Thursday, June 18, 2026
முகப்பு பதிவு பக்கம் 502

ஓபசமுத்திரம் கிராம மக்களின் இறால் பண்ணை அழிப்பு போராட்டம் !

1

திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், ஓபசமுத்திரம் கிராமத்தில் சுமார் 6 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். அக்கிராமத்தை சுற்றி 15 -க்கும் மேற்பட்ட இறால் பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக அந்த கிராமத்தின் பிரதான தொழில்களான மீன் பிடி தொழிலும், விவசாயமும் முற்றிலுமாக அழிந்து வருகிறது.அதுமட்டுமல்லாமல், நிலத்தடி நீர் முற்றிலும் கெட்டுப்போய், குடிப்பதற்குக்கூட தண்ணீர் இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

தற்போதைக்கு அக்கிராமத்திலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நத்தம் கிராமத்திலிருந்துதான் குழாய் மூலமாக குடி தண்ணீர் பெற்று வருகின்றனர். தற்போதே இந்த நிலைமை என்றால், எதிர் வரும் காலத்தில் தங்கள் பிள்ளைகளின் வாழ்க்கை என்னவாகப்போகிறது? என உணர்ந்த கிராம மக்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக இறால் பண்ணைகளை அகற்றுவதற்கான போராட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இடைப்பட்ட காலத்தில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் கொடுப்பது, வருவாய் கோட்டாட்சியரிடம் மனு கொடுப்பது, உண்ணாவிரதம், சாலை மறியல் உள்ளிட்ட அனைத்து வடிவங்களிலும் போராட்டங்களை நடத்திவிட்டனர். அரசு அதிகாரிகள் தொடர்ந்து அலட்சியப்படுத்தியுள்ளனர். மக்களின் போராட்டத்தால் மிகுந்த நெருக்கடிக்கு ஆட்படும்போது, அரசு அதிகாரிகள் பெயரளவிற்கு கிராமத்தில் ஆய்வு செய்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக மக்களுக்கு வாக்குறுதியளித்து சென்றுள்ளனர்.

அரசு அதிகாரிகளின் அலட்சியத்தால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இறால் பண்ணைகளை அகற்றியே ஆகவேண்டும் என்கிற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் 2016 -ம் ஆண்டு பொன்னேரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக வருவாய் கோட்டாட்சியர் திரு.நாராயணன் அவர்கள் இறால் பண்ணைகளை அகற்ற உத்தரவு பிறப்பித்துள்ளார்.

உத்தரவு பிறப்பித்தது மட்டுமல்லாமல் கிராமத்திற்கே வந்து இறால் பண்ணை உரிமையாளர்களை அழைத்து “உடனடியாக இறால் பண்ணைகளை அகற்றவேண்டும்; இல்லாவிட்டால் அரசு நிர்வாகமே அந்த வேலையை செய்யும், அதற்கான அபராதமும் விதிக்கப்படும்” என எச்சரிக்கை செய்துள்ளார். இதனால் கிராம மக்கள் தங்கள் போராட்டம் வெற்றியடைந்ததாக நினைத்து மகிழ்ச்சியடைந்தனர். பின்னர்தான் தெரிந்தது அது வெரும் கண்துடைப்பு, ஏமாற்று என்று!.

இன்றளவும் இறால் பண்ணைகள் அகற்றப்படவில்லை. மாறாக நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதை கிராம மக்கள் அவமானமாக கருதினர். இதே நிலை நீடித்தால் தங்களது வாழ்நாளிலேயே, தமது சந்ததிகள் வாழ்வாதாரத்தை இழந்து அடுத்தவனிடன் கையேந்தும் நிலை ஏற்பட்டுவிடும் என்கிற அச்சம் உண்டானது.

ஓபசமுத்திரம் இறால் பண்ணை அழிப்பு போராட்டதில் கைது செய்து ரீமான்டு செய்யப்பட்ட பெண்.

இனி அரசு அதிகாரிகளை நம்பி பயனில்லை என உணர்ந்த கிராம மக்கள் கடந்த 29.10.2017 அன்று கிராம கூட்டத்தை கூட்டி இறால் பண்ணை உரிமையாளர்களுக்கு, பண்ணையை அகற்றுவதற்கு ஒரு வாரம் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றினர். இருந்தபோதிலும் இறால் பண்ணை உரிமையாளர்கள் ‘தமக்கு ஆதரவாக அரசு அதிகாரிகளும், போலீசும் இருக்கும்போது நாம் ஏன் கவலை கொள்ளவேண்டும், மக்களால் என்ன செய்துவிட முடியும்’ என அலட்சியமாக இருந்துவிட்டனர். ஆனால், அதற்கு மாறாக சொன்னபடியே 05.11.2017 அன்று கிராம மக்கள் ஒன்றுகூடி தங்கள் சொந்த அதிகாரத்தை கொண்டு இறால் பண்ணைகளை அகற்றும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தி முடித்தனர்.

பாதிப்படைந்த பண்ணை உரிமையாளர்கள் போராட்டத்தில் முன்னணி வகித்த பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, ஆரம்பாக்கம் போலீசு நிலையத்தில் 11 பேர் மீது பொய் புகாரும் கொடுத்துள்ளனர். காவல் துறையும் அவர்களுக்கு ஆதரவாக உள்ளது. இந்த அரசு நமக்கு உதவாது என தங்கள் சொந்த அனுபவத்தில் உணர்ந்துள்ள ஓபசமுத்திர கிராம மக்கள் என்ன நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக உள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
திருவள்ளுர் (கிழக்கு). 
தொடர்புக்கு : 94444 61480


சினிமா நட்சத்திரங்களை நாக் அவுட்டாக்கிய நக்கலைட்ஸ் வீடியோ !

4

நக்கலைட்ஸ் குழுவினர் ஒராண்டு பயணத்தை முடித்திருக்கிறார்கள். அதற்கு முதலில் வாழ்த்துக்கள் !

ஃபேஸ்புக்கில் நாலு ஸ்டேட்டஸ் போட்டு அதையும் ஃபேக் ஐ.டியில் வந்து லைக் பண்ணும் பேதை ஒருத்தி, துப்பறிவாளனிடம் ரொமான்டிக்கான ஹீரோவை தேடித் தருமாறு கேட்கிறாள்.

விக்ரம், தனுஷ், சிம்பு, ரஜினி, கார்த்தி, விஷால் அனைவரும் நக்கலைட்ஸ் படைப்பில் தாருமாறாக அடி வாங்கி ஒரே ரவுண்டில் நாக் அவுட்டாகிறார்கள்.

சினிமா நாயகர்களை நச்சென்று தரைமட்டமாக்கும் படம். வினவு போன்ற ‘குற்றம் கண்டுபிடித்து பெயர் வாங்கும் புலவர்களே” குறையேதுமின்றி நிறைவாக பாராட்டும் படம்.

வடிவம், உள்ளடக்கம் இரண்டும் நீ இல்லாமல் நானில்லை என அழகாகப் பொருந்துகிறது.

நக்கலைட்ஸ் குழுவினர்க்கு வாழ்த்துக்கள்! படத்தைப் பாருங்கள், பகிருங்கள்!

Thupparivalan-2 – A Love Mystery – Spoof – Nakkalites | துப்பறிவாளன் 2 : காதல் ஒரு மர்மம் – நகலடி – வீடியோ

(நகலடி – Spoof ஆங்கில வார்த்தையின் தமிழாக்கம் = நகலைப் பகடி செய்வதால் நகலடி!)


நவம்பர் புரட்சி 100 ஆண்டு நிறைவு : கம்யூனிசம் வெல்லும் !

1

கம்யூனிசம் வெல்லும் !

2017 – கார்ல் மார்க்ஸின் மூலதனம் வெளியிடப்பட்டதன் நூற்று ஐம்பதாவது ஆண்டு. ரசிய சோசலிசப் புரட்சியின் நூறாவது ஆண்டு. சீனத்தின் மாபெரும் கலாச்சாரப் புரட்சிக்கும் இந்தியாவின் நக்சல்பாரி எழுச்சிக்கும் இது ஐம்பதாம் ஆண்டு.

பல்வேறு கற்பனாவாத சோசலிசப் போக்குகள் கோலோச்சிய ஒரு காலத்தில், முதலாளி வர்க்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தொழிலாளி வர்க்க இயக்கத்துக்கு ஒரு வலிமையான தத்துவ ஆயுதத்தை வழங்கினார் மார்க்ஸ். தொழிலாளி வர்க்க இயக்கத்துக்குள் தோன்றிய பொருளாதாரவாதம், இடது சாகசவாதம், தேசவெறி ஆகியவற்றுக்கு எதிராகப் போராடிப் பாட்டாளி வர்க்கப் புரட்சியை வெற்றிக்கு இட்டுச் சென்றார் லெனின்.

பின் தங்கிய விவசாய நாட்டில் புரட்சியைச் சாதித்தது மட்டுமின்றி, சோசலிச சமூகத்திலும் முதலாளித்துவ மீட்சி சாத்தியமே என்று எச்சரித்து, அதனை எதிர்த்துப் போராடுவதற்குத் தொழிலாளி வர்க்கம் நடத்த வேண்டிய கலாச்சாரப் புரட்சியையும் நடத்திக் காட்டினார் மாவோ, ஏகாதிபத்தியத்துடன் சமாதான சகவாழ்வு என்ற சமரசவாத அரசியலிலிருந்தும், நாடாளுமன்றச் சரணடைவுப் பாதையிலிருந்தும் இந்திய கம்யூனிஸ்டு இயக்கத்தை மீட்டு புரட்சிப் பாதைக்குக் கொண்டு வந்தது நக்சல்பாரி எழுச்சி.

இவையனைத்தும் இடையறாமல் தொடர்ந்து வரும் வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றுப் பதிவுகள். இப்போராட்டத்தில் தொழிலாளி வர்க்கம் பின்னடைவுக்கும் தோல்விக்கும் உள்ளாகியிருக்கிறது என்பதன் பொருள் முதலாளி வர்க்கம் அறுதி வெற்றி பெற்று விட்டது என்பதல்ல.

ஆனால், அப்படி ஒரு பிரமையை ஏற்படுத்தவே உலக முதலாளி வர்க்கம் தொடர்ந்து முயற்சிக்கிறது. தனது மூலதனம் நூலின் மூலம் அந்தப் பிரமையைத் தகர்த்தெறிந்தார் மார்க்ஸ். வரலாற்றின் குறிப்பிட்ட கட்டத்தில் முதலாளித்துவம் எப்படித் தோன்றியது என்பதையும், தனது உள் முரண் பாடுகள் காரணமாக அது அழிவை நோக்கிச் செல்வது ஏன் தவிர்க்கவியலாதது என்பதையும் அறிவியல்பூர்வமாக நிறுவினார்.

உலகப் போர்களும் புரட்சிகளும், தேச விடுதலைப் போராட்டங்களும், முதலாளித்துவப் போட்டியும், சுரண்டலும் தோற்றுவித்த தவிர்க்கவியலாத விளைவுகள்தான். அவற்றைத் தற்செயல் நிகழ்வுகளாகக் காட்டுவதன் மூலம்தான் சாகாவரம் பெற்று விட முடியும் என்று மனப்பால் குடிக்கிறது சர்வதேச மூலதனம்.

மீட்சியே இல்லாமல் தொடரும் உலகப் பொருளாதார நெருக்கடியும், அதன் விளைவாக அமெரிக்கா முதல் இந்தியா வரையிலான பல நாடுகளில் வெடித்துக் கிளம்பும் மக்கள் போராட்டங்களும் உலக முதலாளித்துவக் கட்டமைவு எதிர்கொண்டிருக்கும் நெருக்கடிக்குச் சான்று கூறுகின்றன. கடுமையான கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரத்தில் மூழ்கடிக்கப்பட்டிருந்த அமெரிக்க, ஐரோப்பிய இளம் தலைமுறையினர் மத்தியிலேயே இந்த நெருக்கடி, மார்க்சியத்தை நோக்கிய ஈர்ப்பைத் தோற்றுவித்திருக்கிறது.

உலக முதலாளித்துவத்துக்கு முடிவு கட்டவேண்டும். தவறினால், முதலாளித்துவத்துடன் சேர்ந்து மொத்த சமூகமும் இந்தப் புவிப்பரப்பும் அழிவை நோக்கிச் செல்வதைத் தவிர்க்கவே இயலாது என்ற நிலையை எதிர் கொண்டிருக்கிறோம்.

முதலாளித்துவ அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கட்டமைவுகளின் தோல்வி மறைக்கவே முடியாத அளவுக்கு மக்களிடம் அம்பலமாகி வருவதால், ஆளும் வர்க்கங்களே புதிய மீட்பர்களை இறக்கி விடுகின்றன. பாசிஸ்டுகள், இனவெறியர்கள், சாதிவெறியர்கள் முதல் அரசியல் கோமாளிகள் வரையிலான பலரும் மக்களைத் திசை திருப்ப அரசியல் களத்தில் நிற்கிறார்கள்.

இந்நிலையில் இளம் தலைமுறை தொழிலாளி வர்க்கத்தினரிடையே மார்க்சியத்தைக் கொண்டு செல்வது காலத்தின் தேவை. இதனைக் கருத்தில் கொண்டே இந்த இதழைக் கொண்டு வந்திருக்கிறோம்.

– புதிய ஜனநாயகம், நவம்பர் 2017.

**************************************************************************************************************************

ரஷ்ய சோசலிசப் புரட்சி நூறாம் ஆண்டு நிறைவு – அனைவருக்கும் வாழ்த்துக்கள் !

**************************************************************************************************************************

காவிக் கும்பலை கண்டித்து கோவை புஜதொமு பத்திரிக்கை செய்தி !

0

பத்திரிக்கை செய்தி

மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகம் முன் வன்முறையில் ஈடுபட்ட ஏ.பி.வி.பி. –  ஆர்.எஸ்.எஸ். கும்பலை புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக்குழு அலுவலகத்தின் முன்பு ஆர்.எஸ்.எஸ். மற்றும் ஏ.பி.வி.பி. பொறுக்கிகள் மார்க்சிஸ்ட் கட்சிக் கொடியையும் கேரள முதல்வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான பினராயி விஜயனின் புகைப்படத்தையும் எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். இதனை காவல் துறை அனுமதித்தது மட்டுமன்றி அவர்களை பெயருக்கு நான்கு பிரிவுகளில் வழக்கு போட்டு உடனே விடுவித்தும் உள்ளது. இச்செயலை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி வன்மையாக கண்டிக்கிறது

பாஜக மற்றும் அதன் துணை அமைப்புகளான சங்கப் பரிவாரங்கள் அனைத்தும் சமூகத்தின் நச்சுக்களை தின்று வன்முறையை தூண்டுவதிலேயே குறியாய் இருக்கின்றன. இவற்றின் அடையாளம் வன்முறையும் பிற்போக்குத்தனமும் ஏகாதிபத்திய அடிமைப்புத்தியும் ஆகும். பிற்போக்குத்தனத்தையும் ஏகாதிபத்திய அடிமைதனத்தையும் நாம் கேள்விக்குள்ளாக்கினால் அதனை வன்முறையாக எதிர்கொள்வதும், அந்த வன்முறையை எதிர்த்தால் அதனை பெரும் கலவரமாக மாற்றுவதுமே இவர்களின் செயல்முறையாக இருக்கிறது.

இதற்கு முன்பாக கோவை மார்க்சிஸ்ட் கட்சி தலைமை அலுவலகத்தின் மீது வி.ஹெச்.பி. பொறுக்கிகள் பெட்ரோல் குண்டு வீசினார்கள். இவ்விரு சம்பவங்களும் ஒரு சில மாதங்களுக்குள் நடந்துள்ளன. ஜனநாயக முறையில் எதிர்ப்பு தெரிவிக்க அனைவருக்கும் உரிமை உண்டு. ஆனால் இம்மாதிரியான சம்பவங்கள் பெரும் வன்முறையை எதிர்நோக்கிய சிறு பொறிகள் இதில் பாரதிய ஜனதாவின் தேர்தல் பலாபலன்களும் ஒரு பகுதி பாஜக அரசின் வருமான வரி மற்றும் இதர துறைகளின் மூலம் அடிமைச் சாசனம் எழுதிக் கொடுத்துவிட்ட ஆளும் அதிமுக அரசும் அதன் காவல்துறையும் இந்த அயோக்கியத்தனத்திற்கு உடந்தையாக இருப்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

ஆகையினால், இந்த ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறையை ஒரு பரந்த முற்போக்கு ஜனநாயக சக்திகளின் ஐக்கிய முன்னணி மூலமே எதிர்க்க முடியும்! விழ்த்த முடியும்! அதற்கான அபாய மணியாக இச்சம்பவத்தை எடுத்துக் கொண்டு அணியமாவோம் என அறைகூவி அழைக்கிறோம்.

விளவை இராமசமி

மாநில துணைத் தலைவர்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
தமிழ்நாடு.

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
கோவை. தொடர்புக்கு : 90924 60750.

விருதாச்சலம்: பேருந்து நிலையத்தை சுத்தம் செய்யவைத்த மக்கள் அதிகாரம் !

0

மிழகம் முழுக்க டெங்குவால் பலர் இறந்து கொண்டு இருக்கும் இந்த நேரத்திலும் கூட எடப்பாடி அரசும், நகராட்சியும் பொது சுகாதாரத்தைப் பற்றி எள்ளளவும் அக்கறை காட்டாமல் இருந்து வருகிறது.

விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மழையின் காரணமாக பேருந்துநிலையம் முழுவதும் தண்ணீர் தேங்கி துர்நாற்றம் வீசியது. பேருந்துநிலையத்துக்கு வரும் பொதுமக்கள் அனைவரும் மூக்கை பொத்திக் கொண்டு கடந்து செல்லும் நிலையே இருந்தது. இதனை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும் என்ற வகையில், கடந்த 3.11.2017 அன்று விருத்தாச்சலம் பேருந்துநிலைத்தில் மக்கள் அதிகாரம் சார்பாக அங்குள்ள வணிகர்களை அணிதிரட்டி ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவாக பொதுமக்களும் இணைந்தனர். பின்னர் மக்களின் போராட்டமானது சாலை மறியலாக மாறியது. அதன் பின்னர் போலீசு வந்து பேச்சு வார்த்தை நடத்தியது.

“உடனடியாக பேருந்துநிலையத்தில் உள்ள சுகாதார சீர்கேடுகளை சரி செய்ய வேண்டும் இல்லையென்றால் சுத்தம் செய்யும் வரை போராட்டம் தொடரும். என தோழர்களும் பொதுமக்களும் உறுதியாக கூறினர்.

அதன்பின்  போலீஸ் தரப்பில் “5 நிமிடம் பொறுத்துக் கொள்ளுங்கள், உடனடியாக சுத்தம் செய்து தருகிறோம்” என உறுதிமொழி அளித்தார்கள். பின்னர் பேருந்து நிலையத்தைச் சுற்றி முழக்கமிட்டு பேரணியாக சென்ற போது அங்கு கூடியிருந்த மக்கள் மற்றும் பயணிகள் நமது போராட்டத்துக்கு ஆதரவு அளித்தனர்.

பின் நகராட்சி ஊழியர்கள் வந்து கொசு மருந்து அடிப்பது, குப்பைக் கழிவுகளை அகற்றுவது மற்றும் பிளீச்சிங் பவுடர் தெளிப்பது என சுகாதாரப்பணிகளை செய்தனர்.

மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட நிறைவேற்ற வக்கில்லாத இந்த அரசை மக்கள் போராட்டங்களே பணியவைக்கின்றன. உங்கள் ஊரில், உங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளுக்கும் தீர்வு போராட்டங்களே!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விருத்தாச்சலம்.


நடப்பது நிர்வாண நடனம் – கோவணம் வரைந்ததே அதிகம் – தோழர் மருதையன் உரை !

8

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது தொடர்பான விவாதங்கள் அனைத்தும், பாலா வரைந்தது கருத்துரிமையின் வரைமுறைக்கு உட்பட்டதா அல்லது, அல்லது மீறியதா என்ற அளவில் தான் விவாதிக்கப்படுகின்றன. பாலா கைது விவகாரத்தில் பேசப்பட வேண்டியது, பாலாவின் கார்ட்டூன் அம்பலப்படுத்திய அமைப்பின் தோல்வி குறித்த பிரச்சினையா இல்லை கருத்துரிமை குறித்த பிரச்சினையா? மூலப் பிரச்சினையை மறைத்து விட்டு கருத்துரிமையை முன் வைத்து விவாதங்கள் நடத்தப்படுவதையும் அதற்கு முற்போக்காளர்கள் பலியாவதையும் குறித்து தோழர் மருதையன் உரையாற்றுகிறார்

நீரில் மூழ்கிய பள்ளிக்கரணை: தூங்கி வழியும் மாநகராட்சி – களத்தில் இறங்கிய மக்கள் அதிகாரம் !

0

நீரில் மூழ்கிய பள்ளிக்கரணை: தூங்கி வழியும் மாநகராட்சி – களத்தில் இறங்கிய மக்கள் அதிகாரம் !

ட- கிழக்கு பருவ மழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை கொட்டி தீர்த்ததால், சென்னை மாநகரமே வெள்ளத்தில் தத்தளிக்கிறது.

பன்னாட்டு கம்பெனிகள், ஷாப்பிங் மால்கள், பொறியியல் கல்லூரிகள், தனியார் மருத்துவமனைகள் ஆகிய வளர்ச்சியின் அடையாளங்களாக சொல்லப்படும் இவைதான், தமிழகம் முழுவதும் நீர்வழி பாதைகளையும், நீர் நிலைகளையும் ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ளன. இதன் விளைவு தண்ணீர் வெளியேற வழியில்லாமல், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.

நிரம்பி வழியும் பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி

அப்படி பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பள்ளிக்கரணை நாராயணபுரம் அண்ணாநகர் மேற்கு பகுதிக்கு உட்பட்டு மொத்தம், 10 தெருக்களில் 6,7,8,9 ஆகிய தெருக்களில் முழங்கால் அளவு முதல் இடுப்பு அளவு வரை தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணி பெண்கள் என மக்கள் அனைவரும் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்கள்.

இந்நிலையில் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக மேற்கண்ட பகுதியில் நிவாரணப் பணி மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மக்களுக்கு உரிய நிவாரண உதவிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டியது இந்த அரசின் கடமை என்பதை விளக்கும் விதமாகவும் மக்களிடம் பேசப்பட்டது.

அப்பகுதி மக்கள் “மூன்று நாட்களாக மழை கொட்டியது, எங்களை அரசு – கட்சிக்காரங்க யாரும் எட்டி பார்க்கவில்லை. நீங்கள் வந்து பார்த்ததே ஆறுதலாக உள்ளது” என்றனர்.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் விதமாக, உணவு, தண்ணீர் ஏற்பாடு செய்ய, ஆபீஸ் மேடம் (office madam) – 8778814966, AE – 9445190788 ஆகிய அரசு அதிகாரிகளின் எண்களுக்குத் தொடர்பு கொண்ட போது, போனை அணைத்துவிட்டனர் (Switch off). மேலும் சுகாதார கண்கானிப்பாளர் (Health inspector)  9445190074 எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது, உரிய ஏற்பாடுகளைச் செய்வோம், ஒரு மணி நேரத்தில் தொடர்பு கொள்ளுமாறு (4.11.2017 மாலை, 6:45) கூறினார் சம்பந்தப்பட்ட அதிகாரி. மீண்டும் தொடர்பு கொண்ட போது, இவருடைய தொலைபேசியும் அணைக்கப்பட்டிருந்தது.

கள நிலவரம் இவ்வாறு இருக்க, மழை நிவாரண வேலைகளுக்கு துறைவாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டிருப்பதாகவும், துறை சார்ந்த அதிகாரிகளிடத்தில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அரசு விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் இதற்கு எதிராக அரசு நடந்து வருகிறது என்பது தான் உண்மையாகும்.

கடந்த 2015 -ம் ஆண்டைப் போல தொடர்ச்சியாக கனமழை பொழியாமல், சற்று இடைவெளி விட்டு பெய்த மழையால், தண்ணீர் வெளியேற இயற்கை வாய்ப்பளித்துள்ளது. ஆனாலும் நீர் வழிதடங்கள் அனைத்தும் முதலாளிகள் மற்றும் கார்ப்ரேட் நிறுவனங்களின் ஆக்கிரமிப்பால் தண்ணீர் வெளியேற வாய்ப்பு இல்லாமல் மக்கள் தத்தளித்து வருகின்றனர். இது பள்ளிக்கரணை நாராயணபுரம் பகுதியில் மட்டுமல்ல, சென்னையின் பல இடங்களிலும் பார்த்தாலே தெரியும் உண்மையாகும்.

வட கிழக்கு பருவ மழை பெய்வது என்பது இயற்கை! ஆனால் எடப்பாடி அரசு இன்னமும் நீடிப்பது இயற்கைக்கே எதிரானது என்பதுதான் கள நிலைமைகள் உணர்த்தும் உண்மை. இந்த உண்மையினை மக்களிடம் கொண்டு செல்வோம்…

தகவல் :
மக்கள் அதிகாரம்
சென்னை மண்டலம்


கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

1

கார்ட்டூனிஸ்ட் பாலாவை கைது செய்ததைக் கண்டித்து தமிழகமெங்கும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம்!

ந்துவட்டி கொடுமைக்கு இசக்கிமுத்து குடும்பத்தையே பலி வாங்கிய இந்த அரசை கண்டித்து கார்ட்டூன் வரைந்த பாலா அவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் 06.11.2017 (இன்று) தமிழகத்தில் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மதுரையில்…

சக்கிமுத்து மரணத்திற்கு காரணமான நெல்லை எஸ் பி, கலெக்டர் மற்றும் எருமைத்தோல் எடப்பாடியை கைது செய்!  கார்ட்டூனிஸ்ட் பாலாவை நிபந்தனையின்றி விடுதலை செய் ! என்ற முழக்கத்தை முன்வைத்து மக்கள் அதிகாரம், மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளர் தோழர் குருசாமி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட இருபது தோழர்கள் கைது செய்யப்பட்டு மதுரை  திலகர் திடல், காவல் நிலையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

திருச்சியில்…

ந்து வட்டி – போலிஸ் – கலெக்டர் கொடுமையால் தீயில் கருகியது இசக்கிமுத்துவின் குடும்பம் ! இந்த அக்கிரம அராஜகங்களுக்கு முடிவுகட்டுவோம் !! கார்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! என்ற முழக்கத்தின் கீழ் திருச்சி மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

***

விருத்தாச்சலத்தில்…

க்கள் அதிகாரம் சார்பில் விருத்தாச்சலம் பகுதியில் கார்ட்டூனிஸ்ட் பாலாவை விடுதலை செய்! என்ற முழக்கத்தின் அடிப்படையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

 தகவல் :
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

கார்ட்டூன் மேல் வந்த கோபம் கந்துவட்டி மேல் வரவில்லையே ?

2

கந்துவட்டி மேல் வராத கோபம் கார்ட்டூன் மேல் வருகிறதா !

ண்மையில்
எங்களை கேலிசெய்கிறது
உங்கள் ஆட்சி.

ஒரு கேலிச்சித்திரத்தை
முடிக்கும் முன்பே
அடுத்த கேலிக்குரியதை
படைத்துவிடுகிறது அரசு.

கேலிசெய்ய நீளும்
எந்தவொரு கார்டூனிஸ்ட்
கோடுகளையும்
முடிக்க இயலாவண்ணம்
வரைபவரின் கைகளை கேலிசெய்து
நீள்கிறது
அதிகார வர்க்கத்தின் ஆணவம்.

நாட்டில்
நீங்கள் நடத்தும் ஆபாசத்தை
கோட்டில் வரையும் அளவுக்கு
கூசாத இதயம்
எங்களுக்கு இல்லை.

எங்கள் கையில் இருப்பது
கண்ணாடி தான்
பிம்பம் உங்களுடையது.
ஆபாசமாய் இருப்பதாய்
அரற்றுவதால் தான் சொல்கிறோம்
கேலிக்குரியதாக்குவது
நீங்களே!

கொட்டாங்கச்சியில்
கொஞ்சம் நீர் இருந்தாலே
டெங்குவிற்கு நீங்கள்தான்
காரணம் என்று
தண்டம் விதித்தவர்கள்,

குடிசைக்குள் தண்ணீர் நிற்கும் அளவுக்கு
தெண்டமான உங்கள் ஆட்சியை
கேள்விகேட்டால்
”மழை என்றாலே
தண்ணீர் தேங்கத்தான் செய்யும்”
என்கிறீர்கள்.
இதைவிடவா ஒரு அருவருப்பை
கார்ட்டூனில் காட்ட முடியும்?

நிவாரணம் கேட்டு
நிர்வாணமாக ஓடினான் விவசாயி.
வெடித்த நிலம் பார்த்து
நெஞ்சு வெடித்துச் செத்தான்,
அதையும்,
சொந்தப் பிரச்சனைக்காக செத்தான்!
என்றீர்கள்,
இந்த ஆபாசத்தை வரைவதற்கு
எந்த கார்ட்டூனிஸ்ட்டால் முடியும்?

கார்ட்டூன் மேல் வந்த கோபம்
கந்துவட்டி மேல் வரவில்லையே!
கருகிய மழலையைக் கண்டவுடன்
‘யானே கள்வன் என்று!’
நெஞ்சு வெடித்து சாக
நீங்கள் என்ன சிலப்பதிகார பாண்டியரா!
ஊருக்கே தெரியும்
உங்கள் உத்தமம்!

ஆபாசமாக…
அருவருப்பாக…
ஆணவமாக…
ஆளத்தகுதியில்லாமல்…
வாழ்வதில் போகாத மானம்
வரைந்ததிலா போயிற்று!

இதைவிட எங்களை யார்
கேலிசெய்து விட முடியும்!

அடக்குமுறைக்கெதிராக
வாழா இருப்பதைவிட
பாலா-வாய் இருப்பதே மேல்!

-துரை. சண்முகம்

பாலாவை விடுதலை செய்! கலெக்டரை கைது செய்! மக்கள் அதிகாரம் – பத்திரிகைச் செய்தி !

8

மக்கள் அதிகாரம்  – பத்திரிகைச் செய்தி

5-11-2017

நெல்லையில் கந்து வட்டிக் கொடுமையால் தீயில் கருகிய குழந்தையை கலெக்டர், கமிசனர், எடப்பாடி ஆகிய மூவரும் அம்மணமாக நின்று வேடிக்கை பார்ப்பது போல் கார்ட்டூன் படம் வரைந்த பத்திரிகையாளர் பாலாவை மாவட்ட ஆட்சியர் அளித்த சந்தீப்  புகாரின் பேரில் நெல்லை போலீசார் இன்று 5-11-2017 காலை கைது செய்துள்ளனர். வீட்டிலிருந்த கம்ப்யூட்டர், செல் போன், கீ போர்டு என அனைத்தையும் போலீசார் குற்றத்தை நிருபிக்க பறிமுதல் செய்து எடுத்துச் சென்று விட்டனர். படம் வரைந்ததை பாலா மறுக்கவில்லை. தமிழக மக்கள் அனைவரும் ”இந்த படத்தில் என்ன தப்பு இருக்கு ?”என்று கேட்கிறார்கள்.

இசக்கிமுத்துவின் மரணம் கிரிமினல்மயமான தோற்றுப்போன இந்த அரசு கட்டமைப்பின் மீது தொடுக்கப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல். இதன் மூலம் அதிகார வர்க்கம் தங்களை நியாயப்படுத்த முடியாமல் அம்மணமாகி நின்றது. இதுதான் பாலாவின் கார்ட்டூன்.

நான்கு பேர் அநியாயமாகத் தீயில் கருகியது குற்றமாகத் தெரியவில்லை. கலெக்டர், கமிசனர், எடப்பாடியை அம்மணமாக பாலா படம் வரைந்தது தான் குற்றமாகத் தெரிகிறது. இந்த அக்கிரம அராஜகங்களுக்கு முடிவு கட்டுவது எப்போது?. மக்கள் பிரச்சினைகளால் வெடிக்க காத்திருக்கும் தமிழகத்தை எந்தத் திரி பற்ற வைக்கும் எனத் தெரியவில்லை. அனிதா மரணத்திலும், டெங்கு மரணத்திலும், சென்னை வெள்ளத்திலும் சிக்கிய அதிமுக அரசு இப்போது கருத்துரிமையில் கை வைத்துச் சிக்கியிருக்கிறது.

“கந்துவட்டிக்காரன் மிரட்டுகிறான் காப்பாற்றுங்கள்” என ஆறு முறை குடும்பத்தோடு நெல்லை கலெக்டரிடம் மனு கொடுத்தார் இசக்கி முத்து. எந்தத் தீர்வும் இல்லை. மாவட்ட ஆட்சியரை நம்பினால் இனி மானத்தோடு வாழ முடியாது என்ற முடிவுக்குத் தள்ளப்பட்டு 23-10-2017 அன்று தனது இரு குழந்தைகள் உட்பட குடும்பத்தோடு தீ வைத்துக் கொளுத்திக் கொண்டார்.

இதைக் கேட்டாலே ஈரக் குலை நடுங்குகிறது. அனைவரும் பார்த்து நெஞ்சம் பதறினோம். கார்டூனிஸ்ட் பாலா படம் வரைந்தார். இனியும் வரைவார். அது நமது உரிமை. கந்துவட்டிக் கொடுமைக்கு எதிராக இசக்கிமுத்து பற்ற வைத்த தீ இன்று தமிழகம் முழுவதும் பரவுகிறது. எடப்பாடி அதிமுக அடிமை அரசிற்கு சுதந்திரம், ஜனநாயகம், மானம், சுயமரியாதை என எதுவும் கிடையாது. ஆனால் ’மானம் போச்சு’ என்றுதான் வழக்கு பதிவு செய்யபட்டிருக்கிறது.

“பாலாவை விடுதலை செய்!

கலெக்டரை கைது செய்!” என முழங்குவோம்!.

 

இவண்

வழக்குரைஞர் சி.ராஜூ

மாநில ஒருங்கிணைப்பாளர், 

மக்கள் அதிகாரம், தமிழ்நாடு.

தொடர்புக்கு : 99623 66321

எடப்பாடியின் குண்டர் ஆட்சியில் கார்ட்டூனிஸ்ட் பாலா கைது ! – வீடியோ Updates !

7

கார்டூனிஸ்ட் பாலா நெல்லை போலீசாரால், சென்னையில் அவரது வீட்டில் வைத்து இன்று (05-11-2017) கைது செய்யப்பட்டார்.

நெல்லையில் கந்துவட்டி கொடுமையால் கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார் இசக்கிமுத்து. கந்துவட்டி கொடுமை தொடர்பாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததோடு கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டனர் அச்சன்புதூர் காவல்துறையினர். ஆறுமுறை மனு அளித்தும் அதன் மீது மாவட்ட ஆட்சியர், நடவடிக்கை எடுக்கவில்லை.

“ஆமா, இந்தக் கார்ட்டூன் ஆத்திரத்தின் உச்சத்தில் நான் வரைந்தது” – கார்ட்டூனிஸ்ட் பாலா

இசக்கிமுத்துவின் தற்கொலைக்கு காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் மற்றும் செயல்படாத எடுபிடி அ.திமு.க அரசும் தான் காரணம் என்று ஒட்டுமொத்த தமிழகமும் கழுவி ஊற்றியது.

இசக்கிமுத்து படுகொலை தொடர்பாக நெல்லை போலீஸ் கமிஷனர், நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் தமிழக முதல்வர் எடப்பாடி ஆகியோரை அம்பலப்படுத்தி கார்ட்டூன் கேலிச்சித்திரம் வரைந்து தனது முகநூலில் வெளியிட்டிருந்தார் கார்ட்டூனிஸ்ட் பாலா. அதை பல்லாயிரக்கணக்கான பேர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.

கார்டூனிஸ்ட் பாலா

இசக்கிமுத்துவின் ஆறு மனுக்களின் மீதும் நடவடிக்கை எடுக்காத நெல்லை கலெக்டர் இந்த கார்ட்டூன் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். கந்துவட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்ட நெல்லை காவல்துறை உடனடியாக சென்னைக்கு விரைந்து வந்து பாலாவைக் கைது செய்து தரதரவென்று இழுத்துச் சென்றுள்ளனர்.

அவரது கணினி மற்றும் இணைய இணைப்பு சாதனங்களையும் வலுக்கட்டாயமாக பிடுங்கிச் சென்றுள்ளனர். அவர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 501, மற்றும் 67 (பிணையில் வெளிவரமுடியாத பிரிவு) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கார்ட்டூனிஸ்ட் பாலாவின் கணினி, கணினியின் உப-பாகங்கள், அவரது கைப்பேசி, மோடம் ஆகியவை போலீசால் அள்ளிச் செல்லப்பட்டன.

பாலாவைக் கைது செய்ய 4 போலீசு மற்றும் ஒரு பெண் போலீசு இன்ஸ்பெக்டர் ஆகியோர் நெல்லையில் இருந்து வந்திருந்தனர். இன்று (05-11-2017) காலை பாலாவின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த போலீசு அவரது குடும்பத்தினரிடம் எந்தக் காரணமும் சொல்லாமல் பாலாவின் வீட்டிலிருந்த கணினி மற்றும் அதன் அனைத்து உப பாகங்களையும், அவர் உபயோகித்த மோடம், அவரது மனைவியின் செல்போன், அவரது செல்போன் உள்ளிட்ட உபகரணங்களைப் பறிமுதல் செய்தது. அதனைத் தொடர்ந்து வலியுறுத்தி காரணம் கேட்ட பின்பு, முதல்வர் மற்றும் கலெக்டரை இழிவுபடுத்தும் விதமாக இசக்கிமுத்து விவகாரத்தில் கார்ட்டூன் வெளியிட்டதற்கு எதிராக நெல்லை கலெக்டர் கொடுத்த புகாரின் பெயரில் கைது நடவடிக்கை மேற்கொள்வதாக கூறியது.

கைது செய்யப்படும் சூழலில் பாலாவுக்கு சட்டரீதியாக உள்ள உரிமைகளை மறுத்து அவரை, அவர் குடியிருக்கும் பகுதியிலேயே தரதரவென இழுத்துச் சென்று கைது செய்திருக்கிறது எடுபிடி அரசின் எடுபிடியான போலீசு.

பாலா கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படும் போது அவருடன் அவரது அண்டைவீட்டுக்காரரான பாலாஜியும் உடன் சென்றுள்ளார். அவரிடமும் கூட முழுமையான விவரங்கள் எதுவும் சொல்லாது பாலாவை அழைத்துச் சென்றிருக்கிறது போலீசு. அருகில் உள்ள மாங்காடு போலீசு நிலையத்திற்கு அழைத்துச் சென்று ஆவண வேலைகளை முடித்துவிட்டு கிளம்புவதாகக் கூறிய போலீசு, மாங்காடு போலீசு நிலையம் செல்லாமல், போரூர் அருகிலேயே ஆவணங்களில் கையெழுத்துப் போட்டு விட்டு, பாலாவின் அண்டைவீட்டுக்காரர் பாலாஜியிடம் அவருக்கான உடைகளை மட்டும் எடுத்து வந்து கொடுக்கக் கூறியிருக்கிறது. பாலாஜியும் அவருடைய உடைகளை எடுத்துக் கொண்டு போய் கொடுத்துள்ளார்.

பாலாவின் அண்டை வீட்டுக்காரர் பாலாஜி, பாலாவின் மனைவி சாந்தினி, பத்திரிக்கையாளர் அருள் எழிலன் ஆகியோரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்ட போது அவர்கள் கூறியது பின்வரும் வீடியோவில் உள்ளது.

 

நேற்றே கைது செய்ய முயற்சித்ததா போலீசு?:

முந்தைய தினமே (04-11-2017) பாலாவுக்கு ஒரு பெண் அவரது கார்ட்டூனைப் பாராட்டி போனில் பேசி, அவரைச் சந்திக்க வெளியூரில் இருந்து வந்திருப்பதாகவும், அவரை சந்திக்க நேரம் ஒதுக்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார். மழை பெய்யும் சமயத்தில் எதற்கு உங்களுக்கு வீண் அலைச்சல் என்று பாலா கேட்டுள்ளார். இருந்தும் அவர் சந்திக்க வேண்டும் என வலியுறுத்தவே, சரி அடையார் ஆனந்த பவனில் சந்திக்கலாம் என நேரம் கூறிவிட்டு, குடும்பத்துடன் அவர் வீட்டுப்பகுதியில் உள்ள அடையாறு ஆனந்தபவனிற்கு  சென்றுள்ளார். ஆனால் போனில் பேசிய பெண்ணோ அடையாரில் உள்ள ஆனந்தபவனிற்குச் சென்றிருக்கிறார். இதன் காரணமாக நேற்று அவரை சந்திக்கமுடியவில்லை.

இன்று கார்ட்டூனிஸ்ட் பாலாவைக் கைது செய்ய வந்த பெண் போலீசு இன்ஸ்பெக்டரின் குரலும், முந்தையநாள் தனக்கு போனில் பேசிய குரலும் ஒன்று தான் என கைது செய்து இழுத்துச் செல்லப்படும் போது தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார், பாலா. இச்சம்பவத்தை வைத்துப் பார்க்கையில் ‘காக்கிகள்’ பாலாவை நேற்றே கைது செய்யத் திட்டமிட்டிருப்பது தெரியவருகிறது.

பெருகும் ஆதரவு:

பாலாவின் மனைவி சாந்தினியை சந்தித்துப் பேசும் தோழர்கள்

கார்ட்டூனிஸ்ட் பாலாவிற்கு ஆதரவாக ஜனநாயக சக்திகள் மற்றும் புரட்சிகர அமைப்புகள் அவரது இல்லத்திற்கு சென்று அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர். முன்னணி பத்திரிக்கையாளர்கள், கார்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளனர்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் மருதையன், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் கணேசன், மக்கள் உரிமைப் பாதுகாப்பு மைய வழக்கறிஞர் தோழர். பார்த்தசாரதி ஆகியோர் நேரில் சென்று தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்

பாலாவிற்கு எதிராக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கை

 

(படத்தைப் பெரிதாகப் பார்க்க அதன் மீது அழுத்தவும்)

– வினவு செய்தியாளர்கள்


சமூகத்தின் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்தும் முன்னறிப் புலனாய்வு !

3

செயற்கை நுண்ணறிவு : நவீன அடிமை யுகம் – பாகம் 5

ரு குறிப்பிட்ட துறையில் எதிர்வரும் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை அனுமானிக்கும் ஆற்றலை, கடந்த கால மற்றும் நிகழ்கால மின் தரவுகளைப் பகுத்தாய்வதன் மூலம் செயற்கை நுண்ணறிக் கணினிகள் பெறுகின்றன. குறிப்பிட்ட விதத்திலான சூழ்நிலைகள் தோன்றாத வண்ணம் தடுப்பதற்கான பரிந்துரைகளை வழங்கும் ஆற்றலையும் இத்தொழில்நுட்பம் கொண்டுள்ளது.

தரவுகளை அலசுவது – தர்க்கரீதியான முடிவுகளை எடுப்பது – முடிவுகளை அமல்படுத்தி அதன் விளைவுகளை பரிசோதிப்பது – அதன் அனுபவங்களை மின் தரவுகளாகச் சேகரித்து, மீண்டும் பகுப்பாய்வுக்கு உட்படுத்தி மேலும் துல்லியமான முடிவை எடுப்பது – மீண்டும் அமல்படுத்துவது என்கிற செயல்பாட்டுச் சுழற்சியின் மூலம் செயற்கை நுண்ணறிவு மேலும் மேலும் துல்லியத்தன்மையை நோக்கி நகர்ந்து கொண்டேயிருக்கிறது.

மீண்டும் மீண்டும் நிகழும் இந்தப் பகுத்தாயும் போக்கானது பின்வரும் நான்கு முக்கியமான கட்டங்களை உள்ளடக்கியுள்ளது.

முதலாவதாக விவரணப் பகுப்பாய்வு (Descriptive analytics). அதாவது வந்து குவிந்துள்ள மின் தரவுக் குவியல்களைப் பகுப்பாய்வு செய்து என்ன நடந்தது என்பதை கண்டறிதல். காவல்துறையின் ஃபோரன்சிக் பிரிவு இம்முறையைக் குறைந்தபட்ச அளவில் பயன்படுத்த துவங்கியுள்ளது. ஒரு குற்றச் சம்பவம் நடந்து முடிந்த பின் அதில் தொடர்புடையவர்களின் இணையச் செயல்பாடுகள், செல்பேசி உரையாடல்கள் உள்ளிட்ட மின் தரவுகளைப் பரிசீலித்து நடந்த சம்பவத்தை முழுமையாக அதன் பின்னணியோடு அறிந்து கொள்ள இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.

இரண்டாவதாக, சோதனைப் பகுப்பாய்வு (Diagnostic Analytics). மின் தரவுகளின் அடிப்படையில் ”ஏன் நடந்தது” என்கிற விளக்கம். ஒரு குறிப்பிட்ட சம்பவம் நடந்த பின் அதில் சம்பந்தப்பட்டவர்கள் தொடர்பான மின் தரவுகளைப் பரிசீலித்துப் பார்த்து அவர்கள் இந்த சம்பவத்தில் ஈடுபட என்ன காரணம் என்பதைக் கண்டறிய இம்முறை பயன்படுத்தப்படுகின்றது.

மூன்றாவதாக, முன்னறிப் பகுப்பாய்வு (Predictive Analytics). ஏற்கனவே உள்ள மின் தரவுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம் நிகழ்ச்சிப் போக்குகளில் உள்ள வகை மாதிரிகளைப் (Pattern) புரிந்து கொள்வது. நிகழ்ச்சிப் போக்கின் வகை மாதிரியை அடிப்படையாக கொண்டு எதிர்காலத்தில் இதே போன்ற நிகழ்வு நடக்குமா, எப்போது, எப்படி, ஏன் நடக்கும் என்பதைக் கணிப்பது. உதாரணமாக, ஒருவரின் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தள நடவடிக்கை, அவர் இணையம் மூலம் வாங்கும் புத்தகங்கள், இணையத்தில் பார்க்கும், கேட்கும் விசயங்களை வைத்து எதிர்காலத்தில் நிகழவிருக்கும் அரசியல் போக்கு ஒன்றில் அவரது பங்கெடுப்பு இருக்குமா இருக்காதா, அப்படி இருந்தால் அது எத்தகையதாக இருக்கும் என்பதைக் கணிக்க முடியும்.

நான்காவதாக பரிந்துரைப் பகுப்பாய்வு (Prescriptive Analytics). கடந்த கால தரவுகளையும், நிகழ்காலப் போக்குகளையும் கணக்கில் கொண்டு எதிர்காலத்தில் ஒரு குறிப்பிட்ட விசயம் நிகழ்வதற்கான சூழலை திட்டமிட்டு உருவாக்குவது. உதாரணமாக, முகநூலில் ’புரட்சிகரமாக’ செயல்படும் ஒருவர் ஓய்வு நேரத்தில் கார்கள் குறித்து இணையத்தில் தேடிக் கொண்டிருக்கிறார் என்பதை அறிந்து, அதில் அவரது ஆர்வம் எந்த மட்டத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு, மாதச் சம்பளக்காரரான அவரைக் கார் கடன் வாங்கி தவணை கட்டச் செய்து விட்டால் ‘புரட்சி’ வேகம் குறைந்து விடும் என்பதை முன்கூட்டியே பரிந்துரைக்க முடியும்.

***

பகுப்பாய்வுத் தொழில்நுட்பத்தின் வழியாக நடந்த விசயங்களைத் தரவுகளின் அடிப்படையில் இருந்து கற்றுக் கொள்ளும் செயற்கை நுண்ணறிக் கணினி, அதனடிப்படையில் நடக்கவிருக்கும் விசயங்களைக் குறித்த அனுமானத்தை அடைவதுடன், எப்படி நடக்க வேண்டும் எனப் பரிந்துரைக்கும் ஆற்றலையும் பெறுகின்றது.

மீப்பெரும் மின் தரவுத் தொழில்நுட்பத்தின் வரவுக்கு முன்பிருந்த, வழமையான செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தைப் பொருத்த வரையில் ஒரு முடிவை எடுப்பதற்கு என்னென்ன தரவுகளை ஆராய வேண்டும், எத்தனை கோணங்களில் ‘சிந்தித்து’ பார்க்க வேண்டும், சாத்தியமான முடிவுகள் எத்தனை இருக்க முடியும், அந்த முடிவுகளில் ஒரு குறிப்பிட்ட சந்தர்ப்பத்துக்கு எது சரியானது என்பதை சீர்தூக்கிப் பார்ப்பது எப்படி என்கிற வரம்புகள் அனைத்தும் நிரல்களாக ஏற்றப்பட்டிருக்கும் (Pre Programmed). சுருக்கமாகச் சொன்னால், முடிவுகளுக்கு வரம்புகள் இருந்தன.

மீப்பெரும் மின் தரவின் வரவுக்குப் பின் அந்த வரம்புகள் உடைந்திருக்கின்றன. முடிவு எடுப்பதற்கு முன் கணக்கில் எடுத்துக் கொண்டு பரிசீலிப்பதற்கு நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட அளவில் மின் தரவுகள் குவிந்து கிடக்கின்றன. அவ்வாறு குவிந்து கிடக்கும் மின் தரவுகளை கண்ணிமைக்கும் நேரத்தில் பகுப்பாய்வு செய்து அதன் முடிவுகளை செயற்கை நுண்ணறிக் கணினிக்கு அறியத்தரும் மென்பொருட்களும் வந்து விட்டன. தரவுகளிலிருந்து “கற்றுக் கொள்வதில்” செயற்கை நுண்ணறிக் கணினிக்கு இதுகாறும் இருந்த வரம்பு உடைந்து விட்டது – எனவே அது எடுக்கக் கூடிய முடிவுகளுக்கு இருந்த வரம்புகளும் உடைந்து விட்டன.

***

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆளும்வர்க்கங்களின் கைகளில் இருப்பதால் அவை அடைந்துள்ள வளர்ச்சியின் பலன்களை அனுபவிப்பதிலும் அதே வர்க்கங்கள் தான் முன்னணியில் இருக்கின்றன. தொழில்நுட்பத்தின் அடிப்படையில் சமூகத்தை இயக்குவது, சிவில் நிர்வாகப் பணிகளை மேற்கொள்வது, காவல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளது என்பதெல்லாம் கேட்பதற்கு நம்ப முடியாத கற்பனைகள் போல் தோன்றினாலும், தற்போதைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சிப் போக்கும், அரசியல் பொருளாதார சூழலும் இந்தப் போக்கை நோக்கியே உள்ளன. ஒரு சில நாடுகளில் “தரவுகளின்” அடிப்படையில் குடிமைச் சமூகத்தை நிர்வகிக்கும் முறைகள் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன. மீப்பெரும் மின் தரவுகளின் அடிப்படையிலான புலனாய்வு முறைகளும் நடைமுறைக்கு வரத் துவங்கியுள்ளன.

***

அது 2014-ம் ஆண்டின் வசந்த காலம். அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணம். தனது தங்கையை பள்ளியில் இருந்து அழைத்து வர பதினெட்டு வயதான ப்ரிஷா போர்டென் அவளது தோழியுடன் சென்று கொண்டிருக்கிறார். அப்போது ஒரு நீல வண்ண சைக்கிளும், ரேஸர் ஸ்கூட்டர் (கால்களால் உந்தித் தள்ளி ஓட்டும் சறுக்கு வண்டி) ஒன்றும் பூட்டாமல் நிறுத்தப்பட்டிருப்பதை இருவரும் பார்க்கிறார்கள். பூட்டாத வாகனங்களைப் பார்த்ததும் தோழிகளுக்கு சபலம்.

சட்டென அந்த வாகனங்களை எடுத்துக் கொண்டு ஓடப் பார்க்கிறார்கள். இதைப் பார்த்து விட்ட ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி உடனே சாலைக்கு ஓடி வந்து “அது என் மகனுடையது” என்று கூச்சலிடுகிறாள். பயந்து போன தோழிகள், உடனே அந்த வாகனங்களைப் போட்டு விட்டு ஓடி விடுகின்றனர். அவர்கள் திருட்டுக்குப் பழக்கமில்லாதவர்கள். இதற்கிடையே ’திருட்டுச்’ சம்பவத்தை பார்த்த ஒருவர் போலீசை அழைக்க, சிறுமிகள் இருவரும் மாட்டிக் கொள்கின்றனர். திருட்டுப் பொருளின் மதிப்பு 80 டாலர்.

அதே சமயத்தில் நடந்த இன்னொரு சம்பவம். 41 வயதான வெர்னான் ப்ரடெர் ஊரறிந்த திருடன். ஏற்கனவே அவன் மேல் துப்பாக்கி முனையில் கொள்ளையடித்தது உட்பட பல திருட்டு வழக்குகள் உள்ளன. ஐந்தாண்டுகள் சிறையிலும் கழித்துள்ளான். ஒரு நாள் அருகில் இருந்த கடையில் சுமார் 86.35 டாலர் மதிப்புள்ள பொருட்களைத் திருடும் போது மாட்டிக் கொள்கிறான்.

இரண்டு வழக்குகளும் நீதிமன்றத்துக்குச் செல்கின்றன. குற்றம் சாட்டப்பட்டவர்கள் செயற்கை நுண்ணறித் திறனில் இயங்கும் “அபாய மதிப்பீட்டு மென்பொருளின்” (Risk assessment tool) முன்னால் நிறுத்தப்படுகின்றனர். அந்த மென்பொருள் கேட்கும் விவரங்களுக்கான பதிலை ப்ரிஷா போர்டெனும், வெர்னான் ப்ரடெரும் சொல்கின்றனர். அதனடிப்படையில் இருவரில் மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபடும் வாய்ப்பு ப்ரிஷா போர்டென் என்ற அந்தப் பெண்ணுக்கு அதிகமிருப்பதாகவும், வெர்னான் ப்ரெடெர் என்ற திருடனுக்கு அத்தகைய வாய்ப்பு குறைவாக இருப்பதாகவும் அந்தக் கணினி பரிந்துரை செய்கின்றது.

கணினியின் பரிந்துரையின் படி ஜூரிகள் தீர்ப்பளிக்கின்றனர்; இருவருமே சிறையில் அடைக்கப்படுகின்றனர். இரண்டாண்டுகளுக்குப் பின் விடுதலையான ப்ரிஷா போர்டென் எந்தக் குற்றச் செயல்களிலும் ஈடுபடாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறாள் – மீண்டும் குற்றமிழைக்கும் வாய்ப்பு குறைவு என்று செயற்கை நுண்ணறிக் கணினியால் கணிக்கப்பட்ட வெர்னான் ப்ரடெர் சிறையில் இருந்து வந்ததும் பெரும் குற்றச் செயல் ஒன்றில் ஈடுபட்டு தற்போது 8 ஆண்டு சிறைத் தண்டனை பெற்றுள்ளான்.

இவர்களில் ப்ரிஷா போர்டென் கருப்பினப் பெண்; வெர்னான் ப்ரடெர் வெள்ளையினத்தவன். செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பம் வெளிப்படுத்திய இனவெறிக்கும், அது தவறிழைத்ததற்கும் என்ன காரணம்?

***

பல்வேறு சந்தர்ப்பங்களில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் செயற்கை நுண்ணறிக் கணினிகள் நிறவெறியையும் பாலியல் ரீதியான முன்முடிவுகளையும் வெளிப்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. மனித மூளைகளுக்கு முன்முடிவுகள் இருக்கலாம் – ஆனால், இயந்திரத்திற்கு முன்முடிவு இருக்க முடியுமா? இதைக் கண்டறிய, ப்ரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி ஐலின் கலிஸ்கன் “உள்ளடக்க சோதனை மென்கருவிகளை” (Implicit Assessment Tool) கொண்டு செயற்கை நுண்ணறிக் கணினிகளை சோதித்துள்ளார்.

மனிதர்கள் தங்களிடம் சொல்லப்படும் வார்த்தைகளை எம்மாதிரியான உணர்ச்சிகளோடு இணைத்துப் புரிந்து கொள்கிறார்கள் என்பதைக் கண்டறிய மனோவியல் துறையில் பயன்படுத்தப்படும் முறை தான் உள்ளடக்க சோதனை. உதாரணமாக, ரோஜாவின் பெயரைச் சொன்னவுடன் இன்ப உணர்ச்சியும், ஹிட்லரின் பெயரைக் கேட்டவுடன் கசப்புணர்வும் தோன்றும்.

எனினும், இவ்வாறு பெயர்களோடு இணையும் உணர்ச்சிகள் உலகம் முழுவதும் பொதுவானதாக இருப்பதில்லை. உணர்ச்சிகள் வர்க்கத்துக்கு வர்க்கம், இனத்துக்கு இனம், நாட்டுக்கு நாடு வேறுபடும் – மோடியின் பெயர் ஒரே நேரத்தில் மக்களிடம் ஆத்திரத்தையும், முதலாளிகளுக்கு மகிழ்ச்சியையும் தோற்றுவிப்பது போல.

மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையில் அமெரிக்காவின் பிரத்யேகமான மனநிலைக்குப் பொருத்தமான சொற்களே எடுத்துக் கொள்ளப்பட்டன. சோதனையின் முடிவில் ஆண்களின் பெயர்களை உள்ளீடு செய்த போது பொறியாளர், இராணுவம், ஆற்றல் மற்றும் அவை சார்ந்த விசயங்களோடும், பெண்களின் பெயர்களை வீட்டு வேலைகள், இசை போன்றவைகளுடனும் இணைத்துள்ளது செயற்கை நுண்ணறிக் கணினி. அதே போல் கருப்பினத்தவர்களின் பெயர்களை உள்ளீடு செய்ததும், அதோடு கசப்புணர்வு இணைந்துள்ளது.

மேற்கு நாடுகளில் வேலைகளுக்கு விண்ணப்பிக்க அளிக்கப்படும் சுயவிவரக் குறிப்புகளை (Resume) செயற்கை நுண்ணறிக் கணினிகளிடம் கொடுத்து முதல்கட்ட தேர்வைச் செய்யும் போக்கு துவங்கியுள்ளது. எதிர்காலத்தில் பொறியாளர், விஞ்ஞானி போன்ற வேலைகளுக்காக பெண்களும், கருப்பினத்தவரும் விண்ணப்பிக்கும் போது அவர்களை முதல் கட்டத்திலேயே செயற்கை நுண்ணறிக் கணினி வடிகட்டி விடும். முசுலீம்களின் நிலை பற்றித் தனியே விவரிக்கத் தேவையில்லை.

“பொதுவாக இயந்திரங்கள் முன்முடிவுகளோடு நடந்து கொள்ளாது என்றே மக்கள் நினைக்கின்றனர். ஆனால் இயந்திரங்கள் மனிதர்களிடமிருந்து பெறப்படும் விவரங்களின் அடிப்படையிலேயே பயிற்றுவிக்கப்படுகின்றன. மனிதர்களுக்கு முன் முடிவுகள் இருக்குமல்லவா?” என்கிறார் ஐலின் கலிஸ்கன்.

துபாயில் அறிமுகப்படுத்தப்பட்ட ரோபோ போலீஸ்

இயந்திரக் கற்றுணர்தல் முறை, தனது பகுப்பாய்வுக்கான கச்சாப் பொருளாக மீப்பெரும் மின் தரவுகளையே சார்ந்திருக்கின்றது. மின் தரவுகளோ சமூக வலைத்தளங்கள் மற்றும் பொருட்களின் இணையத்திலிருந்து உற்பத்தியாகின்றன. “சமூகத்திலிருந்து” உற்பத்தி செய்யப்படும் மின் தரவுகள் சமூகத்தின் பொதுப்புத்தியையும் முன்முடிவுகளையும் தன்னோடு சுமந்து செல்கின்றன. சமூகத்தின் பொதுபுத்தியோ ஆளும் வர்க்க சித்தாந்தங்களால் தீர்மானிக்கப்படுகின்றது.

ட்விட்டர் முகநூல் போன்ற சமூக வலைத்தளங்களில், தொலைபேசி உரையாடல்களில், இணைய அரட்டைகளில் குறிப்பிட்ட இனக்குழு அல்லது மதப் பிரிவைச் சார்ந்தவர்கள் குறித்து ‘பரவலான’ மக்களிடம் இருக்கும் கருத்துக்கள் மீப்பெரும் மின் தரவுகளாகச் சேகரிக்கப்பட்டு பின்னர் பகுப்பாய்வு செய்யப்படுகின்றது. இந்த “தரவுகளே” இயந்திரக் கற்றுணர்தலுக்கான மூலப்பொருளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றது. செயற்கை நுண்ணறிக் கணினிகள், குறிப்பான ஒரு முடிவை எடுப்பதற்கு இயந்திரக் கற்றுணர்தலைச் சார்ந்திருப்பதால், பொதுபுத்தி சார்ந்த முடிவுகளே கிடைக்கின்றன.

ஒரு உதாரணத்தைப் பார்ப்போம். எதிர்காலத்தில் இந்தியாவின் சட்டம் ஒழுங்கைக் கட்டுப்படுத்தும் பொறுப்பு செயற்கை நுண்ணறிக் கணினிக்கு வழங்கப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். அந்த சமயத்தில் பாரதிய ஜனதா அலுவலகத்தில் குண்டு தயாரிக்கும் போது எதிர்பாராத விதமாக வெடித்து நான்கைந்து பேர் இறந்து விடுகிறார்கள்.

உடனடியாக சமூக வலைத்தளங்களில் இயங்கும் காவிக் கூலி கும்பல் குற்றத்தை முசுலீம்களின் மேல் சுமத்துகிறது. காவிகளால் அவ்விதமே புகாரும் பதிவு செய்யப்படுகின்றது. இப்போது வழக்கை முதற்கட்டமாக பரிசீலிக்கும் செயற்கை நுண்ணறிக் கணினி எவ்வாறு முடிவெடுக்கும்?

செயற்கை நுண்ணறிக் கணினி இந்த வழக்கில் எம்மாதிரியான முடிவுகளுக்கு எல்லாம் வந்தடைய முடியும் என்பதை பட்டியலிடும். இந்தப் பட்டியல் என்பது இயந்திரக் கற்றுணர்தலை அடிப்படையாக கொண்டது. இயந்திரக் கற்றுணர்தல், மீப்பெரும் மின் தரவுகளைப் பகுப்பாய்வு செய்தே சாத்தியமான முடிவுகளின் பட்டியலை செயற்கை நுண்ணறிக் கணினிக்கு வழங்கும்.

மீப்பெரும் மின் தரவுகள் சமூக வலைத்தளங்களில் இருந்து சேகரிக்கப்பட்டவை. பொது புத்தியில் உள்ள “தாடி – குல்லா – முசுலீம் – தீவிரவாதி – வெடிகுண்டு” என்பதே சமூக வலைத்தளத்தின் பொதுக்கருத்து. இந்த “மூலப் பொருட்களில்” இருந்து முடிவெடுக்கும் செயற்கை நுண்ணறிக் கணினி, தாடி வைத்தவர்களைக் கைது செய்ய பரிந்துரை செய்யும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் ஆற்றல் சுரண்டும் வர்க்கங்களால் பயன்படுத்தப்படும் போது அது சமூகத்திற்கு பெரும் அச்சுறுத்தலையே ஏற்படுத்தும். மேற்குலக முதலாளிய அரசுகள் தமது சொந்த மக்களை வேவு பார்ப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் செயற்கை நுண்ணறித் தொழில்நுட்பத்தின் சாத்தியங்களைப் பயன்படுத்தி வருகின்றன.

(தொடரும்)

– சாக்கியன், வினவு
புதிய கலாச்சாரம், ஜூலை 2017

இந்த கட்டுரையின் பிற பாகங்களுக்கு கீழே உள்ள சுட்டியை அழுத்தவும் :

_____________

இதனை முழுமையான புத்தகமாக வாங்க

20.00Read more

அச்சு நூல் தேவைப்படுவோர்  மலிவு விலைப் பதிப்பை பதிவுத் தபாலில் பெற ரூ 50-ம் (நூல் விலை ரூ 20, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) கெட்டி அட்டை புத்தகப் பதிப்பை பெற ரூ 100-ம் (நூல் விலை ரூ. 60,  தபால் கட்டணம் ரூ. 40) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன ? விழுப்புரம் பொதுக்கூட்டம் !

0

விழுப்புரம் வட்டம் மக்கள் அதிகாரம் சார்பாக 28.10.2017 சனிக்கிழமை, மாலை புதிய பேருந்து நிலையம் அருகில் ஜல்லிக்கட்டுத் திடலில் “இன்றைய அரசியல் சிக்கல்களுக்கு தீர்வு என்ன? அரசியல் அராஜகங்களுக்கு, அக்கிரமங்களுக்கு முடிவு கட்டும் போராட்டங்கள் தேவை!” என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் நடந்தது.

இக்கூட்டத்திற்கு தோழர்.சிவானந்தம் (பொருளாளர், விழுப்புரம் வட்டம் – மக்கள் அதிகாரம்) தலைமை தாங்கினார். தோழர்கள் ஞானவேல் (புரட்சிகர மாணவர்-இளைஞர் முண்ணனி அமைப்பாளர், விழுப்புரம்), மோகன்ராஜ் (விழுப்புரம் மண்டலம் ஒருங்கிணைப்பாளர்- மக்கள் அதிகாரம்), செல்வக்குமார் (விழுப்புரம் வட்டம் ஒருங்கிணைப்பாளர்- மக்கள் அதிகாரம்) உரையாற்றினார்கள். தோழர்.காளியப்பன் (மாநில பொருளாளர்- மக்கள் அதிகாரம் தமிழ்நாடு) அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.

கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக மோடியின் பணமதிப்பு நீக்கத்தால் வரிசையில் நின்று உயிரிழந்தவர்களுக்கும், காவிரி நீர் தடுத்து நிறுத்தப்பட்டு வறட்சியால் நெஞ்சு வெடித்து உயிரிழந்த விவசாயிகளுக்கும், நீட் நுழைவுத் தேர்வால் உயிரிழந்த மாணவி அனிதாவிற்கும், கந்துவட்டி கொடுமையால் கலெக்டரும், போலீசு துறையும் வைத்த தீயில் கருகிய இசக்கிமுத்து குடும்பத்திற்கும் ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதையடுத்து கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தோழர். சிவானந்தம் அவர்கள் பேசுகையில் “இன்று டெங்குவால் மக்கள் கொத்து கொத்தாக சாகின்றனர், நேற்று விவசாயிகள் சாகடிக்கப்பட்டனர், NEET- தேர்வால் மாணவர்கள் இறக்கின்றனர், கருத்து சுதந்திரம் பறிக்கப்படுகிறது. மாட்டுக்கறி தடை, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற அழிவு திட்டங்களை RSS-BJP கும்பல் திணித்து தமிழகத்தை சுடுகாடாக்குகிறது.

இந்த கொலைகார அரசிடமே சென்று மீண்டும் மீண்டும் மனுக் கொடுத்து, மன்றாடி  நம் பிரச்சனைகளுக்கு தீர்வு தேட போகிறோமா? அல்லது இந்த கட்சிகளுக்கு பதில் அந்தக் கட்சி என ஓட்டின் மூலமே தீர்வு தேடப் போகிறோமா? அல்லது இவர்கள் யாரும் சரியில்லை இன்று சினிமாக்காரர்கள் நன்றாக பேசுகிறார்கள்,படத்தில் கருத்து கூறுகிறார்கள் என்று அவர்கள் பின்னால் சென்று அவர்களுக்கு கொடி பிடிக்கப் போகிறோமா? இல்லை எப்படி மெரினாவில் சாதி கடந்து, மதம் கடந்து, அரசியல் கட்சிகளை தூக்கி எறிந்து, சினிமா மோகத்தை மறந்து, அதிகாரம் செலுத்தி நம் உரிமைகளை நாமே மீட்டு எடுத்தோமோ அது போன்ற போராட்டங்களை மீண்டும் முன்னெடுத்து நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண போகிறோமா? என்பதை விளக்கவே இந்த கூட்டம்” என்று முடித்தார்.

அவரைத் தொடர்ந்து தோழர்.ஞானவேல் பேசும்போது “வெறிநாய் கும்பலிடம் ஒரு ஆடு தனியாக மாட்டிக்கொண்டால் அதன் கதி என்னவோ? காம வெறிப் பிடித்த மிருகங்களிடம் ஒரு பெண் தனியாக மாட்டினால் அவள் கதி என்னவோ?” அப்படி இந்த அரசிடம் மக்கள் சிக்கி அவர்களுடைய வாழ்க்கை சின்னாபின்னமாக, கந்தல் கந்தலாக சீரழிந்து கொண்டிருக்கிறது.

மோடி வந்த பிறகு மக்களின் மீது அனைத்து திட்டங்களும் வலுக்கட்டாயமாக, அடாவடித்தனமாக திணிக்கப்படுகின்றன. இன்று நீட் தேர்வு வந்தபின் மாணவர்களின் கதி என்ன? நாங்கள் நீட்-ன் மூலம் மருத்துவ தரத்தை உயர்த்தப் போகிறோம், கட்டண கொள்ளையை தடுக்கப்போகிறோம், சுயநிதிக் கல்லூரிகள், தரமில்லா மருத்துவக் கல்லூரிகளுக்கு முடிவு கட்டப்படும் என்றெல்லாம் மோடி அரசு உதார் விட்டது.

காங்கிரஸ் அரசாங்கத்தின் போது நீதிபதி அல்கபீர் தாமஸ் என்பவரால் நீட் மனு நிராகரிக்கப்பட்டது. ஆனால் BJP ஆட்சிக்கு வந்த பிறகு அணில் ஆர் தவே என்ற RSS நீதிபதியால் மீண்டும் நீட் கொண்டுவரப்பட்டு, அனிதா உயிர் காவு வாங்கப்பட்டதோடு, அனைத்து தனியார் கல்வி நிறுவனங்களின் கொள்ளைகளும் சட்டப்பூர்வமாக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்வியிலிருந்து வெளியேற்றபட்டுள்ளனர்.

கேதான் தேசாய் போன்ற கிரிமினல்கள் மருத்துவ கவுன்சில் தலைவராகவும், கீதாலக்ஷ்மி போன்ற கிரிமினல்கள் துணை வேந்தர்களாகவும் நீடித்ததால்தான் விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி SVS கல்லூரியில் மூன்று மாணவிகள் பலியாகினர். இப்படி மாணவர்களின் உயிர்களை குடித்த கிரிமினல் நடத்தக்கூடிய கல்லூரிகளுக்கு அரசு அங்கீகாரம் வழங்குகிறது.

கல்வியை அரசின் பொறுப்பிலிருந்து விடுவித்து HERA போன்ற முறைகளால் இனி தனியார் தான் மாணவர்களின் கல்வியை தீர்மானிக்கும். இனி யாரும் படிக்க கூடாது, காசு இருப்பவன் படிச்சிக்கோ, இல்லாதவன் அவன் அப்பன் தொழிலை செய்ய வேணும் என்று இந்த பார்ப்பன RSS, மோடி – கும்பல் மாணவர்களை கல்வியில் இருந்து வெளியேற்றுகிறது.

இப்படி தனியார் நிறுவனங்களின் ஊழலையோ, கட்டணக் கொள்ளையையோ  கட்டுப்படுத்தவோ, தண்டிக்கவோ அரசுக்கு அதிகாரம் இல்லை. இது தான் கல்வியை அனைவரும் சமமாக பயில இந்த யோக்கியர்கள் கொண்டு வரும் திட்டம்.

இனியும் மக்கள் ஒன்றிணையாமல், போராடாமல் தீர்வு இல்லை. எப்படி  ஒரு ஓட்டை வண்டியில் பயணம் செய்வது உயிருக்கு ஆபத்தோ அப்படி இந்த கட்டமைப்புக்குள்ளேயே தீர்வு தேடுவது பயனளிக்காது! நம்மை காப்பாற்றிக்கொள்ள முடியாது. இதற்கு வெளியில் தான் தீர்வு. எங்களோடு சேர்ந்து செயல்பட வாருங்கள்” என்று பேசி முடித்தார்.

அதன்பின்னர் பேசிய தோழர் மோகன்ராஜ் அவரது உரையில் “இன்று தமிழக மக்களை காவு வாங்கி கொண்டு இருக்கும் டெங்கு என்பது வேற எதுவும் இல்லை இந்த மோடி கும்பலும், எடப்பாடி- பன்னீர் கும்பலும் தான்.

அவர்களை ஒழித்தாலே டெங்குவும் ஒழிந்து விடும், மக்கள் கஷ்டமும் தீரும். அரசு மருத்துவமனைகளில் பத்து நோயாளிகளுக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும். ஆனால் இங்கு நூறு நோயாளிக்கு ஒரு மருத்துவர் தான் உள்ளனர். ஒரு வார்டில் 32 இருக்கைகள் உள்ளன. ஆனால், 100 – 150 பேர் தரையில் படுத்துள்ளனர். எப்படி மாட்டுப் பட்டியில் மாடுகளை அடைத்து வைத்து இருப்பார்களோ அப்படி மக்களையும் அடைத்து வைத்துள்ளனர்.

போதிய மருத்துவர் இல்லை, மருந்துகள் இல்லை, படுக்கை  வசதி இல்லை. இதை ஏன் என்று மருத்துவ அதிகாரியிடம்  கேட்டால் எங்க கிட்ட இவ்ளோ தான் வசதி இருக்கு நாங்க என்ன பண்ண முடியும். இருப்பதை வைத்து தான் மருத்துவம் பார்க்க முடியும், நீங்க இதை மேலிடத்தில் தான் கேட்க வேண்டும் என்று அலட்சியமாக பதில் கூறுகின்றனர்.

ஆனால் மோடியின் டிஜிட்டல் இந்தியாவில் மாட்டுக்கு ஆம்புலன்ஸ் வசதி இருக்கு மக்களுக்கு இல்லை. இது தான் இவர்களின் யோக்கியதை. இன்னொரு புறம் கொசுவை ஒழிக்கிறோம் என்ற பெயரில் வீடுகளுக்கும், கடைகளுக்கும் நகராட்சி அபராதம் விதிக்கிறது. நாங்கள் விழுப்புரம் மக்கள் அதிகாரம் சார்பாக மாவட்ட, நகராட்சிகளில் உள்ள அரசு அலுவலகம், வாய்க்கால்கள் என்று ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களோடு நகராட்சியை முற்றுகையிட்டு போராடினால் அவர்களும் நாங்கள் என்ன செய்ய மேலிடம்… என்று சொல்கிறார்கள்.

எனவே மக்களே இனியும் இந்த அரசை நம்பி நாம் வாழ முடியாது. இவர்கள் நம்முடைய வேலையாட்கள் தான். இவர்களிடம் கெஞ்சுவதை நாம் விட்டுவிட்டு இவர்களுக்கு ஆணையிடுவதும், இவர்களிடம் நாம் அதிகாரம் செலுத்துவதன் மூலமே நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும். இது தான் மக்கள் அதிகாரம்” என்று முடித்தார்.

அவரையடுத்து தோழர் செல்வக்குமார் பேசும்போது “இன்று மக்களிடம் போய் இந்த ஆட்சியைப் பற்றி கேட்டாலே எடப்பாடி – ஓபிஎஸ் என்ற அடிமைகள் நம்மை  ஆண்டு கொண்டு இருக்கிறார்கள் என்று சாதாரணமாக சொல்லிவிடுவார்கள். ஏன்னென்றால் மக்களுக்கு பிரச்சனை தெரியாமல் இல்லை. அனால் அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு தான் தெரிவதில்லை. அந்த தீர்வை சொல்வதற்குத் தான் இந்த பொதுக்கூட்டம்.

இப்போதெல்லாம் திருடர்கள் பயப்படுவதில்லை. எந்த வீட்டில் திருடுகிறார்களோ அந்த வீட்டிலேயே சமைத்து ஆம்லேட் போட்டு சாப்பிட்டு தூங்கிவிட்டு ஹாயாக போகிறார்கள். அது போலத்தான் இந்த அரசும் இன்று மக்களின் வரிப்பணத்தை கொள்ளையிட்டுக் கொண்டு அவர்களை காக்காமல் சுற்றுச்சூழல், சுகாதாரத்தை பராமரிக்காமல், மருத்துவக்கழிவுகளை அகற்றாமல், வாய்க்கால்களை மூடாமல், குப்பைகளை முறையாக பராமரிக்காமல் மக்கள் வசிப்பிடங்களிலேயே போட்டு விட்டு இன்று மக்கள் மீது பழி போட்டு அவர்களையே குற்றவாளிகளாக்கி அபராதமும் வசூல் செய்கின்றனர்.

இன்னொரு பக்கம் நேர்மையானவர்களின் நிலைமை என்ன? விஷ்ணுப்பிரியா, முத்துக்குமாரசாமி, சகாயம் – இவர்களின் நிலை என்ன? பெங்களூர் DSP கணபதி கர்நாடக உள்துறை அமைச்சர் ஜார்ஜ் மற்றும் இரண்டு ஐ.பி.எஸ். அதிகாரிகள் தான் என் தற்கொலைக்கு காரணம் என்று எழுதி வைத்து உயிரிழந்தார். DSP கணபதியின் மரணத்திற்கு நீதி கேட்டு அவரின் தந்தை சுப்ரீம் கோர்ட் சென்றுதான் முதல் தகவல் அறிக்கையையே பதிந்துள்ளார். அதுவும் மூன்று மாத போராட்டத்திற்கு பின். இதுதான் நேர்மையான அதிகாரிகளுக்கு நேரும் அவலம்.

அதிகார வர்க்கம் பெரும்பாலும் ஊழலிலும், முறைகேடுகளிலும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு விழுப்புரம் முழுக்க மூணு சீட்டு, கஞ்சா வியாபாரம் கொடிகட்டி பறக்கிறது. இது சாதாரண மக்களுக்கே தெரியும் போது போலீசுக்கு தெரியாதா? தெரியும். ஆனால் இந்த அரசு தடுக்காது. ஏனென்றால் மாமூலோடு சேர்த்து போனஸ் வாங்கும் போலீசுதுறை எப்படி இதைத் தடுக்கும்?

இந்த அரசுக் கட்டமைப்பில் நேர்மையானவர்களுக்கு இடமில்லை. ஏனென்றால் இது கிரிமினல்களின் கூடாரம். இங்கே நேர்மையானவர்களுக்கு கிடைப்பது மரணம், இல்லையென்றால் டம்மியான பதவிகளுக்கு தூக்கி எறியப்படுவார்கள். டாஸ்மாக் விசயத்தில் ஐயா சசிப்பெருமாள் நிலை என்ன?

ஆனால் மக்களே அதிகாரத்தை எடுத்து “மூடு டாஸ்மாக்கை” என்ற போராட்ட வழியை காட்டினோம். இன்று மக்களே மூடுகிறார்கள்.

இன்னொருபுறம் BJP, RSS, சிவசேனா, பஜ்ரங்தள் போன்ற சங்க பரிவாரங்கள் மக்கள் மீது இந்துத்துவத்தை திணிக்கின்றன. ஆனாலும் மோடியின் அனைத்து இந்தியாவும் கிழிந்து தொங்குகிறது. இன்று அனைத்து மக்களும் வீதிக்கு வந்துவிட்டனர்.” என்று முடித்தார்.

அடுத்து சிறப்புரையாற்றிய தோழர் காளியப்பன் பேசும்போது “உலகத்திலேயே சிறந்த அற இலக்கியத்தையும், நீதி இலக்கியத்தையும் கொண்டது தமிழ்நாடு. திருக்குறள் ஒன்றுக்காகவே நாமெல்லாம் பெருமைப்படலாம். ஒரு மன்னன் எவ்வாறு நாட்டை ஆள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்.

”நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன்
நாடொறும் நாடு கெடும்.”

என்று எந்நாளும் மக்களை தேடித்தேடிச் சென்று அவர்கள் விருப்பத்தை அறிந்து மன்னன் செயல்பட வேண்டும். மக்கள் எங்களுக்கு நிலம் கொடு, வீடு கொடு, என்று கேட்டால் அது நாடு அல்ல. மக்கள் மனதில் நினைப்பதற்கு முன்னால் அவர்களை காத்து நிற்பது தான் மன்னனின் கடமை.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் ஜனநாயகம் என்றால் என்னவென்று மக்களுக்கு தெரியாது. அப்போது சட்டமன்றம் இல்லை, பாராளுமன்றம் இல்லை,  கலெக்டர் இல்லை, தாசில்தார் இல்லை, போலீசு இல்லை, உளவுப்பிரிவு இல்லை. ஆனாலும் மக்கள் வாழ்ந்தார்கள்.

பின்னர் மன்னர்கள் ஆண்டார்கள். மன்னன் வைத்தது தான் சட்டம், அவனை எதிர்த்து யாரும் கேட்க முடியாது. அது போலத்தான் அ.தி.மு.க. என்றொரு கட்சி இன்று கொள்ளை கூடாரமாக, கொள்ளை அடிப்பதை பிரிப்பதில் தான் சண்டை போட்டுக்கொண்டு   மக்கள் பிரச்சனைகளை கேட்பதற்கு கூட நாதி இல்லாமல், முட்டாள்களின் கூடாரமாக தினம்தினம் அராஜகங்களை அரங்கேற்றுகின்ற ஒரு கேவலமான ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

டெங்கு நோய் உயிரைக் கொல்லும் அளவுக்கு பெரிய நோய் அல்ல. ஆனால் ஒரு கொசுவைக் கூட ஒழிக்க முடியாத இந்த அரசின் சார்பாக, டெல்லியிலிருந்து, ஆம்னி பஸ்சின் மூலம் டெங்கு கொசு வருகிறது என  தெர்மாக்கோல் மேதை சொல்லுகிறார். வாசலில் சாணி தெளித்து கோலம் போட்டால் கொசு வராதாம். நாம் நோபல் பரிசுக்கு இந்தியாவிலிருந்து  அ.தி.மு.க. அமைச்சர்களை சிபாரிசு செய்யலாம். அந்தளவுக்கு அறிவாளிகளாக உள்ளனர்.

மதுரை ராஜாஜி தலைமை மருத்துவமனையில் என்ன நடந்தது. ஒரு துப்புறவு பணிப்பெண் ஊசி போட்டதற்காக பணிநீக்கம் செய்யப்படுகிறார், தலைமை மருத்துவமனைகளின் நிலையே இதுதான். மற்ற மருத்துவமனைகளைப் பற்றி சொல்லவா வேண்டும். இந்த அரசு எழவு வீட்டிலும் திருடுகின்றது. கொசு மருந்து அடிப்பதற்கு வக்கில்லாது மக்கள் மீது பழிப்போட்டு அபராதம் என்ற பெயரில் திருடுகிறது.

ஒரு பக்கம் டெல்டா விவசாயிகள் வறட்சி, பயிர் காப்பீடு கிடைக்கவில்லை. கடன் கிடைக்கவில்லை, காவிரியில் தண்ணீர் வரவில்லை என செத்து மடிந்தார்கள், திருப்பூரிலே நெசவுத்தொழில் அழிந்து அங்கு மக்கள் தங்கள் உடம்பை விற்று பிழைக்க வேண்டிய நிலை. சென்னை காசிமேட்டில் மீனவர்கள் சீன என்ஜின் படகுகளுக்கு எதிராகப் போராடினால் அவர்கள் மீது தடியடி நடத்துகிறது போலீசு. ஏனென்றால் அந்த சீன என்ஜின் படகுகள் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாருக்கு சொந்தமானவை.

கந்துவட்டியால் இசக்கிமுத்து குடும்பம் தீக்குளித்ததற்கு “அவர் ஏன் அவ்வளவு கடன் வாங்கணும், விரலுக்கு ஏத்த வீக்கம் வேணும்” என ஒரு அமைச்சர் பேசுகிறான். திருப்பூரில் ஐம்பது கோடி மதிப்புள்ள நூற்பாலை முதலாளி தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாரே அதற்கு யார் பொறுப்பேற்பது?  இப்படி மக்கள் சாவதை கண்டுகொள்ளாமல் எங்களை அம்மாவின் ஆவி தான் வழி நடத்துது,  ஆவிக்கூட பேசினேன் என்று அராஜகங்களை நாள்தோறும் அரங்கேற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.

‘குட்கா புகழ்’ விஜயபாஸ்கர் டெங்குவுக்காக 26 கோடி ஒதுக்கியதாக கூறுகிறார், ஆனால் MGR நூற்றாண்டு விழாவுக்கு 76 கோடி செலவு செய்கிறது எடப்பாடி அரசு. எம்.ஜி.ஆர் -க்கு விழா எடுக்கும் அளவுக்கு அவர் என்ன செய்து விட்டார். அவர் தமிழகத்துக்கு கொடுத்த கொடை என்பது ஜெயா என்கிற சதிகாரியை கொண்டுவந்தது தான்.

ஜெயா தமிழகத்தை இருந்தும் கெடுத்தார், இறந்தும் கெடுக்கிறார். இப்போது ஜெயா செத்ததுக்கு விசாரணையாம். அனைவரும் பிறக்கும்போதே கட்டாயம் இறப்பும் இருக்கும். தேர்தல் நேரத்திலேயே அந்த அம்மாவுக்கு உடம்பு முடியவில்லை என எல்லோருக்கும் தெரியும். அதுவா பிரச்சனை? அவரை மருத்துவமனையில் வைத்து 75 நாள் மக்களை ஏமாற்றிய சசி, ஓ.பி.எஸ், எடப்பாடி, மோடி, கவர்னர், வெங்கையா நாயுடு இவர்கள் மேல் தான் விசாரணை வைக்கவேண்டும். இந்தக் கொள்ளைக்கார ஆட்சியில் ஊழல் இல்லாத துறையே இல்லை என்று ஊழல் கண்காணிப்புத் துறையை சேர்ந்த மூத்த அதிகாரியே சொல்கிறார்.

இன்னொருபுறம் மோடியின் ஜி.எஸ்.டி. நாட்டின் பொருளாதாரத்தையும், வணிகர்களையும் அழிக்கத் தொடங்கியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் 2% வீழ்ச்சி. அதாவது 1% என்பது 15 லட்சம் குடும்பங்கள் பாதிப்பு பலகோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கேட்டால் ஒரே வரி, ஒரே தேசம் என்று இந்த காவி கும்பல் பிதற்றுகிறது. சுருக்கமாக இந்த GST என்பது இனி தரகு முதலாளிகளும், அம்பானி, அதானி, போன்றவர்களும் வரிகட்ட தேவை இல்லை. அதாவது ஜவுளி வணிகத்தை எடுத்துக்கொண்டால் ஒரு இடத்தில் நூல் வாங்குவார், ஒரு இடத்தில் தைப்பார், ஒர் இடத்தில் எம்ப்ரைடு பண்ணுவார் இவருக்கு வரி. இவை அனைத்தையும் ஒரே இடத்தில் வைத்து வணிகம் செய்யும் அம்பானி போன்றவர்களுக்கு வரி இல்லை ஏனென்றால் அவர் உற்பத்தியாளர் ஆகிவிடுகிறார்.

முன்பு ஒருவர் 5 லட்சம் வியாபாரம் செய்தால் அவர் செய்த வியாபாரத்திற்கு ஏற்றதுபோல் வரி செலுத்தினார். ஆனால் இன்று அந்த 5 லட்சத்துக்கு வாங்கியவர்கள் வரியை கட்ட வேண்டும் அது தான் GST. இன்று நாட்டில் நடந்த ஊழல்களிலேயே மிகப்பெரிய ஊழல் மோடியின் பணமதிப்பு நீக்கம் தான் என்று அனைத்து முதலாளித்துவ பத்திரிக்கைகளே எழுதுகின்றன. இன்னும் சொல்லப்போனால் BJP-யை சேர்ந்த முன்னாள் அமைச்சர் அருண்சோரி, சுப்ரமணியசாமி போன்றவர்களே இதை பேசுகின்றனர்.

அமித்ஷாவின் மகன் ஒரு வழக்கில் சிக்குகிறார். அவரை விசாரிப்பதற்கு பதில் விசாரிக்க சொல்கிறவர்கள் மீது வழக்கு போடுகிறது இந்த யோக்கியர்களின் கட்சியான BJP. இப்படியாக விவசாயிகள், வணிகர்கள், சிறுதொழில்கள், மாணவர்கள், மீனவர்கள், முற்போக்காளர்கள், என்று யாருமே வாழமுடியாத சூழலிலேயே நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம்.

எனவே இந்த கொலைகார அரசிடம் போய் தீர்வு தேடுவதை விட்டு விட்டு இதற்கு வெளியில் தீர்வை தேடுவது தான் சரியாக இருக்கும். மீண்டும் மெரினா போராட்டத்தை, ஒரு அமைப்பாக, ஒரு அரசியல் தலைமையின் கீழ் முன்னெடுக்க வேண்டும்” என்று முடித்தார்.

இறுதியாக கூட்டத்திற்கு தோழர். வித்யாசாகர் நன்றியுரை கூறினார். வட்டாரக்கலைக்குழு தோழர்கள் உரையின் இடையிடையே புரட்சிகர பாடல்களை பாடி எழுச்சியூட்டினர்.

மக்கள் அதிகாரம் தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுக்கட்சியை சேர்ந்த ஜனநாயக சக்திகள் என கூட்டத்தில் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
விழுப்புரம் – மண்டலம்.

ஒக்கேனக்கல் : பேருந்து கட்டணக் கொள்ளையை தட்டிக் கேட்ட மக்கள் அதிகாரம் !

2

மக்களிடம்  பகற்கொள்ளையில்  ஈடுபடும்  பென்னாகரம் அரசு போக்குவரத்து கழகத்தை  பணியவைத்த  மக்கள்  அதிகாரம்!

மிழகத்தின்  பிரபலமான சுற்றுலா தளங்களில்  ஒன்று  ஒகேனக்கல்  இங்கு ஆயிரக்கணக்கான  மக்கள்  வந்து செல்வது வழக்கம். அதுவும்  ஞாயிற்றுக்கிழமை   என்றால்  அதிக கூட்டம்  அலைமோதும். இந்த கூட்ட நெரிசலை  பயன்படுத்தி  அரசு ‘காய்லாங்கடை’  பேருந்துகளை இயக்கி கட்டண கொள்ளையடித்து வருகிறது பென்னாகரம் போக்குவரத்து துறை. பென்னாகரத்திலிருந்து  ஓகேனக்கல்லுக்கு  செல்லும் பேருந்துக்கு 8 ரூபாயும், டவுன் பஸ்சுக்கு  6 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கின்றனர்.

29.10.2017 அன்று ஞாயிற்றுகிழமை  என்பதால் காயிலாங்கடைக்கு  போடவேண்டிய  டவுன் பஸ்களை இயக்கி  6 ரூபாய் வாங்க வேண்டிய  பேருந்து  கட்டணத்திற்கு  பதிலாக 10 ரூபாய் வசூலித்தனர். அன்று  மாலை  3.30 மணிக்கு  ஒகேனக்கல்  பேருந்து  நிலையத்திலிருந்து 7-ம் எண்   டவுன் பஸ் பென்னாகரம்  சென்றது.  இதில்  60 க்கும்  மேற்பட்ட  பயணிகள்  பயணம்  செய்தனர். இந்த பேருந்தில்  மக்கள்  அதிகாரம்  தோழர்களும்  பயணம் செய்தனர்.

