Tuesday, June 16, 2026
முகப்பு பதிவு பக்கம் 371

மே தின சிறப்புக் கதை : சிலந்தியும் ஈயும் !

வில்ஹெல்ம் லீப்னெஹ்ட் (1826-1900) ஜெர்மன் சமூக ஜன நாயகக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினருள் ஒருவர். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகரமான போராட்டத்தின் வெற்றிக்கு மனப்பூர்வமாகப் பாடுபடும் தொழிலாளி வர்க்கத் தலைவர்கள் தமது வாழ்வு மற்றும் பணி மூலம் உதாரணமாக விளங்குவதைப் போன்று அவர் இருந்தார்.

“லீப்னெஹ்ட்டின் பெயர் ஜெர்மன் தொழிலாளி வர்க்க இயக்கத்தின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்து இரண்டறக் கலந்ததாகும்” என்று எழுதினார் லெனின். பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் லீப்னெஹ்ட் ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சிக்குத் தலைமை தாங்கினார். கார்ல் மார்க்ஸ், பிரெடெரிக் எங்கெல்ஸ் இவர்களது நண்பராய், சக தோழராய் இருந்தார். தலைசிறந்த பாட்டாளி வர்க்க நிறுவன ஒழுங்கமைப்பாளராகவும் சங்கநாதமென ஒலித்த குரலாகவும் ஜெர்மனியின் எல்லைகளுக்கு அப்பாலும் முற்போக்குத் தொழிலாளர்களின் அன்புக்குப் பாத்திரமாகி அவர்களிடையே செல்வாக்கு பெற்றிருந்தார். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் தலைசிறந்த போராட்டத் தலைவராக இருந்த அவர் ஆற்றல் மிகுந்த பிரசாரகராயும் விளங்கினார்.

சிலந்தியும் ஈயும் ஐரோப்பிய நாடுகளில் அது வெளிவந்த காலத்தில் வெகுவாய் வரவேற்கப்பட்ட பிரசுரமாய்த் திகழ்ந்தது. பாட்டாளிகளிடையே அரசியல் உணர்வை உயர்த்துவதற்கு அருஞ்சேவை புரிந்தது. சுரண்டும் சிலந்திக்கும் சுரண்டப்படும் ஈக்கும் இடையிலே நிலவும் பகை முரண்பாடுகளை லீப்னெஹ்ட் தெளிவான, எளிய நடையில் புலப்படுத்துகிறார். ஒடுக்குமுறைத் தளைகளை முறிக்க வேண்டுமாயின் தொழிலாளர்கள் ஒன்றுபட்டு ஒருசேரப் பாடுபடுவது ஒன்றே வழி என்பதைத் தெளிவுபடுத்துகிறார்.

– பதிப்பாளர், மாஸ்கோ பதிப்பகம்


சிலந்தியும் ஈயும்

நீங்கள் எல்லோரும் அதை நன்கு அறிவீர்கள் – அந்தப் பூச்சி சால் போன்ற வயிறுடையது. முடிகள் மண்டிய பிசுபிசுப்பான உடல் கொண்டது. பகலின் ஒளியிலிருந்து தூர விலகி இருண்ட இடங்களில் பதுங்கியிருக்கிறது. கொலைகார வலையைப் பின்னி வைக்கிறது. கவனக் குறைவான அல்லது சிந்தனையில்லாத, பரிதாபத்துக்குரிய ஈ இந்த வலையிலே அகப்பட்டுக் கொலையுண்டு போகிறது. அருவருப்பான அந்தக் கொடூரப் பூச்சி கண்ணாடி போன்ற உருண்டைக் கண்களுடையது. தன்னிடம் அகப்பட்டுக் கொள்ளும் ஈயைக் கெட்டியாய் பற்றிக் கொண்டு அழுத்தி நெரிப்பதற்கு வசதியாய் கோணமாய் மடங்கிக் குச்சி போலமைந்த நீண்ட முன்கரங்களைக் கொண்டது. அந்தக் கொலைகாரப் பூச்சிதான் சிலந்தி.

அதோ அந்த மூலையில், இரை எப்பொழுது தன் பிடியில் வந்து சிக்குமென்று ஆடாமல் அசையாமல் உணர்ச்சியற்றுக் காத்திருக்கிறது. அல்லது மெல்லிய ஈயைச் சிக்க வைத்துத் தப்ப முடியாதபடிக் கட்டுண்டு போகச் செய்யும் தனது கொலைகார இழைகளை பேய்த்தனமாய் நெய்து கொண்டிருக்கிறது! வெறுக்கத்தக்க கொடும் பிறவியான அது அளவிலா முயற்சியெடுத்து வேலை செய்கிறது. தன்னிடம் வந்து சிக்கும் இரை தப்புவதற்குச் சிறிதும் வழியின்றி கடைசி இழை வரை யாவற்றையும் செவ்வனே அமைத்துத் தனது வலையைக் குற்றம் குறையற்றதாய் நெய்கிறது. முதலில் ஓர் இமையைப் பின்னியமைக்கிறது. பிறகு இரண்டாவது, மூன்றாவது – இப்படி மேலும் மேலும் அமைத்துச் செல்கிறது. சிக்கும் இரை சாகுமுன் எவ்வளவு தான் துடியாய்த் துடித்தாலுங்கூட வலை பிய்ந்து போகாமல், அதிரவுங்கூட இல்லாமல் கெட்டியாய் இருக்கும் பொருட்டு, இழைகளைக் குறுக்கில் இழுத்துச் சுற்றுகிறது, மறுமுறையும் இழுத்துக் கெட்டியாய்ச் சுற்றுகிறது.

படிக்க :
எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !
மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?

முடிவில் வலை தயாராகிவிடுகிறது, கண்ணி வைக்கப்பட்டு விட்டது, இனி தப்ப வழி ஏதுமில்லை – சிலந்தி இப்பொழுது அதன் உறைவிடத்தில் பதுங்கிக் கொள்கிறது. சூதறியாத ஈ பசியால் உந்தப்பட்டு உணவு தேடிக் கொண்டு எப்பொழுது வருமென்று சிலந்தி காத்திருக்கிறது.

ஈ வந்து சேர சிலந்தி அதிக நேரம் காத்திருக்க நேர்வதில்லை. பாவம், அப்படியும் இப்படியுமாய்ப் பார்த்தவாறு ஈ ஓடி வந்து விரியப் பறந்திருக்கும் இழைகளை அடைந்து துணுக்குற்று நடுங்குகிறது. சிக்குண்டுத் துடிக்கிறது, பெரு முயற்சி செய்கிறது – அவ்வளவுதான், இனி ஒன்றும் செய்வதற்கில்லை.

வில்ஹெல்ம் லீஃப்னெஹ்ட்

ஈ அகப்பட்டுக் கொண்டுவிட்டதைக் கண்டதும் சிலந்தி தனது பதுங்கிடத்தை விட்டு மெள்ள முன்னே வருகிறது. பசி வெறி கொண்ட கண்களுடன் குச்சிக் கரங்களை அசைத்துக் கொண்டு தனது இரையை நோக்கி முன்னேறுகிறது. அது அவசரப்படத் தேவையில்லை, தன் வலையில் அகப்பட்டுக் கொள்ளும் அபாக்கியசாலி தப்ப முடியாது என்பது அந்தப் பயங்கர பைசாசத்துக்குத் தெரியும். அது மேலும் மேலும் நெருங்கிச் செல்கிறது, துருத்திக் கொண்டிருக்கும் மங்கலான கண்களால் தனது இரையை ஏறிட்டுப் பார்த்து எடை போடுகிறது, அதைத் தவிக்கச் செய்து திணறடிக்கிறது. ஈ தன்னை நெருங்கி வரும் பயங்கர அபாயத்தைக் கண்டு நடு நடுங்குகிறது, பிசுபிசுப்பான அந்த இழைகளிலிருந்து பிய்த்துக் கொள்ள முயலுகிறது, தப்பிப்பதற்கு அரும்பாடுபடுகிறது. இந்த மூர்க்கமான இறுதி முயற்சிகளில் அது தனது பலத்தை இழந்து விடுகிறது.

ஆனால் அதன் முயற்சிகள் பயனளிக்கவில்லை, அதன் பிரயத்தனங்கள் வீணாகின்றன! வலையில் அது மேலும் மேலும் கடுமையாய்ச் சிக்கிக் கொள்கிறது. இதற்கிடையில் சிலந்தி அதை மேலும் மேலும் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. சிலந்திக் கூட்டின் வலைப் பின்னல்கள் மெல்லியனவாய் இருப்பினும் தப்ப வழியின்றி ஈயை இறுகப் பற்றிக் கொண்டுவிட்டன. இவற்றிடமிருந்து தன்னை விடுவித்துக் கொள்வதற்காக ஈ மேற்கொள்ளும் முயற்சி ஒவ்வொன்றும் மேலும் அதிகமான இழைகளில் அதை மாட்ட வைத்து. மேலும் அதிகமான வலைப் பின்னல்களில் சிக்கச் செய்கிறது. முடிவில், எதிர்க்கும் ஆற்றல் அனைத்தையும் இழந்து ஓய்ந்து போய் மூர்ச்சித்துவிடும் ஈ, அதன் பகைவனின், வெற்றியாளனின் அந்தப் பயங்கரச் சிலந்தியின் காலடியில் கிடக்கிறது!

பிறகு அந்தப் படுபயங்கரப் பிராணி முடிகள் மண்டிய தனது கொடுங்கரங்களை நீட்டி ஈயைப் பிடித்துத் தனது கொலைகார அரவணைப்பிலே கெட்டியாய் அழுத்துகிறது. அடுத்து அது பலமிழந்து போய் நடுங்கும் ஈயின் உடலைக் கடிக்கிறது. ஒரு தரம், இரண்டு தரம், மூன்று தரம் என்று தனது வெறிக்கும் பசிக்கும் ஏற்ப அத்தனை தரம் விழுந்து பிடுங்குகிறது. அதன் இரத்த வெறி தற்போதைக்கு அடங்கியதும் பாதி உயிர் போன நிலையில் அந்த ஈயை விட்டுவிட்டு விலகுகிறது. பிறகு திரும்பி வந்து மீண்டும் உறிஞ்சுகிறது. இப்படித் திரும்பித் திரும்பி வந்து ஈயின் உடலிலுள்ள இரத்தம் அனைத்தையும், சத்து அனைத்தையும் உறிஞ்சி இழுத்து விழுங்குகிறது. பாவம் அந்த ஈ, எளிதில் அது உயிரை இழப்பதில்லை, குத்துயிரும் கொலையுயிருமாய் நெடு நேரம் திணறுகிறது.

படிக்க :
‘மே’லான கவனத்திற்கு ! மே நாளின் சிறப்பு ! | துரை சண்முகம்
♦ வெனிசுவேலா : ஆக்கிரமிப்புப் போருக்குத் தயாராகிறது அமெரிக்கா !

இரத்த வெறி கொண்ட அந்தப் பைசாசம் தனது இரையிடம் இம்மியளவு உயிர்த் துடிப்பு எஞ்சியிருக்கும் வரை அதை விடுவதில்லை. ஈயின் உயிரை உள்ளுக்கு இழுக்கிறது, அதன் பலத்தை உறிஞ்சியிழுக்கிறது, இரத்தத்தைக் குடிக்கிறது. ஈயிடமிருந்து பருக எதுவுமே இல்லாமற் போன பிறகு தான் அதை விடுகிறது.

முற்றும் உறிஞ்சப்பட்டு சாகடிக்கப்பட்ட ஈ மெல்லிறகையும் விட இலேசாகியபின் வலையிலிருந்து தள்ளிவிடப்படுகிறது. சிறிதளவு காற்று வீசியதுமே காற்றோடு காற்றாய் அடித்துச் செல்லப்படுகிறது. யாவும் முடிவுற்றுவிட்டன.

வயிற்றை நிரப்பிக் கொண்டு திருப்தியோடு சிலந்தி மட்டும் தனது உறைவிடத்துக்குத் திரும்புகிறது. தன்னையும் தனது உலகையும் நினைத்து மன நிறைவு கொள்கிறது. தரமானவர்கள் உலகில் இனியும் நல்லபடியாகவே காலங்கழிக்க முடிகிறதென அகமகிழ்ந்து கொள்கிறது….

***

நகரத்தையும் கிராமத்தையும் சேர்ந்த பாட்டாளி வர்க்கத்தினர்களே, உறிஞ்சியிழுக்கப்பட்டுக் கொல்லப்படும் இந்த ஈ, விழுங்கப்படும் இந்த ஈ நீங்களேதான்! ஏனையோர் வாழ்வது உங்களுடைய இரத்தத்தைக் குடித்துத்தான்! ஒடுக்கப்பட்ட மக்களே, அறிவுத் துறையினரே, ஆலைத் தொழிலாளர்களே, உங்கள் உரிமைகளுக்காக எதிர்த்து நிற்கத் துணியாதோரான அஞ்சி நடுங்கும் இளம் மகளிர்களே, பலமற்றோராய் இருந்து மிதிபடும் பெண்டிர்களே, யுத்த வேந்தர்களுக்குப் பலியாகும் அப்பாவிகளே! சுருங்கக் கூறின் ஏழைகளும் சுரண்டப்படுவோருமானோரே, உங்களுடைய இரத்த நாளங்களிலிருந்து உறிஞ்ச ஏதும் இல்லாமற் போனதும் உதறியெறியப்படுவோரே!

எல்லாச் செல்வங்களின் உற்பத்தியாளர்களே, தேசத்தின் இதயமும் மூளையும் ஜீவ சக்தியுமானோரே, அடி பணிந்து ஓசையின்றி எங்கோ மூலையில் அவலமான முறையில் மடியும் உரிமையன்றி வேறு உரிமை ஏதும் இல்லாதவர்களே! உங்களுடைய இரத்தத்தை, வியர்வையை, உழைப்பை, உங்களுடைய சிந்தனைகளை, உங்களுடைய உயிரைக் கொடுத்து உங்கள் எஜமானர்களாகவும் ஒடுக்குமுறையாளர்களாகவும் இருப்போரை – அருவருக்கத்தக்க சிலந்திகளை – பெரியவர்களாக்குகிறீர்கள், வலியவராக்குகிறீர்கள்.

