தமிழ்நாட்டில் புறக்கணிக்கப்பட்ட பல கிராமங்களில் ஒன்றுதான் சித்தேரிபட்டு. மூவாயிரத்துக்கும் மேற்பட்ட மக்களும் 1200 வாக்காளர்கள் கொண்ட கிராமத்தில் அடிப்படை வசதிகள் ஏதும் கிடையாது. காரணை ஊராட்சியில் உள்ளடங்கிய இக்கிராமத்திற்கு எப்பொழுதும் நிதி ஒதுக்குவதே கிடையாது. எத்தனை முறை மன்றாடுவது? எத்தனை முறை மனு கொடுப்பது ?
குடிநீர் இல்லை, நீர் ஆதரமாக விளங்கும் குளமும் இல்லை, ஏரி இருந்தும் தூர்வாரப்படுவதே இல்லை. இதனால் உப்பு நீரை குடிக்க வேண்டிய கட்டத்துக்கு மக்கள் தள்ளப்படுகிறார்கள் அதனால் பல்வேறு நாள்பட்ட நோய்களுக்கு ஆளாகின்றனர்.
கழிவுநீர் கால்வாய், நூலகம், விளையாட்டு மைதானம் என எதுவுமில்லை. தெருவிளக்கு இருந்தாலும் முறையாக பராமரிக்கப் படுவதில்லை.
100 நாள் வேலையும் முறையாக கொடுப்பதில்லை. செய்த வேலைக்கும் முழுமையான கூலி கொடுப்பது இல்லை.
கடந்த 5 ஆண்டுகளாக அரசின் தொகுப்பு வீடுகளுக்கு நிதி ஒதுக்கப்படுவது கிடையாது.
காரனை ஊராட்சிக்கு ஒதுக்கும் நிதியோ, திட்டங்களோ குறைந்தபட்சம் கூட மக்களுக்கு வந்து சேருவதில்லை .
இந்த ஆண்டு காரனை ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்ட SC/ST சிறப்பு நிதி 30 லட்சம் ரூபாயில் ஒரு பைசாக்கூட சித்தேரிப்பட்டு கிராமத்திற்கு ஒதுக்கவில்லை.
ஆனாலும் இதற்கு பேர் கிராமம். இதற்கு பிடிஓ இருக்கிறார். மக்கள் முறையாக வரி கட்ட வேண்டும். மின்சார கட்டணம் கட்ட வேண்டும். அரசின் அனைத்து வரிகளையும் கட்ட வேண்டும். ஆனால் அரசு மக்களுக்கு எதையும் செய்யாது.
கம்பியூட்டர் டேட்டா லிஸ்டில் சித்தேரிப்பட்டு கிராமமே இல்லை என்று பிடிஓ சொல்கிறார். இத்தனை ஆண்டு காலமும் ஒரு கிராமமே தமிழக அரசின் உள்ளாட்சி டேட்டா லிஸ்டில் பதிவு செய்யப்படவில்லை என்றால் இதற்கு யார் காரணம்? கலெக்டர், BDO, செயலரின் வேலைதான் என்ன? எதற்காக சம்பளம் வாங்குகிறார்கள்?
ஒரு கிராமத்தின் பெயரை உள்ளாட்சி டேட்டா லிஸ்டில் பதிவுசெய்யாத தொடர்புடைய அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். பெரிய ஊருக்குத்தான் நிதி ஒதுக்க முடியும் சிறிய ஊருக்கு நிதி ஒதுக்க முடியாது என்று கூறும் அநியாயத்தை இன்னும் எத்தனை நாட்கள் பொறுத்துக் கொண்டிருக்க வேண்டும்?
ஓட்டு கேட்க வருபவர்களும் வரிகேட்க வருபவர்களும் நமக்காக ஒருபோதும் பேசப்போவதில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் தீண்டத்தகாத கிராமமாக ஒதுக்கப்பட்டிருக்கும் சித்தேரிப்பட்டு மக்கள் இந்த அநியாயத்திற்கு முடிவு கட்ட வேண்டும். ஒன்றிணைய வேண்டும்.
தமிழக அரசே!
சித்தேரி பட்டு கிராமத்தை ஊராட்சியாக அறிவித்திடு!
தமிழகத்தின் உள்ளாட்சி டேட்டா லிஸ்ட்டில் இதுவரை இணைக்காத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடு !
***
கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் !
விழுப்புரம் – சித்தேரிப்பட்டு கிராமத்தில் முறையான குடிநீர் இல்லை, நடந்து செல்ல ரோடு இல்லை, நூலகம் , விளையாட்டு மைதானம், முறையான தெரு விளக்கு இல்லை, அரசின் தொகுப்பு வீடு ஐந்து ஆண்டுகள் இல்லை, SC/ST சிறப்பு நிதி 80 லட்சத்தில் ஒரு பைசா கூட இல்லை போன்ற கோரிக்கையை உள்ளடக்கி மக்கள் அதிகாரம் தலைமையில் கிராம மக்களை ஒருங்கிணைத்து. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது அதில் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த கோரிக்கைகளை உடனே விரைந்து போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற வேண்டும் என்று முன்வைக்கப்பட்டது.
நிறைவேறவில்லை என்றால் மாவட்ட நிர்வாகம் முற்றுகையிடப்படும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
This slideshow requires JavaScript.
( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )
தகவல் : மக்கள் அதிகாரம், விழுப்புரம் மண்டலம். தொடர்புக்கு : 94865 97801.
ஸ்டெர்லைட் வழக்கு : மக்கள் போராட்டத்தின் விளைவே இந்த தீர்ப்பு ! | மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ்
இது போன்ற தீர்ப்பை இதுவரை பார்த்ததில்லை. அவர்கள் கண்டிப்பாக உச்சநீதிமன்றத்திற்கு செல்வார்கள். ஆனால், உச்சநீதிமன்றத்திற்கு இது கடுமையாக வழக்காகத்தான் இருக்கும்.
இதற்கு முன் 2013-ல் வழக்கு நடத்திய போது உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலைக்கு நூறுகோடி ரூபாய் அபராதம் விதித்தது. காற்று, நிலம், நீர் இவைகள் எல்லாம் மாசுப்பட்டிருக்கிறது, மக்கள் அந்த ஆலையால் படும் துயரம், உயிர் இழப்பு, நோய்கள் ஆகிறவற்றை அந்த பணத்தால் மட்டும் ஈடுசெய்துவிட முடியாது.
ஏற்கனவே கோவா-வில் இந்த ஸ்டெர்லைட் ஆலை வைக்கப்பட்ட போது, அங்கு காற்று, நிலம், நீர் மாசுப்பட்டிருக்கிறது. மக்கள் ஆலையில் பாய்லர்களை எல்லாம் உடைத்து மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அங்கு தாக்குப்பிடிக்க முடியாமல்தான் தமிழ்நாட்டிற்கு வந்துள்ளது. நாமும், கோவா மக்களை போல் போராடினோம், ஆனால் ஆயுதங்களுடன் செல்லாமல் விட்டுவிட்டோம்.
2013 உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு பிறகும், ஸ்டெர்லைட் ஆலை சுற்றுசூழல் பற்றிய எந்த பாதுகாப்பு நடவடிக்கையும் பின்பற்றவில்லை. அரசு அதிகாரிகள், மாசுக்கட்டுப்பாடு வாரியம் அனைத்தும் இவற்றை கண்டுகொள்ளாமல் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது.
மக்கள் போராட்டத்தில் இருந்துதான் இந்த தீர்ப்பு வந்திருக்கிறது. இந்த ஆலை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவைவிட்டே மூட்டை முடிச்சிகளை கட்டி அனுப்பப்பட வேண்டும் என்று பல்வேறு கருத்துக்களை இந்த காணொளியில் மூத்த வழக்கறிஞர் காலின் கன்சால்வஸ் விளக்குகிறார்.
அண்மையில் படித்த இரண்டு செய்திகளை முதலில் சொல்லியாக வேண்டும். அமெரிக்கா, இந்தியா போன்ற வளரும் நாடுகள் வேதி உரங்களை அதிகமாகப் பயன்படுத்துவது, ‘உலகில் மாசுப் பெருக்கத்துக்கான பெருங்காரணங்களில் ஒன்றாகிவிட்டது’ என்று குற்றம் சாட்டியிருந்தது. மற்றொருபுறத்தில், தமிழக வேளாண்துறை உயர் அதிகாரி ஒருவர், ‘இரண்டாவது பசுமைப்புரட்சிக்கு நமது நிலங்கள் ஏற்புடையதாக இல்லை; இயற்கை உரங்களைக் கொண்டு நிலத்தை மீண்டும் நாம் செம்மையாக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார். 1960-களின் தொடக்கப் பகுதியில் நான் சிறுவனாக இருந்தபோது நெடுஞ்சாலை ஓரத்து நன்செய் வயல்களில் ‘நவீன உர நிரூபண வயல்’ என்றெழுதி நடப்பட்டிருந்த விளம்பரப் பலகைகள் நினைவுக்கு வந்தன. உயிரியல் தெழில்நுட்பத்தை எதிர்த்து வேளாண் அறிஞர் வந்தனா சிவா அண்மையில் எழுதிய புத்தகமும் என் நினைவுக்கு வந்தது.
நாற்பதாண்டுக் காலத்தில் இயற்கை நம்மைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கிவிட்டது என்றுதானே இதற்குப் பொருள்? ‘உள்ளது சிறத்தல்’ எனும் உயிரியல் கோட்பாட்டில் ‘காலம்’ பெற்றுள்ள இடத்தை நாம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டோமோ? ‘இயற்கையோடியைந்த இன்பம் இன்பத்தோடியைந்த வாழ்வு’ என்று பாடிய சுந்தரரும் திரு.வி.க.வும் இப்போது பெரியாரைப் போல நமது மறுவாசிப்புக்கு உரியவர்களாகி விட்டார்கள்.
பயிர்த்துறையில் நடந்த மாற்றங்கள், பண்பாட்டுத் துறையிலும் நடந்தேறியுள்ளன. வேதி உரங்கள் ‘விஞ்ஞானப் போர்வையில் உருவாக்கிய எதிர்விளைவுகளை, பண்பாட்டுத் தளத்தில் தகவல் தொடர்புச் சாதனங்கள், பன்னாட்டு மூலதன உதவியுடன் உருவாக்கிவிட்டன. 14 செ.மீ. திரைப்பெட்டி, கிரிக்கெட் என்னும் இரண்டு நோய்கள் நம்முடைய ‘கொழுந்து’களைத் தாக்கத் தொடங்கியுள்ளன. “வேரிலே வெக்கை தட்டினால் கொழுந்து முற்பட வாடுமாறுபோல” என்பது வைணவ உரை நயம். வேர்களைப் பற்றிய ஞானமில்லாமல், கல்வியில்லாமல், கொழுந்துகளைப் பற்றிக் கவலைப்பட்டு என்ன பயன்!’
… வேரைத் தாங்கும் மண்ணை இழந்த ஆற்றங்கரை அரச மரத்துக்குக்கூட மறுவாழ்வு உண்டு. நோய் தாக்கிய வேர்களுக்கு மருந்து இல்லாமல் வாழ்வில்லை. மண் எப்பொழுதும் வளமானதுதான்.
கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தான் என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும், என் தேடல் மனிதனை நோக்கியே. (நூலின் முன்னுரையிலிருந்து, பக்கம் 9,10)
… ‘அறியப்படாத தமிழகம்’ – உண்மையில் இது நாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் – நுவல்கின்றவற்றின் சில மைய இழைகளை இனங்காண முயல்வோம். இடையறாத நெடிய வரலாற்றையுடைய ஒரு சமூகத்தின் மீது மின்னல் வெட்டுகளாகப் பளீரென ஒளிபாய்ச்சுவதே நூலின் அமைதி. விரிவான ஆராய்ச்சி என்ற ஒளிவெள்ளத்திலே முழுக் காட்சியும் விளக்கம் பெறவேண்டும் என்ற பொருளும் இந்த உருவகத்திலிருந்து பெறப்படும்.
