ரோட்டக் சகோதரிகள் இப்போது சமூக வளைத்தளங்களில் பிரபலங்களாகி விட்டனர். சமூக வலைத்தள கட்சியாக இருக்கும் பாரதிய ஜனதா வாய்ப்பைத் தவற விட அவ்வளவு முட்டாள்கள் இல்லை என்பதால், எதிர்வரும் குடியரசு தின விழா நிகழ்ச்சியில் ரோட்டக் சகோதரிகளை கவுரவிக்கப் போவதாக அறிவித்துள்ளது.
ரோட்டக் சகோதரிகள் யார், அவர்கள் நிகழ்த்திய சாதனை என்னவென்று அறியாதவர்களுக்காக –
கையில் கிடைத்த பெல்ட்டால் அம்மூன்று வாலிபர்களையும் விளாசித் தள்ளியிருக்கிறார்கள் சகோதரிகள்
ஆர்த்தி மற்றும் பூஜா குஹார் ஆகிய இருவரும் சகோதரிகள். ஹரியாணா மாநிலம் சோனேபட் மாவட்டத்தைச் சேர்ந்த இவர்கள் அருகில் உள்ள ரோட்டக் நகரின் அரசுக் கல்லூரியில் பயிலும் மாணவிகள். கடந்த 28ம் தேதி இவர்கள் இருவரும் ஹரியாணா மாநில போக்குவரத்துத் துறையின் பேருந்து ஒன்றில் கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தனர்.
குஹார் சகோதரிகள் பயணம் செய்த அதே பேருந்தில் வந்த குல்தீப், மோஹித் மற்றும் தீபக் என்ற மூன்று வாலிபர்கள், இருக்கையில் அமர்ந்து வந்த சகோதரிகளுக்குத் தொல்லை கொடுத்துள்ளனர். பெண்கள் என்றால் இருக்கையில் அமரக் கூடாது என்றும், எழுந்து நிற்க வேண்டும் என்றும் மிரட்டியுள்ளனர். இதற்கு பதிலளிக்காத சகோதரிகளை இழிவாக பேசி, துண்டுச் சீட்டில் தங்கள் தொலைபேசி எண்களை எழுதி அவர்கள்மேல் வீசியுள்ளனர். இதை எதிர்த்து குரல் எழுபிய இப்பெண்களை நோக்கி ஆபாச சைகைகள் செய்துள்ளனர்.
இருக்கையில் இருந்து எழுந்து சென்று அதைத் தட்டிக் கேட்ட ஒரு சகோதரியை கழுத்தைப் பிடித்து கீழே தள்ள, பொங்கியெழுந்த சகோதரிகள், அம்மூன்று வாலிபர்களையும் எதிர்த்து போராடியுள்ளனர். மற்ற பயணிகள் கோழைகள் போல் வேடிக்கை பார்த்து நின்ற நிலையில், தங்கள் கையில் கிடைத்த பெல்ட்டால் அம்மூன்று வாலிபர்களையும் விளாசித் தள்ளியிருக்கிறார்கள் சகோதரிகள். பேருந்தில் பயணம் செய்த மற்ற பயணிகள் இந்த அடாவடித்தனங்களை தடுக்காமல் வேடிக்கை பார்த்திருக்கின்றனர். உடன் பயணித்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் மட்டும் ஆதரவாக இடையே புகுந்துள்ளார். சகோதரிகள் அந்த வாலிபர்களுக்கு புரியும் மொழியில் பெல்டால் பேசியதை அந்த கர்ப்பிணிப் பெண் தனது செல்போன் கேமராவில் பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிந்துள்ளார்.
பேருந்தில் இருந்த மற்ற பயணிகள் போலீசுக்கு தொலைபேசுவதைத் தடுத்திருக்கின்றனர். பேருந்து சிறிது தூரம் சென்று நின்று விட சகோதரிகள் இருவரையும் தாக்கியவர்கள் அவர்களை பேருந்திலிருந்து வெளியே தள்ளியிருக்கின்றனர்.
தங்களை தாக்கியவர்களைப் பற்றி இரு சகோதரிகளும் போலீசில் புகார் செய்திருக்கின்றனர்.
சகோதரிகள் இளைஞர்களை தாக்கும் வீடியோ சில மணி நேரங்களிலேயேசமூகவலைத்தளங்களில் ’வைரல்’ ஆகிவிட்டது. “#RohtakSisters”, “#BraveheartSisters” உள்ளிட்ட ஹேஷ் டேக்குகளால் பகிரப்பட்ட வீடியோ ஓரிரு நாட்களிலேயே பல்லாயிரக்கணக்கானவர்களால் பார்வையிடப்பட்டு வடமாநில சமூக வளைத்தள பயன்பாட்டாளர்களிடையே முக்கிய பேசு பொருளானது. இத்தனை பேரின் விவாதப் பொருளான பின் பாரதிய ஜனதாவின் கண்ணை உறுத்தாமல் இருந்தால் தான் அது அதிசயம்.
உடனடியாக அம்மூன்று வாலிபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இராணுவத்தில் பணிக்குச் சேர்வதற்கான உடற் தகுதித் தேர்வில் வென்றவர்கள் என்றும், எழுத்துத் தேர்வுக்கான காத்திருப்புப் பட்டியலில் இருப்பவர்கள் என்றும் செய்திகள் வெளியாகின. சம்பவம் குறித்து பேட்டியளித்த மத்திய இராணுவ அமைச்சர், இது போன்ற பொறுக்கிகளுக்கு இராணுவத்தில் இடமில்லை என்றும், ஒழுக்கம் போன்ற விஷயங்களில் இராணுவம் கறாராக நடந்து கொள்ளும் என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ஹரியாணா முதல்வர் மனோகர் லால், வரும் குடியரசு தினத்தன்று சகோதரிகள் இருவரும் அவர்களின் வீரச் செயலுக்காக கவுரவிக்கப்படுவார்கள் என்று அறிவித்தார். மேலும், மாநில அரசு சார்பாக அப்பெண்களுக்கு ரொக்கப் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நடந்திருப்பது அரிதினும் அரிதான ஒரு சாதனை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. பெண் சிசுக்களை கருவிலேயே கண்டறிந்து கொன்றொழிக்கும் ஆணாதிக்க சமூகமான வடமாநிலங்களில் முதன்மையானது ஹரியானா. பெண்களை சுயேச்சையான மனித உயிர்களாக அல்லாமல், ஒரு உடைமையாகப் நடத்தும் பழக்கம்தான் பார்ப்பனிய கலாச்சாரத்தின் அடிப்படை. இதுவே இந்திய சமூகத்தில் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்கொடுமைகளின் ஆணிவேர்.
ரோட்டக் சகோதரிகள்
இன்றைக்கும் பெண் சிசுக் கொலைகளால் ஆண் பெண் மக்கள் தொகை விகிதாச்சாரம் குலைந்து, திருமணத்திற்கு ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் இருந்து காசு கொடுத்து ஏழைப் பெண்களை ஓட்டி வரும் பார்ப்பனிய ஆண் திமிரும் அதை அங்கீகரிக்கும் ஜாட் கட்டைப் பஞ்சாயத்தும் தான் ஹரியானாவின் முதன்மையான அடையாளம். சாதி மாறிக் காதலித்த ’குற்றத்திற்காக’ கொளுத்தி சாம்பலாக்கப் பட்ட பெண்களின் எண்ணிக்கையோ எண்ணி மாளாது.
இது போன்ற ஒரு படுபிற்போக்கான மாநிலத்தில் பொதுவிடத்தில் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக பெண்கள் சண்டை போடுவது உண்மையில் வரவேற்கத்தக்கது மட்டுமல்ல, எல்லோரும் பின்பற்றத்தக்க முன்மாதிரியும் ஆகும். அந்த வகையில் ரோட்டக் சகோதரிகளின் வீரத்தை நாம் போற்றுவதும், பார்ப்பனிய ஆணாதிக்கத் திமிருக்கு எதிரான இதை தூக்கிப் பிடிப்படும் அவசியம்.
ஆனால், சம்பவம் மக்களின் கவனத்திற்கு வந்த பின் பாரதிய ஜனதா ஆடும் அழுகுணி ஆட்டங்கள் தான் சகிக்க முடியாததாக உள்ளது. ரோட்டக் சகோதரிகளை பாராட்டும் அதே பாரதிய ஜனதாவில் தான் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு ஆளான நிகால் சந்த் மேஹ்வால் அமைச்சராக இருக்கிறார். பாரதிய ஜனதா ஆளும் ஹரியானா மாநில போலீசாரால் “தலைமறைவாக” உள்ளவராகத் தேடப்படும் அதே மேஹ்வால் மத்திய பாரதிய ஜனதா அரசியல் அமைச்சராக இருக்கிறார்.
பாலியல் வக்கிரங்களும் பாரதிய ஜனதாவும் ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் என்பதை நாம் விரிவாக விளக்கத் தேவையில்லை. சஞ்சய் ஜோஷி சிடி, கர்நாடக மற்றும் குஜராத் சட்டசபைகளில் நீலப் படம் பார்த்த பா.ஜ.க எம்.எல்.ஏக்கள், பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான கள்ளச்சாமியார்களோடான நெருக்கம் என்று இந்தப் பட்டியல் மிக நீண்டது. காமசாஸ்திரம், கொக்கோக சாஸ்திரம் படைத்த ஞான மரபின் புத்திரர்களின் சாதனையை விவரிக்கவும் வேண்டுமா என்ன.
மத்திய இராணுவ அமைச்சர் மனோகர் பாரிக்கர் பொங்கியெழுந்திருப்பது போல் இராணுவத்தின் ஒழுக்க சீலங்கள் என்னவென்பது தமிழர்களுக்குத் தெரியும், தெரியாத தமிழர்கள் ஈழத் தமிழர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். எண்பதுகளின் இறுதியில் ’அமைதிப் படை’ என்ற பேரில் ஈழம் சென்ற இந்திய இராணுவத்தின் மைணர்த் தனங்களைப் பற்றி ஈழத் தமிழர்கள் கண்ணீரால் எழுதி வைத்துள்ள இரத்த வரலாறு நம் கண் முன் உள்ளது.
ஓரு ஆக்கிரமிப்பு இராணுவம் என்ற வகையில் அந்நிய தேசத்தில் மட்டுமல்ல, ஏகாதிபத்தியத்திற்கு அல்லக்கை குண்டர்படை என்ற எதார்த்த நிலைமையின் காரணமாக இந்தியாவுக்குள்ளேயும் ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு எதிராக இந்திய இராணுவத்தின் பாலியல் அடாவடித்தனங்களைச் சொல்லி மாளாது. தங்ஜம் மனோரமாவின் கதையை இன்றைக்கும் மணிப்பூர் பெண்கள் மறக்கவில்லை. காஷ்மீரிகளின் சோகமோ எழுத்தில் விளக்கவியலாதவை.
பெண்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்துக்கே எதிரிகள் இவர்கள். ஊடக வெளிச்சமும், விளம்பரமும் கிடைக்கிறது என்பதைத் தாண்டி ரோட்டக் சகோதரிகளை இவர்கள் ஆதரிப்பதற்கு வேறு எந்த முகாந்திரமும் கிடையாது.
பெண்ணைத் தாயாக, நதியாக, மலையாக, ஏன் கடவுளாகவே ஏற்றிப் போற்றும் அதே இந்து தத்துவ மரபு தான் சில பத்தாண்டுகளுக்கு முன்பு வரை விதவைகளை மொட்டையடித்து மூலையில் உட்கார வைத்தது. ஒரு நூற்றாண்டுக்கு முன்பு கணவனை இழந்த பெண்களை நெருப்பில் இட்டு வாட்டியது. இன்றும், சாதி மாறிக் காதலிக்கும் பெண்களைக் ’கவுரவமாக’ கொன்றொழிக்கும் சாதிவெறியின் அடிப்படையாக இருப்பதும் அதே தத்துவஞான மரபுதான்.
இந்த எதார்த்த உண்மைகளின் யோக்கியதையைப் புரிந்தவர்களுக்கு இந்துத்துவ புத்திரர்களின் போற்றுதலுடைய யோக்கியதையும் புரியும்.
ரோட்டக் சகோதரிகள் காவல் துறையிடம் அளித்த புகாரை வாபஸ் பெற வேண்டும் என்று தற்போது சாதிப் பஞ்சாயத்தார் அழுத்தம் கொடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர்கள் இந்த நிமிடம் வரை அடிபணியவில்லை. அவர்கள் பேருந்தில் உயர்த்திய சாட்டையின் நுனி நிமிர்ந்து நிற்பது பா.ஜ.கவின் இரட்டை வேடத்தை நம்பி அல்ல, மாறாக ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டவர்களின் ஆதரவில் தான் இருக்கிறது.
நாம் அந்த சுயமரியாதையின் வீரத்தை ஆதரிப்போம்; அப்பெண்கள் துவங்கி வைத்துள்ள போராட்டத்தை உயர்த்திப் பிடிப்போம்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத் தலைவராக இருந்த சுப்பையா அய்.ஏ.எஸ் என்ற அதிகாரிக்கு தனது சட்டவிரோத நடவடிக்கைகள் மற்றும் கடத்தலுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஏழரை கோடி லஞ்சமாக வழங்கியுள்ளார் வைகுண்டராஜன்.
சுப்பையா அய்.ஏ.எஸ் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியைச் சேர்ந்தவர். சுப்பையாவின் தாயார் ஜானகியின் பெயரில் காரியாபட்டியில் ஒரு நிலம் உள்ளது. வானம் பார்த்த பூமியான சில லட்ச ரூபாய் மதிப்பேயுள்ள இந்த நிலத்தை சந்தை விலையை விட பல கோடி ரூபாய் அதிகம் கொடுத்து விலைக்கு வாங்கியுள்ளனர் வைகுண்டராஜனும், அவரது அண்ணன் ஜெகதீசனும்.
மிகவும் நூதனமாக நடந்த இந்த ஊழலுக்கு RC MAI 2012 A 0055-என்ற வழக்கு எண்ணில் 120-B IPC r/w 13(2) r/w 13(1)(e) of PC act 1988-ன் படி கடந்த 24.12.2012-ல் சி.பி.அய் வழக்குப் பதிவு செய்தது. கடந்த 17.10.2014 அன்று சுப்பையாவின் சகோதரர் ஜெயராமன் சி.பி.அய்-ஆல் கைது செய்யப்பட்ட நிலையில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் மனுத் தாக்கல் செய்தார் வைகுண்டராஜன். மேற்படி முன்ஜாமின் மனு உயர்நீதிமன்ற நீதிபதி சொக்கலிங்கத்தால் தள்ளுபடி செய்யப்பட்டதால் தற்போது தலைமறைவாகியுள்ளார் வைகுண்டராஜன்.
தூத்துக்குடி – திருநெல்வேலி – கன்னியாகுமரி மாவட்டங்களில் வி.வி.மினரல்ஸ் நிறுவன உரிமையாளர் வைகுண்டராஜன் கடந்த 20 வருடங்களாக நடத்திவரும் தாது மணல் கொள்ளையானது கனிம வளச் சட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு சட்டங்களில் கீழ் குற்றமாகும். குறிப்பாக அணு உலை மற்றும் அணு ஆயுத தயாரிப்பிற்குப் பயன்படும் தோரியத்தின் மூலப்பொருளான மோனோசைட் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் 2 மில்லியன் டன் மோனோசைட் எடுக்கப்பட்டுள்ளது. இந்த மோனோசைட்டில்தான் அணுகுண்டு தயாரிப்புக்குப் பயன்படும் தோரியம் உள்ளது. தோரியம், யுரேனியத்துக்கு மாற்று என்ற நிலையில் இதன் சர்வதேச சந்தை மதிப்பு பல லட்சம் கோடி ரூபாயாகும். இதனால் அரசுக்கு பல லட்சம் கோடி இழப்பு என்பதோடு வைகுண்டராஜனின் இக்குற்றம் மாபெரும் தேசத்துரோகமாகும்.
போராடும் கூடங்குளம் மக்கள் மீது தேசத் துரோக வழக்குப் போடும் தமிழக அரசு வைகுண்டராஜனை இன்றுவரை பாதுகாத்து வருகிறது. கேரளாவிலும் தாது மணல் கடத்தலில் ஈடுபட்டுள்ள வைகுண்டராஜன் மீது கேரள அரசின் குற்றப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது. தமிழக அரசு கடந்த ஆகஸ்ட், 2013 முதல் தாதுமணல் அள்ளத் தடை விதித்தது. ஆனால் அதன்பின்பும் சுமார் நான்கு லட்சம் டன் தாது மணலை ஏற்றுமதி செய்துள்ளார் வைகுண்டராஜன்.
வி.வி.மினரல்ஸ் நிறுவனத்தின் தாது மணல் ஏற்றுமதி அனைத்தும் தூத்துக்குடி துறைமுகம் மூலமே நடைபெற்று வருகிறது. இதில் சட்டவிரோதமாக தோரியம் அனுப்பப்பட்டதும் உள்ளடங்கும். வைகுண்டராஜனின் மேற்படி சட்டவிரோத செயல்களுக்கு தூத்துக்குடி துறைமுக அதிகாரிகள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்து வருகிறார்கள்.
எழுத்துபூர்வ ஆவணங்கள் இருந்ததால் சி.பி.அய் வசம் மாட்டிக் கொண்டவர்தான் தூத்துக்குடி வ.உ.சி துறைமுக தலைவராக இருந்த சுப்பையா அய்.ஏ.எஸ். தனது சட்டவிரோத கடத்தல் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்ததற்காக ஏழரை கோடி ரூபாய் லஞ்சமாக சுப்பையாவிற்கு வழங்கியுள்ளார் வைகுண்டராஜன். இவ்வழக்கில் தற்போது மதுரை உயர்நீதிமன்றம் வைகுண்டராஜனின் முன்ஜாமின் மனுவைத் தள்ளுபடி செய்த பின் வைகுண்டராஜனைக் கைது செய்ய சி.பி.அய் தனிப்படை அமைத்துள்ளதாகச் செய்திகள் வந்துள்ளன. ஆனால் சி.பி.அய் அதிகாரபூர்வமாக இதை அறிவிக்கவில்லை.
வைகுண்டராஜன் நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த நபர் அல்ல. தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் மிகப்பெரிய தொழிற்சாலைகள் நடத்தி வருபவர். கோடிக்கணக்கான சொத்துக்களுக்கு அதிபதி. புதிதாக தொலைக்காட்சி சேனல் கூட தொடங்கி இருப்பவர். இப்படிப்பட்ட நபர் தலைமறைவானார் என்று சொல்வது மக்கள் ஏற்றுக் கொள்ளும்படி இல்லை. ஆகவே வைகுண்டராஜன் தலைமறைவு உண்மை எனில்,
அவரை விசாரணைக்கு ஒத்துழைக்காத தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என சி.பி.அய் அறிவிக்க வேண்டும்.
வி.வி.மினரல்ஸ் நிறுவனம் மற்றும் வைகுண்டராஜன் குடும்ப சொத்துக்களை முடக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வைகுண்டராஜனின் தொலைக்காட்சி நிறுவனத்தை சீல் வைக்க வேண்டும்.
சி.பி.அய் மோடி அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் இவ்வழக்கிலிருந்து தப்பிக்க வைகுண்டராஜன் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க. தலைவர்களை அணுகியுள்ளதாக மக்கள் பேசுகிறார்கள். ஏற்கனவே ”மக்களின்” முதல்வரும், பினாமி முதல்வரும் வைகுண்டராஜனைப் பாதுகாத்து வருகிறார்கள்.
ஆகவே,
மத்திய அரசும், தமிழக பா.ஜ.க.வும் இப்பிரச்சனையில் தங்கள் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும்.
மத்திய அரசு நேர்மையாகச் செயல்படுகின்றதெனில் வைகுண்டராஜனை உடனே கைது செய்து, அவரது சொத்துக்களை முடக்க வேண்டும்.
இந்த லஞ்ச வழக்கோடு வைகுண்டராஜன் கடந்த 20 ஆண்டுகளாய் நிகழ்த்தி வந்துள்ள அனைத்துக் குற்றங்களையும் சி.பி.அய் விசாரிக்க வேண்டும்.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுக கழகத்தில் கடந்த 20 ஆண்டுகளாகப் பணியிலிருந்த அதிகாரிகளின் சொத்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு அவர்களுக்கும் வைகுண்டராஜனுக்கும் உள்ள தொடர்புகள் குறித்து விசாரிக்க வேண்டும்.
குறிப்பாக கடந்த ஆகஸ்ட்,2013-ல் தமிழக அரசு தாது மணல் அள்ளத் தடை விதித்து இன்றுவரை மேற்படி தடை அமலில் உள்ளது.ஆனால் தடைக் காலத்திலும் வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் நிறுவனம் தூத்துக்குடி துறைமுகம் வழியே ஏற்றுமதி செய்துள்ளது. இதற்கு துறைமுக அதிகாரிகள் பலரும் லஞ்சம் வாங்கிக் கொண்டு உடந்தையாக இருந்துள்ளனர். இந்த ஊழல் குறித்தும் சி.பி.அய் விசாரிக்க வேண்டும்.
– மனித உரிமை பாதுகாப்பு மையத்திற்காக வழக்கறிஞர்கள் சிவராஜ பூபதி, அரிராகவன், இராமச்சந்திரன், தங்கப்பாண்டியன் வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தி.
தூத்துக்குடி துறைமுக கழகத்தலைவருக்கு 71/2 கோடி லஞ்சம்! தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு! சி.பி.ஐ.-யே உடனே கைது செய்! சொத்துக்களை முடக்கு!
என்ற தலைப்பில்29.11.2014 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு தூத்துகுடி பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டோம். 10 நாட்களுக்கு முன்பே வைகுண்டராஜனை கைது செய்ய வலியுறுத்தி மூன்று மாவட்டங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது.
கண்டன ஆர்ப்பாட்டத்திற்காக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் பிரச்சாரம் கொண்டுசெல்லப்பட்டது. குறிப்பாக கடந்த ஆண்டில் தாதுமணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்தில் முன்னின்றுள்ள கடலோர கிராமங்களான வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், பெரியதாழை மற்றும் அணு உலைக்கு எதிராக உறுதியாக போராடிவரும் இடிந்தகரை, கூடங்குளம் ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் செய்யப்பட்டது. அங்குள்ள ஊர்க்கமிட்டிகளை சந்தித்தும், பாதிரியார்களை சந்தித்தும், களப்போராளிகளை சந்தித்தும் வைகுண்டராஜன் தலைமறைவு என்று பத்திரிகைகளில் எழுதப்பட்டு வரும் – தமிழக அரசு நாடகமாடிவரும் – தற்போதுள்ள சூழலை விளக்கி, உடனே எதிர்வினையாற்ற வேண்டிய கடமையை முன்வைத்தோம். அனைவரும் போராட்டத்தை ஆதரிப்பதாகவும் கண்டிப்பாக கலந்து கொள்வதாகவும் உத்தரவாதம் தந்தனர்.
அதேபோல் தூத்துக்குடியிலுள்ள விசைப்படகு, நாட்டுப்படகு உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர் சங்கங்களையும், பிற அமைப்புகளையும், ஜனநாயக சக்திகளையும், வழக்கறிஞர்கள், மாணவர்கள், இளைஞர்கள், தொழிலாளர்களையும் தொடர்பு கொண்டு போராட்டத்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தோம்..
சனிக்கிழமை காலை 10.30 அளவில் ஒவ்வொறு பகுதியிலிருந்தும் வந்து அணிவகுத்தனர். அதில் வேம்பார், பெரியசாமிபுரம், கீழவைப்பார், பெரியதாழை உள்ளிட்ட மீனவ கிராமங்களிலிருந்தும், இடிந்தகரை, கூடங்குளத்திலிருந்து பெண்கள் குழந்தைகளும், கோவில்பட்டி, நெல்லை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய இடங்களிலிருந்தும் மக்கள் கலந்து கொண்டனர்.
மாணவர்கள் ஆர்ப்பாட்ட பேனரை பிடித்து நிற்க, வந்திருந்தவர்கள் முழக்க அட்டைகளை உயர்த்திப்பிடிக்க அனைவரின் பார்வையையும் ஈர்க்கும்படி அணிவரிசை அமைந்தது. புரட்சிகர பாடல்களை 30 நிமிடம் ஒலிக்கவிட்டு சரியாக 11.00 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கியது.
