Sunday, November 9, 2025
முகப்பு பதிவு பக்கம் 349

ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் ! அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு அறைகூவல் !

மே-22ல், ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவு கூர்வோம் !
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பின் அறைகூவல் !

உயிரோடு இருந்து செய்யமுடியாததை நம் உணர்வோடு இருந்து செய்து கொண்டிருக்கிறார்கள்  ஸ்டெர்லைட் எதிர்ப்புத்  தியாகிகள். ”

மே-22, 2018 அன்றைய தினம், உலகமே தூத்துக்குடியை உற்றுக் கவனித்த நாள், கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான  தமிழகத்தின்  ஒட்டுமொத்த கோபமும்  தூத்துக்குடியில்  வெளிப்பட்ட நாள், ஸ்டெர்லைட் எனும் உயிர்க்கொல்லி ஆலையை தமிழகத்தில் இருந்து விரட்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள் என பலரும் ஒன்றிணைந்த நாள். “இலட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !” என விண்ணதிர முழக்கமிட்டுக்கொண்டு  அமைதியாக  மாவட்ட ஆட்சியரை சந்தித்து  மனுகொடுக்க சென்றார்கள் மக்கள்.

ஆனால்  கார்ப்பரேட் கைக்கூலியான மோடி அரசும், அடிமை எடப்பாடி அரசும், போலீசும் கூட்டுச் சேர்ந்துகொண்டு  துப்பாக்கிச்சூடு நடத்தி  15 அப்பாவி உயிர்களை  படுகொலை செய்தது. துப்பாக்கிச் சூடு நடத்தி ஓராண்டு கடந்த பின்பும் இன்றுவரையில் விசாரணை ஆணையம், நீதிமன்ற வழக்கு என நம்மை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

படிக்க:
♦ சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !
♦ உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !

சொந்த மண்ணில் எது வேண்டும், எது வேண்டாம் என முடிவெடுக்கும் உரிமை கூட நமக்கில்லை என்பதைத்தான்  நமது சொந்தங்களைப் பலிவாங்கிய துப்பாக்கிச்சூடு நமக்கு உணர்த்துகிறது.  15 உயிர்களைப் பறிகொடுத்த துயரம் நம் கண்ணிலிருந்து இன்னும் நீங்கவில்லை. அதற்குள்ளாகவே வேதாந்தாவின் கோரப்பசிக்கு  மோடியும், அடிமை எடப்பாடி அரசும் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு நமது தமிழன்னையை கூறுபோட்டு விற்றுவிட்டார்கள்.

தமிழகமே! “இலட்சம் மக்கள் கூடுவோம்! ஸ்டெர்லைட்டை மூடுவோம்!” என்று துணிச்சலோடு துப்பாக்கிச்சூட்டை எதிர்கொண்ட  மாணவி ஸ்னோலின் குரல் கேட்கவில்லையா? அக்குரல் இன்று மட்டுமல்ல, கொலைகாரச் ஸ்டெர்லைட்டை இம்மண்ணிலிருந்து விரட்டும் வரை என்றைக்கும் ஒலிக்கும். அடக்குமுறையாலும், அச்சுறுத்தல்களாலும் தூத்துக்குடியை முடக்கப்பார்க்கிறார்கள்.  தூக்கில் போட்டாலும் அடிபணிய மாட்டேன் என்று துணிவோடு நின்றான் கட்டபொம்மன். கட்டபொம்மனின் வாரிசுகள் நாம் வேதாந்தாவை இனியும் நம் மண்ணில் இயங்க விடக்கூடாது.

ஸ்டெர்லைட் எதிர்ப்பு தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம் !
அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்ற மே-22 ல் உறுதியேற்போம்!”

இழந்த உயிர்களுக்கு நீதி வேண்டாமா? அவர்களின் இலட்சியம் நிறைவேற வேண்டாமா? அதற்கான பொறுப்பை நம்மிடம் ஒப்படைத்துள்ளார்கள்  ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகள். அவற்றை நிறைவேற்றுவதே நம் அனைவரின் முழுமுதல் கடமை.

படிக்க :
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
♦ மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !

தூத்துக்குடியிலிருந்து ஸ்டெர்லைட்டை விரட்டுவது மட்டுமல்ல,  இரத்தவெறி பிடித்த வேதாந்தா குழுமத்தை இந்தியாவிலிருந்தே விரட்டுவதுதான், ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலி.

மாணவர்களே, இளைஞர்களே, பொதுமக்களே !

  • ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளை நினைவுகூரும் வகையில், மே 22 அன்று பொது இடங்கள், பூங்காக்களில் தியாகிகளின் உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்துவோம்!
  • கருஞ்சட்டை அணிந்து அந்நாளை கருப்பு தினமாக அனுசரிப்போம்!
  • ஜல்லிக்கட்டில் செய்தது போல மே-22 அன்று இரவு ஒவ்வொரு வீட்டு மாடியிலும்  செல்போன் டார்ச் மூலம் தியாகிகளை ஒளிரச்செய்வோம்!
  • மாணவர்கள், இளைஞர்கள் தியாகிகளின் நினைவாக இரத்த தானம் செய்வோம்!
  • தியாகிகளின் நினைவாக மரக்கன்றுகள் நடுவோம்!
  • துப்பாக்கிச்சூடு நடத்தி 15 உயிர்களைப் படுகொலை செய்த காவல்துறை மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க குரல் கொடுப்போம் !
  • சிறப்புச்சட்டம் இயற்றி ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக அகற்றவும், தியாகிகளுக்கு நினைவிடம் அமைக்கவும் தமிழக அரசை வலியுறுத்துவோம்!

இப்படிக்கு,
அனைத்துக் கல்லூரி மாணவர் கூட்டமைப்பு (ACSF),
தூத்துக்குடி.

சமூக ஊடகங்களில் கேலியான மோடியின் குகை ‘தியானம்’ !

ஞாயிற்றுக்கிழமை இறுதிக்கட்ட தேர்தல் நடக்க இருந்த நிலையில் சனிக்கிழமை கேதார்நாத் ஆலயத்தில் வழிபாடு நடத்தினார் மோடி. தேர்தல் நடத்தை விதிகளை ‘பிரதமர்’ மோடியும் மதிக்கவில்லை; ‘பிரதமர்’ மோடியை தேர்தல் ஆணையமும் கண்டிக்கவில்லை. ஆனால், சமூக ஊடகங்களில் மக்கள் ஒரு பிரதமர் என்றும் பார்க்காமல், மோடியை கீழிறங்கி கேலி செய்துவருகிறார்கள். கடந்த மூன்று நாட்களாக மோடியின் குகை ‘தியானம்’ ட்ரெண்டிலேயே இருக்கிறது!

விளம்பர மோகியான மோடி, குகைக்குள் தியானம் செல்லும்போதும் கேமராவுடன் சென்றிருக்கிறார். தியானம் என்றால் கட்டாந்தரையில் செய்வார்கள். மோடி என்னும் யோகி, பஞ்சு மெத்தை மேல் அமர்ந்து தியானம் செய்கிறார்.  குகை என சொல்லப்படும் அந்த இடமும் குகை அல்ல; குகை போன்று வடிவமைக்கப்பட்ட தங்கும் அறை! உல்லாச தங்கும் அறைகளில் என்னென்ன வசதிகள் உண்டோ, அவை அத்தனையும் அந்த குகை போன்ற அறையில் உண்டு. நாள் வாடகை ரூ.990 லிருந்து ரூ. 3000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தொடர்புடைய குகையின் உரிமையாளர் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.

படிக்க:
மோடி பட்டப்படிப்பில் படித்த பாடங்கள் பாடத்திட்டத்திலேயே இல்லையாம் !
♦ ஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் !

முன்னதாக மோடியின் குகை தியானப் படங்கள் பாஜகவின் ட்விட்டர் பக்கத்தில் வெளியானது. கேதார்நாத் குகையில் ‘கர்ம யோகி’ என்ற தலைப்பிட்டு படங்கள் பகிரப்பட்டிருந்தன.

பகிரப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டர்வாசிகள் பிரதமர் என்றும் பாராமல் கேலி செய்யத் தொடங்கினர்.

சஞ்சய் ஜா, ‘கேமராவுடன் தியானம் சாத்தியமே’ என்கிறார்.

“ட்ரஸ் மாட்ட ஆங்கர், பஞ்சு மெத்தை, பின்னாடி தலையணை, இதை படம் புடிக்க கேமிரா.. கேட்டா குகையில் தியானம். மொத்தத்துல இத இட்லின்னு சொன்னா சட்னி கூட நம்பாது!! ” என்கிறார் நிரஞ்சன்.

“உணர்ச்சிபூர்வமாக இருக்கிறேன், சிவாஜி தாத்தா நியாபகம் வருது” என்கிறார் பிரமோத்.

“என் மனைவி நடு இரவில் தண்ணீர் கேட்கும்போது, இப்படித்தான் இருப்பேன்” என்கிறார் கனோனி, மோடி தியானப் படத்தைப் பகிர்ந்து…

மோடியிடம் அரசியல் அல்லாத பேட்டி எடுத்த நடிகர் அக்‌ஷய் குமாரின் மனைவி ட்விங்கிள் கன்னா, “நண்பர்களே, கடந்த சில நாட்களாக ஏராளமான ஆன்மீக படங்களைப் பார்த்து வருவதால், தியானப் படங்கள் குறித்த ஒர்க்‌ஷாப் ஒன்றை நடத்த திட்டமிட்டிருக்கிறேன். திருமண புகைப்படங்களுக்குப் பிறகு, இது மிகப்பெரிய வெற்றி வாய்ப்புள்ள விஷயமாக இருக்கும் என நினைக்கிறேன்” என கேலியுடன் ட்விட்டியுள்ளார்.

“யாராவது இந்த பேரரசரிடம் நேற்றைய கேதார்நாத் படத்தைப் பார்த்து உலகமே சிரிக்கிறது என சொல்லி இருக்கிறார்களா? அல்லது அவருடைய முட்டாள்தனமான அமைச்சர்களிடமிருந்து வரும் புகழ்ச்சியான கருத்துக்களை மட்டும்தான் அவருக்கு அனுப்புவார்களா?” என கேட்கிறார் ப்ரீத்தி.

“கேதார்நாத்திலிருந்து வாத் நகருக்கு” தேர்தல் முடிவு வந்தால் மோடி தனது ஊரான வாத்நகருக்கு செல்வார் என்கிறார் ஆஸி.

“3.17 மணிக்கு மோடி தியானம் செய்கிறார். க்ளிக்.

4.10க்கு மோடி இன்னும் சில மணி நேரத்தில் தியானத்தைத் தொடங்குவார். ஏ.என்.ஐ-இன் வேண்டுகோளுக்கு இணங்க மோடி சில படங்களுக்கு போஸ் கொடுத்தார்.” பிரதிக் சின்ஹாவின் ட்விட் இது.

கேதார்நாத் சென்ற மோடிக்கு வேறு எந்த பக்தருக்கும் இல்லாத சிறப்பு ‘சிவப்பு கம்பள’ மரியாதை அளிக்கப்பட்டது. இது குறித்தும் பலர் கேலி செய்தனர்.

“சரியான உடை, சிவப்பு கம்பளம் மற்றும் ஜோடிக்கப்பட்ட புகைப்பட வாய்ப்பு இல்லாமல் எந்தவொரு தியானமும் முழுமையடையாது அல்லது பொருளற்றதாக இருக்காது.”

மோடியின் தியான குகையில் இருக்கும் “அந்த கொக்கிகள் ஒளிவட்டங்களை தொங்கவிடவா?” எனக் கேட்கிறார் மனு ஜோசப்.

“ஒளிப்பதிவாளர் பார்த்துக்கொண்டிருக்க மோடி தியானம் செய்கிறாரா?” என வினவுகிறார் ஸ்வாதி சதுர்வேதி.

கலைமதி
நன்றி: ஸ்க்ரால்


தவறாமல் பாருங்கள் …

புருடா மன்னன் – Cloudy மோடி | கலாய் காணொளி

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மீதான பாலியல் புகார் – தீர்வு என்ன ? | ம.உ.பா.மை அறிக்கை !

லைமை நீதிபதி திரு.ரஞ்சன் கோகோய் மீது உச்சநீதிமன்றப் பெண் ஊழியர் கொடுத்த புகார் தொடர்பான பிரச்சினை தற்போது மறக்கப்பட்டு வருகிறது.தேர்தல் முடிவுகள், அடுத்து ஆட்சி அமைப்பது யார்? என்று வரும் நாட்கள் நகரும்போது, நாமும் அடுத்தடுத்த பிரச்சினைகளுக்குத் தாவி விடுவோம். ஆனால், பாதிக்கப்பட்ட குடும்பம் மட்டும், தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியைச் சுமந்து கொண்டிருக்கும். கைகள், கால்களில் விலங்கிடப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்பட்டு, துரத்தித் துரத்தி வேட்டையாடப்பட்டது, கொடுங்கனவாக அவர்களைத் துரத்தும்.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு, மகாராஷ்டிரா மாநிலம், கயர்லாஞ்சியில் துண்டு நிலம் வாங்கி, குழந்தைகளைப் படிக்க வைத்த குற்றத்திற்காக, சுரேகா போட்மாங்கே என்ற தலித் அம்மாவும், மகளும், மனநிலை பாதிக்கப்பட்ட மகனும் நிர்வாணப்படுத்தப்பட்டு, வன்புணர்வு செய்து கொல்லப்பட்டார்கள். தன் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதிகளைத் தடுக்கமுடியாமல், மறைந்திருந்து பார்த்துவிட்டு தப்பித்து ஓடிய, பையலால் போட்மாங்கேவிற்கு இன்றுவரை நீதி கிடைக்கவில்லை.கடந்த 2002-ல், குஜராத்தில் கும்பல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, தங்கள் குடும்பத்தினர்  கண்முன்னே கொல்லப்பட்டதைப் பார்த்து, மனநிலை பாதித்து, இன்றுவரை முகாம்களில் தங்கியுள்ள இசுலாமியப் பெண்களுக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப்போவதில்லை. இவ்வாறு, கடந்த 70 ஆண்டுகளில் சாதி, மதம், இலாப வெறிக்காக இழைக்கப்பட்ட அநீதிகளின் கதையை எளிதில் விவரித்துவிட இயலாது.

படிக்க :
♦ தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது தைரியமாகப் புகார் செய்த பெண்ணுக்கும் நிச்சயம் நீதி கிட்டாது. நீதி அல்ல, சரியான விசாரணை கூட நடக்காது.

எதிர்காலத்தில் தலைமை நீதிபதி, பிரதமர் உள்ளிட்ட உயர் பொறுப்பில் உள்ளோர் மீது பாலியல் புகார்கள் வந்தால் எப்படி எதிர்கொள்வது என்பது குறித்த ஒரு விவாதத்திற்காவது இப்பிரச்சினை வரவேண்டும். அதற்காவது மூத்த வழக்கறிஞர்கள்,வழக்கறிஞர் சங்கங்கள்,சமூக அக்கறை கொண்டோர் குரல் எழுப்புவது மிகவும் அவசியம். தமிழகத்தில் எந்த மூத்த வழக்கறிஞரும் தலைமை நீதிபதி விசயத்தில் பேசாதது மிகவும் வருத்தத்திற்குரியது.

தலைமை நீதிபதி பிரச்சினையில், முறையான விசாரணை நடத்தப்படுவதைத்  தடுப்பது எது? பிரச்சினை எங்குள்ளது?

வழக்கமாக பாலியல் புகார் காவல்துறையில் அளிக்கப்பட்டால் வழக்குப் பதியப்பட்டு, விசாரணை நடந்து இறுதி அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். உச்ச, உயர் நீதிமன்ற நீதிபதிகள் மீது பாலியல் புகார் வந்தால் என்ன நடைமுறை பின்பற்றப்படும் என்பது குறித்த தெளிவான சட்டமோ, விதிகளோ இல்லை. தலைமை நீதிபதி மீதே புகார் வந்தால், புகார் சட்டப்படியே குப்பைக் கூடைக்குத்தான் போகும். 1947-லிருந்து இன்றுவரை ஏராளமான உச்ச, உயர்நீதிமன்ற நீதிபதிகள் மீது பாலியல், லஞ்ச, ஊழல் புகார்கள் வந்துள்ளது. ஒரு நீதிபதி மீது கூட நடவடிக்கை எடுக்கப்பட்டதில்லை. உள்ளக விசாரணை முறை (In house enquiry) நடைமுறைகள் பொதுவெளியில் தெரியாது. உள்ளக விசாரணையில் எந்த வழக்கறிஞரும் பங்கேற்றதே கிடையாது. ஒருவேளை உள்ளக விசாரணைக் குழு தலைமை நீதிபதி குற்றம் இழைத்துள்ளார் என அறிக்கை அளித்தாலும், அவ்வறிக்கை தலைமை நீதிபதியிடம்தான் செல்லும். அவர் மீது யார் நடவடிக்கை எடுப்பது? ஆகக் குற்றம் இழைத்தால், சட்டப்படி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலைதான், நீதிபதிகள் தைரியமாக குற்றங்கள் இழைப்பதற்கான அடிப்படை.

பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய்

மேலும், நீதிபதிகள் மீதான புகார்கள், விமர்சனங்களை பொதுவெளியில் சொன்னால், சம்மந்தப்பட்டவர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குப் பாயும், அவர்கள் சிறைக்கு அனுப்பப்படுவார்கள். பத்திரிக்கைகள், தொலைக்காட்சிகள் அவற்றை விவாதிக்க முடியாது.

இப்படி சட்டப்படி ஒரு நீதிபதி மீது நடவடிக்கை எடுக்க இயலாது, காவல்துறையில் புகார் அளிக்க முடியாது என்ற சூழலில்தான் பாதிக்கப்பட்ட பெண் அனைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கும் புகார் அனுப்புகிறார். புகாரை வாங்கி, அவர்கள் ஏதாவது செய்ய முடியுமா என்றால், முடியாது. சட்டத்தில் தலைமை நீதிபதியை விசாரிக்கும் நடைமுறை இதுவரை இல்லை.

இணையதள ஊடகங்களில் செய்தி வெளியாகி பல வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள், பெண்கள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துப் போராட்டம் நடத்தியதால்தான் செய்தியாவது வெளியில் தெரிந்தது. இத்தனை நடந்த பின்னும் நாட்டின் பெரிய அரசியல் கட்சிகள் புகாருக்கு உள்ளானவர் தலைமை நீதிபதி என்பதால் கள்ள மவுனம் காக்கின்றன. பாஜக நேரடியாக தலைமை நீதிபதியை ஆதரிக்கிறது. முக்கியமாக மே 23 தேர்தல் முடிவுகளுக்குப் பின், பாஜக-காங்கிரசுக்குப் பெரும்பான்மை இல்லை என்றால், ஆட்சி அமைப்பது தொடர்பாக வழக்கு உச்சநீதிமன்றத்திற்கு வரும். அவ்வழக்கை  எந்த நீதிபதிகள் விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் தீர்மானிப்பார். மே 11 முதல் ஜீன் மாதம்வரை உச்சநீதிமன்றத்திற்கு கோடைகால விடுமுறை. வழக்கமாக இளம் நீதிபதிகள்தான் கோடைகால நீதிமன்றத்தில் வழக்குகளை விசாரிப்பார்கள். இந்த ஆண்டு, தலைமை நீதிபதியே கோடைகால நீதிபதியாக அமர்கிறார். பாஜக தலைமை நீதிபதியை ஆதரிப்பதன் ரகசியம் புரிகிறதா?

வழக்கறிஞர் சமூகத்தை தலைகுனியச் செய்த இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர்

பிரச்சினை துவங்கும் முதல் நாளில், விடுமுறை நாளில் சிறப்பு அமர்வு கூட்டப்பட்டு, தன் மீதான வழக்கைத் தானே விசாரிக்கிறார் தலைமை நீதிபதி. இந்த விசாரணையில் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரும், இந்தியாவின் முன்னணி வழக்கறிஞருமான திரு.கே.கே.வேணுகோபாலும் பங்கேற்றுப் பேசுகிறார். கே.கே.வேணுகோபால் அவர்களுக்கும், சக நீதிபதிகளுக்கும், தலைமை நீதிபதி அவ்வழக்கை விசாரிப்பது தவறு எனத் தெரியாதா? தெரிந்தே தலைமை நீதிபதியின் தவறுக்குத் துணை போகிறார்கள். தலைமை நீதிபதியை விமர்சிக்கும் அனைவரும் தலைமை நீதிபதி பாலியல் ரீதியாக குற்றம் இழைத்துவிட்டார் எனச் சொல்லவில்லை.மாறாக, தலைமை நீதிபதி மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற அளவில் நம்பகத் தன்மை கொண்ட புகார், உரிய ஆதாரங்களுடன் அளிக்கப்பட்டுள்ளது. அதை ஏன் விசாரிக்க மறுக்கிறார்கள்? அல்லது ஏன் இத்தனை குளறுபடிகள் செய்கிறார்கள்? என்ற கேள்வியை எழுப்புகிறார்கள். தலைமை நீதிபதியின் பதட்டமும், விசாரணை நடந்த முறையும்தான் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

கே.கே. வேணுகோபால்

குறிப்பாக விசாரணை நடத்த அமைக்கப்பட்ட நீதிபதி பாப்டே குழு, பாதிக்கப்பட்ட பெண்ணுடன் முதலில் சமரசம் பேசுகிறது. அவர் மறுத்தவுடன், இறுக்கமான விசாரணை நடக்கிறது. சில நாட்களில் தலைமை நீதிபதி மீது தவறில்லை என அறிக்கையில் உள்ளதாகச் செய்தி வருகிறது. இந்த விசாரணை உள்ளக விசாரணை கூட அல்ல என்கிறது விசாரணைக்குழு. விசாரணைக் குழுவின் சட்ட ரீதியான நிலை என்ன? எனத் தெரியவில்லை. பொதுவெளியில் விசாரணை அறிக்கை இல்லை. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கோ, மற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கோ வழங்கப்படவில்லை. இதைவிட கேலிக் கூத்தான விசாரணை முறை உலகில் எங்கும் இருக்காது.

 பாலியல் குற்றச்சாட்டு தவிர இதர குற்றச்சாட்டுகளும் விசாரிக்கப்படவேண்டும்!

பாதிக்கப்பட்ட உச்சநீதிமன்றப் பணியாளர்  தெரிவித்த குற்றச்சாட்டில் முக்கியமானது, அவரது மற்றும் குடும்பத்தினரது பணிநீக்கம் தொடர்பானது. சர்வீஸ் சட்டங்களில் ஓரிரு ஆண்டுகள் அனுபவம் உள்ள எந்த வழக்கறிஞரும் சொல்லிவிடுவார், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனை(நிரந்தரப் பணிநீக்கம்) மிக, மிக அதிகப்படியானது என்று. அப்பெண் உச்சநீதிமன்றப் பணியாளராக இல்லாமல், வேறு துறையில் பணிபுரிந்து, இத்தண்டனை வழங்கப்பட்டிருந்தால், இதே நீதிமன்றங்கள் உடனே தண்டனையை ரத்து செய்து விடும். உண்மையில் தன் பணியாளர்கள் மீதான நடவடிக்கைகளை சரியான முறையில் மேற்கொள்ளும் நிறுவனம்தான் மக்கள் மத்தியில் நன்மதிப்பைப்பெறும். நீதித்துறை எப்போதும் இதற்கு விதிவிலக்குதான். நீதித்துறை ஊழியர்களுக்கு, மற்ற அரசு ஊழியர்களுக்கு இருக்கும் சுதந்திரம் எப்போதும் இல்லை.

