மார்க்சியம் என்ற சமூக விஞ்ஞானத்திற்கு தோழர்கள் மார்க்சும் எங்கெல்சும் மாபெரும் பங்களிப்பைச் செலுத்தியிருக்கிறார்கள். தோழர் எங்கெல்ஸ் பிறந்து 200-வது ஆண்டில் இன்று, முதலாளித்துவத்தின் அனைத்து சுரண்டல்களும், இழிவுகளும் மக்களிடையே வெகுவாக அம்பலமாகியிருக்கின்றன. ஆனாலும் இதற்கு மாற்று வேறு இல்லை என்ற எண்ணமே மக்களிடம் மேலோங்கி இருக்கிறது. அத்தைகயதொரு கருத்தை மக்கள் மனதில் வேரூன்றச் செய்வதில் மிகவும் மும்முரமாக வேலை பார்க்கின்றது முதலாளித்துவம்.
இந்தப் பணியைச் செவ்வனே செய்வதற்காகவே பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்களை உருவாக்கி அவர்களுக்கும் படியளந்து வருகிறது. இத்தகைய என்.ஜி.ஓ.க்கள், மக்களின் தன்னெழுச்சி போராட்டங்களை ஆதரித்து அவற்றை ஆளும் அரசாங்கங்களுக்கு எதிராகத் திசை மாற்றி விடும் வேலையை வெற்றிகரமாகச் செய்து முடிக்கின்றன. மக்களின் கோபம், முதலாளித்துவ சமூக அமைப்பின் மீது திரும்பாமல் பார்த்துக் கொள்கின்றன. பல்வேறு சீர்திருத்தங்களைக் கோருகின்றன. அவற்றில் சில பல வெற்றிகளை காணச் செய்து அவர்களை அதற்குள் திருப்தியுறச் செய்து விடுகின்றன.
நாம் இன்று எதிர்கொள்ளும் ஒவ்வொரு பிரச்சினைகளையும் அதன் ஆணிவேரைத் தேடிச் சென்று அதனைக் களைய வேண்டுமெனில், நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் மீதான சமூக அறிவியல் பார்வையைப் பெற வேண்டியதும், அந்த அறிவியல் பார்வையிலிருந்து, இப்பிரச்சினைகளுக்கு நிரந்தரமான முற்றுப் புள்ளி வைப்பதற்கான பணியில், முழுமையான சமூக மாற்றத்திற்கான பணியில் ஈடுபட வேண்டியது அவசியமாகிறது. அதனை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியே செய்ய முடியும். ரசியாவில் அத்தகையதொரு கட்சியைக் கட்டி அங்கு ஒரு சோசலிச சமூகத்தைக் கட்டிய தோழர் லெனின், எங்கெல்சின் பணிகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் எங்கெல்ஸ் இறந்த 1895-ம் ஆண்டில் எழுதினார். அதனை இங்கே ஒரு தொடராக வாசகர்களுக்குத் தருகிறோம். தொடர்ந்து படியுங்கள் !
தோழமையுடன்
வினவு
0*0*0
பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 1
எத்தகைய அறிவுச்சுடர் விளக்கவிந்தது;
எத்தகைய அன்பு மலர் நெஞ்சு நின்றது !
1895-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதியன்று பிரெடெரிக் எங்கெல்ஸ் லண்டன் மாநகரில் காலமானார். (1883-ம் ஆண்டில் மறைந்த) அவருடைய நண்பர் கார்ல் மார்க்சுக்கு அடுத்தபடி நாகரிக உலகெங்கும் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் தலைசிறந்த அறிஞராகவும் ஆசானாகவும் விளங்கியவர் எங்கெல்ஸ் ஆவார். கார்ல் மார்க்சையும் பிரெடெரிக் எங்கெல்சையும் விதி ஒன்று சேர்த்து வைத்த காலத்திலிருந்து அவ்விரு நண்பர்களும் தமது வாழ்வை இருவருக்கும் பொதுவான இலட்சியத்துக்கு அர்ப்பணித்துக் கொண்டனர். ஆகவே, பாட்டாளி வர்க்கத்திற்கு பிரெடெரிக் எங்கெல்ஸ் ஆற்றிய பணியைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் தற்காலத்தியத் தொழிலாளர் இயக்கத்தின் வளர்ச்சியில் மார்க்சின் போதனையும் பணியும் வகிக்கும் முக்கியத்துவத்தைத் தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும்.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
♦ மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் சகாப்தத்தில் கட்சி நடத்திய போராட்டங்கள் !
தொழிலாளி வர்க்கமும் அதன் கோரிக்கைகளும் இன்றையப் பொருளாதார அமைப்பு முறையிலிருந்து விளைந்த அவசியமான விளைவே என்றும், இந்தப் பொருளாதார அமைப்பு முறையும் முதலாளித்துவ வர்க்கமும் சேர்ந்து தவிர்க்க முடியாத வகையிலே பாட்டாளி வர்க்கத்தை உண்டாக்கி, அதனை ஒழுங்கமைத்து அணி திரட்டுகின்றன என்றும் முதன்முதலாக எடுத்துக் காட்டியவர்கள் மார்க்ஸ், எங்கெல்ஸ் இருவருமே. இன்று மனிதகுலத்தை ஒடுக்கி வதைத்து வரும் தீமைகளிலிருந்து அதை விடுவிக்கவல்லது ஒழுங்கமைத்துக் கொண்டு அணிதிரண்டு நிற்கும் பாட்டாளி வர்க்கத்தின் வர்க்கப் போராட்டமே தவிர உயர்ந்த சிந்தனை படைத்த தனிநபர்கள் சிலரின் நல்லெண்ணமிக்க முயற்சிகள் அல்ல என்று அவ்விருவரும் எடுத்துக் காட்டினார்கள். சோசலிசம் என்பது ஏதோ கனவு காண்பவர்களுடைய கற்பனைப் பொருள் அல்ல; நவீன சமுதாயத்தில் உற்பத்திச் சக்திகளுடைய வளர்ச்சியின் கடைசிக் குறிக்கோளும், தவிர்க்க முடியாத விளைவும் ஆகும் அது என்று தங்கள் விஞ்ஞான நூல்களிலே மார்க்சும் எங்கெல்சும் முதன்முதலாக விளக்கினர்.
இதுவரை ஏட்டிலேறியுள்ள வரலாறெல்லாம் வர்க்கப் போராட்டத்தின் வரலாறுதான், ஒன்றன் பின்னொன்றாய்த் தொடர்ந்து சில சமுதாய வர்க்கங்கள் மற்ற வர்க்கங்களின் மீது வெற்றிகொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளதின் வரலாறுதான். வர்க்கப் போராட்டத்துக்கும், வர்க்கத்திற்குரிய ஆதிக்கத்துக்கும் அடிப்படைகளாயுள்ள தனிச்சொத்தும், அராஜகமான சமுதாய உற்பத்தியும் மறைந்தொழிகிற வரையில் இது நீடித்தே தீரும். இந்த அடிப்படைகளை அழித்துவிட வேண்டும் என்று பாட்டாளி வர்க்கத்தின் நலன்கள் கோருகின்றன. எனவே, ஓர் அணியில் திரண்ட தொழிலாளிகளின் உணர்வுபூர்வமான வர்க்கப் போராட்டம் இவ்வடிப்படைகளுக்கு எதிராகச் செலுத்தப்பட வேண்டும். மேலும், ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் போராட்டமேயாகும்.
இவை மார்க்ஸ், எங்கெல்சின் கருத்துக்களாகும். பாட்டாளி வர்க்கத்தின் விடுதலைக்காகப் போராடும் பாட்டாளிகள் அனைவரும் இந்தக் கருத்துக்களை ஏற்றுத் தமதாக்கிக் கொண்டுள்ளனர். ஆனால், 1840-50-ம் ஆண்டுகளில், இவ்விரு நண்பர்களும் அந்தக் காலத்திய சோசலிஸ்டு இலக்கியத்திலும் சமுதாய இயக்கங்களிலும் பங்கு கொண்ட பொழுது இப்படிப்பட்ட கருத்துக்கள் முற்றிலும் புதியனவாயிருந்தன. அந்தக் காலத்தில் திறனுள்ளவர்களாயும் திறனற்றவர்களாயும், நேர்மையுள்ளவர்களாயும் நேர்மையற்றவர்களாயும் இருந்த பல பேர் அரசியல் விடுதலைப் போராட்டத்தில், ஜார் மன்னர்களின், போலீசின், பாதிரிமார்களின் யதேச்சாதிகாரத்தை எதிர்க்கும் போராட்டத்தில் முழுக்க ஈடுபட்டிருந்தபோதிலும் முதலாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் பாட்டாளி வர்க்கத்தின் நலன்களுக்கும் இடையேயுள்ள பகைமையைப் பார்க்கத் தவறினார்கள்.
சுதந்திரமான சமுதாயச் சக்தியாகத் தொழிலாளர்கள் செயல்புரிவதென்ற கருத்துக்கு அவர்கள் இடங்கொடுக்க மறுத்தார்கள். மற்றொரு பக்கத்தில் கனவு காண்போர் பலர் இருந்தார்கள்; அவர்களில் சிலர் மேதைகள்கூட; நவீன சமுதாய அமைப்பு முறை அநியாயமானது என்று ஆட்சியாளர்களுக்கும் ஆட்சி செலுத்தும் வர்க்கங்களுக்கும் புரிய வைப்பது ஒன்றுதான் வேலை, அதைச் செய்துவிட்டால் பிறகு இந்த மண்ணுலகில் அமைதியையும் பொதுவான நல்வாழ்வையும் நிறுவுவது சுலபம் என்று அவர்கள் எண்ணினார்கள். போராட்டமில்லாமலே சோசலிசம் வரும் என்று அவர்கள் கனவு கண்டார்கள். கடைசியாக ஒன்று. அந்தக் காலத்தைச் சேர்ந்த அநேகமாக எல்லா சோசலிஸ்டுகளும், பொதுவாகத் தொழிலாளி வர்க்கத்தின் நண்பர்களும், பாட்டாளி வர்க்கம் ஒரு சீழ்வடியும் புண் என்று கருதினர்; இயந்திரத் தொழிலின் வளர்ச்சிக்கு ஏற்ப இந்தப் புண்ணும் வளர்ந்து கொண்டே போவதை அவர்கள் பீதியுடன் கவனித்தார்கள்.
ஆகவே, இயந்திரத் தொழிலின் வளர்ச்சியையும் பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியையும் எப்படித் தடுத்து நிறுத்துவது, “வரலாற்றின் சக்கரத்தை” எப்படித் தடுத்து நிறுத்துவது என்பதிலேயே அவர்கள் அனைவரின் கவனமும் சென்றது. பாட்டாளி வர்க்கத்தின் வளர்ச்சியைப் பற்றிப் பொதுவாக நிலவிய பயபீதிகளுக்கு ஆளாவதற்குப் பதிலாக மார்க்சும் எங்கெல்சும் பாட்டாளி வர்க்கத்தின் இடைவிடாத வளர்ச்சியின்மீதே தங்கள் நம்பிக்கைகள் அனைத்தையும் வைத்தார்கள்.
பாட்டாளிகளின் எண்ணிக்கை எவ்வளவுக்கெவ்வளவு அதிகமாகிறதோ, அவ்வளவுக்கவ்வளவு புரட்சிகரமான வர்க்கம் என்ற வகையிலே அவர்களின் வலிமை அதிகமாகும், அவ்வளவுக்கவ்வளவு சோசலிசம் நெருங்குவது சாத்தியமாகும். தொழிலாளி வர்க்கத்துக்கு மார்க்சும் எங்கெல்சும் ஆற்றிய பணியைப் பற்றி ஒருசில சொற்களிலே பின்வருமாறு சொல்லிவிடலாம் : தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே அறிந்து கொள்ளுமாறு, தன்னைப் பற்றிய உணர்வு கொள்ளுமாறு அவர்கள் போதித்தார்கள்; மேலும், கனவுகள் இருந்த இடத்தில் விஞ்ஞானத்தை நிலைநாட்டினார்கள்.
ஆகவேதான் எங்கெல்சின் பெயரும் வாழ்க்கையும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் தெரிந்திருக்க வேண்டும். நமது எல்லா வெளியீடு களையும் போலவே இந்தச் சஞ்சிகையின் நோக்கமும் ரசியத் தொழி லாளர்களிடையே வர்க்க உணர்வைத் தூண்டுவதேயாகும். அதனால் தான் இச்சஞ்சிகையில் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் மகத்தான இரு ஆசான்களில் ஒருவராகிய பிரெடெரிக் எங்கெல்சின் வாழ்க்கையையும் பணியையும் நாம் சித்திரித்துக் காட்ட வேண்டும்.
(தொடரும்)
நூல் : பிரெடரிக் எங்கெல்ஸ்
ஆசிரியர் : வி.இ.லெனின்
வெளியீடு : கீழைக்காற்று
விலை : ரூ. 15
தொடர்பு : 73 9593 7703







முதலில், நிலக்கரி அமைச்சகம் 41 நிலக்கரி சுரங்கங்களை ஏலம் விட திட்டமிட்டிருந்தது, ஆனால் அந்த பட்டியல் பின்னர் 38 ஆக குறைக்கப்பட்டது. தொழில்நுட்ப ஏலங்கள் (இதில் நிறுவனங்கள் தகுதிகளை பூர்த்தி செய்வதற்கான விவரங்களை அளிக்க வேண்டும் ) செப்டம்பர் 29 அன்று மூடப்பட்டது. ஆனால் அடுத்த நாளே, அமைச்சகம் 23 சுரங்கங்களுக்கான ஏலங்களை மட்டுமே பெற்றதாக அறிவித்தது.







தொழிலாளர் வர்க்கம் தன்னைத்தானே எப்படி ஸ்தாபனரீதியாக ஒன்று திரட்டிக் கொள்வது என்பதையும்
ஆதலால் மார்க்ஸ்
அந்த சமயத்தில் ஒருபுறத்தில் தொழிலாளி வர்க்கப் புரட்சிக்கு செய்ய வேண்டிய போர்க்குணமிக்க கடமைகளை நிறைவேற்றுவதற்கும் பரந்த பொதுஜனங்களுக்கு தலைமை கொடுக்கவும் பலமாக போராடும் கட்சி அவசியமாயிருந்தது என்பதை அப்புரட்சிக் கடமைகளே வலியுறுத்தின. மறுபுறத்தில் இண்டாவது இண்ட
நமது கட்சி தொழிலாளி வர்க்க கட்சி, பரந்த பொதுஜனங்களின் போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தும் கட்சி, தனக்கு கடமையாக அமைந்துள்ள சரித்திரப்பூர்வமான பணிகளை கட்சி நிறைவேற்ற வேண்டுமானால் பல்வேறு காலகட்டங்களில் புரட்சிக்கு எதிராக வரும் விரோதிகளை எதிர்த்துப் போராட வேண்டும். பல்வேறு புரட்சிகரமான ஜனப்பகுதிகள், வர்க்கங்களுடன் ஐக்கியப்பட வேண்டும்.
ஆதலால் அத்தகைய உட்கட்சிப் போராட்டம் முற்றிலும் அவசியம்; தவிர்க்க முடியாதது. உள்கட்சிப் போராட்டத்தை தவிர்ப்பதற்கு முயலுகின்ற எவ்வித எண்ணமானாலும் சரி அல்லது தன் குற்றத்தை பிறர் விமர்சிக்காமலிருக்கட்டும் என்பதற்காக மற்றவர்களின் குற்றங்களை விமர்சிக்காமல் ஒதுங்குவதானாலும் சரி, முற்றிலும் தவறானது.
ஆதலால் நமது உள்கட்சிப் போராட்டம் ஏககாலத்திலேயே வலதுசாரி சந்தர்ப்ப வாதத்தையும் இடதுசாரி சந்தர்ப்பவாதத்தையும் எதிர்த்து திருப்பிவிடப்பட வேண்டும்; இந்த இரண்டு அம்சங்களை எதிர்த்து திருப்பினால்தான் நமது கட்சி அதன் திட்டவட்டமான தொழிலாளி வர்க்க குணத்தை பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை நாம் செய்யத் தவறினால், நாம் ஒருதலைப்பட்சமான போராட்டத்தை மட்டும் நடத்திக் கொண்டிருப்போமேயானால், அல்லது நமது உஷார் உணர்வு தளர்த்தப்படுமேயானால், இரு பக்கத்தையும் எதிர்த்து நாம் நடத்தும் போராட்டம் தளருமேயானால் அப்பொழுது விரோதி தாக்கக்கூடும் என்பது மட்டுமல்ல, நாம் புறக்கணித்த பக்கத்திலிருந்து நிச்சயமாகத் தாக்குவான். அம்மாதிரி நிலைமையில் கட்சியின் பரிசுத்தத் தன்மையையும், சுயேட்சை தன்மையையும் பாதுகாப்பதும் கட்சியை ஒன்றுபடுத்துவதும் அசாத்தியமாகிவிடும். ஆதலால் இரு முனைகளில் ஓய்வு ஒழிச்சலின்றி நிகழ்த்தப்படும் உள்கட்சிப் போராட்டத்தின் மூலம்தான் நமது கட்சி பலம் பெற்று வளர்கிறது.
மேலும் அவர் கூறினார்: 
1. மூத்த ஊழியர்கள் தமது நீண்டகால அனுபவத்தை வைத்து காலத்தைத் தள்ளிக்கொண்டிருக்கக் கூடாது. உங்களுடைய நீண்டகால சேவையைக் காட்டி தம்பட்டமடித்துக் கொள்வது அர்த்தமற்றது. கட்சி ஊழியர்களுக்கு மூன்று தகுதிகள் இருந்தாக வேண்டும் என்பதை மூத்த ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். அரசியல் நேர்மை, திறனாற்றல், அனுபவ மேம்பாடு ஆகியவையே இந்த மூன்று தகுதிகள். அவர்கள் தமது நீண்டகாலச் சேவையை மட்டும் வலியுறுத்தாமல் திறனாற்றலுக்கும் முக்கியத்துவம் தர வேண்டும். அரசியல் நேர்மையை திறனாற்றலிலிருந்து பிரித்து விடக்கூடாது. புரட்சிகரக் கடமைகளை நிறைவு செய்ய உங்களால் முடியாவிட்டால், உங்கள் அரசியல் நேர்மை குறைபாடுடையதே. நீண்டகாலச் சேவை எனும் பெருமிதமானது, உங்களுடைய முன்னேற்றத்துக்குத் தடையாவதை நீங்கள் அனுமதிக்காமல் இருந்தால், ஒரு மூத்த புரட்சியாளராக இருப்பது பெருமைக்குரியதே.
3. தனித் தேர்ச்சிமிக்க ஊழியர்கள் பற்றி
நமது சொந்த திறனாற்றல்களின்பால் ஒரு விஞ்ஞானபூர்வமானப் போக்கை நாம் கைக்கொண்டாக வேண்டும். தவறவே தவறாதவர்களாக நம்மையே நாம் கருதக் கூடாது. ஆலோசனைக்காக பிற மருத்துவர்களை அழைப்பதை சில மருத்துவர்கள் விரும்புவதே இல்லை. நோயைக் குணப்படுத்துவதில் தாம் தவறும்பட்சத்தில், வேறு எவரும் நோயைக் குணப்படுத்தக் கூடாது என்று அவர்கள் நினைக்கின்றனர். சிலர், மற்றவர்களுடைய பலவீனங்களைப் பற்றிப் பேசுவதில் நாட்டம் கொள்கின்றனர். ஆனால், தமது சொந்த பல வீனங்களைப் பற்றி வேறு எவரும் பேசினால், அவர்கள் சீற்றமடைகின்றனர். இவர்கள், தம்மைத் தவறற்றவர்களாகக் காட்டிக் கொள்ள விரும்புகின்றனர். இதன் காரணம் என்னவென்றால், அவர்கள் தமது புகழிலும் அந்தஸ்திலும் மெய்மறந்து உள்ளனர். ஆனால், பிறரிடமிருந்து அறிவுரை பெறுவதால், ஒருவர் தமது மதிப்பை இழந்து விடுவாரா? அப்படியெல்லாம் ஒன்றுமில்லை.
3. பொருத்தமான பாராட்டுதல்களையும் அவசியமான ஒழுங்கு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுங்கள். தவறு செய்த ஊழியர்களை விமர்சிப்பதைப் பற்றி தலைமை ஊழியர்களில் சிலர் கவலைப்படுவதே இல்லை. இதன் மூலம், எதிர்காலத்தில் மேலும் சிறந்த வேலைகளைச் செய்யக் கற்றுக் கொள்வதிலிருந்து அவர்களைத் தடுத்து விடுகின்றனர். ஊழியர்களை நன்றாகக் கவனித்துக் கொள்வது என்பதன் முதன்மையான பொருள், அவர்கள் அரசியல் ரீதியில் முன்னேறுமாறு கவனித்துக் கொள்வதாகும். ஓர் ஊழியரின் தவறுகளை மிகைப்படுத்துவது சரியல்ல. ஆனால், ஓர் ஊழியரை விமர்சிக்காமல், எப்படியோ போகட்டும் என்று விட்டுவிடுவதும் சரியல்ல. பாரதூரமான தவறுகளை இழைத்துள்ள ஓர் ஊழியர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்படாவிட்டால், அனுபவத்திலிருந்து எந்த படிப்பினையையும் அவர் பெறமாட்டார். பிற தோழர்களும் எதையும் கற்றுக்கொள்ள மாட்டார்கள். நன்றாகச் செயல்பட்டுள்ள ஒருவர் பாராட்டப்படாமல் போனால், பெருமளவு முன்னேற்றம் அடைய அவருக்கு ஊக்கம் ஏதும் இராது. மேலும், இதிலிருந்து எவரும் எதையும் கற்றுக் கொள்ள மாட்டார்கள். எனவே, அவரவர்க்குரிய பாராட்டுகளும் ஒழுங்கு நடவடிக்கைகளும் வழங்கப்படுவதில் நாம் நம்பிக்கை வைக்கிறோம்.



உண்மை என்னவென்றால், கட்சியின் இந்த எதிர்பார்ப்புகள் பற்றி ஊழியர்கள் அக்கறை கொள்ள வேண்டும்; அவை தம்மிடம் இருக்க வேண்டுமென்று அவர்கள் தமக்குத் தாமே கண்டிப்பாகக் கோரவேண்டும். ஆனால், இப்போது யேனானில் உள்ள சில ஊழியர்கள், கட்சியின் ஊழியர் கொள்கை பற்றி பேசும்போதெல்லாம் கட்சி தங்களை நன்றாகக் கவனித்துக் கொள்ள வேண்டும், தம்மை நன்றாகப் புரிந்துகொள்ள வேண்டும், தம்மைப் பேணி வளர்க்க வேண்டுமென்று நினைக்கின்றனர். அவர்கள் கட்டாயம் முயற்சிக்க வேண்டிய நான்கு எதிர்பார்ப்புகள் (கட்சிக்கு விசுவாசமாக இருத்தல், மக்களுடன் நெருங்கிய பிணைப்புகளைக் கொண்டிருத்தல், சுயேட்சையாக வேலை செய்யும் ஆற்றல் கொண்டிருத்தல் மற்றும் கட்சிக் கட்டுப்பாட்டை ஏற்றுக் கொள்ளுதல்) பற்றி அவர்கள் பொருட்படுத்துவது இல்லை. அவற்றை இரண்டாந்தர முக்கியத்துவம் உடையவையாக அவர்கள் கருதுகின்றனர்; அல்லது அவற்றை அடியோடு அவர்கள் மறந்து விடுகின்றனர். இது தவறானது என்பது சொல்லாமலே விளங்கும்.
இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் இயக்கங்களில் தாம் பெற்ற அனுபவத்திலிருந்து புரட்சியாளர் பற்றிய அவர்களது கருத்தாக்கம் பின்வருமாறு உள்ளது. ஒரு அரசியல்வாதிதான் புரட்சியாளர்; கூட்டங்களில் தங்குதடையின்றி மடைதிறந்த வெள்ளம் போலப் பேசுபவர் புரட்சியாளர்; ஆர்ப்பாட்டங்கள், கலை இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்தான், புரட்சிக்காக கிளர்ச்சி வேலைகளில் பங்கேற்பவர்தான் புரட்சியாளர்; – இப்படித்தான் அவர்கள் கருதுகின்றனர்.
எல்லா தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளும் தமக்கே உரிய அரசியல் முக்கியத்துவத்தைக் கொண்டுள்ளன. எல்லா அரசியல் வேலைகளும் தொழில்நுட்ப, பொருளாதார, நிர்வாக வேலைகளுடன் பின்னிப் பிணைந்தவையாக உள்ளன. இராணுவ நிர்வாக அமைப்பை எடுத்துக்கொண்டால், அதில் அரசியல் பிரிவு மட்டும் இல்லாமல் அதில் படையதிகாரிகள் பிரிவும் படைவீரர்களை அணிவகுத்து வழிநடத்தும் பிரிவும் இதுபோலவே இருக்கின்றன. பொதுமக்களிடையேயான வேலையிலும் இதே நிலைமைதான் இருக்கிறது. இது கட்சியின் வடமேற்கு பிரிவினுடைய தலைமைக் குழுவிலும், ஷான்க்ஸி – காங்சு – நிங்ஸியா எல்லைப் பிரதேச அரசாங்கத்திலும் பல்வேறு பணித்துறைகள் உள்ளன. வேறெந்த பணிகளுடனும் தொடர்பற்ற முழுமையான அரசியல் வேலை என்று எதுவுமே இல்லை.
முதலில் ”திறமையானவர்களை”ப் பற்றி பரிசீலிப்போம். பொருளாதாரரீதியிலும் கல்விரீதியிலும் சீனா பின்தங்கியுள்ளது. இந்தக் காரணத்தால், அறிவாளிப் பிரிவினர் பெரும் பயனளிப்பவர்களாக உள்ளனர். எனவே, நடுத்தரப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் நமக்கு மதிப்பு மிக்க செல்வங்களாவர். ஆனால், ஒப்பீட்டு ரீதியில் அவர்கள் சாதாரண மக்களை விட திறமையானவர்களாக இருக்கிறார்களே ஒழிய, புரட்சியாளர்கள் என்ற முறையில் அவர்கள் திறமை மிக்கவர்களாக இருப்பதில்லை. புரட்சிகர அணிகளில் சேர்ந்து வேலை செய்வதற்கு, நடுத்தரப் பள்ளி அல்லது கல்லூரி கல்வி கற்றவர்களாக இருப்பது போதுமானதாக இருக்காதா? சிலருக்கு இது பொருந்தலாம்; ஆனால், பிறருக்கு, இன்னும் பெரும்பாலானோரைப் பொருத்தவரை இது போதுமானதல்ல. ஏனெனில், புரட்சிகர வேலைக்குத் தேவைப்படுவது புத்தக அறிவு மட்டுமல்ல; மாறாக, இதற்குச் சமுதாயம் பற்றிய அறிவும் புரட்சிகர நடைமுறை வேலையினால் ஈட்டப்பட்ட அனுபவமும் தேவைப்படுகிறது.
சர்வசாதாரண கடமைகள் தரப்படுவது பற்றி இப்போது கவனிப்போம். ஒவ்வொருவரும் தம்மைப் பற்றி சரியான மதிப்பீட்டைக் கொண்டிருக்க வேண்டும்; சிறுசிறு வேலைகளைச் செய்வது பற்றி கவலைப்படக் கூடாது. ஏனெனில், மகத்தான சாதனைகள் சிறுசிறு வேலைகளிலிருந்துதான் தொடங்குகின்றன.