‘தமிழ்’ என்பது முதல் கட்டுரையாக அமைந்திருப்பது தற்செயலானதன்று. தமிழ்ப் பண்பாட்டின் உருவாக்கம் பற்றிய புரிதல் நூல் நெடுகவும் இழையோடுகின்றது. புறச்சமயங்களாகத் திரித்துக் காட்டப்படும் சமண, பௌத்த மதங்கள் தமிழ்ப் பண்பாட்டைச் சமைத்ததில் ஆற்றிய பங்கு அழுத்தமாகக் காட்டப்பட்டுள்ளது. சைவ, வைணவம் பற்றிப் பேசும் அதே வேளையில், சிறு தெய்வங்கள் பற்றியும், இப்பெருஞ் சமயங்கள் நாட்டார் சமயக் கூறுகளை எவ்வாறு கைவயப்படுத்திக்கொண்டன என்பதும் தெளிவுபடுத்தப்படுகின்றன. தொ.பரமசிவன் கட்டமைக்கும் தமிழ்ப் பண்பாட்டில் இசுலாமும் கிறித்தவமும் பிரிக்க முடியாத வகையிலேயே பிணைந்துள்ளன. சாதியைச் சமூகத்தின் முக்கிய அலகாக இனங்காணும் அதே வேளையில், சாதிக் கட்டுமானமும் கருத்தியலும், ஒடுக்குமுறைக்கும் சுரண்டலுக்கும் அடிப்படை என்ற ஓர்மையும் ஐயத்திற்கிடமில்லாமல் வெளிப்படுகிறது. ‘கீழோர்’ மரபுகளைக் கணக்கிலெடுக்காமல் தமிழ்ப் பண்பாடு இல்லை என்பதும் உறுதிப்படுத்தப்படுகின்றது. மொத்தத்தில், அடிப்படை வாதங்களுக்கு எதிரான ஜனநாயகக் கூறுகளோடுதான் தொ.ப. முன்வைக்கும் தமிழ்ப் பண்பாடு விளங்குகின்றது. நுவலப்படுகின்ற பொருள்களின் சமகாலப் பொருத்தப்பாட்டையும் ஆங்காங்கே சுட்டிக்காட்ட, தொ.ப. தவறவில்லை.
பொருண்மைப் பண்பாடு (material culture) எனப்படும் துறையில் தமிழியல் ஆய்வாளர்களின் கவனம் போதுமான அளவு குவியவில்லை. மிக அடிப்படை நிலையில், தொல்லியலாளர் மட்டுமே அக்கறை கொள்வதாக அமைந்துவிட்ட இத்துறையில் உரல், உலக்கை, உணவு, உடை என்று முதற்படிகளை இந்நூல் எடுத்துவைத்துள்ளது. தாம் புழங்கும் சமூகம் பற்றி வாயில்லாப் பொருள்களுக்குச் சொல்வதற்கு நிறைய உண்டு. தொ.ப. அவற்றுக்குச் செவிமடுக்கத் தொடங்கினார்.
எடுத்துக்கொண்ட ஆய்வுப் பொருள் என்பதோடன்றி, அதன் மீது எய்யப்படும் ஆய்வுக் கேள்விகள், பயன்படுத்தப்படும் சான்றுகள் ஆகியவற்றிலும் தமிழியல் ஆய்வுக்கான புதிய களங்களை இந்நூல் காட்டுவதாகவே நான் கொள்கின்றேன். (ஆ.இரா.வேங்கடாசலபதியின் அணிந்துரையிலிருந்து, பக்கம் 15,16)
நூல் : அறியப்படாத தமிழகம் ஆசிரியர் : தொ.பரமசிவன்
வெளியீடு : காலச்சுவடு, 669, கே.பி. சாலை, நாகர்கோவில் 629 001.
தற்போது ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக தீர்ப்பு வந்திருக்கிறது. அடுத்து அவர்கள் உச்சநீதிமன்றம் சென்று வழக்காடுவார்கள். ஏற்கனவே உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் வழக்கில் அபராதம் விதித்து ஆலைய திறக்க அனுமதித்தது அனைவரும் அறிந்ததே! மக்கள் மன்றத்தின் தீர்ப்பு என்ன என்பதை பார்க்க வேண்டும்.
1992 – ல் மகாராஸ்டிரம் மாநிலம் ரத்தினகிரியில் 200 -ஏக்டேர் நிலம் ஸ்டெர்லைட் ஆலை கட்ட மாநில அரசு அனுமதி அளித்தது. கட்டிடமும் கட்டப்பட்டு விட்டது. ஆனால் ஊர் மக்கள் ஸ்டெர்லைட் ஆலை கட்டப்படுவதை கடுமையாக எதிர்த்தார்கள். 20ஆயிரம் பேர் அந்த கட்டிடத்தை இடித்து நொறுக்கினார்கள், அம்மக்கள் மீது அரசு எந்த தாக்குதலும் துப்பாக்கிச்சூடும் நடத்தவில்லை. ஆனால், தூத்துக்குடியில் அமைதியான வழியில் மனு அளிக்க சென்ற மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை சூற்றுசூழல் மாசு படுத்துகிறது என்பதற்கு பல்வேறு ஆதாரங்கள் உள்ளது. விஷவாயு தாக்கி பல்வேறு மரணங்கள் நிகழ்ந்துள்ளது. ஆனால், அரசு ஆலைக்கு ஆதரவாக மட்டுமே செயல்படுகிறது. பொருளாதாரத்தை விட சுற்றுசூழல் பாதுகாப்புதான் மிகவும் அவசியமானது. எனவே தூத்துக்குடி மக்களுக்காக நாம் தொடர்ந்து போராட வேண்டும். 144 தடை உத்தரவு என்பது மக்களுக்கான சொத்துக்களை பாதுகாக்கத்தான் அரசால் பயன்படுத்தப்படும், ஆனால், இங்கோ ஸ்டெர்லைட் ஆலையை பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகிறது.
தற்போது வந்த தீர்ப்புக்கு அடுத்து என்ன? எது நமக்கு முழுவெற்றியாக அமையும்? என்பதை பற்றி இந்த காணொளியில் விளக்குகிறார் மேனாள் நீதிபதி ஹரிபரந்தாமன். பாருங்கள் ! பகிருங்கள் !!
மார்க்சியத்தை ஏற்கிறேன்; ஆனால் கட்சியில் இருக்க மாட்டேன் என்று ஒருவர் கூறினால் அவர் வேறு எதுவாகவோ இருக்க முடியுமே தவிர கம்யூனிஸ்ட்டாக இருக்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் உயிரே கட்சி அமைப்புதான் என்றார் லெனின். பல்வேறு போக்குகள் கொண்ட குழுக்களாக இருந்த ரசிய சமூக ஜனநாயகக் கட்சியின் இரண்டாவது மாநாடு 1903-இல் நடந்தது. அதில் கட்சி கட்டுவது குறித்த பாட்டாளிகளின் கண்ணோட்டம், செயல்முறை, அமைப்புமுறை பற்றி உறுதியுடன் வழக்காடிய லெனின் அதையெல்லாம் தொகுத்தளித்த நூல்தான் ‘ஓரடி முன்னால் ஈரடி பின்னால்’. கம்யூனிஸ்ட் கட்சிக்குள் அறிவாளிகள் வழியா? பாட்டாளிகள் வழியா? எது சரி என்பதை சுவைபட விவரிக்கிறது இந்நூல்.
மாநாட்டில் லெனினின் வழியை ஏற்ற பெரும்பான்மையினர் போல்ஷ்விக்குகள் என்று பிரிந்தது அப்போதுதான். அன்று மட்டுமல்ல, இன்றும் உண்மையான கம்யூனிஸ்ட் கட்சிகளும், அறிவாளி வர்க்கமும் ஒன்றுக்கொன்று முரண்பட்டு நிற்கிறது, இனியும் அப்படித்தான். ஏன்? அறிவாளிகளின் சமூக, உளவியல் பின்னணியை ‘காவுட்ஸ்கி’யின் கட்டுரையின் மூலம் விளக்கி பதில் தருகிறார் லெனின்.
அறிவாளிகளின் பண்புகள் ‘மண்ணுக்கேற்றபடியெல்லாம் மாறுவதில்லை’, உலகெங்கிலும் ஒரே மாதிரிதான். தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு சமூக நடவடிக்கையில் இருப்பதாகக் காட்டிக்கொள்ளும் பேராசிரியர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் ஏராளம் இருக்கிறார்கள். புரட்சிகரக் கம்யூனிஸ்டுக் கட்சிகளை எதிர்ப்பதில் மட்டும் இவர்கள் ஒன்றுபடவில்லை. தமது கத்துக்குட்டி அறிவின் மூலம் சமூகத்தை ஏளனமாகப் பார்க்கும் இவர்களது சிந்தனைமுறை, வாழ்க்கை பற்றிய பாதுகாப்பு உணர்வு, தன்னகங்கார தனித்துவம் இன்னும் ஏராளமானவற்றில் ஒன்றுபடுகிறார்கள்.
பெரும்பான்மை மக்களோ, கட்சியோ, சமூகமோ இவற்றுடன் முரண்பட்டு தன்னை உயர்வாய் நினைத்துக் கொள்ளும் அறிவாளிகளின் பாத்திரத்தை ‘அதே அறிவைக்’ கொண்டு ஆய்கிறார் லெனின். இனி அவரது வார்த்தையிலேயே பார்ப்போம்.
சாமானிய உழைப்பாளி மக்களை லெனின் நேசித்தார். லெனினது சவ அடக்கத்தின் போது இது பற்றி நதேஸ்தா கன்ஸ்தன்தீனவ்னா நன்றாகச் சொன்னார்:
“எல்லா உழைப்பாளர்களின் பாலும் அவரது நெஞ்சம் ஆர்வமிக்க அன்பு கொண்டு துடித்தது.”
சோவியத் அரசாங்கத்தின் தலைவராக இருந்த போது விளதீமிர் இலீச் (லெனினது இயற்பெயர்) தொழிலாளர்களுடனும் விவசாயிகளுடனும் விருப்பமுடன் உரையாடினார். மத்தியக் கமிட்டி உறுப்பினர்கள், மக்கள் கமிசாரவை உறுப்பினர்கள ஆகியோரின் கருத்தை அறிவது போன்றே தொழிலாளரின், விவசாயியின் மனநிலையை அறிவதும் அவருக்கு முக்கியமானதாகும்.
தொழிலாளர்களுடன் உரையாடுவதற்குக் குறிப்பாக விரும்பினார் விளதீமிர் இலீச். தமது சிந்தனைகளை அவர்களுடன் அவர் பகிர்ந்து கொண்டார். அவர்களது கருத்துக்களை மிகவும் மதித்தார்.
பெத்னதா (“ஏழ்மை”) என்ற பத்திரிகையில் வந்த விவசாயிகளின் கடிதங்களை உயர்வாக மதித்தார்.
“இவையல்லவா உண்மையான மனித ஆவணங்கள்! எந்தவொரு பேச்சிலும் நான் இதைக் கேட்க முடியாது!”
