தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடுமாறு போராடிய மக்களை துப்பாக்கிச் சூடு நடத்தி ஒடுக்கி வருகிறது அரசு. ஸ்டெர்லைட் ஆலை மட்டுமல்ல, கதிராமங்கலம், நெடுவாசல், கூடங் குளம், நியமகிரி, போஸ்கோ ஆலை எதிர்ப்புப் போராட்டம், சட்டீஸ்கர், ஜார்கண்ட், கெயில் குழாய் பதிக்க எதிர்ப்பு என தமிழகம் உட்பட நாடெங்கும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன.
போராடும் மக்களை போலீசு – துணை இராணுவப் படை மூலம் ஒடுக்கும் அரசை ஆதரித்து ஊடகங்களும், தனியார்மய ஆதரவு அறிஞர்கள் பெருமக்களும் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.
வெளிநாட்டு என்.ஜி.வோக்கள், கிறித்தவ நிறுவனங்கள், சீனா – ரசிய நாடுகளின் முகவர்கள் இத்தகைய போராட்டங்களை தூண்டி விடுகிறார்களாம். முட்டாள்களாக இருக்கும் மக்கள் இந்த விசமப் பிரச்சாரங்களை நம்புகிறார்களாம். அடுத்து இடதுசாரி தீவிர அமைப்புக்கள், அமைதி வழி போராட்டங்களை மாற்றி போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துமாறு தூண்டுகிறார்களாம். கடைசியில் இத்தகைய சமூகவிரோதிகள் கலவரத்தை நடத்துகிறார்களாம்.
இறுதியில் வன்முறையால் மக்கள் கொல்லப்படுவதோடு நாட்டின் வளர்ச்சியை பாதிக்கிறதாம் இப்போராட்டங்கள். இந்தியாவில் தொழில் முதலீடு வருவது நிற்பதோடு, போராட்டங்களால் மூடப்படும் ஆலைகளால் வேலைவாய்ப்பு குறைந்து பொருளாதாரம் பாதிக்கப்படுகிறதாம்.
ஒடிசாவின் நியமகிரி முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் வரை இந்த வாதங்களை எங்கும் கேட்கலாம்.
அதிக வேலைவாய்ப்புள்ள விவசாயத்தை அழிக்காதே என்று காவிரிக்காகவும், கதிராமங்கலம் – நெடுவாசலிலும் போராடினால் அது வளர்ச்சிக்கான போராட்டமாக இவர்கள் பார்ப்பதில்லை. குடிநீர் கெட்டுப்போய் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்று நியமகிரி, தூத்துக்குடியில் போராடினால் அவை சமூகவிரோதமாம். கேன்சர், பெரும் வியாதிகளால் மரிப்பதை எடுத்துச் சொன்னால் மக்கள் முட்டாள்களாம். இந்த விழிப்புணர்வை பரப்பினால் இடதுசாரி அமைப்புகள் சமூகவிரோதிகளாம்.
உண்மையில் மணல் கொள்ளை, கனிமக் கொள்ளை, கருப்புப் பண மோசடி, பொதுத்துறை வங்கிகளிடம் கடன் மோசடி போன்ற சமூகவிரோதச் செயல்களை கார்ப்பரேட் முதலாளிகளே செய்கிறார்கள். அவர்களிடமிருந்து பெரும் பணத்தை நன்கொடையாக பெறும் பாஜக, காங்கிரசு மற்றும் உள்ளூர் பெரிய கட்சிகள் அந்த முதலாளிகளுக்கு நேரடியாக அடியாள் வேலை பார்க்கின்றன.
இப்படித்தான் நாடு முழுவதும் நடைபெறும் போராட்டங்களை அரச பயங்கரவாதத்தால் ஒடுக்குகிறார்கள். ஆனால், அந்த அடக்குமுறைகளுக்கு அஞ்சமாட்டோம் என தூத்துக்குடி முதல் நியமகிரி வரை மக்கள் வரலாற்றை மாற்றி வருகிறார்கள்.
அந்தப் போராட்ட வரலாற்றின் பக்கங்களை தொகுத்துத் தருகிறது இந்தத் தொகுப்பு!
தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.
தூத்துக்குடி முதல் நியமகிரி வரை : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! – புதிய கலாச்சாரம் ஜுன் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Payumoney மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.
(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)
தூத்துக்குடி – நியமகிரி : வளர்ச்சியின் பெயரில் கொல்லப்படும் மக்கள் ! நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :
- தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டம்: வினவு செய்தியாளர்களின் நேரடி அனுபவங்கள்!
- மரணம் துரத்திய அந்த நள்ளிரவில் …
- நெடுவாசல் சிறப்புக் கட்டுரை : சங்கிலித் திருடர்கள் பேசும் வளர்ச்சி!
- மீனவர்களை சுனாமியாக அழிக்கவரும் மேலாண்மைச் சட்டம்!
- போஸ்கோவின் அடியாளாக இந்திய அரசு!
- இந்திய நியூட்ரினோ ஆய்வுக்கூடம் – மேட் இன் அமெரிக்கா!
- நீதிமன்றம், அரசு ஆதரவுடன் ஸ்டெர்லைட் ஆலை திறப்பு!
- கூடங்குளம் போராட்டம்: அனுபவங்களும் படிப்பினைகளும்!
- சத்தீஸ்கர் தாக்குதல் : ‘நடுநிலையாளர்’களின் பசப்பல்!
- ஹைட்ரோ கார்பன் திட்டம் : பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாய் விரிக்கும் மோடி!
- சுற்றுச் சூழல் : மோடி பாணி வளர்ச்சியின் முதல் பலி!
- தமிழகத்தின் மீது இந்திய அரசு தொடுத்திருக்கும் போர்!
பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00
ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400
ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800
இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த | ||
---|---|---|
Paypal மூலம்(வெளிநாடு) | $27 | |
Payumoney மூலம்(உள்நாடு) | ரூ.400 |
மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கண்ணையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,
KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.
சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.
அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.
தொலைபேசி
99411 75876, 97100 82506
மின்னஞ்சல்
vinavu@gmail.com
அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.
மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.
திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !
_____________
முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்