Tuesday, June 30, 2026
முகப்பு பதிவு பக்கம் 236

தனியார்மயக் கொள்கையால் புழுத்து நாறும் இந்திய மருத்துவக் கட்டமைப்பு !!

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் வார்த்தைகளில் வடிக்க முடியாத அளவிற்கான பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது. போதிய அளவு படுக்கைகள் இல்லாதது, ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துகள் தட்டுப்பாடு, கள்ளச் சந்தையில் மருந்துகள் விற்கப்படுவது, இறந்தவர்களின் சடலங்களை எரிக்கக் கூட வரிசையில் நிற்க வேண்டியிருந்த அவலநிலை இவையெல்லாம் இந்த கொரோனா வைரஸின் இரண்டாம் அலையால் ஒரே நாளில் நடந்துவிடவில்லை.

அறிவியலாளர்கள் சொன்ன முன்னெச்சரிக்கைகளை மோடி அரசு அலட்சியம் செய்தது இந்த இரண்டாம் அலைப் பரவலுக்கு காரணமென்றாலும், மரண விகிதம் அதிகரித்ததற்கு முழுக்க முழுக்க இந்திய மருத்துவ கட்டமைப்பை தனியார்மயப்படுத்தியதுதான் அடிப்படைக் காரணம் என்பது மறுக்க முடியாத உண்மை.

படிக்க :
♦ கொரோனா கால இந்தியா : மோடியின் எரியும் பிணக்காடு || ராணா அய்யூப் || கை.அறிவழகன்
♦ கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

கடந்த 30 ஆண்டுகளாக பொது சுகாதாரத்துறையை நிதியில்லாமல் கைகழுவி விட்டதும், மருத்துவத் துறையை தனியாரின் லாப வேட்கைக்கு திறந்துவிட்டதன் விளைவுதான் இந்த அவலநிலைக்கு முழுமுதற் காரணம் என்பதை ஆதாரங்களுடன் நம்மால் நிறுவ முடியும்.

இந்திய பொது சுகாதாரத்துறையின் நசிவுக்கு, தனியார்மயத்தை ஊக்குவிக்கும் வகையில் கொள்கைகள் வடிவமைக்கப்பட்டதும், பொது சுகாதாரத்துறைக்கு போதிய நிதி ஒதுக்காததும், அதனை புறக்கணித்ததும்தான் அடிப்படைக் காரணம்.

மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை :

கொரோனா நோய்த் தொற்று இந்தியாவின் மருத்துவக் கட்டமைப்பின் அவல நிலையை திரை கிழித்துக் காட்டியுள்ளது. படுக்கைகள், ICU வார்டுகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், உயிர் காக்கும் மருந்துகள் இவற்றின் பற்றாக்குறைகள் ஒருபக்கம் இருக்கும் போது, இன்னொரு பக்கம் போதிய மருத்துவ ஊழியர்கள் இல்லாத நிலை முகத்தில் அறையும் எதார்த்தமாக நம் முன் நிற்கிறது. “படுக்கைகள் நோயாளிகள் குணப்படுத்துவதில்லை, மருத்துவர்கள்தான் குணப்படுத்துகிறார்கள்”.

கொரோனா பெருந்தொற்றுக்கான இந்தியாவின் எதிர்வினையை பெருமளவில் முடக்கிப் போட்டிருக்கிறது, மருத்துவ ஊழியர்களின் பற்றாக்குறை. இந்தியாவில் 10,000 நபர்களுக்கு 38 மருத்துவப் பணியாளர்கள் தான் இருக்கிறார்கள். உலக சுகாதார நிறுவனத்தின் வரைவளவு 10,000 நபர்களுக்கு குறைந்தபட்சம் 45 மருத்துவப் பணியாளர்கள் இருக்க வேண்டுமென்று வலியுறுத்துகிறது.

உலக அளவில் இந்தியாவில் அதிகமாக மருத்துவக் கல்லூரிகள் இருக்கிறது, அதே நேரத்தில் உலக அளவில் மக்கள் தொகை அதிகமாக இருக்கும் நாடுகளின் வரிசையில் இந்தியா 2-வது இடத்தில் இருக்கிறது.

1.3 பில்லியன் மக்கள் தொகையிருக்கும் இந்தியாவில் மருத்துவர் – நோயாளி விகிதம் பாதாளத்தில் இருக்கிறது. 10,000 நபர்களுக்கு வெறும் 9 மருத்துவர்கள்தான் இருக்கிறார்கள்.

இந்தியாவில் 3.2 மில்லியன் செவிலியர்கள் இருக்கிறார்கள். ஆண்டுதோறும் 5,085 நிறுவனங்களின் இருந்து 3,35,000 பயிற்சி பெற்ற செவிலியர்கள் மருத்துவத் துறையில் நுழைகிறார்கள். இருப்பினும் 10,000 நபர்களுக்கு வெறும் 15 செவிலியர்கள்தான் இருக்கிறார்கள். 10,000 நபர்களுக்கு 5.3 படுக்கைகள் மட்டுமே இந்தியாவில் உள்ளது.

படிக்க :
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
♦ கொரோனா அவலத்தின் உச்சத்தில் மக்கள் ! அதிகாரத்தைப் பிடிக்கும் வெறியில் மோடி !

தொற்றை எதிர்கொள்ள 2,65,000 மருத்துவப் பணியாளர்களை மாநில அளவிலான ஒப்பந்த அடிப்படையில் சேர்த்துக் கொள்ள அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. இதனடிப்படையில் மாநில அரசுகள் பணியிடங்களை நிரப்ப முடிவு செய்ததுதான். ஆனால், பீகார் மாநிலத்தில் 9,000 செவிலியர்கள் தேவைப்படும் நிலையில் 5,000 பணியிடங்கள்தான் நிரப்பப்பட்டது. டெல்லி அரசாங்கம் நான்காம் ஆண்டு ஐந்தாமாண்டு பயிலும் மருத்துவ மாணவர்களை  கொரோனா சேவையில் ஈடுபடுத்தி அவர்களுக்கு தினம் ரூ.1,000 – ரூ.2,000 வரை மதிப்பூதியம் கொடுக்க திட்டமிட்டிருக்கிறது.

டெல்லி புனித ஸ்டீபன் மருத்துவமனையின் முன்னாள் இயக்குனர், டாக்டர். மேத்திவ் வர்கீஸ் கூறுகையில், “வெண்டீலேட்டர்  படுக்கைகளை பொருத்தவரை சிக்கலான விசயம் என்னவென்றால், அதை இயக்குவதற்கான ஊழியர்கள்தான். எல்லா மருத்துவர்களும் அதை இயக்க முடியாது. எனக்கும் வெண்டீலேட்டரை எப்படி இயக்குவதென்று தெரியாது. ஒரு மருத்துவமனை  வெண்டீலேட்டர்களை வாங்கலாம் ஆனால், அதை இயக்குவதற்கான ஊழியர்கள் இல்லாமல் இருக்கிறார்கள்.”

000

மருத்துவப் பொருட்களுக்கான பற்றாக்குறை :

எந்த சமூகத்திலும் பற்றாக்குறை என்பது சாதாரணமான விசயம்தான். ஆனால், இந்தியாவில் அடிப்படை மருத்துவப் பொருட்களுக்கான பற்றாக்குறை என்பது முறைக்கேடான ஒன்றாகவே இருக்க முடியும்.

இந்தியா உலகின் மருந்தகம் என்னும் பெருமைக்குரியதாக திகழ்கிறது. ஏனெனில், இந்தியாவின் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மிகத் திறமையுடன் நேர்மாறாக்க பொறியியல் (Reverse Engineering) மூலமாக பொதுவான மருந்துகளை தயாரிக்கின்றன. உலகின் மூன்றாவது பெரிய மருந்துப் பொருட்கள் தயாரிக்கும் நாடு இந்தியா. உலகின் தடுப்பூசி தயாரிப்பில் இந்தியாவின் பங்கு 60 சதவீதமாக இருக்கிறது. அமெரிக்க மருந்து சந்தைக்காக மாத்திரைகளை தயாரிப்பதில் இந்தியா மிகப்பெரிய தயாரிப்பாளராக இருக்கிறது. ஆனால், இவையெதுவும் கொரோனா காலத்தில் இந்தியாவை காக்கவில்லை.

கொரோனா தடுப்பூசி இந்திய மக்களுக்கு அது தேவைப்படும் அளவிலும் வேகத்திலும் கிடைக்கவில்லை.

தற்போது இந்தியாவில் இரண்டு தனியார் நிறுவனங்களான Serum Institute of India மற்றும் Bharat Biotech மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு நிறுவனங்கள் தான் இந்தியாவின் உள்நாட்டு தடுப்பூசி கிராக்கியான மாதத்திற்கு 90 மில்லியன் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. ஆனால், இந்த இரண்டு நிறுவனங்களால் மாதத்திற்கு 70 மில்லியன் தடுப்பூசிகள் மட்டுமே தயாரிக்க முடியும். இது தேவைப்படும் தடுப்பூசிகள் விட மிகக் குறைந்தது என்பது தெளிவு.

மோடி அரசு இந்தியாவின் அரசு தடுப்பூசி நிறுவனங்களையே கண்டுகொள்ளாமல் விட்டிருப்பதை Down to Earth என்ற பத்திரிக்கை அம்பலப்படுத்தியுள்ளது. Central Research Institute (CRI), BCG Vaccine Laboratory (BCGVL), Pasteur Institute of India (PII), HLL Biotech, Bharat Immunological and Biologicals Corporation Limited, Haffkine Bio-Pharmaceutical Corporation Limited, Human Biological Institute, Integrated Vaccine Complex in Tamilnadu. இந்த நிறுவனங்களையும், அவற்றின் திறன் மற்றும் அனுபவங்களையும் புறக்கணித்துவிட்டு இரண்டு தனியார் கார்ப்பரேட்களுக்கு மட்டுமே தடுப்பூசி தயாரிக்கும் உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 16-ஆம் தேதி மூன்று பொதுத்துறை நிறுவனங்களை தடுப்பூசி தயாரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்போவதாக அறிவித்தது மத்திய அரசு. ஆனால், தடுப்பூசி தயாரிப்பில் மிகுந்த நிபுணத்துவமும், அதிக கொள்திறனும் கொண்ட நிறுவனங்கள் இந்த பட்டியலில் இடம் பெறவில்லை. இதில் முக்கிய நிறுவனமான Integrated Vaccine Complex in Tamilnadu இடம்பெறவில்லை.

கடந்த மார்ச் 17-ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்ரே மோடியிடம் காணொளி காட்சி உரையாடலின் போது, மும்பையிலுள்ள அரசு நிறுவனவமான Haffkine Institute-க்கு Covaxin தடுப்பூசியில் தொழில்நுட்பத்தை மாற்றிக் கொடுக்கச் சொல்லி வேண்டுகோள் விடுதார். ஆனால், அது குறித்து இன்னும் மத்திய அரசு முடிவு செய்யவில்லை.

அமெரிக்காவும், பிரிட்டனும் தாங்கள் தயாரிக்கும் தடுப்பூசிகளை தங்கள் உள்நாட்டு தேவைக்கு மட்டும் பயன்படுத்துகிறார்கள். ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் அவர்களுக்குள்ளே பகிர்ந்துக் கொள்கிறார்கள். ஆனால், இந்தியாவும் சீனாவும் மட்டுமே தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார்கள். இதில் சீனாவின் நிலைமை சீராகவே இருக்கிறது. ஆனால், இந்தியாவின் நிலை மிக மோசமாக இருக்குபோதும் ஏற்றுமதி நடக்கிறது.

கடந்த 6 மாத காலத்தில் 11 லட்சம் ரெம்டெசிவிர் (Remdesivir) என்னும் வைரஸ் எதிர்ப்பு மருந்தை 100 நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இந்த ரெம்டெசிவிர் மருந்தையும் அதன் முக்கிய மருத்துவ உள்ளடக்கப் பொருட்களையும் (Active Pharmaceutical Ingredients) ஏற்றுமதி செய்ய மத்திய அரசு தடைவிதித்துள்ள போதிலும் இந்த ஏற்றுமதி நடந்திருக்கிறது.

இந்தியாவில் கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததை காரணமாக கொண்டு இந்த ரெம்டெசிவிர் மருந்து ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கிறது. இதே கொரோனா தொற்று குறைந்ததன்  காரணாமாக சந்தையின் கிராக்கி குறைந்து விட்டது என்று சொல்லி, ரெம்டெசிவிர் மருந்து தயாரிப்பை நிறுவனங்கள் சுறுக்கிக் கொண்டனர். இதன் விளைவாகவே தற்போதைய தட்டுப்பாடு.

கடந்த நவம்பர் மாதம் உலக சுகாதார நிறுவனம் கூறுகையில், “இந்த ரெம்டெசிவிர் மருந்து கொரோனா நோயாளிகளின் உயிரை காப்பாற்றியதாகவோ மிகுந்த தொற்று பாதிப்புடையவர்களின் நிலையை மேம்படுத்தியதாகவோ எந்த ஆதாரமும் இல்லை” என்கிறது. இருந்தாலும், இதைப்பற்றிய தெளிவை மக்களுக்கு ஏற்படுத்தாமல், இந்த மருந்துக்காக மக்கள் உயிரை பணயம் வைத்து கூட்ட நெரிசலில் காத்துக் கிடக்க விட்டிருக்கிறது அரசு.

ஆக்சிஜன் பற்றாக்குறை :

வளர்ந்த நாடுகளின் சுகாதார அமைப்புகள் கூட ஸ்தம்பித்துப் போயிவிட்டது என்பது உண்மைதான். ஆனால், அவர்கள் ஆக்சிஜன் இல்லாமல் நோயிகளை கைவிடவில்லை. அங்கே பெரிய மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தயாரிக்கும் நிலையம் உள்ளது. அவர்கள் மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவதிப்பட்டார்கள், காரணம் சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் தொழிற்துறைகளையெல்லாம் வளரும் பிந்தங்கிய நாடுகளுக்கு மாற்றிவிட்டார்கள். சீனா எப்படி இந்த சூழலை கடந்து வந்தது? சீனா வெண்டீலேட்டர்கள் இல்லாமல், மருத்துவப் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் அவதிப்படவில்லை. அவர்கள் எந்த நோயாளியையும் படுக்கையில்லை என்று திருப்பி அனுப்பவில்லை.

இந்தியாவின் இரும்பு மற்றும் பிற உலோகங்களை தயாரிக்கும் தொழிற்துறைகள் தான் அதிகமாக ஆக்சிஜனை தயாரிக்கின்றன. ஒன்றிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ள படி இந்தியாவின் ஒருநாள் ஆக்சிஜன் தயாரிப்பு அளவு 7,287 மெகா டன்னாக இருக்கிறது. மொத்த இருப்பாக 50,000 மெகா டன் ஆக்சிஜன் இருக்கிறது. இவை ஒரு நாளுக்கு தேவைப்படும் அளவான 3,842 மெகா டன்னை விட அதிகமாகும். ஆனால், அவை பெரும்பாலும் அதன் சொந்த தேவைக்காக மட்டுமே தயாரிக்கப் படுகின்றன.

இப்போது பிரச்சனை என்னவென்றால் இந்த தயாரிக்கப்பட்ட ஆக்சிசனை நாடு முழுவதும் தேவைப்படும் மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைப்பதுதான். அதற்கு தேவையான Cryogenic டாங்குகள் போதுமானதாக இல்லை. இந்தியா முழுவதும் வெறும் 1,170 Cryogenic டாங்குகள் தான் இருக்கிறது. ஆக்சிஜனை மருத்துவமனைகளுக்கு கொண்டு சேர்க்கும் தளவாடங்கள் இல்லாமைதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது.

இந்த பிரச்சனைகளை எல்லாம் சரி செய்வது மத்திய, மாநில அரசின் பொறுப்பு. இவற்றை தீர்ப்பதற்கு பல முயற்சிகளை எடுத்து வருவதுபோல் செய்யும் நடவடிக்கைகள் பிரச்சனையை தீர்ப்பதற்கு அல்ல, அரசின் தோல்வியை மறைப்பதற்கும், தன் மீது எந்த குற்றமும் இல்லை என்பதை நியாப்படுத்தி கொள்வவதற்கும் ஒரு சில செயல்பாடுகளை செய்வதுபோல் ஊடகத்தில் ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

000

National Sample Survey புள்ளி விவரங்களின் படி, 2001-02 முதல் 2010-11 வரையிலான ஆண்டுகளில் தனிநபர் நடத்தும் மருத்துவமனைகளின் எண்ணிக்கை குறைந்து வருவதும், சிறு, குறு, மிகப்பெரிய நிறுவனமயமான மருத்துவமனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதும், அதிலும் மிகப்பெரிய மருத்துவமனைகள் மிக விரைவாக வளர்ந்து வருவதும் தெரிய வந்துள்ளது. இதில் தனியாரின் பங்கு மிக அதிகமானது.  இந்திய நகரங்களில் 95 சதவீதம் மருத்துவமனைகள் அதாவது 13,413 மருத்துவமனைகள் தனியாருடையவை தான்.

இந்தியாவின் மொத்த மருத்துவ சந்தையின் மதிப்பு 100 பில்லியன் டாலரில் (2015) இருந்து ஐந்தாண்டுகளில் அதாவது 2020-ஆம் ஆண்டில் 280 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் அதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 22.9 சதவீதமாக இருக்குமென்றும் கணிக்கப்பட்டது. இந்த சந்தை வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் லாபத்தை பெருக்கிக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்கள் போட்டி போட்டன. உலகளாவிய பங்கு நிறுவனங்கள் இந்திய மருத்துவமனைகளின் பங்குகளை கைப்பற்றியிருக்கின்றன. இதன் மூலமாக மக்களின் சுகாதாரத்தை காட்டிலும் இந்த பன்னாட்டு விகிதப்பங்கு நிறுவனங்கள் லாபமே, இந்திய மருத்துவக் கட்டமைப்பின் நோக்கமாக மாற்றப்பட்டது.

இந்திய தனியார் மருத்துவமனைகள் உடைமை என்பது இனிமேலும், மருத்துவத் துறை சார்ந்தவர்களின் கைகளிலும், உள்ளூர் முதலாளிகளின் கைகளிலும் இல்லை. அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்திய மருத்துவமனைகளின் பங்குகளை கைப்பற்றிக் கொண்டிருக்கின்றன. ஒரு அந்நிய நாட்டு நிறுவனம் அப்பல்லோ (Apollo) நிறுவனத்தின் 45 சதவீத பங்குகளை வைத்திருக்கிறது.

ஒரு சில மிகப்பெரிய நிறுவனங்கள் இந்தியாவின் சிறு, குறு நகரங்களில் வாழும் நடுத்தர வர்க்கத்தின் வாங்கும் சக்தியை பயன்படுத்தி அதன் கிளைகளை பரப்பி வருகிறது. மருத்துவத்துறையில் ஆதிக்கம் செலுத்தும் இந்த நிறுவனங்கள் கார்ப்பரேட் பாணியிலான நிர்வாக முறைகளை புகுத்தி சிறு, குறு கிளினிக்குகளையும், ஒற்றையாக பணிபுரியும் மருத்துவர்களையும் தங்கள் வலைப்பின்னலுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகின்றனர். HCL போன்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களும் மருத்துவத்துறையில் கால்பதித்துள்ளன. பெரும் கார்ப்பரேட் மருத்துவமனிகளான Apollo, Fortis போன்றவற்றிற்கு  நோயாளிகளை பரிந்துரைப்பதன் வழியாக வருவாய் ஈட்டுகிறது இந்நிறுவனம்.

மருத்துவத்துறை என்பது வியாபார ரீதியாக நெருக்கடிகளற்ற லாபம் கொழிக்கும் துறையாக பார்க்கப்படுகிறது. சர்வதேச நிதி நிறுவனங்கள், வளர்ச்சி முகமைகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தியாவின் மருத்துவத்துறையில் தனியார் நிறுவனங்களின் வளர்ச்சிக்கு உதவி செய்து வருகின்றனர்.

சர்வதேச நிதி கழகத்தின் (International Finance Corporation) அலுவலர் கூறுகையில், “மருத்துவத்துறை மிக முக்கியமான உலகளாவிய லாபம் கொழிக்கும் துறையாக வளர்ந்து வருகிறது. பெரும்பாலான நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட வேகமாக வளர்ந்து வருகிறது. உலகப் பொருளாதாரம் சர்வதேச நிதி நெருக்கடியில் இருந்து மீண்டவுடன் மருத்துவ சந்தையின் வளர்ச்சிக்கு ஏற்றாப்போல் தனியார் மருத்துவத் துறையை விரிவாக்க வேண்டும்” என்கிறார்.

தனியார்மயத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தோடுதான் இந்தியாவின் பொதுத்துறை மருத்துவக் கட்டமைப்பு திட்டமிட்டே சீர்குலைக்கப்பட்டது. புதிய தாராளவாதக் கொள்கைகளின்படி மருத்துவம், சமூகத்திற்கான சேவையாக மக்களின் அடிப்படை உரிமையாக பார்க்காமல் கடைச்சரக்காக மட்டுமே பார்க்கப்பட்டது. அரசு நிதி பெருமளவில் காப்பீட்டுத் திட்டம் என்ற பெயரில் தனியாருக்கு திருப்பிவிடப்பட்டது.

தனியார் மருத்துவத்துறை என்பது காப்பீட்டுத் திட்டத்தை பரவலாக்கியதன் மூலமாக ஏழை – நடுத்தர வர்க்கத்தையும் தனியார் மருத்துவ கட்டமைப்பின் கீழ் கொண்டு வந்திருக்கிறது. இந்த பெருந்தொற்று நோய்க்கு மத்தியில் மாநில அரசுகள் கூட மருத்துவ காப்பீட்டை பிரச்சாரம் செய்வதன் மூலமாக மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக் கொள்கிறார்கள். ஆனால், ஆக்சிஜன் சிலிண்டரை பெறுவதற்கும், படுக்கைகள் காலியாக இல்லாத மருத்துவமனைகளில் படுக்கைகள் கிடைப்பதற்கும் இந்த காப்பீட்டுத் திட்டம் எப்படி உதவும்?

மருத்துவத் துறையில் தனியார்மயமாக்களில் வெளிநாட்டு நிதியின் பங்கு அதிகரிக்கும் போது மருத்துவ நிறுவனங்களில் வேலை செய்யும் மருத்துவர்கள் கூட இரண்டாம் பட்சமாக கருதப்பட்டு லாபமே முதன்மையான நோக்கமாக கருதப்படுகிறது.

ஆக மொத்தத்தில், இந்திய மருத்துவத்துறை என்பது லாபத்தை மட்டுமே மையமாக கொண்டு ஒழுக்கமைக்கப்பட்டதாகவும் ஒரு சில நிறுவனங்களின் ஏகபோகமாகவும் மாறி வருகிறது. கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களை  தனியாரிடம் குறிப்பாக கார்ப்பரேட்களிடம் விட்டுவிட வேண்டும் என்பதுதான் ஆகப் பெரும்பான்மையான ஓட்டுக் கட்சிகளின் நிலைப்பாடு.

மருத்துவத் துறையை தனியார்மயமாகியது, அரசு மருத்துவ கட்டமைப்புக்கான செலவை குறைத்ததும், மிக மோசமான விளைவை ஏற்படுத்தியிருக்கிறது. லாபத்தை மட்டுமே நோக்கமாக கொண்டிருக்கும் தனியார் மருத்துவமனைகளை சார்ந்திருப்பதை தவிர்க்க, பொது சுகாதாரத்தில் நிறைய முதலீடுகள் செய்யப்பட வேண்டுமென்று வாதிடுகிறார்கள் பொது சுகாதார ஆர்வலர்கள்.

2018-ம் ஆண்டு இந்திய சுகாதரத்திற்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 3.5 சதவீதம் மட்டுமே செலவு செய்திருக்கிறது. இந்த நிலை சில பத்தாண்டுகளாக மாறாமல்தான் இருக்கிறது.

இந்த பலவீனமான மருத்துவக் கட்டமைப்பிற்குக் காரணம் தனியார்மயம்தான். தனியார் மருத்துவமனைகள் எப்போது முழு கொள்திறனுடன் இயங்குகின்றன. சாதாரண நாட்களில் உபரியாக படுக்கைகளை பராமரித்து வந்தால்தான் பெருந்தொற்று காலங்களில் அதைப் பயன்படுத்தி தொற்றை சமாளிக்க முடியும். ஆனால், எப்போதும் லாப நோக்கத்துடனே செயல்படும் தனியார் மருத்துவமனைகள் அதை செய்வதில்லை.

000

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!
♦ கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !

உண்மையில் மத்திய, மாநில அரசுகளுக்கு மக்களின் மீது அக்கறை இருந்தால்  பிரச்சனைகளுக்கான காரணத்தை சரி செய்ய வேண்டும். அதற்கு  பொதுத்துறை மருத்துவக் கட்டமைப்பை மக்கள் தொகைக்கு ஏற்றார்போல் மேம்படுத்த வேண்டும். அதோடு இங்கு உள்ள தனியார் மருத்துவமனைகளையும் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும். இப்படி செய்ய கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் நிதி வாங்கும் பாரளுமன்றக் கட்சிகள் முன்வருவார்களா ? இவர்களை நம்பி பலனில்லை. அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்மடுத்தும்படி அரசை நிர்பந்தித்து வீதியில் இறங்கிப் போராடினால்தான் இதற்கான தீர்வு கிடைக்கும்.


ராஜேஷ்

செய்தி ஆதாரம் :
National Herald , People’s World , India Today , EPW , Business line

இணையவழிக் கூட்டம் : அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் நிரந்தரமாக்கு || மக்கள் அதிகாரம்

மக்கள் அதிகாரம் நடத்தும் இணையவழி கூட்டம்

அரசு மருத்துவமனையில் பல ஆண்டுகளாக ஒப்பந்தப் பணியாளர்களாக பணியாற்றிவரும் பணியாளர்களை அரசும் ஒப்பந்ததாரர்களும் இணைந்து நைச்சியமான வழியில் நிரந்தரமாக்காமல் இழுத்தடித்து வருகின்றனர். கொரோனா காலகட்டத்தில் முன் நின்று பணியாற்றும் இந்த ஒப்பந்தத் தொழிலாளர்களை முன்களப் பணியாளர்களாக அறிவித்து அவர்களை நிரந்தர பணியாளர்களாக்க வேண்டும்.

இதனை வலியுறுத்தி மக்கள் அதிகாரம் நடத்தவிருக்கும் இணையவழிக் கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு, தொழிலாளர்களின் உரிமைக்காக குரல் கொடுப்போம் !!

♦ ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் அரசு மருத்துவமனை பணியாளர்கள் நிரந்தரமாக்கு!
♦ முன்கள பணியாளர்களாக அறிவித்திடு!

நாள் : 03.06.2021, வியாழக்கிழமை
நேரம் : மாலை 6 மணிக்கு

தலைமை :
தோழர் சண்முகசுந்தரம்,
தஞ்சை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்

உரை :
தோழர் மோகன் ,
அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் மாவட்டத் தலைவர் ,
சி.ஐ.டி.யு.

தோழர் முத்துக்குமார்,
மாநிலத் தலைமைக் குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம் .

மாலை 6 மணிக்கு காணத் தவறாதீர்கள் !!

மக்கள் அதிகாரம் முகநூல் பக்கத்தில் இணைந்திருங்கள்.

தகவல் :
மக்கள் அதிகாரம்

கொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்

கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிவேகமாகப் பரவி, மிகப்பெரும் அழிவை ஏற்படுத்தியுள்ளது. இந்த பேரழிவிற்கு மோடி ஆட்சியே காரணம் என வெளிநாட்டு ஊடகங்கள் உள்ளிட்டு பலரும் தலையங்கம் எழுதிவிட்டனர்.

கும்பமேளாவுக்கு அனுமதி, தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் வரைமுறையற்ற கூட்டம், தடுப்பூசிகளை திட்டமின்றி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது என தமது இயல்பான பாசிசத் தன்மையால், கொரோனாவை இந்தியா முழுவதும் தீவிரமாக பரப்பியது மோடி அரசு.

கொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader மோடி


கருத்துப்படம் : மு.துரை

அதிகாரவர்க்கத்தின் துணையோடு விதிகளை மீறிய ஜக்கி வாசுதேவ் !!

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம்: கட்டி எழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 4

2013-ல் ஈஷாவில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை இடிக்க வேண்டுமென்று மாவட்ட நிர்வாகம் சொன்ன நிலையில், 2020-ல் தமிழக வனத்துறை அப்படியே தன் நிலையை மாற்றிப் பேச ஆரம்பித்தது. 2020 ஜூன் மாதம் இந்த விவகாரம் தொடர்பான நிலை அறிக்கை தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் முதன்மை வனப் பாதுகாப்பாளர் பி.துரையரசு என்பவரால் தாக்கல் செய்யப்பட்டது.

படிக்க :
♦ ஜக்கி வாசுதேவை ஆதாரங்களுடன் தோலுரிக்கும் சவுக்கு !
♦ சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!

அதில், ஈஷாவின் வளாகம் என்பது இக்கரை பொலுவம்பட்டியில் பிளாக்-2 காப்புக்காடுகளை ஒட்டி அமைந்திருக்கிறது என்றும் இது பிரபலமான யானை வாழிடம் என்றும் குறிப்பிட்டது. இருந்தபோதும், அந்தப் பகுதி யானைகள் செல்லும் பகுதியாக வரையறுக்கப்படவில்லை என தனது அறிக்கையில் குறிப்பிட்டார் துரையரசு.

ஒவ்வொரு ஆண்டும், யானைகள் ஈஷா வளாகம் அமைந்துள்ள பகுதியை ஒட்டி செல்வது வழக்கம்தான் என்றாலும், இந்தப் பகுதி யானைகள் செல்லும் பகுதியாக வரையறுக்கப்படுவதில்லை என்றது அறிக்கை.

இக்கரை பொலுவம்பட்டி குறித்து வனத்துறை இப்படி மாற்றிப் பேசியது, ஈஷாவுக்கு வசதியாகப்போனது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அரசு ஒரு உத்தரவை வெளியிட்டது. அதன்படி, மலைப்பிரதேசங்களில் அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டிடங்களை வரைமுறைபடுத்தலாம் என்றது. HACA அனுமதியளிக்க வேண்டிய நிலங்கள், அதாவது இக்கரை பொலுவம்பட்டியும் இதில் அடங்கும் என்றது.

“சட்டவிரோத கட்டுமானங்களை வரைமுறைப்படுத்தி ஈஷா அமைப்புக்கு உதவுவதற்காகவே இந்த விதி கொண்டுவரப்பட்டதாக கருதுகிறோம்” என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜி.சுந்தர்ராஜன்.

தாங்கள் ஏற்கனவே கட்டிய கட்டிடங்களுக்கு HACA ஒப்புதல் கேட்டு 2017-ல் ஈஷா விண்ணப்பித்த போது அப்போதைய தலைமைக் காப்பாளரான எச்.பசவராஜு இந்த விண்ணப்பம் குறித்து பரிசீலிக்க ஒரு கமிட்டியை அமைத்தார். ஈஷாவின் கட்டுமானங்கள் உள்ளூர் வனச் சூழலையும் சுற்றுச்சூழலையும் அந்தக் கமிட்டி கண்டறிந்தது. இந்தக் கட்டுமானங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டுமென்றால் சில சாலைகளை அவர்கள் பயன்படுத்தக் கூடாது; ஏற்கனவே, கட்டிய சில கட்டிங்களில் மாறுதல்களைச் செய்ய வேண்டும்;

காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதியிலிருந்து 100 மீட்டர் தொலைவுக்குள் எந்தக் கட்டுமானத்தையும் செய்யக் கூடாது என்று தெரிவித்தது கமிட்டி.

ஈஷா சட்டவிரோதமாக கட்டிடங்களைக் கட்டி வருகிறது என்பது 2012-லிருந்தே தெரிந்தும் அதை நிறுத்தாது ஏன்? என அதே ஆண்டு இந்திய ஆடிட்டர் ஜெனரலின் அறிக்கை தமிழக வனத்துறையிடம் கேள்வி எழுப்பியது. HACA-வின் ஒப்புதல் பெறாமல் அந்தக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன என்பதை சி.ஏ.ஜி சுட்டிக்காட்டியது.

ஆனால், தாங்கள் எல்லா கட்டிடங்களுக்கும் எச்.ஏசி.ஏ ஒப்புதல் பெற்றிருப்பதாக மார்ச் 16, 2017-ல் தெரிவித்தது ஈஷா. ஆனால், ஈஷா வளாகத்தில் நடந்த கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கொடுக்கலாமா என்பதை ஆராய கமிட்டி அமைக்கப்பட்டதே அதற்கு அடுத்த நாள்தான். அதாவது மார்ச் 17-ஆம் தேதிதான். இந்தக் குழு மார்ச் 29-ஆம் தேதி தனது அறிக்கையை தாக்கல் செய்தது.

ஏப்ரல் நான்காம் தேதிவாக்கில்தான் முதன்மை தலைமை வனக்காப்பாளர், ஈஷாவின் கட்டுமானங்களுக்கு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கலாம் என கடிதம் எழுதினார். இதையடுத்து நகர்ப்புற திட்டமிடல் துறை, கோயம்புத்தூரில் இருந்த மண்டல துணை இயக்குனரை வைத்து மே 3-ஆம் தேதி ஒப்புதல் அளிக்கச் சொன்னது. இதற்கு வனத்துறை விதிக்கும் கட்டணங்களைச் செலுத்த வேண்டும் என்பதோடு, நிபந்தனைகளையும் ஏற்க வேண்டும் என்று சொன்னது. அப்படி இருக்கும் போது மார்ச் 16-ஆம் தேதியே HACA எப்படி ஒப்புதல் அளித்திருக்க முடியும்?

இந்தக் கேள்விக்கும் சரி, மற்ற குற்றச்சாட்டுகளுக்கும் சரி ஈஷா பதிலளிக்க மறுத்துவிட்டது. இது தொடர்பாக Newslaundry அனுப்பிய மின்னஞ்சலுக்குப் பதிலளித்த ஈஷாவின் செய்தித் தொடர்பாளர், உங்களுடைய முன்அனுமானங்களைப் பற்றி எங்களுக்குக் கவலையில்லை. எங்கள் ஃபவுண்டேஷனைப் பற்றி தூற்றி எழுதினால், அது உங்கள் ரிஸ்க்தான்” என்று எச்சரித்தது.

கட்டுமானங்களைக் கட்டி முடித்த பிறகு அனுமதி அளிக்கும் பிரிவு என்பது தமிழக விதிகளில் கிடையாது. நகர்ப்புற திட்டமிடல் துறையானது கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடத்தை வரைமுறைப்படுத்தலாம். ஆனால், அந்தத் துறை விதிக்கும் நிபந்தனைகளை ஏற்க வேண்டும். அப்படியே வரைமுறைப்படுத்தினாலும் சுற்றுச்சூழல் அனுமதியை நகர்ப்புற திட்டமிடல் துறை அளிக்க முடியாது.

ஈஷாவின் கட்டுமானங்களுக்கு, அனுமதி அளிக்கலாம் எனப் பரிந்துரை செய்த பசவராஜு நம்முடைய கேள்விகளுக்குப் பதிலளிக்க முன்வரவில்லை. அவருக்குப் பிறகு அந்தப் பதவிக்கு வந்து, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் நிலை அறிக்கையை தாக்கல் செய்த துரையரசு “போதுமான நிபந்தனைகளை விதித்த பிறகுதான் வரைமுறைப்படுத்தும் பரிந்துரைகள் செய்யப்பட்டன. அவர்கள் நிபந்தனைகளை நிறைவேற்றினார்களா என்பது தெரியாது. எனக்குத் தெரிந்தவரை அவர்களுக்கு HACA ஒப்புதல் இப்போதுவரை கிடைக்கவில்லை” என்றார்.

படிக்க :
♦ கோவையில் போலீசு தடையை மீறி மோடி – ஜக்கி எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் !
♦ மோடி – ஜக்கியின் யோகா தினம் – வினவு நேரலை

கோயம்புத்தூரின் மாவட்ட ஆட்சித் தலைவர் என்ற முறையில் HACA-வின் தலைவராக இருந்த ராஜாமணி ஈஷாவுக்கு அளிக்கப்பட்ட HACA ஒப்புதல் குறித்து எதுவும் பேச விரும்பவில்லை என்று சொன்னார். “நீங்கள் என்ன எழுத நினைக்கிறீர்களோ, எழுதிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார் அவர்.

***

முந்தைய பாகங்கள் :
பாகம் 1 : சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி?

பாகம் 2 : யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !
பாகம் 3 : சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

கொரோனா துயரத்திலும் மாளிகை கேட்கிறதா ? மோடியை சாடிய மேனாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் || பி.பி.சி

கொரோனா பேரிடரை இந்திய அரசு எதிர்கொள்ளும்விதம் குறித்து அடுக்கடுக்கான கேள்விகளை ஓய்வுபெற்ற ஆட்சிப் பணி அதிகாரிகள் எழுப்பியுள்ளனர்.

`அரசமைப்புச் சட்டத்தின் வழி நடக்க வலியுறுத்தும் குழு’ (constituition conduct group) என்பது இந்திய மற்றும் மாநில அரசுகளில் உயர் பொறுப்புகளில் இருந்து ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், ஐ.ஆர்.எஸ், ஐ.எஃப்.எஸ் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்களை உறுப்பினர்களாக கொண்டு இயங்கும் ஓர் அமைப்பு. இதில் 116 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். இந்திய அரசியலைமைப்புச் சட்டத்தின்படியே நாட்டின் நிர்வாகம் நடைபெற வேண்டும்’ என்பதை அழுத்தமாக எடுத்துரைக்கும் அமைப்பாகவும் இது உள்ளது.

இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலையை எதிர்கொள்வதில் மத்திய அரசின் தவறுகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடந்த மே 20-ம் தேதி இந்த அமைப்பினர் விரிவான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். இந்தக் கடிதத்தில் நேர்மையான காவல் ஆணையராக அறியப்பட்ட ஜூலியோ ரிபைரோ, முன்னாள் கேபினட் செயலாளர் கே.எம்.சந்திரசேகர், மேற்குவங்க அரசில் கூடுதல் தலைமைச் செயலாளராக இருந்த ஜி.பாலச்சந்திரன் உள்பட 116 பேர் கையொப்பமிட்டுள்ளனர்.

படிக்க :
♦ பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை புறக்கணித்த ஆப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் !!
♦ கொரோனா : கார்ப்பரேட் – சனாதன வைரஸுக்கு எதிரான இருமுனைப் போராட்டம் தேவை !

பிரதமருக்கு சிசிஜி அனுப்பியுள்ள கடிதம் :

“பிரதமர் அவர்களுக்கு, இந்திய ஆட்சிப் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களான நாங்கள், அரசமைப்புச் சட்டத்தின் மீது ஈடுபாடு கொண்டவர்களாக இருக்கிறோம். எங்களுக்கு எந்தவித அரசியல் சார்பும் கிடையாது. இதற்கு முன்னால் நிர்வாக செயல்முறைகள் எப்போதெல்லாம் அரசமைப்புச் சட்டத்தினை மீறுவதாக இருந்ததாகக் கருதினோமோ அப்போதெல்லாம் நாங்கள் உங்களுக்குக் கடிதம் எழுதியிருக்கிறோம்.

தற்போது கொரோனா பேரலை என்ற துயரமான நிகழ்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்றால் நமது மக்கள் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் கோபத்துடனும் துக்கத்துடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம். இந்தியாவை மட்டும் கொரோனா தொற்று பாதிக்கவில்லை என்பதை நாங்கள் அறிவோம்.

மருத்துவ உதவிகளுக்காகவும் கொரோனா சம்பந்தப்பட்ட மற்ற உதவிகளுக்காகவும் மக்கள் கதறும் சூழலில், ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து கொண்டிருக்கும் இந்த நேரத்தில் உங்கள் அரசு, இவ்வளவு பெரிய சிக்கலை சாதாரணமாக கையாண்டு கொண்டிருக்கிறது என்பதைப் பார்க்கும்போது எங்கள் உணர்வுகள் மரத்துப் போகின்றன. இதனால் உடல்ரீதியாகவும் மனரீதியாகவும் விரும்பத்தகாத விளைவுகள் இந்தியர்களுக்கு ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதைக் கண்ட காரணத்தினால் துக்கத்துடனும் துயரத்துடனும் இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம்.

தயாராக இருக்கும் பிரதமர் மாளிகையின் மாதிரி

காற்றில் பறக்கும் கொள்கைகள் :

உங்களது அரசு பதவியேற்ற நாளில் இருந்து, `அமைச்சரவை கூடி முடிவெடுத்து அரசின் செயல்கள் நடைபெறும்’ என்பது காற்றில் பறக்கவிடப்பட்டது என்பதனையும், இந்த நாடு கூட்டாட்சி தத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட ஒன்றிய அரசு என்பதை நீங்கள் மறந்துவிட்டதையும், எந்த மாநிலங்களில் எல்லாம் உங்கள் கட்சி ஆட்சியில் இல்லையோ, அந்த மாநிலங்களை நீங்கள் நடத்தும் விதம் எப்படியுள்ளது என்பதைக் கண்டதாலும் இதனைக் கூறுகிறோம்.

கொரோனா போன்ற சிக்கல்கள் எழும்போது அந்தச் சிக்கல்களுக்கு தீர்வு காணும் வல்லமை படைத்தவர்களையும், நாடாளுமன்றக் குழுக்களையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற கொள்கை காற்றில் பறக்கவிடப்பட்டதைப் பார்க்கிறோம்.
மாநில அரசுகளுடன் இத்தகைய தருணங்களில் மிகவும் நெருக்கமாகக் கலந்து உரையாட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு இல்லாததால் விரும்பத்தகாத அபாயகரமான விளைவுகளால் ஏழைகளும் இந்தச் சமுதாயத்தில் நல்ல நிலையில் உள்ளவர்களும் பாதிப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் மனம் வருந்துகின்றோம்.

பன்னாட்டு சமுதாயம் மற்றும் நம்முடைய விஞ்ஞானிகள், `கொரோனாவால் எத்தகைய விளைவுகள் வரும்?’ என்பதை எடுத்துக் கூறியும் கொரானாவின் முதல் அலை மற்றும் இரண்டாம் அலைக்கு இடையில் இருந்த இடைவெளியில் மிகத் தேவையான மருத்துவக் குழுக்கள், படுக்கைகள், தேவையான ஆக்சிஜனை கையிருப்பாக வைத்திருத்தல், மருத்துவ உபகரணங்களை பெருக்குதல் என முன்கூட்டியே திட்டமிடலை உங்களிடம் பார்க்க முடியவில்லை.

’இந்தக் கொரோனாவை எதிர்க்கும் ஆயுதமே தடுப்பூசிதான்’ என்று இருக்கும்போது, இந்திய மக்கள் தொகையோடு ஒப்பிட்டு போதுமான அளவுக்கு கையிருப்பு இருப்பதற்கு என்னென்ன செய்திருக்க வேண்டும் என்பதைப் பற்றிய விழிப்புணர்வும் உங்களுக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

எங்கே ஆத்ம நிர்பார் பாரத்?

நீங்கள் மற்றும் உங்களின் அமைச்சரவை சகாக்கள் பேசிய பேச்சுக்களைப் பார்க்கும்போது, கொரோனாவை பற்றிய விழிப்புணர்வில் இருந்து மக்களை திசைதிருப்ப முயன்றீர்கள் என்ற உணர்வுதான் ஏற்படுகிறது.

நீங்கள் இத்தகைய நிலைப்பாட்டை எடுத்ததன் காரணமாக மாநில அரசுகளும் மக்களும், `அரசன் எவ்வழி மக்கள் அவ்வழி’ என்பதற்கேற்ப மிதப்புடன் இருந்துவிட்டார்கள் என்பது கண்கூடு. `இந்தியாவிலேயே எல்லாவற்றையும் உருவாக்குவோம்’ என்று கூறினீர்கள். அந்த `ஆத்ம நிர்பார் பாரத்’ இன்று எங்கே இருக்கிறது? தற்போது உலகின் பல்வேறு பகுதிகளில் நம்மைவிட சிறிய நாடுகளில் இருந்து உதவிகளைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

2020-ம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா முதல் அலை வலுப்பெறத் தொடங்கிய நேரத்தில், `எவ்வளவு நிதி தேவைப்படும்?’,` அதில் மாநில அரசுகளுக்கு எவ்வளவு கொடுக்க வேண்டும்?’ என்ற சரியான கணக்கு உங்களிடம் இருந்ததாகத் தோன்றவில்லை.

`பி.எம் கேர்ஸ்’ என்ற புதுமையான நன்கொடை திட்டத்தைத் தொடங்கி வைத்தீர்கள். ஏற்கெனவே `prime minister national relief fund’ என்ற ஒன்று இருக்கும்போது, இந்த பி.எம் கேர்ஸுக்கு பணம் எவ்வாறு பெறப்பட்டது, அது எப்படி செலவழிக்கப்பட்டது என்பதைப் பற்றிய தெளிவான தகவல்கள் இன்று வரையில் இல்லை. பி.எம் கேர்ஸ் நிதிக்கான நீங்கள் கொடுத்த வரிச்சலுகைகளின் காரணமாக தற்சார்பு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அந்தந்த பகுதிகளில் செலவழிக்கின்ற தொகைகள் அனைத்தும் பி.எம் கேர்ஸ் நன்கொடைக்கு வந்துவிட்டது. இதனால் அடிமட்டத்தில் செல்ல வேண்டிய உதவிகள் எதுவும் செல்லாமல் தடுக்கப்பட்டன என்பது கசப்பான உண்மை.

பிரதமருக்கு மாளிகை அவசியமா?

இதுதவிர, மாநிலங்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஜி.எஸ்.டி தொகையை நீங்கள் சரியான நேரத்தில் செலுத்தவில்லை. அவ்வாறு நீங்கள் கொடுத்திருந்தால் மாநிலங்கள் தங்களின் நிதிச் சுமையில் இருந்து தலைநிமிர்ந்திருக்கும். அது நடக்காமல் போய்விட்டது.

அதேநேரத்தில் தேவையே இல்லாமல் புதிய நாடாளுமன்றக் கட்டம், பிரதமருக்கென்று ஒரு பெரிய மாளிகை. அந்த மாளிகையில் இருந்து நாடாளுமன்றத்துக்குச் செல்வதற்கு ரகசியப் பாதை என்றெல்லாம் திட்டமிட்டு ஏறக்குறைய 20,000 கோடி ரூபாய் இந்தநேரத்தில் செலவழிக்கப்படுவதைக் காண்கிறோம்.

இந்தச் செலவு இந்த நேரத்தில் தேவையா? என்பதைப் பற்றி கிஞ்சித்தும் கவலைப்படாமல் அந்த வேலைகள் தொடர்ந்து நடப்பதைக் காண்கிறோம். இதைத் தவிர அரசு சாரா நிறுவனங்கள் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி பெறுவது என்பது கடுமையாக்கப்பட்டிருக்கிறது. இதுவரையில் அத்தகைய நிதி நிறுவனங்கள் பெற்று வந்த நிதிகள் பெருமளவு வராமல் போகும் சூழல் உருவாகியிருக்கிறது.

இந்திய அரசின் கீழ் வரும் அசாம், மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்கள், ஒன்றியப் பிரதேசங்களில் தேர்தல் தவிர்க்க முடியாது என்பது உண்மைதான். ஆனால், இந்தத் தேர்தல்களை நடத்துவதில் நீங்கள் எத்தகைய வழிமுறைகளைக் கையாண்டீர்கள்? நீங்களும் உங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களும் இந்தநேரத்தில் மிகப்பெரிய கூட்டங்களை கூட்டியதன் மூலம் எத்தகைய ஆபத்துக்கு மக்களை ஆட்படுத்துகிறோம் என்பதைப் பற்றிக் கொஞ்சம் கூட கவலைப்படாமல் தொடர்ந்து உங்கள் பிரசாரத்தை நடத்தினீர்கள்.

கொரோனாவை பரப்பிய 2 சம்பவங்கள்!

அதேபோல், ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெற்றபோது, கோவிட் பாதுகாப்பு நடைமுறைகளைப் பற்றி சற்றும் கவலைப்படாமல்தான் கும்பபமேளாவும் இருந்தன.
இரண்டாம் கொரோனா அலையினை வரவேற்பது போல உங்களின் இந்த நிகழ்வுகள் அமைந்தன. அதனுடைய தாக்கத்தை இன்று நாம் கண்டுகொண்டுள்ளோம். இது நகர்ப்புறங்களை மட்டுமல்ல, கிராமப்புறங்களையும் பாதித்துள்ளதைக் காண முடிகிறது.

எங்கெங்கும் பிணக்குவியல்

கொரோனா தொடர்பான செய்திகளை உங்கள் அரசு மிகச் சிறப்பாக கையாள்வதை முக்கியமானதாகப் பார்க்கிறீர்கள். ஆனால், கொரோனாவை எப்படி எதிர்கொள்வது என்பதில் கவனம் இருப்பதாகத் தெரியவில்லை. பல மாநிலங்களில் இந்தக் கொரோனா உள்ளதா இல்லையா என்பதைக் கண்டறியும் சோதனைகளில், எத்தனை பாசிட்டிவ் அறிக்கைகள் வந்தன, எத்தனை பேர் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டார்கள் என்பதைப் பற்றிய சரியான வெளிப்படைத்தன்மை இல்லை என்று பரவலாக உணரப்படுகிறது.

இவைகள் வெளிப்படைத்தன்மையுடன் இல்லாத காரணத்தினால் எந்த அளவுக்கு மருத்துவ வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்ற முறையான கணக்கும் இல்லாதது தெளிவாகிறது. இன்றுள்ள நிலையில் இந்தக் கொரோனா தொற்றை எதிர்கொள்வதற்கான வழிகளை ஆராய வேண்டும் என்பதால் உங்களுக்கு சில ஆலோசனைகளை சமர்ப்பிக்கிறோம்.

1. நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி தர வேண்டிய பொறுப்பினை மத்திய அரசு ஏற்க வேண்டும். அதற்காக எங்கெல்லாம் தடுப்பூசி வாங்க முடியுமோ அதனைப் பெற்று மாநில அரசுகளுக்கும் தடுப்பூசி திட்டத்தை முன்னெடுக்கும் ஏஜென்சிகளுக்கும் வழங்கும் பொறுப்பினை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

2. மாநில அரசுகளுடன் ஆலோசித்து ஆக்சிஜன் வசதி தேவைப்படுவோருக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் மிகத் தேவையான மருந்துகள் மற்றும் அதற்குத் தேவையான கருவிகள் மாநிலங்களில் இருக்கிறதா என்பதையும் அவை இல்லாத இடங்களில் அதற்கான ஏற்பாடுகளைச் செய்வதும் அரசின் முக்கியமான கடமை.

3. கிராமப்புறங்கள், நகர்ப்புறங்களில் ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும்.

4. `சென்ட்ரல் விஸ்டா’ என்ற பெயரில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்துக்கும் மற்றும் பிரதமரின் அரண்மனைக்கும் செலவழிக்கும் போக்கைக் கைவிட வேண்டும். இதுதவிர பிற தேவையற்ற செலவினங்கள் அனைத்தையும் நிறுத்தி வைத்துவிட்டு மாநில அரசுகளுக்கு மருத்துவ வசதியினை பெருக்குவதற்கு உடனடியாக உதவி செய்ய வேண்டும்.

5. கொரோனா பெருந்தொற்றின் கொடுமை தணியும் வரை, இந்திய உணவுக் கழகத்தில் உள்ள வழக்கமான ரேசன்களுக்கு கொடுப்பது தவிர, மீதமுள்ள உணவுத் தானியங்களை ஏழைகளுக்கு உடனடியாக வழங்குவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்.

6. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு உடனடியாக மாநில அரசுகளுடன் கலந்தாலோசித்து தற்போது நடைபெற்று வரும் சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளுக்கும் அவர்களின் தாய்மார்களுக்கும் ஏற்கெனவே வழங்கப்பட்டு வரும் புரத உணவுகளை தொடர்ந்து வழங்க வேண்டும்.

படிக்க :
♦ நடப்பதோ தேசிய பேரழிவு ; தீர்ப்பை வரலாறு எழுதும் || அருந்ததி ராய்
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

7. கொரோனா இந்த ஆண்டு தணிந்துவிடும் என உறுதியாகக் கூற முடியாத நிலை உள்ளது. மூன்றாவது அலை வருவதற்கான காரணங்கள் இருப்பதால், இந்த நிதியாண்டு முழுமைக்கும் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கு மாதம் 7,000 என்ற அளவில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் `குறைந்தபட்சக் கூலி’ கொடுக்க வேண்டும்.

8. வெளிநாட்டு நிதி ஒழுங்குபடுத்துதல் சட்டத்தில் (FCRA – Foreign Contrubution Regulation Act) புதிதாகக் கொண்டு வரப்பட்டுள்ள அனைத்துக் கட்டுப்பாடுகளையும் தற்போதைய அளவில் தளர்த்திவிட்டு, அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி உதவி அளிப்போரிடம் பணம் வாங்குவதற்கு வழி திறக்கவேண்டும். அவை முறையாக செலவழிக்கப்படுவதையும் உறுதி செய்யவேண்டும்.

9. கொரோனா தொற்றை தடுப்பதற்கு என்னென்ன செயல்கள் அரசால் மேற்கொள்ளப்படுகின்றன என்பதை வெளிப்படைத்தன்மையுடன் அறிவிக்க வேண்டும்.

10. அனைத்துக் கட்சிகள் கொண்ட குழுவை மத்திய அரசு அமைத்து அவர்களின் ஆலோசனைகள், கொரோனாவை தடுக்க மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள், அரசின் முடிவுகள் குறித்து அந்தக் குழு ஆய்வு செய்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தித் தரவேண்டும். பல மாநிலங்களில் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்த என்னென்ன வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பதை அந்தக் குழுவிடம் அளித்து ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

மேலும், கொரோனா பெருந்தொற்றைத் தடுக்க அரசு மற்றும் நிர்வாக அளவில் என்னென்ன பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி நாங்கள் கடிதத்தில் விரிவாகக் கூறியிருக்கிறோம். ஆனால், இவை அனைத்தையும்விட மிக முக்கியமானது என்னவென்றால், இந்தக் கொரோனாவால் தங்களின் உறவுகளை இழந்து தவிக்கின்ற மக்கள் அனைவருக்கும் நம்பிக்கையூட்டும் விதமாக இந்த அரசு நடந்து கொள்ள வேண்டும்.

பரிவு மற்றும் கவனத்துடன் பார்த்துக் கொள்ளுதல் என்பதுதான் மத்திய அரசின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். பிரதமர் அவர்களே, எந்தளவுக்குத் திறமையாக இந்தச் சிக்கலை நீங்கள் தீர்க்க முயல்கிறீர்கள் என்பதைப் பொறுத்துத்தான் வரலாறு உங்களை வகைப்படுத்தும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : பிபிசி தமிழ்

குறிப்பு :
பி.பி.சி. தமிழ் இணையதளத்தில் வெளியான இக்கடிதத்தின் தமிழாக்கத்தை அதன் முக்கியத்துவம் கருதி, அப்படியே இங்கு வாசகர்களுக்கு மறுபதிவு செய்துள்ளோம் !

disclaimer

மோடி சுட்ட மான்கி பாத் வடையும் – ஒரிஜினல் கதையும் || கருத்துப்படம் !!

மோடியின் மன் கி பாத்  : (சுட்ட வடை) 
கொரோனா பெருந்தொற்றையும் இயற்கைப் பேரிடரையும் இந்தியா வெற்றிகரமாக சமாளித்துள்ளது !

இந்தியாவின் மன் கி பாத் : (ஒரிஜினல் கதை)

மோடி எனும் பேரிடர்,

♠ முதல் அலையில் டிரம்பை வரவழைத்து பெருங்கூட்டம் கூட்டியது !
♠ தடுப்பூசியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதித்தது !!
♠ இரண்டாம் அலையில் மாநில தேர்தல்கள் – தேர்தல் பிரச்சாரக் கூட்டம் !!
♠ கும்பமேளாவுக்கு அனுமதி அளித்தது !!
♠ ஆக்சிஜன் இன்றி மக்கள் தவிக்கையில் ரூ. 20,000 கோடியில் சென்ட்ரல் விஸ்டா !!
♠ மக்கள் கொரோனாவில் சிக்கியிருக்கையில் புதிய கல்விக் கொள்கை, குடியுரிமை சட்டத்தை திணித்தது !!

கருத்துப்படம் :

கருத்துப்படம் : வேலன்

பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இஸ்ரேலை புறக்கணித்த ஆப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் !!

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இனவெறி ஆக்கிரமிப்பு போருக்கு எதிர்ப்பு தெரிவித்து பாலஸ்தீனிய தொழிற்சங்கங்களின் பொது கூட்டமைப்பு (BGFTU) இஸ்ரேலின் பொருட்களை கப்பல் துறைமுகங்கள், விமான நிலையங்களில் இருந்து இறக்கவும் ஏற்றவும் எதிர்ப்பு தெரிவிக்குமாறு தொழிலாளர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. மேலும் BDS (Boycott, Divestment and Sanctions movement – பாலஸ்தீனத்துக்கு ஆதரவான சர்வதேச இஸ்ரேல் புறக்கனிப்பு இயக்கம்) இயக்கத்தையும் தீவிரப்படுத்தியுள்ளது.

இதனை சர்வதேச துறைமுகத் தொழிலாளர்கள் சங்கம் (International Dockworkers Council – IDC) ஆதரித்த நிலையில், தென்னாப்பிரிக்க துறைமுக நகரமான டர்பனில் தென்னாப்பிரிக்க போக்குவரத்து மற்றும் அதனுடன் இணைந்த தொழிற்சங்கத்தை சேர்ந்த (SATAWU) துறைமுகத் தொழிலாளர்கள் இஸ்ரேலிய கப்பல்களில் இருந்து சரக்குகளை இறக்காமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

படிக்க :
♦ சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !
♦ தடுப்பூசி வணிகம் : மக்களின் மரணத்தில் நடத்தப்படும் கொள்ளை !

மேலும் பாலஸ்தீன மக்களை இஸ்ரேலின் அடிமைத்தனத்தில் இருந்து விடுவிக்க அழைப்பு விடுக்கும் வகையில் மே 23-இல் டர்பன் நகர கடற்கரையில் 10,000–க்கும் மேற்பட்டோர் பேரணியாக அணிவகுத்துச் சென்றனர். (2008 – 2009 ஆண்டுகளிலும் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இஸ்ரேலின் கப்பல்களை தென்னாப்பிரிக்க துறைமுகத் தொழிலாளர்கள் புறக்கணித்தனர்)

இதேபோல், இத்தாலிய நகரமானா லிவோர்னோவிலும் (Livorno) துறைமுகத் தொழிலாளர்கள் இஸ்ரேல் அரசின் ஜிம் ஷாங்காய் (Zim shanghai) கப்பலில் ஆயுதங்களை உள்ளடக்கிய சரக்கினை ஏற்றாமல் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இலண்டனில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நடத்தப்பட்ட போராட்டம்

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான ஆயுதங்கள் இருப்பதால், ”லிவோர்னோ துறைமுகம் பாலஸ்தீனிய மக்கள் படுகொலைக்கு ஒருபோதும் துணையாக இருக்காதுஎன்று இத்தாலியின் யூ.எஸ்.பி (Union Sindacale di Base) தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுபோல் லண்டன், நியூயார்க், ஸ்பெயின், சோமாலியா, லிபியா, ஈரான், பிரிட்டன், அயர்லாந்து ஆகிய நாடுகளிலுள்ள மக்கள் தனியாகவும் சில இடங்களில் துறைமுகத் தொழிலாளர்களோடு இணைந்தும் Boycott Israel” போன்ற பல்வேறு முழக்கங்களுடன் பேரணிகள் நடத்தியுள்ளார்கள்.

தேசியவெறியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போர்களுக்கு எதிரான போராட்டங்களை வெற்றிகரமாக நடத்துவதற்கு வாய்ப்புள்ள ஒரே வர்க்கம் தொழிலாளி வர்க்கம் தான். போரை நடத்தும் கார்ப்பரேட் நிதியாதிக்கக் கும்பலுக்கு நெருக்கடி கொடுப்பது என்பது தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமே சாத்தியம். இத்தகைய சர்வதேச தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஒற்றுமையும் ஆதரவும்தான் பாலஸ்தீனிய மக்களின் விடுதலைக்கு உரமூட்டும் !!


பூபாலன்
செய்தி ஆதாரம் : MIDDLE EAST EYE, Aljazeera

அரசு மருத்துவமனை ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரமாக்கு !! || மக்கள் அதிகாரம்

PP Letter headபத்திரிகைச் செய்தி

30.05.2021

ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் மருத்துவமனை பணியாளர்களை நிரந்தரமாக்கு ! முன்கள பணியாளர்களாக அறிவித்திடு!

தமிழகத்தில் 48 அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள் உள்ளன. மேலும் பல மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் உள்ளன. இவற்றில் மருத்துவர், செவிலியர் தவிர மற்ற அனைவரையும் தனியார் மனிதவள முகமைகள் (Man Power Agency) மூலம் ஒப்பந்த அடிப்படையில் ஆளெடுப்பு செய்யப்படுகிறது.

அதாவது மேனேஜர், சூப்ரவைசர், எலக்ட்ரிசியன், ப்ளம்பர், குக் அசிஸ்டென்ட், டோஃபி அசிஸ்டென்ட், தோட்ட வேலையாள், தச்சர், செக்யூரிட்டி, தூய்மை பணியாளர் என பல பணியாளர்கள் ஆளெடுக்கப்பட்டு வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகளில் கிரிஸ்டல் என்ற தனியார் நிறுவனமும், அரசு மாவட்ட தலைமை மருத்துவ மனைகளில் ஸ்மித் என்ற தனியார் நிறுவனமும் இந்த பணியாளர்களை வேலைக்கு எடுத்துள்ளது.

படிக்க:
♦ கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!
♦ கொரோனா : கண்டுகொள்ளாமல் விடப்படும் ஆஷா பணியாளர்கள் !

இதற்கு முன்னர் இந்தப் பணியாளர்கள் பத்மாவதி ஏஜென்சி என்ற நிறுவனத்திடம் வேலைசெய்தனர். இவ்வாறு கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஒப்பந்தத் பணியாளர்களாகவே இவர்கள் வேலை செய்துவருகின்றனர்.

ஒவ்வொரு தொழிலாளருக்கும் ரூ. 18000-க்கும் அதிகமான தொகையை அந்த தனியார் முகமைகளுக்கு அரசு கொடுத்து வருகிறது. ஆனால் பணியாளர்களுக்கோ,  ரூபாய் 5000 முதல் 6000 வரைதான் ஒப்பந்த கம்பெனியால் வழங்கப்படுகிறது. மேலும் தங்களின் கொள்ளைக்காக குறைவான ஆட்களை நியமித்து அதிக வேலைகளை வாங்கி கொள்ளை அடிக்கின்றனர்.

இந்த தொழிலாளர்களுக்கு மிகை நேர கூலி, விடுமுறை சம்பளம் போன்ற அடிப்படை உரிமைகளும் மறுக்கப்படுகின்றன.

மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைகளில் பணியாற்றிய ஒப்பந்த தொழிலாளர்களை சென்ற ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியிலிருந்து பத்மாவதி மேன் பவர் ஏஜென்சியானது கிரிஸ்டல் ஏஜென்சிக்கு மாற்றிக்கொடுத்தது. அதே போல் 2017-ம் ஆண்டு கிரிஸ்டல் என்ற மேன் பவர் ஏஜென்சி, மாவட்ட தலைமை மருத்துவமனையில் பணியாற்றிய பணியாளர்களை ஸ்மித் என்ற ஏஜென்சிக்கு கைமாற்றி கொடுத்தது. இந்த ஏஜென்சிகள் தங்களுக்குள் சுழற்சி முறையில் இவ்வாறு மாற்றி ஒப்பந்தம் போட்டுக்கொள்கின்றனர். தொழிலாளர்கள் மட்டும் ஒப்பந்த தொழிலாளர்களாக எப்போதும் நிரந்தரமாக இருக்கிறார்கள்.

மாதிரி படம்

தொழிலாளர்களை நிரந்தரமாக்க கூடாது என்பதற்காக இந்த ஏற்பாட்டை இந்த நிறுவனங்களும் அரசும் செய்கின்றன. இவ்வாறு தமிழகத்தில் 45,000 பேர் பணியாற்றுகின்றனர். ஸ்மித் என்ற நிறுவனம் தனது ஒப்பந்த பணியாளர்கள் சங்கம் வைக்க கூடாது என்று கையெழுத்து வாங்கிகொண்டுதான் வேலைக்கே எடுக்கிறது. பல ஆண்டுகளாக இவர்களுக்கு சம்பள உயர்வு என்பதே இல்லை.

கொரானா வந்த பிறகு இவர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து சுகாதாரத்தைப் பேணி பாதுகாத்து மருத்துவ மனைகளை பராமரித்து வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் நோய் தொற்றும் இடமாக இருந்தநிலையிலிருந்து சற்று தூய்மையாக இருக்கிறது என்றால் இதற்கு பின்னால் இவர்களின் கடும் உழைப்பு உள்ளது. இவர்களுக்கு பல அரசு மருத்துவமனைகளில் கவச உடைகள் கொடுக்கப்படுவதில்லை. இவர்கள் முன்களப்பணியாளர்களாக அரசால் அறிவிக்கப்படவும் இல்லை.

சமீபத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற திமுக தலைவர் ஸ்டாலின் ஊடகவியலாளர்களை முன்கள பணியாளராக அறிவித்து அவர்களுக்கு முன்களப்பணியாளர்களுக்கான சலுகைகள் வழங்கப்படும் என்று அறிவித்தார். ஆனால் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் இந்தப் பணியாளர்கள், ஊழியர்கள், காவலர்களை முன்களப் பணியாளர்களாக அறிவிக்காமல் இருப்பது வேதனைக்குரியது.

தங்களையும் முன்களப்பணியாளர்களாக அறிவித்து மருத்துவ காப்பீடு, கொரானா தொற்று ஏற்பட்டு இறந்தால் இழப்பீடு போன்ற சலுகைகளை தங்களுக்கும் தரவேண்டும் என்றும் தங்களை பணிநிரந்தரம் செய்யவேண்டும் என்றும் இந்த பணியாளர்கள், ஊழியர்கள் சமீப காலமாக போராடிவருகின்றனர்.

இவர்களுடைய போராட்டம் ஊடகங்களாலும் ஆளும்கட்சிகளாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. இந்த பணியாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதற்காக அவர்கள் மட்டும் அல்ல, நாம் அனைவரும் போராடுவதே நமது சமூகக் கடமை. ஆகவே கீழ்கண்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர் உடனே நிறைவேற்றித் தரும்படி மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது .

தமிழக அரசே !
♠ அரசு மருத்துவ மனைகளில் பணியாற்றும் ஒப்பந்த பணியாளர்களுக்கு ஊதியத்தை உயர்த்திடு! அவர்களை பணிநிரந்தரம் செய்!
♠ அரசு மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்களை முன்கள பணியாளர்களாக அறிவித்து அரசு மருத்துவ காப்பீடு வழங்கு!
♠ கொரானா கால ஊக்கத்தொகை வழங்கு!

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை

பாலஸ்தீனம் : ஷேக் ஜர்ராவில் அரங்கேறும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு !

ஸ்ரேலியர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கும் கிழக்கு ஜெருசலேமில்’ ஒரு மூன்றடுக்கு கட்டிடத்தின் கூரையிலிருந்து நீண்டிருந்த குழாயில் இஸ்ரேலின் கொடிகள்.தனது அதிகாரத்தை எடுத்துக்காட்டும் விதமாக, மிதமான தென்றலிலும் அது அசைவது அச்சமூட்டும் விதமாக இருந்தது.

அதிகார எல்லையை குறிப்பதற்காகவே இஸ்ரேலியர்கள் கொடிகளை பறக்கவிட்டு பாலஸ்தீனியர்களுக்கு நினைவுபடுத்திக்கொண்டிருந்தனர்.அந்த வீட்டின் முன்புறம் பெரிய எழுத்துகளில் ஆனால் கிறுக்கலான ஹீப்ரு மொழியில் பொறிக்கப்பட்டிருந்தது. தங்களது எல்லைக்குள் மகன்கள் திரும்ப வருகிறார்கள்
இது பைபிள் வாசகம். மதத்திற்கான ஒரு கூட்டத்தின் குரல். இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் பாலஸ்தீனத்தை தங்களுடைய புனித உரிமையாக பார்க்கிறார்கள்.

காம் அல்ஜவொனி பகுதியிலிருக்கும் 500 பாலஸ்தீனியர்களுக்கு இந்த வீடு ஒரு பயங்கரமான கடந்த காலத்தையும், எதிர்நோக்கியிருக்கும் இருண்ட எதிர்காலத்தையும் காட்டும் நினைவுசின்னமாக நிலைத்திருக்கிறது.

படிக்க:
♦ மதுரை : கடன் தொல்லையால் குடும்பமே தற்கொலை
♦ கொரோனா : பேரிடரிலும் பிணந்தின்னும் கார்ப்பரேட்டுகள் || கருத்துப்படம்

மூன்று தலைமுறைகளாக ஹாவி வசித்து வரும் வீட்டில் இப்போது குடியேறிய இஸ்ரேலியர்கள் அவர்கள் இருக்கக் கூடாது என தடுக்கிறார்கள் என்றால், இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கும் உண்மைகளுக்கு ஒரு அத்தாட்சியாகும்.

எட்டு குடும்பங்களை சேர்ந்த 28 சிறுவர்கள் உட்பட மொத்தம் 78 பேர், ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக அந்த பகுதியில் வசித்துவருகிறார்கள். இப்போது அவர்களது வீடு மற்றும் சொத்துக்களை, பறித்து கொண்டு விரட்டியடிக்கப் போவதாக மிரட்டி வருகிறார்கள், அங்கு குடியேறியவர்கள்.

அதில் நான்கு குடும்பங்கள், இந்த மாத ஆரம்பத்திலேயே வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். அந்த பகுதியில் நடந்த மரணத்தை ஒட்டி இஸ்ரேலிய உயர்நீதிமன்றம் வெளியேற்றுவதை தள்ளிபோட்டிருக்கிறது.

பாலஸ்தீன பகுதிகளில் “குடியேறியவர்களின் (இஸ்ரேலியர்கள்) அமைப்பு” அந்த பகுதியில் வாழ்ந்து வரும் ‘பதினைந்து குடும்பங்களின் உரிமையை ரத்து செய்து அவர்கள் இப்போது இருக்கின்ற வீடுகளிலிருந்து வெளியேற்ற வேண்டும்’ என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த குடும்பங்களுக்கு நீதிமன்ற நடவடிக்கைகள் பற்றி தெரியும். ஆனால் ஒரு ஐம்பது ஆண்டுகாலம் வாழ்ந்த வீட்டை விட்டு வெளியேற்றினால் எங்கே போவது? என்ற அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாலஸ்தீனக் கொடியுடன் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த இடத்தின் முன் போராடும் பாலஸ்தீனியர்

யூதர்களின் ஆதிக்கத்தை யூதர்கள் அல்லாதவர்களிடம் உறுதி செய்வதற்காக உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களை கொண்டு இயங்கும் நீதிமன்றங்கள் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான வழக்குகளை இரக்கமறற முறையில் விசாரிக்கும் நடைமுறைகளை கொண்டது. அதிகாரமில்லாத பாலஸ்தீனிய அரசியல் தலைவர்கள், கண்முன்னே நடக்கும் அநியாயங்களை அறிந்தும் உலகநாடுகளின் அக்கறையில்லாத்தன்மை கடைசியில் ஏதோ ஒன்று முறிவதை பார்த்ததாக தெரிகிறது.

அந்த பகுதியை சேர்ந்த மற்றும் ஜெருசலேத்தில் மீதி இருக்கக்கூடிய பகுதிகளைச் சேர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக தினமும் ஏதோ ஒரு வகையில் எதிர்ப்பை காட்டி வருகின்றனர். ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் கிழக்கு ஜெருசலேத்திலும் சமீப நாட்களில் மற்றும் வாரங்களில் இந்த எதிர்ப்பு பரவிவருகிறது.

அவர்கள் ஆயுதமேந்திய இஸ்ரேலிய போலீசு மற்றும் துருப்புகளின் மிருகத்தனமான தாக்குதலை சந்தித்து கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும் வழக்கறிஞர்கள் மற்றும் வீர்ர்கள் ஆகியோரால் கைவிடப்பட்டு சோர்ந்த மனநிலையில் இருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தின் தெளிவான கோபத்தை அடக்குவதில் இதுவரை தோல்விதான் கிடைத்துள்ளது.

ஜெருசலத்தில் 1967-ல் கிழக்கு பகுதியில் ஆக்கிரமிப்பு செய்ததைக் கொண்டாடும் வகையில் ஆண்டுதோறும் நடைபெறும் இஸ்ரேலியர்களின் வெற்றி ஊர்வலத்தின் பாதையை பாலஸ்தீனியர்களின் போராட்டம் காரணமாக இஸ்ரேலிய அதிகாரிகளே மாற்ற வேண்டியதாயிற்று. உண்மையில் இதன் மூலம் போராட்டக்கார்ர்கள் தீர்மானகரமாக தங்களை நிருபித்துள்ளார்கள்

.தினமும் முகத்திலறைவதை போல பெரிய ஹீப்ரு எழுத்துகளால் எழுதப்பட்டுள்ள தங்களது அண்மைய வரலாறை இங்கே இருக்கும் மக்கள் அறிந்தே இருக்கிறார்கள்

2009-ல் ஹாவிஸ் ஹானொன் குடும்பத்தினரோடு (மொத்தமாக 55 பேர்) வலுக்கட்டாயமாக அவர்களது வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அவர்களுக்கு உடமையான பொருள்கள் அனைத்தும் திறந்தவெளி மைதானத்தில் வீசியெறியப்பட்டன. பக்கத்திலிருக்கும் குடியிருப்புவாசிகளிடம் அந்த நினைவுகள் பசுமையாக பதிந்து இருக்கின்றன. ”இஸ்ரேலிய படைகள் வீட்டுக்கதவை தகர்த்து சிறுவர்களை அநியாயமாக தெருவில் வீசி எறிந்தனர்” என்று எலெக்ட்ரானிக் இன்டிஃபடாவிடம் ரஷா புடெரி என்பவர் கூறினார்..

ரஷாவின் குடும்பவீடு ஹாவி வீட்டைத் தாண்டி அமைந்துள்ளது. அங்குதான் அவளது பெற்றோர்கள் சமீரா தஜானி மற்றும் அடெல் புடெரி வாழ்கிறார்கள். குடும்ப வீட்டிலிருந்து ஆகஸ்ட் 2-ம் தேதி அவர்கள் வெளியேற்றப்பட இருக்கிறார்கள்.

ரஷா அந்த வீட்டில் வாழுகின்ற மூன்றாம் தலைமுறை உறுப்பினர்

தஜானி யின் முன்னோர்கள் அவர்களது ஜெருசலேம் பகுதி கிராமமான பாகா வை விட்டு 1948ல் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபின் இந்த பகுதிக்கு வந்து தற்சமயம் வாழும் வீட்டில் வசிக்க துவங்கினார்கள்.

தங்களை அகதிகளாக பதிவு செய்து கொண்டனர் ஆனால் அகதிகள் முகாமை தவிர்த்துவிட்டு முதலில் தங்களது உறவினர்களுடன் சிரியாவிலும் அதன்பிறகு ஜோர்டானிலும் கிழக்கு ஜெருசலேமுக்கு 1949-ல் திரும்ப வரும் வரை இருந்தனர்.

தங்களது மீதி காலத்தை கிழக்கு ஜெருசலேத்தில் வாழ்ந்தனர். அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்து அங்கேதான் வளர்ந்தனர்.

அந்த பகுதியிலிருக்கும் மற்ற குடும்பங்களை போலவே அவர்களது குழந்தைகளும் மீண்டும் வீடற்றவர்களாக ஆகப்போகிறார்கள்.எங்களுக்கு ரொம்ப காலத்திற்கு முன்னாடியே இப்படித்தான் நடக்கப்போகிறது என்பதை உணர்ந்திருந்தோம்” என்கிறார் ரஷா.

போலீசுடன் வாக்குவாதம் செய்யும் போராட்டக்காரர்கள்

அங்கே வளர்ந்தபோது அவர்களது அருகாமை வீடுகளில்குடியேறிகளாக வந்தவர்கள் கண்களில் எப்போதும் இப்படியான ஒருபார்வையை பார்க்கலாம். .அந்த வீட்டை எந்த காரணகாரியமும் இன்றி சுற்றி வந்து முறைத்து பார்த்துக் கொண்டிருப்பார்கள் .ரகசியமாக முக்கியமான விசயம்போல ஒருவருக்கொருவர் பேசிக்கோள்வார்கள். சிலபேர் எங்களது வீட்டின் மீது கல்லெறிவதும் உண்டு.எங்களது அம்மா மற்றும் உறவினர்கள் எக்காரணத்தை கொண்டும் அந்த வீட்டை விட்டு வெளியேறிவிடாதீர்கள் என எச்சரித்துக் கொண்டேயிருந்தனர். என கொடுமையான நாட்களை நினைவு கூர்கிறார் ரஷா.

அங்கிருந்த எங்களது வீடுகள்ஐநா சபையின் பாலஸ்தீனிய அகதிகளுக்கான அமைப்பான UNRWA மற்றும் ஜோர்டான அரசின் கூட்டு முயற்சியால் 1956 –ல்’ கட்டப்பட்டன.

1948-ல் பாலஸ்தீன இனத்தையே துடைத்தெறிதலை நோக்கமாக கொண்ட நிகழ்வானநக்பா’வுக்கு பிறகு அங்கிருந்து வெளியேறியவர்களுக்காக 28 குடியிருப்பு வாரியங்கள் கட்டப்ட்டன.

அந்த வீடுகளுக்கு பிரதிபலனாக தங்களது அகதிகள் தகுதியை 28 குடும்பங்கள் விட்டுத்தந்தன. 1948-ல் இஸ்ரேல் அப்போது உருவாகியிருக்கவில்லை என்றாலும் பாலஸ்தினியர்கள் இப்போது இருக்கக்கூடிய நிலம் மற்றும சொத்துகள் ஆகியவை முன்னர் யூத குடும்பங்களுக்கு சொந்தமான இடங்கள் என குற்றம் சாட்டப்பட்டு வழக்குகள் இப்போது போடப்பட்டுள்ளன.

யூதர்கள்எங்களது சொத்துக்களக்கு உரிமை கொண்டாடுகின்றனர்’ என்றால் அதற்கான சட்ட அடிப்படைகள்குறிப்பாக இரண்டு சட்டங்கள் இயற்றப்பட்டதே காரணம். இஸ்ரேலியர்கள் பாலஸ்தீனியர்களின் சொத்துக்களை தங்களின் பொறுப்புக்கு மாற்றிக்கொள்ள என்று போடப்பட்ட தனிச்சிறப்பு சட்டமாகும்

இதன் மூலம் உரிமை பாராட்டும் யூதர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதும் அதேசமயம் பாலஸ்தினியர்களுக்கு அதே உதவியை மறுப்பதும் இஸ்ரேலின் சட்டத்தில் புனிதமாக பாதுகாக்கப்படுகிறது..

இஸ்ரேல் உருவாக்கப்பட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் 1950ல்இல்லாதவர்கள் சொத்துரிமை சட்டம்என்ற ஒன்றை நடைமுறைக்கு கொண்டுவந்தனர். பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக பக்கத்து நாடுகளுக்கு அனுப்பிவைக்கும் நோக்கத்திற்கான வரைவு திட்டமாகும். அதன் மூலம் அவர்களைஇல்லாதவர்களாகஅறிவித்து அவர்களது சொத்துக்களை இஸ்ரேல் அரசு தனது சட்ட வரம்புக்குள் கொண்டுவந்து வைத்துக்கொண்டது.

வேறு நாட்டிலிருந்து இஸ்ரேலுக்கு வந்த யூதர்களுக்கு அந்த வீடுகள் உடைமையாக்கப்பட்டன. யூதர்கள் எங்கு பிறந்திருந்த போதிலும்இஸ்ரேலுக்கு வந்தால் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்பட்டது. ஆனால் பாலஸ்தீனியர்களுக்கு அன்றிலிருந்து இன்றுவரை இஸ்ரேலுக்குள் திரும்ப வருவதற்கே உரிமை மறுக்கப்பட்டது.

1967-ல் கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் ஆக்ரமித்த்து.அதை அடுத்து 1970-ல் சட்டம் மற்றும் நிர்வாக விசயங்கள் சட்டம் நடைமுறைக்கு கொண்டுவந்த்து. ஜோர்டான் கட்டுப்பாட்டில் 1948-லிருந்து வந்த சொத்துக்களை இஸ்ரேலிய யூதர்களுக்கு உரிமை கொண்டாட அனுமதித்தது. இந்த உரிமைகள் எதுவும் பாலஸ்தீனியர்களுக்கு வழங்கப்படவில்லை.

ஷெய்க் ஜார்ராவில் கார்ம் அல்ஜௌனி நிலங்களின் பராமரிப்பு கொஞ்ச காலத்திற்கு இஸ்ரேல் அரசாங்கத்தின் காப்பாளர் ஜெனரல் பொறுப்பிலிருந்த்து. அதன் பிறகு இரண்டு கமிட்டிகளிடம்ஷெபார்டிக் சமூகக் குழு, க்நிஸெட் இஸ்ரேல்ஆகியவற்றிடம் கைமாற்றி விடப்பட்டது.

அனைத்து 28 பாலஸ்தீனிய குடும்பங்களுக்கு எதிராக முதலில் வழக்குகள் போடப்பட்டபோது. 1970-களில் சட்ட நடவடிக்கைகள் நடைமுறைக்கு வந்தன. 2008 வரை ஒன்றுமில்லை, அதற்கு பிறகு அமெரிக்காவை பூர்விகமாக கொண்டநஹாலாட் சிமோன் இன்டர்நேஷனல்’ என்ற குடியேறிகளின் குழு அந்த சர்ச்சைக்குரிய நிலத்தின் உரிமைகளை வாங்கியதும், முதல் குடும்பம் வலுக்கட்டாயமாக அவர்களுக்கு சொந்தமான இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டது.

நஹாலாட் சிமோன் கார்ம் அல்ஜௌனி பகுதியிலுள்ள நிலங்களிலிருந்து அனைத்து பாலஸ்தீனியர்களையும் விரட்டுவதையே தனது பிரதான நோக்கமாக வைத்திருக்கிறது.அடுத்து தற்போதுள்ள வீடுகளை இடித்து தள்ளிவிட்டு புதிதாக குடியேறிவர்களுக்கான திட்டம் ஒன்றைசிமோன் ஹாட்சாதிக்என்ற பெயரில் 200 குடியிருப்புகளை கட்டுவதற்காக தயாரித்திருக்கிறது.

2009-ல் கர்ட் குடும்பம் வசித்து வந்த அவர்களது சொந்த வீட்டின் பாதியை இஸ்ரேல குடியேறிகள் ஆக்கிரமித்து கொண்டனர். இரண்டு அந்நிய குடும்பங்களின் தினசரி நிகழ்வுகள், கோபதாபங்கள் அவர்களது அந்தரங்கங்கள் அனைத்தையும் நடுவில் ஒரு பெட்ஷீட் மட்டுமே பிரித்தது. இதிலிருந்து அவர்களது வாழ்க்கையின் கோரத்தன்மையை உணரலாம்.

இதை என்றைக்கும் நிறுத்த மாட்டார்கள். மன உளைச்சலை ஏற்படுத்தும் அளவு தொல்லைகள், கேட்கக் கூசும் வார்த்தைகளால் இழிவுபடுத்துதல் தங்களது நாயை பழக்கி நம்மை பார்த்தவுடன் குரைக்கவைத்து பயமுறுத்துவது, தேவையில்லாமல் போலீசை கூப்பிட்டுவைத்து நம்மை பற்றி ஏதாவது பொய் புகார் சொல்வது அல்லது நமது இடத்தில் அவர்கள் பார்ட்டிகளை நடத்தி, வேண்டுமென்றே இடைஞ்சல் கொடுப்பது எல்லாத்துக்கும் மேலே ஆளில்லாத நமது வீட்டுக்குள் அந்த குடியேறிகள் உட்கார்ந்து அரட்டை அடிப்பதை வீட்டுக்கு வரும் நாம் பார்க்கும் போது என்ன உணர்வு ஏற்படும்?என்று எலக்ட்ரானிக் இன்டிபாடா வுக்கு அளித்த பேட்டியில் மொஹமது எல்கர்ட் மனவேதனையுடன் சொல்கிறார்..

தங்களது சொந்த வீட்டில் வசிக்கும் உரிமைக்காக 1972-லிருந்து இஸ்ரேலிய நீதிமன்றங்களில் கர்ட் மற்றும் அவரைப் போன்றவர்கள் போராடி வருகிறார்கள்.

மொஹமது எல்கர்ட் டின் பாட்டி தனது 103 வயதில் இறக்கும்போது கூடநிச்சயமாக நமக்கு உரிமையான இந்த வீட்டில் நாம் நிலையாக வசிக்கும் காலம் வரும்என்ற நம்பிக்கை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இன்றைக்கு எனது பாட்டி உயிருடன் இருந்திருந்தால் இது அவருக்கு நான்காவது வலுக்கட்டாயமான இடமாறுதலாக இருக்கும். அல்ஹக் ஒரு சட்டஉரிமைக்கான குழு மற்றும் நிறைய பாலஸ்தீனிய அமைப்புகள் #SaveSheikJarrahக்காக சமூக ஊடகங்கள் மூலமான பேச்சரங்கம் ஏப்ரல் 14-ல் நடைபெற்றது. அதில்.எல்கர்ட் தனது வேதனையை பகிர்ந்து கொண்டார். ஆனால் அதன்மூலம் நம்பிக்கையான செய்திகள் வெளிவரவில்லை.

பிப்ரவரி 15-ல் ஜெருசலேம் மாவட்ட நீதிமன்றம் கொடுத்திருக்கும் ஒரு வழிகாட்டல்படி நான்கு குடும்பங்களின் அதிலிருக்கும் மொத்தம் முப்பது பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன..வீட்டை விட்டு அவர்கள் அனைவரும் மே 2 ந்தேதிக்குள் வெளியேற வேண்டுமென நீதிமன்றம் ஆணை பிறப்பித்திருக்கிறது.

வீட்டைவிட்டு வெளியேறுவது மட்டுமல்ல தாமதபடுத்திய இந்த இடைவெளி காலத்துக்காக அந்த குடும்பங்கள் சட்ட செலவுக்களுக்கான கட்டணமாக ஒவ்வொருவரும் 21000 டாலர்களுக்கும் மேலாக நகாலாட் ஷிமோனுக்கு கொடுக்க வேண்டியிருக்கும்.

25 பேர் கொண்ட மூன்று வேறு குடும்பங்களும் ஆகஸ்ட் மாதம் வீட்டைவிட்டு வெளியேற்றப்படுவதை எதிர்நோக்கியிருக்கிறார்கள். அவர்களும் ஒரு குடும்பத்திற்கு 9000 டாலர் வீதம் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். ரஷா பதெரி குடும்பம் அவற்றில் ஒன்று.

உயிர்வாழும் அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிராக எங்களை விரட்டிக் கொண்டிருக்கிறார்கள். நாளைக்கு எங்கே தூங்குவது என்பது தான் பிரதான கவலையாக இருக்கிறது.இங்கே ஒருவருக்கும் வாழ வழி இல்லை” என்கிறார் ரஷா.

வேறு போக்கிடம் எதுவுமில்லை

கிழக்கு ஜெருசலம் முழுதும் யுத மயமாக்குவதுஇந்த ஒற்றைக் குறிக்கோளை நிறைவேற்றிட தோதாக நகரத்திலிருந்து பாலஸ்தீனியர்களை விரட்டியடிக்க தீவிர வலதுசாரி அமைப்புகளால் பணம் கொடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்ட கும்பல்களுடன் நடக்கும் ஒரு பரந்த போர்களத்தின் முன்னணி களமாக ஷேக் ஜாரா இருக்கிறது.

ஜெருசலத்தை அடித்தளமாக கொண்ட அல்க்யுட்ஸ் அமைப்பை சேர்ந்த .ஃபயருஸ் சார்கவியின் வாதப்படி1967 லிருந்து இஸ்ரேலின் நோக்கம் பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கையை ஜெருசலத்தின் பொதுமக்கள் தொகையில் 40 சதத்திற்கு கீழே கொண்டு வந்து விடவேண்டும்என்பதுதான்.

இஸ்ரேலின்மாஸ்டர்பிளான் 2000”-ல் இது குறிப்பால் உணர்த்தப்பட்டுள்ளது. நகரத்தின் மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குள் வேறுபாடு காட்டாத நகர அளவிலான நகர்புற மற்றும் மண்டலதிட்டம்.

மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வுகளை கொண்டு வருவதற்காக இடமாறுதல் பற்றிய வேறுபட்ட கொள்கைகளை திட்டமிட்டு அவற்றை ஜெருசலத்தில் அமுல்படுத்தினர்என்று சார்கவி எலக்ட்ரானிக் இன்டிபாடா வுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார். (Al-Quds – that is the Arabic name of the city of Jerusalem.)

க்ராஸ்ருட்ஸ் அல்குட்ஸ்” என்ற அமைப்பு ஜெருசலத்தில் இயங்கும் பல்வேறு குழுக்களை ஒன்றுபடுத்துவதைபாலஸ்தீனிய இனம் இங்கே வாழஉரிமை வேண்டும்என்பதற்கான ஒரு செயல்முறையாக வகுத்து செயல்படுகிறது. .2011 ல் இந்த அமைப்பு துவங்கப்பட்டதிலிருந்துகிழக்கு ஜெருசலத்தில் பாலஸ்தீன இனத்தில் இருக்கும் பிரிவுகள் பற்றிஆராய்ச்சி செய்து வருகிறது.

இஸ்ரேலிய நீதித்துறை குடியேறியவர்களின் அமைப்புகள் மற்றும் இஸரேலிய ஆக்ரமிப்பு சக்திகள் ஆகியவற்றுக்கிடையே தெளிவான வலைப்பின்னல் கூட்டு செயல்பாடு இருப்பதாக சார்கவி குறிப்பிடுகிறார். இம்மாதிரியான கூட்டு செயல்பாடு தான் பாலஸ்தீனியர்களுக்கு எதிரான அமைப்புரீதியான பாகுபாட்டை எளிதாக அமுல்படுத்த உதவுகிறது.

வழக்குகள் கோர்ட்டுகள் வழியாக செல்வதற்கான வழியை துடைத்தெறியும் போது குடியேறியவர்களின் இருப்பு மற்றும் அதே போன்று போலீசு துறையில் அவர்களின் ஆதிக்கம் அதிகரித்து வருவதும் மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழ்ந்து வருவதும் அங்கு இருக்கும் பூர்வகுடிகளை நிலையான பயத்திலேயே இருத்திவைக்கிறது.

அவர்களிடம் கேமராக்கள் இருக்கின்றன. அதைக்கொண்டு ஏதோ குற்றவாளிகளை கண்காணிப்பது போல நமது எல்லா நகர்வுகளையும் அசைவுகளையும் படம் பிடிக்கிறார்கள். அந்த பகுதியை சேர்ந்திராத குடியேறிகள் கூட பக்கத்து வீடுகளுக்கு வருவது போல வருகின்றனர். அவர்கள் அனைவரது கைகளிலும் ஆயுதங்கள் இருக்கும். அவர்கள் எப்போதும் நாங்கள் ஏதோ தவறு செய்து விட்டதை போல போலீசை கூப்பிட்டு எங்களை மிரட்டுவார்கள்”. ஆரிப் ஹம்மத் 70 வயது பெரியவர் எலக்ட்ரானிக் இன்டிபாடாவிடம் புலம்புகிறார்.

ஹம்மத் பிறந்து வளர்ந்தது எல்லாம் ஷேய்க் ஜாரா விலுள்ள காம் அல்ஜவொனி பகுதியில்.அவரது குடும்பம் 1948-ல் ஹைஃபாவிலிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டபின் இங்கு வந்து வசித்து வருகிறார்கள். எட்டு உறவினர்களுடன் வாழும் அவருக்கு பேத்தி பிறந்து 18 மாதங்களே ஆகின்றன. என்றாலும் வீட்டிலிருந்து வெளியேற்றபடும் ஆகஸ்ட் மாதத்தை எதிர்நோக்கியிருக்கிறார். ”இங்கே நம்மை சுற்றி அபாயங்கள் அழுத்தங்கள் சூழ்நிலைகள் மனஅழுத்தத்தை கொண்டு வந்து விடும்.என்றாலும் நான் அவ்வளவு எளிதாக விடுவதாக இல்லைஹம்மத் கூறுகிறார்.

வரைமுறையில்லாமல் நீண்டகாலத்திற்கு இழுத்துச்செல்லப்படும் வழக்குகள் அதன் நடைமுறையால் ஒரு மாயையை ஏற்படுத்திவிடுகின்றனஎன்கிறார் க்ராஸ்ருட்ஸ் அல்கட்ஸ் அமைப்பைச் சேர்ந்த சார்க்வி.

நியாயமான சண்டை அல்ல :

அவர்கள் மத்தியில்குடியேறிகள்கெட்டவர்கள் என்றும்மற்றவர்கள் நல்லவர்கள்என்ற உணர்வு எப்போதும் இருக்கிறது. குறைந்தபட்சம் சட்டம் ஒழுங்கு இருக்கிறது. ஆம், சட்டம் இருக்கிறது. ஆனால் அது இனவெறி கொண்டதாக இருக்கிறதுஅவரே சொல்கிறார்.

இதை காட்டாமல் இருப்பதில் நாம் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் இங்கே அரசு இருக்கிறது சட்டம் இருக்கிறது சட்டம் ஒழுங்கு இருக்கிறது மற்றும் இங்கே சட்ட உதவிபெறாதவர்கள் நாடுகடத்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள். அவரே தொடர்ந்துஇல்லை எல்லாமே இனவெறி பிடித்திருப்பவை. இந்த சட்டமியற்றும் கிளைகள் அதன் அமுலாக்கம் இங்கு இருக்கின்ற அத்தனையும் எல்லாமே

எல்லா ஏழு குடும்பங்களும் தாங்கள் வெளியேற்றபடுவதை நிறுத்தக்கோரி எந்த நீதிமன்றத்திலும் முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளனர். ஆனால் அதற்கான வாய்ப்புகள் மிக மெல்லியதாக இருக்கின்றன, என்கிறார் அஸீல் அலபாஜெ அல் கட்க் கின் ஒரு சட்ட ஆலோசகர்.

படிக்க:
♦ இஸ்ரேல் மோடியைக் கொஞ்சுவது ஏன் ?
♦ போராட்டத்தில் ஓய்வறியா பாலஸ்தீனம் – படக்கட்டுரை

கிழக்கு ஜெருசலமில் இருக்கும் அனைத்து குடும்பங்களின் அனுபவம் உணர்த்துவது ஒரு மாஜிஸ்ட்ரெட் கோர்ட்டிலிருந்து வீட்டை விட்டு வெளியேறுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டால் நீங்கள் வலுலுக்கட்டாயமாக வெளியேற்றபடுமுன் இது ஒரு காலபகுதி யாகும் என்பதை குறிக்கிறதுஎன்கிறார் அல்பஜே

சர்வதேச கவனத்தை கவருவதற்காக சமூக ஊடகங்களில் பிரச்சார இயக்கம் மேற்கொள்வது சளைக்காமல் வழக்காடுவது ஆகியவற்றில் அங்கிருக்கும் பாலஸ்தீனியர்களும் அவரகளுக்கான செயற்பாட்டாளர்களும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

ஷேய்க் ஜாரா வில் வசிப்பவர்கள் 191 பாலஸ்தீனியர்கள் உட்பட 500 பேர் இஸ்ரேலி மற்றும் சர்வதேச உரிமைகள் அமைப்பு ஆகியவை ஏப்ரல் 22 அன்று சர்வதேச குற்ற நீதிமன்றத்திடம் (ICC) ஒரு முறையீடு செய்துள்ளனர்.

(ICC) சர்வதேச நீதிமன்றம் ஏற்கனவே பாலஸ்தீனத்தில் இழைக்கப்பட்ட போர்குற்றங்களை பற்றிய விசாரணையை செய்துகொண்டிருக்கிறது. அதனுடன் கிழக்கு ஜெருசலமில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் பாலஸ்தீனியர்களின் நிலைமை குறித்தும் அந்த விசாரணையில் சேர்க்ககுமாறு கோரியுள்ளனர்.

அதேசமயம் அங்கே குடியிருப்பவரகள் தங்கள் முன்னால் காத்திருக்கும் போராட்டங்களுக்கும் தாங்களே முன்னின்று வழிநடத்த தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு குழந்தையாக, இங்கே குடியேறியவர்களின் நடவடிக்கைகள் எவ்வளவு கொடூரமானவை என பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். இது ஒரு சொத்து இழப்பு என்ற அளவில் தொடங்கி முடிவதல்ல. மனரீதியான தொல்லைகள், பொருளாதாரம் வறண்டு போதல் ஆகியவைகளையும் உள்ளடக்கியது. இது ஒரு வெறும் சட்டப் போராட்டம் மட்டும் அல்ல. அரசியல் போராட்டம்என்கிறார் மொகமது எல்கர்ட் ..

கட்டுரையாளர் : கெல்லி குன்ஸ்ல், அமெரிக்க சுயாதின பத்திரிக்கையாளர்
தமிழாக்கம் : மணிவேல்
நன்றி : ElectronicIntifada

கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகின் மிக மோசமான ஐந்து தலைவர்கள் !!

கொரோனா பெருந்தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஆனால் கொடிய கொரோனா பெருந்தொற்றை ஆற்றலுடன் தடுக்கத் தவறி வரலாற்றில் தமது பெயரை அழிக்க முடியாத வகையில் இந்தத் தலைவர்கள் பதிய வைத்து விட்டனர். சிலர் உண்மையில் மக்களைக் காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

கோவிட்-19ஐக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினம். தொற்று நோய் மேலாண்மை என்று வரும்போது அதைக் கட்டுப்படுத்தும் பொறுப்புள்ளவர்கள் என்பதாக ஆட்சியில் உள்ள அரசியல் தலைவர்களின் பங்குள்ளது. ஆனால் சில தற்போதைய மற்றும் முன்னாள் உலகத் தலைவர்கள் தங்கள் நாட்டில் பெருந்தொற்று பாதிப்புகளை எதிர்த்துப் போராடுவதற்கு வெகு குறைவான முயற்சிகளையே எடுத்துள்ளனர். அது தொற்றுநோயின் தீவிரத்தை குறைத்து மதிப்பிடுவதன் மூலமோ, அறிவியலை புறக்கணிப்பதன் மூலமோ அல்லது சமூக இடைவெளி மற்றும் முகக் கவசங்கள் போன்ற முக்கியமான சுகாதார தலையீடுகளை புறக்கணிப்பதன் மூலமோ தொற்று பரவ காரணமாக இருந்துள்ளனர். இந்த பட்டியலில் உள்ள அனைத்து தலைவர்களும் இந்த தவறுகளில் ஒன்றையாவது செய்தனர். சிலர் அனைத்து தவறுகளையும் செய்தனர், அவற்றின் கொடிய விளைவுகளுடன்.

***

படிக்க :
♦ இந்தியாவின் துயரம் : ஆர்.எஸ்.எஸ் – பாஜக !
♦ மாதவிடாயும்  சானிட்டரி நாப்கினின் வரலாறும் || சிந்துஜா

இந்தியாவின் நரேந்திர மோடி :
ஸ்மித் கங்குலி, இண்டியானா பல்கலைக் கழகம்

உலகளாவிய தொற்று நோயின் புதிய மையமாக இந்தியா உள்ளது. மே 2021 க்குள் நாளொன்றுக்கு சுமார் 400,000க்கும் மேலானவர்களுக்கு கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஏற்படும். புள்ளி விவரங்கள் எவ்வளவு தான் மோசமானதாக இருந்தாலும், இந்த புள்ளி விவரம் நாட்டில் நிலவுகின்ற கொடூரமான பயங்கரத்தை வெளிப்படுத்த இயலாது. கோவிட்-19 நோயாளிகள் மருத்துவமனைகளில் இறந்து கொண்டிருக்கின்றனர், ஏனெனில் மருத்துவ மனைகளில் ஆக்ஸிஜன் இல்லை மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர்காக்கும் மருந்துகள் இல்லை. நோயாளிகள் அளவுக்கு அதிகமாக நிரம்பி வழிவதால் புதிதாக வரும் நோயாளிகளுக்கு படுக்கைகள் இன்றி மருத்துவமனைகளில் இருந்து திருப்பி அனுப்பப் படுகிறார்கள்.

நாட்டின் இந்தப் பெருந்துயருக்கு காரணம் என மக்கள் ஒரே ஒரு நபரை சுட்டிக் காட்டுகின்றனர். அது பிரதமர் நரேந்திர மோடி.

ஜனவரி 2021-ல், மோடி ஒரு உலகளாவிய மன்றத்தில் “இந்தியா மனிதகுலத்தை காப்பாற்றியதுகொரோனாவை திறம்பட கட்டுப்படுத்துவதன் மூலம்என்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டார். மார்ச் மாதம், அவரது சுகாதார அமைச்சர் தொற்றுநோய் ஒரு ”முடிவுக்கு” வந்து விட்டதாக படாடோபமாக அறிவித்தார். அச்சமயம் கோவிட்-19 உண்மையில் இந்தியாவிலும் உலகெங்கிலும் வலுப்பெற்று வந்தது ஆனால் அவரது அரசாங்கம் ஒரு கொடிய மற்றும் மிகவும் எளிதாகவும் வேகமாகவும் தொற்றும் கோவிட்-19 மாறுபட்ட வடிவத்தை அடைந்து விட்டது பற்றி எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை.

நாட்டின் குறிப்பிடத்தக்க பகுதிகளில் வைரஸை முழுமையாக கட்டுப்படுத்தாத நிலையில், மோடியும் அவரது கட்சியின் மற்ற உறுப்பினர்களும் ஏப்ரல் தேர்தலுக்கு முன்னர் நெரிசல் நிறைந்த வெளிப்புற பிரச்சார பேரணிகளை நடத்தினர். வெகு சில பங்கேற்பாளர்கள் மட்டுமே முககவசங்களை அணிந்திருந்தனர். ஜனவரி முதல் மார்ச் வரை லட்சக் கணக்கானவர்களை ஈர்க்கும் ஒரு (இந்து) மத விழாவையும் மோடி அனுமதித்தார். பொது சுகாதார அதிகாரிகள் இப்போது இந்த விழா ஒரு மிகப்பெரிய அளவு நோய்த் தொற்றைப் பரப்பும் (சூப்பர்ஸ்ப்ரெட்டர்) நிகழ்வு என்றும் ஒரு மகத்தான தவறுஎன்றும் நம்புகிறார்கள்.

கடந்த ஆண்டு மோடி இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளர் என தற்பெருமையடித்துக் கொண்ட போது, இந்தியா ஒரு கோடிக்கும் அதிகமான தடுப்பூசி அளவுகளை அண்டை நாடுகளுக்கு அனுப்பியது. இருப்பினும் இந்தியாவின் 130 கோடி மக்களில் வெறும் 1.9% பேருக்கு மட்டுமே மே மாத தொடக்கத்தில் கோவிட்-19 க்கு எதிரான முதல் கட்ட தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இவர்களில் ஆகப் பெரும்பான்மையினருக்கு 2-ம் கட்ட தடுப்பூசி போட தடுப்பூசிகள் இல்லை.

***

பிரேசிலின் ஜைர் போல்சோனாரோ :
எலிஸ் மசார்ட் டா ஃபொன்ஸெகா, Fundação கெடுலியோ வர்காஸ் மற்றும் ஸ்காட் எல். கிரீர், மிச்சிகன் பல்கலைக்கழகம்

பிரேசில் ஜனாதிபதி ஜைர் போல்சோனாரோ கோவிட்-19 பெருந்தொற்றுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை இது ஒரு சிறிய காய்ச்சல்என்று அவர் ஏளனம் செய்தார் அவர் பிரேசிலில் நோயின் பாதிப்புகளை மேலும் தீவிரமாக மோசமடையச் செய்தார்.

மருத்துவ நெறிமுறைகள், புள்ளி விவர தரவுகளை வெளியிடுதல் மற்றும் தடுப்பூசி கொள்முதல் போன்ற சுகாதார அமைச்சகத்தின் நிர்வாக விவகாரங்களில் தலையிட, போல்சோனாரோ தனது அரசியலமைப்பு அதிகாரங்களைப் பயன்படுத்தினார். அரசியல் அமைப்பு தனக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தை (வீட்டோ) கேடாகப் பயன்படுத்தினார். எடுத்துக்காட்டாக, மத வழிபாட்டிடங்களில் முகக்கவசங்களைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்கியிருக்கும் சட்டத்தை அவர் ரத்து செய்தார், தொற்றுநோயால் நிரந்தரமாக பாதிக்கப்பட்ட சுகாதார நிபுணர்களுக்கு இழப்பீடு வழங்குவதையும் ரத்து செய்தார். சமூக இடைவெளியை ஊக்குவிப்பதற்கான மாநில அரசாங்கத்தின் முயற்சிகளை அவர் தடுத்தார் மேலும் அழகு நிலையங்கள் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள் உட்பட பல வணிகங்கள் அத்தியாவசியமானதாகதிறந்திருக்க அனுமதிக்க தனது சிறப்பு அதிகாரத்தைப் (வீட்டோ) பயன்படுத்தினார். கோவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க, நிரூபிக்கப்படாத மருந்துகளை, குறிப்பாக ஹைட்ராக்ஸிகுளோரோகுயின்ஐ போல்சோனாரோ தீவிரமாக ஊக்குவித்தார்.

போல்சோனாரோ ஜனாதிபதி என்ற முறையில் தனது சொந்த சுய முயற்சியில் கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சுற்றியுள்ள விவாதத்தை வடிவமைத்தார். தொற்று பாதிப்புக்கும் பொருளாதார பேரழிவுக்குமான தொடர்பை மறுத்தார். சமூக இடைவெளி கடைப்பிடிக்க வேண்டும் என்பதை முற்றாகப் புறக்கணித்தார். அறிவியலை கேடாக சித்தரித்தார். இதனால் மக்களில் பலர் தவறான கருத்துக்களுக்கு ஆட்பட்டு, எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி தொற்றை தீவுரமாகப் பரப்பினார்கள். ஆனால் ஜனாதிபதி போல்சோனாரோவோ கோவிட்-19 நெருக்கடிக்கு பிரேசிலிய மாநில அரசாங்கங்கள், சீனா மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றை குற்றம் சாட்டினாரே தவிர, பெருந்தொற்று பாதிப்புக்கான தனது தவறான நிர்வாகப் பொறுப்பின் காரணத்தை ஒருபோதும் ஏற்கவில்லை.

டிசம்பரில், போல்சோனாரோ பக்க விளைவுகள் காரணமாக தடுப்பூசியை எடுக்க மாட்டேன் என்று அறிவித்தார். “நீங்கள் முதலையாக மாறினால், அது உங்கள் பிரச்சனை,” என்றார் அவர்.

போல்சோனாரோவின் தொற்றுநோய் பற்றியதான தவறான நிர்வாகம் அவரது அரசாங்கத்திற்குள் மோதலை உருவாக்கியது. பிரேசில் ஒரு வருடத்திற்கும் குறைவான காலத்தில் நான்கு சுகாதார அமைச்சர்களைக் கண்டது. பிரேசிலின் கட்டுப்பாடற்ற நோய்த் தொற்று பல புதிய கொரோனா வைரஸ் வகைகளுக்கு வழிவகுத்தது, இதில் பி.1 மாறுபாடும் அடங்கும், இது மிகவும் தொற்றும் தன்மை கொண்டதாக தோன்றுகிறது. பிரேசிலின் கோவிட்-19 தொற்று பரவும் விகிதம் இறுதியாக குறையத் தொடங்கியுள்ளது, ஆனாலும் நிலைமை இன்னும் கவலையளிக்கிறது.

***

பெலாரஸின் அலெக்சாண்டர் லூக்காசென்கோ:
எலிசபெத் ஜே. கிங் மற்றும் ஸ்காட் எல். கிரீர், மிச்சிகன் பல்கலைக்கழகம்

உலகெங்கிலும் உள்ள பல நாடுகள் கோவிட்-19 க்கு சில நடவடிக்கைகள் எடுத்தாலும் அவை போதுமானவையாக இல்லாததால் மோசமான பாதிப்புகளுக்கு உள்ளாயின. ஆயினும், அப்படி அறைகுறை நடவடிக்கையை விட முழுமையான மறுப்புவாதத்தை தேர்ந்தெடுத்தவர்கள் மோசமான தொற்றுநோய் தலைவர்கள் என்று நாங்கள் முடிவுக்கு வருகிறோம்

பெலாரஸ் நாட்டின் நீண்டகால சர்வாதிகாரத் தலைவரான அலெக்சாண்டர் லூக்காசென்கோ கோவிட்-19 இன் அச்சுறுத்தலை ஒருபோதும் ஒப்புக்கொள்ளவில்லை. தொற்றுநோயின் ஆரம்பத்தில், மற்ற நாடுகள் ஊரடங்குகளை நடைமுறைப்படுத்தியபோது, கோவிட்-19 பரவுவதைத் தடுக்க எந்த கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் செயல்படுத்த வேண்டாம் என்று லூக்காசென்கோ தேர்வு செய்தார். மாறாக, வோட்கா குடிப்பதன் மூலமும், ஒரு சிறிய அறையில் நீராவிக் குளியல் எடுக்கும் சௌனாவுக்கு சென்று வருவதன் மூலமும், வயல்களில் வேலை செய்வதன் மூலமும் கொரோனா வைரஸைத் தடுக்க முடியும் என்று அவர் கூறினார். இந்த மறுப்புவாதம் அடிப்படையில் தடுப்பு நடவடிக்கைகளைக் கைவிடவும், தனிநபர்களாகவும் மற்றும் கொத்துக் கொத்தாகவும் தொற்றுநோய் பரவுவதற்கும், மக்கள் இறப்பதற்குமே உதவியது.

2020 கோடையில், லூக்காசென்கோ தனக்கு கோவிட்-19 இருப்பது கண்டறியப்பட்டதாகவும், ஆனால் தனக்கு அதற்கான அறிகுறிகள் ஏதுமில்லையென்றும், இந்த வைரஸ் ஒரு தீவிர அச்சுறுத்தல் அல்ல என்றும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருந்தார். முகமூடி இல்லாமல் கோவிட்-19 மருத்துவமனைகளுக்குச் சென்றதாகவும், இந்த நோயை முறியடித்து விட்டதாகவும் கூறி வந்தார். மேலும் தான் ஒரு வலுவான மனிதன் என்று தான் விரும்பிய பிம்பத்தை உருவாக்க இந்த நடவடிக்கைகள் உதவின.

தற்போது பெலாரஸ் நாட்டில் தடுப்பூசி போடும் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பினும், லூக்காசென்கோ தான் தடுப்பூசி போட்டுக் கொள்ளப் போவதில்லை என உறுதிபடக் கூறிவிட்டார். இன்றைய தேதி வரை பெலாரஸ் நாட்டு மக்கள் தொகையில் 3%க்கும் குறைவானவர்களுக்கு தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் டொனால்ட் டிரம்ப் :
டோரதி சின், கலிபோர்னியா பல்கலைக் கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ்.

டிரம்ப் தேர்தலில் தோற்று பதவியில் இல்லாமற் போனாலும், அவர் இந்த கொரோனா தொற்றை தவறாகக் கையாண்டதன் விளைவாக அமெரிக்காவில் அதன் கொடிய பாதிப்புகள் நீண்ட காலத்திற்கு தொடர்கின்றது. குறிப்பாக வெள்ளையின மக்கள் அல்லாதவர்களின் சுகாதாரமும் நல்வாழ்வும் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

துவக்கத்தில் ட்ரம்ப் இந்த கொரோனா தொற்று நோயை மறுத்தார். முகமூடி அணிவது மற்றும் சிகிச்சைகள் பற்றிய தவறான தகவல்களை தீவிரமாக பரப்பினார். இதோடு, ஆட்சியிலிருந்த தலைமைகளுக்கிடையே ஒற்றுமையின்மை நாடு முழுவதிலும் பெரும் தீங்கு விளைவித்தது ஆனால் விளைவு வெள்ளையர்களை விட வேறு சில குழுக்களுக்கு மிகவும் மோசமாக இருந்தது. நிற சமூகங்கள் சமத்துவமற்ற நோய் மற்றும் இறப்புகளால் பாதிக்கப்பட்டன. எடுத்துக்காட்டாக, ஆப்பிரிக்க அமெரிக்கர்களும் லத்தீனோக்களும் அமெரிக்க மக்கள் தொகையில் 31% மட்டுமே என்றாலும், கோவிட்-19 நோயாளிகளில் 55% க்கும் அதிகமானவர்கள் இந்தப் பிரிவினர்களே. பழங்குடி அமெரிக்கர்கள் 3.5 மடங்கு அதிகமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் மற்றும் வெள்ளையர்களின் இறப்பு விகிதத்தை விட 2.4 மடங்கு அதிக இறப்புக்கும் ஆளாயினர்.

வேலையின்மை பாதிப்புகளும் சமத்துவமற்ற முறையிலிருந்தது. அமெரிக்காவில் கொரோனா தொற்று மிக மோசமான போது, லத்தீன் அமெரிக்கர்களுக்கு 17.6% ஆகவும், ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு 16.8% ஆகவும், ஆசிய அமெரிக்கர்களுக்கு 15% ஆகவும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. இவர்களுடன் ஒப்பிடுகையில் வெள்ளையின அமெரிக்கர்களின் வேலையின்மை 12.4% தான் உயர்ந்தது.

இந்த சமத்துவமற்ற கொரோனா தாக்குதல்களின் விளைவாக, ஏற்கனவே இருக்கும் வறுமை, வீடின்மை மற்றும் பள்ளிக் கல்வியின் தரம் போன்றவற்றில் உள்ள சமத்துவமின்மைகள் மேலும் மிகுதியாக அதிகரித்தன மேலும் வரவிருக்கும் சில காலத்திற்கு தொடர்ந்து இப்படி அதிகரிக்கவே செய்யும். எடுத்துக்காட்டாக, ஒட்டுமொத்த அமெரிக்கப் பொருளாதாரம் மீட்சிக்கான அறிகுறிகளைக் காட்டினாலும், இந்த நிற பாகுபாடு சிறுபான்மைக் குழுக்கள் சமமான முன்னேற்றத்தை அடையவில்லை.

இறுதியாக, கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு சீனாவை ட்ரம்ப் குற்றம் சாட்டினார் இந்த வைரஸை குங் காய்ச்சல்என்று அழைக்கும் இனரீதியான வெறுப்பை உமிழும் அடைமொழிகளும் அடங்கும். இந்த இனவெறிப் பிரச்சாரம் காரணமாக கடந்த ஆண்டில் ஆசிய அமெரிக்கர்கள் மற்றும் பசிபிக் தீவுவாசிகள் மீதான தாக்குதல்கள் கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகரித்தது. இந்த இனவெறித் தாக்குதல்கள் குறைவதற்கான அறிகுறிகள் இன்று வரை தென்படவில்லை.

தடுப்பூசி கண்டுபிடிப்பதற்கான ஆரம்பகட்ட முன்னேற்றத்திற்கு ட்ரம்ப் நிர்வாகம் ஆதரவாக இருந்தது, உலகில் வேறு எந்தத் தலைவரும் செய்யாத ஒன்று. ஆயினும் கொரோனா பற்றிய தவறான தகவல்களைப் பரப்பியது, அறிவியல் பூர்வமற்ற பிரச்சாரத்தை காட்டுத்தனமாக மேற்கொண்டது போன்ற பாதிப்புகளினால் அமெரிக்கா இன்னும் கொரோனா பாதிப்பிலிருந்து மீளமுடியாமல் உள்ளது. சமீபத்திய ஒரு கருத்துக் கணிப்பின்படி மொத்த அமெரிக்கர்களில் 24% பேரும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 41% பேரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள மாட்டோம் எனறு கூறியுள்ளனர்.

மெக்சிகோவின் ஆண்ட்ரீஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடர்
சால்வடார் வஸ்குஎஸ் டெல் மெர்காடோ, சென்ட்ரோ டி இன்வெஸ்டிகேசன் ஒய் டோசென்சியா எகனாமிகாஸ்

மெக்சிகோ நாட்டு கோவிட்-19 நோயாளிகளில் 9.2% நோயால் இறக்கும் நிலையில், மெக்சிகோ உலகிலேயே மிக உயர்ந்த இறப்பு விகிதத்தைக் கொண்டுள்ளது. சமீபத்திய மதிப்பீடுகள் அது 617,000 இறப்புக்களை சந்தித்திருக்கலாம் என்று காட்டுகின்றன.

அதிக மக்கள் தொகை கொண்ட இரு நாடுகளான அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு இணையாக, மெக்சிகோவில் நீண்ட, தீவிர கோவிட்-19 தொற்றுப் பரவலுக்கு பல காரணங்கள் இருப்பினும், அதில் ஆற்றல் மிக்க ஒரு தேசியத் தலைமை இல்லாததும் ஒன்று.

தொற்றுநோய் காலம் முழுவதிலும், மெக்சிகோவின் ஜனாதிபதி ஆண்ட்ரீஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடர் மெக்சிகோவில் நோயின் தீவிரத்தை குறைத்துக் காட்டவே முயன்றார். ஆரம்பத்தில், அவர் நாடு தழுவிய ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கான கோரிக்கைகளை எதிர்த்தார். இறுதியில் மார்ச் 23, 2020 அன்று மெக்சிகோ இரண்டு மாதங்களுக்கு ஊரடங்கை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் நாடு தழுவிய பேரணிகளை நட்த்தினார். அவர் அடிக்கடி முகக்கவசம் அணிய மறுத்தார்.

படிக்க :
♦ சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 1
♦ யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

அவர் 2018-ல் பதவியேற்றபோது சுகாதார சேவைகளுக்கு குறைந்த அளவு நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதையே மரபுரிமையாகப் பெற்றார். அதன் பின்னர், லோபஸ் ஒப்ராடர் தொற்றுநோயின் போது சுகாதாரம் தொடர்பான செலவினங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாமல், சற்றே அதிகரித்தார். மருத்துவமனை வரவு செலவுத் திட்டங்கள் எதிர்கொள்ளும் மகத்தான பணிக்கு இந்த நிதி உயர்வு போதுமானதாக இல்லை என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.

தொற்றுநோய் வெடிப்பதற்கு முன்னரே, லோபஸ் ஒப்ராடரின் தீவிர நிதி சிக்கனக் கொள்கை – 2018 ல் இருந்து நடைமுறையில் இருந்தது குடிமக்கள் மற்றும் வணிகங்களுக்கு கிடைக்கும் கோவிட்-19 நிதி உதவியை கணிசமாக கட்டுப்படுத்துவதன் மூலம் ஒரு சுகாதார நெருக்கடியை சமாளிப்பது மிகவும் கடினமாக இருந்தது. இதையொட்டி, மெக்சிகோவில் தொற்றுநோயால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை அது தீவிரப்படுத்தியது. கடந்த ஆண்டு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகளை தொடர்வதற்காக தேவையானவர்களுக்கு உணவளித்தது. ஆண்டு இறுதியில் தொற்றிலிருந்து மீளும் சூழலில் மூர்க்கமான குளிர்கால இரண்டாவது அலைக்குள் நுழைந்தது.

இறுதியில், மற்றொரு முடக்கம் தவிர்க்க முடியாததாகியது. 2020 டிசம்பரில் மெக்சிகோ மீண்டும் சிறிது காலம் மூடப்பட்டது.

இன்று, முகமூடி அணிந்திருப்பது அதிகரித்துள்ளது. மெக்சிகோ அதன் மக்கள் தொகையில் 10% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளது. அண்டை நாடான கௌதமாலாவில் 1% பேருக்கே தடுப்பூசி போடப்பட்டுள்ளதுடன் ஒப்பிடுகையில், விசயங்கள் மேம்பட்டு வருகின்றன. ஆனால் மெக்சிகோவின் மீட்புப் பாதை நீண்டது.

00000

கட்டுரையாளர்கள் குறித்த குறிப்பு :

1. சுமித் கங்குலி புகழ்பெற்ற அரசியல் அறிவியல் பேராசிரியர் மற்றும் இந்திய கலாச்சாரங்கள் மற்றும் நாகரிகங்களுக்கான தாகூர் இருக்கையின் தலைவர், இந்தியானா பல்கலைக்கழகம்;
2. டோரதி சின் – இணை ஆராய்ச்சி உளவியலாளர், கலிபோர்னியா பல்கலைக்கழகம், லாஸ் ஏஞ்சல்ஸ்;
3. எலிசபெத் ஜே கிங் – மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் பொது சுகாதார பள்ளியில் சுகாதார நடத்தை மற்றும் சுகாதார கல்வி இணை பேராசிரியர்;
4. எலிஸ் மசார்ட் டா ஃபொன்ஸெகா – உதவி பேராசிரியர், பிரேசிலிய பொது நிர்வாக பள்ளி, Fundação கெடுலியோ வர்காஸ்;
5. சால்வடார் Vázquez டெல் மெர்காடோ கோனாசைட் ஆராய்ச்சி பேராசிரியர், பொது கொள்கை தேசிய ஆய்வகம், சென்ட்ரோ டி Investigación ஒய் டோசென்சியா Económicas;
6. ஸ்காட் எல். கிரீர் பேராசிரியர், உலகளாவிய சுகாதார மேலாண்மை மற்றும் கொள்கை மற்றும் அரசியல் அறிவியல், மிச்சிகன் பல்கலைக்கழகம்.

இந்த கட்டுரை ஒரு கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தின் கீழ் தி கான்வர்சேசன்ல் இருந்து மறுபிரசுரம் செய்யப்படுகிறது.

நன்றி: The Wire
தமிழாக்கம் : நாகராசு
.

சத்குருவின் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான சட்டப் போராட்டங்கள் !

பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த எம். வெற்றிச்செல்வன் கடந்த எட்டு ஆண்டுகளுக்கும் மேலாக வாசுதேவனின் சட்டவிரோதக் கட்டுமானங்களை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் போராடிவருகிறார். 2013, 2014-ம் ஆண்டுகளில் ஈஷாவுக்கு எதிராக இவரால் வழக்குகள் தொடரப்பட்டன. ஈஷா சட்டவிரோதமாக கட்டியிருக்கும் கட்டுமானங்களை இடித்துத்தள்ள வேண்டும் என நகர்ப்புற திட்டமிடல் துறை அளித்த ஆணையைச் செயல்படுத்த வேண்டும், இந்த சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராகச் செயல்படாத அதிகாரிகளைத் தண்டிக்க வேண்டும், சன்ஸ்க்ருதி என்ற பெயரில் ஈஷா சட்டவிரோதமாக நடத்திவரும் பள்ளிக்கூடம் மூடப்பட வேண்டும், ஈஷாவுக்கு குறைந்த விலையில் தரப்படும் மின்சாரத்தை நிறுத்த வேண்டும் என தனது மனுவில் வெற்றிச் செல்வன் கோரியிருக்கிறார்.

2013 மார்ச் முதல் 2014 ஏப்ரல் வரை இந்த மனுக்கள் மீது பத்து முறை விசாரணை நடைபெற்றது. அதற்குப் பிறகு விசாரணை ஏதும் நடக்கவில்லை. “ஈஷாவில் உள்ள சட்டவிரோதக் கட்டுமானங்களை இடிக்க வேண்டும் என்ற எங்களுடைய மனு மீது 2013 மார்ச் 8-ம் தேதி விசாரணை நடந்தது. ஈஷா, மாவட்ட ஆட்சியர், வனத்துறை HACA, கிராமப் பஞ்சாயத்து ஆகியவற்றுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அடுத்த விசாரணை மார்ச் 25-ம் தேதி நடக்கவிருந்தது. இந்த நிலையில், இது தொடர்பாக பதிலளிக்க தங்களுக்கு கால அவகாசம் வேண்டுமென ஈஷாவின் வழக்கறிஞர் கோரினார்.

படிக்க :
♦ கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?
♦ கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !

ஜூன் 20-ம் தேதியன்று ஈஷா, நகர்ப்புற திட்டமிடல் துறை, மாநில அரசு ஆகியவை தங்கள் பதில்களை பிரமாணப் பத்திரமாகத் தாக்கல் செய்தன. வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. 2013 ஆகஸ்ட் 22-ம் தேதி மேலும் மூன்று மனுக்களைத்தாக்கல் செய்தோம். இவை எல்லா மனுக்களும் சேர்த்து அடுத்த நாள் விசாரணைக்கு வந்தது. இரு தரப்பும் வாதிட்டோம். ஆனால், மாநில அரசு எந்த பதிலையும் சொல்லவில்லை. ஆகவே வழக்கு மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது.

2014 மார்ச் 13-ம் தேதி நடந்த விசாரணையின்போது, பள்ளிக்கூடங்கள் எதையும் நடத்த தாங்கள் ஈஷாவுக்கு அனுமதியளிக்கவில்லையென பள்ளிக் கல்வித் துறை தெரிவித்தது. இதற்குப் பிறகு எல்லாத் தரப்பும் தங்கள் பதில் வாதங்களை சமர்ப்பித்தால், இறுதி விசாரணை நடக்குமென நீதிமன்றம் தெரிவித்தது. ஆனால், அதற்குப் பிறகு எந்த விசாரணையும் நடக்கவில்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.

2017-ல் ஈஷாவின் மகாசிவராத்திரி விழாவை எதிர்த்து வெற்றிச்செல்வன் ஒரு வழக்கை தாக்கல் செய்தார். ஆனால், அவர் தாக்கல்செய்த முந்தைய மனுவே நிலுவையில் இருப்பதால் இந்த மனுவை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
“நான் உள்நோக்கத்துடன் அந்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக நீதிமன்றம் சொன்னது. ஈஷாவின் சுற்றுப்புறத்தில் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதல் கடந்த 15 – 20 ஆண்டுகளில் வெகுவாக அதிகரித்திருக்கிறது. யானைகள் செல்லும் வழியில் சட்டவிரோதமாக கட்டடங்கள் கட்டப்பட்டதுதான் இதற்கு முக்கியக் காரணம். இந்தப் பகுதியின் பல்லுயிர்த்தன்மையைப் பாதுகாக்கத்தான் நாங்கள் முயற்சிசெய்தோம். அதனால்தான் ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களை எதிர்த்துப் போராடுகிறோம். இதில் தனிப்பட்ட விரோதம் ஏதும் இல்லை” என்கிறார் வெற்றிச்செல்வன்.

கோவை – வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் 150 ஏக்கர் நிலப்பரப்பில் விரிந்துள்ள பிரம்மாண்டமான ஈஷா யோகா மையம்

தனது மனுவை உயர்நீதிமன்றம் ஏற்க மறுத்ததற்குப் பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தை அணுகினார். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஒரு அறிவுறுத்தலை வழங்கியது. அதாவது, மகாசிவராத்திரி போன்ற மிகப் பெரிய நிகழ்வுகளில் சுற்றுச்சூழல் மாசுபாடு அடையாமல் பார்த்துக்கொள்ள வேண்டுமெனக் கூறியது.

வெற்றிச்செல்வனைப் போலவே The Velliangiri Hill Tribal Protection Society என்ற அமைப்பும் நீதிமன்றத்தை அணுகியது. இக்கரைப் பொலவம்பட்டியில் உள்ள முட்டாத்து ஆயல் குடியிருப்பைச் சேர்ந்த 49 வயதான பி. முத்தமாள் என்பவர் இந்த வழக்கைத் தாக்கல் செய்தார்.

ஈஷாவின் சட்டவிரோத கட்டுமானங்களால் மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான மோதல் அதிகரித்து ஆதிவாசிகளின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகியிருப்பதாக முத்தம்மாள் வாதிட்டார். எவ்விதமான அனுமதியையும் பெறாமல் 112 அடி உயரத்தில் கட்டப்பட்டிருக்கும் ஆதியோகி வடிவத்திற்கும் அவர் எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்த மனுவுக்குப் பதிலளித்த நகர்ப்புற திட்டமிடல் துறையின் துணை இயக்குனர் ஆர். செல்வராஜ், அந்த ஆதியோகி வடிவம் எவ்வித ஒப்புதலும் பெறாமல் கட்டப்பட்டது என்று நீதின்றத்தில் தெரிவித்தார். ஆனால், செல்வராஜ் தனது பதிலை தாக்கல் செய்வதற்கு முன்பாகவே அந்த ஆதியோகி சிலை திறந்து வைக்கப்பட்டது. திறந்து வைத்தவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி.

அந்த ஆதியோகி சிலை என்பது சட்டச்சிக்கலில் இருக்கிறது என்பது தெரிந்தும் அதனைத் திறந்துவைக்க நரேந்திர மோதி தயங்கவில்லை. ஈஷா இவ்வளவு தைரியமாக சட்டமீறல்களைச் செய்வதற்குக் காரணம், அந்த அரசுக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கு. குறிப்பாக அப்போதைய தமிழ்நாடு அரசு அளித்த ஆதரவு.
ஈஷா ஆசிரமம் ஒன்றும் யானைகள் செல்லும் பாதையில் அமைந்திருக்கவில்லையென தனது நிலைப்பாட்டை மாற்றி நீதிமன்றத்தில் கூறியது தமிழக வனத்துறை.

படிக்க :
♦ சத்குரு ஜக்கி வாசுதேவின் டெரர் ஆன்மீகம்! கஞ்சா முதல் கொலை வரை!!
♦ துருக்கியில் 4700 ஆண்டு பழமையான லிங்கத்தைக் கண்டெடுத்த ஜக்கி !

நியூஸ்லாண்டரிக்கு கிடைத்த ஆவணங்களின்படி, 2012-ல் கோயம்புத்தூர் வனத்துறை அதிகாரி மாநிலத்தின் முதன்மை வனக் காப்பாளருக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில் யானைகள் செல்லும் வழியில் ஈஷா கட்டுமானங்களை எழுப்பியிருப்பதாகக் குறிப்பிட்டார். இந்தக் கட்டுமானங்களும் அங்கு வந்து குவியும் மக்களும் மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் இடையிலான மோதலை அதிகரிப்பதாக குறிப்பிட்டார். மகாசிவராத்திரியன்று மட்டும் சுமார் இரண்டு லட்சம் பேர் அங்கு வந்து குவிகின்றனர். மிகப் பெரிய வெளிச்சத்தைத் தரும் விளக்குகள் பொறுத்தப்பட்டு, பெரிய பெரிய ஒலிபெருக்கிகளும் வைக்கப்படுகின்றன.

2013-ல் மாவட்ட ஆட்சியர் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் ஈஷாவின் பெயர் குறிப்பிடப்படவில்லை. இக்கரைப் பொலுவம்பட்டியின் காப்புக்காட்டுப் பகுதியில் கட்டப்பட்டிருக்கும் சட்டவிரோத கட்டடங்களால் யானைகள் செல்லும் பாதைகள் மறிக்கப்படுவதாகவும் இதனால் மனிதர்களுக்கும் சொத்துகளுக்கும் சேதம் ஏற்படுவதாகவும் கூறிய அறிவிப்பு, மின்சாரம், குடிநீர் ஆகியவை துண்டிக்கப்படும் எனக் கூறியது. HACA ஒப்புதல் இல்லாமல் கட்டப்பட்டிருப்பதால் அந்த இடம் இடித்துத்தள்ளப்படும் என்றும் அறிவிப்பு கூறியது.

ஆனால், 2020வாக்கில் வனத்துறை அதிகாரிகள் வேறு கதை சொன்னார்கள்.

***

முந்தைய பாகங்கள் :
பாகம் 1: சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் கட்டிஎழுப்பப்பட்டது எப்படி?

பாகம் 2: யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி!

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

கொரோனா பெருந்தொற்றை ஆளும்வர்க்கம் எதிர்கொள்ள முடியாதது ஏன் ?

கான்பூர் தொழிற்சங்க இயக்கத்தினுடைய முண்ணனித் தோழரின் இளைய மகனிடமிருந்து ஏப்ரல் 27-ஆம் தேதி காலை தொலைபேசி அழைப்பு வந்தது. அவர்கள் வீட்டில் அனைவரும் கோவிட்-19 அறிகுறிகளால் பாதிக்கபட்டுள்ளனர் என்று தெரிவித்தார். அவரின் அப்பாவைத் தவிர வீட்டில் உள்ள மற்றவர்களின் உடல்நிலை நிலையாக இருப்பதாகவும் அப்பாவிற்கு ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டு வருவதாகவும் கூறினார். ஆக்சிஜன் கிடைப்பதும் மருத்துவமனைகளில் படுக்கை கிடைப்பதும் தாமதமாகிக் கொண்டே வந்தது.

உதவிக்காக நான் பணிபுரியும் கல்வி வளாகத்தில் கொரோனா பாதித்தவர்களுக்காக நடத்தப்படும் சமூக ஒருங்கிணைப்பு குழுவின் பொறுப்பாளரை அழைத்தேன். அவரோ தன்னுடைய மாமனார் போன வருடம் இதே நாளில் இறந்ததாகக் கூறினார். ஒரு வருடமாக தொடரும் இந்த நிலை தற்போது இன்னும் கோரமான வடிவத்தில், ஆக்ஸிஜன் இல்லை, மருத்துவமனையில் படுக்கை இல்லை எனத் தொடர்கிறது. இந்த ஒரு வருடம் காலத்தில் காலையில் கிரிக்கெட் புள்ளி விவரங்களை பார்ப்பதற்கு பதில் கொரோனா விவரங்களை பார்ப்பது வழக்கமாகி உள்ளது.

படிக்க :
யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !
பத்ம சேஷாத்திரி பள்ளி நிர்வாகத்தை குற்றம் சொல்ல முடியுமா ? சங்கிகள் தர்க்கம் || நெல்லை மக்கள் அதிகாரம்

மாற்று ஊடகங்களில் நாம் பார்பது கூட கோவிட் பரிசோதனை, மருத்துவர் ஆலோசனைகள், மருத்துவ அவசர ஊர்தி, மருந்துகள், ஆகியவற்றை பெற முடிகிறவர்களை பற்றி செய்திகளைதான். இந்த வசதிகளையெல்லாம் பெற முடியாதவர்களின் நிலையோ மிகவும் மோசமாக உள்ளது. நான் பணிபுரியும் மேல்தட்டு வர்க்கத்திற்ககான உயர் தரமான கல்லூரிக்கு அருகாமையிலேயே சுமார் 50,000 மக்கள் தொகை கொண்ட நான்காரி என்ற பகுதி உள்ளது.

தோட்டவேலை செய்பவர்கள், விடுதிகளில் வேலைசெய்பவர்கள், பேராசிரியர் வீடுகளில் வேலை செய்பவர்கள், செக்யூரிட்டிகள் என கல்லூரியில் பணிபுரியும் ஒப்பந்த பணியாளர்கள் ஆயிரக்கனக்கானோர் நான்காரி பகுதியில் வசிக்கின்றனர். இப்பகுதி மக்கள் மருத்துவச் சிகிச்சை பெற தகுதியுள்ள ஒரு மருத்துவர் இப்பகுதியில் கிடையாது. முறையாக மருத்துவம் படிக்காதவர்களே (jholawala doctors) – போலி மருத்துவர்களே – இப்பகுதியில் உள்ளனர்.

கொரோனா காலத்தில் இந்த போலி மருத்துவர்களின் வீட்டு வாசலில், தினமும் ஒரே அறிகுறிகள் உள்ள நூற்றுக்கணக்கானோர் வரிசையில் நிற்பதாக நண்பர்கள் கூறக் கேள்விபட்டிருக்கிறேன். பொதுவான மருந்துகளைக் கூட பெறமுடியாத காரணத்தால் இந்த போலி மருத்துவர்கள் சிகிச்சையளிப்பதை நிறுத்தினாலும், மக்கள் கூட்டம், கூட்டமாக இவர்களின் வீட்டிற்கு வந்து கொண்டே தான் இருக்கின்றனர். இந்த போலி மருத்துவர்கள் அதே பகுதியில் வசிப்பதனால் தங்களுடைய வீட்டுக்கு வரும் நோயாளிகளை இவர்களால் புறக்கணிக்கவும் முடிவதில்லை. தற்போதைய சுகாதார நெருக்கடியில் இந்த போலி மருத்துவர்களே நாட்டைக் காப்பாற்றுகின்றனர் என்று அப்பகுதியில் வசிக்கும் என்னுடைய பழைய நண்பர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

தகுதியுள்ள மருத்துவர்கள் நான்காரியில் பகுதியிலிருந்து திடீரென வெளிறிவிடவில்லை. உழைக்கும் வர்க்க பிரிவினரும் நடுத்தர வர்க்கத்தினரும் வசிக்கின்ற இப்பகுதியில் எனக்கு தெரிந்தவரையில், நான் 27 வருடங்களாக இக்கல்லூரியில் பணிபுரிகிறேன், இங்குள்ள பெரும்பான்மையான உழைக்கும் வர்கத்தினரால் தகுதியுள்ள மருத்துவர்களிடம் மருத்துவ சிகிச்சை பெற முடிந்ததில்லை. ஓரளவு வசதி படைத்தவர்கள் கூட மருத்துவ சிகிச்சை பெற மருத்துவர்கள் இப்பகுதியில் கிடையாது. மிக மோசமான பாதிப்புகளாக இருந்தால் ஜிடி சாலையிலும், வணிக பகுதிகளிலும் உள்ள மருத்துவமனைகளுக்குச் செல்லுவார்கள். இச்சூழலில் கொரோனா அறிகுறிகளுடன் வருபவர்களுக்கு இப்போலி மருத்துவர்கள் மருத்துவம் பார்ப்பதைத் தாண்டி முறையான கொரோனா பரிசோதனைகளோ வழிகாட்டுதல்களோ எதுவும் கிடையாது.

கள நிலவரங்களை கவனிக்கும் நம்மில் பலருக்கு இந்த திடீர் மருத்துவ நெருக்கடி கொரோனாவால் ஏற்பட்டது அல்ல என்று புரிந்து கொள்ள முடியும். எந்த ஒரு சராசரி நபருக்கும் இது போன்ற மருத்துவ நெருக்கடிகள் மீள முடியாத ஒரு பெருந்துயரம் தான். வசதி படைத்தவர்களும் உயர்மட்ட தொடர்பு உள்ளவர்களும் தங்களையும் தங்களுக்கு வேண்டியவர்களையும் கொரோனா தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் என்று நினைத்திருந்தனர். இந்த நெருக்கடி அவர்களையும் விட்டு வைக்கவில்லை.

கடந்த வருடம், டிசம்பர் மாதம், பெருந்தொற்று சமயத்தில் அலகாபாத்தில் (இப்பொழுது ‘பிராயாக்ராஜ்’) உள்ள என் தந்தைக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டது. வீட்டிற்கும் மருத்துவமனைக்கும் இடையே எண்ணற்ற பயணத்தின் போது சாலைகளில் கோவிட் விதிமுறைகளான முக கவசம் அணிதல், வீட்டில் இருத்தல் ஆகியவற்றை பின்பற்றுவதன் மூலம் இந்த கிருமியை ஒழித்து நமது மரியாதைக்குரிய மாநில முதல்வர் யோகி அவர்களுக்கு பலம் சேர்க்க வேண்டும் என்ற பிரச்சாரங்கள் ஒலிபெருக்கியில் ஒலித்துக் கொண்டே இருந்தன. ஒரு நாள் காலை ரிக்க்ஷாவில் சிக்னலில் காத்துக்கொண்டிருந்த போது பிச்சை எடுக்கும் ஒரு பெண் என்னிடம் வந்து இந்த முககவசத்தை எல்லாம் வைத்து என்ன செய்கிறீர்கள், “வீதிகளில் திரியும் எங்களை போன்றோர் இது இல்லாமலே சமாளிக்கிறோம் எங்களைப்பற்றி என்ன கருதுகிறீர்கள், உங்களுக்கெல்லாம் அசிங்கமாக இல்லையா?” என்று கேட்டார்.

இந்த பிரச்சனை கடந்த ஒரு வருடகால நெருக்கடியினால் உருவானது என்று கருதுவது பிரச்சனையை எளிமையாகப் பார்ப்பதாகும். பெருந்தொற்றால் ஏற்பட்ட இந்த ஆழமானப் பிளவுகள் உண்மையில் நமக்கு என்ன வேண்டும் என்பதை காட்டுகின்றன. அதாவது: தற்போதைய ஆஷா ஊழியர்கள்(Asha workers) போல் இல்லாமல், நாம் வசிக்கின்ற பகுதிகள் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள மக்களின் ஆரோக்கியத்தை கண்காணிக்க முறையான பயிற்ச்சி பெற்ற சமூக சுகாதார ஊழியர்கள் (உரிய சம்பளத்தோடு) பணியமர்த்த வேண்டும்; வழக்கமான நோய் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் வேண்டும்; குடியிருப்பு பகுதிகளில் ஆரம்ப சுகாதார மையம் அமைப்பதிலிருந்து; இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை சுகாதார மையங்கள் வரை அனைத்து வசதிகளையும் கொண்ட நன்கு செயல்படக்கூடிய கிராமத்திலிருந்து பெரிய நகரங்களுடன் இணைக்கப்பட பொது சுகாதார மையங்களை அமைக்க வேண்டும். ஆனால் மிகவும் வேதனை தரும் விஷயம் என்னவென்றால் ஒவ்வொரு வீடும் பெருந்தொற்றால் பற்றி எரியும் இந்த காலகட்டத்தில் (மே 2021) சாத்தியமான மேற்கூறிய இலக்குகள் கூட தொலைதூர கற்பனை போலவேத் தெரிகிறது.

ஒரு ஆண்டு முழுவதும் இழந்து விட்டோம் என்ற உண்மையை எண்ணி பலரும் வருந்துகின்றனர். பெருந்தொற்றை எதிர்கொள்ளுவதற்கான சிறந்த ‘திட்டமிடல்’ இருந்திருந்தால் (பரிசோதனைகள், மருந்துகள், ஆக்ஸிஜன், படுக்கைகள், பணியாளர்கள் மற்றும் பல), தற்போது இருக்கும் படுமோசமான நிலைக்கு நாம் வந்திருக்க மாட்டோம். ஆனால் நான் கூறுவது என்னவென்றால் தற்போதைய ஆட்சி, அடிப்படையில் பொது மக்களின் நலனுக்காக, அது பெருந்தொற்றோ அல்லது மற்றவையோ, சிந்திப்பது அல்லது வேலை செய்வது என்ற பொதுக் கண்ணோட்டத்திலிருந்து எந்த திட்டத்தையும் வகுக்கவில்லை. இவர்கள் திட்டமிட்டு இருக்கலாம், அதனை செயல்படுத்தவும் செய்திருக்கலாம். ஆனால் அந்தத் திட்டங்கள் அனைத்தும் தேசத்தைப் பற்றிய அவர்களுடைய கருத்தாக்கத்துடன் பொருந்தக்கூடியதாக பிரம்மாண்டம் நிறைந்த ஒன்றாக இருக்க வேண்டும்.

உதாரணமாக உ.பி. ல் அடுத்த தேர்தல் வருவதற்குள் ‘ஜனம் பூமியில்’, ஒரு பிரமாண்டமான ராமர் கோவிலை கட்டுவதற்கான பொறுப்பு பிரதமரின் முன்னாள் முதன்மை ஆலோசகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் மிகப்பெரிய பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்றக் கட்டிடத்தைக் கட்டுவது (கொரோனா பெருந்தொற்றுக்கு மத்தியில் கூட பிரதமர் இல்லம் கட்டுவது ‘அத்தியாவசிய’ சேவையாக அறிவிக்கப்பட்டுள்ளது).

பொது சுகாதாரத்திற்காக திட்டங்கள் வகுக்கப்பட்டால் கூட அது, இந்தியா எத்தனை நாடுகளுக்கு தடுப்பூசி வழங்கியுள்ளது அதன் மூலம் இந்தியா எவ்வளவு உயர்ந்த தேசம் என்று கூறும் வடிவத்தில் திட்டங்கள் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா தயாரிக்கும் கோவிஷீல்ட் தடுப்பூசி ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் உருவாக்கப்பட்டது. தடுப்பூசி உற்பத்திக்கு தேவையான பல முக்கிய மூலப்பொருட்களுக்கு நாம் முதன்மையாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவையே சார்ந்து இருக்கிறோம். ஒருவேளை அந்த நாடுகள் ஏற்றுமதிக்கு தடை விதித்தால் உரிமம் பெற்ற உற்பத்தியைக் கூட நிறுத்த வேண்டியிருக்கும் என்பதே எதார்த்தமாகும்.

படிக்க :
♦ கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !
♦ உலக அளவில் கொரோனாவை மோசமாகக் கையாண்ட தலைவர்களில் மோடி முதலிடம் !

‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘ஆத்மநிர்பார் பாரத்’ போன்ற வசனங்கள் பேசினாலும் நம்மிடம் தொழில்நுட்ப வலிமை இருந்தாலும், நம்மால் சொந்தமாக எதையும் உருவாக்கமுடிவதில்லை. மருந்து உற்பத்தித் துறை இதற்கு சிறிது விதிவிலக்காக இருக்கலாம். இங்கு இரண்டு முக்கியமான விஷயங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று, சுதந்திரத்திற்கு பின் எடுக்கப்பட்ட கூட்டு முயற்சிகளினால் உள்நாட்டு திறன்களை வளர்த்திடவும் மருந்துகளை தயாரிப்பதற்கான பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளடக்கிய வலைபின்னலை உருவாக்கியதன் மூலம் உள்நாட்டு மருந்து உற்பத்தியில் சுதந்திரமான பாதையை வடிவமைத்திருந்தனர்.

முக்கியமாக 1970-ல் கொண்டுவரப்பட்ட காப்புரிமைச் சட்டமானது உள்நாட்டு மருந்து உற்பத்தித் தொழிலை மேம்படுத்தவும் இந்தியாவை ‘உலகின் மருந்தகம்’ என்று மாறுவதற்கான வாய்ப்புகளையும் திறந்து விட்டது. 1990 களில் உலக வர்த்தக அமைப்பின் புதிய அறிவுசார் சொத்து உரிமை திட்டத்தில் காங்கிரஸ் அரசாங்கம் கையெழுத்திட்டதினால் மேற்கூறிய முயற்ச்சிகளனியத்துமே சிதைவுற ஆரம்பித்தன. தற்போது உள்நாட்டு மருந்து உற்பத்தி தொழில்கள் அனைத்தும் சர்வதேச சக்திகளை சார்ந்திருக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். உதாரணமாக, இந்திய மருந்து உற்பத்திக்கு தேவையான மூலப் பொருட்களுக்கு (70%) சதவிகிதம் சீனாவையே சார்ந்துள்ளோம். தற்போது கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் சீனா இந்தியாவுக்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதியை நிறுத்தினால் அதன் தேவையை எவ்வாறு பூர்த்தி செய்யப்போகிறோம்?

மக்களுடைய நலன் சார்ந்த விசயங்களில் நேரடியாக அரசு பங்கெடுக்க வேன்டியதில்லை அதனை சந்தையின் பொறுப்பில் விட்டுவிட வேண்டும் என்பது தற்போதுள்ள அரசாங்கத்தின் கொள்கை முடிவாகும். கூடவே தனியார் மூலதனம் சுகந்திரமாக செயல்படுவதற்கான சூழல் இல்லாமல் இருப்பதே பொருளாதார மேம்பாட்டுக்கான தடையாகக் கருதுகின்றனர். உதாரணமாக, ஊரடங்கின் போது தொழிலாளர் நலன்களை பறிக்கின்ற தொழிலாளர் சட்டத்தினை (Labour Codes) நிறைவேற்றியது, விவசாயச் சந்தையில் ‘மிருக வெறியை(Animal sprit) கட்டவிழ்த்து விடுவதற்கான மூன்று விவசாய சட்ட திருத்தங்களை கொண்டுவந்தது ஆகியவற்றைக் கூறலாம்.

போராடும் விவசாயிகள் என்ன கோருகிறார்கள் அல்லது தொழிலாளர் சட்டத் திருத்தத்தைப் பற்றி தொழிலாளர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதையெல்லாம் முக்கியமாக இவர்கள் கருதப்படுவதில்லை. தற்போதைய அரசாங்கத்தைப் பொறுத்தவரை தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் தங்களுக்கு எது நல்லது என்று தெரியாத கோபக்கார சிறுவர்கள் அவ்வளவுதான். மேலும் பொருளாதாரத்தின் ஒவ்வொரு முக்கியத் துறையிலும் அரசின் தலையீடு இருப்பதை(பொதுத்துற நிறுவனங்கள்) பொருளாதார வளர்ச்சிக்கான தடையாக தற்போதைய ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள். எனவே பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துக்களை விற்பது, பங்குகளை விற்பது, தனியார்மயப்படுத்து போன்ற நடவடிக்கைகள் மூலம் இதனை சரிசெய்ய முடியும் எனக் கருதுகின்றனர். மேற்சொன்ன பல்வேறு நடவடிக்கைகள் மூலம் பொருளாதாரத்தில் மிருகவெறியை (Animal spirit) கட்டவித்து விடுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்த பெருந்தொற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

தனியார்முதலாளிகளுக்கு அள்ளிக் கொடுப்பதுதான் ஆத்மநிர்பர்

இந்த ஆட்சியாளர்கள் பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதற்காக முயற்ச்சிப்பார்கள் என்று எண்ணுவது நம்முடைய விருப்பமாக இருக்கலாம். ஆனால் கடந்த கால அனுபவத்திலிருந்து பார்த்தால் அதற்கு வாய்ப்பில்லை என்று முடிவுக்கே வரமுடியும். பாராளுமன்ற கட்சிகள் அனைத்துமே, கல்வி மற்றும் சுகாதாரம் போன்ற விஷயங்களை தனியாரிடம் குறிப்பாக கார்ப்பரேட்டுகளிடம் விட்டுவிட வேண்டும் என்ற கருத்தை ஆதரிப்பவர்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்த தொற்றுநோய்க்கு மத்தியில் மாநில அரசாங்கள் கூட மருத்துவ காப்பீட்டை பிரச்சாரம் செய்வதன் மூலம் மக்களின் மீது அக்கறை கொண்டவர்களாக காட்டிக்கொள்கிறார்கள். ஆனால் ஆக்ஸிஜன் சிலிண்டரை பெறுவதற்கு மருத்துவக் காப்பீடு எவ்வாறு உதவும்? ஆனால் இந்த கேள்வியை கேட்க யாரும் தயாராவே இல்லை. இங்கே முரண்பாடு என்னவெனில், டாக்டர் மன்மோகன் சிங் கொரோனா சிகிச்சைக்காக அகில இந்திய மருத்துவ அறிவியல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுபோன்ற உயர்தரமான அரசு மருத்துவமனைகளில் சலுகை பெற்ற சில நபர்கள் மட்டுமே செல்லமுடியும். மற்றவர்களுக்கான (பணக்காரர்கள் மற்றும் ஏழைகள்) மருத்துவ சேவையோ சந்தையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதில் பணக்காரர்களுக்கு ஏழு நட்சத்திர அங்கீகாரம் பெற்ற மருத்துவமனைகளிலும் ஏழைகளுக்கு தெருவிலும் மருத்துவம் பார்க்கப்படும்.

சந்தையே அனைத்தையும் நிர்வகிக்கின்ற தற்போதைய நிலையில் மருந்துகளிலிருந்து ஆக்ஸிஜன் மற்றும் இறந்தவர்களை தகனம் செய்வது வரை அனைத்தும் அதிக விலைக்கே ஏலம் விடப்படுகிறது. இந்த சந்தை கருத்தியலானது ஒருவரோ அல்லது இருவரின் முட்டாள்தனத்தினால் உருவாக்கப்பட்டதல்ல. மாறாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு மேல்தட்டு வர்க்கத்தினர் கடந்த 30 வருடங்களாக இந்திய துணைக்கண்டத்தில் திட்டமிட்டு கட்டியமைத்ததாகும். இதன் விளைவுகளை அனைத்தும் தற்போது கொரோனா பெருந்தொற்று பற்றவைத்த தீயினால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்த அரசைப் பொறுத்தவரை அது மக்களுக்கு ஆற்றக்கூடிய ஒரே கடமையாகக் கருதுவது சந்தைக்கான சிறந்த பொருளாக மக்களை ஒழுங்குபடுத்துவதே. மக்கள் ஏதாவது குறைக்கூறினால் அவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை திணிப்பது, ஆக்ஸிஜன் பற்றாகுறை பற்றி புகார் கூறினால் உத்திர பிரதேச அரசாங்கம் மிரட்டுவது போல, அது குடியுரிமை சட்டமாகட்டும் அல்லது விவசாய சட்டமாகட்டும் அனைத்திற்கும் இதே நிலைதான்.

இதற்கிடையில் சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இலண்டனில் வாரத்துக்கு யூரோ 50,000 என்ற மதிப்பில் ஒரு மாளிகையை வாடகை எடுத்து தங்கியுள்ளார். இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கபட்டோரின் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை தொட்டு கொண்டு இருக்கும் இந்நேரத்தில், திரு. முகேஷ் அம்பானியோ இலண்டன் அருகில் உள்ள மிகப் பழமையான ஸ்டோக் பார்க் எஸ்டேட்டை 79 மில்லியன் டாலருக்கு வாங்கியுள்ளார். இதில் இங்கிலாந்தின் மிக சிறந்த கோல்ஃப் ஆடுகளம், விம்பிள்டன் வீரர்களின் பயிற்சிக்கான டென்னிஸ் ஆடுகளம் ஆகியவை ஸ்டோக் பார்கில் உள்ளன.

இது தான் நம்முடைய ஆட்சியாளர்களின் பார்வையில் வளர்ச்சியெனில், நம்முடைய தற்போதைய நிலைமை கண்டு ஒருவர் அதிர்ச்சி அடைவதற்கு ஒன்றுமில்லை.

கட்டுரையாளர்: ராகுல் வர்மன்
மொழிபெயர்ப்பு: வருண், CCCE-TN
மூலக் கட்டுரை :
RUPE-India

கட்டுரையாளர் பற்றிய குறிப்பு : பேரா. ராகுல் வர்மன், ஐ.ஐ.டி. கான்பூரில் தொழில் மற்றும் மேலாண்மைத் துறையில் பேராசிரியராக உள்ளார். தாராளமயப் பொருளாதாரக் கொள்கையின் விளைவுகள் குறித்து RUPE இணையத் தளத்தில் தொடர்ந்து எழுதி வருகிறார்.

யானைகளின் வழித்தடத்தை அழித்து விவசாயிகளின் வயிற்றிலடித்த ஜக்கி !

சத்குருவின் சட்டவிரோத சாம்ராஜ்யம் : கட்டிஎழுப்பப்பட்டது எப்படி? – பாகம் 2

2012-வாக்கில் எம்.எஸ்.பார்த்திபன் என்ற வனச்சரகர் ஈஷா ஆசிரமத்திற்குள் சென்றார். சாடிவயலுக்கும் தாணிக்கண்டிக்கும் இடையில் யானைகள் சென்று வரும் வழியில், ஈஷா பல இடங்களை வளைத்துப் போட்டிருப்பதை அவர் கண்டறிந்தார். யானைகள் வரும் வழியில் சட்டவிரோதமாகக் கட்டங்கள், மின் வேலிகள், சுவர்கள் எழுப்பப்பட்டிருந்ததால், யானைகள் செம்மேடு மற்றும் நர்சீபுரத்திற்கு இடைப்பட்ட வனப்பகுதி வழியாக வெளியேறி விவசாயப் பயிர்களை நாசம் செய்ததோடு, விவசாயிகளையும் தாக்கிவந்தன.

படிக்க :
♦ காடுவெட்டி சத்குரு ! நாட்டை விற்கும் மோடி !! கேலிச்சித்திரங்கள்
♦ ஜக்கி காருண்யா ஆக்கிரமிப்பை மீட்காமல் சின்னத்தம்பிக்கு விடுதலை ஏது ?

“300 சதுர மீட்டர் பரப்பிற்கு மேல் எதைக் கட்ட வேண்டுமென்றாலும் HACAவின் ஒப்புதலைப் பெற வேண்டும். ஆனால், ஈஷா எந்த அனுமதியும் இன்றி மிகப் பெரிய அளவுக்கு கட்டுமானங்களை உருவாக்கியிருந்தது. அவர்கள் முதலில் கட்டடங்களைக் கட்டிவிட்டு பிறகு அனுமதிக்காக விண்ணப்பித்தார்கள். அவர்கள் புதிய கட்டுமானப் பணிகளுக்காக விண்ணப்பிக்கும்போது எங்கள் அனுமதிக்காக காத்திருந்ததேயில்லை.

ஆதியோகி சிலைக்கு அருகில் மின்சாரம் தாக்கி பலியான யானை.

விண்ணப்பித்துவிட்டு கட்டடம் கட்ட ஆரம்பித்துவிடுவார்கள்.” என்கிறார் பார்த்திபனின் சோதனையின்போது உடன் சென்ற ஒரு அதிகாரி. இவர் தன் பெயரைத் தெரிவிக்க விரும்பவில்லை. “ஈஷா கட்டடம் கட்டிய இடங்கள் யானைகள் நடமாடும் பகுதிகள். அதனால்தான் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை” என்கிறார் அந்த அதிகாரி.

இக்கரை பொலுவம்பட்டியில் 33 கட்டுமானங்களை மதரீதியான பணிகளுக்கு என ஈஷா குறித்திருக்கிறது. இவை தமிழ்நாடு அரசின் கட்டுமான விதிகளின்படி இவை பொதுப் பயன்பாட்டிற்கான கட்டடங்கள்.  இம்மாதிரியான கட்டுமானங்களுக்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் ஒப்புதல் தேவை. மேலும் நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் துணை இயக்குனரின் ஒப்புதலும் தேவை.  ஆனால், இந்த அனுமதிகளைப் பெறுவது குறித்து ஈஷா அலட்டிக்கொள்ளவேயில்லை.

அதற்குப் பதிலாக அனுமதி கோரி அந்த கிராமப் பஞ்சாயத்தை அணுகினர். நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் அனுமதியின்றி அம்மாதிரி ஒப்புதலை அளிக்க அந்தப் பஞ்சாயத்துக்கு அதிகாரமே இல்லை.  பிறகு ஒரு வழியாக 2011ல் ஒப்புதல் கோரி திட்டமிடல் துறையை அணுகினர்.

ஈஷா வளாகத்தை ஒட்டி போடப்பட்டுள்ள மின் வேலி

ஆனால், அதற்கு முன்பாகவே சட்டவிரோதமாக பல கட்டங்கள் அங்கே கட்டப்பட்டிருந்தன.    ஏற்கனவே கடந்த 15 ஆண்டுகளாகக் கட்டிய கட்டங்களுக்கு ஒப்புதல் கேட்டதோடு, புதிதாக 27 கட்டடங்களைக் கட்டவும் அனுமதி கோரினர். ஆனால், அந்த விண்ணப்பம் முழுமையானதாக இல்லை. 2012 பிப்ரவரிக்குள் புதிய விண்ணப்பத்தை அளிக்கும்படி நகர்ப்புற திட்டமிடல் துறை சொன்னது.

ஆனால், அதற்குள் ஈஷா விண்ணப்பத்தை தாக்கல் செய்யவில்லை. ஏழு மாதங்களுக்குப் பிறகு புதிய விண்ணப்பத்தை அனுப்பியது.  இதன் தொடர்ச்சியாக 2012 அக்டோபரில் திட்டமிடல் துறையின் அதிகாரிகள் ஈஷா வளாகத்திற்கு வந்தபோது, புதிய கட்டங்களைக் கட்டும் பணிகள் ஏற்கனவே துவங்கியிருந்தன. இந்தக் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி அவர்கள் உத்தரவிட்டனர். இது தொடர்பாக 2012 நவம்பரில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், ஈஷா கண்டுகொள்ளவில்லை.

2012 டிசம்பரில் நகர்ப்புறத் திட்டமிடல் துறை மீண்டும் ஒரு நோட்டீஸை அனுப்பியது. ஒரு மாதத்திற்குள் சட்டவிரோதக் கட்டுமானங்கள் அனைத்தையும் இடித்துவிடும்படி அந்த நோட்டீஸில் கூறப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து நகர்ப்புறத் திட்டமிடல் துறையின் இயக்குனர் முன்பாக முறையிட்டது. இந்த விவகாரம் இன்னும் முடிவுக்கு வரவில்லை.

அந்த நேரத்தில் கே. மூக்கைய்யா என்பவர் நகர்ப்புற திட்டமிடல் துறையின் துணை இயக்குனராக கோயம்புத்தூரில் பணியாற்றிவந்தார்.  நகர்ப்புறத் திட்டமிடல் துறை விதித்த ஆணைகளை ஈஷா அலட்சியப்படுத்திய நிலையில், அந்தத் துறை நடவடிக்கை எடுக்காதது ஏன்?

ஈஷா வளாகத்தில் உள்ள ஆதியோகி வடிவம்

“அந்த நோட்டீஸை அனுப்பிய ஒரு மதத்திற்குள் நான் அங்கிருந்து இடமாற்றம் செய்யப்பட்டேன். அதற்குப் பிறகு என்ன நடந்தது எனத் தெரியவில்லை. அனுமதியைப் பெற்றார்களா இல்லையா என்பது தெரியவில்லை” என்கிறார் மூக்கைய்யா.

2012வாக்கில் ஈஷா 50 கட்டடங்களைக் கட்டியிருந்தது. மேலும் 27 கட்டடங்களைக் கட்டிவந்தது. எல்லா கட்டடங்களுமே சட்டவிரோதமானவை. ஆனால், ஈஷாவின் சட்டவிரோத செயல்பாடுகளை யாரும் எதிர்க்கத் துணியாத நிலையில், எதிர்க்கத் துணிந்த சிலர் இருந்தார்கள்.

அவர்கள் பூவுலகின் நண்பர்கள்!

(தொடரும் – 2)

பாகம் : 1

கட்டுரையாளர் : பிரதீக் கோயல்
தமிழாக்கம் : சுந்தர் ராஜன்
நன்றி : Newslaundry

முகநூலில் : Sundar Rajan

disclaimer

இந்திய பொதுவுடைமைக் கட்சி (மா- லெ) முதலாவது மாநாட்டின் 51-ம் ஆண்டு நிறைவு !

இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)
முதலாவது மாநாட்டின் 51-வது ஆண்டு நிறைவு !!

திரிபுவாதத்திற்கு எதிரான போராட்ட மரபை
தொடர்ந்து உயர்த்திப் பிடிப்போம் !

1970-ஆம் ஆண்டு மே 15-16 தேதிகளில் கொல்கத்தா – கார்டன் ரீச் பகுதியின் ரயில்வே காலனியிலுள்ள ஒரு வீட்டின் முதல் மாடியில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் அந்த மாநாடு  (பேராயம்) நடந்து கொண்டிருந்தது. அது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாடு.

இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 7-வது மாநாடு மார்க்சிஸ்ட் (CPM) கட்சியாக இருந்தபோது நடத்தப்பட்டது. அதன் பின்னர், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) யின் நவீன திரிவுவாதத்தைத் திரைகிழித்த நக்சல்பாரி எழுச்சியைத் தொடர்ந்து, உண்மையான புரட்சிகரக் கட்சியாக உதயமான இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்), அதன் தொடர்ச்சியாக இந்த முதலாவது மாநாட்டை – அதாவது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் எட்டாவது மாநாட்டை நடத்தியது.

படிக்க :
♦ இந்தியப் புரட்சியின் இடிமுழக்கமான நக்சல்பாரி எழுச்சியை நினைவுகூர்வோம் !
♦ நக்சல்பாரி இயக்கத்தின் வரலாறு !

போலீசு அடக்குமுறை நிலவிய அன்றைய சூழலில் கம்யூனிசப் புரட்சியாளர்களான நக்சல்பாரிகள், போலீசின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு இரகசியமாக அணிதிரண்டு அந்த மாநாட்டை நடத்திக் கொண்டிருந்தனர். அந்த வீட்டின் கீழ்த்தளப் பகுதியில் ஆண்களும் பெண்களுமாக ஏறத்தாழ 50 கட்சித் தோழர்கள் கூடி, போலியான ஒரு திருமண விழாவை நடத்திக் கொண்டிருக்க, மேல்மாடியில் கட்சியின் மாநாடு நடைபெற்றுக் கொண்டிருந்தது. மேலே காரசாரமான விவாதங்கள் நடந்து கொண்டிருந்தபோது, அது வெளியே கசியாதவண்ணம், கீழே ஒலிபெருக்கியில் திருமண விழாவையொட்டிய பாடல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.

இந்த மாநாட்டில் நாடெங்கிலுமிருந்து 52 பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் என்று தீர்மானிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், போலீசு அடக்குமுறைச் சூழலின் காரணமாக 35 கட்சிப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இவர்களில் மே.வங்கம், ஆந்திரா, பீகார், பஞ்சாப், உ.பி, தமிழ்நாடு, ஒரிசா, காஷ்மீர், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 21 தோழர்கள் கட்சியின் மத்தியக் கமிட்டியாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

தோழர் சாரு மசும்தார் பொதுச் செயலராகத் தெரிவு செய்யப்பட்டார். மத்தியக் கமிட்டியில் இருந்து 9 பேர் கொண்ட அரசியல் தலைமைக்குழு அமைக்க முடிவாகியது. தோழர்கள் சுஷிதல்ராய் சவுத்திரி, சரோஜ் தத்தா, சுரேன் போஸ் (இவர்கள் அனைவரும் மே.வங்கத்தைச் சேர்ந்தவர்கள்), சத்யநாராயண் சிங் (பீகார்), சிவகுமார் மிஸ்ரா (உ.பி), ஆர்.பி.ஷராப் (காஷ்மீர்), தோழர் அப்பு (தமிழ்நாடு) ஆகிய 7 பேர் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு, மற்ற இரண்டு இடங்களும் இம்மாநாட்டில் பங்கேற்க இயலாத ஆந்திரத்தைச் சேர்ந்த தோழர்களுக்காக ஒதுக்கப்பட்டது.

★★★

நக்சல்பாரி – இந்தச் சொல் இன்றும்கூட நாளேடுகளில், வானொலியில், தொலைக்காட்சியில், இணையதளத்தில் அன்றாடம் அடிபட்டுக் கொண்டுதான் இருக்கிறது.

நக்சல்பாரி –- மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம், சிலிகுரி வட்டத்தில், இமயமலையின் அடிவாரத்தில் உள்ள ஒரு சிறு கிராமம். பண்ணை நிலப்பிரபுக்கள், கந்துவட்டி லேவாதேவிக்காரர்கள், அரசு அதிகார வர்க்கத்தினர், போலீசு ஆகியோரின் சுரண்டல், ஒடுக்குமுறைக் கொடுமைகளை மௌனமாக அனுபவித்துக் கொண்டிருக்கும் இலட்சக்கணக்கான இந்தியக் கிராமங்களில் ஒன்றாகத்தான் 53 ஆண்டுகளுக்கு முன்பு நக்சல்பாரி இருந்தது. ஆனால் இன்றோ, உலகப்புரட்சி வரலாற்றில் அழிக்க முடியாத இடத்தைப் பெற்றிருக்கிறது.

“உழுபவனுக்கே நிலம், உழைப்பவனுக்கே அதிகாரம்” என்கிற முழக்கத்தை முன்வைத்து, 1967-ஆம் ஆண்டு மே மாதம் ஆயுதந்தாங்கிய பேரெழுச்சியை நடத்தி, அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி, நக்சல்பாரி விவசாயிகள் இந்தியப் புரட்சிக்கான போர்ப் பிரகடனத்தைச் செய்தார்கள். அன்று, நக்சல்பாரி உழவர்கள் மூட்டிய சிறு பொறி பெருங்காட்டுத் தீயாக மாறி நாடு முழுவதும் பற்றிப் படர்ந்ததைக் குறிப்பதுதான் நக்சல்பாரி இயக்கம்.

இந்திய நாடாளுமன்ற அரசியலில் 1967-ஆம் ஆண்டு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. ஏகபோகமாக இந்தியாவை ஆண்டு வந்த காங்கிரசு எட்டு மாநிலங்களில் வீழ்த்தப் பட்டு, எதிர்க்கட்சி அணிகள் ஆட்சிக்கு வந்தன. அவற்றில் ஒன்று மேற்கு வங்கம். அங்கே 14 கட்சி ஐக்கிய முன்னணி ஆட்சிக்கு வந்தது. வங்காளக் காங்கிரசின் தலைவர் அஜய் முகர்ஜி முதலமைச்சரானார். கூட்டணி அமைச்சரவையில் போலி மார்க்சிஸ்டு கட்சித் தலைவர் ஜோதிபாசு போலீசு அமைச்சர் ஆனார். நிலச் சீர்திருத்தம் – நில உச்சவரம்புச் சட்டம் தீவிரமாக அமலாக்கப்பட்டு உபரி நிலங்களைக் கைப்பற்றி உடனடியாகவே கூலி, ஏழை விவசாயிகளுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முன்னும் பின்னும் வெற்று வாக்குறுதிகளை வாரி வழங்கினர், போலி கம்யூனிஸ்டுகள்.

மார்ச்–18, 1967-இல் சிலிகுரி வட்ட ‘மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு’ கட்சியின் தலைமையிலான விவசாயிகள் சங்க மாநாடு வெற்றிகரமாகக் கூடியது. அன்று அங்கே போலி மார்க்சிஸ்டுகளின் ஐக்கிய முன்னணி அரசுக்கு எதிராக, நாற்காலிப் புரட்சிக்கு எதிராகக் கலகக் கொடி ஏற்றப்பட்டது.

“நிலப்பிரபுக்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட வேண்டும். பறிமுதலும் விநியோகம் செய்யும் அதிகாரமும் விவசாயிகள் கமிட்டிகளுக்கே அளிக்கப்பட வேண்டும். இதைச் செய்ய வேண்டுமெனில், நிலப்பிரபுக்களின் எதிர்ப்பைச் சமாளிக்க நாம் ஆயுதம் ஏந்த வேண்டும்” என்று விவசாயிகளின் சங்கத்தின் சிலிகுரி வட்டச் செயலர் ஜங்கல் சந்தாலும், அன்றைய ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் மாவட்டக் கமிட்டி உறுப்பினர் கனு சன்யாலும் விடுத்த அறைகூவலை எழுச்சி ஆரவாரத்தோடு வரவேற்று விவசாயிகள் அனைவரும் அங்கீகரித்தனர்.

சாரு மஜூம்தார்

‘மார்க்சிஸ்டு’ கட்சித் தலைமையும் நாற்காலிப் புரட்சிக்கு எதிராக நக்சல்பாரியில் கலகக் கொடி உயர்ந்தது ஏதோ தற்செயலாக நடந்து விட்ட சம்பவமல்ல. ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்குள் இருந்த முன்னணியாளர்களான சாரு மஜும்தார், கனு சன்யால், சுஷிதல் ராய் சவுத்திரி போன்ற தோழர்கள் தலைமையின் திருத்தல்வாதத்தை எதிர்த்து போராடி, புரட்சிகர நிலைப்பாடுகளை முன்வைத்து, அணிகளில் பலரை வளர்த்தெடுத்ததுதான் காரணம். ‘மார்க்சிஸ்டு’ கட்சித் தலைமையின் நாடாளுமன்ற சமரச சரண்டைவுப் பாதையைக் கைவிட்டு, புரட்சிப் பாதையை மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை அவர்கள் 1965-ஆம் ஆண்டு முதலே வலியுறுத்தி வந்தனர். இதன் அடிப்படையில் அமைப்புகளையும் – இயக்கங்களையும் கட்டியமைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த ஜோதிபாசு, பிரமோத் தாஸ் குப்தா ஆகிய திருத்தல்வாதத் துரோகிகள் புரட்சியாளர்களை வெளியேற்றியும், குறிப்பாக தோழர் சாரு மஜும்தாரை பைத்தியக்காரன், போலீசு உளவாளி என்றும் வசைபாடினர். ஆனால், இந்த அவதூறுகளால் நக்சல்பாரி எழுச்சியை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

நக்சல்பாரி கிராமத்தில் நடந்த ஒரு சம்பவம் அந்த விவசாயிகளின் நெஞ்சில் கனலை மூட்டியது. பிகுல் கிஷன் என்ற குத்தகை விவசாயி, நிலப்பிரபுவால் வெறியேற்றப்பட்டார். வழக்குமன்ற உத்திரவு பிகுல் கிஷனுக்கு சாதகமாக இருந்த போதிலும் நிலப்பிரபுவின் ஆட்கள் அவரை அடித்து விரட்டினர். எனவே, மாநாட்டு அறைகூவலை உடனடியாக அமலாக்குவதே சரியானது என்று விவசாயிகள் முடிவு செய்தனர். ஏப்ரல் மாதத்திற்குள் அந்த வட்டாரத்திலிருந்த எல்லா கிராமங்களிலும் விவசாயிகள் கமிட்டிகளும் தற்காப்புக்காக ஆயுதம் தாங்கிய செங்காவலர் குழுக்களும் அமைக்கப்பட்டன.

மே மாதத்தில் நிலப்பிரபுக்களின் பத்திரங்கள் அனைத்தும் எரிக்கப்பட்டன. நிலப்பிரபுக்களின் ஆயுதங்களும், துப்பாக்கிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கொடும் நிலப்பிரபுக்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. வில்லும், அம்பும், கோடரியும், துப்பாக்கிகளும் ஏந்திய விவசாயிகள் நிர்வாகத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டனர். இந்தப் பிராந்தியத்தின் போலீசு நிலையங்கள் செயலிழந்தன. விவசாயிகளின் அனுமதியின்றி யாரும் அப்பிராந்தியத்தினுள் நுழையக்கூட முடியாது என்ற நிலைமை 1967 மே மாதத்தில் உருவானது.

மே-23, 1967 நக்சல்பாரி விவசாயிகளுக்கு எதிரான அரசின் போர் தொடங்கியது. தங்களது தலைவர்களைக் கைது செய்ய முயன்ற போலீஸ் படையை ஆயுதம் தாங்கிய விவசாயிகள் திருப்பித் தாக்கினர். பின்வாங்கிய போலீசு, 25-ஆம் தேதி பெரும்படையுடன் வந்து மீண்டும் தாக்கியது. ஆறு பெண்கள், இரண்டு குழந்தைகள் உள்ளிட்ட 9 பேரைச் சுட்டுக் கொன்றது; விவசாயிகள் பலர் கைது செய்யப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடுச் சம்பவம் ‘மார்க்சிஸ்டு’ கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும் பெரும் கொந்தளிப்பைத் தோற்றுவித்தது. கட்சித் தலைமையானது, இறந்து போனவர்களுக்காக முதலைக் கண்ணீர் வடித்தது. ஆனால், ‘மார்க்சிஸ்டு’ கட்சி இரு கூறாகப் பிளவுபடுவதை இந்த முதலைக் கண்ணீரால் தடுக்க முடியவில்லை.

அஜய் முகர்ஜி

“நக்சல்பாரிப் பாதையே விவசாயப் புரட்சியின் பாதை!” “கொலைகாரன் அஜய் முகர்ஜியே ராஜினாமா செய்!” என்ற முழக்கங்களால் கொல்கத்தா நகரச் சுவர்களை அதிர வைத்தனர், கொல்கத்தாவின் புரட்சிகர மாணவர்கள். ‘மார்க்சிஸ்டு’ கட்சியிலிருந்த புரட்சிகர அணிகளும் கல்லூரி மாணவர்களும் “நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு” (நக்சல்பாரி கிருஷாக் சங்கராம் சகாயக் சமிதி) ஒன்றைக் கட்டி ஜூன் 27-ஆம் தேதியன்று சட்டசபையின் முன் பெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர். அதைத் தொடர்ந்து ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் அப்போதைய மாநிலக்குழு உறுப்பினரான சுஷிதல் ராய் சவுத்ரி உள்ளிட்ட 19 பேர் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

வங்காளத்தின் வடமுனையில் பற்றிய தீ, நாடெங்கும் ‘மார்க்சிஸ்டு’ கட்சியைச் சுட்டெரிக்க தொடங்கியது. நக்சல்பாரிகளையும் அதன் ஆதரவாளர்களையும் குறுங்குழுவாதிகள், வறட்டுவாதிகள், சாகசவாதிகள் என்பதாக மட்டுமின்றி, சி.ஐ.ஏ. உளவாளிகள் என்றெல்லாம்கூட போலி கம்யூனிஸ்ட் கட்சிகள் அவதூறு செய்தன. ஆனால், அக்கட்சிகளுக்குள் வெடிக்கத் துவங்கிய கலகத்தை அவர்களால் தடுத்து நிறுத்த முடியவில்லை.

“சீறிவரும் இந்தியப் புரட்சிச் சிறுத்தையின் முதல் காலடி” என்று நக்சல்பாரி எழுச்சியை தனது ஜூன் 28-ஆம் தேதி ஒலிபரப்பில் சித்தரித்த சோசலிச சீனத்தின் பீகிங் வானொலி, ‘மார்க்சிஸ்டு’களின் ஐக்கிய முன்னணி சர்க்காரை “மக்களை ஏய்க்கும் எதிர்ப்புரட்சியாளர்களின் கருவி” எனச் சாடியது.

1967 ஜூலையில், நக்சல்பாரி விவசாயிகள் போராட்ட ஆதரவுக் குழு ஒரு கருத்தரங்கை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக சி.பி.எம். கட்சியிலிருந்து வெளியேறிய கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவைக் கட்டியமைக்கத் தீர்மானித்தது.

இதற்கிடையே கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஒரு அரசியல் – சித்தாந்தப் பத்திரிகையை நடத்தி, அதன் மூலம் புரட்சிகர வழியைப் பிரச்சாரம் செய்வதெனத் தீர்மானித்தனர். ‘மார்க்சிஸ்டு’ கட்சியின் வங்காள மொழி வார இதழான ”தேஷ் ஹிதாஷி”யின் ஆசிரியராக இருந்த சுஷிதல்ராய் சவுத்ரி, கட்சியில் இருந்து வெளியேற்றப்படுவதற்கு முன்பிருந்தே நக்சல்பாரி எழுச்சியை ஆதரித்து அதில் எழுதி வந்தார். அவரையும் சுனிதி குமார் கோஷ்-ஐயும் ஆசிரியர்களாகக் கொண்டு 1967 நவம்பர் 11 அன்று “லிபரேஷன்” என்ற ஆங்கில இதழ் வெளியிடப்பட்டது. வங்க மொழியில் “தேசப் பிரதி” என்ற பத்திரிகை தொடங்கப்பட்டது. லிபரேஷன் இதழ் 2,500 பிரதிகளும், தேசப் பிரதி 40,000 பிரதிகளும் விற்பனையாகின. இவ்விரு இதழ்களும் ‘மார்க்சிஸ்டு’களை அரசியல் – சித்தாந்தாந்த ரீதியாகத் தோலுரிக்கத் தொடங்கின.

இதைத் தொடர்ந்து ‘மார்க்சிஸ்ட்’ கட்சியின் காஷ்மீர், உத்திரப்பிரதேசம், ஆந்திரா ஆகிய மாநில கமிட்டிகளின் பெரும்பான்மையான தோழர்கள் வெளியேறினர். “கட்சித் தலைமைக்கெதிராக கலகக் கொடி உயர்த்துங்கள்!” என்ற அறைகூவல் எங்கும் எதிரொலித்தது. பஞ்சாப், கேரளா, தமிழ்நாடு, பீகார், ஒரிசா – எனப் பல மாநிலங்களிலும் புரட்சியாளர்கள் கலகம் செய்து போலி மார்க்சிஸ்டு கட்சியை விட்டு வெளியேறினர்.

1967 நவம்பர் 12, 13 தேதிகளில் நாடு முழுவதுமுள்ள கம்யூனிசப் புரட்சியாளர்கள் கூடி, ஒருங்கிணைப்புக் குழுவை – ஒரு தற்காலிகக் கமிட்டியைக் கட்டியமைத்தனர். புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து உறுதிப்படுத்தி, அதன் தொடர்ச்சியாக ஒரு புரட்சிகர கம்யூனிஸ்டு கட்சியைக் கட்டியமைக்க வேண்டுமெனத் தீர்மானித்தனர்.

படிக்க :
♦ கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சீர்செய்யப்பட வேண்டிய விவகாரங்கள் | தோழர் மாவோ !
♦ கம்யூனிஸ்ட் கட்சியில் தவறை மறைப்பது நோயை மறைப்பதற்குச் சமம் ! | லியூ ஷோசி

இந்த கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழுவானது, மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையை வழிகாட்டும் சித்தாந்தமாக ஏற்றுக்கொள்வது, கம்யூனிசப் புரட்சியாளர்களை இந்தச் சித்தாந்த அடிப்படையில் ஐக்கியப்படுத்துவது, திரிபுவாதத்திற்கு எதிராக சமரசமற்றப் போராட்டத்தை நடத்துவது, புரட்சிகர போராட்டங்களை – குறிப்பாக நக்சல்பாரி பாணியிலான விவசாயிகளது போராட்டங்களை முன்னெடுத்துச் செல்வது – அத்தகைய போராட்டங்களுக்கு ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது, புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சிக்கான கட்சித் திட்டத்தையும் செயல்தந்திர வழியையும் தயாரிப்பது – ஆகியவற்றைத் தனது கடமைகளாக அறிவித்தது.

இதைத் தொடர்ந்து 1968 மே மாதத்தில் அதன் இரண்டாவது கூட்டம் – அதாவது, நக்சல்பாரி எழுச்சியின் முதலாமாண்டு நிறைவையொட்டி நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஒருங்கிணைப்புக் குழுவின் பெயரானது, அனைத்து இந்திய கம்யூனிசப் புரட்சியாளர்களின் ஒருங்கிணைப்புக் குழு (AICCCR)  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு, தோழர் சுஷிதல்ராய் சவுத்திரி அதன் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்றும் தீர்மானிக்கப்பட்டது. ஒருங்கிணைப்புக் கமிட்டியானது, நாட்டின் பல பகுதிகளிலும் வெடித்தெழும் விவசாயிகளின் போராட்டங்களுக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்ல வேண்டும் என்றும், நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க ஒரு புரட்சிகர கட்சியைக் கட்ட வேண்டும் என்றும் தனது முதல் பிரகடனத்தில் தீர்மானித்தது.

“நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் புரட்சிகர விவசாயிகளின் போராட்டங்கள் வெடித்தெழுவதை தோழர்கள் அவதானித்திருப்பீர்கள். பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை என்ற முறையில் இவற்றை வளர்த்தெடுப்பதும், தலைமை தாங்கி வழிநடத்துவதும் நமது கடமை. நாட்டின் பல்வேறு மூலைகளில், தனித்தனியே, மக்கள் போராட்டங்களின் பல்வேறு அரங்குகளில் கட்சிக்கு (மார்க்சிஸ்ட்) உள்ளேயும் வெளியேயும் செயலாற்றி வரும் சக்திகளெல்லாம் ஒன்றுபட வேண்டும். மார்க்சிய – லெனினிய – மாசேதுங் சிந்தனையின் ஒளியில் ஒரு புரட்சிகரக் கட்சியைக் கட்டியமைக்க வேண்டும்” என்ற அறைகூவலை அது விடுத்தது.

இந்தியா அரசியல் சுதந்திரம் பெறாத அரைக் காலனிய – அரை நிலப்பிரபுத்துவ நாடு; இந்தியப் புரட்சியின் இலக்குகள் அமெரிக்க ஏகாதிபத்தியம், சோவியத் சமூக ஏகாதிபத்தியம், தரகு அதிகார வர்க்க முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவம்; இந்தியப் புரட்சி, விவசாயிகளின் விவசாயப் புரட்சியை சாராம்சமாகக் கொண்ட புதிய ஜனநாயகப் புரட்சி; புரட்சிக்கான பாதை நீண்டகால மக்கள் யுத்தப் பாதையே; தேர்தலைப் புரட்சிக் காலம் முழுவதும் புறக்கணிப்பது – போன்ற அரசியல் அடிப்படை நிலைப்பாடுகளை ஒருங்கிணைப்புக் கமிட்டி அறிவித்தது. மார்க்சிய – லெனினிய – மாவோ சிந்தனையே சித்தாந்த வழிகாட்டி எனவும் பிரகடனம் செய்தது.

இதற்கிடையே நக்சல்பாரி வழியிலான போராட்டங்கள் காட்டுத் தீயாக 1968-இல் பரவத் தொடங்கின. குறிப்பாக, சிறீகாகுளம் போராட்டம் மிகப் பெரிய எழுச்சியாக வளர்ந்தது. இந்நிலைமையில் அ.இ.க.பு.ஒ. குழுவானது பிப்ரவரி 8, 1969 அன்று கூடியது. அது, ஒரு புரட்சிகர கட்சியைக் கட்டியமைக்க வேண்டிய அவசியத்தை தீர்மானமாக நிறைவேற்றியது.

அ.இ.க.பு.ஒ. குழுவின் விரிவாக்கப்பட்ட கூட்டம் 1969 ஏப்ரல் 19 முதல் 22 வரை நடந்தது. அதில், தோழர் லெனினுடைய 100-வது பிறந்த நாளில் இந்தியாவில் ஒரு புரட்சிகர கட்சியை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) யைத் தொடங்குவது என முடிவாகியது. நக்சல்பாரி எழுச்சி ஓர் உண்மையான, புரட்சிகரமான கம்யூனிஸ்டு கட்சிக்கு அடித்தளமிட்டது. ஆளும் வர்க்கங்கள் அச்சத்துடனும், வெறுப்புடனும், ஆத்திரத்துடனும் குறிப்பிடும் நக்சல்பாரிகளின் கட்சி – இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) – ஏப்ரல் 22, 1969 அன்று உதயமானது. கட்சியின் அமைப்பு விதிகளை வரையறுப்பது, கட்சியின் முதலாவது மாநாட்டுக்கான ஏற்பாடுகளைச் செய்வது என்று தீர்மானிக்கப்பட்டு, இதற்கென ஒரு ஒருங்கிணைப்புக் குழு கட்டியமைக்கப்பட்டது.

1969 மே தினத்தன்று, கொல்கத்தாவில் ஷாஹித் மினார் மைதானத்தில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் மேநாள் ஊர்வலமும், அதைத் தொடர்ந்து பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அக்கூட்டத்தில் தோழர் கனு சன்யால், இந்தியாவில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாக மா-லெ கட்சி தொடங்கப்பட்டுள்ளதை பிரகடனப்படுத்தினார்.

1969, ஜூலை 12-ஆம் தேதி மிருக பலத்துடன் மீண்டும் நக்சல்பாரிகள் மீது போலீசு படையெடுத்தது. ஜங்கல் சந்தாலும் முன்னணி போராட்ட வீர்ர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். 1969-இன் மத்தியில், துணை ராணுவப் படைகளை ஏவி போராட்டப் பகுதிகளில் தாக்குதலை நடத்தியதோடு, மா-லெ கட்சியின் தலைவர்களைக் குறிவைத்து வேட்டையாடுவதைத் தொடங்கியது. இதனால், கட்சியானது முழுவதுமாக தலைமறைவாகியது. ஏப்ரல் 1970-இல் லிபரேஷன், தேசப் பிரதி அச்சகங்களில் போலீசாரால் திடீர் சோதனை நடத்தப்பட்டு, அவை முடக்கப்பட்டதால், அப்பத்திரிகைகள் இரகசியமாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. தலைவர்கள் மட்டுமின்றி, நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளர்கள் உள்ளிட்டு அனைவரும் போலீசாரால் குறிவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டனர், அல்லது சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்தச் சூழலில்தான் இ.பொ.க. (மா-லெ) யின் முதலாவது மாநாடு, அதாவது, இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் 8-வது மாநாடு நடந்தது. அம்மாநாட்டுக்குப் பின், அரசின் அடக்குமுறையால் கட்சியின் முன்னணித் தலைவர்கள் பலர் தியாகிகளானார்கள். மற்றவர்கள் சிறையிடப்பட்டு மரணமடைந்தார்கள்; அல்லது இயற்கை விதிகளின்படி, மரணமடைந்தார்கள்.

நக்சல்பாரி எழுச்சியும் கட்சியும் நசுக்கப்பட்டாலும், அதன் அரசியலும் சித்தாந்தமும் நாடு முழுவதும் பற்றிப் பரவியது. சிறீகாகுளம், தெலுங்கானா, பஞ்சாப், உ.பி., பீகார், கேரளா, தமிழ்நாடு, அசாம், காஷ்மீர் என்று குறுக்கு நெடுக்காக நாடெங்கிலும் விவசாயிகளின் வர்க்கப் போர் காட்டுத் தீயாய்ப் பற்றிப் படர்ந்தது. ‘வேலை நிறுத்தம் என்றால் கதவடைப்பு’ என்று மிரட்டிய ஆலை முதலாளிகள், முற்றுகையிடும் தொழிலாளர்களைக் கண்டு அஞ்சி நடுநடுங்கினர். நக்சல்பாரித் தொழிற்சங்கங்களின் போர்க்குணமிக்க “கெரோ” போராட்டங்கள் நாடெங்கும் பரவின. நாடு முழுவதும் அரசு அலுவலர்கள் வேலைகளைத் துறந்து, மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளைத் துறந்து நக்சல்பாரி இயக்கத்துடன் தம்மை இணைத்துக் கொண்டனர். விவசாயிகளை அணிதிரட்ட கிராமங்களை நோக்கிச் சென்றனர்.

1970-களின் துவக்கத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்), மற்றும் சிறு குழுக்களின் தலைமையில் நக்சல்பாரி இயக்கம் உச்சநிலையை எட்டியது. ஆந்திராவின் 15 மாவட்டங்களில் கம்யூனிசப் புரட்சியாளர்களின் தலைமையில் அணிதிரண்ட உழவர்கள், குறிப்பாக பழங்குடியின மக்கள் 300-க்கும் மேற்பட்ட நிலப்பிரபுக்களை கிராமங்களை விட்டுத் துரத்தியடித்தனர். அதன்மூலம் கிராமப்புறங்களில் மாற்று அரசியல் அதிகாரமாகத் தங்களை நிறுவிக் கொள்ள முயன்றனர். இதே முறையில் இரகசிய கொரில்லா குழுக்களைக் கட்டி நிலப்பிரபுக்களை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளில் பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப் ஒரிசா, தமிழ்நாடு, கேரளாவில் கம்யூனிசப் புரட்சியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆனால், போதிய ஆயுதங்களும், பயிற்சியும் இல்லாத உழவர் படைக் குழுக்களுக்கு எதிராக, துணை இராணுவமும் போலீசுப் படையின் அடக்குமுறையும் ஏவி விடப்பட்டபோது, அரசு பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டபோது, நக்சல்பாரி இயக்கம் பின்னடைவைச் சந்தித்தது. தலைமையின் செயல்முறை தவறுகளும் இதற்கு இன்னொரு காரணமாக அமைந்தது. நூற்றுக்கணக்கான நக்சல்பாரிகளும், போலீசின் சந்தேகத்துக்கு இலக்கான அப்பாவி இளைஞர்களும் “போலீசுடன் மோதல்” என்கிற பெயரில் படுகொலை செய்யப்பட்டனர். ஆந்திராவின் காடு – வயல்வெளிகளிலும், கொல்கத்தா நகரத் தெருக்களிலும் குண்டுதுளைத்த நக்சல்பாரிகளின் உடல்களை விசிறியடித்து, பயபீதி திட்டமிட்டு பரப்பப்பட்டது.

1973-க்குள் 32,000 நக்சல்பாரிகளும் அவர்களது ஆதரவாளர்களும் நாடு முழுவதும் உள்ள பல்வேறு சிறைகளிலும் அடைக்கப்பட்டனர். அவர்களில் பலர் மீது கொலை, கொள்ளை மற்றும் சதி வழக்குகள் போடப்பட்டன. சிறைச்சாலைக்குள் போலீசு சித்திரவதைகளும், துப்பாக்கிச் சூடுகளும் இயல்பான நடைமுறையாகி விட்டன. 1970-72 ஆகிய மூன்றாண்டுக்குள் குறைந்தது 20 துப்பாக்கிச் சூடுகள் நடத்தி நூற்றுக்கும் மேற்பட்ட நக்சல்பாரிகள் கொல்லப்பட்டனர். 1975-76 அவசர நிலை பாசிச ஆட்சிக் காலத்திலும் இதேநிலை நீடித்தது. நக்சல்பாரிகளை ஒடுக்குவதற்கென்றே ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்புப் போலீசுப் படையும் சித்திரவதைக் கூடங்களும் உருவாக்கப்பட்டன.

ஆனால், அரசு பயங்கரவாத ஒடுக்குமுறைகள் எதுவும் நக்சல்பாரி இயக்கத்தை இந்த மண்ணில் இருந்து முற்றாகத் துடைத்தெறிந்து விடவில்லை. போர்க்குணமிக்க மக்கள்திரள் போராட்டமாக நக்சல்பாரி இயக்கம் தொடர்ந்து வளர்ந்து பரவுகிறது. அது, வெட்ட வெட்டத் துளிர்க்கும், வளரும். அது, நாட்டின் மூலை முடுக்குகளில் எல்லாம், அடர்ந்த காடுகளில் எல்லாம் எதிரொலித்துக் கொண்டே இருக்கும்.

இன்று, இந்திய நாடாளுமன்ற போலி ஜனநாயகக் கட்டமைப்பே நொறுங்கி விழுந்து கொண்டிருக்கிறது. இன்று, ஓட்டுக்கட்சிக் கொடிகளும் சின்னங்களும் மட்டுமே வேறுவேறாக உள்ளன. ஆனால், “தனியார்மயம், தாராளமயம், உலகமயம்” என்கிற கொள்கையில் ஓட்டுப் பொறுக்கி அரசியல் கட்சிகளிடையே எந்த வேறுபாடும் கிடையாது. நாடெங்கும் கிரிமினல் குற்றக் கும்பல்கள் தோன்றி அரசியலே கிரிமினல்மயமாகிவிட்டது. இலஞ்ச – ஊழல் அதிகார முறைகேடுகளாலும், சமூக விரோத கிரிமினல் குற்றங்களாலும் அரசியல் அமைப்பு முழுவதும் புழுத்து நாறுகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே, மக்கள் அணி திரள்வதற்கும், தங்கள் அவலங்களுக்கும் துயரங்களுக்கும் தீர்வு காண்பதற்கான ஒரே மையமாக நக்சல்பாரி இயக்கமொன்றுதான் உள்ளது. அதுமட்டுமே நாடாளுமன்றப் பாதைக்கு வெளியே, அதற்குப் புறம்பாகவும் எதிராகவும், ஆக்கபூர்வமான அரசியல், பொருளாதாரத் தீர்வு காணவும், மக்களை வழிநடத்தும் துணிவும் தெளிவும் கொண்டதாக உள்ளது.

நக்சல்பாரி என்ற சொல் இனியும் அந்தச் சிறு கிராமத்தை மட்டும் குறிக்கவில்லை. இப்போது நக்சல்பாரி என்ற சொல், ஒரு மாபெரும் அரசியல் இயக்கத்தைக் குறிக்கிறது. நாடாளுமன்ற போலி ஜனநாயகத்துக்கு வெளியே உழைக்கும் மக்கள் அணிதிரளும் மையமாக விளங்குகிறது. நாடாளுமன்றத் தொழுவத்தில் விழுந்து புரளும் பன்றிகளாகிய அரசியல் கட்சிகளை எள்ளி நகையாடும் அரங்கமாகத் திகழ்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, அதிகாரவர்க்க – இராணுவ அரசு அமைப்பைத் தாக்கித் தகர்ப்பதற்கான போராயுதமாக எழுகிறது. உழைக்கும் மக்கள் நேரடியாக அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான ஒரே பாதையாக நக்சல்பாரிப் பாதை திகழ்கிறது.

இந்த மே மாதத்தில், கட்சியின் 8-வது மாநாடு நடந்து 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. நாட்டில் எத்தனையோ கட்சிகளும் இயக்கங்களும் உருவாகி மறைந்து போய்விட்டன. ஆனால் 51 ஆண்டுகளுக்கு மேலாகியும் இன்னமும் நக்சல்பாரி இயக்கம் அழியாமல் ஒளிவீசிக் கொண்டிருக்கிறது.

நக்சல்பாரி எழுச்சிக்குப் பிறகு, திரிபுவாத – நவீன திரிபுவாதப் பாரம்பரியங்களை நிராகரித்து, உண்மையான கம்யூனிஸ்ட் கட்சியாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்)-யை புரட்சியாளர்கள் உருவாக்கினார்கள். இந்திய கம்யூனிச இயக்கம் புரட்சிகரப் பாதையில் அடியெடுத்து வைத்தாலும், விரைவிலேயே இடது சந்தர்ப்பவாதப் பாதையில் சறுக்கி விழுந்து பெரும் பின்னடைவையும் இழப்பையும் சந்தித்தது. இடது சந்தர்ப்பவாதத்தை நிராகரிப்பது என்ற பெயரில் மீண்டும் வலது சந்தர்ப்பவாதப் போக்குகள் தோன்றி மா-லெ கட்சி பிளவுபட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் – லெனினிஸ்ட்) உருவாகி 51 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளபோதிலும், நாடு தழுவிய ஐக்கியப்பட்ட கட்சியாக வளர்ந்து தனது 9-வது மாநாட்டை நடத்த வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாம் ஆண்டா இது?
♦ வலது திசைவிலகலில் இருந்து கட்சியை மீட்போம் ! SOC – CPI (ML) 10-வது பிளீன அறிக்கை !

போர்க்குணம், புரட்சியைச் சாதிக்க வேண்டுமென்ற வைராக்கியம், எல்லா வகையான அடக்குமுறைகளையும் துச்சமாக மதிக்கும் எஃகுறுதி, முழுமையான அர்ப்பணிப்பு, எல்லா வண்ணத் திரிபுவாதங்களையும் எதிர்த்து முறியடிப்பதில் இடையறாத போராட்டம் – ஆகிய உயரிய பண்புகளை நக்சல்பாரி இயக்கம் தோற்றுவித்துள்ளது. சித்தாந்தப் போராட்டத்தின் மூலம் புரட்சிகர குழுக்களை ஐக்கியப்படுத்தி, நாடு தழுவிய கட்சியாக வளர்த்தெடுப்பதென்பது புரட்சியாளர்களின் அவசர, அவசியமான கடமையாக உள்ளது. இம்மகத்தான கடமையை நிறைவேற்ற, எண்ணற்ற தியாகிகளின் உதிரத்தால் சிவந்த நக்சல்பாரி புரட்சிப் பாதையில் தொடர்ந்து முன்னேறிச் செல்ல சூளுரை ஏற்போம்!

தங்கம்

கொரோனா : கணக்கில் கொண்டு வரப்படாத மரணங்கள் !

முறிந்துகிடக்கும் இந்தியாவின் கொரோனா இறப்பு விவரங்கள் : தீர்வு காண்பது எப்படி?

கடந்த ஓராண்டு காலமாக, இந்திய ஆராய்ச்சியாளர்களும் பத்திரிகையாளர்களும் ஒரே ஒரு எளிமையான கேள்விக்கு பதில் சொல்ல பல்வேறு முயற்சிகளைச் செய்து வருகின்றனர். இந்தியாவில் கோவிட்-19 பாதிப்பால் இறந்தவர்களின் உண்மையான எண்ணிக்கை என்ன?

அரசாங்கத்தின் தரவுகளில் பெரும் முரண்பாடுகள் இருப்பதால், இந்த விவரங்களை வெளிக் கொண்டுவர ஊடகத்துறையினர் பல்வேறு வகையான, வழக்கத்திற்கு மாறான உத்திகளை பயன்படுத்துகின்றனர். அரசாங்கம் வெளியிடும் இந்த எண்ணிக்கையில் என்ன பிரச்சனை  இருக்கிறது? என்பதை பார்ப்போம்.

படிக்க :
♦ மருத்துவ கட்டமைப்பு வசதிகள் இல்லாமல் நிகழும் கொரோனா மரணங்கள் || மக்கள் அதிகாரம்
♦ குஜராத் மாடல் : குவியும் கொரோனா மரணங்கள் !

கோவிட்-19 இறப்பு கணக்கை தவறவிட மூன்று முக்கிய வாய்ப்புகள் உள்ளன.

  1. கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டு இறந்த நபரை, தொற்று இல்லாமல் இறந்ததாக பதிவு செய்வது அல்லது தொற்று உறுதிசெய்யப்பட்டவர் வீட்டிலேயே இறந்துவிட்டால் அந்த இறப்பினைக் கணக்கில் எடுத்துக் கொள்ளமாலேயே விட்டுவிடுவது.
  2. கோவிட்-19 பரிசோதனை செய்து கொள்ளாத நபர் நோய்த் தொற்றினால் இறந்தாலும், பரிசோதனை செய்து கொள்ளாததால் அவர் கோவிட்-19 இறப்புகளில் சேர்க்கப்படமாட்டார்.
  3. கோவிட்-19 இறப்புகளின் எண்ணிக்கையை வேண்டுமென்றே குறைவாகக் காட்டிக் கொள்ள எடுக்கப்படும் முயற்சிகள்.

மேற்கூறியவற்றில் மூன்றாவது வாய்ப்பு முக்கியமானதும் பெரும்பாண்மை வகிப்பதும் என்று பலர் கருதலாம். அதேவேளையில், மற்ற இரண்டு அம்சங்களும் நிச்சயம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.

உலக சுகாதார நிறுவனம் வழிகாட்டியுள்ளபடி, தற்போதைய தொற்று நோயின் இறப்புகளைப் பதிவு செய்ய சில நெறிமுறைகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (ICMR) கூறுகிறது.

ஒரு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபரின் மரணம் கோவிட்-19 மரணமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

மேலும், ஒரு நபர் தற்போதைய நோய்த் தொற்றின் எந்தவொரு அறிகுறிகளும் இல்லாமல் இறந்தாலும், அவரை கோவிட்-19 நோய்த் தொற்றினால் இறந்ததாக எவ்வாறு கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று குறியீடுகளின் அடிப்படையில் உலக சுகாதார அமைப்பின் “நோய்களின் சர்வதேச வகைப்பாடு” (INTERNATIONAL CLASSIFICATION OF DISEASES _ ICD-10) வழிகாட்டியுள்ளது.

அதன்படி,

  1. தொற்று உறுதி செய்யப்பட்ட நபர் சுவாசக் கோளாறு காரணமாக இறந்திருப்பதாகத் தோன்றினாலும், – தனித்துவமான இறப்பு முறையாக இருப்பதால் – அவரது இறப்பை கோவிட்-19ஆல் ஏற்பட்ட இறப்பு என்றே கணக்கில் கொள்ள வேண்டும்.
  2. தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு வேறு பல நோய்கள் இருப்பின் நிச்சயமாக அவர் சுவாசக் கோளாறு ஏற்பட்டு இறக்க நிறைய வாய்ப்புகள் உள்ளது. அதனால், மற்ற நோய்களால் ஏற்பட்ட மரணம் என்று கருத்தக் கூடாது, மாறாக இறப்பின் காரணம் கோவிட்-19 எனக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. ஒருவர் கோவிட்-19 பரிசோதனையை எடுக்காமல் அல்லது நோய்த் தொற்று இல்லாதவர் என்று பரிசோதனையில் முடிவு வந்திருந்தாலும் தொற்றுக்கான அறிகுறிகள் தென்பட்டால் அவரது இறப்பு, “சந்தேகத்திற்குரிய அல்லது கோவிட்-19ஆல் ஏற்பட்ட மரணம்” என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால், நடைமுறையில் இந்த வழிகாட்டுதல்கள் எதுவும் பின்பற்றப்படுவதே இல்லை. பல மாநிலங்களில் உள்ள அதிகாரிகள் எங்களுக்கு சொன்னது என்னவென்றால், ஒருவர் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டு சில நாட்களில் உயிரிழந்தாலோ அல்லது அறிகுறிகள் தெளிவாக வெளிப்பட்டாலோ மட்டுமே அந்த மரணம் கொரோனாவினால் எற்பட்ட மரணம் என்று கணக்கிடப்படுகிறது.

இதுவே ஒரு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு சில வாரங்களில் தொற்று இல்லை என பரிசோதனை முடிவுகள் வந்தாலும் வெளிப்படையான அறிகுறிகள் காணப்படலாம். இந்த நிலையில் அவர் இறந்தாலும் அவரது இறப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை.

பெரும்பாலான மாநிலங்கள் “சந்தேகத்திற்குரிய கொரோனா இறப்புகளை” கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. குறிப்பாக இரண்டாம் அலையின் போது பல சந்தேகத்திற்குரிய கொரோனா உறுதி செய்யப்பட்ட நபர்கள் மருத்துவமனை நடைபாதைகளில் மற்றும் வீடுகளில் இறந்துள்ளனர். இவர்கள்  கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

நாட்டில் நிகழும் மொத்த மரணங்களில் பாதிக்கும் குறைவானவைதான் மருத்துவமனைகளில் நிகழ்கின்றன என 2018-இன் அரசின் தரவுகள் கூறுகின்றன. அப்படியிருக்கும் போது, தற்போது கோவிட்-19 இறப்புகள் என அதிகாரப் பூர்வமாகக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டதில் மிகப் பெரும்பாலானவை மருத்துவமனைகளில் நிகழ்ந்ததுள்ளவை மட்டுமே.

அதே வேளையில், மற்ற நோய்களுக்கான சிகிச்சைகளைப் பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதால், மற்ற நோய்களினால் ஏற்படும் இறப்புகளின் சதவீதமும் உயர்ந்துள்ளது. உதாரணமாக, டயாலிசிஸ் (Dialysis) மற்றும் கோவிட் அல்லாத ஆக்சிஜன் தேவை காரணமாக நிகழும் இறப்புகளும் உயர்ந்து வருகின்றன. மேலும், பத்திரிக்கையாளர்கள் தங்களுக்கு நெருக்கமான நகரங்கள் மற்றும் கிராமங்களில் அரசால் சொல்லப்படும் தரவுக்கும் உண்மையாக இறந்தவர்களின் எண்ணிக்கைக்கும் பொருத்தமில்லாமல் இருப்பதைக் கேள்வி எழுப்புகின்றனர்.

பெரும் வேறுபாடுள்ள கோவிட்-19 இறப்புகளின் தரவுகளினால், இப்பத்திரிக்கையாளர்கள் இறந்தவர்களைத் தகனம் செய்யும் இடங்களுக்கும் புதைக்கும் இடங்களுக்கும் சென்று தரவுகளைச் சேமிக்கின்றனர். ஆனால், இம்மாதிரி குளறுபடியான தரவுகளை ஒருங்கிணைப்பதனால் இந்த நோய்த் தொற்றை நம்மால் ஒருபோதும் சரி செய்ய முடியாது.

இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஒன்று, தகனம் செய்யும் இடங்களிலும் புதைக்கும் இடங்களிலு பதிவேடுகள் முறையாகப் பாராமரிக்கப் படுவதில்லை. தகனம் செய்து முடிந்த நபர்களின் எண்ணிக்கை சரியாகப் பராமரிக்கப் படாததால் பெரும்பான்மை பத்திரிக்கையாளர்களின் தரவுகளை சரியாக கணக்கிட முடியாது. மேலும், கோவிட்-19 வழிகாட்டு நெறிமுறையின்படித் தகனம் செய்த நபர்களின் எண்ணிக்கையும் முறையாக இருப்பதில்லை. பெரும்பாலான இடங்களில், நோய்த் தொற்று உடையவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்களும் நோய்த் தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களும் முன்னெச்சரிக்கையாக இந்த நெறிமுறையின்படியே தகனம் செய்யப்படுகின்றனர்.

இந்தியாவில், ஒரு மாநிலத்துக்குள்ளே அல்லது ஒரு நகரத்துக்குள்ளே தகனம் செய்யும் இடங்களில் சேகரிக்கப்படும் தரவுகள் முறையானதாக இருப்பதில்லை. உதாரணமாக, பெங்களுருவில், கோவிட்-19 தொற்று காரணமாக இறந்த நபரையும் கோவிட்-19 பரிசோதனை மட்டுமே எடுத்துக் கொண்ட நபரையும் ஒரே இடத்தில் தகனம் செய்கின்றனர். பரிசோதனை செய்துக் கொண்டவருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்டதா? இல்லையா? என்ற எந்தச் சோதனையும் நடைபெறுவதில்லை. மேலும், பெங்களுருவில் தொற்று உறுதி செய்யப்பட்ட நபருக்கு அடையாள அட்டை வழங்கப் படுகிறது. ஆனால், இந்த முறையானது வேறு எங்கும் இல்லை.

கேரளாவில், பல தகனம் செய்யும் இடங்களில் பதிவுகள் முறையாகப் பராமரிக்கப் படுவதில்லை. கோவிட்-19ஆல் பாதிக்கப்பட்டு இறந்தவர் என்பதற்கான மருத்துவரின் சான்றிதழை குடும்பத்தினர் முறையாக வைத்திருக்கும் போதிலும், தகனம் செய்யும் இடங்களில் அதைக் குறிப்பிடாமல் தவறவிடுகின்றனர். பல மருத்துவமனைகளில் கோவிட்-19 தொற்று உறுதி செய்யப்பட்டதானது, வாய்வழியாக மட்டுமே உறவினர்களுக்குச் சொல்லப் படுகிறது. எனவே, அவர்கள் இறக்கும் போது முறையான ஆதாரங்கள், ஆவணங்கள் எதுவும் இல்லையென்பதால் அந்த மரணங்களும் கோவிட் அல்லாத மரணங்களாகவே தகனம் செய்யும் இடங்களில் பதிவு செய்யப் படுகின்றன.

மேலும், கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் தொற்றினை சரிசெய்து கொள்ள பெருநகரங்களுக்கு வருபவர்களில் சிலர் இறக்கின்றனர். இவர்களின் உடல்களும் அங்கேயே தகனம் செய்யப் படுகிறது. அதனாலும் பெருநகரங்களில் இறப்பு எண்ணிக்கை அதிகமாகக் காணப்படுகிறது.

நோய்த் தொற்று காரணமாக இறப்புகளைப் பதிவு செய்வது இந்தியாவில் முழுமையற்றதாக உள்ளதால், முந்தைய ஆண்டுகளின் “எல்லா மரணங்களையும் அவற்றின் காரணங்களையும்” எடுத்து ஒப்பிட்டு பத்திரிக்கையாளர்கள் ஆய்வு செய்யலாம். 2018-இன் தரவுகளின்படி, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையத்தில் 86 சதவீதம் இறப்புகள் மட்டுமே பதிவாகிறது என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 16 மாநிலங்களில் மட்டுமே முழுமையாக இறப்புகள் பதிவு  செய்யப்படுகிறது.

கேரளா மாநிலம் மட்டுமே அனைத்து இறப்புகளையும் அதற்கான காரணங்களையும் 2020-இல் பதிவு செய்துள்ளது. கேரள மாநிலத்தில், 2020-ல் பதிவு செய்யப்பட்ட இறப்புகள் 2019-இன் ஆண்டை விடக் குறைவு என்பதால் இதனை மரணத்தைக் குறைத்துக் காட்டும் தரவு என்றோ தவறான தரவு என்று எண்ணக் கூடாது. (2018-இல்-மொர்) குறிப்பிட்ட அளவிலான மரணங்கள் தாமதமாகவே பதிவு செய்யப்பட்டன. உதாரணமாக, 2018-இல் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட மரணங்கள் இறந்த ஒரு மாதத்திற்கு பின்பே பதிவு செய்யப்பட்டது. 2 சதவீதம் (4810) இறப்புகள் ஒரு வருடத்திற்கு பின்பு கூட பதிவு செய்யப்படவில்லை. 2020-ல் கேரளாவில் கொரோனாவால் ஏற்பட்ட இறப்புகள் 3,096. இதனை பதிவு செய்யாத இறப்புகளோடு ஒப்பிட்டால் குறைவுதான்.

படிக்க :
♦ “நிர்வாண அரசரின் ராமராஜ்ஜியத்தில் கங்கை நதியில் பிணங்கள் மிதக்கின்றன”
♦ ஆபத்தான புதிய வகை கொரோனா : அறிவியலாளர் குழுவின் எச்சரிக்கையை புறக்கணித்த மோடி

மும்பை, டெல்லி, வேறு சில மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இந்த இறப்பு பதிவுகள் முழுமையாக உள்ளதனால் முந்தைய ஆண்டை ஒப்பிட்டு பதிவிட்ட இறப்புகளின் சதவீதத்தை அறிந்து, இந்த நோய்த் தொற்றின் வீரியத்தையும் இதனால் நேராகவோ மறைமுகமாகவோ ஏற்படும் விளைவுகளையும் புரிந்துக் கொள்ள முடியும்.

மக்கள் தொகை பதிவுகள் முழுமையாக இல்லாத வடமாநிலங்களில் “மாதிரி பதிவு அமைப்பு” (Sample registration system) உதவும். இ்ந்த மாதிரி கணக்கெடுப்பு, ஆண்டின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதத்தை அளிக்கிறது.

இந்த தரவுகள் வெளியிடப்பட்டால் கொரோனாவின் முதல் மற்றும் இரண்டாம் அலையின் மூலம் ஏற்பட்ட இறப்பு விகிதத்தை அறிந்துக் கொள்ள முடியும்.


கட்டுரையாளர்கள் : ஆஷிஷ் குப்தா, தன்யா ராஜேந்திரன், ருக்மிணி
சுருக்கப்பட்ட தமிழாக்கம் : மாதவன்
நன்றி : The Wire