கோட்டையிலே கொலைகாரக் கூட்டம் ! கொந்தளிக்கிறது ஃபேஸ்புக்

எத்தனை பேரு மண்டை உடைஞ்சு, கை, கால் உடைஞ்சு அந்த வலியை துளி கூட முகத்துல காட்டிக்காம பைக்ல வச்சு கூட்டி போனாங்கனு தெரியுமா? தூத்துக்குடி படுகொலை தொடர்பாக ஃபேஸ்புக் நண்பர்களின் பதிவுகள் - பாகம் 2

தூத்துக்குடியில் 13 பேரைக் சுட்டுக் கொன்ற அரசின் பயங்கரவாதத்தைக் கண்டித்து ஃபேஸ்புக்கில் பலரும் எழுதிய கருத்துக்களின் தொகுப்பு! பாகம் 2

AD Bala
அரசியல் கட்சிகள் போராட்டங்களை சம்பிரதாயச் சடங்காக மாற்றின. மறுபுறம் அரசு மேலும் மேலும் மிருக பலமும் தடித்த தோலும் உடையதாக, குயுக்தி நிறைந்ததாக மாறியுள்ளது. இதன் காரணமாக போராட்டங்கள் தமது நெருக்கடி தரும் வலுவை இழக்கின்றன.

சூறாவளியாய் எழுகிற தன்னெழுச்சிப் போராட்டங்கள் நடுவழியில் திசை தெரியாத கப்பலாய் சிக்கிக்கொள்கின்றன.

ஒரு தொழிற்சாலையை அகற்ற அது அமைந்துள்ள இடத்தின் மக்கள் கூட்டாக தங்கள் விருப்பத்தை தெரிவிப்பதே போதுமானதாக இருக்கவேண்டும்.

கண்டிப்பா அடிப்பானுங்கனு தெரியும்., ஆனா சுடுவானுங்கனு நினைச்சு கூட பார்க்கல,
“பொம்பளைங்களுக்கெல்லாம் இங்க என்னடி வேலை, ஓடுங்கடி வீட்டுக்கு”னு சொல்லிட்டு தான் அடிச்சாய்ங்க..

இங்கோ 13 உயிர்கள்கூட போதுமானதா தெரியவில்லை.
கிருமிகள் மருந்துக்கு அடங்காதவையாக மாறும்போது மேலும் வீரியமிக்க மருந்துகள் ஆய்வகங்களில் உருவாவதைப் போல வீரியமிக்க போராட்ட வடிவங்களை, சட்ட உரிமைகளை, பாதுகாப்பு மிக்க போராட்டச்சூழலை உருவாக்குவதற்கு என்ன செய்வது என்ற சிந்தனை பல தரப்பிலும் நிகழவேண்டும்.

ஒவ்வொரு குடிமைப் போராட்டத்திலும் உயிர்களை இழப்பது நிகழ்ந்தே ஆகவேண்டிய தியாகமல்ல. மாற்றப்பட்டாகவேண்டிய சமூக ஒழுங்கு.
____________
Barathi Thambi
எழுத்தாளர்கள், கலைஞர்கள் உள்ளிட்ட அறிவுத்துறை நண்பர்களே… தூத்துக்குடி மக்கள் மீதான தமிழக அரசின்; தமிழக காவல்துறையின் இரக்கமற்ற கொலைவெறி தாக்குதலை உடனே நிறுத்தக்கோரி வெளிப்படையான போராட்டம் ஒன்றை அவசரமாக நடத்த வேண்டும். அறிவுலகின் இந்த அமைதி உடனே உடைக்கப்பட்டாக வேண்டும். கூட்டறிக்கை போதாது. களத்துக்கு வர வேண்டும். உடனே… இன்றே… இப்போதே… அங்கே அரச பயங்கரவாதம் உயிர்களை இடைவிடாமல் கொன்றொழிக்கிறது. இணையதள சேவைகளை முடக்கி இது ஒரு சாட்சியமற்ற போராக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விரைந்து வினையாற்றுவது அவசியம்.
__________
கி. நடராசன்
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் உதயம் மனோகரன், மில்லர், பார்வேந்தன், உட்பட மதுரை, நெல்லை, திருச்சி இன்னும் பல நகரங்களில் இருந்து பல குழுக்களாக 60 வழக்கறிஞர்கள் நேற்று தூத்துக்குடி சென்றனர்.

இனி வழக்கறிஞர் உதயம் மனோகரன் என்னிடம் விவரித்தன் சாரம்:
உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி சென்றதால் அங்காங்கே கும்பலாக இருந்த போலிஸார் தடுக்கவில்லை.. ஆனால் தூத்துக்குடி ஆள் நடமாற்றம் அற்ற சுடுகாடு போல் உள்ளது.
நெல்லை வழக்கறிஞர்கள் சங்கம் இதற்கு முன்பு சாதிரீதியாக பிரிந்து இருந்தன.. இந்த படுகொலைக்கு பின் ஒன்றிணைந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இணைந்து வழக்காடினர்.
மாவட்ட நீதிபதியிடம் ஆள் கொணர் மனு போட்டு ஆர்டர் வாங்கினர். துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உட்பட பல இடங்களில் அடைக்கப்பட்டு கிடந்த தூத்துக்குடி மக்கள் 65 பேரை அப்பொழுதுதான் கைது செய்ததாக பொய் வழக்கு போட்டு நீதிமன்றம் கொண்டு வந்தனர். நீதிபதி அவர்களை சொந்த ஜாமீனில் விடுதலை செய்தார்…

தூத்துக்குடி மருத்துமனை முழுவதும் போலிஸ் குவிக்கப்பட்டு உள்ளது. தலை, மார்பு, தொடை, விலா எலும்பு என்று குண்டடிப்பட்டு 45 பேர் அங்கு இருந்தனர். அவர்கள் கூற்று படி மக்கள் அமைதியாக அறவழியில்தான் பேரணியாக சென்றனர். போலிஸ் திட்டமிட்டு தூப்பாக்கி சூடு நடத்தி கொலை செய்துள்ளது.

போலிசார் துப்பாக்கியால் சுட்டனர். அதனால் பலர் குற்றுயிறும் குலையுறுமாய் துடித்தனர்.. அவர்களை மருத்தமனைக்கு தூக்கு செல்லாமல் அப்படியே போட்டு விட்டு சென்றனர். குண்டடி பட்ட ஒருவர் அருகில் உள்ள மருத்தவமனைக்கு செல்ல அங்கு வந்த போலிஸ்காரன்கள் அவரை அடிக்க முயன்றனர். செவிலியர்கள் போலிஸ்கார்களிடம் மன்றாடி கையெடுத்து கும்பிட்டு அவரை காப்பாற்றினர்.
மேலும் இஸ்லாமிய சகோதரர்களின் ஆம்புலன்ஸ்சில் வந்துதான் குற்றுயிறும் குலையுறுமாய் துடித்தவர்களை மனித நேயத்துடன் மருத்துவமனை கொண்டு சென்று சேர்த்தனர்.

