Wednesday, July 30, 2025
முகப்பு பதிவு பக்கம் 242

நூல் அறிமுகம்: தமிழா ! நீ ஓர் இந்துவா? | மஞ்சை வசந்தன்

பார்ப்பன எதிர்ப்பு கொண்ட தமிழகத்திலேயே பெண்ணடிமைத்தனமும், சடங்கு சம்பிராதயங்களும், மூடக்கருத்துக்களும் கோலாச்சுகிறது; குடும்பங்களிலிருந்து அகற்றுவது அப்படி ஒன்றும் எளிமையானது இல்லை என்கிறபோது, வட இந்தியாவின் நிலையைப் பற்றி தனியாக விளக்கத் தேவையில்லை. அதனால்தான் அங்கே இராமனின் பெயரால் இலட்சக்கணக்கானோர் கூடுகிறார்கள்; கொலைக்கருவிகளோடு தெருக்களில் வலம் வருகிறார்கள்.

வட இந்தியாவில் இராமன் பெயரால் ஏற்படுத்தப்பட்ட மதச் சார்பாக்கத்தை தமிழகத்தில் முருகனின் பெயரால் கொண்டுவர முயற்சிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தமிழர்களின் மதச்சார்பற்ற பண்பாட்டை இந்துப் பண்பாடாக மாற்றிக் காட்டி நம்மையும் காட்டுமிராண்டிகளாக்கத் துடிக்கிறது சங்க பரிவாரக் கும்பல். தமிழர் பாரம்பரியம்  ‘இந்துப்’ பாரம்பரியம் அல்ல என்பதை நமக்கு ஆதாரப் பூர்வமாக எடுத்துக் காட்டுகிறது இந்நூல்..

நூலிலிருந்து சில பகுதிகள்:

அந்தணர்

“பண்டைத் தமிழர்களிடையே எவ்விதமான ஏற்றத்தாழ்வும், சாதிப் பாகுபாடும் கிடையாது. செய்யும் தொழிலின் அடிப்படையில் நான்கு பிரிவுகளாக பெயரிட்டு அழைக்கப்பட்டனர். அந்தணர், அரசர், வணிகர், வேளாளர் என்ற பிரிவுகளே அவை.”

“சுருங்கக்கூறின், அனுபவ அறிவும், பொதுநல நாட்டமும் உடைய, இல்வாழ்க்கையை விட்டு பொதுத் தொண்டாற்ற முன்வந்த தமிழ்ப் பெரியவர்களே அந்தணர்கள். இவர்கள் தனிப் பிரிவினர் அல்ல.”

“இளஞ்சேட் சென்னியின் மனைவி அழுந்தூர் வேளின் மகள் ஆவாள். அவனுடைய மகன் கரிகாலனின் மனைவி நாங்கூர் வேளின் மகள். சேரன் செங்குட்டுவனின் மனைவி கொங்குவேள் ஒருவனின் மகள்.

எனவே, அந்தணர் என்பதும், அரசர் என்பதும், வணிகர் என்பதும், வேளாளர் என்பதும் தொழில் பிரிவுகளே! சாதிப் பிரிவுகள் அல்ல என்பதற்கு மேற்கண்ட திருமண உறவுகளே நல்ல சான்றுகளாகும். சாதிப் பிரிவுகளாக இருந்திருந்தால் திருமண உறவு ஏற்பட்டிருக்காது அல்லவா?”

தமிழர் காதல்

“பருவமடைந்த ஒரு ஆணும் பெண்ணும் தனியே சந்தித்து, பேசி, காதல் கொள்வது என்பது அன்று குற்றமாகக் கொள்ளப்படவில்லை. காதல் என்பது வாழ்க்கையின் ஓர் அங்கமாகவேக் கருதப்பட்டது.”

“… அக்கால தமிழ்க் காதலுக்கு சாதியில்லை, உறவு இல்லை; உறவுக்காரர்கள்தான் மணந்து கொள்ள வேண்டும் என்பது இல்லை; ஏற்றத்தாழ்வு இல்லை. அன்பு கொண்ட, பருவமடைந்த எந்த ஆணும் பெண்ணும் காதல் கொண்டனர், இல்வாழ்வு நடத்தினர்.”

தமிழர் திருமணம்

“காதல் கொண்ட இருவரும் இறுதியில் இல்வாழ்க்கையை எந்தவித திருமணச் சடங்கும் இன்றி துவங்குவதே பண்டைத் தமிழர்களின் மரபாக இருந்தது…”

“பெற்றோர் சம்மதிக்காவிட்டாலும், காதலியின் விருப்பத்தோடு அவளை ஒருவரும் அறியாமல் தன் ஊருக்கு அழைத்துச் சென்று இல்வாழ்வு நடத்துவான்.”

“இதைக்கண்ட பெரியவர்கள், இப்படிப்பட்ட மோசடிகள் நடக்காமல் தடுக்கும் பொருட்டு பலரறிய திருமணம் செய்யும் முறையை ஏற்படுத்தினர்…..”

“…. பண்டைத் தமிழர்கள் திருமணத்தில், தாலி இல்லை, தரம்கெட்ட வேதம் இல்லை, எரிவளர்த்தல் இல்லை, ஏய்த்துப் பிழைக்கும் பார்ப்பனர் இல்லை, அம்மி மிதித்தல் இல்லை, அருந்ததி பார்த்தல் இல்லை என்பது தெளிவாக விளங்குகிறது.”

இல்லுறை தெய்வ வழிபாடு

“இறந்துபோன குடும்பப் பெரியவர்களை, பெற்றோர்களை வழிபாடு செய்வதே இல்லுறை தெய்வ வழிபாடு ஆகும்.”

“முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல் ஆகிய நிலத்து மக்கள் முறையே மாயோன், சேயோன், வேந்தன், வருணன் ஆகிய நிலத்தலைவர்களை வணங்கினர்.

மாயோன் என்றால் திருமால் என்றும், சேயோன் என்றால் முருகன் என்றும், வேந்தன் என்றால் இந்திரன் என்றும், வருணன் என்றால் கடற்கடவுள் என்றும் பல உரையாசிரியர்கள் இதற்குப் பொருள் கூறுகின்றனர். இக்கருத்து முற்றிலும் தவறானதாகும்.

தங்கள் கருத்துக்களை வலியுறுத்திக் கூற, தமிழர் வழக்கத்தையே திரித்துக் கூறுகின்ற பெருங்குற்றத்தை அவர்கள் செய்துள்ளனர்.” (நூலில் பக்கம் 8-19)

சிந்துவெளித் தமிழன் வழிபட்டது சிவலிங்மா?

“அக்காலத்தில் மக்களைவிட விலங்குகளே அதிக அளவில் இருந்தன. மனிதர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு.

எனவே அக்கால மக்களுக்கு தங்கள் இனத்தை அபிவிருத்தி அடையச் செய்ய வேண்டிய அவசியம் அதிக அளவில் இருந்தன. மக்கள் எண்ணிக்கை அதிகம் பெருக வேண்டும் என்று அக்கால மக்கள் விரும்பினர்.”

“இக்காலத்தில், ஆயுத பூசை என்ற பெயரில் மக்கள் தங்களுக்குப் பயன்படக்கூடிய கருவிகளை வழிபடுவதைக் காணலாம்.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின்
புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

தச்சன் தனக்குப் பயன்படும் கருவிகளையும், கொல்லன் தனக்குப் பயன்படும் கருவிகளையும், அவ்வாறே ஒவ்வொருவரும் தங்கள் தங்களுக்குப் பயன்படும் கருவிகளையும் வழிபடுதல் போலவே அக்கால மக்கள் தங்களுக்கு அவசியம் என்று கருதப்பட்ட ஆண் – பெண் உறுப்புகளை வழிபட்டனர்.

இவ்வாறு ஆன் – பெண் உறுப்புகளை பொருத்தி வழிபட்ட வழக்கம் சிந்துவெளி மக்களிடம் மட்டுமின்றி, உலகின் பல்வேறு பகுதிகளிலும் அக்காலத்தில் இருந்தது.”

“வளர்பிறைக்கும் தேய்பிறைக்கும், சூரிய கிரகணத்திற்கும் சந்திர கிரகணத்திற்கும் கதை கட்டியது போல; அக்கால மக்கள் வழிபட்ட ஆண், பெண் உறுப்பு இணைந்த உருவங்களைக் கண்ட ஆரியர்கள் அதற்கேற்ப ஒரு கதையைக் கட்டினர்.”

“அதாவது, சிவனின் ஆண் உறுப்பும், பார்வதியின் பெண் உறுப்பும் இணைந்ததே சிவலிங்கம் என்று ஒரு கதை கட்டினர். ஆதாரம் லிங்கபுராணம்.” (நூலில் பக்கம் 23–26)

ஆரியர்கள் பார்ப்பனர் ஆனது எப்படி?

பார்ப்பு என்ற சொல்லிலிருந்தே பார்ப்பனர் என்ற சொல் உருவாயிற்று. பார்ப்பு என்பதற்கு இளமை என்பது அர்த்தம்.”

“இளங்குழந்தைகளை “பாப்பா” என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பார்ப்பு என்று அழைப்பது இன்றும் வழக்கத்தில் உள்ளது. பார்ப்பு என்பது பார்ப்பா என்றாகி பின்னர் பாப்பா என்று வழக்கத்தில் ஆகியது.”

“தமிழ் மன்னர்களின் அரண்மனையிலும், பெருஞ்செல்வர்களின் வீடுகளிலும் உள்ள இளைஞர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்த தமிழர்களே பார்ப்பனர் ஆவர்.

அதாவது, இளம்பருவத்தில் (பார்ப்பு பருவத்தில்) உள்ளவர்களுக்கு உதவியாளர் பணி செய்தவர்கள் என்பதால் அந்த உதவியாளர்கள் பார்ப்பனர்கள் என்று அழைக்கப்பட்டனர்.

பார்ப்பனர் என்பதற்கு இளைஞர்களின் துணைவன் என்று அர்த்தம். பார்ப்பனர் என்பது ஒரு வேலையின் (தொழிலின்) பெயரே ஆகும்.” (நூலில் பக்கம் 29, 30)

ஜாதிப் பிரிவினையை உருவாக்குதல்

“ஆரம்பத்தில் தமிழர்கள் செய்து வந்த பார்ப்புத் தொழிலை ஆரியர்கள் தங்களுடையதாக ஆக்கிக் கொண்டு பார்ப்பனர்கள் ஆனதுபோல, நாளடைவில் அந்தணப் பணியையும் மேற்கொண்டு செய்ய ஆரம்பித்தவர்கள், அந்தணர்கள் என்றாலே ஆரியர்கள்தான் என்றாகிவிட்டது.

தமிழர்கள் அந்தணர் பணி செய்யும்போது அவர்கள் சமுதாயப் பணியினை செய்தனர். ஆனால் ஆரியர்கள் அந்தணர் பணி செய்ய ஆரம்பித்தபின், அந்தணர் பணியை சமயப் பணியாக்கிவிட்டனர். கடவுள் பணி, கடவுள் கொள்கையைப் பரப்புதல், சடங்குகள் செய்தல், யாகங்கள் நடத்துதல் போன்றவை அந்தணர்களுக்கு உரியது என்று ஆக்கிவிட்டனர்.”

“அதாவது, ஆரியர்கள் செல்வாக்கடைந்த காலகட்டத்தில் தமிழ்நாட்டில் 1.தமிழர், 2.ஆரியர் என்று இரு இனப்பிரிவும், தமிழர்களிடையே 1.அரசர், 2.வணிகர், 3.வேளாளர் என்ற தொழில் பிரிவும் காணப்பட்டன.

சாதியை உருவாக்கி தமிழர்களிடையே பிரிவினையை ஏற்படுத்தத் திட்டமிட்ட ஆரியர்கள், இந்த நான்கு பிரிவையும் (1.ஆரியர், 2.அரசர், 3.வணிகர், 4.வேளாளர்) நான்கு வருணங்களாக ஆக்கத் திட்டமிட்டனர்.” (நூலில் பக்கம் 39, 40)

இவ்வாறு தமிழ்ச் சமூகத்தில் பார்ப்பனர்கள் ஆதிக்கம் செலுத்தியதை பல்வேறு சம்பவங்கள் மூலம் தக்க ஆதாரங்களுடன் சிறுசிறு தலைப்புகளாகப் பிரித்து விளக்கியுள்ளார் நூலாசிரியர். அவசியம் படிக்க வேண்டிய நூல்.

நூல் : தமிழா, நீ ஓர் இந்துவா?
ஆசிரியர் : மஞ்சை வசந்தன்

வெளியீடு : திராவிடர் கழக (இயக்க) வெளியீடு, சென்னை – 600 007.
தொலைபேசி எண்: 044 – 26618161

கிடைக்குமிடங்கள்: பெரியார் புத்தக நிலையம்
பெரியார் திடல், 84/1(50). ஈ.வெ.கி. சம்பத் சாலை,
வேப்பேரி, சென்னை – 600 007. தொ.பே. 044-26618163

பெரியார் மாளிகை, புத்தூர், திருச்சி – 620 017. தொ.பே. 0431-2771815
info@periyar.org | www.dravidianbookhouse.com

பக்கங்கள்: 64
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

 

மூணாறு நிலச்சரிவு : தமிழக தோட்டத் தொழிலாளர்களின் உயிரைக் குடித்த டாட்டாவின் இலாப வெறி !

மூணாறு – பெட்டிமுடி நிலச்சரிவு – 80 தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மரணம் ! காரணம் இயற்கைப் பேரழிவல்ல ! டாட்டாவின் லாபவெறியே !

கேரள மாநிலத்தில் பெய்துவரும் தொடர் மழையால் பெட்டிமுடி அருகே கடந்த வெள்ளிக்கிழமை (07-08-2020) அதிகாலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் அங்கு பணிபுரிந்த தமிழர்கள் மரணமடைந்துள்ளனர். இந்த உயிரிழப்பை இயற்கைப் பேரிடராகக் காட்ட கேரள அரசும், தேயிலை எஸ்டேட் உரிமையாளரான டாட்டா நிறுவனமும் முயற்சிக்கின்றன.

கடந்த ஆண்டு கடும் மழை பெய்த சமயத்திலேயே, நிலவியல் ஆய்வறிஞர்கள் மழை பொழிந்தால், அப்பகுதியில் இருந்து மக்களை பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு சென்று குடியமர்த்த வேண்டும் என்று கொடுத்த எச்சரிக்கையைப் பொருட்படுத்தாமல் அதற்கான முயற்சிகள் எதையும் செய்யாமல், இன்று 80 பேரின் உயிரிழப்பிற்குக் காரணமாகியுள்ளது டாட்டா நிர்வாகம்.

இந்த மரணத்திற்குக் காரணம் இயற்கைப் பேரிடர் அல்ல, மாறாக டாட்டாவின் இலாபவெறி. தொழிலாளர்களின் இரத்தத்தால் ஈட்டப்படும் தமது வருமானத்தில் ஒரு சிறு பகுதியைக் கூட தொழிலாளர்களைப் பாதுகாக்க செலவு செய்யாத முதலாளித்துவ இலாபவெறியே காரணம் !

படிக்க:
கேரளா : கொழஞ்சேரியை சீர்குலைத்த வெள்ளம் ! நேரடி ரிப்போர்ட்
கேரளா : பம்பை நதியோரம் அழிந்த வாழ்க்கை ! நேரடி ரிப்போர்ட்

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர், தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர் மாவட்டப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர். கேரளாவில் கோழிக்கோட்டில் நடந்த விமான விபத்து குறித்து பேசும் தேசிய மீடியாக்கள் எதுவும் மூணாறு பிரச்சினை குறித்து வாய் திறப்பதில்லை.

