Tuesday, July 29, 2025
முகப்பு பதிவு பக்கம் 241

அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது ? | லெனின்

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 06

முதல் பாகம்

5. அரசியல் போராட்டத்திற்கான நிறுவனம்

அரசியல் இயக்கங்களை எவ்வாறு நடத்துவது?

31. பொதுவுடைமைக் கட்சியைப் பொருத்தவரை, அதன் கட்சி நிறுவனம் அரசியல் நடவடிக்கையைச் செய்ய இயலாத காலம் என்று எதுவும் இருக்க முடியாது. எந்த ஒரு அரசியல் பொருளாதார நிலைமையையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்திற்காக – இதுபோலவை இந்த நிலைமைகளில் ஏற்படும் மாறுதல்களைப் பயன்படுத்திக் கொள்வதற்காக – ஸ்தாபனத்தின் போர்த்தந்திரங்களும் செயல்தந்திரங்களும் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். கட்சி எவ்வளவு பலவீனமாக இருந்தபோதிலும் முறைப்படி திட்டமிட்டும் சிறப்புத் தேர்ச்சியுடனும் ஒழுங்கமைக்கப்பட்ட தீவிரமான பிரச்சாரத்தின் மூலம் எழுச்சியூட்டுகின்ற அரசியல் நிலைமைகளையும் அல்லது முழு பொருளாதாரக் கட்டமைவையும் பாதிக்கும் பரந்து விரிந்த வேலை நிறுத்தங்களையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வது முடியும். ஒரு குறிப்பிட்ட நிலைமையைப் பயன்படுத்திக் கொள்வது என்று கட்சி தீர்மானித்தவுடன் தனது உறுப்பினர்கள் அனைவரின் மற்றும் கட்சி முழுவதன் சக்தியையும் இந்த இயக்கத்தில் ஒன்றுகுவிக்க முனைய வேண்டும்.

மேலும், ஒரு வேலை நிறுத்தத்தின் தொடர்ச்சியான மேல் நடவடிக்கைகளுக்கும் அரசியல் முக்கியத்துவம் உடைய மையங்களில் பொதுக்கூட்டங்களை நடத்துவதற்கும் கட்சியானது தனது கருக்குழுக்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களின் வேலைகளின் மூலம் பெற்ற அனைத்து தொடர்புகளையும் பயன்படுத்த வேண்டும். கட்சியின் பேச்சாளர்கள் பொதுவுடைமைவாதம் மட்டுமே போராட்டத்தை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவர இயலும் என்று கூட்டத்தில் உள்ளவர்கள் ஏற்கும்படி செய்ய தம்மால் இயன்றதனைத்தையும் செய்ய வேண்டும். இத்தகைய கூட்டங்களுக்கான முற்று முழுதான தயாரிப்பை விசேடமான குழுக்கள் செய்ய வேண்டும். ஏதோ சில காரணங்களினால் கட்சி தானே இத்தகைய கூட்டங்களை நடத்த முடியாமல் போகுமானால், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோர்களோ அல்லது போராடும் தொழிலாளர்களின் ஒரு பிரிவினரோ ஏற்பாடு செய்யும் பொதுக்கூட்டங்களில் பொருத்தமான தோழர்கள் உரையாற்ற வேண்டும்.

கூட்டத்தின் பெரும்பான்மையினர் அல்லது கணிசமான பகுதியினர் நமது கோரிக்கையை ஏற்கச் செய்யத் தூண்டிவிடுவது சாத்தியப்படும்போது, அவை நன்கு உருவாக்கப்பட்டு மற்றும் தீர விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் முடிவுகளாக நிறைவேற்றப்பட வேண்டும். இவை அதே இடத்திலோ அல்லது வேறு பகுதிகளிலோ அதே பிரச்சினையின் மீது பலமான சிறுபான்மையினரான மேலும் மேலும் அதிக எண்ணிக்கையிலானவர்கள் இம்மாதிரியான தீர்மானங்களை நிறைவேற்றச் செய்ய முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். இந்த வழியில் நாம் உழைக்கும் மக்கள்திரளினரை அப்போதைய இயக்கத்தில் உறுதிப்படுத்தவும் நமது தார்மீக செல்வாக்கின் கீழ் கொண்டுவரவும் அவர்கள் நமது தலைமையை அங்கீகரிக்கச் செய்யவும் இயலும்.

இத்தகைய கூட்டங்கள் முடிந்த பின்னர், இவற்றுக்கான நிறுவன தயாரிப்புகளில் ஈடுபட்டு வாய்ப்புகளைப் பயன்படுத்திய கமிட்டிகள் ஒரு மாநாடு நடத்தி, கட்சியின் மேல்மட்டக் கமிட்டிக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். எதிர்காலத்துக்கான சரியான முடிவுகளை, அனுபவங்கள் அல்லது தவறுகளிலிருந்து பெற்ற முடிவுகளைக் கொண்டதாக அந்த அறிக்கை இருக்க வேண்டும். ஒவ்வொரு குறிப்பிட்ட நிலைமைக்கும் ஏற்ப பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தொழிலாளர்களின் அன்றாட கோரிக்கைகள், சுவரொட்டிகள், அச்சிடப்பட்ட பிரசுரங்களில் (பிரகடனங்களில்) வெளிப்படையாக முன்வைக்கப்பட்டு அவை தொழிலாளர்களிடையே விநியோகிக்கப்பட வேண்டும். பொதுவுடைமைக் கொள்கைகள் அந்த நிலைமைக்கு எப்படிப் பொருத்தமானவையாகவும் குறிப்பிட்ட நிலைமைக்குப் பிரயோகிக்கப்படக் கூடியதாகவும் இருக்கிறது என்பதைத் தொழிலாளர்களுக்கு அவர்களுடைய சொந்தக் கோரிக்கைகள் வாயிலாக நிரூபிக்க வேண்டும். சுவரொட்டிகளை விநியோகிக்கவும், பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்யவும், ஒட்டுவதற்கான சரியான நேரத்தைத் தீர்மானிக்கவும் விசேடமாக அமைக்கப்பட்ட குழுக்கள் தேவை. அச்சிடப்பட்ட பிரகடனங்கள் தொழிற்சாலைகளுக்கு உள்ளேயும், வாயிலிலும், தொழிலாளர்கள் கூடப்போகின்ற அரங்குகளிலும், வேலை தேடித்தரும் அலுவலகங்கள் மற்றும் ரயில் நிலையம் போன்று நகரின் முக்கியமான இடங்களிலும் விநியோகிக்கப்பட வேண்டும். இத்தகைய துண்டுப் பிரசுர விநியோகத்தைத் தொடர்ந்து உழைக்கும் மக்கள் திரளினர் அனைவரிடையிலும் சுலபமாக பரவுகின்ற கவனத்தை ஈர்க்கின்ற விவாதங்களும் முழக்கங்களும் தொடர வேண்டும். சாத்தியமானால் அச்சிட்ட விவரமான துண்டுப் பிரசுரங்களை அரங்குகள், தொழிற்சாலைகள், குடியிருப்புகள் அல்லது பிற இடங்களில் அதாவது, எங்கு இந்த அச்சிடப்பட்ட பிரசுரங்களுக்கு உரிய கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறதோ, அங்கு விநியோகிக்கப்பட வேண்டும்.

படிக்க:
101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

எல்லா தொழிற்சங்கங்களிலும் பிரச்சினை முட்டிமோதும் காலத்தில் நடக்கின்ற தொழிற்சாலைக் கூட்டங்களிலும் நாம் செய்கின்ற இணையான நடவடிக்கைகள் மூலம் இந்தப் பிரச்சாரத்திற்கு ஆதரவளிக்க வேண்டும். நமது தோழர்களாலோ அல்லது நம்மை ஆதரிப்பவர்களாலோ ஏற்பாடு செய்யப்படும் இக்கூட்டங்களில் பொருத்தமான நமது பேச்சாளர்களும் ஆற்றல்மிகு வாதிடுவோர்களும் வாய்ப்பைப் பயன்படுத்தி பரந்துபட்ட மக்கள் நமது கருத்தோட்டத்தை ஏற்குமாறு செய்ய வேண்டும். நமது கட்சி செய்திப் பத்திரிகைகள் இத்தகைய விசேடமான இயக்கத்திற்கு அதிகமான பக்கங்களையும் அதேபோல் அதனை சிறந்த முறையில் நியாயப்படுத்துவதற்கான வாதங்களுக்கு முக்கியத்துவத்தையும் அளிக்க வேண்டும். செயலூக்கமுள்ள நமது கட்சி நிறுவனங்கள் அப்போதைக்குத் தற்காலிகமாக இத்தகைய இயக்கத்தின் பொது நோக்கத்திற்காக சேவை செய்து இதில் பணியாற்றும் தோழர்கள் குன்றாத ஆற்றலுடன் செயலாற்ற உதவ வேண்டும்.

நிலைமைக்கு ஏற்ப இயங்கும் தலைமையும், தொழிற்சாலை செல்களை அடிப்படையாகக் கொண்ட அமைப்பும் வெற்றிகரமான ஆர்ப்பாட்டத்தை நடத்துவதற்கான உத்திரவாதங்கள்

32. ஆர்ப்பாட்டங்களை நடத்துவதற்கு நிலைமைக்கேற்ப இயங்கும் தலைமை மற்றும் சுயதியாகத் தலைமை அவசியம். குறிப்பிட்ட நடவடிக்கையின் நோக்கத்தை நெருக்கமாகக் கவனித்து ஒரு குறிப்பிட்ட தருணத்தில் ஒரு ஆர்ப்பாட்டம் அதிகபட்சம் சாத்தியமான விளைவை ஏற்படுத்தி விட்டதா என்று கணிக்கின்ற ஆற்றல் படைத்த தலைமை அல்லது ஆர்ப்பாட்டம், வேலை நிறுத்தங்கள், ஏன், ஒரு பொது வேலைநிறுத்தம் என்று மக்கள்திரள் நடவடிக்கையின் மூலம் இயக்கத்தை அந்தக் குறிப்பிட்ட நிலைமையில் தீவிரப்படுத்துவது உகந்ததா என்று தீர்மானிக்கின்ற தலைமை அவசியம். யுத்தத்தின் போது நடத்திய சமாதானத்துக்கான ஆர்ப்பாட்டங்கள் நமக்குக் கற்பித்தது போல இத்தகைய ஆர்ப்பாட்டங்கள் நடத்திக் கலைந்த பிறகுகூட ஒரு கட்சி – ஒரு போரிடும் பாட்டாளி வர்க்கக் கட்சி – எவ்வளவுதான் சிறியதாக அல்லது சட்டவிரோதமானதாக இருந்தாலும் எழுப்பியுள்ள பிரச்சினை முக்கியமானதாக இருக்கும் பட்சத்தில், மிகப்பெரும் அளவிலான மக்கள்திரளினருக்குக் கூடுதலான ஆர்வத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும் பட்சத்தில் இதிலிருந்து கவனத்தைத் திருப்பிடவோ, அல்லது அமைதியாய் இருக்கவோ கூடாது. பெரிய தொழிற்சாலைகளை அடிப்படையாக வைத்து ஏற்பாடு செய்யப்பட்டால், தெருமுனை ஆர்ப்பாட்டங்கள் மிகப்பெரும் விளைவை ஏற்படுத்துகின்றன. சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட நமது கருக்குழுக்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களின் வாய்வழியான, மற்றும் அச்சிட்ட பிரகடனங்கள் மூலமான பிரச்சாரம் ஒரு குறிப்பிட்ட நிலைமையில் ஒரு குறிப்பிட்ட அளவு சிந்தனை மற்றும் நடவடிக்கைக்கான ஒற்றுமையைக் கொண்டுவருவதில் வெற்றி பெற்று இருக்குமானால், நிர்வாகக் கமிட்டியானது தொழிற்சாலையில் உள்ள நம்பிக்கைக்குரிய கட்சி உறுப்பினர்களையும் கருக்குழுக்கள் மற்றும் தொழிலாளர் குழுக்களின் தலைவர்களையும் அழைத்து விவாதித்து திட்டமிட்ட நாளில் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான நேரம் மற்றும் வேலையை இறுதியாக்கவும், மேலும் முழக்கங்களைத் தீர்மானிக்கவும், ஆர்ப்பாட்டத்தைத் தீவிரப்படுத்தும் வாய்ப்புகள், நிறுத்துவதற்கான மற்றும் கலைந்து செல்வதற்கான தருணம் ஆகியவற்றைத் தீர்மானிக்கவும் வேண்டும். நன்கு அறிவுறுத்தப்பட்ட மற்றும் அனுபவம் வாய்ந்த நிர்வாகிகள் குழு ஆர்ப்பாட்டத்துக்கு முதுகெலும்பாக அமைக்கப்பட வேண்டும். ஆர்ப்பாட்டம் தொழிற்சாலையில் இருந்து தொடங்குவது முதல் கலையும் வரை மக்களிடையில் அவர்கள் கலந்திருக்க வேண்டும். மக்களிடையில் பொறுப்பான கட்சி ஊழியர்கள் திட்டவகைப்பட்ட முறையில் கலந்திருக்க வேண்டும். நிர்வாகிகள் அவர்களுக்குள் உயிரோட்டமான தொடர்புகள் வைத்திருக்கவும், அவ்வப்போது உறுப்பினர்களுக்குத் தேவையான அரசியல் அறிவுறுத்தல்கள் தரவுமான நோக்கத்திற்கு இது வசதிப்படும். ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கான, நிலைமைக்கேற்ப இயங்கும் அரசியல் ரீதியில் ஒழுங்கமைக்கப்பட்ட இத்தகைய தலைமையைக் கொண்டிருப்பது பெரிய பெரிய மக்கள்திரள் நடவடிக்கைகளை மிகப்பயனுள்ள முறையில் இடையறாது புதுமைப்படுத்தவும் அடுத்தடுத்து தீவிரப்படுத்தவும் வாய்ப்பு அளிக்கும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

பென்னாகரம் : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு ஆர்ப்பாட்டம் !

0

“மோடி அரசின் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழும்!” என்ற தலைப்பில் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் 12.08.2020 அன்று, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புமாஇமு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் தோழர் பாலன் தலைமை தாங்கினார். தனது உரையில் “மோடி அரசு கடந்த 2015-ல் இருந்து இந்தக் கல்விக் கொள்கையை அமுல்படுத்த தொடர்ச்சியாக முயற்சித்து வந்தனர். இது மட்டுமின்றி இந்த கோரோனா சூழலில் 196 சட்டங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது…” இந்த மக்கள் விரோத திட்டங்களை எதிர்த்து நாம் போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார்.

அடுத்து உரையாற்றிய திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட செயலாளர் தோழர் சந்தோஷ்குமார் “மும்மொழி கல்வி கொள்கை என்ற பெயரில் சமஸ்கிருதத்தை திணிக்கிறது மோடி அரசு. அன்றைக்கு ராஜாஜியின் குலக்கல்வி திட்டத்தை எதிர்த்து பெரியார் அன்று அதனை முறியடித்தார், இன்று மோடி தலைமையிலான பிஜேபி அரசு மீண்டும் குலத்தொழிலை திணிக்கிறது. இதனை எதிர்த்து போராடவேண்டும்” என்றார்.

அடுத்து உரையாற்றிய மக்கள் அதிகாரத்தின் பென்னாகரம் பகுதி ஒருங்கிணைப்பாளர் தோழர் சிவா. “இந்தக் கல்விக் கொள்கை ஏழை எளிய மாணவர்களின் கல்வியை மறுக்கின்றது. தாய்மொழி வழியில் படித்தவர்கள் தான் இன்றைக்கு பல துறையில் சாதிக்கின்றனர். ஆனால் மோடி அரசு யாரும் பேசாத மொழியான சமஸ்கிருதத்தை திணிக்கிறது, இந்தி படித்தால் வேலை கிடைக்கும் என்கின்றனர். ஆனால் இந்தி படித்த பல வடமாநில இளைஞர்கள் தமிழகத்தில் தான் வேலை செய்கின்றனர். அவர்களுக்கு இந்த அரசு ஏன் வேலை கொடுக்கவில்லை? இதை எதிர்த்து பேசினால் பல முற்போக்காளர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்து சிறையில் அடைக்கிறது. இந்த பாசிச அடக்குமுறையை எதிர்த்து அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும்” என்றார்.

அடுத்து உரையாற்றிய தமிழ் புலிகள் கட்சியின் மேற்கு மாவட்ட தலைவர் தோழர் முனுசாமி “பரவலாக்கப்பட்ட கல்வி அறிவை யார் பெறுகிறார்களோ, அவர்கள்தான் முன்னேறுகின்றனர். நாம் கல்வியறிவை பெறக் கூடாது என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். – பிஜேபி கும்பலின் நோக்கம். நமது கல்வியை பறிக்கின்ற கல்விக் கொள்கை தான் இந்த புதிய கல்விக் கொள்கை. நாம் கல்வியைப் பெற வேண்டுமானால் இந்தக் கல்விக் கொள்கையை எதிர்த்துப் போராட வேண்டும்.” என்று கூறினார்.

படிக்க :
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே ! பு.மா.இ.மு கையெழுத்து இயக்கம் !
NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !

அடுத்து உரையாற்றிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் லட்சுமணன் “மோடி அரசு பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை வைத்துக் கொண்டு, ஏழை தாழ்த்தப்பட்ட மாணவர்கள் படிக்க கூடாது என்று தான் இந்தக் கல்விக் கொள்கையை அமல்படுத்துகிறது. அன்றைக்கு பெரியார் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒன்றிணைத்து இந்தித் திணிப்பை எதிர்த்துப் போராடினார். இன்று நாமும் பெரியார் – அம்பேத்கர் வழியில் போராட வேண்டும். ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி -யின் கொள்கைகளை திணித்துக் கொண்டு இருக்கின்றன. இதை எதிர்த்து தமிழகத்தில் உள்ள அனைத்து ஜனநாயக கட்சிகளும் குரல் எழுப்ப வேண்டும்.” என்றார்.

அடுத்து உரையாற்றிய மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜானகிராமன் “பார்ப்பனிய மேலாதிக்கத்தை நிறுவ பல சட்டங்களை கொண்டு வந்துள்ளது பிஜேபி கும்பல். குறிப்பாக அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது; குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை திருத்துவது. என பல சட்ட விதிகளை தனக்கு ஏற்ப மாற்றுகின்றனர். மக்களின் கடவுள் நம்பிக்கை வைத்து நம்மை பிளவுபடுத்துகிறனர். இந்த புதிய கல்விக் கொள்கையும் அதுபோன்ற ஒன்றுதான்.” என்று விளக்கினார்.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

அடுத்ததாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் தர்மபுரி மாவட்ட அமைப்பாளர் தனது உரையில் “பாசிச மோடி அரசு சமீபகாலமாக கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்துள்ளது; அரசு கலை கல்லூரிகளில் சுழற்சி முறை ரத்து! இணையவழிக் கல்வி முறை! கலை அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு! உயர்கல்வி ஆணையம்! இப்படி பெரும்பான்மை மாணவர்களின் கல்வி உரிமையை மறுக்கும் வகையில் இவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப் படுகின்றது.

அதேபோன்றுதான் இந்த புதிய கல்விக் கொள்கை 450 பக்கங்களைக் கொண்டு ஐந்து பிரிவுகளாக கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிக் கல்வியில் இருந்து மாணவர்களை வெளியேற்றும் நோக்கத்தில் 3,5,8, வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு.

ஏற்கனவே இடைநிற்றல் என்பது அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. நமது மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும்பான்மை மாணவர்கள் கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்கள். குடும்பச் சூழலின் காரணமாக உயர்கல்வி செல்வதே பெரிய விஷயம், இந்த நிலையில் இந்த பொதுத்தேர்வு முறை என்பது பள்ளிக் கல்வியில் இருந்து மாணவர்களை வெளியேற்றும். அதோடு மட்டுமல்லாமல் கூலித் தொழிலாளர் முறையை அதிகரிக்கும்.

தருமபுரி மாவட்டத்தை பொருத்தவரையில் அரசு பள்ளி கல்லூரிகளில் எந்த அடிப்படை வசதிகளும் இன்றி இயங்குகிறது. குடிநீர் கழிப்பறை போன்ற வசதிகள் கூட இல்லாமல் மாணவர்கள் படிக்கின்றனர் அரசுப் பள்ளி – கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, அந்த கட்டமைப்புகளை சரிசெய்வது என்று இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கு அரசு துணை நிற்கிறது. குறிப்பாக ஒரு செங்கல்லை கூட நடாத ஜியோ பல்கலைக்கழகத்திற்கு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு, உலகத் தரச் சான்றிதழ் பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்துள்ளது.

படிக்க :
101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?
மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

இவை இன்றி ஏர்டெல் பல்கலைக்கழகத்திற்கும் உலகத் தரச் சான்றிதழ் இனி உள்ளூர் முதலாளிகள் கொள்ளை அடித்தது போதும், கார்ப்பரேட் முதலாளிகள் கொள்ளைக்கு இந்த புதிய கல்விக் கொள்கை அடித்தளம் இடுகிறது. இதுமட்டுமின்றி மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் எந்த மாநிலத்திலும் பேசாத; வழக்கத்தில் இல்லாத செத்துப்போன மொழியான சமஸ்கிருதத்திற்கு அதனுடைய மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்கிறது.