75 வயது மூதாட்டி இது வரை பல சாதி கலவரங்களை பார்த்துள்ளேன் ஆனால் இப்படியான போலிஸ் வெறியாட்டம் தனது வாழ்நாளில் பார்த்தது இல்லை என்றார்.
குண்டடி பட்டாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்.. புற்றுநோயால் சாவது. போராடி சாவது என்பதுதான் அது. நான் இறந்தால் என் மனைவி போராடுவாள் என்று குண்டடிபட்ட தூத்துக்குடி வாசி உறுதியாக சொன்னார். பல பகுதிகளுக்கு சென்று விட்டு சட்டரீதியாக உதவிகள் என்ன என்ன செய்வது என்று கூறிவிட்டு 60 வழக்கறிஞர்கள் திரும்பினோம்
__________
Mohana Dharshiny

கால்களிலும், கைகளிலும், தோள்பட்டைகளிலும் குண்டுகள் பாய்ந்து சிகிச்சை பெற்று வரும் தூத்துக்குடி போராளிகளை சந்தித்தோம். நாங்கள் நினைத்தது போல் எங்களை பார்த்ததும் அவர்களும் அவர்கள் குடும்பத்தினரும் அழுகவில்லை. புலம்ப வில்லை.

இந்த கேடுகெட்ட அரசிற்கெதிராகவும் காவல்துறைக்கெதிராகவும் ,ஸ்டெர்லைட் டிற்கெராகவும் கோபம் கொப்பளிக்க வீரபாண்டிய கட்டபொம்மனைப் போல வசனம் பேச யதை கேட்டு ஆச்சர்யமடைந்தோம்.

ஆனால் தங்கள் சக போராளிகள் இறந்த விஷயத்தை பகிர்ந்து கொள்ளும் போது நொறுங்கிப் போனார்கள். ஒருவரது அழுகையை எங்களால் நிறுத்த வே முடியவில்லை.மக்கள் சக்தி மகத்தானது.

– தோழர் Suganthi P

//எல்லா பிற்போக்குவாதிகளும் காகிதப் புலிகள். தோற்றத்தில் பிற்போக்குவாதிகள் பயங்கரமானவர்கள். ஆனால் யதார்த்தத்தில் பலமுடையவர்கள் அல்ல. நீண்டகால நோக்கிலிருந்து பார்த்தால் உண்மையில் பலமுடையவர்கள் பிற்போக்குவாதிகள் அல்ல, மக்களே ஆவர்.
#மாசேதுங்///

மக்கள் சக்தியைப் பற்றிய மாவோவின் மதிப்பீடுகள் இப்போதும் மிகச் சரியானவையே…
_________
Naveen Krishnan

ஸ்டர்லைட் போராட்டத்தில் (மே 22) கலந்துகொண்ட தோழி ரோசி மது பதிவு

#போராட்டக்களம்_போர்க்களமானது_எப்படி..?? களத்திலிருந்து ஒரு சாட்சியம்
# முன்குறிப்பு: அந்த போராட்டத்துல கலந்துக்கிட்ட ஒரு சாதாரண பெண்ணோட மனநிலையில் இருந்து தான் இதை நான் எழுதியிருக்கேன்..
# காலையில பெயரளவுக்கு தடுத்துட்டு அனுமதிச்சப்பவே தெரியும், இவிய்ங்களாம் ஒன்னும் அவ்ளோ நல்லவய்ங்க இல்லயேனு.. அங்க ஏதோ விபரீதமா நடக்க போகுதுனு, நாங்க கடந்து சென்ற பாதையில் நின்றிருந்த பெண் போலீசார் சிலரின் முகத்தில் அப்பட்டமாகவே தெரிந்தது..

சில ஆண் போலீசின் முகத்திலோ, ‘போங்கடீ உங்களுக்கு அங்க இருக்கு’ பாவனைகள் தான்.. கடும் தண்ணி தாகத்துல சுட்டெரிக்கும் வெயிலுல வயசு பாகுபாடு இல்லாம ஒரு வயசு குழந்தையில இருந்து கிட்டத்தட்ட 60வயசு பெரியவங்க வரை கலந்துக்கிட்டாங்க..

போற வழி நெடுகிலும் போட்ட கோஷங்களை விட வழியெங்கும் ஒட்டியிருந்த கண்ணீர் அஞ்சலி போஸ்டர்ஸ பார்த்து இவருக்கு இந்த கேன்சர், அவருக்கு அந்த கேன்சர்னு காதுல விழுந்தது தான் அதிகமா இருந்துச்சு..

அவங்க அடிபட்டு இருக்காங்கனு வந்த அழுகைய விட, அந்த வலியை கொஞ்சம் கூட முகத்துல காட்டிக்காம இருந்த அவங்களோட போராட்ட வெறி உடல் சிலிர்க்க வச்சுச்சு..

போற வழியில தடுத்து நிறுத்த முற்பட்டானுங்கனும், அதை மீறி மீறி தான் போனோம்னும் ஏற்கனவே சொல்லியிருந்தேன்.. புதுத்தெருவுல இருந்து மாதா கோவில் போற வழியில ரெண்டு இடத்துல தடுத்தானுங்க, மாதா கோவில்ல இருந்து எல்லாரும் சேர்ந்து போனப்போ இரண்டு இடத்துல தடுத்தானுங்க..

மூணாவது தடவையா தடுத்தப்ப தான் கல்லெறிஞ்சுருக்கானுங்க போலீஸ்காரனுங்க.. நிறைய பேருக்கு மண்டை உடைஞ்சு, கால் உடைஞ்சு இரத்தம் ஒழுக ஒழுக தூக்கிட்டு ஓடுனாங்க..

அப்புறம் தான் நம்ம ஆட்களும் திருப்பி கல்லெறிஞ்சு போலீச ஓடவிட்டாங்க.. அதற்கடுத்துதான் சில கிலோமீட்டர் தாண்டி பாலம் வந்துச்சு, அந்த பாலத்துக்கு கீழ பெட்ரோல் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியது போலீஸ்காரனுங்க தான்.. எத்தனை குண்டுகள்னு கணக்கேயில்ல..
பாதிபேர் அந்த புகையையும், நெடியையும், கண்ணெரிச்சல், தோல் எரிச்சல் எல்லாத்தையும் தாண்டி முன்னேறி போயிட்டாங்க.. எங்களை கொஞ்ச நேரம் வெயிட் பன்ன சொன்னாங்க., கண்ணெரிஞ்சது, கண்ல தண்ணியா ஊத்துச்சு, மூச்சு முட்டுச்சு, மூக்கு அரிச்சுச்சு.. கிராஸ் பன்னி போக முடியல..

ஆளாளுக்கு கையில் இருந்த துண்டு, கர்சீஃப், ஷால் எல்லாத்தையும் வச்சு மூஞ்சிய மூடிட்டு முன்னேறி போனோம்..

நாங்க இங்க கொஞ்சம் தாமதிச்ச இந்த சமயத்துல தான் எங்களுக்கு முன்ன போனவங்க கலெக்டர் ஆஃபீஸ் உள்ள போயிட்டாங்க.. அங்கயும் அதிக அளவில் ஏதோ புகை வந்துட்டே இருந்தது.. அப்பவும் ஏற்கனவே எதிர்கொண்ட அதே symptoms..
நீங்க முதல் போட்டோவ கூர்ந்து கவனிச்சீங்கனா நல்லா தெரியும்.. அதுல முன்னாடி ஒரு பெரிய வண்டி நிக்குது, அதுக்கு பின்ன safe-ஆ தான் போலீஸ் படை நின்னுச்சு..