இதுதவிர, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் குடும்பத்தினரை ராஜஸ்தான்வரை விரட்டிச் சென்று கைது செய்தது, கைவிலங்கிட்டது உச்சநீதிமன்றத்தின் டி.கே.பாசு மற்றும் அர்னேஸ்குமார் வழக்குகளின் தீர்ப்புகளுக்கு எதிரானது. மேலும், டெல்லி திலக் மார்க் காவல்நிலையத்திலிருந்து, தலைமை நீதிபதியின் வீட்டுக்கு புகார் அளித்த பணியாளர் அழைத்துச் செல்லப்பட்டு, தலைமை நீதிபதியின் மனைவி காலில் விழ வைக்கப்பட்டாரா? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும். குறைந்தபட்சம், திலக் மார்க் காவல்துறை அதிகாரிகளை விசாரணைக் குழு விசாரித்திருந்தால் உண்மை வெளிவந்திருக்கும். எனவே சரியான விசாரணை முறையை வரையறுக்கத்தான் முதலில் நாம்  போராட வேண்டியுள்ளது.

குறைந்தபட்சக் கோரிக்கை – தீர்வு என்ன?  

உச்சநீதிமன்றப் பணியாளரின் புகார் சரியான முறையில் விசாரிக்கப்பட இருமாத காலம் தலைமை நீதிபதி பணிவிடுப்பில் செல்ல வேண்டும். உச்சநீதிமன்றத்தின் மற்ற அனைத்து நீதிபதிகளும் சேர்ந்து தலைமை நீதிபதி மீதான புகாரை எப்படி விசாரிக்க வேண்டும் என்பதை வரையறுக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்திற்கு வெளியே ஒரு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரனையில், புகாரில் சொல்லப்பட்ட அனைவரும் விசாரிக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட பெண்ணும், தலைமை நீதிபதியும், வழக்கறிஞர் வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும். விசாரணை முழுவதும் வெளிப்படையாக மக்கள் முன்பு திறந்த அரங்கில் நடத்தப்பட வேண்டும். விசாரணைக் குழு முடிவுகள் இரு தரப்புக்கும் வழங்கப்பட்டு, பதில் கேட்டு, உச்சநீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகள் முன்பு வைக்கப்படவேண்டும். குற்றம் நிரூபிக்கப்பட்டால் உச்சநீதிமன்றம், பாராளுமன்றத்திற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க(பணிநீக்கம்) வலியுறுத்த வேண்டும். பணிநீக்கம் செய்தபின் உரிய குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். புகார் பொய்யெனத் தெரிய வந்தால், சம்மந்தப்பட்ட பெண் மீது உரிய நடவடிக்கை எடுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

படிக்க:
♦ ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !
♦ ரஞ்சன் கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு ! உண்மையா ? பொய்யா ?

இவை நிலவும் நீதி-நிர்வாக அமைப்பு முறை இதுவரை சொல்லிவந்த நடைமுறைகள்தான். இவையெதுவும் நிச்சயம் நடக்காது. எனினும், இந்த நீதித்துறைத்தான் நிலவுகின்ற அரசுக் கட்டமைப்பில், மக்களின் கடைசி நம்பிக்கை என்று சொல்லப்படுகிறது. கடைசி நம்பிக்கையும் உள்ளுக்குள் சரிந்து நொறுங்கியிருக்கிறது என்பது நீதித்துறையைச் சேர்ந்த அனைவருக்கும் தெரியும். தலைமை நீதிபதிக்கும் தெரியும். ஏனென்றால் ஜனவரி 12,2018 அன்று, “ஜனநாயகத்துக்கு ஆபத்து” என்று முன்னாள் தலைமை நீதிபதி திரு. தீபக் மிஸ்ராவிற்கு எதிராக கலகக் குரல் எழுப்பி, உச்சநீதிமன்ற நிர்வாக முறையில் வெளிப்படைத்தன்மை கோரியவர் தற்போதைய தலைமை நீதிபதிதான். தற்போது அதைத் தடுத்துக் கொண்டிருப்பவரும் அவர்தான்.

இவண்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம்.
தொடர்புக்கு : 94434 71003

சூத்திரருக்குத் தாழ்நிலைதான் தர்ம சாஸ்திரத் தீர்ப்பா ?

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 16


காட்சி : 24

இடம் : வீதி
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்குப் பட்டர், வீரர்கள். கேசவப்பட்டர், பாலச்சந்திரப் பட்டர் வாத்திய கோஷ்டி

(கேசவப்பட்டரும், பாலச்சந்திரப்பட்டரும் எதிர்கொண்டு அழைக்கின்றனர். சீடர்கள் சாமரம் வீசுகின்றனர்)

காசிவாசி காகப்பட்டருக்கு ஜே! குரு மகாராஜன் குணசீலன் காகப்பட்டிருக்கு ஜே! சகல சாஸ்திர விற்பன்னர், வேத விற்பன்னர், வேதியகுல வேந்தர் காகப்பட்டருக்கு ஜே!’ என்ற கோஷம்.

தளபதிகள் மாலை மரியாதையுடன் வருகின்றனர். மாலைகளிலே ரங்குப் பட்டர் கங்கா தீர்த்தம் தெளித்து, பிறகு? பிறகு ஏற்றுக் கொள்கிறார். தளபதிகள் பல்லக்கு அருகே சென்று வீழ்ந்து பணிகிறார்கள். ரங்கு அவர்களை விலக்கிச் செல்கிறார். தளபதிகள் பயபக்தியுடன் பின்னால் செல்லுகிறார்கள். மீண்டும் கோஷம் – ஊர்வலம் செல்லுகிறது. ஊர்வலத்தின் கடைசியிலே பதிகள் செல்கின்றனர்.

♦ ♦ ♦ 

காட்சி : 25
இடம் : தர்பார்
உறுப்பினர்கள் : காகப்பட்டர், ரங்கு, பட்டர்கள், தளபதிகள், வீரர்கள், சிவாஜி,
மோரோபந்த், சிட்னீஸ்

(தளபதியிடம் )

காகப்பட்டர் : நாம் நமது சீடருடன் பேச வேண்டும். நீங்கள் போய் வெளியே இருக்கலாம்; பிறகு அழைப்போம்.

(தளபதி சென்ற பிறகு)

ரங்குப்பட்டர் : இப்ப என்ன சொல்றே! நமக்கு நடக்கும் இந்த ராஜோபசாரத்தைப் பார். நமது பாதத்திலே வீழ்ந்து வணங்கினவா ஒவ்வொருவனும் சாமான்யனில்லை. அசகாய சூரர்கள். யுத்தத்திலே ஜெய வீராளா இருப்பவர். அவாளுடைய அதிகாரமும் கீர்த்தியும் அமோகம். ஆனால் நமது அடி பணிந்தார் பார்த்தாயல்லவா?

ரங்குப்பட்டர் : தேவ தேவனைத் தொழும் பக்தனைப் போல் அல்லவா ஸ்வாமி அவர்கள் நடந்து கொண்டார்கள் !

காகப்பட்டர் : இதில் என்னடா ஆச்சரியம்? நாம் யார். பூதேவா! அவர்கள் சூத்திரர்கள். மனுவின் வாக்கியப்படி நமக்குச் சேவை செய்யவே பூலோகத்தில் பிறந்தவர்.

ரங்குப்பட்டர் : மனு நமக்காகச் செய்திருக்கும் ஏற்பாடு மகா மகத்துவம் வாய்ந்தது.

காகப்பட்டர் : சந்தேகமென்ன. சரி இனி இந்தப் பிராயச்சித்தக் காரியப்படி இரண்டு முக்கிய விஷயங்கள் பூர்த்தியாக வேண்டும்.

ரங்குப்பட்டர் : அவைகள்?

காகப்பட்டர் : ஒன்று வீராதி வீரனானாலும் விற்பன்னருக்கு அடங்கியே தீர வேண்டும் என்ற கொள்கையை நிலை நாட்ட வேண்டும். சிவாஜி என்னிடம் ஆசி பெற்று, அனுமதி பெற்று, அடிபணிந்த பிறகே சிம்மாசனம் ஏறுவான். ஆகவே அந்த அபிலாஷை சித்தியாகும்.

ரங்குப்பட்டர் : மற்றொன்று?

காகப்பட்டர் : நமது ஆரியச் சோதராளுக்கு இந்தச் சமயத்திலே கூடுமான சகாயம் செய்ய வேண்டும்.

ரங்குப்பட்டர் : எப்படி ஸ்வாமி, அது சாத்தியமாகும்?

காகப்பட்டர் : எப்படி ஆகாமல் போகிறது பார்ப்போம். நீ போய் வெளியே இரு. அந்தத் தளபதியை வரச்சொல் (ரங்கு போகிறான்)

(சிவாஜி வரக்கண்டு காகப்பட்டர்)
அமருக! அஞ்சாநெஞ்சுடைய ஆரிய சேவா சிம்மமே,
(சிவாஜி அமருகிறார்)

நமது கட்டளையை ஏற்றுக் கொண்டது கண்டு சித்தம் களித்தோம். ஏனெனில் அந்தக் கட்டளையை மீறினால் இம்மையில் இம்சையும், மறுமையில் மாபாவமும் சம்பவிக்கும் என்று மாந்தாதா திருவாய் மலர்ந்தருளி இருக்கிறார்.

சிவாஜி : ஆரியவர்த்தனா! என் பட்டாபிஷேகம் சம்பந்தமாக ஆட்சேபனை கிளம்பிய போது கிளம்பிய புயல் இன்னும் அடங்கவில்லை.

காகப்பட்டர் : புயலா? சனாதன சத்காரியத்தை எதிர்த்திட எந்தச் சண்டமாருதத்தாலும் ஆகாதே.

சிவாஜி : தாங்கள் அறியமாட்டீர்கள் அந்தப் புயலின் வேகத்தை … சூத்திரருக்கு நாடாள ஏன் உரிமையில்லை ? சாஸ்திரம் தடுப்பது ஏன் என்று கேட்கின்றனர். என்னோடு
தோளோடு தோள் நின்று போரிட்ட வீரர்கள்.

காகப்பட்டர் : வீரர்கள் கேட்டனரா? பாவம்! அவர்கள் வீரர்கள் தானே? விவேகிகள் அல்ல பார்!

சிவாஜி : சூத்திரருக்குத் தாழ்நிலைதான் தர்ம சாஸ்திரத் தீர்ப்பா?

காகப்பட்டர் : இன்று நேற்று ஏற்பட்டதல்லவே. இகபர சுகம் இரண்டுக்கு மல்லவோ சாஸ்திரம். அது மனு, பராசரர், பாக்கிய வல்கியர் போன்ற ரிஷி ஸிரேஷ்டர்களின் பாஷ்யங்களோடு ஜொலிக்கின்றன.

ரங்குப்பட்டர் : விளக்கமாகக் கூற வேண்டுகிறேன். சூத்திரருக்கு ஏன் தாழ்நிலை?

காகப்பட்டர் : (புன்சிரிப்புடன்) குழந்தாய்! நீ ஆகமத்தின் அடிச்சுவடையும் அறியவில்லையே. சிருஷ்டிகளின் கர்த்தா பிரம்மதேவன், பிரம்மதேவன் பிரபஞ்சத்தை கிருஷ்டித்தான். அயன் படைப்பு நாலு ஜாதி. நான்முகனுடைய முகத்திலே தோன்றியோர் முப்பிரி தரித்த பூசுரர். தோளிலே தோன்றியோர் க்ஷத்திரியர். வைசியர் தொடையிலே தோன்றினர். பிரம்மனனின் பாதத்தில் தோன்றியோர் சூத்திரர். பிரமகுலம் தேவதாதராகவும், க்ஷத்திரிய குலம் அரச சேவை செய்துக் கொண்டும், வைசிய குலம் செல்வத்தைச் சேகரிக்கும் சேவை செய்துக் கொண்டும் வாழ வேண்டும். சூத்திர குலம் பிரம்ம குலத்துக்குத் தாசராகி சேவை செய்து வரவேண்டும். இது பிரம்மன் கட்டளை.

சிவாஜி : காலிலே தோன்றியதாலா இந்தக் கடும் தண்டனை? காடு, மேடு திருத்திக் கழனியாக்கி நாடு வாழ நற்பணி புரியும் எங்களுக்கு?

காகப்பட்டர் : தண்டனை என்று கூறுவது தவறு; தீர்ப்பு! தேவ கட்டளை; ஆண்டவன் ஆணை; தேவ சாஸ்திர விதி ; குலதர்மம் .

சிவாஜி : நல்ல தர்மம்! நல்ல கட்டளை ! நல்ல ஆணை!

காகப்பட்டர் : சிவாஜி என்னிடம் தர்க்கிக்கவா துணிகிறாய்?

சிவாஜி : நான் தர்கிக்கவில்லை; சந்தேக விளக்கம் கேட்டேன்.

காகப்பட்டர் : சாஸ்திரத்தை சந்தேகிப்பதே பாவம். தெரியுமா உனக்கு? அது கேவலம் நாஸ்திகாளின் செயல். நாஸ்திகளுக்கு என்ன நேரிடும் தெரியுமா? ரெளரவாதி நரகம் சம்பவிக்கும்.

சிவாஜி : அது இறந்த பிறகுதானே?

காகப்பட்டர் : ஆமாம் இங்கேயும் உண்டு இம்மை.

சிவாஜி : நான் பாடுபட்டேன். அதன் பலனை அனுபவிக்க நினைப்பது தவறா? பாவமா? அரசு அமைத்தேன், வாள் பலத்தால் ஆள்வதற்கு மட்டும் ஆரிய பலம் வேண்டுமா என்று கேட்கின்றனர்.

காகப்பட்டர் : நீயேதான் கேளேன் அதனால் என்ன? சிவாஜி வீரன்தான், போர் பல கண்டவன் தான். எதிரியின் மண்டைகள் சிதற, மலைகள் அதிரபோரிட்டவன் தான். ஆயினும் என்ன? அவன் பூசுரனல்லவே. நமது மதக் கோட்பாட்டின் படி க்ஷத்திரியனே மன்னனாக முடியும். சூத்திர சிவாஜி எங்ஙனம் முடிசூட முடியும் என்று நான்
கேட்டதாக நீ கேள்.

ஆட்சிக்கு வருவதென்பது அவ்வளவு கடினமானதல்ல. சதிபல புரிந்து, வாரிசுகளைச் சிதைத்துப் பலர் மன்னராயினர். மன்னரை மயக்கி ஒழித்து, மந்திரிகள் பலர் முடி சூடினர். மன்னரையும், மந்திரியையும் ராணுவத்தைக் காட்டி மிரட்டி, படைத்தலைவன் பீடத்தில் அமர்ந்திருக்கிறான்.

சிவாஜி : நான் சதி செய்தல்ல ராஜ்யம் பெற்றது. வீர வெற்றிகள் பெற்றிருக்கிறேன்.

காகப்பட்டர்: நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆகவேதான் சூத்திர குலத்தில் பிறந்தாலும் உன்னை க்ஷத்திரியனாக்கத் தீர்மானித்திருக்கிறேன். உனக்குப் பெருமை தந்தேன்.

சிவாஜி : அந்தப் பெருமையை என் தளபதிகள் உணரவில்லை.

காகப்பட்டர் : சிவாஜி நீ க்ஷத்திரியனாக்கப்பட்டால் தான் பரத கண்டம் முழுவதும் உள்ள பிராமணோத்தமர்கள் உன்னை ஆசீர்வாதம் செய்வர். அந்த ஆசிர்வத பலம் இல்லாத அரசு ஆண்டவனால் அழிக்கப்பட்டு விடும். இதற்கு ஆதாரம் சாஸ்திரம். மூலம் வேதம், வேதம் அனாதி காலத்தது. தேவன் தந்தது. அதன் பாஷ்யம் கூறும். அருகதை பெற்றவரே ஆரியர். ஆரியர் தேவர்.

சிவாஜி, சாஸ்திரத்தின்படி நடக்கச் சம்மதம் இல்லாவிட்டால் கூறிவிடும். என் காலத்தை வீணாக்காதே. எனக்கு வேலை இருக்கிறது.

சிவாஜி : உமது யோசனையை ஏற்க மறுத்தால்?

காகப்பட்டர் : யோசனையல்ல, கட்டளை !

சிவாஜி : சிவாஜிக்கு கட்டளை பிறப்பிக்கும் துணிவு .. !

காகப்பட்டர் : ஆரியருக்கு உண்டு, அவர்கள் பூதேவரானதால்.

சிவாஜி : கட்டளையை மறுக்க முடியும் என்னால்.

காகப்பட்டர் : முடியாது. மறுத்தால் முடி கிடையாது.

சிவாஜி : முடியாதா? என்னால் முடியாதா? காகப்பட்டரே உற்றுப்பாரும், யார் என்று பாரும் !

காகப்பட்டர் : வீராதி வீரன் அதனால் என்ன? நீ சாஸ்திரத்துக்குச் சம்மதித்தே ஆகவேண்டும்.

சிவாஜி : முடியாது என்றால் என்ன செய்வீர்?

காகப்பட்டர் : நானா! என்ன செய்வேன்? சரி என்று கூறி விட்டுப் போய்விடுவேன். ஆனால் முடியாது என்று சொல்லி வாய்மூடுமுன் தெய்வத்தின் சாபம் உன்னைத் தீண்டும்.

சிவாஜி : என்னை மிரட்டுவது முடியாத காரியம். என் ராஜ்யத்திலே என் இஷ்டப்படி நடக்க எனக்கு உரிமை உண்டு.

காகப்பட்டர் : உண்மை. உதாரணமாக நீ என்னைக் கொன்றுவிடக்கூட அதிகாரம் உண்டு. செய்து பார்.

சிவாஜி : காகப்பட்டரே! சிவாஜியின் சித்தம் கலக்கத்தை அறியாதது. கொன்றால் என்ன நடந்துவிடும்?

காகப்பட்டர் : என்ன நடக்கும் என் உயிர் போகும். ஆனால், என் பிணம் வேகுமுன் உன் ராஜ்யம் சாம்பலாகும்.

சிவாஜி : எவ்வளவு ஆணவம்?

காகப்பட்டர் : யாருக்கு?

(சிவாஜி மெளனமாக)

சிவாஜி : என்னென்ன சடங்குகள் நடைபெறவேண்டும்?

காகப்பட்டர் : பரத கண்டத்திலே பல பாகங்களிலிருந்து பிராமணோத்தமர்களை வரவழைத்துச் சமாராதனை நடத்தி தட்சணை தர வேண்டும்.

சிவாஜி : சாஸ்திர விதிப்படிதானா அதுவும்?

காகப்பட்டர் : ஆம் தானாதி காரியமூலம் ஆசிர்வாதம் பெற உன் பாவத்தை நீ கழுவிக் கொள்ள வேண்டும்.

சிவாஜி : பாவமா? எனக்கா? நான் வஞ்சிக்க வில்லையே. பொய்யனல்லவே. புரட்டனல்லவே?

காகப்பட்டர் : நீ பஞ்சமா பாதகத்திலே மிஞ்சியதாம் கொலை பாதகத்தைச் செய்தவன்.

சிவாஜி : யாரை?

காகப்பட்டர் : களத்திலே பலரை.

சிவாஜி : சரி! பிறகு நடக்க வேண்டியதைக் கூறும்.

காகப்பட்டர்: ஹோமம்,

சிவாஜி : விறகு, நெய்.

காகப்பட்டர் : மலை உயரம் விறகு; மடு ஆழம் நெய்.

சிவாஜி : பிறகு?

படிக்க:
தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?

காகப்பட்டர் : துலாபாரம்

சிவாஜி : துலாபாரமா?

காகப்பட்டர் : ஆம் உன் எடைக்கு எடை நவரத்தினங்கள், தங்கம், வெள்ளி முதலிய உலோகங்கள், பட்டு முதலியன நிறுத்தி தானம் செய்ய வேண்டும்.

சிவாஜி : யாருக்கு? ஏழைகளுக்கா?

காகப்பட்டர் : இல்லை … பிராமணர்களுக்கு.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி: சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்

நமது மக்கள் எஃகு உறுதி படைத்தவர்கள் !

உண்மை மனிதனின் கதை | முதல் பாகம் | அத்தியாயம் – 15

மிஹாய்லா தாத்தா வீட்டில் அலெக்ஸேய் தங்கியிருந்த மூன்றாம் நாள் காலை, கிழவர் அவனிடம் தீர்மானமாகச் சொன்னார்:

“கேள், அலெக்ஸேய். உன்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு செய்கிறேன். உன் உடம்பைக் கழுவி ஆவியால் எலும்புகளுக்குச் சூடேற்றுகிறேன். நீ பட்டிருக்கும் பாட்டிற்கு, வென்னீரில் குளிப்பது ரொம்ப இதமாயிருக்கும். ஊம்? அப்படித்தானே?”

பின்பு அவர் வென்னீர் போடுவதற்கு ஏற்பாடு செய்தார். மூலையில் இருந்த கணப்பைப் பெரிதாக மூண்டு எரியச் செய்தார். அதன் சூட்டில் கற்கள் ஓசையுடன் பிளக்கலாயின. தெருவிலும் நெருப்பு எரிந்தது. பெரிய கற்பாளம் அதில் பழுக்கச் சூடேற்றப் பட்டது. வார்யா தண்ணீர் கொண்டு வந்து பழைய பீப்பாயில் நிரப்பினாள். தரைமீது பொன்னிற வைக்கோல் பரப்பப்பட்டது. அப்புறம் மிஹாய்லா தாத்தா மேலுடைகளைக் களைந்து விட்டு, உட்காற்சட்டை மட்டும் அணிந்தவாறு சிறு மரத் தொட்டியில் காரத்தை மளமளவென்று கரைத்தார், மரவுரிப் பாயைப் பிய்த்து, கோடை மணம் வீசும் தேய்ப்பு நார்க் கற்றை தயாரித்தார். நிலவரையில் விட்டத்திலிருந்து கனத்த குளிர் நீர்த் துளிகள் சொட்டும் அளவுக்குச் சூடு ஏறியதும் கிழவர் தெருவுக்குப் பாய்ந்து போய், சூட்டால் சிவந்திருந்த கற்பாளத்தை இரும்பு தகட்டில் தள்ளி அறைக்குள் கொண்டு வந்து பீப்பாயில் போட்டார். ரோவிப் படலம் குப்பென்று கிளம்பி விட்டத்தை நோக்கிச் சென்று வெண் சுருள்களாக அங்கே பரவியது. ஒன்றுமே கண்ணுக்குத் தெரியவில்லை. கிழவரின் லாவகமான கைகள் தன் உடலைக் களைவதை அலெக்ஸேய் உணர்ந்தான்.

