Wednesday, July 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 240

கொள்ளை நோயில் இருந்து மீண்ட வரலாறு  | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ம் மனித இனத்துக்கு கடந்த 12000 ஆண்டுகளாக மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த ஒரு கொள்ளை நோய் “பெரியம்மை” (Small pox) ஆகும். பெரியம்மை என்பது கிறிஸ்துவின் பிறப்புக்கு முன்பிருந்தே மனித இனத்தை அச்சுறுத்தும் கொள்ளை நோயாகும். கிமு 300 ஆம் ஆண்டு எகிப்த்தை ஆட்சி செய்த பாரோ மன்னனுக்கு இருந்தது என்பதை அவனது பதப்படுத்தப்பட்ட மம்மியில் இருந்த அம்மைத் தழும்புகள் உறுதி செய்தன.

இப்போது கோவிட்-19 எப்படி இருமுவதால் தும்முவதால் பரவுகிறதோ அதே போன்று எளிதில் பரவும் நோயாக இருந்தது. இந்த நோய் தாக்கிய பத்து பேரில் மூன்று பேர் இறந்து வந்தனர். குழத்தைகளை தாக்கினால் 80 சதவிகிதம் மரணம் தான். தப்பிப்பிழைத்தவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத அளவு தழும்புகளை பரிசாகத்தந்து விடும் கொடிய நோய் அது.

பெரியம்மை. மாதிரிப் படம்.

உலகில் முதன் முதலாக அறியப்பட்ட தடுப்பூசி வைத்தியம் “பெரியம்மையை” தடுப்பதற்காக செய்யப்பட்ட “வேரியோலேசன்” (Variolation) எனும் முறையாகும்.
இந்த முறையில் பெரியம்மை வந்து குணமடைந்தவரின் உடலில் ஏற்பட்ட புண், காய்ந்த பின் அந்த சருகை (Scabs) எடுத்து மூலிகையுடன் சேர்த்து இடித்து பொடியாக்கி விடுவார்கள். அந்த பொடியை தோள்களில் புண் உண்டாக்கி அதில் தேய்ப்பது அல்லது சுவாசக்காற்று மூலம் உள்ளே இழுத்துக்கொள்வது என்ற முறையில் மக்களுக்கு கொடுத்து வந்தனர்.

இதன் மூலம் வேரியோலேசன் செய்யப்பட்ட மக்களுக்கு சிறிது நாட்களுக்குப் பிறகு காய்ச்சல், உடல் முழுவதும் படை தோன்றும். ஆனாலும் பெரியம்மை தாக்கி மரணமடையும் மக்களை விட வேரியோலேசன் செய்யப்பட்ட மக்கள் குறைவாகவே இறந்தனர்.

பெரியம்மை வந்து 30% பேர் இறந்தார்கள் என்றால் வேரியோலேசன் செய்யப்பட்டவர்களில் மரண விகிதம் 2% என்று குறைந்தது. இதற்கடுத்தக்கட்ட முயற்சியாக 1796 ஆம் ஆண்டு இங்கிலாந்து மருத்துவரான எட்வர்ட் ஜென்னர்(1749-1823) அவர்கள் பெரியம்மை நோய்க்கு எதிரான தடுப்பூசியை கண்டறியும் ஆயத்தப்பணிகளில் இறங்கினார்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்
கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

பால் பீய்ச்சும் பெண்ணான சாரா நெல்ம்ஸ் மற்றும் தனது தோட்டப்பணியாளரின் ஒன்பது வயது மகனான ஜேம்ஸ் ஃபிப்ஸ் இருவரையும் தனது ஆராய்ச்சிக்கு தேர்ந்தெடுத்தார். நெல்ம்ஸ்க்கு வந்திருந்த பசு அம்மை நோயினால் ஏற்பட்ட புண்ணில் இருந்து சலத்தை எடுத்து சிறுவனான ஃபிப்ஸின் தோள்களில் செலுத்தினார். சிறிது நாட்களுக்கு பிறகு ஃபிப்ஸை பெரியம்மை நோய் வந்தவர்களுடன் பலமுறை நெருங்கி இருக்கச்செய்தார். அத்தனை முறையிலும் ஃபிப்ஸ்க்கு பெரியம்மை நோய் தாக்கவில்லை. இந்த ஆராய்ச்சியை முறைப்படுத்தி 1801ஆம் ஆண்டு தனது அறிவியல் ஆய்வை வெளியிட்டார்.

உலகின் முதல் தடுப்பூசி கண்டறியப்பட்டு விட்டது. கண்டறியப்பட்ட தடுப்பூசி முறை பழைய வேரியோலேசன் முறையை பின்னுக்குத் தள்ளி உலகம் முழுவதும் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சுமார் 12000 ஆண்டுகள் மனித சமுதாயத்திற்கு மிகப்பெரும் அச்சுறுத்தலாக இருந்து வந்த பெரியம்மை 1952 மற்றும் 1953 ஆம் ஆண்டுகளில் முறையே அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் ஒழிக்கப்பட்டது.

என்னதான் வளர்ந்த நாடுகளில் ஒழிக்கப்பட்டாலும் வளரும் நாடுகள் இருக்கும் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் தொடர்ந்து பெரியம்மை நிலைத்து வந்தது. வளர்ந்த நாடுகளில் கிடைத்த நம்பிக்கையான முடிவுகளை ஒட்டி பெரியம்மை நோயை உலகை விட்டு ஒழிக்க முடியும் என்று சபதம் எடுத்து உலக சுகாதார நிறுவனம் (World health organisation) 1959ஆம் ஆண்டு பெரியம்மை ஒழிப்பு இயக்கத்தை ஆரம்பித்தது. தொடக்கத்தில் பெரிய அளவில் ஆதரவும் இல்லை. நிதி ஒதுக்கீடும் இல்லாமல் தோல்வி முகத்தில் இருந்த இந்த இயக்கமானது, 1974 ஆம் ஆண்டு இந்தியாவின் பிஹார், ஒரிசா மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களில் ஏற்பட்ட பெரிய்மமை கொள்ளை நோய்க்கு பிறகு வீரியமடைந்தது.

இதற்கு காரணம் அந்த கொள்ளை நோயில் மட்டும் இந்தியாவில் 15,000 பேர் மரணமடைந்தனர். உலக சுகாதார நிறுவனமும் இந்திய அரசும் இணைந்து
ஜனவரி 1975ஆம் ஆண்டில் “இலக்கு பூஜ்யம்” (TARGET ZERO) என்ற இயக்கத்தை ஆரம்பித்து இந்திய மக்கள் அனைவருக்கும் பெரியம்மை தடுப்பூசியை கொடுக்க ஆரம்பித்தார்கள்.

படிக்க:
எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்
கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

இந்திய மக்கள் அனைவரும் பெரியம்மை தடுப்பூசிகளை தேடித்தேடி போட்டுக்கொண்டனர் என்கிறது வரலாறு. இதன் விளைவாக 1975 ஆம் ஆண்டு மே மாதம் 24ஆம் தேதி பெரியம்மை நோய் இந்தியாவில் இருந்து ஒழிக்கப்பட்டது.
உலகின் கடைசி கொடிய பெரியம்மை (wild variola major) நோயாளியாக 1975ஆம் ஆண்டில் பங்களாதேஷைச் சேர்ந்த ரஹிமா பானு என்ற மூன்று வயது குழந்தை அமைந்தாள்.

ரஹிமா பானு

உலக சுகாதார நிறுவனம் மகிழ்ச்சியான வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்வில் 1980ஆம் ஆண்டு பல நூற்றாண்டுகளாக மனித இனத்தை அச்சுறுத்தி சேதப்படுத்தி வந்த பெரியம்மை நோய் உலகை விட்டு ஒழிக்கப்பட்டு விட்டது என்று
அறிவித்து மகிழ்ந்தது.

இப்போதே உங்களின் வீட்டில் இருக்கும் 1980க்கு முன்பு பிறந்தவர்களின் இடது தோள்களில் இருக்கும் பெரியம்மை தடுப்பூசி தழும்பை ஒருமுறை தொட்டுப்பாருங்கள். அறிவியல் பாதையில் பயணித்தால் எத்தனை பெரிய சுகாதார அச்சுறுத்தலில் இருந்தும் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கை ஏற்படும்.

தாங்கள் காணும் இந்த புகைப்படத்தில் இருப்பது உலகின் கடைசி கொடிய பெரியம்மை தொற்று பெற்ற சிறுமி – ரஹிமா பானு புகைப்படம் எடுக்கப்பட்ட ஆண்டு -1975,வங்கதேசம். (ஆனந்தவிகடன் இதழில் நான் எழுதிய “மீண்டும் மீள்வோம்” எனும் தொடரின் ஒரு பகுதியில் இருந்து பகிர்ந்திருக்கிறேன்)

அன்பார்ந்த பெற்றோர்களே,

21ஆம் நூற்றாண்டில் 2K கிட்ஸ்களுக்கு என்னவென்றே தெரியாத இந்த நோய் குறித்தும் தடுப்பூசிகளின் தேவை குறித்தும் ஒரு சிறு உரை நடத்துங்கள்.
நன்றி

நன்றி : ஃபேஸ்புக்கில்Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் | செய்தி – படங்கள்

மிழகத்தின் பல்வேறு பகுதிகளில் “ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்து !!” என்ற முழக்கத்தை முன்வைத்து, மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 19.08.2020 அன்று ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. அவற்றின் செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்.

***

மதுரை

ரடங்கிற்கு முடிவு கட்டு! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதார கட்டமைப்பைப் பலப்படுத்து! என்ற முழக்கத்தின் அடிப்படையில் மக்கள் அதிகாரத்தின் சார்பில் தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகாரம் மதுரை மண்டலம் சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்திற்கு மதுரை ஒருங்கிணைப்பாளர் தோழர் மருது தலைமை வகித்தார்.

மேலும் மக்கள் கலை இலக்கியக் கழகம் மதுரை மாவட்ட அமைப்பாளர் தோழர் இராமலிங்கம், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மதுரை மாவட்ட துணைத்தலைவர் வழக்கறிஞர் நடராஜன், சமூக, மக்கள் நல ஆர்வலர் எம்.பி ஹிதாயத்துல்லா, மக்கள் அதிகாரம் உசிலை பகுதி தோழர் ஆசை ஆகியோர் இந்நிகழ்வில் கண்டன உரையாற்றினர்.

மத்திய மாநில அரசுகளுக்கு கொரோனாவை ஒழிக்கவும் துப்பில்லை, நிவாரணம் வழங்கவும் வக்கில்லை, என்ன வெங்காயத்துக்கு ஊரடங்கு! அரசு ஊரடங்கை முடிவுக்குக் கொண்டுவராது! மக்கள் போராடித்தான் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம்.
தொடர்புக்கு : 78268 47268.

படிக்க:
ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் செல்லும் வேதாந்தா ! போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம் !!
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை

***

காஞ்சிபுரம்

ரடங்கிற்கு முடிவு கட்டு! பொது சுகாதாரத்தை மேம்படுத்து! என்ற முழக்கத்தை முன்வைத்து காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஒரு நிமிடம் கூட நின்று முழக்கமிடவோ, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்க கூட அனுமதிக்காமல் அராஜகமாக போலீசு நடந்துகொண்டது. தோழர்களை வலுக்கட்டாயமாக வண்டியில் ஏற்றியது. இந்தியா ஒரு ‘ஜனநாயக நாடாம்!’ ஆனால், கருத்து சொல்லவும் போராடவும் மட்டும் உரிமையில்லை.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
காஞ்சிபுரம்.

***

விழுப்புரம்

க்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் விழுப்புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கிற்கு முடிவு கட்டு! பொது சுகாதாரத்தை மேம்படுத்து! என்ற முழக்கத்தி அடிப்படையில் 19.08.2020 அன்று கண்டன ஆர்பாட்டங்கள் நடைபெற்றன.

விக்கிரவாண்டி வட்டம் தொரவி கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

கானை ஒன்றியம் பள்ளியந்தூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

திருவெண்ணைநல்லூர் வட்டம், பொய்கை அரசூர் கிராமத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக நடந்த ஆர்ப்பாட்டம்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் மண்டலம்.

***

தருமபுரி

ரடங்கிற்கு முடிவு கட்டு! பொது சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து! என்ற தலைப்பில் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

ஊரடங்கு என்ற பெயரில் பாசிச அடக்கு முறை சட்டங்களை கொண்டு வருவது, EIA 2020, சட்டத் திருத்தம், புதிய கல்வி கொள்கை போன்ற உழைக்கும் மக்கள் மீதான பல்வேறு அடக்கு முறை சட்டங்களை அமுல்படுத்தி வருகிறது. கொரோனா போன்ற கொள்ளை நோயை ஒழிப்பதற்கு சுகாதார கட்டமைப்பை பலப்படுத்துவதற்கு பதிலாக, கார்ப்பரேட் நல சட்டங்களை இயற்றி மக்களை கொள்ளையடித்து வருகிறது மோடி அரசு.

இவ்வார்ப்பாட்டத்திற்கு மக்கள் அதிகாரம் தோழர் ராஜா தலைமை தாங்கினார். அவரைத் தொடர்ந்து திவிக மாவட்ட செயலாளர் தோழர் சந்தோஷ்குமார், புமாஇமு மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன், தமிழ்புலிகள் கட்சி தோழர் MR. பீமாராவ் விஜய், பென்னாகரம் மக்கள் அதிகாரம் மண்டல குழு உறுப்பினர் தோழர் அருண் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக அப்பகுதி மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா நன்றியுரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு : 97901 38614

***

தஞ்சை

கொரோனா ஊரடங்கிற்கு முடிவுகட்டு! கொரோனாவை தடுப்பதற்கு பொதுச்சுகாதார கட்டமைப்பை பலப்படுத்து என்ற கோரிக்கையை முன்வைத்து மக்கள் தஞ்சை அதிகாரம் சார்பில் 19-08-2020 அன்று காலை 10.30 மணிக்கு தலைமை தபால் நிலையம் முன்பு “கண்டன ஆர்ப்பாட்டம்” நடைபெற்றது.

மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன் தலைமையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நகர செயலர் தோழர் குருசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலர் தோழர் கிருஷ்ணமூர்த்தி, CPML(மக்கள் விடுதலை) மாவட்டசெயலர் தோழர் அருணாச்சலம், ஏ. ஐ.டி.யூ.சி மாவட்ட தலைவர் தோழர் சேவையா, ஆதித்தமிழர் பேரவை தோழர் நாத்திகன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலர் தோழர் சதா. முத்துகிருஷ்ணன், வணிகர் சங்க பேரவை மாவட்டத்தலைவர் திரு கணேசன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து சம்மேளன செயலர் தோழர் துரை. மதிவாணன், தாளாண்மை உழவர் இயக்க நிறுவுனர் தலைவர் தோழர் திருநாவுக்கரசு,  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

ஐம்பதிற்கும் மேற்பட்டதோழர்கள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல்:
மக்கள் அதிகாரம்,
தஞ்சை.

***

ஊரடங்கிற்கு முடிவு கட்டு! கொரோனா தடுப்பிற்கு பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து! என்ற முழக்கத்தின்கீழ் மக்கள் அதிகாரம் நடத்திய தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டத்தின்  ஒரு பகுதியாக 19/08/2020 அன்று மாலை 5 மணியளவில் ஓசூர் ராம்நகர் அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

விடுதலை சிறுத்தைகள், திராவிடர் கழகம் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் மற்றும் பொது மக்கள் என பலரும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மக்கள் அதிகாரத்தின் பாகலூர் பகுதிப் பொறுப்பாளர் தோழர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில்…

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஓசூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் திரு ராமச்சந்திரன், திராவிடர் கழகத்தின் மாவட்டத் தலைவர் திரு. வனவேந்தன், தோழர் சொன்னப்பா (IYF), புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாவட்ட செயலாளர் தோழர் பரசுராமன். ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

இறுதியாக புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியை சார்ந்த தோழர் சங்கர் நன்றி உரையாற்றினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
ஓசூர்.

எஃகுறுதி வாய்ந்த கட்சி வேண்டும் | லெனின்

1

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 10

முதல் பாகம்

8. கட்சி நிறுவனக் கட்டமைப்பு பற்றி

43. பரந்து விரிந்ததாக எஃகுறுதி வாய்ந்ததாக கட்டியமைக்கப்படும் கட்சி நிறுவனமானது, வெறும் புவியியல் பிரிவுகளை அடிப்படையாகக் கொண்ட திட்டத்தின் அடிப்படையில் அமைக்கப்படக் கூடாது. மாறாக, குறிப்பிட்ட மாவட்டத்தின் யதார்த்தமான பொருளாதார, அரசியல் மற்றும் போக்குவரத்து நிலைமைகளுக்குப் பொருத்தமாக அமைக்கப்பட வேண்டும். பிரதானமான மாநகரங்கள், பெரிய தொழிற்சாலை மையங்கள் கட்சி நிறுவனத்தின் ஈர்ப்பு மையமாக்கப்பட வேண்டும்.

ஒரு புதிய கட்சியைக் கட்டியமைக்கும்போது எடுத்த எடுப்பிலேயே நாடு முழுவதும் பரந்து விரிந்த கட்சி நிறுவனத்தைக் கட்டியமைக்கும் போக்கு தோன்றுவதுண்டு. கட்சியின் வசம் உள்ள ஊழியர்கள் வரம்புக்குட்பட்டிருப்பதையும், மிகச் சிலவாக உள்ள இந்த ஊழியர்கள் எல்லா திக்குகளிலும் சிதறி இருப்பதையும் புறக்கணிப்பதாக உள்ளது இப்போக்கு. இது கட்சிக்கு உறுப்பினர் சேர்க்கும் திறனையும் வளர்ச்சியையும் பலவீனப்படுத்துகிறது. இத்தகைய சந்தர்ப்பங்களில் பரந்த அளவில் கட்சி அலுவலகங்கள் தோன்றுகின்றன. ஆனால், கட்சியானது மிகமிகப் பிரதானமான எந்தவொரு தொழில் நகரத்திலும் வேர்விட்டு வளர்வதில் வெற்றி பெறுவதில்லை.

மாநில மற்றும் மாவட்ட நிறுவனங்கள்

44. கட்சி நடவடிக்கை அதிகபட்ச அளவு மையப்படுத்துவதை சாத்தியமாக்குவதற்கு ஒன்றுக்கொன்று கீழ்படிதலுள்ள மேலிருந்து கீழ்வரை கிரமமான பல குழுக்களைக் கொண்டதாக கட்சித் தலைமை பிரித்து அமைப்பது உசிதமானதல்ல. ஒரு பொருளாதார, அரசியல் அல்லது போக்குவரத்து மையமாக விளங்கும் ஒரு மாநகரை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட பகுதி முழுவதையும் – அடுத்தடுத்த மாவட்டங்களை உள்ளடக்கி – அரசியல் பொருளாதாரத் தொடர்புகளை அடிப்படையாகக் கொண்டு விரிந்து பரந்ததாக வலைப்பின்னல் போன்ற நிறுவனங்களை அமைக்க வேண்டும். பெரிய மையத்தைச் சேர்ந்த கட்சிக் கமிட்டி, கட்சியின் பொதுப் பேரவைக்குத் தலைமை அமைப்பாக விளங்க வேண்டும். அங்கிருந்து மாவட்டத்தின் நிறுவன நடவடிக்கையை நடத்த வேண்டும். பகுதி உறுப்பினர்களின் நெருங்கிய தொடர்புடன் தனது கொள்கைகளை வழிநடத்த வேண்டும்.

மாவட்ட மாநாட்டினால் தேர்ந்தெடுக்கப்பட்டு கட்சி மத்தியக் கமிட்டியால் உறுதி செய்யப்பட்ட இத்தகைய ஒரு மாவட்டத்தைச் சேர்ந்த அமைப்பாளர்கள் உள்ளூர் நிறுவனங்களின் கட்சி வாழ்க்கையில் ஊக்கமான பாத்திரமாற்ற கடமைப்பட்டவர்கள் ஆவர். அந்தப் பகுதியைச் சேர்ந்த கட்சி ஊழியர்கள் அம்மாவட்டத்தினுடைய கட்சிக் கமிட்டிக்கு இடையறாது சேர்க்கப்பட வேண்டும். இதனால் அந்தக் கமிட்டிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த பெரு எண்ணிக்கையிலான மக்கள் திரளினருக்கும் இடையில் நெருக்கமான உறவுகள் ஏற்படும். வளர்ந்துவரும் போக்கில் மாவட்டத்தின் தலைமைக் கமிட்டியானது அப்பகுதியின் அரசியல் தலைமை உறுப்பாக வளர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு மாவட்டக் கமிட்டியானது மத்தியக் கமிட்டியுடன் இணைந்து பொதுவான கட்சி நிறுவனத்தில் உண்மையான தலைமைப் பாத்திரத்தை ஆற்றும் உறுப்பாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

இயல்பாகவே கட்சி மாவட்டங்களின் எல்லைகள் அப்பகுதியுடனேயே வரம்பிட்டுக் கொள்வதாக இராது. ஒரு மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் உள்ள உள்ளூர் நிறுவனங்களின் நடவடிக்கைகள் அனைத்தையும் சீரான முறையில் வழிநடத்துகின்ற நிலையில் மாவட்டக் கமிட்டி இருப்பதே இதைத் தீர்மானிக்கும் காரணியாக இருக்க வேண்டும். இந்த நிலை சாத்தியமற்றதானவுடன் மாவட்டமானது பிரிக்கப்பட்டு, புதிய கட்சி மாவட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும்.

பெரிய நாடுகளில் மத்தியக் கமிட்டியையும் உள்ளூர் நிறுவனங்களையும் இணைப்பதற்கான குறிப்பிட்ட இடைநிலை நிறுவனங்களை அமைப்பதும் அவசியமாகும். குறிப்பிட்ட சில சூழ்நிலைகளில் இந்த இடைநிலையிலுள்ள நிறுவனங்களுக்கு, எடுத்துக்காட்டாக மிக அதிக எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்ட ஒரு மாநகரத்துக்கு முக்கிய இடம் கொடுப்பது அவசியமாகும். மையப்படுத்தலைப் பலவீனப்படுத்தும் என்பதால் ஒரு பொதுவிதி என்ற முறையில் இது தவிர்க்கப்பட வேண்டும்.

