Sunday, June 28, 2026
முகப்பு பதிவு பக்கம் 349

ஆர்.எஸ்.எ.ஸ்-ன் அஜெண்டாதான் தேசியக் கல்விக் கொள்கை 2019 | மருத்துவர் எழிலன் | காணொளி

தேசியக் கல்விக் கொள்கை எனும் பெயரில் மோடி அரசு எவ்வாறு மனுநீதியை இந்திய மக்களின் மீது திணிக்கிறது என்பதை விளக்குகிறார் மருத்துவர் எழிலன்.

தேசியக் கல்விக்கொள்கையின் மூலம் இந்தித் திணிப்பை எவ்வாறு மத்திய அரசு நேரடியாகச் செய்கிறது ? இந்த பட்ஜெட்டில் கல்விக்கான தொகை ஒதுக்கீட்டை வெறும் 0.01% அதிகரித்துவிட்டு, இந்தி மொழி வளர்ச்சிக்காக அதிகமாக நிதியை ஒதுக்கியது ஏன்?

கல்வியின் மீதான அரசின் பிடியைத் தளர்த்தி அதனை தனியாரின் கையில் தாரை வார்க்கிறது தேசிய கல்விக் கொள்கை. அறிவியல் என்னும் பெயரில் புராணக் குப்பைகளைப் பற்றி பெருமையாகப் பேசுகிறது தேசிய கல்விக் கொள்கை..

இது தேசிய கல்விக் கொள்கை அல்ல ! ஆர்.எஸ்.எஸ்.-ன் சித்தாந்தக் கொள்கை என்பதை அம்பலப்படுத்துகிறார் மருத்துவர் முகிலன்.

பாருங்கள் ! பகிருங்கள் !

பாகிஸ்தான் உளவுத்துறையும், நானும் | அ முத்துலிங்கம்

எழுத்தாளர் அ. முத்துலிங்கம்
 இஸ்லாமபாத்தை என்னால் மறக்க முடியாது. பணி நிமித்தமாக பாகிஸ்தானின் தலைநகரத்துக்கு என்னை மாற்றியிருந்தார்கள். காலடி வைத்து பதினைந்து நிமிடங்களுக்குள்ளாக நான் ஏமாற்றப்பட்டேன்.

விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்ததும் பல டாக்ஸி டிரைவர்கள் என்னைச் சூழ்ந்து கொண்டார்கள். தாடி வைத்து தொள தொளவென்று நீண்ட மேலங்கி அணிந்த உயரமான பட்டான் சாரதி ஒருத்தர் என்னை வெற்றி கொண்டார். அவருடைய வண்டியிலே ஏறியதும் எந்த ஹொட்டல் என்று கேட்டார். நான் பயண முகவர் குறித்து தந்த ‘பேர்ல் கொன்ரினென்ரல்’ என்ற பெயரைச் சொன்னேன். அவர் ரேடியோவில் ஓர் உருதுப் பாடலை உரக்க வைத்தபடி புறப்பட்டார்.

எந்த நாட்டுக்குப் போனாலும் முதன்முதல் ஏதாவது ஓர் அதிர்ச்சி கிடைப்பது வழக்கம். இங்கே நான் பார்த்த முதல் அதிர்ச்சி மூன்று சக்கர ஒட்டோக்களில். அவற்றின் உருவத்தில் அல்ல, வேகத்திலும் அல்ல, காட்சியில். எனக்கு எதிரிலே வந்த ஒட்டோக்களிலும், என்னைத் தாண்டிப்போன ஒட்டோக்களிலும் பின் படுதாவில் நடிகை சிறீதேவியின் சிரித்த முகப் படம் பெரிதாகக் தொங்கியது. ‘அட எனக்கு முன்பாகவே சிறீதேவி இங்கே வந்து எல்லா ஒட்டோக்களையும் வளைத்து வாங்கிப் போட்டுவிட்டாரே’ என்றுதான் என்னை எண்ண வைத்தது. ஆக பாகிஸ்தானில் வந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே எனக்கு பரிச்சயமான இந்த முகம் ரோடுகள் எல்லாவற்றையும் ஆக்கிரமித்திருப்பதைப் பார்த்து சிறிது சந்தோசம் ஏற்படவே செய்தது.

என் சந்தோசம் சாரதிக்குத் தெரிந்துவிட்டது. திடீரென்று ‘எந்த பேர்ல் கொன்ரினென்ரல்?’ என்றார். இந்தக் கேள்வியை பாதி தூரம் கடந்து விட்ட பிறகுதான் கேட்டார். நான் ராவல்பிண்டி என்று சொன்னேன். அவர் எரிச்சலுடன் நாங்கள் இஸ்லாமபாத்துக்கு வந்துவிட்டோம். இதை முதலிலேயே சொல்லியிருக்கலாம் என்றபடி வண்டியைத் திருப்பினார். பயண முடிவில் நான் இரண்டு மடங்கு கட்டணம் அழவேண்டி வந்தது.

பிறகு விசாரித்து இரண்டு ஹொட்டல்கள் இல்லை என்பதைக் கண்டுபிடித்தேன். நான் சுலபமாக ஏமாறக்கூடிய ஆள் என்பதை அந்தச் சாரதி எப்படியோ அறிந்து வைத்திருந்தார். சிரித்தபடியே சிறீதேவி இவ்வளவு பெரியது துரோகம் செய்வார் என்பதை நானும் எதிர் பார்க்கவில்லை.

புராணங்களில் சொல்லப்பட்ட எட்டு நாகங்களில் ஒன்று தட்சன். இந்த நாக அரசனின் வழித்தோன்றல்கள் ஸ்தாபித்த நகரம்தான் ‘தட்சிலா’ (Taxilla) என்பது பாரம்பரியக் கதை. இது ராவல்பிண்டியில் இருந்து 30 கி.மீட்டர் தூரத்தில் இருந்தது. 2,500 வருடங்களுக்கு முன்னர் இங்கே ஓர் உலகப் புகழ்பெற்ற கல்வி மையம் செழிப்பாக வளர்ந்தது. உலகத்தின் பல்வேறு பாகங்களில் இருந்தும் கல்விமான்கள் இங்கே கூடினார்கள். அங்குலிமாலா தன் தாயைக் கொல்லப்போன போது புத்தர் தடுத்து ஆட்கொண்டது இங்கே தான் என்பார்கள். தட்சிலாவுக்கு யேசுவும் வந்திருந்தார் என்று ஹொல்கர் கேர்ஸ்டென் என்பவர் தன் புத்தகத்தில் அழுத்தமாக எழுதுகிறார்.

கி.மு 326 -ல் அலெக்ஸாந்தர் தட்சிலா அரசனான ஒம்பிஃஸின் விருந்தாளியாக மூன்று நாட்கள் தங்கி இருந்திருக்கிறார். தத்துவஞானி கௌடில்யர் இங்கேதான் அலெக்ஸாந்தருக்கு பெரிய பிரசங்கம் செய்தார். பேரரசனுக்கு எரிச்சல் உண்டானது. ஞானியின் ஒயாத வாயசைவை எப்படி நிறுத்துவது என்பது தெரியாமல் அவருடைய தலையை கொய்யுங்கள் என்று சேவகர்களுக்கு கட்டளை இட்டாராம். கௌடில்யர் தன் கால்களின் துரிதத்தினால் தன் தலையைக் காப்பாற்றினார் என்று பின்வந்த வரலாற்று ஆசிரியர்கள் இதைப்பற்றி எழுதினார்கள். இந்த விவரங்களை சரித்திரக்காரர்களிடம் விட்டுவிட்டு என்னுடைய சரித்திரத்துக்கு வருவோம்.

படிக்க:
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?
♦ காஞ்சிபுரம் அத்தி வரதர் கெடுபிடியில் ஆட்டோ ஓட்டுநர் தீக்குளிப்பு !

நான் சூரியக் கோயிலையும் அங்கே உள்ள பிரபலமான இரட்டைத் தலை கழுகு உருவத்தையும் பார்த்தபடி நின்றேன். எனக்கு சற்று தூரத்தில் இருந்த சிதிலமான 2000 வருடவயதான சுவரில் ஒருத்தர் தன் 40 வயது கால்களை பதித்தபடி குந்தியிருந்தார். மிகப் பெரிய கொட்டாவி ஒன்றை உருவாக்க நினைத்து பாதியிலே அது சரியாகப் போகாததால் நிறுத்திவிட்டு இன்னொரு முயற்சி செய்யும் யோசனையில் இருந்தார். என்னைக் கண்டதும் தன் பின்னங் கால்களை 2000 வருட சுவரில் இருந்து இறக்கி நிலத்தில் வைத்து நிமிர்ந்தார். முரட்டு சால்வை போர்த்தியிருக்கும் ஆறடி உயரம், பச்சைக் கண்கள். என்னிடம் ஏதோ சதிக்கு கூப்பிடுவது போல கிட்ட வந்து தன் உள்ளங்கையில் மறைத்து வைத்த ஒரு நாணயத்தை மெல்லத் திறந்து காட்டினார். நெளிந்த வட்ட நாணயம் மிகப்பழசானது. அலெக்ஸாந்தர் காலத்தில் இருந்து பரம்பரை பரம்பரையாக தங்கள் குடும்பத்தில் இதைப் பாதுகாத்து வருவதாகவும் வறுமை காரணமாக விற்கவேண்டி இருப்பதாகவும் கூறினார்.

மாதிரிப் படம்

நாணயத்தை வாங்கிப் பார்த்தேன், சந்தேகமே இல்லை. அலெக்ஸாந்தர் தலை போட்ட யானைத்தோல் கவசம் அணிந்த பிரபலமான நாணயம். பேரம் நடந்தது. இருபது டொலருக்கு வாங்கிவிட்டேன். இதன் விலை வெளியே நூறு மடங்கு இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

ஒரு நண்பர் தன்னிடம் அதுபோல் இருப்பதாகக் கூறினார். இன்னொருத்தர் தன்னிடம் இரண்டு நாணயங்கள் இருப்பதாகச் சொன்னார். கடைசியில் பார்த்தால் இஸ்லாமபாத்தில் இந்த நாணயம் இல்லாதவரே ஒன்று இரண்டு பேர்கள்தான் என்று தெரிய வந்தது. நாணயம் விற்க வந்தவரிடம் நாணயம் எதிர்பார்த்தது என் குற்றம் என்று மனைவி உற்சாகத்துடன் சுட்டிக்காட்டினாள்.

அந்த வருடம் நல்ல வருடம். என் நண்பர்களில் ஒருத்தராவது கடத்தப்படவில்லை. ஒருத்தராவது குண்டு வெடிப்பில் இறக்கவில்லை. ஒருத்தராவது சிறையில் அடைக்கப்படவில்லை. லாகூரிலே பார்க்க வேண்டியது எல்லாவற்றையும் பார்த்தாகிவிட்டது, இன்னும் ஒரு சில காட்சிகளே எஞ்சி இருந்தன. இந்தக் கடைசிக் கட்டத்துக்கு ஒரு வழி காட்டியை வைத்தால் வேலை சுலபமாக முடிந்துவிடும் என்று மனைவி அபிப்பிராயப்பட்டாள்.

முத்து மசூதிக்கு கிட்ட இரண்டு காட்டு மயில்கள் சனசந்தடியைப் பொருட்படுத்தாமல் எதையோ கொத்திக்கொண்டிருந்தன. ஒரு பெட்டிக் கடையில் சிலர் ‘நாண்’ ரொட்டியை வாங்கி மொகலாய மன்னர்கள் கண்டுபிடித்த பந்து இறைச்சிக் குழம்பில் தோய்த்து தோய்த்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.

அந்த பஞ்சாபி வழிகாட்டி குஞ்சம் வைத்த தலைப்பா கட்டியிருந்தார். பஸ் நிலையத்தில் சகாயவிலைக் கடையில் வாங்கிய இருபது ரூபா கறுப்புக் கண்ணாடியை மாட்டியபடி, இரண்டு நாள் வயதான பறவை எச்சமோ, அணில் எச்சமோ, வினை எச்சமோ ஏதோ ஒன்றை வெள்ளையாக தன் தோளிலே அவருடைய தகுதிக்கு ஏற்றவாறு தரிக்திருந்தார். அவருடைய கட்டணம் எவ்வளவு என்பதைக் கறாராக பேசி முடிவு செய்தோம்.

தன் தகப்பனைப் போல ஒளரங்கசீப் கட்டிடக்கலையில் ஆர்வம் காட்டவில்லை. அபூர்வமாக அவர் கட்டிய அலாம்கீர் வாசலை ஏதோ தான்தான் கட்டிமுடித்தது போல வழிகாட்டி பெருமையாகக் காட்டினார். அதன் பிறகு ஷாஜஹான் கட்டிய சீஸ் மஹாலைப் பார்த்தோம். முழுக்க முழுக்க கண்ணாடிகள் பதித்துக் கட்டிய மாளிகை. அதன் உட்புறத்தில் வழிகாட்டி நெருப்பு கொழுந்தைப் பற்றவைத்து வீசி வீசிக்காட்டிய போது எங்கும் தீக்கொழுந்து மின்னல்போல பரவி ஒளியடித்தது.

இறுதியாக ‘நவ்லாக்’ என்ற மண்டபம். வளைந்த சலவைக்கல் விமானம் முழுக்க கலாபூர்வமான உள்வண்ண வேலைப்பாடுகள் நிறைந்திருந்தன. அதைப் பார்த்து அசந்துபோய் சில நிமிடங்கள் பேச்சு வராமல் நின்றோம். ‘நவ்லாக்’ என்றால் ஒன்பது லட்சம். எதற்காக ஒன்பது லட்சம் என்று பேர் வைத்தார்கள் என்று கேட்டேன். ஒன்பது லட்சம் உள் வேலைப்பாடுகள் கொண்டதாக இருக்கலாம் என்பது என் அபிப்பிராயம். எங்கள் வழிகாட்டி சொன்ன பதில் ஆச்சரியத்தை தந்தது. தாஜ்மஹாலை உலகத்துக்கு தந்த ஷாஜஹானுக்கு கட்டிடங்கள் கட்டுவதே வேலை. அவரிடம் உயர்ந்த கணக்காளர்கள் இருந்தார்கள். வேலை நடக்கும் போதே ஒவ்வொரு செலவுக்கும் நுணுக்கமாக கணக்கு எழுதி வைத்துவிடுவார்கள். இந்த மண்டபம் முடிந்தபோது ஷாஜஹான் செலவு எவ்வளவு என்று கேட்டிருக்கிறார். கணக்காளர்கள் அவசரமாக கூட்டிப் பார்த்தபோது மிகச் சரியாக ஒன்பது லட்சம் காட்டியதாம். அப்படியே அதன் பெயரைக் சூட்டிவிட்டார்கள்.

படிக்க:
கனமழை : சிக்கித் திணறும் மும்பை | படக்கட்டுரை
♦ அமெரிக்க உளவாளி | அ.முத்துலிங்கம்

எங்கள் சுற்றுலா ஒருவாறாக முடிவை நெருங்கியது. முழங்கால் தெரிய உடை உடுத்திய வெள்ளைக்காரப் பெண்மணி ஒருத்தி தனியாக, கையிலே ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு, சுவர்களை ஆராய்ந்தபடி நின்றார். அவரை சிறுவர்கள் சூழ்ந்து, கைகளைப் பக்கவாட்டில் நீட்டி ரஸ்ய எழுத்துக்கள் போல ஒருவரை ஒருவர் தொட்டுக்கொண்டு நின்றார்கள். வழிகாட்டி திடீரென்று அவசரம் காட்டினார். எங்களை சீக்கிரத்தில் முடித்துவிட்டு அந்தப் பெண்ணின் வாடிக்கையை பிடிப்பதற்காக விடை பெற்றுக்கொண்டு அவளை நோக்கி ஒடினார். நாங்கள் வீட்டிற்கு வந்த பிறகு தான் வழிகாட்டி மீதி ஒன்பது ரூபாய்க்கு பதில் நாலு ரூபா கொடுத்தது தெரியவந்தது. ஒன்பது லட்சத்துக்கு ஒழுங்காக கணக்கு வைத்த பேரரசன் கதையைச் சொன்னவர் ஒன்பது ரூபாய் கணக்கில் தவறியது எனக்கு கொஞ்சம் ஏமாற்றத்தை தந்தது.

என்னடா எல்லோரும் எப்ப பார்த்தாலும் என்னை சுலபமாக ஏமாற்றிவிடுகிறார்களே என்று அலுத்துக்கொண்டேன். அந்தச் சமயம் பார்த்து பாகிஸ்தான் உளவுத்துறை என்னிடம் சிக்கியது. அவர்கள் என்னிடம் ஏமாறும் சந்தர்ப்பமும் வாய்த்தது.

என்னுடைய இஸ்லமாபாத் வாழ்க்கையில் ஒருமுறை இந்திய தூதரகத்தில் நடந்த ஒரு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தேன். இங்கே இந்தியர்களுடன் பழகக்கூடாது என்று நாங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தோம். இருந்தும் ஒரு பலமான, பழமையான உந்துதலால் இந்த விருந்துக்குப் போவதென்று நானும் மனைவியும் முடிவு செய்தோம்.

நாங்கள் இங்கே வசித்த காலங்களில் என் மனைவி மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டாள். கூந்தலில் பூ வைப்பதும், நெற்றியில் பொட்டு வைப்பதும் ஆபத்தான காரியங்கள். உங்களை இந்தியர் என்று நினைத்து தொடரத் தொடங்கிவிடுவார்கள். அது தவிர சேலை உடுத்தும் போது இடைதெரியும் அபாயம் இருந்தது. சல்வார் கமிஸ் உடை சகல அங்கங்களையும் மறைக்க வல்லது. ஆகவே எல்லா அங்கங்களையும் சேமமாக எடுத்துக் கொண்டு எங்கேயும் பயமில்லாமல் போகலாம், வரலாம்.

விருந்துக்குப் போய்விட்டுத் திரும்பும்போது எங்கள் காரைத் தொடர்ந்து நீண்ட நேரமாக இன்னொரு கார் வந்தது. உளவுத்துறையில் முன் அனுபவம் இல்லை எனக்கு. நான் அதை வித்தியாசமாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் அடுத்த நாள் காலை வீட்டுக் காவல்காரர்களும், கார் சாரதியும் உளவுத்துறையினரால் தாங்கள் விசாரிக்கப்பட்டதாக சொன்னார்கள்.

அதன் பிறகு நாங்கள் வெளியே புறப்பட்டபோதெல்லாம் தொடரப்பட்டோம். முதலில் பயம் வந்தது. பிறகு ஒரு ஜேம்ஸ்பொண்ட் படம் பார்ப்பது போன்ற திரில்லுடன் இதை அனுபவிக்கும் ஆசை துளிர்விட்டது. ஆனால் நாலாவது நாளே இந்த நனைந்த கோழியில் வேலை இல்லை என்று அவர்கள் கைவிட்டு விட்டார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வேறு கோழியைப் பார்க்கப் போயிருக்கலாம்.

இந்த நாலு நாட்களும் என் வாழ்க்கையிலே மறக்கமுடியாத, சந்தோசமான நாட்கள். நான் எங்கு போனாலும் ஒரு கார் என்னைத் தொடர்ந்தது. அடிக்கடி திரும்பிப் பார்த்து அவர்கள் என்னைத் தொடர்கிறார்கள் என்பதை உறுதி செய்துகொண்டு பயணம் செய்தேன். அவர்கள் என்னைத் தவறவிட்டு விடக்கூடாது என்பதற்காக வளைவுகளில் நின்றும், இன்னும் சில நேரங்களில் வேகத்தை குறைத்தும் உதவி செய்தேன். சில வேளைகளில் அவர்கள் போதிய சிரத்தை காட்டாமல், தவறான திருப்பங்களை எடுக்கும்போது இவர்கள் தங்கள் தொழிலை தீவிரத்துடன் செய்யவில்லை என்ற முறைப்பாட்டை அவர்கள் மேலதிகாரிகளுக்கு தெரிவிப்போமா என்றுகூட யோசித்தது உண்டு.

ஒர் உலகளாவிய உளவாளி எப்படி இருப்பான் என்று யோசித்து அதற்குத் தக்க மாதிரி உடை அணியவும், பேசவும், நடக்கவும் பழகிக் கொண்டேன். டெலிபோனில் கதைக்கும் போது சில சங்கேத வார்த்தைகளைச் சேர்த்துக்கொண்டேன். என் பாதைகளையும், கிளம்பும் நேரங்களையும் அடிக்கடி மாற்றவும், முன்பின் தெரியாத மனிதர்களுடன் ரகஸ்யமான வாய் அசைவுகளுடன் பேசவும் கற்றுக் கொண்டேன்.

இவை ஒன்றும் பெரிய பலனைத் தரவில்லை.

எவ்வளவுதான் நான் உலகத்தர உளவாளியாக இருந்தாலும் வீட்டிலே சாதாரண மனுசன்தானே. ஒரு வெள்ளிக்கிழமை காலை, இது அங்கே விடுமுறை தினம், என் மனைவி ஜும்மா சந்தைக்குப் போக வேண்டும் என்றாள். இது இஸ்லாமபாத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கூடும் பிரம்மாண்டமான சந்தை. பொருட்கள் வாங்க அங்கே சனங்கள் நெருக்கியடித்துக் கொண்டு வருவார்கள். ஒர் உலகப் புகழ் உளவாளி செல்லக்கூடிய சந்தை அல்லதான், ஆனாலும் இதை மனைவிகளுக்குப் புரிய வைப்பது எப்படி.

சரி என்றேன். சில துப்புகள் கிடைத்தாலும் கிடைக்கலாம். இந்த இடம் எனக்கு அவ்வளவு பழக்கமில்லாதது. கண்களை ஏமாற்றும் வளைவான தெருக்களும் ஒரு வழிப்பாதைகளும் நிறைந்தது. நான் ஒரே மூச்சில் சந்தையை அடைந்துவிட்டேன். அங்கே என் மனைவி ஒரு ‘புக்காரா’ கம்பளத்தை இரண்டு மணி நேரம் பேரம் பேசி வாங்கி முடித்துவிட்டாள்.