வார்யா, மாமனாருக்கு ஒத்தாசை செய்தாள். வெக்கை காரணமாகத் தன் பஞ்சுவைத்த சட்டையையும் தலைக்குட்டை யையும் அவள் கழற்றிவிட்டாள். கனத்த பின்னல்கள் அவிழ்ந்து தோள்கள் மீது புரண்டன. கிழிந்த தலைக்குட்டைக்குள் அவை இருப்பதை அனுமானிப்பதே கடினமாயிருந்தது. லேசான, மெலிந்த மேனியும் பெரிய விழிகளும் கொண்ட வார்யா, கடவுளை வழிபடும் கிழவியிலிருந்து இளநங்கையாக எதிர்பாராத விதமாக மாறிவிட்டாள். இந்த உருமாற்றம் முற்றிலும் எதிர்பாராததாக இருந்தமையால், தொடக்கத்தில் அவள்பால் கவனமே செலுத்தாதிருந்த அலெக்ஸேய் தான் நிர்வாணமாக இருப்பது குறித்து நாணம் அடைந்தான்.

“கூச்சப்படாதே, அலெக்ஸேய்! ஆமாம், நண்பா, கூச்சப்படாதே. இப்போது நமது விவகாரம் அப்பேர்பட்டது. இவள் இருக்கிறாளே, வார்யா, சண்டையில் காயமடைந்தவனுக்கு முன் மருத்துவத்தாதி போல. ஆமாம். கூச்சப்படுவது கூடாது. இந்தா, இவனைப் பிடித்துக்கொள், நான் சட்டையைக் கழற்றுகிறேன். அடே, சட்டை எப்படி இற்றுப்போய்விட்டது! தானாகவே கிழிந்து போகிறதே!”

அப்போது இளநங்கையின் பெரிய கரு விழிகளில் அச்சம் தென்பட்டதை அலெக்ஸேய் கண்டான். அசையும் நீராவித் திரையின் ஊடாகத் தனது உடம்பை அவன் விபத்துக்குப் பின் முதன்முறையாக நோக்கினான். தங்க நிற வைக்கோல் மேல் கிடந்து பழுப்பேறிய தோலால் போர்த்தப்பட்ட எலும்புக்கூடு. முழங்கால் சில்லுகள் உருண்டையாகத் துருத்திக் கொண்டிருந்தன. இடுப் பெலும்புக் கட்டு உருண்டையாகவும் கூர்ந்தும் இருந்தது. வயிறு ஒரேடியாக ஒட்டிப் போயிருந்தது. பழுவெலும்புகள் கூரிய அரை வளையங்களாக இருந்தன.

கிழவர் சிறு தொட்டியில் காரத்தைக் கரைத்துக் கொண்டிருந்தார். சாம்பல் நிற எண்ணெய்ப் பசையுள்ள திரவத்தில் தேய்ப்பு நார்க் கற்றையை பிடித்திருந்த அவரது கை அப்படியே அந்தரத்தில் நின்றுவிட்டது.

“அடக் கஷ்டமே! உன் விவகாரம் ஆபத்தானது, தம்பி அலெக்ஸேய்! ஊம்? ஆபத்தானது என்கிறேன். ஜெர்மானியர்களிடமிருந்து நீ ஊர்ந்து தப்பிவிட்டாய், வாஸ்தவந்தான். ஆனால் காலனிடமிருந்தோ…” திடீரென அவர் அலெக்ஸேயைப் பின்புறம் தாங்கிக் கொண்டிருந்த வார்யா மீது பாய்ந்தார்: ”நீ என்ன அம்மணமான ஆண் பிள்ளை மீது சாய்ந்து கொண்டு விட்டாய், வெட்கங் கெட்டவளே, ஊம்? உதட்டை எதற்காகக் கடித்துக் கொள்கிறாய்? ஐயோ, நீங்கள் இருக்கிறீர்களே, பெண்கள், உளறுவாய் ஜன்மங்கள்! அலெக்ஸேய் நீ ஏதேனும் கெடுதலாக நினைக்காதே. என்னவானாலும் உன்னை நாங்கள் காலன் கொண்டு போக விட மாட்டோம், தம்பி. உனக்குச் சிகிச்சை செய்து குணப்படுத்தியே தீர்ப்போம், இது உண்மை! செளக்கியமாக இரு!”

அவர் லாவகமாகவும் பதமாகவும் குழந்தையைப் போல அலெக்ஸேயைக் காரத்தினால் தேய்த்துக் கழுவினார், புரட்டினார், வென்னீரால் குளிப்பாட்டினார், மறுபடி மறுபடி ஒரே உற்சாகத்துடன் தேய்த்தார். வார்யா பேசாமல் அவருக்கு உதவி செய்தாள்.

…அப்பறம் அலெக்ஸேய், குறுக்கும் நெடுக்கும் இழையெடுத்துத் தைக்கப்பட்டிருந்த, ஆனால் துப்பரவும் மென்மையுமான நீண்ட சட்டை – மிஹாய்லா தாத்தாவினது – அணிந்து, கோடிட்ட மெல்லிய மெத்தை மேல் படுத்துக் கொண்டான். அவன் உடம்பு முழுவதிலும் புத்துணர்ச்சியும் உற்சாகமும் பொங்கின. குளியலுக்குப் பிறகு, கணப்புக்கு மேல் விட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சாளரம் வழியாக நீராவி நிலவறையிலிருந்து வெளியேறிய பின் வார்யா அவனுக்குப் புகை மணம் வீசிய காட்டுப் பழத் தேநீர் பருகக் கொடுத்தாள். சிறுவர்கள் கொண்டு வந்த இரண்டு சர்க்கரைக் கட்டிகளை வார்யா அவனுக்காகச் சிறு சிறு துணுக்குகளாக வெள்ளை பிர்ச் பட்டை மேல் உதிர்த்து வைத்திருந்தாள். அந்த சர்க்கரையுடன்தான் அலெக்ஸேய் தேநீர் பருகினான். அப்புறம் அவன் உறங்கி விட்டான் – முதன் முறையாகக் கனவுகள் இன்றி ஆழ்ந்து தூங்கினான்.

உரத்த பேச்சுக்குரல் கேட்டு அவன் விழித்துக் கொண்டான். நிலவறையில் அனேகமாக இருட்டாயிருந்தது. சிறாய் விளக்கு மினுக்கு மினுக்கென்று எரிந்தது. இந்தப் புகை இருட்டில் மிஹாய்லா தாத்தாவின் சுரீரென்ற கீச்சுக்குரல் கணகணத்தது:

“பெண் புத்திக்காரி, உன் அறிவு எங்கே போயிற்று? மனிதன் இந்தப் பதினொரு நாட்களாக ஒரு பருக்கை தினைச் சோறு கூட வாயில் போட்டுக் கொள்ளாமல் இருக்கிறான், நீ என்னடா என்றால் முழு வேக்காடு முட்டையைத் தின்னச் சொல்கிறாய்…. இந்த முழு வேக்காடு முட்டை அவனுக்கு எமனாயிற்றே! திடீரென்றுக் கிழவனாரின் குரலில் வேண்டுகோள் ஒலித்தது.” வஸிலீஸா, இவனுக்கு இப்போது வேண்டியது முட்டை அல்ல. இவனுக்கு வேண்டியது என்ன தெரியுமா? கோழி சூப் வேண்டும் இவனுக்கு இப்போது. ஓ, அது தான் இவனுக்குத் தேவை. அது கிடைத்தால் இவனுக்கு உயிர் கிடைத்த மாதிரி. உன் கொரில்லாக் கோழியை அறுத்து, ஊம்?…

ஆனால் கடுமையும் கலவரமும் தொனித்த கிழவியின் குரல் அவரது பேச்சை இடை முறித்தது:

“தர மாட்டேன்! தர மாட்டேன் என்றால் தர மாட்டேன். நீயும் கேளாதே, கிழட்டுப் பேயே! நல்ல ஆள்தான் போ. இந்தப் பேச்சை மறுபடி எடுக்கத் துணியாதே. என் கொரில்லாக் கோழியை நான் அறுப்பதாம்…. சூப் வைத்துக் கொடுப்பதாம்… சூப்! இங்கே தான் ஊர்பட்டப் பண்டங்கள் நிறைந்து கிடக்கின்றனவே, கலியாண விருந்துக்குப் போல! நல்ல யோசனைதான் செய்தாய் போ!…”

கிழவியின் இருண்ட நிழலுரு வாயிலுக்கு வழுகிச் சென்றது. கதவு திறக்கப்பட்டதும் வசந்த காலப் பகலின் பளிச்சிடும் ஒளிக் கீற்று அறைக்குள் வந்து விழிகளைக் கூசச் செய்தது. அலெக்ஸேய் தான் அறியாமலே கண்களைச் சுருக்கிக் கொண்டு முனகினான். கிழவர் அவனருகே பாய்ந்து வந்தார்.

“அடே, நீ உறங்கவில்லையா, அலெக்ஸேய்? ஊம்? பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தயா? கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா? அவளை மோசமானவள் என்று எண்ணிவிடாதே. அவள் வார்த்தைகளை வைத்து எடை போடாதே, அப்பனே. உனக்காகக் கோழியை அறுக்க அவள் தயங்கினாள் என்று நினைக்கிறாயா? சே, சே, இல்லை, அலெக்ஸேய்! அவளுடைய குடும்பத்தார் எல்லோரையும் – குடும்பம் பெரிது, பத்து ஆட்கள் இருந்தார்கள் – ஜெர்மன்காரன் கொன்றுவிட்டான். மூத்த மகன் கர்னல். கர்னலின் குடும்பம் அது என்ற தகவல் கிடைத்ததும் ஜெர்மன்காரர்கள் வந்து வஸிலீஸா ஒருத்தி தவிர மற்றவர்களை எல்லாம் ஒரே நேரத்தில் கொன்று அகழியில் எறிந்து விட்டார்கள். சொத்து சாமான்களை எல்லாம் பாழ்படுத்திவிட்டார்கள். அட்டா, பெருந்துன்பம் இது, இவள் வயதில் சொந்தக்காரர் யாரும் இல்லாமல் ஒண்டிக் கட்டை ஆகிவிடுவது!

சொத்துக்களில் கடைசியாக மிஞ்சியது ஒரே ஒரு கோழி தான். படு தந்திரக்காரக் கோழி அலெக்ஸேய்! முதல் வாரத்திலேயே ஜெர்மானியர் எல்லாக் கோழிகளையும் வாத்துக்களையும் பிடித்துக் கொண்டு போய்விட்டார்கள், ஏனென்றால் ஜெர்மானியனுக்கு எல்லாவற்றையும் விடச் சுவையான உணவு அவை. ஆனால் வஸிலீஸாவின் கோழி தப்பிவிட்டது. பெருத்த நடிகைதான் போ, வெறும் கோழி அல்ல இது! ஜெர்மானியன் வீட்டு முகப்புக்கு வந்தால் இது முகட்டறையில் பதுங்கிக் கொள்ளும். அது இருப்பதே தெரியாது. தன்னவர்கள் வந்தாலோ, ஒன்றுமில்லை. முற்றத்தில் அதன் பாட்டில் திரிந்து கொண்டிருக்கும். எப்படித்தான் அடையாளம் தெரிந்து கொண்டதோ, சைத்தானுக்கே வெளிச்சம். எங்கள் கிராமம் பூராவுக்கும் இந்த ஒரு கோழி தான் மிஞ்சியிருக்கிறது. இதன் தந்திரத்திற்காகத் தான் கொரில்லாக் கோழி என்று நாங்கள் இதற்கு பெயர் வைத்தோம்.”

அலெக்ஸேய் திறந்த விழிகளுடன் உறங்கி வழிந்தான். இப்படி உறங்க அவன் காட்டில் பழகியிருந்தான். அவன் பேசாமல் இருந்தது மிஹாய்லா தாத்தாவுக்குக் கவலை அளித்தது. போலும். நிலவறையில் ஏதோ பரபரப்புடன் இங்குமங்கும் துருவிவிட்டு, மேஜை அருகே ஏதோ வேலையைச் செய்தபடியே அவர் மறுபடி இந்த விஷயத்துக்கு திரும்பினார்.

“அலெக்ஸேய், இந்தக் கிழவியை மோசமாக மதித்து விடாதே. விஷயத்தை ஆழ்ந்து ஆராய்ந்து பார், அருமை நண்பா. பெரிய காட்டில் பழங்கால பிர்ச் மரம் போல இருந்தாள் இவள், காற்றுக்கூட இவள் மேல் வீசவில்லை. இப்போதே மரங்கள் வெட்டப்பட்ட காட்டில் உளுத்த கட்டைப் போலத் துருத்திக் கொண்டிருக்கிறாள். இவளுக்கு ஒரே ஆறுதல் இந்தக் கோழிதான். என்ன, பேசாதிருக்கிறாய்? அடே, தூங்கிவிட்டாயா? … நல்லது, உறங்கு, தம்பி, உறங்கு.”

அலெக்ஸேய் உறங்கினான், உறங்காமலும் இருந்தான். அவன் உடல் இல்லாதது போலவும், வெதுவெதுப்பான பஞ்சு வைத்து அடைத்திருப்பது போலவும், அதில் இரத்தம் அதிர்ச்சியுடன் பாய்வது போலவும் இருந்தது. நொருங்கி வீங்கிய கால்கள் அனலாய் காந்தின. உள்ளேயிருந்து குடையும் வலி அவற்றை நோகச் செய்தது. ஆனால் திரும்பவோ அசையவோ திராணி இல்லை.

இந்த அரைத் தூக்கத்தில் நிலவறை வாழ்க்கை அலெக்ஸேயின் உள்ளத்தில் தனித்தனித் துண்டுகளாய்ப் பதிந்தது. இது எதார்த்தமான வாழ்க்கை அல்ல போன்றும், ஒன்றுக்கொன்று தொடர்பு இல்லாத, அசாதாரணமான காட்சிகள் அவனுக்கு முன் திரையில் அலெக்ஸேய் தோன்றி மறைவது போன்றும் இருந்தது.

வசந்த காலம். அகதிக் கிராமத்தினர் மிக கஷ்டமான நாட்களைக் கழித்துக் கொண்டிருந்தனர். விபத்து நேர்வதற்கு முன்பே பழைய கிராமத்திலே தரையில் புதைத்துப் பத்திரப்படுத்தி, எரிந்த ஊரிலிருந்து இரவில் இரகசியமாகத் தோண்டிக் காட்டுக்கு எடுத்து வந்திருந்த உணவுப்பண்டங்களில் கடைசியாக மிஞ்சியிருந்த பகுதியைத் தின்று தீர்த்துக் கொண்டிருந்தார்கள். தரைப் பனி அகன்று இளகலாயிற்று. அவசர அவசரமாகத் தோண்டியிருந்த வளைகள் “கண்ணீர் சிந்தி” ஈரமாயின. கிராமத்துக்கு மேற்கே ஒலேனினோக் காட்டில் கொரில்லாப் போர் புரிந்து கொண்டிருந்த ஆண்கள் முன்பு எப்போதாயினும் ஒரு தரம், தனிமையில், இரவில் தான் என்றாலும், நிலவறைக் கிராமத்துக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். இப்போது போர் முனை வரிசையால் அவர்கள் துணிக்கப்பட்டுவிட்டார்கள் போலத் தோன்றியது. அவர்களிடமிருந்து ஒரு தகவலும் கிடைக்கவில்லை. ஏற்கனவே துன்பத்தில் வதைபட்டுக் கொண்டிருந்த மாதர்களின் தோள்கள் மீது புதிய சுமை சார்ந்தது. வசந்தம் வந்துவிட்டது, வெண்பனி உருகலாயிற்று, விதைப்பைப் பற்றியும் காய்கறி தோட்டம் பற்றியும் கவலை எடுத்துக் கொள்ள வேண்டுமே.

ஒரு நாள் பகலில் கிழவனார் மனநிறைவுடனும் சிந்தனையில் ஆழ்ந்தவாறும் வீடு திரும்பினார். பசும்புல் செடி ஒன்றை அவர் கொண்டுவந்திருந்தார். கரடு தட்டிய உள்ளங்கையில் அதைப் பதபாகமாக வைத்து அலெக்ஸேய்க்குக் காட்டினார்:

“பார்த்தாயா? வயலிலிருந்து வருகிறேன். நிலம் விழித்துக் கொண்டுவிட்டது, பனிக்கால விதைப்பு, ஆண்டவன் அருளால், மோசமில்லாமல் முளைத்துவிட்டது. வெண்பனி ஏராளம். நான் பார்த்தேன். வசந்தகாலப் பயிர் விளைச்சல் பொய்த்து விட்டாலும் கூட, பனிக்காலப் பயிர் விளைச்சல் ஓரளவு உணவு தரும். நான் போய் பெண்களுக்கு சேதி சொல்கிறேன், சந்தோஷப்படட்டும், பாவங்கள்!”

வயலிலிருந்து எடுத்துவரப்பட்ட பசுந்தாள் மாதர்களுக்குப் புது நம்பிக்கையை ஊட்டிவிட்டது. நிலவறையின் அருகே அவர்கள் வசந்தகாலக் காக்கைக் கூட்டம்போல ஆராவாரித்தார்கள், கத்தினார்கள். மாலையில் மிஹாய்லா தாத்தா மன நிறைவுடன் கைகளைத் தேய்த்துக் கொண்டார்:

“என்னுடைய நீள் முடி மந்திரிகள் சரியாகவே தீர்மானித்திருக்கிறார்கள். கேட்டாயா, அலெக்ஸேய்? ஒரு வேலைக் குழு பசுக்களைக் கட்டி உழும். இந்த உழவு, நீர் தங்கிய தாழ் நிலத்தில் நடக்கும், அங்கே உழவு கடினமானது. பார்க்கப் போனால் நம்மிடம் மிஞ்சியிருப்பவை ஆறே பசுக்கள் தானே, எவ்வளவு உழுதுவிட முடியும்! இரண்டாவது வேலைக் குழுவுக்கு நீர் தங்காத நிலம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. மண்வாரிகளையும் மண்வெட்டிகளையும் கொண்டு பெண்கள் உழுவார்கள். அட ஒன்றுமில்லாவிட்டாலும் தோட்டத்தைக் கொத்திக் காய்கறிகளாவது பயிர் செய்யலாமே. மூன்றாவது வேலைக் குழுவுக்கு மேட்டில் மணற்பாங்கான நிலம் ஒதுக்கியிருக்கிறோம். அங்கே உருளைக் கிழங்கு பயிரிடுவதற்கு நிலத்தை சீர்படுத்துவோம். இந்த வேலை மொத்தத்தில் சுளுவானது. பயல்களை அங்கே மண்வெட்டியால் கொத்தச் செய்வோம். பலவீனமான பெண்களையும் அங்கே அனுப்புவோம். சர்க்காரிடமிருந்து நமக்கு உதவி கிடைக்கும் பார். கிடைக்காவிட்டாலும் ஒன்றும் குடிமுழுகிடாது. நாமே எப்படியாவது சமாளித்துக் கொள்வோம். நிலத்தை பயிரிடாமல் விட்டுவிட மாட்டோம். நல்ல வேளை, ஜெர்மான்காரனை இங்கிருந்து விரட்டியாயிற்று. இப்போது வாழ்க்கை ஒழுங்காக நடக்கும். நமது மக்கள் எஃகு உறுதி படைத்தவர்கள். எந்த சுமையையும் தாங்கிக்கொள்வார்கள்….”

அன்று இரவு அலெக்ஸேய்க்கு உடம்பு மோசமாகி விட்டது.

அவனுடைய உடல் மெதுவாக, மரத்துப் போய் அவிந்து விடும் நிலையில் இருந்தது. கிழவனார் நடத்திய குளியல் அதை உலுக்கி இந்த மரப்பு நிலையிலிருந்து வெளியே கொணர்ந்தது. சோர்வையும் மனித அனுபவத்துக்குப் புறம்பான களைப்பையும் கால்களில் வலியையும் அவன் முன் ஒருபோதும் இல்லாத வன்மையுடன் திடீரென உணர்ந்தான். ஜன்னி கண்ட அரைத் தூக்கத்தில் அவன் மெத்தை மேல் புரண்டான், முனகினான், பற்களை நெறுநெறுத்தான், யாரையோ அழைத்தான், யாருடனோ சச்சரவிட்டான், ஏதோ வேண்டுமென்று கேட்டான்.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

பளபளவென்று விடியும் தறுவாயில் கிழவர் படுக்கையை விட்டு எழுந்தார். ஓரளவு அமைதி அடைந்து உறங்கி கொண்டிருந்த அலெக்ஸேய் மீது பார்வை செலுத்தினார், வார்யாவிடம் எதோ கிசுகிசுத்தார், பின்பு வழிச் செல்ல ஆயத்தமானார். மோட்டார் ட்யூபினால் தாமே செய்த பெரிய ரப்பர் காப்பு லோடுகளை நமுதா ஜோடுகள் மேல் மாட்டிக் கொண்டார். மேற்சட்டையை மரவுரி வாரினால் இறுக்கிக் கொண்டார். தம் கையால் இழைத்து மழமழப்பாக்கப்பட்ட ஜூனிப்பர் கழியை எடுத்துக் கொண்டார். நெடுந்தூர நடைப் பயணங்களில் இந்தக் கழி எப்போதும் கிழவருடன் செல்வது வழக்கம்.

அலெக்ஸேயிடம் ஒரு வார்த்தைக் கூடச் சொல்லாமல் கிழவனார் புறப்பட்டுப் போய்விட்டார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

டெல்டாவை நாசம் செய்யும் கெயில் – எதிர்த்தால் பொய் வழக்கு !

மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம்
எண் :1, அண்ணா நகர்,
சிவாஜிநகர் வழி, தஞ்சை-1
அலை பேசி: 9443188285

பத்திரிகைச் செய்தி

19-05-2019

நாகை மாவட்டத்தில் சீர்காழி மாதானம் முதல் செம்பனார் கோயில் மேமாத்தூர் வரை கெயில் நிறுவனம் எரிவாயு குழாய் பதிக்க விவசாய நிலங்களையும், நெற்பயிர், பருத்தி போன்ற பயிர்களையும் விவசாயிகளின் ஒப்புதல் இன்றி நாசம் செய்து வருகிறது. இதனை எதிர்த்து சட்டப்பூர்வமாக புகார் கொடுத்தவர்கள் மீதே பொய் வழக்கு போட்டு, நிலம் நீர் பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த இரணியனை செம்பனார் கோயில் போலீசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. கெயில் நிறுவனத்தின் சட்ட விரோத, மக்கள் விரோத, நடவடிக்கைக்குத் துணை போவது மட்டுமின்றி பொய் வழக்குப் போடும் காவல் துறையின் செயலை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது. பொய் வழக்கைத் திரும்பப்பெற்று தோழர் இரணியனை விடுதலை செய்ய வேண்டுமென வலியுறுத்துகிறது.

குழாய் பதிக்கவே இவ்வளவு நாசம் என்றால் வேதாந்தாவும், ஓஎன்ஜிசியும் தோண்டப் போகும் கிணறுகளால் எவ்வளவு நாசம் ஏற்படப் போகிறது என்பதை நினைக்கவே அச்சமாக இருக்கிறது. மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பதை விட கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபமே அரசின் குறிக்கோளாக மாறிவிட்டது. எடப்பாடி அரசு முற்றிலும் மக்கள் விரோத அரசாகச் சீரழிந்து விட்டது.

