Friday, May 2, 2025
முகப்பு பதிவு பக்கம் 370

சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் புத்தாண்டு நேர்காணல் !

0

பிரதமராக பதவி ஏற்று ஐந்தாண்டுகள் முடியவிருக்கிற நிலையில் ஒரே ஒரு முறைகூட பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தாத மோடி, தேர்தல் நெருங்க உள்ளதையொட்டி ஊடகங்களுக்கு ‘எக்ஸ்க்ளூசிவ்’ பேட்டி அளிக்கத் தயாராகி வருகிறார்.  புத்தாண்டு தினத்தன்று ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் பல புளுகு மூட்டைகள், சில திரித்தல்கள், சில முரண்பாடுகள் என பலவற்றை ’கலவையாக’ பேசியிருக்கிறார். மோடியின் நேர்காணல் ஒரு புறத்தில் கடும் எதிர்வினைக்கும் மற்றொரு புறத்தில் கேலி-கிண்டலுக்கும் ஆளாகியுள்ளது.

இச்செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் விவசாய கடன் தள்ளுபடி, சர்ஜிக்கல் ஸ்டிரைக், தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அமைத்துவரும் கூட்டணி, ராமர் கோயில் விவகாரம், முத்தலாக் மசோதா, சபரிமலையில் பெண்கள் நுழைவு உள்ளிட்ட பல விஷயங்களைப் பேசியிருக்கிறார்.  காங்கிரசின் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பை ‘லாலிபாப்’ என்கிறார்; உச்சநீதிமன்ற தீர்ப்பு இல்லாமல் ராமர் கோயில் கட்ட சட்ட இயற்றுவது  இயலாது என்கிறார்; ஒரே ஒரு சர்ஜிக்கல் ஸ்டிரைக்கால் பாகிஸ்தான் மாறிவிடாது என்கிறார்; எதிர்க்கட்சிகளின் கூட்டணி தன்னை எதிர்த்தே என்கிறார்.

படிக்க:
♦ சிபிஐ மோசடி : மோடியின் அமைச்சர் சௌத்ரியும் என்எஸ்ஏ அஜித் தோவலும் புதுவரவு !
♦ மோடி அமைச்சரவைக் கமிட்டிதான் ரஃபேல் விமான விலையை உயர்த்தியது !

காங்கிரசு கட்சி மோடியின் பேட்டியை ‘நான், எனது, என்னால், எனக்காக’ என பகடி செய்திருக்கிறது. வேலை வாய்ப்பு, கருப்புப் பணம், பணமதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. உள்ளிட்டவை குறித்து 10 கேள்விகளை தயாரித்துள்ள காங்கிரஸ், இந்தக் கேள்விக்கு பிரதமர் பதிலளிப்பாரா என வினவுகிறது.

மோடியின் நேர்காணல் குறித்து சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்துள்ள மக்கள், தன்னுடைய பிம்பம் சரிந்து வருவதை சீர்செய்ய வேண்டிய சூழ்நிலையில் மோடி ஊடகங்களிடம் பேசுவதாக தெரிவித்துள்ளனர்.  மோடியின் ஜோடிக்கப்பட்ட நேர்காணலில் புதிதாக எதுவும் இல்லை என்றும் பலர் கருத்து சொல்லியிடுக்கின்றனர்.

சங்பரிவாரங்கள் வழக்கம்போல, மோடியின் நேர்காணலை ஏகத்துக்கு புகழ்ந்துகொண்டிருக்கும் வேளையில், மோடியின் ஐந்தாண்டு ஆட்சியில் எரிச்சலடைந்திருக்கும் பலர் ட்விட்டரில் பகடி செய்ய ஆரம்பித்துள்ளனர்.

மிருணாள் பாண்டே

மோடி தன்னுடைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த நேர்காணலில் எத்தனை முறை ‘நான்’ என்கிற சொல்லை பயன்படுத்திருக்கிறார் என்பதை யாரேனும் எண்ணியிருக்கிறார்களா? எனக் கேட்கிறார் மிருணாள் பாண்டே.

துருவ் ரதீ

“கேள்வி இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருந்திருக்கலாம். ஆனால், பதில்கள் அனைத்தும் மன் கி பாத் ரகம். எழுதி தருகிறவர்கள் சிறப்பான கதைகள் எழுத வேண்டும். நேர்கண்டவர் பதிலிலிருந்து கேள்வி கேட்பதை பழக வேண்டும்” என்கிறார் துருவ் ரதீ.

அதுல் கட்ரி

#Modi2019Interview என்ற ஹேஷ்டாகை பார்த்தபோது இறுதியாக நீரவ் மோடிதான் பேட்டியளித்திருக்கிறார் என நினைத்தேன் என்கிறார் எழுத்தாளர் அதுல் கட்ரி.

ஜாய்

ஏ.என்.ஐ எடுத்த நரேந்திர மோடியின் பதில்/கேள்வி நேர்காணலை மிகவும் விரும்புகிறேன். மோடி முதல் எழுதிய பதில்களை கொடுத்திருக்கிறார். அதன் பிறகு ஏ.என்.ஐ. கேள்வி அமைத்திருக்கிறது என்கிறது இந்தப் பதிவு.

ஆகாஷ் பானர்ஜி

நல்லதோ கெட்டதோ மோடி நேர்காணல், ஒன்றை உணர்த்தியிருக்கிறது. அதாவது, மோடி நேர்காணல் அளிக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டிருக்கிறார் என்பதே அது. பிரதமரின் மிகப் பெரிய மக்கள் தொடர்பு சாதனங்களான, ஒருதலைபட்சமான டிவிட்டுகளும், மன் கி பாத் சொற்பொழிவுகளும், அனல் பறக்கும் பேச்சுகளும் தோற்றுவிட்ட நிலையில் மோடி இறங்கி வந்திருக்கிறார் என்கிறார் நகைச்சுவையாளர் ஆகாஷ் பானர்ஜி.

மொயின் நஸ்

மேகாலயாவில் 15 சுரங்கத் தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டதை தேசிய ஊடகங்கள் மறந்துவிட்டதை சுட்டிக்காட்டும் ஒரு பதிவர், 2014-ஆம் ஆண்டிலிருந்து மனித உயிர்களுக்கு நம் நாட்டில் மதிப்பிருக்கிறதா? மோடி பேரழிவுகளை ஏற்படுத்தியவர் என சுட்டிக்காட்டுகிறார் அந்தப் பதிவர்.

கேள்வியும் நானே பதிலும் நானே மோடியை பகடி செய்கிறது இந்த ட்விட்டர் பதிவு.

முத்தலாக் தடை சட்ட விசயத்தில் அது முசுலீம் பெண்களுக்கு சம உரிமை தருவதாக பேட்டியளித்திருக்கும் மோடி, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் வழிபடலாம் என்கிற நீதிமன்ற தீர்ப்பை, பாரம்பரியம் தொடர்பானது என்கிறார். மாதவிடாய் காலத்தில் உள்ள பெண்கள் சபரிமலைக்குச் செல்வதைத்தான் எதிர்ப்பதாகவும் அது சபரிமலையின் பாரம்பரியத்துக்கு எதிரானது எனவும் பேசுகிறார் மோடி. இத்தனை வெளிப்படையான பிற்போக்குத்தனத்தை பேசும் முதல் இந்திய பிரதமர் மோடியாகத்தான் இருப்பார். மோடியின் இரட்டை வேடம், சந்தர்ப்பவாதம் ட்விட்டரில் கடும் கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

“முசுலீம் நாடுகள்கூட முத்தலாக்-ஐ தடை செய்திருக்கின்றன. பாகிஸ்தானிலும்கூட அது தடை செய்யப்பட்டிருக்கிறது.” என்கிற மோடி, பாகிஸ்தான் போன்ற அடிப்படைவாதிகளிடம் உள்ள சிந்தனைகூட தன்னிடம் (சங்பரிவார் அடிப்படைவாதிகளிடம்) சபரிமலை விசயத்தில் இல்லை என்கிறார். சபரிமலை தீர்ப்பளித்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய குழுவில் இருந்த நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் வேறுபட்ட பார்வை (மத கட்டுப்பாடுகளில் தலையிடக்கூடாது என சொன்னார்) குறித்த கேள்விக்கு பதிலளித்த மோடி “ஒரு பெண்ணாக அவர் இந்தக் கருத்தை சொல்லியிருக்கிறார்” என்கிறார்.  அவருடைய கருத்தை எந்தக் கட்சியோடு முடிச்சு போடக்கூடாது எனவும் விளக்கம் தருகிறார்.

மோடியின் இரட்டை வேடம் குறித்து கருத்து தெரிவித்துள்ளா அசாசுதீன் ஓவைசி, “மோடி அனைத்து விசயத்திலும் பாகிஸ்தானை பின்பற்ற நினைக்கிறார்” என விமர்சித்துள்ளார்.

ஜம்மு -காஷ்மீரின் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ஒன்று முசுலீம்கள் தொடர்பானது. இன்னொன்று அப்படியல்ல. அதனால்தான் தன்னுடைய அரசு முரண்பட்ட பார்வைகளுக்கு மோடி விளக்கமளித்துக்கொண்டிருக்கிறார் என எதிர்வினையாற்றியிருக்கிறார்.

டிவிட்டரில் ஒரு பதிவர், “முசுலீம் பெண்களுக்கு மட்டும் பாலின சமத்துவமா? முத்தலாக் சொன்ன கணவர், மனைவியை கைவிட்டால், உச்சநீதிமன்றத்தின் முன் அந்த முத்தலாக் செல்லாது. முசுலீம் பெண்களுக்கு மட்டும் தன்னை கைவிட்ட கணவனை சிறைக்கும் அனுப்புவது நீதி என்றால், அதை வைத்து இந்துப் பெண்களை கைவிடும் கணவர்களையும் சிறைக்கு அனுப்பலாம் இல்லையா? எனக் கேட்கிறார்.

“இந்தியாவில் இந்து கணவர்களால் கைவிடப்பட்ட இரண்டு மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் இருக்கிறார்கள்.  முத்தலாக் செய்யப்பட்டு கைவிடப்பட்ட பெண்கள் சில ஆயிரங்களில் இருப்பார்கள். எனில், முசுலீம் பெண்களுக்குக் கிடைத்த நீதி, இந்து பெண்களுக்கும் கிடைக்க வேண்டும் அல்லவா?” என கேட்கிறார் மற்றொரு டிவிட்டர்வாசி.

’ஹிட்’டடிப்பதற்காக எடுக்கப்பட்ட மோடியின் நேர்காணல் ஊத்திக்கொண்டுள்ளதையே சமூக ஊடக எதிர்வினைகள் காட்டுகின்றன. இதையெல்லாம் பொருட்படுத்தாது அதனால் என்னவென்று துடைத்து போட்டுவிட்டு, அடுத்த செயல்திட்டத்துக்கு தயாராகிக்கொண்டிருக்கும் மோடி கும்பல்.

அனிதா

நன்றி: ஸ்கரால்

ஆந்திரா கோதாவரிப் படுகை : 40 ஏக்கரில் விவசாயம் செய்கிறார் – ஆனாலும் அவர் ஏழை !

ந்திரா மாநிலம்-காக்கிநாடா நகரம் சார்ந்த் பகுதிகள்தான் கோதாவரி நதியின் கடைமடைப்பகுதி. காக்கிநாடவை சுற்றியுள்ள பகுதி கோதாவரியின் டெல்டா என்றழைக்கப்படுகிறது. காக்கிநாடா நகரை விட்டு வெளியே சென்றால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை விவசாய நிலங்கள், குறுக்கும் நெடுக்குமாக வாய்க்கால்கள், கால்வாய்கள் என நீர் ஆதாரம் நிறைந்த பகுதியாக இருக்கிறது.

இங்கு விவசாய நிலங்கள் பெரும்பாலும் பண்ணையார்கள் வசம்தான் உள்ளது. தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இரண்டு ஏக்கருக்கும் குறைவாகவே நிலமுள்ளது; அல்லது அதுவும்கூட இல்லாமல் இருக்கிறது. அதில் ஒரு கிராமம்தான் அயனவள்ளி-லங்கா மண்டலத்தைச் சேர்ந்த வீரனவள்ளிபாலேம்.

கோட்டிப்பள்ளி

இந்த கிராமத்திற்கு  செல்ல கொட்டிப்பள்ளியில் இருந்து கோதாவரி ஆற்றின் குறுக்கே கடந்துதான் செல்ல வேண்டும். ஆறு என்றதும் நம் ஊர்போல வறண்ட பாலைவனம் போல் இருக்கும், மணல் கொள்ளையடிக்கப்பட்டு ஆறு என்பதற்கான தடமே அழிக்கப்பட்டிருக்கும் என்று நினைக்க வேண்டாம்.

எங்களை ஆட்டோவில் அழைத்து சென்ற நண்பர் ஒருவர், “நாம் ஆற்றை கடக்க படகில் செல்லப் போகிறோம்” என்றார். ஆற்றை  கடந்ததும் எதில் செல்வோம் என்றோம்.  அப்போழுது அவர் “ஆட்டோவையும் படகில் ஏற்றிக்கொண்டு செல்ல வேண்டும்” என்றதும் திகைப்பு தான் ஏற்பட்டது. உண்மையில் எதிர்பார்த்ததை விட மிகப் பிரமாண்டமாக இருந்தது கோதாவரி.

கோதாவரி ஆறு

ஆற்றின் கரையில் இருந்த பெரிய படகில் மக்கள் ஏறிக்கொண்டு இருந்தனர். முன்னதாக அந்த படகில் ஒரு காரை ஏற்றி வைத்திருந்தார்கள். ஆட்டோவை படகில் ஏற்றியதும் கிளம்பியது. எதிர் கரையில் இருந்து இன்னொரு படகு மக்களை சுமந்துக் கொண்டு கொட்டிப்பள்ளி நோக்கி வந்து கொண்டிருந்தது. ஆற்றை கடக்கும் தூரம் சுமார் இரண்டு கிலோ மீட்டர் இருக்கும். படகில் பயணித்த மக்களுக்கு அது புதிதில்லை என்றாலும் ஒவ்வொரு முறையும் பயணிக்கும்போது புதிதாகவே உணர்கிறார்கள் என்பதை அவர்கள் வளைத்து வளைத்து எடுத்துக்கொண்ட செல்ஃபி நமக்கு உணர்த்தியது.

கோதாவரி படகு பயணம்

“எப்பொழுதும் தண்ணீர் வற்றாமல் ஓடிக்கொண்டே இருக்கும். இந்த தண்ணியின் வரத்து கொஞ்சம் கொறஞ்சி இருக்கு. இதோட முழு அளவுல பார்த்தா இன்னும் பிரமாண்டமா இருக்கும்” என்று அதன் பெருமை மெய்சிலிர்த்தவாறு சொன்னார் அழைத்துச் சென்ற நண்பர். அவர் சொல்லும்போதே இப்பகுதி பாசனத்தின் வளத்தை நம்மால் புரிந்து கொள்ள முடிந்தது. இந்த ஆறு இல்லையென்றால் ஆந்திராவில் இருந்து மாபெரும் குடிபெயர்வு மூலம் மக்கள் சென்றிருப்பார்கள் என்பது மிகையல்ல.

கோதாவரி படகு

“பரந்து விரிந்த தென்னை விவசாயம், வாழை விவசாயம், அதற்கிடையில் ஊடுபயிராக சிறுதானிய பயிர் வகைகள், கத்தரி-பூசணிக்காய் என்று காணும் இடமெல்லாம் பசுமை. நிலம் அனைத்தும் பண்ணையாரின் வசம். இந்த பசுமையை கொஞ்சம் அசைத்துப் பார்த்துள்ளது கடந்த ஆண்டு டிசம்பர் 17-ம் தேதி வீசிய பெய்ட்டி புயல்.

பெய்ட்டி புயல் பாதிப்புகள்

இப்பகுதியில் பயிரிடப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான ஏக்கர் வாழைகள் பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தன. வெளியில் இருந்து பார்க்கும் போது அதன் பாதிப்பு தெரியவில்லை. உள்ளே செல்ல செல்ல தான் புயலின் பாதிப்பை முழுமையாக தெரிந்து கொள்ள முடிந்தது. எனவே இவ்விடங்களுக்கு ஊடகங்களோ, அதிகாரிகளோ சென்றிருக்க வாய்ப்பேயில்லை.

ஆற்றை கடந்து குண்டும் குழியுமான சாலையில் ஊர்ந்து செல்லும்போது சாய்ந்து கிடந்த வாழைத்தோப்பின் அருகே இருந்த ஒரு மரத்தின் நிழலில் அமர்ந்திருந்தார் 49 வயதான விவசாயி நாகேஸ்வரராவ். கோதாவரி ஆற்றுப் படுகையோரம் 40 ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிட்டுள்ளார்.

விவசாயி நாகேஸ்வரராவ்
விவசாயி நாகேஸ்வரராவ்

அவரிடம் புயல் பாதிப்பு குறித்து கேட்டபோது….

“இந்தமாதிரி சேதாரம் எத்தனையோ பார்த்துட்டோம். இந்த தடவை மொத்த வாழையும் போயிடுச்சி. பூம்பழம், ரஸ்தாளி, கதளி, பழவாழைன்னு நாற்பது ஏக்கரிலும் இதான் போட்டிருக்கேன்.  இந்த வாழையில ஊடுபயிரா பப்பாளி போட்டிருக்கேன். ஆனா இந்த வாழையே தென்னையின் ஊடுபயிராகத்தான் இருக்குது. தென்னையை தவிர மொத்தமும் அழிஞ்சிடுச்சி” என்று சொல்லிக்கொண்டே தோப்பின் உள்ளே கூட்டிச் சென்று காட்டினார். சாய்ந்து கிடந்த மரங்கள் எல்லாம் பாதி குலைதள்ளிய நிலையில் இருந்தது.

சேதமடைந்த காக்கிநாடா வாழை விவசாயம்

“இது உங்களுக்கு சொந்த நிலமா?”…  எனக்கேட்டதும் ….சிரிக்கிறார்.  “இல்லை. இங்க இருக்க மொத்த நிலமும் விஜயநகர ஜமீந்தாருக்குத்தான் சொந்தம். அவங்களுக்கு கோதாவரி படுகையில சொந்தமா ஆயிரக்கணக்கான ஏக்கர் இருக்கு. ஆத்தோட நடுவுல பல மணல்திட்டுகள் இருக்கு. அந்த மணல் திட்டுகளும் ஜமீனுக்குத்தான் சொந்தம். இந்த மணல் திட்டுலயும் விவசாயம் பண்றாங்க. அங்கயும் வாழைதான்” என்கிறார்.

பெய்ட்டி புயல் சேதம்

இன்று சமவெளியில் விவசாயம் செய்வதே இயலாத நிலையில் ஆற்றின் நடுவில் விவசாயம் என்பதை நம்மால் நினைத்துப் பார்க்கவே இயலவில்லை. ஆனால், இது அப்பகுதியில் இயல்பாக நடக்கும் ஒன்று.

கோதாவரி மணல் திட்டு விவசாயம்

“சமவெளியில இருக்கறவங்களாவது பரவாயில்ல. கோதாவரி ஆத்து திட்டுல விவசாயம் செய்யிறவங்களுக்குத்தான் ரொம்ப கஷ்டம். அவங்க சொந்தமா சின்னதா படகு வச்சிருக்காங்க. அவங்களால தெனைக்கும் வந்து போக முடியாது. அதனால  இரண்டு நாள் நிலத்துலயே தங்கி பயிர் பச்சிலய பார்த்துட்டு போயிடுவாங்க. அறுவடை சமயத்துல கொஞ்சம் கஷ்டமா இருக்கும்.  பயிரை கொண்டு வந்து படகுல தான் ஏத்திட்டு கொண்டு போறதுக்குள்ள போதும்னு ஆயிடும். ஆத்துல வெள்ளம் போனா அவங்க நெலம இன்னும் மோசமாயிடும்.

இப்ப அதெல்லாம்கூட பாதிக்கப்பட்டிருக்கு. இந்த நிலம் ஜமீனோட ட்ரஸ்டுக்கு சொந்தமானது. கொட்டிபள்ளியில தான் ட்ரஸ்ட் ஆபிஸ் இருக்கு. அங்கதான் போயிட்டு குத்தகை பணம் கட்டிட்டு வருவோம்” என்று அவர் சொல்லி முடிக்கும்போது கூட இருந்த நண்பர் குறுக்கிட்டு……….

“இந்த நிலங்கள் எப்படி அறக்கட்டளையாக மாறியதுன்னா…. 1950-60 களில் வினோபாவின் பூமிதான இயக்கம், கம்யூனிஸ்ட் கட்சிகளின் தீவிர நிலப்பறி போராட்டம். அதைத் தொடர்ந்து  நில உச்ச வரம்பு சட்டம் கொண்டு வந்தாங்க. அந்த சமயத்துல மீப்பெரும் நிலச்சுவாந்தாரர்கள் தங்கள் பெயரில் இருக்கும் நிலத்தை பிரித்து தங்களது ரத்த உறவுகளின் பெயரிலும், பினாமிகளின் பெயரிலும் எழுதியது போக மீதி நிலத்தை அறக்கட்டளை பெயரிலும் எழுதிக் கொண்டார்கள்.

நிலத்தின் அனுபவஸ்தர்களாக அவர்களே இருப்பார்கள். எல்லா உரிமையும் அவர்களுக்கே இருக்கும்படி செய்து கொண்டார்கள். இதன் காரணமாகவே பெரும்பான்மை மக்களுக்கு நிலம் மறுக்கப்பட்டு காலம் காலமாக குத்தகை விவசாயிகளாகவே இருந்து வருகின்றனர்” என்றார்.

தொடர்ந்து நாகேஸ்வரராவிடம் “இந்த நிலத்துல நீங்க எவ்ளோ வருஷமா பயிர் வக்கிறீங்க? எவ்ளோ குத்தகை கட்டுறீங்க?

“எங்க தாத்தா-அப்பா, இப்ப நான் என்று வழிவழியா குத்தகைக்கு எடுத்துதான் விவசாயம் பன்றோம். இதை விட்டு வெளியில போக முடியாது. ஒருவேளை போயிட்டா  யார்கிட்டயாவது கொடுத்துடுவாங்க. திரும்ப நம்மள நெனச்சிக்கூட  பாக்க முடியாது. இதனாலயே நாங்க யாரும் பள்ளிக்கூடம்கூட போகல.  ஒரு ஏக்கருக்கு வருசத்துக்கு ரூ.25,000 கட்டிடனும். இதுல பயிர் வக்கிற உரிமை மட்டும்தான் நமக்கு இருக்கு.  தென்னைக்கும் நமக்கும் சம்பந்தம் இல்ல. அதுல விளையிர காயை எல்லாம்  குத்தகைக்கு விட்டுடுவாங்க. குத்தகை எடுக்கிறவங்க எஸ்டேட்ல காச கட்டிடுவாங்க. நாங்க ஒரு மட்டையக்கூட அதுல இருந்து எடுக்க கூடாது. நிலத்துல இருந்து ஒரு பிடி மண்ண எடுத்தாலும் எனக்கு குத்தகை கேன்சல் ஆயிடும்.”

புயலால் சரிந்து கிடக்கும் பப்பாளி

அப்படின்னா…. தென்னைக்கு தண்ணி பாய்ச்சிறது, பராமரிப்பு வேலையெல்லாம் யார் செய்வாங்க?

“வாழைக்கு பாய்ச்சும்போதே தென்னைக்கும் நீர் போயிடும். அதுக்குன்னு தனியா ஆள் வைக்க மாட்டாங்க. எல்லாத்தையும் நாமளே பார்த்துக்க வேண்டியதுதான். கூலி எதுவும் கொடுகிறதில்ல” என்று நிலப்புரபுத்துவ விவசாயத்தின் சுரண்டலை எந்த சலனமுமின்றி இயல்பாக சொல்கிறார்.