மோடி ஆட்சி ஏற்றுக் கொண்ட 2014-ல் இதற்கு ஒரு வாரம் விழா நடத்துவது, அதைத் தொடர்ந்து மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை கட்டாயமாக்குவது என தொடர்ச்சியாக சமஸ்கிருத திணிப்பை செய்தது. அதுபோன்றுதான் சமீபத்தில் திருப்பூரில் அனைத்து ஆசிரியர்களையும் அழைத்து ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்துகிறது. புராண இதிகாசங்களை மாணவர்களுக்கு சொல்லித் தரவேண்டும் என்று கூட்டம் நடத்துகின்றனர். இந்த புராண இதிகாசங்களை மாணவர்கள் படித்தால் என்ன நடக்கும்? மருத்துவதுறை எப்படி இருக்கும்? நோய் வந்தால் அந்த நோய்க்கு மாட்டு மூத்திரம், அப்பளமும், சாணியும், சாப்பிட்டால் சரியாகிவிடும் என்று கூறுவார்கள்.

நீதிபதிகள் தீர்ப்பு எப்படி எழுதுவார்கள் “குற்றவாளிகளை எண்ணெய் சட்டியில் போட்டு வறுத்து எடுங்கள்..” இப்படி புராண இதிகாசங்களை கொண்டு, கல்வியில் விஞ்ஞானத்துக்கு புறம்பான குப்பைகளை கொண்டு வந்து திணிக்கிறது.

இது புதிய கல்விக் கொள்கை அல்ல பார்ப்பன மனுநீதி கல்வி கொள்கை. ஆகவே இந்தக் கல்விக் கொள்கையை நாம் எந்த வடிவில் வந்தாலும் எதிர்த்துப் போராட வேண்டும். கல்வி இல்லாதவன் கலர் நிலத்துக்கு சமம் என்றார் வள்ளுவர், நம்மை களர் நிலம் ஆகும் மோடி அரசின் இந்த கல்விக் கொள்கையை எதிர்த்து அனைத்து ஜனநாயக இயக்கங்களும் அமைப்புகளும் ஓரணியில் திரண்டு போராடுவோம்!” என்று அறைகூவல் விடுத்தார்.

இறுதியாக புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாவட்ட குழு உறுப்பினர் தோழர் சத்தியநாதன் நன்றியுரை கூறினார்.

தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி.
தருமபுரி. தொடர்புக்கு : 63845 69228.

101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி ரத்து : ஆத்மநிர்பாரா ? கார்ப்பரேட் நிர்பாரா ?

ந்தியாவின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்க “ஆத்ம நிர்பார்” (சுயசார்பு) இந்தியா திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் கோடிக்கான திட்டங்கள் வகுக்கப்பட்டிருப்பதாக நிர்மலா சீதாராமன் கடந்த மே மாதத்தில் அறிவித்திருந்தார். அதன் ஒருபகுதியாக இராணுவத் துறையிலும் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் 101 பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அண்மையில் அறிவித்துள்ளார்.

பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள ராஜ்நாத் சிங், இந்த தடையானது 2020 முதல் 2024-ம் ஆண்டுக்குள் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்த 6 முதல் 7 ஆண்டுகளுக்குள் முப்படைகளுக்கும் ரூ.4 லட்சம் கோடி அளவிலான தளவாடங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படும் எனவும், துப்பாக்கிகள், சரக்கு போக்குவரத்துக்கான விமானங்கள், ரேடார்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் 2020-21-ம் நிதியாண்டுக்கு உள்நாட்டில் உற்பத்தி செய்யப்பட்ட இராணுவத் தளவாடங்களின் கொள்முதலுக்காக ரூ.52,000 கோடியையும் ஒதுக்கியுள்ளது பாதுகாப்புத்துறை அமைச்சகம்.

கொரோனாவால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உள்நாட்டு பொருளாதாரத்தை வளர்க்க இறக்குமதியின் அளவைக் குறைத்து ஏற்றுமதியை அதிகரிக்கும் நடவடிக்கையாகவே ஆத்மநிர்பார் திட்டத்தைக் கொண்டு வந்திருப்பதாக மோடி அரசு கூறுகிறது. ஆனால் சொல்லொன்றாக செயல் வேறாக இருப்பதுதான் மோடி அரசின் தனிச்சிறப்பான இயல்பு. அந்த வகையில், ஒரு பக்கத்தில் ஆத்மநிர்பார் இந்தியா எனக் கூறிக் கொண்டே, மறுபக்கத்தில், அந்நிய முதலீட்டை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார் பிரதமர் மோடி. சமீபத்தில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்தியா குளோபல் வீக் மாநாட்டில் பேசிய மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் பியூஷ் கோயல், சீனாவில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு நிறுவனங்கள், தங்களது முதலீடுகளை வேறு நாடுகளுக்கு மாற்றத் திட்டமிட்டுள்ளதால் அதை இந்தியாவும், இந்திய நிறுவனங்களும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கூறியிருக்கிறார்.

அந்நிய நிறுவனங்களின் மூலதனத்தை பெறுவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகத்தான் இந்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பரில் அந்நிய நேரடி முதலீடுகளை ஊக்குவிக்கும் விதமாக, கார்ப்பரேட் வரி விகிதத்தினை 25 சதவிகிதமாக குறைத்தது. மேலும், சீனாவில் இருந்து வெளியேறும் நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும் வகையில் அவர்களுக்கான விதிமுறைகளை மேலும் தளர்வு செய்யவும் மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

சாதாரண உற்பத்தி மற்றும் சேவைத் துறைகளின் நிலைமையே இப்படி இருக்கையில், ராணுவ தளவாடங்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் என்ற பிதற்றலை பாதுகாப்புத் துறை அமைச்சர் வெளியிட்டுள்ளார். ராணுவ தளவாடங்கள் உற்பத்தித் துறையில் உள்நாட்டுத் தயாரிப்பு எந்த அளவு சாத்தியம் என்பதையும், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட உள்நாட்டுத் தயாரிப்புத் திட்டங்களின் நிலைமையையும் சிறிது பார்த்தாலே இது வெறும் சவடால்தான் என்பது தெரியவரும்.

படிக்க :
சுயசார்பு இந்தியா : மோடியின் மற்றொரு பித்தலாட்டம் !
தமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ? | நா. வானமாமலை

இராணுவத் தளவாடங்கள் உற்பத்தியில் உள்நாட்டுப் பங்களிப்பிற்கான இதைப் போன்றதொரு அறிவிப்பை கடந்த 2013 மற்றும் 2018 காலகட்டங்களில் இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. இதற்கு தொழில்நுட்பக் கண்ணோட்டம் மற்றும் செய்திறன் திட்டம் (TPCR) என்று பெயரிட்டிருந்தது. கடந்த 2013-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியிலும், 2018-ம் ஆண்டு பாஜக ஆட்சியிலும்தான் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் இந்தத் திட்டத்தின்படி இராணுவத் தளவாடங்களின் உள்நாட்டு உற்பத்தியை சாதிக்க இயலவில்லை.

கடந்த 2018-ம் ஆண்டு மோடி அரசால் அறிவிக்கப்பட்ட TPCR-2018 திட்டத்தின்படி, சுமார் 221 இராணுவத் தளவாட பாகங்களை “மேக் இன் இந்தியா” திட்டத்தின் கீழ் 2020-களின் பிற்பகுதிக்குள் உள்நாட்டிலேயே தயாரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப் படுவதில் வெற்றி பெறவில்லை.

எனில் தற்போது 101 இராணுவத் தளவாடங்கள் உள்நாட்டில் உற்பத்தி செய்யப் போவதாக மோடி அரசு அறிவித்ததன் பின்னணி என்ன ? இராணுவத் தளவாட உற்பத்தியில் ஈடுபட்டுள்ள பொதுத்துறை நிறுவனங்களை ஓரம் கட்டிவிட்டு, அந்நிய மற்றும் உள்நாட்டு தனியார் நிறுவனங்களை ஊக்குவிப்பதையே நோக்கமாகக் கொண்டது இந்த அறிவிப்பு. இதற்கான பின்னணி வேலைகள் கடந்த சில ஆண்டுகளாக துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன. இரண்டு உதாரணங்களை அதற்குப் பார்க்கலாம். ஒன்று உலகமே காறித்துப்பிய ரஃபேல் விமான ஒப்பந்தம், மற்றொன்று சி-295 ரக போக்குவரத்து விமான உற்பத்தி ஒப்பந்தம்.

காங்கிரஸ் ஆட்சியில் எடுக்கப்பட்ட முடிவின்படி, ரபேல் போர் விமானங்களுக்கான ஒப்பந்தம் பிரான்ஸ் நாட்டின் டஸால்ட் நிறுவனத்துக்கும் இந்திய பொதுத்துறை நிறுவனமான இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கும் இடையில் போடப்பட்டது. அந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சத்தை பார்ப்போம். ரஃபேல் விமானத் தயாரிப்பு உரிமையையும், அதற்கான தொழில்நுட்பத்தையும் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துக்கு வழங்கவேண்டும் என்றுதான் காங்கிரஸ் ஆட்சியில் டசால்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.

ஆனால் ஆதம்நிர்பார் நாயகர் எனப் புகழப்படும் ‘தேசபக்தர்’ மோடி ஆட்சிக்கு வந்ததும், அந்த ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு, அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் மூலம் வாங்குவது என்று முடிவு செய்யப்பட்டது. அதிக விலை கொடுத்து வாங்கியதோடு மட்டுமல்லாமல் உற்பத்திக்கான தொழில்நுட்பம் வழங்கப்படாது என்ற டஸால்ட் நிபந்தனைக்கு உட்பட்டுதான் இந்த ஒப்பந்தத்தைப் போட்டது மோடி அரசு. இதன் காரணமாக பொதுத்துறை நிறுவனமான எச்.ஏ.எல் (HAL) மிகப்பெரிய வருவாய் ஆதாயத்தையும், விமான உற்பத்திக்கான தொழில்நுட்பத்தையும் இழந்தது. இந்த ஒப்பந்தம் போடப்படுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் ரிலையன்ஸ் டிபன்ஸ் நிறுவனம் அவசர அவசரமாக உருவாக்கப்பட்டது என்பது கூடுதல் செய்தி.

படிக்க :
நாட்டைப் பாதுகாக்க ரஃபேல் ! ரஃபேலை பாதுகாக்க எலுமிச்சை !
சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

அதே போல இந்திய இராணுவத்திற்கான போக்குவரத்து விமானங்கள் உற்பத்தி செய்வதற்கான பணியை எடுப்பதற்கான போட்டியில் பங்கேற்கவியலாமல் எச்.ஏ.எல் (HAL) நிறுவனம் முடக்கப்பட்டது. சி-295 ரக போக்குவரத்து விமானம் வாங்குவதற்கான ஒப்பந்தம் டாட்டா – ஏர்பஸ் நிறுவனங்களுக்கு இடையே போடப்பட்டது. எச்.ஏ.எல் நிறுவனம் போட்டியிலிருந்து விலக்கப்பட்டு தனியார் நிறுவனமான டாட்டாவுக்கு இந்தப் பணியாணை வழங்கப்பட்டிருப்பதுதான், மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தின் இலட்சணம்.

தற்போது ‘மேக் இன் இந்தியா’வை சற்றுப் பெயர் மாற்றி ‘ஆத்ம நிர்பார்’ என்று வைத்துள்ளார் மோடி. அவ்வளவுதான் வித்தியாசம். ஆத்மநிர்பார் இந்தியா – அதாவது சுயசார்பு இந்தியா என்றால் உள்நாட்டு முதலாளிகளின் மூலதனத்தில் பிரதானமாக உள்நாட்டின் தேவைக்காகவும், இரண்டாம்பட்சமாக ஏற்றுமதிக்காகவும் உற்பத்தி செய்வது என்று பொருள். ஆனால் மோடியின் இலக்கணப்படி, உள்நாட்டு நிறுவனத்தில் அந்நிய நிறுவனங்களின் முதலீடும், பங்கும் இருந்தாலும், இந்தியாவில் பதிவு செய்திருந்தால் அது இந்திய நிறுவனம்தான். அது ஆத்மநிர்பார் தான்.

இந்தியாவில் அந்நிய முதலீடுகளை பொறுத்த வரையில் மொரீஷியஸ், சிங்கப்பூர், நெதர்லாந்து, அமெரிக்கா, ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, UAE உள்ளிட்ட நாடுகள் முதன்மையாக உள்ளன. மேலும், அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் கோலோச்சிக் கொண்டிருக்கும் தொலைதொடர்பு மற்றும் மின்னணு சேவைத்துறை சமீபத்தில் அதிகளவிலான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்துள்ளதையும் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது.

கடந்த 2017-19 ஆண்டுகளில் தொலைத் தொடர்புத் துறையில் மட்டும் சுமார் 8,809 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அந்நிய முதலீடு குவிந்துள்ளது. உற்பத்தித்துறையில் சுமார் 7,066 மில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டு முதலீடு குவிந்துள்ளது. சில்லறை மற்றும் மொத்த வர்த்தகத் துறையிலும் வெளிநாட்டு முதலீடு குவிந்துவருகிறது. ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் தளங்களில் 2017-18-ம் ஆண்டில் மட்டும், சுமார் 4,478 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. வங்கிகள், நிதி நிறுவனங்களை உள்ளடக்கிய நிதிச்சேவைகள் துறையில் சுமார் 4,070 மில்லியன் டாலர்கள் அளவுக்கு வெளிநாட்டு முதலீடுகள் குவிந்துள்ளன. மேலும், வணிக சேவைகள், கணிணிச் சேவைகள், கட்டுமானம், மின்சாரம், எரிசக்தி உற்பத்தித் துறையில் வெளிநாட்டு முதலீடுகள் அதிக அளவில் வந்துள்ளன.

கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்தி, தொழிலாளர் நலச்சட்ட ஒழிப்பு, கார்ப்பரேட்டுகளுக்கு நிதிச் சலுகை என அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களை சிவப்புக் கம்பளமிட்டு வரவேற்கும் மோடி அரசு மற்றொரு பக்கம் சுயசார்பு பொருளாதாரம் என்ற பெயரில் பூச்சு பூசும் வேலையில் ஈடுபட்டுள்ளது.

இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்தோ அல்லது பதிவு செய்யப்பட்ட நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதன் மூலமாகவோ, அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்கள் போட்டிருக்கும் மூலதனத்தை இந்த நாட்டிலிருந்து வெளியே அள்ளிச் செல்ல வழிவகுத்துக் கொண்டே ஆத்மநிர்பார் எனக் கூவுவது, வெறும் நாடகம் தானே அன்றி உண்மையான சுயசார்பு குறித்த அக்கறை மோடி அரசிடம் துளியும் கிடையாது. மாறாக பொதுத் துறைகளையும் தனியார் மயமாக்கி, சொந்த மக்களையே சுரண்டுவதற்கான திட்டம்தான் இது என்பதைத்தான் சமீபத்திய நிகழ்வுகள் உறுதி செய்கின்றன. அதன் ஒரு பகுதியே 101 இராணுவத் தளவாடங்கள் இறக்குமதி குறித்த மோடி அரசின் அறிவிப்பாகும் !


 எல்லாளன்
செய்தி ஆதாரம் : டைம்ஸ் ஆஃப் இந்தியா

தமிழர் வரலாற்றை எந்தக் கண்ணோட்டத்தில் பார்ப்பது ? | நா. வானமாமலை

3
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 07

முதல் பாகம்

தமிழக வரலாற்றுக் கண்ணோட்டங்கள்

கடந்த 5 ஆண்டுகளில்(1960-களில்) தமிழக வரலாற்றுச் சான்றுகள் பல வெளியாகியுள்ளன. புதைபொருள் ஆராய்ச்சியாலும் கல்வெட்டு ஆராய்ச்சியாலும் இலக்கிய நூல்களிலுள்ள வரலாற்றுச் சம்பவங்கள் குறித்த ஆராய்ச்சியாலும் பற்பல வரலாற்று நிகழ்ச்சிகள் ஆராய்ச்சியாளர்களது கவனத்திற்கு வந்துள்ளன.

வரலாறு நிகழ்ச்சிகளின் கோர்வையல்ல. வரலாற்று ஆசிரியர் நிகழ்ச்சிகளைத் தமது கண்ணோட்டத்திற்கு ஏற்ற முறையில் பகுத்து ஆராய்ந்து அவற்றிற்குப் பொருள் கொடுக்கிறார்கள். அதனாலேயே ஒரேவிதமான நிகழ்ச்சிகள் கண்ணோட்ட வேறுபாட்டால் இருவிதமான பொருள் பெறுவதுண்டு.

தமிழக வரலாற்றுத் துறையில் இருவகையான கண்ணோட்டங்களை நாம் காண்கிறோம். ஒவ்வொரு கண்ணோட்டமும் குறிப்பிட்ட அரசியல் – சமூக சூழ்நிலையில் எழுகின்றது. பின்னர் அக்கண்ணோட்டம் வரலாற்று நிகழ்ச்சிகளுக்குக் குறிப்பிட்ட முறையில் பொருள் அளிக்கின்றது. இவ்வாறு வரலாற்றின் பொருள், கண்ணோட்டத்தைப் பொருத்ததாகி விடுகிறது.

நமது வரலாற்றை நாம் அறிந்து கொள்வதற்கு மேற்குறித்த இரு கண்ணோட்டங்கள் எவ்வகையில் வழி காட்டுகின்றன? எச்சூழ்நிலையில் அவை எழுந்தன? அவற்றின் மூலம் வரலாற்றுண்மையை அர்த்தப்படுத்திக் கொள்ள முடியுமா? என்னும் வினாக்களுக்கு விடை காண முயலுவோம்.

இந்திய வரலாறு முதன்முதலில் ஆங்கிலச் சரித்திர ஆசிரியர்களால் எழுதப்பட்டது. அவர்களில் வின்சென்ட் ஸ்மித் முக்கியமானவர். அவர் சரித்திரம் எழுத மேனாட்டு ஆசிரியர்களது கீழ்திசைத் தத்துவ ஆராய்ச்சிகளை அடிப்படையாகக் கொண்டார்.

ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவுவதற்கு முன் இந்தியாவில் தோன்றியிருந்த நாகரிகத்தைப் பற்றி உயர்வான எண்ணம் அவருக்குக் கிடையாது. ஆங்கில ஆதிக்கம் இந்நாட்டில் பரவியது இந்நாட்டின் தவப்பயன் என்று எண்ணினார். ஆங்கில ஆட்சியின் மேன்மையை விளம்பரப்படுத்த விரும்பினார். இக்கண்ணோட்டம் வரலாற்றுண்மைகளை அவருடைய போக்கில் காண உதவிற்று. இவரைப் போன்றே பல ஆங்கில ஆசிரியர்கள் இந்நாட்டு உண்மைகளைக் கண்டார்கள். இது ஏகாதிபத்தியக் கண்ணோட்டமாகும். இவர்கள் இந்நாட்டு மக்களின் ஒற்றுமையை விரும்பவில்லை. எனவே ஒவ்வொரு இன மக்களின் நாகரிகத்தையும் தனிப்பட்டதாகவும், ஒன்றிற்கொன்று முரண்பட்டதாகவும் வருணித்தார்கள். ஆரிய நாகரிகம், திராவிட நாகரிகம் இவற்றிடையே தவிர்க்க முடியாத முரண்பாடுகள் இருப்பது ஆகிய தன்மைகளை இவர்கள் கண்ணோட்டக் கண்ணாடி மூலம் பெரிதாக்கிக் கொண்டார்கள். இந்து – முஸ்லீம் முரண்பாடுகளைப் பெரிதாக்கி வரலாற்றில் அதனையே நமது இடைக்கால வரலாற்றின் அச்சாணியாக்கிக் காட்டினார்கள். ஆங்கில ஆசிரியர்களில் சிலர் ஆரிய நாகரிகத்தை உயர்த்தினர். சிலர் இந்து மன்னர் ஆட்சியை உயர்த்திப் பேசினர், இன முரண்பாடுகளையும் மிக விரிவாக எழுதினர்.

இந்நூல்கள் தாம் நமது தமிழக வரலாற்று ஆசிரியர்களின் மூல நூல்கள். அவற்றை அவர்கள் பயன்படுத்திய விதத்தை நாம் ஆராய்தல் வேண்டும்.

தமிழக வரலாற்றை எழுதியவர்களில் இரு கண்ணோட்டங்கள் கொண்டவர்கள் உண்டு என்று முன்னர் குறிப்பிட்டேன். முதல் கண்ணோட்டம் எது என்று தற்போது காண்போம்.

தமிழக வரலாற்றில் சிற்சில பகுதிகளை முதன் முதலில் எழுதிய எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார்.