உள்ளூர் நிறுவனங்கள்

45. நாட்டுப்புற குழுக்கள், சிறு நகரக் கமிட்டிகள், மாவட்டக் கமிட்டிகள், மாநகரத்திலேயே பல்வேறு பகுதிக் கமிட்டிகள் ஆகிய உள்ளூர் நிறுவனங்களில் இருந்து பெரிய இடைப்பட்ட நிலையிலுள்ள நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டும்.

சட்டபூர்வமான கட்சியாக இருக்கையில் உள்ளூர் கட்சி நிறுவனம் ஒன்று தனது உறுப்பினர்கள் அனைவரும் பங்கேற்கக் கூடிய பொதுக்கூட்டங்களை நடத்த இயலாத நிலையை அடையும் அளவுக்கு வளர்ந்துவிட்டிருக்குமானால், அந்த உள்ளூர் நிறுவனம் பிரிக்கப்பட வேண்டும்.

எந்தவொரு கட்சி நிறுவனத்திலும் அதனுடைய உறுப்பினர்கள் அன்றாட நடவடிக்கைகளுக்கான குழுவாக அமைக்கப்பட வேண்டும். பெரிய நிறுவனங்களில் பல்வேறு குழுக்களைச் சேர்த்து கூட்டு அமைப்புகளாக நிறுவுவது உசிதமானது. பொதுவாக, இத்தகைய உறுப்பினர்கள் அவர்கள் வேலை செய்யும் இடத்தில் ஒரு குழுவுக்குள் சேர்க்கப்பட வேண்டும். அல்லது வெவ்வேறு இடங்களில் இருப்பவர்களானால், தமது அன்றாட நடவடிக்கையில் ஒருவரையொருவர் சந்திக்கும்படியான குழுவாக அமைக்கப்பட வேண்டும். இத்தகைய கூட்டுக்குழுவின் நோக்கம் பல்வேறு சிறிய அல்லது வேலைக்கான குழுக்களுக்கிடையில் கட்சி வேலைகளைப் பகிர்ந்தளிப்பது, பல்வேறு நிர்வாகிகளிடமிருந்து வேலை அறிக்கைகளைப் பெறுவது மற்றும் தேர்வுநிலை உறுப்பினர்களைப் பயிற்றுவிப்பது ஆகியவையாகும்.

படிக்க:
தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்
தமிழக அவலம் : இந்தி தெரிந்தால்தான் பதவி உயர்வும் சம்பள உயர்வும் !

பொதுவுடைமை அகிலத்தின் செயற்குழு

46. கட்சி முழுவதுமே பொதுவுடைமை அகிலத்தினுடைய வழிகாட்டுதலின் கீழ் இருக்க வேண்டும். அகிலத்தில் இணைந்துள்ள கட்சிகளின் வேலைகளை நெறிப்படுத்துகின்ற அகிலத்தினுடைய செயற்குழுவின் அறிவுறுத்தல்களும் (கட்டளைகளும்) தீர்மானங்களும் 1. கட்சியின் மத்தியக் கமிட்டிக்கு அல்லது 2. மத்தியக் கமிட்டியின் வாயிலாக விசேடமான கமிட்டிக்கு அல்லது 3. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் என்று அனுப்பப்பட வேண்டும்.

அகிலத்தினுடைய அறிவுறுத்தல்களும் (கட்டளைகளும்) தீர்மானங்களும் கட்சியை, இயல்பாகவே கட்சியின் ஒவ்வொரு உறுப்பினரையும் கட்டுப்படுத்தும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

ஸ்டெர்லைட் தீர்ப்பு : உச்ச நீதிமன்றம் செல்லும் வேதாந்தா ! போராட்டத்தை இறுதிவரை தொடர்வோம் !!

தீர்ப்புக்கு பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு !

யர்நீதிமன்றத்தில் இன்று (18.08.2020) வந்த தீர்ப்பு…. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் இலட்சக்கணக்கில் கலந்துகொண்ட மக்களுக்கும், உயிர்நீத்த போராளிகளுக்கும் கிடைத்த வெற்றி !

தீர்ப்பு வந்த பிறகும் பிஜேபி ஸ்டெர்லைட்டுக்கு ஆதரவு.

ஸ்டெர்லைட்டை உடனடியாக‌ தூத்துக்குடி சிப்காட்டிலிருந்து அகற்றவேண்டும்.

ஸ்டெர்லைட் உச்சநீதிமன்றத்திற்கு செல்லும் !
நாமும் நமது போராட்டத்தை
இறுதிவரை தொடர்வோம் !

வழக்கறிஞர் வாஞ்சிநாதன்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

***

ஸ்டெர்லைட் தீர்ப்பை வரவேற்கிறோம்! – ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு

மிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை பிரித்து அகற்ற வேண்டும்! ஸ்டெர்லைட்டை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் வரவேற்கிறோம். இதற்காக உழைத்த அனைத்து பொதுமக்களுக்கும், கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், இயக்கங்களுக்கும் தூத்துக்குடி மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழக அரசு இந்த தீர்ப்பினை பயன்படுத்தி தூத்துக்குடி மக்களின் கீழ்க்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

  1. ஸ்டெர்லைட் ஆலையை தூத்துக்குடி சிப்காட் வளாகத்தில் இருந்து பிரித்து அகற்ற வேண்டும்.
  2. ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்து கொண்ட பொதுமக்களை துப்பாக்கிச்சூடு நடத்தி படுகொலை செய்த போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
  3. பொதுமக்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும்.
  4. மக்களின் உணர்வுக்கு மதிப்பளித்து ஸ்டெர்லைட் ஆலை மேல்முறையீடு செய்யக்கூடாது.
  5. உயிர் தியாகம் செய்த 15 தியாகிகளுக்கு தூத்துக்குடி மையப்பகுதியில் நினைவு மண்டபம் கட்டப்பட வேண்டும்.

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.
9443584049, 7811940678,
8122275718, 7305172352,
9787195783, 9952763686,
9965345695, 9894574817.

***

ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போரில் முன்னணியில் நின்று போராடி, கொல்லப்பட்ட தியாகிகளுக்கு உயர்நீதிமன்ற தீர்ப்பு சமர்ப்பணம்!!

1. ஸ்நோலின்
2. கிளாஸ்டன்
3. தமிழரசன்
4. ரஞ்சித்
5. ஜான்சி
6. கார்த்திக்
7. அந்தோணி செல்வராஜ்
8. கந்தையா
9. ஜெயராமன்
10. மணிராஜ்
11. காளியப்பன்
12. சண்முகம்
13. செல்வசேகர்
14. பரத்ராஜ்
15. ஜஸ்டின்

ஸ்டெர்லைட் உச்சநீதி மன்றம் சென்றாலும், இறுதிவரை போராடுவோம்.
– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

***

ஸ்டெர்லைட் வழக்கு : உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு!

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டெல்லி உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலையானது மேல்முறையீடு செய்ய இருப்பதால், அதற்கு முன்னர் நமது ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் வழக்கறிஞர் கெ. அரி ராகவன் பெயரில் இன்று (19.08.2020) காலை 10.30 மணிக்கு கேவியட் மனு தாக்கல் செய்யப்படுகிறது என்பதை பொதுமக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

இதன் மூலம் நமது தரப்பு வாதத்தை கேட்காமல் உச்ச நீதிமன்றம் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு.

***

ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டங்களுக்கு கிடைத்த வெற்றி!

சென்னை உயர்நீதி மன்ற வாயிலில் வழக்கறிஞர்கள் இனிப்பு கொடுத்து மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்கிறார்கள்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

– மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

***

இன்றைய தீர்ப்பு வரை அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி!

ஸ்டெர்லைட் எதிர்ப்பு போரில், ஸ்டெர்லைட் எதிர்ப்பு அனைத்து கிராம மக்கள் கூட்டமைப்பு மடத்தூரில் உருவாகியது முதல்…

தொடர் போராட்டங்கள், கூட்டங்கள், ஊர்வலம், பொதுக்கூட்டம், மே 22 மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை, மறு பிரேதப் பரிசோதனை வழக்கு, சட்ட உதவி வழக்கு, தலைமறைவு வாழ்க்கை, சென்னை ஏர்போர்ட்டில் கைது, பாளையங்கோட்டை சிறை, வீடு, அலுவலகம் ரெய்டு, 273 வழக்குகளை ஒரே வழக்காக மாற்றியது, தேசிய பாதுகாப்புச் சட்டம், குண்டர் சட்டம், 100-க்கும் மேலான வழக்குகளை உடைத்தது, பசுமைத் தீர்ப்பாயம், உச்சநீதிமன்றம், இன்றுவரை தூத்துக்குடி மாவட்டத்தில் நுழைய நீடிக்கும் தடை, இன்றைய தீர்ப்பு என அனைத்து நிலைகளிலும் எங்களுடன் பயணித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றி!

வாஞ்சிநாதன்,
வழக்கறிஞர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்,
தமிழ்நாடு.

பொதுவுடைமைக் கட்சியின் பத்திரிகை எவ்வாறு இருக்க வேண்டும்?

1

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 09

முதல் பாகம்

7. கட்சிப் பத்திரிகை பற்றி

பொதுவுடைமைவாதப் பத்திரிகை எப்படி இருக்க வேண்டும்?

36. பொதுவுடைமைவாதப் பத்திரிகை கட்சியால் சோர்வின்றி பேரூக்கத்துடன் வளர்க்கப்பட வேண்டும். கட்சியின் ஆணைகளுக்குக் கீழ்ப்படியாத எந்தப் பத்திரிகையும் பொதுவுடைமைவாதப் பத்திரிகை என்று அங்கீகரிக்கப்படலாகாது.

கூடுதலான பத்திரிகைகளைப் பெற்றிருப்பதைக் காட்டிலும் சிறந்த, தரமான பத்திரிகைகளைப் பெற்றிருக்க கட்சி கூடுதலான கவனம் செலுத்த வேண்டும். ஒவ்வொரு பொதுவுடைமைக் கட்சியும் தரமானதொரு மையப் பத்திரிகையை – சாத்தியமானால் தினசரிப் பத்திரிகையைப் பெற்றிருக்க வேண்டும்.

37. முதலாளித்துவப் பத்திரிகைகளைப் போல, ஏன், “சோசலிஸ்ட்” பத்திரிகையைப் போல, பொதுவுடைமைப் பத்திரிகையானது முதலாளித்துவ நிறுவனமாக இருக்கக் கூடாது. முதலாளித்துவக் கடன் வழங்கும் நிறுவனங்கள் அனைத்திலிருந்தும் நமது பத்திரிகை சுயேட்சையானதாக இருக்க வேண்டும். சட்டபூர்வமான மக்கள்திரள் கட்சிகள் நமது பத்திரிகை இருப்பதைத் தெரிந்து கொள்ள சாத்தியமாக்குகின்ற வகையில் தேர்ச்சியான விளம்பர ஏற்பாடுகள் அவசியம். ஆனால், இது எந்த விதத்திலும் நமது பத்திரிகை பெரிய விளம்பரதாரர்களைச் சார்ந்திருப்பதாக இருக்கக் கூடாது. மாறாக, சமூகப் பிரச்சினைகள் அனைத்திலுமான இதன் பாட்டாளி வர்க்க நோக்கு, இதற்கு மக்கள்திரள் கட்சிகள் அனைத்திலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பொது மக்களின் பரபரப்பான அல்லது பொழுதுபோக்கான விருப்பங்களை நிறைவு செய்வதாக நமது பத்திரிகைகள் இருக்கக் கூடாது. “மதிப்புக்குரியதாக”  ஆகும் முயற்சியில் அவை குட்டி முதலாளித்துவ எழுத்தாளர்கள் அல்லது பத்திரிகை நிபுணர்களின் விமர்சனங்களுக்குப் பணிந்துவிடக் கூடாது.

38. ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் போராடும் தொழிலாளர்களின் நலன்களைப் பற்றி அக்கறை கொள்வதைப் பொதுவுடைமைவாதப் பத்திரிகை முதன்மையானதாக எடுத்துக்கொள்ள வெண்டும். பத்திரிகையானது பாட்டாளி வர்க்கப் புரட்சியின் மிகச் சிறந்த கிளர்ச்சியாளனாகவும் தலையாயப் பிரச்சாரகனாகவும் விளங்க வேண்டும்.

கட்சி உறுப்பினர்களுடைய நடவடிக்கைகளின் மதிப்பிடற்கரிய அனைத்து அனுபவங்களையும் சேகரித்து அவற்றைத் தோழர்களுக்கு எடுத்துக் காட்டி இந்த அனுவபங்களைக் கொண்டு பொதுவுடைமைவாத வேலைமுறையைத் தொடர்ச்சியாக மாற்றி முன்னேற்றத்தைக் கொண்டுவருவது நமது பத்திரிகையின் நோக்கமாகும். இவ்வாறு நமது புரட்சி வேலையின் மிகச் சிறந்த அமைப்பாளனாக பத்திரிகை விளங்கும்.

பொதுவுடைமைவாதப் பத்திரிகையின், குறிப்பாக நமது பிரதான பத்திரிகையின் அனைத்தும் தழுவிய நிறுவன வேலையின் மூலம்தான், நிச்சயமான இந்த நோக்கத்தினைக் கொண்டுதான், நாம் ஜனநாயக மத்தியத்துவத்தை நிறுவுவதும், பொதுவுடைமைக் கட்சியின் வேலைகளில் சிறப்பான பகிர்ந்தளித்தலைச் செய்வதும் முடியும். இவ்வாறுதான் பத்திரிகையானது, தனது வரலாற்றுக் கடமையை ஆற்ற முடியும்.

ஒரு பொதுவுடைமைவாதப் பத்திரிகையை நிறுவுவது

39. பொதுவுடைமைவாதப் பத்திரிகை ஒரு பொதுவுடைமைவாத நிறுவனமாக ஆக முயற்சிக்க வேண்டும். அது ஒரு பாட்டாளி வர்க்கப் போரிடும் நிறுவனமாக இருக்க வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகையானது புரட்சிகரத் தொழிலாளர்களின், பத்திரிகைக்குத் தொடர்ச்சியாகப் படைப்புகளைத் தரும் எழுத்தாளர்கள் அனைவரின், ஆசிரியர்களின், அச்சுக் கோர்ப்பவர்களின், அச்சிடுபவர்களின், விநியோகிப்பவர்களின், உள்ளூர் விசயங்களைச் சேகரித்து பத்திரிகைக்குத் தந்து அவற்றைப் பற்றி பத்திரிகைகளில் விவாதிப்பவர்களின், பத்திரிகைக்காக நாள்தோறும் ஊக்கமாகப் பிரச்சாரம் செய்பவர்களின், இன்னும் பத்திரிகையோடு தொடர்புடையோரின் கூட்டு முயற்சியில் இயங்கும் நிறுவனமாகும். ஒரு பத்திரிகையை உண்மையான போரிடும் நிறுவனமாக, பொதுவுடைமையாளர்களின் பலமிக்க கூட்டு நிறுவனமாக மாற்றுவதற்கு பல நடைமுறை ரீதியிலான நடவடிக்கைகள் தேவை.

ஒரு பொதுவுடைமைவாதி தனது பத்திரிகையுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும். அதற்காக அவர் வேலை செய்யவும், தியாகங்கள் புரியவும் வேண்டும். பத்திரிகை அவரது அன்றாட ஆயுதமாகும். சிறப்பாகப் பயன்படுத்துவதற்குத் தகுதியுடையதாக்க அதை நாள்தோறும் உறுதிப்படுத்தவும், கூர்மைப்படுத்தவும் வேண்டும். பொதுவுடைமைவாதப் பத்திரிகை நிலைத்திருக்க வேண்டுமானால், அதற்குத் தொடர்ச்சியாக அதிக அளவிலான பொருள் மற்றும் நிதியைத் தியாகம் செய்ய வேண்டும். அதன் வளர்ச்சி மற்றும் செழுமைக்கான சாதனங்கள் கட்சி உறுப்பினர்களான அணிகளிடமிருந்து இடையறாது அளிக்கப்பட வேண்டும். பத்திரிகையானது, உறுதியான நிறுவனமாக நிறுவப்படும் நிலைமைக்கு, சட்டபூர்வ மக்கள்திரள் கட்சிகளில் போதுமான எண்ணிக்கையில் பிரதிகள் விற்கப்பட்டு பொதுவுடைமை இயக்கத்திற்கு அதுவே ஒரு பலமிக்க ஆதரவு சக்தியாக வளரும் நிலையை அடையும்வரை இவ்வாறு கீழிருந்து ஆதரவு பெறுவது நீடிக்கும்.

ஒருவர் பத்திரிகையின் ஊக்கமான சந்தா சேகரிப்பவராகவும் அதற்காகப் பிரச்சாரம் செய்பவராகவும் இருப்பது மட்டும் போதாது. அதற்கு படைப்புகள் தருபவராகவும் இருக்க வேண்டும்.

தொழில் நிலையங்களில் நிகழ்கின்ற சமூக அல்லது பொருளாதார முக்கியத்துவமுடைய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் – ஒரு சாதாரண விபத்து முதல் தொழிலாளர்களின் பொதுக்கூட்டம் வரை, ஒரு பயிற்சியாளரை மோசமாக நடத்துவது முதல் நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை வரை – பத்திரிகையில் உடனடியாகத் தெரிவிக்கப்பட வேண்டும். தொழிற்சங்க பிராக்சன் தனது கூட்டங்கள் மற்றும் செயலாளர்களின் முக்கியமான முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் பற்றியும் நமது எதிரிகளின் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளைப் பற்றியும் செய்திகள் தர வேண்டும். வீதிகளிலும் கூட்டங்களிலும் நிகழ்கின்ற பொது வாழ்க்கை பற்றிய விவரங்கள் உன்னிப்பாக கட்சி உறுப்பினர்களுக்குச் சமுதாயத்தைப் பற்றி விமர்சிக்க வாய்ப்புகைள அளிக்கும். இந்த விவரங்கள் நமது கட்சிப் பத்திரிகையில் வெளியிடப்படும்போது, அவை ஏற்கெனவே நாம் எவ்வாறு வாழ்க்கையின் அன்றாடத் தேவைகள் மீது கவனம் செலுத்தி வருகிறோம் என்பதைப் பற்றி மேலோட்டமான வாசகர்களுக்குக்கூட தெளிவாகக் காட்டும்.

தொழிலாளர்களுடன் தொடர்புகள்

தொழிலாளர்களிடமிருந்தும் தொழிலாளர் வர்க்க அமைப்புகளிடமிருந்தும் தொழிலாளர்களது வாழ்க்கையைப் பற்றி வரும் செய்திகள் ஆசிரியர் குழுவால் மிகுந்த கவனத்துடனும் அக்கறையுடனும் கையாளப்பட வேண்டும். இந்தச் செய்திகள் சிறு தகவல்களாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இவை பத்திரிகைக்கும் தொழிலாளர் வாழ்க்கைக்கும் நெருக்கமான பிணைப்பு இருக்கும் உணர்வை வெளிப்படுத்தும். அல்லது தொழிலாளர்களின் அன்றாட வாழ்க்கையின் நடைமுறை உதாரணங்களில் இருந்து பொதுவுடைமைவாதக் கொள்கைகளை விளக்குவதற்காகப் பயன்படுத்த முடியும். ஆசிரியர் குழுவானது தம்மைச் சந்திக்க வரும் தொழிலாளர்களைச் சந்திக்க ஒவ்வொரு நாளும் வசதியான ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும். அப்போது அவர்களது விருப்பங்கள் அல்லது வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றிய புகார்கள் பற்றிக் கேட்டறிந்து அவற்றைக் குறித்துக் கொண்டு கட்சிக்குத் தெளிவுபடுத்துவதற்கு இவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

“பிராவ்தா”வின் முன்னுதாரணம்

முதலாளித்துவக் கட்டமைவின் கீழ் நம்முடைய பத்திரிகைகள் முழுக்கவும் பொதுவுடைமைவாத ஊழியர்களின் கூட்டு நிறுவனமாக ஆவது சாத்தியமில்லை என்பது உண்மையே. எப்படி இருப்பினும் மிகமிகக் கடுமையான சூழ்நிலைகளிலும் கூட இத்தகைய புரட்சிப் பத்திரிகை ஒன்றை நிறுவி அமைப்பதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி ஈட்டுவது சாத்தியமே. 1912-13 காலத்தில் ரஷ்யத் தோழர்களின் “பிராவ்தா”-வால் இது நிரூபிக்கப்பட்டுள்ளது.  ரஷ்யாவினுடைய மிகமிக முக்கியமான மையங்களின் ஊணர்வுபூர்வமான புரட்சிகரத் தொழிலாளர்களின் நிரந்தரமான மற்றும் ஊக்கமான நிறுவனத்தை இது உண்மையில் பிரதிநிதித்துவப்படுத்தியது. பத்திரிகையின் படைப்புகளை மேற்பார்வையிட்டுத் தீர்மானிப்பது, வெளியிடுவது, விநியோகிப்பது ஆகியவற்றைத் தோழர்கள் தமது கூட்டு முயற்சியில் செய்தனர். அவர்களில் பலர் தமது வேலையுடன் சேர்த்து இதைச் செய்ததுடன் தமது ஊதியத்திலிருந்து பணத்தையும் ஒதுக்கினர். இவற்றுக்குக் கைமாறாக, அப்பத்திரிகையானது, அவர்கள் விரும்பிய மிகச் சிறந்த படைப்புகளை அளித்தது. அவர்களுக்கு உடனடியாகத் தேவைப்பட்டவற்றையும் மேலும் அவர்கள் தமது வேலையிலும் போராட்டத்திலும் பயன்படுத்தக் கூடியவற்றையும் அவர்களுக்கு அளித்தது. இத்தகைய பத்திரிகை கட்சி உறுப்பினர்களாலும் பிற புரட்சிகர தொழிலாளர்களாலும் “நமது பத்திரிகை” என்று உண்மையாகவும் யதார்த்தமாகவும் அழைக்கப்பட்டது.