உங்களுக்கு மொத்தமா எவ்ளோ இழப்பு? நிவாரணம் எதாவது தர்றதா சொன்னாங்களா?

சந்திரபாபு நாயுடு ஆட்சியில இந்த நாலு வருஷமா 3-4 தடவை வெள்ளம்-புயல் வந்துடுச்சி… இதே மாதிரிதான் டேமேஜ் ஆனது. ஆனா எந்த நிவாரணமும் தரல. இதுக்கு முன்னாடி இருந்த காங்கிரசு அரசாவது எதாவது நிவாரணம் கொடுத்துச்சி. இப்ப அதுவும் வரதில்ல.

இழப்பு எவ்ளோ?

ஏக்கருக்கு 800 கண்ணு, ஒரு கண்ணு ரூ.12 மேனிக்கு ரூ 9600. வாழைக்கு பக்கபலமா முட்டுக்கு சவுக்கு கழி வாங்கனும். ஒரு கழி ரூ.49 மேனிக்கு 800 மரத்துக்கு ரூ.39,200 ரூபா. உரம் 6,000 ஆகும். மொத்தம் 54,800 ரூபா செலவாகும். கூட குறைவா பூச்சி தாக்குனா செலவாகும். நல்லா வெளஞ்சி வியாபாரிகிட்ட விற்கும்போது ஒரு தார் வாழை  150 ரூபாய் (விளைச்சல்-சந்தையின் தேவைக்கு ஏற்ப தாரில் விலை அதிகரிக்கும்) போகும். 800 தார் என்று கணக்கு போட்டால் 1,20,000 வரும். இதுல செலவுக்கான கழிவு போக, குத்தகை 25,000 கட்டனும், மீண்டும் இதை அடுத்த வெட்டுக்கு பராமரிக்க ரூ.15,000 ஆகும். அதெல்லாம் போக மிஞ்சுறதுலதான் குடும்பத்த காப்பாத்தனும். இதுல என்னோட உழைப்ப இல்லாம சொல்லியிருக்கேன்.

விற்பனைக்கு உதவாத வாழைகள்

சாஞ்ச  மரத்தில தேறும் காய் அடிபட்ட காய்னு குறைவான விலைக்குத்தான் வாங்குவாங்க. அதனால ஒன்னும் பிரயோஜனம் இல்லை. ஏற்கனவே இந்த செலவை எல்லாம் வெளியில 3, 4 பைசா வட்டிக்கு வாங்கித்தான் செஞ்சிருக்கேன். இதுல இந்த பாதிப்ப எப்படி சமாளிக்கிறதுன்னு தெரியல…

வங்கியில விவசாய கடன் தரதில்லையா?

நமக்கெல்லாம் எப்படி தருவான்..?. இந்த நிலம் குத்தகை நிலம். கடன் வாங்கனும்னா, நிலத்தோட உரிமைப் பத்திரம் வேணும். அது எங்ககிட்ட இருக்காது. குத்தகை அக்ரீமெண்ட் பத்திரமாவது தரனும்…. அதுவும் கிடையாது.

அரசாங்கம் குத்தகை விவசாயின்னு ஒரு ஐ.டி கார்டு கொடுப்பாங்க. அதுவும் தரதில்ல. அப்புறம் எப்படி வாங்க முடியும்? நாங்க பயிர் வச்சிருந்தாலும் நிலத்துக்கு சொந்தாகரங்கன்னு சொல்லி ஜமீன்கள் வாங்கிப்பாங்க.

ஒருவேளை சொந்த நிலம் வச்சிருக்கிறவங்களுக்கு பேங்குல லோன் கொடுத்தாலும் ஏக்கருக்கு ரூ.15000 தான் கொடுப்பாங்க. அதுவும் அவ்ளோ சீக்கிரத்துல வாங்கிட முடியாது.

அரசு நிவாரணமும் கிடைக்காது

வியாபாரிகிட்ட இருந்து முன்பணம் எதாவது வாங்கி இருக்கிங்களா?

“ஆமா, ஏக்கருக்கு ரூ.20,000 வாங்கி இருக்கோம். அந்த வகையில ஒரு கடன் இருக்கு. இதை எப்படி அடைக்கிறது, வியாபாரிகிட்ட என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியல” என்கிறார் சோகமாக.

இத்தன வருசமா விவசாயம் செய்யுறீங்க.. ஏன் சொந்தமா நிலம் வாங்கல?

நமக்கு யார் கொடுப்பாங்க…..? அதோட இங்க ஏக்கருக்கு 25 லட்சத்துல இருந்து 50 லட்சம் வரைக்கும் விலை போவுது… அது எந்த மாதிரியான நிலமா இருந்தாலும் இதான் விலை. அப்புறம் எப்படி வாங்க முடியும்?

கோதாவரி

இவ்ளோ பாதிப்பு இருக்க இடத்துல விவசாயம் செய்யிறீங்களே வேற எங்கயாவது போயிட்டு குத்தகை எடுத்து விவசாயம் செய்யிறதுதானே?

சொல்றது சரிதான். ஆனா வேற எங்க போனாலும் லீசு அதிகம். இத விட்டுட்டு போனா திரும்ப இந்த நிலம் கிடைக்காது. இத வாங்க காத்திட்டு கெடக்காங்க. கோதாவரி பக்கமா இருந்தாலும் அந்த தண்ணிய பயன்படுத்துவது இல்லை. பக்கத்துலயே கடல் இருக்கதால உப்புத்தண்ணி கலந்துடுது.  மழை அப்படி  இல்லனா போர் தண்ணி பஞ்சமில்லாம கெடைக்கும்.

திரும்பவும் நீங்க வாழை வைப்பிங்களா? என்ன பண்ண போறீங்க?

அப்படி ஒரு எண்ணம் இல்ல. இதை எல்லாம் கிளீயர் பன்றதுக்கே கொறஞ்சது 15,000 ஆகும். அதுக்கே என்ன பன்றதுன்னு தெரியல. திரும்ப வைக்கணும்னாலும் நேரம் இல்ல. பருவம் தவறி போயிடுச்சி. இப்ப வச்சா மரம் வளர்ந்து நிக்கும்போது திரும்பவும் காத்து, புயல் அடிக்குற காலம் வந்துடும். அப்புறம் எல்லாமும் நாசமாயிடும்.

சவுக்கு கழி
சவுக்கு கழி

உங்களுக்கு பசங்க இருக்காங்களா-என்ன பன்றாங்க?

ரெண்டு பசங்க. ஒரு பொண்ணு ஒரு பையன் . இப்பதான் அரசுப்பள்ளியில  படிக்கிறாங்க.

அவங்கள எதிர்காலத்துல என்ன படிக்க வக்க போறீங்க?

என்ன படிக்க வக்கிறது..! அப்படியே இந்த வேலைதான். இதுதான் எங்க ஊர்ல இருக்க எல்லோருக்கும். ஒரு சிலர் தான் காலேஜ் வரைக்கும் போயிட்டு படிக்கிறாங்க. கடன் வாங்குறது- விவசாயம் செய்யிறது- அதனை அடைக்கிறது- மீண்டும் கடன் வாங்கி விவசாயம் செய்யிறதுன்னு இப்படியே சுத்தி சுத்தி வரணும்.. இதுல புயல்- மழை வந்தா அதையும் சரி கட்டனும். அப்புறம் எங்க படிக்க வைக்கிறது? என்னால படிக்க வக்கிறதெல்லாம் முடியாத காரியம்.

நான் காலையில ஆறு மணிக்கு வீட்டவிட்டு வந்தா நைட்டு பத்து மணிக்குத்தான் நிலத்த விட்டு போவேன். நகரத்துக்கு எப்பவாது ஒருமுறை தான் போவேன். அதுவும் உரம் வாங்க போவேன். அதுக்கு மேல எங்களுக்கு அங்க வேலை இல்ல. நிலந்தான் எங்களுக்கு வாழ்க்கை..! இத காப்பாத்திக்கிட்டாலே போதும்..!

படம், செய்தி: வினவு செய்தியாளர்கள்,
ஆந்திரா, காக்கிநாடாவில் இருந்து..

2400 வருடங்களாக நடைபெறும் விவாதம் : பண்டத்தின் மதிப்பை தீர்மானிப்பது எது ?

1

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 6

பொருளாதாரத்தின் கடைசி அலகு பண்டம். சரக்கு அல்லது பண்டத்தின் மதிப்பு எப்படி தீர்மானிக்கப்படுகிறது? இதில் மார்க்சிய அரசியல் பொருளாதாரமும், முதலாளித்துவ அரசியல் பொருளுதாரமும் எப்படி வேறுபடுகின்றன? இந்த மதிப்பு குறித்த விவாதத்தில் முதலாளித்துவக் கல்வி ஒதுக்கும் அம்சங்கள் என்ன? அடிமை உடமை சமூகத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டில் பண்டத்தின் மதிப்பு குறித்து என்ன சொல்கிறார்? படியுங்கள். கட்டுரையின் இறுதியில் கேள்விகள் இருக்கின்றன – விடையளிக்க முயலுங்கள்!
-வினவு

*****

முதல் தொடக்கம் : அரிஸ்டாட்டில் (தொடர்ச்சி)

மார்க்சியப் பொருளாதாரப் போதனையில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் ஒரு முக்கியமான பங்கு வகிக்கிறது.

அ.அனிக்கின்
மார்க்ஸ் முதலாளித்துவ மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தைப் பற்றிச் செய்த விமர்சன ஆராய்ச்சியின் மூலம் இந்தத் தத்துவத்தை உருவாக்கினார். எல்லாப் பண்டங்களும் ஒரு அடிப்படையான குணாம்சத்தைப் பொதுவாகக் கொண்டிருக்கின்றன. அவை எல்லாமே மனிதனுடைய உழைப்பினால் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருள்கள். இந்த உழைப்பின் அளவுதான் அந்தப் பண்டத்தின் மதிப்பை நிர்ணயிக்கிறது.

ECONOMICஒரு கோடரியைச் செய்வதற்கு ஐந்து உழைப்பு மணி நேரமும், ஒரு மண்பானையைச் செய்வதற்கு ஒரு மணி நேரமும் செலவிடப்பட்டால், மற்றவை எல்லாம் சமமாக இருக்கும் பொழுது, கோடரியின் மதிப்பு பானையின் மதிப்பைப் போல ஐந்து மடங்கு அதிகமாக இருக்கும். ஒரு கோடரிக்குப் பரிவர்த்தனையாக ஐந்து பானைகள் கொடுக்கப்படுவதிலிருந்து இதைத் தெரிந்து கொள்ள முடியும். இது பானைகளின் மூலமாகச் சொல்லப்படும் கோடரியின் பரிவர்த்தனை மதிப்பு.

இதை இறைச்சி, துணி, அல்லது வேறு எந்தப் பண்டத்தின் மூலமாகவும் சொல்ல முடியும்; அல்லது கடைசியில் பணத்தின் மூலமாகவும், அதாவது ஒரு குறிப்பிட்ட அளவு வெள்ளி அல்லது தங்கத்தின் மூலமாகச் சொல்ல முடியும். ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு பணத்தின் மூலமாக எடுத்துரைக்கப்படும் பொழுது அது அதன் விலை எனப்படும்.

உழைப்பு என்பது மதிப்பைப் படைக்கின்ற ஒன்று என்ற பொருள் விளக்கம் மிக முக்கியமானது. கோடரிகளைத் தயாரிப்பவரின் உழைப்பை பானைகளைச் செய்பவரின் உழைப்போடு ஒப்பிட வேண்டுமென்றால், அதை ஒரு குறிப்பிட்ட தொழிலின் ஸ்தூலமான வகையைச் சேர்ந்த உழைப்பாகக் கருதக் கூடாது; ஒரு குறிப்பிட்ட கால அளவுக்கு ஒரு நபரின் கருத்துச் சக்தியையும் உடற்சக்தியையும் செலவு செய்வதாக மட்டுமே கருத வேண்டும்; அதாவது ஸ்தூலமான வடிவத்துக்குச் சம்பந்தம் இல்லாத சூக்குமமான உழைப்பாக மட்டுமே கருத வேண்டும். ஒரு பண்டத்தின் பயன் மதிப்பு (உபயோகம்) அதனுடைய மதிப்பைக் காட்டும் அவசியமான நிபந்தனை; ஆனால் அந்த மதிப்புக்கு அது தோற்றுவாயாக இருக்க முடியாது.

எனவே மதிப்பு புறவயமானதாக இருக்கிறது. அது ஒரு நபரின் உணர்ச்சிகளிலிருந்து சுதந்திரமானதாக, அந்தப் பண்டத்தின் உபயோகத்தை அவர் தன்னுடைய மனதில் எப்படி மதிக்கிறார் என்பதற்குச் சம்பந்தம் இல்லாததாக இருக்கிறது. மேலும் மதிப்புக்கு ஒரு சமூகத் தன்மை இருக்கிறது. ஒரு நபருக்கும் ஒரு பண்டம், பொருளுக்கும் இடையே உள்ள உறவின் மூலம் அது நிர்ணயக்கப்படுவதில்லை; தங்களுடைய உழைப்பின் மூலம் பண்டங்களை உருவாக்கி அந்தப் பண்டங்களைத் தங்களுக்கிடையே பரிவர்த்தனை செய்து கொள்கின்ற மக்களுக்கிடையே உள்ள உறவின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.

இந்தக் கொள்கைக்கு மாறாக, நவீன முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் பரிவர்த்தனை செய்யப்பட்ட பண்டங்களின் அகவய உபயோகமே மதிப்பின் ஆதாரம், அடிப்படை என்று கருதுகிறது. ஒரு பண்டத்தின் பரிவர்த்தனை மதிப்பு அந்தப் பண்டத்தை நுகர்வோனின் விருப்பத்தின் தீவிரத்திலிருந்தும் அந்தக் குறிப்பிட்ட பண்டம் சந்தையில் கிடைக்கின்ற அளிப்பு நிலையிலிருந்தும் ஏற்படுகிறது. எனவே அது தற்செயலானதாக, ”சந்தை” மதிப்பு எனவாகிறது. மதிப்புப் பிரச்சினை தனிப்பட்ட மிகு விருப்பத் துறைக்கு ஒதுக்கப்படுவதால், இங்கே மதிப்பு அதன் சமூகத் தன்மையை இழந்து விடுகிறது; அது மக்களுக்கிடையே உள்ள உறவு என்பது போய்விடுகிறது.

மதிப்புத் தத்துவம் அதனளவில் மட்டும் முக்கியமானதென்று நினைக்கக் கூடாது. உழைப்பளவை மதிப்புத் தத்துவத்திலிருந்து நாம் அடைகின்ற முக்கியமான முடிவு உபரி மதிப்புத் தத்துவமாகும். முதலாளிகள் தொழிலாளி வர்க்கத்தைச் சுரண்டுகின்ற செயல் முறையை இந்தத் தத்துவம் விளக்குகிறது.

முதலாளித்துவ சமூகத்தில் உற்பத்தி செய்யப்படும் பண்டங்களின் மதிப்பில் கூலி உழைப்பாளியால் உருவாக்கப்பட்டு ஆனால் முதலாளியினால் கூலி கொடுக்கப்படாதிருக்கும் பகுதியின் மதிப்பு உபரி மதிப்பு எனப்படும். முதலாளி அந்தப் பகுதிக்குக் கூலி கொடுக்காமலே தனக்கென ஒதுக்கிக் கொள்கிறார்; முதலாளி வர்க்கத்தின் லாப வேட்டையின் ஆதாரம் இதுவே. முதலாளித்துவ உற்பத்தியின் நோக்கம் உபரி மதிப்பைப் படைப்பதே. இதை உற்பத்தி செய்வதே முதலாளித்துவத்தின் பொதுப் பொருளாதார விதி. உபரி மதிப்பில்தான் பொருளாதார முரணியலின், முதலாளி வர்க்கத்துக்கும் தொழிலாளி வர்க்கத்துக்கும் இடையே உள்ள வர்க்கப் போராட்டத்தின் மூல வேர்கள் இருக்கின்றன.

Economic-politc-Surplusமார்க்சியப் பொருளாதாரப் போதனையின் அடிப்படை என்ற முறையில் உபரி மதிப்புத் தத்துவம் முதலாளித்துவ உற்பத்தி முறையின் முரண்பாடுகள் வளர்ச்சியடைவதையும் ஆழமடைவதையும் கடைசியில் அதன் வீழ்ச்சியையும் நிரூபிக்கிறது. மார்க்சியத்துக்கு எதிராக முதலாளித்துவ அறிஞர்களின் தாக்குதல்கள் பிரதானமாக உபரி மதிப்புத் தத்துவத்தை நோக்கியே திருப்பப்படுகின்றன. மதிப்பைப் பற்றிய அகவயத் தத்துவமும் அதனோடு தொடர்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் மற்ற கருத்துக்களும் சுரண்டலையும் வர்க்க முரண்பாடுகளையும் கோட்பாட்டளவில் ஒதுக்குகின்றன.

கடந்த 2,400 வருடங்களாக நடைபெற்றுவரும் ஒரு விவாதத்தை இது விளக்கிக் காட்டுகிறது. அரிஸ்டாட்டில் உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தைத் தொலைவில் நின்று கொண்டாவது ஆதரித்தாரா? அல்லது ஒரு பொருளின் பரிவர்த்தனை மதிப்பை அதன் உபயோகத்தைக் கொண்டு கணக்கிடுகிற கொள்கைகளுக்கு அவர் முன்னோடியா? அரிஸ்டாட்டில் மதிப்புத் தத்துவம் ஒன்றை முழுமையாக உருவாக்கவில்லை என்பதனால்தான் இந்த விவாதம் ஏற்படுகிறது; அத்தகைய தத்துவத்தை அவர் உருவாக்கியிருக்கவும் முடியாது.

படிக்க:
பொருளாதாரம் : முதலாளித்துவ பொருளியலின் மூன்று நூற்றாண்டுகள் !
♦ ஜெர்மனியின் ரைன் பிரதேசத்தில் மார்க்ஸ் தோன்றியது தற்செயலானதா ?

அவர் பரிவர்த்தனையில் பண்ட மதிப்புக்களின் சமன்பாட்டைக் கண்டார்; அந்த சமன்பாட்டுக்குப் பொது அடிப்படை எது என்று தீவிரமாகத் தேடினார். அவருடைய சிறப்பான சிந்தனையின் ஆழத்தைக் காட்டுவதற்கு இது மட்டுமே போதும்; அவருக்குப் பிறகு பல நூற்றாண்டுகளுக்குப் பொருளாதார ஆராய்ச்சியின் திருப்புமுனையாக இது இருந்தது. உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தின் மிகமிக ஆரம்ப வடிவத்தைப் போன்ற சில கருத்துக்களை அவர் சொல்லியிருக்கிறார்.

மேலே தரப்பட்ட பகுதியில் பொலியான்ஸ்கி குறிப்பிடுவது இந்தக் கருத்துக்களாகவே இருக்க வேண்டும். ஆனால் அவர் மதிப்புப் பிரச்சினையை அறிந்திருந்தார் என்பது இதைக் காட்டிலும் முக்கியமானதாகும். நிக்கமாகஸிய அறவியல் என்ற புத்தகத்திலுள்ள பின்வரும் பகுதியில் இதைக் காணலாம்:

நிக்கமாகஸிய அறவியல் நூல்

”ஒரே வகையைச் சேர்ந்த இரண்டு பேர்களுக்கிடையில் உதாரணமாக இரண்டு மருத்துவர்களுக்கிடையே – எந்த வியாபாரமும் நடப்பதில்லை; ஆனால் ஒரு மருத்துவருக்கும் விவசாயிக்கும் இடையே நடைபெறுகிறது. பொதுவாகச் சொல்ல வேண்டுமென்றால் வெவ்வேறானவர்கள், சமமாக இல்லாதவர்களுக்கிடையில் அது நடைபெறுகிறது; ஆனால் பரிவர்த்தனை ஏற்படுவதற்கு முன்பாக இவர்கள் சமப்படுத்தப்பட வேண்டும்… அதனால்தான் எல்லாவற்றுக்கும் ஒரே அளவுகோல் அவசியமாகிறது… அப்படியானால், இனங்கள் சமப்படுத்தப்பட்ட பிறகு சரிசமமாகத் திருப்பிக் கொடுப்பது சாத்தியமாகும். அது பின்வரும் அளவு விகிதத்தில் இருக்கும்:

விவசாயி : செருப்புத் தயாரிப்பவன் = செருப்புத் தயாரிப்பவனின் உற்பத்திப் பொருள் : விவசாயியின் உற்பத்திப் பொருள்.”(1)

இங்கே மதிப்பு என்பது வெவ்வேறான பயன் மதிப்புக்களைக் கொண்டிருக்கும் பண்டங்களை உற்பத்தி செய்கின்றவர்களுக்கிடையே உள்ள சமூக உறவு என்ற பொருள் விளக்கம் கரு வடிவத்தில் இருக்கிறது. இதிலிருந்து விவசாயியும் செருப்புத் தயாரிப்பவரும் ஒருவருக்கொருவர் ஒரு மூட்டை தானியத்தையும் ஒரு ஜோடி செருப்பையும் உற்பத்தி செய்வதற்குத் தேவையான உழைப்பு நேரத்தை, உழைப்பின் அளவைக் கொண்டு உறவு கொள்கிறார்கள் என்ற முடிவுக்கு வருவதற்கு ஒரே ஒரு காலடி எடுத்து வைத்தால் போதும் என்று தோன்றும். ஆனால் அரிஸ்டாட்டில் இந்த முடிவுக்கு வரவில்லை.

அவரால் ஏன் இந்த முடிவுக்கு வரமுடியவில்லை என்றால் அவர் பண்டைக் காலத்தில் அடிமைகளை உடைமையாகக் கொண்டிருக்கும் சமூகத்தில் வாழ்ந்தார். அந்த சமூகத்தின் இயல்பே சமத்துவம் என்ற கருத்துக்குப் புறம்பானது, எல்லா வகையான உழைப்புகளும் சமமான மதிப்புடையவை என்ற கருத்துக்குப் புறம்பானது. உடல் உழைப்பு அடிமைகள் செய்ய வேண்டிய உழைப்பு என்று இழிவாகக் கருதப்பட்டது. கிரீஸில் சுதந்திரமான கைவினைஞர்களும் விவசாயிகளும் இருந்தபோதிலும், சமூக, உழைப்புக்குப் பொருள் விளக்கம் தரும் பொழுது அரிஸ்டாட்டில் அவர்களைப் “பார்க்கத் தவறியது” விசித்திரமானதே.

எனினும் மதிப்பை (பரிவர்த்தனை மதிப்பை) மூடியிருக்கும் துணியை அகற்றத் தவறிவிட்ட அரிஸ்டாட்டில் வேதனைப் பெருமூச்சு விட்டபடி இந்த மர்மத்துக்கு விளக்கத்தைத் தேடி பண்டங்களின் உபயோகத்தில் இருக்கின்ற குணவேறுபாடு என்ற மேலெழுந்தவாரியான உண்மைக்கு வந்து சேருகிறார். இந்தக் கருத்தின் (”எனக்கு உன்னிடமிருக்கும் பண்டம் வேண்டும்; உனக்கு என்னிடமிருக்கும் பண்டம் வேண்டும். எனவே நாம் பரிவர்த்தனை செய்து கொள்கிறோம்” என்று அதைக் கொச்சையாகச் சொல்லலாம்) அற்பமான தன்மை , அளவு ரீதியில் அது தெளிவில்லாமல் இருப்பது அவருக்கே தெரிந்திருக்க வேண்டும். எனவே பணம் பண்டங்களை ஒப்பிடக் கூடியவைகளாக்குகிறது என்கிறார்.

