Friday, July 18, 2025
முகப்பு பதிவு பக்கம் 556

எழுந்தது மக்களின் அதிகாரம் – உணர்வூட்டும் போராட்டச் செய்திகள் !

5

1. ஆனைவாரி

shutdown-tasmac-anaivari-siege-1005-05-2016 வியாழன் அன்று சுமார் காலை 10.30 மணி அளவில் ஆனைவாரி பகுதி சுற்று வட்டார மக்களை மக்கள் அதிகாரத்தின் சார்பாக அணி திரட்டி கொண்டு டாஸ்மாக் கடையை மூடுவதற்கு தோழர்கள் பொதுமக்களுடன் “ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூடு” என்ற விண் அதிரும் முழக்கத்துடன் தோழர்கள் டாஸ்மாக் கடை மூடுவதற்காக சென்றனர். கடை அருகாமையிலேயே காவல் துறையின் சுமார் 100-க்கு மேற்பட்டோர் தடுத்து நிறுத்தினர். கடை அருகில் போகாமலே 10 நிமிடத்திற்கு மேலாக முழக்கமிட்டனர். அப்போது மக்களிடம் பேசிய தோழர் முருகானந்தம், “காவல் துறையினருக்கு இங்கு வேலையில்லை, காவல் துறையால் டாஸ்மாக்கை மூட முடியாது. கடந்த 02-05-2016 அன்று சிதம்பரம் ஆர்.டி.ஓ-விடம் கடையை மூடுவதற்கு மனுகொடுத்தோம். இன்று வரை மூடவில்லை. ஆர்.டி.ஓ-வை இங்கு வரசொல்லுங்கள்” என்றதற்கு போலீசு, “அவருக்கு தேர்தல் வேலை இருப்பதாக” கூறினர்.

“சரி அவர் தேர்தல் வேலையை பார்க்கட்டும். நாங்களே மூடிக்கொள்கிறோம். டாஸ்மாக் கடையை உடனடியாக மூடாமல் இங்கிருந்து போவதில்லை” என்று கூறிவிட்டு தொடர்ந்து முழக்கமிட்டனர்.

உடனே காவல் துறை, “நீங்கள் சொல்லுவதை எல்லாம் கேட்க முடியாது. உங்களை கைது செய்கிறோம். உடன் வண்டியில் ஏறுங்கள்” என்று கூறி மிக வலுக்கட்டாயமாக தோழர்களையும், ஊர்மக்களையும் தள்ளியும் தூக்கிக்கொண்டும் கைது செய்து வண்டியில் ஏற்றினர்.

இந்த போராட்டத்தில் மக்கள் அதிகாரத்தோழர்கள் உட்பட 35 பேர் கைது செய்யப்பட்டனர். புவனகிரி தி.மு.க மாணவரணி நிர்வாகி பாலசுப்ரமணியன் இணைந்து கைதானார். அருகாமையில் உள்ள எறும்பூரில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்து உள்ளனர். அங்கு கடையை மூடாமல் சாப்பிட முடியாது என காவல் துறையினர் அளித்த உணவை மறுத்து தொடர்ந்து போராடி வருகின்றனர்.

உடன் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் / PUSER நிர்வாகிகளும் கலந்துக் கொண்டனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் காவல் துறையிடம் பெயர் ஏதும் தறாமல் மறுத்தனர். காவல் துறை வழக்கறிஞரை சந்தித்து, “உங்கள் தோழர்கள் பெயர் தர ஒத்துழைப்பு தறாமல் மறுக்கின்றனர். நீங்கள் தயவு செய்து பெயர் தர வேண்டும் சொல்லுங்கள்” போயி கெஞ்சுகிறது. மண்டபத்தில் உள்ள அனைத்து தோழர்களது போன்களை பறிமுதல் செய்து விட்டனர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம்

2. ஒசூர்

சூர் : பாகலூர் அருகிலுள்ள சத்தியமங்கலம் கேட் அருகே 100 கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அவ்வழியே செல்பவர்களை அச்சுறுத்தும் வகையில் ஒருவித பதட்டத்துடன் அந்தப் பகுதி முழுவதும் இருந்தது.

இந்நிலையில் சத்தியமங்கலம் கேட்டுக்கு அருகே இருக்கின்ற இரண்டு டாஸ்மாக் சாராயக் கடைகளையும் முற்றுகையிடப்போவதாக அறிவித்திருந்த மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த தோழர்கள், சத்தியமங்கலம் கிராமத்தில் தெருத்தெருவாக சென்று பெண்கள் குழந்தைகள் முதியவர்கள் என ஊர்வலமாக திரண்டு முழக்கமிட்டபடியே அணிதிரட்டிக்கொண்டிருந்தனர்.

தோழர்கள் அணிதிரட்டிக்கொண்டிருப்பதை அறிந்த போலீசு ஊருக்குள் வந்து தோழர்களையும், ஊர்மக்களையும் பிளவுபடுத்தும் சதிவேலைத்திட்டத்தோடே அணுகியது. குறிப்பாக, “தேர்தல் நேரம் என்பதால் இங்கே யாரும் கூட்டம் கூடக்கூடாது. சட்டம் ஒழுங்கு பாதிக்கும்” என்ற வழக்கமான அறிவிப்பை மிரட்டும் தொனியிலும், நைச்சியமான முறையிலும் கூடியிருந்த தோழர்கள் மக்களிடம் முன்வைத்தது.

அதற்கு தோழர்கள், “டாஸ்மாக்குக்கு எதிராகப் போராடுவது எங்களது உரிமை என்றும், நாங்கள் உழைக்கும் மக்கள்! எங்கள் ஊரில் டாஸ்மாக் வேண்டாம் என்றுதான் நாங்கள் போராட்டம் நடத்துகிறோம். கடையை மூடினால் பிரச்சனை ஏதுமில்லை. எங்களால் எப்போதும் சட்டம் ஒழுங்குப் பிரச்சனை ஏற்படுவதில்லை. கடையை மூடினால் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்கிறோம். இல்லையேல், டாஸ்மாக்கை மூடும் வரை நாங்கள் எங்களின் முற்றுகைப் போராட்டத்தை தொடர்வோம்” என்றனர்.

“கடையை மூடுவதற்கெல்லாம் எங்களுக்கு அதிகாரம் இல்லை, நீங்கள் போராட்டம் நடத்தினால் நாங்கள் கைது செய்து ரிமாண்ட் செய்வோம்” என்று அச்சுறுத்தியது போலிசு. போலீசின் மிரட்டலுக்கு பணியாமல் போராட்டத்தை தொடர்ந்தனர். ஊர்வலமாக முழக்கமிட்டபடியே முற்றுகையிட சென்றனர். சத்தியமங்கலம் கேட் அருகில் ஏற்கனவே குவிக்கப்பட்டிருந்த போலீசு ஊர்வலமாக வந்த மக்களை சுற்றி வளைத்தது. பெண்கள் போலீசை முற்றுகையிட்டு டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூடக் கோரினர். வாதாடினர்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

உடனடியாக, அதிகார போதையேறிய போலீசு திமிராக அவர்களை தரதரவென இழுத்துச் சென்று வேனில் ஏற்றியது. உள்ளுர் மக்கள்,வேடிக்கை பார்த்தவர்கள் என எல்லோரையும் கைது செய்தது. மேலும் கைதாகாமல் ஒதுங்கிய பெண்கள், முதியவர்களை கேவலமான முறையில் விரட்டிச் சென்றது. மக்கள் அதிகாரம் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், ரமேஷ் உள்ளிட்ட அணைவர்களையும் கைது செய்தது. அது மட்டுமில்லாமல், சாலையில் நிற்பவர்களையும் பேருந்து நிலையத்தில் நிற்பவர்களையும் கைது செய்வதாக மிரட்டி விரட்டியது. மேலும், போலீசுக்குத் துணையாக அ.தி.மு.க-வினர் இணைந்து கொண்டு உள்ளூர் மக்கள் யார், வெளியூர் மக்கள் யார் என காட்டிக் கொடுக்கும் வேலையை செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
ஒசூர்

3. அன்பில், திருச்சி

trichy-anbil-shutdown-tasmac-siege-21திருச்சி பகுதியின் புறநகர் பகுதியான லால்குடி வட்டத்தில் உள்ள அன்பில் கிராமத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை மூட மே 5 கெடு விதித்து 2-ம் தேதி மாவட்ட ஆட்சியரின் உதவியாளரிடம் மக்கள் அதிகாரமும், ஊர்ப்பொதுமக்களும் இணைந்து மனுகொடுத்தோம். அதையொட்டி மக்கள் அதிகார தோழர்கள் அப்பகுதியில் உள்ள கிராமங்களில் தங்கி, மக்கள் கலை இலக்கியக் கழக கலைக்குழுவின் பாடல்களுடன் தெருமுனைப் பிரச்சாரமும், பரவலாக சுவரொட்டி விளம்பரமும் செய்தோம். கெடு விதித்து மக்கள் மத்தியில் தங்கி வேலை செய்ததால் பீதியடைந்த அரசு 04-05-2016 இரவு 9.30 மணி முதலே மக்களிடமிருந்து சாராயக் கடையை ‘பாதுகாக்க’ 2 போலீசை நிறுத்தியதுடன், அதிகாலை 6 மணி முதல் தீயணைப்பு வாகனம், 50-க்கும் மேற்பட்ட காவல்துறை வாகனங்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சகிதமாக நிறுத்தியிருந்தனர். 3 கி.மீ முன்பே தடையரண்கள் அமைத்து போக்குவரத்தை மாற்றிவிட்டனர்.

உள்ளூர் பகுதியில் உள்ள முன்னணியாளர்களுக்கு அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு தொந்தரவு செய்வது, உளவு பார்ப்பது போன்ற வேலைகளை செய்து வந்தது. மேலும், மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதை தடுக்க அப்பகுதியில் மக்களை அணிதிரட்டிய நம் தோழர்கள் உட்பட 4 பேரை கைது செய்து பீதியூட்டும் முயற்சியில் ஈடுபட்டதுடன், பல பகுதிகளிலிருந்து, 500-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வாகனங்களில் வந்திறங்கியதை கண்டு, டாஸ்மாக் பாதுகாப்பு டியூட்டியில் ஈடுபட்ட போலீசாரை (போராடும்) மக்கள் கூடும் இடத்திற்கு 200 மீட்டருக்கு முன் வரவழைத்தது.

திருச்சி பகுதி மக்கள் அதிகார ஒருங்கிணைப்பாளர் தோழர் தர்மராஜ் போராட்டத்தை பற்றி விளக்கினார். தமிழக விவசாய சங்கத்தை சேர்ந்த மா.பா. சின்னதுரை, ஆதிதமிழர் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள், பெண்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 [படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

அதன் பின் ம.க.இ.க மைய கலைக் குழுவின் பாடல்கள் பாடப்பட்டது. இதற்கிடையே, காவல்துறை ஆய்வாளர் பாலாஜி, தாசில்தார் ஜெயக்குமார் ‘பேச்சுவார்த்தை’க்கு வந்தனர். அவரிடம் மக்களின் கோரிக்கைகளை தோழர் தர்மராஜ் விளக்கினார். “தற்போதைக்கு மூடுவது சாத்தியமில்லை” எனக் கூறியவர், “கலெக்டரை சந்திக்க 10 பேர் வாருங்கள்” என அழைத்தார். “மக்கள் முன்பு விவாதிக்கலாம்” எனக் கூறியதற்கு, “எப்படிங்க மக்கள் முன்னாடி பேச முடியும்” என்றார். மேலும், “என்னைப்பற்றி இப்பகுதி மக்களிடம் நல்லபெயர் உள்ளது” எனக் கூறியதும், அதற்கு காவல் ஆய்வாளர் சர்டிபிகேட் கொடுத்தார்!

“கோரிக்கையை மக்கள் முன்பு தான் விவாதிக்க வேண்டும்” என அவரை அழைத்து மக்கள் முன் நிறுத்தி தாசில்தார் கூறியதை மக்களிடம் சொன்னது தான் தாமதம், மக்கள் தங்கள் வேதனையை (குடித்துவிட்டு கணவன் அடிப்பது, வீட்டிலுள்ள பானைகளை உடைப்பது, தாய் முன்பே நிர்வாணமாக நிற்பது, உணவில் சிறுநீர் கழிப்பது) கொட்டித் தீர்த்தனர். ஒரு குறிப்பிட்ட கட்டத்திற்கு மேல், “கடையை மூடவில்லையென்றால் பால் டாயிலை குடித்து இங்கேயே சாகப்போகிறோம், தீக்குளித்து சாகப்போகிறோம்” என தங்கள் கையறு நிலையை ஆத்திரமாக வெளிப்படுத்தினர். இதற்கு பதில் சொல்ல முடியாத தாசில்தார் பின்வாங்கினார்.

ஒரு மணி நேரத்திற்கு பின் ஏ.டி.எஸ்.பி நடராஜனுடன் வந்தவர், “கலெக்டரிடம் பேசியதில் ‘விதிமுறைப்படி’ அமைந்துள்ள கடையை உடனடியாக எடுப்பது சாத்தியமில்லை” என விளக்கம் கொடுத்தார்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள், குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CRPC) பிரிவு 133-ன் படி அமைதிக்குலைவு ஏற்படுத்தக் கூடிய தடைகளை நீக்க தாசில்தாருக்கு அதிகாரம் இருப்பதை சுட்டிக்காட்டியும் ஏற்க மறுத்து, கடையை மூடுவது பற்றி மூன்று நாள் கழித்து பதில் சொல்வதாகவும், இதை ஏற்கவில்லையென்றால் ‘சட்டவிரோதமாக’ கூடியுள்ளீர்கள் எனக் கலைக்க கலெக்டர் உத்தரவிட்டுள்ளதாகவும் கூறினார். 3 நாளில் நடவடிக்கை எடுப்பது பற்றி எழுத்துப்பூர்வமாக கேட்டதற்கு சரி எனக்கூறி நழுவி காரில் ஏறி தப்பினார்.

அதன் பின் மக்களை அச்சுறுத்தும் வகையில் போலீசார் நெருங்கினர். இதை முன் கூட்டியே கணித்த நம் தோழர்கள், ஏற்கனவே மனிதச் சங்கிலித் தொடர் அமைத்து மக்களுக்கு அரணாக நின்றனர். மக்களிடம் நடந்ததை விளக்கியதில், “டாஸ்மாக்கை மூடவில்லையென்றால் நாங்கள் அனைவரும் கைதாகத் தயார்” என போர்க்குணமாக ஒரே குரலில் முழக்கமிட்டனர். அவர்கள் விருப்பத்திற்கிணங்க கைதாக முடிவெடுக்கப்பட்டு அனைவரும் கைதாகினர்.

சட்டம் ஒழுங்கு சீர்குலைவை கையாள கடையை மூடுவது, கைது செய்வது என்ற இருவேறு வழிமுறைகளில் கைது செய்வதை தேர்ந்தெடுத்ததின் மூலம் இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக உள்ளதை நிரூபித்துள்ளது அதிகார வர்க்கம்! இனி அதிகாரத்தை கையிலெடுப்பதைத் தவிர மக்களுக்கு வேறு வழியில்லை என்பதை உணர்த்தியுள்ளது இப்போராட்டம்!

மண்டபத்தில் அடைக்கப்பட்ட பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன் இருந்தனர். மக்களை உற்சாகப்படுத்த போராட்ட அனுபவகள் மற்றும் ம.க.இ.க மையக் கலைக்குழு தோழர்களின் புரட்சிகர பாடல்கள் இடம் பெற்றன. டாஸ்மாக் கடையை மூடும் வரை போராடலாம் என கோரியதன் அடிப்படையில் உள்ளேயே கையெழுத்து போடாமல் எதிர்ப்பை பதிவு செய்தோம். காவல்துறை உயர்அதிகாரிகள் பலர் வந்து பேசியும் மக்கள் உறுதியாடு இருந்ததால் இறுதியில் சப்கலெக்டர் வந்து மக்களிடம் பேசியும் பயனில்லை மக்கள் அதிகாரத் தோழர்களும்,பொது மக்களும் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாத அதிகாரி, “என்னால் எதுவும் செய்ய முடியாது எனக்கு அதிகாரம் இல்லை” என தெரிவித்தனர். உடனே ஊர் மக்களில் இருந்த சாந்தி என்ற பெண்மணி சப்கலெடரிடம் “அப்போ அதிகாரம் இருப்பவர்களை வரச்சொல்லுங்க நீங்க கிளம்புங்க” என கூற அதிகாரிகள் அதிர்சியில் உறைந்தனர்.

பிறகு, “எவரும் கையெழுத்து கூட போட வேண்டாம் உங்களை கூட்டிட்டு வந்த வேனிலேயே கொண்டு போய் விட்டு விடுகிறோம். நாளை ஒரு வாரத்திற்குள் டாஸ்மாக்கை மூடுவதற்கான நகலை தருகிறேன். நீங்கள் தற்போது கிளம்புங்கள்” என காவல்துறை அதிகாரி கெஞ்சி நிற்க, “அதிகாரிகள் உரிய தேதிக்குள் சொன்னதை செய்ய மறுத்தால் நாம் இன்னும் மக்களை அதிகப்படியாக திரட்டி நாமே டாஸ்மாக்கை மூடுவோம்” என மக்களுடன் கூடி பேசி முடிவெடுத்து அறிவித்தோம்.

இரவு மண்டபத்தை விட்டு அனைவரும் போராட்ட குணம் குறையாமல் சென்றது காவல் துறையினரை வியப்பில் ஆழ்த்தியது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம்,
திருச்சி கிளை.

4. விழுப்புரம்


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

5. கோவை

கோவைப் பகுதியில் கோவை, உடுமலை, கோத்தகிரி என மூன்று இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டம் நடைபெற்றது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

 

6. மதுரை

மதுரை, யா.ஒத்தக்கடையில் “டாஸ்மாக்கை மூடு” என மக்கள் அதிகாரம் முற்றுகை

மே 5 அன்று காலை 11 மணிக்கு, யா.ஒத்தக்கடை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை “நாமே மூடுவோம், அரசு மூடாது” எனக் கூறி1௦௦ க்கும் அதிகமான மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் பேருந்து நிலையத்தில் இருந்து பேரணியாக சென்று டாஸ்மாக் கடையை முற்றுகை இட்டனர்.

அதிகாலை முதலே, ஒத்தக்கடையில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கும் இரும்புத் தடுப்பரண்கள் அமைத்து பெரும் போலீசுபடையே காவல் காத்து வந்தது.

திடிரென பேரணியாக வந்தவர்களை பாய்ந்து வந்து மறித்தது போலீசு. மக்களோ, போலீசை தள்ளி விட்டு விட்டு டாஸ்மாக் கடையை நோக்கி விண்ணதிரும் முழக்கங்களுடன் முன்னேறினர். இரும்புத் தடுப்புகளின் பின்னே பாதுகாப்பாக நின்று கொண்டு சாராயக்கடையை மக்கள் நெருங்க விடாமல் தடுக்கப் பார்த்தது போலீசு.

அந்தத் தடுப்பரண்களையும் தள்ளிக்கொண்டு முன்னேற முயன்றனர் மக்கள். சுற்றி வளைத்த போலீசு, பின்னணியில் நின்றவர்களை அடித்தும், இழுத்துச் சென்றும் அப்புறப் படுத்தியது. எஞ்சியவர்கள் விடாது போலீசுடன் மல்லுக் கட்டினர். மக்களையும்தோழர்களையும் அடித்தும் இழுத்துச சென்றும் காவல் வாகனத்தில் ஏற்றியது போலீசு. ஒவ்வொரு நபரையும் கைது செய்ய மூன்று நான்கு போலீசார்போராடினர்.

பெண் தோழர்களையும் கூட அடித்து வேனில் தூக்கி எறிந்தனர் ஆண் போலீசார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின் அனைவரையும் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர்.

மண்டபத்தில் அடைக்கப்பபட்ட உடன் அனைவரும் பாடல்கள் பாடுவது, உரைகள் நிகழ்த்துவது என முறையாக நிகழ்ச்சிகளை நடத்தத் துவங்கினர்.

பெயர், முகவரி கொடுக்க போலீசு அழைத்தபோது செல்லாமல், தலைமையிடம் கேளுங்கள் என போலீசிடம் கூறினர். தலைமையின் வழிகாட்டல் படி பெயர் முகவரி குடுக்க முடியாதென்றும், டாஸ்மாக் அதிகாரி வரவேண்டும் என்றும் கூறினர். அதுவரை போலீசு வழங்கிய உணவையும் ஏற்க முடியாது என கூறிவிட்டனர்.

பெயர் கொடுக்காவிட்டால் ரிமாண்டு செய்து விடுவோம் என மிரட்டிய போலீசை யாரும் கண்டு கொள்ளவே இல்லை.

மாலை 7.3௦ வரை அதிகாரிகள் யாரும் வரவில்லை. தோழர்களும் போராட்டக் கனலை அனையவிடவே இல்லை. இறுதியில், ஒத்தக்கடை வி.எ.ஓ மற்றும் ஆர்.ஐ. வந்தனர். குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கேட்ட போது, தற்போது தேர்தல் நேரம், பிறகு பார்க்கலாம் என கூறினர். தோழர்கள் ஏற்கமறுத்து உடனே மூட வேண்டும் என கூறினர். முற்றிலும் சட்ட விரோதமாக நெடுஞ்சாலையில் அமைந்துள்ள கடையை மூட என்ன தயக்கம் என கேட்டனர். உடன், எங்களுக்கு அதிகாரம் இல்லை என்றனர். எனில், அதிகாரம் உள்ளவரை வரச் சொல்லுங்கள் என கூறிவிட்டு, நிகழ்ச்சிகளில் மூழ்கினர் தோழர்கள்.

பெயர்,முகவரியும் வாங்க முடியவில்லை, பேச்சு வார்த்தையும் வெற்றியடையவில்லை, “என்னடா இது மதுரைக்கு வந்த சோதனை” என விழி பிதுங்கிய போலிசு, மொத்தமாக மண்டபத்தை விட்டு வெளியேறியது. தனக்கும் தான் கைது செய்தவர்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது போல ஒதுங்கிக் கொண்டது.

மீண்டும் முழக்கங்கள் அதிர் வேட்டுகளாக வெடித்துச் சிதறின. ஓடி வந்த வி.எ.ஒ. “டெபுடி கலக்டர் வருகிறார் பொறுமையாக இருங்கள்” என கெஞ்சினார். தூழர்களோ, அவருக்காக நாளெல்லாம் காத்திருக்க முடியாது. வேண்டுமானால் இன்னும் ஒரூ பத்து நிமிடம் இருக்கிறோம். அதற்குள் அவர் வந்தால் பேசலாம். இல்லாவிட்டால், இன்றைய போராட்டத்தை விட மிகச் சிறப்பான போராட்டம் விரைவில் நடத்துவோம். அப்போது பார்க்கலாம். என கூறிவிட்டனர்.

கூறிய நேரம் கடந்ததும், தோழர்கள் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி அவரவர்கள் குழுக்குழுவாக விவாதித்தபடி வெளியேறினார்கள்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

7. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி பத்திரிகை செய்தி

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது போலீசின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை வண்மையாகக் கண்டிக்கிறோம்.

தமிழகத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பினர் கடந்த ஓராண்டிற்கும் மேலாக மக்களைக் கொல்லும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி போராடி வருவது அனைவரும் அறிந்ததே.

சட்டமன்றத்திலேயே டாஸ்மாக் கடைகளை மூட முடியாது என்று அறிவித்த பாசிச ஜெயா, தேர்தலில் மக்களை ஏமாற்ற – மீண்டும் ஆட்சியைப் பிடிக்க, படிப்படியாக கடைகளை மூடுவதாக பசப்பினார்.

இன்று தமிழகம் முழுவதும் 25 இடங்களுக்கும் மேல் போராட்டம் நடத்திய மக்கள் அதிகாரம் அமைப்பினர் மீது கண்மூடித்தனமாக போலீசு அடித்து இழுத்துச் சென்று கைது செய்தனர். பெண்களையும், குழந்தைகளையும் கூட ஆண் போலீசார் வெறித்தனமாக அடித்தனர்.

தமிழக மக்கள் தொலைக்காட்சிகளில் இந்த கொடுமைகளைப் பார்த்து வெதும்புகின்றனர்.

டாஸ்மாக் கடைகளை மூடும் வரை இந்த போராட்டத்தை அனைத்து மக்களும் ஆதரிக்க வேண்டுமென கோருகிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னனி, போராடும் தோழர்களை வாழ்த்துகிறது. எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாமல் போராட்டம் தொடரும் என மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினர் தோழர் காளியப்பன் அறிவித்துள்ளார். அனைவரும் ஆதரவு தருங்கள்.

அ.முகுந்தன்,
தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
தமிழ்நாடு

8. மக்கள் கலை இலக்கியக் கழகம் பத்திரிகை செய்தி

டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டுப் போடும் ‘மக்கள் அதிகாரம்’ போராட்டம்
தமிழகம் முழுவதும் 1000 பேர் கைது!
சென்னையில் நூற்றுக் கணக்கில் கைது

இன்று 05-05-2016 அன்று காலை சென்னையை அடுத்து பொன்னேரி நாப்பாளையம் மற்றும் மதுரவாயல் நொளம்பூரில் போராட்டம் நடத்தப்பட்டு மூன்று கடைகளுக்கு பூட்டு போடப்பட்டது. பெண்கள் மற்றும் சிறுவர் நூற்றுக்கணக்கானவர் மீது “ஜெ”வின் போலீஸ் தடிஅடி நடத்தியது. பெண்களின் சேலைகள் கிழிக்கப்பட்டன. மண்டை உடைத்து ரத்த காயத்தோடு தரதரவென்று இழுத்துச் சென்று வேனில் தூக்கி எறியப்பட்டனர்.

2. கொந்தளிப்பில் உள்ள உள்ளூர் மக்கள் நாளை மீண்டும் கடை திறக்கப்பட்டு நடக்குமானால் நிரந்தரமாக மூடப்படும் வரை ஒவ்வொரு நாளும் தொடர்ந்து போராடுவோம். கைது செய்யப்படுவதற்கு அஞ்சவும் மாட்டோம் என்று அறிவித்துள்ளனர்.

3. போராடியவரைத் தாக்குகின்ற ‘ஜெ’ அரசு, ‘படிப்படியாக மூடுவேன்’ என்று பேசுவது தேர்தல் பசப்பும் வெற்றுப் பேச்சுமே ஆகும்; ஜெயா அரசை தூக்கி எறியாமல் உழைக்கும் மக்களுக்கு வாழ்வு இல்லை; சாராய போதையில் இருந்து தமிழக மக்களுக்கு விடுதலையும் இல்லை. இச்செய்தியை தமிழகம் முழுவதும் எழுச்சியாக தீ பரவுவது போத அறிவித்துள்ள மக்கள் அதிகாரம் மற்றும் போராடிவரும் மக்களுக்கு எங்கள் ம.க.இ.க சார்பில் புரட்சிகர வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

வே.வெங்கடேசன்,
செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
சென்னை மாவட்டம்

மூடு டாஸ்மாக்கை – மதுரவாயல், பென்னாகரம், கோவில்பட்டி – படங்கள்

0

மதுரவாயல் போராட்டத்தில் போலீசு கொலைவெறித்தாக்குதல்.

மே 5 ஆம் தேதிக்குள் தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள் அனைத்தையும் மூட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் அமைப்பு கெடு விதித்திருந்தது. குறிப்பிட்ட தேதிக்குள் மூடாவிட்டால் மக்களை அணிதிரட்டி நாங்களே மூடுவோம் என்றும் கூறியிருந்தது.

அதன்படி இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை மூடும் போராட்டம் காலை துவங்கியது. சென்னையில் மதுரவாயல், பொன்னேரி, மீஞ்சூர்..  மூன்று இடங்களில் போராட்டம் நடந்தது. மதுரவாயல், பொன்னேரி, மீஞ்சூர்.. மதுரவாயலில் போலீசு கும்பல் மக்களை மிகவும் கொடூரமான முறையில் தாக்கியுள்ளது.

மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பகுதி மக்களுடன் இணைந்து காலை 11.30 மணிக்கு மக்கள் அதிகாரம் தோழர்கள் போராட்டத்தை துவங்கினர். இன்று போராட்டம் என்று அறிவித்திருந்தும் திமிருடன் கடைக்கு முழுப் பாதுகாப்பு போட்டு திறந்து வைத்திருந்தது ஜெயா அரசு. தோழர்களும் மக்களும் கடையை மூடக்கோரி முழக்கமிட்டவாறே பூந்தமல்லி சாலையை கடந்து கடையை நோக்கி முன்னேறத்துவங்கியதும், இதற்காகவே காத்திருந்த வெறிகொண்ட மிருகம் போல அனைவரையும் காட்டுமிராண்டித்தனத்துடன் தாக்கத் துவங்கியது போலீசு.

பெண்கள், குழந்தைகள், சிறுவர்கள் என்று அனைவரையும் கொடூரமாக தாக்கினர். லத்திக்கம்புகளைக் கொண்டு நாலா பக்கங்களிலிருந்தும் நிராயுதபாணிகளான தோழர்களையும் மக்களையும் சுழற்றி சுழற்றி அடித்தனர். இந்த தாக்குதலில் அனைவருக்கும் மிகக்கடுமையான காயங்கள் ஏற்பட்டது. சத்யா என்கிற பெண்ணின் மண்டையை உடைத்துவிட்டனர். தற்போது அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார். ஆகாஷ் என்கிற 16 வயது பள்ளி சிறுவனை வயிற்றிலும், நெஞ்சிலும் கடுமையாக தாக்கியதில் முச்சுத்திணறல் ஏற்பட்டு அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்.

வண்டியில் ஏற்றிய பிறகும் உள்ளுக்குள் வைத்து தாக்கியுள்ளனர். அனைவரும் தற்போது கைது செய்யப்பட்டு மண்டபத்தில் வைக்கப்பட்டிருக்கின்றனர். கைதானவர்களை பார்க்கச் சென்ற தோழர்களையும் உறவினர்களையும் கூட போலீசு தாக்கியுள்ளனர்.

பிற்சேர்க்கை: மாலை 5.00 மணி

இன்று காலை மதுவரவாயல் டாஸ்மாக் மூடும் போராட்டத்தில் ஈடுப்பட்டு சிறைபிடிக்கப்பட்ட மக்கள் அதிகாரம் மற்றும் மக்கள் உண்ணாநிலை போராட்டம்!

மதுரவாயல் ரேசன் கடை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடும் போராட்டத்தில் ஈடுப்பட்ட அப்பகுதி மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல் 24 பேர் படுகாயம். பெண்களுக்கு மண்டை உடைப்பு. தற்போது மதுரவாயல் பாக்கிய லட்சுமி மண்டபத்தில் சிறைவைப்பு. படுகாயம் அடைந்தவர்களுக்கு உடனடி மருத்துவ சிகிச்சை அளிக்காததை எதிர்த்து மதிய உணவு சாப்பிட மறுத்து  உண்ணாநிலை போராட்டம்.

image6

 

image5

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு
———————————————————————————–
மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கை
மீஞ்சூர் அருகில் உள்ள நாப்பாளையம் மற்றும் மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடு என்று போராடிய மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

பெறுநர்: ஆசிரியர்/நிர்வாகி அவர்கள் பத்திரிக்கை/தொலைக்காட்சி

அன்புடையீர்,

வணக்கம். கடந்த ஒரு வருட காலமாக டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு தொடந்து போராட்டங்களை நடத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மே 5ம் தேதிக்குள் கடையை மூட வேண்டும் என்று எச்சரித்து மனு கொடுக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் மதுரவாயல் நொளம்பூர் பகுதியிலும், மீஞ்சூர் அடுத்த நாப்பாளையம் பகுதியில் உள்ள இரு டாஸ்மாக் கடைகளையும் அகற்ற வேண்டும் என்று மக்கள் மனு கொடுத்து இருந்தனர். அதன் பின்னும் கடை அகற்றப்படாததால், அப்பகுதி மக்கள் இணைந்து கடைகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல் துறை கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளது. பெண்கள் என்றும் பாராமல், அவர்களின் ஆடைகளைக் கிழுத்தும், அவர்களைக் கீழே தள்ளி பூட்ஸ் காலால் உதைத்தும், வக்கிரமாக நடந்து கொண்டுள்ளனர். மதுரவாயலில் நடந்த போராட்டத்தில் சிறுவன் ஆகாஷ் மீது நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்து மோசமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் சத்யா என்ற 50 வயது மதிக்கத்தக்க பெண்மணியை மண்டையை உடைத்து இரத்த காயம் ஏற்படுத்தினர். மீஞ்சூரில் நடந்த போராட்டத்தில் ஒரு பெண்ணை ஆண் போலீசு வக்கிரமாக தாக்கியுள்ளார். மேலும் பலர் படுகாயமடைந்துள்ளனர். ஜெயா போலீசின் இந்த நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டிய காவல்துறை இன்று டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி போராடுகின்ற மக்கள் மீது காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல் நடத்துகிறது. முழுக்க முழுக்க மக்களுக்கு எதிரானதாக மாறிப்போய் உள்ளது. காவல்துறை மட்டும் அல்ல இந்த ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்புமே திவாலாகி, தோற்றுப்போய், நிலைகுலைந்து, எதிர்நிலை சக்தியாக மாறிவிட்டது. இவற்றை அகற்றிவிட்டு மக்கள் தங்களுடைய கையில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. ஜெயா போலீசின் இந்த காட்டுமிராண்டித் தாக்குதலால், ஒரு நாளும் மக்கள் அதிகாரம் அமைப்பும், மக்களும் பின்வாங்கப்போவதில்லை. டாஸ்மாக் கடைகளை முழுமையாக அகற்றும் வரை இந்த போராட்டங்கள் தொடரும்.