படிக்க:
♦ தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி
♦ அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட்டைப் பாதுகாக்க 15 பேரை சுட்டுக் கொன்ற எடப்பாடி அரசு அதே வேதாந்தாவின் ஹைட்ரோகார்பன் திட்டத்திற்காக இப்போது டெல்டா விவசாயிகளை வேட்டையாடத் தொடங்கிவிட்டது. டெல்டாவைப் பாதுகாக்கப் பிரச்சாரம் செய்த மக்கள் அதிகாரம் மீது டெல்டா முழுவதும் ஏராளமான வழக்குகளைப் போட்டு முடக்குவதுடன், தொடர்ந்து கருத்துரிமையையும் தடுத்து வருகிறது காவல்துறை.

டெல்டா மக்களின் வாழ்வாதாரத்தை நாசம் செய்யும் ஹைட்ரோ கார்பன் திட்டம், குழாய் பதிப்பு இவற்றை எதிர்க்கும் அனைவரும் ஒன்றுபட்டுப் போராடினால் மட்டுமே இதனை முறியடிக்க முடியும். உதட்டளவிலான எதிர்ப்பு எந்தப் பலனையும் தராது. தனித்தனியாகப் போராடுவது மக்களை சிதறடிக்கவே பயன்படும். திட்டவட்டமாகக் கூட்டு சேர்ந்து தேர்தலில் போட்டியிடும் அமைப்புகள் டெல்டாவை பாதுகாப்பதில் அத்தகைய அக்கறையைக் காட்டாததும், முயற்சியில் ஈடுபடாதததும் கவலைக்குரிய ஒன்று. எனவே கருத்தொற்றுமையுள்ள அனைத்துக் கட்சிகளும், இயக்கங்களும் ஒன்று சேர்ந்து மக்களைத் திரட்டிப் போராட வேண்டும். இதற்கான முயற்சியை தன்னளவில் மக்கள் அதிகாரம் மேற்கொள்ளும்.

தங்கள்
காளியப்பன்
மாநிலப் பொருளாளர்,
மக்கள் அதிகாரம்

தூத்துக்குடியின் தியாகிகளே | மகஇக பாடல் | காணொளி

மோடி அரசை தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனமான வேதாந்தாவின், கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்தார்கள் தூத்துக்குடி மக்கள். அதற்காக தமது இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிரச் செய்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள் ! அந்தத் தியாகிகளை கவுரவிக்க, ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க முயற்சிக்கும் வேதாந்தா குழுமத்தை துரத்தியடித்திட உறுதி பூணுவோம்.

தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த மே 22 நாளை நாம் மறக்க முடியாது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி அமைதிப் பேரணியாக வந்த மக்களை துப்பாக்கிச் சூடு மூலம் ஒடுக்கியது போலீசு. கொல்லப்பட்ட தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தக் கூட அனுமதி மறுக்கிறது அரசு!

  • மே 22 – ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத் தியாகிகள் நினைவு நாள்!
  • மக்கள் அதிகாரம் சார்பில் சென்னையிலும் மதுரையிலும் நடத்தவிருந்த தியாகிகள் நினைவஞ்சலிக் கூட்டத்துக்கு தடை விதித்திருக்கிறது தமிழக போலீஸ்.
  • வாயில் சுட்டுக் கொலை செய்தவர்கள், அழவும் கூடாது என்று நம் வாயை மூடுகிறார்கள். அழுது பயனில்லை.. தமிழகமே, ஆர்த்தெழு!

தூத்துக்குடி தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தும் ம.க.இ.க கலைக்குழுவின் பாடல்..

பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல் வரிகள்:

தூத்துக்குடியின் … தியாகிகளே! – உயிர்
மூச்சை விதைத்த போராளிகளே …

நாங்கள்
சுவாசிக்கும் கா…ற்று – நீங்கள்
விட்டுச்சென்ற மூச்சு
உங்கள் மரணத்துக்கு – அணி
திரள்கிறோம் வீதியில்
நீதி கேட்டு

வேதாந்தா – அதை வென்றுவிட்டோமென்று
உலகம் புகழ்வது கேட்கிறது !
அந்தப் பெருமிதமெல்லாம் உங்களது …
நன்றி சொல்கிறோம் உங்களுக்கு …

அன்று – உங்களை துளைத்த
அந்த துப்பாக்கிகள்
இன்று – எங்களையும் குறி பார்க்கிறது
அன்று சுட்டுக்கொலை செய்ய
அனுமதி தேவையில்லை- இன்று
வாய்விட்டு அழதிட போலீஸ் அனுமதி

எத்தனை நேரம் அழுவீர்கள்?
எத்தனை பேர் கூடி அழுவீர்கள்?
எந்த இடத்தில் அழுவீர்கள்?
என்ன சொல்லி நீங்கள் அழுவீர்கள்?
அழுதிட ஆயிரம் கட்டளைகள்…
இடுவதோ வாயில் சுட்டவர்கள்…

கண்ணே வெனிஸ்டா, கண்ணே
ஸ்னோலின்- உன்
கனவுகள் இனி எங்கள் நெஞ்சில் …
நீங்கள் உயிர்விட்ட நாளில் …
நீங்கள் சரிந்திட்ட மண்ணில் …
நாங்கள் எழுவோம் ! மீண்டும் எழுவோம் !
தூத்துக்குடியின் தியாகிகளே!

வினவு செய்திப் பிரிவு

அய்யர் சொல்லிட்டா அப்பீல் ஏது ?

“அச்சத்தில் இந்திய இராணுவம்” என்ற தலைப்பில் 15.05.2019 தேதியிட்ட தினமணி நாளிதழில் தலையங்கம் வெளியாகியிருக்கிறது. தினமணி குறிப்பிடும் அச்சம், காஷ்மீர் போராளிகளோ அல்லது பாகிஸ்தானால் ஏவிவிடப்படும் எல்லை கடந்த பயங்கரவாதிகளோ இந்திய இராணுவத்தின் மீது தொடுத்துவரும் தாக்குதல்களால் ஏற்படும் அச்சம் அல்ல. மாறாக, இந்திய இராணுவத்தின் கைகளிலுள்ள “சரக்குகளால்” ஏற்பட்டுவரும் அச்சம் குறித்துப் பேசுகிறது, அத்தலையங்கம்.

அதாவது, இந்திய இராணுவம் பயன்படுத்தும் ரவைகள் மற்றும் பீரங்கி குண்டுகள் உள்ளிட்ட ஆயுதத் தளவாடங்கள் தரமற்றவையாகவும், காலாவதியாகிப் போனதாலும் இந்திய இராணுவச் சிப்பாய்களிடம் ஏற்பட்டுள்ள அச்சம் குறித்துப் பேசுகிறது, அத்தலையங்கம்.

“அரசின் இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகள் தொடர்பான விபத்துகள் அதிகரிப்பது இராணுவ வீரர்கள் மத்தியில் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்தி இருக்கிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் டாங்குகளில் பயன்படுத்தப்படும் 125 எம்.எம். அதிதிறன் கொண்ட குண்டுகளின் பயன்பாட்டில் 40-க்கும் மேற்பட்ட விபத்துக்கள் நேர்ந்திருக்கின்றன. அது மட்டுமல்லாமல், எல்-70 என்கிற விமானங்களைத் தாக்கும் பீரங்கிகளில் பயன்படுத்தப்படும் அதிதிறன் கொண்ட 40 எம்.எம். குண்டுகளை இராணுவ வீரர்களின் பயிற்சியின்போது பயன்படுத்துவது அறவே நிறுத்தப்பட்டுவிட்டது. அதற்குக் காரணம், இதனால் ஏற்பட்ட எதிர்பாராத விபத்துகளால் பல இராணுவ வீரர்கள் பயிற்சியின் போது காயமடைந்தார்கள் என்பதுதான்.”

“சில குண்டுகள் வெடிக்காமல் போவதும், வேறு சில பயன்படுத்துவதற்கு முன்பே வெடித்து விடுவதும் இன்னும் சில தாமதமாக வெடிப்பதும் இராணுவ வீரர்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியிருக்கின்றன. தரமில்லாத தயாரிப்பாலும், முறையான பாதுகாப்புடன் வழங்கப்படாததாலும் விரைவிலேயே அவை செயலிழந்துவிடுகின்றன” என இராணுவமே பல்வேறு குற்றச்சாட்டுகளைக் குறிப்பிட்டுப் பாதுகாப்பு அமைச்சகத்துக்கு அறிக்கை அளித்திருப்பதாகக் கூறுகிறது, அத்தலையங்கம்.

“இந்திய அரசால் நடத்தப்படும் 41 இராணுவத் தளவாடத் தொழிற்சாலைகளில் தயாரிக்கப்படும் ரவைகள், குண்டுகளைவிட, சிவகாசியில் தயாரிக்கப்படும் அணுகுண்டுகள் தரமானவை” என்பதுதான் இந்திய இராணுவம் எழுதியிருக்கும் கடிதத்தின் பொருள். இந்த ஒப்பீடை நாகரீகம் கருதிச் சொல்லாமல் விட்டுவிட்டது, தினமணி.

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழலே நடக்கவில்லை என்று வாதாடி வந்தவர்கள், “இப்பொழுது அதில் ஊழல் நடந்தால்தான் என்ன? விமானத்தின் திறனை மட்டும் பாருங்கள்” என்ற இடத்திற்கு விவாதத்தை நகர்த்த முயலுகிறார்கள்.

நமத்துப் போன குண்டுகளை, ரவைகளை இந்திய இராணுவத்திடம் கொடுத்துச் சுடச் சொல்லுவதற்கு யாரைப் பொறுப்பாக்க வேண்டும்?

தற்பொழுது நாட்டை ஆளும் பா.ஜ.க. ஆட்சியாளர்களைப் பொருத்தவரை, முந்தைய காங்கிரசு ஆட்சியாளர்கள் தேசப் பாதுகாப்பு விடயத்தில் அக்கறையில்லாதவர்கள். இராணுவக் கொள்முதல் அனைத்திலும் ஊழல் செய்வதைத் தவிர, அவர்களுக்கு வேறு நோக்கம் கிடையாது.

ஆனால், 56 இஞ்ச் மார்பு கொண்ட மோடி அப்படிப்பட்டவர் அல்ல. பாகிஸ்தான் மற்றும் முசுலீம் பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் அளவிற்கு நாட்டை வலிமைமிக்கதாக மாற்றுவது குறித்துத்தான் அவர் பிறந்த தினத்திலிருந்தே சிந்தித்துச் செயலாற்றிக் கொண்டிருக்கிறார். அதற்காகத்தான் மேக் இன் இந்தியா திட்டத்தைக் கொண்டுவந்தார் என்றெல்லாம் உச்சி முகரப்படும் மோடி ஆட்சியிலும் இந்திய இராணுவம் பலவீனமாக இருக்கிறதே, அது ஏன் என்று பரிசீலித்திருக்க வேண்டும். மாறாக, தினமணியின் தலையங்கம் இன்றைய ஆட்சியாளர்களையும், முந்தைய ஆட்சியாளர்களையும் ஒரே தட்டில் வைத்து “நடுநிலையாக” விமரிசிக்கிறது. தினமணியின் இந்த நடுநிலைக்கு, அரசாங்க விளம்பரம் தடையின்றிக் கிடைக்க வேண்டுமே என்ற அச்சம் காரணமாக இருக்கக்கூடும்.

இந்திய இராணுவம் தரமற்ற ரவைகளையும் குண்டுகளையும் பற்றி மூக்கைச் சிந்தினால், தினமணி தலையங்கமோ, அதற்கு அப்பாலும் சென்று, “இராணுவத் தளவாடங்களில் மட்டுமல்ல, நமது விமானப் படையும் பல சவால்களை எதிர்கொள்கிறது. பாலாகோட் தாக்குதல் இந்திய விமானப் படையின் பலவீனத்தை வெளிச்சம் போட்டதை நாம் உணர வேண்டும். பாகிஸ்தானின் எஃப்-16 போர் விமானங்களுக்கு நமது பழமையான மிக்-21 போர் விமானங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. அதையும் மீறித்தான் நமது விமானப் படையினர் பாலாகோட்டில் துல்லியத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள்” என்பதை நாம் மறந்துவிடக் கூடாது எனக் கண்ணீர் வடித்திருக்கிறது.

இப்படித் தனது வாசகர்களின் செண்டிமென்டை டச் செய்த பிறகுதான், தினமணிவாள் தனது புத்தியைக் காட்டியிருக்கிறார். இந்திய விமானப் படையின் பலவீனத்தை உடைத்து, அதை உடனடியாகப் பலமாக மாற்றும் நோக்கில்தான் மோடி அரசு 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்கும் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும், அந்த விமானக் கொள்முதல் விவாதப் பொருளாகி இருப்பது இந்திய இராணுவத்தைக் கவலைக்குள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிடும் தினமணி, போஃபர்ஸ் ஊழலைக் காட்டி ரஃபேல் ஊழலை இப்படி நியாயப்படுத்தத் துணிகிறது:

“இதற்கு முன்னால் போஃபர்ஸ் வாங்கியது விவாதப் பொருளாக்கப்பட்டாலும், 1999 கார்கில் போரில் பாகிஸ்தானிய ஊடுருவிகளை அகற்ற அந்தப் பீரங்கிகள்தான் பயன்படுத்தப்பட்டன என்பதை அவர்கள் (இராணுவ அதிகாரிகள்) சுட்டிக் காட்டுகிறார்கள். விமர்சனங்களை எழுப்பி ரஃபேல் போன்ற அதிநவீன போர் விமானங்களை வாங்குவது தடுக்கப்பட்டால், அதனால் இந்தியாவின் பாதுகாப்பு பேராபத்தை எதிர்கொள்ளும் என்றும் அவர்கள் எச்சரிக்கிறார்கள்.”

“126 போர் விமானங்களை வாங்கும் முந்தைய ஒப்பந்தம் கைவிடப்பட்டு, 36 விமானங்களை மட்டுமே வாங்கும் புதிய ஒப்பந்தம் ஏன் போடப்பட்டது? இந்தியப் பாதுகாப்பு அமைச்சகத்தை ஓரங்கட்டிவிட்டு, பிரதமர் அலுவலகம் இந்த ஒப்பந்தத்தை முடிப்பதில் அதீத அக்கறை காட்டியது ஏன்? இந்துஸ்தான் ஏரோநாட்டிக்கல் நிறுவனத்திற்குப் பதிலாக அனில் அம்பானியின் நிறுவனத்திற்கு ஏன் சலுகை காட்டப்பட்டது? டஸால்ட் நிறுவனம் வங்கி உத்தரவாதம் அளிக்க வேண்டியதில்லை என்ற முடிவு ஏன் எடுக்கப்பட்டது?” என்றபடியான கேள்விகளை, விமர்சனங்களையெல்லாம் விட்டுவிட்டு, ரஃபேல் விமானம் திறன்மிக்கதா, இல்லையா என்பதை மட்டும்தான் பார்க்க வேண்டும் என மறைபொருளாக உபதேசிக்கிறது தினமணி.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !

“கோழி எப்படி இருந்தா என்னடா, குழம்பு ருசியா இருக்கான்னு மட்டும்தான் பார்க்கோணும்” என்ற கவுண்டமணியின் நகைச்சுவைக்கும் தினமணியின் தர்க்கத்திற்கும் அதிக வேறுபாடு கிடையாது.

ரஃபேல் விமானக் கொள்முதல் தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்தபோது, “அவ்விமானத்தின் திறன், தகுதி குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பரிசீலிக்க முடியாது. ஏனென்றால், அத்தகைய தொழில்நுட்ப அறிவு மாண்புமிகு நீதிபதிகளுக்குக் கிடையாது” என வாதாடியது மோடி அரசு. உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே அந்த உரிமை மறுக்கப்பட்ட பிறகு, சாமானிய மக்கள் ரஃபேல் விமானத்தின் தகுதி, திறன் குறித்து முடிவு செய்ய முடியுமா? எனவே, அவ்விமானத்தின் தகுதி, திறன் குறித்து சாமானிய மக்கள் அறிந்து கொள்ளுவதற்கு ஒரு போருக்காகக் காத்திருக்க வேண்டும் போலும். ஆனால், அந்த எதிர்காலப் போரை இந்திய அரசு யார் மீது தொடுக்கும்? பாகிஸ்தான் மீதா, அல்லது தமது சமூகப் பொருளாதார உரிமைகளுக்காகத் தெருவில் இறங்கி வரும் இந்திய மக்கள் மீதா?

குஜராத்தில்… “நீதியைக் கேட்காதீர்கள், வளர்ச்சியைப் பாருங்கள்” என்று அன்று எழுதிய வைத்தியநாத அய்யர்தான், “இன்று ஊழலைப் பார்க்காதீர்கள், திறனைப் பாருங்கள்” என எழுதி மோடியைத் தாங்கிப் பிடிக்கிறார்.

ரஃபேல் போர் விமானக் கொள்முதலில் ஊழலே நடக்கவில்லை என்று வாதாடி வந்தவர்கள், “இப்பொழுது அதில் ஊழல் நடந்தால்தான் என்ன? விமானத்தின் திறனை மட்டும் பாருங்கள்” என்ற இடத்திற்கு விவாதத்தை நகர்த்த முயலுகிறார்கள்.

குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடியைப் பிரதமர் பதவிக்கான தகுதி வாய்ந்த வேட்பாளராகத் தரகு முதலாளிகளும் கார்ப்பரேட் ஊடகங்களும் முன்னிறுத்தியபோது, தினமணிவாள், “இன்னும் எத்துணை காலத்திற்குத்தான் குஜராத்தில் முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட மதவெறிப் படுகொலைகளைப் பற்றியே பேசி, மோடியைக் குற்றவாளியாகப் பார்த்துக் கொண்டிருக்க முடியும்? குஜராத்தில் அவர் கொண்டுவந்திருக்கும் வளர்ச்சியைப் பாருங்கள்” என வக்காலத்து வாங்கி தலையங்கம் தீட்டியிருந்தது.

“நீதியைக் கேட்காதீர்கள், வளர்ச்சியைப் பாருங்கள்” என்று அன்று எழுதிய வைத்தியநாத அய்யர்தான், “இன்று ஊழலைப் பார்க்காதீர்கள், திறனைப் பாருங்கள்” என எழுதி மோடியைத் தாங்கிப் பிடிக்கிறார்.

கீரன் 

அரசியல் கணிதம் : பெட்டியின் இரண்டாவது புத்தகம் ! | பொருளாதாரம் கற்போம் – 18

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 18

அரசியல் கணிதம்
அ.அனிக்கின்

ங்கிலாந்தின் அரசரான இரண்டாம் சார்ல்ஸ் தனது மேதகு உறவினரான பிரெஞ்சு மன்னர் பதினான்காம் லுயீயைக் காட்டிலும் ஏதாவதொரு வகையில் சிறந்து விளங்க விரும்பினார். இது அவருடைய வாழ்க்கையின் மாபெரும் ஆசையாகும். அவர் வெர்ஸேய் அரண்மனைக்குப் போட்டியாகக் கேளிக்கை நடனங்களையும் வான வேடிக்கைகளையும் நடத்தினார்.

ஆனால் பிரெஞ்சு மன்னரைக் காட்டிலும் அவரிடம் பணம் குறைவாகவே இருந்தது. அவர் தனக்கு முறைகேடாகப் பிறந்த ஆண் மக்களில் சிலருக்குக் கோமகன் பட்டம் கொடுத்திருந்தார். ஆனால் லுயீ தனது சோரப் பிள்ளைகளைப் பிரான்சின் மார்ஷல்களாக நியமித்திருந்தார். ஸ்டுவர்ட் மரபினரான இரண்டாம் சார்ல்ஸால் அந்த அளவுக்குப் போக முடியவில்லை. அவருடைய முடியாட்சி லுயீயின் முடியாட்சியைப் போல சர்வாதிகாரம் அல்ல.

அவருக்கு விஞ்ஞானம் மட்டுமே மிஞ்சியது. மறுவருகைக்குப் பிறகு அவருடைய தூண்டுதலினாலும் மொத்த அரச குடும்பத்தினரின் ஆதரவோடும் இராயல் சொஸைட்டி நிறுவப்பட்டது. அதைப் பற்றி சார்ல்ஸ் நியாயமாகப் பெருமைப்பட முடியும். ஏனென்றால் லுயீ அப்படி ஒன்றை ஏற்படுத்தவில்லை. அரசரே இரசாயனப் பரிசோதனைகள் செய்தார். கடற்பயணத்தைப் பற்றி ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். இது அந்தக் காலத்தின் உணர்ச்சிக்கு ஏற்றதாக இருந்தது. “மகிழ்ச்சியில் திளைத்த மன்னருக்கு” அது ஒரு பொழுதுபோக்கு; இராயல் சொஸைட்டியும் அப்படிப்பட்டதே.

இரண்டாம் சார்ல்ஸ்

இராயல் சொஸைட்டியின் அதிக சுவாரசியமும் நகைச்சுவை உணர்ச்சியும் நிறைந்த உறுப்பினர் சர் வில்லியம் பெட்டி. அரசரும், உயர்ந்த அந்தஸ்துடைய மேன்மக்களும் நண்பர்கள் தங்களோடிருக்கும் நேரங்களில் சுதந்திரமான சிந்தனையாளர்களாக நடந்து கொண்டார்கள்; சமய விதிகளை உறுதியாகப் பின்பற்றிய பலவிதமான மதப் பிரிவுகளையும் வேடிக்கையாகக் கேலி செய்து பேச பெட்டியைப் போல வேறு யாராலும் முடியாது.

ஒரு நாள் அயர்லாந்தின் ஆளுநரான ஓர் மான்ட் கோமகன் – நண்பர்களோடிருந்த பொழுது அவர்கள் எல்லோருமே அதிகமாகக் குடித்திருந்தபடியால் அதிகமான மகிழ்ச்சியோடிருந்தனர் -சர் வில்லியம் பெட்டியிடம் தம்முடைய திறமையைக் காட்டுமாறு கேட்டுக் கொண்டார். பெட்டி அங்கே போடப் பட்டிருந்த நாற்காலிகளில் ஒன்றின் மீது ஏறி நின்று பல மதப்பிரிவுகளையும் சேர்ந்த மதகுருக்களைப் போல வேடிக்கையாகப் பேசினார். அங்கே இருந்தவர்கள் இதை மிகவும் ரசித்துச் சிரித்தார்கள். இதனால் அதிக உற்சாகமடைந்த பெட்டி, ஒரு மத குரு “இளவரசர்களையும் ஆளுநர்களையும்” அவர்களுடைய மோசமான ஆட்சிக்காக, பாரபட்சம் காட்டுவதற்காக, பேராசைக்காகக் கண்டிப்பது, போன்று பேச ஆரம்பித்தார். உடனே சிரிப்பு நின்று விட்டது என்று இதைப் பார்த்த ஒருவர் எழுதியிருக்கிறார். பெட்டியை நிறுத்துமாறு செய்வது கோமகனுக்குப் பெரும்பாடாகிவிட்டது.