தமிழக வரலாற்றில் சிற்சில பகுதிகளை முதன் முதலில் எழுதியவர்கள் எஸ்.கிருஷ்ணசாமி அய்யங்கார், நீலகண்ட சாஸ்திரியார், பி.டி.ஸ்ரீனிவாச அய்யங்கார் முதலியோர். இவர்கள் யாவரும் ஆங்கில ஆட்சிக் காலத்தில் ‘அறிவாளி’ வர்க்கம் என்று கருதப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள். இவ்வர்க்கம் ஆங்கில ஆட்சியில், அதன் உதவியோடு உயர்ந்து அதன் ஆதிக்கத்தில் பணிபுரிந்தது. ஆரிய உயர்வு பற்றி தமக்கே உரிய உணர்வு, ஆங்கில ஆசிரியர்களால் போற்றப்பட்டது கண்டு பெருமை கொண்டது. ஆரிய நாகரிகம், வேத நூல்கள், உபநிஷத தத்துவங்கள், வடமொழி நூல்களில் காணப்படும் அரசியல் கருத்துக்கள் இவற்றை ஆங்கிலேய மொழி பெயர்ப்பாளர்கள் மூலம் உணர்ந்து அவற்றைப் பெருமையோடு போற்றினர். ஆங்கில நாகரிகம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் எவ்வாறு கீழ் நிலையிலுள்ள இந்திய நாகரிகத்தை மாற்றியமைத்ததோ, அதுபோலவே இந்தியாவின் பழங்காலத்திலுள்ள பல்வேறு நாகரிகங்களையும் ஆரிய நாகரிகம் மாற்றியமைத்தது என எண்ணினர். இந்நாகரிகத்தின் பிரதிநிதிகள் தமிழ்நாட்டில் பிராமணர்கள் என்று அவர்கள் நினைத்தனர். உதாரணமாக, எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்காரின் சொற்பொழிவுகளுக்கு, அவர் எழுதிய முன்னுரையில் இக்கருத்தை அவரே கூறுகிறார்:

  • “தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் தனித்தன்மை வாய்ந்தது. வெளிநாட்டாருடைய மதிப்பீட்டில், வேதகால முறை, அடிப்படை மாறுதல் எதுவுமின்றி தென்னாட்டில் நிலவி வருகிறது. தென்னாட்டில் பிராமணருடைய ஸ்தானம் பற்றிய விவாதம் தற்பொழுது முன்னணிக்கு வந்துள்ளது. இந்நிலையில் வரலாற்று ரீதியாக இப்பிரச்சினையை ஆராய்வது அவசியம். இந்திய சமூகத்தில் பிராமணருடைய ஸ்தானம் பற்றி ‘ஸ்த பாத பிராமணம்’ கூறுகிறது. தென்னாட்டிலும் அதே ஸ்தானம் அவர்களுக்கு இருந்தது (வட நாட்டிலிருந்து தென்னாட்டிற்குக் குடியேறிய காலத்திலிருந்து சமீப காலம் வரை இந்நிலை மாறவில்லை). அவர்களுக்கு இரண்டு பொறுப்புகள் சமூகத்தில் இருந்தன. ஒன்று சமூக நன்மைக்காக யாகம் முதலிய வழிபாடுகளைச் செய்வது; மற்றொன்று கல்வி கேள்விகளைப் பாதுகாத்து வளர்ப்பது. இவற்றைப் பாதுகாப்பது என்றால் இவற்றைச் சமூகத்தில் பரப்புவதும் அடங்கும்.
  • கிடைக்கும் ஆதாரங்களினின்றும், பிராமணர் தங்களது கடமையைத் திறமையாகச் செய்து, தங்கள் நடைமுறையினின்றும் பிற மக்களின் உயர்வுக்கு வழிகாட்ட உதாரணமாகத் திகழ்ந்தார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்குக் கீழ்நிலையிலிருந்த பிறர் அவர்களைப் பின்பற்றி அவர்களுடைய நிலைக்கு உயர முயன்றார்கள். எனவே இந்தியாவிலுள்ள பெருவாரியான மக்களின் சமூகம் உயர்வதற்கு பிராமணர்கள் முக்கிய காரணமாக இருந்தார்கள். தமிழ் இலக்கியத்தில் புகழ்பெற்ற பெயர்களைப் பார்த்தால் இந்த உண்மை விளங்கும். பிராமண முறை சமுதாய அமைப்பே கல்வி, நாகரிகம் முதலியன தமிழ் நாட்டில் முன்னேறியதற்குக் காரணம்.”

இந்த மேற்கோளிலிருந்து தமிழக வரலாற்றின் ஒரு கண்ணோட்டம் தெளிவாயிற்று. மேலும் அது எழுந்த சமூகச் சூழ்நிலையும் ஒருவாறு விளங்கப்பட்டது.

இனி இரண்டாவது கண்ணோட்டத்தை ஆராய்வோம்.

ஹீராஸ் பாதிரியார்

தமிழ்நாட்டில் பிராமணருக்குச் சமமாகத் தங்களைக் கருதிக் கொண்ட சைவர்களான முதலியார், பிள்ளை, சைவச் செட்டியார்கள் நகரத்தார், கவுண்டர் முதலிய நிலப்பிரபுத்துவ வர்க்கத்தைச் சார்ந்தவரும் சமூக நிலையில் பிராமணருடைய ஆதிக்கம், தங்களுக்கு வேண்டுமென்று எண்ணினர். ஆங்கில ஆதிக்கத்தில் அறிவாளி வர்க்கமாகத் தாங்கள் உயர வேண்டுமென எண்ணினர். பிராமணர்களுடைய ஆரிய நாகரிகக் கொள்கை இவர்களுக்கு வரப்பிரசாதமாகக் கிடைத்தது. இவர்களும் ஒரு தத்துவத்தை உருவாக்கிக் கொண்டனர். அதற்கு அடிப்படை ஆரிய, திராவிட நாகரிகங்களிலுள்ள முரண்பாடுகளைப் பற்றி ஆங்கில ஆசிரியர்களுடைய கருத்துக்கள் தாம். தமிழிலக்கியத்தில் இவர்கள் தென்னாட்டுப் பெருமையைக் கண்டார்கள். தமிழின் சிறப்பையும், தமிழ் நாட்டின் தொன்மையையும் நிறுவ இவர்கள் வரலாறு காணத் துணிந்தனர். இச்சமயம் மொகெஞ்சதாரோ, ஹரப்பா அகழ்வு ஆராய்ச்சிகள் வெளிவந்தன. அவற்றைப் பற்றி ஹீராஸ் பாதிரியார் என்ற மேனாட்டு ஆராய்ச்சியாளர் கருத்துக்களை விமர்சனம் எதுவுமின்றி அப்படியே ஏற்றுக் கொண்டனர். பிராமணர்கள் ஆரிய உயர்வைப் பற்றி எழுதினால் இவர்கள் ஆரிய இழிவையும் திராவிட உயர்வையும் பற்றி எழுதினர்.

வரலாற்று நிகழ்ச்சிகளை திராவிட உயர்வு என்ற கண்ணோட்டத்தில் இவர்கள் கண்டனர். வேதகால முறை தமிழ் நாட்டில் மாறாமல் இருக்கிறதென்று முதல் கண்ணோட்டமுடையவர்கள் கூறினால், இவர்கள் கற்காலம் முதல், தமிழ்நாடும் திராவிட நாடும் எவ்விதத்திலும் மாறவில்லை என்று கூறினர். தங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தேட, தென்னாட்டு வரலாறே, திராவிட ஆரிய முரண்பாடுதான் என்று கூறினர். இராமாயணக் கதையை ஆரிய திராவிடப் போராகச் சித்தரித்தனர். சுக்ரீவனையும் அனுமானையும் ஆரிய அடிவருடிகளாக்கினர். வாலியை ஆரிய ஆதிக்கத்தை எதிர்க்க திராவிட வீரனாக்கினர். ஆரியர் ஆதிக்கத்தை எதிர்க்கத் திராவிட நாடு என்றும் போராடியுள்ளது; இது விடுதலை காக்கும் உணர்வு என்று அந்த மூச்சில் வடநாட்டை அடக்கியாண்டான் கரிகாலன் என்றும், கனக விசயர் தலையில் கல்லேற்றிக் கொணர்ந்தான் செங்குட்டுவன் என்றும் ஆதிக்கப் பெருமை பேசுவர். ஆரியப் படைக் கடந்த நெடுஞ்செழியன் என்ற பெயரைக் கொண்டு, பெரும் போர் ஒன்று நடந்ததாக ஆதாரமின்றியே கயிறு திரிப்பர்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்
பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

இவ்விரண்டு போக்குடையோர் ஆங்கில வரலாற்று ஆசிரியர்கள் தனித் தனியே விரித்து வைத்த இரண்டு வலைகளில் விழுந்து அதனையே வரலாற்று ஆதாரமாகக் கற்பனை செய்து கொண்டார்கள்.

தமிழ்நாட்டு வரலாற்றை இவ்விரு கண்ணோட்டமுடையோராலும் புரிந்து கொள்ள முடியாது. ஏனெனில், இவையிரண்டுமே விஞ்ஞானக் கண்ணோட்டங்களல்ல.

தமிழ்நாட்டு வரலாற்றை உண்மையாக்கிப் புரிந்து கொள்வதற்குத் தமிழ்நாட்டு வளர்ச்சியையும் பிற இனங்களோடு தமிழர் சமுதாயம் கொண்ட தொடர்புகளையும் ஆராய வேண்டும்.

தமிழர் சமுதாய வளர்ச்சியை வரலாற்றுத் தொடக்ககால முதல் ஆராய்வதற்கு சிற்சில பிராமிக் கல்வெட்டுகளும், சங்க இலக்கியங்களும் ஆதாரமாக அமையக் கூடும். புத்த மத வரலாற்று நூல்களும், சைவ வைணவ சமய நூல்களும் ஓரளவு உதவி புரியக் கூடும். பல்லவர் காலத்திற்குப்பின் ஏராளமான கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. அவையாவும் பெயர்த்து எழுதப்பட்டால் வரலாற்றின் அடிப்படை செம்மையாக அமையும். காசுகள், பழம் பொருள்கள் முதலியவை பற்றிய ஆராய்ச்சி இனிதான் தொடங்க வேண்டும். அவை மேற்கொள்ளப்பட்டால் சரித்திரத்தைப் பற்றிய புதிய உண்மைகள் வெளியாகும். தமிழ் நாட்டுப் பண்டைய நகரங்கள் இருந்து மறைந்து போன இடங்கள் அகழ்ந்து ஆராயப்பட்டால், புதிய புதிய உண்மைகள் வெளியாகும்.

இவ்வாறு கிடைக்கும் ஆதாரங்களின் சமுதாய வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு தமிழ் நாட்டு வரலாறு எழுதப்பட வேண்டும். மலையிலும் கடற்கரையிலும் சிறு குடியாக வாழ்ந்த தமிழன், தனது உழைப்பினால் உற்பத்திச் சக்திகளை வளர்த்து முன்னேறி, முல்லை நிலத்திலும், மருதத்திலும் பெருவாழ்வடைந்து பேரரசுகளை நிறுவி, பல்வேறு நாட்டு மக்களோடு நேசப்பான்மையோடும், போர் புரிந்தும் எவ்வாறு வாழ்ந்தான் என்பதை சமூக வளர்ச்சி அடிப்படையில் அன்றி எழுத முடியாது. இது போலவே பிற இன மக்களும், படிப்படியாக வளர்ச்சி பெற்றனர். இந்தியாவில் வளர்ச்சி பெற்ற பல இனங்களைச் சேர்ந்த மக்கள் வாணிபத்தின் மூலம், அறிவுத் தேட்டத்தின் மூலம் நிலப்பிரபுத்துவப் போர் வெறியர் தூண்டுதலாலும், சிற்சில வேளைகள் நேச உறவோடும், சிற்சில வேளைகள் போரின் மூலமாகவும் தொடர்பு பெற்றனர்.

இவற்றால் சமூக வளர்ச்சிகள் சிக்கலடைந்தன. பண்பாட்டுக் கலப்புகள் ஏற்பட்டன. சமுதாய மாறுதலுக்கேற்ற வகையில் பண்பாட்டு மாறுதல்களும் நிகழ்ந்துள்ளன.

ஒரு இன மக்களின் பண்பாட்டில் வளர்ச்சியுறும் அம்சங்களும் உண்டு; தேய்வுறும் அம்சங்களும் உண்டு. பண்பாட்டுக் கலப்பு நிகழும் போது சூழ்நிலை, இரு பண்பாடுகளின் பக்குவ நிலை பொறுத்து பண்பாட்டு அம்சங்கள் சில இணையும், சில அம்சங்கள் இணையா.

இதை மனத்துட் கொண்டு தமிழர் சமுதாய வளர்ச்சிப் போக்கை உண்மையாகச் சித்தரிக்கும் வரலாறு எழுதப்பட வேண்டும். இனக் கண்ணோட்டமோ சாதிக் கண்ணோட்டமோ உண்மையைக் காண உதவாது. வரலாறு ஒரு சமூக விஞ்ஞானம். அது பல விஞ்ஞானங்களின் துணையோடு எழுதப்பட வேண்டும். மானிட இயல், அகழ்வு ஆராய்ச்சி, காசு ஆராய்ச்சி, சமூக இயல், அரசியல், பொருளாதாரம் ஆகிய விஞ்ஞானங்களின் துணையோடு வரலாறு எழுதப்பட வேண்டும். இலக்கியமும் கலைகளும் சமூக வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சரித்திரம் எழுதத் துணையாகும்.

இத்தகைய கண்ணோட்டத்தை உருவாக்குவது உண்மை வரலாறு காண விரும்புவோர் கடமையாகும்.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

சீர்திருத்தவாதத் தலைவர்களை அம்பலப்படுத்துவது எப்படி ?

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 05

முதல் பாகம்

சீர்திருத்தவாதத் தலைவர்களை பருண்மையாக அம்பலப்படுத்துவது

26. சமூக ஜனநாயகவாத மற்றும் குட்டி முதலாளித்துவ தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், இதுபோலவே பல்வேறு வகையான தொழிலாளர் கட்சிகளின் தலைவர்களுக்கும் எதிரான போராட்டத்தில் தொழிலாளர்களுக்கு வெறுமனே எடுத்துக் கூறுவதன் மூலம் அதிகமாக சாதித்துவிட முடியும் என்று நம்ப முடியாது.

இவர்களுக்கு எதிரான போராட்டம் மிகமிக ஆற்றல்மிக்க வகையில் நடத்தப்பட வேண்டும். அவர்களைப் பின்பற்றக் கூடியவர்களை இல்லாமல் செய்வது, முதலாளித்துவத்தின் தாளத்துக்கு ஆடும், துரோகத்தனமான சோசலிஸ்டு தலைவர்களின் உண்மைச் சொரூபத்தை தொழிலாளர்களுக்குக் காட்டுவது இதற்கு மிகச் சிறந்த வழியாகும். தலைவர்கள் என்று கூறப்படும் இவர்களின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கும் அதற்கடுத்த மிகவும் ஆற்றலுள்ள பாணியில் அவர்களைத் தாக்கி வீழ்த்துவதற்கும் பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

முதலாளித்துவத்தின் தாளத்துக்கு ஆடும், துரோகத்தனமான சோசலிஸ்டு தலைவர்களின் உண்மைச் சொரூபத்தை தொழிலாளர்களுக்குக் காட்டுவது இதற்கு மிகச் சிறந்த வழியாகும். தலைவர்கள் என்று கூறப்படும் இவர்களின் முகமூடியைக் கிழித்தெறிவதற்கும் அதற்கடுத்த மிகவும் ஆற்றலுள்ள பாணியில் அவர்களைத் தாக்கி வீழ்த்துவதற்கும் பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும்.

ஆம்ஸ்டர்டாம் தலைவர்களை* (சீர்திருத்தவாத தொழிற்சங்கத் தலைவர்களை) மஞ்சள் தலைவர்கள் என்று கூறுவது மட்டும் போதாது. தொடர்ச்சியான மற்றும் நடைமுறை ரீதியிலான விளக்கங்களுடன் அவர்களது துரோகத்தன்மை நிரூபிக்கப்பட வேண்டும். தொழிற்சங்கங்களில் அவர்களது நடவடிக்கைகள், உலக நாடுகள் லீகின் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பில் அவர்களது நடவடிக்கைகள், முதலாளித்துவ அமைச்சரவைகள் மற்றும் நிர்வாகத்தில் அவர்களது நடவடிக்கைகள், மாநாடுகள் மற்றும் நாடாளுமன்றங்களில் அவர்கள் ஆற்றும் துரோகத்தனமான உரைகள், அவர்களது எழுத்துபூர்வமான அறிவிப்புகள் மற்றும் பத்திரிகைகளில் உள்ள ஆலோசனைகள் எல்லாவற்றுக்கும் மேலாக அனைத்து போராட்டங்களிலும், ஏன், மிகக் குறைவான கூலி உயர்வுக்கான போராட்டங்களிலும் வெளிப்படும் அவர்களது ஊசலாட்டம் மற்றும் தயக்கம் – இவை அனைத்தும் எளிய உரைகளிலும் தீர்மானங்களிலும் ஆம்ஸ்டர்டாம் தலைவர்களின் துரோகத்தனத்தை அம்பலப்படுத்துவதற்கு இடையறாத வாய்ப்புகளை அளித்துக் கொண்டிருக்கின்றன.

பிராக்சன்கள் தங்களது நடைமுறை முன்னணி இயக்கத்தைத் திட்டமிட்ட பாணியில் நடத்த வேண்டும். கீழ்மட்ட தொழிற்சங்க நிர்வாகிகள் காட்டும் அற்ப சமாதானங்களை பொதுவுடைமையாளர்கள் ஏற்கக் கூடாது. அவர்கள் என்னதான் நல்லெண்ணம் கொண்டிருந்தாலும் தங்களது பலவீனம் காரணமாக சட்டங்கள், தொழிற்சங்க முடிவுகள், மேல்மட்ட தொழிற்சங்க நிர்வாகிகளின் கட்டளைகள் ஆகியவற்றின் பின்னால் அடிக்கடி நின்றுகொண்டு, தொழிலாளர்கள் முன்னோக்கிச் செல்வதைத் தடுக்கிறார்கள். மாறாக, தொழிலாளர்களது வழியில் அதிகாரத்துவ எந்திரத்தால் வைக்கப்படுகிற உண்மையான அல்லது கற்பனையான தடைகளை நீக்கும் விசயத்தில் தங்களுக்கு திருப்தி ஏற்படும்வரை பொதுவுடைமைவாதிகள் கீழ்மட்டத் தொழிற்சங்க நிர்வாகிகளை வற்புறுத்த வேண்டும்.

பிராக்சன்கள் எவ்வாறு வேலை செய்ய வேண்டும்?

27. தொழிற்சங்க நிறுவனங்களின் மாநாடுகளிலும் கூட்டங்களிலும் பொதுவுடைமையாளர்கள் பங்கேற்க எச்சரிக்கையான தயாரிப்புகளை பிராக்சன்கள் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, அவைகளை தாங்கள் வைக்கப்போகும் முன்மொழிதல்களை அலசி ஆராய வேண்டும். பேச்சாளர்களையும் ஆலோசகர்களையும் தெரிவு செய்ய வேண்டும். திறமையான அனுபவமிக்க செயல்திறனுள்ள தோழர்களை (தொழிற்சங்க) வேட்பாளர்களை நிறுத்த வேண்டும்.

தமது பிராக்சன்கள் வாயிலாக பொதுவுடைமை நிறுவனங்கள் அனைத்துத் தொழிலாளர்களின் கூட்டங்கள், தேர்தல் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் விழாக்கள் இன்னும் இதுபோன்று, பொதுவுடைமைவாத விரோத நிறுவனங்களால் ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள் தொடர்பாகவும் எச்சரிக்கையான தயாரிப்புகளைச் செய்ய வேண்டும். பொதுவுடைமையாளர்கள் தமது சொந்த தொழிலாளர் கூட்டங்களைக் கூட்டும்போதெல்லாம், கூட்டத்தினரிடையே போதுமான அளவு பொதுவுடைமையாளர்களின் குழுக்கள் விரவி இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். பிரச்சாரத்தில் மனநிறைவு தரும்படியான விளைவுகளை உத்தரவாதப்படுத்திக் கொள்வதற்கான தயாரிப்புகள் அனைத்தையும் அவர்கள் செய்ய வேண்டும்.

தொழிலாளர் நிறுவனங்கள் அனைத்திலும் வேலை செய்வது

28. நிறுவனமயமாக்கப்படாத மற்றும் பின்தங்கிய தொழிலாளர்களை நிரந்தரமாகக் கட்சியின் அணிவரிசைகளில் ஈர்ப்பதற்கும் பொதுவுடையாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். நமது பிராக்சன்களின் உதவியோடு தொழிலாளர்களை தொழிற்சங்கங்களில் சேர்க்கவும் நமது கட்சிப் பத்திரிகைகளைப் படிக்கவும் தூண்ட வேண்டும். பிற நிறுவனங்களை – கல்விக் கழகங்கள், ஆய்வு வட்டங்கள், விளையாட்டு மன்றங்கள், நாடக மன்றங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், நுகர்வோர் சங்கங்கள், யுத்தத்தில் பாதிக்கப்பட்டோர் அமைப்புகள் இன்னும் இதுபோன்றவை – நமக்கும் தொழிலாளர்களுக்கும் தொடர்பு ஏற்படுத்தும் நிறுவனங்களாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுவுடைமைக் கட்சி சட்டவிரோதமாக வேலை செய்யும் இடங்களில் கட்சி உறுப்பினர்களின் முன்முயற்சியால் தலைமைக் கட்சி உறுப்புகளின் ஒத்துழைப்போடும் அவற்றின் கட்டுப்பாட்டிலும் இத்தகைய தொழிலாளர் கழகங்களை (ஆதரவாளர்கள் தலைமையிலான சங்கங்களை) அமைக்கலாம்.

கல்வி வகுப்புகள், வாசகர் வட்டங்கள், சுற்றுலாக்கள், விழாக்கள், ஞாயிறு உலாக்கள், இன்னும் இதுபோன்றவை மூலமாகவும், பிரசுரங்கள் விநியோகிப்பது, கட்சிப் பத்திரிகையின் எண்ணிக்கையை அதிகரிப்பது, இன்னும் இதுபோன்றவை மூலமாகவும் பின்தங்கியவர்களை ஈர்க்க முடியும். பொது இயக்கத்தில் பங்கேற்பதன் வாயிலாக தொழிலாளர்கள் தம்மைத்தாமே தமது சிறு முதலாளித்துவ சார்பிலிருந்து விடுவித்துக் கொள்வர்.