இவண்
வெற்றிவேல் செழியன்
மண்டல ஒருங்கிணைப்பாளர்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள்

__________________

பென்னாகரம்

பென்னாகரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் டாஸ்மாக்கை மூட கோரி போராடிய
நான்கு பெண்கள், இரண்டு கைக்குழந்தைகள் உட்பட போராடிய மக்கள், தோழர்கள் கைது !
பாசிச ஜெயா போலீசின் கொடுரமான காட்டு மிரண்டித் தாக்குதல் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே

டாஸ்மாக்கை மூட போராடினால் தேசத்துரோகம் என்கிறது அரசு. போராடுபவர்கள் மீது காட்டுமிரண்டி தாக்குதலை தொடுத்து வருகிறது போலீசு. பென்னாகரம் பேருந்து நிலையத்திற்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து  தினமும் ஆயிரக்கனக்கான மக்கள் வந்து செல்கின்றனர். ஆனால் மக்கள் இப்படி நெருக்கமாக கூடும் பேருந்து நிலையத்திலேயே டாஸ்மாக்கை திறந்து வைத்திருக்கிறது அரசு. இதனை மூட கோரி மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பாக பென்னாகரம் நகரம் மற்றும் அதனை சுற்றி இருக்கின்ற கிராமங்களில் உள்ள மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து  கடந்த 2/5/2016 தேதி தாசில்தார்/ தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் மனு கொடுக்கப்பட்டது. நாங்கள் மூடுவதாக  கூறி வாக்குறுதி கொடுத்தனர் அதிகாரிகள். 5 – ம் தேதிக்குள் மூடவில்லை எனில் மக்களை திரட்டி நாங்கள் மூடுவோம் என பகுதி வாழ் மக்கள் எச்சரித்து இருந்தனர்.

அப்போது பேசிய தேர்தல் அதிகாரி கண்டிப்பாக நடவடிக்கை இருக்கும் என்று வாக்குறுதி கொடுத்தார். ஆனால் 5/5/2016 அன்று வரை அந்த கோரிக்கை நிறைவேறவில்லை என்பதாலேயே மக்கள் அதிகாரம் சார்பாக டாஸ்மாக்கை மூட சென்றனர். ஆயிரக்கணக்கான பெண்களின் தாலியை அறுக்கும் டாஸ்மாக்கை மூடுவற்கு பதிலாக நூற்றுக்கணக்கான வந்திருந்த  துணை ரானுவ படையினரை கொண்டு பேருந்து நிலையத்தில் குவித்திருந்தனர் அதிகாரிகள். ஆயிரக்கனக்கான மக்கள் கூடி இருக்கும்  பேருந்து நிலையத்தில் டாஸ்மாக்கை மூடு என போராடிய பெண்கள், கைகுழந்தைகள் என்று பாரபட்சம் பாராமல் எடுத்த எடுப்பில் தாக்குதல் தொடுத்தனர்.

போராட்டத்திற்கு கூடியிருந்த பொது மக்களை மிரட்டுகிற வேலையையும்  மக்களை கலைக்கும் வேலையையும் உள்ளூர் போலீசு   செய்தனர். போலீசு பட்டளத்தை கண்டு மிரளாத தோழர்கள் முழக்கமிட்டவாறே இருந்தனர். கைது  செய்ய முயற்ச்சித்த போது எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டதால் தரதரவென இழுத்து சென்றனர். தோழர் முத்துக்குமார், மக்கள் அதிகாரம் அமைப்பின் மண்டல ஒருங்கிணைப்பாளர் டாஸ்மாக் அதிகாரிகளை வரச்சொல்லுங்கள் என்று பேசி கொண்டு இருக்கும் போதே நூற்றுக்கணக்கான போலீசு  நான்கு பக்கமும் இழுத்து காட்டுமிரண்டித்தனமாக தாக்கினர். துணிந்து எதிர்கொண்ட தோழர்கள் பெண்கள் 35 பேர் கைதாகினர். இதில் 7 தோழர்களுக்கு ரத்த காயம் ஏற்ப்பட்டது நான்கு தோழர்களை பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தேர்தலில் ஓட்டுக்காக ஊருக்குஊரு எல்லா கட்சிகளும் பணத்தை வினியோகம் செய்து வருகின்றனர். இதற்கு பாதுகாப்பாக இருப்பது தேர்தல் அதிகாரிகள் தான், மாலை கொடுக்கிற பணத்தை மீண்டும் காலையே டாஸ்மாக்கில் வசூல் செய்து கொள்கின்றனர். இந்த மானகெட்ட வேலைக்கு பெயர் தேர்தல் அதிகாரியாம் ? தோற்றுபோன இந்த அரசமைப்பை காறி உமிழ்வோம்.  டாஸ்மாக்கை மூடும் வரை போராட்டத்தை போராடுவோம்.

மக்கள் அதிகாரம்
தருமபுரி.
8148573417

______________________

 

20160505_111526_13665

20160505_112142_3137

 

 

மக்கள் அதிகாரத்தின் துண்டுப் பிரசுரங்களை பிடுங்கி கழிப்பறையில் வீசியிருக்கும் தருமபுரி போலீசு!

police-use-toilet-paper

 

கோவில்பட்டி போராட்டம் – படங்கள்:

கோவில்பட்டி

டாஸ்மாக்கை மூடு – தமிழகம் போர்க்களமானது – வீடியோ

9

மதுரவாயல்

புமாஇமு மாநில ஒருங்கிணைப்பாளர் வெளியிடும் கண்டன அறிக்கை

மதுரவாயலில் டாஸ்மாக் கடையை மூடு என்று போராடிய மக்கள் மீதும் மக்கள் அதிகாரம் தோழர்கள் மீதும் போலீசார் கொலைவெறி தாக்குதல் நடத்தியதை பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது.

பெறுநர்: ஆசிரியர்/நிர்வாகி அவர்கள் பத்திரிக்கை/தொலைக்காட்சி

அன்புடையீர்,

வணக்கம். சென்னை மதுரவாயல் ரேசன் கடை அருகில், உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என்று மதுரவாயல் நொளம்பூர் மாதாகோயில் நகர், ஓம் சக்தி நகர் ஆகிய பகுதிகளை சார்ந்த சுமார் 2000க்கும் மேற்பட்ட மக்கள் கையெழுத்திட்டு கடந்த 2-ம் தேதி மனு கொடுத்து எச்சரித்திருந்தனர். அதன் பின்னரும் நடவடிக்கை எடுக்கப்படாததால், மேற்படி பகுதிகளை சார்ந்த மக்களை அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்பு குழுவும், மக்கள் அதிகாரமும் ஒருங்கிணைத்து, இன்று காலை 11.30 மணி அளவில், ரேசன் கடை அருகில் உள்ள டாஸ்மாக் கடையை மூடுவதற்காக சென்றனர். சுமார் 500 பெண்கள், 100 சிறுவர்கள் என 1000 பேர் திரண்டு முழக்கம் எழுப்பியதும் அவர்கள் மீது போலீசார் கொலை வெறி தாக்குதலை நடத்தினர். பெண்கள் என்றும் பாராமல், ஆண் போலீசார் அவர்களைக் கீழே தள்ளி வக்கிரமாக பூட்ஸ் காலால் மிதித்தனர். பெண்களின் ஆடையை கிழித்து வக்கிரமாக நடந்து கொண்டனர். சிறுவர்கள் மீது நடத்திய தாக்குதலில் ஆகாஷ் என்ற பள்ளி மாணவர் படுகாயமடைந்து, மருத்துவமனையில் மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சத்யா என்ற 50 வயது பெண்மணியின் மண்டையை உடைத்து இரத்த காயம் ஏற்படுத்தினர். அப்போராட்டதிற்கு ஆதரவாக சென்ற என் மீதும் (த.கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர், பு.மா.இ.மு) கொலை வெறித் தாக்குதலை நடத்தினர். பேசக் கூட அனுமதிக்காமல், சுமார் 20 -க்கும் மேற்பட்ட போலீசார் சூழ்ந்து கொண்டு தாக்கினர். தலையிலும், முதுகிலும், முகத்திலும் என லத்தி கொண்டு கொடூரமாக தாக்குதல் நடத்தினர். இதில் இடது கண் அருகே காயம் ஏற்பட்டுள்ளது. என்னைப் போல் சுமார் 24 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இவர்கள் யாருக்கும் மருத்துவம் கூட பார்க்காமல், மதுரவாயல் பாக்கியலஷ்மி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளது போலீசு. டாஸ்மாக்கை மூடாமல் காவல் காக்கும் ஜெயா அரசின் போலீசு போராடிய மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதையும், மண்டபத்தில் அடைத்து வைத்து மருத்துவம் பார்க்காமல் சித்திரவதை செய்வதையும், பு.மா.இ.மு வன்மையாக கண்டிக்கிறது. தமிழகத்தில் செயல்படும் அனைத்து மாணவர் அமைப்புகளும் ஜனநாயக அமைப்புகளும் ஜெயாவின் பாசிச நடவடிக்கையை கண்டிக்க வேண்டுமென பு.மா.இ.மு கோருகிறது.

இவண்
த. கணேசன், மாநில ஒருங்கிணைப்பாளர்.
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, தமிழ்நாடு
41, பிள்ளையார் கோயில் தெரு, மதுரவாயல், சென்னை. 9445112675

கோவை

மீஞ்சூர்

 

100% புறக்கணிக்கத் தயாராவீர் !

1

Hello IT Friends

ndlf-it-boycott-electionசட்டமன்ற தேர்தல் தொடர்பாக ஐ.டி. ஊழியர்களான நாம் சில கேள்விகளை எழுப்ப வேண்டியிருக்கிறது.

1. ஓராண்டுக்கு முன்பு டி.சி.எஸ் 25,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்தது. அதன் பிறகு சின்டெல், வெஸ்டாஸ் என்று பல்வேறு ஐ.டி நிறுவனங்கள் ரகசியமாகவும், சட்டவிரோதமான முறையிலும் Layoffசெய்து கொண்டிருக்கின்றன.

தேர்தலில் வாக்களித்தால் லே ஆஃப்-ஐ தடுக்க முடியுமா? ஜாப் செக்யூரிட்டி கிடைக்குமா? இதற்கு எந்தக் கட்சியாவது வாக்குறுதி அளித்திருக்கின்றதா?

2. பேச்சுரிமை, எழுத்துரிமை போன்ற அடிப்படை உரிமையாக யூனியன்–ல் சேரும் உரிமையை அரசியல் சட்டம் அங்கீகரித்துள்ளது. பிரிட்டிஷ் ஆட்சியில் கிடைத்திட்ட இந்த உரிமையை தொழிற்சாலைகளில் பயன்படுத்த முடிகிறதா? யூனியன் சேர விடாமல் தடுக்கப்படுகின்றனர், தொழிலாளர்கள். 100% வாக்குப்பதிவை வலியுறுத்தும் தேர்தல் ஆணையத்தால், 100% யூனியன்–ல் சேரும் உரிமையை நடைமுறைப்படுத்த முடியுமா?

அமெரிக்காவில் கூட வெரிசான், ஐ.பி.எம் போன்ற நிறுவன ஊழியர்கள் தொழிற்சங்கம் வைத்திருக்கின்றனர். நம் நாட்டிலோ, ஐ.டி. ஊழியர்களான நாம் யூனியன் வைத்துக் கொள்ள அனுமதிக்கிறோமா? இதுதான் ஜனநாயகமா?

3. சென்னை பெருவெள்ளத்தை நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். கார்ப்பரேட்கள், ரியல் எஸ்டேட் மாபியாக்கள் செய்த ஏரி, குளங்கள் ஆக்கிரமிப்புதான் இப்பேரழிவிற்கே காரணம். ஆக்கிரமிப்புக்கு அரசியல் கட்சிகள், அதிகாரிகள், நீதித்துறை என அனைவரும் உடந்தை. செம்பரம்பாக்கம் ஏரி நீரை ஒரே நாளில் மொத்தமாக திறந்து விட்ட அரசு மக்களைக் காப்பாற்றாமல் வேடிக்கைதான் பார்த்தது. இன்று வரைக்கும் மியாட் உள்ளிட்ட கார்ப்பரேட்களின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதா?  இயற்கை மீதான இத்தகைய சூறையாடலை அரசாலோ, இந்தத் தேர்தலாலோ நிறுத்திவிட முடியுமா?

4. பல லட்சம் கோடி மதிப்பிலான தாதுமணலைக் கொள்ளையிட்டு வரும் வைகுண்டராஜன் மீதான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து, கொள்ளையைத் தொடர நீதிமன்றமே துணைபோனது.

அதேபோல மதுரை மாவட்டத்தின் பல குன்றுகளையும், குளங்களையும் அழித்துவிட்ட P.R. பழனிச்சாமியின் கிரானைட் கொள்ளை பற்றி விசாரணை நடத்த”நேர்மை”யான அதிகாரி சகாயம் நியமிக்கப்பட்டார். விசாரணையின் போது வழக்கிற்கு தேவையான தடயங்களை போலீசே அழித்துவிடும் என்று பயந்து சுடுகாட்டில் படுத்து உறங்கினார்.

ஆனால், மேலூர் மாஜிஸ்ட்ரேட்  பி.ஆர்.பி-யிடம் கோடிக்கணக்கில் பணத்தை பெற்றுக்கொண்டு அவரை விடுவித்ததுடன், வழக்கு தொடுத்த கலெக்டர் மீதே வழக்கு போட்டுவிட்டார். கொள்ளைக்காரன் பழனிச்சாமியோ சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருக்கின்றான். சகாயத்தின் விசாரணை அறிக்கையோ நீதிமன்றத்தின் டாய்லெட் பேப்பராக தொங்கிக் கொண்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் கூட பி.ஆர்.பி, வைகுண்டராஜன் முதலானோர் பல கோடிகளை கொட்டி அனைத்துக் கட்சிகளையும் சிறப்பாக கவனித்திருக்கின்றனர். நம் நாட்டை கொள்ளையடிக்க தரகு வேலை பார்க்கும் இந்தக் கட்சிகளுக்குத்தான் வாக்களிக்க போகிறோமா?

5. ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு வழக்கு நாடே அறிந்து நாறிப்போன ஒன்று. வழக்கை விசாரித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கினார். ஆனால், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தத்துவும், பெங்களூரு உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமியும் சரியாக “கணக்கு” போட்டு அம்மாவை விடுவித்து விட்டனர்.

அதுமட்டுமின்றி, பல்லாயிரம் கோடிகளை ஏப்பம் விட்டு விஜய்மல்லையா லண்டனுக்குத் தப்பிப் போகும் வரை ஒட்டுமொத்த அமைப்பும் உதவியது. ஜெயலலிதா, வைகுண்டராஜன், பி.ஆர்.பி, மல்லையா இவர்களைப் போன்ற எண்ணற்ற கிரிமினல்களுடன் கைகோர்த்துக் கொண்டுதான் நீதித்துறையே இயங்குகிறது.

இந்தத் தேர்தலில் வாக்களிப்பதன் மூலம் இவர்களைப் போன்ற குற்றவாளிகளையும், குற்றவாளிகளை காப்பாற்றும் நீதிபதிகளையும் தண்டிக்க முடியுமா?

6. 100% வாக்களியுங்கள் என்று பிரச்சாரம் செய்கிறது தேர்தல் ஆணையம்.
100% வாக்களித்தால் 100% ஊழல் ஒழியுமா?
இதற்கு தேர்தல் ஆணையம் உத்திரவாதம் தருமா?
100% வாக்களித்தால் நமக்கு 100% JOB SECURITY கிடைக்குமா?
இதற்கும் தேர்தல் ஆணையம் உத்தரவாதம் தருமா?

நேர்மையான தேர்தல் எனக் கூறிக்கொண்டு, அரசியல் தலைவர்களை எல்லாம் விட்டுவிட்டு அப்பாவி மக்களை சோதனை போடுகின்ற தேர்தல் ஆணையம், நம்மால் தேர்வு செய்யப்பட்ட அமைப்பா? இதன் கேட்பாரில்லாத சர்வாதிகாரம், எவ்வாறு உண்மையான ஜனநாயகத்தைத் தரும்?

7. நல்லவர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறது தேர்தல் ஆணையம்.

தேர்தலில் நிற்கும் நல்லவர்கள் யாரையாவது உங்களுக்கு தெரியுமா?

பெயரளவு போலி ஜனநாயகத்திற்கு கூட இடமில்லாதபடி கிரிமினல்களும், ரவுடிகளும் நிறைந்திருக்கும் இந்தத் தேர்தல் முறையில் நாம் யாரைத் தேர்ந்தெடுப்பது?

எனக்கு உனக்கு என்று போட்டி போட்டுக்கொண்டு ஓட்டு கேட்கும் கட்சிகள் எல்லாம் எப்படிப்பட்டவை? அ.தி.மு.க – ஜெயலலிதா,சசிகலா மன்னார்குடி மாஃபியா கும்பலின் குடும்பம், தி.மு.க -கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி, மாறன் குடும்பம்,  தே.மு.தி.க -விஜயகாந்த்,  பிரேமலதா, சுதீஷ் குடும்பம், பா.ம.க – ராமதாஸ்,  அன்புமணி, சவுமியா குடும்பம். இவ்வாறு கட்சிகள் அனைத்தும் குடும்பக் கட்சிகளாக இருக்கின்றன.

நமக்கோ, கோடி ரூபாய் என்பது மிகப் பெரிய தொகை. ஆனால் தேர்தலில் நிற்பவர்கள் பல கோடிகளை சாதாரணமாக செலவு செய்கிறார்கள். வெற்றி பெற்றால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பல கோடிகளைக் கொள்ளையடிப்பார்கள். மற்ற கட்சிகளும் ஊழல், கொலை, கொள்ளை, கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் செய்கின்ற பொறுக்கிக் கட்சிகள்தான். பேய்களும், பிசாசுகளும் போட்டியிடும் தேர்தலில் எதைத் தேர்ந்தெடுப்பீர்கள்? பேயையா, பிசாசையா?

வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்கிறது தேர்தல் ஆணையம். இந்தத் தேர்தலில் வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வதாகும். இன்னும் தெளிவாக கூறினால் நம்மை கொள்ளையடிக்க நாமே வரிசையில் காத்திருந்து லைசென்ஸ் வழங்குவதாகும்!

8.  நாம் போடாவிட்டால் நமது ஓட்டை வேறு யாராவது போட்டுவிடுவார்களே என்கிறார்கள் சிலர். அதற்காக புதைகுழி என்று தெரிந்தே விழ முடியுமா?

சரி, என்ன தான் செய்ய வேண்டும் என்று கேட்கிறீர்களா? அந்த மாற்றைப் பற்றி வாருங்கள் விவாதிப்போம்! தொடர்புக்கு: 9003198576

தகவல்

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – ஐ.டி. ஊழியர்கள் பிரிவு
NDLF I.T. Employees Wing

இன்று டாஸ்மாக் மூடுவிழா ! அனைவரும் வருக !

0

ஆனைவாரி

“பிராத்தல் கேஸ் போடுவேன் கை, காலை உடைத்து விடுவேன்”  ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூட பிரச்சாரம் செய்த பெண்கள் மக்கள் அதிகாரம் தோழர்களிடம் சேத்தியாதோப்பு டி.எஸ்.பி குத்தாலிங்கம் ரவுடித்தனம்.

புவனகிரி தாலுக்கா, ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூட மே 5-ம் தேதி வரை கெடுவிடுத்து ஆனைவாரி கிராமம் மற்றும் சுற்றுப்புற கிராம மக்களும், விருத்தாசலம் மக்கள் அதிகாரம் அமைப்பினரும் சிதம்பரம் கோட்டாட்சியரிடம் தேதி மனு அளித்தனர்.

இதைத் தொடர்ந்து மனு கொடுக்க வந்த பெண்களும், மக்கள் அதிகாரம் தோழர்களும் இணைந்து சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு கொடுத்தது பற்றியும். மே 5-ம் தேதி போராட்டத்திற்கு அறைகூவல் விடுத்தும் தெருமுனை கூட்டங்கள் போட்டு விளக்கினார்.

காட்டு நாயக்கன் தெருவில் தெருமுனை கூட்டம் நடந்து கொண்டிருந்த போது அங்கு வந்த போலிசு “யாரிடம் அனுமதி வாங்கி பிராச்சாரம் செய்தீர்கள், தேர்தல் நேரத்தில் இப்படி கூட்டம் போடுவது சட்டவிரோதம்” என்று கூறி தோழர்களிடம் இருந்த மெகா போனை பிடுங்கிக் கொண்டு தோழர்களையும் கைது செய்து வண்டியில் ஏற்ற முயன்றனர். அதற்கு ஒத்துழைக்காமல் தோழர்கள் தொடர்ந்து முழக்கமிட்டு போலிசிடம் போராடினார்கள்.

“நீங்கள் எல்லாம் எந்த ஊர்? இங்கு வந்து மக்களை ஏன் போராட துண்டுகிறீர்கள் சொன்னா ஒழுங்க ஏற மாட்டீர்களா? சோறுதான் தின்றீங்களா, வேறா ஏதாவது சாப்பிடுறீர்களா?” என்றவாறு திட்டித் தீர்த்தனர். கூடுதலான போலீசு வந்து ஆண் தோழர்களை ஜீப்பில் ஏற்றியது. பெண் தோழர்கள் “பெண் போலீஸ் இல்லாமல் கைது செய்ய முடியாது” என்று வாதாடிய பிறகு பெண் போலீசை வரவழைத்து கைது செய்ய முயன்றனர்.

இதற்கிடையே கைது செய்த ஆண் தோழர்களை கொண்ட ஜீப்பை எடுக்க போலீசு முயன்ற போது பெண் தோழர்களுடன் இணைந்து மக்களும் ஜீப்பை மறித்து நின்று போராடினார்கள். இது சுமார் 1 மணி நேரம் நீடித்தது. இதனால் செய்வதறியாது திகைத்து போனது போலீசு.

ஜீப்பை பின்னால் எடுத்த போலீசு வேறு வழியில் 3 கி.மீ தொலைவில் உள்ள காவல் நிலையத்திற்கு 25 கி.மீ சுற்றிக் கொண்டு தோழர்களை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றது. போகிற வழியில் தோழர்களிடம் இருந்து செல்போனை பிடுங்கியது. செல் போனை பிடுங்கியவுடன் தோழர்கள் “மூடு டாஸ்மாக்கை” என்று பாடியவாறு வந்ததும் போலிசை ஆத்திரமடைய செய்தது.

பெண் போலிசு வந்து தோழர்களை கைது செய்ய முயன்ற போது உடன் வந்த DSP குத்தாலிங்கம் “உங்களை எல்லாம் பிராத்தல் கேஸ் போட்டு உள்ளே தள்ளி விடுவேன் இங்கு வந்து ஏன் பிரச்சினை பன்றீங்க, இது வி.ஐ.பி தொகுதி (அ.தி.மு.க செல்வி. இராமஜெயம்)” என தோழர்களையும் “நீங்க என்னிடம் தான் வந்தாக வேண்டும். உங்கள் பிள்ளைகள் வேலைக்கு போகாமல் செய்துவிடுவேன்” என்று மக்களையும் மிரட்டினார்.

பெண் தோழர்களை கைது செய்ய முயடியாமல் திணறிய போலிசு தோழர்களை நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு கைது செய்தது. தோழர்களை போட்டோ பிடிக்க சி.ஐ.டி உளவுப்பிரிவு, எஸ்.ஐ என அனைவரும் அணிவகுத்தனர்.

கைது செய்த தோழர்களை தனித்தனியாக விசாரித்த டி.எஸ்.பி எதும் பதில் ஏதும் கிடைக்கததால் மேலும் ஆத்திரமடைந்தார். மக்கள் அதிகாரம் விருத்தாசலம் ஒருங்கிணைப்பாளர் முருகானந்தத்தை தனி அறையில் அடைத்தனர். தோழர் மணிவாசகத்திடம் “மக்கள் அதிகாரம் என்ன மயிர் அதிகாரம்” என்றும் “ நீங்கள் அதிகாரத்தை கையில் எடுத்தால் நாங்கள் என்ன செரைக்கவா இருக்கிறோம். கை காலை உடைத்து விடுவேன்” என்றும் மிரட்டினார்.

அதற்கு தோழர், “நீங்கள் என்னை அடித்துக்கூட கொல்லலாம் அமைப்பைப் பற்றி தவறாகப் பேசினால் நடப்பதே வேறு” என பதிலடி கொடுத்தவுடன் அமைதியாக சென்றார்.

கைதான பெண் தோழர்கள் 3 பேர் உட்பட 10 பேர் மீதும் பிரிவு 143 மற்றும் 188 ன் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்ட துணை செயலாளர் செந்தில் தலைமையிலான வழக்கறிஞர் குழு, போலீசார்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிறகு தோழர்கள் விடுவிக்கப்பட்டனர்.

விடுதலையான தோழர்கள் மறுநாளே அதே கிராமத்திற்கு சென்று, “மே 5 -ம் தேதி கடையை மூட வாருங்கள், அதிகாரிகள் மூட மாட்டார்கள் போலீசு கண்டு அஞ்சத் தேவையில்லை. நாம் ஒன்று திரண்டால் நிச்சயம் மூடமுடியும்” என்று பிரச்சாரம் செய்தனர். பிரச்சாரம் செய்ய மீண்டும் வரமாட்டார்கள் என்று நினைத்த மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். கடையை மூட பெருமளவில் திரள்வோம் என உறுதியாக கூறினர்.

shutdown-tasmac-anaivari

shutdown-tasmac-anaivari-poster

தகவல்
மக்கள் அதிகாரம்,
விருத்தாசலம்

சென்னை மதுரவாயல்

shutdown-tasmac-maduravoyal-poster-2

shutdown-tasmac-maduravoyal-banner

தகவல்
மக்கள் அதிகாரம்,
சென்னை

சீர்காழி

shutdown-tasmac-sirkazhi-banner

தகவல்
மக்கள் அதிகாரம்,
சீர்காழி வட்டம்

தஞ்சை

shutdown-tasmac-thanjai-poster

தகவல்
மக்கள் அதிகாரம்,
தஞ்சை

தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் 4

0

10. புதுச்சேரி

விவசாயம் – நெசவு – சிறுவணிகம் – சிறுதொழில்களை அழித்து காண்டிராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்!

puduvai-may-day-21இது மேதினத்தின் 130-வது ஆண்டு நிறைவு. 1886-வது ஆண்டில் தொழிலாளி வர்க்கம் எத்தகைய அடக்குமுறை, சுரண்டல் ஆகியவற்றை எதிர்த்தும், 8 மணிநேர வேலை என்கிற உரிமைக்காகவும் போராடி ரத்தம் சிந்தியதோ அந்தக் கொடிய நிலைமை இன்றைக்கு மீண்டும் வந்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால் அடக்குமுறையும், சுரண்டலும் அப்போது இருந்ததை விட பன்மடங்கு கொடூரமானதாகவும், நவீனப்படுத்தப்பட்டும் அமல்படுத்தப்படுகிறது.

கார்ப்பரேட்மயம் – காண்டிராக்ட்மயம்!

எந்த ஒரு ஆலையிலும், நேரடி உற்பத்தி சாராத வேலைகளில் மட்டும் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நேரடி உற்பத்தி நடக்கிற வேலையிலும் காண்டிராக்ட் தொழிலாளர்களைப் பயன்படுத்திக் கொள்வது அதிகரித்து வருகிறது. எந்த ஆலையிலும் நிரந்தரத் தொழிலாளர்களது எண்ணிக்கையை விட காண்டிராக்ட் தொழிலாளர்களது எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. காண்டிராக்ட் தொழிலாளர்கள் இல்லையென்றால் ஆலையே ஓடாது என்கிற அளவுக்கு ஒட்டுமொத்த ஆலையுமே காண்டிராக்ட் தொழிலாளிமயமாகி விட்டது.

puduvai-may-day-banners-32-2நெருப்புக் குழம்பு ஓடுகின்ற இரும்பு உருக்காலையானாலும், தூசும், மாசும் மூச்சை முட்டுகிற சிமெண்ட் ஆலையானாலும், பாறைகள் சரிந்து உயிரைப் பறிக்கிற சுரங்கமாக இருந்தாலும் காண்டிராக்ட் தொழிலாளி இல்லாமல் ஒரு துரும்பு கூட நகர முடியாது. கல்லூரி பேராசிரியர் நியமனம் கூட காண்டிராக்ட் முறையில் நடக்கிறதென்றால் இதை விட அவலம் வேறென்ன இருக்க முடியும்?

தொழில்துறையின் உயிர்த்துடிப்பு! ஆனால், உயிராதாரம் பறிப்பு!

தொழிலின் உயிர்த்துடிப்பாகிவிட்ட காண்டிராக்ட் தொழிலாளிக்கு உயிர்வாழும் உரிமை கூட மறுக்கப்படுகிறது. வேலை நிரந்தரம் கேட்டால் கேலி பேசுகிறான், முதலாளி. ஆபத்துகள் மிகுந்த வேலைகளில் கூட எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் வேலை செய்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம். அப்போது விபத்து ஏற்பட்டு உயிரே போனாலும், அற்பப் பணத்தை வீசி எறிந்து விட்டு அடுத்த காண்டிராக்டுக்கு மாறி விடுகிறான், முதலாளி. ஆலை விபத்துகளில் செத்துப்போன பல்லாயிரக்கணக்கான காண்டிராக்ட் தொழிலாளர்களது கதியும், கதையும் இப்படித்தான் முடிக்கப்பட்டது.

puduvai-may-day-banners-32-8காண்டிராக்ட் தொழிலாளிக்கு முறையான சம்பளம் கூட கிடைப்பதில்லை. நிரந்தரத் தொழிலாளிக்கு கிடைக்கின்ற சம்பளத்தில் பாதிகூட கிடைப்பதில்லை. இரண்டு பேரும் ஒரே வேலையை செய்தாலும், காண்டிராக்ட் தொழிலாளி என்றால் கொத்தடிமைதான். சம்பளத்தில் மட்டுமல்ல, சாப்பிடும் சோற்றிலும் கூட இரண்டாம் தரமாக நடத்தப்பட்டு, அவமானத்தில் குன்றிப் போகிறான். காண்டிராக்ட் தொழிலாளி. இதனை நிரந்தரத் தொழிலாளியும் அவர்களது சங்கமும் கண்டும் காணாமல் இருப்பது மானக்கேடு. இன்னும் ஒரு படி மேலே போய் நிரந்தரத் தொழிலாளிக்கு சம்பள உயர்வு கொடுத்து காண்டிராக்ட் தொழிலாளி மீதான சுரண்டலை பாதுகாத்துக் கொள்கின்றனர், முதலாளிகள். ஊழல்படுத்தப்பட்ட நிரந்தரத் தொழிலாளர்களோ, முதலாளியின் இளைய பங்காளிகளாக மாறி காண்டிராக்ட் தொழிலாளிக்கு எதிரியாக மாறி, தனக்குத் தானே குழி தோண்டிக் கொள்கின்றனர்.

மறுகாலனியாக்கத்தால் தீவிரமாகும் நிலைமை!

puduvai-may-day-19தனியார்மய – தாராளமய – உலகமய – மறுகாலனியாக்க நடவடிக்கைகளின் விளைவாக விவசாயம் நாசமாகிப் போன நிலையில் தற்கொலை செய்து கொள்வதை விட நகரத்துக்குப் போய் பிழைத்துக் கொள்ளலாம் என்று ஓடி வருகின்ற விவசாயிகளுக்கும், விவசாயக் கூலிகளுக்கும் வேறென்ன வழி இருக்கிறது? நெசவும், நூற்பும் பன்னாட்டுக் கம்பெனிகளது ஏகபோகத்துக்குப் போய்விட்டதால் நவீன எந்திரங்களுடன் போட்டி போட முடியாமல் உடைந்த தறியோடும், முதுகு நிறைந்த கடனோடும் வருகின்ற நெசவு தொழிலாளிக்கு வேறு போக்கிடம் என்ன இருக்கிறது?

செய்து வந்த சிறுதொழிலை நவீன எந்திரங்கள் முழுங்கிவிட்டன. சிறுவணிகத்தை கார்ப்பரேட் கடைகளும், ஆன்லைன் வர்த்தகமும் காவு வாங்கி விட்டன. இதனால் பிழைப்பு தேடி, அலைபவர்கள் வேறெங்கு போக முடியும்? இவர்கள் அனைவரும் தொழிற்பேட்டை என்கிற நரகத்து தள்ளி விடப்படுகின்ற நிலையில் காண்டிராக்ட் புரோக்கர்களைத் தவிர வேறு யாரும் கை கொடுப்பதில்லை. காண்டிராக்ட் கூலிகளில் பெரும்பாலானோர் இப்படி வந்தவர்கள் தான். எந்த மலிவான கூலிக்கும் உழைப்பது, எத்தனை ஆபத்தான வேலையையும் செய்வது என்கிற நிர்ப்பந்தத்தில் வாழ்கின்ற இவர்களை வைத்துத் தான் கார்ப்பரேட் உலகம் தன்னுடைய லாபவெறியைத் தீர்த்துக் கொள்கிறது.

puduvai-may-day-banner-83-220 காண்டிராக்ட் தொழிலாளிக்கு மேல் வைத்துக் கொண்டால் லைசென்சு வாங்க வேண்டும் என்கின்ற விதிமுறையினை மாற்றி 100 பேர் வரை லைசென்சு இல்லாமலேயே வைத்துக் கொள்ளலாம் எனவும், எந்த வேலையிலும் எத்தனை மணிநேரத்துக்கும் காண்டிராக்ட் தொழிலாளியை ஈடுபடுத்தலாம் எனவும் சட்டதிருத்தம் செய்ய மோடி அரசு தயாராகி வருகிறது. சட்டத்தின் பெயரால் கட்டுப்பாடுகள் இருக்கின்ற போதே கசக்கிப் பிழிகின்ற முதலாளிகள், சுரண்டலுக்கும், அடக்குமுறைக்கும் சட்டப் பூர்வமாகவே அங்கீகாரம் கிடைத்து விட்டால் எப்படி நசுக்குவார்கள் என்பதை நினைத்தாலே நெஞ்சு கொதிக்கிறது.

தொழிலாளர்களது உரிமைகளை உத்திரவாதம் செய்வதற்காக உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகின்ற தொழிலாளர் நலத்துறையானது, முதலாளிகள் நலத்துறையாக அப்பட்டமாக செயல்படுகிறது. தொழிலாளர்களது சட்டப்பூர்வமான கோரிக்கைகளைக் கூட பரிசீலிக்க மறுப்பதோடு, நாங்கள் முதலாளிகளின் பக்கம்தான் நிற்போம் என்று பகிரங்கமாக சொல்கின்றனர். புதுச்சேரி தொழிலாளர் அதிகாரி தயாளன், தொழிலாளர் ஆய்வாளர் ரவி போன்ற அதிகாரிகளும், வேலையிலிருந்து ஓய்வுபெற்ற பின்னரும் தொழிலாளர்களை வேட்டையாடுவதற்கு பயிற்சி வகுப்பு நடத்தி வருகின்ற முன்னாள் தொழிலாளர் நலத்துறை ஆணையரான ரவீந்திரனும் இதற்கு எடுத்துக்காட்டு.

puduvai-may-day-20தொழிலாளர் நலத்துறையின் தொழிலாளர் விரோதப்போக்கு அரியானாவில் மாருதி ஆலை, ராஜஸ்தானில் ஹோண்டா மோட்டார்ஸ், மராட்டியத்தில் பஜாஜ் ஸ்கூட்டர்ஸ், குஜராத்தில் நானோ, கர்நாடகத்தில் டயோட்டா, தமிழகத்தில் ஹூண்டாய், நோக்கியா, ஜி.எஸ்.எச்., புதுச்சேரியில் சுஸ்லான், ஹைடிசைன், என பலநூறு உதாரணங்களையும், ஆதாரங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும், தான் ஏற்றுக் கொண்ட பொறுப்புக்கு எதிர்நிலையாகவும், செயல்படுவதற்கு தகுதியற்றதாகவும் மாறியுள்ள நிலையில் தொழிலாளர் நலத்துறையானது ஒரு சுற்று அதிகமாக நாறுகிறது,

மூடப்பட்ட கதவு தானாக திறக்காது! உடைத்தெறி!