படிக்க:
ஒரு விரல் புரட்சியால் ஈரானிடம் எண்ணெய் வாங்க முடியுமா ?
♦ சோஷலிசம் என்பது வெறும் போதனை மட்டுமே அல்ல | மார்க்ஸ் பிறந்தார் இறுதி பகுதி

அரசரும் அயர்லாந்தின் ஆளுநரும் பெட்டி அரசியலையும் வர்த்தகத்தையும் பற்றிப் பேச ஆரம்பிக்கும் வரையிலும் அவருடைய பல குரல் திறமையை ரசித்துக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவரால் அந்த விஷயங்களைப் பற்றிப் பேசாமலிருக்க முடியாதே! அவருக்கு எல்லா உரையாடலுமே தன்னுடைய புதுப் பொருளாதாரத் திட்டத்தைப் பற்றி விளக்குவதற்கு ஒரு சாக்காக மட்டுமே இருந்தது. ஒவ்வொரு திட்டமும் அதற்கு முந்திய திட்டத்தைக் காட்டிலும் அதிகத் துணிச்சலாகவும் தீவிரமானதாகவும் இருந்தது. இது ஆபத்தானது; சலிப்பூட்டுவது; அவசியமில்லாதது.

அயர்லாந்தின் மற்றொரு ஆளுநரான எஸ்ஸெக்ஸ் பிரபு ”மூன்று இராஜ்யங்களிலுமே” (அதாவது இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, அயர்லாந்து ஆகியவை) “சர் வில்லியம் பெட்டிதான் அதிகக் கோபமூட்டுகிற நபர்” என்றார். “சிலர் உங்களை மாயவித்தைக்காரர் என்றும், மற்றவர்கள் உங்களைப் பைத்தியம் என்று சொல்லக் கூடிய அளவுக்குக் கற்பனை ஈடுபாடுடையவர், வெறியர் என்றும் சொல்கிறார்கள்” என்று ஓர் மான்ட் பிரபு பெட்டியிடம் வெளிப்படையாகவே சொன்னார்.

அவருடைய வாழ்க்கை சுலபமானதாக இருக்கவில்லை. அவர் எதிர்காலத்தின் மீது இயல்பான நம்பிக்கை வைத்திருந்தார். ஆனால் சில சமயங்களில் அவர் வெடுவெடுப்பும் கவலையும் கொண்டவராக அல்லது ஒரு பயனுமில்லாமல் ஆத்திரப்படுபவராகத் தோன்றினார்.

இராயல் சொஸைட்டியின் முத்திரை

பெட்டியின் திட்டங்களில் அநேகமாக ஒன்றைக் கூட அரசவை விரும்பாதது ஏன்? அவருடைய ஆலோசனைகளில் சில- துணிச்சலும் மேதாவிலாசமும் கொண்டவையாக இருந்த போதிலும் வெறும் கற்பனாவாதத் திட்டங்களே. ஆனால் பல திட்டங்கள் அந்தக் காலத்துக்கு முற்றிலும் அறிவு மிகுந்தவையாகும். அவை துணிச்சலாகவும், உணர்வுப் பூர்வமாகவும் இங்கிலாந்திலும் அயர்லாந்திலும் முதலாளித்துவப் பொருளாதாரத்தை வளர்ப்பதை, நிலப்பிரபுத்துவ உறவுகளோடு அதிகத் தீர்மானமாக முறித்துக் கொள்வதை நோக்கமாகக் கொண்டிருந்தன என்பதே முக்கியமாகும்.

ஆனால் இரண்டாம் சார்ல்ஸ், அவருடைய தம்பி இரண்டாம் ஜேம்ஸின் முடியாட்சி இந்த மரபெச்சங்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தது. அல்லது, முதலாளித்துவ வர்க்கத்தின் நிர்ப்பந்தத்தினால் அதிகபட்சமாக சமரச நடவடிக்கைகளை எடுத்தது. அதனால்தான் அது (பெட்டியின் மரணத்துக்கு ஒரு வருடத்துக்குப் பிறகு) வீழ்ச்சியடைந்தது – பெட்டி இங்கிலாந்தின் செல்வத்தையும் வளத்தையும் மற்ற நாடுகளோடு ஒப்பிட்டுக் காண்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

ஹாலந்து நாடு அவருக்கு ஒருவகையான அளவுகோலாக இருந்தது; அதன் வெற்றிகரமான வளர்ச்சிக்குக் காரணம் என்ன என்ற சிக்கலான கேள்வியை அவர் அடிக்கடி கேட்டுக் கொண்டிருந்தார். பல வருடங்கள் கழிந்த பிறகு, இங்கிலாந்துக்கு நேரடியான ஆபத்து ஹாலந்தின் மூலம் ஏற்படாது, ஆனால் அதைக் காட்டிலும் பெரிய, சுறுசுறுப்பான நாட்டிலிருந்துதான் வரும், பிரான்சிலிருந்துதான் ஏற்படும் என்று மென்மேலும் அதிகமாக நம்பினார். அவருடைய பொருளாதாரக் கருத்துக்கள் பிரெஞ்சு எதிர்ப்பு அரசியல் தன்மையை மென்மேலும் அதிகமாகப் பெற்றன.

1676-ம் வருடத்தில் அரசியல் கணிதம் என்ற இரண்டாவது புத்தகத்தை அவர் எழுதி முடித்தார். ஆனால் அதை வெளியிடுவதற்குத் துணியவில்லை. பிரான்சோடு கூட்டணியில் சேர்வது , இரண்டாம் சார்ல்சின் வெளிநாட்டுக் கொள்கையின் அடிப்படையாகும். மேலும் இங்கிலாந்தின் அரசர் பிரெஞ்சு மன்னரிடமிருந்து இரகசியமாகப் பண உதவி பெற்றுக் கொண்டிருந்தார். இங்கிலாந்தில் வரிகள் அரசருக்கு வந்து சேருவதில்லை; நாடாளுமன்றம் பணத்தை இறுக்கி வைத்துக் கொண்டிருந்தது. எனவே அரசர் தன்னுடைய செலவுகளைச் சமாளிப்பதற்காக வேறு வழியைக் கண்டுபிடித்திருந்தார். சர் வில்லியம் பெட்டி கோழையல்ல; எனினும் அரசவையின் அதிருப்திக்கு ஆளாக அவர் விரும்பவில்லை .

அரசியல் கணிதம் கையெழுத்துப் பிரதியாகவே சுற்றி வந்தது. 1683 -ம் வருடத்தில் பெட்டிக்குத் தெரியாமல், ஆசிரியருடைய பெயர் இல்லாமல், வேறு தலைப்போடு அது வெளியிடப்பட்டது. 1688 – 89-ம் வருடங்களில் ‘மகத்தான புரட்சி’ நடைபெற்று அதனையொட்டி இங்கிலாந்தின் கொள்கையில் தீவிரமான மாற்றங்கள் ஏற்பட்ட பிறகு தான் பெட்டியின் மகன் (ஷெல்பர்ன் பிரபு) அந்தப் புத்தகத்தை முழுமையாகவும் தன் தகப்பனார் பெயரிலும் வெளியிட்டார். ”இந்தப் புத்தகத்திலுள்ள கருத்துக்கள் பிரான்சுக்கு விரோதமாக இருந்ததனால் ” காலஞ்சென்ற தன் தகப்பனார் எழுதிய புத்தகத்தை முன்பு வெளியிடுவதற்கு இயலவில்லை என்று அவர் தமது சமர்ப்பணத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பெட்டியின் பிரெஞ்சு எதிர்ப்புக் கருத்துக்கள் ஆங்கில முதலாளி வர்க்கத்தின் நலன்களினால் உந்தப்பட்டவையாகும். அடுத்த நூற்றாண்டில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை-இங்கிலாந்து பிரான்சை எதிர்த்துத் தீவிரமாகப் போராடிக் கொண்டிருந்தது; கடைசியில் உலகத்திலுள்ள தொழில்துறை வல்லரசுகளுக்கிடையே தனக்கு முதல் நிலையை உறுதிப்படுத்தியது. அரசியல் கணிதத்தில் தன்னுடைய வாதங்களை நிரூபிப்பதற்குப் பெட்டி பின்பற்றிய முறைகள் மிக முக்கியமானவையாகும். சமூக விஞ்ஞானங்களின் வரலாற்றில் பொருளாதாரப் புள்ளியியல் முறையை ஆதாரமாகக் கொண்ட முதல் புத்தகம் இதுவே.

இன்று புள்ளிவிவரம் இல்லாத நவீன அரசை ஒருவர் கற்பனை செய்ய முடியுமா? நிச்சயமாக முடியாது. புள்ளியியல் இல்லாத நவீன பொருளாதார ஆராய்ச்சியை ஒருவர் கற்பனை செய்ய முடியுமா? கற்பனை செய்யலாம். ஆனால் அது உண்மையாக இருக்காது. ஒரு ஆராய்ச்சியாளர் “கலப்பற்ற தத்துவத்தை” இலக்கிய அல்லது கணித வடிவத்தில் உபயோகித்து எவ்விதமான புள்ளி விவரங்களையும் பயன்படுத்தாவிட்டாலும், அவை கோட்பாட்டளவில் இருப்பதாகவும், வாசகர் அதைத் தெரிந்திருப்பதாகவும் அவர் ஒரே மாதிரியாக அனுமானித்துக் கொள்கிறார்.

இன்று புள்ளிவிவரம் இல்லாத நவீன அரசை ஒருவர் கற்பனை செய்ய முடியுமா?

17 -ம் நூற்றாண்டில் இந்த நிலை கிடையாது. புள்ளியியல் என்பதே அந்தக் காலத்தில் இல்லை (அந்த வார்த்தையும் 18-ம் நூற்றாண்டின் இறுதி வரையில் ஏற்படவில்லை). நாட்டிலுள்ள மக்கள் தொகையின் அளவு, வகை, வயது , தொழில்கள் ஆகியவற்றைப் பற்றி அன்று எந்த விவரமும் தெரியாதிருந்தனர். மேலும், அடிப்படையான பண்டங்களின் உற்பத்தி மற்றும் நுகர்வு, வருமானங்கள், செல்வம் வகைப்படுத்தப்பட்டிருக்கும் முறை ஆகிய ஆதாரமான பொருளாதார விவரங்களைப் பற்றியும் எதுவும் தெரியாது. வரி விதிப்பு, வெளி நாட்டு வர்த்தகம் ஆகியவற்றைப் பற்றிய சில புள்ளிவிவரங்களும் தகவல்களும் இருந்தன.

அரசாங்கத்தில் புள்ளிவிவரங்கள் சேகரிப்பதற்கென்று தனியாக ஒரு துறை இருக்க வேண்டும் என்று பெட்டி முதன்முதலாகக் கூறினார்; தகவல்களைச் சேகரிப்பதற்குரிய முக்கியமான வழிகளையும் அவர் விளக்கினார். அவர் செய்த மாபெரும் சேவை என்று இதைக் கூற வேண்டும். புள்ளியியல் துறையை ஏற்படுத்த வேண்டிய அவசியத்தைப் பற்றி அவர் அடிக்கடி எழுதினார், சிறிதும் மாறாமல் எழுதிக் கொண்டிருந்தார்.

இதற்கிடையில் அந்த அரசாங்கத்துறையின் தலைவராகவும் தம்மைக் கற்பனை செய்து கொண்டார். அவரால் கண்டுபிடிக்கப்பட்ட இந்தப் பதவிக்கு அவர் அவ்வப்போது தம்முடைய உற்சாகத்துக்குத் தகுந்தவாறும், அந்தப் பதவி தமக்குத் தரப்படுமா என்ற சந்தேகங்களுக்குத் தகுந்தவாறும் பல பெயர்களைக் கொடுத்தார்; இவை அநேகமாக ஆடம்பரமான பெயர்களாகவே இருந்தன. மேலும் அவர் கணக்குப் போடுவது மட்டுமல்லாமல், ஓரளவுக்குத் திட்டம் தயாரிக்கவும் விரும்பினார்.

உதாரணமாக, அவர் ”உழைப்பு அணியின் சம நிலையைப் பற்றி” சில மதிப்பீடுகளைத் தொகுத்தது அன்றைய சூழ்நிலையில் குறிப்பிடத்தக்கதாகும். நாட்டுக்குத் தேவைப்படுகின்ற மருத்துவர்கள், வழக்குரைஞர்களின் (17 -ம் நூற்றாண்டில் உயர்கல்வி பெற்ற தொழில் நிபுணர்கள் வேறு யாரும் இல்லை) எண்ணிக்கையைக் கணக்கிட்டார்; அதிலிருந்து பல்கலைக்கழகங்கள் வருடந்தோறும் எவ்வளவு மாணவர்களைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறினார்.

படிக்க:
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !
♦ ஐயோ அசைவையே காணோமே உயிரோடுதான் இருக்கிறானா ?

அவர் புள்ளியியலின் அவசியத்தைப் பற்றி ஓய்வில்லாது பிரச்சாரம் செய்தார். மேலும் அன்றைக்குக் கிடைத்த குறைவான, அதிகம் நம்ப முடியாத விவரங்களைத் தமது பொருளாதார வாதங்களுக்கு மிகவும் சிறப்பாகப் பயன்படுத்திக் கொண்டார். பிரான்சைக் காட்டிலும் இங்கிலாந்து ஏழை நாடு அல்ல, பலவீனமான நாடுமல்ல என்பதைப் புள்ளிவிவரங்களின் மூலம் நிரூபிப்பதை அவர் தம்முடைய முக்கியமான கடமையாகக் கருதினார். இது இன்னும் விரிவான ஒரு கடமையை மேற்கொள்வதற்கு வழிவகுத்தது. அவர் காலத்தில் இங்கிலாந்தின் பொருளாதார நிலைமையைப் பற்றி அளவு ரீதியான மதிப்பீட்டைச் செய்வதே அது..

அவர் தம்முடைய புத்தகத்தின் முன்னுரையில் அரசியல் கணிதத்தின் முறையைப் பற்றிப் பின்வருமாறு எழுதுகிறார்: “இதற்கு நான் பின்பற்றியிருக்கும் முறை இன்னும் வழக்கத்துக்கு வரவில்லை. ஒப்புமை செய்கிற வார்த்தைகளையும் அறிவுப் பூர்வமான வாதங்களையும் உபயோகிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், இந்த முறையில் (நான் நெடுங்காலமாகப் பாடுபட்டிருக்கும் அரசியல் கணிதத்துக்கு ஒரு மாதிரி என்ற வகையில்) எண்கள், எடைகள், அளவுகள் மூலமாக என்னுடைய கருத்துக்களைத் தெரிவித்திருக்கிறேன்; கண்ணால் பார்க்கக் கூடிய வகையில் இயற்கையில் அடிப்படைகளைக் கொண்டவற்றையே ஆராய்ந்திருக்கிறேன்; குறிப்பிட்ட மனிதர்களுடைய மாறக் கூடிய அறிவு, கருத் துக்கள், பசிகள், உணர்ச்சிகள் ஆகியவற்றைச் சார்ந்திருப்பனவற்றை மற்றவர்களின் ஆராய்ச்சிக்கு விட்டுவிடுகிறேன்.” (1)

பெட்டியைப் பின்பற்றியவர்களில் புகழ் மிக்கவரான சார்ல்ஸ் டாவெனான்ட் பின்வரும் எளிமையான வரையறையைக் கூறியிருக்கிறார்; ”அரசாங்கம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எண்களை ஆதாரமாகக் கொண்டு வாதிடும் கலையை அரசியல் கணிதம் என்று கூறுகிறோம்…” இந்தக் கலை மிகவும் பழமையானது என்பதில் சந்தேகமில்லை என்பதையும் அவர் குறிப்பிடுகிறார். ஆனால் பெட்டி ”அதற்குப் பெயரைக் கொடுத்தார்; விதிகளையும் முறைகளையும் வகுத்துக் கொடுத்தார்”.

சர் வில்லியம் பெட்டி

பெட்டியின் அரசியல் கணிதம் புள்ளியியலுக்கு முன் மாதிரியாக இருந்தது. அவர் தன்னுடைய முறையில் பொருளாதார விஞ்ஞானத்தின் முக்கியமான போக்குகளின் மொத்தத் தொடர்வரிசையையுமே முன்னூகித்தார். ஒரு நாட்டின் தேசிய வருமானம், தேசியச் செல்வம் ஆகியவற்றைக் கணக்கிடுவதன் முக்கியத்துவத்தைப் பற்றி அவர் மதிநுட்பத்தோடு எழுதினார். இவை நவீன புள்ளியியலிலும் பொருளாதாரத்திலும் முக்கியமான பங்கு வகிக்கின்றன. இங்கிலாந்தின் தேசிய செல்வத்தைக் கணக்கிடுவதற்கு முதலில் முயற்சி செய்தவரும், அதைக் கணக்கிட்டவரும் அவர்தான்.

பெட்டியின் ஜனநாயக உணர்வையும் அசாதாரணமான துணிவையும் பின்வரும் பகுதியிலிருந்து நன்கு தெரிந்து கொள்ள முடியும். ”… மக்களின் செல்வத்தையும் சர்வாதிகாரம் செலுத்தும் மன்னரின் செல்வத்தையும் அதிகமான கவனத்தோடு வேறுபடுத்திப் பார்க்க வேண்டும்; மன்னர் தான் விரும்புவதை எங்கேயும், எப்பொழுதும், எந்த அளவிலும் மக்களிடமிருந்து எடுத்துக் கொள்கிறார். ”(2) அவர் இங்கே குறிப்பிட்டது பதினான்காம் லுயீயை. ஆனால் இந்தச் சொற்றொடரை இரண்டாம் சார்ல்ஸ் தனக்கும் ஒரு கண்டனமாகக் கருதியிருக்கலாம்.

இங்கிலாந்தின் பொருளாயதச் செல்வம் 250 மில்லியன் பவுன் என்று பெட்டி மதிப்பிட்டார்; இதனோடு நாட்டிலுள்ள மக்கள் தொகையின் பணவியல் மதிப்பாக இன்னொரு 417 மில்லியன் பவுனைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இந்தப் புதிர் போன்ற கருத்து முதல் பார்வையில் தோன்றுவதைக் காட்டிலும் மிகவும் ஆழமானதாகும். உற்பத்திச் சக்திகளில் உள்ள மனிதக் கூறை -உழைப்புத் திறன், உத்திகள், ஏற்படக் கூடிய தொழில் நுட்ப வளர்ச்சி முதலியனவற்றை- அதன் பரிமாணத்தைக் கணக்கிடுவதற்குப் பெட்டி ஒரு வழியைத் தேடி முயற்சி செய்திருக்கிறார்.

பெட்டியின் மொத்த பொருளாதாரத் தத்துவமுமே மக்கள் தொகையின் அளவு, அதன் உள்ளமைப்போடு தொடங்குகிறது. பெட்டியைப் பற்றி மார்க்ஸ் பின்வரும் அம்சத்தைக் குறிப்பிட்டார்: “நமது நண்பர் பெட்டி மால்தஸிலிருந்து வேறுபட்ட ‘மக்கள் தொகைத் தத்துவத்தைக்’ கொண்டிருக்கிறார்……. அது மக்கள் – செல்வம் என்பதாகும்…” (3) மக்கள் தொகை வளர்ச்சியைப் பற்றி இத்தகைய நம்பிக்கையான கருத்து மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் ஆரம்பகர்த்தாக்களுக்கு மாதிரி எடுத்துக்காட்டாகும். 19 -ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மால்தஸ், உழைப்பாளிகளின் ஏழ்மைக்கு முக்கியமான காரணம் அவர்கள் அதிகமாக இனப்பெருக்கம் செய்கிறார்கள் என்ற இயற்கையான காரணமே என்றார் (இதைப் பற்றி இப்புத்தகத்தின் பதினான்காம் அத்தியாயத்தில் விரிவாகச் சொல்லப்படும்). அவர் இதன் மூலம் முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தில் தவறை மழுப்புகின்ற போக்குகளில் ஒன்றைத் தொடங்கி வைத்தார்.

பெட்டி இங்கிலாந்தின் தேசிய வருமானத்தைக் கணக்கிட்டார். இதுதான் இன்றுள்ள தேசியக் கணக்கெடுப்பு என்ற நவீன முறையாக வளர்ச்சியடைந்தது. இதன் மூலம் ஒரு நாட்டின் உற்பத்தி அளவு, அதன் உற்பத்திகள் நுகர்வு, சேமிப்பு, ஏற்றுமதிக்கென்று பகிர்ந்து கொடுக்கப்படும் முறை, முக்கியமான சமூக வர்க்கங்கள், கோஷ்டிகளின் வருமானங்கள், இதரவற்றை சுமாராகக் கணக்கிடுவது சாத்தியமாகியிருக்கிறது .

பெட்டியின் கணக்குகளில் முக்கியமான தவறுகள் இருந்தன என்பது உண்மையே. அவர் தேசிய வருமானத்தை மக்கள் தொகையின் நுகர்வுச் செலவின் மொத்தம் என்று கருதி மதிப்பிட்டார். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால் கட்டிடங்கள், இயந்திரங்கள், நிலச் சீர்திருத்தம் மற்றும் இதர முதலீடுகளில் வருமானம் செலவிடப்படுகிறது (இது பல வருடச் சேமிப்பின் திரட்சியாகும்), இதைச் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பது அவருக்குத் தெரியவில்லை.

ஆனால் இந்தக் கருத்தும் 17-ம் நூற்றாண்டில் யதார்த்தமான ஒன்றுதான். ஏனென்றால் அன்று மூலதனத் திரட்சி மிகவும் கீழ்நிலையில் இருந்தது; நாட்டின் பொருளாயதச் செல்வம் மிகவும் மெதுவாகவே அதிகரித்து வந்தது. மேலும் அரசியல் கணிதத் துறையில் பெட்டியின் சீடர்கள் -குறிப்பாக கிரேகொரி கிங்- இந்தத் தவறைச் சீக்கிரமாகவே திருத்தினார்கள். 17 -ம் நூற்றாண்டின் இறுதியில் இங்கிலாந்தின் தேசிய வருமானத்தைப் பற்றி கிரே கொரி கிங் செய்த கணக்குகள் குறிப்பிடத்தக்க அளவுக்கு முழுமையாகவும் சரியாகவும் இருந்தன.

(தொடரும்…)

அடிக்குறிப்புகள் :

(1) Petty, Political Arithmetick, London, 1690, p. 244.
(2) W. Petty, The Economic Writings, Cambridge, 1899, Vol. 1, p. 272.

(3) K. Marx, Theories of Surplus-Value, Part 1, pp. 354, 355.

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க:

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ
வெளியீடு :
முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983

நூல் அறிமுகம் : தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்

ந்திய ஒன்றியத்தின் தண்ணீர்க் கொள்கையில் இருக்கும் தனியார்மயப்படுத்தல் மற்றும் தண்ணீருக்கு விலை நிர்ணயித்தல் குறித்தும் அதனால் குடிமக்கள் பாதிக்கப்படுவது குறித்தான நூல் இது.