40. கட்சியால் இயக்கப்படும் இயக்கங்களில் நேரடியாகப் பங்கேற்பது போர்க்குணமிக்க பொதுவுடைமைவாதப் பத்திரிகையின் சரியான பண்பாகும். ஒரு குறிப்பிட்ட தருணத்தில் கட்சியின் நடவடிக்கை குறிப்பிட்டதொரு இயக்கத்தில் குவிந்திருக்குமானால், அந்தக் குறிப்பிட்ட இயக்கத்துக்குப் பணியாற்ற பத்திரிகை தனது அனைத்து துறைகளையும் – தலையங்கப் பக்கங்கள் மட்டுமல்ல – ஈடுபடுத்துவது அதன் கடமையாகும். இந்த இயக்கத்துக்கு உதவும்படியாக பத்திரிகை முழுவதிலும் – அதன் உள்ளடக்கம், உருவம் என்ற இரண்டிலும் – அதற்கான பொருளாயத மற்றும் மூலாதார விசயங்களைச் சேகரித்தளிப்பதை ஆசிரியர் குழு செய்ய வேண்டும்.

படிக்க:
சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

41. “நமது பத்திரிகை”க்காக சந்தாக்கள் சேகரிப்பது என்பது ஒரு கட்டமைப்பாக ஆக்கப்பட வேண்டும். தொழிலாளர்களைக் கொதித்தெழச் செய்கின்ற ஒவ்வொரு நிகழ்ச்சியையும் (சந்தர்ப்பத்தையும்) தொழிலாளர்களின் அரசியல் மற்றும் சமூக உணர்வைத் தூண்டிவிடக் கூடிய விசேட நிகழ்ச்சியால் ஏற்படும் ஒவ்வொரு நிலைமையையும் பயன்படுத்திக் கொள்வது முதலாவது விசயம். இவ்வாறாக, ஒவ்வொரு பெரிய வேலை நிறுத்த இயக்கம் அல்லது கதவடைப்பை அடுத்து – அப்போது பத்திரிகை பகிரங்கமாகவும், ஊக்கமாகவும் தொழிலாளர் நலன்களுக்காகக் குரல் கொடுத்திருக்கும் – போராட்டத்தில் பங்கேற்பவர்கள் மத்தியில் சந்தா சேர்ப்பு இயக்கம் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட வேண்டும். பத்திரிகை சந்தா விண்ணப்பங்களையும் பொதுவுடைமையாளர்கள் ஊக்கமாக வேலை செய்யும் தொழில்களிலும், வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற தொழிற்சங்க பிராக்சன்கள் பணியாற்றும் தொழில்களிலும் மட்டுமின்றி, எவ்வெப்போது சாத்தியமோ, அவ்வப்போதெல்லாம் விசேட குழுக்கள் அல்லது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யமு தொழிலாளர்கள் வீடுவீடாகச் சென்று விநியோகிக்க வேண்டும்.

இதுபோலவே, தொழிலாளர்களை எழுச்சியுறச் செய்த ஒவ்வொரு தேர்தல் பிரச்சார இயக்கத்தைத் தொடர்ந்தும் விசேட பிரச்சாரத்துக்கான குழுக்கள் தொழிலாளர்களின் வீடுகளுக்குச் சென்று தொழிலாளர்களின் பத்திரிகைக்காகத் திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்த வேண்டும்.

மிகப் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்களைப் பாதிக்கின்ற விலைவாசி உயர்வு, வேலையின்மை மற்றும் பிற இடர்ப்பாடுகள் வாயிலாகத் தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் போது, பல்வேறு தொழிற்சாலைகளைச் சேர்ந்த தொழில் ரீதியில் அமைக்கப்பட்ட தொழிலாளர்களை வென்றெடுக்க வேண்டும். பத்திரிகைக்காக வீடு வீடாகச் சென்று திட்டமிட்ட பிரச்சாரத்தை நடத்துவதற்காக அவர்களை ஒழுங்கமைக்க சாத்தியமான எல்லா முயற்சிகளையும் செய்ய வேண்டும். ஒவ்வொரு மாதத்திலும் கடைசி வாரம் சந்தா சேர்ப்பு வேலைக்கு மிகமிகப் பொருத்தமான நேரமாகும் என்பதை அனுபவம் காட்டுகிறது. ஒரு மாதத்தின் கடைசி வாரத்தை பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்யும் வேலைக்குப் பயன்படுத்தத் தவறும் எந்த ஒரு உள்ளூர் குழுவும், பொதுவுடைமை இயக்கத்தைப் பரவலாக்குவதைப் பொருத்தவரை கடுமையான கேட்டை விளைவிக்கிறது என்று அர்த்தம். பத்திரிகைக்காகப் பிரச்சாரத்தை நடத்தும் வேலைக்கான குழு எந்தவொரு பொதுக் கூட்டத்திலும் அல்லது எந்தவொரு ஆர்ப்பாட்டத்திலும் இல்லாமல் இருக்கக் கூடாது. அதன் தொடக்கம், இடைவேளை, முடிவு ஆகியவற்றின் போது பத்திரிகைக்கான சந்தா பட்டியலுடன் தோன்ற வேண்டும். ஒவ்வொரு தொழிற்சங்கக் கூட்டத்தின் போது பிராக்சன்களும் ஒவ்வொரு பணிமனைக் கூட்டத்தின் போதும் குழு மற்றும் பிராக்சன்களும் இதே கடமைகளை மேற்கொள்ள வேண்டும்.

கட்சிப் பத்திரிகைக்காக உறுதியாக நிற்பது

42. கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சிப் பத்திரிகைக்காக இடையறாது வாதிட வேண்டும். அதன் எதிரிகளுக்கு எதிராக நின்று உறுதியாகப் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகைகளுக்கு எதிராக உத்வேகத்துடன் போராட வேண்டும். முதலாளித்துவப் பத்திரிகையின் அப்பட்டமான நச்சுத் தன்மையை, போலித் தனத்தை, செய்திகளை இருட்டடிப்பு செய்தலை, எல்லா வகையான இரட்டை மோசடிகளை ஈவிரக்கமின்றி அம்பலப்படுத்த வேண்டும்.

நாள்தோறும் மிகமிகக் கொடியதாகும் வர்க்க மோதல்களை மூடிமறைக்கும் சமூக ஜனநாயக மற்றும் சுயேட்சையான பத்திரிகையின் துரோகத்தனத்தை விடாப்பிடியாக அம்பலப்படுத்தி, அற்பமான விதண்டாவாதத்தில் ஈடுபடாமல், இடையறாத மற்றும் முன்னேறித் தாக்கும் விமர்சனத்தின் மூலம் இப்பத்திரிகைகளை வெற்றிகொள்ள வேண்டும். தொழிற்சங்கம் மற்றும் பிற தொழிலாளர்களது நிறுவனங்களின் உறுப்பினர்களைத் தவறாக வழிநடத்தும், முடமாக்கும் சமூக ஜனநாயக பத்திரிகைகளின் செல்வாக்கிலிருந்து பிய்த்தெடுக்க தொழிற்சங்க மற்றும் பிராக்சன்கள் நிறுவன ரீதியிலான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், வீட்டுக்கு வீடு நமது பத்திரிகைக்காகப் பிரச்சாரம் செய்வதன் மூலம் குறிப்பாக ஆலைத் தொழிலாளர்கள் மத்தியில் செய்வதன் மூலம் சமூக ஜனநாயக பத்திரிகைக்கு எதிரான நமது போராட்டக் கூர்முனை சாதுரியமாகத் திருப்பிவிடப்பட வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தேசிய கல்விக் கொள்கை – நிராகரிக்க வேண்டும் ஏன் ? | இலவச மின்னூல்

1

கொரோனா பெருந்தொற்று சமயத்தில் ஒட்டுமொத்த நாட்டிற்கும், மக்களுக்கும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திவிட்டு தனது கார்ப்பரேட் காவி பாசிச நடவடிக்கையை அமல்படுத்துகிறது பாசிச பாஜக அரசு.

அதன் ஒரு அங்கமாக புதிய கல்விக் கொள்கையை அறிவித்துள்ளது. இதனை கிட்டத்தட்ட தனது முதல் அரசாங்கம் அமைந்த 2014-ம் ஆண்டு முதல் எப்பாடு பட்டாவது அமல்படுத்த வேண்டும் என துடிக்கிறது. ஒவ்வொரு முறையும், இதனை அமல்படுத்த முயற்சித்து தோற்றுப் போயுள்ளது. இந்நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு பல்வேறு கல்வியாளர்களும், முற்போக்காளர்களும் இந்த தேசிய கல்விக் கொள்கையை அம்பலப்படுத்தியிருப்பதைத் தொகுத்து “தேசிய கல்விக் கொள்கை 2019 –  நிராகரிக்க வேண்டும் ஏன் ?” என்ற வெளியீடு புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பில் கொண்டுவரப்பட்டது.

இந்த வெளியீஇடு இன்று புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கும் அனைவருக்கும் சரியான பதிலடி வழங்கியுள்ளது. அதுமட்டுமல்ல போராடும் அமைப்புகளுக்கு ஒரு கருத்தாயுதமாக இச் சிறு வெளியீடு அமையும். எனவே அந்நூலின் Pdf கோப்பை உங்களுக்காக வழங்குகிறோம். படியுங்கள்… பகிருங்கள்…

மின்னூலாக தரவிறக்கம் செய்ய கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

நூல் : தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிக்க வேண்டும் ஏன் ?
வெளியீடு : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி

அச்சு நூலாக வாங்க விரும்புவோர் கீழே உள்ள முகவரியில் தொடர்பு கொள்ளவும் :

வெளியீடு : புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
நெ-7, மாதாகோவில் நகர் முதல் தெரு, நொளம்பூர், சென்னை – 600 095.
தொலைபேசி எண் : 94451 12675
மின்னஞ்சல் : rsyfchennai@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 25.00

ஸ்டெர்லைட் தீர்ப்பு : மக்கள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி !

PP Letter head

நாள் 18-8-2020

பத்திரிகைச் செய்தி

ன்புடையீர் வணக்கம்!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக தமிழக அரசு மூடியது சரிதான் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பளித்து வேதாந்தா நிறுவனத்தின் அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்துள்ளது.

ஸ்டெர்லைட் கம்பெனிக்கு எதிரான இந்த வழக்கில் மக்கள் அதிகாரம் சார்பில் மாநில ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சி.ராஜு, மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் பி.ஆர்.பி.சி. தூத்துக்குடி வழக்கறிஞர் அரிராகவன் ஆகியோர் இணைந்து வாதிட்டனர். மேலும் திரு வைகோ, சி.பி.எம்., வணிகர் சங்கம், பேராசிரியர் பாத்திமாபாபு ஆகியோரும் இந்த வழக்கில் இணைந்து வாதிட்டனர். தமிழக அரசின் வாதங்களை தாண்டி ஸ்டெர்லைட்டின் 25 ஆண்டுகால சட்டமீறல்கள், மோசடி, கழிவுகளை அகற்றாமல் தேக்கி வைத்தது, நீர், காற்று மாசுபட்டது, பசுமை வளையம் அமைக்காமல் ஏமாற்றியது என பல்வேறு உண்மைகளை மக்கள் சார்பில் சேகரித்து நீதிமன்றத்தில் சமர்பிக்கபட்டது.

இத்தீர்ப்பு தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி. 15 பேர்களின் உயிர் தியாகத்திற்கு கிடைத்த மரியாதை. சுற்றுச்சூழலை நாசமாக்கி கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் கம்பெனிகளை விரட்டியடிக்க எப்படிப் போராட வேண்டும் என்பதை உலகிற்குச் சொல்லிக் கொடுத்த முன்னுதாரணமானது தூத்துக்குடி மக்களின் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம்.

தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட் ஆலையின் கடைசி செங்கல்லை பிரித்து கடலில் வீசி எறியும் வரை சட்டப் போராட்டமும் மக்கள் பேராட்டமும் இதே ஒற்றுமை, உறுதியுடன் தொடர வேண்டும்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக, போராடிய மக்கள் மீது போடப்பட்ட அனைத்து வழக்குகளையும் தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும்.

ஸ்டெர்லைட் துப்பாக்கி சூட்டிற்கு பலியான தியாகிகளுக்கும் ஜாலியன்வாலாபாக் போன்று தூத்துக்குடியில் நினைவு தூண் அமைக்க வேண்டும்.

ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்ட அரசு, மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்த தன் சொந்த நாட்டு மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி படுகொலை செய்ததை அனுமதிக்க முடியாது. படுகொலைக்கு காரணமான போலீசார் மற்றும் உத்திரவிட்ட அதிகாரிகள் மீது கொலை வழக்கு பதிவு செய்து தண்டிக்கபட வேண்டும்.

படிக்க:
ஸ்டெர்லைட் படுகொலை : தூத்துக்குடி தியாகிகளின் இரண்டாம் ஆண்டு நினைவு தினம் !
தடைகளை தகர்த்து ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராளிகள் 2-ம் ஆண்டு நினைவேந்தல் !

கார்ப்பரேட்டு கொள்ளைக்கு ஆதரவாக பா.ஜ.க அரசு சுற்றுசூழல் சட்டத்தில் புதிய திருத்தத்தை கொண்டு வர முயலும் இந்த நேரத்தில் இந்த தீர்ப்பு முக்கியமானது.

பாசிச பாஜ.க மற்றும் இந்துத்துவா சக்திகள், ஊடக தொலைகாட்சி விவாதங்களில் பங்கேற்கும் வலதுசாரி கருத்தாளர்கள் துவக்கம் முதலே ஸ்டெர்லைட் ஆலைக்கு ஆதரவாக பேசியதுடன், தூத்துக்குடி மக்கள் போராட்டத்தை, தியாகத்தை கொச்சைபடுத்தினர். மீண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க காவி பாசிசஸ்டுகள் அனைத்து துரோக வேலைகளையும் செய்ய துவங்குவார்கள்.

தமிழக மக்கள் விழிப்போடு இருந்து இவர்களை முறியடிக்க வேண்டும்.

தோழமையுடன்
வழக்கறிஞர் சி.ராஜு
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

நூல் அறிமுகம் :- ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்

ந்தக் குறுநூல் இரண்டு கட்டுரைகளை உள்ளடக்கியது. ஒன்று ஆர்.எஸ்.எஸ் எப்படி இந்துத் தீவிரவாதத்தைக் கட்டமைக்கிறது என்றும் மற்றொன்று எப்படி சிறுபான்மையினர் ஆர்.எஸ்.எஸ்-ஆல் வேட்டையாடப்படுகிறார்கள் என்பதைப் பற்றியும் விளக்குகிறது.

பல்வேறு கலாச்சாரம், மொழி, பண்பாடு கொண்ட தேசத்தில் இந்து பண்பாடு மட்டுமே உயர்ந்தது என்றும் அப்படி இந்துவாக இல்லாதவன் தேசவிரோதி என்றும் பல்வகைப்பட்ட தேசிய இனங்களின் மரபுரிமைகளைப் பறித்து ஒற்றைக் கலாச்சாரத்தை நம்மீது திணிக்கும் பாசிசச் செயல்பாடுகள் கருக்கொண்டதை விளக்கித் தெளிவுபடுத்துகிறார் இந்நூலாசிரியர்.

தேசிய இனங்களின் பொருளாதாரத்தையும், சிறுபான்மையினரின் வணிகத்தையும் வேட்டையாடும் ஆர்.எஸ்.எஸ்-இன் வளர்ச்சிக்கு அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து வரும் நிதிக்கட்டமைப்பையும் அதற்கு சங்பரிவார அமைப்புக்கள் ‘யோகா’ போன்ற நிதி ஆதாரங்களையும் ஆராய்ந்து அவர்களின் தீவிரவாதத்தைத் தோலுரித்துக் காட்டியிருக்கிறார் நூலாசிரியர். நம்மைச் சுற்றி நடக்கும் உண்மைகளை அறிந்துகொள்ள அனைவராலும் படிக்கப்பட வேண்டிய குறுநூல் இது. (பதிப்புரையிலிருந்து).

ஆர்.எஸ்.எஸ் – இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்!

…. ஆரிய இந்து தீவிரவாதத்தின் தத்துவார்த்த கோட்பாடுகளை வடிவமைக்கும் அதிகாரம் படைத்த அமைப்பாக ஆர்.எஸ்.எஸ் என்று அழைக்கப்படும் ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக சங்கம் (Rashtriya Swayamsevak Sangh) செயல்படுகிறது. மத அடிப்படைவாத செயல்களை வி.எச்.பி என்று அழைக்கப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் (Vishva Hindu Parishad) செயல்படுத்தி வருகிறது. இந்த வி.எச்.பி-யின் திட்டங்களைச் செயல்படுத்தும் காவி ரவுடி கும்பலாக பஜ்ரங்தள் (bajran dal) எனும் இளைஞர் அமப்பு இருக்கிறது. காவி அடிப்படைவாதத்தின் மாணவர் அமைப்பாக ஏ.பி.வி.பி (Akhil Bharatiya Vidyarthi Parishad) செயல்பட்டு வருகிறது. இதைப் போன்று 30க்கும் மேற்பட்ட  அமைப்புகள் உள்ளன. இந்த அமைப்புகள் அனைத்தும் கூட்டாக சங் பரிவார் என்று அழைக்கப்படுகிறது.

வேலைக்காக அமெரிக்கா சென்று வாழத் தொடங்கிய இந்திய நடுத்தர வர்க்க இளைஞர்களை கார்ப்பரேட் சாமியார்களின் யோகா, தியானம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ் தன்வயப்படுத்தி வைத்திருக்கிறது. காவி பயங்கரவாத சக்திகள் அமெரிக்காவிலும், சிலந்தி வலைபோல் பரவி பல நிர்வாகக் கட்டுமானங்களையும், உருவாக்கி செயல்பட்டு வருகிறது. சேவா விபா அமைப்பு அமெரிக்காவில் வாழும் இந்தியர்களிடம் நிதி திரட்டி இந்தியாவில் பல மதக்கலவரங்களுக்கு நிதியுதவி செய்து வருகிறது. பல்வேறு அமைப்புகளாக செயல்பட்டாலும் இந்த அமைப்புகளில் உள்ள உறுப்பினர்கள் அனைவரும் இந்து அடிப்படைவாத கூட்டம்தான், ஒருவரே பல அமைப்புகளிலும் உறுப்பினராக இருந்து செயல்பட்டு வருகிறார்கள்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் எச்.எஸ்.எஸ் (HSS – Hindu Swayamsevak Sangh) எனும் பெயரில் செயல்பட்டு வருகிறது. இவ்வமைப்பு அமெரிக்கவாழ் இந்தியர்களை ஒன்றுதிரட்ட FISI (Friends of Indian Society) எனும் அமைப்பை துவங்கி தீவிரமாக ஆட்களை சேர்த்து வருகிறது. அதேபோல் வி.எச்.பி.ஏ (VHPA – Vishva Hindu Parashad of America) எனும் அமைப்பு இந்துமதவாத செயல்களை பரப்பி வருகிறது. இந்திய மக்களுக்கு சேவை செய்யும் எனும் போர்வையில் Sewa International USA Ekal Vidyalaya Foundation – USA எனும் அமைப்புகள் பல்லாயிரக்கணக்கான கோடி பணத்தை அமெரிக்காவில் திரட்டி இந்தியாவில் மதக் கலவரத்திற்கும் இந்து அடிப்படைவாத கட்டமைப்பை விரிவுபடுத்துவதற்கும் உதவி வருகின்றன.

எந்தவிதமான சந்தேகமும் வராமல் இருப்பதற்காக அமெரிக்காவில் 1989ம் ஆண்டு IDRI (Indian Development Relief Fund) எனும் பொது அமைப்பை உருவாக்கி அவற்றின் ஊடாகவும் நிதி திரட்டும் வேலையை செய்து வருகிறது. இந்த IDRF எனும் மைய அமைப்புதான் கடந்த 27 ஆண்டுகளாக பல ஆயிரம் கோடி நிதியை இந்தியாவிற்குள் கொண்டு வந்தது. (நூலிலிருந்து பக்கம் 7-11)

… தமிழ்நாட்டின் சிற்பங்கள், கோயில்கள், பக்தி இலக்கியங்கள், தொல்லியல், வரலாறு அனைத்தையும் தனக்குள் சேர்க்கப் பார்க்கிறது. இப்படித்தான் ஆரிய – வேத – சமஸ்கிருத பண்பாடு இந்திய துணைக்கண்டத்தின் அனைத்துக் கூறுகளையும் உள்வாங்கிக் கொண்டது. தமிழ்த்தேசியத்தின் அடையாளமாக சொல்லப்படும் அனைத்தும் ஆரிய வேத மரபின் நீட்சியாக உருவாக்க ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ் அமைப்பால் விழுங்க முடியாத ஒரே சக்தியாக தந்தைப் பெரியார் நம் மண்ணில் நிற்கிறார். (நூலிலிருந்து பக்கம் 26-28)

ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் குண்டர்களால் வேட்டையாடப்படும் சிறுபான்மையினர்

…. இந்திய சுதந்திரம் அடைந்ததற்குப் பின்பு ஏறத்தாழ 40,000க்கும் அதிகமான மக்கள் மதக்கலவரத்தில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இதில் பெரும் பகுதியினர் சிறுபான்மையின மக்கள், குறிப்பாக இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள்.

