Saturday, June 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 728

அரியானா : நாட்டின் அவமானச் சின்னம் !

3

ரியானா மாநிலத்தில் கடந்த இரு மாதங்களில் நடந்துள்ள 19 பாலியல் வன்புணர்ச்சி தாக்குதல்களில் 15 தாக்குதல்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மீது நடத்தப்பட்டவை எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.  இந்த 15 வழக்குகளில் பெரும்பாலானவை ஆதிக்க சாதி வெறியர்களால் நடத்தப்பட்ட கும்பல் பாலியல் வன்புணர்ச்சித் தாக்குதல்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.  இவ்வழக்குகளில் ஒன்றிரண்டில்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செயப்பட்டு, குற்றமிழைத்த ஆதிக்க சாதிவெறியர்கள் கைது செயப்பட்டுள்ளனர்.  இதுவும்கூடத் தாழ்த்தப்பட்ட மக்களும் அமைப்புகளும் போராடிய பிறகுதான் நடந்திருக்கிறது.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான வன்கொடுமை, ஆதிக்க சாதிக் கொழுப்பும் ஆணாதிக்க திமிரும் வக்கிரமும் கொண்ட ஜாட் சாதி பஞ்சாயத்துகள், அப்பஞ்சாயத்துகளுக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் ஓட்டுக்கட்சிகள்-அரசு இயந்திரம் – இதுதான் அரியானாவின் உண்மை முகம் என்பது ஏற்கெனவே பலமுறை அம்பலமாகியிருக்கிறது.  இப்பொழுதும்கூட, அம்மாநிலத்தை ஆண்டு வரும் காங்கிரசு கட்சியும், போலீசும், ஜாட் பஞ்சாயத்துகளும் தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடந்துள்ள இந்த வன்புணர்ச்சித் தாக்குதல்களை உப்புசப்பில்லாத விவகாரமாக ஆக்கி, கைகழுவிவிடத் தொடர்ந்து முயன்று வருகின்றன.

ஜாட் சாதியைச் சேர்ந்த கும்பலால் 15 தாழ்த்தப்பட்ட பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகியுள்ள நிலையில், காங்கிரசுக் கட்சியின் தலைவி சோனியா காந்தி ஜிந்த் மாவட்டத்தில் சச்சா கேரா என்ற கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாகி, தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட தாழ்த்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் அளிக்கச் சென்றார்.  ஒரு சில நிமிடங்களே நடந்த இந்த ஆறுதல் நாடகத்தின் மூலம் எல்லா சாதிகளிலும் பெண்களுக்கு எதிரான போக்கிரி கும்பல் இருப்பதாகக் காட்டியதோடு, “கற்பழிப்புக் குற்றம் நாடு முழுவதும் நடப்பதுதான்” எனக் கூறி, அரியானா அரசிற்கு வக்காலத்து வாங்கினார்.

அக்கட்சியைச் சேர்ந்த உள்ளூர் தலைவரான தரம்வீர் கோயட், “இக்கற்பழிப்பு சம்பவங்களில் 90 சதவீதம் பெண்ணின் சம்மதத்தோடு நடந்தவைதான்” எனக் குறிப்பிட்டு, பாதிக்கப்பட்ட பெண்களை நடத்தை கெட்டவர்களாகக் குற்றஞ்சுமத்துகிறார்.  வன்புணர்ச்சி குற்றத்தில் ஈடுபட்ட சாதி வெறியர்களுள் பலர் திருமணமானவர்கள் என்ற உண்மையை மறைத்துவிட்டு, இளைஞர்களுக்கு 16 வயதிலேயே திருமணம் செய்துவிட்டால், அவர்கள் அலைவதைத் தடுக்க முடியும்” எனக் கூறி, குழந்தைத் திருமண முறைக்கு வக்காலத்து வாங்குகிறது, உள்ளூர் காப் (சாதி) பஞ்சாயத்து.  இந்தக் காட்டுமிராண்டித்தனமான யோசனையை அரியானாவின் முன்னாள் முதல்வர் ஓம் பிரகாஷ் சௌதாலா வழிமொழிந்து, பின்பு ஜகா வாங்கிக் கொண்டார்.

அரியானா

முதலாளித்துவ அறிவுஜீவிகளோ, “அரியானா மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு எண்ணூத்தி சொச்சம் பெண்கள் இருப்பதுதான் இப்பிரச்சினைக்குக் காரணம்” எனக் காரணம் கற்பிக்கிறார்கள். அரியானா மாநிலத்தில் பெண்களின் எண்ணிக்கை சரிந்துகொண்டே போவதற்கு ஆணாதிக்கம் நிறைந்த பிற்போக்கு குடும்பங்கள் பெண் சிசுக்களைச் சட்டவிரோதமான முறையில் கருவிலேயே அழித்துவிடுவதுதான் காரணம் என்பதும்; ஆண்கள் எண்ணிக்கைக்குச் சமமாகப் பெண்கள் இருக்கும் இடங்களிலும் பாலியல் வன்புணர்ச்சி நடைபெற்று வரும் உண்மையும் இவர்களை உறுத்தவில்லை போலும்.

அரியானாவை ஆண்டு வரும் காங்கிரசு அரசோ இன்னும் ஒருபடி மேலே போய், தனது ஆட்சியின் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் அரசியல் சதி இது” என்ற புளுகுணி பிரச்சாரத்தை நடத்தி வருகிறது.  அரியானா  போலீசு துறை இயக்குநர் ரஞ்ஜிவ் சிங் தலால், “கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் கற்பழிப்புக் குற்றங்களின் எண்ணிக்கையில் 80 குறைந்துள்ளதாக’’ப் புள்ளிவிவரத்தைத் தூக்கிப்போடுகிறார்.  ஹிஸார் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர், தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதியினரால் கற்பழிக்கப்படுவது குறைவுதான்” என வாதிடுகிறார்.  கோஹானா நகரின் துணைக் கண்காணிப்பாளர், “பெண்கள் மேற்கத்திய பாணி உடைகளை அணிவதால்தான் கும்பல் கற்பழிப்புக் குற்றங்கள் அதிகரிப்பதாக’’க் கண்டுபிடித்துச் சோல்கிறார்.  இவற்றின் மூலம் அம்மாநில அரசு, “இது சட்டம்-ஒழுங்கு சம்பந்தப்பட்ட பிரச்சினையே தவிர, இதில் சாதிக்கு இடமில்லை” எனச் சாதிக்க முயலுகிறது.

அரியானா-1ஆனால், தாழ்த்தப்பட்ட பெண்கள் ஆதிக்க சாதிவெறியர்களால் பாலியல் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட ஒவ்வொரு வழக்கிலும் காப் பஞ்சாயத்து தலையீடு செய்து, குற்றவாளிகளைக் காப்பாற்றியிருக்கிறது; காப்பாற்ற முயலுகிறது என்பதற்கு நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் உள்ளன.  ஹிஸார் மாவட்டம்-டாப்ரா கிராமத்தைச் சேர்ந்த 16 வயதான தாழ்த்தப்பட்ட இளம் பெண் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்ட வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள ஜாட் சாதியைச் சேர்ந்த சுனிலை போலீசு கைது செய்துவிடாமல் காப்பாற்றி வருகிறது, அக்கிராம காப் பஞ்சாயத்து.  குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதற்காக சுனிலைப் பாதிக்கப்பட்ட பெண்ணின் முன் போலீசு நிறுத்தியபோது, அப்பெண் காப் பஞ்சாயத்தின் கட்டாயத்தால் அவனை அடையாளம் காட்டவில்லை.  இப்பாலியல் வன்புணர்ச்சி வழக்கு தொடர்பாக காப் பஞ்சாயத்து நடத்திய கூட்டத்தில் வெளியாட்களையும் பத்திரிகையாளர்களையும் கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது எனத் தீர்மானிக்கப்பட்டதாகவும், அப்பொழுது அக்கூட்டத்தில் அம்மாவட்ட போலீசு கண்காணிப்பாளர் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

டாப்ரா வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் வழக்குரைஞரான ரஜத் கல்ஸான், “போலீசு, நீதித்துறை என அரசு இயந்திரம் முழுவதிலும் ஜாட் சாதியினர் நிறைந்துள்ளனர்.  அதிகார வர்க்கமும் காப் பஞ்சாயத்தும் பல்வேறு வழிகளில் நெருக்கமாக உள்ளது.  இந்த நெருக்கம் காரணமாக, தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிரான பலாத்கார வழக்குகளில் என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை காப் பஞ்சாயத்துதான் தீர்மானிக்கின்றன.  போலீசு அதற்குத் தலையாட்டுகிறது” எனக் குற்றஞ் சுமத்துகிறார்.

‘‘ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகள் போலீசால் கைது செய்யப்படும்பொழுது, காப் பஞ்சாயத்துத் தலைவர்கள் தலையிட்டு, நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கைத் தீர்த்துக் கொள்வதாகக் கூறி, குற்றவாளியை விடுவித்துவிடுகிறார்கள்.  இதையும் மீறி வழக்கு நீதிமன்றத்திற்குச் சென்றால், பஞ்சாயத்தின் மிரட்டலால் பாதிக்கப்பட்ட பெண்ணே பிறழ் சாட்சியாக மாறிவிடுகிறார்” என்கிறார் ஜிந்த் மாவட்ட போலீசு கண்காணிப்பாளர்.

அம்மாநிலத்தில் நீதிமன்ற விசாரணைக்குச் செல்லும் வன்புணர்ச்சி வழக்குகளில் வெறும் 13 சதவீத வழக்குகளில்தான் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.  இப்புள்ளிவிவரமும் போலீசு கண்காணிப்பாளரின் கூற்றும் வழக்குரைஞர் ரஜத் கல்சான் முன்வைக்கும் குற்றச்சாட்டை உறுதி செகின்றன.

கடந்த செப்.9 அன்று டாப்ரா கிராமத்தில் நடந்த பாலியல் வன்புணர்ச்சி வழக்கில், குற்றவாளிகள் அச்சம்பவத்தைத் தாமே கைபேசியில் படமெடுத்ததோடு, அதனைப் பலருக்கும் அனுப்பி வைத்தனர்.  பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை கிருஷ்ணகுமார் இந்த அவமானத்தைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்.  குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், கிருஷ்ணகுமாரின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் எனக் கோரித் தாழ்த்தப்பட்ட மக்கள் போராடிய பிறகுதான்,  இவ்வழக்கில் போலீசு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது.  அதிலும்கூட, பாதிக்கப்பட்ட பெண் தந்த வாக்குமூலத்தைத் திரித்து எழுதி, சில தாழ்த்தப்பட்ட இளைஞர்களையும் வழக்கில் சேர்க்க முனைந்து அம்பலப்பட்டுப் போனது.

சோனியா அரியானாவிற்கு வந்து ஆறுதல் நாடகம் நடத்திச் சென்ற மறுநாளே, கைதால் என்ற கிராமத்தைச் சேர்ந்த திருமணமான தாழ்த்தப்பட்ட இளம் பெண் இரண்டு ஆதிக்க சாதிவெறியர்களால் பாலியல் பலாத்காரப்படுத்தப்பட்டார்.  குற்றவாளிகள் இருவரும் அப்பெண்ணிற்கு ஏற்கெனவே அறிமுகமானவர்கள் என்பதையும்; குற்றம் நடப்பதற்கு முன் அப்பெண் அவர்களோடு கைபேசியில் பேசியிருக்கிறார் என்பதையும் வைத்துக் கொண்டு, இவ்வழக்கில் குற்றவாளிகளைத் தப்பவைக்கும் முகமாக அப்பெண்ணின் நடத்தையைக் கேள்விக்குள்ளாக்கி வருகிறது போலீசு.  இப்படிப் பல்வேறு வழக்குகளில் ஆதிக்க சாதியைச் சேர்ந்த குற்றவாளிகளுக்குச் சாதகமாகச் செயல்பட்ட போலீசார் மீது கிரிமனல் சட்டப்படியோ, வன்கொடுமை தடுப்புச் சட்டப்படியோ எந்தவொரு வழக்கும் தொடரப்படுவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

‘‘தனது பண்ணையாளின் மனைவியோடும் மகளோடும் வல்லுறவு கொள்ளாத எந்தவொரு ஜாட்டும், தன்னை ஜாட் என்று அழைத்துக் கொள்ளத் தகுதியில்லாதவன்” என்று காப் பஞ்சாயத்துத் தலைவர்கள் பெருமையாக கூறிக் கொண்டு திரிவதை அரியானாவின் ஒவ்வொரு கிராமப்புறத்திலும் இன்றும் காண முடியும்.  இன்று இவர்கள் பண்ணையார்களாக, நிலப்பிரபுக்களாக மட்டும் இல்லை.  தனியார்மயத்தைப் பயன்படுத்திக் கொண்டு புதுப் பணக்காரக் கும்பலாகவும் உருவெடுத்துள்ளனர்.  இவர்கள்தான் அரியானாவில் முதலீடு செயும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களை வாங்கிக் கொடுக்கும் ரியல் எஸ்டேட் தரகர்களாக, அந்நிறுவனங்களுக்குக் கூலி ஆட்களை சப்ளை செயும் காண்டிராக்டர்களாக மாறி பெரும் பணத்தில் புரள்கின்றனர்.

இந்த நிலப்பிரபுத்துவ பிற்போக்குக் கும்பலிடம் பணப்புழக்கம் அதிகரிப்பதற்கு ஏற்ப, தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான அவர்களின் சாதிக் கொழுப்பும் வக்கிரமும் அதிகரித்து வருகிறது.  அரியானாவில் 2004-ஆம் ஆண்டில் பதிவான பாலியல் வன்புணர்ச்சி குற்றங்களின் எண்ணிக்கை (386), 2011-இல் இரண்டு மடங்காக அதிகரித்திருப்பதை (733) இந்தப் பின்னணியில் வைத்துதான் பார்க்க வேண்டும்.

ஆதிக்க சாதிவெறிக் கும்பல் தாழ்த்தப்பட்ட பெண்களைப் பாலியல் பலாத்காரப்படுத்தும் வழக்குகளில், அந்த வக்கிரத்தை அக்கும்பல் கைபேசியில் பதிவு செய்து கொள்வதோடு, அக்காட்சிகளைப் பலருக்கும் அனுப்பிவைக்கும் போக்கும் தற்பொழுது அதிகரித்து வருகிறது.  அவர்கள் தங்களின் செய்கையை வெட்கப்படத்தக்கதாகவோ, குற்றமாகவோ பார்ப்பதில்லை.  தங்களின் ஆண்மையையும் ஆதிக்க சாதித் திமிரையும் நிலைநாட்டும் செயலாகவே கருதுகின்றனர்.  இவை தாழ்த்தப்பட்ட பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் இவ்வன்புணர்ச்சி தாக்குதல்கள் காமத்தின் பாற்பட்டதல்ல; ஆதிக்க சாதித் திமிரோடு தொடர்புடையது என்பதைத்தான் நிரூபித்துக் காட்டுகின்றன.

பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மட்டுமல்ல, சாதியை மறுத்துத் திருமணம் செய்து கொள்ளும் தம்பதியினரைப் படுகொலை செய்யும் குற்றச் செயலுக்குக் கௌரவக் கொலைகள் என நாமகரணம் சூட்டி, அப்படுகொலைகளைச் செய்யும் ஆதிக்க சாதிவெறி பிடித்த கொலைகாரர்களையும் காப் பஞ்சாயத்துகள்தான் ஆதரித்துக் காப்பாற்றி வருகின்றன.  இப்படிபட்ட சட்டவிரோத, சமூக விரோத, பிற்போக்கான காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்வதை ஓட்டுக்கட்சிகளே முன்னின்று தடுத்து வருகின்றன.

இந்த நிலையில் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமை, வன்புணர்ச்சி வழக்குகளில் நீதி கிடைத்துவிடும் என யாரேனும் நம்ப முடியுமா?  எட்டு மாதங்களுக்கு முன்பு நர்வானா என்ற கிராமத்தைச் சேர்ந்த ஒரு தாழ்த்தப்பட்ட பெண்ணின் மீது ஜாட் சாதிவெறிக் கும்பல் பாலியல் வல்லுறவு தாக்குதல் நடத்திய வழக்கில், அக்குற்றவாளிகளின் மீது வழக்குப் பதிவு செய்ய போலீசு மறுத்துவிட்டதால், குற்றவாளிகளுள் சிலரைத் தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் கொன்றொழித்தனர்.  நீதி பெறுவதற்கு இதைக் காட்டிலும் காரிய சாத்தியமான வழி வேறெதுவும் இருக்கிறதா?

__________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

__________________________________________________

ரஜினி பாபாவும் பக்தகேடிகளும் – ஒரு நேருக்குநேர் !

58

ரஜினி என்ற மாபெரும் சக்தியின் சகல வல்லமைகளைப் பற்றி ஊடகங்களும் அரசியல் உலகமும் கட்டி எழுப்பியிருக்கும் கருத்துலகம் உண்மையில் ஒரு ஊதிப் பெருக்கப்பட்ட பலூன்தான். அதற்கு ஆதாரமாக பாபா படம் வெளியான போது திருச்சியில் இந்த பலூனை வெடிக்கவைத்த  கதையை இங்கு காலப்பொருத்தம் கருதி பதிவு செய்கிறோம்.

ரஜினி-பால்சில திரைப்படங்களுக்கு எழுத்தில் விமரிசனம் செய்தால் போதுமானதாக இருப்பதில்லை. சமகால வரலாற்றைத் திரித்து பம்பாய், ரோஜா போன்ற இந்து மதவெறி ஆதரவுப் படங்களை மணிரத்தினம் வெளியிட்டபோது அவற்றுக்கெதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினோம். பாலியல் வக்கிரங்களையே பண்பாடாக்கும் ஆபாசத் திரைப்படங்களுக்கு எதிராகவும் இத்தகைய நேரடி நடவடிக்கை தேவைப்பட்டிருக்கிறது.

ஆபாசமும் வக்கிரமும் படத்திற்குள்ளேதான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பாபா திரைப்படத்தைப் பொறுத்தவரை அதன் கதை இன்னதென்று தெரியாவிட்டாலும், படம் வெளியாவதற்கு முன்னால் அதற்குப் பத்திரிகையுலகம் அளித்த விளம்பரமும், தமிழகமெங்கும் பாபா வெளியீட்டையொட்டி நடைபெற்ற கூத்துகளும் ஆபாசம் வக்கிரம் என்ற சொற்களுக்குள் அடக்கவியலாத அளவுக்கு அருவருப்பானவை.இந்த அசிங்கம் தோற்றுவிக்கும் நாற்றத்தை எதிர்கொள்ளவியலாமல் மூக்கைப் பிடித்துக் கொண்டு ஒதுங்கிச் செல்வதென்பது தமிழ் மக்களின் சுயமரியாதைக்கே விடப்பட்ட சவாலாகக் கருதினோம். எனவே தமிழகத்தில் ரஜினியின் தலைமை ரசிகர் மன்றம் இயங்கும் திருச்சியில், பாபாவையும் பக்தகேடிகளையும் நேருக்கு நேர் சந்திப்பது என்று களத்தில் இறங்கினோம்.

பாபா வெளியிடப்பட்ட ஆகஸ்டு 15, 2002 அன்று தமிழகத்தின் சூழல் என்னவென்பதை வாசகர்களுக்கு நினைவுபடுத்துகிறோம். நெசவாளர்களுக்குக் கஞ்சித் தொட்டி வைத்த தி.மு.க வினர், முட்டை பிரியாணிக் கும்பலிடம் அடி வாங்கி, சிறை சென்ற முன்னாள் சபாநாயகர் உள்ளிட்ட  110பேர் கண்டிசன் பெயிலில் கையெழுத்துப் போட்டுக்  கொண்டிருந்தனர். நெசவாளர்கள் ஆங்காங்கே போராடிக் கொண்டிருந்தனர்.
காவிரியில் தண்ணீர் விடாமல் கர்நாடகம் அடாவடித்தனம் செய்து கொண்டிருந்தது. தஞ்சை  பஞ்சபூமியாகி விவசாயிகள் எலிக்கறி தின்னும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தனர். தமிழகமெங்கும், ஆசிரியர் போராட்டம், வழக்குறைஞர் போராட்டம்.

இந்தச் சூழலில் தமிழகப் பத்திரிகைகளில் பாபாதான் அட்டைப்படக் கட்டுரை அல்லது முக்கியச் செய்தி. இதை விடப் பெரிய பூச்செண்டை பாபாவைத் தவிர யாரும் ஜெயலலிதாவுக்கு வழங்கியிருக்க முடியாது. அந்த அளவிற்கு இருட்டடிப்பு செய்யப்பட்டன மக்கள் பிரச்சினைகள்.பாபா வெளியீட்டிற்கு இரண்டு நாட்கள் முன் ராமதாஸ் ரஜினியைப் பற்றித் தெரிவித்த விமரிசனம் பத்திரிகைகளில் பெற்ற முக்கியத்துவத்தைக் காட்டிலும், ராமதாசுக்கு ரஜினி ரசிகர்கள் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்திய செய்திதான் முக்கியத்துவம் பெற்றது. ரசிகர்கள் “கொந்தளிப்பு – ஆவேசம்” என்றும் ரஜினி மட்டும் தடுத்து நிறுத்தாமலிருந்தால் ரசிகர்கள் தமிழ்நாட்டையே கொளுத்தி விடுவார்கள் என்பது போலவும் ஒரு பயங்கரத் தோற்றத்தையும் உருவாக்கின பத்திரிகைகள்.

தங்கள் முகத்தை பூதக்கண்ணாடி வழியே பார்த்து தைரியம் பெற்ற ரசிகர்கள் எனப்படும் தெள்ளவாரிகள் கூட்டம் ” ராமதாசையும் திருமாவளவனையும் பொடாவில் கைது செய்” என்று அறிக்கை விட்டு தங்கள் அரசியல் பார்வையைத் தெளிவுபடுத்தியது; இதுவும் மாலைப் பத்திரிக்கைகளின் முதல் பக்கச் செய்தியானது.

திருச்சி நகரமோ பாபா நகரமாகவே இருந்தது. ஷாகுல்ஜி (ஷாகுல் ஹமீது) தலைமையில் அதிகாரபூர்வ ரசிகர் மன்றம்; கலீல்ஜி (கலீல்) தலைமையில் போட்டி ரசிகர் மன்றம். மாவட்டத்தில் மொத்தம் 550 கிளைகள், இரு ரசிகர் மன்றங்களுக்கிடையிலான போட்டியில் திருச்சி நகரத்தின் எல்லாச் சுவர்களுக்கும் ஆயில் பெயிண்ட் அடித்து விட்டனர். ஒரு சுவர் விளம்பரத்துக்கு 3000 ரூபாய் என்று மதிப்பிட்டாலும் மொத்தம் சுமார் 18 லட்சம் ரூபாய்க்கு (600 இடங்களுக்கு மேல்) பாபா விளம்பரம் செய்திருந்தனர். விளம்பர வாசகங்களைப் படித்தால் தன்மானமுள்ள வாசகர்களுக்கு அது கொலை வெறியை ஏற்படுத்தும் என்பதால் எழுதாமல் விடுகிறோம்.

இவையன்றி, சுவரொட்டிகள். ரஜினி திரைப்படத்தின் தயாரிப்பு செலவு 5 கோடியென்றால் ரசிகர்கள் செய்யும் விளம்பரச் செலவு 10 கோடி என்பதை ‘படையப்பா’ படம் வெளிவந்த போது உரிய விவரங்களுடன் புதிய கலாச்சாரத்தில் எழுதியிருக்கிறோம். மூன்றாண்டுகளுக்குப் பிறகு ‘தலைவர்’ படம் வருகிறதென்பதால் விளம்பரம் எப்படி இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை.ரஜினியின் நண்பரும் தொழில் கூட்டாளியுமான முன்னாள் காங்கிரசு எம்.பி அடைக்கலராஜின் கொட்டகை உட்பட 3 திரையரங்குகளில் படம் திரையிடப்பட்டது. ஆகஸ்டு – 15 அன்று மட்டும் 5 திரையரங்குகளில் அன்றாடம் 5 காட்சிகள்.

ஆகஸ்டு – 14 ஆம் தேதியன்று போலிச் சுதந்திரத்தை அம்பலப்படுத்தி ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்த திருச்சி நகர மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி தோழர்கள், ஆகஸ்டு – 15 ஆம் தேதியன்று பாபா திரையிடப்படும் ரம்பா திரையரங்கின் வாயிலில் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கும் கண்டன ஊர்வலத்திற்கும் போலீசிடம் அனுமதி கேட்டனர்.
“சுதந்திர தினத்தன்று குடிமக்கள் எந்த விதமான ஜனநாயக உரிமையையும் பயன்படுத்த அனுமதிப்பது வழக்கமில்லை” என்ற  புனிதமான மரபை போலீசார் சுட்டிக் காட்டினர். 16 ஆம் தேதி அனுமதியளிப்பதாக வாக்களித்தனர்.

“பாபாவுக்குப் பால்குட ஊர்வலம் நடத்த  அனுமதித்தால் அதை எதிர்த்து காலிப்பானை ஊர்வலம் நடத்துவோம் ” என்று போலீசை எச்சரித்தோம். பால்குட ஊர்வலத்தை அனுமதிக்க மாட்டோமென உறுதியளித்தனர் போலீசு அதிகாரிகள். ரஜினியின் படம் வெளியாகும் நாளன்று நகரம் எப்படி இருக்குமென்பதைத் தமிழக மக்களுக்கு விளக்கத் தேவையில்லை. சுதந்தி தினத்தன்று பிராந்திக் கடை திறக்கக்கூடாது என்ற ‘ கருப்புச் சட்டம்’ அமலில் இருப்பதால் 14 ஆம் தேதியே போதுமான அளவு ‘ ஜனநாயகத்தை’ வாங்கி இடுப்பில் செருகிக் கொண்டிருந்தார்கள் பாபாவின் பக்த கேடிகள்.

எம் தரப்பில், பாபாவை அம்பலப்படுத்தும் 3500 சுவரொட்டிகள் தயாரிக்கப்பட்டன. இவற்றை 14 ஆம் தேதி இரவு ஒட்டுவதைக் காட்டிலும் காலையில் ஒட்டுவதன் மூலம்தான் பக்த கேடிகளை “நேருக்குநேர்” சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பதாலும், ரஜினி ரசிகர்கள் எனும் ” மாபெரும் சக்தி ” பற்றி மக்களிடம் தோற்றுவிக்கப்பட்டிருக்கும் பிரமையை உடைக்க முடியும் என்பதாலும் ஆகஸ்டு 15 அன்று காலையில் ஒட்டுவதென முடிவு செய்தோம்.

செஞ்சட்டையணிந்த தோழர்கள் பல குழுக்களாகப் பிரிந்து திருச்சி நகரின் எல்லாப் பேருந்துகளிலும் சுவரொட்டிகளை ஒட்டினர். மக்கள் கும்பல் கும்பலாகப் படித்து ரசிக்கத் தொடங்கினர். ரசிகர்கள் நின்று படித்துவிட்டு மவுனமாக இடத்தை விட்டு அகன்றனர். ஒட்டும்போது வம்புக்கு வந்தாலோ ஒட்டிய பிறகு கிழித்தாலோ என்ன நடக்கும் என்பது சுவரொட்டியிலேயே அச்சிடப்பட்டிருந்தது. படித்துப் புரிந்து கொள்ளத் தவறும் ரசிகர்கள் பார்த்தே புரிந்து கொள்ள ஏதுவாக உரிய தயாரிப்புடன் சென்றனர் தோழர்கள். “ராமதாசுக்குத் தமிழகமெங்கும் கொடும்பாவி கொளுத்தினார்கள், கொதிக்கிறார்கள், கொந்தளிக்கிறார்கள் ” என்று பத்திரிகைகளால் வருணிக்கப்பட்ட ரசிகர்கள் ஒரு இடத்திலும் மூச்சு விடவில்லை.

ரஜினி-பாபாதேநீர்க் கடைகள், தெருக்கள்  என்று நகரின் உட்பகுதிகளெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. ஒரேயொரு தெருவில் சுவரொட்டியைக் கிழித்த ரசிகர் கூட்டத்தைத் ‘ தக்கபடி கவனித்து ‘ கையில் பசைவாளியையும் சுவரொட்டிகளையும் கொடுத்து அவர்களையே ஒட்டச் செய்தனர் தோழர்கள். நகரின் மையமான இடங்களில் இதே முழக்கங்கள் ( தாழ்ந்த தமிழகமே! கஞ்சிக்கு மக்கள் மிதிபடும் நாட்டில் காவிரிக்கு உழவன் கண்ணீர் விடும் மண்ணில் பாபா காட்சிக்கு அலை மோதும் ரசிகர் கூட்டம்! பாபா டிக்கெட் 600 ரூபாயாம்! தமிழனே! உன் சூடு சொரணை எத்தனை ரூபாய்?! ஆர்ப்பாட்டம், “ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!” ) பெரிய தட்டிகளாக எழுதி வைக்கப்பட்டன.  அவற்றுக்கும் சேதமில்லை.

மதியம் தட்டிகளைக் கையிலேந்தியபடி பல குழுக்களாகக் குடியிருப்புப் பகுதிகளுக்குள் பிரச்சாரம் செய்யச் சென்றனர் தோழர்கள். ரஜினி ரசிகர் மன்றங்களில் உட்காந்திருந்தவர்களை அழைத்துப் பேசினர். “ரேசன் வாங்க வைத்திருந்த காசைக் காணோம்; பைனான்சுக்கு வைத்திருந்த காசை எடுத்து விட்டான்; பாத்திரத்தைக் காணோம்; நகையைக் காணோம்” என்ற தாய்மார்களின் புகார்களும், வசவுகளும், கண்ணீரும் எல்லாத்  தெருக்களிலும் கேட்டது. இந்த எதிர்ப்பியக்கத்தை மக்கள் எப்படி வரவேற்றிருப்பார்கள் என்று மேலும் விளக்கத் தேவையில்லை.

“படம் படுதோல்வி ” என்ற செய்தி அதற்குள் நகரம் முழுவதும் பரவிவிட்டது. ” பாபா படுதோல்வி! போண்டியானது ரசிகர்கள்தான் – ரஜினி அல்ல! பண்ட பாத்திரத்தை விற்று ரஜினிக்கு மொய் எழுதிய ரசிகர்களே இனியாவது திருந்துங்கள்!” என்ற தட்டிகளை அன்று மாலையே நகரின் மையப்பகுதிகளில் வைத்தோம். அன்று காலை “ஜெயங்கொண்டத்தில் படப்பெட்டியைப் பா.ம.க வினர் பறித்துச் சென்று விட்டனர் ” என்ற செய்தி மாலைப் பத்திரிகைகளின் பரபரப்புக்குத் தீனியானது.

போலீசுக்கோ 16 ஆம் தேதி ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுக்க இது ஒரு முகாந்திரமானது. ” அடுத்த 10 நாட்களுக்குள் பாபாவுக்கு எதிராக எதுவும் செய்ய அனுமதிக்கக்கூடாது ” என்று அம்மாவின் அரசு உத்திரவிட்டிருப்பதாகக் கூறினர். தடை உத்திரவை நள்ளிரவு 1 மணிக்குக் கொண்டு வந்து கொடுத்தனர். ஆனால் 16ஆம் தேதி காலை 9 மணிக்குத் தடையை மீறி திருச்சி சிங்காரத் தோப்பில் திடீரென்று குழுமிய தோழர்கள் ஊர்வலமாகக் கிளம்பி ரம்பா திரையரங்கம் நோக்கிச் சென்றனர். தெப்பக்குளம் அருகே ஊர்வலத்தை மறித்துக் கைது செய்தது போலீசு. பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சிகள் அனைத்திலும் செய்தி வெளிவந்தது. ( பரபரப்பு முக்கியத்துவம் என்று ஒன்று இருக்கிறதே )

பண்ருட்டியில் சுவரொட்டி வாசகத்திற்காக அதனை ஒட்டிய தோழர்கள் கைது செய்யப்பட்டனர். “”ஈராயிரம் ஆண்டுகளாய் உயிரோடிருந்து, ஏசு முதல் ரஜினி வரை எல்லொருக்கும் ஆசி வழங்கிய இமயத்து பாபாவின் இயற்பெயர் என்ன – கஞ்சாச் செடி!” என்ற அந்தச் சுவரொட்டி வாசகம் இந்து மத உணர்வைப் புண்படுத்துவதாகக் கூறி குற்றப் பிரிவு 153-ஏ இல் கைது செய்து சிறை வைத்தனர். அதாவது பாபர் மசூதியை இடித்ததற்கு அத்வானி மேல் போடப்பட்ட அதே குற்றப் பிரிவு!

16 – ஆம் தேதி இரவே திருச்சி நகரச் சுவர்களை அசிங்கமாக்கிக் கொண்டிருந்த பாபா விளம்பரங்கள் மீது வெள்ளையடித்து  “உலக வங்கிக் கைக்கூலி ஜெயா” வுக்கு எதிரான முழக்கங்களை எழுதத் தொடங்கினார்கள் தோழர்கள். வெள்ளையடிக்கும் பணி மறுநாள் பகலிலும் தொடர்ந்தது. இதைக் கண்டும் ரசிகர்கள் யாரும் கொந்தளிக்கவோ குறுக்கிடவோ இல்லை. ஒரு இடத்தில் ரஜினியின் முகத்தில் வெள்ளையடிக்கும்போது மட்டும் ஒரு ரசிகர் குறுக்கிட்டார். ” தலைவா… பாத்து… தலைவர் முகத்தில் அடிக்கும் போது மட்டும் கொஞ்சம் பாத்து அடிங்க ” என்றார்.

பார்த்து அடிப்போம்.

__________________________________________________

புதிய கலாச்சாரம் செப்டம்பர், 2002
_____________________________________________

பேரம் படிந்தது – நாடகம் முடிந்தது!

4


பேரம் படிந்ததுநாடகம் முடிந்தது!

______________________________________________

ஊழல்   ராணியும்     – மலை  முழுங்கி   மகாதேவனும்

-மெகாசீரியல்

_________________________________________________________________

டந்த  7 மாதங்களாக கிரானைட் மாபியா பி.ஆர்.பி – துரைதயாநிதி கும்பலுக்கு எதிராக ஊழல் ராணி ஜெயா நடத்தி வந்த மெகா சீரியலின் இறுதிக்காட்சி தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

ஜெயா – சசி கும்பல் – பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்கள் – அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள் – உயர்நீதிமன்ற நீதிபதிகள் – காவல்துறை அதிகாரிகள் எல்லோரும் இணைந்து ஊழல் எதிர்ப்பு மெகா சீரியலை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளனர்.

ஒலிம்பஸ்,மதுரா.சிந்து கிரானைட் முதலாளிகள் துரைதயாநிதி-செல்வராஜ்-ரபீக் ஆகியோருக்கு முதற்கட்டமாக பிணை வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் உள்ளிட்ட தமிழகமக்கள் அனைவரும் கோமாளிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். பி.ஆர்.பி உள்ளிட்ட கிரானைட் மாபியாக்களை தண்டிக்கும் நோக்கத்துடன் ஜெ அரசு – மதுரை மாவட்ட நிர்வாகம் செயல்படவில்லை – சில பேரங்களை முன்வைத்துத்தான் இக்கண்துடைப்பு நடவடிக்கை என்பது தற்போது வெளிப்படையாக அம்பலமாகியுள்ளது.

புரட்சித்தலைவி அம்மா ஊழலுக்கு எதிராக உண்மையிலேயே சாட்டையைச் சுழற்றுகிறார், உச்ச,உயர்நீதிமன்றங்கள் தற்போது ஊழல் வழக்குகளில் கடுமையாக உள்ளன என்று கருதிவந்த பலருக்கும் சமீபத்தில் வந்த மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சர்மாவின் தீர்ப்பு பலவற்றைத் தெளிவுபடுத்தியுள்ளது  என்பதுடன்  தமிழக அரசும்-நீதித்துறையும் பதிலளிக்க வேண்டிய சில கேள்விகளையும் எழுப்பியுள்ளது.