“எனவே எல்லாப் பொருள்களையும் ஒப்பிட்டுக் காட்டக் கூடிய ஒன்று தேவைப்படுகிறது …. இப்பொழுது அவற்றுக்கு உண்மையாகவே தேவை ஏற்படுவது இதனால்தான். இந்த வியாபாரங்களின் பொதுவான இணைப்பு இதுதான்…… பொதுவான உடன்பாட்டின் மூலம் பணம் தேவையின் பிரதிநிதியாகிறது.”(2)

இது அடிப்படையாகவே மாறுபட்ட நிலையாகும். அதனால்தான் நாம் மேலே மேற்கோள் காட்டிய பேராசிரியர் பெல் கருத்துக்கள் போன்றவை சாத்தியமாகின்றன.

(தொடரும்…)

அடுத்த பகுதியில் பார்க்க இருக்கும் தலைப்பு : பொருளாதாரமும் செல்வ இயலும்

அடிக்குறிப்பு:
(1) Aristotle, The Nicomachean Ethics, London, Toronto, N.-Y., 1920, p. 113.
(2) Aristotle, op. cit., p. 113.

கேள்விகள்:

  1. மார்க்சியப் பொருளாதாரக் கல்வியில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் என்றால் என்ன?
  2. உற்பத்தியின் அலகான பண்டத்தின் மதிப்பை படைப்பது எது? ஏன்?
  3. பண்டத்தின் மதிப்பு – “தங்களுடைய உழைப்பின் மூலம் பண்டங்களை உருவாக்கி அந்தப் பண்டங்களைத் தங்களுக்கிடையே பரிவர்த்தனை செய்து கொள்கின்ற மக்களுக்கிடையே உள்ள உறவின் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது.” ஏன்?
  4. பண்டத்தின் மதிப்பு குறித்து முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் எவ்வாறு மதிப்பிடுகிறது? அது சரியா? ஏன்?
  5. உபரி மதிப்பு என்றால் என்ன?
  6. முதலாளித்துவ அரசியல் பொருளாதாரம் சுரண்டலையும் வர்க்க முரண்பாடுகளையும் பேசாமல் ஒதுக்கி வைப்பது ஏன்?
  7. பண்டத்தின் மதிப்பு குறித்த பிரச்சினையில் அரிஸ்டாட்டிலின் பங்கு என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

நான் என் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் திறந்து கூறிவிட்டால் ….

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 45

மாக்சிம் கார்க்கி
”நாய்க்குப் பிறந்த பயல்களா! நீங்கள் எல்லாம் முட்டாள்கள். உங்களுக்குத் தெரியாத விஷயங்களிலெல்லாம் நீங்கள் தலை கொடுக்கிறீர்கள். இது ஓர் அரசாங்கக் காரியம் தெரியுமா? நீங்கள் எனக்கு நன்றிதான் செலுத்த வேண்டும். நான் உங்களிடம் இவ்வளவு நல்லபடியாய் நடந்து கொண்டதற்காக, நீங்கள் என் முன் மண்டியிட்டு உங்கள் நன்றி விசுவாசத்தைக் காட்ட வேண்டும். உங்கள் அனைவரையும் கடுங்காவல் தண்டனைக்கு ஆளாக்க வேண்டுமென்று நான் நினைத்தால், அப்படியே செய்து முடிக்க எனக்குத் தைரியம் உண்டு.”

தலைகளிலே தொப்பியே வைக்காத சில முஜீக்குகள் மட்டும் அவன் சொன்னதைக் காதில் வாங்கிக் கொண்டார்கள். மேகக்கூட்டங்கள் தணிந்து இறங்கிக் கவிந்த உடனேயே இருள் பரவ ஆரம்பித்தது. அந்த நீலக்கண் முஜீக், தாய் நின்றுகொண்டிருந்த இடத்தை நோக்கி வந்து சேர்ந்தான்.

“என்ன நடக்கிறது என்று பார்த்தீர்களா?”

“ஆமாம்” என்று மெதுவாகச் சொன்னாள் தாய்.

“நீங்கள் இங்கு எதற்கு வந்தீர்கள்?” என்று அவளது கண்களையே பார்த்துக்கொண்டு கேட்டான் அவன்.

”நான் விவசாயிப் பெண்களிடமிருந்து லேஸ்களும், துணிகளும் விலைக்கு வாங்க வந்தேன்.”

அந்த முஜீக் தன் தாடியை மெதுவாகத் தடவிக் கொடுத்தான்.

“எங்கள் பெண்கள் அந்தச் சாமான்களையே நெய்வதில்லையே!” என்று மெல்லக் கூறிக்கொண்டே அந்தக் கட்டிடத்தை ஒரு பார்வை பார்த்தான் அவன்.

தாய் தனது கண்ணால் அவனை ஒருமுறை அளந்து பார்த்தாள். உள்ளே போவதற்கு வசதியான நேரத்தை எதிர்நோக்கி நின்று கொண்டிருந்தாள். அந்த முஜீக்கின் முகம் அழகாகவும் சிந்தனை நிரம்பியதாகவும் இருந்தது. அவனது கண்களில் சோக பாவம் ததும்பியது. அவன் நெடிய உருவமும் அகன்ற தோள்களும் உடையவனாயிருந்தான்; ஒரு சுத்தமான துணிச் சட்டையும் சட்டைக்கு மேல் ஏகப்பட்ட ஒட்டுக்களுடன் கூடிய ஒரு கோட்டும், கபில நிறமான முரட்டுக் கால்சராயும், வெறும் கால்களில் செருப்புக்களும் அணிந்திருந்தான்.

இனந்தெரியாத காரணத்தால் தாய் நிம்மதியோடு ஆழ்ந்து பெருமூச்செறிந்தாள். தட்டுத் தடுமாறும் தனது சிந்தனைகளையும் முந்திக் கொண்டு உந்திவரும் ஓர் உணர்ச்சியால் அவள் திடீரெனப் பேசினாள்:

”இன்றிரவு நான் இங்கே தங்குவதற்கு இடம் கொடுப்பாயா?”

அந்தக் கேள்வி அவளுக்கே எதிர்பாராத சொல்லாக ஒலித்தது. அந்தக் கேள்வியைக் கேட்டவுடனேயே அவளது உடல் முழுவதும் திடீரென இறுகுவது போல் இருந்தது. அவள் நிமிர்ந்து நின்று அந்த மனிதனை உறுதியோடு அசைவற்றுப் பார்த்தாள். என்றாலும் பின்னி முடியும் சிந்தனைகள் அவளது மனத்தை உறுத்திக்கொண்டே இருந்தன.

“நான்தான் நிகலாய் இவானவிச்சின் அழிவுக்குக் காரணமாயிருப்பேன். பாவெலையும் நான் ரொம்ப காலத்துக்குப் பார்க்கவே முடியாது. அவர்கள் என்னை அடிக்கத்தான் போகிறார்கள்!”

அந்த முஜீக் அவசரம் ஏதுமில்லாமல், தரையை நோக்கியவாறே தனது கோட்டை இழுத்துவிட்டுக் கொண்டு நிதானமாகப் பதில் சொன்னான்:

“இரவு தங்குவதற்கா? ஏன் தரமாட்டான்? என் வீடு ஒரு சின்ன ஏழைக் குடில். அவ்வளவுதான்.”

”நல்ல வீடுகளில் இருந்து எனக்குப் பழக்கமேயில்லை” என்றாள் தாய்.

“அப்படியென்றால் சரி” என்று கூறிக்கொண்டே அந்த முஜீத் தலையை உயர்த்தி மீண்டும் தன் கண்களால் அவளை அளந்து நோக்கினான். ஏற்கெனவே இருண்டு விட்டது. அவனது தோற்றத்தில் இருளின் சாயை படிந்திருந்தது. அவனது கண்கள் மங்கிப் பிரகாசித்தன; முகம் அந்தி மயக்க மஞ்சள் வெயிலால் வெளிறித் தோன்றியது.

”சரி, நான் இப்போதே வருகிறேன். தயைசெய்து என்னுடைய டிரங்குப் பெட்டியை கொஞ்சம் தூக்கி வருவாயா?” என்று மெதுவாகச் சொன்னாள் தாய். அப்படிச் சொல்லும்போது அவள் மலை மீதிருந்து சரிந்து விழுவது போல் உணர்ந்தாள்.

”சரி.”

“அவன் தோள்களை உயர்த்தி மீண்டும் தன் கோட்டைச் சரி செய்து கொண்டான்.”

”இதோ வண்டி வந்துவிட்டது” என்றான் அவன்.

ரீபின் அந்த அரசாங்கக் கட்டிடத்தின் முகப்பில் தோன்றினான். அவனது தலையிலும் முகத்திலும் கட்டுகள் போடப்பட்டிருந்தன; அவனது கைகளும் மீண்டும் கட்டப்பட்டிருந்தன.

”போய் வருகிறேன். நல்லவர்களே” என்ற குரல் அந்த குளிரில் அந்தி மயக்க ஒளியினூடே ஒலித்தது. உண்மையை நாடுங்கள், அதைப் பேணிப் பாதுகாருங்கள். உங்களிடம் தூய்மையான பேச்சுப் பேசும் மனிதனை நம்புங்கள். சத்தியத்தைக் காப்பதற்காக போராடத் தயங்காதீர்கள்!”

”உன் வாயை மூடும்” என்று போலீஸ் அதிகாரி கத்தினான். “ஏ, போலீஸ்கார மூடமே குதிரையைத் தட்டி விடு!”

“நீங்கள் எதை இழக்கப் போகிறீர்கள்? உங்கள் வாழ்க்கையை எண்ணிப்பாருங்கள்.”

வண்டி புறப்பட்டுச் சென்றது. இரு போலீஸ்காரர்களுக்கிடையில் ரீபின் உட்கார்ந்திருந்தான். அங்கிருந்தவாறே அவன் சத்தமிட்டான்.

“நீங்கள் ஏன் பட்டினியால் செத்துக் கொண்டேயிருக்க வேண்டும்? உங்களுக்குச் சுதந்திரம் கிடைத்து விட்டால், உங்களுக்கு உணவும் கிடைக்கும், நியாயமும் கிட்டும். போய் வருகிறேன், நல்லவர்களே!’’

வண்டிச் சக்கரங்களின் பலத்த ஒசையாலும், குதிரைகளின் காலடியோசையாலும், போலீஸ் தலைவனின் குரலாலும் ரீபினுடைய குரல் ஆழ்ந்து அமிழ்ந்து போய்விட்டது.

”எல்லாம் முடிந்தது” என்று தலையை அசைத்துக்கொண்டே சொன்னான் அந்த முஜீக். பிறகு தாயின் பக்கம் திரும்பித் தணிந்த குரலில் பேசினான். “எனக்காகக் கடையில் கொஞ்ச நேரம் காத்திருங்கள், நான் இதோ வந்துவிடுகிறேன்.”

தாய் அறைக்குள் சென்று, அந்தக் கடையின் அடுப்புக்கு எதிராக இருந்த மேஜையருகில் உட்கார்ந்தாள். அவள் ஒரு துண்டு ரொட்டியை எடுத்துப் பார்த்துவிட்டு அதைத் தட்டிலேயே வைத்துவிட்டாள். மீண்டும் அவளுக்கு அந்தக் கிறக்க உணர்ச்சி ஏற்பட்டது. அவளால் சாப்பிடக்கூட முடியவில்லை. அவளது உடம்பு குதுகுதுத்துக் காய்ந்து உடலை பலவீனப்படுத்தியது. அந்தக் காய்ச்சல் இருதயத்தின் ரத்த ஓட்டத்தை இழுத்து நிறுத்தி, அவளைக் கிறக்கச் செய்தது. அவளுக்கு முன்னால், அந்த நீலக்கண் முஜீக்கின் முகம் தெரிந்தது. ஆனால் அந்த முகம் பரிபூரணமாகத் தோன்றவில்லை. அதைக் கண்டவுடன் அவநம்பிக்கை உணர்ச்சி மேலிட்டது. அவன் தன்னைக் கைவிட்டுவிடுவான் என்று எண்ணிப் பார்க்க அவள் விரும்பவில்லை. இருந்தாலும் அந்த எண்ணம் அவள் மனத்தில் எப்போதோ குடி புகுந்துவிட்டது. அவளது இதயத்தை ஒரு பளு அழுத்தியது.

“அவன் என்னைக் கவனித்தானே. கவனித்துப் பார்த்து ஊகித்துக் கொண்டானே” என்று அவள் லேசாகச் சிந்தித்தாள்.

அந்த எண்ணம் வளரவில்லை. கிறக்க உணர்ச்சியிலும் குழப்ப உணர்ச்சியிலும் அந்த எண்ணம் முங்கி மூழ்கிப் போய்விட்டது. ஜன்னலுக்கு வெளியே முன்னிருந்த இரைச்சலுக்குப்பதில் இப்போது ஆழ்ந்த அமைதி நிலவியது. அந்த அமைதி அந்தக் கிராமம் முழுவதையும் சுற்றி வட்டமிடும் பயவுணர்ச்சியையும் பாரவுணர்ச்சியையும் பிரதிபலித்துக் காட்டியது. தனிமை உணர்ச்சி பெருகியது. சாம்பலைப் போல் நிறம் கறுத்த ஒர் அந்தி மயக்கத்தை இதயம் முற்றிலும் பரப்பியது.

மீண்டும் அந்த யுவதி வாசல் நடையில் தோன்றினாள்.

”நான் உங்களுக்குப் பொரித்த முட்டை கொண்டுவரட்டுமா?” என்று கேட்டாள்.

”சிரமப்படாதே. எனக்குச் சாப்பிடவே மனமில்லை. அவர்களுடைய கூச்சலும் கும்மாளமும் என்னைப் பயமுறுத்தி விட்டுவிட்டன.

அந்தப் பெண் மேஜையருகே வந்து ரகசியமாக உத்வேகம் நிறைந்த குரலில் பேசினாள்.

”அந்தப் போலீஸ் தலைவன் அவனை எப்படி அடித்தான் தெரியுமா? நீங்கள் அதைப் பார்த்திருக்க வேண்டும். நான் பக்கத்தில்தான் நின்றேன். கன்னத்தில் கொடுத்த அறையில் அவன் பற்கள் உதிர்ந்துவிட்டன. அவன் குபுக்கென்று ரத்தம் கக்கினான். கரிய சிவந்த கட்டியான ரத்தம் அவனது கண்கள் வீங்கிப்போய் மூடிவிட்டன. அவன் ஒரு தார் எண்ணெய்த் தொழிலாளி. அந்தப் போலீஸ் ஸார்ஜெண்டோ மாடி மேலே போய்ப் படுத்துக்கொண்டு நன்றாகக் குடித்து மயங்கிக் கிடந்தான். இன்னும் குடிக்கக் கேட்டான். ஒரு பெரிய சதிக் கூட்டமே இருக்கிறதாம். அவர்களுக்கெல்லாம் இந்தத் தாடிக்கார மனுஷன்தான் தலைவனாம். மூன்று பேர்களைப் பிடித்தார்களாம். ஒருவன் தப்பியோடிவிட்டானாம். இவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர்களென்று ஒரு பள்ளிக்கூட உபாத்தியாயரையும் அவர்கள் பிடித்திருக்கிறார்களாம். இவர்களுக்குக் கடவுள் நம்பிக்கை கிடையாதாம்; தேவாலயங்களைக் கொள்ளையடிக்கும்படி மற்றவர்களைத் தூண்டி விடுகிறார்களாம். இவர்கள் இப்படிப்பட்ட ஆசாமிகள்தானாம். எங்கள் கிராமத்து முஜீக்குகள் சிலர் இவர்களுக்காக வருத்தப்பட்டார்கள். சிலர் இவர்களுக்கு இத்தோடு சமாதி கட்டிவிட வேண்டும் என்று சொல்லுகிறார்கள். இந்த மாதிரியான கேவல புத்தி படைத்த முஜீக்குகள் இங்கே அதிகம் பேர் இருக்கிறார்கள்!”

அந்தப் பெண்ணின் தொடர்பிழந்த படபடக்கும் பேச்சைத் தாய் கவனமாகக் கேட்டாள். அதைக் கேட்டு தனது பயத்தையும் பீதியையும் போக்கி வெற்றி காண முனைந்தாள். தனது பேச்சைக் கேட்பதற்கும் ஓர் ஆள் இருக்கிறது என்ற உற்சாகத்தில் அந்தப் பெண் உத்வேகமும் உவகையும் பொங்கித் ததும்ப, ரகசியமான குரலிலேயே பேசத் தொடங்கினாள்.

”இதெல்லாம் வெள்ளாமை விளைச்சல் சரியாக இல்லாததால்தான் ஏற்படுகிறது என்று எங்கள் அப்பா சொல்கிறார். இரண்டு வருஷ காலமாய் இங்கே நிலத்திலே எந்த விளைச்சலும் கிடையாது. இதனால்தான் இத்தகைய முஜீக்குகள் தோன்றுகிறார்கள். கிராமக் கூட்டங்களில் அவர்கள் சண்டைப் பிடிக்கிறார்கள்; கூச்சல் போடுகிறார்கள். ஒரு நாள் வசுகோவ் என்பவன் பொருள்களை, அவன் வரி கட்டவில்லை என்பதற்காக ஏலம் போட்டார்கள். அவனோ ”இதோ உன் வரி” என்று சொல்லிக் கொண்டே நாட்டாண்மைக்காரரின் முகத்தில் ஓங்கி ஒரு குத்து விடுகிறான்.”

வெளியே பலத்த காலடியோசை கேட்டது. தாய் மேஜையைப் பிடித்தவாறே எழுந்து நின்றாள்.

அந்த நீலக்கண் முஜீக் தனது தொப்பியை எடுக்காமலே உள்ளே வந்தான்.

“உன் பெட்டி எங்கே?”

அவன் அதை லேசாகத் தூக்கி ஆட்டிப் பார்த்தான்.

“காலிப் பெட்டிதான். சரி, மார்க்கா! இவளை என் குடிசைவரை கூட்டிக்கொண்டு போ.”

அவன் திரும்பிப் பார்க்காமலே சென்றான்.

“இன்றிரவு நீங்கள் இந்த ஊரிலா தங்குகிறீர்கள்?” என்று கேட்டாள் அந்தப் பெண்.

“ஆமாம். பின்னால் லேஸ் வாங்க வந்தேன்………”

“இங்கே யாரும் பின்னுவதில்லையே, தின்கோவாவிலும், தாரினாவிலும்தான் நெய்கிறார்கள். இங்கே கிடையாது” என்று விளக்கினாள் அந்த யுவதி.

”நான் நாளைக்கு அங்கே போவேன்…”

“தேநீருக்குக் காசு கொடுத்து முடிந்ததும், தாய் அந்தப் பெண்ணுக்கு, மூன்று கோபெக்குகளை இனாமாகக் கொடுத்தாள். இனாம் கொடுத்ததில் அவளுக்கு ஓர் ஆனந்தம். அவர்கள் வெளியே வந்தார்கள். ஈரம் படிந்த அந்த ரோட்டில் அந்தப் பெண் வெறும் கால்களோடு விடுவிடென்று நடந்து சென்றாள்.

படிக்க:
வினவை ஆதரிப்பது உங்கள் கடமை ! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் !!
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

“நீங்கள் விரும்பினால், நான் தாரினாவுக்குச் சென்று அங்குள்ள பெண்களை, அவர்கள் பின்னிய லேஸ்களை எடுத்துக்கொண்டு இங்கு வரச் சொல்கிறேன்” என்றாள் அந்தப் பெண், ”அவர்களே இங்கு வந்துவிடுவார்கள். நீங்கள் அங்கே போக வேண்டியதில்லை. இங்கிருந்து பன்னிரண்டு கிலோமீட்டர் தூரம்தான் இருக்கிறது…….”

“நீ ஒன்றும் கவலைப்படாதே, கண்ணு” என்று கூறிக்கொண்டே அவளோடு சேர்ந்து நடக்க முயன்றாள் தாய். குளிர்ந்த காற்று அவளுக்கு இதம் அளித்தது. ஏதோ ஒரு மங்கிய தீர்மானம் அவளது மனத்துக்குள்ளே வடிவாகி உருபெறுவதாகத் தோன்றியது. அந்த உருவம் மெதுவாக வளர்ந்து வந்தது. அதன் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டும் என்ற ஆசையால், அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டிருந்தாள்.

”நான் என்ன செய்ய வேண்டும்? நான் என் இதயத்திலுள்ள எல்லாவற்றையும் திறந்து கூறிவிட்டால்…”

பொழுது ஒரே இருளாகவும் குளிராகவும் ஈரமாகவும் இருந்தது. குடிசைகளின் ஜன்னல்களில் செக்கர் ஒளி மினுமினுத்தது. சிறு சிறு அழுகைக் குரல்களும், கால்நடைகளின் கனைப்பும் அந்த அமைதியினூடே கேட்டன. அந்தக் கிராமம் முழுவதுமே ஏதோ ஓர் இருண்ட பாரவுணர்ச்சியைச் சுமந்து கவலையில் ஆழ்ந்திருப்பதாகத் தோன்றியது.

“இதோ” என்று காட்டினாள் அந்தப் பெண்; ”இரவைக் கழிப்பதற்கு மிகவும் மோசமான இடத்தைத் தேர்ந்தெடுக்கிறீர்கள். இவன் மிகவும் ஏழையான முஜீக்.”

அவள் கதவைத் தட்டினாள். கதவு திறந்தவுடன் அவள் தன் தலையை உள்ளே நீட்டிச் சத்தமிட்டாள்.

“தத்யானா அத்தை!”

பிறகு அவள் ஓடிப்போய்விட்டாள்.

“போய்வருகிறேன்” என்ற அவளது குரல் இருளினூடே ஒலித்தது.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

நிவாரணம் இல்லை ! 100 நாள் வேலையும் இல்லை ! நுண்கடன் தொல்லை ! குமுறும் டெல்டா மக்கள்

Slider-gaja-cyclone-microfinance-company-atrocities-delta-farmers-protest-(5)
தமிழக அரசே ! உடனடியாக நிவாரணம் வழங்கு ! 100 நாள் வேலையை முறைப்படுத்தி கொடு! விளார் கிராம மக்கள் குமுறல் !

ஞ்சை மாவட்டத்தில் பல்வேறு கிராமங்கள் கஜா புயலால் பாதிக்கப்பட்டு இன்னும் மீண்டு வராமல் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தஞ்சை மாநகரத்தையொட்டி உள்ள விளார் ஊராட்சி.

Tanjavour-People-100-day-work-protest (2)அரசு மற்ற கிராமங்களுக்கு பெயரளவுக்கு செய்த நிவாரணத்தைக் கூட இந்த ஊராட்சியில் மேற்கொள்ளவில்லை. அத்துடன் 100 நாள் வேலையிலும் மக்களை ஏமாற்றி அதிகாரிகள் பகல் கொள்ளையடித்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் ஒட்டுமொத்த பெண்களும் மக்கள் அதிகார அமைப்பு தோழர்களிடம் ஒன்று திரண்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர். ஆகவே முதல் கட்டமாக மக்களை திரட்டி மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்கலாம், பிறகு அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்கலாம் என முடிவுசெய்து 75-க்கும் மேற்பட்ட பெண்கள் தஞ்சை பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் பச்சையப்பன் தலைமையில் 31.12.2018 அன்று மாவட்ட ஆட்சியரிடம் தங்களது கோரிக்களை மனுவாக கொடுத்தனர்.

Tanjavour-People-100-day-work-protest (1)
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுகொடுத்துவிட்டு வெளியே வந்த மக்கள்

ஆட்சியரும் கோரிக்களை உடனடியாக தீர்த்துக் கொடுப்பதாக உறுதி கொடுத்தார். அந்த உ றுதி நிறைவேறாத பட்சத்தில் மக்கள் தங்களது அடுத்த கட்ட போரட்டத்தை எப்படி நடத்தலாம் என்று தயாராகி வருகின்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

*****

தமிழக அரசே! நுண்கடனை கட்ட மக்களை மிரட்டும் வங்கிகள் மீது நடவடிக்கை எடு! முழு கடனையும் அரசே பொறுப்பேற்றுக்கொள்! திருவாரூர் மாவட்ட மக்கள் கொந்தளிப்பு!