உலகவங்கி, பன்னாட்டு நிதியம் மற்றும் உலக வர்த்தக கழகத்தின் கட்டளைகளை தனக்கான சாசனமாக வரித்துக்கொண்டு செயல்படுகிறது இந்திய அரசு. மக்களை குடிமக்களாக இல்லாமல் பன்னாட்டு நிறுவனங்களின் நுகர்வோராக மட்டுமே பார்க்கிறது இந்த அரசு. அடிப்படை உரிமையான தண்ணீரையும் தனியார்மயமாக்கி கட்டணம் செலுத்தி வாங்க செய்யும் ”தண்ணீர் கொள்கை” மக்கள் விரோத கொள்கை என உரத்து சொல்கிறது இந்த நூல். (நூலின் பதிப்புரையிலிருந்து)

மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் தேசிய தண்ணீர்க் கொள்கை மூலம் நீர் வளங்களை தனியார்மயப்படுத்தி, நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு சொட்டு நீருக்கும் விலை நிர்ணயம் செய்யவிருக்கிறது, இந்திய ஒன்றிய அரசு. இதன்படி, இதுவரை இயற்கையாய் இருந்த தண்ணீர் மீதான மனிதனின் அடிப்படை உரிமையை மறுத்து, தண்ணீரை ஒரு வியாபாரப் பொருளாக (சரக்காக) மாற்றும் வேலையைச் செய்து கொண்டிருக்கிறது.

ஐநா – வின் பொருளாதார, சமூக மற்றும் கலாச்சார உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை (International Covenant on Economic, Social and Cultural Rights), “தண்ணீ ர் பொதுச் சொத்து, அது வாழ்வுக்கும் சுகாதாரத்துக்கும் அடிப்படை. கண்ணியமான மனித வாழ்வுக்கு நீரின் மீதான மனித உரிமை தவிர்க்க முடியாது. மேலும், தண்ணீர் மற்ற மனித உரிமைகளைவிட முதன்மையானது என்பதை ஒத்துக்கொள்கிறது. இந்தியா இதில் கையெழுத்திட்டிருக்கிறது. மேலும் ஐநா பொதுச் சபையின் ‘தண்ணீர் அடிப்படை உரிமை’ எனும் Right to Water தீர்மானத்திற்கு ஆதரவாக 2010-இல் இந்தியா வாக்களித்துள்ளது.

1987 இல் நீர் ஆதாரங்களுக்கான மத்திய, மாநில அரசுகள் தங்கள் திட்டங்களை வகுப்பதற்காக ‘தேசிய தண்ணீர்க் கொள்கையை நீர்வளத்துறை அமைச்சகம் முதன் முதலில் இயற்றி ஏற்றுக்கொண்டது. இதில் தண்ணீர் பற்றாக்குறையைப் பயனீட்டாளர்களுக்கு உணர்த்தவும், நீர் பயன்பாட்டில் பொருளாதார செயல்பாட்டை ஊக்குவிக்கவும் தண்ணீருக்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் எனச் சொல்கிறது. அதாவது, தண்ணீர் இயற்கையாக அமைந்த மனிதனுக்கான அடிப்படை உரிமை என்பதை மறுத்து, குடிமக்களைத் தண்ணீர் பயன்படுத்தும் நுகர்வோர்களாகப் பார்க்கிறது . இதனடிப்படையில் தண்ணீர் சார்ந்த தொழில்களை உருவாக்கி, நீரை வணிகமயப்படுத்தி, அதன் மீதான பொருளாதார செயல்பாடுகளை ஊக்குவிக்கச் சொல்கிறது. மேலும், இந்த விலை நிர்ணயித்தலை விவசாயப் பாசனத்துக்கும் விரிவுபடுத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வலியுறுத்தப்பட்டுள்ளது.

படிக்க:
தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்
ரஞ்சன் கோகோய் : நீதி செத்துவிட்டது ! நீதிபதிகள் வாழ்க !

தண்ணீர்க் கொள்கை 2002 மற்றும் 2012 என இரண்டு முறை திருத்தப்பட்டுள்ளது. 2002இல் திருத்தியமைக்கப்பட்ட இந்தக் கொள்கையில், வெளிப்படையாக தனியார்மயப்படுத்துவது வலியுறுத்தப்பட்டுள்ளது. பல்வேறு பயன்பாட்டுக்கான நீர்வளத் திட்டங்களின் ‘திட்டமிடுதல், செயல்படுத்துதல் மற்றும் நிர்வகித்தல்’ போன்றவற்றில் எங்கெல்லாம் முடியுமோ அங்கெல்லாம் தனியாரின் பங்களிப்பை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு வலியுறுத்தியுள்ளது. இதற்குக் காரணமாக நிதிச் சுமைகள் குறையும், புதுமையான திட்ட வடிவமைப்புகள் கிடைக்கும், பயனீட்டாளர்களுக்கு திறன்வாய்ந்த, வெளிப்படையான சேவையைத் தர முடியும்’ என்பனவற்றைக் கூறு கின் றது. இதற்கு கடுமையான எதிர்ப்புகள் சமூக  செயல்பாட்டாளர்களிடமிருந்து வந்தாலும் , தனியார்மயப்படுத்தலுக்கு எதிரான சட்டிஸ்கர் சியோநாத் நதிக்கரை மக்களின் போராட்டம், கோக்கோகோலா ஆலைகளுக்கு எதிரான வைத்ரானா ஆற்று குடூஸ் மக்கள் போராட்டம் மற்றும் கேரளா பிளச்சிமடா போராட்டம் போன்றவற்றினாலும் 2012 இல் இக்கொள்கைத் திருத்தப்பட்டபோது, தனியார் பங்களிப்பு என்பதை அரசு-தனியார் கூட்டு (Public-Private Partnership) என மாற்றப்பட்ட து. இது நீர் மேலாண்மையில், உலக வங்கி – சர்வதேச நாணய நிதியம் (WB -IMF) பரிந்துரைத்த கொள்கையோடு ஒத்துப்போகும் வகையில் அரசு தனியார் கூட்டு என மாற்றப்பட்டுள்ளது. இதன்படி, அரசின் பங்கு வெறும் கண்காணிப்பது மட்டுமே; குடிமக்களுக்கு சேவை வழங்குவது அல்ல. இது தனியார் மயப்படுத்துதலின் வேறு வடிவம். (நூலிலிருந்து பக்.7-8)

தண்ணீர் வணிகத்தில் ஈடுபடும் பன்னாட்டு பிரெஞ்சு நிறுவனமான சூயஸ் தனது வலைத்தளத்தில் கோவை நகரத்தின் (60 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தத்தை பிப்ரவரி மாதம், 2018 ஆம் ஆண்டு பெற்றிருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் 400 மில்லியன் யூரோக்கள் (சுமார் ரூ. 3,200 கோடி). பத்தாண்டுகளுக்கு முன்பாகவே இந்திய மாநிலங்களின் பல பகுதிகளில் குடிநீர் விநியோகத்தை வணிக அடிப்படையில் செய்து வரும் சூயஸ் நிறுவனத்திற்கு கோவையில் கிடைத்திருக்கும் ஒப்பந்தம்தான் இந்தியளவில் மிகப் பெரிய ஒப்பந்தமாகும்.

24 மணி நேரமும் தங்குதடையற்ற குடிநீர் விநியோகத்திற்காகவே சூயஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டாலும் இத்திட்டத்தின் முக்கிய நோக்கம் மக்கள் பயன்படுத்துகின்ற ஒரு துளி குடிநீரையும் கணக்கிட்டு அதற்கான கட்டணத்தை நிர்ணயிப்பதே ஆகும். தண்ணீர்க் குழாய்களில் மீட்டர்கள் பொருத்தப்பட்டு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு சொட்டுக் குடிநீரும் கணக்கிடப்படும். பயன்படுத்தப்படும் தண்ணீருக்கான கட்டணத்தை வசூல் செய்ய வேண்டியது சூயஸ் நிறுவனத்தின் பொறுப்பு.

இத்திட்டம் பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய கோவை நகராட்சி நிர்வாக இயக்குனர், ”இத்திட்டத்தின் முன் வைப்பு கட்டணமாக பயனாளிகளுக்கு ரூ.10,000 முதல் ரூ.15,000 வரை நிர்ணயிக்கப்படலாம்” என கூறினார். மிகக் குறிப்பாக தற்போது பயன்பாட்டிலுள்ள குடிநீர் பொதுக்குழாய்கள் அகற்றப்படும் என தெரிவித்துள்ளார்.

அனைவருக்கும் உரிமையுடைய, அனைவரும் அணுகும் விதத்திலிருக்கக் கூடிய, பொதுச் சொத்தான குடிநீர், தனியார் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு செல்லப்பட்டு வணிகத்திற்கான தனிச்சொத்தாக மாற்றப்படுகிறது.

தமிழகத்தின் பல நகரங்கள் இருக்க, கோவையில் தண்ணீரை தனியார்மயமாக்குவதற்கான கட்டுமானப்பணிகள் தொடங்கப்பட அடிப்படைக் காரணம் இந்திய அரசு அறிவித்துள்ள ஸ்மார்ட் சிட்டி திட்டம் ஆகும். இந்திய நகரங்களை மேம்படுத்துகிறேன் என்ற பெயரில் நகரத்தின் நவீன கட்டமைப்பு உருவாக்கத்தை தனியாருக்கான வணிகமாக ஒப்பந்தம் எழுதித் தருவதே “ஸ்மார்ட் சிட்டி’ திட்டம். இத்திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் குடிநீர் விநியோகத்திற்கான நவீன கட்டமைப்புகளைத் தனியார் நிறுவனங்கள் ஏற்படுத்துவதும், குடிநீர் விநியோகம் செய்வதும் ஒரு அங்கமாகும். (நூலிலிருந்து பக்.23-24)

நூல்:தனியார்மயமாக்கப்படும் தண்ணீர்
ஆசிரியர்கள்: மயில்வாகனன், வீரைய்யன்

வெளியீடு: நிமிர் பதிப்பகம்,
புது எண்: 18, சுப்ரிதா பிளாட்ஸ், அவ்வையார் தெரு,
நங்கநல்லூர், சென்னை – 600 061.
தொலைபேசி எண்: 72999 68999
மின்னஞ்சல் : nimirpublications@gmail.com

பக்கங்கள்: 48
விலை: ரூ 40.00

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

இணையத்தில் வாங்க: nimir | commonfolks

குழந்தைகளுக்குக் கணிதம் பிடிக்கின்றதா ?

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 2 | பாகம் – 7

பாடங்களுக்கு இடையிலான நேரத்தை – எப்படிப் பயன்படுத்துவது? (தொடர்ச்சி…)

“கணிதம் உங்களுக்குப் பிடிக்கின்றதா?”

‘பிடிக்கும்!” என்று உற்சாகமாக, ஒரே குரலில் பதில் வருகிறது.

ஏக்கா: “இதை எங்களுக்குச் சொல்லித் தருவீர்களா? : (சூத்திரங்களைக் காட்டுகிறாள்.)

“நீங்கள் இத்தகைய சூத்திரங்களைப் புரிந்து கொள்ளத் துவங்க நான் உங்களுக்குப் பயிற்சியளிக்கட்டுமா?”

மீண்டும் உற்சாகமும் ஏகோபித்த ஆமோதிப்பும்: ‘ஆமாம்!”

“சரி, ஆரம்பிப்போம்!… நேராக உட்காருங்கள்!… இந்த வடிவங்களைப் பாருங்கள், அவை எந்த வரிசையில் உள்ளன என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.”

வடிவங்கள் வரையப்பட்டுள்ள சதுர அட்டைகளை நான் கரும்பலகையருகே வைக்கிறேன்:

‘ஞாபகம் வைத்துக் கொண்டீர்களா?… தலையைத் தொங்கப் போடுங்கள்….. கண்களை மூடுங்கள். தலையைத் தூக்குங்கள்…. வடிவங்களின் வரிசைக் கிரமத்தில் என்ன மாற்றம் என்று சொல்லுங்கள்.”

இப்போது இவற்றின் வரிசைக் கிரமம் பின்வருமாறு உள்ளது:

கீகா கரும்பலகையை நோக்கி ஓடி வந்து உரக்கச் சொல்லுகிறான்:

“நீங்கள் இதை மாற்றி விட்டீர்கள். இது இங்கே இருந்தது” (புள்ளியைக் காட்டுகிறான்), “A என்ற எழுத்து இங்கேயிருந்தது!” அவன் அவற்றைப் பழைய இடத்தில் திரும்ப வைக்கிறான்.

“வடிவங்கள் எந்த வரிசைக் கிரமத்தில் உள்ளன என்று மீண்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். தலையைக் கீழே போட்டுக் கண்களை மூடிக் கொள்ளுங்கள். எவற்றை நான் மாற்றி வைத்திருக்கிறேன் என்பதை என் காதில் மெதுவாகச் சொல்லுங்கள். தலையை உயர்த்திப் பாருங்கள்.” குழந்தைகளுடன் முணுமுணுவென்று பேசியபடியே நான் வகுப்பறையைச் சுற்றி வருகிறேன். ஒரு பதில் கூட சரியானதாக இல்லை. நான், வரிசைக் கிரமத்தில் ஒரு மாற்றத்தையும் செய்யவில்லை. என்ன விஷயம்? சிக்கலான கடமையா? இருக்க முடியாது. அனேகமாக, நான் இம்மாதிரி செய்ய முடியும் என்று எனது நம்பகமான குழந்தைகள் எண்ணியிருக்க மாட்டார்கள். எந்த மாற்றங்களைப் பற்றி நான் கூறினேனோ அவை இல்லாவிட்டாலும் கூட அவற்றை அவர்கள் தேடுகின்றனர்.

“இங்கு எதையும் நான் தொடவேயில்லை, எல்லாம் அதனதன் இடத்தில் இருந்தபடியே உள்ளன என்பதை நீங்கள் கவனிக்கவில்லையா, குழந்தைகளே?”

மாயா: “எல்லாம் அப்படியே உள்ளன என்பதை நான் கவனித்தேன், ஆனால் நான் நம்பவில்லை …”

தாத்தோ: “நீங்கள் கரும்பலகையருகே ஏதோ செய்ததைப் பார்த்தால், அங்கே எதையோ உண்மையிலேயே மாற்றி வைத்தீர்கள் என்று நினைத்தேன்….”

“அடுத்த முறை இன்னமும் கவனமாக இருங்கள். இப்போது அடுத்த பயிற்சிக்கு வருவோம்: எது அதிகம் என்று நீங்கள் சொல்ல வேண்டும்.”

குழந்தைகளின் முன் இரண்டு கரும்பலகைகள் உள்ளன. இடைவேளையின் போது இவற்றில் பலவற்றை வரைந்தேன்: எவ்வளவு, எது அதிகம், எதிலிருந்து, எங்கே அதிகம் (வலப்புறம், இடப்புறம், கீழே, மேலே) என்னும் கேள்விகளைக் கேட்க இவை வசதியாக இருக்கும். இவை எல்லாம் முதல் கரும்பலகையில் உள்ளன. அடுத்த கரும்பலகை பூராவும் பல வடிவங்கள் உள்ளன.

“எது எவ்வளவு” என்று குழந்தைகள் கண்டுபிடிக்க வேண்டும். முதல் கரும்பலகையின் மூன்றிலொரு பகுதியைத் திறந்து காட்டுகிறேன். “இங்கே எவ்வளவு வட்டங்கள் உள்ளன?” – “ஐந்து!” என்கின்றனர் குழந்தைகள்.

இதில் ஐந்தாவது எது என்று யாரால் சொல்ல முடியும்? பூஜ்ஜியம் முதல் ஒன்பது வரை எழுதப்பட்டுள்ள அட்டைகளைக் காட்டுகிறேன்.

‘அதோ, நடுவில் உள்ள அட்டை “ என்று பலர் பதில் கூறுகின்றனர்.

“இதுவா?” 3 என்று எழுதப்பட்டுள்ள அட்டையைக் காட்டுகிறேன்.

“இல்லை! அதற்கு அருகே உள்ளது!”

“ஓ, இதுவா!” என்றபடியே 4 என்று எழுதப்பட்ட அட்டையை எடுக்கிறேன்.

“இல்லை!” என்கிறாள் மாயா, “நீங்கள் தவறான அட்டையைக் காட்டுகின்றீர்கள். நான் காட்டட்டுமா?”

“தயவு செய்து, காட்டேன்!”

மாயா ஓடி வந்து 5 என்று எழுதப்பட்ட அட்டையை எடுக்கிறாள்.

“இது என்ன எண்?” என்று குழந்தைகளிடம் காட்டி கேட்கிறேன்.

“ஐந்து!” என்கின்றனர் அவர்கள். “நன்றி, மாயா,”

4 என்று எழுதப்பட்ட அட்டைக்குப் பதில் 5 என்று எழுதப்பட்ட அட்டையை நான் கரும்பலகையில் வைக்கிறேன். இப்போது எல்லாம் சரி.

முக்கோணங்கள் வரையப்பட்டுள்ள இடத்தைக் காட்டி, இதில் எவ்வளவு முக்கோணங்கள் உள்ளன என்று கேட்கிறேன்.

“நான்கு….. நான்கு!” என்று பலவாறாக பதில் வருகிறது.

“இதில் 4 எது? இதுவா?” – 2 என்ற எண்ணைக் காட்டியபடி நான் கேட்கிறேன்.

“இல்லை. இது இரண்டு.”

“ஒரு வேளை இதுவோ?” – 6 என்ற எண்ணைக் காட்டுகிறேன்.

“இல்லை….. அது ஆறு.”

“அப்படியானால், இதுவா?”

“இல்லை. இது ஏழு.”

குழந்தைகளுக்கு ஒரே உற்சாகம். 4 என்ற எண்ணை எனக்குக் காட்ட அவர்கள் துடிக்கின்றனர். மாக்தா ஓடி வந்து என் கையைப் பிடித்து 4 என்று எழுதப்பட்ட அட்டையைச் சுட்டிக் காட்டுகிறாள். “இதோ, இது தான் நான்கு!”

“4 என்ற எண்ணைக் கண்டுபிடிக்க உதவியதற்கு நன்றி, மாக்தா. இதில் எவ்வளவு சதுரங்கள் உள்ளன?”

“ஆறு!” என்று பதில் வருகிறது. 6 என்று எழுதப்பட்ட அட்டையை எடுத்து மற்ற எண்களின் அருகில் தலைகீழாக வைக்கிறேன். குழந்தைகள் உற்சாகமாக என்னைத் திருத்துகின்றனர்.

“இப்போது நீங்கள் வைத்துள்ளது ஒன்பது, அதைத் திருப்பி வைத்தால் தான் ஆறு வரும்.” நான் அப்படியே செய்கிறேன்.

கோத்தே நேர்க்கோடுகளைப் பார்த்தபடியே, அங்கே ஏழு நேர்க்கோடுகள் உள்ளன என்று கத்துகிறான்.

“இங்கே ஏழு நேர்க்கோடுகள் உள்ளன என்கிறான் கோத்தே, எனக்கோ இவை எட்டு என்று தோன்றுகிறது. யார் சொல்வது சரி?”

“நீங்கள் சொல்வது தான் சரி!” என்று பலர் யோசிக்காமலேயே கத்துகின்றனர்.

“கோத்தே தான் சரி!” என்று மிகச் சிலர் அவனைச் சுட்டிக்காட்டியபடி கூறுகின்றனர்.

மாயா கரும்பலகையை உற்றுக் கவனித்தபடி ஏதோ முணுமுணுக்கிறாள். அவள் இடத்திலிருந்து எழுந்து கூறுகிறாள்.

“நான் சொல்லட்டுமா?… அங்கே ஏழு நேர்க்கோடுகள் தான் உள்ளனவே தவிர எட்டு அல்ல. எனவே, கோத்தே தான் சரியே தவிர நீங்கள் அல்ல.”

படிக்க:
குழந்தைகளை அடிக்காத பள்ளிகள் சாத்தியமா ? | வில்லவன்
மிகக் கடினமான பத்தாம் வகுப்பு கணிதத் தேர்வு : தற்செயலா ? சூழ்ச்சியா ?

“மாயா சொல்வதை நீங்கள் எல்லோரும் ஒப்புக் கொள்கின்றீர்களா?”

எனது ஆதரவாளர்கள் குறைந்து விட்டனர். ஏல்லா எழுந்து விரைவாக கரும்பலகையை அணுகி நேர்க்கோடுகளைத் தானாகவே எண்ணுகிறாள்.

“என்ன விஷயம், ஏல்லா?” “ஏழு நேர்க்கோடுகள் தான் உள்ளனவே தவிர எட்டு அல்ல!” என்று இப்படிச் சொல்லி விட்டு அவள் தன்னிடத்திற்கு ஓடுகிறாள்.

“வாருங்கள், எல்லோரும் சேர்ந்து எண்ணுவோம்.” நான் சுட்டுக் குச்சியின் உதவியால் ஒவ்வொரு நேர் கோடாகக் காட்டுகிறேன்.

”ஒன்று… இரண்டு… மூன்று!” என்று குழந்தைகள் ராகம் போட்டு எண்ணுகின்றனர்.

நான்காவது கோட்டைச் சுட்டிக் காட்டியதும் அதே இடத்தில் சற்று தாமதிக்கிறேன்.

மாதிரி படம்

“நான்கு… ஐந்து!” எனது சுட்டுக் குச்சி அசையாததையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள் தொடருகின்றனர். எல்லாம் குழம்பி விட்டது, இப்படித் தொடர முடியாது என்று மாயா எதிர்ப்பு தெரிவிக்கின்றாள். மீண்டும் ஆரம்பிக்கின்றோம். இப்போது எனது சுட்டுக் குச்சி வேகமாக நகருகிறது. “ஏழு” என்று ராகமான பதில் வந்ததும் மீண்டும் அதே நேர்க்கோடுகளைச் சுட்டிக் காட்டுவதைத் தொடருகிறேன். “எட்டு. ஒன்பது… பத்து… பதினொன்று!..”

ஆனால் படிப்படியாகக் குரல்கள் குறைகின்றன, மீண்டும் எல்லாம் குழம்பி விட்டது என்று பலருக்கு இறுதியாகப் புரிகின்றது. நேர்க்கோடுகளை எண்ண உதவி புரியுமாறு மாயாவை நான் கரும்பலகைக்கு அழைக்கிறேன். மூன்றாவது முறை மாயாவின் உதவியோடு எல்லாம் வெற்றிகரமாக முடிகிறது.

“நிச்சயமாக, ஏழு நேர்க்கோடுகள் தான் உள்ளனவே தவிர எட்டல்ல. கோத்தே சொன்னதுதான் சரி” என்று சொன்னபடியே நான் கரும்பலகையில் மற்ற எண்களின் அருகே 7 என்ற எண்ணையும் வைக்கிறேன். நான் தவறு செய்கிறேனா இல்லையா என்று குழந்தைகள் உன்னிப்பாக கவனிக்கின்றனர். “இது ஏழு அல்ல!” என்று கூட யாரோ கத்தினார்கள். ஆனால் மற்றவர்கள் இது ஏழுதான் என்று ஊர்ஜிதப்படுத்தினர்.

“இப்போது இப்புள்ளிகளைப் பாருங்கள். எவ்வளவு புள்ளிகள் உள்ளன என்று எண்ணி என் காதில் சொல்லுங்கள்!”