  • பி.ஆர்.பி  குவாரி  நடத்துவதை  ரத்து  செய்ய  இன்றுவரை  தமிழகஅரசு  நடவடிக்கை  எடுக்காதது   ஏன்? 
  • சட்டவிரோத குவாரி லீஸ்களை ரத்து செய்ய  உரிய நடவடிக்கை இல்லாதது ஏன்? 
  • பி.ஆர்.பியின் தெற்குத்தெரு தொழிற்சாலையை முடக்க நடவடிக்கை எடுக்காமல் நிர்வாக அலுவலகத்தை மட்டும் சீல் வைத்தது கூட சட்டவிரோதம் என தமிழக அரசே உயர்நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டதன் பின்னணி என்ன? தவறை சரிசெய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? 
  • பி.ஆர்.பி நிறுவனத்தின் ஆக்கிரமிப்புகள்  இன்றுவரை  அகற்றப்படாதது  ஏன்? 
  • பி.ஆர்.பி  ஊழலுக்கு  துணை  போன அரசு அதிகாரிகள் மீது தொடர்நடவடிக்கை இல்லாதது ஏன்? 
  • போராடும் ஏழை மக்களிடம் வீரம் காட்டும் ஜெ யின் போலீசு பி.ஆர்.பி. மகன் சுரேஷ்குமார்அழகிரிமகன் துரைதயாநிதியை  கைது செய்யாமல்  விரல்  சூப்பிக் கொண்டிருப்பதேன்? 
  • சோ, தினமலரால் வியந்தோதப்படும் நிர்வாகத்திறமைமிக்க ஜெயா ஆட்சியின் மெத்தப்படித்த அதிகாரிகள்- அரசு வழக்கறிஞர்களுக்குஎந்த நடவடிக்கைக்கும் முன்பாக ஒரு நோட்டீஸ் தரவேண்டும் என்று தெரியாமல் போன மர்மம் என்ன? 
  • பி.ஆர்.பியின் வழக்கறிஞர்பி.ஆர்.பி செய்த குற்றம் என்ன? ஊழல் தொகை எவ்வளவு என்பதையாவது தமிழக அரசால் சொல்ல முடியுமா? ஏழு மாதங்களாக அரசாங்கம் என்ன கிழித்துக்கொண்டிருக்கிறது? என்ற கேட்டதற்கு பதில்சொல்லத் திராணியில்லாமல் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் திணறியது ஏன்? 
  • அப்பாவி கூடங்குளம் மக்களை குண்டர் சட்டத்தில் அடைக்கும் ஜெயா அரசு 54 கிரிமினல் வழக்குகள் உள்ள பி.ஆர்.பி யை குண்டர் சட்டத்தில் அடைக்காதது ஏன்? 
  • கடந்த 7 மாதங்களாக பதியப்பட்ட கிரிமினல் வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? 
  • தற்போது கிரானைட் மாபியாக்கள் எளிதில் ஜாமீனில் வெளிவர அரசே அனுமதிப்பது ஏன்? 
  • நூற்றுக்கணக்கான பென்சன் வழக்குகளை நிலுவையில் வைத்திருக்கும் உயர்நீதிமன்றம் கிரானைட் கிரிமினல்களுக்கு  விரைந்து  நீதி  வழங்கிய மர்மம் என்ன?  கைமாறிய தொகை எவ்வளவு? 
  • கடந்த 7 மாதங்களாக கிரானைட் ஊழலுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுப்பதாகக்காட்டி வந்த தமிழக அரசு சட்டப்படி ஒரு நடவடிக்கை கூட எடுக்காமல் பி.ஆர்.பி யை மீண்டும் கொள்ளையடிக்க அனுமதித்திருப்பதின் பின்னணி பேரங்கள் என்ன? ஜெயாவின் அடுத்த பாராளுமன்ற தேர்தல் செலவு முழுவதும் லஞ்சமாக பெறப்பட்டது என்கிறார்களே உண்மையா? 
  • தமிழகத்தில் நடந்த மிகப்பெரிய கிரானைட் ஊழலில் இதுவரை மத்திய அரசின் அனைத்துத் துறைகளும் வாய் மூடி மவுனமாயிருப்பதேன்? காங்கிரஸ் கைமேல் பெற்ற பலன் என்ன? 
  • காங்கிரஸ். தி.மு.க. ம.தி.மு.க. பா.ம.க. வி.சி. தா.பாண்டியன், நெடுமாறன், சீமான்……..உள்ளிட்டோர் கிரானைட் ஊழலில் மவுனிப்பதன் மர்மம் — செஞ்சோற்றுக் கடனா? 

ஒட்டுமொத்தத்தில் தமிழக அரசு பி.ஆர்.பி க்கு எதிராக ஒன்றும் புடுங்கவில்லை என்பதுடன் பி.ஆர்.பி கொள்ளையடித்த மக்கள் பணத்தில் ஒரு பகுதியை ஜெயா – சசி கும்பல்- அனைத்து ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் -அரசு அதிகாரிகள் – அரசு வழக்கறிஞர்கள்-உயர்நீதிமன்ற நீதிபதிகள் -காவல்துறை அதிகாரிகள் – பொதுப்பணித்துறை- கனிமவளத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட எல்லோரும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதே உண்மை.

கடந்த இருபது ஆண்டுகளாக இந்த ஊழலுக்குத் துணை நின்ற இதே அதிகாரவர்க்கம் பி.ஆர்.பி போன்ற மக்கள் சொத்தை சூறையாடும் முதலாளிகள் மீது ஒருபோதும் நடவடிக்கை எடுக்காது என்பதுடன் எடுப்பதாகப் பம்மாத்து காட்டுவது கூடுதல் எலும்புத்துண்டுகளை கவ்வுவதற்கே என்பதும் உள்ளங்ககை நெல்லிக்கனி.

பி.ஆர்.பி. உள்ளிட்ட கிரானைட் முதலைகளோ –- அம்பானி,டாடா உள்ளிட்ட தரகு முதலாளிகளோ– இன்னும் இந்நாட்டின் கனிமவளங்களையெல்லாம் மூர்க்கத்தோடு சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்களோ—அடித்த, அடித்துவரும், அடிக்கஇருக்கும் அனைத்துக் கொள்ளைக்குமான அடிப்படை இந்திய அரசு பின்பற்றிவரும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற பொருளாதாரக் கொள்கைதான்.இது சட்டப்படிதான் அரங்கேறுகிறது என்பது மிகவும் முக்கியமானது.அதில் ஏற்படும் சில பணப்பகிர்வு தொடர்பான பிரச்சனைகளுக்கே வழக்கு,வாய்தா. பி.ஆர்.பி. பிரச்சனையும் அவ்வாறே.

மேலும் இன்று  சட்டமே ஒரு சார்பாக மிக விரைந்து மாற்றப்பட்டு வரும் நிலையில் பாராளுமன்றம்-நீதிமன்றம்-நிர்வாக அலகுகள் அதற்க்குத் துணைநிற்பது தவிர்க்கைஇயலாதது. இதை கிரானைட் ஊழலில் மட்டுமல்ல, ஸ்பெக்ட்ரம்-இஸ்ரோ-நிலக்கரி-சில்லறை வணிகத்தில் வால்மார்ட் உள்ளிட்ட சமீபத்திய ஊழல்களில் அரசும்-உச்சநீதிமன்றமும் எடுக்கும் நிலைப்பாடுகளில் இருந்து தெளிவாக உணர முடியும்.

ஆக இன்றைய ஒருசார்பு சட்டப்படி பி.ஆர்.பி போன்ற ஊழல் பெருச்சாளிகளையும் -துணைநிற்கும் – அதிகாரவர்க்கத்தையும் தண்டிக்கவே முடியாது என்பதே நிதர்சன உண்மை. ஆக இனி வெறுமனே சட்டத்தையும்,கோர்ட்டையும் நம்பிக்கொண்டிராமல் பி.ஆர்.பி. போன்ற கிரிமினல் முதலாளிகளை முச்சந்தியில்    நிறுத்தி  செருப்பால் அடித்துத் தண்டிக்க என்று மக்கள் தயாராகிறார்களோ அன்றே  ஊழல் ஒழியும்.

_____________________________________

 மனித உரிமைப்பாதுகாப்பு மையம்
மதுரை மாவட்டம். 9443471003.9865348163
______________________________________

கசாப்புக்கு தூக்கு, தாக்கரேவுக்கு மரியாதை – ஏன்?

20

பாக். பயங்கரவாதிக்குத் தூக்கு!

உள்நாட்டு பயங்கரவாதி தாக்கரேவுக்கு அரசு மரியாதை!

166 பேரைப் படுகொலை செய்த, பிரபலமாக அறியப்பட்ட 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய பத்து பாகிஸ்தான் பயங்கரவாதிகளில் உயிருடன் பிடிபட்டவரான முகம்மது அஜ்மல் அமீர் கசாப், கடந்த 21/11 அன்று முற்றிலும் இரகசியமாக இந்திய அரசால் தூக்கிலிடப்பட்டார். இதை, மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தியும், நினைவுகூர்ந்தும், பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் பலவாறாக நாடே கொண்டாடியது. மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட்டது; பயங்கரவாதத்துக்குப் பதிலடி கொடுத்தாகிட்டது; இந்தியச் சட்டம், நீதி அமைப்பின் சிறப்பு நிரூபிக்கப்பட்டுவிட்டது; பயங்கரவாதக் குற்றவாளிக்குக் கூட சட்டபூர்வமான எல்லா வாய்ப்புகளும் வழங்கிய இந்திய ஜனநாயகத்தின் மேன்மை உலகுக்கு மீண்டும் தெளிவாகியுள்ளது” என்று கூறி கசாப் தூக்கு பற்றி பலரும் பெருமிதம் கொள்கின்றனர்.

கசாப் தூக்கை வரவேற்பவர்களிலேயே இன்னொரு பிரிவினரும் உள்ளனர். கசாப்பைத் தூக்கிலிட்டதன் மூலம் பாதி நீதியைத்தான் நிலைநாட்டியிருக்கிறோம். பாகிஸ்தானில் பாதுகாப்பாக வாழும் பயங்கரவாதக் தலைமைக் குற்றவாளிகளின் கருவிதான், கசாப். 26/11 மும்பை பயங்கரவாதத் தாக்குதலைத் திட்டமிட்டு, பயிற்சி, நிதி, ஆயுதங்கள் கொடுத்து ஏவிவிட்ட அக்குற்றவாளிகளைக் கொண்டுவந்து அல்லது அங்கேயே தாக்குதல்கள் நடத்திக் கொல்லப்பட்டால்தான் மும்பையில் பலியானவர்களுக்கு முழுமையான நீதி வழங்கியதாகும். கசாப்பை உடனடியாகத் தூக்கிலிடாமலும், பிற குற்றவாளிகள் மீது தாக்குதல் தொடுக்காமல் தாமதிப்பதும், கசாப்பை சிறையில் வைத்துப் பராமரிப்பதற்கு பல கோடி செலவு செய்ததும் தவறுதான் என்றும் பலர் கொந்தளிக்கிறார்கள். இந்திய நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியதாகக் கூறி தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ள அப்சல் குருவை இனியும் தாமதமின்றித் தூக்கிலிட வேண்டும் என்று கோருகின்றனர்.

இவ்வாறு கசாப்பின் தூக்கை வரவேற்றுக் கொண்டாடுபவர்கள், பாகிஸ்தான் மீதான பதிலடிக்கும் தாக்குதலுக்கும் ஏங்குபவர்கள்தான் தேச பக்தர்கள்; இதற்கு மாற்றுக் கருத்துடையவர்கள் எல்லாம் தேசத்துரோகிகள் என்ற கருத்து அரசாலும், ஆளும் கட்சிகள் – எதிர்க்கட்சிகளாலும், ஊடகங்களாலும் உருவாக்கப்படுகிறது. மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும் பரப்புபவர்களும் பாசிச முறையில் மிரட்டப்படுகின்றனர். அதையும் மீறுபவர்கள் அச்சத்துடன் கூடிய மழுப்பலைக் கவசமாக அணிந்து கொள்கிறார்கள். மரண தண்டனையையே எதிர்ப்பது என்ற மனிதாபிமான வாதத்துக்குள் புகுந்து கொள்கிறார்கள். குடியரசுத் தலைவர் தக்க காரணம் கூறாமல் அவசரகதியில் கசாப்பின் கருணை மனுவை நிராகரித்து விட்டார்; அதன் பிறகும் மேல்முறையீடு செய்வதற்கான கசாப்பின் சட்ட உரிமை மறுக்கப்பட்டு விட்டது; முற்றிலும் இரகசியமாக வைத்துத் தூக்கிலிடப்பட்டது தவறு; 26/11 தாக்குதலுக்கான ஒரே சாட்சியமாக இருந்தவரை, அதுவும் பாகிஸ்தானில் நடக்கும் வழக்கு விசாரணை முடியும் முன்பு தூக்கிலிட்டு அழித்தது தவறு; வரும் குஜராத் தேர்தலில் ஆதாயம் தேடிக் கொள்வதற்காகவும், சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு முதலிய தேசத்துரோகச் செயல்கள் மீதான எதிர்ப்பிலிருந்து திசைதிருப்பவும் ஆளும் கூட்டணி உள்நோக்கத்தோடு அவசர அவசரமாகச் செயல்பட்டு விட்டது” – இப்படிப்பட்ட மழுப்பலான மாற்றுக் கருத்துக்கள்தாம் சொல்லப்படுகின்றன.

ஆனால், கசாப்பின் தூக்கை வரவேற்றுக் கொண்டாடுவது மற்றும் அதற்குப் பதிலாக மழுப்பலான மாற்றுக் கருத்துக்களைக் கொள்வது- இரண்டில் இருந்தும் முற்றிலும் மாறாக, நாடும் மக்களும் புரிந்து கொள்ள வேண்டிய வேறு சில உண்மைகள் உள்ளன.

கசாப் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டதற்கு நான்கு நாட்களுக்கு முன்புதான் மும்பை சிவசேனாவின் நிறுவனரும் தளபதியுமான பாலாசாகேப் கேசவ் தாக்கரே அனைத்துக் கட்சித் தலைவர்கள், அரசு – அரசாங்கத் தலைவர்கள், அனைத்துப் பிரிவு ஊடகப் பிரபலங்களின் புகழஞ்சலியோடும் அனைத்து அரசு மரியாதைகளுடனும் இறுதிச் சடங்கு நடத்தி, எரியூட்டப்பட்டார். கசாப் தூக்கிலிடப்பட்டது, பால் தாக்கரே இயற்கை மரணமடைந்து அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடத்தி எரியூட்டப்பட்டது – இவை இரண்டும் தொடர்பே இல்லாத, வேறுவேறு நிகழ்வுகளாக, ஒப்பீடு செய்யாது தனித்தனியே கருதத்தக்கவை அல்ல. கசாப், 26/11 மும்பைத் தாக்குதலை நடத்திய பாகிஸ்தான் – இசுலாமியப் பயங்கரவாதக் கும்பலில் ஒருவன்; ஆனால், பால் தாக்கரே மும்பையில் நடந்த பல படுகொலைகளுக்குக் காரணமான இந்திய ‘இந்து’ மத, சாதி, இனவெறி பயங்கரவாதக் கும்பலின் தலைவர்; ஒரு கிரிமினல் குற்றக்கும்பலின் மூளையாகச் செயல்பட்டவர்.

மும்பையில் காலூன்றுவதற்காக, நூற்றுக்கணக்கான தென்னிந்தியர்களைக் கொன்று, அவர்களின் சொத்துக்களைச் சூறையாடியது சிவசேனா பாசிசப் படை; தொழிற்சங்கங்களைக் கைப்பற்றுவதற்காக வலது கம்யூனிஸ்டு சட்டமன்ற உறுப்பினரையும் பல தொழிற்சங்க முன்னணியாளர்களையும் ஈவிரக்கமின்றிக் கொன்றது; மும்பை சினிமா மற்றும் நிழல் உலகைத் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்காக, தாவூத் இப்ராகிம் கும்பலுக்குப் போட்டியாக அருண் காவ்லி தலைமையிலான கிரிமினல் குற்றக்கும்பலை வளர்த்து, உருட்டல் மிரட்டல், மாமூல் வசூல் முதல் தாக்குதல்கள், படுகொலைகளைச் செய்தது; மண்டல் இடஒதுக்கீடு எதிர்ப்பு மற்றும் மரத்வாடா பல்கலைக்கழகத்திற்கு அம்பேத்கர் பெயரிடுவதை எதிர்த்து ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பலரை நடுத்தெருவில் வெட்டிச் சாய்த்தது; அயோத்தி-பாபரி மசூதியை இடிப்பதற்கு ஒரு பயங்கரவாத கும்பலை ஏவியதோடு, 1992-இல் இரண்டு மாதங்கள் மும்பையைத் தனது சர்வாதிகார-பாசிச படையால் கைப்பற்றிக் கொண்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இசுலாமியர்களை வெட்டியும் உயிரோடு எரித்தும் கொன்றது. இதற்கெல்லாம் மூளையாக விளங்கியவர் பால்தாக்கரே.

இவையெல்லாம் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்கள் அல்ல; இக்குற்றங்களுக்காக 16 கிரிமினல் வழக்குகள் நீதிமன்றங்களில் பதிவு செய்யப்பட்டு பா.ஜ.க. மற்றும் காங்கிரசுத் தலைமை கூட்டாளிகளின் சதியால் பின்னர் முடக்கப்பட்டன. இவற்றுக்கான ஆதாரங்கள் பால் தாக்கரே மரணமடைந்த அன்றைய நாளில் எல்லா நாளேடுகளிலும் காணக்கிடக்கின்றன. 26/11 மும்பை பயங்கரவாதப் படுகொலைகளில் பங்கேற்றதற்காக கசாப் தூக்கிலிடப்பட்டான், முப்பதாண்டுகளாக பல படுகொலைகளை நடத்தி அதே மும்பையை ஆட்டிப் படைத்த பால்தாக்கரே இயற்கையாக மரணமடைய விடப்பட்டதோடு அரசு மரியாதை இறுதிச் சடங்கு பெற்றார்.

கசாப் பகை நாடாகிய பாகிஸ்தான் பயங்கரவாதி, பால் தாக்கரே நமது சொந்த நாடாகிய இந்தியப் பயங்கரவாதி என்பதால் மட்டும் இந்த வேறுபாடு இல்லை! அவர் ஒரு இசுலாமியப் பயங்கரவாதி. இவர் ஒரு “இந்து” பயங்கரவாதி என்பதாலும் இந்த வேறுபட்ட அணுகுமுறை. ஆயிரக்கணக்கான இசுலாமியரைக் கொன்ற “இந்து” பயங்கரவாதி மோடிக்கு என்ன தண்டனை தரப்பட்டது? ஐதராபாத் மசூதி, அஜ்மீர் தர்க்கா, சம்ஜவ்தா விரைவு வண்டி, மலேகான் மசூதி குண் டுவெடிப்புகளை நடத்திய இந்து பயங்கரவாதிகள் பல ஆண்டுகளாகத் தண்டனை ஏதுமின்றி, அரசு விருந்தினர்களாகத் தானே உள்ளனர். இந்தப் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கும் இசுலாமியர்கள்தாம் காரணமென்று கூறிப் பல இசுலாமிய இளைஞர்களைப் பிடித்து, சித்திரவதை செய்து, சிறையில் அடைத்துத் தண்டித்து வருகிறது, இந்திய அரசு.

1996-ஆம் ஆண்டு டெல்லி லஜ்பத் நகர் சந்தை குண்டுவெடிப்பு வழக்கில் தூக்குத் தண்டனை பெற்றிருந்த இசுலாமிய இளைஞர்கள் இருவரை நிரபராதிகள் என 14 ஆண்டுகளுக்குப் பிறகு, கசாப் தூக்கிலிட்ட இரண்டாவது நாள் உயர் நீதிமன்றம் விடுவித்தது. அதற்குள் இதே வழக்கில் அவர்களில் ஒருவரின் சகோதரர் செய்யாத குற்றத்திற்காக ஆயுள் தண்டனை முடிந்து விடுதலையாகி விட்டார். மரண தண்டனையிலிருந்து தப்பியவரை, இராஜஸ்தான் குண்டுவெடிப்பில் சிக்க வைத்து இன்னமும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு முந்தைய மாதம்தான் பதினோரு இசுலாமிய “தடா” கைதிகளை உச்ச நீதிமன்றம் நிரபராதிகள் என விடுவித்தது. இதுதான் இந்தியச் சட்டம், நீதி! கசாப் தூக்கிலிடப்பட்டவுடன், “ஆதாரம் இல்லை என்றாலும், தேசத்தின் உணர்வை மதித்துத் தூக்குத் தண்டனை வழங்கப்படுவதாக” உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால், நாடாளுமன்றத் தாக்குதல் வழக்கில் அப்சல் குருவைத் தூக்கிலிட வேண்டுமென பார்ப்பன மதவெறி பாசிச பயங்கரவாதக் கும்பல் கூச்சலிடுகிறது.

இத்தகைய தேசிய உணர்வு, தேசபக்தி உண்மையானதா? நேர்மையானதா? அவசியமானதா? அறிவியல்பூர்வமானதா? இதுதான் மதவெறி பயங்கரவாத எதிர்ப்பா? ஒழிப்பா? இல்லை. இத்தகைய போக்கினால் இங்கே இந்து மதவெறியையும் அங்கே இசுலாமிய மதவெறியையும் தூபமிட்டு ஆதாயம் அடைகின்றன, இருநாட்டு ஆளும் கும்பல்கள். இதனால் ஒன்றுக்கொன்று பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி, பகைமையையும் வெறுப்பையும் அடுத்த கட்டத்திற்கு முன்தள்ளி, சுருள் வளர்ச்சி முறையில் மேலும் உயர்த்துவதாகவே முடியும்.

____________________________________

– புதிய ஜனநாயகம், டிசம்பர் – 2012
_________________________________________

வாழ்க்கை : மாருதி, ஹூண்டாயைச் சுமக்கும் மனிதர்கள் !

9

ந்தியாவின் எந்த தேசிய நெடுஞ்சாலைகளில் பயணித்தாலும் நம்மோடு பயணிக்கும் அனைத்து வாகனங்களையும் முந்திச் செல்வதற்காக அவ்வப்போது காற்றைக் கிழித்துக் கொண்டு சர் சர் என்று பாயும் பல கார்களை நீங்கள் பார்த்திருக்கலாம்.

சென்னையில் மட்டும் ஃபோர்டு, ஹூண்டாய், பி.எம்.டபிள்யு, லான்சர், ஸ்கோடா, ரெனால்ட் நிசான், மகிந்த்ரா எனப் பல தொழிற்சாலைகள் இயங்குகின்றன. தென் கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலையில், பணி புரியும் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ஆயிரத்து முன்னூற்று ஐம்பது கார்களை உற்பத்தி செய்கிறார்கள். மாருதியின் மானேசர் ஆலையிலோ அதைவிட அதிகமான கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் இது போன்ற பன்னாட்டு நிறுவனங்களின் கார் தொழிற்சாலைகள் உள்ளன.

பன்னாட்டுக் கம்பெனிகளின் இந்த சொகுசு கார்களில் ஏறிப் பறப்பவர்களுக்கு இந்தக் கார்கள் எத்தகைய கொத்தடிமைக் கூடாரங்களில் தயாரிக்கப்படுகின்றன என்பது தெரியாத ஒன்று. இந்நிலையில் அந்தக் கார்களை இந்தியா முழுவதும் கொண்டு செல்பவர்களைப் பற்றியும் பலர் அறிந்திருக்கமாட்டார்கள்.  அப்படி இந்தக் கார்களை ஒவ்வொரு ஊரின் சாலைகளிலும் இறக்கி விடும் லாரி ஓட்டுநர்களின் கதை இது.

சென்னை ஹூண்டாய் தொழிற்சாலையைச் சுற்றி தமிழக லாரிகளோடு இமாச்சல் பிரதேசம், பஞ்சாப், ராஜஸ்தான், டெல்லி, அரியாணா, உ.பி, ம.பி, குஜராத், மகாராஷ்டிரா, உத்ரகாண்ட், சட்டிஸ்கர், ஜார்கண்ட், பீகார், ஒடிசா, அசாம், மேற்கு வங்கம், நாகாலாந்து என்று நாடு முழுவதுமுள்ள ஆயிரக்கணக்கான லாரிகள் கார்களை ஏற்றிச் செல்வதற்காக நின்று கொண்டிருக்கின்றன. பல லாரிகள் பதினைந்து நாட்களாகக் காத்துக் கொண்டிருக்கின்றன.

இங்கிருந்து டெல்லிக்கு ஹூண்டாய் கார்களை ஏற்றிச் செல்பவர்களுக்கு  அங்கிருந்து மாருதி லோடு கிடைக்கும். அதை ஏற்றிக்கொண்டு மாருதி கார்கள் எங்கே சொல்கிறதோ அங்கே போக வேண்டும். ஹூண்டாயிலிருந்து மத்திய பிரதேசத்திற்கு அனுப்பினால் ம.பி.யில் இறக்கிவிட்டு, அடுத்த லோடுக்காக காலி லாரியை ஓட்டிக்கொண்டு மானேசருக்கு தான் செல்ல வேண்டும். அதே போல மாருதி ஏற்றிக்கொண்டு தென்னிந்தியாவிற்கு வரும் லாரிகள் கேரளாவிற்கு சென்றால் அங்கிருந்து லோடுக்காக சென்னைக்கு தான் வர வேண்டும்.

கார்களை ஏற்றிச் செல்லும் இந்த கண்டெய்னர் லாரிகளை நிறுத்துவதற்காகவே ஸ்ரீபெரும்புதூரைச் சுற்றி பல ஏக்கர்கள் பரப்பில் காலி மைதானங்கள் இருக்கின்றன. முதலில் அத்தகைய மைதானம் ஒன்றிற்குள் நுழைந்தோம். சுற்றிலும் நூற்றுக்கணக்கில் லாரிகள். அந்த மைதானத்தின் மொத்தப் பரப்பளவு பதினாறு ஏக்கர்கள். இரண்டு லாரிகளுக்கிடையிலான இடைவெளியில் சில ஓட்டுநர்களும் கிளீனர்களும் அமர்ந்து ஓய்வெடுப்பதைக் கண்டு அருகில் சென்றோம்.

தனது லாரி மீது சாய்ந்து கொண்டிருந்த தர்மேந்திர சிங் பீகார் மாநிலத்தின் சப்ரா மாவட்டத்தைச் சேர்ந்தவர். பத்தாண்டுகளாக லாரி ஓட்டுகிறார். வண்டியின் முதலாளி பீகாரில் இருக்கிறார். “பீகாரிலிருந்து கிளம்பும் போது சரக்கு எதுவும் கிடைக்காது. ஏன்னா அங்க தொழிற்சாலைகள் எதுவும் இல்லை. அதனால ஒன்னு ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர், இல்லைன்னா மேற்கு வங்கத்துக்கு போய் டாடா வண்டிகளை ஏத்திக்கிட்டு அங்கிருந்து எங்க போகச் சொல்றாங்களோ அங்கே போவோம்.”

“தில்லி கிடைச்சா அங்கே இறக்கிட்டு, மானேசரிலிருந்து மாருதி ஏத்திக்குவோம். தென்னிந்தியாவுக்கு கிடைச்சா எங்க இறக்கணுமோ அங்க இறக்கிட்டு சென்னைக்கு வந்துருவோம். இங்கிருந்து லோடை ஏத்திக்கிட்டு அடுத்த ஊருக்குப் போவோம். அங்கிருந்து அடுத்த லோடு, அடுத்த ஊர். இப்படியே ஆறு மாசம், ஒரு வருசம்னு போய்கிட்டே இருப்போம். தினம் தினம் எல்லாம் வீட்டுக்குப் போக முடியாது. வாழ்க்கையே ரோட்ல தான். வண்டில பார்த்தீங்கன்னா இங்கிருந்து கிளம்பும் போது ஹூண்டாய் போர்டு தொங்கும்; மானேசரிலிருந்து திரும்பும் போது மாருதி போர்டு.”

“வருசத்துக்கு ரெண்டு தடவை தான் அம்மா, அப்பாவையும், மனைவி குழந்தைகளையும் பார்க்க முடியும். ஏன்னா ஆறு மாசத்துக்கு ஒரு முறை, வருசத்துக்கு ஒரு முறை தான் வீட்டுக்கே போக முடியும். அதனால ஒரு ஃபோனை வாங்கிக் கொடுத்திட்டேன். இப்ப தினமும் வீட்டுக்குப் பேசுறேன். விடுமுறை நாட்கள்னு எதுவும் இல்லை. எப்ப ஊருக்கு போறோமோ அப்ப தான் விடுமுறை. வேலைக்கு வந்துட்டா லீவே கிடையாது. எல்லா நாளும் வேலை நாள் தான். ஞாயிற்றுக் கிழமைகளிலும் தீபாவளி மாதிரி பண்டிகை நாட்களிலும் கூட நாங்க வேலை செஞ்சுக்கிட்டே தான் இருக்கோம்.”

“பயணமும் சாதாரணமானது அல்ல. உயிரைக் கையில பிடிச்சுக்கிட்டு தான் போறோம். இப்போதெல்லாம் கொள்ளைச் சம்பவங்கள் அதிகமா நடக்குது. டிரைவரைக் கொன்னுட்டு இருக்கிறதை எடுத்துட்டு ஓடிடுறாங்க. இப்படி குடும்பத்தை விட்டுட்டு, உயிரைப் பணயம் வச்சு, இரவு பகலா கண் முழிச்சு சரக்குகளைப் பாதுகாப்பாகக் கொண்டு போய் சேர்க்க முதலாளி எவ்வளவு சம்பளம் தருகிறார் தெரியுமா ? கிலோ மீட்டருக்கு பதினாறு ரூபாய். அதில் தான் டீசல் செலவு,  கிளீனர் சம்பளம், உணவுச் செலவு,  கட்டணச் சாலைகளுக்கான கட்டணம்,  வண்டி பராமரிப்பு அனைத்தையும் பார்த்துக்கொள்ள வேண்டும்.”

லாரி ஓட்டுநர்கள்
லாரி ஓட்டுநர்கள்

“சென்னையிலிருந்து-கொல்கத்தா போனால் எட்டாயிரம் ரூபாய் கிடைக்கும். இப்படி இரண்டு பயணங்கள் போய் வந்தால் பதினாறாயிரம் சம்பாதிக்கலாம். ஆனால் மாதத்தில் இரண்டு பயணங்கள் கிடைப்பது கடினம். இங்கே பார்த்தீங்கன்னா பல லாரிகள் பத்து நாட்களுக்கு மேல நின்னுக்கிட்ருக்கு. இப்படிக் காத்திருக்கும் ஒவ்வொரு நாளுக்கும் உணவுக்காக நூற்று ஐம்பது ரூபாய் தனியாக கிடைக்கும்.”

தர்மேந்திர சிங் அடிப்படையில் ஒரு விவசாயி. குடும்பமே விவசாயக் குடும்பம். நிலம் குறைவாக இருப்பதாலும், விவசாயத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான நட்டத்தாலும் வேறு வழியின்றி இந்த வேலைக்கு வந்திருக்கிறார். எனினும் தனது குழந்தைகள் எந்த நிலையிலும் இந்தத் தொழிலுக்கு வந்துவிடக் கூடாது என்று கருதுகிறார். “ஏன் நீங்கள் செய்கின்ற வேலை அவ்வளவு மோசமனதா?” என்றால் “இல்லை! எந்த ஊருக்குப் போனாலும் யார் வேண்டுமானாலும் திட்டவும், அடிக்கவும் முடிகின்ற பிரிவினர் நாங்கள் தான்.  எங்களுடைய உழைப்புக்கு யாரும் எந்த மரியாதையும் தருவதில்லை” என்றார் வருத்தத்துடன்.

லாரி டிரைவர்களை இளக்காரமாக பார்க்கும் சமூகம் அவர்கள் இல்லையென்றால் வாழ முடியாது என்பதை ஒத்துக்கொள்ளாது. அவரிடம் “அப்படின்னா உங்களுக்கு இந்த வேலை பிடிக்கவில்லை?” எனக் கேட்டதற்கு, “ஆமாம். இதைவிடக் குறைவான சம்பளத்திற்கு ஊரில் வேறு எந்த வேலை கிடைத்தாலும் போய்டுவேன்.” என்றார்.

“சரி! நிதீஷ்குமார் வந்த பிறகு தான் உங்க ஊர் ஓரளவு முன்னேறி இருக்குன்னு சொல்றாங்களே! உண்மையா?” என்றதும் “மற்றவங்க நூறு ரூபாய் கொள்ளையடித்தால் இவர் ஐம்பது ரூபாய் கொள்ளையடிக்கிறார். அதைத்தான் பத்திரிகைககள் முன்னேற்றம்னு எழுதுறாங்க போலிருக்கு!” என்றார் கிண்டலாக.

“டிரைவர், கிளீனர்ன்னு இங்க நூற்றுக்கணக்கில் இருக்கீங்களே! இதில் பலரும் பல சாதிகளை சேர்ந்தவர்களா இருப்பாங்க. யாரும் சாதி வேறுபாட்டோடு நடந்துக்குவாங்களா?” எனக் கேட்டோம். “இல்லை! இங்க யாரும் அப்படி நடந்துக்கிறது இல்லை. நாங்க எல்லோரும் ஒன்னா தான் இருக்கோம். ஒரு வண்டில சமைக்கிறதை இன்னொரு வண்டிக்காரங்களுக்கு கொடுத்து அவங்க சமைத்ததை வாங்கிக்குவோம். ஒன்னா தான் சாப்பிடுறோம்; ஒன்னா தான் பயணிக்கிறோம்.  யாரும் சாதி பார்த்துப் பழகுவதில்லை. ஆனால் கிராமத்துக்கு போனா அது இருக்கும்” என்றார். சாதி ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கும் பீகாரிலிந்து வந்தவர் கூறிய வார்த்தைகள் இவை. வர்க்கம் சாதியின் ஏற்றத்தாழ்வை தொழில் ரீதியாகவே மட்டுப்படுத்தும் இன்பதற்கு இவர்கள் வாழ்க்கை ஒரு எடுத்துக்காட்டு.

அடுத்ததாகத் தில்லியைச் சேர்ந்த சஞ்சய் குமார் சர்மா,  உத்தராஞ்சலை சேர்ந்த மேத்தா இருவரிடமும் அறிமுகப்படுத்திக் கொண்டோம்.

“லோடு ஏற்றிக்கொண்டு கிளம்பினால் ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் ஓட்டுவீங்க?” எனக் கேட்டோம். “ரெண்டு டிரைவர் இருக்கோம். ஒரு கிளீனர் பையன் இருக்கான். டிரைவருங்க ரெண்டு பேரும் மாத்தி மாத்தி ஓட்டுவோம்.  ஒரு நாளைக்கு நானூறிலிருந்து அறுநூறு கி.மீ. வரை ஓட்டுவோம்.  ஒவ்வொரு உணவு வேளையிலும் ஒவ்வொரு மாநிலத்தில் இருப்போம். சாப்பாட்டு நேரம் நெருங்கும் போது எங்க இருக்கோமோ அங்கேயே நிறுத்தி சமைத்துச் சாப்பிட்டு விட்டு, மீண்டும் கிளம்புவோம். கொள்ளைக்காரர்கள் பயத்தால் பெரும்பாலும் இரவு நேரங்களில் ஓட்றது இல்லை. ஓரமா நிறுத்திட்டு தூங்கிருவோம். துணிஞ்சு போறவங்களும் தனியா போறது இல்ல, பத்து, இருபது வண்டிகள் ஒன்னா சேர்ந்து கொண்டு வரிசையா போவாங்க.”

“சம்பளம்னு பார்த்தா, முதலாளி கிலோ மீட்டருக்கு இருபத்தி நாலு ரூபாய் கொடுத்திருவாரு. டீசல், கிரீஸ் முதல் கிளீனர் சம்பளம், சாப்பாடு வரை எல்லாத்தையும் இதிலிருந்து தான் கொடுக்கணும். லோடுக்காக நிக்கிற நாட்களில் மட்டும் சாப்பாட்டுக்கு தனியா நூறு ரூபாய் கிடைக்கும். எல்லாச் செலவுகளும் போக ஒரு டிரைவருக்கு மாசம் பத்தாயிரம் கிடைக்கும். இருக்கிற விலைவாசி உயர்வில் இதை வச்சிக்கிட்டு எப்படி சார் தாக்குப்பிடிக்க முடியும்?”

“விவசாயம் செய்து வாழ முடியாததால் தான் இந்த வேலைக்கு வந்திருக்கோம். ஊரில் வெறும் ஐயாயிரம் ரூபாய் கிடைத்தால் கூட சந்தோஷமா போயிருவோம்; ஆனால் கிடைக்காது.  இப்போ டீசல் விலை ஏறியிருக்கு. வண்டி முதலாளிகளுக்கு லோடிங் கட்டணத்தை ஹூண்டாய் கூட்டிக் கொடுக்கும். ஆனால் முதலாளி எங்களுக்கு அதிகரித்துத் தர மாட்டார். கேட்டால் இஷ்டம் இருந்தா ஓட்டு, இல்லைனா ஓட்றதுக்கு வேற ஆள் இருக்கான்னு பதில் வரும். பணம் இருப்பவன் தான் மேலும் அதிகமா சம்பாதிக்கிறான்.” என்றார்.  டீசல் விலை உயர்வை எதிர்த்து லாரி உரிமையாளர் சங்கம் போராடுவதைப் போல ஓட்டுநர்களின் ஊதிய உயர்வுக்கு இவர்கள் சங்கமாக அணிதிரண்டு போராட முடியாதபடி அவர்களின் வேலையே அலைக்கழித்து விடுகிறது.