கீழவைப்பார் மீனவர்கள் 10.00 மணிக்கே வந்துசேர்ந்தனர். வேம்பாரும், இடிந்தகரையும் தூத்துக்குடிக்கு இருவேறு எல்லைகளில் வடக்கு, தெற்கில் உள்ளது. குறிப்பாக சுமார் 100 கி.மீ தள்ளியுள்ள இடிந்தகரை கிராமத்திலிருந்து அதிகாலையில் அணிதிரண்டு புறப்பட்டு ஆர்ப்பட்டம் தொடங்கியவுடன் வந்து இணைந்தனர்.
நமக்கு முன்பாக இந்த அரசு தன் காவல்துறையை சீருடையிலும், சீருடை இல்லாமலும் களமிறக்கி வைகுண்டனுக்கு தொண்டூழியம் செய்ய முனைப்பு காட்டியது.
ஆர்ப்பாட்டத்திற்கு சிவராச பூபதி (வழக்கறிஞர்) – செயலர் – மனித உரிமை பாதுகாப்பு மையம், குமரி மாவட்டம் – தலைமை தாங்கினார். தனது தலைமை உரையில், “நாங்கள் வைகுண்டராஜனை கைது செய்யுமாறு மட்டுமல்ல கனிமவளக் கொள்ளையர்கள் அனைவருக்கு எதிராகவும் போராடுகிறோம்” என்று பதிவு செய்தார்.
“கடந்த ஆண்டுகளில் மீனவ இடிந்தகரையும், விவசாய கூடங்குளமும் அதாவது பரதவர்களும் நாடார்களும் எப்படி ஒற்றுமையாக செயல்பட்டனர்” என்று விளக்கினார். “அணு உலையை எதிர்த்து போராடும் மீனவர்கள்மீது கடலோரத்தில் துப்பாக்கிச்சூடு நடப்பதை பார்த்த கூடங்குளம் நாடார் சாதியினர் உடனே தமது ஊரில் சாலையை மறித்து படைகளை முடக்கினர்; ரத்தமும் சிந்தினர்” என்பதையும், “அணு உலைக்கு எதிரான போராட்டம் போன்று தொடர்ந்து உழைக்கும் மக்கள் ஒற்றுமையாக போராடினால் மட்டுமே கனிமக்கொள்ளைக்கு முடிவுகட்ட முடியும்” என்றும் உரையாற்றி நிகழ்ச்சியை தலைமைதாங்கி நடத்தினார்.
அடுத்ததாக ஆர்ப்பாட்டம் தொடங்கியது. விண்ணதிர முழக்கங்களை எழுப்பிய தோழர்கள் இந்த அரசு செய்யத்தவறியதை காட்சி வடிவில் தாம் செய்தனர். அதாவது வைகுண்டராஜனை (முகமூடி அணிவிக்கப்பட்ட தோழரை) கயிற்றால் கட்டி இழுத்து வந்தனர். இது மக்களின் கவனத்தை ஈர்த்து, சிந்திக்கத் தூண்டியது.
அப்பொழுது காவல்துறை முகத்துக்கு அருகில் கேமராவை கொண்டுவந்து பதிவு செய்த்து அச்சுறுத்தவும், மக்களின் பார்வையை கெடுக்கும் விதமாக குறுக்கில் மறிக்கவும் முயன்றது. இது போராட்டத்தில் நின்றவர்களை கொதிக்க வைத்தது. முழக்கங்கள் குறிப்பாக காவல்துறையின் ‘மாமா’ வேலைக்கானதை அம்பலப்படுத்துவதாக வீச்சுடன் வெளிப்பட்டது.
தொடர்ந்து வேம்பார், பெரியசாமிபுரத்தைச் சேர்ந்த எழிலன் “சட்டம் அனைவருக்கும் சமம், அனைவரையும் பாதுகாக்கிறது என்பதால்தான் வைகுண்டராஜனையும் பாதுகாக்கிறது போல” என்று அரசின் ஆளும் வர்க்க விசுவாசத்தை சாடினார்.
கீழவைப்பாரை சேர்ந்த சார்லஸ் “எங்கள் ஊரில் நாங்கள் ஓடி விளையாடிய கடற்கரை இன்று இல்லை. கடலுக்குள் போய்விட்டது. தொடர்ந்து மணல் அள்ளினால் ஊருக்குள்ளும் கடல் புகும். மணல் கம்பெனியில் மலைபோல மணலை குவித்துவைத்துள்ளனர். இக்கம்பெனிகளை விரட்டியடித்தாக வேண்டும்” என்று அபாயத்தை விளக்கினார்.
அரி ராகவன் (வழக்கறிஞர்) – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்ட தலைவர் – பேசும்போது “மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மக்களுக்குத்தான் விசுவாசமாக இருக்க வேண்டும். ‘நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் ஸ்டெர்லைட் ஆலை இயங்கும். எதிர்த்தால் வழக்கு’ என்று சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டிய இதே அரசு இப்பொழுது லஞ்சம் தந்து கையும் களவுமாக மாட்டிய வைகுண்டராஜனை கைது செய்யவில்லையே அது ஏன்?” என்றும், லஞ்சம் வாங்குவதில் கடைநிலை ஊழியர் முதல் உயர்மட்ட அதிகாரிகள் வரை கையாளும் வழிமுறைகளையும் இதில் வெளிப்படும் தனித்திறமைகளையும் அம்பலப்படுத்தினார்.
ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தைச் சேர்ந்த சண்முகவேல் பேசும்போது “மனித உரிமை பாதுகாப்பு மையம் நடத்தும் அனைத்து போரட்டங்களிலும் நாங்கள் உடன் இருப்போம்” என்று பதிவு செய்தார்.
வாஞ்சிநாதன் (வழக்கறிஞர்) –HRPC மதுரை மாவட்ட துணைச்செயலர் – பேசியபோது வைகுண்டராஜனின் கையாட்கள் எப்படி தம்மை பல்வேறு வழிகளில் தொடர்பு கொண்டனர் என்பதையும் “நீங்கள் விலகிக்கொள்ள எத்தனை கோடி வேண்டும்” என்று விலைபேசியதையும் குறிப்பிட்டு “எத்தனை கோடி கொடுத்தாலும் விலைபோகாத ஆட்கள் நாட்டில் உள்ளனர் என்று இன்றாவது பார்த்துக்கொள்” என்று பதிவு செய்தார்.
இயற்கை வளம், கனிம வளம் சூறையாடப்படுவதை எதிர்த்து மக்கள் அணிதிரள்வதை தடுக்கும் சூழ்ச்சியாக வைகுண்டராஜனை நாடார் சாதியினரின் பிரதிநிதியாக முன்னிருத்த முயன்றனர் சிலர். ஆனால் எங்கள் பிரச்சாரத்தின்போது இதே தூத்துக்குடி மார்க்கெட்டில் கடுமையாக உழைத்து வாழும் வணிகர்கள் நிதிதந்து வாழ்த்தி தாம் நாட்டை நேசிப்பதை நிரூபித்துள்ளதையும், ஆனால் சில கைக்கூலிகள்தான் நாட்டை சூறையாடிவரும் வைகுண்டராஜனை கடுமையாக உழைத்து தொழில் செய்துவரும் நாடார் சமூகத்தின் பிரதிநியாக முன்னிருத்த முயற்சிப்பதையும் குறிப்பிட்டு சாடினார்.
“ரவுடிகளை ஏவி தாக்குவது பலிக்காது என்பதை உணர்ந்ததால்தான் வைகுண்டராஜன் அடக்கி வாசிக்கிறார். அவர் புத்திசாலி. ஏற்கனவே பொதுக்கூட்டத்தில் கலகத்தை தூண்ட முயற்சித்து சூடுபட்டிருக்கிறார் அல்லவா?” என்று ரவுடிகளின் வீரத்தை எள்ளிநகையாடினார். “நாங்கள் அடித்தால் திருப்பியடிப்பவர்கள்” என்று புரட்சிகர போர்க்குணத்தை முன்வைத்தார்.
“யாருக்கு தேவை தாது மணல்? இனியும் இக்கம்பெனிகளை செயல்படவிடலாமா?” என்று கேள்வி எழுப்பி இதற்கு முன்னுதாரணமான வகையில் BMC கம்பெனியை சூறையாடிய பெரியதாழை மக்களின் போர்க்குணத்தை முன்னுதாரணம் என்று குறிப்பிட்டு உயர்த்திப் பிடித்தார். இந்த அரசு தொடுத்துள்ள வழக்குகளை தமது அமைப்பான HRPC எதிர்த்து முறியடிக்க உதவும் என்றார்.
அணு உலையை எதிர்த்து நடந்துவரும் போராட்டத்திலும் மக்கள் பல்வேறு அடக்குமுறைகளை சந்தித்தும், தேசத்துரோக வழக்குகளை எதிர்கொண்டும், சிலர் உயிரையே தியாகம் செய்தும் போராடிவருவதை குறிப்பிட்டு, “நாட்டுக்காக போராடும்போது அதிகபட்சம் சிறைக்கு அனுப்பப்படுவோம்தான்; சிறை நம்மை என்ன செய்துவிடும்? அதற்காக நாம் வழக்கிற்கும், இழப்பிற்க்கும் அஞ்சக்கூடாது ; கனிமக்கொள்ளையர்களை தண்டிக்காமல் விட்டுவிடக்கூடாது; நம் ஊரைத்தாண்டி ஒரு மணல் லாரியும் செல்லமுடியாது என்ற நிலைமையை உருவாக்குவோம்; அதற்கான போராட்ட கமிட்டிகளை அனைத்து கிராமங்களிலும் கட்டியமைப்போம்!” என்று மக்களுக்கு அறைகூவல் விடுத்தார்.
இடிந்தகரையை சேர்ந்த திருமதி மேரி பேசும்போது “அணு உலைக்கு எதிராக நாங்கள் பட்டினி கிடந்தும் துன்பங்களை சகித்தும் போராடி வருகிறோம். கடலுக்கு போனாத்தான் எங்களுக்கு பொழப்பு. நாட்டு மக்களுக்காக போராடுனா இந்த அரசு எங்களை தீவிரவாதின்னு சொல்லுது. அமெரிக்காவுல இருந்து காசு வாங்கறாங்கன்னு பழிபோடுது. எங்க புள்ளைங்க வெளிநாட்டிலிருந்து அனுப்பற பணம் இந்த அரசாங்கத்துக்கு தெரிஞ்சுதானே இவிங்க மூலமாத்தானே வருது. இதை எப்படி தப்புங்கறாங்க? நாங்க தப்பாக காசுவாங்குனதா இந்த அரசாலே நிரூபிக்க முடியுமா? அப்படி நிரூபித்தால் நாங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ள தயார்” என்று சவால் விட்டார். தமது போராட்டத்தை கொச்சைப்படுத்தும் இந்த அரசை எச்சரிக்கும் விதமாக “அணு உலையை மட்டுமல்ல; சிறுநீரகத்தை சிதைக்கும், புற்றுநோயை பரப்பும் தாதுமணல் கம்பெனியை எதிர்த்தும் உறுதியாக போராடுவோம்” என்று முழங்கினார்.
இடிந்தகரை மீனவ மக்களின் போர்க்குணத்தை பதியவைத்த மேரி
இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘பெண்கள் வீட்டை மட்டும் பார்த்தால் போதும்’ என்ற ஆணாதிக்க சிந்தனைக்கு ஆப்பறையும் விதமாகவும், வந்திருந்த ஜனநாயக சக்திகளை சிந்திக்க தூண்டும்படியும் முன்னுதாரணமானதாக இருந்தது இடிந்தகரை மீனவ பெண்களின் பங்களிப்பு. உணர்வுபூர்வமாக அவர்கள் எழுப்பிய முழக்கங்களும், அவர்களின் சார்பாக பேசிய திருமதி மேரியின் பேச்சும் பார்வையாளர்களை மட்டுமல்ல; உடன் நின்றிருந்த தோழர்களுக்கும் உணர்வூட்டி சிந்திக்கத்தூண்டியது.
இந்த ஆர்ப்பாட்டம் அனைத்து பிரிவு உழைக்கும் மக்களின் பங்கேற்புடன்தான் நடந்தது. குறிப்பாக ஆர்ப்பாட்ட செலவை ஈடுகட்ட பெரியதாழை ஊர்க்கமிட்டியினர் 3000.00ரூபாயும், கூடங்குளத்து மக்கள் 1000.00 ரூபாயும், பெரியசாமிபுரத்திலிருந்து 1000.00 ரூபாயும், தூத்துக்குடி மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தினர் 2000.00 ரூபாயும் தந்து போராட்டத்திலும் பங்கெடுத்ததை வைத்து புரிந்துகொள்ள முடிந்தது.
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, விவசாயிகள் விடுதலை முன்னணி உள்ளிட்ட புரட்சிகர அமைப்புத்தோழர்களும், எழுத்தாளர் குளச்சல் முகம்மது யூசூப் உள்ளிட்ட முற்போக்காளர்களும் பங்கெடுத்தனர்.
இறுதியாக ராமச்சந்திரன் (வழக்கறிஞர்) –செயலர் – மனித உரிமைப் பாதுகாப்பு மைய தூத்துக்குடி மாவட்டம் – நன்றியுரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டம் தாதுமணல் கம்பெனிகளை அடித்து விரட்டும் தொடர் போராட்டத்துக்கான முன்னறிவிப்பாக அனைவர் மனதிலும் பதிந்தது.
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
செய்தி
மனித உரிமைப் பாதுகாப்பு மையம்- தமிழ்நாடு தூத்துக்குடி-நெல்லை-குமரி மாவட்டங்கள்
விருத்தாசலம் தாலுக்கா, கருவேப்பிலங்குறிச்சி வெள்ளாற்றில் கடந்த 10 மாதமாக மாநில சுற்றுச்சூழல் ஆணையத்தின் தடையில்லாச் சான்றிதழுடன், மாவட்டஆட்சியரின் 3 ஆண்டுகால அனுமதி உத்தரவுடன் சுமார் 50 ஏக்கர் பகுதியில் ஆற்று மணலை அள்ளுவதற்கு அமைக்கப்பட்ட கார்மாங்குடி மணல்குவாரி செயல்பட்டு வருகிறது. மணல் குவாரியை எதிர்த்த பகுதி மக்களின் சிறு சிறு போராட்டங்களை கடந்து, 10 மாதங்களுக்குப் பிறகும் மணல் கொள்ளை நிறுத்தப்படவில்லை. ‘அனைவரும் மணல்கொள்ளைக்கு காசு வாங்கிவிட்டார்கள்’ என்ற அவநம்பிக்கையுடன் மக்கள் இருந்த நிலையில் மனித உரிமை பாதுகாப்பு மையம் வெள்ளாற்றுப் பகுதி மக்களிடையே தொடர்ந்து ஒரு மாத காலமாக பிரச்சாரம் நடத்தி நம்பிக்கை ஏற்படுத்தியது.
2-12-2014 அன்று ஆயிரக்கணக்கான மக்களோடு ஆற்றில் இறங்கி மணல் அள்ளும் எந்திரத்தை முற்றுகையிட்டு மணல்குவாரியை தற்காலிகமாக மூடும்படி அதிகார வர்க்கத்தை பணிய வைத்திருக்கிறோம்.
மக்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்த போராட்டம் பற்றிய விபரங்களை சுருக்கமாக தருகிறோம்.
“2-12-2014 கார்மாங்குடி மணல் குவாரி முற்றுகை” “நீர் ஆதாரத்தை காக்க வீட்டுக்கு ஒருவர் ஆற்றில் இறங்குவோம்” என்ற முழக்கத்துடன் பிரசுரங்களை ஆற்றின் இரு கரையிலும் உள்ள 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விநியோகித்து சுவரொட்டி ஒட்டிச்சென்றோம். இளைஞர்கள், பெண்கள் உட்பட அனைத்து மக்களையும் மறியல் போராட்டத்திற்கு வாருங்கள் என உள்ளுர் இளைஞர்களுடன் இணைந்து அழைப்பு விடுத்தோம்.
மக்கள் மத்தியில் மணல் குவாரிக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவு வலுப்பது தெரிய வந்த விருத்தாசலம் தாசில்தார் பணம் வாங்குவதற்காக போராட்டம் அறிவித்த வல்லியம் கிராமத்தைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்களை அழைத்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதில் கலந்து கொண்ட மணல் குவாரிக்கு எதிரான கீரனுர் நபர்கள் குறுக்கிட்டு, “உங்கள் நியாயம் வேண்டாம். மணல்குவாரியை மூடுவதாக இருந்தால் பேசுங்கள். மணல் குவாரி வேண்டுமா? விவசாயிகள் வேண்டுமா?” என முடிவு செய்யுங்கள் என வெளியே வந்துவிட்டனர்.
மக்கள் போராட்டத்தை ஒட்டி மணல் லாரிகளை அப்புறப்படுத்தும் போலிசார்
“திட்டமிட்டபடி மறியல் போராட்டம் நடக்கும்” என மனித உரிமை பாதுகாப்பு மையம் சார்பில் பத்திரிகை செய்தி கொடுக்கப்பட்டது.
கார்மாங்குடியில் அறிவரசன் என்ற எம்.டெக். படித்த மாணவர் ஆரம்பம் முதலே மணல் கொள்ளைக்கு எதிரான போராட்டத்துக்கு ஆதரவளித்து நம்மோடு இணைந்து செயல்பட்டு வந்தார். மணல்குவாரி மேலாளர் கார்த்திக் என்பருடைய தூண்டுதலில் இளங்கோவன் என்பவர் 4 நாட்களுக்கு முன்பாக, ‘மணல்குவாரியை மறிப்பவர்கள் யாராக இருந்தாலும் அறிவரசனாக இருந்தாலும் அவர்களுக்கு சப்போட்டாக வக்கீல் வந்தாலும் வெட்டுவேன்’ என்று மிரட்டிச் சென்றுள்ளார். மேலும் கார்மாங்குடி கிராமம் முழுவதும் போராட்டத்தில் கலந்து கொள்ள கூடாது என்பதற்காக பணம் கொடுப்பதும், மிரட்டுவதும் தொடர்ந்து நடந்து வந்தது.
இந்த சூழலில் போராட்டத்தன்று காலையிலேயே புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் கார்மாங்குடி, கருவேப்பிலங்குறிச்சி, நேமம், வல்லியம், சக்கரமங்கலம், முத்துகிருஷ்ணாபுரம், கீரனூர், மேலப்பாளையுர், மருங்கூர் ஆகிய ஊர்களிலிருந்து மக்களை ஒருங்கிணைத்து அழைத்து வந்தனர்.
மணற் கொள்ளையை நிறுத்தாமல் அகலமாட்டோம் – போராட்டக் களத்தில் மக்கள்
மக்கள் கூட்டததை பார்த்ததும் அதிகாரிகள் மணல் லாரிகளை அங்கிருந்து அவசரமாக அகற்றினர். மணல் அள்ளும் ஜே.சி.பி. எந்திரம் இருக்கும் இடத்திற்கு செல்ல ஆற்றில் 3 கிலோமீட்டர் நடந்து செல்ல வேண்டும். காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செந்தில், துணைக்கண்காணிப்பாளர் வெங்கடேசன் மற்றும் பாண்டியன் ஆய்வாளர்கள் செந்தில்குமார், சுப்புராயலு, ராஜேந்திரன் மற்றும் 50-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் ஆற்றிலே நடக்க முடியாமல் நடந்து வந்தனர். அதிகாரிகள் மணல்மேட்டில் பார்வையாளராக உட்கார்ந்து விட்டனர்.
ஆற்றில் ஜேசிபியை நோக்கி இருபக்கமும் வேகமாக வந்த மக்கள் காட்டாற்று வெள்ளம் போல் இயந்திரத்தை முற்றுகையிட்டனர். கரையில் இருந்து நம் முழக்கத்தை தொடர்ந்து, வந்த மக்கள் ஆங்காங்கே அமர்ந்த பிறகு தொடர்ந்து முழக்கம் இட்டோம். அதைத் தொடர்ந்து போராட்டத்தின் நியாயங்களை அதிகாரிகளின் கழுத்தறுப்பு வேலைகளை, அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை ஆதாரங்களோடு விளக்கி மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ராஜூ உரையாற்றினார்.
“மாநில சுற்றுச்சூழல் ஆணையம் ஆற்றுமணலை கொள்ளையடிக்க தடையில்லாச் சான்று வழங்குகிறது. அதன் தலைவர் யார்? ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி. முதலாளிக்கும், அரசுக்கும் ஜால்ரா போடுபவர்கள்.
மணல் அள்ளும் எந்திரத்தின் மீது மக்கள் போராட்டம்!
அதன் பிறகு மாவட்ட ஆட்சியர் ஆற்றில் ஒரு மீட்டர்தான் மணல் அள்ள வேண்டுமென உத்தரவு போடுகிறார். இங்கே 40 அடி மணலை கொள்ளயடித்துள்ளார்கள். மாவட்ட நிர்வாகம் ஒன்றும் செய்யவில்லை.
இவர்கள் செய்கிற தவறுகளை எதிர்த்து நாம் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்குப் போட வேண்டும். அதன் தலைவர் யார்? ஓய்வு பெற்ற நீதிபதி. அரசுக்கும், முதலாளிக்கும் அடியாள் வேலை செய்பவர்கள்.
அதன் பிறகு உயர்நீதிமன்றத்தில் வழக்குப் போட வேண்டும். அங்கு தமிழக அரசே நமக்கு எதிராக வழக்கு நடத்தும். கமிட்டி போடும். விசாரிக்கும். அதற்குள் ஆற்று மணல் முழுவதையும் அள்ளி முடித்து விடுவார்கள். இதுதான் சட்டம்.
மக்களின் கேள்விக்கு பதில் கூற திணறும் அதிகார – போலீசு வர்க்கம்
நமக்கு சட்டம் தேவையி்ல்லை. நியாயம் வேண்டும் என போராடுகிறோம். ஆற்று மணலை அளவுக்கு அதிகமாக கொள்ளையடித்தால் நீர்வளம் பாதிக்கும் என்பது நீர்வள ஆதார பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்குத் தெரியும். வருவாய்த்துறை, காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியும். அமைதியான முறையில் மனு கொடுத்தால் தீர்வு எப்படி கிடைக்கும்?
இன்றைய தினம் நாம் உறுதியாக மணல் குவாரியை மூடும்வரை இங்கிருந்து செல்ல மாட்டோம் என போராடினால் கண்டிப்பாக வெற்றி பெற முடியும். மக்கள் எல்லாம் அயோக்கியர்கள், காசு வாங்க கூடியவர்கள் என ஏளனம் பேசும் அரசியல்வாதிகள், அதிகாரிகள் அச்சப்படுகின்ற வகையில் நம்முடைய போராட்டம் அமைய வேண்டும்.
இது மணல்கொள்ளைக்கு எதிரான போராட்டம் மட்டுமல்ல. நம் மானம் காக்கும் போராட்டம். அரசு மணல்குவாரியை மூட வேண்டும் அல்லது நம் அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்குவதோடு, நாம் அனைவரும் சிறை செல்ல தயங்க கூடாது.
மனித உரிமைபாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் உங்களைவிட்டு ஓடிவிட மாட்டோம். முதல் ஆளாக போலீஸ் வேனிலே ஏறுவோம்.
எல்லா காலங்களிலும் அயோக்கியர்கள் இருந்திருக்கிறார்கள். ஊழல் அதிகாரிகள் இருந்திருக்கிறார்கள். யோக்கியமானவர்கள், நேர்மையான அதிகாரிகள் என்ன செய்கிறார்கள்? என்பதுதான் முக்கியமானது. எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்று நினைப்பவர்களோடு, இப்படித்தான் மானத்தோடு, நேர்மையாக உழைத்து வாழ வேண்டும் என நினைப்பவர்கள் தங்களை ஒப்பிடத் தேவையில்லை.
நமது போராட்டம் தமிழகம் முழுவதும் ஆற்று மணல் கொள்ளைக்கு எதிராக போராடக்கூடிய மக்களுக்கு கலங்கரை விளக்கமாக நம்பிக்கை ஊட்டுவதாக அமைய வேண்டும்.
மணல் கொள்ளையில் அரசின் இதே அணுகுமுறைதான் கல்விக் கட்டணக்கொள்ளையிலும், மின் கட்டண உயர்விலும்,கேஸ் மானியம் ரத்து செய்வதிலும், மருத்துவம் தனியார்மயத்திலும் கடைபிடிக்கிறது. போராடுவதைத் தவிர வேறுவழியில்லை என்ற நிலையில் நாம் வாழுகிறோம்.