என்னைக் கூப்பிடுபவர்கள் அருகில் வேகமாகச் செல்கிறேன். கணித விஞ்ஞான துல்லியத்தின் எல்லா அடிப்படைகளையும் மீறும் பதில்கள் என் காதில் ஒலிக்கின்றன: “ஐந்து … ஒன்பது… பத்து… இருபது… நூறு… ஆயிரம்….. மில்லியன்!” தேயா, அங்கே ஏராளமான புள்ளிகள் உள்ளதால் அவற்றை எண்ணவே முடியாதெனக் கூறுகிறாள். நான் அவளுடைய பெஞ்ச் அருகே நிற்கிறேன்.

“தேயா, எல்லோருக்கும் கேட்கும்படி உரக்க பதில் சொல் பார்க்கலாம்: அங்கே எவ்வளவு புள்ளிகள்?”

“அங்கே ஏராளமான புள்ளிகள் உள்ளன, அவற்றை எண்ணுவதே கடினம்!”

நன்றி, தேயா!.. நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?..”

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

♦ ஸ்டெர்லைட் எதிர்ப்புத் தியாகிகளுக்கு நினைவிடம் அமை!
♦ படுகொலைக்குக் காரணமான போலீசாருக்கு கொலை குற்றத்தில் தண்டனை வழங்கு!
♦ ஸ்டெர்லைட் நச்சு ஆலையை நிரந்தரமாக அகற்ற தனிச்சட்டம் இயற்று!

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகள் முதலாமாண்டு நினைவேந்தல்

22-05-2019
வள்ளுவர் கோட்டம்
சென்னை

ன்பார்ந்த நண்பர்களே !

1919-ம் ஆண்டு ஜாலியன் வாலாபாக்கில், கொடிய ஆள்தூக்கி ரவுலட் சட்டத்தை எதிர்த்து அமைதியாக ஆயுதமின்றி கூடிய பொதுமக்கள் மீது ஆங்கிலேய அதிகாரி ஜெனரல் டயர் துப்பாக்கி ரவைகள் தீரும் வரை கொடூரமாக சுட்டுத் தள்ளினான். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இன்று நூறாண்டுகள் நிறைவடைந்துவிட்டன. ஜாலியன் வாலாபாக் தியாகிகள் நினைவிடத்தில் மக்களும் தலைவர்களும் ஏப்ரல் 13 அன்று அஞ்சலி செலுத்தினார்கள்.

தூத்துக்குடி படுகொலை என்பது இன்னொரு ஜாலியன் வாலாபாக். அது காலனியாதிக்க எதிர்ப்புப் போராட்டம் என்றால் தூத்துக்குடி போராட்டம் வேதாந்தா என்ற பன்னாட்டு நிறுவனத்துக்கு எதிரான போராட்டம். ஆகவே, ஜாலியன் வாலாபாக் நினைவு நாளைப் போலவே, 2019 மே 22 அன்று தூத்துக்குடி போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளின் படங்களை வீதிகள்தோறும் வைத்து, ஜல்லிக்கட்டு மக்கள் எழுச்சியைப் போல தமிழகமே அந்தத் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த வேண்டும். ஜாலியன் வாலாபாக் போன்று ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட தியாகிகளுக்கும் தூத்துக்குடியில் நினைவிடம் அமைக்க போராட வேண்டும்.

தூத்துக்குடி மக்களின் வீரம் செறிந்த போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி, எட்டுவழிச்சாலை, நெடுவாசல், கன்னியாகுமரி இனையம் துறைமுக விரிவாக்கம், ஹைட்ரோ கார்பன் திட்டம் ஆகியவற்றுக்கு எதிரான போராட்டங்களுக்கு உத்வேகத்தை அளித்திருக்கிறது. அதேபோல், கார்ப்பரேட் கொள்ளையை எதிர்த்து போராடினால் தூத்துக்குடி மாடல் அடக்குமுறைதான் வரும் என்று எச்சரிப்பதற்காகவே அந்தப் படுகொலை நடத்தப்பட்டிருக்கிறது. போராடிய மக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் சட்டம், பல நூறு வழக் குகளில் சிறை, போராட்டத்துக்கு உதவி செய்த வழக்கறிஞர்களுக்கும் சிறை போன்ற அடக்குமுறைகள் ஏவப்பட்டிருக்கின்றன.

மே 22 தூத்துக்குடியில் நடந்ததை ஒரு கனம் நினைவுபடுத்தி பாருங்கள், குடிநீர், பால், உணவு எடுத்துக்கொண்டு குழந்தைகள், பெண்கள் முதியவர்கள் குடும்பத்து டன் திருவிழாவிற்கு செல்வது போல் இந்த அரசை நம்பி மாவட்ட ஆட்சியரிடம் முறையிடச் சென்றார்கள். அந்த மக்களைத்தான் வேனில் ஏறி நின்று எதிரிகளைச் சுடுவது போல் சுட்டுக்கொன்றிருக்கிறது போலீசு. அந்தக் கொலைகார போலீசார் அனைவரும் கொலைக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்பட வேண்டும்.

நடந்தது கூட்டத்தைக் கலைப்பதற்கான துப்பாக்கிச்சூடு அல்ல என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை நிரூபித்திருக்கிறது. மக்கள் மிக அருகிலிருந்து தலையிலும், வாயிலும் கழுத்திலும் குறிபார்த்து சுட்டு கொல்லப்பட்டிருக்கின்றனர். கலைந்து ஓடிய மக்கள் பின்புறத்திலிருந்து சுடப்பட்டிருக்கின்றனர். துப்பாக்கிச் சூடு நடத்திய போலீசார் மீது விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால், இதுவரை எந்தக் கொலைகார போலீசாரும் சி.பி.ஐ. ஆல் விசாரிக்கப்படவில்லை. மாறாக, மக்களை ஃபோனில் அழைத்து ஸ்டெர்லைட்டுக்கு எதிராக ஏன் போராடினீர்கள், எப்படி போராடினீர்கள்? என்று துருவித் துருவி விசாரித்து வருகிறது சி.பி.ஐ.

போராடிய மக்கள் எந்த வன்முறையிலும் ஈடுபடவில்லை ஸ்டெர்லைட் ஆதரவு கூலிப்படையினர்தான் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தைத் தாக்கி வாகனங்களை தீயிட்டு கொளுத்தினார்கள். இந்தச் சம்பவம் போலீசு உயர் அதிகாரிகளுக்கு முன்பே தெரியும் என்பது சிசிடிவி படக்காட்சிகள் மூலம் ஆதார பூர்வமாக நிரூபிக்கபட்டுள்ளது. ஆதாரத்தை தொகுத்து வெளியிட்ட சமூக செயற்பாட்டாளர் முகிலன் இன்று வரை என்ன ஆனார் எனத் தெரியவில்லை.

தூத்துக்குடி மக்கள் மீது கடந்த ஓராண்டாக அறிவிக்கப்படாத எமர் ஜென்சி அமல்படுத்தபட்டு வருகிறது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பினர் யாரும் எங்கும் சென்று எதையும் பேசக் கூடாது. வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாறக்கூடாது. வீட்டில் கருப்பு கொடி ஏற்றக்கூடாது . துண்டறிக்கை விநியோ கிக்கக் கூடாது. போஸ்டர் ஒட்டக்கூடாது. எதைச்செய்தாலும், தீவிரவாதிகளை காண்காணிப்பது போல் கண்காணித்து போலீசார் உடனே அழைத்து எச்சரிக்கிறார்கள், பொய் வழக்கு போடுகிறார்கள். போராட்டத்தில் முன்னணியாக உள்ள இளைஞர்களை கைது செய்து அடித்து துன்புறுத்தப்படுகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் உட்பட அனைவரும் போலீசாரால் எந்த நேரமும் பின்தொடரப்பட்டு, அச்சத்தில் வைக்கப்பட்டுள்ளார்கள்.

ஆனால், ஸ்டெர்லைட்டுக்கு எந்த விதத்தடையும் இல்லை , உயர்நீதிமன்ற நீதிபதியே போலீஸ் எஸ்.பி. முரளி ரம்பாவை நேரில் அழைத்து கண்டிக்கும் அளவிற்கு போலீசாரின் ஸ்டெர்லைட் ஆதரவு நடவடிக்கை இருந்து வருகிறது. போராடும் மக்களின் ஒற்றுமையை சீர்குலைக்க பல கோடி ரூபாயை வாரி இரைத்து எண்ணற்ற கூலிப்படையினரை மக்கள் மத்தியில் இறக்கி தனக்கு ஆதரவான பிரச்சாரத்தை பலவகைகளில் ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்து வருகிறது. தேர்தலுக்குப்பிறகு நீதிமன்ற உத்திரவு பெற்று மீண்டும் ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்படும் என்ற கருத்து மக்களிடம் பரப்பப்படுகிறது.

படிக்க:
ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !

இதனை ஒருபோதும் நாம் அனுமதிக்கக் கூடாது. வேதாந்தா என்பது பல நாடுகளின் அரசுகளையே விலை பேசுகின்ற பன்னாட்டு நிறுவனம், மோடி அரசைத் தனது கைப்பாவையாக வைத்திருக்கும் நிறுவனம். அத்தகையதொரு நிறுவனத்தை தமது வீரஞ்செறிந்த போராட்டத்தின் மூலம் மூட வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி மக்கள். பல நாட்டு மக்களை அச்சுறுத்தி வரும் கொலை கார நிறுவனத்தை மண்டியிட வைத்த இந்தப் போராட்டத்தை உலகெங் கிலும் உள்ள மக்கள் வியந்து பாராட்டுகிறார்கள். தங்கள் இன்னுயிரை ஈந்து தமிழகத்தையே தலை நிமிர வைத்திருக்கிறார்கள் தூத்துக்குடி தியாகிகள்.

அந்தத் தியாகிகளை கவுரவிக்க , ஸ்டெர்லைட் ஆலையை வெளியேற்றுவதற்கு தூத்துக்குடி மக்களுக்குத் தமிழகமே துணை நிற்கும் என்பதை உணர்த்த மே 22 அன்று தமிழகம் முழுவதும் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத் தியாகிகளின் படங்களை வைத்து நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துமாறு அனைவரையும் கேட்டுக்கொள்கிறோம்.


மக்கள் அதிகாரம்,
சென்னை,
தொடர்புக்கு: 91768 01656

ஒரு ஏழை அப்பாவி முசுலீம் தற்கொலைப் படை பயங்கரவாதியாக ஆக்கப்பட்ட கதை !

டந்த சனிக்கிழமை முன்னிரவுப் பொழுதில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூருவிலுள்ள ஆர்.டி.நகர் என்ற பகுதியிலுள்ள மசூதி அருகே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த 38 வயதான சஜ்ஜித் கான் என்ற முசுலீம் நபரைப் பயங்கரவாதி எனக் கூறிக் கைது செய்த பெங்களூரு போலீசார், பெங்களூரு நகரில் ஒரு தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் சஜ்ஜித் பெங்களூருவிற்கு வந்திருக்கக்கூடும் என்ற அடிப்படையில் விசாரணை நடத்தினர். சஜ்ஜித்துக்கு உதவியாக வந்த 50 வயதான மற்றொருவரை பெங்களூரு போலீசார் வலைவீசித் தேடிக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் வெளிவந்தன.

தீவிரவாதிகளும் பயங்கரவாதிகளும் எந்த வேடத்தில் வேண்டுமானாலும் வரக்கூடும் அல்லவா! சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாகப் பீதி பரவியது.

தீவிரவாதி சஜ்ஜித் பிச்சைக்காரன் வேடத்தில் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்து பீதி பரப்பிய தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.

சஜ்ஜித் பெங்களூரு நகருக்குள் ஊடுருவியிருப்பதை முதலில் கண்டுபிடித்தவர்கள் போலீசார் அல்ல. அதனை “நுணுக்கமாக”த் துப்பறிந்து கண்டுபிடித்தவைக் கன்னடத் தொலைக்காட்சி செய்தி ஊடகங்கள்.

சஜ்ஜித், தான் பெங்களூரு போலீசாரால் கைது செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்னதாக, மே 6 அன்று பெங்களூரு-கெம்பேகௌடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வரும்போது, அந்த ரயில் நிலையத்தின் வாயிலில் வைக்கப்பட்டிருந்த மெட்டல் டிடெக்டர் நிலை பீப் என்ற ஒலியை ஏற்படுத்தியது. எனினும், அவர் அந்நிலையத்திலிருந்து வெளியேறிவிட்டார்.

இந்தக் காட்சி அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. இந்தப் பதிவை ஒளிபரப்பிய கன்னட டி.வி.சேனல்கள், முசுலீம் தீவிரவாதியொருவர் பெங்களூரு நகருக்குள் ஊடுருவிவிட்டதாக பிரேக்கிங் நியூஸ் போட்டன. அதே காட்சியை ஒளிபரப்பிய மற்றொரு தொலைக்காட்சி ஊடகம், சஜ்ஜித்தைத் தொடர்ந்து அந்த ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த மற்றொரு முசுலீமை, “முதலில் வெளியேறிய தீவிரவாதியின் உதவியாளர்” என அடையாளப்படுத்தியது.

மேலும், அத்தீவிரவாதி அந்த ரயில் நிலையத்தில் வேலை பார்க்கும் ஒரு துப்பரவு பணியாளரிடம், தான் ஒரு கோடி ரூபாய் பணம் தருவதாகவும், அதை வாங்கிக்கொண்டு தன்னை வெடிகுண்டோடு உள்ளே விட்டுவிட வேண்டுமென்று பேரம் பேசியதாகவும் தொலைக்காட்சி ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.

வெறும் வாயை மெல்பவனுக்கு அவல் கிடைத்த கதையாக, தொலைக்காட்சி ஊடகங்கள் வெளியிட்ட இந்தச் செய்திகளை அடிப்படையாகக் கொண்டு பெங்களூரு போலீசு தீவிரவாதியையும் அவரது உதவியாளரையும் தேடியலைந்து, ஆறு நாட்கள் கழித்து சஜ்ஜித் கானை மட்டும் ஆர்.டி. நகர் மசூதிக்கு அருகே வைத்துக் கைது செய்தது.

சஜ்ஜித்தை இரண்டு நாட்கள் போலீசு காவலில் வைத்து விசாரணை நடத்தியதில், சஜ்ஜித் தாடி வைத்திருந்த, குல்லாவும், குர்தாவும், கைலியும் அணிந்திருந்த முசுலீம் என்பதைத் தாண்டி, அவர் எந்தவொரு முசுலீம் தீவிரவாத அமைப்போடும் தொடர்பில் இருந்ததற்கோ, அவர் தற்கொலைத் தாக்குதலை நடத்தும் நோக்கில் பெங்களூருவிற்கு வந்ததற்கோ மயிரளவு ஆதாரம்கூட போலீசுக்குக் கிடைக்கவில்லை. மாறாக, சஜ்ஜித் பற்றிக் கிடைத்த உண்மைத் தகவல்கள் இவைதான்:

சஜ்ஜித், இராசஸ்தானிலுள்ள ஜுன்ஜுனு மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி. அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக ரமலான் நோன்பு காலத்தில் பிச்சை எடுப்பதற்காக பெங்களூரு வருவதை வாடிக்கையாகக் கொண்டிருக்கிறார். இப்பொழுதும் அவர், தனது மனைவியோடு மசூதி வாசல்களில் நின்றுகொண்டு தொழுகை முடித்துவரும் முசுலீம்களிடம் பிச்சை எடுப்பதற்காகவே பெங்களூரு வந்திருக்கிறார். அப்படியான பரம ஏழையான சஜ்ஜித்தைத்தான் ஊடகங்கள் தீவிரவாதியாகச் சித்தரித்துள்ளன. அதை நம்பிக்கொண்டு பெங்களூரு போலீசும் அவரைக் கைது செய்து, விசாரணை நடத்தியிருக்கிறது.

சஜ்ஜித், கெம்பேகவுடா மெட்ரோ ரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்த சமயத்தில், தான் பிச்சை எடுத்துச் சேர்த்த 150 ரூபாயை, நாணயங்களாகத் தனது இடுப்பில் முடிந்து வைத்திருந்தார். அந்தப் “பிச்சைக் காசுகள்”தான் பீப் ஒலி எழும்பவுதற்குக் காரணம். இந்த உண்மைகள் புறந்தள்ளப்பட்டு, தாடி, குல்லா, குர்தா, கைலி, பீப் ஒலி இவற்றை மட்டுமே காரணமாக வைத்து, சஜ்ஜித்தைத் தீவிரவாதியெனக் கன்னடத் தொலைக்காட்சி ஊடகங்கள் கதை கட்டியுள்ளன.

சஜ்ஜித்தின் உதவியாளர் என ஊடகங்களால் அடையாளப்படுத்தப்பட்டவர் ரியாஸ் அகமது. அவர் கடந்த முப்பது ஆண்டுகளாக பெங்களூரு நகரிலுள்ள மெஜஸ்டிக் பகுதியின் சாலையோரங்களில் கடை போட்டு கடிகாரங்களை விற்றுவரும் சிறிய வியாபாரி. தான் தீவிரவாதியின் உதவியாளராகச் சித்தகரிப்பட்டது தெரிந்தவுடன், தானே போலீசு நிலையத்திற்கு வந்து, தன்னைப் பற்றிய தகவல்களை போலீசிடம் தெரிவித்துச் சென்றார், அவர்.

“அன்றாடம் பிச்சை எடுத்து வாழ்க்கையை ஓட்டிவரும் தன்னால் யாருக்கேனும் ஒரு பைசாவாவது இலஞ்சம் தர முடியுமா?” எனக் கேள்வி எழுப்பும் சஜ்ஜித், “நடந்தவற்றை நினைத்து நான் அழத்தான் முடியும், இறைவனிடம் முறையிட முடியும், இதைத்தாண்டி, ஒரு சாதாரண ஏழையான என்னால் யார் மீதாவது கோபங்கொள்ள முடியுமா?” எனத் தனது ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது மனைவியோ, தனது கணவர் விடுவிக்கப்பட்ட பின்னர்கூட, போலீசு விசாரணை ஏற்படுத்திய அச்சத்திலிருந்து விடுபடவில்லை.

“தொலைக்காட்சிகளில் தீவிரவாதியாக அடையாளப்படுத்தப்பட்டுவிட்ட என்னை, அந்தக் காட்சிகளைப் பார்த்த யாராவது ஒருவர் அடித்தே கொன்றுவிடக் கூடுமோ?” என்ற அச்சத்தில் இருப்பதாகக் கூறுகிறார், ரியாஸ் அகமது.

“சந்தேகப்படுபவர்களை விசாரிக்காமல் இருக்க முடியுமா?” என சங்கிகளும் அவர்களது ஆதரவாளர்களும் இந்த விடயத்தை நியாயப்படுத்தக் கூடும். ஆனால், சஜ்ஜித் மீது ஊடகங்களும், போலீசும் சந்தேகப்படுவதற்கு அவரது மத அடையாளங்களைத் தாண்டி வேறெந்த அடிப்படையும் இல்லை என்பதுதான் இங்கு கவனிக்கத்தக்கது.

கோட்சே ஓர் இந்து தீவிரவாதி என்ற வரலாற்று உண்மையை மக்கள் நீதி மய்யத் தலைவர் கமலஹாசன் சொன்னதற்காக, அவரது நாக்கை அறுத்துப் போடுமாறும், அவரை வீதியில் நடமாடவிடக் கூடாதென்றும் சங்கப் பரிவாரங்களும், அவர்களது ஆதரவாளர்களும் கூச்சல் போடுகிறார்கள். இந்துவாக இருப்பவர் பயங்கரவாதியாக இருக்க முடியாது என ஆவேசப்படுகிறார், பிரதமர் மோடி. மதத்தோடு தீவிரவாதத்தைத் தொடர்புபடுத்தக் கூடாது என நடுநிலையாளர்கள் போல வாதிடுகிறார்கள், ஆர்.எஸ்.எஸ்.-இன் அல்லக்கைகள்.

இந்து பயங்கரவாதி சாத்வி பிரக்யா சிங்

ஆனால், முசுலீம்கள் விடயத்திலோ தீவிரவாதம், பயங்கரவாதங்கள் குறித்த இந்த நியாயங்களையெல்லாம் தலைகீழாகத் திருப்பிப் போடுகிறது சங்கப் பரிவாரம். “முசுலீம்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்ல; ஆனால், தீவிரவாதிகள் அனைவரும் முசுலீம்களாக இருக்கிறார்கள்” எனக் குதர்க்க நியாயம் பேசி, முசுலீம் சமூகத்தையே குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிறது, ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதம், பயங்கரவாதத்தோடு முசுலீம் மதத்தைத் தொடர்புபடுத்துவதற்குத் தயங்காத சங்கப் பரிவாரமும் அவர்களது ஆதரவாளர்களும் இந்து பயங்கரவாதம் என்ற ஒன்று இருக்கவே முடியாது என வாதிடுகிறார்கள்.

தீவிரவாதியாக முத்திரை குத்தப்பட்ட சஜ்ஜித், தனக்குத் தானே ஆறுதல் சொல்லிக்கொண்டு, பீதியில் உறைந்து போன தனது மனைவியைத் தேற்ற முயன்று வருகிறார். சஜ்ஜித் மட்டுமல்ல, பயங்கரவாத வழக்குகளில் சிக்க வைக்கப்பட்ட அப்பாவி முசுலீம்கள், செய்யாத குற்றத்திற்குப் பல பத்தாண்டு காலம் சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டு, அதற்குப் பிறகு நிரபராதிகள் என விடுதலை செய்யப்பட்ட பிறகு, நடைப் பிணங்களாக காலந்தள்ள வேண்டியிருக்கிறது. நேர்மையற்ற முறையிலும் சட்டவிரோதமாகவும் தண்டிக்கப்பட்ட அவர்களுக்கு நிவாரண உதவி அளிக்கக்கூட நீதிமன்றங்களும் அரசும் மறுத்து வருகின்றன.

ஆனால், மாலேகான் குண்டு வெடிப்பு பயங்கரவாத வழக்கை எதிர்கொண்டுவரும் இந்து பயங்கரவாதியான சாத்வி பிரக்யா சிங்கோ போபால் தொகுதியில் நாடாளுமன்ற வேட்பாளராக பா.ஜ.க.வால் நிறுத்தப்பட்டிருக்கிறார். இத்தகைய அநியாயத்தைக் கேள்விக்குள்ளாக்க வேண்டும் என்ற தார்மீக எண்ணம்கூட இன்றிப் பெரும்பான்மையான இந்துக்கள் இந்த விடயத்தைக் கடந்து போகிறார்கள். சட்டப்படி இல்லையென்றாலும், தார்மீக அடிப்படையிலாவது பிரக்யா சிங் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பதைத் திரும்பப் பெறுங்கள் எனக் கூறும் மனதிடமின்றி, இந்திய அதிகார அமைப்புகள் அறவுணர்ச்சியை இழந்து நிற்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்து பயங்கரவாதத்தை சகஜமாக எடுத்துக்கொள்ளும் மனநிலைக்குப் பெரும்பான்மையான இந்துக்கள் ஆட்பட்டிருப்பதை பிரக்யா சிங்கின் போட்டி உள்ளிட்ட பல விடயங்கள் அடுத்தடுத்து எடுத்துக்காட்டுகின்றன. இந்த சகஜ மனநிலைதான் நமது காலத்தின் மிகப் பெரும் அபாயமாகும்.