தொழிலாளர்களின் பேரழிவிற்குக் காரணமான டாட்டா நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுப்பதோடு அந்த எஸ்டேட்டையும் தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் வழிகாட்டுதலின் கீழ் அரசே எடுத்து நடத்த வேண்டும். தனியார் இலாபவெறிக்கு அப்பாவித் தொழிலாளர்களின் உயிர் பலியாவதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டும்.

***

“மூணாறு – பெட்டிமுடி நிலச்சரிவு தமிழக தேயிலை தோட்ட தொழிலாளர்கள் 80 பேர் மரணம் ! பெட்டிமுடி நிலச்சரிவு இயற்கைப் பேரழிவல்ல ! கார்ப்பரேட் முதலாளி டாட்டா -வின் இலாப வெறிக்காக நடத்தப்பட்ட படுகொலை !” என்ற முழக்கத்தின் கீழ் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன் வரும் 12.08.2020 அன்று காலை 10:30 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. அனைவரும் வாருங்கள்…

மத்திய அரசே ! கேரள அரசே !

  • கார்ப்பரேட் முதலாளி டாட்டாவை காப்பாற்ற முயற்சிக்காதே !
  • பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 50 இலட்சம் இழப்பீடு வழங்கு !
  • வாழ்க்கை முழுவதும் வாழ்வாதார பதுகாப்பு கொடு !

உழைக்கும் மக்களே !

  • கொலைகார கார்ப்பரேட்டுகளின் தேயிலைத் தோட்டங்களை அரசுடமையாக்க போராடுவோம் !

 

This slideshow requires JavaScript.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
திருநெல்வேலி – தூத்துக்குடி.
தொடர்புக்கு : 9385353605.

பொதுவுடைமைக் கட்சியில் வேலைகளை சோதித்தறிவது எப்படி ?

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 03

முதல் பாகம்

பொதுவுடைமைவாத செல்(Cell) களை எப்படிக் கட்டியமைப்பது?

உறுதியான நம்பிக்கையும் ஊக்கமும் உடைய பொதுவுடைமைவாதிகளான செயல்திறனுள்ள பல அமைப்பாளர்களுடன் கலந்தாலோசித்து – நாட்டின் பல்வேறு மையங்களில் உள்ள இயக்கத்தின் நிலைமையை அறிந்தவர்களைக் கலந்தாலோசித்து இந்தப் புதிய விசயங்களை அறிமுகப்படுத்துவதற்கான விவரமான அடிப்படைகளை விரிவாக வகுக்க வேண்டும் என்பதை நாம் சிபாரிசு செய்கிறோம். இதன்பின்னர், பயிற்றுவிக்கப்பட்ட அமைப்பாளர்கள் அல்லது அமைப்புக் கமிட்டிகள், களத்தில் வேலைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குழுக்களின் முதல்தரமான தலைவர்களைத் தெரிவு செய்து கொண்டு ஆரம்ப வேலைகளைத் துவக்க வேண்டும். அதன்பின்னர் கட்சி நிறுவனங்கள், வேலைக்கான குழுக்கள், கருக்குழுக்கள், தனிப்பட்ட உறுப்பினர்கள் அனைத்துக்கும் பருண்மையான, குறிப்பிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகள் முன்வைக்கப்பட வேண்டும். இவற்றை முன்வைக்கும்போது, அவை அவர்களுக்குப் பயனுள்ளவையாகவும், விரும்பி ஏற்றுக் கொள்ளக் கூடியவையாகவும் அமல்படுத்தக் கூடியவையாகவும் இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். அவசியமான இடங்களில் இக்கடமைகளை எவ்வாறு நிறைவேற்றுவது என்பதை நடைமுறையில் செய்து காட்ட வேண்டும். அப்போது தவிர்க்கப்பட வேண்டிய தவறான நடவடிக்கைகள் பற்றி அவர்களுக்கு எச்சரிக்கை செய்யவும் வேண்டும்.

பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

14. இந்த மறு ஒழுங்கமைப்பு வேலைகள் நடைமுறையில் படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும். ஆரம்பத்தில் எண்ணற்ற கருக்குழுக்கள் அல்லது வேலைக்கான குழுக்களை உள்ளூர் நிறுவனங்களில் அமைக்கக் கூடாது. தனியாகப் பிரிக்கப்பட்ட முக்கியமான தொழிற்சாலைகள் மற்றும் தொழிற்சங்கங்களில் அமைக்கப்பட்ட சில கருக்குழுக்கள் சரியாக இயங்குவதையும், கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அவசியமான அளவு அவை உறுதிப்படுத்தப்பட்டிருப்பதையும் (எடுத்துக்காட்டாக, தகவல் சேகரிப்பு, தகவல் தொடர்பு, மகளிர் இயக்கம், கிளர்ச்சித்துறை, பத்திரிகை வேலை, வேலையின்மை எதிர்ப்பு இயக்கம் போன்றவை) நிரூபணமாக்க வேண்டும். புதிய நிறுவன எந்திரம் குறிப்பிடத்தக்க நடைமுறை அனுபவம் பெறும்வரை பழைய நிறுவனக் கட்டமைப்பு அவசர கோலமாகக் கலைக்கப்படக் கூடாது. அதேவேளையில், கட்சி நிறுவன வேலைகளின் இந்த அடிப்படைக் கடமைகள் ஒவ்வொரு இடத்திலும் மீமிகு ஆற்றலுடன் நிறைவேற்றப்பட வேண்டும். இவை சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகளுக்கு மட்டுமல்லாமல், சட்டவிரோதமாக இயங்கும் கட்சிகளுக்கும் மகத்தான கடமைகளை சுமத்துகின்றன.

பாட்டாளி வர்க்கப் போராட்ட மையங்கள் அனைத்திலும் பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்சன், தொழிலாளர் குழுக்கள் பரந்துவிரிந்து வலைப்பின்னல் ஆக அமைக்கப்பட்டு இயங்கும் வரையில், கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் அன்றாட புரட்சி வேலையில் தனது பங்கைச் செய்யும் வரையில் இவ்வாறு செய்வது உறுப்பினர்களுக்கு இயல்பானதாகவும் வழமையானதாகவும் ஆகும் வரையில் இக்கடமைகளை நிறைவேற்றுவதில் கடின உழைப்பைச் செலுத்துவதிலிருந்து கட்சியானது ஓய்வாக இருக்க தன்னைத்தானே அனுமதிக்கக் கூடாது.

சோதித்தறிவது

15. இந்த அடிப்படையிலான நிறுவனக் கடமையானது கட்சித் தலைமை உறுப்புகளின் மீது ஒரு கடப்பாட்டைச் சுமத்துகின்றது. கட்சி வேலைகளின் மீது முறையான, தொடர்ச்சியான, செல்வாக்கு செலுத்தும்படியான முறையில் இடையறாது வழிகாட்டுவதும் தனது கட்டுப்பாட்டை செலுத்துவதுமே அக்கடப்பாடு. கட்சி நிறுவனங்களின் தலைமையில் இருக்கும் செயலூக்கமிக்கத் தோழர்கள் தமது பங்குக்கு பன்முக செல்வாக்கு செலுத்துவதானது இதற்குத் தேவைப்படுகிறது. பொதுவுடைமைவாத நடவடிக்கைகளுக்குப் பொறுப்பானவர்கள், தோழர்கள் பொதுவாக அன்றாட வேலைகளில் ஈடுபடுகிறார்களா என்பதைக் கண்காணிப்பது மட்டும் போதாது. சிறப்பான சூழ்நிலைகளுக்கு ஏற்றதான குறிப்பிட்ட திசைவழியில் வேலை பற்றிய நடைமுறை அறிவுடன் இத்தகைய பணிகளைச் செய்ய உதவவும், அவற்றை முறைப்படி வழிநடத்தவும் வேண்டும். அனுபவத்தின் அடிப்படையில் தமது சொந்த நடவடிக்கைகளில் இருக்கக்கூடிய தவறுகளைக் கண்டறியவும் வேலைமுறைகளை இடையறாது செழுமைப்படுத்தவும் போராட்டத்தின் நோக்கத்தை ஒருகணமும் மறவாதிருக்கவும் அவர்கள் முயற்சிக்க வேண்டும்.

 

மேலிருந்து அறிவிப்பதும் கீழிருந்து அறிக்கை பெறுவதும்
– தலைமையின் மையக் கடமை

16. நமது கட்சி வேலைகள் முழுவதும் சித்தாந்த அல்லது நடைமுறைப் போராட்டங்களாகவோ அல்லது போராட்டத்துக்கான தயாரிப்பு வேலையாகவோ இருக்கின்றன. இதுவரையில் இப்பணியில் தேர்ச்சி என்பது மிகவும் குறைபாடுள்ளதாகவே இருந்து வருகிறது. கட்சி நடவடிக்கைகள் அரிதாகவே இருப்பது என்பது மிக முக்கிய துறைகளில் கூட காணப்படுகின்றன. உதாரணமாக, இரகசிய உளவாளிகளை எதிர்ப்பது என்ற விசயத்தில் சட்டபூர்வமாக இயங்கும் கட்சிகள் மிகச் சிறிய அளவு பணிகளையே செய்துள்ளன. நமது கட்சித் தோழர்களுக்கு ஒரு விதி என்ற முறையில் செய்ய வேண்டிய அறிவுறுத்தும் (Instruct) வேலை எப்போதாவது செய்யப்படுகிறது – அல்லது இரண்டாம் பட்சமாக செய்யப்படுவதாக இருக்கிறது. இது எந்த அளவு மேலோட்டமாகச் செய்யப்படுகிறது என்றால், கட்சியின் தீர்மானங்களும் ஏன் கட்சித் திட்டமும் பொதுவுடைமை அகிலத்தின் தீர்மானங்களும்கூட மிகப் பெருமளவில், மிகப் பரவலான பிரிவினரான கட்சி உறுப்பினர்களுக்குத் தெரியாமலேயே இருக்கின்றன. மிக உயர்ந்த அளவில் தேர்ச்சி பெறுவதற்காக கட்சி நிறுவனக் கட்டமைவு முழுவதிலும் கட்சியின் செயல்பாட்டுக் கமிட்டிகள் அனைத்திலும் முறையாகவும், இடையறாதும் அறிவுறுத்தும் வேலை செய்யப்பட்டாக வேண்டும்.

17. (கீழிருந்து) அறிக்கைகள் சமர்ப்பிப்பது என்பதும் பொதுவுடைமைவாத நடவடிக்கையில் கடமைகளைச் சேர்ந்ததாகும். இது, கட்சியின் அனைத்து நிறுவனங்கள் மற்றும் உறுப்புகளின், இதுபோலவே ஒவ்வொரு தனிப்பட்ட உறுப்பினரின் கடமையாகும். குறுகிய காலத்துக்கான பொது அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். கட்சியின் விசேடமான கமிட்டிகளின் வேலைகளைப் பற்றி விசேடமான அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். முறையாகவும் தொடர்ச்சியாகவும் அறிக்கை சமர்ப்பிப்பது என்பதை எந்த அளவு அவசியமானதாக செய்ய வேண்டும் என்றால், இது ஒரு நிரந்தரமாக நிறுவப்பட்ட வழிமுறை என்ற அளவுக்கு, பொதுவுடைமை இயக்கத்தின் மிகச் சிறந்த பாரம்பரியம் என்ற அளவுக்கு செய்ய வேண்டும்.

ஒவ்வொரு நிறுவனமும் தனது மேல்மட்ட கமிட்டிக்கு வேலை அறிக்கை சமர்ப்பிப்பது

18. ஒவ்வொரு கட்சியும் தனது காலாண்டு வேலை அறிக்கையை பொதுவுடைமை அகிலத்தின் தலைமை உறுப்புக்குத் தருதல் வேண்டும். கட்சி நிறுவனம் ஒவ்வொன்றும் தனக்கு அடுத்த மேல் கமிட்டிக்கு (எடுத்துக்காட்டாக, பகுதி அடிப்படையிலான ஒவ்வொரு கிளையும் தனக்கு மேலான கட்சிக் கமிட்டிக்கு) மாதாந்திர வேலை அறிக்கையை அளிக்க வேண்டும்.

ஒவ்வொரு கட்சிக் கருக்குழுவும், பிராக்சனும், தொழிலாளர் குழுவும் எந்தக் கட்சி உறுப்பின் பொறுப்பில் இருக்கின்றனவோ, அவற்றுக்குத் தமது அறிக்கையை அனுப்புதல் வேண்டும். தனி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தாம் அங்கம் வகிக்கும் கருக்குழு அல்லது தொழிலாளர் குழுவுக்கு (முறையே அவற்றின் தலைவருக்கு) அறிக்கை அளிக்க வேண்டும். இதுபோலவே குறிப்பிட்ட விசேட பொறுப்பை நிறைவேற்றியது பற்றி எந்தக் கட்சி உறுப்பு அந்த வேலையை ஒப்படைத்ததோ, அதற்கு அறிக்கை அளிக்க வேண்டும்.

படிக்க:
முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை!
♦ காஷ்மீர் பிரிவு 370 ரத்து: ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

இந்த அறிக்கையானது எப்போது சாத்தியப்பட்ட அளவுக்கு முதல் சந்தர்ப்பத்திலேயே அளிக்கப்பட வேண்டும். வேலையைச் செய்யுமாறு பணித்த கட்சி உறுப்பு அல்லது தோழர் எழுத்து பூர்வமான அறிக்கை வேண்டுமெனக் கோரினால் ஒழிய, அறிக்கை வாய் மூலமாகவே இருக்க வேண்டும். அறிக்கைகள் குறிப்பாகவும் விசயத்தை விட்டு விலகாமலும் இருக்க வேண்டும். வெளியிடப்படக் கூடாத அறிக்கைகளைப் பத்திரமாக வைத்திருக்கவும், முக்கியமான அறிக்கைகளைக் காலதாமதமின்றி சம்பந்தப்பட்ட கட்சி அங்கங்களுக்கு அனுப்புவதும் அறிக்கைகளைப் பெறுபவரின் பொறுப்பாகும்.

வேலை அறிக்கை எவ்வாறு இருக்க வேண்டும்?

19. இந்த அறிக்கைகள் அனைத்தும் இயல்பாகவே, அறிக்கை அளிப்பவரின் வேலைகளைப் பற்றிய விவரங்களுடன் வரம்பிட்டுக் கொள்பவையாக இருக்க வேண்டும். நமது வேலையின்போது கவனத்துக்கு வந்த, நமது எதிர்காலப் போராட்டத்துக்கு குறிப்பிடத்தக்க அளவு முக்கியத்துவமுடைய விசேட சூழ்நிலைகள், நமது எதிர்கால வேலைகளில் மாற்றம் அல்லது முன்னேற்றத்தைக் கொண்டுவரத்தக்கதான குறிப்பான பரிசீலனைகள், வேலையை நிறைவேற்றும்போது உணரப்பட்ட முன்னேற்றத்துக்கான ஆலோசனைகள் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இவை அனைத்தும் பற்றிய தகவல்களை உள்ளடக்கியதாக அறிக்கைகள் இருக்க வேண்டும்.

பொதுவுடைமைவாத கருக்குழுக்கள், பிராக்சன், தொழிலாளர் குழுக்கள் அனைத்திலும் எல்லா வேலை அறிக்கைகளும் – அவை பெறுகின்றவையும், அதுபோலவே அவை அனுப்புபவையும் – முற்று முழுதாக விவாதிக்கப்பட வேண்டும். இத்தகைய விவாதங்களை நடத்துவது ஒரு முறையான பழக்கமாகவே மேற்கொள்ளப்பட வேண்டும்.

பாட்டாளி வர்க்கத்துக்கு எதிரான நிறுவனங்களின் குறிப்பாக குட்டி முதலாளித்துவ தொழிலாஈளர் நிறுவனங்களின் அதிலும் முக்கியமாக சோசலிஸ்டு கட்சிகளின் நடவடிக்கைகள் பற்றி கண்காணிப்பதையும், அவை பற்றி அறிக்கை செய்வதையும் கருக்குழுக்களிலும் தொழிலாளர் குழுக்களிலும் உள்ள தனிப்பட்ட கட்சி உறுப்பினர்களும் அல்லது குழுவாக உள்ள கட்சி உறுப்பினர்களும் கவனமாகச் செய்ய வேண்டும்.