அரசியலில் அக்கறை காட்டாத பாட்டாளி வர்க்கத்தினரின் நலன்களைத் தட்டி எழுப்பவும் பின்னர் அவர்களைக் கட்சியில் ஈர்க்கவும் பொதுவுடைமைவாத இளைஞர் மற்றும் மகளிர் நிறுவனங்களும் உதவுவதாக இருக்கலாம். கல்வி வகுப்புகள், வாசகர் வட்டங்கள், சுற்றுலாக்கள், விழாக்கள், ஞாயிறு உலாக்கள், இன்னும் இதுபோன்றவை மூலமாகவும், பிரசுரங்கள் விநியோகிப்பது, கட்சிப் பத்திரிகையின் எண்ணிக்கையை அதிகரிப்பது, இன்னும் இதுபோன்றவை மூலமாகவும் பின்தங்கியவர்களை ஈர்க்க முடியும். பொது இயக்கத்தில் பங்கேற்பதன் வாயிலாக தொழிலாளர்கள் தம்மைத்தாமே தமது சிறு முதலாளித்துவ சார்பிலிருந்து விடுவித்துக் கொள்வர்.

குட்டி முதலாளித்துவப் பிரிவினரை வென்றெடுப்பது

29. தொழிலாளர்களில் அரைப் பாட்டாளி வர்க்கப் பிரிவினரை புரட்சிகரப் பாட்டாளி வர்க்கத்தின்பாலான ஆதரவாளர்களாக வென்றெடுக்க, அவர்களுக்கு நிலவுடைமையாளர்களுடனும் முதலாளிகளுடனும் முதலாளித்துவ அரசுடனும் உள்ள விசேடமான முரண்பாட்டைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த இடைப்பட்ட குழுக்கள் பாட்டாளி வர்க்கத்தின் மீது கொண்டுள்ள அவநம்பிக்கையைப் போக்கி வென்றெடுக்க இது அவசியம். இதற்கு அவர்களது தேவைகளின்பால் அறிவுபூர்வமான ஆதரவளிப்பது, அவர்களுக்கு இடையூறுகள் ஏற்படும்போது உதவியும் ஆலோசனையும் வழங்குவது, அவர்களது கல்வியை முன்னேற்ற வாய்ப்புகள் அளிப்பது, இன்னும் இது போன்றவை இதற்கு அவசியமாகலாம். இவையனைத்தும் பொதுவுடைமை இயக்கத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும். நமக்கு எதிரான இயக்கங்களின் நச்சு செல்வாக்கை எதிர்க்கவும் பொதுவுடைமையாளர்கள் முயல வேண்டும். அவை சில மாவட்டங்களில் பலமான செல்வாக்கு செலுத்துபவையாக அல்லது குட்டி முதலாளித்துவ உழைக்கும் விவசாயிகளிடையே செல்வாக்கு உடையவையாக இருக்கலாம். இவை குடிசைத் தொழில்களில் வேலை செய்வோர் மற்றும் பிற அரைப் பாட்டாளி வர்க்கங்களிடையே செல்வாக்கு செலுத்தலாம். சுரண்டப்படுபவர் தமது சொந்த கசப்பான படிப்பினைகளிலிருந்து இந்த நிறுவனங்கள் கொடூரமான முதலாளித்துவக் கட்டமைவின் பிரதிநிதிகள் என்பதையும் அதன் மொத்த உருவங்கள் என்பதையும் அறியும்படியாக அவற்றின் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும். பொதுவுடைமைவாத கிளர்ச்சியின் போக்கில் ஜனநாயகம் மற்றும் நீதித்துறை பற்றிய குட்டி முதலாளித்துவ கற்பனைகளுடன் அரசு அதிகார வர்க்கம் மோதுகின்ற அன்றாட நிகழ்ச்சிகள் அனைத்தையும் மதிநுட்பமான மற்றும் ஆற்றல் மிக்க முறையில் பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாட்டுப்புற கட்சி நிறுவனமும் தமது மாவட்டத்தில் உள்ள எல்லா கிராமங்களிலும், பண்ணை குடியிருப்புகளிலும் – தொலைதூரக் குடியிருப்புகளிலும் பொதுவுடைமைப் பிரச்சாரத்தை எடுத்துச் செல்வதற்காக வீடு வீடாகச் சென்று பிரச்சாரம் செய்யும் வேலைகளை தனது உறுப்பினர்களுக்குள் கவனமாக பகிர்ந்தளிக்க வேண்டும்.

இராணுவத்தினரிடையே வேலை செய்வது

30. தரைப்படை மற்றும் கப்பல் படையினரின் மத்தியிலான பிரச்சார முறைகள் ஒவ்வொரு நாட்டிலுமுள்ள சிறப்பான நிலைமைகளுக்கு பொருந்தக் கூடியதாக இருத்தல் வேண்டும். சாந்தப்படுத்தும் இயல்புடைய இராணுவ எதிர்ப்புக் கிளர்ச்சி மிகமிக கேடு விளைவிக்கக் கூடியதும், பாட்டாளி வர்க்கத்தை நிராயுதபாணியாக்கும் முதலாளித்துவ வர்க்கத்தினரின் முயற்சிகளுக்கு உதவக் கூடியதுமாகும். முதலாளித்துவ அரசு எந்திரத்தின் எவ்வகையான இராணுவ நிறுவனங்களையும் பொதுவாக முதலாளித்துவ வர்க்கத்தையும் பாட்டாளி வர்க்கம் கோட்பாடு அடிப்படையில் நிராகரிக்கிறது. தனது சக்தி அனைத்தையும் கொண்டு எதிர்த்துப் போரிடுகிறது. இருப்பினும், எதிர்காலத்தில் வரக்கூடிய புரட்சிப் போர்களுக்கு தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கும் நோக்கத்திற்காக இந்த நிறுவனங்கள் (இராணுவம், துப்பாக்கி சுட பயிற்சியளிக்கும் கிளப்புகள், குடிமக்கள் பாதுகாப்பு நிறுவனம், இன்னபிற) அனைத்தையும் பாட்டாளி வர்க்கம் பயன்படுத்திக் கொள்கிறது. எனவே, இளைஞர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இராணுவப் பயிற்சி அளிப்பதற்கு எதிராக தீவிரமான கிளர்ச்சிகள் நடத்தக்கூடாது. தொழிலாளர்களுக்கு ஆயுதங்கள் வழங்கக்கூடிய ஒவ்வொரு சாத்தியப்பாட்டையும் நாம் மிக ஆர்வமுடன் நமக்குச் சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

படிக்க:
எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை: அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு!
புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும்!

இராணுவத்தில் வெளிப்படுகின்ற வர்க்கப் பகைமைகளை – பொருளாதார ரீதியில் மிகவும் சாதகமான நிலையில் அதிகாரிகள் இருப்பதற்கு எதிரிடையாக சாதாரணப் படை வீரர்கள் மோசமாக நடத்தப்படுவதையும், சமூக வாழ்வில் உத்திரவாதம் ஏதுமின்றி இருப்பதையும் – படைவீரர்களுக்கு மிகத் தெளிவாகக் காட்டியாக வேண்டும். இத்துடன் சுரண்டப்படும் வர்க்கங்களின் தலைவிதியோடு அவர்களது எதிர்காலம் பின்னிப் பிணைந்திருக்கிறது என்ற உண்மையை கீழ்மட்டத்தினர் உணரும்படியாக கிளர்ச்சிகள் இருக்க வேண்டும். புரட்சிக் கொந்தளிப்பு ஆரம்ப நிலைக்கு முந்திய காலத்தில் எல்லா படைத்தலைவர்களும் படை வீரர்களாலும், மாலுமிகளாலும் ஜனநாயகத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்றும், படை வீரர்கள் கவுன்சில்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கோரி கிளர்ச்சி செய்வதானது, முதலாளித்துவ ஆட்சியின் அடித்தளங்களைக் குழிபறிப்பதற்கு மிகவும் சாதகமானதாக விளங்கும்.

முதலாளித்துவ வர்க்கத்தினர் வர்க்க யுத்தத்தில் பயன்படுத்தும் பொறுக்கி எடுத்த படைகளுக்கு எதிராக, குறிப்பாக அதன் தொண்டர் படைகளுக்கு எதிராக கிளர்ச்சி செய்கையில், மிக நெருக்கமாகக் கண்காணிப்பதும் அதிகபட்சம் கவனம் செலுத்துவதும் எப்போதும் அவசியம்.

மேலும், இந்தப் படைகளின் சமூக சேர்க்கையும் ஊழல்மிக்க நடத்தையும் கிளர்ச்சி நடத்துவதற்கு அளிக்கின்ற ஒவ்வொரு வாய்ப்பையும் சீர்குலைவுகள் ஏற்படுத்த பயன்படுத்த வேண்டும். எங்கெல்லாம் இராணுவம் தனது தனிச்சிறப்பான முதலாளித்துவ வர்க்கத் தன்மையைக் கொண்டிருக்கிறதோ, எடுத்துக்காட்டாக அதன் அதிகாரிகள் பட்டாளத்தில், அங்கெல்லாம் அது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு அதன் விளைவாய் தனக்குத்தானே சீர்குலைந்து போகுமளவிற்கு அனைத்து மக்களின் முன் அதன் முகமூடியைக் கிழித்தெறிய வேண்டும். மக்கள் அதனை மிகவும் வெறுக்கும்படியும் எதிர்க்கும்படியும் செய்ய வேண்டும்.

(தொடரும்)


குறிப்பு:

* ஆம்ஸ்டர்டாம் மஞ்சள் தொழிற்சங்கத் தலைவர்கள் :
1919 ஜூலையில் ஆம்ஸ்டர்டாமில் இது ஏற்படுத்தப்பட்டது. பெரும்பாலான மேற்கு ஐரோப்பிய நாடுகளின் சீர்திருத்தவாத தொழிற்சங்கங்களையும் அமெரிக்கத் தொழிலாளர் சம்மேளனத்தையும் இது உள்ளடக்கி இருந்தது. ஆம்ஸ்டர்டாம் அகிலம் ஒரு சீர்திருத்தவாதக் கொள்கையை மேற்கொண்டது. முதலாளித்துவத்துடன் வெளிப்படையாகவே கூடிக்குலாவியது. தொழிலாளர் இயக்கத்தில் ஐக்கிய முன்னணியை எதிர்த்தது. சோவியத் யூனியனுக்கு எதிராகப் பகைமையான கண்ணோட்டத்தைக் கடைபிடித்தது. இவைகளின் விளைவாக, தொழிலாளர் இயக்கத்தில் அதன் செல்வாக்கு படிப்படியாகக் குறைந்தது. இரண்டாவது ஏகாதிபத்திய உலகப் போர் சமயத்தில் இந்த அகிலம் ஏறத்தாழ செயலற்றுப் போனது. 1945-ல் உலகத் தொழிற்சங்கங்களின் கூட்டிணைப்பு உருவாகியதைத் தொடர்ந்து இது கலைந்து போனது. இந்த அகிலத்தின் தலைவர்கள்தான் ஆம்ஸ்டர்டாம் மஞ்சள் தொழிற்சங்கத் தலைவர்கள் என்றழைக்கப்படுகின்றனர்.

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

மூணாறு பெட்டி முடி நிலச்சரிவினால் ஏற்பட்ட மரணங்கள், இயற்கைப் பேரழிவு அல்ல, டாடா நிர்வாகம் மற்றும் கேரள அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை!” என்ற முழக்கத்தின் அடிப்படையில் உயிரிழந்த தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு நீதி கேட்டு, 12.08.2020 அன்று நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பாக மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒவ்வொரு உயிர்களுக்கும் தலா 50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்.
  • உயிரிழந்த, படுகாயமடைந்த, பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் வாழ்நாள் முழுவதற்குமான வாழ்வாதார பாதுகாப்பிற்கு உத்திரவாதம் செய்ய வேண்டும்.
  • மாஞ்சோலை, மூணாறு, வால்பாறை, நீலகிரி – என அனைத்துப் பகுதி தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான வாழ்க்கை, அனைத்து உரிமைகளையும் உத்திரவாதப்படுத்த வேண்டும்.
  • தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளிய கார்ப்பரேட் முதலாளிகள் டாட்டா போன்றோரின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும்.
  • தேயிலைத் தோட்டங்கள் தொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் உடைமையாக்கப்பட்டு நிர்வகிக்கப்பட வேண்டும்.
  • இக்கோரிக்கைகளுக்காக அனைத்து தரப்பு உழைக்கும் மக்களும் இணைந்து போராட வேண்டும்.

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி.
தொடர்புக்கு : 9385353605.

 

புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தாதே ! பு.மா.இ.மு கையெழுத்து இயக்கம் !

0

த்திய அரசு கொண்டுவரும் புதிய கல்வி கொள்கைக்கு எதிராக கடந்த ஒரு வாரமாக மாணவர்கள், பெற்றோர்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 12/08/2020 அன்று சென்னை கிளையின் மாவட்ட பொருளாளர் தோழர் செல்வகுமார் தலைமையில் சென்னை பாடநூல் கழகம் ( DPI ) பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அவர்களிடம் மனு அளிக்கப்பட்டது.

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தேசிய கல்விக் கொள்கை ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையை பறிக்கும் செயல். இந்த கல்விக் கொள்கையால் படிப்பறிவு இல்லாத குழந்தைத் தொழிலாளர்கள் அதிகம் உருவாகக்கூடும். மீண்டும் குலக்கல்வியை கொண்டுவரவும், தொழில் கல்வியை ஊக்குவித்து முதலாளிகளின் லாபத்தை நேக்கத்திற்கு தேவையாக அடிமைகளை உருவாக்கவே இக்கல்வி கொள்கையை மத்திய அரசு கொண்டு வருகிறது. இந்த புதிய கல்விக் கொள்கை சமூகநீதிக்கு எதிராக உள்ளது. எனவே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை அமல்படுத்தமாட்டோம் என தமிழக அரசு அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு அளிக்கப்பட்டது.

படிக்க:
மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !

தமிழக அரசு இரு மொழி கொள்கையை அமுல்படுதுவோம் என்று உறுதியாக உள்ளது என்றும், இதற்கென ஒரு ஆய்வு குழுவை அமைத்துள்ளதாகவும், அதன் முடிவு வந்த பின்னர் தங்களது முடிவை அறிவிப்பதாகவும், இந்த மனுவை பரிசீலித்து முதல்வரிடம் தெரிவிப்பதாகவும் பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் கூறினார்.

தகவல் :
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,
சென்னை.

எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !

0

ல்கார் பரிஷத் மாநாடு முதல் சமீபத்திய டெல்லி கலவரம் வரை அனைத்து சந்தர்ப்பங்களையும் சதித்தனமான பொய் வழக்குகள் மூலம் மக்களுக்காக குரல் கொடுக்கும் அறிவுத்துறையினரை முடக்கவும், சிறையிலடைக்கவும் பயன்படுத்திவருகிறது மோடி அரசு. இதன் தொடர்ச்சியாக சமீபத்தில் எல்கர் பரிஷத் மாநாடு தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹனிபாபு கைது செய்யப்பட்டிருகிறார். அதே போல், டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் டெல்லி பல்கலையைச் சேர்ந்த பேராசிரியர் அபூர்வானந்தை விசாரணைக்கு உட்படுத்தி மிரட்டியிருக்கிறது டெல்லி போலீசு.

டெல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஹனி பாபுவை எல்கர் பரிஷத் வழக்கு தொடர்பாக கடந்த ஜூலை 28 அன்று கைது செய்தது தேசிய பாதுகாப்பு முகமை (NIA).  ஆகஸ்ட் 8-ம் தேதியோடு என்.ஐ.ஏ காவல் முடிவடைந்த நிலையில், தற்போது அவரை ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறது மும்பை சிறப்பு நீதிமன்றம்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹனிபாபு

பேராசிரியர் ஹனிபாபு மீது மாவோயிஸ்டுகளுடன் தொடர்பில் இருந்ததாகவும், பேராசிரியர் சாய்பாபாவை ஆதரித்து அவருக்காக நிதி திரட்டியதாகவும் குற்றம்சாட்டி அவரை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது தேசிய பாதுகாப்பு முகமை. ஜூலை 28-ம் தேதி கைது செய்யப்பட்ட பேராசிரியர் ஹனிபாபுவை ஆகஸ்ட் 4 வரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டது என்.ஐ.ஏ. அதன் பின்னர், கடந்த ஆகஸ்ட் 8 வரை என்.ஐ.ஏ காவலை நீட்டித்துக் கொடுத்தது சிறப்பு நீதிமன்றம்.

என்.ஐ.ஏ விசாரணைக் காவல் முடிவடைந்த நிலையில் அவரை ஆகஸ்ட் 21 வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாரு உத்தரவிட்டுள்ளது. என்.ஐ.ஏ. விசாரணையின் போது ஹனிபாபுவிடம் அவரது செயல்பாடுகளுக்கு அவருடன் பணிபுரிபவர்கள், அவரது மாணவர்கள் என யாரேனும் இதைச் செய்கிறார்களா என்ற விதத்திலேயே விசாரித்திருக்கிறது போலீசு.

சிறப்பு நீதிமன்றத்தில் பேராசிரிய ஹனிபாபுவை நேர்நிறுத்திய என்.ஐ.ஏ., அவர் பீமா கொரேகான் வழக்கில் சம்பந்தப்பட்டு சிறையில் இருக்கும் பலரையும் தொடர்பு கொண்டுள்ளதாகவும், மாவோயிஸ்ட்டுகளையும், பேராசிரியர் சாய்பாபாவையும் சிறையில் இருந்து விடுவிக்க நிதியாதாரத்தை திரட்டியதாகவும் நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது.

படிக்க:
மக்கள் கவிஞர் தோழர் – வரவர ராவை விடுதலை செய் ! ம.க.இ.க ஆர்ப்பாட்டம் !
பிரசாந்த் பூஷனையும், டிவிட்டரையும் மிரட்டும் உச்சநீதிமன்றம் !

ஹனிபாபுவின் கணிணியைக் கைப்பற்றிச் சென்ற போலீசு, அந்தக் கணிணியின்  வன்தகட்டில் உள்ள ஒரு பிரிவில் (partition) பிப்ரவரி – ஏப்ரல் 2019 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு அதில் மாவோயிஸ்ட்டுகள் சம்பந்தப்பட்ட 62 கோப்புகள் இருந்ததாகவும் கூறி அது குறித்த விவரங்களைக் கேட்டுள்ளது. ஆனால் அப்படி ஒரு வன்தகட்டுப் பிரிவை (Hard disk partition) தாம் ஏற்படுத்தவேயில்லை என்று கூறி மறுத்திருக்கிறார் ஹனிபாபு. ஏற்கெனவே பீமா கொரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூகச் செயற்பாட்டாளர் கான்சால்வேஸ் உள்ளிட்டவர்களின் கைப்பற்றப்பட்ட கணிணிக்குள் இது போன்ற மோவோயிஸ்ட் தொடர்பான கோப்புகள் என்.ஐ.ஏ விசாரணையின் போது திடீர் திடீரென முளைத்தன என்பது குறிப்பிடத்தக்கது. சமூகச் செயற்பாட்டாளர்களை முடக்குவதற்கு ஒரு முகாந்திரத்தை ஏற்படுத்த இத்தகைய கிரிமினல்தனமான வேலைகளைச் செய்ய என்றுமே என்.ஐ.ஏ தயங்கியதில்லை.

பேராசிரியர் அபூர்வானந்த்

இதே போல கடந்த ஆகஸ்ட் 3-ம் தேதி டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், தி வயர் இணையதளத்தில் தொடர்ந்து இந்துத்துவ பாசிசத்தை எதிர்த்து எழுதிவருபவருமான பேராசிரியர் அபூர்வானந்த்-ஐ விசாரணைக்கு அழைத்துச் சென்றுள்ளது டெல்லி போலீசு. கடந்த பிப்ரவரி மாதம் இந்துத்துவக் கும்பலால் நடத்தப்பட்ட டெல்லி கலவரத்தில் அவருக்கு பங்கிருப்பதாகக் கூறி அவருக்கு சம்மன் அனுப்பியிருந்தது டெல்லி போலீசு.

விசாரணைக்கு பின்னர், தமது மொபைலை தங்களது விசாரணைக்குத் தேவை என்று கூறி டெல்லி போலீசு பறித்துக் கொண்டதாகக் கூறியுள்ளார் அபூர்வானாந்த்.  இந்த விசாரணை சுமார் 5 மணிநேரம் நீண்டிருக்கிறது.

இது குறித்துப் பேசிய பேராசிரியர் அபூர்வானந்த், சி.ஏ.ஏ., என்.பி.ஆர்., என்.ஆர்.சி ஆகியவற்றிற்கு எதிராக போராடுபவர்களையும் அவர்களுக்காக குரல் கொடுப்பவர்களையும் குற்றவாளியாக்கவும், துன்புறுத்தவும் கூடாது என்று கூறினார்.

படிக்க:
ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை
ஊரடங்கு அல்ல, அறிவிக்கப்படாத அவசர நிலை !

பேராசிரியர் அபூர்வானந்த் கடந்த மே மாதம், தி வயர் இணையதளத்தில் எழுதிய ஒரு கட்டுரையில்,  சி.ஏ.ஏ-வுக்கு எதிரான போராட்டக்காரர்கள்தான் வட கிழக்கு டில்லியில் வன்முறையை தூண்டி விட்டதாகக் கூறும் போலீசின் கருத்தாக்கம், அவர்களது அரசியல் எஜமானர்களால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது என எழுதினார். மேலும், இந்த திட்டத்தை ஒரு கதையாக உருவாக்கி, அந்த திரைக்கதைக்கு உகந்த கதாபாத்திரங்களைக் கண்டுபிடித்து நீதிமன்றங்களையும், பொதுமக்களையும் நம்ப வைக்க டெல்லி போலீசு முயற்சிப்பதாக எழுதியிருந்தார்.