ஜா புயலின் கோரத்தாண்டவத்தால் வாழ்வாதாரத்தை இழந்து இன்னும் சகஜநிலைமைக்கு திரும்ப இயலாமல் உள்ளது டெல்டா மாவட்டங்கள். அரசின் நிவாரணமோ கண்துடைப்பு நாடகமாக நடந்தது. இந்த நிலையில் நுண்கடனை கட்டியே ஆக வேண்டும் என்று பொதுத்துறை வங்கிகள், நிதி நிறுவனங்கள் அனைத்தும் மக்களை மிரட்டி வருகின்றன.

gaja cyclone microfinance company atrocities delta farmers protest (7)
நுண்கடன் நிறுவனங்களின் அட்டூழியத்தை ஊடகங்களிடம் முன்வைக்கும் மக்கள்.

நிவாரணத் தொகை, ஊனமுற்றோர் உதவித்தொகை, 100 நாள் ஊதியம் ஆகிவற்றை மக்களிடம் அனுமதி கேட்காமல் சட்ட விரோதமாக பிடித்துக் கொள்கின்றன. கந்துவட்டியை மிஞ்சும் இந்த கொடூரம் சில பெண்களை தற்கொலை செய்து கொள்ளும் மனநிலைக்கு தள்ளியுள்ளது. இதை எதிர்த்தும் பல இடங்களில் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன.

அதனடிப்படையில் திருவாரூர் மாவட்ட ஆட்சியாளர் “நுண்கடன் வசூலை 6 மாதம் தள்ளி வைக்க” வங்கிகள், நிதி நிறுவனங்களுக்கு உத்தரவிட்டார். அதையும் மீறி இந்த நிறுவனங்கள் மக்களை மிரட்டி வந்தன.

இதை அறிந்த மக்கள் அதிகாரம் தோழர்கள் “நுண்கடனை யாரும் கட்ட வேண்டாம்! மீறி கட்டாயப்படுத்தினால் எங்களை தொடர்பு கொள்ளுங்கள்” என்று சுவரொட்டி அடித்து பரவலாக ஒட்டினர். இந்த சுவரொட்டி சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவியது. மாவட்டம் முழுக்க இருந்து தொலைபேசி அழைப்புகள் தினந்தோறும் வந்த வண்ணம் உள்ளன. இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட தொலைபேசி அழைப்புகள் வந்துள்ளன. அதில் பல பெண்கள் தங்களது நிலையை சொல்லி கதறி அழுவதையே காணமுடிந்தது.

gaja cyclone microfinance company atrocities delta farmers protest (2)
திருவாரூர் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்க செல்லும் மக்கள்.

இவர்களை அழைத்து முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க திட்டமிடப்பட்டது. நேற்று (31.12.2018) இருபதுக்கும் மேற்பட்ட ஊர்களை சார்ந்த 300-க்கும் மேற்பட்ட மக்கள் திருவாரூர் மக்கள் அதிகாரம் தோழர்கள் தலைமையில் திரண்டனர். ஒவ்வொருவரும் தனிதனியாக மனுவாக எழுதி தங்களது கோபங்களால் மாவட்ட ஆட்சியரை கேள்வி கணைகளாய் துளைத்தெடுத்தனர்.

உடனடியாக வங்கிகளை அழைத்து கண்டிப்பதாகவும், இனி இவ்வாறு நடக்காது என உறுதியளித்தார். ஆனால் மக்கள் தங்கள் அனுபவத்தின் மூலமாகவே இதெல்லாம் நடக்காது என்பதை உணர்ந்து அடுத்தகட்ட போராட்டத்திற்கு அழைப்பு விட்டுள்ளனர், நுண்கடனை தமிழக அரசே முழுவதுமாக ஏற்கவைக்கும் வரை விடமாட்டோம் என எச்சரித்துச் சென்றனர்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருவாரூர். தொடர்புக்கு : 96263 52829

ஸ்டெர்லைட்டை எவ்வாறு மூடுவது ? பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் ராஜு !

ஸ்டெர்லைட் போராட்டம் தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு வினவு நேரலையில் பார்வையாளர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் இறுதிப் பகுதி !

அரசு எப்போதும் மக்கள் பக்கம் நிற்காது

* “பாசிச பா.ஜ.க ஒழிக” என சோஃபியா முழக்கமிட்டு கைதானபோது ஒன்றுபட்டு நின்ற தமிழகம், இன்று பாராமுகமாக இருப்பது ஏன்? சோஃபியாவின் தியாகம் வீண் போனதா?
* ஸ்டெர்லைட் பிரச்சினையில் தமிழக மக்கள் ஈடுபாடு காட்டுவதில்லையே? இதை எப்படி பார்ப்பது?
* எல்லா மீடியாவும் வேதாந்தா வென்றது என கூறுகின்றன. காசு வாங்கிக் கொண்டு செய்திகள் போடுகின்றன. இதை பற்றி உங்கள் கருத்து என்ன?
* போராட்ட கமிட்டி, போலீசு, நிர்வாகம், அரசு, நீதிமன்றம் பற்றி பாத்திமா பாபு வெளியிட்ட அறிக்கைக்கு உங்கள் பதில் என்ன?

பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் இராஜு ! பாருங்கள் பகிருங்கள் !

 

***

மக்கள் போராட்டம்தான் ஸ்டெர்லைட்டை விரட்டும்

* தூத்துக்குடியில் வீட்டில் கருப்பு கொடி கட்டுகிறார்கள். வெளியூரில் இருந்து போராட்டத்தில் கலந்துக் கொண்டால், போலீசு கைதுசெய்கிறார்கள். இதை எப்படி எதிர்கொள்வது?
* பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக அரசு செயல்படுகின்றனர். இந்நிலையில் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக குறிப்பிட்ட பகுதி மக்களால் போராடி வெற்றி பெற முடியுமா?
* மக்கள் அதிகாரம் ஸ்டெர்லைட் பிரச்சினையை வைத்து கட்சியை வளர்க்கப் பார்க்கிறது என மற்றவர்கள் கேட்பதற்கு உங்கள் பதில் என்ன?
* இப்போது தூத்துக்குடி மக்களின் போராட்டம் எப்படி இருக்கு? அடுத்தக்கட்ட போராட்டம் எப்படி இருக்கும்?
* மக்கள் அதிகாரம் மக்களுக்கு வைக்கும் வேண்டுகோள் என்ன?

பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் இராஜு ! பாருங்கள் பகிருங்கள் !

 

***

மேகதாதுவில் அணை – சதித்திட்டத்தை முறியடிப்போம் ! தருமபுரி மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்

“காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்ட கர்நாடகாவிற்கு பாசிச பாஜக அனுமதி! தமிழகத்தை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் சதித்திட்டத்தை முறியடிப்போம்!” எனும் முழக்கத்தோடு ஓசூர் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி பேருந்து நிலையம் அருகே மக்கள் அதிகாரம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. நாள் 30.12.2018.

ஆர்ப்பாட்டத்தில் அப்பகுதி மக்கள் அதிகாரத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் சரவணன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளான தோழர் இராமு, தோழர் சங்கர், தோழர் செல்வி மற்றும் தருமபுரி மண்டல பொருளாளர் தோழர் கோபிநாத் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இறுதியாக, தோழர் சென்னப்பன் நன்றியுரையாற்றினார். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னதாக ஆயிரக்கணக்கில் துண்டறிக்கைகளும், நூற்றுக்கணக்கில் சுவரொட்டிகளையும் தயாரித்து கொண்டு நாட்றாம்பாளயம், அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, மற்றும் ஒசூர் முழுவதும் பரவலாக பிரச்சாரம் செய்திருந்தனர்.

தோழர் கோபிநாத் தனது கண்டன உரையில், “மேகதாதுவில் அணைக் கட்டுவதை ஆதரித்து கர்நாடக அமைச்சர் சிவக்குமார் முழங்குகிறார். ஆனால், மத்தியிலே இருக்கிற பிரதமர் மோடி, அமைச்சர் நிதின் கட்கரி இவர்கள் என்ன சொல்லுகிறார்கள்? நிதின்கட்கரி எதிர்க்கட்சியினருக்கு விடுத்த அறிக்கையில் கர்நாடக அமைச்சர் சிவக்குமார் என்ன சொன்னாரோ அதையேச் சொல்லி காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணைக்கட்டும் திட்டம் என்பது தமிழ் நாட்டுக்கு நன்மை பயக்கும் திட்டம். அதனால நீங்கள் பாராளுமன்றத்தை முடக்காதீர்கள், மக்கள் நலத்திட்டங்கள் விவாதிக்கப்படாமல் போய்விடும் என்று நிதின் கட்கரி பேசுகிறார்.

தமிழ்நாடு என்றாலே எப்பவுமே பி.ஜே.பி-க்கு பிடிக்காது. இது பெரியார் பிறந்த மண், பார்ப்பன எதிர்ப்பு கொண்ட மண். ஆக, தமிழ்நாட்டை எப்போதுமே வெறுப்பாக பார்த்துக் கொண்டிருக்கும் பி.ஜே.பி தமிழ் நாட்டின் மீது கரிசனை கொள்ளுமா? இங்கே நம்ம தமிழ்நாட்டில ஓட்டு வாங்கி ஜெயிக்க முடியாது. ஆனால், கர்நாடகாவில் ஓட்டு வாங்கி ஜெயிக்கிறதுக்கான வாய்ப்பாக இந்தப் பிரச்சினையை பார்க்கிறது. கர்நாடகாவில் இருக்கிற பி.ஜே.பி என்ன சொல்லுது? சுப்ரீம் கோர்ட்டு சொல்றதெல்லாம் இருக்கட்டும், எங்களுடைய மோடி கோர்ட்டு என்ன சொல்லுது? கார்ப்பரேட் கோர்ட் என்ன சொல்லுது என்று மட்டும்தான் அவன் பார்க்கிறான்.

மேகதாதுவில் 65 டி.எம்.சி தண்ணீர் தேக்கி வைத்தால்… கர்நாடகாவிற்கு மின்சாரம் கிடைக்கும், தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைக்கும் என்ன சொல்ற என்று கேட்கிறான்? இதனை மேலோட்டமாக பார்க்கும்போது சரிதான் என்று தெரிகிறது. ஆனால் இது உண்மையா?

கர்நாடகாவில் உள்ள சமூக ஆர்வலர்களில் பலரும் இது தவறான திட்டம் என்று பேசுகிறார்கள். எதிர்க்கிறார்கள்.  ஆனால் இவர்களோ, இந்த திட்டத்தை அமல்படுத்தியே தீரவேண்டும் என்று வெறித்தனமாக துடிக்கிறார்கள். அதற்கு என்ன காரணம்? இதன்பின்னே மிகப்பெரிய சதித்திட்டம் இருக்கிறது. இந்த அணையை கட்டுவதன் மூலமாக இரண்டு விதமான லாபம் பார்க்கலாம் என்று நினைக்கிறார்கள்.

ஒன்று தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கனிமவளங்கள் மற்றொன்று கர்நாடகாவில் உள்ள பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்கள், மல்டி நேஷனல் கம்பெனிகளுக்கு எல்லாம் தாராள தண்ணீர் சப்ளை. இந்த சதித்திட்டங்களை மறைத்துக்கொண்டு மொக்கையான காரணம் சொல்லி அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை செய்ய 6,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளனர். இதனை சென்று பார்வையிடுகிறேன் என்று சொல்லி முன்னாள் பிரதமர் தேவகவுடா போய் பார்வையிட்ட பிறகு, ஆமாம் இந்த அணை அவசியமானது. இருமாநிலத்திற்குமே நன்மை பயப்பது என்று பேசுகிறார்.

megathathu dam issue pp protest (2)
தோழர் கோபிநாத்

காவிரியை தடுத்து நிறுத்தி வைப்பது என்பது கர்நாடகாவில் உள்ள கார்ப்பரேட் கம்பெனிகளுக்கும், தமிழ்நாட்டின் 22 மாவட்டங்களை பாலைவனமாக்கி அந்த பகுதியை கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு தாரைவார்ப்பதற்காத்தான்.

இந்த நீதிமன்றங்களோ, இந்த மத்திய அரசோ அல்லது இவர்கள் அமைத்த காவிரி மேலாண்மை ஆணையமோ நமக்கு எதுவும் செய்யாது. இந்நிலையில் நம்ம தமிழ்நாட்டில் இருக்கிற ஆட்சியாளர்கள் நமக்கு தண்ணீரைப் பெற்றுத் தருவார்கள் என்று நம்பிக்கை கொள்ள முடியுமா? அமைச்சர் ஜெயக்குமார் சொல்லுகிறார், நாங்க சட்டப்போராட்டம் நடத்தி உங்களுக்கு தண்ணீரைப் பெற்றுத்தருகிறோம் என்று மேடையிலே சவால் விடுகிறார். இவரது சட்டப் போராட்டத்தை கடுகளவும் கூட எவனும் மதிக்க மாட்டான்.

படிக்க:
♦ மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி : அரசியல் சட்ட விரோதமானது !
♦ மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி!

உன் சட்டப் போராட்டத்தின் யோக்கியதையை நாங்க தூத்துக்குடியில பாத்தோமே. தூத்துக்குடியில் மக்கள் என்ன கேட்டார்கள்? ஸ்டெர்லைட் ஆலையை மூடு. எனக்கு சுத்தமான தண்ணீர், சுத்தமான காற்று வேணும் என்று தூத்துக்குடி மக்கள் சொல்கிறார்கள். ஆனால், நீ என்ன பண்ணிட்டிருக்க? நான் போட்டிருக்கற தடையை எல்லாம் யாரும் மீறமுடியாது. வலுவான இந்த ஆளும் அரசாங்கத்தை எவராலும் ஒன்னும் பண்ண முடியாது, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க முடியாது. ஐ.நா சபைக்கு போனாலும் செல்லாது. அவ்வளவு ஸ்ட்ராங்ன்னு சொன்ன. இப்ப பல நாள் கழித்து எனக்கு அதெல்லாம் தெரியாது என்று சொல்லுகிறார்கள் இந்த தமிழக அமைச்சர்கள். இவர்களை நாம் இந்த மேகதாது விசயத்திலும் நம்பத்தான் முடியுமா? இவர்கள் ஒவ்வொருவரும் எப்படி இருக்கிறார்கள்? ஒருவர் குட்கா புகழ், ஒருவர் தெர்மாகூல் புகழ், கேவலம் முன்னால் முதலமைச்சர் முதன்மை குற்றவாளி ஜெயாவை அப்பல்லோவில் கிடத்திவிட்டு இரண்டு இட்லி சாப்பிட்டு ஒருகோடியே பதினேழு லட்சம் செலவாகியிருக்கிறதாக கணக்கு காட்டி கொள்ளையடிப்பதையே தொழிலாக கொண்டிருக்கும் இவர்களை நாம் நம்பத்தான் முடியுமா?

கஜா புயலால் தங்களது 30 ஆண்டுகால உழைப்பு எல்லாமே வீணாகிப்போய் விட்டதே, இனி  சாப்பிடுவதற்குகூட ஒன்னும் இல்ல, அரிசி இல்லைன்னு தட்டேந்தி நிற்கிறார்கள் நமது விவசாயிகள். இந்த நிலையில் ஓ எஸ் மணியன் போன்றவர்கள் அவர்களிடம் சென்று திமிர்த்தனமாக பேசுகிறார்கள். மக்களே ஆத்திரப்பட்டு துரத்தி செருப்பைத்தூக்கி அடித்தார்கள். திருடன் சுவரேறி குதித்து ஓடுவதுபோல ஓடிச்சென்றார். இவர்களைப் பொறுத்தவரை இவர்களுக்கு வந்தாதான் ரத்தம், மற்றவர்களுக்கு அப்படி அல்ல என்று கருதுபவர்கள். எனவே,  அணையைக் கட்டினால் தான் நாம கமிஷன் வாங்கமுடியும், 8 வழி சாலை போட்டால்தான் ஓபிஎஸ் – ஈபிஎஸ் போன்றோர் காண்ட்ராக்ட் எடுத்து, மணல் கொள்ளையடித்து கமிசன் பெற்று கொள்ளையிடமுடியும் என எதிர்பார்க்கிறார்கள். அப்படித்தான் மேகதாது அணை கட்டினால் என்ன கமிஷன் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள காவிரிப் படுகையில் தாதுப்பொருட்கள் இருக்கிறது, வாயுப்பொருட்கள் இருக்கிறது. இவைகளை கொள்ளையிடவே காவிரியின் குறுக்கே அணை கட்ட வேண்டும் என்ற முதலாளிகளின் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிகாரிகளின் கூட்டம் தான் இந்த அதிகாரிகள் அமைச்சர்கள் எல்லாம். இன்னைக்கு மீத்தேன் எடுக்காதே ஹைட்ரோகார்பன் எடுக்காதே என்று பல நாட்களாக கிராமங்களில் மக்கள் போராடுகிறார்கள். அந்தப் போராட்டத்தை இவர்கள் துளியாவது மதிக்கிறார்களா ?

என் ஊர்ல என்னுடைய விவசாயத்தை அழிக்காதே! என்னுடைய வாழ்வாதாரத்தை பறிக்காதே என்று பேச முடியல. அப்படியே பேசினால் உடனே வரிசை வரிசையாக போலீசை குவிக்கிறார்கள். நீ அத பேசாத இத பேசாத என தடை விதிக்கிறார்கள். இப்ப இங்க அசோக் லேலண்ட் நிறுவனம் தண்ணி எடுத்து விற்பதற்கு நாட்றம்பள்ளிக்கு வருது. வந்து என்ன பன்ன போறான். ராட்சத போர்வெல் போட்டு இந்த காடுகளில் கொஞ்சம் நஞ்சம் இருக்கிற பசுமையும் இந்த கார்ப்பரேட் முதலாளிக்கு பொறுக்க முடியல. இப்ப சேசுராஜபுரத்துல வந்து அடிக்கல் நாட்டிருக்கிறான். ஆக, இன்றைக்கே மேகதாது விஷயம் ஆகட்டும் அல்லது எட்டு வழி சாலை ஆகட்டும் எந்த பிரச்சனையும் மக்கள் பிரச்சினையை தீர்ப்பதற்கு லாயக்கற்று இந்த அரசமைப்பு தோற்றுப்போய் இருக்கிறது. அதனுடைய வெளிப்பாடுதான் இந்த மேகதாது அணை கட்டும் திட்டம்.

ஆர்ப்பாட்டத்தை நின்று கவனித்து செல்லும் மக்கள்

மேகதாதுவில் அணை கட்டினால் டெல்டா மட்டும் பாதிக்கும் என்று புரிந்து கொள்ளக் கூடாது தமிழகம் முழுவதும் பாலைவனமாக, சுடுகாடாக மாறிவிடும். தமிழ்நாட்டுல இருக்கிற 22 மாவட்ட மக்களின் குடிநீர், விவசாயம், உயிர், நாடி, நரம்பு எல்லாம் ரத்தமும் சதையுமாக மக்கள் பிணைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை நாம் உணர வேண்டும். மத்திய அரசாகட்டும், மாநில அரசாகட்டும் இவர்கள் காவிரியில் தண்ணீர் திறந்து விடுவது என்பது இவங்க போடுகிற பிச்சை இல்லை. அது தமிழ்நாட்டினுடைய உரிமை.

உச்ச நீதிமன்றத்தில் மீண்டும் வழக்கு போட்டால் என்ன நடக்கும்? அந்த வாழ்க்கை மீண்டும் ஒரு நாற்பது வருஷம் இழுத்துச் செல்லும். அதனால இனி நீதிமன்றங்களோ. மத்திய மாநில அரசோ, அதிகாரிகளோ, இந்த அமைப்பு முறைகளில் உள்ள யாருடைய வாக்குறுதிகளையும் பாதிக்கப்படும் மக்களாகிய நாம் நம்பி ஏமாறமுடியாது. மக்கள் தாங்களே அணிதிரண்டு அதிகாரத்தை கைப்பற்றுவது கையிலெடுப்பது ஒன்றுதான் தீர்வு. நீதிமன்றமோ, சட்டமன்றமோ நீங்க யாரும் எந்த ஆணியையும் பிடுங்கத்தேவையில்லை. நீங்க இயங்காமல் சும்மா இருந்தாலே போதும். மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.

எளிய உழைக்கின்ற மக்களுடைய போராட்டம் மட்டும்தான் காவிரியின் குறுக்கே அணை கட்டக்கூடிய இந்த சதித் திட்டத்தை தடுக்கும், என்று கூறி தனது பேச்சை முடித்துக் கொண்டார்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம். தொடர்புக்கு : 97901 38614.

உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கி விட்டது

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – பகுதி – 45

மாக்சிம் கார்க்கி
போலீசாரின் தலைவன் வந்து கொண்டிருந்தான். உருண்டை முகமும், கனத்த சரீரமும், நெடிய உருவமும் கொண்டவனாக இருந்தான் அவன். அவன் அணிந்திருந்த தொப்பி காது பக்கமாக நீண்டு கொண்டிருந்தது. மீசையின் ஒருபுறம் மேல்நோக்கித் திருகி நின்றது, மறுமுனை கீழ்நோக்கி வளைந்திருந்தது. எனவே அவனது தோற்றமே என்னவோ கோணங்கித்தனமாகத் தோன்றியது. மேலும் அவனது உதட்டில் பிறந்த உயிரற்ற புன்னகையால் அவனது முகமே கோரமாகத் தெரிந்தது. அவனது இடது கையில் ஒரு வாள் இருந்தது. வலது கையால் வீசி விளாசிச் சைகை காட்டிக்கொண்டே அவன் வந்தான். அவனது வருகையின் கனத்த காலடியோசையை எல்லோரும் கேட்டனர். கூட்டம் அவனுக்கு வழிவிட்டு ஒதுங்கியது. அவர்களது முகங்களிலெல்லாம் ஒரு சோர்வு நிறைந்த அழுத்த உணர்ச்சி குடியேறியது. அவர்களது குரல்கள் எல்லாம் பூமிக்குள்ளே மூழகுவது போல் உள்வாங்கிச் செத்து மடிந்தன. தாய்க்கு தன் கண்கள் எரிந்து கனல்வதாகத் தோன்றியது. நெற்றித் தசை நடுங்கிச் சிலிர்த்தது. மீண்டும் அவளுக்கு அந்தக் கூட்டத்தாரோடு கலந்து கொள்ளும் ஆசை உந்தியெழுந்தது. அவள் முன்னே செல்வதற்காக முண்டிப் பார்த்தாள். பிறகு அசைவற்று ஸ்திரமாக நின்று போனாள்.

“இதென்ன இது?” என்று ரீபினின் முன்னால் வந்து நின்று கொண்டே கேட்டான் அந்தத் தலைவன். ரீபினை ஏற இறங்க நோக்கி அளந்து பார்த்தான். ”இவன் கைகளை ஏன் கட்டவில்லை? போலீஸ்! இவன் கையைக் கட்டுங்கள்!”

அவனது குரல் உச்ச ஸ்தாயியில் கணீரென்று ஒலித்தது. என்றாலும் அதில் உணர்ச்சியில்லை.

‘’கட்டித்தான் இருந்தோம். ஜனங்கள் அவிழ்த்துவிட்டு விட்டார்கள்” என்று ஒரு போலீஸ்காரன் பதில் சொன்னான்.

“என்ன ஜனங்களா? எந்த ஜனங்கள்?”

அந்தப் போலீஸ் தலைவன் தன்னைச் சுற்றிப் பிறை வடிவமாகச் சூழ்ந்து நிற்கும் ஜனக்கூட்டத்தைச் சுற்று முற்றும் பார்த்தான்.

“யார் இந்த ஜனங்கள்?” என்று அவனது உணர்ச்சியற்ற வெளிறிய குரலை உயர்த்தாமலும் தாழ்த்தாமலும் கேட்டான். அவன் வாளின் கைப்பிடியால் அந்த நீலக்கண் முஜீக்கைத் தொட்டான்.

“அந்த ஜனங்கள் யார்? நீயா சுமகோவ்? வேறு யார்? நீயா, மீஷன்?”

அவன் அவர்களில் ஒருவனது தாடியை வலது கையால் பற்றிப் பிடித்தான்.

“இங்கிருந்து உடனே கலைந்து போய்விடுங்கள்! அயோக்கியப் பயல்களா! இல்லையென்றால் உங்களுக்கு வேண்டுமட்டும் உதை கொடுத்தனுப்புவேன். நான் யாரென்பதைக் காட்டிவிடுவேன்!”

அவன் முகத்தில் கோபமோ பயமுறுத்தலோ காணப்படவில்லை. அவன் அமைதியாகப் பேசினான். தனது நெடிய கரங்களால் ஜனங்களை வழக்கம்போல் ஓங்கியறைந்தான். ஜனங்கள் முகத்தைத் திருப்பிக் கொண்டும் தலையைக் குனிந்து கொண்டும், பின்வாங்கத் தொடங்கினர்.

”சரி, நீங்கள் இங்கு எதற்கு நிற்கிறீர்கள்?” என்று போலீசாரைப் பார்த்துச் சொன்னான். ”நான் சொல்கிறேன். கட்டுங்கள் அவனை!”

அவன் ஏதேதோ வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு ரீபினை நோக்கினான்.

“உன் கையைப் பின்னால் கட்டு” என்று உரத்த குரலில் சொன்னான் அவன்.

“இவர்கள் என் கையை கட்ட வேண்டியதில்லை” என்றான் ரீபின்; “நான் ஒன்றும் ஓடிப்போக நினைக்கவில்லை. சண்டை போடவும் விரும்பவில்லை . பின் ஏன் கைகளைக் கட்டுகிறீர்கள்?”

“என்ன சொன்னாய்” என்று கேட்டுக்கொண்டே அவனை நோக்கி அடியெடுத்து வைத்தான். அந்தப் போலீஸ் தலைவன்.

”ஏ . மிருகங்களா! நீங்கள் மக்களைச் சித்திரவதை செய்தது போதும்” என்று தன் குரலை உயர்த்திக்கொண்டு சொன்னான் ரீபின். “உங்களுக்குச் சாவுமணி அடிக்கும் நாள் நெருங்கிவிட்டது!

துடிதுடிக்கும் மீசையோடு ரீபினின் முகத்தையே வெறித்துப் பார்த்தான் அந்தத் தலைவன். பிறகு ஒரு அடி பின் வாங்கி வெறிபிடித்த குரலில் கத்தினான்.

”நாய்க்குப் பிறந்த பயலே! என்னடா சொன்னாய்!” திடீரென்று அவன் ரீபினின் முகத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தான்.

“உன்னுடைய முஷ்டியால், நீ உண்மையைக் கொன்றுவிட முடியாது!” என்று அவனை நோக்கி முன்னேறிக்கொண்டே சத்தமிட்டான் ரீபின். “அட்டுப் பிடித்த நாயே! என்னை அடிப்பதற்கு உனக்கு என்ன உரிமை இருக்கிறது?”

“எனக்கு உரிமை கிடையாதா? கிடையாதா?” என்று ஊளையிட்டுக் கத்தினான் அந்தத் தலைவன்.

மீண்டும் அவன் ரீபினின் தலையைக் குறிபார்த்துத் தன் கையை ஓங்கினான். பின் குனிந்து கொடுத்ததால் அந்த அடி தவறிப் போய், அந்தப் போலீஸ் தலைவனே நிலை தவறித் தடுமாறிப் போய்விட்டான். கூட்டத்தில் யாரோ கனைத்தார்கள். மீண்டும் ரீபினின் ஆக்ரோஷமான குரல் ஓங்கி ஒலித்தது:

“ஏ, பிசாசே! என்னை அடிக்க மட்டும் துணியாதே. ஆமாம் சொல்லிவிட்டேன்.”

அந்தப் போலீஸ் தலைவன் சுற்றுமுற்றும் பார்த்தான். ஜனங்கள் ஒன்றுகூடி இருண்ட வளையமாக நெருக்கமாய் நின்று கொண்டிருந்தார்கள்.

“நிகீதா! ஏ நிக்தா!’’ என்று கத்தினான் அந்தத் தலைவன்.

கம்பளிக்கோட்டு அணிந்து குட்டையும் குண்டுமாயிருந்த ஒரு முஜிக் கூட்டத்திலிருந்து வெளிவந்தான். அவனது கலைந்துபோன பெரிய தலை கவிழ்ந்து குனிந்திருந்தது.

”நிகீதா!’ என்று தன் மீசையை நிதானமாகத் திருகிக்கொண்டே சொன்னான் அந்தப் போலீஸ் தலைவன். அவன் செவிட்டில், ஓங்கி ஒரு சரியான குத்து விடு.”

அந்த முஜீக் ரீபினின் முன்னால் வந்து நின்று தலையை நிமிர்த்தினான். உடனே ரீபின் அவன் முன் கடுகடுத்த வார்த்தைகளை வீசியபடி உரத்த உறுதி வாய்ந்த குரலில் சொன்னான்.

அயோக்கியப் பதர்களா? இவன் ஓர் அரசியல் குற்றவாளி என்பது உங்களுக்குத் தெரியாதா? இவன் யார்? அரசுக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுபவன் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவனையா நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள். அப்படியானால் நீங்களும் கலகக்காரர்கள்தானா? அப்படித்தானே!”

”ஜனங்களே பார்த்தீர்களா? இந்த மிருகங்கள் நம் கைகளைக் கொண்டே நம் தொண்டையை நெரிப்பதை நன்றாகப் பாருங்கள்! சிந்தித்துப் பாருங்கள்!”

அந்த முஜீக் தன் கையை மெதுவாக உயர்த்தி ரீபினின் தலையில் லேசாக ஒரு குத்துவிட்டான்.

”ஏ, நாய்க்குப் பிறந்த பயலே! இப்படித்தான் அடிக்கிறதோ?” என்று அவனை நோக்கி அழுது விடிந்தான் அந்தத் தலைவன்.

“ஏய், நிகீதா!” என்று கூட்டத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது. ”கடவுளை மறந்து காரியம் செய்யாதே!”

”நான் சொல்கிறேன், அவனை அடி” என்று முஜீக்கின் பிடரியைப் பிடித்துத் தள்ளிக்கொண்டே கத்தினான் தலைவன். ஆனால் அந்த முஜீக்கோ தன் தலையைக் குனிந்தவாறே ஒருபுறமாக ஒதுங்கிச் சென்றான்.

‘’என்னால் முடிந்தவரை அடித்தாயிற்று” என்று முனகினான்.

“என்ன?”

”அந்தப் போலீஸ் தலைவனின் முகத்தில் ஒரு நடுக்கம் பரவிப் பாய்ந்தது. அவன் தரையை எட்டி உதைத்தான். ஏதேதோ திட்டிக்கொண்டு ரீபினை நோக்கிப் பாய்ந்தான். திடீரென ஓங்கியறையும் சத்தம் கேட்டது. பின் கிறுகிறுத்துச் சுழன்றான். தன் கையை உயர்த்தினான். ஆனால் இரண்டாவதாக விழுந்த அறை அவனைக் கீழே தள்ளி வீழ்த்தியது. அந்தப் போலீஸ் அதிகாரி கீழே விழுந்த ரீபினின் நெஞ்சிலும் விலாவிலும் தலையிலும் உதைத்தான், மிதித்தான்.

கூட்டத்தினரிடையே கோபக் குமுறல் முரமுரத்து வெளிப்பட்டது. ஜனங்கள் அந்த அதிகாரியை நோக்கிச் சூழ ஆரம்பித்தார்கள். ஆனால் அவனோ இதைக் கண்டுகொண்டான். பின்னால் துள்ளிப் பாய்ந்து, தன் வாளின் கைப்பிடியைப் பற்றிப் பிடித்துச் சுழற்றி வீசினான்:

“என்ன இது? கலவரம் உண்டாக்கவா பார்க்கிறீர்கள்? ஆ ஹா ஹா! அப்படியா சேதி?”

அவனது குரல் உடைந்து கரகரத்து நடுங்கியது. திராணியற்ற சிறு கூச்சலைத்தான் அவனால் வெளியிட முடிந்தது. திடீரென்று அவனது குரலோடு அவனது பலமும் பறந்தோடிப் போய்விட்டது. தலையைத் தோள் மீது தொங்கவிட்டபடி அவன் தடுமாறி நிலைகுலைந்து கால்களாலேயே வழியை உணர்ந்து உயிரற்ற கண்களால் வெறித்துப் பார்த்தவாறே பின்வாங்கினான்.

”ரொம்ப நல்லது” என்று அவன் கரகரத்த குரலில் சத்தமிட்டான். ”அவனைக் கொண்டு போங்கள் – நான் அவனை விட்டுவிடுகிறேன். வாருங்கள். ஆனால் அயோக்கியப் பதர்களா? இவன் ஓர் அரசியல் குற்றவாளி என்பது உங்களுக்குத் தெரியாதா? இவன் யார்? அரசுக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுபவன் என்பது உங்களுக்குத் தெரியாதா? இவனையா நீங்கள் காப்பாற்றப் போகிறீர்கள். அப்படியானால் நீங்களும் கலகக்காரர்கள்தானா? அப்படித்தானே!”

தாய் கொஞ்சங்கூட அசையாமல் நின்றாள். அவளது கண்கள்கூட இமைக்கவில்லை. சிந்தித்துப் பார்க்கும் சக்தியையும் பலத்தையும் இழந்துபோய் பயமும் அனுதாபமும் பிடித்த மனதோடு அவள் ஒரு கனவு நிலையில் நின்று கொண்டிருந்தாள். முறைப்பும் கோபமும் புண்பட்ட மக்களின் குரல்கள், கலைக்கப்பட்ட தேனீக்களின் மூர்க்க ரீங்காரத்தைப் போல் கும்மென்று அவள் காதுகளில் இரைந்தன. அந்த அதிகாரியின் குழறிய குரல் அவள் காதில் ஒலித்தது. அத்துடன் யாரோ குசுகுசுவெனப் பேசும் குரலும் சேர்ந்தது.

”அவன் குற்றவாளியென்றால், அவனை நீதிமன்றத்திற்குக் கொண்டு போ…”

”எஜமான்! அவன் மீது கருணை கொள்ளுங்கள்……”

”இதுதான் உண்மை. இந்த மாதிரி நடத்துவதற்கு எந்தச் சட்டமும் இடங்கொடுக்காது.”

”இது என்ன நியாயமா? இப்படி எல்லோரும் அடிக்கத் தொடங்கி விட்டால், அப்புறம் என்ன நடக்கும்?”

ஜனங்கள் இரு பிரிவினராகப் பிரிந்து நின்றார்கள். ஒருசிலர் அந்த அதிகாரியைச் சுற்றி நின்று அவனோடு சேர்ந்து கத்திக்கொண்டும் இரங்கிக் கேட்டுக்கொண்டுமிருந்தனர். அந்தப் பிரிவினரில் சிறுபான்மையோர் கீழே விழுந்து கிடக்கும் ரீபினின் பக்கமாக நின்று ஏதேதோ வன்மம் கூறினர். அவர்களில் சிலர் ரீபினைத் தரையிலிருந்து தூக்கி நிறுத்தினர். போலீஸ்காரர்கள் அவனது கைகளைக் கட்ட முன்வந்தபோது அவர்கள் கூச்சலிட்டார்கள்:

”ஏ, பிசாசுகளே! அவசரப்படாதீர்கள்!”

ரீபின் தனது முகத்திலும் தாடியிலும் படிந்திருந்த ரத்தத்தையும் புழுதியையும் துடைத்தான். வாய் பேசாது சுற்றுமுற்றும் பார்த்தான். அவனது பார்வை தாயின் மீது விழுந்தது. அவள் நடுங்கியபடி அவனை நோக்கித் தன்னையுமறியாமல் கையை ஆட்டிக்கொண்டே முன்வரக் குனிந்தாள். ஆனால் அவன் சட்டென்று அவள் பார்வையினின்றும் கண்களைத் திருப்பிக்கொண்டான். சில நிமிஷ நேரம் கழித்து அவனது கண்கள் மீண்டும் அவள் பக்கம் திரும்பின. அவன் நிமிர்ந்து நின்று தலையை உயர்த்திப் பார்ப்பதாகவும் ரத்தக்கறை படிந்த அவனது கன்னங்கள் நடுங்குவதாகவும் அவளுக்குத் தோன்றியது.

“அவன் என்னைக் கண்டு கொண்டான் – உண்மையிலேயே என்னை அவன் அடையாளம் கண்டுகொண்டானா?”

அவள் அவனை நோக்கி உடம்பெல்லாம் நடுங்க, அடக்கமுடியாத வருத்தம் நிறைந்த மகிழ்ச்சியோடு தலையை அசைத்தாள். மறுகணமே அந்த நீலக்கண் முஜீக் அருகே நின்று தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டுகொண்டாள். அவனது பார்வை தாயின் உள்ளத்தில் ஆபத்துக்கான எச்சரிக்கையுணர்வைக் கிளப்பிவிட்டது.

“நான் என்ன செய்கிறேன்? இப்படிச் செய்தால் என்னையும் அவர்கள் கொண்டு போய்விடுவார்கள்!”

அந்த முஜீக் ரீபினிடம் ஏதோ சொன்னான். பின் பதிலுக்கு ஏதோ கூறியவாறே தலையை அசைத்தான்.

“அது சரிதான்” என்றான் அவன். நடுக்கம் ஒருபுறமிருந்தாலும், அவனது குரல் தெளிவாகவும் துணிவாகவும் ஒலித்தது. ”இந்தப் பூமியில் நான் ஒருவன் மட்டும் அல்ல, உண்மை முழுவதையும் அவர்களால் அடக்கிப் பிடித்துவிட முடியாது. நான் எங்கெங்கு இருந்தேனோ அங்கெல்லாம் என்னைப் பற்றிய நினைவு நிலைத்திருக்கும். அவர்கள் எங்களது இருப்பிடங்களையெல்லாம் குலைத்து, எல்லாத் தோழர்களையும் கொண்டு போய்விட்டாலும்கூட…”

”அவன் இதை எனக்காகத்தான் சொல்லுகிறான்” என்று ஊகித்துக் கொண்டாள் தாய்.

“பறவைகள் சிறைவிட்டுப் பறக்கும். மக்கள் தளைவிட்டு நீங்கும் காலம் வரத்தான் போகிறது!”

படிக்க:
வினவை ஆதரிப்பது உங்கள் கடமை ! ஒரு நிமிடம் ஒதுக்குங்கள் !!
இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

ஒரு பெண்பிள்ளை ஒரு வாளியில் தண்ணீர் கொண்டுவந்து ரீபினின் முகத்தைக் கழுவினாள். கழுவும்போது ‘ஆ — ஓ’ என்று புலம்பினாள். அவளது இரங்கிய கீச்சுக்குரல் மிகயீல் பேசிய பேச்சோடு சிக்கி முரணியது. எனவே அவன் பேச்சைத் தாயால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை. போலீஸ் தலைவன் முன்னால் வர, ஒருசில முஜீக்குகள் முன்னேறி வந்தார்கள். அவர்களில் யாரோ ஒருவன் கத்தினான்:

“இந்தக் கைதியை ஒரு வண்டியில் போட்டுக் கொண்டு போவோம். சரி, இந்தத் தடவை யாருடைய முறைக்கட்டு?”

பிறகு அந்தப் போலீஸ் அதிகாரி தனக்கே புதிதான குரலில், புண்பட்டவனின் முனகல் குரலில் பேசினான்.

“ஏ, நாயே! நான் உன்னை அடிக்கலாம். ஆனால் நீ என்னை அடிக்க முடியாது!”

“அப்படியா? நீ உன்னை என்னவென்று நினைத்துக் கொண்டிருக்கிறாய் – கடவுள் என்றா?” என்று கத்தினான் ரீபின்.

உள்ளடங்கிப்போய்க் குழம்பிய கசமுசப்பு. அவனது குரலை மூழ்கடித்து விழுங்கிற்று.

“தம்பி, அவரோடு வம்பு பண்ணாதே. அவர் ஓர் அரசாங்க அதிகாரி.”

”நீங்கள் அவன் மீது கோபப்படக்கூடாது. எசமான் அவன் தன் நிலையிலேயே இல்லை.”

“ஏ புத்திசாலி! சும்மா கிட.”

”அவர்கள் உன்னை இப்போது நகருக்குக் கொண்டு போகப் போகிறார்கள்.”

“அங்கு, இங்கிருப்பதைவிட ஒழுங்கு முறை அதிகம்.”

ஜனங்களுடைய குரல்கள் கெஞ்சிக் கேட்பதுபோல் இருந்தன. அந்தக் குரல்கள் ஒரு சிறு நம்பிக்கையோடு முழங்கிக் கலந்து மங்கி ஒலித்தன. போலீஸ்காரர்கள் ரீபின் கையைப் பற்றி, அந்தக் கிராமச் சாவடியின் முகப்பை நோக்கி இழுத்துக் கொண்டு சென்றார்கள். அங்கு சென்றவுடன் அவர்கள் கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று மறைந்தார்கள். கொஞ்சம் கொஞ்சமாக அங்கு கூடி நின்ற முஜீக்குகள் கலைந்து சென்றார்கள். அந்த நீலக்கண் முஜீக் மட்டும் புருவத்துக்குக் கீழாகத் தன்னை உர்ரென்று பார்த்தவாறே தன்னை நோக்கி வருவதைக் கண்டாள் தாய். அவளது முழங்காலுக்குக் கீழே பலமிழந்து சுழலாடுவதுபோல் தோன்றியது. திகைப்பும் பயமும் அவளது இதயத்தை ஆட்கொண்டு, அவளுக்குக் குமட்டல் உணர்ச்சியைத் தந்தன.

“நான் போகக்கூடாது. போகவே கூடாது” என்று அவள் நினைத்துக் கொண்டாள்.

அவள் பக்கத்திலிருந்த கம்பியைப் பலமாக பிடித்தவாறே நின்றாள்.

அந்தப் போலீஸ் தலைவன் கட்டிடத்தின் முகப்பிலேயே நின்று கைகளை வீசி . கண்டிக்கும் குரலில் பேசினான். அவனது குரலில் மீண்டும் பழைய வறட்சியும் உணர்ச்சியின்மையும் குடிபுகுந்துவிட்டன.

(தொடரும்)

கோடானுகோடி உழைப்பாளிகளை தட்டி எழுப்பி ஆர்வமும் வர்க்க உணர்வும் ஊட்டி போராட்டத்தில் தன்னையுமறியாமல் ஈடுபடுத்தவல்ல ஆற்றல் படைத்தது என லெனின் பாராட்டியது தாய் நாவலைத் தான்.

கார்க்கியின் ‘தாய்’ நாவல் முதன்முதலில் 1975-ம் ஆண்டு மாஸ்கோவின் முன்னேற்றப் பதிப்பகத்தால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது. இந்நாவலை மிகச் சிறப்பாக தமிழில் மொழிபெயர்த்தவர் தொ.மு.சி. ரகுநாதன்.

’தாய்’ நாவல் அச்சு நூல் கிடைக்குமிடம்:

சென்னையில் கீழைக்காற்று வெளியீட்டகத்திலும் கிடைக்கும்.

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

பக்கங்கள்: 536
விலை: ரூ.200.00
பதிப்பகம் : தோழமை வெளியீடு

முந்தைய பகுதிகள்:

மாக்சிம் கார்க்கியின் தாய் நாவல் – தொடர்

கருத்துக் கணிப்பு : தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?

2018-ம் ஆண்டின் சிறப்பு விருதுகளை தெரிவு செய்யும் முகமாக நடத்தப்படும் கருத்துக் கணிப்பில் இது கடைசி. அர்னாப் கோஸ்வாமிக்கு அறிமுகம் தேவையில்லை. சங்கிகளுக்கு சவுண்டு கொடுப்பதிலும், சங்கிகளை அம்பலப்படுத்துபவர்களை சதித் திட்டங்களைத் தீட்டி தேச விரோதிகளாக சித்தரிப்பதிலும் அர்னாப்புக்கு நிகர் கோஸ்வாமிதான்.

தமிழகத்தில் சந்தேகமில்லாமல் இந்த திருப்பணியை ரங்கராஜ் பாண்டேதான் செய்து வருகிறார். தந்தி டிவியிலிருந்து விலகிய பிறகு தற்போது பாண்டே மார்க்கெட்டிங் வேலைகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. கடைசியாக அவர் பச்சையாகவே பாஜக-வை ஆதரித்துப் பேசியது வரை அனைவரும் அறிந்த ஒன்றுதான். பாண்டே தனி டிவி ஆரம்பிப்பாரா, ரஜினி டிவி பொறுப்பேற்பாரா, இல்லை பாஜகவின் தமிழ் டிவி நடத்துவாரா ? அனைத்தும் வரும் தேர்தலை முன்னிட்டு ஏற்கனவே பாஜக முடிவு செய்து விட்டது. இதற்கு மேலாக மேலவை எம்பி போன்றவையும் கூட டீலாக பேசப்பட்டிருக்கலாம்.

எனினும் பாண்டே பரந்துபட்ட மக்கள் திரளிடம் செய்யும் காவிக் கதை செய்திகளை இலக்கியம், நாளிதழ், பத்திரிகை என பல ஊடக வடிவங்களில் செய்யும் முக்கியமானவர்களும் இருக்கிறார்கள். இவர்கள் பாண்டே அளவுக்கு பிரபலம் ஆகவில்லை என்றாலும் பாண்டே செய்யும் வேலையை தத்தமது துறைகளில் திறம்படச் செய்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

தினமணி வைத்தியநாதன், அனைவருக்கும் சீனியர். ஆண்டாள் பிரச்சினையில் அவர் அவாளிடம் காலில் விழுந்தது முதல் தினமணி தலையங்க கட்டுரைகள் வரை பாஜகவின் அவாள் அணி போற்றும் நம்பர் ஒன் மூத்த பத்திரிகையாளர்.

புதிய தலைமுறை மாலனும் மூத்த பத்திரிகையாளர்தான். பத்திரிகை, டிவி விவாதங்கள், பேஸ்புக்கில் விவாதிப்பது மூலம் கமலாலயம் கவனிக்கும் நிலைக்கு வந்தவர். பாண்டே பொய்யை ஓங்கிச் சொல்வார். வைத்தியநாதன் அதை ஒழுக்கமாக மொழிபெயர்ப்பார். மாலன் அதை புள்ளி விவரங்களுடன் உண்மையாக மாற்றிச் சொல்வார். சரி இவர்களோடு ஜெயமோகன் என்ன சொல்வார்?

படிக்க:
♦ பாஜக-வின் கொள்கை பரப்பும் நம்பர் 1 நடுநிலை தமிழ் நாளிதழ் எது ? கருத்துக் கணிப்பு
♦ மோடிக்கு ஜால்ரா போடும் தொலைக்காட்சிகளில் நம்பர் 1 எது ? கருத்துக் கணிப்பு

ஜெயமோகனைப் பொறுத்த வரை மேற்கண்ட நால்வரின் திறமைகளையும் இணைத்து பிணைத்து நுட்பமாகவும், நூதனமாகவும், நூலாகவும் காவிகளுக்கு பரிந்துரை செய்வார். அடுத்த முறை அன்னாருக்கு சாகித்ய அகாடமி நிச்சயம் என்பதாலும், இயல்பிலேயே இந்துத்துவத்தின் பண்பாட்டை பாரதப் பண்பாடு என உள்ளார்ந்து ஏற்றிருப்பதாலும் ஜெயமோகன் இலக்கிய உலகில் பாஜக-வின் பிராண்டு அம்பாசிடராக செயல்படுகிறார். இங்கே பாண்டே போல நேரடியாக இருக்க வேண்டியதில்லை. இந்து முன்னணி சொல்லும் இந்துமதம் வேறு என்று ஆரம்பித்து இந்து மதத்தை உயர்த்தி அதுதான் ஆர்.எஸ்.எஸ் சொல்லும் இந்துமதம் என்று முடிப்பார்.

இறுதியாக இவர்களோடு இணைகிறார் தி இந்து தமிழ் பத்திரிகையின் பத்திரிகையாளர் சமஸ் அவர்கள். சமஸுக்கு தினமணி வைத்தியநாதன் குரு. தி இந்து தமிழ் பதிப்பு ஆரம்பித்த முதல் நாளிலேயே ஜெயமோகனை நடுப்பக்கத்தில் எழுத வைத்தார். மோடி பதவியேற்ற பிறகு ஏகப்பட்ட கட்டுரைகள் மோடியை நேரடியாக ஆதரித்தும், மறைமுகமாக நியாயப்படுத்தியும் எழுதியிருக்கிறார். என்ன, மேற்கண்ட கோஸ்வாமிகளை விட கூடுதலான ஒரு பண்பு சமஸிடம் இருக்கிறது எனலாம். மோடியை ஆதரித்தாலும் மோடிக்கு என சில அட்வைசுகள் சொல்லித்தான் சமஸ் எழுதுவார்.

கேள்வி:

தமிழகத்தின் அர்னாப் கோஸ்வாமி யார் ?

♥ ரங்கராஜ் பாண்டே
♥ புதியதலைமுறை மாலன்
♥ பத்திரிகையாளர் சமஸ்
♥ தினமணி வைத்தியநாதன்
♥ எழுத்தாளர் ஜெயமோகன்

(அனைவரும் கண்ணை மூடிக் கொண்டு பாண்டேவை தெரிவு செய்வீர்கள். மற்றவர்களையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்பதற்காக மூன்று தெரிவுகள் எடுக்கலாம்)

நாளை வெற்றி பெற்றவர்கள், விருது பெறுபவர்கள் அறிவிக்கப்படுவார்கள்.

டிவிட்டரில் வாக்களிக்க :

யூ-டியூபில் வாக்களிக்க :

https://www.youtube.com/user/vinavu/community

குழந்தை இல்லாத ஆண்களின் மனநிலை குறித்து சிந்தித்ததுண்டா ?

0
stressed-man

குழந்தையில்லா பெண்கள் குறித்து நிறைய பேசுகிறோம். குழந்தையில்லா ஆண்களின் நிலை குறித்து நாம் பேசியதுண்டா? தாத்தாவாகும் வயதில் ஆண்களால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியும் என்கிற நிலையில், ஆண்களின் குழந்தையின்மை குறித்து பொதுவெளியில் பேசுவதில்லை.

Robin Hadley
டாக்டர் ராபின் ஹாட்லி

அது தவறான முடிவு. டாக்டர் ராபின் ஹாட்லி(58), தன்னளவில் குழந்தையில்லாதவர். வயதானதன் காரணமாக தாமாக குழந்தை வேண்டாம் என முடிவெடுத்தவர்கள் குறித்து சமீபத்தில் ஆய்வொன்றை செய்திருக்கிறார்.

“பெற்றோராகும் விருப்பத்தில் குழந்தையில்லா ஆண்களும் பெண்களும் சிறிய அளவில் வேறுபடுகிறார்கள். மேலும், இந்த ஆய்வில் குழந்தையில்லா ஆண்களுக்கு வேறு சில எதிர்மறை விளைவுகள் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது. ஏனெனில் இங்கே குழந்தையில்லா ஆண்கள் குறித்து எவரும் பேசுவதில்லை” என தனது ஆய்வு குறித்து பேசுகிறார் ராபின் ஹாட்லி.

குழந்தையில்லா பெண்கள் குறித்து சமூகம் மிக மோசமான பார்வையை வைத்திருக்கிறது. இந்தப் பார்வையும் கூட மாறிவருகிறது. குழந்தையில்லா பெண்கள் மீதான சமூகத்தின் பார்வை மாற வேண்டும் என பேசியும் எழுதியும் வருகிறோம். ஆனால் ஆண்கள் குறித்து?

“ஒரு ஆண் தன்னை மலட்டுத்தன்மை உடையவர் என சொல்லிக் கொண்டால், அது மிகப்பெரிய அதிர்ச்சிக்குரிய விசயமாக பார்க்கப்படும். அவர் தன்னை கீழ்மை படுத்திக் கொள்வதாகவோ அல்லது கீழ்மையான பார்வையில் அடுத்தவர்களால் பார்க்கப்படுவார்” என்கிறார் ஹாட்லி.

ஆண்கள் பரிதாபத்துக்குரியவர்களாக பார்க்கப்படுகிறார்களா? “இல்லை. ஆனால், மக்கள் என்னை வித்தியாசமாக பார்க்கிறார்கள்” என்கிறார் 43 வயதான வடிவமைப்பாளர் பணி புரியும் கெல்சே. சந்தர்ப்பவசத்தால் குழந்தையின்மைக்கு ஆளானவர் இவர்.

stressed-man“43 வயதாகியும் திருமணம் ஆகவில்லை; குடும்பம் இல்லை… இதை மக்கள் வித்தியாசமாக பார்க்கிறார்கள். 43 வயதான பெண்ணுக்கு திருமணம் ஆகவில்லை, அவருக்கு குடும்பம் இல்லை எனில் அவரை இப்படி பார்ப்பேனா என்பது தெரியாது. சினிமாக்களிலும் டிவி நிகழ்ச்சிகளிலும் கூச்ச சுபாவம் உள்ள, அமைதியான பெண் குறித்து பதிவு செய்கிறார்கள். நம்முடைய கலாச்சாரம் அது குறித்து பேசுகிறது. ஆனால், 43 வயதாகியும் திருமணம் ஆகாமல் இருக்கும் ஆண்களின் அமைதியான குணத்தை எவரும் பேசுவதில்லை. அவர் அனைத்திலும் தோற்றவர். அம்மாவின் உதவியுடன் வாழ்பவர் என்பதாகத்தான் காட்டப்படுவார்.

பெண்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதை உணர்கிறார்கள். ஆனால், அவர்களுடைய புறக்கணிப்பு காதுகொடுத்து கேட்கப்படுகிறது. அதுகுறித்து விவாதிக்கப்படுகிறது. குறைந்தபட்சம் ஆண்களைக் காட்டிலும் அவர்களுடைய குரல் கேட்கப்படுகிறது. உண்மையை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும், என்னைக் காட்டிலும் குழந்தையில்லா பெண்கள் அதிகமாக கவலை கொள்கிறார்கள். ஆனால், ஆணுக்கு ஓர் உயிரியல் ரீதியான உணர்வு இருக்கிறது. நான் எப்போதும் ஒரு குழந்தை வேண்டுமென விரும்பியதுண்டு.  நீங்கள் செய்யக்கூடிய ஆகச்சிறந்த செயல்களில் அது ஒன்று” என்கிறார் கெல்சே.

உடல்ரீதியாக ஆண்களுக்கு குழந்தை வேண்டும் என்கிற உணர்வு ஏற்படுமா? ஹாட்லி சொல்கிறார், “எனக்கு அந்த உணர்வு இருந்த காரணத்தாலேயே குழந்தையில்லா ஆண்கள் குறித்து ஆராயும் ஆர்வம் உண்டானது. பெண்களுக்கு அவர்களுடைய சுழற்சியின் அடிப்படையில் குறிப்பிட்ட காலத்துக்கு குழந்தை வேண்டும் என்கிற உணர்வு இருக்கும். அப்போது அவர்களுக்கு பாலுறவு கொள்வதற்கு விருப்பம் இருக்கும். ஆண்களுக்கு அப்படிப்பட்ட உணர்வு நிலையில் பாலுறவு விருப்பம் தோன்றுவதில்லை எனினும், உயிரியல் அடிப்படையில் குழந்தை வேண்டும் என்கிற உணர்வு பைத்தியக்காரத்தனமாக இருக்கும். எப்படியாயினும் குழந்தை எனக்கு வேண்டும் என்பதாக அந்த உணர்வு இருக்கும்”.

“குழந்தை வேண்டும் என என்னுடைய இருபது வயதுகளின் தொடக்கத்தில் நான் உறுதியாக இருந்தேன். என்னுடைய குழந்தைப் பருவத்தின் காரணமாக எனக்கு மகன் வேண்டும் என விரும்பினேன். எனக்கு மகள் வேண்டுமென நான் ஒருபோதும் விரும்பியதில்லை. வலிகள் நிறைந்த குழந்தை பருவத்தை அது மாற்றிவிடாது என்றபோதிலும், நான் பெறாத ஒரு குழந்தைப் பருவத்தை என்னுடைய மகனுக்கு அளிக்க விரும்பினேன். நான் நல்ல தகப்பனாக இருப்பேன் என நினைத்தேன்” குழந்தை வேண்டும் என்கிற ஏக்கம் தனக்கும் இருந்ததாக ஒப்புக்கொள்கிறார் கெல்சே.

“நான் 30 வயதை நெருங்கியபோது, எனக்கு குழந்தை பிறக்காது என தெரிந்து கொண்டேன். நான் வருத்தமுற்றேன். ‘இது நடக்கும், கவலைப்படாதே’ என நண்பர்கள் ஆறுதல் சொன்னார்கள்.  ஆனால், இது நடக்காது என்கிற உணர்வு எனக்கிருந்தது. 40 வயதை எட்டியபோது உணர்வு நிலையில் நான் இன்னும் கீழிறங்கிப் போனேன். ‘இது நடக்கப்போவதே இல்லை’ என்கிற உணர்வு வந்தது” என்கிறார்.

குழந்தையில்லா பெண்களுக்கான அரவணைப்பு அமைப்பை நடத்திவரும் ஜோடி டே, “குழந்தையில்லா ஆண்கள் தனக்கென ஒரு துணையை தேடிக்கொள்வது அவசியம். அவர் அந்த ஆணைப் பற்றி புரிந்தவராய் இருக்க வேண்டும். குழந்தையில்லா ஆண்கள் துணையில்லாமல் எப்படி சமாளிக்க முடியும்?” என்கிறார்.

Rod Silvers
நடிகரும் எழுத்தாளருமான ராட் சில்வர்ஸ்

நடிகரும் எழுத்தாளருமான ராட் சில்வர்ஸ் (52), அவரும் அவருடைய முன்னாள் மனைவியுடன் சேர்ந்து ஐ.வி.எஃப் எனப்படும் செயற்கை கரூவுட்டல் மூலம் குழந்தையை பெற்றுக் கொள்ளும் முயற்சியை இரண்டு முறை செய்தவர். ஆண்கள் எந்த வழியிலும் தங்களுடைய உணர்வுகளை சொல்ல ஒரு இடம் இல்லை என்கிறார் இவர். “நீங்களாகவே உங்களுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டு உங்களை தேற்றிக் கொள்ள வேண்டும். இளம் ஆண்கள் இப்போது வெளிப்படையாக இருக்கிறார்கள். ஆனால், பணியாற்றும் வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்கள், தங்களுடைய உணர்வுகள் குறித்து பேசமுடியாது. வலி? காயம்? இந்த வார்த்தைகளை நான் அங்கீகரிக்கவேயில்லை” என குழந்தையில்லா ஆண்கள் சமூகத்தில் எதிர் கொள்கிற பிரச்சினைகளை பேசிகிறார் சில்வர்ஸ்.

சில்வர்ஸ், குழந்தையில்லா வயதான இரண்டு ஆண்களின் வாழ்க்கை குறித்து ஒரு நாடகம் ஒன்றை எழுதியிருக்கிறார். தன்னுடைய ஐவிஎஃப் (IVF) அனுபவத்தை வைத்து குறும்படம் ஒன்றையும் இயக்கியிருக்கிறார். அவர் ஏன் இவற்றை படைக்கிறார்? “எழுதுவது எனக்கு ஆறுதல் அளிக்கிறது. சிலர் பேசுவார்கள். நான் எழுதுகிறேன். நினைப்பதைக் காட்டிலும் செயல்படுத்துவதை விரும்புகிறது. நான் முன்பு எப்போதும் இதுகுறித்து பேசியதில்லை. அந்த நேரத்தில் என்னுடைய பெண்ணின் வலிக்கு ஆதரவாக நின்றேன்” என்கிறார்.

குழந்தையில்லாவர்களுக்கு அது ஏற்படுத்தும் வலி, இழப்பு, துக்கம், மன அழுத்தம் போன்றவை சமூகத்தின் பார்வையால் ஏற்படுகின்றன. ஹாட்லியின் ஆய்வில் தங்களுடைய அனுபவத்தை ஆண்கள் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
ஆண்மைக் குறைவும் ஆச்சி மனோரமாவின் கவலையும் !!
♦ சிசேரியன் எனும் உயிர்காக்கும் சிகிச்சை !

“பலர் தங்களுடைய குழந்தையின்மை பிரச்சினைக்கு மன அழுத்தமே காரணம் என்றார்கள். பொருளாதார ரீதியில் எப்படி இருக்கிறேன்? சமூக ரீதியாக எப்படி இருக்கிறேன்? என சிந்திக்கத் தொடங்கும்போது, நான் அவற்றில் சிறக்கவில்லை என்றால், நான் உயிரியல் அடிப்படையில் மறு உற்பத்தி செய்ய முடியாதவனாகிறேன் – எனில் ஆணாக நான் யார்?

30 வயதுகளில் குழந்தை பெற்றுக் கொள்ளும் உணர்வு இருந்த போது,  நான் இவை பற்றியெல்லாம் சிந்தித்து விரக்தியடைந்திருந்தேன். ஆனால், நான் அவற்றையெல்லாம் எனக்குள்ளே வைத்துக் கொண்டேன். விரக்தியடைவது, மீள்வது என போய்க் கொண்டிருந்தேன். வேலையில் கவனம் செலுத்தினேன்; குடிப்பதில் கவனம் திருப்பினேன். இப்போது, என்னுடைய ஆய்வு காரணமாக, நான் அவமானம் கொள்ளவில்லை” என்கிறார் ஹாட்லி.

மேலும் “உங்களுக்கு ஒன்று தெரியுமா? குழந்தையில்லா பெண்களைக் காட்டிலும் குழந்தையில்லா ஆண்களே அதிகம். இது குறித்து சரியான புள்ளிவிவரங்கள் தெரியவில்லை என்றாலும், பிரிட்டனில் குழந்தையில்லா ஆண்கள் 25 சதவீதமும் குழந்தையில்லா பெண்கள் 20 சதவீதமும் உள்ளனர்” என்கிற தகவலை பகிர்கிறார்.

இழப்பு இருக்கத்தான் செய்யும் என்கிறார் சில்வர்ஸ், “குழந்தை, திருமணம் குறித்த துக்கம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் என்ன செய்ய முடியும்? அதை ஏற்றுக் கொண்டு, நேர்மறையாக எதையாவது செய்யத்தானே வேண்டும். அதனால்தான் நான் குறும்படம் எடுத்தேன். நாடகம் எழுதினேன். என்னைபோல குழந்தையில்லா சக ஆண்கள், தான் மட்டும் தனியாக இல்லை என்பதை உணர்த்துவதற்காக அதைச் செய்தேன்” என்கிறார்.

70 வயதிலும் குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் இருக்கிறார்களே? என்கிற கேள்விக்கு, ஹாட்லியின் சூடான பதில், “வயதானாலும் குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என்பது முட்டாள்தனமானது. அறத்தின் அடிப்படையில் அது தவறானதும்கூட. எல்லாவற்றுக்கும் ஒரு வரையறை இருக்கிறது” என்கிறார்.

“குழந்தையில்லையே என கவலைப் பட்ட காலம் கடந்து விட்டது. ஆனால், குழந்தைகளைப் பார்க்கும்போது நமக்கு இதுபோன்றதொரு குழந்தை இல்லையே என்கிற உணர்வு வருவது உண்மைதான். உங்களைப் போன்று தோற்றமளிக்கும் உங்கள் குழந்தையை பார்ப்பது என்ன மாதிரியான உணர்வுகளை ஏற்படுத்தும் என என்னால் கற்பனை செய்ய முடியவில்லை.” குழந்தையின்மை குறித்த ஏக்கம் ஹாட்லிக்குள்  அவ்வப்போது வெளிப்படுவதை உணர முடிகிறது.

ஆணுக்கும் சரி பெண்ணுக்கும் சரி குழந்தையின்மை என்பது குழந்தை பிறப்பை போன்ற இயல்பான உயிரியல் நிகழ்வாக இருக்கிறது என்பதை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும். அதோடு, ஆண்களுக்கும் ஏக்கங்கள், இழப்புகள், வலிகள் இருக்கும் என்பதை புரிந்து கொள்ளவும் வேண்டும்.

சுருக்கப்பட்ட தமிழாக்கம்: அனிதா
நன்றி : தி கார்டியன் 

 

 

இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் : படிப்பினை என்ன ?

டந்த 6 நாட்களாக நடந்த இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாநிலைப் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 29.12.2018 அன்று இரவு பேச்சுவார்த்தையின் போது தொடக்கக்கல்வித்துறை இயக்குநர் திரு.கருப்பசாமி அவர்கள் “ஊதிய முரண்பாடுகளை நீக்குவதற்கான ஒருநபர் குழுவின் அறிக்கை விரைவில் அரசிடம் தாக்கல் செய்யப்பட உள்ளது, எனவே, கோரிக்கைக் குறித்து நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்று எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.”  இதைத் தொடர்ந்துதான் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர்.

teachers-protest-chenna-1
போராட்டக்களத்தில் ஆசிரியர்கள்

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கப் பொது செயலாளர் திரு.ராபர்ட் அவர்கள், “உறுதி கூறியபடி அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும், மீண்டும் எங்களை போராட்டத்துக்கு தள்ளாது என்றும் நம்புகிறேன்” என கூறி போராட்டத்தை தற்காலிகமாக முடித்து வைப்பதாக கூறியுள்ளார்.

ஆனால், அரசு உறுதி கூறுவதும், அதை ஊத்தி மூடுவதும் புது விஷயமா என்றால் இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக இப்படித்தான் அரசு உறுதிகூறி ஏமாற்றி வருகிறதென்பது ஆசிரியர்கள் அறிந்ததே.

பத்தாண்டுகளாக என்ன நடந்தது ?

6-வது ஊதியக்குழுவில்தான் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதியைக் குறைத்து, மே 31, 2009 -க்கு முன் பணியில் சேர்ந்தவர்களுக்கு 8,370/- ரூபாயாக இருந்த அடிப்படை சம்பளத்தை, அதற்கு பின் சேர்ந்தவர்களுக்கு 5,200/- ரூபாயாக குறைத்து அறிவித்தது தமிழக அரசு.

அப்போதே, இடைநிலை ஆசிரியர்கள் இதற்கெதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். மேலும், இப்பிரச்சினைக்குத் தீர்வு காணுமாறு பள்ளிக்கல்வித் துறை இயக்குநருக்கு ஆயிரக்கணக்கில் பதிவுத்தபால்களும், இ-மெயில்களும் அனுப்பியுள்ளனர். இதற்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. அடுத்தடுத்து,

  • ஜாக்டோ- ஜியோ, தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளின் போராட்டத்தில் கலந்துகொண்டு கோரிக்கைகள் வைப்பது.
  • இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தைத் தொடங்கி, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தனியாக போராடத் தொடங்கியுள்ளனர்.
  • 2016-ஆம் ஆண்டில் 8 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம்.
  • 7-வது ஊதியக் குழு அமைக்கப்படும்போது, ஒருநாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டம்.
  • 7-வது ஊதியக் குழு பரிந்துரைத்த புதிய ஊதியத்தை ஏற்றுக் கொள்ளாமல் போராட்டம்.
  • 2018 ஏப்ரலில் 4 நாட்கள் உண்ணாநிலைப் போராட்டம்.

தற்போது கடந்த 2018 டிசம்பர் 23 -ஆம் தேதி டி.பி.ஐ-யில் போராட வந்த ஆசிரியர்களை தாம்பரம், மடிப்பாக்கம், பல்லாவரம் என மண்டபங்களில் அடைத்து வைத்து, அலைய வைத்தபின், கலைந்துபோக சொல்லி மிரட்டியது போலீசு.

teachers-protest-chenna
போராட்டக்களத்தில் மயக்கமடைந்த ஆசிரியர் ஒருவர் மருத்துவ உதவிக்கு அழைத்துச்செல்லப்படுகிறார்.

ஆனால், ஆசிரியர்கள் போலீசின் மிரட்டலுக்கு அஞ்சாமல் டிபிஐ-யை முற்றுகையிட்டு போராட முயற்சித்தபோது, ராஜரத்னம் விளையாட்டு மைதானத்தில் அடைத்து வைத்தது. மீண்டும் ஆசிரியர்கள் விடாப்பிடியாகப் போராடித்தான் டி.பி.ஐ.-வளாகத்துக்குள் வந்து போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அதுமட்டுமின்றி, முதல்வருடன் பேச்சுவார்த்தை என ஏமாற்றி அழைத்துச் செல்லப்பட்டதோடு, “ஜனவரி 7-ஆம் தேதி வரை காத்திருங்கள், ஒரு நபர் கமிசன் அறிக்கை வந்துவிடும் கலைந்துபோங்கள்” என கல்வி செயலர் பிரதீப் யாவ் மூலமாக மிரட்டப்பட்டனர்.

ஊடகங்களில் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் ஊதிய முரண்பாடு களையப்படும் என அறிவித்திருந்தார். ஆனால், போராட்டக்குழுவினர் நேரில் சென்று, அதுபற்றி பேசியபோது, “தொலைக்காட்சிக்காக சொன்னா நம்பிட்டு வந்துருவீங்களா?” என திமிராகப் பேசியுள்ளார். இப்படி வெளிப்படையாக அறிவித்த வாக்குறுதியையே மதிக்காமல் காற்றில் பறக்க விட்டுவிட்டு, தற்போது 4 சுவருக்குள், ‘பரிசீலிக்கிறேன் என உறுதி கூறியிருப்பதை மட்டும் நிறைவேற்றிவிடுவார்களா?

இப்படி ஒவ்வொரு முறையும் வாக்குறுதிக் கொடுத்து ஏமாற்றி, கிடப்பில் போட்ட அரசுதான் இப்போதும் பரிசீலிக்கிறேன் என உறுதி கொடுத்துள்ளது.

போராட்டத்தின்போது, ஆசிரியர் ஒருவர் சொன்னார், “எங்கள் கோரிக்கை இழவு வீட்டிலுள்ள பிணம் போல கிடக்கிறது”. எடுத்துப்போட வேண்டிய அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கிறது. ஆதரவு தெரிவிக்கும் அரசியல் கட்சிகள், வருத்தம் தெரிவிப்பதோடு சென்றுவிடுகின்றனர் என்றார்.

அரசு, அரசியல் கட்சிகள், ஊடகங்கள் என யாருக்குமே ஆசிரியர்களின் வலியும், வேதனையும், தீர்வும் பொருட்டல்ல என்பதுதான் உண்மை. அந்த ஆசிரியர் குறிப்பிட்டதுபோல, ஆதரவு தெரிவுக்கும் கட்சிகள் தமது செல்வாக்கைப் பயன்படுத்தி, போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம் கொண்டு செல்ல முடியாதா?

ஊடகங்களால் போராட்டத்தின் நியாயத்தை மக்களுக்கு விளக்கிப் புரிய வைக்க முடியாதா? தனது சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்குக்காகத்தான் போட்டியும், பேட்டியும். ஆனால், கல்வியைத் தனியார்மயமாக்கும் அரசின் கொள்கையை ஆதரிக்கும் அரசியல் கட்சிகளும், ஊடகங்களும் எப்படி அரசுப் பள்ளிகளைக் காப்பாற்ற போராடும்?

உதாரணத்துக்கு, பச்சமுத்துவின் புதிய தலைமுறை, நியூஸ் 7 வைகுண்ட ராஜன், சன் டிவி கலாநிதிமாறன், மற்றும் ஏனைய ஊடகங்களின் முதலாளிக்கோ அரசுப் பள்ளிகளை காப்பாற்றுவதா நோக்கம்? இனியும் அரசையும், ஊடகங்களையும் நம்புவது முட்டாள்தனம்.

அரசின் நோக்கம்தான் என்ன?

இந்தப்போராட்டத்தை சீர்குலைப்பதும், ஆசிரியர்களின் மனவலிமையைக் குறைத்து “இனிமேல் ஆகப்போவது ஒன்றுமில்லை” என்ற விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளி மீண்டுமொரு போராட்டத்தை முன்னெடுக்காதவாறு தடுப்பதும்தான் அரசின் நோக்கம். அரசு ஏன் இதை செய்ய வேண்டும்?

சற்று யோசித்துப் பாருங்கள். அரசின் செலவுகளை குறைப்பதற்காகத்தான் தகுதி குறைக்கப்பட்டு, சம்பளம் குறைக்கப்படுகிறது என 6-வது ஊதியக்குழுவில் சொன்னது. இப்போதும் இதை சொல்லித்தான் அரசுப் பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஒதுக்க வேண்டிய நிதியை குறைத்து தனியாரிடம் தாரைவார்க்க தயாராகிறது.

அதானால்தான் சத்துணவு மையங்களை மூடுவது, குறைவான மாணவர்கள் படிக்கும் பள்ளிகளை மூடுவது, பள்ளிகளை இணைப்பது என அரசுப்பள்ளிகளுக்கு பூட்டு போட்டுவிட்டு போகத் துடிக்கிறது. சம்பளத்தைக் குறைத்து இலாபத்தை பெருக்க நினைக்கும் முதலாளியைப் போலத்தான், அரசும் இன்று திட்டமிடுகிறது. அதனால்தான், ஆசிரியர்களின் சம்பளத்தை குறைத்து வழங்கி, அவர்களை வறுமையில் தள்ளிவிட்டுள்ளது.

ஆனால், மறுபுறம் மக்களின் வரிப்பணத்தை ஊதாரித்தனமாக செலவு செய்கிறது. எம்.எல்.ஏ-க்களுக்கு சம்பள உயர்வு, பதவியேற்றவுடனே அமைச்சர்களுக்கு புதிய கார்கள், புயலால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கும்போது ஆயிரக்கணக்கான கோடி செலவில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா என வீணாக்குகிறது.

படிக்க:
♦ அரசு பள்ளி : முதலில் வாத்தியாரைப் போடு ! மற்றதை அப்புறம் பேசு !
♦ குடிநீர் இல்லை கழிப்பறை இல்லை ! போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு !

தனியார் பள்ளிகளில் 25% ஏழை மாணவர்களுக்கு இடஒதுக்கீடு என சொல்லி கல்விக் கொள்ளையர்களுக்கு கொட்டிக் கொடுக்கிறது. ஆனால். ஏழை எளிய மாணவர்கள் பயிலும் அரசுப்பள்ளிகளுக்குத் தேவையான நிதியில் 1/3 பங்கு மட்டுமே ஒதுக்குகிறது.

ஆனால், மறைமுகமாக தனியாரை ஊக்குவித்து, வளர்த்துவிடும் அரசின் நோக்கமே அரசுப்பள்ளிகளை கைகழுவிவிட வேண்டுமென்பதுதான். பள்ளிகளை மட்டுமல்ல சேவைத்துறைகளான கல்வி, மருத்துவம், குடிநீர் உள்ளிட்ட அனைத்தையும் தனியாரின் இலாபத்தை அதிகரிக்கக் கொடுத்து முதலாளிகளை வாழவைக்க நினைக்கிறது.

இதன் ஒரு பகுதிதான், இடைநிலை ஆசிரியர்களுக்கு குறைவான சம்பளத்தையும், மன அழுத்தத்தையும் கொடுத்து விரட்ட நினைப்பது. நிலைமை இவ்வாறு இருக்கையில், இந்த அரசிடமே மன்றாடி நம் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ள முடியுமா? வேறு என்ன செய்வது என கேட்கிறீர்களா?

என்ன செய்வது?

6 நாட்களாக உணவருந்தாமல் தன்னை வதைத்துக் கொண்டும், 200-க்கும் மேற்பட்ட சக ஆசிரியர்கள் மயங்கி விழுந்தபோதும், அடிப்படை வசதிகள் ஏதுமின்றி, பூரான் கடியிலும், தேள்கடியிலும், கொட்டும் பனியிலும், வெயிலிலும் கைக்குழந்தைகளுடனும் தீரத்துடன் போராடிய ஆசிரியர்கள் இன்று வெறுங்கையுடனும், மனக்கொதிப்புடனும், கோபத்துடனும்தான் வீடு திரும்பியுள்ளனர்.

இதை போராட்டத் தலைமை உணர்வதோடு, இதற்கேற்ப அடுத்தகட்ட போராட்டங்களை முன்னெடுக்க வேண்டும். இல்லாவிடில் ஆசிரியர்களின் நம்பிக்கையைப் பெற முடியாது என கருதுகிறோம்.

தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்தாலும், மெரினா போராட்டமும், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டமும் மட்டும் வெற்றி பெற்றதற்கு காரணம் அது உலக அளவில் பேசப்பட்டதும், அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்றதும்தான். மக்கள் சக்திக்கு மட்டுமே அரசையே அச்சுறுத்தும், அசைத்துப் பார்க்கும் வலிமை உள்ளது என மீண்டும் மீண்டும் வரலாறு நிரூபித்துள்ளது.

சீனாவிலும், ரஷ்யாவிலும் நடந்த மக்கள் புரட்சியாகட்டும், அமெரிக்காவின் வால்வீதி போராட்டம், தற்போது பிரான்சின் வீதிகளில் இறங்கி பெட்ரோல், டீசல் விலைகளை குறைப்பதற்கான போராட்டம் என வெற்றி பெற்ற அனைத்து போராட்டங்களும் மக்கள் ஆதரவும் அவர்களது பங்களிப்பும் இருந்ததால்தான். இது எல்லா நாடுகளுக்கும், எல்லாக் கோரிக்கைகளுக்கும் பொருந்தும்.

தற்போதுகூட, பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மட்டும் போராடுவதும், மக்களுக்கு இப்போராட்டம் பற்றியோ, அதிலுள்ள நியாயமோ தெரியாததும்தான் அரசின் பலம், போராடியவர்களின் பலவீனம். அதனால்தான் இந்த அரசு போராட்டத்தைப் பற்றியே வாய்திறக்காமல் இருந்ததோடு, உளவுப்பிரிவு போலீசை போராட்டத்திற்குள் கலக்கவிட்டு போராடும் ஆசிரியர்களின் மனவலிமையை குலைக்க முயற்சித்து தோற்றது.

எனவே, போராட்டத்தின் நியாயம் என்ன என்பதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அவசியமாகவுள்ளது. சில ஆசிரியர்கள் மட்டும் உண்ணாநிலைப் போராட்டத்தில் இருந்து கொண்டு, மற்ற ஆசிரியர்கள் தங்களது கோரிக்கையின் நியாயத்தை சிறு பிரசுரமாக, சுவரொட்டிகளாக, தட்டிகளாக, பதாகைகளாக அனைத்து இடங்களுக்கும் கொண்டு செல்லலாம். இதன்மூலம் மக்களும், தம் பிள்ளைகளின் நலனுக்காக அரசுப்பள்ளிகளை காப்பாற்ற களம் இறங்குவர்.

இதுவே, இந்த அரசுக்கு அச்சுறுத்தலாக அமையும், தீர்வை நோக்கி முன்னேற முடியும். மேலும், அரசுப் பள்ளிமேல் அக்கறையுள்ள முன்னாள், இன்னாள் பள்ளி மாணவர்களும், சமூக ஆர்வலர்களும் இதற்கு ஒத்துழைப்பு நல்கும்பட்சத்தில் இந்த இயக்கத்தை மிக எளிதாக தமிழகம் முழுவதும் பரப்ப இயலும்.

மாணவர்களின் படிப்பு பாதிக்காமல் விடுமுறை நாட்களில் மட்டும் போராடும் ஆசிரியர்களின் உணர்வை மதிக்கிறோம். ஆனால், அதேசமயம், படிப்பையும், ஒழுக்கத்தையும் போதிக்கும் ஆசிரியர்கள்தான் போராட்ட உணர்வையும் மாணவர்களுக்கு கற்றுத்தர முடியுமென நினைக்கிறோம்.

அதுமட்டுமின்றி, ஆசியர்களின் சம்பள உரிமைக்காகவும், மாணவர்களின் கல்வி பெறும் உரிமைக்கானதுமான இந்தப் போராட்டத்தில் ஆசிரியர்-மாணவர்-பெற்றோர் கூட்டணியே சரியானதும், வெற்றியடையச் செய்யக்கூடியதுமாகும்,

ஆசிரியர் நலனுக்கான-மாணவர் நலனுக்கான- எதிர்கால சமூகத்தினரின் நலனுக்கான- அரசுப் பள்ளிகளின் நலனுக்கான இந்தப் போராட்டத்தில் அதனால் பயன்பெறப்போகும் அனைவரும் கைகோர்ப்பதுதான் நியாயம் என நம்புகிறோம்.

இது எங்களது ஆலோசனை மட்டுமே. இதை செயல்படுத்துவது பற்றி முடிவெடுக்க வேண்டியது போராடும் ஆசிரியர்களும், அவர்களை வழிநடத்தும் போராட்டத் தலைமையும்தான்.

இருப்பினும் கடந்த ஆறு நாட்களாக போலீசின் அச்சுறுத்தலையும், அலைக்கழிப்பையும் மீறி உறுதியுடன் போராடிய ஆசிரியர்களுக்கு வினவு இணையதளம் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், போராடும் ஆசிரியர்கள் இதுபற்றிய தங்களது கருத்துக்களையும், விமர்சனங்களையும் தவறாமல் பின்னூட்டத்தில் பதிவிடுங்கள். முற்போக்கு இயக்கங்கள் அனைவரும் இடைநிலை ஆசிரியர்களின் போராட்டத்திற்கு தொடர்ந்து ஆதரவளிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம்.

வினவு தொடர்பு கொள்ள:பேச  97100 82506, Email – vinavu@gmail.com

பிக் பாஸ் : இனி அரசின் நேரடி கண்காணிப்பில் உங்கள் கணினிகள் !

0

னைத்து கணினிகளும் அரசு நிறுவனங்களால் கண்காணிக்கப்படுவது மோடி அரசால் சட்டப் பூர்வமாக்கப்பட்டுள்ளது. கணினியால் சேகரிக்கப்படும், உருவாக்கப்படும், உள்வாங்கப்படும் அல்லது அனுப்பப்படும் தகவல்கள் அனைத்தையும் இடைமறிப்பதற்கும், கண்காணிப்பதற்கும் நீக்குவதற்கும் மத்திய உளவுத்துறை, அமலாக்க இயக்குனரகம், மத்திய புலனாய்வு பிரிவு உள்ளிட்ட 10 மைய அரசு நிறுவனங்களுக்கு அனுமதியளித்து உள்துறை அமைச்சகம் ஆணை ஒன்றை பிறப்பித்துள்ளது.

people under surveillanceசந்தாதாரர், சேவை வழங்குபவர் அல்லது கணினி வைத்துள்ள நபர் என்று யாராயினும் மேற்சொன்ன நிறுவனங்கள் ஆய்வு செய்வதற்கு தேவையான வசதிகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் செய்ய வேண்டும். மீறினால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் மேலும் தண்டத்தொகையும் செலுத்த வேண்டியிருக்கும் என்று அந்த ஆணை கூறுகிறது.

மைய அரசுக்கு இதற்கான அங்கீகாரத்தை 2000-ம் ஆண்டு தகவல் தொழில்நுட்ப சட்ட பிரிவு 69(1) வழங்கியிருக்கிறது. “இந்திய இறையாண்மை அல்லது ஒருமைப்பாடு,  இந்தியாவின் பாதுகாப்பு,  அரசின் பாதுகாப்பு, வெளிநாட்டு அரசுகளுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கு அல்லது மேற்கூறியவற்றிற்கு எதிரான எந்தவொரு குற்றத்தினையும் தடுத்தல் அல்லது அத்தகைய குற்றங்கள் மீதான விசாரணை நடத்துதல்” என்ற அடிப்படையில் செயல்பட எந்த ஒரு நிறுவனத்திற்கும் மைய அரசு வழிகாட்டலாம் என்று அந்த சட்டப் பிரிவு கூறுகிறது.

இந்த ஆணை இந்திய இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பு நலன்களுக்கு தேவையானது, மேலும் காங்கிரசு தலைமையிலான அரசு 2009-ம் ஆண்டு கொண்டுவந்த கொள்கையின்  விரிவாக்கம்தான் இது என்றும் பல்வேறு அரசு அதிகாரிகளும் பா.ஜ.க நிர்வாகிகளும் முட்டுக் கொடுக்கின்றனர்.

சட்டப்பிரிவு 69 (1)-ன் கீழ் அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அனைத்து அங்கீகார ஆணைகளும் நியாயமானதாகவும் பதிவு செய்யப்பட்டதாகவும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் நடைமுறையின்படி இருக்க வேண்டும். இந்திய தந்தி விதிகள், 1951-ன் விதிமுறை 419A-ன் கீழ் மைய அல்லது மாநில அரசினால் உருவாக்கப்பட்ட ஆய்வுக்குழுவினால் அத்தகைய ஆணைகள் அனைத்தும் தகவல் தொழில்நுட்ப விதிகளின் கீழ் கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும்.

ஆனால் விதி 419A-ன் கீழ் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுக்களின் உறுப்பினர்களாக அரசாங்கத்தின் செயலர்களே உள்ளனர். அதாவது, தன்னுடைய முடிவுகளுக்கு தீர்ப்பெழுத தன்னையே நீதிபதியாக்கி கொண்டுள்ளது இந்த அரசு நிர்வாகம். தன்னை ஒரு ஜனநாயகவாதி என்று கூறிக்கொள்ளும் ஒரு அரசு இதை விட இங்கே வேறு என்ன கேலிக்கூத்தை அரங்கேற்ற முடியும்?

இது வெளிப்படையான நீதி என்ற கருத்தாக்கத்துக்கே எதிரானது: அதாவது எந்த மனிதரும் தன்னுடைய வழக்குக்கு தானே நீதிபதியாக முடியாது.

அந்தரங்கத்திற்கு அச்சுறுத்தல்:

அரசாங்கத்தின் கண்காணிப்பு தனிநபரின் அந்தரங்கத்தை அச்சுறுத்துகிறது மேலும் அது பாதுகாப்பு விதிமுறைகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும். 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தரங்கம் ஒரு அடிப்படை உரிமை என்று ஒன்பது நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு கூறியுள்ளது. மேலும் ஏனைய தனிநபர் உரிமை போலவே சட்டபூர்வமான நடவடிக்கைகள், சட்டப்படியான அரசின் நோக்கம் மற்றும் சமநிலை கட்டுப்பாடு (proportionate) என்ற மூன்று நிபந்தனைகளுக்கு இது கட்டுப்படக்கூடியது.

இதன் விளைவாக 69(1) -ன் படி போடப்பட்ட இந்த ஆணையானது மேற்சொன்ன மூன்று சோதனைகளையும் கடக்க வேண்டும். சட்டமன்ற மற்றும் நீதித்துறை மேற்பார்வை இல்லாமல் தான்தோன்றித்தனமான மைய அரசின் இந்த ஆணை தனி நபர் அடிப்படை உரிமை மீது சமனற்ற கட்டுப்பாட்டை விதிப்பது அரசியலமைப்பிற்கே எதிரானது.

மேலும் தகவல் பாதுகாப்பு சட்டத்தை உருவாக்க மைய அரசு உருவாக்கிய ஸ்ரீகிருஷ்ணா குழு ஜெர்மனி, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளின் சட்டங்களை ஒப்பிட்டு தன்னுடைய அறிக்கையின் 125-ம் பக்கத்தில்  “ஜனநாயக நாடுகளில் செயல்பாட்டுப் பரிசீலனை என்பது சட்டமன்ற மேற்பார்வை அல்லது நீதித்துறை அனுமதி அல்லது இரண்டுமாக சேர்ந்தேதான் இருக்கின்றன.  ஆனால் இங்கு அதுமட்டும் அவ்வாறாக இல்லை” என்று கூறுகிறது.

படிக்க:
மக்களை உளவு பார்க்காத அரசு சாத்தியமா ?
♦ ஆதார் : மாட்டுக்கு சூடு ! மனுசனை உளவு பார் !!

இந்திய அரசாங்கம் தம் மக்களை கண்காணிக்க கொண்டுள்ள பல வழிகளில் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப விதிகளும் ஒன்றாகும். இந்திய தந்தி சட்டம்-1885, தந்தி விதிகள்-1951 மற்றும் இந்திய அஞ்சல் அலுவலக சட்டம் – 1898 ஆகிய சட்டங்களிலும் இதே போன்ற ஏற்பாடுகள் உள்ளன. இந்த சட்டங்கள் காலனியாதிக்க காலத்தில் வெள்ளையர்களால்  உருவாக்கப்பட்ட சட்டங்களின் விரிவாக்கமே ஆகும். மேலும் ஏமாற்றமளிக்கும் வகையில் இந்த தகவல் தொழில்நுட்ப சட்ட கண்காணிப்பு என்பதும் கூட ஒரு காலனியாதிக்க நீட்டிப்பாகவே இருக்கிறது.

பல்தேசிய இன மக்களின் ஒருமைப்பாட்டிலும், தன்னுடைய சொந்த மதிப்பீடுகளின் மூலமாக உருவாக்கப்படும் சுயேச்சையான அரசியலைமைப்பாலும் மட்டுமே தன்னுடைய இறையாண்மையை இந்தியா கட்டியெழுப்ப முடியும். ஆனால் தன்னுடைய சொந்த மக்களை கண்காணிப்பதன் மூலம் ஆங்கிலேய அரசு என்ன செய்ததோ அதையே தான் இந்திய அரசும் இன்று செய்கிறது. இது இந்தியாவின் பிரச்சினை மட்டுமல்ல. ஏகாதிபத்தியங்களால் கைமாற்றி கொடுக்கப்பட்ட போலி சுதந்திரம் அடைந்த அனைத்து நாடுகளுக்குமான பிரச்சினை.

இந்த ஆணையை எதிர்த்து The Hindu பத்திரிகையில் வாசகர்கள் சிலர் தெரிவித்த கருத்துக்கள்:

DR. SESHADRI KANNAN : ஏஜெண்டுகள் என்று கூறிக்கொண்டு தனிப்பட்ட கணினிகளுக்குள் நுழைவது கேலிக்குரியது. ஏற்கனவே உள்ள நிறுவனங்களின் அதிகாரங்களை பயன்படுத்தி ஒன்றுமே சாதிக்காத அரசாங்கம் புதிதாக எதாவது சாதிப்பார்கள் என்று அதே நிறுவனங்களுக்கு கூடுதலான அதிகாரங்களை அறிமுகப்படுத்துகிறது. அரசாங்கத்தின் நடவடிக்கை உண்மையிலேயே நேர்மையற்றது. மேலும், காங்கிரஸ் அறிமுகப்படுத்திய போது எதிர்த்தவர்கள்  இப்போது திடீரென்று அறிமுகப்படுத்துவது நியாயமற்றது. இது மோசமாக தோல்வியடைந்த பணமதிப்பழிப்பு நடவடிக்கை போல மற்றுமொரு நடவடிக்கையே.  இது முற்றிலும் நியாயமற்றது. ஜனநாயகத்தையும் அப்பாவி மக்களையும் காப்பாற்ற ஆட்சியாளர்களை மாற்ற இதுதான் சரியான நேரம். இதை அறிமுகப்படுத்தியதற்கு ஏதேனும் ஒரு நல்ல காரணம் இருக்கிறதா?  தற்போதுள்ள அனைத்து சட்டங்களும் தோல்வியடைந்து விட்டதற்கு ஏதேனும் சான்றுகள் இருந்ததா?

Mel ஆட்சியாளர்கள் பொதுமக்களுக்கு அஞ்சுகிறார்கள். கணினிக்குள்ளும் ஸ்மார்ட்போன்களுக்குள்ளும் நுழைந்து நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை காண விரும்புகிறார்கள். இது ஜனநாயகத்தை ஆட்சியாளர்களுக்கு தோதாக வளைப்பதாகும். ஒரு கட்சி மற்றொன்றை புறம் சொல்லுகிறது ஆனால் இருவரும் ஒன்று போலவே நடக்கிறார்கள். 

Naresh Chand : அனைத்து கணினிகளையும் புலானாய்வு நிறுவனங்களின் கண்காணிப்பின் கீழ் ஒப்படைப்பதில் ‘தி ஹிந்து’ மகிழ்ச்சி கொள்கிறதா? ‘தி இந்து’வுக்கு இது சரியான வழியாக சரியான நடவடிக்கையாக தெரிகிறதா? பொதுவாக எப்போதும் போல மோடிக்கும் அவரது அரசுக்கும் பின்னால் ‘தி ஹிந்து’ இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்ள நான் விரும்புகிறேன். இப்போது எந்த பக்கம் இது நிற்கிறது?

Anupam Rae : நாம் இப்போது போலிசு இராஜ்ஜியத்தை நோக்கியா செல்கிறோம்? பெரியண்ணன் நம்மை எப்போதும் கண்காணிக்கிறார். இந்த மீம்பெரும் தகவல்களை கையாளும் திறமை படைத்தவையா இந்நிறுவனங்கள்? இந்நிறுவனங்கள் வைக்கோலிலிருந்து கோதுமையை தனியாக பிரிக்குமா? ஏராளமான அப்பாவி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நான் நினைக்கிறன். 

Dr. Sayar : இது கண்டிப்பாக மோடியின் ஆத்திரமூட்டும் நடவடிக்கை தான்….. ஒவ்வொரு குடிமக்களின் காதுகளாகவும் கண்களாகவும் மாற முயல்கிறது மேலும் ஒவ்வொரு குடிமக்களையும் அச்சுறுத்தலாகவே பார்க்கிறது. இந்நடவடிக்கை என்பது 2019 தேர்தலுக்கான தகவல்களை திரட்டவே அன்றி தேசிய பாதுகாப்பு என்பதெல்லாம் சும்மா சாக்குபோக்கு. 

Arvind : இது அடிமைத்தனம் அன்றி வேறென்ன?அவர்கள் பிரதமர் மற்றும் முதலமைச்சர்களின் கணினிகளையும் நோட்டம் விடுவார்களா? மேன்மைதாங்கிய உச்சநீதிமன்றத்தின் அந்தரங்கம் தொடர்பான தீர்ப்பு எங்கே?  இது கொடூரமானதன்றி வேறென்ன?புலனாய்வு செய்யும் திறமையில் அல்ல சிக்கல் என்னவெனில், புலானாய்வு நிறுவனங்களை நடத்துபவர்கள் மனிதர்கள். அவர்கள் பக்கச் சார்பு கொண்டவர்கள். பல்வேறு வகுப்புகள், சாதிகள், மதங்கள் மற்றும் வர்க்க பிரதிநிதிதத்துவம் இல்லாததால் பக்கசார்பே இருக்கும். புலனாய்வுக்கு பதிலாக சித்தரவதைகள், ஊழல், மனித துன்புறுத்தல்கள் ஆகியவையே இருக்கும். மேலும் பயம் மற்றும் சுதந்திரமின்மைதான் இருக்கும்.

புலனாய்வு இயந்திரம் சார்பற்றதாக இருந்தால், அமலாக்க நிறுவனம் சார்பற்றதாக இருந்தால்,  நீதித்துறை செயல்முறை சார்பற்றதாக இருந்தால்  பின்னர் தானாகவே குற்றங்கள் தீவிரமாக குறைந்து விடும்.

அரசாங்கத்தின் இந்த ஆணையை நான் ஏற்கவில்லை. ஏனெனில் ஏழை மற்றும் பலவீனமான பிரிவினருக்கு எதிராக இது பயன்படுத்தப்படுமே ஒழிய ஊழல் நிறைந்த அரசியல்வாதிகள் மற்றும் பணக்கார “அழுகிய உருளைக் கிழங்குகளுக்கு” எதிராக அல்ல என்பதை நான் அறிவேன். ஜெய்ஹிந்த்.

செய்தி ஆதாரம் :
♠ All computers can now be monitored by govt. agencies

♣ Centre’s order on computer surveillance is backed by law – but the law lacks adequate safeguards

வரலாறு : மதுரைக் கோவில் நுழைவும் ஆர்.எஸ். நாயுடுவும் !

துரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடந்த ஆலயப் பிரவேசத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கோவிலின் அறங்காவலரான ஆர்.எஸ். நாயுடு. சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servents of the Goddess புத்தகத்தில் ஆலயப் பிரவேசத்தில் இவரது பங்களிப்பு குறித்து விரிவாகப் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அவரைப் பற்றி தனிப்பட்ட விவரங்கள் அதிகமாக இல்லை.

madurai-temple-entry-protest-history-R-S-Naiduஆர்.எஸ். நாயுடுவின் வழித்தோன்றல்கள் இப்போதும் மதுரை நகரில் வசிக்கிறார்கள். ஆர்.எஸ். நாயுடுவின் பேரன்கள் வழக்கறிஞர் ஆர். கோபிநாத் மற்றும் சேக்ஸ்ஃபியர் ஆகிய இரண்டு பேரையும் நான் சந்தித்தேன். இவர்களிடம் தங்கள் தாத்தா குறித்த தெளிவான விவரங்கள் இல்லை. ஆனால், நாயுடுவின் பல புகைப்படங்களை அவர்களிடமிருந்து பெற முடிந்தது.

சென்னையில் பாரி அண்ட் கம்பனியில் ஆடிட்டிங் பிரிவில் பணியாற்றியவர் ரெங்கமன்னார் நாயுடு. அந்த காலத்திலேயே ஆயிரக் கணக்கில் மாத ஊதியம் பெற்றவர். இவருக்கு இரு மகன்கள். ஒருவர் ஆர். சேஷாச்சலம் நாயுடு. மற்றொருவர் ஆர். நெம்பெருமாள் நாயுடு. இவர்களில் சேஷாச்சலம் நாயுடு தன் பெயரை ஆர்.எஸ். நாயுடு என கெஸட்டிலேயே மாற்றிக்கொண்டார், நெம்பெருமாள் நாயுடு ஆர்.என். நாயுடு என மாற்றிக்கொண்டார். நெம்பெருமாள் நாயுடு மருத்துவர். ஆர்.எஸ். நாயுடு இங்கிலாந்தில் பார் அட் லா முடித்தவர்.

இதற்குப் பிறகு மதுரை திரும்பிய ஆர்.எஸ். நாயுடு, நீதிக் கட்சியில் பெரும் ஈடுபாடு காட்டினார். அந்தக் கட்சியின் சார்பில் மதுரை நகர சபைக்குப் போட்டியிட்டு நகர சபைத் தலைவராக 12 ஆண்டுகள் பணியாற்றியிருக்கிறார். அவர் நகரசபைத் தலைவராக இருந்த காலகட்டத்தில்தான் சைமன் கமிஷன் என பரவலாக அழைக்கப்பட் சர் ஜான் சைமன் தலைமையிலான The Indian Statutory Commission மதுரைக்கு விஜயம் செய்தது.

R-S-Naidu-welcome-simanகாங்கிரசும் ஜின்னா தலைமையிலான முஸ்லீம் லீகும் இந்த கமிஷனை புறக்கணித்த நிலையில், இந்த கமிஷன் சென்ற இடமெல்லாம் எதிர்ப்பு நிலவியது. ஆனால், இந்தியாவில் இரண்டே இரண்டு கட்சிகள் இந்த கமிஷனை ஆதரித்தன. ஒன்று முகமது ஷாஃபி தலைமையிலான முஸ்லீம் லீக். இரண்டாவது நீதிக் கட்சி.

ஆகவே, மதுரைக்கு வந்த சைமன் கமிஷனை நீதிக் கட்சியைச் சேர்ந்த ஆர்.எஸ். நாயுடு வரவேற்றார். அந்த கமிஷனில் இடம்பெற்றிருந்த, பின்னாளில் பிரிட்டனின் பிரதமரான லேபர் பார்ட்டியைச் சேர்ந்த கிளமன்ட் அட்லி, ஆர்.எஸ். நாயுடுவின் வீட்டிற்கும்கூட வந்தார். (கிளமன்ட் அட்லியும் ஆர்.எஸ். நாயுடுவும் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள் என்கின்றனர் அவரது குடும்பத்தினர். இதை உறுதி செய்ய முடியவில்லை).

R-S-Naidu-Glament-atlee12 ஆண்டுகள் மதுரை நகர சபையின் தலைவராகப் பணியாற்றிய பிறகு, மதுரை மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக 1937-ல் நியமிக்கப்பட்டார் ஆர்.எஸ். நாயுடு. நீதிக் கட்சி ஆட்சியின் இறுதிக் காலத்தில் மதுரையில் செல்வாக்குடன் விளங்கிய நீதிக் கட்சித் தலைவர் பி.டி. ராஜனால், நாயுடு நியமிக்கப்பட்டார்.

மீனாட்சி அம்மன் கோவிலின் நிர்வாக அதிகாரியாக ஆர்.எஸ். நாயுடு செய்த மாற்றங்கள், சீர்திருத்தங்கள் பாரதூரமானவை. அவர் நிர்வாக அதிகாரியாக இருக்கும்போதுதான் ஆலய நுழைவு நடந்தது என்பது எல்லோரும் அறிந்தது. ஆனால், மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகத்தில் அவர் செய்த மாற்றங்களும் மேம்பாடுகளும் போற்றத்தக்கவை.

ஆலயப் பிரவேசத்தை ஒட்டிய காலத்தில், ஆர்.எஸ். நாயுடு மிக கண்டிப்பாக நடந்து கொண்டார். அதனாலேயே, பட்டர்களின் கலகத்தை மீறியும் ஆலயப் பிரவேசம் நிலைத்து நின்றது. ஆலயப் பிரவேசத்திற்கு அடுத்த நாள் சந்நிதானக் கதவுகளைப் பூட்டிக்கொண்டு சாவியைத் தர மறுத்த முத்து சுப்ப பட்டரையும் மேலும் இரண்டு பேரையும் இடைநீக்கம் செய்தார். அதற்குப் பிறகு, அன்றைக்கு பூசை உரிமை உள்ளவர்கள் கோவிலுக்கு வராமல் போனால், உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

madurai-temple-entry-protest-history-Sandhu-patter
சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.

சில வாரங்களில் சாந்து பட்டரைத் தவிர எல்லா பட்டர்களும் சஸ்பென்ட் செய்யப்பட்டனர். பூசைகளைத் தொடர்ந்து செய்ய திருநெல்வேலியிலிருந்து 12 ஆதி சிவாச்சாரியார்களை வரவழைத்தார் நாயுடு.

1939 ஜூலை 29-ஆம் தேதி கோவிலுக்குள் சென்று சுத்தீகரண சடங்குகளைச் செய்ய வேண்டும் என சில பட்டர்கள் ஆர்ப்பாட்டம் செய்தபோது, கோவில் கதவுகளை மூடியதோடு சஸ்பென்ட் ஆன பட்டர்கள் கோவிலுக்குள் வரக்கூடாது என்று விதித்தார். சுத்தீகரணச் சடங்கையும் அனுமதிக்க மறுத்தார்.

ஆகஸ்ட் மாதம் ஆவணி மூலத் திருவிழாவின்போது வேத பாராயணம் செய்யும் பாடகர்கள் கோவிலை விட்டு வெளியேறியபோது, வேறு கோவில்களில் இருந்து வேத பாராயணம் செய்யவைத்தார். முடிவில் 1945 செப்டம்பர் மாதத்தில், சுத்தீகரணச் சடங்கு ஏதும் செய்யாமல், ஆர்.எஸ். நாயுடுவுடன் சமரசம் செய்துகொண்டுதான் பட்டர்கள் மீண்டும் கோவிலுக்குள் நுழைய முடிந்தது.

இந்த அர்ச்சகர்கள் கோவிலில் இல்லாத காலகட்டத்தில் பல நிர்வாகச் சீர்திருத்தங்களை அவர் முன்னெடுத்தார்.

1. 1939 ஆகஸ்டில் அர்ச்சனை செய்ய விரும்பும் பக்தர்கள் அலுவலகத்தில் சீட்டு வாங்க வேண்டும். பட்டர்களிடம் நேரடியாக காசு கொடுக்கக்கூடாது. சீட்டின் விலை 3 அணா. இதில் 1 அணா பட்டருக்கு. 2 அணா கோவிலுக்கு.

2. நாயுடு வருவதற்கு முன்பாக கோவிலில் 2 உண்டியல்கள் மட்டுமே இருந்தன. இதனால் பக்தர்கள் பலர் பட்டர்களிடம் காசு கொடுத்தனர். வட இந்தியர்கள் காசுகளை சந்நிதியில் தூக்கி எறிந்தனர். இதைப் பார்த்த நாயுடு கோவில் முழுக்க உண்டியல் வைக்க உத்தரவிட்டார். சந்நதியில் பணம் எறியும் பழக்கம் தடுத்து நிறுத்தப்பட்டது.

3. முக்கியப் பிரமுகர்கள் வரும்போது அவர்களை பட்டர்கள் வரவேற்றனர். அதை மாற்றிய நாயுடு, கோவில் நிர்வாக அதிகாரிகளே இனி முக்கியப் பிரமுகர்களை வரவேற்பார்கள் என செயல்படுத்தினார். இப்போதுவரை அந்த முறையே நீடிக்கிறது.

4. மீனாட்சிக்கும் சுந்தரேஸ்வரருக்கும் பட்டாபிஷேகம் நடக்கும் போது அவர்கள் செங்கோல்களை முதன்மை பட்டர்தான் எடுத்துச் சென்றார். ஆனால், 1940-ல் இந்தப் பழக்கத்தை நாயுடு மாற்றினார். சாந்து பட்டர்தான் கடைசியாக இப்படி செங்கோலைக் கொண்டுசென்ற பட்டர். அதற்குப் பிறகு, நிர்வாக அதிகாரியோ, அறங்காவலரோதான் செங்கோலைப் பெறுகின்றனர்.

5. கோவில் பேஷ்காராக அதுவரை பிராமணர்களே நியமிக்கப்பட்டனர். ஆனால், முதல் முறையாக பிராமணரல்லாத ஒருவரை 1945 பிப்ரவரியில் நாயுடு நியமித்தார்.

6. எந்தெந்த நேரத்தில் வழிபாடு நடக்கிறது என்பது பலகைகளில் எழுதி வைக்கப்பட்டது. அந்தந்த நேரத்தில் பூஜை நடக்கிறதா என்பதை பேஷ்கார் கண்காணிக்கும் முறை வந்தது.

7. புதிய பட்டர்கள் தீட்சை பெறும் அதிகாரம் பட்டர்கள் கையிலிருந்து கோவில் நிர்வாகத்தின் கைக்கு வந்தது.

1945-ல் ஆர்.எஸ். நாயுடு கோவில் நிர்வாகத்தில் இருந்து ஓய்வுபெற்றார்.

ஆர்.எஸ். நாயுடுவுக்கு மூன்று மகன்கள். ராஜேந்திரன், எஸ்டி ராய், கிருஷ்ணமோகன். இவர்களில் ராஜேந்திரனும் வெளிநாட்டில் சட்டம் படித்தவர். ஆனால், படிப்பை முடிக்கவில்லை. தந்தையின் சொத்தை குதிரைப் பந்தையத்தில் செலவழித்தார். மதுரையிலிருந்து செயல்பட்ட சித்ராலயா ஸ்டுடியோவில் சில காலம் நிர்வாகியாகவும் பணியாற்றினார்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

இவரது மகன்கள் கோபிநாத், ஷேக்ஸ்பியர் ஆகியோரைத்தான் நான் சந்தித்தேன். ஏப்ரல் 23-ஆம் தேதி பிறந்ததால், ஷேக்ஸ்பியர் என தன் மகனுக்கு பெயர் வைத்திருக்கிறார் ராஜேந்திரன்.

கோவில் நுழைவுப் போராட்டத்தில் ஆர்.எஸ். நாயுடுவுக்கு பக்கபலமாக நின்ற சாந்து பட்டரின் மகன் சுப்பிரமணியன், ஆர்.எஸ். நாயுடு மிக உறுதியான, அச்சத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு நிர்வாகி என நினைவுகூர்கிறார்.

ஆர்.எஸ். நாயுடுவுக்கு இங்கிலாந்தில் இருந்து வந்த கடிதங்கள் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டதாக ஷேக்ஸ்பியர் சொல்கிறார். ஆர்.எஸ். நாயுடு மதுரை நகர சபை தலைவராக இருந்தபோது செய்த பணிகள் என்ன என்பது இன்னொரு ஆய்வுக்குரியது.

நன்றி: Muralidharan Kasi Viswanathan

தள்ளு வண்டி காவியம் | துரை. சண்முகம்

3

ள்ளுவண்டி
தள்ளும் பெண்ணின்
பித்த வெடிப்பு
கால்பட்டு
கிழக்கு சிவக்கிறது.

விசை கொண்டு
தள்ளு வண்டியை
நகர்த்தும் வேகத்தில்
சூரியன் நகர்கிறது.

வண்டியை
ஏற்றத்தில்
உந்தித் தள்ளி,

இறக்கத்தில்
இழுத்துப் பிடித்து,

பள்ளிப் பிள்ளைகள்
சைக்கிள்கள்
பைக்குகளின் சீண்டல்கள்
படாமல்… விலகி
பக்குவமாய்
கட்டுக்குள் நிறுத்தும்
பெண்ணின்
தொண்டைக்குழி தசையில்
வியர்வை உருளும்.

தள்ளுவண்டி
நிறுத்துமிடத்தை
குனிந்து நிமிர்ந்து கூட்ட
சில
பார்வை குப்பைகள்
படுத்தும்.

உடலையே
சமைத்துப்போடுவது போல் களமாட வேண்டும்

பார்சல் பேப்பர்
பார்சல் கவர்
குடம்
தண்ணீர் கேன்.. என
வந்து சேரும்
இருசக்கர வாகனத்தில்
அவள்
கணவனைத் தவிர
அனைத்தும்
வசதியாய் அமர்ந்திருக்கும்.

எரிக்கும் சிகரெட்டெ
எரிபொருள்.
சேர்ந்து இருமும்
சைக்கிளின் மேல் மாமனார்.
அந்த
தள்ளுவண்டி வியாபாரத்தை
தாங்கிப் பிடிக்கும்
துருபிடித்த சக்கரத்தில்
அவர்
விலா எலும்பும் அடக்கம்.

கை கழுவி
உறக்கம் தொலைத்த
விழிகளால் தீ மூட்டி
ஓங்கி… தோசைக்கல்லில்
உயிர் தண்ணீர் தெளிக்க
அங்கே
ஒட்டு மொத்த குடும்பத்தின்
ஆவி
பறக்கும்.

வாழ்வின்
சுமை கொள்ளா
வாகனமாய்
தள்ளு வண்டி
காட்சி தரும்.

பள்ளிக்குப் போனாளோ…
பத்திரமாய் வருவாளோ..
பிள்ளையை நினைக்கையில்
மணக்கும் இட்டிலியோடு
அவள் மனதும் வேகும்.
அடுத்த ஈடு ஊத்துவதில்
தோசையை புரட்டுவதில்
சட்டினி.. சாம்பார் – என
குரல்கள் நெருக்குவதில்
நினைவுகள் தொலையும்
தன் பசி மறக்கும்.

குடும்பமே பணியாற்றும் தள்ளு வண்டிக் கடை

குறிப்பிட்ட நேரத்திற்குள்
மொத்த உடலின் சத்தும்
பிழியப்படும்.
தசைகளின்
அசைவுகளில்
ஆட்டம் கண்டு
தள்ளுவண்டி
உயிர் உறையும்.

உடலையே
சமைத்துப்போடுவது போல்
களமாட வேண்டும்.

பசியின் வேகத்திற்கு
பரிமாற வேண்டும்
மனித எந்திரமாய்
உருமாற வேண்டும்.

நாலு இட்லி.. ரெண்டுவடை
பொங்கல் ஒண்ணு…
பூரி ஒண்ணு
ரெண்டு கல்தோசை
ஒரு வடகறி….
வித விதமாய் வரும்
கட்டளைக்கு
காது முளைக்க வேண்டும்
விடுபடாமல்
வேகமாய் பார்சல் கட்ட
விரல்களின் நகக் கண்
விழிக்க வேண்டும்.

கழன்டு விடும்
மணிக் கட்டு.
கூட்டத்தின் கோபத்திற்கு
வாட்டம் காட்டாமல்
குவிந்து விரியும்
நெற்றிப் பொட்டு.

நிலைகுத்தி
நின்ற இடத்தில்
உடல் வளைந்து
பொருள் எடுக்க
வலி பிடுங்கும்
தொடை நரம்பு.

கைவிடப்பட்ட
முதியவர்கள்
பசித்ததை
சொல்லத் தெரியாமல்
பார்த்து நிற்கும்
மனநோயாளிகள்
இவர்க்கும்
சுரக்கும்
தள்ளுவண்டிக் கடையின்
பாசப் பரிமாற்றம்.
பாக்கி வைக்கும்
பழக்கமில்லா முகங்களுக்கும்
தள்ளுவண்டி
இடம் கொடுக்கும்.

முதுமையில் வளைந்த
தந்தையின் கை நரம்புகள்
சட்னி, சாம்பார்
பொட்டலம் கட்ட தடுமாறும்.

பார்த்து.. பார்த்து.. என
பார்வையில்
முடிச்சு போட்ட படியே
பையன்,

பல விதமாய்
உண்டவர் கணக்கை
ஒன்று விடாமல்
ஒரு விதமாய்
கூட்டிச் சொல்லும் அழகு
வலியின் பிரசவம்.

படிக்க :
♦ மதுரவாயில் போலீசு மாமூல் வெறிக்கு தண்டனை !
முறுக்கு போலீசு – மிரட்டும் போலீசு – விபச்சாரப் போலீசு

குறைய குறைய
வெங்காயம் நறுக்கி
வேக வேகமாய்
வடையைத் தட்டி
இடையிடையே
இட்லியை ஊற்றி
சூடான சிற்றுண்டிக்குள்

உழைப்பின் சூட்டில்
ரத்தம் கொதிக்கும்
உடல் வலி கலந்து
வடகறி மணக்கும்.

எடுத்து வைக்கும்
எண்ணமின்றி
உனக்கும் எனக்கும்
கொடுத்த பிறகு
மிச்சம் மீதிகள்
அவர்
இரைப்பை நினைக்கும்.

ஐயாவுக்கு.. அண்ணனுக்கு
என
மாமூல் கேட்க
கடுப்பில்.. அடுப்பில்
எண்ணைய் குமுறும் !
உழைப்பின் துடிப்பை
உறியும் முகம் பார்த்து
காகம் துப்பும்
தெரு நாய் திட்டும் !

பத்து பாத்திரம்
கழுவி முடிக்கையில்
பெத்த பிள்ளையின்
முகம் அது தெரியும்
பிள்ளை சாப்பிட்டதோ
என்ற கவலையில்
பெத்த வயிறு விரியும்.

தள்ளி தள்ளிப் பார்த்தாலும்
வாழ்வின் ஏக்கம் நகரவில்லை
இன்னும்
எதைத் தள்ளிப் பார்த்தால்
வாழ்க்கை கிடைக்கும்
தெரியவில்லை?

துரை. சண்முகம்  

கஜா புயல் பாதித்த பகுதிகளைத் தாக்கும் நுண்கடன் நிறுவனங்கள் !

ஜா புயலின் பாதிப்புகளில் இருந்து இன்னமும் மக்கள் மீளவில்லை என்பது அனைவரும் அறிந்த செய்திதான். மக்களுக்கு உரிய இழப்பீடுகள் மற்றும் நிவாரண உதவிகள் இன்னமும் கிடைக்கவில்லை என பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டம் தொடர்கிறது.

இன்னும் சகஜநிலைக்கு திரும்பாத பகுதிதான் வேதாரண்யம் தாலுக்காவில் உள்ள வெள்ளப்பள்ளம். இப்பகுதியில் இன்னமும் குடியிருப்புப் பகுதிகளில் புகுந்த கடல்நீர் முழுமையாக வெளியேற்றப்படவில்லை. மேலும் சேதமான மீனவர்களின் படகுகளுக்கு அரசு உரிய இழப்பீடுகளை வழங்கவில்லை.

கடல் நீர் வெளியேற்றப்படாத குடியிறுப்புப் பகுதி

புயலில் வீழ்ந்த மரங்கள், மற்றும் கூரைகள் அகற்றப்படவில்லை. இந்த நிலைமையை சீர் செய்ய எந்த அதிகாரிகளும் முயற்சி செய்யாத நிலையில், அப்பகுதி மக்களும் மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளும் தான் நிலமையை சீர் செய்ய தொடர்ந்து களப்பணியாற்றி வருகின்றனர். இச்சூழலில்தான் நுண்கடன் நிறுவனங்களின் கோரத்தாண்டவம் அதிகரிக்க ஆரம்பித்துள்ளது.

வாழ்வை இழந்து ஏதிலிகளாக நிற்கும் மக்களின் கழுத்தை இறுக்குகிறது நுண்கடன் நிறுவனங்கள். சாதாரண நாட்களில் “மடிவற்றிய நிலையில் பால் கறக்கும் இக்கயவர்கள் தற்போது மடியறுக்கவும் தயங்க மாட்டோம்” என்பது போல் செயல்படுகின்றனர். வாழ்வையும் வாழ்வாதாரத்தையும் இழந்து நிற்பவர்களை இது போன்ற ஒட்டுண்ணி கும்பல் நிர்பந்திப்பதன் மூலம் சாவை நோக்கி தள்ளிக் கொண்டிருக்கின்றனர்.

சீரமைக்கப்படாத படகுகள்

ஆம். கஜாவின் கோரத்தாண்டவத்திற்கு பின்னர் அப்பகுதிகளில் இருந்து வெளியாகும் தற்கொலை செய்திகள் பலவும் அம்மக்களின் அவல நிலையை வெளிச்சம் போட்டு காட்டுகின்றன. இந்த நிலையில் அப்பகுதி மக்கள், மக்கள் அதிகாரம் தோழர்களை அணுகியுள்ளனர்.

அதன் பிறகு மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர் ஆகியோரிடம் மனுக்கள் அளிக்கப்பட்டன. அதன் பின்னரும் நுண்கடன் கும்பல் அடங்கவில்லை. எனவே கடந்த 24-12-2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் ஆயக்காரன்புலம் பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அதன்பின் அங்கு வந்த வட்டாட்சியர் இன்னும் 6 மாதங்களுக்கு பிறகு நீங்கள் உங்கள் கடன்களைச் செலுத்துங்கள் என கூறியுள்ளார். அதனடிப்படையில் மக்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெற்றுள்ளனர்.

இந்த தகவலானது ஆயக்காரன்புலம் பகுதி முழுக்க மக்கள் அதிகாரம் சார்பில் தெருமுனைப் பிரச்சாரமாக கொண்டு செல்லப்பட்டது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
வேதாரண்யம், தொடர்புக்கு : 90944 98693.