…. பாஜக ஆட்சி நடக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் ஏறத்தாழ 2,920 கலவரங்கள் நடந்துள்ளன. அதில் 8,890 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 389 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பெரும்பான்மையானோர் இஸ்லாமியர்கள். இக்கலவரங்களில் பெரிய தொகையான மக்கள் உடைமைகளை இழந்து வாழுகின்றனர். மோடி ஆட்சி செய்யும் கடந்த மூன்று ஆண்டுகளில் மதக்கலவரம் 28% அதிகமாகியுள்ளது. 2016ம் ஆண்டை ஒப்பிடும்போது 17% மதக்கலவரங்கள் அதிகரித்துள்ளன. (நூலிலிருந்து பக்கம் 39, 41)

இந்திய சுதந்திரத்திற்குப் பிறகு 35க்கும் அதிகமான கலவரங்கள் குறித்து விசாரணை நடத்திய ஆணையங்கள் சமர்ப்பித்த அறிக்கைகளில் காவல்துறையும் அரசாங்கமும் கலவரத்திற்கு துணைநின்றதை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளன. குறிப்பாக முக்கியமான இந்துத்துவ மற்றும் பாஜக தலைவர்களின் பெயர்கள் பல்வேறு அறிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுவரை அவர்களுக்கு எந்த தண்டனையும் வழங்கப்பட்டது கிடையாது. ஆர்.எஸ்.எஸ் இந்துத்துவ அமைப்புகள் ஒரு நிறுவனமயப்படுத்தப்பட்ட வன்முறையைச் Institutionalised riot system) செயல்படுத்தி வருகிறது. கலவரங்கள் எப்படி உருவாக்குவது, எந்தப் போக்கில் திசைதிருப்பப்பட வேண்டும், கலவரம் முடிந்ததற்கு பிறகு எவ்வாறு வழக்குகளைக் கையாள வேண்டும் போன்ற அனைத்துத் திட்டங்களும், முன்கூட்டியே திட்டமிட்டு செயல்படுகிறது. இதுபோன்ற கலவரங்களை நடைமுறைப்படுத்துவதில்தான் அவர்களின் அரசியல் எதிர்காலமே அடங்கியுள்ளது. இப்படி வன்முறைச் செயல்களில் ஈடுபடும் இந்துத்துவா குண்டர்கள் மீது எந்த வழக்கும் பதியப்படுவது கிடையாது. மாறாக பாதிப்பிற்கு உள்ளான சிறுபான்மையினர் மீதுதான் அதிக வழக்கு பதியப்பட்டுள்ளது. கடந்த 60 ஆண்டுகளில் கலவரம் குறித்து கைது செய்யப்பட்டவர்களில் அதிகபடியானவர்கள் கலவரத்தால் பாதிக்கப்பட்ட இஸ்லாமியர்கள் என்பது மிக வேதனைக்குரியது.

….. வகுப்புவாத மற்றும் இலக்கு வன்முறைத் தடுப்புச் (நியாயமும், இழப்பீடும் பெறுவதற்கான வழிவகை) சட்டத்தின் முன்வரைவு பல்வேறு முற்போக்கு சக்திகளைக் கொண்டு நீண்ட ஆய்வுக்கு பிறகு வடிவமைக்கப்பட்டது. இதில், 49 திருத்தங்கள் செய்யப்பட்டு மேலும், செழுமைப்படுத்தப்பட்டது. இந்துத்துவ அமைப்புகள் இந்த வரைவை கடுமையாக எதிர்த்து வந்தனர். அதற்குள்ள காரணங்களில் மிக முக்கியமானது பிரிவு 15ல் பின்வருமாறு பரிந்துரைக்கப்பட்டது.

படிக்க:
சென்னை டாஸ்மாக் திறப்பு : மக்கள் பணத்தை கல்லா கட்டும் எடப்பாடி அரசு !
நூல் அறிமுகம் : கடவுள் கற்பனையே | ஏ.எஸ்.கே

“ஒரு அரசு சாராத அமைப்புச் செய்யும் வகுப்பு மற்றும் இலக்கு வன்முறையை அதன் தலைவர் தடுக்கத் தவறினால் அவரின் தொண்டர்கள் செய்த குற்றத்திற்கு பொறுப்பேற்க வேண்டும். அதேபோல் அவரும் குற்றம் இழைத்தவர்களாகக் கருதப்படுவார்”. இந்தச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தால் ஆர்.எஸ்.எஸ் சங்பரிவார் அமைப்புகளின் பெருவாரியான தலைவர்கள் கைது செய்யப்பட்டிருப்பார்கள். குறிப்பாக பாஜகவில் இன்று திகாரத்தில் உள்ளவர்கள் சிறையில் இருந்திருப்பார்கள். (நூலிலிருந்து பக்கம் 56, 60)

நூல் : ஆர்.எஸ்.எஸ்: இந்து தீவிரவாத கட்டமைப்பின் வேர்
ஆசிரியர் : அரண்

வெளியீடு : நிமிர் வெளியீடு, 18, சுப்ரிதா பிளாட்ஸ், அவ்வையார் தெரு,
நங்கநல்லூர், சென்னை – 600 061
தொலைபேசி எண்: 72999 68999
மின்னஞ்சல்: nimirpublications@gmail.com

பக்கங்கள்: 64
விலை: ரூ. 50.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

லாக்டவுனும் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான வன்முறையும் !

லகம் முழுவதும் கோவிட்-19 பொதுமுடக்கம், வேலை இழப்பு, பொருளாதார நெருக்கடி, கடன் சுமை என மக்களை வாட்டி வதைத்து வருகிறது. அதுமட்டுமின்றி கடந்த சில மாதங்களாக பெண்கள் மீதான குடும்ப வன்முறை, குழந்தைகள் மீதான பாலியல் சீண்டல் அதிகரித்து வருகிறது. கோவில் -19 பெரும் தொற்று ஏற்பட்டு சுமார் 8 மாதங்கள் கடந்தும் நம்மை பல்வேறு வகையில் அது துன்புறுத்தி வருகிறது என்பதே நிதர்சன உண்மை.

உலகம் முழுக்க எல்லா நாடுகளும் இதைப்பற்றி பேசி கொண்டுயிருக்கையில் இந்தியா ஓரு பக்கம் புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சுழல் ஆய்வு மேலாண்மை EIA-2020, இரயில்வே தனியார்மயம், பொதுத்துறை தனியார் மயமாக்கம் என நோய் தொற்றை கவனிக்காமல் தனியார் லாப நோக்கத்துக்காக செயல்பட்டு வருகிறது. மறுபுறம் ஊடக சுதந்திரம், முஸ்லிம்களுக்கு எதிரான போக்கு, ராமர் கோவில் பூஜை என வேறு பாதையில் போய்க்கொண்டு இருக்கிறது. உலக நாடுகள் முழுக்க பெண்களுக்கு எதிரான வன்முறைகள் இந்நேரத்தில் அதிகரித்து வருவதில் நாம் அதுகுறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என பேசுகின்றன. இதைப்பற்றி பிரபல நாளேடுகளான நியூயார்க் டைம்ஸ், கார்டியன் போன்ற தளங்கள் பெண்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு மற்றும் ஆலோசனை முகாம்களை துவங்கி நடத்திவருகின்றன.

அதிலும் பொது முடக்கத்தில் பெண்கள் வீட்டிலிருந்து வேலை செய்யும் சுழலை உண்டாக்கியுள்ளது. அலுவலகப்பணி மற்றும் வீட்டுப் பணிகள் என இரண்டும் சேர்ந்து வீட்டில் பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைகிறது. அதுமட்டுமின்றி பெண்கள் தங்களின் குழந்தைகள் கல்வி கற்க ஆன்லைன் வகுப்புகளையும் கண்காணிக்க வேண்டிய உள்ளது. வீட்டிலிருக்கும் ஆண்கள் இதையெல்லாம் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

அதே போல பொது முடக்க காலத்தில் இனணயத்தில் ஆண்கள் அதிமாக போர்ன் (Porn) வீடியோக்கள் பார்பதும் அதிகரித்து வந்துள்ளது. அதிலும் குறிப்பாக குழந்தைகள் சார்ந்த பாலியல் வீடியோக்கள் அதிக அளவில் பகிரப்படுகிறது என உலக சுகாதார நிறுவனமும் சுட்டிக்காட்டியுள்ளது. இதன் மூலம் குழந்தைகள் பாலியில் ரீதியான துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகின்றனர் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது மேலும் Sex Traffic -ஐ ஊக்கவிக்க வகை செய்கிறது. ஆன்லைன் பாலியில் சீண்டல், குடும்ப வன்முறை என ஒருபக்கம் இப்படி எனில் மறுபக்கம் கிராமப்புறங்களில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கோவிட்-19 பொது முடக்கத்தின் போது சுமார் 5,584 குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளது என குழந்தைகள் பாதுகாப்பு மையம் தெரிவிக்கிறது. ஆனாலும் அதுவும் கூட குறைவே. நமக்கு தெரியாமல் ஆயிரம் ஆயிரம் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. கர்நாடகாவில் 118, ஆந்திராவில் 204, தெலுங்கானாவில் 165 என நாடு முழுக்க பல இடங்களில் குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டாலும், வட மற்றும் மத்திய இந்தியாவில் இது கணிசமாக நடைபெற்று வருகிறது என்பதை பார்க்க முடிகிறது.

படிக்க:
கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …
பொள்ளாச்சி பாலியல் வன்முறை : 250 நிர்பயாக்களையும் கைவிடப் போகிறோமா ?

இதைப்போன்றே UNICEF ஆய்வறிக்கையில் 2017-ல் இந்தியாவில் 27% பெண்குழந்தைகள் 18 வயதிற்கு முன்பாகவே திருமணம் செய்து கொள்கிறார்கள் எனவும் அதிலும் குறிப்பாக 7% குழந்தைகளுக்கு 15 வயதிற்கு முன்னரே திருமணம் நடைபெறுகிறது என சொல்கிறது. இந்த கோவிட்-19 பொதுமுடக்கம் மக்களிடம் கணிசமான வேறு சில உந்துதலையும் ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக குறைந்த செலவில் திருமணம், வரதட்சனை போன்ற காரணங்கள் கூறப்படுகிறது. உலகப் பார்வை என்ற அமைப்பு அதிகரித்து வரும் கொரானவால் “மேலும் 4 மில்லியன் கட்டாய குழந்தை திருமணத்திற்கு வாய்ப்புள்ளது” என தெரிவித்துள்ளது. காலவரையற்ற பள்ளி மூடல், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சுகாதார சூழ்நிலை என எல்லாம் பெண் குழந்தைகளின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கி உள்ளது.

குழந்தை திருமணமும் கிராம-நகர்புற இடைவெளியும்

NFHS-4 வெளியிட்ட குழந்தை திருமணங்கள் குறித்த ஆய்வில் கிராமப்புறத்தில் 14.1 % -மாகவும் இது நகர்புறத்தில் 6.9% இருப்பதாக தெரிவிக்கிறது. இந்த இடைவெளி என்பது சுமார் 9% சதவிதம் கல்வியும், வேலைவாய்ப்பு, பொருளாதாரத்திலும் நகரத்தைவிட கிராமங்களில் பின் தாங்கிய சூழ்நிலையிலே இத்திருமணங்கள் நடப்பதாக தெரிவிக்கிறது.

பீகாரை சேர்ந்த 37 வயதான மீனா தனது 15 வயது மகளுடன் டில்லியில் புலம் பெயர் தொழிலாளாராக பணியாற்றி வருகிறார். இவரின் மகன் கிராமத்தில் உறவினர்களுடன் படித்து வருகிறான். பெண் குழந்தை என்பதால் தனியாக கிராமத்தில் விடமுடியாத சூழ்நிலையில் தங்களுடன் டில்லிக்கு அழைத்து வந்துவிட்டோம் என்றும் கூறுகிறார். கடந்தாண்டு தீபாவளி பண்டிகையின் போது தனது மகளுக்கு ஒரு ஆணுடன் நிச்சயம் செய்யப்பட்டுள்ளது. இந்த தீபாவளிக்கு முன் வரதட்சனை பணத்தை கொடுக்க வேண்டும். சமூகத்தில்  பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு என கருதுவது திருமண சடங்கை மட்டுமே. இதற்கு காரணமாக பெண்களின் பாதுகாப்பு, வயது கூட இருப்பின் அதிகமான வரதட்சணை, அவளின் ‘கன்னித்தன்மை’ பாதுகாப்பது போன்ற காரணங்களை சுட்டிக்காட்டுகிறார்கள்.

இதில் எங்கு நாம் அவர்களிடம் பெண்ணின் உரிமையை பற்றி பேசுவது!? இங்கு தான் இந்த இடைவெளி ஏழைக்கும் பணக்காரர்களுக்குமானது என்பது புரிகிறது. குறிப்பாக இச்சூழல் புலம்பெயர் தொழிலாளர்களின் மகள்களை கட்டாய திருமணத்திற்கு தள்ளுகிறது. பொதுமுடக்கம் போன்ற பல காரணங்களால் புலம்பெயர் தொழிலாளர்கள் வெறும் கால்களுடன் சொந்த ஊரை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். இது ஒரு புறம் என்றால் பருவமழை முன்னே பெய்ததால் அசாம், பீகார், ஒடிசா போன்ற மாநிலங்கள் வெள்ளத்தால் பெரும் தாக்கத்தை சந்தித்து வருகிறது. இந்த சுழ்நிலையில் திருமணம் என்பது ஒரு பெண்ணுக்கு செய்யும் சடங்காக எண்ணி, அதைச் செய்வது மேலும் அதிகரித்து வருகிறது.

படிக்க:
நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

Prohibition of Child Marriage Act 2006, என்ற சட்டத்தின் மூலம் குழந்தை திருமணத்தை முழுமையாக தடுக்கமுடிவதில்லை. மேலும் PCM Act 2006, நிறைவேற்றப்பட்டத்திலிருந்து 2017 வரை இப்படியான திருமணங்களின் மூலம் நடக்கும் உடலுறவு, பாலியல் வன்முறையாக கருதப்படவில்லை. அது திருமணத்தின் ஒரு சடங்காக பார்க்கப்படுகிறது. பின் 2017-ற்கு பிறகு Independent through vs Union of India வழக்கு பதிவுச் செய்து 15 வயதிலிருந்து 18 வயதாக மாற்றி பிரிவு 375 IPC -இன் கீழ்  குழந்தைகளுக்கு எதிரானது என வரையறுக்கப்பட்டது. மேலும் இக் குழந்தைகளிடம் விருப்பமின்றி உடலுறவு கொள்வதும் தவறு எனவும், அவை கற்பழிப்பாக கருதப்படும் என்றும் தீர்ப்பளித்தது.

பாலியல் சுரண்டலுக்காக அதிகரிக்கும் குழந்தை கடத்தல் :

கோவிட்-19 பொது முடக்கத்தில் மற்றொரு பாதிப்பு குழந்தை கடத்தல். இது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. கடந்த வாரம் டில்லியில் 15 வயது சிறுமி காணாமல் போனது குறித்து விசாரித்ததில் 9 குழந்தைகள் ஒரே சமயத்தில் வடக்கு டில்லியில் மீட்கப்பட்டனர்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில், சுமார் 89 சதவீதம் பேர், பெண்கள் மற்றும் குழந்தைகளை உழைப்புக்காக கடத்துவது பொதுமுடக்கத்திற்கு பிந்தைய காலகட்டத்தில் “மிகப் பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக” இருக்கும் என்று கூறியுள்ளனர்.

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளை நடத்திய ஆய்வில், உழைப்பு நோக்கத்திற்காக, பொதுமுடக்கத்திற்குப் பிந்தைய காலத்தில் மனித கடத்தல் அதிகரிப்பதற்கு “மிக அதிக வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்துள்ளது.

“தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தகவலின் அடிப்படையில், 76% பேர் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர் கடத்தல் ஆகிய நோக்கத்திற்காக மனிதக் கடத்தலை செய்கின்றனர் என்றும். கிராமப்புறங்களில் அதிக கண்காணிப்பு மற்றும் சட்ட அமலாக்க நிறுவனங்கள் குறித்த விழிப்புணர்வு முக்கிய தேவை என்றும் வலியுறுத்தப்படுகிறது.

வாழ்வாதாரத்தை இழந்து பசி மற்றும் பட்டினியை எதிர்கொள்ளும் குடும்பங்கள், குழந்தை கடத்தல் உட்பட அனைத்து வகையான சுரண்டல்களுக்கும் மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றனர். கடத்தலால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்கள் என்பது தொற்றுநோய்க்குப் பிந்தைய மிகப்பெரிய அச்சுறுத்தல்களில் ஒன்றாக இருக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

குழந்தைகள் கடத்தப்படுவதிலிருந்து தடுத்துப் பாதுகாக்க கடத்தல் நடக்கும் பகுதிகளில் ஒரு பரந்த கட்டாய பாதுகாப்பு வலையமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்று எங்கள் அறிக்கையின் மூலம் நாங்கள் அரசிடம் பரிந்துரைக்கிறோம்,” என்று கைலாஷ் சத்தியார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குநர் ராகேஷ் சங்கர் கூறுகிறார்.

தொற்றுநோய் உலகில் பல தொல்லைகளை கட்டவிழ்த்துவிட்டது. அதில் பெண்கள் மீதான அதன் தாக்கம் குறித்து பேசப்பட வேண்டும் என்பதே இப்போதைய தேவை. மன அழுத்தத்திலிருந்து, நிதி உறுதியற்றதன்மை மற்றும் சுகாதாரத்துக்கான அணுகல் இல்லாமை வரை, வைரஸ் அனைத்து வயதினருக்கும் மற்றும் நாடுகளுக்கும் உள்ள பெண்களுக்கு கடுமையான பாதிப்பை தந்துள்ளது. இந்த அதிகரித்த சுமை பல பெண்களுக்கு மன அழுத்தம், பதட்டம் மற்றும் பிற மனநல பிரச்சினைகளை உருவாக்குக்கிறது. ஏராளமான பெண்கள், சமூக தனிமைப்படுத்தலின் விளைவாக கோபம் மற்றும் அதிக அளவு விரக்தியையும் அனுபவித்திருக்கிறார்கள்.

பெண்களுக்கான தேசிய ஆணையம் கடந்த ஏப்ரல் மாதத்தில் உதவி எண்களை அறிவித்து இருந்தனர். இருந்தும் இப்படி நாடு முழுக்க குடும்ப வன்முறை, குழந்தை கடத்தல், பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதால் அரசு இதை கவனிக்க வேண்டிய கட்டாய தேவையுள்ளது. இதை தொடர்ந்து கேரள அரசாங்கம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இயக்குனர் அனுபாமா குறுச்செய்தி / வாட்ஸ் ஆப் மூலம் மித்ரா 181 சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இரண்டு நாட்களுக்கு முன்பு மகாராட்ஷாவில் பெண்கள் பாதுகாப்பு செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதையெல்லாம் பெண்களை விட ஆண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பதை அனைத்து பெண்களின் கோரிக்கையாக வைக்கின்றேன்.

சிந்துஜா சமூக ஆர்வலர்.

நெருக்கடியின்போது வேலையை முன்னெடுத்துச் செல்வது எப்படி ?

1

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 08

முதல் பாகம்

பகுதிக் கோரிக்கைகளுக்கான போராட்டங்களை ஒருங்கிணைந்த போராட்டங்களாக மாற்றுவது

ந்த முறையில் பொதுவுடைமைவாதச் செல்வாக்கின் கீழ் உறுதிப்படுத்தப்பட்ட புதிய தலைமையானது, செயலூக்கமுள்ள தொழிலாளர் குழுக்களை ஒன்றுகுவிப்பதன் மூலமாக புதிய சக்தியாக்கிக் கொள்கிறது. சோசலிஸ்ட் கட்சிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் தலைமையை உந்தி முன்தள்ளுவதற்கு அல்லது அவற்றின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கு இந்தச் சக்தி பயன்படுத்தப்பட வேண்டும்.

நமது கட்சி மிகச் சிறந்த நிறுவனங்களைப் பெற்றும் அதன் கோரிக்கைகளுக்காக மிகப்பெரும் ஆதரவைப் பெற்றும் உள்ள தொழிற்பகுதிகளில், உள்ளூர் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிற்துறை கவுன்சில்கள் மீது ஒழுங்கமைக்கப்பட்ட நிர்பந்தத்தைக் கொடுப்பதன் மூலம் அப்பகுதிகளில் அங்குமிங்குமாக நடைபெறுகின்ற பொருளாதாரப் போராட்டங்களையும் இதுபோலவே பிற குழுக்களின் வளர்ந்துவரும் போராட்ட இயக்கத்தையும் ஒரு ஒருங்கிணைந்த போராட்டமாக வெற்றிகரமாக இணைக்க வேண்டும்.

இதன் பின்னர் இந்த இயக்கமானது, குறிப்பிட்ட தொழிற்கிளை நலன்களுக்கு அப்பாற்பட்டு ஆரம்ப நிலை கோரிக்கைகள் அனைத்தையும் முன்வைத்து இவற்றை நிறைவேற்றுவதற்கு போராட முன்வர வேண்டும். இதற்காக மாவட்டத்தில் உள்ள எல்லா நிறுவனங்களின் ஒன்றுபட்ட சக்திகளையும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டும். இத்தகைய இயக்கத்தில் போராட்டத்திற்குத் தயாராக உள்ள பாட்டாளி வர்க்கத்தினர் அனைவரின் தலைவனாக பொதுவுடைமைக் கட்சி தன்னை நிரூபித்துக் கொள்ளும். ஆனால், இத்தகைய ஒன்றுபட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தை எதிர்க்கின்ற தொழிற்சங்க அதிகாரத்துவமும் “சோசலிஸ்ட்” கட்சியும் அவற்றின் சொந்த நிறத்தைக் காட்டி அரசியல் ரீதியில் மட்டுமின்றி, நடைமுறை நிறுவன ரீதியிலான கண்ணோட்டத்திலும் தம்மை அம்பலப்படுத்திக் கொள்ளும்.

ஒரு கடுமையான நெருக்கடியின்போது வேலைகளை முன்னெடுத்துச் செல்வது எப்படி?

