தமிழ்நாடு வெள்ளப் பாதிப்பும், நிவாரணத்திற்கான மக்களின் போராட்டமும்
கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கடந்த நவம்பர் 30-ஆம் தேதி கரையைக் கடந்த பெஞ்சல் புயலினால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் வரலாறு காணாத கனமழை பெய்து பல ஊர்கள் வெள்ளத்தால் பெரிதும் பாதிப்புக்குள்ளானது.
குறிப்பாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை போன்ற மாவட்டங்கள் மிகப்பெரிய இழப்புகளை சந்தித்தன. அல்ஹம்துலில்லாஹ் (Alhamdulillah) மலையின் மேல் ஏற்பட்ட மன்சரிவில் 5 சிறுமிகள் உள்பட 7 பேர் உயிரிழந்த நிகழ்வானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் புயலினால் ஏற்பட்டவெள்ளத்தினால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தி. மு. க அரசானது முன்னறிவிப்பின்றி சாத்தனூர் அணையை திறந்துவிட்டதால் மக்களின் வீடுகளுக்குள் புகுந்ததுடன் ஆடு, மாடுகளையும் அடித்துச் சென்றது. எனவே பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக அரசானது வெள்ள நிவாரணம் கணக்கிடப்பட்டு ரேஷன் அட்டைக்கு 2000 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தது.
ஆனால் பல இடங்களில் இன்று வரை நிவாரணத் தொகை வழங்கப்படாததால் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.