டீர்களா? சரி, கொஞ்சநேரம் ஓய்வு எடுத்துக்கொள்ளுங்கள். நிகலாய்! நீலவ்னாவுக்கு ஒரு கிளாஸ் ஒயின் கொடு.”
கொஞ்ச நேரத்துக்கு முன்னர் தான் அனுபவித்த சங்கடத்தால் ஏற்பட்ட அதிர்ச்சி இன்னும் தாயை வாட்டிக்கொண்டிருந்தது. அவளுக்கு மூச்சுவிடவே சிரமமாக இருந்தது. நெஞ்சில் குத்தலான வேதனை எடுத்தது.
”என்னைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டிராதே” என்று அவள் முனகினாள். என்றாலும் அவளது உடல் முழுவதும் யாருடைய பணிவிடையையாவது எதிர்நோக்கித் தவித்தது. அன்பாதரவின் சுகத்தை நாடியது.
அடுத்த அறையிலிருந்து நிகலாய் கட்டுப்போட்ட கையோடு வந்து சேர்ந்தான். அவனோடு டாக்டர் இவான் தனீலவிச்சும் முள்ளம் பன்றியைப் போல் சிலிர்த்துக் கலைந்த தலைமயிரோடு வெளி வந்தார். விருட்டென்று இவானின் பக்கம் ஓடிச்சென்று அவனைக் குனிந்து பார்த்தார்.
”தண்ணீர்!” என்றான் அவன். ”நிறையத் தண்ணீர் கொண்டுவா. அத்துடன் கொஞ்சம் பஞ்சும், சுத்தமான துணியும் கொண்டுவா.”
தாய் சமையலறையை நோக்கி நடந்தாள். ஆனால் அதற்குள் நிகலாய் அவளது கையைப் பிடித்து அவளைச் சாப்பாட்டு அறைக்குள்ளே அழைத்துச் சென்றான். .
”அவன் சொன்னது சோபியாவிடம், உங்களிடமல்ல” என்று மெதுவாகக் கூறினான் அவன். “ரொம்பவும் நிலைகுலைந்து போய்விட்டீர்கள் என்று அஞ்சுகிறேன். அப்படியா, அம்மா?”
அவனது அன்பு ததும்பும் ஆர்வம் நிறைந்த கண்களைக் கண்டதும் தாயினால் தனது பொருமலை அடக்கி வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை.
“ஓ! என்னவெல்லாம் நடந்துவிட்டது” என்று அவள் கத்தினாள். ”அவர்கள் மக்களை அடித்தார்கள், வெட்டினார்கள்……..”
”நானும் பார்த்தேன்’ என்று கூறிக்கொண்டே, அவளுக்கு ஒரு கோப்பை ஒயினைக் கொடுத்தான் நிகலாய். “இருதரத்தாருமே தங்கள் மூளையைக் கொஞ்சம் பறிகொடுக்கத்தான் செய்தார்கள். ஆனால் நீங்கள் அதை எண்ணி அலட்டிக்கொள்ளாதீர்கள். அவர்கள் தங்கள் கத்திகளின் பின்புறத்தால்தான் தாக்கினார்கள். ஒரே ஒருவனுக்குத்தான் படுகாயம் ஏற்பட்டுவிட்டதாகத் தெரிகிறது. அதையும் அவர்கள் என் கண்முன்னாலேயே செய்தார்கள். நான் அவனைக் கூட்டத்தைவிட்டு வெளியே இழுத்து வந்துவிட்டேன்.”
நிகலாவின் குரலாலும் அந்த அறையின் வெதுவெதுப்பாலும் வெளிச்சத்தாலும் தாயின் உள்ளம் ஓரளவு அமைதி கண்டது. நன்றி உணர்வோடு அவனைப் பார்த்துக்கொண்டே அவள் கேட்டாள்.
”அவர்கள் உங்களையும் தாக்கினார்களா?”
”இது என்னால்தான் விளைந்தது. நான்தான் அஜாக்கிரதையாய் என் கையை எதன்மீதோ ஓங்கி மோதிவிட்டேன். அதனால், அந்த அடி என் கைச் சதையைப் பிய்த்தெறிந்துவிட்டது. சரி, கொஞ்சம் தேநீர் குடியுங்கள். வெளியே ஒரே குளிர். நீங்களும் மெல்லிய உடைகள்தான் அணிந்திருக்கிறீர்கள்.”
அவள் கோப்பையை எடுப்பதற்காகக் கையை நீட்டினாள். அப்போது தனது கைவிரல்களில் காய்ந்துபோன ரத்தக்கறை படிந்திருப்பதைக் கண்டாள். தன்னையறியாமலே அவள் கையை தன் மடிமீது தளரவிட்டாள். அவளது உடுப்பு ஒரே ஈரமாயிருந்தது. அவள் தன் புருவங்களை நெரித்து உயர்த்திக் கண்களை அகலத்திறந்து, தனது கை விரல்களையே பார்த்தாள். அவளது இதயம் படபடத்தது. கண்கள் இருண்டு மயக்க உணர்ச்சி ஏற்பட்டது.
“பாவெலுக்கு கூட – அவர்கள் அவனுக்கும் இப்படித்தான் செய்யக்கூடும்!”
இவான் தனீலவிச் தனது சட்டைக் கைகளைத் திரைத்துச் சுருட்டியவாறே அந்த அறைக்குள் வந்தார். வந்த விஷயத்தைக் கேட்பதற்காக வாய் பேசாமல் ஏறிட்டு நோக்கிய நிகலாயைப் பார்த்து உரத்த குரலில் பேசினார் அவர்:
”முகத்திலுள்ள காயம் ஒன்றும் மோசமாக இல்லை. ஆனால், அவனது மண்டையெலும்பு நொறுங்கியிருக்கிறது. படுமோசமாக இல்லை. இவன் ஒரு பலசாலியான பையன்; இருந்தாலும். நிறைய ரத்தத்தை இழந்துவிட்டான். நாம் இவனை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவிடுவோமா?”
“ஏன்? அவன் இங்கேயே இருக்கட்டுமே!” என்றான் நிகலாய்.
“இன்று இல்லாவிட்டால் நாளையாவது அவனை அனுப்பி வைத்தால்தான் நல்லது. ஆஸ்பத்திரியில் இருந்தானானால் என்னால் இன்னும் மிகுந்த செளகரியத்தோடு அவனைக் கவனித்துப் பார்க்க முடியும். அடிக்கடி வந்து கொண்டிருக்க எனக்கு நேரம் கிடையாது. நீ இந்த இடுகாட்டு சம்பவத்தைப் பற்றி ஒரு பிரசுரம் எழுதி வெளியிடுவாயல்லவா?”
“நிச்சயமாய்!” என்றான் நிகலாய்.
தாய் அமைதியுடன் எழுந்து சமையலறையை நோக்கிச் சென்றாள்.
”எங்கே போகிறீர்கள். நீலவ்னா?’ என்று ஒரு விசித்திரச் சிரிப்புடன் கூறினாள் அவள்.
அவள் தன்னறைக்குள் சென்று உடை மாற்றிக்கொள்ளும்போது, இந்த மனிதர்களின் அமைதியைப் பற்றியும், இந்த மாதிரியான பயங்கர விஷயங்களைக்கூட அநாயாசமாக ஏற்றுத் தாங்கும் அவர்களது சக்தியைப் பற்றியும் எண்ணி எண்ணிப் பார்த்துத் தனக்குத்தானே வியந்து கொண்டாள். இந்தச் சிந்தனைகள் அவளுக்குத் தெளிவையுண்டாக்கி அவளது உள்ளத்தில் குடிகொண்டிருந்த பயத்தை விரட்டியடித்தன. அந்தப் பையன் படுத்திருந்த அறைக்குள் அவள் நுழைந்தபோது, சோபியா பையனுடைய படுக்கைக்கு மேலாகக் குனிந்து ஏதோ பேசுவதைக் கண்டாள்.
”அபத்தம், தோழா!” என்றாள் சோபியா.
“நான் போகிறேன், உங்களுக்குத்தான் தொந்தரவு” என்று பலவீனமான குரலில் அவன் எதிர்த்துப் பேசினான்.
”பேச்சை நிறுத்து. அதுவே உனக்கு ரொம்ப நல்லது…”
தாய், சோபியாவுக்குப் பின்னால் வந்து அவளது தோளில் கையைப் போட்டுக்கொண்டு நின்றாள். அந்தப் பையனின் வெளுத்த முகத்தைப் பார்த்துப் புன்னகை புரிந்தாள்; வண்டியில் வரும்போது அவன் முனகிய பயங்கரமான விஷயங்களை கேட்டு அவள் எப்படிப் பயந்து போனாள் என்பதையும் அவளிடம் சொன்னாள். இவானின் கண்கள் ஜூர வேகத்தோடு பிரகாசித்தன. அவன் தன் நாக்கைச் சப்புக் கொட்டிவிட்டு, வெட்கம் கவிந்த முகத்தோடு பேசினான்:
”நான் எவ்வளவு பெரிய முட்டாள்!”
“சரி. நாங்கள் போகிறோம்” என்று கூறிக்கொண்டே அவனது போர்வையைச் சரி செய்தாள் சோபியா, ”நீ தூங்கு.”
அவர்கள் சாப்பாட்டு அறைக்குள் வந்தார்கள். அங்கு உட்கார்ந்து அன்று நடந்த சம்பவங்களைப் பற்றி வெகுநேரம் விவாதித்துக் கொண்டிருந்தார்கள். அன்றைய நிகழ்ச்சியை என்றோ வெகு காலத்துக்கு முன் நடந்த சம்பவத்தைப் போலக் கருதி அவர்கள் தங்களது எதிர்காலத்தை, வரப்போகும் நாட்களுக்குரிய வேலைத் திட்டத்தை வகுப்பது பற்றி மிகுந்த ஈடுபாட்டுடன் விவாதித்துக்கொண்டார்கள். அவர்களது முகங்கள் களைத்துத் தோன்றின. எனினும் அவர்களது எண்ணங்கள் மட்டும் துணிவாற்றலோடு விளங்கின. தங்களது வேலைத் திட்டத்தைப் பற்றி அவர்கள் பேசும்போது தங்களுக்குள் எழுந்த அதிருப்தியுணர்ச்சிகளை அவர்கள் மூடி மறைக்கவில்லை. அந்த டாக்டர் நாற்காலியில் நிலைகொள்ளாமல் உட்கார்ந்து நெளிந்து கொடுத்துக்கொண்டிருந்தார்.
“பிரசாரம், பிரசாரம்தான் ஒரே வழி. அது இப்பொழுது குறைச்சல்” என்று அவன் தனது கூர்மையான மெல்லிய குரலைத் தணிக்க முயன்றவாறே கூறினான். “வாலிபத் தொழிலாளிகள் சரியாக இருக்கிறார்கள். நாம்தான் பிரசாரத்தை விரிவாக்க வேண்டும். தொழிலாளர்கள் சரியாகத்தானிருக்கிறார்கள். அதுமட்டும் எனக்குத் தெரியும்.”
நிகலாய் முகத்தைச் சுழித்தவாறே அந்த டாக்டர் பேசிய மாதிரியே பேசத் தொடங்கினான்.
“ஒவ்வொரு இடத்திலிருந்தும் போதுமான புத்தகங்கள் கிடைக்கவில்லையென்று நமக்குப் புகார்கள் வருகின்றன. நமக்கோ ஒரு நல்ல அச்சகம் வைப்பதற்குக்கூட வழியைக் காணோம். லுத்மீலாவோ நாளுக்குநாள் பலவீனப்பட்டு வருகிறாள். நாம் அவளுக்கு ஏதாவதொரு வகையில் உதவாவிட்டால், அவள் பாடு மோசமாகிவிடும்.”
”நிகலாய் வெஸோவ்ஷிகோவ் என்ன ஆனான்?” என்று கேட்டாள் சோபியா.
”அவனால் நகருக்குள் வாழமுடியாது. புதிய அச்சகம் வைத்தால்தான் அவன் அதில் வேலை செய்யத் தொடங்கலாம். ஆனால், அதற்கு முன்னால், நமக்குத் தற்சமயத்துக்கு இன்னொரு ஆள் தேவை.”
”நான் செய்யமாட்டேனோ?” என்று அமைதியாகக் கேட்டாள் தாய்.
அவர்கள் மூவரும் ஒன்றும் பேசாமல் தாயையே சில கணநேரம் பார்த்தார்கள்.
“அதுவும் ஒரு நல்ல யோசனைதான்!” என்றாள் சோபியா.