(தொடரும்)

முந்தைய பாகம் ******************************************* அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

முருகன் – பாஜக – தமிழ் இந்து | ஒரு நாடகக் காதல் கதை !

2

ருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் கந்த சஷ்டி கவசம் குறித்து விமர்சித்து வெளியிட்ட காணொலியைப் பயன்படுத்தி அந்த சேனலையே இந்துத்துவக் கும்பல் முடக்கியது நினைவிருக்கலாம். குறிப்பாக இது போலீசின் உதவியுடன் கன கச்சிதமாக நிறைவேற்றப்பட்டது.

தமிழர் பண்பாட்டின் மீது தாங்கள் தனிக்காதல் கொண்டவர்கள் என்பதாகக் காட்டிக் கொள்ள இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டது இந்துத்துவக் கும்பல். ’தமிழ்க்’ கடவுள் முருகனை ‘திராவிட’ நாத்திகவாதிகள் அவமதித்துவிட்டதாகக் கூறி ஒரு கொந்தளிப்பைக் காட்ட சங்க பரிவாரக் கூட்டம் எத்தனித்தது.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பாஜக-வின் தமிழகத் தலைவர் முருகன், திடீரென ஒரு அறைகூவல் விடுத்தார். அதாவது ஆகஸ்ட் 9-ம் தேதி ஞாயிறு அன்று மாலை 6.01 மணிக்கு அனைவரும் அவரவர்களது வீட்டில் இருந்து கொண்டே வேல் அல்லது முருகன் (கடவுள்) படத்தை வைத்துப் பூஜை செய்ய வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

கொரோனா பெருந்தொற்றில் மக்களின் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க ஒரு நடவடிக்கையோ, போராட்டமோ நடத்தாத பாஜக மற்றும் சங்க பரிவாரக் கும்பலின் இந்த ‘அறைகூவல்’ மக்களுக்கு ஆத்திரத்தை மட்டுமே ஏற்படுத்தியிருக்க முடியும். ஆனால் தங்களது ‘கந்த சஷ்டி இயக்கம்’ வெற்றி பெற்றதாக கூறிக் கொண்டது பாஜக. அதற்குச் சான்றாக பாஜக-வின் தலைவர்களும், அதிமுக தலைவர்களும் தாங்கள் வேலோடும் முருகன் படத்தோடும் நிற்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

படிக்க :
♦ புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் !
♦ பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !

பண்டைய தமிழகத்தின் குறிஞ்சி நிலத் தலைவனான முருகனை வழிபடும் போக்கை சுவீகரித்துக் கொண்ட பார்ப்பனீயம், முருகனுக்கு ஒரு புதிய கதையைக் கட்டி ஸ்கந்தன் என்றும் சுப்ரமணியன் என்றும் பெயரிட்டு முருக வழிபாட்டை பார்ப்பனமயமாக்கிக் கொண்டது. முருகனின் துணைவியாக அறியப்பட்ட வள்ளியை ஓரம்கட்ட தெய்வானையைக் கொண்டுவந்து இறக்கிப் புராணப் புழுகுகளைக் கட்டிவிட்டது தனிக் கதை !

மக்களின் மத நம்பிக்கையை பார்ப்பனியமயமாக்க முருகனை சுவீகரித்துக் கொண்டாலும் பார்ப்பனர்கள் வீட்டில், விஷ்ணுவின் அவதாரங்களுக்கும், சிவனுக்கும், பிள்ளையாருக்கும் தான் முதல் மரியாதையே ஒழிய முருகனுக்கு என்றும் இருந்ததில்லை. பார்ப்பன சமூகத்தைச் சேர்ந்த பாஜக, அதிமுக தலைவர்கள் நேற்று (09-08-2020) வெளியிட்டுள்ள முருகன் வழிபாட்டுப் புகைப்படங்களே அதற்குச் சான்று!

மேலே உள்ள புகைப்படங்களில் பாஜகவின்  எஸ்.வி. சேகர், எச். ராஜா ஆகியோரின் பூஜையறையைப் பாருங்கள். கடவுளர்களுக்கே வர்ணாசிரம தர்மப்படிதான் உரிய இடம் வழங்கப்பட்டிருக்கும். குறிப்பாக எச்.ராஜாவின் பூஜை அறையின் ‘மேல்’ தட்டில், “மகா பெரியவா”, திருப்பதி வெங்கடாசலபதி, லெட்சுமி, பிள்ளையார், கிருஷ்ணர், நடராஜர் உள்ளிட்ட கடவுளர் படங்களும், ‘கீழ்’ தட்டில் மாரியம்மன், பராசக்தி உள்ளிட்ட கடவுளர்களும், தரையில், கட்சியின் செயல்திட்டத்துக்காக நிறுத்திவைக்கப்பட்ட வேலும் இடம் பெற்றிருக்கிறது. கடவுளர்களேயானாலும் பார்ப்பனியத்தின் படிநிலைக்கு உட்பட்டவர்கள்தான்.

‘சவுண்டு ஸ்பெசலிஸ்ட்’ திருப்பதி நாராயணன், அதிமுகவின் மைத்ரேயன் ‘ஐயங்கார்’ உள்ளிட்ட அனைவரின் வீட்டு பூஜையறையிலும் முருகனின் படம் எதுவும் இல்லை என்பதையும் அவசரத்துக்காக காலண்டரில் இருந்து கிழித்துவந்த படமும், அவசரமாக ஆர்டர் செய்யப்பட்ட வேலும் தான் அதற்கு சான்று.

அவசர அவசரமாக தயாரிக்கப்பட்ட செட்டப்புகளில், அவசர அவசரமாக வாங்கப்பட்ட போட்டோக்களைக் கொண்டே பூஜைகள் செய்யப்படுகின்றன. எச்.ராஜா, எஸ்.வி.சேகர் வீட்டுப் பூஜையறையில் மகா பெரியவாளின் அருகில் ஒரு சிலையாகவோ, படமாகவோ இடம்பெறக் கூட முருகனுக்கு பாக்கியதையில்லை. இதுதான் முருகப் பெருமான் மீதான பாஜகவினரின் ‘திடீர்க் காதலின்’ இலட்சணம். நியாயப்படி அவர்களின் ‘பாஷையில்’ சொல்வதானால் இதை நாடகக் காதல் என்றுதானே சொல்லமுடியும்.  ஆனால் ஒன்று ! பூஜை அறையில் முருகனைச் சேர்த்துக் கொள்ள வேண்டிய  ‘அவல நிலைக்கு’  பாஜக பார்ப்பனர்களைத் தள்ளிய பெருமை தமிழ்நாட்டையே சேரும் !

தமிழகத்தில் மக்களை மதரீதியாக தங்கள் பக்கம் அணி சேர்க்க மீண்டும் மீண்டும் முயற்சித்து வரும் பாஜக-விற்கு தமிழக ஊடகங்களும் ஆதரவாக இருந்து வருகின்றன. இன்றைய ‘தமிழ் இந்து’ நாளிதழில், இது குறித்து அதற்கே உரிய இந்துத்துவ நரித்தனத்தோடு செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

”கந்த சஷ்டி கவசத்தை பெருமைப் படுத்த வீடுதோறும் கந்தவேல் பூஜை” என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது. அதில் யூடியூப் சேனல் ஒன்று தமிழ் கடவுள் முருகனையும், கந்த சஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசியதால் தமிழகத்தில் உள்ள முருக பக்தர்கள், காவடிக் குழுக்கள், பாதயாத்திரைக் குழுக்கள் ஆகியோர் சார்பில் தான் 9-ம் தேதி மாலை 6 மணிக்கு கந்த சஷ்டிக் கவசம்  படிக்குமாறு அறைகூவல் விடுக்கப்பட்டதாம். பக்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க பலரும் இந்த பூஜையை நடத்தினராம். இந்த செய்தியோடு முருகன் படத்தைக் கும்பிடும் ஒரு சிறுவனின் படத்தையும் வெளியிட்டு, வாசகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதாவது சாதாரண மக்கள் இதைத் தங்களுக்கான பிரச்சினையாக கையிலெடுத்துக் கொண்டு தாங்களே முன் வந்து அறைகூவல் விடுத்து கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலுக்கு எதிராகக் குரல் கொடுத்திருப்பதாக ஒரு தோற்றத்தை ஏற்படுத்துவதற்காகவே இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மற்றொரு செய்தியில், பாஜக அமைப்பினருடன், ஆர்.எஸ்.எஸ்., விசுவ இந்து பரிஷத், இந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகளின் நிர்வாகிகள் இந்த பூஜையை நடத்தியது குறித்து விலாவாரியாக ஒரு செய்தி வெளியிட்டுள்ளது. ‘தமிழ் இந்து’ நாளிதழைப் பொறுத்தவரையில் ஆர்.எஸ்.எஸ்.-ன் அதிகாரப் பூர்வ நாளிதழாக அறிவிக்கப்படாதது ஒன்றுதான் பாக்கி. அந்த அளவிற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட சங்க பரிவாரக் கும்பலின் செயல்திட்டத்தின் அங்கமாக மாறியிருக்கிறது.

கொரோனாவை விடக் கொடூரமான இந்தக் கிருமிகளை அடையாளம் கண்டு விரட்டியடிப்பதுதான் காலத்தின் அவசியத் தேவையாக இருக்கிறது.

நந்தன்

பொதுவுடைமைக் கட்சி உறுப்பினரின் கடமைகள் | லெனின்

0

கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | பாகம் 02

முதல் பாகம்

3. பொதுவுடைமைவாத நடவடிக்கையின் கடமைகள் பற்றி

கட்சி உறுப்பினரின் கடமை

8. புரட்சிகர மார்க்சிய பயிற்சிப் பள்ளியாக பொதுவுடைமைக் கட்சி விளங்க வேண்டும். கட்சி நடவடிக்கைகளில் அன்றாட பொது வேலைகள் வாயிலாக கட்சி நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் இடையிலும், கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலும் உயிரோட்டமுள்ள உறவுகள் நிறுவப்படுகின்றன.

கட்சியின் அன்றாட நடவடிக்கைகளில் கட்சி உறுப்பினர்களில் ஆகப் பெரும்பான்மையானவர்கள் பங்கேற்பது சட்டபூர்வ பொதுவுடைமைக் கட்சிகளில் இன்றும் கூட குறைவாக உள்ளது. இது இந்தக் கட்சிகளின் தலையாயக் குறைபாடாகும். அவற்றின் முன்னேற்றத்தில் தொடர்ச்சியான உத்திரவாதமின்மைக்கு அடித்தளமாக இக்குறைபாடு விளங்குகிறது.

9. பொதுவுடைமைவாதத்துக்கு மாறும் ஆரம்பக் கட்டங்களில் ஒவ்வொரு தொழிலாளர் கட்சியும் பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருப்பது, தனது பிரச்சாரத்தில் பழைய கோட்பாட்டுக்குப் பதில் பொதுவுடைமைவாத போதனைகளைக் கடைபிடிப்பது, எதிர் முகாமைச் சேர்ந்த நிர்வாகிகளிடமிருந்து பொதுவுடைமைவாத நிர்வாகிகளுக்கு பொறுப்புகளை மாற்றுவது ஆகியவற்றுடன் மனநிறைவு அடையக் கூடிய அபாயம் உள்ளது. பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக் கொள்வது என்பது பொதுவுடைமைவாதியாவதற்கான விருப்பதைக் குறிப்பது மட்டுமேயாகும். பொதுவுடைமைவாத நடவடிக்கை இல்லாமலிருந்தால், பரந்துபட்ட கட்சி உறுப்பினர்கள் இன்னமும் செயலின்றி இருந்தால், பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை ஏற்றுக்கொண்ட உறுதிமொழியில் கட்சியானது ஒரு சிறு பகுதியைக் கூட நிறைவு செய்யவில்லை என்றே ஆகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரும் கட்சியின் தொடர்ச்சியான அன்றாட நடவடிக்கைகளில் பங்கேற்பது என்பதே பொதுவுடைமைவாத வேலைத் திட்டத்தை நேர்மையாக அமல்படுத்துவதன் முதல் நிபந்தனை ஆகும்.

பொதுவுடைமைவாத நிறுவனக் கலை எதில் அடங்கியிருக்கிறது என்றால், பாட்டாளி வர்க்கம் போராட்டத்திற்காக ஒவ்வொருவரையும் பயன்படுத்திக் கொள்ளும் திறமையில் அடங்கியிருக்கிறது. கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் கட்சி வேலையைப் பகிர்ந்தளிப்பதிலும், அவர்கள் வாயிலாக புரட்சி இயக்கத்தின்பால் மென்மேலும் பரந்துபட்ட பாட்டாளி வர்க்கத்தினரை ஈர்ப்பதிலும் இருக்கிறது. மேலும், பொதுவுடைமைக் கட்சியானது, இயக்கம் முழுவதன் திசைவழியைத் தனது பிடியில் வைத்திருக்க வேண்டும். இதைத் தனது பலத்தைக் கொண்டல்ல, தனது அதிகாரத்துவத்தின் மூலம் (அளவற்ற) சக்தியின் மூலம், மகத்தான அனுபவத்தின் மூலம், பன்முக அறிவாற்றலின் மூலம், திறன்களின் மூலம் செய்தல் வேண்டும்.

10. பொதுவுடைமைக் கட்சியானது, உண்மையிலேயே செயல் திறனுள்ளவர்களை மட்டுமே கொண்டிருக்க முயல வேண்டும். கட்சியின் தேவைக்கு உட்பட்டு தனது அணிவரிசையிலுள்ள கட்சி உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தமது முழு பலத்தையும் காலத்தையும் குறிப்பிட்ட சூழ்நிலைகளின் கீழ் அவர்களால் முடிந்தவரை கட்சி வேலைகளுக்காக ஒதுக்கி தன்னையே அர்ப்பணிக்க வேண்டும். தனது மிகச் சிறந்த சக்திகளை கட்சிப் பணிகளுக்காக ஒதுக்க வேண்டும் எனக் கோர வேண்டும்.

உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும்..

பொதுவுடைமைக் கட்சியில் உறுப்பினராக இருப்பது என்பது இயல்பாகவே பொதுவுடைமைவாத நம்பிக்கைகளுடன் சேர்ந்து முதலில் தேர்வுநிலை உறுப்பினராகவும், பின்னர் உறுப்பினராகவும் அதிகார பூர்வமாகப் பதிவு செய்வது, நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை முறையாகச் செலுத்துவது, கட்சிப் பத்திரிகைகளுக்குச் சந்தா செலுத்துவது போன்றவற்றையும் கொண்டதாகும். ஆனால் மிகமிக முக்கியமானது கட்சி உறுப்பினர் ஒவ்வொருவரும் கட்சியின் அன்றாட வேலைகளில் ஈடுபடுவதாகும்.

ஒவ்வொருவரும் ஒரு கட்சியின் ஒரு குழுவில் இருப்பது

11. கட்சி வேலைகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக ஒரு விதி என்ற முறையில் ஒவ்வொரு உறுப்பினரும் ஒரு குழு, கமிட்டி, கமிஷன், பெரிய குழு, பிராக்சன் அல்லது கருக்குழு போன்று செயல்படும் குழு ஒன்றில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த வழியில் மட்டுமே கட்சி வேலைகளைச் சரியாகப் பகிர்ந்தளிக்க முடியும். வழிகாட்ட முடியும். நிறைவேற்ற முடியும்.

உள்ளூர் அமைப்பின் கூட்டத்தில் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்பதைக் கூறவே வேண்டியதில்லை. சட்டபூர்வ சூழ்நிலைகள் நிலவும்போது, குறிப்பிட்ட காலக்கிரமத்தில் நடைபெறும் இக் கூட்டங்களுக்கு பதிலாக, உள்ளூர் பிரதிநிதிகளின் கூட்டத்தை நடத்துவது உசிதமானதல்ல. அனைத்து உறுப்பினர்களும் இந்தக் கூட்டங்களில் முறையாகக் கலந்து கொள்ள வேண்டும். ஆனால் இது மட்டும் போதுமானதல்ல. இந்தக் கூட்டங்களுக்கான தயாரிப்பு என்பதே சிறு குழுக்களாக வேலையைப் பிரித்து செய்வது அல்லது குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய சில தோழர்கள் ஒதுக்கப்படுவது என்பதை முன் அனுமானமாகக் கொண்டிருக்கிறது. இவற்றைச் சிறப்பாகப் பயன்படுத்தியே தொழிலாளர்களின் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் மக்கள்திரள் நடவடிக்கைகளுக்கான தயாரிப்புகள் செய்யப்படுகின்றன. இந்நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பலதரப்பட்ட கடமைகளை சிறு குழுக்கள் மட்டுமே எச்சரிக்கையாக ஆய்வதும், ஆழமாக நடைமுறைப் படுத்துவதும் இயலும். உறுப்பினர்கள் அனைவரும் இத்தகைய பல்வேறு சிறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு அன்றாட வேலைகளை இடையறாது செய்யாவிடில், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்கப் போராட்டத்தில் பங்கேற்கும் எத்தகைய தீவிர முயற்சிகளும் இப்போராட்டங்களில் செல்வாக்கு செலுத்தும் முயற்சிகளும் தோல்வியுறும். இவ்வாறே ஒன்றுபட்ட திறன்மிக்க பொதுவுடைமைக் கட்சியில் பாட்டாளி வர்க்கத்தின் உயிரோட்டமுள்ள புரட்சி சக்திகள் அனைத்தையும் கொண்டுவந்து கெட்டிப்படுத்துவது இயலாது.

ஆலை செல்களின் (Factory Cells) முக்கியத்துவம்

12. கட்சி நடவடிக்கைகளின் பல்வேறு கிளைகளில் அன்றாட வேலைகளைச் செய்ய பொதுவுடைமைக் கருக்குழுக்களை அமைக்க வேண்டும். குறிப்பிட்ட நேரத்தில் கிளர்ச்சிகளை நடத்துதல், கட்சி ஆய்வு, செய்திப் பத்திரிகை வேலை, கட்சி வெளியீடுகளை விநியோகித்தல், தகவல் சேகரிப்பு, தொடர்ச்சியான பணிகள் – இன்னும் இதுபோன்றவற்றைக் கருக்குழுக்கள் செய்யும்.

பொதுவுடைமைக் கட்சிக்கு ஒருசில உறுப்பினர்கள் அல்லது தேர்வுநிலை உறுப்பினர்கள் உள்ள இடங்களில் எல்லாம் தொழிற்சாலை மற்றும் பணிமனைகளில் உள்ள தொழிற்சங்கங்களில், பாட்டாளி வர்க்க அமைப்புகளில், இராணுவப் பிரிவுகளில், அன்றாட கட்சி வேலைகளைச் செய்வதற்கான சிறு குழுக்களே பொதுவுடைமைவாதக் கருக்குழுக்களாகும். ஒரே தொழிற்சாலை அல்லது தொழிற்சங்கத்தில் பெரும் எண்ணிக்கையில் கட்சி உறுப்பினர்கள் இருந்தால், கருக்குழுவானது பிராக்சனாக மாற்றப்பட்டு, அது சிறு குழுக்களின் வேலைகளை வழிநடத்தும்.

படிக்க:
காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை
♦ நீதிமன்றத்தின் ஆணவப் படுகொலை !

பரந்த தன்மையுடைய எதிர்த்தரப்பு பிராக்சனை அமைப்பதோ, அல்லது ஏற்கெனவே உள்ளதில் பங்கேற்பதோ அவசியமாகும்போது சிறப்புக் கருக்குழுவின் வாயிலாக தொழிற்சங்கத் தலைமையைக் கைப்பற்ற அல்லது தலைமை ஏற்க பொதுவுடைமையாளர்கள் முயற்சிக்க வேண்டும். தனது சொந்த சுற்றுச்சூழலைப் பொருத்து கருக்குழு வெளிப்படையாக வருவதா, அல்லது பொதுமக்கள் மத்தியில் கூட வெளிப்படையாக வருவதா என்பது விசேட சூழ்நிலைகளைக் கணக்கிலெடுத்து அவ்வாறு வருவதன் அபாயங்கள் மற்றும் சாதகங்களை ஆழமாகப் பரிசீலிப்பதைச் சார்ந்திருக்கும்.

13. பொதுக் கடமையான வேலைகளைக் கட்சியில் அறிமுகப்படுத்துவதும், சிறு வேலைக் குழுக்களைக் கட்டியமைப்பதும் மக்கள்திரள் பொதுவுடைமைக் கட்சிகளுக்கு (மிகக் குறிப்பாக) கடினமான பணியாகும். இதை எடுத்த எடுப்பிலேயே சாதித்துவிட முடியாது. இதற்கு சலிப்பற்ற விடாமுயற்சி, முதிர்ச்சி பெற்ற அறிவு, மகத்தான ஆற்றல் ஆகியவை வேண்டும்.

இந்தப் புதிய வடிவிலான நிறுவனத்தைத் துவக்கத்திலிருந்தே எச்சரிக்கையுடனும் முதிர்ச்சியான அறிவுடனும் கட்டியமைப்பது குறிப்பான முக்கியத்துவம் வாய்ந்ததாகும். கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் பெயரளவிலான திட்டத்தின்படி கருக்குழுக்களாகவும், சிறு சிறு குழுக்களாகவும் பிரித்து உடனடியாகக் கட்சியின் அன்றாட பொது வேலைகளைச் செய்யுமாறு அவற்றை அறைகூவி அழைப்பது என்பது மிகச் சுலபமான வேலையாகும். ஆனால், இத்தகைய தொடக்கம் என்பது தொடங்காமல் இருப்பதைவிட மோசமானது. இந்த மகத்தான கண்டுபிடிப்புகளின்பால் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் மன நிறைவின்மையும் வெறுப்பையுமே இது தூண்டிவிடும்.

(தொடரும்)

முந்தைய பாகம்*****************************************அடுத்த பாகம்

நூல் தேவைக்கு :

கீழைக்காற்று பதிப்பகம்,
16, அருமலை சாவடி,
கண்டோன்மென்ட் பல்லாவரம்,
சென்னை – 600043.
அலைபேசி : 9444 88 1066
மின்னஞ்சல் : keezhaikkatru2019@gmail.com
முகநூலில் பின் தொடர : கீழைக்காற்று

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

தருமபுரி : புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து பு.மா.இ.மு. ஆர்ப்பாட்டம் !

0

ன்பார்ந்த மாணவர்களே, பெற்றோர்களே!

பாசிச மோடி அரசு 2014-ல் ஆட்சியைக் கைப்பற்றியதிலிருந்து புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த துடித்துக்கொண்டிருந்தது. இந்தக் கல்விக் கொள்கையை எதிர்த்து நாடு முழுவதும் கடுமையான போராட்டங்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது கொரோனா சூழலில் மக்கள் வாழ்விழந்து செத்துக் கொண்டிருக்கும் போது பள்ளி கல்லூரிகள் எப்போது திறக்கும் என்று தெரியாத இந்த நிலையில் பெரும்பான்மை மாணவர்களின் கல்வியை பறித்து மாணவர்களை கையறு நிலைக்குத் தள்ளும் வகையில் புதிய கல்விக் கொள்கையை மீண்டும் கொண்டு வந்திருக்கிறது மத்திய பிஜேபி அரசு.

மூன்று வயதில் இருந்தே மும்மொழிக் கல்வியை படிக்க வேண்டும் என்று செத்த மொழியான சமஸ்கிருதத்திற்கு உயிர் கொடுக்கின்றனர். ஏழை மாணவர்களின் அடிப்படை கல்வி கற்கும் உரிமையை பறிக்க 3, 5,8 வகுப்புகளுக்கும் பொதுத்தேர்வு வைத்து, “அவனவன் அப்பன் தொழிலை செய்யட்டும்” என்ற ராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தை மீண்டும் நவீன வடிவத்தில் கொண்டு வந்துள்ளது மோடி அரசு .

இனி அனைத்து கல்வி நிறுவனங்களும் தனியார் முதலாளிகளின் கையில் ஒப்படைக்கப்பட்டு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்படும். இவையின்றி உயர்கல்விக்கு செல்ல அனைத்து படிப்புகளுக்கும் (கலைக் கல்லூரிகள் உட்பட) நீட் போன்ற அகில இந்திய அளவில் பொதுத் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்படும். அதே போல நாடு முழுவதும் ஒரே மாதிரி பாடமுறையின் மூலம் பல்தேசிய இனங்களின் கலை இலக்கிய பண்பாடுகளையும் ஒழிக்க பார்க்கிறது மோடி அரசு.

மேலும் கல்வியின் மீது மாநில அரசின் உரிமை பறிக்கப்படுகிறது. சமூக நீதியும் இட ஒதுக்கீடும் அடியோடு குழி தோண்டிப் புதைக்கப்படுகிறது. இந்த தேசிய கல்விக்கொள்கையை எதிர்த்து வரும் 12-08-20 அன்று காலை 11 மணிக்கு தருமபுரி மாவட்டம் பென்னாகரம் பேருந்து நிலையம் அருகில் எமது புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.

இதில் பல ஜனநாயக அமைப்புகள், கட்சிகளின் தலைவர்கள் கலந்துகொண்டு உரையாற்றவிருக்கின்றனர். நமது கல்வி உரிமை மறுக்கப்படுவதற்கு எதிராகப் போராடுவதற்கு மாணவர்கள் பெற்றோர்கள் என அனைவரையும் இந்த ஆர்ப்பட்டத்தில் பங்கெடுத்துக் கொள்ளுமாறு உரிமையுடன் அழைக்கிறது புரட்சிகர மாணவர் –  இளைஞர் முன்னணி.

நம் அடுத்த தலைமுறையின் கல்வியைக் காக்க வீதியில் களமிறங்குவோம் !

இவண்:
பு.மா.இ.மு.
தருமபுரி

புராதன ஆரியரும் திராவிடரும், இந்தியப் பண்பாடும் !

0
நா. வானமாமலை

தமிழர் வரலாறும் பண்பாடும் (ஆராய்ச்சிக் கட்டுரைகள்) | நா. வானமாமலை – பாகம் – 06

முதல் பாகம்

புராதன ஆரியரும் திராவிடரும்

(டாக்டர் ஆனந்த குமாரசுவாமி 1877-ல் பிறந்தவர். அவர் தந்தையார் யாழ்ப்பாணத் தமிழர். தாயார் ஆங்கிலப் பெண்மணி. இங்கிலாந்தில் நிலவியலில் (geology) டாக்டர் பட்டம் பெற்று இலங்கை திரும்பினார். இந்திய இலங்கைக் கலைகளின் ஆராய்ச்சியில் ஈடுபட்டார். கலை வரலாறு, பண்பாட்டு வரலாறு, தத்துவ வரலாறு ஆகிய துறைகளில் உலகிலேயே சிறந்த ஆராய்ச்சியாளருள் ஒருவராகத் திகழ்ந்தார். சுமார் 100 நூல்களுக்கு மேல் எழுதியுள்ளார். 1947-ம் ஆண்டில் உயிர் நீத்தார். அவர் எழுதிய நூல்களுள், இந்திய இந்தோனேசியக் கலைகளின் வரலாறு தலைசிறந்தது. அதைப் போன்றதோர் சிறந்த நூல் வரலாற்றுத் துறையில் இதுவரை எழுதப்பட்டதில்லை. இந்நூலில் ஆரிய திராவிடப் பண்பாடுகளைப் பற்றியும், அவற்றின் கலப்பினால் தோன்றிய இந்தியப் பண்பாட்டைப் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். அவரது கருத்துக்களைத் தொகுத்து இக்கட்டுரையில் விளக்க முயன்றுள்ளேன். – நா. வா.)

டாக்டர் ஆனந்த குமாரசுவாமி.

கிறிஸ்து சகாப்தத்துக்கு 2000 ஆண்டுகளுக்கு முன்னரே திராவிடர்கள் இந்தியா முழுவதிலும் சிறு சிறு குடியினராகப் பரவியிருந்தனர். இவர்கள் மேற்கிலிருந்து வந்தனர் என்று சில ஆராய்ச்சியாளர் கருதுவர். ஆனால் புதிய கற்காலம் தொட்டு இந்நாட்டிலேயே பண்பாட்டு வளர்ச்சி பெற்றவர்கள் திராவிடர் என்பதே ஆனந்தரின் கருத்து. ஆரியர்கள் ‘தாஸ்யூக்கள்’ அல்லது ‘தாஸர்’ என்ற வகுப்பாரோடு ஓயாமல் போராடி வந்தார்களென்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. அவர்களது நகரங்கள் ஆரியர்களால் புரங்கள் என்று அழைக்கப்பட்டன. அவர்கள் ஆரிய இனத்தவர் அல்ல என்பது ‘அனாஸர்’ (மூக்கற்றவர்கள்) என்று ஆரியர் அவர்களுக்கு இட்ட பெயரிலிருந்து தெரிகிறது.

இன்றைய இந்தியப் பண்பாட்டில் திராவிட அம்சங்களை நாம் சுட்டிக்காட்டலாம். லிங்க வணக்கம், சக்தி வணக்கம், நாகர், யக்ஷி வணக்கம் இன்னும் இயற்கைத் தேவதை வணக்கம் முதலிய திராவிடப் பண்பாட்டிலிருந்து தோன்றியவை பல கலைகளிலும் அவர்களது காணிக்கையைக் காணலாம். ஆரியர்கள் வட நாட்டார், திராவிடர் தென்னாட்டார்; ஆரியர் திராவிடரை வெற்றி கொண்டனர். இவ்வெற்றி முடியரசு அமைப்பு, இன ஆட்சி முறையின் மீது கொண்ட வெற்றி என்று வரலாற்று ஆசிரியர் கூறுவர். ஆனால் வெற்றி பெற்றவர்களது பண்பாடு, தோற்றவரது கலைகளாலும் பண்பாட்டாலும் மூழ்கடிக்கப்பட்டு, தோற்றுவிட்டது. திராவிடர் பண்பாட்டின் முக்கிய அம்சங்களான லிங்க வணக்கம், சக்தி வணக்கம், பக்தி இயக்கம், அது தோற்றுவித்த உருவ வழிபாடு முதலியன ஆரியர் பண்பாட்டை ஆட்கொண்டது. ஆரியரது யக்ஞம் என்ற வழிபாட்டு முறையை திராவிடரது பூசை என்ற வழிபாட்டு முறை ஆக்கிரமித்து மாற்றிவிட்டது.

படிக்க:
கட்சி நிறுவனக் கோட்பாடுகள் | லெனின் | புதிய தொடர்
கோவிட் – 19 தாக்குதலை குளோரோகுயின் முறியடிக்குமா ?

சிற்பக் கலையில் மூங்கில் வேலைப்பாட்டின் அடிப்படையில் தோன்றிய கலை உருவங்கள், திராவிடர் கலையில் தோன்றி, இந்தியக் கலைக்குப் பரவியிருக்க வேண்டும். புத்த சைத்தியங்கள், (பிரார்த்தனை மண்டபங்கள்) புராதன திராவிடக் கல்லறைகளின் சிற்ப அமைப்பிலிருந்து தோன்றியவை. ஆரியர்கள் கடற்கரையில் வாழ்ந்தவர்களல்லர். ஆகவே கப்பல் நிர்மாண அறிவிலும், மீன் பிடித்தல், தொழில், புராதன கடல் வழி வாணிபம் அனைத்தும் திராவிடர்களுடையதே.

தட்சிணத்திலும், தென்னிந்தியாவிலும் வாழ்ந்த திராவிடருடைய வரலாறு தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் கிறிஸ்து சகாப்தத்துக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே அவர்கள் வளர்ச்சி பெற்றதோர் பண்பாட்டை உடையவர்கள் என்பதைப் புலப்படுத்தும் சான்றுகள் உள்ளன. மூன்றாம் நூற்றாண்டில் மேற்குக் கடற்கரை முதல் கிழக்குக் கடற்கரை வரை பரந்து கிடந்த ஆந்திரப் பேரரசு புகழ் பெற்று விளங்கியது. அக்காலத்திலேயே கொற்கையைத் தலைநகராகக் கொண்டு பாண்டியர் பேரரசு வலிமை பெற்று விளங்கியது. முதல் மூன்று நூற்றாண்டுகளில் தமிழ் இலக்கியமும் இன்கலைகளும் மகத்தான வளர்ச்சி பெற்று உலகப் புராதனப் பண்பாடுகளுள் சிறந்ததொன்று என விளங்கியது. தமிழ்நாடு, ரோம சாம்ராஜ்யத்தோடும் இந்தோனேசியாவோடும் வாணிபத் தொடர்பும் கொண்டிருந்தது. தமிழகத்திலிருந்து மிளகு, முத்து, சந்தனம், தேக்கு முதலிய பொருள்கள் ஏற்றுமதியாயின.

மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘குங்கேரியா’ பகுதியில் அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட செம்புக் கருவிகள்.

இந்தியத் தொல் பொருள்களில் சில, கிறிஸ்து சகாப்தத்திற்குச் சில நூற்றாண்டுகளுக்கு முன்பும், பின்புமாகத் தோன்றியவை. அவற்றின் தோற்றகாலம் சரியாகக் கணக்கிடப்படவில்லை. பழங்கற்காலச் சின்னங்களும், நடுகற்காலச் சின்னங்களும் இந்தியா முழுவதிலும் கிடைக்கின்றன. புதிய கற்காலச் சின்னங்கள் கிறிஸ்து சகாப்தத்திற்கு அணித்தானவை. அவற்றில் கல் ஆயுதங்களும், மண்பாண்டங்களும் அடங்கும். வட இந்தியாவில் புதிய கற்காலத்தில் செம்புப் பண்பாடு தோன்றியது. இவ்வுண்மைக்கு மொகெஞ்சதாரோ தொல் பொருள்களே சான்றாக அமையும். மத்தியப் பிரதேசத்திலுள்ள ‘குங்கேரியா’ என்ற பகுதியில் செம்புக் கருவிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. சாதாரண ஈட்டி முனைகளும், பிளவற்ற ஈட்டி முனைகளும், போர்வாள்களும், மீன் தூண்டில்களும் இவ்விடத்தில் அகப்பட்டன. அவற்றுள் சில திறமையான வேலைப்பாடுடையவை. இவற்றுள் சில மிகவும் கனமாகவிருக்கின்றன. இவை தொழில்களில் பயன்பட்டிரா பூசைக்குரியனவாக இவை இருந்திருக்கலாம். வட இந்தியாவில் கி.பி. முதல் நூற்றாண்டு வரை வெண்கலச் சாமான்கள் இருந்ததாகத் தெரியவில்லை. இரும்பு கி.மு. 1000 ஆண்டுகளாகப் பழக்கத்தில் இருந்திருக்கலாம்.

ஆரியர்களுக்கு அதற்கும் முன்னரே இரும்பின் பயன் தெரிந்திருக்க வேண்டும். செம்புக்காலம் என்றதோர் பண்பாட்டுக் கட்டம் தென்னிந்தியாவில் இருந்ததாகத் தெரியவில்லை. கற்காலத்திற்கும், இரும்புக் காலத்திற்கும் இடைவெளியற்ற தொடர்பு உள்ளது. தென்னாட்டில் வரலாற்று முற்காலப் புதை பொருள் தலங்களில் இரும்புக் கருவிகள் கிடைக்கின்றன. தென்னிந்தியாவில் இரும்புக் கனியம் ஏராளமாகக் கிடைக்கிறது என்பதைக் காணும் பொழுதும், சங்க வளையல் முதலிய அணிகலன்களைச் செய்வதற்கு இரும்பு அரங்கள் தேவை என்பதை நினைவில் கொண்டும் இரும்பு தென்னிந்தியாவிலேயே உருக்கி எடுக்கப்பட்டது என்ற முடிவுக்கு வருவது தவறாகாது. வேதங்களில் இரும்பு என்ற சொல் இல்லாததைக் கவனத்தில் கொண்டு கி.மு. 1500-ம் ஆண்டிற்கு முன் இரும்பு வட இந்தியாவில் உபயோகத்தில் இருந்ததில்லை எனக் கூறுவாரும் உளர். ஆயினும் இந்தியா முழுவதிலும் சுமார் 3000 ஆண்டுகளாகவே இரும்புக் கால நாகரிகம் தோன்றிவிட்டது என்று கூறலாம்.

திராவிடருக்கும் முந்திய பண்பாடு ‘நிகிரிடோ’ பண்பாடு என்றும், அதுவும் இந்தியா முழுவதிலும் காணப்பட்டதென்றும் நினைக்கப் பல சான்றுகள் உள்ளன.

இந்தியாவினுள் ஆரியர் நுழைந்த காலம் சுமார் கி.மு.2000 முதல் 1600 வரை இருக்கலாம். சிந்து சமவெளியில் குடியேறி பின்னர் அவர்கள் கங்கைச் சமவெளியிலும், விந்திய மலையடிவாரத்திலும் பரவினார்கள் என்று நாம் கருதலாம். பின்னர் அவர்கள் தென்னிந்தியாவிலும் குடியேறினர். வேதகால ஆரியர் தச்சுத் தொழில், வீடுகட்டும் தொழில், ரத நிர்மாணம், உலோக வேலைகள், செம்புப் பாத்திரங்கள் செய்தல், தங்க நகைத் தொழில் முதலியனவற்றை அறிந்திருந்தார்கள். நெசவும் மண்பாண்டத் தொழிலும். தோல் பதனிடும் தொழிலும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது. தெய்வப் படிமங்களை அவர்கள் கல்லாலோ, உலோகத்தாலோ செய்தார்கள் என்பதற்குப் புராதன நூல்களில் சான்று கிடைக்கவில்லை. ஆரியர்களது கலை அழகுப்படுத்தும் கலையாக அடையாளப் பூர்வமான கலையாக இருந்தது. இயற்கையையோ, மனிதர்களையோ, உருவப் பூர்வமாக அல்லாமல், அடையாளப் பூர்வமாக இக்கலை வெளியிட்டது.

Synthesis வகையிலான திராவிடக் கலை வடிவம்.

ஆனால் திராவிடக் கலையில் உருவபூர்வமான வெளியீடு காணப்பட்டது. ஆனால் வளர்ச்சியுற்ற நிலையில் அடையாளப் பூர்வமான கலைப் போக்கும் உருவபூர்வமான கலைப் போக்கும் கலந்து (Synthesis) புதியதோர் கலைப் போக்கு உருவாயிற்று. உதாரணமாக பெளத்தக் கலையில் உருவமும், அடையாளமும் ஒன்றி நிற்பதைக் காணலாம். யானையின் உருவமும், அதன் பொருளான செழிப்பும் பழங்கால நாணயங்களின் சின்னங்களாகக் காணப்படுகின்றன. யானையின் உருவம் செழிப்பை அடையாளமாக உணர்த்தும். இதில் இரண்டு கலைப்போக்குகள் கலந்து பரிணமித்து முழுமையடைவதைக் காணலாம். இதுபோலவே உடைகளின் கரைகளிலும், சுவரில் எழுதிய கொடி சித்திரங்களிலும் இக்கலப்புப் போக்கைக் காணலாம். ஆனால் இக்கலை இணைப்பு மிகப் பழங்காலத்திலேயே தோன்றி விட்டது. குஷானர் காலகட்டத்தில் நிலவிய கலை பக்தி இயக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. இது சாராம்சத்தில் திராவிடர் கலையாகும். புத்த கயாவிலுள்ள ’இந்திர சாந்தி’ உருவம் திராவிடர் கலையை ஆரியர் கலை மாற்றியமைத்ததின் விளைவாகும். குப்தர்காலப் புத்தர் படிமங்களும் எலிபான்டா குகையிலுள்ள மகேசுவரர் திருவுருவமும். பல்லவர் காலத்து லிங்கங்களும், நடராஜர் மூர்த்தங்களும், இரு ஆன்ம ஓட்டங்களினால் விளைந்த கலை உருவங்களாகும். தென்னாட்டில் ஆயிரக்கணக்கான தெய்வத் திருவுருவங்கள் உள்ளன.

இவையாவும் இந்திய சிற்பக் கலையின் ஆழ்ந்த தத்துவத்தை வெளியிடுகின்றன. ஒவ்வொரு தெய்வத்தின் உருவமும் அடையாள பூர்வமானதாகும். வழிபடுபவன் தனது உணர்வின் உருவமாகவும் சிலையைக் காண்கிறான். வரலாற்றுக் கால இந்தியக் கலையிலும், தத்துவத்திலும், புலனுணர்விற்கும், அகத்துறவிற்கும் இடையேயுள்ள முரண்பாட்டைத் தீர்த்து ஒன்றுபடுத்த நிகழ்ந்த நிகழ்ச்சியை நாம் காண்கிறோம். மேற்கும், கிழக்கும், வடக்கும் தெற்கும் இவ்வாறாக ஒன்றி உருமாறிப் புதியதொரு முழுமையான கலை இந்தியாவில் தோன்றி வளர்ந்தன. இவையாவும் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே நிகழ்ந்து வளர்ச்சியுறத் தொடங்கி விட்டன. உலோகங்கள் கண்டுபிடிக்கப்படுவதன் முன்னரே ஆரியத் திராவிட பண்பாட்டுக் கலப்பு முழுமை பெற்று விட்டது.

(தொடரும்)

« முந்தைய பாகம் ……………………………………………………………………. அடுத்த பாகம் »

தமிழர் வரலாறும் பண்பாடும்
(ஆராய்ச்சிக் கட்டுரைகள்)
நா. வானமாமலை
முதற்பதிப்பு: 1966

வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

பு.ஜ.தொ.மு மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்து இடைநீக்கம் !

பத்திரிகைச் செய்தி

தேதி: 07.08.2020

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலப் பொதுச் செயலாளர் சுப. தங்கராசு பு.ஜ.தொ.மு அடிப்படை உறுப்பினர் தகுதி மற்றும் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து இடைநீக்கம் !

கடந்த 29.07.2020 அன்று வெளிவந்த நக்கீரன் இதழில், “பலநூறு ஏக்கர் அனாதீனநிலத்தை ஆட்டையைப்போடும் ஆளுங்கட்சியினர் + அதிகாரிகள்” என்ற தலைப்பிட்டு ஒரு சிறப்புக் கட்டுரை வெளிவந்தது.

“பாரத மிகுமின் நிறுவனத்தில் (பெல்) பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர்கள் சுமார் 400 -க்கும் மேற்பட்டோர் ஒன்றாகச் சேர்ந்து பதிவு செய்யப்பட்ட சொசைட்டி ஒன்றைத் துவங்கி இயங்கி வருகின்றனர். இந்த பதிவு செய்யப்பட்ட சொசைட்டியின் செயலாளராக இருந்த தங்கராஜ், காஞ்சிபுரம் மாவட்டம் தாழம்பூர் கிராமத்திலுள்ள சில சர்வே எண்களில் அமைந்துள்ள நிலங்களை வாங்கித்தருவதாக உறுதியளித்து சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளார். இந்த தாழம்பூர் நிலமானது அரசுக்கு சொந்தமான அனாதீன நிலம் என்பதால், அரசு அதிகாரிகள், ஆளுங்கட்சியினருக்கும் கோடிக்கணக்கில் இலஞ்சம் கொடுத்து அந்நிலத்துக்கு பட்டா வாங்க முயற்சி செய்ததாகவும், ஆனாலும் வாக்களித்தவாறு தங்களுக்கு இன்னும் நிலம் கிடைக்கவில்லை எனவும் மேற்படி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்க உறுப்பினர்கள் சிலர் நக்கீரனுக்குத் தகவல் சொன்னதன் பேரில் புலனாய்வு செய்யப்பட்டது’’ என்று மேற்படி கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

நக்கீரன் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தங்கராஜ் என்பவர், எமது புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில பொதுச் செயலாளராக இருந்த சுப.தங்கராசு தான் என மேற்படி கட்டுரையில் குறிப்பிடப்படவில்லை என்கிற போதிலும், மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்குத் தெரியும். பு.ஜ.தொ.மு அணிகளில் சில பேருக்கும் அது தெரிந்திருக்கக்கூடும்.

மேற்படி பிரச்சினையில், அக்டோபர் – 2019 இல் சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் மூலம் சுப.தங்கராசு மீது மோசடி – பணம் கையாடல் நடந்துள்ளதாக புகார் ஒன்று மாநில நிர்வாகக்குழுவுக்கு வந்து, அதன் மீதான விசாரணை நடைபெற்றிருந்தாலும், இறுதி முடிவு அறிவிக்கப்படாத நிலையில், 29.7.2020 தேதியிட்ட நக்கீரன் இதழில் கட்டுரை வெளிவந்துள்ள நிலையில், அன்றைய தினமே (29.7.2020) பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக் குழுவின் அவசரக்கூட்டம் நடைபெற்றது. அதில் சுப.தங்கராசு அவர்களை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அடிப்படை உறுப்பினர் தகுதியில் இருந்தும், அவர் வகித்து வந்த மாநில பொதுச் செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்தும் இடைநீக்கம் செய்ய முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவு அன்றைய தினமே மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மட்டம் வரை தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், கீற்று இணையதளத்தில், “ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக் குழு” என்கிற பெயரில் வெளியான கட்டுரையில் ஒட்டுமொத்த தலைமைக்குழுவுக்கும் இக்‘குற்றத்தில்’ பங்குள்ளது என்ற அவதூறு கட்டுரை வெளியாகியுள்ளது. எந்தக் கட்டுரையை வெளியிடுவது என்பது கீற்று இணையதளத்தின் உரிமை என்கிறபோதிலும், பல்லாயிரம் தொழிலாளர்களின் நம்பிக்கையைப் பெற்றுள்ள புரட்சிகரத் தொழிற்சங்க அமைப்பான பு.ஜ.தொ.மு மீதான குற்றச்சாட்டின் உண்மைத்தன்மையை அறிந்து வெளியிடுவதுதான் ஊடக தர்மமாக இருக்க முடியும். வணிகப் பத்திரிக்கையான நக்கீரன் கூட தனக்கு வந்த தகவல்கள் அடிப்படையில் புலனாய்வு செய்து செய்தி வெளியிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள நிலையில், கீற்று இணையதளமோ, பு.ஜ.தொ.மு மீது சுமத்தப்பட்டுள்ள அவதூறு குறித்த உண்மைத்தன்மையை அறிந்து கொள்ள எவ்வித முயற்சியையும் மேற்கொள்ளாமல் வெளியிட்டிருப்பதன் நோக்கம் என்ன? அவர்களின் நோக்கம் என்னவாக இருந்தாலும், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி என்ற இயக்கத்தினை வீழ்த்திவிட முடியாது. இந்தச் சூழலில், சுப.தங்கராசு அவர்கள் மீதான குற்றச்சாட்டு என்ன? அந்தக் குற்றச்சாட்டை பு.ஜ.தொ.மு மாநில நிர்வாகக்குழு எவ்வாறு கையாண்டது? என்பது குறித்து ஒரு சுருக்கமான விளக்கத்தைத் தொழிலாளர்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற சுமார் 400 தொழிலாளர்களுக்கு வீட்டுமனை வாங்கித்தருவது என்ற நோக்கத்துடன் ஒரு சொசைட்டி ஆரம்பிக்கப்பட்டது. அந்த சொசைட்டிக்கு ஒரு நிர்வாகக்குழு தேர்வு செய்யப்பட்டு, அதன் செயலராக சுப.தங்கராசு இருந்து வந்தார். வாங்கத் திட்டமிடப்பட்ட வீட்டுமனைகளுக்காக சொசைட்டி உறுப்பினர்களிடமிருந்து, மொத்தமாக சுமார் 100 கோடி ரூபாய் வரை வசூல் செய்யப்பட்டதாகவும், ஆனால் இதுவரை திட்டமிட்டவாறு வீட்டுமனைகள் தங்களுக்கு கிடைக்கவில்லை என்றும், இதில் முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், இந்த முறைகேட்டில் சுப.தங்கராசு அவர்களுக்கு முக்கியப்பங்கிருப்பதாகவும், அந்த சொசைட்டி உறுப்பினர்கள் சிலர் 11.10.2019 தேதியிட்ட புகார் கடிதம் ஒன்றை மாநில நிர்வாகக்குழுவுக்கு அளித்தனர். இந்தப் புகாரின் மீது சுப.தங்கராசு விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில நிர்வாகக்குழு கேட்டுக்கொண்டதன் பேரில் அவரும் 14.10.2019 தேதியிட்டு, தனது விளக்கத்தை எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்தார்.

