பிரெடரிக் எங்கெல்ஸ் : பாகம் – 3
பாகம் 2 : தத்துவஞானத்தை ஹெகலிடமிருந்து துவங்கிய எங்கெல்ஸ்
எங்கெல்சுக்கு முன்பே மிகப் பலர் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களை வர்ணித்து, அதற்கு உதவி புரிய வேண்டியதன் அவசியத்தை எடுத்துச் சொல்லியுள்ளனர். பாட்டாளி வர்க்கம் துன்ப துயரங்களை அனுபவிக்கும் வர்க்கம் மட்டுமல்ல, உண்மையிலே பாட்டாளி வர்க்கத்தின் வெட்கக் கேடான பொருளாதார நிலைமை தடுக்க முடியாத வகையில் அதை முன்தள்ளிச் செல்கிறது, தனது இறுதி விடுதலைக்காகப் போராடும்படி நிர்ப்பந்திக்கிறது என்று எங்கெல்ஸ்தான் முதன்முதலாகச் சொன்னவர். மேலும், போராடும் பாட்டாளி வர்க்கம் தன் கையையே தனக்குதவியாகக் கொள்ளும். தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் இயக்கம் தங்களது விமோசனம் சோசலிசத்தில் மட்டுமே உள்ளது என்று தொழிலாளர்கள் அறியும் நிலைக்குத் தவிர்க்க முடியாதபடி கொண்டுபோய்விடும்.
மறுபக்கத்தில், தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் போராட்டத்தின் இலட்சியமாக ஆகும் போதுதான் சோசலிசம் ஒரு சக்தியாக ஆகும். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை பற்றிய எங்கெல்ஸ் நூலிலுள்ள பிரதான கருத்துக்கள் இவைதான். சிந்தனையுள்ள, போராடிக் கொண்டிருக்கிற பாட்டாளிகள் எல்லோரும் இந்தக் கருத்துக்களை இப்போது ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அந்தக் காலத்தில் அவை முழுக்க முழுக்கப் புதியனவாயிருந்தன. சிந்தனையைக் கவரும் நடையில் எழுதப்பட்ட இந்நூலில் இந்தக் கருத்துக்கள் வெளியிடப்பட்டன.
படிக்க :
♦ நூல் அறிமுகம் : மார்க்ஸின் மூலதனம் பற்றி … எங்கெல்ஸ்
♦ பாட்டாளி வர்க்கக் கட்சி குறித்து மார்க்ஸ் – எங்கெல்ஸ்
பிரிட்டிஷ் பாட்டாளி வர்க்கத்தின் துன்ப துயரங்களைப் பற்றிய முற்றிலும் உண்மையான, அதிர்ச்சி உண்டாக்கத்தக்க சித்திரங்கள் இந்நூலிலே நிறைந்துள்ளன. இந்த நூல் முதலாளித்துவ அமைப்பின் மீதும் முதலாளி வர்க்கத்தின் மீதும் மிகப் பயங்கரமான குற்றச்சாட்டாக விளங்கியது. மக்களின் மனத்தில் அது பசுமரத்தாணிபோல் பதிந்தது. எங்கெல்சின் நூல் நவீனகாலப் பாட்டாளி வர்க்கத்தின் நிலைமையைப் பற்றிய மிகச் சிறந்த சித்திரத்தை வழங்குகிறது என்று இதிலிருந்து எங்கும் மேற்கோள் காட்டத் தொடங்கினார்கள். உண்மையிலே பார்த்தால், 1845-ம் ஆண்டுக்கு முன்னரும் சரி, பின்னரும் சரி, தொழிலாளி வர்க்கத்தின் துன்பதுயரங்களைப் பற்றி இவ்வளவு வியக்கத்தக்க உண்மையான சித்திரம் வெளிவந்தது கிடையாது.
