Friday, June 26, 2026
முகப்பு பதிவு பக்கம் 382

மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?

த்தாம் வகுப்பு கணிதத் தேர்வு வினாத்தாள் மிகக் கடினமாக இருந்தது எனச் செய்திகள் வெளிவந்துள்ளன. பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் சில பாடத் தேர்வுகள் கடினமாகவும் சில பாடத் தேர்வுகள் எளிதாகவும் இருந்ததாக மாணவர்கள் குறை கூறுவதும், செய்திகள் வெளிவருவது வழமையான ஒன்றுதான். ஆனால், நிகழாண்டிற்கான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு குறித்து வந்திருக்கும் செய்தி, அத்தகைய வழமையான ஒன்று அல்ல. கணிதத் தேர்வு ஆசிரியர்களே வெறுத்துப்போய் வேதனைப்படும் அளவிற்கு கணிதத் தேர்வு வினாத்தாள் கடினமாகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது.

“மாணவர்கள் தேர்ச்சி பெற உதவும் 5 மதிப்பெண் பகுதியில் கேட்கப்பட்ட 9 கேள்விகளுள் ஒரேயொரு கேள்விக்கு மட்டும்தான் சராசரி மாணவர்களால் விடையளிக்க முடியும். மீதமுள்ள எட்டு கேள்விகளும் கடினம், மிகக் கடினம் என்ற வகையைச் சேர்ந்தவை” எனக் கணித ஆசிரியர்கள் இத்தேர்வின் பயங்கரத் தன்மையை அம்பலப்படுத்தியுள்ளனர்.

“வினாத்தாள் தயாரித்தவர்கள் தங்களது திறமையை வினா வடிவில், அதுவும் மாணவர்களிடம் காட்டியுள்ளனர்” எனக் கணித ஆசிரியர்கள் வெளிப்படையாகவே குற்றஞ்சுமத்தியுள்ளனர்.

100 மதிப்பெண் எடுக்கக்கூடிய திறமையான மாணவர்கள்கூட இந்தத் தேர்வில் 75 மதிப்பெண்கள் வரைதான் பெறமுடியும் எனும்போது, சராசரி மற்றும் அதற்குக் கீழிருக்கும் மாணவர்களின் நிலைமை நிச்சயம் பரிதாபத்துக்குரியதுதான்.

சராசரி என முத்திரை குத்தப்படும் மாணவர்களைப் பயமுறுத்துவது ஆங்கிலம் மற்றும் கணிதத் தேர்வுகள்தான். இந்நிலையில் கடினமாகத் தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த வினாத்தாள் அம்மாணவர்களை நிச்சயம் மனச்சோர்வுக்குள்ளாக்கி, அடுத்த இரண்டு தேர்வுகளை அவர்கள் எதிர்கொள்வதிலும்கூடப் பாதிப்புகளை ஏற்படுத்தவே செய்யும்.

“பெயிலாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் இவ்வினாத்தாள் தயாரிக்கப்பட்டிருக்கிறது” என சென்னையில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் கணித ஆசிரியை, ஒன்பதாவது வகுப்பைச் சேர்ந்த தனது மாணவர்களிடம் கூறித் தனது ஆதங்கத்தைக் கொட்டித்தீர்த்திருக்கிறார். இக்குற்றச்சாட்டு நிச்சயமாக அபாண்டமானதோ, மிகைப்படுத்தப்பட்டதோ அல்ல.

நீட் தேர்வு அனிதா என்ற இளம் மாணவியைப் பலி வாங்கியது. இந்தக் கணிதத் தேர்வு எத்தனை இளம் மாணவர்களின் உயிரைக் குடிக்கக் காத்திருக்கிறதோ?

சடலமாக பூங்குழலி.

கள்ளக்குறிச்சிக்கு அருகிலுள்ள சின்னசேலத்தைச் சேர்ந்த தனியார் பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி பூங்குழலி, கணிதத் தேர்வு முடிந்த அன்றே, அப்பள்ளியின் விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுவிட்டாள். அம்மாணவியின் அகால மரணத்திற்கு இந்தக் கடினமான தேர்வு காரணமாக இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்திருக்கிறது.

நீட் தேர்வு தமிழகத்தில் திணிக்கப்பட்ட பிறகு, பாடப் புத்தகங்களைக் கனமாகவும், வினாத்தாட்களை கடினமாகவும் வைப்பதன் மூலம்தான் மாணவர்களின் திறமையைப் பரிசோதிக்க முடியும். தகுதியான மாணவர்களை உருவாக்க முடியும் என்ற கருத்தைத் தமிழகக் கல்வித்துறையே பரப்பி வருகிறது.

பத்தாம் வகுப்பு கணித வினாத்தாள் மிகக் கடினமாகத் தயாரிக்கப்பட்டிருப்பது மட்டுமின்றி, ஒன்றாம் வகுப்பு தொடங்கி பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலும் உள்ள பாடத் திட்டத்தை சி.பி.எஸ்.இ.க்கு இணையாக மாற்றுவது என்ற பெயரில் பாடப் புத்தகத்தின் எடையைக் கூட்டியிருப்பதையும் இந்தப் பின்னணியில் வைத்துத்தான் பார்க்க வேண்டும்.

பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அனைவரும், அவ்வளவு ஏன், கணிதம் மற்றும் அறிவியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் பயிலும் மாணவர்கள் அனைவரும் நீட் தேர்வு எழுதுவதில்லை எனும்போது, ஒன்றாம் வகுப்பு தொடங்கியே மாணவர்கள் சி.பி.எஸ்.இ.க்கு இணையான பாடத்திட்டம் என்ற சிலுவையை ஏன் சுமக்க வேண்டும்?

படிக்க:
பிட் அடித்து 100% ரிசல்ட்! தனியார் பள்ளிகள் சாதனை!!
நாமக்கல் பிராய்லர் பள்ளிகள்!

பள்ளிக்குப் போவதும், கற்பதும் இனிமையாக இருக்க வேண்டும் என சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள் வலியுறுத்தி வரும் வேளையில், கல்வி கற்பதைப் பெரும் சுமையாக, மன அழுத்தமாக மாற்றிவருகிறது, இந்திய அரசு.

சூத்திரர்களுக்கும், நான்கு வருணத்திற்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்ட தீண்டத்தகாதவர்களுக்கும் கல்வி கற்கும் உரிமையை, வாய்ப்புகளை மறுத்ததன் மூலம் பார்ப்பனர்களை அறிவாளிகளாகத் தூக்கி நிறுத்தியது, மனு நீதி. அந்த மத்தியகால நீதியை, இன்றைய ஜனநாயக யுகத்தில் கடைபிடிக்க வழியில்லை. அதனால்தான், ஏழைகளுக்கும், சூத்திர, தாழ்த்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கும் அடிப்படை கல்வி தொடங்கி உயர்கல்வி வரையிலான உரிமைகளை மறுக்க புதிய கருவிகளை, உத்திகளை உருவாக்கி வருகிறது, பார்ப்பன – பனியா ஆளுங்கும்பல்.

(மாதிரிப் படம்)

கல்வி உரிமைச் சட்டத்தில் வரையறுக்கப்பட்ட ஒன்றாம் வகுப்பு தொடங்கி எட்டாம் வகுப்பு வரையில் எந்தவொரு மாணவனையும் பெயிலாக்கக்கூடாது என்ற விதி கைவிடப்பட்டிருப்பது, ஐந்தாம் வகுப்பு மற்றும் எட்டாம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு நடத்துவது, அத்தேர்வுகளில் தேர்ச்சியடையாத மாணவர்களைத் தொழிற்கல்விக்கு அனுப்பிவைப்பது, மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்குக் கொண்டுவரப்பட்டிருக்கும் நீட் தேர்வை, பொறியியல், கலை, அறிவியல் உள்ளிட்ட பிற உயர்கல்வியிலும் புகுத்துவது, ஐந்தரை ஆண்டுகள் மருத்துவம் படித்து முடித்த மாணவர்கள் தமது பல்கலைக்கழகங்கள் நடத்துகின்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றால் மட்டும் போதாது, நீட்டைப் போலவே மைய அரசால் நடத்தப்படும் எக்ஸிட் எனப்படும் தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்றால்தான் மருத்துவப் பட்டத்தைப் பெற முடியும் என்ற புதிய தேர்ச்சி முறையை அறிமுகப்படுத்த முயலவுது ஆகிய இவையனைத்தும் கல்வித்துறையில் புகுத்தப்படும் புதிய மனுநீதிகளாகும்.

இத்தகைய புதிய புதிய தேர்வுகளின் மூலம் தகுதியும் திறமையும் கொண்ட மாணவ சமுதாயத்தை உருவாக்கப் போவதாக ஆளுங்கும்பல் கூறுவது வடிகட்டிய பொய். மாறாக, இது மாணவர்களை வடிகட்டுவதற்கான ஏற்பாடு. அனிதாவைப் போல திறமையிருந்தும் பணமில்லாத ஏழை மாணவர்கள், நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைக் குடும்பங்கள் மற்றும் உதிரித் தொழிலாளர் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களை வடிகட்டி, ஒதுக்கி, அவர்களைத் திறமையற்றவர்கள் என முத்திரை குத்துவதற்கான ஏற்பாடுகள்தான் இப்புதிய தேர்வு முறை.

மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிட்டு, குழந்தைத் தொழிலாளர்களாகப் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், எட்டாம் வகுப்பு வரை அனைவருக்கும் தேர்ச்சி என்ற முறை கொண்டுவரப்பட்டது. இப்பொழுது, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புகளுக்கும் பொதுத் தேர்வுத் திணிக்கப்படுவதன் நோக்கமே, அத்தேர்வுகளில் தேர்ச்சியடையாத மாணவர்கள் படிப்பைப் பாதியிலேயே கைவிட நிர்பந்திப்பதுதான். அவர்களைக் குழந்தைத் தொழிலாளர்களாக உழைப்புச் சந்தையில் தள்ளுவதுதான். தேர்ச்சியடையாத மாணவர்களுக்குத் தொழிற்கல்வி வழங்கப்படும் என்ற அறிவிப்பு குழந்தைத் தொழிலாளர் முறையை மூடிமறைக்கும் தந்திரம், தேன் தடவிய விஷம் தவிர வேறல்ல.

படிக்க:
கல்வி உரிமையை பறிக்க வரும் இந்திய உயர்கல்வி ஆணையம் !
கல்வி தனியார்மயம் – எரியும் வீட்டில் எண்ணெய் ஊற்றும் பார்ப்பனீயம் !

அனைவருக்கும் தரமான, இலவசக் கல்வி அளிக்க மறுக்கும் அரசு, தனது பொறுப்பற்ற கிரிமனல்தனத்தை மூடிமறைத்துக்கொள்ள, உனக்குத் தகுதியில்லை, திறமையில்லை என மாணவ சமுதாயத்தைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறது.

தமிழகத்திலிருந்து மட்டும் ஒவ்வொரு ஆண்டும் ஒரு இலட்சத்துக்கும் குறையாத மாணவர்கள் பொறியியல் படிப்பை முடித்து வெளியே வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் படிப்பிற்கு ஏற்ற தகுதியான வேலை கிடைப்பதில்லை. இதற்குக் காரணம் கேட்டால், அவர்களுக்குத் தகுதியில்லை எனத் தொழில் அதிபர்கள் குற்றஞ்சுமத்துகிறார்கள்.

அப்படி அவர்கள் திறமையற்றவர்களாக வெளியே வருவதற்கு யார் காரணம்? பொறியியல் கல்லூரிகள் என்ற பெயரில் வசூல்வேட்டையை மட்டுமே நடத்திவரும் கல்லூரி அதிபர்கள், அக்கல்லூரிகள் இயங்குவதற்கு அனுமதி கொடுத்திருக்கும் ஏ.ஐ.சி.இ.டி., பல்கலைக்கழகம் உள்ளிட்ட அரசு அமைப்பகள், காலாவதியாகிப் போன பாடத் திட்டங்கள் ஆகியவைதான். கல்லூரி அதிபர்கள் – அதிகார வர்க்கம் என்ற இந்தக் கூட்டணியைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்ற மறுக்கும் தொழில் அதிபர்கள் – நிபுணர்கள் கூட்டம், அப்பாவி மாணவர்களைத் திறமையற்றவர்களாக, தகுதியற்றவர்களாகக் குற்றஞ்சுமத்தி, அவர்களை ஒதுக்கிவைக்கிறது.

(மாதிரிப் படம்)

ஈராயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கல்வி கற்பதிலிருந்து சூத்திரர்களும், பஞ்சமர்களும் பார்ப்பனியத்தால் ஒதுக்கிவைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து சமூக நீதிக்காக நடத்தப்பட்ட போராட்டங்கள்தான் அப்பார்ப்பனிய மேலாதிக்கத்தை வீழ்த்தியது. அச்சமூக நீதிப் போராட்டங்கள் தற்சமயம் வீரியம் இழந்து நிற்கும் நிலையைப் பயன்படுத்திக்கொண்டு, மீண்டும் கல்வியில், வேலைவாய்ப்புகளில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்டிக்கொள்ள பார்ப்பன – மேல்சாதி சக்திகள் முயன்றுவருகின்றன.

இம்முயற்சியைத் தோற்கடிப்பதற்கு மாணவர்களும் பெற்றோர்களும் மீண்டும் சமூக நீதி கோரிப் போராடுவதைத் தவிர வேறுவழியில்லை. ஆயின், இப்புதிய சமூக நீதிப் போராட்டம் நீட் உள்ளிட்ட பார்ப்பன – பனியா சூழ்ச்சிகளுக்கு எதிராக மட்டுமின்றி, கல்வியை முற்றிலுமாகவே தனியார்மயமாக்கும் புதிய கல்விக் கொள்கைக்கு எதிராகவும் நடத்தப்பட வேண்டும்.

கல்வியைப் பார்ப்பன சமஸ்கிருதமயமாக்காதே, கல்வியைத் தனியார்மயமாக்காதே, ஆரம்பக் கல்வி தொடங்கி ஆராய்ச்சி கல்வி வரையிலும் தரமான, தாய்மொழிக் கல்வியை இலவசமாக வழங்கு என்பவைதான் இன்றைய காலத்தின் கோரிக்கைகளாகும்.

செல்வம்

நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே | டிவிட்டர் லந்து !

மோடி என்றால் பீதி என்று அர்த்தம் !

க்களவை தேர்தல் நெருங்க இருக்கிற நிலையில், மோடி தலைமையிலான  பாஜக அரசு பதட்டத்தில் உள்ளது. எதையாவது செய்து மீண்டும் பதவியில் அமர்ந்துவிட வேண்டுமென மோடி-பாஜக கும்பல் துடித்துக் கொண்டிருக்கிறது. புல்வாமா தாக்குதலுக்குப் பிறகான தேசபக்தி முழக்கங்கள் புஸ்வானமாகிவிட்ட நிலையில், புதன்கிழமை காலை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார்.

“இன்று 11.45 லிருந்து 12 மணிக்குள் முக்கிய அறிவுப்பு ஒன்றை அறிவிக்கப்போகிறேன். அனைவரும் தொலைக்காட்சி/சமூக வலைதளங்கள்/வானொலி வாயிலாக கட்டாயம் அறிந்து கொள்ளவும்” என்ற அந்தப் பதிவைப் பார்த்து, நாடே பதட்டத்தில் உறைந்தது. ‘பதட்டம்’ என்கிற வார்த்தையை பிரயோகிக்க தயங்கிய வெகுஜென ஊடகங்கள் ‘நாடே ஆர்வமாக’ உள்ளதாக பயந்துபடியே பிரேக்கிங் நியூஸ் போட்டார்கள்.

மக்களின் பதட்டத்தை ரசித்த ‘சாடிஸ்ட்’ மோடி நண்பகல் 12.10 வாக்கில் ‘முக்கிய’ அறிவிப்பை வெளியிட்டார். எதிரிகளின் செயற்கைகோள்களை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி என்பதைத்தான் மோடி ‘முக்கிய’ செய்தியாக சொன்னார்.  பொக்ரானில் அணுகுண்டு சோதனை நடத்தியதை அறிவித்த வாஜ்பாயி, பணமதிப்பு நீக்கத்தை அறிவித்த மோடி என இந்தியாவை ஆண்ட பாசிச பாஜகவினரைத் தவிர வேறு எந்த பிரதமரும் இத்தகைய ‘முக்கிய’ அறிவிப்புகளை செய்து மக்களை பதட்டமடைய வைக்கவில்லை. பாசிசத்தின் சிறப்பே அதுதானே?!

படிக்க:
செயற்கோளைத் தாக்கும் ஏவுகணை | மோடியின் தேர்தல் வான வேடிக்கை !
பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

மோடியின்  ‘முக்கிய’ அறிவிப்புக்கு சமூக ஊடகங்களில் மக்கள் எதிர்வினையாற்றத் தொடங்கிவிட்டார்கள். ஐந்தாண்டுகால மோடி ஆட்சியின் மிகப் பெரும் இழிசாதனைகள் பலவற்றை நினைவுபடுத்தி மக்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். சிலவற்றை இங்கே தொகுத்திருக்கிறோம்.

“இது வான்வெளி தொடர்பானது நண்பர்களே, உங்களுடைய பணம் பத்திரமாகிவிட்டது, போய் வேலைப் பாருங்கள்” என்கிறார் பத்திரிகையாளர் சகரிகா கோஷ்.

“மோடியின் ஏவுகணை சோதனையால் நிலாவுக்கு ஒன்னும் ப்ராப்ளம் இல்லயே…!” என கேட்கிறார் சிவராமன்.