மோடி அரசாங்கத்தினை விமர்சிக்கும், சில அறிவுத்துறையினரும் செயல்பாட்டாளர்களும் விசாரணைக்காக டெல்லி போலீசின் சிறப்புப் பிரிவால் சம்மன் அனுப்பப்படலாம் எனத் தெரியவருவதாக தி வயர் இணையதளம் தெரிவிக்கிறது. குறிப்பாக “டெல்லி போராட்ட ஆதரவுக் குழு” என்ற வாட்சப் குழுவில் இருப்பவர்களின் பங்கு குறித்து விசாரித்து வருவதாகக் கூறுகிறது.

காவி கும்பலால் திட்டமிட்டு நடத்தப்பட்ட டெல்லி கலவரம்.

குறிப்பாக “டெல்லி போராட்ட ஆதரவுக் குழு” என்ற வாட்சப் குழுவில் பிரபல படத் தயாரிப்பாளர்களான ராகுல் ராய், சபா திவான், அரசிய செயல்பாட்டாளர்களான கவிதா கிருஷ்ணன், யோகேந்திர யாதவ், அன்னி ராஜ, சமூகச் செயற்பாட்டாளர்களான ஹர்ஷ் மந்தெர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். பேராசிரியர் அபூர்வானந்த் அந்தக் குழுவில் ஒரு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், வாட்சப் குழுவில் உறுப்பினராக  இருந்தாலே முதல் தகவல் அறிக்கையில் பெயரைச் சேர்த்து விசாரிக்கும் டெல்லி போலீசு, வன்முறையைத் தூண்டும் வகையில் வெளிப்படையாகவே பேசிய  கபில் மிஸ்ரா மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை கூட பதியவில்லை.

ஆனால் சொந்த நாட்டில் தங்களது குடியுரிமைக்காகப் போராடிய மக்களையும் அவர்களுக்கு ஆதரவாக நின்றவர்களையும், குரல் கொடுத்தவர்களையும் தொடர்ந்து பொய் வழக்குகளில் கைது செய்து வருகிறதுய். குறிப்பாக பல மாணவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களை ஊபா சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அந்த வாட்சப் குழுமத்தில் நடந்த விவாதங்களைச் சதியாக சித்தரிக்கும் வகையிலேயே போலீசு ஆவணங்களும் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.

பீமா கொரேகான் வழக்கைப் போலவே டெல்லி கலவர வழக்கும் கொண்டு செல்லப்படுகிறது. மத்திய அரசாங்கத்தை விமர்சிப்பவர்களையும்  செயற்பாட்டாளர்களையும் கடுமையான குற்றச்சாட்டுகளின் கீழ் கைது செய்ய இந்த வழக்கை பயன்படுத்துகின்றன, என்.ஐ.ஏ உள்ளிட்ட அரசின் ஒடுக்குமுறைக் கருவிகள். குறிப்பாக தற்போதைய ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி, எந்த ஒரு எதிர்ப்பும் இல்லாமல் மக்களுக்காகக் குரல்கொடுக்கும் அறிவுத்துறையினரை முடக்கிவருகிறது மோடி அரசு. அரசின் சுரண்டலில் இருந்து நமது உரிமைகளைப் பாதுகாக்கக் குரல் கொடுத்தவர்களுக்காக குரல் கொடுப்பது நமது கடமை அல்லவா ?

நந்தன்

செய்தி ஆதாரம் :

ஊரடங்கிற்கு முடிவு கட்டு ! பொது சுகாதாரக் கட்டமைப்பை பலப்படுத்து !! தோழர் ராஜூ உரை

கொரோனா பெருந்தொற்றானது இந்த அரசு கட்டமைப்பின் தோல்வியை அம்பலப்படுத்திவிட்டது. இந்தியா மட்டுமல்ல உலகின் பெரியண்ணனாகத் திகழும் அமெரிக்கா மட்டுமல்லாது, வளர்ந்த நாடுகள் என்று சொல்லிக் கொள்ளும் அனைத்து நாடுகளின் முகத்திரையும் கிழிந்து தொங்குகிறது.

இந்நிலையில் தனது தோல்வியை மறைக்கவும், தனது அடக்குமுறை அனைத்தையும் சட்டப் பூர்வமாக்கவும் துடிக்கிறது மோடி அரசு. அதனால்தான் இப்பெருந்தொற்று சூழலைப் பயன்படுத்தி மின்சார திருத்தச் சட்டம், சுற்றுசூழல் சட்டத் திருத்தம், புதிய கல்விக் கொள்கை, கிரிமினல் சட்ட திருத்தம் என நீள்கிறது காவி – கார்ப்பரேட்  திட்டங்கள். ஆனால் இவை எதைப் பற்றியும் மக்கள் பேச முடியாதபடியும் எதிர்த்துப் போராட முடியாதபடியும் ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது மோடி அரசு.

மீறிப் போராடுபவர்களை “5-பேருக்கு மேல் கூடாதே…” எனக் கூறி வழக்கு பதிவு செய்கிறது போலிசு. மற்றொரு பக்கம் மக்களுக்காக பேசும் அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் பொய் வழக்குகளின் பேரில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். இந்த அரசின் மக்கள் விரோத சட்டங்களையும்  ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து யாரும் நீதிமன்றம் கூட செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால் மத்திய மோடி அரசு எவ்வித தங்குதடையுமின்றி தனது நாசகர திட்டங்களை அறிவித்து கொண்டே செல்கிறது. எனவே மக்களுக்கு, மக்கள் போராட்டங்களுக்கு ஊரடங்கு என்றால் இந்த அரசும் புதிய திட்டங்களை அறிவிக்கக் கூடாது. பெருந்தொற்று அபாயம்தான் உடனடிப் பிரச்சினை என்றால் அதனை தீர்ப்பது ஒன்றுதான் அரசின் முழு கடமையாக இருக்கவேண்டும். இல்லையெனில் மக்களின் ஜனநாயக உரிமைகளைப் பறிக்க துணை செய்யும் இந்த “ஊரடங்கை இரத்து செய்!” என்பதுதான் நமது கோரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் இராஜு ! காணொலியை பாருங்கள் ! பகிருங்கள் !

 

ஆடம் ஸ்மித்தின் வாதம் | பொருளாதாரம் கற்போம் – 59

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் – பாகம் 59

ஸ்மித்தின் வாதம்

அ.அனிக்கின்

ஸ்மித்தின் போதனை இங்கிலாந்திலும் பிரான்சிலும் அதிகமான தாக்கத்தைக் கொண்டிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் கடைசிப் பகுதியிலும் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் இந்த நாடுகளில் தொழில்துறை வளர்ச்சி உச்சகட்டத்தை அடைந்திருந்தது. மேலும் இங்கே முதலாளிகள் கணிசமான அளவுக்கு அரசு அதிகாரத்தைப் பெற்றிருந்தார்கள்.

எனினும் இங்கிலாந்தில் ஸ்மித்தைப் பின்பற்றியவர்களில் சுதந்திரமான, முக்கியத்துவமுடைய சிந்தனையாளர்கள் (ரிக்கார்டோ வரும் வரையிலும்) யாருமே இல்லை. ஸ்மித்தின் முதல் விமரிசகர்கள் நிலவுடைமையாளர்களின் நலன்களை எடுத்துரைத்தவர்களே. இங்கிலாந்தில் அத்தகைய விமரிசகர்களில் மால்தசும், லொடர்டேல் பிரபுவும் அதிக முக்கியமானவர்கள்.

மால்தஸ் பாதிரியார்

பிரான்சில் ஸ்மித்தின் போதனை ஆரம்பத்தில் அண்மைக் காலத்தைச் சேர்ந்த பிஸியோகிராட்டுகளிடம் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. பிறகு புரட்சி ஏற்பட்டதும் பொருளாதாரத் தத்துவத்திலிருந்து கவனம் திரும்பிவிட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் திருப்புமுனை ஏற்பட்டது. 1802 -ம் வருடத்தில் நாடுகளின் செல்வம் முதல் தடவையாக ஜெ. கார்னியே என்பவரால் சரியான முறையில் மொழிபெயர்த்து வெளியிடப்பட்டது. அதில் அவருடைய விளக்கக் குறிப்புகளும் இருந்தன. 1803-ம் வருடத்தில் ஸேய், ஸி ஸ்மான்டி ஆகியோருடைய புத்தகங்கள் வெளிவந்தன.

இந்த இரண்டு பொருளியலாளர்களும் தங்களுடைய புத்தகங்களில் பிரதானமாக ஸ்மித்தைப் பின்பற்றுபவர்களாகவே தோன்றினார்கள். ஸேய் ஸ்மித்துக்கு எழுதிய பொருள் விளக்கம் ”பரிசுத்தமான” ஸ்மித்தைக் காட்டிலும் ஓரளவுக்கு முதலாளிகளுக்கு உகந்ததாக இருந்தது. எனினும் ஸேய் முதலாளித்துவத் தொழில் துறை வளர்ச்சிக்காக சுறுசுறுப்பாகப் போராடிய அளவுக்கு, அவருடைய கருத்துக்களில் பல ஸ்மித்துக்கு நெருக்கமாக இருந்தன.

இங்கிலாந்திலும் பிரான்சிலும் ஸ்மித்தின் கருத்துக்கள் முற்போக்கானவையாக இருந்தன என்றால் நிலப்பிரபுத்துவப் பிற்போக்கு நிலவிக் கொண்டு முதலாளித்துவ வளர்ச்சி அப்பொழுது தான் ஆரம்பமாகியிருந்த ஜெர்மனி, ஆஸ்திரியா, இத்தாலி, ஸ்பெயினிலும் நிச்சயமாக ருஷ்யாவிலும் இது இன்னும் அதிகமாகத் தெளிவாயிற்று. ஸ்பெயினிலிருந்த மத விரோதக் குற்ற விசாரணை மன்றம் ஸ்மித்தின் புத்தகத்துக்கு முதலில் தடை விதித்தது என்று சொல்லப்படுகிறது.

காமெராலிஸ்டிக் என்று சொல்லப்படும் வாணிப ஊக்கக் கொள்கையின் ஜெர்மானியப் பதிப்பின் உணர்ச்சியை ஒட்டி விரிவுரையாற்றிய பிற்போக்குத்தனமான ஜெர்மானியப் பேராசிரியர்கள் நெடுங்காலம் வரை ஸ்மித்தை அங்கீகரிக்க மறுத்தார்கள். எனினும் ஜெர்மனியிலிருந்த அரசுகளில் மிகவும் பெரியதான பிரஷ்யாவில்தான் ஸ்மித்தின் கருத்துக்கள் சம்பவங்களின் நிகழ்ச்சிப் போக்கின் மீது ஓரளவுக்குத் தாக்கத்தைச் செலுத்தின; நெப்போலியனின் யுத்தங்களின் காலகட்டத்தில் அங்கே மிதவாத முதலாளித்துவ சீர்திருத்தங்களை அறிமுகம் செய்தவர்கள் ஸ்மித்தின் கருத்துக்களை ஆதரித்தவர்களே.

படிக்க:
NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !
பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

ஸ்மித்தின் போதனையையும் அவருடைய தாக்கத்தையும் பற்றிப் பேசும் பொழுது, அவரிடமிருந்த பொருந்தாத் தன்மை, வேறுபாடுள்ள – சில சமயங்களில் முரண்பாடுள்ள – கருத்துக்கள் அவர் புத்தகத்தில் இடம் பெற்றிருப்பது முற்றிலும் வெவ்வேறான கோட்பாடுகளையும் கருத்துக்களையும் கொண்ட மனிதர்கள் அவரிடமிருந்து பலனடைவதற்கும் அவரைத் தங்களுடைய ஆசிரியராகவும் முன்னோடியாகவும் கருதுவதற்கும் இடமளித்தது என்பதை ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இருபதுகளிலும் நாற்பதுகளிலும் ரிக்கார்டோவின் போதனையை முதலாளி வர்க்கத்துக்கு எதிராகப் பயன்படுத்த விரும்பிய ஆங்கில சோஷலிஸ்டுகள் ஆடம் ஸ்மித்தின் ஆன்மிக வாரிசுகளாகத் தங்களைக் கருதினார்கள்; உண்மையும் அதுவே.

The Wealth of Nations Adam Smith Bookஉழைப்பின் முழு உற்பத்திப் பொருள், அதிலிருந்து முத லாளிக்கும் நிலவுடைமையாளருக்கும் கழிவுகள் செய்வது பற்றிய ஸ்மித்தின் கருத்துக்களை இவர்கள் பிரதானமாகத் தங்களுக்கு அடிப்படையாகக் கொண்டார்கள். மறு பக்கத் தில் பிரான்சில் முதலாளித்துவ அரசியல் பொருளா தாரத்தில் கொச்சையான; மழுப்பல்வாதப் போக்கைப் பிரதிநிதித்துவப்படுத்திய “ஸேயின் மரபு” தன்னை ஸ்மித்தைப் பின்பற்றுபவர்கள் என்று கருதியது. ஸ்மித்தினுடைய சிந்தனையில் இன்னொரு போக்கை, பொருளையும் அதன் மதிப்பையும் படைப்பதில் உற்பத்திக் காரணிகளின் ஒத்துழைப்பு என்ற போக்கை அது ஆதாரமாகக் கொண்டது. அவர்கள் சுதந்திர வர்த்தகத்தை ஆதரித்த ஸ்மித்தின் வாதத்தைப் பயன்படுத்திக் கொண்டனர், ஆனால் அதற்கு நயமில்லாத வர்த்தகத் தன்மையைக் கொடுத்தனர்.

ஸ்மித்தின் தத்துவ ரீதியான தாக்கத்தின் மிக முக்கியமான கோடு ரிக்கார்டோவுக்கும் மார்க்சுக்கும் இட்டுச் செல்கிறது.

ஸ்மித்தின் போதனை தத்துவ ரீதியாகவும் பொருளாதார, சமூகக் கொள்கை என்ற ஸ்தூலமான ரீதியிலும் வெவ்வேறு அம்சங்களைக் கொண்டிருந்தது. ஸ்மித்தைப் பின் பற்றியவர்களில் சிலர் இவற்றில் சுதந்திரமான அந்நிய வர்த்தகம், காப்புவாதத்தை எதிர்த்துப் போராட்டம் போல ஏதாவது ஒரு அம்சத்தை மட்டும் இரவல் வாங்கிக் கொண்டார்கள். இந்த வாதங்கள் அங்கேயிருந்த ஸ்தூலமான நிலைமையைப் பொறுத்து முற்போக்குத் தன்மையோ அல்லது சுமாரான பிற்போக்குத் தன்மையோ கொண்டிருந்தன.

உதாரணமாக, பிரஷ்யாவில் பிற்போக்கான ஜங்கர் வட்டாரங்களே சுதந்திர வர்த்தகத்துக்காக இயக்கம் நடத்தின. மலிவான தொழிற்சாலை உற்பத்திப் பொருள்களை அந்நிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதிலும் தங்களுடைய சொந்த தானியத்தை எத்தகைய கட்டுப்பாடும் இல்லாமல் ஏற்றுமதி செய்வதிலும் அவர்களுக்கு அக்கறை இருந்தது. ஆனால் ஸ்மித்தைப் பொறுத்தவரையிலும் பொருளாதார மற்றும் அரசியல் சுதந்திரத்துக்குரிய விரிவான நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு வேலைத் திட்டத்தில் சுதந்திர வர்த்தகம் என்பது ஒரு பகுதி மட்டுமே என்பதை நாம் நன்றாக அறிவோம்.

ஸ்மித்தினுடைய கருத்துக்களை (முன்னணியிலிருந்த மற்ற பதினெட்டாம் நூற்றாண்டுச் சிந்தனையாளர்களின் கருத்துக்களோடு இவை பிரிக்க முடியாதபடி பெரும்பாலும் கலந்திருந்தன) பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதற்பாதியில் தோன்றிய பல முற்போக்கான இயக்கங்களிலும் விடுதலை இயக்கங்களிலும் உணர முடியும் என்பது நாகரிக வரலாற்றில் அவருடைய மகத்தான பாத்திரத்தைக் காட்டுகிறது.

(தொடரும்…)

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

பிரச்சாரமும் கிளர்ச்சியும் போராட்டங்களுக்குத் தலைமையேற்பதும் !

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 04

முதல் பாகம்

4. பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி பற்றி

நம்முடைய பிரச்சாரம் புரட்சிகரமானது

20. புரட்சிகரமான பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவது என்பது வெளிப்படையான புரட்சிப் போராட்டம் நடத்தும் நமது கடமையில் தலையாயதாகும். இந்த வேலையும் இதை நடத்துவதற்கான நிறுவனங்களும் இன்னமும், பிரதானமாக, சம்பிரதாயமான முறைகளிலேயே நடத்தப்படுகின்றன. எப்போதாவது நடைபெறும் பொதுக்கூட்டங்களில் பேசுவதுடனேயே இருக்கிறது. உரைகள் மற்றும் கட்டுரைகளின் பருண்மையான புரட்சிகர உள்ளடக்கத்தில் கவனம் செலுத்தப்படாமல் உள்ளது.

தொழிலாளர்களின் பொது நலன்களிலிருந்தும், விழைவுகளிலிருந்தும் குறிப்பாக அவர்களது ஒன்றுபட்ட போராட்டங்களிலிருந்தும், அவர்கள் மத்தியிலிருந்தே பொதுவுடைமைப் பிரச்சாரமும் கிளர்ச்சியும் வேர்விட்டிருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.

பொதுவுடைமைவாதப் பிரச்சாரம் புரட்சிகரத் தன்மை கொண்டதாக இருக்க வேண்டும் என்பது நினைவில் கொள்ள வேண்டிய அதிமுக்கியமான விசயம். பருண்மையான பிரச்சினைகளின்பாலான பொதுவுடைமைவாதக் கண்ணோட்டமும், அதற்குரிய பொதுவுடைமைவாதப் போராட்ட அறைகூவல்களும் (முழக்கங்களும்) நமது சிறப்பான கவனத்தையும் அக்கறையையும் பெற வேண்டும்.

இந்தச் சரியான போக்கை உத்திரவாதப்படுத்திக் கொள்ள, பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியையே தொழிலாகக் கொண்டவர்களுக்கு மட்டுமின்றி, அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் அறிவுறுத்துவதற்குக் கவனம் செலுத்த வேண்டும்.

பிரச்சாரம் மற்றும் முழக்கங்களின் வடிவங்கள்

21. பொதுவுடைமைவாதப் பிரச்சாரங்களின் தலையாய வடிவங்கள் பின்வருமாறு: 1. தனிப்பட்ட வாய்வழிப் பிரச்சாரம் 2. தொழிலாளர்களின் தொழிற்சங்க மற்றும் அரசியல் இயக்கத்தில் பங்கு பெறுவது 3. கட்சிப் பத்திரிகை மற்றும் கட்சி வெளியீடுகளை விநியோகிப்பது – ஆகியவைகளின் வாயிலாக நடத்தும் பிரச்சாரம். சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோதமான கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் இப்பிரச்சார வடிவங்கள் ஏதாவதொன்றில் முறையாகப் பங்கேற்க வேண்டும்.

பொதுவுடைமைவாத நிறுவனங்கள் தமது சொந்த தொழிலாளர் இயக்கத்தின் வீரமிக்க, அறிவுக்கூர்மைமிக்க, பேராற்றல்மிக்க, எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமை என்ற தோற்றத்தை அளிக்கத்தக்க முறையில் பாட்டாளி வர்க்கத் திரளினரிடையே பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி நடத்த வேண்டும்.

பொதுவுடைமைவாத நிறுவனங்கள் தமது சொந்த தொழிலாளர் இயக்கத்தின் வீரமிக்க, அறிவுக்கூர்மைமிக்க, பேராற்றல்மிக்க, எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமை என்ற தோற்றத்தை அளிக்கத்தக்க முறையில் பாட்டாளி வர்க்கத் திரளினரிடையே பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி நடத்த வேண்டும்.

தனிப்பட்ட வாய்வழிப் பிரச்சாரம் என்பது விசேடமான தொழிலாளர் குழுக்கள் வீடுவீடாகச் சென்று முறையாகவும் தொடர்ச்சியாகவும் பிரச்சாரம் செய்வது என்ற வடிவத்தை மேற்கொள்ள வேண்டும். கட்சி செல்வாக்குக்கு உட்பட்ட பகுதியில் ஒரு வீட்டைக்கூட விட்டுவிடாமல் இந்தப் பிரச்சாரத்தை மேற்கொள்ள வேண்டும். பெரு நகரங்களில் சுவரொட்டிகள் மற்றும் பிரசுரங்கள் விநியோகிப்பது என்ற ஒழுங்கமைக்கப்பட்ட வெளிப்பிரச்சார இயக்கம் மனநிறைவு அளிக்கக்கூடிய விளைவுகளை வழக்கமாக ஏற்படுத்தும். இத்துடன் தொழில் நிலையங்களில் பிராக்சன்கள் நேரடியான கிளர்ச்சிகளை முறையாக நடத்த வேண்டும். இதைத் தொடர்ந்து கட்சி வெளியீடுகளை தொழில் நிலையங்களில் விநியோகிக்க வேண்டும்.