இங்கிலாந்துக்கு வந்த பிறகுதான் எங்கெல்ஸ் சோசலிஸ்டு ஆனார். அந்தக் காலத்தில் பிரிட்டிஷ் தொழிலாளர் இயக்கத்தின் தலைவர்களுடன் மான்செஸ்டரில் எங்கெல்ஸ் தொடர்பு கொண்டார்; பிரிட்டிஷ் சோசலிசப் பத்திரிகைகளில் எழுதத் துவங்கினார். 1844-ம் ஆண்டில், ஜெர்மனிக்குத் திரும்பிவரும் வழியில், பாரிஸ் நகரில் அவர் மார்க்சைச் சந்தித்துப் பழகினார். மார்க்சுடன் ஏற்கெனவே அவர் கடிதப் போக்குவரத்து வைத்துக் கொண்டிருந்தவர்தான். பாரிசில் பிரெஞ்சு சோசலிஸ்டுகளின், பிரெஞ்சு வாழ்க்கையின் செல்வாக்கின்கீழ் மார்க்சும் சோசலிஸ்டு ஆகிவிட்டார்.
இங்கே அவ்விரு நண்பர்களும் சேர்ந்து புனிதக் குடும்பம் அல்லது விமர்சன வகைப்பட்ட விமர்சனத்தின் விமர்சனம் என்று தலைப்பிட்ட ஒரு நூலை எழுதினார்கள். இங்கிலாந்தில் தொழிலாளி வர்க்கத்தின் நிலைமை என்ற நூல் வெளியாவதற்கு ஒரு வருடத்துக்கு முன்பே இது வெளிவந்தது. இதன் பெரும் பகுதியை மார்க்ஸ்தாம் எழுதினார். இந்நூலில் புரட்சிகரமான பொருள்முதல்வாத சோசலிசத்தின் அடிப்படைகள் – அதன் முதன்மையான கருத்துக்களை மேலே விளக்கிச் சொல்லியிருக்கிறோம் – சொற்பமான அடங்கியுள்ளன. ”புனிதக் குடும்பம்” என்பது தத்துவஞானிகளான பௌவர் சகோதரர்களையும், அவர்களைப் பின்பற்றியோரையும் குறிக்கும் கேலிப் பெயராகும்.
எல்லா வகையான யதார்த்தத்திற்கும் அப்பாற்பட்ட, கட்சிகளுக்கும் அரசியலுக்கும் அப்பாற்பட்ட ஒரு விமர்சனத்தை இந்தக் கனவான்கள் பிரச்சாரம் செய்தார்கள். எல்லாவிதமான நடைமுறை நடவடிக்கைகளையும் அது நிராகரித்தது; நம்மைச் சூழ்ந்துள்ள உலகையும், அதில் நடந்துவரும் நிகழ்ச்சிகளையும் பற்றி அந்த விமர்சனம் வெறுமே ”விமர்சன” கண்கொண்டு பார்ப்பதோடு நின்று விட்டது. இந்தக் கனவான்கள் – பௌவர் சகோதரர்கள் – பாட்டாளி வர்க்கம் விமர்சனப் பார்வையற்ற கும்பல் என்று இழிவுபடுத்தினார்கள். சுத்த அபத்தமான, தீங்கு விளைவிக்கக் கூடிய இந்தப் போக்கை மார்க்சும் எங்கெல்சும் தீவிரமாக எதிர்த்தார்கள்.
ஆளும் வர்க்கங்களாலும் அரசாலும் மிதித்து நசுக்கப்பட்டு வரும் தொழிலாளி என்ற அசல் மனிதப் பிறவியின் சார்பாக வீண் சிந்தனை அல்ல, மேம்பட்ட சமுதாய அமைப்பு முறைக்காகப் போராட்டம் நடத்த வேண்டும் என்று மார்க்சும் எங்கெல்சும் கோரினார்கள். இந்தப் போராட்டத்தை நடத்துவதில் அக்கறை கொண்டுள்ள சக்தியாக, இந்தப் போராட்டத்தை நடத்துவதற்குத் திறன் பெற்றுள்ள சக்தியாக, பாட்டாளி வர்க்கத்தை அவர்கள் கருதினார்கள் என்பதில் ஐயமில்லை. புனிதக் குடும்பம் வெளிவருவதற்கு முன்பே, மார்க்சும் ரூகேயும் நடத்திய Deutsch-Franzosische Jahrbicher என்ற பத்திரிகையில் அரசியல் பொருளாதாரம் பற்றிய விமர்சனவுரைக்கு ஒரு நகல் என்ற தொடரை எங்கெல்ஸ் வெளியிட்டார்.