பெத்னதாவின் ஆசிரியராக இருந்த நான் விவசாயிகளின் கடிதங்களை அவரிடம் எடுத்து வரும்போது என்னிடம் அவர் இவ்வாறு சொன்னார். கிராமத்தில் வாழ்க்கை எப்படி இருக்கிறது, கிராமத்தின் தேவை என்ன என்று அவர் நீண்ட நேரம் கூர்ந்து கேட்பார். ஒரு கடிதத்தைக் கையிலெடுத்துக் கொண்டு கவனமாகப் பார்ப்பார். வ்பெரியோத், புரொலித்தாரி (“பாட்டளி”) என்ற பத்திரிகைகளுக்காக, தொழிலாளர்கள் எழுதிய கடிதங்களை எவ்வளவு ஆர்வமுடன் அவர் படித்தார், திருத்தினார் என்பது எனக்கு நன்கு நினைவிருக்கிறது.
1920 – 1921 பனிக்காலத்தில் நடந்த உரையாடல் குறிப்பாக என் நினைவில் பசுமையாக இருக்கிறது. இது கஷ்டமான காலம். உள்நாட்டுப் போர் முடிந்த நேரம். உழைப்பாளர்களின் தியாகங்களும் இழப்புக்களும் உச்சகட்டத்தை அடைந்திருந்த நேரம். பெத்னதாவுக்கு ஏராளமான கடிதங்களை எழுதியது கிராமம். ஒவ்வொரு கடிதத்தையும் பற்றி விளதீமிர் இலீச் என்னை நிறையக் கேள்விகள் கேட்டார்.
“இதோ, சோவியத் ஆட்சி ஜார் ஆட்சியை விட மோசம் என்று எழுதுகிறார்கள்” என்றேன் நான்.
“ஜார் ஆட்சியை விட மோசமா?” என்று திரும்பக் கேட்டுவிட்டுக் கண்களை நெரித்துக் சிரித்தார் விளதீமிர் இலீச். “எழுதுவது யார்? குலாக்கா? மத்தியதர விவசாயியா?”
விவசாயிகள் கடிதங்களிலிருந்து மேற்கோள்கள் தந்து, கிராமத்திலுள்ள நிலைமை பற்றி விவரமான அறிக்கை சமர்ப்பிக்கும்படி அவர் கோரினார். உரையாடல் அத்துடன் முடிந்தது.
தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்தின் விளைவாக சென்னை உயர்நீதி மன்றம் “தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடியது சரிதான்” என தீர்ப்பு வழங்கியிருக்கிறது. இத்தீர்ப்பிற்காக 15 பேர் தங்களின் இன்னுயிரை விலையாகக் கொடுத்துள்ளனர்.
100 நாள் நடந்த இப்போராட்டத்தின் தொடக்கம் முதலே, போராட்டத்தை சீர்குலைக்கவும், மக்களை பிளவுபடுத்தவும் அரசும் போலீசும் முயற்சி செய்தன. ஆனாலும் அவற்றையும் மீறி வணிகர்கள், மீனவர்கள், விவசாயிகள் மற்றும் போராடும் அமைப்புகள் என அனைத்து தரப்பினரும் உறுதியுடன் எதிர்த்து நின்றனர். அதுமட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகமும் “ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம்!” என கோரிக்கை வைத்தது.
அச்சூழலில் பாஜக மட்டும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடுபவர்களை ‘வளர்ச்சிக்கு எதிரானவர்கள்’ என்றும், ‘தேசவிரோதி’ என்றும் முத்திரைகுத்த முயன்றது. பிற அரசியல்கட்சிகள் அனைத்தும் மக்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிலையில் தான் ஜாலியன்வாலாபாக் படுகொலையையொத்த மே 22, தூத்துக்குடி படுகொலை அரங்கேறியது. இவ்வளவுக்கும் பின்னர்தான் தற்போது இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பின் பின்னணியில் நடந்த விவகாரங்கள் குறித்து தெளிவாக விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் தோழர் ராஜூ. காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…
தகவல் : மக்கள் அதிகாரம், தமிழ்நாடு. தொடர்புக்கு : 99623 66321.
அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த கெனோஷா நகரப் போலீசு கருப்பின இளைஞர் ஒருவரை சுட்டதைத் தொடர்ந்து அந்நகரமே மக்கள் போராட்டத்தால் பற்றி எரிகிறது.
கடந்த 23-ம் தேதி பட்டப் பகலில் 29 வயது கருப்பின இளைஞரான ஜேக்கப் ப்ளேக் என்பவரை துப்பாக்கியால் போலீசு சுட்டது. வாகனத்தில் காத்திருந்த தமது மூன்று குழந்தைகளை நோக்கிச் சென்ற ஜேக்கப்பை முதுகில் பலமுறை சுட்டுள்ளது போலீசு. அதனை ஒருவர் காணொளியாகப் பதிவு செய்து ச்மூக வலைத்தளங்களில் வெளியிட்டதைத் தொடர்ந்து கெனோஷா மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நகரில் விதிக்கப்பட்ட ஊரடங்கையும் மீறி வீதியில் இறங்கி பாட்டில்களையும் பட்டாசுகளையும் வீசி எறிந்து மக்கள் போராடத் துவங்கியுள்ளனர். “நீதியில்லையேல் அமைதியில்லை” என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் போராடினர். போராடும் மக்கள் மீது கண்ணீர்புகை குண்டுகளை வீசி கலைக்கத் துவங்கியது போலீசு.
பிளேக் மீதான துப்பாக்கிச் சூட்டிற்கு நீதி கேட்டு நீதிமன்றத்தை முற்றுகையிட்டிருக்கும் போராட்டக்காரர்கள்.ஜேக்கப் பிளேக் மீது பலமுறை துப்பாக்கியால் சுட்டது போலீசு. அதனைத் தொடர்ந்து நிற வெறிப் பிரச்சினைக்கு நீதியைக் கோரி மக்கள் வீதியில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர் (புகைப்படம் : KAMIL KRZACZYNSKI)போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்களை சுற்றிவளைத்த செரிப் படையினரை எதிர்கொள்ளும் பெண்மணி (புகைப்படம் : REUTERS/Stephen Maturen)சம்பவம் நடந்த கெனோஷா கவுண்டியில், கடந்த திங்கள் கிழமை (24-08-2020) இரவு 8 மணிமுதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் செரிப் படை போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை நெட்டித்தள்ளத் துவங்கியது. (புகைப்படம் : TANNEN MAURY)நீதிமன்ற கட்டிடத்திற்கு முன்னே போராட்டக்காரர்கள் செரிப் படையினருடன் மோதலில் ஈடுபடுகின்றனர் (புகைப்படம் : KAMIL KRZACZYNSKI / AFP)இரண்டாம் நாளாக தொடர்ந்த போராட்டத்தில், போராட்டக் காரர்கள மீது போலீசு கண்ணீர்புகை குண்டுகளை வீசியதைத் தொடரந்து போராட்டக்காரர்கள் ஓடுகின்றனர் (புகைப்படம் : TANNEN MAURY )அரசு கட்டிடத்தின் மீது பறந்து கொண்டிருக்கும் அமெரிக்கக் கொடி பற்றி எரிகிறது. (புகைப்படம் : Morry Gash)ஒரு வாகனம் பற்றி எரிந்து கொண்டிருக்கும் சூழலில் இரண்டு போராட்டக்காரர்கள் கைகளை உயர்த்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்கின்றனர். (புகைப்படம் : TANNEN MAURY )போராட்டத்தின் போது தீவைக்கப்பட்ட வாகனங்கள் பற்றி எரிகின்றன. (புகைப்படம் : TANNEN MAURY )சட்ட அமலாக்க அதிகாரிகள், கலவர தடுப்பு உடையை அணிந்துகொண்டு, கோபமிக்க போராட்டக்காரர்களை எதிர்கொள்கின்றனர் (புகைப்படம் : TANNEN MAURY)
கொரோனா ஊரடங்கில் நாட்டுமக்கள் வறுமையில் வாடும் சூழலில் நாடு வளரச்சி அடைகிறது என்கிறார் மோடி. மக்கள் நலன், இயற்கை வளங்களை அழிக்கும் திட்டங்களை கொரோனா ஊரடங்கு சூழலை பயன்படுத்தி விரைந்து அமுல்படுத்துகிறது மத்திய பா.ஜ.க அரசு. ஏழை தாழ்த்தப்பட்ட மக்களை தற்குறிகளாக மாற்றும் நவீன குலக்கல்வித் திட்டமான புதிய கல்விக் கொள்கையை எதிர்ப்பையும் மீறி அமுல்படுத்துகிறது.
சுயசார்பு என பேசிக்கொண்டு அதற்கு மாறாக பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கிறது. சுற்றுச் சூழல் தாக்க மதிப்பீட்டு மசோதா மூலம் ஒட்டுமொத்த இயற்கையையும் கார்ப்பரேட் இலாப வெறிக்குப் பலியாக்கி சுற்றுச் சூழலை பாழ்படுத்தவும் தயாராகிவிட்டது.
மோடி அரசின் அழிவுத் திட்டங்களை பற்றியும் அதற்கு எடப்பாடி அரசு துணை போவதை பற்றியும் அம்பலப்படுத்தும் விதமாக ஊரும் அடங்கிடுச்சி, ஊரடங்கும் நீண்டுருச்சி… என்ற பாடல் தருமபுரி மக்கள் அதிகாரம், கலைக்குழு தோழர்களால் காணொளி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பாருங்கள் பகிருங்கள் !
ஸ்மித்தின் வாழ்க்கையைப் பற்றி இனி சொல்ல வேண்டியது அநேகமாகக் குறைவே. நாடுகளின் செல்வம் வெளியிடப்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு, பக்லூ கோமகன் மற்றும் அவருடைய செல்வாக்கு மிக்க நண்பர்கள், ஆதரவாளர்கள் செய்த முயற்சிகளினால் எடின்பரோவில் ஸ்காட்டிஷ் சுங்கக் கமிஷனர் என்ற வேலை அவருக்குக் கொடுக்கப்பட்டது. அது சுகமான வேலை; அறுநூறு பவுன் வருட வருமானம் கிடைக்கும். அந்தக் காலத்தில் இது மிகவும் அதிகமான தொகையாகும். ஸ்மித் தன்னுடைய வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை சுங்க இலாகாவில் கழித்தார். சுங்க வரிவசூலை மேற்பார்வையிடுவதிலும் லண்டனுக்குக் கடிதங்கள் எழுதுவதிலும் கடத்தல்காரர்களைப் பிடிப்பதற்காக அவ்வப்பொழுது படையினரை அனுப்புவதிலும் பொழுதைக் கழித்தார்.
அவர் தம்முடைய இருப்பிடத்தை எடின்பரோவுக்கு மாற்றிக் கொண்டார், அந்த நகரத்தின் பழமையான பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்குப் பிடித்தார். அவர் முன்பிருந்த எளிமையான வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்தினார், அறச்செயல்களுக்கு அதிகமான பணம் செலவிட்டார். அவர் விட்டுச் சென்ற மதிப்புடைய ஒரே பொருள் அவருடைய பெரிய நூலகமே. ”என்னுடைய புத்தகங்களைத் தவிர வேறு எதிலும் நான் பணக்காரன் அல்ல” என்று ஸ்மித் தன்னைப் பற்றி ஒரு தடவை சொன்னார்
பதினெட்டாம் நூற்றாண்டில் ஸ்மித்துக்குக் கொடுக்கப்பட்டது போன்ற அரசாங்கப் பதவிகள் அந்த நபர்களை ஆதரிப்பதற்காகக் கொடுக்கப்பட்டன, அவை மானியமாகவே கருதப்பட்டன. ஆனால் ஸ்மித் மனசாட்சி உள்ளவர், ஓரளவுக்குக் கல்விச் செருக்குடையவர். எனவே அவர் தமக்குக் கொடுக்கப்பட்ட வேலையைப் பொறுப்போடு நிறைவேற்ற வேண்டும் என்று கருதிக்கொண்டு கணிசமான நேரத்தை அலுவலகத்தில் கழித்தார். இது மட்டுமே (அவருடைய முதிர்ந்த வயதும் பலவீனமான உடல் நிலையும் கூட) அவர் இனி எதையும் தீவிரமாக விஞ்ஞான ஆராய்ச்சி செய்வதைத் தடுத்தது. ஸ்மித்துக்கும் அப்படிப்பட்ட குறிப்பிட்ட ஆசைகளும் இல்லை என்று தோன்றுகிறது.