“சரி, சரக்குகளைக் கொண்டு சேர்ப்பதற்குள் என்னென்ன பிரச்சினைகளை எல்லாம் எதிர்கொள்கிறீர்கள் ?” எனக் கேட்டோம். ”ஏத்தினதிலிருந்து இறக்குற வரைக்கும் ஒரே பிரச்சினை தான்.  போலீசு பிரச்சினை, செக்போஸ்ட்ல பிரச்சினை, கொள்ளைக்காரங்க பிரச்சினை, பெரிய வண்டிங்கிறதால சின்ன வண்டிக்காரங்களோட பிரச்சினைன்னு சின்ன பிரச்சியிலிருந்து பெரிய பிரச்சினைகள் வரை எல்லாத்தையும் சமாளிச்சு தான் சரக்கை எடுத்துட்டுப் போறோம். முக்கியமான பிரச்சினை போலீசும், கொள்ளைக்காரங்களும் தான்.  இப்பல்லாம் இரவுல மட்டுமில்ல, பகல்ல கூட ஓட்ட பயமாக இருக்கு. இதுவரை இல்லாத அளவுக்கு கொள்ளையர்கள் பிரச்சினை இப்போ அதிகமாகிருக்கு. கொள்ளையர்களால் இதுவரை பல டிரைவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.  உயிருக்கு அஞ்சி அஞ்சி தான் ஓட்டுறோம்.”  என்றார்.

மறுகாலனியாக்கத்தின் பொருளாதார சீர்கேடுகளால் குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் கொள்ளையடிப்பது அதிகரித்திருப்பதை ஓட்டுநர்கள் பலர் தெரிவித்திருப்பதில் இருந்து புரிந்து கொள்ளமுடிகிறது. நாடாளும் தலைவர்களுக்கு கருப்பு பூனை, கமாண்டோ என்று பாதுகாப்பு செலவிற்கு கோடிக்கணக்கில் செலவழிக்கும் அரசு இந்த ஓட்டுநர்களுக்கு எதுவும் செய்வதில்லை. ஆனால் கொள்ளையர்கள் மட்டுமா பிரச்சினை?

“ஊரைத் தாண்டினால் கொள்ளையர்கள் பிரச்சினைன்னா, ஊருக்குள்ள போலீசும் குண்டர்களும் தான் பிரச்சினை. இருக்கிறதுலேயே மகாராஷ்டிரா தான் ரொம்ப மோசம்.  டோல் கேட்டில் குண்டர்களோடு சேர்ந்து கொண்டு நூறு ரூபாய்க்கு பதிலா முன்னூறு ரூபாய் கேட்பாங்க. குடுக்கணும்; இல்லைனா அடி தான்.  குண்டா டேக்ஸ்ன்னு போலீஸ்காரனைக் கூட்டிட்டு வந்தே வாங்குவார்கள். மகாராஷ்டிராவில் போலீஸ்காரர்கள் தான் பெரிய கொள்ளையர்கள்.  வண்டியில் ஏறி அடிக்கிறது, சட்டைப் பையில் கையை விட்டுப் பறிப்பது எல்லாம் அங்கே தான் நடக்கும். தென்னிந்தியா ஓரளவு பரவாயில்லை. பெரியளவு பிரச்சினைகள் இல்லை.”

“அடுத்து ரோட்லயும் திட்டு வாங்க வேண்டியிருக்கு. பெரிய வண்டிங்கிறதால ரொம்ப பிரச்சினை. போறவன் வர்றவன் எல்லாம் திட்டிட்டு போவான். சிலர் மோசமான கெட்ட வார்த்தைகளில் கூட திட்டுவாங்க. சிலர் திட்டுறதோட நிக்காம வேகமா லாரியை ஓவர்டேக் பண்ணி ஹீரோ மாதிரி பைக்கை குறுக்க மறிச்சு நிறுத்திட்டு மேலே ஏறி வந்து அடிப்பாங்க. பைக் காரங்க மட்டுமில்ல கார்ல வர்றவங்க கூட மோசமா நடந்துக்குவாங்க. அவங்க காரையே நாங்க தான் அந்த ஊருக்கு கொண்டு வந்து இறக்கியிருப்போம். ஆனா அதே காரில் உட்கார்ந்து கொண்டு எங்களுடைய வண்டிகளை மறித்து அடிக்க வருவார்கள்.”

“நீங்க இவ்வளவு கஷ்ட்டப்படுறீங்க. ஆனா லாரி டிரைவர்களை பற்றி மக்களிடம் நல்லவிதமான கருத்து இல்லையே ஏன் ?” எனக் கேட்டதற்கு ”இந்த வேலைக்கு வர்றவங்க எல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க இல்ல சார். படிப்பறிவு குறைவானவங்க தான் வர்றாங்க. அதுல சில பேர் ரோட்ல போற வர்ற பெண்களை கிண்டல் பன்னிருப்பாங்க. அதை வச்சும், அதோட லாரி டிரைவர் வாழ்க்கை முறை காரணமா தான் அவங்க பேசுறதும் நடந்துக்கிறதும் மோசமாக இருக்கிறதா நினைக்கிறாங்க. அந்த மாதிரி ஒரு சிலரை வைத்து எல்லோரையும் தப்பா நினைக்கிறாங்க.” என்றார்.

“இந்தியா முழுவதும் கார்களைக் கொண்டு போய்ச் சேர்க்கிற உங்களுக்கு இந்த மாதிரி ஒரு கார் வாங்கணும்னு ஆசை இல்லையா ?” ”இல்லை. கார்களை ஏத்தி இறக்குறதே நிறைவை தந்துடுது. வாங்குற ஆசை எல்லாம் இல்லை. வாங்கினாலும் நம்மால பராமரிக்க முடியாது. அது யானைக்குத் தீனி போடுற வேலை.”

“உங்களுடைய பயணத்தில் மாவோயிஸ்டுகளைப் பார்த்திருக்கிறீர்களா ? அவர்கள் எப்படிப் பட்டவர்கள் ?” என்று கேட்டதற்கு “அவர்கள் நல்லவர்கள். ஏழைகளுக்காக, வாழ்வாதாரங்களை இழந்தவர்களுக்காகப் போராடுகிறார்கள். அவர்களால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் வந்தது இல்லை. சில நேரங்களில் திடீரென்று சாலையின் குறுக்கே வந்து நிற்பார்கள். நாங்கள் பயந்து போய் விடுவோம். ஆனால் எங்களை ஒன்றும் செய்ய மாட்டார்கள். டீசல் கேட்பார்கள். அதற்கும் கூட காசு கொடுத்து விடுவார்கள். அவர்களுக்கும், பணக்காரர்களுக்கும் தான் பிரச்சனை. அவர்களைப் பயங்கரவாதிகள் என்று சொல்வது தவறு!” என்றனர். கொள்ளையர்கள், போலிஸ்காரர்கள், அரசியல்வாதிகள் என எல்லோரையும் விமரிசனம் செய்யும் ஓட்டுநர்கள் மாவோயிஸ்டுகளை மட்டும் பாராட்டுவது குறிப்பிடத்தக்கது. இந்த ஓட்டுநர்களை அங்கீகரித்து மனிதத் தன்மையோடு நடத்துவது அவர்கள் மட்டும்தான் போலும்.

“மானேசரில் மாருதி தொழிலாளர்கள் போராடினாங்களே. அதை ஆதரிக்கிறீங்களா ?” “அவங்க போராட்டத்தால எங்களுக்கு வேலை இல்லாமப் போய்டுச்சு சார். மாசக்கணக்கில் லோடு இல்லைன்னா நாங்க என்ன பண்றது ? வீட்டுக்கு எப்படி பணம் அனுப்புறது ?  அவங்களுக்கு எங்களை விட நல்ல சம்பளம் தான்; வசதிகள் எல்லாம் இருக்கு. இப்ப அந்தக் கிராம மக்களும், தலைவர்களும் கம்பெனிக்கு அவங்க ஊர் இளைஞர்களை அனுப்பி வைக்கிறதா சொல்லியிருக்காங்க.” என்றனர். தொழிலாளிகளே அரசியல் உணர்வும், வர்க்க உணர்வும் குன்றியிருக்கும் போது இந்த அலைந்து திரியும் தொழிலாளிகள் தமது பாதிப்பிலிருந்து மாருதி போராட்டத்தை பார்ப்பதை புரிந்து கொள்ள முடியும்.

அத்துடன் அவர்களிடம் விடைபெற்றுக் கொண்டு அருகில் நின்று கொண்டிருந்த பஞ்சாப் லாரியை நெருங்கினோம்.  அது மாலை நேரம். எனினும் அப்போதே இரவு உணவுக்கான தயாரிப்புகள் அங்கு நடந்து கொண்டிருந்தது. அருகில் நெருங்கியதுமே ஓட்டுனர் சுக்ஜித் சிங் ”நமஸ்தே ஜி! ஆயி ஆயி!” என்று வரவேற்று தார்ப்பாயில் அமர வைத்தார்.

“எப்போது சென்னைக்கு வந்தீங்க ?” “பத்து நாட்களாகி விட்டது. இன்னும் லோடு கிடைக்கவில்லை.” என்றார். “பஞ்சாபில் எந்த ஊர் ?” “அமிர்தசரசுக்கு பக்கத்துல ஒரு கிராமம். இருபத்து நாலு வருசமா இந்தியா முழுக்க சுத்தி சுத்தி வர்றேன்.  சம்பளம் கி.மீ.க்கு ஒரு ரூபா. அதோட தினசரி நூற்று ஐம்பது ரூபாய்; லோடு இல்லாம நிற்கும் போது உணவுக்கு தனியா நூறு ரூபாய் என்று கிடைக்கும்.  மொத்தமா பார்த்தா மாசத்துக்கு ஒன்பது இல்லைனா பத்தாயிரம் ரூபாய் தான் கிடைக்குது. சம்பளம் சின்னது; ஆனால் ஓனர் பெரிய ஆள். அவருக்கு மொத்தம் மூவாயிரம் லாரி இருக்கு. ஒரு ஐந்து நட்சத்திர விடுதி, டாடா வாகனங்களுக்கான ஷோரூம், அதோடு அகில இந்திய மோட்டார் வாகன உரிமையாளர் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருக்கிறார்.”

1984-ல் இந்திரா காந்தி பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பியதை பற்றி கேட்டோம்.  “பியந்த் சிங், சத்வந் சிங் ரெண்டு பேரும் அதுக்கு என்ன  தண்டனை கொடுக்கனுமோ அதை இந்திர காந்திக்கு கொடுத்தாங்க. சத்வந்த் சிங் எங்க கிராமத்துக்கு பக்கத்து கிராமம் தான். அவங்க நிலமும் எங்க நிலமும் பக்கத்து பக்கத்ததுல தான் இருக்கு. அவரோடு எனக்கு நெருக்கமான பழக்கமும் இருந்தது.”

“பகத் சிங் பிறந்த பஞ்சாபிலிருந்து மன்மோகன் சிங் மாதிரி ஒரு ஆள் வந்திருப்பதை பற்றி என்ன நினைக்கிறீங்க?” எனக் கேட்டதற்கு “அவர் சிலருடைய அதிகார தேவைகளுக்கு வேலை செய்து கொண்டிருக்கிறார். என்ன சொல்றது? எதுவும் செய்ய முடியாது. இப்போதைய அகாலிதள அரசும் ஊழல்வாத மக்கள் விரோத அரசுதான்.  எல்லாத்தையும் அடியோடு மாத்தியமைக்கணும். அதுக்கு எங்களுக்கு தனி நாடு வேணும்.” என்றார். முன்னேறிய பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என்றாலும் அவரது வாழ்க்கை உயர்ந்து விடவில்லை. எனினும் அந்த முன்னேற்றம் தனிநாடு கோரிக்கையில் அடங்கியிருப்பதாக அப்பாவித்தனமாய் நம்புகிறார். வெற்று உணர்ச்சி அரசியல் இந்த ஓட்டுநர்களையும் விடவில்லை என்று தெரிகிறது.

சுக்ஜித் சிங்கிடமிருந்து விடைபெறும் போது இருட்டி விட்டது. அந்த பார்க்கிங் மைதானத்தில் வெளிச்சமே இல்லை. அவர்கள் தமது ஒளித் தேவைகளுக்கு மெழுகுவர்திகளையும், வண்டியின் ஹெட்லைட்களையும் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வெளியே வந்து ஆலையின் முன்பாக நின்றோம். சாலையின் இரு பக்கமும் லாரிகள் நின்று கொண்டிருந்தன. அவற்றை ஒவ்வொன்றாக கடந்து சென்ற போது ஒரு வண்டியின் கண்டெய்னர் கதவு திறக்கப்பட்டிருந்தது. உள்ளே ஹூண்டாயின் புதிய மாடலான எலன்ட்ரா வரிசையாக நிற்கவைக்கப் பட்டிருந்தது. அந்த பளபளப்புக்கு அருகிலேயே ஒரு கொடி கட்டப்பட்டு, அதில் ஓட்டுநருடையதா கிளீனருடையதா என்று தெரியவில்லை, ஒரு பனியனும், ஜட்டியும் துவைத்து காயப்போடப் பட்டிருந்தன. அது அந்த புதிய காரில் ஒட்டி ஒட்டி உரசிக் கொண்டிருந்தது.

அதே போல இன்னொரு லாரியில் பதினைந்து லட்சம் மதிப்புடைய இந்த   பளபளப்புக்கு அடியில், அழுக்கு ஸ்டவ்வை வைத்து கிளீனர் ஒருவர் இரவு உணவுக்காக ரொட்டி சுட்டுக் கொண்டிருந்தார். சாலைக்கு வந்து ஹூண்டாய் வாயிலை நோக்கினோம். பல லாரிகள் உற்பத்தியான கார்களை ஏற்றிக்கொண்டு வெளியே வந்து கொண்டிருந்தன. அடுத்த ஷிப்டில் கார்களைத் தயாரிக்க தொழிலாளிகள் ஆலைப் பேருந்துகளில் உள்ளே நுழைந்து கொண்டிருந்தனர்.

கார்களைச் சுமந்தவாறு இந்தியா முழுவதும் சுற்றி வரும் இந்தத் தொழிலாளிகளின் வாழ்க்கை இப்படித்தான் நடக்கிறது. குடும்பத்தையும், சொந்த ஊரையும் மாதக்கணக்கில் பிரிந்து இருக்கும் இந்த தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த ஊதியமே கிடைக்கிறது. அந்த வேலையும் நிம்மதியாக செய்யும்படி இல்லை. ஆயிரத்தெட்டு பிரச்சினைகளை சந்தித்தபடியே நகர்கிறது. மாருதி, ஹூண்டாய்களை நாடெங்கும் விநியோகிக்கும் இந்த தொழிலாளிகள் இல்லையென்றால் அந்த கார் நிறுவனங்கள் இல்லை. ஆனாலும் இவர்களுக்காக கவலைப்படுபவர்கள் யாருமில்லை!

_________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_________________________________________________

பிணந்தின்னிகள் !

3

மெரிக்க விதைகள் அமோக விளைச்சல் தரும் என நம்பி, பி.டி. பருத்தியைப் பயிரிட்டுக் கடனாளியான விவசாயிகள், கந்துவட்டிக் கொடுமைக்கு பயந்து தற்கொலை செய்துகொள்ளும் அவலம் மகாராஷ்டிர மாநிலத்தில் இன்னமும் தொடர்கிறது. சாய்நாத் என்ற பத்திரிக்கையாளர் விவசாயிகளின் தற்கொலைகளைப் பற்றி தொடர்ச்சியாக எழுதிய பின்னர்தான், விதர்பா பிராந்திய விவசாயிகளின் துயரம் வெளியுலகுக்குத் தெரிய வந்தது. ஆனால், தங்கள் உயிரை மாய்த்துக்கொண்டிருந்த விவசாயிகளின் நலனுக்காக ஒதுக்கப்பட்ட நிதியைக்  கூட விட்டுவைக்காமல் கொள்ளையடித்துள்ளனர், மகாராஷ்டிர ஓட்டுப் பொறுக்கிகள். இழவுவீட்டில் கூட திருடிக் கொண்டிருந்த அந்த இழிபிறவிகள், நீர்ப்பாசனத் திட்டங்களின் பெயரால் பத்தாண்டுகளுக்கும் மேலாகப் பகற்கொள்ளையை நடத்தி வந்துள்ளனர்.

மகாராஷ்டிர  மாநில நீர்ப்பாசனத்துறைத் திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் சுமார் 35 ஆயிரம் கோடி ரூபா அளவிற்கு ஊழல்கள் நடந்துள்ளதை அம்மாநிலத்தின்  தலைமைப் பொறியாளரான விஜ பந்தாரே என்பவர் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அம்பலப்படுத்தியுள்ளார். மகாராஷ்டிர  முன்னாள் துணை முதல்வரான அஜித்பவார் நீர்பாசனத்துறை அமைச்சராக இருந்தபோது,  நீர்ப்பாசன வசதிகளை மேம்படுத்த செலவிடப்பட்ட ரூ.70 ஆயிரம் கோடியில், பாதிக்குப்பாதி கொள்ளையடிக்கப்பட்டு, கொள்ளையில் பெரும்பங்கு அஜித்பவாருக்குப் போயுள்ளது.

முன்பெல்லாம்  நீர்ப்பாசனத்துறையில் வெட்டாத கிணறுக்குக் கணக்குக் காட்டுவதும், ஒப்பந்தக்காரரிடம் சதவீதக் கணக்கில் பணம் வாங்குவதும்தான் ஊழல் என்றிருந்தது. ஆனால் மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துள்ள கொள்ளையோ நினைத்துக் கூடப் பார்க்க முடியாத அளவிற்கு,  ஊழலின் அடுத்த பரிணாமத்தை எட்டியுள்ளது.

முதலில் அரசின் திட்ட மதிப்பிற்கு உட்பட்டு ஒப்பந்தங்களை வாங்குவது, பின்னர் ஏதாவதொரு காரணத்தைக் காட்டி திட்ட மதிப்பை உயர்த்திக் கேட்பது – என இக்கொள்ளை நடந்துள்ளது. மேட்டுப்பாங்கான இடங்களுக்கு நீரை ஏற்றி, அதன் பிறகு வாய்க்கால்கள் மூலம் பாசனவசதி செய்து தரும் திட்டங்களுக்காக  மகாராஷ்டிர அரசு சுமார் 30 ஆயிரம் கோடி ரூபா செலவிட்டுள்ளது. ஆனால் அதில் 90% திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேயில்லை.  கீழ் பெங்கங்கா திட்டத்தில், ஒரு ஒப்பந்தத்தின் மதிப்பு அதன் உண்மை மதிப்பிலிருந்து ரூ.9072 கோடிக்கு உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல, ரூ.60 கோடி திட்டமதிப்பில் தொடங்கப்பட்ட ஜிகான் பாசன வசதித் திட்டம், பின்னர் ரூ.1322  கோடியாக உயர்த்தப்பட்டது. பல திட்டங்கள் அதன் உண்மை மதிப்பிலிருந்து 100 முதல் 1000 மடங்கு வரை உயர்த்தப்பட்டு, நிதி முழுவதுமே கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. நர்வாதே அணைக்கட்டை உயர்த்திக் கட்டுவதாகக் கூறி 650 கோடி ரூபா கொள்ளை, வாசிம் மாவட்டத்தில் 11 தடுப்பணைகள் கட்டுவதாகக் கூறி அணைக்கு 50 கோடி ரூபாவரை கொள்ளை -என இப்பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.

விதர்பா விவசாயிகளின் தற்கொலை உச்சத்தில் இருந்த  2008-ஆம் ஆண்டில், மூன்றே மாதங்களில் அப்பகுதியில் தொடங்கப்பட்ட 32 திட்டங்களின் மதிப்பை மொத்தமாக ரூ,17,700 கோடி அளவிற்கு ஒப்பந்ததாரர்கள் உயர்த்தினர். ஒருபுறம் விவசாயிகளின் தற்கொலை அவலம் தொடர்ந்து கொண்டிருந்தபோது,  இன்னொருபுறம் அவர்களது வாழ்வை மேம்படுத்தப் போவதாகக் கூறிக்கொண்டு இத்திட்டங்களின் மூலம் கொள்ளையடித்துள்ளனர். திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட பணம் முழுவதையும் இவர்கள் விழுங்கிவிட்டதால், 32 திட்டங்களில் ஒன்றுகூட இதுவரை முடிக்கப்படவில்லை.

பெரிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை, அதிகாரிகளுக்குப் பதிலாக அஜித்பவாரே நேரடியாகத் தலையிட்டுத் தனக்கு வேண்டிய ஒப்பந்தக்காரர்களுக்கு ஒதுக்கியுள்ளார். பெரிய ஒப்பந்தங்கள் அனைத்திலும் நீர்ப்பாசனத்துறை அதிகாரியின் கையொப்பம் இருக்க வேண்டிய இடத்தில், அஜித் பவாரின் கையொப்பம் இருப்பதே அவரது தலையீட்டிற்குச் சாட்சி. வேலையைத் தொடங்கும் முன்னரே ஒப்பந்தக்காரர்களுக்கு பலநூறு கோடி ரூபாய்கள் முன்பணமாக வழங்கப்பட்டுள்ளன. பல சமயங்களில் ஒப்பந்தக்காரர்கள், கட்டுமானப் பணிகளைத் தொடங்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தபோதே நூற்றுக்கணக்கான கோடி ரூபாகள் அவர்களுக்கு அடுத்த தவணையாக வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு முன்பணம் வழங்குதல் கூடாதென நீர்ப்பாசனத்துறை அதிகாரிகள் இருவர் அனுப்பிய சுற்றறிக்கை, அஜித் பவாரால் திரும்பப் பெறப்பட்டது.

ஓட்டுக்கட்சி அரசியல்வாதிகள், அதிகாரிகள், ஒப்பந்தக்காரர்கள் இணைந்து நடத்தியுள்ள இந்தக் கொள்ளையின் விளைவாக 1200-க்கும் அதிகமான திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.  பத்து ஆண்டுகளாகியும் பல திட்டங்கள் நிறைவடையவில்லை. மகாராஷ்டிர  மாநிலப் பொருளாதார ஆய்வறிக்கையின்படி, கடந்த பத்து ஆண்டுகளில் அம்மாநிலத்தில் பாசன வசதிபெறும் நிலங்களின் பரப்பு வெறும் 0.1% மட்டுமே அதிகரித்துள்ளது.

இந்தப் பகற்கொள்ளை அம்பலமாகிய பின்னரும் எந்த ஓட்டுக்கட்சியும் இதனைத் தட்டிக்கேட்கவில்லை.  மாநிலத்திலும், மத்தியிலும் தேசியவாத காங்கிரசுக் கட்சியானது கூட்டணியில் இருப்பதால், காங்கிரசுக் கட்சி இந்தக் கொள்ளைகளைக் கண்டுகொள்ளவில்லை. தங்கள் கட்சிகளைச் சேர்ந்த முக்கிய புள்ளிகளும்  ஒப்பந்தங்களைப் பெற்றுக் கொள்ளையடித்துள்ளதால், எதிர்க்கட்சிகளான பா.ஜ.க.வும் சிவசேனாவும்  இந்த ஊழலை அம்பலப்படுத்த முன்வரவில்லை.

இந்தத் திட்டங்கள் பெரும்பாலும் நான்கு ஒப்பந்தக்காரர்களுக்கே வழங்கப்பட்டுள்ளன. பத்தாண்டுகளுக்கு முன்னர் சாதாரண ஒப்பந்தக்காரர்களாக இருந்த இவர்கள், இன்று பல ஆயிரம் கோடி ரூபா மதிப்புள்ள கட்டுமான நிறுவனங்களின் உரிமையாளர்கள். அவர்களில் மூன்று பேர் பா.ஜ.க. மற்றும் தேசியவாத காங்கிரசின்  சட்டமேலவை  உறுப்பினர்களாக உள்ளனர். இன்னொருவரோ பா.ஜ.க. மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.

பா.ஜ.க. தலைவர் கட்காரியோ, அஜித்பவார் மீது விசாரணை கூடாதென்றும் நடவடிக்கை தேவையில்லை என்றும்  கூறியிருக்கிறார். ஏனெனில், நீர்ப்பாசன ஊழல்களில் கட்காரியும் கை நனைத்திருக்கிறார். விதிமுறைகளுக்கு மாறாக, பத்துக்கும் அதிகமான ஒப்பந்தங்களை கட்காரியின் நிறுவனத்துக்கு அஜித்பவார் ஒதுக்கி, இருவரும் கூட்டுக் களவாணித்தனம் செய்துள்ளனர். அது மட்டுமன்றி, பா.ஜ.க. எம்.பி.யும் கட்காரியின் கூட்டாளியுமான அஜய் சஞ்செட்டியின் நிறுவனத்திற்குத்தான் மிக அதிக அளவில் ஒப்பந்தங்கள் வாரிவழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கட்காரி எவ்வாறு இந்த ஊழலை எதிர்த்துப் பேசுவார்?

அஜித்பவாருக்கும், நீர்ப்பாசனத்துறை ஒப்பந்தக்காரர்களுக்கும் நெருங்கிய தொடர்பிருப்பதை, கடந்த 2009-ஆம் ஆண்டு லோக்சத்தா என்ற நாளேடு அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அப்போது நீர்ப்பாசனத்துறை அமைச்சராக இருந்த அஜித்பவார் பதவி விலகினார். ஆனால், அப்பதவியில் அவரின் விசுவாசியான  சுனில் தட்காரே அமர்த்தப்பட்டார். அதன் பின்னர், அஜித்பவாரின் அரசியல் வளர்ச்சி வேகமடைந்தது. ஊழல் குற்றச்சாட்டில் பதவி விலகிய அஜித்பவார், துணை முதல்வராக்கப்பட்டார். அவர் மீதான விசாரணைகள் படிப்படியாக முடக்கப்பட்டன.

2010-இல் நீர்ப்பாசனத்துறை முறைகேடுகளை விசாரித்த இரண்டு விசாரணைக் கமிட்டிகளின் அறிக்கைகள் அரசிடம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரும், இன்னமும் வெளியிடப்படாமல் கிணற்றில் போட்ட கல்லைப் போலக் கிடக்கின்றன. இதுவரை அஜித்பவார் மீது மும்பை உயர் நீதிமன்றத்தில் தன்னார்வக் குழுக்களால் தொடரப்பட்டுள்ள இரண்டு பொதுநல வழக்குகளைத் தவிர, அரசு தரப்பிலிருந்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

ஆதர்ஷ், காமன்வெல்த், 2-ஜி,  நிலக்கரி என அடுத்தடுத்து ஊழல்களும் கொள்ளையும் அம்பலமாகிக் கொண்டே இருக்கின்றன. இந்த ஊழல்களில் பல லட்சம் கோடிகளை விழுங்கிய கொள்ளையர்கள் சுதந்திரமாகத் திரிகின்றனர். அவர்களைப் பாதுகாக்கின்ற அதே அரசியமைப்புதான் மகாராஷ்டிர நீர்பாசனக் கொள்ளையர்களையும் பாதுகாக்கிறது. ஒட்டுமொத்தமாக இந்த அரசியலமைப்பே ஊழலுக்கும், கொள்ளைக்கும் ஏதுவாகக் கட்டமைக்கப்பட்டுள்ள நிலையில், சட்டத்தின் மூலம் இவர்களைத் தண்டித்துவிடமுடியுமா?

___________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

___________________________________

பாராளுமன்றம்: எதிர்க்கிற கைதான் ஆதரிக்கும்!

3

நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம்; ஆனால்  அதைக் கொண்டு வரும் மத்திய காங்கிரசு அரசை ஆதரிக்கிறோம்” – தி.மு.க

“நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோம்; ஆனால் அதைக் கொண்டு வரும் மத்திய காங்கிரசு அரசையும் எதிர்க்கிறோம்; ஆனால் எதிர்த்து ஓட்டுப் போட மாட்டோம்” – பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி.

“நாங்கள் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை எதிர்க்கிறோமா இல்லையா என்பதை எமது மகாராஷ்டிர நிலையை ஒட்டியே முடிவு செய்வோம். அது எப்படியிருப்பினும் நாங்கள் அரசை எதிர்க்கவில்லை” தேசியவாத காங்கிரசு.

“நாங்கள் அந்நிய முதலீட்டை எப்போதுமே ஆதரிக்கிறோம்; சில்லறை வர்த்தகத்திலும் முன்பு ஆதரித்தோம் ஆனால் இப்போதைக்கு எதிர்க்கிறோம். (எப்போதுமே எதிர்ப்போமா இல்லையா என்பதை இப்போது சொல்ல முடியாது –  மைண்ட் வாய்ஸ்) ” –  இது பாரதிய ஜனதா, அ.தி.மு.க மற்றும் மமதா பானர்ஜி.

சி.பி.ஐ சி.பி.எம் மற்றும் அதையொத்த நண்டு சிண்டுகள், துண்டு துக்காணிகள், பழசு பட்டைகள் மற்றும் ஓட்டை உடைசல்களின் நிலைப்பாடுகள் மேலே உள்ளவற்றில் இருக்கும் வார்த்தைகளை மட்டும் அங்கேயும் இங்கேயுமாக இடம் மாற்றிப் போட்டால் வந்து விடும். இவ்வாறாக ஓட்டுக் கட்சிகள் அனைத்தும் “மாப்பிள்ளை இவரு தான்… ஆனா அந்த சட்டையப் பத்தி எனக்குத் தெரியாது” என்கிற பாணியில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு பற்றி வழவழாவென்று பேசிக் கொண்டிருந்த இடைவெளியில் இதைப் பற்றிய தீர்மானத்தை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றியுள்ளது காங்கிரசு தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு.

545 பேர் கொண்ட லோக்சபையில் ‘கொள்கை ரீதியில்’ வெளிநடப்பு செய்தவர்களைத் தவிர்த்த 471 பேர் வாக்களித்துள்ளனர். இதில் அரசுக்கு ஆதரவாக 253 பேரும் எதிராக 218 பேரும் வாக்களித்துள்ளனர். இதில் வெளிநடப்பு செய்த 45 எம்.பிகள் அந்நிய முதலீட்டை எதிர்த்து விவாதங்களில் சூடுபறக்கப் பேசியுள்ளனர். ஆதரித்து வாக்களித்தவர்களில், தி.மு.க எம்.பி இளங்கோவனின் பேச்சு இது – “சில்லறை வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள 30 கோடி பேரை பாதிக்கும்  என்பதால் கடுமையாக எதிர்க்கிறோம்” என்று தெரிவித்து விட்டு அரசை ஆதரித்துள்ளார்.

வெளிநடப்பு செய்த பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சி எம்.பிக்கள் பேசியவைகளைக் கேட்டால் மரித்துப் போன  சேகுவேராவே மீண்டும் உயிர்த்தெழுந்து வந்து அமெரிக்காவையும் பன்னாட்டுக் கம்பெனிகளையும் விட்டு விளாசுவது போலவே விளாசியுள்ளனர். ஆனால், இவையணைத்துமே பச்சையாக நடத்தப்பட்ட நாடகங்கள்.

சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை ஆதரிப்பதும் எதிர்ப்பதும் தொடர்பான முடிவை எடுப்பது இவர்கள் கையில் இல்லை. அதற்கான அதிகாரமும் இவர்களிடம் இல்லை. 2008-ம் ஆண்டு துவங்கிய சர்வதேச பொருளாதார கட்டமைப்பு நெருக்கடி தேசங்கடந்த தொழிற்கழகங்களை புதிய சந்தைகளை வெறி கொண்ட முறையில் தேட வைத்துள்ளது. சூதாட்டப் பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ள தனது பிரம்மாண்டமான மூலதனத்தை சுழற்சிக்கு விட உலகளவிலான சந்தைகளை வெறிகொண்ட முறையில் தேடியலைந்து கொண்டிருக்கிறது ஏகாதிபத்திய நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டுத் தொழிற்கழகங்கள். உலகளவில் சுழற்சியில் உள்ள மூலதனத்தில் மூன்றில் இரண்டு பங்கு சூதாட்ட பொருளாதாரத்தின் விளைவாய் வீங்கிப் பெருத்துப் போயுள்ளது.

இந்த பிரம்மாண்டமான மூலதனம் சுழலாமல் தேங்கி நிற்பது என்பது முதலாளித்துவமே மொத்தமாக செத்துப் போவதற்கு ஒப்பானது. ஏகாதிபத்திய நாடுகளின் சந்தைகளோ இதற்கு மேலும் சுரண்ட முடியாது எனும் அளவிற்கு ஏற்கனவே ஒட்டச் சுரண்டப்பட்டு விட்டது. அந்நாடுகளின் தொழிற்சாலை உற்பத்தி அலகுகள் குறைந்த கூலியைத் தேடி மூன்றாம் உலக நாடுகளுக்குக் கடத்தப்பட்டு விட்டன. வேலையும் வாழ்க்கையும் சமூக பாதுபாப்பையும் இழந்த மக்களோ தெருவிலிறங்கிப் போராடி வருகிறார்கள். இந்தப் பின்னணியில் தான் மூன்றாம் உலக நாடுகளைக் குறிவைத்து இரண்டாம் தலைமுறை பொருளாதாரச் சீர்திருத்தங்களை மேற்கொள்ள உலக வங்கி நிர்பந்தித்து வருகிறது. சில்லறை வர்த்தகம் என்றில்லாமல் விமானப் போக்குவரத்து, வங்கித்துறை, இன்சுரென்ஸ், தபால் துறை என்று லாபம் கொழிக்கும் துறைகளில் பொதுத்துறையை ஒழித்து விட்டு அந்நிய மூலதனத்தை அதிகரிக்க வேண்டுமென்ற கோரிக்கைகளை வலுவாக முன்தள்ளுகிறார்கள்.

இதைத் தாமதிக்கும் நாடுகளை பல்வேறு வகைகளில் மிரட்டியும் வருகிறார்கள். சில்லறை வர்த்தகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது தொடர்பான விவாதங்கள் சுமார் ஓராண்டுகளுக்கு முன்பாகவே துவங்கி விட்டது. இதை எந்த விவாதமும் இன்றி திடீரென்று திணிப்பது மக்களிடமே கொந்தளிப்பை ஏற்படுத்தி விடும் என்பதாலேயே இதற்கு ‘எதிர்ப்பான’ குரல்களை சில காலத்துக்கு ஒலிக்க விட்டிருந்தனர். நடந்த நாடகத்தில் இந்த ‘அடுத்துக் கெடுக்கும்’ பாத்திரத்தை திறம்பட ஏற்று நடித்த கட்சி தான் பாரதிய ஜனதா. உலகின் எந்த நாட்டிலுமே இல்லாத ஒரு வழக்கமாக பாரதிய ஜனதாவின் ஆட்சிக் காலத்தில் தான் அரசுக்குச் சொந்தமான பொதுத்துறைகளைக் கூறு போட்டு உள்நாட்டுத் தரகு முதலாளிகளுக்கும் பன்னாட்டுக் கம்பேனிகளுக்கும் விற்க தனியாக ஒரு அமைச்சரவையே ஏற்படுத்தப்பட்டது என்பதிலிருந்தே இவர்களின் விசுவாசம் யாரிடம் உள்ளது என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

எனினும், அமெரிக்கா எந்தவகையான சந்தேகத்துக்கும் இடம் கொடுக்க விரும்பவில்லை. நாடகத்தின் பாத்திரங்கள் எழுதித் தரப்பட்ட திரைக்கதை வசனத்தைத் தாண்டி சொந்த வசனங்களைப் பேசினால் என்னவாகும் என்பதைக் குறிப்பாலுணர்த்தத் தவறவில்லை. அந்த வகையில் தான், அக்டோபரில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை 6.9 சதவீதத்திலிருந்து 6 சதவீதமாகக் குறைத்து மதிப்பிட்டது. அதைத் தொடர்ந்து அக்டோபர் 10ம் தேதியன்று பொருளாதாரத்துக்கான தரநிர்ணய நிறுவனமான எஸ் & பி, இந்தியாவுக்கான பொருளாதார மதிப்பீட்டை BBBயில் இருந்து BBB-(எதிர்மறை)யாக குறைத்தது. இதற்கான காரணங்களாக, இந்தியா இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் ஏற்படும் தாமதங்களைச் சுட்டிக்காட்டியிருந்தது அந்நிறுவனம்.