எஜமானன், பணமூட்டை, சுரண்டலாளன், ஊகவாணிபன், முதலாளி, ஆசை காட்டி மோசம் செய்கிறவன், சமயச்சபை மேலவர்கள், எல்லா வகையான புல்லுருவிகள், நம்மை வருத்தும் கொடுங்கோலன், படுமோசமான ஒடுக்குமுறைச் சட்டங்களை இயற்றுகிறவன், நம்மை அடிமைப்படுத்தும் மூர்க்கன் ஆகிய இவர்கள் தான் சிலந்தி. மக்கள் செலவில் உண்டு வாழும் ஒவ்வொருவனும், நம்மைக் காலால் மிதித்துத் துவைக்கும், நமது துன்ப துயரங்களையும் பயனற்றுப் போகும் நமது முயற்சிகளையும் எள்ளி நகையாடும் ஒவ்வொருவனும்தான் இந்தச் சிலந்தி.

ஏழைத் தொழிலாளிதான் ஈ. வேலை வாங்கும் எஜமானன் பிறப்பிக்க விரும்பும் கொடிய சட்டங்களுக்கு எல்லாம் இந்த ஏழைத் தொழிலாளி அடங்கி நடக்க வேண்டியிருக்கிறது. ஏனெனில் வாழ வழியற்ற நிலையிலுள்ள அபாக்கியவானான இந்தத் தொழிலாளி தனக்கும் தன் குடும்பத்துக்கும் ஜீவனோபாயம் தேடிக் கொள்ள வேண்டியிருக்கிறது. பெரிய ஆலை முதலாளிதான் சிலந்தி.

தனது தொழிலாளர்கள் ஒவ்வொருவரிடமிருந்தும் நாள் ஒன்றுக்கு 6-லிருந்து 8 மார்க்(1) வீதம் சம்பாதிக்கும் இந்த முதலாளி, அதே போது 12-லிருந்து 14 மணி நேர வேலைக்கு இத்தொழிலாளர்களுக்கு மனம் துணிந்து, இல்லை அருள் கூர்ந்து 2-லிருந்து 3 மார்க் வரையிலான அரைப் பட்டினிக் கூலி தருகிறான்.

சுரங்கத்தின் நச்சுக் காற்றில் தன் உயிரைப் பலி கொடுக்கிறானே, தான் அனுபவிக்கப் போகாத செல்வங்களைத் தரைக்கு அடியிலிருந்து வெட்டியெடுக்கிறானே, அந்தச் சுரங்கத் தொழிலாளிதான் ஈ. திருவாளர் பங்கு முதலாளிதான் சிலந்தி. இந்த ஆளின் பங்குகள் மதிப்பில் இரட்டிப்பாகவும் மும்மடங்காகவும் உயர்ந்து செல்கின்றன.

படிக்க :
♦ முதலாளித்துவம் உடைந்து கொண்டிருக்கிறது என்கிறார் ரகுராம் ராஜன் !
♦ மனிதனை நாயாகப் பயிற்றுவிக்கிறது முதலாளித்துவம் ! தோழர் மருதையன்

ஆயினும் இவர் திருப்தியடைவதே இல்லை, மேலும் மேலும் உயர்ந்த லாப விகிதங்கள் வேண்டுமென்கிறார், தொழிலாளர்களுடைய உழைப்பின் பயன்களை அவர்களிடமிருந்து சூறையாடிக் கொண்டு விடுகிறார். தொழிலாளர்கள் சொற்ப அளவு கூலி உயர்வு கேட்கத் துணிவார்களாயின் ராணுவத்தை அழைத்துக் கலகக்காரர்களுக்குத் துப்பாக்கிக் குண்டுகளின் சுவையைத் தெரியப்படுத்துகிறார்.

சின்னஞ் சிறு வயதில் அறியாப் பருவத்தில் ஆலையிலும் பட்டறையிலும் பிறகு வீட்டிலும் மாடாய் வேலை செய்து குடும்பச் செலவுக்கு, வரவை இணையாக்க உதவ வேண்டியிருக்கும் சிறு பிள்ளை தான் ஈ. போதாமையால் தம் குழந்தைகளைக் காவு கொடுக்கும்படி பலவந்தம் செய்யப்படும் ஏழைப் பெற்றோர்களல்ல சிலந்தி; இயற்கை உணர்ச்சிகளின் இந்த வக்கரிப்புகளை, தனது சொந்தக் குடும்பம் இப்படி நாசமாவதை மாறாத மூர்க்க விதியாக்கும் இன்றைய அடாத நிலைமைகளே தான் சிலந்தி.

மக்களுடைய மகளாய்ப் பிறந்த மதிப்புக்குரிய மங்கை நேர்மையாய் வாழ வழி தேடுகிறாள், ஆனால் ஆலை முதலாளி அல்லது டைரக்டரின் காமவெறிக்குப் பணியாவிடில் வேலை பெற முடியாதவளாய்த் திண்டாடுகிறாள். அவளைக் கெடுக்கும் அந்த ஆள் பிற்பாடு – பல சந்தர்ப்பங்களில் பிள்ளையும் பிறக்கப் போகும் நிலையில் – “மானத்தை காப்பாற்றிக் கொள்வதற்காக” ஈவிரக்கமின்றி மெத்தனமாய் அவளை நடுத்தெருவில் விடவே நிற்கதியாகிறாள் – அவள் தான் ஈ.

தளுக்கு இளைஞன், “உயர் குடும்பத்தில்” பிறந்த வீணன், கூத்தடித்துத் திரிந்து அறியாப் பெண்களைச் சீரழித்துச் சாக்கடையிலே தள்ளுகிறானே, இப்படித் தன்னால் சீரழிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப தன் மதிப்பும் உயர்வதாய்க் கருதுகிறானே அவன் தான் சிலந்தி.

நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கும் உழவர்களே, செல்வந்தர்களான நிலப்பிரபுக்களுக்காக நிலத்தை உழுது நீங்கள் அறுத்தெடுத்துக் கொள்ளப் போகாத பயிரை விதைத்தும், நீங்கள் சுவைக்கப் போகாத கனிகளை வளர்த்தும் வரும் நீங்கள் தான் ஈ. தான் சொகுசாய்ச் சுகபோக ஆடம்பர வாழ்க்கை நடத்துவதற்காகத் தனது ஏழைச் சாகுபடியாளர்களையும் பண்ணையடிமைகளையும் கூலியாட்களையும் கணப்பொழுதும் ஓய்வின்றி வேலை வாங்கும் அந்த நிலப்பிரபுதான், ஆண்டுக்கு ஆண்டு வாரத்தை(2) உயர்த்தியும் நேர்மையான உழைப்புக்குரிய கூலியைக் குறைத்தும் செல்லும் அந்த நிலப்பிரபுதான் சிலந்தி.

ஏழையும் எளியோருமான நாம் எல்லோரும் தான் ஈ. நீண்ட நெடுங்காலமாய் வழிபாட்டு மேடையின் படிகளில் நின்று நடுங்கியும், சமயக் குருமார்களது சாபச் சொற்களுக்குத் தலைவணங்கியும், சமயச் சபையின் கீர்த்திக்காகவும் உல்லாச விளையாட்டுக்காகவும் போராடியும் ஒருவரையொருவர் அடிமை செய்தும் வந்திருக்கும் நாம் தான், அவர்களுடைய சமயப் போதனையின் நலிவுறச் செய்யும் செல்வாக்குக்கு உட்பட்டு ஆன்மீக முடவர்களாகிவிட்டோம். ஆதலால், நமது முதுகு ஓடிய வளைந்தும் மண்டியிட்டும் வந்துள்ள நாம் தான், நமது ஒடுக்குமுறையாளர்களை அவர்களது அநீதியின் பலன்களை அனுபவிக்கும்படி விட்டு வந்துள்ள நாம் தான் ஈ.

கறுப்பு அங்கி அணிந்து நயவஞ்சகமும் பேராசையும் நிறைந்த பார்வை கொண்டுள்ள அந்த குருமார் தான், இழிநிலையிலே இருத்தும் தனது போதனையின் மூலம் தனது பக்த கோடிகளின் எளிய உள்ளங்களை மயக்கங் கொள்ளச் செய்து பணிந்து ஒடுங்கும் அடிமைப் புத்தியை வளர்த்தும், இதன் மூலம் மக்களது ஆன்மாவை மாசுபடுத்தியும், போலந்தின் விவகாரத்தில்(3) நடைபெற்றது போல் தேசங்களையே பாழ்பட வைத்தும் செல்லும் அந்த சமயக் குருமார் தான் சிலந்தி.

படிக்க :
♦ ”கம்யூனிச” சீனா எதிர்கொள்ளும் புதிய எதிரி : கம்யூனிசம் !
♦ கம்யூனிச எதிர்ப்பு எழுத்தாளர்கள்: அறிவாளிகளா, உளவாளிகளா?

சுருங்கக் கூறினால் ஒடுக்கப்பட்டோரும் அடிமைப்பட்டோரும் சுரண்டப்படுவோரும் தாம் ஈ. கேடுகெட்ட ஊக வாணிபக்காரர் என்றோ, சட்ட முறையற்ற கொடுங்கோலர் என்றோ எப்படி வேண்டுமாயினும் அழைக்கப்படத் தக்கவராயுள்ள அவரேதான் சிலந்தி.

சிலந்தி முன்னொரு காலத்தில் அரண்கள் செய்யப்பட்ட பெரிய கோட்டைகளிலும் நிலப்பிரபுத்துவப் பண்ணைகளிலும் தனது வலையைப் பின்னி வந்தது. இன்று அது பெரிய தொழில் மையங்களில், இக்காலத்துப் புண்ணியவான்களது செல்வமனைகளில் தன்னை இருத்திக் கொள்ள முனைகிறது. பெரும்பாலும் ஆலை நகரங்களில் தான் அதை அதிகமாய்க் காண்கிறோம்.

ஆயினும் கிராமப்புறங்களிலும் சிறு ஊர்களிலும் அது வலை பின்னிக் கொண்டுதான் இருக்கிறது. எங்கே சுரண்டல் தாண்டவமாடுகிறதோ, எங்கே தொழிலாளியும் சொத்தில்லாத பாட்டாளியும் சிறு கைவினைஞரும் நாட்கூலியாரும் கடன் சுமை தாங்காமல் வருந்தும் சிறுவிவசாயியும் ஊகவாணிபர்களது வரைமுறையற்ற லாப வெறிக்கு ஈவிரக்கமின்றி உட்படுத்தப்படுகிறார்களோ அங்கெல்லாம் அது இருக்கக் காணலாம்.

அது எங்கே இருப்பினும், நகரமாயினும் கிராமமாயினும், அங்கே பேதைகளான ஈக்கள் பகைவரது வலைகளில் சிக்கிக் கொண்டு தப்ப முடியாமல் தவிப்பதைக் காணலாம், துடிதுடித்துப் பலமிழந்து ஓய்ந்து உலர்ந்து போய் மடிவதைக் காணலாம்.

பல மில்லாத மெல்லிய ஈக்கும் இரத்த வெறி கொண்ட கொடூரச் சிலந்திக்கும் இடையே எத்தனையோ நூறு ஆண்டுகளாய் நடைபெறும் இந்தப் போரில் புரியப்பட்டுள்ள சொல்லொணாத படுபயங்கரங்களுக்கு அளவே இல்லை! இந்தக் கதை கொடுமையிலும் கொடுமையானது. அதைத் திரும்பவும் சொல்ல வேண்டியதில்லை. நடந்தது நடந்து விட்டது, கடந்த காலம் போகட்டும், நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பற்றிப் பேசுவோம்.

சிலந்திக்கும் ஈக்கும் இடையே நடைபெறும் இன்றைய போராட்டத்தை நெருங்கிச் சென்று உற்று நோக்குவோம். நிலைமையை உள்ளது உள்ளபடி நாம் உணர்ந்து கொண்டாக வேண்டும். ஈக்களாகிய நாம் நமது பகைவர்கள் நமக்காக மீண்டும் எப்படிப்பட்ட கண்ணிகளை வைத்தமைத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுடைய தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும் கண்டு கொண்டாக வேண்டும். யாவற்றுக்கும் மேலாய் நாம் ஒன்றுபட்டாக வேண்டும்.

நாம் தனித்து நிற்கும் வரை நம்மைக் கட்டியிருத்தி வைக்கும் வலைப் பின்னல்களைப் பிய்த்தெறியப் பலமற்றோராகவே இருப்போம். நமக்கு விலங்குகளிடும் சங்கிலிகளை உடைத்தெறிவோம், நமது பகைவர்களை அவர்களது பதுங்கு இடங்களிலிருந்து விரட்டியடிப்போம், எங்கும் அறிவின் பிரகாச ஒளியைப் பரப்புவோம், பேய்த் தனமான இந்தச் சிலந்தி இனி எந்நாளும் இருண்ட மூலையில் இருந்து தனது கொலைகாரக் கைங்கரியத்தைச் செய்ய வழியில்லாதபடி செய்வோம்!

ஈக்களே, நீங்கள் விரும்பினால், மெய்யாகவே விரும்பினால், யாராலும் உங்களை வெல்ல முடியாதபடி நீங்கள் பெரும் பலம் படைத்தோராகிவிட முடியும்! மெய் தான், இன்றும் சிலந்திகள் பலமுடையதாகவே இருக்கின்றன, ஆனால் எண்ணிக்கையில் அவை மிகமிகச் சொற்பம். ஈக்களான நீங்கள் சின்னஞ் சிறியவர்களாய் இருப்பினும், செல்வாக்கு இல்லாதிருப்பினும், எண்ணிக்கையில் அதிகமாய் இருப்பவர்கள்; வாழ்வே நீங்கள் தான், உலகமே நீங்கள் தான் – மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாமே நீங்கள்தான்!

நீங்கள் ஒன்றுபட்டால், உங்களுடைய இறக்கைகளின் ஒரேயொரு வீச்சாலேயே எல்லா இழைகளையும் அறுத்தெறிந்துவிடலாம், இன்று உங்களைக் கெட்டியாய்க் கட்டி, அடக்கி வைத்திருக்கும் சிலந்தி வலைகளை எல்லாம், உங்களைத் திணற வைத்துத் துடிக்கச் செய்து பட்டினியால் சாகடிக்கும் இந்த வலைகளை எல்லாம் அடியோடு துடைத்தெறிந்துவிடலாம், வறுமையையும் அடிமை வாழ்வையும் நீங்கள் ஒழித்துக் கட்டிவிடலாம். மெய்யாகவே நீங்கள் விரும்புவீர்களாயின் எல்லாம் செய்யலாம்!

ஆகவே விரும்பக் கற்றுக் கொள்ளுங்கள்!