”அது உங்களுக்கு மிகுந்த சிரமமான காரியம், நீலவ்னா” என்றான் நிகலாய். ‘நீங்கள் நகருக்கு வெளியே வசிக்க நேரிடும். அதனால், பாவெலைப் பார்க்க முடியாது போகும். பொதுவாகச் சொன்னால்……..”
“பாவெலை இந்தப் பிரிவு ஒன்றுமே பாதிக்காது” என்று பெருமூச்சுடன் சொன்னாள் அவள். ”உண்மையைச் சொல்லப்போனால், எனக்குக் கூட அவனைச் சந்தித்துவிட்டு வருவது என் இதயத்தையே பிழிந்தெடுப்பது மாதிரி இருக்கிறது. அவர்கள் ஒன்றுமே பேசவிடுவதில்லை. சும்மா வெறுமனே போய் முட்டாள் மாதிரி மகனையே பார்த்துக் கொண்டிருப்பதும், நாம் அவனிடம் ஏதாவது பேசிவிடப் போகிறோமோ என்ற பயத்தில் அவர்கள் நம் வாயையே பார்த்துக்கொண்டிருப்பதும்………”
கடந்த சிலநாட்களில் நடந்துபோன சம்பவங்களால் அவள் மிகவும் சலித்துவிட்டாள். எனவே நகரத்தின் நாடகம் போன்ற வாழ்வைவிட்டு வெகுதூரம் ஒதுங்கிச் சென்று வாழ்வதற்கு இதுதான் சந்தர்ப்பம் என அவளுக்குத் தோன்றியது. எனவே அதைக் கேட்டவுடன் அவள் ஆசையோடு துள்ளியெழுந்தாள்.
ஆனால் நிகலாயோ பேச்சின் விஷயத்தையே மாற்றிவிட்டான்.
“இவான். நீ என்ன யோசித்துக்கொண்டிருக்கிறாய்?” என்று அந்த டாக்டரின் பக்கம் திரும்பிக் கேட்டான் அவன்.
அந்த டாக்டர் தனது குனிந்த தலையை நிமிர்த்தியவாறே சோகத்தோடு பதில் சொன்னார்:
“நம்மோடிருப்பவர்கள் எவ்வளவு குறைந்த தொகையினர் என்பதை நினைத்துப் பார்த்தேன். நாம் இன்னும் மிகுந்த உற்சாகத்தோடு உழைக்க வேண்டும். பாவெலும் அந்திரேயும் உள்ளிருந்து தப்பியோடி வரத்தான் வேண்டும். அதற்கு அவர்களைச் சம்மதிக்கச் செய்ய வேண்டும். அவர்களைப் போன்ற உழைப்பாளிகள் உள்ளே சும்மா முடங்கி உட்கார்ந்து கொண்டிருக்கக் கூடாது.”
நிகலாய் முகத்தைச் சுழித்தான். தாயைப் பார்த்தவாறே தலையை ஆட்டினான். தன் முன்னிலையிலேயே தன் மகனைப் பற்றிப் பேசிக்கொண்டிருப்பது அவர்களுக்குச் சிரமமாயிருக்கிறது என்பதைத் தாய் கண்டுகொண்டாள். எனவே அவள் எழுந்து அந்த அறையை விட்டுத் தன் அறைக்குச் சென்றாள். அவளது மனத்தில் அவர்கள் தன்னுடைய விருப்பத்தை நிராகரித்துத்தான் விட்டார்கள் என்ற வேதனையுணர்ச்சி ஏற்பட்டு அவளை வருத்தியது. அவள் படுக்கையில் படுத்தவாறே, அந்தக் குரல்களின் உள்ளடங்கிய முணுமுணுப்பைக் கேட்டாள்; தன்னை மறந்து ஒரு பயபீதி உணர்ச்சிக்கு அவள் அடிமையானாள்.
அன்றைய தினம் முழுவதுமே அவளுக்கு ஒரே புரியாத இருள் மண்டலமாகவும், தீய சொரூபமாகவும் தோன்றியது, ஆனால் அதைப்பற்றி அவள் சிந்திக்க விரும்பவில்லை. தனது மனத்தை அலைக்கழிக்கும் எண்ணங்களை உதறித் தள்ளிக்கொண்டே, அவள் தன் சிந்தனையையெல்லாம் பாவெலை நோக்கித் திருப்பினாள். அவன் விடுதலை பெற்று வருவதைப் பார்க்க அவள் ஆவல் கொண்டாள். ஆனால் அதேசமயத்தில் அவள் பயப்படவும் செய்தாள். தன்னைச் சுற்றி நிகழும் சம்பவங்களெல்லாம் ஓர் உச்சநிலைக்கு ஆரோகணித்துச் சென்று கொண்டிருப்பதாக அவள் உணர்ந்தாள். அந்த உச்சநிலையில் ஏதோ ஒரு பெரும் மோதல் ஏற்படும் என்ற பயமும் அவளுக்கு எழுந்தது. ஜனங்களின் மெளனம் நிறைந்த சகிப்புத்தன்மை எதற்காகவோ விழிப்போடு காத்து நிற்கும் பரபரப்புக்கு இடம் கொடுத்தது. அவர்களது உத்வேகம் நன்கு மேலோங்கியிருக்கிறது. ஒவ்வொருவரும் கூரிய வார்த்தைகளைப் பேசுவதைக் கேட்டாள். எல்லாமே பொறுமையிழந்து புழுங்குவதாக உணர்ந்தாள்.
ஒவ்வொரு அறிக்கை வெளிவரும்போதும், சந்தையிலும், கடைகளிலும், வேலைக்காரர்களிடமும் தொழில் சிப்பந்திகளிடமும் உத்வேகமான வாதப்பிரதிவாதங்கள் கிளம்பி ஒலிப்பதைக் கேட்டாள். ஒவ்வொருவர் கைதியாகும் போதும், மக்களிடையே அந்தக் கைதுக்குரிய காரணத்தைப் பற்றிப் பயமும் வியப்பும் தன்னுணர்வற்ற அனுதாப வார்த்தைகளும் பரிமாறப்பட்டன. ஒருகாலத்தில் அவளை எவ்வளவோ பயமூட்டிய வார்த்தைகளை இன்று சாதாரண மக்கள் பிரயோகித்துப் பேசுவதையும் அவள் கேட்டாள். எழுச்சி, சோஷலிஸ்டுகள், அரசியல் முதலிய வார்த்தைகள். அவர்கள் அந்த வார்த்தைகளை ஏளனபாவத்தோடு சொன்னாலும், அந்த ஏளன பாவத்துக்குப் பின்னால் ஒரு தனி குறுகுறுப்புணர்ச்சியும் தொனித்தது; குரோத உணர்ச்சிக்குப் பின்னால் பய உணர்ச்சியும் தொனித்தது. அந்த வார்த்தைகளை அவர்கள் சிந்தனை வசப்பட்டவாறு பேசும்போது, அந்தச் சிந்தனையில் நம்பிக்கையும் பயமுறுத்தலும் நிறைந்து ஒலித்தன. அவர்களது அசைவற்ற கட்டுக்கிடையான இருண்ட வாழ்க்கைத் தடாகத்தில் வட்டவட்டமாக அலைகள் பெருகி விரிந்தன. தூங்கி விழுந்த சிந்தனைகள் துள்ளியெழுந்து விழிப்புற்றன. அன்றாட வாழ்க்கைச் சம்பவங்களை வழக்கம்போல் ஏற்றுக்கொள்ளும் அமைதி கலகலத்துச் சிதற ஆரம்பித்தது. இந்த மாறுதல்களையெல்லாம் அவள் மற்றவர்களைவிடத் தெளிவாக உணர்ந்தறிந்தாள். ஏனெனில் மற்றவர்களைவிட வாழ்க்கையின் துயர முகத்தை அவள்தான் நன்கு அறிந்திருந்தாள். அம் முகத்தில் சுருக்கங்கள் விழுவதையும், சிந்தனையும், எழுச்சியார்வமும் ஏற்படுவதைக் கண்டு அவளுக்கு மகிழ்ச்சியும் பயபீதியும் கலந்து ஏற்பட்டன. அவற்றில் தன் மகனது சேவையைக் கண்டதால் அவள் ஆனந்தம் அடைந்தாள். அவன் சிறையிலிருந்து தப்பி வந்தால், இவர்களுக்கெல்லாம் தலைமை வகிக்கும் ஆபத்தான பொறுப்புக்கு அவன் ஆளாவான் என்று அவள் அறிந்திருந்ததால், அவள் பயபீதியும் அடைந்தாள். அதனால் அவன் அழிந்தே போவான் என்று அஞ்சினாள்.
சமயங்களில் தன் மகனது உருவம் ஒரு சரித்திர புருஷனின் உருவம்போல் வியாபகம் பெற்று விரிந்து அவளுக்குத் தோன்றும். தான் இதுவரை கேள்விப்பட்ட நேர்மையும் தைரியமும் நிறைந்த சகல வார்த்தைகளின் உருவமாக, தான் இதுவரை கண்டு வியந்து போற்றிய சகல மக்களின் கூட்டுத் தோற்றமாக, தான் இதுவரை அறிந்திருந்த வீரமும் பிரபலமும் நிறைந்த சகல விஷயங்களின் சம்மேளனமாக, அவன் அவளுக்குத் தோற்றமளித்தான். இம்மாதிரி சமயங்களில் அவளது உள்ளத்தில் பெருமையும் அன்பும் பெருகி வழியும். அவனைப் பற்றி ஆனந்தம் கொண்டு நம்பிக்கையோடு தனக்குத்தானே நினைத்துக் கொள்வாள்:
“எல்லாம் சரியாகிவிடும் – எல்லாம் சரியாகிவிடும்!” அவளது அன்பு அவளது தாய்மைப் பாசம் ஓங்கியெழுந்து அவளது இதயத்தை வேதனையோடு குன்றிக் குறுகச் செய்யும். தாயின் பாச உணர்ச்சி தனது தீப ஒளியால் மனித உணர்ச்சியின் வளர்ச்சியைத் தடை செய்து, அதனை ஆட்கொண்டு எரித்துச் சாம்பலாக்கும். அந்த மாபெரும் உணர்ச்சியின் இடத்திலே, அவளது பயவுணர்ச்சியின் சாம்பல் குவியலுக்கிடையே அவளது மனம் ஒரே ஒரு சிந்தனைக்கு ஆளாகி உள்ளூரப் போராடிக்கொண்டிருக்கும்:
“அவன் செத்துப் போவான்… அவன் அழிந்து போவான்.”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு
கேள்வி பதில் பகுதிக்கு நண்பர்கள் பலரும் கேள்விகளை கிரமமாக அனுப்பி வருகிறார்கள். வாழ்த்துக்கள்! முடிந்த மட்டும் உடனுக்குடன் பதில் அளிக்க முனைகிறோம். அசை போட்டு எழுத வேண்டிய கேள்விகளுக்கு சற்று காலம் பிடிக்கும். இங்கே 5 கேள்விகள் இடம்பெறுகிறன. நன்றி.
நட்புடன்
வினவு
*****
கேள்வி : பாஜக-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி உதவுமா? மேலும் எதிர்க்கட்சிகளிடம் காணப்படும் ஒற்றுமை இறுதி வரை நீடிக்குமா?
-ஷாஜகான்
அன்புள்ள ஷாஜகான்,
பாரதிய ஜனதாவை வீழ்த்துவதற்கு எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணி ஓரளவிற்கே உதவும். இந்தி மாநிலங்கள் மட்டுமல்ல, கேரளா போன்ற முன்னேறிய மாநிலங்களில் கூட ஆர்.எஸ்.எஸ் முன்வைக்கும் பார்ப்பனியக் கருத்துக்கள் செல்வாக்கோடு இருக்கின்றன. இன்று வரையிலும் கூட அங்கே சபரிமலையில் பெண்கள் நுழைய முடியவில்லை.
சங்க பரிவாரத்தின் செல்வாக்கு வளர்வது என்பது தேர்தல் அரசியலை மட்டும் நம்பி இல்லை. அதற்கு வெளியே அவர்கள் மக்களிடையே கற்பனையாக முசுலீம் மக்கள் மீதான துவேசம், சாதி வெறி, பசுப் புனிதம், பாக் பயங்கரவாதம், வங்க தேச அகதிகள் என தொடர்ந்து அவதூறுகளையும் விசமப் பிரச்சாரத்தையும் திட்டமிட்டு பரப்புகிறார்கள்.