இதற்கும் முன்பாகவே கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் இரண்டாம் தலைமுறை பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுப்பதில் ஏற்பட்டுள்ள சுணங்கிய நிலை குறித்து டைம் பத்திரிகை ஒரு கட்டுரை வெளியிடுகிறது. அதன் முகப்பு அட்டையிலேயே மன்மோகனின் படத்தைப் போட்டு “உதவாக்கரை”என்று தலைப்பிட்டிருந்தது. அதே மாதத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியாவின் இரண்டாம் கட்ட பொருளாதார சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படுவதில் ஏற்பட்டுள்ள சுணக்கத்தைப் பற்றி கருத்துத் தெரிவித்திருந்தார்.  இருநாடுகளின் நலனை உத்தேசித்து இந்தியா சில்லறை வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பதில் இந்தியா ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று நேரடியாகவே மிரட்டியிருந்தார்.

உடனடியாக ஒபாமாவின் இந்தக் கருத்துக்கு பதிலடி கொடுத்த மத்திய தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, “கொள்கை ரீதியிலான முடிவுகளை எடுப்பது இந்தியாவின் இறையாண்மை சம்பந்தப்பட்டதாகும்” என்று தெரிவித்திருந்தார். அந்த ‘டக்கு’ தான் இந்த ‘டக்கு’. காங்கிரசு மட்டுமல்ல, பாரதிய ஜனதாவிலிருந்து சகல கட்சிகளும் அன்று ஒபாமாவின் கருத்துக்கு ‘எதிராக’ சவடால் அடித்திருந்தனர். ஆனால், அவையணைத்துமே வெறும் வெற்றுக் கூச்சல்கள் என்பதைக் கடந்த வாரம் பாராளுமன்றத்தில் நடந்த கூத்துகளில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

பாரதிய ஜனதா, காங்கிரசு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே கொள்கையளவில் தனியார்மயம் தாராளமயம் உலகமயம் உள்ளிட்ட பொருளாதார சீர்திருத்தங்களையும் காட் ஒப்பந்தத்தையும் அதன் ஷரத்துகளையும் முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ள கட்சிகள் தாம்.  அமெரிக்க -இந்தியாவின் அணுசக்தி ஒப்பந்தத்தை ஆதரிக்கிறோம் – கூடங்குளத்தை மாத்திரம் எதிர்க்கிறோம் என்று சொல்வது எப்படி முரண்பாடானதோ அதே போலத் தான் மறுகாலனியாக்கப் பொருளாதாரக் கொள்கைகளை ஏற்றுக் கொண்டே அதை எதிர்ப்பதாகப் பேசுவதும். இவர்கள் கொள்கையளவில் அந்நிய முதலீட்டை ஏற்றுக் கொண்டனர். எனவே பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது என்பது ஒரு சடங்கு தான்.  அது தான் இப்போது நிறைவேறியுள்ளது.

எனினும், இதில் எந்தவிதமான சந்தேகங்களுக்கும் இடம் கொடுக்கக் கூடாது என்பதில் வால்மார்ட் தெளிவாகவே இருந்துள்ளது. வால்மார்ட் இந்தியாவில் நுழைவதற்காக கடந்த 2008-ம் ஆண்டிலிருந்து சுமார் 125 கோடி வரை அமெரிக்க செனேட்டர்கள் மத்தியிலும் அரசுத் துறைகளின் மட்டத்திலும் லாபி செய்ய மட்டும் செலவழித்துள்ளது. இது அதிகாரப்பூர்வமாக அமெரிக்க செனேட்டில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள தொகை. வால்மார்ட்டின் வரலாறையும் பிற அமெரிக்க கார்ப்பரேட்டுகளின் சந்தை வெறியைப் பற்றியும் ஓரளவுக்குத் தெரிந்தவர்கள் கூட அவர்கள் தமது நோக்கங்களை நிறைவேற்றிக் கொள்ள எந்த எல்லைகளுக்குச் செல்வார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

மறுகாலனியாதிக்கம் நமது நாட்டின் மேல் ஒரு பேரிருள் போல மெல்ல மெல்லக் கவிந்து வருகிறது. நாட்டின் இயற்கை வளங்கள்,  தொழில்கள், மனித வளம் என்று சகலமும் ஏகாதிபத்திய நாடுகளின் லாப வேட்டைக்கு இரையாக்கப் படுவதை நமது கண் முன்னே காண்கிறோம். ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகளின் பின்னே செல்வதால் எந்தப் பலனும் இல்லையென்பதையும் அவர்களே நிரூபித்துக் காட்டி விட்டனர். இதற்கு மேலும் மக்கள் இந்த மண் குதிரைகளை நம்பியிராமல் நேரடியாய்த் தாமே தெருவிலிறங்கினால் மட்டுமே நாட்டைக் காக்க முடியும். தேசத்தின் மேல் அக்கறை கொண்டவர்கள் சிந்திக்கட்டும்.

________________________

– தமிழரசன்
_____________________

இந்திய இராணுவம் இன்னொரு பஜ்ரங்தள்!

11

கண்ணை மறைக்கும் காவிப் புழுதி

சிறுபான்மையினர்க்கு எதிரான ஆர்.எஸ்.எஸ்இன் பொய்யும் புரட்டும் – 24

 ”இராணுவம், துணைஇராணுவம், போலீசுத்துறைஆகியவற்றில்முசுலீம்களுக்குஒதுக்கீடுசெய்யவேண்டுமென்றுஅபாயகரமானகோரிக்கைஒன்றுஎழுந்துள்ளது. இராணுவத்தில்மதத்தைவைத்துஒதுக்கீடுசெய்வதுஎன்பதுதேசப்பாதுகாப்புக்குஊறுவிளைவிக்கும்செயலாகும்.

 நாட்டைப்பாதுகாக்கஇந்துமுன்னணிவைக்கும்  கோரிக்கைகளில்ஒன்று.

 ஏதோ இந்தியப் பாதுகாப்புப் படைகளும், போலீசுப் பிரிவுகளும் நடுநிலையாக இருப்பதாகவும், முசுலீம்களுக்கான கோரிக்கையினால் அந்நடுநிலை சீர்குலைவதாகவும் இந்து முன்னணிக் கும்பல் ஓநாயைப் போல் வருந்துகிறது. உண்மையில் பாதுகாப்புப் படைகளின் யோக்கியதை என்ன?

எல்லைப் பாதுகாப்புப் படையின் உளவுப் பிரிவு டி.ஜி. விபூதி நாராயணராய், 1995-ஆம் ஆண்டு ‘வகுப்புக் கலவரங்களில் போலீசின் நடுநிலைமை’ குறித்து ஒரு ஆய்வினை மேற்கொண்டார். எந்தக் கலவரத்தையும் 24 மணி நேரத்திற்குள் அடக்கிவிட முடியும் என்றும், அதற்கு மேல் கலவரம் நீடிப்பது என்பது போலீசும், அரசும் விரும்பினால் மட்டுமே சாத்தியம் என்றும் அந்த அதிகாரி குறிப்பிடுகிறார். ஆக முசுலீம்களுக்கெதிரான கலவரம் வார, மாதக் கணக்கில் நீடிப்பதிலிருந்தே போலீசின் நடுநிலை இலட்சணம் என்ன என்பது தெரிகிறது. அடுத்து இந்துக்கள் மட்டும்  போலீசைத் தமது நண்பர்களாகவும், முசுலீம் – சீக்கிய மக்கள் போலீசைத் தமது வில்லன்களாகவும் கருதுவதாக விபூதி நாராயணன் ராய் குறிப்பிடுகிறார். இப்படி போலீசின் மீது சிறுபான்மை மக்கள் நம்பிக்கை இழக்கிறார்கள் என்பது அரசின் மீதான நம்பிக்கை இழப்புக்கு இட்டுச் செல்லும் என்றும் கூறுகிறார்.

உயர்மட்டத்தைச் சேர்ந்த ஒரு ‘இந்து’ உளவுத்துறை அதிகாரியே போலீசு என்பது இந்துக்களின் காவலன் என்பதை நிரூபித்துவிட்டபோது வேறு என்ன ஆதாரம் வேண்டும்? இந்தியாவின் அதிகார வர்க்கம், நீதித்துறை, இராணுவ – போலீசு நிறுவனங்கள் மற்றும் செய்தி நிறுவனங்கள் அனைத்தும் பார்ப்பனீய இந்துமதத்தை இயல்பாகக் கருத்திலும், செயலிலும் ஆதரிக்கின்றன. அதன்படி இந்துமத வெறியர்களின் சித்தாந்தத்திற்கு நெருக்கமாகவே உள்ளன. இராணுவ – உளவுத்துறைகளின் உயர் பதவிகளுக்கு முசுலீம்கள் வர முடியாது என்பது எழுதப்படாத விதியாகப் பின்பற்றப்படுவதும் இதனால்தான்.

வேறு எந்தக் கட்சியையும் விட அதிகாரிகள் விரும்பிச் சேரும் கட்சியாக பா.ஜ.க.தான் இருக்கிறது. 1949 ஆம் ஆண்டு பாபர் மசூதியில் திருட்டுத்தனமாக வைக்க்பட்ட இராமன் சிலையைப் பாதுகாத்த மாவட்ட நீதிபதி நாயரும், 1987 இல் பூட்டை உடைத்து இராமனைக் கும்பிடத் தீர்ப்பளித்த நீதிபதியும் ஓய்வு பெற்றபின் பா.ஜ.க.வில் சேர்ந்தனர். இவர்கள் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ்., ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பா.ஜ.க.வில் நிரம்பி வழிகின்றனர். முந்தைய ஆர்.எஸ்.எஸ். தலைவர் இராஜேந்திர சிங் உ.பி. மாநில ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு தேசபக்தி பற்றி வகுப்பெடுத்திருக்கிறார்.

எனவே, கடந்த 50 ஆண்டுகளில் நடைபெற்ற மகத்கலவரங்கள் அனைத்திலும் அதிகார வர்க்கம் – போலீசு – இராணுவம் – நீதித்துறை அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். இன் கிளையாகவே செயல்பட்டன என்பது எவரும் மறுக்க முடியாத உண்மையாகும். ’87 மீரட் கலவரம் – ஹஷிம்புரா மலியானா படுகொலையிலும்’, ’89 பகல்பூரிலும்’, ’97 கோவை கலவரத்திலும்’ போலீசு – அரை இராணுவப் படைகள் ஏராளமான முசுலீம் மக்களைக் கொன்றன. ’93 பாபர்மசூதி இடிப்பை’ வேடிக்கை பார்த்த எல்லைப் பாதுகாப்புப் படையினர், பின்பு வழிபாடும் நடத்தினர். ’93 பம்பாய்க் கலவரத்தில்’ முசுலீம்களை வேட்டையாடிய 20 போலீசு அதிகாரிகளை நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குறிப்பிடுகிறார். இன்றுவரை அவர்கள் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை.

இந்துமத வெறியர்கள் உருவாக்க விரும்பும் இந்து ராட்டிரத்துக்கு இப்போதே அடியாட்படை தயாராகிவிட்டதைத்தான் மேற்கண்ட சம்பவங்கள் காட்டுகின்றன. முசுலீம் மக்களுக்கு எதிராக மட்டுமலல தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிரான மேல் சாதி வெறியோடும்தான் போலீசு நிறுவனங்கள் செயல்படுகின்றன. கொடியங்குளம் முதல் ரன்பீர்சேனா படுகொலை புரியும் பீகார் வரை அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. எனினும் போலீசு – இராணுவத்தில் முசுலீமைச் சேர்க்காதே என்ற ஆர்.எஸ்.எஸ். இன் பகிரங்கக் கோரிக்கை மதச்சார்பின்மை கோவணத்தையும் உருவி அரசை அம்மணமாக்குகிறது. இந்துமத வெறியர்களின் இக்கோரிக்கைக்குக் காரணம் என்ன?

பஞ்சாப் பிரச்சினையில், நீல நட்சத்திர நடவடிக்கையை எதிர்த்து இராணுவத்தின் சீக்கிய ரெஜிமெண்ட் கலகம் செய்தது வரலாறு. முசுலீம்களைப் பெருந்திரளாகப் போலீசும் பிரிவுகளில் சேர்த்தால் அவர்களும் கலகம் செய்வார்கள் – அப்பாவி முசுலீம் மக்களைக் கொல்ல மறுப்பார்கள் என்பதே இந்து மதவெறியர்களின் கவலை. இனிமேல்தான் இப்படி நடக்கும் என்பதல்ல. ஏற்கனவே அப்படித்தான் நடந்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக நடந்த ஜம்மு காசுமீர் போலீசின் வேலை நிறுத்தத்தைக் குறிப்பிடலாம். மத்திய அரசின் இராணுவ, துணை இராணுவப் படைகள் காசுமீர் முசுலீம் மக்கள் மீது நடத்திய அடக்குமுறைக்கு உள்ளூர் காசுமீர்  போலீசு உட்னபட மறுத்தது. அதனால் ஏற்பட்ட முரண்பாடு பின்பு பெரும் வேலை நிறுத்தத்திற்கு இட்டுச் சென்றது.

இதையெல்லாம் எதிர்பார்த்துத்தான் இப்படிப் போராட்டம் நடக்கும் மாநிலங்களில் அந்த இன மக்களைக் கொண்ட தனிச்சிறப்பான போலீசுப் பிரிவுகள் – தனிச் சிறப்பான – பயிற்சி அதிக சம்பளத்துடன் உருவாக்கப்படுகின்றன. அதாவது துரோகிகளுக்கான படை உருவாக்கப்படுகிறது. அசாம் ரைபிள்ஸ், காசுமீர் ரைபிள்ஸ் போன்றவை இப்படித்தான் உருவாக்கப்பட்டன. இப்படி அவர்கள் எத்தனை துரோகப் படைகளை உருவாக்கினாலும், படைகளுக்குள் நிச்சயம் முரண்பாடு ஏற்படவே செய்யும்.

ஆனால், இத்தகைய கலகங்கள் மதத்தோடு மட்டும் நின்றுவிடாது. பார்ப்பனிய இந்துமதம் என்பது இன, மொழி, மத, வர்க்க சாதி ஒடுக்கு முறைகளை உள்ளடக்கிறது என்பதால் கலகங்கள் இந்தப் பிரிவுகளுக்குள்ளிருந்தும் எழும். அப்படி எழக்கூடாது என்பதற்காகத்தான் நாட்டின் பல்வேறு பிரச்சனைகளுக்கு வேறு வேறு இன இராணுவப் பிரிவுகள் கவனமாக அனுப்பப்படுகின்றன. மேலும், இந்திய இராணுவத்தின் பல பிரிவுகளும் சாதி ரீதியாகவே உருவாக்கப்பட்டு, இன்றும் பராமரிக்கப்படுகின்றன. மராத்தா, ஜாட், ராஜ்புதன, சீக்கிய, கூர்க்கா ரெஜிமண்டுகள் இத்தகைய அப்பட்டமான சாதியப் பிரிவினையின் உதாரணங்களே. இந்திய ஆளும் வர்க்கத்தின் அடியாட்படையான இராணுவ, துணை இராணுவப் பிரிவுகள் அனைத்தும் தேசிய இன, சாதி ரீதியாகப் பிரித்தாளும் சூழ்ச்சியால்தான் இயங்குகின்றன. அதனால்தான் ஒரு இன மக்கள் போராட்டத்திற்கு, வேற்று இன இராணுவத்தை அனுப்பி தற்போது அடக்கி வருகிறார்கள்.

தமிழகத்து இந்தி எதிர்ப்பை அடக்க கேரளத்தின் மலபார் போலீசு, வடகிழக்கு தேசிய இனப் போராட்டங்களைம் அடக்க மராட்டியத்தின் மராட்டா ரெஜிமெண்ட், காசுமீருக்கு மதராஸ் ரெஜிமண்ட், ஈழத்துக்கு பஞ்சாப் ரெஜிமண்ட் என ஒன்றுக்கு எதிராய் வேறு இனத்தை நிறுத்துகிறார்கள். இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சியும், நாடகமும் எத்தனை நாள் நடத்த முடியும்? விவசாயிகள், தொழிலாளர்கள் போராட்டம் முற்றி வெடிக்கும்போது இராணுவமும் வர்க்க ரீதியாகப் பிளவுபடும். 1942 காலனிய எதிர்ப்புப் போராட்டத்தில் பம்பாயின் கப்பற்படை வீரர்களிடையே தோன்றிய எழுச்சி அதற்கோர் உதாரணம். இன்று இராணுவத்தில் முசுலீமை நம்பாதே, அசாமியனை நம்பாதே, தமிழனை நம்பாதே எனத் தொடங்குவது இறுதியில் சிப்பாயை நம்பாதே என்று முடியும்.

தன் நிழலைத்தவிர யாரையும் நம்ப இயலாத நிலைக்கு ஆளும் வர்க்கமும் அதன் அடிவருடிகளான இந்து மதவெறியாளர்களும் தள்ளப்படுவார்கள். அப்போது உழைக்கும் மக்களும் ‘போலீசை நம்பாதே, இராணுவத்தை நம்பாதே’ என்று கையில் ஆயுதம் ஏந்துவார்கள்.

– தொடரும்

__________இதுவரை____________

காடுவெட்டி குருவை கைது செய் ! வன்னியர் சங்கத்தை தடை செய் !!

23

ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் தடை செய் !
– சென்னையில் தரும்புரி தலித் மக்கள்மீதான வன்னிய சாதிவெறித் தாக்குதலைக் கண்டித்து மனித உரிமைப் பாதுகாப்பு மையம் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் விரிவான செய்தித் தொகுப்பு.

நத்ததிலும், அண்ணா நகரிலும்,
கொண்டாம்பட்டி செங்கல் மேட்டிலும்
அழிச்சிட்டான் அழிச்சிட்டான்
தலித் மக்களின் சொத்துக்களை
,
இரண்டு தலைமுறை உழைப்பை

ஒன்னு விடாம அழிச்சிட்டான் !

பட்டா, சிட்டா, பாட புத்தகம்
கட்டில்
, பீரோ, துணியெல்லாம்
தீ
வச்சு கொளுத்திட்டான் !

கொள்ளை போச்சு கொள்ளை போச்சு
கஷ்டப்பட்டு சேத்து வச்ச
பணமும் நகையும் கொள்ளை போச்சு
!

தமிழக அரசே தமிழக அரசே !
தடை செய் தடை செய்
வன்னியர் சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
உடனடியாக தடை செய் !

கைது செய் சிறையிலடை
சாதி வெறியை தூண்டி வரும்
காடு வெட்டி குருவை
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில்
கைது செய் சிறையிலடை !

மூச்சு விட்டாலும் போஸ்டர் ஒட்டினாலும்
மோப்பமிடும் உளவுத்துறையே
ஊரைக்கொளுத்தி சூறையாடியதை
வேடிக்கை பார்த்த மர்மம் என்ன ?

துணை போனாயே துணை போனாயே
உளவுத்துறையே
, காவல் துறையே
சாதி வெறிக்கு துணை போனாயே !

தாக்குதலை தடுக்காத
தருமபுரி போலீசாரை

கைது செய், டிஸ்மிஸ் செய் !

தஞ்சையிலே வெண்மனி,
மேலவளவு முருகேசன்,
திண்ணியம் கருப்பையா,
விருத்தாசலம் முருகேசன்,
கயர்லாஞ்சி போட்மாங்கே                              

ஆதிக்க சாதி வெறியாட்டத்தால்
எத்தனை இழப்பு எத்தனை இழப்பு
,
எத்தனை கொலைகள் எத்தனை கொலைகள் ?

தமிழக அரசே தமிழக அரசே
தடை செய் தடை செய்
வன்னியர் சங்கம் உள்ளிட்ட
ஆதிக்க சாதி சங்கங்களை
உடனடியாக தடை செய்
!

வை கடந்த 29-ம் தேதி மாலை சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் சென்னை கிளை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்ட முழக்கங்கள். தருமபுரியில் நிகழ்த்தப்பட்ட வன்னிய சாதிவெறியாட்டத்தை கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை உயநீதிமன்ற வழக்குரைஞர்களும், பல்வேறு ஜனநாயக சக்திகளும் நூற்றுக்கணக்கில் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். பாதிக்கப்பட்ட நத்தம் காலனி மக்கள் சம்பவத்தை நேரடியாக விளக்கினர். ம.உ.பா.மையத்தின் உண்மை அறியும் குழுவின் அறிக்கையும் வெளியிடப்பட்டது.

தோழர் மில்டன்
தோழர் மில்டன்

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கிய ம.உ.பா.மையத்தின் சென்னை மாவட்ட செயலாளர் ஜிம்ராஜ் மில்டன்

தாக்குதல் சம்பவத்தை அறிந்த உடனே ம.உ.பா.மை தோழர்கள் களத்திற்கு சென்றதையும் இது திடீர் தாக்குதல் அல்ல பொருளாதார ரீதியாக சேதம் விளைவிக்க வேண்டும் என்பதை நோக்கமாக கொண்டு பொறுமையாக, நிதானமாக திட்டமிட்டு நடத்திய கொள்ளைச் சம்பவம்

என்பதை விரிவாக விளக்கினார்.

தலைமை உரையை அடுத்து பேச வந்த வழக்குரைஞர் அருள் மொழி

இந்த நாடு ஒரு புனித பூமி என்பதற்கோ, அல்லது வல்லரசு ஆவதற்கோ, முன்னேற்றத்தை பற்றி பேசுவதற்கோ எந்த தகுதியும் அற்றது. பேசுவதெல்லாம் பெரிய பேச்சு ஆனால் நடைமுறையில், மனசுக்குள் இருப்பதெல்லாம் கசடு, அழுக்கு, அயோக்கியத்தனம். அதை மறைத்துக்கொண்டு நாகரீக மனிதர்களைப் போல வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள்.

அருள்மொழி
வழக்குறைஞர் அருள்மொழி

படிக்காதவனை விட படித்தவன் தான் அதிகமாக சாதி பார்க்கிறான். ஒவ்வொரு ஆதிக்க சாதியும் நாங்கள் அந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள், இந்த மன்னர் பரம்பரையில் வந்தவர்கள் என்று பெருமைபட்டுக் கொள்கிறார்கள்.

சென்னையிலுள்ள ஓட்டல்களில் வேலை செய்பவர்களில் அரியலூர், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தான் பெரும்பான்மையானவர்களாக இருப்பார்கள். சொந்த ஊரில் ஊரும் சேரியுமாக இருப்பவர்கள் சென்னையில் ஒன்றாக டேபிள் துடைக்கிறார்கள், ஒன்றாக தங்கியிருக்கிறார்கள் இவர்களில் யார் உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி என்று கூற முடியும், அனைவருமே உழைப்பாளிகள் தான்

என்று சாதிவெறியை சாடினார்.

அவரையடுத்து பேசிய சென்னை உயர்நீதி மன்ற வழக்குரைஞர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணகுமார்

எங்களுடைய சங்கம் பல ஆயிரக்கணக்கான வழக்குரைஞர்களை உறுப்பினர்களாக கொண்ட சங்கம் ஆனாலும் நாங்கள் இப்படி ஒரு ஆர்ப்பாட்டத்தை நடத்தாமல், மக்களைப் பற்றி கவலை இல்லாமல் இருக்கிறோம் அது தவறு தான் இனிமேல் செய்ய வேண்டும் என்று கூறியவர். தருமபுரியில் யாருக்கும் யாருக்கும் கல்யாணம் நடந்தது மாட்டுக்கும் மனுசனுக்குமா நடந்தது ? ஆணுக்கும் பெண்ணுக்கும் தானே நடந்தது பிறகு எதுக்கு குதிக்கிறார்கள் ?

சாதி வெறியை தூண்டுவதற்கெல்லாம் சங்கம் வைத்திருக்கிறார்கள். சங்கம் என்பது எதற்காக உருவானது தெரியுமா ? பாதிக்கப்படும் ஒரு பிரிவு மக்கள் நமக்கெல்லாம் பிரச்சினை இருக்கு அதனால நாம் எல்லாம் ஒன்றாக சேருவோம் என்று பாதுகாப்பிற்காகவும், உரிமைக்காகவும் ஒன்று சேருவதற்காக உருவானது தான் சங்கம். ஆனால் காடுவெட்டி குருவும் மற்ற ஆதிக்க சாதிவெறியர்களும் வைத்திருக்கின்ற சங்கங்கள் எதற்காக ? ஆதிக்கம் செய்வதற்காக. எனவே அரசு உடனடியாக இது போன்ற ஆதிக்கசாதி சங்கங்களை எல்லாம் தடை செய்ய வேண்டும்

என்று கூறி தனது உரையை முடித்தார்.

அடுத்ததாக பேசிய தோழர் மதிமாறன்

சாதி என்பது மேலிருந்து கீழாக ஒரு படிநிலை அமைப்பை கொண்டிருக்கிறது. ஒரு தலித் பையன் வன்னியப் பெண்ணையோ, அல்லது வேறு ஒரு ஆதிக்க சாதி பெண்ணையோ திருமணம் செய்யும் போது தான் இவர்களுக்கு பிரச்சினையே வருகிறது, அதுவே வன்னியப்பெண் அல்லது பையன் அந்த சாதிக்கு மேல் நிலையில் உள்ள சாதி பையனையோ பெண்ணையோ திருமணம் செய்தால் நம்ம சாதி என்ன அவங்க சாதி என்ன நமக்கு இதெல்லாம் ஒத்து வருமாம்மா என்று குலைந்து குலைந்து பேசுவார்கள். சாதி அமைப்பு இப்படிப்பட்ட படிநிலையில் தான் இயங்குகிறது.

உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்படுகிறது
உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்படுகிறது

சாதி மறுப்பு திருமணத்திற்கு எதிராக பேசும் எவனாச்சும் தனது சொந்த சாதியை சேர்ந்த பெண்களை இனிமேல் எந்த சொந்த சாதிக்கார ஆணும் சொந்த சாதி பெண்ணை சுரண்டக்கூடாது, வரதட்சனை வாங்கக்கூடாது, இதுவரைக்கும் வாங்குன வரதட்சனையை கூட திருப்பி கொடுத்துடனும் இல்லைன்னா நடவடிக்கை எடுப்போம்னு சொல்லச் சொல்லுங்க பார்ப்போம். அப்படிச் சொன்னா வன்னியனே இவனுங்க வாயில குத்துவான்.

இந்த சாதி வெறியர்களை தண்டிக்க வேண்டுமானால் அவர்கள் கொள்ளையடித்த தலித் மக்களின் சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும். பொருளாதார ரீதியாக அவர்கள் இழக்கும் போது தான் இனி வரும் காலங்களில் இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

சாதி வெறியர்கள் எல்லோரும் இப்போது ஒன்று கூட ஆரம்பித்திருக்கிறார்கள். சாதி மறுப்பு திருமணங்கள் செய்தால் வெட்டிருவேன், கொளுத்திருவேன்னு பேசுறானுங்க. ஆனால் எனக்கு ஒரு நம்பிக்கை இருக்கு. இவனுங்க குடும்பத்தில் இருக்கின்ற பேரக்குழந்தைகள் இவங்களுக்கு தக்க பாடம் கற்பிப்பார்கள் என்கிற ஒரு நம்பிக்கை இருக்கு. அந்த குழந்தைகள் வளர்ந்து பெரியாளாகி காதல் திருமணம் செய்து கொள்ளும் போது அவர்களுடைய தாத்தாக்களிடமிருந்து அவர்களை காப்பாற்றி அவர்களுக்கு தோழர்கள் தான் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக ம.உ.பா.மையத்தின் உண்மை அறியும் குழு அறிக்கை வெளியிடப்பட்டது. அறிக்கையை ம.உ.பா.மை மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு வெளியிட நத்தம் காலனியை சேர்ந்த முருகனும், அகஸ்டினும் பெற்றுக்கொண்டனர்.

அதையடுத்து பேச வந்த மூத்த வழக்குரைஞர் சங்கரசுப்பு

தருமபுரி மாவட்டத்தில் மிகவும் செல்வாக்குடன் இருந்த நகசல்பாரி இயக்கம் சிதறுண்டதால் தான் இன்று இந்த நிலை ஏற்பட்டிருப்பதாக அப்பகுதி மக்கள் கூறுகிறார்கள். அது உண்மை.1970 களில் அந்த பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலத்தை வைத்திருந்த கேசவரெட்டி என்கிற நிலச்சுவாந்தார் ஊரிலுள்ள எல்லா பொம்பளையும் என் பொண்டாட்டி தான் என்று சொன்னான். அந்த கொடுங்கோலன் நக்சல்பாரி இயக்கத்தால் அழித்தொழிக்கப்பட்டான். அதே போல கியூ பிராஞ்ச் போலீசாரால் நிலச்சுவாந்தார்கள் சங்கம் என்கிற பெயரில் ஒரு சங்கம் உருவாக்கப்பட்டு அதற்கு வெள்ளய குண்டன் என்கிற நிலச்சுவாந்தாரை தலைவனாக்கினார்கள். அவனும் நக்சல்பாரி தோழர்களால் அழித்தொழிக்கப்பட்டான். குறிப்பாக ரவுடி ரங்கன் என்பவனுடைய ஆதிக்கமும், அட்டகாசமும் தருமபுரி மாவட்டத்தில் அதிகமாக இருந்தது. அவனுக்கும் இயக்கத்தால் குறிவைக்கப்பட்டது ஆனால் அவன் தப்பி விட்டான்.

இப்படி உழைக்கும் மக்களின் காவலர்களாக இருந்தார்கள் நக்சல்பாரிகள். அவர்களை ஒழித்துக் கட்டுவதற்காக அரசு பல போலி மோதல்களை நடத்தி தோழர்களை கொன்று குவித்தது. இன்று தர்மபுரியில் நக்சல்பாரி இயக்கம் இல்லாமல் போனதன் விளைவுகளை தான் நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோர்
ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்தோர்

இந்த அரசு மக்களுக்கு ஒன்றும் செய்யாது. இது ஒரு செத்துப்போன அரசு. ஐந்து மணி நேரமாக நடந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்த அரசு இது. இன்று வரை ஜெயலலிதா இதற்கு ஒரு சிறு வருத்தத்தை கூட தெரிவிக்கவில்லை. இந்த சம்பவத்துக்கு இந்த அரசு தான் பொறுப்பேற்க வேண்டும். எனவே ஜெயலலிதா தார்மீக ரீதியில் பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்.

சேதமடைந்த சொத்துக்களை பற்றி அரசு அளிக்கும் அறிக்கைகளை எல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது. தேசிய தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆணையம் இதற்கு பொறுப்பேற்று உண்மையான ஆய்வை நடத்தி மக்களுக்கு பழைய நிலையை மீட்டுத் தர வேண்டும் என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக ஆதிக்க சாதிவெறியர்களின் தாக்குதல், கொள்ளையடித்தலை நேரில் பார்த்த நத்தம் காலனியை சேர்ந்த முருகனும், அகஸ்டினும் சம்பவத்தை பற்றி விளக்கினர். அகஸ்டின் எழுப்பிய கேள்விகள் மனிதாபிமானமுள்ள அனைவரையும் பிடித்து உலுக்குவதாக இருந்தது. ஏன் நாங்க வீடு கட்டக்கூடாதா ? நாங்க பைக்கு வாங்க கூடாதா ? நல்ல சட்டை போட்டுக்க கூடாதா ? ஏன் எங்களை மட்டும் வாழ விடமாட்டேங்குறீங்க, நாங்க என்ன பாவம் பன்னினோம் ? என்று கேட்கும் போதே உடைந்து அழுதார். அவருடைய கண்ணீராலும் விம்மலாலும் கூட்டம் குற்றவுணர்வில் அமைதியானது.

அவரையடுத்து தருமபுரி மாவட்ட ம.உ.பா.மையத்தின் செயலாளர் ஜானகிராமன் உரையாற்றினார்.

எல்லா பத்திரிகைக்காரனும், டி.விக்காரனும் இதை சாதிக்கலவரம், சாதிக்கலவரம்னு எழுதுறானுங்க. இரண்டு தரப்பு எதிரெதிராக மோதிக்கொள்வது தான் கலவரம், ஆனால் இங்கே நடந்திருப்பது என்ன ? ஒரு ஆதிக்க தரப்பின் திட்டமிட்ட தாக்குதல் நடந்திருகிறது. எனவே முதலில் இது கலவரமல்ல.

ராமதாசு அடிக்கடி தருமபுரிக்கு வந்து போவார். வன்னியர் சங்க கூட்டமும் அடிக்கடி நடக்கும். முதல்ல ஈழத்தமிழனை பத்தி பேசிப்பார்த்தாரு வேலைக்கு ஆகல, அப்புறம் தமிழ், தமிழன்னு பேசிப்பார்த்தாரு அதுவும் வேலைக்கு ஆகல இப்படி எதுவும் எடுபடாம செல்லாக் காசாகிப்போன ராமதாசு இப்ப சாதியை கையிலெடுத்திருக்கிறார். இது தான் அவருடைய புதிய பாதை, புதிய அரசியல், புதிய நம்பிக்கை.

நக்சல்பாரி என்கிற அந்த வார்த்தை தருமபுரி மாவட்டத்தில் சாதி ஒடுக்குமுறையை தடுத்து நிறுத்திக்கொண்டிருந்தது. இப்போதும் அது விவசாயிகள் விடுதலை முன்னணி போன்ற புரட்சிகர அமைப்புகளால் தடுக்கப்படுகிறது. இல்லை என்றால் அது இன்னமும் அதிகரித்திருக்கும்.

எந்த வன்னியனாவது அரசு அலுவலகங்களில் போய் லஞ்சம் கொடுக்காம நான் வன்னியன் உயர்ந்த சாதி எனக்கு சலுகை கொடுன்னா குடுத்துருவானா, இல்லை உலகமயமாக்கம் சாதி பார்த்து தான் தாக்குமா. மறுகாலனியாக்கத்துக்கு முன்னாடி எல்லோரும் தான் அழியனும்.

ம்க்கள் இப்படி சாதி ரீதியாக பிரிந்து கிடப்பது தான் அரசுக்கும் நல்லது. இல்லைன்னா அவனோட இவன் இவனோட அவன்னு சேர்ந்துக்கிட்டு விலைவாசி உயர்வுக்கெதிராவும், மின்வெட்டுக்கு எதிராவும் போராடுவானுங்க. சாதிவெறி அவர்களை பிரித்து வைத்திருப்பது அரசுக்கு நல்லது தானே. அரசு இந்த தாக்குதலை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததற்கு இதுவும் கூட ஒரு காரணம்.

தமிழகத்தில் சாதி சங்கங்களை தடை செய்தால் தான் மக்களை சாதி வெறியர்களிடமிருந்து மீட்க முடியும். எனவே ஆதிக்க சாதிவெறி சங்கங்கள் அனைத்தையும் உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று கூறி முடித்தார்.

அடுத்ததாக பேசிய பு.ஜ.தொ.மு மாநில பொருளாளர் தோழர் விஜயக்குமார்

திராவிடக்கட்சிகளுக்கும், தேசியக்கட்சிகளுக்கும் மாற்றாக நாம் ஆட்சியை பிடித்துவிடலாம் என்று ராமதாஸ் கனவு கண்டு கொண்டிருக்கிறார். அதுக்கு அவர் கண்டுபிடிச்ச வழி தான் இந்த வீடு கொளுத்துற வேலை.

தோழர் விஜயகுமார்
தோழர் விஜயகுமார்

இவனுங்க எதை மானக்கேடா நினைக்கிறானுங்க. திவ்யா ஒரு மாட்டை கல்யாணம் பண்ணிக்கிட்டா அது மானக்கேடு. நாமெல்லாம் ஆறறிவு கொண்ட மனிதர்களாச்சே நம்ம சாதிப்பொண்ணு திவ்யா போய் ஒரு ஐந்தறிவு கொண்ட மாட்டை கல்யாணம் பண்ணிக்கிச்சே இது மானக்கேடு இல்லையான்னு ராமதாசு தூக்குல கூட தொங்கிடுவாறு. ஏன்னா அவரு மான அவமானமெல்லாம் பாக்கக்கூடியவரு.

ஆனா ஒரு பொண்ணு ஒரு பையனை கல்யாணம் தானே கல்யாணம் பண்ணிக்கிட்டா இதில் என்னடா மானக்கேடு. ஜெயலலிதாகிட்ட செருப்படி வாங்குனப்ப வராத மானக்கேடா, கருணாநிதி காறித்துப்புன்னப்ப வராத மானக்கேடா ? அப்பல்லாம் வராத மானக்கேடு இவனுங்களுக்கு இப்ப மட்டும் வந்துருச்சாம்.