ஆனால் திரும்பும் போது வழி மறந்துபோய்விட்டது. ஒரு வழிப் பாதைகள் என்னை தொடங்கிய இடத்துக்கே மீண்டும் கொண்டு போய் சேர்த்தன. அப்பொழுது நான் என்னை தொடர்ந்து வந்த கார்காரரை அணுகி வழிதவறிவிட்டதைச் சொன்னேன். அவர் நல்ல மனிதர். தான் வழி காட்டுவதாக முன்னே சென்றார். விலாசம் கொடுக்காமலே என் வீட்டு வாசலுக்கு அலுங்காமல் என்னைக் கொண்டு போய்ச் சேர்த்தார்.

இப்படி என்னை வேவு பார்க்க அனுப்பப்பட்டவர்கள் முன்னே செல்ல, நான் பின்னே சென்றேன். உலக உளவுத்துறை சரித்திரத்தில் இது ஒரு பெரிய சாதனையாக அமைந்தது.

அ. முத்துலிங்கம்

எழுத்தாளர் முத்துலிங்கத்தின் இணைய தளம்

எழுத்தாளர் அறிமுகக் குறிப்பு :
இலங்கையில் கொக்குவில் என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தேன். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்ததன் பின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும், இங்கிலாந்தின் சாட்டட்ர்ட் மனேஜ்மெண்ட் அக்கவுண்டண்ட் படிப்பையும் பூர்த்தி செய்து வேலை பார்த்தேன். பின்னர் ஐ.நாவுக்காக பல வெளிநாடுகளில் பணிபுரிந்தேன். 2000ம் ஆண்டில் ஓய்வு பெற்று கனடாவில் மனைவியுடன் வசிக்கிறேன். பிள்ளைகள் இருவர், சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி என் கதைகளில் வரும் அப்ஸரா.

அறுபதுகளில் எழுத ஆரம்பித்து சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நேர்காணல்கள், நாடகங்கள், நாவல்கள் என எழுதியிருக்கிறேன்.

(அ.முத்துலிங்கத்தின் தளத்தில் வெளிவந்துள்ள கட்டுரைகளை அவரது அனுமதியுடன் இங்கே வெளியிடுகிறோம்.)

ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு – மரணங்கள்

ரேஷன் கார்டு மரணங்கள்

ன்று வெளியாகியிருக்கும் ஆங்கில இந்து நாளிதழில் (ஜூலை 13) ஒரு கட்டுரை வெளியாகியிருக்கிறது. Death by digital exclusion? என்ற தலைப்பில் வெளியாகிருக்கும் இந்தக் கட்டுரை இந்தியாவின் மிகவும் பின்தங்கிய மாநிலங்களில் ஒன்றான ஜார்க்கண்டில், ஆதார் கணக்குடன் ரேஷன் கார்டுகளை இணைக்காதது, Point of Sales எந்திரங்கள் இயங்க இன்டர்நெட் இணைப்பு இல்லாததால் பொருட்களை விநியோகம் செய்ய முடியாதது ஆகிய காரணங்களால், பழங்குடியின மக்களுக்கு ரேஷன் பொருட்கள் சரியாக சென்று சேர்வதில்லை. இதனால், அந்த மாநிலத்தில் பட்டினிச் சாவுகள் அதிகரித்திருக்கின்றன என்கிறது கட்டுரை. 

‘ஒரே நாடு – ஒரே ரேஷன் கார்டு’ திட்டத்தின் கீழ் இங்கே ரேஷன் கார்டு வாங்கினால், இந்தியாவில் எங்கே வேண்டுமானாலும் போய் ரேஷன் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என்கிறார்களே, அவர்களுக்கு இந்தக் கட்டுரை பதில் சொல்கிறது. வட மாநிலங்களில் உள்ள பொது விநியோகத் திட்டத்தில் அந்தந்த மாநில மக்களுக்கே பொருட்களை சரியாக விநியோகிக்க முடியாதபோது, எப்படி பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களுக்கு விநியோகிப்பார்கள் என்ற கேள்வியையும் எழுப்புகிறது.

கடந்த 2017-ம் ஆண்டு ஜார்கண்ட் மாநிலத்தில் பட்டினிக்கு பலியான 11 வயது சிறுமி சந்தோஷி.

பிஹாரிலிருந்து 2000-வது ஆண்டில் உருவாக்கப்பட்ட மாநிலம் ஜார்க்கண்ட். தற்போது பாஜக-வின் ரகுபர்தாஸ் முதல்வராக இருக்கிறார். மாநிலம் உருவாக்கப்பட்டதிலிருந்து 2006-ம் ஆண்டுவரையிலும்; 2010-லிருந்து 2013 வரையிலும்; 2014-லில் இருந்து தற்போது வரையிலும் பா.ஜ.க. ஆட்சி செய்கிறது. நடுநடுவே ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆட்சியில் இருந்திருக்கிறது.

பொது விநியோகத் திட்டத்தை டிஜிட்டல்மயமாக்கும் சோதனை தற்போது இந்த மாநிலத்தில் நடந்துவருகிறது. இதில் உள்ள குளறுபடிகள் காரணமாக, உணவு தானியம் கிடைக்காமல் பட்டினியால் 2017 செப்டம்பரிலிருந்து 2019 ஜூன் வரை 20 பேர் உயிரிழந்துள்ளனர். கடைசியாகச் செத்தவர் லடேஹர் கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திர முண்டா. இவர் கிராமத்திற்கு பல மாதங்களாக ரேஷன் பொருட்களே வரவில்லை.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பொது விநியோகத் திட்டத்தில் பொருட்களை வாங்க பல விஷயங்களைச் செய்ய வேண்டும். முதலில் ரேஷன் கார்டு இருக்க வேண்டும். பிறகு ஆதார் அட்டை இருக்க வேண்டும். அதற்குப் பிறகு இரண்டையும் இணைக்க வேண்டும். இங்கிருக்கும் ரேஷன் கடைகளில் பாய்ண்ட் ஆஃப் சேல் மிஷின் மூலம்தான் விற்பனை நடக்கிறது. அது இயங்க இன்டர்நெட் வேண்டும். இதெல்லாம் சரியாக இருந்தால்தான் ரேஷன் பொருட்கள் கிடைக்கும்.

சில இடங்களில் ரேஷன் கடைகளுக்குப் பொருட்கள் வந்துவிடும். ஆனால், இன்டர்நெட் இல்லாததால் பொருட்களை பயனாளிகளுக்கு விநியோகிக்க முடியாத நிலை.

படிக்க :
♦ கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை
♦ ஜார்கண்ட் – தொடரும் பட்டினி மரணங்கள் !

இதற்கு நடுவில் அதிகாரிகள் இடும் பல உத்தரவுகள், நிலைமையை மோசமாக்கியிருக்கின்றன. 2017-ல் தலைமைச் செயலராக இருந்த ராஜ்பாலா வர்மா, ஆதாருடன் இணைக்காத ரேஷன் கார்டுகளை ரத்துசெய்ய உத்தரவிட்டார். இது மிகப் பெரிய அளவில் பயனாளிகளை பொதுவிநியோகப் பட்டியலில் இருந்து நீக்கியது. இதைவிட இன்னொரு கொடுமை நடந்தது. சத்தர்பூரில் இருந்த துணை வட்டாட்சியர் ஒரு உத்தரவை வெளியிட்டார். அதன்படி ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கழிப்பறையைப் பயன்படுத்தாதவர்களுக்கு ரேஷன் பொருட்கள் இல்லை என அறிவிக்கப்பட்டது.

இதற்குப் பிறகு, பயனாளிகளுக்கு நேரடியாக பணம் வழங்கும் முறை பரிசோதிக்கப்பட்டது. ஆனால், வங்கிக் கணக்கில் வந்து விழும் பணத்தை வந்து எடுக்க ஒரு நாளும் பொருட்களை வாங்க ஒரு நாளும் ஆனதால், கடும் எதிர்ப்பு எழுந்ததையடுத்து இந்தத் திட்டம் இப்போதைக்கு கைவிடப்பட்டது.

இந்த மாநிலத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் மோசமாக செயல்படுத்தப்படுவது நிலைமையை இன்னும் மோசமாக்கியிருக்கிறது.
இதுவரை பட்டினியால் இறந்துபோன 20 பேரில் 11 பேர் ஆதிவாசிகள். 4 பேர் தலித்துகள். 11 பேர் பெண்கள். 13 பேர் ஆதார் கணக்கை ரேஷன் கார்டுடன் இணைக்க முடியாததால் இறந்துபோனவர்கள்.

கட்டுரைக்கான சுட்டி கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது. படித்துப் பாருங்கள் பல விஷயங்கள் புலப்படும்.

Death by digital exclusion? : on faulty public distribution system in Jharkhand

நன்றி : முரளிதரன் காசி விஸ்வநாதன்
ஃபேஸ்புக் பதிவிலிருந்து…

ஜாலியன்வாலாபாக் படுகொலையும் உத்தம் சிங்கின் இருபதாண்டு கால காத்திருப்பும் !

0

பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சி இந்தியாவில் நடத்திய மிக பயங்கரமான துப்பாக்கிச்சூடு சம்பவமான ஜாலியன்வாலாபாக் படுகொலையின் நூற்றாண்டு நினைவு இந்த ஆண்டு அனுசரிக்கப்பட்டுவருகிறது.

அதனையொட்டி ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு பழிவாங்கிய போராளி உத்தம் சிங் குறித்து ‘The Patient Assassin’ என்ற நூலை பத்திரிகையாளர் அனிதா ஆனந்த் எழுதியிருக்கிறார். அந்த நூலுக்கு Francis P Sempa எழுதிய விமர்சனத்தின் தமிழாக்கம் இந்தப் பதிவு.

♦ ♦ ♦

1919 ஏப்ரல் 13-ம் தேதி, பஞ்சாப்பின் அம்ரித்சர் தங்கக் கோயில் அருகே இருந்த ஜாலியன்வாலா பாக் பூங்காவில் கூடியிருந்த போராட்டக்காரர்களை ஜெனரல் ரெக்ஸ் டயர் (General Reginald Rex Dyer) தலைமையிலான பிரிட்டீஷ் மற்றும் ஏகாதிபத்திய படைகள் சுட்டுவீழ்த்தின.

போராட்டத்துக்காக திரண்டிருந்த 400-லிருந்து 600 மக்கள் அந்த இடத்தில் வீழ்ந்தனர். ஏராளமானவர்கள் காயமடைந்தனர். பத்து நிமிடங்கள் நீடித்த அந்த துப்பாக்கிச்சூட்டிலிருந்து தப்பித்து, ஓட முயற்சித்த பலர் சுடப்பட்டனர். உயிர் பிழைக்க பூங்கா சுவர் ஏறியவர்களும் இரக்கமில்லாமல் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை அல்லது அம்ரித்சர் படுகொலை குறித்து அப்போதைய இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் பாராளுமன்றத்தில், ‘இது ஒரு படுகொலை. ஒரு பயங்கரமான நிகழ்வு’ என கூறினார். “இந்த சம்பவம் பிரிட்டீஷ் பேரரசின் நவீன வரலாற்றில் முன்மாதிரி அல்லாத ஒன்று” எனவும் அவர் பேசினார். பிரிட்டீஷ் வரலாற்றாசிரியர் ஏ.ஜே.பி டெய்லர் இந்தப் படுகொலை, “பிரிட்டீஷ் ஆட்சியில் இந்தியர்கள் அந்நியப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்திய தருணம்” என எழுதினார்.

நீண்ட காலம் பிபிசி-யில் பணியாற்றிய பத்திரிகையாளர் அனிதா ஆனந்த், ஜாலியன்வாலாபாக் படுகொலையின் பின்னணியில் உத்தம் சிங் குறித்த மிக சுவாரஸ்யமான கதையைக் கூறியுள்ளார். ‘கீழ்சாதி’யைச் சேர்ந்த பஞ்சாபியான உத்தம் சிங், ஜாலியன்வாலாபாக்கில் கொல்லப்பட்டவர்களுக்காக அவர்களைக் கொல்லக் காரணமாக இருந்த பிரிட்டீஷ் அதிகாரிகளை பழிவாங்க தன்னுடைய 21 ஆண்டுகாலத்தை செலவழித்து திட்டமிட்டார்.

1940, மார்ச் 13-ம் நாள், லண்டனில் கேக்ஸ்டன் ஹாலில் நடந்த கிழக்கு இந்திய சங்கத்தின் சந்திப்புக்கு வந்திருந்த சர் மைக்கேல் ஓ. டயரை (Michael O’Dwyer) கொன்றார் உத்தம் சிங். ஜாலியன்வாலாபாக் படுகொலையின்போது பஞ்சாப் கவர்னராக இருந்தவர் டயர். பிரிட்டீஷின் நடவடிக்கைக்கு ஒப்புதல் அளித்தவரும் இவரே. அதன்பின் ஆதரித்தும் பேசியவர். இந்த சம்பவத்தில் மூன்று பிரிட்டீஷ் அதிகாரிகளும் காயமுற்றனர்.

படிக்க:
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
♦ ஜாலியன்வாலா பாக் நூற்றாண்டு : தொடருகிறது விடுதலைப் போராட்டம் !

“உத்தம் சிங், துப்பாக்கி விசையை அழுத்திய அந்தக் கணம்,அவர் பிரிட்டனின் அதிகம் வெறுக்கப்பட்ட நபராகவும், இந்தியாவின் கதாநாயகனாகவும் சர்வதேச அரசியலில் மதிப்புள்ள ஒரு கதாபாத்திரமாகவும் மாறினார்” என எழுதுகிறார் அனிதா.

அனிதாவின் பார்வையில் உத்தம் சிங், வில்லனும் அல்ல புனிதரும் அல்ல !

Francis P Sempa

பிரிட்டீஷ் ஒடுக்குமுறை இந்திய தேசிய நம்பிக்கைகளுக்கு எதிர்ப்பு குறித்த பரப்புரைகளாலும் படுகொலை காரணமாகவும் உத்தம் சிங் தீவிரமயப்படுத்தப்பட்டார். முதலில் கம்யூனிஸ்ட் இயக்கமாகவும் பிறகு நாசிக்களாகவும் மாறிய இந்திய தேசிய ராணுவத்தால், பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சியை பலவீனப்படுத்த அவர் பயன்படுத்தப்பட்டார்.

இந்த நூலை எழுதிய அனிதா ஆனந்த், இந்தப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புள்ளவர். அந்த சமயத்தில் பதின்பருவத்தில் இருந்த இவருடைய தாத்தா, படுகொலையின்போது அம்ரித்சரில் இருந்தார். பிரிட்டீஷ் படைகள் ஜாலியன்வாலாபாக் வருவதற்கு சற்று முன்பான அவர் அங்கிருந்து வெளியேறினார். தன்னுடைய நண்பரை இந்தத் தாக்குதலில் பலிகொடுத்தார்.

அனிதாவின் கணவர் குடும்பமும் பஞ்சாபிலிருந்து வந்ததுதான். அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் உத்தம் சிங்குடன் வசித்தவர். அவருடைய பார்வை இந்திய தன்மையுடன் உள்ளது, அது தவறானதல்ல எனினும், அது முழுமையாக இல்லை. பிரிட்டீஷ் பார்வை முழுமையாக இல்லை என்றும் சொல்ல முடியாது, ஆனால் ஒப்பீட்டளவில் குறைவானதாகவே உள்ளது.

பேரரசின் அடையாளமாக இருந்த பிரிட்டீஷ் மகுடத்தில் ஒரு ஆபரணமாக இருந்தது இந்தியா. சிறிய அளவிலான பிரிட்டீஷ் இராணுவத்தாலும் அரசியல் உயரடுக்கைச் சேர்ந்தவர்களாலும் துணைகண்டத்தில் இருந்த உள்ளூர் உயரடுக்கைச் சேர்ந்தவர்களைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது அது. பிரிட்டன் தனது பேரரசை தேவைப்படும்போது இரக்கமின்றி ஆட்சி செய்தது, இந்தியாவில் இருந்த பிரிட்டனின் அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தின் மீது பிடிப்புடன் இருப்பதை புரிந்து வைத்திருந்தனர்.

கிளர்ச்சியின் முதல் அறிகுறியில் பிரிட்டனின் நடத்தையை அனிதா இப்படிச் சொல்கிறார், “தொடக்கத்திலேயே செயல்படுங்கள், தீர்க்கமாக செயல்படுங்கள், வலிமையைக் காட்டுங்கள் அல்லது ஆபத்து துடைத்தெறியப்பட வேண்டும்”.

1857-ன் இந்திய சிப்பாய் கலகம் இது தொடர்பாக ஒரு பாடத்தை வழங்கியிருக்கிறது. கொல்கத்தாவில் பிரிட்டீஷ் இராணுவத்தில் பணியாற்றிய சிப்பாய்கள் செய்த கலகம், வட இந்தியா முழுவதும் வேகமாக பரவியது.

“கிளர்ச்சியாளர்கள் இப்பகுதி முழுவதும் வெடித்தெழுந்தனர்” என எழுதுகிற அனிதா, “ஒரு சிறுபான்மையினர் பிரிட்டீஷ் பொதுமக்களுக்கு எதிராக சொல்லமுடியாத குற்றங்களை செய்தனர். 200-க்கும் மேற்பட்ட பிரிட்டீஷ் குழந்தைகள் மற்றும் பெண்களை பிபிகரில் கொன்றனர். இந்த சம்பவங்களில் தொடர்பில்லாத பலரையும் சேர்த்து, கிட்டத்தட்ட ஒரு லட்சம் சிப்பாய்களை தூக்கிட்டதன் மூலம் பிரிட்டீஷ் அரசாங்கம் தனது பழிவாங்கலைச் செய்தது.

1857 சிப்பாய் கலகம் இந்திய வரலாற்றில் முதல் சுதந்திரப் போர் என பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக இந்திய அரசு வெளியிட்ட தபால்தலை.

பிரிட்டீஷ் அதிகாரிகள் ஏப்ரல் 1919-ம் ஆண்டும் சிப்பாய் கலகம் போன்றதொரு சம்பவம் நடக்கக்கூடாது என்றே கருதினர். தன்னாட்சி அதிகாரத்துக்கான காந்தியின் அகிச்சை இயக்கம், இந்திய புரட்சிகர இயக்கத்தினரால் கடத்தப்பட்டதாக அவர்கள் கருதினர். ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு, டெல்லியில் அராஜகம் கட்டவிழ்த்துவிடப்பட்டது. அதன் பின், பஞ்சாபில் கலவரங்கள் வெடிக்க ஆரம்பித்தன. படுகொலைக்கு மூன்று நாட்களுக்கு முன், காந்தியையும் மேலும் இரண்டு காலனிய எதிர்ப்பு தலைவர்களையும் பிரிட்டீஷ் போலீசு கைது செய்தது. இந்தக் கைதை கண்டிக்கும் வகையில் ஒரு கும்பல் அம்ரித்சரில் சில ஐரோப்பியர்களை தாக்கியது, இது உள்ளூர் போலீசால் தடுத்து நிறுத்தப்படவில்லை. இந்த கும்பல் ஐவரைக் கொன்று, மூன்று பேரை தெருவில் வைத்து எரித்தது. ஒரு மூத்த மிஷனரி பெண்ணை கடுமையாக தாக்கி, கொன்றது இந்த கும்பல்.

ஏப்ரல் 13-ம் தேதி காலையில் ஜெனரல் டயர், நகரின் பல்வேறு இடங்களில் பொது கூட்டம் நடத்தவோ, கூட்டமாகவோ கூடக்கூடாது என்றும் அப்படி கூடினால் படைகளால் சிதறியடிக்கப்படுவீர்கள் எனவும் பொது அறிவிப்பைச் செய்தார். அவருடைய எச்சரிக்கையை புறம்தள்ளிவிட்டு, 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரையிலான மக்கள் ஆயுதங்களை ஏந்தி, ஜாலியன்வாலாபாக்கில் கூடினர்.

படிக்க:
♦ பட்டேல் சிலைக்கு 3000 கோடி – ஜாலியன் வாலாபாக் நினைவிடத்திற்கு 1 ரூபாய் கூட இல்லை !
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்

பிரிட்டீசின் பார்வையில், டயரின் நடவடிக்கையால் அந்த நாளில் பெருமளவில் நடக்கவிருந்த சேதம் தடுக்கப்பட்டது, பல உயிர்களும் காப்பாற்றப்பட்டது. சில நாட்களில் பிரிட்டீசின் நடவடிக்கை பஞ்சாப் மாகாணத்தில் அமைதியைக் கொண்டுவந்தது. இந்திய கடைக்காரர்களும் வணிகர்கள் தங்களுடைய பொருட்கள் கொள்ளை போகாமல் தடுத்ததற்காக டயரை புகழ்ந்தனர். அருகில் இருந்த தங்கக் கோயிலின் காப்பாளர்கள் டயருக்கு கௌரவ சீக்கியர் பட்டம் அளித்தனர்.

அனிதா மற்றும் சில பிரிட்டீஷ் கண்ணோட்டங்கள் உண்மையை பிரிக்கவில்லை, அது அவர்களுடைய மாறுபட்ட கண்ணோட்டங்களாகும்.

அதன்பின், பிரிட்டீஷ் தலைமையிலான ஆணையத்தின் விசாரணையில் ஜெனரல் டயரின் நடவடிக்கை மீது தவறு இருப்பது தெரியவந்தது, அவர் தன்னுடைய பதவியை இழந்தார். இந்தியர்களுக்கு அம்ரித்சரின் கொடுங்கோலன் அவர். பிரித்தானியர்களைப் பொறுத்தவரை இந்தியாவில் பிரிட்டனின் ஆட்சியை காப்பாற்ற இந்திய மக்களிடம் அமைதியைக் கொண்டு வர முயற்சித்த ஒரு பலியாடு. அவர் உடைந்த மனிதராக 1927-ம் ஆண்டு ஜூலை மாதம் இறந்தார்.

ஜாலியன் வாலாபாக் நிகழ்வை சித்தரிக்கும் ஓவியம்.