அப்படி இருக்கப்போ பெண்களோடவும், குழந்தைங்களோடவும் போன போராட்டக்காரர்கள் எப்படி அவிய்ங்கள மீறி கலெக்டர் ஆஃபீஸ் உள்ள போய் வேனை எரிக்க முடியும்..?? அவிய்ங்கள தாண்டி உள்ள போக துளி கூட வாய்ப்பில்ல..
இவ்ளோ பழி சுமத்துற அவிய்ங்க, ஒரு இடம்கூட விடாம கேமராவும் கையுமா அலையிற அவிய்ங்க போராட்டக்காரர்கள் கலெக்டர் ஆஃபீஸ் உள்ள வேனை எரிச்சாங்கன்ற வீடியோவ இருந்தா வெளியிட சொல்லுங்களேன் பார்ப்போம்..

அடுத்தடுத்து நிகழ்ந்தவை தான் ஒடுக்குமுறையின் உச்சம்.. முதல்ல உள்ள போனவங்கள ரெண்டு பேர் சுட்டுட்டதா ஓடி வந்தாங்க, ஒருத்தர் அங்கயே இறந்துட்டாருன்னும், இன்னொருத்தர மாற்றுத்திறனாளி ஒருத்தரோட வண்டியில வச்சும் தூக்கிட்டு வந்தாங்க..

அதை பார்த்துட்டு தான் வெளில நின்றிருந்தவங்க இன்னும் ஆக்ரோசத்தோட உள்ள போனாங்க.. திரும்பவும் குண்டுகள் பொழிய ஓடி வந்தாங்க.. துப்பாக்கி குண்டுகளின் சத்தம் கேட்டுட்டே இருந்துச்சு, அது துப்பாக்கி சத்தம் தான்னு நம்ம உறவுகள் செத்து வெளில வந்தப்ப தான் தெரியும்..

முதல் அரைமணி நேரத்துக்கு ஆம்புலன்ஸ் கூட இல்ல, அதுவரை பைக்லதான் குண்டடிபட்டவங்களை தூக்கிட்டு போனாங்க.. அரைமணி நேரம் கழிச்சு தான் ஆம்புலன்ஸ் வந்துச்சு.. நாங்க அங்க இருந்த அந்த சமயத்துல மட்டும் கிட்டத்தட்ட 20தடவைக்கு மேல அந்த ஆம்புலன்ஸ் போயிட்டு போயிட்டு வந்தது..
கண்டிப்பா அடிப்பானுங்கனு தெரியும்., ஆனா சுடுவானுங்கனு நினைச்சு கூட பார்க்கல, முதல்ல ஒருத்தர் சுடப்பட்டார்னு தெரிஞ்சப்பவே ஓடியோடி கேட்டேன், ‘சாவல இல்ல, சாவல இல்ல’னு..

உங்களுக்கு எல்லாம் சுட்டவங்களையும், செத்தவங்களையும் தானே தெரியும்.. ஆனா எத்தனை பேரு மண்டை உடைஞ்சு, கை, கால் உடைஞ்சு அந்த வலியை துளி கூட முகத்துல காட்டிக்காம பைக்ல வச்சு கூட்டி போனாங்கனு தெரியுமா..??
அவங்க அடிபட்டு இருக்காங்கனு வந்த அழுகைய விட, அந்த வலியை கொஞ்சம் கூட முகத்துல காட்டிக்காம இருந்த அவங்களோட போராட்ட வெறி உடல் சிலிர்க்க வச்சுச்சு.. ஒரு பைக்ல இரண்டு பேருக்கு இடையில ஒருத்தர் உட்கார்ந்து போறாருனா அவரு கண்டிப்பா அடிபட்டு இருக்காருனு அர்த்தம்.. அப்படி எத்தனை பேருன்னு கணக்கே இல்ல.,

அவங்க தலையிலயோ, கையிலயோ, கால்லயோ கட்டியிருந்த துணியையும், சட்டை நிறைய படிஞ்சுருந்த இரத்தத்தையும் வச்சுத்தான் அவங்க அடிபட்டு இருக்காங்கனு தெரிஞ்சுக்க முடிஞ்சது..

அடினா அடி சாதாரண அடியில்ல, ஒவ்வொரு அடிக்கும் தோலுரிஞ்சு இரத்தக்காயத்தோட தான் தடியடி இருந்தது.. எத்தனை பேரோட தோள்லயும், கையிலயும், கால்லயும் இரத்தம் வடிய வடிய தடியடிய நான் பார்த்தேன் தெரியுமா..??
அதுக்கு பிறகுதாங்க, சரி தற்போதைக்கு திரும்பி போகலாம்னு முடிவெடுத்து திரும்பி வந்துட்டு இருந்தோம்.. வர்ர வழியில ஒரு பெரிய டீமே காத்திருந்தாய்ங்க.. கிடைச்ச திசையில எல்லாம் ஆளாளுக்கு ஓடி ஒளிஞ்சுட்டோம்.. ஏன்னா கல்லெறிஞ்சாய்ங்க..

ரொம்ப நேரமாகியும், அவிய்ங்க அங்க இருந்து போறதா இல்ல, நாங்களும் வெயிட் பன்னி பார்த்துட்டு, சரி இப்படியே போலாம்னு வேற வழியா 2கிமீல போக வேண்டிய இடத்துக்கு, 8கிமீ நடந்தே வந்தோம்.. நடந்து வந்தோம்னு சொல்றத விட நடைபிணமா வந்தோம்.. ஒவ்வொரு மெயின் ரோடுக்கு போறப்பவும் எதிர்த்தாப்ல வந்தவங்ககிட்ட கேட்டப்ப, அங்க போலீஸ் இருக்கு, இருக்குனே சொன்னாங்க,
திரும்ப திரும்ப வேற வழியில ஒரு வழியா மெயின் ரோட் வந்து சேர்ந்ததும், நடந்த களைப்புல கொஞ்ச நேரம் ஒரு இடத்துல உட்கார்ந்தோம்.. அந்த இடத்துல பைக்ல பின்னாடி உட்கார்ந்து வந்த அம்மா நிலை தடுமாறி கீழ விழுந்துட்டாங்க.. ஓடிப்போய் தூக்கி, தண்ணி கொடுத்து, அவங்கள அனுப்பிட்டு திரும்பி பார்த்தா வரிசையா பெரிய பெரிய வேன்ல வந்தானுங்க..

நாந்தான் ஓடிப்போய் சொன்னேன், நிறைய வண்டி வருது, எதுக்கும் நாம அந்த பக்கம் போயிடலாம்னு சொல்லி கூட முடிக்கல, வண்டியிலயிருந்து திபுதிபுனு இறங்கி அடிக்க துரத்திட்டு வந்தானுங்க..நா சொல்லலனா யாரும் எதிர்பார்க்காம எல்லாரும் அடி வாங்கியிருப்போம்.. ஏன்னா அந்த பில்டிங்கோட பின்பக்கமும் அவிய்ங்க வந்துட்டாய்ங்க..