அக்கட்டுரைகளில் தனிச்சொத்தின் ஆதிக்கத்தால் ஏற்பட்டுத் தீரும் விளைவுகள் என்ற முறையில், நவீன காலப் பொருளாதார அமைப்பு முறையின் முதன்மையான தோற்றங்களை சோசலிச நோக்குநிலையிலிருந்து பரிசீலித்தார். அரசியல் பொருளாதாரத்தைப் பயில்வதென்று மார்க்ஸ் முடிவு செய்ததற்கு அவர் எங்கெல்சுடன் தொடர்பு கொண்டிருந்தது ஒரு காரணம் என்பதில் சந்தேகமேயில்லை. அரசியல் பொருளாதாரம் என்ற விஞ்ஞானத் துறையில் மார்க்ஸ் அசல் புரட்சியையே உண்டாக்கிவிட்டார்.
1845-லிருந்து 1847 வரை எங்கெல்ஸ் பிரஸ்ஸெல்சிலும் பாரிசிலும் வாழ்ந்தார். விஞ்ஞானப் பயிற்சியோடு கூடவே பிரஸ்ஸெல்ஸ், பாரிஸ் நகரங்களிலுள்ள ஜெர்மன் தொழிலாளர்களிடையே நடைமுறை நடவடிக்கைகளிலும் அவர் ஈடுபட்டிருந்தார். இங்கே இரகசியமாயிருந்த ஜெர்மன் கம்யூனிஸ்டுகளின் லீக்” என்ற நிறுவனத்துடன் மார்க்சும் எங்கெல்சும் தொடர்பு ஏற்படுத்திக் கொண்டனர். அவர்கள் வரையறுத்து விவரித்துள்ள சோசலிசத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை விளக்கும்படி அந்த லீக் அவர்களைப் பணித்தது. இவ்வழியேதான் மார்க்சும் எங்கெல்சும் எழுதிய கம்யூனிஸ்டுக் கட்சி அறிக்கை என்ற புகழ்பெற்ற நூல் 1848-ல் வெளிவந்தது. இந்தச் சிறு பிரசுரம் மிகப்பெரிய நூல் தொகுதிகளுக்குச் சமமானது. அதன் உணர்ச்சி நாகரிக உலகில் ஒழுங்கமைப்பு பெற்று அணிதிரண்டு போராடி வரும் பாட்டாளி வர்க்கம் முழுவதையும் இன்றைக்கும்கூட ஊக்குவித்து இயக்கிச் செல்கிறது.
(தொடரும்)



எனவே நவம்பர் 26 அன்று நடைபெறவிருக்கும், நாடு தழுவிய பொது வேலை நிறுத்தப் போராட்டத்தை தொழிலாளர்களின் தனிப்பட்ட பிரச்சினையாக பார்க்க முடியாது. தனியார்மயம், தாராளமயம், உலகமயத்தினால் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாதிக்கப்படும் நம் ஒவ்வொருவருடைய பிரச்சினையும்தான்.