ஜாலியன்வாலாபாக் படுகொலை இந்திய தேசியவாதத்தையும் பிரிட்டீஷ் எதிர்ப்பு மனநிலையையும் வளர்த்தது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. படுகொலைக்கு முந்தைய ஆண்டுகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய துருப்புகள் முதல் உலகப் போரில் பேரரசுக்கு சேவை செய்திருந்தன என்பது இந்த விசயத்தில் உதவவில்லை. ஆங்கிலேயர்களின் நன்றிக்கடனை காட்டியவிதம்தான் ஜாலியன்வாலாபாக் படுகொலையா?

பிரிட்டீஷ் காலனி ஆட்சிக்கு எதிர்ப்பு இரு முக்கிய வழிகளில் வந்தது: காந்தி மற்றும் அவரை பின்பற்றுகிறவர்கள் அகிம்சை முறையில் பிரிட்டீஷ் ஏகாதிபத்திய அமைப்புக்குள்ளே அரசியல் தன்னாட்சி வேண்டும் எனக் கேட்டார்கள். பஞ்சாப்பில் கெதர் கட்சி தலைமையிலான தீவிர புரட்சிகர இயக்கம், பிரிட்டீஷ் ஏகாதிபத்திய ஆட்சி வன்முறையின் மூலமே துடைத்தெறியப்படவேண்டும் என்றது. உத்தம் சிங் கெதர்களின் மீது ஈர்ப்பு கொண்டார்.

ஜாலியன்வாலாபாக் படுகொலையின் போது உத்தம் சிங் அங்கே இருந்ததாக அனிதா எழுதுகிறார். ஆனால், அந்த நாளில் எங்கே இருந்தார் என்கிற உண்மை தெளிவாக இல்லை. உத்தம் சிங்கிற்கு மட்டுமே உண்மை தெரியும். அவர் தன்னுடைய வாழ்நாளில் பல நபர்களிடம் பலவிதமான சம்பவங்களைச் சொல்லியிருக்கிறார். எது உண்மை என கண்டறிவது இயலாததாக உள்ளது.

படுகொலை நிகழ்ந்து இருபது ஆண்டுகளில் உத்தம் சிங், வெவ்வேறு பெயர்களில் ஆப்பிரிக்கா முதல் ஐரோப்பிய கண்டம் வரை அமெரிக்கா முதல் இங்கிலாந்து வரை “தனது மக்களின் பழிவாங்கும் தேவதையாக” மாறும் முயற்சியில் பயணித்திருக்கிறார்.

இந்திய புரட்சியாளர்கள் மற்றும் ரஷ்ய கம்யூனிஸ்டுகளின் தொடர்பு காரணமாக பிரிட்டீஷ் புலனாய்வு அமைப்புகளின் சோதனைகளுக்கு பல முறை அவர் உள்ளாகியிருக்கிறார். உத்தம் சிங் குறித்து பிரிட்டீஷ் அதிகாரிகளால் மூடிவைக்கப்பட்டிருந்த ஆவணங்களை தகவல் பெறும் சுதந்திரத்தின் அடிப்படையில் அனிதா பெற்றிருக்கிறார்.

அமெரிக்கா, ஐரோப்பியாவில் இருந்த இந்திய கெதர் கட்சியால் உத்தம் சிங் ஆதரிக்கப்பட்டார். அந்தக் கட்சிக்கு விசுவாசமாகவும் அவர் இருந்தார். கெதர் கட்சிக்காரர்கள் அவருக்கு பணத்தையும் போலி அடையாளங்களுக்கான சான்றுகளை அளித்ததோடு, பயணங்களின்போது தங்குவதற்கு நட்பான இடங்களையும் ஏற்பாடு செய்துகொடுத்தனர்.

அம்ரித்சரில் தேசவிரோத பொருட்கள் மற்றும் துப்பாக்கி வைத்திருந்த காரணத்தால் கைதாகி ஐந்து வருடம் சிறை தண்டனை பெற்றார் உத்தம் சிங். அப்போது அவர், 1929-ம் ஆண்டும் டெல்லி சட்டப் பேரவை வளாகத்தில் தீவிரவாத நடவடிக்கையில் ஈடுபட்டு பிரிட்டீஷ் போலிசு அதிகாரியைக் கொன்றதற்காக மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த பகத் சிங்கை சந்தித்தார். உத்தம் சிங், பகத் சிங்கை தன்னுடைய குரு என அழைத்தார். பகத் சிங்கின் முன்னுதாரணத்தைப் பயன்படுத்தி கொலைத்திட்டத்துக்கான ஊக்கத்தைப் பெற்றார்.

உத்தம் சிங்கின் காத்திருப்பு, இறுதியாக 1940 மார்ச் 13-ம் தேதி பலன் கொடுத்தது. சர் மைக்கேல் ஓ டயரைக் கொன்ற பிறகு, ஜாலியன்வாலாபாக் படுகொலைக்காகவும் சுதந்திரத்துக்காகவும் என தனது குற்றத்தையும் நோக்கத்தையும் சொன்னார் அவர். இந்த விசாரணை இரண்டு நாள் நீடித்தது. அவர் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு, மரணதண்டனை பெற்றார். 1940-ம் ஆண்டு ஜூலை 31-ம் நாள் பென்நோன்வில்லா சிறையில் அவர் தூக்கிலடப்பட்டார்.

எந்தவொரு அரசியல் தொடர்போ அல்லது நோக்கமோ இல்லாத ஒரு ‘தனி-ஓநாய் பயங்கரவாதி’ என்று பிரிட்டீஷ் அதிகாரிகள் அவரை உருவகப்படுத்தினர். அங்கே ஒரு போர் நடந்துகொண்டிருந்தது, பேரரசு காப்பாற்றப்பட்டாக வேண்டிய தேவை இருந்தது.

பிரிட்டன் போரில் வென்றது. ஆனால், பேரரசை காப்பாற்ற முடியவில்லை. இந்திய சுதந்திரம் வென்றெடுக்கப்பட்டது, ஆனால் அமைதியாக அல்ல. அனிதாவின் கூற்றுப்படி, பிரிட்டீஷ் ஆட்சியிலிருந்து விடுதலை பெற மிக கடுமையான விலையைக் கொடுக்க வேண்டிருந்தது. 15 மில்லியன் மக்கள் இடம்பெயர்வுக்கு ஆளானார்கள், 2 மில்லியன் மக்கள் இறந்தார்கள். அனிதா, பிரிட்டீசாரே இதற்குக் காரணம் என குற்றம்சாட்டுகிறார்.

படுகொலை நடந்த இடத்தில் உத்தம் சிங்கிற்கு 2017-ம் ஆண்டு சிலை வைக்கப்பட்டதாக அனிதா முடிக்கிறார்…

“அது அவரை சித்தரிக்கிறது. கையை நீட்டி, உள்ளங்கையை உயர்த்தி, தரையில் சிந்திய ரத்தத் துளிகளை கையில் ஏந்தி நிற்கிறார். ஒரு வாக்குறுதி நிறைவேற்றப்பட இருபதாண்டுகள் பிடித்ததற்கான ஒரு நினைவூட்டல்.”


கட்டுரையாளர் : Francis P Sempa
தமிழாக்கம் : கலைமதி
நன்றி: ஸ்க்ரால்

நூல் அறிமுகம் : காலந்தோறும் நந்தன் கதை

ல்கலைக்கழக அளவில், தமிழில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் பெரும்பாலும் சடங்குகளாகி வருகின்றன. பதவி உயர்வுகளுக்கு ஆய்வுப் பட்டங்கள் இன்றையமையாத் தகுதிகளாக வற்புறுத்தப்பட்ட பின்பு, ஆய்வாளர்களின் எண்ணிக்கை கூடியது. வருமானத்துக்காக மட்டுமே பதவிகளையும் படிப்பையும் ஏற்றவர்கள், ஆய்வுகளையும் செய்து தொலைக்க வேண்டிய கடனாகக் கருதினார். இதனால் புறநானூற்றில் பூச்சிகள், சிலப்பதிகாரத்தில் பூண்டுகள் என்ற போக்கிலேயே ஆய்வுகள் தொடர்கின்றன. தமிழ் ஆய்வுகளைப் பொறுத்தமட்டிலும் தரமான ஆய்வுகளைச் செய்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தரமான ஆய்வு நூல்களைத் தேடிப்பிடிக்க வேண்டிய ஒரு சூழலில் மா.உத்திராபதியின் எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு, ”காலந்தோறும் நந்தன் கதை” என்ற தலைப்பில் நூலாக வருகிறது.

எம்.ஃபில். பட்டத்துக்கான ஆய்வு என்ற எல்லைக்குள் நின்று இந்த நூலைப் படிக்கும்பொழுது, இது பத்தோடு பதினொன்று என்று எண்ணிச் செல்ல வேண்டிய ஒரு நூலாகப் படவில்லை. ஆய்வாளரின் ஈடுபாடும், முயற்சியும் நமது கவனத்தை ஈர்க்கின்றன. இது பார்வையிழந்த மாணவர் ஒருவரின் நூல் என்று யாராலும் பரிந்துரைக்கப்பட வேண்டிய தேவையைத் தவிர்த்து நிற்கின்றது.

‘அடியும் முடியும்’ என்ற நூலில், ‘புலைப்பாடியும் கோபுர வாசலும்’ என்ற கட்டுரையில், க. கைலாசபதி, நந்தன் கதையை ஆராய்ந்துள்ளார். இது அந்த ஆய்வின் தொடர்ச்சியாக நீள்கிறது. நந்தனைப் பற்றிய ஒரு புதினம், ஒரு சிறுகதை, ஒரு கதா காலட்சேபம், ஒரு நாடகம், ஒரு கவிதை,  ஒரு வில்லுப்பாட்டு ஆகியவை ஆய்வுக்குரியவையாகின்றன. இவை 1917-ல் இருந்து, 1982 வரை படைக்கப்பட்டவை. இந்தக் கால கட்டங்களில், நந்தன் என்ற கதாபாத்திரம் தமிழ்ச் சமுதாய மாற்றத்தின் தவிர்க்க முடியாத குறியீடாக இருக்கிறான்.

தீண்டாமைக்கும், சமூக ஒடுக்குமுறைக்கும் எதிரான குரல் ‘நந்தன்’ என்ற கதாபாத்திரத்தின் மூலமாகத்தான் உரக்கக் கேட்கிறது.

விவேகானந்தரிலிருந்து ஜெயகாந்தன் வரை நந்தன்களை மேல்நிலையாக்கம் செய்யும் நோக்கங்களை வலியுறுத்துகின்றனர். இந்த நோக்கங்கள் இன்றளவும் ஈடேறவில்லை; அது மட்டுமன்று நந்தனுக்குப் பூணூல் போட்டுப் பார்ப்பது எந்த அளவில் அவனை விடுதலை பெற்ற மனிதனாக்கும் என்பதும் நாம் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய ஒன்றாகும்.

… பூணூலும் வேத பாராயணமும், விடுதலைக்கான சின்னங்கள் அல்ல. அவை மரபு வழிப்பட்ட ஒடுக்குமுறைச் சின்னங்கள், இன்று கல்விகற்று அதிகாரத்தில் அமரும் ஒரு சில தாழ்த்தப்பட்டவர்கள் பூணூல் அணியாதிருக்கலாம். வேதம் ஓதாதிருக்கலாம் – ஆனால் அவர்கள் பெற்ற கல்வி விடுதலைக்கான கல்வி அன்று. வளர்த்துக்கொண்ட சிந்தனை விடுதலைக்கான சிந்தனையன்று. இதனால் அவர்கள் இந்த வாழ்க்கை முறையை உடைப்பதற்கு மாறாக உறவுகளை உடைத்துக் கொள்கிறார்கள், மனோபாவத்தால் ஒடுக்குமுறையாளர்களுடனேயே தங்களை அடையாளப்படுத்த விரும்புகிறார்கள். இங்கு மேனிலையாக்கம் என்பது இந்த வகையில் நடைபெறுகிறது என்று சொல்லலாம்…

… ‘காலந்தோறும் நந்தன் கதை’ ஆய்வு நூலைப் படித்து முடித்தால் இன்னும் நந்தன் கதைகளும், அவை தொடர்பான ஆய்வுகளும் வளரும் என்றே தோன்றுகிறது. நந்தனுடைய விடுதலை நந்தன் தன்னை அந்தணனாகக் காண்பதில் இல்லை, புலையனாகக் காண்பதில் இல்லை, மனிதனாகக் காண்பதிலேயே என்றும் கூறத் தோன்றுகிறது. (நூலுக்கான அணிந்துரையில் இன்குலாப்)

வேதங்கள், பிராமணங்கள், உபநிடதங்கள், ஆரண்யங்கள் போன்ற மிகப்பழமையான நூல்களில் எண்ணற்ற கதைக் குறிப்புகள் காணக்கிடக்கின்றன. இவை பின்னர் இதிகாசங்களாகவும் புராணங்களாகவும் காப்பியங்களாகவும் உருப்பெற்றன. இவ்வாறு உருவாகிய கதைகளில் வரும் கதை மாந்தர்களின் பெயர்கள் மக்களின் அன்றாடப் பேச்சு வழக்கிலும் அடிப்படுவதைக் காணலாம். அந்த அளவிற்கு இவை மக்களின் அடிமனத்தில் இடம் பெற்றுள்ளன.

… தமிழ் இலக்கியத்திலும் இம் மரபைக் காணலாம். கண்ணகியைப் பற்றிய கதைகள் பலவும் இம் மரபில் தோன்றியவை. பெரிய புராணத்தில் கூறப்பட்டிருக்கும் அறுபத்தி மூன்று நாயன்மார்களின் கதைகளில் பல இம் மரபில் பிற்காலத்தில் பல்வேறு வடிவங்களில் இலக்கியப் படைப்புகளாக உருப்பெற்றிருக்கின்ற. இங்ஙனம் இம்மரபிற்கு உட்படுத்தப்பட்ட கதைகளில் திருநாளைப் போவார் எனும் நந்தனார் கதையும் ஒன்று.

தமிழ்நாட்டில் சாதி அடிப்படையில் உயர்வு தாழ்வு கருதுவதும் தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மனித உரிமைகள் மறுக்கப்படுவதும் பன்னெடுங்காலமாக இருந்து வருகின்றன. கீழ்ச்சாதியினருக்கும் மேற்சாதியினருக்கும் இடையேயுள்ள முரண்பாடுகளின் தன்மை காலத்திற்குக் காலம் வேறுபட்டு வந்துள்ளது. கீழ்ச்சாதியினர் தம் நிலையை உயர்த்திக் கொள்ள பலவாறு முயற்சிகள் மேற்கொண்டு வந்துள்ளனர். இம்முயற்சிகள் இன்றும் முரண்பாடுகளுக்குத் தீர்வு காணுமளவிற்கு வெற்றிபெறவில்லை. தொடர்ந்து நிலவும் முரண்பாடுகள் படைப்பிலக்கியத்தின் கவனத்தை ஈர்ப்பது இயல்பே. கீழ்ச்சாதியைச் சேர்ந்த நந்தனின் கதை இலக்கியப் படைப்பாளிகளால் மீண்டும் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்பட்டு, புதிய கருத்துக்களுடன் மறுவார்ப்பு செய்யப்படுவதை காணலாம்.

இந்த ஆய்விற்கு இருபதால் நூற்றாண்டில் படைக்கப் பெற்ற ஆறு படைப்புகள் மட்டுமே எடுத்துக்கொள்ளப்பட்டன… ஒவ்வோர் இலக்கிய வடிவத்திற்கும் ஒரு நூல் மட்டுமே ஆய்விற்கு எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.

படிக்க:
கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !
தில்லை கோயில் உரிமைக்காக நடந்த போராட்ட விவரங்கள் !

நூல், முன்னுரை, முடிவுரை நீங்கலாக, ஏழு இயல்கள் கொண்டது. முதல் இயலில், புராணக்கதைகள், பழங்கதைகள் ஆகியவை இலக்கியங்களில் ஏன் இடம்பெறுகின்றன என்பது பற்றியும் யுங், பிரை, கைலாசபதி, ஆகியோர் கருத்துக்கள் விவாதிக்கப்படுகின்றன… அடுத்த ஆறு இயல்களில் முறையே நந்தன் கதையின் தாக்கத்தில் படைக்கப்பட்ட ஆறு நூல்களும் ஒவ்வொன்றாக ஆய்விற்கு உட்படுத்தப்படுகின்றன. ஒவ்வோர் இயலிலும், அந்நூல் தோன்றிய காலத்து சமூக அரசியல் சூழல் விவரிக்கப்பட்டு அவ்வக் காலக் கருத்துக்கள் எவ்வாறு இலக்கியப் படைப்பைப் பாதித்திருக்கின்றன என்பது எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. காலத்தேவையை பூர்த்தி செய்வதில் ஒவ்வொரு நூலும் எந்த அளவிற்கு வெற்றி கண்டுள்ளது, எவ்வகையில் குறைபாடுடையது என்பனவும் விவாதிக்கப்படுகின்றன. (நூலாசிரியரின் முன்னுரையிலிருந்து)

நூல் : காலந்தோறும் நந்தன் கதை
ஆசிரியர் : மா. உத்திராபதி

வெளியீடு : அலைகள் வெளியீட்டகம்,
எண் : 5/ 1 ஏ, இரண்டாவது தெரு,
நடேசன் நகர், இராமாபுரம்,
சென்னை – 600 089..
தொலைபேசி எண் : 98417 75112.

பக்கங்கள்: 124
விலை: ரூ 50.00

இணையத்தில் வாங்க : marinabooks

வினவு தளத்தின் மின் நூல்கள் (e books) வாங்க

சென்னையில் கிடைக்குமிடம்:

கீழைக்காற்று

முகவரி :
1/110, முதல் தளம், லட்சுமி வளாகம்,
ஈ.வெ.ரா. பெரியார் நெடுஞ்சாலை, நெற்குன்றம், சென்னை – 600 107.
இடக்குறியீடு :

வெங்காயமண்டி பேருந்து நிறுத்தம் அருகில்,
நெற்குன்றம் – முகப்பேர் சிக்னல், (சிவா ஜிம் மாடி)
அலைபேசி : 99623 90277

தமிழகத்தின் பல ஊர்களில் என்.சி.பி.ஹெச் மற்றும் பாரதி புத்தகாலயம் கடைகளில் கிடைக்கும்.

குழந்தைகளுடன் கலகலப்பான கணித விளையாட்டு !

0
அமனஷ்வீலி

குழந்தைகள் வாழ்க | அமனஷ்வீலி | அத்தியாயம் – 3 | பாகம் – 09

“கண்களை மூடுங்கள்… இப்போது உங்களிடம் இரண்டு நேர்க்கோண முக்கோணங்கள் இருப்பதாக வைத்துக் கொள்ளுங்கள். இவற்றை ஒன்றுடன் ஒன்று சேர்த்தால் என்ன வடிவம் கிடைக்கும்?”

ஒரு நொடி நிசப்தம் நிலவியது.

லாலி கண்களைத் திறக்காமலேயே சந்தேகத்தை தெளிவுபடுத்திக் கொண்டாள்:

“முக்கோணங்கள் ஒரே மாதிரியானவையா?”

“ஆமாம், ஆமாம். தெளிவுபடுத்தியதற்கு நன்றி.”

குழந்தைகள் நிமிர்ந்து என் காதில் தம் பதில்களைச் சொல்லத் துவங்கினர். வகுப்பு முழுவதும் சுற்றி வந்ததும் நான் வியப்புடன் குழந்தைகளிடம் கேட்டேன்:

“இது எப்படி சாத்தியம்? சிலருக்கு மீண்டும் முக்கோணம் வருகிறது, சிலருக்குச் செவ்வகம் கிடைக்கிறது, சிலருக்கோ சதுரம், நாற்கோணம் வருகிறது…”

நாங்களனைவரும், இரண்டு சமமான நேர்க்கோண முக்கோணங்களை எடுத்துக் கொண்டு இவற்றை இணைக்கத் துவங்கினோம். மூன்று வெவ்வேறு விதமான வடிவங்கள் கிடைத்தன. இவற்றை நான் கரும்பலகையில் வரைந்தேன்:

வெவ்வேறு விதமாக குழந்தைகள் முயற்சி செய்தனர். ஆனால் கரும்பலகையில் வரையப்பட்டுள்ள வடிவங்களே தான் மீண்டும் மீண்டும் கிடைத்தன. சில சமயங்களில் இவை ஒன்றுடன் ஒன்று வேறுவிதமாக இணைந்திருந்தன. உதாரணமாக, பின்வருமாறு இருந்தது:

இப்படிப்பட்ட தீர்வு முன்மொழியப்பட்டது:

“இது பாய்மரக் கப்பல்!” என்றனர் குழந்தைகள்.

சுருங்கச் சொன்னால், வரைகணித வடிவங்களுடனான விளையாட்டு குழந்தைகளுக்குப் பிடித்திருந்தது. இரு முறை இப்பெட்டிகளை வீட்டிற்கு எடுத்துச் சென்று விளையாட அனுமதியளித்தேன். ஒரு வாரத்திற்குப் பின் இவற்றை அவர்களுக்கே தந்துவிடுவேன். வகுப்பறைக்கு இவை இனி தேவையில்லை. வீட்டில் இவற்றை வைத்துக் குழந்தைகள் நிறைய விளையாடுவார்கள்.

இன்று, கவனம் மற்றும் விமரிசனப் பார்வையை வளர்க்கும் இரண்டு அல்லது மூன்று கட்டளைகளை அவர்களுக்குத் தருவேன்.

“உங்கள் முன் உள்ள பெட்டியிலிருந்து இதோ இந்த வடிவத்தை எடுங்கள்.”

பெரிய கறுப்பு நிற சதுரத்தைக் காட்டுகிறேன். கறுப்புச் சதுரம் யாரிடமும் கிடையாது.

“அடுத்து…” என்று சொல்லியபடியே, இப்படிப்பட்ட சதுரம் இல்லையென யார் சொல்வார்கள் என்று நான் கவனிக்கிறேன். “அடுத்து, இதோ இதை எடுங்கள்!” என்று பெரிய சிவப்பு நிற முக்கோணத்தைக் காட்டுகிறேன்.

வாஹ்தாங்: “எப்படி கறுப்பு சதுரத்தை எடுப்பது? எங்களிடம் தான் கறுப்பு நிற வடிவங்களே இல்லையே!”