புள்ளைய தூக்கிக்கிட்டு, புள்ளைய பத்திரமா பார்த்துக்கனுமே, அய்யோ மாட்டுனோமா, அவ்ளோதானானு ஓடி ஒளிஞ்ச அந்த நொடிகளை மறக்கவே முடியாது.. பயந்தியா, ஓடுனியா, ஒளிஞ்சியானா ஆமா, சாதாரண பயமில்ல, உயிர் பயம்..நெஞ்ச நிமிர்த்தி நின்னு வீர மரணம் அடையிறதுக்கு நா ஒன்னும் தனி ஆள் இல்ல, என் மகளுக்காகவாச்சும் உயிர் வாழ வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கு..

உயிரை கையில் பிடித்துக் கொண்டு ஓடிய தருணம் வாழ்வில் எப்போதும் மறக்க முடியாதது.. நாங்கள் ஓடி ஒளிந்த இடம் அனைத்துமே முட்டு சந்து, கிட்டத்தட்ட மூணு இடத்தை தாண்டி ஒளிய முயற்சித்த நாலாவது இடமும் மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடம்தான்.. ஆண்கள் எல்லாம் சிதறி நாலா பக்கமும் ஓடிட்டாங்க..
பெண்கள் அந்த மரங்களுக்குள்ள ஒளிஞ்சுக்கிட்டோம், “பொம்பளைங்களுக்கெல்லாம் இங்க என்னடி வேலை, ஓடுங்கடி வீட்டுக்கு”னு சொல்லிட்டு தான் அடிச்சாய்ங்க.. கொஞ்ச நேரம் கழித்து தான் வெளில வந்தோம்., ஒவ்வொரு வீட்டுக்குள்ள இருந்தும் ஆண்களும் வர ஆரம்பிச்சாங்க..என்கூட இருந்ததுல நாலு பெண்களுக்கு அடி விழுந்துருக்கு..

வீட்டுக்கு வந்து சேர்ந்த கொஞ்ச நேரத்துல சொல்றாங்க திரேஸ்புரத்துல பெண் உட்பட நாலு பேர சுட்டுட்டானுங்களாம் அப்படினு..
இன்னும் தொடர்ந்துக்கிட்டு தான் இருக்கு அங்க துப்பாக்கிச் சூடும், அடிதடியும்.. என்ன பன்ன போறோம்னு தெரியல..

பிகு: நான் அங்க இருந்தவரை நடந்ததுல கொஞ்சம் தான் எழுதியிருக்கேன்.. இதையொட்டி எழுகிற கேள்விகளும், விளக்கங்களும் எழுதுற மனநிலை இப்போ எனக்கு இல்லை.. இன்னும் மீள முடியாம தான் இருக்கேன்..
_________
Marx Anthonisamy
Outsiders = Outlaws : உருவாகும் புதிய மொழி

“Outsiders” தான் வன்முறைகளுக்குக் காரணம் என ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதற்கு தூத்துக்குடிக்கு வெளியிலிருந்து வரும் தமிழர்களைக் காய்கிறது தமிழக உளவுத்துறை

இன்றைய The Hindu நேற்றைய கொடுமைகள் பற்றிய செய்தியில் அது குறித்து வருவாய்த்துறையினரும் காவல்துறையினரும் என்ன சொல்லியுள்ளனர் என்பதைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்த்துறை, “உளவுத் துறை சரியான தகவல் கொடுக்கவில்லை” எனக் குற்றம் சாட்டியுள்ளது.

உளவுத் துறையோ எல்லாவற்றிற்கும் வெளியிலிருந்து வந்து ‘தீவிரமாகப்’ பேசிச் செல்லும் போராட்ட ஆதரவாளர்களைக் குற்றம் சொல்லியுள்ளது. “ஜல்லிக்கட்டு மற்றும் ஹைட்ரோகார்பன் போராட்டங்களில் பார்த்த அதே முகங்களை தூத்துக்குடியிலும் பார்க்க முடிந்தது” என outsiders மீது குற்றம்சாட்டுகிறார் அந்த உளவுத்துறை அதிகாரி..

அடுத்து நாம் எதிர்பார்த்தபடியே இந்த outsiders “தீவிரவாத இயக்கங்களுடன இணைக்கப்படுகின்றனர். “பெண்கள்கூட” என்கிறார் அவர்.
ஆக இனி கூடங்குளம் போராட்டம் என்றால் கூடங்குளத்து மக்கள்தான் போராட வேண்டும். வெளியிலிருந்து சுற்றுச் சூழல் இயக்கத்தினரோ இல்லை ஏன் கட்சிக்காரகளோகூட சென்றால் அவர்கள் தடுக்கப்படலாம், ஏன் கைதும் செய்யப்படலாம்.
“ஏன் இப்படியான outsiders ஐத் தனிமைப்படுத்தி கைது செய்யவில்லை?” எனக் கேட்கிறார் The Hindu நிருபர்.

ஊடக மனநிலை இப்படி உள்ளது.
இனி போராட்டங்கள் என்றால் அந்த உள்ளூர்க்காரர்கள்தான் போராட வேண்டும். நாம் யாராவது போனால் அவர்கள் Outsiders எனக் கைது செய்யப்படலாம்.
சென்ற ஆன்டு தெலங்கானாவிலிருந்து சட்டிஸ்கர் சென்ற உண்மை அறியும் குழுவைக் கைது செய்து ஆறு மாதங்கல் வரை சிறையில் அடைக்கவில்லையா அங்குள்ள பாஜக அரசு.
மக்களை இப்படி outsiders X locals என எதிர்வுகளாக்கி outsiders = outlaws என ஆக்கும் இந்த மொழி விளையாட்டு பாசிசமாகும் சூழலுக்கு ஒரு எடுத்துக்காட்டு.
_________
Abdul Hameed Sheik Mohamed
தமிழகத்தை வட கிழக்கு மாநிலங்கள் போல, காஷ்மீர்போல ராணுவமயமாக்க விரும்பும் மத்திய அரசின் நோக்கமே இப்போதையை நிகழ்வுகளில் வெளிப்படுகிறது
_________
Chandran Veerasamy
144 தடை உத்தரவை மீறி, அதிக வாகனங்களில் சென்றதாக ஸ்டாலின், திருநாவுக்கரசர், வைகோ திருமாவளவன், கமல்ஹாசன், ஜி.கே.வாசன், டி.ராஜேந்தர், ரா.முத்தரசன், கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பொது அமைதிக்கு பங்கம் விளைவித்ததாக கூறி இந்திய தண்டனைச் சட்டம் 143, 188 மற்றும் 153(ஏ) பிரிவுகளின் கீழ் தென்பாகம் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
#கொலைகாரக் கூட்டம் கோட்டையிலே
உள்ளவரை நாட்டின் நிலை இதுதான் !
_________
Vinayaga Murugan
போலீசுக்கு ரைபிள். சங்கிகளுக்கு போட்டோஷாப். இலக்கு ஒண்ணுதான். ஆயுதங்கள்தான் வேறு வேறு!
_________
Mahendra Kumar
கலவரத்தை அடக்கும் காவ்துறையின் முயற்சியில், தவறுதலாக இறந்துவிட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தான் காலங்காலமாக வழக்கம்.
திட்டமிட்டே சுட்டுக்கொலை செய்துவிட்டு, மீடியாவை சந்திப்பதற்கும், நிவாரணம் வழங்குவோம் என்று சொல்வதற்கும் எவ்வளவு தடித்த தோல் இருக்கவேண்டும் இவர்களுக்கு?