ஆரம்பத்தில் தன்னுடைய மூன்றாவது பெரிய புத்தகத்தை கலாச்சாரம், விஞ்ஞானத்தைப் பற்றிய சர்வாம்ச வரலாற்றை எழுத வேண்டுமென்று அவர் திட்டம் போட்டிருந்தது உண்மை தான். ஆனால் அவர் வெகு சீக்கிரத்தில் இந்தத் திட்டத்தைக் கைவிட்டார். அவருடைய மரணத்துக்குப் பிறகு வானஇயல், தத்துவஞானம், கலைகளைப் பற்றிக் கூட அவர் எழுதியிருந்த சுவாரசியமான குறிப்புகள் கண்டுபிடிக்கப்பட்டு வெளியிடப்பட்டன. அவருடைய புத்தகங்களின் புதிய பதிப்புகளைக் கொண்டு வருவதில் அவருடைய நேரத்தில் பெரும் பகுதி கழிந்தது; அவருடைய வாழ்நாளிலேயே அறவியல் உணர்ச்சிகளைப் பற்றிய தத்துவம் ஆறு பதிப்புக்களும் நாடுகளின் செல்வம் ஐந்து பதிப்புக்களும் இங்கிலாந்தில் வெளிவந்தன. நாடுகளின் செல்வம் மூன்றாவது பதிப்பின் போது (1784) ஸ்மித் முக்கியமான பகுதிகளைச் சேர்த்தார், அவற்றில் வாணிப ஊக்கக் கொள்கையைப் பற்றிய முடிவுரை என்ற அத்தியாயம் குறிப்பிடத்தக்கதாகும்.
தம்முடைய புத்தகங்களுக்கு வெளிநாடுகளில் வெளிவருகின்ற பதிப்புகளையும் அவர் ஓரளவுக்குக் கவனமாகப் பார்த்துக் கொண்டார். பிரெஞ்சு மொழியில் இரண்டு தடவைகளும் ஜெர்மன், டேனிஷ் மொழிகளில் ஒரு தடவையும் மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன, இத்தாலிய மொழிபெயர்ப்பு தயாரிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. நாடுகளின் செல்வம் அயர்லாந்திலும் அமெரிக்காவிலும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது. நாடுகளின் செல்வம் என்ற புத்தகத்துக்கு அது வெளியிடப்பட்ட முதல் ஐம்பது வருடங்களில் வெளிவந்த பதிப்புகள் ஒரு சிறு பழைய புத்தகக் கடை நிறைய இருக்கும். 1802-1806ம் வருடங்களில் அதன் முதல் ருஷ்ய மொழிப் பதிப்பு வெளியாயிற்று. ருஷ்ய மொழியில் இந்தப் புத்தகத்துக்கு இது வரை மொத்தம் எட்டு பதிப்புக்கள் வெளிவந்திருக்கின்றன; அவற்றில் நான்கு பதிப்புகள் 1917-ம் வருட அக்டோபர் சோஷலிஸ்ட் புரட்சிக்குப் பிறகு வெளியிடப்பட்டவையாகும்.
ஸ்காட்லாந்தின் தலைநகரம் லண்டனுக்கு அடுத்தபடியாக தேசத்தின் இரண்டாவது முக்கியமான கலாச்சார நகரமாகத் திகழ்ந்தது, சில அம்சங்களில் அது முதல் நகரத்துக்குச் சிறிதும் குறையாத புகழோடு விளங்கியது. மறு பக்கத்தில் ஒப்பு நோக்கில் அது சிறிய நகரம், நெருக்கமான உணர்ச்சியைக் கொடுக்கின்ற நகரம். ஸ்மித் வழக்கம் போல இங்கேயும் பொழுதுபோக்குச் சங்கத்தில் சேர்ந்து கொண்டார், அங்கே தம்முடைய சிநேகிதர்களையும் நண்பர்களையும் கொண்ட நெருங்கிய குழுவினர்களை வழக்கமாகச் சந்தித்தார். இதைத் தவிர, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் நண்பர்கள் அவரோடு விருந்துண்டார்கள். அவர் இதற்கு முன்பே ஐரோப்பாவின் புகழ் மிக்க நபர்களில் ஒருவராக, எடின்பரோ நகரத்தின் அரிய காட்சிகளில் ஒன்றாகிவிட்டார். லண்டன், பாரிஸ், பெர்லின். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் ஆகிய நகரங்களிலிருந்து வரும் பிரயாணிகள் ஸ்காட்லாந்தின் ஞானியைத் தரிசிக்க விரும்பினார்கள்.
அவர் எவ்விதத்திலும் குறிப்பிடத்தக்க தோற்றச் சிறப்பைக் கொண்டிருக்கவில்லை. அவர் சராசரிக்குச் சற்று அதிக உயரமுள்ளவர், வளையாமல் நிமிர்ந்து நடப்பார். அவருடைய எளிமையான முகம் வழக்கமான அமைப்பையும் பழுப்பு நீல நிறக் கண்களையும் நீண்ட, நேரான மூக்கையும் கொண்டிருந்தது. அவர் மற்றவர்களுடைய கவனத்தைக் கவராதபடி உடையணிவார். கடைசிவரை தலையில் பொய் முடி அணிந்திருந்தார். தன்னுடைய தோளின் மீது மூங்கில் பிரம்பைச் சாய்வாக வைத்துக் கொண்டு நடப்பது அவருக்குப் பிடிக்கும்.
அவர் தன்னிடம் பேசிக் கொண்டபடியே நடந்து செல்லும் பழக்கம் உடையவர். இந்தப் பழக்கம் சற்று அதிகமான அளவுக்கு அவரிடமிருந்தபடியால், ஒரு நாள் சந்தையிலிருந்து வந்து கொண்டிருந்த இரண்டு பெண்கள் அவரைப் பார்த்துப் பைத்தியக்காரன் என்று நினைத்துக் கொண்டார்கள். “அட கடவுளே!” என்று ஒரு பெண் தலையை பலமாக ஆட்டிக்கொண்டு சொன்னாள். “எப்படி உடையணிந்திருக்கிறான் பார்” என்று அடுத்துப் பேசினாள் இரண்டாவது பெண். அவருக்கு அதிகமான ஞாபகமறதி ஏற்படும். அவர் மற்றவர்களோடு இன்முகத்தோடு பழகினார்; சதா பேசிக்கொண்டிருப்பதும் அவரிடமிருந்த பழக்கம். அவருடைய சமகாலத்தவர்களில் ஒருவர் அவரைப் பற்றி – சற்று மிகையாகவே – எழுதுகிறார்: “நான் பார்த்தவரையிலும் கூட்டத்திலிருக்கும் பொழுது, அதிகமான ஞாபக மறதியோடு இருந்தவர் அவர்தான். அவர் பெரிய கூட்டங்களில் இருக்கும் பொழுது கூட தனக்குத் தானே பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருப்பார்; அவருடைய உதடுகள் எப்பொழுதும் துடித்துக் கொண்டிருக்கும். அவருடைய சிந்தனை மயக்கத்தைக் கலைத்து நாம் உரையாடிக் கொண்டிருக்கும் பொருளை கவனிக்கச் செய்தோமென்றால் அவர் உடனே ஆவேசமாகப் பேச ஆரம்பித்து விடுவார். அதைப் பற்றி அவருக்குத் தெரிந்த எல்லாவற்றையும் அதிகமான தத்துவஞான நுண்ணறிவோடு சொல்லி முடிக்கின்ற வரையிலும் அவர் ஒருபோதும் நிறுத்த மாட்டார்”.(1)
ஸ்மித் எடின்பரோ நகரத்தில் 1790-ம் வருடம் ஜூலை மாதத்தில் தமது அறுபத்தேழாம் வயதில் மரணமடைந் தார். அதற்கு முன்பு சுமார் நான்கு வருட காலம் அவர் அதிகமான அளவுக்கு நோய்வாய்ப்பட்டிருந்தார்.
ஸ்மித் அறிவுத்துறையில் சில சமயங்களில் ஒரு குடிமகன் என்ற முறையில் கணிசமான அளவுக்குத் துணிச்சல் கொண்டவராக இருந்தார். ஆனால் அவர் எப்படிப்பட்ட அர்த்தத்திலும் ஒரு போராட்டக்காரர் அல்ல. அவர் இரக்கசிந்தை உடையவர், அநீதியையும் வன்முறையையும் கொடுமையையும் வெறுத்தார்; ஆனால் ஓரளவு சுலபமாகவே அவற்றைப் பொறுத்துக் கொண்டார். பகுத்தறிவு, பண்பாடு ஆகியவற்றின் வெற்றியில் நம்பிக்கை கொண்டிருந்த போதிலும் இந்தக் கரடுமுரடான, தீமைகள் மலிந்த உலகத்தில் அவற்றின் நிலையைப் பற்றி அதிகமாக அச்சமடைந்தார். அதிகார வர்க்கத்தைச் சேர்ந்தவர்களை அவர் வெறுத்தார், துச்சமாகக் கருதினார்; ஆனால் தாமும் அவர்களில் ஒருவராக மாறினார்.
உழைக்கின்ற ஏழை மக்கள் மீது, தொழிலாளி வர்க்கத் தின் மீது ஸ்மித்துக்கு அதிகமான அனு தாபம் இருந்தது. கூலித் தொழிலாளர்களுக்கு இயன்ற அளவுக்கு அதிகமான ஊதியம் கொடுப்பதை அவர் ஆதரித்தார். ஏனென்றால் “சமூகத்தின் மிகப்பெரும் பகுதி ஏழ்மையிலும் துன்பத்திலும் உழல்கின்ற பொழுது அந்த சமூகத்தில் வளப்பெருக்கம் ஏற்பட முடியாது.” தங்களுடைய உழைப்பின் மூலமாக சமூகத்தையே ஆதரித்துக் காப்பாற்றுகின்ற மக்கள் ஏழ்மையிலே வாடுவது அநீதியானது. ஆனால் அதே சமயத்தில் “இயற்கைச் சட்டங்கள்” தொழிலாளர்களுக்குச் சமூகத்தில் மிகவும் கீழ் நிலையான இடத்தையே கொடுத்திருப்பதாக அவர் அனுமானித்துக் கொண்டார். “தொழிலாளியின் நலன் சமூக நலன்களோடு கண்டிப்பான வகையில் இணைக்கப்பட்டிருந்த போதிலும் அவன் அந்த நலன்களைப் புரிந்து கொள்வதற்கோ அல்லது தன்னுடைய நலனோடு அவை இணைக்கப்பட்டிருப்பதை அறிவதற்கோ இயலாதவன்” (2) என்று கருதினார்.