34. புதிய இயக்கங்கள் தோன்றுவதற்குக் காரணமாக அமைகின்ற கடுமையான அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியின்போது மக்கள்திரளினரைத் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவர பொதுவுடைமைக் கட்சி முயற்சிக்க வேண்டும். குறிப்பிட்ட கோரிக்கைகளுக்காகப் போராடுவதைத் தவிர்த்து சோசலிஸ்ட் கட்சிகள் மற்றும் தொழிற்சங்க உறுப்பினர்களுக்கு நேரடியான வேண்டுகோள் விடுப்பது மிகச் சிறப்பானதாக அமையும். தீர்மானகரமான போராட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிட அவர்களது அதிகாரத்துவத் தலைவர்கள் எத்தணிப்பதையும் மீறி எவ்வாறு வறுமையும் ஒடுக்குமுறையும் அவர்களைத் தமது எஜமானர்களுக்கு எதிராக வேறுவழியின்றிப் போராடும்படி தள்ளி வருகின்றன என்பதையும் அவர்களுக்குச் சுட்டிக்காட்ட வேண்டும்.

கட்சியின் பத்திரிகைகள் குறிப்பாக தினசரி ஏடுகள், நாள்தோறும் வலியுறுத்த வேண்டியது என்னவெனில், அப்போதைய நெருக்கடியான நிலையில் பொதுவுடைமையாளர்கள் நிராதரவான தொழிலாளர்களின் எதிர்வரும் மற்றும் நடைமுறைப் போராட்டத்திற்குத் தலைமையேற்கத் தயாராய் இருக்கிறார்கள், ஒடுக்கப்பட்ட அனைவருக்கும் சாத்தியமான இடங்களில் எல்லாம் பொதுவுடைமையாளர்களின் போரிடும் நிறுவனம் உதவிக்கரம் நீட்டத் தயாராய் இருக்கிறது – என்பதையே. இந்தப் போராட்டங்கள் இன்றி – பழைய நிறுவனங்கள் இப்போராட்டங்களை ஒதுக்கித் தள்ளிவிடவும் அவற்றுக்குத் தடையேற்படுத்துவதற்கும் எவ்வளவுதான் முயன்ற போதிலும் – தொழிலாளர்களின் வளர்ந்துவரும் சகிக்க முடியாத வாழ்க்கை நிலைமைகளை மாற்றுவதற்கு சாத்தியமே இல்லை என்பதை நாம் நாள்தோறும் சுட்டிக்காட்ட வேண்டும்.

தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களில் உள்ள பொதுவுடைமைவாத பிராக்சன்கள் பொதுவுடைமையாளர்கள் சுயதியாகத்துக்குத் தயாராய் இருப்பதையும் இந்தப் போராட்டம் தவிர்க்க முடியாதது என்பதையும் சக தொழிலாளர்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். எப்படியாயினும், அப்போதைய நிலைமையில் எழுகின்ற எல்லா போராட்டங்களையும், இயக்கங்களையும் ஒன்றுபடுத்துவதும், உறுதிப்படுத்துவதும் பிரதானக் கடமையாகும். போராட்டத்தில் ஈர்க்கப்பட்டுள்ள தொழிற்துறை மற்றும் கைவினைத் தொழிலில் உள்ள கருக்குழுக்கள், பிராக்சன்கள் அனைத்தும் தமக்குள் நெருக்கமான இணைப்புகள் வைத்திருப்பது மட்டுமின்றி, வெடித்து எழக்கூடிய எல்லா இயக்கங்களுக்கும் தலைமை அளிக்கவும் வேண்டும். போராட்டத்தை விரிவுபடுத்தவும், ஆழப்படுத்தவும், அதைப் பரவலாக்கவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களுடன் கரம் கோர்த்து பணியாற்றக் கூடிய நிர்வாகிகள் மற்றும் பொறுப்புள்ள ஊழியர்களை உடனுக்குடன் அனுப்பி மாவட்டக் கமிட்டிகளும் மத்தியக் கமிட்டிகளும் இயக்கத்துக்குத் தலைமை அளிக்க வேண்டும்.

அவசியமானால், அரசியல் வழியில் பிரச்சினைக்குப் பொதுத் தீர்வு காணும் கருத்தை வளர்ப்பதற்காக அனைத்து வகைப்பட்ட போராட்டங்களின் பொதுத்தன்மையைச் சுட்டிக்காட்டுவதும், வலியுறுத்துவதும் ஒவ்வொரு இடத்திலுமுள்ள நிறுவனத்தின் பிரதான கடமையாகும். போராட்டங்கள் மேலும் தீவிரமடைந்து பொதுத்தன்மை பெறுகையில் போராட்டத் தலைமைகளை ஒரே மாதிரியான அமைப்புகளாக உருவாக்குவது அவசியமாகும். தொழிற்சங்க அதிகாரத்துவ வேலை நிறுத்தத் தலைவர்கள் தோல்வியுறும் இடங்களில் எல்லாம் பொதுவுடைமையாளர்கள் உடனடியாக முன்வந்து நடவடிக்கைக்கான தீர்மானகரமான நிறுவனத்தை – சாதாரண ஆரம்ப நிறுவனத்தை – உத்திரவாதம் செய்ய வேண்டும். பிராக்சன்கள் மற்றும் தொழில் கவுன்சில்களின் கூட்டங்களிலும் சம்பந்தப்பட்ட தொழில்களின் பொதுக் கூட்டங்களிலும் விடாப்பிடியாக வலியுறுத்துவதன் மூலம், செயல்திறனுள்ள போர்க்குணமிக்க தலைமையின் கீழ் இதனைச் சாதிக்க முடியும்.

இயக்கம் பரவலாகி முதலாளிகளின் நிறுவனங்களின் தாக்குதல்கள் மற்றும் அரசாங்கத் தலையீட்டால் அரசியல் தன்மையைப் பெறும்போது, தொழிலாளர்கள் கவுன்சில்களைத் தேர்ந்தெடுப்பதற்கான ஆரம்பப் பிரச்சாரம் மற்றும் நிறுவன வேலையைத் தொடங்க வேண்டும். அத்தருணத்தில் இவை சாத்தியமாகவும் அவசியமானதாகவும் ஆகலாம்.

இங்குதான் கட்சி உறுப்புகள் அனைத்தும் தொழிலாளர் வர்க்கம் தனது சொந்தப் போராட்ட ஆயுதங்களை வார்த்தெடுப்பதன் மூலமே தனது சொந்த விடுதலையைச் சாதிக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்த வேண்டும். இந்தப் பிரச்சாரத்தில் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கோ அல்லது பழைய சோசலிஸ்ட் கட்சிகளுக்கோ இம்மியளவும் கருணை காட்டக் கூடாது.

35. ஏற்கெனவே பலமாக வளர்ந்துள்ள, குறிப்பாக மக்கள்திரளுடைய பெரிய பொதுவுடைமைக் கட்சிகள் மக்கள்திரள் நடவடிக்கைக்குத் தயாரிப்புகளைச் செய்து கொள்ள வேண்டும். பரந்துபட்ட மக்கள்திரளினருடன் நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டுவருவதற்கான அரசியல் ஆர்ப்பாட்டங்கள், பொருளாதார இயக்கங்கள் மற்றும் இதுபோன்ற உள்ளூர் நடவடிக்கைகள் அனைத்தின் அனுபவங்களை எப்போதும் ஒருங்கிணைத்துக் கொள்ள வேண்டும். தலைமை நிர்வாகிகள், பொறுப்புள்ள கட்சி ஊழியர்கள், நம்பிக்கைக்குரிய பெரிய மற்றும் நடுத்தரத் தொழில்களின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் மாநாடுகளில் எல்லா பெரிய இயக்கங்களிலும் பெற்ற அனுபவங்களைப் பற்றி விவாதிக்க வேண்டும். இம்முறையில் வலைப்பின்னல் போன்ற தொடர்பு தொடர்ச்சியாக அதிகரிக்கும், பலப்படும், நம்பிக்கைக்குரிய தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மேலும் மேலும் போரிடும் உணர்வுடன் எழுச்சியுறுவர். தலைமை நிர்வாகிகள் மற்றும் பொறுப்புளள கட்சி ஊழியர்களுக்கும் பணிமனைப் பிரதிநிதிகளுக்கும் இடையிலான பரஸ்பரம் நம்பிக்கையான தொடர்புகள் (உறவுகள்) இருப்பதானது காலம் கனிவதற்கு முந்திய மக்கள்திரள் அரசியல் நடவடிக்கை இராது என்பதற்கும் சூழ்நிலைகளுக்கும் கட்சியின் உண்மையான பலத்துக்கும் ஏற்ற நடவடிக்கைகளே இருக்கும் என்பதற்கும் நிச்சயமான உத்திரவாதமாகும்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

கட்சி நிறுவனங்களுக்கும் பெரும் மக்கள்திரள் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற பாட்டாளி வர்க்கத்தினருக்குமிடையே நெருக்கமான இணைப்புகளைக் கட்டியமைக்காமல் உண்மையிலேயே புரட்சிகரமான ஒரு இயக்கத்தை வளர்க்க முடியாது. கடந்த ஆண்டு இத்தாலியில் நடந்த சந்தேகத்திற்கிடமற்ற புரட்சிக் கொந்தளிப்பு – தொழிற்சாலைகளைக் கைப்பற்றுவதில் இது தெளிவாக வெளிப்பட்டது – அகாலமாக வீழ்ச்சியுற்றது. இதற்குப் பெருமளவு காரணமாக இருந்தது, தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் துரோகம் – நம்பிக்கை வைக்கத் தகுதி இல்லாத அரசியல் தலைவர்கள் – ஆகியவையாகும். கட்சிக்கும் தொழிலுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகள் அறவே இல்லாதது, அதாவது, கட்சி நலனில் அக்கறையுள்ள அரசியல் அறிவுமிக்க தொழில் நிலையப் பிரதிநிதிகள் இல்லாதது இதற்கு ஓரளவு காரணமாகும். இவ்வாண்டு (1921) ஆங்கிலேய நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும் சந்தேகத்துக்கு இடமின்றி இதே குறைபாடு அளவுக்கு அளவுக்கதிகமாக இருந்ததால் தோல்விக்கு உள்ளாயிற்று.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

ஆளுநர்கள் : மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஒற்றர்கள் !

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் || விடுதலை இராசேந்திரன் | பாகம் – 2

முதல் பாகத்துக்கு

மோடி ஆட்சிக்கு வந்த உடனேயே 2015ஆம் ஆண்டு அருணாசலப் பிரதேசத்தில் அரசியல் சித்து விளையாட்டைத் தொடங்கினார்கள். அங்கே ஆளுநராக வந்த ஜெ.பி. ராஜ்கோல்வா சட்டமன்ற கூட்டத்  தொடர் நடக்கும் தேதியை அவரே முன்கூட்டியே அறிவித்து சட்டசபையைக் கூட்டச் செய்து தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை மெஜாரிட்டி இல்லை என்று டிஸ்மிஸ் செய்தார். காங்கிரசிலிருந்து அதிருப்தியாளர்களை இழுத்து ஒரு பொம்மை ஆட்சியை ஆளுநர் உருவாக்கினார்.

உச்சநீதிமன்றம் தலையிட்டு ஆளுநர் முடிவை நீக்கம் செய்தது. “ஒரு ஆளுநர் தனது சொந்த விருப்பத்துக்காக சட்டமன்றத்தைக் கூட்டுவது, ஆளுநரின் வேலையல்ல. சட்டமன்ற செயல்பாடுகளில் குறுக்கிடுவதாகும்” என்று கூறியது உச்சநீதிமன்ற அமர்வு. தொடர்ந்து உத்தரகாண்ட் மாநிலத்திலும் இந்த ஜனநாயக விரோத மீறல்களை அம்மாநில ஆளுநர் அரங்கேற்றியபோது உச்சநீதிமன்றம் தலையிட்டு தவறைத் திருத்தியது. ஹரிஷ்ராவத் தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சிக்கு எதிராக 69 காங்கிரஸ் சட்டசபை உறுப்பினர்கள் போர்க்கொடி உயர்த்தியதால் மாநில ஆளுநர் கே.கே. பவுல் – ஆட்சியை ‘டிஸ்மிஸ்’ செய்தார். சட்டமன்றத்துக்குள் ஆட்சியின் மெஜாரிட்டி எண்ணிக்கையை நிரூபிக்க வாய்ப்பு தராமல் ஆட்சியை கலைத்தது தவறு என்றது உச்சநீதிமன்றம்.

2017ஆம் ஆண்டு கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆளுநர் பா.ஜ.க.வின் ஏஜெண்டுகளாக மாறி காங்கிரஸ் தனிப் பெரும்பான்மை கட்சியாக தேர்தலில் வெற்றி பெற்றிருந்தாலும் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சியை நிறுவிட தங்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தினர். 2017இல் பீகாரிலும் இதுதான் நடந்தது. ஆளுநராக இருந்த ஆர்.எஸ்.எஸ்.காரரான கேசரிநாத் திரிபாதி, தனிப்பெரும்பான்மை கொண்டிருந்த கட்சியை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை. அய்க்கிய ஜனதாதளத்தின் தலைவராக இருந்த நித்திஷ்குமார், லல்லு பிரசாத்தின் இராஷ்டிரிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தினார். திடீரென்று லல்லு கட்சியின் உறவைத் துண்டித்துக் கொண்டு பா.ஜ.க.வுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க முன் வந்தபோது ஆளுநர் அரசியல் கட்சிக்காரர் போலவே செயல்பட்டார்.

ஆளுநர்கள் தங்களின் ‘கைப்பாவையாக’ செயல்படக்கூடியவர்களாக இருக்க வேண்டும் என்ற காரணத்துக்காக மோடி பிரதமரானவுடன் நான்கு ஆளுநர்கள் பதவி விலக நிர்ப்பந்திக்கப்பட்டனர். எம்.கே. நாராயணன் (மே. வங்கம்), அஷ்வனிகுமார் (நாகாலாந்து), பி.எல். ஜோஷி (உ.பி.). சேகர் தத்தா (சத்திஸ்கர்) ஆகியோர் அந்த ஆளுநர்கள். குஜராத் ஆளுநர் கம்லா பெனிவார் – அங்கிருந்து மிசோராம் மாநிலத்துக்கு தூக்கியடிக்கப்பட்டு, பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

புதுச்சேரி மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டிருக்கும் கிரேன்பேடி, டெல்லி மாநிலத்துக்கான தேர்தலில் பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு படுதோல்வியை சந்தித்தவர். இப்போது புதுச்சேரியின் ‘நியமன முதல்வராக’ செயல்பட்டு வருகிறார். ஆட்சியின் அன்றாடப் பணிகளில் குறுக்கிட்டு, அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு போடுவதும் அதிகாரிகளை அழைத்து ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதும் அவரது வாடிக்கையாகிவிட்டது. இது ஆளுநரின் அதிகார வரம்புக்கு அப்பாற்பட்டது என்று மாநில முதல்வர் நாராயணசாமி பிரதமருக்கு கடிதம் எழுதியும் முதல்வர் கடிதத்தைக் குப்பைக் கூடையில் வீசி விட்டார் மோடி.

கடந்த மே 8, 2018 அன்று புதுவை முதலமைச்சர் அரசு ஆணை ஒன்றை பிறப்பித்தார். ஆளுநர் அல்லது ஆளுநர் அலுவலகம் வழியாக அதிகாரிகளுக்குப் பிறப்பிக்கப்படும் உத்தரவுகளை தொடர்புடைய அமைச்சர்கள் மற்றும் முதலமைச்சரோடு கலந்து பேசி அவர்களின்  ஒப்புதலைப் பெற்ற பிறகே செயல்படுத்த வேண்டும் என்று அந்த ஆணை கூறுகிறது.

இப்போது டில்லி யூனியன்  பிரதேச வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு புதுவை முதல்வர் நாராயணசாமி, கிரேன் பேடிக்கு எழுதிய கடிதம் கடுமையாக எச்சரிக்கிறது.

“உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகாவது உங்களின் ஜனநாயக விரோத செயல்பாடுகளை நிறுத்திக் கொண்டு உங்கள் தவறுகளை சரி செய்து கொள்வீர்கள் என்று நம்புகிறேன். அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவது, சட்டத்துக்குப் புறம்பாக தன்னிச்சையாக அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளைப் பிறப்பிப்பது போன்ற உங்களது செயல்பாடுகள் தொடருமேயானால் உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர வேண்டிய நிலை உருவாகும்” என்று கடுமையாக எச்சரிக்கிறது அந்தக் கடிதம். “உச்சநீதிமன்றத்தில் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பளித்துள்ளதால்   இந்தத் தீர்ப்பு டெல்லி மாநில ஆட்சிக்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களிலும் ஆளுநரின் அதிகாரங்களை வரையறுத்துள்ள தீர்ப்பாகும்” என்று வாதிடுகிறார், புதுவை முதல்வர் நாராயணசாமி.

தமிழக அரசுக்கோ இத்தகைய அரசியல் நிகழ்வுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து எல்லாம் அவர்கள் பார்வைக்குச் சென்றிருக்குமா என்பதுகூட தெரியவில்லை. இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று அமித்ஷா பேசினால்கூட “அப்படி எல்லாம் அவர் பேசியிருக்க மாட்டார், அவர் இந்திப் பேச்சை தமிழில் மொழி பெயர்த்தவர்கள் சரியாகப் புரிந்து கொள்ளாமல் மொழி பெயர்த்திருப்பார்கள்” என்று விளக்கம் கூறும் பரிதாப நிலையில்தான் தமிழக அரசு அடிபணிந்து கிடக்கிறது.

படிக்க :
தமிழக அவலம் : இந்தி தெரிந்தால்தான் பதவி உயர்வும் சம்பள உயர்வும் !
கொரோனா : மாநில அரசுகளுக்கு கடன் வேண்டுமா ? அடிமை சாசனத்தில் கையெழுத்திடு !

ஆளுநர்கள் ஆளும் கட்சிகளின் பிரதிநிதிகளாகவே செயல்படுவது ‘சுதந்திரம்’ பெற்ற காலத்திலேயே தொடங்கிவிட்டது. அப்போது மத்தியிலும் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சிகளின் ஆட்சிகளே நடந்ததால் முரண்பாடுகளுக்கு வாய்ப்புகள் இல்லை; எனவே பிரச்சினைகள் எழவில்லை; அவ்வளவுதான்.

1970களிலும் 1980களிலும் இந்திராவுக்கு எதிராக செயல்பட்ட மாநில அரசுகளை ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்திராகாந்தி கலைத்தார். மொரார்ஜி தலைமையில் ஜனதா அமைச்சரவை பதவி ஏற்ற 1977ஆம் ஆண்டிலும் காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த மாநிலங்களை ஆளுநர் அதிகாரத்தைப் பயன்படுத்திக் கலைத்து, அதே தவறைச் செய்தார்கள்.

உலகத்திலேயே மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை கேரளாவில் ஈ.எம்.எஸ். நம்பூதிபாத் தலைமையில் 1957இல் ஏப்.5ஆம் தேதி அமைந்தது. போதிய மெஜாரிட்டி எண்ணிக்கை இல்லாத நிலையில் அய்ந்து சுயேச்சை உறுப்பினர் ஆதரவுடன் அமைக்கப்பட்ட அமைச்சரவையை இரண்டே ஆண்டுகளில் 1959, ஜூன் 31இல் அன்றைய நேரு ஆட்சி டிஸ்மிஸ் செய்தது. அந்த அமைச்சரவை கொண்டு வந்த நில சீர்த்திருத்தம் மற்றும் கல்வி மசோதாவுக்கு மதவாதிகளிடையே எழுந்த எதிர்ப்பு இதற்குக் காரணமாகக் காட்டப் பட்டது. இந்தியாவில் ‘356’ ஆவது விதியைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஜனநாயகப் படுகொலையைத் தொடங்கி வைத்தது நேருதான். அவருக்கு இந்த விபரீத ஆலோ சனையைக் கூறியவர் அன்றைய காங்கிரஸ் தலைவராக இருந்த அவரது மகள் இந்திரா காந்தி.

இந்தியாவில் ஒரே கட்சி ஆட்சி என்ற நிலை மாறி, மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத கட்சிகள் ஆட்சிக்கு வரத் தொடங்கின. அடுத்தக்கட்டமாக கூட்டணி ஆட்சிகளின் ‘யுகம்’ மத்தியிலும் மாநிலங்களிலும் தொடங்கியது. இப்போது ஆளுநர் பதவியும் அதற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் முக்கியத்துவமும் அதிகரித்து விட்டன.

ஆளுநர் பதவி குறித்து அரசியல் நிர்ணய சபையிலேயே கடும் விவாதங்கள் நடந்தன. அந்த விவாதங்களைப் படித்தால், மாநிலங்களைக் கண்காணிக்கக்கூடிய மத்திய அரசின் ஒற்றர்களாக செயல்படுவதற்கே ஆளுநர் பதவி உருவாக்கப்பட்டது என்ற முடிவுக்கு வந்து விடலாம். அரசியல் சட்ட உருவாக்கத்திற்கான நகல் வரைவுக் குழு ஆளுநர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்று தனது வரைவில் குறிப்பிட்டிருந்தது. இது குறித்து நடந்த விவாதத்தில் இந்த நடைமுறை இரண்டு முதலமைச்சர்களை உருவாக்குவதாகிவிடும் என்று கூறி இந்த முடிவு புறந்தள்ளப்பட்டது. கவர்னர் பதவிக்கான வேட்பாளர்கள் பட்டியல் ஒன்றைத் தயாரித்து சட்டமன்றத்தின் ஒப்புதலைப் பெற்று பட்டியலிலிருந்து ஒருவரை தேர்வு செய்ய குடியரசுத் தலைவருக்கு அனுப்பலாம் என்பது இரண்டாவது ஆலோசனையாக முன் வைக்கப்பட்டது. இந்த முறையினால் மாநிலத்தில் ஆளும் கட்சியின் ஆதரவு பெற்றவர்தான் ஆளுநராக வர முடியும். பிறகு மாநில அரசும் ஆளுநரும் கைகோர்த்து செயல்படுவார்கள் என்பதால் இந்த ஆலோசனையும் புறந்தள்ளப்பட்டது.

