Friday, August 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 815

டெண்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி!

127

சச்சின் டென்டுல்கரின் டுபாக்கூர் தேசபக்தி

vote-012தேசிய இனங்களின் சிறைக்கூடமாக இருக்கும் இந்தியாவை பார்ப்பனியத்தின் சாதி அமைப்பு, கிரிக்கெட் மோகம் என இரண்டு விசயங்கள் வலிமையாக இணைக்கின்றன. ஒன்று நிலப்பிரபுத்துவம் என்றால் மற்றது முதலாளித்துவம். இரண்டுக்கும் இரண்டு நாயகர்கள் ஒரு பிராண்டு மதிப்புடன் இந்தியாவெங்கும் சந்தைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள். பார்ப்பனியத்திற்கு ராமன், முதலாளித்துவத்திற்கு டெண்டுல்கர்.

ராமனுக்கு கோவில் என்று பாபர் மசூதியை இடித்து ஆட்சியைப் பிடித்தது பா.ஜ.க. ( இன்றைக்கு இந்தப் பருப்பு வேகவில்லை என்பது வேறுவிசயம்). ஆனால் முதலாளிகளால் முன்னிறுத்த்தப்பட்ட டெண்டுல்கரால் நுகர்வு கலாச்சாரப் பொருள்களின் விற்பனையில் கொடிகட்டிப் பறந்த முதலாளிகள் இன்றைக்கும் இந்த நட்சத்திர நாயகனுக்கு ஒளிவட்டம் போட்டே வருகிறார்கள்.

அதிலொன்றுதான் சச்சினின் இருபதாண்டு கிரிக்கெட் வாழ்க்கை. ஊடகங்கள் இதையே பல்வேறாக வியந்தோதி மாய்ந்து மாய்ந்து எழுதின, காட்டின. இந்த ஒளிவட்ட அத்தியாத்திற்கு ஏதாவது பேட்டி கொடுக்க வேண்டுமென்ற சடங்குப்படி சச்சின் சில வாக்கியங்களை கடமைக்காக உதிர்த்தார். அதிலொன்றும் புதுமையில்லை. “நான் மராட்டியன் என்பதற்கு பெருமைப்படுகிறேன், ஆனால் முதலில் நான் இந்தியன், மும்பை மாநகரம் எல்லா இந்தியர்களுக்கும் சொந்தமானது” இவைதான் நட்சத்திர நாயகன் உதிர்த்த தத்துவ முத்துக்கள். காலணாவுக்கு பிரயோசனமில்லாத இந்த வாக்கியங்களை பயங்கரமான அரசியல் சவடால்களாக ஊடகங்கள் கட்டியமைத்தன. அதற்கு உகந்த விதத்தில் காலாவதியான கிழட்டு நரி பால்தாக்கரே சில கருத்துக்களை சச்சினுக்கு எதிராக உதிர்த்தார்.

“சச்சின் தேவையில்லாமல் ஆடுகளத்திலிருந்து அரசியலுக்குள் நுழைகிறார். மராட்டியர்களுக்கு சொந்தமான மும்பையை இந்தியர்களுக்கு என்று சொன்னதால் அவர் மராட்டிய இதயங்களில் ரன் அவுட்டாகி விட்டார். மும்பையை பெறுவதற்காக 105 மராட்டியர்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றனர். அந்தப் போராட்டம் நடைபெறும்போது அவர் பிறக்கக்கூட இல்லை.” இவைதான் வேலைவெட்டியில்லாத கிழடு பால்தாக்கரே சொன்ன பதிலடி.

இதை வைத்து சச்சின் மதவெறி, இனவெறி அமைப்புகளுக்கு எதிராக பெரும் போர் நடத்துவது போன்று ஊடகங்கள் பில்டப் கொடுத்தன. இந்த பில்டப்பில் மாதவராஜூம் சரண்டராகி நாயகனுக்கு தாங்கமுடியாத பாராட்டு பத்திரங்களை அள்ளி வீசுகிறார். வேறு எந்தப் பதிவர்களெல்லாம் இந்த ஜோடனையில் மனதை பறிகொடுத்தார்களோ தெரியவில்லை. அது என்னவோ போலிக் கம்யூனிஸ்டுகளுக்கும், நமக்கும் எல்லா பிரச்சினைகளிலும் மலையளவு வேறுபாடு இயல்பாகவே வருகிறது. போகட்டும். விசயத்திற்கு வருவோம்.

பால்தாக்கரேவின் சிவசேனா இயக்கம் தனது ‘வரலாற்றுக்’ கடமைகளை முடித்துவிட்டு, அதாவது இனவெறி, மதவெறிக் கலவரங்களை நடத்தி ஆட்சியைப் பிடித்து, இப்போது சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்து அய்யோ பாவம் என நாதியற்று கிடக்கிறது. பிரிந்து போன மருமகன் ராஜ்தாக்கரே சம்சா விற்கும் பீகாரி மக்களை மிருகத்தனமாக அடித்து தான்தான் மராட்டியர்களின் சேம்பியன் என சில சில்லறைகளை வைத்து காட்டிக்கொண்டார். அதன் தொடர்ச்சிதான் சட்டசபையில் இந்தியில் பதவிப்பிராமணம் எடுத்த சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ அபுஆஷ்மியைத் தாக்கி ரகளை செய்தது.

வளர்த்த கடா மார்பில் பாய்வது ஒரு புறம் என்றால் எந்த இனவெறியை வைத்து அரசியல் ஆதாயம் செய்தோமோ அதையே மருமகப்பிள்ளை அப்பட்டமாக போட்டிக்கு செய்வதை தாக்கரேவால் தாங்கமுடியவில்லை. இனவாதம் மராட்டியத்தில் இனிமேலும் எடுபடாது என்றாலும் அதற்கும் போட்டி என வந்து விட்ட பிறகு தாக்கரேவும் ஏதாவது செய்ய வேண்டியிருக்கிறது. இச்சூழலில்தான் டெண்டுல்கரின் ஒண்ணுமில்லாத விசயத்திற்கு தாக்கரே பதிலடி கொடுத்து தான்தான் மராட்டியர்களின் நாட்டாமை என காட்டுவதற்கு முயன்றார்.

70களில் மும்பையில் கம்யூனிஸ்டுகளின் செல்வாக்கை முறியடிக்க காங்கிரசாலும், முதலாளிகளாலும் வளர்த்து விடப்பட்ட இனவெறி சிவசேனா இப்போது முதலாளிகளுக்கு தேவைப்படவில்லை. போலிக் கம்யூனிஸ்டுகளும் தங்கள் செயல்பாடுகளால் முதலாளித்துவத்தை வெளிப்படையாக ஆதரிக்தகும் நிலைமைக்கு முன்னேறியிருக்கிறார்கள். இதுபோக  மராட்டிய மக்களும் பெரும்பான்மையாக இனவெறிக்கு  முன்பு போல ஆதரவு தருவதில்லை. இப்படி ஒரு சூழலில்தான் தாக்கரே எதாவது அவ்வப்போது பேசி நானும் உள்ளேன் ஐயா என்று காட்ட வேண்டியிருக்கிறது.

ஆனால் டெண்டுல்கரின் சூழலோ வேறுமாதிரி. கிரிக்கெட்டில் தனது ஆட்டத்தால் பிரபலமான அவரை முதலாளிகள் இந்திய அளவில் ஒருவெற்றிகரமான பிராண்டாக மாற்றி விட்டு ஆதாயம் பார்த்துவிட்டார்கள். சச்சினுக்கும் கிரிக்கெட் மூலம் வந்த வருவாயை விட விளம்பரங்கள் மூலம் வந்த வருவாய்தான் பல நூறு கோடிகள் இருக்கும். இப்படி தன்னை ஒரு பில்லியனராக மாற்றியது இந்திய அளவிலான சந்தை என்பதும் அவருக்கு புரியாத ஒன்றல்ல. அதனால்தான் தான் முதலில் இந்தியன் அப்புறம்தான் மாரட்டியன் என்று அவர் சொல்கிறார். அவரது இந்தியப் பற்றின் பின்னே ஒளிந்திருப்பது இந்தியாவின் நுகர்பொருள் சந்தையின் மதிப்பு.

காரணம் அவருக்கு மாபெரும் வருவாய் அளித்தது மராட்டிய இனமல்ல, இந்திய மக்கள். இந்திய அளவிலான புகழே அவரது பிராண்டு மதிப்பை பல மடங்கு உயர்த்தியது. இந்திய அளவிலான ரசிகர்களின் செல்வாக்கே சச்சினது மதிப்பை முதலாளிகளின் உலகத்தில் கொண்டு போய்சேர்த்தது. அவரது உடலில், உடையில் எல்லா பன்னாட்டு நிறுவனங்களது முத்திரையும் உள்ளன. அவர்   பெப்சிக்கும், அடிடாசுக்கும் மாய்ந்து மாய்ந்து போஸ் கொடுப்பதன் பொருள் என்ன?

மற்றபடி இந்த நாட்டின் ஜீவாதாரமான பிரச்சினைகள் எதற்கும் அவரிடமிருந்து ஒரு சொல் கூட அல்லது ஒரு சொட்டு கண்ணீர் கூட வந்ததில்லை. முக்கியமான பிரமுகர்கள் மட்டும் கலந்து கொண்ட அவரது திருமணத்தின் வி.ஐ.பியே பால்தாக்கரேவின் குடும்பத்தினர்தான். அதற்கு முன்னர்தான் மும்பையில் பலநூறு முசுலீம் மக்களைக் கொன்று சிவசேனா பெரும் கலவரத்தை முடித்திருந்தது. அந்த அநீதிக்காக கோபம் கொண்டிருந்தால் தாக்கரேவை எப்படி தனது திருமணத்திற்கு அழைத்திருக்க முடியும்? அப்போது மட்டுமல்ல பாபர்மசூதி இடிப்பை பற்றியோ, குஜராத் இனப்படுகொலை பற்றியோ, அல்லது விதர்பாவில் கொத்து கொத்தாய் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதை பற்றிய இந்த இந்திய தேசபக்தர் ஒரு சொல் கூட சொல்லாதது மட்டுமல்ல அந்தக்காலங்களில் பன்னாட்டு முத்திரைகளுடன் கூடிய தனது உடையில் அகமதாபாத்திலும், மும்பையிலும் பவுண்டரி, சிக்சர்கள் அடித்து தனது நாயக இமேஜை கூட்டிக் கொண்டிருந்தார்.

இதுதான் டெண்டுல்கரின் தேசபக்தி எனும்போது அதை காறி உமிழ்வதை விடுத்து அவருக்கு புகழாரம் சூட்டுவதைத்தான் சகிக்க முடியவில்லை. டெண்டுல்கர் தனது வருவாய்க்கு விசுவாசமாக இருக்கிறார். அது முதலாளிகளின் கைக்குள் இருக்கும் இந்தியாவின் தேசபக்தி. மாறாக இந்திய மக்களின் இரத்தமும், சதையுமாய் இருக்கும் இந்திய மக்களது வாழக்கையோடு தொடர்புள்ள தேசபக்தியல்ல.

இந்துமதவெறியை எதிர்த்து எத்தனை அமைப்புகள், தனிநபர்கள் போராடி வருகிறார்கள்? அவர்களுக்கெல்லாம் இல்லாத விளம்பரம் ஒரு வாக்கியத்தை சொன்ன சச்சினுக்கு கிடைக்கிறது என்றால் இந்த நாட்டில் இந்துமதவெறியர்கள் யாரும் வெல்ல முடியாது என்றே அர்த்தம். ஏற்கனவே தோற்றிருக்கும் தாக்கரேவுக்கு எதிராக மாபெரும் போராளியாய் டெண்டுல்கரை நிறுத்துவதிலிருந்தே ஊடகங்களின் யோக்கியதை தெரிகிறதல்லவா? ஊடகங்களுக்கும் விளம்பரங்களின் வழி வரும் வருவாய்க்கு சச்சினும் காரணாமாக இருக்கிறார் என்பதால் அப்படி தாங்கமுடியாத அளவிற்கு சச்சினே வெட்கப்படுமளவுக்கு ஊதிப்பெருக்குகிறார்கள்.

டெண்டுல்கரை வைத்துத்தான் இந்திய தேசபக்தி அளவிடப்படும் என்றால் இந்தியாவை எந்த ‘கடவுளாலும்’ காப்பாற்ற முடியாது.

vote-012

தொடர்புடைய பதிவுகள்

ஈழம்- செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

94

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

vote-012ஈழப் போர் துயரமான முறையில் முடிவுக்கு வந்திருக்கிறது. போர் நிறுத்தம் கேட்டு போராட வேண்டிய நேரத்தில் ஓட்டுச் சீட்டு சந்தர்ப்பவாத அரசியலில் சிக்கி  ஈழத் துரோகி கருணாநிதியோடும், உழைக்கும் மக்களுக்கே எதிரி ஜே ‘ வோடும் கைகோர்த்தவர்களும், ஈழப் பிணங்களை வைத்து ஆதாயமடையப் பார்த்தார்கள். ஒருவர் பதவியைக் காப்பாற்ற தொடர் நாடகங்களை நடத்தினார். இன்று வரை நடத்திக் கொண்டிருக்கிறார். இன்னொருவர் இதை வைத்து பதவிக்கு வரும் நோக்கத்திற்காகவே வெற்று வீர வசனங்களை உதிர்த்தார்.

மொத்தத்தில் ஈழ மக்கள் இந்திய, இலங்கை இராணுவங்களால் கொல்லப்பட்ட போது, அதை தங்களுக்கு ஆதாயமான ஒன்றாக மாற்றிக் கொண்ட சந்தர்ப்பவாதிகள் பிழைப்புவாதிகள் பலர். ஈழம் அவர்களுக்கு ஒரு கறவை மாடு. யானை இறந்தாலும் ஆயிரம் பொன் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் துடிக்கத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்ட ஈழம் எனும் பசுவின் மடியிலிருந்தும் கூட பால் கறக்க முடியும் என்பதை நமக்கு நிரூபித்துக் கொண்டிருக்கிறார் ஜெகத் கஸ்பார் எனும் பாதிரி.

“ஈழ மக்கள் மீதான படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்து, யுத்தக் குற்றவாளிகளுக்கு எதிராக நூறு பேர் கவிதை எழுதுகிறார்கள் நீங்கள் கவிதை கொடுக்க வேண்டும்” என்று த.செ.ஞானவேல் என்பவர் பலரிடமும் கேட்டிருந்தாராம். அவருக்காக ஆனந்தவிகடனின் திருமாவேலனும், டைம்ஸ் ஆப்ஃ இண்டியா இதழின் குணசேகரன் என்னும் பத்திரிகையாளரும் கூட இப்படிப் பலரிடமும் கவிதை கேட்டிருக்கிறார்கள். நூலை ஞானவேல் எனும் பத்திரிகையாளர் வெளியிடப் போவதாகச் சொல்லித்தான் அனைவரிடமும் கவிதை வாங்கியிருக்கிறார்கள்.

ஒரு வழியாக “ஈழம்…. மௌனத்தின் வலி” என்ற அந்தக் கவிதை நூல் இப்போது வெளிவந்திருக்கிறது. கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பர் ராஜ் என்பவருக்குச் சொந்தமான “நல்லேர் பதிப்பகம்” சார்பில் வெளிவந்திருக்கிறது இந்தக் கவிதை நூல். ஞானவேலோ  அவர் அமைப்பாளராக இருக்கும் “போருக்கு எதிரான பத்திரிகையாளர் அமைப்போ” இந்நூலை வெளிக் கொண்டுவரவில்லை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதிகாரவர்க்கங்கள், புகழ்பெற்றவர்கள் என்னும் வரிசைப்படி கட்டமைக்கப்பட்டுள்ள அந்நூல் கமலஹாசன் முதல் ரஜினிகாந்த் வரை என்னும் அமைப்பில் பல நண்பர்கள் தோழர்கள், சமூக ஆர்வலர்களின் கவிதைகளோடு வெளிவந்திருக்கிறது.

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!

“ஈழம்…. மௌனத்தின் வலி” என்னும் தலைப்பிலான அக்கவிதை நூலின் முதல் கவிதையை கமலஹாசனும், கடைசிக் கவிதையை ரஜினிகாந்தும் எழுதியிருக்கிறார்கள். கமல் எழுதிய கவிதை தெனாலி படப்பிடிப்பின் போது எழுதப்பட்டதாம். ரஜினிகாந்த் எழுதியுள்ள பஞ்ச் டயலாக் கவிதையை அவர் இவர்களுக்காவே எழுதிக் கொடுத்தாரா? அல்லது ஏதாவது மேடைகளில்  உதிர்த்த முத்தா ? என்று தெரியவில்லை. மற்றபடி தோழர் துரை.சண்முகம், இயக்குநர் கவிதா பாரதி, கலாப்பிரியா, ராஜுமூருகன் உள்ளிட்ட இன்னும் சிலரின் கவிதைகளைத் தவிர பெரும்பாலான கவிதைகள் மொக்கைகள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளேட்டின் நிருபர் குணசேகரன், “ஈழம் தொடர்பான புகைப்படங்களைப் பொருத்தமான கவிதையுடன் வெளியிட இருப்பதாகவும், பத்திரிகையாளர்கள் சேர்ந்து வெளியிடும் இந்த கவிதை நூலுக்கு நீங்களும் ஒரு கவிதை தர வேண்டும்” என்று தோழர்.துரை சண்முகத்திடம் கவிதை ஒன்று கேட்டாராம். “தன்னார்வக் குழுக்கள் வெளியிடுவதாக இருந்தால் கவிதை தரமுடியாது. கவிதையில் ஒரு சொல்லைத் தணிக்கை செய்வதாக இருந்தாலும் கவிதை தர முடியாது” என்று குணசேகரனிடம் கூறியிருக்கிறார் துரை.சண்முகம். இரண்டிற்கும் குணசேகரன் உத்திரவாதம் கொடுத்ததன் அடிப்படையில் கவிதையையும் தந்திருக்கிறார்.

இரக்கம் காட்டுவதாய்
நீங்கள் ஒரு அறிக்கை விடுவதற்கு
இன்னும் எத்தனை வேண்டும் ஈழப்பிணங்கள்….

தேர்தல் செலவுக்காக
எங்கள் இரத்தத்தையே திருடிய உங்களிடம்
ஒப்படைக்க முடியாது கண்ணீரை

தலை சிதறிப் போனாலும்
எம் தலைமுறைகள் மறவாது
இந்திய கொலைக்கரம் முறிக்காமல்
எம் பிள்ளை துயிலாது

என்று துரை சண்முகம் எழுதிக் கொடுத்த கவிதை வரிகளில் “தேர்தலுக்காக” என்ற சொல்லும் “இந்திய கொலைக்கரம்” என்ற சொற்களும் வெட்டப்பட்டிருக்கின்றன. பத்திரிகையாளர்களுக்குப் பதிலாக வெளியீட்டாளராக ஜெகத் கஸ்பார் அவதரித்திருக்கிறார். இவ்விரு விசயங்கள் குறித்தும் உடனே குணசேகரனுக்கு போன் செய்து கேட்டாராம் துரை. சண்முகம். அதிர்ச்சி அடைந்த குணசேகரன், கவிதையை ஞானவேலிடம் கொடுத்ததாகவும் இந்த அயோக்கியத்தனம் பற்றித் தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறி வருந்தினாராம்.

ரஜனிகாந்த் கமலஹாசன் போன்ற கவிஞர்கள் எல்லாம் எழுதப்போகிறார்கள் என்ற விசயமும் துரை சண்முகத்துக்கு சொல்லப்பட வில்லையாம்.   இயக்குநர் சேரன் போன்றவர்கள் எழுதிய அயோக்கியத்தனமான கவிதைகளும் உண்டு. அழுது வடிந்து ஈழத்துக்காக போலிக்கண்ணீர் வடிக்கிற தந்திரக் கவிதைகளும் உண்டு. நூறு ரூபாய் விலையில்,”மனித நேயமிக்க எவரும் மறுபதிப்புச் செய்யலாம்” என்னும் அறிவிப்போடு பளபள காகித்தத்தில் வெளிவந்திருக்கும் நூலை, கிறிஸ்தவப் பாதிரி ஜெகத்கஸ்பார் ராஜ் வெளியிடுகிறார் என்பது தெரிந்திருந்தால் பாதிக்கும் மேலானவர்கள் கவிதை கொடுத்திருக்க மாட்டார்கள். ஏன் ஞானவேல் இப்படிச் செய்தார் என்று பலரும் இப்போது புலம்பித்திரிகிறார்கள்.

ஞானவேல் பத்திரிகையாளரா? என்று சிலர் கேட்டார்கள். அவர் ஆனந்த விகடனில் நிருபராக வேலை பார்த்ததாகவும் அதில் கிடைத்த தொடர்புகள் மூலம் அதிகார மட்டங்களில் உறவுகளை வளர்த்த பிறகு கலைக்குடும்பமான நடிகர் சிவக்குமார், அவரின் வாரிசு நடிகர் சூர்யா ஆகியோரின் பி,ஆர்.ஓவாகவும், சூர்யா ரசிகர் மன்றம், அவர்களின் அறக்கட்டளை வேலைகளைக் கவனித்துக் கொள்வதாகவும், நடிகர் பிரகாஷ்ராஜிற்கும்  பி.ஆர்.ஓவாக இருப்பதாகவும் சொல்கிறார்கள். அவ்வப்போது “உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள்” என்னும் திடீர் பணக்காரர்கள் குறித்த தன்னம்பிகை கட்டுரைகளை சிலிர்க்க சிலிர்க்க உருட்டி உருட்டி எழுதுகிறவர் என்றும் நண்பர்கள் சொல்கிறார்கள்.

ஞானவேல் என்ற நபர் என்ன தொழில் செய்கிறார் என்பது இங்கு முக்கியமல்ல,  ஆனால் இன்றைய இவரது நடவடிக்கை ஈழப் பிரச்சனை என்னும் பொதுப் பிரச்சனையில் அசிங்கமான அவதாரமாக உருவெடுத்திருக்கிறது. ஈழப்போராட்டத்தை இங்குள்ள அதிகார பீடங்களிடமும்,  சந்தர்ப்பவாத  சாமியார்கள், பெரும் பண்ணைகளிடமும் கொண்டு போய் அடகு வைத்து இவர்களை ஈழ நாயகர்களாக உருவாக்குகிற ஆளும் வர்க்க நலன் சார்ந்த தந்திரமாக உருவெடுத்திருக்கிறது.

போருக்கு எதிரான பத்திரிகையாளர்  என்ற அமைப்பு என்ற ஒன்றைத் துவங்குவதோ, அதற்கு அமைப்பளாராக ஞானவேல் இருப்பதோ, ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ தவறிலை, ஆனால் தனக்குத் தெரிந்த பணக்காரர்கள், ஆளும் வர்க்க அடிவருடிகள், நடிகர்கள், என்ற இவர்களின் பின்னணியில் ஜெகத் கஸ்பார் என்னும் ஆளும் கட்சி ஆதரவுபெற்ற ஒரு நபரின் நிதி உதவியோடு வெளியிடுவதும் , அதற்குப் பத்திரிகையாளர்களின் பெயரைப் பயன்படுத்திக் கொள்வதும்தான் இங்கு பிரச்சனை. ஞானவேல் “அகில இந்திய சூர்யா ரசிகர் மன்றம்” சார்பில் இதைச் செய்திருந்தால் யாரும் கேட்கப் போவதில்லை.

போருக்கு எதிரானவர்கள் யார்?

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்மாவிலாறில் தொடங்கி முள்ளிவாய்க்கால் வரை நீடித்த இரண்டரை ஆண்டுகால இலங்கை அரசின் போர் என்பது வெறுமனே இலங்கை அரசின் போர் அல்ல. பிராந்திய வல்லரசுகளின் ஆதிக்க வெறியே ஈழத்தில் போர் வெறியாக மக்களைக் கொன்று தீர்த்தது. ஆனால் இப்பிராந்தியத்தில் வேறெந்த ஒரு நாட்டின் பங்களிப்பையும் விட இந்தியாவின் பங்களிப்பே வன்னிப் போரில் அதிகம்.

இவர்களே ஆயுதங்களைக் கொடுத்தார்கள், இவர்களே இராணுவத்தை அனுப்பினார்கள், இவர்களே இராணுவ டாங்கிகளையும், விமானங்களையும் அனுப்பினார்கள். இவர்களே கொலைகார பாசிஸ்டுகளான ராஜபட்சே சகோதர்களை பாதுகாத்தார்கள். போரை நிறுத்துங்கள் என்று தமிழகம் கேட்ட போது இறையாண்மையுள்ள இலங்கை தேசத்திற்குள் தலையிட மாட்டோம் என்றார்கள். போரை நடத்திய இந்திய, இலங்கை கூட்டு இராணுவப் படைகள் கொன்றொழித்தது புலிகளை மட்டுமல்ல ஐம்பதாயிரம் வன்னி மக்களையும்தான்; இனப்படுகொலையின் சூத்திரதாரி இலங்கை மட்டுமல்ல மத்திய ஆளும் காங்கிரஸ் கட்சியும்தான்.

போரை நிறுத்தாமல் அதை வேகமாக முடிக்க நெருக்கடி கொடுத்த இந்தியா இன்று ராஜபட்சேவுக்கும், சரத்பொன்சேகாவுக்குமிடையிலான போரை தீர்த்து வைக்க விரும்புகிறது. சமாதானம் பேசவே கொழும்பு சென்றிருக்கிறார் பிரணாப்முகர்ஜி. வன்னி மக்களைக் கொன்றொழித்த மத்திய காங்கிரஸ் அரசு, போர் நிறுத்தம் கோரிய ஜனநாயக சக்திகளின் நண்பனா? எதிரியா?

இதற்கும் இந்த நூல் வெளியீட்டு விழாவுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழலாம். கட்டுரையை எழுத நினத்ததன் தேவையே அங்கிருந்துதான் உருவாகிறது. அதைச் சொல்வதற்கு முன்னால், வேறு சில விஷயங்களைப் பேசியே ஆகவேண்டும்.

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக ஏதோ ஒரு வகையில் மத்திய மாநில அரசு அதிகாரங்களை துய்த்து வரும் தி.மு.க இப்போது மாநிலத்தில் ஆளும் கட்சி, மத்தியில் ஆளும் கட்சியோடு பதவியை பங்கிட்டிருக்கும் கட்சி. தமிழகத்தில் போர் நிறுத்தம் கேட்ட போது கருணாநிதி தன் பதவி அதிகாரத்தைப்ப பாதுகாத்துக் கொள்வற்காக ஈழம் தொடர்பாக நாடகங்களை அரங்கேற்றினாரே தவிர கடைசி வரை ஈழ மக்களிடம் கரிசனம் காட்டவில்லை. மக்கள் கொல்லப்படுகிறார்கள் என்ற போது அவர் புலிகளின் சகோதரப் படுகொலை பற்றி பேசினார். வன்னி மக்களை காப்பாற்றுங்கள் என்ற போது பிரபாகரன் சர்வாதிகாரி என்றார். ஈழம் தொடர்பாக மத்திய அரசின் கொள்கையே மாநில அரசின் கொள்கை என்றார் கருணாநிதி.

கருணாநிதி மட்டுமல்ல அவரோடு அன்று  காங்கிரஸ் கூட்டணியில் இருந்த டாகடர் ராமதாஸ் கூட சூழலுக்கு தக்கவாறு பேசியே நாடகங்களை அரங்கேற்றினார்.போர் என்றால் மக்கள் மடியத்தான் செய்வார்கள் என்று பார்ப்பனத் திமிரோடு பேசிய ஜெயலலிதாவோ, கருணாநிதியின் பெயர் கெடுகிறது என்பதைத் தெரிந்து கொண்டு ஈழப் பிரச்சினையை கருணாநிதிக்கு எதிராக மடை மாற்றினார். மக்கள் அதை நம்பவில்லை என்பது தனிக்கதை.

கடைசியில் புலிக்கோஷமிட்டவர்களாலேயோ, நாடகங்களை நடத்தியவர்களாலேயோ, ஈழத் தமிழர்களை காப்பாற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொண்டோம். இவர்களால் உள்ளூர் தமிழர்களையும் காப்பாற்ற முடியாது என்பதை இன்றைக்கு மீனவர் பிரச்சனையில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். வைகோ, திருமா, கருணாநிதி, ஜே, நெடுமாறன், என எல்லா தலைகளும் சந்தர்ப்பவாதிகளே என்பதை தீயில் எரிந்து முத்துக்குமார் உணர்த்தினான். முத்துக்குமாரின் தியாகத்தை தற்கொலை என்றார் திமுகவின் அன்பழகன்.  இதெல்லாம் போரின் போது நடந்த சில கசப்பான உண்மைகள்.

ஜெகத்கஸ்பார் கும்பல் சொல்கிற மாதிரி அமைதியாக மௌனமாக இல்லாமல் தமிழகத்தின் இரண்டு துருவ அரசியல்வாதிகளுக்கு அப்பாற்பட்டு பல அமைப்புகளும்,வழக்கறிஞர்கள், மாணவர்கள், பெண்கள், மனித உரிமை அமைப்பினர், கண் தெரியாதவர்கள், தையல் கலைஞர்கள்,  விவசாயிகள், மீனவர்கள், என பலரும் போராடினார்கள். ஆனால் பத்திரிகையாளர்கள் மட்டும் போருக்கு எதிராக போராடவில்லை. ஒரு வேளை அப்போது இந்த அமைப்பு துவங்கப்பட்டு போருக்கு எதிராக போராடியிருந்தால் சீமானையும், கொளத்தூர் மணியையும், கோவை இராமகிருட்டிணனையும் ஏனைய தோழர்களையும் சிறையில் தள்ளி ஒடுக்கிய கருணாநிதி, இந்த பத்திரிகையாளர்களையும் உள்ளே தான் தள்ளியிருப்பார்.

ஈழப்போருக்கு எதிராக தொடர் போராட்டங்களை முன்னெடுத்த  வழக்கறிஞர்களுக்கு உயர் நீதிமன்றத்தில் எது கிடைத்ததோ, அதுவே பத்திரிகையாளர்களுக்கும் கிடைத்திருக்கும். போராட்டம் என்பதன் வலியறியாத பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக போராடவில்லை என்றால், சில பிழைப்புவாத துரோகிகளோ அம்சாவின் காலடியில் விழுந்து கிடந்தார்கள். இது குறித்தெல்லாம் ஏற்கனவே விரிவாக வினவில் எழுதியிருக்கிறோம். போர் நடக்கும் போது மவுனமாக இருந்து விட்டு இப்போது போருக்கு எதிரான அமைப்பு என்று துவங்கியிருக்கிறார்களே, எந்த போருக்கு எதிரானது இந்த அமைப்பு என்று அதன் அமைப்பாளர் ஞானவேல் சொல்வாரா?

வடகிழக்கில் இந்தியப் படைகள் நடத்திக் கொண்டிருக்கிறதே அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளுக்கு எதிராக ஈராக் மக்கள் நடத்திக் கொண்டிருக்கிறார்களே வீரம் செறிந்த போர், அந்தப் போருக்கு எதிரானதா? அல்லது ஆப்கான் போருக்கு எதிரானதா? அல்லது இந்திய அரசு விரும்பாத போராக  சரத்பொன்சேகாவிற்கும், ராஜபட்சேவுக்கும் இடையில் தற்போது நடக்கும் போருக்கு எதிரானதா?

ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரி

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்இன்று இந்தப் பாதிரியார் குறித்து எழுத பலரும் பயப்படுகிறார்கள். சிலர் இவர் பிரபாகரனோடு உண்டு உறங்கி வாழ்ந்தவர் என்று மிரட்சியோடு பார்க்கிறார்கள். இன்னும் சிலரோ இவர் கனிமொழி, கார்த்திக் சிதம்பரம், சிதம்பரம் என பெரிய இடத்து தொடர்புகள் உள்ளவர் அதனால் வம்பு வேண்டாம் என்று ஒதுங்குகிறார்கள். இன்னும் சிலரோ இவர் பின்னால் திருச்சபை இருக்கிறது. மிகப் பெரிய அதிகார பீடமது. அதனால் நாம் இவரை பகைத்துக் கொள்ள முடியாது என்று ஒதுங்குகிறார்கள். மே 18க்குப் பிறகு இவர் எழுதிய நக்கீரன் கட்டுரைகளை பதிவுலகில் பலர் வெளியிட்டு ஜெகத் கஸ்பாரை பிரபாகரன் ரேஞ்சுக்கு உயர்த்தினார்கள்.

கஸ்பாரைப் பொறுத்தவரை ஈழம் என்பது அவருக்கு “காலம் உருவாக்கித் தந்த கறவை மாடு. அவருக்கு ஈழத்தின் மீதோ, திமுக மீதோ, கருணாநிதியின் மீதோ அபிமானமோ, பற்றோ கிடையாது. பெரிய மனிதர்களின் பழக்கமும் தனது தன்னார்வக்குழுவுக்கு அதைப் பயன்படுத்திக்கொள்வதும்தான் ஜெகத்தின் நோக்கம்.

கஸ்பார் கிறிஸ்தவ நிறுவனமான வெரித்தாஸ் வானொலியில் பிலிப்பைன்சில் பணியாற்றிய போது புலிகளோடு தொடர்பை ஏற்படுத்திக் கொண்டு வன்னி மக்களுக்கு உதவுகிறோம் என்ற பெயரில் புலத்து மக்களிடம் வசூலித்ததாகவும், பின்னர் அதில் நிதி தொடர்பான பிணக்கில் ஃபாதரை வன்னிகே அழைத்து புலிகள் எச்சரித்து அனுப்பியதாகவும் கூறப்படுவதுண்டு. அதன் பின்னர் கஸ்பார் சாதித்து வந்த மௌனத்தின் உணைமையான வலி இதுதான்.

நீண்டகால மௌனத்திற்குப் பிறகு, புலிகள் இல்லாமல் போன பிறகு, புலிகள் பற்றி பேசத் தொடங்கியருக்கிறார் கஸ்பார். புலிகளோடு தான் மிக மிக நெருக்கமாக இருந்ததாக தொடர்ந்து எழுதுகிறார். கடந்து போன நிகழ்வுகள் குறித்து எழுதும் போது, அதை மறுக்கவோ, அல்லது உண்மைதான் என்று சொல்லவோ சம்பந்தப்பட்ட நபர்கள் இல்லை என்றால் இம்மாதிரி நபர்களுக்கு அதுவே கொண்டாட்டமாகிவிடுகிறது.

பிலிப்பைன்சில் இருக்கும் வெரித்தாஸ் வானொலி நிலையம் அமெரிக்க சி.ஐ.ஏவின் நிதி, கட்டுபாடுடன் ஆசியாவில் கம்யூனிசத்தையும், தேசிய விடுதலை இயக்கங்களையும் உளவறிந்து ஊடுறுவி, கண்காணத்து குலைப்பதற்கான பிரச்சாரத்தை செய்து வந்த நிறுவனம் என்பது பலருக்கும் தெரியாது.

இப்போது ஜெகத் இந்திய உளவு நிறுவனத்தில் உளவாளியாக இருப்பாரோ என்ற சந்தேகங்கள் புலத்து மக்களிடமிருந்து வெளிப்படுவதோடு, தமிழகத்திலும் கூட அப்படியான பேச்சுகள் அடிபடுகின்றன. அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் மிக முக்கியமாக ஆராயப்பட வேண்டியது. மே-மாதம் வன்னிப் போர் துயரமான முறையில் – இருபதாயிரத்திற்கும் மேற்பட்ட வன்னி மக்களையும் போராளிகளையும் ஈவிரக்கமற்ற முறையில் கொன்றொழித்து – முடிவுக்கு வந்த பிறகு வெளிவந்த  நக்கீரனில்  “வன்னியில் என்ன நடந்தது?”  என்ற தலைப்பில் ஒரு கட்டுரை வந்தது.

அக்கட்டுரையில் காங்கிரஸ் கட்சியின் பெரியவர் ஒருவரைத் தொடர்பு கொண்டு புலிகளின் சரணடைவுக்காக, தான்  முயற்சித்ததாகவும் தானே கைப்பட கடிதம் ஒன்றை எழுதி வெள்ளைக் கொடியோடு புலிகளை  சிங்கள இராணுவத்திடம் சரணடைய வைத்ததாகவும், ஆனால் இலங்கை அரசின் துரோகிகள்  நடேசனைக் கொன்று விட்டதாகவும் ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்  ஜெகத் கஸ்பார் . இதில் நமக்கு உறுத்துகிற ஒரு கேள்வி இருக்கிறது. சரண்டையச் சொல்லி புலிகளுக்கு ஆலோசனை அல்லது நிர்ப்பந்தம் கொடுத்த மூன்றாம் தரப்பு யார்?

