பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் குறித்து மக்களவையில் பதிலளித்த மைய அரசு, தற்போது பொதுத்துறை வங்கிகளின் வாராக் கடன் மதிப்பு 7.77 இலட்சம் கோடி ரூபாயாகும் எனத் தெரிவித்திருக்கிறது. இதில் 5.27 லட்சம் கோடி ரூபாயை மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் நிலுவையில் வைத்திருப்பதாகவும், கடந்த 2015-இல் இந்தத் தொகை 1.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது என்றும் அப்பதிலில் மைய அரசு ஒப்புக்கொண்டிருக்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் நான்கு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக் கடன் அதிகரித்திருப்பது ஒருபுறம் என்றால், இன்னொருபுறத்திலோ கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆறு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான வாராக் கடன்களை இந்திய வங்கிகள் தள்ளுபடி செய்துள்ளன. எனில், கார்ப்பரேட் முதலாளிகள் கடன் வாங்கி ஏப்பம் விட்டுள்ள பொதுப்பணத்தின் மதிப்பு என்ன என்பதை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்.

விவசாயக் கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மகாராஷ்டிராவில் நடைபெற்ற விவசாயிகளின் பேரணி

இந்நிலையில் நரேந்திர மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலைவர் பிபேக் தெபராய் வாராக் கடன் தொகையில் மேலும் மூன்று லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு தள்ளுபடி செய்ய வேண்டும் எனக் கோரியிருக்கிறார். இந்தத் தள்ளுபடியை அவர்கள் விவசாயிகளுக்கோ, கல்விக்கடன் வாங்கிய ஏழை மாணவர்களுக்கோ தரப்போவதில்லை. கார்ப்பரேட் முதலாளிகள்தான் இந்தச் சலுகையையும் அனுபவிக்கப் போகிறவர்கள்.

விவசாயிகள் கடன் தள்ளுபடி கேட்டால் வங்கிகள் திவாலாகிவிடும் எனப் பதறித் துடிப்பவர்கள், கார்ப்பரேட் முதலாளிகள் விசயத்தில் இந்த செண்டிமென்டெல்லாம் பார்ப்பதில்லை. பொதுத்துறை வங்கிகளை அழித்தாவது கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்தைக் கைதூக்கிவிடத் தயாராகவே இருக்கிறார்கள் அவர்கள்.

பொதுத்துறை வங்கிகளை மீட்டெடுக்க 2.11 இலட்சம் கோடி ரூபாய் அளவிற்கு அரசு மறுமுதலீடு செய்யப்போவதாக மோடி அரசு பட்ஜெட்டில் அறிவித்திருக்கிறது. வாராக் கடனால் திவால் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள பொதுத்துறை வங்கிகளைத் தனியார்மயப்படுத்துவதற்கு இந்த முதலீடு அவசியம் என நியாயப்படுத்தியிருக்கிறார், தெபராய்.

வங்கிப் பணத்தை ஏப்பம் விட்ட கார்ப்பரேட் முதலாளி வர்க்கத்திடமிருந்து அந்தப் பணத்தை மீட்பதற்குத் தயாராக இல்லாத மோடி அரசு, பொதுத்துறை வங்கிகளில் மறுமுதலீடு செய்து, பிறகு அவ்வங்கிகளைத் தனியார் முதலாளிகளிடம் கைமாற்றிவிடத் திட்டம் தீட்டுவது, வல்லுறவு குற்றவாளியைத் தண்டிக்காமல், அவனுக்கே பாதிக்கப்பட்ட பெண்ணைக் கட்டி வைக்கச் சொல்லும் சாதிப் பஞ்சாயத்து தீர்ப்புக்குச் சமமானது. ஆனால், ஆளுங்கும்பலோ இந்த அயோக்கியத்தனத்தை வங்கி சீர்திருத்தம் எனப் பெயரிட்டு அழைக்கிறது. புரோக்கர்களை பி.ஆர்.ஓ.க்கள் என நயமாக அழைப்பதில்லையா, அதுபோலத்தான் இதுவும்!

புதிய ஜனநாயகம், ஏப்ரல் 2018

மின்னூல்:


PayUMoney

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.


Paypal

$0.5




Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com