எதற்கும் துணிந்த கொலைகார அரசு இது! இந்த அடிமை அரசையும், அவர்களை சார்ந்தவர்களையும் இனியும் தலையெடுக்க விடாமல் செய்யவேண்டும்.
அதோடு மக்கள் விரோத பாஜக அரசை எந்த ரூபத்திலும் உள்ளே விடவும் கூடாது! இதுவே நமக்கிருக்கும் தலையாய பணி!
_________
Lakshmanasamy Odiyen Rangasamy
தூத்துக்குடி அப்டேசன்
மதியம் 1 மணி, 24-5-2018
1. துணை ராணுவம் எதுவும் வரவில்லை.
2. மற்றமாவட்ட காவல்துறைப்படைகள் தான் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
3. நேற்றிரவு மட்டும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை கணக்கில் 132தான் சொல்லப்படுகிறது. மீதமுள்ள நபர்களை சட்டப்படி கைது செய்யவில்லை, எனவே இந்த சட்டமீறலை நிறுத்தவேண்டும்.
4. காவல்துறை அழைத்துச்சென்றவர்கள் போக, 100க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காணவில்லை.
5. ஸ்டெர்லைட்டுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டாலும், Sterlite நிறுவனமே தனியாக 160மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் யூனிட் வைத்திருக்கிறது. (SESA Sterlite) எனவே இது கண்துடைப்பு.
6. காவல்துறைதான் வதந்திகளை கிளப்புகிறது, நேற்றிரவு காவலர் 2 பேர் வெட்டப்பட்டதாக, குண்டு வீசப்பட்டதாக சொல்வது வதந்தி, அப்படி யாரும் செய்யவில்லை.
7. இணையம் இருந்தால் உண்மை வீடியோக்களைப் பகிரலாம், இல்லாததால் எங்கள் பக்க உண்மைகளைப் பகிர முடியவில்லை, அனைவரும் பயந்துபோய் பதுங்கியிருக்கிறோம்.

அந்த பாலத்துக்கு கீழ பெட்ரோல் குண்டுகளையும், கண்ணீர் புகை குண்டுகளையும் வீசியது போலீஸ்காரனுங்க தான்.. எத்தனை குண்டுகள்னு கணக்கேயில்ல..
பாதிபேர் அந்த புகையையும், நெடியையும், கண்ணெரிச்சல், தோல் எரிச்சல் எல்லாத்தையும் தாண்டி முன்னேறி போயிட்டாங்க..

8. இறந்தவர்கள் எண்ணிக்கை 26 பேர். 26 உடல்களும் தூத்துக்குடி அரசுமருத்தவமனையில் இருக்கிறது, ஆனால் உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது.
9. ஒவ்வொரு பகுதி மக்கள் பிரதிநிதியும் அழைத்துப்பேசினாலே பிரச்சினை நின்றுவிடும், ஆனால் காவல்துறையை நம்பிப்போகமுடியவில்லை.
10. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கையசைத்து உள்ளே வாருங்கள் என்று அழைத்ததே காவல்துறைதான், நம்பிப்போன மக்கள் பிரதிநிதிகளைத்தான் போலீஸ் சுட்டுக்கொன்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், 15 பேர் இப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.
ரா புவன்
_________
வாசுகி பாஸ்கர்
நண்பர்கள் நிறைய பேர் பார்ப்பனர்களையும், பார்ப்பனர்களிடம் கழுவிக்குடிக்கும் சூத்திர அடிமைகளையும், ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர்கள் பேசும் பதப்படுத்தப்பட்ட கொழுப்பு வாதத்திற்காக unfriend செய்தபடி இருக்கிறார்கள்.

பலபேர் காலம் வரும்போது தான் உணர்வீர்கள், இதைத்தான் எல்லா பொழுதுகளிலும் சொல்லி வருகிறோம். இன்னமும் இந்த நாட்டில் எஞ்சிருக்கிற அரசியலமைப்பு சட்டம் தான் நம்மை காப்பாற்றி வருகிறது. பார்ப்பனர்களின் மனுநீதி அடிப்படையில் இந்த நாடு இயங்க ஆரம்பித்தால், அப்படியான கொடுங்கோல் ஆட்சியையும், வன்முறையையும், குரூர பாசிச முகத்தையும் உலகத்தின் எந்த பகுதியிலும் நீங்கள் பார்க்க முடியாது.
ஜெர்மனியின் யூத இன அழிப்பை அரிசி சேவை சாப்பிட்டுக்கொண்டே ரசித்தவர்கள் பார்ப்பனர்கள், ஹிட்லரின் கை ஓங்கினால் உருவி பிழைத்துக்கொள்ளலாம் என்று ஜெர்மன் மொழியை கற்க தயரானவர்கள் பார்ப்பனர்கள்.

வெளிச்சத்தை பார்க்கும் கருப்பான் பூச்சிகளை போல, சோப்பு நுரைக்கு முகம் சுளிக்கும் கழிவறை இடுக்குகளில் வாழும் நுண் கிருமிகளை போல பார்ப்பனர்களிடம் அஞ்சி ஓடும் ஒரு தன்மை உண்டு. அது அவர்களின் முகத்தை தோலுரிப்பதே. உண்மையை உள்ளது உள்ளபடி சொன்னால் பார்ப்பனர்களால் பொறுத்துக்கொள்ளவே முடிவதில்லை, பொய் புகழ்ச்சிக்கும், குறுக்கு வழியில் சோறு தின்று குறுக்கு வழியில் உடல் வளர்த்து ஊளைச்சதையில் திளைப்பவர்களால் நிஜத்தை உள்வாங்கவே முடிவதில்லை .

நீங்கள் அதை பேச ஆரம்பித்தால் தானாகவே ஓடுவார்கள், இடுக்குகளில் ஒளிவார்கள், எந்த பார்பனரையும், பார்பனீயவாதிகளையும் நான் நட்பு வட்டத்தில் இருந்து நீக்கியதேயில்லை.

காலத்தால் அவர்களே ஓடினார்கள், ஒருநாள் கூத்தல்ல இது. ஆயிரம் வருஷமா நடக்குற கூத்து. ஸ்டெர்லைட் வரை பேசிவிட்டு பார்ப்பனியத்தின் எல்லா அக்கிரமங்களையும் வருடம் முழுவதும் ஏற்கத்தயாரான உங்கள் நிராகரிப்பில் அவர்கள் வாழ்கிறார்கள்.

ஆகையால், அவர்கள் பேசுவதினால் நீங்கள் விலக கூடாது, இந்த தளமானாலும் இந்த மண்ணானாலும் அக்கறையோடு அறச்சீற்றமடையும் நீங்கள் தான் இங்கே இருக்கவேண்டியவர்கள், ஒட வேண்டியது அவர்கள்.