ஸ்மித் முதலாளி வர்க்கத்தை வளர்கின்ற முற்போக்கான வர்க்கம் என்று கருதினார்; அதனுடைய நலன்களை குறுகிய, தற்காலிகமான நலன்களை அல்ல, விரிவான நெடுந்தொலைவு நோக்கில் அதன் நலன்களை-புற நிலையில் எடுத்துக் கூறினார். ஆனால் அவர் கீழ்வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவி என்ற வகையில் முதலாளிகள் மீது சிறிதளவு பிரியம் கூட அவருக்கு ஏற்படவில்லை. லாபவேட்கை இவர்களைக் குருடர்களாக்கிவிடுகிறது, அவர்களுடைய இதயங்களைக் கல்லாக்கி விடுகிறது என்று கருதினார். அவர்கள் தங்களுக்குக் கிடைக்கும் லாபத்துக்காக, சமூக நலன்களுக்கு எதிரான எந்த வழியையும் பின்பற்றத் தயாராக இருக்கிறார்கள். தங்களுடைய பண்டங்களின் விலையை அதிகரிப்பதற்கும் தொழிலாளர்களின் கூலியைக் குறைப்பதற்கும் அவர்கள் தங்கள் முழு பலத்தையும் திரட்டிப் பாடுபட்டார்கள். தொழிலதிபர்களும் வணிகர்களும் சுதந்திரமான போட்டியைக் கட்டுப்படுத்துவதற்கும் நசுக்குவதற்கும் சமூகத்துக்குத் தீங்கு விளைவிக்கின்ற ஏகபோகங்களை உருவாக்குவதற்கும் எப்பொழுதும் முயற்சித்தார்கள்.
பொதுவாகச் சொல்வதென்றால், முதலாளி என்பவர் முன்னேற்றம், ”நாட்டின் செல்வத்தின்” வளர்ச்சியின் ஆட்சார்பற்ற இயற்கையான கருவி என்று ஸ்மித் கருதினார். சமூகத்திலுள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியின் நலன்களோடு முதலாளி வர்க்கத்தின் நலன்கள் பொருந்தி வருகின்ற அளவுக்குத்தான் ஸ்மித் அந்த வர்க்கத்தை ஆதரித்தார்.
(தொடரும்…)
அடிக்குறிப்புகள் :
(1) C. Fay, Adam Smith and the Scotland of His Day, Cambridge, 1956, p. 79. (2) A. Smith, The Wealth of Nations, Vol. 1, London, 1924, p. 230.
நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
புரட்சி நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக கட்சி நிறுவனம் இருக்க வேண்டும்.
57. எனவே புரட்சிக்கு முந்திய காலத்திலேயே புரட்சியின் தேவைகளுக்குப் போதுமான ஒரு போரிடும் நிறுவனத்தை உருவாக்கி உறுதிப்படுத்துவதை உத்திரவாதப்படுத்தக் கூடிய முறையில் நமது பொதுவான கட்சி வேலைகள் பிரித்தளிக்கப்பட வேண்டும். பொதுவுடைமைக் கட்சியை வழிநடத்தும் தலைமையானது தனது நடவடிக்கைகள் அனைத்திலும், புரட்சியின் தேவைகளால் வழிநடத்தப்படுவது மகத்தான முக்கியத்துவமுடையதாகும். இத்தேவைகள் என்னவாக இருக்குமென்று முன்கூட்டியே சாத்தியப்பட்ட அளவு காண முடிவது மகத்தான முக்கியத்துவம் உடையதாகும். இது இயல்பாகவே எளிய விசயமல்ல. ஆனால் இது எந்த விதத்திலும் பொதுவுடைமைவாத நிறுவனத் தலைமையில் இந்த முக்கிய விசயத்தைக் கவனத்தில் கொள்ளாமல் விடுவதற்கான காரணமாக இருக்கக் கூடாது.
பகிரங்கமான புரட்சி எழுச்சிகளின் காலத்தில், கட்சி இயங்குவதில் பெரு மாற்றங்களுக்கு உள்ளாவது என்ற மிகக் கடினமான மற்றும் சிக்கலான கடமைகளை மிகச் சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்ட கட்சி கூட எதிர்கொள்ள வேண்டியிருக்கும். தனது சக்திகள் அனைத்தையும், புரட்சி நடவடிக்கைகளுக்காக ஒருசில நாட்களில் திரட்ட வேண்டிய அவசியம் நமது அரசியல் கட்சிக்கு எழுவது சாத்தியமே. தனது சக்திகளைத் திரட்டுவதுடன் கூடவே தனது சேமிப்புச் சக்திகளையும் ஆதரவான நிறுவனங்களையும், அதாவது நிறுவனமாக்கப்படாத புரட்சிகர மக்கள் திரளினரையும் கட்சியானது திரட்ட வேண்டியிருக்கும். முறையான செஞ்சேனையை அமைப்பது என்பது இன்னமும் நிகழ்ச்சிநிரலில் எழாத பிரச்சினையாகவே இருக்கும். ஏற்கெனவே நிறுவி அமைக்கப்பட்ட படையின்றி ஆட்சித் தலைமையின் கீழான மக்கள் திரளினரைக் கொண்டே நாம் வெற்றியடைய வேண்டியிருக்கும். இக்காரணத்தினால் ஒரு எழுச்சிக்காகச் சிறப்பாகத் தயாரிப்பு செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்படாமல் இருந்தால் கட்சியின் மிகத் தீர்மானகரமான முயற்சிகூட வெற்றி பெறாது.
விசேடமான இரகசிய எந்திரத்தைக் கட்டியமைப்பது
58. புரட்சிகர மையத் தலைமை உறுப்புகள் கூட புரட்சி நிலைமைகளைத் தாக்குப்பிடிக்க இயலாதவை என்று நிரூபிக்கப்பட்டிருப்பதை கண்டிருக்க முடியும். சிறு கடமைகளைப் பொருத்தவரை பாட்டாளி வர்க்கம் மகத்தான புரட்சி நிறுவன அமைப்பாக்குதலைப் பொதுவாக சாதிக்க முடிந்துள்ளது. ஆனால், தலைமையகங்களில் எப்போதும் கிட்டத்தட்ட ஒழுங்கின்மை, குழப்பம், அராஜகம் ஆகியவை இருந்துள்ளன. சில நேரங்களில் மிகமிக எளிய வேலையைப் “பிரித்தளிப்பது” கூட போதுமான அளவு இல்லாமல் இருந்திருக்கிறது. உளவு அறியும் துறை எந்த அளவு மோசமாக ஒழுங்கமைக்கப்பட்டு இருக்குமென்றால், அடிக்கடி அது நன்மை செய்வதை விட தீமையே கூடுதலாகச் செய்திருக்கிறது. இரகசிய அஞ்சல் மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் நம்பகமானதாக இல்லை. இரகசிய அலுவலகம் மற்றும் அச்சிடும் வேலைகள் பொதுவாகவே அதிர்ஷ்டவசமான அல்லது தூரதிருஷ்டவசமான வாய்ப்புகளின் தயவில் உள்ளன. எதிரி சக்திகளின் “தூண்டிவிட்டுக் காட்டிக் கொடுக்கும் ஏஜெண்டுகளுக்கு” இவை சிறந்த வாய்ப்புகள் அளிப்பவையாக உள்ளன.
குறிப்பிட்ட இத்தகைய வேலைகளுக்காக கட்சியானது தனது நிர்வாகத்தில் விசேடமான துறையை ஒழுங்கமைக்காவிட்டால், இக்குறைகளைச் சரிப்படுத்த முடியாது. இராணுவ உளவறியும் வேலைக்கு நடைமுறை அனுபவம், விசேடப் பயிற்சி, கூர்மதி ஆகியவை வேண்டும். அரசியல் போலீசுக்கு எதிரான இரகசிய வேலைக்கும் இதுவே பொருந்தும் என்று கூறலாம். நீண்டகால அனுபவத்தின் வாயிலாக மட்டுமே மனநிறைவுறத்தக்க முறையில் இரகசியத் துறை உருவாக்கப்பட முடியும். இந்தச் சிறப்புத் தன்மையுடைய புரட்சி வேலைகள் அனைத்தையும் செய்ய சட்டபூர்வமாக இயங்கும் ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் தயாரிப்புகள் (அது எவ்வளவு குறைவாக இருந்தாலும் சரி) செய்ய வேண்டும். மிகப் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் முழுக்கவும் சட்டபூர்வமான நடவடிக்கைகளின் வாயிலாகவே இத்தகைய இரகசிய நிறுவனங்களைப் படைக்க முடியும்.
எடுத்துக்காட்டாக, கூர்மதியுடன் ஏற்பாடு செய்யப்பட்டு சட்டபூர்வ பிரசுரங்கள் விநியோகிப்பது மற்றும் பத்திரிகைகளின் தொடர்பு ஏற்பாடுகள் ஆகியவற்றில் குறியீடு முறையைக் கடைபிடிப்பதன் மூலம் இரகசிய அஞ்சல் மற்றும் போக்குவரத்து செய்தித் தொடர்புகளை நிறுவுவது முற்றிலும் சாத்தியமே.
ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரையும் புரட்சிக் கடமைகளுக்காக வளர்த்தெடுப்பது
பொதுவுடைமைவாத அமைப்பாளர் கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரையும் ஒவ்வொரு புரட்சிகர தொழிலாளியையும் எதிர்காலப் புரட்சிப் படையின் போராளி என்று நோக்க வேண்டும். இக்காரணத்தால் எதிர்காலத்தில் அவர் ஆற்றப் போகின்ற பாத்திரத்துக்கு ஏற்ப ஒரு இடத்தை அவருக்கு ஒதுக்க வேண்டும். அவருடைய இப்போதைய நடவடிக்கை உபயோகமானதாக – கட்சியின் இப்போதைய வேலைக்கு அவசியமானதாக – இருக்க வேண்டும். மற்றபடி, வெறும் (வறட்டுத்தனமான) பயிற்சியாக இருக்கக் கூடாது. ஏனெனில், நடைமுறை ஊழியர் இதை நிராகரித்து விடுவார். இத்தகைய நடவடிக்கை ஒவ்வொரு பொதுவுடைமைவாதிக்கும், மிக அத்தியாவசியமான இறுதிப் போராட்டத்துக்கான ஆக மிகச் சிறந்த தயாரிப்பு என்பதை யாரும் மறக்கவே கூடாது.
ஸ்டெர்லைட் போராட்டம் உயர்நீதிமன்றத் தீர்ப்பு…! அடுத்து என்ன…? என்ற தலைப்பில் ஆகஸ்டு 23 அன்று மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய இணைய வழிப்பொதுக்கூட்டத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் ஆற்றிய உரை!
இரண்டாம் ஜாலியன் வாலாபாக் என்று அழைக்கப்படும் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு நடைபெற்று இரண்டு ஆண்டுகள் முடிவடைந்துவிட்டது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான வழக்கு 60% முடிந்திருகிறது. இறுதியான முடிவிற்காக தூத்துக்குடி மக்கள் காத்திருக்கிறார்கள்.
மோடியின் ஆட்சியின் மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து மக்கள் தொடர்ந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள். இன்றை சூழல் என்பது பார்ப்பன – கார்ப்பரேட் மறுமலர்ச்சி காலமாக உள்ளது. இந்த அரசுக்கு அடிபணிந்து போவதால் ஏதேனும் மாற்றம் வருமா? வரப்போவதில்லை. எதிர்த்துப் போராட்டினால் மட்டுமே குறைந்த பட்சமாக நம்முடைய ஜனநாயகத்தை நம்மால் அடைய முடியும். எனவே இதற்கு முன் நடந்த மக்கள் போராட்டங்களை அனுபவமாக எடுத்துக்கொண்டு நாம் போராடாமல் வாழ்க்கையில்லை என்பதை உணர்ந்து போராட வேண்டும்.