“அவென்சர்ஸ் முன்னெடுப்பில் மோடியும் மூழ்கிப்போயிருக்கிறார். எனவே, கருந்துளைகள் திறந்துகொண்டு அதிலிருந்து தனோசும் அவருடைய இராணுவமும் தாக்கினால், இந்தியா அதை எதிர்கொள்வதில் முக்கிய பங்காற்றும்” என்கிறார் ஸ்காட்சி.

செயற்கோள்களை வீழ்த்தும் ஏவுகணை குறித்து 2012-ம் ஆண்டிலேயே இந்தச் செய்தி வெளியாகிவிட்டதை சுட்டிக்காட்டுகிறார் மகேஷ் லங்கா.

“ஓ…இன்னைக்கு உலக நாடக தினமா? இதுவே அனைத்தையும் சொல்லிவிடுகிறதே மோடிஜி!” என்கிறார் துஷ்யந்த்.

பிரதமர் மோடி ஏலியன்களுடன் உரையாடுகிறார்…

“எனக்குத் தெரிந்த கார் ஓட்டுநர் அண்ணன் ஒருவர்,

ப்ரோ அவசரப்பட்டு ஏடிஎம்ல இருந்த காசு எல்லாத்தையும் எடுத்துட்டேன்…2400தான் வெச்சிருந்தேன்

ஏன் ப்ரோ

ஏதோ அறிவிப்புன்னு சொன்னாங்க, அதான் பழைய ஞாபகம் வந்துடுச்சு…உடனே எல்லாத்தையும் எடுத்துட்டேன்.

நான் வாயை மூடிக்கொண்டேன்” என்கிறார் சஞ்சீவி சடகோபன்.

இந்திய டிவி நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் இன்றிரவு டிவி ஸ்டுடியோக்களில் இப்படி மிதக்கப்போகிறார்கள்…

வின்வெளி உடையிலும், செயற்கோளில் அமர்ந்தும், இந்திய கொடி பறக்கும் ஏவுகணை மீது அமர்ந்தும் – என பகடி செய்கிறார் மேக்நாத்.

பிரதமர் மோடியின் அறிவிப்பை கேலி செய்யும் மக்கள் மிகவும் மோசமானவர்கள். வரிசையில் நிற்க வைக்கப்படவில்லையே என்பதற்காக அவருக்கு நன்றி அல்லவா சொல்லியிருக்க வேண்டும்? என்கிறார் ஆதித்ய மேனன்

“சிறப்பான பணி DRDO. உங்களுடைய பணியால் பெருமை கொள்கிறேன்.

பிரதமருக்கும் வாழ்த்து தெரிவிக்க விரும்புகிறேன்… உலக நாடக நாள் வாழ்த்துகள்!” என்கிறார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.

“மதிப்பிற்குரிய பிரதமர் அவர்களே, நான் DRDO சாதனை குறித்து மகிழ்கிறேன். நாம் இப்போது கையால் மலம் அள்ளும் முறையை தொழிற்நுட்பத்தின் உதவியுடன் ஒழிப்பது குறித்து விவாதிக்கலாமா? மன்னிக்கவும், சொல்ல மறந்துவிட்டேன், மலக்குழி மரணங்களில் குஜராத் மாநிலம்தான் இரண்டாம் இடத்தில் உள்ளது. உண்மையில் இது சாதனைதான்” என்கிறார் அரசியல் செயல்பாட்டாளர் ஜிக்னேஷ் மேவானி.

“விண்வெளியில் ராக்கெட்டை சுட்டுவீழ்த்தும் தொழிற்நுட்பம் கொண்ட நாட்டில் 350 கிலோ வெடிகுண்டு வண்டியை கன்டுபிடிக்க முடியவில்லை” என்கிறார் இவர்.

இதை அறிவியலாளர்களே அறிவித்திருக்கலாம் அல்லவா? அப்புறம் தலைமை காவலாளி என்னதான் செய்வார்?

”அமேசான் காட்டில், நீங்கள் நடு இரவில் மாட்டிக்கொண்டால், பயங்கரமாக குளிரும், உங்கள் உடல் உறைந்து போகும்! மரணிக்கவும் வாய்ப்புள்ளது!

Reaction:நாங்க ஏன்டா நடு ராத்திரி அமேசான் காட்டுக்கு போகப்போறோம் Moment! 🙊”

“அறிவிப்பு என்று சொன்னதும் வங்கி, ஏ.டி.எம். நோக்கி ஓடுகிறார்கள். ஜனநாயகவாதிகள் அஞ்சுகிறார்கள். எப்படியும் கேடுகெட்ட செய்தியைத்தான் சொல்லப்போகிறார் என்பதைத்தவிர யாரும் எதுவும் நினைக்கவில்லை. மக்களிடம் எவ்வளவு அவநம்பிக்கை, கெடு உணர்வு.! மோடி என்றால் இனி தமிழில் பீதி என்று அர்த்தம்”

தொகுப்பு:

அந்த பசங்கள எல்லாம் கிரிக்கெட்டுல வளர விடக்கூடாது …

சென்னையில் உள்ள ஒரு பிரதான ரயில்நிலையத்தில் ரயிலுக்காக காத்திருந்தேன். அப்போது 5 பதின்வயது சிறுவர்கள் (வயது 15-17க்குள் இருக்கும்) கிரிக்கெட் பயிற்சியை முடித்து விட்டு விளையாட்டு உபகரணங்களுடன் பயிற்சி சீருடையில் தங்களுக்குள் பேசி சிரித்துக்கொண்டே வந்தனர். அவர்களில் 2 பேர் நான் அமர்ந்திருந்த இருக்கையிலும், 3 பேர் வேறு இருக்கையிலும் அமர்ந்தனர்.

எனது அருகில் அமர்ந்த இருவரும் அன்றைய தினம் நடைபெற்ற பயிற்சியைப் பற்றியும், வேறு இருக்கையில் அமர்ந்திருந்த அந்த 3 பேரில் ஒருவனைப் பற்றியும் தங்களுக்குள் பேசத் தொடங்கினர்.

“அவன் நல்லா பெர்ஃபார்ம் பண்ணிட்டு வரான்டா.. டாப் ஆர்டர்ல உனக்கு ரொம்ப டஃப் கொடுப்பான்டா. அந்த பசங்கள எல்லாம் வளர விடக்கூடாது… பாத்துக்க மச்சி”

“அவனுக்கெல்லாம் நான் பயப்படலடா… ‘கோச்’சும், ‘கிளப்’பும் நமக்குதான் சப்போர்ட். கிளப் மேட்சஸ்ல ‘வின்’ பண்றதுக்கு மட்டும்தான் இவனுங்கள எல்லாம் கோச் வெச்சிருக்காரு… நம்ம கூட விளையாட அவனுங்களுக்கு தகுதியே கிடையாது”

மாதிரிப் படம்

“பின்ன ஏண்டா, அவனுங்க கூட ஜாலியா பேசுறே?”

“அவனுங்கள தேவைப்படுற நேரத்துல யூஸ் பண்ணிட்டு கழட்டி விட்றனும்டா. பகைச்சுக்கிட்டா தேவையில்லாத பிரச்சனையாகிடும்.”

“அப்ப இவனுங்களையெல்லாம் கண்டுக்கத் தேவையில்லைன்னு சொல்றியா?”

“தமிழ்நாடு கிரிக்கெட்டே நம்மகிட்டதான்டா இருக்கு. யாருக்கும் பயப்பட தேவையில்ல”

அவர்களின் உரையாடல் நிறைவடைவதற்கு முன்பே ரயில் வந்தது. இந்த உரையாடலை நடத்தியவர்களின் மொழி, தோற்றம், உடல் மொழி அனைத்தும் பார்ப்பனர்களை நினைவுபடுத்தியது. அவர்களில் ஓரிருவர் ’உயர்’ சாதிகளாகவும் இருக்கலாம். உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த எனக்கு, இந்த சிறு வயதிலேயே இப்படி ஒரு சாதி வன்மத்துடன் உள்ளார்களே… இவர்கள் வளர்ந்தால் எப்படி இருக்கும்? எனத் தோன்றியது.

அந்த சிறுவர்கள் அதே பாணியில் இருபிரிவுகளாக வெவ்வேறு இருக்கைகளில் அமர்ந்தனர். நான் இம்முறை அந்த 3 சிறுவர்களுக்கு அருகில் சென்று அமர்ந்தேன். ஏதோ தனிப்பட்ட விசயங்களை பற்றி பேசி சிரித்துக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு சிறுவன் திடீரென தனது போனை எடுத்து பேசத் தொடங்கினான்.

“மச்சி.. இன்னைக்கு செம ஆட்டம்டா… வச்சிப் பிரிச்சு எடுத்துட்டேன்.. அவனவன் மூஞ்சில அல்லு இல்ல…” எனத் தொடங்கி, அன்றைய ஆட்டத்தின் சிறப்பை சத்தமாக கத்திப் பேசினான்.

வேறு இருக்கையில் அமர்ந்த அந்த இரு சிறுவர்களும் இவன் பேச்சை முகம் சுழித்தவாறு கேட்டுக் கொண்டிருந்தனர்.

படிக்க:
மீண்டும் ஒரு மோடி ஆட்சியை இந்த நாடு தாங்காது !
ஆதிக்க சாதிவெறிக்கு எதிராக முகிலனின் கருத்தோவியங்கள் !

பின்னர் போனை வைத்த அவனிடம், அருகில் அமர்ந்திருந்த அவனது நண்பர்கள் கேட்டனர், “ஏண்டா இவ்ளோ கத்தி பேசுற…?”

“நான் யாருக்கும் போன் பேசல மச்சி… சும்மா சீன் போட்டேன்… அவனுங்க ரெண்டு பேரு மூஞ்ச பாத்தியா? காத்து போன பலூனாட்டம் சுருங்கிடுச்சி … கடுப்பாகட்டும்…”

“ஏண்டா, இந்த தேவையில்லாத வேலை…”

“அவனுங்க எல்லாம் ஒரு ஆளாடா; கிரிக்கெட்டே விளையாட தெரியாம நல்ல பேட், கிட்ஸ் (Kits) மட்டும் எடுத்துட்டு வந்து சீன் போடுறாங்க..”

“அவனுங்கள பத்தி நீ ஏன்டா திங்க் பண்றே?”

“மச்சி… எனக்கும் ரஞ்சி, டிஎன்பிஎல், ஐபிஎல், இந்தியன் டீம்ல ஆடணும்னு ஆசைதான். என்னதான் நமக்கு திறமை இருந்தாலும் நம்மால அதெல்லாம் முடியாது.. அவனுங்களுக்கு திறமையே இல்லன்னாலும் சான்ஸ் கிடைக்கும்… நம்ம கிளப்ல விளையாடி அடுத்த லெவலுக்கு போன எல்லாரும் அவங்க ‘ஆளுங்க’ தான்.”

“டேய் … நம்ம கோச் நம்ம அடுத்த லெவலுக்கு கொண்டு போறேன்னு சொன்னாரே டா…”

மாதிரிப் படம்

“அடப் போடா… கோச் நமக்கு ஒரு மாதிரியும், அவங்க ஆளுங்களுக்கு வேற மாதிரியும் ட்ரைன் பண்றான்… நம்மலாம் இந்த மாதிரி அவனுங்கள கலாய்ச்சி சந்தோசப்பட்டுக்கிட்டாதான் உண்டு”

“மச்சான்… அதெல்லாம் இல்லடா… கோச் நல்லவரு… என்ன அண்டர் 17 செலக்சனுக்கு அனுப்புறதா சொன்னாரு..”

“வெள்ளந்தியா இருக்கியேடா… நடந்தால் பார்ப்போம், அந்தாள அதிகம் நம்பாத… அவ்வளவுதான் சொல்வேன்… பாத்துக்கோ…”

விரக்தியோடு சொல்லி சிரித்தனர் அச்சிறுவர்கள்.

நான் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது… ரயிலிலிருந்து இறங்கி ரயில் நிலைய படிக்கட்டுகளில் ஏறினேன். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கலாம். மனிதர்களுக்குள் ஏற்ற இறக்கங்கள் இருந்தால் மனிதம் மரித்துப்போகும்.

படிக்க:
ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐயர் ஆத்து அலப்பறைகள் !
வினவு தளத்தில் 2018-ம் ஆண்டில் வாசகர்களால் அதிகம் வாசிக்கப்பட்ட கட்டுரைகள் !

அந்த இரு சிறுவர்கள் மீதும் எனக்கு கோபம் வரவில்லை; இந்த இளம் வயதில் சாதிய நஞ்சை அவர்களுள் விதைத்த அவர்களின் பெற்றோர்கள், சமூகம், கல்விமுறை, சாதி வெறியை கண்டிக்காத ஆசிரியர்கள், திறமையை மதிக்காமல் சாதி அடிப்படையில் வாய்ப்பு கொடுக்கும் தமிழ்நாடு கிரிக்கெட் வாரியம், பிசிசிஐ போன்றவற்றின் மீதுதான் கோபம் வருகிறது.

ஒவ்வொரு பயணமும் நமக்குப் பல்வேறு அனுபவங்களை கற்றுத் தருகிறது. இன்றைய அனுபவம் என்றும் மறக்க முடியாதது.

அஹமது சமூக ஆர்வலர்.

பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் ?

பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் : பாகம் – 1

வீட்டு நிர்வாகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். வருகிற வருமானத்தில் பெரும்பகுதியை அவருடைய மேக்அப் செலவுக்கு, வாசலில் வைரம் பொதித்த பெயர் பலகை வைப்பதற்கு, உல்லாச பயணங்களுக்கு, தன்னுடைய ஆடை ஆபரணங்களுக்கு செலவு செய்கிறார். இன்னொரு பக்கம் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் சோத்துக்கே வழியில்லாமல் திண்டாடுகிறார்கள்.

உடல்நலமில்லாமல் கிடக்கும் ஒருவருக்கு அவசரசிகிச்சைக்குக் கூட பணமில்லாமல் தவிக்கிறார்கள். மருத்துவத்துக்கு பணம் கேட்டால் பாக்கெட்டை விரித்து இருந்தால் தரமாட்டேனா என்கிறார் நிர்வாகி. ஆனால், இன்னொரு பக்கம் இந்த நிர்வாகி கலர் கலராக பல ஆயிரங்களுக்கு சொக்காய் வாங்கி மாட்டிக்கொண்டு திரிந்தால் குடும்பத்தினருக்கு கடுப்பாகும்தானே…

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : மார்ச் 30 சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் !
மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் – பொளந்து கட்டும் சென்னை மக்கள் | காணொளி

கடந்து ஐந்தாண்டுகால மோடி ஆட்சி அப்படித்தான் இருந்தது.

இந்த அரசு கடந்து ஐந்தாண்டுகளில் செய்த விளம்பர செலவு மட்டுமே 4800+ கோடிகள். பிரதமர் உலகம் சுற்றிப்பார்க்க ஆன செலவுகள் மட்டுமே 2000+ கோடிகள். இதில் அவருடைய பர்சனல் விமான பராமரிப்பு செலவு 1088 கோடி.

(இவை எல்லாம் ஆர்டிஐ போட்டு வாங்கப்பட்ட தகவல்கள்)

இப்படி உலகம் சுற்றியதால் கடந்த ஐந்தாண்டுகளில் மூன்றில் ஒருநாள் அவர் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். இப்படி இருந்ததால் என்ன பிரயோஜனம். நாட்டுக்கு அந்நிய முதலீடுகள் வந்து குவிந்தனவா… நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்ததா… இல்லை. சொல்லப்போனால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்த ஐந்தாண்டுகளில் ஆளைவிட்றா என சுவர் ஏறி குதித்து தப்பித்துதான் சென்றிருக்கிறார்கள்.

விவசாயிகலின் வாழ்வை அழிக்க போடும் திட்டம் புல்லட் ரயில்

அடுத்து மும்பை தொடங்கி அகமதாபாத் வரை ஓடுகிற புல்லட் ரயில் ப்ராஜெக்ட். நாட்டில் அவன் அவனுக்கு சோத்துக்கே வழியில்லை என்னும் போது வெறும் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்க எதுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடியில் புல்லட் ரயில். அப்படியே இந்த புல்லட் ரயில் ஓட ஆரம்பித்தாலும் யாருக்காக ஓடும்… ஏழை ஜனங்களுக்காகவா… இல்லை எலைட் ஜனங்களுக்காகவா?

இப்படித்தான் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களுக்காக மக்கள் பணத்தை வாரி இரைத்திருக்கிறது இந்த அரசு…

மோடி என்கிற ஒருவருடைய பிழை என்று ஐந்தாண்டுகால மத்திய அரசின் ஆட்சியை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு முட்டாள் அரசனை முன்னால் நிறுத்திக்கொண்டு திரைமறைவில் வியாபாரிகளும் சாமியார்களும் கார்ப்பரேட் திருடர்களும் கூத்தடித்திருக்கிறார்கள்.

பொய் பரப்புரைகளால் ஆட்சியை பிடித்தவர்களின் ஐந்தாண்டுகால ஆட்சி இந்தியாவை சிதைத்திருக்கிறது. இப்போதும் அவர்களுடைய பொய்கள் தீரவில்லை. இன்னும் அதிக வீரியத்தோடு இன்னும் கூட மோசமாக பொய்களை விற்று மீண்டும் அரியாசனத்தில் அமரும் முனைப்பில் இருக்கிறார்கள் பாஜகவினரும் அவர்களுடைய அயோக்கித்தனமான கூட்டாளிகளும்.
நாம் உண்மைகளை பேச வேண்டியிருக்கிறது.