 அடிக்குறிப்புகள்:

  1. மார்க் – ஜெர்மன் மார்க் – ஜெர்மன் நாணய முறை.
  2. வாரம் – நிலவாரம் – நிலவுடைமையாளர்கள் மற்றும் நிலப்பிரபுக்களுக்கு விவசாயிகள் கொடுக்க வேண்டிய நிலவாடகை, நிலத்துக்கான குத்தகை.
  3. ஆஸ்திரிய மற்றும் பிரஷ்யவுக்கு எதிரான போலந்தின் தேசிய விடுதலை எழுச்சியில் சமயகுருமார்கள் அடிமைச் சிந்தனையை பரப்பி தேசத்தின் ஆன்மாவை சீரழித்தனர்.

-வில்ஹெல்ம் லீப்னெஹ்ட்

அல்லாவின் பெயரால் : பாகிஸ்தானியரின் கனவும் … சவுதி மரண தண்டனையும் !

0

பாகிஸ்தான், சர்கோதா (Sargodha) நகரில் பிளேக் நோயினால் பத்தாயிரக்கணக்கான மக்கள் தங்களது இன்னுயிரை இழந்தது பற்றி கதைகதையாக மக்கள் இன்று கூறுகிறார்கள். அது மனிதகுலத்தின் ஒரு சாபக்கேடு.

நூறு ஆண்டுகளுக்கு பிறகு சொந்த ஊரான சர்கோதாவிலிருந்து ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் மரண தண்டனையை எதிர்நோக்கி சிறைக்குள் அடைப்பட்டு கிடக்கிறார் முகம்மது பரூக். அது அவர் விரும்பாதது. அவரது கனவுகளுக்கு பதிலாக கிடைத்தது மரணம். தன்னுடைய குட்டி மகள் வயது வந்ததும் திருமணம் செய்வதற்கான கனவுகள் அவை. ஆனால், கொடுங்கனவுகளே ஏழைகளுக்கு எதார்த்தமாகின்றன.

படிப்பறிவற்ற பாரூக் தன்னுடைய குடும்பத்திற்கு உதவிட ரிக்க்ஷா வண்டி ஒட்டி வந்தார். ரிக்க்ஷாவின் மூன்று சக்கரங்கள் ஓடினால் தான் அவரது நிறைமாத மனைவி மற்றும் மகளின் வாழ்க்கையும் சற்று ஓட்ட முடியும்.

அதிக நேரம் உழைத்தாலும் குறைவான பணம் தான் பரூக்கிற்கு கிடைத்தது. எனவே கனவு காண்பதற்கு அவருக்கு நேரம் கிடைக்கவில்லை. ஆனால், அவரது அப்பா அப்துல் சமதிற்கு ஒரு கனவு இருந்தது. தன்னுடைய மூன்று மகன்களுக்கும் ஒரு மகளுக்கும் தன்னை விட சிறப்பான ஒரு வாழ்க்கை கிடைக்க அவர் கனவு கண்டார்.

சவுதியில் பணியாற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் (கோப்புப் படம்)

2010-ம் ஆண்டில் சமதின் கனவை கொடுங்கனவாக்க வெளிநாட்டில் வேலைக்கு ஏற்பாடு செய்பவர்கள் என்று கூறிக்கொண்டு இரண்டு தரகர்கள் அவரை சந்தித்தனர். சமத், தன்னுடைய கனவை நினைவாக்கவும், பரூக் புதிய கனவுகள் காணவும் அதை நல்வாய்ப்பாக கண்டனர்.

அந்த தரகர்களில் ஒருவர் அல்லாஹ் டிட்டா மற்றொருவர் மஸார் அப்பாஸ். இருவரும் சமதிடம் 1,50,000 ரூபாய் கொடுத்தால் அவரது மகனை சவூதி அரேபியாவிற்கு அழைத்து செல்வதாக உறுதியளித்தனர். அது மட்டும் நடந்தால் 26 வயதியான பரூக் ஒரு புதிய வாழ்க்கையை சவுதியில் தொடங்கலாம். விளைவாக சர்கோதாவில் அவரது குடும்பத்தினர் வாழ்க்கையும் மலரும் என்று நம்பினார்கள்.

ஆனால், தரகர்கள் கேட்டத்தொகையோ அவர்களது குடும்பத்திற்கு சாதாரணமானது கிடையாது. அவர்களது மூன்று சக்கர வண்டியுடன் அவர்களிடமிருந்த மதிப்பு வாய்ந்த பொருட்கள் அனைத்தையும் அவர்களது கனவிற்காகவும், அவர்களது எதிர்காலத்திற்காகவும் பரூக்கின் குழந்தைகளுடைய எதிர்காலத்திற்காகவும் விற்க வேண்டியிருந்தது.

அந்த பணம் கடவு சீட்டையும் இதர பயண ஆவணங்களையும் பரூக்கிற்கு வாங்கி கொடுத்தது. அதே ஆண்டின் மே மாதத்தில் பாகிஸ்தான் முழுவதும் வெள்ளப்பெருக்கு பேரவலம் ஏற்படுவதற்கு சற்று முன்னதாக தரகர்கள் இருவரும் பரூக்கை கராச்சிக்கு அழைத்து சென்றனர். ஆனால், விளக்குகளின் நகரம் பரூக்கின் வாழ்க்கையை கூடிய சீக்கிரம் இருளில் தள்ள இருக்கிறது.

அடுத்த சில நாட்கள் அவர் அங்கு தங்கி இருந்தார். மே மாத வெய்யிலும் கடுமையான ஈரப்பதமும் அவரை வாட்டின. ஆனால், அதை விட பயங்கரமான நெருப்பொன்று அவரை கவ்வ காத்திருந்தது.

இரண்டு வாய்ப்புகள் அவர் முன்னால் இருந்தன. ஒன்று முன்பு போல அவரது வாழ்க்கையும் அவரது குடும்ப வாழ்க்கையையும் பணயம் வைத்து போராடுவது மற்றொன்று தரகர்கள் சொல்வதை செய்வது. அவர் தரகர்கள் சொல்வதை செய்வது என்று முடிவெடுத்தார்.

ஹெராயின் போதை பொருள் அடங்கிய மாத்திரைகளை அவர் விழுங்கினார். அது வயிற்றிலிருந்து எடுக்கும் வரை பத்திரமாக இருக்கும். பின்னர் அவர் விமானத்தில் ஏற்றப்பட்டார். அவருக்கு பிரியாவிடை கொடுக்க அங்கே யாருமில்லை. அவர் மீண்டும் வரும் போது தான் அங்கு இருக்க வேண்டும் என்று அவரது மகள் அவரிடம் கேட்கவில்லை. மனைவியையும் வயிற்றிலிருக்கும் குழந்தையையும் நன்றாக பார்த்துக்கொள்ளுமாறு அவர் கூறவும் இல்லை.

வெளிநாடுகளில் சிறையில் வாடும் பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை:

சவுதி அரேபியாவில் மரணதண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தானியர்கள் எண்ணிக்கை:

அங்கு அறிமுகமில்லா அந்த தரகர்கள் மட்டுமே அவருக்கு தெரிந்த முகங்கள். அவர்கள் இருவரும் பரூக்கை விமானத்தில் ஏற வலியுறுத்தினார். இறங்கியவுடன் அவரை அழைத்து செல்ல சிலர் வருவார்கள் என்று கூறினார்கள். ஆனால், அந்த சிலர் சவூதி அதிகாரிகள் என்பது பரூக்கின் விதிப்பயனா இல்லை ஏழைகளின் கொடுங்கனவா?

ரியாத்தில் இறங்கிய மறுகணமே பரூக் கைது செய்யப்பட்டார். சர்வதேச சட்டதிட்டங்களுக்கு புறம்பாக அரபி மொழியில் அவருக்கு விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையில் சிலப்பகுதிகள் மட்டுமே அவருக்கு மொழி பெயர்க்கப்பட்டன.

புரியாத மொழியில் விசாரணை நடத்தப்பட்டதால் அவர் அதை ஒப்புக்கொள்ளவில்லை. அவருடைய எதிர்ப்பை தெரிவிக்க ஒரு மாத காலம் காலக்கெடு கொடுக்கப்பட்டது. நல்ல உள்ளம் கொண்ட சில சிறைக்கைதிகள் மூலம் அரபி மொழியில் தன்னுடைய எதிர்ப்பை உரிய காலத்தில் பதிவு செய்து கொடுத்தார். ஆனால், தன்னுடைய தரப்பு நியாயத்தை எடுத்து சொல்வதற்கோ அல்லது சட்ட வல்லுனரை அமர்த்தவோ அடிப்படை உரிமை அவருக்கு மறுக்கப்பட்டது.

அவருக்கு இரண்டு மாதங்களில் மரணதண்டனை நிறைவேற்ற வேண்டும் என்று அல்லாவின் பெயரால் தீர்ப்பளிக்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் அவரது இரண்டாவது மகளும் பிறந்தாள்.

இன்று அவரது மகள்களுக்கு 11 மற்றும் 9 வயதாகிறது. மேலும் பரூக் சிறையிலடைக்கப்பட்டு பத்தாண்டுகளாகிறது. அவர் முதலில் மாலஸ் சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அல் ஹாரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பரூக் தன்னுடைய குடும்பத்தினருடன் அடிக்கடி பேசுகிறார். பரூக்கின் மகள்கள் அவரிடம் என்ன பேசுவார்கள் நீங்கள் அவரிடம் என்ன பேசுவீர்கள் என்று நான் சமத்திடம் கேட்டேன். ஆழ்ந்த மவுனமே பதிலாக கிடைக்கிறது. சூழ்நிலையின் மவுனம் அவரையும் ஆட்கொண்டுவிட்டது.

பரூக் கைது செய்யப்பட பிறகு இரு தரகர்கள் மீது வழக்கு தொடுத்து முதல் தகவல் அறிக்கையை சமத் பதிவு செய்தார். ஆனால், அவர்கள் இருவரும் ஒன்றரை ஆண்டுகளில் விடுதலை செய்யப்பட்டு விட்டனர். பின்னர் தொடர்ச்சியாக அதிபர், முதன்மை அமைச்சர் மற்றும் முதலமைச்சர் என்று மன்றாடிக் களைத்து விட்டார். எந்த பதிலும் அவருக்கு கிடைக்கவில்லை.

படிக்க:
எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !
கொலைகார சவுதி அரசால் குதறப்படும் ஏமன் மக்கள் – படக் கட்டுரை

பரூக் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினருக்கு அரசாங்கம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. அல்லது தூதரக உறவுகள் பற்றிய வியன்னா ஒப்பந்தம், உலகளாவிய மனித உரிமை பிரகடனம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை, எந்தவொரு வடிவிலான சிறைச்சாலை அல்லது சிறைச்சாலையில் அடைக்கப்பட்டவர்களை பாதுகாப்பதற்கான ஐநா கோட்பாடுகள் அல்லது கெய்ரோ இஸ்லாமிய மனித உரிமைகள் பிரகடனம் உள்ளிட்ட எந்த மனித உரிமை சட்டதிட்டங்கள் மூலமாகவும் பரூக்கை விடுதலை செய்ய பாகிஸ்தான் அரசாங்கம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

இச்சட்ட திட்டங்கள் பற்றி சமத்திற்கு எதுவும் தெரியாது. அல்லது அது பற்றி அவர் கவலை கொள்வதுமில்லை. அவரிடம் சமீபத்தில் போனில் பேசிய போது தன்னுடைய மகன் விடுதலையாவதற்கு ஏதேனும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டார். மவுனம் மட்டுமே என்னுடைய பதிலாக இருந்தது.

சர்கோதா நகரை மீண்டும் 2010-ல் ப்ளேக் நோய் கவ்வியது. ஆனால், இம்முறை என்ன சொல்வதென்று யாருக்கும் தெரியவில்லை.


கட்டுரையாளர்:
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி : Dawn

எத்தகைய ஒரு குரூர பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளோம் நாம் !

த்தகைய கீழ்த்தர எண்ணம் கொண்ட ஒருவரை கிட்டத்தட்ட 130 கோடி மக்கட்தொகை கொண்ட இந்திய ஒன்றியத்தின் தலைமை அமைச்சராக தேர்ந்தெடுத்துள்ளனர் என்பதை மோடியின் தேர்தல் கால நடவடிக்கைகளும், பேச்சுக்களும் பதிவுசெய்து வருகின்றன. எத்தனையோரு துன்பமான நிகழ்விது.

1. வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம் என அத்தனை அமைப்புகளையும் பாஜகவின் ஒரு கிளையாக, ஆர்.எஸ்.எஸ். சாகாவாக மாற்றி எதிர்கட்சிகளை முடக்க முயற்சித்து பாஜகவிற்கு தேர்தல் அறுவடைக்காக பயன்படுத்துவதோடு நிற்கவில்லை.

2. சாதி, மத மோதல்களை வளர்க்க அத்தனை வக்கிரமான பேச்சுக்களையும் அனுமதிப்பதோடு தானே அத்தகைய வன்மமான பேச்சுக்களைப் பேசியது.

3. வாரணாசி தேர்தல் விண்ணப்பம் தாக்கல் செய்த நாளில் காவியுடையணிந்து நடத்திய அத்தனை மத நாடகங்களும், தான் ஒரு மதத்தின் பிரதிநிதி மட்டுமே என்று வெளிப்படையாக பிரகடனம் செய்த நிகழ்வு.

படிக்க :
♦ மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?
♦ மங்காத்தா முதல் மோடி வரை நமக்கு சொல்வது ஒன்றுதான் : “எதுவும் தவறில்லை”

அதோடு நின்றதா என்றால் இல்லை. மேற்கு வங்காள தேர்தலில் அருவருக்கத்தக்க விதமாக சனநாயகத்தை கொலை செய்கிற, குதிரை பேரத்தை வெளிப்படையாக அறிவிக்கிற வகையில் உள்ளது மோடியின் பேச்சு:

//உங்கள் எம்.எம்.எல்.ஏ.-க்கள் உங்களை விட்டு விலகப்போகிறார்கள். தீதி அவர்களே, இன்றைக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 40 எம்எல்ஏக்கள் பாஜகவுடன் தொடர்பில் உள்ளார்கள். எனவே தேர்தல் முடிவுக்குப் பின் அவர்கள் பாஜக-வில் இணைவார்கள்// – மோடியின் தேர்தல்கால உரை.

எத்தகைய ஒரு குரூரமான பாசிஸ்டை தேர்ந்தெடுத்துள்ளனர்.

நன்றி : முகநூலில் – Thiru Yo

பொன்பரப்பி வன்கொடுமை : எழுத்தாளர் ஜெயமோகன் யாரை கண்டிக்கிறார்?

2

பொன்பரப்பி சாதி வன்முறையை கண்டிக்கும் எழுத்தாளர்கள் கூட்டத்தில் ஜெயமோகன் தன்னால் ஒழுங்காக பேச முடியாததற்கு காரணம் திருமாவளவனின் திடீர் வருகை என்று குற்றஞ்சாட்டும் தொனியில் எழுதியுள்ளார்.