இதற்கு எடுத்துக்காட்டாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் இருக்கிறது. போராட்டத்தின் துவக்கத்தில் இருந்து இறுதி வரை மக்கள் தான் தலைமை தாங்கி எடுத்து சென்றார்கள். அதில் முக்கியமாக அனைத்து கிராம மக்களை ஓர் அமைப்பாக இணைத்துக் கொண்டு செயல்பட்டனர். போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டின் போதும் மக்கள் யாரும் பயந்து பின்வாங்கவில்லை. அடுத்துத்தடுத்து இன்னும் போலீசின் அடங்குமுறைகள் அதிகரித்தன. அப்போதும் தூத்துக்கூடி மக்களின் போராட்டம் ஓயவில்லை. சாதி, மதங்களை கடந்து மக்கள் அனைவரும் ஸ்டெர்லைட்டுக்கு எதிராகவும், அரசுக்கு எதிராகவும் களத்தில் தற்போது வரை போராடிக்கொண்டிருக்கின்றனர். அந்த போராட்டம் நடந்த விதத்தை பற்றியும், தூத்துக்குடி மக்களின் போர்க்குணம் பற்றியும் தோழர் வாஞ்சிநாதன் இந்த காணொளியில் விரிவாக விளக்குகிறார். பாருங்கள் ! பகிருங்கள் !!
போராட்டங்களின் சூழ்நிலைகளில் ஏற்படக் கூடிய எல்லா மாற்றங்களுக்கும் ஏற்ப தன்னை எப்போதும் விரைந்து மாற்றி அமைத்துக் கொள்ளக்கூடியவாறு கட்சி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட இடத்தில் குவிக்கப்பட்டுள்ள பெரு எண்ணிக்கையில் உள்ள எதிரியுடன் வெளிப்படையான மோதலைத் தவிர்க்க இயலக் கூடியதான போர்க்குணமிக்க நிறுவனமாக பொதுவுடைமைக் கட்சி வளர்க்கப்பட வேண்டும். ஆனால், மற்றொருபுறம் எதிரி குவிந்திருப்பதையே பயன்படுத்திக் கொள்வது எப்படி இருக்க வேண்டுமெனில், எதிரி எதிர்பாராத இடத்தில் தாக்குதல் தொடுக்கும்படியாக இருக்க வேண்டும். கலகங்கள் மற்றும் தெருச் சண்டைகள் அல்லது கடுமையான அடக்குமுறை சூழ்நிலைகளை மட்டுமே நம்பியிருப்பது கட்சி நிறுவனத்தின் மிகமிகப் பெரிய தவறாகும். திடுதிப்பென்று வரும் எதிர்கால நிலைமைகளை சமாளிக்கத் தயாராய் இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் ஒவ்வொரு சூழ்நிலையிலும் பொதுவுடைமையாளர்கள் ஆரம்பகட்ட புரட்சிகர வேலைகளைத் துல்லியமாக செய்து கொள்ள வேண்டும். ஏனெனில், பெரும்பாலும் புயல் போன்ற மற்றும் அமைதியான காலங்கள் என்று மாறுவதை முன்கூட்டியே கண்டறிவது கிட்டத்தட்ட அசாத்தியமானதாகும். முன்கூட்டியே அறிவது சாத்தியமாக இருந்தாலும்கூட, பல சந்தர்ப்பங்களில் புனரமைத்தலுக்கு இந்தத் தொலைநோக்கைப் பயன்படுத்துவது இயலாது. ஏனெனில், ஒரு பொதுவிதி என்ற முறையில் மாற்றம் மிகமிக விரைவாகவும் அடிக்கடியும் திடுதிப்பென்றும் நிகழ்வதாக உள்ளது.
சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான நடவடிக்கைகளை இணைப்பது :
54. ஆயுதப் போராட்டத்திற்கு அல்லது பொதுவாக சட்டவிரோதமான போராட்டத்திற்கு முறையாகத் தயாரிக்கின்ற கட்சியின் முன்னுள்ள முக்கியத்துவம் வாய்ய்த இக்கடமையை முதலாளித்துவ நாடுகளிலுள்ள சட்டபூர்வமாக இயங்கும் பொதுவுடைமைக் கட்சிகள் வழக்கமாகவே கிரகிக்கத் தவறுகின்றன. தாம் நிலைப்பதற்கு நிரந்தரமான சட்டபூர்வ அடிப்படையைச் சார்ந்திருப்பது மற்றும் சட்டபூர்வ கடமைகளைச் செய்வதற்கு ஏற்ப தமது வேலைகளைச் சார்ந்திருப்பது என்ற பிழையை பொதுவுடைமை நிறுவனங்கள் அடிக்கடி இழைக்கின்றன.
மறுபுறம் சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகள் புரட்சிகர மக்கள்திரளினருடன் இடையறாத தொடர்புடைய ஒரு கட்சியைக் கட்டி முடிப்பதற்கு சட்டபூர்வ நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்துவதற்கு அடிக்கடி தவறுகின்றன. இந்த முக்கிய உண்மைகளை அலட்சியப்படுத்தும் தலைமறைவுக் கட்சிகள் வியர்த்தமான கடமைகளுக்காக தமது உழைப்பை வீணாக்குகின்ற வெறும் சதிகாரக் குழுக்களாகிவிடும் அபாயத்திற்கு உள்ளாகின்றன.
இவ்விரு போக்குகளுமே பிழையானவை. தலைமறைவாக இருந்து இயங்குவதற்கான மற்றும் எல்லாவற்றுக்கும் மேலாக, புரட்சி வெடிப்புகளுக்கான, முழுமையான தயாரிப்புகளை எவ்வாறு நிச்சயப்படுத்திக் கொள்வது என்பதை சட்டபூர்வமாக இயங்குகின்ற ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் அறிந்திருக்க வேண்டும். மறுபுறம், தீவிரமான கட்சி நடவடிக்கைகளின் மூலம் மகத்தான புரட்சிகர மக்கள் திரளினருடைய நிறுவன ரீதியிலான மற்றும் உண்மையான தலைவன் ஆவதற்கு ஒவ்வொரு சட்டவிரோதமாக இயங்கும் பொதுவுடைமைக் கட்சியும் சட்டபூர்வமான தொழிலாளர் இயக்கம் வழங்குகின்ற அனைத்து சாத்தியப்பாடுகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சட்டவிரோதமான – சட்டபூர்வமான கட்சி நிறுவனங்கள் முழுக்க முழுக்க தனித்தனியானவை அல்ல :
சட்டபூர்வமாக இயங்குகின்ற தலைமறைவாக இயங்குகின்ற இரு கட்சி வட்டாரங்களிலுமே சட்டவிரோதமான பொதுவுடைமைவாத நடவடிக்கைகள் பற்றி ஒரு தவறான போக்கு உள்ளது. பிற கட்சி நிறுவனங்களிலிருந்தும் நடவடிக்கைகளிலிருந்தும் முற்றாகத் துண்டிக்கப்பட்ட தூய்மையான இராணுவ நிறுவனத்தை நிறுவுவதும் நிலை நிறுத்துவதும் என்ற போக்கே இது. இது முழுக்க முழுக்கப் பிழையானது. மாறாக, புரட்சிக்கு முந்திய காலத்தில் போர்க்குணமிக்க நிறுவனங்களை உருவாக்குவது என்பது பொதுவுடைமைக் கட்சியின் பொதுவான வேலைகளின் வாயிலாகவே பிரதானமாக சாதிக்கப்படுகிறது. புரட்சிக்கான போர்க்குணமிக்க நிறுவனமாக முழுக் கட்சியும் வளர்க்கப்பட வேண்டும்.
புரட்சிக்கு முந்திய காலத்தில் முந்திரிக்கொட்டைத் தனமாக அமைக்கப்படும் தனித்தனியான இராணுவ நிறுவனங்கள் கலைந்துபோகும் போக்குகளையே வெளிப்படுத்தித் தீரும். ஏனெனில், அவற்றுக்கு நேரடியான மற்றும் பயனுள்ள கட்சி வேலை என்று எதுவுமில்லை.
தனது உறுப்பினர்களையும் கட்சி நிறுவனங்களையும் அதிகாரிகள் கண்டுபிடித்துவிடாமல் பாதுகாப்பதும், இவ்வாறு கண்டுபிடிப்பதைச் சாத்தியமாக்குகின்ற பதிவு செய்தல், கவனக்குறைவாக நிதி மற்றும் நன்கொடை சேகரிப்பது, புரட்சிகர வெளியீடுகளைத் தராதரமின்றி கவனக்குறைவாக விநியோகிப்பது போன்றவற்றைத் தவிர்ப்பதும் ஒரு தலைமறைவுக் கட்சி செய்ய வேண்டியது அவசியமே. இந்தக் காரணங்களால் ஒரு தலைமறைவுக் கட்சியானது சட்டபூர்வமான கட்சியின் அளவுக்கு வெளிப்படையான நிறுவன முறைகளைக் கடைபிடிக்க முடியாது. இருப்பினும் நடைமுறை வாயிலாக நிறுவன முறைகளில் மேலும்மேலும் தேர்ச்சி பெற முடியும்.
மறுபுறம், ஒரு சட்டபூர்வமான மக்கள்திரள் கட்சியானது, சட்டவிரோதமான வேலைகளுக்கும் போராட்டக் காலங்களை எதிர்நோக்கியும் முழுமையான தயாரிப்புகளுடன் இருக்க வேண்டும். எந்த விதமான சூழ்நிலைகளிலும், அது தனது தயாரிப்பைத் தளர்த்தவே கூடாது. அதாவது, உறுப்பினர்களின் கோப்புகளுக்குப் பிரதி எடுத்து பத்திரப்படுத்த வேண்டும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில் கடிதங்களை அழித்துவிட வேண்டும். முக்கிய ஆவணங்களைப் பத்திரமாக வைக்க வேண்டும். செய்தி எடுத்துச் செல்பவர்களுக்கு இரகசிய முறைகள் பற்றி பயிற்சி அளிக்க வேண்டும்.
சட்டபூர்வமான அதுபோலவே சட்டவிரோதமான கட்சி வட்டாரங்களில், சட்டவிரோதமான நிறுவனங்களானவை முழுக்க முழுக்க இராணுவ நிறுவனங்களாக கட்சிக்குள்ளேயை மிகமிகத் தனிமைப்பட்டவையாக அமைக்கப்பட வேண்டும் என்று ஊகிக்கப்படுகிறது. இந்த ஊகம் முழுக்கவும் பிழையானது. புரட்சிக்கு முந்திய காலத்தில் நமது போரிடும் நிறுவனங்களை உருவாக்குவது என்ற பொதுவுடைமைக் கட்சியின் பொதுவான வேலையைப் பிரதானமாகச் சார்ந்திருக்க வேண்டும். முழுக் கட்சியுமே புரட்சிக்காகப் போரிடும் நிறுவனமாக ஆக்கப்பட வேண்டும்.