உங்கள் உறவினர்கள் அனைவரையும் பெருந்திரளாக இந்தப் போராட்டத்திற்கு வரச்சொல்லுங்கள். எத்தனை நாளானாலும் மணல் குவாரியை மூடுகின்ற வரை நமது போராட்டத்தை விலக்கக்கூடாது. ஒரு நாள் போராட்டத்திலேயே வெற்றியைத் தேடி களைப்படையத்தேவையில்லை.
கூடங்குளம் அணுஉலை போராட்டத்திலும், முல்லை பெரியாறு அணைக்காக நடந்த மக்கள் போராட்டங்களும் பல நாட்கள் நடந்தது.
காவல்துறையை கண்டு அச்சப்படத்தேவையில்லை. வழக்கு, சிறைகளுக்கு தயங்கத் தேவையில்லை. ‘அவுங்க ஊர் பாதிப்பிற்கு நீ ஏன் போராடுகிறாய்?’ என மக்களிடம் கேள்வி கேட்டு ‘கலைந்து போ’ என திணறடிக்கிறது அதிகாரவர்க்கம். வ.உ.சி.யும், பகத்சிங்கும் ஒட்டுமொத்த மக்களுக்கும் போராடினார்கள். கட்டபொம்மனும், மருது சகோதரர்களும், ஆங்கிலேயரை எதிர்த்துப் போராடினார்கள். ஏரியா பிரிக்க வில்லை. ஆகையால் ஆற்று மணல் கொள்ளையை தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். மணல்குவாரியை மூடுகிற வரை உறுதியாக களத்திலே நிற்க வேண்டும்” என பேசினார்.
மணற் கொள்ளையர்கள் தங்குமிடம் தீவைப்பு
அதன்பிறகு ஊர் முக்கியஸ்தர்கள் கீரனூர் ராஜவன்னியன், மருங்கூர் பஞ்சமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜகோபால், செந்தில்குமார், விஜயகுமார், மேலப்பாளையுர் சசிக்குமார், கார்மாங்குடி சிவப்பிரகாசம், அறிவரசன், பன்னீர்செல்வம் ஆகியோர் உரையாற்றினார்கள். மனித உரிமை பாதுகாப்பு மையத்தை சேர்ந்த செந்தாமரைக்கந்தன், செல்வகுமார்வழக்கறிஞர்கள் புஷ்பதேவன், செந்தில், செந்தில்குமார் ஆகியோர் உரையாற்றினர்.
“மணல்குவாரியை கண்டிப்பாக மூடவேண்டும். மனித உரிமை பாதுகாப்புமையம் தொடர்ந்து பலமுறை எங்கள் ஊருக்கு இரவும், பகலும் வந்து பிரச்சாரம் செய்தனர். அதனால் இவ்வளவு மக்கள் வந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்றி கடன்பட்டிருக்கிறோம். விலை போய்விடுவார்கள் என்று எங்களிடம் பலர் எச்சரித்தனர். அதையெல்லாம் பொய்யாக்கி இன்றைக்கு இந்த போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார்கள். அவர்களோடு தொடர்ந்து நாங்கள் உறுதியாக நிற்போம்” என அவர்கள் கருத்து தெரிவித்தனர்.
“அரசியல் ஓட்டுக்கட்சியை நம்பாதீர்கள், சாமியை நம்பாதீர்கள், ஜனநாயகம் என்னவென்றால் இன்றைக்குத்தான் பார்க்கிறேன். மனித உரிமை பாதுகாப்பு மையம் இல்லை என்றால் நம்மால் இந்த குவாரியை மூட முடியாது” என்று தொடர்ந்து போராடிவரும் அறிவரசன் பேசினார். கீழ்நிலை காவலர்களும், வருவாய்த்துறை ஊழியர்களும் மக்களோடு மக்களாக நின்று கொண்டு பேசியதை ரசித்து கேட்டனர். வயதானவர்கள்கூட கூட்டத்தோடு கூட்டமாக வந்து கலந்து கொண்டனர். “எங்கிருந்தோ வந்து செய்றாங்க. கலந்துகொள்வது நமது கடமை” என பேசிக் கொண்டனர்.
நமது கோரிக்கையை ஒலிபெருக்கி மூலமாக மக்கள் குரலோடு சேர்த்து, “மணல் குவாரியை மூட வேண்டும். மூடும்வரை இங்கிருந்து அகலமாட்டோம். உங்கள் பதில் என்ன?” என நிறுத்திக்கொண்டோம்.
பேச்சுவார்த்தைக்கு வந்த வருவாய் கோட்டாட்சியர், “மணல் கொள்ளை குறித்து சுரங்கத்துறை, நீர்வளத்துறை, பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை இணைத்து அதிகாரிகள் குழு அமைக்கிறேன். விசாரணை அறிக்கை வரும் வரை ஒருவாரம் பொறுங்கள்” என வேண்டுகோள் விடுத்தார்.
“நீங்கள் எத்தனை விசாரணைக்குழுவையும் அமைத்துக்கொள்ளுங்கள். எத்தனை நாள் வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள். இன்றைக்கு மணல்குவாரியை மூட வேண்டும். விசாரணை, அறிக்கை என்பதெல்லாம் மக்களை ஏமாற்றும் அதிகாரிகள் நடவடிக்கை. கண்முன்னே தெரிகின்ற இந்த மணல்கொள்ளையை மூடுவதற்கு தயங்கக் கூடாது. பொது அமைதிக்கு பங்கம் என மக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு போடும் நீங்கள் மணல்கொள்ளைக்கு எதிராக உத்தரவு போட முடியும். மக்களை அலைக்கழிக்க நினைக்காதீர்கள். எங்களுடைய ஒரே கோரிக்கை மணல்குவாரியை மூட வேண்டும். முடியாது என்றால் நீங்கள் எங்களை கைது செய்யலாம். அதற்கு நாங்கள் தயார்” என அனைவரும் உறுதியாக தெரிவித்தோம்.
உயரதிகாரிகளிடம் பேசிய கோட்டாட்சியர் “தற்காலிகமாக இந்த குவாரியை மூட உத்தரவிடுகிறேன்” என அறிவித்தார்.
ஒட்டுமொத்த மக்களும் உணர்ச்சி பொங்க மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். “மணல் அள்ளும் எந்திரத்தை அப்புறப்படுத்த வேண்டும். இல்லையென்றால் நாங்களே அகற்றுவோம்” என்று கூறியதும், காவல்துறை பாதுகாப்புடன் மணல்குவாரி உரிமையாளர்கள் இரண்டு கிட்டாட்சி எந்திரத்தை கரைக்கு எடுத்துச் சென்றனர். காவலுக்கு வந்த காவல்துறையினர் வாகனம் மணலிலே திரும்பிசெல்ல முடியாமல் காவலர்கள் தள்ளி சிரமப்பட்டனர்.
போராட்டத்தில் ஆரம்பம்முதலே உற்சாகத்துடன் கலந்து கொண்ட சிறுவர்கள், வெயிலுக்காக மணல்குவாரி காரர்கள் அமைத்திருந்த கொட்டகையை பிய்த்து தீ வைத்து எரித்தனர். மணலில் சிக்காமல் செல்வதற்காக மணல் கீழே போடப்பட்ட கரும்புசெத்தையும் கொளுத்தினர்.
கார்மாங்குடி ஊராட்சிமன்றத் தலைவர் வெங்கடேசன் என்பவர் விவசாய சங்க பேனரை வைத்துக்கொண்டு அதிகாரிகளோடு நெருக்கமாக உறவாடி, மணல்குவாரிக்கும், மணல்கிடங்குக்கும் இடம்பிடித்து கொடுத்து ஆதரவு அளித்து வருபவர். இதனால் பல லட்சம் ஆதாயம் அடைந்தவர். நம் ஊரில் ஒரு சிறுவன் மணல்குவாரியை மூட முக்கிய காரணமாகி விட்டான் என்ற அவமானத்தில், இதுவரை நாள்தோறும் அதிகாரிகளுக்கும்,உள்ளுர் அல்லக்கைகளுக்கும் வந்து கொண்டிருந்த மாமுல் பணம் இன்று முதல் கிடைக்காது என்ற ஆத்திரத்தில் காவல் துறையை கையாளாக பயன்படுத்தினார். ‘ஆற்றில் 10 அடிக்கு கீழே இருந்த கரும்பு செத்தையை மணல் கொள்ளையை எதிர்த்து போராடிவரும் கார்மாங்குடி அறிவரசன்தான் கொளுத்தினார்’ என புகார் வாங்கி காவல்துறை உடனடியாக வழக்கு பதிவு செய்ய முயன்றது.
இச்செய்தி கேள்விபட்டு நமது வழக்கறிஞர்கள், “இலட்சக் கணக்கில் மணல்கொள்ளை போனதுக்கு எந்த எப்.ஐ.ஆரும் இல்லை. ரூபாய் 2000 பெறுமானம் உள்ள கரும்பு செத்தையை கொளுத்தினான் என்று வழக்குபோடுவது அநியாயம். அமைதியாக முடிந்த போராட்டத்தை மணல்கொள்ளைக்கு ஆதரவாக பிரச்சனையாக்கப் பாக்கிறது காவல் துறை” என நேரடியாக விருத்தாசலம் காவல்துறை ஆய்வாளர் செந்தில்குமாரிடம் குற்றம் சாட்டினோம்.
“புகார் கொடுத்திருக்கிறார்கள். சட்டப்படி வழக்கு பதிவு செய்வது எனது கடமை” எனபேசினார். “மேற்கொண்டு விசாரணையில் அறிவரசன் தவறு செய்யவில்லையென்று தெரிய வந்தால் கைது செய்ய மாட்டேன்” என வாக்குறுதி கொடுத்தார்.
“அறிவரசன் கடைசிவரை எங்களோடு இருந்தார். இத்தகைய காரியங்களில் அவர் ஈடுபட மாட்டார். கொளுத்தியதற்கு வழக்கு பதிய வேண்டுமென நினைத்தால் பெயர் இல்லாமல் பதிவுசெய்யுங்கள்” என சொன்னோம்.
ஆய்வாளர், “புகார் கொடுத்தவர் பெயரோடு கொடுத்திருக்கிறார். நான் என்ன செய்ய முடியும்” என சட்டம் பேசினார்.
உடனே நமது வழக்கறிஞர்கள் ஊர் முக்கியஸ்தர்களை கலந்து ஆலோசித்து, “4-12-14-ம் தேதி மாலை 4 மணிக்கு கருவேப்பிலங்குறிச்சியில் மணல் கொள்ளைக்கு ஆதரவாக பொய்வழக்கு போடும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி” கேட்டு விண்ணப்பம் கொடுத்தோம்.
ஆய்வாளரின் கை நடுங்கியது. வெளியில் நின்ற எதிர் தரப்பினர் அமைதியாகினர். மேலும், அறிவரசன் பெயரை போட்டு எப்.ஐ.ஆர் பதிவு செய்தால் நாளைய தினம் குற்றவியல் நீதிமன்றத்தில் 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், “செத்தையை நாங்கள்தான் கொளுத்தினோம்” என ஒப்புக்கொண்டு சரணடைவது என முடிவெடுத்தோம்.
புகார் கொடுத்த எதிர் தரப்பினர், “நாங்கள் புகாரை வாபஸ் வாங்கிகொள்கிறோம்” என நமக்கு தூது அனுப்பினர். ஆய்வாளரோ, “எப்.ஐ.ஆர் போட மாட்டேன். அப்படி போட்டாலும் பெயர் இல்லாமல் போடுகிறேன்” எனச் சொல்லி அனுப்பினார். மேலும் ஆர்ப்பாட்ட அனுமதி கடிதத்தை திரும்ப பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினார். இவ்வாறு, மணல்குவாரிக்கு ஆதரவான காவல்துறையின் அச்சுறுத்தலை முளையிலேயே நாம் கிள்ளி எறிந்தோம்.
போராட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து மக்களும், “நாம் போராடியா இந்த வெற்றியை பெற்றோம்” என அளவில்லா உற்சாகம் அடைந்தனர்.
70 வயதை கடந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர், “மனித உரிமை பாதுகாப்பு மையமும், விலைபோகாத யாருக்கும் அஞ்சாத வழக்கறிஞர்கள்தான் இந்த போராட்டத்தை சாதித்துள்ளனர். அவர்களை மனமார வாழ்த்துகிறோம். என் சார்பாக போராட்டம் நிதியாக 1000 தருகிறேன்” என நிதி கொடுத்தார். அதைத் தொடர்ந்து பல்வேறு நபர்களும் 200, 500, 1000 என அந்த இடத்திலேயே சுமார் 5000 ரூபாய் வசூல் ஆனது. மருங்கூர் கிராமத்தைச் சேர்ந்த பஞ்சமுத்து என்பவர், “அனைவருக்கும் என் செலவில் உணவு வழங்குகிறேன்” என மனித உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் மற்றும் தோழர்கள் 20 பேருக்கு மேல் உணவு வழங்கினார்.
இந்நிகழ்வில் அனைத்து பத்திரிகையாளர்களும் ஊடக துறையினரும் இறுதிவரை அங்கேயே இருந்தனர். மணல் கொள்ளைக்கு எதிராக படம் எடுக்கிறார்கள், நம்மிடம் பேட்டி எடுக்கிறார்கள் ஆனால் தொலைக்காட்சியில் அதற்கு உரிய முக்கியத்துவத்தில் காட்டப்படுவதில்லை. அல்லது காட்டாமல் இருட்டிப்பு செய்யப்படுகின்றது. அங்கு வந்த நிருபர்களிடம், “எங்கள் போராட்டத்தை மக்கள் ஏன் காட்ட வில்லை” என கேள்வி எழுப்பினர் மக்கள்.
“மணல் கொள்ளையர்கள் மேலே உள்ள தலைமை நிருபர்களை கவனிக்கின்றனர் மாவட்ட நிருபர்களும் பணம் வாங்குகின்றனர், நாங்கள் என்ன செய்ய முடியும்” என உள்ளுர் பத்திரிகையாளர்கள் வருத்தபடுகின்றனர். அதிகாரிகள் போல் ஊடக நிருபர்களும் லஞ்ச ஊழலுக்கு பலியாகியுள்ளனர். மக்கள் போராட்டத்தை காட்ட வேண்டாம் என தடுப்பது போலீசு மற்றும் ஊடக துறையின் நோக்கமாக உள்ளது.
காலை 10 மணி முதல் ஆரம்பித்த தன்னெழுச்சியான மக்கள் போராட்டத்தை மனித உரிமை பாதுகாப்பு மையம் ஒருங்கிணைத்து தலைமை தாங்க, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இணைந்து களப்பணி ஆற்றினர். மக்கள் அனைவரும் இறுதிவரை கட்டுப்பாடோடு கோரிக்கையை முன்வைத்து போராட, உணர்ச்சிப் பூர்வமாக உரையாற்றி எழுச்சிகரமான முழக்கங்களோடு போராட்டத்தை நடத்தியது மனித உரிமை பாதுகாப்பு மையம்.
இது, தற்காலிக வெற்றியை ஈட்டித்தந்திருக்கிறது. மக்களிடையே உள்ள அவநம்பிக்கையை தகர்த்திருக்கிறது.
வருகின்ற 15-12-14 அன்று தேதி கருவேப்பிலங்குறிச்சியில் மாபெரும் பொதுக்கூட்டத்தை நடத்துவது என ஏகமனதாக முடிவு செய்யபட்டது. பெற்ற வெற்றியை தக்க வைக்கவும் ,அதிகாரிகளை அச்சுறுத்தவும் ஆயிரக்ககணக்கில் கூடவேண்டும் என்ற அறிவிப்பை அனைவரும் வரவேற்றனர்.
பத்திரிகை செய்திகள்
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
தகவல் மனித உரிமை பாதுகாப்பு மையம் கடலூர் மாவட்டம்.
“பிராஸ்பெக்ட்” ( Prospect )ஆங்கில மாத இதழில் அருந்ததி ராய் எழுதிய கட்டுரை “இந்தியாவின் இழிவு”.
இந்தியாவின் சாதிகளில் ஆகக் கடைசியாக ஒடுக்கப்படும் தாழ்த்தப்பட்டோர், தீண்டாமையின் கொடூரம், அந்த கொடூரமெல்லாம் ஒரு விசயமா என்று செல்வாக்கு செலுத்தும் பொதுப்புத்தி, இதை எதிர்த்து அம்பேத்கரின் போராட்டம், பொருளாதார- கலாச்சார அரங்குகளில் ஆதிக்கம் செலுத்தும் பார்ப்பன-பனியா கூட்டணி என்று வரலாறு, நடைமுறை, சம்பவம், ஊடகங்கள், அதிகார வர்க்கம், போலீசு, சட்டம் என்று விரிவாக பேசுகிறார் அருந்ததி ராய்.
கட்டுரையின் முடிவில் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:
“சாதி அமைப்பை அழிக்க முடியுமா? நாம் நமது மண்டலத்தில் விண்மீன் நிலைகளை மாற்றியமைக்கத் துணிவு காட்டாத வரை, புரட்சியாளர்கள் எனச் சொல்லிக் கொள்வோர் தங்களைப் பார்ப்பனியத்தின் தீவிர விமர்சகர்ளாக மாற்றிக் கொள்ளாத வரை, பார்ப்பனியத்தைப் புரிந்து கொண்டோர் தங்களின் முதலாளித்துவ விமர்சனத்தைக் கூர்மைப்படுத்திக் கொள்ளாத வரை சாதியை அழிக்க முடியாது. அது வரை இந்துஸ்தானத்தின் நோய்வாய்ப்பட்ட ஆண், பெண்களாகவே நாம் இருந்து வருவோம், அவர்களுக்கோ நலம் பெற வேண்டுமென்னும் எண்ணம் இருப்பதாகவே தெரியவில்லை.”
கட்டுரையின் ஆரம்பத்தில் இப்படி குறிப்பிடுகிறார்:
என் தந்தை ஓர் இந்து பார்ப்பனர். நான் வயதுக்கு வரும் வரை அவரைப் பார்த்ததே இல்லை. தென்னிந்தியாவில் கம்யூனிஸ்டு ஆட்சி நடந்த கேரளாவில் அயமெனம் சிற்றூரில் ஒரு சிரிய கிறித்துவக் குடும்பத்தில் என் தாயோடு வளர்ந்து வந்தேன். அயமெனம் சிற்றூர்க்கென அமைந்திருந்த ‘பறையர்’ தேவாலயத்தில் ‘பறையர்’ குருமார்கள் ‘தீண்டத்தகாத” திருக்கூட்டத்தினரைப் பார்த்து போதனைகள் வழங்குவர். ஊர் மக்களின் பெயர்களில், அவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக் கொள்வதில், செய்யும் தொழிலில், உடுத்தும் உடையில், ஏற்பாடு செய்யும் திருமணங்களில், பேசும் மொழியில் சாதி ஒட்டிக் கொண்டிருக்கும். ஆனாலும் நான் ஒரு பள்ளிப் பாடப் புத்தகத்தில் கூட சாதி என்னும் கருத்தைக் கண்டதே இல்லை. இந்திய எழுத்தாளரும் சிந்தனையாளருமாகிய பி. ஆர். அம்பேத்கர் 1936-ல் வழங்கிய உரையாகிய சாதி ஒழிப்பு என்னும் நூலைப் படித்த பிறகுதான் நமது பயிற்றுமுறை உலகில் உள்ள பெரும் இடைவெளி பற்றி என் மனத்தில் உறைத்தது. இந்த இடைவெளி இருப்பதேன் என்றும், அது இந்தியச் சமுதாயம் அடிப்படையான புரட்சிகர மாற்றத்துக்கு உள்ளாகாத வரை தொடரவே செய்யும் என்றும் கூட அவ்வாசிப்பு எனக்குத் தெளிவாக உணர்த்தியது.
கட்டுரையின் இடையில் வரும் ஒரு பத்தி:
இனவொதுக்கல், இனவெறி, ஆணாதிக்கம், பொருளியல் ஏகாதிபத்தியம், மத அடிப்படைவாதம் போன்ற ஏனைய சமகாலத் தீச்செயல்களை எதிர்த்துப் பன்னாட்டு மன்றங்களில் அரசியல் வகையிலும், அறிவு வகையிலும் விவாதிக்கப்பட்டுள்ளன. இதே போன்ற ஆய்வுகளிலிருந்தும், குற்றச்சாட்டுகளிலிருந்தும் இந்தியாவின் சாதி நடைமுறை, மனிதச் சமுதாயம் அறிந்துள்ள மிகக் கொடுமையான படிமுறைச் சமுதாய அமைப்புகளில் ஒன்றாகிய இந்த நடைமுறை மட்டும் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்தது எப்படி? ஒருவேளை சாதியம் இந்து மதத்துடன் மிகவும் பின்னிப் பிணைந்திருக்கும் காரணத்தால், அது தெய்விகம், ஆன்மிகம், அகிம்சை, சகிப்புத்தன்மை, புலால் உண்ணாமை, காந்தி, யோகா, வெளிநாட்டு யாத்ரிகர்கள், பீடில்ஸ் இசைக்குழு என அன்பும் இனிமையும் வாய்ந்த பலவற்றுடன் இணைத்துப் பேசப்படும் காரணத்தால், குறைந்தது அயலாருக்கேனும் அதனைத் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்வது முடியாத காரியமாக உள்ளது.
“இப்பவெல்லாம் யார் சார் சாதி பாக்குறாங்க?” என்று சலித்துக் கொள்ளுவோர் இந்தக் கட்டுரையை பொறுமையுடன் படிக்க வேண்டும். கட்டுரை எழுப்பும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முனைய வேண்டும். சாதி குறித்து பொதுவில் அறிந்தோருக்கும், அப்படி அறிந்திருப்பினும் அதன் வன்முறை குறித்து அதிர்ச்சியடையாதோருக்கும் இந்தக் கட்டுரை மிகுந்த பயனளிக்கும்.
அருந்ததிராயின் ஆங்கிலக் கட்டுரையை நலங்கிள்ளி (தமிழ்த் தேசம் – திங்களேடு) மொழிபெயர்த்திருக்கிறார். கட்டுரையை முழுமையாக படிக்க கீற்று தளத்திற்கு செல்லுங்கள்………….
கர்நாடக அரசு மேக்கேதாட்டு பகுதியில் இரண்டு சமநிலை நீர்த்தேக்க அணைகள் கட்டுவதாக அறிவித்துள்ளது. இதனைக் கண்டித்து ஓசூரில் 25.11.2014 மாலை 5 மணிக்கு நகராட்சி அலுவலகம் முன்பாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி அதன் தோழமை அமைப்பான விவசாயிகள் விடுதலை முன்னணியுடன் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது.
முன்னதாக, “காவிரியின் குறுக்கே கர்நாடக அரசின் அரசின் அணைக்கட்டும் திட்டம் என்பது தஞ்சை டெல்டா மாவட்டங்களை பாலைவனமாக்கும் கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளைக்கான சதித்திட்டம்!” என்ற முழக்கத்தின் கீழ் கார்ப்பரேட் முதலாளிகளின் உண்மையான திட்டத்தை அம்பலப்படுத்தி நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குவிந்து பிரச்சாரம் செய்யப்பட்டது.
காவிரியின் குறுக்கே அணை கட்டுவதன் மூலம் தஞ்சை டெல்டா மாவட்டங்களில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மக்களை அவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் விவசாயத்தை விட்டே வெளியேற்றுவதற்கு வழி செய்கிறது கர்நாடக அரசு. கிரேட் ஈஸ்டர்ன் கம்பெனி என்ற தனியார் நிறுவனம் காவிரி டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருவதன் பின்னணியில் இந்த அணை கட்டுவதை பார்க்க வேண்டும்.
மேக்கேதாட்டுப் பகுதியில் அணை கட்டுவதன் மூலம் தமிழகத்திற்கு வருகின்ற கொஞ்ச நஞ்ச உபரிநீரையும் ஒரு சொட்டுகூட விடாமல் தடுத்து நிறுத்தி தஞ்சை டெல்டா மாவட்டங்கள் முழுவதையும் பாலைவனமாக்கத் திட்டமிட்டுள்ளது கர்நாடக அரசு.