சமீபத்தில் பெங்களூருவில் ஆயத்த ஆடைத் தொழிலாளர்கள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்தை நீங்கள் அறிந்திருப்பீர்கள். தொழிலாளர்கள் தங்களது சேமிப்பினை பெறுவதற்கு மத்திய அரசு போட்ட புதிய விதிமுறைகளை தகர்த்தெறிந்தது, பெண் தொழிலாளர்கள் முன்நின்று நடத்திய போராட்டம். தினம் தினம் தீவிரமடைந்து வருகின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்துக்கு மென்மையான வார்த்தைகளோ, சாந்தமான, சட்டப்பூர்வமான போராட்டங்களோ புரியாது. அவற்றை நசுக்கத்தான் செய்யும். 1886-ல் மேதினத்தில் தொழிலாளி வர்க்கம் சிந்திய இரத்தமும், மேதினத் தியாகிகளது உயிர்பலியும் நமக்கு திரும்பத் திரும்ப சொல்லிக் கொடுப்பது ஒன்றைத்தான். தொழிலாளி வரிக்கமே அடங்கிக் கிடக்கின்ற உனது குரலையும், கைகளையும் உயர்த்து; மூடப்பட்டுள்ள நெடுங்கதவை நொறுக்கு; காட்டுத்தீயாய் பரவிடு; கார்ப்பரேட் கொட்டத்தைப் பொசுக்கிடு!

உழைக்கும் மக்களே,

  • உலகையே சூறையாடி வருகின்ற சர்வதேச நிதியாதிக்கக் கும்பலை முறியடிப்போம்!
  • தொழிலாளி வர்க்கத்தின் வாழ்வுரிமையைப் பறிக்கின்ற முதலாளித்துவ பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுவோம்!

  • நாட்டை சுடுகாடாக்கி வருகின்ற மறுகாலனியாக்கத்திற்கும், இந்துமதவெறி பாசிசத்திற்கும், முடிவுகட்டுவோம்!

  • அழுகி நாறிவரும் அரசுக் கட்டமைப்பை அப்புறப்படுத்துவோம்!

  • போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!

  • புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரள்வோம்!

என்ற மே நாள் சூளுரையோடு 131 -வது மேதினப் பேரணி – ஆர்ப்பாட்டம் புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பில் நடத்தப்பட்டது.

மே நாள் காலை முதல், மேதின சூளுரை ஏற்று, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி இயங்கும், கிளை மற்றும் இணைப்பு சங்கங்களில் திரளான தொழிலாளர்கள் பங்கேற்புடன் கொடியேற்றப்பட்டது.

மறுபுறம், மேதின பேரணி – ஆர்ப்பாட்டத்திற்கான அனுமதியை தேர்தல் துறை நிகழ்ச்சி துவங்கும் வரை இழுத்தடித்தது. ஏற்கனவே, ஒலிபெருக்கி அமைக்கும் சவுண்ட் சர்வீஸ் உரிமையாளர்களைக் கூட்டி பல்வேறு கெடுபிடி உத்தரவுகளைப் போட்டிருந்ததால், ஒலிபெருக்கி உரிமையாளர், அனுமதி உத்தரவு இருந்தால் மட்டுமே தன்னால், வரமுடியும் என்று தெரிவித்திருந்ததால், அனுமதிக்கு இறுதிவரை தேர்தல்துறையில் முட்டி மோதி அனுமதி பெறப்பட்டது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர். சரவணன் பேரணியை துவக்கி வைத்தார்.

போலி கம்யூனிஸ்டுகள் உள்ளிட்ட எல்லா ஓட்டுக் கட்சிகளும் தேர்தல் திருவிழாவில் சங்கமமாகி, மேதினத் தியாகிகளின் தியாகத்தை, தங்களது வாக்குறுதிகளில் தேடிக் கொண்டிருந்தனர். அதே வேளையில், பேரணி, இன்னுமொரு மேதினப் போராட்டத்திற்கு அறைகூவிய படியே நகரத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஆர்ப்பாட்டம் நடக்கும் சாரம் பெரியார் சிலையை வந்தடைந்தது.

puduvai-may-day-18ஆர்ப்பாட்டத்தில், நமது உரிமைகளுக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்திப் போராடாமல், அவர்களின் தியாகத்தையும், மேநாள் போராட்டத்தின் இன்றைய தேவையையும் இருட்டடிப்பு செய்யும் வகையில் வெடிவெடித்து இனிப்புகள் வழங்கிக் கொண்டாடும் ஓட்டுக்கட்சிகளை அம்பலப்படுத்தியும், இன்றைய தேவை, சாதி, மத, இன உணர்வல்ல, மே நாள் போராட்டத்தால் உருவான உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்! என்ற சர்வதேசப் பாட்டாளிவர்க்க முழக்கம் என்று கூறி புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் சரவணன், தலைமை உரையாற்றினார்.

puduvai-may-day-01புதுச்சேரி புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர். லோகநாதன், சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளாத வகையில் முதலாளிகள் தொழிலாளர்களை உழைக்கும் இயந்திரங்களாக மாற்றி வைத்துள்ளனர். அவர்களைப் புரியவைத்து போராட்டத்திற்கு அழைத்து வருவதே நம்முன் உள்ள சவாலான விசயம். இதற்கு தொடர்ந்து தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்ய வேண்டிய தேவையை விளக்கிப் பேசினார்.

இறுதியாகப் பேசிய மக்கள் அதிகாரம் அமைப்பின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர். ராஜூ, “இந்தியாவில் பல கோடி தொழிலாளர்கள் இருந்தாலும் 2 கோடி பேர் தான், சொல்லிக் கொள்ளும் வகையில் ஓரளவு சட்டப் பாதுகாப்புடன் உள்ளனர். மீதமுள்ள தொழிலாளர்களின் வாழ்க்கை ஒடுக்குமுறை மிகுந்ததாகவே உள்ளது. puduvai-may-day-22எனினும், தொழிலாளர்கள் போராடுவதற்குத் தயாராகவே உள்ளனர். இதை பெங்களூரு ஆயத்த ஆடை தொழிலாளர்களின் போராட்டம் உணர்த்துகிறது. எந்த ஓட்டுக்கட்சிகளின் துணையில்லாமல், சுயமாக தங்களது பலத்தில் அந்தப் பெண் தொழிலாளர்கள் போராடியுள்ளனர். அது தான் அவர்களின் முதல் வெற்றி! ஆண்டுக்கணக்கில் தொழிலாளர்களின் பல கோரிக்கைகள் நீதிமன்றங்களில் தூங்கும் போது, காலை 06.30 மணிக்குத் துவங்கிய போராட்டம், ஒரே நாளில் கோரிக்கையை வென்றெடுத்துள்ளது எனில், அத்தொழிலாளர்களிடமிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். தொழிலாளர்களிடம் உள்ளது அச்சம் என்ற ஒரே தடைக்கல் தான். அதை தகர்த்தெறியும் போது, உலகமே நமது காலடியில் என்பதை உணர வேண்டும். மக்கள் தான் தீர்மானிக்கும் அதிகாரம் கொண்டவர்கள். இது ஆற்று மணல் கொள்ளை மற்றும் டாஸ்மாக் எதிரான போராட்டங்கள் நிரூபிக்கிறது. எனவே, இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறிந்து, மக்கள் தங்களது அதிகாரத்தைக் கையில் எடுக்கும் போது அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கான விடுதலை சாத்தியமாகும்” என்று கூறி நிறைவு செய்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மே நாள் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தி, மேநாள் சூளுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
புதுச்சேரி

மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – பட்டியல் 2

0

6. கரூர்

டாஸ்மாக் சாராயத்தின் மூலம் ஒட்டுமொத்த சமூகமே சீரழிந்து வருகிறது என்பதை நாடே அறியும். தற்பொழுது தேர்தல் நேரத்தில் பணப்பட்டுவாடா அதிகமாக உள்ளதால், மக்கள் அதிக அளவில் குடித்துவிட்டு இறக்கும் சூழ்நிலையை உருவாக்கியிருக்கிறது இந்த அரசு. அதற்கு பலியான கரூர் டாஸ்மாக்கில் சென்ற வாரத்தில் திருப்பூரைச் சேர்ந்த துரைசாமி, ஈரோட்டைச் சேர்ந்த கணேசன், பொன்னமராவதியைச் சேர்ந்த கருப்பையா என்று தினம் தினம் டாஸ்மாக் சாராயத்திற்கு மக்கள் பலியாகி வருகின்றனர்.

karuru-tasmac-shutdown-campaign-3இந்நிலையில் ராயனூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் (கடை எண் 4952) கடையை அகற்றக் கோரி, முதல் கட்டமாக ராயனூர் சுற்றுவட்டாரப் பகுதியான தில்லைநகர், எம்.ஜி.ஆர்.நகர், அன்புநகர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் விரிவான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ராயனூர் பகுதியில் 1000-த்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 5000-த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை உள்ள பகுதியாகும். பெரும்பாலும் டெக்ஸ்டைல்ஸில் வேலை செய்யும் கூலித்தொழிலாளர்கள், தையல் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் அதிகமாக இப்பகுதியில் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதியில் உள்ள டாஸ்மாக்கில் நாளொன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கும் மேல் மதுவிற்பனை நடைபெறுவதாக புள்ளி விபரத்தின் மூலம் தெரியவருகிறது. எனவே இந்த டாஸ்மாக் சாராயக்கடையை அகற்றக் கோரி அப்பகுதி மக்களிடையே கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டு அதனை மாவட்ட ஆட்சியர், தேர்தல் ஆணையர் அவர்களிடம் மனு கொடுக்க முடிவு செய்யப்பட்டது.

karuru-tasmac-shutdown-campaign-1பிரச்சாரத்தின்போது தில்லைநகர் பகுதிமக்கள் பெருத்த ஆதரவு இருந்தது. மேற்கண்ட பகுதியில் உள்ள இளைஞர்கள் டாஸ்மாக் சாரயத்தின் மூலம் வீட்டுக்கொரு குடிகாரர்களாக மாறிவிட்டனர் என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அதோடு 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர், “நானும் குடியால் பாதிக்கப்பட்டுள்ளேன். இந்த பழக்கத்திலிருந்து என்னால் மீள முடியவில்லை. அந்தக் கடையை மூடுங்க, நானும் வருகிறேன்” என்றார்.

மேலும் 65 வயதுள்ள இளஞ்சியம் என்பவர், “என் கணவர் குடியினால் இறந்தார். இந்தக் குடிக்கு என் மகனும் அடிமையாகி விட்டான்” என்று பேசிக்கொண்டிருக்கும்போது, “பாருங்க, என் மகன் வீட்டிற்குள்ள குடிச்சிட்டிருக்கிறான் பாருங்க” என்று கண்ணீரோடும், வேதனையுடனும் கூறினார்.

karuru-tasmac-shutdown-campaign-2மூன்று மாதத்திற்கு முன்பு இதே பகுதியைச் சேர்ந்த வேலன் என்கின்ற 27 வயதுள்ள இளைஞர் ஒருவர் ராயனூர் டாஸ்மாக் அருகில் குடித்துவிட்டு ரோட்டு அருகில் தண்ணீர் கேட்டவாறே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இறந்தவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இச்சம்பவத்தை சோகத்தோடும், ஆதங்கத்தோடும் எங்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

அப்பகுதி இளைஞர் அருண் என்பவர் கூறுகையில், “எங்கள் வீட்டில் எங்கள் தாத்தா குடிச்சாரு, அப்புறம் எங்க அப்பா குடிச்சாரு, அப்புறம் நானும் குடிச்சே, இந்த குடியினால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனை, மற்றவர்கள் என்னை தரக்குறைவாக பார்த்தனர். இதனால் நான் கடந்த 6 வருடமாக குடிக்கிறத நிறுத்திட்டேன், இந்த பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற நானும் உங்களுடன் சேர்ந்து போராடுவேன்” என்று உறுதியுடன் கூறினார்.

karuru-tasmac-shutdown-campaign-4அதன்பின்னர் அப்பகுதி மக்களிடம் கையெழுத்து பெற்று இன்று 02-05-2016 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியரை சந்திக்க முடியாததால், கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம்  அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது. மனுவினை பெற்றுக்கொண்ட கோட்டாட்சியர், “இது சம்மந்தப்பட்ட அதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்வேன்” என்று எந்திரகதியில் பதிலளித்தார்.

அவரிடம் தோழர்கள், “மக்கள் அதிகாரம் அமைப்பு கரூர் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தொடர்ந்து டாஸ்மாக் பிரச்சினையில் தலையிட்டு போராடி வருகிறது. கடந்த வாரம் கணேசன், துரைசாமி, கருப்பையா ஆகிய மூன்றுபேர் கரூர் டாஸ்மாக் சாராயத்தால் இறந்து போனார்கள்; எனவே சாராயச் சாவை தடுத்து நிறுத்தவும், அதனை தொடர்ந்து ராயனூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடை எண் 4952 கடையை உடனடியாக அகற்ற வேண்டும்” என்றும் இல்லையென்றால் மக்களே மூடுவார்கள் என்று சொல்லப்பட்டது..

மேற்கண்ட பகுதி இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் இதில் கலந்து கொண்டனர். அடுத்த கட்டமாக டாஸ்மாக் கடையை அகற்றுவதற்கான களப்பணி இப்பகுதி மக்களோடு சேர்ந்து செயல்படுத்தப்படுகிறது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம், கரூர்

7. கோவை

டாஸ்மாக்கை மூடு! மே 5 கெடு!!

கோவை மாவட்ட மக்களுக்கு மக்கள் அதிகாரம் தோழர்களின் அறிமுகமே, அதிரடியாக சாய்பாபா காலனி டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கிய காட்சிகளை தொலைக்காட்சியில் காணும் போது தான். அந்த நிகழ்வை தொடர்ந்து மக்கள்அதிகாரம் தொடர்ச்சியாக கோவை மாவட்டத்தில் டாஸ்மாக் சாராயக் கடைக்கு எதிராக போராடி வருகிறார்கள். ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்ற டாஸ்மாக் தலைமை அலுவலக முற்றுகைப் போராட்டம் என கோவை மாவட்டத்தில் மக்கள் அதிகாரம் சாராயத்துக்கும் பணத்துக்கும் அடிபணியாத அதிகார வர்க்கத்தின் புதிய பிரதான பிரச்சினையாக மக்களுக்காக போராடும் புத்தம்புதிய தூய ஆற்றலாக உருவாகிக் கொண்டிருக்கிறது.

இதன் அடுத்த கட்ட நகர்வாக, மே 2-ம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
மே 5-ம் தேதி பாப்பநாயக்கன் பாளையம் டாஸ்மாக் சாராயக் கடையை மூடப் போகும் போராட்ட அறிவிப்பினை ஒரு மனுவாக மாற்றி கொடுக்க மக்கள் அதிகாரம் தோழர்கள் சென்றோம். இது தேர்தல் காலமாதலால் அனைத்து அதிகாரிகளும் அந்த பரபரப்பில் இருப்பதாகவும் எனவே இன்று ஆட்சியரை பார்த்து மனுக் கொடுக்க வாய்ப்பில்லை என்றும், எனவே கலால் துறை அதிகாரியை பார்க்குமாறு கூறவே அவரை சற்று நேரம் தேடினோம். அரை மணி நேர தேடுதலுக்கு பிறகு ஒரு வழியாக அந்த அதிகாரியை கண்டுபிடித்து மனுவை அவரிடம் நீட்டி,

“சார்,  நாங்க மக்கள் அதிகாரத்திலிருந்து வரோம். வர மே 5 ஆம் தேதி
பாப்பநாயக்கன் பாளையம் பகுதி டாஸ்மாக் கடையை மூடப் போறோம் அதுக்காக மனு இந்தாங்க ”

முகத்தில் கேள்வி ரேகைகளுடன் மனுவை வாங்கியவர் இந்த வார்த்தையை கேட்க கேட்க அதிர்ச்சியில் அப்படியே மனுவை டேபிளில் நழுவ விட்டுவிட்டு நம்மை நோக்கினார்.

பின்பு, “என்ன நீங்க இப்பிடி பேசுறீங்க இப்பிடிலாம் பேசக் கூடாது ஒரு அதிகாரிகிட்ட, மொதல்ல எப்பிடி பேசணும்னு கத்துக்கங்க, இப்படியெல்லாம் அதிகாரம் பண்ணி பேசக் கூடாது. தப்பு இப்பிடி பேசுனா செய்றவன் கூட செய்ய மாட்டான். உங்க பேரு என்ன ?” எனக் கேட்க பின்பு மீண்டும் நமது அறிமுகம் முடிந்தவுடன் மனுவை படிக்காமலே எடுத்து வைத்து கொண்டு, பேச ஆரம்பித்தவர் பேசிக் கொண்டே அந்த மனுவை உதவியாளரின் மூலம் உள்ளே அனுப்பினார்.

பின்பு , எப்படி அதிகாரிகளை அணுக வேண்டும் என பல்வேறு மாடுலெசன்கலில் பேசி நமக்கு வகுப்பு எடுக்க ஆரம்பித்தார்.

“சார் நாங்க பாதிக்கப்பட்டவங்க அந்த கடைய மூடச் சொல்லி பல கட்ட போராட்டம் நடத்தினோம். நீங்க மூடல, அதுனால நாங்க இப்ப இப்பிடி பேசுறோம். இல்ல வேற எப்படி கேட்டா டாஸ்மாக்கை மூடுவீங்கன்னு சொல்லுங்க” என்று கேட்டதற்கு பதில் பேசாமல் வெறித்து பார்த்தார்.

இதற்கிடையில், வெளியே நின்றிருந்த நமது தோழர்கள் மூவரை கிட்டத்தட்ட 10 உளவுத் துறை அதிகாரிகள் சுற்றி வளைத்துக் கொண்டு “மக்கள் அதிகாரமா, என்ன செய்யப் போறீங்க ? சொல்லுங்க., இங்க கலெக்டர் ஆபீசுக்குள்ள எதாச்சும் செய்ய போறீங்களா…? இல்லை வெளியவா…? எத்தன பேரு வந்துருக்கீங்க, யார் யாரு பேரு என்ன போன் நம்பர் என்ன?” என அவசர பரபரப்பில் கேள்விகளாக அடுக்கினார்கள்.

நாம் நடந்தால் கழிவறை சென்றால் தண்ணீர் குடிக்க சென்றால் என எங்கு சென்றாலும் பின்னாடியே வந்து, “நண்பா., நண்பா என்ன செய்ய போறீங்க சொல்லுங்க. சொல்லுங்க” என குடைந்து கொண்டே இருந்தனர். பின்னர் மீண்டும் ஒரு உளவு அதிகாரி நம்மை அணுகி, “ஏதாவது ஒரு க்ளூ’வாச்சும் குடுங்க” என ஆரம்பித்தார்.

இதில் க்ளூ கொடுக்க என்ன இருக்கிறது, நீங்களா டாஸ்மாக்கை மூடப்போகிறீர்களா, இல்லை மக்களே மூடட்டுமா?

தகவல்: மக்கள் அதிகாரம், கோவை
தொடர்புக்கு :: 9585822157

8. குறிஞ்சிப்பாடி

டலூர் மாவட்டம் ஆயித்துறை தீர்த்தனகிரி கிராம பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், சிறுவர்கள் மக்கள் அதிகாரம் தோழர்களுடன் இணைந்து குறிஞ்சிப்பாடி கோட்டாட்சியரிடம், டாஸ்மாக் ஆயித்துறை கடை எண் 2521-ஐ மூடக் கோரி மனு கொடுத்தனர்.

Jpeg

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம், குறிஞ்சிப்பாடி.

9. சென்னை மதுரவாயல்

ரும் மே 5-ம் தேதி நாளை மறுநாள் மதுரவாயல் ரேசன்கடை பேருந்து நிறுத்தத்திற்கு அருகே உள்ள டாஸ்மாக் கடையை மூடும் போராட்டம், அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக்குழு மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் காலை 11.30 மணிக்கு நடைபெற உள்ளது.

அந்த டாஸ்மாக் கடை அரசு விதிமுறைகளை மீறி இயங்கி வருகிறது. தேசிய நெடுஞ்சாலைக்கு மிக அருகில் உள்ளது. குடியிருப்பு பகுதிகளுக்கு அருகில் உள்ளது. எனவே அந்த டாஸ்மாக் கடையை மூட அந்த பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக்குழு மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமையில் வரும் வியாழன் அன்று ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அந்த அரசு விதியை மீறி இயங்கக்கூடிய டாஸ்மாக் கடையை மூடப்போவதாக அறிவித்துள்ளனர்.

அனைத்து பத்திரிகையாளர்களும் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம் : மதுரவாயல் ரேசன் கடை பேருந்து நிறுத்தம் அருகில் உள்ள டாஸ்மாக் கடை

நேரம் : காலை 11.30 மணிக்கு

நாள் : 05-05-2016

தகவல்: மக்கள் அதிகாரம், சென்னை
9176801656

10. கடலூர் மாவட்டம் ஆனைவாரி

ஆனைவாரி டாஸ்மாக் கடையை மூட அதிகாரிக்கு மக்கள் உத்தரவு

vdm-shutdown-tasmac-1கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு அருகாமையில் உள்ள ஆனைவாரி கிராமத்தில் பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் சாராயக்கடை உள்ளது. இந்தக் கடைதான் ஆனைவாரி கிராமத்தை சுற்றியுள்ள நல்ல தண்ணீர்குளம், மணக்காடு, பெரிய நெல்லிக்கொல்லை, சின்ன நெல்லிக்கொல்லை, துருஞ்சிக்கொல்லை, மதுவானமேடு, எறும்புர் உட்பட 10 கிராம பெண்களின் தாலியறுப்பது.

இந்தக் கடையை மூடக்கோரி ஓராண்டிற்கு முன்பாகவே தாசில்தாரிடம் மனுகொடுத்து பார்த்தனர். அவர்களாகவே தன்னெழுச்சியாக டாஸ்மாக் கடையை முற்றுகையிட்டு போராடினர். அப்போது போலீசார் மக்களை கைது செய்து சிறையில் வைத்துவிடுவேன் என்று அச்சுறுத்தி மதுவிற்கு எதிராக போராடிய மக்களை களைத்தனர். இது இந்த பகுதி மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தியது. போராடி கடையை மூடமுடியாது, அவர்களே கடையை மூடினால் உண்டு. இல்லையெனில் இது நம் சாபக்கேடு, அனுபவித்து ஆக வேண்டும் என்று விரக்தி அடைந்தனர். இந்த ஓராண்டு காலத்தில் இப்பகுதியில் குடிக்கு அடிமையானவர்களின் எண்ணிக்கை பெருகியது.

vdm-shutdown-tasmac-2இந்நிலையில் கடந்த எட்டு மாதகாலமாக “மூடு டாஸ்மாக்கை, குடிகெடுக்கும் அரசிடம் கெஞ்சாதே” என்ற முழக்கத்தை முன்னிறுத்தி மக்கள் அதிகாரம் அமைப்பு பிரச்சாரம் செய்தது. தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியது ஆகியவற்றை ஊடகங்கள் மூலம் பார்த்து வந்தனர். இதை தொடர்ந்து அருகாமை பகுதி தோழர்கள் மூலமாக திருச்சி மாநாடு, விருத்தாசலம் பொதுக்கூட்டம், விழுப்புரம் டாஸ்மாக் அலுவலக முற்றுகை ஆகியவற்றில் இப்பகுதியை சார்ந்த மக்கள் கலந்து கொண்டனர்.

இவை இந்த பகுதி மக்கள் மத்தியில் நம்பிக்கை கீற்றை உருவாக்கியது. தங்கள் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மூட மக்கள் அதிகாரம் துணை புரிய வேண்டும் என்று கோரினர்.

vdm-shutdown-tasmac-8இதை அடுத்து கடந்த ஒருவார காலமாக மக்கள் அதிகாரம் அமைப்பு தோழர்கள் அந்த மக்களுடனேயே தங்கி ஆனைவாரி கடையை மூட பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இப்பிரச்சாரத்தின் போது தேர்தல் சமயத்தில் கட்சிகள் மதுவிலக்கு பற்றி பேசுவதை நம்ப தயாராக இல்லை. இருந்தாலும் வேறு வழியில்லை என்று தங்கள் ஆற்றாமையை வெளிப்படுத்தினர். அவர்களிடம் கடையை மூட தேர்தல் வரை காத்திருக்கத் தேவையில்லை, கட்சிகளின் வாக்குறுதியை நம்பி ஏமாறத் தேவையில்லை, விருத்தாசலம் மேலப்பாலையூர் கடையை மக்களே மூடியதைபோல் நீங்கள் வந்தால் நிச்சயம் ஆனைவாரி கடையையும் மூடமுடியும் என்று நம்பிக்கை ஊட்டப்பட்டது.

இந்த பிரச்சாரத்தை கண்டு பீதியடைந்து உளவுத்துறை போலீசு ஊர் முக்கியஸ்தர்களிடம் சென்று மக்கள் அதிகாரம் அமைப்புடன் செல்லாதீர்கள். சென்றால் சிறை நிச்சயம் என மிரட்டியுள்ளனர். இந்த அச்சுறுத்தும் வேலையை அப்பகுதி வி.சி.க. பா.ம.க. அதிமுக வை சார்ந்த சிலரும் மக்களிடையே செய்தனர்.

vdm-shutdown-tasmac-9இந்த நிலையில், தமிழகம் தழுவிய அளவில் மக்களுடன் இணைந்து மக்கள் அதிகாரம் அமைப்பு 10க்கும் மேற்பட்ட டாஸ்மாக் சாராய கடைகளை மூட மே 5 கெடு விதித்ததும் அதை அறிவிக்கும் விதமாக மே 20ம் தேதி அந்தந்த பகுதி கோட்டாட்சியரிடம் மனுவாக தெரிவிப்பது என முடிவெடுக்கப்பட்டது.

இந்த முடிவை அறிவிக்கும் விதமாக மனுவில் மக்கள், மாணவர்கள் 1200-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டனர்.

சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்துக்கு மனு கொடுக்க 70 பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டடோர் திரண்டனர். ஆரம்பத்தில் மனு கொடுப்பதற்கு வர தயங்கிய பெண்கள் , மற்ற பெண்கள் கிளம்புவதை பார்த்து அவர்களுடன் இணைந்து கொண்டனர். இப்படி பெண்கள் அணிதிரண்டுவிடக்கூடாது என்பதற்காக பொய்ப்பிரச்சாரம், போலீசு பீதியூட்டியவர்கள் வாயடைத்துப் போயினர்.

vdm-shutdown-tasmac-7சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களிடம் தோழர்கள், “இந்த மனு என்பது அரசிடம் கெஞ்சுவது அல்ல, மே 5-க்குள் மூட வுண்டும் என்ற முடிவை அறிவிப்பது. போலீசுக்கு அஞ்சாமல் போராடினால்தான் கடையை மூட முடியும்” என்பதை விளக்கி பேசினர். இந்தக் கூட்டத்தில் புகைப்படம் எடுக்க வந்த உளவுப் பிரிவு போலீசை தோழர்கள் விரட்டியதை பார்த்து போலீசிடம் இப்படித்தான் பேச வேண்டும் என்று கூறினர்.

vdm-shutdown-tasmac-6கோட்டாட்சியரிடம் மனு கொடுத்த பெண்கள், “எனக்கு பெண் குழந்தை உள்ளது, கணவனின் குடியால் இப்போது எப்படி அவர்களை வளர்க்க போகிறேன் என்று தெரியவில்லை. அதற்கு யார் பொறுப்பு? கடையை மூடாவிட்டால் தீக்குளிக்கவும் தயங்கமாட்டேன். மே 5-க்குள் கடையை மூடவில்லையெனில் நாங்களே மூடுவோம்” என பேசினர். இவற்றை அங்கு சூழ்ந்து இருந்த பத்திரிகை தொலைக்காட்சி நிரூபர்கள் படம் பிடித்தனர்.

வழக்கமாக தன்னிடம் வந்து மனுகொடுத்து கெஞ்சியவர்களை பார்த்து பழகிய கோட்டாட்சியர் மக்கள் குறிப்பாக உழைக்கும் பெண்கள் உத்தரவிடுவதை கண்டு அதிர்ச்சியில் அமைதியாக இருந்தார். வலியுறுத்தி பதில் கேட்டபோது நடவடிக்கை எடுப்பதாக கூறி முடித்துக்கொண்டார்.

மனு கொடுக்க வந்த பெண்கள், “இந்த அதிகாரி சாராயக் கடையை மூட மாட்டார். மே 5 -ம் தேதி போராட்டத்திற்கு மக்களை திரட்டி மூடிக்காட்டுவோம்” என்று உறுதியாக கூறினர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் அதிகாரம், விருத்தாசலம்

11. பென்னாகரம்

மிழகம் முழுவதும் டாஸ்மாக்கை மூடியே தீருவோம் என்கிற தொடர்போராட்டத்தில் களம் இறங்கியுள்ளது மக்கள் அதிகாரம். அதனுடைய ஒருபகுதியாக தருமபுரியில் நடந்த போராட்டம் .

pennagaram-shutdown-tasmac-2தேர்தல் வந்தால் திருவிழா வந்ததை போல தெருத்தெருவாக வீடு வீடாக களம் இறங்கியிருக்கிறார்கள் ஓட்டுக்கட்சிகள் இவர்களை ஆர்த்தி எடுத்து அழைக்கும் காலம் போய் ஆர்த்தெழுந்து போராடவும் தயாராகியிருக்கிறார்கள் மக்கள். இந்தப் போராட்டத் தீயை அணையவிடாமல் வளர்த்தெடுக்கும் வகையில் மக்கள் அதிகாரம் சார்பாக டாஸ்மாக்கை மூட வேண்டும் என்ற அடிப்படையில் மக்களை திரட்டி 05-05-2016-க்குள் டாஸ்மாக்கை மூட அரசுக்கு கெடு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய ஒரு பகுதியாக பென்னாகரம் வட்டாச்சியரிடம் மனு அளித்து தொடர் போராட்டத்தை நடத்தி வருகிறது, மக்கள் அதிகாரம்.

மக்கள் அதிகாரம் கடந்த 10 மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டம் நடத்தி வந்ததை நீங்கள் அறிவீர்கள். இதனுடை பிரதிபலிப்பாக மதுவை பற்றி பேசாமல் எந்த கட்சியும் ஓட்டுக்கேட்க முடியாது என்ற நிலையை உருவாக்கியுள்ளோம். இருப்பினும் எந்தப் போராட்டத்தையும் கண்டு கொள்ளாத ஜெயலலிதா தேர்தல் வந்தவுடனே படிப்படியாக மதுவிலக்கை கொண்டு வருவேன். அதுதான் என்னுடைய லட்சியம், கொள்கை என்றெல்லாம் பேசுகிறார். யாரை ஏமாற்றுவதற்கு?தமிழ்நாட்டு மக்கள் என்றால் தன்மானமற்றவர்கள் என்று எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அத்தனை வேலைகளையும் செய்து வருகிறார்.

pennagaram-shutdown-tasmac-1இப்படி எல்லா கட்சிகளுமே பேசுகிறார்கள். இவர்கள் பேசுவது எல்லாமே ஒரு ஏமாற்று என்பதை கிராமத்து பாணியில் சொன்னால் போதைக்காரன் பேச்சு பொழுது விடிஞ்சா போச்சு என்பதை போல இன்றைக்கு தேர்தல் மயக்கத்தில் உளறிகொண்டு இருக்கிறார்கள். இதை நம்பி நாம் ஏமாற போகிறோமா?இல்லை போராட போகிறோமா?

அந்த மயக்கத்தை தெளிய வைக்க வேண்டுமென்றால் மக்கள் அதிகாரம் என்னும் சுயமரியாதை மருந்தை எடுக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலே கடந்த ஒரு வாரகாலமாக தருமபுரியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு 1300 கையெழுத்து இயக்கம் நடத்தி இதனை 02-05-2016 நண்பகல் 12 மணியளவில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் பேரணியை மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் துவக்கிவைத்து உரையாற்றினார்.

அப்போது அன்றாடம், “ஆயிரக்கணக்கான பெண்கள் தாலியறுப்பதும், மாணவர்கள், இளைஞர்கள் சீரழிவதும் என அன்றாடம் வேதனைகளை துடித்துக்கொண்டு இருக்கிறோம். இதனை எல்லாம் கண்டு கொள்ளாமல் தேர்தல் வரை காத்திருங்கள் என்று நமக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இதெல்லாம் ஏமாற்று நாம் ஏன் தேர்தல் வரை காத்தியிருக்க வேண்டும். இன்றே களம் இறங்குவோம் டாஸ்மாக்கை மூடுவோம். நம் வாழ்க்கையை பாதுகாப்போம்” என்று மக்களிடம் நம்பிக்கையூட்டினார்.

இதனை நூற்றுக்கணக்கான மக்கள் நின்று கவனித்தனர். பிறகு பேரணியாக வழிநெடுகிலும் பிரசுரம் வினியோகித்து சென்றது மக்கள் வியப்பாக நின்று கவனித்தனர். வட்டாட்சியர் அலுவலகம் சென்று வட்டாட்சியர், டாஸ்மாக் அலுவலக அதிகாரி முன்னிலையில் மனு அளிக்கப்பட்டது.

அப்போது, “நாங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கிறோம்” என்று அவர்களுக்கே உரிய பாணியில் பேசினர். இதனை ஏற்றுக்கொண்ட தோழர்கள், “கடையை மூடவில்லை என்றால் மீண்டும் 05-05-2016 அன்று மக்களை திரட்டி கடையை மூடுவோம்” என்று எச்சரிக்கை விடுத்து கலைந்து சென்றனர்.

இது அதிகாரிகள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் போராட்டத்தின் மூலமாக தான் டாஸ்மாக்கை மூட முடியும், போராட்டத்தின் மூலமாகத்தான் அனைத்து உரிமைகளையும் பெறமுடியும் என்பதை உணர்த்தும் வகையில்,அடுத்தக்கட்ட போராட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தயாராகி வருகிறது.

