ந்தியா டுடே இதழில் இராணுவம், பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களைக் கவனித்துவருபவர் சந்தீப் உன்னிதன். பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் வி.கே. சரஸ்வத்தை சந்தீப் உன்னிதன் ஒரு பேட்டி எடுத்திருந்தார். அந்தப் பேட்டி 2012-ம் ஆண்டு ஏப்ரல் 27-ம் தேதி இந்தியா டுடே இதழில் வெளியாகியிருந்தது. அந்தப் பேட்டியிலிருந்து:

பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (டிஆர்டிஓ) தலைவர் வி.கே. சரஸ்வத்.

கேள்வி : செயற்கைக் கோள்களை விண்வெளியிலேயே அழிக்கும் சக்தி DRDOவுக்கு உள்ளதா?

வி.கே.எஸ். : இந்தியாவில் சாட்டிலைட் எதிர்ப்பு அமைப்பிற்கான எல்லா பாகங்களும் இந்தியாவிடம் தயாராக உள்ளன. விண்வெளியை ஆயுதமயமாக்க நாங்கள் விரும்பவில்லை. ஆனால், எல்லாம் தயாராக இருக்க வேண்டுமென விரும்புகிறோம். இவையெல்லாம் தேவைப்படும் நேரம் வரலாம். ஆகவே, ஒரு சாட்டிலைட் எதிர்ப்பு அமைப்பிற்கான எல்லாம் தயாராக இருக்கிறது. சிறிய மாறுதல்களைச் செய்ய வேண்டும். ஆனால், அதனை எலக்ட்ரானிக்கலாக செய்துவிடலாம்.

ஆனால், ஒரு சாட்டிலைட்டை மோதி, நொறுக்கி சோதனை செய்து பார்க்க மாட்டோம். ஏனென்றால், விண்வெளியில் துகள்கள் உருவாகி, பிற சாட்டிலைட்களைச் சேதப்படுத்தும்.

கேள்வி : இந்த சாட்டிலைட் எதிர்ப்புத் திறனை எப்படி உருவாக்கினீர்கள்?

வி.கே.எஸ். : சாட்டிலைட்களைக் குறுக்கிட சில அடிப்படையான அம்சங்கள் தேவை. முதலாவதாக, விண்வெளியில் சுற்றும் சாட்டிலைட்டின் பாதையைக் கணிக்கும் திறன். பிறகு, அவற்றை நோக்கி ஏவுகணைகளை அனுப்பி, அவற்றை அழிக்கும் திறன் வேண்டும். நம்மிடம் Long Range Tracking Radar (LRTR) இருக்கிறது. அதை 600 கி.மீ. தாண்டிச் சென்று தாக்கும் கண்டம் தாண்டும் ஏவுகணைகளில் பயன்படுத்துகிறோம். அதன் திறனை 1400 கி.மீ-ஆக உயர்த்தினால், சாட்டிலைட்களை கணிக்க முடியும்.

உண்மையில், சாட்டிலைட்களைத் தாக்குவதைவிட, கண்டம்தாண்டும் ஏவுகணைகளைத் தாக்குவதுதான் கடினம். சாட்டிலைட்டுகள், அவற்றுக்கென வகுக்கப்பட்ட பாதையில்தான் செல்கின்றன.

கண்டம் தாண்டும் ஏவுகணையைப் பொருத்தவரை ஒரு சதுர மீட்டரில் 0.1 அளவுள்ள ஏவுகணையை, கண்டுபிடித்து மறிக்கிறோம். சாட்டிலைட் அதைப் போல பத்து மடங்கு பெரிது. ஒரு மீட்டர் அளவுக்கு இருக்கும்.

படிக்க:
இந்திய சாதி ஒடுக்குமுறை வரலாற்றை பாடநூல்களிலிருந்து நீக்கும் மோடி அரசு !
கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும் | காணொளி

கண்டம் தாண்டும் ஏவுகணைக்காகத் தயாரிக்கப்பட்ட தொலைத் தொடர்பு அமைப்பும் நம்மிடம் இருக்கிறது. அக்னி – 5க்காக தயாரிக்கப்பட்ட முதல் ஸ்டேஜ் பூஸ்டர், ஒரு ஏவுகணையை 600 கி.மீ. ஏவும் திறனுடையது. கண்டம் தாண்டும் ஏவுகணையை மோதி அழிக்கும் வாகனமும் (kill vehicle) நம்மிடம் உள்ளது.

சாட்டிலைட்டைத் தாக்கும் திறன் இந்தியாவுக்கு உள்ளதாக சரஸ்வத் 2012-ல் சொல்கிறார். ஏன் அதனைச் சோதித்துப் பார்க்கவில்லையென்றும் சொல்கிறார். அவரது விரிவான பேட்டிக்கான இணைப்பு சுட்டி. india today

நன்றி : முகநூலில் Muralidharan Kasi Viswanathan