இந்த தாக்குதலில் போலீசின் பங்கு மிக முக்கியமானது. கடந்த இருபத்தி நான்காம் தேதி ஆவடியிலுள்ள டி.ஐ மெட்டல் பார்மிங் என்கிற நிறுவனத்தில் பு.ஜ.தொ.மு தொழிற்சங்கத்திலுள்ள தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 24 ம் தேதி மாலை நாலரை மணிக்கு உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவது என்று முடிவு செய்கிறார்கள். மாலை நாலரை மணிக்கு நடக்கவிருக்கிற போராட்டத்தை மோப்பம் பிடித்துக் கொண்டு காலை எட்டு மணிக்கே ஆலைக்கு அருகில் வந்துவிட்ட உளவுத்துறை போலீசுக்கு தருமபுரியில் மிகப்பெரிய அளவுக்கு ஒரு தாக்குதலை நடத்த திட்டமிட்டிருப்பதை கண்டு பிடிக்க முடியவில்லையாம். இதில் போலீசுக்கும் பங்கு உண்டு.  இது உளவுத்துறையும், தமிழக போலீசும் சேர்ந்து நடத்திய வன்கொடுமை.

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து சாதி மக்களும் தோளோடு தோள் கோர்த்து ஒன்றாக நின்றார்கள், சகோதரர்களாக வாழ்ந்தார்கள். எப்போது ? அங்கே நக்சல்பாரி இயக்கம் இருந்த போது அப்படி வாழ்ந்தார்கள். இன்று அது பின்னடைவுக்குள்ளாகியிருக்கிறது. இது தான் சாதித்திமிர் தலை தூக்க காரணம் என்று பிழைப்புவாத பத்திரிகைகளில் கூட எழுதுகிறார்கள்.

ஆம், நக்சல்பாரி இயக்கம் தான் சாதி வேறுபாடுகளை களைந்து அனைத்து சாதி மக்களையும் உழைக்கும் மக்களாக அணிதிரட்டும், அவர்களுடைய விடுதலைக்கு தலைமை தாங்கும் தகுதி நக்சல்பாரி இயக்கத்துக்கு மட்டும் தான் உண்டு என்கிற வகையில் தமிழர்களாய் அல்ல நக்சல்பாரிகளாய் அணிதிரள்வோம் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன் என்று முடித்தார்.

அடுத்ததாக ம.உ.பா மைய மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜு

கடந்த இரண்டு நாட்களாக மூன்று கிராம மக்களும் காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார்கள். ஏழாம் தேதி காலை ஐம்பது லட்சம் ரூபாய் வீட்டுக்கு சொந்தக்காரராக இருந்த ஒருவர் எட்டாம் தேதி காலை தான் வாழ்ந்த ஊரில், பிறந்த மண்ணில் அகதியாக்கப்பட்டு சுற்றிலும் போலீசு காவல் நிற்க சாப்பிடறதுக்காக தட்ட எடுத்துக்கிட்டு லைன்ல நிக்கிறாரு. இரவு சாப்பாட்டை மதியமே வாங்கி வச்சுக்கனும்.

மூனு வேலைக்கும் சோறு கிடைக்கமாட்டேங்குது. இந்த அரசால் அந்த மக்களுக்கு சோறு கூட போடமுடியவில்லை. இந்த நிலை யாரால் வந்தது ? பூகம்பத்தால் வந்ததா, புயலால் வந்ததா. அங்கு ஒரு திட்டமிடப்பட்ட குற்றம் நடந்திருக்கிறது அதுவும் காவல்துறை கண்ணெதிரே நடந்திருக்கிறது. சென்னையில் நடந்த வங்கி கொள்ளையில் துப்பு துலக்கி வட மாநிலத்தை சேர்ந்தவர்களை திரிபாதி தலைமையில் சுட்டுக்கொன்ற ஜெயலலிதாவின் வளர்ப்பு நாய்கள் தருமபுரியில் என்ன புடுங்கிக்கொண்டிருந்தன? காவல்துறையின் கண்ணெதிரிலேயே ஆறு மணி நேரத்திற்கு தீ வைக்க முடியும் என்றால், கொள்ளையடிக்க முடியும் என்றால் தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சி எங்கே இருக்கிறது,  சமமான அணுகுமுறை எங்கே இருக்கிறது ?

குற்றவாளி ராமதாசு, குற்றவாளி காடுவெட்டி குரு என்று பாதிக்கப்பட்ட மக்கள் வீதிகளில் வந்து சாட்சி சொல்கிறார்கள். வீதிக்கு வருபவர்கள் நீதிமன்றத்தில் வந்து சொல்ல மாட்டார்களா ? எங்கே கைதி, எங்கே விசாரணை, எங்கே கொள்ளையடிக்கப்பட்ட பணம் நகைகள் எல்லாம் ? முடியுமா இந்த அரசால்.

நாலு பேர் கொள்ளையடித்த நகைகளையே கூட கண்டுபிடிக்கமுடியாமல் யாராவது நகைக்கடை வியாபாரியை மிரட்டி வாங்கிட்டு வந்து கண்டுபிடிக்கப்பட்ட நகைகள் என்று ஐ.ஜி, டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி என்று எல்லோரும் நகைகளை மேஜையில் விரித்து வைத்துக்கொண்டு ஊடகங்களை அழைத்து பறிக்கப்பட்ட நகைகளை திருப்பி ஒப்படைக்கிறோம் என்று விழா எடுக்கிறீர்களே இன்று ஏழு கோடிக்கும் மேல் தலித் மக்களுடைய சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது இந்த காவல்துறையால் அதை மீட்க முடியுமா ? கொள்ளையடிக்கப்பட்ட சொத்துக்களை உங்களால் திருப்பி வாங்கித்தர முடியுமா ? இன்றைக்கு சவால் விடுகிறோம் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதித்தால் கூட உங்களால் இந்த ஆதிக்க சாதி வெறியர்களின் மயிரைக்கூட பிடுங்க முடியாது.

நண்பர்களே இது விலைவாசி உயர்வு பிரச்சினை அல்ல, அந்நிய முதலீடு பிரச்சினை அல்ல, அல்லது குடிநீர் பிரச்சினை, மின்வெட்டு பிரச்சினை அல்ல இது மனித குல நாகரீகத்திற்கும் காட்டுமிராண்டுகளுக்குமிடையே நடக்கக்கூடிய போராட்டம்.  இவன் வச்சிருக்க கட்சிக்கு பேரு பாட்டாளி மக்கள் கட்சியாம். தொடப்பக்கட்டைக்கு பட்டுக்குஞ்சம் கட்டுன மாதிரி பாட்டாளிகளை ஒன்றினைய விடாமல் தடுக்கிறவனுக்கு பேரு பாட்டாளி மக்கள் கட்சியாம்.

சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து வந்து தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எல்லாம் ஒரே கல்லூரியில், ஒரே சினிமாவில், ஒரே கடைத்தெருவில், ஒரே திருமணத்தில், ஒரே விழாக்களில் எங்களோடு கலந்துகொண்டவர்கள் சார் அவங்க கூட எங்களை அடிக்க வந்தாங்க சார் என்கிறார்கள் நத்தம் காலனி மக்கள். இது எப்படி முடிந்தது ?

பாட்டாளிகளுக்குள் மோதவிட்டு இரத்தம் குடிக்கக்கூடிய ஓநாய்களாக இராமதாசும், காடுவெட்டி குருவும் இருப்பதால் தான் இது நடந்திருக்கிறது. இதை தட்டிக்கேட்க ஜெயலலிதாவுக்கு மனம் இல்லையா, அதிகாரம் இல்லையா, அல்லது முடியவில்லையா ? அப்படி கேட்டால் ராமதாஸ் திருப்பி கேட்பார் நீ பரமக்குடியில் என்ன செய்தாயோ, தேவர் ஜெயந்தியில் என்ன செய்தாயோ அதை தான் நானும் செய்றேன்னு திருப்பி கேட்பார். கேட்பதற்கும் ஒரு தகுதி வேண்டுமல்லவா ?

அரசுக்கும் இது சாதகமாகிவிட்டது. பரவாயில்ல தமிழகம் முழுவதும் விலைவாசி உயர்வுக்கெதிராகவும், மின்வெட்டிற்கெதிராகவும் போராடக்கூடிய அனைத்து அமைப்புகளும் இன்னைக்கு தர்மபுரி பிரச்சினைக்காக ஆர்ப்பாட்டம் பண்ணிக்கிட்ருக்காங்க, நமக்கும் பிரச்சினை இல்லைன்னு நினைக்கிறாங்க. இந்த பிரச்சினையில் இரண்டு குற்றவாளிகள் இருக்கிறார்கள். ஒன்று அரசாங்கம் இரண்டு பா.ம.க.வும் வன்னியர் சங்கமும். இந்த குற்றவாளிகளை எப்படி தண்டிப்பது ?

அனைத்து பிரச்சினைகளும், கியூ பிராஞ்ச், ஸ்பெஷல் பிராஞ்ச், நக்சலைட் ஒழிப்பு பிரிவு, மாவட்ட அளவிலான மேல் மட்ட அதிகாரிகளிலிருந்து எஸ்.பி முதல், கிருஷ்ணாபுரம் காவல் நிலையத்திலுள்ள காண்ஸ்டபிள் ஏட்டு வரை அனைவருக்கும் தெரியும். அரசுக்கும் இது நேரடியாக தெரியும். தருமபுரியில் என்ன நடக்கிறது, என்ன நடக்கப்போகிறது என்பது டி.ஜி.பி.வரைக்கும் தெரியும் என்று நாங்கள் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறோம். தர்மபுரி தாக்குதலை தெரிந்தும் தடுக்கத்தவறியதும், அதற்கு பொறுப்பும் இந்த மாநிலத்தின் டி.ஜி.பி.க்கு உண்டு என்று நாங்கள் குற்றம் சாட்டுகிறோம்.

நாம் அம்பேத்கர் கருத்துக்களை பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல, பெரியார் கருத்துக்களை பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல, மார்க்சியம் கம்யூனிசம் எல்லாம் பேசுகிறோம் ஆனால் கடைபிடிக்கிறது இல்ல. அதனால வர்ற பிரச்சினை தான் இது.

அப்பு பாலன் இருந்தவரை அங்கு சாதிப் பிரச்சினைகள் தலைதூக்கவில்லை. என்றைக்கு அவர்கள் சிலைகளாக மாறினார்களோ அப்போது அங்கே சாதிக்கலவரம் வந்துவிட்டது. வீட்டுக்கு ஒரு அப்பு பாலன்கள் உருவாக வேண்டிய நிர்பந்த்தத்தை இந்த அரசு நாயக்கன்கொட்டாய்க்கு ஏற்படுத்தியிருக்கிறது. இது தான் தருமபுரியில் நாங்கள் கண்டறிந்த உண்மை. ’இதற்கு மட்டும் சரியான தீர்வு கிடைக்கவில்லை என்றால் நாங்கள் சும்மா இருக்க மாட்டோம்’ என்கிறார்கள் அங்குள்ள இளைஞர்கள்.

போலிஸ்காரனும் அதிகாரிகளும் கேட்கிறாங்களாம் எதுக்கு இவ்வளவு பெரிய வீடு கட்டுன, உன்னை யாரு பல்சர் வாங்கச் சொன்னது, உன்னை யாரு ஏ.சி வாங்கச்சொன்னது, உன்னை யாரு பிரிட்ஜ் வாங்கச்சொன்னது, உன்னை யாரு கட்டில் வாங்கச் சொன்னது, உன்னை யாரு பீரோ வாங்கச் சொன்னதுன்னு கேட்கிறானுங்களாம். இனிமேல் எந்த அதிகாரியாவது உங்க கிட்ட அப்படி கேட்டால், இங்கு வந்திருக்கும் முருகன், அகஸ்டின் போன்ற இளைஞர்களே உங்கள் ஊருக்கு போய் சொல்லுங்கள், நாங்களும் உங்களோடு வருகிறோம். அப்படி கேட்கும் அதிகாரிகளை  ஊரிலேயே புடிச்சி கட்டி வைங்க. யார் வாங்கச்சொன்னது என்பதை முடிவு செய்வோம், நாம் எப்படி வாழ வேண்டும் என்பதை சொல்ல எவனுக்கும் அதிகாரம் கிடையாது என்பதையும் அவர்களுக்கு புரியவைப்போம்.

அந்த மக்களுடைய வீடுகள் எல்லாம் உருகுலைந்த நிலையில் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு வீடும் பாழடைந்த வீடுகளைப் போல அரைகுறையாக இடிந்த நிலையில் நிற்கின்றன. ஒவ்வொரு நாளும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வந்து போகிறார்கள். இவங்களாவது ஏதாவது செய்யமாட்டாங்களான்னு மரத்து போன முகங்களுடன் அனைவரிடமும் வீட்டிற்கு அருகிலேயே நின்று கொண்டு இது தாங்க வீடு, இத பாருங்க, இது தாங்க வீடு, இத பாருங்க என்று காலை முதல் மாலை வரை சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். உள்ளே நுழைவதற்கே குற்ற உணர்வாக இருக்கிறது. இந்த மக்களுக்கு என்ன தீர்வை நம்மால் தர முடியும், என்ன நீதியை நம்மால் பெற்றுத்தர முடியும் ?

இந்த பிரச்சினைக்கு மற்ற பிரச்சினைகளுக்கு நடப்பதை போல அடையாளமாக நடத்தப்படும் போராட்டங்களால் தீர்வு வரப்போவதில்லை. எண்ணற்ற தலித் அமைப்புகள், சென்னை முழுவதும் போஸ்டர்கள். இந்த பிரச்சினைக்காக போஸ்டர் ஒட்டாத தலித் அமைப்புகளே இல்லை. தங்களுடைய அமைப்பு இந்த பிரச்சினைக்கு செய்ய வேண்டும் என்று செய்கிறார்கள் ஆனால் அவர்களுடைய செயல்பாடுகள், கோரிக்கைகள் அனைத்தும் வரம்புக்குட்பட்டது.

ராமதாசு, கொங்கு வேளாள கவுண்டர்கள் சங்கம் என்று ஆதிக்க சாதிவெறியர்கள் எல்லாம் இப்போது ஒன்று கூடி பேசுகிறார்கள். வன்கொடுமை சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறதாம். சாதி மறுப்புத் திருமணத்திற்கு எதிராக மாநாடு நடத்துகிறார்கள். சாதிவெறியை தூண்டும் இவர்களை ஏன் இந்த அரசு கைது செய்யக்கூடாது ?

கூடங்குளத்தில் சாதாரன பெண்கள் மீது நூற்றுகணக்கில் வழக்குகளை போட்டு குண்டர் சட்டத்தில் வைத்திருக்கும் அரசு, கடல் பாசிகளை எடுத்து விற்கும் எழுபது வயது முதியவரைக் கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யும் அரசாங்கத்திற்கு ஏன் காடுவெட்டி குருவையும், ராமதாசையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய துணிச்சல் இல்லை, என்ன பயம் ? அது தான் ஆதிக்க சாதி உணர்வு. அவர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருக்கிறது. எனவே நாம் சாதி இந்துக்களிடம் பேச வேண்டும்.

பி.ஜே.பி. எப்படி முசுலீம்களுக்கு எதிரான கலவரங்களைத் தூண்டி ஆட்சியை கைப்பற்ற துடிக்கிறதோ அப்படி தலித் மக்களுக்கு எதிராக ஒரு கலவரத்தை நடத்தி ஆதிக்கசாதிகள் எல்லாம் அதிகாரத்திற்கு வரத்துடிக்கிறார்கள் அல்லது அதிகாரத்தை தங்கள் கைகளில் வைத்திருக்க நினைக்கிறார்கள். இதனால் தலித் மக்கள் மட்டும் பாதிக்கப்படப் போவதில்லை. ஜனநாயகத்திற்காக பேசக்கூடியவர்கள், உரிமைகளுக்காக பேசக்கூடியவர்கள், புரட்சிக்காக பேசக்கூடியவர்கள், தான் உண்டு தன் வேலை உண்டு என்று நேர்மையாக வாழக்கூடிய அனைவரும் தான் பாதிக்கப்படுவார்கள். இது சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள புற்று நோய். இதற்கு அறுவை சிகிச்சை செய்தே தீர வேண்டும். முடியாதா ? முடியும், நாம் வீதிகளில் இறங்கி மக்களிடம் வேலை செய்தால் முடியும்.

பா.ம.க. முன் நின்று நடத்திய கண்ணகி-முருகேசன் கொலை வழக்கில் இழுத்துக்கிட்டே போய் சமாதானம் பன்றது தான் அரசாங்கம். கொலைக்கே அப்படின்னா தர்மபுரி பிரச்சினைலையும் விசாரிக்கிறேன் விசாரிக்கிறேன்னு நாலஞ்சு வருசம் சார்ஜ் ஷீட் போட்டு, அப்புறம் சி.பி.சி.ஐ.டி விசாரிச்சி சி.பி.ஐ விசாரிச்சி. அஞ்சு பேர் கொள்ளையடிச்சதையே கண்டுபிடிக்க முடியாத போலீசு ஐநூறு பேரை விசாரிச்சு கண்டுபிடிக்கப்போறானா. ஒவ்வொருத்தனையா நிக்க வச்சு அடையாளம் காட்டி சாட்சி சொல்லி அப்புறம் கீழ்கோர்ட்ல தண்டனை கொடுத்து உடனே மேல் கோர்ட்ல பெயில் வாங்கி அப்புறம் சுப்ரீம் கோர்ட்ல கேஸ் முடிஞ்சு போயிரும் அவ்வளவு தான். அப்புறம் அனைவரும் மறந்துவிடுவார்கள். இது தான் இவர்களுடைய திட்டம்.

நாங்கள் இன்னொரு சந்தேகத்தையும் ஆணித்தரமாக முன் வைக்கிறோம். இந்த தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டிருக்கிறது. இதற்கு பின்னால் அதிகார வர்க்கத்தின் உயர்பதவிகளில் உள்ள வன்னிய சாதியை சேர்ந்தவர்கள் மூளையாக செயல்பட்டிருக்க வாய்ப்பு உண்டு. ஏனென்றால் உணர்சிவசப்பட்ட ஒரு கும்பல் என்ன செய்யும், கையில் கிடைப்பதையெல்லாம் எடுத்து அடிக்கும், தாக்கும். அவ்ர்கள் நினைத்திருந்தால் ஐம்பது பேரைக்கூட கொன்றிருக்க முடியும். ஒரு சில வீடுகளில் குழந்தைகளையும் பெண்களைளையும் வைத்து பூட்டியிருக்கிறார்கள், ஆனால் யார் மீதும் ஒரு சின்ன அடி கூட விழவில்லை. எனவே தெளிவாக ஒரு முடிவை எடுத்து ஆளுக்கு எந்த சேதாரமும் வரக்கூடாது என்று திட்டமிட்டு ஊரை கொள்ளையடித்திருக்கிறார்கள்.

குருவி சேர்ப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் சேர்த்து வைத்த பணங்களையும், நகைகளையும் திருடிக்கொண்டார்கள். அதையெல்லாம் மொத்தமாக சேர்த்தால் பா.ம.க ஒரு ஓட்டுக்கு ஐயாயிரம் கொடுத்து தருமபுரியில் ஜெயிக்க முடியும். அல்லது சுப்ரீம் கோர்டில் பல ஆண்டுகளுக்கு வழக்கு நடத்த முடியும். அல்லது கொள்ளையடித்தவர்களை எல்லாம் ’தியாகி’களாக்கி அவர்களுக்கு சாகும் வரை பென்ஷன் தொகை கொடுக்க முடியும்.

தோழர் ராஜு
தோழர் ராஜு

இப்போதைக்கு நமக்கு அரசு தான் குற்றவாளி. குற்றவாளிகளை இந்த அரசு என்ன செய்தது, பாதிக்கப்பட்ட மக்களுக்கு என்ன நிவாரணம் வழங்கப்பட்டது ? நாங்கள் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் சார்பில் கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த பிரச்சினையில் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று. போலீசின் வேலை கிரைமை விசாரிப்பது மட்டும் தான். அதாவது கொள்ளையடிக்கப்பட்டது, வீடுகள் கொழுத்தப்பட்டது அதற்கு என்ன தண்டனை அத்தோடு போலீசின் வேலை முடிந்துவிட்டது.

தாக்குதலில் ஈடுபட்டவர்களின் நோக்கம், பின்னணி, இதில் யார் என்ன நோக்கத்திற்காக செயல்பட்டார்கள், எதிர்காலத்தில் இது போல நடைபெறாமல் இருக்க என்ன மாதிரியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதை பற்றியெல்லாம் முழுமையாக விசாரிக்க வேண்டும். இந்த சம்பவத்தில் மாநிலத்தின் பெரிய சாதிக்கட்சி தலைவர் ராமதாஸ், காடுவெட்டி குரு போன்றோர் முன் நின்று செயல்பட்டிருக்கின்றனர் என்கிற போது ஒரு ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதியின் தலைமையிலான விசாரணை கமிஷன் தான் இந்த தாக்குதலை பற்றி முழுமையாக விசாரித்து, இது யாருடைய மூளையில் யாருடைய நலன்களுக்காக செய்யப்பட்டது என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடியும்.

மும்பை கலவரத்தில் சிறீ கிருஷ்ணா கமிஷன் பால்தாக்ரேவை குற்றவாளி என்று அறிவித்தது. சதாசிவம் கமிஷன் அதிரடிப்படையின் அட்டூழியங்களை பட்டியலிட்டு ஐந்து கோடி ரூபாய் இழப்பீட்டை வழங்க வேண்டும் என்று அறிவித்தது. அதைப் போல இழப்பீடுகளை முடிவு செய்ய இந்த கலவரத்தினுடைய பயணாளி யார், யாருக்காக இந்த தாழ்த்தப்பட்ட மக்கள் அடித்து நொறுக்கப்பட்டார்கள், எது சாதாரண மனிதனை கூட கொள்ளையில் ஈடுபட தூண்டியது உள்ளிட்ட அனைத்தையும் முழுமையாக விசாரிக்க வேண்டும். அதை ஒரு தலைமை நீதிபதியின் கீழ் அமைக்கப்பட்ட குழு தான் செய்ய வேண்டும் என்று கோரியுள்ளோம்.

அதே நேரத்தில் சி.பி.ஐ யும் ஒரு போஸ்ட் பாக்ஸ்தான். போலீசு கூட பரவாயில்லைன்னு சொல்ற அளவுக்கு சி.பி.ஐ ரொம்ப மட்டம். வழக்கறிஞர் சங்கர சுப்பு மகன் கொலை வழக்கில் அவரே பிளாடால் அறுத்துக்கொண்டு இறந்துட்டதா கேசை முடிச்சிட்டானுங்க. ஹைகோர்ட்ல வழக்கு நடந்த போது ஜட்ஜ் கேட்ட கேள்விக்கு சி.பி.ஐ வழகறிஞரால பதில் சொல்ல முடியல. சி.பி.ஐ அப்படித்தான் இருக்கிறது.

நிலப்பிரச்சினையில வீரபாண்டி ஆறுமுகத்தை ஆறுமாதம் சிறையிலடைத்த இந்த அரசாங்கத்துக்கு ஒரு நிலத்தையே அழித்த ராமதாசையும், காடுவெட்டி குருவையும் ரெண்டு மாசம் தூக்கி உள்ள வச்சா என்ன ஆதரவு கொறைஞ்சிறப்போவுது. இவனுங்களை புடிச்சு உள்ள போட்டா தலித் மக்கள் எல்லாம் உங்கள் பின்னால் அணிதிரளுவார்களே. ஏன் அச்சம் ? எனினும் அச்சப்படுகிறார்கள்

வன்னியர் சங்கத்தை தடை செய் என்று நாம் பிரசுரத்தை கொடுத்த உடன் அ.தி.மு.க வழக்கறிஞர், தி.மு.க வழக்கறிஞர், ம.தி.மு.க வழக்கறிஞர் எல்லோரும் ஒன்று சேர்ந்து கொண்டு அதெப்படி அப்படி சொல்லலாம் என்கிறார்கள்.

அதை நாங்கள் சொல்வதால் தான் வாதிடுகிறார்கள். ஏனென்றால் அதை சொல்லுகின்ற தகுதியும், ஆற்றலும், அறிவும் மனித உரிமைப் பாதுகாப்பு மையத்திற்கு இருக்கிறது. இவர்கள் சொன்னால் இறுதி வரை பின்வாங்க மாட்டார்கள். உறுதியாக நிற்பார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் மிரட்டினால் பயந்து கொண்டு ஓடுவதற்கு நாங்கள் ஒன்றும் பிழைப்புவாதிகள் அல்ல. நாங்கள் ஆதாயத்திற்காக யாருடனாவது கூட்டு சேர்வதற்காக காலம் பார்த்துக்கொண்டிருப்பவர்களும் அல்ல.

கருணாநிதி உயர்நீதி மன்றத்திற்கு வந்த போது வெறும் ஆறே ஆறு பேர் வழக்கறிஞர்களை அடித்து நொறுக்கிய காவல் துறைக்கு எதிராக கருணாநிதிக்கு கருப்புக்கொடி காட்டிய போது தி.மு.க வழக்கறிஞர்கள் எல்லாம் சூழ்ந்துகொண்டு கடுமையாக தாக்கிய போதும் போலீசை எதிர்த்து முழக்கமிட்டனர். கருணாநிதி மறுநாள் எங்கே கருப்புக் கொடி காட்டலாம், எங்கே காட்டக்கூடாது, சொல்லிட்டு காட்டனுமா, சொல்லாம காட்டனுமான்னு ஒன்றரை பக்கத்திற்கு சட்டமன்றத்தில் விளக்கம் கொடுத்தார்.

அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் உங்களை பார்க்க ஜெயலலிதாவை நாங்கள் அழைத்து வருகிறோம் நீங்கள் போய் மருத்துவமனையில் படுத்துக்கொள்ளுங்கள் என்று எங்களிடம் பேசினார்கள். நாங்கள் இதை ஜெயலலிதாவுக்காக செய்யவில்லை, வழக்கறிஞர்களின் உரிமைக்காக செய்தோம் என்று கூறி ஜெயலலிதாவை சந்திக்க மறுத்துவிட்டோம். நாங்கள் அன்று மருத்துவமனையில் படுத்திருந்தால் அரசு வழக்கறிஞராகவோ, வாரியத்தலைவராகவோ ஏதோ ஒரு பதவிக்கு சென்றிருக்க முடியும். அதற்கு அ.தி.மு.க வில் வாய்ப்புண்டு ஆனால் நாங்கள் சாதாரண மக்களுக்காக எத்தகைய அடக்குமுறைகளையும் எதிர்கொள்ளக்கூடிய துணிவோடும், ஆற்றலோடும் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட அரசு எப்படி சாதிவெறியர்கள் மீது கை வைக்கும். வைக்காது. சாதி வெறியர்களையும் அவர்களுடைய சங்கங்களையும் ஒழித்துக்கட்ட வேண்டுமானால் தர்மபுரி மாவட்டத்தில் மீண்டும் நக்சல்பாரிகள் பிறக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிலிருந்தும்  மீண்டும் அப்பு, பாலன்கள் பிறக்க வேண்டும். என்று கூறி தனது கண்டன உரையை நிறைவு செய்தார்.

மூத்த வழக்குரைஞர் என்.ஜி.ஆர் பிரசாத் உடல்நிலை சரியில்லாததாலும், பேரா.கருணானந்தம் வெளியூர் சென்று திரும்ப முடியாத காரணத்தாலும் பங்கேற்க முடியவில்லை என்று தகவல் அனுப்பியிருந்தனர்.

ஆதிக்க சாதிவெறியர்களுக்கு எதிராக வடிக்கப்பட்ட முழக்கங்கள் சாலைகளில் கடந்து செல்லக்கூடியவர்களை சற்று நேரம் நின்று கவனிக்க வைக்கும் விதத்தில் இருந்தது. நானூறு பேருக்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டம் சாதி ஆதிக்க வெறியர்களிடமிருந்து தமிழக உழைக்கும் மக்களை மீட்டெடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை அனைவருக்கும் உணர்த்தியது.

________________________

– வினவு செய்தியாளர்
___________________________

வளர்ச்சியின் வன்முறை!

1
சென்னை அசோக் நகர் குடிசை தீவிபத்து
சென்னை அசோக் நகரையொட்டி அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் ஏற்பட்ட திடீர் தீ ‘விபத்தில்’ 500க்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து போன அவலம்

சென்னையிலுள்ள கிரீம்ஸ் சாலைக்கு அருகே அமைந்துள்ள மர்கீஸ் கார்டன்  பகுதியில், கடந்த ஜூன் 26 அன்று 70 குடிசை வீடுகளும்; ஜூலை-2 அன்று 45 வீடுகளும்; எஞ்சியிருந்த குடிசைகள் ஜூலை 11 அன்றும் எனத் தவணை முறையில், சுமார் ஒரு மாத காலத்திற்குள் ஒன்றன் பின் ஒன்றாக ஏற்பட்ட தீ விபத்தில் அங்கிருந்த 130 குடிசைகளும் எரிந்து சாம்பலாகின. இப்பகுதியினை அடுத்து, ஜூலை 29 அன்று சென்னை – அசோக் நகரையொட்டி அமைந்துள்ள அம்பேத்கர் நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் 500-க்கும் மேற்பட்ட குடிசைகள் தீக்கிரையாகின. இதனைத் தொடர்ந்து பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் குடிசைப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடிசைகள் எரிந்து சாம்பலானது மட்டுமின்றி, உடல்கருகி ஒருவர் இறந்தும் போனார்.

கூவம் கரையில் கட்டப்பட்டு வரும் அதிவேக நெடுஞ்சாலைப் பணியை காரணம் காட்டி, மர்கீஸ் கார்டன் பகுதி மக்களையும்; மெட்ரோ ரயில் பணியைக் காரணம் காட்டி அம்பேத்கர் நகர் பகுதி மக்களையும் அவ்விடத்தைக் காலிசெய்துவிட்டு கிளம்புமாறு அதிகாரிகளும், அமைச்சர்களும் அவர்களின் அல்லக்கைகளான உள்ளூர் கரைவேட்டிகளும்  இப்பகுதி மக்களை  தொடர்ந்து மிரட்டி வந்ததோடு, நகருக்கு வெளியே செம்மஞ்சேரியில் மாற்று இடம் தருவதாகவும் நைச்சியமாகப் பேசிவந்தனர். இந்த நிலையில் இப்பகுதிகளில் நடைபெற்றுள்ள இத்தீவிபத்துக்களைத் திடீர் தீவிபத்துக்கள் என அவ்வளவு சாதாரணமாக ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. எனினும், இவற்றைத் தற்செயலான தீ விபத்துகள்தான் என்று கூறி வழக்கை முடித்துவிட்டன, போலீசும் தீயணைப்புத்துறையும்.

இப்படிபட்ட மர்மமான தீவிபத்துகளில் சிக்கித் தமது குடிசைகளையும், உடைமைகளையும் பறிகொடுத்துவிட்டு நிராதராவாய் நடுத்தெருவில் நிற்கும் அம்மக்களுக்கு பெயரளவிலான நிவாரணங்களையும் இழப்பீடுகளையும் வழங்கக்கூட, அரசு இப்பொழுதெல்லாம் முன்வருவதில்லை. மாறாக, அப்பகுதிகளில் இருந்து அவர்களைக் காலி செய்து, புறநகர்ப் பகுதிகளுக்குத் துரத்தியடிப்பதில்தான் குறியாக இருக்கிறது.

மர்கீஸ் கார்டன் தீ விபத்து நடந்தவுடன், ஜூனியர் விகடன் இதழுக்குப் பேட்டியளித்த சென்னை மாநகரத் ‘தந்தை’ சைதை சா.துரைசாமி,  “இந்த மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் வெள்ளம் பெருகி சிரமப்படுகிறார்கள். இப்போது அடிக்கடி தீ விபத்தும் ஏற்படுகிறது… அவர்களுடைய ஆரோக்கியத்துக்காகவும் நலனுக்காகவுமே செம்மஞ்சேரிக்குக் குடிபெயரச்சொல்கிறோம்…. இவர்கள் செம்மஞ்சேரியிலிருந்து நகருக்குள் வந்து போவதற்கு இலவச பஸ் பாஸ் வேண்டுமானால் ஏற்பாடு செய்யலாம்” (ஜூ.வி, ஜூலை-25) எனக் கூறியிருக்கிறார். இம்மக்களின்பால் அரசு கொண்டிருக்கும் ‘நல்லெண்ணத்தை’ இந்த பேட்டி ஒன்றே புரிய வைத்துவிடும்.

இவ்வாறு அடிக்கடி குடிசைகள் எரிந்து சாம்பலாகும் சம்பவங்கள் சென்னைக்குப் புதிய தொன்றும் அல்ல. மாநகர வளர்ச்சித் திட்டங்களும், சென்னையை அழகுபடுத்தும் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்ட நாளிலிருந்தே சென்னை நகரில் குடிசைப் பகுதிகள் எரியத் தொடங்கிவிட்டன. வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த பி.எஸ். மூர்த்தி நகர், பி.கே.புரம், புதுநகர், சேத்துப்பட்டு ஷெனாய் நகர் அவ்வைபுரம், நந்தம்பாக்கம் எம்.ஜி.ஆர். நகர் மற்றும் எம்.ஜி.ஆர்.நகர் விரிவு, கொருக்குப்பேட்டை ஜே.ஜே.நகர், மர்கீஸ் கார்டன் மற்றும் அம்பேத்கர் நகர் குடிசைகள் எனக் கடந்த பத்தாண்டுகளில் எரிந்துபோன குடிசைப் பகுதிகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம்.

வியாசர்பாடி-பேசின்பிரிட்ஜ் சாலையை அகலப்படுத்துதல்; வியாசர்பாடி மேம்பாலம்; அடையாறு ஆற்றின் மேலும் அதன் கரையை ஒட்டியும் அமைக்கப்படும் மலர் மருத்துவமனை தொடங்கி போரூர் நந்தம்பாக்கம் பாலம் வரையிலான அதிவேக நெடுஞ்சாலை; சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரையில் கூவம் நதிக்கு மேலாகச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலை; எண்ணூர்-பேசின் பிரிட்ஜ் – வால்டாக்ஸ் ரோடு வழியாக பக்கிங்காம் கால்வாய் மீது அமைக்கப்படும் அதிவேக நெடுஞ்சாலை; பறக்கும் ரயில்பாதைக்கு இணையான சாலை, மெட்ரோ ரயில் என ‘சிங்காரச் சென்னை’ யின் கனவுத் திட்டங்கள் நடைபெறும் இடங்களில் இருந்த குடிசைகளெல்லாம் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன அல்லது மர்மமான முறையில் எரிந்து போயுள்ளன.  உலக வங்கி அளித்துள்ள தமிழ்நாடு நகர வளர்ச்சித் திட்டம்-2, 2005 என்ற ஆவறிக்கை, சென்னையிலுள்ள 122 குடிசைப் பகுதிகளை அப்புறப்படுத்த வேண்டுமென தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்கியிருப்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

குடிசைப்பகுதிகள் அப்புறப்படுத்தப்படுவதென்பது, ‘சர்வதேச தரம் வாய்ந்த சிங்கார சென்னை’ என்ற கனவுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்குரிய அவசியமான நடவடிக்கை என்பதாக ஆளும் வர்க்கம் சித்தரிக்கிறது. நடுத்தர வர்க்கமும் மகுடிக்குத் தலையாட்டும் பாம்பு போல இக்கருத்தை தீவிரமாக ஆதரிக்கிறது. ஒரு தெருவிலிருந்து மற்றோர் தெருவிற்கு வீட்டை மாற்றிக் கொள்வதைப் போன்றதல்ல இந்த இடப்பெயர்வு.  நகர்ப்புற குடிசைப் பகுதிகளில் வாழ்ந்து வரும் உழைக்கும் மக்கள், சென்னை நகரத்திலிருந்து 30 – 40 கி.மீ. தொலைவுக்கு அப்பால் உள்ள செம்மஞ்சேரி, கண்ணகி நகர், ஒக்கியம், கார்கில் நகர், எர்ணாவூர், நல்லூர், கன்னடபாளையம் போன்ற இடங்களுக்கு விரட்டியடிக்கப்படுகின்றனர்.  இதனை அம்மக்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் நடவடிக்கையாக இவர்கள் பார்ப்பதில்லை.

நகர், நகர் என்று அழைப்பதால், இவைகளெல்லாம் சென்னையின் அண்ணாநகர், பெசன்ட் நகர் போன்ற ‘தரமான’ நகர்களில்லை. சென்னை நகருக்குள் சேரும் குப்பைகளைக் கொட்ட பள்ளிக்கரணை மற்றும் கொடுங்கையூரில் திறந்தவெளிக் குப்பைக் கிடங்குகளை அரசு வைத்திருப்பது போல, நகரிலிருந்து அப்புறப்படுத்தப்படும் ஏழை மக்களை நகருக்கு வெளியே கொண்டுபோய்க் கொட்டுவதற்கென்றே உருவாக்கப்பட்ட குப்பை கிடங்கை போன்றதுதான் செம்மஞ்சேரியும், மற்ற நகர்களும்!

செம்மஞ்சேரியில் கட்டப்பட்டுள்ள கான்கிரீட் வீடுகளை, 160 சதுர அடியில் கட்டப்பட்ட கான்கிரீட் பொந்துகள் என்றுதான் சொல்ல முடியும்.  சாலை வசதி, குடிநீர் வசதி, பள்ளிக்கூட வசதி என மக்கள் வாழ்வதற்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே செம்மஞ்சேரியில் கிடையாது. சிறுமழைக்கே வீடுகளின் முன்பு குளம் போல் தேங்கிக் கிடக்கிறது, கழிவுநீருடன் கலந்த மழைநீர். இச்சுகாதாரமற்ற சூழலிலும் பாம்புகள் படையெடுக்கும் ஆபத்திற்கு மத்தியிலும் அங்கு குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

செம்மஞ்சேரியில் அரசு இரண்டு ‘வசதிகளை’ அக்கறையோடு ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஒன்று டாஸ்மாக் சாராயக் கடை. மற்றொன்று போலீசு நிலையம். அரைமணி நேரத்திற்கு ஒரு முறை ரோந்து வந்து இக்குடியிருப்பை கண்காணிக்கிறது, போலீசு. “இருவருக்கு மேல் கூடி நின்று பேசக்கூடாது; இரவு 10 மணிக்கு மேல் எவரும் நடமாடக்கூடாது” என்பது போன்ற போலீசின் வாய்மொழி உத்திரவுகளே இங்கே சட்டமாக்கப்பட்டிருக்கின்றன. இவை மட்டுமின்றி, மழிக்காத முகத்தையோ, ஒழுங்காக வாராத தலையையோ கண்டால் அவரைக் குற்றவாளியாக்குவது; எவரையும் சந்தேகக் கேசு எனத் தள்ளிக்கொண்டு போய், விடிய விடிய போலீசு நிலையத்தில் அடைப்பது; அவர்களின் கைரேகை மற்றும் விழிரேகையைப் பதிவு செய்து பீதியூட்டுவது என எந்நேரமும் போலீசின் கண்காணிப்பிலேயே இறுத்தப்பட்டிருக்கும் வதைமுகாமாகவே உள்ளது செம்மஞ்சேரி.

சென்னை நகரத்தில் நிலவும் இரண்டு மணி நேர மின்வெட்டைக்கூடச் சகித்துக்கொள்ள முடியாமல் புலம்பும் நடுத்தர வர்க்கத்திற்கு, செம்மஞ்சேரியில் உள்ள 7000 குடியிருப்புகளில் 5000-க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின் இணைப்பே இல்லை என்ற உண்மையும்; நகரத்திலிருந்து செம்மஞ்சேரிக்கு விசிறி எறியப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள், தமது படிப்பைத் தொடரப் போதுமான பள்ளிக்கூட வசதி குடியிருப்புக்கு அருகிலேயே ஏற்படுத்தித் தரப்படாததால், படிப்பைக் கைவிட்டுக் குழந்தைத் தொழிலாளர்களாகப் போக வேண்டிய அவல நிலையை எதிர்கொண்டுள்ளனர் என்பதும் தெரியுமா? தெரிந்தாலும், அவர்களுக்கு உரைக்குமா?

நகரத்திலிருந்து விரட்டப்பட்டு, செம்மஞ்சேரியில் குடியமர்த்தப்பட்டவர்களுள் பெரும்பாலோர் கொத்துவேலை, வீட்டு வேலை, பெயிண்டிங் வேலை போன்ற தொழில்களில் ஈடுபடும் உதிரித் தொழிலாளர்கள்.  இவர்களது பிழைப்பு நகரத்தைச் சார்ந்ததாக இருக்கிறது.  இக்கூலித் தொழிலாளர்கள் செம்மஞ்சேரியிலிருந்து கிட்டதட்ட இரண்டு மணி நேரம் பேருந்து பயணம் செய்தால்தான் நகரத்திற்கு போய்ச்சேர முடியும்.  அவர்கள் காலையில் எட்டு மணிக்குள்ளாக நகரிலுள்ள குறிப்பிட்ட மையங்களுக்குச் சென்றால்தான், வேலை தரும் தரகர்களை அணுகி அன்றைய பிழைப்பைப் பெறமுடியும். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு வேலை நடக்குமிடத்திற்குச் செல்ல வேண்டும்  எனவே, அதிகாலையே வீட்டைவிட்டுக் கிளம்பியாக வேண்டும்; பேருந்துக்கான கட்டணம், டீ, பீடிச் செலவுக்கு எனக் கையில்  நூறு ரூபா வைத்துக்கொள்ள வேண்டும்; தாமதமாகச் செல்ல நேரிட்டாலோ, அல்லது வேலையில்லையென்றாலோ, பேருந்துக்குக் கொடுத்த காசு அரசுக்குப் போட்ட வாய்க்கரிசி என்றெண்ணி வந்த வழி திரும்புவதைத் தவிர வேறுவழியில்லை.

தினமும் இவ்வாறு வேலைதேடிச் செல்வதில்  உள்ள சிக்கல்; பயணச்செலவு; தொடர்ச்சியாக வேலை கிடைப்பதில் ஏற்படும் இடர்ப்பாடுகள் ஆகியவற்றின் காரணமாக, வடமாநில மற்றும் வெளிமாவட்டத் தொழிலாளர்களைப் போலவே, இவர்களும் வேலைநடக்கும் இடங்களிலே நான்கைந்து நாட்கள் தங்கி வேலைசெய்துவிட்டு, பின்னர் வீடு திரும்பும் அகதி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

நகர்ப்புறக் குடிசைகளில் வாழ்ந்தபோது, வீட்டு வேலைகளுக்குச் சென்றுவந்த பெண்களுள் பலர், இடப்பெயர்விற்குப் பின்னர் அந்த வேலைவாப்பை இழந்துள்ளனர். குடும்பச்சூழல் காரணமாக அந்த வேலையைத் தொடர வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள் அதிகாலை 5 மணிக்கே எழுந்து ஓடவேண்டிய நிலைமைக்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாகவே, குடும்பம் குட்டி என எதனையும் கவனிக்க முடியாத சூழலில் தள்ளப்பட்டுள்ளனர்.

நாற்றம் பிடித்த கூவத்துக்கு மத்தியிலும், சுகாதாரமற்ற நகர்ப்புறச் சேரிகளிலும் வாழ்ந்துவந்த போது, கூலி வேலையைத் தேடிக்கொள்வதற்கான வாய்ப்புகள் இவர்களுக்குக் கிடைத்து வந்தன; இவர்கள் மீது அரசு திணித்திருக்கும் இந்தக்  கட்டாய இடப்பெயர்வோ அவர்களின்  வேலைவாப்பைப் பறிப்பதாகவும்; பிள்ளைகளின் கல்வியைப் பறிப்பதாகவும் மாறிவிட்டது. மீனவக் கிராமங்களிலிருந்து செம்மஞ்சேரிக்கு விரட்டியடிக்கப்பட்ட மீனவப் பெண்கள் வயிற்றுப்பிழைப்புக்காக சிறுநீரகத்தை விற்ற சம்பவங்களும்; செம்மஞ்சேரியிலும் கண்ணகி நகரிலும் வாழ்வைத் தொடர முடியாமல் தற்கொலை செய்துகொண்டவர்களது பட்டியலுமே இவ்வுண்மையை விளங்கச் செய்யும்.

பன்னாட்டு மென்பொருள் நிறுவனங்களுக்கு அடிநிலம் முதற்கொண்டு அனைத்து வசதிகளையும் தாமாகவே செய்து தந்து நகரின் மையப்பகுதியில் அவர்களை அமர்த்தும் அரசு, தமது கடும் உழைப்பின் மூலம் இந்த நகரத்தையே உருவாக்கி, அதன் இயக்கத்திற்கும் ஆதாரமாய் அமைந்த உழைக்கும் மக்களை, இப்பொழுது வேண்டாத குப்பைகளைப் போல நகருக்கு வெளியே தூக்கி வீசுகிறது.

இது, உழைக்கும் மக்கள் மீது அரசு ஏவும் நவீன தீண்டாமை; மறுகாலனியாக்கக் கொள்கை உருவாக்கியிருக்கும் நவீன சேரிப்பகுதிகள் தான், இந்த செம்மஞ்சேரிகள்.

__________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
__________________________________________________

Salt of the Earth (1954) – மண்ணின் உப்பு! அமெரிக்க அரசின் வெறுப்பு!!

24
சால்ட் ஆஃப் த எர்த் 3

சால்ட் ஆஃப் த எர்த் 1ருத்துச் சுதந்திரம் தழைத்தோங்கும் நாடு, பூவுலக சொர்க்கம், ஜனநாயகமே அதன் சுவாசம்  என்றெல்லாம் பீற்றிக்கொள்ளப்படும்  அமெரிக்காவில் 1954 இல் வெளிவந்த படம் கூடஞு The Salt of the Earth –  தி சால்ட் ஆஃப் த எர்த் (மண்ணின் உப்பு).

இதனை வெளிவராத படம் என்று கூறுவதே பொருத்தம். ஏனென்றால், அமெரிக்க அரசு பல ஆண்டுகள் இதனை  அதிகாரபூர்வமற்ற முறையில் தடை செய்திருந்தது. குப்பைகள் முதல் காமக் களியாட்ட வக்கிரங்கள் வரை சகலத்தையும் அனுமதித்து, கருத்துச் சுதந்திரத்தின் சொர்க்கம் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அமெரிக்கா, இந்தப் படத்தை தடை செய்யக் காரணம் என்ன? அமெரிக்க அரசு பயந்து, தொடை நடுங்கும் அளவுக்கு இந்தப் படத்தில் என்ன இருந்தது?

பதில் எளிமையானது – படத்தில் உண்மை இருந்தது.

000

மெரிக்காவின் நியூ மெக்சிகோ மாகாணத்தில் டெலவேர் ஜின்க் கம்பெனி என்ற பெரும் நிறுவனத்தின் சுரங்கத்தில் அமெரிக்கத் தொழிலாளர்களும், புலம்பெயர்ந்த மெக்சிகன் தொழிலாளர்களும் பணிபுரிகிறார்கள். வேலை நிலைமையைப் பொறுத்த வரையில் அமெரிக்கர்களுக்கும்  மெக்சிகர்களுக்கும்  எந்த வித்தியாசமுமில்லை. மிக மோசமான ஆபத்தான பணிச்சூழல், பாதுகாப்பு நடைமுறைகளைப் புறக்கணித்து அலட்சியப்படுத்தும் நிர்வாகம், எந்நேரமும் உயிர் போகலாம் என்ற நிலைமை, காயமடைந்தாலோ, இறந்தாலோ கேட்க யாருமில்லை என்பது தான் அங்கே நடைமுறை.

’உயிரைப் பணயம் வைத்து சுரங்கத்தில் உழைக்கும் அமெரிக்க மற்றும் மெக்சிகன் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து உரிமைகளுக்காகப் போராடி விடக் கூடாது’ என்பதற்காக தந்திரமாகச் செயல்படுகிறது நிர்வாகம். அமெரிக்கத் தொழிலாளர்களுக்கு மட்டும் சுகாதாரமான குடியிருப்பு போன்ற அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்கிறது. மெக்சிகர்களுக்கான குடியிருப்புப் பகுதிகளோ மிக மோசமாகப் பராமரிக்கப்படுகின்றன.

தமது பணிச் சூழலை மேம்படுத்திடப்  போராடுவதற்காக மெக்சிகன் தொழிலாளர்கள் தமக்குள் சங்கம் அமைக்கிறார்கள். ஆனால் அதில் அமெரிக்கத் தொழிலாளர்கள் கலந்து கொள்வதில்லை.  வேலை நேரத்துக்குப் பிறகு இரவெல்லாம் சங்கத்தில் கூடி,  தமது உரிமைகளுக்காகப் போராடுவதைப் பற்றி பேசுகிறார்கள் தொழிலாளிகள். அவர்களில் ஒரு தொழிலாளி  ரமோன்.

சங்கக் கூட்டம் முடிந்து வீட்டிற்கு வருகிறான் ரமோன். ‘ சுகாதாரமான குடியிருப்புகள் வேண்டும்,  கழிவு நீர் அகற்றும் வசதிகளையும் மேம்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை தொழிலாளர் சங்கம் மூலம் முன் வைக்க வேண்டும்’ என்று ரமோனிடம் சொல்கிறாள் அவன் மனைவி எஸ்பிரன்சா.

இதையெல்லாம் கோரிக்கையாக வைக்க  முடியாது என்று அவளை ஆணாதிக்கக் கண்ணோட்டத்துடன் கேலி செய்கிறான் ரமோன்.  எஸ்பிரன்சா தன் இயலாமையை எண்ணி வேதனைப்படுகிறாள். ஆனால் வேறு வழியில்லாமல் அப்போது அடங்கிப் போகிறாள்.

ஒரு  நாள் தொழிலாளி ஒருவர் விபத்தில் சிக்கிக் காயமடைகிறார். தொழிலாளிகளிடையே அத்தனை நாள் மனதில் பொங்கிக் கொண்டிருந்த கோபம் வெடித்துக் கிளம்பி வேலை நிறுத்தமாக மாறுகிறது. ஆனால் ஆலையிலிருந்த அமெரிக்க வெள்ளைத் தொழிலாளர்களில் பெரும்பகுதியினர் போராட்டத்தில் கலந்து கொள்ள முன்வரவில்லை. மெக்சிகன் தொழிலாளர்கள் மாத்திரம் தளராமல் போராட உறுதி ஏற்கிறார்கள்.

சுரங்கத்திற்குச் செல்லும் வழியை மறித்து ஆர்ப்பாட்டம் செய்கின்றனர்; பாடல்கள் பல பாடியும், முழக்கமிட்டும்  போராட ஆரம்பிக்கிறார்கள். இந்த வேலை நிறுத்தத்தை நிர்வாகம் முதலில் கண்டுகொள்ள மறுக்கிறது. இந்தப் போராட்டத்தைப் பற்றி கேள்விப்பட்டு, வேறு பகுதிகளில் வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளர்கள் பணம், உணவுப் பொருட்களைக் கொண்டுவந்து கொடுத்து உதவுகிறார்கள். போராடும் தொழிலாளர்கள் வரும் பொருட்களைத் தங்களுக்குள்  சமமாகப் பங்கிட்டுக் கொண்டு போராட்டத்தைத் தொடருகிறார்கள்.

நிறுவனம் காவல்துறைக்கு கையூட்டு கொடுத்து போராட்டத்தைக் கலைக்கச் சொல்லுகிறது. போலீசால் கலைக்க முடியவில்லை.  எனவே, போராட்டத்தின் முன்னணியாளர்களில் ஒருவரான ரமோனை, போலீசு  தந்திரமாக கைது செய்து சித்திரவதை செய்கிறது. ரமோன் சிறை சென்று திரும்புகிறான். பிறகு நடக்கும் தொழிற்சங்க கூட்டத்தில் போராட்டத்தைத் தொடர முடிவு செய்கிறார்கள் தொழிலாளர்கள்.

சால்ட் ஆஃப் த எர்த் 2அதே வேளையில் தொழிலாளிகளுடைய மனைவிமார்களும், வீட்டிலுள்ள பெண்களும் ஒன்றாக இணைகிறார்கள். ‘சுகாதாரமான குடிநீர், தூய்மையான சுற்றுப்புறம்’ ஆகியவற்றையும் போராட்டத்தின் கோரிக்கைகளில் சேர்க்க  வேண்டும் என்று தொழிலாளர் சங்கத்தில் எடுத்துக் கூற முடிவு செய்கிறார்கள். ஆனால் அப் பெண்களுடன் சேருவதற்கு எஸ்பிரன்சா தயங்குகிறாள். ‘தான் ஒரு பெண்; வீட்டைப் பார்த்துக் கொள்வது, குழந்தைகளை வளர்ப்பது தான் தன்னுடைய வேலை; யூனியன் கூட்டத்திற்குத் தான் செல்வதை கணவர் ரமோன் விரும்ப மாட்டார். பிரச்சினைகள் வரும்’ எனப் பயப்படுகிறாள். ஆனால் மற்றவர்களின் வற்புறுத்தலைத் தவிர்க்க முடியாமல் தொழிலாளர்களின் சங்கக் கூட்டம் நடக்கும் இடத்திற்குச் செல்கிறாள்.

சங்கத்தில் வேலை நிறுத்தத்தைப் பற்றி காரசாரமாக விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள் தொழிலாளர்கள். இதற்கிடையில் பெண்களின் வருகையும், அவர்கள் வைக்கின்ற  கோரிக்கைகளும்  ஆண்களுக்கு முட்டாள்தனமாகத் தெரிகிறது; எரிச்சல் அடைகிறார்கள். பெண்களோ விடாப்பிடியாக  தங்களது கருத்துக்களை தொழிலாளர்கள் சங்கத்தின் முன்பு வைக்கிறார்கள். அது நிராகரிக்கப்படுகிறது. அன்றிரவு வீட்டில் எஸ்பிரன்சாவை ரமோன் கண்டிக்கிறான். ”வீட்டு வேலைகள் செய்தால் போதும், சங்கம் போராட்டம் எல்லாம் பெண்களின் வேலையல்ல” என அறிவுறுத்துகிறான்.

சுரங்கத் தொழிலாளிகள் தொடர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்துவது சட்ட விரோதம் என நீதிமன்ற தீர்ப்பைப் பெறுகிறது நிர்வாகம். போராட்டம் தோல்வியை நோக்கிப் போகும் தருணத்தில் தொழிலாளர்கள் சங்கக் கூட்டம் அடுத்த கட்டத்தைப் பற்றி விவாதிக்கிறது.

அந்தக் கூட்டத்திற்கு வந்து சேரும் பெண்கள் குழுவினர்  “சுரங்கத் தொழிலாளர்களாகிய நீங்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினால் தான் கைது செய்யப்படுவீர்கள். ஆகவே நாளை முதல் நீங்கள் பின்னணியில் இருங்கள். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்கிறோம்” என்கிறார்கள். இந்தக் கருத்தை தொழிற்சங்க உறுப்பினர்கள் மத்தியில் வாக்கெடுப்புக்கு விடலாம் என்கிறார்கள் தொழிலாளர்கள். “முதலில் பெண்களுக்கும் ஓட்டுரிமை கொடுங்கள்” என்று கேட்கிறாள் எஸ்பிரன்சா. தொழிற்சங்கக் கூட்டம் பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை கொண்ட சமூகக் கூட்டமாக மாற்றப்படுகிறது. இறுதியில், தீவிரமான எதிர்ப்புக்கிடையில்,  பெண்கள் முன்நின்று  போராட்டம் நடத்தும் தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.

“பெண்கள் என்ன கிழித்து விடப் போகிறார்கள்” என ஆண்கள் நினைக்க, பெண்கள் உற்சாகமாகப் பாடல்கள் பாடியும், கோஷமிட்டும் ஆர்ப்பாட்டம் நடத்த ஆரம்பிக்கிறார்கள். எஸ்பிரன்சா தன் கைக்குழந்தையுடன் அவர்களுக்கு தேநீர் கொடுத்து உதவுகிறாள். ஆனால் ரமோன் இதைக் கடுமையாக எதிர்க்கிறான். எனினும் உற்சாகம் பொங்கும்  எஸ்பிரன்சாவை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

பெண்களது  போராட்டம்  தீவிரமடையவே, போலீசார் அவர்களைப் பயமுறுத்த முயற்சிக்கின்றனர். போலீசு சுடுவேன் என்கிறது – முழக்கம்  உயருகிறது. போலீசு கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசுகின்றது. பெண்கள் சிறிது பின் நகர்ந்துவிட்டு, மீண்டும் போராட்டத்தைத் தொடருகிறார்கள். போராடும் பெண்கள் மீது போலீசார் கார் ஏற்றி காயமுறச் செய்கின்றனர். பதிலுக்கு பெண்கள் செருப்பால் அடித்துப்  போலீசைத் துரத்துகிறார்கள். போலீசின் துப்பாக்கி பயனற்றுப் போகிறது.

தொழிற்சங்கத்தில் ஒரு கருங்காலியை முதலாளிகள் விலைக்கு வாங்குகின்றனர். அவன் மூலம் முன்னணிப் பெண்கள் காட்டிக் கொடுக்கப்பட்டு  கைது செய்யப்படுகிறார்கள். எஸ்பிரன்சா தன் கைக்குழந்தையுடன் சிறைக்குச் செல்கிறாள். வெளியில் இருக்கும் பெண்கள் போர்க்குணத்துடன் ஆர்ப்பாட்டத்தைத் தொடருகிறார்கள்.

சிறையிலும் பெண்கள் தொடர்ச்சியாகக் கோஷமிடுகிறார்கள். அவர்களின் விடாப்பிடியான போராட்டத்தைக் கண்டு அஞ்சிய போலீசு அவர்களை விடுவிக்கிறது. வீடுகளில் பெண்கள் ஒன்றாகக் கூடி, அடுத்து எப்படிப் போராடலாம் எனத் தங்களுக்குள் விவாதிக்கிறார்கள். மறுபுறம் ஆண்கள் இந்த மாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக்கொண்டு, வீட்டு வேலைகளையும் குழந்தைகளையும் பார்த்துக் கொள்கின்றவர்களாகத் தங்களை மாற்றிக் கொள்கிறார்கள். வீட்டு வேலைகளைச் செய்யத் தொடங்கும் போதுதான்,  பெண்கள் முன் வைத்த கோரிக்கைகளின் நியாயத்தை சொந்த முறையில் உணர்கிறார்கள். தொழிலாளர்களது  கோரிக்கைகளில் சுகாதாரமான குடியிருப்புகள், சுத்தமான தண்ணீர்  ஆகிய இரண்டும்  சேர்க்கப்படுகின்றன.

அதே நேரத்தில் பெண்களின் தலைமையில் நடக்கும் போராட்டம் கணவன்மார்களுக்கு  எரிச்சலூட்டுகிறது. ரமோன் எஸ்பிரன்சாவை கோபமாக த் திட்டுகிறான்.  அடங்கி இருக்குமாறு எச்சரிக்கிறான். எஸ்பிரன்சா அவன் ஆதிக்கத்திற்கு கட்டுப்பட மறுக்கிறாள்.  ரமோன் மனம் வெதும்பி வீட்டை விட்டுச் செல்கிறான்.

கம்பெனி நிர்வாகமும், போலீசும் ரமோன் வீட்டைத் தந்திரமாகக் காலி செய்யத் திட்டம் தீட்டுகின்றனர். சிலரை மாத்திரம் இப்படி விரட்டியடித்தால் உளவியல் ரீதியாக மற்றவர்கள் பயந்து போராட்டத்தைக் கைவிடுவார்கள் என நினைக்கின்றனர். ரமோன் வீடு காலி செய்யப்படுவதைக் கண்டு, எல்லாத் தொழிலாளர்களும்  அவன் வீட்டின் முன் கூடுகிறார்கள். சுரங்கத்தில் வேலை செய்யும் வெள்ளை அமெரிக்க தொழிலாளர்களும் ரமோன் வீட்டின் முன் குவிகிறார்கள்.

போலீசு வீட்டில் உள்ள பொருட்களை வெளியே வைக்க, பெண்களும், சிறுவர்களும் அவர்களை எதிர்த்து அவற்றை வீட்டின் உள்ளே மீண்டும் வைக்கிறார்கள். சோர்ந்து போகும் போலீசார் மீது சிறுவன் ஒருவன் கல்லெறியத் துவங்க, கூடி நிற்கும் தொழிலாளர்கள் ஒற்றுமையைப் பார்த்து போலீசார் அஞ்சி ஓடுகின்றனர். இதைத் தொடர்ந்து நிறுவனமும் தொழிலாளர்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக முடிவு செய்யவே, போராட்டம் வெற்றியடைகிறது.

000

1950 களின் துவக்கம் என்பது இரண்டாம் உலகப் போரில் பாசிசத்தை வீழ்த்தி சோவியத் யூனியன் மீண்டெழுந்த காலம். ‘கம்யூனிச பூதம் அமெரிக்காவைப் பற்றி விடுமோ’ என அமெரிக்க முதலாளி வர்க்கம் அஞ்சியது. கம்யூனிஸ்டுகளை ஒழித்துக் கட்ட வேண்டும் என்ற  வெறியின் அதிகார வர்க்கப் பிரதிநிதியாக அப்போது வந்தவர் தான் மெக்கார்த்தி.

சால்ட் ஆஃப் த எர்த் 3அறிவுத்துறையினர், கலைஞர்கள் ஆகியோர் மத்தியிலிருந்து மட்டுமின்றி, மொத்த சமூகத்திலிருந்துமே கம்யூனிசத்தைக் களையெடுக்கவேண்டுமென வெறிகொண்டிருந்த து மெக்கார்த்தியிசம்.  அன்று தொழிலாளர்கள் மத்தியில் மட்டுமின்றி, கலைஞர்கள் மத்தியிலும் கம்யூனிசம் செல்வாக்கு பெற்றிருந்தது.  சுதந்திரம், மக்கள் விடுதலை, மக்களுக்காகக் கலை என்ற விவாதங்கள் தீவிரமாக நடந்த காலம் அது.  உழைக்கும் மக்களின் பால் அன்பு கொண்ட கலைஞர்கள் கம்யூனிசத்தையும் நேசித்தனர்.

1947 முதல் 1975 வரை அமெரிக்கத்தன்மைக்கு முரணான நடவடிக்கைகளை ஆய்வதற்கான குழு, என்ற பெயரில் அமைக்கப்பட்ட நாடாளுமன்றக் குழு, கம்யூனிச ஆதரவாளர்களென்று சந்தேகப்படும் அனைவரையும் வேட்டையாடியது.  சார்லி சாப்லின் உள்ளிட்ட ஹாலிவுட் கலைஞர்கள் அனைவரையும் விசாரணைக்கு உட்படுத்தியது. இந்த விசாரணைக்கு வரமறுத்த 10 கலைஞர்கள்  சிறைவைக்கப்பட்டனர்.  ‘ஹாலிவுட் டென்’ என்று அழைக்கப்பட்ட இவர்களில் ஒருவர்தான் இப்படத்தின் இயக்குநர் பிபர்மேன்.

கம்யூனிச ஆதரவுக் கலைஞர்களை யாரும் வேலைக்கு அமர்த்தக் கூடாது என  ஹாலிவுட் ஸ்டுடியோக்களுக்கு அமெரிக்க அரசு ரகசிய உத்தரவைப் பிறப்பித்திருந்ததால்,   இச்சவாலை எதிர்கொள்ள சுயேச்சையான தயாரிப்பாளர் கழகம் என்ற அமைப்பை தொடங்கினார்கள் இக்கலைஞர்கள். இக்கழக்த்தின் முதல் தயாரிப்புதான் சால்ட் ஆப் த எர்த்.

அமெரிக்காவின் நியூ மெக்சிகோ மாநிலத்தில்  எம்பயர் சின்க் கார்ப்பரேசன் என்ற சுரங்க நிறுவனத்தில் நடைபெற்ற  நடந்த உண்மையான தொழிலாளர் போராட்டம்தான் இந்தத் திரைப்படத்தின் கதை. தொழிலாளர்களிடையே  நிறவெறி அடிப்படையில் பாகுபாடு காட்டியது, ஆண் தொழிலாளர்கள் பெண்களை ஆணாதிக்க கண்ணோட்டத்துடன் அலட்சியப்படுத்தியது, அதை எதிர்த்து வென்று பெண்களும் போராட்டத்தில ஈடுபட்டது ஆகிய அனைத்துமே உண்மையில் நடந்த நிகழ்வுகள்.

இப்போராட்டம் முடிந்த சில மாதங்களுக்குள்ளாகவே திரைப்படத்துக்கான பணிகளைத் தொடங்கிவிட்டார் இதன் இயக்குநர். ரசிய அரசின் நேரடி உத்தரவின் கீழ் ஹாலிவுட்டிலேயே ஒரு கம்யூனிசப் படம்  தயாராகிக் கொண்டிருப்பதாக பீதியைக் கிளப்பியது ஹாலிவுட் நியூஸ் என்ற செய்திப்பத்திரிகை.  இதன் படப்பிடிப்பையே ஹாலிவுட்டிற்கு  வெளியேதான் நடத்தினார் இயக்குநர் பெபர்மேன். படத்தில் நடித்த பெரும்பான்மையினர் தொழில்முறை நடிகர்களும் அல்லர். அவர்கள் போராட்டத்தில் உண்மையிலேயே பங்கு கொண்ட தொழிலாளர்கள் மற்றும் பெண்கள்.

படப்பிடிப்பையே ரகசியமாக நடத்த வேண்டியிருந்தது மட்டுமல்ல, படச்சுருள்கள் அழிக்கப்படலாம் என்பதால் அவற்றைப் பாதுகாப்பது கூட படக்குழுவினருக்கு பெரும் சிரமமாக இருந்தது. படம் வெளிவரத் தயாரான பிறகு படத்தைத்  திரையிட முனையும் திரையரங்குகளுக்கு மிரட்டல்கள் பறந்தன. படத்திற்கு நிதியுதவி செய்ததாக சந்தேகப்பட்டவர்கள் மீது சோதனைகள் நடந்தன. படத்தில் எஸ்பிரன்சாவாக நடித்த மெக்சிகோ நடிகை ரோசாரா ரெவுல்டாஸ் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றும் அளவுக்கு வெறித்தனமாக நடந்து கொண்டது அமெரிக்க அரசு.

மொத்த அமெரிக்காவிலும் விரல் விட்டு எண்ணக்கூடிய சில திரையரங்குகள் மட்டும்தான் படத்தைத் திரையிட முன் வந்தன. படத்தை நியூ மெக்சிகோ சுரங்கத் தொழிலாளர்களும், பிற சுரங்கத் தொழிலாளர்களும் உச்சி மோந்து வரவேற்றனர். அமெரிக்கா முழுவதும் இருந்த பல தொழிலாளர்கள் இயக்கங்கள் இந்தப் படத்தை அப்படியே வாங்கிக் கொண்டன. அவற்றில் சில தமது பெயரையே ‘சால்ட் ஆப் த எர்த்’ என மாற்றிக் கொண்டன.

சமூகத்துக்கு ஆரவாரமின்றித் தொண்டாற்றும் எளிய மனிதர்களே ‘மண்ணின் உப்பு’ என்றழைக்கப்படுகிறார்கள். இம்மண்ணின் உப்பாகிய தொழிலாளி வர்க்கம்,  முதலாளி வர்க்கத்துக்கு எதிரான ஒரு போராட்டத்தின் ஊடாக,  தன்னிடம் நிலவிய ஆணாதிக்க கண்ணோட்டத்தையும், வெள்ளை நிற மேட்டிமைத்தனத்தையும் எப்படி களைந்து கொள்கிறது என்பதை அழகாக விளக்கிச் செல்கிறது இப்படம். பெண்விடுதலையும், நிறவெறி ஒழிப்பும் எங்ஙனம் தமது வெற்றிக்கு இன்றியமையாதவை என்று தொழிலாளி வர்க்கம் தனது சொந்த அனுபவத்தின் ஊடாகப் புரிந்து கொள்வதையும் வெற்றி காண்பதையும்   குறிப்பான நிகழ்ச்சிகள், சிக்கனமான வசனங்கள் மூலம் காட்சிப்படுத்துகிறது இந்தப் படம்.

இதன் காரணமாகத்தான் அன்று அமெரிக்க முதலாளி வர்க்கம் இப்படத்தைக் கண்டு அஞ்சியிருக்கிறது. இதன் காரணமாகத்தான் அரை நூற்றாண்டுக்குப் பின்னர் இன்றும் இந்தப்படம் வெளியிடும் உண்மையின் அழகு நம்மை ஈர்க்கிறது.

_____________________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
______________________________________________________

உச்ச நீதிமன்றம்: கார்ப்பரேட் கொள்ளையர்களின் காவல்காரன்!

2

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு-ஊழல் தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், முன்னாள் தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவால் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் ஜனவரி 10, 2008-க்குப் பின் வழங்கப்பட்ட 122 உரிமங்களையும் ரத்து செதது.  மேலும் அத்தீர்ப்பில், அலைக்கற்றை போன்ற இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய நேர்மையாகவும் பாரபட்சமற்ற முறையிலும் நடத்தப்படும் ஏலமுறைதான் சிறந்தது” என்ற வழிகாட்டுதலையும் முன் வைத்தது.

இத்தீர்ப்பை மறுஆய்வுக்கு உட்படுத்தக் கோரி மைய அரசு தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்ட நிலையில், அனைத்து இயற்கை வளங்களையும் எந்தச் சூழ்நிலையிலும் ஏலத்தில் விடுவது மட்டும்தான் அனுமதிக்கப்பட்ட முறையா? முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் 2008-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்கள் ரத்து செயப்பட்டிருப்பதால், அதற்கு முன்னர் அதேமுறைப்படி ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை உரிமங்களின் நிலை என்ன? இதற்கு முன்னர் பல்வேறு வகையான இயற்கை வளங்கள் ஏலம் அல்லாத முறைகளில் ஒதுக்கீடு செயப்பட்டிருப்பதோடு, அந்த ஒதுக்கீடுகளை உச்ச நீதிமன்றமும் அங்கீகரித்து தீர்ப்பு கூறியிருக்கிறது.  இத்தீர்ப்புக்குப் பின்னர் அந்த ஒதுக்கீடுகளின் நிலை என்ன? இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அரசு எடுக்கும் கொள்கை முடிவுகளில் நீதிமன்றம் எந்த அடிப்படையில் தலையிட முடியும்?” என்பது உள்ளிட்ட 14 கேள்விகளை எழுப்பி, இக்கேள்விகளின் அடிப்படையில் இத்தீர்ப்புக்கு விளக்கம் அளிக்குமாறு கோரும் மற்றொரு மனுவை அரசுத் தலைவர் மூலம் தாக்கல் செய்தது.  அதனை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு, இயற்கை வளங்களைத் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்வது குறித்த பிரச்சினையில் பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற மாதிரியானதொரு தீர்ப்பை கடந்த செப்.27 அன்று அளித்தது.

அத்தீர்ப்பில், “இயற்கை வளங்களை ஏல முறையில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் எனத் தாம் அளித்த தீர்ப்பு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதற்குப் பொருந்தாது.  இயற்கை வளங்களை ஏலத்தின் மூலம் ஒதுக்குவது வசதியான ஒதுக்கீடு முறையாக இருக்கலாம்.  ஆனால், அரசியலமைப்பு ரீதியாக அதனைக் கட்டாயமாக்க முடியாது.  ஏலத்தில் விடாமல் இருப்பதைச் சட்டவிரோதமான செயலாகக் கருத முடியாது.”

‘‘அதிகபட்ச இலாப நோக்கத்தைக் கொண்டு இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய ஏலமுறைதான் சிறந்தது என்றாலும், அதிகபட்ச இலாப நோக்கத்தை மட்டுமே கொண்டு இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய முடியாது.  பொதுநலன் நோக்கத்திற்காக இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்யும்பொழுது, ஏலமுறையைப் பின்பற்ற வேண்டிய தேவையில்லை.  வருவாய்ப் பெருக்கத்தை நோக்கமாகக் கொண்டு கொள்கைகளை வகுக்கக் கூடாது.  பொது நலனுக்கு அவசியமென்றால் ஏலம் அல்லாத பிற வழிகளிலும் இயற்கை வளங்களைத் தனியார் நிறுவனங்களுக்கு ஒதுக்கலாம்.”

‘‘இந்நீதிமன்றம் இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்தவற்கு எந்தவொரு முறையையும் பரிந்துரைக்கவுமில்லை; எந்தவொரு முறையையும் தடைசெயவுமில்லை.  இயற்கை வளங்களைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய்ய எந்த முறையைப் பின்பற்றலாம் என முடிவெடுக்கும் அதிகாரம் நிர்வாகத்திற்கு மட்டுமே உண்டு.  அம்முடிவு அரசியலமைப்பையும் பொதுநலனையும் மீறுவதாகக் கருதப்பட்டால், அதில் தலையிடும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு உண்டு” என விளக்கமளித்திருக்கிறது.

அரசு இயற்கை வளங்களைத் தனியாருக்கு ஒதுக்கீடு செய்யும்பொழுது, அதில் இலாப/நட்டக் கணக்குப் பார்க்க முடியாது என்பதுதான் இத்தீர்ப்பு சொல்லியிருக்கும் செய்தி.  அதாவது, அரசு இயற்கை வளங்களை ஏலத்தில் விடாதபொழுது, ஏலத்தில் விட்டிருந்தால் அரசுக்குக் கூடுதலாக இவ்வளவு வருவாய் கிடைத்திருக்கும்.  எனவே, ஏலத்தில் விடாததால் அரசுக்கு நட்டமேற்பட்டுவிட்டது எனத் தணிக்கை அதிகாரிகள் உள்ளிட்டு யாரும் இனி அரசின் மீது குற்றஞ்சுமத்த முடியாது.

உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்து, 2ஜி வழக்கில் இந்த விளக்கத்தை எழுதிய கையோடு ஓய்வு பெற்றுச் சென்றுள்ள எஸ்.ஹெச். கபாடியா இந்த இலாப/நட்டக் கணக்கு குறித்து, இன்னும் தெளிவாகவே அரசுக்குச் சாதகமாக விளக்கியிருக்கிறார். இயற்கை வளங்களை மதிப்பீடு செய்வதில் பல குழப்பங்கள் நிலவுகின்றன.  இக்குழப்பங்கள் நீங்க வேண்டும் என்றால்,  நட்டமென்பது உண்மையானது; இலாபமென்பது கருதுகோள்தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தான் ஓய்வு பெறுவதற்கு முன்பாக,  நிலக்கரி ஊழல் விவகாரம் நாடாளுமன்றத்தில் அடிபட்டுக் கொண்டிருந்த சமயத்தில் உபதேசித்தார், அவர்.

இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய அரசுக்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு அளித்துள்ள விளக்கம், இயற்கை வளங்களை மதிப்பீடு செய்வது குறித்து முன்னாள் தலைமை நீதிபதி ஹெச்.எஸ்.கபாடியா கூறியுள்ள கருத்து – இவை இரண்டும் ஆ.ராசாவால் அலைக்கற்றை ஒதுக்கீடு செயப்பட்டதில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபா நட்டமேற்பட்டுவிட்டதாகத் தணிக்கை அதிகாரி அளித்துள்ள அறிக்கையைக் கேள்விக்குள்ளாக்கிவிடுகிறது.  அது மட்டுமின்றி, ஆ.ராசாவால் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையில் ஒதுக்கப்பட்ட 122 உரிமங்களை ரத்து செய்த உச்சநீதிமன்றத்தின் முந்தைய முடிவையும் கேள்விக்குள்ளாக்குகிறது.

2008-ஆம் ஒதுக்கப்பட்ட 122 உரிமங்களும் பொது நல நோக்கின் அடிப்படையில்தான் குறைந்த விலையிலும் – அதாவது, 2001-ஆம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட விலையிலும், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் ஒதுக்கப்பட்டதாகவும், வருவாய்ப் பெருக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஒதுக்கப்படாததால் அரசுக்கு எவ்வித இழப்பும் இல்லை என்பதுதான் மைய அரசின் வாதம்.  மேலும், முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற முறையைக் கடைபிடித்தார் என்பதற்காக ஆ.ராசா மீது வழக்குத் தொடரப்படவில்லை.  வழக்கு தொடரவும் முடியாது.  ஏனென்றால், ராசா அரசின் கொள்கை முடிவைத்தான் நடைமுறைப்படுத்தினார்.  இம்முறையை அவர் பாரபட்சமற்ற முறையில் கடைபிடிக்கவில்லை; சில தனியார் நிறுவனங்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டார்” என்றுதான் அவர் மீது குற்றஞ்சுமத்தப்பட்டு, சி.பி.ஐ. நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வது தொடர்பாக தற்பொழுது உச்சநீதிமன்றம் அளித்துள்ள விளக்கம் இவற்றின் அடிப்படையில் பார்த்தால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு 122 உரிமங்களை ரத்து செய்த முடிவையும் கைவிட்டிருக்க வேண்டும்.  ஆனால், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வோ அரசுத் தலைவர் மூலம் விளக்கம் கோரும் மனுவில் 2ஜி தொடர்பாகக் கேட்கப்பட்டிருந்த மூன்று கேள்விகளுக்குப் பதில் அளிக்காமல் ஒருபுறம் நழுவிக் கொண்டுவிட்டு, இன்னொருபுறம் நாட்டாமை கணக்கில், தனது முடிவை யாரும் கேள்வி கேட்க முடியாது என்ற திமிரில் 122 உரிமங்களை ரத்து செய்தது செய்ததுதான் எனத்  தீர்ப்புக் கூறியிருக்கிறது.

மீண்டும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ள இயற்கை வளமான அலைக்கற்றையை ஏலத்தில்தான் விட வேண்டும்; தோண்டி எடுத்தால் காலியாகிவிடும் நிலக்கரி, கச்சா எண்ணெ போன்ற இயற்கை வளங்களை அரசு விரும்பும் எந்த முறையில் வேண்டுமானாலும் ஒதுக்கீடு செய்து கொள்ளலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் விளக்கமே தர்க்க அறிவுக்குப் பொருத்தமானதாக இல்லை.  இயற்கை வளங்களுள் ஒன்றான அலைக்கற்றையை மட்டும் ஏலத்தில்தான் விடவேண்டும்” என்ற தனது முடிவை நியாயப்படுத்தும் விதத்தில் உச்சநீதிமன்றம் எந்தவிதமான விளக்கத்தையும் அளிக்கவில்லை.  மேலும், தனது இந்த முடிவைப் பாரபட்சமின்றி நடைமுறைப்படுத்தும் நாணயமும் அதனிடம் இல்லை.

ஆ.ராசா தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது மட்டுமல்ல, அதற்கு முன்பும், அதாவது தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதி மாறன் தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதும், அதற்கும் முன்பாக பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் அருண்ஷோரி தொலைதொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோதும் 2ஜி அலைக்கற்றைகள் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில்தான் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளன.  ஆனால், உச்சநீதிமன்றம் பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், ஆ.ராசா அமைச்சராக இருந்து, ஜனவரி 2008-க்குப் பிறகு ஒதுக்கிய அலைக்கற்றை உரிமங்களை மட்டும் உள்நோக்கத்தோடு தேர்ந்தெடுத்து ரத்து செய்திருக்கிறது.

ஆ.ராசா முதலில் வந்தவருக்கு முன்னுரிமை அடிப்படையில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்து அரசிற்கு நட்டமேற்படுத்தினார் என்றால், தயாநிதி மாறனும் அருண்ஷோரியும் இதே முறையில் செய்த ஒதுக்கீடுகள் எப்படி அரசிற்கு இலாபத்தை ஈட்டித் தந்திருக்க முடியும்?  அலைக்கற்றைகளை ஏலத்தின் அடிப்படையில்தான் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் முடிவு ஆ.ராசாவின் காலத்திற்குப் பொருந்தும்பொழுது, அதற்கு முந்தையை ஒதுக்கீடுகளுக்கு எப்படிப் பொருந்தாமல் போகும் என்ற கேள்விகளுக்குள் நுழையாமல், அவற்றை வேண்டுமென்றே அலட்சியப்படுத்திவிட்டுத் தனது விளக்கத்தை அளித்திருக்கிறது, உச்சநீதிமன்றம்.

உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒருதலைப்பட்சமாக தனது விளக்கத்தை அளித்திருப்பதாக இந்தப் பிரச்சினையைச் சுருக்கிப் பார்க்க முடியாது.  காற்று, தண்ணீர் தொடங்கி நிலக்கரி, இரும்பு, அலுமினியம் போன்ற கனிம வளங்கள் ஊடாக மலை, மண் ஈறாக அனைத்து இயற்கை வளங்களையும் தனியாருக்குத் தாரை வார்ப்பதன் மூலம்தான் பொருளாதார வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என ஆளுங்கும்பலும், அனைத்து ஓட்டுக்கட்சிகளும் சாமியாடிக் கொண்டிருக்கும் வேளையில்,             உச்சநீதிமன்றமும் அரசின் தனியார்மயக் கொள்கைக்கு ஏற்றபடியே, கார்ப்பரேட் கொள்ளைக்கு இசைந்தாற் போலவே தனது விளக்கத்தை அளித்திருக்கிறது.

எனினும், பா.ஜ.க., சி.பி.எம்., ஊழலுக்கு எதிரான இந்தியா இயக்கத்தைச் சேர்ந்த பிரசாந்த் பூஷண், சு.சாமி உள்ளிட்ட எதிர்த்தரப்பு யானையைத் தடவிப் பார்த்து வியந்து நின்ற குருடர்களைப் போல, உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு அளித்திருக்கும் இந்த விளக்கம், மைய அரசு இனி தன் விருப்பம் போல இயற்கை வளங்களைத் தனியார் முதலாளிகளுக்கு ஒதுக்க முடியாதபடி ஆப்பு வைத்திருப்பதாகப் பொழிப்புரை எழுதி வருகிறார்கள்.  மைய அரசு பொது நலனுக்கு எதிராக இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்ய முனைந்தால், உச்ச நீதிமன்றம் தலையிட்டு நீதியை நிலைநாட்டிவிடுமென இவர்கள் ஒரேகுரலில் பீற்றி வருகிறார்கள்.

உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு இந்த விளக்கத்தை அளித்தபொழுதுதான், 2ஜி ஊழலைவிடப் பல மடங்கு பிரம்மாண்டமான நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் அம்பலப்பட்டு, மன்மோகன் சிங்கின் யோக்கியதை சந்தி சிரித்தது. பொதுநலனுக்கு எதிராக இயற்கை வளங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டால் நாங்கள் தலையீடு செய்வோம் எனத் தனது விளக்கத்தில் நீட்டி முழங்கியிருக்கும் உச்ச நீதிமன்றம் இந்த ஊழல்  குறித்து மௌனமாகவே இருந்து வருகிறது.

உச்ச நீதிமன்றத்தின் இந்தக் கள்ள மௌளம் ஒருபுறமிருக்க, இயற்கை வளங்களை ஒதுக்கீடு செய்வதில் பொது நலன் என்பதை எப்படி வரையறுப்பது? கிராம், செ.மீ., என்பது போல அனைவரும் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் இதற்குப் பொது அளவுகோல் உண்டா? என்பதுதான் இந்த விவகாரத்தின் மையமான கேள்வியாகும்.

மக்கள் அனைவருக்கும் கைபேசி சேவை குறைந்த கட்டணத்தில் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் அலைக்கற்றையைக் குறைந்த விலையில் ஒதுக்கீடு செததாக ஆ.ராசா வாதிட்டு வருகிறார்.  அவரது வாதத்தில் ஓரளவு நியாயம் இருப்பதை உச்சநீதிமன்றம்கூட மறுத்துவிட முடியாது.  ஆனாலும், ஆ.ராசா பொது நலனுக்கு விரோதமாக அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததாகக் குற்றஞ்சுமத்தி, அவர் ஒதுக்கீடு செய்த 122 உரிமங்களை ரத்து செய்தது, உச்சநீதிமன்றம். அதேசமயம், ஆ.ராசாவிற்கு முன்பாக, பா.ஜ.க. கூட்டணி ஆட்சியில் குறைந்த விலையிலும் முதலில் வந்தவருக்கு முன்னுரிமை என்ற அடிப்படையிலும் அலைக்கற்றைகள் ஒதுக்கீடு செயப்பட்டுள்ளதை ரத்து செய்யாததன் மூலம், அந்த ஒதுக்கீடு பொது நலனுக்கு விரோதமானதல்ல எனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

‘‘பொது மக்களுக்கு மலிவான விலையில் மின்சாரம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான் நிலக்கரிச் சுரங்கங்களை ஏலத்தில் விடாமல், குறைந்த விலையில் தனியாருக்கு ஒதுக்கீடு செய்ததாக” மன்மோகன் சிங்கும் கூறி வருகிறார்.  ஆனால், மின்சாரக் கட்டணமோ மக்களின் மென்னியை இறுக்கும் வண்ணம் உயர்ந்து கொண்டே போகிறது.  எனினும், தனியார் வர்த்தக மின்சாரக் கழகங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலக்கரிச் சுரங்கங்களைத் திரும்பப் பெறுவது குறித்துப் பேச மறுக்கிறது, உச்ச நீதிமன்றம்.

சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீட்டை அனுமதிப்பது நாட்டு நலனுக்கு எதிரானது; அதனால் அதைத் தடை செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கில், அரசின் கொள்கை முடிவைத் தடை செய்ய மறுத்து, அவ்வழக்கைத் தள்ளுபடி செய்திருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

பொது நலனை வரையறுக்கும் துல்லியமான, கறரான சட்ட விதிகள் எதுவும் கிடையாது என்பது மட்டுமல்ல, அரசு, நீதிமன்றம், ஓட்டுக்கட்சிகள் அனைத்தும் தற்பொழுது பொதுநலன் எனப் பேசி வருவது மக்கள் நலனையோ, நாட்டு நலனையோ குறிக்கவில்லை.  அவர்கள் யாவரும் இன்று தனியார்மயத்துக்குச் சேவை செவதைத்தான் பொது நலன், நாட்டின் வளர்ச்சி என வரையறுக்கிறார்கள்.  தனியார்மயம் – தாராளமயம் மூலம்தான் வளர்ச்சியைச் சாதிக்க முடியும் என்ற அரசின், ஆளும் வர்க்கத்தின்  மறுகாலனியாதிக்கக் கொள்கையை உச்ச நீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு, அதற்குத் தக்கபடிதான் சட்டத்திற்கும் அரசியல் சாசனத்திற்கும் விளக்கங்களை வழங்கி வருகிறது.   வோடாஃபோன் வழக்கில், அந்நிறுவனம் 11,000 கோடி ரூபாயை வரியாகச் செலுத்தத் தேவையில்லை என ஹெச்.எஸ்.கபாடியா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு அளித்த தீர்ப்பு ஒன்றே, நீதித்துறை யார் பக்கம் நிற்கிறது என்பதைத் துலக்கமாக எடுத்துக் காட்டியிருக்கிறது.  2ஜி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் விளக்கம், நாட்டின் இயற்கை வளங்களை, பொதுச் சோத்துக்களைக் கொள்ளையிடக் குதித்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடையே அரசு பாரபட்சம் காட்டக் கூடாது; அவர்களிடம் நேர்மையாகவும் முறையாகவும் நடந்துகொள்ள வேண்டும்” என்பதை உறுதி செயும் கார்ப்பரேட் நிறுவனங்களின் காவல்காரனாக உச்ச நீதிமன்றம் நிற்கும் என்பதை எடுத்துக் கூறுகிறது.

தனியார்மயத்துக்கு ஜே! உடன்பிறந்த ஊழலுக்கு ஜே! ஜே!

ச்ச நீதிமன்றம் உள்ளிட்டு, தனியார்மயம் – தாராளமயம் என்ற பொருளாதாரக் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்கள் அனைவரும் அக்கொள்கையோடு ஒட்டிப் பிறந்த ஊழலையும், கார்ப்பரேட் பகற்கொள்ளையையும் அங்கீகரித்துக் கொண்டே, இயற்கை வளங்களையோ, பொதுத்துறை நிறுவனங்களையோ கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஏல முறை மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ கைமாற்றிவிடும்பொழுது, அதில் ஊழலோ முறைகேடுகளோ நடைபெறக் கூடாது என உபதேசித்து வருகிறார்கள்.  இங்கே ஊழல் என்று உச்ச நீதிமன்றமும், நடுத்தர வர்க்க கனவான்களும் குறிப்பிடுவது, நிச்சயமாக கார்ப்பரேட் நிறுவனங்கள் அடிக்கும் பகற்கொள்ளையை அல்ல; பொதுத்துறை நிறுவனங்களையோ, இயற்கை வளங்களையோ தனியாருக்கு ஒதுக்கும்பொழுது அதில் அரசியல்வாதிகள், ஓட்டுக்கட்சிகள் தங்களது தனிப்பட்ட இலாபத்திற்காக அடிக்கும் கமிசனை மட்டும்தான் ஊழல் என்கிறார்கள். அரசியல்வாதிகளின் ஊழலைத்தான் இவர்கள் பொதுநலனுக்கு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக் கூறுகிறார்களே தவிர, கார்ப்பரேட் பகற்கொள்ளையை நோக்கி இவர்களின் சுண்டுவிரல் கூட நீளுவதில்லை.

உதாரணத்திற்கு 2ஜி வழக்கை எடுத்துக் கொண்டால் ஆ.ராசா, கனிமொழி, கலைஞர் டி.வி. பெற்ற கையூட்டுப் பற்றி பேசிய அளவிற்கு, 2 ஜி உரிமத்தைப் பெற்ற பின்,  தங்கள் நிறுவனப் பங்குகளை விற்று 22,000 கோடி ரூபாய் அளவிற்குக் கொள்ளை இலாபம் அடைந்த டாடா டெலி சர்வீசஸ், ஸ்வான், யுனிடெக் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் பற்றி உச்ச நீதிமன்றமோ, ஜெயாவோ, சுப்பிரமணிய சுவாமியோ, சோ ராமஸ்வாமியோ பேசவில்லை.  இந்த ஊழலில் ஆதாயம் அடைந்ததாகக் குற்றஞ்சுமத்தப்பட்ட கலைஞர் டி.வி.யின் பங்குதாரர் என்ற முறையில் கனிமொழி கைது செய்யப்பட்டார்.  ஆனால், இவ்வூழலில் தொடர்பிருப்பது அம்பலமான பிறகும் பழம்பெரும் தரகு முதலாளியான டாடா சி.பி.ஐ.-யாலும் நீதிமன்றத்தாலும் விசாரிக்கப்படவேயில்லை.  ரிலையன்ஸ் அதிபர் அனில் அம்பானியும் டி.பி. ரியாலிட்டி  நிறுவனத்தின் அதிபர் பல்வாவும் அலைக்கற்றை உரிமம் பெற்றதில் கூட்டுக் களவாணிகளாக இருந்துள்ளனர் என்பது தெரியவந்த பிறகும், அனில் அம்பானி கைது செயப்படவில்லை.  ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகளும், புதுத் தரகு முதலாளியான பல்வாவும்தான் சிறையில் அடைக்கப்பட்டனர்.  டாடா- நீரா ராடியா தொடர்பை உச்ச நீதிமன்றம் உள்ளிட்டு யாரும் மறந்தும்கூடத் தற்பொழுது பேசுவதில்லை.

நிலக்கரி ஊழல், இஸ்ரோ ஊழல், ஏர் இந்தியா ஊழல், முகேஷ் அம்பானி தொடர்புடைய கே.ஜி. எண்ணெ வயல் ஊழல், ஆதர்ஷ் அடுக்குமாடி ஊழல், பா.ஜ.க. தொடர்புடைய ரெட்டி சகோதரர்களின் ஊழல் என கடந்த இரண்டு ஆண்டுகளில் ஏகப்பட்ட ஊழல்கள் அம்பலமானாலும், முதலாளித்துவப் பத்திரிகைகள், பா.ஜ.க., அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சுப்பிரமணிய சுவாமி, சோ ராமஸ்வாமி போன்ற யோக்கியர்கள் மட்டுமல்ல, அரசியல் சாசன நிறுவனங்களான உச்ச நீதிமன்றம், தலைமை தணிக்கை அதிகாரி ஆகியோரும் 2ஜி ஊழலை மட்டும்தான், அதிலும் அவ்வூழலில் சம்பந்தப்பட்ட மற்றவர்களைக் காட்டிலும் ஆ.ராசா, மற்றும் தி.மு.க.வைத்தான் குறிவைத்துக் காய்களை நகர்த்தினார்கள்; தமிழகத்தின் பார்ப்பன ஜெயா கும்பல்  1,76,000 கோடி ரூபா அளவிற்கு தி.மு.க. ஊழல் செய்துவிட்டதாகப் புளுகுணி பிரச்சாரம் நடத்தி, தமிழக முதல்வர் பதவி என்ற அரசியல் ஆதாயத்தையும் அடைந்தது.

உச்ச நீதிமன்றம் உள்ளிட்டு ஊழலுக்கு எதிராக சவுண்டு விடுபவர்கள் அனைவரும் தனியார்மயத்தின் கீழ் நடக்கும் எல்லா ஊழல்களையும் கண்டு கொள்வதில்லை.  ஊழலை யார் செய்தார்கள் என்ற அடிப்படையிலும் எந்த ஊழலை எந்த அளவிற்கு அம்பலப்படுத்துவது என்பதையும், இந்த ஊழல் எதிர்ப்பு சவுண்டு பார்ட்டிகள் அரசியல் உள்நோக்கம், சுய இலாபம் கருதியே தீர்மானித்து அம்பலப்படுத்துகிறார்கள்.  மற்றபடி, இவர்கள் அனைவரும், தனியார்மயத்தின் உடன்பிறப்புகளான ஊழலையும், கார்ப்பரேட் பகற்கொள்ளையும் பொது நலன் என்ற போர்வையில் ஒரு கொள்கையாகவே வரித்துக் கொண்டுவிட்டனர்.

___________________________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012

___________________________________________________________

புன்னகை என்ன விலை?

2

காசு

__________________________

-ஷெரிப் அராஃபா
__________________________

தேவனின் திருச்சபை! மாபியாக்களின் கருப்பை!!

30

ஏசுநாதர்மூடப்பட்ட அந்தக் கழிவறையிலிருந்து ஒரு குழந்தையின் அழுகுரலும், அதனுடன் ஒரு பெண்ணின் விசும்பலும் கேட்டது. நாங்கள் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்த போது கண்ட காட்சி இதயத்தை நொறுக்குவதாய் இருந்தது. ஒரு கன்னியாஸ்திரி தனக்கு அப்போது தான் பிறந்திருந்த பச்சைக் குழந்தையை கழிவறையின் பீங்கான் கோப்பைக்குள்ளே திணித்துக் கொண்டிருந்தாள். குழந்தையின் கால்களிரண்டும் கோப்பையின் வெளியே துடித்துக் கொண்டிருந்தன. அந்த அறையின் தரையெங்கும் இரத்தத் துளிகள் …”

– கேரளத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரியான சகோதரி மேரி சாண்டியின் சுயசரிதையான “நன்ம நிறஞ்சவளே ஸ்வஸ்தி” எனும் நூலில் இருந்து…

67 வயதான மேரி சாண்டி பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பே தனது கன்னியாஸ்திரி வாழ்க்கையைத் துறந்து விட்டவர். சுமார் நாற்பதாண்டுகள் கத்தோலிக்கத் திருச்சபையில் கன்னியாஸ்திரியாக இருந்துள்ளார். அவரது 13வது வயதிலிருந்து துவங்கிய நெடும் பயணம் அது. நாற்பதாண்டு கால ‘இறைப்பணியில்’ தான் சந்தித்த அருவெறுப்பான தருணங்களை இப்போது தனது சுயசரிதையின் ஊடாக முன்வைத்துள்ளார்.

மேரியின் நூல் கேரள கத்தோலிக்கத் திருச்சபையில் மலிந்து விட்ட பாலியல் வன்கொடுமைகளைப் பற்றி மிக விரிவாகப் பேசுகிறது. பாதிரிமார்களால் வல்லுறவுக்குக் கட்டாயப்படுத்தப்படும் அப்பாவிக் கன்னியாஸ்திரிகளின் கதைகள் நம்மைத் திகைப்புக்குள்ளாக்குகின்றன என்றால், பாலியல் ரீதியிலான முறைகேடான உறவுகள், நிதி முறைகேடுகள் போன்றவற்றைப் பொது நியதியாக ஏற்றுக்கொண்ட பாதிரியார்கள் மற்றும் கன்னியாஸ்திரிகள் பற்றிய விவரணைகள் சாமானிய வாசகர்களுக்கு நிச்சயம் ஆச்சர்யமூட்டும்.

கேரளத்துக்கு வெளியிலிருக்கும் பொது வாசகர்களுக்கு வேண்டுமானால் இந்தக் கதைகளை அதிசயமாய்த் தோன்றலாம் – ஆனால், கேரளம் இவற்றையெல்லாம் பலமுறை கேட்டுப்  பழகிவிட்டது. இதற்கு முன்பே சகோதரி ஜெஸ்மியின் “ஆமென் – ஒரு கன்னியாஸ்திரியின் வாழ்க்கை வரலாறு” என்கிற நூலும், பாதிரியார் ஷிபு கலம்பரம்பிலின் “ஒரு வைதிகண்டே ஹ்ருதயாத்மா” என்கிற நூலும் இதே போன்ற விஷயங்களைக் கையாண்டுள்ளன.

இதில் ஜெஸ்மியின் “ஆமென் – ஒரு கன்னியாஸ்திரியின் தன் வரலாறு” இன்றளவும் திருச்சபையால் செரிக்க முடியாத கடப்பாறையாய் உருத்திக் கொண்டிருக்கிறது. அதிலிருந்து சில வரிகள் –

“நெருக்கியபடி என்னருகே உட்கார்ந்து கொண்ட அருட்தந்தை, மூச்சடைக்க வைப்பது போல என்னைப் பலமாகக் கட்டிப் பிடித்தார். அவரது பிடியிலிருந்து என்னை விடுவித்துக் கொள்ள  நான் முயற்சி செய்வதற்கிடையே என் மார்பகங்களைப் பற்றியபடி அவற்றைக் காட்டித் தரும்படிக் கேட்டார். என்னைப் பலவந்தமாகப் பிடித்து உட்கார வைத்து விட்டுக் கேட்டார்: ‘உன்னுடைய வாழ்க்கையில் இதுவரை நீ ஏதாவதொரு ஆண்மகனைப் பார்த்திருக்கிறாயா?’ இல்லையென்று தலையசைத்தேன். உடனே தன்னுடைய ஆடைகளைக் களைந்தார்” – பக்கம் 103.

ஜெஸ்மியின் நூல் வெளியான சமயத்தில் அது உண்டாக்கிய அதிர்வலைகள்  கேரளத்தில் மட்டுமல்ல, நாடெங்குமுள்ள கத்தோலிக்கர்களிடையேயும் எதிரொலித்தன.  கத்தோலிக்கத் திருச்சபை மலக்குட்டையில் மூழ்கித் திளைக்கும் ஆபாசக் காட்சிகள் ஜெஸ்மியின் நூலெங்கும் விரவிக் கிடந்தன. முகத்தில் வழிந்த மலத்தைத் துடைத்துக் கொண்ட திருச்சபை, ஜெஸ்மியை பைத்தியகாரி  என்றும், சூனியக்காரி என்றும் சாத்தானால் வழி நடத்தப்படுகிறாரென்றும் கதைகளைப் புனைந்து பார்த்தது. ஆயினும், இன்றளவும் அதில் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளின்  மேல் எந்த விசாரணையும் நடத்தவில்லை; அப்படியொன்றைச் செய்ய வேண்டும் என்கிற முனைப்பு கூட இல்லாத திமிர்த்தனத்தையே  திருச்சபை வெளிப்படுத்தியது.

ஜெஸ்மி மற்றும் மேரியின் நூல்களில் வருகின்ற மதகுருமார்கள் பலரும் எந்த தடுமாற்றமோ குற்றவுணர்வோ இன்றி பாலியல் முறைகேடுகளிலும், நிதி முறைகேடுகளிலும் ஈடுபடுவதும், அது கேள்விக்குள்ளாகும் போது அதிகார வர்க்கத் திமிருடன் கையாள்வதும் ‘நம்பிக்கை உள்ள’ கிருஸ்தவர்களிடையே கடும் அதிர்ச்சியைத்  தோற்றுவித்துள்ளன.

திருச்சபை எனும் மாபெரும் இயந்திரத்தினுள் மக்களுக்குச் சேவை செய்வது, இயேசுவின் சுவிசேஷத்தை பிரசங்கிப்பது என்கிற ‘தூய’ நோக்கங்களுக்காக நுழையும் ஜெஸ்மி, மேரி,  கலம்பரம்பில் போன்ற அப்பாவி ஆட்டுக்குட்டிகள் ஒரு கட்டத்தில் சகிக்க முடியாமல் வெளியேறியாக  வேண்டும் அல்லது அனைத்தையும் இயேசுவின் திருநாமத்தினாலே சகித்துக் கொண்டு இதயமற்ற அந்த இயந்திரத்தின் நட்டு போல்டுகளாய்ச் சுருங்கி விட வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்- வேறு வாய்ப்புகள் ஏதும் இவர்களுக்கில்லை.

திருச்சபை எனும் இந்த இயந்திரத்துக்கு அதிகளவில் உதிரிபாகங்களை சப்ளை செய்யும் பின்நிலமான கேரளத்திலிருந்து இது போன்ற நூல்கள் அதிகம் வெளியாவது புரிந்து கொள்ளத்தக்கதே. கேரளத்திலிருந்து மட்டும் சுமார் 1,85,000 பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் உருவாகியுள்ளனர். இதில் சுமார் 1,35,000 பேர் கேரளத்துக்கு வெளியே ‘தேவ காரியத்தில்’ ஈடுபட்டு வருகிறார்கள். கத்தோலிக்க திருச்சபை ஊழியர்களில் மட்டும் சுமார் 15 சதவீதம் மலையாளிகள் என்கிறது அவுட்லுக் பத்திரிகை அளிக்கும் புள்ளிவிவரம்.

சகோதரி மேரி சாண்டி
“பாவமன்னிப்பிற்காக பாதிரியிடம் போகாதீர்கள்” – சகோதரி மேரி சாண்டி

உலகளவில் நிறுவனமயப்பட்ட மதம் எனும் வகையில் கிருஸ்தவம் ஒரு பிரம்மாண்டமான இயந்திரமாய் இருக்கிறது. கத்தோலிக்கர்கள் மெத்தடிஸ்டுகள், லுத்தரன்கள் மற்றும் பெந்தெகொஸ்தே சபையினர் என்று சகல கிருஸ்தவ நிறுவனங்களையும் சேர்த்துக்  கணக்கிட்டால் இவர்களின் வருடாந்திர பட்ஜெட் சுமார் ரூ. 7.5 லட்சம்  கோடிகள். சுமார் 40 லட்சம் முழுநேர ஊழியர்களையும், 13,000 நூலகங்களையும், 22,000 பத்திரிகைகளையும், சுமார் 1800 தொலைக்காட்சி சேனல்களையும், 1500 பல்கலைக்கழகங்களையும், 930 ஆராய்ச்சி நிறுவனங்களையும் இவர்கள் நடத்துகிறார்கள். ஆண்டு தோறும் சுமார் 400  கோடி துண்டுப் பிரசுரங்களையும், நூல்களையும் வெளியிடுகிறார்கள்.

மக்களுக்குப் பதில் சொல்லத் தேவையில்லாத வரம்பற்ற அதிகாரமும், ஆளும் வர்க்கங்களுடனான நெருங்கிய ஐக்கியமும் காரணமாக இவர்கள் தங்களை இயேசுவுக்கும் மேலாக நிறுவிக் கொண்டுள்னர். தம் வாழ்நாளை ரோம சாம்ராஜ்ஜியத்துக்கு எதிரான கலகங்களோடும், தொழுநோயாளிகளோடும் கழித்து, யூதர்களிடையே சமூக சீர்திருத்தங்கள் கோரி, இறுதியாக சிலுவையில் மரித்துப் போன வெகுளித்தனமும், வெள்ளந்தித்தனமும் நிரம்பிய ஏசு எனும் வரலாற்று மனிதன் என்றோ ஒரு நாள் தனது பெயரால் இப்படியொரு மிருகத்தனமான நிறுவனம் எழுந்து நிற்கும் என்று கற்பனை செய்திருப்பானா?

ஐசுவரியவானை மறுத்து லாசருவுக்காகவும் – அதிகாரத்தை எதிர்த்து சாமானியர்களுக்காகவும் – வலுத்தவர்களைப் புறக்கணித்து எளியவர்களுக்காகவும் நின்ற ஒரு எளிய மனிதனான இயேசுவின் நாமத்தோடு பிற்காலத்தில் ‘கிறிஸ்து’ என்கிற வால் ஒட்டிக்கொண்டதைத் தொடர்ந்த ஈராயிரம் ஆண்டுகளின் வளர்ச்சி இது.

மூன்றாம் உலக நாடுகளில் கிருஸ்தவர்களின் சமூக வாழ்க்கை கிருஸ்தவ மத நிறுவனங்களோடு தவிர்க்கவியலாதபடி பின்னிப் பிணைந்துள்ளது. அவர்களின் பிறப்பு, வாழ்வு, திருமணம், இறப்பு என்று சகலத்திலும் திருச்சபை நேரடியாகத் தலையிடுகிறது.

பதினான்காண்டுகளுக்கு முன்பே திருச்சபையிலிருந்து விலகும் மேரி சாண்டி, சொந்தமாய் ஒரு ஆதரவற்றோர் இல்லத்தை நடத்த முற்படுகிறார். திருச்சபை தொடர்ச்சியாக அவருக்கு இடைஞ்சல்களை உருவாக்குகிறது.  அவருக்கு கிருஸ்தவர்கள் எவரும் வீடு அளிக்க முடியாதபடி செய்கிறது. ஒரு சில மாதங்களுக்கு ஒரு முறை ஆதரவற்ற அந்தக் குழந்தைகளோடு இடம் விட்டு இடம் மாறவேண்டிய சூழலை உருவாக்குகிறது. ஜெஸ்மியையும், ஷிபு கலம்பரம்பிலையும் அவர்களது குடும்பத்தாரே புறக்கணிக்கும்படி செய்துள்ளது. திருச்சபையின் வழிகாட்டுதல்களை மீறும் எவருக்கும் புதைக்கச் சுடுகாடு கூட கிடைக்காது என்பதால், அந்தத் தடிக்கம்பின் அதிகாரத்திலிருந்து விசுவாசிகளை எப்பேர்ப்பட்ட தேவனாலும் காப்பாற்றமுடிவதில்லை.

கத்தோலிக்கத் திருச்சபை போன்ற கார்ப்பரேட் பாணியில் மையப்படுத்தப்பட்ட நிறுவனமாக இல்லாமல், குடிசைத் தொழில்  போன்று ஆங்காங்கே பரவியுள்ள பெந்தெகொஸ்தே சபைகளிலும்  இவாஞ்சலிக்கல் ஊழியங்களில் ஈடுபடும் கிருஸ்தவ நிறுவனங்களிலும் அதிகார பீடங்களில் இருப்பவர்களின்  மீதான குற்றச்சாட்டுகள் இதே போலத்தான் கையாளப்படுகின்றன.

வின்சென்ட  செல்வகுமார் தமிழ்நாட்டின் பெந்தெகொஸ்தே வட்டாரங்களில் பரவலாக அறியப்பட்ட ஊழியக்காரர். அவர் கிருஸ்தவ ஊழியத் தொழிலைத் துவங்கிய காலத்திலிருந்து அவருடன் உடனிருந்த சொந்தக்காரர்களே சமீபத்தில் அவரிடமிருந்து விலகி வந்ததோடு, அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தனர். அவரது சொந்த வளர்ப்பு மகனே முன்னின்று குற்றம் சாட்டியிருந்தார். தனது ஆதரவாளர்களிடையே கையும் மெய்யுமாகப் பிடிபட்ட நிலையிலும், தன் மீதான குற்றச்சாட்டுகளை எளிதில் புறம் தள்ளிய வின்சென்ட், ஏஞ்செல் தொலைக்காட்சியில் தோன்றி அதற்கு சப்பைக்கட்டுகளை முன்வைத்துப் பேசியுள்ளார்.

இது இந்தியாவுக்கு மட்டுமேயான பிரத்யேகமான அணுகுமுறை இல்லை – உலகெங்கும் இதே போன்ற அணுகுமுறைகளைத் தான் திருச்சபைகள் பின்பற்றி வருகின்றன.

கிருஸ்தவ மதம் ஆளும் வர்க்க நிறுவனமாக மாறியது தொட்டு,  நாளது வரையிலான நீண்ட வரலாற்றுக்கு இணையாக அந்த நிறுவனங்களுக்கு உள்ளே நடந்த முறைகேடுகளின் வரலாறும் உள்ளது. கள்ளக் காதலில் இருந்து நிதிமுறைகேடுகள் வரை நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளைச் சுமந்து கொண்டே பரமண்டலத்திற்குள் நுழைந்த போப்பாண்டவர்களின் பட்டியல் மிக நீண்டது. இந்தப் பட்டியலில் சமீபத்திய  சேர்க்கை வாத்திகன் அரச வங்கியில் போப்பின் நேரடிப் பார்வையின் கீழ் நடந்த மாபெரும் நிதி மோசடி.

ஐரோப்பா மற்றும் உலகமெங்கும் இயங்கும் கிரிமினல் கும்பல்களுக்கும், நிழலுலக மாஃபியா கும்பல்களுக்கும் பணப்பரிவர்த்தனை மையமாக வாத்திகன் வங்கி திகழ்ந்துள்ளது. தற்போது நிழல் உலகத் தொடர்பு மற்றும் வெளிப்படைத்தன்மையின்மை உள்ளிட்ட காரணங்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கருப்புப் பண சுழற்சிக்கு எதிரான அமைப்பு (Financial action Task force on Money laundering) வாத்திகன் வங்கியைக் கருப்புப் பட்டியலில் வைத்துள்ளது. மாஃபியாக்களின் வங்கி என்றே அறியப்படும் வாத்திகன் வங்கியின் பெயர் – “மத நடவடிக்கைகளுக்கான நிறுவனம்” (The institue for the works of the religion)

சுமார் 6 பில்லியன் நிதிக் கையிருப்பைக் கொண்டுள்ள இந்த வங்கி, 2010ஆம் ஆண்டு மட்டும் சுமார் 55 மில்லியன் யூரோக்களை போப்புக்கு இலாபமாக ஈட்டிக் கொடுத்துள்ளது.  கடந்த மார்ச் மாதம் வாத்திகன் அரசாங்கத்தின் இரகசியமான ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜியான்லுகி நுஸ்ஸி என்பவர் “பதினாறாம் பெனடிக்டின் இரகசிய ஆவணங்கள்” எனும் தலைப்பில் விரிவான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். தற்போது மேற்குலகில் போப்பின் திருட்டுத்தனங்களும் சூடான தலைப்புகளில் ஒன்றாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

விவகாரம் இந்தளவுக்கு முற்றி முடைநாற்றமெடுக்கத் துவங்கிய பின்னும் கூட, நிதி மோசடியின் மூலகர்த்தாவான  போப்பிடமோ அவருக்கு அடுத்த நிலையிலிருப்பவர்களிடமோ எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை. மாறாக, நுஸ்ஸியிடம் அரசாங்கத்தின் இரகசிய ஆவணங்களைக் கொடுத்தது யார் என்கிற கோணத்தில் விசாரித்து வரும் வாத்திகன் போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் போப்பின் சமையல்காரரைக் கைது செய்துள்ளனர்.  மதம்  நேரடியாக ஆட்சி அதிகார பீடத்தில் அமர்ந்தால் காட்சிகள் எப்படியிருக்கும் என்பதற்கு வாத்திகனே சாட்சி – இங்கே போப்பாண்டவரே முகமூடியணிந்த திருடனாகவும், சீருடையணிந்த போலீசாகவும், அங்கியணிந்த நீதிபதியாகவும், ஒளிவட்டம் பொருத்திய மீட்பராகவும் சகல பாத்திரங்களிலும் களமிறங்கிக் கலக்குகிறார்.

பாதிரியார் ஷிபு கலம்பரம்பில்
12 வருடங்களுக்குப் பிறகு திருச்சபையிலிருந்து விலகுகிறார் பாதிரியார் ஷிபு கலம்பரம்பில்.

நிறுவனத்தின் பிரமாண்டமும், அந்த பிரமாண்டம் அளிக்கும் மமதையும், ஆளும் வர்க்கத்தோடான நெருக்கமும், அந்த நெருக்கம் அளிக்கும் அதிகாரமும், கேள்வி முறையின்றிப் பின்பற்ற கையறு நிலையிலிருக்கும் மக்கள் கூட்டமும் மத பீடங்களைத் தரையிலிருந்து ஒரு சில அடிகளுக்கு மேல் மிதக்க வைக்கிறது.

சகல திசைகளிலும் சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளால் தாக்கப்படும் மக்கள் ஜனநாயக உணர்வற்ற விசுவாசிகளாய், அநீதியை எதிர்த்துப் போராடுவதற்குப் பதிலாக, தேவ விசுவாசத்தின் ஊடாய் சகலத்தையும் சகித்துக் கொண்டு செல்பவர்களாய் பயிற்றுவிக்கப் படுகிறார்கள். தொட்டறியத்தக்க பொருளாதாயக் காரணிகளை முன்னிட்டு ஏற்படும் பாடுகளைச் சகித்துக்கொண்டு,  தேவ சமூகத்தில் கண்ணீர் மல்க பிரார்த்திப்பதே மேன்மை என்பதாக கற்றுத் தரப்படுகிறார்கள். அதுவே  தியாகம் என்பதாகப் புரியவைக்கப் படுகிறார்கள். கையறு நிலையில் நிர்க்கதியாய் நிற்கும் மக்களின் அறியாமையே மத நிறுவனங்களின் திமிருக்கு விளைநிலமாய் இருக்கிறது.

இது ஒரு விநோதமான உலகம். இங்கே கொலைகாரனே ஜீவகாருண்யவாதி. திருடனே மீட்பன். கொள்ளைக்காரனே வள்ளல். நாலாந்தர பொறுக்கி தான் முதல்தர ‘போதகர்’. இந்த உலகத்துக்குள் இயேசுவின் ‘அழைப்பை’ ஏற்று நுழையும் மேரி சாண்டி, ஜெஸ்மி போன்றவர்கள் எதார்த்தத்தை பிரத்யட்சமாய்த் தரிசிக்கும் அந்தத் தருணங்கள் எப்படியிருந்திருக்கும்? இது தான் அறம் என்று அவர்கள் நம்பிய விழுமியங்கள் சில்லுச் சில்லாக நொறுங்கித் தகர்ந்து விழும்போது எப்படி உணர்ந்திருப்பார்கள்? அதை அவர்களது வாழ்க்கை வரலாற்று நூல் விரிவாகச் சொல்கிறது.

அவுட்லுக் பத்திரிகைக்கு பேட்டியளிக்கும் மேரி, அதன் இறுதியில் இவ்வாறு சொல்கிறார் –

“பல  நல்ல பாதிரியார்களும், கன்னியாஸ்திரிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள் – அதே நேரத்தில் தவறானவர்களும் இருக்கிறார்கள். நான் சர்ச்சுக்குச் செல்லும் இளம் கத்தோலிக்கப் பெண்களுக்குச் சொல்லிக் கொள்வது இது தான், உங்கள் பாவ மன்னிப்பை எந்தப் பாதிரியிடமும் அறிக்கையிடாதிருங்கள்..”

தனது சொந்த அனுபவத்தின் காரணமாக, இளம் பெண்கள் கத்தோலிக்கத் திருச்சபையை நம்பவேண்டாம் என்கிறார் மேரி. சாதி ஆதிக்கம் நிறைந்திருக்கும் திருச்சபையை தலித்துகள் நம்பவேண்டாம் என்று தமது சொந்த அனுபவத்திலிருந்து ஒரு தலித் பாதிரியார் கூறக்கூடும். கருப்பின மக்கள் வெள்ளையினப் பாதிரியை நம்பவேண்டாம் என்று கருப்பினப் பாதிரி சொல்லுவார். திருச்சபைக்கு சொந்தமான நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் நிர்வாகத்திலிருக்கும் பாதிரிகளை நம்பவேண்டாம் என்று எச்சரிக்கை செய்வார்கள்.

இந்தப் பட்டியல் நீண்டு கொண்டே போகும். மேரி அல்லது ஜெஸ்மியைப் பொருத்தவரை பாலியல் முறைகேடுகளில் ஈடுபடாமல், துறவு நிலை பேணும் பாதிரிகளும் கன்னியாஸ்திரீகளும் நல்லவர்களே. ஒழுக்கம், அறம் என்பனவற்றை பாலியல் ஒழுக்கம், நிதிக் கையாடல் செய்யாமை போன்ற குறிப்பிட்ட சில பண்புகளோடு மட்டுமே தொடர்பு படுத்திப் பார்ப்பதும், திருச்சபை உள்ளிட்ட ஒரு நிறுவனத்தின் யோக்கியதையை, அந்நிறுவனத்தில் இருக்கும் குறிப்பிட்ட சில நபர்களின் குணநலன்களை மட்டுமே வைத்து மதிப்பிடுவதும்தான் இதில் மையமான பிரச்சினை.

ஒழுக்கம், அறம் குறித்த கோட்பாடுகளின் சமூகப் பாத்திரத்தை விலக்கி விட்டு, அதாவது அவற்றின் பின்னால் ஒளிந்திருக்கும் வர்க்க நலனை மறைத்துக் கொண்டு, முடிந்தவரை அவற்றைப் பூடகமாக்குவதன் மூலம், வர்க்க சுரண்டலுக்கு நியாயம் கற்பிப்பதுதான் மத நிறுவனங்கள் ஆற்றிவரும் பாத்திரம்.

தமது கோடானு கோடி விசுவாசிகள் பஞ்சப்பராரிகளாய், பன்றிகள் மேயும் குடிசைகளுக்குள் உழலும் போது, அவர்களுக்காய் தேவ சமூகத்தில் கண்ணீர் மல்க மன்றாடுவதாய்ச் சொல்லிக் கொள்ளும் திருச்சபைப் பாதிரிகள் வாழும் வாழ்க்கை எத்தகையது? ஒரு சாதாரண சி.எஸ்.ஐ பாதிரியின் துவக்க சம்பளமே சுமார் முப்பதாயிரம். தங்குமிடம் இலவசம், உண்ணும் உணவு இலவசம். மனைவிக்கு வேலை, பிள்ளைகளின் ஆரம்பக் கல்வியிலிருந்து உயர்கல்வி வரை இலவசம், மருத்துவச் செலவுகளை விசுவாசிகள் கவனித்துக் கொள்வார்கள் – இதற்கும் மேல் வரும்படியாகத் தனிப்பட்ட ஜெபக் கூட்டங்களில் வசூலாகும் தொகையும் இவர்களுக்கே. கத்தோலிக்கப் பாதிரியார்களின் வாழ்க்கை வசதிகளைப் பற்றிச்  சொல்லவே வேண்டியதில்லை.

இவர்களுக்குப் படியளக்கும் மக்கள் வறுமையிலும், துன்பத்திலும் உழன்று கொண்டிருக்கும் போது பாதிரிமார்கள் உல்லாச வாழ்க்கை வாழ்வது தீயொழுக்கம் என்று கூறி எந்த யாரும் திருச்சபைகளில் இருந்து வெளியேறியதில்லை. ஏனென்றால் அந்த உல்லாச வாழ்க்கையை அறம் கொன்ற செயலென்று அவர்கள் யாரும் கருதியதில்லை, அவ்வாறு கற்பிக்கப் பட்டதுமில்லை.

போப்பாண்டவரின் வங்கி மோசடியைப் பற்றியும், அவர்கள் கடந்த காலங்களில் கள்ளக்காதல்களில் ஈடுபட்ட கிசுகிசுக்களையும் எழுதி மாயும் ஐரோப்பிய ஊடகங்கள், இரண்டாம் உலகப் போரின்போது பாசிசத்தை திருச்சபை ஆதரித்து நின்றதும், பற்றியும், இன்று அமெரிக்காவின் ஆக்கிரமிப்புப் போர்களை மவுனமாக அங்கீகரிப்பதும் அறம் கொன்ற செயல் என்று சாடுவதில்லை.

இன்றைய உலகமே போராட்டங்களின் உலகமாய் இருக்கிறது. அமெரிக்காவின் வால் வீதியில் துவங்கி ஸ்பெயினின் தெருக்களிலும், கிரீஸின் நகரங்களிலும் மக்கள் தங்களைச் சூறையாடும் உலக முதலாளித்துவத்தை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். இந்தியாவில் அந்நிய முதலீட்டை எதிர்த்து வணிகர்கள், கல்வி தனியார்மயத்தை எதிர்த்து மாணவர்கள், விளைச்சலுக்கு விலை கேட்டு விவசாயிகள், வாழ்விடங்கள் ஆக்கிரமிக்கப்படுவதை எதிர்த்து பழங்குடியினர், அணுவுலையை எதிர்த்து மீனவர்கள் என்று திரும்பிய திசைகளிலெல்லாம்  போராட்டம் நடந்து கொண்டேயிருக்கிறது.

இந்தப் புவிப்பரப்பே மக்களின் வாழ்க்கைக்கான போராட்டங்களினால் கொதிநிலையிலிருக்கும் போது திருச்சபைகள் என்ன செய்து கொண்டிருக்கின்றன? யார் பக்கம் நிற்கின்றன? தங்களது சொத்துகளையும் சுகபோக வாழ்க்கையையும் காப்பாற்றிக் கொள்வதற்காக, அவற்றைத் தமக்கு அருளிய ஆளும் வர்க்கங்களின் அயோக்கியத்தனங்களை நியாயப்படுத்துகின்றன அல்லது மறைக்கின்றன தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாக்கா பரலோகம் மட்டும்தான் என்பது போலவும், இகலோகப் பிரச்சினைகளில் தங்களுக்குத் தொடர்பில்லாதது போலவும் பம்மாத்து செய்கின்றனர்.

ஒழுக்கம் என்பதை தனிநபர் விவகாரமாகச் சுருக்கி, அந்த ஒழுக்கத்தின் வாழ்விடத்தையும் தொடையிடுக்குகளுக்குள் சுருக்கி, துறவு என்ற ஒற்றைப் பரிமாணத்துக்குள் அடக்கி, அந்தத் துறவுக்கு, கண்கள் கூசுமளவுக்கு ஓர் ஒளிவட்டத்தை உருவாக்கிக் காட்டுவதன் நோக்கமே, மத நிறுவனங்களின் இருண்ட பக்கத்தை மறைப்பதுதான். இந்த இருட்டுக்குள்ளே தான் மேரி குறிப்பிடும் ‘நல்லவர்கள்’ உலவுகிறார்கள். இது கத்தோலிக்க திருச்சபைக்கு மட்டுல்ல, எல்லா மதங்களுக்கும் பொருந்தும்.

படங்கள் நன்றி: அவுட்லுக்

________________________________________

– புதிய கலாச்சாரம், அக்டோபர் – 2012
_____________________________________________

இடம்பெயரும் தொழிலாளிகள்: இனவெறியர்களின் வெறுப்பரசியல்!

15

இடம்பெயரும் தொழிலாளர்கள்:
இனவெறியர்களின் பீதியூட்டலும் பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேசியமும்!

சென்னையில், அடிப்படை வசதிகளின்றித் தகரக் கொட்டகையில் வாழ வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டுள்ள வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள்
சென்னையில், அடிப்படை வசதிகளின்றித் தகரக் கொட்டகையில் வாழ வேண்டிய அவலத்தில் தள்ளப்பட்டுள்ள வடமாநில கட்டுமானத் தொழிலாளர்கள்

நீண்ட தகரக் கொட்டகை. அதில் ஆறடிக்கு நாலடியில்  சிறிய அறைகள். அறை முழுவதும் பாகள் விரிக்கப்பட்டிருக்கின்றன. ஓரத்தில் சூட்கேஸ்கள் தலையணையாக உள்ளன. சுவரில் ஆணியில் தொங்கும் சட்டைகள், பேண்டுகள். இது நான்கு பேர் தங்கும் அறை. இதுபோல் அடுத்தடுத்து பல அறைகள். வெளியே அனைவருக்கும் குளிக்க ஒரு பெரிய தொட்டி. சுகாதாரமற்ற கழிப்பறைகள். கழிவுநீர் அப்பகுதியில் சாக்கடையாகத் தேங்கி நிற்கிறது.  இவைதான் வடமாநிலங்களிலிருந்து வந்து சென்னையில் வானுயர்ந்த கட்டிடங்களை எழுப்பும் கட்டுமானத் தொழிலாளர்கள் தங்கியிருக்கும் வாழ்விடங்கள்.

கால்களை நீட்டிப் படுக்கக்கூட இடமில்லாமலும், இரவு முழுவதும் கொசுக்கடியால் அவதிப்பட்டும் உறங்கும் அவர்கள், காலையில் ஒப்பந்ததாரர்களால் கட்டுமானப் பணி நடக்கும் இடங்களுக்கு லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறார்கள். சென்னையைச் சுற்றி பெருங்குடி, பள்ளிக்கரணை, சோழிங்கநல்லூர், பெருங்களத்தூர், தாம்பரம், திருவான்மியூர் ரயில் நிலயத்தை ஒட்டிய பகுதி முதலான பல இடங்களிலும் கட்டுமானத் தொழிலாளர்கள் இப்படித்தான் வாழ்கிறார்கள்.

அடிப்படை வசதிகள் இல்லாத  சுகாதாரமற்ற சூழலால் இவர்களில் பலர் நோய்வாய்ப்படுகின்றனர். அண்மையில் சென்னையில் வட மாநிலத் தொழிலாளர் இரண்டு பேர்  வாந்தி-பேதியால் மாண்டு போயுள்ளனர். எல்லாவற்றுக்கும் மேலாக, இவர்களுக்குப் பணியாற்றுமிடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளோ, அவசர மருத்துவ சிகிச்சைக்கான ஏற்பாடுகளோ கிடையாது. சென்னை ஜேப்பியார் கல்லூரி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்த வடமாநிலத் தொழிலாளர்கள் கட்டிடம் சரிந்து விழுந்து உயிரோடு கொல்லப்பட்டனர். ஓமலூர் தவிட்டுக் கம்பெனியில் தீயில் வெந்து வடமாநிலத் தொழிலாளிகள் மாண்டு போயினர். இத்தகைய அவலங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

விவசாயத்தின் அழிவும் தீவிரமாகும் உலகமயமாக்கமும் நாடெங்கும் கிராமப்புற இளைஞர்களை வாரிக்கொண்டுவந்து பெருநகரங்களில் குவித்துக் கொண்டிருக்கிறது. 2007-08 ஆம் ஆண்டின் தேசிய மாதிரி கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் ஏறத்தாழ 30 சதவீத மக்கள், இடம் பெயரும் உழைக்கும் மக்களாக உள்ளனர். கடந்த 2001-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, ஏறத்தாழ ஒரு கோடியே 70 லட்சம் பீகாரிகள் இடம் பெயர்ந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் பஞ்சாப், டெல்லி, மகாராஷ்டிரா, அரியானா மாநிலங்களில் கூலித் தொழிலாளர்களாகக் குடியேறியுள்ளனர். இடம் பெயர் தொழிலாளர்களின் மையமாக மும்பை நகரம் மாறியுள்ளது. இங்கு இடம் பெயர்ந்த உழைக்கும் மக்களாக ஏறத்தாழ ஒரு கோடிக்கும் மேலானோர்  உள்ளனர்.

கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்மாநிலங்களிலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்
கடந்த ஆகஸ்டு மாதத்தில் தென்மாநிலங்களிலிருந்து உயிருக்கு அஞ்சி வெளியேறும் வடமாநிலத் தொழிலாளர்கள்

தமிழகத்தில் ஏறத்தாழ 10 முதல் 15 இலட்சம் பேர் இடம் பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். ஆந்திரா, அசாம், பீகார், சட்டிஸ்கர், ஒரிசா, உ.பி. மணிப்பூர், மிஜோரம் முதலான மாநிலங்களிலிருந்து இடம் பெயர்ந்த இக்கட்டுமான கூலித் தொழிலாளர்களுக்கு 12 மணி நேர வேலைக்கு 150 முதல் 300 ரூபாய் வரை ஊதியமாகத் தரப்படுகிறது. இவர்கள் தவிர, நாளொன்றுக்கு ரூ.100,150 கூலியுடன்  தமிழகத்தின்  உணவு விடுதிகள் – தேநீர்க்கடைகளில் பல இளைஞர்கள் பணியாற்றுகின்றனர்.

பல ஆண்டுகளாக இவர்கள் தமிழகத்தில் தங்கியிருந்த போதிலும், இவர்களுக்கு அடையாள அட்டை எதுவும் ஒப்பந்ததாரர்களால் வழங்கப்படுவதில்லை. தொழிலாளர்களுக்கு கேன்டீன், குழந்தைகள் காப்பகம், குடிநீர், கழிவறை முதலான வசதிகளைச் செய்து தர வேண்டியது முதலாளிகளின் கடமையாகும். அல்லது ஒப்பந்ததாரர்கள் அவற்றைச் செய்ய வேண்டும். மாநில அரசு அதனைக் கண்காணித்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஆனால், குறைந்த பட்ச கூலி உள்ளிட்டு இந்த அடிப்படை வசதிகள் எதுவும் நடைமுறைப்படுத்தப்படாத போதிலும் அரசு கண்டுகொள்வதில்லை. இடம் பெயரும் தொழிலாளர்கள் சட்டபூர்வக் கூலியைக்கூட கேட்க முடியாத, அதைப் பற்றி அறிந்திராத நிலையிலேயே உள்ளனர். அவர்களை அமைப்பாக்கி தொழிற்சங்கம் கட்டக்கூட விடாமல்  முதலாளிகளும் ஒப்பந்ததாரர்களும் மூர்க்கமாகத் தடுத்து வருகின்றனர்.

இத்தகைய இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு, தேர்தல் நேரத்தில் தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்த முடியாத நிலைமையே நீடிக்கிறது. அது பொதுத் தேர்தலாக இருந்தாலும் உள்ளாட்சித் தேர்தலாக இருந்தாலும் அவர்களால் தங்கள் பகுதிக்குச் சென்று வாக்களிக்க முடிவதில்லை. ஆனால், இது பற்றி தேர்தல் ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை.

இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு அரசின் பொது விநியோகத் திட்டத்தின் கீழான உணவுப் பொருட்கள் இடம் பெயர்ந்த இடத்தில் வழங்கப்படுவதில்லை. ஏனெனில், அவர்கள் தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ள இடத்திற்கான ஆதாரத்தைப் பெற வேண்டியிருக்கிறது. அப்படி ஒருவேளை பெற்றாலும், அந்த இடத்தில் வேலை நிரந்தரமில்லாததால், அடுத்தடுத்து வேறிடத்துக்கு மாறிச் செல்ல வேண்டியிருக்கிறது. அங்கும் ஆதாரத்தைப் பெற வேண்டியிருக்கிறது. இது தீராத நச்சுச் சுழலாக இருப்பதால் இடம் பெயரும் உழைக்கும் மக்கள் தாங்கள் செல்லுமிடங்களுக்கு ஏற்ப ஒவ்வொரு முறையும் ஆதாரத்தைப் பெற முடியாமல் தவித்து நிற்கின்றனர். இதனால் அவர்கள் வறுமைக் கோட்டுக்கு மேலுள்ளவர்கள் வாங்குவதைப் போலவே, தனியார் அங்காடிகளில் உணவுப் பொருட்களைக் கூடுதல் விலைக்கு வாங்க வேண்டியதாகி, தொடர்ந்து ஏழ்மை நிலையிலேயே உள்ளனர்.

இடம் பெயரும் உழைக்கும் மக்களுக்கு இலவசப் போக்குவரத்து, குடியிருப்பு, வேலைவாப்பு, மருத்துவம், அவர்களது குழந்தைகளுக்கான கல்வி முதலான அடிப்படை வசதிகளைச் செதுதர வேண்டும் எனத் தொழிற்சங்கங்களும், தன்னார்வக் குழுக்களும்,  சில அறிவுத்துறையினரும் அவ்வப்போது குரலெழுப்பிய போதிலும்,  அரசும் முதலாளிகளும் அதை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அரசின் கொள்கை வகுப்பாளர்கள் இவர்களைப் பற்றி அக்கறை காட்டுவதில்லை. இதனால் ஏற்படும் சமூகக் கொந்தளிப்புகளைப் பற்றிய தொலைநோக்குப் பார்வையோ, தீர்வோ அவர்களிடம் இல்லை.

இடம் பெயர்ந்த பீகாரி கூலித் தொழிலாளியை சுற்றிவளைத்துத் தாக்கும் இனவெளி பாசிச ராஜ் தாக்கரே குண்டர்களின் அட்டூழியம்
இடம் பெயர்ந்த பீகாரி கூலித் தொழிலாளியை சுற்றிவளைத்துத் தாக்கும் இனவெளி பாசிச ராஜ் தாக்கரே குண்டர்களின் அட்டூழியம்

இந்திய அரசின் அடிப்படை உரிமைகள் சட்டத்தின் 19(1) பிரிவு ‘டி’ மற்றும் ‘இ’ யின் படி, எந்த ஒரு குடிமகனும் நாட்டின் எந்தப் பகுதிக்கும் இடம் பெயரவும் அப்பகுதியில் தொடர்ந்து வாழவும் உரிமை உள்ளது. இருப்பினும், கடந்த 2008-ஆம் ஆண்டில் மும்பை, புனே, நாசிக் நகரங்களில் பிழைப்புக்காகக் குடியேறிய உ.பி. பீகார் மாநிலக் கூலித் தொழிலாளிகள் மீது மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா நடத்திய வன்முறைத் தாக்குதலால் வட இந்திய உழைக்கும் மக்கள் மும்பையை விட்டுத் தப்பியோடிய அவலம் நடந்தது. அண்மையில் வட மாநிலங்களைச் சேர்ந்த ரிச்சர்டு லோயிதம் பெங்களூரிலும், தனா சங்மா குர்கானிலும் கொல்லப்பட்டுள்ளனர். வடகிழக்கு மாநிலங்களிலிருந்து பிற மாநிலங்களில் கல்விக்காகவும் பிழைப்புக்காகவும் குடியேறும் மக்களைத் தாக்குவதும் இழிவுபடுத்துவதும் தாழ்த்தப்பட்டோருக்கு எதிரான வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மைய அரசின் உள்துறை அமைச்சகம் எச்சரிக்கிறது. ஆனால், எந்த மாநில அரசும் இதனைப் பொருட்டாக மதிப்பதேயில்லை.

தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாதிக்கக் கொள்கையானது, உழைக்கும் மக்களின் பெருந்திரளான இடம் பெயர்தலையும் சமூகத்தில் முறுகல் நிலையையும் தோற்றுவித்துள்ளது. விவசாயத்தின் அழிவும், அதில் முதலீடற்ற நிலையும், திணிக்கப்படும் ஏகாதிபத்திய உலகமயமாக்கமும் இப்பிரச்சினையை மேலும் தீவிரமாக்கி வருகிறது. விவசாயத்தை விட்டு உழைக்கும் மக்கள் பெருந்தொகையில் நகரங்களில் குவிவதையும், தேவையேயில்லாமல் உழைக்கும் மக்களை விசிறியடித்து அலைக்கழிக்கப்பதையும் உலகமயமாக்கம் மூர்க்கமாகச் செது கொண்டிருக்கிறது. அற்பக்கூலியுடன் உரிமைகளற்ற அடிமை நிலையில் வாழும் இம்மக்கள், எஸ்.எம்.எஸ். பீதியால் உயிருக்கு அஞ்சி ஓட வேண்டிய அவலத்தைப் போன்று, எந்நேரமும் தாக்கப்படலாம் என்ற அச்சத்தில்தான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. ஆக்கிரமிப்பாளர்களாகக் காட்டி இடம் பெயரும் தொழிலாளர்கள் மீது இனவெறி, சமூகப் புறக்கணிப்பு, பாலியல் தாக்குதல்கள், அச்சுறுத்துவது, விரட்டுவது, பொய்வழக்கு போடுவது, கைது செய்வது, கொள்ளையர்களாகச் சித்தரித்து சுட்டுக் கொல்வது – என்பதாக நிலைமைகள் தீவிரமாகி வருவதால், வரப் போகும் காலம் மிகவும் சிக்கலாகவே இருக்கும் என்று சில முதலாளித்துவ அறிஞர்களே ஒப்புக் கொள்கின்றனர்.

கூலித் தொழிலாளிகளாகப் பெரு நகரங்களில் குவியும் இடம் பெயரும் தொழிலாளர்கள் யாருடைய வாழ்வையும் பறிப்பதற்காக வந்தவர்கள் அல்ல. இருப்பினும், வடகிழக்கிந்தியர்களை அந்நியர்களாகப் பார்க்கும் மனோபாவம்தான் சமுதாயத்தில் நிலவுகிறது. அவர்கள் வேலை வாப்பைப் பறித்துக் கொள்கிறார்கள், அவர்களால் சமூகத்தின் ஒழுங்கு சிதைகிறது என்றெல்லாம் இனவெறியர்களால் இட்டுக்கட்டப்பட்ட பிரச்சாரத்துக்கு மக்கள் எளிதில் பலியாகியாகிறார்கள். அசாமில் நடந்துள்ள வன்முறை வெறியாட்டங்களும், அதைத் தொடர்ந்து வடகிழக்கிந்திய மக்கள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து பெருந்திரளாக வெளியேறியதும்,  பிழைப்புக்காக நாட்டுக்குள்ளேயே நடக்கும் குடியேற்றங்களும் இன ரீதியான வன்மத்தை மக்களிடையே மௌனமாக வளர்த்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் ஏற்கெனவே நீடித்துவரும் சாதி, மத, இன முரண்பாடுகளும் வேலையின்மை, விலையேற்றம் முதலான பிரச்சினைகளும் தீராத நிலையில், இடம் பெயர் தொழிலாளர்கள்தான் இவையனைத்துக்கும் காரணம் என்பதாக வெறியூட்டப்பட்ட நிலையில்தான் நமது சமூக அமைப்பு உள்ளது.

வெளி மாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்பாட்டம்
வெளி மாநிலத்தவருக்குக் குடும்ப அட்டை தரக்கூடாது எனக் கோரி த.தே.பொ.கட்சியின் இளைஞர் அமைப்பினர் சென்னையில் நடத்திய ஆர்பாட்டம்

கடந்த 2008-ஆம் ஆண்டில் வட இந்திய மாணவர்கள் ரயில்வே நுழைவுத் தேர்வு எழுத மும்பை வந்த போது இனவெறி பிடித்த ராஜ்தாக்கரேவின் குண்டர்களால் தாக்கி விரட்டப்பட்டனர். மும்பையில் டாக்சி ஓட்டுநர்களான பீகாரிகள் அடுத்தடுத்து தாக்கப்படுகின்றனர். ஆனால், இடம் பெயர்ந்த தொழிலாளர்கள் இல்லாமல் மும்பை ஒருநாள் கூட இயங்க முடியாது என்பதே உண்மை. டாக்சி ஓட்டுநர்கள், காய்கறி வியாபாரிகள், பால்காரர், செய்தித்தாள் போடுபவர், டெலிவரி பையன்கள் எனப் பலதரப்பட்ட வேலைகளைச் செய்பவர்கள் வடகிழக்கு மாநிலத்தவர்கள்தான். இவர்களில் பெரும்பாலோர் பீகார், உ.பி. முஸ்லிம்களாக இருப்பதால், இவர்களால் மராத்தியர்களின் வாழ்வும் வளமும் பண்பாடும் நாகரிகமும் நாசமாகிவிட்டதாகவும்,  இவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் குற்றம் சாட்டி வெறியூட்டி வருகிறது ராஜ்தாக்கரே கும்பல். தமிழகத்தின் மணியரசன் கும்பலோ, தமிழகத்தில் பிழைப்புக்காகக் குடியேறியுள்ள வடமாநிலத் தொழிலாளர்களை வெளியேற்ற வேண்டுமென்று வெறியூட்டுகிறது.

பொதுவில் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் ராஜ்தாக்கரே அளவுக்கு வன்மத்தைக் காட்டாதபோதிலும், தமது ஓட்டு வங்கிக்காக இதே பாணியில்தான் செயல்படுகின்றன. காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்களில் குறுகிய இனவெறியூட்டி அரசியல் ஆதாயமடையும் நோக்கில்தான் கர்நாடகா மற்றும் கேரளத்தின் அனைத்து ஓட்டுக் கட்சிகளும் செயல்படுகின்றன. ஆனால், உழைக்கும் மக்களின் இன, மொழி, பண்பாட்டு அடையாளங்களைத் தகர்த்துக் கொண்டிருப்பதும், வேலையின்மை, விலையேற்றம் முதலானவற்றுக்குக் காரணமாக இருப்பதும் ஏகாதிபத்திய உலகமயமாக்கம்தான். ஒருபுறம் தரகுப் பெருமுதலாளிகளும், புதிய தரகு வர்க்கங்களும், பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களும் கொழுப்பதற்கும், உழைக்கும் மக்கள் மரணப் படுகுழியில் சிக்கித் தவிப்பதற்கும் காரணமாக இருப்பது தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் எனும் மறுகாலனியாக்கம்தான். இந்நிலையில், உலகமயமாக்கலை எதிர்க்காமல் குறுகிய இனவெறியூட்டுவதையே இவர்கள் தீர்வாக முன்வைக்கின்றனர்.

மகாராஷ்டிராவில் ராஜ்தாக்கரே கும்பல் மராத்தா இனவெறி-இந்துவெறி தேசியத்தை இதற்குத் தீர்வாக வைக்கிறது. தமிழகத்தில் மணியரசன் கும்பலோ தமிழ்த்தேசியத்தைத் தீர்வாகக் காட்டுகிறது. ராஜ்தாக்கரே முன்வைக்கும் இந்துத்துவ தேசியமோ, மணியரசன் முன்வைக்கும் தமிழ்த்தேசியமோ உலகமய எதிர்ப்பை அடிப்படையாகக் கொண்டதல்ல. தாக்கரே கும்பல் என்ரானை வரவேற்று ஆதரித்தது என்றால், மணியரசன் கும்பலோ தமிழகத்தில் முதலீடு செயும் அந்நிய நிறுவனங்களில் தமிழனுக்கு பங்கு கேட்கிறது. ஏகாதிபத்திய உலகமயத்துடன் கூட்டணி கட்டிக் கொண்டுள்ள இவர்கள், வடமாநிலங்களிலிருந்து பிழைப்புக்காக வந்தேறிய தொழிலாளர்களை எதிரிகளாகக் காட்டுகின்றனர். தமிழனுக்கு எதிரியாக வடமாநிலத் தொழிலாளர்களையும், மராத்தியனுக்கு எதிராக பீகார் தொழிலாளர்களையும் நிறுத்தி இவர்கள் இனவெறியூட்டி மோதவிடுகின்றனர்.

ஏகாதிபத்திய உலகமயமாக்கத்தின்கீழ் உற்பத்தியும் உழைப்புப் பிரிவினையும் உலகமயமாகியுள்ள நிலையில், ஏகாதிபத்திய மூலதனத்துக்கு – பன்னாட்டு ஏகபோக தொழிற்கழகங்களுக்கும் தரகுப் பெருமுதலாளித்துவ நிறுவனங்களுக்கும் – எதிரான போராட்டங்களில் தேசிய எல்லைகளையும் தேசிய இன அடையாளங்களையும் கடந்த பாட்டாளி வர்க்க அமைப்புகளும் இயக்கங்களும் ஒன்றிணைய வேண்டிய தேவை எழுந்துள்ளது. இனம் கடந்த தொழிலாளர் ஒற்றுமையைக் கட்டியமைப்பதன் மூலம்தான் உலகமயமாக்கத்தை வீழ்த்த முடியும். ஆனால், உழைக்கும் மக்கள் உலகமயமாக்கலுக்கு எதிராக ஓரணியில் திரண்டு போராடுவதைத் தடுத்து திசைதிருப்பவும், குறுகிய இனவெறியூட்டி ஆதாயமடையவும் ராஜ்தாக்கரே, வட்டாள் நாகராஜ், தமிழகத்தின் மணியரசன் கும்பல் போன்றவை கிளம்பியுள்ளன. வர்க்க ஒற்றுமையைச் சிதறடித்து இனரீதியாகக் கூறுபோட்டுப் பிரிக்கும் அடையாள அரசியலையே தங்களது நிகழ்ச்சிநிரலாகக் கொண்டுள்ள இவர்கள், தங்களது வர்க்கத்தன்மைக்கேற்ப வெவ்வேறு அளவுகளில் செயல்படுத்துகின்றனர்.

எல்லாவற்றையும் தேசிய இன முரண்பாடகப் பார்க்கும் மணியரசன் போன்ற இனவாத அடையாள அரசியல்வாதிகளின் காமாலைக் கண்களுக்கு ஏகாதிபத்திய உலகமயமாக்கலையும் அதன் கொடிய விளைவுகளையும் புரிந்து கொள்ள முடியாது. வட மாநிலத் தொழிலாளர்களுக்கு எதிராகத் தமிழ் மக்களின் பகையைத் தூண்டுவதென்பது, ஏகாதிபத்திய உலகமயமாக்கத்துக்குத் துணைபோவதுதானேயன்றி, அது தேசிய இனச் சிக்கலுக்கோ தீவிரமாகிவரும் பிரச்சினைகளுக்கோ ஒருக்காலும் தீர்வாக முடியாது. வட இந்தியத் தொழிலாளிகளால் தமிழனக்குப் பாதிப்பு ஏதுமில்லை எனும்போது, இத்தகைய இனவெறியர்கள் தமிழனின் பெயரால், தமிழினத்தின் பெயரால் பேசுவதற்கு எந்த உரிமையும் கிடையாது. ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிரான பாட்டாளி வர்க்க உலகமயமாக்கம்தான் மாற்றுத் தீர்வாக முடியும். பாட்டாளி வர்க்க சர்வதேசியம்தான் பாட்டாளி வர்க்க உலகமயமாக்கத்துக்குப் பொருத்தமான அரசியல் அமைப்பாகவும் இருக்க முடியும். அத்தகைய திசையில், இனவெறியர்களைத் தனிமைப்படுத்தி, ஏகாதிபத்திய உலகமயமாக்கலுக்கு எதிராகத் தேசிய எல்லைகளையும் தேசிய இன அடையாளங்களையும் கடந்த போராட்டங்களும் தொழிலாளர்களின் ஒற்றுமையுமே இன்றைய தேவையாக உள்ளது.

____________________________________________

– புதிய ஜனநாயகம், நவம்பர் – 2012
_______________________________________