இறைவழிபாடு செய்வதோ ஒரு மதத்தை பின்பற்றுவதோ ஒரு குடிமகனின் அடிப்படை உரிமை. அந்த உரிமையை அங்கீகரிப்பதைத் தாண்டி அரசு, அரசாங்கங்களில் மதத்திற்கு எந்த இடமும் இல்லை. இதுதான் மதச்சார்பற்ற அரசின் இலக்கணம். அதை ஒழித்துக் கட்டி நேரடியாக இந்து ராஷ்டிரத்தை உருவாக்குவதே ஆர்.எஸ்.எஸ்-இன் குறிக்கோள்.
பார்ப்பனியம் என்பது சாதி, பாலினம், மத, வர்க்க ரீதியாக மக்களை பிரித்து ஒடுக்குகிறது. இதை எதிர்த்து புத்தர், சித்தர்கள், பெரியார், அம்பேத்கர், பொதுவுடமைக் கட்சிகள், திராவிட இயக்கம் என பலர் வரலாறு நெடுகிலும் போராடினர் – போராடி வருகின்றனர். இத்தகைய கருத்து ரீதியான தொடர் பிரச்சார இயக்கம், உழைக்கும் மக்களின் வாழ்வில் தலையிடும் பார்ப்பனியத்தை எதிர்த்து நடக்கும் அரசியல் ரீதியான போராட்டம். இவை எவ்வளவு அதிகம் நடக்கின்றதோ அந்த அளவுக்கு இந்துத்துவத்தின் செல்வாக்கு அகற்றப்படும். இதன் கீழ் தேர்தல் அரசியலுக்கு ஒரு பங்குண்டு அவ்வளவே.
பாஜக-விற்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கண்ட கொள்கை அடிப்படையில் ஒன்றிணைந்தால் மட்டுமே கூட்டணி ஒற்றுமை வலுவாக இருக்கும். இவர்களில் பலர் கடந்த காலங்களில் பாஜக-வுடன் கூட்டணி அமைத்திருக்கின்றனர். மேலும் பாஜக உருவாக்கியிருக்கும் ‘இந்து’ உணர்வை இவர்களும் அங்கீகரித்து அதற்கு பலியாகியும் இருக்கிறார்கள். ஆகவே மக்கள் அரங்கில் இந்துத்துவத்திற்கு எதிராக நடக்கும் போராட்டங்கள்தான் ஓட்டுக் கட்சிகளின் இந்துத்துவ எதிர்ப்பு கொள்கையையும் வலுப்படுத்தும்.
♦ ♦ ♦
கேள்வி : வினவு தளம் ஜனநாயக கொள்கைகளுக்கு எதிராக முன் வைக்கும் கருத்துக்களை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் வினவு ஜனநாயக முறைப்படி போராடுவது ஏன்?
நீதிமன்றங்களை குறை சொல்லும் வினவு நீதிமன்றங்களில் வழக்கு தொடுப்பது ஏன்?
அரசியல் கட்சிக்கும் வினவு போன்ற மாற்று ஊடகத்திற்கும் என்ன வேறுபாடு?
-ஸ்டீபன்
அன்புள்ள ஸ்டீபன்,
இப்போதிருப்பது போலி ஜனநாயகம். ஆகையால் உண்மையான ஜனநாயகத்தை வேண்டி அதை எதிர்க்கிறோம். இங்கு தாய் மொழிக்கு இடமில்லை, ஒரு கார் ஆலையில் சங்கம் கட்டக் கூட அனுமதியில்லை, கோக்கோ கோலாவை எதிர்த்து பிரச்சாரம் செய்யத் தடை, மக்களின் நிலங்கள் கார்ப்பரேட்கள் எடுப்பதை தடுக்க உரிமையில்லை, தெரிவு செய்யப்படும் எம்.எல்.ஏ, எம்.பி போன்றோருக்கு சட்டத்தை அமல்படுத்தும் உரிமையில்லை, தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை நடத்திய போலீசு குற்றவாளிகளை தண்டிப்பதற்கு சட்டப்படி வழியில்லை…….. இவையெல்லாம் போலி ஜனநாயகத்திற்கு சில சான்றுகள்.
ஜனநாயக முறைப்படி நாம் நடத்தும் போராட்டங்கள் இந்த அரசியல் சட்டப்படியே அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களோ சில நேரம் அனுமதிக்கிறார்கள். பல நேரம் கைது செய்கிறார்கள். போராட்டங்களும் நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதும் இந்த அரசமைப்பு வழங்கியிருப்பதாக சொல்லப்படும் உரிமைகள். அதை நாம் உருவாக்கவில்லை. அந்த உரிமைகள் போலியாக இருக்கிறதென்றே சொல்கிறோம். அடுத்து இந்த போராட்டங்களும், நீதிமன்ற வழக்குகளும் நாம் எதிர்பார்க்கும் உண்மையான ஜனநாயகத்தை வழங்கிவிடாது என்பதையும் சேர்த்தே மக்களிடம் கொண்டு செல்கிறோம். இது உண்மைதான் என்பதை மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதன் மூலம் அரசும் உறுதி செய்கிறது.
அப்போது சட்டத்தை மீறியும் போராடுகிறோம். தூத்துக்குடியில் 144 தடைச்சட்டம் போடப்படுகிறது. மக்கள் அதை மீறுகிறார்கள். சாலையில் போக்குவரத்தை மறிக்க கூடாது என்று சட்டம் சொல்கிறது. மக்களை அதை மீறி போராடுகிறார்கள். டாஸ்மாக் போராட்டத்தின் போது பல கடைகளை மக்கள் தீயிட்டு கொளுத்தியதை சட்ட உரிமை மீறலாக பார்க்க கூடாது என உயர்நீதிமன்றமே சட்டவிரோதமாக விளக்கம் கொடுத்தது. ஆகையால் தேவைப்பட்டால் சட்டவிரோதமாக போராடுவோம் என மக்களே உணர்ந்து விட்ட காலமிது.
வினவு ஒரு மாற்று ஊடகம் என்று சொல்லும் போதே அது ஒரு மாற்று அரசியலையும் முன்வைக்கிறது, ஆதரிக்கிறது. கார்ப்பரேட் ஊடகங்கள் அனைத்தும் பெரிய கட்சிகள் மற்றும் முதலாளித்துவ உலகின் அரசியலை முன்வைக்கின்றன. அரசியலே இல்லாமல் எந்த ஊடகமும் இல்லை. அரசியல் கட்சிகளிலும் கூட முதலாளிகளின் நலனைப் பேசும் கட்சிகள், உழைக்கும் மக்களின் விடுதலையைப் பேசும் கட்சிகள் என்று பிரிந்தே இருக்கின்றன. வினவு உழைக்கும் மக்களின் அரசியலை ஆதரிக்கும் ஒரு மாற்று ஊடகம்.
♦ ♦ ♦
கேள்வி: பத்திரிக்கை துறையில் (வினவு)வலை பின்னலை உருவாக்க ஏதெனும் வடிவம் உண்டா?
– வெங்கடேஷ்
அன்புள்ள வெங்கடேஷ்,
பத்திரிகை துறையில் ஒரு வலை பின்னலை கண்டிப்பாக உருவாக்க வேண்டும். இது காலத்தின் தேவையும் கூட. நாடு முழுவதும் மக்கள் பத்திரிகையாளர்கள் – புகைப்படக் காரர்கள் உருவாக வேண்டும். இது சாத்தியமானால் பெரும் ஊடகங்கள் செய்ய முடியாத பணியினை மாற்று ஊடகம் செய்ய முடியும்.
பத்திரிகைத் துறையில் இருக்கும் பத்திரிகையாளர்கள் கருத்து ரீதியில் மக்களுக்கு பணியாற்ற விரும்புவோர் தமது ஓய்வு நேரத்தில் இத்தகைய மாற்று ஊடகங்களுக்கு தோள் கொடுக்க வேண்டும். அதே போன்று கல்வி- சினிமா – இலக்கியம் என அனைத்து துறைகளிலும் மக்கள் நலன் பாற்பட்டு சிந்திப்போர் பணிபுரிந்தால் மீடியாவில் நாம் ஒரு வலைப்பின்னலை நிச்சயம் உருவாக்க முடியும்.
இதை எப்படி சாதிப்பது, என்ன வடிவில் என்பதெல்லாம் உங்களைப் போன்ற வாசகர்களின் பங்கேற்போடுதான் செய்ய முடியும். ஆலோசனைகளைத் தெரிவியுங்கள்.
♦ ♦ ♦
கேள்வி : இப்போதைய தலைமுறை, பெரிய கட்டுரைகளை, நூல்களை படிப்பதில் ஆர்வம், ஆற்றல் இல்லாமல் உள்ளதே, இதற்கு மாற்று என்ன?
வினவு போன்ற மாற்று ஊடகங்கள், இதை எப்படி கையாளப் போகிறார்கள்?
– வசந்தன்
அன்புள்ள வசந்தன்,
முந்தைய தலைமுறை காலத்தில் எழுத்தறிவின் சதவிதமே குறைவு. இப்போதைய தலைமுறையில் எழுதப்படிக்க தெரிந்தோர் அதிகம் என்றாலும் கூடவே திசைதிருப்பும் அறிவியல் வளர்ச்சியும் அதிகம். இணையத்தில் அதிகம் உலாவுவோர் கூட அவர்கள் நீண்ட கட்டுரைகள் படிக்கும் வழக்கும் விருப்பம் உள்ளவராக இருந்தாலும் குறிப்பிட்ட காலத்தில் அவர்களது இணைய டி.என்.ஏ-விலேயே தொடர்பற்று திரியும் நிலை உருவாகிவிடுகிறது. வேலை நிமித்தமாக இணையத்தில் இருப்போரின் கவனக்குவிப்பும் வெகுவாக குறைந்து விடுகிறது. இதை பல ஆய்வுகள் சுட்டுகின்றன.
இன்னொரு பக்கத்தில் இன்று படிக்கும், கேட்கும், பார்க்கும் தலைப்புகள் எண்ணிக்கை பிரம்மாண்டமாய் அதிகரித்திருக்கின்றன. முன்பு நாளிதழ் மட்டும் படிக்கும் வழக்கம் கொண்டிருப்போர் கூட இன்று ஒரு செய்தியை மேற்கண்ட மூன்று வடிவங்களிலும் பின் தொடர்கிறார்கள். இத்தோடு விவாதம் செய்யும் வழக்கமும் அதிகரித்திருக்கிறது.
மெரினா போராட்டத்தின் போதும் அடுத்து வந்த சில மாதங்களிலும் தமிழக மக்களிடையே அரசியல் விவாதங்கள் அதிகம் நடந்தன. தொலைக்காட்சிகளில் கூட செய்தி பார்ப்பதும், விவாதங்களை கவனிப்பதும் சற்றே அதிகரித்தன. தற்போது அந்த மாற்றம் முடிந்து இயல்பு நிலை அதாவது பொழுது போக்கு அம்சங்களை கவனிப்பது மீண்டும் வந்தாலும் முன்பிருந்ததை விட அரசியல் செய்தி படிப்போர் அதிகரித்திருக்கின்றனர்.
ஆகவே ஒரு நாட்டில் நடக்கும் போராட்டங்களும், மக்களின் வாழ்வை தீர்மானிக்கின்ற அரசியல் அம்சங்களும் கூட நீங்கள் சொல்லும் நீண்ட கட்டுரைகளை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்துகின்றன.
மேற்குலகில் தற்போது மார்க்சிய நூல்களை படிப்போர் அதிகரித்து வருகின்றனர். அவர்கள் இன்றைய வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், டிவிட்டர், ஃபேஸ்புக் தலைமுறையானாலும் அவர்களது போராட்டச் சூழல் அத்தகைய படிப்பை கோருகிறது. மார்க்சை படிப்பது என்பது நீண்ட கட்டுரைகளை படிப்பதை விட கடிமானது.
மேலும் எல்லா விசயங்களையும் நீண்ட கட்டுரைகளாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. யூ-டியூபில் பொழுது போக்கு விசயங்களே அதிகம் பார்க்கப்படுகின்றன. ஆனால் பணமதிப்பழிப்பின் போது தோழர் மருதையன் பேசிய கருப்புப்பணம் குறித்த நீண்ட உரைகள் பெரும் வரவேற்பு பெற்றன. இன்றும் கூட அந்த வீடியோக்கல் வாட்ஸ்அப் குழுக்களில் பகிரப்படுகின்றன. குறிப்பிட்ட அரசியல் சூழல், அதன் தேவையை ஒட்டி இந்த ஆழமான உரைகளோ, நீண்ட கட்டுரைகளோ மக்கள் படிப்பார்கள்.
வினவு தளத்தைப் பொறுத்த வரை குறுஞ்செய்திகள், நடுத்தரமான செய்திகள், கட்டுரைகள், ஆய்வுகள், கள ஆய்வுகள், படக் கட்டுரைகள், வீடியோ செய்திகள், உரைகள் என எல்லா வடிவங்களிலும் செயல்பட வேண்டுமென்கிறோம்.