திருமாவளவன் அங்கு வந்த உடனே கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டதாகவும் உடனே பேச்சை நிறுத்திக் கொண்டதாகவும் தனது வலைப்பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மையில் அங்கு என்ன நடந்தது என்றால் திருமாவளவன் சிதறி அமர்ந்திருந்த மக்களை முன்னே சென்று அமருமாறு கேட்டுக் கொண்டார். அப்போது நாற்காலிகளை எடுத்துக் கொண்டு முன்னே சென்று சிலர் அமர முற்பட்டதையே சலசலப்பு என்று கூறியிருக்கிறார்.

ஒரு நிமிட அளவுக்கு மட்டுமே அந்த இடையீடு அமைந்திருந்தது. பின்னர் திருமாவளவன் நேராக மேடைக்குச் சென்றார். பேசி முடித்துவிட்டு உடனே செல்லவிருப்பதாக அவசரம் காட்டிய ஜெமோ, கூறியபடி செல்லாமல் திருமாவளவனுடன் இணைந்து எதையோ தீவிரமாக சிந்திக்கும் பாவனையில் கப்பல் கவிழ்ந்து விட்ட சோக முகத்துடன் அமர்ந்திருந்தார்.ப் அந்த படங்களை அவரது எடுபிடிகள் அதிகமாக இப்போது பகிர்கிறார்கள்.

தனது வலைப்பதிவில் வன்னியர்களை கண்டித்திருக்கும் ஜெயமோகன், அந்த கூட்டத்தில் மூச்சு விடவில்லை. அது போல் பிரச்சினையின் சூத்திரதாரியான இந்து முன்னணியின் பங்களிப்பையும் தணிக்கை செய்துள்ளார். சென்னைக்கு வந்து சென்றதை ஒரு பயண அனுபவக் கட்டுரை போன்று தனது வலைப்பதிவில் விவரித்துள்ளார். தனது அத்தையின் மரணம், அதற்குச் செல்ல நேர்ந்தது, பின்னர் தாமதமாக விமான நிலையம் சென்றது, அங்கு ஒரு பெண்ணுடன் ஏற்பட்ட சந்திப்பு, சென்னை வந்த பிறகு விசிக அலுவலகத்தில் பார்க்கிங் வசதி இல்லாததால் தனக்கு ஏற்பட்ட சிக்கல், சாலை மதில் ஏறிக் குதித்தது என்று தடைகள் பல கடந்து இந்த கூட்டத்தில் கலந்து கொண்டதை ஆரவாரமாக எழுதி உள்ளார்.

படிக்க:
பொன்பரப்பி வன்கொடுமை – ராமதாசே முழுப்பொறுப்பு : மக்கள் அதிகாரம் – புஜதொமு கண்டனம்
♦ பொன்பரப்பி வன்கொடுமை : தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதி மறுப்பு !

ஒரு வன்முறை வெறியாட்டத்தைக் கண்டிக்கும் பாவனை கொண்ட இவ்வளவு கேடுகெட்ட உரையை ஜெயமோகனைத் தவிர வேறு யாரும் ஆற்ற முடியாது. எந்த அரசியல்வாதியுடனும் மேடையேறியதில்லை; இவர் (திருமா) மட்டும் விதிவிலக்கு என்று சொன்னதில் வெளிப்பட்ட உயர் சாதி பெரிய மனம் நவீனத்தை கடந்து சிந்திப்பதாக காட்டிக் கொள்ளும் ஒருவர் வாய்க்கப் பெற்றிருப்பது பேரவலம்.

ஜெயமோகன் வாழும் காலத்தில் வாழ்வது தனக்கு பெருமை என்றார் லக்ஷ்மி மணிவண்ணன். ராமதாஸ் வாழும் காலத்தில் வாழ்வது அவமானகரமானது என்று சொல்ல அங்கு எந்த எழுத்தாளரும் துணியவில்லை. இந்தக் கூட்டம் தலித் அரசியலில் ஜெயமோகன் கைநனைக்க உதவ அவரது குமரி மாவட்ட எடுபிடி எழுத்தாளரால் ஒழுங்கு செய்யப்பட்ட போலியானதொரு தலித் ஆதரவு பாசாங்குக் கூட்டம் என்பதில் சந்தேகமில்லை.

அதில் கலந்து கொண்டு திருமாவளவன் அவ்வளவு ஈடுபாட்டுணர்வுடன் பேசியது சங்கடமாக இருந்தது என்றாலும் பேச்சில் முத்தாய்ப்பாக ஒரு கருத்தை வெளியிட்டார். “ஒரு பிரச்சினை எழும்போது அதில் உறுதியான நிலைப்பாடு எடுக்காமல் பட்டும்படாமலும் கருத்து சொல்வது நீங்கள் ஜனநாயகவாதிகள் தானா என்ற கேள்வியை எழுப்புகிறது” என்றார்.

அவர் யாரையோ நோக்கி சொன்னதாக இருந்தாலும் மேடையில் அமர்ந்திருந்த ஜெயமோகன், லக்ஷ்மி மணிவண்ணன் போன்ற போலிகளின் முகத்தில் அது முதலில் கண்டிப்பாக அறைந்திருக்கக்கூடும்.

நன்றி : முகநூலில் – Raj Dev

வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம் !

யர்நீதிமன்ற வரலாறும் (சென்னை) நீதித்துறைச் சார்ந்த அரிய சுவையான தகவல்களும் நிரம்பிய நூல். “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்.(1987)’’

நண்பர்களே…

இன்றைய காலக்கட்டத்தில் அரசியல்வாதிகளின் வார்த்தைகளை பெரும்பாலோர் நம்புவதில்லை. அதேநேரத்தில் தங்களின் பிரச்சனைகளை நீதிமன்றங்கள் நியாயத்துடன் தீர்த்து வைக்கும் என்று பெரும்பாலான மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்.

நால்வருண நீதி என்று சொல்லப்படுவதற்கு மாறாக எல்லா மக்களுக்குமான பொதுவான நீதியை வழங்கும் என்று நம்பப்பட்ட நீதிமன்றங்களின் வரலாறு பற்றிய நூல்கள் தமிழில் மிகவும் குறைவாகவே வந்துள்ளன. ஜனநாயகத்தை விரும்பும் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய செய்திகளில் நீதியும் நீதித்துறை சார்ந்த நடவடிக்கைகளும் மிகவும் முக்கியமானவை ஆகும்.

ஆனால் 19-ம் நூற்றாண்டில் வழக்குகள் சார்ந்த விவரங்கள் தமிழ்மொழியில் இருந்ததைப் போன்று பின் வந்த காலங்களில் அதாவது சுதந்திரத்திற்கு பின்னான காலங்களில் நமக்கு கிடைப்பது அரிதாகிவிட்டது.

இத்தகைய சூழலில் “வரலாற்றில் நெஞ்சையள்ளும் தமிழக உயர்நீதிமன்றம்” என்ற நூலை (1987) – நீதிபதி சி.இராமகிருட்டினன் பி.எ.பி.எல்., அவர்களால், அரிய செய்திகளுடன் மிகச் சுவையாக எழுதப்பட்டுள்ள இந்த நூலை – ஜனநாயக சிந்தனை உள்ளவர்கள் அனைவரும் எளிதில் அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலில் அந்த நூலின் இணைப்பை தங்களுக்கு கொடுத்துள்ளேன்.

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

சாஸ்திரமல்ல மகராஜ் ! நமது இருதயத்திலே வீசப்படும் அஸ்திரம் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 12


காட்சி : 17

இடம் : வீதி
உறுப்பினர்கள் : சிட்னீஸ், பட்டர்கள்.

சிட்னீஸ் : வாருங்கள், வாருங்கள் போன காரியம் ஜெயந்தானே! (பட்டர்கள் கடிதம் கொடுக்கக் கண்டு ) என்ன இது! வர முடியாது என்று எழுதியிருக்கிறாரே.

கேசவப்பட்டர் : நாங்கள் என்ன செய்வது?

சிட்னீஸ் : மூன்று பேர் சென்றீர்களே?

கேசவப்பட்டர் : நயமாக வினயமாக, பவ்யமாக விஷயத்தை எடுத்துச் சொன்னோம்.

சிட்னீஸ் : சொன்னதின் பலனா இது?

கேசவப்பட்டர் : அவர் வயிறு குலங்கச் குலுங்கச் சிரிக்கிறார்.

சிட்னீஸ் : மக்களின் மனநிலை, மண்டலத்தின் மனநிலை.

கேசவப்பட்டர் : எல்லாம் சொன்னோம். சிவாஜியின் வீர தீரத்தைப் பற்றிச் சொன்னோம். அவர் கோதண்டத்தில் ஒரு ஸ்லோகம் சொல்லி எங்களைத் திணற அடித்துவிட்டார்.

சிட்னீஸ் : ம்.. சரி.. சரி… என் புத்திப் பிசகு. உங்களை அனுப்பினேன். சதிகாரர்களே போங்கள்.

கேசவப்பட்டர் : ஆத்திரம் கூடாதென்று ஆகமம் அலறுகிறது; வேதம் முழங்குகிறது.

சிட்னீஸ் : எங்காவது ஆற்றோரத்தில் போய்ப் பேசிக்கொண்டிருங்கள் இதுபோல. இப்படி அடுத்துக் கெடுக்காதீர்கள். (போகிறார்கள்)

நிச்சயமாக இவர்கள் சதிதான் செய்துவிட்டு வந்திருக்கிறார்கள். இவர்கள் அந்த காகப்பட்டரின் குலமாயிற்றே என்று அனுப்பினேன். குலத்தின் குணத்தைக் காட்டி விட்டார்கள். சூதுக்காரர்களே! உங்கள் சூட்சி வெற்றி பெற விடுகிறேனா, பாருங்கள்.

♦ ♦ ♦

காட்சி : 18
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : சிவாஜி, தளபதி , வீரர்கள், மோகன்.

தளபதி-1 : மகராஜ் புதிய மாளிகை கட்டியதும் அதற்கு என்ன பெயரிட உத்தேசம்?

சிவாஜி : நீயே சொல்லு, என்ன பெயரிடலாம்?

தளபதி-1 : சலவைக் கல்லால் கட்டப் போவதால் வெள்ளை மாளிகை என்று பெயரிடலாமே?

தளபதி-2 : அப்படி பார்த்தால் மாளிகையின் கொலு மண்டபத்திலே தங்கத் தகடு போடப்படுவதால் சொர்ண மாளிகை என்ற பெயர் பொருத்தமாக இராதோ?

தளபதி-1 : நமது சிவாஜி மகாராஜாவுக்கு ஜெயச் சின்னமாக அந்த மாளிகை இருக்கப் போகிறது. அதனால் ஜெயவிலாசம் என்ற பெயர் பொருத்தமாக இருக்கும். நாம் கூறிக் கொண்டே போவானேன்? அவருடைய உத்தரவு எப்படியோ?

சிவாஜி : நான் அதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கவில்லை, மகுடாபிஷேகம் நடைபெறுவதற்கு முன்பே தாங்களெல்லாம் மகாராஜா என்று அழைக்கிறீர்களே, எவ்வளவு ஆழ்ந்த அன்பு உங்களுக்கு என்பதைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்.
(மோகன், வீரர்கள் ஒடிவருகின்றனர்)

ஏன், என்ன செய்தி எதிரிப் படைகளா?

மோகன் : எதிரிகளிடம் படையில்லை , மகராஜ் … தடை விதித்திருக்கிறார்கள்

சிவாஜி : தடையா? என்ன? யார்?

வீரன் : மகராஜ் பட்டாபிஷேகம் நடக்கக்கூடாதாம்.

சிவாஜி : சொன்னவன் யார்?

மோகன் : பிணமாகாமல்தான் இருக்கிறார்கள். அந்தப் பித்தர்கள்.

சிவாஜி : அமைதியாகப் பேசுங்கள். பட்டாபிஷேகத்தைப் பாதுஷாவின் ஆட்கள் தடுக்கின்றனரா?

மோகன் : அவர்கள் துணியவில்லை மகராஜ்! அவர்களுக்கில்லை அந்தக் கெடுமதி. மொகலாயர் வீரத் தலைவனை மதிக்கின்றனர். ஆனால் …

சிவாஜி : ஆனால்! என்ன அது ஆனால் ?

வீரன் : முகூர்த்தம் குறிக்கும்படி புரோகிதரைக் கேட்டோம்.

சிவாஜி : நாள் சரியில்லை. நட்சத்திரம் சரியில்லை என்று கூறியிருப்பார்.

வீரன் : இல்லை மகராஜ்… விபரீதமாகப் பேசுகிறார்கள்.

சிவாஜி : விபரீதமாகப் பேசுகிறார்களா? என்ன உளறுகிறீர்கள்?

மோகன் : அப்படிக் கேட்டிருக்க வேண்டும். அந்த உலுத்தர்களை வாயை மூடிக் கொண்டு வந்து விட்டீர்கள் வகையற்று..

சிவாஜி : சந்தர்.

மோகன் : மகராஜ் மன்னிக்க வேண்டும்.

வீரன் : புரோகிதர் பட்டாபிஷேகம் கூடாதென்று …

தளபதி-4 : கூடாதென்று..?

வீரன் : கூறிவிட்டனர்.

தளபதி-4 : ஏன்? என்ன காரணம்?

வீரன் : நமது தலைவர் சூத்திரராம் சூத்திரருக்கு ராஜ்யாபிஷேக உரிமை கிடையாதாம். அது சாஸ்திர விரோதமாம்.

(சிவாஜி ‘ஆஹா’ என்று வாளை உருவ, மற்றவர்களும் வாளை உருவுகின்றனர். பாலச்சந்திரப்பட்டர். கேசவப்பட்டர் வருகின்றனர்)

கேசவப்பட்டர் : எங்களைக் கொல்ல இத்தனை ஆட்களும் வாட்களும் தேவையா? வீரர்களே! உங்களுடைய கோபப் பார்வையாலேயே எங்களைச் சுட்டுச் சாம்பலாக்கி விடலாமே. பொறுங்கள் பொறுங்கள்! பொறுத்தார் பூமியாள்வார்.

பாலச்சந்திரப்பட்டர் : பொங்கினவர் காடாள்வார்.

சிவாஜி : சரி! இவர்களை அழைத்துக் கொண்டு நந்தவனம் சென்று. என்ன சேதி என்று விசாரித்துத் தகவலை பிறகு வந்து கூறுங்கள் என்னிடம். என் முன் நிறுத்த வேண்டாம். இவர்களைக் கொண்டு போங்கள்.