ஒன்றை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் பிரிந்து செல்லும் வாய்ப்புகள் உருவாகிவிடலாம் என்ற அச்சமும் அதைத் தடுப்பதற்கான வலிமையான சட்டப் பிரிவுகளை உருவாக்கிட வேண்டும் என்ற துடிப்புமே அரசியல் நிர்ணய சபையில் காங்கிரஸ் தலைவர்களின் உளவியலாக இருந்தது. அந்த உணர்வுகளே அரசியல் சட்ட உருவாக்கத்துக்கு அடிநாதமாக இருந்தன. மாநிலத்து மக்களுக்கு நெருக்கமான ஒருவரை ஆளுநராக வரவிடக் கூடாது என்பதில் நேரு மிகவும் உறுதியாக இருந்தார். ஆளுநர் அந்த மாநிலத்துக்கு தொடர் பில்லாதவர்களாக வேறு மாநிலங்களிலிருந்து நியமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தை நேரு வலியுறுத்தினார். 1949 மே 31 அன்று நிர்ணய சபையில் நேரு இவ்வாறு கூறினார்.

“ஆளுநர்கள் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்களாக இருந்தால் மாகாணப் பிரிவினை உணர்ச்சிகளையும், குறுகிய மாகாண உணர்வுகளையும் ஊக்கப்படுத்திவிடும்” என்றார்.

மற்றொரு உறுப்பினரான பி.எஸ். தேஷ்முக் வெளிப்படையாகவே கேட்டார்:

“முதல்வரும், ஆளுநரும் எல்லா பிரச்சினையிலும் ஒன்றுபட்டு நின்று, மத்திய அரசை எதிர்ப்பதிலும் அவர்கள் ஒன்றுபட்டு நின்றால், பிறகு என்ன செய்ய முடியும்? மத்திய அரசின் ஆணைகளையும் கட்டளைகளையும் மாநில அரசு செயல்படுத்த மறுத்தால் என்ன செய்வது? மத்திய அரசு மாநில அரசு மீது படை எடுத்துச் செல்லுமா?” என்று கேட்டார்.

இறுதியாக ஆளுநர் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுபவராகவே இருப்பார் என்ற முடிவு எடுக்கப்பட்டது. இதற்கான திருத்தத்தை இறுதியாகக் கொண்டு வந்தவர் பிரஜேஸ்வர் பிரசாத்.  “மத்திய அரசின் அதிகாரம் அனைத்து மாகாணங்களிலும் நிலை நாட்டப்பட்டாக வேண்டும். இது அவசியமானது” என்பது தீர்மானத்துக்கு அவர் கூறிய காரணம்.

படிக்க :
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !
இஷ்ரத் ஜஹான் போலி மோதல் கொலை : மோடியின் கூட்டாளி முர்முவுக்கு கவர்னர் பதவி !

பிரிட்டிஷ் இந்தியாவில் 1935ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக உருவாக்கப்பட்ட சட்டத்தின் கீழ் ‘மாகாண ஆட்சி’களைக் கண்காணிக்க ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு தங்கு தடையற்ற அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்தியாவின் ‘சுதந்திரத்துக்கு’ப் பிறகும் அறுக்க முடியாத அடிமைச் சங்கிலியாக ஆளுநர் பதவி தொடருகிறது. ஆளுநருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களைக் குறைத்து அமைச்சரவையின் ஆலோசனைப்படி செயல்பட வேண்டும் என்று சட்டம் அவர்களுக்கான அதிகாரங்களைக் கட்டுப்படுத்தினாலும் ஆளுநர்கள் தங்கள் ‘உசிதம்போல்’ செயல்படக் கூடிய அதிகாரங்களை சட்டம் வழங்கியிருக்கிறது. அந்த அதிகாரங்கள் எவை என்ற வரையறைகளும் சட்டத்தில் தெளிவாக்கப்படவில்லை. இப்போது ‘உசிதம்போல்’ என்பது தான் சார்ந்துள்ள கட்சித் தலைமையின் ‘உசிதம்போல்’ செயல்படுதல் என்ற நிலைக்கு வந்து விட்டது.

ஆளுநர் மாளிகை ஆடம்பரங்களில் வீண் செலவுகளில் கொழுத்துப் போய் கிடக்கின்றன. நேருவின் சகோதரியாகிய விஜயலட்சுமி பண்டிட், மகாராஷ்டிர மாநிலத்தின் ஆளுநராக சிறிது காலம் பணியாற்றி, பிறகு பதவியைத் துறந்தார். “ஆளுநர் பதவிக்குக் கிடைக்கிற அதிக ஊதியமும், வசதிகளுமே ஒருவரை அப்பதவிக்குத் தூண்டுகின்றன. ஆளுநர் பதவி பயனற்றது. அரசமைப்புச் சட்டத்திலிருந்தே ஆளுநர் பதவியை அகற்றி விடவேண்டும்” என்று பதவி விலகியதற்குப் பிறகு அவர் துணிந்து கூறினார்.

‘ஆட்டுக்குத் தாடி தேவை இல்லை; அதுபோல் ஆளுநர் பதவியும் நாட்டுக்குத் தேவை இல்லை’ என்பதே தொடக்கக்கால தி.மு.க.வின் கொள்கையாகவும் இருந்தது.

மத்திய மாநில அரசுகளின் உரிமைகள் மறுபரிசீலனைக்குள்ளாக்கப்பட வேண்டிய சூழல் இப்போது உருவாகிவிட்டது. இது குறித்து ஆராய ஏற்கனவே பல ஆணையங்கள் நியமிக்கப்பட்டன. ஆந்திராவில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியிலிருந்த முதல்வர் என்.டி.ராமாராவ் வெளிநாடு சிகிச்சைக்குச் சென்ற காலத்தில் அவரது கட்சியிலிருந்து சில துரோகிகளைப் பிடித்து அன்றைய பிரதமர் இந்திரா, ‘தெலுங்கு தேச’க் கட்சி ஆட்சியைக் கவிழ்த்து, ‘பாஸ்கர் ராவ்’ என்ற துரோகியை ஆளுநரைப் பயன்படுத்தி முதல்வராக்கினார். ஆந்திராவே கொந்தளித்தது. மக்கள் எழுச்சிக்கு அடி பணிய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட இந்திரா காந்தி மீண்டும் என்.டி. ராமராவை முதல்வராக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டார். இது மக்கள் சக்தி நிகழ்த்திய வரலாற்றுச் சாதனையாகும். மக்கள் எதிர்ப்பை திசை திருப்ப சர்க்காரியா ஆணையத்தையும் உடனே இந்திரா நியமித்தார். மாநில உரிமைகளை வலியுறுத்திய அந்த ஆணையத்தின் பரிந்துரை அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

மாநிலக் கட்சிகள் மக்கள் செல்வாக்கைப் பெற்று வளர்ந்து வருகின்றன தேசியக் கட்சிகள். ‘இந்தியாவின் தேசிய முரண்பாடுகளில்’ தங்களை நிலைப்படுத்திக் கொள்ள முடியாமல் சிதறிக் கொண்டிருக்கின்றன. அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட சூழலில் இருந்த இந்திய தேசியத்தின் அடையாளம், இப்போது மாநிலங்களின் தன்னாட்சி  அடையாளமாக உருத்திரட்சிப் பெற்று வருகிறது. சர்க்காரியா ஆணையம் மட்டுமல்ல; மத்திய மாநில உறவுகளை மறு பரிசீலனைக்கு உட்படுத்த நிர்வாக சீர்திருத்த ஆணையம் (1966), அரசியல் சட்ட செயல்பாடுகளை மறு ஆய்வுக் குள்ளாக்கும் தேசிய ஆணையம் (2000), புஞ்சி ஆணையம் (2007) என்று பல்வேறு ஆணையங்கள் நியமிக்கப்பட்டு மாநிலங்களின் உரிமைகளுக்கான பரிந்துரைகளை வழங்கியிருக்கின்றன.

மாநில சுயாட்சி முழக்கத்தை முன் வைத்த தி.மு.க. ஆட்சியிலிருந்தபோது மத்திய மாநில உறவுகள் குறித்து ஆராய டாக்டர் பி.வி. இராசமன்னார் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அக்குழுவின் பரிந்துரையை தமிழக அரசு ஏற்றது. அதனடிப்படையில் 1974ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் நாள் தமிழ்நாடு சட்டசபையில் மாநில சுயாட்சித் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார், அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதி.

“இராஜமன்னார் குழு பரிந்துரைகள் மீது தமிழ்நாடு அரசு அளித்திருக்கும் கருத் துரைகளை ஏற்று மத்திய அரசு ஏற்று, மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி கொண்ட உண்மையான கூட்டாட்சி முறையை உருவாக்கும் அடிப்படையில் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் உடனடியாக திருத்தப்பட வேண்டும் என்று இப்பேரவை முடிவு செய்கிறது” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்மானம் தமிழக சட்டமன்றத்தில் நிறை வேற்றப்பட்டது.

1974இல் கூட்டாட்சிக்கும் சுயாட்சிக்கும் குரல் கொடுத்த அதே தமிழக சட்டப் பேரவை இப்போது ஒற்றையாட்சிக்கு வாழ்த்துப் பா பாடிக் கொண்டிருப்பது நகை முரண்!

மாநிலங்களின் தனித்துவங்கள்  அழிக்கப்பட்டும் பறிக்கப்பட்டும் ஒற்றை ஆட்சி என்ற பார்ப்பனிய இந்துத்துவ படுகுழிக்குள் தமிழினம் புதைக்கப்பட்டும் வருகிறது.

மத்தியில் ஏற்படும் ஆட்சி மாற்றங்களில் இதற்கான தீர்வுகள் நிச்சயமாக இல்லை. அன்னிய இந்திய பார்ப்பனிய எதிர்ப்புக் களங்களை நோக்கி மக்களைத் திரட்டுவதே இதற்கான விடியலை உருவாக்கும்.

(முற்றும்)

விடுதலை இராசேந்திரன்

ஆதாரங்கள் :

Front Line, Economic and Political Weekly, மாநில சுயாட்சி – முரசொலி மாறன், மலர்க மாநில சுயாட்சி – கு.ச. ஆனந்தன், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘இந்துஸ்தான் டைம்ஸ்’, ‘மக்கள் முன்னணி’

disclaimer

கொரோனா வந்தாகூட ஒரேயடியா போய்ச் சேந்திரலாம் போல …

கொரோனா பேரிடரைக் காரணமாகக் காட்டி, மத்திய மாநில அரசுகள் கார்ப்பரேட்டுகளுக்கு சேவை செய்வதிலேயே மும்முரமா இருந்து வருகிறது. இதில், “யானை புகுந்த சோளக்கொள்ளையைப் போல” சிறு குறு தொழில் செய்வோர் தங்களது வாழ்வு நசுக்கப்பட்டு தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் பல நூறுகளையோ, சில ஆயிரங்களையோ முதலீடுகளாய் போட்டு தொழில் செய்யும் நடைபாதை வியாபாரிகளின் நிலையைச் சொல்லவா வேண்டும்.

அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டவர்களின் வாழ்விலிருந்து …

***

ஜோதியப்பன், வயது 70.

நகராட்சி மருத்துவமனை வாசலில் மரத்தடி நிழலில் வீட்டுக்குத் தேவையான சிறு பொருட்களை விற்பவர்.

கொரோனா 60 வயசுக்கும் மேலானவர்களை அதிகம் தாக்கும், வெளியில் நடமாடக் கூடாது என்று அரசு சொல்கிறதே, உங்களுக்குத் தெரியாதா என்றோம். அவர் நம்மை ஏற இறங்கப் பார்த்தார்.

சார் அரசு சொல்றத நான் கேட்டுக்கிறேன், என் வயிறு கேக்குதில்லயே சார். நான் என்ன பண்றது. ரோட்டுல கடைய போடாதேன்னு டெய்லி போலீசு தொறத்துது; வயிறு ரோட்டுக்குப் போடான்னு தொறத்துது. யார் சொல்றத சார் நான் கேக்குறது? என்றார் பரிதாபமாக.

பூட்டு, கீ செயின், ஸ்பேனர், நகவெட்டி, ஊசி, தாயக்கட்டை, கத்திரி இப்படி, நான் விக்கிறதே 50 ரூபா பொருள்தான். இதையும் 10, 20 கம்மியா கொடுன்னு பேரம் பேசுறாங்க. கேக்குறவுங்க மேலே கோபப்பட்டு பிரயோஜனமில்லை. அவங்ககிட்டே பணம் இருந்தாத்தானே கேக்குறத கொடுப்பாங்க.

எனக்கு வீடு வேளச்சேரியில. காலையிலே சைக்கிள் மிதிக்க ஆரம்பிச்சா, சைதாப்பேட்டை வந்து சேர ஒன்னவர் ஆகும். 10 கிலோமீட்டர். இங்கே வந்து எடத்த பெருக்கி சுத்தம் பண்ணி முடிக்கும்போது, உடம்பு அப்பாடான்னு ஆயிடும். அப்புறம் அம்மா மெஸ்ஸில 6 இட்லி சாப்பிடுவேன். வகையான சாப்பாட்டை நிறுத்தி நாலு மாசமாச்சு. சாயாந்திரம் 7 மணிக்கு கடையை சாத்திட்டு திரும்பவும் சைக்கிளை மிதிப்பேன். இப்படியே போகுது என்னோட வாழ்க்கை.

பொண்டாட்டி மட்டும்தான் கூட இருக்கா. எங்க 2 பேருக்கே இவ்வளவு கஷ்டமுன்னா கொழந்த குட்டிகளோடு இருக்குறவுங்களுக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கும்! நினைப்பதற்கே பயமாயிருக்கு என்றார்.

படிக்க:
தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை
முகக்கவசம் விற்கும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை

அங்கப்பன், வயது 50.

மோதிரங்கள் மற்றும் பழைய காசுகளை விற்பவர்.

எந்தக் கேள்வி கேட்டாலும் பேச மறுத்தார். அருகே அமர்ந்தும் நெருக்கமாகப் பேசியும் பார்த்தோம், போ… போ… என்று கையால் சைகை காண்பித்தார்.

இந்த ராசிக்கல் மோதிரக்காரர், மோதிரங்களை கைப்பெட்டியில் வைத்து 20 ஆண்டுகளாக வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 4 மாதங்களாக இவருக்கு ஒரு வியாபாரமும் இல்லை. தற்போது மதியம் ஒரு மணி வரையில் ஒன்றுகூட போனியாகவில்லை.

“தினமும் தவறாமல், கடையைப் போடுகிறார். வெறுமனே உட்கார்ந்துவிட்டு வெறுங்கையோடு போகிறார். எங்களோடு கூட அதிகம் பேசுவதில்லை. நாங்கள் சாப்பிடும்போது எங்களிடம் இருப்பதைக் கொடுப்போம். அதைக்கூட சிலநேரம் வாங்க மறுத்து விடுவார்.

இன்னைக்கு காலையில ஒரு டீ வாங்கிக் கொடுத்தோம். இதுவரை அவர் வேறு எதுவும் சாப்பிடவில்லை. கொரோனா லாக்டவுன் காலத்தில் ரோட்டில் போவோர் வருவோர் கொடுத்த சாப்பாட்டை வாங்கிச் சாப்பிட்டு வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு யாரும் எதுவும் கொடுப்பதில்லை. வீட்டிலும் யாரும் என்னிடம் பேசுவதில்லை என்று வருத்தப்படுவார்.

கொரோனா வந்தால்கூட ஒரேயடியாகப் போய்ச்சேரலாம், இப்போ எதுவும் இல்லாமலேயே செத்துக்கொண்டிருக்கிறோம் என்று மனம் நொந்து போவார். அந்த நிலைமைதான் சார் எங்களுக்கும்” என்றார்கள் அருகில் இருந்த அனைவரும்.

ஊருக்கெல்லாம் ராசிக்கல் விற்றவர், ஊரிலிருக்கும் குடும்பத்தினரின் கஷ்டத்தைக் கேட்டவர், இப்போ அவரோட கஷ்டத்தைக் கேட்க யாருமில்லையே என்று பக்கத்துக் கடைக்காரர்கள் உருகினர்.

கொரோனா நோய்த்தொற்று தோற்றுவித்திருக்கும் சமூக அவலங்களின் ஆழம், நம்மால் மதிப்பிட முடியாத அளவிற்கு போய்விட்டது. மோடி – எடப்பாடி விதித்திருக்கும் ஊரடங்கு மனிதத்தை குழிதோண்டி புதைத்துவிட்டது. ஆதரவுக் கரம் நீட்டவேண்டிய அரசு, வாய்க்கரிசி போடவும் வக்கற்று இருக்கிறது.

மேலும் படங்களுக்கு :

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

போராட்டங்களை ஒழுங்கமைப்பதும் சீர்திருத்தவாதிகளை தனிமைப்படுத்துவதும் !

1

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 07

முதல் பாகம்

ஒன்றுபட்ட தொழிலாளர் வர்க்கம் போராட்டங்களை ஒழுங்கமைப்பதும் சீர்திருத்தவாதிகளை தனிமைப்படுத்துவதும்

33. உள்நிறுவன பலமும், சோதிக்கப்பட்ட நிர்வாகிகள் படையும், மக்கள் திரளினரிடையே கணிசமாக எண்ணிக்கையும் உறுதியானவர்களையும் கொண்டுள்ள பொதுவுடைமைக் கட்சிகள் விரிவான இயக்கங்களின் மூலம் தொழிலாளர் வர்க்கத்தின் மீது துரோகத்தனமான சோசலிஸ்ட் தலைவர்களுக்குள்ள செல்வாக்கை முழுமையாக வெற்றி கொள்ளவும், பொதுவுடைமைப் பதாகையின் பின்னே மிகப் பெரும்பான்மையான உழைக்கும் மக்கள்திரளினரை அணிதிரட்டவும் விரிவான இயக்கங்கள் வாயிலக எல்லா முயற்சிகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு குறிப்பிட்ட நிலைமை தீவிரமாகப் போராடுவதற்கு ஏற்றதா அல்லது அது தற்காலிகமாகத் தேக்கமான காலமா என்பதைப் பொருத்து பல்வேறு வழிகளிலும் இயக்கங்கள் ஒழுங்கமைக்கப்பட வேண்டும். சாதகமான நிலைமையானால், பாட்டாளி வர்க்க இயக்கத்தின் தலைமையில் முனைப்புடன் தம்மை நிறுத்திக் கொண்டு அக்கட்சிகள் செயல்பட வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நிறுவன முறைகளைத் தெரிந்தெடுப்பதற்கு கட்சியின் கட்டமைப்பு ஒரு தீர்மானகரமான காரணியாகும்.

எடுத்துக் காட்டாக, “பகிரங்கக் கடிதம்” வெளியிடுவது என்ற முறை ஜெர்மனியில் – மற்ற நாடுகளில் சாத்தியப்படாத இம்முறை – சமுதாய ரீதியில் தீர்மானகரமான பாட்டாளி வர்க்கப் பிரிவுகளை வென்றெடுப்பதற்குப் பெருமளவு பயன்படுத்தப்பட்டது. யுத்தத்தின் அழிவு அதிகரித்துக் கொண்டும், வர்க்க மோதல்கள் தீவிரமாகிக் கொண்டும் இருந்த தருணத்தில், துரோகத்தனமான சோசலிஸ்ட் தலைவர்களது முகமூடியைக் கிழிப்பதற்காக ஜெர்மன் பொதுவுடைமைக் கட்சியானது பாட்டாளி வர்க்கத்தின் பிற எல்லா மக்கள்திரள் அமைப்புகளை நோக்கி இத்தகு பகிரங்கக் கடிதங்களை வெளியிட்டது. பலமான நிறுவனங்கள் இருப்பதாகக் கூறிக்கொள்ளும் அவை பொதுவுடைமைக் கட்சியுடன் ஒத்துழைத்து போராட்டங்களை எடுக்கத் தயாரா என்பதை பாட்டாளி வர்க்கத்தின் முன்னிலையில் அவைகளிடமிருந்து கோரும் நோக்கத்திற்காக ஜெர்மன் கட்சி அவ்வாறு செய்தது.

பாட்டாளி வர்க்கம் பராரியாக்கப்படுவதற்கு எதிராகவும் மிகச் சிறு கோரிக்கைகளுக்காகவும், ஏன், துண்டு ரொட்டிக்காகவும் கூட பொதுவுடைமைக் கட்சியுடன் இணைந்து போராட முன்வருமாறு அவைகளை பகிரங்கக் கடிதம் கோரியது.