நான்: “நான் கறுப்புச் சதுரத்தையா எடுக்கச் சொன்னேன்?”

குழந்தைகள்: “நீங்கள் கறுப்புச் சதுரத்தைக் காட்டுகின்றீர்கள், எங்களிடம் கறுப்பு நிறமே இல்லை !”

நான் : “’தவறு” செய்ததை “இப்போதுதான் உணர்ந்தேன்”.

“இல்லையில்லை, இதுவல்ல, இதோ இது!” என்று கூறியபடியே சிவப்பு நிற பல்கோணத்தைக் காட்டுகிறேன். ஆனால் சிலர் சிந்தித்தனர்.

“இது என்ன வடிவம்? இது எங்களிடம் இல்லையே.”

“ஏன், உங்களிடம் தான் சிவப்பு வடிவங்கள் உள்ளனவே.”

சூரிக்கோ: “சிவப்பு வடிவங்கள் இருக்கின்றன. ஆனால் நீங்கள் காட்டும் வடிவம் இல்லை.”

ஏக்கா: “இந்த வடிவத்தின் பெயரென்ன?”

நான்: “இது சதுரமல்லவோ?” என்று நான் கேள்வியைக் கண்டு “வியப்படைகிறேன்”. பின் கையில் உள்ள வடிவத்தைக் கவனமாகப் பார்க்கிறேன். “ஓ, மன்னியுங்கள்… மீண்டும் தவறு. இது பல்கோணம். எனக்கு என்ன வேண்டும் தெரியுமா… (மேசையில் தேவையான வடிவத்தைத் தேடுகிறேன்) இதோ இந்த மாதிரி வடிவம்!” என்று பெரிய சிவப்புச் சதுரத்தைக் காட்டுகிறேன்.

குழந்தைகள் சிவப்புச் சதுரங்களை எடுத்து எனக்குக் காட்டிவிட்டுத் தம் முன் வைக்கின்றனர்.

“இதோ இம்மாதிரியான வடிவத்தையும் எடுங்கள்!” என்று பெரிய சிவப்பு நிற முக்கோணத்தைக் காட்டுகிறேன்.

“இவ்வடிவங்களை அருகே வைத்துக் கொண்டு, இந்த சதுரத்தில் இம்மாதிரியான முக்கோணங்கள் எவ்வளவு அடங்குமென கண்டுபிடியுங்கள்.”

“இரண்டு !”

“சரிபாருங்கள்.”

குழந்தைகள் சரிபார்க்கின்றனர்: பெரிய சதுரத்திற்குள் பெரிய முக்கோணங்களை வைக்கின்றனர்.

“சரியாக இரண்டு முக்கோணங்கள் அடங்கின!”

“எல்லோரும் ஒப்புக் கொள்கின்றீர்களா? மிக நல்லது. அந்த இரண்டு முக்கோணங்களையும் ஓரமாக வைத்து விட்டு இதோ இந்த வடிவத்தை எடுங்கள்!” என்று நடுத்தர அளவுள்ள சிவப்பு முக்கோணத்தைக் காட்டுகிறேன். இதை சதுரத்தின் அருகே வையுங்கள். இதே மாதிரி எவ்வளவு முக்கோணங்கள் சதுரத்தினுள் அடங்குமென கண்களாலேயே கணித்துச் சொல்லுங்கள்.”

படியுங்கள் :
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்டவர்களின் உயிரி மாதிரிகள் சேகரிப்பு !
நூல் அறிமுகம் : ஐன்ஸ்டீன் வாழ்வும் சிந்தனையும்

சிலர் மூன்று என்றும் சிலர் நான்கு என்றும் சிலர் ஐந்து, ஏன் ஆறு என்றும் கூறுகின்றனர்.

”சரிபாருங்கள்.”

குழந்தைகள் அதே முறையில் சரிபார்க்கின்றனர்: நடுத்தர அளவுள்ள முக்கோணங்களை சதுரத்தினுள் வைக்கின்றனர். சதுரத்தினுள் நான்கு முக்கோணங்கள் அடங்குவதாகப் பலர் கூறுகின்றனர். சிலருக்கோ முக்கோணங்கள் சதுரத்தினுள் அடங்கவேயில்லை.

நானும் இதற்குக் கரும்பலகையில் விடை கண்டுபிடிக்க “முயல்கிறேன்”, வாய்விட்டு யோசிக்கிறேன், “கஷ்டப்படுகிறேன்”, குழந்தைகள் சொல்லித் தருகின்றனர், முடிவாக விடை கண்டுபிடித்தாகி விட்டது.

“அந்த முக்கோணங்களை ஒரு ஓரமாக வைத்து விட்டு இதோ இந்த வடிவத்தை எடுங்கள்!” என்று சிறிய சிவப்பு முக்கோணத்தைக் காட்டுகிறேன். இதையும் பெரிய சிவப்பு சதுரத்தின் அருகே வைத்து, எவ்வளவு இப்படிப்பட்ட முக்கோணங்கள் அதனுள் அடங்குமெனக் கண்களாலேயே கணித்துச் சொல்லுங்கள்.”

இக்கணக்கைப் போட குழந்தைகள் கஷ்டப்படுகின்றனர். 5, 6, 8, 10, 12, 20 என்று தோன்றிய விடையைச் சொல்கின்றனர்.

“வைத்துப் பார்க்கும் அளவு இவ்வளவு சிறு முக்கோணங்கள் நம்மிடமில்லை. இதை எப்படி செய்யலாம் என்று யோசித்து பதில் சொல்லுங்கள்.”

இல்லை, என் வகுப்பிலுள்ள ஆறு வயதுக் குழந்தைகளுக்கு, தம் கல்வியின் முதல் மாத இறுதியில், நடுத்தர மற்றும் பெரிய முக்கோணங்களை அளவுகோலாகப் பயன்படுத்தலாம் என்று தெரியாது. சரி, நாளையோ, நாளைய மறுநாளோ இதற்குத் திரும்பி வருவோம். இதற்கான தீர்வை அவர்களே “கண்டுபிடிக்க” உதவும் வழியை நான் முடிவு செய்தாக வேண்டும்.

“நல்லது! இந்தக் கணக்கை நாளை போட முயற்சிப்போம். இப்போது இந்த வடிவங்களிலிருந்து ஏதாவதொரு பூவின் பல்வண்ணப் பட்டையை உருவாக்குங்கள்.”

“ரயில் வண்டி செய்யலாமா?”

“யாருக்கு விருப்பமோ அவர்கள் ரயில் வண்டியையோ வேறு எதையாவதையோ செய்யுங்கள்.”

குழந்தைகளின் பல்வண்ணப் பட்டையைப் பார்த்து ஆமோதிக்கிறேன், திருத்துகிறேன், ஆலோசனை கூறுகிறேன்.

கணிதப் பாடவேளையின் பதினைந்தாவது நிமிடம் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது.

பின் இன்னுமொரு கணித மினி – பாடம் உண்டு. ஒவ்வொருவருக்கும் ஒரு வேலைத் தாள் தரப்படும்: படங்களின்படி கணக்குகளை உருவாக்கி விடை கண்டுபிடித்து, எழுத வேண்டும். வேலைத்தாள் இப்படிப்பட்டது:

இப்படிப்பட்ட வேலைகளை நான் இதற்கு முன் தரவில்லை. ஒரு வேளை கடினமாக இருக்குமோ? ஒருவருடன் ஒருவர் கலந்தாலோசித்தோ என்னுடன் கலந்து பேசியோ இவற்றைச் செய்ய நான் அனுமதியளிப்பேன். எங்களுடைய மினி – பாடவேளையின் போது நிச்சயமாக எல்லோராலும் ஆறு – கணக்குகளையும் போட முடியாது. ஒரு சிலர் இவற்றை வீட்டிற்கு எடுத்துச் சென்று, வகுப்பில் போட முடியாதவற்றை வீட்டில் செய்ய விரும்புவார்கள்.

“வடிவங்களை உள்ளே போடுங்கள்!… எழுந்திருங்கள்!… சிறுவர்களே, நீங்கள் ஆண் பிள்ளைகள் என்பதை மறந்து விட வேண்டாம்.”

நீண்ட இனிய பள்ளி மணியொலி கேட்கிறது.

(தொடரும்)

முந்தைய பகுதியைப் படிக்க:
குழந்தைகள் வாழ்க!

கடந்த வாரத்தில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டங்கள் – ஒரு பார்வை

சேலத்தில் எட்டு வழிச் சாலைக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :

டப்பாடி பழனிச்சாமி  கடந்த வியாழனன்று, மதுரையில் பத்திரிகையாளர் சந்திப்பில் எட்டுவழிச்சாலை ஒரு அபிவிருத்தி திட்டம் என்றும், மேலும் நிலங்களை கையகப்படுத்துவதற்காக மூன்று மடங்கு  இழப்பீடு வழங்கப்பட்டிருப்பதாகவும் கூறியிருந்தார். இதைக் கண்டித்து விவசாயிகள் சேலத்தில் பாரப்பட்டி மற்றும் புலாவரியில் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தினர்.

பலகட்டப் போராட்டத்திற்குப் பிறகும், இந்த அரசு எங்கள் குறைகளை கேட்க தயாராக இல்லை, இது ஒரு மேம்பாட்டுத் திட்டம் இல்லை, இத்திட்டத்தால் நீர்நிலைகள், உணவு உற்பத்தி பாதிக்கப்படும் என்று விவசாயிகள் கூறினர். மேலும் தேர்தலில் மத்திய அரசு தமிழகப் பாராளுமன்ற தொகுதிகளில் தோற்றுப் போனதால் , விவசாயிகளை பழிவாங்குவதைப் போல  உணர்வதாகவும் கூறுகிறார்கள்.

♦ ♦ ♦

புதுச்சேரியில் ஹைட்ரோகார்பனுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :

விவசாயிகள் சார்பில் ஜுலை 9-ம் தேதியன்று பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில், ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.

போராடிய விவசாயிகள், இத்திட்டம் விவசாயிகள் வாழ்வாதாரத்தை அழிக்க வந்தத் திட்டம் என்றும், வளமான நிலங்களை அழிக்க வந்த இந்தத் திட்டம், சுற்றுச்சூழலை நாசமாக்கும் என்றும் இந்த திட்டத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேட்டை ஒரு போதும்  சீர் செய்ய முடியாது என்றும் கூறுகின்றனர்.

♦ ♦ ♦

கோபிசெட்டிபாளையத்தில் கொடிவேரி ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டம்  தொடங்கும் பகுதிக்கு  எதிராக விவசாயிகள் போராட்டம் :

கொடிவேரி அணைக்கட்டின் நீர் பரவல் பகுதியின் வளையத்தில் உள்ள கிணற்றிலிருந்து, பெருந்துறை மற்றும் ஊத்துக்குளிக்கு குடிநீர் வழங்கும் திட்டத்தை செயல்படுத்தினால் விவசாய பாசன நீர்வரத்துக்கு பங்கம் ஏற்படும்; இந்த திட்டம் தற்போது செயல்படுத்தும் பகுதியிலிருந்து 100 மீட்டர் தூரத்தில் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையோடு விவசாயிகள் திரண்டனர். இதற்காக கோபிச்செட்டிப் பாளையத்தில் கடைகளும் அடைக்கப்பட்டன.

படிக்க:
மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !
♦ ஒரு வரிச் செய்திகள் – 15/07/2019

♦ ♦ ♦

கர்நாடக – ஹாசன் மாவட்ட விவசாயிகள் போராட்டம் :

ர்நாடக ஹாசன் மாவட்ட விவசாயிகள் நீர்ப்பாசனத் திட்டங்களை விரைவாக முடிக்க வேண்டும் என்றும், விவசாய கடன்களிலிருந்து விடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

ஹேமாவதி சிலையிலிருந்து அவர்கள் ஊர்வலமாக துணை ஆட்சியர் அலுவலகம் வரை சென்றனர். வறட்சியின் காரணமாக உருளை, மக்காச்சோளம் பயிரிட்ட விவசாயிகளுக்கு நல்ல மகசூல் கிடைக்கப் போவதில்லை என்றும், நீர்ப்பாசனத் திட்டங்களை உரிய காலத்தில் அரசு முடிக்க தவறிவிட்டது என்றும் அவர்கள் போராடினர்.

♦ ♦ ♦

கர்நாடக மைசூரு விவசாயிகள் போராட்டம் :

மைசூரு துணை ஆய்வாளர் அலுவலகம் முன்பு மாநில விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தங்கள் கோரிக்கை மனு அளிப்பிற்குப் பிறகு போரட்டம் நடத்தப்பட்டது.

அதில் அவர்கள் வறட்சியின் காரணமாக கரும்புகளை உடனே சர்க்கரை ஆலைக்கு விற்பனை செய்ய வழி வகுக்க வேண்டும் என்றும்; விவசாயிகள் தங்கள் நிலங்களை அடமானம் வைத்து கூட்டுறவு வங்கிகளில் கடன் பெறுவது விவசாயிகளுக்கு அதிக  அலைச்சல்  தருவதாகவும், பணச் செலவு அதிகரிப்பதாகவும் உள்ளது. இதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போராடிய விவசாயிகள் கூறுகின்றனர்.

♦ ♦ ♦

சிவகரியில் நிலம் கையகப்படுத்துதலுக்கு எதிராக விவசாயிகள் போராட்டம் :

திருமங்கலம் முதல் கொல்லம் வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டத்திற்காக தங்களுடைய நிலங்கள் கையகப்படுத்துவதற்காக எதிராக விவசாயிகள் போராட்டம் நடத்தினர். ஜுலை 5-ம் தேதி சிவகிரி தாலுகா அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய போதிலும், அதிலிருந்து விவசாயிகள் வெளியேறி போராட்டத்தில் பங்கேற்றனர்.

♦ ♦ ♦

ஒடிசா பால் விவசாயிகள் இரண்டாயிரம் லிட்டர் பாலை வீதியில் கொட்டி போராட்டம் :

டிசா அரசு நிறுவனமான ஒடிசா மாநில கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு ஒடிசாவின் பத்ராக் மாவட்டத்தில் பால் விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்த பாலை கலப்படம் என்று கூறி நிராகரித்ததால் தங்களுடைய இரண்டாயிரம் லிட்டர் பாலை விவசாயிகள் வீதிகளில் கொட்டி போராடினர்.

தாங்கள் தினந்தோறும் கொண்டுவரும் பாலுக்கு எந்த ஒரு தரக் கட்டுப்பாடும் இல்லாத போதும், அதை தரக் கட்டுப்பாடு என்று வேண்டுமென்றே கூட்டமைப்பு நிராகரிப்பதாகவும், தங்களுடைய பாலை வீதியில் கொட்டுவதற்கு அது நிர்ப்பந்திப்பதாகவும் கூறுகிறார்கள்.


செய்தி ஆதாரங்கள்:

Anti-green corridor farmers stage protest in Salem-The Hindu 13,2019
Farmers protest against hydrocarbon project-The Hindu July 10,2019
Farmers condemn resumption of water scheme works- The Hindu July 13, 2019
Raitha sangha for quick completion of projects- July 09,  The Hindu
DC to hold meet to discuss farmers’ issues on July 15 –The Hindu July 10 2019
Farmers stage protest ag ainst land acquisition- The Hindu July 08,2019
Odisha dairy farmers spill milk on streets after state cooperative cites ‘adulteration- Hindustan times July 13 -2019

ஐ.எஸ் பயங்கரவாதிகளை எதிர்க்கும் யாசிடி குலப் பெண்களின் தீரம் – படக்கட்டுரை

0

என் சொந்த நாட்டிலேயே நான் ஏன் அகதியாகவோ பாலியல் அடிமையாகவோ வாழவேண்டும் ?

ராக்கில் ஐ.எஸ் அமைப்பால் 2014-ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட மனிதப் படுகொலைகளின் சாட்சியாக விளங்கும் யாசிடி குலப் பெண்களின் கேள்வி இது.

2014 -ம் ஆண்டு வடக்கு ஈராக்கில் கிராமம் கிராமமாகப் புகுந்த ஐ.எஸ் அமைப்பினர்; கண்ணில் தென்பட்டவர்களையெல்லாம் காக்கைக் குருவிகளைப் போன்று சுட்டுத்தள்ளிவிட்டு, பெண்களைப் பாலியல் அடிமைகளாகக் கைப்பற்றிச் சென்றனர்.

தப்பிப் பிழைத்த ஆயிரக்கணக்கானோர் அகதிகள் முகாம்களில் தஞ்சம் புகுந்தனர். இவர்களில் பல பெண்கள் இப்போது தங்கள் பூர்வீக இடத்திற்குச் சென்று வசிக்க விரும்புகின்றனர். இது குறித்து அவர்களுக்கு எந்த பயமும் இருக்கவில்லை.

யாசிடிகள் இல்லாத சிஞ்சார் நகரமும் இல்லை; சிஞ்சார் இல்லையெனில் யாசிடிகளும் இல்லை என்கிறார் 25 வயதான ஷ்ரீன். மொசூல் நகரத்தில் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில் பாலியல் அடிமையாக சிறைபட்டிருந்த இவர், அரச படைகளுக்கும், ஐ.எஸ்-க்கும் இடையே போர் தீவிரமடைந்த போது, தப்பிப் பிழைத்து சிரியா சென்று ஐ.எஸ்-ன் பிடியில் சிக்கியிருந்த தன் தங்கையை மீட்கச் சென்றுள்ளார்.

அழுதுபுலம்பும் யாசிடி இனப்பெண்கள் – இடம்: கோஜோ கிராமத்தில் கொத்தாகப் புதைக்கப்பட்ட மனிதச்சடலங்களை அடையாளம் காணும்போது.

நான் மற்றவர்களால் ஒரு அகதியாகவோ அல்லது பாலியல் அடிமையாகவோ பார்க்கப்பட விரும்பவில்லை. மாறாக யாசிடி இனக்குழுவின் போராட்டப் பெண்மணியாகப் பார்க்கப்பட விரும்புகிறேன். என் தந்தையின் இறந்த உடலைப் பெறும் வரை, ஈராக்கை விட்டுப் போகப் போவதில்லை என்கிறார் ஷ்ரீன். இவரின் தந்தை 2014-ம் ஆண்டு ஐ.எஸ் அமைப்பினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஷ்ரீன் இப்போது, கோஜோ எனும் கிராமத்தில் ஐ.எஸ் அமைப்பினரால் படுகொலை செய்யப்பட்டு கொத்துக் கொத்தாகப் புதைக்கப்பட்டவர்களின் விவரங்களைக் கணக்கெடுக்கும் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். நோபல் பரிசு பெற்ற சமூக ஆர்வலர் நடியா முராத் இந்த கிராமத்தில்தான் ஐ.எஸ் அமைப்பினரால் 2014-ம் ஆண்டு கடத்தப்பட்டார்.

படிக்க:
அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி
♦ மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !

ஐ.எஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பாலியல் அடிமைகளாக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட யாசிடி பெண்களின் நிலைமை என்னவானது என்று இதுவரை தெரியவில்லை. ஆனாலும் தப்பிப்பிழைத்த யாசிடி குலப்பெண்கள் உயிரைக் குறித்து அச்சப்படாமல் தங்களுடைய சொந்த இடத்திற்குத் திரும்ப வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளனர்.

ஷ்ரீனைப் போலவே மற்ற ஷானா, நடா ஆகிய பெண்களும் இந்த நிறுவனங்களில் தன்னார்வலர்களாகப் பணியாற்றிவருகின்றனர். தங்கள் சொந்த பந்தங்களின் எலும்புக்கூடுகளையாவது பார்க்க முடியுமா என்பது தான் இவர்களின் நோக்கம்.

மக்கள் முகாம்களில் வாழ்வதற்கே சிரமப்பட்டு வரும் நிலையில், யாசிடி பெண்களோ தங்கள் சொந்த இடத்திற்கு தைரியமாகச் சென்று புணரமைக்கும் பணியினை மேற்கொண்டு வருகின்றனர்.

யாசிடி மதத்தலைவர் ஷேக் கட்டோ, கோஜோ கிராமத்தில், புதைக்கப்பட்ட உடல்களை அடையாளம் காணும் முன்பு வெள்ளைப் புறாக்களைப் பறக்கவிடுகிறார். கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் சூழ்ந்து நிற்கின்றனர். இது போன்று 70 இடங்களில் ஐ.எஸ் அமைப்பினரால் கொல்லப்பட்ட அப்பாவி மக்கள் புதைக்கப்பட்டுள்ளனர்.

நோபல் பரிசு பெற்ற நடியா முராத் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கிறார், இதே கோஜோ கிராமத்தில்தான் ஐ.எஸ் அமைப்பினர் 2014-ம் ஆண்டு இவரைக் கடத்தியிருந்தனர்.

மூன்று யாசிடி இனப்பெண்கள் கல்லறைகளுக்கு அவர்களின் மதமுறைப்படி சாம்பிராணி புகை போட்டு, சடங்குகளைச் செய்கின்றனர்.

சிஞ்சார் மலைப்பகுதியில் ஒழுங்கற்ற முறையில் அமைந்துள்ள அகதிகள் முகாம். ஐ.எஸ் தாக்குதல் தீவிரமான போது இந்த மலைப்பகுதியில் பலர் ஒளிந்து கொண்டு உயிர் தப்பியுள்ளனர்.

சிஞ்சார் மலையின் வடக்குப்பகுதியில் ஐ.எஸ் அமைப்பினரை எதிர்த்து தீரத்துடன் போரிட்டு மடிந்த யாசிடி இன ஆண்கள் மற்றும் பெண்களின் சதுக்கங்கள்.

நடா மற்றும் ஷானா இருவரும் ஐ.எஸ் தாக்குதலுக்கு முன் தாங்கள் வசித்து வந்த சிஞ்சார் நகரத்தில் இருக்கும் காட்சி. 2014-ல் இங்கிருந்து தப்பிச் சென்றவர்கள் இப்போது திரும்பவும் தங்களுடைய சொந்த இடத்திற்கு வந்துவிட்டனர்.