– கீரன்

ஏப்ரல் மாதத்தில் மோடியை 722 மணி நேரம் ஒளிபரப்பிய தொலைக்காட்சிகள் !

0

தொலைக்காட்சி நிறுவனங்கள் கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் பிரதமர் நரேந்திர மோடியை சுமார் 722 மணி நேரம் திரையில் காட்டியிருக்கின்றன. கடந்த ஏப்ரல் 1, 2019 முதல் ஏப்ரல் 28, 2019 வரையில் எடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களின் அடிப்படையில் இவ்விவரங்களை வெளிப்படுத்தியிருக்கிறது ஒளிபரப்பு பார்வையாளர் ஆய்வு நிறுவனம் (Broadcast Audience Research Council (BARC).)

akshay with modi
மோடியிடம் ‘அரசியல் அல்லாத பேட்டி’ எடுக்கும் நடிகர் அக்‌ஷய் குமார்

இந்தக் காலகட்டத்தில்தான் அதாவது இந்த 28 நாட்களுக்குள்ளாகத்தான் 722 மணிநேரம் தொலைக்காட்சி நிறுவனங்களால் மோடி காட்டப்பட்டிருக்கிறார். ஆனால் இதே தொலைக்காட்சி நிறுவனங்கள், இதே காலகட்டத்தில் ராகுல்காந்தியை வெறுமனே 252 மணிநேரத்திற்கும் குறைவாக மட்டுமே காட்டியுள்ளனர். அதாவது ராகுல்காந்தியை விட கிட்டத்தட்ட 3 மடங்கு அதிகமான நேரத்திற்கு இத்தொலைக்காட்சி நிறுவனங்கள் மோடியைக் காட்டியிருக்கின்றன. இத்தகவலை கடந்த திங்கள் அன்று டைனிக் பாஸ்கர் எனும் பத்திரிகை வெளியிட்டது.

இத்தனைக்கும் ராகுல்காந்தியும் மோடியும் இந்தக் காலகட்டத்தில் கிட்டத்தட்ட சம அளவிலான பேரணிகளில் கலந்து கொண்டுள்ளனர். அதாவது ராகுல் காந்தி 65 பேரணிகளிலும், மோடி 64 பேரணிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

படிக்க:
மே – 22 தியாகிகளுக்காக கூடி அழ கூட உரிமையில்லை ! தொடரும் ஸ்டெர்லைட் அடக்குமுறை !
கல்லூரி மாணவி திலகவதி படுகொலை ! தீர்ப்புக்கு முன்பே தீ மூட்டும் சாதி வெறி !

பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷாவை சுமார் 124 மணிநேரங்கள் காட்டியுள்ள தொலைக்காட்சிகள், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியை 84 மணிநேரம் மட்டுமே காட்டியிருக்கின்றன.

NaMo Tv
” நமோ டிவி ” மோடியின் விளம்பர சேனல்

முன்பெல்லாம் தேர்தல் காலம் ஆரம்பித்துவிட்டாலே வீதியில் போஸ்டர்களும் நோட்டீசுகளும் களைகட்ட ஆரம்பித்துவிடும். பல்வேறு விதமான சின்னங்கள், பல்வேறு வாக்குறுதிகள் என சுயேட்சை முதல் தேசியக் கட்சிகள் வரை அனைவரின் தேர்தல் பிரச்சாரமும் மக்களைச் சென்றடைவதற்கான வாய்ப்புகள் அகலத் திறந்திருந்தன.

ஆனால் தேர்தல் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் முதலில் சுவரெழுத்துக்களும், நோட்டீஸ்களும், சுவரொட்டிகளும் தடை செய்யப்பட்டன. ஆனால் இணையதளங்களிலும், பத்திரிகைகளிலும், தொலைக்காட்சிகளிலும் பிரச்சாரம் செய்து கொள்ளலாம் என்றன தேர்தல் விதிமுறைகள். அதாவது அச்சு மற்றும் தொலைக்காட்சி, இணைய ஊடகங்களில் விளம்பரம் கொடுத்து பிரச்சாரம் செய்ய வசதியுள்ளவர்கள் மட்டும் போட்டியிடலாம் என்பதுதான் அதன் உள் அர்த்தம்.

தேர்தல் பிரச்சார முறை என்ற பெயரில் பல்வேறு கெடுபிடிகள் அமல்படுத்தப்பட்டன. இவை அனைத்துமே பணம் இல்லாதவர்கள் யாரும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்பதை உறுதி செய்யும் வண்ணமே அமைந்திருந்தன.

மக்களிடம் யாருடைய பிரச்சாரத்தைச் சேர்க்க வேண்டும் என்பதை இன்று கார்ப்பரேட் ஊடகங்கள் தீர்மானிக்கின்றன. இணையதளம், தொலைக்காட்சி என மக்களை சென்றடையும் அனைத்து ஊடகங்களையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறது பாஜக.

இதற்காகவே சமூக வலைத்தளங்களில், திட்டமிட்டுச் செயல்படும் ட்ரோல் கும்பல்கள், பொய்ச் செய்தி பரப்புக் கும்பல்கள், பொதுக் கருத்தை உருவாக்கும் கும்பல்கள் என இணையத்தை ஆக்கிரமித்திருக்கிறது பாஜக கும்பல். தொலைக்காட்சி நிறுவனங்களோ, தமது கார்ப்பரேட் நலனுக்காக மோடியை அதிக நேரம் ஒளிபரப்புவது போன்றவற்றின் மூலம் மக்களின் மனதில் மோடி என்ற பாசிஸ்ட்டின் படையெடுப்புக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கின்றன. அதற்கான சிறந்த சாட்சிதான் இந்தப் புள்ளிவிவரங்கள்.

– நந்தன்

செய்தி ஆதாரம் :
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் : TV channels showed Modi for over 722 hours in April


தவறாமல் பாருங்க …

புருடா மன்னன் – Cloudy மோடி | கலாய் காணொளி

 

நாளுக்கு ஒரு நன்மை | அ முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
நான் அப்போது பொஸ்டனில் இருந்தேன். எங்கள் வீட்டில் இரண்டு விதமான ஆட்கள் இருந்தார்கள். உட்கார்ந்து வேலைசெய்துவிட்டு நின்று இளைப்பாறுபவர்கள்; நின்று வேலை செய்துவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவர்கள். நான் மூன்றாவது வகை. நின்று இளைப்பாறிவிட்டு உட்கார்ந்து இளைப்பாறுபவன்.

அப்படியிருக்க அன்று அதிகாலை சூரியன் எழும்ப முன்னர் நான் எழும்பிவிட்டேன். கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. அந்த நேரத்தில் யார் தட்டுவார்கள் என்று நான் யோசிக்கவில்லை. திறந்துவிட்டேன். பார்த்தால் என்னிலும் உயரமான ஒரு whitetail deer. ஆண் மான் என்றபடியால் இரண்டு பக்கமும் கிளைவிட்டு பரந்த கொம்புகளை தூக்கமுடியாமல் தூக்கிக்கொண்டு நின்றது.

நான்கு கால்களையும் சரிசமமாக ஊன்றி பக்கவாட்டில் நின்று முகத்தை மாத்திரம் திருப்பி என்னை பார்த்தது. வீட்டு அபாய மணியை அணைக்க மறந்துவிட்டதால் அது அலறத்தொடங்கியது.  வீட்டில் அன்று தூங்கிய அத்தனை நின்று இளைப்பாறுபவர்களும், உட்கார்ந்து இளப்பாறுபவர்களும் ஓடிவந்தார்கள். அப்ஸராவும் ஓடிவந்து என்னைக் கடந்து போனாள். நான் அவளைத் தூக்கிய பிறகும் அவள் கால்கள் ஓடிக்கொண்டிருந்தன. இந்தச் சத்தத்திலும் கலவரத்திலும் மான் துள்ளித் திரும்பி ஓடிவிட்டது. அபாய மணியை அணைத்துவிட்டு மற்றவர்கள் திரும்ப படுக்கைக்குப் போய்விட்டார்கள். அப்ஸரா மாத்திரம் என்னுடன் தங்கினாள்.

அவளுக்கு வயது ஐந்து. அறிவாளி. பிரச்சினைகள் என்றால் நான் ஆலோசனை கேட்பது அவளிடம்தான். எதற்காக மான் வந்து கதவை தட்டியிருக்கும் என்றேன். அது திரும்பி ஓடிவிட்ட துக்கம் என்னிலும் பார்க்க அவளுக்கு அதிகம். கண்களில் நீர் தளும்பி நின்றது. வீட்டுக்கு பின்னால் இருக்கும் காட்டில் பல மான்கள் வாழ்ந்தன. அவ்வப்போது அவை வரும், ஆனால் கதவை தட்டுவதில்லை. அப்ஸரா யோசித்துவிட்டு காலை வணக்கம் சொல்வதற்காக இருக்கலாம் என்றாள். நான் சரி அப்படித்தான் இருக்கும் என்று சொல்லி சிரிப்பு காட்டினேன். அவளும் சிரித்தாள். வந்த கண்ணீரைக் காணவில்லை. எப்படியோ கண்ணீரை கண்களால் உறிஞ்சி உள்ளே இழுத்துவிட்டாள்.

பெற்றோர் தூங்கும்போது முழு வீடும் அவளுக்குத்தான் சொந்தம். ‘இன்று என்ன நல்வினை?’ என்றாள். பூஞ்செடிக்கு தண்ணீர் ஊற்றலாம் என்று சொன்னேன். அவள் சின்னத் தலையை ஆட்டிவிட்டு போனாள். நாளுக்கு ஒரேயொரு நன்மை செய்தால் போதும் என்பது அவள் கற்றுக்கொண்டது.

நான் சிறுவயதில் படித்த பள்ளிக்கூடத்தில் ஒரு வாத்தியார் படிப்பித்தார். காந்தி வாத்தியார் என்று பெயர். ஐந்தடி நாலு அங்குலம் உயரம் இருப்பார். மேல்சட்டை அணியமாட்டார். இரண்டே இரண்டு வேட்டிகள் அவரிடம் இருந்தன. ஒன்று கிழிந்தால்தான் இன்னொரு புதிசு வாங்குவார். காந்திபோல ஒரு போர்வைதான். உரத்துப் பேசத் தெரியாது. சிரிக்கும்போதுகூட  இரண்டு ஸ்வரத்தில் மட்டும் சிரிப்பார். காந்தி வைத்திருந்ததுபோல உயரமான தடியை அவர் வைத்திருக்கவில்லை. மற்றும்படிக்கு காந்தியைப் போலவே நடந்துகொண்டார். அவர் என் அண்ணனைப் படிப்பித்தார்; தங்கையை படிப்பித்தார்; தம்பியை படிப்பித்தார். ஆனால், என் வகுப்பை அவர் படிப்பிக்கவே இல்லை. ஆனாலும் எனக்கு அவரிலே பிரியம் இருந்தது. அவர் அந்த வயதில் எனக்கு சொன்னது ‘ஒரு நாளைக்கு ஒரு நன்மை செய்தால் போதும்’ என்பது. அது சொல்லி பல வருடங்களாகிவிட்டது என்றாலும் அதை இன்னும் அவ்வப்போது நான் கடைப்பிடித்து வந்தேன். அப்ஸராவுக்கும் சொல்லியிருந்தேன். பெரிதாக ஒன்றும் இல்லை. பெரியவர்களுக்கு வணக்கம் சொல்வது; அஞ்சல் பெண்ணுக்கு நன்றி கூறுவது; முன்பின் தெரியாத ஒருவரைப் பார்த்து முறுவல் செய்வது. அவ்வளவுதான். அப்ஸரா ஒவ்வொரு செடியாக தண்ணீர் ஊற்றி வந்தாள். செடிக்கு போன தண்ணீரிலும் பார்க்க வெளியே அதிகமாக நீர் பாய்ந்து ஓடிக்கொண்டிருந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்னர் என் நண்பர் தொலைபேசியில் அழைத்திருந்தார். ஏதோ பேச்சில் காந்தி வாத்தியாருடைய பெயர் வந்தது. அவரும் மனைவியும் கஷ்டத்தில் இருக்கிறார்கள் என்றார். எனக்கு காந்தி வாத்தியாருடன் 50 வருடங்களுக்கு மேலாக தொடர்பே இல்லை. எனினும் இன்றைய என் நன்மை இதுதான் என்று தீர்மானித்து நண்பரிடம் முகவரி பெற்று காந்தி வாத்தியாருக்கு என்னால் இயன்ற சிறு தொகை பணம் அனுப்பிவைத்தேன். இங்கே சிறுதொகை ஆனால், இலங்கையில் அது பெரும் கொடை. அனுப்பியதுடன் அதை மறந்துபோனேன்.

அவர் பற்றிய சின்னச் சின்ன சம்பவங்களை மறக்க முடியவில்லை. நான் புதுப் பாடப் புத்தகம் வாங்கியதும் அதற்கு மாட்டுத்தாள் கடதாசியில் உறைபோட்டு கொண்டுபோய் என்னுடைய பெயரை எழுத காந்தி வாத்தியாரிடம் கொடுப்பேன். புத்தகங்களில் பெயர் எழுதித் தருவது அவர்தான். அவர் என் பெயரை நான் எதிர்பார்த்த மாதிரி முன்பக்கத்திலோ, மட்டையிலோ எழுதாமல் இருபதாம் பக்கத்தில் எழுதினார். ஏன் என்று கேட்க பதில் சொல்லவில்லை. ஆனால், ‘புத்தகம் பத்திரம்’ என்றார். அப்பொழுது எங்கள் பள்ளிக்கூடத்தில் புத்தகங்கள் களவு போய்க்கொண்டிருந்தன. இரண்டே இரண்டு நாளில் என் புத்தகமும் களவு போனது. நான் காந்தி வாத்தியாரிடம் போய் முறைப்பாடு செய்தேன். அங்கே படிப்பித்த எல்லா வாத்தியார்களிலும் இவரிடம் தான் பிரம்பு என்ற பொருள் இல்லை, அடிக்கவும் மாட்டார். ஆனாலும் இவரைத்தான் நான் தெரிவு செய்தேன்.

மாணவர்களிடம் அவர் கேட்கும் முதல் கேள்வி ‘இன்று என்ன நன்மை செய்தாய்?’ ஒரு நாளைக்கு ஒரு நன்மை என்பது அவர் உபதேசம். ஒரு மாணவன் ‘ஏன் சேர் இரண்டு நன்மை செய்யக்கூடாதா?’ என்று கேட்டான். அவர் ‘அது பேராசை, ஒரு நாளைக்கு ஒன்று போதும்’ என்பார்.

காந்தி வாத்தியார் எங்கள் வகுப்புக்குள் நுழைந்து எல்லோருடைய புத்தகங்களையும் வாங்கி ஒற்றையை தட்டிப் பரிசோதித்த பின்னர் திருப்பி கொடுத்துவிட்டு போனார். பள்ளிக்கூடம் முடிந்த பிறகு என்னையும், எப்பொழுதும் வகுப்பில் கடைசி வாங்கில் குடியிருக்கும் கிருட்டிணபிள்ளை என்பவனையும் தன் வகுப்பறைக்கு கூப்பிட்டார். கிருட்டிணபிள்ளை உயரமானவன். ஒரு கண்ணாடி யன்னலுக்கு பின்னால் நின்று முகத்தை அழுத்திப் பார்ப்பதுபோல சப்பையான முகம். அவன் முன்னாலே ஏதோ பரிசு வாங்கப் புறப்பட்டதுபோல நடந்துபோக நான் பின்னால் போனேன்.  அவனுடைய புத்தகத்தில் இருபதாம் பக்கம் கிழிக்கப்பட்டிருந்தது. அந்தப் புத்தகத்தை எடுத்து காந்தி வாத்தியார் என்னிடம் தந்தார். அவனுக்கு ஒரு புதுப் புத்தகம் தன் காசில் வாங்கிக் கொடுத்தார். கிருட்டிணபிள்ளை ஓர் அடி பின்னுக்கு நகர்ந்து விம்மத் தொடங்கினான். காந்தி வாத்தியார் சொன்ன அறிவுரை இதுதான். ‘நீ படிக்கவேண்டும் என்று ஆசைப்பட்டது நல்லது. ஆனால், களவெடுத்ததுதான் பிழை.’ அங்கே நடந்த விசயம் எங்கள் மூவரையும் தவிர வேறு ஒருவருக்கும் தெரியாது.

‘தாங்கள் மனமுவந்து மன நிறைவோடு அனுப்பிய பணம் வங்கிமூலம் பெற்றுக்கொண்டேன். நீங்கள் உங்களைப் பல வகையிலும், பல நிகழ்ச்சிகளிலும் நினைவூட்டி எழுதி அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். ஆனால், நீங்கள் யாரென்று எனக்கு ஞாபகமில்லை. என்னை மன்னியுங்கள்.’

அவர் வெள்ளிக்கிழமைகளில் முழு நாளும் உபவாசம் இருப்பது மாணவர்களுக்கு தெரியும். ‘பசிக்காதா சேர், உங்களுக்கு நோய் பிடிக்காதா?’ என்று கேட்பார்கள். அவர் சொல்வார், போன சனிக்கிழமையில் இருந்து அடுத்த வெள்ளிக்கிழமை நான் விரதம் என்பது எனக்கு தெரியும். என் வயிற்றுக்கும் தெரியும். அது தன்னைத் தயார் செய்துவிடும். எதிர்பார்ப்புத்தான் பசியைக் கொண்டுவருகிறது. எங்கள் ஊரில் வரும் நோய்களில் பாதிக்குமேல் தண்ணீரால் வருபவை. தண்ணீரைக் காய்ச்சிக் குடியுங்கள், பாதி நோய் போய்விடும் என்பார். அனைத்து மாணவர்களும் வீடுகளில் போய் தங்கள் தாய்மார்களை தொந்திரவு செய்வார்கள். தண்ணீரைச் சுடவைத்தால்தான் குடிப்பேன் என்று அடம் பிடிப்பார்கள். அடுத்தநாள் பெற்றோர்கள் தலைமையாசிரியருக்கு முறைப்பாடு கொண்டுவருவது நிச்சயம்.

காந்தி வாத்தியாருக்கு கடிதம் போட்டு பல வாரங்களாகியும் பதில் இல்லை. அவர் இருப்பது திருக்கோணமலையில். அங்கே நிலவரங்கள் சரியில்லை என்று தமிழ் தினசரிகளில் செய்திகள் வந்த வண்ணம் இருந்தன. ஆள் கடத்தலும் குண்டு வெடிப்புகளும் குறைந்தபாடில்லை. கடிதம் போய்ச் சேர்ந்ததோ என்றுகூடத் தெரியாது. ஒரு பதில் வந்தால் நிம்மதியாக இருக்குமே என்று நினைத்துக்கொண்டேன்.

ஆறு மாதம் கழித்து அப்ஸரா ஒரு நீலநிற வான்கடிதத்தை தூக்கிக்கொண்டு வந்து அஞ்சல் பெண் தந்ததாகச் சொல்லிக் கொடுத்தாள். அஞ்சல் பெண்ணுக்கு நன்றி சொன்னாயா என்று கேட்டேன், சொன்னேன் என்றாள். அன்றைய நாளின் நன்மை அவளுக்கு முடிந்துவிட்டது. வான்கடிதத்தை பிரிப்பதற்கு நிறைந்த பொது அறிவும், பொறுமையும் தேவை. சிறு கவனயீனமும் கடிதத்தை மூன்று துண்டுகளாக கிழித்துவிடும்.

காந்தி வாத்தியார்தான் எழுதியிருந்தார். ஒரு 15 வயதுப் பெண்ணின் கையெழுத்துப்போல ஓர் எழுத்தோடு ஒன்று முட்டாமல் வட்ட வட்டமான எழுத்துக்கள். ‘அன்புள்ள ஐயா’ என்று கடிதம் தொடங்கியதும் எனக்கு துணுக்கென்றது. நான் என்னை யாரென்று அவருக்கு நினைவூட்டுவதற்காக என் தங்கையைப் பற்றியும், தம்பியைப் பற்றியும், அண்ணனைப்பற்றியும் எழுதியிருந்தேன். நான் அவரிடம் ‘சத்திய சோதனை’ புத்தகம் பரிசு பெற்றதையும் ஞாபகப்படுத்தியிருந்தேன். ‘தங்களுடைய கடிதம் எனக்கு பெரிய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் தந்தது. அத்தோடு அதிசயமாகவும் இருந்தது. தங்கள் கடிதத்தை என் மனைவிக்கு வாசித்துக் காட்டினேன். அவர் மிகவும் சந்தோசப்பட்டார். இரண்டு நாள் கழித்து அவர் சிவபதம் அடைந்தார். அவருக்கு வயது 84. எனக்கு 90 நடக்கிறது.’ இப்படி தொடர்ந்து அவர் பல விசயங்களை நீலக் கடிதத்தின் ஓர் ஓரத்தில் இருந்து மறு ஓரம் வரை நெருக்கி நெருக்கி, கடிதத்தின் முழுப்பெறுமதியையும் பெறும்விதமாக  எழுதியிருந்தார். தான் வெள்ளிக்கிழமைகளில் நீராகாரம் மட்டுமே அருந்துவதாகவும் கடந்த 65 வருடங்களில் ஒரு நாள்கூட அதில் தவறியதில்லை என்றும் எழுதியிருந்தார். நடப்பது கஷ்டமாக இருக்கிறதாம். யாரோவுடைய சைக்கிள் பாரிலும், மோட்டார்சைக்கிள் பின் சீட்டிலும் அமர்ந்து வெளியே பயணம் செய்வதாகவும் தூர இடம் என்றால் ஓட்டோவில் போவதாகவும் கடிதத்தில் கூறியிருந்தார்.

படிக்க:
முதல் காதல் அபத்தமா ? அழியா நினைவா ? | மு.வி. நந்தினி
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

‘ஒரு நாளில் 24 மணி. ஆறு மணி சாப்பாட்டுக்காக உழைக்கவேண்டும். ஆறு மணி சுயகருமங்கள். ஆறு மணி நித்திரை. ஆறு மணி நாட்டு மக்களுக்கு சேவை.’ சனங்களுக்கு சேவை செய்யாத ஒவ்வொரு மணி நேரமும் கடவுளிடமிருந்து தூரமாகவும், மரணத்துக்கு கிட்டவாகவும் தான் நகர்வதை உணருவதாக அவர் சொன்னது நினைவுக்கு வந்தது. அவருடைய இந்தக் கொள்கையில் கடந்த 65 வருடங்களில் ஒரு மாற்றம்கூட இல்லை என்பதையும் எனக்கு தெரிவித்திருந்தார்.

காந்தி வாத்தியார் கடிதத்தை இப்படி முடித்திருந்தார்.

‘தாங்கள் மனமுவந்து மன நிறைவோடு அனுப்பிய பணம் வங்கிமூலம் பெற்றுக்கொண்டேன். நீங்கள் உங்களைப் பல வகையிலும், பல நிகழ்ச்சிகளிலும் நினைவூட்டி எழுதி அறிமுகப்படுத்தியிருந்தீர்கள். ஆனால், நீங்கள் யாரென்று எனக்கு ஞாபகமில்லை. என்னை மன்னியுங்கள்.’

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)