நாம் பேசித்தான் அவர்களை ஓட்டமெடுக்கச்செய்ய வேண்டும்.
______
Dinesh Guavera
நாங்கள் தான் தமிழ்நாட்டின் எதிர்கட்சி
நீங்கள் எங்களை துச்சமென நினைத்தாலும் உண்டியல் குலுக்கிகள் என்றாலும் செவ்வாழை என்றாலும் ஆளும் வர்க்கத்தை முதலாளித்துவத்தை எதிர்க்க இன்முகத்தோடு உங்களுக்காக களத்தில் நிற்க்கின்றோம் கம்யூனிஸ்ட்கள்… எங்களோடு இணைந்து போராடுங்கள் எங்களுக்கு பலம் சேருங்கள் இது ஓட்டுக்காக அல்ல சுட்டுக் கொல்லப்பட்ட மக்களின் நீதிக்காக…
-தினேஷ் குவேரா
_______
Tamil Selvan
குரல்வளையை நெரிப்பதன் மூலம் கொலைப்பழியிலிருந்து தமிழக அரசு தப்ப முடியாது.

தூத்துக்குடியில் வேதாந்தம் கம்பெனியாரின் உயிர்க்கொல்லி ஸ்டெர்லைட் ஆலையைக் காப்பதற்காக,13 பேரைச் சுட்டுப்பலி கொடுத்த தமிழக அரசு இப்போது உண்மைகளை மறைக்கும் பணியில் தீவிரமாக இறங்கியுள்ளது.அப்பகுதியிலிருக்கும் நண்பர்கள் இளைஞர்கள் பாதிக்கப்பட்ட மக்களின் சார்பாக இணையவெளியில் பல உண்மைகளைப் பேசி வருகின்றனர்.உண்மையில் கொல்லப்பட்டவர்கள் எத்தனைபேர்?காவல்துறை பிடித்துச் சென்ற 122 இளைஞர்களின் கதி என்ன?பெனிஸ்டா என்கிற 18 வயது மாணவியின் வாயில் துப்பாக்கியை வைத்துச் சுட்டது ஏன்? என்று அரசுக்கு நெருக்கடியைத்தரும் கேள்விகள் இணையத்தின் மூலம் வெளி உலகுக்குச் சென்று கொண்டிருப்பதால், எடப்பாடி அரசு தென் மாவட்டங்கள் மூன்றிலும் இணையதள சேவைகளைத் தடை செய்துள்ளது.

கருத்துரிமைக்கு எதிரான இந்நடவடிக்கையை தமுஎகச வன்மையாகக் கண்டனம் செய்கிறது.உடனடியாக முடக்கப்பட்ட இணைய சேவை மீண்டும் இயங்க அனுமதிக்கப்பட வேண்டும்.மக்கள் மீது உண்மையான அக்கறை இருக்குமானால் தமிழக அரசு குற்ற உணர்வு கொண்டு மக்களிடம் பகிரங்க மன்னிப்பைக் கோரி ,விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும்.குரல்வளையை நெரிப்பதன் மூலம் கொலைப்பழியிலிருந்து தமிழக அரசு தப்ப முடியாது.
ச.தமிழ்ச்செல்வன், தலைவர்
சு.வெங்கடேசன், பொதுச்செயலாளர்
________
Jose Antoin
வெளிப்படையாக நமக்கு தெரிவதைவிட பா.ஜா.க. வின் அடிமையான எடப்பாடி அரசின் செயல்பாடுகள் மிகக்கொடூரமான நோக்கம் கொண்டவை. தற்போது சாட்சியங்களற்ற தாக்குதலுக்காக கட்டம் கட்டப்பட்டிருக்கின்ற மூன்று தென் மாவட்டங்களும் (தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாக்குமரி) சிறுபான்மையினர் அதிகமாக வசிப்பவை.(அருகிலுள்ள இராமநாதபுரம் மாவட்டமும் சிறுபான்மையினர்-குறிப்பாக முஸ்லீம்கள்- அதிகமாக வாழும் மாவட்டம்.) ஆக, மக்களை வேட்டையாடி, மத, சாதி அடிப்படையில் பிளவுகளை ஏற்படுத்தி கலவரங்களை மூட்டிவிட்டு கார்பொரேட் நலன்களை பாதுகாப்பதுடன், இந்துத்துவ அரசியலை வலுவாக காலூன்ற வைப்பதே அரசின் எண்ணம்.

குருமூர்த்தியின் “சர்ச்சில் ஏன் போராட்டக்காரர்கள் குழுமினார்கள்” என்ற கயமைமிக்க வாதத்தையும், அவர் ஆன்மீக அரசியல் என்ற போர்வையில் பாசிச அரசியலை முன்னெடுக்கும் ரஜினியை சந்தித்ததையும், பா.ஜ.க – விற்கு ஆதரவு கொடுத்திருந்தால் தூத்துகுடியில் இந்த படுகொலை நிகழ்ந்திருக்காது என்ற பொன். இராதாகிருஷ்ணனின் கூற்றையும் ஒருசேர கணக்கிலெடுத்துப் பார்த்தோமென்றால் நாஜிக்களின் தந்திரோபாயங்களுடன் மத்திய மாநில அரசுகள் செயல்படுவதை பார்க்க முடியும். இது தமிழக வரலாற்றில் மதசார்பின்மை அரசியல் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவாலாக இருக்கப் போகிறது. இந்த சூழ்ச்சியை தமிழக மக்கள் முறியடித்துவிட்டால் இந்துத்துவா சக்திகள் இம்மண்ணில் எழுந்திருக்க முடியாதபடி தோற்கடிக்கபட்டிருப்பர். எல்லா ஜனநாயக சக்திகளும் ஒன்றுசேர்ந்து செயல்பட வேண்டிய நேரம் இது.
_______
ஜெனி
நடுநிலைமையாளர்கள் என்றும், வளர்ச்சியின் பக்கம் நிற்பவர்கள் என்றும், தேசாபிமானம் கொண்டவர்கள் என்றும் சொல்லிக் கொண்டு திரிபவர்களே!
உங்களின் பெயரால் தான் இந்த படுகொலைகள் நிகழ்த்தப்படுகின்றன. யார் தேசபக்தர்கள்? நாட்டின் அத்தனை வளங்களையும் அள்ளிக் கொடுத்து விட்டு தன் வருமானத்தையும், அதிகாரத்தையும் பெருக்கிக் கொள்பவர்களா? இல்லை உனக்காகவும், எனக்காகவும், அடுத்த தலைமுறைக்காகவும் குண்டடிப்பட்டு செத்துக் கிடப்பவர்களா?

தூத்துக்குடி இன்று தமிழகத்தின் நோய்களுக்கான தலைநகரம். கேன்சர் இன்று அத்தனை பேருக்கும் வருகிறது. ஏன்னு கேட்டிருக்குறோமா? மாரடைப்பும், கேன்சர் மரணமும் இன்று “இயற்கை மரணங்கள்” category-ல வந்திருக்கு. எப்படி இந்த நிலைமை?

போராடுற மக்கள சிறுமைப்படுத்துகிறவர்களுக்கு ஒரு கேள்வி….
“உங்கள் வீட்டில் கேன்சர் வந்து செத்தவர்கள் இல்லையா? இனிமேல் கேன்சர், இதய நோய் வந்து சாக மாட்டார்களா?”
போராடுற உழைக்கிற மக்களுக்காக இல்லை. உங்களுக்காக, உங்கள் குழந்தைகளுக்காக கேள்வி கேளுங்க.

தமிழ்நாட்டில் கொடைக்கானல், கடலூர், காவிரி பாய்ந்தோட வேண்டும் என்று நாம் விரும்பும் மேட்டூர், சேலம், தென் தமிழ்நாட்டில் தூத்துக்குடி, காயல்பட்டிணம், கூடங்குளம், வடசென்னை முழுவதும் இன்னும் இன்னும் அத்தனை இடங்கள் இன்று தொழிற்சாலைகளால் மாசுபட்டு கிடக்கின்றன. இதை நாமும் எதிர்க்காமல், எதிர்ப்பவர்களை அவங்க கிறிஸ்தவங்க, முஸ்லிமுங்க, இந்துக்களா இருந்தா தீவிரவாதிங்க…. Bore அடிக்குது. உருப்படியா சேர்ந்து வேலை பாக்கலைன்னா, சாவு எல்லாத்துக்கும் சேத்து தான் வரும். பாத்துக்கோங்க.
________
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்கும் தமிழக அரசு!
சென்னையில் போராட்டம் நடத்திய இளந்தமிழகம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோழர்கள் கைது!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தின் நூறாவது நாளான நேற்று (22-5-2018) ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி சென்ற மக்களைத் தாக்கி வன்முறையில் இறங்கியது தமிழக காவல்துறை. அமைதியான முறையில் பேரணியாக சென்ற மக்கள் ஆட்சியர் அலுவலகத்தைத் தாக்கினர், வாகனங்களைத் தீயிட்டு கொளுத்தினர் என்று உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு போராடும் மக்கள் மீது தனது வெறியாட்டத்தை நிகழ்த்தியது காவல்துறை. மக்கள் மீது தடியடி நடத்தியதோடல்லாமல் துப்பாக்கிச் சூடு நடத்தியும் வன்முறை வெறியாட்டத்தினை அரங்கேற்றியது.

நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் மட்டும் 11க்கும் மேற்பட்டவர்கள் இறந்திருக்கும் நிலையில் பலர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் மருத்துவமனைக்குள்ளும் புகுந்து சிகிச்சை பெறுபவர்களைத் தாக்கி கைது செய்தது எடப்பாடி அரசின் காவல்துறை. இந்நிலையில், காவல்துறையை தன் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே, காவல் துறையின் இவ்வன்முறை வெறியாட்டத்துக்கு முழு பொறுப்பாகிறார்.

ஆகையால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையை தூண்டிவிட்டு போராடிய பொதுமக்களை பச்சை படுகொலை புரிந்த காவல் அதிகாரிகளின் மீதும் அதற்குத் துணைநின்ற தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரின் மீதும் கொலை வழக்கு பதியப்பட வேண்டும். மேலும், தமிழக காவல்துறையின் வன்முறை வெறியாட்டத்துக்கு பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பதவி விலக வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மையமாக வைத்து இன்று காலை 9.30 மணி அளவில் இளந்தமிழகம் இயக்கம் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியைச் சேர்ந்த தோழர்கள் சென்னை அண்ணா சாலையில் மறியல் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுமார் 22 பேரை கைது செய்து சைதாப்பேட்டை காவல் நிலையம் அருகிலுள்ள திருமண மண்டபத்தில் அடைத்து வைத்த காவல்துறையினர், கைதானவர்களில் 8 பெண்களை மட்டும் விடுவித்துவிட்டு ஏனைய தோழர்களை இ.பி.கோ 341, 353, 143, 188, 506(1) ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.

போராடிய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி பச்சைப் படுகொலை செய்து கொண்டிருக்கும் அதேவேளையில் அம்மக்களுக்குத் தோள் கொடுக்கும் எம் போன்ற தோழர்களையும் வழக்கு பதிவு செய்து சிறையிலடைக்கும் எடப்பாடி அரசை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

மக்கள் போராட்டங்களை சிறைகளோ, துப்பாக்கிக் குண்டுகளோ ஒருபோதும் அடக்கிவிட முடியாது என்பதை எடப்பாடி அரசுக்கு அறிவுறுத்துகிறோம். அரசின் அடக்குமுறைகள் மேலும் மேலும் எங்களை வீரியத்துடன் போராடவே தூண்டும்.

போலீஸ்: அதுக்கு விடமாட்டாங்கம்மா, வெறும் பிஸ்கட்டா திங்கிறோம் முடியல, பசியில இருக்கோம் அதாம்மா கேட்டோம்.
tuty அம்மாக்கள்: சரி, நாங்களும் ரெண்டு மூணு நாளா ஒல(உலை) வைக்கல, சின்னப்பிள்ளைகளுக்கு மட்டுந்தான் ஏதாவது செஞ்சு கொடுக்கோம், சரி கொஞ்சம் பொறுங்க மருமகள ரவ கிண்டித்தரச் சொல்றேன்.

எடப்பாடி அரசே,
1. தூத்துக்குடி ஸ்டெலைட் எதிர்ப்புப் போராட்டத்தை அரச பயங்கரவாதம் கொண்டு நசுக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிடு!
2. தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு பச்சைப் படுகொலைகள் புரிந்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களுக்குத் துணைபோன தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மீது கொலை வழக்கு பதிவு செய்!
3. நீதி கேட்டு போராடிய இளந்தமிழகம் மற்றும் தமிழ்த் தேச மக்கள் முன்னணி தோழர்களை உடனடியாக விடுதலை செய்!
4. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வழிவகை செய்
5. காவல்துறையின் வன்முறை வெறியாட்டங்களுக்கும் நிகழ்த்தப்பட்ட பச்சை படுகொலைகளுக்கும் பொறுப்பேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே பதவி விலகு!
_______
ராஜசங்கீதன் ஜான்
என் பதிவில் அன்றே சொன்னது— இப்போது இன்று
தூத்துக்குடி பிரச்சினைக்கு ஏன் திருநெல்வேலி மற்றும் கன்யாகுமரி மாவட்டங்களில் இணையம் முடக்கப்படுகிறது? ஏன் மூன்று மாவட்டங்கள் கவனிக்கப்படுகின்றன?
ஏன் சம்பந்தமே இல்லாமல் படகுகள் எரிக்கப்படுகின்றன?
துணை ராணுவத்தை எல்லாம் வரவழைத்திருப்பது வெறும் ஸ்டெர்லைட் பிரச்சினைக்காக மட்டும் அல்ல. உண்மையில் இந்த களேபரம் எல்லாம் சாகர்மாலா திட்டத்துக்காக!

சாகர்மாலா திட்டம் என்றால் என்ன?
கடலோர துறைமுகங்களை வர்த்தக துறைமுகங்களாகவும் இன்னும் புது துறைமுகங்களை உருவாக்குவதும்தான் சாகர்மாலா திட்டம். கடலோரங்களில் பொருளாதார மையங்கள் உருவாக்கப்படும். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அவை தாரை வார்க்கப்படும்.

மீனவன் வேலை இழப்பான். கடல்சார் உள்நாட்டு தொழில்கள் நசியும். பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் தொழில் மையங்களை நிறுவ அந்த கடலோரங்களில் நிலங்களை ஆர்ஜிதம் செய்ய வேண்டியிருக்கும். அதில் மக்கள் நிலங்கள் கையகப்படுத்தப்படும். பூர்விக இடங்களில் இருந்து மக்கள் வெளியேற்றப்படுவார்கள். இவை எல்லாம் எப்படி சாத்தியம்?

துணை ராணுவத்தால் சாத்தியம்.
கூடங்குளம், மீனவ பிரச்சினை என மூன்று மாவட்டங்களில் எழும் எதிர்ப்பையும் ஒரேயடியாக நசுக்கியெறிந்து பன்னாட்டு நிறுவனங்களின் லாபவெறிக்கு துணை நின்று தம் சொந்த மக்களையே அரசுகள் கொன்று குவிக்கும் ஒரு நீண்ட வேலைக்கான அடித்தளம்தான் இப்போது அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
________
Chandra Sekaran
மொதல்ல இந்த சினிமாகாரனுங்கள அடிச்சி தொறத்தி விடணும் …போலீஸ்காரனுங்களுக்கு இந்த அளவுக்கு குருட்டு தைரியம் வர போலீஸ் வேஷம் போட்டு இவனுங்க பண்ண கூமுட்டத்தனம் ஒரு முக்கிய காரணம்!
________
Saraa Subramaniam
மாண்புமிகு முதல்வர் என்றும் பாராமல் #EncounterEdappadi என்பதை ட்விட்டரில் சென்னை ட்ரெண்டிங்கில் முதலிடத்தை நீடிக்கச் செய்வதுதான் உங்கள் அறமா?
144 தடை உத்தரவை மதித்து தானே முன்னுதாரணமாகத் திகழ்பவரும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கூட விளிம்புநிலை மக்கள் போல ஊடகம் மூலம் அறிந்துகொள்ளும் சாமானிய மக்களில் ஒருவராகத் திகழ்பவருமான முதல்வர் பழனிசாமியைக் கழுவியூற்ற எப்படி மனசு வருகிறது உங்களுக்கெல்லாம்..?
_______
Ezhilan M
எப்பேர்பட்ட முதல்வர் தமிழகத்தை ஆளும் காலத்தில் வாழ்கிறோம் என நினைக்கும் போது பெருமை பீறிட கண்களில் ஆனந்த கண்ணீர் வழிகிறது.
செய்தியாளர் : துப்பாக்கிச்சூடு நடந்த இடத்திற்கு இதுவரை ஏன் நீங்கள் செல்லவில்லை ?
முதல்வர் : நான் சட்டத்தை மதிப்பவன், அங்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதால் நான் அங்கு செல்லவில்லை
செய்தியாளர் : ??????
____________
Bharathi Vasan
போராட்டக்களத்தில் தலையில் கல்லடிபட்ட காவலரை நான்கைந்து இளைஞர்கள் பத்திரமாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கின்றனர்.
மக்கள்திரளில் சிக்கி உதைபட்ட ஒருகாவலரையும் மீட்டு – அனுப்பியுள்ளனர்… இளைஞர்கள்.

இந்தப்போராட்ட களேபரங்களைக் கண்டு மயக்க நிலைக்குப்போன ஒரு பெண்காவலரை கூட்டிவந்து குடிக்க தண்ணீர் கொடுத்து – ஆசுவாசப்படுத்தி இருக்கின்றனர் – பகுதியினர்.

தொலைக்காட்சியில் தொடர்ந்து மக்களின் இந்த மனிதநேயம் – மனிதாபிமானம் குறித்தே சிலாகித்துக் கொண்டிருக்கிறார்கள்…
பாவிகள்…

கொடூரமான போலீஸ் படை திட்டமிட்டு தயவுதாட்சண்யமற்ற 10க்கும் மேற்பட்டவர்களையும் சுட்டுக் கொன்றிருக்கிறது.

மனிதாபிமானமும் மனிதநேயமும் சாதாரண மக்களிடம் மட்டுமே இருக்க வேண்டும் என்பதுதான் நியதியா… அதுதான் போற்றுதலுக்குரியதா….
மக்களிடமும் எதிர்தாக்குதலுக்கான ஆயுதம் வரும் வரையில் – இந்தக் கொடூரக் காட்டுமிராண்டிகளின் அதிகாரம் முடிவுக்கு வராது என்பதே எதார்த்தம்.
_________
Raja Prabhu VK
நடந்த கலவரத்தை ஊடகத்தில் பார்த்து தான் தெரிந்து கொண்டேன் – எடப்ஸ்
ஒரு முதல்வர் மாதிரி பேசுயா… எதுக்கு சுட்டீங்கன்னு கேட்டா நான் சென்னைல இருந்தேன் சட்டத்தை மதிக்கணும்ன்னு கதை உட்டுகிட்டு
________
Kappikulam J Prabakar
போலீஸ்: யம்மா குடிக்க கொஞ்சம் தண்ணி கொடுங்களேன்..
tuty அம்மாக்கள்: இந்தாப்பா…. ஏம்ப்பா இப்டிப் போட்டு அடிக்கீங்க..
போலீஸ்: இல்லம்மா, எங்களுக்கே முடியல.. மேலதிகாரி சொல்றாங்க.. வெளியூர்காரங்க வந்திருக்காங்க, அவங்களுக்கு என்னன்னே தெரியலம்மா… யம்மா.. எங்களுக்கு சோறு பொங்கித்தர முடியுமா.. எவ்ளோ வேணாலும் காசு தாரோம்..
tuty அம்மாக்கள் : தம்பி உங்களுக்கு சும்மாவே நான் சோறு போடுவேன். ஆனா நீங்க செஞ்ச காரியத்துக்கு உங்கள பாத்தாலே பத்திக்கிட்டு எரியுது. செத்த பொணத்தக் கூட பாக்க விடாம ஆஸ்பத்திரிய பூட்டி வைச்சிருக்கீங்களே.. உங்களால அத தொறந்து விட முடியுமா..?
போலீஸ்: அதுக்கு விடமாட்டாங்கம்மா, வெறும் பிஸ்கட்டா திங்கிறோம் முடியல, பசியில இருக்கோம் அதாம்மா கேட்டோம்.
tuty அம்மாக்கள்: சரி, நாங்களும் ரெண்டு மூணு நாளா ஒல(உலை) வைக்கல, சின்னப்பிள்ளைகளுக்கு மட்டுந்தான் ஏதாவது செஞ்சு கொடுக்கோம், சரி கொஞ்சம் பொறுங்க மருமகள ரவ கிண்டித்தரச் சொல்றேன்.
காத்திருக்கும் காவலரும், கருணையுள்ள எம் மகளிரும்…- #தூத்துக்குடி

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க