நீட் நுழைவுத் தேர்வு மூலம் சாதாரண ஏழைகளின் பிள்ளைகளை மருத்துவக் கல்வியில் நுழையவிடாமல் தடுக்கும் வேலையைச் செய்த மோடி அரசு, தற்போது மருத்துவ உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்ட இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் வாரிசுகள் நுழைய முடியாதபடி இட ஒதுக்கீட்டை ரத்து செய்துள்ளது.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டை மறுக்கும் அதே வேளையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஒதுக்கீட்டை மட்டும் அனுமதிக்கிறது. இது அப்பட்டமாக உயர்சாதியைச் சேர்ந்தவர்கள் மட்டும் மருத்துவ உயர்கல்வியைப் படிக்கச் செய்வதறகான சதியே என்பதை அம்பலப்படுத்தி பேசுகிறார் மருத்துவர் எழிலன்.
பாருங்கள் ! நண்பர்களுடன் பகிருங்கள் !
வினவு களச் செய்தியாளர்