(தொடரும்)
முந்தைய பாகம்*******************************************அடுத்த பாகம்
நூல் தேவைக்கு :
கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com முகநூலில் பின் தொடர :கீழைக்காற்று
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகின்றன. ஆனாலும் இன்றுவரை ஆகம கோவில்களில் தகுதிபடைத்த பார்ப்பனர் அல்லாதா அர்ச்சகர்கள் நியமிக்கப்படவில்லை. தமிழக அரசால் கடந்த 2006 -ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் உரிய முறையில் பயிற்சி பெற்ற 206 மாணவர்கள் இன்றும் பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளனர். இதனை எதிர்த்து அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் தொடர்ந்து போராடிவருகிறது. அவர்களுக்கு ஆதரவாக பல ஜனநாயக சக்திகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஆகஸ்டு 22, 2006 அன்று தமிழகத்தில் இரண்டாவது முறையாக அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த 23.08.2020 அன்று டிவிட்டரில், ஜனநாய சக்திகள் மற்றும் சமூகநீதிக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் #SaveTemplesFromBrahmanism#கருவறையில்_தீண்டாமை என்ற ஹேஸ்டேக்களை முன்வைத்து தங்களது கருத்துக்களைத் தெரிவித்தனர் அவற்றில் சிலவற்றை இங்கே தொகுத்து தருகிறோம். இம்முழக்கங்களை டிவிட்டரில் மட்டுமல்லாது தெருவெங்கும் எடுத்துச் செல்வோம்! கருவறைத் தீண்டாமைக்கு முடிவுகட்ட அணிதிரள்வோம் வாரீர்…
— Ambedkar-Periyar Study Circle – APSC UNOM_Official (@APSC_UNOM) August 23, 2020
ஆகஸ்ட் 22 2006 ஆம் ஆண்டு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை சட்டம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2வது முறையாக நிறைவேற்றப்பட்டு 14 ஆண்டுகள் ஆகியும் நீதிக்குப் போராடும் மாணவர்களுக்காக குரல் கொடுப்போம் !#SaveTemplesFromBrahmanism
(2/2)
— Ambedkar-Periyar Study Circle – APSC UNOM_Official (@APSC_UNOM) August 23, 2020
அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டத்தைத் தலைவர் கலைஞர் கொண்டு வந்த இந்நாளில், அதனை நாடெங்கும் நடைமுறைப்படுத்த அரசுகளை வலியுறுத்துவோம்! #SaveTemplesFromBrahmanism#subavee_tweets
கட்சியின் மத்தியக் கமிட்டி, கட்சியின் பேரவையில் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மத்தியக் கமிட்டி பேரவைக்குப் பொறுப்பானதாகும். மத்தியக் கமிட்டி தனது உறுப்பினர்களிலிருந்து அரசியல் நடவடிக்கைக்காக இரு துணைக் கமிட்டிகளைத் தெரிவு செய்கிறது. இவ்விரு துணைக் கமிட்டிகளும் கட்சியினுடைய அரசியல் மற்றும் அன்றாட வேலைகளுக்குப் பொறுப்பானவையாகும். இத்துணைக் கமிட்டிகள் அல்லது குழுக்கள் கட்சியின் மத்தியக் கமிட்டியின் முறையான கூட்டுக் கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யும். இக்கூட்டங்களில் உடனடி முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படும். பொதுவான மற்றும் அரசியல் நிலைமைகளை ஆய்வு செய்யவும் கட்சியில் உள்ள நிலைமைகள் – நடப்புகள் பற்றித் தெளிவான முடிவுக்கு வரவும், இதுபோலவே கட்சி முழுவதன் வாழ்வைத் தீர்மானிக்கக் கூடிய முடிவுகள் எடுக்கப்படும்போதும் மத்தியக் கமிட்டியில் பல்வேறு பகுதிகளும் பிரதிநிதித்துவப்படுத்துவதும் அவசியம். இதே காரணங்களால் செயல்தந்திரங்கள் பற்றிய கருத்து வேறுபாடுகளை – அவை மிகப் பாரதூரமான இயல்புடையவையாக இருக்கும் பட்சத்தில் – மத்தியக் கமிட்டி ஒடுக்கக் கூடாது. மாறாக, இந்தக் கருத்துக்கள் மத்தியக் கமிட்டியில் பிரதிநிதித்துவம் பெற வேண்டும். ஆனால், சிறு குழு (அரசியல் தலைமைக் குழு) சீரானதாக அமைக்கப்பட்டு இயங்க வேண்டும். உறுதியான மற்றும் நிச்சயமான கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு அரசியல் தலைமைக் குழுவானது தனது சொந்த அதிகாரத்தை மத்தியக் கமிட்டியின் குறிப்பிடத்தக்க பெரும்பான்மையைச் சார்ந்திருக்க வேண்டும்.
இத்தகைய அடிப்படையில் கட்சியின் மத்தியக் கமிட்டியானது குறிப்பாக சட்டபூர்வமான கட்சிகளில், கட்சி உறுப்பினர்களின் நிபந்தனையற்ற நம்பிக்கைக்கு அவசியமான கட்டுப்பாட்டு உறுதியான அடித்தளத்தை மிகவும் குறைந்த காலத்திலேயே அமைக்க இயலும். அதேவேளையில் எழுகின்ற ஊசலாட்டங்கள் மற்றும் தெரிய வருகின்ற விலகல்களை முறியடிக்க முடியும். கட்சியில் இத்தகைய மாறுபட்ட போக்குகள் ஒரு கட்டத்துக்கு வளர்ச்சி அடையும் முன்பு, கட்சிப் பேரவையில் முடிவெடுக்கக் கொண்டுவரப்பட்டு நீக்கப்படக் கூடும்.
வேலைப் பிரிவின், துணைக் கமிட்டிகள்
வேலைகளின் பல்வேறு கிளைகளில் தேர்ச்சியை அடைவதற்கு ஒவ்வொரு மேல்மட்டக் கமிட்டியும் தனது உறுப்பினர்களுக்குள் வேலைகளைப் பிரித்துக் கொள்ள வேண்டும். இதற்குப் பல்வேறு விசேடக் கமிட்டிகள் – எடுத்துக்காட்டாக, பிரச்சாரத்துக்கானவை, பத்திரிகைகளுக்கானவை, தொழிற்சங்க இயக்கங்களை நடத்துவதற்கானவை, செய்தித் தொடர்புகளுக்கானவை, இன்னும் பிறவற்றுக்கானவை என்று கமிட்டிகள் – அமைப்பது அவசியம். ஒவ்வொரு விசேடக் கமிட்டியும் கட்சியின் மத்தியக் கமிட்டிக்கோ, மாவட்டக் கமிட்டிக்கோ கட்டுப்பட்டதாகும்.
அனைத்து கமிட்டிகளின் நடவடிக்கைகள் மற்றும் சேர்க்கையின் (Composition) மீதான கட்டுப்பாடு குறிப்பிட்ட மாவட்டக் கமிட்டிகளின், இறுதியாகப் பார்க்கப்போனால், கட்சியின் மத்தியக் கமிட்டியின் கரங்களில் இருக்க வேண்டும். பத்திரிகை ஆசிரியர்கள், அமைப்பாளர்கள், பிரச்சாரகர்கள் இன்னும் இவை போன்ற பல்வேறு கட்சிப் பணிகளை ஆற்றுபவர்களின் வேலைகள் மற்றும் அலுவலகங்களைக் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மாற்றுவது – கட்சி வேலைகளில் அதிகமாக பாதிப்பை ஏற்படுத்தாதிருக்கும் பட்சத்தில் – உசிதமாகலாம். பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் பிரச்சாரகர்கள் ஏதாவது ஒரு கட்சிக் குழுவில் இருந்துகொண்டு முறையான கட்சிப் பணிகளில் பங்கேற்க வேண்டும்.
கட்சியின் மத்தியக் கமிட்டி
கட்சியின் மத்தியக் கமிட்டியும் இதுபோலவே பொதுவுடைமை அகிலமும் எந்த நேரத்திலும் தமது எல்லா பொதுவுடைமைவாத நிறுவனங்களிலிருந்து உறுப்புகள் மற்றும் அவற்றின் தனிப்பட்ட உறுப்பினர்களிடமிருந்து முழுமையான அறிக்கைகள் பெற உரிமை பெற்றுள்ளன. மத்தியக் கமிட்டியின் பிரதிநிதிகளும் அதனால் அதிகாரம் அளிக்கப்பட்டவர்களும் தீர்மானிக்கும் உரிமையுடன் எல்லாக் கூட்டங்களிலும் கூட்டத் தொடர்களிலும் அனுமதிக்கப்படுவர். கட்சியின் மத்தியக் கமிட்டி சர்வ அதிகாரமும் பொறுப்பும் உள்ள பிரதிநிதிகளை எப்போதும் தன்வசம் வைத்திருக்க வேண்டும். (அதாவது, பல்வேறு மாவட்ட மற்றும் பிராந்திய தலைமை நிறுவனங்களுக்குப் பொறுப்புள்ள அமைப்புகளுக்கும் தமது சுற்றறிக்கைகள், கடிதங்கள் மூலமாக மட்டுமின்றி நேரடியாகவும் வாய்வழியாகவும் அரசியல் – அமைப்புப் பிரச்சினைகள் பற்றி அறிவுறுத்தவும், அறிவிக்கவும் அனுப்பப்படும் கமிசார்களே இப்பிரதிநிதிகள்)
எந்தவொரு நிறுவனமும் கட்சியின் எந்தக் கிளையும், தனிப்பட்ட உறுப்பினரும் கூட தனது விருப்பங்கள், ஆலோசனைகள், விமர்சனங்கள் அல்லது புகார்களை நேரடியாக, எந்த நேரத்திலும் கட்சியின் மத்தியக் கமிட்டிக்கோ அல்லது பொதுவுடைமை அகிலத்துக்கோ அனுப்ப உரிமை உண்டு.
கீழ்மட்ட நிறுவனங்கள் மேல்மட்ட நிறுவனங்களுக்குக் கட்டுப்பட வேண்டும்
கட்சியின் மேல்மட்ட நிறுவனங்களினுடைய அறிவுறுத்தல்கள் மற்றும் முடிவுகளுக்குக் கீழ்மட்ட நிறுவனங்களும், தனிப்பட்ட உறுப்பினர்களும் கட்டுப்பட வேண்டும். தலைமை நிறுவனங்களின் பொறுப்புகளும், கடமை தவறுவது அல்லது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தடுப்பதை ஒரு பகுதி அளவுக்கு மட்டுமே அதிகார பூர்வமாகத் தீர்மானிக்க முடியும். அவர்களது அதிகார பூர்வமான பொறுப்பு எந்த அளவுக்குக் குறைவாக இருக்கிறதோ (உதாரணமாக, சட்டவிரோதக் கட்சிகளில்) அந்த அளவுக்குத் தலைமைக்குக் கட்சி உறுப்பினர்களின் கருத்துக்களை ஆய்வு செய்வது என்ற கடமை அதிகமாக உள்ளது. தலைமை, முறையான மற்றும் நம்பகமான தகவல்களைப் பெற்று முதிர்ச்சி மற்றும் தெள்ளத் தெளிவான பரிசீலனைக்குப் பின், தமது சொந்த முடிவுகளை எடுக்க வேண்டுவது அதன் பொறுப்பாகும்.
கட்சி உறுப்பினர்கள் அனைவரும் தமது நடவடிக்கைகள் அனைத்திலும் எப்போதும் ஒரு போர்க்குணமிக்க நிறுவனத்தின் உறுப்பினர்கள் போல கட்டுப்பாட்டுடன் நடக்க வேண்டிய கடப்பாடு உடையவர்கள்.
பொருத்தமான நடவடிக்கை பற்றி கருத்து வேறுபாடு ஏற்படுமானால், சாத்தியமான அளவு கட்சிக்குள் நடந்த விவாதங்களில் வந்தடைந்த முடிவுகளின்படி, கட்சி நடவடிக்கையானது தீர்மானிக்கப்பட வேண்டும். பிற உறுப்பினர்களின் கருத்துப்படி கட்சியின் அல்லது கட்சிக் கமிட்டியின் முடிவு தவறாக இருந்தாலும் கூட ஒன்றுபட்ட முன்னணியின் ஐக்கியத்துக்குத் தடங்கல் ஏற்படுத்துவதோ, அல்லது முழுமையாக உடைப்பதோ கூடாது. அது கட்டுப்பாடற்ற நடவடிக்கையின் மிகமிக மோசமான உதாரணமாகும். இராணுவ ரீதியில் ஆக மிகப் பெரும் தவறாகும். இந்த உண்மையை தமது பொது நடவடிக்கையில் மாறுபட்ட கருத்துடைய தோழர்கள் காணத் தவறக் கூடாது.