தகவல்:மக்கள் அதிகாரம், தருமபுரி.
தொடர்புக்கு: 8148573417.

பெண் தொழிலாளிகளின் மே தினம் 2016 – படங்கள் !

1
உலக தொழிலாளர்க்ளே ஒன்றுபடுங்கள்
பெங்களூரு தொழிலாளிகளின் போராட்டம் – உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்!
பெங்களுரில் பல்வேறு தொழிற்சங்களை சார்ந்த பெண்கள் ஒன்றுக்கூடி மே தின பேரணி நடத்தினர்.
பெங்களுருவில் பல்வேறு தொழிற்சங்களை சார்ந்த பெண்கள் ஒன்றுக்கூடி மே தின பேரணி நடத்தினர்.
பொலிவியா நாட்டின் கொடியை ஏந்தி அந்நாட்டு சுதேச பெண்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தில் பேரணி நடத்தினர்.
பொலிவியா நாட்டின் கொடியை ஏந்தி அந்நாட்டு பெண்கள் சர்வதேச தொழிலாளர் தினத்தில் பேரணி நடத்தினர்.
கோஸ்டா ரிக்காவில் இந்த ஆண்டு உயர்நிலை பள்ளி மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் மாணவர்கள், பாலியல் தொழிலாளர்கள் , பழங்குடி மக்கள், , LGBT ஆர்வலர்கள் , பெண்ணுரிமை, சோசலிஸ்டுகள் என பலர் கலந்துக்கொண்டு நடத்திய மே தின பேரணி.
கோஸ்டா ரிக்காவில் இந்த ஆண்டு பல்வேறு அமைப்புகளோடு உயர்நிலை மற்றும் பல்கலைகழக மாணவர்கள்  இணைந்து நடத்திய மே தின பேரணி.
கோஸ்டா ரிக்காவில் இந்த ஆண்டு உயர்நிலை பள்ளி மற்றும் அரசு பல்கலைக்கழகங்கள் மாணவர்கள், பாலியல் தொழிலாளர்கள் , பழங்குடி மக்கள், , LGBT ஆர்வலர்கள் , பெண்ணுரிமை, சோசலிஸ்டுகள் என பலர் கலந்துக்கொண்டு நடத்திய மே தின பேரணி.
கோஸ்டா ரிக்காவில் உள்ள லாஸ் சான்டோஸ் மலை பகுதிகளில் வாழும் பெண்கள் மே தின பேரணியில் கலந்துக்கொண்டனர்.
மே தின பேரணி ஆர்ப்பாட்டத்தில் தடைகளை மீறி செல்லும் பெண்.
மே தின பேரணி ஆர்ப்பாட்டத்தில் தடைகளை மீறி செல்லும் பெண்.
சுமார் 1000 பேர் கலந்து கொண்ட சியாட்டில் நகரில் உள்ள ஜுட்கின் பார்க்கிலிருந்து ஃபெட்ரல் கோர்ட் ஹவுஸ் வரை நடந்த மே தின பேரணி.
சுமார் 1000 பேர் கலந்து கொண்ட சியாட்டில் நகரின் மே தின பேரணி.
கல்வியை வழங்கு வேளியேற்றாதே – சியாட்டில் மே தின பேரணியில் ஒரு பெண் மற்றும் சமூக ஆர்வலர் பதாகை ஏந்தியப்படி ஊர்வலம் செல்கிறார்.
கல்வியை வழங்கு மக்களை வேளியேற்றாதே – சியாட்டில் மே தின பேரணி
சியாட்டில் - ஒரு பெண் ஆர்ப்பாட்டகாரின் பேனரை பறித்து அவரை பிரம்பை கொண்டு பின்னோக்கி தள்ளும் போலீசு. இந்த ஆர்ப்பாட்டதில் போலீசு குண்டு வெடிப்பு பந்துகளை பயன்படுத்தி கலைக்க முயன்றனர். ஆர்ப்பாட்டத்தில்  9 பேர்கள் கைது செய்யப்பட்டனர் மேலும் இதனால் 6 பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.
சியாட்டில் – ஒரு பெண் ஆர்ப்பாட்டகாரரின் பேனரை பறித்து, அவரை பிரம்பை கொண்டு பின்னோக்கி தள்ளும் போலீசு. இந்த ஆர்ப்பாட்டதில்  9 பேர்கள் கைது செய்யப்பட்டனர், 6 பத்திரிக்கையாளர்கள் தாக்கப்பட்டனர்.
பங்களாதேஷ் டாக்காவில் பெண் ஆடை தொழிலாளர்கள் மற்றும் சமுக ஆர்வலர்கள் தங்களின் கைகளில் கம்யூனிச தலைவர்களின் படங்களை ஏந்தி மே தின பேரணியை நடத்தினர்.
பங்களாதேஷ் டாக்காவில் பெண் ஆடை தொழிலாளர்கள் மார்க்சிய பேராசன்களின் படங்களை ஏந்தி நடத்திய மே தின பேரணி!
லண்டனில் நடைப்பெற்ற மே தின பேரணியில் ஒரு மூதாட்டி மார்க்ஸ் படத்தினை ஏந்தியப்படி கலந்துக் கொண்டார்.
லண்டனில் நடைப்பெற்ற மே தின பேரணியில் ஒரு மூதாட்டி
சிலியில் நடைப்பெற்ற மே தின பேரணியில் நடந்து செல்லும் பெண்கள்
சிலியில் நடைப்பெற்ற மே தின பேரணி.
நியுயார்க் நகரில் பெண்கள் முன்னின்று நடத்திய மே தின பேரணி
நியுயார்க் நகரில் பெண்கள் அமைப்பு முன்னின்று நடத்திய மே தின பேரணி
ஊதிய உயர்வு மற்றும் வேலை நேரத்தை குறைக்ககோரி தைவான் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளிகளும், பல்வேறு தொழிலாளர்கள் அமைப்பை சார்ந்த பெண்களும் கலந்துக்கொண்டு நடத்திய மே தின பேரணி
ஊதிய உயர்வு மற்றும் வேலை நேரத்தை குறைக்ககோரி தைவான் நாட்டில் வெளிநாட்டு தொழிலாளிகளும், பல்வேறு தொழிலாளர்கள் அமைப்பை சார்ந்த பெண்களும் கலந்துக்கொண்டு நடத்திய எழுச்சிமிகு மே தின பேரணி!

தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் 3

0

7. திருச்சி (செய்தி, படங்கள்)

மே -1 2016 தொழிலாளர் தினத்தன்று திருச்சியில் புதிய ஐனநாயகத் தொழிலாளர் முன்னணியின் இணைப்பு சங்கமான பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன், ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கம், சுமைப்பணி தொழிலாளர் பாதுகாப்பு சங்கம், அனைத்து தரைக்கடை வியாபாரிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தோழமை அரங்குகளுடன் இணைந்து பேரணி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மூன்று நாள் தொடர் போராட்டத்துக்கு பின் பேரணிக்கு அனுமதி கொடுத்த திருச்சி காவல்துறை பேரணி துவங்கும் போது, “பேரணியில் முழக்கம் போடுவதற்கு மைக் செட் பயன்படுத்தக் கூடாது வெறும் வாயில் முழக்கம் போட்டுக்கொள்ளுங்கள்” என அடாவடித்தனம் செய்தது. தோழர்களின் விடாபடியான போராட்டத்தால் காவல்துறை பின் வாங்கியது.

விண்ணதிரும் முழக்கங்களோடு திருச்சி மரக்கடையில் பேரணி துவங்கியது. தஞ்சை மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் இராவணன் பேரணிக்கு தலைமையேற்று மே நாளின் மகத்துவத்தைப் பற்றியும் மே நாள் தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்தி அவர்கள் வென்றெடுத்த உரிமைகளை பேணி பாதுகாத்து அடுத்த தலைமுறைகளுக்கு ஒப்படைப்பது நமது கடமை எனவும் பேசி பேரணியை துவக்கி வைத்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேரணியின் முன்வரிசையில் பறையோசை முழங்க, தலைவர்களும் வழக்குரைஞர்களும் நடைபோட, அதன் பின்னால் அறுவாள் சுத்தியலை ஆணும் பெண்ணும் ஏந்தியபடி செல்ல, பாட்டளிவர்க்க ராணுவத்தின் மிடுக்கு நடையுடன் செஞ்சட்டை அணிந்த வீரர்கள் செல்ல, அவர்ளின் அடியொற்றி பெருந்திரள் தொழிலாளி வர்க்கமும் தோழமை அமைப்புகளின் தோழர்களும் செல்ல சாலையின் இருபுறமும் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் பேரணி அமைந்தது. இறுதியில் சிந்தாமணி அண்ணாசிலை அருகில் பேரணி முடிவுற்று ஆர்ப்பாட்டம் துவங்கியது.

செங்கொடியும் முழக்கப் பதாகைகளும் முன்வரிசையில் நிற்க்க பறையோசையுடன் கூடிய விண்ணை முட்டும் முழக்கங்களுடன் துவங்கியது ஆர்ப்பாட்டம்.

தோழர் சுந்தரராசு
தோழர் சுந்தரராசு `

பாய்லர் பிளாண்ட் ஒர்க்கர்ஸ் யூனியன் பொதுச் செயலாளர் தோழர் சுந்தரராசு அவர்கள் தலைமையேற்று,

“தொழிலாளி வர்க்கம் உதிரம் சிந்தி பெற்றெடுத்த 8 மணி நேர வேலை நாள் என்பது முதலாளிகளின் லாப வெறிக்கு போதவில்லை என்பதால் இப்போதெல்லாம் 15, 16 மணி நேரம் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் படுகிறான் தொழிலாளி. வேலை செய்ய மறுத்தால் வேலையை பறித்து தொழிலாளியை பட்டினிபோட்டு கொலை செய்கிறான் முதலாளி. பணி நிரந்தரம் இல்லை. எதிலும் காண்ட்ராக்ட் மயம் தினிக்கப்பட்டுள்ளது. இத்தகைய கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவெறிக்கு முடிவுகட்ட பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் அணிதிரள்வதுதான் ஒரே தீர்வு” என உரையாற்றினார்.

தோழர் ஜீவா
தோழர் ஜீவா

திருச்சி ம.க.இ.க. மாவட்ட செயலாளர் தோழர் ஜீவா பேசுகையில்,

“மே தினம் என்பது ஓய்வு நாள் அல்ல அஜீத்தின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காகவோ அல்ல. தொழிலாளி வர்க்கம் முதலாளி வர்க்கத்தின் சுரண்டலுக்கு முடிவு கட்டியநாள். 8 மணி நேர வேலை என்பதை வென்றெடுத்த தினம். இவை இன்று பறிபோகின்றன. இதனைத் தடுப்பதற்கு இளைஞர்கள் போராட முன்வர வேண்டும். இதற்காக நாம் சிந்திக்க வேண்டும், செயல்பட வேண்டும்” என அறைகூவினார்.

மக்கள் அதிகாரத்தின் தோழர் ஓவியா பேசுகையில்,

தோழர் ஓவியா
தோழர் ஓவியா

“ஜனநாயகத்தின் 4 தூண்கள் எதுவும் உழைக்கும் மக்கள் யாருக்கும் பயன்படுவதில்லை. எனவே இதை யாரும் நம்ப வேண்டிய தேவையும் இல்லை என கேரளாவின் தேயிலை தோட்ட பெண் தொழிலாளிகளின் வீரமிக்க போராட்டமும் மக்கள் அதிகாரத்தின் டாஸ்மாக்கை மூடும் போராட்டமும் மக்கள் தனக்கான உரிமையை தானே நிலைநாடடிக்கொள்வதுதான் ஒரே வழி. நேற்றுவரை லஞ்ச ஊழலில் ஊறித் திளைத்த அதிகாரிகள் தான் இன்று தேர்தல் அதிகாரியாகவும் பறக்கும் படையாகவும் வலம்வருகின்றனர். இவர்கள் எப்படி தேர்தலை நியாயமாக நடத்த முடியும். மக்கள் தான் இவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும்” என உரையை முடித்தார்.

தோழர் ராஜா
தோழர் ராஜா

சுமைப்பணித் தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தின் கௌரவத் தலைவர் தோழர் ராஜா பேசும் போது,

“போலிகளின் இரு (CITU, AITUC ) தொழிற்சங்கங்களும் தொழிலாளிக்கு செய்யும் துரோகங்களை பட்டியலிட்டார். தா.பாண்டியனின் ஜெயா துதிபாடலையும், முதலாளிக்கு சேவை, பாட்டாளிக்கு பட்டினி, இவைதான் மோடியின் ஆட்சி. எனவேதான் சட்டமன்ற பாராளுமன்ற தேர்தல் பாதை நமது பிரச்சினையை தீர்க்காது. இதனை தூக்கியெறிய வேண்டும். இதற்கு புரட்சிதான் தீர்வு” என தனது உரையை முடித்தார்.

தோழர் நிர்மலா
தோழர் நிர்மலா

பெண்கள் விடுதலை முன்னணியின் மாவட்டத் தலைவர் தோழர் நிர்மலா பேசுகையில், “வேலை செய்யும் ஆலைகளிலும் அரசுப்பணிகளிலும் தனியார் தொழிற்சாலையிலும், நிறுவனங்களிலும் வேலை செய்யும் பெண்கள் பாலியல் ரீதியான சுரண்டல், உழைப்பு சுரண்டலென இருவகைகளில் சுரண்டப்படுகின்றனர். இதனை மாற்றக்கூடிய வலிமை கம்யுனிஸ்ட்டுகளிடம் மட்டுமே உள்ளது” என குறிப்பிட்டார்.

ஆட்டோ ஓட்டுநர் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர் கோபி பேசும் போது,

தோழர் கோபி
தோழர் கோபி

“கால்டாக்சி, தனியார் பேருந்துகளின் போட்டிகளுக்கு மத்தியில் ஆட்டோ தொழில் செய்வது முடியாத காரியமாக உள்ளது. இதற்கிடையில் மாநகராட்சி அதிகாரிகளின் அடாவடித்தனம், போலீசின் பொய் வழக்கு இதனையெல்லாம் தொழிலாளியின் ஒன்றிணைந்த போராட்டத்தாலும் பு.ஜ.தொ.மு வின் சிறப்பான வழிகாட்டலினாலும்தான் முறியடிக்க முடிந்தது. எனவே துரோகத்தை ஒழித்து தொழிலாளிக்காய் பாடுபடும் பு.ஜ.தொ.மு. வில் இணைவீர்” என தொழிலாளிகளுக்கு அறைகூவல் விடுத்தார்.

அனைத்து தரைக்கடை வியாபரிகள் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தோழர்.பழனிச்சாமி பேசுகையில்

தோழர்.பழனிச்சாமி
தோழர்.பழனிச்சாமி

“முன்பெல்லாம் வயதானவர்கள் பிழைப்பு நடத்த தரைக்கடை போடுவார்கள். இன்றோ கிராமப்புறத்தில் டிகிரி படித்த மாணவர்கள் படித்த படிப்புக்கு வேலை கிடைக்காமல் தரைக்கடை போட்டு பிழைப்பு நடத்துகின்றார்கள்.

ஒருபக்கம் கார்ப்பரேட்டுகளின் சுரண்டலுக்காக தரைக்கடைகள் அழிக்கப்படுகின்றது. இன்னொருபுரம் உள்ளுரில் உள்ள சாரதாஸ், மங்கள்-மங்கள் போன்ற பெரும் நிறுவனங்கள் பொது இடத்தை ஆக்கிரமித்து கார் பார்க்கிங் அமைக்கிறார்கள். தனது கடைமுன்னால் 3 அடி கடைபோட வேண்டுமா மாத வாடகைக் கொடு என மிரட்டுகின்றார்கள். இதற்காக போலீசை வைத்து தரைக்டைகளை அப்புறப்படுத்துகின்றனர். தரைக்கடை வியாபாரிகள் மீதான தாக்குதலுக்கு எதிராக எந்த ஓட்டுக்கட்சியும் தனது தேர்தல் அறிக்கையில் பேசவில்லை. எனவே அவர்களுக்கு ஏன் ஓட்டுபோட வேண்டும்” என வினா எழுப்பினார்.

சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில இணைச் செயலாளர் தோழர் காளியப்பன் பேசுகையில்,

தோழர் காளியப்பன்
தோழர் காளியப்பன்

“1886-ம் ஆண்டு சிக்காகோ நகரில் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேரம் உறக்கம் என்பதை தொழிலாளிகள் தம் இன்னுயிரைக் கொடுத்து வென்றார்கள். இத்தகைய மகத்தான மே நாளை தோழர் லெனின் போராட்ட நாளாக அறிவித்தார். இந்தியாவில் காலனியாட்சி நடந்த போது தொழிலாளி வர்க்கம் போராடி பெற்ற உரிமைகள் அனைத்தையும் பறித்தெடுக்க முயன்ற போது காலனியாட்சிக்கு எதிராக தோழர் பகத்சிங் பாராளுமன்றத்தில் குண்டுவீசி தனது எதிர்ப்பைத் தெரிவித்தார். அதன்பின் காங்கிரஸ் தொடங்கி இன்றுள்ள பி.ஜே.பி வரை அனைத்துக்கட்சிகளும் பன்னாட்டுக் கம்பெனிக்கு ஆதரவாக கார்ப்பரேட் கம்பெனி கொள்ளைக்கு ஏதுவாக தனியாரமய – தாராளமய – உலகமயக் கொள்கைகளை போட்டி போட்டு அமுல்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் தான் கேரளாவில் தேயிலை தோட்ட பெண்தொழிலாளிகள் போராட்டம் துரோக தொழிற்சங்கங்களின் முகத்திரையை கிழித்து முதலாளித்துவ சுரண்டலுக்கு மரண அடி கொடுத்தது. சமீபத்தில் பெங்களுரில் ஆயத்த ஆடைதயாரிக்கும் லட்ச்சக்கணக்கான தொழிலாளர்கள் மூன்றே நாளில் எந்தத் தொழிற்சங்கத்தின் தலைமையும் இல்லாமல் தன்னியல்பாக போராடி பி.எஃப் பணத்தை எடுத்து பயன்படுத்துவதற்கு மத்திய அரசு போட்ட தடையை உறுதிமிக்க போராட்டத்தால் உடைத்தெறிந்தார்கள். இத்தகைய உறுதிமிக்க சமரசமற்ற போராட்டத்திலிருந்து பாடம் கற்போம்.

விவசாயம், நெசவு, சிறு தொழில், சிறு வணிகம் அழிக்கப்பட்டு வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகின்றது, இத்தகைய சூழலை முதலாளிகள் கூட்டம் பயன்படுத்திக் கொண்டு தொழிலாளிகளை அற்பக் கூலிக்கு கசக்கி பிழிகின்றான். அனைத்து துறைகளிலும் புதிய வடிவத்தில் காண்டிராக்ட் மயத்தை புகுத்துகிறான்.

மனித உழைப்பை சூறையாடும் அம்பானி, டாடா, பிர்லா, அதானி மற்றும் அன்னிய பன்னாட்டு கொள்ளை கும்பலுக்கு மோடியும், லேடியும் போட்டி போட்டுக்கொண்டு சேவை செய்கின்றனர். இதனை எந்த IAS,IPS அதிகாரிகளும் தடுப்பதற்கில்லை. இவர்களை ஒழிக்காமல் ஊழலை ஒழிக்க முடியாது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் பாதிபேர் கிரிமினல்கள். தே.மு.தி.க பிரேமலதா போன்ற கந்து வட்டி பேர்வழிகள், இவர்கள் எப்படி மக்களுக்காக போராடமுடியும். எனவே தேர்தல் பாதை நமது அன்றாட பிரச்சினைகளை தீர்க்காது. மக்களை சீரழிக்கும் மதுக்கடைகளை மூடாது. கல்வி, மருத்துவத்துறையில் நடக்கும் வியாபாரத்தைத் தடுக்காது. முதலாளிகளின் லாபவெறியால் 10- ஆண்டுக்கு ஒருமுறை சரிந்துவிழும் முதலாளித்துவ பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த முடியாது.

தோழர் மணலிதாஸ்
தோழர் மணலிதாஸ்

மரணப் படுக்கையில் கிடக்கும் இந்தியப் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த நலிவடைந்த முதலாளிகளுக்கு மக்களின் வரிப்பணத்தை வாரிவழங்கினால்தான் சாத்தியமென இந்திய ரிசர்வ் வங்கியின் தலைவர் ரகுராம் ராஜன் கூறியுள்ளார். இது எவ்வளவு பெரிய மோசடி என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு, அழுகிநாறும் அரசுக்கட்டமைப்பை மக்கள் அதிகாரத்தின் மூலம் அப்புறப் படுத்திவிட்டு மக்களே ஆழ்வதன் மூலம்தான் பிரச்சினைகளை தீர்க்க முடியும்” என தனது உரையை முடித்தார். தோழரின் பேச்சை கேட்ட ஒரு போலீசார் தன்னை அறியாமல் கைதட்டி ரசித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக ஆட்டோ ஓட்டுனர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் தோழர் மணலிதாஸ் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தின் இடைஇடையே போடப்பட்ட முழக்கங்கள், ம.க.இ.க.மையக் கலைக்குழுவின் புரட்சிகர பாடல்களும், தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் புரட்சிகர உணர்வை ஊட்டும் வகையில் அமைந்தது.

செய்தி:
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி

8. கோவை

கோவையில் மே தினப் பேரணி ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறையிடம் அனுமதி கோரிய போது “முதலமைச்சர் ஜெயலலிதா தேர்தல் பிரச்சாரம் செய்ய மாலை வருகிறார். எனவே நீங்கள் காலையில் நடத்திக் கொள்ளுங்கள்; மாலையில் தர முடியாது” என்றனர். “ஜெயலலிதாவை வேண்டுமானால் வழக்கம் போல் வெயிலில் நடத்தச் சொல்லுங்கள். நாங்கள் மாலையில் தான் நடத்துவோம்” என உறுதிபடக் கூறிவிட்டோம்.

தொழிலாளர் வர்க்கப் பாரம்பரியம் தியாகம் நிரம்பிய கோவை மாநகரில் சி‌.ஐ‌.டி‌.யு, ஏ‌.ஐ‌.டி‌.யு‌.சி போலிகள் வழக்கம் போல் மே தினத்தின் மகத்துவம் புரியாமல், அவர்களுடைய ஓட்டுப் பொறுக்கும் நிலைமைக்கு ஏற்ப விஜயகாந்தின் தொழிற்சங்கம், ம.தி.மு.க தொழிற்சங்கம் என இணைந்தும், மே தின ஊர்வலம் நடத்தினர். வெளிப்படையாக கம்யூனிஸ்ட் கட்சியிலும், தலைமறைவாக அ.தி.மு.க.விலும் அங்கம் வகிக்கின்ற தா.பாண்டியன் கலந்து கொண்டார். இது ஒன்றே போதும் அவர்கள் நடத்திய மே தினத்தின் அற்பத் தனத்தை புரிந்து கொள்ளலாம்.

நமது மே தின நிகழ்வு பாட்டாளி வர்க்கத்தின் எளிமை அதே சமயம் கம்பீரத்துடன் மாலை 5 மணிக்கு சிவானந்தா காலனி பவர் ஹவுஸ் முன்பிருந்து துவங்கியது பேரணி. மாவட்டச் செயலாளர் தோழர் திலீப் கொடியசைத்து துவக்கி வைத்தார். எஸ்‌.ஆ.ர்‌ஐ கிளை தோழர்கள் மோடி, பண்டாரு தத்தாத்ரேயா அருண் ஜெட்லி என முகமூடி அணிந்து காட்சி விளக்கத்துடன் பேரணியில் கலந்து கொண்டனர். ரோட்டில் போவோர் வருவோர் எல்லோரும் நின்று பார்க்கும் அளவுக்கு பேரணி மெதுவாக முன்னேறியது. ஜெயா கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அடுத்த ஐந்து கிலோ மீட்டர் தள்ளி கொடீசியாவில் நடந்தாலும் காவல் துறை, உளவுத் துறையினருக்கு அதை விட முக்கியமானது பு.ஜ.தொ.மு நிகழ்ச்சி என முடிவு செய்து கலந்து கொண்டு சிறப்பாக உளவு வேலை செய்தனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பேரணி முடிவில் சிவானந்தா காலனி பேருந்து நிறுத்தத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. மோடி, ஜெயா ஆட்சியை அகற்றாவிட்டால் இந்தியாவில் தொழிலாளர், மாணவர் விவசாயி பெண்கள் என அனைவரும் தூக்கு போட்டு தற்கொலைதான் செய்ய வேண்டும் என காட்சி விளக்க நாடகம் சிறப்பாக நடைபெற்றது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தோழர் கோபிநாத் தனது தலைமையுரையில் விவசாயம் சிறுவணிகம் நெசவு என துறைவாரியாக மோடி அரசு தனது கொடுங்கரங்களை நீட்டி உழைக்கும் மக்களை பலியிடுவதை தடுத்து கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவதை வலியுறுத்தி பேசினார்.

பு.ஜ.தொ.மு நீலமலை செயலர் தோழர் பாலன் தனது கண்டன உரையில், “எட்டுமணி நேர வேலையை நாலு மணி நேர வேலையாக மாற்ற வேண்டும். புதிய ஜனநாயகப் புரட்சியை நடத்துவதன் மூலமே இதனைச் சாதிக்க முடியும். இதுவே நமது மே தினச் சூளுரை” என முழங்கினார்.

மண்டல சங்கத் தோழர் ஜெகநாதன் தனது கண்டன உரையில், “கோவை நகரின் காற்றில் ஈரப்பதம் உள்ளது. கற்றாழை தாவரத்தை வீட்டில் கட்டி தொங்க வைத்தாலே காற்றின் ஈரப்பதத்தை உறிஞ்சியே அது வளரும். ஆனால் இப்போது காற்றில் ஈரப்பதம் இல்லை. கற்றாலழையை மண்ணில் நாட்டாலும் வளர மாட்டேங்குது. காரணம் மண்ணிலும் ஈரப்பதம் இல்லை மேற்கு தொடர்ச்சி மலையை யுனெஸ்கோ புராதானச் சின்னமாக அறிவித்து இருந்தது. இன்று அது அழியும் நிலையில் உள்ளது. பெண் போலீசார் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அரசுக் கட்டமைப்பு அழுகி நாறுவதன் வெளிப்பாடு இது. எனவே காவல்துறையினர் முதலில் தங்கள் துறையில் தற்கொலை நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். பிறகு வந்து எங்களை கண்காணிக்கலாம்” என நகைச்சுவையாக பேசி முடித்தார்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

பு.ஜ.தொ.மு தோழர் விளவை இராமசாமி தனது கண்டன உரையில்,

தோழர் விளவை ராமசாமி
தோழர் விளவை ராமசாமி

“எட்டு மணி நேர வேலையை தங்கள் போராட்டத்தின் தங்கள் தியாகத்தின் மூலம் உலகுக்கு வென்று கொடுத்தவர்கள் மே தினத் தியாகிகள்.

எட்டு மணி நேர வேலை மட்டுமல்ல இந்த முழு உலகமும் உழைக்கும் மக்களுக்கே சொந்தமாக வேண்டும் என முதலாவது அகிலம் முடிவெடுத்து மே நாளை உலகத் தொழிலாளர் தினமாக எங்கெல்ஸ் அறிவித்தார்.

இதன்படி எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர தூக்கம், எட்டு மணி நேர ஓய்வு என இருந்ததை சர்வதேச அகிலம் எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர தூக்கம், எட்டு மணி நேர அரசியல் என மாற்றி அமைத்தது.

மே நாள் என்பது கொண்டாட்ட நாள் அல்ல மே தின சபதம் எடுக்க வேண்டும். மே தினச் சூளுரை எடுக்க வேண்டும். இது வரை முதலாளித்துவத்தை முறியடிக்க என்ன செய்தோம்; இனிமேல் என்ன செய்ய வேண்டும் என கணக்கு பார்த்துக் கொள்ள வேண்டிய நாள் மே நாள்.

மே நாளுக்கு ஜெயா, கருணாநிதி, ரோசையா, விஜயகாந்த் வாசன் என எல்லோரும் வாழ்த்து சொல்கிறார்கள். இது போலி கம்யூனிஸ்டுகள் ஓட்டுப் பொறுக்க போனதால் வந்த ஒழுக்கக் கேடு. நம்முடைய முதல் மே தின சூளுரை ஜெயாவை மே தின வாழ்த்து சொல்ல அனுமதிக்க கூடாது என்பதாக இருக்க வேண்டும்.

குற்றவாளி ஜெயா இப்போது கொடிசியாவில் காசு கொடுத்து கூட்டம் சேர்த்து பேசிக் கொண்டிருக்கிறார். பாசிஸ்டுகளுக்கு வரலாறு கொடுத்த தண்டனை என்ன? இத்தாலி பாசிஸ்டு முசோலினியை செம்படை தூக்கில் ஏற்றியது, செத்த பிறகு அவன் பிணத்தை எல்லோரும் காறித் துப்ப வேண்டும் என நாலைந்து நாள் தொங்க விட்டார்கள். வெயிலும் மழையிலும் இரவிலும் பகலிலும் தூக்கில் உயிர் போன பிறகும் தொங்கினான். இதனை கேள்விப்பட்ட ஹிட்லரும் நம்மையும் இதே போல்தான் தொங்க விடுவார்கள் என்று பயந்து தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டான். அனைத்து சர்வாதிகாரிகளுக்கும் இதே முடிவு தான் நேரிடும். ஜெ வுக்கு இதைத்தான் வரலாறு பரிந்துரைக்கும் இதனை உருவாக்க நாம் மே தினச் சூளுரை எடுக்க வேண்டும்.

kovai-may-day-banners-6வர்க்கப் போராட்டத்தை மட்டும் ஏற்றுக் கொள்பவர் மே தின சபதம் எடுக்கும் தகுதியை பெற முடியாது. தொழிலாளர் சம்பளம் போனஸ் வேண்டும் என்பவர் மே தின சூளுரை எடுக்கும் தகுதியை பெற முடியாது. வர்க்கப் போராட்டத்தை பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் எனும் அளவுக்கு வளர்த்துச் செல்பவர் எவரோ அவரே உண்மையான கம்யூனிஸ்டு. கம்யூனிஸ்‌டுகளுக்கு தான் மே தின சூளுரை எடுக்கும் அருகதை உண்டு பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை நோக்கிய நமது பயணத்தை வேகப்படுத்த வேண்டும். இதுவே நமது மே தினச் சூளுரை.

இந்த மே தினச் சூளுரையே விவசாயம்-நெசவு-சிறுவணிகம் சிறு தொழில்களை அழித்து காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்தும் கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவு கட்டுவோம் என்பதுதான்.

இப்போது கோவை நகரில் வெயில் கொளுத்துகிறது கோவை நகரம் மட்டுமல்ல தமிழ்நாடே வெயிலில் தவித்துக் கொண்டிருக்கிறது. ஏறத்தாழ எல்லா மாவட்டங்களிலும் வெயில் சதமடித்துவிட்டது இதற்கு என்ன காரணம்? தானாகவே நடந்து விட்டதா? இல்லை., இதற்கு கார்பரேட் முதலாளிகளே காரணம். ஆந்திராவில் 2015ஆம் ஆண்டு வெயில் கொடுமையால் ஆயிரம் பேருக்கு மேல் மாண்டார்கள். இந்த ஆண்டும் இதுவரை 140 பேர் மாண்டு போனார்கள். கரீம் நகரில் அடுப்பில்லாமல் தரையில் முட்டையை உடைத்து ஊற்றினால் வெப்பத்தில் ஆம்லெட் ஆக மாறுகிறது அதைப் போல கோவையையும் நாம் போராடா விட்டால் மாற்றி விடுவார்கள்.

kovai-may-day-banners-3மேற்கு தொடர்ச்சி மலையின் குழந்தைகள் நாம். மேற்கு தொடர்ச்சி மலைகள் ஈரமான காற்றை அனுப்பி கோவையை தென்னிந்தியாவின் மான்செஸ்டர் ஆக்கியது மேற்கு தொடர்ச்சி மலைகள் சிறுவாணியை நமக்கு அனுப்பி நமது மாநகரத்தை மகிழ்ச்சிக்குள்ளாக்குகிறது அது நொய்யலை அனுப்பி நமது புறநகர் பகுதியை தென்னை வாழைத் தோப்புகளாக்கியது பவானி நதியை அனுப்பி நம்மை பரவசப்படுத்தியது. குடிநீர்த் தேவையையும் பூர்த்தி செய்கிறது. நொய்யல் நதியின் கழுத்தை நெரித்துக் கொன்ற குற்றவாளிகள் யார்? உள்ளூர் முதலாளிகளும் கார்ப்பரேட் முதலாளிகளும் தான். நொய்யல் என்பது கோவையின் பெருமை நொய்யல் காவிரித் தாயின் பெரிய மகள் நல்லது கெட்டதுக்கு பேரூர் போனால் 20 வருடங்களுக்கு முன்னாள் நொய்யல் நாணல் புதர்களினூடாக நாணி நடந்து வருவாள். ஒரு சொம்பில் துணியால் தலைப்பாகை கட்டி மொண்டு குடித்தால் தொண்டைக் குழியில் தேனாக இறங்குவாள். இன்று., நொய்யல் அங்கே அய்யோ நதியை பேரூரில் காண முடியவில்லை. நொய்யல் ஆற்றங்கரையில் இறந்தவர்களுக்கு பார்ப்பனர்கள் காசு வாங்கி திதி கொடுப்பார்கள். பார்ப்பனர்கள் பேரூரில் சங்கமே அமைத்திருந்தார்கள். ஆக கடைசியில் நொய்யலுக்கும் திதி கொடுத்துவிட்டு வேறுபக்கம் போய் விட்டார்கள். நதியை கொன்றவனை நாம் நாசம் செய்ய வேண்டும். இதுவே மே தினச் சூளுரை.

kovai-may-day-banners-1பவானி நதியில் சாயக்கழிவு நீரை கலந்தவன், விஸ்கோஸ் கழிவு நீரை கலந்தவன், மேற்கு தொடர்ச்சி மாலையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் வாங்கி தியானலிங்கம் அமைத்து காட்டை அழிப்பவன் யார்? ஜக்கி வாசுதேவ். ஜக்கி வாசுதேவுக்கு சொம்பு தூக்குவது யார் ? கோவையின் எழுத்தாளர்கள், முதலாளிகள் தாமிரா ரிசார்ட் உரிமையாளர் சிறுதுளி வனிதா மோகன், சின்மயானந்தா மிஷன், காருண்யா தினகரன் இந்த கூட்டம் தான் மேற்கு தொடர்ச்சி மலையை அழித்துக் கொண்டிருப்பவர்கள். இவர்களை விரட்டி அடிக்க வேண்டும். இன்றே இப்போதே செய்ய வேண்டும். இல்லையென்றால் நொய்யலை அழித்ததை போல பவானியையும் அழித்து விடுவார்கள் சிறுவாணியையும் இல்லாமல் செய்து விடுவார்கள். சிறுவாணி இல்லாத கோவையை கற்பனை செய்து பாருங்கள். மேற்கு தொடர்ச்சி மலையின் பாதுகாப்பு இல்லாத, ஈரக்காற்று இல்லாத கோவையை கற்பனை செய்து பாருங்கள் இவை எல்லாம் அழிந்து விட்டால் கரீம் நகரில் நடப்பது போல் கோவை வீதிகளிலும் ஆம்லெட்தான் போட வேண்டும்.

kovai-may-day-23இவையெல்லாம் நடக்காது. கூடுதலாக பயமுறுத்துகிறார் என சிலர் நினைக்கலாம். அவர்களைப் பார்த்து நாம் கேட்கிறோம் தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோவையில் நூற்றுக்கணக்கான மில்கள் மூடப்படும் என்று யாராவது நினைத்தீர்களா? ஆனால் மூடப்பட்டு விட்டதே! தலையில் பஞ்சோடும், கையில் வெற்றிலை செல்லத்தொடும் பஞ்சாலைகளில் வேலை முடித்து கோவை நகர வீதிகளை அலங்கரித்த நம் தாய்மார்கள் எங்கே? ஆஃப் நைட், ஃபுல் நைட் பகல் என பஞ்சாலைகளில் வேலை முடித்து அல்லும் பகலும் நடமாடி, டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசி கோவை நகரத்தை தூங்கா நகரமாக்கிய பஞ்சாலைத் தொழிலாளர்கள் எங்கே? இதுவெல்லாம் நடக்கும் என நினைத்தோமா? ஆனால் நடந்து விட்டதே! அது போலத்தான் இனியும் அமைதியாக இருந்தால் போராடாமல் இருந்தால் நகரை நாசமாக்கி விடுவார்கள். நமது முன்னோர்கள், நமது பெற்றோர் நமக்கு மலையையும் நதியையும் காப்பாற்றி நமக்குக் கொடுத்து விட்டு போனார்கள். நாம் நம் குழந்தைகளுக்கு என்ன கொடுக்கப் போகிறோம். சிறுவாணி இல்லாத கோவையா தரப்போகிறோம். எனவே இன்றே இப்போதே போராட்டத்தை ஆரம்பிக்க வேண்டும். கார்ப்பரேட் முதலாளிகளையும் கார்ப்பரேட் சாமியார்களையும் அடித்து விரட்ட வேண்டும் இதுவே நமது மே தினச் சூளுரை

kovai-may-day-banners-1இந்திய வனச் சட்டத்தை திருத்தி 10 கோடி ஹெக்டேர் நிலத்தை ரிசர்வ் பாரஸ்டை பராமரிப்புக்கு தனியாருக்கு கொடுக்கப் போகிறான். இயற்கையையும் மனித குலைத்தையும் ஒரு சேர அழிக்கின்ற கார்ப்பரேட் கொள்ளைக் கூட்டத்தை இந்த மண்ணிலிருந்தே காலி செய்ய வேண்டும். பேஸ்புக், டிவிட்டர் பின்னூட்டம் நிலைத் தகவல் மூலம் அல்ல. களமாடி சிறை சென்று போராட வேண்டும்.

மத்திய அரசின் செலவுகளை குறைக்கும் நடவடிக்கையாக நஷ்டத்தில் இயங்கும் பொதுத் துறை நிறுவனங்களை விற்க மோடி அரசு திட்டமிடுகிறது. தமிழ் இந்து ஏப்.25 இல் செய்தி வந்துள்ளது. 77 பொதுத் துறை நிறுவனங்கள் 27,360 கோடி நட்டத்தில் இயங்குகிறது இதில் கோவையில் இயங்கும் 5 என்‌.டி‌.சி மில்களும் அடக்கம்.

விஜய் மல்லையா என்ற ஒருவனின் வாராக்கடன் சுமார் 9,000 கோடி ரூபாய் அம்பானி வைத்திருப்பதோ 40,000 கோடி ரூபாயை நெருங்குகிறது. 2015 மார்ச் வரை 2.67 இலட்சம் கோடி ரூபாய் வாராக்கடன் மத்திய அரசுக்கு உள்ளது. (தமிழ் இந்து – செப்.28-15) இதை வசூல் பண்ண துப்பில்லை 27,300 கோடி ரூபாய் நட்டத்துக்காக பொதுத் துறையை விற்பது என்‌.டி‌.சி.யை மூடுவது பச்சை அயோக்கியத்தனம்.

kovai-may-day-banner-8ஆக மக்களுடைய, தொழிலாளர்களுடைய பணத்தை வாரியாக பெற்று முதலாளிகளுக்கு கடனாக கொடுத்து விட்டு அதனை வசூலிக்க துப்புக் கேட்ட மோடி கும்பல் பொதுத் துறையை விற்கிறான் இதில் யார் தேசத் துரோகி ? பொதுத் துறையை விற்கிற புரோக்கர் வேலைக்கு உன்னை எதற்கு நாங்கள் ஓட்டு போட்டு பிரதமர் முதலமைச்சர் என்று ஆக்கணும்.

நட்டம் என்று சொல்லி இவர்கள் இதுவரை இவ்த்த விற்கப்போற பொதுத் துறை நிறுவனங்களை இவ்வளவு பெரிய இந்திய அரசை விட திறம்பட நிர்வாகம் பண்ணி ஒரு தனியார் முதலாளி லாபம் கொண்டு வர முடியும் என்றால் என்ன அர்த்தம் ?

இத்தனை அறிவாளிகள், அருண் ஜெட்லி, ஐ‌ஏ‌எஸ் ஐ‌பி‌எஸ் அதிகாரிகளை வைத்து அரசாளுகிற உன்னை விட ஒரு தனியார் சிறப்பாக செயல்பட முடியும் என்றால் என்ன பொருள் ?

அரசு மருத்துவ மனையை தனியாருக்கு கொடுக்கிறாய்; அரசுக் கல்லூரியை தனியாருக்குக் கொடுக்கிறாய்; உன்னோட அரசை விட ஒரு தனியார் லாபகரமாக செயல்படுத்த முடியுது என்றால் என்ன பொருள் ?

ஆக, எந்த ஒரு நிர்வாகத்தையும் உன்னை விட உன் அரசை விட தனியார் சிறப்பாக செய்ய முடியுமென்றால் உன்னை எதுக்கு நாங்கள் ஓட்டுப் போட்டு தேர்ந்தெடுக்க வேண்டும். அம்பானிக்கும் அதானிக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லி விட வேண்டியது தானே?

உன்னாலே முடியலை என்று நீயே சொல்லிவிட்டப் பின்பு ஒதுங்கிக் கொள்வதுதான் உனக்கு மரியாதை, இல்லையென்றால் ஒதுங்க வைக்கும் தொழிலாளி வர்க்கம். அதற்கு ஒரு சின்ன டீஸர் தான் பெங்களூரு தொழிலாளர் போராட்டம். தொழிலாளர்கள் வர மாட்டார்கள் என்று எவனாவது சொன்னால் பளார் என்று அவன் முகத்தில் அடிக்க வேண்டும். பெங்களூர் கார்மெண்ட்ஸ் தொழிலாளர்கள் எப்படி போராட வந்தார்கள்; போராடி வெற்றி கண்டார்கள். உனக்கும் எனக்குமான வருங்கால வைப்பு நிதியை களவாட சட்டம் போட்ட மோடி கூட்டத்தை சட்டையை பிடித்து உலுக்கினார்கள். இதற்கு பதில் சொல் என்று அவநம்பிக்கை வாதிகளைக் திருப்பி கேட்க வேண்டும்.

பெங்களூர் தொழிலாளர் போராட்டம், அதுவும் பெண்கள் நடத்திய போராட்டம். இந்திய தொழிற் சங்க வரலாறு இருண்டு கிடந்தது. அதில் ஒளிக்கீற்றாக உதயமாகி உள்ளது. இதிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும். மூணார் தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் போராட்டத்தில் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். ஆனைகட்டி போராட்டங்களிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும்.

அது போல நாமும் திரண்டு போராடினால் நம் உரிமைகளை பெற முடியும். கார்ப்பரேட் முதலாளிகளை வீழ்த்த முடியும்.

1887-ல் தூக்கில் ஏற்றப்பட்ட மே தினத் தியாகிகளில் ஒருவரான தோழர் அகஸ்டஸ் ஸ்பைஸ் தூக்கு மேடையில் நின்று முழங்கினார்.,

“இன்று நீங்கள் எங்கள் கழுத்தை நெரிக்கலாம் குரலை முடக்கலாம்; ஆனால், எங்கள் மவுனம் ஆற்றல் மிகுந்த சக்தியாக வெளிப்படும் காலம் வரும்”

தோழர் அகஸ்டஸ், உங்கள் மவுனத்தை இங்கே சிவானந்தா காலனியில் ஆர்ப்பாட்டம் மூலம் மொழி பெயர்க்கிறோம். ஆற்றல் மிக்க சக்தியாக உருமாறி இயற்கையை மனித குலத்தையும் நாசம் செய்கிற முதலாளித்துவத்தை அழிப்போம் என்று சூளுரைக்கிறோம்.”

என்று முடித்தார்.

இறுதியாக பு.ஜ.தொ.மு கோவை மாவட்ட இணைச் செயலர் தோழர் நித்தியானந்தனின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை

9. மதுரை

கார்ப்பரேட் காட்டாட்சியை ஒழிக்க மே நாளில் சூளுரைப்போம் !

மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய புரட்சிகர அமைப்புகள் இணைந்து மதுரை யா.ஒத்தக்கடையில் மே நாள் பேரணி, ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது.

தேர்தலை காரணம் காட்டி காவல் துறை பேரணிக்கு மட்டும் அனுமதி கொடுத்தது. ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி இல்லை.

மே நாள் அன்று, காலை 11 மணியளவில் கொளுத்தும் வெய்யிலை பொருட்படுத்தாமல் விண்ணதிரும் முழக்கங்களுடன் பேரணியாக புறப்பட்டது தொழிலாளர் வர்க்கப் படை. பேரணிக்கு பு.ஜ.தொ.மு தோழர் பிரகாஷ் தலைமை தாங்கினார். வி.வி.மு தோழர் போஸ் பேரணியை துவக்கி வைத்தார்.

சிறுவர்கள், பெண்கள், முதியவர்கள், இளைஞர்கள் உணர்வுபூர்வமாக பேரணியில் பங்கேற்றனர். தோற்று, திவாலாகி அழுகி நாறும் இந்த அரசு கட்டமைப்பு முற்றிலும் மக்கள் விரோதமாக மாறிவிட்டதையும், தேர்தல் ஒரு பித்தலாட்டம் என்பதையும் மக்கள் அதிகார அலகுகளை உருவாக்குவதே மாற்று என்பதையும் ஒத்தக்கடை மக்களுக்கு எளிமையாகவும், எழுச்சிகரமாகவும் புரிய வைத்தன பேரணி முழக்கங்கள். அப்பகுதி மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடந்தது.

பேரணி முடிவில் ஆர்ப்பாட்டம் அனுமதி இன்றி நடத்தப்பட்டது. ம.க.இ.க மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கதிரவன் சிறப்புரை ஆற்றினார். 131 ஆண்டுகளுக்கு முன்னர் சிகாகோ தொழிலாளர்கள் ரத்தம் சிந்தி, உயிர் கொடுத்து பெற்றுத்தந்த உரிமைகளை, இன்று கார்ப்பரேட் கம்பெனிகளும், அவர்களின் கூஜா மோடியும் எப்படி காலில் போட்டு மிதிக்கின்றனர் என்பதையும், விளக்கினார். இனியும் வேடிக்கை பார்க்க முடியாது, இது போராடும் தருணம் என்பதை உணர்த்தும் வகையில் எழுச்சி உரையாற்றினார். பு.ஜ.தொ.மு தோழர் போஸ் நன்றி கூற ஆர்ப்பாட்டம் நிறைவடைந்தது.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
விவசாயிகள் விடுதலை முன்னணி,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
மதுரை.

டாஸ்மாக் – கேலிச்சித்திரங்கள்

0

செய்தி: 2016 இல் 29,672 கோடிக்கு மது விற்பனை!

– தமிழக அரசு இலக்கு

அனுமதிக்கப்பட்ட
அனுமதிக்கப்பட்ட அளவை விட குறைவா குடித்திருப்பதால், உங்களை கைது செய்கிறேன்!
UKG பசங்களோட சேர்ந்து குடிச்சதை கண்டிச்சது உண்மைதான்... அதுக்காக போலீசு அங்கிளை கூப்பிடுவேன்னு மிரட்டறது கொஞ்சமும் நல்லா இல்லே!...
UKG பசங்களோட சேர்ந்து குடிச்சதை கண்டிச்சது உண்மைதான்…
அதுக்காக போலீஸ் அங்கிளை கூப்பிடுவேன்னு மிரட்டறது கொஞ்சமும் நல்லா இல்லே!…

கேலிச்சித்திரம் – சர்தார்.

தேர்தல் : எத்தனை முறை ஏமாறுவீர்கள் ?

2

2011 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி வெளியிடப்பட்ட இச்சிறு வெளியீடு, தேர்தல் புறக்கணிப்பு குறித்து எளிய மொழியில் மக்களிடம் விளக்குகிறது. கட்சிகள், தலைவர்கள், இலவசங்கள், முதலாளிகள், அரசுகள், மட்டுமல்ல இங்கே மக்களும் கூட விமரிசிக்கப்படுகிறார்கள். நீண்ட கட்டுரை, பொறுமையாக படியுங்கள்.

-வினவு

  1. ஓட்டுப் போடாதே புரட்சி செய்!

இது 13 வது சட்டமன்றத் தேர்தல். மீண்டும் வாக்களிக்கப் போகிறீர்களா? ஒரு முறை ஏமாறுவது மனிதனுக்கு இயல்பு; இரண்டு முறை ஏமாறுபவன் ஏமாளி; மூன்று முறை ஏமாந்தால் அவனை முட்டாள் என்றும் சொல்லலாம்.12 முறை ஏமாற்றப் பட்டபிறகும் சொரணையில்லாமல் பல்லிளித்துக் கொண்டு ஓட்டுப் போடச் செல்பவர்களை என்ன பெயரிட்டு அழைப்பது?

may_dayஅப்பன், பாட்டன், கொள்ளுப்பாட்டன் என்று மூன்று தலைமுறைகள் ஏமாந்த பிறகும் புத்தி வராமல்,”அன்பார்ந்த வாக்காளப் பெருமக்களே” என்ற சத்தம் கேட்டவுடனே நான்காவது தலைமுறையும் ஓடுகிறது; மசால் வடைக்கு மயங்கும் எலியைப்போல வாக்குச்சாவடியின் முன்னால் வரிசையில் நிற்கிறது. இந்த மானக்கேட்டை யாரிடம் சொல்லி அழுவது?

தேர்தல் என்ற அறிவிப்பு வந்தவுடன் கரண்டு கம்பத்தைக் கண்டால் காலைத்தூக்கும் தெருநாயைப் போல, தானாக வந்து ஓட்டுப் போடுவான் என்று நம்மைக் கேவலமாக நினைக் கிறார்களே ஓட்டுப் பொறுக்கிகள், இந்த அவமானத்திற்கு எப்போதுதான் முடிவு கட்டுவது?

பழனிக்கும் திருப்பதிக்கும் மொட்டை போடும் பக்தன் கூட தன்னுடைய நம்பிக்கைக்கு ஒரு விளக்கம் சொல்கிறான். “இந்தச் சாமிக்கு நேர்ந்து கொண்டால் இது நடக்கும்” என்று நம்பவும் செய்கிறான். ஆனால் 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்குச் ‘சாவடியில்’தவறாமல் மொட்டை போட்டுக் கொள்ளும் வாக்காளனுக்கோ இந்தத் தேர்தலின் மீது அப்படியொரு நம்பிக்கை கூடக் கிடையாது.

“எவன் வந்தாலும் விலைவாசி குறையப் போவதில்லை, விவசாயம் விளங்கப் போவதில்லை, வேலை கிடைக்கப் போவதில்லை, லஞ்சம் ஒழியப் போவதில்லை, ஊழல் குறையப் போவதில்லை” என்று ஆணித்தரமாகப் பேசுகிறான். “அப்புறம் எதற்காக ஓட்டுப் போடுகிறாய்?” என்று கேட்டால், “வேறென்ன செய்ய முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்கிறான். வாக்குரி மையை ‘வேஸ்ட்’ ஆக்காமல் யாராவது ஒரு திருடனுக்குக் காணிக்கையாகச் செலுத்திவிட வேண்டுமென்று துடிக்கிறான்.

“ஓட்டுப் போடவில்லையென்றால் செத்ததுக்குச் சமமாமே” என்று பாமரத்தனமாகச் சிலர்அஞ்சுகிறார்கள். இது உண்மை யென்றால் மன்மோகன் சிங் செத்த இடத்தில் புல் முளைத்திருக்க வேண்டும். 3 தேர்தலாக ஓட்டுப்போடாத மன்மோகன்சிங் தான் இந்த நாட்டின் பிரதமர். தேர்தல் ஒரு நாடகம் என்றும் எவன் ஜெயித்தாலும் அந்த ஆட்சி நம்ம ஆட்சிதான் என்றும் தெளிவாகப் புரிந்து வைத்திருக்கும் டாடா பிர்லா போன்ற பெரு முதலாளிகள் முதல் உள்ளூர்ப் பணக்காரர்கள் வரை யாரும் எப்போதும் ஓட்டுப் போடுவதில்லை. கொளுத்தும் வெயிலில் வரிசையில் நின்று இந்த ‘ஜனநாயகத்தை’க் காப்பாற்றுவது பாமர மக்கள்தான்.

ஏனென்றால், “தேர்தலைப் புறக்கணித்து விட்டால் இருக்கின்ற ஒரே ஒரு பிடியையும் நாம் இழந்துவிடுவோம். ஜெயலலிதா சரியில்லை என்றால் கருணாநிதியைக் கொண்டு வரலாம், சோனியா சரியில்லை என்றால் வாஜ்பாயியைக் கொண்டு வரலாம். புறக்கணிப்பதன் மூலம் என்ன சாதித்து விடமுடியும்? வேறென்ன வழி இருக்கிறது?”என்று எண்ணுகிறான் வாக்காளன்.

தேர்தல் தோல்வி என்பது ஓட்டுப் பொறுக்கிகளுக்கு விதிக்கப்படும் தண்டனை அல்ல, இன்று தோற்றாலும் நாளை நாம்தான் என்று ஐந்தாண்டுகள் அவர்கள் ஓய்வெடுத்துக் கொள்கிறார்கள். ஆட்சிக்காலத்தில் அடித்த கொள்ளையை அனுபவிக்கிறார்கள். தத்தம் தொழிலை அபிவிருத்தி செய்துகொள்கிறார்கள். ஐந்தாண்டுகளுக்குப் பின் மீண்டும் அரியணை ஏறுகிறார்கள்.

“மக்களுக்குத்தான் இதை விட்டால் வேறு வழியில்லை” என்ற சலிப்பு! ஓட்டுக் கட்சிகளுக்கோ “நம்மை விட்டால் மக்களுக்கு வேறு நாதி இல்லை” என்ற இறுமாப்பு!

தேர்தலைப் புறக்கணிக்க மக்கள் தயங்கலாம். ஆனால் மக்களின் இந்தக் கையறு நிலையைப் பயன்படுத்திக் கொண்டுதான் கடந்த 50 ஆண்டுகளாக இந்த நாட்டின் பெரும்பான்மை மக்களை மிகவும் அலட்சியமாகப் புறக்கணித்து வருகிறது தேர்தல் அரசியல்.

தொடர்ந்து நம்மைப் புறக்கணித்து வரும் இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலை நாம் ஏன் புறக்கணிக்க மறுக்கிறோம் என்பதுதான் எங்களது கேள்வி.

  1. வாக்காளர்களா, பிச்சைக்காரர்களா?

jayalalitha_give_riceகலர் டிவி, கிலோ 2 ரூபாய்க்கு அரிசி, 2 ஏக்கர் நிலம்” என்று வாக்குறுதி தருகிறார் கருணாநிதி. “இலவச சைக்கிள் கொடுத்தேன், பாடநூல் கொடுத்தேன், வெள்ள நிவாரணம் கொடுத்தேன், கோயிலில் அன்னதானம் போட்டேன், இலவசத் திருமணம் நடத்திவைத்தேன்” என்று சாதனைப் பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா. “மாதம் 15 கிலோ அரிசி இலவசமாகத் தருகிறேன், அதையும் வீட்டுக்கே கொண்டு வந்து தருகிறேன், கல்யாணம் பண்ணி வைத்து பிள்ளை பெத்தால் அதற்கும் பணம் கொடுக்கிறேன்” என்கிறார் நடிகர் விஜயகாந்த்.

இந்த வாக்குறுதிகளைப் படிப்பவர்கள், தமிழ்நாட்டு மக்களில் பெரும்பாலானோர் பிச்சைக்காரர்கள் என்ற முடிவுக்குத்தான் வர முடியும்.இப்படி எல்லாவற்றையும் இலவசமாக அள்ளி அள்ளிக் கொடுத்தால் அரசாங்க கஜானாவே காலியாகி விடுமென்று ஆத்திரம் பொங்க பத்திரிக்கைகளில் எழுதுகிறார்கள் திமிர் பிடித்த மேட்டுக்குடி அறிவாளிகள்.

யாருடைய பணத்திலிருந்து நமக்கு இந்த ‘இலவசங்களை’ வழங்குகிறார்கள் ஓட்டுப் பொறுக்கிகள்? அரசாங்க கஜானாவில் சேரும் வரிப்பணத்தில் ஆகப்பெரும்பகுதி ஏழை- நடுத்தர மக்கள் கொடுக்கும் மறைமுக, நேர்முக வரிப்பணம்தான். ஏழை களின் வரிப்பணத்திலிருந்து ஏழைகளுக்குச் செலவிடுவதை ‘இலவசம்’ என்று எப்படி அழைக்க முடியும்?

இலவச சைக்கிளுக்கு 83 கோடி, பாடநூலுக்கு 113 கோடி, சத்துணவுக்கு 850 கோடி, உழவர் பாதுகாப்புத் திட்டத்துக்கு 300 கோடி – என்று பட்டியல் படிக்கிறார் ஜெயலலிதா.

போர்டு, ஹ¥ண்டாய், கோகோ கோலா போன்ற பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலமும், தண்ணீரும், மின்சாரமும், சாலை வசதிகளும் செய்து கொடுத்து அவர்களுக்கு வரிச் சலுகை களையும் வாரி வழங்கியிருக்கிறது ஜெ அரசு. மக்களுடைய வரிப்பணத்திலிருந்து பன்னாட்டு முதலாளிகள் ஒவ்வொரு வருக்கும் எத்தனை ஆயிரம் கோடி சலுகைகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்ற இரகசியத்தை ஜெயலலிதா வெளியிடுவாரா? ‘முதலாளிகளுக்கான இலவசத் திட்டங்கள்’ என்று இவை அழைக்கப் படுவதில்லையே, ஏன்?

2004-05 ஆம் ஆண்டில் மட்டும் பன்னாட்டு முதலாளிகள் மற்றும் இந்தியத் தரகு முதலாளிகளுக்கு ப.சிதம்பரம் வழங்கி யுள்ள வரித்தள்ளுபடி 1,58,661 கோடி ரூபாய் என்கிறது முதலாளி வர்க்கத்தின் பத்திரிகையான பிசினஸ் ஸ்டாண்டர்ட். ஆனால் இதே ஆண்டில் நாடு முழுவதும் உள்ள மக்களின் ரேசன் அரிசிக்காக சிதம்பரம் வழங்கிய மானியம் ரூ.25,000 கோடி மட்டும்தான். யார் வழங்கும் மானியத்தில் யார் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரிகிறதா?

tv_kalaignarஆண்டொன்றுக்கு டாஸ்மாக்கின் மொத்த விற்பனை 24,000 கோடி என்கிறார் ஜெயலலிதா. இதில் அரசுக்குக் கிடைக்கும் ஆண்டு வருவாய் சுமார் 5000 கோடியாம். என்றால், சசிகலாவின் சாராயக் கம்பெனி அடித்த லாபம் எத்தனை ஆயிரம் கோடி? சாராயத்தில் வரவு 5000 கோடி, சத்துணவுக்குச் செலவு 850 கோடி. இந்த அயோக்கியத் தனத்துக்குப் பெயர் இலவசத் திட்டமாம்!

தமிழகம் இந்தியாவிலேயே முதல் மாநிலமாகிக் கொண்டிருக்கிறது என்றும் இதைச் சாதித்தது நான்தான் என்றும் ஜெயலலிதாவும் கருணாநிதியும் இந்தப் பெருமைக்குப் போட்டி போடுகிறார்கள். ஆனால், ஒவ்வொரு தேர்தலுக்கும் இத்தகைய ‘இலவச’த் திட்டங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. இதுதான் தமிழகத்தின் முன்னேற்றமா?

கிலோ 2 ரூபாய்க்குக் கிடைக்கும் புழுத்த அரிசியில்தான் கஞ்சி குடிக்க முடியும் என்ற அளவிற்கு மோசமான வறுமை நிலையில் தமிழ்நாட்டின் பல கோடி மக்கள் வைக்கப்பட்டிருப் பது ஏன்? நிலமில்லாத கூலி விவசாயி மட்டுமல்ல, தன்னுடைய நிலத்தில் நெல் பயிரிடும் விவசாயி கூட சொந்த நிலத்தில் விளைந்ததை வந்த விலைக்கு விற்று விட்டு, இந்த 2 ரூபாய் புழுத்த அரிசியை எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? எதை நட்டாலும் விவசாயம் விளங்காத போது கருணாநிதி கொடுக்கவிருக்கும் புறம்போக்கு நிலத்தில் யாரை நடுவது?

பெற்ற பிள்ளைக்குத் திருமணம் செய்யவும், கட்டிய மனைவிக்கு சேலை எடுத்துக் கொடுக்கவும், அவளுக்குப் பிரசவம் பார்க்கவும் விஜயகாந்த் பணம் கொடுக்க வேண்டிய நிலைமைதான் 12 தேர்தல்களில் நாம் கண்ட முன்னேற்றமா?

2000 ரூபாய் காசுக்காக சென்னை நகரில் 50 பேர் மிதிபட்டுச் செத்திருக்கிறார்களே, மக்களை இந்த அவலமான வாழ்க்கை நிலைக்கு விரட்டியது யார்?

ஜெயலலிதா கூட்டத்துக்குப் போனால் சோறு போட்டு 100 ரூபாய், ஸ்டாலின் கூட்டத்துக்குப் போனால் சேலை, இன்னொரு மந்திரி கூட்டத்துக்குப் போனால் 2 கிலோ அரிசி, புரட்சித் தலைவி பிறந்த நாளுக்கு அன்னதானம்… என்று எட்டுத்திக்கும் பிச்சை யெடுத்துத் திரிய வேண்டிய மானங்கெட்ட நிலைமை மக்களுக்கு ஏன் ஏற்பட்டது?

இப்படிப்பட்ட கேள்விகளை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் எழுப்புவதில்லை. இலவச டிவி கொடுக்க முடியுமா முடியாதா, 2 ரூபாய் அரிசி போட முடியுமா முடியாதா என்று அனல் பறக்கும் விவாதம் நடத்துகிறார்கள். பண்ணையார்களிடம் பொங்கல் இனாம் வாங்கப்போன பண்ணையாட்களைப் போல மக்களைத் தங்கள் முன்னால் கையேந்தி நிற்க வைக்கிறார்கள் இந்த ஓட்டுப் பொறுக்கிகள்.

தாம் சொந்தமாகச் சம்பாதித்த காசிலிருந்து பழனி படிக்கட்டில் காத்திருக்கும் பிச்சைக்காரர்களுக்கு தருமம் செய்கிறார்கள் பக்தர்கள். ஆனால் ஓட்டுப்பொறுக்கிகளோ, நம்மைக் கொள்ளையடித்த பணத்திற்குச் சில்லறை மாற்றி 50, 100, 500 என்று நமக்கே விட்டெறிகிறார்கள். இவர்களுக்கு எப்படி வந்தது இந்தப் பணம்?

jayalalitha_give_mixieஅரசாங்க காண்டிராக்டில் அடித்த கொள்ளை, காடுகளையும் மலைகளையும் வெட்டி விற்ற காசு, புறம்போக்குகளை விற்று ரியல் எஸ்டேட்டுகளாக மாற்றிக் குவித்த பணம், ரேசன் அரிசி,வெள்ள நிவாரணம், வறட்சி நிவாரணம்,வளர்ச்சித் திட்டங்கள் அனைத்திலும் சுருட்டிய மக்களின் வரிப்பணம், அரசாங்க அதிகாரிகள் வாங்கும் லஞ்சப்பணத்தில் வசூலிக்கும் கப்பம், சட்டவிரோத சமூக விரோதத் தொழில்கள், போலீசுடன் கூட்டு சேர்ந்து நடத்தும் கட்டைப் பஞ்சாயத்து கலெக்சன், இவையனைத்துக்கும் மேலாக பன்னாட்டு முதலாளிகளிடம் நாட்டைக் கூட்டிக் கொடுத்து வாங்கிய கமிசன்…….. என்று இவர்கள் சூறையாடிய பொதுச் சொத்துதான் தொகுதிக்கு 4 கோடி 5 கோடி என ஆறாய்ப் பெருக்கெடுத்து ஓடுகிறது.

முன்னர் முதலாளிகளிடம் லஞ்சம் வாங்கித் தின்று கொண்டிருந்த ஓட்டுப்பொறுக்கிகள், தனியார்மய, தாராளமயக் கொள்கைகள் அமலாகத் தொடங்கிய பின்னர் தாங்களே முதலாளிகளாக மாறத் தொடங்கிவிட்டார்கள். கந்து வட்டிக் காரர்கள், காண்டிராக்டர்கள், ரியல் எஸ்டேட் முதலாளிகள், சினிமா தயாரிப்பாளர்கள், தண்ணீர் வியாபாரிகள், கிரானைட் அதிபர்கள், பஸ் கம்பெனி அதிபர்கள், சுயநிதிக் கல்லூரி முதலாளிகள், பன்னாட்டுக் கம்பெனிகளின் ஏஜெண்டுகள் .. என இந்த ஓட்டுப் பொறுக்கித் தொழிலதிபர் களின் கொள்ளை லாபம் பன்மடங்கு அதிகரித்து விட்டது.

இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காகத் தன்னுடைய சாராயக் கம்பெனி லாபத்திலிருந்து, ஜெயா-சசி கும்பல் ஓட்டுக்கு 1000 ரூபாய் கூடக் கொடுக்கும்; ஒரே ஆண்டில் போட்ட காசையும் எடுக்கும். தன்னால் போண்டியாக்கப்பட்ட ஏழை மக்களையே தனக்கு விசுவாசமான ஓட்டு வங்கியாக உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, அவர்களைத் தன்னுடைய கையேந்திகளாகத் திட்ட மிட்டே மாற்றி வருகிறது ஜெயா – சசி கும்பல். கருணாநிதியோ ஏழைகளை அரசாங்கக் கையேந்திகளாக ஆக்கும் திட்டங்களை அடுக்கடுக்காக அறிவிக்கிறார்.

தள்ளாத வயதிலும் கடுமையாக உழைத்துக் கஞ்சி குடிக்கும் மானமுள்ள உழைக்கும் மக்கள் பிச்சைக்காரர்களாக நடத்தப் படுகிறார்கள். சூடு, சொரணை, மான ரோசமில்லாமல் பதவிக்காக எவன் காலையும் பிடிக்கத் தயங்காத இழிபிறவிகளும், அடுத்தவனை ஏமாற்றியே உடம்பை வளர்த்த சோம்பேறிகளும், பொதுச் சொத்தை வளைக்கவும் சொந்த மனைவியை விலை பேசவும் தயங்காத கயவர்களும் “எம்.எல்.ஏ காட்டன், மினிஸ்டர் காட்டன்’ சட்டைகளுக்குள் புகுந்துகொண்டு மினுக்கித் திரிகிறார்கள்.

கேவலம் ஒரு டீயைக் கூட அடுத்தவன் காசில் மட்டுமே குடித்துப் பழகிய இந்த அயோக்கியர்கள் மக்களுக்கு இலவசத் திட்டம் அறிவிக்கிறார்கள்; ஓட்டுக்கு 200, 300 பணமும் கொடுக்கிறார்கள். இவர்களிடம் கையேந்தி நிற்பதும், இப்படிப்பட்ட தேர்தலில் வாக்களிப்பதும் நம்மை நாமே பிச்சைக்காரர்கள் என்று ஒப்புக்கொள்வதற்குச் சமமல்லவா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.

  1. ஜனநாயகத்தை அடியறுக்கும் ஆயுதமாக வாக்குரிமை!

trafficஜெயலலிதா சூறாவளி சுற்றுப்பயணம், விஜயகாந்த் சுனாமி சுற்றுப்பயணம்… என்று தமிழ்நாடு முழுவதும் புழுதி பறந்து கொண்டிருக்கிறது. ‘எனக்கு ஓட்டுப் போடுங்கள்’ என்ற கோரிக்கையை முன்வைத்து மக்களைச் சந்திக்க வரும் தலைவர்களின் அணிவகுப்பால் எல்லாச் சாலைகளிலும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. இந்தச் ‘சாலை மறியலுக்கு’ போலீசு காவல் நிற்கிறது. இக்காட்சிகளைப் புகைப்படம் எடுத்து பக்கம் பக்கமாகப் பிரசுரிக்கின்றன பத்திரிக்கைகள்.

“எங்களுக்கு குடிக்கத் தண்ணீர் வேண்டும், பாசனத்திற்குத் தண்ணீர் வேண்டும், பள்ளிக்கூடம் வேண்டும், சாலை வேண்டும், பேருந்து விடவேண்டும், வெள்ள நிவாரணம் வேண்டும், வறட்சி நிவாரணம் வேண்டும்” – என்று மக்கள் தமது கோரிக்கைகளை முன்வைத்து நடத்திய சாலை மறியல் போராட்டங்கள் கொஞ்சமா?

சாலை மறியல் என்றவுடனே போலீசு வரும், பிறகு அதிரடிப்படை வரும், அதன்பின் ஆயுதப்படை வரும். இவை எதற்கும் பயப்படாமல் மக்கள் துணிந்து நின்றால் கடைசியாக தாசில்தார் வருவார். கலைந்து போகச்சொல்வார். கொளுத்தும் வெயிலில் பிள்ளை குட்டிகளோடு தெருவில் உட்கார்ந்திருக்கும் மக்களைச் சந்திக்க மந்திரி, எம்.எல்.ஏ, வட்டம், குட்டம் எவனும் எப்போதும் வந்ததில்லை. அவர்களுடைய கோரிக்கைகளைக் காது கொடுத்துக் கேட்டதுமில்லை. ஆளும் கட்சி மட்டுமல்ல, எதிர்க்கட்சிகள் எனப்படுவோரின் யோக்கியதையும் இதுதான்.

ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் கடந்த 5 ஆண்டுகளில் நடைபெற்ற மக்கள் போராட்டங்களைக் கொஞ்சம் நினைவு படுத்திப் பாருங்கள்.

ஆட்சிக்கு வந்தவுடன் டிசம்பர் 2001- இலேயே பேருந்துக் கட்டணம் பன்மடங்கு உயர்த்தப் பட்டது. மாணவர் பஸ் பாஸ் ரத்து, அரசு மருத்துவ மனையில் நோயாளிகளுக்குக் கட்டணம், நோயாளியைப் பார்க்கப் போகும் பார்வையாளர்களுக்குக் கட்டணம், ரேசன் அரிசி விலை ஏற்றம், அரிசி வாங்க கூப்பன் … எல்லாம் ஒரே நாளில் அறிவிக்கப்பட்டன. தமிழகமெங்கும் மக்கள் எதிர்த்துப் போராடினார்கள்.

அரசுக் கல்லூரிகள் பல்கலைக் கழகங்களுடன் இணைக்கப் பட்டன. கல்லூரிகளை லாபமீட்டும் கம்பெனிகளாக்கி ஏழை மாணவர்களின் கல்வியைப் பறிப்பதற்கெதிராக மாணவர்கள் போராடினார்கள்.

Pachiyappa's college1நீதிமன்றக் கட்டணம் 100 மடங்கு உயர்த்தப் பட்டதை எதிர்த்து வழக்குரைஞர்கள் போராடினார்கள். மாவட்ட ஆட்சியரிடம் மனுக்கொடுக்க 25 ரூபாய் கட்டணம், நகர்ப்புற நடுத்தர மக்களைக் கொள்ளையடிக்க கட்டிட வரன்முறைச் சட்டம்… என ஆட்சிக்கு வந்த எட்டே மாதத்தில் எல்லா மக்கட்பிரிவினர் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெயா ஆட்சி.

காவிரியில் தண்ணீரில்லாததால் விவசாயிகள் எலிக்கறி தின்றார்கள். நெற்களஞ்சியமாம் தஞ்சையில் பட்டினிச்சாவு தொடங்கியது. 22 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டார் கள். ஜெ அரசோ விவசாயிகளுக்கான கூட்டுறவுக் கடனையும் கடன் தள்ளுபடியையும் நிறுத்தியது. அரசாங்க நெல் கொள்முதலையும் குறைத்தது.

கிணறு தோண்டித் தோண்டி தண்ணீரைக் காணாமல் திவாலான ஒரு விவசாயியின் குடும்பம் கரண்டு கம்பியை உடலில் சுற்றிக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது. ஜெயலலிதா பம்பு செட்டுக்கு மீட்டர் போடப்போவதாக அறிவித்தார். அதே நேரத்தில் தனியார் தண்ணீர் வியாபாரம் ஊக்குவிக்கப்பட்டது. தாமிரவருணி கோகோ கோலாவிற்கு விலை பேசப்பட்டது.

கைத்தறிக்கு ஒதுக்கப்பட்ட ரகங்கள் குறைக்கப்பட்டதால் நசிந்து போன நெசவாளர்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது ஜெ அரசு. இலவச வேட்டி சேலை கொள்முதலை நிறுத்தியதால் தேங்கிய துணிகளை விற்க முடியாமல் பல லட்சம் நெசவாளர்கள் பட்டினிச் சாவுக்கும் தற்கொலைக்கும் தள்ளப் பட்டனர். கஞ்சித் தொட்டியின் முன்னால் கையேந்தி நின்ற அந்த நெசவாளர்கள் மீதும் தடியடி நடத்தியது ஜெ அரசு.

18,000 கிராமப்புறத் தொடக்கப் பள்ளிகளில் 5 ஆசிரியர்களை 2 ஆகக் குறைத்தது ஜெ அரசு. 1500 பள்ளிகளுக்கு ஒரே ஆசிரியர். நூற்றுக்கணக்கான பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. ஆசிரியர் களும் பேராசிரியர்களும் இனி காண்டிராக்டு முறையில்தான் நியமிக்கப் படுவார்களென்று பகிரங்கமாக அறிவித்தது அரசு.

இழந்த உரிமைகளை மீட்பதற்காகப் போராடிய போக்குவரத்துத் தொழிலாளர்கள் 27,000 பேர் சிறையிலடைக்கப் பட்டார்கள். அரசு ஊழியர்கள் நடத்திய போராட்டமோ இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்பட்டது. 2 லட்சம் ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 50-க்கும் மேற்பட்டோர் மாரடைப் பால் இறந்தார்கள். பல்லாயிரக் கணக்கான மக்கள் நலப் பணியாளர்களும் சாலைப் பணியாளர்களும் ஒரே நொடியில் வேலை நீக்கம் செய்யப்பட்டார்கள். 64 சாலைப் பணியாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்.

மதமாற்றத் தடைச்சட்டம், கிடா வெட்டுத் தடைச்சட்டம் என பார்ப்பன பாசிச சட்டங்கள் திணிக்கப்பட்டன. கிடா வெட்டி சாமி கும்பிடப் போன பக்தர்களும் பூசாரிகளும் கைது செய்யப் பட்டார்கள். கிராமப்புறக் கோயில்கள் போலீசின் புறக்காவல் நிலையங்களாகவே மாற்றப்பட்டன.

தலித் மக்களின் வாயில் மலத்தைத் திணிப்பது, சிறுநீர் கழிப்பது, பாப்பாப்பட்டி கீரிப்பட்டி தேர்தல்களை சாதி வெறியர்கள் முடக்குவது… என தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான தாக்குதல்கள் தீவிரமடைந்தன.

அதிரடிப்படையின் அக்கிரமங்கள், லாக் அப் கொலைகள், போலி மோதல் கொலைகள், ஏட்டு முதல் எஸ்பி வரை நீண்டு சென்ற ஜெயலட்சுமி புராணம், கான்ஸ்டபிள் முதல் டி.ஐ.ஜி வரையிலான அனைத்து போலீசு அதிகாரிகளின் களவாணித் தனங்கள் .. என ஜெயலலிதாவால் செல்லப் பிராணியாக வளர்க்கப்பட்ட போலீசின் அட்டூழியங்கள் கட்டுக்கடங்காமல் அதிகரித்தன.

இவற்றின் விளைவாகக் கொண்ட ஆத்திரத்தில்தான் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்கள் எதிர்க்கட்சிகளுக்கு வாக்களித்தார்கள். ஆனால் மக்களுடைய வாக்குகளை அறுவடை செய்து கொள்வதற்கு இந்த எதிர்க்கட்சிகளுக்கு என்ன அருகதை இருக்கிறது?

இன்று ஓட்டுக்கேட்டு உங்கள் மத்தியில் ஊர்ஊராகச் சூறாவளி சுற்றுப் பயணம் வரும் ஓட்டுப் பொறுக்கிகள் அன்று மக்களுடைய போராட்டங்களுக்கு ஆதரவாகக் களத்தில் இறங்கினார்களா? இணைந்து போராடினார்களா? இல்லை. வீட்டிலிருந்தபடியே அறிக்கை விட்டார்கள். ஜெயலலிதாவிடம் அடிபடும் மக்கள் அடுத்த தேர்தலில் எப்படியும் தங்களுக்குத்தான் ஓட்டுப் போடுவார்கள் என்று எண்ணி, மக்கள் அடிவாங்கு வதைக் கண்டு மகிழ்ச்சியடைந்து கொண்டிருந்தார்கள். இது மிகையல்ல, உண்மை.

தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்று கூறும் நாங்கள்தான் மக்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாகத் தமிழக மெங்கும் ஊர் ஊராகப் பிரச்சாரம் செய்தோம். போராடினோம். சிறையும் சென்றோம்.

ஒருவேளை மக்கள் கோரிக்கைகளுக்கு ஆதரவாக மற்றெல்லாக் கட்சியினரும் ‘கூட்டணி சேர்ந்து’ போராடி யிருந்தால் மக்கள் தனித்தனியே போராடி அடிவாங்கித் தோற்றுத் துவண்டு விழும் நிலை ஏற்பட்டிருக்காது. இத்தனை அரசு ஊழியர்களும் சாலைப்பணியாளர்களும் நெசவாளர்களும் விவசாயிகளும் அநியாயமாகச் செத்து மடியவேண்டிய நிலையும் ஏற்பட்டிருக்காது.

ஆனால் மக்கள் தங்களுடைய ஜனநாயக உரிமைகளை தங்களுடைய சொந்தக் கரங்களாலேயே போராடி வென்றெடுப் பதை ஓட்டுப்பொறுக்கிகள் யாரும் விரும்புவதில்லை. அது அவர்களுடைய முதலுக்கே மோசமாகிவிடும் என்று அஞ்சுகிறார்கள்.

“ஐந்தாண்டுகள் அடக்குமுறைகளைப் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக்கொள்ளுங்கள், அதற்குப் பிறகு எங்களுக்கு ஓட்டுப் போட்டு நாற்காலியில் உட்கார வையுங்கள். நாங்கள் வந்து கிழிக்கிறோம்” என்று கூறி மக்களுடைய போராட்டங் களை முடமாக்குகிறார்கள். ஜனநாயக உணர்வை மழுங்கடிக் கிறார்கள்.

வாக்குரிமையை மிகவும் புனிதமான உரிமையாகச் சித்தரிக்கும் ஓட்டுப்பொறுக்கிகள், மக்களுடைய பிற வாழ்வுரி மைகளையும் ஜனநாயக உரிமைகளையும் எப்போதுமே கால்தூசுக்குச் சமமாகத்தான் மதிக்கிறார்கள். எந்த ஆட்சியாக இருந்தாலும் போலீசின் அனுமதி இல்லாமல் நீங்கள் பொதுக்கூட்டம் நடத்தவோ, பேரணி நடத்தவோ, ஆர்ப்பாட்டம் நடத்தவோ முடியாது. ஓட்டுப்போடுவதற்கு மட்டும் போலீசு அனுமதி தேவையில்லை எனும்போது, பேசுவதற்கும் போராடுவதற்கும் மட்டும் ஏன் போலிசைக் கேட்க வேண்டும்? வாக்குரிமையைப் போல கருத்துரிமையும் ஒரு அடிப்படை ஜனநாயக உரிமை என்பதை எந்த ஆட்சியும் ஏற்பதில்லை.

அதனால்தான், மக்கள் தண்ணீர் கேட்டுப் போராடினால் குடிநீர் வாரிய அதிகாரி வருவதில்லை; போலீசு வருகிறது. சாலை கேட்டால் நெடுஞ்சாலைத் துறை அதிகாரி வருவதில்லை, போலீசு வருகிறது. பள்ளிக்கூடம் கேட்டால் கல்வித்துறை அதிகாரி வருவதில்லை, போலீசுதான் வருகிறது. அமைச்சர்களும் எம்.எல்.ஏ-க்களும் போராடும் மக்களைச் சந்திப்பதற்கு எப்போதுமே வருவதில்லை. ஏனென்றால் மக்களின் அடிப்படை உரிமைகள் எதையும் ஓட்டுப் பொறுக்கிகள் அங்கீகரிப்பதேயில்லை.

vodeவாக்குரிமையைத் தவிர வேறெந்த உரிமையைப் பற்றி மக்கள் பேசினாலும் அது ஓட்டுப்பொறுக்கிகளுக்கு வேப்பங்காயாய்க் கசக்கிறது. விவசாயிகள் வாழவேண்டு மானால் விளை பொருளுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை அவர்களுக்கு வழங்கப் படவேண்டும். கருணாநிதியோ

“2 ரூபாய்க்கு அரிசி போடுகிறேன் கஞ்சி குடித்துக்கொள்” என்று ‘கருணை’ காட்டுகிறார்.

இலவச மருத்துவம் மக்களின் உரிமை. “எனக்கு ஓட்டுப் போட்டால் பிரசவத்துக்கு பணம் கொடுக்கிறேன்” என்கிறார் விஜயகாந்த். இலவசக் கல்வி என்பது மக்களின் உரிமை. அம்மாவோ சைக்கிள் கொடுக்கிறார், ஏழை மாணவர்கள் 4 பேருக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தாயுள்ளத்துடன் தருமம் கொடுத்துவிட்டு பத்திரிகைகளில் பிலிம் காட்டுகிறார்.

‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற பேச்சே ஒரு பித்தலாட்டம். இப்போது நாம் காண்பது ஒரு புதிய வகை மன்னராட்சி. ராஜாவுக்குப் பிறந்தவன் ராஜா என்பதற்குப் பதிலாக 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை மன்னரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அந்த மன்னர் போடும் பிச்சைதான் உங்கள் வாழ்க்கை.

வாக்குரிமை என்பது மற்றெல்லா உரிமைகளையும் அடியறுக்கும் ஆயுதமாகவே மாற்றப்பட்டு விட்டது. இந்த ஆயுதத்தை நமக்கெதிராக நாமே பயன்படுத்துவது மடமை யில்லையா, என்பதுதான் எங்கள் கேள்வி.

  1. யாரால் கொள்ளையடிக்கப்பட விரும்புகிறீர்கள்?

ஒரு வாக்காளர் என்ற முறையில் சொல்லுங்கள். ஓட்டுக் கட்சிகளுக்கு உங்கள் ஓட்டு ஏன் தேவைப்படுகிறது? ஐந்தாண்டு களுக்கு ஒருமுறை நடக்கும் தேர்தல் என்ற இந்தக் கூத்தினால் என்ன பயன்?

“தேர்தல் என்ற ஒன்று நடக்காமல் அரசாங்கம் எப்படி அமையும்? நல்லதோ கெட்டதோ, அரசாங்கம் என்ற ஒன்று அமையாமல், சட்டசபை என்ற ஒன்று இல்லாமல், சட்ட திட்டங்கள் வகுப்பது எப்படி? நிர்வாகம் நடப்பது எப்படி? மக்களுக்கு நல்லது கெட்டது செய்வது எப்படி?” என்று நீங்கள் திருப்பிக் கேட்கக் கூடும்.

இது ஓட்டுப் போடும் வாக்காளராகிய உங்களுடைய கருத்து. ஓட்டு வாங்கும் வேட்பாளர்களிடம் இதே கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். வை.கோ என்ற அசிங்கத்தைப் பார்த்த பிறகும் இந்தத் தேர்தல் என்பது பொறுக்கித் தின்பதற்கான போட்டி என்பதை இவர்களிடம் கேட்டுத்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?

தயாநிதியும் அன்புமணியும் திடீர் மந்திரிகளாக்கப் பட்டதும், முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதற்காகக் கருணாநிதியின் முதுகுக்குப் பின்னால் ஸ்டாலின் தயாராகக் காத்து நிற்பதும் வேறெதற்கு?

வீரபாண்டி ஆறுமுகம் தனக்கொரு சீட், தன் மகனுக்கு ஒரு சீட், மச்சானுக்கு ஒரு சீட் வாங்கியிருப்பதும், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியும் அன்பரசுவும் தமது பிள்ளைகளுக்கு சீட் வாங்கியிருப்பதும் எதற்கு, குடும்பத்தோடு மக்கள் தொண்டாற்றவா?

jayalalitha“எனக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள்” என்று விஜயகாந்த் கெஞ்சுவதும், “கருணாநிதி குடும்பம் மட்டும்தான் கொள்ளை யடிக்க வேண்டுமா, காத்திருக்கும் நாங்களெல்லாம் இளித்த வாயர்களா” என்று வை.கோ குமுறி வெடிப்பதும், எல்லாக் கட்சிகளின் ‘செயல் வீரர்’ கூட்டங்களிலும் நாற்காலிகள் பறப்பதும், சத்தியமூர்த்தி பவனில் அன்றாடம் பத்து இருபது கதர்ச்சட்டைகள் கிழிவதும் எதற்காக?

இதில் மூடு மந்திரம் எதுவும் இல்லை. அ.தி.மு.க வில் வேட்பாளர் விண்ணப்பத்துக்கான கட்டணம் 10,000 ரூபாய். வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு ஜெயித்தால் பல கோடி பம்பர் பரிசு. தோற்றால், தேர்தல் செலவுக்கு அம்மா கொடுக்கும் 2 கோடியில் அமுக்கியவரை லாபம் – இது ஆறுதல் பரிசு. ஜெயித்தாலும் தோற்றாலும் பரிசு தரும் லாட்டரிச் சீட்டு உலகத்தில் வேறெங்காவது உண்டா?

“சீட்டு கிடைக்காதவர்கள் கோபப்படாதீர்கள்; ராஜ்யசபா சீட்டு தருகிறேன், மேல்சபைக்கு மீண்டும் உயிர் கொடுக்கிறேன்” என்று உடன் பிறப்புகளுக்கு உற்சாகபானம் ஊற்றி உசுப்பி விடுகிறார் கலைஞர்.

தேர்தலின் நோக்கம் என்ன என்பது பற்றி வாக்காளராகிய நீங்கள் ஏதாவது முட்டாள்தனமாகக் கற்பனை செய்து கொண்டிருக்கலாம். ஆனால், தாங்கள் போட்டியிடுவதன் நோக்கம் என்ன என்பதில் வேட்பாளர்கள் மிகவும் தெளிவாக இருக்கிறார்கள். ஒளிவு மறைவோ கூச்சநாச்சமோ இல்லாமல் அதை வெளிப்படையாகப் பேசவும் செய்கிறார்கள்.

ஆயுத பேரத்தில் லஞ்சம், நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கு லஞ்சம், தொகுதி மேம்பாட்டு நிதியை மக்களுக்குச் செலவிடுவதற்கு லஞ்சம் .. என அனைத்தும் தெளிவாக வீடியோ படமெடுத்து நாடெங்கும் ஒளிபரப்பப்பட்டுவிட்டன. நடைபெறவிருப்பது இரண்டு கொள்ளைக் கூட்டணிகளுக் கிடையிலான ‘ஜனநாயக பூர்வமான’ மோதல்.

மக்களிடம் மாமூல் வசூலிப்பதில் ஒரே ஊரிலுள்ள இரண்டு ரவுடிக்கும்பல்களுக்கிடையே போட்டி வந்தால் என்ன நடக்கும்? அடிதடி வெட்டு குத்தின் மூலம் ஒரு கோஷ்டி இன்னொரு கோஷ்டியை ஒழித்துக் கட்டி, தனது அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ளும்.

அவ்வாறில்லாமல், கொள்ளையடிக்கும் உரிமையை ‘ஜனநாயகபூர்வமான’ முறையில் முடிவு செய்வதுதான் இந்தத் தேர்தல். அடுத்த 5 ஆண்டுகளுக்கு நீங்கள் யாரால் கொள்ளை யடிக்கப்பட விரும்புகிறீர்கள் என்பதை நீங்கள் ‘ரகசியமாக’த் தெரிவித்து விட்டால், அதன்பின் அவர்கள் உங்களைப் பகிரங்கமாகவும் சட்டபூர்வமாகவும் கொள்ளையடிப்பார்கள். இதுதான் தேர்தல் விசயத்தில் வேட்பாளர்கள் கொண்டிருக்கும் நோக்கம்.

யாருடைய நோக்கம் நிறைவேறப் போகிறது? வாக்காளர் களாகிய உங்களுடைய நோக்கமா, கொள்ளையர்களாகிய அவர்களுடைய நோக்கமா?

  1. உங்களை ஒடுக்க நீங்களே நியாயவுரிமை வழங்காதீர்கள்!

புழுத்து நாறிவிட்டது இந்த ஜனநாயகம். இதற்குப் புனுகு பூசி, நம்பிக்கையிழந்து வெறுத்துப் போன வாக்காளர்களுக்கு நம்பிக்கையூட்டி, தேர்தலில் ஒரு விறுவிறுப்பை உருவாக்கி வாக்காளர்களைக் கவர்ந்திழுக்கிறார்கள் ஆளும் வர்க்கங்கள்.

jayalalithaa1“நல்லவர்கள், வல்லவர்களாகப் பார்த்துத் தேர்ந்தெடுக்க வேண்டியது உங்கள் பொறுப்பு. நல்ல பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்தால் நல்ல சட்டம் போடுவார்கள். வல்லவர்களைத் தேர்ந்தெடுத்தால் நாட்டை வல்லரசாக்குவார்கள். வெல்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் மக்களாகிய நீங்கள்தான். உங்கள் பிரதிநிதிகள்தான் சட்டமியற்றுகிறார்கள். எனவே அவற்றுக்குக் கட்டுப்பட்டு நடக்க வேண் டியது உங்கள் கடமை” என்று நம்மை ஏற்கச் செய்கிறார்கள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களாம்! இந்த நியாய உரிமையை வைத்துக் கொண்டுதான் மன்மோகன் சிங்கும், ப.சிதம்பரமும், ஜெயலலிதாவும் எல்லா வகையான மக்கள் விரோதத் திட்டங்களையும் அமலாக்குகிறார்கள். நாட்டின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை கொண்டவர்கள் போல நடிக்கிறார்கள். “தமிழ்நாடு முதல் மாநிலமாகிறது, இந்தியா வல்லரசாகிறது” என்ற பிரமைகளைப் பரப்பிவிட்டு மக்களை மயக்கத்திலாழ்த்துகிறார்கள்.

சட்டமன்றத்தில் நடக்கும் விவாதங்களின் யோக்கிய தையைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? “ஜெயலலிதா எங்களைப் பேசவே விடுவதில்லை” என்று கூறி எதிர்க்கட்சிகள் ஒவ்வொரு நாளும் வெளிநடப்பு செய்தன. மீறிப் பேசினால் அவைக் குறிப்பிலிருந்து நீக்குவார் காளிமுத்து. இவர்களுடைய பேச்செல்லாம் அவைக் குறிப்பில் ஏறினால் என்ன, இறங்கினால் என்ன?

இந்த அவையிலேயே இல்லாத உலக வங்கியும், உலக வர்த்தகக் கழகமும் தான் அவையில் நிறைவேற்றப்படும் சட்ட திட்டங்கள் அனைத்தையும் தீர்மானிக்கின்றன. 2001 இல் நாற்காலியில் அமர்ந்த மறுகணமே பேருந்துக் கட்டண உயர்வு, ரேசன் விலை உயர்வு, பம்பு செட்டுக்கு மீட்டர் என்று ஒரே நாளில் அறிவித்தாரே ஜெயலலிதா, அவை உலக வங்கியின் உத்தரவுகளன்றி வேறென்ன? அரசு ஊழியர் சலுகைகளை வெட்டும் சதித்திட்டம் முதல், மகளிர் சுய உதவிக்குழு போன்ற ‘நலத்திட்டங்கள்’வரை அனைத்தும் உலக வங்கியின் ஆணைகள். தண்ணீர் தனியார்மயம், கடற்கரை தனியார்மயம், பன்னாட்டு நிறுவனங்கள் தொடங்கவிருக்கும் பண்ணை விவசாயம், சிறப்புப் பொருளாதார மண்டலங்களில் தொழிலாளர் சட்டங்கள் ரத்து என்பன போன்ற அனைத்தும் உலக வர்த்தகக் கழகத்தின் உத்தரவுகள்.

இத்தகைய மசோதாக்களெல்லாம் தமிழக சட்டமன்றத்தில் ஒரே நாளில் 10, 15 என்று கொத்துக்கொத்தாக விவாதமின்றி நிறைவேற்றப் பட்டிருக்கின்றன. ‘ஏக்கருக்கு ஆண்டொன்றுக்கு 8000 ரூபாய் தண்ணீர் வரி’ என்ற மசோதா உட்பட 16 மசோதாக்களை ஒரே மணிநேரத்தில் நிறைவேற்றியது மகாராட்டிரச் சட்டமன்றம்.

நாடாளுமன்றத்தில் நடப்பதென்ன?

பொதுத்துறைகளைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கை களையெல்லாம் அமல்படுத்திவிட்டு, அப்புறம் போனால் போகிறதென்றுதான் பாராளுமன்றத்துக்குச் சேதி சொல்கிறார் ப.சிதம்பரம். உலக வங்கியின் வழிகாட்டுதலின் கீழ்தான் மத்திய மாநில பட்ஜெட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.

top-10-leadingபிறகு, டாடா, பிர்லா, பஜாஜ், அம்பானி, நாராயணமூர்த்தி, மல்லையா போன்ற தரகு முதலாளிகள் நிதியமைச்சருக்கு ‘ஆலோசனை’ வழங்குகிறார்கள். அதன்பின் இந்த மாபெரும் ‘ரகசிய ஆவணத்திற்கு’ அரக்கு சீல் வைத்து, ஆயுதக் காவல் போட்டு மக்கள் பிரதிநிதிகளுக்கு விநியோகிக்கிறார் நிதியமைச்சர்.

சமீபத்தில் அமெரிக்காவுடன் போடப்பட்ட ராணுவ ஒப்பந்தம், அணுசக்தி ஒப்பந்தம், விவசாய ஒப்பந்தம் ஆகியவற்றில் என்ன இருக்கிறது என்றுகூட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இந்த நிமிடம் வரை முழுமையாகத் தெரியாது. நம்முடைய நாட்டையே வல்லரசுகளுக்கு அடிமையாக்கும் ‘காட்’ ஒப்பந்தமோ அதிகாரிகளால் கையெழுத்திடப்பட்டு அதன் பின்னர் அரைகுறையாக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

நாட்டின் தலைவிதியையும் மக்களின் எதிர்காலத்தையும் தீர்மானிக்கின்ற கொள்கைகள் – திட்டங்கள் பற்றி, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கே எதுவும் தெரிவிக்கப் படுவதில்லை எனும்போது, மக்களாகிய நம்முடைய நிலைமையைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமா?

“என்னைத் தேர்ந்தெடுத்தால் ரேசன் விலையை ஏற்றுவேன், பம்புசெட்டுக்கு மீட்டர் போடுவேன், பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவேன், தொழிலாளர்களுக்கு போனஸை வெட்டுவேன்” என்று மக்களுக்கு ‘வாக்குறுதி’ அளித்திருந்தால், 2001 இல் ஜெயலலிதா ஆட்சியைக் கைப்பற்றியிருக்க முடியுமா?

“எங்களைத் தேர்ந்தெடுத்தால் ஆண்டுக்கு 1000 விவசாயிகளையாவது மருந்து வைத்துக் கொல்லுவோம், லாபமீட்டும் பொதுத்துறை நிறுவனங்களை பன்னாட்டு முதலாளிகளிடம் அடிமாட்டு விலைக்குத் தள்ளுவோம், சில்லறை வணிகத்தை பன்னாட்டு நிறுவனங்களுக்குத் திறந்து விடுவோம் – இதுதான் எங்களுடைய குறைந்த பட்ச செயல் திட்டம்” – என்று கூறி காங்கிரஸ் வென்றிருக்க முடியுமா?

இன்ன கொள்கையைத்தான் அமல்படுத்தப் போகிறோம் என்பதை வெளிப்படையாகச் சொன்னால் ஓட்டுப் பொறுக்கிகள் மக்களிடம் ஓட்டு வாங்குவது கடினம். எனவேதான் கள்ளத் தனமான வாக்குறுதிகளைத் தந்து ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றுகிறார்கள். பெரும்பான்மை மக்களின் வாக்குகளைப் பெற்று ஆள்வதற்கான நியாய உரிமையைப் பெறுகிறார்கள்.நம்மைச் சுரண்டிச் சூறையாடி ஒடுக்குவதற்கான நியாய உரிமையை ஆளும் வர்க்கங்களுக்கும் அவர்களது எடுபிடிகளான ஓட்டுப் பொறுக்கிகளுக்கும் நாமே வழங்குவது அறிவுடைமையா என்பதுதான் நாங்கள் எழுப்பும் கேள்வி.

  1. உழைப்பாளிகளின் பிரதிநிதிகள் களவாணிகளா?

vaiko1‘வாக்காளப் பெருமக்களே!’ என்று அலறும் ஒலிபெருக்கிச் சத்தம் இந்தத் தேர்தல் முடிவதற்குள் குறைந்தது சில ஆயிரம் தடவைகளாவது உங்கள் காதுகளைக் குடைந்துவிடும். இந்தச் சொல்லின் பொருள் என்ன என்று எப்போதாவது நீங்கள் யோசித்ததுண்டா?

பண்ணையார்கள்- விவசாயிகள், முதலாளிகள்- தொழிலாளர்கள், அதிகாரிகள் – ஊழியர்கள் என்று பல்வேறு வர்க்கங்களாகப் பிரிந்திருக்கும் இந்தச் சமுதாயத்தில் கோடீசுவரன் முதல் குப்பன் சுப்பன் வரை எல்லோரையும் ஒரே பட்டியிலடைத்து ‘வாக்காளப் பெருமக்கள்’ ஆக்கி, இவர்கள் எல்லோருக்கும் பொதுவாக நடுநிலையாக ஒரு அரசாங்கத்தை நடத்த முடியுமா? முதலாளியும் தொழிலாளியும் ஒரே நபரைத் தங்களுடைய வேட்பாளராகத் தேர்ந்தெடுக்க முடியுமா? முடியாது. ஆனால் நடந்து கொண்டிருப்பதென்னவோ அதுதான்.

நாங்கள் முதலாளிகளின் பிரதிநிதிகள் என்றோ, பண்ணை யார்களின் பிரதிநிதிகள் என்றோ எந்தக் கட்சியும் சொல்லிக் கொள்வதில்லை. தாங்கள் பெரும்பான்மை ஏழை மக்களின் பிரதிநிதிகள் என்றுதான் எல்லா ஓட்டுக் கட்சிகளும் கூறிக்கொள்கின்றன. ஆனால், ஏழ்மையின் சாயலைக்கூட எந்த வேட்பாளரிடமும் நாம் பார்க்க முடிவதில்லை.

farmerநாட்டிலேயே எண்ணிக்கையில் பெரிய வர்க்கம் விவசாயி வர்க்கம். நிலமற்ற கூலி விவசாயிகள் தஞ்சை மாவட்டத்தில் எலிக்கறி தின்றார்கள், பட்டினியால் செத்தார்கள். நெல், கரும்பு, பருத்தி, தென்னை விவசாயிகளும், தக்காளி முதலான காய்களைப் பயிரிட்ட விவசாயிகளும் கடன் கட்ட முடியாமல் தற்கொலை செய்துகொள்கிறார்கள். அல்லது திருப்பூருக்கு கூலி வேலைக்கு ஓடுகிறார்கள். உலகமயமாக்கம் தோற்றுவித்த விலை வீழ்ச்சியால் போண்டியான நீலகிரி தேயிலை விவசாயிகளோ கோவை நகரில் மூட்டை தூக்கி வயிற்றைக் கழுவுகிறார்கள். இந்தப் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள் எத்தனைப் பேர்?

கைத்தறிக்கான நூல் ரகங்கள் ஒதுக்கீடு ஒழிக்கப்பட்டதால் கைத்தறி நெசவுத் தொழிலே ஒழிந்து வருகிறது. ஜெ ஆட்சியில் கஞ்சித்தொட்டியின் முன் கையேந்தி நின்ற அந்தக் கைத்தறி நெசவாளர்களை எந்தக் கட்சி வேட்பாளராகத் தெரிவு செய்திருக்கிறது?

பன்னாட்டுக் கம்பெனிகளின் வரவால் அழிந்து வரும் சிவகாசியின் தீப்பெட்டித் தொழில், கோலா பானங்களால் கொல்லப்பட்ட சோடா கலர் கம்பெனிகள், சோப்பு, சீப்பு, ஊறுகாய், வத்தல், வறுவல், மிட்டாய் என பன்னாட்டு நிறுவனங்களால் ஆக்கிரமிக்கப்படும் ஆயிரக்கணக்கான குடிசைத் தொழில் மற்றும் சிறு தொழில் முனைவோருக்கும், சில்லறை வணிகர்களுக்கும் எந்தக் கட்சி சீட் கொடுத்திருக்கிறது?

தொழிற்சங்க உரிமைகள் இழந்து, வேலை உத்திரவாதம் இழந்து, குறைந்தபட்ச ஊதியம் எனும் சட்டப் பாதுகாப்பும் இன்றி நாளொன்றுக்கு 12 மணி நேரம் வேலை செய்கிறார்களே தொழிலாளர்கள் அவர்களுக்கும், நாடெங்கும் இரைந்து கிடக்கும் உதிரித் தொழிலாளர்களுக்கும் எந்தக் கட்சியில் பிரதிநிதித்துவம் இருக்கிறது?

பெயருக்குக் கூட நம்முடைய வர்க்கத்தைச் சேர்ந்த ஒரு நபர் இல்லாத மன்றம், நம்முடைய நலனைப் பற்றி எப்படிச் சிந்திக்க முடியும்?

“என்ன சாதி, எவ்வளவு ரூபாய் செலவு செய்வாய்” என்ற இரண்டு கேள்விகளின் அடிப்படையில்தான் ஓட்டுக் கட்சிகளின் வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். ‘பெரிய’ சாதியைச் சேர்ந்தவனாக இருந்தாலும் வசதி சிறியதாக இருக்கும் கட்சித் தொண்டன் வேட்பாளராகவே முடியாது. இது தெரிந்த விசயம்தானே என்று நீங்கள் கருதலாம்.

விசயம் தெரிந்த பிறகும் நீங்கள் வாக்களிக்கிறீர்கள் என்றால் இவர்களை உங்கள் பிரதிநிதிகளாக ஒப்புக் கொள்கிறீர்கள் என்றே பொருள்.

Karthikசினிமாவில் நடித்து கோடி கோடியாய்ச் சம்பாதித்து, பிறகு தி.மு.க வில் சேர்ந்து எம்.பி பதவியும் வாங்கிவிட்ட சரத்குமார் என்ற நடிகனுக்கு மந்திரிப்பதவி வேண்டுமாம். இல்லை யென்றால் நாடார் சமுதாயம் பொங்கி எழுமாம். இதை ஆதரிக்க ஒரு கூட்டம். பத்திரிகைகளில் பக்கம் பக்கமாகக் கட்டுரைகள். அதே நாடார் சமூகத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான சிறு வணிகர்கள் சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்கள் நுழைவதை எதிர்த்தும், கோகோ கோலாவை எதிர்த்தும் போராடிக் கொண்டிருக்கிறார்களே இந்த நடிகனா அவர்களுடைய பிரதிநிதி?

விவசாயம் பொய்த்துப் போய், ஆந்திராவில் முறுக்கு சுட்டு விற்கவும், கேரளத்து எஸ்டேட்டுகளில் கூலி வேலை பார்க்கவும், திருப்பூர் பனியன் கம்பெனியில் கொத்தடிமையாக உழைத்து கந்துவட்டிக் கடனை அடைக்கவும் ஓடுகிறார்கள் மதுரை மாவட்டத்தின் தேவர் சாதியைச் சேர்ந்த விவசாயிகள். ‘சின்ன ஜமீன்’ கார்த்திக்கா இவர்களுடைய பிரதிநிதி?

குடித்து வளர்ந்த தாமிரவருணித் தண்ணீரையே கோகோ கோலாகாரனுக்குக் கூட்டிக் கொடுத்துவிட்டு, அதற்கு உத்தரவிட்ட ஜெயலலிதாவுடன் கூட்டணியும் அமைத் திருக்கும் கோபாலசாமியா ஈழத்தமிழர் விடுதலைக்குப் பிரதிநிதி?

திண்ணியத்தில் மலம், திண்டுக்கல்லில் சிறுநீர், தென் மாவட்டமெங்கும் தனிக்குவளை, பாப்பாப்பட்டி கீரிப்பட்டியில் அரசாங்க முத்திரை பெற்ற தீண்டாமை….. தலித் மக்களுக்கு ஜெயலலிதா அருளிச் செய்துள்ள இந்த ‘சலுகை’களெல்லாம் போதாதென்று 9 தொகுதிகளையும் சேர்த்து வாங்கியிருக்கிறார் திருமா. புரட்சித் தலைவியிடம் சொல்லி பொதுச் சுடுகாடு களில் தலித் பிணங்களுக்கும் 9 இடங்களை பெற்றுத் தருவாரா இந்த தலித் பிரதிநிதி?

கல் சுமக்கவும் கட்டிட வேலை பார்க்கவும் பெங்களூருக்கு ஓடும் சேலம், தருமபுரி வன்னிய விவசாயிகளின் பிள்ளைகளை டாக்டராக்கி அழகு பார்க்கத்தான் மருத்துவக் கல்லூரி கட்டுகிறாரா மருத்துவர் அய்யா?

பாகிஸ்தானைப் பந்தாடி, ஊழல் போலீசை ஒழித்து, ஆஸ்பத்திரி லஞ்சத்தை ஓழித்து, இருட்டரங்கில் இந்தியாவை வல்லரசாக்கிக் காட்டிய விஜயகாந்த், வெளிச்சத்துக்கு வந்தவுடன் சுயநிதிக் கல்லூரி முதலாளியாகி விட்டார். இலவச அரிசிக்குப் பதில் இலவசக் கல்வி தருகிறேன் என்று அவர் ஒரு பேச்சுக்குக் கூட சொல்லாத மர்மம் என்ன? அவர் கல்விக் கொள்ளையர்களிடம் லட்சக்கணக்கில் ஜேப்படி கொடுத்த மாணவர்களின் பிரதிநிதியா, ஜேப்படி அடித்த ஜேப்பியாரின் பிரதிநிதியா?

உள்ளங்கை நெல்லிக்கனி போலத் தெரிகிறது உண்மை. இதை மறைப்பதற்குத்தான் ஓட்டுப்பொறுக்கிகள் அரும்பாடு படுகிறார்கள். தங்களுக்கு சீட் கிடைக்காத சோகத்திற்காக உங்களை அழச்சொல்கிறார்கள். தங்களுக்குப் பொறுக்கித் தின்னும் வாய்ப்பு மறுக்கப்பட்டதை விளக்கி அதற்காக உங்களைக் கோபப்படச் சொல்கிறார்கள். தங்களுடைய அரசியல் எதிரிகளின் சந்தர்ப்பவாதங்களைச் சொல்லி உங்களைச் சிரிக்கச் சொல்கிறார்கள். சிம்ரன், விந்தியா போன்ற நடிகைகளை மேடையேற்றி அவர்களை ரசிக்கச் சொல்கிறார்கள்.

உங்களுடைய வர்க்கத்தின் கோரிக்கை என்ன என்பதைப் பற்றி நீங்கள் சிந்திக்காமல், ‘வாக்காளப் பெருமக்களாகவே’ நீடிக்கும் வரை இவர்கள் நம்முடைய பிரதிநிதிகளாவதைத் தடுக்க முடியாது; பிதாமகன் சினிமாவில் வரும் ஒரு காட்சியைப் போல, நடிகை சிம்ரன் ஊர் ஊராகப் போய் இலவசமாக டான்ஸ் ஆடிக்காண்பித்து விட்டு, தன்னுடைய ரசிகப் பெருமக்களை அப்படியே வாக்காளப் பெருமக்களாக மாற்றி, முதல்வர் நாற்காலியிலும் அமர்ந்துவிட முடியும்.

வாக்காளப் பெருமக்களாகவே நீடிக்கப் போகிறீர்களா, வர்க்க உணர்வு கொண்ட உழைக்கும் மக்களாக மாறப் போகிறீர்களா என்பதுதான் எங்களுடைய கேள்வி.

  1. மறுகாலனியாக்கத்தை முறியடிக்க தேர்தல் தீர்வல்ல!

தி.மு.க கூட்டணிக்கும் அ.தி.மு.க கூட்டணிக்குமிடையில் என்ன கொள்கை வேறுபாடு? ஹமாம் சோப்புக்கும் லைப்பாய் சோப்புக்குமிடையில் உள்ள வேறுபாடுதான் இவர்களுக்கிடை யிலான கொள்கை வேறுபாடு. இவர்கள் பேசுவதைக் கவனிப்பதற்குப் பதிலாக, பேசாதவற்றைக் கொஞ்சம் கவனித்துப் பாருங்கள்.

தமிழகத்திலிருந்து போன மத்திய அமைச்சர்கள் மீது அடுக்கடுக்காகக் குற்றம் சாட்டுகிறார் ஜெயலலிதா. ஆனால், சென்னைத் துறைமுகத்தை ஆஸ்திரேலிய நிறுவனத்துக்கு விற்றுவிட்டார் டி.ஆர்.பாலு என்றோ, அரசுத் தொலைபேசித் துறையை முடமாக்கி தனியார் தொலைபேசி முதலாளிகளைக் கொழுக்க வைக்கிறார் தயாநிதி மாறன் என்றோ, டிரிப்ஸ் (TRIPS) ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் மருந்துகளின் விலையை ஏழை மக்களுக்கு எட்டாக்கனியாக்கிவிட்டார் அன்புமணி என்றோ ஜெயலலிதா குற்றம் சாட்டுவதில்லை. வை.கோ இவை பற்றியெல்லாம் மூச்சே விடுவதில்லை.

ஜெயலலிதாவின் சுனாமி ஊழல், வெள்ள நிவாரண ஊழல் பற்றியெல்லாம் விலாவாரியாகப் பேசும் தி.மு.க, தாமிரவருணி ஆற்றையே கோகோ கோலாவிற்குத் தாரை வார்த்த மாபெரும் ஊழலைப் பற்றி வாய் திறப்பதில்லை. தமிழகத்தில் இயங்கும் பன்னாட்டு நிறுவனங்களிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எவ்விதத் தொழிற்சங்க உரிமையும் இல்லாமல் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக வைக்கப் பட்டிருப்பதை “ஜெயலலிதாவின் சர்வாதிகாரப் போக்கிற்கு’ ஒரு சான்றாகக் கூடக் காட்டுவதில்லை.

“நோக்கியாவை நான் கொண்டு வந்தேன்” என்கிறார் தயாநிதி மாறன். “·போர்டு, ஹ¥ண்டாய் கம்பெனிகளை நான் கொண்டுவந்தேன்” என்று வாங்கிப் பாடுகிறார் ஜெயா. “தி.மு.க ஆட்சியில் தொடங்கப்பட்ட டைடல் பார்க் முதலான கணினித்துறை தொழில் வளர்ச்சிகளை அ.தி.மு.க அரசு தொடர்வதால், மேலும் முதலீடு போடுமாறு பில் கேட்ஸைக் கேட்டுக்கொண்டேன்” என்கிறார் கருணாநிதி.

சிவகங்கை கூட்டுறவு வங்கி மூடப்பட்ட விவகாரத்தைப் பேசி வரும் ஜெயலலிதா, விமான நிலையத் தனியார்மயம், காப்பீடு தனியார்மயம், சில்லறை வணிகத்தில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அனுமதி போன்ற பிரச்சினைகளை ப.சிதம்பரத்துக்கு எதிராக தவறியும் பேசுவதில்லை.

உலக வங்கி – உலக வர்த்தகக் கழகத்தின் ஆட்சி, அதனடிப் படையில் வகுக்கப்படும் இந்திய மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றில் இருவருமே முழுமையாக உடன்படுகிறார்கள். இவற்றைத் தீவிரமாக அமல்படுத்துவதன் மூலம்தான் தமிழகத்தை முதல் மாநிலமாக்க முடியுமென்றும் கூறுகிறார்கள். இந்தக் கொள்கைகளின் விளைவாகப் பாதிக்கப்படும் மக்களின் போராட்டத்தை ஒடுக்க போலீசைப் பலப்படுத்துவதையும் போலீசுக்குச் சலுகை வழங்குவதையும் போட்டி போட்டுக்கொண்டு செய்கிறார்கள்.

இப்படி மறுகாலனியாக்கக் கொள்கைகளை அமல்படுத்து வதில் ஒரே கூட்டணியாகச் செயல்படும் இவர்கள், இந்தக் கொள்கைகளுக்கும் அரசியலுக்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதாக மக்களை நம்ப வைத்திருக்கிறார்கள். தங்களுக்கிடையிலான இந்த முக்கியமான ஒற்றுமையைப் பார்க்காமல், முக்கியத்துவமற்ற வேற்றுமைகளைப் பெரிதுபடுத்திக் காட்டி அதிலேயே மக்களை மயங்கவும் வைத்திருக்கிறார்கள்.

election1இவ்விரண்டு கூட்டணிகளுமே பிழைப்புவாதக் கூட்டணிகள்தான் என்பது மக்களுக்குத் தெரிந்திருந்தாலும் வேறு மாற்று தெரியாததால், “ஏதோவொரு அயோக்கியனைத் தேர்ந்தெடுப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?” என்று சிந்திக்கிறார்கள். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா” என்று அவர்கள் சார்பில் வக்காலத்து வாங்கிப் பேசுகிறார்கள். சில மூடர்கள் “விஜயகாந்துக்கும் ஒரு வாய்ப்புக் கொடுத்தா லென்ன?” என்று விபரீதமாகச் சிந்திக்கிறார்கள்.

லஞ்சத்தை வெறுத்த மக்களை ‘லஞ்சம் தவிர்க்க முடியாதது’ என்று காலப்போக்கில் ஏற்கச் செய்ததைப் போல, குடிநீருக்கும் சிறுநீருக்கும் கூடக் காசு கொடுத்தாக வேண்டும் என்று மக்களைப் பழக்கியதைப்போல, கல்வியும் மருத்துவமும் காசுக்கு மட்டும்தான் என்பதை சகஜமாக்கியதைப் போல அரசியல் சீரழிவுக்கும் மக்களைப் பழக்கியிருக்கிருக்கிறார்கள்.

இந்தத் தேர்தல் ஜனநாயகம் சீரழிந்ததற்குக் காரணமான வர்கள் ஓட்டுப் பொறுக்கிகள் மட்டுமல்ல. மறுகாலனியாக்கக் கொள்கைகளின் விளைவாக நாட்டின் இறையாண்மையும், மக்களின் வாழ்வுரிமைகளும் பன்னாட்டு நிறுவனங்களால் சூறையாடப்பட்டு, உலக வர்த்தகக் கழகத்தின் ஆணைகளுக் கேற்ப இந்திய அரசு ஆடிவரும் சூழலில், ‘ஜனநாயகம்’ என்பதும், ‘வாக்குரிமை’ என்பதும் கவைக்குதவாத கேலிப்பொருட்களாகி வருகின்றன.

நாடே அந்நிய வல்லரசுகளுக்கு அடிமையாகிக் கொண்டிருக்கும்போது, இந்த பொம்மைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுப்பதால் என்ன பயன்? இராக்கை நேரடியாக ஆக்கிரமித்துக் காலனியாதிக்கம் செய்கிறது அமெரிக்கா. அந்த ஆதிக்கத்தின் கீழ் ஏதோவொரு அமெரிக்கக் கைக்கூலியைத் தேர்ந்தெடுப்பதற்காக நடத்தப்படும் போலித் தேர்தலைப் புறக்கணித்து அமெரிக்க இராணுவத்திற்கெதிராக ஆயுதப் போராட்டம் நடத்துகிறார்கள் இராக் மக்கள்.

நாம் சந்தித்துக் கொண்டிருப்பதோ மறுகாலனியாதிக்கம். அன்று நம் நாட்டை வணிகம் என்ற பெயரில் அடிமைப்படுத்திய கிழக்கிந்தியக் கம்பெனியின் இடத்தில், இன்று பல பன்னாட்டு நிறுவனங்கள்; அந்த நிறுவனங்களின் எடுபிடிகளாக பல்வேறு ஓட்டுப்பொறுக்கிகள். இந்த ஓட்டுப் பொறுக்கிகளில் யாரேனும் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதன் மூலமாகவா நாட்டை விடுவிக்க முடியும்? தேச விடுதலையை யாரேனும் ஓட்டுப் பாதையின் மூலம் வென்றெடுத்ததாக வரலாறு உண்டா?

இந்தத் தேர்தல் முறை என்பதொன்றும் கல் தோன்றி மண் தோன்றாக் காலத்திலேயே தோன்றியதுமல்ல; வேறு மாற்றே இல்லாத ஒரே ஆட்சி முறையுமல்ல. தனக்குச் சேவகம் செய்யும் கைக்கூலிகளை உருவாக்கிக் கொள்ளும் பொருட்டு, நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷார் அறிமுகப்படுத்தியவைதான் இன்று நாம் காணும் சட்டமன்றமும், தேர்தல் முறையும். அன்று திவான் பகதூர்களும் ராவ் பகதூர்களும் சட்டமன்றப் பதவிச்சொகுசை அனுபவித்துக் கொண்டிருக்க, உண்மையான விடுதலை வீரர்கள் தெருவிலிறங்கிப் போராடினார்கள்.

அந்த ராவ் பகதூர்களின் வாரிசுகளான ஓட்டுப்பொறுக்கிகள் இன்று நாட்டை அந்நிய வல்லரசுகளுக்கு விலை பேசுகிறார்கள். பன்னாட்டு முதலாளிகள் வீசும் எலும்புத் துண்டுகளுக்கும், அரசுச் சன்மானங்களுக்கும் அடித்துக் கொள்வதையே ஜனநாயகம் என்று சித்தரிக்கிறார்கள்.

மறுகாலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடும் நாங்கள், இந்தப் போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிக்க வேண்டுமென்கிறோம். மறுகாலனியாக்கத்திற்கு எதிரான போராட்டத்தினூடாக ஒரு புதிய ஜனநாயக அரசமைப்பை உருவாக்க வேண்டுமென்கிறோம்.

இலவசங்களுக்கு மயங்கியது போதும். வாக்குறுதிகளால் ஏமாற்றப்பட்டது போதும். நம் காலடியிலிருந்து நழுவித் தேசமே அந்நியன் கைகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறது. போராடி வென்றெடுத்த உரிமைகள் எல்லாம் நம் கைகளிலிருந்து ஒவ்வொன்றாய் உருவப்படுகின்றன. சூறைக்காற்றில் சிக்கிய காகிதமாய் பிடிமானமின்றி அலைக்கழிக்கப் படுகிறது நம் வாழ்க்கை.

நின்று ஒரு கணம் சிந்தியுங்கள். ஏன் என்று ஒரு முறை கேட்டுப் பாருங்கள். இந்தத் தேர்தலை விட்டால் வேறு வழியில்லை என்ற உங்கள் கருத்து மாறும்.

“ஓட்டுப் போடாதே, புரட்சி செய்” என்ற எங்கள் முழக்கம் உங்களது முழக்கமாக உடனே மாறும்! நேபாளத்தின் மாவோயிஸ்டுகள், பிலிப்பைன்ஸின் ‘தேசிய மக்கள் படை’, பெருவின் ‘ஒளிரும் பாதை’, என்ற அணிவரிசையில் இந்தியாவின் நக்சல்பாரிப் பாதை விடுதலைக்கான புதிய வழியைப் படைத்துக் காட்டும்!

– ஓட்டுப் போடாதே, புரட்சி செய்!
2011 சட்டமன்றத் தேர்தலை ஒட்டி ம.க.இ.க மற்றும் அதன் தோழமை அமைப்புகள் வெளியிட்ட சிறு வெளியீடு!

 

inner_design450x150

மே 5 முதல் டாஸ்மாக் மூடப்படும் ஊர்கள் – மக்கள் அதிகாரம் அறிவிப்பு !

0

பட்டியல் 1

1. உசிலம்பட்டி

pp-petition02-05-2016 திங்கள் மாலை 3 மணியளவில் உசிலம்பட்டி செல்லம்பட்டி கிராமத்தில் மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் மக்கள் அதிகாரம் தோழர்கள் மக்களைக் கெடுக்கும் டாஸ்மாக்கை மூடுவதற்காக மக்களிடம் பிரச்சாரம் செய்து மக்கள் பங்கேற்போடு தப்படித்து வெடி வெடித்து செல்லம்பட்டி பகுதி இரண்டு டாஸ்மாக் கடைகளை 05-05-2016 முதல் மூடச்சொல்லி ஆணையாளரிடம் மனுகொடுக்க மக்கள் திரளோடு சென்றனர்.

ஆணையாளரோ, “எனக்கு அதிகாரம் என்னவோ ரோடு, சாக்கடை இப்படி பிரச்சனைன்னா சரி பண்ண முடியும், டாஸ்மாக்கெல்லாம் பெரிய விவகாரம்” என்றார்.

தோழர்களோ, “இப்பகுதிக்கு நீங்கள் தான் தற்போது பெரிய அதிகாரி, இம்மனுவை தங்கள் மேலதிகாரிகளுக்கு தெரியப்படுத்தி மூடச்செய்யுங்கள். இல்லையேல் 5-ம் தேதி நாங்கள் மூடச்செய்வோம்” என்றனர்.

bdo-replyஆணையாளரும் மேலே அனுப்பி வைப்பதாக ஒப்புதல் அளித்தார்.

தோழர்கள் நிகழ்ச்சியை முடித்து வெளியில் சென்று டீக்கடையில் பேசிக்கொண்டிருந்த பொழுது ஊராட்சிய ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஒருவர் ஓடி வந்து பார்த்துவிட்டு மக்கள் அதிகாரம் மனுவை வருவாய் கோட்டாட்சியர்,வட்டாட்சியர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆகியோருக்கு அனுப்பி வைக்கும் வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்திட்ட பதில் மனுவை தோழர் கையில் ஒப்படைத்து சென்றார்.

மூக்கு வேர்த்த நுண்ணறிவு போலீஸார் கண்கொத்தி பாம்பாய் ஆரம்பம் முதல் கடைசி வரை கவனித்தபடியே இருந்தனர்.

தேர்தல் நேரத்தில் மக்கள் அதிகாரம் செயல்பாட்டினால் செல்லம்பட்டி பகுதியில் மக்களின் முக்கிய பேசு பொருளாக டாஸ்மாக் விவகாரம் மாறி உள்ளதை காண முடிந்தது.

தகவல்

பு.ஜ செய்தியாளர்கள்
உசிலம்பட்டி

2. மதுரவாயல், சென்னை

துரவாயல் பகுதியில் உள்ள டாஸ்மாக்கை மூடு, இல்லையேல் நாங்களே இழுத்து மூடுவோம் – மக்கள் அதிகாரம் அரசுக்கு எச்சரிக்கை!

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

மதுரவாயல் நொளம்பூர் பகுதியில் உச்சநீதிமன்ற உத்திரவுகளையெல்லாம் துளியும் மதிக்காமல் நெடுஞ்சாலை அருகிலும், குடியிருப்புகளின் மத்தியிலும் அமைந்து மக்களுக்கு இடையூறாக உள்ள டாஸ்மாக்கை எடுக்க வலியுறுத்தி நொளம்பூர் பகுதி மக்களிடையே மக்கள் அதிகாரம் அமைப்பினர் தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்து வந்தனர். அதன் முதல் கட்டமாக நேற்று (02-05-2016) பொதுமக்களை திரட்டி வட்டாட்சியரிடம் மனு கொடுக்க திட்டமிட்டிருந்தனர். அதற்காக நொளம்பூர் மாதா கோவில் நகர், சின்ன நொளம்பூர், ஓம்சக்தி நகர் ஆகிய டாஸ்மாக்கிற்கு அருகில் உள்ள பகுதி மக்களை அழைத்து செல்ல நேற்று காலை அப்பகுதி டாஸ்மாக் எதிர்ப்புக் குழுவை சார்ந்த தோழர்கள் சென்றிருந்தனர்.

காலையிலேயே குறிப்பிட்ட டாஸ்மாக் கடையை பாதுகாக்க போலீசு தடுப்பு வளையத்துடன் டாஸ்மாக் வாயிலில் நாற்காலிகள் போட்டு காவல் காத்துக் கொண்டிருந்தது. அந்த கடைக்கு மிக அருகில் உள்ள ஓம்சக்தி நகருக்கு சென்ற தோழர் கணேசனை, பகுதிக்குள் செல்லும் முன்பாகவே டாஸ்மாக்கிற்கு காவல் காத்துக்கொண்டிருந்த போலீசும், உளவுப்பிரிவு போலீசும் அவரை முன் எச்சரிக்கை நடவடிக்கை என்ற பெயரில் கைது செய்து மதுரவாயல் போலீஸ் ஸ்டேசனுக்கு கொண்டு சென்றது. தகவல் அறிந்து தோழர்கள் உடனடியாக போலீஸ் ஸ்டேசனுக்கு விரைந்தனர்.

“தேர்தல் நேரத்தில் நீங்கள் ஊர் மக்களை திரட்டுவது சரியில்லை. மீண்டுமொருமுறை இப்படி நடந்தால் உங்களை ரிமாண்ட் செய்வோம்” என்று மிரட்டியது போலீசு. ‘ஜனநாயக’ தேர்தல் நேரத்தில் மனுகொடுக்க செல்வது சட்டம் ஒழுங்கு பிரச்சனையை உண்டுபண்ணிவிடுமாம்!

“நியாயாமாக பார்த்தால் சட்டத்திற்கு புறம்பாக உள்ள அந்த டாஸ்மாக்கை போலீசு நீங்கள்தான் மூடவேண்டும். உங்கள் வேலையைத்தான் நாங்கள் செய்கிறோம். அதுவும் ஊர் பிரச்சினைக்காக மனுகொடுக்க மக்களை அழைத்து செல்ல கூடாது என்று நீங்கள் சொல்வதுதான் சட்ட விரோதம், இப்போது மனு கொடுக்க நாங்கள் ஊர் மக்களோடு செல்கிறோம். அவரை விடுகிறீர்களா இல்லையா?” என்றனர் மக்கள் அதிகாரம் தோழர்கள். பயந்து பின்வாங்கிவிடுவார்கள் என நினைத்த போலீசு, தோழர்கள் ஏறி பேசவே தாங்கள் சற்று பின்வாங்கினர்.

“நீங்கள் மனு கொடுக்க மட்டும்தான் செல்கிறீர்கள். அங்கு எதாவது போராட்டம் நடத்தினால் இவரை உடனே ரிமாண்ட் செய்து விடுவோம்” என்று கூறிவிட்டு தோழர் கணேசனை தன்னுடன் அழைத்துக்கொண்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தது.

வட்டாட்சியர் அலுவலகத்திலும் காலையில் இருந்தே அங்கு வருபவர்களை கண்காணித்துக் கொண்டிருந்தது போலீசு. இரண்டு வாயில்களிலும் யாரையும் விடாமல் தடுப்பு அமைத்து இருந்தது. தோழர்களும் ஊர் மக்களும் வந்தவுடன், தடுப்புகளையும் போலீசையும் கண்டு அஞ்சாமல் மனு கொடுக்க உள்ளே சென்றனர். இதில் நகைக்கதக்க விசயம் என்னவெனில், அலுவலக படிக்கட்டுகளில் தடுப்புகளை வைத்து அலுவலகத்தையே மறைத்து, போலீசு காவல் காத்துக் கொண்டிருந்தது. இதை பார்த்து அலுவலகத்திற்கு வந்த சிலர் விடுமுறை என கருதி திரும்பி சென்றனர்.

மூன்று ஊர் மக்கள் மனு கொடுக்க வருவதை பார்த்து அஞ்சிய போலீசு, ஐந்துபேர் மட்டுமே உள்ளே செல்லமுடியும் என கண்டிசன் போட்டது. போலீசுக்கும் தோழர்களுக்கும் இடையிலான நீண்ட வாக்குவாதத்திற்கு பின்னர் 5 பேர் மனுகொடுக்க உள்ளே சென்றனர்.

உள்ளே சென்ற் வட்டாட்சியரிடம் மனுவைக்கொடுத்து படித்து பாருங்கள் என்றனர். மனுவை மேலோட்டமாக பார்த்துவிட்டு, “என்னப்பா! 5 ஆம் தேதிக்குள் டாஸ்மாக் கடையை மூடவேண்டும் என போட்டிருக்கு” என நக்கலாக சொன்னார்.

“ஆமா சார்!, 5-க்குள் நீங்கள் மூடவில்லையென்றால் நாங்களே மூடிக்கொள்கிறோம் அதையும் படிச்சிப்பாருங்க” என தோழர்கள் பதிலுக்கு சொல்ல அமைதியாகிவிட்டார் தாசில்தார்.

ஆனால், அருகில் இருந்த தேர்தல் அதிகாரி, “தேர்தல் நேரத்தில் இப்படி ஏதாவது செய்தீர்கள் என்றால் ரிமாண்ட் செய்துவிடுவோம்” என பூச்சாண்டி காட்டினார்.

எத்தன பேர்ரா இதயே சொல்வீங்க என நினைத்துக்கொண்டு தோழர்கள், “சரி நீங்க என்னமோ பண்ணுங்க, ஆனா மொதல்ல கடைய மூடுங்க, இல்ல நாங்களே மூடிக்கிறோம்” என முடிவாக சொல்லிவிட்டு புறப்படத் தயாராகினர்.

பின்னர் அவர்களை சமாதானப்படுத்த முயல்வதாக நினைத்துக்கொண்டு, “இது தேர்தல் நேரம் எங்களால எதுவும் செய்ய முடியாது. நான் வேணும்னா இத உடனே கலெக்டருக்கு ஃபார்வார்டு பண்னி விடறேன்” என தேனொழுகப் பேசினார்.

“நீங்க யாருக்கு வேணும்னாலும் அனுப்பிக்கோங்க, எங்களுக்கு அந்த கடை மூடியாகணும்” என மீண்டுமொருமுறை சொல்லிவிட்டு வெளியே வந்தனர் மக்கள் அதிகாரம் அமைப்பினர்.

பின் அடுத்தக்கட்ட போராட்டத்தை பற்றி வந்திருந்த மக்களிடம் பேசி அங்கிருந்து கலைந்து சென்றனர். அதிகாரிகளிடம் வரும் அனைவரும் பம்மிக்கொண்டும், குனிந்துக்கொண்டும் வந்து போகையில் அவர்களுக்கு கட்டளையிடும் விதத்தில் மக்கள் அதிகாரத்தினர் வந்துசென்றது அங்கிருந்த பொதுமக்களுக்கு உற்சாகத்தை அளித்தது.

தகவல்

வினவு செய்தியாளர்கள்,
சென்னை.

3. மீஞ்சூர், சென்னை

பேண்டு வாத்தியம் முழங்க மனுகொடுக்க சென்ற நாப்பாளையம் பகுதி மக்கள்!
– ’
மூடு டாஸ்மாக்கை’ திருவிழா தொடக்கம்!

shutdown-tasmac-ponneri-deadline-3மீஞ்சூரை அடுத்துள்ள நாப்பாளையம் பகுதியில் ஒரே இடத்தில் இரண்டு டாஸ்மாக் கடைகள் உள்ளன. அந்தக்கடைகளால் பாதிக்கப்படும் கிராமங்களில் இருந்து 75-க்கும் மேற்பட்ட ஊர் மக்கள் பொன்னேரி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர்.

போகும் போதே திருவிழாவிற்கு செல்வது போல் பேண்டு, டோலக்கு, பறை ஆகியவற்றை அடித்துக்கொண்டு, ஊர் மக்கள், பள்ளி மாணவர்கள் என ஒட்டுமொத்த படையும் திரண்டு பேரணியாக கோட்டாச்சியர் அலுவலகம் நோக்கி “டாஸ்மாக்கை மூடு , எங்கள் குடும்பத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடையை மூடு” என முழக்கமிட்டபடி சென்றனர். அதோடு பத்தடி உயர டாஸ்மாக் பாட்டில் போல் வடிவமைத்த அட்டையில், கடை எண்ணை குறிப்பிட்டு, இந்த கடையை வரும் 5 -ம் தேதிக்குள் மூட வேண்டும் என எழுதி கையோடு கொண்டு சென்றனர்.

shutdown-tasmac-ponneri-deadline-2அலுவலகம் உள்ள தெருவில் நீதிமன்றம் மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் என அனைத்து அரசு அலுவலகங்களும் இருந்தன. எனவே திருவிழா போன்ற சத்தத்தை கேட்டதும் வக்கீல்கள், போலீசு, பொதுமக்கள் என அனைவரும் வெளியே வந்து பார்த்தனர். அலுவலகத்தை அடைந்ததும் தயாராக இருந்த போலீசு பொதுமக்களை தடுத்து நிறுத்தியது.

“ஐயாவை பார்க்க முடியாது, அவர் தேர்தல் பற்றிய முக்கிய வேலையாக இருக்கிறார் 2 மணி வரை பார்க்க முடியாது. உங்களை பார்க்கவும் அனுமதிக்க முடியாது” என்றது போலீசு.

“சரி, அப்போ நாங்கள் 2 மணி வரை மறியல் அல்லது போராட்டம் செய்து கொண்டிருக்கிறோம் உங்கய்யாவ பொறுமையா வரச்சொல்லுங்க” என கூறி அங்கேயே முழக்கமிட்டு ஆர்ப்பாட்டம் செய்யத் துவங்கினர்.

shutdown-tasmac-ponneri-deadline-4மக்களின் இந்த நடவடிக்கையை கண்டு பயந்து பின்வாங்கிய போலீசு சமாதானத்திற்கு வந்தது. “இரண்டு பேர் என்னுடன் வாங்க அய்யாவ பார்க்கலாம்” என பணிந்து சொன்னது.

“இல்லை! உள்ளே போனால் நாங்கள் அனைவருமே உள்ளே செல்வோம். இல்லையெனில் நாங்கள் உள்ளே வந்து பார்க்க முடியாது, அவர் மக்களுக்காகத்தானே வேலை பார்க்கிறார். அவரை இங்கு வர சொல்லுங்கள்” என்று மக்கள் எந்த அச்சமும் இல்லாமல் அரசுக்கு கட்டளையிட்டனர்.

நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு, 75 பேரையுமே உள்ளே அழைத்து சென்றது போலீசு. மக்களின் அதிகாரத்துக்கு முன்பு போலீசு எம்மாத்திரம்?

shutdown-tasmac-ponneri-deadline-7ஆனால், கல்யாணத்தை நிறுத்த சீப்பை ஒளித்துவைத்த கதையாக கோட்டாட்சியருக்கு பதிலாக அவரது அலுவலகத்தில் வட்டாட்சியரை கொண்டுவந்தது போலீசு. அவரைக்கண்டவுடன் அவருக்கு எதிரிலேயே “நாங்கள் இவரை பார்க்க வரவில்லை, இவரிடம் நாங்கள் பேசமுடியாது. நீங்கள் RDO- வை வர சொல்லுங்கள்” என்று மக்கள் உறுதியாக கூறிவிட்டனர்.

”இவரும் அதிகாரிதான், இவருகிட்டயும் மனு கொடுக்கலாம்” என போலீசு சமாளிக்கப் போய் அது வஞ்சப்புகழ்ச்சி அணியாக மாறி வட்டாட்சியரை கண்டு எள்ளி நகையாட வைத்தது. பின்னர் மீண்டும் ஒரு நீண்ட வாக்குவாதத்திற்கு பிறகு மக்களை சந்திக்க கோட்டாச்சியர் வந்து சேர்ந்தார்.

மனுவை பெற்றுக் கொண்ட அவர் “ஆமா! ஒரு நாளைக்கு நான் நூற்றுக்கணக்கான மனுவாங்குகிறேன். டாஸ்மாக்கை எப்போது மூட வேண்டுமென்று எனக்கு தெரியும்” என்று அதிகாரிகளுக்கே உரித்த திமிருடன் கூறினார்.

shutdown-tasmac-ponneri-deadline-8ஆனால், மனுகொடுத்தது மக்கள் அதிகாரமாயிற்றே! “நீங்கள் டாஸ்மாக் கடை நடத்த வேண்டுமென்றால், உங்க அலுவலகம் பக்கத்துலயோ இல்ல உங்கள் வீட்டிலயோ வைத்துக்கொள்ளுங்கள் அதன்பின் எப்போது உங்களுக்கு மூடத்தெரியுமோ அப்போது மூடிக்கொள்ளுங்கள்” என்று பதிலடி கொடுத்தனர்.

அதுமட்டுமன்றி கோட்டாட்சியரை வைத்துக்கொண்டே மக்கள் அதிகாரத்தை சார்ந்த ஒரு தோழர், “நாம் இப்போ இவரிடம் மனுக்கொடுத்து விட்டோம், மனுவில் கூறியபடி இவர் 5-ம் தேதிக்குள் கடையை மூடவில்லையென்றால் நாமளே கடைய மூடிக்கொள்ளலாம்” என்று அறிவித்தார்.

இப்போதுதான் கோட்டாட்சியர்க்கு மக்கள் அதிகாரத்தை பற்றி முழுமையாக புரிந்திருக்க வேண்டும். ஏனெனில் அதுவரை திமிராக பேசிக்கொண்டிருந்த கோட்டாட்சியர் இதற்குபின்னர் அவர் பேசுவது அவருக்கே புரியாதபடி “என்ன பன்றீங்க! என்ன பன்றீங்க!” என பயத்தில் உளற ஆரம்பித்து விட்டார். அந்த உளறலை கண்டுக்கொள்ளாமல் அந்த அறையை விட்டு உற்சாகத்துடன் வெளியேறினர் மக்கள் அதிகாரத்தினர்.

shutdown-tasmac-ponneri-deadline-1வெளியே வந்த மக்கள் பத்திரிக்கைகளுக்கு தங்கள் போராட்டத்தைப் பற்றி பேட்டியளித்தனர். பேட்டியளித்துக் கொண்டிருக்கும்போதே ஒருவர் “தோழர் அந்த போஸ்டரை கொடுங்க!” என வாங்கி ஊடகங்களின் கேமரா முன்பாகவே அந்த போஸ்டரை சுவற்றில் ஒட்டினர்.

“மக்களுக்கு இடையூறாக உள்ள எங்கள் குடும்பத்தை சீரழிக்கும் டாஸ்மாக் கடைகளை மூடக்கோரி மே 02 அன்று கோட்டாட்சியரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. தவறினால் மே 5-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்” என டாஸ்மாக் எதிர்ப்புக்குழு மற்றும் மக்கள் அதிகாரம் சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டது. போஸ்டர் ஒட்டிய விதமே மிகவும் கோலாகலமாக இருந்தது.

shutdown-tasmac-ponneri-deadline-6பின் அந்த போஸ்டரை பார்த்து, “இதில் எழுதப்பட்டுள்ளபடி 5-ம் தேதிக்குள் நாப்பளையத்தில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடை மூடப்படவில்லை என்றால் நாங்களே மூடிக்கொள்வோம்” என பத்திரிக்கையாளர்களிடம் மக்கள் தெரிவித்து 5-ம் தேதி போராட்டத்திற்கும் அழைப்பு விடுத்தனர்.

இந்தச் செய்தி தொலைக்காட்சியில் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டுள்ளது. இதனால், அனைத்து ஊர் மக்களும் டாஸ்மாக்கை மூடமுடியும் என நம்பிக்கையும், மிகுந்த உற்சாகமும் அடைந்துள்ளனர். மக்கள் தங்கள் அதிகாரத்தை எப்படி அரசு அதிகாரிகளிடம் காட்டுவது என்பதை நடைமுறையில் காட்டியுள்ளனர் நாப்பாளையம் பகுதி பொதுமக்கள். தேர்தல் பாதையின் மூலம் டாஸ்மாக் கடைகளை உட முடியாது, மக்கள் அதிகாரமே ஒரே தீர்வு என்பதனை உணர்த்தும் வகையில் அமைந்தது இந்த மனுகொடுக்கும் நிகழ்ச்சி.

shutdown-tasmac-ponneri-deadline-5

தகவல்

வினவு செய்தியாளர்கள்,
சென்னை.

4. விழுப்புரம்

மூடு டாஸ்மாக்கை – மே 5 கெடு! விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மக்கள் அதிகாரம்!

vpm-shutdown-tasmac-deadline-7விழுப்புரம் மாவட்டம் அயினம்பாளையம் கிராமத்தில் 300 குடும்பங்களுக்கு மேல் உள்ளது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இந்த கிராமத்தில் டாஸ்மாக் கடை உள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள இந்த கடை உயர்நீதி மன்ற உத்தரவுக்கு பிறகு, கடையின் முன்பக்க வழியை அடைத்து விட்டு பின்பக்கமாக திறந்து கொண்டனர். அந்தளவிற்கு விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. இந்த கடையை அகற்றக்கோரி சில மாதங்களுக்கு முன்பு அப்பகுதி மக்கள் சாலை மறியல் செய்துள்ளனர். அவர்கள் மீது தடியடி நடத்தியுள்ளது காவல்துறை. இனிமேல் போராட்டம் ஏதாவது நடத்தினால் உங்கள் அனைவரையும் “உள்ளே” தள்ளிவிடுவேன் என மிரட்டியும் உள்ளது.

vpm-shutdown-tasmac-deadline-9முக்கியமாக அந்த கடையை நான்கு முறை மாற்றி அதே ஊரில் வைத்துள்ளனர். காரணம், அயினம்பாளையத்தை சுற்றியுள்ள சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராமத்தை சேர்ந்தவர்களுக்கும் அந்த ஒரு கடை தான் உள்ளது. எனினும் அரசின் டார்கெட் அயினம்பாளையம் தான்.

ஏப்ரல் 20 அன்று “வேர் அவுஸிங்” குடோனில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம் முற்றுகையிடும் போராட்டத்தை மக்கள் அதிகாரம் அமைப்பினர் நடத்தினார். இந்தச் செய்தி வினவு உட்பட அனைத்து நாளிதழ்கள் மற்றும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

vpm-shutdown-tasmac-deadline-8அந்த குடோனில் தான் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள் சுமார் 98 பேர் சுமை தூக்கும் தொழிலாளராக வேலை செய்து வருகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் தாழ்த்தப்பட்டவர்கள் தான். இவர்கள் சம்பாதிப்பதில் பெரும்பான்மையை இந்த கடையில் குடித்தே அழிக்கின்றனர். ஒரு மாதத்திற்கு பதினைந்து நாள் மட்டுமே வேலை இருக்கும். மற்ற நாட்கள் வீட்டில் தான் இருப்பார்கள்.

vpm-shutdown-tasmac-deadline-6இவர்களின் உழைப்பை சுரண்டுவதற்காகவே இந்த குடோனிற்கு நேர் எதிராக இரண்டு டாஸ்மாக் கடைகளை சட்ட விரோதமாக உயர்நீதி மன்ற உத்தரவை கூட மதிக்காமல் நெடுஞ்சாலையில் வைத்துள்ளது தமிழக அரசு.

கடுமையான உழைப்பில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்கள் உடல் வலியை காரணம் காட்டி நிறைய குடிக்கின்றனர். வேலை இல்லாமல் வீட்டில் இருக்கும் போதும் தொடர்ந்து குடித்து குடித்து குடல் வெந்து பலர் இறந்தும் போயுள்ளனர். இந்த கிராமத்தில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரும் குடிக்கு அடிமையாகியுள்ளனர். தாழ்த்தப்பட்ட மற்றும் பிற்படுத்தப்பட்ட இரண்டு பிரிவினருக்கும் இதில் ஏற்றத்தாழ்வு இல்லை. இந்த கிராம மக்களின் கணிசமான சேமிப்புகள் அனைத்தும் குடித்தே அழித்து விட்டனர்.

vpm-shutdown-tasmac-deadline-1தற்போது அந்த கிராமத்தில் உள்ளவர்கள் பலர் குடிக்கு அடிமையானதாலும், பல பெண்கள் தங்கள் கணவனை இழந்தாலும் குடும்பத்தை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு பெண்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தச் சூழலில் அவர்கள் நம்பி இருப்பது கூலி விவசாயம் தான். நகரமயமாக்கலின் காரணமாக விவசாயமும் அழிக்கப்பட்டு வருவதால் இனி அவர்களின் எதிர்காலம் என்பதே கேள்விக்குறி தான்…..

தங்களின் வாழ்க்கையையும், தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்தையும் நாசமாக்கிய இந்த சாராயக்கடையை விரட்டுவது தான் இனி ஒரே தீர்வு என்பதை மக்கள் உணர்ந்து விட்டனர்.

vpm-shutdown-tasmac-deadline-0இந்த அரசின் மீதும், ஓட்டுக்கட்சிகள் மீதும் நம்பிக்கை இழந்து விட்ட மக்கள் கடந்த 24 ம் தேதியிலிருந்து மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர்களுடன் இணைந்து பிரச்சாரம் செய்து வந்தனர். மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்த தோழர்களும் அந்த கிராம மக்களோடு தங்கி சாதியை தகர்த்து அவர்களை போராட்ட களத்திற்கு அழைத்து வந்துள்ளனர்.

முதற்கட்டமாக விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை 02.05.2016 திங்கள் கிழமை இன்று சந்தித்து “வருகிற 05-05-2016 தேதிக்குள் எங்கள் ஊர் கடையை மூடிவிட வேண்டும். இல்லையேல் நாங்களே மூடிவிடுவோம்” என கெடு விதித்து எச்சரித்து விட்டு வந்துள்ளனர்.

[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்

வினவு செய்தியாளர்,
விழுப்புரம்.

5. கோத்தகிரி

க்கள் அதிகாரம் கோத்தகிரி தாலுக்கா நெடுகுளா பஞ்சாயத்து கேர்கம்பை சுற்றுவட்டார பொது மக்கள் இணைந்து கேர்கம்பை என்ற இடத்தில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை (எண் 8024) மூடக்கோரி கேர்கம்பை ஹட்டி, இந்திரா நகர் மற்றும் காக்கசோலை மக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தியதில் அந்த பகுதி மக்கள் பெண்கள் 100 பேர், பள்ளி மாணவ மாணவிகள் 40 பேர் மற்றும் 60 ஆண்கள் கையெழுத்து இட்டனர்.

அதை 02-05-2016 திங்கள் அன்று கோட்டாட்சியர் அவர்களிடம் கொடுத்து குறிப்பிட்ட கடையை மூடவலியுறுத்தப்பட்டது. அதற்கு, “நான் சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் அனுப்பிவைக்கிறேன்” என்றார்.

“நாங்கள் கொடுத்த மனுவுக்கு ரசீது கொடுங்கள்” என்று கேட்டோம்.

“ரசீது இல்லை” என்றார்.

“எப்போது எப்படி நடவடிக்கை எடுப்பார்கள் என்று தெரிந்து கொள்வது எப்படி” என்று கேட்டோம்.

“எடுக்கும் நடவடிக்கை பற்றி எனக்கு தகவல் கொடுப்பார்கள், அந்தத் தகவலை உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்” என்றார்.

“உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் நாங்கள் எடுப்போம்” என்று அவரிடம் தெரிவிக்கப்பட்டது..

தகவல்
மக்கள் அதிகாரம்
கோத்தகிரி

தமிழகமெங்கும் மே தினப் போராட்டங்கள் – பாகம் 2

0

5. சென்னை கும்மிடிப்பூண்டி

130-வது உலகத் தொழிலாளர் தினமான மே-1 அன்று புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பில் “விவசாயம் – நெசவு, சிறுவணிகம், சிறுதொழில்களை அழித்து, காண்ட்ராக்ட் சுரண்டலை தீவிரப்படுத்துகின்ற கார்ப்பரேட் காட்டாட்சிக்கு முடிவுகட்டுவோம்!” என்கிற தலைப்பின் கீழ் கும்மிடிப்பூண்டியில் பேரணி – ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிடப்பட்டது. தேர்தலைக் காரணம் காட்டி, பேரணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் ஆர்ப்பாட்டம் மட்டும் எழுச்சிகரமாக நடத்தப்பட்டது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் கே.எம்.விகந்தர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்திய பின்னர், தலைமை உரையாற்றினார். “நிரந்தர தொழிலாளர் முறையை ஒழித்து கட்டி காண்டிராக்ட் முறையை அமல்படுத்தி தொழிலாளர்களை கொத்தடிமைகளாக வைத்துச் சுரண்டிக் கொழுக்கின்றனர், முதலாளிகள். இந்த சுரண்டலுக்கு அரசு துணை நிற்கிறது. ஆளத் தகுதியிழந்துவிட்ட இந்த அரசுதான் நம்மை கட்டிக் காப்பதாகவும், நமக்காக இருப்பதாகவும் கூறி நம்மை ஏமாற்றி வருகின்றனர். நாம் போராடுவதன் மூலமே நமது உரிமைகளைப் பெற முடியும்” என உரையாற்றினார்.

SRF புதிய ஜனநாயகத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் தோழர் ஆறுமுகம், லைட்விண்டு ஸ்ரீராம் கிளையின் தலைவர் தோழர் பிரவீன், பாரத் டெக்ஸ்டைல்ஸ் கிளையின் தலைவர் தோழர் ஆனந்தன் ஆகியோர் தங்களது சொந்த வாழ்வியல் அனுபவங்களிலிருந்து அரசென்பது உழைக்கும் மக்களுக்கு எதிராகவே உள்ளது என்பதை பதிவு செய்தனர்.

ஆர்ப்பாட்ட எழுச்சியுரையாற்றிய புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில இணைச் செயலாளர் தோழர் சுதேஷ்குமார், தேர்தல் ஆணையத்தை அம்பலப்படுத்தியும், விவசாயம் நெசவு, சிறுதொழில், சிறுவணிகம் என ஒவ்வொரு துறையும் எப்படியொரு தாக்குதலை எதிர்கொண்டுள்ளது என்பதையும், இதைத் தீர்க்க உழைக்கும் மக்களாக நாமனைவரும் ஒன்றிணைவதைத் தவிர வேறேதும் தீர்வில்லை என்பதை ஆணித்தரமாக பதியவைத்தார்.

மாவட்டப் பிரச்சாரக் குழுவின் சார்பாக புரட்சிகரப் பாடல்கள் பாடப்பட்டன. கூட்டத்தின் இடையிடையே ஆர்ப்பாட்ட முழக்கமிடப்பட்டது.

இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகுமார் நன்றியுரையாற்றினார். உழைக்கும் மக்கள் தொழிலாளிகள் கலந்து கொண்ட இந்த ஆர்ப்பாட்டம், பாட்டாளி வர்க்க சர்வதேசகீதத்துடன் கூட்டம் நிறைவுபெற்றது.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்

6. ஒசூர்

தேர்தல் ஓட்டுச்சீட்டு அரசியல் என்பது மக்களின் பிரச்சனைகளுக்கு எந்தவகையிலும் தொடர்பற்றது மட்டுமல்ல, அவை, அடிப்படைப் பிரச்சனைகளிலிருந்து மக்களை திசை திருப்புபவையும் கூட. ஒசூரில் இதனை அம்பலப்படுத்தும் வகையில் அமைந்தது இந்த ஆண்டு மே நாள். வழக்கமாக மே நாள் என்றவுடன் போலிகளின் சி.ஐ.டி.யூ.-ஏ.ஐ.டி.யூ.சி சங்கங்கள் சில பல தொழிலாளர்களை கொண்டு ஒரு அடையாள ஊர்வலமும் ஒரு ஆர்ப்பாட்டமும் நடத்துவார்கள். பிற ஓட்டுக் கட்சிகள், உதிரி அமைப்புகளும் இந்த நாளைக் கடைப்பிடிப்பார்கள் சுவரொட்டிகள் ஒட்டுவார்கள். ஆனால், இவை எதையும் இன்று ஒசூரில் காணவில்லை. மே நாளுக்கு தொழிற்சங்கங்கள் சுவரொட்டி ஒட்டக் கூடாது என தேர்தல் கமிசன் சொல்லவில்லை என்றாலும், இவை அனைத்தும் ஓட்டு போதைக்குள் அடங்கிவிட்டன. தேர்தல் ஓட்டு வேட்டைக்குக் கூட மே நாளைப் பயன்படுத்தக் கூடாது என்று இந்த ஓட்டுச்சீட்டு தொழிற்சங்கங்கள் முடிவு செய்துள்ளன போலும்!

may-day-hosur-banners-2may-day-hosur-banners-1இன்று மே நாளும் ஞாயிற்றுக் கிழமையும் சேர்ந்து வந்ததால், ஒசூரில் பல ஆலைகளில் விடுமுறை வழங்கவில்லை. குறிப்பாக, சண்டே ஒர்க் செய்யும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் வேலைக்கு சென்று கொண்டுதான் இருந்தார்கள். இதனை எதிர்த்துக் கேட்டதற்காக வேலைநீக்கமும் செய்யப்பட்டுள்ளார்கள். இவை ஒப்பந்தத் தொழிலாளர்கள் படும் துன்பம்! பு.ஜ.தொ.மு. தலைமையில் இன்று ஒசூரில் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் இத்துன்பத்திற்கான காரணங்களையும் தீர்வுகளையும் முன்வைத்து தொழிலாளர்களுக்கு நம்பிக்கையூட்டு வகையில் அமைந்தது.

பேருந்துகளின் உறுமல், போக்குவரத்து நெரிசல், வியாபாரிகளின் கூவல் என ஓயாத பேரிரைச்சலால் சூழப்பட்ட ஒசூர் பேருந்து நிலையமும் அதன் அருகில் உள்ள பழைய நகராட்சி அலுவலகமும் எழுச்சிகரமான பறை முழக்கத்தால் கவரப்பட்டது. பறை முழக்கமும் அதனைத் தொடர்ந்து உயிரைக் கொடுத்து தோழர்கள் எழுப்பிய வின்னைக் கிழிக்கும் ஆர்ப்பாட்ட முழக்கங்களும் பாதசாரிகள் முதல் பயணிகள் வரை அனைவரும் ஒரு கணம் திரும்பிப் பார்க்க வைத்தது; பலரையும் நின்று கேட்க வைத்தது.

may-day-hosur-banners-3சிறுவர்கள், பெரியவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கில் தோழர்களும் தொழிலாளர்களும் திரண்டிருந்த மே நாள் ஆர்ப்பாட்டத்தை பு.ஜ.தொ.மு.வின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

மேநாளின் தியாக வரலாற்றையும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக போராடிய தொழிலாளர்களின் வரலாற்றையும் நினைவுகூர்ந்த தோழர், பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேர் இரட்டை ஆயுள்தண்டனை அனுபவித்து வருவதையும் மாருதி தொழிலாளர்கள் 3 ஆண்டுகளாக சிறையில் வாடுவதையும் நினைவு கூர்ந்து உரையாற்றினார். பிறகு இங்கே ஓசூரில் உள்ள லேலாண்டு, டி.வி.எஸ், டைட்டான், குளோபல் ஃபார்மாடெக், ஆவ்டெக், எக்ஸைடு போன்ற கம்பெனிகளில் தொழிலாளர்கள்மீதான நிர்வாகத்தின் ஒடுக்குமுறை, சி.எல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என்ற முறையில் இளம் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கசக்கிப் பிழிந்து வேலைவாங்கி உற்பத்தியிலக்கை எட்டியபிறகு அவர்களை எவ்வித முன்னறிவிப்புமின்றி வெளியேற்றும் கொடுமைகளை பட்டியலிட்டு சாடினார். ஆலைநிர்வாகம் தங்கள் ஆலையில் உள்ள தொழிற்சங்கங்களில் தனக்கு பாதசேவைசெய்யும் தொழிற்சங்கங்களை மட்டும் அங்கீகரித்து வைத்துக்கொண்டு மற்ற நேர்மையானதொரு தொழிற்சங்கம் உருவாவதை தடைசெய்துவருகின்றன. பாதுகாப்பற்ற வேலைமுறையினால் விபத்துக்குள்ளாகி இறக்கின்ற தொழிலாளர்களை தனதுக்கணக்கில்கூட கொண்டுவராமல் தட்டிக்கழித்து தனதுக் கொலையை மறைத்துவிடுகின்றன, இதனை எதிர்த்து குரல் கொடுக்கும் தொழிலாளர்கள் அல்லது சங்கங்களை மிரட்டி பணியவைக்கின்றன. இதுபோன்ற கொடூரமான கார்ப்பரேட் சுரண்டல்களை, கொலைகளை கோடிக்கால் பூதமான தொழிலாளர் வர்க்கம் தியாகத்திற்கு அஞ்சாத நெஞ்சுரத்துடன் புரட்சிகர சங்கமாய் எழுந்து முறியடிக்கும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று அறிவித்துப் பேசினார்.

may-day-hosur-banners-4இதனைத் தொடர்ந்து மண்ணைத் தோண்டி “வெட்டி எடுத்த தங்கம் யாருக்கு” என்ற புரட்சிகர பாடலை பென்னாகரம் விவசாயிகள் விடுதலை முன்னணி தோழர்கள் இசைத்து மக்களுக்கு உணர்வூட்டினர். தொடர்ந்து, கோலார் தங்கவயல் தொழிலாளர்கள் குறிப்பாக, பெம்மல் ஒப்பந்தத் தொழிலாளர்கள் மற்றும் நகராட்சி ஒப்பந்தத் துப்புரவுத் தொழிலாளர்களின் அண்மைகால போராட்ட அனுபவங்களைத் தொகுத்து தோழர் ரமேஷ் எடுத்துரைத்தார். குறிப்பாக கே.ஜி.எப் ஒப்பந்தத் தொழிலாளர்களின் இன்றைய அவல வாழ்க்கை நிலைமைகளை விவரித்துக்கூறி அதிலிருந்து தங்களை விடுவித்துக்கொள்ள புரட்சிகர தொழிற்சங்கத்தின் தேவையை வலியுறுத்தி உரையாற்றியது நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது.

தொடர்ந்து விவசாயத்திலும் சிறுதொழில்கள், சிறுவணிகத்திலிருந்தும் மக்கள் வெளியேற்றக் காரணமாக உள்ள கார்ப்பரேட் கம்பெனிகள் ஆதிக்கம், காண்டிராக்ட்மயம் குறித்து விவசாயிகள் விடுதலை முன்னணியின் பென்னாகரம் வட்டச் செயலாளர் தோழர்.கோபிநாத் விளக்கிப் பேசி விவசாயிகளும், தொழிலாளர்களும் ஒன்றிணைந்து மீண்டும் ஒரு மேநாளை உருவாக்குவோம் என அறைகூவி பேசினார்.

“25 ஆண்டுகளுக்கு முன்பிருந்த கட்டமைப்பு முழுவதும் இன்று இல்லை; குறிப்பாக தொழிலாளர் நலத்துறையை எடுத்துக் கொண்டால் அது முழுக்க முழுக்க முதலாளிகளின் நலனைப் பேணுகின்ற துறையாக வெட்டவெளிச்சமாகவே தெரிகிறது. இதனை தொழிலாளர்கள் தங்களின் சொந்த அனுபவத்தின் ஊடாகவே காணமுடியும். பார்ப்பனர்களின் மனுதர்ம படிநிலைகளைப்போலவே தொழிலாளர்கள் சி.எல், காண்ட்ராக்ட், அப்ரண்டீஸ் என பல படிநிலைகளாக பிரித்துவைத்து அடிமைகளாக்கி கார்ப்பரேட் முதலாளிகளால் சுரண்டப்பட்டுவருகின்றனர். அரசுத் துறை என்று சொல்லப்படு்பவை அனைத்துமே கார்ப்பரேட் முதலாளிகளின் அலுவலகமாக மாறிப்போயுள்ளது. மொத்தத்தில் அரசுக் கட்டமைப்பு முழுவதுமே கார்ப்பரேட்மயமும் காண்டிராக்ட்மயமும் இணைந்த ஒரு கலவையாக உள்ளது.” எனவே, ஆளத் தகுதியிழந்த அரசுக் கட்டமைப்பு என்பதையும் மக்கள் அதிகாரத்தைக் கையில் எடுக்க வேண்டிய அவசியத்தையும் உணர்த்தி மக்கள் அதிகாரத்தின் தருமபுரி மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர்.முத்துக்குமார் உரையாற்றினார்.


[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்]

இறுதியாக, பு.ஜ.தொ.மு.வின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ராஜூ நன்றியுரையாற்றினார்.

இப்படிக்கு,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தொடர்புக்கு : 9788011784, ஓசூர்.

7. திருச்சி

திருச்சியில் மே தினத்தை ஒட்டி வெளியிடப்பட்ட சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள்:

may-day-trichy-poster

may-day-trichy-banner

தகவல்
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருச்சி

ஜெயாவின் நீலிக்கண்ணீர் – டாஸ்மாக் முற்றுகை வீடியோ

1

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகையில் இருக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் ஏப். 20, 2016 அன்று நடத்தப்பட்ட போராட்டத்தின்  தொகுப்பு!

———————————————————

நம்மாழ்வார் அவதாரமெடுக்கும் தமிழக கட்சிகள் – உண்மை என்ன ?

18

ய்யா நம்மாழ்வார் மீதும், இயற்கை விவசாயத்தின் மீதும் நம் அரசியல்வாதிகளுக்கு திடீர் அக்கறை முளைத்திருக்கிறது. நம்மாழ்வார் பெயரில் விவசாயத் திட்டம், இயற்கை விவசாயத்திற்கு மானியங்கள், விவசாயத்திற்கு தனி பட்ஜெட், விவசாயக் கடன் தள்ளுபடி என தேர்தல் வாக்குறுதிகளை பல கட்சிகளும் அறிவித்திருக்கின்றன. காதல்-காமெடி-டூயட்-சென்டிமென்ட்-சண்டை-குத்துப்பாட்டு-என மசாலா படத்தின் வெற்றி பார்முலா போல இருக்கும் இவர்களின் தேர்தல் அறிக்கைகள் ஒரு பக்கம் இருக்க, விவசாயத்தின் மீது இவர்களின் திடீர் அக்கறைக்கு காரணம் என்ன? இவர்கள் கூறுவது நடைமுறை சாத்தியமானதா?

farmers
நடைமுறையில், ஒரு சில பணக்கார விவசாயிகளும், ஐ.டி.துறையிலிருந்து வரும் புதுப் பணக்காரர்களும்தான் இயற்கை விவசாயம் செய்கின்றனர்

50 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக பயன்படுத்திய ரசாயான உரங்களால் மேல்மண்ணில் உள்ள உயிர்ச்சத்துக்களை முற்றிலுமாக இழந்து நிலமே மலடாகிவிட்டது! பிள்ளைக்கு புட்டிப் பால் ஊட்டுவதைப் போல, அவ்வப்போது ரசாயான உரம் போட்டால்தான் எதுவும் விளையும் என்கிற அளவுக்கு சீரழிந்து கிடக்கிறது விவசாயம்! இந்நிலையில், எருவையும்-மண்புழு உரத்தையும் போட்டு ஒரே நாளில் இயற்கை விவசாய நிலமாக மாற்ற முடியுமா?

“ரசாயன உரத்தின் பாதிப்பிலிருந்து நிலத்தை இயற்கை விவசாயத்திற்கு மாற்ற வேண்டுமானால், குறைந்தது 3 வருடமாகும். முதல் வருடத்தில் ரசாயன உரம் 75 சதவீதம், இயற்கை உரம் 25 சதவீதம், அடுத்த ஆண்டில் 50:50, அடுத்து 25:75 என்று படிப்படியாக இயற்கை உரப் பயன்பாட்டை அதிகரிப்பதன் வாயிலாகவே இயற்கை விவசாயத்திற்கு உகந்ததாக நிலத்தை மாற்றமுடியும்! இந்த 3 வருடத்திலும் சராசரியை விட குறைந்த விளைச்சலே கிடைக்கும்!” என்கிறார்கள் நிபுணர்கள்! இவ்வாறு முறையான பரிசோதனைக்கும்,கண்காணிப்புக்கும் உட்படுத்தப்பட்ட நிலத்திற்குத்தான் ‘அபெடா’ நிறுவனம் ‘ஆர்கானிக்’ சான்றிதழ் வழங்குகிறது! இச்சான்றிதழ் இருந்தால்தான் விளைபொருள்களை ஏற்றுமதி செய்ய முடியும்!

ஏற்கனவே உரம் முதலான இடுபொருட்கள் விலை உயர்வு, விளைபொருட்கள் விலை வீழ்ச்சி என்று கடனில் மூழ்கி நிலத்தை விட்டு ஓடும் நிலையில் உள்ள சிறு-குறு விவசாயிகளுக்கு இதுவெல்லாம் ஒத்துவருமா?

நடைமுறையில், ஒரு சில பணக்கார விவசாயிகளும், ஐ.டி.துறையிலிருந்து வரும் புதுப் பணக்காரர்களும்தான் இயற்கை விவசாயம் செய்கின்றனர். 10 ஏக்கர் நிலம் இருந்தால், 9 ஏக்கரில் ரசாயன உரம் போட்டுவிட்டு, ஒரு ஏக்கரில் இயற்கை விவசாயமும் செய்கிறார்கள். இவர்களுக்கு 3 வருட இழப்பு அல்லது வருமானக் குறைவு என்பது பெரிய பாதிப்பாக இருக்காது. மேலும் நம்மாழ்வார் முன்வைக்கும் இயற்கை விவசாயம், நம் பாரம்பரிய விவசாயத்தோடு தொடர்புடையது. இது பன்னாட்டுக் கம்பெனிகளின் வீரியரகப் பயிர்களுக்கு பயன்படாது என்பதே உண்மை! ஏனெனில், வீரியரகப் பயிர்கள் அனைத்தும் ரசாயன உரங்களின் தன்மைக்கு ஏற்பவே உருவாக்கப்படுகின்றன.

ரசாயனப் பாதிப்புகளில்லாத இயற்கை உணவுப் பொருள்கள் என்பது நடுத்தர வர்க்கத்தின் விருப்பம் என்பதையும் தாண்டி பேஷனாகி விட்டது. உடனே முதலாளிகளும் மூலிகை-இயற்கை ஆர்வலர்களாக உருமாறத் தொடங்கி விட்டனர். இதனால்தான் பப்பாளி-வேம்பு சோப்பு, கற்றாழை கிரீம், மூலிகை பற்பசை, துளசி மிட்டாய், புதினா பிஸ்கட்டுகள் போன்றவை சந்தையை ஆக்கிரமித்து வருகின்றன, மேலும், உலக நாடுகளின் ஏற்றுமதி சந்தையில் இது அதிக லாபம் ஈட்டக் கூடியதாகவும் இருக்கிறது. அதிகரித்துவரும் இதன் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், தற்போது நம்நாட்டு விவசாயத் திட்டங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது.

“நாடு முழுவதும் அடுத்த 3 ஆண்டுகளில் 5 லட்சம் ஏக்கரில் இயற்கை விவசாயம் அறிமுகப்படுத்தப்படும்” என அறிவித்துள்ள பிஜேபி அரசு, நடப்பு பட்ஜெட்டில் இதற்காக 412 கோடி ரூபாயையும் ஒதுக்கியுள்ளது!

‘வேளாண் மின்னணு மேடை, வேளாண் சந்தைகளை இணையதளம் மூலம் இணைப்பது, வேளாண் பொருள்களுக்கான ஆன்லைன் சந்தை ஆகியவை மூலம் அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கப் போகிறோம்” என்று நடப்பு பட்ஜெட்டில் மோடி அரசு தம்பட்டம் அடித்ததையே தி.மு.க, ம.ந.கூ, பா.ம.க ஆகியவற்றின் தேர்தல் அறிக்கைகளும் வழிமொழிகின்றன.

இதன் மூலம், உலகின் ஏதோ ஒரு மூலையில் உட்கார்ந்து கொண்டு, நம்நாட்டில் ஒரு பொருளை அதிகளவில் கொள்முதல் செய்வதன் மூலம் செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கி, அதன் விலையை உயரவிட்டு, பிறகு அதிக விலைக்கு சந்தையில் விற்றுக் கொள்ளையடிக்க முடியும்! ஏற்கனவே இத்தகைய பன்னாட்டுக் கம்பெனிகள் மற்றும் உள்நாட்டு தரகு முதலாளிகளின் வர்த்தக சூதாட்டத்திற்காக வேளாண் பொருள்களின் மீதான ஆன்லைன் வர்த்தகத்தை ஏற்கனவே அனுமதித்துள்ளது மத்திய அரசு! அண்மைக் காலங்களில் உப்பு, புளி, மிளகாய், மஞ்சள், பயறுவகைகள், எண்ணெய் வகைகள் ஆகிய அத்தியாவசிய உணவுப் பொருள்களின் கடும் விலைவாசி உயர்வுக்கும் இந்த ஆன்லைன் வர்த்தகமே முக்கிய காரணம்!

வேளாண் பொருள்கள் விற்பனைச் சந்தையில், பெரு முதலாளிகளும், பன்னாட்டுக் கம்பெனிகளும் நுழைவதற்கு வழிவகுப்பதுதான் ஆன்லைன் வர்த்தகத்தின் உண்மையான நோக்கம்.! பொட்டலம் மடித்துக் கொடுக்கும் அண்ணாச்சி மளிகைக் கடைகள் இருந்த இடத்தில், சூப்பர் மார்க்கெட்டுகளும், சலுகை விலையில் விற்கும் பெரும் மால்களும், வணிகப் பெயரிட்ட மளிகைச் சாமான்களின் விற்பனையும் அதிகரித்து வருவது, ஆன்லைன் வர்த்தகத்தின் மற்றுமொரு கோர முகம்தான் !

அந்நியக் கம்பெனிகள் சில்லறை விற்பனையில் ஈடுபட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இவர்களுக்கு தேவையானதை மொத்தமாக ஒரே இடத்தில் கொள்முதல் செய்வதற்கு வசதியாக தற்போது வேளாண் சந்தைகளையும் ஆன்லைனில் இணைக்கும் திட்டத்தில் மோடி அரசு இறங்கியுள்ளது!. அரைகுறையாக இன்னமும் நிலத்தோடு ஒட்டிக் கொண்டிருக்கும் சிறு-குறு விவசாயிகளை, நிலத்திலிருந்து விரட்டியடிக்கவும், சிறுவணிகர்களை முற்றாக ஒழித்துக் கட்டவுமே இது உதவும்!

இவ்வாறு ஒட்டுமொத்த அரசுக் கட்டமைப்பும் மக்கள் விரோத,தேசத்துரோகக் கொள்கைகளால் கட்டி எழுப்பப் பட்டிருக்கும் நிலையில், தனி பட்ஜெட், கடன்தள்ளுபடி, இயற்கை விவசாயம், ஆகியவற்றால் விவசாயிகளை வாழ வைக்கப் போகிறோம் என்கின்றன ஓட்டுக்கட்சிகள்!

வெயிலில் விவசாய மக்களை வம்படியாக அழைத்து வந்து கொல்லும் அ.தி.மு.கவின் தேர்தல் கூட்டங்கள் ஒரு புறம். இன்னொரு புறம் நம்புகின்ற அப்பாவிகளுக்கு, “தமிழகத்தின் தொழில்வளர்ச்சியை மேம்படுத்த, முதலீட்டாளர்களின் நீண்டகால நண்பனாக அரசு செயல்பட, அரசியல் சாராதவர்களைக்!! கொண்ட மாநில பொருளாதார வளர்ச்சி வாரியம் அமைக்கப்படும்” என்று முதலாளிகளுக்கு ஆதரவாக ஆப்படிக்கிறார் கலைஞர்! தி.மு.க, அ.தி.மு.க வுக்கு மாற்று தேடுபவரா நீங்கள்? இதோ, பெரும் முதலீட்டாளர்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்கப்பட்டும்” என்கிறது மாற்று அரசியல் புகழ் ம.ந.கூட்டணியின் தேர்தல் அறிக்கை! நீங்கள் ஓடி ஒதுங்குவதற்கு சட்டமன்ற ஜனநாயகத்திற்குள் பாதுகாப்பான இடம் எதுவுமில்லை!

– விவசாயிகள் விடுதலை முன்னணி,
தேனி.