தேசிய சிறுபான்மையினர் வாழும் நாடுகளில் இந்தத் தேசிய சிறுபான்மை இனத்தைச் சேர்ந்த பாட்டாளி வர்க்கப் பிரிவினரிடையில் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சியை நடத்துவதற்குத் தேவையான கவனத்தைச் செலுத்துவது கட்சியின் கடமையாகும். கட்சியின் பிரச்சாரம் மற்றும் கிளர்ச்சி அந்தந்த சிறுபான்மை மொழிகளில்தான் நடத்தப்பட வேண்டும். இந்த நோக்கத்திற்காக அவசியமான விசேட பத்திரிகைகளை கட்சி உருவாக்க வேண்டும்.

22. பெரும்பான்மை பாட்டாளி வர்க்கத்தினர் இன்னும் புரட்சிகர உணர்வை அடையாத நிலையில் உள்ள முதலாளித்துவ நாடுகளில், இத்தகைய பின்தங்களிய தொழிலாளர்களைப் புரட்சிகர அணிவரிசைக்குக் கொண்டுவரும் வகையிலான புதுப்புது பிரச்சார வடிவங்களைத் தேடிக் கண்டுபிடிக்கும் முறையில் பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி அமைய வேண்டும். முதலாளித்துவ கருதுகோள்கள் மற்றும் மரபுகளுக்கு எதிராக, தொழிலாளர் மனங்களில் உணர்வுபூர்வமற்ற முறையில் முளைவிட்டுக் கொண்டிருக்கின்ற அரைகுறையான, ஊசலாட்டமான, அரை முதலாளித்துவத் தன்மையுடைய புரட்சிகரப் போக்குகள் மேலோங்குவதற்காகப் போராடிக் கொண்டிருக்கின்றன. பொதுவுடைமைவாதப் பிரச்சாரமானது, திரும்பத்திரும்ப பிரபலப்படுத்தப்படும் தனக்கே உரித்தான சொற்றொடர்கள், அறைகூவல்களுடன் (முழக்கங்களுடன்) இப்போக்குகளை வெளிக்கொணரச் செய்ய வேண்டும்.

அதேவேளையில், பாட்டாளி வர்க்கத் திரளினரின் வரம்புக்கு உட்பட்ட மற்றும் குழப்பமான கோரிக்கைகள் அல்லது விருப்பங்களுடன் பொதுவுடைமைவாதப் பிரச்சாரம் மனநிறைவு பெற்று ஓய்ந்துவிடக் கூடாது. இந்தக் கோரிக்கைகளும் எதிர்பார்ப்புகளும் புரட்சிக் கருத்துக்களின் நுண்ணுயிர்களைக் கொண்டிருக்கின்றன. இவை பாட்டாளி வர்க்கத்தை பொதுவுடைமைவாதப் பிரச்சாரத்தின் செல்வாக்கின்கீழ் கொண்டு வருவதற்கான சாதனங்களாகும்.

தொழிலாளர் வர்க்கத்தின் அன்றாடப் போராட்டங்களுக்குத் தலைமையேற்பது

23. பொதுவுடைமைவாத நிறுவனங்கள் தமது சொந்த தொழிலாளர் இயக்கத்தின் வீரமிக்க, அறிவுக்கூர்மைமிக்க, பேராற்றல்மிக்க, எப்போதும் நம்பிக்கைக்குப் பாத்திரமான தலைமை என்ற தோற்றத்தை அளிக்கத்தக்க முறையில் பாட்டாளி வர்க்கத் திரளினரிடையே பொதுவுடைமைவாதக் கிளர்ச்சி நடத்த வேண்டும்.

இதை ஈடேற்ற பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர்களின் ஆரம்ப நிலையிலுள்ள போராட்டங்கள் மற்றும் இயக்கங்கள் அனைத்திலும் பங்கேற்க வேண்டும். வேலைநேரம், வேலை நிலைமைகள், கூலி இன்னும் இதுபோன்ற பிரச்சினைகளில் முதலாளிகளுடனான மோதலில் தொழிலாளர் நலன்களைப் பாதுகாக்க வேண்டும். தொழிலாளர் வர்க்கத்தினுடைய பருண்மையான வாழ்க்கைப் பிரச்சினைகள் பற்றியும் பொதுவுடைமையாளர்கள் பெரும் கவனம் செலுத்த வேண்டும். இப்பிரச்சினைகளின் மீது சரியான புரிதலுக்கு வர தொழிலாளர்களுக்குப் பொதுவுடைமையாளர்கள் உதவ வேண்டும். மிகமிகக் கொடிய அத்துமீறல்களின்பால் தொழிலாளர்களின் கவனத்தை ஈர்ப்பதையும் தொழிலாளர்கள் தமது கோரிக்கைகளை நடைமுறை ரீதியிலும், தெளிவான வடிவிலும் உருவாக்க உதவுவதையும் பொதுவுடைமையாளர்கள் செய்ய வேண்டும். இந்த வழியில் பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர் மத்தியில் ஒற்றுமை உணர்வை விழித்தெழச் செய்ய முடியும். ஒரு ஒன்றுபட்ட வர்க்கம் – இது உலகப் பாட்டாளி வர்க்கப் படைவரிசையின் ஒரு பிரிவே – என்ற ரீதியில் நாட்டில் உள்ள தொழிலாளர்கள் அனைவரிடமும் சமுதாய நலன்கள் பற்றிய உணர்வை ஏற்படுத்த முடியும்.

முட்டாள்தனமான வேலை நிறுத்தங்கள் மற்றும் பரிசீலனையற்ற நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களைத் தூண்டிவிடுகிறோம், வெறியூட்டுகிறோம் என்ற குற்றச்சாட்டு வரும்படியானதாக நமது கிளர்ச்சி வேலைகள் இருக்கக் கூடாது. மக்களுடைய போராட்டங்களில் வீரத்துடனும் துடிப்புடனும் பங்கேற்பவர்கள் பொதுவுடைமையாளர்கள் என்ற பெயரை போராடும் மக்களிடையே ஈட்ட பொதுவுடைமையாளர்கள் திடசித்தத்துடன் முயல வேண்டும்.

இத்தகைய அடிப்படையான கடமைகளை அன்றாடம் நிறைவேற்றுவது பாட்டாளி வர்க்கத்தின் அனைத்து போராட்டங்களிலும் பங்கேற்பது ஆகியவற்றின் வாயிலாக பொதுவுடைமைக் கட்சியானது உண்மையான பொதுவுடைமைக் கட்சியாக உருவாக முடியும். இத்தகைய முறைகளை மேற்கொள்வதன் மூலமாகவே பொதுவுடைமைக் கட்சி பிரச்சாரத்தை பாமரத்தனமான பிரச்சாரகர்களிடமிருந்து, தூய சோசலிஸ்டு பிரச்சாரம் என்று சொல்லப்படுவதிலிருந்து – புதிய உறுப்பினர்களைச் சேர்ப்பது, சீர்திருத்தங்கள் பற்றியும், நாடாளுமன்ற சாத்தியப்பாடுகள் அல்லது சாத்தியப்பாடின்மைகள் பற்றிப் பேசுவது ஆகியவற்றைக் கொண்டது இது – வேறுபடுத்திப் பார்க்க முடியும். சுரண்டுபவர்களுடனான சுரண்டப்படுவோரின் அன்றாடப் போராட்டங்கள் மற்றும் பல வடிவங்களிலான மோதல்களில் கட்சி உறுப்பினர்கள் அனைவரும் சுயதியாக அர்ப்பணிப்புடனும், உணர்வுபூர்வமாகவும் பங்கேற்பது என்பது பாட்டாளி வர்க்கத்தின் வெற்றிக்கு மட்டுமின்றி, மேலும் கூடுதலான அளவில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமானதாகும். முதலாளித்துவத்தின் தாக்குதல்களுக்கு எதிரான சிறு போர்களில் தொழிலாளி வர்க்கத்தை வழிநடத்துவதன் வாயிலாகவே பொதுவுடைமைக் கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் முன்னணிப் படையாக வளர முடியும். முதலாளித்துவ வர்க்கத்தின் மீது மேல்நிலையை அடைவதற்கான போராட்டத்தில் முறையான தலைமை அளிப்பதற்கான திராணி உடையதாக வளர முடியும்.

ஒவ்வொரு போராட்டத்திலும் முன்வரிசையில் நிற்பது

24. தொழிலாளர் இயக்கத்தில் பங்கேற்க, வேலை நிறுத்தங்கள், கதவடைப்புகள், தொழிலாளர்கள் மொத்தமாக வெளியேற்றப்படுவது போன்ற விசேடமான காலங்களிலும் பொதுவுடைமையாளர்கள் தமது முழு சக்தியையும் அணிதிரட்டிட வேண்டும்.

கட்சியின் வேலைத்திட்டத்தை, ஏன், இறுதி நோக்கங்களை அடைவதற்கான புரட்சிகர ஆயுதப் போராட்டத்தின் தேவையைக் காரணம் காட்டி, தொழிலாளர்களின் வேலை நிலைமைகளில் சிறு முன்னேற்றங்களைக் கொண்டுவருவதற்கான இப்போதைய போராட்டங்களை பொதுவுடைமையாளர்கள் வெறுத்தொதுக்குவதும், இத்தகைய போராட்டங்களின்பால் ஊக்கமற்ற போக்கைக் கடைபிடிப்பதும் மிகப் பெரிய தவறாகும். தொழிலாளர்களின் கோரிக்கைகள் எவ்வளவுதான் சிறு அளவிலானதாகவும், சாதாரணமானதாகவும் இருந்தாலும் இன்று தொழிலாளர்கள் முதலாளிக்கு எதிராகப் போராடத் தயாராக முன்வரும் பட்சத்தில் அந்தப் போராட்டத்தில் பங்கேற்காமல் இருப்பதற்கான நொண்டிச் சாக்காக கோரிக்கைகளின் சிறு அளவிலான தன்மையை பொதுவுடைமையாளர்கள் காட்டக் கூடாது. முட்டாள்தனமான வேலை நிறுத்தங்கள் மற்றும் பரிசீலனையற்ற நடவடிக்கைகளுக்காக தொழிலாளர்களைத் தூண்டிவிடுகிறோம், வெறியூட்டுகிறோம் என்ற குற்றச்சாட்டு வரும்படியானதாக நமது கிளர்ச்சி வேலைகள் இருக்கக் கூடாது. மக்களுடைய போராட்டங்களில் வீரத்துடனும் துடிப்புடனும் பங்கேற்பவர்கள் பொதுவுடைமையாளர்கள் என்ற பெயரை போராடும் மக்களிடையே ஈட்ட பொதுவுடைமையாளர்கள் திடசித்தத்துடன் முயல வேண்டும்.

பகுதி கோரிக்கைகளுக்கான போராட்டங்களைத் தொடுக்கக் கற்பது

25. தொழிற்சங்க இயக்கத்தில் உள்ள பொதுவுடைமைவாத செல்கள் (அல்லது பிராக்சன்கள்) அன்றாட வாழ்க்கையில் எழக்கூடிய சில சாதாரணமான பிரச்சினைகளை நடைமுறையில் எதிர்கொள்ள இயலாதவை என்று தம்மைக் காட்டிக் கொண்டுள்ளன. பொதுவுடைமையின் பொதுக் கோட்பாடுகளைப் போதித்துக் கொண்டே இருப்பது எளிமையானது. ஆனால் பயனற்றது. ஏனெனில், பருண்மையான பிரச்சினைகளை எதிர்கொள்கையில் எதிர்மறை போக்கான சர்வசாதாரணமான சிண்டிகலிசத்தில் வீழ்வதில் போய் முடியும். இத்தகைய நடைமுறைகள் ஆம்ஸ்டர்டாம் மஞ்சள் அகிலத்தின்* வலையில் வீழ்வதாகும்.

மாறாக, பொதுவுடைமையாளர்கள் தமது நடவடிக்கைகளில், பிரச்சினையின் ஒவ்வொரு அம்சத்தையும் எச்சரிக்கையாகப் பரிசீலிக்குமாறு வழிநடத்தப்பட வேண்டும்.

எடுத்துக்காட்டாக, தத்துவார்த்த ரீதியில் மற்றும் கோட்பாடுகளின் மீது வேலை சம்பந்தமான ஒப்பந்தங்களையும் (கூலிகள் மற்றும் வேலை நிலைமைகள் பற்றி) எதிர்ப்பதுடன் பொதுவுடைமையாளர்கள் மனநிறைவு அடைந்துவிடுவதற்குப் பதிலாக ஆம்ஸ்டர்டாம் தலைவர்களால் சிபாரிசு செய்யப்படும் கூலி ஒப்பந்தங்களின் குறிப்பான இயல்புக்கு எதிரான போராட்டத்தில் தலைமை ஏற்று நடத்த வேண்டும். பாட்டாளி வர்க்கத்தின் புரட்சிகர தயாரிப்புக்கு ஊறுவிளைவிக்கும் விசயங்கள் எதையும் எதிர்க்க வேண்டும் என்பது உண்மையே. எல்லாவகை நடைமுறை ஒப்பந்தங்களின் மூலமாகவும் முதலாளிகளும் ஆம்ஸ்டர்டாம் கேடுகெட்ட ஆமாம்சாமிகளும் தொழிலாளர்களின் கைகளைக் கட்டிப் போடுவதை நோக்கமாகக் கொண்டிருக்கிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். எனவே, இந்த நோக்கங்களின் இயல்பு பற்றி தொழிலாளர்களின் கண்களைத் திறக்கச் செய்வது பொதுவுடைமையாளர்களின் கட்டாயக் கடமையாகும். தொழிலாளர்களை விலங்கிடாத ஒப்பந்தங்களுக்காக வாதிடுவதன் மூலம் இந்நோக்கத்தை பொதுவுடைமையாளர்கள் மிகச் சிறப்பாக அடைய முடியும்.

தொழிற்சங்க நிறுவனங்களுடைய வேலையின்மை, சுகவீனம் மற்றும் பிற நன்மைகளுக்கும் இதுவே பொருந்தும். போராட்ட நிதிகளை உருவாக்குவது, வேலை நிறுத்தக் காலத்துக்குச் சம்பளம் வேண்டும் எனக் கோருவது ஆகிய நடவடிக்கைகள் நாம் சிபாரிசு செய்யக் கூடாது.

எனவே கோட்பாட்டு ரீதியில் இத்தகைய நடவடிக்கைகளை எதிர்ப்பது உசிதமானது அல்ல. ஆனால் ஆம்ஸ்டர்டாம் தலைவர்கள் கூறுகின்ற முறையில் இந்த நிதிகளை சேகரிப்பதும் உபயோகிப்பதும் தொழிலாளர் வர்க்கத்தின் நலன்களுக்கு எதிரானது என்பதை பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர்களுக்கு சுட்டிக்காட்ட வேண்டும். நோயுற்றோர் நல நிதி போன்றவை சம்பந்தப்பட்டவரை பொதுவுடைமையாளர்கள் தொழிலாளர்களிடமிருந்து நிதி கோரும் முறையை ஒழிக்க வேண்டும். எல்லா வகையான தாமாக முன்வந்து தரும் நிதிகள் தொடர்பாக கட்டாயப்படுத்தும் நிபந்தனைகளையும் ஒழிக்க வேண்டும் என்று வற்புறுத்த வேண்டும். (அரசும் முதலாளிகளும் இவற்றுக்கான நிதியைத் தர வேண்டும் என்று கோர வேண்டும் – மொழிபெயர்ப்பாளர்) கட்டணங்கள் செலுத்துவதன் மூலம் நோயுற்றோர் நல நிதி பெறுவதற்கு சில தொழிற்சங்க உறுப்பினர்கள் இன்னமும் ஆர்வம் காட்டுவார்களேயானால், அவர்கள் நம்மைப் புரிந்து கொள்ளாமல் போய்விடுவார்களோ என்று அஞ்சி, வெறுமனே அவற்றைத் தடை செய்வது நமக்குப் பலனளிக்காது. தீவிரமான நேரடியான பிரச்சாரத்தின் மூலம் அத்தகைய தொழிலாளர்லளை அவர்களது குட்டி முதலாளித்துவ கருத்தோட்டங்களிலிருந்து வென்றெடுப்பது அவசியமாக இருக்கும்.

(தொடரும்)


குறிப்பு:

* மஞ்சள் அகிலம் அல்லது பெர்ன் அகிலம் :
இரண்டாம் அகிலத்தில் எப்பொழுதுமே இடது, வலது, நடுநிலை என்றிருந்தது. இவை நாளடைவில் கெட்டிப்பட்டு மூன்று அகிலங்களாகப் பிரிந்தன. வலது சந்தர்ப்பவாதிகள் இரண்டாம் அகிலத்தைப் புதுப்பித்துக் கொண்டனர். 1919-ஆம் ஆண்டு பிப்ரவரியில் பெர்ன் நகரில் கூடிய சோசலிஸ்டுக் கட்சிகளுடைய மாநாட்டில் இது நடந்தது. இதுவே மஞ்சள் அல்லது பெர்ன் அகிலம் எனப்படுவதாகும்.

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

NEP 2020 : கார்ப்பரேட் – காவிகளின் நலனில் விளைந்த வீரிய ஒட்டு ரகம் !

சுற்றுச்சூழல் விதிகளில் திருத்தம், கூட்டுறவு வங்கிகளை ஆர்.பி.ஐ-யின் கைகளில் ஒப்படைப்பது, பொதுத்துறை நிறுவனங்களை படிப்படியாகத் தனியாருக்குத் தாரைவார்ப்பது என மோடி அரசின் அடுத்தடுத்த தாக்குதல்களைத் தொடர்ந்து, கடந்த 5 ஆண்டுகளாக நாடே எதிர்த்து வந்த தேசிய கல்விக் கொள்கைக்கும் கொரோனா ஊரடங்கைப் பயன்படுத்திக் கொண்டு ஜூலை 29-ல் ஒப்புதல் அளித்துள்ளது.

34 ஆண்டுகளுக்குப் பின்னர் தேசத்தையே புரட்டிப்போடக்கூடிய அம்சங்களைக் கொண்ட கல்விக் கொள்கை என ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலால் தம்பட்டமடிக்கப்படும் இக்கல்விக் கொள்கை உண்மையில் ஒரு தேன் தடவிய விஷம். 2016-ல் வெளியிடப்பட்ட டி.எஸ்.ஆர் சுப்பிரமணியன் குழு அறிக்கை, 2019-ல் வெளியிடப்பட்ட கஸ்தூரி ரங்கன் குழு தலைமையிலான “வரைவு தேசியக் கொள்கை” இவையிரண்டின் சாரமாகவே வெளிவந்துள்ளது தற்போதைய புதிய கல்விக் கொள்கை. ஒரே வேறுபாடு என்னவென்றால், முந்தையவற்றை விட இது நைச்சியமாகவும் தந்திரமாகவும் எழுதப்பட்டுள்ளது என்பதே.

இக்கொள்கையில், இந்தியக் கல்வியை உலகமயமாக்கி அதைத் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் திட்டமும், தங்களின் இந்து சாம்ராஜ்ஜியக் கனவுக்கேற்ப பாடத்திட்டங்களை  அமைப்பது, முதல் மூன்று வயதிலிருந்தே மாணவர்களின் மூளையை வார்ப்பு செய்வது வரையிலான ஆர்.எஸ்.எஸ் கும்பலின் திட்டமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது.

***

2015-இல் இந்தியா ஏற்றுக்கொண்ட (காட்ஸின் கீழ் வருகிற) சர்வதேச கல்வி விதிமுறைகளுக்கு ஏற்பத்தான் தற்போதைய கல்விக் கொள்கை மாற்றியமைக்கப் பட்டிருப்பதாக இக்கொள்கையின் முன்னுரையே கூறுகிறது. (பக்.3). “நிலையான வளர்ச்சி இலக்கு (SDG4)” என்று கூறப்படும் இச்சர்வதேச விதியானது, 2030-க்குள் கல்வியை உலகமயமாக்கி அதை தனியாரிடம் ஒப்படைப்பதையும் 21 ஆம் நூற்றாண்டில் சந்தையின் தேவைகளுக்கேற்ப கல்வி முறையை மாற்றியமைப்பதையுமே நோக்கமாகக் கொண்டதாகும்.

மேலும் துடிப்பான கல்வியை அடைய, கொடையாளர்கள் என்ற பெயரில் தனியாரின் முதலீட்டை ஊக்குவிப்பதே இக்கொள்கையின் நோக்கம் என்று வெளிப்படையாகவே கூறுகிறது. (பக்.6).

இன்னொருபுறம் அதே முன்னுரையில், ஆயிரமாண்டு  கால (ஆரிய-பார்ப்பன) மரபையும், சிந்னையையும் வழிகாட்டும் ஒளிவிளக்காகக் கொண்டுதான் இக்கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறது. மேலும் சரகா, சுஸ்ருதா, சாணக்கியர், பதஞ்சலி  போன்றவர்கள் மருத்துவம், கணிதம், அறுவை சிகிச்சை உட்பட பலதுறைகளைப் பற்றிக் கூறியுள்ள இலக்கியங்கள் இந்தியாவில் இருப்பதாகவும் இப்பொக்கிஷங்களைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்குக் கடத்த வேண்டும் என்றும் கூறுகிறது. (பக்.4,6). வேறு வார்த்தையில் சொல்வதானால், “அந்தக் காலத்திலேயே நாங்கள் அறுவை சிகிச்சையெல்லாம் செய்துள்ளோம்” என்ற சங்கிகளின் முட்டாள் கூற்றுகள் சட்டப்பூர்வ அங்கீகாரம் பெற்று கல்விக் கொள்கையாகவே ஆகிறது.