இன்னொரு புறம் மக்களிடையே இலக்கியம், அரசியல் போன்ற துறைகளில் ரசனை, தெளிவு, விவாத அடிப்படையில் விவாதக் குழுக்கள் ஆங்காங்கே கட்டப்பட்டு அதை வளர்க்கவும் முயல வேண்டும். ஒரு நூலைப் பற்றியோ, ஒரு திரைப்பட்த்தைப் பற்றியோ தொடர்ந்து விவாதிக்கும் வழக்கத்தின் மூலமாக மக்கள் அடுத்த கட்டமாக பெரிய நூல்களை படிக்கும் மனத்திண்மையினை அடைகிறார்கள்.
சமீபத்திய ஆண்டுகளாக தமிழில் நல்ல மொழிபெயர்ப்பு நூல்களும், பொதுவான நூல்களும் அதிகம் வந்திருக்கின்றன. ஆனால் இலக்கிய எழுத்தாளர்கள் கூட சினிமா விமர்சனங்களைத்தான் அதிகம் எழுதுகிறார்கள், நல்ல நூல்களை அறிமுகப்படுத்துவதில்லை என்கிறார் முனைவர் ஆ.இரா. வெங்கடாசலபதி. உண்மைதான்.
வெண்டி டோனிகரின் “இந்துத்துவம் ஒரு மாற்று வரலாறு” நூலினை ஒவ்வொரு நகரத்திலும் ஒரு வருடம் விவாதிக்கலாம். அறிமுகப்படுத்தலாம். இது போன்று பொருளாதாரம், மார்க்சியம், வரலாறு என தமிழில் இருக்கும் நூல்களை படிக்குமாறு ஒரு அறிவியக்கம் பரவலாகாமால் மக்கள் படிப்பதற்கு முன்வரமாட்டார்கள். எதிர்காலத்தில் இந்த ஆலோசனைகளை அமல்படுத்துவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.
♦ ♦ ♦
கேள்வி : Need audio file for communism education ஆடியோவில் கம்யூனிச கல்வி தேவை!
– தீபக்
அன்புள்ள தீபக்,
நிச்சயம் செய்கிறோம். மார்க்சிய பாடங்களை நடத்துவதை நீண்டகாலமாக ஒத்திப் போட்டு வந்துள்ளோம். கூடிய விரைவில் உரை வடிவில் செய்ய முயல்கிறோம். தற்போது பொருளாதரம் தலைப்பில் ஒரு தொடரை வெளியிட்டு வருகிறோம்.
நன்றி.
♦ ♦ ♦
வினவு கேள்வி பதில் பகுதியில் நீங்களும் கேட்கலாம்: கேள்விகளை பதிவு செய்யுங்கள்
‘என் சாவுக்கு காரணம் எடப்பாடி அரசும், தமிழக போலீஸும்தான்’ – ’கஜா’ புயலில் பாதிக்கப்பட்ட இளைஞரின் ஃபேஸ்புக் வீடியோ வாக்குமூலம்!
நாகை மாவட்டம் தலைஞாயிறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் (தி.மு.க) ராஜேந்திரனின் மகன், இனியவன். இதழியல் படித்த இவர், தலைஞாயிறு பகுதியில் மக்கள் பிரச்னைகளுக்கு முன்வந்து செயல்படக்கூடியவர்.
கஜா புயலால் தலைஞாயிறு பேரழிவை சந்தித்த அந்த இரவில், அந்தந்தப் பகுதி இளைஞர்கள்தான், துடிப்புடன் செயல்பட்டு மக்களின் உயிர்களைக் காப்பாற்றினார்கள். அதில் இனியவனும் ஒருவர். புயல் அடித்து பல நாட்களாகியும் உணவின்றி, நீரின்றி, வசிப்பிடமின்றி மக்கள் பரிதவித்து நின்ற வேலையில், நிவாரணம் வழங்காத தமிழக அ.தி.மு.க. அரசை கண்டித்து பல இடங்களில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. அப்படி, தலைஞாயிறு பகுதியிலும் நடந்தது. அதில் நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்றதைப் போலவே இனியவனின் பங்கேற்றார்.
ஆனால், அமைச்சர் ஓ.எஸ்.மணியனை மக்கள் விரட்டி அடித்தப் பிறகு, நிவாரணம் கேட்டு போராடிய அத்தனை மக்களையும் மிக மோசமாக தாக்கியது தமிழக காவல்துறை. அனைத்தையும் இழந்து நடுத்தெருவில் நிற்கும் மக்களை நள்ளிரவில் தேடிப்பிடித்து கைது செய்வது, அவர்களை திருச்சி உள்ளிட்ட நெடுந்தொலைவு சிறைகளில் அடைப்பது… என இன்றுவரை சித்திரவதை தொடர்கிறது. நேற்று கூட தலைஞாயுறு அருகே உள்ள லிங்கத்தடி என்ற ஊரில் ஓர் இளைஞரை கைது செய்துள்ளனர்.
இதில் இளைஞர் இனியவனின் மீது பல பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்திருப்பதுடன் தினம்தோறும் அவரைத் தேடிச்சென்று, ‘வந்தால் என்கவுண்டரில் போட்டுவிடுவோம்’ எனவும் போலீஸ் மிரட்டி வருகிறது. ஏற்கெனவே இவரது அப்பா ராஜேந்திரனையும், அண்ணனையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இவரைத் தேடி வருகின்றனர். இதனால் அவர் ஒரு மாதத்தும் மேலாக தலைமறைவாகவே சுற்றி வருகிறார். இந்நிலையில்தான், டிசம்பர் 24-ம் தேதி, இன்று இரவு 8 மணி அளவில் தனது முகநூல் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.
அதில், கஜா புயலால் பாதிக்கப்பட்ட தன்னையும், தன் குடும்பத்தையும், தங்களைப் போன்ற பலரையும் இந்த தமிழக அரசும், காவல்துறையும் தீவிரவாதிகளைப் போல தேடி வருவதாகவும், இந்த வேதனை தாங்காமல் தான் விஷம் குடித்துவிட்டதாகவும் கூறுகிறார். கண்ணீர் மல்க பேசும் அவர், தன் மரணத்தின் மூலமாகவேனும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும், கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று கோருகிறார்.
இனியவன் எந்த ஊரில் இருக்கிறார் என்பது தெரியாத நிலையில், அவரது தற்போதைய உடல்நிலை என்ன என்பது குறித்து உடனடி விவரங்கள் கிடைக்கவில்லை. தற்போது அவரது உயிருக்கு ஆபத்து இல்லை என்றும் தகவல் வந்திருக்கிறது. இதையும் உறுதிப்படுத்த வேண்டும். போலீசோ அவரை கைது செய்து கடுமையான பிரிவுகளில் வழக்குப் போட காத்திருக்கிறது. அவரது பெற்றோருக்கு கூட அவர் எங்கிருக்கிறார் எனத் தெரியவில்லை. புயல் நிவாரணப்பணிகள் சரியாக நடக்கவில்லை என்றது கூட இந்நாட்டில் கடுமையான குற்றமாக பார்க்கப்படுகிறது என்றால் இதை விட இழிவு வேறு என்ன வேண்டும்?
*****
தலைஞாயிறு இனியன் உயிருக்கு ஆபத்து ?
தலைஞாயிறு இனியன் தலைமறைவாக இருக்க நேர்ந்துள்ளது குறித்து எங்கள் அறிக்கையில் விரிவாக எழுதியுள்ளேன். சுற்றியுள்ள மூன்று தலித் குடியிருப்புகளும் இன்று கடும் அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளன. நாங்கள் சென்றிருந்தபோதே 40 க்கும் மேற்பட்டவர்கள் கைதாகியிருந்தனர். நள்ளிரவுக் கைதுகளுக்குப் பயந்து ஆண்கள் ஊரிலேயே இருக்க முடியவில்லை. பெண்களும் இரவுகளில் கோவிலில் சென்று தஞ்சமடையும் அவலம்.
தலைஞாயிறு பேரூராட்சியின் முன்னாள் தலைவர் ராஜேந்திரன் திமுக சார்பில் நின்று வெற்றி பெற்றவர். இன்று அவரது குடும்பத்தில் அவரும் அவரது மூத்த மகனும் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். இன்னொரு மகன் இனியவன்மீது ஏகப்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து கைது செய்யத் தீவிரமாகத் தேடப்படுவதால் அவர் தலைமறைவாகி உள்ளதையும் எங்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தோம்.
அவர் அகப்பட்டால் என்கவுன்டர் செய்து கொன்றுவிடுவார்கள் என்கிற அச்சமும் பீதியும் ஊர் மக்கள் மத்தியில் பரவி இருந்ததையும் குறிப்பிட்டிருந்தோம்.
நேர்றிரவு அந்த ஊரிலிருந்தும் இதழாளர் கவின்மலரிடமிருந்தும் வந்த தொலைபேசிச் செய்திகளிலிருந்து இனியன் தற்கொலைக்கு முயன்று ஆபத்தான நிலையில் உள்ளதாகத் தெரிய வந்தது. ஆனால் அவர்களுக்கும் அவர் இருப்பிடம் தெரியவில்லை. வழக்குரைஞர்கள் தனசேகர், தை.கந்தசாமி முதலானோரும் பிற நண்பர்களும் அவரது இருப்பிடத்தைக் கண்டுபிடித்து அவரை நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சியில் உள்ளனர்.
இனியவன் மீது ஏன் இந்த ஆத்திரம்? உள்ளூர் அமைச்சர் ஓ.எஸ். மணியன் குறித்து கஜாபுயலை ஒட்டி இனியவன் பேசிய ஒரு உரை பெரிய அளவில் வைரலாகப் பரவியதுதான் காரணம் எனச் சொல்கின்றனர். அந்த உரையை நீங்கள் கவின்மலர் முகநூல் பக்கத்தில் காணலாம்.
இனியனின் உரை – சன் நியூஸ்
முன்னாள் அரசு ஊழியரும் சமூகநலச் செயல்பாட்டாளரும் உள்ளூர் CPI கட்சியின் செயலருமான சோமு.இளங்கோ அவர்களும் கூட கைது செய்யப்படலாம் என்கிற நிலையில் தொடர்பில் இல்லாமல் உள்ளார்.
புயலால் ஏற்பட்ட பாதிப்பைவிடக் கொடும் பாதிப்பாக இது உள்ளது. அரசியல் கட்சிகளும் இதைக் கண்டிக்க வேண்டும்.
உலகிற்கே அறத்தைக் கற்பித்த திருக்குறளானது தமிழ் உலகின் இணையில்லாப் படைப்பாகும். இத்தகைய பெருமை மிகு குறளினை மறைக்கும் / எதிர்க்கும் முயற்சியினைப் பார்ப்பனியமானது காலகாலமாக மேற்கொண்டுவருகின்றது. `கடவுள்` என்ற சொல்லே இல்லாத திருக்குறளினை `கடவுள் வாழ்த்து` என அதிகாரம் அமைத்து தொடங்குவதிலிருந்து இந்த அரசியல் தொடங்குகின்றது (அதிகாரங்கள் எல்லாம் பின்நாளில் வகுக்கப்பட்டதே). வள்ளுவன் குறிப்பிடுவது எல்லாம் இறைவன், தெய்வம் ஆகிய இரு சொற்களே. இங்கு `இறைவன்` என்பது இறை (வரி) அறவிடும் தலைவனை / அரசனையே குறிக்கின்றது (மக்களை இறுக்குவதால் இறை) . தெய்வம் என்பது ஒரு பாலறியாக் கிளவி. இங்கு இயற்கையோடு ஒன்றிய மூத்தோர் வழிபாடு, இயற்கை போன்றவற்றையே தெய்வம் என்பது குறிக்கும்.
இங்கு மூத்தோர் வழிபாடே ஒரு வகையில் தெய்வமாகக் காட்டப்படுகின்றது. இத்தகைய இயற்கையோடு ஒன்றிய இறைவன், தெய்வம் என்பவற்றைப் பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கியதே முதல் புரட்டு ஆகும்.
பரிமேலழகரின் உரைப்பாயிர அரசியல்:
திருக்குறள் குறிப்பிடும் அறத்துப்பாலில் அறம் என்ற சொல் முதன்மையானது. அறம் என்ற சொல்லானது அறுத்தல் என்ற வினைச்சொல்லினை அடிப்படையாகக்கொண்ட ஒரு சொல்லாகும் (அறு+அம்=அறம்). எவற்றை அறுக்க (விட்டொழிக்க) வேண்டும். இதோ வள்ளுவனே கூறுகின்றார்.