நிறைய உண்மைகளை… இன்னும் சத்தமாக பேசுவோம் …

பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் : பாகம் – 2

Lynching… இப்படி ஒரு சொல்லை கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். இது அமெரிக்காவில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சொல்தான்… கறுப்பினத்தவர்களை அச்சுறுத்த வெள்ளை மேலாதிக்க எண்ணங்கொண்டவர்கள் கூட்டு சேர்ந்து பண்ணுகிற கொலைகளை இப்படி குறிப்பிடுகிறார்கள். அதை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பாஜகவையே சாரும்.

அங்கே கறுப்பின மக்கள் என்றால் இங்கே இஸ்லாமியர்களை, தலித்துகளை அச்சுறுத்த பசு பாதுகாவலர்கள் எனும் இந்து அடிப்படைவாதிகள் பண்ணுகிற கூட்டுக்கொலைகளை லின்ச்சிங் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இப்படியொரு சொல்லை நமக்கு அறிமுகப்படுத்தியதோடல்லாமல் மாதந்தோறும் யாரையாவது போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தவர்களுக்கு துணையாக நின்ற பெருமைமிகு ஆட்சிதான் பாஜகவின் ஆட்சி.

படிக்க:
பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

சும்மா சொல்லவில்லை… கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த இவ்வகை கும்பல் தாக்குதல்களுக்கென்றே ஒரு மேப் போட்டு வைத்திருக்கிறார்கள் இங்கே விபரங்களோடு பார்க்கலாம். மொத்தம் நடந்த 300-க்கும் அதிகமான தாக்குதல்களில் 90 பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அத்தனை பேரின் படங்களும் விபரமும் இருக்கின்றன. ஒவ்வொரு முகத்தையும் பார்க்கும் போது பதற்றம் வருகிறது. இதில் எந்த அம்பானியும் அதானியும் இல்லை. எல்லோருமே சாதாரண விவசாயிகள், கூலிவேலை செய்கிறவர்கள். சில இந்துக்களும் கூட இருக்கிறார்கள்… ஆனால் தலித்துகள்!

ஆனால் இந்தக்கொலைகளுக்கெல்லாம் பாஜக தரப்பிலிருந்து என்னமாதிரியான எதிர்வினைகள் வந்திருக்கின்றன என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. `இதையெல்லாம் தவிர்க்கமுடியாது, கொலையெல்லாம் நடக்கவில்லை, பசுக்களை கடத்துகிறார்கள், செத்துப்போனவர்கள் திருடர்கள், தானாகவே நோயால் இறந்துபோய்விட்டார்கள்’ என விதவிதமான பொறுப்பற்ற பதில்களையே முன்னணி பாஜக தலைவர் கொடுத்தார்கள்.

பிரதமர் மோடி கூட எத்தனையோ கொலைகள் நடந்த பிறகு 2017ன் இறுதியில்தான் மயலிறகால் வருடுவது போல ”மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ள கூடாது. சட்டத்திடம்தான் ஒப்படைக்கவேண்டும்” என்றார். அதற்கு மேல் அவருக்கு இதை கண்டிக்கவோ தடுக்கவோ எந்த ஆர்வமும் இருக்கவில்லை. கடந்த டிசம்பரில் இந்த கும்பல் கொலைகாரர்களை தட்டிக்கேட்ட ஒரு காவலரையே போட்டுத்தள்ளியதெல்லாம் நடந்தது. பசுபாதுகாப்பின் பேரால் நடந்த அத்தனை கொலைகளையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டும், அதை திரைமறைவில் தூண்டிக்கொண்டும்தான் இருந்திருக்கிறது.

ஒருகட்சிக்கு ஏன் வாக்களிக்கிறோம். இவரால் நாம் பாதுகாப்பாக இருப்போம், நிம்மதியாக சாலைகளில் நடமாட முடியும். நம் வீட்டிற்குள் யாரும் புகுந்து அடிக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில்தான்… ஆனால் அந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசே வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எரிபொருள் தந்து உதவிக்கொண்டிருந்தால் என்னாகும்.

“இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சி அப்படித்தான் நடந்திருக்கிறது” என்று ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் மிசேல் சமீபத்தில் பேசியிருந்தார். மிகமோசமான அளவில் வன்முறைகள் நிகழ்ந்திருப்பதையும் அவை முறையாக விசாரணைக்கும் கூட உட்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் மனித உரிமைகள் மீறல்கள் நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. எத்தனை எத்தனை படுகொலைகள் மதத்தின் பேரால், உணவில் பேரால், நம்பிக்கைகளின் பேரால், சாதியின் பேரால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களும் தலித்துகளும் பெருமளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏராளமானோர் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படிக்க:
♦ தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி
♦ பட்டணத்து நாயும் கிராமத்து மாடும் | தோழர் துரை சண்முகம்

அரசே கொடுக்கிற எண்ணிக்கையின் அடிப்படையில் கடந்த ஐந்தாண்டுகளில் இவ்வகை சாதி ரீதியிலான, மத ரீதிலியான குற்றச்செயல்களின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரித்திருக்கின்றன என்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வழக்குகள் இவ்வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாதவை எத்தனையோ… 2017ஆம் ஆண்டில் மட்டுமே இந்தியா முழுக்க 822 மதம் சார்ந்த மோதல்கள் நடந்திருக்கின்றன. இதில் இறந்து போனவர்கள் எண்ணிக்கை 111. கௌரி லங்கேஷ் மாதிரியான எண்ணற்ற எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் அரசை விமர்சித்து எழுதியதற்காக்க கொல்லபட்டிருக்கிறார்கள். உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு போலி என்கவுண்டர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்திருக்கிறது. 1038 என்கவுண்டர்களை நடத்தியிருக்கிறார் யோகி.

தன்னை சௌகிதார் என்றும் காவலன் என்றும் பீத்துக்கொண்டால் மட்டும் போதாது. அதானிக்கும் அம்பானிக்கும் மட்டுமல்ல அப்பாவிகளுக்கும் சௌகிதார்கள் பாதுகாப்பை உறுதிசெய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இனி எப்போதும் செய்யவும்மாட்டார்கள். அதனால்தான் பாஜகவை விரட்டவேண்டியிருக்கிறது.

முகநூலில் : Athisha


இதையும் பாருங்க :

 

லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் ! | லெனின்

0

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின் | பாகம் – 4

லியோ டால்ஸ்டாயும் அவரது சகாப்தமும் !
வி.இ.லெனின்

டால்ஸ்டாய் சார்ந்திருந்ததும், அவர் தமது அற்புத இலக்கிய நூல்களிலும் போதனைகளிலும் மிகவும் தெளிவாகப் பிரதிபலித்ததுமான சகாப்தம் 1261-க்குப் பிறகு துவங்கி 1905 வரை  நீடித்தது. உண்மையில், டால்ஸ்டாய் தமது இலக்கிய வாழ்க்கையினை இதற்கு முன்னரே துவங்கினார். அது பின்னால்தான் முடிவுற்றது. எனினும் டால்ஸ்டாயின் நூல்கள், டால்ஸ்டாயிசம் இவற்றின் தனிச்சிறப்பு அம்சங்கள் அனைத்தும் எழுச்சியுற்ற மாறுதல் தன்மையுடைய இந்தக் காலகட்டத்தில்தான் அவர் ஒரு கலைஞர் என்ற முறையிலும் சிந்தனையாளர் என்ற முறையிலும் முழுமையான முதிர்ச்சியடைந்தார் என்பதைக் காட்டுகின்றன.

அன்னா கரினினா  நவீனத்தில் வரும் லெவின் என்னும் பாத்திரத்தின் மூலம், டால்ஸ்டாய் இந்த அரை நூற்றாண்டில் ஏற்பட்ட ரஷ்ய வரலாற்றின் திருப்பத்தின் இயல்பைத் தெளிவாக வெளியிட்டுள்ளார்.

“அறுவடை, தொழிலாளர்களைக் கூலிக்கமர்த்தல், இத்தியாதி பற்றிய பேச்சினை மிகவும் தாழ்ந்த ஒன்றாகக் கருதும் வழக்கம் இருந்ததை லெவின் அறிவார்.”  இது இப்போது லெவினுக்கு ஒரே முக்கிய விஷயமாகத் தோன்றியது. “இது அடிமைச் சமுதாயத்தில் முக்கியமல்லாததாக இருக்கலாம், இங்கிலாந்தில் முக்கியமற்றதாக இருக்கலாம். இரண்டின் கீழும் நிலைமைகள் திட்டவட்டமானது. ஆனால், இங்கு இன்று எல்லாம் தலைகீழாகப் புரண்டு போய், மீண்டும் உருவாகி வருகிற பொழுதில் இந்த நிலைமைகள் எவ்வாறு உருவாகும் என்பது மட்டுமே ரஷ்யாவிலுள்ள முக்கிய பிரச்சினை” என்றார்  லெவின். (தொகுப்பு நூல்கள் பாகம் 10, பக்.137)

“இங்கு ரஷ்யாவில் யாவும் தலைகீழாகப் புரட்டப்பட்டிருக்கிறது.”, ”இப்போதுதான் உருவாகி வருகிறது ” 1861-1905 காலகட்டத்தினை இதைவிடப் பொருத்தமாகச் சிறப்பித்துக் காட்டுவது என்பதைக் கற்பனை செய்வதே கடினம். “தலைகீழாகப் புரட்டப் பட்டது” என்ன என்பது ஒவ்வொரு ரஷ்யனுக்கும் பழக்கமானது. குறைந்தபட்சம் நன்றாகத் தெரிந்த ஒன்று. இது அடிமை அமைப்பும் அதோடு சேர்ந்த “பழைய ஏற்பாடும்” முழுமையாக இருப்பது. “தற்போது உருவாகி வருவது” என்ன என்பது மக்கள் தொகையின் விரிவான பகுதிகளுக்கு முற்றிலும் தெரியாதது, அந்நியமானது, விளக்கமற்றது . ஒரு போலி வடிவத்தில் இங்கிலாந்தில் “இப்போதுதான் உருவாகி வருகிற” இந்த பூர்ஷுவா அமைப்பினை டால்ஸ்டாய் கருவில் கண்டார். உண்மையில் இது வெறும் போலி. ஏனெனில் இந்த “இங்கிலாந்தில்” காணப்பெறும் சமூக அமைப்பின் அம்சங்களையோ, இந்த அமைப்புக்கும் முதலாளித்துவத்தின் ஆதிக்கத்திற்கும் இடையிலான தொடர்பு பற்றியோ, பணம் வகிக்கும் பாத்திரம், பண்டமாற்றின் எழுச்சி வளர்ச்சி பற்றி ஆராய்வது என்று முயற்சியைக் கோட்பாட்டளவில் அவர் நிராகரிக்கிறார். நரோத்னி (55) க்குகளைப் போன்று அவர் பார்க்க மறுக்கிறார். “ரஷ்யாவில் உருவாகி வருவது“ பூர்ஷூவா அமைப்பே தவிர வேறன்று என்று பாராது கண்ணை மூடிக் கொண்டு அந்த எண்ணத்தையே விலக்கிவிட்டார்.

“ஒரே முக்கிய“ பிரச்சினை இல்லாவிடினும், 1861-1905 திட்டத்தில் (நமது காலத்திலும் கூட) ரஷ்யாவிலான அனைத்து சமூக அரசியல் செயல்பாடுகளின் உடனடிக் கடமைகள் என்ற கருத்தோட்டத்திலிருந்து பார்க்கும்போது முக்கியமாக இருக்கிற பிரச்சினை இந்த அமைப்பு  “எவ்வித உருவம்“ எடுக்கும் என்பதே. இந்தப் பூர்ஷூவா அமைப்பு “இங்கிலாந்து”, ஜெர்மனி,  அமெரிக்கா, பிரான்ஸ் இத்தியாதி நாடுகளில் மிகவும் வேறு வேறான வடிவங்களை எடுத்துள்ளது. ஆனால், பிரச்சினையை இவ்வாறு திட்டவட்டமாயும் ஸ்தூலமாயும் வரலாற்று ரீதியிலும் விளக்குவது என்பது டால்ஸ்டாய்க்கு முற்றிலும் புறம்பான ஒன்று. அவர் ஸ்தூலமற்ற முறையில் வாதிடுகிறார். சீலத்தின் அழியாத கோட்பாட்டின் நிலைகளை, சமயத்தின் அறியாத உண்மைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார். இந்தக் கருத்தோட்டத்தை அடையத் தவறுவது, பழைய அமைப்பின் சித்தாந்தப் பிரதிபலிப்பே (தலைகீழாகப் புரட்டப்பட்டது) நிலப்பிரபுத்துவ அமைப்பின் கீழ்த்திசை மக்களின் வாழ்க்கை முறையின் சித்தாந்தப் பிரதிபலிப்பேயாகும்.

லூசர்னே (1857-ல் எழுதப்பட்டது) என்ற நூலில் டால்ஸ்டாய் நாகரிகத்தை ஒரு வரப்பிரசாதம் என்று கருதுவது ஒரு “கற்பனைக் கருத்து ” “அது மனித இயல்பின் உள்ளார்ந்து கிடக்கும் நன்மை புரிதல் என்ற ஆதிகால இன்பகரத் தேவையினை அழிக்கும்” என்று கூறுகிறார். தவறாத வழிகாட்டி ஒன்றே ஒன்று தான், ” நம்மைப் பரிணமித்துக் கொண்டிருக்கும் உலக உணர்வு” என்கிறார் டால்ஸ்டாய். (தொகுப்பு நூல் II, பக்.125)

நமது காலத்தின் அடிமைத்தனம் (1900-ல் எழுதியது) என்ற நூலில் டால்ஸ்டாய் இந்த உலக உணர்வுக்கு மிகுந்த ஆர்வத்தோடு வேண்டுகோள் விடுக்கிறார். அரசியல் பொருளாதாரம் “ஒரு போலி விஞ்ஞானம்”,  ஏனெனில் அது மிகவும் “தனிச் சிறப்புடைய நிலைமைகளைக் கொண்ட இங்கிலாந்தை” ஒரு மாதிரியாக ஏற்கின்றது. உலகம் முற்றிலுமுள்ள வரலாறு முழுவதிலுமுள்ள மக்கள் நிலைமையினை மாதிரியாகக் கொள்ளவில்லை என்று கூறுகின்றார்.

முன்னேற்றமும் கல்வி பற்றிய வரையறுப்பும்”, (1862) என்ற நூலில் இந்த முழு உலகம் எப்படி இருக்கும் என்பது நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது. “கீழ்த்திசை என்று அறியப்படுவதை” குறிப்பிட்டு, ”முன்னேற்றம் என்பது மனித குலத்தின் பொது விதி” என்ற வரலாற்றாசிரியர் கருத்தை டால்ஸ்டாய் எதிர்க்கிறார். ”மனித முன்னேற்றம் என்ற ஒரு பொது விதி கிடையாது. இதைக் கீழ்த்திசை மக்களின் அமைதி நிரூபிக்கின்றது ” என்கிறார் டால்ஸ்டாய்.

டால்ஸ்டாயிசம் அதன் உண்மையான வரலாற்று உள்ளடக்கத்தில் ஒரு கீழ்த்திசை ஆரிய அமைப்பின் சித்தாந்தமாகும். எனவே, துறவு, தீமையை எதிர்க்காமை, தோல்வி மனப்பான்மையின் ஆழ்ந்த குறிப்புகள்,  “எல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் பெளதீகரீதியில் ஒன்றுமில்லை (“வாழ்க்கையின் பொருள்” பக்.52) “ஆன்மாவில் நம்பிக்கை எல்லாவற்றின் துவக்கத்தில் நம்பிக்கை, மனிதன் இந்தத் துவக்கத்துடனான தனது உறவில் வெறும் “உழைப்பாளியாக… தனது சொந்த ஆத்மாவினைக் காத்துக் கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டவனாக இருக்கிறான்.

”கிரீட்சர் சொனாட்டா”  என்னும் நூலிலும் டால்ஸ்டாய் இந்தச் சித்தாந்தத்திற்கு உண்மையாக நடந்து கொள்கிறார். அவர் கூறுகின்றார்: “மகளிர் விடுதலை என்பது கல்லூரிகளில் இல்லை; பார்லிமெண்டுகளில் இல்லை; ஆனால், படுக்கை அறைகளில் இருக்கிறது.”  1862-ல் எழுதிய கட்டுரை ஒன்றில் அவர் பல்கலைக் கழகங்கள்  “எரிச்சல்படுகிற ஊட்டமிழந்த மிதவாதிகளை” மட்டுமே பயிற்றுவிக்கின்றன, அவர்களால் மக்களுக்கு எவ்விதப் பயனும் கிடையாது.” மக்கள் முன்னால் சுற்றுச் சார்பிலிருந்து பயனற்ற முறையில் பிரிக்கப்பெற்று வாழ்க்கையில் எவ்வித இடத்தையும் பெறுவதில்லை,” என்று பலபடக் கூறுகின்றார். (IV பக் 136-137).