(தளபதி பட்டர்களை அழைத்துப் போக , மோகனும் போகிறான்.)

சிவாஜி : சந்தர்! வா இங்கே நீ போகாதே இங்கேயே இரு.
(சிறிது மெளனமாய் இருந்துவிட்டு)…

நான் எப்போதும் இப்படித் திகைத்ததில்லை. எதிரியின் படைகள் நான்கு பக்கமும் சூழ்ந்து கொண்ட போதும் எனக்கு ஏற்பட்டதில்லை இந்தக் கலக்கம். நான் நாடாளத் தகுதியற்றவன்.. சிவாஜி சூத்திரன். சூத்திரன் நாடாளக் கூடாது? இது சாஸ்திரம்.

மோகன் : சாஸ்திரமல்ல மகராஜ்! நமது இருதயத்திலே வீசப்படும் அஸ்திரம்.

சிவாஜி : உண்மைதான். எதிரியின் வாளுக்கும், வேலுக்கும் என் மார்பு அஞ்சியதில்லை. இந்த அஸ்திரம் …

மோகன் : மகராஜ் என்னால் தாங்க முடியவில்லை பொறுக்க முடியாது. ஒரு வார்த்தை சொல்லுங்கள், தங்களைத் தடை செய்யத் துணிந்தவர்களை …

சிவாஜி : கண்ட துண்டமாக்குவாய். பயன் என்ன? வாள் கொண்டு அவர்களைச் சிதைக்க விரும்புவாய். அவர்கள் வாள் எடுக்காமலே என்னைச் சித்திரவதை செய்துவிட்டார்களே. முகலாயச் சக்கரவர்த்தி முயன்று பார்த்து தோல்வி பெற்றான். சண்டமாருதம் போன்ற எதிரிப் படையினால் என் சித்தத்தைக் குறைக்க முடியவில்லை. சாத்பூரா முழுவதும் ரத்தக் காடான போது என் மனம் குலையவில்லை. உற்றார் உறவினரும், ஆருயிர்த் தோழர்களும், களத்திலே பிணமான போதும் என் உறுதி குலையவில்லை. போர் போர் போர் என்றே கர்ஜித்தேன். இதோ, என்னை நாடாளத் தகுதியற்றவன் என்று கூறிவிட்டார்கள். நான் சூத்திரன். சூத்திரனுக்கு சாஸ்திரம் அனுமதி தரவில்லையாம். ராஜ்யம் ஆள!

மோகன் : சூதான வார்த்தை அது.

சிவாஜி : ராஜ்யம்! யார் சிருஷ்டித்த ராஜ்யம்? எவ்வளவு கஷ்டங்களுக்குப் பிறகு சிருஷ்டித்த ராஜ்யம்? சந்தர்! எத்தனைத் தாய்மார்கள், தங்கள் குமாரர்களை இதற்கு அர்ப்பணம் செய்தனர். எத்தனை காதலிகள் தங்கள் காதலர்களை இதற்குக் காணிக்கை செலுத்தினர். ராஜ்யம் ஆள சிவாஜிக்கு உரிமையில்லையாம். சூத்திரன் ராஜ்யம் அமைக்கலாம். ரணகளத்திலே உழைக்கலாம். ஆனால் அவன் ஆளக் கூடாது. இது சாஸ்திரம் சந்தர்! இந்த சாஸ்திரம்?

மோகன் : சாம்பலாகட்டும் மகராஜ் சுட்டுச் சாம்பலாக்குவோம். புறப்படுங்கள்.

சிவாஜி : சந்தர்! என் மனம் குழம்பிவிட்டது.

மோகன் : மகராஜ் மகராஜ்!

சிவாஜி : மோகன் விலகிநில் ! விசாரம் நிறைந்த என்னை விட்டு விலகும். அப்பா சந்தர்! அஞ்சாநெஞ்சன், அசகாய – சூரன், ஆற்றல்மிக்கோன் என்றெல்லாம் மராட்டிய மண்டலம் புகழ்ந்ததோ அந்த மாவீரனுடைய நிலையைப் பார். மகாராஷ்டிரம் மயக்கத்திலே சிக்கி விட்டது. உன்னையும் அந்த நோய் பிடிக்கா முன்பு விலகிச் செல்.

படிக்க:
மாட்டுக்கறி மக்கள் உணவு ! மோடி பருப்பு இங்கே வேகாது ! வீடியோ
குடிநீர் , சாலை , மின்சாரம் எதுவும் இல்லை ! இதுதான் குஜராத் மாடல் வளர்ச்சி !

மோகன் : மகராஜ் ! வீணான மனக் கலக்கம் கூடாது! உமது ஆத்திரத்தை மீறும் ஆற்றல் கொண்ட ஆண்மகன் எவனும் இங்கே இருக்க முடியாது. என் கையில் வாள் இருக்கும் வரை, தங்கள் தாள் பணிகிறேன். ஒரு வார்த்தை சொல்லுங்கள்.

சிவாஜி : நாளைக்கு வா! இன்று என்னை இம்சிக்காதே! வேதனை வெள்ளம் போலாகிவிட்டது. நான் அதைத் தாண்டி கரை ஏறுவேனோ அல்லது அதிலேயே அமிழ்ந்து போவேனோ யார் கண்டார்கள்? மகாராஷ்டிர மண்டலமே! உன் கதி என்னவோ…

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

பொன்பரப்பி சாதிய வன்கொடுமை : சென்னை மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

“பொன்பரப்பி கிராமத்தில் தலித் மக்கள் மீது தாக்குதல் நடத்திய சாதி வெறியர்களைக் கைது செய்!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைவரும் வாரீர்…!
நாள் : 02.05.2019, வியாழக்கிழமை, காலை 11 மணி
இடம் : வள்ளுவர் கோட்டம் – சென்னை.

ஆர்ப்பாட்ட சுவரொட்டி முழக்கங்கள் :

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)


தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை
தொடர்புக்கு  – 91768 01656 

திருச்சி மே நாள் ஆர்ப்பாட்டம் : கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம் !

“நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்துக் கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்! கூலி அடிமை முறையை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் (GATT) காட்டாட்சியை தூக்கியெறிவோம்!” என்கிற முழக்கத்தை முன்வைத்து மே தினத்தன்று பேரணி – ஆர்ப்பாட்டம். உழைக்கும் மக்கள் அனைவரும் திரள்வோம் திருச்சியில்.

நாள் : 01.05.2019
பேரணி தொடங்குமிடம் : மரக்கடை to சத்திரம்
நேரம் : மாலை 5.00 மணி

ஆர்ப்பாட்டம் : மாலை 6:00 மணிக்கு அண்ணாசிலை அருகில், அனைவரும் வாரீர்.

உலகம் இயங்குவது தொழிலாளர்களால்தான். அந்த தொழிலாளர்களின் போராடிப் பெற்ற உரிமைகள் அனைத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியால் பறிக்கப்படும்போது மொத்த சமூகமும் வீதியில் இறங்கிப் போராட வேண்டியுள்ளது. அனைவரும் அணிதிரள்வோம் வாரீர்…

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
திருச்சி.
தொடர்புக்கு : 89030 42388.

‘மே’லான கவனத்திற்கு ! மே நாளின் சிறப்பு ! | துரை சண்முகம்

மே லான கவனத்திற்கு! மே நாள் வெல்லட்டும்!

நான்
ஒரு தொழிலாளி
உழைப்பாளி
என்பதுதான்
மகிழ்ச்சியும்
மதிப்பும்.

நான் ஒரு தொழிலாளி
என்ற மகிழ்ச்சியை
எதனோடு ஒப்பிட முடியும்?

ஓடை பனிநீரில்
ஊறும் குளிர்நிலவின்
ஜாடை எனில்,

அது,
ஒரு தொழிலாளி
உலகூட்டும்
உழைப்பின் விளைபயனும்
அது பலர்க்கும் உருவாக்கும்
பெரும் சுகமும்
ஒத்ததாய் இல்லை.

நான் ஒரு தொழிலாளி
எனும் கவுரவத்தை
உலகின் பெருமதிப்பு
எதனோடும்
இணைவைக்க முடியவில்லை,
ஏனெனில்,

சூரியன் எனில்,
அது மறைந்து விடுகிறது.
வானம் எனில்,
அது வெளிறி விடுகிறது.
மரம் எனில்,
அது உதிர்ந்து விடுகிறது.
நிலம் எனில்,
அது சரிந்து விடுகிறது.
அனைத்துக்கும் ஆதரவாய்
அழியா பெரும் உயிர்ப்பாய்
புவிப் பரப்பெங்கும்
வர்க்கப் பெருமிதம்
விரிந்து கிடக்கிறது.

என்ன இருந்தாலும்
அவன் பெரிய முதலாளி,
நாம சாதாரணம்
என்ற எண்ணமே பிழை..

பெரிய முதலாளிகள்..
பில்லியன் மூலதனங்கள்..
எதுவாயினும்
தொழிலாளியே
உனது கை படாவிட்டால்
அவை வெறும் கல்.
உனது உழைப்பு தீண்டாவிடில்
பணம்
பிணம்!

பிரச்சினை,
அவன் முதலாளி
என்பது மட்டுமல்ல
நான் தொழிலாளி
எனும் பலமறியாத
பலவீனமே!

ஆலைகள் மாறலாம்
ஆடைகள் மாறலாம்
அனைவரும் சுரண்டப்படுகிறோம்
எனும்
பொது அநீதிக்கெதிராக
வர்க்கமாய்
நாம் இணைந்துகொள்ள
மறுப்பது,
நமது சுவாசத்தை
நாமே மறுப்பது.

இனம்
மதம்
சாதி
பாலினம்
அனைத்தின்
வழியாகவும்
ஆதிக்கம் செய்கிறது
அன்னிய – பெருமூலதனம்.

அனைத்தும்
நம்மைக் கண்டு
அஞ்சி நடுங்கும் …

அனைத்தையும்
அடித்து நொறுக்கும்
வரலாற்றுப் பேராயுதம்
நமது வர்க்க பலம்.

எவ்வளவு
மும்முரமாய் உழைத்தாலும்
அது முதலாளிக்கே,
கொஞ்சம்
அரசியலாய் உழைத்துப் பார்
அதுதான் தொழிலாளிக்கு!

உனது
முதுகெலும்பு
உருவப்படுவது கூடத் தெரியாமல்
முன்னேறி முன்னேறி
முதலாளித்துவ நுகர்வில்
கிறங்காதே…

முன்னோர்கள் ரத்தத்தில்
ஒளியாதே..
முதுகுக்குப் பின்னால்
நெளியாதே..
தொழிலாளி வர்க்கமே
துலங்கும்படி பேசு!
தொடர்ச்சியைப் பேசு!
நீதான்
புது உலகைப் படைத்திடும்
போராட்ட மூச்சு!

எட்டு மணிநேர வேலை..
ஏற்ற ஊதியம்
பணிப் பாதுகாப்பு
உரிமைக்கான சங்கம்..
அத்தனையும்
போராடிப் பெற்றது சிவப்பு.
வர்க்க அரசியல்தான்
மே நாளின் சிறப்பு.

போராடாத இடத்தில்தான்
சோகம் பிறக்கிறது
போராடிப்பார்.. அங்கே
மே நாள் சிலிர்க்கிறது!

துரை. சண்முகம்

வஹாபியிசத்தை வரவேற்றார்களா இலங்கை முஸ்லீம்கள் ?

தௌஹீத் அமைப்பு வளர்வதற்கு இலங்கை முஸ்லீம்கள் இடம்கொடுத்தார்கள் என்பது உண்மையா ?

 

தௌஹீத் (வஹாபிய) சாயல்கொண்ட அமைப்புகள் இலங்கைக்குள் வருவதற்கு முன்பு கூட, ஒற்றைக் கருத்தியலைப் பின்பற்றும் சமூகமாக முஸ்லிம்கள் இலங்கையில் இருக்கவில்லை. மரபான இஸ்லாமியப் பாரம்பரியம் என்று ஒன்று தனியாக இல்லை.

சூபி முகாம்கள் (பல) இருந்தன. தப்லீக் ஜமாத் இருந்தது. ஜமாதே இஸ்லாமி இருந்தது. மிகப் பழமையான ஷியாப் பிரிவினரும் இருந்தனர்.

இத்தனை அமைப்புகளினுள்ளும் சமயச் சடங்கு, நடைமுறை மற்றும் அறிதல் முறைகளில் வேறுபாடுகளும் போட்டிகளும், முரண்பாடுகளும் இருக்கத்தான் செய்தன.

ஷியா அமைப்புக்களை மற்றைய அமைப்புக்கள் மறுப்பதலில் ஒரு பொது நிலைப்பாட்டைக் கொண்டிருந்தன. எனினும், பிற அமைப்புகளுக்கிடையில் மூர்க்கமான சண்டைகளும் சச்சரவுகளும் வெளிப்பட்டதில்லை. அதிகமான விஷயங்களில் இயைந்து போகும் மனநிலையே இருந்தது. பங்காளிகளுக்கு இடையிலான போட்டி என்ற வகையில்தான் வேறுபாடுகள் இருந்தன.

ஆனால், தௌஹீத் அமைப்புக்கள் இலங்கையில் நுழைந்தபோது, அதுவரை முஸ்லிம்கள் மத்தியில் செயல்பட்டுக் கொண்டிருந்த அனைத்து அமைப்புகளும் அதை எதிர்த்தன.

அந்த அமைப்பு குறித்து பொதுமக்கள் வெளியில் கடுமையான அதிருப்திகளையும், எதிர்ப்புக்களையும் வெளிப்படுத்தின. ஏற்கனவே இருந்த எந்தப் பள்ளிகளினுள்ளும் தௌஹீத் (வஹாபிய) அமைப்புக்களைச் செயல்பட அனுமதிக்கவில்லை. தௌஹீத் கருத்துக்களைப் பிரசாரம் செய்யவோ, அவர்களின் முறையில் மதச் சடங்குகளை தலைமையேற்று நடத்தவோ அனுமதிக்கவே இல்லை. இன்றுவரை அதுதான் நிலவரம். தௌஹீத்வாதிகளுக்கு என்று தனியான பள்ளிகள் இருக்கின்றன. அவை அவர்களே உருவாக்கியவை.