இந்த `அறம்` என்ற சொல்லிற்கு ஓரளவிற்கு சரிநிகரான சொல்லாக கிரேக்கச் சொல்லான `Ethics` காணப்படுகின்றது. `தர்மம்` என்ற வடசொல்லிற்கு நிகராக அறத்தை கருதுவது தவறு, ஏனெனில் தர்மம் ஆட்களிற்கேற்ப வேறுபடும். அதாவது ஒரு வழக்கறிஞர் தனது கட்சிக்காரரிற்காகப் பொய் சொல்லுவது தொழில் தர்மம் என்பார்கள். ஆனால், அது அறமாகாது. அறம் எப்பொழுதும் பொது நன்மை கருதியே காணப்படும். எமக்கு எது தேவையோ அதுவே தர்மமாகும் எனக் கூறுவதுபோல அறத்தை வளைக்க முடியாது. அதனால்தான் மனு சுமிர்தியினை (Manusmriti ) மனுதர்மம், மனுநீதி என்றெல்லாம் அழைப்பார்கள். ஆனால் `மனு அறம்` என அழைக்க அவர்களிற்கே நா கூசும் (அதேபோன்றே சனாதன தர்மமும்).
பரிமேலழகர் இத்தகைய சிறப்புவாய்ந்த சொல்லான அறம் என்பதற்குப் பொருந்தா விளக்கம் கொடுக்கின்றார். பரிமேலழகர் தனது உரைப்பாயிரத்தில் “அறமாவது மனு முதலிய நூல்களில் விதித்தன செய்தலும், விலக்கின ஒழித்தலும் ஆகும்” என்கின்றார். அதாவது மனுதர்மத்தில் கூறப்பட்டவையே அறம் என வேண்டுமென்றே பொய் சொல்லுகின்றார். திருக்குறள் மனுதர்மத்திற்கு காலத்தால் முற்பட்டது என்பது ஒரு புறமிருக்க; மறுபுறத்தே மனுதர்மத்திற்கும், குறள் விளக்கும் அறத்திற்குமிடையே மலைக்கும் மடுவிற்குமுள்ள வேறுபாடுகள் உண்டு. பிறப்பினடிப்படையிலான வர்ணாச்சிரம சாதிக் கோட்பாட்டினை வலியுறுத்தும் மனுநீதி எங்கே? பிறப்பொக்கும் எனப் பாடி பிறப்பிலடிப்படையிலான வேறுபாடுகளை அறவே களையும் குறள் எங்கே?
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.”– (குறள் :972)
என வேளாண்மையினைப் (கமத்தினை) புகழும் குறள் எங்கே? பயிர் செய்தலைப் பாவகரமாகப் பார்க்கும் மனுநீதி எங்கே?
இவ்வாறு திருக்குறள் குறிப்பிடும் அறத்திற்கு முற்றிலும் முரணாக மனுநீதி காணப்பட, எவ்வாறு மனுநீதி முதலிய நூல்கள் விதித்ததுதான் அறம் என பரிமேலழகர் கூறுகின்றார்? வேறு ஒன்றுமில்லை, அவருடைய பார்ப்பனச்சாதிப் பற்றே அவ்வாறு பச்சைப்பொய் சொல்லவைத்தது. இந்த பரிமேலழகர் கக்கிய நஞ்சின் நீட்சியே இன்றைய நாகசாமியின் ` Tirukkural – An Abridgement of Shaastras ` என்ற புத்தகம் ஆகும்.
திருக்குறளை திரிக்க முயலும் ஒரு ஆங்கில நூல் –
` Tirukkural – An Abridgement of Shaastras`
நாகசாமி என்பவர் Tirukkural – An Abridgement of Shaastras என்றொரு (புத்தகத்தினை) புரட்டினை எழுதியுள்ளார். அதில் மனுதர்மம் முதலிய சமசுகிரத நூல்களின் பிழிவிலிருந்தே (சாரம்சம்) திருக்குறள் தோன்றியதாக வழமையான பார்ப்பன புரட்டினை கூறியுள்ளார். மனுதர்மம் காலத்தால் திருக்குறளிற்குப் பிற்பட்டது என்று ஏற்கனவே அறிஞர்களால் சான்றுபடுத்தப்பட்டதனை அவர் கவனத்திற்கொள்ளவில்லை. நூலின் தலைப்பிலும், நூல் முழுவதுமே திருக்குறள் வடமொழி சாத்திரங்களின் வழிவந்ததே என அழுத்திக் கூறும் இவர், ஓரிடத்தில் மட்டும் இது எதிர்கால ஆய்விற்குரியது என்கின்றார்.
திருக்குறள் மீது பார்ப்பனர்களின் ஒவ்வாமை வரலாறு அறிந்ததே. “தீக் குறளை சென்று ஓதோம்” (கோள் சொல்லுதல் கூடாது) என்ற ஆண்டாள் பாடலிற்கு “திருக்குறளை ஓதவேண்டாம்” என வலியப் பொய் சொன்ன மூத்த சங்கரச்சாரியார் முதல் “முதல் பத்து குறள்களை மட்டுமே பயன்படுத்தலாம்” என்று சொன்ன செயேந்திர சங்கரச்சாரியார் ஈடாக இன்றைய நாகசாமியின் இப் புத்தகம் வரை இந்த தமிழ் வெறுப்பினைக் காணலாம். இப் புத்தகத்தின் பொய்மையினை உடைக்க சங்கரச்சாரியார் விரும்பும் முதல் பத்து குறள்களிலேயே சில குறள்களை முதலில் நாமும் அவர் விருப்பப்படி எடுத்துக்கொள்வோம்.
மனுநீதி முதலான பார்ப்பனிய சாத்திரங்கள் எல்லாவற்றுக்கும் அடிப்படை வர்ணாச்சிரம கோட்பாடே ஆகும். ரிக்வேத புருச சூத்திரத்தின் 10 வது சுலோகமான பிரம்மனின் படைப்புக் கோட்பாடே சாத்திரங்களின் அடிப்படை. இதன்படி சூத்திரன் காலிலிருந்தே பிறந்தவர்கள் எனக் கூறி தமிழர்களை இழிவுபடுத்துகின்றது ரிக்வேதம். இக் கருத்து தமிழ் மண்ணையும் வந்துசேர்ந்த காலத்திலேயே திருக்குறள் எழுதப்படுகின்றது. இப்போது முதல் பத்து குறள்களில் (பின்நாளில் கடவுள் வாழ்த்தாக்கப்பட்ட) குறள்களில் 7 குறள்களை எடுத்து, அதற்கு முனைவர் மறைமலை இலக்குவனார் கொடுத்த விளக்கங்களையே துணையாகக் கொள்ளப்போகின்றேன். இங்கு நீங்கள் கவனிக்கவேண்டிய விடயம் பின்வரும் 7 குறள்களிலும் காலின் பெருமையினைப் பேசியே வள்ளுவன் ரிக்வேத புருச சூத்திரத்திற்குப் பதிலடி கொடுக்கின்றார்.
{திருவள்ளுவர். மாண்பு உடையவர்களின் – சிறப்பு உடையவர்களின் – அடிகளைப் பொருந்தி வாழ்பவர்களே நீடு வாழ்பவர்களாம் எனவே தலையில் பிறந்ததாக ஆணவம் கொள்ளாமல் காலை வணங்க வேண்டும்}
{துன்பம் இல்லாது வாழ என்ன செய்ய வேண்டும் என்கிறார்? விருப்பு வெறுப்புடன் எதையும் – யாரையும் பார்க்காத – அணுகாத கண்ணோட்டம் உடைய விருப்பு வெறுப்பு அற்றவர்களின் அடியை ( பாதம்)வணங்க வேண்டும்}
“தனக்குவமை யில்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்ற லரிது”.(குறள் 7)
{மனத்துன்பத்தை யாரால் போக்க முடியும்? ஒப்பு நோக்குவதற்கு இணையற்ற ஆற்றோர் திருவடிகளைப் பற்றினால் அன்றி மனக்கவலைகளை மாற்ற இயலாது எனத் திருவள்ளுவர்}
{பொருட்கடலிலும் இன்பக்கடலிலும் திளைக்க வேண்டும் என்றால் அழகிய பண்புநலன்கள் உடைய அறவோர்களின் தாள் ( கால் ) பணிதல் வேண்டும் என்கிறார்} (அந்தணர் = அறவோர், பார்ப்பனரல்ல)
தலையில் பிறந்ததால் உயர்வு என்போரை அடிசாய்க்கும் வகையில் திருவள்ளுவர் மற்றொரு கருத்தைக் கூறுகிறார். என்னவென்று?
{நல்ல பண்புகளை உறைவிடமாகக் கொண்டவர்கள் – கல்விச் செல்வம் தங்கியிருப்பவர்கள் – அதிகார ஆளுமை தங்கியிருப்பவர்கள் ஆகிய இறைமையாளர்களின் அல்லது இறைவனின் அடி சேர்ந்தவர்களால் மட்டும் அவர்கள் வழிகாட்டுதலில் துன்பக்கடலைக் கடக்கமுடியும்}.
நாகசாமி .
பார்த்தீர்களா! வள்ளுவன் எவ்வாறு முதல் அதிகாரத்திலேயே ரிக்வேத புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினை காலின் பெருமை பேசி தகர்த்து எறிந்துள்ளார். இங்கு வள்ளுவன் காலின் பெருமைகளைப் பேசி சூத்திரர்களை உயர்ந்தவராகக் காட்டமுயல்கின்றார் என்பதல்ல, மாறாக முள்ளை முள்ளால் எடுப்பதுபோல கால்களின் பெருமையினை உவமையாகக் கையாண்டு புருச சூத்திர படைப்புக் கோட்பாட்டினைத் தகர்த்து எறிகின்றார். இவை எல்லாவற்றிற்றிற்கும் முத்தாய்ப்பாக அமைந்த குறள் வருமாறு
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்”.(குறள் 972)
மேற்கூறிய குறளில் `எல்லா உயிர்க்கும் பிறப்பு ஒருத் தன்மையானதே` என மேற்குறித்த குறளில் வர்ணாச்சிரமக் கோட்பாட்டினையே தகர்த்து எறிகின்றார்.
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன் உயிர்செகுத்து உண்ணாமை நன்று”(குறள் 259)
என்ற குறளின் மூலம் பார்ப்பனச் சடங்கான வேள்வியினையே (யாகம்) ஏளனம் செய்கின்றார் வள்ளுவன்.
“மறப்பினும் ஒத்துக் கொளல்ஆகும் பார்ப்பான் பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்”(குறள் 134)
என்ற குறள் வேறு பார்ப்பனர் என்ற சொல்லையே பயன்படுத்திச் சாடுகின்றார் வள்ளுவர்.
இவ்வாறு குறள்களை அடுக்கிக்கொண்டே போகலாம், விரிவஞ்சி நிறுத்துகின்றேன். இத்தகைய முழுவதும் பார்ப்பன – ஆரிய எதிர்ப்பாக அமைந்த திருக்குறளை `ஆரிய சாத்திரங்களின் சாரம்` என நூல் எழுதுபவர்களை என்ன சொல்லுவது!
இத்துடன் ஆசிரியர் அனிக்கினின் முன்னுரை முடிகிறது. இந்த நூல் முதலாளித்துவம் தோன்றி நிலைப்பட்ட மூன்று நூற்றாண்டுகளில் அரசியல் பொருளாதாரம் எனும் துறையின் அடிக்கற்கள் எப்படி தோற்றுவிக்கப்பட்டன என்பதை விவரிக்கிறது. இந்த காலகட்டத்தின் நடை உடை பாவனைகள் மட்டுமல்ல பொருளாதரத்தின் குறிப்பிட்ட நிலையும் கூட ஆரம்ப கால பொருளாதார அறிஞர்களின் சிந்தனையில் செல்வாக்கு செலுத்தின. இப்பகுதியில் ஆரம்ப ஆண்டுகளில் எந்தெந்த நாடுகளில் இருந்து அறிஞர்கள் பொருளாதாரத்தை பேசினர், அவர்களின் பங்கு என்ன என்பதை சுருக்கமாக அறியத் தருகிறார் ஆசிரியர். இதை நூலில் விரிவாக காண இருக்கிறோம். இதற்கு அடுத்த பகுதியில் இருந்துதான் இந்த நூலின் முதல் அத்தியாயம் துவங்குகிறது. அதில் பூர்வீக மனிதன் செய்த முதல் கோடரி, வில்லிலிருந்து ஆசிரியர் கதை சொல்ல துவங்குகிறார்.
மூன்று நூற்றாண்டுகள்
அ.அனிக்கின் பொருளாதார அறிஞர்களின் கருத்துக்கள் தங்கள் நாடுகளின் சமூக மற்றும் பொருளாதாரத்தின் வளர்ச்சி மட்டத்தினால் மிகப் பெரிய அளவுக்கு நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே இந்தப் புத்தகத்தில் அவர்களுடைய வாழ்க்கை மற்றும் பணிகளைப் பற்றிய வர்ணனையில் அந்தக் காலகட்டத்தில் அந்த நாடுகளில் நிலவிய பொருளாதாரக் கூறுகளைப் பற்றிய சுருக்கமான உருவரையை வாசகர் காண்பார்.
பதினேழாம் நூற்றாண்டு முதல் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை அரசியல் பொருளாதாரத்தின் முன்னேற்றம் ஒரு புதிய சமூக அமைப்பின் வளர்ச்சியினால், அதாவது அந்த சமயத்தில் முற்போக்குடையதாக இருந்த முதலாளித்துவம் என்ற சமூக அமைப்பினால் முன்நிர்ணயம் செய்யப்பட்டது. சிறந்த திறமையும் சக்தி மிக்க ஆளுமையும் கொண்ட நபர்கள் மாபெரும் சிந்தனையாளர்களாகத் தோன்றினார்கள்.
மூன்று நூற்றாண்டுகளைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் ஒரு காட்சியை நாம் ஒரு வினாடி கற்பனை செய்து பார்ப்போம். அவர்களிடம் எவ்வளவு வேறுபாடுகளைக் காண்கிறோம்!
அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கிலாந்தைச் சேர்ந்தவர்கள். ஆனால் பிரெஞ்சுக்காரர்களும் ஓரளவுக்கு இருக்கிறார்கள். இது ஆச்சரியமல்ல. அன்று இங்கிலாந்து முன்னணியிலிருந்த முதலாளித்துவ நாடு; மார்க்ஸ் வாழ்ந்த காலத்தில் கூட அரசியல் பொருளாதாரம் என்பது மிகவும் அதிகமான அளவுக்கு இங்கிலாந்தின் விஞ்ஞானமாகவே கருதப்பட்டது. பிரான்சிலும் கூட மற்ற நாடுகளைக் காட்டிலும் சீக்கிரமாகவே முதலாளித்துவம் வளர்ச்சியடைய ஆரம்பித்தது; ‘அரசியல் பொருளாதாரம்’ என்ற வார்த்தையே முதலில் பிரெஞ்சு மொழியில்தான் ஏற்பட்டது. இந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த பொருளாதார அறிஞர்களில் அமெரிக்கர்கள் குறைவாகவே இருக்கிறார்கள்; ஆனால் அறிவுசான்ற மேதையான பிராங்கிளின் அவர்களில் ஒருவர்.
முதல் பொருளாதார நிபுணர்கள் மார்க்சின் வார்த்தைகளில் ”தொழில் செய்பவர்களும் இராஜீயவாதிகளுமாக” இருந்தது வழக்கமானதே. பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் அரசு நிர்வாகத்தின் செய்முறைத் தேவைகளே பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றிச் சிந்திக்குமாறு அவர்களைத் தூண்டின.
மான்கிரெட்டியேன் (வலது) ஜார்ஜ் வாக்கர் மற்றும் வில்லியம் லெவிஸ் (இடது)
அங்கே ஷேக்ஸ்பியரின் சமகாலத்தவர்கள் இருக்கிறார்கள். நீண்ட தலை முடியோடு சரிகை உடையணிந்த பெருந்தகையினரையும் கச்சிதமாகவும் கண்ணியமாகவும் உடையணிந்த, முதலாளித்துவத் திரட்டலின் ஆரம்பக் காலத்தைச் சேர்ந்த வியாபாரிகளையும் பார்க்கிறோம். இவர்கள் அரசர்களுக்கு ஆலோசனை சொல்கின்றவர்கள் – வாணிப ஊக்கக் கொள்கையினரான மான்கிரெட்டியேன், தாமஸ்மான் ஆகியோர்.
இன்னொரு கோஷ்டி, இவர்கள் மூலச் சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைத் தோற்றுவித்தவர்களான பெட்டி, புவாகில்பேர் மற்றும் ஆடம் ஸ்மித்தின் இதர முன்னோடிகள். தலையில் பெரிய டோபாவும் நீண்ட கோட்டும் உள்ளே திருப்பிவிடப்பட்ட அகன்ற கைகளும் கொண்ட உடைகளை அணிந்திருக்கிறார்கள். இவர்கள் தொழில்முறையில் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபடவில்லை; ஏனென்றால் அப்படிப்பட்ட ஒரு தொழில் இன்னும் தோன்றவில்லை. பெட்டி – ஒரு மருத்துவர்; தோல்வியடைந்த அரசியல்வாதி. புவாகில்பேர் -ஒரு நீதிபதி. கான்டில்லான் – ஒரு வங்கி முதலாளி. லாக் – ஒரு பிரபலமான தத்துவஞானி. அவர்கள் அரசர்களிடமும் அரசாங்கங்களிடமும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பவர்கள். இப்பொழுது அறிவு வளர்ச்சிபெற்று வருகின்ற பொதுமக்களுக்காகவும் எழுத ஆரம்பித்திருக்கிறார்கள். இவர்கள் இந்தப் புதிய விஞ்ஞானத்தைப் பற்றிய தத்துவப் பிரச்சினைகளை முதல் தடவையாக எழுப்புகிறார்கள். இவர்களில் பெட்டி குறிப்பிடத்தக்கவர். அவர் சிறந்த சிந்தனையாளர் மட்டுமல்ல; தெளிவும் முனைப்பும் கொண்ட தற்சிந்தனையாளர்.
ஜான் லோ
இதோ சுறுசுறுப்புமிக்க ஜான் லோ. இவர் திட்டங்கள் தயாரிப்பதில் நிபுணர்; வீர சாகசக்காரர்; காகிதப் பணம் வெளியிடலாம் என்பதை முதலில் ” கண்டுபிடித்தவர்”; பணவீக்கத்தின் முதல் தத்துவாசிரியர் மட்டுமல்ல, அதை நடைமுறையில் பிரயோகித்தவர். லோவின் முன்னேற்றமும் வீழ்ச்சியும் பதினெட்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பிரெஞ்சு வரலாற்றின் உயிர்க்களை ததும்பும் பக்கங்களில் ஒன்றாகும்.
மோலியேர் அல்லது ஸ்விப்டின் படங்களில் நாம் காண்பது போன்ற பெரிய டோபாக்களுக்கு பதிலாகக் குட்டையான, முகப் பூச்சு தடவிய டோபாக்களைப் பார்க்கிறோம். இவற்றில் நெற்றியின் மீது இரண்டு முடிச்சுருள்கள் தொங்குகின்றன. பின்னங்காற் சதைகளை வெண்மையான பட்டுக் காலுறைகள் மூடியிருக்கின்றன. இவர்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்த பிரெஞ்சுப் பொருளாதார நிபுணர்களான பிஸியோகிராட்டுகள், அறிவியக்கத்தின் மாபெரும் தத்துவஞானிகளின் நண்பர்கள். பிரான்சுவா கெனே அவர்களின் அங்கீகரிக்கப்பட்ட தலைவர். அவர் தொழிலால் மருத்துவர்; விருப்பத்தினால் பொருளாதார நிபுணர். இன்னொரு சிறந்த அறிஞர் டியுர்கோ ; புரட்சிக்கு முந்திய பிரான்சின் மிகச்சிறந்த முற்போக்கான அரசியல்வாதிகளில் ஒருவர்.
ஆடம் ஸ்மித்… அவர் புகழ் ருஷ்யாவில் மிக அதிகமாகப் பரவியிருந்தது. அதனால்தான் புஷ்கின் தன்னுடைய எவ்கேனிய் ஒநேகின் என்ற கவிதை நாவலில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருபதுகளில் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒரு இளைஞனைச் சித்திரிக்கும் பொழுது பின்வருமாறு எழுதினார்:
ஆடம் ஸ்மித்திடம் அறிவைத் தேடினார்
பொருளியலில் அவர் புலியானார்.
தங்கத்தின் பேருதவி இல்லாமல்
அரசுகள் வளமாக ஆரோக்கியமாக
இருப்பது எப்படி என்பதை
அவர் அழகாகச் சொல்லுவார்.
அந்த இரகசியம் என்ன? ஆதாரமானமூலப்பொருட்கள்; அவை
அங்கே செல்வத்தைக் குவிக்கின்றன.(1)
ஸ்மித்தின் வாழ்க்கை அநேகமாக நியூட்டனின் வாழ்க்கையைப் போன்றதாகும். அதில் வெளியே நடைபெறுகின்ற சம்பவங்கள் குறைவு; ஆனால் அதிகத் தீவிரமான அறிவுசார்ந்த வாழ்க்கை உள்ளே இருக்கிறது.
ஸ்மித்தைப் பின்பற்றியவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அரசியல் பொருளாதாரத்தில் ஈடுபடுவது என்றால் ஸ்மித்தைப் பின்பற்றுவது என்றுதான் அர்த்தம். அந்த மாபெரும் ஸ்காட்லாந்துக்காரரை ”சரி செய்ய” (அதாவது குறைகளை அகற்றுவது என்ற அர்த்தத்தில் மட்டுமல்லாமல் அரசியல் ரீதியாகச் “சரியான து” என்ற அர்த்தத்தில்) ஆரம்பித்திருந்தார்கள். இந்தப் பணியை பிரான்சில் ஸேய், இங்கிலாந்தில் மால்தஸ் போன்றவர்கள் செய்தனர். பல்கலைக் கழகங்களில் அரசியல் பொருளாதாரத்தைக் கற்பிக்கத் தொடங்கினர்; பணக்காரக் குடும்பங்களைச் சேர்ந்த இளைஞர்களின் கல்வி வளர்ச்சிக்கு அது ”அவசியமானது” என்ற நிலை ஏற்பட்டது.
இப்பொழுது செல்வம் படைத்த வங்கிக்காரரும் சுயமாகக் கல்வி கற்ற மேதையுமான டேவிட் ரிக்கார்டோ காட்சியில் தோன்றுகிறார். இது நெப்போலியன் யுகம். எனவே அவர் தலையில் டோபா காணப்படவில்லை. பழைய காலத்து நீளமான கோட், முழங்கால் வரை கால் லேசு களுக்கு பதிலாக அவர் உள்கோட்டும் நீளமான, உடலுடன் ஒட்டிய குறுங்கால் சட்டையும் அணிந்திருக்கிறார். முதலாளித்துவ மூலச்சிறப்பான அரசியல் பொருளாதாரத்தின் வளர்ச்சியை ரிக்கார்டோ முடித்து வைத்தார். முதலாளித்துவ சமூகத்தில் முதலாளிகள், தொழிலாளர்கள் என்ற இரண்டு முக்கியமான வர்க்கங்களின் நலன்களுக்கிடையே உள்ள போராட்டத்தை அவர் சுட்டிக் காட்டினார். ஆனால் அவருடைய வாழ்நாளுக்குள்ளாகவே அவர்மீது தாக்குதல்கள் தொடங்கிவிட்டன.
ரிக்கார்டோவைப் பின்பற்றியவர்களை வெவ்வேறான பல குழுக்களாகப் பிரிக்கலாம். ஒரு பக்கத்தில் சோஷலிஸ்டுகள் அவருடைய போதனையை முதலாளி வர்க்கத்துக்கு எதிராக உபயோகிப்பதற்கு முயற்சித்தார்கள். மறுபக்கத்தில் முதலாளித்துவ விஞ்ஞானத்தில் ரிக்கார்டோவின் போதனையின் மிச்சத்தில் கொச்சையான அரசியல் பொருளாதாரம் வளர்ச்சியடைந்தது. கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்சின் பணிகள் ஆரம்பமான பத்தொன்பதாம் நூற்றாண்டின் நாற்பதுக்களை நாம் நெருங்கி வருகிறோம்.
மூலச்சிறப்புடைய பொருளாதார அறிஞர்கள் முதலாளி வர்க்கத்தின் மிக முற்போக்கான பகுதியின் கருத்துக்களை எடுத்துக் கூறும்பொழுது இங்கிலாந்தில் உறுதியாகவும் பாதுகாப்பாகவும் இடம் பிடித்திருந்த, பிரான்சில் பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசியில் ஏற்பட்ட புரட்சி வரை மேலாதிக்கம் வகித்த நிலப்பிரபுத்துவ, நிலவுடமையாளர்களான பிரபுக்களோடு மோதிக்கொண்டார்கள். பிரபுக்களின் நலன்களுக்குத் துணையாக இருந்த அரசுடனும் நாட்டிலிருந்த திருச்சபையோடும் மோதிக் கொண்டார்கள். முதலாளித்துவ அமைப்பிலிருந்த ஒவ்வொன்றையும் அவர்கள் அங்கீகரித்தார்கள், ஏற்றுக் கொண்டார்கள் என்று ஒருபோதும் சொல்ல முடியாது. எனவே பல பொருளாதார நிபுணர்கள் தங்களுடைய வாழ்க்கையில் எதிர்ப்பு, கலகம், போராட்டம் ஆகியவற்றைச் சந்தித்தனர். ஸ்மித் எவ்வளவோ ஜாக்கிரதையானவர்தான்; ஆனால் அவரும் பிற்போக்கு சக்திகளால் தாக்கப்பட்டார். மார்க்சுக்கு முந்திய காலத்தைச் சேர்ந்த சோஷலிஸ்டுகளில் உயர்ந்த கொள்கைகளையும் தனி முறையாகவும் பொது வாழ்க்கையிலும் அதிகமான துணிச்சலையும் கொண்ட பலரைச் சந்திக்கிறோம்.
இங்கே பரிசீலிக்கப்படும் காலகட்டத்தின்போது ருஷ்யாவில் சில துணிச்சலான தற்சிந்தனையாளர்கள் தோன்றினார்கள் என்ற போதிலும், இந்தப் புத்தகத்தில் ருஷ்யாவின் பொருளாதாரத் தத்துவத்தின் முன்னோடிகளைப் பற்றிச் சொல்லப் போவதில்லை. ருஷ்யாவில் மாபெரும் பீட்டர் காலகட்டத்தைச் சேர்ந்த அருமையான எழுத்தாளரும் விஞ்ஞானியுமான இவான் பொசோஷ்கோவை (1652-1726) மட்டும் இங்கே குறிப்பிடுவது போதுமான து. ருஷ்யாவில் பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி விசேஷமான கவனம் செலுத்தி எழுதப்பட்ட முதல் கட்டுரையை இவர் எழுதினார்; புரட்சிகரமான அறிவியக்கத்தினரும், “பீட்டர்ஸ் பர்க்கிலிருந்து மாஸ்கோவுக்கு ஒரு பயணம்” என்ற பிரபலமான புத்தகத்தின் ஆசிரியரும், அந்தப் புத்தகத்தில் நிலவுடமையாளர்களையும் முடியாட்சியையும் கூட விமர்சனம் செய்திருந்தவருமான அலெக்ஸாந்தர் ராடிஷெவ் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளில் அதிகமான கவனம் செலுத் தினார்.
ருஷ்யாவின் புரட்சிகர இயக்கத்தில் பங்கு கொண்டவர்களான டிசம்பரிஸ்டுகள் 1825 டிசம்பர் மாதத்தில் ஜாருக்கு எதிராக எழுச்சியை ஏற்படுத்த முயற்சித்தார்கள். இவர்கள் சில முக்கியமான பொருளாதாரப் புத்தகங்களை எழுதினார்கள். இவற்றில் நிக்கலாய் துர்கேனிவ் (1789 – 1871), பாவெல் பெஸ்டெல் (1793-1826), மிஹயீல் ஒர்லோவ் (1788-1842) எழுதிய புத்தகங்கள் குறிப்பிடத்தக்க வகையில் சிறந்து விளங்கின. மாபெரும் ருஷ்ய எழுத்தாளரும் புரட்சிகரமான ஜனநாயகவாதியுமான நிக்கலாய் செர்னிஷேவ்ஸ்கி (182 8-1889) மிகவும் ஆழமான பொருளாதாரச் சிந்தனையாளர்; முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் சிறப்புமிக்க விமர்சகர். அவருடைய விஞ்ஞானக் கட்டுரைகளையும் நடைமுறைப் பணிகளையும் மார்க்ஸ் மிகவும் உயர்வாகக் கருதினார்.
எனினும் பதினெட்டாம் நூற்றாண்டிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் ருஷ்யா பொருளாதார வளர்ச்சியில் மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட மிகவும் பின்தங்கியிருந்தது. பண்ணையடிமை முறை இன்னும் நீடித்தது; முதலாளித்துவ உற்பத்தி உறவுகள் இன்னும் கருவடிவத்தில் மட்டுமே உருவாகியிருந்தன. எனவே ருஷ்ய பொருளாதாரச் சிந்தனை வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்குத் தனித்தன்மையைக் கொண்டிருந்தது. அதே சமயத்தில் மார்க்சின் பொருளாதாரத் தத்துவம் என்ற விதை ருஷ்யாவின் செழிப்பான மண்ணில் விழுந்து சீக்கிரமாக வேரூன்றியது. “மூலதனம்” முதன் முதலில் மொழிபெயர்க்கப்பட்டது ருஷ்ய மொழியில்தான். கீவ் நகரத்தைச் சேர்ந்த பேராசிரியர் என்.லீபெர் (1844-1888) மார்க்சின் போதனைகளுக்கும் ஸ்மித் மற்றும் ரிக்கார்டோவின் கோட்பாடுகளுக்கும் உள்ள தொடர்பை முதலில் ஆராய்ந்த சிலரில் ஒருவராவார்.
அரசியல் பொருளாதாரத்தைப் பற்றி ஆழமாக எழுதப்பட்டிருக்கும் சில புத்தகங்களைப் படிப்பதற்கு ”ஒட்டகத்தின் சகிப்புத் தன்மையும் ஞானியின் பொறுமையும்” அவசியம் என்று ஹெய்ல்ப்ரோனர் கூறுவார். வாசகர் இந்தப் புத்தகத்தைப் படிக்க அந்த அளவுக்குப் பாடுபடத் தேவையிருக்காது என்று நான் நம்புகிறேன்.
எனவே அடிமைகளை உடைமையாகக் கொண்டிருந்த சமூகத்தின் அரசியல் பொருளாதாரத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் அரசியல் பொருளாதாரம் வரையிலும் நமது ஆராய்ச்சிப் பயணத்தைச் செய்வோம். இந்த நீண்ட பயணத்தில் முக்கியமான இடங்கள் சிவற்றில் நாம் தங்கிச் செல்ல வேண்டியிருக்கும்.
(தொடரும்…)
அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : அத்தியாயம் ஒன்று: தோற்றுவாய்கள்
அடிக்குறிப்பு:
(1) A. Pushkin, Eugene Onegin, N.Y., 1963, p.8
மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 41 (தொடர்ச்சி)
மாக்சிம் கார்க்கிதாய் ஒருபுறமாக நெருக்கித் தள்ளப்பட்டாள். அவள் பயத்தால் ஒரு சிலுவையின் மீது போய்ச் சாய்ந்து ஏதோ ஓர் அடியை எதிர்நோக்கி கண்களை மூடி நின்றாள். குழம்பிப்போன குரலோசை அவளது காதுகளைச் செவிடுபடச் செய்தது. பூமியே அவளது காலடியை விட்டு அகன்று செல்வதாக ஒரு பிரமை. பயத்தினால் அவளுக்கு மூச்செடுக்கவே முடியாமல் திக்குமுக்காடியது. போலீஸ் விசிலின் சப்தம் ஆபத்தை அறிவித்து ஒலித்தது. முரட்டுக் குரல்கள் உத்தரவு போட்டன. பெண்களின் கூச்சல் பீதியடித்துக் கதறின; வேலிக் கம்பிகள் முறிந்து துண்டாயின. கனத்த பூட்ஸ் காலடிகள் வறண்ட பூமியில் ஓங்கியறைந்து ஒலித்தன. இந்தக் களேபரம் அதிக நேரம் நீடித்தது. எனவே அவள் இந்தப் பயபீதியால் அஞ்சி நடுங்கிப்போய் கண்களை மூடியவாறே அதிக நேரம் நின்று கொண்டிருக்க இயலவில்லை.
அவள் ஏறிட்டுப் பார்த்தாள். கூச்சலிட்டுக் கொண்டும் தன் கைகளை முன்னே நீட்டிக்கொண்டும் பாய்ந்து ஓடினாள். கொஞ்ச தூரத்தில், சமாதிக் குழிகளுக்கு இடையேயுள்ள குறுகிய சந்தில், போலீசார் அந்த நீண்ட கேசமுடைய இளைஞனைச் சுற்றி வளைத்துக் கொண்டு நின்றார்கள். அவனைக் காப்பாற்றுவதற்காக நாலாபுறத்திலிருந்தும் சாடி முன்னேறி வரும் ஜனங்களை அடித்து விரட்டிக் கொண்டிருந்தார்கள். உரிய வாள்கள் மனிதத் தலைகளுக்கு மேலாகப் பளபளத்து மின்னி திடீரெனக் கூட்டத்தினர் மத்தியில் குதித்துப் பாய்ந்தன. ஒடிந்த வேலிக் கம்பிகளும், கம்புகளும் ஆயுதங்களாகப் பயன்படுத்தப்பட்டன. கூச்சலிடும் ஜனங்கள் வெளுத்த முகமுடைய அந்த இளைஞனைச் சுற்றிலும் வெறியாட்டம் ஆடிக்கொண்டு குமைந்து கூடினார்கள். இந்த வெறியுணர்ச்சிக் களேபரப் புயலுக்கு மத்தியில் அந்த இளைஞனது பலம் வாய்ந்த குரல் ஓங்கி ஒலித்தது:
”தோழர்களே! உங்கள் சக்தியை ஏன் விரயம் செய்கிறீர்கள்?”
அவனது வார்த்தைகள் தெளிவு தருவனவாக ஒலித்தன. ஜனங்கள் தங்கள் கைகளிலிருந்த கழிகளையும் கம்புகளையும் விட்டெறிந்துவிட்டு, ஒருவர் பின் ஒருவராக ஓட ஆரம்பித்தார்கள். ஆனால் தாயோ ஏதோ ஒரு தடுக்க முடியாத சக்தியால் தூண்டப்பெற்று முன்னோக்கி முண்டிச் சென்று கொண்டிருந்தாள். பின்னால் சரிந்துபோன தொப்பியோடு நிகலாய் இவானவிச் அந்த வெறிகொண்ட ஜனக்கூட்டத்தை விலக்கித் தள்ளிக் கொண்டிருப்பதை அவள் கண்டாள்.
”உங்களுக்கு என்ன பைத்தியமா? அமைதியாயிருங்கள்!” என்று கத்தினான் அவன்.
அவனது ஒரு கை செக்கச் சிவந்து காணப்படுவதாகத் தாய்க்குத் தோன்றியது.
“நிகலாய் இவானவிச் இங்கிருந்து போய்விடுங்கள்” என்று அவனை நோக்கி ஓடிக்கொண்டே கத்தினாள் தாய்.
“நீங்கள் எங்கே போகிறீர்கள்? அவர்கள் உங்களைத் தாக்குவார்கள்”
அவளது தோள்மீது ஒரு கரம் விழுந்தது. திரும்பினாள்; அவளுக்கு அடுத்தாற்போல் தலையிலே தொப்பியற்றுக் கலைந்துபோன தலைமயிரோடு சோபியா நின்றுகொண்டிருந்தாள்; அவள் ஒரு பையனைத் தன் கையில் பிடித்துக்கொண்டு நின்றாள். அந்தப் பையன் இன்னும் வாலிப வயதை எட்டிப்பிடிக்காத, பால்மணம் மாறாதவனாயிருந்தான். அவன் தன் முகத்திலுள்ள ரத்தத்தைத் துடைத்துக்கொண்டே, துடிதுடிக்கும் உதடுகளால் முணுமுணுத்துக் கொண்டிருந்தான்:
”என்னைப் போகவிடுங்கள் …… எனக்கு ஒன்றுமில்லை …..”
”இவனைப் பார்த்துக்கொள்ளுங்கள், நம் வீட்டுக்குக் கொண்டு போங்கள். இதோ கைக்குட்டை; அவன் முகத்தில் ஒரு கட்டுப்போடுங்கள்’ என்று படபடத்துக் கூறினாள் சோபியா. பிறகு அவள் அந்தப் பையனின் கையைத் தாயின் கையில் பிடித்து ஒப்படைத்துவிட்டு ஓடினாள். ஓடும்போதே சொன்னாள்:
“சீக்கிரமாகப் போய்விடுங்கள். இல்லையென்றால் அவர்கள் உங்களைக் கைது செய்துவிடுவார்கள்”
இடுகாட்டின் நாலாபுறங்களிலும் ஜனங்கள் சிதறியடித்து ஓடினார்கள், போலீஸ்காரர்கள் சமாதி மேடுகளின் மேலெல்லாம் ஏறிக் குதித்து ஓடினார்கள். அவர்களது நீண்ட சாம்பல் நிறச் சட்டைகள் முழங்கால் வரையிலும் தொங்கி, முட்டிக் கால்களைத் தட்டின, அவர்கள் தங்கள் வாள்களைச் சுழற்றிக்கொண்டும். வாய்க்கு வந்தபடி சத்தமிட்டுக்கொண்டும் தாவித் தாவிப் பின்தொடர்ந்தார்கள். அந்தப் பையன் அவர்களை உர்ரென்று முறைத்துப் பார்த்தான்.