பழைய அமைப்பு தலைகீழாகப் புரட்டப் பெற்றுள்ள சகாப்தத்தில் தோல்வி மனப்பான்மை, எதிர்த்துப் போராடாமை, “உணர்வு”க்கு வேண்டுகோள் என்ற சித்தாந்தம் தவிர்க்க முடியாததாக உள்ளது . இந்தப் பழைய அமைப்பின் கீழ் வளர்க்கப்பெற்ற வெகுஜனங்கள் தமது தாய்ப்பாலுடன் கூடவே, இந்த அமைப்பின் கோட்பாடுகள், வழக்கங்கள், மரபுகள், நம்பிக்கைகளைத் தன்வயப்படுத்தியிருந்தார்கள். எத்தகைய புதிய அமைப்பு “உருவாகி வருகிறது” என்னென்ன சமூக சக்திகள் “உருவாகி வருகின்றன” என்பனவற்றையும் இந்தச் சகாப்தத்தின் எழுச்சியின் தனி இயல்புகளான மிகவும் கடுமையான அளவிடற்கரிய துன்ப துயரங்களிலிருந்து விடுதலையைக் கொண்டு வரும் ஆற்றல் உடைய சக்திகள் யாவை, அவை எப்படி, செயல்படும் என்பதையும் பார்ப்பதில்லை; பார்க்க முடியாது.

1862-1904 காலகட்டம் ரஷ்யாவில் அத்தகைய எழுச்சிகளைக் கண்ட கட்டமாகும். இந்தக் கட்டத்தில் அனைவரின் கண் முன்னும் பழைய அமைப்பு இனி என்றுமே மீள முடியாத வகையில் சரிந்தழிந்தது. புதிய அமைப்பு இப்போதுதான் உருவாகி வரத் தொடங்கியது. 1905-ல்தான் பல்வேறு துறைகளில் விரிவான நாடு தழுவிய அளவில் வெகுஜனப் பொதுப் போராட்டமாக இந்தப் புதிய அமைப்பினை உருவாக்கும் சமுதாயச் சக்திகள் முதன் முதலாக வெளிப்பட்டன.

1905-ல் ரஷ்யாவில் ஏற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அந்தக் “கீழ்த்திசை”‘யிலேயே 1862-ல் டால்ஸ்டாய் குறிப்பிட்ட அமைதியின் பிரகாரம் பல நாடுகளின் அதே போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 1905-ம் ஆண்டு “கீழ்த்திசை” அமைதியின் முடிவின் துவக்கத்தைக் குறித்தது. குறிப்பாக இந்தக் காரணத்துடனே அவ்வாண்டு டால்ஸ்டாயிசத்தின் வரலாற்று முடிவினை, டால்ஸ்டாய் போதனைகளைப் பிறப்பித்த சகாப்தத்தின் முடிவினைக் குறித்தது. இவை ஏதோ தனிப்பட்ட நபரின் மனம்போன போக்கு, பற்று வெறி என்ற நிலையில் அன்றி, ஒரு குறிப்பிட்ட காலகட்டம் வரையில் லட்சோப லட்சம் மக்கள் எதார்த்தத்தில் வாழ்வு நடத்திய நிலைமைகளின் சித்தாந்தம் என்ற வகையில் இது தவிர்க்க முடியாததாகக் காட்சியளித்தது.

டால்ஸ்டாயின் சித்தாந்தம் நிச்சயமாயும் கற்பனாவாதமாகும். அதன் உள்ளடக்கம் பிற்போக்கானது என்பதை மிகவும் துல்லியமாயும் ஆழ்ந்த பொருளிலும் காணலாம். ஆனால் இந்தச் சித்தாந்தம் சோஷலிசத் தன்மைக் கொண்டதல்ல  என்றோ, முன்னேற்றமடைந்த வர்க்கங்களுக்கு விழிப்பூட்டுவதற்கான பயனுள்ள கருத்துகளை அளிக்கும் ஆற்றலுடைய விமர்சனக் கூறுகளை உள்ளடக்கியிருக்கவில்லை என்றோ பொருளல்ல.

பல்வேறு வகையான சோஷலிசம் இருக்கிறது. முதலாளித்துவ உற்பத்தி முறை நிலவும் எல்லா  நாடுகளிலும் பூர்ஷுவா வர்க்கத்தை அகற்றி அதனிடத்தில் வரவிருக்கும் வர்க்கத்தின் சித்தாந்தத்தை வெளிப்படுத்தும் சோஷலிசம் உள்ளது. நிலப் பிரபுத்துவ சோஷலிசம் பிந்திய வடிவிலான சோஷலிசத்திற்கு உதாரணம். இந்த சோஷலிசத்தின் தன்மை நெடு நாள்களுக்கு முன்னால் அறுபதாண்டுகளுக்கு முன்பாகவே மார்க்சினால், இதர வடிவிலான சோஷலிசத்தை (56) மதிப்பீடு செய்த அதே சமயத்தில் மதிப்பீடு செய்யப்பட்டது.

மேலும், டால்ஸ்டாயின் கற்பனைவாத சித்தாந்தத்தில் உள்ளார்ந்து கிடக்கும் விமர்சனக் கூறுகளும் பல கற்பன அமைப்புகளில் உள்ளார்ந்து கிடக்கும் விமர்சனக் கூறுகள் போலவே காணக் கிடக்கின்றன, கற்பனா சோஷலிசத்திலுள்ள விமர்சனக் கூறுகளின் மதிப்பு  “வரலாற்று வளர்ச்சிக்கு எதிரான உறவுகளைக் கொண்டிருக்கின்றது” என்ற மார்க்சின் அறிவார்ந்த கருத்தை நாம் மறந்து விடக்கூடாது. புதிய ரஷ்யாவை உருவாக்கி, இன்றைய சமூகத் தீமைகளிலிருந்து விடுதலை கொண்டு வரும் சமுதாய சக்திகளின் செயல்பாடுகள் மேலதிகமாக வளர்ச்சியடைந்து திட்டவட்டமான தன்மையினைப் பெறும் அளவுக்கு “விமரிசனரீதி – கற்பனா சோஷலிசம் அனைத்து நடைமுறை மதிப்பினையும், தத்துவார்த்த நியாயத்தையும் இழந்துவிடும்” (57)

படிக்க:
சோவியத் ரஷ்யாவில் முஸ்லீம்கள் – நூல் அறிமுகம்
சப்பாயேவ் – சோவியத் திரைப்படம்

கால் நாற்றாண்டுக்கு முன்பாக, டால்ஸ்டாய் சித்தாந்தத்தின் விமரிசனக் கூறுகள், பிற்போக்கு கற்பனை அம்சங்களைக் கொண்டிருந்த போதிலும் மக்கள் தொகையின் சில பகுதிகளுக்குச் சில சமயங்களில் நடைமுறை பயனுடையனவாக விளங்கின. இது கடந்த பத்தாண்டில் நடந்திருக்க முடியாது. காரணம் வரலாற்று வளர்ச்சி 1880 -ஐ ஒட்டிய ஆண்டுகளுக்கும் கடந்த நூற்றாண்டின் இறுதியாண்டுகளுக்கும் இடையே கணிசமான முன்னேற்றத்தினை அடைந்திருந்தது. நமது காலத்தில் மேலே குறிப்பிடப்பட்ட நிகழ்ச்சித் தொடர்கள் நமது காலத்தில் கீழ்த்திசை அமைதிக்கு முடிவுகட்டிவிட்டன. வெக்கிகளின் (குறுகிய வர்க்க சுயநல வர்க்கப் பிற்போக்காளர்) உணர்வுபூர்வமான பிற்போக்குக் கருத்துகள் மிதவாத பூர்ஷ்வாக்களிடையில் மிகப்பெருமளவில் பரவின.

ஏறத்தாழ மார்க்சியவாதிகளானவர்களில் ஒரு பகுதியினரைக் கூட இந்தக் கருத்துகள் பீடித்தன. ஒரு குலைவுப் போக்கினை (58)ச் சிருஷ்டித்தன. இந்த நிலையில் டால்ஸ்டாயின் சித்தாந்தத்தை லட்சியவாதமாகச் செய்யும் ஒவ்வொரு முயற்சியும் அவரது  “எதிர்த்துப் போராடாமை” கோட்பாட்டினை நியாயப்படுத்தல் மன்னித்தல் செய்வதும், ஆன்மிக சக்திக்கு வேண்டுகோள் விடுத்தலும், “ஒழுக்கமுறை சுய நிறைவு”க்கான அவரது “வேண்டுகோள்களும்” “அவரது மனச்சாட்சி”, உலக  “அன்பு” என்ற கோட்பாடும், துறவறம் அமைதிவாதம் போன்றவற்றைப் பற்றிய அவரது பிரச்சாரமும் நமது காலத்தில் மிகவும் நேரடியான மிகவும் ஆழமான பாதகத்தை விளைக்கும்.

– லெனின், (ஜனவரி 22, 1911-ல் எழுதியது)(ஸ்வெஸ்தா, நெ.6, ஜனவரி 22, 1911, ஒப்பம் : வி.இ. லெனின்)
(தொகுப்பு நூல்கள், பாகம் 17, பக்கம் 49-53)

அடிக்குறிப்புகள்:

55: நரோத்னிக்குகள் – நரோதிசத்தின் ஆதரவாளர்கள்; 19-ம் நாற்றாண்டின் எழுபதாம் ஆண்டுகளில் ரஷ்யாவில் தோன்றிய ஓர் அரசியல் போக்கு. அவர்களுடைய உலகக் கண்ணோட்டத்தில் பிரதான அம்சங்கள் புரட்சிகர இயக்கத்தில் தொழிலாளி வர்க்கத்தின் தலைமைப் பாத்திரத்தை மறுப்பதும், சிறு உடைமையாளர்களும் விவசாயிகளும் சோஷலிசப் புரட்சியை நடத்த முடியும் என்பதும் ஆகும். சமுதாயத்தின் மெய்யான வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டிராததாலும், வெறும் நேர்த்தியான சொற்கள், கற்பனைகள், உன்னதமான எண்ணங்களை அடிப்படையாகக் கொண்டிருந்ததாலும், நரோத்நிக்குகளின் சோஷலிசம் கற்பனைவாதமாயிருந்தது.
எண்பதாம் ஆண்டுகளிலும், தொண்ணூறாம் ஆண்டுகளிலும் நரோத்னிக்குகள் ஜாரிசத்துடன் சமரசம் செய்து கொள்வதற்குத் தயாராய் இருந்தனர். குலக்குகளின் நலன்களைப் பிரதிபலித்து மார்க்சியத்திற்கு எதிராக கடுமையான போராட்டம் நடத்தி வந்தனர்.

56: கே. மார்க்ஸ், எப். எங்கல்சின் கம்யூனிஸ்டு அறிக்கை அத்தியாயம் III பற்றிய குறிப்பு இது.

57: கே. மார்க்ஸ், எப். எங்கல்சின் கம்யூனிஸ்டு அறிக்கை (மார்க்ஸ், எங்கல்சின் தொகுப்பு நூல்கள், பாகம்.1, மாஸ்கோ, 1962, பக்.63ஐப் பார்க்கவும்)

58: குலைவு வாதம் – 1905-07 புரட்சியின் தோல்விக்குப் பிறகு மென்ஷிவிக் – சமூக ஜனநாயகவாதிகளிடையே தோன்றிய ஒரு சந்தர்ப்பவாத போக்கு அதன் ஆதரவாளர்கள் தொழிலாளி வர்க்கத்தின் புரட்சிகர சட்டவிரோதக் கட்சியின் கலைப்பையும் அதற்குப் பதிலாக ஜார் உத்தவின் பேரில் சட்ட பூர்வமாகச் செயல்படும் சந்தர்ப்பவாதக் கட்சி நிறுவப்படுவதையும் கோரினர். புரட்சியின் லட்சியத்தைக் காட்டிக் கொடுத்த குலைவு வாதிகளை லெனினும், இதர போல்ஷிவிக்குகளும் இடைவிடாது அம்பலப்படுத்தினர். இந்தக் குலைவு வாதிகள் தொழிலாளிகளின் ”ஆதரவைப் பெறத் தவறினர். இவர்கள் 1911 ஜனவரியில் ர.ச.இ.தொ. கட்சியின் பிராக் மாநாட்டில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

நூல்: கலை, இலக்கியம் பற்றி – வி.இ.லெனின்
தமிழாக்கம்: கே.ராமநாதன்
ஆங்கில மூல நூல் – முன்னேற்ற பதிப்பகம், மாஸ்கோ
1974-ம் ஆண்டு – தமிழாக்க நூல் வெளியீடு: நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம், சென்னை.

இதன் முந்தைய பாகத்திற்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

லியோ டால்ஸ்டாய் : ஒரு மகத்தான கலைஞர் ! லெனின்
விவசாயிகளின் உணர்வுகளைப் பிரதிபலித்த டால்ஸ்டாய் – லெனின்

டால்ஸ்டாயும் பாட்டாளி வர்க்கப் போராட்டமும் – லெனின்

மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் – பொளந்து கட்டும் சென்னை மக்கள் | காணொளி

பாராளுமன்றத் தேர்தலில் தாமரை மலர்ந்தே தீருமென்று தமிழிசை முதல் எச். ராஜா வரை கூவி வருகின்றனர். இது குறித்து சென்னை மக்களிடம் கேட்டோம். நாம் கேட்ட கேள்வி ஒன்றுதான் … தாமரை மலருமா மலராதா, ஏன்? பொங்கித் தீர்த்தார்கள் மக்கள்.

  • என்ன செஞ்சாரு மோடி?
  • திங்கிற இட்லிக்கும் வரி போட்டவருதானே மோடி?
  • அவரு போட்ட டிரஸ்ஸையே சில இலட்ச ரூபாய்க்கு ஏலம் விட்டவர்தானே மோடி?
  • கஜா புயலுக்கு வந்தாரா மோடி?
  • மோடிக்கு இங்க வேலை கிடையாது…

முழுமையான வீடியோவை காண பாருங்கள்…

நண்பர்களுக்கு பரவலாக பகிருங்கள்!

நேர்காணல்:

மக்களவைத் தேர்தலில் பாசிச பாஜக காணாமல்போகும் – லண்டன் பேராசிரியர் ஜேம்ஸ் மேனர் !

0

(செப்டம்பர் 5, 2018 அன்று வெளியான இந்தக் கட்டுரையை தவறுதலாக இன்று (மார்ச் 26, 2019) மீண்டும் வெளியிட்டு விட்டோம். சிரமத்திற்கு வருந்துகிறோம். இனி இத்தகைய தவறுகள் நிகழாதவாறு கவனமாக இருக்கிறோம் – வினவு)

‘பாசிச பாஜக ஒழிக’ என முழக்கமிட்ட காரணத்துக்காக கைது செய்யப்பட்டார், ஆய்வு மாணவர் சோபியா. அவர் எழுப்பிய முழக்கத்தை இப்போது முழு இந்தியாவும் சமூக ஊடகங்களில் எழுப்பிக் கொண்டிருக்கிறது.  சமீபத்தில் ‘மோடியை கொல்ல சதி’ என்கிற பெயரில் கைதான செயல்பாட்டாளர்கள் குறித்த ஆங்கில ஊடக செய்தி ஒன்றில், பெரும்பாலான பின்னூட்டங்கள் மோடி தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைக்கத்தான் இந்த ‘கொலைப்பழி’ நாடகத்தை போடுகிறார் என்பதை சுட்டுவதாக இருந்தன. மோடிக்கு எதிராக உருவாகிவரும் மனநிலை காரணமாக ‘பாசிச பாஜக வரும் தேர்தலில் ஒழிந்துபோகும்’என்கிறார் ஜேம்ஸ் மேனர் என்கிற லண்டன் பல்கலைக்கழக பேராசிரியர் .

…………………………………………..

ஓர் ஆண்டுக்கு முன் பாஜக, வரப்போகிற தேர்தலில் தன் ஆட்சியை தக்கவைத்து கொள்ள முடியும் என நம்பியது.  ஆனால், சமீபத்திய கருத்து கணிப்புகள், பாஜக தேய்ந்து வருவதை சொல்கின்றன. மக்களவையில் தனி பெரும்பான்மையுள்ள கட்சி, இப்போது தள்ளாட்டத்தை சந்திக்கிறது.  பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில், கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியமைத்தாலும் அவர்கள் பிரதமரை மாற்றச் சொல்லி கோரிக்கை வைக்கக்கூடும்.

உச்சபட்ச வேலைவாய்ப்பின்மை

லோக்நீதி என்ற அமைப்பு மே மாதம் வெளியிட்ட கருத்து கணிப்பில் 22% தலித்துகள் பாஜகவை ஆதரித்திருந்தனர். கடந்த ஜனவரி வெளியான முடிவைக் காட்டிலும் இது 8% குறைந்திருந்தது. இதுபோல பழங்குடியினரின் ஆதரவும் குறைந்திருந்தது. விவசாயிகளின் ஆதரவு ஒரே வருடத்தில் 49% சதவீதத்திலிருந்து 29% சதவீதமாக குறைந்திருப்பது தெரிந்தது.

மேலும் சில சரிவுகள்…

♣ 61 %  பேர் இந்த அரசு விலைவாசியை நிர்வகிப்பதில் கோட்டைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
♣ 55% பேர் ஊழலை ஒழிக்க இந்த அரசு போதிய முயற்சிகள் எடுக்கவில்லை என்கிறார்கள்.
♣ 61% பேர் இந்த அரசே ஊழல் அரசுதான் என்கிறார்கள்.
♣ 64% பேர் பாஜக ஆட்சியில் வளர்ச்சி எதிர்மறையாக உள்ளதாக சொல்கிறார்கள்.
♣ 57% பேர் 2014 மக்களவை தேர்தல் பிரச்சாரத்தில் மோடி சொன்ன வேலைவாய்ப்பை ஏற்படுத்துவேன் என்ற வாக்குறுதி காற்றோடு கலந்துவிட்டதாக கருதுகிறார்கள்.
♣ 47% பேர் இந்த அரசின் செயல்பாடுகளில் திருப்தி இல்லை என்கிறார்கள். முந்தைய கணிப்பில் 27% பேர் மட்டுமே இப்படி சொல்லியிருந்தார்கள்.
♣ 38% பேர், 2014-ல் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு வாக்களித்தவர்கள், வரப்போகிற தேர்தலில் வாக்களிக்கப்போவதில்லை என தெரிவித்துள்ளனர்.