பொதுவுடைமைவாதத்தின் எதிரிகள் அனைவருக்கும் எதிராக பொதுவுடைமைக் கட்சிக்காக எல்லாவற்றுக்கும் மேலாக, பொதுவுடைமை அகிலத்துக்காகப் போராடுவது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரின் அதி உயர்ந்த கடமையாகும். மாறாக, இதை மறந்து பகிரங்கமாகக் கட்சியையோ, பொதுவுடைமை அகிலத்தையோ கண்டனம் செய்பவர் ஒரு மோசமான பொதுவுடைமைவாதியாவார்.
கட்சியின் அமைப்பு விதிகள் பொதுவான கட்சி நிறுவனங்களின் பொதுவுடைமைவாத வளர்ச்சியில் தலைமைக் கட்சி நிறுவனங்களுக்கு உதவக் கூடியதாக – தடையேற்படுத்துவதாக அல்ல – கட்சி நடவடிக்கைகளின் தொடர்ச்சியான வளர்ச்சிக்கு உதவக் கூடியதாக – தடையேற்படுத்துவதாக அல்ல – வகுக்கப்பட வேண்டும். பொதுவுடைமை அகிலத்தின் முடிவுகள் அதில் சேர்ந்துள்ள கட்சிகளால் உடனுக்குடன் அமல்படுத்தப்பட வேண்டும். இதற்காகவே ஏற்கெனவே உள்ள நிறுவன அமைப்பு விதிகளிலும் கட்சி முடிவுகளிலும் தேவையான மாற்றங்களைச் செய்ய வேண்டுமானாலும் பின்னர் செய்து கொள்ளலாம்.
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு (PEOPLE’S RIGHT PROTECTION CENTRE – TAMILNADU)
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு (TAMILNADU ASSOCIATION FOR TRAINED ARCHAKAS)
14 ஆண்டுகளாய் நீதி இல்லை! அர்ச்சக அரசுப் பணியில் அனைத்து இந்துக்களுக்குமான இடஒதுக்கீட்டை தடுப்பது யார்?
நாள்:22.08.2020
பத்திரிகைச் செய்தி
இந்திய அளவில் சமூக நலத் திட்டங்களின் முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. கல்வி, மருத்துவம், தொழில் துறை என பலவற்றில் பிற மாநிலங்களைவிட முன்னணியில் இருக்கும் தமிழகம் சமூக நீதியை நிலைநாட்டுவதிலும் முன்மாதிரியாக விளங்குகிறது. அந்த வகையிலே ‘அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம்’ என்ற சட்டம் இயற்றப்பட்டு சுமார் 14 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையிலும் எந்தவித நீதியும் கிடைக்கப்பெறவில்லை. இறைவன் முன்னால் அனைவரும் சமம் என அனைத்து சமயங்களும் போதித்தாலும் குறிப்பிட்ட சமூகத்தவர்கள் மட்டுமே கருவறை நுழைந்து பூஜை செய்ய முடியும் என்ற நிலை காலங்காலமாக இருந்து வருகிறது.
“அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்” என தமிழ்நாடு சட்டமன்றத்தில் 2-ஆவது முறையாக சட்டம் நிறைவேற்றி இன்றுடன் (ஆகஸ்ட் 22 ) 14 ஆண்டுகள் முடிவடைகிறது.
28-2-2007 , அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் பயிற்சிக்கான சேர்க்கை விண்ணப்பப் படிவம் வெளியானதும் திருவண்ணாமலை கோயிலில் 600 பேர் விண்ணப்பித்தனர். மூன்று நாட்கள் நேர்காணல் நடைபெற்றது. 40 மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டனர். அதுபோல் மதுரை திருச்செந்தூர், பழனி ஆகிய கோயில்களில் 1000க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 120 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள்.
திருவரங்கம், சென்னை பார்த்தசாரதி கோயில்களில் 500க்கும் மேற்பட்டோர் நேர்காணல் செய்யப்பட்டு 80 பேர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். இறுதியில் 206 பேர் மட்டும் ஒன்றரை ஆண்டு காலம் அர்ச்சகர் பயிற்சியை நிறைவு செய்தனர்.
கடவுளைத் தொட்டு வழிபாடு செய்யவேண்டும் என்ற மாணவர்களின் எண்ணம் இன்னும் நிறைவேறவில்லை.
ஆனால், இத்தகைய திறன் படைத்த மாணவர்களுக்கு இன்றுவரை ஆகமக் கோவில்களில் பணிநியமனம் வழங்கப்படவில்லை. குறிப்பாக மதுரை மீனாட்சியம்மன், பழனி, திருச்செந்தூர் முருகன், சிறீரங்கம் ரெங்கநாதன், மயிலை கபாலீசுவரர் உள்ளிட்ட முக்கிய கோவில்களில் பணிநியமனம் எப்படி செய்யப்படுகிறது? என்பது மிகவும் இரகசியமாகவே உள்ளது.
பரம்பரை வழி அர்ச்சகர் உரிமை சட்டப்படி ஒழிக்கப்பட்டு, அதனைப் பல்வேறு வழக்குகளில் உச்சநீதிமன்றம் உறுதி செய்தபின்பும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே 100% தமிழகத்தின் பெரிய கோவில்களில் அர்ச்சகர்களாக உள்ளனர். இவர்கள் நியமனம், வெளிப்படையான அறிவிப்பு, முறையான தேர்வு இன்றி நடைபெற்று வருகிறது. அர்ச்சகர் என்பது அரசுப் பணி. அனைத்து அரசுப் பணிகளும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றியே நியமிக்கப்பட வேண்டும். ஆனால், சட்டம், உச்ச நீதிமன்ற தீர்ப்புகள் செல்லாத இடமாக ஆகமக் கோயில்கள் உள்ளன.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என தமிழக அரசு 2006 –ல் கொண்டு வந்த அரசாணைக்கு எதிரான வழக்கு 2015-ஆம் ஆண்டு தமிழக அரசின் அரசாணை செல்லும், குறிப்பிட்டு கோயில்கள் பணி நியமனம் குறித்து முடிவு செய்யலாம், ஆனால் பிறப்பின் அடிப்படையில் பணிநியமனம் கூடாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. ஆனால் ஆகமப்படி அர்ச்சகர் நியமனமா? அரசியல் சட்டப்படி அர்ச்சகர் நியமனமா? என்பதில் தெளிவு இல்லை. திராவிட இயக்கத்தின் வழிவந்ததாய் சொல்லும் தமிழக அரசு 2015 உச்சநீதிமன்ற தீர்ப்பின் சட்டத்தன்மை குறித்து இன்றுவரை கருத்துச் சொல்லவில்லை.
அதனால் பயிற்சி முடித்த அர்ச்சக மாணவர்களுக்கு பணி நியமனம் வழங்கப்படாமல் இருந்து வந்தது. இரண்டாண்டுகளுக்கு முன்பு மதுரை அர்ச்சக பாடசாலை மாணவர் திரு.மாரிச்சாமி என்பவருக்கு மதுரை புதூர் அய்யப்பன் கோவிலில் பணி வழங்கப்பட்டது. அதன்பிறகு தற்போது தியாகராஜன் என்ற மதுரை பாடசாலை மாணவருக்கு மதுரை நாகமலை பிள்ளையார் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை அர்ச்சகர் பணி வழங்கி உள்ளது.
பேருந்து நிலைய கழிவறையைவிட மோசமான நிலையில் கலைஞர் தொடங்கிய அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகள்
தமிழகம் முழுவதும் சைவத்திலும், வைணவத்திலும் பாடல் பெற்ற பிரபலமான பல நூறு பொதுக் கோவில்கள் இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளன. அர்ச்சகர் பணி காலியிடங்களும் அதிகம் உள்ளது. இந்துமதத்தில் அனைவரும் சமம், பிறப்பால் உயர்வு – தாழ்வு இல்லை. கருவறையில் உள்ள சாதி – தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்று தமிழக அரசு சொன்னது. ஆனால் தமிழக அரசு தயங்கித் தயங்கி, ஒவ்வொரு சாதிக்கும் தனிசுடுகாடு அமைத்துக் கொடுப்பதுபோல, தனியாக உள்ள சிறு கோவில்களில் பிராமணர் அல்லாத மற்ற சாதி மாணவர்களை பணி நியமனம் செய்கிறது. இதுவும் மொத்தமாக செய்யப்படுவதில்லை. நியமனம் செய்யப்படும் இந்த மாணவர்களுக்கு ஓய்வு பெறும் வரையில் பணி உயர்வு கிடையாது. பணி மாறுதல் கிடையாது.
சபரிமலை வழக்கில் உச்சநீதிமன்றம் “தீட்டு என்ற அடிப்படையில் பெண்களை ஒதுக்குவதும் தீண்டாமைதான்”– எனவே அது குற்றம் என்றது. ஆனால் தமிழகத்தில் கடந்த பல நூற்றாண்டுகளாகத் தொடரும் கருவறை தீண்டாமை அரசியல் சட்ட ஆட்சி வந்தபின்பும் நீடிக்கிறது. இப்பிரச்சனையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் தங்கள் நிலைப்பாடுகளைத் தெரிவிக்க வேண்டும்.
பல்லாண்டுகளாக அனைவரும் போராடிப் பெற்ற அர்ச்சகர் பணி நியமன செய்தியைக்கூட மாணவர்கள் வெளியே சொல்ல அஞ்சுகின்றனர். இந்த நிலைமாற வேண்டும். எனவே, தமிழக அரசு இந்து அறநிலையத் துறையின் கீழான முக்கிய கோவில்களில் உள்ள காலியிடங்களில் அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி முடித்த 200-க்கும் மேலான மாணவர்களுக்கு, இந்துசமய அறநிலையத்துறை பணிநியமனம் வழங்க வேண்டும்.
பணிநியமன நிகழ்வு இந்துசமய அறைநிலையத்துறை அமைச்சர், அதிகாரிகள் முன்னிலையில் விழாவாக நடைபெற வேண்டும். எந்தக் காரணமும் இன்றி மூடப்பட்ட அனைத்து சாதி மாணவர்களுக்கான சைவ – வைணவ அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிகளை மீண்டும் திறந்து அர்ச்சகர் பயிற்சி அளிக்க வேண்டும். அனைத்து சாதி அர்ச்சகர் பணி என்பது வெறும் வேலைவாய்ப்பு தொடர்பானது மட்டுமல்ல! இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ள உயர்ந்த கருத்தாக்கங்களான குடிமக்கள் அனைவருக்கும் சமத்துவம், சமவாய்ப்பு, சமூக நீதி, தனி மனித மாண்பு காத்தல் போன்ற அடிப்படை உரிமைகள் தொடர்பானது; கருவறைத் தீண்டாமையை ஒழிப்பது.
எனவே கருவறை தீண்டாமையை ஒழிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு அர்ச்சகர் பள்ளியில் பயிற்சி பெற்ற அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சங்கங்களும், அனைத்து முற்போக்கு அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், தலைவர்களும் வலியுறுத்த வேண்டும் என பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்.
எனவே, தமிழக அரசிடம் !
தமிழகத்தில் அரசு கட்டுப்பாட்டில் 38,000 கோயில்கள் உள்ளன. அதில் தகுதி திறமை உள்ள அனைத்து சாதியினரையும் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பணி அமர்த்த வேண்டும்
சைவ-வைணவ வழிபாட்டு முறையில் முறையாக பயிற்சி பெற மூடப்பட்ட அர்ச்சகர் பயிற்சி நிலையங்களை அரசு மீண்டும் திறக்க வேண்டும்.
என்று கோருகிறோம்.
வழக்கறிஞர்.வாஞ்சிநாதன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் – தமிழ்நாடு
வா.ரங்கநாதன்,
தலைவர்,
அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கம் – தமிழ்நாடு
தகவல் : அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர் சங்கம் – தமிழ்நாடு தொடர்புக்கு : 90474 00485