அப்போது நடத்துனர்  6 ரூபாய்க்கு  பதிலாக  10 ரூபாயை  டிக்கெட்டை  கொடுத்தார்.  மக்கள்  டவுன் பஸ்சில்  அநியாயமாக  காசு வாங்கிறீங்க என்று  முணுமுணுத்தனர்.  அப்போது பேருந்தில்  மக்கள்  அதிகாரம்  தோழர்கள், “யாரும் பயணசீட்டு  வாங்க வேண்டாம்”  என்று  மக்களிடம்  பேசினர். இதனையடுத்து  நடத்துனர் மாதுராஜ்  இது    சிறப்பு  பேருந்து;   அதனால்  டிக்கெட் விலை 10 ரூபாய் தான்; வாங்கினால் வாங்கு, இல்லை என்றால் இங்கே இறங்கு” என்று நடுகாட்டில் இறக்கி விட முயற்சித்தார்.

அப்போது, வயதான  முதியவர்கள், பெண்கள், கை குழந்தைகள் என  அனைவரும்  தவித்தனர்.  அதை பார்த்த மக்கள்  அதிகாரம் தோழர்கள்   யாரும்  பேருந்தில்  இருந்து  இறங்காதீர்கள்  என மக்களிடம் அறிவித்துவிட்டு, ஒட்டுனரிடம்  பணிமணைக்கு  பேருந்தை விடுங்கள் இல்லை எனில் அதிகாரியை  வரசொல்லுங்கள்  என்று கூறினர்.

அதன் பிறகு  காட்டு பகுதியில் இருந்து  வெளியே உள்ள செக்போஸ்ட்டுக்கு  ஒட்டி வந்தார் ஓட்டுநர். அப்போது  அங்கு இருந்த  போக்குவரத்து  போலீசு இன்ஸ்பெக்டர்  மக்களை  மிரட்டினார். இதற்கு  அச்சபடாமல் மக்கள்  அதிகார தோழர்கள்  “திருடனுக்கு போலீசு ஆதரவாகத்தான்  செயல்படும்” என்பதை  பேருந்தில்  அம்பலப்படுத்தி  பேசினர்.  இதனை கண்ட போலீசு உடனே பேருந்தில் ஒரு  போலீசை   உடன்  அனுப்பி   பென்னாகரம் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.  அங்கு  பணியில் இருந்த எஸ்.ஐ கல்பனா  பேருந்தில் வந்த பயணிகள் கொடுத்த புகாரை  பெற்று,  கூடுதலாக  கட்டணம் வசூலிக்க நிர்பந்தித்த அதிகாரிகள்  மீது  நடவடிக்கை  எடுப்பதற்கு  பதிலாக  புகாரை  வாங்க மறுத்து விட்டார்.

இதனை  அடுத்து  அங்கு வந்த   பென்னாகரம்  போக்குவரத்து  கிளை மேலாளர்   போக்குவரத்து  நட்டத்தில் ஓடுது, என்ன சார்  பண்ண முடியும்?  இனிமேல்  கூடுதலாக  வசூலிக்க மாட்டோம்  என்றார். இதனை  குறுக்கிட்ட  மக்கள்  அதிகாரம் தோழர்கள்  இனி கூடுதலாக கட்டணம் வசூலிக்க மாட்டோம் என்று  எழுதித் தருமாறு  கேட்டனர்.

”அதெல்லாம் முடியாதுங்க, இனிமேல்  நடக்காது” என எழுதி தர  மறுத்தார்.  அப்போது  காவல் நிலையத்துக்குள்  வேகமாக  வந்தார்  இன்ஸபெக்டர் சிவராமன். ” மக்கள் அதிகாரத்துக்கு  இதே வேலையா போச்சு” என சத்தம் போட்டு பேசினார்.  ”கூட்டம்  இருக்குதுன்னு  பேசறீங்களா?” என்று  அதிகாரிகளுக்கு  ஆதரவாக  கண்மூடித்தனமாக  பேசினார். அதற்கு  ”அரசாங்க அதிகாரின்னா  பொறுமையா  பேசுவிங்க, மக்கள்ன்னா  எரிஞ்சு ,பொறுஞ்சி   மிரட்டி சத்தமா  பேசுவிங்க இல்லையா சார்?” என்று மக்கள்  அதிகார தோழர்கள் கேட்டனர்.

மேலும் கிளை மேலாளரிடம்  நீங்களும்  ஒரு  பெட்டிசன்  கொடுங்க  இரண்டு தரப்பிலும்  வழக்கு போடலாம் என்று மிரட்டினார்  இன்ஸ்பெக்டர். நீங்க  திருடனுக்கு  ஆதரவாகதான் பேசுவிங்க என்று தோழர்கள் கேட்ட உடனே  ”இவங்களுக்கு  மொதல்ல  பெட்டிசனை வாங்கி கிட்டு  சிஎஸ்ஆர்  போட்டு கொடுங்க” என்று  ஆத்திரத்தோடு  பேசி  உள்ளே  சென்றுவிட்டார்.

தினந்தோறும்  மக்கள்  தலையில் ஏதாவது ஒரு வரியை சுமத்தி கொள்ளையடிக்கும்  அரசு,  ஞாயிற்றுகிழமை  என்பதாலே  சுற்றுலா  பயணிகளையும், சாதாரண  உழைக்கும்  மக்களையும் பட்டபகலில் சிறப்பு  பேருந்து  என்று காய்லாங்கடை பஸ்ஸுக்கு கூடுதல்  கட்டணம்  வசூலித்து திருட்டை  பகிரங்கமாக  நடத்துகின்றனர். போக்குவரத்து  துறை அதிகாரிகள்.

இந்த மோசடியை  எதிர்த்து  கேள்வி கேட்டால் போலீசு  போராடுபவர்களை  மிரட்டுகிறது.  ஏற்கனவே  கடந்த ஆண்டு  பேருந்தை  மலைப்பகுதியில்  இயக்கியதால்  பெரிய  விபத்து ஏற்பட்டு  11  அப்பாவி  மக்கள் ஒகேனக்கல் மலைப்பகுதியில்   இறந்தனர். இது போன்ற விபத்துக்கள்  ஒகேனக்கல்  மலைப்பகுதியில்  அடிக்கடி சர்வ சாதாரணமாக  நிகழ்கின்றன.

பயணிகளின்   பயணத்தை  பாதுகாப்பாக  கொண்டு செல்வதற்கு  வக்கற்ற  அரசமைப்பு  மக்களை  பல வகையில்  சிறப்பு கட்டணம், விழா கட்டணம்  என்ற பெயரில்  கொள்ளையடிப்பதே நோக்கமாகக்  கொண்டு அதிகாரிகள்  செயல்பட்டு வருகின்றனர். இவ்வாறு  அதிகாரிகளின்  வாய்வழி  உத்தரவு  போட்டு நடத்துனர்களை  மிரட்டி கூடுதல்  கட்டணம்  வசூலிக்க  நிர்பந்தம்  செய்கின்றனர்.

இது போல்  மக்கள்  கேள்வி கேட்கும் போதோ, போராடும் போதோ  ஓட்டுனர்கள்  நடத்துனர்கள் மீது  நடவடிக்கை  எடுத்து  அதிகாரிகள்  தப்பித்து  கொள்கின்றனர். இந்த பகற்கொள்ளையை திமிரோடு அதிகாரிகள் நடைமுறைப்படுத்துகின்றனர். அதுமட்டுமின்றி முன்நின்று கேள்வி கேட்கும் நபர்கள் மீது  வழக்கு போடுவதாக மிரட்டுகின்றது போலீசு. அநியாயம்  நடக்கும்  போது  தட்டிகேட்கவும், வீதிக்கு வரவும், தயங்க கூடாது   என்பதே  தற்போது நம்முன் நிற்கும் ஒரே வழி என்பதை  இப்போராட்டம்  உணர்த்தியது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
மக்கள் அதிகாரம்,
பென்னாகரம்.
தொடர்புக்கு : 81485 73417.
த்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தியும், தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை விளக்கியும், இந்த கட்டமைப்புக்கு வெளியே நின்று மக்கள் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மானோஜிப்பட்டி உப்பிலி மண்டபம் அருகில் 29.10.2017 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையேற்க, தோழர்கள் அருள், ராணி, பாலாஜி, சிவாநந்தம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழகத்தில் டெங்குக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தி மரணங்களைத் தடுப்பதில் படுதோல்வியடைந்த எடப்பாடி அரசின் கயமைத்தனங்களையும், கொள்ளையையும் தோலுரித்து அம்பலப்படுத்திப் பேசினார் திருச்சி மக்கள் அதிகாரம் தோழர் ராஜா.

இறுதியில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், ” டெங்குவால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுபிடி எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர்-க்கு நூற்றாண்டு விழா என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் பணத்தை வாரியிறைக்கிறது” என அரசின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார். உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசுக் கட்டமைப்பே கொள்ளையர்களுக்குத் துணை போவதைக் கடுமையாக சாடினார். ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்வதன் பெயரில் சசி-தினகரன் கும்பலைக் குற்றவாளியாக்கி எடப்பாடி- பன்னீர் கும்பல் தான் தப்பித்துக்கொள்வதற்கு தமிழகத்தையே பா.ஜ.க காலடியில் தாரைவார்த்து துரோகம் செய்வதை விளக்கினார்.

அறுபது மாதங்கள் கொடுங்கள், புதிய இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்” என சவடாலடித்து ஆட்சிக்கு வந்த மோடி முப்பதே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததையும் ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில், சிறு வணிகம், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்து மதவெறி பாசிசத்தை வெறி கொண்டு அமல்படுத்துவதால் ஏற்படப்போகும் அபாயத்தையும் விளக்கினார். உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தைக் கையிலெடுத்து மாற்று அமைப்பை உருவாக்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை.

தொடர்புக்கு: 94431 88285

அரசியல் அராஜகங்களுக்கு முடிவு கட்டுவோம் ! தஞ்சை பொதுக்கூட்டம் !

0

த்தியிலும் மாநிலத்திலும் பா.ஜ.க, அ.தி.மு.க கும்பல்கள் அரங்கேற்றி வரும் மக்கள் விரோதக் கொள்கைகளையும் அராஜகங்களையும் அம்பலப்படுத்தியும், தற்போது நிலவும் அரசுக்கட்டமைப்பில் மக்கள் பிரச்சனைகள் எதையும் தீர்க்க முடியாது என்பதை விளக்கியும், இந்த கட்டமைப்புக்கு வெளியே நின்று மக்கள் தாங்களே அதிகாரத்தைக் கையிலெடுப்பதன் மூலமே தீர்வு காண முடியும் என்பதை வலியுறுத்தியும் தஞ்சை மானோஜிப்பட்டி உப்பிலி மண்டபம் அருகில் 29.10.2017 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையேற்க, தோழர்கள் அருள், ராணி, பாலாஜி, சிவாநந்தம் ஆகியோர் உரையாற்றினர்.

தமிழகத்தில் டெங்குக்காய்ச்சலைக் கட்டுப்படுத்தி மரணங்களைத் தடுப்பதில் படுதோல்வியடைந்த எடப்பாடி அரசின் கயமைத்தனங்களையும், கொள்ளையையும் தோலுரித்து அம்பலப்படுத்திப் பேசினார் திருச்சி மக்கள் அதிகாரம் தோழர் ராஜா.

இறுதியில் சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் மாநிலப் பொருளாளர் தோழர் காளியப்பன், ” டெங்குவால் தமிழகமே தத்தளித்துக்கொண்டிருக்கும் வேளையில் எடுபிடி எடப்பாடி அரசு எம்.ஜி.ஆர்-க்கு நூற்றாண்டு விழா என்ற பெயரில் கூத்தடித்துக் கொண்டிருக்கிறது. பல கோடி மக்கள் பணத்தை வாரியிறைக்கிறது” என அரசின் அக்கிரமங்களை அம்பலப்படுத்தினார். உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சகாயம் குழு அறிக்கைப் பரிந்துரைகளை அமல்படுத்த மறுப்பதன் மூலம் அரசுக் கட்டமைப்பே கொள்ளையர்களுக்குத் துணை போவதைக் கடுமையாக சாடினார். ஜெயலலிதா மரணத்தை விசாரணை செய்வதன் பெயரில் சசி-தினகரன் கும்பலைக் குற்றவாளியாக்கி எடப்பாடி- பன்னீர் கும்பல் தான் தப்பித்துக்கொள்வதற்கு தமிழகத்தையே பா.ஜ.க காலடியில் தாரைவார்த்து துரோகம் செய்வதை விளக்கினார்.

அறுபது மாதங்கள் கொடுங்கள், புதிய இந்தியாவை உருவாக்கிக் காட்டுகிறேன்” என சவடாலடித்து ஆட்சிக்கு வந்த மோடி முப்பதே மாதங்களில் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்ததையும்  ஜி.எஸ்.டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகள் மூலம் சிறு தொழில், சிறு வணிகம், விவசாயம் ஆகியவற்றை சார்ந்திருக்கும் கோடிக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அழிக்கப்பட்டிருப்பதையும், இந்து மதவெறி பாசிசத்தை வெறி கொண்டு அமல்படுத்துவதால் ஏற்படப்போகும் அபாயத்தையும் விளக்கினார். உழைக்கும் மக்களாகிய நாம் அதிகாரத்தைக் கையிலெடுத்து மாற்று அமைப்பை உருவாக்குவதை நோக்கி சிந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இறுதியில் ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி நடைபெற்று அனைவரின் பெருத்த வரவேற்பைப் பெற்றது.

தகவல்
மக்கள் அதிகாரம்
தஞ்சை.

தொடர்புக்கு: 94431 88285