PP Letter head

பத்திரிக்கை செய்தி

நாள் : 08.05.2020

144 தடை உத்தரவு போட்டது எதற்காக, கொரோனாவிலிருந்து எங்களை காக்கவா டாஸ்மாக் வியாபாரத்தை நடத்தவா என்று கேட்பதற்கு உரிமை இல்லையா? கோர்ட் இல்லை, கோவில் இல்லை, ஆஸ்பத்திரி இல்லை, பள்ளி, கல்லூரி இல்லை, டாஸ்மாக் திறக்க என்ன அவசரம்? என கேட்ட மக்கள் அதிகாரம் அமைப்பைச் சேர்ந்த 45 வயதான தோழர் மோகன், அவருடைய 72 வயது தந்தை வெங்கடேசன், ஆகிய இருவர் மீதும் வாலஜாபாத் – ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதியால் பொய்வழக்கு பதிவு செய்யப்பட்டு (இ.த.ச. பிரிவுகள் 144,188,269,270) அரக்கோணம் கிளைச்சிறையில் அடைக்கப் பட்டுள்ளனர்.

மக்கள் அதிகாரம் சார்பில் இதை வன்மையாக கண்டிக்கிறோம். சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்வதுடன், சம்பந்தபட்ட காவல் ஆய்வாளர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

படிக்க:
♦ திருச்சி – கடலூர் – விருத்தாசலம் : மூடு டாஸ்மாக்கை ! களமிறங்கிய மக்கள் அதிகாரம் !
♦ மூடு டாஸ்மாக்கை – மீண்டும் ஒலிக்கும் மக்கள் அதிகாரத்தின் போர்க்குரல் !

டாஸ்மாக் திறக்கும் முடிவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் எதிர்கட்சிகள் போராட்டம் செய்திருக்கிறது. பல இடங்களில் பெண்கள் ஆத்திரம் பொங்க கடைமுன் போராடியதால் பல டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட வில்லை. ஆனால் ஆவலூர் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதிக்கு சட்டமும் தெரியவில்லை, கொரோனா நோய் தொற்றைப் பற்றியும் அறிவில்லை. வக்கிர புத்தியுடன் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். மனித உரிமை தொடர்பாக, கைது தொடர்பாக போலீசுக்கு சொன்ன உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை எல்லாம் இன்ஸ்பெக்டர் லட்சுமிபதி தனது பூட்ஸ்காலில் போட்டு மிதித்துள்ளார்.

சென்னை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக்கை திறக்ககூடாது என மக்கள் அதிகாரம் உட்பட பலர் பொதுநல வழக்கு தாக்கல் செய்து விசாரணையில் இருந்து வருகிறது. (அதில் உயர்நீதிமன்றம் டாஸ்மாக் கடைகளை திறக்கக் கூடாது என தீர்ப்பளித்துள்ளது) சமூக இடைவெளி, ஒருவருக்கு ஒரு பாட்டில், ஆதார் அட்டை பதிவு ஆகிய நீதிமன்ற உத்திரவுகளை கட்டாயம் அமல்படுத்துவோம் எனச் சொல்லிய எடப்பாடி அரசாங்கம் ஏன் செய்யவில்லை?. பல ஆயிரம் மக்கள் நெருக்கி அடித்துக் கொண்டு நின்றார்கள்.

சமூக இடைவெளி என்பது அறவே இல்லை. ஒவ்வொருவரும் பல பாட்டில்கள் வாங்கி சென்றார்கள். இதன் மூலம் பல ஆயிரம் குடும்பங்களுக்கு கொரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் உள்ளது.

கொரோனாவால் சிறையில் உள்ள தண்டனை கைதிகளையே விடுதலை செய்து வரும் நிலையில், மக்கள் அதிகாரம் தோழர்கள் இருவரை எதற்கு சிறைபடுத்த வேண்டும்.

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், டாஸ்மாக் வேண்டாம் என சொன்னால், சிறை தண்டனை என்றால் என்ன ஜனநாயகம் இருக்கிறது?

தங்கள்
அமிர்தா
சென்னை மண்டல ஒருங்கிணைப்பாளர்,
9176801656

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க