”சீக்கிரம், சீக்கிரம், புறப்படு” என்று அவனது முகத்தைக் கைக்குட்டையால் துடைத்துக்கொண்டே கத்தினாள் தாய்.
“என்னைப் பற்றிக் கவலைப்படாதே — இது ஒன்றும் வலிக்கவில்லை” என்று முணுமுணுத்துக்கொண்டே அவன் வாயிலிருந்த ரத்தத்தைக் கக்கினான். “அவன் வாளின் கைப்பிடியால் என்னை ஓர் அடி கொடுத்தான். ஆனால் பதிலுக்கு என்னிடம் அவனும் வாங்கிக் கட்டிக்கொண்டான். நான் ஒரு கழியினால் அவனை ஒரு விளாசு விளாசினேன்; பயல் கதறி ஊளையிட்டான். நீங்கள் கொஞ்சம் பொறுங்கள்” என்று அவன் தனது ரத்தம் தோய்ந்த முஷ்டியை உலுக்கியாட்டிக் கொண்டே கத்தினான். “வரப்போகிற சண்டையை நினைத்துப் பார்த்தால், இது என்ன பிரமாதம்? நாங்கள் —- தொழிலாளர்களாகிய நாங்கள் அனைவரும் கிளர்ந்தெழும்போது, உங்களையெல்லாம் சண்டை போடாமலே துடைத்துத் தூர்த்துவிடுகிறோம்!”
”புறப்படு சீக்கிரம்” என்று அவனை அவசரப்படுத்திக்கொண்டே, இடுகாட்டின் வேலிப்புறமாகவுள்ள சிறு வாசலை நோக்கி நடந்தாள் தாய். வெளியேயுள்ள பரந்த வயல்வெளியில் போலீஸ்காரர்கள் பதுங்கிக் காத்திருந்து, ஜனங்கள் இடுகாட்டைவிட்டு வெளியே வந்ததும், பாய்ந்து தாக்குவதற்குத் தயாராக இருப்பார்கள் என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அவள் அந்த வாசலுக்கு வந்ததும், ரொம்பவும் ஜாக்கிரதையோடு இலையுதிர்காலத்தின் இருள் போர்வை போர்த்திருந்த வெளியைப் பார்த்தாள். அங்கு யாரையும் காணோம், மெளனமே நிலவியது. அவளுக்குத் தைரியம் வந்தது.
“சரி, இப்படி வா. முகத்தில் ஒரு கட்டுப் போடுகிறேன்” என்று சொன்னாள் தாய்.
”அதைப்பற்றிக் கவலைப்படாதீர்கள் — இதைக் கண்டு நான் ஒன்றும் வெட்கப்படவில்லை” என்றான் அவன். “இது ஒரு சரியான நேர்மையான சண்டை. அவன் என்னை அடித்தான். பதிலுக்கு நானும் அவனை அடித்துவிட்டேன்!”
ஆனால் தாய் விறுவிறென்று அவனது முகத்திலிருந்த காயத்துக்குக் கட்டுப்போட்டாள். ரத்தத்தைக் கண்ணால் கண்டதும் அவள் மனத்தில் ஓர் அனுதாப உணர்ச்சி ஏற்பட்டது. அவளது கைவிரல்கள் வெதுவெதுப்பான அந்தச் செங்குருதியின் பிசுபிசுப்பை உணர்ந்தபோது, அவளது உடம்பெல்லாம் ஒரு குளிர்நடுக்கம் பரவிச் சிலிர்த்தோடியது. அவசர அவசரமாக, வாயே பேசாமல் அவள் அந்தச் சிறுவனை வயல்வெளியின் குறுக்காக இழுத்துக்கொண்டு ஓடினாள்.
“தோழரே, என்னை எங்கே கொண்டு போகிறீர்கள்?” என்று தன் வாயின்மீது போட்டிருந்த கட்டை அவிழ்த்துக்கொண்டே கிண்டலாகக் கேட்டான். அவன். “உங்கள் உதவியில்லாமலே, நான் போய்விடுவேனே.”
ஆனால் அவனது கரங்கள் நடுநடுங்குவதையும், கால்கள் பலமிழந்து தடுமாறுவதையும் அவள் கண்டாள். பலமற்ற மெல்லிய குரலில் அவன் பேசிக்கொண்டும் கேள்விகள் கேட்டுக்கொண்டும் விரைவாக வந்தான். தான் கேட்கும் கேள்விகளின் பதிலுக்காகக் கூட அவன் காத்திராமல் பேசினான்:
“நீங்கள் யார்? நான் ஒரு தகரத் தொழிலாளி. என் பேர் இவான். இகோர் இவானவிச்சின் கல்விக்குழாத்தில் நாங்கள் மூன்று பேர் இருந்தோம். மூன்று பேரும் தகரத் தொழிலாளிகள். ஆனால் நாங்கள் மொத்தத்தில் பதினோரு பேர். எங்களுக்கு அவர் மீது ஒரே பிரியம். அவரது ஆத்மா சாந்தியடையட்டும் – எனக்குக் கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் கூட ……”
ஒரு தெருவுக்கு வந்ததும் தாய் ஒரு வண்டியை வாடகைக்கு அமர்த்தினாள். இவானை அதில் ஏற்றி உட்காரவைத்தவுடன் அவள்: ”இனிமேல் ஒன்றும் பேசாதே” என்று மெதுவாகச் சொல்லிவிட்டு மீண்டும் அந்தக் கைக்குட்டையால் அவனது வாயில் ஒரு கட்டுப்போட்டாள்.
அவன் தன் கையைத் தன் முகத்துக்குக் கொண்டு போனான். அந்தக் கட்டை அலைத்து அவிழ்க்கச் சக்தியற்று மீண்டும் தன் கையை மடிமீது நழுவவிட்டான். இருந்தாலும் அந்தக் கட்டோடேயே அவன் முணுமுணுத்துப் பேசத் தொடங்கினான்:
”அருமைப் பயல்களா, இதை மட்டும் நான் மறந்துவிடுவேன் என்று நினைக்காதீர்கள்…… முன்னால் தித்தோவிச் என்ற ஒரு மாணவர் எங்களுக்கு வகுப்பு நடத்தினார். அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிப் பாடம் சொன்னார்……… பிறகு அவர்கள் அவரையும் கைது செய்துவிட்டார்கள்………”
தாய் இவானைச் சுற்றித் தன் கரத்தைப் போட்டு, அவனது தலையை இழுத்து மார்போடு அணைத்துக்கொண்டாள். திடீரென அந்தப் பையன் கிறங்கி விழுந்து மெளனமாகிக் கிடந்தான். பயபீதியால் செய்வது இன்னதென்று அறியாமல் திகைத்தாள் தாய். ஒவ்வொரு பக்கத்திலும் பார்த்துக்கொண்டாள். எங்கோ ஒரு மூலையிலிருந்து கிளம்பி, போலீஸ்காரர்கள் தன்னைப் பின்தொடர்ந்து வருவதாக அவளுக்குத் தோன்றியது. அவர்கள் ஓடோடியும் வந்து, இவானின் கட்டுப்போட்ட தலையைப் பிடித்து இழுத்துப்போட்டு அவனைக் கொல்லப் போவதாகத் தோன்றியது.
“குடித்திருக்கிறானா?” என்று வண்டிக்காரன் தன் இடத்தைவிட்டுத் திரும்பி புன்னகை செய்து கொண்டே கேட்டான்.
“ரொம்ப ரொம்பக் குடித்துவிட்டான்” என்று பெருமூச்சோடு சொன்னாள் தாய்.
“இது யார் உங்கள் மகனா?”
“ஆமாம். ஒரு செருப்புத் தொழிலாளி. நான் ஒரு சமையற்காரி.”
”கஷ்டமான வாழ்க்கைதான், இல்லையா?”
அவன் தன் சாட்டையை ஒரு சுண்டுச் சுண்டி வாங்கினான். மீண்டும் அந்த வண்டிக்காரன் திரும்பவும் பேசினான்:
”கொஞ்ச நேரத்துக்கு முன்னால் இடுகாட்டில் நடந்த கலவரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டீர்களா? அவர்கள் யாரோ ஓர் அரசியல்வாதியை, அதிகாரிகளுக்கு எதிராக வேலை செய்த ஓர் அரசியல்வாதியைப் புதைக்கச் சென்றார்கள் போலிருக்கிறது. அங்கு அவர்களுக்கும் அதிகாரிகளுக்கும் சண்டை. அந்த அரசியல்வாதியைச் சேர்ந்த நண்பர்கள்தாம் அவனைப் புதைக்கப் போனார்களாம். அப்படித்தான் சொல்லிக்கொள்கிறார்கள். ‘மக்களை ஏழைகளாக்கும் அதிகாரிகள் ஒழிக’ என்று அவர்கள் கத்தினார்களாம். உடனே போலீஸார் வந்து, அவர்களை அடிக்கத் தொடங்கினார்களாம். சிலர் படுகாயம் அடைந்ததாகக் கூடச் சொல்லிக் கொள்கிறார்கள். போலீஸ்காரர்களுக்கும் அடி விழுந்ததாம். அவன் ஒரு கணநேரம் மெளனமாயிருந்தான். பிறகு விசித்திரமான குரலில் வருத்தத்துடன் தலையை ஆட்டிக்கொண்டே பேசத் தொடங்கினான். “செத்தவர்களை அடக்கம் செய்வதோ இப்படி இருக்கிறது! செத்தவர்களுக்கோ அமைதியே கிடையாது!”
வண்டிச் சரளைக் கற்களில் ஏறி விழும்போது, இவானின் தலை தாயின் மார்போடு மெதுவாக மோதிக்கொண்டது. வண்டிக்காரன் பெட்டியில் பாதி திரும்பியவாறு உட்கார்ந்து ஏதேதோ பேசி வந்தான்.
“ஜனங்களுக்குப் பொறுமையின்மை ஏற்பட்டுவிட்டது. உலகில் எங்கு பார்த்தாலும் ஒரே களேபரம்தான் தலைதூக்கி வருகிறது. நேற்று ராத்திரி என் அடுத்த வீட்டுக்காரன் வீட்டுக்குப் போலீஸார் வந்து, விடியும் வரை எல்லாவற்றையும் இழுத்துப்போட்டுச் சோதனை போட்டார்கள். அப்புறம் ஒரு கொல்லுலைத் தொழிலாளியைத் தங்களோடு கொண்டு போய்விட்டார்கள். அவனை இரவு வேளையிலே ஆற்றங்கரைக்குக் கொண்டுபோய் நீரில் அமுக்கிக் கொன்றுவிடுவார்கள் என்று ஜனங்கள் பேசிக்கொள்கிறார்கள். அந்தக் கொல்லன் ரொம்ப நல்லவன்.”
“அவன் பேர் என்ன?” என்று கேட்டாள் தாய்.
அந்த கொல்லன் பேரா? சவேல். சவேல் எவ்சென்கோ. சிறு வயசுதான். இருந்தாலும், அவனுக்கு நிறைய விஷயம் தெரியும். விஷயங்களைத் தெரிந்துகொள்ளவே இங்கே அனுமதி கிடையாது என்றுதான் தோன்றுகிறது. அவன் எங்களிடம் வந்து பேசுவான். வண்டிக்காரர்களே உங்கள் வாழ்க்கை எப்படிப்பட்டது? என்பான். ‘உண்மையைச் சொல்லப்போனால் எங்கள் வாழ்க்கை நாயினும் கேடான வாழ்க்கைதான்’ என்று நாங்கள் சொல்லுவோம்.”
“நிறுத்து’ என்றாள் தாய்.
வண்டி நின்றதால் ஏற்பட்ட குலுங்கலில் இவான் விழித்துக்கொண்டு லேசாக முனகினான்.
மிகுந்த சிரமத்தோடு இவான் நடந்துகொண்டே தன்னைத் தாங்கிப் பிடிக்கும் தாயை நோக்கிச் சொன்னான்:
“பரவாயில்லை. என்னால் முடியும்.”
(தொடரும்)
கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.
கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.
’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:
சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.
தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.
பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு