இந்திய ஏற்றுமதிப் பொருட்களுக்கு 50% வரி: அமெரிக்காவுக்கு நாட்டை அடிமையாக்காதே! | துண்டறிக்கை
செப்டம்பர் 5 - வ.உ.சி. பிறந்த நாளில் | தமிழ்நாடு-புதுச்சேரி முழுவதும் ஆர்ப்பாட்டம் - தெருமுனைக் கூட்டங்கள்
பொள்ளாச்சியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: குற்றவாளிகளை பாதுகாக்கும் தி.மு.க. அரசு!
பள்ளிகளில் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்துவதை விடுத்து பள்ளிகளை கார்ப்பரேட்மயமாக்குவதில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது தி.மு.க. அரசு. இதுதான் தி.மு.க. அரசின் சமூக நீதியா?
மரபணு திருத்தப்பட்ட நெல் ரகங்கள்: பாரம்பரிய நெல் விதைகளை அழிக்கும் சதி!
கார்ப்பரேட் பகாசுர நிறுவனங்கள் இந்திய விவசாயத்தையும் விவசாயிகளையும் காவு வாங்கும் வகையில் ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தியுள்ள மரபணு திருத்தப்பட்ட நெல் இரகங்களை உடனடியாக திரும்பப்பெற வேண்டும்.
“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படத்திற்கு தடை: போலீசு அராஜகம்
இந்து முன்னணி, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் பாசிச கும்பலுக்கு எதிராக எவ்வித ஆவணமும் புதிதாக உருவாகி விடக்கூடாது என்பதில் மதுரை போலீசு மிகத் தீவிரமாக இருப்பதையே இந்நிகழ்வு எடுத்துக்காட்டுகிறது.
“பரமசிவமும் பாஷாவும்” ஆவணப்படம் திரையிடத் தடை.. போராட்டம் நீள்கிறது!
இந்த ஆவணப்படம் வெளியே வந்தால் சங்கிகள் மற்றும் அதிகார வர்க்கத்தின் கூட்டுச்சதி அம்பலமாகிவிடும் என்ற காரணத்தினாலேயே ஆவணப்பட திரையிடல் தடுக்கப்பட்டுள்ளது.
அசாம்: பழங்குடியினரின் மாவட்டத்தை கார்ப்பரேட்டுக்கு தாரைவார்க்கும் பா.ஜ.க. அரசு
அசாம் மாநிலத்தின் திமா ஹசாவோ மாவட்டத்தில் பழங்குடியின மக்களை விரட்டியடித்துவிட்டு சுரங்கம் அமைப்பதற்கு “மகாபால் சிமெண்ட்” எனும் கார்ப்பரேட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
மாறுபட்ட தீர்ப்புகள்: திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க அனுமதியோம்! | கருத்தரங்கு | சென்னை
நாள்: 31.08.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: மாலை 5 மணி | இடம்: மணியம்மை அரங்கம், பெரியார் திடல், சென்னை.
இஸ்ரேலின் வதை முகாமாக்கப்படும் காசா!
ஜெர்மனியில் பாசிச ஹிட்லர் யூதர்களை வதை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ததைப் போன்று, தற்போது பாசிஸ்ட் நெதன்யாகு தலைமையிலான இஸ்ரேல் அரசு காசாவின் பாலஸ்தீன மக்களை முகாம்களில் அடைத்து படுகொலை செய்ய திட்டமிட்டுள்ளது.
9-வது நாளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் போராட்டம்: வஞ்சிக்கும் தி.மு.க அரசு!
தாங்கள் ஆட்சிக்கு வந்தால் போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு பழைய ஒய்வூதியத் திட்டம் செயல்படுத்தபடும் என்று தி.மு.க. வாக்குறுதி அளித்தது. ஆனால், ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளைக் கடந்தும் அவர்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல் வஞ்சித்து வருகிறது.
பரமசிவமும் பாஷாவும் | ஆவணப்படம் | டீசர் | ம.க.இ.க
பரமசிவமும் பாஷாவும் | ஆவணப்படம் | டீசர் | ம.க.இ.க
https://youtu.be/ODWCxTEyRuE
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
***
ஆவணப்படம் திரையிடல்
இடம்: பிரசிடன்ஸி ஹோட்டல், யானைக்கல், மதுரை.
நாள்: ஆகஸ்ட் 25, 2025 (திங்கட்கிழமை) | மாலை 6 மணிக்கு
அனைவரும் வாரீர்!!
இந்நிகழ்வு...
ஒடுக்கப்பட்டோரின் கல்வி உரிமையைப் பறிக்கும் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம்!
அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக நிர்வாகம் இட ஒதுக்கீடு அமல்படுத்தப்பட்ட 2021-ஆம் ஆண்டு தவிர்த்து, கடந்த நான்கு ஆண்டுகளாகவே, 7.5 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் கல்வி பயிலக்கூடிய மாணவர்களுக்கு விடுதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது.
தமிழ்நாட்டில் 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்: செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றச்சாட்டு!
பீகாரில் “சிறப்பு தீவிர மறு ஆய்வு” மூலம் தேர்தல் ஆணையம் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியுள்ளது. இந்நிலையில், தமிழ்நாட்டிலும் கடந்த தேர்தல்களின் போது 30 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டிருப்பதாக சமூக செயற்பாட்டாளர் தீஸ்தா செதல்வாட் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஊடகவியலாளர்களைக் கொன்று குவிக்கும் இனவெறி இஸ்ரேல்
ஆகஸ்ட் 10-ஆம் தேதியன்று இரவு காசாவின் அல் ஷிபா மருத்துவமனைக்கு வெளியே அமைக்கப்பட்டிருந்த பத்திரிகையாளர்கள் கூடாரத்தின் மீது இஸ்ரேல் டிரோன் தாக்குதல் நடத்தி 7 பத்திரிகையாளர்களைப் படுகொலை செய்துள்ளது.
குஜராத்: மாணவர்கள் மனதில் நஞ்சை விதைக்கும் காவி கும்பல்
‘சுதந்திர தின’ கொண்டாட்டத்தில் அரங்கேற்றப்பட்ட நாடகத்தில், இஸ்லாமியர்கள் அணியும் பர்தா உடையணிந்த மாணவிகள் பயங்கரவாதிகள் கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்டுள்ளனர்.
தங்கச்சிமடம் நாட்டுப் படகு மீனவர்களின் தொடர் போராட்டம் வெல்லட்டும்!
ஒன்றிய மோடி அரசோ இலங்கையில் தொழில் நடத்தும் அம்பானி அதானிகளின் கைப்பாவையாக இருந்து கொண்டு மீனவர்களைத் தொடர்ச்சியாகப் புறக்கணித்து வருகிறது.

