இது போன்ற இயக்கத்தை பொதுவுடைமைக் கட்சி முன்முயற்சி எடுத்துத் துவக்கும்போது, தொழிலாளர் வர்க்கத்தின் பரந்துபட்ட மக்கள்திரளினரிடையே இத்தகைய நடவடிக்கை சென்றடையும் நோக்கத்திற்காக கட்சியானது முழுமையான நிறுவன ரீதியான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்தின் அதிமுக்கிய கோரிக்கைகளின் திரட்சியான உருவத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கட்சியால் முன்வைக்கப்படும் கோரிக்கையை கட்சியின் அனைத்து தொழிற்சாலைக் குழுக்களும், தொழிற்சங்க நிர்வாகிகளும் அடுத்து வருகின்ற தமது தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கக் கூட்டங்களில் அதுபோலவே பொதுக்கூட்டங்களிலும் – இத்தகைய கூட்டங்களுக்கான தயாரிப்புகளை முழுமையாகச் செய்துகொண்டு – விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள வேண்டும். பரந்துபட்ட தொழிலாளர்களின் உத்வேகத்தைச் சாதகமாக்கிக் கொள்ளும் நோக்கத்துடன் துண்டுப் பிரசுரங்கள், அச்சிட்ட பிரகடனங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை எங்கும் விநியோகிக்க வேண்டும். நமது கருக்குழுக்கள் அல்லது தொழிலாளர் குழுக்கள் நமது கோரிக்கைகளை மக்கள் ஆதரிக்கச் செய்ய முயற்சிக்கும் இடங்களில் மேலும் சிறப்பாக விநியோகிக்க வேண்டும். இத்தகைய இயக்கம் நடைபெறும்போது இந்த இயக்கத்தின் பிரச்சினைகளைப் பற்றி இடையறாத விளக்கங்களை கட்சிப் பத்திரிகைகள் தர வேண்டும். இடையறாது தினசரி சிறு விளக்கங்கள் அல்லது விளக்கமான கட்டுரைகள் பிரச்சினையின் பல்வேறு படிநிலைகளையும் சாத்தியமான ஒவ்வொரு கருத்தோட்டத்திலிருந்தும் பத்திரிகைகள் அவற்றை விளக்க வேண்டும். இத்தகைய கட்டுரைகளுக்கான விசயதானங்களை கட்சி நிறுவனம் தொடர்ந்து பத்திரிகைக்கு அளிக்கவும் கட்சியின் இயக்கத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதற்கு பத்திரிகை ஆசிரியர்கள் தமது முயற்சிகளைக் கைவிட்டுவிடாமல் தமது கவனத்தைச் செலுத்துமாறும் நெருக்கமாகக் கண்காணிக்க வேண்டும். இத்தகைய போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்காக கட்சியின் நாடாளுமன்றக் குழுக்களும், நகராட்சி உறுப்பினர்களும் திட்டவகைப்பட்ட முறையில் வேலை செய்ய வேண்டும். கட்சித் தலைமையின் வழிகாட்டுதலின்படி தீர்மானங்கள், பிரேரணைகள் மூலம் பல்வேறு நாடாளுமன்றக் குழுக்களிலும் இயக்கத்தைப் பற்றி விவாதத்துக்குக் கொண்டுவர அவர்கள் முயற்சிக்க வேண்டும். இந்தப் பிரதிநிதிகள் தம்மைப் போராடும் மக்கள் திரளினரின் முகாமில் அவர்களுக்காக வாதிடுபவர்களாகவும், அவர்களுக்குப் பொறுப்பான அதிகாரிகளாகவும், கட்சி ஊழியர்களாகவும் தம்மைக் கருதிக் கொள்ள வேண்டும்.

நிறுவன ரீதியில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்சியின் அனைத்து சக்திகளின் நடவடிக்கைகளும் வெற்றி பெறுமானால், ஒருசில வாரங்களுக்குள் நமது கோரிக்கைகளை ஆதரிக்கும் தீர்மானங்கள் மேலும் மேலும் அதிக எண்ணிக்கையில் அங்கீகரிக்கப்படுமானால், நமது கோரிக்கைகளுக்கு ஆதரவாக காட்டப்பட்ட மக்கள்திரளினரை உறுதிப்படுத்துவது கட்சியின் மிகப் பாரதூரமான நிறுவன ரீதியிலான கடமையாகும். இந்நிகழ்ச்சியில் ஒரு குறிப்பிட்ட தொழிற்சங்கத் தன்மையை இயக்கம் அடையுமானால், நமது செல்வாக்கை அதிகரிப்பது என்பதை எல்லாவற்றுக்கும் மேலாக நாம் முயற்சிக்க வேண்டும்.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை: அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு!
புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும்!

இந்த நோக்கத்திற்காக உள்ளூர் தொழிற்சங்கத் தலைவர்களின் செல்வாக்கை முறியடிக்கச் செய்வது அல்லது நமது கட்சியினுடைய கோரிக்கையின் அடிப்படையில் ஒருங்கிணைந்து போராட நிர்ப்பந்திப்பது என்ற நோக்கத்தை ஈடேற்ற தொழிற்சங்கங்களில் உள்ள நமது குழுக்கள் அவர்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட நேரடி நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். தொழிற்சாலை கவுன்சில்கள், தொழிற்துறை கமிட்டிகள் அல்லது இதுபோன்ற நிறுவனங்கள் இருக்குமிடங்களில் எல்லாம், நமது குழுக்கள் அந்நிறுவனங்களின் விரிவான கூட்டங்களில் செல்வாக்கு செலுத்தி அதன் வாயிலாக அவற்றைப் போராட்டத்திற்கு ஆதரவாகத் தீர்மானிக்கச் செய்ய வேண்டும். பொதுவுடைமைக் கட்சித் தலைமையின் கீழ் பாட்டாளி வர்க்கத்தின் மிகக் குறைந்தபட்ச கோரிக்கைகளுக்காகப் (நலன்களுக்காகப்)  போராடுவதற்கான இயக்கத்தை ஆதரிக்கும்படி எண்ணிறந்த உள்ளூர் நிறுவனங்கள் செய்யப்பட்டுவிட்டால், அவற்றை ஒரு பொது மாநாட்டில் பங்கெடுக்க அழைக்க வேண்டும். இவற்றுக்கு ஆதரவான தீர்மானங்களை நிறைவேற்றிய தொழிற்சாலைக் கூட்டங்களின் சிறப்புப் பிரதிநிதிகளும் இம்மாநாட்டுக்கு அழைக்கப்பட வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தமிழர் நிலத்தில் பௌத்தமும் சமணமும் வீழ காரணம் என்ன ? | நா. வானமாமலை

0

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 08

முதல் பாகம்

நா. வானமாமலை

மூடுதிரை

(‘நாடும் நாயன்மாரும்’ என்றதோர் ஆராய்ச்சிக் கட்டுரையை இலங்கைப் பல்கலைக் கழகத் தமிழ்த்துறை உரையாளர் க.கைலாசபதி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளார்கள். சைவம் பெருவெள்ளம் போலத் தமிழ் நாட்டில் பெருகிய காலத்தில் நிலவிய சமூக அடித்தளத்தையும், தத்துவ மேற்கோப்பையும் அவர் அக்கட்டுரையில் ஆராய்கிறார். இத்தகைய முயற்சி நம் நாட்டுத் தத்துவங்களை, சமூக அடித்தளத்தோடு சேர்த்துக் கற்றுக் கொள்வதற்கோர் வழிகாட்டியாக உள்ளது. இம்முயற்சி மிகவும் போற்றத்தக்கது. ஆயினும் அவருடைய வரையறுப்புகளிலிருந்து நான் பல விஷயங்களில் மாறுபடுகிறேன். கண்ணோட்டம் ஒன்றாயினும் அது ஆதாரங்களை வரிசைப்படுத்தும்போது வேறுபடக் கூடும். அது கண்ணோட்டத்திலுள்ள குறைபாடாகவோ ஆதாரங்கள் போதிய அளவு சேகரிக்கப்படாததாலோ இருக்கலாம். இது அவருடைய கட்டுரைக்கு மட்டுமல்ல, என்னுடைய இச்சிறு கட்டுரைக்கும் பொருந்தும். இதுபோன்ற பல கட்டுரைகள் வெளியாகுமாயின், நமது கருத்துக்களைத் தொகுத்து விவாதித்து நமது பொதுவான கண்ணோட்டத்தையும் புரிந்து கொண்டு ஆதாரங்களை ஆராய்வதில் கருத்து ஒற்றுமை ஏற்படும் என்ற உறுதியான நம்பிக்கையோடு இதனை எழுதுகிறேன் – நா. வா.)

நாயன்மாரது பக்தி வெள்ளமான இலக்கியத்தின் அடித்தளத்தைக் காண ’நாடும் நாயன்மாரும்’ என்ற கட்டுரை முயலுகிறது. இம்முயற்சி மிகவும் கடினமானது. கடினமான இப்பணியை மேற்கொண்ட கைலாசபதி அவர்களின் துணிவை நாம் போற்ற வேண்டும். அம்முயற்சி இத்துறையில் ஒரு கிளர்ச்சியை ஏற்படுத்தினால், அதுவே மேற்கொண்டு ஆராய்ச்சிகள் தோன்ற வழிவகுக்கக் கூடும். இப்பயனை இக்கட்டுரைத் தோற்றுவிக்கும் என்பதே என் நம்பிக்கை.

இக்கட்டுரையில் சைவம் தனக்கு முன் தமிழ் நாட்டில் வேரூன்றி நின்ற இரண்டு சமயங்களை எதிர்த்துப் போராடி வளர்ந்தது என்று ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். அதனைப் பற்றி அவர் தரும் முடிவுகளே பின்னர் சைவம் இவ்விரு சமயங்களை எதிர்க்க எத்தத்துவத்தை உருவாக்கிக் கொண்டது என்பதை விவரிக்க அடிப்படையாக அமைந்துள்ளது. ஆகவே இவ்விரு சமயங்களின் சமூக அடிப்படையை விரிவாக ஆராய்தல் அவசியம்.

கி.மு. நான்காம் நூற்றாண்டளவில் தமிழ் நாட்டில் குலங்களும், குடிகளும் அழியத் தொடங்கி நிலவுடைமை முறை தோன்றத் தொடங்கிவிட்டது. அம்முறையின் அரசியல் வடிவம் குறுநில மன்னர் ஆட்சி, தென் தமிழ் நாட்டில் பொருநைக் கரையிலும், காவிரிக் கரையிலும், பெருவிளைச்சல் காரணமாக அரசுகள் எழுந்தன. இதுவும் இரண்டாம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வந்ததென ஆதாரத்தோடு சொல்லலாம்.(1)

குலங்களையும், குடிகளையும் விழுங்கிவிட்ட சிற்றரசுகள் தம்முள் போட்டியிட்டு மூன்று முடியரசுகளாயின. அவை, சிதைவைத் தவிர்க்க பெளத்தத்தைக் கருவியாக்கிக் கொண்டன. பௌத்தம் இணைப்புக் கருவியாகப் பயன்பட்டது. குழுக்களிலுள்ள மாற்ற முடியாத பழைமைப் பற்றை ஒழிக்கப் பௌத்தம் பயன்பட்டது. குழுவினுள் அடங்கிச் சிறு தெய்வ வணக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களை பெளத்தம் தனது ஜாதகக் கதைகளினாலும், எழுத்தறிவினாலும், நீதி போதனையாலும், புத்தனைக் கடவுளாக வழிபடும் வணக்க முறையைப் புகுத்தியதாலும், புதிய அகன்ற உலகத்தை கற்பனையில் காண உதவிற்று.(2)

கி.மு. ஆறாம் நூற்றாண்டில் வடமேற்கு இந்தியாவில் காணப்பட்ட நிலைமையையும், தமிழ் நாட்டில் கி.மு.2, 1-ம் நூற்றாண்டில் நிலவிய நிலைமையையும் ஒன்றெனக் கொள்ள முடியாது. இக்காலத்தில் தென்னாட்டில் அரசுகள் நிலைத்துவிட்டன. வர்க்கப் பிரிவினைகள் தீவிரமடையத் தொடங்கி விட்டன. உணவுக்குத் திண்டாடிய நாட்டில் தேவைக்கு மிஞ்சும் உற்பத்தி தோன்றிவிட்டது. அதன் காரணமாக உள்நாட்டு வாணிபமும் தலைதூக்கத் தொடங்கிற்று. முதலில் நிலக்கிழாரில் ஒரு பகுதியினரே வாணிபத்துறையில் இறங்கியிருக்க வேண்டும். ஏனெனில் அவர்களிடம்தானே தேவைக்குப் போக எஞ்சிய தானியம் இருக்கும்? விவசாய உற்பத்தி அதிகமாக வாணிபமும் செழித்தது. பல புதிய பொருள்களுக்குத் தேவை பிறந்தது. இத்தேவை வணிக வர்க்கத்தை வளர்த்தது. முதலில் நிலக்கிழார் வர்க்கத்திலிருந்து தோன்றிய வணிக வர்க்கம் நிலக்கிழார்களின் நிலப்பிடிப்பை எதிர்த்து நிற்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இதுதான் கி.பி. முதல் நூற்றாண்டு முதல் 6-ம் நூற்றாண்டுவரை நிலவிய வர்க்க முரண்பாட்டின் சித்திரம். (3)

இந்நிலையில் பௌத்தம் தமிழ் நாட்டில் பரவியது. பிராமி சாசனங்களின் காலம் கி.மு. இரண்டாம் நூற்றாண்டு என்பது உண்மையானால் அது அக்காலத்தில் பரவத் தொடங்கியது என்று கொள்ளலாம். ஆனால் செல்வாக்கு பெறவில்லை. அது தமிழ் நாட்டிற்கு வந்த காலத்தில் கி.மு.6-ம் நூற்றாண்டில் தோன்றிய தர்ம பாதையாக வரவில்லை. 6-ம் நூற்றாண்டில் சமூக மாறுதல்கள், பெளத்த தத்துவங்களையும் மாற்றியிருந்தது. இங்கு வந்த தத்துவம் ‘ஹினாயன’ தத்துவம். இதில் விக்ரக வணக்கம் உண்டு. சக்ரவர்த்திகளும் போதி சத்துவர்களும் சமமாகக் கருதப்படுகிறார்கள். சக்கரவர்த்திகள் பல பிறப்புகளில் செய்த புண்ணியம் காரணமாக அப்பதவியடைகிறார்கள் என்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. ஆணைச் சக்கரமும், தர்ம சக்கரமும் இணைக்கப்படுகின்றன. நிலப்பிரபுத்துவம் வடநாட்டில் பரவி பேரரசு தோன்றிய காலத்தில் அதற்கு ஆதரவாகத் தோன்றிய தத்துவம் இது. இதுதான் தமிழ் நாட்டில் நிலப்பிரபுத்துவம் வளருவதற்கும் அவசியமான தத்துவமாக இருந்தது. இக்காலத்தில் போர் அவசியமில்லை. ஆகவே அஹிம்சையை ஒரு தத்துவமாகக் கொண்ட ’ஹினாயன பௌத்தம்’ ஆளும் வர்க்கத்தினரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

சமணம் தமிழ்நாட்டில் பின்னரே தோன்றியது. தோன்றும் காலத்தில் அது பேரரசு தோன்றவே ஆதரவான கொள்கைகளைக் கொண்டிருந்தது. பெருங்கதை முதலிய முற்காவியங்களின் அடிப்படைக் கருத்துக்களும் கதாநாயகர்களது பண்புகளும் இதற்குச் சான்று. சீவக சிந்தாமணி பேரரசு ஆதரவில் மிக மிக முன்னேறிச் சென்றது.(4)

இவையாவும் சமணக் காப்பியங்களாயினும், உலகியலில் கெளடலியத்தைப் பின்பற்றுகின்றன. பேரரசுகள் நிலைக்கவே சாணக்கியர் தமது அர்த்த சாஸ்திரத்தை எழுதினார் என்பது அறிஞர்கள் ஒப்புக்கொள்ளும் உண்மையே.

இவ்விரு சமயங்களும், அவற்றின் வளர்ச்சிக் காலத்தில் சாதித்த மாறுதல்கள் எவை?

1. சிறு குழு உணர்வைத் தகர்த்தன.
2. பேரரசு தோன்றத் துணை செய்தன.
3. வாணிபம் வளரவும், வணிக வர்க்கம் தோன்றவும் துணை செய்தன.
4. குழுக்களையும் சாதிகளையும் ஓரளவு ஒன்றாக இணைத்தன.
5. மொழி வளர்ச்சிக்கு உதவின.
6. புதிய பாட்டுருவங்களைப் புகுத்தி காவிய காலத்துக்குப் பாதை அமைத்தன.
7. ஒரே தமிழ்நாடு என்ற அமைப்பை மக்களும், மன்னரும் வணிகரும், நோக்கமாகக் கொள்ள உதவின.
8. இதன் மூலம் கலாச்சார ஒருமையை வளர்த்தன.
9. காவியங்களின் மூலம் இந்தியப் பண்பாட்டோடு , தமிழ் நாட்டின் பண்பாட்டை இணைத்தன.
10. போரைத் தவிர்த்து வாணிப வளர்ச்சிக்கு உதவின.

இம்மாறுதல்களின் காரணமாக சமூகச் சித்திரம் மாறுபாடடைந்தது. மன்னர்கள், நிலக்கிழார் வர்க்கம் வலுப்பெற்றால் அதனோடும், வணிக வர்க்கம் வலுவடைந்தால் அதனோடும் மாறி மாறிச் சேர்ந்து கொண்டார்கள். சமூக மாறுதல்களால் தோன்றிய நிலமற்ற உழவரும், நிலத்தொடர்பிழந்த கைத்தொழிலாளரும், விதிக் கொள்கையால் உயர் வர்க்கங்களின் பிடிப்புக்குள்ளாயினர். அவற்றை எதிர்க்க முடியாதபடி விதிக்கொள்கை அவர்களைச் செயலற்றவராக்கியது.

களப்பிரர் காலத்தில் (இக்காலத்தில் தமிழ் மொழி இலக்கண அடிப்படை பெற்றது.) ஆரம்ப இலக்கியங்கள் தொகுக்கப்பட்டன. காவிய காலத்தின் தொடக்கமும், நீதி நூல்களின் ஆரம்பக் காலமும் அதுவே. இம்மாறுதல்கள் நெருக்கடியை நோக்கி விரைந்தன. நிலப் பிரபுத்துவ வர்க்கம், நிலத் தொடர்புடைய தொழில் புரியும் மக்களைத் திரட்ட முயன்றது. இவ்வர்க்கங்கள் சமூக அடிப்படை அமைத்துக் கொள்ளும் முயற்சியில் வர்க்கப் போராட்டம் முற்ற ஆரம்பித்தது. இச்சமயம் உழைக்காத ஆயிரக்கணக்கான பிரபுக்களும், திகம்பர ஸ்வேதாம்பரத் துறவிகளும், உணவு பெற பள்ளிச்சந்த நிலங்களை அரசர் உதவியால் பெருக்கிக் கொண்டனர். விகாரைகளும், சைத்தியங்களும் சமணப் பள்ளிகளும் நிலப்பிரபுத்துவ ஸ்தாபனங்களாயின. இவை வணிக வர்க்கத்தாரோடு பொருளாதாரத் தொடர்பு பூண்டன. அவர்கள் நிலத்தில் விளைந்தவற்றை வணிகர் வாங்கி விற்றனர். அல்லது கச்சாப் பொருளாக வாங்கிச் செய்பொருள்களைச் செய்தனர். இவை தவிர நிலக்கிழார்கள், சிறு நில உடைமையாளர்கள் ஏராளமாக இருந்தனர். சமண, பௌத்த சமய நிறுவனங்கள் பெரும் சுரண்டல் ஸ்தாபனங்களாயிருந்தன. அவைதாம் நேரடியாகச் சுரண்டும் உழவர்கள், தமது செல்வாக்கினால் பாதிக்கப்பட்ட நிலக்கிழார்கள், சிறு நில உடைமையாளர் ஆகிய பகுதியினரின் வெறுப்புக்களாயின. தம்மை ஆதரிக்கும் வியாபாரிகளின் நலனுக்காகவே மத ஸ்தாபனங்கள், நிலங்களை நிருவகித்தன. ‘மத்தவிலாசப் பிரகசனம்’ பௌத்த விகாரைகளின் செல்வச் செழிப்பையும், செல்வாக்கையும் கூறுகிறது.

இவ்வர்க்கங்களில் பெருநிலக் கிழார்கள், சமண, பௌத்த எதிர்ப்புக்குத் தலைமை தாங்கினர். அவர்களது போராட்டத்திற்கு பக்தி இயக்கம் உதவியாக இருந்தது. வெளிப்படையாக அது எந்த நலனையும் ஆதரிக்காவிட்டாலும் சமண, பௌத்த, எதிர்ப்பு – பொருளாதாரத் துறையில் வாணிக வர்க்க எதிர்ப்பாகவே சாராம்சத்தில் இருந்தது.

நிலப்பிரபுத்துவ சமூக அடிப்படையை விரிவுபடுத்த எல்லோரையும் ஆகர்ஷிக்கும் வண்ணம், மக்கள் அனைவரும் சகோதரர்கள், ஒரே குலம் என்ற தத்துவத்தை சமயம் பரப்பியது. கொள்வினை, கொடுப்பு வினை செய்துகொள்ள ஆதரவு காட்டியது. உறவில்லாத உறவை சிருஷ்டித்தது. (Idyllic relations) சிவனை, விதியை வெல்ல வழி காட்டும் மூலத் தலைவனாக்கியது. நிலப்பிரபுத்துவச் சுரண்டலால் ஏற்படும் வேதனைகளுக்கும், துன்பங்களுக்கும் விகாரைகளும், பள்ளிகளும் காரணமயிருந்ததால், அவற்றை எதிர்த்து அவர்களுடைய விதிக் கொள்கையை எதிர்த்து, மக்களைத் திரட்டுவதற்காக வேதனை நீக்கச் சிவனிடம் சரணடையும்படி சைவம் கோரியது. விதியை வெல்லச் சிவனிடம் சரணடையக் கோரியது.

‘நமச்சிவாயம்’ என்ற சொல்லே இகபர செல்வங்களையெல்லாம் அளிக்குமென்றது. மக்கள் புரிந்து கொள்ள இது எளிதாயிருந்தது. புத்த சமண தத்துவச் சுழல்கள் ஆரம்ப சைவ சமயத்தில் இல்லை. சிவன் யாரும் வழிபடக் கூடிய பொதுக் கடவுளாயிருந்தார். பிறவிப் பெருங்கடலை நீந்த பிரபுக்களின் தர்ம போதனையோ, சமணக் குரவர், குரத்தியரது துணையோ தேவையில்லை. சைவ மடங்களும் அப்பொழுது தோன்றவில்லை.

சைவம் தழைக்கப் பணி செய்த முதன் நாயன்மார்கள் நாடு முழுவதும் அலைந்து மக்களிடையே வழங்கி வந்த இனிய பண்களில் மனித உணர்வை உருவமாக்கிச் சிவனை மனிதருக்கு மட்டும் எட்டும் தந்தையாக, தாயாக வருணித்துப் பாடினார்கள். அறிவைப் பின் தள்ளி உணர்ச்சியை ஆழமாக்கி பக்தி வெள்ளத்தில் நாட்டை மூழ்கடித்தார்கள்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்
முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை!