25.10.2019 அன்று கூட்டப்பட்ட பு.ஜ.தொ.மு.வின் மாநில நிர்வாகக்குழுவில் இது குறித்து விவாதிக்கப்பட்டு, சுப.தங்கராசு மீது கூறப்பட்ட புகாரின் உண்மைத் தன்மையைக் கண்டறிய 3 பேர் கொண்ட விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக்குழுவானது 12.11.2019 முதல் 17.11.2019 வரை பல்வேறு ஆவணங்கள், சான்றுகள், இதில் சம்பந்தப்பட்டுள்ள தனிநபர்களது வாக்குமூலங்கள் என பலவற்றைத் திரட்டி, தனது விசாரணை அறிக்கையை 25.11.2019 அன்று மாநில நிர்வாகக்குழுவுக்குக் கொடுத்தது. ( இந்தப் பிரச்சினை குறித்து புகார் அளித்தவர்களில் சிலரும், இந்த சொசைட்டியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களில் பெரும்பான்மையினரும் விசாரணைக்குழு நடவடிக்கைகளுக்கு எவ்வித ஒத்துழைப்பும் தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )

மேற்குறிப்பிடப்பட்ட விசாரணைக்குழு அறிக்கை மாநில நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு 03.12.2019 முதல் 05.01.2020 வரை பல சுற்று கூட்டங்கள் நடத்தி விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் மூலமாக குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பதாக மாநில நிர்வாகக்குழு வந்தடைந்த முடிவின் அடிப்படையில் சுப.தங்கராசு அவர்களுக்கு 06.01.2020 அன்று குற்றப்பத்திரிக்கை வழங்கபட்டு, அதன் மீதான அவரது விளக்கத்தினை தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையில் 12.01.2020 தேதியிட்ட கடிதம் மூலமாக சுப.தங்கராசு தன்னுடைய விளக்கத்தைத் தெரிவித்தார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் அமைப்பு விதிகளின்படி, மாநிலக்குழு முதல் மாவட்டக்குழு வரை அமைப்பின் கொள்கைக்கு விரோதமான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக எந்தத் தனிநபர் மீதோ அல்லது எந்தக் குழு மீதோ புகார் வந்தால் அதை எப்படிக் கையாள வேண்டுமென விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்த விதிமுறைகளின் அடிப்படையில், மேற்குறித்த விசாரணைக்குழு அறிக்கை மீது நடந்த விவாதத்தின் வழியாக வந்தடைந்த முடிவுகள், அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட குற்றப்பத்திரிக்கை, அந்தக் குற்றப்பத்திரிக்கை மீது சுப.தங்கராசு கொடுத்த விளக்கம் ஆகியவற்றை மாநில நிர்வாகக்குழு பரிசீலித்து, தண்டனை வழங்குவதற்குரிய அடிப்படை இருந்தால், குற்றத்தின் தன்மைக்கேற்ப வழங்கப்பட வேண்டிய தண்டனை என்னவென்பதைத் தீர்மானித்து, தொடர்புடைய ஆவணங்களோடு மாநில செயற்குழுவில் வைத்து விவாதித்து இறுதி முடிவெடுக்க வேண்டும். புகார் மற்றும் புகார் மீதான விளக்கம் தொடங்கி இறுதி முடிவெடுப்பது வரை இயற்கை நீதிக்கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்பதில் பு.ஜ.தொ.மு -வின் மாநில நிர்வாகக்குழு உறுதியாக நின்றது.

மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க வேண்டிய தருணத்தில் சுப.தங்கராசு அவர்களது தாயாரின் உடல்நலக்கோளாறு தீவிரமானது. தீவிர சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். அடுத்தடுத்த நாட்களில் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் ஒருவருக்கு உடல்நலம் குன்றிய நிலைமை, சுப.தங்கராசுவுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலைமை, பு.ஜ.தொ.மு அங்கம் வகிக்கும் “மக்கள் அதிகாரம்” அமைப்பின் மாநாட்டுப் பணிகள் ஆகிய பல்வேறு புறநிலைமைகள் காரணமாக மேற்குறித்த விசாரணை நடவடிக்கை மீது மாநில நிர்வாகக்குழு இறுதி முடிவெடுக்க முடியவில்லை.

இதன் தொடர்ச்சியாக, கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக 22.03.2020 முதல் பல்வேறு கட்டங்களாக அமலாக்கப்பட்டுவரும் பொது ஊரடங்கு காரணமாகப் பொதுப்போக்குவரத்து முடக்கப்பட்டு, ஈ-பாஸ் இல்லாமல் மாவட்டம் விட்டு மாவட்டம் பயணிக்க முடியாத நிலைமை காரணமாக மாநில நிர்வாகக்குழு நேரில்கூடி இறுதி முடிவெடுக்கவோ, மாநில செயற்குழுவைக் கூட்டி விவாதித்து இறுதி முடிவெடுக்கு ஒப்புதல் பெறவோ, மாவட்ட செயற்குழு மட்டம் வரை எடுத்துச்சென்று விவரிக்கவோ இயலாத சூழல் நிலவியது.

இந்தச் சூழலில் நக்கீரன் கட்டுரை வெளியாகியுள்ளது. இது குறித்து தேவையற்ற குழப்பங்கள், அவநம்பிக்கைகள், அவதூறுகள் உள்ளிட்ட எதையும் அனுமதிக்கக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, நக்கீரன் கட்டுரை வெளியான அன்றைய தினமே கான்பரன்ஸ் கால் மூலம் மாநில நிர்வாகக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நமக்கு நாமே வகுத்துக்கொண்டு, மாநில நிர்வாகக்குழு முதல் கிளைச்சங்கம் வரை அமல்படுத்தி வருகின்ற ஒழுங்குமுறையை எவராலும் மறுக்கவோ, மீறவோ முடியாது என்பதில் உறுதியாக இருக்கிறோம். இருப்பினும், மாநில செயற்குழுவில் விவாதிப்பது என்கிற விதிமுறையை மீறி, குற்றம் சாட்டப்பட்ட சுப.தங்கராசு மீது நடவடிக்கை மேற்கொள்வது தவிர்க்க முடியாததாகி விட்டது. இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக 29.07.2020 முதல் சுப.தங்கராசு அவர்கள் பு.ஜ.தொ.மு.வின் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்தும், அவர் வகித்து வந்த பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இடைநீக்கம் செய்யப்பட்ட சுப.தங்கராசு வகித்து வந்த பொதுச்செயலாளர் பொறுப்பை மாநில இணைச்செயலாளர் தோழர் டி. பழனிச்சாமி அவர்கள் தற்காலிகமாக ஏற்று செயல்பட முடிவு செய்யப்பட்டுள்ளது.

நக்கீரன் கட்டுரையில் குறிப்பிட்டுள்ள அனாதீன நிலத்தை அபகரிக்கும் முயற்சி என்பது குறித்து விசாரணைக்குழுவின் விசாரணையின்போது தெரியவந்தது. இந்த சட்டவிரோத, மக்கள்விரோத, அபகரிப்பு குறித்து உடனடியாகப் பரிசீலித்து, இதன் அடிப்படையிலேயே குற்றப்பத்திரிக்கை வழங்கப்பட்ட போதிலும், சுப.தங்கராசு மீதான ஒழுங்கு நடவடிக்கைகளில் புறநிலைமைகளைத் தாண்டி உடனடியாக இறுதி முடிவெடுக்க போராடி இருக்க வேண்டும் என்கிற பாரிய தவறிழைத்துள்ளோம் என்பதை சுயவிமர்சனமாக உணர்கிறோம்.

அதேசமயத்தில், குற்றச்சாட்டுக்கு உள்ளானவர் எந்தத் தகுதியில் இருந்தாலும், அவர் மீதான குற்றச்சாட்டின் உண்மைத் தன்மைக்கேற்ப எவ்வித பாகுபாடும் இன்றி அமைப்புரீதியான தண்டனை வழங்குவதிலும், அத்தகைய நடவடிக்கைகளை கீழ் அணிகள் வரை எடுத்துச்சென்று ஜனநாயகத்தை உயர்த்திப்பிடிப்பதிலும் பு.ஜ.தொ.மு உறுதியாக நிற்கிறது என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறோம்.

ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இடைநீக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் சுப.தங்கராசு அவர்களுடன் தொழிற்சங்கரீதியாக எவ்விதத் தகவல் பரிமாற்றமோ, தொடர்போ வைத்துக் கொள்ள வேண்டாம் என மாநில நிர்வாகக்குழுவின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.

தோழமையுடன்,

டி. பழனிச்சாமி
பொதுச் செயலாளர் (பொறுப்பு)

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி.
தமிழ்நாடு – புதுச்சேரி.
தொடர்புக்கு: 944444 2374.

புதிய கல்வி கொள்கையின் உள்ளார்ந்த அரசியல் | பேராசிரியர் வீ. அரசு

மோடி அரசு ஆட்சியில் அமர்ந்ததில் இருந்து தமது இந்து ராஷ்டிரக் கனவுக்கும், கார்ப்பரேட்டுகளின் கொள்ளைக்கும் ஏதுவான ‘புதிய கல்விக் கொள்கையை’ நிறைவேற்ற பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனை தமிழக மக்களும், மாணவர் அமைப்புகளும் தொடர்ச்சியாக எதிர்த்து வந்துள்ளனர். அதன் விளைவாக ஒவ்வொரு முறையும் பின்வாங்கியுள்ளது மோடி அரசு.

எனினும், தனது திணிப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டே இருந்தது. அதன் உச்சமாக தற்போதைய கொரோனா ஊரடங்கு சூழலைப் பயன்படுத்தி, எவ்வித எதிர்ப்பும் இன்றி புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தப் பார்க்கிறது மோடி அரசு.

நாம் அனைவரும் இதனை எதிர்க்க வேண்டிய அவசியச் சூழலில் உள்ளோம். எனவே இப்புதிய கல்விக் கொள்கையின் உள்ளார்ந்த சாரம் என்ன ? அதில் நாம் கவனிக்க வேண்டிய விசயங்கள் என்ன ? என்பது குறித்து தெரிந்து கொள்ள வேண்டியுள்ளது.

அவற்றை தெளிவாக விளக்குகிறார் சென்னைப் பல்கலைக் கழக முன்னாள் துறைத் தலைவர் பேராசிரியர் வீ. அரசு அதன் காணொளி உங்களுக்காக. பாருங்கள்… பகிருங்கள்…

காஷ்மீர் பிரிவு 370 ரத்து : ஓராண்டாகத் தொடரும் ஊரடங்கு | படக் கட்டுரை

காஷ்மீரின் சிறப்புரிமையை உறுதி செய்யும் அரசியல்சாசன சட்டத்தின் பிரிவு 370 -ஐ இரத்து செய்து, கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி உத்தரவிட்டது மத்திய மோடி அரசு. அதனைத் தொடர்ந்து காஷ்மீரின் கட்சித் தலைவர்களை தடுப்புக்காவலில் அடைத்து, காஷ்மீர் முழுவதும் ஊரடங்குச் சட்டம் போட்டு, காஷ்மீர் மக்களை கடந்த ஓராண்டாகவே திறந்தவெளி சிறைக் கைதிகளாக வைத்திருக்கிறது மோடி அரசு.

ஆகஸ்டு 6, 2019 முதல் முள்வேலிக்குள் முடக்கப்பட்ட காஷ்மீர்.

காஷ்மீர் முழுவதும் மக்களின் வீரமிகு எழுச்சிப் போராட்டங்கள் நடந்த போதும் அனைத்தும் இராணுவத்தால் கொடூரமான முறையில் ஒடுக்கப்பட்டன. ஊடகங்கள் முடக்கம், பத்திரிகையாளர்கள் மீதான தாக்குதல், இணையச் சேவை முடக்கம், மக்கள் வாழ்வாதார முடக்கம் என தொடரந்து எண்ணற்ற துன்பங்களை அம்மக்களுக்கு இழைத்து வந்துள்ளது மோடி அரசு.

4 மாத கொரோனா ஊரடங்கிற்கே நாம் வாழ்வாதாரம் இழந்து வீதியில் நிற்கும் நிலையில், கடந்த ஓராண்டில் காஷ்மீர் மக்களின் வாழ்நிலை எவ்வளவு மோசமாகியிருக்கும். அதை பதிவு செய்திருக்கிறது அல்-ஜசீராவின் இந்த புகைப்படக் கட்டுரை !

***

காஷ்மீரின் போக்குவரத்து அலுவலகத்தின் முன்பாக, பேருந்து பயணச் சீட்டுக்காக காத்திருக்கும் இந்திய புலம்பெயர் தொழிலாளர்கள். காஷ்மீரின் முழு ஊரடங்கைத் தொடர்ந்து இவர்கள் இமாலயப் பகுதியில் இருந்து, தொலைதூரத்தில் உள்ள வடக்கு மற்றும் கிழக்கு இந்தியாவின் கிராமங்களுக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து. கடந்த ஆகஸ்ட் 12, 2019 அன்று ஈத் பண்டிகைக்கான தொழுகை முடித்தபின், ஸ்ரீநகரில் போராட்டத்தில் ஈடுபடும் காஷ்மீரிகள். இந்நிகழ்வில் “சுதந்திரம் வேண்டும்” மற்றும் “இந்தியாவே திரும்பிப் போ!” என போராட்டக்காரர்கள் முழங்கியதாக நேரில் கண்டவர்கள் கூறினார்கள்.

படிக்க:
தொடரும் லாக்டவுன் ! தொடரும் துயரங்கள் !!
பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !

சிறப்பு அந்தஸ்து இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காஷ்மீரில் இந்தியப் படைகளின் தாக்குதல் தொடர்கதையாகிப் போனது. இந்நிலையில் மருத்துவமனைகள் போலிசின் தீவிர கண்காணிப்புக்குள்ளான சூழலில், கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பெல்லட் குண்டு தாக்குதலுக்கு ஆளாகி, அருகாமையில் உள்ள ஒரு விட்டிலேயே சிகிச்சை எடுத்துக் கொள்ளும் நபர்.

கடந்த ஆகஸ்ட் 16, 2019 அன்று வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடைபெற்ற போராட்டத்தின் போது, தனது கைகளில் “சுதந்திரம் வேண்டும்”, “சட்டப்பிரிவு 370 -ஐ அமல்படுத்து” என்ற முழக்கத்தை மெகந்தி மூலம் எழுதி காண்பிக்கும் காட்சி.

ஸ்ரீநகரில், இந்தியப் படையினரின் கண்ணீர் புகை குண்டு தாக்குதலில் இருந்து தங்களை காத்துக் கொள்ள சிதறி ஓடும் காஷ்மீரிகள். நாள் – செப்டம்பர் 6, 2019

இந்திய தேசியவாதிகளால் காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்து இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொது முடக்கம் மற்றும் தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு மொத்த காஷ்மீரும் சிறைவைக்கப்பட்டது. அதனைக் கண்டித்து வீதியில் இறங்கிப் போராடும் பெண்கள்.

கடந்த அக்டோபர் 11, 2019 அன்று ஸ்ரீ நகரில், வெள்ளிக்கிழமை தொழுகைக்குப் பிறகு நடந்த போராட்டத்தில், மொத்த காஷ்மீரின் துயரத்தையும் பிரதிபலிக்கும் வகையில் முள்வேலிக் கம்பிகளை முகத்தில் சுற்றி போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்.

கடந்த அக்டோபரில் ஒவ்வொரு அங்குலமும் இந்தியப் படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த சூழலில் ஒரு சிறுமி சைக்கிளில் செல்லும் காட்சி.

ஸ்ரீநகரில் பத்திரிகையாளர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தகவல் தொடர்பு மையத்தில் அவரவர் தொலைபேசிகளில் உள்ள இணைய வசதியைப் பயன்படுத்தும் காட்சி. கடந்த மார்ச் 4, 2020-ல் தான் பல மாதங்களுக்குப் பிறகு இணைய சேவைகள் காஷ்மீரில் அனுமதிக்கப்பட்டதன. அதிலும் தற்போது வரை 4-ஜி சேவைகள் முடக்கப்பட்ட நிலையே தொடர்கிறது.


தமிழாக்கம்: அன்பு
நன்றி: அல்ஜசீரா

கோவிட்19 அனுபவமும் ஆராய்ச்சியும் | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

கோவிட்19 நோயானது பல்வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றது. பிரதானமான முதல் வகை Asymptomatic infection என்று அழைக்கப்படுவதாகும்.

அறிகுறிகளற்ற கொரோனா தொற்று (ASYMPTOMATIC nCoV19 INFECTION)

90% பேருக்கு இந்த வகை, எந்த அறிகுறிகளும் தோன்றாமல் இருக்கும். ஆனால் வைரஸ் மட்டும் தொண்டைப்பகுதியில் இருக்கும். இவர்களிடம் இருந்து பிறருக்கு பரவும் வாய்ப்பு மிக குறைவு.

இவர்களுக்கு கோவிட் நோய்க்கான எந்த அறிகுறியும் இருக்காது. எனவே இவர்களுக்கு வந்திருப்பது நோய் என்று கூற இயலாது மாறாக இவர்களுக்கு ஏற்பட்டிருப்பது “தொற்று” (Infection) மட்டுமே. இந்த வகையினருக்கு நோய் வந்ததும் தெரியாதது
போனதும் தெரியாது.

இவர்களுக்கு வேறெந்த பாதிப்பும் நேராது, இவர்களால் குறைவான அளவு நோய் பிறருக்கு வாய்ப்பு இருப்பதால். கட்டாயம் தனிமைப்படுத்துதல்(ISOLATION)
அவசியம்.

இந்த காரணத்திற்காகத்தான் நோய் தொற்று பெற்ற ஒருவர் குடும்பத்தில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்தப்படுகின்றனர். இதே போன்ற தனிமைப்படுத்துதல் முறையை நாம் அம்மைத்தொற்றுக்கும் கடைபிடித்து வருகிறோம்.

COVID-19 (COrona VIrus Disease-19)

இதற்கடுத்த நிலையில் வருவது தான், அறிகுறிகள் வெளியே தென்படும்
கோவிட்-19 என்று பெயரிடப்பட்டுள்ள COrona VIrus Disease 19 இது மொத்த கோவிட் நோயாளர்களில் 10% -15% இதில் மூன்று வகை.

  • முதல் வகை MILD COVID DISEASE

லேசான/சாதாரண கோவிட் நோய் இவர்கள் கோவிட் அறிகுறிகள் தோன்றும் நோயாளர்களுள் 80- 90% இருப்பார்கள் இந்த வகையினருக்கு

  1. காய்ச்சல்
  2. தொண்டை வலி
  3. வறட்டு இருமல்
  4. உடல் அசதி / வலி
  5. நுகர்தல் இழப்பு
  6. சுவைத்திறன் இழப்பு

போன்ற அறிகுறிகள் தோன்றும்.

இவர்களுக்கு இந்த அறிகுறிகளைத் தாண்டி வேறு பிரச்சனைகள் பெரும்பாலும் நேருவதில்லை. பெரும்பாலும் குழந்தைகள், இளைய வயதினர், வேறெந்த தொற்றா நோயும் இல்லாதவர்களுக்கு இந்த நிலையிலேயே கோவிட் நோய் சரியாகிவிடும்.

இந்த வகை நோயர்கள் கோவிட் நோயர்களிடம் இருந்து தான் பிறருக்கும் சமூகத்துக்கும் நோய் வேகமாக பரவுகிறது. எனவே கோவிட் நோயின் அறிகுறிகள் தோன்றினால் உடனே தனிமைப்படுத்திக்கொள்ளுதல் அவசியமாகின்றது,
இவர்களுக்கு எந்த சிகிச்சையும் மருந்தும் தேவையில்லை.

படிக்க:
கோவிட் நோய் எவ்வாறெல்லாம் வெளிப்படலாம் ? | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா 
தொடரும் லாக்டவுன் ! தொடரும் துயரங்கள் !!

காய்ச்சல் / இருமல் போன்றவற்றிற்கு உரிய மருத்துவ சிகிச்சை எடுத்தாலே போதுமானது. தானாக நோய் குறி குணமாகி பழைய நிலைக்கு விரைவில் மீண்டு விடுகின்றனர்.சுவாசம் ஒரு நிமிடத்திற்கு 24 தடவைக்குள்ளாகவே இருக்கும்
பல்ஸ் ஆக்சிமீட்டரில் எப்போதும் 95 என்ற அளவுக்கு மேலாகவே இருக்கும்.

  • மிதமான கோவிட் நோய் MODERATE COVID

இந்த வகையினர் மேற்சொன்ன நோய் அறிகுறிகள் அடுத்த நிலைக்கு சென்று
கூடவே,

  1. விடாத இருமல்
  2. மூச்சு விடுவதில் சிரமம்
  3. மூச்சு இறைத்தல்
  4. நிமிடத்திற்கு 24 முதல் 30 முறை சுவாசிப்பார்கள் ( நார்மல்- 24க்குள் இருக்க வேண்டும்)
  5. பல்ஸ் ஆக்சிமீட்டரில் 90-94 என்ற அளவில் ஆக்சிஜன் அளவுகள் ரத்தத்தில் குறையும்.
  6. இவர்களுக்கு நுரையீரலில் தொற்று ஆரம்பமாகிவிட்டது என்று பொருள்.
    இதை “நியுமோனியா” என்று கூறுவோம்.

இந்த வகையில் சிலருக்கு ஆக்சிஜன் தேவைப்படும் நிலை இருக்கும். முறையாக ஆக்சிஜன் வழங்கி ரத்த ஆக்சிஜன் அளவுகளை பராமரிக்காவிடில் இதயத்துக்கு சுத்தமான ரத்த ஓட்டம் கிடைக்காமல் இதயம் சார்ந்த பிரச்சனைகள் உருவாகக்கூடும்.

முதல் வாரத்தில் லேசான அறிகுறிகள் தென்படுபவர்களுக்கு, தொற்றா நோய்கள், முதுமை போன்றவை காரணமாக இரண்டாவது வாரம் – மிதமான கோவிட் நிலைக்கு மாறுகிறார்கள்.

முதல்வாரத்திலேயே அந்த நோயாளிகளை இனங்கண்டு கண்காணித்தால் அவர்கள் இந்த இரண்டாவது நிலையை அடைவதில் இருந்து தடுக்க முடியும். சிகிச்சை அளிக்க முடியும். இந்திய ஒன்றிய அரசின் கூற்றுப்படி 3% பேருக்கு ஆக்சிஜன் தேவைப்படுகின்றது

  • தீவிர கோவிட் நோய் SEVERE COVID

இரண்டாவது வாரத்தின் இறுதியில் நுரையீரலின் பெரும்பகுதியை வைரஸ் தொற்று ஆக்கிரமிப்பு செய்தவுடன், நுரையீரல் தனது வேலையை முழுமையாக செய்ய இயலாமல் போய் விடும்.

சுவாசித்தல் ஒரு நிமிடத்திற்கு 30 முறைக்கு மேல் இருக்கும். பல்ஸ் ஆக்சிமீட்டர் 90%க்கு கீழ் காட்டும். இந்த நிலையை அடைந்தவர்களுக்கு எப்போது வேண்டுமானாலும், தீவிர மூச்சுத்திணறல் நிலை (ACUTE RESPIRATORY DISTRESS SYNDROME) என்ற பிரச்சனை ஏற்படலாம்.

இதை கவனிக்காமல் விட்டால் / தாமதமாக மருத்துவமனையை அணுகினால் நுரையீரல் செயலிழப்பு (RESPIRATORY FAILURE)ஏற்பட்டு மரணம் சம்பவிக்கின்றது.
இன்னும் சிலருக்கு இதய செயல் இழப்பு(CARDIAC ARREST) நேர்ந்து அதனால் மரணம் ஏற்படுகின்றது.

இவர்களை தீவிர சிகிச்சை மற்றும் கண்காணிப்பு பிரிவில் அட்மிட் செய்து பார்க்க வேண்டும். தீவிர மூச்சுத்திணறல் நிலை / நுரையீரல் செயலிழப்பு / இதய செயலிழப்பு நேர்ந்தால் உடனே இதய சுவாச மீட்பு சிகிச்சை செய்து வெண்ட்டிலேட்டரில் பொருத்த வேண்டும்.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !
நெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி ?

உடல் முழுவதும் இருக்கும் பாகங்களுக்கு ஆக்சிஜன் குறைவாக செல்வதால் ஒவ்வொரு உறுப்பாக செயலிழந்து கடைசியில் மரணம் சம்பவிக்கின்றது. (Multi organ Dysfunction syndrome – septic shock)

இந்திய அரசின் கூற்றுப்படி நோய் தொற்றாளர்களில் 2%பேருக்கு ஐசியூ சிகிச்சை தேவைப்படுகின்றது. நூறில் ஒருவருக்கு வெண்ட்டிலேட்டர் சிகிச்சை தேவைப்படுகின்றது.

அதிக கண்காணிப்பு தேவைப்படுபவர்கள் :

1. முதியோர்கள் > 60
2. உடல் பருமனாக இருப்பவர்கள்
3. இதய / சிறுநீரக நோயாளிகள்
4. நீரிழிவு / ரத்த கொதிப்பு நோயாளிகள்
5. சுவாசப்பாதை பிரச்சனை இருப்பவர்கள்
6. புற்றுநோயர்கள்

மரணங்கள் மிக மிக அரிதாகவே நடக்கும் வயது < 20 வயதுக்குள், குழந்தைகள் மரணமடைவது மிக மிக அரிது. நோயின் தன்மையை விரைவில் கண்டறிந்து
விரைவில் சிகிச்சை பெறுபவர்கள் பிரச்சனையில் இருந்து சீக்கிரம் மீண்டுவிடுகிறார்கள்.

நோயைப்பற்றி நன்றாக அறிந்து கொண்டு, உங்களையும் உங்களை நம்பி இருப்பவர்கள் நலனையும் காக்கும் பொறுப்பு இதைப்படிக்கும் உங்களுடையது.

நன்றி : ஃபேஸ்புக்கில்Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

நெருக்கடி கொடுக்கும் நுண்கடன் நிறுவனங்களை எதிர்கொள்வது எப்படி ?

கொரோனா கால ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து, இலவச அரிசியை நம்பியே பல லட்சம் குடும்பங்கள் வாழ்க்கையை நடத்தி வருகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. இந்தச் சூழலில் நுண்கடன் நிறுவனங்கள் தொடர்ச்சியாக பெண்களுக்கு நெருக்கடி கொடுத்து மனவுளைச்சலுக்கு ஆளாக்கி தற்கொலைக்கு தள்ளி வருகின்றன.

திருவாரூர் மாவட்டம் பேரளத்தை சேர்ந்த திருமதி. தனலெட்சுமி என்பவர் ஒரு வாரத்திற்கு முன்பு மண்ணெண்னை ஊற்றிக்கொண்டு தனக்கு தீ வைத்துக்கொண்டார். இறந்த பின்னர் வரும் இன்சூரன்ஸ் பணத்தை வைத்து தமது குடும்பத்தினர் கடனை அடைக்க முடியும் என்பதால் தீ வைத்துக்கொண்டதாக கூறியுள்ளார். நுண்கடன் நிறுவனங்கள் பெண்களை எவ்வளவு கொடூரமான நிலைக்கு தள்ளியதற்கு இது ஒரு உதாரணம்.

ஆகவே அடாவடி செய்யும் நுண்கடன் நிறுவனங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்பது குறித்து, நுண்கடன் நிறுவனங்களை எதிர்த்து நின்ற பெண்கள் தங்களது அனுபவத்தினை “ஒரு உரையாடலாக” பகிர்ந்து கொண்டுள்ளனர். அந்த காணொளியைப் பாருங்கள்… பகிருங்கள்…

தகவல் :
பெண்கள் உரிமைப் பாதுகாப்புச் சங்கம்.
தஞ்சை, தொடர்புக்கு : 89034 03970.

தொடரும் லாக்டவுன் ! தொடரும் துயரங்கள் !!

வடியில் இருந்து 06.08.2020 அன்று மக்கள் அதிகாரம் தொடர்பு எண்ணிற்கு வயதான தம்பதியினர் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

அவர்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருசக்கர வாகனம் ஒன்று வேலைக்காக வாங்கியதாகவும், கொரானா தொற்றுக் காரணமாக அரசு அறிவித்த ஊரடங்கினால் வேலை, வருமானம் இன்றி கடந்த 4 மாதமாக வண்டிக்கு தவணை கட்ட முடியாத சூழலில், “இன்னும் ஒரு மணி நேரத்தில் வண்டியை பிடிங்கி விடுவதாக…” வண்டிக்கு கடனளித்த நிறுவனத்தினர் போன் செய்து மிரட்டுவதாகவும் தெரிவித்தனர்.

பெரியவர் நெய்வேலியில் அலுவலகப் பணியில் இருந்து வந்துள்ளார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இருவருக்கும் திருமணமாகிவிட்டது. இருவரையும் படிக்க வைக்கவும், திருமணத்திற்கென்றும் கனரா வங்கியில் கடன் வாங்கியிருக்கிறார். தற்போது வேலையில் இருந்து ஓய்வு பெற்று விட்டார். அவருக்கு தற்போது ஓய்வூதியமாக மாதம் ரூ. 9000 வருகிறது.

ஆனால் ஏற்கெனவே வாங்கிய கல்விக்கடன், திருமணக் கடனுக்காக நெய்வேலி கனரா வங்கி கடந்த ஒரு வருட காலமாக ஓய்வூதிய பணத்தைத் தராமல் கடனுக்காக ஈடுசெய்துகொள்கிறது. நேரில் சென்று மேனேஜரை பார்த்து தம்பதியினர் பேசியுள்ளார்கள். “முழு கடனையும் கட்டு! பிறகு மத்ததை பேசி கொள்ளலாம்” என ஈவிரக்கம் இல்லாமல் பேசியுள்ளார்.

