05.10.2024

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர் போராட்டம் வெல்லட்டடும்!

பத்திரிகை செய்தி

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் கல்விக் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வேண்டும், பட்டமளிப்பு விழாவை உடனடியாக நடத்த வேண்டும், உள்ளூர் மாணவர்களுக்கு அனைத்து பாடப்பிரிவுகளிலும் 25 சதவீத இட ஒதுக்கீடு, மாணவர் பேரவை தேர்தலை நடத்த வேண்டும், தாமதமாகக் கட்டப்படும் கல்விக் கட்டணத்திற்கு வசூலிக்கப்பட்ட அபராதத்தை மாணவர்களுக்குத் திருப்பி வழங்க வேண்டும், மாணவர்களின் அடிப்படை பிரச்சினைகளை உடனடியாக சரி செய்ய வேண்டும் உள்ளிட்ட 20 கோரிக்கைகளை முன்வைத்து இந்திய மாணவர் சங்கம் தலைமையில் பல்கலைக்கழக மாணவர்கள் அக்டோபர் 1 ஆம் தேதியன்று துணைவேந்தர் அலுவலகத்தை நோக்கி பேரணியாகச் சென்று, அலுவலகத்தின் முன்பு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் போராட்டத்தை எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக வரவேற்கிறோம்.

கல்வியை முழுவதுமாக கார்ப்பரேட்மயமாக்கவும் காவி மயமாக்கவும் தீவிரமாக வேலைகள் நடந்து கொண்டிருக்கும் இத்தகைய தருணங்களில், மாணவர்களுக்குப் பெயரளவிற்கு இருக்கும் உரிமைகளைக் கூட ஒழித்துக்கட்டப்பட்டு வருகிறது. இதற்கு எதிராக மாணவர்கள் இயக்கங்களாகவும் சங்கங்களாகவும் ஒருங்கிணைந்து போராட வேண்டிய தேவையுள்ளது. போராடக்கூடிய பல்வேறு மாணவர் அமைப்புகளும் இணைந்து நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உரிமைகளை நிலைநாட்ட நடைபெறும் போராட்டம் வெல்லட்டும்!

மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
தமிழ்நாடு.
9444836642.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram



விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க