ஐ.எஸ் அமைப்பினரால் முற்றிலும் தரைமட்டமாக்கப்பட்ட சிஞ்சார் நகர வீதியொன்றில் நடந்து வரும் நடா, ஷானா. யாசிடி இனத்தவரை இங்கே மீள்குடியமர்த்துவதற்குத் தேவைப்படும் உதவிகளைச் செய்யும் வண்ணம் இங்கே வந்துள்ளனர்.

சிஞ்சார் நகரின் மலைப்பகுதியிலிருந்து சிஞ்சார் நகரைப் படம் பிடித்த காட்சிதான் இப்போது நீங்கள் பார்ப்பது.

அன்னா பொலிட்கோவ்ஸ்கயா விருதுபெற்ற ஈராக்கிய பாராளுமன்ற உறுப்பினரான வியான் டக்கீல்-இன் பேனர். தன் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் ஈராக்கியப் பெண்களுக்காகக் குரல் கொடுத்தவர்

கோஜோ கிராமத்தில் ஐ.எஸ் அமைப்பினரால் சின்னா பின்னமாக்கப்பட்ட வீட்டின் மேல் ஈராக் தேசியக்கொடி பறக்கிறது

ஆயிஷா தன் இரு குழந்தைகள் ஜினான், ஜிகா-வுடன் சிஞ்சாரில் உள்ள தனது வீட்டிலிருக்கிறார். 2014-ல் இவர்கள் ஐ.எஸ் அமைப்பினரால் கடத்தப்பட்டு பிரிக்கப்பட்டு விட்டனர். 2018-ம் ஆண்டு சிரியாவில் உள்ள இருவேறு அகதிகள் முகாம்களிலிருந்து ஆயிஷாவின் குழந்தைகள் மீட்கப்பட்டு இப்போது ஒன்றாக வாழ்கின்றனர்.

யாசிடி இனக்குழுவைச் சேர்ந்த ஒரு பெண் குழந்தை சீர்குலைக்கப்பட்ட காரின் மேல் விளையாடும் காட்சி. முகாம்களில் இருந்து தைரியமாக இங்கே திரும்பி வந்துவிட்டாலும் இவர்களின் வாழ்க்கை விளிம்பு நிலையில்தான் இருக்கிறது.

சிஞ்சார் மலைப்பகுதியிலிருந்து ஐ.எஸ் அமைப்பினரால் சீர்குலைக்கப்பட்ட நகரத்தின் காட்சி.

கட்டுரையாளர்: Marta Bellingreri & Alessio Mamo
தமிழாக்கம் : வரதன்
நன்றி : aljazeera

மும்பை ’வளர்ச்சிக்கு’ பலி கொடுக்கப்படும் இயற்கை !

0

மும்பை மெட்ரோ திட்டத்திற்கு இடையூறாக இருந்த “100 ஆண்டுகள் பழமையான மிகப்பெரிய ஆலமரம் வெட்டப்படாது” என்று கடந்த ஜூன் மாதம் செய்தி வெளிவந்தது. இது சமூக ஆர்வலர்களுக்கும் மரங்களை நேசிப்பவர்களுக்கும் தற்காலிக மகிழ்ச்சியளித்தது. ஆனால் இது ஒரு சிறிய ஆறுதல்தான். வளர்ச்சியின் பெயரில் மாநகரின் மற்ற பகுதிகளில் இன்னும் கொடூரமான அழித்தொழிப்பு நடந்து கொண்டுதான் இருக்கிறது.

மாநிலத்தின் சுற்றுப்புறச் சூழலுக்கு நேரடி கேடு விளைவிக்கும் மூன்று பெரிய திட்டங்களுக்கும் பல்வேறு நடுத்தர திட்டங்களுக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் மாநில அரசு ஒப்புதல் கொடுத்துள்ளது. ஏனைய புல்லட் ரயில் திட்டங்களைப் போலவே ஆரவாரமான மும்பை கடற்கரை வழி புல்லட் ரயில் திட்டமும் சதுப்புநிலக் காடுகள் மற்றும் ஆயிரக்கணக்கான மரங்களை அழிப்பதுடன் பல்வேறு பழங்குடி சமூகங்களின் வாழ்விடங்களையும் காலி செய்ய இருக்கிறது.

மும்பை – அகமதாபாத் புல்லட் இரயில் திட்டத்தால் 13.36 ஹெக்டேரில் பரவியுள்ள 54,000 சதுப்புநில மரங்கள் பாதிக்கப்பட உள்ளதாக மகாராஸ்டிர சட்டமன்ற அவையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் திவாகர் ரோட்டே ஜூன் 24 -ம் தேதி தெரிவித்தார்.

குஜராத் (724.13 ஹெக்டேர்) மற்றும் மகாராட்டிரத்தின் (270.65 ஹெக்டேர்) இரண்டு மாவட்டங்களில் ஒரு இலட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள புல்லட் ரயில் திட்டத்தால் ஏற்படக் கூடிய சுற்றுச்சூழல் அழிவு குறித்து முதன்முறையாக மாநில அரசு ஒப்புக்கொண்டது.

புல்லட் இரயில் பாதையானது பல ஹெக்டேர் விவசாய நிலங்கள், மலைப்பாங்கான பகுதிகள், தரிசு நிலங்கள், பழத்தோட்டங்கள், பழங்குடிப் பகுதிகள், வனப்பகுதிகள், மலைகள், ஆறுகள், உப்பங்கழிகள் மற்றும் பிற நகர வசிப்பிடங்களின் வழியாகச் செல்லும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

ஆண்டுதோறும் மும்பையில் அடாத பருவமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்படுகிறது. சதுப்பு நிலக் காடுகளை அழிப்பது நிலைமையை இன்னும் கடுமையானதாக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கிறார்கள். கடந்த முப்பதாண்டுகளாக கடற்கரைகளில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்க இந்திய சதுப்பு நில சமூக அமைப்பு (The Mangrove Society of India – MSI) முயன்று வருகிறது. இந்த அமைப்பும் ஜவகர்லால் நேரு துறைமுக அறக்கட்டளையும் (Jawaharlal Nehru Port Trust) புல்லட் ரயில் திட்டங்கள், கடற்கரை வழிச் சாலை, நவி மும்பை சர்வதேச விமான நிலையம் (NMIA) போன்ற திட்டங்கள் குறித்த அச்சத்தை வெளியிட்டிருக்கின்றன.

ஜூலை 26, 2005-ல் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்கினால் 1,000 பேர் பலியானார்கள். ஜூலை 1 முதல் 2 வரை மும்பையில் 200 மிமீ கனமழை பெய்தது. நாம் இயற்கையுடன் விளையாடினால் அதன் எதிர்வினை இப்படித்தான் கடுமையாக இருக்கும் என்று மழைக்கு பிறகு இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் சதுப்பு நில சமூக அமைப்பின் நிர்வாக இயக்குனர் அர்விந்த் உண்ட்வாலெ கூறியுள்ளார்.

கடற்கரை சாலையும் அழிவின் தொடர்ச்சியும்

கடற்கரை சாலைக்காக 164 ஹெக்டேர் நிலப்பகுதி மொத்தமாக அக்கிரமிக்கப்பட வேண்டும். இதற்காக பல்வேறு கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகள் தளார்த்தப்பட இருப்பதாக ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 1,400 கோடி ரூபாய்க்கான கடற்கரை சாலை திட்டம் 2018-ம் ஆண்டில் முன் வைக்கப்பட்ட மறுகணமே அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் குறித்த ஐந்து வழக்குகள் மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன.

மாற்று இடத்திற்கான கூட்டுமுயற்சி (Collective for Spatial Alternatives) உறுப்பினரும், கட்டிடக் கலைஞருமான ஸ்வேதா வாக், இத்திட்டத்தைத் தடை செய்யக் கோரி 2018-ம் ஆண்டின் பிற்பகுதியில் உயர் நீதிமன்றத்தை நாடினார். தற்போதைய நில ஆக்கிரமிப்பு சட்டத்திற்கு புறம்பானது மட்டுமல்லாமல், கடலோர உருவவியல் (coastal morphology), பல்லுயிர் மற்றும் பாரம்பரிய சுற்றுச்சூழல் நடைமுறைகளை மீள முடியாத வகையில் அழித்துவிடும் என்று கூறினார். கடற்கரை சாலை மற்றும் மற்ற திட்டங்களுக்காக நடந்து கொண்டிருக்கும் நில ஆக்கிரமிப்புகள் அனைத்தும் சுற்றுச்சூழல் அனுமதி, பாரம்பரிய நில உரிமைகள் ஆகியவற்றின் மீதான அப்பட்டமான உரிமை மீறல்களாகும் என்றும் கூறினார்.

படிக்க:
மோடியின் புல்லட் ரயில் திட்டத்திற்கு 1000 விவசாயிகள் எதிர்ப்பு !
♦ அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி

மேலும் கோலிவாடா நகவா மீன்வள சங்கம் (Koliwada Nakhawa Fisheries) மற்றும் வொர்லி மச்சிமார் சர்வோதய கூட்டுறவு சங்கம் (Worli Machhimar Sarvoday Co-operative Society) ஆகிய இரு மீனவ சங்கங்களும் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று கூறி இந்த திட்டத்தை தடை செய்யக் கோரியுள்ளன. இத்திட்டத்தால் கடற்கரையில் உள்ள சிப்பி படுகைகள் அதிகபடியாக பாதிப்பிற்குள்ளாகும் என்றும் எச்சரித்துள்ளனர்.

இவர்களின் அச்சத்திற்கு காரணமில்லாமல் இல்லை என்று வனசக்தி என்ற தன்னார்வ அமைப்பை சேர்ந்த சரிதா ஃபெர்னாண்டஸ் கூறுகிறார். கடற்கரை சாலையெங்கும் உள்ள மீனவ கிராமங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படவுள்ளது. மும்பையில் வோர்லி மீனவர்களை பொருத்தவரையில் பாரம்பரிய மீன்பிடி வழக்கத்தை பின்பற்றுகிறார்கள். குறிப்பாக தெற்கு மும்பையில் உள்ள வோர்லி கோலிவாடா மீனவர்கள் பன்ரா-வோர்லி (Bandra-Worli) கடற்கரைப் பாறைகளை மீன்பிடிக்கு நம்பியுள்ளனர்.

ஏனைய வளர்ச்சி திட்டங்களை போலவே இதற்கும் பணத்தை கொடுத்து சரிகட்ட மாநில அரசும் முயற்சித்தது. ஆனால் மீனவர்கள் நிராகரித்து விட்டனர்.பல பத்தாண்டுகளாக, இன்னும் சொல்லப்போனால் நூற்றாண்டுகளாக அவர்கள் சார்ந்திருந்த அந்தக் கடற்கரையை அடுத்த தலைமுறைக்காகப் பாதுகாக்கவே, அரசாங்கத்தின் பண நிவாரணத்தை அவர்கள் நிரகரித்தனர். அவர்களது வாழ்வாதாரம் பறிக்கப்பட்டால் அவர்களது குழந்தைகளின் நிலை என்னவாகும்?” என்று கேட்கிறார் ஃபெர்னாண்டஸ்.

கடற்கரை சாலைத் திட்டத்தின் விசயத்திலும், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதால் பாதிக்கப்படும் சதுப்பு நிலக்காடுகளை மீட்டுருவாக்கம் செய்து விடுவோம் என்று அரசாங்கம் தீவிரமாக வாதிடுகிறது. ”இழந்து போன சதுப்பு நிலக்காடுகளை ஐந்து மடங்குக்கு மீட்டுருவாக்கம் செய்வதற்கு நிலம் எங்கே இருக்கிறது? இது முதல் சிக்கல். ஏற்கெனவே இது போன்ற பல முயற்சிகள் உயிர் இயற்பியல் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தோல்வியடைந்திருக்கின்றன. மேலும் சதுப்பு நிலக்காடுகளின் தனிச்சிறப்பான உயிரிகளை நம்பியுள்ள காட்டுயிர்களின் நிலை ஒரு இன்றியமையாத சிக்கலாகும். காட்டைப் பெயர்த்து மீட்டுருவாக்கம் செய்வது என்பது ஒருபோதும் வெற்றிகரமான தீர்வல்ல” என்று அவர் மேலும் கூறுகிறார்.

மும்பை – அகமதாபாத் புல்லட் ரெயில் திட்டம் அதன் வழியிலுள்ள பழத்தோட்டங்களைக் கடுமையாக பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரு மாநிலங்களிலும் உள்ள விவசாயிகள் போராடுவதற்கு முதன்மையான காரணியாக இது இருக்கிறது. இத்திட்டத்தினால் 26,980 பழமரங்களும் 53,457 மரசாமான்கள் தயாரிக்க பயன்படும் மரங்களும் பாதிக்கப்படும் என்று இத்திட்டத்தின் முதன்மை புரவலரான ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு முகமை (Japan International Cooperation Agency) கடந்த 2015-ம் ஆண்டில் செய்த ஆய்வில் தெரிவித்துள்ளது.

வெட்டப்பட்ட மரங்கள் “இடமாற்றம் செய்யப்படும்” என்று தேசிய அதிவேக இரயில் நிறுவன (NHSRCL) அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இந்தக் கூற்றுக்களை கேள்வி எழுப்பியுள்ளனர். “மரங்களை அவற்றின் அசல் இடத்திலிருந்து ஒரு புதிய இடத்திற்கு பிடுங்கி நடுவதை அவர்கள் குறிப்பிடுகின்றனர். கடந்த காலங்களில் இந்த செயல்பாட்டினால் மரங்கள் அழிந்து போனதை நாம் பார்த்திருக்கிறோம்” என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் அமிர்தா பட்டாச்சார்யா சுட்டிக்காட்டுகிறார்.

அது மட்டுமல்லாமல் மரங்களை மீண்டும் நடுவதற்கு வேறு இடத்தை தேசிய அதிவேக இரயில் நிறுவனம் இன்னும் பார்க்கவில்லை என்றும் அவர் கூறுகிறார். நிலப்பற்றாக்குறை கொண்ட மும்பை மற்றும் தானே போன்ற மாவட்டங்களில் மரங்களை பிடுங்கி நடுவது ஒருபோதும் எளிதான செயலல்ல. சரியாக திட்டமிடவில்லை எனில் முடிவில் 50,000 மரங்களுக்கு மேல் நாம் இழக்க நேரிடும் என்று அவர் மேலும் கூறினார்.

சுற்றுச்சூழல் மட்டுமல்ல மக்களை அகதிகளாக்குவதும் கூடுதலான சிக்கல். மும்பைக்கு வெளியே தானே மற்றும் பல்ஹர் இரண்டு மாவட்டங்களும் பல கோடி மதிப்புமிக்க திட்டங்களால் கடுமையாக பாதிக்கப்பட உள்ளன. சான்றாக ஏழு கிலோமிட்டர் நீளம் கொண்ட கடல் வழி சுரங்கப்பாதையின் காரணமாக குன்பி மற்றும் ஆக்ரி போன்ற விவசாய சமூக மக்களும் தானே மாவட்டத்தில் பாதிக்கப்பட இருக்கின்றன.

தானே மாவட்டத்தில் உள்ள தனது சிறு நிலத்தை காண்பிக்கும் வழக்குரைஞர் பரத்வாஜ் சவுத்ரி.

பாதிக்கப்பட்ட தானே மாவட்ட கிராமமொன்றில் தனக்கு சிறிய நிலம் இருந்ததாக மும்பையை சேர்ந்த வழக்குரைஞரான பரத்வாஜ் சவுத்ரி கூறினார். கடுமையாக எதிர்ப்பு இருந்த போதிலும் நிலங்களை கொடுக்க கிராம மக்கள் கடுமையாக நிர்பந்திக்கப்பட்டனர். “இப்படி நிலங்களை இழப்பதென்பது முதன்முறையல்ல. முன்னரும் நிலங்களை இப்படியான திட்டங்களுக்கு நாங்கள் இழந்துள்ளோம். மேலும் இப்படியான இழப்புகளுக்கு எவ்விதமான முறையான இழப்பீடுகளும் வழங்கப்பட்டதில்லை” என்று அவர் கூறினார்.

ஆனால் புல்லட் இரயில்கள் மூலம் மாநகரங்களை இணைப்பது கரியமில வாயு வெளியேற்றத்தை குறைக்கும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால் இதற்கு எவ்விதமான அறிவியல்பூர்வமான பின்னணியும் இல்லை. இத்திட்டம் சுற்றுப்புறச் சூழலை இன்னும் கடுமையாகப் பாதிக்கும் என்றே தோன்றுகிறது.

“கிராம மக்கள் கூற்றுக்கு மாறாக 2,200 பேர்களது ஒப்புதலின் பேரில்தான் 40 விழுக்காடு நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களது வங்கி சேமிப்புகளுக்கு பணமும் செலுத்தப்பட்டுள்ளது. உரிமையாளர்களது ஒப்புதலின் பேரிலேயே நிலம் பெறப்பட்டுள்ளது என்பதை அறிந்தால் நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்” என்று தேசிய அதிவேக இரயில் நிறுவன செய்தித்தொடர்பாளர் சுஷ்மா கவுர் கூறினார். மேலும்  2019 ஆம் ஆண்டு இறுதிக்குள் மீதி நிலங்களும் கையகப்படுத்தப்படும் என்று அவர் கூறினார்.

பட்டாச்சார்யா மற்றும் ஃபெர்னாண்டஸ் இருவரது பீதிக்கும் காரணமில்லாமல் இல்லை. மெட்ரோ திட்டத்திற்காக “2017 முதல் இன்று வரை 1,200 -க்கும் அதிகமான மரங்கள் தெற்கு மும்பையிலிருந்து ஆரேய் (Aarey) காலனிக்கு பிடுங்கி நடப்பட்டன. அவற்றில் 50 விழுக்காட்டிற்கும் மேல் புதிய இடத்திற்கு போவதற்குள் மடிந்து விட்டன. வேரோடு பெயர்ப்பது, எடுத்து செல்வது மற்றும் மீண்டும் நடுவது போன்ற செயல்கள் முறையாக நடக்காததால் மரங்கள் சில நாட்கள் கூட உயிருடன் இல்லை” என்று பட்டாச்சார்யா கூறினார்.

படிக்க:
மகாராட்டிரா : விவசாயிகளின் மயான பூமி !
♦ கார்ப்பரேட்களின் நன்கொடையில் 93 % பெற்றது பாஜக தான் !

மெட்ரோ-3 திட்டத்தின்போது ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களில் மரங்கள் வாடி விடுவதும் ஒன்று. ஆரேயில் உள்ள பெரிய எண்ணிக்கையிலான பழங்குடி மக்கள் ஆரேய் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியிலுள்ள தங்களது வாழ்வாதாரமான பாரம்பரிய விவசாய நிலங்களை இழந்துள்ளனர்.

கடந்த மூன்றாண்டுகளாக மெட்ரோ-3 (கொலாபா – பந்த்ரா சிறப்பு பொருளாதார மண்டலம்) திட்டத்திற்காக கார் நிறுத்த கொட்டகை ஒன்றை அமைப்பதை எதிர்த்து அப்பகுதி மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் பசுமை தீர்ப்பாயம், மும்பை உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் வரை போராடி வருகின்றனர்.

மெட்ரோ கார் நிறுத்த கொட்டகைக்கு அருகிலேயே 190 ஏக்கர் நிலத்தில் உயிரியல் பூங்கா ஒன்றை அமைக்க மும்பை நகராட்சி திட்டம் தீட்டியுள்ளது. அங்கு சபாரி வசதியை ஏற்பாடு செய்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கவும் அழிந்து வரும் விலங்குகளை அங்கு வைத்து பாதுகாக்கவும் திட்டமிட்டு வருகிறது.

திட்டத்திற்கான பரிந்துரை தயாரான மறுகணமே நிலத்தை கையகப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மும்பை நகராட்சி தொடங்கியது. உயிரியல் பூங்காவை அமைக்க நகராட்சி ஆணையர் பிரவீன் பரதேசி வனத்துறையுடன் கைகோர்த்திருக்கிறார்.

இந்த முனைப்பான திட்டம் அழிந்து வரும் வன விலங்குகளை பாதுகாப்பதாக கூறிக்கொண்டாலும் அதன் நேரடியான பாதிப்பு ஆரேய் வனப்பகுதியில் ஏழு கிராமங்களில் வாழ்ந்து வரும் வார்லி சமூகத்திற்கு தான்.

மனிஷா திண்டே தன் தாயாருடன் அவர்களது நிலத்தில் இருக்கும் புகைப்படம். இது போன்ற நூற்றுக்கணக்கான பழங்குடிகளின் நிலங்கள் உயிரியல் பூங்காவுக்காக அரசால் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

பாதிக்கப்பட இருக்கும் ஏழு கிரமங்களில் மனிஷா திண்டேவுடைய மொராஷி கிராமமும் ஒன்று. இப்பகுதியில் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வரும் பழங்குடிகளை அழித்து, விலங்குகளை பாதுகாக்க இங்கே உயிரியல் பூங்கா அமைக்கப்படவுள்ளது என்று அவர் கூறினார். திண்டெவுக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது. அதன் விளைச்சலை நம்பி 8 பேர் கொண்ட குடும்பம் இருக்கிறது.

”எங்களுக்கு வேறு வருமானம் எதுவும் கிடையாது. ஒருவேளை இந்த அரசு எங்களுக்கு இழப்பீடு கொடுத்தாலும் மாற்றுத் தொழில் எதுவும் எங்களுக்கு கிடையாது. பழங்குடிகளை கட்டாயமாக வெளியேற்றி எந்த வளர்ச்சி திட்டங்களும் இருக்க முடியாது” என்றும் அவர் கூறினார்.

மக்கள் இயக்கங்கள் அளவில் சிறியதாக இருந்தாலும் கூட அதிகாரிகளுடைய முடிவுகளை மாற்ற அழுத்தம் கொடுத்திருக்கின்றன. சான்றாக புல்லட் ரெயில் திட்டத்திற்காக 54,000 சதுப்பு நில மரங்கள் வெட்டப்பட இருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் கூறியிருந்தார். அதற்கு ஒரு வாரம் கழித்து போக்குவரத்து அமைச்சகத்தின் தலையீட்டிற்கு பின்னர் தானே மாவட்ட இரயில் நிலைய வடிவமைப்பு சதுப்பு நிலப்பகுதியில் இருந்து விலகி இருக்குமாறு மாற்றப்பட்டதாக தேசிய அதிவேக இரயில் நிறுவன நிர்வாக இயக்குனர் அச்சல் காரே தி வயர் பத்திரிகைக்கு கூறினார்.

”இதன் மூலம் 21,000 சதுப்பு நில மரங்களை பாதுகாத்து விட்டோம். 32,044 மரங்கள் மட்டுமே தற்போது வெட்டப்பட உள்ளன” என்று காரே கூறினார். பாதிக்கப்படும் சதுப்பு நில மரம் ஒன்றிற்கு பதிலாக 5 மரங்களுக்கான நிதியை ”சதுப்பு நில செல்” ஒன்றிற்கு ஒதுக்கி அதன் மூலம் புதிய சதுப்பு நில காடுகளை தேசிய அதிவேக இரயில் நிறுவனம் உருவாக்க இருப்பதாக அவர் கூறினார்.

ஆனால் எண்ணிக்கை குறைந்தாலும்கூட அது ஆபத்தானது. கடந்த காலங்களில் மரங்களை நடுவதில் தோல்வியடைந்த திட்டங்களை பார்க்கும் போதும் புதிய மரங்கள் வளர நீண்ட ஆண்டுகள் பிடிக்கும் என்பதாலும் இந்த திட்டங்கள் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் சுற்றுச்சூழலின்பால் பெரும் தாக்கத்தையே ஏற்படுத்தும்.


கட்டுரையாளர் : Sukanya Shantha
தமிழாக்கம் : சுகுமார்
நன்றி: தி வயர்

பள்ளி மாணவர்கள் இளம் பாசிஸ்டு அமைப்புகளில் சேர்வது கட்டாயம் !

பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் | விரிவுரை – 4 | பாகம் – 23

டோக்ளியாட்டி

க்கள் படையின் சமூகக் கட்டமைப்பு ராணுவத்தின் சமூகக் கட்டமைப்புடன் மிக நெருங்கி வருகிறது என்பதை நாம் மனதிற் கொள்ள வேண்டும். இந்த மக்கள்படை கிராமப்புற முதலாளிகள் உருவாக்கி வந்த பழைய பாணி படைகளைப் போன்றவை அல்ல என்பது இங்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகும். பிரான்சில் நடைபெறுவது போன்றே வேலையில்லாதவர்கள் ஒரு தொண்டர் படைப்பிரிவாக அணி திரட்டப்படுகின்றனர். இதனை மிக முக்கியமாகக் கவனிக்க வேண்டும்; ஏனென்றால் மக்கள் படையில் பணியாற்றுவது இராணுவத்தில் பணியாற்றுவதற்கு ஒப்பானதாகக் கருதப்படும் சாத்தியக் கூறுகளை இது தோற்றுவிக்கிறது.

இனி அடுத்து, இராணுவ ரீதியாக மட்டுமன்றி பிரசார ரீதியாகவும் அமைந்துள்ள பாலில்லா, இளைஞர் முன்னணிப் படை, இளம் பாசிஸ்டுகள் போன்ற அமைப்புகளைப் பற்றிப் பார்ப்போம். பாலில்லா அமைப்புகளில் பதினான்கு வயது வரையுள்ள குழந்தைகள் இடம் பெறுகிறார்கள். பாசிஸ்டுக் கட்சியில் சேரும் கட்டம் வரையிலான இளைஞர்களைக் கொண்டு இளைஞர் முன்னணிப் படை ஆரம்பத்தில் அமைக்கப்பட்டு வந்தது. ஆனால் பிறகு இளைஞர் முன்னணிப் படைக்கும் இளம் பாசிஸ்டுகளுக்கும் இடையே ஒரு பாகுபாடு புகுத்தப்பட்டது. முன்னணிப்படையில் சேருவதற்கான வயது 17 வரை என்று நிர்ணயிக்கப்பட்டது. 17 வயது முதல் பாசிஸ்டுக் கட்சியில் சேரும் கட்டம் வரையுள்ள இளைஞர்கள் இளம் பாசிஸ்டுகள் அமைப்பில் சேரலாம்.

இத்தகைய ஏற்பாடு கூட உடனடியாக செய்யப்படவில்லை; தொடர்ந்து பல முயற்சிகளும், பரிசோதனைகளும் செய்யப்பட்ட பிறகே இந்த ஒழுங்கமைப்பு சாதிக்கப்பட்டது.

1926-1927 வரை பாலில்லா அமைப்பு சுய விருப்ப அடிப்படையில் அமைந்ததாகவே இருந்தது. பிறகு அது கட்டாயமாக்கப்பட்டது. ஆனால் நூறு சதவீதக் கட்டாயமல்ல, தொண்ணூறு சதவீதக் கட்டாயம்தான். பாலில்லாவில் தமது குழந்தைகளைப் பதிவு செய்து கொள்ளும்படி பெற்றோர்கள் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். இதை மீறினால் அபராதம் முதலிய தண்டனைகள் உண்டு.

கட்டாயப் பதிவுதான் பொதுவாகக் கடைப்பிடிக்கப்பட்டு வந்த விதிமுறையாகும்.

இந்த அமைப்புக்கும் பாசிஸ்டுக் கட்சி நிறுவனத்துக்கும் இடையே மிகப் பெரிய வேறுபாடு இருந்தது; கட்டாயப்படுத்தும் அம்சம் பிந்தையதைவிட முந்தையதுக்குத்தான் மிகத் தீவிரமானது. பட்டவர்த்தனமாகக் கூறுவதானால் ஓர் ஆலைத் தொழிலாளி பாசிஸ்டுக் கட்சியில் சேர வேண்டுமென்ற கட்டாயம் ஏதுமில்லை. ஆனால் பள்ளிக்குச் செல்லும் அவனுடைய மகன் பாலில்லாவில் அவசியம் சேர்ந்துதான் ஆக வேண்டும். இந்த நிறுவனத்தின் நிர்ப்பந்த அம்சம் இதில்தான் பொதிந்திருக்கிறது. இளைஞர் முன்னணிக்கும் இது பொருந்தும். எனினும் சற்றுக் குறைவான அளவில் இது பொருந்தும். இங்கும் கட்டாய அம்சம் உண்டு. இளம் பாசிஸ்டுகள் அமைப்பை எடுத்துக் கொண்டால் கட்டாய அம்சம் இதில் எவ்விதம் புகுத்தப்படுகிறது என்பதையும், எத்தகைய வடிவங்களை அது மேற்கொள்கிறது என்பதையும் காணலாம். இவை போன்ற வெகுஜன நிறுவனங்களுக்கும் பாசிஸ்டுக் கட்சிக்குமுள்ள வேறுபாட்டை துலாம்பரமாக சுட்டிக்காட்டும் பொருட்டு இளம் பாசிஸ்டுகள் அமைப்பைப் பற்றி இங்கு சற்று விரிவாகவே கூற விரும்புகிறேன்.

ஒரு பாசிஸ்டுக் கட்சி உறுப்பினரின் கடமைகள் என்ன? அவன் எதைச் செய்யக் கட்டுப்பட்டிருக்கிறான்? தேசத்தை நேசிப்பது, தந்தையர் நாட்டுக்குச் சேவை செய்வது போன்ற பொதுக் கடமைப் பொறுப்புகளை நிறைவேற்றுவதைத் தவிர அவன் செய்ய வேண்டியவை மிகவும் குறைவு. வருடாந்தர உறுப்பினர் மகாசபைக் கூட்டத்தில் கலந்து கொள்வது, சில அணிவகுப்புகளில் பங்கு கொள்வது, அருகிலுள்ள மன்றத்துக்கு அடிக்கடி செல்வது போன்ற பணிகளை இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிடலாம். உண்மையில், மன்றத்துக்கு இவ்விதம் அடிக்கடிச் செல்ல வேண்டும் என்பது கூடக் கட்டாயமில்லை.

மாறாக, இளம் பாசிஸ்டுகள் முக்கியமாக சீருடையை விலை கொடுத்து வாங்கி தவறாது அணிய வேண்டும். அடிக்கடி அணி வகுப்புகள் நடைபெற்று கிட்டத்தட்ட ஒவ்வொரு ஞாயிறன்றும் – இராணுவ போதனைகள் அளிக்கப்படுகின்றன. தவிரவும் இளம் பாசிஸ்டுகள் தாங்கள் உறுப்பினர்களாக இருக்கும் காலம் வரையிலும் இராணுவ ரீதியான கட்டுப்பாட்டை கண்டிப்பான முறையில் கடைப்பிடிக்க வேண்டும். பயிற்சிப் பிரிவின் தலைவர் எல்லா இளைஞர்களுடனும் நிரந்தரமாக இடையறாது தொடர்பு கொண்டிருக்கிறார். உச்சி மட்டத்திலிருந்து கடைசி உறுப்பினர் வரை ஒரு வரையறுக்கப்பட்ட படிநிலை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை பாசிஸ்டுக் கட்சியில் காண முடியாது. ஓர் இளம் பாசிஸ்டு தனது பயிற்சிப் பிரிவின் தலைவன் யார் என்பதை அனுதினமும் அறிவான். எந்தக் காலத்திலும் பயிற்சிப் பிரிவின் தலைவன் தன் இல்லத்துக்கு வந்து தன்னைச் சந்திப்பான் என்பதையும் அவன் அறிவான். அவன் முகாமில் கலந்து கொள்ள வேண்டும் (சென்ற வருடம் ஐம்பது பாசிஸ்டு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டன). இது பாசிஸ்டுகளுக்கு இல்லாத மற்றொரு கடமைப் பொறுப்பாகும்.

இந்தக் கடமைப் பொறுப்புகளை நீங்கள் நோக்கினால், பாசிஸ்டுக் கட்சியைவிட அதன் இந்த இணை அமைப்பில் இந்தக் கடமைகள் மிக அதிக எண்ணிக்கையில் இருப்பதைக் காணலாம். இந்த அமைப்பின் முதல் அம்சம் இது.

அடுத்து, இரண்டாவது அம்சத்தைப் பார்ப்போம். இத்தனை கடமைப் பொறுப்புகள் இருந்த போதிலும் இந்த அமைப்பு பாசிஸ்டுக் கட்சியைவிட அதிக வெகுஜனத்தன்மை கொண்டதாகும். பாலில்லாவின் தற்போதைய உறுப்பினர்கள் எண்ணிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். இதில் பத்து இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இருக்கிறார்கள். கட்சியிலுள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கைக்கு இது கிட்டத்தட்ட சமம். 1930-ல் பாலில்லாவின் உறுப்பினர்கள் எண்ணிக்கை 13 இலட்சம். அதே சமயம் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கையோ பத்து லட்சத்தைக் கூட எட்டவில்லை. பாலில்லாவில் ஆறு முதல் பதினான்கு வயதுள்ளவர்கள்தான் இடம் பெற முடியும். கட்சியில் சேருவதற்கோ எத்தகைய வயது வரம்பும் இல்லை. இதனைக் கருத்திற் கொண்டு பார்த்தால் பாலில்லாவின் மிகப் பரந்த இயல்பை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

படிக்க:
ஜாதிய ஏற்றத்தாழ்வுகளை கொண்ட பிராமணமதம் !
இந்தியாவில் #MeToo இயக்கம் ! அச்சுநூல்

இளம் பாசிஸ்டு அமைப்புக்கும் இது பொருந்தும். பதினெட்டு முதல் இருபத்தியொரு வயதுள்ளவர்கள்தான் இதில் சேர முடியும் என்றிருந்தாலும் இந்த நிறுவனத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஏறத்தாழ ஐந்து லட்சத்தை எட்டியிருக்கிறது. இதனை பாசிஸ்டுக் கட்சியின் வயது வந்தோர் எண்ணிக்கையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், இந்த அமைப்பின் வெகுஜனத் தன்மை மிகத் தெளிவாகப் புலப்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறிருந்தும் இளம் பாசிஸ்டு அமைப்பின் கடமைகள் ஏராளம். இதில் வெளிப்படையான ஒரு முரண்பாடு இருப்பதைக் காணலாம். இது எவ்வாறு தீர்க்கப்பட்டது? மிகுந்த கட்டுப்பாட்டைப் புகுத்தி இப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டது.

(தொடரும்)

பால்மிரோ டோக்ளியாட்டி
ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள்
தமிழில் : ரா. ரங்கசாமி
பக்கங்கள் : 233
விலை : ரூ. 50.00
வெளியீடு : நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்

முந்தைய பகுதிகள் : பால்மிரோ டோக்ளியாட்டி ஆற்றிய பாசிசம் குறித்த விரிவுரைகள் !

ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதாம் !

அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை தொடர் | பகுதி – 12

பிராமணர்கள் , சவுகரியத்திற்குத் தகுந்தாற்போலக் கூட்டுக் குடும்பம் சவுகரியமென்கிறார்கள். தமிழர்கள் அன்புக்குக் கல்யாணம் செய்யவேண்டுமென்று கூறித் தம் குழந்தைகளை அந்த அன்புடன் பாதுகாக்கிறார்கள். பிராமணர் அல்லது ஆரியர், இவ்வுலகத்தில் தம் ஜாதியார் முன்னால் வரவேண்டுமென்றும் அதற்காகவே குழந்தைகளைப் பெற வேண்டுமென்றும் கல்யாணம் செய்கிறார்கள். மற்றும் தம் வகுப்பை விருத்தி செய்யவேண்டுமென்கிற எண்ணத்துடனும், தம் பிள்ளைகளைக் காப்பாற்றி ஆண்பிள்ளைகளைப் பெறவேண்டுமென்ற எண்ணத்துடனும் கல்யாணம் செய்கிறார்கள்.

பிச்சை கேட்பது, தமிழர்களால் இழிவாகக் கருதப்படுகிறது. ஆனால், பிராமணர்கள் எனப்படும் ஆரியர்கள் அதுதான் சிறந்தது என்று எண்ணுகிறார்கள். இதற்குப் பல உதாரணங்கள் சொல்லலாம். இதுதானா ஆரியர்களுக்கும் ஆரியரல்லாத தமிழ் மக்களுக்கும் வித்தியாசமில்லாத பொதுவான கலை என்று சொல்லக்கூடியது.

பல பொய்க் கூற்றுகள், சரித ஆராய்ச்சியின்மையால் முளைக்கின்றன. இக்காளான்களைப் போக்கப் பேராசிரியர் பாரதியார் கூறியது போன்ற ஆராய்ச்சியுரைகள் மேலும் சிலவற்றைத் தருகிறோம்.

பண்டைக் காலத்தில் தமிழ்ப் பெருமக்கள் அறிவிலும் ஆற்றலிலும் கைத்தொழில் வியாபாரங்களிலும், அரசியல் நாகரிகத்திலும் தலை சிறந்து விளங்கினார்கள் என்பது எவரும் மறுக்க முடியாத உண்மை. பல நாட்டுச் சரித்திரங்களில் இதற்கு ஆதாரங்களுண்டு. ஆயினும், இடைக் காலத்தில் ஆரியர் தமிழர் நாகரிகத்தைத் திருத்தி மாற்றி தங்களுக்கே பெருமை உண்டாக்கத்தக்க விதமாகப் பலவித வேத புராணங்களை எழுதித் தமிழர் சிறப்பை உருத்தெரியாமல் மாற்றிவிட்டார்கள்.

ஆரியர், படையெடுத்து வந்த தமிழர்களைப் போரில் வென்றதாகவும், தமிழர்கள் ஆரியர்களை எதிர்த்து நிற்க  மாட்டாமல், விந்திய மலைக்குத் தெற்கே பின்வாங்கி ஓடி விட்டதாகவும், ஆரியர் வந்த பிறகே இந்தியாவில் நாகரிகம் ஏற்பட்டதென்றும், ஆரியர்கள் தந்திரமாகச் செய்து வந்த பிரச்சாரம் காலக்கிரமத்தில் நாடெங்கும் பரவி வேரூன்றி விட்டது. பெரும்பான்மையினரான மக்கள், இன்றும் இந்தக் கதைகளை உண்மையென நம்பிக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்ப் புலவர்களிலும் பலர், இந்தப் பொய்க் கதைகளை உண்மை போல எடுத்துக் கூறிப் பிரசங்கங்கள் செய்து வருகிறார்கள். இதுவும் போதாதென்று சென்ற நூற்றாண்டின் கடைசிப் பாகத்தில், ஐரோப்பிய அறிஞர் சிலர் இந்தியப் புராதனக் கதைகளை உண்மைபோல நம்பி, ஆரியர் என்ற ஒரு வகுப்பார் மத்திய ஆசியாவிலிருந்து கிளம்பி ஐரோப்பா முதலிய இடங்களுக்குச் சென்றனர் என்றும், அவர்களில் ஒரு பிரிவினர் இந்தியாவுக்கும் படையெடுத்து வந்து இந்தியாவை நாகரிகப்படுத்தினர் என்றும் புதுமை புனைந்து ஒரு புதுக்கதை செய்தனர். இதை இங்குள்ள ஆரிய வகுப்பினர் தங்கள் குலப் பெருமையை நிலைநாட்டுவதற்காக வெகு சாமர்த்தியமாகப் பிரச்சாரம் செய்து வந்திருக்கிறார்கள்.

ஆரியர் படையெடுத்து வந்து இந்தியாவையும் திராவிடப் பெருமைகளையும் நாசப்படுத்தினர் என்ற இந்தக் கற்பனைக் கதைக்குச் சரியான ஆதாரம் எதுவுமே கிடையாது. ‘வேலிக்கு ஓணான் சாட்சி’ என்பது போல் ஆரியர் எழுதின வேத புராணங்களே இதற்கு ஆதாரமாகக் காட்டப்படுகிறது. ஆனால் அறிஞர், தோழர் பி.டி. சீனிவாச ஐயங்கார் எம்.ஏ. இந்தப் படுபொய்யை அடியோடு மறுத்து, இதெல்லாம் வெறும் கற்பனை என்று எடுத்துக்கூறி இருக்கிறார். ஒரு சம்பவம் சம்பந்தமாக அவர், (இந்தியப் புராதன ஆராய்ச்சி வெளியீடு 42 -ம் ஆண்டு புத்தகம் 77-வது பக்கத்தில்) எழுதியுள்ள ஆராய்ச்சிக் கட்டுரையின் சாரம் வருமாறு:

பி.டி. சீனிவாச ஐயங்கார்.

”தற்காலச் சரித்திராசிரியர்கள் பெரும்பாலோருக்கு அரசியல் கொள்கைப் பற்றும், மதப்பற்றும் இருந்தே வந்திருக்கின்றன. உதாரணமாகச் சரித்திராசிரியர்களான ஹியூமையும், மக்காலேயையும் கவனித்தால், சரித்திர உண்மைகளைத் தொகுப்பதிலும், அவற்றை வருணித்துக் கூறுவதிலும், ஹியூம் தமது ”கன்சர்வேடிவ்’’ கட்சிக் கொள்கைகளையும், மக்காலே தமது ”லிபரல்’’ கட்சிக் கொள்கைகளையும் இலைமறை காய் போல் வெளியிட்டிருப்பதைக் காணலாம். புராதன சரித்திர விஷயத்திலும் இப்படித்தான்.

ஆரிய நாகரிகத்தைப்பற்றி மேற்கண்ட கற்பனை ஆரம்பமான பொழுது, ஆரியர் உயர்ந்த உருவமும் நீண்ட தலையும் அழகிய மேனியுமுள்ளவர்களென்றும், அவர்கள்தான் ஜெர்மனியின் மூதாதைகள் என்றும், ஜெர்மன் ஆராய்ச்சிக்காரர்கள் கூறினார்கள்.

அதற்கு மாறாகப் பிரெஞ்சு ”ஆல்ப்பின்” வகுப்பினர் மூலமாகத்தான் ஆரிய நாகரிகமும் மொழியும் ஐரோப்பாவுக்குள் புகுந்தது என்று வற்புறுத்தினார்கள் பிரெஞ்சு அறிஞர்கள். ஆல்ப்பின் இனத்தினர் பிரெஞ்சுக்காரரில் பெரும்பாலாராய் இருப்பதே இதற்குக் காரணம்.

இத்தாலிய ஆசிரியர் செர்ஜி கூறியிருப்பது. இவ்விதக் கருத்துக்களுக்கு முற்றும் மாறானது. ஐரோப்பாவில் ஏற்பட்ட கிரேக்க – ரோம் நாகரிகம், மத்திய தரைக்கடல் பக்கத்திலுள்ள ஓர் இனத்தினரால் கொண்டுவரப்பட்டதென்றும் ஐரோப்பா மீது படையெடுத்து வந்த ஆரியர்கள் காட்டுமிராண்டிகள் என்றும் கூறியிருக்கிறார் அவர்.

இப்படிச் சரித்திரத்தைப் பலவாறு மாறுபடுத்தி இருப்பதால், கூரிய புத்தியால் அனுதாபத்துடன் சுயநலப் பித்தலாட்டப் பிரச்சாரமாகிய தடித்த திரையைக் கிழித்தெறிந்து அதனுள் மறைந்திருக்கும் உண்மைகளைப் பகுத்தறிவுடன் கண்டு பிடித்து வெளியிட வேண்டும்.

படிக்க:
தலித் இளைஞரோடு திருமணம் – மகளுக்கு ஆணவக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக எம்எல்ஏ !
கேள்வி பதில் : ‘மூன்றாம் கலைஞரா’ உதயநிதி ஸ்டாலின் ?

ஆரியர் இந்தியா மீது படையெடுத்து வெற்றி பெற்று நாடெங்கும் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்ற கற்பனையைப் பகுத்தறிவு வாயிலாக ஆராய்ச்சி செய்தல் வேண்டும்.