மாநிலத்துக்கு மாநிலம் பாஜகவின் வளர்ச்சியை கணக்கில் எடுத்தால், இதே போன்ற முடிவுக்கு வரமுடியும். பாஜகவுக்கு சாதகமான மாநிலங்களிலிருந்து இதைத் தொடங்கலாம். கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மொத்தமுள்ள 21 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பாஜக வென்றது. ஒடிசா முதலமைச்சர் நவீன் பட்நாயக்-ஐ குறைத்து மதிப்பிட முடியாது, ஆனாலும், பாஜக 10-லிருந்து 15 இடங்களை வெல்ல வாய்ப்புண்டு.

படிக்க:
♦ நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்!
♦ சம்ஜவுதா ரயில் குண்டுவெடிப்பு வழக்கு : குற்றவாளி அசீமானந்தா விடுதலை !

வடகிழக்கு மாநிலங்களில் பாஜகவுக்கு சாதகமான சூழல் உள்ளது. அசாமில் 14 இடங்களில் 7 இடங்களை வென்றது. இது மேலும் அதிகரிக்கலாம் என்றாலும் கருத்து கணிப்பு பின்னடைவு உள்ளதைக் காட்டுகிறது. சிறு மாநிலங்களில் 10-க்கு 1 இடத்தில் வென்றது பாஜக. இது மேலும் அதிகரிக்க வாய்ப்புண்டு. மேற்கு வங்கத்தில் இரண்டு இடங்களை மட்டுமே பெற்ற பாஜக, வரவிருக்கிற தேர்தலில் கூடுதல் இடங்கள் கிடைக்கலாம்.

இவற்றை ஒட்டுமொத்தமாக சேர்த்தால் வெறும் 87 எம்.பி.க்கள் மட்டுமே கிடைப்பார்கள். 326 இடங்களை ஒப்பிடும்போது இது மிக மிக குறைவு. பாஜக சில அல்லது பல இடங்களை இழக்கலாம்.

டெல்லியில் ஏழுக்கு ஏழு இடங்களை பெற்றது, அதில் இழப்பு ஏற்படலாம். ஹரியானா (10 இடங்களில் முந்தைய தேர்தலில் பெற்றது 7), சத்தீஸ்கர் (11-10), குஜராத் (26-26), ஹிமாச்சல் பிரதேசம் (4-4). மொத்தமுள்ள 63 இடங்களில் பல இடங்களை பாஜக இழக்கும்.

ரஃபேல் புகழ் மோடி

பீகாரில் கடந்த தேர்தலில் 40 இடங்களில் 22-ல் வென்றது. அதில் 9 இடங்கள் கூட்டணி கட்சிகளுக்குப் போனது. ஜார்க்கண்ட் (14-12), கர்நாடகா (28-17). இந்த மாநிலங்களிலும் பாஜகவுக்கு இழப்பு ஏற்படலாம். குறிப்பாக, பீகாரில் இழப்பு அதிகமாகவே இருக்கும். காங்கிரசுக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்துக்குமான கூட்டணி குறைந்தபட்சம் தேர்தல் முடியும் வரை நீடிக்கும் என எதிர்ப்பார்க்கலாம். இந்தக் கூட்டணி கணிசமான இடங்களைப் பெற வாய்ப்புண்டு. மகாராஷ்டிரத்தில் சிவசேனையுடன் ஒப்பந்தம் ஏற்படாவிட்டால், 47 இடங்களில் 23 இடங்களைப் பெற்ற கணக்கு வெகுவாக குறையக்கூடும். அப்படியே கூட்டணி அமைந்துவிட்டாலும், இவர்களை எதிர்த்து போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்களைப் பொறுத்தே இவர்களது வெற்றி பெறும் என அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இந்த மாநிலங்களில் மொத்தம் 129 இடங்கள் உள்ளன.

சமாஜ்வாதி கட்சிக்கும் பகுஜன் சமாஜ் கட்சிக்கும் இடையே கூட்டணி ஏற்பட்டால், உத்திரபிரதேசத்தில் பாஜகவுக்கு கடும் பின்னடைவு ஏற்படும். இதில் காங்கிரசும் ராஷ்ட்ரிய லோக் தளமும் இணைந்தால், கடந்த தேர்தலில் பாஜக வென்ற 71 தொகுதிகளில் பல தொகுதிகளை இழக்கும்.

இறுதியாக, பாஜகவுக்கு மிக மிக சாதகமான இரண்டு மாநிலங்களில் அது கடுமையான பின்னடைவை சந்திக்கும் என கருத்து கணிப்பு அறிவிக்கிறது. மத்திய பிரதேசத்தில் கடந்த முறை 29 இடங்களில் 27 தொகுதிகளை வென்றது. அங்கே தற்போது காங்கிரசுக்கு சாதகமான அலை வீசிக்கொண்டிருக்கிறது.  ராஜஸ்தானில் கடந்த முறை மொத்தமுள்ள 25 தொகுதிகளையும் வென்றது.  ராஜஸ்தானில் பாஜக முதல்வராக முதல்முறை வசுந்தரா ராஜே சிந்தியா தேர்வு செய்யப்பட்டபோது என்னென்ன குளறுபடி செய்து ஆட்சியை இழந்தாரோ அதுபோன்ற சூழல் இப்போதும் நிலவுகிறது. இந்த இரண்டு மாநிலங்களிலும் காங்கிரஸ் மாநில ஆட்சியை கைப்பற்றுவதோடு, கணிசமான மக்களவை தொகுதிகளையும் பெறும். பாஜக பெற்ற 52 இடங்களில் கணிசமானதை இழக்கும்.

படிக்க:
♦ பாஜக ஒரு மார்க்கெட்டிங் கம்பெனி : முன்னாள் பாஜக தலைவர் ரேஷ்மா !
♦ பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

தென்னிந்திய மாநிலங்களான தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் மொத்தமுள்ள 102 தொகுதிகளில் கடந்த தேர்தலில் பாஜக நான்கு இடங்களை மட்டுமே வென்றது. ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சியுடன் இணைந்து தேர்தலை சந்தித்த பாஜக 2 இடங்களில் வென்றது. 2019-ல் இந்த எண்ணிக்கை சற்று கூடும் என எதிர்ப்பார்க்கலாம்.

ஒட்டுமொத்தமாக பார்த்தால், 87 இடங்கள் புதிதாக கிடைத்தாலும், முன்பு கிடைத்த 326 தொகுதிகளின் எண்ணிகையில் பெரும் சரிவு இருக்கும்.

ஆட்சியமைக்கப் போதுமான 272 தொகுதிகளை பாஜக பெறுவதுகூட முடியாத நிலைமைதான் என தெளிவாகத் தெரிகிறது. ஆனால், கூட்டணி ஆட்சியமைக்க போதுமான இடங்கள் நிச்சயம் கிடைக்கும். ஆனால் மோடியின் மீது ஆழ்ந்த விரக்தியில் இருக்கும் கூட்டணி கட்சியினரிடம் கடுமையான பேரத்தை பாஜக நடத்த வேண்டியிருக்கும். 200-க்கு மேற்பட்ட இடங்களை பாஜக பெற்றால், கூட்டணி கட்சியினர் மோடியை மாற்றச் சொல்வார்கள். ஆர்.எஸ்.எஸ். அதற்கு தயாராகவே இருக்கும். 200-க்கும் கீழே எண்ணிக்கை குறைந்தால் கூட்டணி ஆட்சியமைவதும் கடினம்தான்.

இது மாறக்கூடிய நிலைமைதான். அமித் ஷாவின் தந்திரங்கள் பாஜகவுக்கு சாதகமான நிலையை ஏற்படுத்தக்கூடியதுதான். குஜராத், உத்திரபிரதேசத்துக்கு வெளியே ஏராளமான வகுப்புவாதத்தைத் தூண்டும் முயற்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன. எதிர்பாராத நிகழ்வுகள் பாஜகவுக்கும் உதவலாம். ஊடகங்களை வலைத்துப்போடுவதன் மூலம் ‘மோடி பிம்பம்’ இன்னமும் வசீகரிப்பதாக காட்டப்படுகிறது. ஆனால், பாஜகவின் முழக்கமான எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா, காங்கிரஸ் இல்லாத இந்தியா என்பதுதான் உண்மையான ஆபத்தில் உள்ளது.


கட்டுரையாளர் : ஜேம்ஸ் மேனர்
நன்றி : தி வயர்
தமிழாக்கம்: கலைமதி

இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?

எலக்சன் பாதுகாப்புக்காக ஆந்திராவில் ஒரு காலேஜில் தங்கியிருக்கிறோம் …

சம்பவம் 1

ஹோலி அன்று Gate ல் நின்றிருந்தேன்.. மூன்று கல்லூரி மாணவிகள் வந்தனர் ஹேப்பி ஹோலி என கை நீட்டினர். நம்ம பொண்ணுங்க கலாச்சாரத்தில் திளைத்ததாச்சே என நான் ஆச்சர்யத்தோடு கை குலுக்கிக்கொண்டேன்.பக்கத்தில் இருந்த வண்ணப்பொடிகளை நெற்றியில் வைக்கவோ கன்னத்தில் தடவவோ கூச்சப்பட்டு கைகளில் கொடுத்தேன். அவர்கள் அனாயசமாக என்னோட கன்னத்தில் தடவிவிட்டு மீண்டும் ஹேப்பி ஹோலி என மிக மகிழ்ச்சியாக விளையாடி சென்றனர்.

சம்பவம் 2

காலேஜோடு சிறிய ஸ்கூலும் உண்டு… சின்னப்பசங்க அவனவன் நோட்டை எடுத்துட்டு ஓடி வந்து நீட்டறாங்க.. என்னடானு பார்த்தா ஆட்டோக்ராப் வேணுமாம்… எனக்கு முன்னாடியே பல ஆட்டோக்ராப்கள்.. வெறும் கையெழுத்து மட்டும் இட்டிருந்தனர். Fight for rights என கையெழுத்திட்டேன். அடுத்தடுத்த யாரெல்லாம் யூனிபார்ம்களில் தெரிகிறார்களோ அவர்களிடத்தில் சார் சார் (கவனிக்கவும் … அங்கிள் என அழைக்கல) என ஆட்டோக்ராப் வேட்டை தொடர்ந்தது.

சம்பவம் 3

இரண்டு டீச்சர்கள் என்னோடு பேசினார்கள். அவர்களுக்கு தமிழ் லேது.. நமக்கு தெலுங்கு தெரியாது. இருந்தாலும் பேசினோம். ஒரு நாள் ஒருவர் ரசமும்… இன்னொருவர் சாம்பாரும் வீட்டிலிருந்து எடுத்து வந்து சிறப்பித்தனர். ரியல் ஹீரோஸ் என்றனர்.

சம்பவம் 4

வெளியில் மார்க்கெட் செல்லும்போது துப்பாக்கியுடன் கூடிய பாதுகாப்போடுதான் போகிறோம் இங்கு. ( உபயம் நக்சல் ஆபத்து) அப்படியான நிலையில் ரூ500 மதிப்புள்ள டி ஷர்ட்டை பட்டாளம் என்பதால் ரூ 300-க்கு தந்த கடைக்காரர் விரும்பியது எங்களுடன் ஒரு செல்பி மட்டுமே.

இப்படி பல சம்பவங்களை அடுக்கலாம். பட்டாளத்தை காணாத மக்கள் அனைவரும் இப்படித்தான் வரவேற்கிறார்கள். இயல்பாக ராணுவம் மேலிருக்கும் ஊட்டப்பட்டிருக்கும் பொதுப்புத்தியில் இவ்வாறு நடந்து கொள்ளும் மக்கள் என்றேனும் ஏன் காஷ்மீரில் மணிப்பூரில் கல்லெறிகிறார்கள் என சிந்திப்பார்களா ? அங்கேயெல்லாம் துப்பாக்கி எடுக்கும் பட்டாளம் இங்கு ஏன் அமைதியாக இருக்கிறது என சிந்திக்கலாமே என புத்திசாலிகள் கேட்கலாம். இங்கே ஒரு ஸ்டெர்லைட்டோ, கூடங்குளமோ அல்லது மக்களுக்கு எதிராக ஒன்றை வைத்து மக்கள் அதனை அறவழியில் எதிர்க்கும்போதே பாருங்களேன் பட்டாளத்து நிலைமையை…

ஆட்டோகிராப் கேட்ட குழந்தைகளுக்கு பெல்லட்கள் பரிசளிக்கப்பட்டிருக்கும். செல்பி கேட்டவர் காணாமல் போனவராகியிருப்பார்… பெண்கள் அருகில் கூட வந்திருக்க வாய்ப்பில்லை. நிலைமை தலைகீழாகியிருக்கும். இதுதான் காஷ்மீரில் நிகழ்கிறது. இதுதான் வடகிழக்கில் நிகழ்கிறது. இதுதான் சட்டீஸ்கரில் நிகழ்கிறது. தலைகீழாக்குவது யார் என்ற புரிதல் பட்டாளாத்தானுக்கு புரிந்தால் பணி செய்வதே பாவமாகிவிடும். மக்களுக்கு புரிந்தால் அரசுக்கு தலைவலியாகும்.

ஈழத்தில் இந்திய அமைதிப்படை இறங்கிய போது கிடைத்த வரவேற்பு எப்படி இருந்தது? பொதுமக்கள் அவர்களை கல்லடித்து வரவேற்கவில்லையே? மாலையிட்டு வரவேற்கப்பட்டவர்கள் வரவேற்றவர்களை பாலியல் வன்கொடுமை செய்தும் கொல்லப்பட்டும் கொடூரமாக முடிவுரை நிகழ்ந்ததும் எங்கனம் ?

ஆக இருபக்கமும் சூழல் அன்பையும் அடிதடியையும் தந்து கொண்டிருக்கிறது.. சூழலை அரசு உருவாக்குகிறது. அரசினை கார்ப்பரேட்கள் நடத்துகின்றனர். இந்த சங்கிலியில் பிணைக்கப்பட்டுள்ள சாதாரண மக்களுக்கும் பட்டாளத்தானுக்கும் அரசியல் புரிந்து விட்டால் போதும். ஊடகங்கள் அதனை ஊக்குவிப்பதில்லை. எட்டு மணி நேர பொழுதுபோக்குக்கு உழைத்த தலைவர்கள் இன்றிருந்தால் அதில் நான்கு மணி நேரம் அரசியலுக்கு என கேட்டிருப்பர்.

படிக்க:
பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

மனதில் தோன்றியவற்றை எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போது கூட பக்கத்து கிராமத்தில் நடந்து வந்தோம். ஊரில் உள்ள குழந்தைகள் ஓடி ஓடி வந்து கை குலுக்கின்றனர். அவர்கள் மீது பெல்லட்கள் பாயும் சூழல் எதுவும் வரும் முன்பே இந்த ஊரை விட்டு கிளம்பிட அல்லாடிக்கொண்டிருக்கிறது மனது. இத்தனை காதலையும் அன்பையும் தொலைக்க யாருக்குதான் மனசு வரும் ?

#sathishchelladurai #kashmir

முகநூலில் : Sathish Chelladurai 


இதையும் பாருங்க …
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா

பாரடா உனது மானிடப்பரப்பை…

நூல் அறிமுகம் : தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் 1946 – 1951

ஹைதராபாத் நிஜாமின் ஆளுகைக்குட்பட்ட தெலுங்கானா பகுதியில் நிலவிய கோரமான கொத்தடிமைத்தனத்தை எதிர்த்து, அனைத்து உழைப்பாளி மக்களும், கைவினைஞர்களும் நிலப்பிரபுக்களுக்கு இலவச உழைப்பைத் தரவேண்டுமென்று அடிமை நிலையில் வைக்கப்பட்டதை எதிர்த்து கம்யூனிஸ்ட்டுகள் ஆயுதமேந்தி தலைமை தாங்கிப் போராடி பல இலட்சக்கணக்கான மக்களை அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து சுதந்திர மனிதர்களாகப் பிரகடனம் செய்த எழுச்சியே தெலுங்கானா ஆயுத எழுச்சி.

இப்போராட்டத்தின் வீரஞ்செறிந்த நிகழ்வுகளை, புரியப்பட்ட அற்புதத் தியாகங்களை, அதன் சாதனைகளை இந்நூல் சுருக்கமாக விவரிக்கிறது.

வீரஞ்செறிந்த இந்த ஆயுதப் போராட்டத்திற்கு அரசியல் ரீதியாக தலைமை தாங்கி வழிநடத்திய தோழர் பி. சுந்தரைய்யா இந்நூலைத் தன் அனுபவங்களின் வாயிலாக விவரித்திருக்கிறார். ஒரு காலகட்டத்து மக்கள் போராட்டத்துக்கான ஆவணம் இது. (நூலின் அறிமுகப் பகுதியிலிருந்து)

… சரித்திரப் பிரசித்தி பெற்ற தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியானது இதர வேறெந்த விஷயத்தையும்விட, விவசாயப் புரட்சி என்ற பிரச்சனையை முன்னுக்குத்தள்ளியது. காலஞ்சென்ற வினோபா பாவேயின் பூதான இயக்கம் என்றழைக்கப்பட்ட இயக்கமும், இந்தியா முழுவதிலும் பல மாநில சட்டமன்றங்களில் கொண்டுவரப்பட்ட விவசாயச் சட்டங்களும், இந்த தெலுங்கானா விவசாயிகள் எழுச்சியின் கொழுந்துவிட்டெரியும் நெருப்பை அணைப்பதற்காகச் செய்யப்பட்ட ஒருவகை முயற்சியேயாகும்.

இந்தப் புகழ்மிகு தெலுங்கானா போராட்டமானது இந்தியா முழுவதிலுமிருந்த நூற்றுக்கணக்கான மன்னராட்சி மாநிலங்களின் செயல்பாட்டுக்கு மரண அடியைக் கொடுத்ததோடு, இந்திய ஒன்றியத்தில் மொழிவழி அடிப்படையில் மாநிலங்களை மாற்றியமைப்பதற்கு வழிவகுத்தது. (நூலிலிருந்து பக்.9 – 10)

இந்த வீரஞ்செறிந்த விவசாயிகள் எழுச்சியின் ஒட்டுமொத்த விபரத்தை சுருக்கமாகக் கூறுவோம். இது போர்க்குணமிக்க தெலுங்கானா விவசாயிகளிடமிருந்தும் இந்த வெகுஜன விவசாயிகள் எழுச்சிக்கு தலைமை தாங்கிய கம்யூனிஸ்ட் கட்சியின் விசாலாந்திரா மாநிலக்கிளையிடமிருந்தும் பெரும் தியாகங்களைப் பெற்றது. கம்யூனிஸ்ட்களும் விவசாயப் போராளிகளும் 4 ஆயிரம் பேர் கொல்லப்பட்டனர்; 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட் ஊழியர்களும், மக்கள் போராளிகளும் 3 முதல் 4 வருட காலம் வரையில் பாதுகாப்பு முகாம்களிலும், சிறைகளிலும் அடைக்கப்பட்டனர்; 50 ஆயிரம் பேர் அவ்வப்பொழுது போலீஸ், இராணுவ முகாம்களுக்கு கொண்டு செல்லப்பட்டு தாக்கப்பட்டனர். சித்ரவதை செய்யப்பட்டனர். தொடர்ந்து வாரக் கணக்கில், மாதக் கணக்கில் பயமுறுத்தப்பட்டனர்.

ஆயிரக்கணக்கான கிராமங்களிலிருந்த பல இலட்சக்கணக்கான மக்கள் போலீஸ், இராணுவ சோதனை வேட்டைகளுக்கும் கொடூரமான தடியடி தாக்குதலுக்கும் ஆட்படுத்தப்பட்டனர். இத்தகைய இராணுவ, போலீஸ் வேட்டைகளின் பொழுது இலட்சக்கணக்கான ரூபாய்கள் பெறுமானமுள்ள சொத்துக்களை மக்கள் இழந்தனர்; இவைகள், ஒன்று கொள்ளையடிக்கப்பட்டன. அல்லது அழிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர்; அவர்கள் அனைத்து வித அவமானங்களுக்கும், இழிவுகளுக்கும் ஆளாயினர்.

ஒரே வார்த்தையில் சொல்வதென்றால், ஆரம்பத்தில் நிஜாம் மற்றும் அவனுடைய ஆயுதமேந்திய ரசாக்கர் குண்டர்களின் தாக்குதலுக்கும், அதைத் தொடர்ந்து மத்திய அரசாங்கம், ஹைதராபாத் மாநில அரசாங்கம் ஆகியவைகளின் போலீஸ், இராணுவ வன்முறை வெறியாட்டத்திற்கும் முழு ஐந்து வருட காலத்திற்கும் இந்தப் பிராந்தியம் முழுவதும் இலக்காயிருந்தது. போலீஸ் நடவடிக்கைகளுக்குப் பின்னர், இந்த இயக்கத்தை வன்முறை மூலம் ஒடுக்குவதற்காகவும், சிதறிப்போன நிலப்பிரபுத்துவ ஆட்சியை மீண்டும் ஏற்படுத்துவதற்காகவும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த 50 ஆயிரம் பேர் கொண்ட பலமான இராணுவப் படை அனுப்பப்பட்டது. அதிகாரபூர்வமற்ற சில மதிப்பீடுகளின்படி 1947-48-ம் ஆண்டுகளில் காஷ்மீர் பிரச்சனையில் பாகிஸ்தானுடன் நடைபெற்ற, யுத்தத்தில் இந்திய அரசாங்கம் செலவிட்ட அளவுக்கு பணம், செல்வாதாரங்களை அன்று ஹைதராபாத்தில் இந்திய அரசாங்கம் செலவிட்டது.

உண்மையில், விவசாயிகள் எழுச்சியின் பெருமைமிகு சாதனைகள், ஆதாயங்கள் என்ற பூரிப்புக்கு சாதனைகள் ஆகிய இதனுடைய மறுபுறத்தைக் காணவில்லையென்றால் இந்த சித்திரம் முழுமையடையாது. இந்தப் போராட்ட காலத்தில் 16 ஆயிரம் சதுர மைல்கள் பரப்பளவிற்குள் 3 ஆயிரம் கிராமங்களிலிருந்த விவசாய மக்கள் சுமாராக 30 இலட்சம் பேர் (பெரும்பாலும் நலகொண்டா, வாரங்கல், கம்மம் ஆகிய மூன்று மாவட்டங்களிலுள்ள) போராடும் கிராமப் பஞ்சாயத்துக்கள் என்ற அடிப்படையில் கிராம இராஜ்யத்தை உருவாக்குவதில் வெற்றியடைந்தனர்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

இத்தகைய கிராமங்களிலிருந்த வெறுக்கப்பட்ட நிலப்பிரபுக்கள் கிராமப்புறப் பகுதிகளில் நிஜாம் எதேச்சதிகாரத்தின் கிராமப்புறத் தூண்களாக இருந்தவர்கள் தங்களுடைய கோட்டைகள் போன்ற வீடுகளிலிருந்தும், நிலங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டனர்; அவர்களுடைய நிலங்கள் விவசாய மக்களால் கைப்பற்றிக் கொள்ளப்பட்டன. மக்கள் கமிட்டிகளின் வழிகாட்டுதல்களின்கீழ் பத்து இலட்சம் ஏக்கர் நிலங்கள் விவசாயிகளிடையே மறு வினியோகம் செய்யப்பட்டன. அனைத்து நில வெளியேற்றங்களும் தடுக்கப்பட்டது; கட்டாய உழைப்புச் சேவை என்பது ஒழிக்கப்பட்டது. கொள்ளை இலாப, அதீத கந்துவட்டி வீதங்கள் என்பது மிகப்பெருமளவு குறைக்கப்பட்டது அல்லது ஒட்டுமொத்தமாக தடுத்து நிறுத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளிகளின் தினசரிக் கூலி என்பது அதிரிக்கப்பட்டது என்பதுடன் குறைந்தபட்ச கூலி என்பது அமலாக்கப்பட்டது. (நூலிலிருந்து பக். 16 – 17)

நூல்:தெலுங்கானா மக்களின் ஆயுதப் போராட்டம் (1946-1951)
ஆசிரியர்: பி. சுந்தரைய்யா
தமிழில்: என். ராமகிருஷ்ணன்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்,
421, அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை – 600 018.
தொலைபேசி: 044 – 24332424, 24332924.
மின்னஞ்சல்:thamizhbooks@gmail.com
இணையம்:thamizhbooks.com

பக்கங்கள்: 192
விலை: ரூ 120.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

இணையத்தில் வாங்க: panuval |nhm

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277


இதையும் பாருங்க…

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் ’வசந்தத்தின் இடி முழக்கம்’ பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பாடல் !

வந்தால் ‘வலி’ யுறுத்துவோம் ! – கேலிச்சித்திரம்

வந்தால் ‘வலி’ யுறுத்துவோம் ! 

ன் முதுகுல சவாரி செய்யுங்க எஜமான்.. உங்களுக்கு வலிக்காம பாத்துக்குறோம்…

ADMK - BJP Election

கேலிச்சித்திரம் : முஹம்மது சர்தார்


இதையும் பாருங்க…

எங்க ஊரு காவக்காரன் (சவுக்கிதார்) | மோடி காணொளி

மதுரை மாநகரின் நீர் இருப்பும் ! நம் உடலின் இன்சுலின் சுரப்பும் !

பொதுவாக ஒரு சராசரி தமிழர் தனது 30 முதல் 40 வயதுக்கு இடைப்பட்ட காலத்தில் நீரிழிவு தனக்கிருப்பதை அறிந்து கொள்கிறார். ஆக, மீதம் இருக்கும் தனது வாழ்நாளை நீரிழிவோடு தான் அவர் கழிக்க நேரிடுகிறது.

இதில் பலருக்கும் பின்வரும் நான் சொல்லும் வழக்கம் பொருந்தும் என்று நினைக்கிறேன்:

  • முதல் ஐந்து வருடம் : ஒரு மாத்திரை சாப்பிட்டாலே சர்க்கரை அளவுகள் குறைந்து நார்மலாக இருக்கும்.
  • அடுத்த ஐந்து வருடம் : இன்னும் சிறிது அதிகமாக சர்க்கரை அளவுகளை குறைக்க கூடிய மாத்திரைகள் தேவைப்படும்.
  • அதற்கடுத்த ஐந்து வருடம் : இரண்டு மூன்று மாத்திரைகள் எடுத்தாலும் சர்க்கரை அளவுகள் கட்டுப்பட மறுக்கும்.
  • இன்னும் சில வருடங்கள் சென்றால் : எதற்கும் சர்க்கரை கட்டுப்படாமல், இன்சுலின் ஊசி போட்டால் தான் சரி வரும் என்ற நிலை வரும்.

கடைசி காலத்தில் அந்த இன்சுலினும் வேலைக்கு ஆகாமல்.. எதைப் போட்டாலும் சர்க்கரை அளவுகள் தாறுமாறாக இருக்கும் சூழலை காண முடிகிறது.

இது ஏன் ?

இந்த காட்சியை நமது மதுரை மாநகரின் தண்ணீர் வளத்தை கொண்டு கூறுகிறேன். கதையை கேளுங்கள் ;

வைகையில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம். படம் – இணையத்திலிருந்து

மதுரை மாநகரில் எனது தாத்தாவும் பாட்டியும் குடியேறி வீடு கட்டியபோது ( 1960 -களின் கடைசியில்) அங்கு அவர்களுக்கு வீட்டிலேயே 20 அடி கிணறில் நல்ல சுத்தமான தண்ணீர் கிடைத்து வந்தது. அக்கம்பக்கம் இருக்கும் பல வீடுகளில் இருப்பவர்களுக்கும் அந்த கிணற்றின் வழி நல்ல குடிநீர் கிடைத்து வந்திருக்கிறது.

எனது தந்தைக்கு திருமணம் ஆன புதிதில் அந்த கிணறு வற்றிப்போனது,
வற்றிய கிணறு மண் கொண்டு அடைக்கப்பட்டது. ( 1980 -களின் கடைசியில்)
ஆனால் போர் போட்டால் நூறு அடியில் தண்ணீர் கிடைத்தது.

1990 மற்றும் 2000 காலங்களில் தண்ணீர் அளவு குறைந்து கொண்டே வந்து ஐநூறு அடி போட்டால் தான் தண்ணீர் கிடைக்கும் அதுவும் உப்பு நீரே கிடைத்தது.

அதே மதுரையில் உப்பு தண்ணீர் பெற போர் போட்டால் சுமார் ஆயிரம் அடி போட்டாலும் தண்ணீர் இல்லை காற்று தான் வருகிறது.

காரணம் என்ன ?

எனது தாத்தா காலத்தில் இப்போது இருக்கும் அளவு மதுரையில் ஜனத்தொகை இல்லை. ஜன நெருக்கடி இல்லை, இத்தனை பேர் தங்கள் வீடுகளில் போர் போடவில்லை. மதுரைக்கு தண்ணீர் தரும் கண்மாய்கள் அனைத்தும் நீர் நிரம்பி உயிர்ப்புடன் இருந்தன.

இன்று நிலை எப்படி இருக்கிறது ?

மதுரையின் ஜன நெருக்கடி மிக மிக அதிகமாகிவிட்டது. தண்ணீர் நிரம்பிய கண்மாய்கள் யாவும் ப்ளாட்டுகளாக்கப்பட்டு ஹவுசிங் போர்டுகளாக மாறிவிட்டன. அவற்றிற்கு தண்ணீர் தந்த கால்வாய்கள் யாவும் முகவரி இழந்து நிற்கதியாய் நிற்கின்றன.

இந்த காட்சியை நமது உடலுடன் ஒப்பீடு செய்யுங்கள் ஒருவர் அவரது உடலுக்கு தேவையானதை விட அதிகமாக மாவுச்சத்தை உண்டு கொண்டே இருக்கிறார்.
அந்த மாவுச்சத்தை செரிமானம் செய்ய இன்சுலினும் சுரந்து கொண்டே இருக்கிறது
ஒரு கட்டத்தில் அவர் நீரிழிவு நோயாளியாகிறார்.

படிக்க:
♦ சர்க்கரை நோய் – உடல்பருமனை கட்டுப்படுத்துவது சரிவிகித உணவா – பேலியோ உணவா ? மருத்துவர் BRJ கண்ணன்
♦ குழந்தையின்மை சிகிச்சையும் பார்ட்னர்ஷிப்பும் ! | மருத்துவர் ஃபரூக் அப்துல்லா

ஏன் நீரிழிவு நோயாளி ஆனார் ? 

அவரது உடலால் அவர் உண்ணும் மாவுச்சத்தை செரிமானம் செய்யும் அளவு இன்சுலினை உற்பத்தி செய்ய இயலவில்லை. மேலும் அவருக்கு சுரக்கும் சிறிதளவு இன்சுலினும் சரியாக வேலை செய்யவில்லை .

அவருக்கு இன்சுலினை சரியாக வேலை செய்ய வைக்கும் மாத்திரைகள் தரப்படுகின்றன. கொஞ்ச நாள் சர்க்கரை கட்டுக்குள் இருக்கிறது. ஆனாலும் அவர் மாவுச்சத்தை அதிகமாக உண்பதை நிறுத்திய அல்லது குறைந்த பாடில்லை. மேலும் அவரது உடல் இன்சுலின் சுரப்பை குறைக்கிறது.

சர்க்கரை அளவுகள் மீண்டும் கட்டுக்குள் வரமாட்டேன் என்கிறது. தற்போது உடலின் இன்சுலினை அதிகப்படுத்தும் மாத்திரைகள் தரப்படுகின்றன. உடல் தன்னால் இயன்ற அளவு முழுத்திறனுடன் இன்சுலினை உற்பத்தி செய்து உண்ணும் மாவுச்சத்தை செரிமானம் செய்கிறது.

தற்போதும் அவர் மூன்று வேளையும் மாவுச்சத்து நிரம்பிய உணவுகளை தான் உண்டு வருகிறார். கணையத்தை சக்கையாக பிழியுமட்டும் பிழிந்து இன்சுலின் சுரந்து சுரந்து ஒரு கட்டத்தில் இன்சுலின் சுரப்பு நின்று விடுகிறது.

தற்போது தான் அந்த நோயாளிக்கு புத்தி வருகிறது. காரணம் தன் உடலில் இன்சுலின் இல்லாததால் மருத்துவர் இன்சுலினை வெளியில் இருந்து போடச்சொல்லும் நிலை வந்துவிட்டது.

தற்போது இதே விசயத்தை மதுரையுடன் ஒப்பிடுங்கள்

1970-களில் குறைவாக இருந்த ஜன நெருக்கடி சர்க்கரை நோயாளி குறைவாக மாவுச்சத்து எடுத்து வந்ததற்கு ஒப்பாகும். அந்த கால மக்களுக்கு தண்ணீர் மிக எளிதாக கிடைத்து வந்தது இன்சுலின் சுரப்பு நன்றாக இருக்கும் நோயாளிக்கு சமம்.

1980-களில் ஜன நெருக்கடி கூடியதால் தண்ணீர் பஞ்சம் ஏற்படத் தொடங்கியது
இன்சுலின் சுரப்பு குறைவதற்கு ஒப்பாகும்.

2000-களில் அனைத்து கண்மாய்களும் வரண்டு தண்ணீர் சுத்தமாக இல்லாமல் போனது இன்சுலின் சுரப்பு கிட்டத்தட்ட இல்லாமல் போனதற்கு ஒப்பாகும். தற்போது ஆயிரம் அடி போட்டாலும் பல இடங்களில் தண்ணீர் கிடைப்பதில்லை. இது உடல் இன்சுலினை சுத்தமாக சுரப்பதை நிறுத்தியதற்கு சமம். வீடுகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் வறட்சி காலங்களில் வெளியில் இருந்து வண்டிகளில் தண்ணீர் கொடுக்கும் சூழல் உருவாகியிருக்கிறது.

ஆகவே , கதை கூறும் கருத்து யாதெனில் தண்ணீரை திறம்பட சேமித்து, தண்ணீர் தரும் கண்மாய்களை அடைக்காமல் ப்ளாட்டுகள் போடாமல் இருந்திருந்தால், தற்போது தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் மதுரை இருந்திருக்கும். அதுபோலவே
நீரிழிவு வந்தது என்று தெரிந்த நாளில் இருந்தாவது மாவுச்சத்தை குறைத்து உண்டு வந்திருந்தால், தற்போது இன்சுலின் சுத்தமாக சுரப்பது நின்று … வெளியில் இருந்து இன்சுலின் போடும் நிலையும் வந்திருக்காது அல்லவா…

தண்ணீரையும் இன்சுலினையும் சிக்கனமாக உபயோகிப்போம்!

நன்றி : ஃபேஸ்புக்கில் Dr. ஃபரூக் அப்துல்லா MBBS.,MD., பொது நல மருத்துவர் சிவகங்கை.

கொடிய வலியும் கடும் பசியும் ! உண்மை மனிதனின் கதை 5

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 5

வ்வோர் அடி எடுத்து வைக்கையிலும் கொடியவலி உண்டாயிற்று. அதை உணராதிருக்கும் பொருட்டு, தனது பாதையைப் பற்றி சிந்திப்பதும் கணக்கிடுவதுமாகக் கவனத்தை வேறுபுறம் திருப்பத் தொடங்கினான். ஒரு நாளுக்குப் பத்து, பன்னிரண்டு கிலோ மீட்டர் நடந்தால் மூன்று அல்லது அதிகமாய் போனால் நான்கு நாட்களில் தன்னவர்களிடம் சேர்ந்துவிடலாம் என்று எண்ணமிட்டான்.

அப்படியானால், நல்லது! இப்பொழுது பத்து, பன்னிரெண்டு கிலோ மீட்டர் நடப்பது என்றால் என்ன அர்த்தம்? ஆகவே, பத்து கிலோ மீட்டர் என்பது இரண்டாயிரம் காலடிகள். ஒவ்வொரு ஐநூறு, அறுநூறு அடிகளுக்கும் பின்புறம் நின்று இளைப்பாற வேண்டியிருக்கும் என்பதைக் கணக்கில் எடுத்துக் கொண்டால் இது பெரிய தொலைவுதான்…

முந்தைய நாள், பாதையின் தூரத்தைக் குறைப்பதற்காக அலெக்ஸேய் ஒரு யுக்தி செய்தான்: பைன் மரம், அடிக்கட்டை, வழியிலிருந்த செடி என்று எதையேனும் புலப்படும் பொருளை இலக்காக வைத்துக்கொண்டு, இளைப்பாறும் இடத்திற்குச் செல்வதுபோல அதை நோக்கி முன்னேறினான். இப்போதோ அவன் இவற்றை எல்லாம் எண்களில் மொழி பெயர்த்தான். காலடிகளின் எண்ணிக்கையாக மாற்றினான். இளைப்பாறும் இடங்களுக்கு இடையே உள்ள தூரத்தை ஆயிரம் அடிகளாக, அதாவது அரைக் கிலோமீட்டராக வைத்துக் கொள்ள நிச்சயித்தான். இளைப்பாறுவதையும் நேரக் கணக்கில், ஐந்து நிமிடங்களுக்கு மேற்படாமல் வைத்துக் கொள்வது என்று முடிவு செய்தான். பொழுது புலர்வதிலிருந்து பொழுது சாய்வதற்குள், சிரமத்துடன்தான் என்றாலும் அவன் பத்து கிலோமீட்டர் தொலைவைக் கடந்து விடுவான் என்று இந்தக் கணக்குக் காட்டியது.

ஆனால் முதல் ஆயிரம் அடிகள் நடப்பதற்கு அவன் என்ன பாடுபட்டுவிட்டான்! வலியை உணராதிருக்கும் பொருட்டு அடிகளை எண்ணுவதில் தன் கவனத்தை திருப்ப முயன்றான். ஆனால் ஐநூறு அடிகள் நடந்த பின் எண்ணிக்கையை குழப்பவும் பொய்யாக எண்ணவும் தொடங்கினான். எரியும், குத்திக் குடையும் வலியைத் தவிர வேறு எதையும் பற்றி சிந்திக்கவே அவனால் முடியவில்லை. ஆயினும் இந்த ஆயிரம் அடிகளை அவன் நடந்து தீர்த்தான். உட்காருவதற்குத் திராணி இல்லாமையினால் வெண்பனியில் முகங்குப்புற விழுந்து பனிப் புறணியை ஆர்வத்துடன் நக்கலானான். நெற்றியையும் இரத்த ஓட்டத்தால் விண்விண்ணென்று தெறித்த கன்னப் பொருத்துக்களையும் வெண்பனியில் அழுத்தினான். அதன் சில்லென்ற ஸ்பரிசத்தால் வருணனைக்கெட்டாத இன்பத்தை அனுபவித்தான்.

உறைந்துபோய்ச் சப்பென்றிருந்த கொழுப்புத் துண்டை வாயில் போட்டுக் கொண்டான். அதைச் சுவைக்காமலேயே விழுங்க விரும்பினான். ஆனால் கொழுப்பு இளகி விட்டது. அதன் ருசியை வாயில் உணர்ந்தான். உடனே அவனுக்கு அகாத பசி எடுத்தது. டப்பாவிலிருந்து மேலும் இறைச்சியை எடுக்க உண்டான ஆசையைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு, எதையாவது விழுங்க வேண்டும் என்பதற்காக வெண்பனியைத் தின்னத் தொடங்கினான்.

அப்புறம் திடுக்கிட்டுக் கடிகாரத்தைப் பார்த்தான். வினாடி முள் ஐந்தாவது நிமிடத்தின் கடைசிக் கண்களைக் கடந்து கொண்டிருந்தது. அது தன் வட்டத்தைச் சுற்றி முடித்ததும் ஏதோ பயங்கரம் நிகழ்ந்து தீரும் என்பது போலப் பேரச்சத்துடன் அதை நோக்கினான். “அறுபது” என்ற எண்ணை அது தொட்டதுமே துள்ளி எழுந்து வலியால் முனகிவிட்டு மேலே நடந்தான்.

நடுப்பகலுக்குள் இம்மாதிரி நான்கு தொலைவுகளை அவன் கடந்து விட்டான். அப்படியே வழி நடுவே வெண்பனியில் உட்கார்ந்தான். அநேகமாகக் கைக்கு எட்டும் தூரத்தில் கிடந்தது பெரிய பிர்ச் அடிமரம். அதுவரை போகக்கூட அவனிடம் வலுவில்லை. தோட்களை கூனியவாறு, எதைப் பற்றியும் நினைக்காமல், எதையும் பார்க்கவோ கேட்கவோ செய்யாமல், பசியைக் கூட உணராமல் நெடுநேரம் உட்கார்ந்திருந்தான்.

படிக்க:
போராட்டமே அவருக்கு உயிர் – மார்க்ஸ் இறப்பின் போது ஏங்கெல்ஸ் ஆற்றிய உரை !
பாசிசத்தின் இயற்கைக் கூட்டாளிதான் பாஜக | தோழர் மருதையன் உரை | காணொளி

பின்பு பெருமூச்சு விட்டு, சில வெண்பனி உருண்டைகளை வாயில் போட்டுக் கொண்டான். உடலைப் பிணித்த மரமரப்பை உதறிப் போக்கிக் கொண்டு, பையிலிருந்து துருவேறிய டப்பியை எடுத்தான், அதைக் கட்டாரியால் திறந்தான். உறைந்துபோய்ச் சப்பென்றிருந்த கொழுப்புத் துண்டை வாயில் போட்டுக் கொண்டான். அதைச் சுவைக்காமலேயே விழுங்க விரும்பினான். ஆனால் கொழுப்பு இளகி விட்டது. அதன் ருசியை வாயில் உணர்ந்தான். உடனே அவனுக்கு அகாத பசி எடுத்தது. டப்பாவிலிருந்து மேலும் இறைச்சியை எடுக்க உண்டான ஆசையைச் சிரமத்துடன் அடக்கிக் கொண்டு, எதையாவது விழுங்க வேண்டும் என்பதற்காக வெண்பனியைத் தின்னத் தொடங்கினான்.

மறுபடி பயணம் தொடங்குமுன் அலெக்ஸேய், ஜூனிப்பர் புதரிலிருந்து இரண்டு கொம்புகளை வெட்டி எடுத்துக் கொண்டான். அவற்றைத் தாங்கலாக ஊன்றிக்கொண்டு நடந்தான். ஆனால் நடப்பது மணிக்கு மணி அதிகக் கடினமாகிக் கொண்டு போயிற்று.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

இந்த செய்தியை நீங்கள்தான் அனுப்பினீர்களா என்பதை என்னால் நம்ப முடியவில்லை !

1

மோடி ஆதரவாளரான என் நண்பருக்கு ஒரு கடிதம் !

டந்த பல மாதங்களாக இந்தக் கடிதத்தை எழுத விரும்பினேன். மக்களவைத் தேர்தல் வரவிருக்கிற நிலையில், இதை எழுதுவது கட்டாயம் என நினைக்கிறேன்.

பதினைந்து ஆண்டுகளாக நாம் ஒருவரையொருவர் அறிவோம்.  இது நீண்ட காலம்தான். நீங்கள் எங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறீர்கள், நான் உங்கள் வீட்டுக்கு வந்திருக்கிறேன்.  நாம் இருவரும் எண்ண முடியாத அளவுக்கு தேநீர் கோப்பைகளையும் நீண்ட மணி நேரங்களையும் வாழ்க்கை குறித்தும் பேரண்டம் குறித்தும், ஏன் அனைத்தையும் பற்றியுமே பேசியிருக்கிறோம். நீங்கள் உங்களுடைய குடும்ப விழாக்களுக்கு அழைத்திருக்கிறீர்கள். நான் எங்களுடைய குடும்ப விழாக்களுக்கு உங்களை அழைத்திருக்கிறேன்.  எனது மகிழ்ச்சியும் துக்கத்திலும் நீங்கள் பங்கெடுத்தீர்கள். அதுபோலவே நானும்!

இந்தக் கடிதம் எழுதுவதற்கு அத்தனை எளிதானது அல்ல, ஆனபோது, தேவையாக இருப்பதால் எழுதுகிறேன்…

ஓராண்டுக்கு முன், நீங்களும் நினைவில் வைத்திருக்கலாம். ‘கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் நாட்டை எப்படி கொள்ளையடித்தது’ என்பது பற்றிய செய்திகளையும் வீடியோக்களையும் அனுப்பத் தொடங்கினீர்கள். யோகா, தியானம், நேர்மறை சிந்தனை, நட்பு போன்றவற்றுடன் இந்த குறுஞ்செய்திகளையும் எனக்கு அனுப்பிக் கொண்டிருந்தீர்கள். வழக்கமாக எனக்கு வரும் காப்பி – பேஸ்ட் குறுஞ்செய்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அப்படி பதில் அனுப்புவதை அனுப்புகிறவர்களும் எதிர்ப்பார்க்க மாட்டார்கள்.

அதன் பிறகு, நரேந்திர மோடியின் அரசு எத்தனை அற்புதமானது என்கிற தொடர் செய்திகளை அனுப்பத் தொடங்கினீர்கள். எனது நினைவு சரியென்றால், அதற்கெல்லாம், சிரிப்பை பதிலாக அனுப்பியிருக்கிறேன். அனைவருக்கும் தனிப்பட்ட அரசியல் கருத்துக்கள் இருக்கும். உங்களுடைய கருத்து உங்களிடம், என்னுடைய கருத்து என்னிடம்.  வாழு வாழ விடு, இதைத்தான் நான் நம்புகிறேன்.

அதன் பிறகு, மற்றொரு தொடர் குறுஞ்செய்திகளை எனக்கு அனுப்பத் தொடங்கினீர்கள். இது என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கி நிறுத்தியது. ‘இந்தியா நல்ல நிலைக்கு வர முசுலீம்கள்தான் பெரும் தடையாக இருக்கிறார்கள்’ என்பதைப் போன்ற வாட்ஸப் செய்திகள் அவை.  இதை நீங்கள்தான் அனுப்பினீர்களா என்பதை என்னால் நம்ப முடியவில்லை. உங்கள் போனிலிருந்து விளையாட்டுக்காக யாராவது ரசிக்க முடியாத இத்தகைய செய்திகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்களா என்றுகூட உங்களிடம் கேட்டேன். நீங்கள் தீவிரமாக அப்படி ஏதும் இல்லை என மறுத்தீர்கள். இதையெல்லாம் நான்தான் அனுப்பினேன் என்றீர்கள்.

அதன்பிறகு, முசுலீம் எத்தனை ஆபத்தானவர்கள் என்பதையும் அவர்கள் எப்படி இந்தியாவுக்கு வலிகளைத் தந்து கொண்டிருக்கிறார்கள் என்பதையும் கடுமையான மொழியில் விவரிக்கும் பெரிய செய்தி ஒன்றை அனுப்பினீர்கள்.  அந்தக் கட்டத்தில், நான் வெடித்து உங்களிடம் ஒன்றைக் கேட்டேன்.  “நீங்கள் எப்போதும் படித்துக் கொண்டிருந்த நூல்கள் என்னவாயின? ஆன்மீகத்தை, அமைதியை, நேர்மறை சிந்தனையை சொன்ன புத்தகங்கள் எங்கே?” என்றதற்கு, நீங்கள் சொன்னீர்கள், “ஆன்மீகம் வேறுபட்டது. நாம் எப்போதும் நடைமுறைச் சார்ந்து இருக்க வேண்டும்.” என்று.

இந்த பதிலால் கவலையுற்ற நான், தொலைபேசியைத் துண்டித்துவிட்டு பணிக்குச் சென்று விட்டேன். ஆனால், நீங்கள் சொன்ன பதில் என்னை தொந்திரவு செய்துகொண்டே இருந்தது.

அதன் பின், சில நாட்களுக்கு நீங்கள் தொடர்ந்து தினமும் வீடியோக்களையும் செய்திகளையும் அனுப்பிக் கொண்டிருந்தீர்கள். அவை அனைத்தும் பாஜகவும் மோடியுமே இந்தியாவுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடியவர்கள் என்பதைக் கூறின.  அவர்களால் ‘முசுலீம் பிரச்சினை’யை தீர்க்க முடியும் எனவும் அந்தச் செய்திகள் வலியுறுத்தின.

அதாவது, உங்களுடைய கருத்தை என்னை ஏற்க வைக்கும் திட்டத்தோடு இருப்பதைப் போன்ற தோற்றத்தை அவை அளித்தன. நான் திரும்பத் திரும்ப இது தவறானது, சரியானதல்ல, மோசமானது, ஒருவரை மோசமாக சித்தரிப்பது சரியல்ல, அதையும் கடந்து நாம் அவர்களை சக மனிதர்களாக கருதுவதே இப்போதைய தேவை என்பதைச் சொன்னேன்.

ஆனால், அது வேலை செய்யவில்லை. ஒரு கட்டத்தில் இத்தகைய வெறுப்பு நிறைந்த, அவதூறு செய்திகளை அனுப்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டேன். அதன்பிறகு நமது நட்பு கரைந்துபோகத் தொடங்கியது. நாம் இருவரும் சந்திக்க நேரும்போது, அமைதியாக நலம் விசாரித்துவிட்டு கடந்து சென்றோம். நம் இருவருக்குள் இருந்தவை மாறிவிட்டன. இதை நான் நல்லதாக உணரவில்லை.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா

நம் இருவருடைய பொது நண்பர்களும் அரசியலை நட்புக்குள் கொண்டுவர அனுமதிக்க வேண்டாம் என்றார்கள். அந்த ஆலோசனைக்கு நீங்கள் என்ன பதில் சொன்னீர்கள் என எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரியும் நான் நட்பை மதிக்கிறவன் என்று. ஆனால், நல்ல நட்பு பொதுவான நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாகக் கூடியது. இதை நீங்கள் ஏற்பீர்கள் இல்லையா? ஒரு சமூகத்தையே மோசமாக சித்தரிப்பதில் எந்தத் தவறும் இல்லையென நீங்கள் கருதினால், நாம் எப்படி நல்ல நண்பர்களாக இருக்க முடியும்? இது உண்மையான கேள்வி, வாய்சவால் அல்ல…

இப்போது ஒன்றை சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்… உங்களுக்கு எப்போது உதவி தேவைப்பட்டாலும் நான் வந்து நிற்பேன். அனைத்தையும் கடந்து நாம் 15 ஆண்டுகளாக நட்பில் இருக்கிறோம். நான் சிறந்த முறையில் இருக்கவே விரும்புகிறேன். ஆனால், கடந்த பதினைந்து ஆண்டுகளாக ஒரே மாதிரியான எண்ணத்துடனும் திறந்த மனதுடனும் நாம் பழகியதைப் போல இருக்க முடியுமா எனத் தெரியவில்லை.  அதை நான் எப்படி எடுத்துக் கொள்வது எனத் தெரியவில்லை.

இப்போது நாம், பெரிய அளவில் அரசியல் விவாதத்துக்குள் இறங்குவோம்.  நீங்கள் மனப்பூர்வமாக ஆதரிக்கும் கட்சி மற்றும் தலைவர் குறித்து நான் ஏராளமான கேள்விகளை கேட்க நினைக்கிறேன்.  நாட்டின் பொருளாதார நிலைமை குறித்தும், ஐந்தாண்டுகளில் குறையாத விவசாயிகளின் தற்கொலைகள் குறித்தும், கங்கை நதியை தூய்மையாக்குவதாக மோடி வாக்குறுதி அளித்த பின்னர் மேலும் அது சீர்கெட்டுள்ளது குறித்தும் 45 ஆண்டுகளில் இல்லாத வேலைவாய்ப்பின்மை குறித்தும், பிரமாண்டமான வீணான சிலைகள் குறித்தும், சமூக ஊடகங்களில் அவதூறு செய்கிறவர்களை மோடி பின் தொடர்வது குறித்தும் நான் ஏராளமாக கேட்க விரும்புகிறேன்.

ஆனால், இப்போதைக்கு இந்தக் கேள்விகளை ஒத்திவைத்து விட்டு, மூன்றே மூன்று கேள்விகளை மட்டும் கேட்கிறேன்.

1 கிறித்துவர்கள் மற்றும் முசுலீம்களை இரண்டாம் தர குடிமக்களாக முன்நிறுத்தி, பாஜக – ஆர்.எஸ்.எஸ். இந்திய அரசியலமைப்பை திருத்தி இந்து ராஷ்டிரமாக மாற்ற விரும்புவதை நீங்கள் ஏற்கிறீர்களா?

2 சமூக ஊடகங்களிலும் தெருக்களிலும் முசுலீம்களை குறிவைத்து தாக்குவதும் அடித்துக் கொல்வதும் உங்களுக்கு சரியாகப் படுகிறதா?

3 மேலும், இதுபோன்ற ஒரு நாட்டில் உங்களுடைய குழந்தைகளை வளர்க்க விரும்புகிறீர்களா?

இந்த கேள்விகளுக்கு ‘ஆம்’ அல்லது ‘இல்லை’ என்ற தெளிவான பதிலைக் கூற முடியும். இந்தக் கேள்விகளுக்கு என்னுடைய ஆணித்தரமான பதில் ‘இல்லை’ என்பதே. உங்களுடைய பதில் என்ன?

தயவு செய்து எனக்குத் தெரியப்படுத்துங்கள். நான் உங்களிடமிருந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திடமிருந்தும் இந்தக் கேள்விகளுக்கான பதிலை எதிர்நோக்கியிருக்கிறேன்.

ரோஹித் குமார்
(நேர்மறை உளவியல் பின்னணியில் பணியாற்றும் கல்வியாளர்)


தமிழாக்கம்: அனிதா
நன்றி
:the wire

தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்

தீஸ்தா செதால்வாட் : அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர் – பீட்டர் துரைராஜ்

“Foot Soldier of the Constitution- A Memoir’ என்ற நூலை Left word Books வெளியிட்டுள்ளது. தீஸ்தா செதால்வாட் எழுதிய இந்த நூலின் தமிழாக்கத்தை ‘நினைவோடை – அரசியலமைப்புச் சட்டத்தின் காலாட்படை வீரர்’ என்ற பெயரில் பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ளது. ச. வீரமணி – தஞ்சை ரமேஷ் மொழிபெயர்த்து உள்ளனர்.

தீஸ்தா செதால்வாட்டின் கொள்ளுதாத்தா ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டையரை குறுக்கு விசாரணை செய்தவர். இவருடைய தாத்தா எம்.சி செதால்வாட் இந்திய அரசாங்கத்தின் முதல் அரசு வழக்கறிஞர். ஒரு அரசு வழக்கறிஞர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக இருந்தவர். இவருடைய நடவடிக்கையால் டி.டி.கிருஷ்ணமாச்சாரி (முந்த்ரா ஊழல்) செய்த செயல்கள் விமர்சிக்கப்பட்டன. இவருடைய அப்பா (அடுல் செதால்வாட்), பால்தாக்கரே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று பொது நல வழக்கு தாக்கல் செய்தவர். இப்படிபட்ட பாரம்பரியத்திற்குச் சொந்தக்காரர்தான் தீஸ்தா செதால்வாட். இந்த நூலில் இவருடைய தன்வரலாறு (அவை சாகசங்கள்) எழுதப்பட்டுள்ளது. ‘வங்காள தேசத்தில் எல்லைகளைத் தாண்டி அச்சமின்றி பாயும் ஓர் ஆறு’ என்பதுதான் இவருடைய பெயர்காரணம்.

இவருடைய நினைவுக் குறிப்புகள் என்பது ஒவ்வொரு குடிமகனோடும் தொடர்பு கொண்டவை. இவர் எழுதியது முதலில் இந்தியா டுடே – இதழில், அவருடைய 14 ம் வயதில், வாசகர் கடிதம் பகுதியில் வெளியாகிறது; பின்னர் கல்லூரி மலரில் வெளியாகிறது. தி டெய்லி, பிசினஸ் இந்தியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட பல இதழ்களில் பத்திரிகையாளராக பணியாற்றி இருக்கிறார். அதனால்தானோ என்னவோ இந்த நூல் செறிவாக இருந்தாலும் படிக்க எளிதாக இருக்கிறது; வார்த்தைகள் வீணடிக்கப்படவில்லை.

1984- ம் ஆண்டு இந்திரா காந்தி இறந்த போது 3000 சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்டனர். அதில் குற்றவாளிகள் முறையாக தண்டிக்கப்பட்டு இருந்தால் 1993-ல் மும்பை கலவரம் நடைபெற்றிருக்காது. அதில் குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டு இருந்தால் 2002 குஜராத் கலவரங்கள் நடைபெற்று இருக்காது. நமது நாட்டிலுள்ள அரசு இயந்திரங்கள், சிறுபான்மை ஆணையம், மனித உரிமை ஆணையம், நீதிமன்றங்கள், சட்டமன்றங்கள் போன்ற அமைப்புகளின் ‘திறன்’ இது போன்ற சமயங்களில்தான் தெரியவருகின்றன. குடிமக்களை பாதுகாப்பதில் இந்த அமைப்புகள் ஆற்றியுள்ள பங்கு என்ன? குற்றமிழைத்தவர்களுக்கு தண்டனை வாங்கித் தருவதில் இந்த அமைப்புகளின் திறன் எத்தகையது? இது குறித்த பார்வையை இந்த நூலைப்படிப்பதன் மூலம் ஒருவர் பெற இயலும்.

ராஜஸ்தான் வறட்சி, சீக்கியர் படுகொலை என இவரது செயல்பாட்டில் ஆரம்பம் முதலே ஒரு தொடர்ச்சி தெரிகிறது. மும்பைக் கலவரம் குறித்தும், குஜராத் கலவரம் குறித்தும் இவர் கொடுக்கும் சித்திரம் வித்தியாசமானது. இந்த நூலை அவசியம் படிக்க வேண்டும். ‘நீதிமன்றத் தீர்ப்புகளின் மீது சிறுநீரை கழிப்பேன்’ என்று கூறிய பால்தாக்கரே மீது அரசு எடுக்கவில்லை. இவருடைய தந்தை அடுல் பொதுநல வழக்கு தாக்கல் செய்கிறார். நீதிமன்றம் அவரை விடுவிக்கிறது. முஸ்லிம்களுக்கு எதிராக பால்தாக்கரே சொல்லுவதை முதல் பக்கத்தில் வெளியிடும் பத்திரிகைகள் இருக்கும்போது ஜனநாயகத்தை பாதுகாப்பது எப்படி? ஸ்ரீ கிருஷ்ணா ஆணையம் அளித்த பரிந்துரைகளை காங்கிரஸ் அரசும் அமலாக்கவில்லை. இதனால் நமது ஜனநாயக அமைப்புகளின் தோல்வி வெளிப்படவில்லையா?

கோத்ரா ரயில் சம்பவத்தினால்தான் பிப்ரவரி 28-ல் 2002-ல் குஜராத் கலவரம் தன்னெழுச்சியாக நடந்தது என்று சொல்லப்படுகிறது. அப்படி இல்லை என்று நிரூபிக்கிறது இந்த நூல். 2001 -ல் குஜராத் மாநில இடைத்தேர்தலில் பாரதிய ஜனதா தோல்வி அடைந்தவுடன் கொண்டு வரப்பட்டவர்தான் நரேந்திர மோடி. 2002 -க்கு முன்னரே ‘முஸ்லிம் மாணவர்கள் ரம்ஜான், பக்ரீத் போன்ற நாட்களில் தேர்வு எழுத வேண்டி இருந்தது’. ‘போரா, கோஜா பிரிவு முஸ்லீம்களின் வர்த்தகத் துறை வெற்றியினால் பொறாமை உருவானது.  பொறுப்பு ஏற்றுக் கொள்ளாத, பெயரிடப்படாத , விஷத்தை கக்கும் துண்டறிக்கைகள் மூலம் தொடர்ந்து இனப்பகை கட்டமைக்கப்பட்டு வந்தது. முஸ்லிம்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில்தான் வசிக்க முடியும் என்ற தற்காப்பு மனநிலைக்கு வந்து விட்டனர். சமையல் எரிவாயு வன்முறையாளர்களுக்கு எப்படி கிடைத்தது. முஸ்லிம்கள் தங்கியிருந்த இடங்கள் எப்படி துல்லியமாக தாக்கப்பட்டன என்ற விபரங்களை எந்த விசாரணை அமைப்புகளும் கண்டு கொள்ள வில்லை. குஜராத் வன்முறைகளுக்கு பொறுப்பான அதிகாரிகள், அரசியல்வாதிகளைக் குறிப்பிட்டுக் காரண காரியங்களை விளக்கி விசாரிக்கச் சொல்லுகிறார்.

படிக்க:
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழுவில் உள்ள அதிகாரிகள் எப்படி குஜராத் அரசிடம் இருந்து இலட்சக் கணக்கில் பணப்பலன்களை பெற்றனர். எப்படி குற்றவாளிகளை தப்பிக்க விட்டனர். ஆவணங்களை, தொலைபேசித் தகவல்களை கண்டுகொள்ளாமல் விட்டனர். குற்றவாளிகளை விட , உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வுக் குழுவில் இருந்த ‘ஆர்.கே .ராகவன்கள்’ போன்ற அதிகாரிகள் மீதுதான் நமக்கு கோபம் வருகிறது.

இவையெல்லாம் ஏதோ குஜராத்தில் மட்டும் நடக்கிறது என்று எண்ணிவிட வேண்டாம். இதுதான் மற்ற இடங்களிலும் நடக்கும்.

குஜராத் கலவரம். (கோப்புப் படம்)

பல்வேறு இன்னல்களுக்கு இடையிலும், குற்றவாளிகள் தண்டிக்கப்பட தீஸ்தா எடுத்து வைத்த முயற்சிகளுக்கு இந்த சமூகம் அவரைக் கோவில் கட்டி கும்பிட வேண்டும். எவ்வளவு அவதூறுகள். வழக்குகள். உயிரைப் பணயம் வைத்து அவர் செய்த பல விஷயங்களை அரசியல்கட்சிகள் கூட செய்யவில்லை. இவை அனைத்தும் இந்த நூலில் விவரிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் மோடி பிரதமராகிறார். விட்டுவிடுமா அரசாங்கம். இவரையும் , இவரது கணவரையும் பண மோசடி வழக்கில் கைது செய்ய முனைப்பு காட்டுகிறது. அவரை கைது செய்ய முனைந்த தருணங்களுக்கும், அவர் பாதிக்கப்பட்டோர் சார்பாக தாக்கல் செய்த வழக்குகள் விசாரணைக்கு வந்த சமயங்களுக்கும் உள்ள தொடர்பை காட்டுகிறார். அரசு எத்தகைய இழிசெயல்களில் ஈடுபட்டு இவரை அவதூறு செய்கிறது என்பதை சொல்லுகிறார்.

தன் கணவர் ஜாவித்தோடு இணைந்து வெளியிட்டு வரும் ‘கம்யூனலிசம் கம்பாட் இதழ் பற்றியும் இந்த நூல் சொல்லுகிறது. தான் வளர்ந்த சூழல், தன்னை உருவாக்கிய ஆளுமைகள் பற்றி ‘வேர்கள்’ அத்தியாயத்தில் கூறுகிறார்.

இவருடைய முயற்சியானால்தான் சட்ட மன்ற உறுப்பினராக இருந்து, பின்னர் அமைச்சரான மாயா கோட்னானி, பஜ்ரங் தளத்தைச் சார்ந்த பாபு பஜ்ரங்கி உள்ளிட்ட பலர் தண்டிக்கப்பட்டு உள்ளனர். (எந்தக் கொடுங் குற்றத்திற்கும் இவர்கள் மரண தண்டனை கோரவில்லை)

இதில் சம்மந்தப்பட்ட மற்ற குற்றவாளிகள் தப்பி இருக்கலாம்; அதிகாரத்தை அடைந்து இருக்கலாம். ஆனால், தீஸ்தா செதால்வாட் நடத்திக் கொண்டு இருப்பது ஒரு நெடிய போராட்டம். அது நிவாரண முகாமில் உள்ளவர்களுக்கு ரேஷன் வாங்கித் தருவதாக இருந்தாலும் சரி; மற்ற அமைப்புகளை நீதி கேட்கும் நெடும் போராட்டத்தில் ஈடுபடுத்துவதாக இருந்தாலும் சரி; இந்த நூல் ஒரு வகையில் இதிகாசமே . ராஜூ ராமச்சந்திரன், இந்திரா ஜெய்சிங், வி.ஆர்.கிருஷ்ண அய்யர், நீதிபதி எச்.சுரேஷ் ,ஜாகிரா ஷேக், மிகிர் தேசாய் போன்ற பலரைப் பற்றிய குறிப்புகள் வருகின்றன.

படிக்க:
தீஸ்தா நேர்காணல் : மோடியின் குற்றம் மறுக்க முடியாத ஆதாரம்
தீஸ்தா செதல்வாட் கைது முயற்சி : பாசிச மோடியின் பழிதீர்க்கும் வெறி !

குடிமக்களின் உயிர் ,உடமைகளை பாதுகாத்தற்காகவே இடமாற்றம், பதவி உயர்வு, ஓய்வூதியம் என பல வழிகளில் இன்னல்களைச் சந்தித்த அதிகாரிகள்; அதற்கு நேர் விரோதமான மற்றொரு வகை அதிகாரிகள், அவர்கள் அடைந்த பலன்கள் எல்லாம் குறிப்பிடப் பட்டுள்ளன.

ஜனநாயகத்தை வலிமைப் படுத்துவதில் இந்த நூல் முக்கியப் பங்காற்றும். பாரதி புத்தகாலயம் ஒரு முக்கியமான அரசியல் கடமையை நிறைவேற்றி இருக்கிறது. இது ஒரு முக்கியமான கையேடு என்பதில் ஐயமில்லை.

  • வெளியீடு – பாரதி புத்தகாலயம்
  • பக்கம் – 231
  • விலை: ரூ.200
  • இணையத்தில் வாங்க : thamizh books


கட்டுரையாளர்: பீட்டர் துரைராஜ்
நன்றி : The times tamil

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று,

கீழைக்காற்று விற்பனையகம் இடமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது.
புதிய முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

பட் … உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா

எச்.ராஜாவை எனக்கு ஏன் பிடித்திருக்கிறது?

மிழிசை, பொன். ராதாகிருஷ்ணன், இல.கணேசன் போன்றவர்கள் போல எச்.ராஜாவுக்கு நடிக்கத் தெரியாது. மிகவும் இயல்பானவர். பாசிச பா.ஜ.க-வின் உண்மையான கோரமுகத்தை கொஞ்சமும் குன்றாமல் காட்டக்கூடிய வல்லமை படைத்தவர்.

பா.ஜ.வின் கொள்கை என்ன? கோட்பாடு என்ன? என்பதெல்லாம் எச்.ராஜா மூலம், அப்படியே வெளிப்படுவதால்தான் பா.ஜ.கவைக் குறித்த உண்மைகளை இன்றைய இளைய சமுதாயம் அறிந்து கொள்ளமுடிகிறது. மக்கள் வெறுக்கவும் செய்கிறார்கள். இப்படி, எச்.ராஜா பாஜக-வின் உண்மை முகத்தை வெளிப்படுத்துவதாலேயே மாநிலத்தலைவர் பதவியில் அமரவைக்கப்படவில்லை.

எச். ராஜா போன்றவர்கள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் தேவை. இப்படிப்பட்டவர்கள், பா.ஜ.கவில் இருப்பதாலேயே பா.ஜ.க. என்ன மாதிரியான கட்சி என்பது நமக்கு நினைவூட்டப்பட்டுக்கொண்டே இருக்கிறது. அவர், அவராகவே இருப்பதால்தான் எனக்கு அவரை பிடித்திருக்கிறது.

எச்.ராஜாவைவிட ஆபத்தானர்கள் யாரென்றால், பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க, பா.ம.க., தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகள்தான். காரணம், தாமரையானது இரட்டை இலை, மாம்பழம், முரசு வடிவத்தில் வந்து வாக்கு சேகரிக்கின்றது. “தாமரை மலரவே மலராது” என்று சொல்லிக்கொண்டு, அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு ஓட்டுபோட்டால் நீங்கள் தமிழகத்தில் தாமரையை மலர வைக்கிறீர்கள் என்றுதான் அர்த்தம்.

படிக்க:
ரஜினி படம் குறித்து வாய் திறக்க மாட்டேன் ! அம்பலப்பட்ட எச். ராஜா ! மரணமாஸ் ஆடியோ !
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

பா.ஜ.கவுடன் கூட்டணிவைத்து தாமரையை மலர வைத்துக்கொண்டிருக்கும் கூட்டணி கட்சித் தலைவர்களைவிட பா.ஜவுக்குள் இருந்துகொண்டு தாமரையை ஆசிட் ஊற்றி அழுக வைத்துக்கொண்டிருக்கும் எச்.ராஜாவை எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது.

மறுபடியும் சொல்றேன். பட்… உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு எச். ராஜா!!! 🙂 🙂

முகநூலில் : Vini Sharpana


இதையும் பாருங்க …
ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் !