பெங்களூருக்கு காவிரியிலிருந்து தினமும் 140 கோடி லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. இதில் 52% நீர் வீணாக்கப்படுகிறது. இதனை தடுப்பதன் மூலமே பெங்களூர் மக்களின் குடிநீர் தேவையை ஈடு செய்யமுடியும். மேலும் மேட்டுக்குடி மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சமச்சீராக குடிநீ்ரை வினியோகம் செய்வதன் மூலமும் குடிநீர் பற்றாக்குறையை சரிசெய்ய முடியும்.
பெங்களூர் மக்களின் குடிநீர் பற்றாக்குறையை ஈடேற்ற மாற்று வழிமுறைகள் இருந்தும் அவற்றுக்கு செவிசாய்க்காத கர்நாடக அரசு 1967-ல் இருந்தே மேக்கேதாட்டுவில் அணைகட்டுவதற்கு முயற்சித்து வருகிறது. இதற்கு கர்நாடக உயர்நீதிமன்றம், வனத்துறை, மற்றும் சுற்றுச்சூழல் துறை போன்றவை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதால் அணை கட்டுவது நடைபெறாமல் இருந்து வருகிறது.
இதனை மறைத்து, ‘தமிழகம் எதிர்ப்பு தெரிவிப்பதால்தான் அணை கட்டமுடியவில்லை’ என்று கர்நாடக அரசு கூறுவது தமிழ் மக்களுக்கு எதிரான இனப்பகையைத் தூண்டும் முயற்சியேயன்றி வேறல்ல.
அணைக்கட்டப்பட்டால் தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்ட பகுதிகள் மட்டுமல்ல இங்குள்ள கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் உள்ளிட்ட தமிழக, கர்நாடக உழைக்கும் மக்களே பெரிதும் பாதிக்கப்படுவர். சுமார் 6,000 காட்டு யானைகள் தமிழகத்தை நோக்கி குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை வட்டங்களைத் தாக்குவதற்கான அபாயம் அதிகமாக உள்ளது. ஆகையால் அணைகட்டுவதை கர்நாடக-தமிழக மக்கள் இணைந்து முறியடிக்கவேண்டும் என்றவகையில் உழைக்கும் மக்களுக்கு உணர்வூட்டும் வண்ணம் பாட்டாளிவர்க்க கடமையாற்ற ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
ஆர்ப்பாட்டத்துக்கு போலீசிடம் சட்டபூர்வமாக முதலில் அனுமதி கோரப்பட்டது. இதற்கு போலீசு “ஆக்ட் 32” –ஐ காரணம் காட்டி அனுமதி மறுத்தது. புதிய ஜனநாயகத் தொழிலாளர் முனனணிக்கு மட்டுமல்லாமல் பிற அமைப்பினருக்கும் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணைகட்டுவதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுத்தது.
தமிழ்நாட்டில் தமிழ் மக்களுக்கு மறுக்கப்படும் உரிமைக்கு எதிராகவும் வாழ்வுரிமை பாதிப்பதற்கு எதிராகவும் போராடுவதற்கு அனுமதி மறுக்கப்படுவது என்பது கர்நாடக அரசின் அடாவடித்தனத்திற்கு துணைபோவதே. மேக்கேதாட்டு அணையை எதிர்த்து ஒரு பக்கம் பிரதமருக்கு கடிதம் எழுதிக்கொண்டே மறுபக்கம் அதற்கு எதிராக செயல்படும் அ.தி.மு. க அரசின் இந்த போக்கை அம்பலப்படுத்தும் வகையில், பு. ஜ.தொ.மு, வி.வி,மு தோழர்கள் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எப்படியும் பு.ஜ.தொ.மு வினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்வார்கள் என உணர்ந்த போலீசு நூற்றுக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்தனர். லத்திக்கம்புகள், வாகனங்களுடன் ஒரு பதட்டமான பகுதியாக தோற்றம் காணும் வகையில் நகராட்சி அலுவலக சுற்றுவட்டப்பகுதியை மாற்றியது.
போலீசின் இந்த அச்சமூட்டும் நடவடிக்கையை முறியடித்து மக்களிடம் கருத்தை கொண்டுச் செல்லும் வகையில் ஒசூர் ஆனந்தபவன் உணவகம் முன்பே திரண்ட தோழர்கள் அங்கிருந்து பேனர், செங்கொடிகள், முழக்க அட்டைகள் பதாகைகளை ஏந்தி விண்ணதிர முழக்கமிட்டபடி, துண்டறிக்கைகளை பொதுமக்களிடம் விநியோகித்துக்கொண்டே ஊர்வலமாக சென்றனர். பு.ஜ.தொ.மு-ன் மாவட்ட செயலாளர் தோழர் சங்கர் தலைமையில் நகராட்சி அலுவலகம் முன்பாக திரண்டிருந்த தோழர்கள் கர்நாடக அரசைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்த போலீசைக் கண்டித்தும் முழக்கமிட்டனர்
ஆர்ப்பாட்டத்தில் பு.ஜ.தொ.மு.வின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன், தோழர் இ.கோ. வெங்கடேசன், விவசாயிகள் விடுதலை முன்னணியின் அஞ்செட்டி ஒன்றிய அமைப்பாளர் தோழர். சரவணன் மற்றும் இவ்வமைப்புகளின் பல நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
நாட்றாம்பாளையம், தேன்கனிக்கோட்டை. மற்றும் அஞ்செட்டி பகுதிகளில் பிரச்சார அனுபவம்
தெலுங்கு மற்றும் கன்னடம் பேசும் மக்கள் நிறைந்த சுற்றுவட்டார கிராம பகுதிகளில் விவசாயிகள் விடுதலை முன்னணியை சேர்ந்த தோழர்கள் மேக்கேதாட்டு அணைத் திட்டத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தனர். நாட்றாபாளையம் முதல் ஒசூர் வரையிலான 75 கி.மீ. பகுதியில் உள்ள தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, மத்தகிரி ஆகிய முக்கிய நகரங்களில் பகுதிகளில் இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று துண்டறிக்கைகள் விநியோகித்து தெருமுனைக்கூட்டம் நடத்தினர். இப்பிரச்சாரம் நல்ல வரவேற்பை பெற்றது.
குறிப்பாக இங்குள்ள 3000-க்கும் மேற்பட்ட சிறியதும் பெரியதுமாக இருந்த குளங்கள், ஏரிகள், ஆறுகள் போன்ற நீர்நிலைகளை பராமரிக்காமல் அழித்து காவிரி நீரை மட்டுமே மக்கள் நம்பியிருக்கும்படி செய்தது கார்ப்பரேட் கம்பெனிகளின் நலனுக்காக செயல்படும் இந்த அரசுதான். இப்போது அந்த நம்பிக்கையையும் அழித்து நம்மை நாடோடிகளாக மாற்றி அலைந்து திரிய வைத்து கொல்லத் துடிக்கிறது என்பதை விளக்கி பிரச்சாரம் செய்யப்பட்டது.
‘பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்குத்தான் இந்த மேக்கேதாட்டு அணை கட்டும் பணி’ என்று கர்நாடக அரசு கூறுவதை மறுத்து ஏற்கனவே ஒரு நாளைக்கு 140 கோடி லிட்டர் நீரை எடுத்து வரும் கர்நாடக அரசு அதில் வீணாகும் 52 சதவீதம் நீரை நிறுத்தினாலே பெங்களுர் முழுவதும் நீர் பற்றாக்குறையை சரிசெய்யமுடியும் என தோழர்கள் விளக்கினர். இதனை செய்ய வக்கற்ற அரசை கண்டித்தும், 2500 ஏக்கருக்குமேல் உள்ள வனப்பகுதிகளை நீரில் மூழ்கடித்து அணை கட்டுவதால் அங்கு வாழ்ந்துவரும் விலங்கினங்கள் நமது ஊர்களுக்குள் ஓடிவந்து நம்மை விரட்டியடிக்க இருக்கிறது என்பதை ஒப்பிட்டு உரையாற்றியதும் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏற்கனவே காடுகளை அழித்து ஆக்கிரமிக்கப்பட்டதால் வேறுவழியின்றி வனவிலங்குகள் ஊருக்குள் வந்து மக்களை அச்சுறுத்தும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கும் பகுதி என்பதால் அக்கறையுடன் மக்கள் கவனித்து தங்களின் ஆதரவைத் தெரிவித்துச் சென்றனர். குறிப்பாக காவிரி நீர் பிரச்சினை என்பது விவசாயிகளுடைய பிரச்சினை மற்றும் தண்ணீர் பிரச்சினை என்று மட்டுமே பார்த்துவந்த மக்களுக்கு இது கார்ப்பரேட் கம்பெனிகள் மக்கள் மீது நடத்தும் உள்நாட்டுப்போர் என்ற கோணத்தில் விளக்கி பேசியதை அறிந்து மக்கள் ஆமோதித்து கேட்டுச்சென்றது நல்ல அனுபவமாக இருந்தது.
நாட்றாம்பாளையத்தில் பிரச்சாரம்
அஞ்செட்டியில் பிரச்சாரம்
தேன்கனிக்கோட்டையில் பிரச்சாரம்
மத்திகிரியில் பிரச்சாரம்
ஒசூரில் பு.ஜ.தொ.மு. மூலம் பெங்களூர் செல்லும் ரயிலில், பேருந்துகளில் பிரச்சாரம் செய்தபோது, “மேக்கேதாட்டு அணை கட்டுவது பெங்களூர் மக்களின் குடிநீர் தேவைக்கு அல்ல” என்பதை சொல்லி அதன்பின்னே ஒளிந்திருக்கும் கார்ப்பரேட் கம்பெனி நலனை அம்பலப்படுத்திப் பேசியபோது, தமிழ் படிக்கத் தெரியாதவர்கள்கூட துண்டறிக்கைகளை வாங்கி நிதி உதவிசெய்தனர். இப்பிரச்சனையை பாட்டாளி வர்க்கக் கண்ணோட்டத்தில் பார்க்கும் மக்கள், மொழி பேதமின்றி தங்கள் வர்க்க உணர்வை வெளிப்படுத்ததினர்
அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒருவர் தோழர்களிடம் துண்டறிக்கைகளை வாங்கிப்படித்துவிட்டு ஆதரவு தெரிவித்தார். நிதியும் கொடுத்தார். பிறகு அவரிடம் இந்த மாதம் புதிய ஜனநாயகத்தை தோழர்கள் கொடுத்தனர். அதில் ஜெயலலிதா படம் போட்டு “தமிழ் சமூகத்தை சீரழிக்கவந்த சதிகாரி” என்ற தலைப்பை பார்த்தவுடன் கோபமாக “நீங்கள் தி.மு.க.காரங்களா,? கருணாநிதியின் ஆட்களா?” என்று சீறினார்.
துண்டறிக்கையில் அரிவாள் சுத்தியல் போட்டுள்ளதைப் பார்த்து, “நீங்கள் கம்யூனிஸ்ட்காரங்களா? அம்மா போட்ட பிச்சையில கட்சி வளர்த்துக்கிட்டவங்க நீங்க , உங்களுக்கு சீட்டுப்பிச்சை போட்டு உங்கள வாழவைத்த தெய்வம் எங்க அம்மா, அவங்களைப்போய் நீங்க ஊழல் சதிகாரி என்று சொல்றீங்களா?” என்று சத்தம் போட்டார்.
அதற்கு தோழர்கள் பொறுமையாக, “நாங்கள் நக்சல்பாரி கம்யூனிஸ்ட்கள், நாங்கள் எல்லா ஊழல்வாதிகளையும் எதிர்த்து மக்களிடம் பிரச்சாரம் செய்து போராடி வருபவர்கள், ஜெயலலிதாவை மட்டுமல்ல பிற எல்லா ஓட்டுக்கட்சிகளையும்தான் இப்போது இந்த மாத ஏட்டில் அம்பலப்படுத்தியிருக்கிறோம். ஊழல் யார் செய்தாலும் நாம் தட்டிக்கேட்க வேண்டும். ஏனென்றால் நமது வரிப்பணத்தில் வயிறு வளர்க்கிறவர்களை நாம் கேட்காமல் வேறு யார் கேட்பது” என்று வினவியபிறகு அமைதியானார்.
காவேரிப்பட்டினம், பாகலூர், ராயக்கோட்டை என மாவட்டத்தின் பிற முக்கிய நகரங்களிலும் வி.வி.மு. தோழர்கள் பிரச்சாரம் வீச்சாக செய்தனர்.
மொத்தத்தில், “ஓட்டுக்கட்சிகளை நம்பி நாம் மோசம் போனது போதும். இங்குள்ள அதிகாரம் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளிடம்தான் உள்ளது. இந்த அதிகாரங்களை பறித்து உழைக்கும் மக்களின் அதிகாரங்களை நிறுவும் திசையில் செயல்படும் புரட்சிகர சக்திகளின் பின்னே அணிதிரள்வது ஒன்றுதான் ஒரே தீர்வு” என்பதை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் இந்த பிரச்சார இயக்கம் நடைபெற்றது.
உள்ளூர் நாளேடுகளில் வெளிவந்த செய்திகள்:
தினத்தந்தி
தினகரன்
ஆந்திர ஜோதி
சாட்சி ஏடு
[படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது சொடுக்கவும்]
முழக்கங்கள்:
கர்நாடகத்தின் மேக்கேதாட்டுவில்
தமிழகத்தின் காவிரி நீரை
அணைகட்டி வழிமறிக்கும்
கர்நாடக அரசைக் கண்டிக்கிறோம்!
கர்நாடக அரசே, கர்நாடக அரசே
கட்டாதே, கட்டாதே
காவிரி நதியின் குறுக்கே
அணையைக் கட்டாதே!
அழிக்காதே, அழிக்காதே,
தஞ்சை டெல்டா மாவட்டங்களின்
விவசாயத்தை அழிக்காதே!
***
சதித்திட்டம், சதித்திட்டம்
காவிரியின் குறுக்கே அணை கட்டுவது
தஞ்சை டெல்டாவை பாலைவனமாக்கும்
சதித் திட்டம் சதித்திட்டம்
சதித்திட்டம் சதித் திட்டம்
மேக்கேதாட்டு அணைத் திட்டம்
காட்டுவளத்தை அழிக்கும்
கார்ப்பரேட் முதலாளிகளின் வேட்டைக்கான
சதித் திட்டம் சதித் திட்டம்
சதித்திட்டம் சதித்திட்டம்
தஞ்சை டெல்டா மாவட்டங்களில்
மீத்தேன் எடுப்புத் திட்டத்திற்கு
தஞ்சை மண்ணை நஞ்சாக்குவதற்கு
மறைமுகமாக உதவும் சதித்திட்டம்
சதித்திட்டம், சதித்திட்டம்
காவிரியின் குறுக்கே அணைகட்டுவது
காட்டு யானைகளை தமிழகத்திற்கு விரட்டி
கிருஷ்ணகிரி மாவட்ட கிராமங்களின்
விவசாயத்தை நாசமாக்கும்
சதித் திட்டம், சதித்திட்டம்!
***
யாருக்காக, யாருக்காக
கர்நாடக அரசு அணை கட்டுவது
யாருக்காக யாருக்காக?
பெங்களூரு மக்களுக்கு குடிநீர் தேவையாம்
உண்மையா, உண்மையா
மக்களுக்கான திட்டமென்பதில்
உண்மையில்லை, உண்மையில்லை.
140 கோடி லிட்டர் தண்ணீரை
காவிரியிலிருந்து உறிஞ்சி எடுத்து
நாள்தோறும் பாதி நீரை
வீணாக்கும் கர்நாடக அரசே
ஏமாற்றாதே, ஏமாற்றாதே
மக்களுக்கான திட்டமென்று
ஏமாற்றாதே, ஏமாற்றாதே!
ஐ.டி. கம்பெனி சாப்பிங் மாலுக்கு
அளவுகடந்த தண்ணீரு
சாதாரண உழைக்கும் மக்களுக்கே
குடிநீருக்கே தட்டுப்பாடு
காசு உள்ளவனுக்கே தண்ணீர் எனும்
மனுநீதியை மாய்க்காமல்
காவிரி நீரை கொண்டுவருதால்
பெங்களூர் மக்களின் தாகம்தீராது!
காவிரியில் அணைகட்டுவது
கரும்பு விவசாய விரிவாக்கத்திற்காம்
யாருக்காக யாருக்காக
கரும்பு விவசாய விரிவாக்கம்
யாருக்காக யாருக்காக
கரும்புக்கு உரிய விலையின்றி
கர்நாடக விவசாயிகள் தற்கொலை
இந்தியாவில் முதலிடம்!
கார்ப்பரேட் முதலாளிகள்,
சர்க்கரை ஆலை முதலாளிகளின்
கொள்ளை லாப வேட்டைக்காக
கரும்பு விவசாய விரிவாக்கம்!
***
மறைக்காதே மறைக்காதே
மேக்கே தாட்டு அணைத்திட்டத்திற்கு
கர்நாடக மக்களின் எதிர்ப்பை
மறைக்காதே மறைக்காதே
உயர்நீதிமன்றத்தின் தடையையும்
வனத்துறையின் எதிர்ப்பையும்
சுற்றுச்சூழல் அமைப்புகளின் கண்டனத்தையும்
மறைக்காதே மறைக்காதே!!
பெங்களூருவில் குடிநீர் கட்டண உயர்வு
அணைகட்டும் சதித்திட்டதை
ஏற்கவைக்கவே ஏற்கவைக்கவே!
தூண்டாதே, தூண்டாதே
கர்நாடக, தமிழக மக்களிடம்
இனவெறியைத் தூண்டாதே!
***
அணை கட்டுவது யாருக்காக?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்காக!
காவிரிநீரை கொண்டுவருவது யாருக்காக?
பெங்களூரு பணக்காரர்களுக்காக!
மின்சார உற்பத்தி யாருக்காக?
ஊதாரி மால்களுக்கும்
நட்சத்திர விடுதிகளுக்காக!!
அணை கட்டினால் பாதிப்பு யாருக்கு?
கர்நாடக, தமிழக மக்களுக்கு!!
அணை கட்டினால் லாபம் யாருக்கு?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு!
ஜனநாயகம் யாருக்கு?
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு!!
அடக்குமுறையும் ஒடுக்குமுறையும்
அழிவுகளும் யாருக்கு?
விவசாயிகள் தொழிலாளர்கள்
வியாபாரிகள் மாணவர்கள்
உழைக்கும் மக்களாகிய நமக்கு!!
போராடுவோம்! போராடுவோம்!
இரு மாநில மக்களுக்கு எதிரான
மேக்கே தாட்டு அணைத் திட்டத்தை
தடுத்து நிறுத்தப் போராடுவோம்!
***
கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு சேவை செய்ய
ஓட்டுக் கட்சிகள், அதிகாரிகள்…
கார்ப்பரேட் கம்பெனிகளை பாதுகாக்க
நீதிமன்றம், போலீசு…
உழைக்கும் மக்களே, உழைக்கும் மக்களே
நம்மையும் நாட்டையும் பாதுகாக்க,
உழைக்கும் மக்கள் அதிகாரம் பெற
உண்மையான ஜனநாயகத்திற்கான
மாற்று அதிகார மன்றங்களை
கட்டி எழுப்புவோம்! கட்டி எழுப்புவோம்!
இவண் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி விவசாயிகள் விடுதலை முன்னணி,
கிருஷ்ணகிரி –தருமபுரி- சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு; 9788011784- 9751378495- 9943312487
கோபி முத்துபெரியசாமி மதுரையைச் சேர்ந்தவர். கணினி மென்பொருள் வல்லுனர். தகவல் தொழில்நுட்பத் துறையில் நுழையும் பலரையும் போல் அமெரிக்காவுக்குச் சென்று அங்கே ஒரு நல்ல வேலையையும் வாழ்க்கையையும் அமைத்துக் கொள்ளும் கனவுகள் அவருக்கு இருந்தன. அமெரிக்காவில் வேலை தேடி வந்த கோபிக்குஒரு ‘ஆள்பிடி’ நிறுவனத்தின் (labor broker) அறிமுகம் கிடைத்துள்ளது. 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தில் வேலை கிடைத்து அமெரிக்கா சென்றுள்ளார் கோபி. இத்தகைய நிறுவனங்களில் வேலை என்றால் அமெரிக்க நிறுவனங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலைக்குப் போவது என்றுதான் பொருள்.
ஒவ்வொரு ஆண்டும் வணிக நிறுவனங்களில் வேலை செய்ய வருபவர்களுக்கு 65,000 விசாக்களையும், அமெரிக்க பல்கலைக் கழகங்களில் பட்டம் பெற்றவர்களுக்கு 20,000 விசாக்களையும் வழங்குவதற்கு சட்டம் வழி செய்கிறது. பல்கலைக் கழகங்களிலும் லாப நோக்கற்ற ஆராய்ச்சி நிறுவனங்களிலும் வேலை செய்வதற்கான விசாவுக்கு வரம்பு எதுவும் இல்லை. இது போன்ற நிறுவனங்களில் பணிபுரிய அயல்நாடுகளில் இருந்து வருபவர்கள் ஒப்பந்தப் பணியாளர்களாக இருந்தாலும் அவர்களுக்கும் விலக்கு உள்ளது.
எச்1பி விசாவுக்கான மோசடி ஆவணங்களில் பெரும்பாலானவை ஹைதராபாத் நகரத்திலிருந்து வருகின்றன என்கிறது 2009-ம் ஆண்டு வெளியான அமெரிக்க வெளியுறவுத்துறை கேபிள் செய்தி ஒன்று. (படம் : நன்றி http://www.theguardian.com )
ஆக, பல்வேறு (வேண்டுமென்றே போடப்பட்ட) ஓட்டைகளோடு உள்ள குடியுரிமைச் சட்டத்தின் படி, அமெரிக்க முதலாளிகள் ஆண்டு தோறும் லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களை அயல்நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். 2010-ம் ஆண்டில் 1.17 லட்சம் விசாக்களும், 2011-ம் ஆண்டில் 1.29 லட்சம் விசாக்களும் வழங்கப்பட்டன. 2012-ம் ஆண்டு மட்டும் அங்கீகரிக்கப்பட்ட புதிய குடியேற்ற விண்ணப்பங்கள் மற்றும் குடியேற்ற புதுப்பிப்பு விண்ணப்பங்களின் எண்ணிக்கை 2,62,569 ஆகும்.
ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதம் ஒன்றாம் தேதி துவங்கி விண்ணப்பங்களை அமெரிக்க குடியுரிமைத் துறை ஏற்றுக் கொள்ளத் துவங்கும். குடியுரிமைத் துறை விண்ணப்பங்களை ஏற்கத் துவங்கிய ஓரிரு நாட்களுக்குள்ளாகவே லட்சக்கணக்கான விண்ணப்பங்கள் குவிந்து அந்த ஆண்டுக்கான ஒதுக்கீட்டு அளவைக் கடந்து விடுகிறது. இவ்வாறு தங்களுக்கான ஹெச்1பி விசா ஒதுக்கீட்டு அளவுக்காக தொழில் நிறுவனங்கள் மாத்திரமின்றி கோபியை பணிக்கு அழைத்தது போன்ற ஆள்பிடி நிறுவனங்களும் துண்டு போட்டு வைத்துக் கொள்கின்றன.
பின்னர் தமது ஒதுக்கீட்டின் கீழ் இந்தியாவில் இருந்து அமெரிக்க கனவுகளோடு மேற்கே வைத்த கண்ணை இமைக்காமல் வாயைப் பிளந்து கொண்டிருக்கும் அப்பாவி இளைஞர்களை ’வேலை கொடுத்து’ வரவழைக்கிறார்கள். இப்படி வரவழைக்கப்படும் இளைஞர்களை நகருக்கு வெளியே வாடகைக்குப் பிடித்த எலிபொந்துகளில் குவித்து வைத்து அவர்களின் திறனுக்கேற்ற வேலையைத் தேடத் துவங்குகிறார்கள்.
இவ்வாறு இந்தியாவில் இருந்து வரவழைக்கப்படும் இளைஞர்களின் தொழில்நுட்ப அனுபவ விவரக் குறிப்பில் (Resume) அவர்களுக்கு தெரியாத தொழில்நுட்பங்களைக் கூட தெரிந்தது போல் குறிப்பிட்டு போர்ஜரி செய்யும் ஆள்பிடி நிறுவனங்கள், அவற்றை வேலைச் சந்தையில் சுற்றுக்கு விடுகிறார்கள். இவ்வாறு ஆள்பிடி நிறுவனங்களால் அமெரிக்க வேலைச் சந்தைக்குள் தள்ளப்படும் பலியாடுகளை வெரிசான், கூகிள், ஐ.பி.எம், ஆப்பிள் போன்ற பகாசுர நிறுவனங்கள் தங்கள் தேவைக்கேற்ப தெரிவு செய்து கொள்ளும். அந்த சில மாத அல்லது சில வார இடைவெளிக்குள் அனுபவ விவரக் குறிப்பில் செய்யப்பட்டுள்ள போர்ஜரிகளுக்கு ஏற்ப தொழில்நுட்பங்களைப் படித்து அடிமைகள் தங்களைத் தாங்களே தயார் செய்து கொள்ள வேண்டும்.
அமெரிக்க நிறுவனங்களைப் பொறுத்தவரையில் உள்ளூர் அமெரிக்கர்களைப் பணிக்கமர்த்தினால் குறைந்தபட்ச ஊதியமாக பெருந்தொகை கொடுக்க வேண்டியிருக்கும். ஹெச்1.பி விசா திட்டமே ஊழியர்களுக்கு கொடுக்க வேண்டிய சம்பளங்களை குறைத்து லாபத்தை அதிகரித்துக் கொள்வதற்காக அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் லாபியிங் மூலம் 1990-ம் ஆண்டில் உருவாக்கப்பட்டது தான்.
அமெரிக்க நிறுவனங்களில் இவ்வாறு வேலை செய்ய ஹெச்1.பி விசாவில் வருபவர்களுக்கான சம்பளம் அதே மாநிலத்தில் அதே மாதிரியான வேலையைச் செய்யும் அமெரிக்கருக்கு கொடுப்பதை விட சராசரியாக $13,000 குறைவு என்றும் மென்பொருள் நிரல் எழுதும் வேலைகளில் ஹெச்1.பி விசாவில் போகும் வெளிநாட்டு ஊழியர்களில் 85 சதவீதம் பேரின் சம்பள வீதம் சராசரி சம்பளத்தை விட குறைவாக இருக்கிறது என்றும், 4 சதவீத ஹெச்1.பி ஊழியர்கள் மட்டுமே உயர் சம்பளம் பெறும் 25% பேரில் இருக்கின்றனர் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
ஆள் பிடி நிறுவனங்களுக்கு எதிராக ஒரு இணைய மன்றத்தை ஆரம்பித்த ஹர்ஷல் வைத்யா (http://www.theguardian.com)
இந்த ஊழியர்கள் வெளி நிறுவனம் மூலம் வேலைக்கு வருபவர்கள் என்ற பேதமே இல்லாமல் அமெரிக்க நிறுவனத்தினுள் ஒரு அமெரிக்க ஊழியர் செய்து வந்த வேலையைச் செய்தாலும் அவர்களுக்கான சம்பளத்தை ஆள்பிடி நிறுவனமே வழங்குகிறது. தலைக்கு இவ்வளவு என்று நிர்ணயித்து அமெரிக்க நிறுவனத்திடம் பெரும் தொகையைப் பெற்றுக் கொள்ளும் ஆள்பிடி நிறுவனங்கள், அதில் தமது கமிஷனைக் கழித்துக் கொண்டு எஞ்சி சொற்ப தொகையை சம்பளமாக ஊழியர்களுக்குக் கொடுக்கிறார்கள்.
அமெரிக்க மாநிலமான பென்சில்வேனியாவில், ‘ஆள்பிடி’ நிறுவனத்தின் மூலம் அரசுத் துறையைச் சேர்ந்த பென்சில்வேனியா டிபார்ட்மென்ட் ஆஃப் லேபர் அண்ட் இண்டஸ்ட்ரியில் வேலை செய்து வந்த கோபி முத்துபெரியசாமி, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அதே வேலையை செய்வதற்கான காண்டிராக்டை சாப்டெக் என்ற வேறொரு ’ஆள்பிடி’ நிறுவனத்துக்கு மாற்றிக் கொள்ள முடிவு செய்திருக்கிறார். சாப்டெக் கிருஷ்ண குமார் என்பவரால் அமெரிக்காவில் நடத்தப்பட்டு வரும் ஆள்பிடி நிறுவனம்.
சாப்டெக் கோபி முத்துபெரியசாமிக்கு வருடத்திற்கு 51,000 டாலர் (31 லட்சம் ரூபாய்) சம்பளம் கொடுப்பதாகக் கூறியிருக்கிறது. இந்திய மதிப்பில் அதிகமாகத் தோன்றும் இந்த சம்பளம், அமெரிக்காவைப் பொறுத்தவரை அத்தியாவசிய செலவுகள் மட்டும் செய்து நடுத்தர வாழ்க்கை வாழவே போதுமானது. இதற்கிடையில் கோபி ஓஹியோ மாநிலத்தில் அதிக சம்பளத்திற்கு வந்த வேறு ஒரு வேலைக்கு மாறியிருக்கிறார்.
இந்நிலையில் தங்களோடு கோபி செய்து கொண்ட ஒப்பந்தத்தை மீறி விட்டார் என்று நீதிமன்றத்தை அணுகிய சாப்டெக், அதற்காக அவர் 20,000 டாலர் நட்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று வழக்குத் தொடர்ந்துள்ளது. இது கோபிக்கு மட்டுமே நேர்ந்த துரதிர்ஷ்டம் அல்ல.
ஹெ1.பி விசா மூலம் வெளிநாட்டிலிருந்து தொழிலாளர்களை இறக்குமதி செய்ய நூற்றுக்கணக்கான ஆள்பிடி நிறுவனங்கள் அமெரிக்காவில் செயல்பட்டு வருகின்றன. தொழிலாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய நியாயமான சம்பளத்தை பிக்பாக்கெட் அடிக்கும் இந்நிறுவனங்கள், அதன் மூலம் லட்சக்கணக்கான டாலர்களைச் ஒவ்வொரு ஆண்டும் சுருட்டிக் கொள்கிறார்கள்.
இந்தியா போன்ற நாடுகளில் இருந்து வேலைகளுக்காக வரும் தொழிலாளர்களிடம் இருந்து சான்றிதழ்கள் உள்ளிட்ட முக்கியமான ஆவணங்களைப் பெற்று முடக்கி வைத்துக் கொள்ளும் ஆள்பிடி நிறுவனங்கள், அவர்கள் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு தங்கள் நிறுவனத்திலேயே அடிமைகளாக இருக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்கிறார்கள். அமெரிக்காவுக்கு உயர்தர அடிமைகளை சப்ளை செய்யும் வேலையில் ஈடுபடும் பல ஆள்பிடி நிறுவனங்கள் இந்தியர்களால் நடத்தப்படுபவை என்பது ஒரு உபதகவல்.
ஆள்பிடி நிறுவன்ங்கள் குறித்து சமீபத்தில் புலனாய்வு இதழியலுக்கான மையம் (Center for Investigative Journalism) என்ற அமைப்பு நடத்திய இரகசிய விசாரணை அறிக்கை இந்நிறுவனங்களைக் கொத்தடிமைக் கூடங்கள் என்றே அழைக்கிறது. அடிப்படை தொழிலாளர் உரிமைகள் மறுக்கப்படும் ஹெச்1.பி ஊழியர்கள், அமெரிக்கச் சட்டங்களில் உள்ள சந்து பொந்துகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் அடிமை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
ஒப்பந்தத்தை மீறி சுயேச்சையாக முயற்சி செய்து வேறு நிறுவனங்களில் வேலை தேடிக் கொள்ளும் கோபி போன்றவர்களை நீதிமன்றத்திற்கு இழுக்கிறார்கள். அமெரிக்க சட்டங்கள் பற்றிய அறிவோ, நீதி மன்ற நடைமுறைகள் குறித்த புரிதலோ இல்லாத ஊழியர்கள் பல வழக்குகளில் தங்களுக்காக வாதாட வழக்கறிஞர்களைக் கூட நியமிக்க வாய்ப்பில்லாமல் சொந்த முறையில் தங்களை நீதிமன்றத்தில் தற்காத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
ஊழியர்களுக்கு எதிராக அனுபவம் வாய்ந்த வழக்கறிஞர்களை நியமித்துக் கொள்ளும் ஆள்பிடி நிறுவனங்கள்தான் வழக்குகளில் இயல்பாக வெல்கிறார்கள். சராசரியாக இருபதாயிரத்திலிருந்து இருபத்தைந்தாயிரம் டாலர் என்ற அளவில் விதிக்கப்படும் அபராதத் தொகையைக் கட்ட வழியில்லாத ஊழியர்கள் பலர் ஓட்டாண்டிகளாகி இந்தியாவுக்குத் திரும்புகின்றனர். சிலர் வேலையும் இழந்து ஆள்பிடி நிறுவனத்திற்குக் கட்டிய இருப்புத் தொகையையும் இழந்து சொல்லாமல் கொள்ளாமல் இரகசியமாக அமெரிக்காவை விட்டு ஓடிவந்த சம்பவங்களும் நடந்துள்ளன.
கோபி முத்துபெரியசாமி ஒரு விதிவிலக்கு. கோபியின் தந்தை மதுரையில் தொழிற்சங்கம் ஒன்றில் தலைவராக இருந்துள்ளார். தனது தந்தையின் தொழிற்சங்க நடவடிக்கைகளில் இருந்து தான் ஊக்கம் பெற்றதாகச் சொல்லும் கோபி, சாப்டெக் நிறுவனத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளார். வழக்கின் செலவை ஈடுகட்ட முடியாமல் தெரிந்தவர்கள், நண்பர்கள், உறவினர்கள் என்று சகலரிடமும் கடன் வாங்கி சுமார் 25000 டாலர்கள் வரை செலவு செய்து இறுதியில் வழக்கில் வென்றுள்ளார்.
மேலோட்டமாகப் பார்த்தால் அதிக பணத்திற்கு ஆசைப்பட்டுப் போன பேராசைக்காரர்கள் தானே என்ற முடிவுக்கு நாம் வந்து விட முடியும். வடமாநிலங்களில் இருந்து வாழ வழியற்று தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களுக்கு அத்துக் கூலிகளாய் வந்து விழும் தொழிலாளர்களையும் கோபி உள்ளிட்டவர்களையும் ஒரே தராசில் வைத்துப் பார்க்க முடியாது.
வடமாநிலத் தொழிலாளர்களுக்கு அவர்களின் சொந்த ஊரில் பிழைக்க வழியேற்படுத்திக் கொடுக்காத அதே அரசு தான் கோபியைப் போன்ற படித்தவர்களுக்கும் உரிய வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்காமல் நாட்டை விட்டு விரட்டுகிறது. அல்லது இந்நாட்டிற்கு தேவையான படிப்பு, சுதேசி பொருளாதாரத்திற்கு தேவைப்படும் தொழில்நுட்பம் என்பதை புறக்கணிக்கிறது. பன்னாட்டு நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளுக்கேற்ற படிப்பு, மலிவான உழைப்புச் சந்தை என்பதே இதன் பின்னணி. இதில் வெளிநாடு சென்று சம்பாதித்து ஆடம்பரமாக வாழலாம் எனும் நுகர்வு கலாச்சார மோகத்தில் இப்படிப்பட்ட இளைஞர்கள் பலியாகிறார்கள்.
இந்திய முதலாளிகள் லாபம் சம்பாதிப்பதை வடமாநிலத் தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி எப்படி உத்திரவாதப்படுத்துகிறதோ அதே போலத் தான் அமெரிக்க முதலாளிகள் லாபம் சம்பாதிப்பதை மூளையுழைப்பு செய்யும் உயர்தரத் தொழிலாளர்களின் இடப்பெயர்ச்சி உத்திரவாதப்படுத்துகிறது. அளவிலும் பரிமாணத்திலும் இந்த இரண்டு போக்குகளுமே வேறுபட்டிருந்தாலும், சாராம்சத்தில் இரண்டுமே முதலாளிகளின் லாபவெறிக்கே சேவை செய்வதாக இருக்கிறது.
சட்டமும் விதிகளும் இந்தியாவில் மட்டுமின்றி உலகிலேயே ஜனநாயகத்தைத் தூக்கி நிறுத்தும் பொறுப்பைச் சுமந்து கொண்டிருக்கும் நாடு என்று பீற்றிக் கொள்ளும் அமெரிக்காவிலும் கூட முதலாளிகளின் நலனுக்காகவே செயல்படுகிறது. கோபியைப் போல் ஓரளவிற்காகவது சுரணை உள்ளவர்கள் இதை எதிர்த்த போராட்டத்தின் வரம்பை விரித்துக் கொள்ள வேண்டும். தங்களுடைய வாழ்க்கைக்கான போராட்டங்கள் என்று மட்டும் சுருக்காமல், தங்களைப் போல் பாரம்பரிய நிலத்திலிருந்து பிய்த்தெரியப்பட்டு பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவுக்கு உள்ளேயும் விசிறியடிக்கப்படும் மக்களுக்காகவும் போராட முன்வர வேண்டும்.
– தமிழரசன்.
இந்தப் பதிவு கார்டியன் இணைய தளத்தில் வெளியான Job brokers steal wages and entrap Indian tech workers in US என்ற கட்டுரையில் வெளியான பல அதிர்ச்சியூட்டும் உதாரணங்களில் ஒன்றை மட்டும் எடுத்துக் கொண்டு எழுதப்பட்டது. கோபி முத்துபெரியசாமியோடு தொடர்புபடுத்தி எழுதப்பட்டிருந்த விபரங்களில் இருந்த தகவல் பிழைகள் எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டன. அதன்படி அவர் சாஃப்டெக் நிறுவனத்தின் மூலம் அமெரிக்கா சென்றார் மற்றும், சாஃப்டெக் நிறுவனத்தினால் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்தார் ஆகிய தவறான தகவல்களை கட்டுரையில் திருத்தியிருக்கிறோம்.
கவனக் குறைவால் நிகழ்ந்த இந்தத் தவறுக்கு பொறுப்பேற்று, வருத்தம் தெரிவிக்கிறோம்.
மற்றபடி, கட்டுரையில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கார்டியன் கட்டுரை சுட்டிக் காட்டும் நடைமுறை உதாரணங்களின் அடிப்படையிலானவையே.
தூத்துக்குடி வ.உ.சி துறைமுகக் கழகத் தலைவராக இருந்த சுப்பையா ஐ.ஏ.எஸ்க்கு வைகுண்டராஜன் ரூ ஏழரை கோடி லஞ்சம் கொடுத்த வழக்கில் வைகுண்டராஜனுக்கு மதுரை உயர்நீதி மன்றம் ஜாமீன் மறுத்துள்ளது. கைது செய்யப்படுவதிலிருந்து தப்பிப்பதற்காக அவர் தலைமறைவாகி விட்டதாக செய்திகள் சொல்லுகின்றன. மிகப்பெரிய தொழிலதிபர், ஜெயா டிவியின் பங்குதாரர், சேனல் நியூஸ் 7 டிவியின் உரிமையாளர், செல்வாக்கு மிக்க பெரும்புள்ளி தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது வேடிக்கையாக இருக்கிறது. தென் மாவட்டங்களின் அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளும், கிரிமினல் கும்பல்களும் வைகுண்டராஜனின் அடியாட்களாக செயல்பட்டு வருவது நாடறிந்த உண்மை. அப்படிப்பட்டவர் இவர்களுக்கெல்லாம் தெரியாமல் தலைமறைவாகி விட்டார் என்று சொல்வது நாடகம் தவிர வேறு என்ன?
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையையே கரைத்து, விலையுயர்ந்த, அபூர்வமான தாதுமணலைக் கொள்ளையடித்தவர் வைகுண்டராஜன்
கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடற்கரையையே கரைத்து, விலையுயர்ந்த, அபூர்வமான தாதுமணலைக் கொள்ளையடித்தவர் வைகுண்டராஜன். சட்டவிரோதமாகத் தோரியம் உள்ளடங்கிய மோனோசைட் தாதுவை தூத்துக்குடி துறைமுகம வழியாக வெளிநாடுகளுக்குக் கடத்துவதற்கு உறுதுணையாக இருந்தததற்காகத்தான் சுப்பையா ஐ.ஏ.எஸ்க்கு ஏழரை கோடி லஞ்சம் கொடுத்துள்ளார் வைகுண்டராஜன். இதை ஆதாரபூரவமாக கண்டுபிடித்து 2012-ம் ஆண்டு வழக்கு தொடுத்த சி.பி.ஐ இதுவரை அவரைக் கைது செய்யவில்லை. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வைகுண்டராஜன் முன்ஜாமீன் மனு தாக்கல் செய்தபோதுதான் இந்த விவரங்கள் வெளிச்சத்துக்கு வந்தன. முன்ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில் இப்போது சி.பி.ஐ சொல்கிறது. “வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார். தனிப்படை அமைத்து தேடுகிறோம்” என்று. இது கண்துடைப்பு நாடகம். சி.பி.ஐயும், தமிழக அரசும் சேர்ந்து வைகுண்டராஜனை தெரிந்தே பாதுகாக்கின்றன.
வைகுண்டராஜன் தலைமறைவாகி விட்டார் என்றால் சி.பி.ஐ அவரை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க வேண்டியதுதானே! அதை ஏன் செய்யவில்லை? எனவே, “வைகுண்டராஜனை உடனே கைது செய்! அவர் கொள்ளையடித்த சொத்துக்களை பறிமுதல் செய்!” எனக் கோருகிறோம். வாழ்வாதாரத்திற்காக கூடங்குளத்தில் போராடும் மக்களையும், பிழைப்பிற்காக தாமிரபரணி, வைப்பாறு உட்பட தமிழக ஆறுகளில் மாட்டு வண்டியில் மணல் அள்ளும் ஏழை விவசாயிகளையும் தேசிய பாதுகாப்பு சட்டத்திலும், குண்டர் சட்டத்திலும் கைது செய்வதோடு, இரவு 11 மணிக்கு மேல் வியாபாரம் செய்யும் சிறு ஹோட்டல்கள், டீக்கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளை அடித்து நொறுக்கியும், மேற்படி கடைகளில் உள்ள போண்டா, வடைகளை பிறந்து பார்த்து, கெட்டுப் போனதாகக் கூறி கடை உரிமத்தையே ரத்து செய்யும் மத்திய, மாநில அரசுகளுக்கு மனித குலத்திற்கும் இயற்கை வளத்திற்கும் சவால் விடும் வைகுண்டராஜனை கைது செய்வது இயலாத காரியம்தானோ?
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் இயற்கை வளக் கொள்ளைகளை விசாரிப்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் சகாயம் ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு அதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் ஆணையிட்டது. ஆனால், அரசு அதற்கு எந்த ஒத்துழைப்பும் அளிக்காத நிலையில் நீதிமன்றம் அரசுக்கு ரூ 10,000 தண்டம் விதித்து மீண்டும் உத்தரவிட்டது. ஆனால், அரசு நீதிமன்ற உத்தரவை மதிக்காமல், மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற கிரானைட் ஊழலை மட்டும் விசாரிக்க உத்தரவிட்டது. கிரானைட் ஊழலை முதலில் அம்பலப்படுத்தியது சகாயம் ஐ.ஏ.எஸ்தான். பி.ஆர்.பி மீது பல வழக்குகளைத் தொடுத்து, தொழிலை முடக்கி, அவரைப் பல மாதங்கள் சிறையிலும் வைத்தது தமிழக அரசு. இதுவரை கிரானைத் தொழில் முடங்கியுள்ளது.
மணல் கொள்ளையை ஆய்வு செய்து அரசுக்கு புகார் அனுப்பிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மறுநாளே பந்தாடப்பட்டார்.
ஆனால், தாது மணல் கொள்ளை, கிரானைட் கொள்ளையை விடப் பெரியது. 25 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. சுற்றுச் சூழல் மாசு, புற்றுநோய், மீன்பிடி தொழில் பாதிப்பு போன்ற பல்வேறு பிரச்சனைகளோடு, பல இலட்சம் கோடி மதிப்புள்ள மோனசைட் எனப்படும் தடை செய்யப்பட்ட கனிமம் திருடப்பட்டு வெளிநாடுகளுக்கு சட்டவிரோதமாக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கு எதிராகப் போராடிய மக்கள் கடுமையாக ஒடுக்கப்பட்டனர். அவர்களுடைய முறையீடுகள் அனைத்தும் குப்பைக் கூடைகளுக்குப் போயின. மக்கள் தொடர்ந்து நேரடியாக பலமுறை முறையிட்டதால் மணல் கொள்ளையை ஆய்வு செய்து அரசுக்கு புகார் அனுப்பிய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் மறுநாளே பந்தாடப்பட்டார்.
வருவாய்த்துறை செயலர் ககன்தீப்சிங் பேடி தலைமையில் தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தியது. ஆனால், அந்த விசாரணை அறிக்கையைக் கூட வெளியிடவில்லை. நீதிமன்றம் கேட்டும் அறிக்கையை தர அரசு மறுத்து விட்டது. வைகுண்டராஜன் கொள்ளை கடற்கரையோடு நின்று விடவில்லை. உள்நாட்டு மக்களையும் பாதிக்கும் வகையில் செம்மண்ணான தேரிமண்ணையும், பல ஆண்டுகளாக சூறையாடி வருகிறார். இதனால் பெருமளவில் பாதிக்கப்படுவது நாடார் சமூக மக்களும்தான். இவ்வாறு அனைத்து சமூக மக்களையும், அடுத்த தலைமுறையையும் பாதிக்கும் வகையில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக தனது ராஜாங்கத்தை நடத்தி வரும் வைகுண்டராஜன் மீது இதுவரை ஒரு வழக்கு கூட பதிவு செய்யப்படவில்லை.
சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரித்தால் உண்மைகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் தமிழக அரசு சகாயம் குழுவை முடக்க முயற்சி செய்கிறது
இந்தச் சூழலில்தான் டிராபிக் ராமசாமி என்பவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் சகாயம் குழு விசாரிக்க நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. சகாயம் ஐ.ஏ.எஸ் விசாரித்தால் உண்மைகள் அம்பலத்துக்கு வந்துவிடும் என்பதால் தமிழக அரசு சகாயம் குழுவை முடக்க முயற்சி செய்கிறது. மக்களிடம் ஓட்டு வாங்கி ஆட்சிக்கு வந்த ஜெயா அரசு, ஓட்டுப் போட்ட உழைக்கும் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம் இது. தாதுமணல், கிரானைட் போலவே ஆற்றுமணல் கொள்ளையும் தமிழகத்தில் தாமிரபரணி, வைப்பாறு, தொடங்கி பாலாறு, காவேரி வரை மிகப்பெரிய அளவில் நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமாக நடைபெறும் இந்தக் கொள்ளைகளை எதிர்த்த பலர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அரசு அளித்துள்ள உரிமத்தைப் பெயரளவுக்கு வைத்துக் கொண்டு பல்லாயிரம் மடங்கு அதிகமாக மாபெரும் கொள்ளையாக இது நடைபெற்று வருகிறது. இவற்றைத் தடுத்து நிறுத்த சகாயம் குழு விசாரணை வரம்பை தாதுமணல் – கிரானைட் – ஆற்று மணல் ஆகிய மூன்றுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
சகாயம் குழு விசாரணைக்கு அரசு உத்தரவிட்டால் கூட மக்ககள் போராட்டமின்றி அவ்விசாரணை முழுமையாக நடைபெறாது. அரசும், அதிகாரிகளும் அதை முடக்குவதற்கு முயற்சிப்பார்கள். ஆகவே, கடற்கரை மக்களின் பல்லாண்டு காலப் போராட்டம் ஒரு குறிப்பிட்ட கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மீண்டும் தீவிரமாக போராடினால், தாதுமணல் நிறுவனங்களை மூடி மக்களின் வாழ்வாதார நிலையை பாதுகாக்கலாம். படுவேகமாக ந டைபெறும் அனைத்து இயற்கை வளக் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்தலாம். இதற்கு பாதிக்கப்பட்ட மக்கள் மட்டுமின்றி அனைத்துப் பிரிவு மக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும். வெறும் பார்வையாளர் என்ற நிலையில் இல்லாமல் பங்கேற்பாளராக எங்களோடு இணையுங்கள். நம் தாய் மண்ணை கனிம கொள்ளையர்களின் பிடியில் இருந்து மீட்டெடுக்க உங்களை அழைக்கிறது மனித உரிமை பாதுகாப்பு மையம்.
தூத்துக்குடி துறைமுகக் கழகத் தலைவருக்கு ஏழரை கோடி லஞ்சம் தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜன் தலைமறைவு! சி.பி.ஐ.-யே உடனே கைது செய்! சொத்துக்களை முடக்கு!