இந்நிலையில் வாணிக வர்க்கம் பலம் குன்றியிருந்தது. மூவரசுகளிடையே வாணிகத் தடைகள் தோன்றியிருந்தன. மேனாட்டு வாணிபம் சீர்குலைந்தது. இஸ்லாமிய வளர்ச்சியாலும், வெற்றியாலும் அண்டை நாடுகளில் இவர்களது வாணிபம் நின்றது. நாட்டுக்குள் முடங்கிய வணிக வர்க்கம் வலிமை குன்றி இத்தாக்குதலைச் சமாளிக்க இயலாது நின்றது.

இந்நிலையில் சைவம் சேர, சோழ, பாண்டிய நாடுகளிலும் பல்லவர் நாட்டிலும் பரவிற்று. சமூக ஒற்றுமைக்கு அது துணை செய்தது. சமண பௌத்த மடங்கள் செல்வாக்கிழந்தன. அரசர்கள் செல்வாக்குப் பெற்ற சைவத்தை ஆதரிக்கத் தொடங்கினர். சமண பௌத்த மடாலயங்களின் சொத்துக்கள் புதிதாகத் தோன்றிய சிவாலயங்களுக்கு மாறின. புதிய தேவதானங்களும், பிரம தேசங்களும் சிருஷ்டிக்கப்பட்டன. பாண்டி நாட்டின் வேள்விக்குடி செப்பேடுகளும் திருநெல்வேலி செப்பேடுகளும் களப்பிரர் காலத்தில் அந்தணர்களிடமிருந்து பறித்துக் கொண்ட நிலங்களை மீண்டும் அவர்களுக்கு உரிமையாக்கியதைக் கூறுகின்றன. மகேந்திரன், மாமல்லன் காலத்துச் சாசனங்கள், காஞ்சி கைலாயநாதர் கோவிலுக்கு, பண்டைச் சமணப் பள்ளிகள் விகாரைகளின் நிலங்களை உரிமையாக்கியதைக் கூறுகின்றன. இவ்வாறு சிவன் கோயில்கள் படிப்படியாக நிலவுடைமை ஸ்தானங்களாயின. இம்முறை நாடு முழுதும் பரவிற்று. ஊர் நிலத்தின் பெரும் பகுதி கோயில்களுக்குச் சொந்தமாயிற்று. அதற்கடுத்தாற்போல நிலமுடைய பெருநிலக்கிழார்கள் கோயில் நிலங்களை மேற்பார்வை செய்யும் சபையினராகவும், ஆயத்தினராகவும், வாரியத்தினராகவும், ஊரவராகவும் நாட்டினராகவும், அதிகாரம் பெற்றனர்.(5) இப்படி ஒரு புதிய நிலவுடைமை முறை உருவாகியது. வாணிக வர்க்கத்தினரும் தமிழ்நாடு முழுவதும் வாணிபம் செய்யும் வாய்ப்பை மறுபடி பெற சைவத்தை அனுசரித்தனர். அவர்களில் பெரும்பகுதியினர் வீர சைவர்களாயினர். இது நிலவுடைமை வர்க்கத்தினரோடு வணிக வர்க்கத்தினர் நட்புறவு கொண்டதையே காட்டுகிறது. 8-ம் நூற்றாண்டிலும் அதற்குப் பின்னும் வணிக வர்க்கத்தினர், பல சிவன் கோயில்களுக்குப் பொன்னளித்ததும், மகமை முறைகள் ஏற்படுத்தியதும் சமகாலச் சாசனங்களால் புலனாகின்றன. கூட்டுச் சுரண்டலுக்கு இவ்வுறவு காரணமாயிற்று.

அடிக்குறிப்புகள்:
♦ தமிழ் நாடும் மோரியரும் – நா. வா. (தாமரை பொங்கல் மலர் 1961)
♦ Philosophies of India – Essay on Buddihism Zimmer.
♦ சிலப்பதிகாரத்தில் வர்க்கப் போராட்டம், ….நா. வா. (ஜனசக்தி, மே. மலர் 1957)
♦ காவியக் கதைத் தலைவர்கள் – நா.வா. (தாமரை)
♦ South Indian Polity – K.S.Krishnaswamy Iyengar உத்தரமேரூர் சாசனம்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக அதிகார வரம்புகளை மீறும் ஆளுநர்கள் || விடுதலை இராசேந்திரன்

க்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட நடுவண் ஆட்சியால் நியமிக்கப்படும் ஆளுநர்கள் வலிமையாக மாறி நிற்கும் ஒரு அவலம் – அரசியலில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஆளுநர்களை அரசியலுக்குப் பயன்படுத்துவது பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு உருவான நிலை என்று சுருக்கிப் பார்த்துவிட முடியாது. காங்கிரஸ் ஆட்சி காலத்திலும் இந்த ‘அதிகார ஆக்கிரமிப்புகள்’ நடந்தன. ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் இது தீவிரம் பெற்று ‘ஆளுநரின் அதிகார ஆக்கிரமிப்புகள்’ ஒரு நிலைத்த அரசியல் நடவடிக்கைகளாகிவிட்டன.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஆளுநருக்குமிடையே நடக்கும் அதிகாரப் போட்டி, தமிழ்நாட்டில் வேறு புதிய வடிவத்தில் எழுந்து நிற்கிறது. இறையாண்மையுள்ள ஒரு மாநில அரசு தனக்கு மக்கள் வழங்கியிருக்கும் சட்டப்பூர்வமான உரிமைகளை தானாகவே முன் வந்து ஆளுநரின் கால்களில் வெட்கப்படாமல் சமர்ப்பித்துக் கொண்டிருக்கிறது. ஆளுநரின்  அதிகார அத்துமீறல்களை எதிர்த்து எதிர்க் கட்சிகள் தான் போராடுகின்றன. போராடினால் 7 ஆண்டு சிறை என்கிறது – ஆளுநர் மாளிகை அறிவிப்பு.

தமிழ்நாடு அரசோ, ஆளுநர் அறிவிப்புக்கு பச்சைக் கொடி காட்டுகிறது. ‘நீட்’ தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு விதிவிலக்குத் தரவேண்டும் என்று தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாவை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்குக்கூட அனுப்பி வைக்காமல், கிடப்பில் போட்டாலும் அதைத் தட்டிக் கேட்கத் தயாராக இல்லை தமிழக அரசு. சி.பி.எஸ்.இ. நீட் தேர்வுக்கான ‘தமிழ் வினாத்தாளில்’ 49 தவறுகள்.

இந்த ஆண்டு தமிழ் வழியில் தேர்வு எழுதிய தமிழ்நாட்டைச் சார்ந்த 24,720 பேரில் தேர்ச்சிப் பெற்றவர்கள் 460 பேர் மட்டுமே. மதுரை உயர்நீதிமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலங்களவை உறுப்பினர் தொடர்ந்த வழக்கால் தமிழ் வழியில் தேர்வு எழுதியவருக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் வழங்க 196 மதிப்பெண்கள் கூடுதலாக வழங்கப்பட வேண்டும் என்ற தீர்ப்பு கிடைத்துள்ளது. நியாயமாக தமிழக அரசு தொடர்ந்திருக்க வேண்டிய வழக்கு இது. இப்போது ‘சி.பி.எஸ்.இ.’ மேல்முறையீட்டுக்கு உச்சநீதிமன்றம் போன நிலையிலும் தன்னையும் ஒரு மனுதாரராக தமிழ்நாடு அரசு இணைத்துக் கொள்ள முன்வராமல் சமூக நீதி மாநிலமான தமிழ் நாட்டையே நடுவண் ஆட்சிக்கு அடிமையாக்கி விட்டார்கள். எதிர்பார்த்தது போல் சி.பி.எஸ்.இ. உச்சநீதிமன்றத்தில் தடையும் வாங்கி மதுரை நீதிமன்றத் தீர்ப்பை நிறுத்திவிட்டது.

இராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட ஏழு தமிழர்களை, தமிழக அமைச்சரவை தனக்கு அரசியல் சட்டம் வழங்கியுள்ள 161 ஆவது பிரிவின் கீழ் தண்டனை குறைப்பு செய்து விடுதலை செய்ய முன் வந்தது. அந்த பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. தமிழக ஆளுநர்  இரண்டு ஆண்டுகளாக அதை அப்படியே கிடப்பில் போட்டுவிட்டார். கேட்டால் ஆளுநருக்கு இதில் முடிவெடுப்பதில் கால நிர்ணயம் எதுவும் இல்லையென்று கூறுகிறார்கள். உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.

படிக்க :
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?
ஆளுநர் மாளிகை அழுத்தம் : சென்னைப் பல்கலை மாணவர் கிருபாமோகன் நீக்கம் !

நீதிபதிகள் ஒரு கருத்தை சுட்டிக்காட்டினார்கள், அரசியல் சட்டத்தில் உயர் பதவிகளை அலங்கரித்துக் கொண்டிருக்கிற ஆளுநர் போன்றவர்கள் இத்தகைய பிரச்சனைகளில் முடிவெடுப்பதற்கு அரசியல் சட்டம் கால நிர்ணயம் எதுவும் செய்யாததற்கு காரணம் இந்த உயர் பதவியில் இருப்பவர்கள்  உரிய நேரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்பியதால்தான் என்று சுட்டிக்காட்டினார்கள். ஆனால் ஆளுநர் இதில் வரம்பு மீறி அப்பட்டமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். மத்திய பிரதேச மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ் அமைச்சரவையை கவிழ்ப்பதற்கு பாஜக கட்சி மாறல்களை ஊக்குவித்து குறுக்கு வழியில் கவிழ்த்தபோது அந்த மாநில ஆளுநர் எப்படியெல்லாம் பலிகிடாவாக செயல்பட்டார் என்பதையும் அன்மையில் பார்த்தோம்.

இந்தப் பின்னணியில் டெல்லி யூனியன் பிரதேசத்தில் நடக்கும் ஆம் ஆத்மி’ ஆட்சி ஆளுநரின் அத்துமீறலுக்கு எதிராக உறுதியுடன் களமிறங்கியது. இப்போது ஆளுநர் அதிகாரத்துக்கு கடிவாளம் போடும் தீர்ப்பையும் உச்சநீதிமன்றம் வழியாகப் பெற்றிருக்கிறது. 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த ஜூலை 4, 2015இல் உச்சநீதிமன்றத்தில் வழங்கிய தீர்ப்பு கூட்டாட்சி தத்துவம் என்ற கண்ணோட்டத்தில் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. (தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தன்னுடைய சார்பிலும், நீதிபதிகள் ஏ.கே. சிக்ரி மற்றும் ஏ.எம். கான்வில்கர் ஆகியோர் சார்பிலும் தீர்ப்பு எழுதியிருக்கிறார். நீதிபதிகள் டி.ஒய்.சந்திர சூட் மற்றும் அசோக் பூஷன் இணைந்து தனியாக தீர்ப்பு எழுதினார்கள். அனைவரது தீர்ப்பின் மய்யக் கருத்தும் ஒரே குரலை பேசியிருக்கின்றன)

உச்சநீதிமன்றம் ஒருமித்தத் தீர்ப்பாகக் கூறியிருப்பது என்ன?

  • ஒன்று – டெல்லி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகத்துக்கான தலைவர் முதலமைச்சரே தவிர, ஆளுநர் அல்ல.
  • இரண்டு – அனைத்துப் பிரச்சினைகளுக்கும் சட்டமியற்றும் அதிகாரம் டெல்லி சட்டசபைக்கு உண்டு. அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளை ஏற்றுத்தான் ஆளுநர் செயல்பட வேண்டும்.
  • மூன்றாவது – குடியரசுத் தலைவரிடம் ஆளுநர், அனைத்து அமைச்சரவை முடிவுகளுக்கும் விளக்கம் கேட்கக் கூடாது. தவிர்க்க வியலாத சூழ்நிலையில் கருத்து மாறுபாடுகள் நியாயமானவையாக இருந்தால் மட்டுமே அப்படி விளக்கம் கேட்க முடியும். கடைசி வாய்ப்பாக மட்டுமே ஆளுநர்இந்த உரிமையைப் பயன்படுத்த வேண்டும்; குடியரசுத் தலைவர் கருத்தை அப்படியே செயல்படுத்த வேண்டிய கடமை ஆளுநருக்கு உண்டு.
  • நான்காவதாக – அமைச்சரவை எடுக்கும் ஒவ்வொரு முடிவுக்கும் ஆளுநர் ஒப்புதல் பெற்றாக வேண்டும்  என்ற அவசியமில்லை. முடிவுகளை ஆளுநரின் பார்வைக்குக் கொண்டு செல்லும் பொறுப்பு அமைச்சரவைக்கு உண்டு.

– இவை தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்.

டெல்லி யூனியன் பிரதேசத்துக்கு தனித் தகுதி உண்டு. சட்டமன்றம், அமைச்சரவை உள்ளிட்ட சிறப்புத் தகுதிகளை சட்ட ரீதியாகப் பெற்றுள்ளது. இந்தியாவின் யூனியன் பிரதேசங்கள் மூன்று வகையாக பிரிக்கப்பட் டுள்ளன. அந்தமான் நிக்கோபர், இலட்சத் தீவு, தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டய்யூ, சண்டிகார் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு சட்டமன்றங்கள் கிடையாது. நாடாளுமன்றச் சட்டத்தின் கீழ் (பிரிவு 239ஏ) சட்டசபை அதிகாரங்கள் வழங்கப்பட்ட யூனியன் பிரதேசம்

இரண்டாவது வகை. புதுச்சேரி மாநிலம் இந்தப் பிரிவின் கீழ் வருகிறது. நாடாளுமன்ற சட்டத்தை பயன்படுத்தாமல் அரசியல் சட்டத்தையே திருத்தி, அதன் வழியாக சட்டசபை மற்றும் அமைச்சரவை அதிகாரம் பெறுவது.

மூன்றாது வகை. டெல்லி யூனியன் பிரதேசம் இந்த சிறப்புப் பிரிவின் கீழ் வருகிறது. (1991-இல் சட்டத்தில் 69-ஆவது திருத்தத்தின் வழியாக டெல்லி யூனியன் பிரதேசம் உருவாக்கப்பட்டது) இதில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை டெல்லி யூனியன் பிரதேசத்தோடு ஒப்பிட முடியாது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீர்ப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார். டெல்லி யூனியன் பிரதேச குடிமக்களின் ஜனநாயக, சமூக, அரசியல் அதிகாரங்களை உறுதி செய்வதற்காகவே டெல்லி யூனியனுக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டிருக்கிறது.

இதே வழக்கில் 2016 ஆகஸ்ட் 4-ஆம் தேதி தீர்ப்பு வழங்கிய டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு மாறாக டெல்லிக்கு சிறப்புத் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் அது ஒரு யூனியன் பிரதேசமாகவே கருத வேண்டும் என்றும், அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டிய அவசியமில்லை. ஆளுநருக்கு தன்னிச்சையாக முடிவு எடுத்து செயல்பட அதிகாரம் உண்டு என்றும் தீர்ப்பளித்தது. வேறு வழியின்றி உச்சநீதிமன்றம் போகும் நிலைக்கு ஆம் ஆத்மி தள்ளப்பட்டது.

சொல்லப்போனால் ஆம் ஆத்மிக்கும் நடுவண் அரசுக்குமிடையிலான மோதல் – மன்மோகன் சிங் பிரதமராக இருந்த அய்க்கிய முன்னணி ஆட்சிலேயே தொடங்கிவிட்டது. 2014-ஆம் ஆண்டு மெஜாரிட்டி பலமின்றி வெளியிலிருந்து காங்கிரஸ் ஆதரவுடன் முதல்வராகப் பதவியேற்ற கெஜ்ரிவால், ரிலையன்ஸ் குழும நிறுவனர் அம்பானி, மத்திய அமைச்சர்கள் வீரப்ப மொய்லி மற்றும் முரளி தியோரா மீது இலஞ்ச ஒழிப்புத் துறை வழியாக ஊழல் வழக்குப் பதிவு செய்தார். எரிவாயு சிலிண்டர் விலை நிர்ணயம் செய்வதில் மத்திய அரசின் உடன்பாட்டுடன் நடந்த ஊழலுக்கு எதிரான வழக்கு அது. இந்த வழக்கை இரத்து செய்ய வேண்டும் என்றும், டெல்லி மாநில ஊழல் ஒழிப்புத் துறைக்கு மத்திய  அரசு ஊழியர்கள் மீது வழக்குத் தொடர உரிமை இல்லை என்றும் அன்றைய அய்க்கிய முன்னணி ஆட்சி நீதிமன்றத்தில் எதிர் மனு தாக்கல் செய்தது.

அம்பானியின் மீது கை வைத்தால் மோடி ஆட்சி மட்டுமல்ல, காங்கிரஸ் ஆட்சியும் சும்மா விடாது. மோடியின் தேசிய முன்னணி பதவிக்கு வந்தவுடன் இன்னும் ஒரு அடி மேலே சென்று மத்திய அரசு ஊழியர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக டெல்லி ஊழல் ஒழிப்புத் துறைக்கு இருந்த வழக்குப் போடும் உரிமையையே பறித்து தாக்கீது வெளியிட்டது. இதற்குப் பிறகு 2015-ஆம் ஆண்டு டெல்லி சட்டமன்றத்துக்கு நடந்த தேர்தலில் முழு மெஜாரிட்டியுடன் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தது. கெஜ்ரிவால் முதல்வரானார். மோடி ஆட்சி தாக்கீதை எதிர்த்து நீதிமன்றம் போனார். அப்போது டெல்லி உயர்நீதிமன்றம் டெல்லி மாநில அரசின் இலஞ்ச ஒழிப்புத் துறைக்கு இருந்த அதிகாரத்தைப் பறித்து மோடி ஆட்சி வெளியிட்ட அறிவிப்பு ‘சந்தேகத்துக்கு’ வழி வகுக்கிறது என்று கூறியதோடு தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி மாநில ஆட்சியின் ஆலோசனைப்படி தான் ஆளுநர் செயல்பட வேண்டும். மக்கள் அளித்த தீர்ப்பு மதிக்கப்பட வேண்டும் என்று மே 25, 2015-இல் தீர்ப்பளித்தது.

படிக்க :
புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியின் தர்ணா போராட்டத்திற்கு காரணம் என்ன? | கருத்துக் கணிப்பு !
பொறுக்கி கவர்னர் ஆர்.எஸ்.எஸ் சண்முகநாதன் !

மோடி ஆட்சி விடவில்லை; அடுத்தக்கட்ட நடவடிக்கையாக மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக வழக்கைக் கொண்டு வந்தால் அதைப் பதிவு செய்ய  காவல் நிலையங்களுக்கு உரிமை கிடையாது என்று அறிவித்தது (டெல்லி மாநில அரசுக்கு காவல்துறை, பொது ஒழுங்கு, நிலம் குறித்த உரிமைகளில் அதிகாரம் கிடையாது. எனவே காவல்துறை மத்திய உள்துறையின் கட்டுப்பாட்டில் இருப்பதைப் பயன்படுத்தி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது) அதைத் தொடர்ந்து டெல்லி மாநில அரசுக்கு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தையும் ஆளுநருக்கு வழங்கியது மோடி ஆட்சி.

அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி இலஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியை ஆளுநரே நியமித்தார். அதிகாரிகளை மாற்றம் செய்யும் உரிமைகளும் நியமிக்கும் உரிமைகளும் மாநில ஆட்சியிடமிருந்து பறிக்கப்பட்ட நிலையில் மீண்டும் உயர்நீதிமன்றம் போனார் கெஜ்ரிவால். இந்த வழக்கில் 2016-இல் டெல்லி உயர்நீதிமன்றம் ஆளுநருக்கே அதிகாரம், தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சரவைக்கு இல்லை என்று 2015-இல் வழங்கிய தீர்ப்பை அப்படியே புரட்டிப் போட்டது. தீர்ப்பு ஆளுநருக்கு சாதகமாக வந்தது.

டெல்லி மாநில அரசின் நிர்வாகத்தை ஆளுநர் முடக்கினார். அதிகாரிகள், முதல்வர் உத்தரவை ஏற்று செயல்பட மறுத்தனர். தலைமைச் செயலாளராக இருந்த அன்ஷீ பிரகாஷ், மாநில முதல்வர் கெஜ்ரிவாலுக்கு எதிராகவே போர்க்கொடி தூக்கினார். ஆம் ஆத்மி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேர்ந்து முதல்வர் தன்னை உடல் ரீதியாகத் தாக்குவதற்கு சதித் திட்டம் தீட்டியதாக புகார் கூறினார். ரேஷன் பொருள்களை வீடுகளுக்கே நேரில் கொண்டு போய் சேர்க்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு நலத் திட்டங்களை முடக்குவதற்காகவே இத்தகைய பொய்ப் புகார்கள் உருவாக்கப்படுகின்றன என்று கூறிய ஆம் ஆத்மி கட்சியினர் பிறகு ஆளுநர் மாளிகையிலேயே 24 மணி நேரமும் ‘அமரும்’ முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினர். இறுதியில் உச்சநீதிமன்றம் மாநிலத்தின் உரிமைக் கதவுகளைத் திறந்து விடும் தீர்ப்பை வழங்கியிருக்கிறது.

பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு அக்கட்சி ஆட்சி செய்யாத மாநிலங்களில் தங்கள் கட்சி விசுவாசிகளை ஆளுநர்களாக நியமித்து ஆளுநர் அதிகாரத்தை அரசியல் நலனுக்கேற்ப முறைகேடாகவே பயன்படுத்துவதை நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. அண்மையில் கருநாடகாவில் மெஜாரிட்டி பலம் இல்லாத எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைத்து முதலமைச்சராக பதவி உறுதிமொழியும் ஏற்க வைத்து அவர் மெஜாரிட்டியை நிரூபிக்க முடியாமல் ஓட்டெடுப்புக்கு முன்பே பதவி விலகி ஓடினார்.

(தொடரும்)

விடுதலை இராசேந்திரன்

disclaimer