30-01-2022
பள்ளி மாணவி லாவண்யா தற்கொலை : தமிழ்நாட்டில்  மதக்கலவரம் செய்ய முயலும்
பாஜக குண்டர்களையும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையையும் கைது செய்!
பிஜேபி, ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை தடைசெய்!
பத்திரிகை செய்தி
ஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளியைச் சேர்ந்த லாவண்யா தற்கொலை செய்து கொண்டார். இறப்பதற்கு முன்பு  நீதிபதியிடம் அவர் கொடுத்த மரண வாக்குமூலத்தில் தன்னை மதமாற்றக் கூறி கட்டாயப்படுத்தும் நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்நிலையில் அப்பள்ளி விடுதியின் பெண் காவலரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்மாணவி சித்திகொடுமைக்கு அஞ்சிதான் தற்கொலை செய்துகொண்டார் என்பது போன்ற தகவல்கள் வெளிவருகின்றன. எனினும் விசாரணையின் முடிவில்தான் உண்மை வெளிவரும்.
ஆனால், லாவண்யாவின் சித்தி மற்றும் அப்பாவை தூண்டிவிட்டு ஆர்.எஸ்.எஸ் – பிஜேபி, அப்பள்ளி நிர்வாகம் மதமாற்றத்திற்கு கட்டாயப்படுத்தியதால்தான் அம்மாணவி தற்கொலை செய்துகொண்டார் என்று மதக்கலவரத்தை தூண்டி மெல்ல மெல்ல நாடுமுழுதும் மதமாற்ற தடை சட்டத்தை கொண்டுவந்து சிறுபான்மை மக்களை வதைக்க சதித் திட்டம் தீட்டிவருகிறது.
தமிழ்நாடு முழுவதும் ஆங்காங்கே ஆர்ப்பாட்டத்தை நடத்தி அப்பள்ளி நிர்வாகிகளை கைது செய்யக்கோரியும், கிருத்துவப் பள்ளிகளை மூட கோரிக்கை வைத்து திமுக அரசு ஓர் இந்துவிரோத அரசு என்று பேசிவருகிறார்கள் பிஜேபி –  ஆர்.எஸ்.எஸ். காரர்கள்.
படிக்க :
அரியலூர் மாணவி தற்கொலை : மதக்கலவரம் நடத்தத் துடிக்கும் பாஜக || காணொலி
மக்கள் அதிகாரம் முதலாவது மாநில மாநாடு வெற்றிகரமாக நிறைவேறியது !
மேலும், இந்த வழக்கை சிபிஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருப்பதுடன் உயர் நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அப்பள்ளி நிர்வாகம் மதமாற்றத்தில் ஈடுபடுகிறதென்று பொய்யான புகார் கொடுக்க திருக்காட்டுப்பள்ளி மைக்கேல் பட்டி மக்கள் கட்டாயப்படுத்தப் படுகிறார்கள். அப்பகுதி மக்கள்” இந்து – கிருத்துவ மக்களாகிய தாங்கள் ஒற்றுமையாக வாழ்வதாகவும் அதை சீர்குலைக்க பிஜேபி-யினர் முயற்சி செய்வதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று  போலீசில் புகார் தெரிவித்துள்ளனர்.
ஃபாக்ஸ்கான் ஆலை விவகாரத்தில் வதந்தி பரப்பினார்கள் என்று கூறி கைது செய்த திமுக அரசு, இங்கே வதந்தியை பரப்பி மதக்கலவரத்தை தூண்ட முயலும் பிஜேபியினர் மீது நடவடிக்கை எடுக்க அஞ்சுகிறது.
ஆக, காவி பாசிசம் ஒரு சிறு துரும்பை கூட பயன்படுத்தி தன்னை நிலைநாட்ட முயன்றுவரும் நிலையில் திமுக அரசு பாசிச சக்திகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து மெல்ல மெல்ல பாசிசம் அரங்கேறவே வழிவகுத்து வருகிறது என்பதைத்தான் நாம் கண்டுவருகிறோம்.
திமுகவையோ, இந்த அரசு கட்டமைப்பையோ நம்பி காவி – கார்ப்பரேட் பாசிசத்தை வீழ்த்த முடியாது என்பதுதான் நாம் சமீப காலமாக தமிழகத்தில் நடைபெறும் கொட்டடி கொலைகள் மற்றும், கொரோனா கட்டுபாடு என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது போலிசின் அடக்குமுறை முதலியவை நமக்கு உணர்த்துகின்றன.
ஆகவே, டெல்லி விவசாயிகள் போல் வீதியில் இறங்கி போராடுவதன் மூலம்தான் பாசிசத்தை எதிர்த்து நிற்க முடியும், பாசிச நடவடிக்கைகளை முறியடிக்கவும் முடியும் என்பதை உணர்ந்து ஜனநாயக சக்திகளும் பொதுமக்களும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கிறது.
தோழமையுடன்

தோழர் வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க