தமிழக அரசே கனிமவளக் கொள்ளையை விசாரிக்க நியமிக்கப்பட்ட சகாயம் குழுவை முடக்காதே! தாதுமணல்-ஆற்றுமணல் கொள்ளைகளையும் விசாரிக்க உத்தரவிடு! தமிழ்நாட்டை சூறையாடும் அனைத்து கனிமவளக் கொள்ளைகளையும் தடுத்து நிறுத்த போராடுவோம்! இயற்கை,சுற்றுச்சூழல், தலைமுறைகளைக் காப்பாற்ற களத்தில் இறங்குவோம்!
கண்டன ஆர்ப்பாட்டம்
நாள் : 29.11.2014, சனிக்கிழமை காலை 10.00 மணி
இடம் : பழைய மாநகராட்சி அலுவலகம் முன்பு, தூத்துக்குடி
மனித உரிமை பாதுகாப்பு மையம், தமிழ்நாடு தூத்துக்குடி – நெல்லை – குமரி மாவட்டங்கள் 9443527613, 9442339260, 9486643116
மும்மூர்த்திகளுக்குஆதரவா, கேலியா, இல்லை விகடனின் வர்த்தகமா?
விலை பன்னிரெண்டு ரூபாய். இதழ் வாரம் இருமுறை. மாதம் எட்டு. இதழ் ஒன்றின் விநியோகம் 2 லட்சம் வரை இருக்கலாம். ஒரு இதழுக்கு மொத்த வரவு (செலவு, கழிவையும் உள்ளடக்கி – விளம்பர வரவை தவிர்த்து ) 24 லட்ச ரூபாய். இதை சாதிப்பதற்கு என்ன வேண்டும்?
அட்டைப்படக் கட்டுரை.
வாசகர்கள் ஜூனியர் விகடன் பெயருக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட கவர் ஸ்டோரி என்ன என்றே பார்க்கிறார்கள். சரக்கு விலைபோவது விகடன் குழும பிராண்டில் அல்ல. மல்டி கலர் வம்பு தும்பு, கிசுகிசு, அரட்டை அக்கப்போர் இன்னபிற மசாலாக்களை கொண்டிருக்கும் அட்டைகளே சரணம். சரி அதனால் என்ன? பெட்டிக்கடையில் வாங்குபவன் வாசகரா, இளித்தவாயனா? அவர்கள் பகிரங்கமாகவே வா இல்லை இ என்றே தெரிவிக்கிறார்கள்.
இனி கதையின் காரணம். 30.11.2014 தேதியிட்ட ஜூவியின் அட்டைப்படம்: முறையே வாசன், விஜயகாந்த், வைகோ சிரித்தவாறு காட்சி. “உருவாகிறது ‘ஊழல் எதிர்ப்பு அணி’!” – இது கவர் ஸ்டோரியின் தலைப்பு!
நாடாளுமன்றத் தேர்தலின் போது மோடி – பாஜகவிற்கு மிருதங்கம் அடித்தார்கள். தேர்தலுக்கு பிறகு திமுகவில் அப்படி, இப்படி என ட்ரம்ஸ் தட்டினார்கள். எத்தனை காலத்திற்கு என்று சலிப்பு வந்த உடன், வாசன் வந்தருளினார். பிறகு தமிழ்நாட்டின் விமோசனத்திற்காக ஜூவி அடுத்த கூட்டணி தயாரிப்பிற்கு தயார். இந்த சமையல் குறிப்பிற்கு அவர்கள் கடுகளவும் மெனக்கெடவே இல்லை.
உருவாகிறது ஊழல் அணிக்கு ஜூவி எழுதிய மொத்த வார்த்தைகளும் எவ்வித சுருக்கமும் இன்றி கீழே தரப்பட்டுள்ளது:
”அரசியல் வட்டாரத்தில் கமுக்கமாக நடக்கத் தொடங்கி இருக்கும் ஒரு பேச்சுவார்த்தை பற்றிய முன்னோட்டங்களை இப்போதே சொல்லிவிடுகிறேன். இது ஆரம்பக்கட்டம்தான்! தி.மு.க, அ.தி.மு.க இல்லாத அணி ஒன்றை உருவாக்கும் முயற்சியில் சிலர் இறங்கி இருக்கிறார்கள். விஜயகாந்த், வைகோ, ஜி.கே.வாசன் ஆகிய மூவரையும் அதில் இணைக்கும் திட்டம் இருக்கிறதாம். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி, ஆம் ஆத்மி ஆகிய நான்கையும் இதனுடன் இணைக்கலாம் என்ற திட்டமும் இருக்கிறதாம். ‘ஊழல் எதிர்ப்பு அணி’ என்று இதற்கு முத்திரையும் வைக்கப்படலாம் என்றும் சொல்கிறார்கள். ஜி.கே.வாசனும் விஜயகாந்தும் எப்போதும் நண்பர்கள். விஜயகாந்தும் வைகோவும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிகமாக பின்னிப் பிணைந்து இருந்தார்கள். இப்படி ஓர் அணி அமையும்போது புதிய கட்சிகளும் தயங்காமல் ஒன்று சேரும் என்கிறார்கள். இது தி.மு.க., அ.தி.மு.க. அல்லாத மட்டுமல்ல, பி.ஜே.பி, காங்கிரஸ் அல்லாத அணியாகவும் அமையுமாம்!” என்ற கழுகார், ”ஒரு சீக்ரெட் சொல்கிறேன்! அது விரைவில் வெடிக்கும்!” என்று பீடிகையுடன் அடுத்த செய்தியை ஆரம்பித்தார்.”
மொத்தம் 107 வார்த்தைகள். ஏழு வாக்கியங்கள். அதிலும் கடைசி வாக்கியத்தில் அடுத்த பரபரப்பிற்கான பீடிகை. இதிலிருந்தே தெரிகிறது, இந்த இத்துப் போன செய்திகளை அவர்களே ரசிக்கவில்லை. இட்டுக் கட்டல்தான் என்றாலும் அதிலும் கூட அளவிலோ, திருப்பங்களிலோ, டிவிஸ்டுகளிலோ, முடிச்சுக்களிலோ கடுகளவு கூட படைப்புத் திறன் இல்லை!
என்ன ஆச்சு ஜூவிக்கு?
பிரியாணி வார்த்தையைக் காட்டினாலே தமிழன் எச்சிலூறும் நாக்குடன் வருவான் என்று எவ்வளவு தன்னம்பிக்கையா? பிரியாணி இல்லை, பிய்ஞ்சு போன செருப்புதான் என்றாலும் ஆம்பூர் வாசனையை தேடுவான் என்று எப்படி ஒரு கணிப்பு? விகடன் குழும மார்க்கெட்டிங் உத்தி அபாரம்!
இல்லை மோடி, பாஜக எபிசோடு போல ஏதும் அசைண்மெண்டா? இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஊழல் எதிர்ப்பு கூட்டணிக்கு கழுகு எனும் கிசுகிசு பக்கத்தில் ஒதுக்க வேண்டிய காரணம்?
ஜூவியில் காரணமே இல்லாமல் வைகோ எனும் பியூஸ் போன பல்பர் ஏதோ ஒரு நியூசில் இடம்பெறுவார். அதற்காகவா இந்த கவரேஜ் (உண்மையில் கடுகரேஜ்)? சார்க் மாநாட்டில் ராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன மோடிக்கு, இடியே கலங்கி போகும் வண்ணம் கண்டித்தாரே வைகோ, அதன் பொருட்டா? வைகோவை நாங்கள் பொருட்படுத்தவே இல்லை என்று பாலிமர் சேனலே பொருட்படுத்தாத பாஜக தலைகள் ஒதுக்கியதே அவர்களை எச்சரிக்கும் பொருட்டா?
இல்லை பிரச்சாரத்துக்கு வைகோ, பிரபலத்துக்கு கேப்டன் என்று கமலாலயம் ஆனந்தத்தில் திளைத்ததே, அதை நினைவுபடுத்தி தாமரைக்கு விடுவிக்கும் எச்சரிக்கையா?
இல்லை வாசன் கம்பெனியை யாராவது கருணை காட்டி கூட்டணியில் தூக்கி போட்டாலும் 5 சீட்டுகள் கிடைத்தாலே அதுதான் எட்டாவது உலக அதிசயம். தஞ்சை பண்ணையாரின் வாரிசுக்கு கூட ரெண்டு மூன்று சேர்த்து கேட்கத்தான் இந்த ஏழு வாக்கியங்களா?
இல்லை விகடன் கனவு கண்ட அந்த பொற்கால பாஜக கூட்டணியின் துர்பாக்கிய தடையாக இருந்த கேப்டன் கட்சியை பழிவாங்கவா? கேப்டன் வருவார், மாட்டார் என்று பொன்னார் அறையில் முறுக்கு பாக்கெட்டுகள் தீர்ந்த நேரத்தில் நகங்களை கடித்து அவதிப்பட்டதாக ஆ.விகடனில் வானதி சீனிவாசன் குமுறுகிறார். கடிபட்ட, அரைபட்ட முறுக்குகளுக்கான நன்றிக் கடனா?
இல்லை திமுக, அதிமுகவிற்கு மாற்றாக பாஜகவை ஆளாக்க சில்லறையாட்களை ஓரம் கட்டுகிறார்களா? எனில் வைகோவின் இடம் சில்லறையில் என்ன? சில்லறை சிறுத்த பிறகு பேரிசையுடன் வேறு ஏதும் முழங்குவாரா? தமிழிசைக்கு தெரியுமா?
இல்லை ரஜினியை இழுத்துபோட அமித்ஷா போடும் திரில்லர் ரூட்டுக்கு இது ஒரு கிளைக்கதையா?
இல்லை, கம்யூனிஸ்டு, ஆம் ஆத்மி, என்று நல்லகண்ணு அறம் காட்டி முற்போக்கு காட்டும் தந்திரமா? நேற்று காவியுடன் காபி, இன்று சிவப்புடன் மோர், நாளை கதருடன் லாலி பாப்பா? அடேயப்பா!
இல்லை இப்படி ஒரு ஊழல் எதிர்ப்பு கூட்டணி வந்தால் ஆம் ஆத்மியிலிருந்து விலகிய ஞானாத்மாக்களும், உதயாத்மாக்களும் வந்து சேருமா? இதனால் ஃபேஸ்புக்கில் ரெண்டு மாதம் அனல் பறக்குமே? அந்த அனலை செய்தியாக்கும் திட்டமா?
இல்லை இந்த வார இதழை விறுவிறுப்புடன் தள்ள வேறு எந்த வரலாற்று சாதனைகளும் நடக்காததன் விளைவா? சொல்லுங்கள் அய்யா, சொல்லுங்கள்!
ஊழல் எதிர்ப்பு அணி என்று பந்தாவுடன் தலைப்பு போட்டு உள்ளே போய் பார்த்தால் பந்தலும் இல்லை பந்தியும் இல்லையே?
ஒரு நாட்டின் அரசியல் தரம் எப்படி இருக்கிறது, அறிய வேண்டுமா? அங்கு வரும் அரசியல் பத்திரிகைகளை பாருங்கள்!
ஓபி எஸ்ஸையும், அம்மா அடிமைகளையும் கிண்டல் செய்து தமிழகத்தை பார்த்து சிரிப்பவர்கள், தமிழக ஊடகங்களை பார்த்து சிரிக்க வேண்டாம், அழவாவது செய்யலாமே?
இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – டாக்டர் அம்பேத்கர் – 4
இப்போது கிருஷ்ணனைப் பற்றிப் பார்ப்போமாக
மகாபாரதத்தின் கதாநாயகன் கிருஷ்ணன். சரியாக சொல்ல வேண்டுமானால் கௌரவர்கள் – பாண்டவர்கள் சம்பந்தப்பட்டதே மகாபாரதக் கதையாகும். தம் மூதாதையரின் அரசாட்சி உரிமைக்காக இவ்விரு அணியினர் மேற்கொண்ட யுத்த-கதையே மகாபாரதக் கதையாகும். அவர்கள் தான் இக்கதையில் பிரதான பங்கினராய் இருந்திருக்க வேண்டும். ஆனால் அப்படித் தெரியவில்லை. கிருஷ்ணன்தான் இக்கதையின் கதாநாயகன். இது விநோதமாய் உள்ளது. மேலும் இந்தக் கிருஷ்ணன் கௌரவர்கள்-பாண்டவர்கள் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்திருந்த ஆளாகவும் தெரியவில்லை. கிருஷ்ணன் நாடாண்ட பாண்டவர்களின் நண்பனாய் இருந்திருக்கிறான். வேறொரு நாட்டின் அரசனான கம்சனுக்கு கிருஷ்ணன் எதிரி. அருகருகே ஒரே இடத்தில், ஒரே காலத்தில் இரு அரசாட்சிகள் இருந்திருக்க கூடுமா? மேலும் இவ்விரு அரசர்களுக்கிடையே உறவு இருந்த்தாய்க் காட்டிட மகாபாரதத்தில் ஏதும் ஆதாரமில்லை. எனவே, கிருஷ்ணன் மற்றும் பாண்டவர் பற்றிய இரு தனித்தனி கதைகள் கலந்து ஜோடிக்கப்பட்டு இடைச்செருகலாகப் பிற்காலத்தில் மகாபாரதத்தில் நுழைக்கப்பட்டிருக்க வேண்டும். கிருஷ்ணனின் கதாபாத்திரத்தை மேலும் சற்று விரிவாக்கும் நோக்கத்துடனேயே இந்த இடைச்செருகல் இடம்பெற்றிருக்க வேண்டும்.
கிருஷ்ணன் அனைத்திற்கும் மேம்பட்டவன், பெருமைக்குரியவன் எனச் சித்தரித்துக் காட்டிட வியாசன் மேற்கொண்ட துணிகரத் திட்டத்தின் விளைவே இவ்விரு கதைகளின் கலப்புத் தொகுப்பாகும்.
வியாசனின் கூற்றுப்படி கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம். அவ்வளவுதான் ! அதனாலேயே கிருஷ்ணன் மகாபாரதக் கதையில் கதாநாயகன் ஆக்கப்பட்டிருக்கின்றான். உண்மையில் கிருஷ்ணன் மனிதர்களுள் தெய்வம் எனும் அளவுக்கு அருகதையுடையவனா? ஒருவேளை அவனுடைய வாழ்க்கைச் சுருக்கம் அவ்வித கேள்விக்குச் சரியான விடை அளிக்கலாம்: சற்று பார்ப்போம்.
தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் அல்லது தெய்வானை மூலம் கேள்விப்பட்ட கம்சன்
பத்ரா மாதம் எட்டாம் நாள் நள்ளிரவில் மதுராபுரி நகரில் கிருஷ்ணன் பிறந்தான். அவனுடைய தந்தை யாதவ இனத்தைச் சேர்ந்த வாசுதேவன். மதுராபுரியை ஆண்ட அரசன் உக்கிர சேனனுடைய சகோதரன் தேவகனுடைய மகள் தேவகி அவனுடைய தாய். சௌபாவின் தானவ மன்னன் துருமிளாவுடன் உக்கிரசேனனுடைய மனைவி கள்ளத் தொடர்பு கொண்டிருந்தாள். இத்தகாத தொடர்பினால் பிறந்தவன் கம்சன். ஒரு வழியில் பார்த்தால் தேவகிக்கு கம்சன் ஒன்றுவிட்ட சகோதரன்.
உக்கிரசேனனை சிறைப்படுத்தி மதுராபுரியின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினான் கம்சன். தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தை கம்சனைக் கொன்றுவிடும் என்று வானத்திலிருந்து அசரீரி சொன்னதாய் நாரதன் அல்லது தெய்வானை மூலம் கேள்விப்பட்ட கம்சன் தேவகியையும் அவள் கணவனையும் சிறைப்படுத்தி ஒன்றன் பின் ஒன்றாய் பிறந்த அவர்களுடைய ஆறு குழந்தைகளையும் கொன்று விடுகிறான். ஏழாவது குழந்தையாகிய பலராமன் தேவகியின் வயிற்றில் கருவாய் இருக்கும்போதே, வாசுதேவனின் வேறொரு மனைவியான ரோகிணியின் வயிற்றுக்கு அதிசயமான முறையில் மாற்றப்படுகிறான். எட்டாவது குழந்தையாய் கிருஷ்ணன் பிறக்கிறான்.
விராஜ நாட்டவர்களான நந்தனும் யசோதையும் அப்போது யமுனை நதியின் மறுகரையில் வாழ்கிறார்கள். இரகசியமாக கிருஷ்ணனின் தந்தை, கிருஷ்ணன் பிறந்தவுடன் அவர்களிடம் சேர்த்து விடுகிறான். பெருக்கெடுத்து ஓடும் யமுனை நின்று இந்த தெய்வ குழந்தை ஆற்றைக் கடக்க வழிவிட்டதாம். நாகங்களின் தலைவனான அனந்தா (பாம்பு) படம் எடுத்து குழந்தைக்கு முக்காடிட்டு கொட்டும் அடைமழை குழந்தை மேல் விழாமல் பாதுகாத்து யமுனையின் அக்கரையிற் சேர்த்ததாம்; அவர்களுக்கு அடைக்கலம் கிடைத்ததாம். ஏற்கெனவே செய்து கொண்ட முன்னேற்பாட்டின்படி வாசுதேவன் தன் மகனை நந்தனுக்கு கொடுத்தான்.
நந்தன் தாம் பெற்ற மகள் யோகிந்தா அல்லது மகமாயா எனும் குழந்தையை வாசுதேவனுக்கு கொடுத்தான். இதுதான் தாம் பெற்ற எட்டாவது குழந்தையென்று வாசுதேவன் அப்பெண் குழந்தையைக் கம்சனிடம் கொடுத்தான். நந்தனும் யசோதையும் வளர்த்துவரும் குழந்தையே கம்சனைக் கொன்றுவிடும் என்று கூறிவிட்டு அப்பெண் குழந்தை எங்கோ ஓடி மறைந்தது.
அனந்தா (பாம்பு) படம் எடுத்து குழந்தைக்கு முக்காடிட்டு கொட்டும் அடைமழை குழந்தை மேல் விழாமல் பாதுகாத்து யமுனையின் அக்கரையிற் சேர்த்ததாம்
எட்டாவது குழந்தையான கிருஷ்ணனை கொன்றிட கம்சன் பல வழிகளில் முயன்றும் முடியாமற் போகிறது. எப்படியாவது கிருஷ்ணனைக் கொன்று விட வேண்டும் எனும் நோக்கத்தில் பல ரூபங்களில் பல அசுரர்களைக் கம்சன் விராஜ நாட்டிற்கு அனுப்பினான். குழந்தைப் பருவத்திலேயே கிருஷ்ணன் பல அசுரர்களைக் கொன்றதாயும், அரிய பல சாகசங்களை நிகழ்த்தியதாயும் புராணத்தில் காணும் நிகழ்ச்சிகளுக்கொப்ப கிருஷ்ணனின் செயல்கள் வேறெந்த சாதாரணக் குழந்தையாலும் செய்ய முடியாத செயல்களாய் தெரிகின்றன. இப்படி சில நிகழ்ச்சிகளை மகாபாரதத்திலும் காணலாம். இவ்வெண்ணத்திற்கு இசைவாக இவ்வுண்மை நிகழ்ச்சிகளைப் பற்றிப் பொறுப்புள்ள சில பெரியவர்களும் கூட பெரும்பாலும் வித்தியாசமான கருத்தையே கொண்டுள்ளனர். பிற்காலத்திய சில ஆதாரங்களினடிப்படையில் சில உண்மைகளை மட்டும் நான் குறிப்பிடுகிறேன். முதலாவதாக, ஓர் நிகழ்ச்சியைப் பார்ப்போம்.
முதலாவதான நிகழ்ச்சி பூதனை என்ற பெண் கிருஷ்ணனால் கொல்லப்பட்ட நிகழ்ச்சி. பூதனை கம்சனின் தாதியாய்ப் பணியாற்றியவள். கிருஷ்ணனைக் கொல்ல ஒரு பெண் இராஜாளிக் கழுகு ரூபத்தில் பூதனையை அனுப்பினான் கம்சன் என்கிறது ஹரிவம்ச புராணம். பாகவத புராணத்தின்படி ஓர் அழகிய பெண் ரூபத்தில் பூதனாவைக் கம்சன் அனுப்பினான் எனத் தெரிகிறது. அழகிய பெண் ரூபத்திலிருந்த பூதனா குழந்தை கிருஷ்ணனுக்கு பாலூட்டுவது போல பாவனை செய்தாளாம். விஷம் தடவிய தன் மார்பகத்தைக் கிருஷ்ணனின் வாயில் வைத்தாளாம். கிருஷ்ணனோ வெகு பலமாக உறிஞ்சினானாம். அவள் உடம்பிலுள்ள இரத்தமெல்லாம் வறண்டு போய் கடுங் கூச்சலுடன் அவள் கீழே விழுந்து மாண்டு போனாளாம். இது ஒரு நிகழ்ச்சி.
கிருஷ்ணன் மூன்று மாதக் குழந்தையாய் இருந்தபோது வேறொரு சாகசத்தைச் செய்தான். இது சகடை என்னும் வண்டியை உடைத்த கதை. இவ்வண்டி உணவுப் பண்டங்களை வைக்க உபயோகிக்கப்பட்டது. அதில் விலையுயர்ந்த ஜாடிகள், சட்டி, பானை, பாத்திரங்கள், பால், தயிர் போன்றவைகளெல்லாம் சீராய் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஹரிவம்ச புராணத்தின்படி கம்சன் கிருஷ்ணனைக் கொன்றிடும் நோக்கத்துடன் ஒரு அசுரனை அந்த வண்டி ரூபத்தில் அனுப்பியதாயத் தெரிகிறது. இருந்தபோதிலும் யசோதா குழந்தையான கிருஷ்ணனை அவ்வண்டிக்கு கீழே கிடத்தி விட்டுக் குளிப்பதற்காக யமுனைக்குப் போனாளாம். அவள் திரும்பி வந்த வேளையில் வண்டியின் கீழ் படுத்துக் கொண்டிருந்த குழந்தை கிருஷ்ணன் அவ்வண்டியை உதைத்ததால் அதன் மீது அடுக்கி வைக்கப்பட்டிருந்த அனைத்துப் பொருட்களும் உடைந்து சிதறி சின்னாபின்னமாய்ப் போனதாய்க் கேள்விப்படுகிறாள். இந்நிகழ்ச்சி யசோதைக்கே அதிர்ச்சியாயும், ஆச்சரியமாயும் உள்ளது. அதன் மூலம் கெடுதல் நேரிடாமல் தடுத்திட அவள் பல பூஜைகள் செய்தாளாம். இது வேறொரு நிகழ்ச்சி.
கிருஷ்ணனைக் கொல்ல சகடை, பூதனா ஆகியோரின் முயற்சிகள் தோற்ற பின் அதே காரியத்தைச் செய்ய கம்சன் மீண்டும் திரினவர்த்தன் எனும் வேறொரு அசுரனை அனுப்பினானாம். இந்த அசுரன் பறவை ரூபத்தில் வந்து தெய்வ வரம் பெற்ற அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு பறந்தானாம். அப்போது கிருஷ்ணனுக்கு ஒரு வயதுதானாம். வானத்தில் பறந்து கொண்டிருந்த அசுரன் விரைவில் கீழே விழுந்து செத்தானாம். அப்போது குழந்தை (கிருஷ்ணன்) பத்திரமாய் இருந்ததோடு, அந்த அசுரனின் குரல்வளையைக் கெட்டியாய் இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததாம். இது மற்றோர் நிகழ்ச்சி.
காளியனை அடக்கியதாய்ச் சொல்லப்படும் அருஞ்செயலைத் தொடர்ந்து கிருஷ்ணன் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிய நிகழ்ச்சி வருகிறது.
கிருஷ்ணனின் அடுத்த சாகசச் செயல் என்னவெனில் அடுத்தடுத்து வளர்ந்திருந்த இரண்டு அர்ஜூனா மரங்களை உடைத்தெறிந்ததாகும்.
ஏதோ சாபத்தால் இரு யக்ஷர்கள் மரமாய்ப் போனார்கள் எனச் சொல்லப்படுகிறது. கிருஷ்ணன் அம்மரங்களை வீழ்த்திச் சாய்த்த சாகசத்தால் அவர்கள் இருவரும் மீண்டும் பழைய வடிவம் பெற்று விடுவிக்கப்பட்டார்களாம்.