முஸ்லிம்களின் முக்கிய மதச் சடங்கான நோன்புகால தராவீஹ் தொழுகையில் – தௌஹீத் அமைப்பு பின்பற்றிய முறையை பிற அமைப்புக்கள் எவையும் பின்பற்றவில்லை. அதே நேரம் முஸ்லிம்களின் விசேட தினங்களான ”பெருநாள்” தினங்களைக் கூட தௌஹீத் அமைப்புக்கள் பின்பற்றும் நடைமுறையினுாடாக ஒருபோதும் பின்பற்றியதே இல்லை. இலங்கை முஸ்லிம் சமூகத்தின் மத்தியில் இரண்டு பெருநாட்கள் கொண்டாடப்பட்டு வருவதும், பிறை பார்ப்பதில் ஏற்படும் சிக்கல்களும் சச்சரவுகளும் அனைத்து சமூகங்களுக்கும் வெளிப்படையாகத் தெரிந்த சம்பவங்கள்.

ஏன் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபையில் கூட தௌஹீத் அமைப்பைத் தன்னுடன் இணைக்கவில்லை என்றே கருதுகிறேன். இது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.

இலங்கையிலிருந்த இஸ்லாமிய அமைப்புகள் தௌஹீத் ஜமாதை எப்படிப் புறமொதுக்கிக் கையாண்டார்கள் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்? அல்லது வேறு எப்படி அவர்கள் நடந்துகொண்டிருக்க வேண்டும்?

படிக்க :
♦ நீ ஒரு இஸ்லாமியனா ? வெளியே வந்து பதில் சொல் !
♦ இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !

இங்கு இன்னுமொரு விசயம் சுட்டிக் காட்டப்பட வேண்டும். இலங்கை முஸ்லிம்களின் பெரும் பகுதியினரை தம்வசம் வைத்திருக்கும் தப்லீக் ஜமாத், ஜமாதே இஸ்லாமி போன்ற அமைப்புக்கள் தொடர்ச்சியாகத் தௌஹீத் அமைப்புக்களை மக்களுக்குள் நுழைய விடாமலே பார்த்துக் கொண்டன.

தௌஹீத் அமைப்புக்களைப் பின்பற்றுபவர்கள் மொத்த முஸ்லிம்களில் மிகச் சொற்பமானவர்களே. தௌஹீத் (வஹாபிய) சாயல் கொண்ட இந்த அமைப்புக்களில் இருந்து மிகையான கடும்போக்கை கடைப்பிடிக்கும் அறிகுறிகள் வெளித் தெரிந்த போது, தௌஹீத் அமைப்பினர் ஸஹ்ரான் ஹாசிமை அதிலிருந்து விலக்கியும் விட்டனர்.

அதே நேரம் காத்தான் குடி மக்கள் அவரைக் கைது செய்யுமாறு பெரிய ஆர்ப்பாட்டங்களைக் கூட செய்தனர். பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததாகக் தகவல் உண்டு. அது போல முஸ்லிம் கவுன்சில் கூட ஸஹ்ரான் ஹாசிமுக்கு எதிராக முறைப்பாடுகளை வெளிப்படையாக செய்திருப்பதாக முஸ்லிம் கவுன்சிலின் பிரதித் தலைவரின் அறிக்கையின் மூலம் அறிகிறேன்.

இத்தனையும் நடந்திருக்கிறது. ஒரு சமூகம் தனக்குள் இயங்க வந்த ஓர் அமைப்பை இதைவிட வேறு எப்படி புறக்கணிக்க முடியும்? அவர்களை தடை செய்வதற்கும், சிறை பிடிப்பதற்கும் என்ன அதிகாரங்கள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்தது, இருக்கிறது?

இத்தனை வழிமுறைகளிலும் தௌஹீத்வாதிகளை இலங்கை முஸ்லிம்கள் எதிர்த்திருக்கிறார்கள். புறக்கணித்திருக்கிறார்கள் என்பதை எப்படி மறுதலித்துக் கடந்து போக முடியும்?

மேலும், வரலாறு நெடுக இலங்கையில் நடந்த தனித்த அல்லது கூட்டுப் படுகொலைகளின் போது அவற்றை நிகழ்த்திய சமூகத்தில் உள்ளோர், அச்செயல்களை எதிர்த்து வாய் திறக்காமல் மௌனம் சாதித்த வரலாறுகள் உண்டு. ஆனால், ஈஸ்டர் படுகொலை நிகழ்ந்த போது இலங்கை முஸ்லிம் சமூகம் அப்படி மௌனம் சாதிக்கவில்லை. உடனடியாகப் பல தளங்களிலும் தனது எதிர்ப்பையும் கண்டனத்தையும் பதிவு செய்தது. அப்படுகொலைகளின் சூத்திரதாரியான ஸஹ்ரானின் சொந்தச் சகோதரியே தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்து, தன்னால் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது எனப் பேட்டி அளித்துள்ளார்.

இதன் பிறகும் இலங்கை முஸ்லிம் சமூகம் தௌஹீத் அமைப்பு வளர இடம்கொடுத்தது; தீவிரவாதத்தை/ பயங்கரவாதத்தை மௌனமாக ஆதரித்தது என எப்படி உங்களால் குற்றஞ்சாட்ட முடியும்?

இவைகள் கேள்விகளாக மட்டுமே முன்வைக்கப்படவில்லை. இது ஒருவகைப் பார்வைக் கோணம். எந்த விசயத்தையும் புரிந்து கொள்ளப் பன்மையான வழிமுறைகளைக் கடைபிடிக்க வேண்டும் என்பதையும் கவனப்படுத்தவே இந்தப் பதிவு.

இதைப் படித்துவிட்டு தௌஹீத் அமைப்பு அடிப்படைவாதிகள் இல்லையா? பெண்களை மோசமான வகையில் நடத்தவில்லையா என கிளம்பிக்கொண்டு யாரும் வரத் தேவையில்லை. அடிப்படைவாத அமைப்பு என நான் சொல்வதாக இருந்தால் இலங்கையின் அனைத்து இஸ்லாமிய அமைப்புக்களின் மீதும்தான் அதைப் பிரயோகிப்பேன்.

பெண்கள் விஷயத்தில் அனைத்து இஸ்லாமிய அமைப்புகளும் பிற்போக்குத் தனமானவைதான் என்பேன். அவற்றை விவாதிப்பதற்கல்ல இந்தப் பதிவு என்பதை இதை எழுதத் தொடங்கும் போதே சுட்டிக்காட்டியிருக்கிறேன்.

ஆனால், பயங்கரவாதச் செயற்பாடுகளை என்னைப் போல, உங்களைப்போல மிகப் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வன்மையாக எதிர்க்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

நன்றி : முகநூலில் – Abdul Sukkur

துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !

மீபத்தில் யோகி சத்குரு ஜக்கி வாசுதேவ் துருக்கி போயிருக்கிறார். அந்த நாட்டில் இருக்கும் கொன்யாவில்தான் ரூமியின் கல்லறை இருக்கிறது. அந்த இடத்திற்கு சென்றவருக்கு ஒரு அதிசயம் நடந்திருக்கிறது.

அவர் கண்ணில் ஒரு டைனோசர் முட்டை போன்ற ஒரு பெரிய கல் தென்பட்டிருக்கிறது. எத்தனையோ ஆண்டுகளாக அந்த கல்லறை இருந்தும் அது ஏனோ யார் கண்ணிலும் படவில்லை. இறையருளை ப்ரோக்கர்கள் இல்லாமல் நேரடியாக பெற்ற சத்குரு அவர்களுக்குதான் அது காட்சியளித்திருக்கிறது பாருங்கள். கன்னத்தில் போட்டுக்கொள்ளுங்கள்.

அந்த முட்டைக்கல்லின் மேல் தன் கழுத்தில் இருந்து சக்திவாய்ந்த ருத்திராட்சத்தை வைத்து சோதித்து பார்க்கிறார். ருத்திராட்சம் அப்படியே அசையாமல் நிற்கிறது… ஒரு இடத்தில் தவிக்கிறது. ஒரே அதிர்ச்சி… அது ஒரு பழமையான சிவலிங்கம்… கன்னத்துல போட்டுக்கோங்க…

செம்பருத்தி சீரியலில் குடும்பத்திற்கே வரிசையாக வருவது போல சத்குருவுக்கும் அதிர்ச்சி வந்து விடுகிறது. அந்த லிங்கம் மட்டுமில்லை, அந்த கல்லறை தோட்டம் முழுக்க ஆங்காங்கே பழமையான கோவிலின் சிதிலங்களை பார்த்து மீண்டும் ராஜாராணி சீரியலில் வருவதுபோல அதிர்ந்து போகிறார் ஜக்கி. ஆம் நண்பர்களே, அது ஒரு பழங்கால சிவன் கோயில். கன்னத்துல போட்டுக்கங்க…

ஆனால் இஸ்லாமியர்கள் தந்திரமாக அந்த இடத்தில் ரூமிக்கு கல்லறை கட்டிவிட்டார்கள். அந்த லிங்கம் 4700 ஆண்டு பழமையானது, சக்தி வாய்ந்தது என்பதும் சத்குருவுக்கு தெரியவருகிறது.

ஞானதிருஷ்டியாலேயே அதை கண்டுபிடித்துவிட்டாலும், விஞ்ஞானிகளை வைத்து ஆராய்ச்சி பண்ணி நிரூபித்துவிட்டார். எந்த விஞ்ஞானிகள் என்று அவரும் சொல்லவில்லை, நாமும் கேட்கவில்லை. சத்குரு மேலயே சந்தேகமா… கன்னத்தில் ப்ளீஸ்…

படிக்க :
♦ கேள்வி பதில் : ஸ்டெர்லைட் – தேர்தல் – பறையிசை !
♦ சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

இந்த கண்டுபிடிப்பால் துருக்கி அரசே ஆடிப்போயிருக்கிறது. யாருய்யா இவரு என துருக்கி பிரதமர் உளவுத்துறையை கூப்பிட்டு கேட்டாராம்… சிவ சிவா… கன்னத்தில் போட்டுக்கலாம். ஆயிரம் அணுகுண்டுகளின் பவர் கொண்ட சத்குருவின் பவர்களை கேள்விப்பட்டு ஆடிப்போய்விட்டாராம்…

ஜக்கி அவர்களின் கண்டுபிடிப்பு இத்தோடு முடியவில்லை… ரூமி கல்லறையில் மட்டுமில்லை, ஐரோப்பா மற்றும் அரேபியா முழுவதுமே இப்படிப்பட்ட லட்சக்கணக்கான கோயில்கள் இருந்ததையும் தன் ஞானதிருஷ்டியால் கண்டுபிடித்துவிட்டார். அதெல்லாம் இப்போது சிதைந்துவிட்டன… என மனது நொந்து தன் சமீபத்திய அருள்தரும் வீடியோவில் உரை ஆற்றியிருக்கிறார்.

அவருடைய மனவாட்டத்தைப் போக்க உடனடியாக அத்வானி… சாரி.. சாரி… அவருக்கு வயதாகி திருந்திவிட்டார்… எனவே அமித்ஷா அவர்கள் தலைமை தாங்கி தன் பாஜக பக்தர்களை அழைத்துக்கொண்டு போய் துருக்கி நாட்டின் மீது படையெடுத்து ரூமியின் கல்லறை இருந்த இடத்தில் சிவன் கோயில் கட்டவேண்டும் என்பதே அகில உலக சத்குரு பக்தர்களின் கோரிக்கை.

இந்த செய்தி அமித்ஷாவை சென்றடையும்வரை அதிகம் பகிரவும்.

(இந்த அதிசய கண்டுபிடிப்பு பற்றி வீடியோ)

நன்றி : முகநூலில் – Athisha

மோடியின் “அரசியல் இல்லாத” நேர்காணல்கள் தெரிவிப்பது என்ன ?

3

ஜார்ஜ் பெர்னாட் ஷா ஒருமுறை சொன்னார், “தகவல் தொடர்பு கொள்வதில் உள்ள ஒரே மிகப்பெரிய பிரச்சினை, அது நடந்த இடத்தில் ஏற்படுத்தும் மாயைதான்”.

மனித தொடர்பு கொள்தலில் உள்ள மிகப்பெரிய கண்ணி குறித்து ஷா எச்சரிக்கும்விதமாக அப்படி சொல்லியிருக்கிறார். ஆனால், நரேந்திர மோடி தன்னுடைய முழுமையான தகவல் தொடர்பையும் பொது மக்கள் தொடர்புத் திட்டத்தையும் இந்த ‘மாயை’யை ஒட்டியே வடிவமைத்திருக்கிறார்.

நம்முடைய பிரதமரைத் தவிர, வேறு எந்த இந்திய தலைவரும் எரிந்து கொண்டிருக்கும் பிரச்சினைகளிலிருந்து முற்றிலுமாக நழுவிச்சென்றதில்லை.

மிகச் சமீபத்திய மோடியின் ‘தொடர்பு கொள்தலின் மாயை’க்கு உதாரணம், அதிகம் விளம்பரப்படுத்தப்பட்ட  பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் எடுத்த ”அரசியல் அல்லாத” நேர்காணலைச் சொல்லலாம்.  தன்னுடைய பிரதமர் பதவி காலத்தில் போதுமான அரசியல் நேர்காணல்களை அளித்துவிட்டார் என்கிற மாயையை ஏற்படுத்தும் வகையில், இந்த நேர்காணல் ‘அரசியல் அல்லாத’ என்கிற அடைமொழியோடு வெளியானது.

உண்மையில் கடந்த ஐந்தாண்டுகளில் எதிர்கொண்ட பிரச்சினைகளில் ஒரு சிறுபகுதியைக்கூட பேசவேயில்லை. அவர் பதில் சொல்ல வேண்டிய ஒரே ஒரு கேள்விக்குக்கூட உருப்படியான, உண்மையான பதிலை அளிக்கவில்லை. பிரதமராக இருந்த காலக்கட்டத்தில் முன்கூட்டியே திட்டமிடப்படாத ஒரே ஒரு ‘அரசியல் நேர்காணலை’கூட அவர் அளித்ததில்லை.

தான் பதவியேற்ற 2014 முதல் வழங்கி வரும் ‘மன் கி பாத்’ வானொலி உரை, முன்கூட்டியே திட்டமிடப்பட்ட ரிபப்ளிக் டிவி, டைம்ஸ் நவ், ஏபீபி தொலைக்காட்சி பேட்டிகளைத் தவிர, இந்திய மக்களோடு உண்மையான வார்த்தைகளோடு மோடி தொடர்பு கொண்டதே இல்லை.