‘உற்பத்தியில் ஈடுபடாத உடல்களுக்கு’ இடமும் பொறுமையும் கிட்டத்தட்ட இல்லாத வலுவான தேசம் என்கிற கருத்தாக்கத்தையும் இது எதிரொலிப்பதாகத் தெரிகிறது. யூதர்களை மட்டுமல்லாது, மாற்றுத்திறனாளிகளாக இருந்த வெள்ளையின ஜெர்மன் குழந்தைகளையும் குறிவைத்து விசவாயு அறைகளில் அடைத்த நாசி ஆட்சியின் நினைவுகளை இது மீண்டும் கொண்டு வருகிறது. இது சந்தை மற்றும் தேசத்தின் ஒரு வகையான ‘திறன்வாதத்தைக்’ குறிக்கிறது. ஒருவர் ‘பயன்பாட்டில்’ இல்லாவிட்டால், உற்பத்தி செய்யாவிட்டால், அவர்களை தூக்கியெறிவது அறமற்ற செயலல்ல என்பதை சொல்கிறது.


இது ஏனெனில், நமது கட்சி சமீபத்தில்தான் அதிக எண்ணிக்கையில் அறிவாளிகளையும், புதிய கட்சி அங்கத்தினர்களையும் கட்சிக்குள் எடுத்துக் கொண்டிருக்கிறது; இவர்கள் பூர்ஷ்வா தாராளவாதத்தில் ஊறிப் போனவர்கள்; சித்தாந்த ரீதியிலும், அரசியல், அமைப்பு ரீதியிலும் தொழிலாளி வர்க்கத்தின் உருக்குப் போன்ற கட்டுப்பாட்டில் புடம் போடப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் அதற்கிடையில் சென்ற காலத்தில் “இடதுசாரி” தவறுகள் செய்தவர்கள். மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டத்திற்கு நின்றவர்கள்.
மேலும் சமீப காலத்தில் கட்சிக்குள் இன்னுமொரு மிக மோசமான போக்கு தலை தூக்கியிருக்கிறது. ஒரு குறிப்பிட்ட கோஷ்டியைச் சேர்ந்த நபர்கள், தங்கள் குறைபாடுகளையும், குற்றங்களையும் கட்சிக்கோ அல்லது அவர்களுக்கு மேலுள்ளவர்களிடத்திலோ மற்றவர்கள் புகார் செய்வார்கள் என்று அஞ்சுகிறார்கள். அவர்களுக்கு விரோதமாக மற்றவர்கள் குற்றச்சாட்டுகள் கொண்டுவந்துவிடுவார்களோ என்று குலை நடுங்கிக்கொண்டிருக்கின்றனர். ஒருபுறத்தில் அவர்களுக்கே தெரிந்திருக்கும் அதே தவறுகளை அவர்களால் செய்யாமலிருக்க முடியவில்லை ; மறுபுறத்தில் அவர்கள் குற்றங்குறைகளைப் பற்றி கட்சிக்கு, அவர்களுக்கு மேலுள்ளவர்களுக்கு மற்ற தோழர்கள் தெரிவிப்பதையோ, கூட்டங்களில் விமர்சனம் செய்வதையோ தடுக்க முயற்சி செய்கின்றனர். அவர்கள் சில தவறான, முறையற்ற காரியங்களைச் செய்திருக்கிறார்கள். பிழைகள் செய்திருக்கிறார்கள்; குற்றங்குறைகளைத் திருத்திக் கொள்ளும் பொருட்டு அவற்றை வெளிப்படுத்துவதற்கு இஷ்டமில்லை! தங்கள் வியாதியை மறைத்துக் கொள்ளுகிறார்கள்; தங்கள் வியாதியை குணப்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்; தங்கள் தவறுகளை வெளிப்படுத்துவதின் மூலம்தான் அத்தகைய குற்றங்களைத் திருத்த முடியும் என்ற உண்மையை அவர்கள் உணரவில்லை . அவர்கள் தங்கள் குற்றங்களை பூலோகத்திலுள்ள பொக்கிஷங்களைக் காட்டிலும் அதிக மதிப்புள்ளது போல, மேல் பூச்சுப்பூசி, மூடிமறைக்கப் பார்க்கின்றனர்.
கட்சிக்கோ அல்லது மேலுள்ளவர்களுக்கோ மற்றவர்கள் அறிக்கை கொடுப்பதை தடுப்பது என்பது சட்ட திட்டங்களுக்கு முற்றிலும் விரோதமானது; கட்சியில் என்றுமே அனுமதிக்கப்படமாட்டாது. இத்தகைய அறிக்கைகள் கிடைத்தால், மேல் கமிட்டிகள், என்ன நடந்தது என்பதை நுட்பமாகத் துருவி ஆராய்ந்து, வழக்கை வெகு கவனமாக விசாரிக்க வேண்டும்; சம்பவத்தைப் பற்றிய ஒருதலைப்பட்சமான தகவலை வைத்துக் கொண்டு அவசரப்பட்டு தீர்ப்பு செய்யாமலிருக்க வேண்டும்.


லெனின், ஸ்டாலின் கட்சியில் குறிப்பாக இதுதான் பரம்பரையான வேலைமுறை; ஆயினும் நமது தோழர்கள் பலர் இதை இன்னும் கற்றுக் கொள்ளவில்லை. ஒத்துப் போகவேண்டிய பிரச்சினைகளில் விடாப்பிடியாகப் போராட்டம் நடத்துகின்றனர்; இதன் விளைவாக அவர்கள் சண்டை போடாத பிரச்சினையே கிடையாது; அவர்கள் சண்டை போடாத நேரம் கிடையாது; அவர்கள் சண்டை போடாத ஆள் கிடையாது. அவர்களுடன் மாறுபட்டவர்கள் அனைவரையும் எதிர்த்துப் போராடினார்கள்; எல்லோரையும் ஒரேவிதமாக எதிர்த்தார்கள்; எதிலும் விட்டுக் கொடுப்பதில்லை; எப்பேர்ப்பட்ட நிலைமையானாலும் சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்; எவ்வித மாறுபாடானாலும் அதை விரோதமானதாகவே பாவித்தார்கள்; எதிர்ப்பதுதான் எல்லாம் என்று நம்பினார்கள்; அவர்களுடைய வரையறையற்ற தன்மை இதில்தான் அடங்கியிருக்கிறது.
மேலே குறிப்பிட்டது சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்கட்சிப் போராட்டத்தில் உள்ள ஒருவகை திரிபு; சீனக் கம்யூனிஸ்ட் கட்சியில் காணும் படு மோசமான திரிபு; (இத்தகைய திரிபு மற்ற நாட்டுக் கட்சிகளில் காணப்பட்ட போதிலும்) வரம்பின்றி, அளவுக்கு மிஞ்சி அதிதீவிரமாக நடத்தப்படும், மற்றொரு கோடிக்கு இழுத்தும் செல்லும் – அதாவது உட்கட்சிப் போராட்டத்திலும், கட்சி அமைப்பு விசயத்திலும் “இடதுசாரி” சந்தர்ப்பவாதத்திற்கு இட்டுச் செல்லும் – உட்கட்சிப் போராட்டமாக அமையும் (அது கட்சிக்குள் ஜனநாயகத்தை மறுக்கிறது. கோட்பாடு சம்பந்தமான விசயங்களில் ஒற்றுமையின் அடிப்படையில் உட்கட்சி சமாதானத்தை நிராகரிக்கிறது, தொழிற்சங்கங்களின், மற்ற பொதுமக்கள் அமைப்புகளின் ஓரளவு சுயேச்சையையும் மறுக்கிறது; கட்சி அங்கத்தினர்களின் தனிப்பட்ட குண சிறப்பு, முன்கை எடுக்கும் குணம், ஆக்கல் திறமை முதலியன மறுக்கப்படுகிறது.) இந்தத் திரிபு சீனக் கட்சியின் விசேஷ சுற்றுச் சார்பினாலும் நிலைமையினாலும் எழுந்துள்ளது.
ஆனால் “இடதுசாரி” கம்யூனிசம் மீண்டும் மேலைய ஐரோப்பிய நாடுகளில் தலைதூக்கிற்று. “சமரசமில்லை ” என்ற கோஷத்தைக் கிளப்பிற்று; பார்லிமெண்டுகளில் பங்கு எடுத்துக் கொள்வதை எதிர்த்தது; எல்லாவிதமான சட்டப்பூர்வமான போராட்டங்களையும் எதிர்த்தது; சமூக ஜனநாயகக் கட்சிகளின் “இடதுசாரி” பகுதிகளுடன் அவசியமான ஒப்பந்தங்கள் செய்து கொள்வதை எதிர்த்தது; இந்த சூழ்நிலையில்தான், 1920ம் வருடம் ஏப்ரல் மாதத்தில் இத்தகைய போக்குகளைத் திருத்துவதற்கு “இடதுசாரி கம்யூனிசம்; இளம்பிள்ளைக் கோளாறு“ என்ற புத்தகத்தை லெனின் எழுதினார்.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இத்தகைய கருத்துக்கள் நிலவின; சில கால கட்டங்களில் கட்சியில் மேலோங்கி நின்ற கருத்துக்களாகவும் விளங்கி வந்துள்ளன. அத்தகைய தவறுகள் செய்பவர்கள், “இடதுசாரி கம்யூனிசம்; இளம் பிள்ளைக் கோளாறு” எனும் லெனின் எழுதிய முக்கிய நூலை அறவே அலட்சியம் செய்தார்கள். அரசியல் ரீதியில் வளைந்து நெளிந்து போவதையும் காத்திருப்பதையும் எதிர்க்கிறார்கள். முன்னணியிலுள்ள ஒரு சிறுபான்மையினர், பரந்த பொதுமக்கள் இன்னும் இவர்கள் அடைந்த நிலைமையை எட்டிப் பிடிக்கவில்லை என்ற விஷயத்தை பொருட்படுத்தாமல் வீரச் செயல் வாதமுறையில் முன்னேறித் தாக்கும் தாக்குதலை தொடுக்கலாம் என்று அவர்கள் ஒரே சாதனையாக சாதித்தார்கள், இதை மற்றவர்கள் எதிர்த்ததால் அவர்களை “வலதுசாரி சந்தர்ப்பவாதத்தில் ” மூழ்கிக் கிடப்பதாக குற்றஞ்சாட்டினார்கள்.
ஆதலின் சீனக் கம்யூனிஸ்ட் உட்கட்சி போராட்ட விசயத்தில் மூன்று விதமான திரிபுகள் உள்ளன. இந்த முறையில் அவர்களை தொகுப்பது தவறில்லையென்றும் சொல்லலாம். முதலாவது, கட்சிக்குள் தாராளவாதம் சமரசவாதமும்; இரண்டாவது இயந்திரகதியான மிதமிஞ்சிய உட்கட்சிப் போராட்டமும், அமைப்பு விசயத்திலும் உட்கட்சிப் போராட்டம் பற்றியும் “இடதுசாரி” சந்தர்ப்பவாதம்; மூன்றாவது, கட்சிக்குள் கோட்பாடற்ற தகராறுகளும் போராட்டங்களும்.
இவையெல்லாம் இங்கொன்றும் அங்கொன்றுமாக தெரியவருகின்ற செய்திகள். இணையவழிக் கல்விமுறை பயன்படுத்தி கணிசமான எண்ணிக்கையிலான மாணவர்களை கல்வியிலிருந்தே விலக்கி வைத்துள்ளது மோடி அரசு. கணிணிகளும் இணையவசதிகளும் இந்தியக் குடும்பங்களில் பரவலாக இல்லை என்பது அரசுக்குத் தெரியும். தேசிய மாதிரி கணக்கெடுப்பு 2017-18 அறிக்கையின் படி 5-24 வயதிற்குட்பட்டவர்களை உறுப்பினர்களாகக் கொண்ட குடும்பங்களில் 8% குடும்பங்களில் மட்டுமே கணிணியும் இணையவசதியும் உள்ளது.
09.11.2020