இவற்றுக்கெல்லாம் அச்சாரம் வைத்தாற்போல், “எண்ணத்தால் மட்டுமல்ல, சிந்தனையால், செயலால், ஆன்மாவால் ஒருவரை இந்தியப் பெருமிதமுள்ளவராக மாற்றுவதே இக்கொள்கையின் இலக்கு” என்கிறது. (பக்.6). இது வெளியானவுடன், இக்கூற்றுக்களையெல்லாம் மேற்கோள்காட்டி இதைத்தான் நாங்களும் சொல்கிறோம் என்றும் எங்களின் கருத்துக்களில் பெரும்பான்மையானவைதான் இதில் இடம் பெற்றுள்ளது என்றும் கூறியது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு. எனவே, நாம் இப்படித் துணிந்து சொல்லலாம் : எண்ணத்தால் மட்டுமல்ல, சிந்தனையால், செயலால், ஆன்மாவால் ஒரு மனிதனை சங்கியாக மறுவார்ப்பு செய்வதே இக்கல்விக் கொள்கையின் நோக்கம்.

***

பள்ளிக் கல்வி :

குழந்தைகளின் 85% மூளை வளர்ச்சி 3 வயதிலேயே நடப்பதால், தற்போதுள்ள 10+2 என்ற பள்ளிக் கல்விக் கட்டமைப்பை 5+3+3+4 என்று மாற்றுவதோடு 3 வயதிலிருந்தே குழந்தைகளுக்கு மும்மொழிகளை கற்றுக் கொடுக்கப் போகிறார்களாம். இவையெல்லாம் குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை என்பது ஒருபுறம். இன்னொருபுறமோ, ஆயிரமாண்டு இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் கதைகள், நாடகங்கள்,  கலைகள், பாடல்கள் மூலமாகச் சொல்லித்தருவது என்ற பெயரில் பள்ளி செல்லும் குழந்தைகளின் மனதில் இந்துத்துவ நஞ்சு விதைக்கப்படும். இப்படிக் கூறுவது மிகையல்ல. பாஜக ஆளும் கர்நாடக மாநிலத்தில் கடந்த ஆண்டு ஒரு பள்ளியில், பாபர் மசூதியை இடிப்பது போன்ற நாடகம் நடத்தப்பட்டது நினைவிருக்கலாம்.

இந்தியாவிலுள்ள பெரும்பான்மையான சிறார்கள், அடிப்படை எண்ணறிவு மற்றும் எழுத்தறிவற்றவர்களாய் இருப்பது பற்றியும் மாணவர்களின் இடைநிற்றல் அதிகரித்துள்ளது பற்றியும் நீலிக்கண்ணீர் வடிக்கும் இக்கொள்கை, அதைப்போக்க உள்ளூர் தன்னார்வலர்களைக் கொண்டு கல்வி கற்பிக்கப் பரிந்துரைக்கிறது. இதற்கேற்ற வகையில் பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி வைத்திருக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ன் கையாட்களை இனி அதிகாரப்பூர்வமாகவே கல்வி நிலையங்களுக்குள் ஊடுருவ வைக்கும் சதித்தனமே இது.

படிக்க:
மோடி அரசின் புதிய கல்வி கொள்கையை எதிர்த்து தமிழகம் கிளர்ந்தெழட்டும் !
பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

இடைநிற்றல் அதிகமாகிவிட்டதாகவும் 2035-க்குள் 50% சேர்க்கை விகிதத்தை அடையப்போவதாகவும் கூறும் இவர்கள், அரசு மற்றும் தனியார் கொடையாளர்களின் (கார்ப்பரேட்களின்) ஒருங்கிணைந்த முயற்சியில் இதைச் சரிபடுத்தப் போகிறார்களாம்.

பாடத்திட்டங்கள் மற்றும் கற்பித்தல் முறையைப் பொறுத்தவரை, மனப்பாடக் கல்வியை  ஒழிக்கப் போவதாகவும், செயல் முறைக் கல்வியை வளர்க்கப் போவதாகவும், பாடச் சுமைகளைக் குறைக்கப் போவதாகவும் பேசுகிறது இக்கொள்கை. பாடச்சுமைகளைக் குறைக்கப் போகிறோம் என்று ‘முற்போக்காகப்’ பேசும் இக்கொள்கை ‘இந்தியப் பாரம்பரியம், கலாச்சாரம், மரபு’ ஆகியவற்றை கற்றுத்தருவதற்கு அதிக அழுத்தம் தருகிறது. எனவே, “பாடச்சுமையைக் குறைப்பது” என்ற பெயரில் ஜனநாயக, பகுத்தறிவுக் கருத்துக்களை நீக்கி பாடப்புத்தகங்களை முழுக்கக் காவிமயமாக்குவதையே குறிக்கோளாகக் கொண்டுள்ளது. கொரோனா ஊரடங்கை ஒட்டி சமீபத்தில் குறைக்கப்பட்டிருக்கும் சி.பி.எஸ்.ஈ. பாடத்திட்டத்திலேயே ஜனநாயகம் தொடர்பான பாடப் பகுதிகளை மத்திய அரசு நீக்கியிருப்பதை இதனுடன் ஒப்பிட்டுப் புரிந்து கொள்ளலாம்.

அதேபோல, 5 ஆம் வகுப்புவரை தாய்மொழி வழிக் கல்வி என்று கூறுவதெல்லாம் பச்சைப் பொய். இக்கொள்கையின் 4.11 ஆவது அம்சத்தில், “சாத்தியமான இடங்களில்” (Where ever possible) தாய்மொழி வழிக் கல்வியைக் கற்றுக்கொடுக்கலாம் என்றுதான் உள்ளது. மேலும் இக்கொள்கை வெளியான மறுதினமே, தங்கள் பள்ளிகளில் தாய்மொழிக் கல்வியை அமல்படுத்த மாட்டோம் என சி.பி.எஸ்.சி பள்ளிகள் அறிவித்துவிட்டன.

3 வயதிலிருந்தே குழந்தைகள் மீது மும்மொழி திணிக்கப்படுகிறது. 3-வது மொழி இந்தியோ சமஸ்கிருதமோ அல்ல, எதை வேண்டுமானாலும் படிக்கலாம் என்று கூறுனாலும், இக்கொள்கை முழுவதும் சமஸ்கிருதத்துக்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. மற்ற செம்மொழிகளை பெயரளவுக்குக் குறிப்பிடும் இதில், மொத்தம் 23 இடங்களில் சமஸ்கிருதத்துக்கான முக்கியத்துவம் பற்றி பேசப்பட்டுள்ளது. அதேபோல, 4.17 ஆவது அம்சத்தில், “பள்ளி முதல் அனைத்து நிலைகளிலும் சமஸ்கிருதம் முக்கிய விருப்ப மொழியாக இருக்கும்” என்று வெளிப்படையாகவே கூறுகிறது.

மேலும், 22.15 ஆவது அம்சத்தில், “சமஸ்கிருத மொழியை மாணவர்களிடம் கொண்டு சேர்க்க வரையறுக்கப்பட்ட ஒற்றை வழியில் அல்லாமல், பள்ளிகளின் வாயிலாகவும் பயிற்றுவிக்கப்படும். மும்மொழிப் பாடத்திட்டத்தில் ஒருமொழியாக மட்டுமின்றி உயர் கல்வியிலும் பயிற்றுவிக்கப்படும். வெறுமனே மொழியாக மட்டுமின்றி புதுமையான சுவாரஸ்யமான முறைகளில் இது மாணவர்களிடம் கொண்டு சேர்க்கப்படும். ….. மாணவர்கள் விரும்பும் பட்சத்தில், சமஸ்கிருதமானது ஒருவகை புனிதத்துவம் மிக்க பல்வேறு படிப்புகளைக் கற்றுக் கொடுக்க முறையாகச் செயல்படத் துவங்கும். அதிக அளவிலான சமஸ்கிருத ஆசிரியர்கள், 4 வருட ஒருங்கிணைந்த பல்துறை கல்வி & பி.எட் பட்டம் பெறுவதன் மூலம் நாடு முழுவதும் பணியமர்த்தப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று கூறுகிறது. (பக்.55)

படிக்க:
நூல் அறிமுகம்: தமிழா ! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்
புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

பிற தேசிய இனங்களின் மீதான தங்களது ஆரிய சமஸ்கிருதப் பன்பாட்டுப் படையெடுப்பை இவ்வளவு பச்சையாகவே கூறுகின்றனர். இத்தனைக்கு பிறகும் இதை வெறும் மொழித் திணிப்பு என்று சுருக்கிப் பார்க்க முடியுமா? மேலும், “ஒருவகைப் புனிதத்துவம் மிக்க பல்வேறு படிப்புகள்” என்று கூறுவது சனாதன தர்மத்தை தவிர வேறென்ன.

5+3+3+4 என்பதில் ஒவ்வொரு கட்டத்திலும் மாணவர்கள் தேசிய அளவிலான பொதுத்தேர்வை எழுத வேண்டும். இத்தேர்வுகள் மாணவர்கள் – ஆசிரியர்களின் செயல்திறனை, விருப்பத்தை மதிப்பீடு செய்வதற்காகவே என்று கூறப்பட்டாலும், உண்மையில் ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை கல்வியிலிருந்து வெளியேற்றுவதையே இது சதித்தனமாக செய்கிறது. இதற்கு இணையாக, 6-வது முதல் 12-வது வரை தொழிற்கல்வி என்ற பேரில் நவீன குலக்கல்வியைப் புகுத்துகிறது இக்கொள்கை. உள்ளூரிலுள்ள தச்சர்கள், குயவர்கள், தோட்டக்காரார்களிடம் மாணவர்கள் இண்டர்ன்சிப் செல்ல வேண்டுமாம். இதற்கு “புத்தகப் பைகளற்ற நாட்கள்” (bagless days) என்று தந்திரமாகப் பெயரும் சூட்டுகிறார்கள். கிராமப்புறங்களின் சமூக சூழ்நிலைமையோடு ஒப்பிட்டுப் பார்த்தால் இதன் வீரியம் இன்னும் தெளிவாகத் தெரியும். இன்ன சாதி இன்ன தொழிலைத் தான் செய்ய வேண்டுமென வரையறுக்கப்பட்டிருக்கும் நிலையில், காலனியைச் சேர்ந்த மாணவன் ஊருக்குள் நுழைவதே சிக்கல் எனும் நிலையில், அந்த மாணவன் குலத் தொழிலை மட்டும்தானே கற்க முடியும் ?

பல்வேறு மொழி, தேசிய இனங்கள், பண்பாடுகள் நிறைந்த நம் நாட்டில், தேசிய அளவில் ஒரே மாதிரியான பாடத்திட்டங்களும் அதை வரையறுக்க ஒரே அமைப்பும் உருவாக்கப்படும் என்றும் கூறுகிறது இக்கொள்கை. மாநிலங்களிடம் கருத்துக்களைக் கேட்டால் போதுமானது என்று கூறுவதோடு, இவ்வமைப்பு கூறும் வரையறைக்குட்பட்டே மாநிலங்கள் தத்தம் வரலாறுகளையும் சிறப்பியல்புகளையும் பாடத்திட்டத்தில் வைக்க வேண்டும் என்றும் சொல்கிறது. (பக்.16, 17). ஒரே நாடு ஒரே கலாச்சாரம் அது இந்துக் கலாச்சாரம் தான் என்ற ஆர்.எஸ்.எஸ். கொள்கையையே இந்தப் புதிய கல்விக் கொள்கை பறைசாற்றுகிறது.

ஆசிரியர்களைப் பற்றிய பகுதியில், பண்டைய குருகுலக் கல்வி முறையை வானளாவப் புகழ்ந்துவிட்டு, தற்போது தகுதியற்றவர்கள் நுழைந்துவிடுகிறார்கள் என்று கூறிவிட்டு, ஆசிரியர்களுக்கும் இனி தேசிய அளவிலான தகுதித்தேர்வு, நேர்முகத் தேர்வுகளை வைக்க வேண்டும் என்றும், பணிமூப்பு அடிப்படையில் நிரந்தரப் பணி தரக்கூடாது அவர்களின் செயல்திறனை மதிப்பிட்டே நிரந்தரப் பணி வழங்க வேண்டும் என்றும் இதற்கு இடையில் தற்காலிக “தகுதிகாண்” கட்டத்தை வைத்து சோதிக்க வேண்டும் என்றும் கூறுகிறது. ஆளெடுப்பு நிறுவனங்கள் ஆர்.எஸ்.எஸ் பிடிக்குள் செல்லும் போது அறிவியல் பூர்வமான, ஜனநாயக சிந்தனை கொண்ட ஆசிரியர்களைக் கல்வி நிலையங்களுக்குள் செல்லவிடாமல் தடுக்கவும் அப்படி இருப்பவர்களை வெளியேற்றவுமே இவை பயன்படும். இவ்விதிகளேதான் கல்லூரிப் பேராசிரியர்களுக்கும்.

மேலும், இன்றைய பாடத்திட்டங்கள் உலகத்தரத்தில் இல்லை என்று கூறும் இக்கொள்கை, கார்ப்பரேட்டுகளின் சந்தைக்கேற்ற படிப்புகளான செயற்கை நுண்ணறிவு (AI), மீப்பெரும் தரவுப் பகுப்பாய்வு, coding, உயிரி தொழில் நுட்பம் போன்றவற்றையே 21-ம் நூற்றாண்டின் திறன்களாகச்  சித்தரித்துள்ளது. உயர் கல்வியில் அவற்றைக் கற்பதற்கான அடிப்படைகளைக் கற்றுக்கொடுப்பதற்கே பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தில் அதிக அழுத்தமும் கொடுத்துள்ளது. இந்தியர்களை கார்ப்பரேட் கூலியாட்களாக மாற்றுவதோடு அவர்களின் சந்தை தேவைகளுக்கேற்ற படிப்பையே நாட்டின் வளர்ச்சியாக இக்கொள்கை தொழிற்கல்வி என்ற பெயரில் சித்தரிக்கிறது.

ஆய்வகங்கள், நூலகங்கள், விளையாட்டு போன்ற வளங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், ஒருங்கிணைந்த பல்துறை கல்வியை அளித்தல் என்ற பெயரில் சிறிய அளவிலான பள்ளிகளை ஒருங்கிணைத்து பள்ளி வளாகங்கள், குழுக்களாக (School complexes and clusters) மாற்றப்படுமென்கிறது இக்கொள்கை. இதை 2025-க்குள் எல்லா மாநில அரசுகளும் செய்யவேண்டும் என்கிறது. “எல்லா வளங்களையும், துறைகளையும் ஒரே இடத்தில் கொண்ட கல்வி நிறுவனங்கள் வேண்டும்” என்ற பன்னாட்டு நிறுவனங்களின் கோரிக்கையான இதில், சிறுசிறு அரசு பள்ளிகளையே படிப்படியாக மூடி ஒழித்துக்கட்டும் மாபெரும் திட்டம் ஒளிந்துள்ளது.

இதற்காக, முதல் கட்டமாக நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளியுடன் ஒரு அரசுப் பள்ளியை இணைக்கப் போகிறார்களாம். இதனால் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் உயர்தர ஆய்வங்கள், நூலகங்கள் கிடைக்கும் என்று காதில் பூச்சுற்றுகிறார்கள். இதன் மூலம் இவர்கள் தெரிவிக்க விரும்புவது, இனி அரசுப் பள்ளிகளுக்கான வசதிகளை அரசாங்கம் செய்து கொடுக்காது என்பதுதான். இலாப நோக்கம் கொண்ட தனியார் பள்ளிகளின் வளங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கிடைக்குமா? அல்லது அரசுப் பள்ளிகளின் நிலங்களையும், விளையாட்டுத் திடல்களையும் தனியார் பள்ளிகள் சுருட்டிக்கொள்ளுமா?.

தற்போதுள்ள கல்வித்துறையின் பெயரளவிலான விதிகள்கூட தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை உள்ளிட்டவற்றை கேள்விகேட்பதாக மறைமுகமாக குறிப்பிடும் இக்கொள்கை, இவற்றை “தொந்தரவுகள்” என்றும் “வளர்ச்சியைத் தடுப்பவை” என்றும் வரையறை செய்கிறது. “பள்ளிகளின் விதிகளிலோ அல்லது செயல்பாடுகளிலோ, பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதிலோ பள்ளிக் கல்வித் துறை தலையிடாது.” (பக்.31). இவ்விதிகள் அனைத்தையும் தளர்த்திக் கொண்டு தனியார் கல்விக் கொள்ளை நிறுவனங்கள் தங்கள் விருப்பம்போலக் கொள்ளையடிக்க ஏதுவான வழிவகைகளைச் செய்துகொடுக்கிறது. மேலும், ‘இலாப நோக்கற்ற தனியார் நிறுவனங்கள்’ கல்வியில் முதலீடு செய்வதை ஊக்குவிக்க வேண்டும் என்று கூறுவதன் மூலம் பள்ளிக் கல்வியின் சந்தையை உள்நாட்டு, பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் திறந்துவிடுகிறது.

மேலும், பள்ளிக் கல்வியில் ஆன்லைன் கல்வி, டிஜிட்டல் கற்பித்தல் இவற்றிற்கு அளிக்கப்படும் முக்கியத்துவம், பன்னாட்டு ஆன்லைன் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கடைவிரிக்க விடுக்கும் சமிக்ஞையே ஆகும்.

***

உயர்கல்வி :

பள்ளிக்கல்வி பகுதியில் தங்களின் திட்டங்களை சூசகமாகக் கூறிய மோடி அரசு உயர்கல்வியில் வெளிப்படையாகவே கூறுகிறது.

மிகமுக்கியமாக உயர்கல்வியில் இதுவரை பல்கலை – கல்லூரிகளுக்கு நிதியளிப்பது, அங்கீகாரம் வழங்குவது, தர நிர்ணயம் செய்வது ஆகியவற்றைச் செய்துவந்த UGC, AICTE போன்ற அமைப்புகளைக் கலைத்துவிட்டு மருத்துவம், சட்டத்துறைகளைத் தவிர அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் நிர்வகிக்க, தர நிர்ணயம் செய்ய HECI என்ற ஒற்றைச் சர்வாதிகார அமைப்பைக் கொண்டுவருகிறது.

2000-ம் ஆண்டு வாஜ்பாய் அரசு அமைத்த, பிர்லா-அம்பானி அறிக்கை யு.ஜி.சி யைக் கலைக்கவும், அரசு பல்கலைக் கழகங்கள்-கல்லூரிகளுக்கு நிதியளிப்பதை படிப்படியாக நிறுத்தவும் கூறியது. அதன்படியே கடந்த 2018 டிசம்பரில் HECI மசோதாவை மோடி அரசு வெளியிட்டது. இவ்வமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அதிகாரம் இல்லை. கல்லூரிகள் தாங்களாகவே, கட்டணங்களை உயர்த்துவதன் மூலம் அல்லது கடன் மூலம் நிதியைத் திரட்டிக் கொள்ள வேண்டும். கல்வி நிறுவனங்களுக்குக் கடன் வழங்குவதற்காக அதற்காக உயர்கல்வி நிதி முகமை என்ற அமைப்பே உருவாக்கப்பட்டுள்ளது. எனவே, இது அரசு கல்வி நிறுவனங்களை நிதி நெருக்கடியில் தள்ளி மூடும் நோக்கத்தைக் கொண்டதாகும். அதுமட்டுமல்ல இந்த HECI அமைப்பில், புரவலர்கள் என்ற பெயரில் கார்ப்பரேட் நிறுவனங்களின் அதிகாரிகள் அமர்வார்கள். அவர்கள்தான் இனி கல்வி தொடர்பான கொள்கை முடிவுகள் எடுப்பார்கள்.

மேலும் இக்கொள்கை, 15 ஆண்டுகளுக்குள் எல்லா உயர் கல்வி நிறுவனங்களுக்கும் படிப்படியாக, தர அடிப்படையிலான தன்னாட்சியை (Graded Autonomy) அளிக்க வேண்டும் என்கிறது. நிதி ஆயோக் கடந்த 2017-இல் மத்திய அரசிற்கு வழங்கிய பரிந்துரையில் தர தன்னாட்சி பட்டியலில் முதலாம், இரண்டாம் நிலைகளில் வராத கல்லூரி / பல்கலைக்கழகங்களை மூடிவிட வேண்டும் எனக் கூறியுள்ளதை இதனுடன் இணைத்துப் பார்த்தால், அரசு உயர்கல்வி நிறுவனங்களுக்கு நிச்சயம் மூடுவிழாதான்.

“நாளந்தா, தக்சசீலா போன்ற பண்டைய கல்வி நிறுவனங்களில் வெளிநாட்டவர் வந்து படித்த பெருமையைக் கொண்டது நமது நாடு” என்று கூறிவிட்டு அதை இப்போது மீட்டெடுக்கப்போவதாக தங்கள் மறுகாலனியாக்க நடவடிக்கைக்கு தேசிய சாயம் பூசுகிறார்கள். உலகளாவிய கல்வியின் தலமாக இந்தியாவை மாற்ற வேண்டும், கற்றல்-கற்பித்தல், ஆசிரியர், மாணவர் பரிமாற்றம் உள்ளிட்ட அனைத்தைப் பற்றியும் உயர்தர பன்னாட்டு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும், உலகின் சிறந்த 100 கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட வசதி செய்து தரப்படும் என்றெல்லாம் வெளிப்படையாகவே கூறுகிறது இக்கொள்கை. மேலும், பன்னாட்டு நிறுவனங்கள் விருப்பம்போல ஆன்லைன் கல்வி நிறுவனங்களைத் தொடங்கவும் இதில் முழுச்சுதந்திரம் தரப்பட்டுள்ளது. இவையெல்லாம் நடைமுறைக்கு வந்தால் பன்னாட்டு நிறுவனங்களின் கோரப்பிடியில் இந்திய உயர்கல்வித்துறை ஒப்படைக்கப்பட்டு, காசிருந்தால்  மட்டுமே உயர்கல்வி என்ற நிலை ஏற்படும்.