“மாதம் பென்சன் ரூ. 9000-த்தையும், வருடத்திற்கு ரூ. 28,000 மருத்துவ செலவிற்கு வருவதையும் மொத்தமாக பிடித்துக்கொள்கிறீர்கள். இப்பொழுது கொரானா காலம் என்பதால், தற்போது பார்த்துவரும் வேலையிலும் வயதானவர் என சொல்லி, வேலைக்கு வேண்டாம் என சொல்லிவிட்டனர். ஆகையால், வாழ்வாதரத்திற்கு பணமே இல்லை. இப்படி மொத்தமாக பிடித்துக்கொள்ளாதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக பிடித்துக் கொள்ளுங்கள்.” என பேசியதை மேலாளர் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

ஓய்வூதியம் என்பதே வயதான காலத்தில் பாதுகாப்பதற்காகதான். ஆனால் சட்டத்திற்கு புறம்பாக நெய்வேலி கனரா வங்கி மேலாளர் நடந்து கொள்கிறார். கடன்களைக் கட்ட நெருக்கடி கொடுக்கக் கூடாது என அரசுத் தரப்பில் பல்வேறு அறிக்கைகள் விடப்பட்டாலும், அது வெறுமனே மக்களின் காதுகளைக் குளிர்விப்பதற்காக மட்டுமே இருக்கிறது. நடைமுறையில் கடன் வசூலிப்பவர்களின் வேட்டை தொடரந்து கொண்டேதான் இருக்கிறது.

படிக்க:
பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !
மக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் !

கந்து வட்டிக்காரர்களை விட மோசமாக ஒரு பொதுத்துறை வங்கி நடந்து கொள்கிறது என்பதே மக்கள் மீதான அரசின் அணுகுமுறைக்குச் சான்று.  நூறு கோடி ஆயிரம் கோடி கடன் பெற்ற பெரு முதலாளிகள் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அயல்நாட்டுக்குப் பறந்து செல்ல அனுமதிக்கும் மத்திய அரசு, ஒரு நெருக்கடியான காலத்தில் மூத்த குடிமக்களிடம்  மட்டும் ‘கறார்’ காட்டுகிறது.

கொரோனா ஊரடங்கில் மக்களின் வாழ்நிலை இயல்புக்குத் திரும்பாத சூழலில், வாழ்வாதாரமிழந்து மக்கள் கதிகலங்கி நிற்கும் நிலையில், கடன் வசூலுக்கான காலக் கெடுவை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட வீதியில் இறங்கி மக்கள் போராட வேண்டிய தருணம் இது.

தற்போது அந்தப் பெரியவர் பிரச்சினை தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பின் வழக்கறிஞர்களைத் தொடர்பு கொண்டு சட்டரீதியான தலையீட்டை மேற்கொண்டிருக்கிறது மக்கள் அதிகாரம் !

தகவல் :
மக்கள் அதிகாரம்,
சென்னை மண்டலம்.
தொடர்புக்கு : 91768 01656.

பாபர் மசூதி இடிப்பு : வரலாறு சொல்லும் புகைப்படங்கள் !

0

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 05-08-2020 அன்று அயோத்தியில் இராமன் கோவிலுக்கு பூமி பூஜை செய்து வைத்தார். பாபர் மசூதி இருந்த இடத்தில், இந்திய அரசியல் சாசனத்தை அவமதிக்கும் அவமானச் சின்னமாக ராமர் கோவில் கட்டப்பட இருக்கிறது. 1992-ம் ஆண்டில் பாபர் மசூதி இடித்துத் தரைமட்டமாக்கப்பட்ட சூழலை தனது புகைப்படங்களில் பதிவு செய்திருக்கிறார், தற்போது பிரிண்ட் இணையதளத்தின் தேசிய புகைப்பட ஆசிரியராக இருக்கும் பிரவீன் ஜெயின் என்பவர்.

பாபர் மசூதி இடிப்பு ‘பக்தர்களின்’ ஆவேசத்தால் நடந்தது அல்ல; அது திட்டமிட்டு நிறைவேற்றப்பட்ட சதி என்பதற்கு இந்தப் புகைப்படங்களை விட வேறு என்ன ஆதாரம் தேவை ?

***

ஜூலை 1992-ம் ஆண்டு உத்தரப் பிரதேசத்தில் கல்யாண் சிங் அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தில் ராமர் கோவிலுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் “சிங்துவார்” எனப்படும் முதன்மை நுழைவாயிலுக்காக திட்டமிடப்பட்ட இடத்தில் அடிக்கல் நாட்டும் விழாவிற்காக கூடியிருந்த கர சேவகர்கள்.

ஜூலை 1992-ம் ஆண்டு அந்த நிலத்தை சீரமைத்து தயாரித்துக் கொண்டிருந்த போது மனித எலும்புகள் கிடைத்தன. வருவாய்துறை ஆவணப் பதிவேடுகளில் அந்த இடம் முசுலீம்களின் இடுகாடு என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.

அன்றைய மத்திய மனித வளத்துறை அமைச்சர் அர்ஜூன் சிங் 03, டிசம்பர் 1992 அன்று புது டெல்லியிலிருந்து லக்னோவுக்குக் கிளம்புகையில் ரயில் நிலையத்தில் இருந்து அன்றைய பிரதமர் நரசிம்மராவிடம் பேசிக் கொண்டிருக்கிறார். அயோத்தியின் நிலைமைகளைக் கண்காணிக்க அங்கு சென்றார்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு ஒரு நாளுக்கு முன்னர் டிசம்பர் 5. 1992 அன்று ஒரு கர சேவகர், “நாங்கள் ரத்தத்தைக் கொடுப்போம். நாங்கள் உயிரையும் கொடுப்போம்” என்று ஒரு சுவற்றில் எழுதிக் கொண்டிருக்கிறார்.

ராம ஜென்மபூமி இயக்கத்தோடு ஒருங்கிணைந்த பாபர் மசூதி இடிப்புக்கு ஒரு நாள் முந்தைய ஒத்திகைக்கு மத்தியில், ஒரு உத்தரப் பிரதேச போலீசுக்காரர் கரசேவகர்களுடன் இணைந்து “ஜெய் ஸ்ரீராம்” என்று  முழக்கமிடுகிறார்.

டிசம்பர் 5, 1992 அன்று சம்மட்டிகளோடும் கடப்பாரைகளோடும் வரிசையில் நிற்கும் கரசேவகர்கள்.

முகமூடி அணிந்த ஒரு நபர், ஒத்திகையின் போது கரசேவகர்களுக்கு வழிகாட்டுதல் கொடுக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்படுவதற்கு முந்தைய நாள் இரவு.

உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட குறியீட்டுக் கரசேவைக்காக, டிசம்பர் 6, 1992 அன்று சரயு நதியில் இருந்து நீரும், மணலும் எடுத்து வரும் கர சேவகர்கள்.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட நாளன்று காலையில், பாஜக தலைவர் எல்.கே. அத்வானி ராம ஜென்மபூமி இயக்கத்தின் தலைவர்களை சந்திக்கிறார்.

பாபர் மசூதி இடிக்கப்பட்டுக் கொண்டிருக்கும்போது பல்வேறு பாஜக தலைவர்கள் அந்த இடத்தில் இருந்தனர். இடமிருந்து வலமாக, அன்றைய பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி, எல்.கே அத்வானி மற்றும் விஜயராஜே சிந்தியா ஆகியோர் அமர்ந்திருக்கின்றனர்

ராம் கதா கஞ்ச் எனுமிடத்தில், விசுவ இந்து பரிஷத் அமைப்பின் தலைவர் அசோக் சிங்கால் (நின்று கொண்டிருப்பவர்), உமா பாரதி (சிங்காலுக்கு வலப்புறம் நிற்பவர்) ஆகியோர் ராஜ்நாத் சிங்கை சந்தித்தனர்.

பாபர் மசூதியை இடிக்கும் கர சேவகர்கள்.

புது டெல்லியில் அத்வானி கைது செய்யப்பட்ட போது எடுத்த படம். அவருக்கு வலப்புறம் அவரது மனைவி கம்லா அத்வானி இருக்கிறார். முன்னால் நிற்பது இன்றைய பிரதம மந்திரி நரேந்திர மோடி

படம் : பிரவீன் ஜெயின் (தேசிய புகைப்பட ஆசிரியர், தி பிரிண்ட் இணையதளம்)

தமிழாக்கம் : நந்தன்

நன்றி : தி பிரிண்ட்

மக்கள் அதிகாரம் : தோழர் ராஜு மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் !

PP Letter head

பத்திரிகைச் செய்தி

06.08.2020

மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு அவர்கள் மீதான அவதூறுக்கு கண்டனமும், எமது மறுப்பும் !

ன்பார்ந்த நண்பர்களே!

வணக்கம். கீற்று இணைய தளத்தில் 4-8-2020 அன்று ஆம்பள்ளி ஒருங்கிணைப்புக்குழு சார்பில் “சீரழிவு சகதியில் மூழ்கி விட்ட பு.ஜ.தொ.மு மற்றும் சகோதர அமைப்புகள்” என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு மீது திட்டமிட்டு அவதூறு கூறப்பட்டுள்ளது.

“சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு அப்போது மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் மாநில ஒருங்கிணைப்பாளராக இருந்தவரும், தற்போது மக்கள் அதிகாரம் அமைப்பின் தலைமைக் குழுவில் இருப்பவருமான திருவாளர் ராஜூ அவர்கள் ஒரு கோடி ரூபாய்க்குச் சொத்து வாங்கியதைப் பற்றி அந்த அமைப்பின் அரசியல் தலைமைக்கு அந்தப் பகுதி தோழர்கள் தகவல் தெரிவித்தார்கள். அதற்குத் தலைமையின் எதிர்வினை “அந்த ஒரு கோடி ரூபாய் பணம் தவறான வழியில் வந்தது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்” என்று தகவல் தெரிவித்தவர்களிடமே கேள்வி கேட்டதுதான்.”

இது ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவில் உள்ள விருத்தாச்சலம் பகுதியை சேர்ந்த திரு.ஜெயகாந்த்சிங் என்பவர் அவர் செயல்பட்டு வந்த விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பில் இருந்து நீக்கப்பட்டபோது ‘சூறாவளி’ எனும் பெயரில் அவர் நடத்திய வலைத் தளத்தில் எழுதிய அவதூறுதான். பல வருடங்களாக சீந்துவாரற்று கிடந்த அவதூறை தூசி தட்டி எடுத்து வேறு இணையத் தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். தான் எழுப்பிய மாபெரும் குற்றச்சாட்டிற்கு ஒரு ஆதாரத்தைக் கூட இத்தனை ஆண்டுகளாக ஏன் திரட்டவில்லை என அவருடன் சேர்ந்து எழுதும் ஆம்பள்ளி ஒருங்கிணைப்பு குழுவினர் கேள்வி கேட்காமல் அந்த அவதூறை அப்படியே வாந்தி எடுத்துள்ளனர்.

எவ்வித முகாந்திரமும் இல்லாமல் போகின்ற போக்கில் அவர் கோடிகளில் சொத்து சேர்த்துள்ளார் என்று இவர்கள் சொல்வதற்கும் பா.ஜ.க. பாசிஸ்டுகளின் பிரச்சார முறைக்கும் வித்தியாசம் ஏதும் இல்லை. குற்றவியல் சட்டங்களில் திருத்தங்கள் கொண்டு வருவதன் மூலம் போலீசு எப்.ஐ.ஆர் போட்டுவிட்டால் குற்றசாட்டப்பட்டவர் தான் இனி, தான் தவறு செய்யவில்லை என நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டுமாம்.

இந்த காவி பாசிஸ்டுகளின் ‘நீதி பரிபாலன’ முறையை தான் இவர்களும் முன்வைக்கிறார்கள். நாங்கள் குற்றஞ்சாட்டிவிட்டோம், முகாந்திரம், ஆதாரம் என்று யாராவது அவர்களிடம் கேட்டால், குற்றம் செய்யவில்லை என நீங்கள் நிரூபியுங்கள் எனத் திருப்பி கேட்கிறார்கள்.

தோழர் ராஜு தன் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது யாரும் தெரிந்து கொள்ளக் கூடிய வெளிப்படையானதுதான். திரு.ஜெய்காந்த்சிங்கும் தோழர் ராஜுவும் பல்வேறு போராட்டங்களில் அக்காலத்தில் இணைந்து ஈடுபட்டது விருதாச்சலம் வட்டாரம் அறிந்ததே. அதுமட்டுமன்றி தோழர்.ராஜுவின் குடும்பத்தில் ஒரு நபராகவும் அவர் பழகி வந்துள்ளார். அப்பேற்பட்ட ‘தோழரால்’ ஆதாரத்தைக் காட்ட முடியவில்லையேன்றால் என்னவென்பது. குற்றச்சாட்டு வைத்த ஜெயகாந்த் சிங்கிற்கு இது பொய் என்பது நன்கு தெரியும்.

படிக்க:
அவதூறு பரப்பும் தினமலருக்கு மக்கள் அதிகாரம் எச்சரிக்கை !
கருத்துச் சுதந்திரத்தை நசுக்கும் காவி பாசிசத்தை எதிர்த்து மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தினமலர் போன்று அவதூறுகளை அவிழ்த்துவிட்டால், மக்களுக்காக பணியாற்றும் அமைப்புகளின் எதிரிகளுக்கும் துரோகிகளுக்கும்தான் அது பயன்படுமே ஒழிய, சொல்பவர்களின் நோக்கத்திற்குகூட அவை பயனளிக்காது. இதை சொல்வதற்கு காரணம் பொதுவாழ்க்கையில் குறிப்பாக புரட்சிகர அரசியலில் ஈடுபடும் அனைவருக்கும், விலைமதிப்பில்லாத ஒரே சொத்து அவர்களின் நேர்மைதான். அதனை அவதூறால் சிதைக்க முயல்வது எத்தகைய அயோக்கியத்தனம்.

கீற்று இணையத் தளம் என்பது முற்போக்கானவர்கள், பகுத்தறிவாளர்கள் தங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளும் இடமாகவும் அறியப்பட்டு வருகிறது. மக்கள் அதிகாரம் மீதும், அமைப்பிலுள்ள தோழர்கள் மீதும் அரசியல் ரீதியாக அவர்கள் செய்யக்கூடிய தவறுகளை, தனிநபர்களாக நாங்கள் செய்யக்கூடிய தவறுகளை சுட்டிக் காட்டுவதற்கு அனைவருக்கும் உரிமை உண்டு. எனினும் கீற்று ஓர் நேர்மையான தளம் என்றால் மக்களுக்காக செயல்படும் அமைப்பின் தலைவர் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம், அடிப்படை ஆதாரம் என்ன என்பதைக் கேட்டு தீர விசாரித்த பின்னர் தான் இந்த கட்டுரையை பதிப்பித்து இருக்க வேண்டும்.

மேலும் பல்வேறு இடதுசாரி, பெரியாரிய, அம்பேத்கரிய இயக்கங்களின் சங்கமமாக இருக்கிற கீற்று இணையதளம் தோழர் ராஜு பற்றி விசாரித்து தெரிந்து கொள்வது ஒன்றும் சிரமமான காரியமும் அல்ல. எனவே இது போன்ற அவதூறுகளை பரப்புவதை கீற்று இணையத் தளம் இனியாவது நிறுத்திக் கொள்ளவும், மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ மீது அவதூறாக வெளிவந்த பகுதிகளை மேற்கூறிய கட்டுரையில் இருந்து உடனே நீக்கவும் வேண்டும். தங்களது தவறை பரிசீலிக்க வேண்டும்.

தோழர் ராஜு பற்றி குற்றச்சாட்டு முன்வைப்பவர்களிடம் அதுதொடர்பாக ஏதேனும் ஆதாரம் இருந்தால் கேளுங்கள். அதை எடுத்துக் கொண்டு விருத்தாசலம் வாருங்கள். தோழர் ராஜு அவர்களின் சொத்து விபரங்களை பற்றியும், வாழ்வாதாரத்திற்கு அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது பற்றியும், எல்லா வகையிலும் பதில் அளிக்க அவர் எப்போதும் தயாராகவே இருக்கிறார் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

தலைமைக் குழு
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை