• ” மாணவர்கள் – இளைஞர்களை சீரழிக்கும் குட்கா போதைக் கலாச்சாரத்தை துடைத்தெறிவோம்.
  • விவசாயம், கல்வி, மருத்துவம், வேலைவாய்ப்பை ஒழித்து நாட்டையே கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கும் மோடி அரசின் அநீதிக்கெதிராக பகத்சிங் வழியில் மாணவர் சங்கமாக ஒன்றிணைவோம் ! ”

என்ற உறுதியேற்பு நிகழ்வாக, ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளி தோழர் பகத்சிங் பிறந்தநாளை கடைபிடித்தனர், புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியினர்.

* சென்னையில் மதுரவாயல் ரேஷன் கடை பேருந்து நிறுத்தம் அருகில் 29.9.2018  அன்று காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், இசை சமர் பறை இசைக்குழுவின் தப்பாட்டம் நிகழ்த்தப்பட்டது. மதுரவாயல் பிள்ளையார் கோவில் பகுதி செயலாளர் தோழர் செந்தில் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சென்னை மாநகர செயலாளர் தோழர் சாரதி கொடியேற்றி, உரையாற்றினார். இறுதியில் இனிப்பு வழங்கினர்.

இதனைத்தொடர்ந்து, அன்று மாலை மதுரவாயல் இ.பி. அலுவலகம் அருகில் தெருமுனைக்கூட்டம் 6.30 மணியளவில் இசை சமர் பறை இசைக்குழுவின் தப்பாட்டத்துடன் தொடங்கியது. போதையில் கலாச்சாரத்தில் சீரழிக்கப்படும் இளம் தலைமுறை என்ற தலைப்பில் நாடகம் நடத்தப்பட்டது. ம.க.இ.க பாடல்களைத் தோழர்கள் பாடினர். இக்கூட்டத்தில் பகுதி மக்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.

* சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடலூர் மாவட்ட பு.மா.இ.மு. சார்பாக ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளி பகத்சிங்கின் 111-வது பிறந்தநாளை முன்னிட்டு மாணவ மாணவிகளிடம் பகத்சிங்கை பற்றியும், அவருடைய தியாகத்தை பற்றியும் மாணவர்களிடம் எடுத்துரைத்தனர்.

* விருத்தாசலம் பகுதி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில், விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி மணவர்கள் மத்தியில் பகத்சிங் படத்தை ஏந்தி, அவர் வழியில் பயணிக்க உறுதியேற்று பிறந்த நாள் விழாவைக் கொண்டாடினர்.

* குடந்தையில், தோழர் பகத்சிங் பிறந்தநாளை முன்னிட்டு, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணியின் சார்பில், குடந்தை அரசினர் கலை கல்லூரி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கும் இனிப்பு வழங்கி பகத்சிங் பிறந்தநாளைக் கொண்டாடினர். பகத்சிங்கின் தியாகத்தையும், விடுதலைப் போராட்டத்தில் அவரது பங்களிப்பையும் கூறி, இன்றைய சூழலில் நமக்கு ஏன் பகத்சிங் தேவைப்படுகிறார் என்பதை மாணவர்களிடையே விளக்கி உரையாற்றினர்.

படிக்க:
♦ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளிகள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு நினைவை நெஞ்சில் ஏந்துவோம் !
பகத்சிங் – புதிய சிந்தனையின் பிறப்பு

தகவல்:

தமிழ்நாடு.