பல நாட்களாக தூக்கமின்றி, உணவின்றி, போராடும் வலுவின்றி, காயங்களுக்கு மருந்தின்றி உளவியல் ரீதியாக பலவீனமாகிப் போயிருந்த போராளிகளை சரணடையச் சொல்லி கடிதம் தயாரித்த ஜெகத் அக்கடிதத்தை யாருக்காக, யாருடைய வழிகாட்டுதலின் பேரில் தயாரித்தார்? தான் ஏதோ புலிகளுக்கு உதவி புரிந்ததாகவும், ஆனால் ராஜபட்சே சகோதர்கள்தன் துரோகம் இழைத்து நடேசனைக் கொன்று விட்டதாகவும் கூறுகிறார். அப்படியே வைத்துக் கொண்டாலும். கடைசி நேரத்தில் ஜகத் கஸ்பார் தொடர்பு கொண்ட “அந்த டில்லி பெரியவர்” இந்த துரோகம் குறித்து என்ன சொன்னார்? அந்தப் பெரியவர் யார்? இந்தக் கபட நாடகம் குறித்து அந்தப் பெரியவருக்குத் தெரியாதா? தெரியாது என்று கஸ்பார் தேவ சாட்சியம் கூறுகிறாரா? ஒரு கொடூரமான அரசியல் படுகொலையை நடத்திவிட்டு, தான் நடத்திய திரை மறைவு பேரத்தை இன்னமும் இரகசியமாக வைத்துக் கொள்ளும் உரிமை கஸ்பாருக்கு உண்டா?

புலிகளின் பலவீனமான நிலையைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை இலகுவாக வெல்ல இந்தியா பயன்படுத்தியிருக்கக் கூடிய தந்திரம்தான் இந்த “சரணடைவு நாடகம்” என்பதை இப்போதும் கூடவா ஒருவர் புரிந்து கொள்ள முடியாது? அதற்கு இந்திய வம்சாவளியினரான விஜய்நம்பியாரை இந்தியா பயன்படுத்திக் கொண்டது. அவரது சகோதரர் சதீஷ் நம்பியார் இலங்கை இராணுவத்தில் ஊதியம் பெறும் ஆலோசகராக இருக்க அவரது அண்ணனான விஜயநம்பியாரோ ஐநாவின் சார்பில் இலங்கையில் சமாதானம் பேசுகிறார். தம்பியின் கையில் துப்பாக்கி… அண்ணனின் கையில் சமாதானப்புறா….. இந்த சமாதானப்புறாவை வைத்து தமிழக சமாதானபுறாவான ஜெகத் கஸ்பர் மூலமாக புலிகளை வழிக்குக் கொண்டு வந்திருக்கிறது,  இந்திய. இலங்கை கூட்டு இராணுவம். இந்த திட்டம் குறித்து அன்றைக்கு எனக்குத் தெரியாது என்று கஸ்பார் சாதிக்கலாம். ஆனால் இன்றைக்கும் இது புரியவில்லை என்று அவர் வாதாடமுடியாது.

இந்தக் கொலை வெறித் திட்டம் குறித்த செய்திகள்  21-05-2009 தேதியிலேயே கசிந்தது. அன்றைய மன அழுத்தங்களில் யாரும் பெரிதாக அதை கண்டுகொள்ளவில்லை. அந்தச் செய்தியில் இருந்தது இதுதான். வற்புறுத்தலாக சமாதானச் செயலகத்தைச் சேர்ந்தவர்கள் சரணடைய நிர்பந்திக்கப்பட்டதாக தெரிவித்த செய்திகளில் உண்மை இருக்கத்தான் செய்தது. விரைந்து போரை முடிக்க இந்தியா இலங்கைக்கு கொடுத்த நெருக்கடியின் இன்னொரு தந்திரமே இந்த வற்புறுத்தலான சரணடைவு. ஜெகத் கஸ்பார் ராஜ் யாருக்காக நடேசனுக்கு இந்த வற்புறுத்தலைக் கொடுத்தார்? பின்னர் எதற்காக இப்போது ஈழத் தமிழர்களுக்காக நீலிக் கண்ணீர் வடிக்கிறார்?

சில வருடங்களுக்கு முன்பு கிறிஸ்தவ திருச்சபையின் இதழான நம்வாழ்வு இதழில் புலிகளை மோசமாக சித்தரித்து கட்டுரை எழுதினார் இதே ஜெகத். அன்றைய மதுரை ஆர்ச் பிஷப் ஆரோக்கியசாமி இதனைக் கண்டிக்க, உடனே “மறுப்பு மாதிரி” ஒன்றை வெளியிட்டு சமாளித்தார். (இதற்கும் ஆரோக்கியசாமி தொடர்பாக சால்ஜாப்பு எதையும் ஜெகத் எழுதினால் அதை மறுக்க ஆரோக்கியசாமியும் உயிருடன் இல்லை)

சி.ஐ.ஏ புகழ் வெரித்தாஸ் வானொலியில் பணியாற்றிய இந்த அனுபவசாலியை இந்திய உளவு நிறுவனங்கள் கைவிடவில்லை என்பது இப்போது தெரிகிறது. சமாதானக் காலத்தில் புலிகளுடன் உறவு கொண்டு ஊடுறுவ அனுப்பியிருக்கிறது. ஆனால் இந்த வசூல் மன்னனின் உண்மை முகத்தைத் தெரிந்து கொண்ட புலிகள் இவரை பட்டும் படாமலும் ஒதுக்கி தங்கள் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப் பார்த்திருக்கின்றனர். கூடாநட்பு குழிபறித்து விட்டது.

இப்போது புலிகள் இல்லை. கஸ்பார் புலிகள் பற்றிப் பேசுகிறார். ஈழ மக்களுக்காக எதையாவது செய்யத் துடிக்கிறாராம். அதற்காகவே சிதம்பரத்தோடும், ஆளும் கட்சியோடும் நெருக்கமாக இருப்பதாக வேறு சொல்லிக் கொள்கிறார்.

ஞானவேல்.. வளர்ந்து வரும் ஜெகத் கஸ்பாரே!

ஈழம் செத்த பிறகும் ரத்தம் கறக்கிறார் ஜெகத் கஸ்பார்!!ஜெகத்தின் நல்லேர் பதிப்பகத்தின் நிதியில் பத்திரிகையாளர்களின் பெயரில் நூல் கொண்டு வந்திருப்பதன் மூலம் அதில் ஏழுதிய ஏராளமானவர்களையும் ஏமாற்றி, சக பத்திரிகையாளர்களையும் ஜெகத் கஸ்பாரோடு சேர்ந்து ஏமாற்றியிருக்கிறார் ஞானவேல். பொதுவாக எதிர்ப்பியக்கங்களின் போராட்ட வடிவங்களெல்லாம், இன்றைய அரசு அடக்குமுறைகளின் விளைவாக போர்க்குணமிக்க வடிவத்துக்கு மாறும் காலம் இது. அது போல அரசு அடக்குமுறைக்கு எதிராக உண்ணாவிரதம் இருப்பது, மனுக்கொடுப்பது, கண்ணீர் அஞசலி செலுத்துவது போன்ற அபத்த நாடகங்கள் இந்தியாவில் காமெடியாகிவிட்டது. மக்கள் இவ்வாறு போராடி போராடி அலுத்துப் போய்விட்டார்கள்.  அப்படி போராடுகிறவர்கள் மண்டையை பிளக்கிறது போலீஸ் அராஜகம். இப்போது இம்மாதிரி போராட்டங்களில் மக்கள் சலிப்படைந்து விட்டார்கள். அதனால்தான் போர் நடைபெற்ற காலத்தில் ஈழ ஆதரவுப் போராட்டங்களும் வன்முறை வடிவம் எடுத்தன. அப்போது ஜெகத் மௌன ஊர்வலம் நடத்தினார்.

அதாவது யாரைப் பற்றியும் எதுவும் பேசாமல் ஒரு ஊர்வலம். அதாவது கொலை செய்கிற இந்தியாவைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார அரசுகளைப் பற்றிப் பேசக் கூடாது. கொலைகார இந்திய அரசோடும், அதற்கு துணைபோகும் மாநில அரசோடும் சேர்ந்து கொண்டு “ஏதாவது” செய்ய வேண்டும். இதுதான் கஸ்பாரின் கொள்கை. அந்தக் கொள்கையை இப்படித்தானே அமல் படுத்த முடியும்?

மக்களின் எதிர்ப்பு வடிவங்களை அரசியல் அற்ற ஒன்றாக மாற்றுவதும் அதை அரசு நிறுனத்தின் ஒரு அங்கமாக மாற்றுவதும்தான் ஜெகத் கஸ்பர் என்னும் பாதிரியின் வேலை. பெரும்பாலான கிறிஸ்தவ பாதிரிகளின் வேலையும் இதுதான்.

அயோக்கியத்தனத்தின் ஒரு போராட்ட வடிவமாக மௌன ஊர்வலத்தையும், மெழுகுவர்த்தி பிரார்த்தனயையும் நடத்தினார் ஜெகத். அதன் போருக்குப் பிந்தைய இன்னொரு வடிவம்தான் இந்த ”மௌனத்தின் வலி” நூல் வெளியீட்டு விழா. கருணாநிதின் பெயரை சரி செய்யும் முயற்சியும், போராட்டங்களை மடைமாற்றும் முயற்சியும் கூட இந்த விழாவில் இருக்கிறது. அதாவது அனைத்து பத்திரிகையாளர்களும், கலைத்துறையினரும், கவிஞர்களும், எழுத்தாளர்களும் எங்களின் பின்னால்  நிற்கிறார்கள் என்ற தோற்றத்தை ஞானவேலும், ஜெகத்தும் தோற்றுவித்திருக்கிறார்கள். கவிதை வெளியீட்டு விழாவில் பிரமுகர்கள் மேடையில் பேசினார்கள்.

பிரகாஷ்ராஜ் அவர் என்ன பேசினார் தெரியுமா? மௌனமாக இருந்து விட்டோம் என்று குறைபட்டார். ( மௌனமாக இருந்த ஞானவேல் பக்கத்தில் இருந்தார்) சிவக்குமார் பேசவே இல்லை ஏதோ கவிதை படித்தார். போலிச் சாமியார் சத்குரு ஜக்கி வாசுதேவ் “அன்பும் கருணையும் பொழியட்டும், மக்கள் போராடக் கூடாது, சேகுவேராவை யாரும் பின்பற்றக் கூடாது” என்றான் அந்த தாடிக்கார சொறி நாய்……”நான் விரைவில் ஈழ மக்களுக்காக ஒரு ப்ராஜக்ட் செய்யப் போகிறேன்” என்று ஆட்டையப் போட்டான் அந்தப் பாவி. ஏ.ஆர் முருகதாஸ் ஏதோ பேசினார்.

அந்த விழாவில் கடைசியாக நன்றி சொன்னது யார் தெரியுமா? மருத்துவர் எழிலன். அவர் திட்டக்குழு தலைவரும் தீவிர திமுக அனுதாபியுமான கருணாநிதியின் செல்லப் பிள்ளையுமான நாகநாதனின் மகனாம். துரோகங்களை என்ன மையிட்டு மறைத்தாலும் அது இந்த புயல் மழையில் கரைந்து கொண்டே இருக்கும்தானே? எவருடைய பேச்சிலும் அரசியல் இல்லை. போரின் இந்திய முகத்தை சுட்டிக் காட்டவோ, தமிழக துரோகத்தை தோலுரிக்கவோ முடியாத ஆளும் வர்க்க பெரும்பண்ணைகள் தங்களின் சந்தர்ப்பவாத ஆளும் வர்க்க நலனை முன்னெடுத்தே இதில் பேசினார்கள்.

வந்திருந்த கூட்டத்தில் பாதி அல்லேலுயா கோஷ்டிகள். மீதி பேர் சத்குருவின் பக்தர்களாம். கூட்டம் முடிந்ததும் சத்குருவைப் பார்த்து அழுது அரற்றினார்களாம். சத்குருவிடம் அழுதால் கஷ்டங்கள் மறைந்து விடும் என்று சாங்கியம் இருப்பதால் அப்படியாம். ஆக ஈழத்துக்காகப் போட்ட கூட்டத்தில் ஆடியன்ஸ் அழுதது சத்குருவுக்காக.

இந்த விழாவில் பேசிய கிறிஸ்தவ பிஷப் மலையப்பன் சின்னப்பா, இறைவன் ராஜபக்சேயை தண்டிப்பான் என்று பேசினார். தங்களைப் போன்ற யூதாஸ்களுக்கு என்ன தண்டனை என்பதை அவர் கூறவில்லை. கிறிஸ்தவத்துக்குள் இருக்கும் பெரும்பலான பாதிரிகள் சாதி வெறியர்கள். பண மோசடிப் பேர்வழிகள். கிறிஸ்தவ மீனவர்களுக்காக வந்த நிதிகளை பெருமவளவு மோசடி செய்த குற்றச்சாட்டுகள் பாதிரிகளுக்கு உண்டு. இந்த சென்னை மயிலை பிஷப் மலையப்பன் சின்னப்பாவோ திமுக ஆதரவாளர். ஆளும் கட்சியோடு தொடர்பு வைத்து தங்களின் மத நிறுவனங்களுக்கு அனுகூலங்களைப் பெற்று அதன் மூலம் தங்கள் வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டவர்கள் இவர்கள்.

ஜெகத் தனது “நாம்” அமைப்பின் நிகழ்ச்சிகளுக்கும்,இந்த மௌனத்தில் வலி நூலிற்கும் 68,லஸ் கோவில் சாலை என்னும் முகவரியைப் பயன்படுத்துகிறார். இது கிறிஸ்தவ நிறுவனமான சாந்தோம் கலைத் தொடர்பு நிலையத்தின் முகவரியாகும். ஆக ஜெகத்தின் இன்றைய ஈழம் சார்ந்த துரோகக் கருத்துக்களுக்கு வலிமை சேர்க்க கிறிஸ்தவ திருச்சபையின் ரப்பர் ஸ்டாம்ப்

இறுதியாக,

பத்திரிகையாளர்கள் ஈழத்துக்காக நூல் வெளியிடுவதோ, அதற்காக  போரடுவதோ தவறில்லை, ஆனால் போர் நடந்து கொண்டிருந்த போது இந்த பத்திரிகையாளர்கள் எங்கே போயிருந்தார்கள் ? போருக்கு எதிரானது என்று சொல்லப்படும் இந்நூல் நல்லேர் எனப்படும் ஜெகத்தின் பணத்தில் ஏன் வெளிவரவேண்டும்? “நாம்” அமைப்பின் நிறுவனர்களாக இருக்கும் கார்த்திக் சிதம்பரம் போன்ற ஈழக் கொலைகாரர்களின் பணம் “நாம்” அமைப்பிடம் இல்லை என்பதற்கு பத்திரிகையாளர்களின் பெயரில் ஜெகத்திற்கு பந்தி வைத்த ஞானவேல் ஏதாவது உத்திரவாதம் தருவாரா? அல்லது நல்லேர் பதிப்பகத்தின் செலவில் வெளிபட்டப்பட்டிருக்கும் இப்பணம் என்பது புலிகளை கடைசி நேரத்தில் எளிதாக சரணடைய வைத்ததற்காக இந்திய உளவு நிறுவனம் ஜெகத் கஸ்பருக்கு சன்மானமாக வழங்கப்பட்ட பணத்தில் இந்நூல் வெளியிடப்படவில்லை என்று உத்திரவாதத்தையாவது ஞானவேல் கொடுப்பாரா?

அன்பான ஈழத் தமிழர்களே!புலத்து மக்களே!  தமிழக மக்களே! வித விதமான குரலில் பேசி உங்கள் கழுத்த்தறுத்த இந்த துரோகிகளை இனம் காணுங்கள். இன்னும் நீங்கள் இவர்களிடமிருந்து பாடம் கற்றுக் கொள்ளவில்லை என்றால் ஈழத்தில் எஞ்சியிருக்கும் உயிர்களைக் கூட இந்த இரத்த வெறியர்களிடம் நீங்கள் இழக்க வேண்டியிருக்கும். இந்தத்  துரோகிகளை இனங்கண்டு கொள்ளுங்கள். துரோகத்தை மறைக்க வித விதமான முகமூடிகளோடு வந்து தங்கள் கறைகளை கழுவ நினைக்கும் இந்த கைக்கூலிகளை அம்பலப்படுத்துங்கள். புதிய அரசியல் பாதையை உங்களின் சொந்த அரசியல் அறிவில் முன்னெடுங்கள்.

–          கட்டுரையாளர்: வெண்மணி

தொடர்புடைய பதிவுகள்

ஈழம் – வதை முகாம்களை எதிர்த்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் !

vote-012வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீண்டும் குடியமர்த்தவும்,
ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து,
நடவடிக்கை எடுக்கக் கோரி….

தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்
சென்னையில் 16.11.09 மாலை 4.30 மணிக்கு
மெமோரியல் ஹால் எதிரில்.

சிங்கள அரசே!
* ஈழத்தமிழ் மக்களை அடைத்து வைத்திருக்கும் வதைமுகாம்களை நீக்கு!
* மக்களை தத்தம் வசிப்பிடங்களில் மீள் குடியமர்த்து!
* அவர்களுடைய விவசாயம், தொழில்களை புனரமைத்துக் கொள்ள நிதி உதவி செய்!
*ஈழத்தமிழ்ப் பகுதிகளை ஆக்கிரமித்திருக்கும் சிங்கள குடியேற்றங்களை அகற்று!

இந்திய அரசே!
* சிங்கள அரசின் தமிழின அழிப்புச்சதிக்கு துணை நிற்காதே!
* மேலாதிக்க நோக்கத்திற்காக ஈழத்தமிழ் பிரதேசங்களை ஆக்கிரமிக்காதே!

ஐக்கிய நாடுகள் மன்றமே!
* ராஜபக்சே அரசை போர்க்குற்றவாளி என அறிவித்து நடவடிக்கை எடு!
* வதை முகாம்களை நீக்கி ஈழத்தமிழ் மக்களை மீள் குடியமர்த்த நடவடிக்கை எடு!

உழைக்கும் மக்களே!
* பிழைப்புவாத ஓட்டுக்கட்சிகளின் வாய்ச்சவடால்களையும், கருணாநிதி அரசின் கபட நாடகத்தையும் முறியடிப்போம்!
* ஈழத்தமிழ் மக்கள் மீண்டும் தங்கள் வாழ்க்கையை தொடங்கும் வரை போராடுவோம்!

———————————————————————

மக்கள் கலை இலக்கியக் கழகம் – 94446 48879
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி – 94451 12675
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி – 94448 34519
பெண்கள் விடுதலை முன்னணி

—————————————————————–

தொடர்புக்கு: அ. முகுந்தன், 110, இரண்டாவது மாடி, மாநகராட்சி வணிக வளாகம், 63, ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், சென்னை – 24

ஈழம்: துயரங்களின் குவியல்!

13

ஈழம்: "ஆப்பரேஷன் லிபரேஷன்" – துயரங்களின் குவியல்!!

vote-012ஒப்பரேஷன் லிபரேஷன் என்ற தமிழின அழிப்பு நடவடிக்கையினால் நாங்கள் சொந்தமண்ணில் சொந்தவீடுகளிலிருந்து அகதிகளாய் விரட்டியடிக்கப்பட்டு பாடசாலைகளிலும் கோவில்களிலும் தஞ்சமடைந்தோம். வல்வெட்டித்துறையிலிருந்து பருத்தித்துறை அண்ணளவாக 7KM தூரம் இருக்கும். அவ்வளவு தூரத்தையும் நடந்தும், ஓடியும் கடந்து பருத்தித்துறையிலுள்ள புட்டளை மகாவித்தியாலயம் என்ற பாடசாலையை அடைந்தோம். உண்மையில் எங்கே போவது என்று தெரியாமல் தான் ஆரம்பத்தில் ஓடிக்கொண்டிருந்தோம். பிறகு ஒருவாறாக அவசரம், அவசரமாக முடிவெடுத்து சிங்கள ராணுவத்தின் துண்டுப்பிரசுரங்களில் குறிப்பிடப்பட்ட ஓர் இடத்தை தேர்வு செய்தோம். கோவில்கள் என்றால் நிச்சயம் குண்டு போடுவார்கள். அதனால் பாடசாலை ஒன்றில் புகுந்துகொள்வதே கொஞ்சமாவது பாதுகாப்பு என்று தோன்றியது.

இப்போது இதை எழுதுவதுவதை விட அந்த பதட்டமான நிமிடங்களில் உயிர் போகும் வேதனையாக இருந்தது. குண்டடிபட்டு உயிர் போனால் பரவாயில்லை. கை, கால் ஊனமாக ஓடவும் முடியாமல், மருத்துவ வசதியும் கிடைக்காமல் மற்றவர்களுக்கு பாரமாக ஏன் இருக்கவேண்டும் என்று தோன்றியது. எப்படியோ, ஏறக்குறைய நடைப்பிணங்கள் போல் புட்டளை மகாவித்தியாலயத்தை அடைந்தோம். நாங்கள் அங்கு சென்றபோது நன்றாகவே இருட்டிவிட்டிருந்தது. எந்தவொரு வெளிச்சமும் இல்லாமல் மனிதக்குரல்கள் பேச்சும் அழுகையுமாக கேட்டுக்கொண்டிருந்தது.

பெரியவர்களின் அழுகை, பேச்சுக்குரல்கள், குழந்தைகளின் அழுகை, எல்லாமே கலந்து எதோ ஒரு விவரிக்கமுடியாத வலி மனதைப்பிசைந்து கொண்டிருந்தது. ஒருவாறாக இருளில் தட்டி தடவி எதோ ஓர் வகுப்பறையில் ஒதுங்க கொஞ்சம் இடம் கிடைத்தது. பசி, தாகம், தூக்கம், வலி என்று எதுவுமே அறியாதபடி ராணுவம் எங்களை என்ன செய்யப்போகிறதோ என்ற பயம் மட்டுமே என்னையும் மற்றும் அனைவரையுமே வாட்டிக்கொண்டிருந்தது. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்று உயிர் பதைக்க காத்திருந்தோம்.

இப்போது இதை எழுதும் போது தான் தோன்றுகிறது. இதைத்தான் அவலம் என்பார்களா? என்னால் உண்மையிலேயே அந்த உணர்வை வார்த்தைகளில் வர்ணிக்க முடியவில்லை. ராணுவ அடக்குமுறைக்கு பணிந்து, பயந்து வாழவும் முடியாமல், சாகவும் முடியாமல் ஏனோ உயிரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறோம். ஒரு விதமாக என்மீதே எனக்கு வெறுப்பாகவும் இருந்தது. உயிரோடு இருப்பது கூட கோழைத்தனம் என்பது போலெல்லாம் சிந்திக்கத் தொடங்கினேன். முகாமில் இடப்பற்றாக்குறை காரணமாக ஆண், பெண் என்ற பேதங்கள் ஏதுமின்றி எல்லோரும் நெருக்கியடித்துக்கொண்டுதான் இருக்கவேண்டியிருந்தது.

பாடசாலை வகுப்பறையில் இருந்த தளபாடங்களை ஓர் ஓரமாக ஒதுக்கி விட்டு கட்டாந்தரையில் உட்கார்ந்தும், சிலர் தூங்கவும் முயற்சி செய்து கொண்டிருந்தார்கள். குழந்தைகள் பெரியவர்களின் மடிகளில் தூங்கிக்கொண்டிருந்தார்கள். என்ன நேரம் என்றும் தெரியவில்லை. தெரிந்து கொள்ளும் ஆவலும் யாருக்கும் இருக்கவில்லை. அங்கிருந்தவர்களில் பலர் தங்கள் மற்றைய உறவுகளுக்கு, அயலவர்களுக்கு என்ன நடந்ததோ என்றும், குண்டுவீச்சில் தங்கள் உறவுகளை பறிகொடுத்தவர்கள் அழுது புலம்பிக்கொண்டிருந்தார்கள். அதை தவிர வேறென்ன செய்யமுடியும்?

மலசல கூடம் எங்கேயிருக்கிறது என்றும் தெரியாது. தண்ணீர் எங்கே கிடைக்கும் என்றும் தெரியாது. தெரிந்தாலும் அந்த இருளில் ராணுவம் எங்கேயாவது மறைந்து நின்று தாக்குமோ என்ற பயப்பீதியில் யாருமே அதைப்பற்றியெல்லாம் பேசக்கூட நினைக்கவில்லை. பொழுது விடியட்டும் பார்த்துக்கொள்ளலாம் என்று நானும் பொறுமையோடு காத்திருந்தேன். பொழுது மட்டும் தான் விடியும். ஈழத்தமிழர்களின் தலைவிதி விடியுமா என்ன? எவ்வளவு நேரம் சென்றிருக்குமோ தெரியவில்லை.

ஒருவாறாக சூரிய வெளிச்சம் தலைகாட்டத்தொடங்கியது. கூடவே சிங்களராணுவம் பற்றிய பயமும் அதிகரிக்கத் தொடங்கியது. எங்கும் மனிததலைகளாக தெரிந்தது. எள் போட்டால் எண்ணையாகும் அளவிற்கு மனிதர்களால் அந்த பாடசாலை நிரம்பி வழிந்தது. இயற்கை உபாதை வேறு உயிரை வாங்கிக்கொண்டிருந்தது. சரி என்ன செய்வதென்று முழித்துக்கொண்டு இருந்தவேளை எங்களுக்கு அருகில் இருந்தவர்கள் தங்கள் வீடு பாடசாலைக்கு முன்னால் இருப்பதாகவும், வேண்டுமானால் தங்களோடு வரும்படியும் கூறினார்கள். அந்த நேரத்தில் உண்மையில் அவர்களுக்கு நன்றி கூற வார்த்தைகள் கிடைக்கவில்லை எனக்கு.

அவர்கள் வீட்டிற்கு சென்று அவசரமாக காலைகடன்களை முடித்துக்கொண்டு மறுபடியும் அகதிமுகாமுக்கு திரும்பினோம். ஆனால், மக்கள் தொகை கூடிய பின் அவர்கள் எத்தனை பேரை தங்கள் வீடிற்கு அழைத்து செல்ல முடியும். அதனால் நாசூக்காக எங்களையும் வரவேண்டாம் என்று சொன்னார்கள். அவர்களை கோபித்துக்கொள்ளவும் முடியாது. அதனால், அந்த பாடாசாலைக்கு அருகிலுள்ள ஓர் சிறிய அதிகம் அடர்த்தியில்லாத பனங்கூடல் தான் மலசல கூடமாக மாறியது. ஆண், பெண் என்ற பாகுபாடு இல்லாமல், அதுவும் அதிகாலை ஒரு மூன்று மணியிலிருந்து ஐந்து மணிக்குள் போனால் தான் உண்டு. இல்லையென்றால் சூரிய வெளிச்சம் எங்களின் பிட்டங்களை படம் பிடித்துக் காட்டிவிடும். அந்த அகால நேரத்தில் எங்காவது மறைந்து நின்று சிங்களராணுவம் பிட்டத்தில் சுட்டுவிடுமே என்ற பயமும் கூட இருந்தது.

இது தவிர நான் மாற்றுடுப்புகள் இல்லாமலும், குளிக்க வசதிகள் இல்லாமலும், இயற்கை பெண்களுக்கு அளித்த தண்டனையினாலும் நாறிய கதையெல்லாம் இங்கே தவிர்த்திருக்கிறேன். பெண்களுக்கு மட்டுமே அந்த நரகவேதனை புரியும். என் அனுபவத்தை நான் தவிர்த்தாலும் எங்கள் சகோதரிகள் வதைமுகாம்களில் இதைவிட மோசமாகத்தான் இன்று பாதிக்கப்பட்டுகொண்டிருக்கிறார்கள். என் உறவினர் ஒருவர் சொன்னார் குளிப்பதற்கு தண்ணீரின்றி இருப்பதால், இவர்களுக்கு பக்கத்தில் போனாலே ஓர் விதமான நாற்றம் அவர்கள் உடம்பிலிருந்து வருவதாக. இதுவும் எங்களின் அவலத்தின் ஓர் அங்கம் தான்.

அப்போதெல்லாம் ஈழத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ எந்தவொரு தொண்டு நிறுவனங்களும் இருந்ததில்லை. இப்போது வதைமுகாம்களில் தொண்டு நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனாலும் அவர்களின் செயற்பாடுகள் சிங்கள அரசால் மட்டுப்படுத்தப்பட்டே இருக்கின்றன. வெறும் ஆயிரத்திச் சொச்ச மாணவர்களே படிக்கக்கூடிய எந்த வசதிகளும் அற்ற ஓர் பொது பாடசாலையில் எத்தனை ஆயிரம் மக்கள் அடிப்படை வசதிகள் இன்றி ஒரு நாளையேனும் தள்ள முடியும்? வீட்டிலுள்ள பெரியவர்கள் தான் சாப்பாடு, தண்ணீர் என்ற பிரச்சனைகளைப் பற்றி பேசி அதற்கான ஏற்பாடுகளை கவனிக்கத்தொடங்கினார்கள்.

அந்த பாடசாலைக்கு அருகிலுள்ள வீடுகளிலுள்ள மக்கள் சில சமையல் பாத்திரங்களை கொடுத்தார்கள். அரிசி, மரக்கறி என்று ஏதோ கிடைத்ததை வீட்டிலுள்ள ஆண்கள் கொண்டுவந்தார்கள். எல்லாவற்றையும் ஒன்றாக அவித்து ஏதோ சாப்பாடு என்ற பெயரில் அரை வயிறும், கால்வயிறுமாக உண்டு உயிரை பிடித்து வைத்துக்கொண்டோம். கிடைத்த இரண்டு தட்டுக்களில் முறைவைத்து உணவு பரிமாறப்பட்டது. பெரியவர்கள் பரவாயில்லை. குழந்தைகள் அதையெல்லாம் சாப்பிடவும் கஷ்டப்பட்டு, வேறு உணவு கிடைக்காததால் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள்.

ஈழத்தில் ரேஷன் கடைகளை பல நோக்கு கூட்டுறவு “சங்க கடை” என்றுதான் அழைப்பார்கள். உணவுப்பற்றாக்குறை காரணமாக அருகிலுள்ள ஊர்களிலிருந்த சங்க கடைகளை உடைத்து தான் அரிசி பருப்பு என்று முடியுமானவரை ஊர் விதானைகள் (கிராம சேவையாளர்கள்) மக்களுக்கு பகிர்ந்தளிக்க முயற்சி செய்தார்கள். ஆனால், அது வேறு விதமாகத்தான் முடிந்தது. ஒரு நாள் அங்கிருந்த மக்கள் ஓர் இடத்தில் உணவுப்பொருட்கள் வழங்கப்படுவதாக அந்த பக்கம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தார்கள்.

நானும் வரிசையில் நின்றால் ஏதாவது கிடைக்கும் என்று ஓடினேன். ஆனால், அங்கு நான் கண்ட அவலக்காட்சி என்னை தாக்கியதால் அப்படியே ஸ்தம்பித்து சிலை போல் நின்றுவிட்டேன். அப்படியே பார்த்துக்கொண்டே நின்றேன். அங்கே மக்கள் தொகையைவிட உணவின் அளவு மிகச்சிறியளவில் இருந்ததால் எல்லோரும் முண்டியடித்து ஒருவர் மேல் ஒருவர் விழுந்து, ஒருவர் கையில் இருந்ததை மற்றவர் பறித்தும் பெரிய போரே உணவுக்காக நடந்துகொண்டிருந்தது.

அந்த கூட்ட நெரிசலின் அடியில் இரண்டு பெண்மணிகள் ஒரு Lakspray பால் பெளடர் பையிற்காக தாங்கள் யாரென்றே தெரியாமல், ஒருவரையொருவர் பார்க்காமல் இழுபறி பட்டுக்கொண்டிருந்தார்கள். பக்கத்தில் நின்ற எனக்குத்தானே தெரியும் அவர்கள் இருவருமே என் சிறியதாய்மார்கள் என்பது. ஒருவாறு ஒருவரை மற்றவருக்கு அடையாளம் காட்டி விலக்கிவிட்ட பிறகுதான் இருவருமே ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துக்கொண்டனர். இருவருமே ஒருவரின் குழந்தைகளுக்காகத்தான் பால்மா யுத்தத்தில் ஈடுபட்டிருந்தார்கள்.

இப்போது இதை நாங்கள் சொல்லி சிரித்துக்கொள்வதும் உண்டு. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் அது வேதனையாக இருந்தது. நல்ல வேளை, அந்த சாப்பாடிற்கான போராட்டத்தில் கூட்டத்தில் நசுங்கி யாருமே இறக்கவில்லை என்றுதான் நிம்மதிப்பெருமூச்சு விட முடிந்தது. இது எங்கள் அவலத்தின் இன்னோர் வடிவம். எங்களை தெருநாய்களைப்போல் உணவிற்காகப் போட்டிபோடவைத்து பிறகு அதை காட்சியாக்கி தொலைக்காட்சியில் பார்த்து மகிழ்கிறது சிங்களப்பேரினவாதம். வன்னியிலும் இதைத்தானே செய்தார்கள். இன்னும் செய்துகொண்டிருக்கிறார்கள்.

அன்று எங்களுக்கு நல்லவேளையாக தண்ணீர் பிரச்சனை ஓரளவிற்கு சமாளிக்ககூடியதாகவே இருந்தது. பாடசாலையில் ஓர் துலா கிணறு ஒன்றிருந்தது. அதை யாரும் குளிப்பதற்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ பாவிக்காமல் குடிதண்ணீர் தேவைகளுக்கு மட்டுமே பாவிக்கும்படி யாரோ சொல்லியிருந்தார்கள். அதனால் ஓரளவிற்கு குடிதண்ணீர் பிரச்சனை இல்லாமல் இருந்தது. இன்று, வதைமுகாம்களில் குடிதண்ணீருக்காக நாட்கணக்கில் கூட அவர்கள் வரிசையில் வாடவேண்டிய அவலம். இவ்வாறாக முகாம்களில் எங்கள் அடிப்படைவசதிகள் பற்றிய அவலங்களை சொல்லிக்கொண்டே போகலாம்.

ஆனால், அதை அனுபவித்தால் தான் அதன் வலியை உணர முடியும். எங்கள் உறவுகளை மிருகக்காட்சி சாலையில் இருக்கும் மிருகங்கள் போல காட்சிப்பொருளாகவும், அந்த மிருகக்காட்சிசாலையின் காவலர்களான அரசியல்வாதிகள் அவ்வப்போது வந்து பார்வையிட்டு, கூடவே அறிக்கைகளும் விட்டு எங்களின் வலிகளுக்கு மென்மேலும் அவலச்சுவை கூட்டிக்கொண்டிருக்கிறார்கள்.
அடிப்படை வசதிப்பிரச்சனைகள் ஒருபுறமிருக்க, ராணுவம் பற்றிய பயபீதியும் விவரிக்க முடியாத ஒன்றுதான். எங்களின் அவலங்களிலேயே வலிகூடிய அவலம் என்றால் அது ராணுவ அட்டூழியம் தான். முதலாவது நாள் ராணுவம் பற்றிய எந்தவொரு செய்தியும் யாருக்கும் தெரியாமல் ஏதோவொரு பதட்டத்துடனேயே பொழுது கழிந்துகொண்டிருந்தது. நிச்சயமாக ராணுவம் முகாமிற்குள் வரும் என்று சிறு குழந்தைக்குகூட தெரியும். இரண்டவது நாள் காலையில் நான் தங்கியிருந்த வகுப்பறையில் இருந்தேன். வேறேது போக்கிடம் எங்களுக்கு. திடீரென்று மக்களின் பேச்சொலிகள் அடங்கி, குழந்தைகளின் அழுகைச்சத்தமும் குறைந்து ஏதோவொரு அமைதி நிலவியது. பக்கென்று விவரிக்கமுடியாத பயத்தில் எனக்கு சர்வமும் அடங்கியது போலிருந்தது.