இலத்தீன் சொல்லான ‘கம்யூனிஸ்’ என்ற சொல்லிருந்து உருவான ‘கம்யூனிகேஷன்’ என்ற சொல்லுக்கு ‘பொதுவில் பகிருதல் அல்லது பகிரச் செய்தல்’ எனப் பொருள்.  உண்மையான தொடர்பு கொள்ளுதல், இரு வழி பரிமாற்றமாகும்.  அதாவது அது ஒரு பரிமாற்றம், ஒன்றுசேர்தல் அல்லது ஒன்றாக இணைதல். இது உங்களையும் என்னையும் ஒரு பொதுத் தளத்தில் ஈடுபட வைக்கிறது. அங்கே என எனக்கு கேள்விகளோ, கரிசனங்களோ இருக்குமானால், நீங்கள் என்னுடைய கேள்விகளுக்கு பதில் சொல்லும்வகையில் எதிர்வினை செய்கிறீர்கள். அதுபோல எனது கரிசனங்களையும் தீர்த்து வைக்கிறீர்கள்.

படிக்க:
சுயமோகி மோடி – கேலிச்சித்திரங்கள் !
♦ மோடி ஆதரவாளர்கள் எப்படி உருவாகிறார்கள் ?

இந்திய பிரதமரை போல, என்ன பேச வேண்டும் என்பதையோ எப்போது பேசவேண்டும் என்பதையோ தானே முடிவு செய்வதல்ல அது.

கோடிக்கணக்கான இந்திய மக்களின் மனதின் உண்மையான பல எரியும் கேள்விகள் பதிலளிக்கப்படாமல் உள்ளன. அவை இதுபோன்றவை….

  • பணமதிப்பழிப்புக்கான நோக்கம்தான் என்ன?
  • அது சாதித்தது என்ன? அது உண்மையில் யாருக்கு உதவியது?
  • அது கருப்புப் பணத்தை ஒழித்துவிட்டதா?
  • அது தீவிரவாத தாக்குதல்களை நிறுத்திவிட்டதா?
  • சிறு வியாபாரிகளுக்கு (அல்லது தொடர்புடைய யாருக்கேனும்) ஜி.எஸ்.டி. பயனளித்ததா?
  • பணமதிப்பழிப்பும் ஜி.எஸ்.டி.-யும் சிறந்த யோசனைகள் எனில், வரலாறு காணாத வேலைவாய்ப்பின்மை ஏன் உள்ளது?
  • ‘நல்ல நாட்கள்’(அச்சே தின்) எங்கே?
  • வளர்ச்சி (விகாஸ்) எங்கே?
  • வாக்குறுதி அளித்த கோடிக்கணக்கான வேலை வாய்ப்புகள் எங்கே?
  • ட்விட்டரில் அவதூறு பரப்புவர்களை பிரதமர் பின்தொடர்வது ஏன்?
  • வகுப்புவாத வன்முறையின் கொடூர சம்பவங்கள் நடக்கும்போதெல்லாம் வாயை மூடி மவுனியாக இருப்பதேன்? சம்பவங்கள் நடந்தமுடிந்த வெகுநாட்களுக்குப் பிறகு, அதுகுறித்து பலவீனமான ஒரே விதமான பதிலையே அளிப்பதேன்?
  • நீரவ் மோடி, மெகுல் சோக்சி போன்ற திருடர்கள் நாட்டைவிட்டு வெளியேறியபின், நாமெல்லாம் ‘காவலாளிகள்’ என சொல்லிக்கொள்வதேன்?

இதுபோன்ற மிக முக்கியமான கேள்விகளுக்கு என்றேனும் பிரதமர் பதிலளித்திருக்கிறாரா ? மேலும் தொடர்ந்து புனையப்பட்ட நிகழ்ச்சிகளின் பின்னே, உண்மையான பிரச்சினைகளை அவர் மறைத்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற பின்வரும் கேள்விகளுக்கே பதிலளிக்க விரும்புகிறார்…

  • உங்களுக்கு மாம்பழம் பிடிக்குமா?
  • மாம்பழத்தை எப்படி சாப்பிடுவீர்கள்?
  • உங்களுக்கு எப்போதாவது கோபம் வருவதுண்டா?
  • உங்களுடைய கோபத்தை எப்படி கையாள்கிறீர்கள்?
  • உங்களுக்கு இன்னமும் நகைச்சுவை உணர்வு இருக்கிறதா?
  • நீங்கள் அணியும் உடைகளை நீங்களே துவைப்பதேன்?
  • உண்மையில் எவ்வளவு குறைவாக நீங்கள் தூங்குகிறீர்கள்?
  • நீங்கள் திரைப்படங்களைப் பார்ப்பீர்களா?
  • திரைப்படப் பாடல்களை நீங்கள் முணுமுணுத்ததுண்டா?
  • உங்களுடைய தாய் உங்களுடன் எப்போதாவது வந்து தங்குவதுண்டா?

தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் இந்திய சமூகத்தில் அதிர்வுக்குரிய மாறுதல்களை உருவாக்கிய, உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் பிரதமர், ‘அரசியல் அல்லாத நேர்காணலை’ பாலிவுட் நடிகருக்கு தருகிறார். அதுவும் பரபரப்பான தேர்தல் நேரத்தில்… நாட்டின் அதிகாரம் மிக்க மனிதர், பயந்து ஓடிக்கொண்டிருப்பதைத்தான் அப்பட்டமாக இது காட்டுகிறது.

இந்த வினோதமான, மிகை யதார்த்தமான இந்த நேர்காணல் குறித்து அதிகம் பேசியாகிவிட்டது. மோடிக்கு இணக்கமான தொலைக்காட்சிகள் இதைக் கொண்டாடின. இணக்கமல்லாத தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் தோலுரித்துப் பேசின. சமூக ஊடகங்கள் பழித்தன; எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. என்.டீ.டி.வி -யின் ராவிஷ் குமார், தன்னுடைய பிரைம் டைம் நிகழ்ச்சியில் இதுகுறித்து ஒரு முழுமையான பகடி நிகழ்ச்சியையே நடத்தினார்.

‘அரசியல்-அல்லாத’ என்ற அடைமொழியோடு வந்தாலும் அதில் ஏராளமான அரசியல் இருந்தது. பிரதமர் எதிர்க்கட்சிகள் மீது பல சந்தர்ப்பங்களில் குற்றம் சொன்னார். ஆர்.எஸ்.எஸ். பற்றி குறைந்தபட்சம் மூன்று முறை உச்சரித்தார். முன்னாள் அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான ‘நட்பு’ குறித்து, அரசியல் எதிர்க்கட்சிகளிடமிருந்து தனக்கு குர்தாவும் இனிப்பும் வருவது குறித்தும் பேசினார்.

கத்தோலிக்கம் அல்லாத போப் என்பதைப் போல, அரசியல் அல்லாத பிரதமர் என ஒன்று இல்லவே இல்லை.

பலர் இதை புத்திசாலித்தனமான விளம்பர ஜோடிப்பு என்றார்கள். ஆனால், மோடி – அக்‌ஷய் குமாரின் நேருக்கு நேர், விளம்பரம் என்பதைக் கடந்து தேர்தல் ஆணையத்தின் நடத்தை விதிகளை அப்பட்டமாக மீறிய செயலாகும். மோடியின் பி.ஆர். குழு அவரை சுவைப்பதிலும் பழக்கத்திலும் பணம், பதவியை அனுபவிப்பதிலும் எளிமையாக உதாரண வாழ்வு வாழும் அன்பான வயதான நபராக காட்ட விரும்பினார்கள்.

ஆனால் அவர்களுடைய திட்டம், யதார்த்தத்திலிருந்து தப்பித்து ஓடுகிற சுயமோகம் பிடித்த ஒருவராக மோடியைக் காட்டி மிக மோசமாக முடிந்தது.

படிக்க:
சுதேசி மோடியின் விதேசி மேக்கப் செலவு தெரியுமா ?
♦ 50 லட்சம் பேரின் வேலையைப் பறித்த மோடியின் பணமதிப்பழிப்பு !

மோடி தன்னை இதுபோல் தட்டிக் கொடுத்திருந்தால், விளைவுகள் வேறுமாதிரியாக இருந்திருக்கும் என அவருக்கு யாராவது நினைவுபடுத்தியிருக்கலாம். ஆனால், இப்போது தாமதமாகிவிட்டது. இந்தியாவில் தற்போது உள்ள பிரச்சினைகளை தூக்கி எறிந்த பெரும் அரசியல்வாதி என வரலாற்றில் சொல்லப்படுவதற்கு பதிலாக, சமூக ஊடக ட்ரோல் படைகள் மற்றும் மிகப்பெரிய பி.ஆர். எந்திரத்தின் துணையுடன் மக்களுடன் தொடர்பு கொள்தலில் தக்கவைத்திருக்கும் மாயைகளுக்கிடையே இந்தியாவின் 14 -வது பிரதமர் பயந்தவராக -பாதுகாப்பற்றவராக- பாலிவுட் நடிகரின் துணை தேவைப்படுவராக, எப்போதும் நினைவு கூறப்படுவார்.


கட்டுரை : ரோஹித் குமார்
தமிழாக்கம் : அனிதா
நன்றி : த வயர் 

விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?

தேர்தல் வாக்குறுதிகள் உண்மையும் பொய்யும் – 2

தேர்தல் கட்சிகள் தந்துள்ள விவசாயம் சார்ந்த வாக்குறுதிகளை  உலக வர்த்தகக் கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டுத்தான் அமல்படுத்த முடியும் .

தேர்தல் வரும்பொழுதெல்லாம் அனைத்துக் கட்சிகளும் விவசாயிகளின் நண்பர்களாக மாறிவிடுகின்றன. ‘தங்கள் கட்சி இருப்பதே விவசாயிகளுக்காகத்தான்’ என்பது போல கட்சித் தலைவர்களும் பேசுகின்றனர்.

ஆட்சிக்கு வந்த பிறகு விவசாயிகளுக்கு உதவாதது மட்டுமல்லாமல், வளர்ச்சி என்ற பெயரில் விவசாயிகளின் நிலங்களை வலுக்கட்டாயமாகப் பிடுங்குவது, விவசாய மூலப் பொருட்களுக்கான மானியத்தை நிறுத்துவது, மான்சாண்டோ போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கையில் விதை விற்கும் உரிமத்தை கொடுப்பது, உணவுப் பயிர்களை ஊக்குவிக்காமல் பணப்பயிர்களை ஊக்குவிப்பது என பல வேலைகளை ஓட்டுக் கட்சிகள் செய்கின்றன.

இருந்தாலும் அடுத்த தேர்தல் வரும்பொழுது நாங்கள் விவசாயிகளை கோடீஸ்வரர்களாக மாற்றாமல் ஓய மாட்டோம் என்பது போல அறிக்கைகளை விடுகின்றனர்.

2019 நாடாளுமன்ற தேர்தல் அறிக்கையும் இதற்கு விதிவிலக்கு அல்ல. பிஜேபி-யை பொறுத்தவரை, 2014-ல் கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையாவது நிறைவேற்றினார்களா என்று நமக்கு தெரியும், அதை பற்றி எதிர்க்கட்சிகளும் மற்றவர்களும் பேசி  வருகின்றனர்.

விவசாயிகளின் வருமானத்தை 2022-க்குள் இரட்டிப்பு ஆக்க போவதாகக் கடந்த சில ஆண்டுகளாகவே பிஜேபி சொல்லி வருகிறது. அதையே இந்த தேர்தல் அறிக்கையிலும் சேர்த்துள்ளது. வருமான இரட்டிப்பு என்பது பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்ட பிறகா? அல்லது கணக்கில் எடுத்துக்கொள்ளாமலா? என்ற   கேள்விக்கு  பிஜேபி தலைவர்கள் பதில் சொல்வதாக இல்லை.

பண வீக்கத்தைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், எதுவுமே செய்யாமலே வருமானம் இரட்டிப்பு ஆகும். எடுத்துக்காட்டாக, 10 வருடங்களுக்கு முன் 5 ரூபாயாக இருந்த தேனீரின் விலை, இப்போது 10 ரூபாய் ஆகிவிட்டது, இதற்கு யாரும் காரணம் அல்ல. பண வீக்கத்தின் காரணமாக விலை அதிகமாகி உள்ளது. இரட்டிப்பைத் தவிர, குறைந்தபட்ச ஆதரவு விலை (MSP – minimum support price), பயிர்க்காப்பீட்டு திட்டம் போன்ற வழக்கமான பல்லவிகளும் பிஜேபி தேர்தல் அறிக்கையில் உள்ளன.

படிக்க:
விவசாய நெருக்கடி : கடன் தள்ளுபடி தீர்வாகுமா ?
♦ சிறப்புக் கட்டுரை : விவசாய நெருக்கடிக்குத் தீர்வு எந்தப் பாதையில் ?

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையைப் பொறுத்தவரை விவசாயக் கடன் தள்ளுபடி என்பது முக்கியமான அம்சமாக கூறப்படுகிறது.  இது போக MSP அதிகரிப்பு, பயிர்க் காப்பீட்டை சீர் செய்வது போன்ற அம்சங்களும் உள்ளன. இந்த இரண்டு கட்சிகளைத் தவிர திமுக, CPI(M) போன்ற கட்சிகளின் அறிக்கைகளும் MSP அதிகரிப்பு பற்றியும், விவசாயக் கடன் தள்ளுபடி பற்றியும் பேசுகின்றன. குறிப்பாக MSP அதிகரிப்பும் விவசாயக் கடன் தள்ளுபடியும் பொதுவாக அனைத்து கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ள வாக்குறுதிகளாக தெரிகிறது.

விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP), உற்பத்திக்கான உள்ளீடு செலவின் (input cost) 150%-ஆக உயர்த்துவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிஜேபி அறிவித்தது. ஆனால் உள்ளீடு செலவு என்பதில் எதுவெல்லாம் அடங்கும் என்பதில் அரசுக்கும் விவசாய சங்கங்களுக்கும் வேறுபாடுகள் உள்ளன.

விவசாய சங்கங்கள் M.S. சாமிநாதன் குழு கூறிய அடக்க விலையை பின்பற்ற வேண்டும் என்று கூறிவருகின்றன. இதற்கு மத்திய அரசு மறுத்துவிட்டது. ஏதாவது ஒரு விளக்கத்தை ஏற்று MSP-யை அதிகரிக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டாலும், மத்திய மாநில அரசுகளின் கடந்த கால நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும்போது இந்திய விவசாயிகளைப் பாதுகாக்கும் நோக்குடன் விவசாயப் பொருட்களுக்கான MSP -யை அதிகப்படுத்துவதற்கான முழு அதிகாரம் இந்திய அரசுக்கு உண்டா? என்ற கேள்வி எழுகிறது. இதற்கு சில சமீபத்திய உதாரணங்களைப் பார்ப்போம்.