வட இந்தியா, பாரசீகம், அர்மீனியா பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகள் ஆகிய தேசங்களில் பேசப்படும் பல்வேறு பாஷைகள், ஒரே பாஷைத் தொகுதியைச் சேர்ந்தவையென்று மொழி ஆராய்ச்சிக்காரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இத்தொகுதிக்கு, இந்திய – ஜெர்மன் பாஷைகள் என்று பெயர் கொடுத்தார்கள். அதன் மேல் இந்தப் பாஷைகளுக்கெல்லாம் ஒரு தாய் மொழி இருந்திருக்க வேண்டும் என்றும், அந்தப் பாஷையைப் பேசியவர்கள் (அதாவது ஆரியர்கள்) இந்துக்குஷ் மலைக்கு அப்பாலுள்ள பிரதேசத்தில் வாழ்ந்திருந்தார்களென்றும், சரித்திர காலத்துக்கு முன் அவர்களில் சில பிரிவினர் பாரசீகம், இந்தியா, ஐரோப்பா முதலிய நாடுகளுக்குச் சென்று குடியேறினார்களென்றும் அழகாகக் கற்பனை செய்து சரித்திரம் எழுதினார்கள்.

(தொடரும்)

அண்ணாவின் ஆரிய மாயை
பக்கங்கள் : 64
விலை : ரூ. 40.00
வெளியீடு : திராவிடர் கழகம்
நூல் கிடைக்குமிடம் : கீழைக்காற்று வெளியீட்டகம்.

ஆரிய மாயை என்னும் இந்நூல் கா.ந. அண்ணாதுரை (அண்ணா) எழுதிய சிறு நூலாகும். அண்ணாவின் படைப்புகளில் மிகுந்த சர்ச்சைகளை ஏற்படுத்திய சில நூல்களுள் இதுவும் ஒன்று. இந்நூலில் பார்ப்பனியத்தின் கொடுங்கோன்மை பற்றியும், பார்ப்பனர்களின் சிறுமதி குறித்தும் அங்குலம் அங்குலமாக அலசி ஆராய்ந்து அம்பலப்படுத்தியிருக்கிறார். இக்காரணங்களுக்காக, அவருக்கு ரூபாய் 700 அபராதம் மற்றும் 6 மாதங்கள் சிறைத் தண்டனையும் சென்னை மாநில அரசால் அண்ணாவுக்கு அளிக்கப்பட்டது.

முந்தைய பகுதிகள் : அறிஞர் அண்ணாவின் ஆரிய மாயை

நீங்கள் எங்கள் சோவியத் தேவதை !

உண்மை மனிதனின் கதை | இரண்டாம் பாகம் | அத்தியாயம் – 9

மாஸ்கோ ஆற்றின் மேல் உறைந்திருந்த பனிப்பாளம் உருகி அகன்றுவிட்டது. பனிக்கட்டி உருகியபோது இரைச்சலுடன் பாய்ந்த ஆறு இப்போது மீண்டும் அமைதியுற்றுப் பெருகியது. அதன் விறல்மிக்க கப்பல்களுக்கும் தோணிகளுக்கும் ஆற்று டிராம்வே எனப்பட்ட பயணிப் படகுகளுக்கும் போக்குவரத்துக்குப் பணிவுடன் இடமளித்தது. அந்த கடினமான நாட்களில் சோவியத் தலைநகரில் சாலைப் போக்குவரத்து அருகியிருந்தது, ஆற்றுப் போக்குவரத்தே அதற்கு ஈடு செய்தது. குக்கூஷ்கின் அவச்சொல் கூறியது போல நாற்பத்து இரண்டாவது வார்டில் ஒருவரும் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படவில்லை. மாறாக, கமிஸார் ஒருவர் நீங்கலாக எல்லோரது உடல் நிலையும் சீர்பட்டு வந்தது. மருத்துவமனையிலிருந்து வெளிச் செல்வது பற்றிய பேச்சே அடிபட்டது.

முதன்முதலாக வார்டை விட்டு வெளியேறினார் ஸ்தெபான் இவானவிச்.

தமது இராணுவச் சீருடையை அணிந்து பயணம் செய்வதற்காக அவர் வார்டுக்கு வந்தார். சாயம் போய் வெள்ளை வெளேறென்று சலவை செய்யப்பட்ட சட்டையை ஒரு மடிப்பு கூட விழாதபடிக் காற்சட்டைக்குள் செருகி இடுப்புவாரால் இறுக்கியிருந்த அந்த ஈசறுகூடான மனிதர் ஒரு பதினைந்து ஆண்டுகள் வயதில் இளையவராகக் காணப்பட்டார். கண்கூசும் படி மின்னுமாறு மெருகேற்றப்பட்டிருந்த வீர நட்சத்திரமும் லெனின் விருதும் “துணிவுக்காக” அளிக்கப்பட்ட பதக்கமும் அவருடைய மார்பின் மீது பளிச்சிட்டன. மேலங்கி அவரது படை வீர மாண்பை மறைக்கவில்லை. பழைய நீள் ஜோடுகளிலிருந்து அரும்பு மீசை வரை ஸ்தெபான் இவானவிச்சின் தோற்றம் முழுவதும் 1914-ம் ஆண்டுப் போர்க்காலக் கிறிஸ்துமஸ் கார்டில் அச்சிடப்பட்ட பகட்டான ருஷ்யப் படைவீரனுடைய தோற்றத்தை ஒத்திருந்தது.

ஸ்தெபான் இவானவிச் வார்டில் ஒவ்வொரு தோழரையும் அணுகி விடை பெற்றுக் கொண்டார். ஒவ்வொருவரையும் அவரது பட்டத்தைக் கூறி அழைத்து, பூட்சுக் குதிகளை ‘டக்’கென்ற ஒலியுடன் அடித்து இராணுவ முறையில் அவர் வணங்கி விடை பெற்றதைக் காணவே உவப்பாயிருந்தது.

“விடைபெற அனுமதியுங்கள், தோழர் ரெஜிமென்ட் கமிஸார்” என்று ஓரக் கட்டில் அருகே தனிப்பட்ட மனநிறைவுடன் சொன்னார் அவர்.

“மீண்டும் சந்திப்போம், ஸ்தெபான். நலமே வாழ்” என்று கூறி வலியையும் பொருட்படுத்தாமல் அவர் பக்கம் கையை நீட்டினார் கமிஸார்.

ஸ்தெபான் இனாவிச் முழந்தாள் படியிட்டு, கமிஸாரின் பெரிய தலையை அணைத்துக் கொண்டார். ருஷ்ய வழக்கப்படி இருவரும் மூன்று முறை மாற்றி மாற்றி முத்தமிட்டுக் கொண்டார்கள்.

“குணமடையுங்கள், ஸெம்யோன் வஸீலியெவிச். ஆண்டவன் உங்களுக்கு உடல் நலமும் நீண்ட ஆயுளும் அருள்வாராக, பொன்னான மனிதரே. எங்கள் தகப்பனார் எங்களை இவ்வளவு பரிவுடன் பேணவில்லை. உங்களது அன்பை வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்…” என்று குரல் தழுதழுக்கக் கூறினார் ஸ்தெபான் இவானவிச்.

“போங்கள், போங்கள், ஸ்தெபான் இவானவிச். இவரைக் கிளர்ச்சி அடையச் செய்வது கெடுதல்” என்று அவர் கையைப் பற்றி இழுத்தவாறு சொன்னாள் க்ளாவ்தியா மிஹாய்லவ்னா.

“ஸிஸ்டர், நீங்கள் காட்டிய அன்புக்கும் பரிவுக்கும் நன்றி” என்று மரியாதையுடன் கூறி, தரை வரை குனிந்து வணங்கினார் ஸ்தெபான் இவானவிச். “நீங்கள் எங்கள் சோவியத் தேவதை. ஆமாம், தேவதை நீங்கள்…”

இன்னொருமுறை எல்லோருக்கும் தலைவணங்கிய பின் அவர் வார்டுக்கு வெளியே போய் மறைந்தார். எல்லோரும் குணமடைந்தார்கள். இப்போது அவர்களுடைய உரையாடல் வெறும் கனவாக இல்லை, காரியரீதியான பேச்சாக இருந்தது. குக்கூஷ்கின் ஆளோடியில் நடக்கத் தொடங்கிவிட்டான். அங்கே நடக்கும் பல நோயாளிகளுடன் அதற்குள் சச்சரவிட்டும் விட்டான். டாங்கிவீரனும் படுக்கையிலிருந்து எழுந்துவிட்டான்.

ஆளோடியில் இருந்த கண்ணாடி முன் நின்றுகொண்டு கட்டுக்கள் அகற்றப்பட்டுக் காயம் ஆறிக் கொண்டிருந்த முகத்தையும் கழுத்தையும் தோட்களையும் நெடுநேரம் பார்த்துக் கொண்டிருந்தான். அன்யூத்தாவுடன் அவனது கடிதப் போக்குவரத்து எவ்வளவுக் கெவ்வளவு உற்சாகமாக நடைபெற்றதோ, அவளுடைய பல்கலைக்கழக விவரங்களை அவன் எவ்வளவுக்கெவ்வளவு ஆழ்ந்து அறிந்து கொண்டானோ, தீ சுட்ட புண்ணால் அலங்கோலமாக்கக் காட்சியளித்த தன் முகத்தை அவன் அவ்வளவுக்கவ்வளவு அதிகக் கலவரத்துடன் கூர்ந்து நோக்கத் தலைப்பட்டான்.

மங்குலில் அல்லது அரையிருள் சூழ்ந்த அறையில் அது நன்றாக, அழகாகக்கூட இருந்தது. உயர்ந்த நெற்றியும் சற்றே சிறு மூக்கும் மருத்துவமனையில் வளர்க்கப்பட்ட குறுகிய மீசையும் இளமை ததும்பும் சிவந்த உதடுகளில் பிடிவாதத் தோற்றமுமாகத் திகழ்ந்தது மெல்லிய வடிவம். ஆனால் வெளிச்சத்தில் தோல் காயங்களால் நிறைந்து அவற்றின் சுருக்கம் விழுந்திருப்பது தென்பட்டது. அவன் கிளர்ச்சி அடைந்த போதும் நீர்ச் சிகிச்சைக்குப்பின் “என்ன சடைந்து கொள்கிறாய்? சினிமா நடிகன் ஆக விரும்புகிறாயா என்ன? அவள், அதுதான் உன் தோழி, சரியானவள் என்றால் இந்தத் தழும்புகள் அவளை அச்சுறுத்தமாட்டா. அச்சுறுத்தினால் அவள் மடைச்சி என்று அர்த்தம், அவளை எக்கேடும் கெட்டுப்போ என்று தொலைத்துத் தலை முழுகிவிடும். அவள் ஒழிந்ததே நல்லதாகும். பாங்கானவள் ஒருத்தி உனக்குக் கிடைப்பாள்” என்று அவனைத் தேற்றினான் மெரேஸ்யேவ்.

“எல்லாப் பெண்களும் இப்படித்தான்” என்றான் குக்கூஷ்கின்.

“உங்கள் தாயாருங்கூடவா?” என்று கேட்டார் கமிஸார். வார்டில் குக்கூஷ்கின் ஒருவனைத்தான் அவர் “நீங்கள்” என்று பன்மையில் அழைத்தார்.

படிக்க :
மாட்டுக்கறி என் உணவு என் உரிமை – சங்கிகளுக்கு சவால் !
நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

அமைதியான அந்தக் கேள்வி குக்கூஷ்கின் மீது விளைவித்த உளப்பதிவை வருணிப்பது கடினம். குக்கூஷ்கின் கட்டிலில் துள்ளி எழுந்தான். அவனுடைய விழிகள் வெறியுடன் அனல் சிந்தித்தன. அவன் முகம் வெளிறி துப்பட்டியைவிட வெண்மை ஆகிவிட்டது.

“பார்த்தீர்களா? நல்ல மாதரும் உலகில் இருக்கிறார்கள் என்று ஆகிறது” என்று சமாதானப்படுத்தும் தோரணையில் சொன்னார் கமிஸார். “க்யோஸ்தியேவுக்கு அப்படிப்பட்டவள் ஏன் வாய்க்கக் கூடாது? அன்பர்களே, வாழ்க்கையில் நடப்பது இது தான்: அவனவனுக்கு கொடுத்துவைத்ததுதான் கிடைக்கும்.”

சுருங்கக்கூறின், வார்டு முழுவதும் குணமடையலாயிற்று. கமிஸாரின் உடல்நிலைதான் நாளுக்குநாள் சீர்கேடு அடைந்து கொண்டு போயிற்று. மோர்பியாவாலும் கற்பூரத் தைலத்தாலுமே அவர் பிழைத்திருக்கிறார். இந்தக் காரணத்தால் சில வேளைகளில் லாகிரி போதையின் அரை மயக்க நிலையில் நாள் முழுவதும் கட்டிலில் புரண்டுகொண்டிருப்பார். ஸ்தெபான் இவானவிச் போன பிறகு எதனாலோ அவர் வெகுவாகச் சோர்ந்து விட்டார். தேவைப்பட்டால் கமிஸாருக்கு உதவும் பொருட்டு தனது கட்டிலை அவர் அருகே போடும்படி மெரேஸ்யெவ் கேட்டுக் கொண்டான். இந்த மனிதர்பால் அவனுக்கு வரவர அதிகக் கவர்ச்சி ஏற்பட்டது.

கால்கள் இன்றி வாழ்வது மற்ற மனிதர்களுடன் ஒப்பிடும் போது தனக்கு அளவிட முடியாதபடிக் கடினமாகவும் சிக்கல் நிறைந்ததாகவும் இருக்கும் என்பதை அலெக்ஸேய் புரிந்து கொண்டான். எனவே, எத்தனையோ இடர்கள் இருப்பினும் பொருட்படுத்தாமல் உண்மையான முறையில் வாழத் திறன் கொண்டிருந்த இந்த மனிதர்பால், தமது பலவீனத்தை அலட்சியம் செய்தவாறு மற்றவர்களைக் காந்தம் போல ஈர்க்க வல்லவராக இருந்த இந்த மனிதர்பால் அவனுக்கு இயல்பாகவே ஈடுபாடு ஏற்பட்டது. இப்பொழுது கமிஸார் ஆழ்ந்த அரை மயக்க நிலையிலிருந்து வெளிவருவது மேலும் மேலும் அரிதாகிக் கொண்டுபோயிற்று. ஆனால் அறிவு தெளிந்திருக்கும் கணங்களில் அவர் பழைய மனிதராகவே விளங்கினார்.

(தொடரும்)

முந்தைய பகுதிகளை படிக்க: உண்மை மனிதனின் கதை

அணி திரள்வோம் ! ஜூலை 17 – சட்டமன்ற முற்றுகை போராட்டம் | காணொளி

மக்கள் அதிகாரம் ஜூலை 17 சட்டமன்ற முற்றுகை போராட்டம் அறிவிப்பு!
தமிழகத்தில் பேரழிவுத் திட்டங்களுக்கு எதிராக போராடுவோர் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெறு!

தேதி : 13-7-2019

பத்திரிக்கைச் செய்தி

ன்புடையீர், வணக்கம் !

தமிழகத்தில் இன்று அறிவிக்கப்படாத போலீஸ் ஆட்சிதான் நடந்து வருகிறது. எது ஜனநாயகம்? எது கருத்து சுதந்திரம் என்பதை உளவுப் பிரிவு, கீயூ பிரிவு போலீசுதான் முடிவு செய்கிறது. மக்கள் பிரச்சினைகளுக்காகப் போராடும் அமைப்புகளும் செயல்பாட்டாளர்களும்  கொலை, கொள்ளையில் ஈடுபடும் கிரிமினல்களைப் போலவே காவல்துறையால் நடத்தப்படுகிறார்கள்.

விழுப்புரத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மாணவர்கள் மீது பேருந்துகளை கல்வீசி நொறுக்கியதாக பொய்வழக்கு போட்டு சிறை வைக்கின்றனர். கள்ளக்குறிச்சியில் ஸ்டெர்லைட் படுகொலைக்கு எதிராக துண்டறிக்கை வினியோகித்த மாணவர்கள் இருவர் தேசத்துரோக வழக்கில் சிறை வைக்கப்பட்டு, பிறகு நிபந்தனை பிணையில் ஒரு மாத காலம் காவல்நிலையத்தில் கையெழுத்திடுகிறார்கள். திரு வைகுண்டத்தில் கல்லூரி வாயிலில் துண்டறிக்கை விநியோகித்ததற்காக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு சிறைபடுத்தப்பட்டனர்.

காவிரி நீர் உரிமைக்காக நெய்வேலியில் நடத்தப்பட்ட பேரணியில் கலந்து கொண்ட பலர் மீது தேசதுரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. பிறகு வேறு வழக்கில் கைதான த.வா.க. தலைவர் வேல்முருகன் அவர்களை நெய்வேலியில் போடப்பட்ட தேசதுரோக வழக்கிலும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கதிராமங்கலத்தில் ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் பிரச்சாரம் செய்த பேரா.ஜெயராமன் மற்றும் பலர் மீது எண்ணற்ற வழக்குகள். மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீதும் எண்ணற்ற வழக்குகளை பல ஊர்களில் பதிவு செய்து வைத்துக் கொண்டு, ஒரு வழக்கில் கைதானவுடன் அடுத்தடுத்த வழக்குகளுக்கு கைது செய்து, இறுதியில் உபா சட்டத்திலும் சிறைவைக்க முயற்சி நடந்தது.

ஸ்டெர்லைட் போராட்டத்தில் மக்களுக்கு உதவிய வழக்கறிஞர்ள் மீது நூறு வழக்குகள் பதிவு செய்து கைது செய்ததுடன், தேசியப் பாதுகாப்பு சட்டத்திலும் நிறை வைத்தனர். இது சட்டவிரோதம் என்று மதுரை உயர்நீதிமன்றம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரை நேரில் வரவழைத்து கண்டித்தது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்திற்காக  தூத்துக்குடி மக்கள் மீதும், மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் மீதும் போடப்பட்ட 200 க்கும் மேற்பட்ட வழக்குகளை ரத்து செய்து அனைத்தையும் ஒரே வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்குப் பின்னரும் தனக்கு அதிகாரமே இல்லாத குநச 107 ஐ தூத்துக்குடி காவல்துறை மக்களுக்கு எதிராகப்  பயன்படுத்தியது. இதையும் சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்ததுடன் அப்பட்டமாக கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக போலீசார் நடந்து கொள்வதை விமர்சித்தது. இத்தனை முறை நீதிமன்றத்தால் விமரிசிக்கப்பட்ட பின்னரும் தனது சட்டவிரோத நடவடிக்கைகளை தமிழக காவல்துறை நிறுத்திக்கொள்ளவில்லை.

மே- 22 துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு ஓராண்டுக்குப் பின்னும் நினைவஞ்சலி செலுத்தக்  கூடாது” என்பதற்காக பல ஊர்களில் மக்கள் அதிகாரம் உறுப்பினர்கள் முதல் நாளே தடுப்புக் காவலில் கைது செய்யப்பட்டனர். “மக்கள் அதிகாரம் அமைப்புக்கு எந்த ஊரிலும் அரங்கம் தரக்கூடாது” என்று காவல்துறை தமிழகம் முழுவதும் வாய்வழி உத்தரவு பிறப்பித்திருக்கிறது. உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து தீர்ப்பு பெறாமல் ஒரு பொதுக்கூட்டம் கூட நாங்கள் நடத்தமுடியவில்லை.

அரங்கத்தில் கூட்டம் நடத்த சட்டப்படி காவல்துறை அனுமதி தேவையில்லை. ஆனால், மத்திய மாநில அரசுகளை விமரிசித்து அரங்குக் கூட்டம் நடத்த முயன்றால், அரங்க உரிமையாளர்களை காவல்துறை மிரட்டுகிறது.

ஸ்டெர்லைட், ஹைட்ரோ கார்பன் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராமங்களில் ஒரு சாமியானா பந்தல் அமைத்து அங்கே அமர்ந்து பெண்கள் அமைதியாக எதிர்ப்பு தெரிவிக்க விரும்பினால் அதற்குத் தடை, ஸ்டெர்லைட்டுக்கு எதிராக வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றத் தடை, ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக கருத்து தெரிவித்த ஊர்களிலெல்லாம் கிராம சபைக் கூட்டம் ரத்து .. என எந்த சட்டத்துக்கும் கட்டுப்படாத ஒரு போலீசு ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது.

கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அனுமதி மறுத்து காவல்துறை அளித்துள்ள கடிதங்களில் சிலவற்றை இத்துடம் இணைத்திருக்கிறோம். போலீஸ் சட்டம் 30(2) என்பதைக் காட்டி பல கூட்டங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கிறது. அந்த சட்டம் அமலில் இருக்கும்  காலங்களில் கூட்டம் நடத்துவதற்கு போலீசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றுதான் அந்த சட்டம் கூறுகிறது. ஆனால் அந்த சட்டம் அமலில் இருந்தாலே அனுமதி மறுக்கலாம் என்று காவல்துறை ஒரு புதிய சட்டத்தை உருவாக்கியிருக்கிறது. இங்கே அரசியல் சட்டத்தின் ஆட்சி நடக்கவில்லை – போலீசு ஆட்சிதான் நடக்கிறது என்பதை புரிந்து  கொள்வதற்கு இது ஒரு சான்று மட்டுமே.

கோலார் சுரங்கத்தில் அணுக்கழிவைப் புதைக்கக் கூடாது என்று அங்கே பாஜக, காங் உள்ளிட்ட கட்சிகள் போராட்டம் நடத்தி அதனைத் தடுத்து விட்டனர். ஆனால், தமிழகத்திலோ, கூடங்குளத்தில் அணுக்கழிவை புதைக்காதே என்று கருத்து சொல்வதற்கே தடை!

படிக்க:
நெடுவாசல் ஹைட்ரோகார்பன் : வளர்ச்சியா அழிவா ?
மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!

புல்லட் ரயில் திட்டத்துக்கு நிலம் கொடுக்கமுடியாது என்று குஜராத்திலும் மகாராட்டிரத்திலும் விவசாயிகள் போராட்டம் நடத்தியதால் அந்த திட்டமே அங்கே முடக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்திலோ எட்டு வழிச் சாலையை எதிர்த்துப் பேசுவதற்கே தடை!

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எங்கள் மாநிலத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று புதுச்சேரி முதல்வர் அதிகாரபூர்வமாக அறிவிக்கிறார். ஆனால் வேண்டாம் ஹைட்ரோ கார்பன் என்று துண்டறிக்கை விநியோகிக்கும் மாணவர்களுக்கு தமிழகத்தில் சிறை!