மரணத்தின் தூதுவர்கள் வந்துவிட்டார்கள் என்பதை அந்த திடீர் அமைதி என் செவிகளிலும், மனதிலும் அறைந்தாற்போல் சொல்லியது. குண்டுச்சத்தங்களை விடவும் இந்த அமைதி அதிக பயத்தை கொடுத்தது. என்னை சுற்றியுள்ளவர்களின் முகங்களையும் பார்த்தேன். பெரியவர்கள், சிறுவர்கள் என்று எல்லோருடைய முகங்களும் பயத்தில் இறுகிப்போயிருந்தன. எல்லோருடைய முகங்களிலும் தெரிந்தது பயம், பயம், வார்த்தைகளில் அடங்காத பயம் என்ற உணர்வுதான். மெதுவாக தலையை நிமிர்த்தி பார்த்தேன். வரிசையாக இரும்புத்தொப்பிகளும், துப்பாக்கிகளும் நரவேட்டைக்காய் முகாமிற்குள்ளே அணிவகுத்து வந்துகொண்டிருந்தன.

என்னை கற்பழித்துவிட்டு கொல்வார்களா? அல்லது போகிறபோக்கில் தெருநாயைப்போல் சுட்டுவிட்டுப்போவார்களா? என் சாவு எப்படியிருக்கும்? என்னை பிடித்துச்சென்றால் சித்திரவதை செய்வார்களா? ஐயோ, அதை எப்படி தாங்க முடியும்? பயப்பிராந்தியில் தாறுமாறாக என் மனதில் கேள்விகள் ஓடத்தொடங்கின.

சர்வநாடியும் அடங்கி ஒடுங்கிய படியே என்னைச்சுற்றி நடப்பதை ஊமைப்படம் போல் பார்த்துக்கொண்டிருந்தேன். ராணுவம் ஒவ்வொரு ஆண்மகனாக சுட்டுவிரலால் சுட்டி எழும்பச்சொல்லி, வரிசையாக நிற்கவைத்துக்கொண்டிருந்தார்கள். மாணவர்கள், திருமணமானவர்கள், திருமணமாகாதவர்கள் என்று எந்த வயது வித்தியாசம் இல்லாமல்தான் கைதுகள் நடந்துகொண்டிருந்தன. சில சகோதரர்களை என்ன காரணத்திற்கு என்று தெரியாமலே நிலத்தில் போட்டு தங்கள் சப்பாத்து கால்களால் மிதித்துக்கொண்டு இருந்தார்கள். அடிவாங்கியவர்கள் தங்கள் கைகளால் தடுக்க முயற்சி செய்தார்களேயன்றி ஏனோ வாய்விட்டு அழக்கூட திராணியற்றவர்களாக மிருகங்களாய் மிதிபட்டுக்கொண்டிருந்தார்கள்.

அந்த வெறி பிடித்த ராணுவத்தை யாரால் தடுக்க முடியும்? அன்றும் சரி, இன்று இதை எழுதும் போதும் சரி என் மனம் அந்த ரணத்தால் வலிக்கிறது. பேசாமல் எழுதுவதை மூட்டைகட்டிவிட்டு ஏதாவதொரு மூலையில் முடங்கி அழவேண்டும் போலுள்ளது. ஆனால், அழுவதால் மட்டும் எங்கள் வலி ஆறாது என்றும் என் அறிவுசார் மனம் சொல்கிறது. யாராவது பெண்களையும் பிடித்துச் செல்கிறார்களா என்று என் கண்கள் சுழன்று, சுழன்று தேடின. அப்படி யாரையும் அழைத்துச் செல்வதாக என் கண்ணில் படவில்லை.

ஆனாலும் என் சகோதரர்களின் நிலையைப் பார்க்கும் போது வேதனையாகத்தானிருந்தது. கைதாகிய சகோதரர்களை துப்பாக்கிகளால் நெட்டித்தள்ளியும், பிடரியில் அடித்தும் அடிமைகளாய் அழைத்துச் சென்றார்கள். இதில் எங்கள் வீட்டு ஆண்களும் அடங்குவர். ஆண்டுகள் கடந்தாலும் அவலங்கள் மட்டும் வதைமுகாம் வடிவில் இன்னும் தொடர்கதைகளாய் தொடர்கிறது. ஆண், பெண், வயதானவர்கள், சிறுவர்கள் என்ற எந்த வரையறைகளுமின்றி கைதுகள் நடக்கின்றன. இதற்கெல்லாம் யாரிடமும் நாங்கள் முறையிட முடிகிறதா? காப்பாற்றுங்கள் என்று அவலக்குரல் எழுப்பினாலே எங்கள் குரல்வளைகளை நெரிக்க அரசியல்வாதிகள் முதல் ராணுவம் வரை ஆளாளுக்கு முண்டியடித்துக்கொண்டு வரிசையில் நிற்கிறார்கள். .
ஏறக்குறைய அந்த முகாமிலுள்ள ஆண்கள் அனைவரும் ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்ட பின்னர், அடுத்த நொடியே பெண்களின் அழுகையொலிகள், ஒப்பாரிகள் என்று முகாமையே உலுக்கியது. “நாசமாப்போவான்கள்” என்று மண்ணைவாரி தூற்றிக்கொண்டிருந்தார்கள் சில தாய்மார்கள். கைதாகி அழைத்துச் செல்லப்பட்ட ஆண்களின் குழந்தைகள் சிலர் “அப்பா, அப்பா” என்று குழறி அழுதுகொண்டிருந்தார்கள். அதெல்லாம் ஒன்றும் சிங்கள ராணுவத்தின் மனதை கரைக்கவில்லை. ஒருவேளை கணவன் திரும்பி வராமலே போனால் ஆதரவில்லாமல் தன்னுடையதும், தன் குழந்தைகளினதும் வாழ்க்கை என்னாகுமோ என்ற விடைதெரியாத கேள்விகளுடன், அதை சொல்லியழத் தெரியாமல் எத்தனையோ மனைவிமார்களையும் பார்த்த போது………எனக்கு வார்த்தை வரவில்லை.

ஆனால், எல்லோருடைய மனதிலும் தொக்கி நின்ற கேள்வி என் மகன், என் கணவன், என் சகோதரன் உயிருடன் திரும்பி வருவானா என்பதுதான். என் உறவினர்களும் ஆளுக்கொரு மூலையில் இருந்து அழுதுகொண்டிருந்தார்கள். என் பாட்டி தான் கொஞ்சம் புலம்பிப் புலம்பி ஏதேதோ அரற்றிக்கொண்டிருந்தார். பக்கத்தில் சென்று “அழாதே” என்று சொன்னால் இயலாமையிலும் வேதனையிலும் பாட்டி கண்டபடி என்னை திட்டத்தொடங்குவார். அதனால், மூடிக்கொண்டு மூலையில் உட்கார்ந்தேன். விழியோரத்தில் கண்ணீர் மட்டும் என்னையும் அறியாமல் வழிந்து கொண்டிருந்தது.

அந்த அழுகை ஒலிகளுக்கு நடுவிலும் ஏதாவது துப்பாக்கிச் சத்தம் கேட்கிறதா என்று காதைக்கொடுத்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். காரணம், சிங்கள ராணுவம் போகிற போக்கிலேயே பிடித்துச்சென்றவர்களை வீதியில் வைத்து சுட்டு எறிந்து விட்டும் செல்வார்கள். முகம் சிதைபடாமல் இருந்தால் உடனேயே யாரென்று அடையாளம் காணலாம். ஒப்பரேஷன் லிபரேஷன் போது இப்படி வீதிகளில் பலபேர் பிணங்களாய் ஆக்கப்பட்டவர்கள்தான்.

எங்களோடு அந்த பாடசாலை வகுப்பறையில் இருந்த ஓர் யாழ்ப்பாண பல்கலைக்கழ மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டு முகம் சிதைக்கப்பட்ட நிலையில் வீதியில் பிணமாய் கிடந்தார். அவரின் அங்க அடையாளங்களை வைத்துத்தான் அவரை குடும்பத்தினர் அடையாளம் கண்டுபிடித்தனர். அவரின் உறவினர்கள் எல்லோரும் இறுதியாய் தெருவிலேயே கூடியழுதுவிட்டு, பக்கத்திலேயே எங்கோ உடலைப் புதைத்துவிட்டு வந்தார்கள். ராணுவ கெடுபிடிகளால் உடல்களை பெரும்பாலும் அச்சமயத்தில் சுடுகாட்டிற்கு கொண்டுசென்று எரிக்கமுடியவில்லை.
சிங்கள ராணுவத்தால் அழைத்துச் செல்லப்பட்டவர்கள் சிலர் அன்றே விடுதலை செய்யப்பட்டனர். சிலர் அடுத்தநாளும், சிலர் சில நாட்களின் பின்பும் விடுவிக்கப்பட்டனர். எங்கள் வீட்டை சேர்ந்தவர்கள் இரண்டு நாட்கள் கழித்து ராணுவத்திடம் நிறைய அடிவாங்கி முகாமிற்கு திரும்பி வந்தார்கள். நாங்கள் முகாமில் இருக்கும் வரை திரும்பி வராதவர்களும், திரும்பியே வராதவர்களும் கூட இருக்கிறரர்கள். ஒவ்வொரு பதிவிலும் இதைத்தானே சொல்கிறேன் என்று நீங்கள் நினைத்தாலும், ஈழத்தமிழர்கள் வாழ்வில் இது இன்று ஓர் அன்றாட நிகழ்வாகிப் போனதால் நான்/நாங்கள் தொடர்ந்தும் இதைப் பேசவேண்டியுள்ளது.

அந்த நாட்களில் ராணுவம் கைது செய்து கொண்டு போனாலும் யாரும் அவர்களின் முகாமிற்கு சென்று பார்க்கவோ பேசவோ முடியாது. எந்தவொரு அமைப்பிடமும் முறையிடவும் முடியாது. கைதானவர்கள் திரும்பி வந்தால் கண்டுகொள்ள வேண்டியதுதான். ஒரு மனைவி கணவன் இறந்து விட்டானா அல்லது உயிருடன் திரும்பி வருவானா என்று எவ்வளவு காலம் பதில் தெரியாமல் காத்திருக்க வேண்டும்? ஆனால், ஈழத்தில் ஆயிரக்கணக்கான பெண்கள் இப்படி இன்றுவரை காத்துக்கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படி சொல்லத்தொடங்கினால் முடிவே இல்லாமல் நீண்டு கொண்டே போகும் எங்கள் அவலங்களின் பட்டியல்.
எத்தனை நாட்கள் இப்படி ஓர் பாடசாலையில் எந்தவொரு அடிப்படைவசதி இல்லாமலும், ராணுவம் எப்போது வந்து யாரை கொண்டு போகுமோ என்ற பீதியுடனும் நாட்களை நகர்த்த முடியும். சிங்கள ராணுவம் வடமராட்சியை கைப்பற்றிய பின் யாழ்ப்பாண நகர்ப்பகுதியையும், தென்மராட்சியையும் கைப்பற்றும் என்றும் தெரியும். ஆனாலும், தற்காலிகமாக ராணுவத்திடமிருந்து தப்பிக்கொள்ள இந்த இரண்டில் ஓர் இடம்தான் கதி. யாழ்ப்பாணம் நகர்ப்பகுதிக்கு போக முடியாது. அது நீண்டவழி. போக்குவரத்து வசதியும் கிடையாது. அதனால், தென்மராட்சிக்கு போவதாக வீட்டில் முடிவெடுத்தார்கள். எங்களுக்கு அங்கு உறவினர்களோ அல்லது தெரிந்தவர்களோ கூட கிடையாது. குறைந்த பட்சம் ஓர் கோவிலோ, மடமோ ராணுவ அட்டூழியம் இல்லாத ஓர் இடமாக இருந்தால் போதுமென்றிருந்தது. தவிரவும், ராணுவம் வேறு எல்லோரும் வீடுகளுக்கு செல்லுங்கள் என்று அறிவித்திருந்தார்கள்.

ஆனால், வீடுகளுக்கு திரும்பிப் போவது என்பது ஏதோ கொலைக்களத்திற்கு போவது போன்ற ஓர் உணர்வாகவே இருந்தது. தென்மராட்சிக்கு போக முன்னர் ஒருதடவை மறுபடியும் வீட்டுக்கு போய் மாற்றுடுப்புகளாவது எடுத்துக்கொண்டு போகலாம் என்று என் தாயாரும், பாட்டியும் ஊருக்கு போகத் தீர்மானித்தார்கள். அவர்கள் வரும்வரை மீதிப்பேர் முகாமில் இருப்பது என்று முடிவெடுத்தோம். எங்களோடு வந்திருந்த சாமிமாமாவின் மனைவி தன்னை ராணுவம் சுட்டாலும் பரவாயில்லை என்று ஏற்கனவே கிளம்பிப் போய்விட்டிருந்தார்.
ஊருக்கு நடந்து போய் நடந்து வரவேண்டும். எந்தவொரு போக்குவரத்து ஊடகமும் கிடையாது. போனவர்கள் உயிருடன் திரும்பவேண்டுமே. போன இருவரும் திரும்பி வரும்வரை உயிர் பதைக்க காத்திருந்தோம். எனக்கு தந்தை இல்லை, தாயார் மட்டுமே. அந்த போர் சூழலில் வாழ்ந்ததாலோ என்னவோ எங்கள் ஈழப்பெண்கள் ஓரளவிற்கு பிரச்சனைகளை சமாளிக்கும் சாதுர்யமும் வலுவும் பெற்றிருந்தார்கள் என்றுதான் சொல்லவேண்டும். இல்லையென்றால் சிங்கள ராணுவத்தின் இரக்கமற்ற இயல்பு தெரிந்தும் யாரும் துணிந்து இப்படியெல்லாம் போவார்களா? இருவரும் போய் எங்கள் பைகளை மட்டும் எடுத்துக்கொண்டு திரும்பிவந்தார்கள்.

இருவருமே உடைமைகள் எரிக்கப்பட்டும் பல உயிர்கள் காவுவாங்கப்பட்டும் இருப்பதை பார்த்தும், கேட்டும் நிறையவே பயந்து போயிருந்தார்கள். எவ்வளவு விரைவில் முடியுமோ அவ்வளவு விரைவாக கிளம்பிப் போகவேண்டும் என்றார்கள். வடமராட்சியில் இருந்து தென்மராட்சிக்கு அண்ணளவாக 18KM இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருநாள், காலையில் முகாமில் இருந்து புறப்பட்டு நீண்டதூரம் முதலில் கடற்கரையோரமாகவும் பிறகு குறுக்குவழிகளின் ஊடாகவும் நடந்து தான் தென்மராட்சிக்கு போனோம்.

ஒருவேளை போகும் வழியில் ராணுவம் மறித்து அடையாள அட்டையிலுள்ள ஊருக்குப் போகாமல் ஏன் வேறு திசையில் போகிறீர்கள் என்று கேட்டால் எல்லோருமே ஒரே பதிலை சொல்லவேண்டும் என்று பேசிவைத்துக்கொண்டோம். ராணுவத்திற்கு பயந்துதான் ஊரை விட்டுபோகிறோம் என்று சொல்ல முடியுமா? ஊரில் எங்களின் வீடுகள் எரிந்துவிட்டது, குண்டுவீச்சில் உடைந்துவிட்டது இருக்க இடமில்லை அதனால் உறவினர் வீட்டுக்கு செல்வதாக எல்லோரும் ஒரே பதிலை சொல்லவேண்டும் என்று தீர்மானித்தோம். ஆனால், இதை ராணுவம் ஏற்றுக்கொள்ளுமா என்பதெல்லாம் வேறுகதை.

எங்கள் வீடு எரிக்கப்படவில்லை. ஆனால், வீட்டிலுள்ள அத்தனை பொருட்களுமே உடைக்கப்பட்டும், சில பொருட்கள் திருட்டுப்போயும் இருந்தன. நல்லவேளையாக ராணுவத்தின் கண்ணில் அகப்படாமலே ஒருவாறு தப்பிவிட்டோம். நாங்கள் போகும் வழியில் கடற்கரையோரத்தில் உள்ள ஊர்களுக்கு ராணுவம் இன்னும் செல்லாததால் அவர்களுக்கு ராணுவம் வடமராட்சியை கைப்பற்றியது தெரிந்திருக்கவில்லை. வெடிச்சத்தங்கள் நிறையவே கேட்டதாகச் சொன்னார்கள். எங்களையும், எங்களின் கோலங்களையும் பார்த்தவர்களுக்கு நாங்கள் எதையுமே அதிகம் விளக்கத்தேவையில்லாமல் இருந்தது. உங்களுக்கு பின்னால் நாங்களும் தென்மராட்சிக்கு வருவதுதான் நல்லது என்றார்கள்.
ஒருவாறாக தென்மராட்சியை அடைந்தபோது ஏதோ ஓர் நிம்மதியாக இருந்தது. தென்மராட்சியில் மிருசுவில் என்ற இடத்தில் தான் ஓர் வீதியோரமாக இருந்த புளியமரத்தின் கீழ் மூட்டை முடிச்சுகளோடு உட்கார்ந்திருந்தோம். அதற்கு மேல் எங்கே போவது என்று தெரியவில்லை. அந்த ஊரில் தங்குவற்கு அருகில் கோவில் அல்லது மடம் இப்படி ஏதாவது இருக்குமா என்று யாரையாவது கேட்கலாம் என்று, யாராவது வருகிறார்களா என்று வீதியோரத்தில் காத்துக்கிடந்தோம். இருட்ட வேறு தொடங்கியிருந்தது. கொஞ்சநேரம் கழித்து அந்த வழியில் சைக்கிளில் வந்த ஒருவர் எங்களிடம் வந்து, “எங்க வடமராட்சியில் இருந்து வாறியளோ”? என்றார். நாங்கள் பதில் சொன்னதும், “உங்களைப்போல் நிறையப்பேர் வந்திருக்கினம். இங்கேயே இருங்கோ நான் போய் உங்களுக்கு உதவி செய்ய ஆட்களை அனுப்புகிறேன்” என்றார்.

சிறிது நேரம் கழித்து சில இளைஞர்கள் சைக்கிளில் வந்தார்கள். எங்களை அழைத்துச் சென்று ஓர் வீட்டில் தங்க ஏற்பாடுகளை செய்தார்கள். அதை வீடு என்பதா என்றெல்லாம் எனக்கு சொல்லத்தெரியவில்லை. காரணம், அங்கிருந்தது ஒரேயொரு மூதாட்டி. அவர் ஏதோ தீட்சை பெற்றவராம். அவருடைய பரம்பரையில் எல்லோருமே சமாதியடைந்தவர்களாம். அவர் எங்களை பார்த்த பார்வையே ஏதோ விரோதியைப் பார்ப்பது போலிருந்தது. ஒருவேளை நாங்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விடுவோம் என்று நினைத்தாரோ தெரியவில்லை. ஆனாலும், அவர் எங்களை வெளியே போ என்றெல்லாம் சொல்லவில்லை.

எங்களை அழைத்து வந்தவர்கள் ஏற்கனவே அந்த மூதாட்டியின் ஆச்சார அனுஷ்டானங்களைப் பற்றி எச்சரிக்கை செய்து, அனுசரித்துப்போங்கள் என்று சொல்லியிருந்தார்கள். சிங்கள ராணுவத்தை விட இவரை அனுசரிப்பது ஒன்றும் எங்களுக்கு பிரச்சனை இல்லையே. அந்த இளைஞர்கள் எங்களிடம் சாப்பாட்டிற்கு சமையல் செலவுக்கு பணம் இருக்கிறதா என்றெல்லாம் திருப்பித் திருப்பி கேட்டார்கள். தொடர்ந்து இரண்டு நாட்கள் வந்து நாங்கள் எப்படியிருக்கிறோம் என்று விசாரித்துவிட்டுச் சென்றார்கள். அவர்கள் யார் என்று நாங்கள் கேட்டதிற்கு, தாங்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என்றார்கள். அந்த மூதாட்டியும், அந்த ஊரில் எங்களுக்கு உதவியவர்களும் இன்றும் என் மனதில் இருக்கிறார்கள்.

அந்த மூதாட்டியின் ஆசாரத்திற்கு பங்கம் வராமல் முற்றத்திலேயே அடுப்பு மூட்டி சமையல் செய்தோம். முற்றத்திலேயே தூங்கினோம். நல்லவேளை அது மழைக்காலம் இல்லை. இப்படி கொஞ்ச நாட்கள் கழிந்தன. ஒருநாள் வழக்கம் போல் மல்லாக்காக படுத்துக்கொண்டு ஈழத்தமிழர்களுக்கு என்றைக்குமே இல்லாத எதிர்காலத்தை நினைத்து ஏதோ சிந்தனையில் இருந்தேன்.

வெளியே சென்றிருந்த என் சித்தப்பா வந்து, “சரி, சரி இந்தியன் ஆமி வந்திட்டானாம் எல்லாரும் வெளிக்கிடுங்கோ ஊருக்கு போவம்” என்றார். ஊருக்கு, எங்கள் சொந்த வீட்டிற்கு திரும்பிப் போகப்போகிறோம் என்று சந்தோசமாக இருந்தாலும் மறுபடியும் ஆமியா என்று ஏதோவொன்று முள்ளாய் என் அடிமனதில் தைத்தது.

தொடரும்

ரதி

தொடர்புடைய பதிவுகள்

பார்ப்பனியத்திடம் சரணடைந்த இஸ்லாம் !!

368

பதிப்புரை

ஸ்லாத்தின் சமூக சமத்துவ கோட்பாட்டுக்கு முற்றிலும் நேரெதிரான வகையில், இந்திய முஸ்லிம்களிடையே சாதிய வேற்றுமையும் பாரபட்சமும் புரையோடிப் போய் கிடக்கிறது. இது, பார்ப்பன இந்து மதத்தின் தாக்கத்தினால் ஏற்பட்டது மட்டுமல்ல; பல இஸ்லாமிய மன்னர்களும் உலேமாக்களும் இச்சாதிய பாரபட்சத்தை நியாயப்படுத்தி கட்டிக் காத்து வந்துள்ளனர். இந்த உண்மையையும், மனுவாத அடிப்படையில் இஸ்லாமிய மார்க்கம் எவ்வாறு இந்தியாவில் உருத்திரிக்கப்பட்டுள்ளது என்பதையும் வரலாற்றுப் பின்னணியுடன் வெளிக்கொணர்கிறார், இஸ்லாமிய இளைஞரான மசூத் ஆலம் ஃபலாஹி.

தற்போது டெல்லி நேரு பல்கலைக்கழகத்தின் அரபுமொழித் துறையில் முனைவர் பட்டத்துக்கான ஆராய்ச்சி மாணவராக உள்ள இவர், ஜாமியா உல்ஃபலா மதரசாவில் இஸ்லாமிய மார்க்கக் கல்வியைப் படித்து முடித்தவர். இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி மற்றும் சாதி அடிப்படையிலான இழிவுபடுத்தல்கள் பற்றி இவர் விரிவாக ஆய்ந்தெழுதியுள்ளார். கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் “”ஃபிராண்டியர்” (பிப்ரவரி 511, 2006) என்ற ஆங்கில வார இதழுக்கு அளித்த நேர்காணலில் அவர், இவை குறித்து அலசுகிறார். புறக்கணிக்கப்படும் பிரச்சினை குறித்த இச்சிறுவெளியீடு இந்துமதத்தின் கொடுமைகளை எதிர்க்கிறோம் என்று கூறிக்கொண்டு இஸ்லாத்திலும் மனு”தர்ம’ அடிகொடுக்கும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும், சாதியத்திற்கு எதிராகவும் விடாப்பிடியாகப் போராட விரிந்த பார்வையை அளிக்குமென்று நம்புகிறோம்.

-கீழைக்காற்று

இஸ்லாத்தில் மனுவாதிகள் : (இந்திய முஸ்லிம்களிடையே நிலவும் சாதி – தீண்டாமை குறித்து ஆய்வு செய்து, மசூத் ஆலம் ஃபலாஹி அளித்த நேர்காணல்)

vote-012கேள்வி:இந்திய முஸ்லீம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையை ஆய்வு செய்வதில் நீங்கள் எவ்வாறு அக்கறை காட்டத் தொடங்கினீர்கள்?

பதில்: பீகார் மாநிலத்திலுள்ள சீத்தாமரி என்ற சிறு கிராமத்தைச் சேர்ந்தவன் நான். கிழக்கு உத்திரப்பிரதேசத்திலுள்ள மவுனத் பான்ஜன் என்ற ஊரில் எனது பள்ளிப் படிப்பை நான் முடித்தேன். பின்னர், இஸ்லாமிய உயர் கல்வி பெறுவதற்காக, ஆஜம்கார் மாவட்டத்தின் பிலாரியாகன்ஜ் எனும் ஊரிலுள்ள ஜாமியா உல்ஃபலா மதரசாவுக்குச் சென்றேன். 1999ஆம் ஆண்டில் ஃபசிலத் கல்வியை முடித்த நான், இளங்கலை பட்டப்படிப்புக்காக அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தேன். அதன்பின்னர், புதுடெல்லியிலுள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்து முதுகலைப் பட்டம் பெற்றேன்.

1996ஆம் ஆண்டில், ஜாமியா உல்ஃபலாவில் நான் மாணவனாக இருந்தபோது, “”குரானைப் பற்றிய ஓர் அறிமுகம்” என்ற ஒரு வார கால நிகழ்ச்சியை ஜமாத்இஇஸ்லாமிஹிந்த் என்ற அமைப்பு உத்திரப்பிரதேச மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்திருந்தது. இதன் ஒரு பகுதியாக, முஸ்லிம்கள் அல்லாதோர் வாழும் பகுதிகளில் இஸ்லாமிய மதம் பற்றி விளக்குவதற்காக ஜமாத் தலைவர்கள் சென்றனர். குறிப்பாக, தலித்துகள் வாழும் பகுதிகளில் அவர்கள் கவனம் செலுத்தினர். இஸ்லாத்தின் பொதுக்கருத்தான சமூக ரீதியிலான சமத்துவம் பற்றி தலித்துகளிடம் அவர்கள் பேசினர்.

ஹக்கிம் அப்துர்ரவூஃப் என்ற மூத்த ஜமாத் தலைவர், பிலாரியாகன்ஜ்இல் உள்ள தலித்துகள் வாழும் சேரிப் பகுதிக்கு வந்தார். நான் படித்துக் கொண்டிருந்த மதரசாவும் இந்த ஊரில்தான் இருந்தது. இஸ்லாம் சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்றும் சாதி, தீண்டாமை ஆகிய இழிவுகளுக்கு ஒரே தீர்வு இஸ்லாம்தான் என்றும் தலித்துகளிடம் அவர் கூறினார். தலித்துகள் இஸ்லாம் மதத்தை ஏற்றுக் கொண்டு மதம் மாறுவார்களானால், முஸ்லிம்கள் அவர்களைக் கட்டித் தழுவி வரவேற்பார்கள் என்றும் அவர் கூறினார்.

அவ்வாறு அவர் பேசிக் கொண்டிருந்த போது, ஒரு தலித் இளைஞர் எழுந்து நின்று, அவரை நோக்கி, “”இஸ்லாம் என்பது சமத்துவத்தைப் போதிக்கும் மதம் என்று எங்களுக்குத் தெரியும். ஆனால், உங்களுடைய முஸ்லிம் சமுதாயம் சாதிகள் மலிந்ததாகவே இருக்கிறது. இந்தப் பகுதியில் உள்ள முஸ்லிம்கள் தமது சாதிக்கு வெளியில் திருமணம் செய்து கொள்வதில்லை; மற்ற பகுதிகளிலும் அநேகமாக இதே நிலைமைதான். இந்நிலையில், தலித்துகளாகிய நாங்கள் முஸ்லிம்களாக மதம் மாறினால், எங்களுடன் யார் மணஉறவு வைத்துக் கொள்வார்கள்? எங்களுடன் சமமாக அமர்ந்து யார் உணவருந்துவார்கள்?” என்று கேட்டார்.

அந்த இளைஞரின் வாதம், எனது நெற்றிப் பொட்டில் தாக்கியதைப் போலிருந்தது; என்னைச் சிந்திக்கத் தூண்டியது. அவர் கூறியது பெருமளவு உண்மை என்பது எனக்குத் தெரியும். அது முதற்கொண்டு, சாதிய அமைப்பின் வரலாறு பற்றிய பல்வேறு நூல்களை நான் படிக்கத் தொடங்கினேன். பல்வேறு இந்திய உலேமாக்களின் நூல்களையும் நான் ஆழ்ந்து படித்தேன். இந்த உலேமாக்கள், அவர்களது சீடர்கள் பலராலும் மிகச் சிறந்த அறிஞர்கள் என்று பெரிதும் மதிக்கப்பட்டவர்கள். மௌலவி அகமத் ரசாகான் பரேல்வி, மௌலவி அஷ்ரப் அலி பரூக்கி தான்வி முதலான இத்தகைய அறிஞர்களின் நூல்களையும் நான் படித்தேன்.

இந்த உலேமாக்களில் பலரும், பிறப்பு அடிப்படையிலான சாதிய மேன்மையை நடைமுறையில் ஆதரித்து வாதிடுவோராக இருப்பதைக் கண்டேன். இந்தச் சாதியக் கருத்தாக்கத்தின் அடிப்படையில், குரானுக்கு முற்றிலும் எதிரான வகையில் இவர்கள் ஃபத்வா வழங்கியுள்ளதை கண்டறிந்தபோது நான் பெரிதும் அதிர்ச்சியடைந்தேன். அரபு மொழியில் காஃபா என்றழைக்கப்படுவதன் கருத்தாக்கத்தைத் துணையாதாரமாகக் கொண்டு, சாதியப் படிநிலை வரிசைப்படி, குழுக்களுக்கிடையே சாத்தியப்படும் மணஉறவுகளைப் பற்றிய விதிகளை அவர்கள் முன்வைத்துள்ளனர்.

இதன்படி, அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்த முஸ்லீம்கள் (சையத்துக்கள், ஷேக்குகள்), அரபுத் தோற்றுவாய் அல்லாதவர்களைவிட அதாவது அஜாமி முஸ்லிம்களைவிட உயர்வானவர்கள். அரபுத் தோற்றுவாயிலிருந்து வந்தவர் என உரிமை பாராட்டும் ஒரு ஆண், அஜாமி முஸ்லிம் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால் அஜாமி முஸ்லிமாக உள்ள ஒரு ஆண், அரபு வழித்தோன்றலான ஒரு முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. இது போலவே பத்தான் முஸ்லிம் ஆணொருவன், ஜுலாஹா (அன்சாரி), மன்சூரி (துனியா), ராயின் (குன்ஞ்ரா), குரைஷி (காஸி) இனப் பெண்ணை மண முடிக்கலாம். ஆனால், அன்சாரி, ராயின், மன்சூரி, குøரஷி ஆகிய இனக்குழுவைச் சேர்ந்த எந்தவொரு முஸ்லிம் ஆணும், பத்தான் முஸ்லிம் பெண்ணை மணமுடிக்க முடியாது. ஏனென்றால் இந்தச் சாதிகள் அனைத்தும் பத்தான்களுக்குக் கீழானவை — இவ்வாறாக இந்த உலேமாக்கள் வாதிட்டனர். ஒருவர் தமது சொந்தச் சாதியிலேயே திருமணம் செய்து கொள்வதுதான் சாலச் சிறந்தது என்று உலேமாக்களில் பலரும் நம்பினர்.

இஸ்லாமைப் பற்றிய எனது புரிதலுக்கு முற்றிலும் நேரெதிரானதாக அவர்களுடைய கருத்துக்கள் இருந்தன. அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ள, அவர்களுடைய நூல்கள் எனக்குப் பெரிதும் உதவின. இந்தியாவில் உள்ள பல உலேமாக்கள் சாதிய அமைப்புக்குத் தவறாக இஸ்லாமியத் தன்மை வழங்குவதன் மூலம் அல்லது மதரீதியில் இசைவாணை வழங்குவதன் மூலம் சாதியத்தை நியாயப்படுத்த முயற்சிக்கின்றனர். இதை அறிந்த போது நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன். இந்து மதத்தில் இன்னமும் நீடித்து வரும் சாதிய நடைமுறையிலிருந்து இது வேறுபட்டதல்ல. ஏனென்றால், இந்துமதம்தான் சாதிய வேறுபாட்டுக்கும் சாதிய ஒடுக்குமுறைக்கும் மதரீதியாக இசைவாணை வழங்குகிறது.

சாதியம் பற்றிய எண்ணற்ற இந்திய உலேமாக்களின் நூல்களைப் படித்த பிறகு, ஜமாத்இஇஸ்லாமி தலைவரிடம் அந்த தலித் இளைஞர் முன்வைத்த கேள்வி கிட்டத்தட்ட முழுமையாக சரியானதுதான் என்பதை நான் புரிந்து கொண்டேன். சாதிய அமைப்பை நியாயப்படுத்துவதற்கு இத்தகைய உலேமாக்கள் இஸ்லாமிய மார்க்கத்தை இப்படித் தவறாக வியாக்கியானம் செய்வார்களானால், இஸ்லாம் மதத்துக்கு மாறுவது பற்றி எந்த தலித் அக்கறையோடு பரிசீலிப்பார்? இந்த மௌலவிகளால் திரித்து முன்வைக்கப்படும் இஸ்லாமிய மார்க்கத்தை எந்த தலித் ஏற்றுக் கொள்வார்?

இந்திய முஸ்லிம்களிடையே சாதியம் என்ற பிரச்சினையானது, ஏதோ இந்து மதத்தின் தாக்கத்தினால் மட்டும் ஏற்பட்டதல்ல; சாதிய அமைப்பை இஸ்லாமிய சட்டம் அல்லது ஷரீஅத் இன் ஓர் அங்கம் எனத் தவறாகக் கருதும் பெரும்பாலான இந்திய உலேமாக்களின் செல்வாக்கும் இதற்குக் காரணமாகும். இஸ்லாமிய மார்க்கத்தை முற்றிலும் தவறாக வியாக்கியானம் செய்வதன் மூலம் இந்த மௌலவிகள் இஸ்லாத்துக்கு எவ்வளவு பெரிய இழுக்கைக் கொண்டு வந்துள்ளனர் என்பதை உணர்ந்தபோது, நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

கேள்வி: முஸ்லிம்களிடையே சாதிய பாரபட்சம் என்ற பிரச்சினையைப் பற்றி நீங்கள் எவ்வாறு எழுதத் தொடங்கினீர்கள்?

பதில்: சாதியையும் சாதிய பாரபட்சம் இழிவுபடுத்துதலையும், அப்பட்டமாக நியாயப்படுத்தி, மதரீதியில் சட்டபூர்வமாக்குவதற்கு இந்த உலேமாக்கள் முயற்சித்ததை அறிந்தபோது, இதைப் பற்றி எழுதுவது முக்கியத்துவம் வாய்ந்ததென நான் உணர்ந்தேன். இந்தப் பிரச்சினையைப் பற்றி எழுத முற்பட்டபோது, ஜாமியா உல்ஃபலாவில் பணியாற்றிய மௌலவி அனீஸ் அகமது சித்திகி ஃபலாஹி மதானி என்ற எனது மதிப்புக்குரிய ஆசிரியர், எனது சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துபவராக இருந்தார். அவர் எங்களுக்கு மதங்கள் குறித்த ஒப்பீடு என்ற பாடத்தைக் கற்பிப்பவராக இருந்தார். படிநிலையாக உள்ள சாதிய அமைப்பு முறையை இந்திய முஸ்லீம்கள் எவ்வாறு இஸ்லாத்தின் உள்ளார்ந்த ஆன்மீகமாக மாற்றிவிட்டார்கள் என்பதையும், இந்து மதத்தின் தாக்கம் இதற்கு ஓரளவுக்குக் காரணமாக இருந்தது என்பதையும் அவரிடமிருந்து நான் கற்றுக் கொண்டேன்.

இருப்பினும், முஸ்லிம் பத்திரிகைகளில் இந்தச் சாதியப் பிரச்சினை பற்றி அபூர்வமாகவே விவாதிக்கப்படுகிறது. இந்தப் பிரச்சினையைப் பற்றி அவை முற்றாக மௌனம் சாதிக்கின்றன. இந்தியாவிலுள்ள பெரும்பாலான முஸ்லிம் பத்திரிகைகள் சுயநலவாதிகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன; வெளியிடப்படுகின்றன. மதரசாக்களில் அளிக்கப்படும் குறுகிய கண்ணோட்டமுடைய பயிற்சியின் காரணமாக, உண்மையிலேயே அவர்கள் விரும்பினாலும் கூட, இத்தகைய பிரச்சினைகளைப் பற்றி எழுத இயலாத நிலையிலேயே உலேமாக்கள் உள்ளனர்.