கோதுமை மற்றும் அரிசி பொருட்களுக்கான  குறைந்தபட்ச ஆதார விலையை உலக வர்த்தக கழக ஒப்பந்தத்தில் ஒப்புக் கொண்ட அளவை விட அதிகமாக தன் நாட்டு விவசாயிகளுக்கு இந்தியா வழங்வதாகக் கூறிய அமெரிக்கா, உலக வர்த்தக கழகத்தில் இந்தியாவின் மீது வழக்கு தொடுக்கப் போவதாக 2018 ஜீலை-ல் செய்திகள் வந்தன.

மேலும் சுண்டல் உள்ளிட்ட ஐந்து பயிர்களுக்கு இந்தியா தனது விவசாயிகளுக்கு அதிக MSP கொடுத்துவிட்டு உலக வர்த்தகக் கழகத்தில் (WTO) தவறான தகவல் கொடுத்ததாக கனடாவும் அமெரிக்காவும் இந்தியாவின் மீது குற்றம் சாட்டின. அதனடிப்படையில் WTO-வில் இந்தியாவின் மீது வழக்கு தொடர்வதாக இவ்விரு நாடுகளும் அறிவித்துள்ளன.

சமீபத்தில் ஆஸ்திரேலியா, பிரேசில், ஐரோப்பிய ஒன்றியம் உட்பட ஒன்பது நாடுகள்  இந்தியாவின் மீது கரும்பு விவசாயிகளுக்கு WTO-ல் ஒப்புக்கொண்ட அளவை விட அதிக மானியம் கொடுத்ததற்காக WTO-ன் சர்ச்சைகளை தீர்க்கும் அமைப்பில் (Dispute settlement panel) வழக்கு தொடுத்துள்ளன. இம்மூன்றும்  கடந்த ஒரு வருடத்திற்குள் விவசாய மானியம் தொடர்பாக  WTO-வின் உறுப்பு நாடுகள் இந்தியாவின் மீது WTO-வில் அளித்துள்ள புகார்களாகும்.

இந்திய விவசாயம் முதலாம் உலக நாடுகளின் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் இருக்கிறதென்பதையே இது காட்டுகிறது.

இந்த செய்திகளை பார்த்தவுடன் நமக்கும் இயல்பாக எழும் கேள்வி – ‘இந்திய அரசாங்கம் தனது விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருள்களுக்கு நிர்ணயிக்கும் குறைந்தபட்ச ஆதார விலையின் (MSP) மீது அந்நிய நாடுகள் WTO-வில் எப்படி புகார் கூற முடியும்?’ என்பதுதான். அவ்வாறு புகார் கூறும் உரிமையை இந்திய அரசாங்கம் மற்ற நாடுகளுக்கு  வழங்கியிருக்கிறது என்பதுதான் கசப்பான உண்மை.

இந்தியா கையெழுத்திட்டிருக்கும் விவசாயம் தொடர்பான உ.வ.கழக ஒப்பந்தத்தின்படி (Agreement on Agriculture – AoA) இந்திய அரசு விவசாயத்திற்காக தரும் மானியத்தின் அளவு மொத்தம் உற்பத்தியாகும் விவசாய பொருட்களின் மதிப்பில் 10 சதவிகதத்தை விட அதிகமாக இருக்கக் கூடாது.

அதாவது ஒரு வருடத்தில் உற்பத்தி செய்யப்படும் விவசாயப் பொருட்களின் மொத்த மதிப்பு 500 கோடி என்றால் அதில் 50 கோடிக்கு மேல் மானியமாக இந்திய அரசு தனது விவசாயிகளுக்கு  வழங்கக்கூடாது. மேலும் இந்தியா போன்ற வளரும் நாடுகள் குறிப்பிட்ட காலத்திற்குள் இந்த 10% மானிய அளவையும் படிப்படியாக குறைக்க வேண்டும்.

இதனை மீறும் பட்சத்தில் WTO-AoA-ல் கையெழுத்திட்டுள்ள பிற நாடுகள் இந்தியாவின் மீது வழக்குத் தொடர முடியும்.  இதனடிப்படையிலேயே பிற நாடுகள் இந்தியாவின் மீது வழக்கு தொடுத்துள்ளன. இவ்வழக்கின் தீர்ப்புகளை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டு அமல்படுத்த வேண்டும். முன்னமே WTO-ன் சில தீர்ப்புகள் இந்தியாவிற்கு பாதகமாக வந்துள்ளது. அதை இந்திய அரசு ஒப்புக்கொண்டு அமல்படுத்தியும் உள்ளது.

கடந்த பதினைந்து வருடங்களுக்கும் மேலாக விவசாயம் சார்ந்த அனைத்து முடிவுகளும் இதனடிப்படையிலேயே எடுக்கப்பட்டு வந்திருக்கின்றன என்பதே உண்மையாகும். எனவே இந்திய விவசாயிகள் கோருகின்ற விவசாயப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை ஆட்சியாளர்களால் ஒருபோதும் கொடுக்க இயலாது என்பதே எதார்த்தம்.

தேர்தல் கட்சிகள் அளித்துள்ள வாக்குறுதிகளையும் இந்திய அரசு WTO உடன் செய்துள்ள ஒப்பந்தங்கள் மற்றும்  மேலே குறிப்பிட்ட செய்திகளையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இதில் உள்ள முரண் நமக்குப் புரியும். ஒருபுறம் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் MSP-யை குறைக்க, பிறகு நிறுத்த வேண்டும் என்று வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்கு WTO-வின் மூலம் அழுத்தம் தருகின்றன. இன்னொருபுறம் இப்போது இருக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை உள்ளீட்டு விலையில் 150% உயர்த்தப் போவதாக ஓட்டு கட்சிகள் கூறுகின்றன. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் WTO ஒப்பந்தங்களைப் பற்றி தெரிந்திருந்தும் தேர்தல் பிரச்சாரத்தின் போது எந்த கட்சியும் மறந்தும் கூட இது பற்றி மூச்சு விடுவது இல்லை.

படிக்க:
பாஜக தேர்தல் அறிக்கை 2019 : கலாய்க்கும் நெட்டிசன்கள் | #sanghifesto
♦ ”இருப்பதைப் பிரித்துக் கொடு” என்பது இந்த நாட்டின் தேசிய கீதமாக வேண்டும் | அருந்ததிராய்

பாஜக தவிர பெரும்பாலான கட்சிகளின் அறிக்கைகளில் இருக்கும் இன்னொரு முக்கியமான வாக்குறுதி, விவசாயக் கடன் தள்ளுபடி பற்றியது. விவசாயக் கடன் தள்ளுபடி பற்றி பேசுவதற்கு முன்பு மொத்த விவசாயக் கடன் எவ்வளவு உள்ளது என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

2016-ம் ஆண்டு மத்திய விவசாயத்துறை அமைச்சர் பாராளுமன்றத்தில் கொடுத்த கணக்கின்படி நிலுவையில் உள்ள மொத்த விவசாயக் கடன் ரூபாய் 12 லட்சம் கோடியாகும். இவ்வளவு பெரிய தொகையை தள்ளுபடி செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது பற்றி எந்தக் கட்சியும் பேசவில்லை. இந்நிலையில் விவசாயக் கடன் தள்ளுபடி, ஏற்கெனவே அதிகமாக இருக்கும் அரசின் நிதிப் பற்றாக்குறையை(fiscal deficit) மேலும் அதிகப்படுத்தும் என்று வலதுசாரி பொருளாதார நிபுணர்கள்  எச்சரிக்கின்றனர்.

இந்திய அரசின் உயர் அதிகாரிகளோ விவசாயக் கடன்களைத் தள்ளுபடி செய்வதினால் கடனை செலுத்த வேண்டிய தேவையில்லை என்ற மனப்பாங்கு (Credit indiscipline) விவசாயிகளிடையே உருவாகும் என எச்சரிக்கின்றனர்.

மேலும் விவசாயம் தொடர்பான செலவுகளுக்கு நிதி ஒதுக்குவதில் மோடி அரசு மிகவும் அலட்சியமாகவே இருந்து வருகிறது. உதாரணமாக, இந்திய உணவுக் கழகம் (FCI – Food Corporation of India) என்ற அரசு நிறுவனம் விவசாயிகளிடம் இருந்து உணவு தானியங்களை அரசு நிர்ணயித்த MSP விலையில் கொள்முதல் செய்கிறது.

இந்த தானியங்கள்  குறைந்த விலைக்கு மாநிலங்களுக்கு மத்திய அரசால் வழங்கப்படுகின்றன. அதை மாநில அரசுகள் நியாய விலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கின்றன.  MSP விலைக்கு உணவு தானியங்களை கொள்முதல் செய்து  மிகக் குறைந்த விலைக்குக் கொடுப்பதால் உண்டாகும் செலவை மானியமாக மத்திய அரசு FCI-க்கு வழங்குகிறது.

ஆனால் கடந்த சில ஆண்டுகளாக மோடி அரசு, FCI-க்கு தர வேண்டிய நிலுவைத் தொகையான ரூ. 1.21 லட்சம் கோடியை தராமல் உள்ளது.  இந்திய உணவுக் கழகம், தனது நிதிப் பற்றாக்குறையை சமாளிப்பதற்காக தேசிய சிறு சேமிப்பு நிதியிடமிருந்து (National Small Saving Fund) FCI கடன் வாங்கியுள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறையை (fiscal deficit) சமாளிப்பதற்காகவே மத்திய அரசு பட்ஜட்டில் ஒதுக்கிய நிதியை FCI-க்கு வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளது என்கின்றனர் பொருளாதார அறிஞர்கள்.

பட்ஜெட்டில் ஒதுக்கிய 1.21 லட்சம் கோடி ரூபாயை தரமுடியாமல் நிதிப் பற்றாக்குறையை காரணம் கூறும் மத்திய அரசு விவசாயக் கடன் தொகையான ரூ.12 லட்சம் கோடியை  எவ்வாறு தள்ளுபடி செய்ய போகிறது? அவ்வாறு தள்ளுபடி செய்யும் பட்சத்தில் நிதிப் பற்றாக்குறையின் அளவு, GDPயில் 3%-ஐ விட மிக அதிகமாகும். இதனால் உலக வங்கி, நிதியாதிக்க கும்பல்கள் மற்றும் பொருளாதார தர நிறுவனங்களின் (Rating Agency) கடுங் கோபத்திற்கு இந்திய அரசு ஆளாக நேரிடும்.

எனவே விவசாயக் கடன் தள்ளுபடி என்பது ஓட்டுக்காக கூறப்படும் கவர்ச்சி வாக்குறுதியே தவிர அதனை நடைமுறைப்படுத்துவதற்கான முழு அதிகாரம் இந்திய அரசாங்கத்திடம் இல்லை என்பதே உண்மை.  நிலைமை இவ்வாறு இருக்க ஏறத்தாழ அனைத்து அரசியல் கட்சிகளும்  தாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயம் சார்ந்த அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கண்டுவிடுவோம் என்ற தொனியில் பேசிவருகின்றன.

(தொடரும்)

இத்தொடரின் முந்தைய பாகத்துக்கு :

– அருண் கார்த்திக், சங்கர்

NEEM – FTE திட்டங்களை ஒழிப்போம் ! மே நாள் பேரணி – பொதுக்கூட்டம் !

♦ நிரந்தரத் தொழிலாளர் முறையை ஒழித்துக்கட்டும் NEEM – FTE திட்டங்களுக்கு முடிவு கட்டுவோம்!

♦ கூலி அடிமைமுறையைத் தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சியை (GATT) தூக்கியெறிவோம்!

கும்மிடிப்பூண்டியில் 133-வது மேநாள் பேரணி பொதுக்கூட்டம்

பேரணி தொடங்குமிடம்:

மே-1, மாலை 4 மணியளவில் பயணியர் மாளிகை…

பொதுக்கூட்டம் நடைபெறுமிடம்:

மே-1, மாலை 6 மணியளவில் தபால் நிலையம் அருகில்…

This slideshow requires JavaScript.

தலைமை:

தோழர் கே.எம். விகந்தர்,
செயலாளர், பு.ஜ.தொ.மு., திருவள்ளூர்(கி) மாவட்டம்.

எழுச்சியுரை:

தோழர் செ. வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு.

தோழர் ம.சி. சுதேஷ்குமார்,
மாநில இணைச் செயலாளர், பு.ஜ.தொ.மு., தமிழ்நாடு.

பங்குபெறுவோர்:

மு. மணிபாலன்,
மேற்கு ஒன்றிய செயலாளர், தி.மு.க., கும்மிடிபூண்டி,

ஜே. அருள்,
ஒன்றிய செயலாளர்,
இந்திய கம்யூனிஸ்டு கட்சி,
கும்மிடிபூண்டி.

கவிஞர் சுரேஷ்,
செந்தமிழ்ச்சோலை,
கும்மிடிபூண்டி.

வழக்கறிஞர் ஏ.நெடுஞ்செழியன்,
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

செங்கை எஸ்.தாமஸ்,
கௌரவத் தலைவர்,
மணலி தொழிற்சங்கக் கூட்டமைப்பு.

தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட நாகராஜ கண்டிகை கிராம மக்களின் நேருரை மற்றும் மக்கள் பாடகர் தோழர் கோவன் பங்குபெறும் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலைநிகழ்ச்சி நடைபெறும்.

இப்பேரணி – பொதுக்கூட்ட நிகழ்வுகள் வினவு தளம் – யூடியூப் – முகநூல் பக்கங்களில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.


தகவல்:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்,
தொடர்புக்கு 9444461480.

தமிழ்நாட்டுல மாட்டுக்கறிய தடை பண்ண முடியாது !

சென்னை பட்டூரில் மிகவும் பிரபலமானது மாட்டுக்கறிக் கடைகளே .. அங்கு நல்ல தரத்துடன் மாட்டுக் கறி மொத்தமாகவும், சில்லறையாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அங்கு மாட்டுக்கறி வாங்க வரும் வாடிக்கையாளர்களிடம் வினவு குழுவினர் நேர்காணல் எடுத்தனர்.

ஒருவேளை மீண்டும் மோடி ஆட்சிக்கு வந்தால், மாட்டுக்கறி விற்பனைக்குத் தடை விதிக்க வாய்ப்பிருப்பது குறித்து கறி வியாபாரிகளும், வாடிக்கையாளர்களும் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விகளுக்கு அவர்கள் என்ன பதில் சொல்கிறார்கள் ? அறிந்து கொள்ள….

பாருங்கள் ! பகிருங்கள் !


வினவு களச் செய்தியாளர்


இதையும் கொஞ்சம் பாருங்க :

மோடி ஆட்சி நன்னாத் தான் இருக்கு .. மோடியே வரட்டும் | Chennai People Comment

பிஜேபிய பத்தி இங்க வந்து பேசாத … செருப்படிதான் விழும் .. | People Comments