திருவண்ணாமலை நகருக்கு அருகில் உள்ள அய்யம்பாளையம் கிராமத்தில் வசித்துவரும் குடுகுடுப்பைச் சமூகத்தைச் சேர்ந்த சுமார் 700 பேர் கரோனா கால ஊரடங்கால் வருவாய்க்கு வழியின்றி பசியால் வாடுவதை அறிந்து அவர்களுக்கு உதவிகள் செய்யும் பணியை மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் மேற்கொண்டது.

18.04.2020 அன்று நேரில் சென்று உண்மை நிலவரத்தை அறிந்து அவர்களுக்கு உதவி செய்யுமாறு சமூக தன்னார்வலர்களுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் அம்மக்களின் தேவை குறித்து காணொளி உள்ளிட்ட விவரங்களோடு சமூகவலைதயங்களில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. நேரில் சென்று உதவமுடியவில்லை என்றால் பொருளாகவோ, பணமாகவோ தருமாறு பொதுமக்களிடம் கோரப்படது. அதன் அடிப்படையில் பலர் பொருளாகவும், பணமாகவும் கொடுத்து உதவினர்.

படிக்க:
♦ நமது இந்தியக் கல்வி முறையின் கோரமுகம் !
♦ லாக்டவுன் : தொழிலாளர்களின் ஊதியத்தை முழுங்கிய முதலாளிகள் !

19.04.2020 அன்று அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்பட்டது. இந்த உதவி குறித்து சமூகவலைதளங்களில் செய்திகள் வெளியான பிறகு வழக்கறிஞர் பாசறை பாபு மூலம் தடை சாமிகள் அசிரமத்தினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கி வருகின்றனர். திருவண்ணாமலை ஒன்றிய தி.மு.க சார்பிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. நகரின் மிக அருகில் வசிக்கும் மக்களுக்குக்கூட மாவட்ட நிர்வாகம் உதவ முன்வராத போது, மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம் முயற்சி எடுத்து பழங்குடி மக்களின் பசியைப் போக்கி உள்ளனர்.

தகவல் :
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்
திருவண்ணாமலை.

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க