மேலும், இந்திய உலேமாக்கள் பெரும்பாலும் ஹனாஃபி மரபில் பயிற்றுவிக்கப்பட்டவர்கள். சாதி அடிப்படையிலான பாரபட்சம் காட்டுவதற்கு இந்த ஹனாஃபி மரபானது, மதரீதியில் புனித இசைவைத் தவறாகக் கற்பித்து வருகிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து இது நடந்து வருகிறது. ஹனாஃபி மரபுவழி சார்ந்த அறிஞர்களின் படைப்புகளைப் பரிசீலித்தால் இது தெளிவாகத் தெரியும்.

இதனால்தான், மிக மோசமாகப் புறக்கணிக்கப்பட்டும் மிகப் பெருமளவுக்கு விவாதத்திற்குரியதுமான இச்சாதியப் பிரச்சினையைப் பற்றி எழுதும் தார்மீகக் கடமை எனக்கிருப்பதாக நான் உணர்ந்தேன். எனவே “”இந்தியாவில் முஸ்லிம்களும் தீண்டாமையும்” என்ற தலைப்பில் பல கட்டுரைகளை நான் தொடர்ச்சியாக எழுதினேன். அலிகாரைச் சேர்ந்த இஸ்லாமிய அறிஞரும் ஜமாத்இஇஸ்லாமியின் மூத்த தலைவர்களுள் ஒருவருமான டாக்டர் ஃபஸ்லுர் ரஹ்மான் ஃபரிடி என்பவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவரும் “”ஜிந்தகிஇநவ்” என்ற பத்திரிகையில் இவை வெளியாயின. பேரன்பு கொண்ட டாக்டர் ஃபரிடி இவற்றை வெளியிட்டு உதவினார். சாதிய பாரபட்சம்இழிவுபடுத்தலுக்கு மதரீதியில் இசைவாணை வழங்கும் உலேமாக்களைக் கடுமையாக விமர்சிப்பவையாக எனது சில கட்டுரைகள் இருந்தன.

கேள்வி: இந்தக் கட்டுரைகளின் மூலம் நீங்கள் வாதிட்டு நிலைநாட்ட முயற்சித்தது என்ன?

பதில்: இந்திய முஸ்லிம்களிடையே சாதி மற்றும் சாதிய அடிப்படையிலான ஏற்றத்தாழ்வுகள் நிலவுவதற்கான வரலாற்றுக் கண்ணோட்டத்தை அளிக்க நான் முயற்சித்தேன். இந்தியாவில் சாதிகளின் தோற்றம், சாதியை அடிப்படையாகக் கொண்ட பார்ப்பன மதத்தின் வளர்ச்சி; பவுத்தம், சீக்கியம், பக்தி இயக்கம் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு சாதிய எதிர்ப்பு இயக்கங்களின் பாத்திரம்; இந்தியாவில் இஸ்லாமிய மதம் பரவுதல்; குறிப்பாக, இஸ்லாத்தின் சமூக சமத்துவம் காரணமாக, அதன்பால் ஈர்க்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதிகளிடையே இஸ்லாமிய பரவுதல் ஆகிய இவை பற்றி நான் ஆய்வு செய்தேன்.

மறுபுறம், இந்திய வரலாற்றில் “இஸ்லாமிய ஆட்சி’ என்று சொல்லப்படும் காலத்தில் எழுதப்பட்டு வெளியான நூல்களிலிருந்து பல்வேறு மேற்கோள்களை முன்வைத்து, முஸ்லிம் மன்னர்களும் பொதுவில் இஸ்லாமிய மேட்டுக்குடி ஆளும் கும்பல்களும் சாதிய அமைப்பை எவ்வாறு கட்டிக் காத்தனர் என்பதை நான் விளக்க முயற்சித்தேன். இந்துக்களில் “உயர்சாதியினர்’ என்று சொல்லப்படுபவர்களுடன் கள்ளக்கூட்டு சேர்ந்து, இந்து மற்றும் முஸ்லிம் மக்களில் “கீழ் சாதியினர்’ என்று சொல்லப்பட்டவர்களை எவ்வாறு ஒடுக்கினர் என்பதையும் நான் எடுத்துக் காட்ட முயற்சித்தேன்.

இந்த முஸ்லிம் மன்னர்களும் மேட்டுக்குடி ஆளுங்கும்பலும் கீழ்ச் சாதியினர் அல்லது ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுவர்களை அவர்கள் இந்துக்களானாலும், முஸ்லிம்களானாலும் கல்வி கற்க அனுமதித்ததில்லை; தங்களது அரசவைகளில் நுழையக்கூட அனுமதித்ததில்லை. இவை இந்து மற்றும் முஸ்லிம்களில் உயர்சாதியினருக்கு மட்டுமே என்று ஏகபோக உரிமை கொண்டாடினர். இந்த உண்மைகளை, முல்லா அப்துல் காதிர் பாவாயுனிஇன் “”முன்டாகாப் அல்தாவாரிக்”, மௌலவி சய்யத் ஜியாவுதீன் பார்னிஇன் “”தாரிக்இஃபிரோஸ் ஷாஹி”, குன்வர் மொகம்மத் அஷ்ரப்இன் “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” ஆகிய நூல்கள் மிகத் தெளிவாகவே நிரூபித்துக் காட்டுகின்றன. இந்த மன்னர்களுக்கும் மேட்டுக்குடி ஆளுங்கும்பல்களுக்கும் இஸ்லாத்தைப் பற்றி முழுநிறைவாகத் தெரியாது. இஸ்லாமிய மார்க்கம் போதிக்கும் சமத்துவத்துக்கு அவர்கள் செவி சாய்த்ததுமில்லை.

இல்டுமிஷ், பால்பன் ஆகியோர் துருக்கிய அடிமை வம்சத்திலிருந்து வந்த சுல்தான்களாவர். அவர்களாவது சாதிய விவகாரங்களில் வேறுபட்டு நடந்திருக்க வேண்டுமென நாம் கருதலாம். ஆனால், அவர்களும்கூட கீழ்சாதியினர் என்றழைக்கப்பட்ட முஸ்லிம்களை அரசாங்கப் பணிகளில் அனுமதிக்க மறுத்தனர்.
இஸ்லாமிய அரசுகள் என்று சொல்லப்பட்ட அரசவைகளில் இருந்த எண்ணற்ற அறிஞர்களும் உலேமாக்களும் பராணி, ஃபரிஷ்டா இன்னும் இவர்களைப் போன்றவர்களும் “கீழ்’ சாதி அல்லது ரஸில் சாதி முஸ்லிம்கள் மீதான சாதிய ஒடுக்குமுறைக்கு மத ரீதியாக இசைவாணை வழங்கவே முயற்சித்தனர். ரஸில் (கீழ்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள், அஷ்ரஃப் (மேல்) சாதியினர் என்றழைக்கப்பட்டவர்களுக்குச் சேவை செய்வதற்கென்றே இறைவனால் படைக்கப்பட்டவர்கள் என்றுகூட பராணி வாதிட்டுள்ளார். கீழ் சாதிகளைச் சேர்ந்தவர்கள் என்றழைக்கப்பட்டவர்களின் குழந்தைகள் தமது முன்னோர்களின் பரம்பரைத் தொழிலை மட்டுமே செய்ய வேண்டும் என்று அவர் கூறினார். இதற்கு மாறாக, தமது குழந்தைகளுக்குக் கல்வி கற்பிக்க எவராவது துணிந்து செயல்பட்டால், அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

“”குரான், தொழுகை, நோன்பு ஆகியவற்றுக்கு அப்பால், மேலான அறிவை ரஸில் என்றழைக்கப்படும் கீழ் சாதியினருக்கு அளிக்கக் கூடாது; இவ்வாறு செய்வது நாய்கள், பன்றிகளின் முன்பு விலையுயர்ந்த முத்துக்களைப் பரப்பி வைப்பதைப் போன்றதாகும்!” இவ்வாறு மக்தும் ஜஹானியான்இஜஹாங்கஷ்ட் என்றழைக்கப்பட்ட சையத் ஜலாலுதீன் புகாரி என்ற பிரபலமான சூஃபி அறிஞர் பகிரங்கமாக அறிவித்துள்ளார். இதைப் பற்றி காஸி சஜ்ஜத் ஹுசைன் தனது “”சிராஜுல் ஹேதயா” என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார். மது அருந்துபவர்கள், கந்து வட்டிக்காரர்கள் மட்டுமின்றி, நாவிதர்கள், பிணம் கழுவுபவர்கள், சாயத் தொழிலில் ஈடுபடுபவர்கள், தோல் பதனிடுபவர்கள், செருப்பு தைப்பவர்கள், வில் செய்பவர்கள், சலவைத் தொழிலாளிகள் முதலானோருடன் சேர்ந்து மேல்சாதி முஸ்லிம்கள் உணவருந்தக்கூடாது என்று இந்த பிரபலமான சூஃபி அறிஞர் வலியுறுத்தியதாகவும் தெரிய வந்துள்ளது. இவர் தமது வாதத்துக்கு வலுவூட்டுவதற்காக, இறைத்தூதர் முகமது நபிகளார் கூறியதாக ஒரு போலியான மரபை சான்றாதாரமாகக் கற்பிதம் செய்துக் காட்டியுள்ளார்.

மேல் சாதியினர் என்று கூறப்படுபவர்களுக்கு அடிமைச் சேவகம் செய்வதற்காகவே கீழ் சாதியினர் கடவுளால் படைக்கப்பட்டுள்ளனர் என்ற பார்ப்பனக் கோட்பாட்டைப் போன்றதுதான் இந்தக் கருத்து. பார்ப்பனர்களின் வேத நூலான மனுதர்மத்தின் நேரடி நகலைப் போன்றதுதான் இது! இதனால்தான் சாதிய பாரபட்சத்தை உயர்த்திப் பிடிக்கும் இத்தகைய உலேமாக்களை “”மனுவாதிகள்” என்று நான் அழைக்கிறேன். ஒடுக்கப்பட்ட சாதிகளிடம் பார்ப்பனர்கள் எத்தகைய மனப்பான்மையைக் கடைபிடிக்கிறார்களோ, அதிலிருந்து இந்த உலேமாக்களின் மனப்பான்மையை வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது.

“மாபெரும்’ மொகலாயப் பேரரசரான அக்பர், ரஸில் சாதியினர் என்றழைக்கப்படுவோருக்குக் கல்வி அளிக்கப்பட்டால், பேரரசின் அடித்தளமே ஆட்டங்கண்டுவிடும் என்று பிரகடனப்படுத்தியுள்ளதாக அப்துல் காதிர் படாயுனி தனது “”முன்டகாப்அல்தாவாரிஹ்” நூலில் குறிப்பிட்டுள்ளார். பேரரசர் ஒளரங்கசீப்இன் ஆணைப்படி தொகுக்கப்பட்ட “”ஃபடாவாஇஆலம்கிரி” என்ற ஹனாஃபி சட்டவியல் கருத்துரைத் தொகுதியில் “கீழ்’ சாதியினர் பற்றி இதேபோன்ற கருத்துக்கள் காணப்படுகின்றன. கடைசி மொகலாயப் பேரரசரான பகதூர்ஷா ஜாஃபரும் இவற்றிலிருந்து வேறுபட்டவராக இல்லை.

பல நூல்களைத் தேடிப்படிக்கும்போது, 24.5.1857 நாளிட்ட “”டெல்லி உருது அக்பர்”இல் ஒரு செய்தி அறிக்கையைக் கண்டேன். அது பின்வருமாறு கூறுகிறது: பிரிட்டிஷாருக்கு எதிரான எழுச்சியைத் தொடர்ந்து 500 பேர் கொண்ட படையொன்றைக் கட்டியமைக்க தயாரிப்புகளை மேற்கொள்ளுமாறு மாமன்னர் பகதூர்ஷா ஆணையிட்டார்; ஆனால், அந்தப் படையினர் அஷ்ரஃப் (மேல்) சாதியினராக இருக்க வேண்டும்; “கீழ்’ சாதியினர் எவரும் அதில் இருக்கக் கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டார். —இதிலிருந்து தெரிவது என்ன? இந்தியாவில் “இஸ்லாமிய’ ஆட்சிக் காலத்தின் “பொற்காலம்’ என்று மிகப் பெரும் எண்ணிக்கையிலான முஸ்லிம் எழுத்தாளர்கள் சளைக்காமல் ஏற்றிப் போற்றிய காலத்தின் நிலைமையே இதுதான். சாராம்சத்தில் இப்”பொற்கால’ ஆட்சிகள், மனுவாத முஸ்லிம்கள் மற்றும் இந்து மேட்டுக்குடியினரின் ஆட்சிகளாகவே இருந்தன. இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் இருந்த “கீழ்’ சாதியினர் என்று சொல்லப்படும் மக்களை, இந்த மேட்டுக்குடி கும்பல் ஆதிக்கம் செலுத்தி ஒடுக்கினர் என்பதே உண்மை.

பல மன்னர்களும், உலேமாக்களும் சாதிய அமைப்பின் ஆதரவாளர்களாக இருந்த போதிலும், அவர்களில் சிலர் இதற்கு எதிராகவும் இருந்துள்ளனர். எடுத்துக்காட்டாக, சுல்தான் முகமது காஸ்நவி தமது அடிமையான அயாஸ் என்பவரை பஞ்சாபின் ஆளுநராக நியமித்தார். ஹஜ்ஜம் எனப்படும் நாவிதர் சாதியைச் சேர்ந்த இந்துவான திலக் என்பவரைத் தமது தலைமைத் தளபதியாக நியமித்ததுடன் “”ராஜா” என்ற பட்டத்தையும் அவர் வழங்கினார். சுல்தான் சகாபுதீன் கோரி, தமது அடிமையான குத்புதீன் ஐபக் என்பவரை இந்தியாவில் தனது ஆளுநராக நியமித்தார். ஐபக், தனது அடிமையான சம்சுதீன் அல்டுமிஷ் என்பவரை குவாலியர், புலந்த்சாகர், படாயுன் ஆகிய பகுதிகளுக்கான ஆளுநராக நியமித்தார்.

சுல்தான் அலாவுதீன் கில்ஜி, பல உயர் பதவிகளில் சையதுகள் மற்றும் அஷ்ரஃப் என்றழைக்கப்பட்ட “மேல்’ சாதியினரை அமர்த்திய போதிலும், தனது வேலையாளான மாலிக் உத்துஜ்ஜார் ஹமீதுத்தீன் முல்பானி என்பவரைத் தலைமை நீதிபதியாக (காஸி உல் காஸட்) நியமித்தார். குஜராத்தின் புர்வா எனப்படும் சாமர் சாதியைச் சேர்ந்தவரும் இஸ்லாமிய மதத்துக்கு மாறியவருமான மாலிக் காபூர் என்பவரைத் தனது தலைமை அமைச்சராகவும் அவர் நியமித்தார். சுல்தான் முகமது பின் துக்ளக், சுல்தானா ரஸியா, சுல்தான் குத்புதீன் முபாரக் ஷா கில்ஜி ஆகியோரும் “கீழ்’ சாதியினர் என்று கூறப்படுபவர்களை உயர் பதவிகளில் அமர்த்தினர்.

கேள்வி: இந்திய வரலாற்றின் இடைக்காலத்தைச் சேர்ந்த “”மனுவாதி உலேமாக்கள்என்று உங்களால் அழைக்கப்படுபவர்கள், பார்ப்பனர்களைப் போலவே சாதிய பாரபட்சத்தை ஈவிரக்கமின்றி உறுதியாக உயர்த்திப் பிடித்த போதிலும், கீழ் சாதியினர் என்று கூறப்படும் கோடிக்கணக்கான இந்துக்கள் இஸ்லாமிய மதத்தை எப்படி ஏற்றுக் கொண்டனர்?

பதில்: இதற்கான காரணம், சாதிய பாரபட்சம் இந்துக்களிடம் இருப்பதைவிட, முஸ்லிம்களிடம் எப்போதும் கடுமை குறைவாக இருப்பதேயாகும். மேலும், இஸ்லாமிய மார்க்கத்தில் சாதிக்கு மதரீதியில் எப்போதுமே இசைவாணை கிடையாது என்பது இன்னொரு காரணமாகும். இந்திய முஸ்லிம்கள் மத்தியில் சாதி வேறுபாடுகள் பலமாக நீடித்து வந்துள்ள போதிலும், தீண்டாமை என்பது நடைமுறையில் அவர்கள் அறியாத விசயம்தான். இருப்பினும், மத்திய காலத்தைச் சேர்ந்த பல இஸ்லாமிய மன்னர்கள் கீழ்வர்க்கத்தினரை தமது அரசவைகளில் அடியெடுத்து வைக்க அனுமதித்ததில்லை; அல்லது, அப்படி ஒரு சிலர் அனுமதித்தாலும், அவர்கள் வாய்திறந்து பேசுவதற்கு அனுமதித்ததில்லை. ஏனெனில், அவர்கள் “புனித’ மற்றவர்களாக “அசுத்த’மானவர்களாகக் கருதப்பட்டனர் என்று பிரபல வரலாற்று ஆசிரியரான கன்வர் மொகம்மத் அஷ்ரஃப், தனது “”இந்துஸ்தானி மாஷ்ரா அக்த்இஉஸ்தா மெய்ன்” நூலில் குறிப்பிடுகிறார்.

கேள்வி: “இஸ்லாமியஆட்சிக் காலத்தைச் சேர்ந்த “மேல்சாதி முஸ்லிம் எழுத்தாளர்களும் உலேமாக்களும் சாதிய அமைப்புக்கு மதரீதியாக இசைவாணை வழங்க முயற்சித்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிந்தைய காலத்தில் இந்த நிலையிலிருந்து நிச்சயம் சில மாறுதல்கள் ஏற்பட்டிருக்க வேண்டுமே?

பதில்: இப்போது அந்த விசயத்துக்கு நான் வருகிறேன். “”ஜிந்தகிஇநவ்” இதழுக்கு நான் எழுதிய சில கட்டுரைகளில், காலனிய ஆட்சிக் காலத்தில் இருந்த பிரபலமான உலேமாக்கள் பற்றியும், இப்போதைய சமகால இந்தியாவிலுள்ள உலேமாக்கள் மற்றும் உலேமாக்களின் அமைப்புகள் பற்றியும் நான் பரிசீலித்தேன். பாரெல்விஸ், தியோபண்டிஸ், ஹல்இஹதித், ஜமாத்இஇஸ்லாமி, அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியம் போன்ற அமைப்புகளைப் பரிசீலித்தேன். குறிப்பாக, திருமண உறவு பற்றிய விசயங்களில், இவர்கள் சமூக சமத்துவம் அல்லது காஃபா பற்றிய கருத்தாக்கத்தை எப்படிக் கையாண்டனர் என்பதைப் பரிசீலிப்பதில் நான் கவனத்தைக் குவித்தபோது, அவர்களுக்கிடையில் வியப்பிற்குரியதொரு கருத்தொற்றுமை நிலவுவதைக் கண்டேன்.

சாதியைச் சட்ட சம்மதம் கொண்டதாக்குவதற்கு காஃபா பற்றிய கருத்தாக்கத்தைத் தமது ஹனாஃபி மரபில் பாரெல்விஸ் மற்றும் தியோபண்டிஸ் அமைப்பினர் பயன்படுத்துகின்றனர். அஷ்ரப் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் மேன்மையையும் ரஸில் சாதியினர் என்று சொல்லப்படுபவர்களின் தாழ்நிலையையும் இவர்கள் சட்ட மரபாக்குகின்றனர். சமூகத் தகுதி பற்றிய விசயத்தில் ஹனாஃபி மரபினர் மிகவும் கறாராக இருக்கின்றனர். எனவே, காஃபா பற்றிய விசயத்தில் பிறப்பு அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாக்குகின்றனர். ஹனாஃபி சிந்தனை மரபு உருவான ஈராக்கைச் சேர்ந்த குஃபாவில் சமூக ஏற்றத்தாழ்வுகள் மலிந்திருந்ததும், அவற்றை அது நியாயப்படுத்த முனைந்ததும் இதற்குக் காரணமாக அமைந்திருக்கலாம். சன்னி சட்டப்பள்ளியைப் பின்பற்றுகின்ற அராபிய மையத்துக்கு வெளியில் உருவாகி வளர்ந்த ஷஃபி, ஹன்பாலி போன்ற மரபுகளும் இதே கருத்தைத்தான் கொண்டுள்ளன.

ஆனால், இமாம் ஷஃபி, இமாம் அகமது பின் ஹன்பால் ஆகிய இருவரும் பிறப்பு அடிப்படையிலான காஃபாவுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டதாகவும் சொல்லப்படுகிறது. பிறப்பு அல்லது குடும்பத்தை அடிப்படையாக்குவதற்கு நேர்மாறாக, மாலிகி சிந்தனைப் பிரிவு விதிவிலக்காக நிமிர்ந்து நிற்கின்றது. காஃபாவைத் தீர்மானிப்பதில் பிறப்பை ஒரு காரணியாகக் கொள்ளாமல், கடவுட்பற்றையே அடிப்படைக் காரணியாக மாலிகி சிந்தனைப் பிரிவு கருதுகிறது. இதுதான் உண்மையான இஸ்லாமிய அளவுகோலாகும். மாலிகி சிந்தனைப் பிரிவைத் தோற்றுவித்தவரான இமாம் மாலிக் உண்மையான இஸ்லாமிய போதனையின் மையமான மெதினாவில் வாழ்ந்தது ஒருவேளை இதற்குக் காரணமாக இருக்கலாம்.

ஹனாஃபி மரபினர் தமது பெரும்பாலான மதரசாக்களில் பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற மடமையை இன்னமும் போதித்துக் கொண்டுதான் இருக்கின்றனர். நான் பயின்ற மதரசாவில் சாதி என்பது இஸ்லாமியத் தன்மையற்றது என்றும், அதை நாம் தகர்க்க வேண்டும் என்றும் நாங்கள் போதிக்கப்பட்டோம். ஆனால் தியோபண்டி மரபு மதரசாக்களில், பிறப்பை அல்லது குடும்பத்தை (நஸ்ப்) அடிப்படையாகக் கொண்ட காஃபா என்ற பொருளில், “”சாதி என்பது இஸ்லாமியத் தன்மையுடையது” என்று கற்பிக்கப்படுகிறது. இதற்குக் காரணம் என்னவென்றால், இந்தியாவிலுள்ள மிக அதிக எண்ணிக்கையிலான பாரம்பரிய மதரசாக்கள், இந்த விசயத்தில் இஸ்லாமிய மார்க்கத்துக்கு உண்மையானவையாக இல்லாமல், ஹனாஃபி சட்டவியல் விதிகளின் அடிப்படையில் போதிப்பவையாக இருப்பதுதான். இதற்கு நீண்ட நெடிய பாரம்பரியம் உள்ளது.

18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஷா வலியுல்லா, இந்தியாவின் பிரபலமான முன்னணி இஸ்லாமிய அறிஞர்களுள் ஒருவர்; சன்னி பிரிவைச் சேர்ந்த சிந்தனை மரபினர் பலர், இவரைப் பெரிதும் மதித்தனர்; இவர் பிறப்பு அடிப்படையிலான காஃபாவை உறுதியாக ஆதரித்து உயர்த்திப் பிடித்தவராவார். காஃபா என்பது ஒருவரின் இயற்கையிலேயே உள்ளார்ந்து உறைந்திருப்பது என்றும், தமது சொந்த காஃபாவுக்கு வெளியில் மணஉறவு கொள்வதானது, கொலை செய்வதை விடவும் அபாயகரமானது என்றும் அவர் தனது “”ஹுஜ்ஜாத்துல்லா அல் பாலிகா”, “”ஃபிக்இஉமர்” ஆகிய நூல்களில் குறிப்பிட்டுள்ளார். இறை தூதருடன் இருந்த அவரது சகாக்களில் பலர் அடிமைப் பெண்களை மணந்த பல நிகழ்வுகள் இஸ்லாமிய வரலாற்றில் காணப்பட்ட போதிலும், இந்த அறிஞர் அதைப் பொருட்படுத்தவில்லை. இறைதூதர் நபிகளார், தமது அத்தை மகளான ஜைனப் பிந்த்இஜஹாஷ்க்கு விடுவிக்கப்பட்ட தனது அடிமையான சையத்ஐ மணமுடித்து வைத்தார். தனது மாமன் மகளான ஜுபா ஏ பிந்த்இஜுபைர்க்கு நெசவாளர் குடும்பத்தைச் சேர்ந்த மிக்தாத் என்பவரை மணமுடித்துள்ளார்.

தீவிர ஹனாஃபி ஆதரவாளர்களான தியோபண்டி மரபினர், பிறப்பு அடிப்படையிலான காஃபா என்ற கருத்தாக்கத்தைத் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்துவோராக உள்ளனர். “”தியோபண்ட் இயக்கமும் சஹரான்பூர் முஸ்லிம்களும்” என்ற நூலின் பாகிஸ்தானிய ஆசிரியரான குலாம் முஸ்தஃபா, அதில் பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்லியுள்ளார். தியோபண்ட் மதரசாவை நிறுவியவர்களில் ஒருவரும், ஷேக் சாதியைச் சேர்ந்தவருமான மௌலவி காசிம் நானோத்வி, நான்கு சாதியினரை மட்டுமே இறைவன் தமது மதத்துக்குச் சேவை செய்யப் படைத்துள்ளார் என்று அறிவித்துள்ளாராம்; சையத், ஷேக், மொகல், பத்தான் ஆகியவையே இந்நான்கு சாதிகளாம்!

தியோபண்டி மரபைச் சேர்ந்த மற்றொரு நூலாசிரியரும், தியோபண்ட் மதரசாவின் முதல் முஃப்தியுமான மௌலானா அஸிசுர் ரஹ்மான் உஸ்மானி, பின்வரும் முக்கிய விசயத்தைச் சொல்கிறார். அஷ்ரஃப் சாதியைச் சேர்ந்த ஒரு பெண், தனது தந்தை, பாட்டன் போன்ற தனது ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதியின்றி, ரஸில் சாதியைச் சேர்ந்த ஒரு ஆண்மகனைத் திருமணம் செய்வாரானால், அந்தத் திருமணம் உண்மையிலேயே நடந்ததாகக் கருத முடியாது; எனவே, அந்தத் திருமணத்தை முறிப்பது (ஃபஸ்க்இநிக்காஹ்) என்ற பிரச்சினைக்கே இடமில்லை என்று அவர் அறிவிக்கிறார். தியோபண்ட் மதரசாவால் வெளியிடப்பட்ட “”ஃபடாவா இ தார்உல்உலும் தியோபண்ட்” என்ற தியோபண்டி ஆணைகளின் (ஃபத்வா) தொகுப்பில் இந்த விசயம் கூறப்பட்டுள்ளது.

அவர் வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அவருடைய வாதத்திலிருந்து தெரிவது என்னவென்றால், இத்தகைய மண உறவுகளில் பிறக்கும் குழந்தைகள் முறைகேடாகப் பிறந்தவர்கள்; இத்தம்பதியினரும் ஒழுக்கக் கேடானவர்கள்; இவர்களுக்கு இஸ்லாமிய சட்டப்படி, நூறு கசையடி தரப்பட வேண்டும்! இருப்பினும், ஒரு “கீழ்’ சாதிப்பெண் தனது நெருங்கிய ஆண் காப்பாளனின் (அவ்லியா) அனுமதி இல்லாமலேயே “மேல்’ சாதி ஆண்மகனைத் திருமணம் செய்து கொள்ள இந்த உஸ்மானி அனுமதித்திருப்பார் என்பதை நாம் துணிந்து கூற முடியும். உண்மையில், இது பார்ப்பனிய மனோபாவத்தையும் அதேபோல முஸ்லிம்களிடம் உள்ளார்ந்து ஆழப்பதிந்துள்ள மூத்த குல ஆணாதிக்கத்தையும் வெளிப்படுத்துவதாகவே உள்ளது.

தியோபண்டி மரபைச் சேர்ந்த இன்னுமொரு இஸ்லாமிய அறிஞரான மௌலவி முகம்மது சகாரியா சித்திகி என்பவர், இன்றைய உலகின் மிகப் பெரிய இஸ்லாமிய இயக்கமான தப்லிஹி ஜமாத் இன் தலைமைச் சித்தாந்தவாதியாவார். “”மெய்யான சமயப் பணிகளின் நற்பேறுகள்” என்ற தமது நூலில் அவர், “”முஸ்லிம்களின் ஒரு குழு, மெக்காவுக்குப் புனிதப் பயணம் (ஹஜ்) அல்லது வேறிடத்துக்குப் பயணம் மேற்கொள்ளுமானால், அவர்கள் தம்மில் ஒருவரைத் தலைவராக (அமிர்) நியமிக்க வேண்டும்; இந்தக் குழுவில் குரைஷி (சைய்யத் அல்லது ஷேக்) சாதியைச் சேர்ந்தவர் எவராவது இருப்பின், அவரையே தலைவராக நியமிப்பது சிறந்தது” என்று கூறுகிறார். அவர் முஸ்லிம்களை அஷ்ரஃப் (“மேல்’ சாதி) என்றும் அர்ஸல் (“கீழ்’ சாதி) என்றும் வகைப்படுத்தியுள்ளார். பாகிஸ்தானின் முதலாவது அரசாங்க முஃப்தியாக (முஃப்திஇஆஜம்) பின்னாளில் அமர்த்தப்பட்ட தியோபண்டி முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி எழுதிய, “”நிஹாயத் அல்அராப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற சர்ச்சைக்குரிய சாதி பற்றிய நூலையும் இவர் ஆதரித்தார். தியோபண்டி உலேமாக்கள் பலராலும் ஆதரிக்கப்பட்ட இந்த நூலில், அஷ்ரஃப் சாதிகள் என்றழைக்கப்பட்ட நான்கு வகை சாதிகளைச் சேர்ந்தவர்களுக்கு இறுதித் தீர்ப்பு நாளில் இறைவன் தனிச்சிறப்பாகக் கருணை காட்டுவார் என்று இந்த உஸ்மானி கூறியிருக்கிறார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி தமது இந்த நூலில், சக தியோபண்டி அறிஞரான அகமத் உஸ்மானி என்பவரின் ஒரு கட்டுரையும் இடம்பெறச் செய்திருந்தார். அந்தக் கட்டுரையில், “கீழ்’ சாதியினர் என்றழைக்கப்பட்டவர்கள் கல்வி கற்கத் தொடங்கியதால்தான் எல்லாவகையான இடர்ப்பாடுகளும் ஆரம்பித்தன என்று அகமது உஸ்மானி எழுதியிருக்கிறார்!

இன்னுமொரு முன்னணி தியோபண்டி அறிஞரான மௌலவி அஷ்ரஃப் அலி ஃபரூக்கி தான்வி என்பவர், முஸ்லிம் நெசவாளர்களைச் சிறுமைப்படுத்தும் சொற்களில் குறிப்பிட்டுள்ளார். முஸ்லிம் நெசவாளர்கள் தொழுகை செய்வது பற்றி தனது “”அல்ரஃபிக் ஃபிசவாய் அல்தாரிக்” நூலில் அவர் எள்ளி நகையாடினார். முஃப்தி முகம்மது ஷஃபி உஸ்மானி என்பவரின் “”நிஹாயத் அல்அரப் ஃபிகாயத் அல்நஸ்ப்” என்ற நூலை ஆதரித்து, அவர் எழுதி “”வாஸ்லஸ் சபாப் ஃபி ஃபாஸ்லின் நஸ்ப்” என்ற தனது நூலில் நெசவாளர் சாதியினரை வெறுப்புடன் “”ஜுலாஹா” என்று குறிப்பிட்டார். அன்சாரிகள் (“”உதவி செய்பவர்கள்”) என்று நெசவாளர்கள் தம்மை அழைத்துக் கொள்வதை அவர் கண்டனம் செய்தார்.

இவ்வாறு அவர்கள் தம்மை அழைத்துக் கொள்வது, ஒருவர் தமது குடும்ப மரபை அல்லது பரம்பரையை மாற்றிக் கொள்ளும் செயலாகும்; மெக்காவிலிருந்து மெதினாவுக்குச் சென்று அங்கு இறைதூதர் வாழ்ந்தபோது அவருக்கு உதவி செய்த மெதினாவைச் சேர்ந்த அன்சார்களின் வழித்தோன்றல்கள் என்று உரிமை பாராட்டுவதாகும்; இது தவறானதும் தடை செய்யப்பட்டதுமாகும் என்று தான்வி வாதிட்டார். தமது வாதத்துக்கு வலுசேர்க்க, இறைதூதர் கூறியதாக ஒரு வழிவழிச் செய்தியை இட்டுக்கட்டி கூறினார். தனது தந்தையைத் தவிர வேறொருவருக்கு மகன் என்று உரிமை பாராட்டும் ஒருவன் விண்ணுலகை அடையமாட்டான் என்பதே இறைதூதர் கூறியதாகச் சொல்லப்படும் அந்த வழிவழிச் செய்தியாகும்.

ஷப்பிர் அகமது ஹக்கீம் என்ற முஸ்லிம் அறிஞர், தான்வியின் “மசாவத்இ பகார்இ ஷாரியத்” என்ற இன்னொரு நூலிலிருந்து ஒரு மேற்கோளை எடுத்தாண்டுள்ளார். ஜுலாஹாஸ் (நெசவாளர்கள்), நயிஸ் (நாவிதர்கள்) ஆகியோரைத் தூய முஸ்லிம்கள் தமது இல்லங்களில் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று தான்வி அதில் வாதிடுகிறார். மேலும், சைய்யது சாதி தந்தைக்கும் சைய்யது அல்லாத தாய்க்கும் பிறக்கும் குழந்தை தூய சைய்யது தம்பதியினருக்குப் பிறக்கும் குழந்தையைவிட சமூகத் தகுதி குறைந்தது என்று தான்வி “”பாஹிஸ்டி ஜேவார்” என்ற தனது நூலில் வன்மத்தோடு வாதிடுகிறார். இதே விசயத்தைத்தான் பிராமணர்கள் ஏற்றிப் போற்றும் மனுவும் தனது மனுதர்ம சாஸ்த்திரத்தில் (மனுஸ்மிருதி) சொல்லியிருக்கிறார்! சைய்யதுகள், ஷேக்குகள், மொகல்கள், பத்தான்கள் ஆகியோர் “மரியாதைக்குரிய மேல்குடி’ (ஷரிப்) சாதியினர் என்றும், எண்ணெய் பிழிபவர்கள் (டெலி), நெசவாளர்கள் (ஜுலாஹா) ஆகியோர் “கீழ்’ சாதிகள் (ரஸில் அக்வம்) என்றும் “”இம்தாத் உல்ஃபடாவா” என்ற தனது நூலில் தான்வி அறிவித்தார்.

இவர், இஸ்லாத்துக்கு மதம் மாறிய அராபியர் அல்லாதவர்களை “”நவ்முஸ்லிம்கள்” என்று குறிப்பிடுகிறார். காந்தானி முசல்மான் எனப்படும் பாரம்பரியமாக உறுதிப்படுத்தப்பட்ட முஸ்லிம்களின் திருமண உறவுக்கான காஃபாவுக்கு, நவ்முஸ்லிம்கள் கருதத்தக்கவர்களே அல்ல என்று இவர் வாதிடுகிறார். பத்தான்கள் அரபுவழி வந்தவர்கள் அல்ல என்பதால் அவர்களும் நவ்முஸ்லிம்கள்தாம் என்கிறார். அரபுவழி வந்தவர்களான சையத்துகள், ஷேக்குகளின் காஃபா வேறானது; எனவே அவர்களுடன் நவ்முஸ்லிம்களான பத்தான்கள் கலப்பு மணம் புரியக்கூடாது என்று எச்சரிக்கிறார்.

அகில இந்திய முஸ்லிம் தனிநபர் சட்டவாரியத்தின் முதலாவது தலைவரும், தியோபந்த் மதரசாவின் துணைவேந்தருமான மௌலவி காரி மொகம்மது தய்யீப் சித்திகி என்பவரும்கூட, சாதியத்தின் ஆதரவாளராக இருந்தார். — இவை எனது ஆய்வில் நான் கண்டறிந்த உண்மைகளாகும்

நூல்: இஸ்லாத்தில் மனுவாதிகள் – வெளியீடு: கீழைக்காற்று பதிப்பகம் – விலை ரூ. 6.00

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று. 10, ஔலியா சாகிப் தெரு,  எல்லீசு சாலை, சென்னை – 600 002 தொலைபேசி – 044 2841 23677
மேலும் விவரங்களுக்கு

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

மெரினா – விட்டுவிடாதே வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!

27

மெரினா: விளையாட்டை வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!!

vote-012வெறிநாய் போலீசை ஏவிவிட்டு
மெரீனா அழகைப் பாதுகாக்குதாம் அரசு!

கடற்கரை அழகைப் பதம்பார்க்கும்
போலீசின் கதை நமக்குத் தெரியாதா?

காற்று வாங்க வந்த பெண்ணின் கழுத்தணியை
அறுத்துக்கொண்டு ஓடுகிறான் ஒருவன்… மடக்கிப்பிடித்தால்
அவன் மஃப்டியில் இருக்கும் போலீசு!

கடற்கரையில் காதலனை விரட்டிவிட்டு, அவன் காதலியை
பாலியல் வன்புணர்ச்சிக்கு துரத்துகிறான் ஒருவன்… விரட்டிப் பிடித்தால்
அவன் டூட்டியில் இருக்கும் போலீசு!

உழைக்கும் மக்களின் அனுபவத்தில்
சமூகத்தின் அருவருப்பே போலீசு…இதைக் கடற்கரையில் குவித்து
’அழகை’ பாதுகாக்குதாம் அரசு! எதற்கு?

கொழுப்பெடுத்தக் கும்பல் உடலைக் குறைக்க…
ஏறிய சர்க்கரையை கடலோரம் இறக்க…
இந்தக் கும்பலோடு வாழ்வதனால்.. கூட வரும் நாயும்
கொஞ்ச தூரம் நடந்தாலே இரைக்க… வழியில் குறுக்கிட்டு
இடையூறாய் இருக்குதாம்
குப்பத்துப் பிள்ளைகள் விளையாடும் கிரிக்கெட்டு!
விளையாடும் இடத்தில் உனக்கென்ன வேலை?
வேறு இடத்துக்கு நடையைக் கட்டு

நடைபழக இடமா இல்லை? போய் கோவிலைச் சுற்று.. இல்லை,
கோட்டையைச் சுற்று! வண்டலூர் பூங்காவில் போய் வசதியாய் நட, கிட!
மீனவர் வளர்த்த கடற்கரையிது, ஒண்ட வந்த பிடாரிகளா நமது உரிமைகளைப் பறிப்பது?

ஏழைகளுக்கு எதையும் மிச்சம் வைக்காமல் தின்று தீர்ப்பது..
ஏறிய தொப்பையை இறக்கி வைக்கவும்..
எங்கள் இடத்தையா நடந்து தீர்ப்பது?
கொஞ்சம் பூங்காவா கொழுப்பர்களுக்கு.. நடைபாதை பூங்கா எத்தனையோ!

அசதியாய் உழைக்கும் மக்கள் இளைப்பாற போனாலும்.. அங்கேயும்
குறுக்கே வந்து பூங்காவை சொந்தம் கொண்டாடும் உங்கள் தொந்தியை விட
எங்கள் அயோத்திக்குப்பம், பட்டினப்பாக்கம் மீனவர் குப்பத்துப் பிள்ளைகள்
விளையாடும் பந்து என்ன நகரின் அழகுக்கு ஆபத்தா?

பணக்கார கும்பலுக்கு கடற்கரையை பட்டா போட்டது பத்தாதா?
கோல்டன் பீச் என்ன வி.ஜி.பி. பெத்து எடுத்ததா? அரசு கொட்டிக் கொடுத்ததா!
கிழக்கு கடற்கரை  ரிசார்டுகள்… கேவலமான நடத்தைகளுக்கு
நீங்கள் கடல் கொண்ட ’கொள்ளை அழகு’ போதாதா!
மூச்சடக்கி முத்தெடுத்து சத்தான மீனெடுத்து சகலருக்கும் கொடுத்து
கடல் சீற்றம், சூறாவளி, சுனாமியில் உறவுகளை பலிகொடுத்து
மீண்டும் கடல்காக்கும் மீனவருக்கே கடற்கரையில் முழு உரிமை உண்டு!

விளையாடத்தடை என்பது வெறும் சாக்கு… படிப்படியாய்
உழைக்கும் மக்கள், மீனவரின் பாரம்பரிய உரிமையை அழிப்பதே அரசின் உள்நோக்கு!

’’பாருங்கள்.. பலகோடியில் அழகுபடுத்தி பசும்புற்களை
உங்கள் பார்வைக்காக வைக்கிறோம்..
அதில் பந்து விழுந்தால் வீணாகாதா?’’ எனப் பசப்புகிற அரசுதான்

பன்னாட்டு தண்ணீர் கம்பெனிகளையும், கார் கம்பெனிகளையும் இறக்கிவிட்டு
இந்நாட்டு பச்சைவயல்களையெல்லாம் கருக்கிவிட்டு
கடற்கரையின் செயற்கைப் புல்லுக்கு இரக்கப்படுகிறதாம்..
அரசாங்கப் பொய்களின் அழுத்தம் தாங்காமல் காறித்துப்புது கடல்

கட்டுமரங்களை உடைத்து, கண்ட துண்டமாய் வலைகளை அறுத்து
இறால்களை கொள்ளையடித்து, மீனவர் கையும் காலையும் உடைத்து
நட்டநடுக் கடலில் சுட்டுத் தள்ளுது சிங்களக் கடற்படை!
கட்டுமரங்களை நகர்த்தச் சொல்லி, காயும் வலைகளை அகற்றச் சொல்லி
மீனவப் பிள்ளைகள் விளையாட்டை நிறுத்தச் சொல்லி
கரையில் நெட்டித் தள்ளுது அரசின் கொலைப்படை ! அழகின் பயங்கரம் பார்த்தாயா!

உழைக்கும் மக்களை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால்
கரையிலும், கடலிலும் அழகேது?
இலக்கியமெங்கும் நெய்தல் நிலத்தின் கருப்பொருளும், உரிப்பொருளும்
பரதவர் வாழ்வின் பரம்பரை அழகை, உரிமையைச் சொல்லும்!

திமிறும் கடலை இரைக்க வைத்து
உப்புக் காற்றை உலர வைத்து
தப்பும் மீன்களை தசைகளில் வளைத்து
களைத்த சூரியனைப் பின்னுக்குத் தள்ளி
கட்டுமரங்கள் முன்னேறும்.
பரதவர் உழைப்புக்கு
ஈடுகொடுக்க முடியாமல்
நுரை தள்ளும் கடல்புறத்தைக்
காணும் யார்க்கும்
அது வலைகளில் பின்னிய கவிதைகள்!

மீண்டும் மீண்டும் விழிகளை ஆழம்பார்த்து
வெறுங்காலில் மணல் நடந்து
சளைக்காமல் வந்து வந்து கேட்கும்
சுண்டல் விற்கும் பையனின் சுறுசுறுப்பின் அழகைப் பார்த்து
கூசிப் பின்வாங்கும் கடல்.
கணப்பொழுதில் பத்து இருபது பலூன்களை ஊதி
திரையில் பொருத்தும் பெண் உழைப்பாளியின்
பெரும்மூச்சின் வேகம்பார்த்து வியந்து விசிலடிக்கும் கடல்காற்று

அருமைக் குழந்தைகள் குலுங்கிச் சிரிக்க
அலையோடு விளையாடி மக்கள் அங்குமிங்கும் ஓட
யார்மீதும் மோதாமல் அந்த உழைப்பாளிச் சிறுவன்
குதிரையைச் செலுத்தும் அழகின் லாவகம் பார்த்து
கடல்நண்டு உடல் சிலிர்க்கும்

வறுகடலை சட்டியை ஒரு தட்டுதட்டி
கடலைவண்டிக்காரர் எழுப்பும் கடற்கரை ஓசை..
ஈரமணலோரம் கடலின் இரைச்சலைத் தாண்டி
நம் இதயத்தை இசைக்கும் புல்லாங்குழல் வியாபாரியின் இசை..

இன்னும் எத்தனையோ.. உழைப்பின் ஓசைகளால்
மெருகேறிய மெரினாவின் அழகு

மெல்ல மெல்ல உழைப்பாளர் ஓசைகளையும்
உழைக்கும் மீனவர் உரிமைகளையும் ஒழித்துக் கட்டிவிட்டு
அங்கே உலகமயத்தின் ’கண்ணைப் பறிக்கும் அழகை’
கட்டியெழுப்பப் போகிறதாம் அரசு!

வாசலில் உழைப்பாளர் சிலை
உள்ளுக்குள் உழைக்கும் வர்க்கத்துக்குத் தடை
மெரினா கடற்கரை ’’உருவாக்கிய வர்க்கத்திற்கா!
பணக்கார உதவாக்கரை வர்க்கத்திற்கா?’’

இது விளையாட்டு விசயமல்ல.. விட்டுவிடாதே
விளையாட்டை வினையாக்கு! கிரிக்கெட்டை அரசியலாக்கு!

–          துரை. சண்முகம்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தமும்!!

நவம்பர் புரட்சி தினமும் ஸ்டாலின் சகாப்தாமும்!!

vote-0121917 நவம்பர் 7 உலக வரலாற்றில் மிகவும் முக்கியத்துவமுடைய நாள். அன்று தான் ரசியாவில் ஜாரின் கொடுங்கோல் ஆட்சி தூக்கி எறியப்பட்டு உலகிலேயே முதல் முறையாக தோழர் லெனின் தலைமையில் உழைக்கும் மக்களின் முதல் அரசு mரசியாவில் அமைக்கப்பட்டது. ஆண்டைகளின் வரலாற்றை புரட்டி போட்டு அடிமைகள் என்று கருதப்பட்ட உழைக்கும் மக்களும் ஆட்சி அமைக்க முடியும்  என்று உலகுக்கு காட்டிய நாள். கூலிகளாகவும், பஞ்சப் பராரிகளாகவும் ஆளும் வர்க்கத்தால் ஏய்க்கப்படிருந்த கூட்டம் சொந்த நாட்டை ஆட்சி செய்வதை உலகுக்கு அறிவித்த நாள்.

தோழர் லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்கம் ஆட்சி அமைத்தவுடன், அதுவரை உழைக்கும் மக்களின் உதிரத்தை குடித்து கொள்ளையடித்து சேர்க்கப்பட்ட சொத்துக்கள் அனைத்தும் பொதுவுடைமை ஆக்கப்பட்டன. லட்சக்கணக்கான ஏக்கர் நிலங்கள் நிலமற்ற கூலி ஏழை விவசாயிகளுக்கு பிரித்து கொடுக்கப்பட்டன. தொழிற்சாலைகள் அனைத்தையும் நிர்வகிக்கும் பொறுப்பு தொழிலாளிகளிடமே விடப்பட்டது. போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. முதல் உலகப்போரால் பாதிக்கப்பட்டு அச்சத்திலிருந்த மக்களுக்கு இந்த அறிவிப்பு பெரும் நிம்மதியை தந்தது. ஜாரினால் பிடித்து வைக்கப்பட்டிருந்த சிறு சிறு அண்டை நாடுகள் அனைத்திற்கும் அன்று முதல் விடுதலை வழங்கப்பட்டது. ரசியா முழு சுதந்திர நாடாக, சோசலிச நாடாக அறிவிக்கப்பட்டது.

இன்று நவம்பர் 7, ரசிய புரட்சி நாள். அந்த ரசியப்புரட்சியின் 92வது நினைவு நாள். தோழர்கள் அனைவருக்கும் எமது நவம்பர் 7 புரட்சி  தின வாழ்த்துக்களையும், செவ்வணக்கத்தையும் தெரிவித்துகொள்கிறோம்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த புரட்சி தினத்தை நினைவு கூரும் இந்த தருணத்தில், அடிமைத்தனத்திற்க்கெதிரான, சுரண்டலுக்கெதிரான சோசலிச குடியரசை கட்டியெழுப்ப நடந்த போராட்டத்தில் தோழர் லெனினோடு தோழர் ஸ்டாலினையும் நினைவு கூறாமல் இருக்க முடியாது. மாமேதை லெனின் தலைமையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் அமைக்க அரும்பாடுபட்ட தோழர் ஸ்டாலின் கடந்து வந்த பாதையை  “ஸ்டாலின் சகாப்தம்” என்னும் ஆவணப்படத்தில் “புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி” தோழர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

“ஸ்டாலின் சகாப்தம்” ஆவணப்படம் தோழர் ஸ்டாலினின் இளமைக்காலம், புரட்சிகர பாதைக்கு அவர் வந்து சேர்ந்தது பற்றி, ரசிய புரட்சியில் அவரது பங்கு, உழைக்கும் மக்களின் தலைவராக அவர் உருவானது பற்றி, ஸ்டாலின் ஆட்சியில் சோசலிசத்தின் சாதனைகள், மார்க்சிய லெனினியத்தை திரித்த புரட்டல்வாதிகள், தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை பரப்பிய துரோகிகள், இரண்டாம் உலக போரில் உலகையே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கிய பாசிசத்தை செம்படை வீழ்த்துதல், போருக்கு பின் மறுநிர்மானம்,  தோழர் ஸ்டாலினின் அன்றைய சாதனைகளை இன்றைய இந்தியாவின் நிலைமையுடன் பொருத்தி இங்கும் ஒரு புரட்சியின் தேவையை வலியுறுத்தி இந்தியாவிலும் ஒரு சோசலிச புரட்சியை நாம் செய்ய வேண்டியதையும், அதற்காக நாம் அணி திரளவேண்டிய அவசியத்தையும் விளக்கிச் செல்கிறது இப்படம்.

உழைக்கும் மக்களின் நாயகனான தோழர் ஸ்டாலின் பெயரை கேட்டாலே காய்ச்சிய எண்ணையை காதில் ஊற்றியது போல் ஓலமிடுகிறது முதலாளித்துவ கூட்டம். தோழர் ஸ்டாலின் இறந்து ஐம்பது ஆண்டுகள் ஆன பிறகும் அவர் மீது தான் எத்தனை எத்தனை பொய்களும், அவதூறுகளும் பரப்பப்படுகின்றன. ஸ்டாலின் சர்வாதிகாரி, கொலைகாரன், கொடுங்கோலன். ஸ்டாலின் ஆட்சியின் கீழ் லட்சக்கணக்கான ரசிய மக்கள் உரிமைகள் ஏதுமின்றி மந்தைகளை போல கொல்லப்பட்டார்கள். சோசலிச கொள்கையை மக்கள் மீது திணிக்கும் பொருட்டு உக்ரைனில் மாபெரும் படுகொலைகளும், பேரழிவும், பஞ்சமும் ஸ்டாலினால் உருவாக்கப்பட்டது என்கிற அவதூறுகள் ஸ்டாலின் வாழ்ந்த காலத்திலிருந்து இன்று வரை தொடர்கிறது. இவற்றுக்கெல்லாம் என்ன பதில்? இது பற்றி இந்த படத்தில் பேசப்பட்டிருக்கிறதா? இல்லை, இந்த ஆவணப்படம் தோழர் ஸ்டாலின் மீது செய்யப்படும் இத்தகைய அவதூறுகளுக்கு பதிலளிக்கவில்லை, மாறாக ஸ்டாலின் கால ரசியாவின் சாதனைகளையும், அவர் ஆட்சி காலத்தின் அரசியல் நெருக்கடிகளையுமே விளக்குகிறது. எனவே தோழர் ஸ்டாலின் பற்றி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை பற்றி சற்று விரிவாக பார்ப்ப்பது அவசியம்.

ஸ்டாலின் யார்? இட்லர் யார்? சர்வாதிகாரி யார்?

ஸ்டாலின் குறித்து செய்யப்படும் அவதூறுகளை பொதுவில் கீழ் கண்ட வகைகளில் தொகுக்கலாம். ஐரோப்பா அமெரிக்காவிலும் இது தான் வாதம் தமிழகத்திலும் இது தான் வாதம்.

  • ஸ்டாலின் ஒரு சர்வாதிகாரி, கொடுங்கோலன்.
  • ஸ்டாலின் ஆட்சியின் கீழ் மக்களுக்கு எந்த உரிமைகளும் இருக்கவில்லை. கட்சி ஊழியர்களே வாய் திறக்க முடியவில்லை. இரும்புத்திரையின் சர்வாதிகாரம் ஆட்சி செய்தது.
  • தனது கொள்கைகளை திணிக்க லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தார்.
  • உக்ரைனில் மட்டும் பல லட்சம் பேரை கொலை செய்தார்.
  • ஸ்டாலின் – இட்லர் இரண்டு பேரும் ஒப்பந்தம் போட்டுக்கொண்டார்கள்.

என்பது போன்ற கேள்விகளை எல்லாம் ரசிய மக்களோ உலகம் முழுவதுமுள்ள உழைக்கும் மக்களோ முன் வைக்கவில்லை. மாறாக முதலாளித்துவத்தையே மூச்சு காற்றாய் சுவாசித்து முண்டாமாய் மட்டுமே வாழ்ந்து அறிவை(!) வளர்த்து கொண்ட அறிவு ஜீவிகளுடையது தான் இந்த கேள்விகளும் அவதூறுகளும்.

ஸ்டாலின் சர்வாதிகாரியா? ஆம், நாம் மறுக்கவில்லை. ஸ்டாலின் சர்வாதிகாரி தான். ஆனால் யாருக்கு? ஸ்டாலினை கண்டு அஞ்சுபவர்கள் யார்? தோழர் ஸ்டாலினை கண்டு ரசிய மக்களோ அல்லது இந்திய மக்களோ அஞ்சவில்லை, ஏனென்றால் அவர்களுக்கெல்லாம் ஸ்டாலின் அன்புக்குரிய தோழர். அப்படி என்றால் அவரை கண்டு அச்சம் கொள்வோர் யார்? வேறு யார், முதலாளித்துவ கூட்டம் தான் ஸ்டாலினை கண்டு பீதியடைகிறது.. அவர்கள் தான் ஸ்டாலின் என்றாலே அலறியடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். தோழர் ஸ்டாலின் மீது இவர்கள் கட்டமைக்கும் அனைத்தும் பொய்கள், புனைவுகள். நமக்கும் தோழர் ஸ்டாலின் மீது விமர்சனங்கள் இருக்கின்றன.  ஆனால் நம்முடைய விமர்சனங்களுக்கும் விமர்சனம் என்கிற இவர்களுடைய அவதூறுகளுக்கும் அடிப்படையிலேயே வேறுபாடு உள்ளது. இரண்டும் தன்மை ரீதியிலேயே வேறு வேறானவை. இவர்களுடைய ஸ்டாலின் எதிர்ப்பு என்கிற வாதத்தின் முனையை பிடித்துக்கொண்டு அதனுடைய வேரை நோக்கி நகர்ந்தோம் எனில் அது ஏகாதிபத்திய தொடர்பில் போய் முடிவதை காணலாம். உதாரணமாக ஜெயமோகனோ, அ.மார்க்சோ முன் வைக்கிற ஸ்டாலின் மீதான குற்றச்சாட்டுகளின் மூலம் ராபர்ட் கான்குவிஸ்ட், சோல்சனிட்சன் என்று துவங்கி ராபர்ட் ஹெர்ஸ்ட்,பாசிஸ்ட் ஹிட்லர், அமெரிக்கா, பிரிட்டன் என்கிற மர்மத்தொடர்பில் போய் முடியும்.

ஸ்டாலின் மீது இவர்கள் வைக்கும் குற்றச்சாட்டுகளுக்கு எது அடிப்படை? எந்த சான்றுகளிலிருந்து இவர்கள் தமது வாதத்தை வைக்கிறார்கள்? ஸ்டாலின் பற்றி இவர்கள் பெறும் தகவல்கள் அனைத்தும் ஏகாதிபத்தியம் உருவாக்கிய கைக்கூலி எழுத்தாளர்களிடமிருந்து தான் பெறப்படுகின்றன.

உக்ரைன் பஞ்சம், உக்ரைன் படுகொலைகள் உண்மையா ?

உக்ரைனில் மட்டும் ஸ்டாலின் 30 லட்சம் பேரை கொன்று குவித்தாராம். இதை புத்தகங்களிலும் மேலை நாடுகளின் பாட நூல்களிலும் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த வாதம் தமிழகத்திலும் ஸ்டாலின் தொடர்பாக வைக்கப்படுகிறது. இது உண்மையா? இல்லை என்றால் இந்த கட்டுக்கதைக்கான அடிப்படை என்ன ?

உலகையே அச்சுறுத்தி வந்த பாசிச இட்லர் உக்ரைனை தனது போர்வாளில் வென்றெடுக்க கனவு கண்டான். ஜெர்மனியர்கள் வாழ்வதற்கு புவிப்பரப்பில் மிகவும் முக்கியமான பகுதியாக உக்ரைன் இருந்தது. விரிந்த ஜெர்மனி என்கிற இட்லரின் நாஜிக்கனவில் உக்ரைனும் இருந்தது. உக்ரைனை கைப்பற்ற வேண்டும் என்றால் அதற்கெதிராக போர் தொடுக்க வேண்டும். அதற்கு முன் கூட்டியே சில தயாரிப்பு பணிகளை செய்ய வேண்டி இருந்தது. இந்த நோக்கத்துடன் நாஜி கோயபல்ஸ் தலைமையிலான சோசலிசத்திற்கு எதிரான ஒரு மாபெரும் பிரச்சார இயக்கம் ஜெர்மனியால் துவக்கப்பட்டது.  “உக்ரைனில் சோசலிச கொள்கைகளை ஏற்றுக்கொள்ளாதவர்களை ஸ்டாலினுடைய செம்படை கொலை செய்தது. பேரழிவு பஞ்சத்தை உருவாக்கியது, பெருந்திரள் படுகொலைகளை போல்ஷ்விக்குகள் நடத்தினார்கள். இதன் காரணமாக மட்டுமே ஸ்டாலின் ஆட்சியில் உக்ரைனில் மட்டும் சுமார் 60 லட்சம் மக்கள் கொல்லப்பட்டார்கள்” என்கிற அவதூறை பரப்புவதையே மையமாக கொண்டிருந்தது அந்த சோவியத் எதிர்ப்பு நாஜி இயக்கம். உக்ரைனை சோவியத்திடமிருந்து ஜெர்மனி விடுவிக்க வேண்டும் என்கிற பொதுக்கருத்தை உலக மக்களிடம் உருவாக்க வேண்டும் என்பது தான் இந்த பிரச்சார இயக்கத்தின் நோக்கம். அதன் பிறகு உள்ளே நுழைந்து உக்ரைனை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து விட வேண்டும் என்பது தான் பாசிச இட்லரின் திட்டம். ஆனால் பெரு முயற்சி எடுத்தும் இட்லரின் இந்த பிரச்சாரம் உலக அரங்கில் வெற்றி பெறவில்லை. அதன் பிறகு அமெரிக்காவிலிருந்து நாஜிக்களுக்கு உதவ தானாகவே ஒரு கோட்டீஸ்வரன் முன்வந்தான். அவன் தான் ரடால்ப் ஹெர்ஸ்ட். இவன் அமெரிக்காவின் மிகப்பெரிய பத்திரிக்கை முதலாளி. 1930 களிலேயே உலகின் மிகப்பெரிய கோடீஸ்வரனாக விளங்கினான். 1934ல் ஹெர்ஸ்ட் ஜெர்மனிக்கு சென்ற போது இட்லர் அவனை தனது விருந்தாளியாகவும், நண்பனாகவும் வரவேற்றான். அதன் பிறகு சோவியத் ரசியாவிற்கு எதிரான பிரச்சார கட்டுரைகள்,  ‘சோவியத் ரசியாவில் நடக்கும் அட்டூழியங்கள்’,  ‘பெருந்திரள் படுகொலைகள்’, ‘திட்டமிட்ட பட்டினி சாவுகள்’ என்னும் பொய் கதைகள் ஹெர்ஸ்டின் நாளேடுகளில் தினமும் வெளி வந்தது. இட்லரின் நண்பனான கோயரிங்கின் ஸ்டாலின் பற்றிய அவதூறு கட்டுரைகள் தொடர்ச்சியாக ஹெர்ஸ்டின் நாளிதழ்களில் வெளிவந்தன. ஸ்டாலினை கொலைகாரனாக சித்தரிக்க கையில் கத்தியுடன் இருக்கும் தோழர் ஸ்டாலினை பற்றிய கேலிச்சித்திரங்களும் இடம் பெற்றன. பரபரபூட்டுவதற்காக தொடர்ச்சியாக உக்ரைன் விஷ்யம் எழுதப்பட்டது. பத்திரிகையில் பிரசுரிப்பதற்கான செய்திகள் அனைத்தையும் ஜெர்மனியின் உளவுப்படையான கெஸ்டபோ தான் நேரடியாக வழங்கியது.

இந்த தொடர் பிரச்சாரத்தின் மூலம் உலக அரங்கில் ஒரு பொதுகருத்தை சோவியத்துக்கு எதிராக திருப்புவதில் நாஜிக்கள் ஹெர்ஸ்டின் உதவியால் வெற்றியும் பெற்றார்கள். இப்படித்தான் ஸ்டாலின் உக்ரைன் மக்களை கொன்ற சர்வாதிகாரியானார்.

ஆனால் அதன் பின்னர் இவை அனைத்தும் முதலாளித்துவ அவதூறுகள் என்பதை கனடா நாட்டு பத்திரிக்கையாளர் டக்ளஸ் டோட்டில் உலகுக்கு அம்பலப்படுத்தினார்.

முதலாளித்துவ சர்வாதிகாரத்தையும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும் ஒரே தராசில் நிறுத்தி  ‘இரண்டுமே சர்வாதிகாரம் தான்’ என்று செல்லும் நடுத்தர வர்க்க அறிவுஜீவிகளின் இந்த கருத்து நேரடியாக ஸ்டாலின் மீதான அவதூறுகளுக்கு மேலும் தூபம் போட்டு பாசிச இட்லருக்கு நிகராக தோழர் ஸ்டாலிக்கும் கருப்பு சாயம் பூசி வரலாற்றில் ஒதுக்கும் செயலாகும்.

ராபர்ட் கான்குவெஸ்ட், ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல், சோல்சனிட்சன் – யார்  இவர்கள் ?

இவர்கள் அத்தனை பேரும் பெரிய மனிதர்கள். மாபெரும் அறிவாளிகள். பேராசிரியர்கள். ஆனால் இது இவர்களின் ஒரு பக்கம் தான் இவர்களின் இன்னொரு பக்கம் என்ன தெரியுமா? இவர்கள் அத்தனை பேரும் கூலிக்காக எழுதிய ஏகாதிபத்திய கூலியாட்கள்.

ராபர்ட் கான்குவெஸ்ட் ஒரு கலிப்போர்னிய பல்கலைகழகத்தின் பேரசிரியர். இவர் ஸ்டாலின் பற்றியும் சோவியத் பற்றியும் பல புத்தகங்களை எழுதியுள்ளார். இரண்டாம் உலகப்போர் பற்றியும், சோவியத் ஒன்றியம் ஸ்டாலின் பற்றியும் எல்லா பொய் கதைகளையும் உருவாக்கியதில் இவர் தான் முதன்மையான நபர், முக்கியமான நபர். உக்ரைன் படுகொலைகள், பட்டினிச்சாவுகளை ஹெர்ஸ்ட் 60 லட்சம் என்றான், இவரோ தனது கணக்குக்கு அதை 150 லட்சமாக உயர்த்திக்கொண்டார்.

சோவியத் மீது படையெடுக்க தயாராகும்படி அமெரிக்க மக்களை அறை கூவி அழைக்கும் தனது தேர்தல் பிரச்சாரத்திர்கு உரை எழுதி தரும் படி 1988ல் ரீகன் இவருக்கு ஒரு வேலையை ஒப்படைத்தார்.

அதன் பிறகு தான் கான்குவெஸ்டின் முழு கைக்கூலித்தனமும் வெளியே தெரிந்தது. இவன் பிரிட்டனுடைய இரகசிய உளவுப்படையின் பொய் பிரச்சாரத்துறையின் ஏஜெண்ட் என்பதை பிரெஞ்சு பத்திரிகையான  ‘கார்டியன்’ அம்பலப்படுத்தியது.

ஜார்ஜ் ஆர்வெல், கீஸ்லர், பெட்ரண்ட் ரஸ்ஸல் ஆகியோரும் சோவியத்துக்கு எதிராகவும் தோழர் ஸ்டாலினுக்கு எதிராகவும் பொய்களை மட்டுமே எழுதி வந்த கைக்கூலி எழுத்தாளர்கள் தான். இவர்கள் அனைவரும் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்வதற்காக பிரிட்டிஷ் உளவுத்துறையிடமிருந்து பணம் பெற்றிருக்கிறார்கள். இந்த உண்மை 1996ல் பிரிட்டிஷ் ஆவணக்காப்பகத்தை திறந்து காட்டிய போது அம்பலமானது.

சோல்சனிட்சன் என்கிற எழுத்தாளன் சோவியத்தையும், ஸ்டாலினையும் மிக மூர்க்கத்தனமாக எதிர்த்து எழுதினான். அவனுடைய எழுத்துக்கள் அனைத்தும் பொய்களையும், அவதூறுகளையுமே கொண்டிருந்தது.

அமெரிக்க வெறி நாய் வியட்நாமில் நுழைந்து, அங்கே வாங்கிய அடியால் வாலை சுருட்டிக்கொண்டு மீண்டும் அமெரிக்கவிற்குள்ளேயே ஓடிப்போனதை இந்த உலகமே மகிழ்ச்சியோடு பார்த்தது. அமெரிக்கா அடி வாங்கி அய்யோ வென்று  நிற்கும் அந்த நிலையிலும் இந்த சோல்சனிட்சன் என்ன சொன்னார் தெரியுமா? அமெரிக்கா மீண்டும் வியட்நாமை தாக்க வேண்டும் என்றார்.

அதன் பிறகு, அமெரிக்காவை விட ஐந்து மடங்கு அதிகமான பீரங்கி மற்றும் போர் விமானங்களை சோவியத் யூனியன் வைத்திருக்கிறது, அதே போல அணு ஆயுதங்களையும் வைத்திருக்கிறது. அதாவது அமெரிக்காவில் இருப்பதை விட மூன்று அல்லது ஐந்து மடங்கு அதிக சக்தி வாய்ந்த அணு ஆயுதங்களை சோவியத் யூனியன் வைத்துள்ளது. ஆகவே அதற்கு எதிராக அமெரிக்கா தனது இராணுவ பலத்தை அதிகரிக்க வேண்டும் என்று இந்த சோல்சனிட்சன் பிரச்சாரம் செய்தார்.

எழுத்தாளனுக்கு எதற்கு ஆயுதங்களை பற்றிய கவலை?

இது போன்ற கைக்கூலித்தனங்களுக்காகத்தான் சோல்சனிட்சனுக்கு நோபல் பரிசும் வழங்கப்பட்டது.

ஆக தோழர் ஸ்டாலின் பற்றி பேசுகிறவர்கள் அத்தனை பேரும் இது போன்ற ஏகாதிபத்திய கூலிக்காசுக்கு எழுதிய எழுத்தாளர்களிடமிருந்து தான் விவரங்களை எடுத்துக் கொண்டு எழுதுகிறார்கள், பேசுகிறார்கள். இது போன்ற காசுக்கு எழுதும் கைக்கூலி எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டிருந்த அதே சமயம் அந்த பொய்களை அம்பலப்படுத்தி உண்மையை எழுதிய எழுத்தாளர்களும் இருந்தார்கள். அவர்கள் யாரும் கம்யூனிஸ்டுகளோ, ஸ்டாலின் ஆதரவாளர்களோ இல்லை, மாறாக அவர்கள் அனைவரும் முதலாளிய ஜனநாயகவாதிகள் தான். ஆனால், நேர்மையான பத்திரிகையாளர்கள் எழுத்தாளர்கள். அவர்கள் டக்ளஸ் டோட்டில், லூயிஸ் பிக்ஷர், டி.என்.பிரீத், அன்னா லூயி ஸ்ட்ராங், மைக்கேல் சேயர்ஸ், ஆல்பர்ட் ஐ கான், ஹெச்.ஜி. வெல்ஸ், ஹென்றி பார்பஸ். இவர்கள் தவிர வேறு பலர் கூட எழுதியிருக்கலாம் அது பற்றிய விவரங்கள் நமக்கு தெரியவில்லை.

திட்டமிட்டே பேரழிவு பஞ்சம்’ என்று எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத அவதூறை பரப்பும் அறிவு ஜீவிகள் ஒருபோதும் இது உண்மையா என்று ஆராய்ந்ததில்லை. ஆராய முற்பட்டதும் இல்லை. ஆராய்ந்தால் திட்டமிட்டே பரப்பப்பட்ட தோழர் ஸ்டாலின் மீதான இந்த அவதூறுகளுக்கு  ராபர்ட் கான்குவஸ்ட், சோல்ஜெனித்சின், பெரும் முதலாளி வில்லியம் ஹெர்ஸ்ட் இவர்களுடன் பாசிச இனவெறியன் இட்லர் போன்றோர் அடங்கிய கூட்டமே காரணம் என்பது நிருபணம் ஆகும்.

ஸ்டாலின் – இட்லர் ஒப்பந்தம் சரியானதா?

ஸ்டாலினுக்கு இட்லர் கொடுங்கோலன் என்று தெரியாதா? பிறகு ஏன் ஸ்டாலின் இட்லருடன் ஒப்பந்தமிட்டார் என்று சிறுபிள்ளைத்தனமாய் வரலாற்றின் பக்கங்களை புரட்டி கூட பார்க்காத சிலர் ஸ்டாலின் பற்றி கேட்கும் எதிர்மறையான கேள்விகளுள் இதுவும் ஒன்று. தோழர் ஸ்டாலின் இனவெறியன் இட்லரின் பாசிச அபாயத்தை கண்டு அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் ஆகியோருடன் ஒரு ஒப்பந்தம் போட்டுகொள்ள அழைத்தார். ஆனால் ஏகாதிபத்திய நாடுகள் தோழர் ஸ்டாலினுடைய அழைப்பை ஏற்கவில்லை. இதில் குறிப்பாக காய் நகர்த்தியது பிரிட்டன் தான்.  பிரிட்டன் சோவியத் யூனியனை தாக்குமாறு இட்லரை ஊக்குவித்தது. இட்லர் சோசலிச ரசியாவை அழிக்க இறங்கினான் என்றால் அது சாதாரண காரியம் அல்ல. அந்த போரில் இட்லர் நிச்சயம் தனது பலத்தை முழுமையாக இழந்து விடுவான். அத்துடன் சோவியத்தின் கம்யூனிச அபாயமும் அழியும். இட்லரும் அழிவான் அல்லது பலவீனமடைவான். பிறகு பிரிட்டன் மட்டும் தான் ஐரோப்பாவின் மாபெரும் சக்தியாக இருக்கும் என்று மனப்பால் குடித்தது பிரிட்டன். அதனால் தோழர் ஸ்டாலினின் ஒப்பந்த கோரிக்கையை ஏற்க மறுத்தது. உலக நாடுகளை அச்சுருத்தும் பாசிசத்தின் போக்கை கண்டு உலக நாடுகளை காக்கும் பொருட்டும், ஏகாதிபத்தியத்தின் கருமேகம் சூழ்ந்துள்ள நிலையில் உழைக்கும் மக்களின் ரத்தமும் வியர்வையும் கொண்டு கட்டியெழுப்பிய சோசலிச சமூகத்தை காக்கும் பொருட்டும் அவர் அமெரிக்காவிடமும் பிரிட்டனிடமும் ஒப்பந்தம் கோரினார். அவை சாத்தியமற்று போனதால் இட்லரிடம் நேரடியாக ஒரு இடைகால ஒப்பந்தம் போட்டுக்கொள்ள தோழர் ஸ்டாலின் தயாரானார். (இந்த இடைக்கால அவகாசம் என்பது தான் இந்த ஒப்பந்தத்தின் முக்கியமான அம்சம்) இடைகால ஒப்பந்தம் என்பது பல்வேறு சாதக பாதகங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு வகுக்கப்பட்ட ஒரு செயல் தந்திரம். உலக யுத்த சூழலில் சோவியத் ரசியாவை தற்காத்துக் கொள்ளவும் செம்படையை பாசிசத்துக்கு எதிராக ஆயத்தபடுத்திக்கொள்ளவும் ஒரு இடைக்காலம் தேவை என்பதாலேயே இந்த ஒப்பந்தம் போடப்பட்டது. அன்றைய சூழலில் இட்லர் போர்வெறி கொண்டு அலைபவனாக மாபெரும் பலத்துடன் இருக்கிறான். அப்போதைக்கு அவனோடு மோதி வெல்வது சாத்தியமற்றதாக இருக்கிறது. காரணம் சோவியத் படைகள் அவ்வளவு பலத்துடன் இல்லை. எனவே தன்னை தயார் படுத்திக்கொள்ள ஒரு சிறு இடைவெளி ரசியாவுக்கு தேவையாக இருந்தது. அதன் காரணமாகத்தான் இந்த ஒப்ப்ந்தம் போடப்பட்டது.

ஒப்பந்தம் போடப்பட்டது, இட்லர் படையெடுப்பான் ரசியா அழியும் ஏகாதிபத்தியங்களின் கனவு தகர்ந்தது. ஒப்பந்தப்படி ரசியா 1939லிருந்து 1941வரை போரில் ஈடுபடவில்லை. செம்படை தன்னை தயார்படுத்திக்கொண்டிருந்த நிலையில், போருக்கு ரசியா தயாராக இல்லாத நிலையில் இட்லர் ரசியாவின் மீது திடீரென்று படையெடுத்தான். இரண்டாவது உலகப்போர் மிக உக்கிரமாக நடந்தது. அப்போது அமெரிக்கா, பிரிட்டன் போன்ற கோழைகள் எல்லாம் இட்லருக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டார்கள். தோழர் ஸ்டாலின் தலைமையிலான செம்படை தான் பாசிசத்தை வீழ்த்தி உலகை காத்தது.

தோழர் ஸ்டாலின் மீதான அவதூறுகளை அள்ளி வீசும் அறிவு ஜீவுகள் ஸ்டாலின் வாழ்ந்த காலகட்டத்தையும் சோவியத் ரசியாவின் புறச் சூழ்நிலையையும் காண மறுக்கின்றனர்.

கம்யூனிஸ்டுகளாகிய நாங்கள் எதையும் மறைத்துக்கொள்வதில்லை. தோழர் ஸ்டாலின் மீது எங்களுக்கும் விமர்சனங்கள் இருக்கின்றன. ஆனால் அவற்றை அந்த காலச்சூழலுடன் பொறுத்தி பார்க்க வேண்டும்.

கடுமையான விமர்சனத்திற்கு ஆட்பட்ட தோழர் ஸ்டாலின் வாழ்ந்த காலம்  சோசலிச ரஷ்யாவின் குழந்தைப் பருவ காலம்’

ரஷ்யபுரட்சி வெற்றி பெற்ற சில ஆண்டுகளிலேயே மாமேதை லெனின் மரணமடைந்தார். அவர் மறைவிற்கு பின் லெனினுடைய பொறுப்புகள் அனைத்தும் ஸ்டாலினிடம் வந்தன. ரசியாவை சதி செய்து கவிழ்த்து மீண்டும் முதலாளித்துவத்தை கொண்டுவருவதற்கு ஏகாதிபத்தியங்கள் காத்துக்கிடந்தன. ரசியாவை கொத்திக்குதற தலைக்கு மேல் சுற்றி வட்டமிட்ட ஏகாதிபத்திய வல்லூறுகளிடமிருந்து நாட்டை பாதுகாக்க வேண்டிய கடமை ஒருபுறமும், கட்சிக்குள் இருந்து கொண்டே சீர்குலைவு வேலைகளை செய்து கொண்டிருந்த டிராஸ்கி போன்ற ஏகாதிபத்தியவாதிகளை கையாள்வது  இன்னொருபுறம்;  இவ்வாறு பல்வேறு சிக்கல்களும், சிரமங்களும் நிறைந்த காலகட்ட்த்தோடு தோழர் ஸ்டாலினின் ஆட்சி காலம். அவருடைய நடவடிக்கைகளையும் அத்துடன் வைத்து தான் நாம் மதிப்பிட வேண்டும்.

ஸ்டாலின் தலைமையில் சோவியத்தின் சாதனைகள்

இரண்டாம் உலக யுத்தத்தில் பாசிச கொடுங்கோலன் இட்லரை வீழ்த்திய போரில் சோசலிச ரசியாவுக்கு ஏற்பட்ட சேதம் கணக்கில் அடங்காது. இரண்டு கோடிக்கும் அதிகமான ரசிய மக்கள் மட்டும் போரில் கொல்லப்பட்டார்கள். இரண்டரை கோடி மக்கள் வீடுகளை இழந்தனர். 1710 நகரங்கள் மற்றும் நகர்புற குடியிருப்புகளை 70,000க்கும் அதிகமான கிராமங்களை, சுமார் 32,000 தொழில் நிறுவனங்களை, 98,000 கூட்டு பண்ணைகளை, ஐயாயிரம் அரசு பண்ணைகளை நாஜிக்கள் அழித்தொழித்தார்கள்.

சோசலிச கட்டமைப்பின் இரண்டாவது புத்துயிர்ப்புக்காக தோழர் ஸ்டாலினால் சரியான தொலைநோக்கு திட்டங்களை முன்வைத்து போருக்கு முன் இருந்த தொழில் வளத்தை விட அதிகமான தொழில் வளத்தில் சோசலிச ரசியாவை முன்னெடுத்து சென்றார். சோவியத் யூனியன் இனி மீள்வது மிகவும் கடினம், தொழிற்துறையின் மீது நாஜிக்கள் நடத்திய தாக்குதல்களிலிருந்து மீள்வதற்கு மட்டுமே இன்னும் சில பத்தாண்டுகள் தேவைபடலாம் என்று சில முதலாளித்துவ எழுத்தாளர்கள் மதிப்பிட்டு எழுதினார்கள். ஆனால் வெறும் மூன்றே ஆண்டுகளில் 1948 தொழிற்துறை உற்பத்தி 1940ன் உற்பத்தியை விட மிஞ்சியது. 1940ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் 1949ம் ஆண்டில் தொழிற்சாலை மற்றும் அலுவலக தொழிலாளர்களுக்கான வருவாய் 24 சதவிகிதம் அதிகரித்தது.

சோவியத்தின் சாதனைகள் என்று நிறைய சொல்லலாம். எனினும் கல்வி தொடர்பான சோவியத் யூனியனின் இரண்டு உதாரணங்களை மட்டும் இங்கு பார்ப்போம். ஜார் ஆட்சி காலத்தில் ரசியாவில் கல்வி கற்றவர்களின் சதவிகிதம் காலனியாட்சி கால இந்தியாவை விட பின் தங்கியிருந்தது. புரட்சிக்கு பின்னர் இருபதே ஆண்டுகளில், குறிப்பாக ஸ்டாலின் ஆட்சி காலத்தில் ரசியாவில் கல்வி கற்றிருந்தோரின் சதவிகிதம், இந்தியாவை காலனியாக்கி வைத்திருந்த, உலகிலேயே கல்வியில் முதல் இடத்தில் இருந்த பிரிட்டனை விட பத்து மடங்கு உயர்ந்திருந்தது.

அதே போன்று காங்கிரஸ் தலைவர் காமராஜர் ரசியாவுக்கு போயிருந்த போது, ஒரு நாள் இரவு ஒரு ஒன்பது மணியை போல வெளியே போய் சும்மா ஒரு நடை நடை நடந்து விட்டு வரலாமா என்று தனக்கு துணையாக வந்திருந்த கைடிடம் கேட்கிறார். போகலாமே, வாருங்கள் போகலாம் என்று அவரை அழைத்துக்கொண்டு வீதியில் இறங்கி நடக்கிறார். அப்போது அவர்கள் ஒரு கட்டிடத்தை கடந்து செல்கிறார்கள், அந்த கட்டிடத்திலிருந்து கசமுச கசமுச என்று சத்தம் வருகிறது, உடனே காமராஜர் அங்கேயே நின்று அது என்ன சத்தம் என்கிறார். உடனே கைடு மக்கள் படிக்கிறார்கள், இரவு பள்ளி என்கிறார். காமராஜர் பார்க்க முடியுமா என்கிறார். பார்க்கலாமே, வாருங்கள் பார்க்கலாம் என்று அந்த கட்டிடத்திற்குள் அழைத்துச்செல்கிறார். உள்ளே பார்த்தால் அனைவரும் வயதானவர்களாக இருக்கிறார்கள். உடனே காமராஜர் என்ன இது எல்லோரும் வயதானவர்களாக இருக்கிறார்கள். இவர்களெல்லாம் இப்போது தான் படிக்கிறார்களா என்று கேட்கிறார்.அதற்கு கைடு இல்லையில்லை இவர்களுக்கு தாய் மொழியான ரஷ்யன் தெரியும். தற்போது பிரெஞ்சு கற்றுவருகிறார்கள் என்கிறார். காமராஜர் வியந்து போகிறார். இது தோழர் ஸ்டாலின் ஆட்சியில் நடந்த நிகழ்வு. சோவியத்தின் வளர்ச்சிக்கு இது போல ஆயிரம் சம்பவங்களை உதாரணங்களாக சொல்லலாம்.

தோழர் ஸ்டாலின் தலைமையிலான சோவியத் ரசியாவின் உழைக்கும் மக்கள் முன்னால், போருக்கு பிந்திய தொழிற்துறையின் அதிவேக முன்னேற்றத்தை சாதித்த உழைத்த மக்களின் முன் ஸ்டாலின் சர்வாதிகாரி என்று புலம்பி தீர்ப்பவர்களின் கூச்சல்கள் அனைத்தும் காணாமல் போகும்.  தோழர் ஸ்டாலினுடைய புகழை அவதூறு அலைகள் வீசியெறியமுடியாது என்பதற்கு சோவியத் மக்களோடு நின்று அவர் கட்டியெழுப்பிய சோசலிச கோட்டையை உடனே தகர்க்க முடியாமல் 40 வருட போராட்டத்திற்கு பிறகே தகர்க்க முடிந்துள்ளது என்கிற ஒன்றே போதுமான சான்று.

அமெரிக்க பள்ளி மாணவர்களின் பாடத்திட்டங்களில் ஸ்டாலின் என்றால் சர்வாதிகாரி, சர்வாதிகாரி என்றால் இட்லர், ஸ்டாலின், மாவோ போன்றோர்கள் என்கிற விசமத்தனமான கருத்து ஆழமாய் இளம் வயதிலேயே விதைக்கப்படுகிறது.

’’‘தோழர் ஸ்டாலின் என்றால் உழைக்கும் வர்க்கத்தின் தோழர்’ என்னும் உண்மையான கருத்துக்களை மக்கள் மத்தியில் எடுத்துரைப்பதில் முதல் முயற்சி என்கிர வகையில் சில பிழைகள் இருப்பினும் “புரட்சிகர மாணவர்-இளைஞர் முண்ணனி” தோழர்களின் இந்த கன்னி முயற்சி வரவேற்கத்தக்கது. ஸ்டாலின் சகாப்தம் என்கிற இந்த ஆவணப்படம் வெளி வந்த சில நாட்களிலேயே முதல் பதிப்பு அனைத்தும் விற்று தீர்ந்துவிட்டன.

தோழர் ஸ்டாலின் பற்றிய அவதூறுகளை நம்புகிறவர்கள் அனைவரும் ஏகாதிபத்தியத்தின் பொய்களைத் தான் நம்புகிறீர்கள். ஸ்டாலின் பற்றி உங்களுக்கு கூறப்படுபவை அனைத்தும் பொய்களே. ஸ்டாலினை கண்டு முதலாளிகள் அச்சப்படுகிறார்கள் எனவே தான் பீதியூட்டும் பொய் கதைகளை பரப்பி விடுகிறார்கள். உழைக்கும் மக்கள் தோழர் ஸ்டாலினை கண்டு அஞ்சுவதற்கு ஒன்றுமில்லை. அவர் நம்முடைய தோழர். ஸ்டாலின் குறித்த அவதூறுகளிலிருந்து உண்மையை அறிய விரும்புபவர்கள் அவசியம் இந்த குருந்தகட்டை வாங்கிப்பார்க்க வேண்டும். அதன் மூலம் நீங்கள் ஸ்டாலினை உண்மையாக அறிவீர்கள்.

இதை தயாரித்து வெளியிட்ட புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் இதே போல் நம் நாட்டில் ஏகாதிபத்தியத்திற்கெதிரான வர்க்க போராட்டத்திற்கு தீ மூட்டிய மாவீரன் பகத் சிங் பற்றிய ஆவணப்படத்தையும் தயாரிக்க வேண்டும். இந்திய இளைஞர்களுக்கு தீ மூட்டும் திரியாய் இந்திய வரலாறு உள்ளவரை வாழும் தோழர் பகத்சிங்கையும் நாம் நினைவு கூறுவோம்.

புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்களின் இந்த முயற்சி பாராட்டத்தக்கது. இதுவரை பார்க்காதவர்கள் அனைவரும் இந்த ஸ்டாலின் பற்றிய ஆவணப்படத்தை அவசியம் வாங்கிப்பாருங்கள்.

மீண்டும் அனைவருக்கும் எமது நவம்பர் புரட்சி தின வாழ்த்துக்கள்.

——————————————————————————————————————————
– கட்டுரையாளர்: சர்வதேசியவாதிகள்

***

ஸ்டாலின் சகாப்தம் - டிவிடி

படத்தை பெரியாத பார்க்க அதன் மீது சொடுக்கவும்

ஸ்டாலின் சகாப்தம் – ஆவணப்படம் DVD

தயாரிப்பு; புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

விலை ரூ. 70.00

கிடைக்குமிடம்:
கீழைக்காற்று.

10, ஔலியா சாகிப் தெரு,
எல்லீசு சாலை,
சென்னை – 600 002

தொலைபேசி – 044 2841 23677

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

நவம்பர் புரட்சி தினக் கவிதைகள்

நவம்பர் புரட்சி தினக் கவிதைகள்

20

நவம்பர் புரட்சி

தன்னையறிந்து இன்பமுறு என் தோழா….

vote-012புரட்சி
வெறும் விருப்பமாக மட்டும்
வெளிப்படுவது போதுமா?
அது செயலாய்
உன்னிடம் மலரும் நாள் எது?
நவம்பர் ஏழு கேட்கிறது

உலகை மாற்றுதல் புரட்சி என்பது
உண்மைதான், ஆனால் –
அதற்கு முதலில் உன்னை மாற்றுதல்
வேண்டுமென்பதை உணர்வாயா?

தாய், தந்தை உருவில்
பாசவடிவாய் முதலாளித்துவ வாழ்க்கை
உனக்கு வழங்கப்படும்போது,

காதலின் காந்தவிழிகளால், சாந்த சொரூபமாய்
தனியுடமை உன்னை நெருங்கும்போது

எதிர்த்து போராடத் தயங்குபவர்க்கு
எப்படிக் கிடைக்கும் புரட்சியின் நறுமணம்?

தாழ்த்தப்பட்ட மக்களை
உறவாட அனுமதிக்காத வீடு…
போராடும் தொழிலாளி வர்க்கத்தை
மதிக்கத் தெரியாத சொந்தம் – இவைகளை
வெறுக்கத் தெரியாதவர்க்கு
எப்படிக் கிடைக்கும் புரட்சியின் உணர்ச்சி பலம்?

வீடுகூட்ட, சோறாக்க, துணிதுவைக்க
பிள்ளைக்கு கால்கழுவ – என
அனைத்து வேலைக்கும் பெண்ணை ஒதுக்கிவைத்து,
அரசியல் வேலைக்கு மட்டும் தடுப்பு வைத்து
பிறவிசுகம் காணும் சராசரி ஆணாய்
உறுத்தலின்றி வாழ்பவர்க்கு
எப்படிக் கிடைக்கும் புரட்சியின் நன்னெறி?

கருவறை வரைக்கும் கைநீட்டிச் சுரண்டும்
ஏகாதிபத்திய தீவிரத்தின் இயல்பறிந்தும்
இயன்றவரை என்னால் முடிந்த வேலைகளைச் செய்கிறேன் – என
வரம்பிட்டுக் கொள்ளும் வாழ்க்கை முறையைத் தகர்க்காமல்
வருமா புரட்சி?

கொண்டாடும் உங்களிடம்
இந்த நவம்பர் ஏழு வேண்டுவது இதைத்தான்:

தயவுசெய்து உங்கள் பழைய உணர்ச்சிகளுக்கு
சலுகை வழங்காதீர்!

புரட்சிக் கடமைகளுக்கு தடையாய் வரும்
உங்கள் சொந்த உணர்ச்சிகளை
எதிர்க்கத் தயங்காதீர்!

தன்சுகம் மறுத்துத் துடித்துக் கொண்டிருக்கும்
நவம்பர் தியாகிகள் இதயத்தின்
தீராத ஆசை கேட்கிறதா உங்கள் செவிகளுக்கு?

தோழர்களே “புரட்சிக்கு உங்களிடம் இடம் கொடுங்கள்”

……………………………………………….

–     நவம்பர் புரட்சிநாள் வாழத்துக்களுடன் துரை.சண்முகம்.

லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்....

லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்…

அவதூறுகளின் குப்பைகளால்
மூடப்பட்டு கிடக்கின்றன
வரலாற்றின் பக்கங்கள்.
கண்களை திசை திருப்பலாம்,
காதுகளை செவிடாக்கலாம்.
காற்றை என்ன செய்வாய்?

இதோ,
திசைகளைக் கிழிக்கும்
காற்று வீசுகிறது!
மண்டி கிடக்கும் குப்பைகள்
பறந்து போகின்றன…
ஜாரின் அரண்மனையை
சுற்றி வளைத்த குரல்கள்
நியூயார்க்கில் ஒலிக்கின்றன…
இராக்கில் எதிரொலிக்கின்றன!
பணப்பெட்டிகள்
கவிழ்ந்து விழ,
பல்லிளித்தவாறு நிற்கிறாய்!

“முதலாளித்துவம் ஒழிக!”
“கம்யூனிசமே வெல்லும்!”
உனது கோட்டைக்குள்ளேயே
முழக்கங்கள் அதிருகின்றன…
உலகெங்கும் எதிரொலிக்கின்றன!
கொக்கரித்த சிரிப்படங்கி
நீ முகம் சிவக்கிறாய்!
மேசைக்கடியில்
ஒளிந்து கொள்கிறாய்!
அவசரமாக ஆயுதங்களை
தொட்டுப் பார்க்கிறாய்…

நனவான கனவுகளின்
நீண்ட பாதையில்
சில மைல் கற்களை
நீ பெயர்த்தெடுத்திருக்கலாம்!
அவசரமாக அவற்றை
குழிதோண்டி புதைத்திருக்கலாம்.
எனினும்,
முளைத்துக் கொண்டேயிருக்கின்றன
புதிய மைல்கற்கள்.
நனவுகளை நொறுக்கலாம்.
கனவுகளை என்ன செய்வாய்!

இதோ,
எதிர்காலத்தின் கனவுகள்
எமது மக்களின் கண்ணீரிலிருந்தும்,
உனது கொலைவாட்கள் ருசித்த குருதியிலிருந்தும்,
விடை தேடும் எங்கள் வியர்வையிலிருந்தும்,
நொடிக்கொரு முறை அலை அலையாய்
எழுந்து ஆர்ப்பரிக்கின்றன…

எங்கள் போர் மீண்டும் துவங்குகிறது..
இதயங்கள் பலமாகத் துடிக்கின்றன..
லெனின் மீண்டும் இளமையாகி விட்டார்
அக்டோபர் மீண்டும் மலர்கிறது*

இக்கவிதை இன்று நவம்பர்-7, ரசியப் புரட்சி நாளையொட்டி எழுதப்பட்டுள்ளது.

* என்.டொப்ரொன்ரவோவ் எழுதிய பாடல் வரிகளிலிருந்து எடுத்தாளப்பட்டுள்ளது. 1927-ல் செர்கேய் ஐசன்ஸ்டீன் இயக்கிய ‘அக்டோபர்’ திரைப்படத்தில், ரசியப் புரட்சியின் நாட்களை உணர்வுபூர்வமாக விவரிக்கும் காட்சித் தொகுப்பிற்கு இப்பாடல் பயன்படுத்தப்பட்டது. இப்படம் ஜான் ரீடின் உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்நாவலை அடிப்படையாகக் கொண்டது.

-போராட்டம்

……………………………………………….

நண்பனுக்கு ஓர் கடிதம்

என் அன்பு நண்பனே,
ஞாபகமிருக்கிறதா ஈராண்டுகளுக்கு
முன் அதிகாலை மூன்றுமணிக்கு
நான் புரட்சிநாள்
கவிதை வாசித்தேனே
ஓடிவிட்டன நாட்கள்
நீ எங்கிருக்கிறாய்
தெரியவில்லை எப்போதாவது
நீ இதை படிப்பாய் என்ற நம்பிக்கையில்….

ஒரு எல்லை வரைப்
உன்னிடத்தில் போராடினேன்
ஆனாலும் முடியவில்லை
எத்தனை வாதங்கள், விவாதங்கள்
சண்டைகள், சமாதானங்கள்
எல்லாம் முடிந்து விட்டன
நான் திரும்பிப்பார்க்கின்றேன்
உன்னிடத்தில் எத்தனைப்
போராட்டங்கள்
ஆனாலும்
உன் அடிமைத்தனத்தையுடைக்க
நீ தயாராக இல்லையே….

இப்போது உணர்கிறேன்
தவறாக பேசிவிட்டோமோ
அப்படி பேசியிருந்தால்
இப்போது உன்னிடம் நான் பேசியிருந்தால்
நீ உன்னை மாற்றிக்கொண்டிருப்பாயோ
ஆனால் எப்போதும் காலச்சக்கரம் பின்னோக்கி
சுழல்வதில்லையே

என் அன்பு நண்பா,
நீ  அடிக்கடி சொல்வாயே
சுயநலம் இல்லாது யாருமில்லையென்று
உனக்குத்தெரியுமா?
நானும் உன்னைப்போலத்தானிருந்தேன்
சில ஆண்டுகளுக்கு முன்
ஒருவர் வந்தார்
தோளில் ஜோல்னா பையினை மாட்டிக்கொண்டு
தன்னை தோழர் என்றார்
கருப்பாக
அதுவும் என்னைவிட கருப்பாக

அவரின் கேள்விகள் என்னை நிலைகுலையச்செய்தன
“உன் வாழ்வில் முதலாளித்துவம்
தலையிடுகிறதா இல்லையா?
நீ உண்ணும் அளவை எவனோ கட்டுப்படுத்துவது
தெரிகிறதா இல்லையா?
எல்லாவற்றையும் குறை கூறுகிறாயே
நீ என்ன செய்தாய் நாட்டுக்கு?”

என்னால் பேச முடியவில்லை
என் அடிமைச்சிறகுகள் ஒடிக்கப்பட்டு
சிறையிலிருப்பதை போல் உணர்ந்தேன்
என் முகத்தை மறைத்துக்கொண்டு
ஓடினேன் பயமெனக்கு
போய்விடுவோமோ நம்மை அறியாமல் போய்விடுவோமோ
ஓடினேன் ஓடிக்கொண்டே இருந்தேன்
இப்போது நான் பறப்பதற்கு சிறகுமில்லை

பேருந்துகளில், தெருக்களில்
பிரச்சாரம் செய்யும் தோழர்களை
கண்டு அவமானத்தில் தலையைக்
குனிந்தேன்., அவர்களின்
சொற்கள் என் இதயத்தை
கிழித்தன அங்கிருந்தும் ஓடினேன்

ஒருவரா இருவரா கருப்பாக,
சிவப்பாக, குண்டாக, ஒல்லியாக
இப்படி எத்தனையோ தோழர்களைக்கண்டேன்
ஆனால அவர்கள் எல்லாம்
எனக்கும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்
கவனித்தாயா நண்பா
உனக்காக எனக்காக எல்லோரும்
போராடும் போது உனக்காக
நீயும் எனக்காக நானும்
போராடாமல் இருப்பது எவ்வளவு கேவலம்….
அடிக்கடி சொல்வேனே
நினைவிருக்கிறதா
“நாட்கள் இப்படியே இருக்காது
நாளை என் சாவு செய்தி கேட்டு
நீ செஞ்சட்டையோடு வந்திருந்தால்
அது தான் எனக்கு மகிழ்ச்சி.”
புரட்சிகர வாழ்த்துக்களுடன்
உன் அன்பு நண்பன்

கலகம்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

தலித்தை மணந்த கள்ளர் சாதிப்பெண் படுகொலை!

329

vote-012திருச்சியில் கள்ளர் சாதியைச் சேர்ந்த ஸ்ரீபிரியா பி.எட் படிக்கும் போது அறிமுகமான தலித் இளைஞரான பத்ரகாளியை காதலிக்கிறார். பின்னர் செப்டம்பர் 29ஆம் நாள் இருவரும் சேலத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் பத்ரகாளியின் சகோதரி வசிக்கும் மடத்துக்குளம் என்ற உடுமலைப்பேட்டைக்கு அருகில் உள்ள ஊரில் வாழ்கின்றனர்.

கடந்த 4.11.09 புதன்கிழமை அன்று ஸ்ரீபிரியாவின் தந்தையான சீனிவாசனும், அவரது இரண்டு உறவினர்களும் மடத்துக்குளம் வருகின்றனர். மகளிடம் அவளது அம்மா நோய்வாய்ப்பட்டிருப்பதால் திருச்சிக்கு வந்து பார்க்குமாறு சீனிவாசன் கேட்டிருக்கிறார். இந்த சென்டிமென்டுக்கு பின்னால் சாதிவெறி இருக்கும் என்பதை யூகிக்க முடியாத அந்த அப்பாவிப் பெண் தனது கணவன் வந்ததும் முடிவு செய்வதாக கூறியிருக்கிறார். திருமணத்திற்குப் பிறகு தனது தந்தையின் சாதிவெறி மாறியிருக்கும் என்று அந்த பெண் மகிழ்ச்சியடைந்திருக்கலாம்.

பத்ரகாளியின் சகோதரி கணவர் சந்திரசேகர் கூறியபடி மகளை பார்க்க வந்த தந்தையும் இரண்டு உறவினர்களும் வெளியேறினர். சிறிது நேரம் கழித்து அந்த இரண்டு உறவினர்கள் மட்டும் திரும்பி வந்தனர். “எதற்கு திரும்ப வந்து தொந்தரவு செய்கிறீர்கள்” என்று சந்திரசேகரனது மனைவி ராணியும் பக்கத்துவீட்டுகாரரும் கேட்டிருக்கின்றனர். அந்த இரண்டு உறவினர்களில் ஒருவர் கத்தியைக்காட்டி மிரட்ட மற்றொருவர் ஸ்ரீபிரியாவைக் குத்திக் கொன்றார். கழுத்திலும், மார்பகத்திலும், வயிற்றிலும் குத்திக் கிழிக்கப்பட்ட ஸ்ரீபிரியா அங்கேயே துடி துடித்துக் கொல்லப்பட்டார்.

தற்போது சீனிவாசனும், அவரது உறவினர்களான ஆசைத்தம்பி, பண்ணாடி முதலியோர் கைது செய்யப்பட்டு 302 கொலை செய்தல் பிரிவின்படி வழக்கு பதியப்பட்டிருக்கிறது. தீண்டாமை வன்கொடுமையின் கீழ் போலிசார் வழக்குபதியவில்லை. (செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா, 6.11.09)

திருமணம் முடிந்த உடனேயே ஸ்ரீபிரியாவின் பெற்றோர், உறவினர்கள் எல்லாம் சேர்ந்து இந்த புதுமணத்தம்பதியினரை மிரட்டி வந்தனர். இதற்காக பத்ராகாளியன் உறவினர்கள் போலிசிடம் சிலமுறை புகார் கொடுத்திருந்தனர். ஆனால் வழக்கம் போல போலிசு நடவடிக்கை எடுக்காமல் ஸ்ரீபிரியாவை அவரது தந்தையுடன் அனுப்ப பஞ்சாயத்து செய்தது. அதை அந்த பெண் மறுக்கவே அவரது தந்தையும், உறவினர்களும் ஆத்திரத்துடன் சென்றிருக்கின்றனர்.

முதலில் அவர்களுடைய திட்டம் பத்ரகாளியைக் கொல்வதுதான். ஆனால் அவர்கள் சென்ற  நேரத்தில் பத்ரகாளி இல்லாததால்  ஸ்ரீபிரியாவை மட்டும் கொடூரமாக கொன்றிருக்கின்றனர். அதுவும் மார்பகங்களை குத்தி கிழிக்குமளவுக்கு சாதிவெறி முத்தியிருந்தது.

கடந்த இருவருடங்களில் இதுபோல ஏழு கொலைகள் கலப்பு மணத்திற்காக நடந்திருக்கின்றன. தஞ்சை, திருச்சி முதலான மத்திய தமிழகத்தில் வாழும் கள்ளர் சாதியினர் தேவர் சாதி பிரிவில் ஒருவராவார்கள். பொதுவில் கடும் சாதிவெறி கொண்டதாகவே இந்த சாதியினர் நடந்து கொள்வார்கள். இந்த பகுதிகளில் எல்லா அரசியல் கட்சிகளிலும், ஏன் ரவுடிகளிலும் கூட இந்த சாதி மட்டுமே இருக்கும். தலித் மக்களை புழு பூச்சிகளாக பார்க்கும் மனோபாவம் இந்த சாதியின் இரத்தித்திலேயே கலந்திருக்கும் என்று கூட சொல்லலாம்

மற்ற எல்லாவற்றையும் விட தனது சாதிப்பெண்கள் தலித்துக்களை மணம் செய்வதை இந்த உலகத்திலேயே மிகவும் இழிவான செயலாக ஆதிக்க சாதி வெறியர்கள் கருதுகின்றனர். இதனாலேயே மகள் தாலியறுத்தாலும் பரவாயில்லை என தலித் மருமகன்களை கொல்கின்றனர். தனது சாதி பெண் கலப்பு மணத்தில் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவளையும் கொல்வதற்கு அவர்கள் தயங்குவதில்லை.

சில ஆண்டுகளுக்கும் முன் விருத்தாசலத்தில் ஒரு வன்னிய பெண் தலித் ஆண் தம்பதியினர் கட்டிவைத்து எரித்துக் கொல்லப்பட்டனர். சென்ற ஆண்டு திருவாரூரைச் சேர்ந்த ஒருதலித் இளைஞன் கள்ளர் சாதி பெண்ணை மணந்ததற்காக அவளது அண்ணன்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இன்னும் வெளிச்சத்திற்கும், ஊடகங்களுக்கும் வராத செய்திகள் பல இருக்கும். இந்த பிரச்சினைகள் போலிசு தரப்பிற்கு வரும்போது அவர்கள் சமரசம்பேசி அந்த  திருமணங்களை ரத்து செய்து ஆதிக்க சாதியினரின் மனங்களை குளிர்விக்கவே முயல்கின்றனர். மாறாக அப்படி திருமணம் செய்து கொண்ட தம்பதியினருக்கு பாதுகாப்பு தருவதில்லை. சமூகத்திலேயே ஆதிக்க சாதி கோலேச்சும் போது போலிசு மட்டும் விதிவிலக்கா என்ன?

இதுதான் தமிழகத்தின் உண்மையான முகம். இதுதான் தமிழக காதலர்களுக்கு உள்ள ஜீவாதாரமான பிரச்சினை. இதை வைத்தோ, அம்பலப்படுத்தியோ, ஆதிக்க சாதியினரை இடித்துரைத்தோ கதைகளோ, சினிமாவோ, தொலைக்காட்சி உரையாடல்களோ வருவதில்லை. மற்றபடி நடை, உடை, பாவனைகளை வைத்து எப்படி காதலிப்பது, கவருவது, கடலை போடுவது என்பதையே ஊடகங்கள் கற்றுத்தரும் பாடம்.

ஆதிக்க சாதி வெறி கிராமத்தில் மட்டும்தான் இருக்கும் நகரத்தில் இல்லை என்பதெல்லாம் மேம்போக்கான மதிப்பீடு மட்டுமே. இங்கே ஸ்ரீபிரியாவின் பெற்றோர் திருச்சியில்தான் வசிக்கின்றனர். கிராமங்கள் சூழ வாழும் நகரத்தில் மட்டும் சாதி புனிதமடைந்து விடுமா என்ன?

தலித் பெண்களை ஆதிக்கசாதி ஆண்கள் மிரட்டி பெண்டாளுவதெல்லாம் பிரச்சினை இல்லை. ஒரு ஆதிக்க சாதியின் திமிரான அந்த காமவெறியினால் சாதியின் புனிதம் கெட்டுவிடுவதில்லை. சொல்லப்போனால் அது பெருமையாக பார்க்கப்படுகிறது. தலித் பெண்களெல்லாம் அவர்களுக்கு படைக்கப்பட்ட சதைப்பிண்டங்களாக கருதப்படுகின்றனர். ஏனைய வேலைகளில் தலித் மக்களின் இலவச சேவைகளை பயன்படுத்தும் ஆதிக்க சாதி இந்த பெண்டாளுவதையும் ஒரு சேவையாக அதிகாரத்தை கையில் வைத்திருக்கும் திமிரில் செய்கிறது.

ஆனால் ஒரு ஆதிக்க சாதி பெண் மட்டும் ஒரு தலித்தை மணந்தால் அது சாதியின் கௌரவம் குலைந்த ஒன்றாக கருதப்படுகிறது. இவ்வளவு சமூக மாற்றத்திற்குப் பிறகும் ஆதிக்க சாதி வெறியர்கள் இந்த ‘கௌரவத்தை’ குலைக்கும் மணங்களை வாழவிடுவதில்லை. தமிழகம் முழுவதும் இதுதான் நீக்கமற நிரம்பியிருக்கும் சமூக யதார்த்தம். இதில் எந்தப்பகுதியும் விதிவிலக்கல்ல.

கல்வியும், வேலைகளும் சமூகமயமாகி வரும் வேளையில் இப்படி இருசாதிகளைச் சேர்ந்தோர் பழகுவதற்கும் காதல் வயப்படுவதற்கும் நிறைய வாய்ப்பிருக்கிறது. ஆனால் எல்லா நவீன நுகர்பொருட்களோடும் வாழும் ஆதிக்க சாதி வெறியர்கள் இதை மட்டும் அனுமதிப்பதில்லை.

தமிழகத்தில் வெற்றிகரமாக ஓடும் டி.வி தொடர்களில் எதாவது இந்த உயிராதராமான பிரச்சினையை பேசுகிறதா?. வெற்றி பெற்ற காதல்படங்கள் இந்த வாழ்வா சாவா போராட்டத்தை பிரதிபலித்திருக்கிறதா? திறமை வாய்ந்த எழுத்தாளர்கள் எவராவது இதை நாவலாக எழுதியிருக்கிறார்களா? கேள்விகளை நிறைய இருக்கின்றன. ஆனால் பதிலென்னவோ ஒன்றுதான்.

நீங்க, வாங்க என்று பேசப்படும் கோவைத்தமிழின் உயர்ந்தபண்பாடு  குறித்தெல்லாம் அந்தப் பகுதியைச் சேர்ந்த பதிவர்கள் உயர்வாக பேசுகின்றனர். ஆனால் அங்குதான் அருந்ததி மக்களை நாயை விட கேவலாமாக நடத்தும் கொங்கு வேளாளக் கவுண்டர்களின் சாதி வெறி கோலேச்சுகிறது. தங்களது ஊரின் பழமைகளை மண்மணக்க பேசும் அந்த பதிவர்கள் எவரும் தமது பகுதிகளின் இந்த காட்டுமிராண்டித்தனத்தை ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. ஏனென்றால் இவர்களும்  கூட சமூகயதர்த்தத்தின் உண்மைகளுக்கு முகங்கொடுப்பதாக இல்லை.

இப்படித்தான் ” இப்பெல்லாம் யாரு சார் சாதியை பார்க்குறாங்க” என்று நாகரீக நியாயம் பேசுபவர்களுக்கு இந்த பதிவை சமர்ப்பிக்கிறோம். மார்பகங்கள் கிழித்து கொல்லப்பட்ட ஸ்ரீபிரியாவை இழந்து கதறிக்கொண்டிருக்கும் பத்ரகாளி ஊரோடு ஒத்து வாழ்ந்திருந்தால் இந்தப் பிரச்சினை இருக்காது என்று கூட அந்த நியாயவான்கள் பேசக்கூடும். அப்படி என்றால் இனி தலித் ஆண்கள் எந்த ஆதிக்க சாதி பெண்களையும் காதலிக்க கூடாது மீறீனால் மரணதண்டனை என்று ஒரு சட்டத்தை இயற்றிவிடலாம். அப்படி நடந்தால் தமிழகம் எந்த சாதி ‘மோதல்களும்’ இல்லாமல் அமைதிப்பூங்காவக திகழும்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

குழந்தைகளின் ‘கொலை’க்காட்சி !

39

குழந்தைகளின் கொலைக்காட்சி

vote-012இரண்டு அல்லது மூன்று நாள் விடுமுறையின் சிக்கல்கள் இரண்டு, ஒன்று சொந்த ஊருக்குப்போவதற்கு பேருந்தை பிடிப்பது. திருப்பூரில் விடுமுறை நாட்களிலும் திருமண நாட்களிலும் பேருந்தில் இடம் பிடிப்பதை விட ரேஷனில் சீமெண்னை வாங்குவது சுலபமானது. இரண்டாவது பிரச்சினை ஊரில் உள்ள தொலைக்காட்சிப்பெட்டி. தோராயமாக ஒரு நாளில் ஆறு மணி நேரம் சீரியல் ஓடுகிறது எல்லா வீடுகளிலும். அவ்வப்போது பார்த்த வகையில் எல்லா நெடுந்தொடரிலும் ஒரே கதைதான் ஓடுவதாக தெரிகிறது. கதை என்கிற சமாச்சாரத்தில் யாரும் அவ்வளவு கவனம் செலுத்துவதில்லை என்பது வேறு விஷயம், ஆனாலும் ஒரே மாதிரியான காட்சிகளின் தொகுப்பாகத்தான் எல்லா தொடர்களும் இருக்கின்றன. ஒரே நடிகர் வெவ்வேறு தொடர்களில் ஒரே மாதிரி பாத்திரத்தில் நடிக்கிறார். நம் வீட்டு ஆட்கள் எப்படி அவர் பாத்திரத்தின் பெயர்களை சரியாக நினைவு வைத்திருக்கிறார்கள் என்பது ஆராயப்படவேண்டிய அதிசயம்.

தொடர்களும் இரண்டு வகையாக காணக்கிடைக்கின்றன. சிவனே என இருக்கும் கதாநாயகியை ஊரில் இருக்கும் பாதி பேர் பாடாய்ப்படுத்தி கதையை வளர்த்துவார்கள். இன்னோர் வகை கதாநாயகி கொஞ்சம் அதிரடி நாயகி, இவர்கள் ஊரில் உள்ள ஆட்கள் பாதி பேரின் பிரச்சனைகளை கவனிப்பதன் மூலம் கதையை கொண்டு செல்வார்கள். தன் அப்பா வயது கதாநாயகர்களுக்கு அம்மாவாக நடிக்க விருப்பமில்லாத முன்னாள் கதாநாயகிகளின் முதல் தேர்வு நெடுந்தொடர்தான் என்பது எல்லோரும் அறிந்ததுதான். அதிலும் தன் மகன் வயது ஆளுக்கு ஜோடியாக நடித்து தன் பழைய கதாநாயகர்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் தரும் பாக்கியம் சிலருக்குத்தான் கிடைக்கிறது.  ரம்யா கிருஷ்ணன்  தன் அத்தையை ‘அத்தை’ என விளிக்காவிட்டால் யார் யாருக்கு அத்தை என நமக்கு குழப்பம் வந்துவிடும்.

சீரியல் கதாநாயகிகளை ஒரு சூப்பர்வுமனாக சித்தரிப்பதில் பெரும் வெற்றி கண்டவர் ராதிகா. அவரது சமீபத்து தொடர் ஒன்றில் அதன் அதிகபட்ச எல்லையை தொடுவதுபோல தெரிகிறது. காபிக்கு சர்க்கரை போடுவதில் தொடங்கி கல்யாணத்தை நிறுத்துவது வரை சகல விஷயங்களிலும் ராதிகாவின் கருத்தை எல்லோரும் பயபக்தியோடு ஆதரிக்கிறார்கள். முன்பு தூர்தர்ஷனில் ஒளிபரப்பான புராணத்தொடர்களில் வரும் கடவுளரைப்போல ஒரு மர்மமான புன்னகையோடு தொடர் முழுக்க வலம்வருகிறார் ராதிகா, தலைக்கு பின்னால் ஒரு ஒளி வட்டமும் ஆசீர்வாதம் செய்வது போல கைகளையும் வைத்திருந்தால் செல்லம்மா ஒரு அவதாரமாகத்தான் காட்சியளிப்பார்.

கதாநாயகி மற்றும் வில்லனை தவிர்த்து நெடுந்தொடரில் வரும் கதாபாத்திரங்களையும் இரு பிரிவுக்குள் அடக்கிவிடமுடியும். ஒன்று கொஞ்சம் வில்லன் சாயலில் இருக்கும் குரூப், கோள் மூட்டுவதும் கழுத்தை வெட்டி ஜாடை பேசுவதும் இவர்கள் அன்றாடப்பணி. செய்வினை வைப்பது மற்றும் சாப்பாட்டில் விஷம் வைப்பது மாதிரியான பணிகளையும் அவசியம் ஏற்படின் இவர்கள் மேற்கொள்வார்கள். இன்னொரு குழு கொஞ்சம் அப்பிராணி உறுப்பினர்களைக்கொண்டது. இவர்கள் எந்நேரமும் கதாநாயகியோடோ அல்லது கதாநாயகிக்காகவோ ஒப்பாரி வைத்தவண்ணமிருப்பார்கள். ஒப்பாரி வைத்த நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் கதாநாயகியின் கஷ்டங்களையோ அல்லது பராக்கிரமங்களையோ மற்றவர்களுக்கு மறு ஒளிபரப்பு செய்வார்கள். நாயகியின் கணவனும் இந்த இரு பிரிவுகளின் ஒன்றின் கீழ்தான் அடங்குவார், எனவே கதாநாயகன் என ஒரு பாத்திரம் இங்கு கிடையாது.

தொடரின் கதைகளுக்கென்று சில விதிமுறைகள் உண்டு. அதாவது தொடரில் வரும் ஒரு குடும்பம் கூட மகிழ்ச்சியாக இருக்கக்கூடாது. ஒரு அதிர்ச்சிகரமான செய்திக்கு வீட்டில் உள்ள எல்லோரையும் குளோசப்பில் காட்ட வேண்டும். உதாரணமாக பாத்ரூம் குழாயில் தண்ணீர் வரவில்லை என்ற வசனம் சொல்லப்பட்ட பிறகு வீட்டு நாய்க்குட்டி உள்ளிட்ட சகல உறுப்பினர்களின் முகத்தையும் மாற்றி மாற்றி காட்டுவது அவசியம். கூடுதல் அதிர்ச்சியைக்காட்டும் காட்சிகளில் கேமராவை மேலிருந்து கீழ், கீழிருந்து மேல், இடமிருந்து வலம் மற்றும் வலமிருந்து இடமென நடிகரின் அல்லது நடிகையின் முகத்தை நோக்கி நான்கு திசைகளிலிருந்தும் வேகமாக திருப்பவேண்டும் ( ‘என்னது இரண்டு நாள் தண்ணீர் வராதா’ என்ற டயலாக்கிற்கு இந்த நுட்பத்தை பயன்படுத்தலாம் ).

சாதாரண  நிகழ்வுகளையும் உணர்வுபூர்வமாகத்தான் காட்ட வேண்டும், உடம்பு சரியில்லாத நபருக்கு சாப்பாடு ஊட்டுவதை நைட்டிங்கேல் அம்மையாரின் சேவைக்கு நிகரானதென நம்பும்படிக்கு காட்சி நீளமாக இருப்பதும் முக்கியம். கல்யாணமானவர்கள் ஆறு மாதத்திற்குமேல் சேர்ந்திருப்பது எந்த சீரியலுக்கும் அடுக்காது.

சித்தி தொடர் ஓடிய நேரத்தில் சென்னை ரங்கநாதன் தெருவில் கூட்டம் கணிசமாகக் குறைந்திருந்தது. மெட்டிஒலி தொடர் ஒளிபரப்பாகும் பொழுது வீட்டில் சேனல் மாற்றுவது கிரிமினல் குற்றமாகக் கருதப்பட்டது. இப்போது நிலைமை அப்படி இல்லை என்றாலும் நெடுந்தொடர்கள் ஓயாமல் வீட்டில் ஓடியவண்ணமிருக்கின்றன. அடுத்து வரப்போகும் காட்சிகளை அனுமானிக்கும் அளவு வல்லமை பெற்ற பிறகும்கூட யாரும் நெடுந்தொடர் பார்ப்பதை நிறுத்தக்காணோம்.

என் கவலை பெரியவர்களின் சீரியல் மோகம் பற்றியதல்ல. வீட்டு குழந்தைகள் நம்முடன் சேர்ந்து தொடர்களைப்பார்க்கும் நிர்பந்தத்திற்க்கு ஆளாகிறார்கள். நான் பார்த்த பல சிறார்கள் தொடர்களின் கதையையும் பாத்திரங்களின் பெயர்களையும் நினைவு வைத்திருக்கிறார்கள். நயவஞ்சகம், முறைகேடான உறவு, ஆள் கடத்தல்,கொலை, பழி வாங்குவது என சமூகத்திற்க்கு ஆகாத செயல்கள் விதிவிலக்கில்லாமல் எல்லா நெடுந்தொடர்களிலும் நிரம்பிவழிகிறது. எல்லா வீடுகளிலும் நடக்கும் சம்பவங்களாக இவை தொடர்களில் காட்டப்படுகின்றன. குழந்தைகள் அடுத்தவர்களை பார்த்து அதேபோல செய்வதன் மூலம்தான் (இமிடேஷன் ) பெரும்பாலானவற்றை கற்கின்றன. ஐந்து வயது வரை டிவியில் வருவது நாடகம் என்பது அவர்களுக்கு தெரியாது, கண்ணில் தெரிவது எல்லாம் அவர்களுக்கு ஒரே மாதிரியானவைதான்.

எனவே சமூகம் பற்றிய  குழந்தைகளின் மதிப்பீடு சீரியலையும் உள்ளடக்கியதாகத்தான் இருக்கும்.குழந்தைகள் தங்கள் சுற்றத்தைப் பற்றி பெருமளவு கற்பது  முன்பள்ளிப்பருவம் வரையிலான காலம்தான். இப்படி இபிகோ வின் எல்லா சட்டப்பிரிவுகளின் கீழ் அடங்கும் அனைத்துக்குற்றங்களும் நிரம்பிய தொடர்களைப் பார்த்துக்கொண்டுதான் நம் குழந்தைகளின் ஆளுமை இப்போது வளர்கிறது. இது எதிர்காலத்தில் அவர்களின் வாழ்க்கை முறையில் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். ஆனாலும் இது தொடர்பில் எந்த ஒரு ஆய்வும் இதுவரை செய்யப்படவில்லை.

நாம் எப்படி ? டிவியை நிறுத்திவைக்கப்போகிறோமா அல்லது ஆராய்சி முடிவுகள் வரும் வரை காத்திருக்கப்போகிறோமா ??

வில்லவன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) – டவுன்லோட்

PUJA_November_09-1

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

  1. தில்லை நடராசர் கோயில் தெற்கு வாயிலை அடைத்து நிற்கும் தீண்டாமைச் சுவரைத் தகர்த்தெறிவோம்! –மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் பிரச்சாரம், ஆர்ப்பாட்டம்!
  2. 25 – ஆம் ஆண்டில் புதிய ஜனநாயகம்
  3. அலைக்கற்றை (ஸ்பெக்ட்ரம்) ஊழல்: தி.மு.க – காங்கிரசின் கூட்டு களவாணித்தனம்!
  4. நக்சல் வேட்டை….அரசு பயங்கரவாத உள்நாட்டுப் போர்!
  5. சி.பி.எம் ஏவியுள்ள பயங்கரவாதச் சட்டம்: சொல்லில் சோசலிசம்! செயலில் பாசிசம்!
  6. போராளி சத்ரதார் மஹடோ கைது: அவதூறு! பொய்வழக்கு!
  7. போலீசு அதிகாரி கடத்தல் விவகாரம்: பயங்கரவாதிகள் யார்?
  8. கோவா குண்டுவெடிப்பும் “இந்துக்களின்” கள்ள மௌனமும்!
  9. தமிழக எம்.பிக்களின் ஈழச்சுற்றுலா: துரோகிகளுக்கு புரியுமா மக்களின் அவலம்?
  10. இந்தியா – ஏசியன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்: விவசாயிகளுக்கு பேரிடி!
  11. ஆந்திர முதல்வர் நாற்காலிச் சண்டை: திடீர் பணக்கார அரசியல் ரவுடிகளின் சவால்!
  12. ஹோண்டுராஸ் இராணுவப் புரட்சியும், அமெரிக்காவின் நப்பாசையும்!
  13. திராவிட – தமிழினக் கட்சிகளின் சமூகநீதி: ஊழலின் கவசமா?
  14. “அப்பன் சொத்து பிள்ளைக்கு!”- பார்ப்பன இந்துத்வ பாதையில் பீடுநடைபோடும் கி.வீரமணி!
  15. இது இன்னும் நீடிக்கலாமா?
  16. “ஆயுத வழிபாடு விடுதலையைத் தராது” தோழர் சிவசேகரத்தின் நேர்காணல் – இரண்டாம் பாகம்
  17. “தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்து போர்க்கால நடவடிக்கை எடு!” – விவசாயிகள் விடுதலை முன்னணியின் ஆர்ப்பாட்டம்
  18. குர்கான் தொழிலாளி வர்க்கத்தின் எழுச்சி: மறுகாலனியாதிக்க எதிர்ப்பில் புதிய அத்தியாயம்!

புதிய ஜனநாயகம் நவம்பர் 2009 மின்னிதழ் (PDF) பெற இங்கே அழுத்தவும்

கோப்பின் அளவு 6 MB இருப்பதால் தரவிரக்கம் செய்ய நேரம் ஆகும் கிளிக் செய்து காத்திருக்கவும் அல்லது சுட்டியை ரைட் கிளிக் செய்து ஃபைல் சேவ் ஏஸ் ஆப்டன் மூலம் முயற்சிக்கவும் ( RIGHT CLICK LINK – FILE SAVE AS or SAVE TARGET AS or SAVE LINK AS).

vote-012

…..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

 

புதிய ஜனநாயகம், நவம்பர்’ 2009 இதழில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்

பதிவர்களை ஊக்குவிக்கும் தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

55

தமிழ்மணம் விருதுகள்: ஒரு பார்வை!

vote-012சென்ற ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பதிவர்களுக்கான விருது போட்டிகளை தமிழ்மணம் அறிவித்திருக்கிறது. கடந்த முறை முதல் சுற்றில் பதிவர்கள் மட்டும் வாக்களித்து சிறந்த இடுகைகளை எழுதிய பதிவர்களை தெரிவு செய்தார்கள். இரண்டாம் சுற்றில் பதிவர்கள் அல்லாத பொதுவாசகர்கள் வாக்களிக்கும் வாய்ப்பு, ஈழத்தின் அசாதாரணமான சூழ்நிலை காரணமாக ஈடேறவில்லை. இறுதியில் பதிவர்களின் வாக்களிப்பை வைத்தே விருதுகள் அறிவிக்கப்பட்டன.

வினவு துவங்குவதற்கு முன்னர் பல தோழர்கள் தமிழ்மணம் பற்றியும், படிக்கவேண்டிய பதிவர்கள் மற்றும்  தோழர்களின் வலைப்பூக்களையும் அறிமுகப்படுத்தியிருந்தார்கள். முதன்முறையாக தமிழ்மணத்தை பார்த்த போது பிரமிப்பாக – ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான பத்திரிகைகளை பார்த்தது போல – இருந்தது. பொதுவில் முற்போக்கு விசயங்களை எழுதும் பதிவர்களை மட்டும் படித்து விட்டு செல்வது என்ற எல்லையைத் தாண்டி பதிவுலகின் பலவிதமான பரிமாணங்களை தமிழ்மணத்தின் மூலமே அறிந்து கொண்டோம். ஆன்மீகம், பகுத்தறிவு, தமிழ்தேசியம், தி.மு.க, அ.தி.மு.க, ஆர்.எஸ்.எஸ், கவிதை, சிறுகதை, செய்திகள், பரபரப்பு செய்திகள், கம்யூனிசம், ரசனையாளர்கள், சினிமா பதிவர்கள், ஈழம், சொந்த வாழ்க்கை அனுபவங்கள், குழந்தை அனுபவம், பெண்கள், உபதேசங்கள், தொழில்நுட்பம், முக்கியமாக நமது மொக்கைகள்…  என வலை உலகு முழுவதையும் தமிழ்மணம் பிரதிபலித்தது.

தமிழ்மணத்தின் செயல்முறையைப் புரிந்து கொள்ளவே சிலமாதங்கள் ஆகின. பலநாட்கள் வாக்களிக்கும் பட்டை ஏன்,எதற்கு என்பதே தெரியாது. தமிழ் தட்டச்சு தெரிந்திருந்தாலும் பின்னூட்டம் போடும் முறை கூட எமக்குத்தெரிந்திருக்கவில்லை. வினவை ஆரம்பித்தவுடன்,  கில்லி சொந்த முறையில் பலவற்றை அறிந்து கொண்டு கற்றுக்கொடுத்தார். ஆரம்பத்தில் வேர்ட்பிரஸ்ஸில் தமிழ்மணத்தின் வாக்களிக்கும் பட்டையை சேர்க்க முடியாது என்பதால் தனி உரல் கொடுத்து வாக்களிக்கும் முறையை, எதிர் வாக்குகளுக்கும் சேர்த்து அவரே அறிமுகம் செய்தார். பின்பு பல வேர்ட்பிரஸ் பதிவர்களும் பிளாக்கர்களும் கூட அதை பயன்படுத்திக் கொண்டனர்.

இப்படித்தான் சூடான இடுகை, வாசகர்பரிந்துரை, மறுமொழி திரட்டி எல்லாம் அறிந்தோம். தமிழ்மணத்தில் இடுகையை சேர்த்து விட்டு முகப்பில் பெயர் வருவதை பார்த்து குழந்தைத்தனமாக உற்சாகம் அடைந்திருக்கிறோம். இது பல பதிவர்களுக்கும் பொருந்தக்கூடியதே, குறிப்பாக புதிய பதிவர்களுக்கு. புதிய பதிவர்களுக்கு வாசகர்கள், பதிவர்கள் மத்தியில் அறிமுகம் செய்யும் நுழைவாயிலாக தமிழ்மணமே விளங்குகிறது. அச்சு மற்றும் காட்சி ஊடகங்களின் ஆதிக்கத்திற்கு மாற்றாக உண்மைகளை பேசுவதற்கு வாய்ப்பளிக்கும் இணையம் என்ற நவீன தொழில்நுட்பத்தில், தமிழ் உலகைப் பொறுத்தவரை தமிழ்மணமே முன்னணியில் இருக்கிறது. எடுத்துக்காட்டாக ஈழப் போர் உச்சத்தில் இருந்த மாதங்களில், போரை நிறுத்த வேண்டுமென்ற கருத்தை பதிவர்கள் மூலம் தமிழ் இணைய உலகம் முழுதும் கொண்டு சென்றதை தமிழ்மணத்தின் சாதனையாக சொல்லலாம்.

எதிர்காலத்தில்  ஊடகமுதலாளிகளின் பிடிக்குத் தப்பி இந்த ஊடகம் எஞ்சி  நிற்குமா? தெரியவில்லை.  பயோ மெட்ரிக் கார்டுகளில் மக்களின் கட்டை விரலைக் காணிக்கையாக கேட்கும் நந்தன் நீலேகனிகள், பதிவர்களின் ரேகைப்பதிவையும் கேட்கக் கூடும். அந்த வகையில் மூச்சு விடக் கிடைத்திருக்கும் இந்த அவகாசத்தில், தமிழ்மணத்தின் முக்கியத்துவத்தை நாம் புரிந்து கொண்டு அங்கீகரிக்கவேண்டும்.

பொதுவில் தமிழ்மணத்தின் நிர்வாகக் குழு முற்போக்கு கருத்துக்களுக்கு (அவர்களது பின்னூட்டங்கள், மற்றும் பதிவுகளை வைத்து) ஆதரவாக இருப்பது தமிழ்பதிவுலகிற்கு மிகப்பெரும் வலிமை. பதிவுலகில் கணிசமான அளவில் இருக்கும் பிற்போக்கு முகாமிற்கு இது உவப்பானதில்லை.  இப்படி ஒரு பின்னணியும் அனுபவமும் கொண்ட தமிழ்மணம், பதிவுலகு எனும் புதிய ஊடகத்தை வளர்த்தெடுக்கும் கடமையினை தொடர்ந்து செய்யும் என நம்புகிறோம், வாழ்த்துகிறோம்.

நாங்கள் ‘வினவு’ துவங்கிய  காலத்தில் இருந்த பதிவர்களின் எண்ணிக்கை இப்போது ஏறக்கூறய இரண்டு மடங்கு அதிகரித்திருக்கிறது. தினமும் இருநூறுக்கும் மேற்பட்ட பதிவுகள், இரண்டாயிரத்து சொச்சம் பின்னூட்டங்களை திரட்டும் அளவிற்கு தமிழ்மணம் ஒரு ஆலமரமாய் வளர்ந்து நிற்கிறது. மேலும் தமிழறிந்த எல்லா நாடுகளையும் சேர்ந்த தமிழ்மக்களை இணைக்கும் பாலமாகவும் தமிழ்மணம் விரிந்து செயல்படுகிறது. புலம் பெயர்ந்து வாழும் வாசகர்கள் தமது சொந்த மண்ணை  தமிழ்மணம் வாயிலாகவே நுகர்கிறார்கள். அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் எட்ட முடியாத புலன் இது.

விரைந்து வளரும் பதிவுலகை மேலாண்மை செய்யும் பணி மிகவும் கடினமானது என்பதை நாம் அங்கீகரிக்கவேண்டும். நிர்வாகப் பணியைச் சுமக்கிற தமிழ்மணம் குழுவினர், பதிவுலகிற்கு விதிக்கும் கட்டுப்பாடுகள ஏற்றுக்கொண்டுதான் நாம் செயல்படமுடியும். சிலபதிவர்கள் தனிப்பட்ட சில பிரச்சினைகளை மட்டும் வைத்து, ” இந்த கட்டுப்பாடுகள் சுதந்திரத்திற்கு எதிரானவை” என தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். நோக்கமென்று ஒன்று இருப்பவர்கள் கட்டுப்பாடு என்பதையும் ஏற்றுத்தான் ஆகவேண்டும். அதுவும் மாற்றத்துக்கு உட்பட்டது என்பதைப் புரிந்து கொள்ளவும் வேண்டும்.  அன்றாட வாழ்க்கையில் கூட அப்படிப்பட்ட விதிமுறைகளை நாம் பற்றியொழுகியே வாழ்ந்துவருகிறோம். பதிவுலகிலும் அதை ஏற்கத்தான் வேண்டும்.

” குமதம்: பத்து ரூபாயில் ஒரு பலான அனுபவம்” என்ற கட்டுரையை தமிழ்மணத்தில் நாங்கள் இணைத்தபோது ‘பலான’ என்ற வார்த்தை வரவில்லை. மின்னஞ்சல் அனுப்பி கேட்டபோது இத்தகைய தலைப்புகள் தமிழ்மணத்தில் வராதபடி ஏற்பாடு செய்திருப்பதாக தமிழ்மணம் தெரிவித்தது. நாங்கள் வெளியிட்ட கட்டுரை  பலான வியாபாரத்தை எதிர்த்து எழுதப்பட்டதுதான் என்ற போதிலும் இந்தக் கட்டுப்பாடை ஏற்றுக்கொண்டோம். இனி தலைப்பு வைக்கும் போது இதைக் கணக்கில் கொள்வோம் என பதிலளித்தோம். இதனைக் கருத்து சுதந்திரத்திற்கு கிடைத்த அடி என தவறாக புரிந்து கொள்ளவில்லை.

பதிவர்களே படைப்பாளிகளாவும், வாசகர்களாவும் செயல்பட வாய்ப்பளிக்கும் இந்த ஊடகம் உரிய முறையில் பதிவர்களால் பயன்படுத்தப்படுகிறாதா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும். விசயமே இல்லாத அக்கப்போர்களே பல பதிவுகளாக வெளியிடப்படுகின்றன.அதிலும் சினிமாவைக் கலந்து எழுதும் பதிவுகளே அதிகம் படிக்கப்படுகின்றன. இணையத்தை அரட்டை அரங்கமாக மாற்றும் போக்கிற்கு எதிராகத்தான் வினவை நிறுத்துவதற்கே நாங்கள் போராடி வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவு வெற்றியும் பெற்றிருக்கிறோம்.  சமூக அக்கறைக்குரிய விசயங்கள் வெல்லும் என்ற நம்பிக்கையை இந்த வெற்றி எங்களுக்குள் விதைத்திருக்கிறது. இந்த வெற்றிக்கு வழியமைத்து கொடுத்து புதிய வாசகர்கள், பதிவர்களை எங்களுக்கு அறிமுகப்படுத்தியது தமிழ்மணம்தான்.

தமிழ்மணத்தோடு எமது பதிவை இணைப்பதைத் தவிர வேறு எந்தவகை நேரடியான தொடர்போ, அறிமுகமோ இல்லாத போதிலும், வினவு ஆரம்பித்த சில மாதங்களிலேயே நட்சத்திரப் பதிவராகும் வாய்ப்பினைப் பெற்றோம். அதன் மூலம் தமிழ்ப் பதிவுலகில் ஒரு இடத்தை எங்களுக்கு தமிழ்மணம் வழங்கியது. இத்தனைக்கும் எல்லோரையும் விமரிசனக் கண்ணோட்டத்தோடு அணுகும் எமது பார்வை, எம்மீது குத்தப்பட்ட’கம்யூனிச தீவிரவாதிகள்’ என்ற முத்திரை போன்றவற்றையெல்லாம் தள்ளிவைத்துவிட்டு, சமூக அக்கறைக்குரிய கட்டுரைகளை வெளியிடும் பதிவர் என்ற முறையில் தமிழ்மணம் எங்களை தெரிவு செய்திருக்க கூடும். நட்சத்திரப் பதிவர்களில் பல வகையினரும் இருந்தாலும் எங்களைப் போன்றவர்களை நட்சத்திரமாக்குவதற்கு ஒரு நேர்மையும் தைரியமும் வேண்டும். அது தமிழ்மணத்திடம் நிறையவே இருக்கிறது. அந்த அஞ்சாமைக்கு வாழ்த்துக்களும் வணக்கங்களும். எங்களுக்கு முன்னால் எங்களது தோழர் அசுரனும் இப்படித்தான் நட்சத்திரமானார். அப்போது நாங்கள் பதிவுலகில் இல்லை.

சென்ற ஆண்டு  அறிவிக்கப்பட்ட தமிழ்மணம் விருது போட்டிகளிலும், சமூக அக்கறைக்குரிய அங்கீகாரம் எப்படி இருக்கும் என்பதை அறிவதற்காகவே கலந்து கொண்டு இரண்டு தலைப்புக்களில் முதலிடத்தை வென்றோம். பதிவுலகம் முற்போக்கு கருத்துக்களுக்கு ஆதரவாக இருக்கிறது என்பது உண்மையில் மகிழ்ச்சியைத் தந்தது. அதற்காக பதிவர்களுக்கும், வாசகர்களுக்கும் நன்றிகள்.

சென்ற ஆண்டு தமிழ்மணம் 12 தலைப்புகளில் சிறந்த முதலிரண்டு இடுகைகளை பதிவர்களின் வாக்குகளை வைத்து தெரிவு செய்தது. இந்த ஆண்டு பதிவர்கள் அல்லாத வாசகர்களும் வாக்களிக்கும் இரண்டாவது சுற்று இருக்கும் என நம்புகிறோம். இந்த முறை சிறப்பாகத்தான் உள்ளது.

விருது தொடர்பாக வினவின் ஆலோசனைகள்!

1, பன்னிரண்டு பிரிவுகளின் அதிக பட்சம் மூன்று தலைப்புகளுக்கு மட்டும் ஒரு பதிவர் போட்டியிடலாம் என்பதை ஒன்றாக குறைக்கலாம். இதன் மூலம் மொத்தம் 24 பதிவர்கள் விருதினைப் பெறுவார்கள். ஒரு பதிவரே மூன்று விருதுகளையும் பெற்றால் மற்றவர்கள் வாய்ப்புகளை இழப்பார்கள். மேலும் ஒரு பதிவர் போட்டிக்கான தனது தலைப்பை விட்டுவிட்டு பதினொரு தலைப்புகளுக்கும் வாக்களிக்கும் வாய்ப்பு இருப்பதால் பல குழுக்களாக பிரிந்திருக்கும் பதிவுலகம் தெரிவு எனும் ஜனநாயகத்தின் அடிப்படையில் ஒன்று சேரலாம்.

2. போட்டிக்கான தலைப்புக்களை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தலாம். கதை, கவிதை, குறும்படம், ஆவணப்படம், கேலிச்சித்திரம், தலித் பிரச்சினைகள், பெண்கள் பிரச்சினைகள், சினிமா விமரிசனம், தமிழ் கணினி தொழில்நுட்பம், மதவெறி,  முதலியவற்றை தனித்தனி தலைப்புக்களில் வைக்கலாம். மொத்தத்தில் இருபது தலைப்புக்கள் வைத்தால் நாற்பது பதிவர்கள் விருதுகள் பெறுவார்கள். இது உற்சாகத்தின் அளவை விரிந்த அளவில் கொண்டு செல்லும். எல்லா முக்கியமான தலைப்புக்களையும் போட்டிக்கு கொண்டு வரமுடியும்.

3. ஒவ்வொரு ஆண்டும் சேரும் புதிய பதிவர்களை உற்சாகப்படுத்தும் முகமாக இந்த ஆண்டின் சிறந்த புதிய பதிவர் எனும் விருதினை புதிதாக ஏற்படுத்தலாம். அதற்கு அவர் எழுதிய இடுகைகளில் ஐந்து சிறந்த இடுகைகளை சமர்ப்பிக்க வேண்டும் என வைக்கலாம். இதனால் பதிவுலகின் மத்தியில் புதிய பதிவர்கள் பரவலான கவனத்தை பெறுவார்கள்.

4. அதே போல சிறந்த பெண் பதிவர் எனும் விருதினை ஏற்படுத்தி முன்னர் கூறியது போல ஐந்து இடுகைகளை சமர்ப்பிக்குமாறு வைக்கலாம். பொதுவில் பதிவுலகில் சிறுபான்மையினராகவும், தனி அணியாகவும் இருக்கும் பெண்களை உற்சாகப்படுத்தும் விதமாகவும், பொது அரங்கில் அவர்களுக்கென்று தனி விருதை தருவது ஆரோக்கியமாகவும் இருக்கும். புதிதாக பெண்பதிவர்கள் வருவதையும் இது ஊக்குவிக்கும். மற்றபடி மற்ற தலைப்புக்களிலும் பெண்கள் போட்டியிடலாம். அதாவது ஒரு தலைப்பு, பெண்பதிவருக்கான போட்டி என்று இரண்டு தலைப்புகளில் அவர்கள் போட்டியட வைக்கலாம். புதிய பதிவர்களுக்கும் இதே சலுகையை அளிக்கலாம்.

5. இதே போல இந்த ஆண்டின் சிறந்த பதிவர் என்ற விருதினையும் வைக்கலாம் என்றாலும் இதில் நிறைய அரசியல் தொழில்நுட்ப பிரச்சினைகள் இருக்கிறது. எந்த அளவுகோலின்படி ஒருவரை சிறந்த பதிவர் என்று தெரிவு செய்வது கடினம். அந்த ஆண்டின் சிறந்த பத்து இடுகைகளை அவர் அளிக்கவேண்டுமென்று வைத்தாலும் தொழில்நுட்ப ரீதியாகவும், போட்டியை நடத்துவதற்கும் இதை பெரும் சுமையாகவும் இருக்கும் என்பதால் இதை மிகுந்த தயக்கத்தோடு சொல்கிறோம். ஏனெனில் இந்தப்பிரிவில் எல்லோரும் போட்டியிடுவார்கள் என்பதால் நிர்வகிப்பது மிகவும் சிரமம்.

6. போட்டிக்கென்று தமிழ்மணம் சென்ற ஆண்டு அறிவித்திருந்த முதல்பரிசு ரூ.500, இரண்டாம் பரிசு ரூ.250 என்பது மிகவும் குறைவு என்று பலர் கருதுகிறார்கள். வினவு அப்படி கருதவில்லை. விருதின் மதிப்பு பணத்தை வைத்து மதிப்படிக்கூடாது என்பதால் இந்த தொகைகளே தொடரலாம் என்பது எங்கள் கோரிக்கை. அதுவும் புத்தகங்களாக அளிப்பது என்பதும் பாராட்டத்தக்க ஒன்று. இதனால் விருது என்பது அறிவை விசாலமாக்கும் நடவடிக்கைக்கு இட்டுச் செல்கிறது. பொதுவில் போட்டிகள் என்றால் அவைகளின் பணமதிப்பை வைத்து அளவிடும் யதார்த்தத்தை நாம் இப்படித்தான் மாற்ற முடியும் என்று வினவு கருதுகிறது.

7. வாய்ப்பு, வசதி, நேரம் இருக்கும் பட்சத்தில் வெற்றிபெறும் பதிவர்களின் கட்டுரைகளை தமிழ்மணத்தின் தொகுப்பில் தனிநூலாக வெளியிடலாம். இதன்மூலம் இணையமில்லாத வாசகர்களின் மத்தியில் பதிவுலகை அறிமுகம் செய்யலாம்.

8. இப்போது உடனடியாக சாத்தியமில்லை என்றாலும் எதிர்காலத்தில் பதிவர்கள் அதிகமிருக்கும் (என்று நினைக்கிறோம்) சென்னை மாநகரத்தில் விருது வழங்கும் விழாவினை நடத்தலாம். இதன் மூலம் ஆண்டுக்கொரு முறை பதிவர்கள், பதிவுலகின் வாசகர்கள் சந்திப்பை சாத்தியப்படுத்தலாம்.

9. சென்றமுறை அறிவித்திருந்தது போல முதல் சுற்றில் பதிவர்களும், இரண்டாவது சுற்றில் வாசகர்களும் வாக்களிப்பதை இம்முறையும் தொடரலாம். வாக்களிப்பதில் கள்ள ஓட்டு பிரச்சினையும் இருக்கிறது. இதை தமிழ்மணம் எப்படி தொழில்நுட்பரீதியாக சமாளிக்கும் என்பது சவாலான ஒன்று. இரகசிய வாக்களிப்பை பகிரங்கமான வாக்களிப்பு என்று மாற்றினால் இதை தவிர்க்கலாமோ என்று தெரியவில்லை. ஆனால் ஜனநாயகத்தில் இரகசிய வாக்கெடுப்புதான் ஏற்றுக் கொள்ளப்படுகிறது. ஆகவே பதிவர்கள், வாசகர்களே உறுதி எடுத்துக்கொண்டால் இந்தப்பிரச்சினையை அதாவது கள்ளவோட்டுக்களை தவிர்க்கலாம்.

10.பதிவுலகத்தை மட்டும் வேலையாக வைத்திருக்கும், விசயத்தோடு எழுதும் பதிவர்களை தன்னார்வத்தொண்டர்களாக கோரிப்பெற்று நின்றுபோன பூங்கா வார இதழை மீண்டும் நடத்தலாம். இதன் மூலம் காத்திரமான கருத்துக்களை எழுதும் பதிவர்களை அறியாதவர்களுக்கு அறிமுகம் செய்யலாம். இதன் மூலமே தமிழ்மணம் தனது அடுத்த கட்ட வளர்ச்சியை சாத்தியப்படுத்த இயலும் என நினைக்கிறோம்.

11. பதிவர்களை இப்படி நேரம், பணம் ஒதுக்கி ஒரு குழுவாக உற்சாகப்படுத்தும் தமிழ்மணத்திற்கு பதிவர்கள் பதிலுக்கு என்ன விருது கொடுக்க முடியும்?

தமிழ்மணம் அறிவித்திருக்கும் விருது போட்டிகளை புதியவர்களுக்கு அறிமுகம் செய்வதற்காகவே இந்த இடுகை எழுதப்படுகிறது. போட்டி குறித்த தங்களது ஆலோசனைகளை பதிவர்கள், வாசகர்கள், தோழர்கள் பின்னூட்டத்தில் குறிப்பிட்டால் தமிழ்மணம் குழுவினருக்கு உதவியாய் இருக்கும். இந்த போட்டியை சிறப்பாக நடத்துவதற்கு நாமும் இத்தகைய பங்களிப்பை அளிக்க வேண்டியிருக்கிறது. அளியுங்கள்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு – பாடல்

vote-012இந்திய தரகு முதலாளிகளில் சிலர் உலக பணக்காரர்களின் பட்டியலில் இடம்பெற்றிருக்கிற அதே நேரத்தில் வறுமைக்கோட்டுக்கு கீழே வாழ்பவர்கள் அதிகமுள்ள நாடுகளில் ஒன்றாகவும் இந்தியா இருக்கிறது. இப்படி இந்தியா முதலாளிகளின் இந்தியாவாகவும், ஏழைகளின் இந்தியாவாகவும் பிரிந்திருப்பதை எள்ளலுடன் உணர்த்துகிறது இந்தப்பாடல். முன்னுரையுடன் இந்தப் பாடலை கேட்டுப் பாருங்கள்.

Adimai_Sasanam_03_Naadu

நாடு முன்னேறுதுங்குறான் – அட
மினு மினு மினுக்கா, ஜிலு ஜிலு ஜிலுக்கா
ஜெர்மன், அமெரிக்கா, ஜப்பானு கணக்கா
நாடு நம்ம நாடு முன்னேறுதுங்குறான்

தாகம்தீர கொக்கோ கோலா
போதை ஏற ஃபாரின் சீசா
மிக்சு பண்ணிக்கோ பெப்சி லெகரு
மிச்ச வேளைக்கெல்லாம் மினரல் வாட்டரு
குடிக்க தண்ணியில்ல, கொப்பளிக்க பன்னீரு
அட்றா செருப்பால வீங்கிப்புடும் செவுளு
( நாடு….)

டீ.வியில் சிரிக்குது காம்ப்ளான் கேர்ளு – டாக்டர்
தினம் தரச்சொல்லுறான் பழம் முட்டைப் பாலு
வகை தெரியாமத் தின்னு அவன் புள்ள வீங்குது – வெறும்
விளம்பரத்தைப் பாத்தே நம்ம புள்ள ஏங்குது
சத்துணவு தீந்துடுன்னு தட்டோட ஓடுது – இவன்
தட்டுகெட்ட திட்டமெல்லாம் என்ன புடுங்குது
( நாடு…)

காலக் காப்பிக்கு மீனம்பாக்கம்
கக்கூசுக்குப் போறான் லண்டன் மாநகரம்
ஈசலாட்டம் தனியார் விமானம் – இதுக்கு
போலீசு கொடை ஒன்னு வேணும்
பேஞ்ச மழையில் எங்க ரோட்டையே காணோம் – பெருசா
பேச வந்துபுட்டான் தேச முன்னேற்றம்
( நாடு…)

பள்ளிக்கூடம்னு போர்டு தொங்குது
பாத்தா மூணு சுவருதான் நிக்குது
பசங்களெல்லாம் மரத்துல தொங்குது
பாடம் நடத்துற டீச்சரு தூங்குது
காசுக்காரன் புள்ள கான்வென்டு போகுது – நம்ம
கார்ப்பரேசன் பள்ளியில சரக்குத்தான் ஓடுது
( நாடு…)

அரசு மருத்துவமனைங்க இருக்குது
ஆரம்ப வியாதியே அங்கதான் தொத்துது
ஆப்பரேஷனுன்னு வச்சுருக்கான் பேரு
அறுத்துப் போட்டுபுட்டு இல்லேங்குறான் நூலு
காசுக்காரன் கூட்டம் அப்பல்லோ போகுது – நமக்கு
கவர்மண்டு இரக்கப்பட்டு போஸ்ட்மார்ட்டம் பண்ணுது
( நாடு…)

ஏசி கூண்டுக்குள்ள பொம்மை விரைக்குது
தங்க ஊசி சேலை அதன் உடம்பில் மினுக்குது
நல்லி, சாரதாஸ் கல்லா பிதுங்குது
வெள்ள எருமைங்கதான் உள்ளே உலாத்துது
பருத்தி நூலுக்கு கைத்தறி ஏங்குது – எங்க
பட்டினி சாவில் உன் பட்டு மினுக்குது
( நாடு…)

காடு, மரம், கடல், மீனும் தனியாரு
போடு கரண்டு, டெலிபோனும் தனியாரு – அரசு
ஆலைகள் அம்புட்டையும் கட்டிபுட்டான் கூறு – அதை
ஏலம் மூணுதரமுன்னு கூவுறான் சர்க்காரு
நம்ம நாடுன்னு சொல்லிக்கிற மிச்சமென்ன கூறு
இவன் ஆடுகிற ஆட்டுறவன் காட்டு தர்பாரு
( நாடு…)

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவு

அடிமைச் சாசனம்அடிமைச் சாசனம்
விலை ரூ. 30

இந்த ஒலிக்குறுந்தகடு தேவைப்படுவோர், இங்கே அழுத்தவும்


மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

மருதிருவர் குருபூசை: அல்லக்கை சாதிச்சங்கங்கள்! ஒத்தூதும் அரசு!!

vote-012கி.பி 1801- அக்டோபர் மாதம் 24ஆம்தேதி  பகல்பொழுது – இன்றைய சிவகங்கை மாவட்டம், திருப்பத்துர் நகரின் பேருந்து நிலையம், எதிர்புறம் நினைவுச்சின்னம் அமைந்துள்ள முச்சந்தியில் பெரியமருதுவும், அவரது தம்பி சின்னமருது என்று அழைக்கப்படுகிற சின்னப்பாண்டியனும் துக்கிலிடப்பட்டார்கள்.

அவர்களோடு சிறைப்பிடிக்கப்பட்டுக் கொண்டுவரப்பட்ட அவரது உறவினர்களான நுற்றுக்கணக்கான ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் மிகக் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டனர். அன்றும் அதன் பின்னரும் பிரிட்டிஷாரால் கொலை செய்யப்பட்டவர்கள் மட்டும் சுமார் ஐநுறுபேர்களுக்கும் மேல் இருக்கும். தமிழக வரலாற்றில் அதற்கு முன்னரும், பின்னரும் நடந்திராத ஒரு கொடூர நிகழ்ச்சி அது.

24ஆம் தேதி துக்கிலிடப்பட்டு இரண்டு நாட்களாகத் தொங்கவிடப்பட்டிருந்த மருதிருவர்களின் உடல்கள் 27ஆம் தேதி கீழிறக்கப்பட்டது. அவர்களது தலைகள் துண்டிக்கப்பட்டு இன்று குருபூசை நடக்கிற காளையார்கோவில் கோவிலின் முன்பாக உள்ள சிறிய அறைக்குள் அடக்கம் செய்யப்பட்டது.

சற்று நேரம் நினைத்தாலுமே நெஞ்சைக் கீறிவிடுகிற இந்தத் துயரத்திற்கு அந்த மாவீரர்களை தள்ளிவிடக் காரணமாக இருந்தது இரண்டு விசயங்கள்.

  1. மருதிருவர்களின் விடுதலைப் போராட்டத் தன்மான உணர்வு.
  2. ஆங்கிலேய அடிவருடி புதுக்கோட்டைத் தொண்டைமான் கும்பலின் துரோகம். (ஆங்கிலேயருக்கு எழுதிய கடிதத்தில் சின்னமருதுவை நாய் எனத் திட்டுகிறான் துரோகி தொண்டைமான்.)

இந்தியத் துணைக்கண்ட அரசியல் வரலாற்றில் அன்னியருக்கு எதிராக முதன்முதலாக ஒரு அறிக்கை எழுதி வெளியிட்டது சின்னமருதுதான். நான்கு மொழிகள் தெரியும் அவனுக்கு. ஏழைமக்கள் கண்ணீரில்லாத வாழ்க்கை வாழ வேண்டுமென்றால் கும்பினியாரை எதிர்த்துப் போராடவேண்டும் என முழங்கியவன் அவன்.  உடம்பில் ஐரோப்பியரத்தம் ஓடாதவர்கள் எனது பேச்சைக் கேட்பார்களாக என்று அழைத்தான். ஆங்கிலேயருக்கு சேவகம் செய்பவர்கள் ஈனப்பிறவிகள் என்றான். கும்பினி ஆட்சி நமது நாட்டைப் பஞ்சத்திலும், பசியிலும் தள்ளிவிடும் என எச்சரித்தான். கும்பினியை இந்தியத் துணைக்கண்டத்திலிருந்தே விரட்டியடிக்க சாதி மத பேதமின்றி ஒன்றுதிரள வேண்டும் என அறைகூவினான்.

தமிழகத்தின் விடுதலைப் போராட்ட வரலாற்றைப் படிக்க நினைப்பவர்கள் முதலில் சின்னமருதுவின் ஜம்புத்தீவுப் பிரகடனம் 1801-லிருந்து துவங்குகள். நீங்கள் அதை அவசியம் படிக்க வேண்டும். காரணம், வரலாறு மீண்டும் திரும்புகிறது. 1990ல் இந்தியா கையெழுத்திட்ட காட்-டங்கல் ஒப்பந்தம் தன்னைப் பன்னாட்டு நிறுவனங்களின் அடிமையாக ஒப்புக் கொடுத்துவிட்டது. பன்னாட்டு நிறுவனங்களின் முதலாளிகள் நலன்களுக்காக தனியார்மயம், தாராளமயம், உலகமயம் என்கிற திட்டத்தை ஏற்றுக் கொண்டு இந்தியாவின் கதவுகளை அகலத் திறந்து வைத்து அள்ளிச் செல்லுங்கள் எனச் சொல்லி வீசும் எலும்பைக் கவ்வக் காத்திருக்கும் நாய்களைப் போல மண்டியிட்டுக் கிடக்கிறார்கள் இந்திய ஆட்சியாளர்கள்.

அன்றைய காலனியாதிக்கத்திற்கு எதிராகப் போராடிய மருதிருவர்களின் தன்மானமும், வீரமும், நாட்டுப்பற்றும் இன்றும் நமக்குத் தேவைப்படுகிறது. அடிமைத்தனத்தை மாற்றம் (Change) வளர்ச்சி (Development) என்று சொல்லி, மறைத்துப் பேசும் கோழைத்தனம் கொண்டவர்களாக இந்திய இளைஞர்கள் வடிவமைக்கப்படும் இந்நேரத்தில் மருதிருவர்களின் வீரம் நமக்கு ஒரு வழிகாட்டியாகும் தகுதியுள்ளதாக இருக்கிறது. நம்மை தன்மானம் உள்ளவர்களாக மாற்றக் கூடிய சக்தியுள்ளதாகவும் இருக்கிறது.

ஆனால் இதற்கும் மருதுபாண்டியர் குருபூசைக்கும் மயிரளவும் தொடர்பில்லை. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பிருந்துதான் இந்த குருபூசைக் கலாச்சாரம் சிவகங்கையில் தொடங்கப்பட்டது. சாதி ஆதிக்கத்தை நிலைநிறுத்தவும், சாதி உணர்வை, சாதிவெறியாக மாற்றவும் பசும்பொன்னில் குருபூசை நடைபெறுகிறது. ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமைக்கான குரல் எழுப்புதலில் படுகொலை செய்யப்பட்ட இமானுவேல் சேகரனாரின் நினைவை ஏந்தி ஒடுக்கப்பட்ட சாதிகளின் விடுதலை உணர்வைப் பிரதிபலித்து பரமக்குடியில் குருபூசை நடைபெறுகிறது. இவ்விரண்டும் சமப்படுத்த முடியாத குருபூஜைகள்தான்.

என்றாலும் மருதிருவர்களின் குருபூசை என்பது முழுக்க, ஓட்டுக்கட்சி அரசியலில் நுழைந்து பதவி சுகத்தை அனுபவிக்கவும் மக்கள் பணத்தைச் சுருட்டவும் முடியாமல் ஏங்கித்திரியும் சாதிய அமைப்புகளால் பரபரப்பாக நடத்தப்படுகிற குருபூசையாகும். தேர்தல் காலம் அல்லாததால் இம்முறை நடந்த விதம் இதை விளக்கமாக வெளிப்படுத்துகிறது.

துயரமான முடிவிற்கு மருதிருவர்களை வெகுவிரைவாக அழைத்துச்சென்ற புதுக்கோட்டை துரோகி தொண்டைமானின் துரோகத்தின் பங்காளிக்கூட்டத்தினர்தான் இன்று மருதிருவர்களின் குருபூசைக்கு அணிதிரளுகிறார்கள். பசும்பொன் முத்துராமலிங்கம் படம் பொறித்த மஞ்சள் கொடிகளும், தேவர் வாழ்க! தேவர் படை போதுமா! இன்னும் கொஞ்சம் வேணுமா! பனமரத்துக்கே வவ்வாலா! தேவருக்கே சவாலா! என்கிற முழக்கங்களும் இம்முறை அகமுடையார் சாதியினரை விடவும் வெகு அதிகமாகவே வெளித்தெரிந்தன.

மருதிருவர்களின், தன்மானத்தையும், வீரத்தையும், நாட்டுப்பற்றையும் தூசி அளவுகூட சிந்தனையில் கொள்ளாத இந்த வெற்றுச் சாதி வெறி ஆரவாரகும்பல்தான் போதையிலே கூச்சலிடுகிறது, கும்மாளமிடுகிறது. ஆதிக்கச்சாதியைச் சேர்ந்த போலீசோ, கத்தி ஓய்ந்துபோன கும்பலை அடித்துவிரட்டுவதைப் போல பாவனை செய்து முறுக்கேற்றிவிடுகிறது. வழியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வசிப்பிடங்கள் இல்லதாதால் ஒரு தனியார் பேருந்து மற்றும் அரசு பேருந்தின் கண்ணாடிகள் மட்டும் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன.

தனியார் பேருந்துகள் தங்களது போக்குவரத்தை நிறுத்திக் கொண்டாலும், அரசு பேருந்தின் ஓட்டுநர்களும், நடத்துனர்களும் பேருந்துகளை துணிச்சலாக எடுத்துச் சென்றனர். இருப்பினும் உடைக்கப்பட்ட பேருந்துகளைக் கொஞ்சமும் கவனியாமல் திரிந்தது போலீசு. இதனால் அதிருப்தி அடைந்த அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் இரவு 7மணிக்கு மேல் பேருந்துகளை எடுக்க மறுத்து முறையிட்டனர். கிராமங்களுக்குச் செல்லும் பலபேருந்துகள் நிறுத்தப்பட்டுவிட்டன. மதுரை போகும் தனியார் பேருந்துகள் மேலூர் வழியாகச் சென்றன. ஊர் திரும்ப முடியாமல் ஆண்களும், பெண்களும், குழந்தைகளும் பொதுமக்கள் பலரும் பெரிதும் அவதிக்குள்ளாகினர். இருப்பினும் போலீசும், அரசும் இது குறித்து கொஞ்சமும் கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

மேற்கே உசிலம்பட்டியைத் தாண்டியும், தெற்கே முதுகுளத்துரைத் தாண்டியும், கிழக்கே திருவாடனையைத் தாண்டியும், உள்ள கிராமங்களிலிருந்து நுற்றுக்கணக்கான இளைஞர்கள் வாகனங்களிலேயே வரவழைக்கப்பட்டிருந்தனர். தொடர் ஜோதி ஓட்டம் பலபகுதிகளிலிருந்தும் வந்தன. மஞ்சளும், பச்சையும், இணைந்த வண்ணங்களில் அவர்களின் சீருடைகள் இருந்தன. மூவேந்தர் முன்னேற்றக் கழக டாக்டர். சேதுராமனின் சங்கக் கொடியும், ஸ்ரீதர் வாண்டையாரின் சங்கக் கொடியும் கட்டிய வாகனங்கள் தான் அதிகமாகச் சென்றன. அ.தி.மு.க, தி.மு.க, காங்கிரசு கொடிகள் கட்டிய கார்கள் ஒன்றிரண்டே சென்றன. சென்ற வருடம் தேர்தல் காலம் ஆகையால் ஓட்டுக் கட்சிகளின் கொடிகள் கட்டிய கார்களும், ஒட்டுக்கட்சிகளின் தலைவர்களின் வருகையுமே மிக அதிகமாக இருந்தது.

நகரங்களில் நுழைந்தவுடன் சமீபத்தியச் சினிமா பாணியிலான ஆபாசக்  குத்தாட்டம் போட்டுக்கொண்டே இளைஞர்கள் ஊர்வலமாய் வந்தனர். அவர்களின் ஆட்டத்திற்கு தங்களது பறை மற்றும் டிரம் செட் மூலம் தாளம் இசைத்து வந்தனர் தாழ்த்தப்பட்ட சாதி இளைஞர்கள்.கொள்வினை கொடுப்பினை உட்பட பல்வேறு பிரச்சனைகளில் இரண்டு சாதியினரும் குத்து வெட்டுப் பலிகொடுத்தும் பலிகொடுக்கவும் காத்துக் கொண்டிருக்கிருக்கின்றனர். ஆனால் ஊர்வலத்தில் மூ.மு.கவினரோ, முக்குலத்தோர் வாழ்க என கோசம் போட்டுக் கொண்டு ஆடினர்.

இந்தக் குருபூசையின் பேரைச் சொல்லி கோடிக்கணக்கான ரூபாய்கள் நன்கொடையாகத் திரட்டப்பட்டுள்ளது. அவற்றில் சிறிதளவு மட்டும் செலவு செய்யப்பட்டு (டீசல், உணவு, வாடகை, சாராயம்) மீதம் அப்படியே சுருட்டப்படுகிறது. பெரிய சங்கங்கள் முதல் கல்லுரி மாணவர்கள் வரை இதுதான் நிலை. சாதி, பிழைப்புவாதிகளுக்கான தொழிலாகப் பயன்படுவதை இதிலிருந்தும நாம் அறியலாம். சாதியின் பெயரால் பிழைப்பு நடத்தும் பேர்வழிகளுக்கான திருவிழாவாக மருதிருவர்கள் குருபூசை நடக்கிறது. அந்த வீரமிக்க   மருதுபாண்டியர்களை இதைவிடக் கேவலப் படுத்தக் கூடியது வேறு எதுவும் இல்லை

வரும் ஆண்டுகளில் முறுகல், மோதல் எனத் துவங்கி பின்னர் பெரிய கலவரங்களும் நடைபெறலாம். எதிர்காலத்தில் அப்படியொரு நிலையை உருவாக்க சாதிய அமைப்புகள் துடித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியொரு பகைச் சூழ்நிலையும், பீதியும் மக்களிடையே நிலவவேண்டுமென்று ஆடு நனைவதைப் பார்த்து அழும் ஓநாய் போல அரசாங்கமும் ஆர்வத்தோடு வேடிக்கைப் பார்த்துக் கொண்டே வருகிறது.

இதைத்தடுக்க மருதிருவர்களின் வரலாற்றை அறிந்து, அன்னியமோகம் எனும் அடிமைப்புத்தியைச் சுட்டெரித்து, மறுகாலனி ஆதிக்கத்திற்கு எதிராய் போராட, மருதிருவர்களின் பெயரால் மக்களை அழைக்க வேண்டிய கடமை நம்முன் உள்ளது.

குருசாமி மயில்வாகனன்

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

தொடர்புடைய பதிவுகள்

தியாகி இம்மானுவேல்சேகரன் நினைவுதினம்: தேவர்சாதி வெறிக்கெதிராய் போராடும் தலித் மக்கள்! தீப்பிடிக்க காத்திருக்கும் தென்மாவட்டங்கள்!

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி! பந்தப்புளியில் தீண்டாமை !!

சட்டக் கல்லூரி கலவரம் : சாதியை ஒழிப்போம் ! தமிழகம் காப்போம் !!

சட்டக் கல்லூரி : பத்துப் பேர் சேர்ந்து ஒருவனை…அடேயப்பா, என்ன காட்டுமிராண்டித்தனம் !

இந்து மதம் கேட்ட நரபலி !

ஆலயத்திற்குள் மட்டுமா, கருவறைக்குள்ளும் நுழைவோம்!

முத்துராமலிங்கன் என்கிற தேவர் சாதிவெறியனுக்கு கீற்று தளம் வக்காலத்து !

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் என்ற ஜாதி வெறியன்

கான்கிரீட் காடுகளிலிருந்து ஒலிக்கும் போர்க்குரல் !!

38

சிவந்த கண்கள் கவனிக்கட்டும்

vote-012சமீப ஆண்டுகளாக சென்னை மாநகரத்தில் வானுயர்ந்த கட்டிடங்கள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. காங்கிரீட் காடுகளின் கட்டிடங்களுக்கு ரெடிமேடான காங்கிரீட் கலவையை சுமந்தவாறு செல்லும் லாரிகளை பலரும் பார்த்திருக்கலாம். எழிலான கட்டிடங்களை ரசிக்கும் நம் கண்களுக்கு இந்த லாரிகளின் ஓட்டுநர்கள் படும் இன்னல்கள் தெரியாது. உழைத்து தேய்ந்து வதங்கும் இந்த தொழிலாளர்களின் உழைப்பில்தான் பளபளக்கும் கட்டிடங்கள் வளருகின்றன.

சென்னை, கேளம்பாக்கத்தின் அருகில் இருக்கும் கிராமம் தையூர். இங்கு ரே மிக்ஸ் (Ray mix) எனும் காங்கிரீட் கலவை நிறுவனம் செயல்படுகிறது. இந்நிறுவனத்தின் முதலாளி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பிரான்சிஸ். இவரும், இவரது இரண்டு சகோதரர்களும் பூந்தமல்லி, வல்லக்கோட்டை என மூன்று இடங்களில் காங்கிரீட் கலவை நிறுவனங்களை நடத்தி வருகின்றனர்.

தையூரில் இருக்கும் காங்கிரீட் கலவை நிறுவனத்தில் கலவையை தயார் செய்வதற்கு 80 தொழிலாளிகள் உள்ளனர். இவர்களில் பெரும்பான்மையினர் ஒரிசா, பீகாரைச் சேர்ந்தவர்கள். அங்கேயே தங்கி, உண்டு இரவு பகல் என  24 மணிநேர ஷிப்டை முடித்தால் அவர்களுக்கு கிடைக்கும் கூலி 250 ரூபாய். இப்படி குறைந்த கூலிக்கு கடுமுழைப்பு தேவைப்படும் வேலைகள் அனைத்திலும் இம்மாநில தொழிலாளர்களே வேலை செய்கின்றனர். இப்போது சென்னை முழுவதும் நிலைமை இதுதான்.

தயார் செய்யப்படும் காங்கீரிட் கலவையை லாரிகளில் கொண்டு செல்வதற்கு நாற்பது ஓட்டுநர்கள் உள்ளனர். இவர்களும் பகல், இரவு என 24 மணிநேர வேலை செய்யவேண்டும். ஊதியம் ரூ.550. இப்படி மாதத்தில் பதினைந்து நாட்கள் வேலைசெய்தால் சுமார் 7,500 ரூபாய் கிடைக்கும். இவர்களும் தினக்கூலி அடிப்படையில்தான் வேலை செய்கிறார்கள். மாதசம்பளம், பி.எஃப், காப்பீடு, மருத்துவம், இ.எஸ்.ஐ என எந்த உரிமைகளும் இவர்களுக்கில்லை. 24மணிநேர ஷிப்டில் இவர்கள் குறைந்தது பத்து லோடுகள் அடிக்கவேண்டும். ஒரு லோடின் விலை 20.000 ரூபாய். இதில் இலாபம் பாதிக்கு மேல் இருக்கும்.

காங்கிரீட் கலவையை தயார் செய்து மூன்று மணிநேரத்திற்குள் அது பயன்படுத்தப்பட வேண்டும். அந்நேரத்தை தாண்டிவிட்டால் அது காலாவதியான கலவையாகிவிடும். இதனால் ஓட்டுநர்கள் எவ்வளவு நெருக்கடியிலும் பதட்டத்திலும் வண்டிகளை ஓட்டவேண்டியிருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். ஒருவேளை மூன்று மணிநேரத்தை தாண்டிவிட்டால் அந்தக்கலவையை பயன்படுத்தக் கூடாது. ஆனால் அதில் ஏதோ ஒரு திரவத்தை ஊற்றி அதை மீண்டும் தயார் செய்வது முதலாளியின் தந்திரம். இப்படி தயாரிக்கப் படும் கலவையில் உண்மையான உறுதி இருக்காது. மேலும் காங்கிரீட் கலவையில் கூட சிமெண்டோடு கருங்கல் தூசி கலவையை கலந்து போர்ஜரி செய்வதும் பிரான்சிஸின் வழக்கம். இப்படிப்பட்ட மோசடிக் கலவைதான் இந்தக் கம்பெனியிலிருந்து கல்பாக்கம் அணுமின்நிலைய வேலைகளுக்கும், பல மேம்பாலங்களுக்கும், அடுக்குமாடி கட்டிடங்களுக்கும் அனுப்பப்படுகிறது.

நாற்பது ஓட்டுநர்களில் பாதிப்பேர் பிரான்சிஸின் ஊர் மற்றும் அவரது சாதியை ( நாடார்)  சேர்ந்தவர்கள். சாதிக்காரன் என்ற பெயரில் ஆட்களை ஊரிலிருந்து கொண்டு வந்து இறக்கி, அவர்களை மாடு போல வேலைவாங்குவது பொதுவில் எல்லா தமிழ் முதலாளிகளுக்கும் வழக்கம்தான். இதற்கு நாடார் முதலாளிகளும் விதிவிலக்கல்ல. மேலும் இந்த முதலாளி எல்லா தொழிலாளிகளையும் அநாகரீக மொழியில்தான் அதட்டி வேலைவாங்குவான். யாராவது தெரியாமல் தவறிழைத்தால் கூட உடனே அண்ணாநகரில் இருக்கும் நிறுவன அலுவலகத்திற்கு வரச்சொல்வது வழக்கம். அங்கே அந்த தொழிலாளிக்கு பெல்ட்டால் அடிகிடைக்கும். ஒரு தொழிலாளி அண்ணாநகருக்கு அழைக்கப்பட்டிருக்கிறார் என்றாலே பெரும்பீதி கிளம்பும்.

இத்தகைய அடக்குமுறை சிறையில் ஓட்டுநராக இருக்கும் தோழர் வெங்கட்ராமன் ஜேப்பியார் கல்லூரி ஓட்டுநர் போராட்டத்தில் வேலையிழந்து வந்தவர். இவர் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஓட்டுநர் சங்க நிர்வாக குழுவில் இருப்பவர். பலநாட்கள் அந்த நாற்பது ஓட்டுநர்களிடமும் தொழிற்சங்கத்தின் அவசியத்தை புரியவைக்க போராடி வந்தார். ஆனால் பிரான்சிஸின் அடக்குமுறைக்கு அஞ்சிய தொழிலாளிகள் இந்த முயற்சிக்கு ஆதரவு தரவில்லை.

இறுதியில் முதலாளிக்கு தெரியாமல் இரகசியமாகவாவது தொழிற்சங்கத்தை கட்டலாம் என்றதும் பாதி ஓட்டுநர்கள் அரை மனதோடு முன்வந்தனர். இந்நிலையில் முதலாளியின் சுயசாதி, ஊரைச் சேர்ந்த ஒரு தொழிலாளியின் மூலமாக இந்த தொழிற்சங்க முயற்சி பிரான்சிஸ்ஸின் காதுகளுக்கு சென்றவுடனே, 24.10.09 அன்று நான்கு ஓட்டுநர்களை வேலைநீக்கம் செய்கிறான். அன்றுதான் சங்கம் ஆரம்பிப்பதாக இருந்தது. தொழிற்சங்கம் உதயமாகும் அன்றே முதலாளியின் காட்டுதர்பாரை காட்ட நினைத்தான் பிரான்சிஸ். ஆனால் இந்த அடக்குமுறை தொழிலாளர்களை அஞ்சி ஓடுமாறு செய்யவில்லை.

இதுநாள் வரையிலும் மந்தைகளைப்போல அடிமையாக இருந்த தொழிலாளர்கள் முதன்முறையாக சினம் கொண்டு இந்த அநீதியை தட்டிக் கேட்டனர். தன்னிடம் பெல்ட்டால் அடிபடும் மந்தைகள் இப்போது கூட்டமாக வந்து எதிர்த்துப் பேசுகிறதே என்று உறுமிய பிரான்சிஸ் மேலும் மொத்தம் 25 தொழிலாளிகளை பணிநீக்கம் செய்கிறான். மிச்சமுள்ள தொழிலாளிகள் பிரான்சிஸின் சாதி, சொந்த ஊரைச் சேர்ந்தவர்கள். அவர்கள் மட்டும் தொழிற்சங்க முயற்சிகளுக்கு முன்வரவில்லை.

இப்படி சனிக்கிழமை வேலைநீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்கள் தங்களது தொழிற்சங்கத்தை முறையாக ஆரம்பித்து நிர்வாகக் குழுவை தெரிவு செய்து போராட முடிவு செய்கின்றனர். புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநில அமைப்புச் செயலாளர் தோழர் வெற்றிவேல் செழியன் இந்த சங்கத்தின் போராட்டத்தை முன்நின்று நடத்துகிறார்.

26.10.09 திங்களன்று நிறுவனத்தின் வாயிலில் மறியல் போராட்டம்.  அடாவடி முதலாளியின் கண் முன்னாலேயே நிறுவனத்தின் கதவுகளை இழுத்து மூடுகின்றனர் தொழிலாளர்கள். உள்ளே இருக்கும் வடமாநில தொழிலாளிகளோ பீதியில் உறைந்து போய் வேடிக்கை பார்க்கின்றனர்.

முதலாளியின் அழைப்பின் பேரில் இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசு படை உடன் வருகிறது. மறியலில் வெற்றிவேல் செழியன் மற்றும் பு.ஜ.தொ.முவின் வாகன ஓட்டுநர் சங்கத்தின் ஐந்து தோழர்களும் அடக்கம். இவர்களைத் தவிர மற்றவர்கள் அங்கேயே வேலைபார்க்கும் ஓட்டுநர்கள். மறியல் என்பது தங்களது தொழிற்சங்க உரிமை என வாதிட்ட தொழிலாளர்களை சிலமணிநேர விவாதம், தள்ளுமுள்ளுக்குப் பின் இறுதியில் கைது செய்கிறது போலீசு.

மொத்தம் 21பேர் மீது 147, 294B,342, 352 ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மதுராந்தகம் சிறையில் அடைக்கப்படுகிறார்கள். காவல் நிலையத்திலும், சிறையிலும் தொழிலாளிகளிடம் அவர்களது சாதியைக் கேட்டபோது “நாங்கள் தொழிலாளிகள், எங்களுக்கு சாதி கிடையாது. சொல்லவும் மாட்டோம்” என்று அவர்கள் போராடி நிலைநாட்டியிருக்கின்றனர்.  தொழிலாளிகளை ஒன்றுபடுத்தும்  வலிமையான வர்க்க அடையாளம் இருக்கும் போது பிளவு படுத்தும் சாதி எதற்கு என்று பேசிய தொழிலாளிகளை  போலீசு, சிறை அதிகாரிகள் முதன் முறையாகப் பார்த்தார்கள்.  இறுதியில் சாதியில்லாமலே அவர்களுடைய பெயர்களைப் பதிந்தார்கள்.

சங்கத்தில் சேரத் தயங்கிய தொழிலாளிகள் பிரான்சிஸின் ஊரையும், சாதியையும் சேர்ந்தவர்கள். சங்கத்தில் சேர்ந்தவர்களுக்கோ சாதி மயக்கம் இல்லை. இந்த கைது, வழக்கு, சிறை இவற்றையெல்லாம்  தொழிலாளிகள் முன்னர் கண்டதில்லை. காணாத வரைதானே அச்சம். கண்டபின் முன்னிலும் வேகமாய் போராட முடிவு செய்திருக்கின்றனர். தற்போது இரண்டு நாட்களுக்கு பிறகு பிணையில் வெளிவந்திருக்கும் அந்த தொழிலாளிகள் அடுத்த கட்ட போராட்டத்தை முன்னெடுக்கும் வேலையை உற்சாகமாக செய்து வருகின்றனர். பிரசுரம், சுவரொட்டி, தெருமுனைக்கூட்டம், மக்களிடம் பிரச்சாரம் என போராட்டம் சூடுபிடிக்கிறது. வேலையிழந்தாலும், வருமானமிழந்தாலும் இந்த தொழிலாளிகள் வர்க்க உணர்வு என்ற அற்புதத்தை உணர்ந்து பெற்றிருக்கிறார்கள். அது அவர்களின் வாழ்வுக்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் வசந்தத்தை கொண்டுவரும்.

தமிழ் சினிமா பண்ணையாரைப் போல தொழிலாளிகளை அச்சுறுத்தி ஆதிக்கம் செய்து பிரான்சிஸ், தன் வாழ்நாளில் முதன்முறை அச்சத்தை அனுபவித்திருக்க வேண்டும். தற்போது தனது ஊர்க்கார தொழிலாளிகள், லைசன்சு இல்லாத கிளீனர்களை வைத்து சில லாரிகளை இயக்கி வருகிறான். வெகுவிரைவில் இந்த சாதி அபிமானத்தில் இருந்து அந்த தொழிலாளிகளும் விடுபடுவார்கள். சாதி அபிமானத்தைத் துறந்து ஏற்கனவே ஒருவர் சங்கத்தில் சேர்ந்து விட்டார். இனிவரும் நாட்களில் பிரான்சிஸின் தர்பாருக்கு முடிவுரை எழுதப்படும்.

தொழிற்சங்கம் ஆரம்பித்த அன்றே போராட்டம், கைது, சிறை என ஆகிவிட்ட போதிலும் அந்த தொழிலாளிகள் அஞ்சவில்லை. தொழிற்சங்கமாக இணைந்த பின்னர்தான் தங்களது பலத்தை மட்டுமின்றி, சுயமரியாதையையும்  தொழிலாளிகள் உணர்ந்திருக்கிறார்கள். இந்த வலிமைதான் சுரண்டலையும் ஆதிக்கத்தையும் எதிர்க்கும் வல்லமையை அவர்களுக்குத் தந்திருக்கிறது.

சாதி, மொழி, இனம் கடந்த தொழிலாளி வர்க்க ஒற்றுமையை, இந்தியிலும், ஒரியாவிலும், தமிழிலும் எழும்பவிருக்கும் போராட்ட முழக்கங்களை விரைவிலேயே அந்த முதலாளி கேட்கவேண்டியிருக்கும். மொழி புரியாவிட்டாலும் அந்த முழக்கங்களின் பொருள் முதலாளிக்கு நிச்சயம் புரியும். புரிய வைப்பார்கள் தொழிலாளர்கள்.

ஆனால் கான்கிரீட் காடுகளை உருவாக்கும் இந்த தொழிலாளிகளின் போர்க்குணம், அந்தக் காடுகளின் ஏ.சி அறைகளுக்குள் அடிமைகளாய் மேய்க்கப்படும் ஐ.டி ஊழியர்களை தீண்டி எழுப்புமா?

போராடும் தொழிலாளர்களுக்கு வினவு சார்பில்  புரட்சிகர வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

vote-012

……………………………..

வினவின் பதிவுகளை மின்னஞ்சலில் பெற…

வினவை ஆதரியுங்கள்

வினவை டிவிட்டரில் தொடர்க

……………………………..

தொடர்புடைய பதிவுகள்