கிருஷ்ணன் தவழத் தொடங்கிய காலத்தில் அவன் செய்யும் குறும்புகளிலிருந்து தடுத்திட மர உரலில் கயிறு போட்டுக் கிருஷ்ணனைக் கட்டிவிட்டு யசோதை வீட்டு வேலைகளைக் கவனிக்கப் போனாளாம். யசோதை மறைந்தவுடன் கிருஷ்ணன் அந்த மர உரலோடு இழுத்துக் கொண்டு போய் மரங்களை வேரோடு சாய்த்தானாம். அடி மரமே வேரறுந்து விழுந்தபோது பெரும் ஓசை எழுந்ததாம். ஆனால், கிருஷ்ணனுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லையாம்.
இவ்வித நிகழ்ச்சிகளெல்லாம் நந்தனின் மனத்தில் பெரும் பயத்தை உண்டாக்கியது. விராஜ நாட்டிலிருந்து வெளியேறி வேறொரு பகுதிக்கு குடிபெயர்ந்திட அவன் தீவிரமாய் யோசித்தான். அவன் இப்படி யோசித்துக் கொண்டிருந்த வேளையில் அப்பிரதேசத்தில் ஓநாய்கள் மலிந்து கால்நடைகளுக்கு பேராபத்தை உண்டுபண்ணியதால் அவ்விடமே பாதுகாப்பற்ற இடமாய்த் தெரிந்தது. எனவே, நாடோடிகளாய் இருந்த கிருஷ்ணனின் கூட்டத்தார் தங்களுடைய பொருள்-உடைமைகளுடன் பிருந்தாவனம் எனும் இரம்மியமான பிரதேசத்தை நோக்கிப் புறப்பட்டனர். அப்போது கிருஷ்ணனுக்கு வயது ஏழுதான்.
புதிதாக இவ்விடத்திற்கு வந்து சேர்ந்தபின் கிருஷ்ணன் பல அசுரர்களைக் கொன்றான். அவர்களுள் அரிஸ்தா என்பவன் காளை மாட்டு ரூபத்தில் வந்தான். கேசின் என்பவன் குதிரை ரூபத்தில் வந்தான். மற்றும் விரத்ராசூரன், பக்காசூரன், அகாசூரன், போமாசூரன், மற்றும் ஷங்காசூரன் ஆகிய யக்ஷன் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர்.
இவையனைத்தையும் விட யமுனைப் பெருநீர்ச் சுழியில் வாழ்ந்து கொண்டிருந்த யமுனை நதி நீரில் விஷம் கலந்திட்ட காளியன் என்ற நாகங்களின் தலைவனைக் கிருஷ்ணன் கொன்றது மிகப் பெருஞ்செயலாம்.
ஒருநாள் படமெடுத்து ஆடிக் கொண்டிருந்த காளியனின் தலை மீது குதித்து கிருஷ்ணன் நடனம் ஆடினான். பொறுக்க முடியாமல் இந்நாகம் இரத்த வாந்தி எடுத்தது. கிருஷ்ணன் அந்த நாகத்தை கொன்று விட்டிருக்கலாம். ஆனால் அந்த நாகத்தின் குடும்பத்தினருக்காக இரங்கிப் பிழைத்துப் போகட்டும் என்று வேறெங்காவது போய்ச் சேர அனுமதித்தான்.
காளியனை அடக்கியதாய்ச் சொல்லப்படும் அருஞ்செயலைத் தொடர்ந்து கிருஷ்ணன் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைத் திருடிய நிகழ்ச்சி வருகிறது. புராணத்தில் வரும் கிருஷ்ணனைத் தெய்வமாய்த் தொழும் பக்தர்கள் இந்நிகழ்ச்சியை ஜீரணிப்பது பெரும் சங்கடத்திற்குரியது. இந்நிகழ்ச்சியை முற்றிலும் விரிவாக குறிப்பிட்டால் மிக்க அருவெறுக்கத்தக்க நிகழ்ச்சியாய்த் தோன்றும்; சுருக்கமாய்ச் சொன்னாலும் கூட அசிங்கமாய்த் தெரியும்; அவமரியாதையாய் தோன்றும். ஆயினும் இயன்றவரை மிக நாகரிகத்துடனேயே கிருஷ்ணனின் இந்த நடவடிக்கையை நான் சுருக்கமாய் குறிப்பிடுகிறேன்.
கோபிகள் ஒரு நாள் யமுனையில் நீந்திக் குளிக்கப் போனார்கள். நதியில் இறங்கும் முன் தம் ஆடைகளைக் களைந்து கரையில் வைத்தார்கள். நிர்வாணமாய்க் குளிக்கும் பழக்கம் நாட்டில் சில பகுதிகளில் இன்னும் நிலவிடுவதாய் சொல்லப்படுகிறது. நதிக்கரையில் கோபியர்கள் அவிழ்த்து வைத்த ஆடைகளைக் கிருஷ்ணன் எடுத்துக் கொண்டு ஓடிப் போய் நதியோரத்தில் இருந்த ஒரு மரத்தின் மீது ஏறிக் கொண்டான். ஆடைகளைத் திருப்பித் தா என்று அப்பெண்கள் கேட்டபோது, ஒவ்வொருத்தியும் அம்மரத்தருகே வந்து தனக்கு ஆடை வேண்டுமென்று ‘கையேந்தி’க் கேட்டாலொழிய அத்துணிகளைக் கொடுக்க முடியாதென்று கிருஷ்ணன் சொன்னானாம். இது நடக்க வேண்டுமானால் குளித்துக் கொண்டிருந்த அப்பெண்கள் நிர்வாணமாக வெளியேறி மரத்தடிக்கு வந்து கிருஷ்ணன் முன் நிர்வாணமாய் நின்று கையேந்த வேண்டும். அப்பெண்கள் அப்படிச் செய்த பின்னர்தான் கிருஷ்ணன் ‘மனமிரங்கி’ அப்பெண்களுக்கு அவரவர் துணிகளைக் கொடுத்தானாம். இக்கதை பாகவதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
(தொடரும்)
(டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு 8 – பின்னிணைப்பு 1 – இராமன், கிருஷ்ணன் பற்றிய புதிர் – பகுதி 4)
“தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டு, கடந்த செப்டம்பர் 27 அன்று மாலை 5 மணிக்கு, பெங்களூரு பரப்பன அக்ரகாரா சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து போய்விட்டது; ஓ. பன்னீர்செல்வம் முதலமைச்சராகப் பதவியேற்ற பிறகு தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது” இப்படி எதிர்க்கட்சிகள் எல்லாம் ஓயாது ஒப்பாரி வைக்கின்றன.
இது உண்மையா! இல்லை. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டிக்கப்பட்ட அன்றும் மறுநாளும் அவரும் பிற அமைச்சர்களும் பெங்களூரு போய்விட்டதால் அவர்களின் கீழ் இருந்த அந்தந்த துறைசார்ந்த அதிகாரிகளும் ஊழியர்களும் தீர்ப்பின் பரபரப்பில் வேலை செய்யவில்லை. வெறுமனே அலுவலகத்துக்கு வந்தவர்களும் தமக்குரிய வழமையான பணிகளைக்கூடச் செய்யாது போய்விட்டார்கள்.
ஜெயலலிதாவைத் தண்டித்த தீர்ப்பு வந்த மறுநிமிடம் முதல் அவர் காலாலிட்ட உத்திரவைத் தலையால் ஏற்று அம்மா தி.மு.க.வின் அடிமைகளும் கைக்கூலிகளும் தமிழக அரசும் அவர் பிணையை விலைக்கு வாங்கிக் கொண்டு போயசுத் தோட்டம் மாளிகைக்குள் நுழையும் வரை செயல்பட்டனர். அதாவது, அம்மாவுக்காக அழுது புரண்டார்கள், ஒப்பாரி வைத்தார்கள், மொட்டை போட்டார்கள், பால்குடம் எடுத்தார்கள், உண்ணாவிரதம் இருந்தார்கள், பொங்கல் வைத்தார்கள், அபிசேகங்கள், யாகங்கள், வேண்டுதல்கள், பரிகாரங்கள் செய்தார்கள்; கடைகளை மூடச்சொல்லி அடித்து நொறுக்கினார்கள்; அரசு மற்றும் தனியார் வாகனங்களை எரித்தார்கள் – அதில் முன்பு நடந்ததைப்போல நரபலி நிகழாமல்போனது குறித்து தண்டிக்கப்பட்ட தெய்வத்துக்கு வருத்தம் இருக்கலாம். மற்றபடி அம்மா தி.மு.க.வின் அடிமைகளோடும் கைக்கூலிகளோடும் கைகோர்த்துக்கொண்டு தமிழக அரசு அதன் வழமையான செயல்பாடுகளோடு, மக்கள் பொதுச்சொத்தைக் கொள்ளையடித்த ஜெயலலிதா கிரிமினல் குற்றவாளி என்ற களங்கத்துக்கு, கறைக்கு வெள்ளையடிக்கும் ஆளுங்கட்சியின் அடாவடி, அராஜகச் செயல்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கும் வேலையைச் செய்துகொண்டுதான் இருந்தது.
சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவைக் குற்றவாளியென அறிவித்துத் தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதில் இருந்து ஆளுங்கட்சியினர் கட்டவிழ்த்து விட்ட அடாவடி, அராஜகச் செயல்களையும் ஆளுங்கட்சி நடத்திய போராட்டங்களையும் அதிகாரிகளும் போலீசும் தடுத்து நிறுத்தவில்லை; பாதிக்கப்பட்ட மக்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் அவர்கள் பாதுகாப்பு வழங்கவில்லை. இவற்றை வைத்துத்தான் ‘தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது’ என்று எதிர்க்கட்சிகள் குறைபட்டுக் கொள்கிறார்கள். ஆனால், அவ்வாறு சொல்வதற்கு எந்த எதிர்க்கட்சிக்கும் அருகதை கிடையாது, ஏனெனில், செயல்படாமல் இருந்தவை எதிர்க்கட்சிகள்தாம்! ஜெயலலிதா சிறையிலடைக்கப்பட்ட பிறகும் பன்னீர்செல்வம் முதலமைச்சரான பிறகும் தமிழக அரசும் அதிகாரிகளும் போலீசும் வழக்கம்போல செயல்பட்டுக் கொண்டுதான் இருந்தார்கள் என்பதுதான் உண்மை.
2014, ஏப்ரல் மாதம் தமிழ்நாட்டில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலை நினைவுபடுத்திப் பார்த்தாலே இந்த உண்மை புரியும். அத்தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் நடத்திய தேர்தல் தில்லுமுல்லுகள், அடாவடி, அராஜகச் செயல்களை அதிகாரிகளும் போலீசும் தடுக்கவோ, நிறுத்தவோ முயன்றார்களா? குற்றமிழைத்த ஆளுங்கட்சியினர் மீது கைதோ வழக்கோ போட்டார்களா? அவற்றை எதிர்த்து அம்பலப்படுத்திய எதிர்க்கட்சியினர் மீது தானே நடவடிக்கை எடுத்தார்கள். போலீசு வேன்களில்தானே பணம் கடத்தப்பட்டது; அதை வாக்காளர்களுக்கு விநியோகித்தவர்களுக்குத்தானே பாதுகாப்புக் கொடுத்தார்கள். 144 தடைவிதித்து ஆளுங்கட்சிக்கு வசதிசெய்து கொடுத்த தேர்தல் ஆணையமே ஆளும்கட்சியின் பணப் பட்டுவாடாவைத் தடுக்க முடியாமல் போய்விட்டது என்று ஒப்புக்கொண்டது. தேர்தல் ஆணையத்தின் ஊழியர்களாகச் செயல்பட்ட அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லையென்றால், அத்தேர்தல்களில் ஆளுங்கட்சி வெற்றி பெற்றிருக்க முடியுமா?
அவ்வளவு ஏன், அதிகாரிகளும் போலீசும் உடந்தையாக இல்லாமலா இப்போது தண்டிக்கப்படுவதற்குக் காரணமான சொத்துகளை எல்லாம் ஜெயா-சசி கும்பல் குவித்தது? அந்தச் சொத்துகள் எல்லாம் இலஞ்ச-ஊழல் மூலம் மட்டும் குவிக்கப்பட்டவை அல்ல. ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் முதல் கோடநாடு பண்ணை, கங்கை அமரனின் பையனூர் பங்களா வரை பல அசையா சொத்துக்கள் எல்லாம் மிரட்டி வாங்கப்பட்டவைதாமே. அப்போதும் அதற்கெல்லாம் பாதுகாப்பாகத்தானே அதிகாரிகளும் போலீசும் நின்றார்கள். போயசு மாளிகைக்கே போய் சொத்துக்களைப் பதிவுசெய்து கொடுத்தவர்கள்தானே!
உயர் அதிகாரிகளும் போலீசும் மட்டுமல்ல; கிராம அதிகாரி முதல் தலைமைச் செயலாளர் வரை, சாலையில் நிற்கும் போக்குவரத்துப் போலீசுக்காரன் முதல் மாநிலத் தலைமைப் போலீசு இயக்குநர் வரை, கீழ்நிலை முன்சீப் கோர்ட் முதல் உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி வரை, உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் முதல் நாட்டின் முதல் குடிமகனான அரசுத் தலைவர், பிரதமர் வரை – இவர்கள் எல்லாம் எதற்காகச் செயல்படுகிறார்கள்? நாட்டு நலனுக்காகவா? மக்கள் நலனுக்காகவா? இல்லையே. இலஞ்ச-ஊழலிலும், அதிகார முறைகேடுகளிலும் ஊறித்திளைக்கும் அவர்கள் ஜெயலலிதாவைப் போன்ற ஊழல் பெருச்சாளிகளுக்குத் துணை நிற்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல.
ஜெயலலிதா மட்டும் நேரில் போயிருந்தால், உச்சநீதி மன்றம் தாமே தண்டனிட்டு, அவர் காலில் விழுந்து கும்பிட்டு, ஜாமீன் உத்திரவைக் கையளித்திருப்பார்கள். அதையும் விஞ்சும் அளவுக்குக் கடுமை காட்டுவதைப் போல நடித்துவிட்டு, ஜெயலலிதாவே எதிர்பாராத தீர்ப்பை வழங்கியது அந்நீதி மன்றம். சொத்துக் குவிப்பு வழக்கை 18 ஆண்டுகள் இழுத்தடித்ததைப்போல மேல்முறையீட்டு வழக்கைத் தாமதிக்காது, 2 மாதங்களில் தாக்கல் செய்து, 3 மாதங்களில் தீர்ப்பு வாங்கவேண்டுமாம்! ஒருநாள் தவறினாலும் கடும் நடவடிக்கை மேற்கொள்வார்களாம்! இதைத்தான் கடும் நிபந்தனை ஜாமீன் என்று கருணாநிதி நம்பச் சொல்லுகிறார். தண்டனை வருமுன் வழக்கை இழுத்தடிப்பதும், தண்டிக்கப்பட்ட பிறகு மேல்முறையீட்டை விரைந்து முடித்து விடுதலை பெறுவதும்தானே கடைந்தெடுத்த குற்றவாளியும் நாலாந்தர வக்கீலும் கையாளும் தந்திரம். அவ்வாறாக விதிக்கப்பட்டது கறாரான, கடுமையான, நிபந்தனையுடன்கூடிய ஜாமீனா, குற்றவாளியுடன் கூட்டுக் களவாணித்தனமா? களவாணித்தனம் செய்து கையும் களவுமாகச் சிக்கிக் கொண்டீர்களா, சரி! போ! இனி இப்படிச் செய்யாதீர்கள்” என்பதுதான் டான்சி நில அபகரிப்பு வழக்கு முதல் ஜெயலலிதாவின் எல்லா விவகாரங்களிலும் நீதியரசர்களின் வழுவாநீதி!
‘தமிழக அரசே செயலிழந்து போய்விட்டது, அதிகாரிகள் ஆளுங்கட்சிக்குச் சாதகமாக செயல்படுகின்றனர், காவல்துறை ஆளுங்கட்சியின் ஏவல்துறையாகிவிட்டது, மக்களுக்குப் பாதுகாப்புக் கொடுக்கத் தவறி விட்டது’ என்றெல்லாம் இப்போது கூச்சல்போடும் எதிர்க்கட்சிகளுக்கும் இது நன்றாகவே தெரியும், அது இராஜாஜியோ, காமராஜரோ, பக்தவச்சலமோ, அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ., ஜெயலலிதாவோ யார் ஆண்டாலும் அரசும் ஆட்சியாளர்களும் எப்போதும் இப்படித்தான் செயல்பட்டிருக்கிறார்கள்; இனியும் இப்படித்தான் செயல்படுவார்கள்.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற வக்கிரமான, பொறுக்கி அரசியல், பாசிசக் கோமாளிகள் எதற்கும் தமது செல்லப் பிள்ளைகளான அரசு அதிகாரிகளையும் போலீசுக்காரன்களையும் கூலி எழுத்தாளர்களையும் நம்பி ஆட்சி நடத்தினார்கள்; தடையற்ற அதிகாரமுறைகேடுகளுக்கு அனுமதிக்கப்பட்ட இவர்கள் கூடுதலான விசுவாசத்தைக் காட்டுவதில் வியப்பொன்றுமில்லை. ஆகவே, எப்போதும் போல அரசும் ஆட்சியாளர்களும் செயல்பட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள். இந்த உண்மையை அறிந்திருந்தும் எதிர்க்கட்சிகள்தாம் வேடிக்கை பார்க்கிறார்கள், அறிக்கை விடுகிறார்கள்; தமக்கும், தாம் முடிந்த அளவு குவித்து வைத்திருக்கும் சொத்துக்களுக்கும் பாதிப்பு வராதவாறு அடையாளப் போராட்டங்கள் நடத்துகிறார்கள். மற்றபடி செயல்படாமலிருப்பவை எதிர்க்கட்சிகள்தாம்!
துணுக்குகள்: அம்மா சேவை தவிர, சகாயம் கமிசனை செயல்படாமல் நிறுத்தி வைப்பது, பால் விலை, மின்கட்டணம் உயர்வு, ஆம்னிப் பேருந்துக் கட்டணத்தை விண்ணுயர ஏற்றிக்கொள்ள அனுமதி, கேரளாவில் மதுவிலக்கு என்றால் எல்லையோரக் கிராமங்களில் டாஸ்மாக் கடைகள் திறந்து வசூல்வேட்டை – இவற்றுக்காக அதிகாரிகள் செயல்படவில்லையா! அம்மா சேவை தவிர, டாஸ்மாக் கடைகளை மூடச்சொல்லிப் போராடினால் தடியடி-கைது-சிறை, லாக்அப் சித்திரவதை-கொலை-பாலியல் வன்முறை என்று போலீசுக்காரன்கள் செயல்படவில்லையா!
________________________________________________ புதிய ஜனநாயகம், நவம்பர் 2014(தலையங்கம்)
________________________________________________
குண்டர் சட்டத்திருத்தத்தை ரத்து செய்! – பிரச்சாரம் – ஆர்ப்பாட்டம்
அன்பார்ந்த வழக்குரைஞர்களே! பொதுமக்களே!
சுதந்திர போராட்ட காலத்தில் காலனிய ஆதிக்க பிரித்தானிய அரசு தனது மூலதனத்தையும் ஆட்சி அதிகாரத்தையும் பாதுகாக்கும் விதத்தில் தடுப்பு காவல் சட்டங்களை இயற்றி, போராட்டக்காரர்களை கடுமையாக ஒடுக்கியது. 1947-க்கு பின்பும், ‘சுதந்திர’ இந்தியாவின் புதிய ஆட்சியாளர்கள் பாகிஸ்தான் பிரிவினையின் சூழலைக் காரணம் காட்டி, அதே ஒடுக்குமுறை ஆயுதத்தை தன் உறைக்குள் பத்திரப்படுத்திக்கொண்டார்கள். இந்திராகாந்தி எதிர்க்கட்சிகளையும், ஜனநாயக, புரட்சிகர சக்திகளையும் கடுமையாக ஒடுக்க ‘மிசா’ என்னும் த.கா.சட்டத்தினைத் தான் பயன்படுத்தினார். அதற்கு பிறகு, தடா, பொடா, தேசிய பாதுகாப்பு சட்டம் என தடுப்பு காவல் சட்டங்களை அடுத்தடுத்து கொண்டுவந்து புரட்சிகர, ஜனநாயக சக்திகளையும், எதிர்கட்சிகளையும் எப்படி ஒடுக்கினார்கள் என்பது கடந்த கால வரலாறு!
இப்பொழுது நடைமுறையில் இருக்கும் குண்டர் தடுப்பு சட்டம் 1982-ல் அரசு கொண்டு வந்தது. தொழில்முறை திருடர்கள், ரவுடிகள், போதைப்பொருள் கடத்துபவர்கள் என சில பிரிவுகளில் துவங்கி, கடந்த 32 ஆண்டுகளில் நில அபகரிப்பு, மணல் கொள்ளை, திருட்டி விசிடி தயாரிப்பவர்கள் என பல பிரிவுகளையும் சேர்த்து பெரியதாய் ஊதிப்பெருக்கியுள்ளனர். வெளியில் இருந்தால், தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபடுவார்கள், அதனால் குற்றமிழைப்பதிலிருந்து தடுத்து வைப்பது என கூறிக்கொண்டு தான் பிணை ஏதுமின்றி ஓராண்டு தடுப்பு காவலில் வைப்பது என்பதை கொண்டுவந்தார்கள்.
சமீபத்தில் தமிழக அரசு குண்டர் சட்டத்தில் முதல்முறை குற்றம் செய்தவர்கள் மீதும் பயன்படுத்தலாம், இணையம் மற்றும் பாலியல் குற்றங்கள் செய்பவர்களும் கைது செய்யப்படலாம் என திருத்தியிருக்கிறது. இந்த சட்டத்தில் இதுவரை கைது செய்திருப்பது தாதுமணல் கொள்ளையன் வைகுண்டராஜனையோ, கிரானைட் திருடன் பி.ஆர்.பியையோ கிடையாது. எதிர்கட்சிகாரர்களையும், புரட்சிகர, ஜனநாயக சக்திகளின் மீது தான் பொய்வழக்குகள் போட்டு கு.சட்டத்தில் அடைத்திருக்கிறார்கள்.
உதாரணமாய், சென்னை மதுரவாயலில் காவல்துறையின் அராஜகங்களை தொடர்ச்சியாய் அம்பலப்படுத்தி, உழைக்கும் மக்களை திரட்டி போராடியதால் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் இரண்டு முன்னணி தோழர்களை குண்டர் சட்டத்தில் அடைத்தார்கள்.
சென்னை சந்தோஷ் நகர் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியைச் சார்ந்த அசோக் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைக்க முயன்றார்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நீதிமன்றங்களில் போராடி காவல்துறையின் முயற்சியை முறியடித்தது. மக்களுக்காக போராடும் புரட்சிகர அமைப்பில் செயல்படும் தோழர்களை இழிவுப்படுத்தும்விதமாக கத்தியைக் காட்டி வழிப்பறித்தார்கள், பொதுமக்களை மிரட்டினார்கள் என பொய் வழக்கு போடுகிறார்கள்.
சமீபத்தில் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் தொழிற்சங்க நிர்வாகியான தோழர் சிவாவை தொழிலாளர் நலத்துறை ஆணைய அதிகாரியை மிரட்டியதாய் பொய் வழக்கு ஒன்றை தொடுத்தார்கள். குண்டர் சட்டத்தில் போடக்கூடாது என சென்னை உயர்நீதி மன்றத்தில் தடை வாங்கியதை கூட மதிக்காமல், கு.சட்டத்தில் அடைத்தார்கள். மனித உரிமைப் பாதுகாப்பு மையம் தொடர்ச்சியாக நீதிமன்றங்களில் போராடி, இப்பொழுது தமிழக அரசின் உள்துறை செயலாளர் தோழர் சிவாவின் மீதான குண்டர் சட்டத்தை திரும்ப பெற்றிருக்கிறார். இது தமிழக குண்டர் சட்ட வரலாற்றில் முதன்முறையாக இப்படி நிறைவேற்றியிருக்கிறோம். 58 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு, தோழர் சிவா இப்பொழுது வெளியே வந்திருக்கிறார்.
இப்படி, காவல்துறை நினைத்தால் இனி யார் மீது வேண்டுமென்றாலும், பொய்வழக்கு ஒன்றைப் போட்டு, குண்டர் சட்டத்தில் தடுப்பு காவலில் அடைக்கலாம் என்ற பாசிச நிலை தான் நிலவுகிறது. இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 95%த்தினர் நீதிமன்றத்தினால் பொருத்தமில்லாத வழக்கு என விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் ஒருவருடத்திற்கு மேலாகவும் சிறையில் அவதிப்பட்டிருக்கிறார்கள். அதற்காக இதுவரை எந்த ஒரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.
மனித உரிமைப் பாதுகாப்புமையம் குண்டர் சட்டத்தில் தமிழக அரசு கொண்டு வந்த திருத்தத்தை ரத்து செய்ய பொதுநலவழக்கு ஒன்றை சென்னை உயர்நீதிமன்றத்தில் அக்டோபர் மாதம் தாக்கல் செய்திருக்கிறது. அரசு பதிலளிக்க நான்கு வார அவகாசம் கேட்டது. 24/11/2014 அன்று வழக்கு விசாரணை வந்த பொழுது, அரசு மீண்டும் இரண்டு வார கால அவகாசம் கேட்டுள்ளது!
மனித உரிமைப் பாதுகாப்பு மையம் அடக்குமுறை சட்டங்களை எதிர்க்காவிட்டால், தனியார்மய, தாராளமய, உலகமய -மறுகாலனியாதிக்க கொள்கைகளின் விளைவாக பாதிப்பினால், போராடும் உழைக்கும் ஏழை மக்களும், மக்களின் உரிமைகளுக்காக போராடக்கூடிய புரட்சிகர, ஜனநாயக சக்திகள் தான் என்பதை புரிந்துகொண்டு, இந்த சட்டத்தை முறியடிக்க நாம் போராடவேண்டும் என்றும், குண்டர் சட்டத்தில் முதலில் அடைக்கப்பட வேண்டியவர் பொதுச்சொத்துக்களை திருடிய ஜெயலலிதாதான் என மக்களிடம் பிரச்சாரம் செய்து வருகிறது. கடந்த வாரத்தில் குண்ட சட்டத்திருத்தத்தின் அபாயத்தை விளக்கி, பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றையும் நடத்தியது
வழக்குரைஞர்கள் மத்தியில் தொடர்ந்து கையெழுத்து இயக்கமும் நடத்தி வருகிறது. நேற்று 25/11/2014 அன்று “குண்டர் சட்ட திருத்தத்தை திரும்ப பெறவேண்டும்” என தமிழக அரசை வலியுறுத்தி 25/11/2014 அன்று பகல் 1.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாக ஆவின் கேட் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது! சென்னை கிளை செயலர் வழக்குரைஞர் மில்ட்டன் தலைமை தாங்கினார். வழக்குரைஞர் பொற்கொடி சிறப்புரை ஆற்றினார். நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் நின்று உரையையும், முழக்கங்களையும் கவனித்தனர். விளக்க பிரசுரங்கங்களை கேட்டு வாங்கிப் படித்தனர்.
ஆர்ப்பாட்ட முழக்கங்கள் நீதிமன்றத்தில் எதிரொலித்தன!
போராடுவோம்! போராடுவொம்!
ஆள்தூக்கி கருப்புச் சட்டம்
குண்டர் தடுப்பு சட்ட திருத்தத்தை
திரும்பப் பெறும்வரை போராடுவோம்!
ஒரு கிரிமினல் வழக்கு போதும்
ஒரு வருடம் உளளே தள்ள!
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!
உரிமைக்காக போராடுகின்ற
ஜனநாயக, புரட்சிகர
சக்திகளை ஒடுக்கவே
சட்ட திருத்தம் என்பதை
புரிந்து கொள்வோம்! புரிந்து கொள்வோம்!
நீக்கியாச்சு! நீக்கியாச்சு!
தொழில்முறை குற்றவாளியைத்தான்
குண்டர் தடுப்பு சட்டத்தில்
கைது செய்ய வேண்டும் என்பதை
நீக்கியாச்சு நீக்கியாச்சு.
சைபர் கிரைம் குற்றத்திற்கும்
பாலியல் வன்முறை குற்றத்திற்கும்
இருக்கின்ற சட்டங்கள் போதாதா?
சட்டத்திருத்தத்தில் சேர்க்கனுமா?
உணர்ந்து கொள்வோம் உணர்ந்து கொள்வோம்
கருத்து உரிமையை மறுத்து
போராடுபவர்களை அச்சுறுத்தவே
சட்டத்திருத்தம் என்பதை
உணர்ந்து கொள்வோம்! உணர்ந்து கொள்வோம்!
கருத்து உரிமையை மறுத்து
போராடுபவர்களை அச்சுறுத்தவே
சட்டத்திருத்தம் என்பதை
உணர்ந்து கொள்வோம், உணர்ந்து கொள்வோம்.
பாயவில்லை! பாயவில்லை!
மக்கள் சொத்தை கொள்ளையடித்த
ஜெயா, சசி கும்பல் மீது
இயற்கை வளத்தை சூறையாடிய
வைகுண்டராஜன், பி.ஆர்.பி மீதும்
குண்டர் சட்டம் பாயவில்லை.
ஏவுகிறது! ஏவுகிறது!
காக்கிச்சட்டை வெறிநாய்கள்
தொழிற்சங்க தலைவர்கள் மீதும்
குண்டர் தடுப்பு சட்டத்தை
ஏவுகிறது ஏவுகிறது.
தவறே செய்யாத அப்பாவியை
குண்டாஸ் வழக்கில் கைது செய்தால்
குறைந்த பட்சம் 9 மாதம்
தெரிந்தே பொய்வழக்கு போடுகின்ற
போலீசுக்கு என்ன தண்டனை
நீதிமன்றமே பதில் சொல்!
கல்வி, வேலை, மருத்துவம்,
தண்ணீர், இருப்பிட உரிமைகளெல்லாம்
உழைத்து வாழும் மக்களுக்கு
கானல் நீராகி போகுது.
உரிமைக்காக போராடாமல்
அடிமைகளாய் வாழவே
போராடும் மக்களை ஒடுக்குவதற்கே
சட்ட திருத்தம், சட்ட திருத்தம்.
போராடுவோம்! போராடுவோம்!
ஆள்தூக்கி கருப்புச் சட்டம்
குண்டர் தடுப்பு சட்டத்தை
தூக்கியெறியப் போராடுவோம்!
தடுப்பு காவல் சட்டமே
தவறாக இருக்கும்போது
திருத்தம் எதற்கு வெங்காயம்.
தமிழக அரசே! தமிழக அரசே!
ரத்து செய்! ரத்து செய்!
உடனடியாக ரத்து செய்!
குண்டர் தடுப்பு சட்ட திருத்தத்தை
உடனடியாக ரத்து செய்!
தீவிரமடையும் வன்கொடுமைகள்: ஒய்யாரக் கொண்டையின் உள்ளே ஈறும் பேனும்
உசிலம்பட்டி தொடங்கி பெங்களூரு, அகமதாபாத், மஹாராஷ்டிரா என்று நாட்டின் குறுக்கும் நெடுக்குமாக கடந்த மூன்று மாதங்களுக்குள் அடுத்தடுத்து தாழ்த்தப்பட்டவர்களுக்கெதிராக ஆதிக்க சாதியினர் நிகழ்த்தியிருக்கும் வன்கொடுமைகளும் – கொலைகளும் வக்கிரம் நிறைந்தவை!
கள்ளர் சாதிவெறி பிடித்த பெற்றோர்களால் எரித்துக் கொல்லப்பட்ட விமலாதேவி.
உசிலம்பட்டி – போலிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கள்ளர் சாதியைச் சேர்ந்த விமலாதேவி, தமது தந்தையிடம் வாகன ஓட்டுநராகப் பணிபுரிந்த பள்ளர் சாதியைச் சேர்ந்த திலீப்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டு கேரளாவில் வாழ்ந்து வந்தார். வயதுக்கு வந்த இருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்துவந்த நிலையில், அவர்களை போலீசின் துணையோடு சட்டவிரோதமாகப் பிரித்தனர், கள்ளர் சாதிவெறியர்கள். உசிலம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் சரவணக்குமார் முன்னிலையில்தான் இந்த சாதிப் பஞ்சாயத்தே நடைபெற்றிருக்கிறது. அங்கே, பாரதிய பார்வர்டு பிளாக் தலைவர் முருகன்ஜி; உசிலை சட்டமன்ற உறுப்பினரும் பார்வர்டு பிளாக் தலைவருமான கதிரவன்; மார்க்சிஸ்டு கட்சியின் செல்லக்கண்ணு மற்றும் கள்ளர் சாதியைச் சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட வழக்குரைஞர்கள் தாலியைக் கழட்டி எறியுமாறு விமலாதேவியை மிரட்டியும் அந்தப் பெண் பணியவில்லை. நீதிமன்றத்தில் விமலாதேவி ஆஜர் படுத்தபட்டபோதும், “என்னை யாரும் கடத்தவில்லை. நான் விரும்பித்தான் திலீப்குமாருடன் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தேன்” என்று உறுதியாக அறிவித்தார். இருப்பினும் அவரைச் சட்டவிரோதமாக சாதிவெறிபிடித்த பெற்றோர்களிடமே ஒப்படைத்தது நீதிமன்றம்.
உடனே, விமலாதேவிக்கு கள்ளர் சாதியைச் சேர்ந்த சதிஷ்குமார் என்பவரோடுகட்டாயத் திருமணம் செய்துவைப்பதற்கான ஏற்பாடுகளை செய்தனர், அவரது பெற்றோர். அதனை உறுதியாக எதிர்த்து நின்ற விமலாதேவி, அக்-1 அன்று இரவு கள்ளர் சாதி சுடுகாட்டில் எரிந்து சாம்பலாகிக் கிடந்தார். விமலாதேவி தற்கொலை செய்துகொண்டதாகவும், பிணத்தை எரித்துவிட்டதாகவும் திமிராக அறிவித்தனர் கள்ளர் சாதிவெறியர்கள்.
“என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் கேசு போட்டுக்கோங்க. ஆனால், என் மகளைக் கொன்னதாகத்தான் கேசு இருக்கனும். அவன் (திலீப்குமார்) பொண்டாட்டினு இருக்கக்கூடாது” என்று கூறியிருக்கிறார், விமலாதேவியின் தந்தை. இக்கூற்று ஒன்றே போதும், சாதிவெறியர்களின் திமிரை நிரூபிப்பதற்கு!
கைக்கடிகாரம் கட்டி வந்ததற்காக ஆதிக்க சாதிவெறி பிடித்த சக மாணவர்களால் மணிக்கட்டுச் சிதைக்கப்பட்ட பி. ரமேஷ்.
மகாராஷ்டிரா மாநிலம் அஹமத்நகர் மாவட்டத்திலுள்ள காசர்வாடி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த சஞ்சய் ஜாதவ், அவரது மனைவி ஜெயசிறீ மற்றும் அவர்களது மகன் சுனில் ஆகியோர் ஆதிக்க சாதி வெறியர்களால் அக்-21 அன்று நள்ளிரவில் படுகொலை செய்யப்பட்டார்கள். கண்டதுண்டமாக வெட்டப்பட்டு நாலாபுறமும் வீசியெறியப்பட்ட அவர்களது சிதைந்த உடல் பாகங்கள் விவசாயக் கிணற்றிலும், விவசாய நிலத்திலும் அழுகிய நிலையில் இரண்டு நாட்களுக்குப் பின்னர் கண்டெடுக்கப்பட்டது.
கொல்லப்பட்ட சஞ்சய் ஜாதவிற்கு மேல்சாதியை சேர்ந்த திருமணமான பெண்ணொருவருடன் கள்ள உறவு இருந்ததாக குற்றம் சாட்டி இப்படுகொலையை நிகழ்த்தியிருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள். இந்த மாவட்டத்தில் கடந்த ஆண்டில் நிகழ்ந்துள்ள மூன்றாவது தாழ்த்தப்பட்டோர் படுகொலை இது.
பஞ்சாபின் லூதியானா மாவட்டம் ஜமால்பூர் கிராமம். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்களான ஹரிந்தர் சிங்கும் ஜதிந்தர் சிங்கும் தங்களுக்குச் சொந்தமான விளைநிலத்தை ஆக்கிரமித்து அனுபவித்து வரும் உள்ளூர் நிலப்பிரபுவுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வந்தனர். நிலப்பிரபுவின் ஆக்கிரமிப்பை மீறி துணிவுடன் தங்களது நிலத்தில் இறங்கி விவசாயம் செய்ய முற்பட்டதற்காக அச்சகோதரர்கள் இருவரும் செப்.27 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். தங்களுடனான மோதலில் இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவித்தது போலீசு. ஆனால் அந்த நிலப்பிரபு, தனது கைக்கூலியான அகாலி தளக் கட்சியின் பிரமுகரை வைத்து இந்தக் கொலையைச் செய்திருப்பதும், கொலைகாரர்களைக் காப்பாற்றும் பொருட்டு இதனை மோதல் கொலை என்று போலீசு சித்தரித்திருப்பதும் இப்போது அம்பலமாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளியில் 11-ம் வகுப்பு படிக்கும் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த மாணவன் பி.ரமேஷ். சற்றே விலை கூடிய கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்ததை ஆதிக்க சாதியைச் சேர்ந்த சக மாணவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. அவரிடமிருந்து அதனைப் பிடுங்கி எறிய முயன்றுள்ளனர். ரமேஷ் அதனை எதிர்த்திருக்கிறார். கடந்த அக்-3 அன்று திருத்தங்கல் இரயில் நிலையம் அருகே ரமேஷை வழிமறித்த அந்த சாதிவெறி பிடித்த மாணவர்கள் கடிகாரம் கட்டிய மணிக்கட்டை வெட்டிச் சிதைத்தனர்.
பெங்களூரு ருத்ரேஸ்வரர் கோயில் பார்ப்பனர்களால் தாக்கப்பட்ட சிறுவன் சந்தோஷ்
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகில் உள்ள கிராமம் செவ்வூர். இக்கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர் சென்று வேலை செய்வதால், எல்லோரிடமும் நிலம் இருக்கிறது. குடியிருப்புகளும் பெரும்பாலும் கான்கிரீட் வீடுகளாகியிருக்கின்றன. கல்வியிலும் பொருளாதாரத்திலும் ஓரளவு முன்னேறியிருக்கின்ற காரணத்தால், தப்படிப்பது, சாவுச்சேதி சொல்வது உள்ளிட்ட சாதி அடிப்படையிலான அடிமைத்தொழில்ளைச் செய்யமாட்டோம் என மறுத்திருக்கின்றனர். இதன் காரணமாக கடந்த மே மாதம் முதல் தாழ்த்தப்பட்ட குடும்பங்கள் அனைத்தையும் ஊரைவிட்டு ஒதுக்கி வைத்து சமூகப்புறக்கணிப்பை அறிவித்திருக்கிறார்கள் ஆதிக்க சாதிவெறியர்கள்.
குஜராத்தின் அகமதாபாத் மாவட்டம், பாய்லா கிராமத்தைச் சேர்ந்த மெகுல் காபிரா, வால்மீகி என்ற தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த இளைஞர். தன்னைப் போலவே தனது பிள்ளையும் துப்புரவுப் பணியாளராக அடிமைத் தொழில் செய்யக்கூடாது என்றெண்ணிய அவரது தந்தை, கடன்பட்டு மகனுக்கு ஆட்டோ ஒன்றை வாங்கித் தருகிறார். “குப்பை அள்ளும் சாதிக்காரன், ஆட்டோ ஓட்டுவதா?” என்று கருவிக் கொண்டிருந்த ஆதிக்க சாதிக் கும்பல் ஒன்று அவரது ஆட்டோவை அடித்து நொறுக்கியதோடு, அவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியது. கடந்த 2012-ம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்காக வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட போதிலும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
பெங்களூரை அடுத்த நெலமங்களாவில் உள்ள ஜெயநகரை சேர்ந்த செருப்பு தைக்கும் தொழிலாளியான ராஜ்குமாரின் எட்டு வயது மகன் சந்தோஷ், கடந்த அக்-19 அன்று தனது நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு, அருகிலுள்ள ருத்ரேஸ்வரா கோயிலுக்குள் தண்ணீர்க் குடிப்பதற்காகச் சென்றிருக்கிறான். அப்போது கோயிலில் பிரசாதம் வழங்கிக் கொண்டிருந்த கோயில் பூசாரி விஜயகுமாரிடம் தங்களுக்கும் பிரசாதம் வழங்குமாறு அச்சிறுவர்கள் கேட்டுள்ளனர். தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சிறுவர்கள் கோயிலுக்குள் நுழைந்துவிட்டதைக் கண்டு ஆத்திரமுற்ற பூசாரி விஜயகுமார், சிறுவர்கள் சந்தோஷ் மற்றும் அவனது நண்பர்களான சேத்தன், கௌதம் ஆகியோரை தடியால் தாக்கியிருக்கிறான். நண்பர்கள் ஓடிவிட, சந்தோஷை மட்டும் பிடித்துக்கொண்ட பூசாரி விஜயகுமார், அவனை வெயிலில் முட்டி போடவைத்து சித்திரவதை செய்திருப்பதோடு, அச்சிறுவனது மண்டை உடைந்து இரத்தம் கொட்டுமளவிற்கு தாக்கியிருக்கிறான்.
தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சாமானியனுக்கு மட்டுமல்ல; மாநில முதல்வர் என்ற அந்தஸ்தில் இருந்தாலும் கூட, ஆதிக்க சாதியினரின் வன்கொடுமைகளிலிருந்து தப்பித்து விடமுடியாது என்பதற்கு பொருத்தமான உதாரணம், பீகார் முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜிக்கு நேர்ந்த அவலம்.
ஆதிக்க சாதிவெறியர்களால் கொல்லப்பட்டு கண்டந்துண்டமாக வெட்டி வீசியெறியப்பட்ட சஞ்சய் ஜாதவ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களின் உடல் பாகங்கள்.
பீகார் முன்னாள் முதல்வரான தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த போலோ பஸ்வான் சாஸ்திரி நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜிதன் ராம் மஞ்ஜி, “கடந்த ஆக-15-ம் தேதியன்று அப்பகுதி மக்களின் வேண்டுகோளுக்கினங்க மதுபானி மாவட்டத்திலுள்ள பகவதி பரமேசுவரி கோயிலுக்குச் சென்றிருந்தேன். நான் அக்கோயிலுக்கு சென்று திரும்பிய பிறகு, தீட்டுக்கழிப்பு சடங்குகள் நடத்தி, கோயில் கழுவப்பட்டிருக்கிறது” என தனக்கு நேர்ந்த வன்கொடுமையைச் சுட்டிக்காட்டி, சாதிவெறியர்களின் வக்கிரத்தை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார்.
கடந்த ஓரிரு மாதங்களில் மட்டும் நாளேடுகளில் வெளிவந்துள்ள வன்கொடுமை பற்றிய செய்திகள் இவை. உசிலம்பட்டி சாதிவெறிக் கொலையாகட்டும், லூதியானாவில் நடத்தப்பட்டிருக்கும் கொலையாகட்டும் இரண்டிலுமே சாதிவெறியர்களும் போலீசும் ஓட்டுக் கட்சிகளும் கூட்டணியாகச் செயல்பட்டிருப்பதைப் பார்க்கிறோம். உசிலைக் கொலையில் நீதிமன்றமும் ஆதிக்க சாதிவெறிக்குத் துணை நின்றிருக்கிறது.
விருதுநகர் சம்பவம், மாணவர்கள் மத்தியில் வளர்ந்துவரும் சாதிவெறிக்கு அச்சுறுத்தும் சான்றாக இருக்கிறது. 50 ஆண்டுகளுக்கு முந்தைய தமிழகத்தைக் காட்டிலும் சமூகத்தின் பண்பாடு பின்னோக்கிச் செல்வதையும், தாழ்த்தப்பட்ட மக்கள் தம் வாழ்க்கையில் எட்டிப் பிடிக்கின்ற எளிய முன்னேற்றத்தைக்கூட சகித்துக் கொள்ள இயலாத அளவிற்கு ஆதிக்க சாதியினர் மத்தியில் சாதிவெறி கொழுந்து விட்டு எரிகிறது என்பதற்கு சிவகங்கை, அகமதாபாத் சம்பங்கள் எடுத்துக்காட்டாக இருக்கின்றன.
பெங்களூருவிலும் மகாராஷ்டிராவிலும் பீகாரிலும் நடைபெற்றுள்ள சம்பவங்கள் பிற்போக்கான காட்டுமிராண்டி நிலையிலேயே இந்தியச் சமூகத்தின் பல பகுதிகள் நீடிப்பதைக் காட்டுகின்றன. குறிப்பாக, தனக்கு நேர்ந்த தீண்டாமைக் கொடுமை பற்றி ஒரு மாநில முதலமைச்சரே வெளிப்படையாகத் தன் குமுறலை வெளியிட்ட பின்னரும், ஓட்டுக்கட்சிகளோ, ஊடகங்களோ அது பற்றிக் கண்டு கொள்ளவில்லை. அந்தக் குறிப்பிட்ட தொகுதியின் எம்.எல்.ஏ. வெளியிட்ட மறுப்புச் செய்தியோடு அப்பிரச்சினை அமுக்கப்பட்டுவிட்டது.
தருமபுரி இளவரசன் கொலைக்குப் பிறகு, தருமபுரி மாவட்டத்தில் ஒவ்வொரு வகுப்பறைக்குள்ளும் ஒரு சேரி உருவாக்கப்பட்டிருக்கிறது. வெறி பிடித்த வன்மத்தோடு தாழ்த்தப்பட்ட மக்கள் சமூக ரீதியாகப் பின்னோக்கித் தள்ளப்படுகின்றனர். நெல்லை மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு எதிராக வெளிப்படும் வன்முறை, இது ஒரு பொதுப்போக்காக வளர்ந்து வருவதைக் காட்டுகிறது.
நாடெங்கும் புதுப்புது வடிவத்திலான வன்கொடுமைகள் அதிகரித்து வருவதற்கும், கண்ணகி-முருகேசன் கொலை உள்ளிட்ட கொடிய வன்கொடுமைக் குற்றங்களில் கூட யாரும் தண்டிக்கப்படாத நிலையிலும், அச்சட்டதையே நீக்க வேண்டும் என்று ஆதிக்க சாதிவெறியர்கள் கூச்சலிடுவதற்கான அடிப்படை என்ன?
அதிகரித்து வரும் நகரமயமாக்கம், தவிர்க்கவியலாமல் காதல் திருமணங்களுக்கும் சாதிரீதியான ஒன்றுகலத்தலுக்கும் வழிவகுக்கிறது. தருமபுரி முதல் உசிலை வரையிலான பல நிகழ்வுகள் அதற்குச் சான்றாக உள்ளன. இந்த மாற்றத்தை கிராமப்புறத்தில் சாதியக் கலாச்சாரத்தில் ஊறியிருக்கும் பழமைவாதப் பெற்றோர்களால் ஒப்புக் கொள்ள முடிவதில்லை என்ற போதிலும், இந்த முரண்பாடு ஒரு கலவரமாக வெடிப்பதற்கு அப்பெற்றோர்கள் காரணமாக இருப்பதில்லை.
எல்லா சாதிகளிலும் தனியார்மய – தாராளமயக் கொள்கைகளின் விளைவாக உருவாகியிருக்கும் புதிய வகை தரகு வர்க்கங்களும், அரசியல் பிழைப்புவாதிகளும்தான் இந்த முரண்பாட்டைத் தீவிரப்படுத்துகிறார்கள். அது மட்டுமல்ல, சொல்லிக்கொள்ளப்படும் இந்த வளர்ச்சியாக இருக்கட்டும், கைபேசி முதல் இணையம் வரையிலான முன்னேற்றங்களாக இருக்கட்டும், இவை எதுவும் சமூகத்தில் ஒரு ஜனநாயகப் பண்பாட்டை உருவாக்கவில்லை; மாறாக, சீரழித்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளைப் போலவே, பெண்களுக்கும், சிறுமியர்க்கும் எதிரான பாலியல் குற்றங்களின் அதிகரிப்பும், திருட்டு, ஆதாயத்துக்கான கொலைகள், மோசடிகள், முதியோர் கொலைகள் உள்ளிட்ட குற்றங்களின் அதிகரிப்பும் இந்த வளர்ச்சிப்பாதை தோற்றுவித்துள்ள கொடிய விளைவுகள் என்பதைக் கணக்கில் கொண்டு, இவற்றுக்கெதிரான போராட்டத்தை நடத்தவேண்டியிருக்கிறது.