படிக்க:
மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !
♦ புதிய கல்விக் கொள்கை மனுநீதி 2.0 ! புதிய கலாச்சாரம் நூல் !

பள்ளிக்கல்வியைப் போலவே தரத்தைக் காரணமாகக்கூறி, கல்லூரிகளையும் உயர்கல்வி கூட்டமைப்புகளாக ஒருங்கிணைக்கச் சொல்கிறது. மேலும், 2040-க்குள் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களையும் பலதரப்பட்ட புலங்களைக் கொண்ட (multidisciplinary) கல்வி மையங்களாக (HUB) உருவாக்க வேண்டும் என்று கூறும் இக்கொள்கை ஒற்றைப் புலங்களைக் கொண்ட (single-strem) பல்கலைக் கழகங்களைப் படிப்படியாக மூடிவிட வேண்டும் அல்லது அத்துடன் இணைத்துவிட வேண்டும் என்கிறது. (பக்.34, 35).

நீட் தேர்வைப் போல, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்துப் படிப்புகளுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் நடத்துவது ஏழை, தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களை உயர்கல்வியிலிருந்து வடிகட்டி வெளியே தள்ளும். மேலும், கல்வியிலிருந்து எந்த ஆண்டில் வேண்டுமானாலும் வெளியேறலாம் என்பதை “நெகிழ்வுத் தன்மைகொண்டது” எனக் கூசாமல் இக்கொள்கை வரையறுக்கிறது. உயர்கல்வி கற்கும் ஏழை மாணவர்கள் குடும்ப சூழலில் கல்வி கற்க முடியாமல் போனால், அவர்கள் கல்வியை முழுமையாக முடிப்பதற்கு உதவி செய்வது நல்ல கல்விக் கொள்கையா ? காசிருக்கும் வரை படித்ததற்கு ஏற்றவாறு இரண்டாம் தர சான்றிதழ் தருவது நல்ல கல்விக் கொள்கையா ?

பள்ளிக் கல்வியைப் போலவே, கல்லூரிப் பேராசிரியர்களுக்கும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு, தகுதிகாண் கட்டம் இவற்றை அமல்படுத்துவதோடு, அப்பேராசிரியர்கள் இந்திய விழுமியங்கள், கலாச்சாரம், மரபுகள் இவற்றில் ஆழமான அடித்தளத்தைப் பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்றும்  கூறுகிறது இக்கொள்கை. (பக்.42). இனி சிந்தனையாலும், ஆத்மாவாலும் முழு சங்கியாக வாழ்பவர்கள்தான் பேராசிரியர்களாக முடியும் என்பதே இதன் பொருள்.

ஆய்வுகளுக்காக, தேசிய அளவிலான ஆரய்ச்சி மையம் (NRF) உருவாக்கப்படும். பல்கலை, கல்லூரிகளின் ஆய்வுகளுக்கு இந்நிறுவனம்தான் நிதி, அங்கீகாரம், ஒப்புதல் இவற்றை வழங்கும். இதுபற்றிக் கூறும் பகுதியில், கார்ப்பரேட்டுகளின் நலனுக்கான டிஜிட்டல் சந்தை, செயற்கை நுண்ணறிவு, உயிரி தொழில் நுட்பம், பிக் டேட்டா, சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளிலும் காவிகளின் விருப்பமான நாட்டின் அடையாளம், கலாச்சாரம், கலை ஆகிய துறைகளிலும் ஆராய்ச்சி செய்யத்தான் இனி ஊக்குவிக்கப்படும் என வெளிப்படையாகவே கூறுகிறது. 22.16-இல் “இந்தியக் கலை, கலை வரலாறு, இந்தியத் தத்துவம் – வரலாறு – இலக்கியம் – தத்துவம் – பண்பாடு இவற்றுக்கான கல்வி நிறுவனங்களும் பல்கலைக் கழகங்களும் அமைக்கப்படும். இதில் ஆராய்ச்சியில் ஈடுபட அனைத்து விதமான நிதி உதவிகளும் NRF மூலம் செய்யப்படும்” என்று காவிகளின் நோக்கத்தை வெளிப்படையாகவே கூறுகிறது இந்த புதிய கல்விக் கொள்கை. மேலும் தொழிற்துறை சார்ந்த ஆய்வுகள் அனைத்தும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான தேவையை மையமாகக் கொண்டே நடைபெறும் என்கிறது இந்த புதிய கல்விக் கொள்கை (பக்.45, 46, 55).

ஜனநாயகத்தின் வாசனையோ, மக்கள் நலனின் வாசனையோ அற்ற கார்ப்பரேட் – காவிமயமான ஆய்வுகள்தான் இனி வெளிவரும். சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள், மக்கள் நலனில் அக்கறை கொண்டோரெல்லாம் முடக்கப்படுவார்கள்.

***

வ்வாறு, ஏழைகளைக் கல்வியிலிருந்து துடைத்தெறிந்து, ஒட்டுமொத்தமாகக் கல்வியையே கார்ப்பரேட் – காவிமயமாக்கும் நவீன மனுநீதியையே புதிய கல்விக் கொள்கையாக வெளியிட்டுள்ளது மோடி அரசு.

இக்கொள்கை ஏழைகளைக் கல்வியிலிருந்து துடைத்தெறிகிறது என்பதோடு, ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க கும்பலின் இந்து ராஷ்டிரக் கனவுக்கேற்ப மனித மூளையை மூன்று வயதிலிருந்தே வார்ப்பு செய்கிறது. வேறு  வார்த்தைகளில் மீண்டும் சொல்வதானால், எண்ணத்தால் மட்டுமல்ல, சிந்தனையால், செயலால், ஆன்மாவால் ஒருவனைச் சங்கியாகவும் கார்ப்பரேட் அடிமையாகவும்  மாற்றுகிறது என்பதுதான் மிகப்பெரிய அபாயம்.

தீரன்

பாசிச இருளை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்? | தோழர் வாஞ்சிநாதன் உரை | காணொலி

0

பொருளாதார நெருக்கடி, கொரோனா பெருந்தொற்று இவற்றுடன் சேர்த்து பாசிச அபாயத்தையும் இந்தியா எதிர் கொண்டுள்ளது. ஆம் ! இங்கு அறிவிக்கப்படாத ஒரு அவசரநிலை ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்திரா காந்தியின் அன்றைய அவசரநிலை ஆட்சியை எதிர்கொண்டதைப் போல பாஜக அரசின் இன்றைய அவசரநிலை ஆட்சியை எதிர்கொள்ள முடியாது. ஏனெனில் இங்கு பாஜக -வைப் பின்னிருந்து இயக்குகிறது ஆர்.எஸ்.எஸ்.. மேலும், அதிகார மட்டங்களிலும் அடியாட்படை பலத்திலும் வலுவாக உள்ளது இக்கும்பல்.

தற்போதைய கொரோனா பெருந்தொற்றுச் சூழலை தனக்கு  சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு இராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா துவங்கி, சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு மசோதா, புதிய கல்விக் கொள்கை வரை தொடர்ச்சியாக தனது காவி – கார்ப்பரேட் திட்டங்களை அமல்படுத்தத் துடிக்கிறது மோடி அரசு.

இந்த பாசிச சூழலை எதிர்க்க, நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டிய அவசியம் உள்ளது. குறிப்பாக கம்யூனிஸ்டுகள், பெரியாரிய – அம்பேத்கரிய சிந்தனையாளர்கள், ஜனநாயக சக்திகள் மற்றும் நாட்டின் மீது அக்கறை உள்ள அனைவரும் பாசிசத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை இக்காணொலியில் விரிவாக விளக்குகிறார் வழக்கறிஞர் வாஞ்சிநாதன். பாருங்கள்… பகிருங்கள்…

நூல் அறிமுகம்: தமிழா ! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்

பார்ப்பன எதிர்ப்பு கொண்ட தமிழகத்திலேயே பெண்ணடிமைத்தனமும், சடங்கு சம்பிராதயங்களும், மூடக்கருத்துக்களும் கோலாச்சுகிறது; குடும்பங்களிலிருந்து அகற்றுவது அப்படி ஒன்றும் எளிமையானது இல்லை என்கிறபோது, வட இந்தியாவின் நிலையைப் பற்றி தனியாக விளக்கத் தேவையில்லை. அதனால்தான் அங்கே இராமனின் பெயரால் இலட்சக்கணக்கானோர் கூடுகிறார்கள்; கொலைக்கருவிகளோடு தெருக்களில் வலம் வருகிறார்கள்.

வட இந்தியாவில் இராமன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட மதச் சார்பாக்கத்தை தமிழகத்தில் முருகனின் பெயரால் கொண்டுவர முயற்சிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தமிழர்களின் மதச்சார்பற்ற பண்பாட்டை இந்துப் பண்பாடாக மாற்றிக் காட்டி நம்மையும் காட்டுமிராண்டிகளாக்கத் துடிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தமிழர் பாரம்பரியம்  ‘இந்துப்’ பாரம்பரியம் அல்ல என்பதை நமக்கு ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டுகிறது இந்நூல்..

நூலிலிருந்து சில பகுதிகள்:

அந்தணர்

“பண்டைத் தமிழர்களிடையே எவ்விதமான ஏற்றத்தாழ்வும், சாதிப் பாகுபாடும் கிடையாது. செய்யும் தொழிலின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பெயரிட்டு அழைக்கப்பட்டனர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகளே அவை.”

“சுருங்கக்கூறின், அனுபவ அறிவும், பொதுநல நாட்டமும் உடைய, இல்வாழ்க்கையை விட்டு பொதுத் தொண்டாற்ற முன்வந்த தமிழ்ப் பெரியவர்களே அந்தணர்கள். இவர்கள் தனிப் பிரிவினர் அல்ல.”

“இளஞ்சேட் சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் மகள் ஆவாள். அவனுடைய மகன் கரிகாலனின் மனைவி நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேள் ஒருவனின் மகள்.

எனவே, அந்தணர் என்பதும், அரசர் என்பதும், வணிகர் என்பதும், வேளாளர் என்பதும் தொழில் பிரிவுகளே! சாதிப் பிரிவுகள் அல்ல என்பதற்கு மேற்கண்ட திருமண உறவுகளே நல்ல சான்றுகளாகும். சாதிப் பிரிவுகளாக இருந்திருந்தால் திருமண உறவு ஏற்பட்டிருக்காது அல்லவா?”

தமிழர் காதல்

“பருவமடைந்த ஒரு ஆணும் பெண்ணும் தனியே சந்தித்து, பேசி, காதல் கொள்வது என்பது அன்று குற்றமாகக் கொள்ளப்படவில்லை. காதல் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவேக் கருதப்பட்டது.”

“… அக்கால தமிழ்க் காதலுக்கு சாதியில்லை, உறவு இல்லை; உறவுக்காரர்கள்தான் மணந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை; ஏற்றத்தாழ்வு இல்லை. அன்பு கொண்ட, பருவமடைந்த எந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டனர், இல்வாழ்வு நடத்தினர்.”

தமிழர் திருமணம்

“காதல் கொண்ட இருவரும் இறுதியில் இல்வாழ்க்கையை எந்தவித திருமணச் சடங்கும் இன்றி துவங்குவதே பண்டைத் தமிழர்களின் மரபாக இருந்தது…”

“பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், காதலியின் விருப்பத்தோடு அவளை ஒருவரும் அறியாமல் தன் ஊருக்கு அழைத்துச் சென்று இல்வாழ்வு நடத்துவான்.”

“இதைக்கண்ட பெரியவர்கள், இப்படிப்பட்ட மோசடிகள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு பலரறிய திருமணம் செய்யும் முறையை ஏற்படுத்தினர்…..”

“…. பண்டைத் தமிழர்கள் திருமணத்தில், தாலி இல்லை, தரம்கெட்ட வேதம் இல்லை, எரிவளர்த்தல் இல்லை, ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பனர் இல்லை, அம்மி மிதித்தல் இல்லை, அருந்ததி பார்த்தல் இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது.”

இல்லுறை தெய்வ வழிபாடு

“இறந்துபோன குடும்பப் பெரியவர்களை, பெற்றோர்களை வழிபாடு செய்வதே இல்லுறை தெய்வ வழிபாடு ஆகும்.”

“முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலத்து மக்கள் முறையே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நிலத்தலைவர்களை வணங்கினர்.

மாயோன் என்றால் திருமால் என்றும், சேயோன் என்றால் முருகன் என்றும், வேந்தன் என்றால் இந்திரன் என்றும், வருணன் என்றால் கடற்கடவுள் என்றும் பல உரையாசிரியர்கள் இதற்குப் பொருள் கூறுகின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.

தங்கள் கருத்துக்களை வலியுறுத்திக் கூற, தமிழர் வழக்கத்தையே திரித்துக் கூறுகின்ற பெருங்குற்றத்தை அவர்கள் செய்துள்ளனர்.” (நூலில் பக்கம் 8-19)

சிந்துவெளித் தமிழன் வழிபட்டது சிவலிங்மா?

“அக்காலத்தில் மக்களைவிட விலங்குகளே அதிக அளவில் இருந்தன. மனிதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

எனவே அக்கால மக்களுக்கு தங்கள் இனத்தை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டிய அவசியம் அதிக அளவில் இருந்தன. மக்கள் எண்ணிக்கை அதிகம் பெருக வேண்டும் என்று அக்கால மக்கள் விரும்பினர்.”

“இக்காலத்தில், ஆயுத பூசை என்ற பெயரில் மக்கள் தங்களுக்குப் பயன்படக்கூடிய கருவிகளை வழிபடுவதைக் காணலாம்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின்
புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

தச்சன் தனக்குப் பயன்படும் கருவிகளையும், கொல்லன் தனக்குப் பயன்படும் கருவிகளையும், அவ்வாறே ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குப் பயன்படும் கருவிகளையும் வழிபடுதல் போலவே அக்கால மக்கள் தங்களுக்கு அவசியம் என்று கருதப்பட்ட ஆண் – பெண் உறுப்புகளை வழிபட்டனர்.

இவ்வாறு ஆன் – பெண் உறுப்புகளை பொருத்தி வழிபட்ட வழக்கம் சிந்துவெளி மக்களிடம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் அக்காலத்தில் இருந்தது.”

“வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும், சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் கதை கட்டியது போல; அக்கால மக்கள் வழிபட்ட ஆண், பெண் உறுப்பு இணைந்த உருவங்களைக் கண்ட ஆரியர்கள் அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டினர்.”

“அதாவது, சிவனின் ஆண் உறுப்பும், பார்வதியின் பெண் உறுப்பும் இணைந்ததே சிவலிங்கம் என்று ஒரு கதை கட்டினர். ஆதாரம் லிங்கபுராணம்.” (நூலில் பக்கம் 23–26)

ஆரியர்கள் பார்ப்பனர் ஆனது எப்படி?

பார்ப்பு என்ற சொல்லிலிருந்தே பார்ப்பனர் என்ற சொல் உருவாயிற்று. பார்ப்பு என்பதற்கு இளமை என்பது அர்த்தம்.”

“இளங்குழந்தைகளை “பாப்பா” என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பார்ப்பு என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பார்ப்பு என்பது பார்ப்பா என்றாகி பின்னர் பாப்பா என்று வழக்கத்தில் ஆகியது.”

“தமிழ் மன்னர்களின் அரண்மனையிலும், பெருஞ்செல்வர்களின் வீடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்த தமிழர்களே பார்ப்பனர் ஆவர்.

அதாவது, இளம்பருவத்தில் (பார்ப்பு பருவத்தில்) உள்ளவர்களுக்கு உதவியாளர் பணி செய்தவர்கள் என்பதால் அந்த உதவியாளர்கள் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பார்ப்பனர் என்பதற்கு இளைஞர்களின் துணைவன் என்று அர்த்தம். பார்ப்பனர் என்பது ஒரு வேலையின் (தொழிலின்) பெயரே ஆகும்.” (நூலில் பக்கம் 29, 30)

ஜாதிப் பிரிவினையை உருவாக்குதல்

“ஆரம்பத்தில் தமிழர்கள் செய்து வந்த பார்ப்புத் தொழிலை ஆரியர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு பார்ப்பனர்கள் ஆனதுபோல, நாளடைவில் அந்தணப் பணியையும் மேற்கொண்டு செய்ய ஆரம்பித்தவர்கள், அந்தணர்கள் என்றாலே ஆரியர்கள்தான் என்றாகிவிட்டது.

தமிழர்கள் அந்தணர் பணி செய்யும்போது அவர்கள் சமுதாயப் பணியினை செய்தனர். ஆனால் ஆரியர்கள் அந்தணர் பணி செய்ய ஆரம்பித்தபின், அந்தணர் பணியை சமயப் பணியாக்கிவிட்டனர். கடவுள் பணி, கடவுள் கொள்கையைப் பரப்புதல், சடங்குகள் செய்தல், யாகங்கள் நடத்துதல் போன்றவை அந்தணர்களுக்கு உரியது என்று ஆக்கிவிட்டனர்.”

“அதாவது, ஆரியர்கள் செல்வாக்கடைந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 1.தமிழர், 2.ஆரியர் என்று இரு இனப்பிரிவும், தமிழர்களிடையே 1.அரசர், 2.வணிகர், 3.வேளாளர் என்ற தொழில் பிரிவும் காணப்பட்டன.

சாதியை உருவாக்கி தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தத் திட்டமிட்ட ஆரியர்கள், இந்த நான்கு பிரிவையும் (1.ஆரியர், 2.அரசர், 3.வணிகர், 4.வேளாளர்) நான்கு வருணங்களாக ஆக்கத் திட்டமிட்டனர்.” (நூலில் பக்கம் 39, 40)

இவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தியதை பல்வேறு சம்பவங்கள் மூலம் தக்க ஆதாரங்களுடன் சிறுசிறு தலைப்புகளாகப் பிரித்து விளக்கியுள்ளார் நூலாசிரியர். அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல் : தமிழா, நீ ஓர் இந்துவா?
ஆசிரியர் : மஞ்சை வசந்தன்

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை – 600 007.
தொலைபேசி எண்: 044 – 26618161

கிடைக்குமிடங்கள்: பெரியார் புத்தக நிலையம்
பெரியார் திடல், 84/1(50). ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007. தொ.பே. 044-26618163

பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி – 620 017. தொ.பே. 0431-2771815
info@periyar.org | www.dravidianbookhouse.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

 

மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !

மூணாறு – பெட்டிமுடி நிலச்சரிவு – 80 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மரணம் ! காரணம் இயற்கைப் பேரழிவல்ல ! டாட்டாவின் லாபவெறியே !

கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பெட்டிமுடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை (07-08-2020) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு பணிபுரிந்த தமிழர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த உயிரிழப்பை இயற்கைப் பேரிடராகக் காட்ட கேரள அரசும், தேயிலை எஸ்டேட் உரிமையாளரான டாட்டா நிறுவனமும் முயற்சிக்கின்றன.

கடந்த ஆண்டு கடும் மழை பெய்த சமயத்திலேயே, நிலவியல் ஆய்வறிஞர்கள் மழை பொழிந்தால், அப்பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று கொடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அதற்கான முயற்சிகள் எதையும் செய்யாமல், இன்று 80 பேரின் உயிரிழப்பிற்குக் காரணமாகியுள்ளது டாட்டா நிர்வாகம்.

இந்த மரணத்திற்குக் காரணம் இயற்கைப் பேரிடர் அல்ல, மாறாக டாட்டாவின் இலாபவெறி. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஈட்டப்படும் தமது வருமானத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட தொழிலாளர்களைப் பாதுகாக்க செலவு செய்யாத முதலாளித்துவ இலாபவெறியே காரணம் !

படிக்க:
கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்
கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து குறித்து பேசும் தேசிய மீடியாக்கள் எதுவும் மூணாறு பிரச்சினை குறித்து வாய் திறப்பதில்லை.

தொழிலாளர்களின் பேரழிவிற்குக் காரணமான டாட்டா நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதோடு அந்த எஸ்டேட்டையும் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் அரசே எடுத்து நடத்த வேண்டும். தனியார் இலாபவெறிக்கு அப்பாவித் தொழிலாளர்களின் உயிர் பலியாவதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

***

“மூணாறு – பெட்டிமுடி நிலச்சரிவு தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80 பேர் மரணம் ! பெட்டிமுடி நிலச்சரிவு இயற்கைப் பேரழிவல்ல ! கார்ப்பரேட் முதலாளி டாட்டா -வின் இலாப வெறிக்காக நடத்தப்பட்ட படுகொலை !” என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் வரும் 12.08.2020 அன்று காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வாருங்கள்…

மத்திய அரசே ! கேரள அரசே !

  • கார்ப்பரேட் முதலாளி டாட்டாவை காப்பாற்ற முயற்சிக்காதே !
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 இலட்சம் இழப்பீடு வழங்கு !
  • வாழ்க்கை முழுவதும் வாழ்வாதார பதுகாப்பு கொடு !

உழைக்கும் மக்களே !

  • கொலைகார கார்ப்பரேட்டுகளின் தேயிலைத் தோட்டங்களை அரசுடமையாக்க போராடுவோம் !

 

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி.
தொடர்புக்கு : 9385353605.