ஹைட்ரோ கார்பனுக்கு எதிரான எங்களது சுவரொட்டிகளை போலீசு கிழிக்கிறது. சுவரெழுத்துகளை அழிக்கிறது. பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கூட இப்படிப்பட்ட கீழ்த்தரமான நடவடிக்கைகளில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டதாகத் தெரியவில்லை.

ஜனநாயக உரிமை பறிப்பு என்பதும் சட்டவிரோத போலீசு ஆட்சி என்பதும் தமிழகத்தில் நிறுவனமயமாகிவிட்டது. இதனை நீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை. ஜனநாயக உரிமை தொடர்பாக ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஒரு நீதிபதி வழங்கும் தீர்ப்பும், அதே மாதிரியான வழக்கில் இன்னொரு நீதிபதி வழங்கும் தீர்ப்பும் முரண்படுகின்றன. ஒரு நிறுவனம் என்ற முறையில் அரசியல் சட்டம் வழங்கியிருக்கும் உரிமைகளைப் பாதுகாப்பதாக நீதித்துறை இல்லை. ஒரு வழக்கு உண்மையா பொய்யா, நீதிமன்றக் காவல் தேவையா தேவையில்லையா என்ற பரிசீலனையே இல்லாமல், கைது செய்யப்படும் அனைவரையும் நீதித்துறை நடுவர்கள் ரிமாண்டு செய்கின்றனர்.

இந்த போலீசு ஆட்சியை நாம் அனுமதிக்க கூடாது. இதற்கு எதிராக சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளும், மக்கள் மன்றத்தில் இயக்கங்களும் அறிவுத்துறையினரும் ஊடகங்களும்  குரல் எழுப்ப வேண்டும், போராட வேண்டுமென்று கோருகிறோம். இத்தகைய போலீசு ஆட்சியை நடத்திவரும் எடப்பாடி அரசைக் கண்டித்து நாங்கள் 17.7.2019 அன்று நடத்தவிருக்கும் சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் அனைவரும் பங்கேற்க வேண்டும் என்றும் உங்கள் ஆதரவை வழங்க வேண்டுமென்றும்  கோருகிறோம்.

தோழமையுடன்,
வழக்கறிஞர்.சி.ராஜு,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.
தொடர்புக்கு : 99623 66321.

நீட் எதிர்ப்பு மசோதா ரத்து : மருத்துவர் எழிலன் நேர்காணல் | காணொளி

நீட் எதிர்ப்பு மசோதா ரத்து, புதிய கல்விக் கொள்கை, இந்தி – சமஸ்கிருத திணிப்பு, இட ஒதுக்கீட்டு உரிமைகள் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் மருத்துவர் எழிலன்.

* தமிழக அரசு சட்டமன்றத்தில் இயற்றிய நீட் ரத்து மசோதாவை ரத்து செய்திருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கூறியிருக்கிறது. இதன் பின்னணியில் என்ன நடந்தது?

* தமிழகத்திற்கு நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் எங்களது கொள்கை என்று அதிமுக அரசு கூறுகிறது. நடைமுறையில் அவ்வாறு உண்மையிலேயே நீட் தேர்வை ரத்து செய்வதற்கு அது முயல்கிறதா?

* இந்தியாவின் மற்ற மாநிலங்கள் நீட் தேர்வை ஏற்றுக் கொண்டிருக்கும் போது தமிழகம் மட்டும் எதிர்ப்பது சரியா?

* நீட் தேர்வில் திறனுள்ள மாணவர்கள் வெற்றிபெறுகிறார்கள், திறனில்லாதவர்கள் தோற்கிறார்கள் மதிப்பெண்கள் குறைவாக பெறுகிறார்கள், தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எதிர்ப்பது என்பது திறனில்லை என்பதை ஒத்துக் கொள்வது போல இல்லையா?

* மருத்துவக் கல்வி தற்போது மாநில அரசின் கையிலா, மத்திய அரசின் கையிலா? மத்திய அரசின் கையில் இருக்கும் பட்சத்தில் தமிழக அரசு நீட் தேர்வை எப்படி ரத்து செய்ய முடியும்?

* உச்சநீதிமன்றத்தின் 50% இட ஒதுக்கீட்டைத் தாண்டி தமிழகத்தில் 69% இட ஒதுக்கீடு சட்டமாக்கப்பட்டது போல நீட் தேர்வை ரத்து செய்யவும் தனிச் சட்டம் இயற்ற வாய்ப்புள்ளதா? பாஜக ஆளும் நேரத்தில் அப்படி தனிச் சட்டம் சாத்தியமா?

* தமிழகத்தில் நீட் தேர்வு காரணமாக அனிதா துவங்கி இந்த ஆண்டில் இரு மாணவிகள் இறந்து போயிருக்கிறார்கள். இதற்கு தமிழக அரசியல்வாதிகள் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று நம்பிக்கை ஊட்டியதுதான் காரணமா?

* நீட் தேர்வில் கேள்விகள் கடினமாக இருக்கிறது என்று கூறுகிறார்களே, எனில் தமிழக பிளஸ் 2 பாடத்திட்டம் அந்த தரத்தில் இல்லையா?

* நீட் தேர்வுக்கு முன்பும் பின்னும் தமிழக அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இருந்து எத்தனை பேர் மருத்துவக் கல்லூரிகளுக்கு சென்றிருக்கிறார்கள். புள்ளிவிவரம் தர இயலுமா?

* தமிழகத்தில் அரசு சார்பில் இருக்கும் பொது சுகாதரத்துறை கட்டமைப்பு வலிமையாக இருக்கிறது என்று கூறுகிறார்களே, அது குறித்து சொல்ல இயலுமா?

* தமிழகத்தில் நீட் தேர்வு அறிமுகமானதற்குப் பிறகு அரசு கல்லூரிகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்களின் சாதி – வர்க்க கட்டமைப்பு பற்றி புள்ளிவிவரங்கள் கூற இயலுமா?

* தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்ய வேண்டுமென்றால் உங்களது ஆலோசனை என்ன?

* புதிய தேசியக் கல்விக் கொள்கை 2019 பற்றி உங்கள் கருத்து என்ன? அதில் உள்ள இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, தனியார் மயம், தாய்மொழிக் கல்வி அழிவு, நவீன குலக்கல்வி இன்னபிற அம்சங்கள் பற்றி விரிவாக கூறுங்கள்? இதனால் மக்களுக்கு என்ன பாதிப்பு, தமிழகத்திற்கு என்ன பாதிப்பு என்பதை விரிவாக விளக்க இயலுமா?

ஆகிய கேள்விகளுக்கு மருத்துவர் எழிலனின் பதிலைக் காண காணொளியைப் பாருங்கள்!

பாகம் – 1

பாகம் – 2

பகிருங்கள்!!

ஈழப் போர்க் குற்ற விசாரணை : ஈழத் தமிழருக்கு வஞ்சனை !

ஈழப் போர்க் குற்ற விசாரணை : இலங்கைக்குச் சலுகை ! ஈழத் தமிழருக்கு வஞ்சனை !!

ழத் தமிழர் இனப் படுகொலை நடந்து பத்து ஆண்டுகள் கடந்துவிட்டன. “ஈழ இறுதிக் கட்டப் போரில் நடந்த மனித உரிமை மீறல்களை விசாரித்துக் குற்றவாளிகளைத் தண்டிப்பதற்கு இலங்கை அரசு அயல்நாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களையும் கொண்ட சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும்” என்பது உள்ளிட்டு ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் (30/1) நிறைவேற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனாலும், நீதி இன்னும் எட்டாக் கனியாகவே உள்ளது.

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் 2015-ம் ஆண்டு ஈழப்போர் தொடர்பாகத் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டபொழுது, அதிலுள்ள அம்சங்களை 2017 மார்ச்சுக்குள் செயலுக்குக் கொண்டுவர வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் அக்கெடு 2019-ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. 2019 மார்ச்சில் நடந்த ஐ.நா. மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் இலங்கை அரசின் வேண்டுகோளை ஏற்று, அக்காலக்கெடுவை மேலும் இரண்டு ஆண்டுகள், அதாவது 2021 வரை இலங்கைக்குக் கால அவகாசம் கொடுக்கும் முடிவை அனைத்து நாடுகளும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுவிட்டன. ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைப்பது திட்டமிட்டரீதியில் மறுக்கப்படுவதைத்தான் இவை அனைத்தும் எடுத்துக்காட்டுகின்றன.

ஈழ இறுதிப் போரின் பத்தாம் ஆண்டு நிறைவுபெற்றதையொட்டி, அப்போரில் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளை நினைவுகூர்ந்து ஈழத்தமிழர்கள் முள்ளிவாய்க்காலில் நடத்திய நினைவேந்தல்.

ஐ.நா. மன்றமோ அல்லது ஐ.நா. மனித உரிமை கவுன்சிலோ, இலங்கை அரசு இறுதிக் கட்டப் போரில் ஈழத் தமிழர்களை இனப் படுகொலை செய்ததை இதுவரை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஈழப் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் கழித்துதான், அப்போது ஐ.நா.மன்ற பொதுச் செயலராக இருந்த பான் கீ மூன் இறுதிக்கட்டப் போர் குறித்து விசாரிக்க குழுவொன்றை அமைத்தார். “இலங்கை அரசு கொடிய போர்க் குற்றங்களைச் செய்திருப்பதாகக் கூறிய அக்குழு, இது குறித்துப்  பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனப் பரிந்துரைத்தது. எனினும், இப்பரிந்துரைகளை உடனடியாகச் செயல்படுத்த ஐ.நா. மன்றம் முன்வரவில்லை.

மாறாக, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அப்பொழுது இலங்கை அதிபராக இருந்த ராஜபக்சே அமைத்திருந்த “கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணத்திற்கான ஆணையத்தின்” பரிந்துரைகளை அமல்படுத்துமாறு ராஜபக்சேவிடம் கோரிவந்தது. யாரைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தித் தண்டிக்க வேண்டுமோ, அக்குற்றவாளியிடமே நீதி கேட்ட கேலிக்கூத்து இது. ராஜபக்சே அமைத்த அந்த ஆணையமும், இறுதிக் கட்டப் போரின்போது இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதா என்பதை இலங்கை அரசே விசாரித்துவருவதாக ஒரு தோற்றத்தை உலக நாடுகளிடம் ஏற்படுத்த காட்டிவந்த நாடகமே தவிர, வேறில்லை. இறுதிக் கட்டப் போரில் இலங்கை இராணுவம் திட்டமிட்டரீதியில் மனிதப் படுகொலை எதிலும் ஈடுபடவில்லை என்றுதான் அந்த ஆணையம் அறிக்கை அளித்திருந்தது.

படிக்க :
♦ இலங்கை குண்டுவெடிப்பு
♦ ராஜபக்சேவை தண்டிப்பது சாத்தியமா? தோழர் மருதையன் நேர்காணல்!

2014, மார்ச்சில்தான் இறுதிக் கட்டப் போர் குறித்த ஒரு விரிவான விசாரணையை ஐ.நா. மனித உரிமை கவுன்சில் ஆணையர் நடத்த வேண்டும் என்றும், அந்த அறிக்கையை மார்ச் 2015-ல் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தீர்மானம் இயற்றப்பட்டது. இதன்படி விசாரணை நடத்தப்பட்டு, செப்.2015-ல் விசாரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையை அடிப்படையாகக் கொண்டுதான் தீர்மானம் எண்.30/1 நிறைவேற்றப்பட்டது.

இந்த இடைப்பட்ட காலத்தில் நடந்த இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சே தோற்று, மைத்ரிபால சிறீசேனா அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ராஜபக்சே அதிபராக இருந்த பொழுது, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் இலங்கைக்கு வந்து விசாரணை நடத்துவதை அனுமதிக்க மறுத்தார். ஆனால், சிறீசேனாவோ இவ்விசாரணைக்கு ஒத்துழைப்புக் கொடுத்ததோடு, அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகள் தீர்மானம் 30/1 -ஐ முன்மொழிந்தபோது, அதில் தானும் இணைந்துகொண்டார். மேலும், இந்த ஒத்துழைப்புக்கான பலன்களையும் அதிபர் சிறீசேனா அறுவடை செய்து கொண்டார்.

ஐ.நா. மன்றப் பொதுச் செயலர் பான் கீ மூன் அமைத்த விசாரணைக் குழு, ஈழ இறுதிக் கட்டப் போர்க் குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டு விசாரணை மன்றம் அமைக்கப்பட வேண்டுமெனப் பரிந்துரைத்திருந்தது. ஆனால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானமோ, இப்பன்னாட்டு விசாரணையைக் கைவிட்டு, அதனிடத்தில் வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்கள் பங்குகொள்ளும்படியான ஒரு சிறப்பு நீதிமன்றத்தை இலங்கை அரசே அமைத்துக்கொள்ள அனுமதித்தது. பன்னாட்டு விசாரணை கூடாது என ராஜபக்சே கோரி வந்ததை, சிறீசேனா கொல்லைப்புற வழியில் சாதித்துக் கொண்டார்.

மைத்ரிபால சிறீசேனா

இச்சிறப்பு நீதிமன்றத்துக்கு அப்பால், “வடக்கு – கிழக்குப் பகுதியில் நிறுத்தப்பட்டிருக்கும் இலங்கை இராணுவத்தைத் திரும்பப் பெற வேண்டும். இராணுவத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள ஈழத் தமிழர்களின் நிலத்தைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும். போரின் முடிவில் வதை முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழர்களை விடுதலை செய்ய வேண்டும். காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் மற்றும் போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு – நிவாரணம் வழங்கும் அலுவலகம் ஆகியவை அமைக்கப்பட வேண்டும். பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும். ஈழத் தமிழர்களுக்கு சமூக, அரசியல் உரிமைகள் வழங்கக்கூடிய வகையில் அரசியல் சாசனத்தில் திருத்தங்கள் செய்ய வேண்டும்” ஆகிய அம்சங்களோடு நிறைவேற்றப்பட்ட அத்தீர்மானத்தை மார்ச் 2017-க்குள் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென காலக்கெடுவும் நிர்ணயிக்கப்பட்டது. எனினும், இக்காலக்கெடு இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டு, தற்பொழுது மார்ச் 2021 வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது.

மார்ச் 2015 -க்கும் மார்ச் 2019 -க்கும் இடைப்பட்ட இந்த நான்கு ஆண்டுகளில், இலங்கை அரசு 30/1 தீர்மானத்தின்படி ஈழத் தமிழர்களுக்கு நீதியும் நியாயமும் வழங்குவதற்கு ஏதேனும் உருப்படியான நடவடிக்கைகள் எடுத்திருக்கிறதா எனப் பரிசீலித்து, காலக்கெடு நீட்டிக்கப்படவில்லை. மாறாக, இலங்கை அரசின் கோரிக்கையை ஏற்றுகொண்டு வழங்கப்பட்ட சலுகை இது. காலக்கெடுவைத் தள்ளிக் கொண்டே போவதன் மூலம் ஈழத் தமிழர்களுக்கு நீதி மறுக்கப்படுவதை நடைமுறைப்படுத்தும் தந்திரம் இது.

நீர்த்துப்போன ஒன்று என்றாலும், வெளிநாட்டு நீதிபதிகள், வழக்குரைஞர்களை உள்ளடக்கிய சிறப்பு நீதிமன்றத்தை அமைக்க வேண்டும் என்பது 30/1 தீர்மானத்தின் முக்கியமான அம்சமாகும். ஆனால், இச்சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் திசையில் இலங்கை ஒரு அடிகூட இதுவரை எடுத்து வைக்கவில்லை. மாறாக, இனப் படுகொலையில் ஈடுபட்ட அதிகாரிகளையும் சிப்பாய்களையும் போர்க் கதாநாயகர்கள் என அழைக்கத் தொடங்கிய சிறீசேனா, பத்திரிகைச் செய்திகளிலும், இராணுவச் சிப்பாய்களைக் கூட்டி நடத்தப்படும் கூட்டங்களிலும், இராணுவ வீரர்கள் ஒருபோதும் தண்டிக்கப்பட மாட்டார்கள் என மீண்டும் மீண்டும் உறுதியளித்து வருகிறார்.

படிக்க :
♦ நாக்பூர் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். புராணம் !
♦ முதலாளித்துவக் கட்டமைப்பின் நெருக்கடியும் ! பாசிசத்தின் வெற்றியும் !!

ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் 2016-ம் ஆண்டுக் கூட்டம் நடந்துகொண்டிருந்த அதேவேளையில், நீதித்துறை அமைச்சர் விஜேவாயாடஸா ராஜபக்சே, “இலங்கை இராணுவம் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக விமர்சிப்போர் மீது கிரிமினல் குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும்” என மிரட்டினார்.

ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் தீர்மானத்தின்படி, காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகமும் போரில் பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு நட்ட ஈடு-நிவாரண உதவி அலுவலகமும் அமைக்கப்பட்டிருப்பதாகக் கணக்குக் காட்டிவருகிறது, இலங்கை அரசு. எனினும், இந்த இரண்டு அமைப்புகளும் சோளக்காட்டு பொம்மையைவிடக் கேவலமானவை.

சர்வதேச காணாமல் போனவர்கள் தினத்தையொட்டி, ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் காணாமல் ஆக்கப்பட்ட ஈழத் தமிழர்களை நினைவுகூர்ந்தும், அதற்கு நீதி கேட்டும் ஈழத் தமிழ் அமைப்புகள் இலங்கை மன்னார் நகரில் நடத்திய ஆர்ப்பாட்ட பேரணி. (கோப்புப் படம்)

காணாமல் போனவர்கள் பற்றிய அலுவலகம் ஒரு குறிப்பிட்ட நபர் போரின்போது காணாமல் போனதாகச் சான்றிதழ் வழங்கி, அதற்குரிய நட்ட ஈடு வழங்குமாறு பரிந்துரைக்க முடியுமே தவிர, அதற்கு மேற்பட்டு குற்றவியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு அந்த அலுவலகத்திற்குச் சட்டபூர்வத் தகுதியும், உரிமையும் கிடையாது. இறுதிக்கட்டப் போரின்போது எத்துணை ஈழத் தமிழர்கள் காணாமல் போனார்கள் என்ற விவரத்தைக்கூட வெளியிட மறுத்துவருகிறது, இலங்கை அரசு.

போரினால் பாதிக்கப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு நட்டஈடு- நிவாரணம் வழங்கும் அலுவலகத்தைப் பொருத்தவரையில், அதனின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் இலங்கை அமைச்சரவையின் ஒப்புதலைப் பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த அலுவலகத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வளவு நட்ட ஈடு வழங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் உரிமைகூட கிடையாது. சுருக்கமாகச் சொன்னால், இந்த இரண்டு அமைப்புகளுமே இலங்கை அரசின் தொங்கு தசைகளாகத் திட்டமிட்டு உருவாக்கப்பட்டிருக்கின்றன.

இலங்கையைச் சார்ந்த “அடையாளம்” மற்றும் “பேர்ல்” என்ற இரண்டு மனித உரிமை அமைப்புகள் ஜூலை 2017-ல் வெளியிட்ட அறிக்கையில், முல்லைத் தீவில் மட்டும் இரண்டு சிவிலியன்களுக்கு ஒரு இராணுவச் சிப்பாய் என்ற அளவில் அப்பகுதியில் இராணுவம் குவிக்கப்பட்டிருப்பது தொடருவதாகக் குறிப்பிட்டுள்ளன.

யாழ்ப்பாண மாவட்டத்திலிருந்து வன்னிக்கு செல்லும் நெடுஞ்சாலையில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடியைக் கடந்து செல்லக் காத்திருக்கும் ஈழத் தமிழர்கள். (கோப்புப் படம்)

“தேசியப் பாதுகாப்பிற்காகத் தேவைப்படும் நிலங்களை இராணுவம் திரும்ப ஒப்படைக்காது” என ஜூலை 2017-ல் நடந்த இராணுவ அதிகாரிகள் கூட்டத்தில் வெளிப்படையாகவே அறிவித்தார், அதிபர் சிறீசேனா.

முள்ளிவாய்க்கால் பகுதியில் தேசியப் பாதுகாப்புக்காக 672 ஏக்கர் நிலத்தைக் கையகப்படுத்தும் அறிவிக்கையை அக்டோபர் 2017-ல் வெளியிட்டது இலங்கை கடற்படை.

வன்னி, கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய பகுதிகளில் மார்ச் 2018-ல் கூடத் தமிழர்களுக்குச் சொந்தமான நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, இராணுவ முகாம்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டிருக்கிறது.

தீவிரவாதத்தை ஒழிப்பது என்ற பெயரில் புதிய கருப்புச் சட்டத்தை இயற்றிவிட்டுத்தான், பழைய பயங்கரவாதத் தடைச் சட்டத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறது, இலங்கை அரசு.

சுருக்கமாகச் சொன்னால், ஐ.நா. மனித உரிமை கவுன்சில் தீர்மானம் வெறும் காகிதத் தீர்மானமாகவே இருந்து வருகிறது. ஆனாலும், இலங்கை அரசிற்கு அடுத்தடுத்து இரண்டு முறை காலக்கெடு நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

இதற்குக் காரணம், அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட ஏகாதிபத்திய நாடுகளுக்கும் சிறீசேனா அரசிற்கும் இடையேயான நெருக்கம் அதிகரித்திருப்பதுதான். மார்ச் 2017-க்குப் பிறகு, அமெரிக்கா இடையே 44 முறை இராணுவம் தொடர்பான சந்திப்புகள் நடந்திருப்பதாகவும், இரண்டு இராணுவங்களும் இணைந்து கூட்டுப் பயிற்சி நடத்தியிருப்பதாகவும் குறிப்பிடுகிறது, மனித உரிமை அமைப்பான பேர்ல்.

இலங்கையில் ஈஸ்டர் தினத்தன்று தலைநகர் கொழும்புவிலுள்ள நெகோம்போ பகுதியில் அமைந்திருக்கும் புனித செபாஸ்டியன் தேவாலயத்தில் நடந்த குண்டுவெடிப்பு.

இந்தியப் பெருங்கடல் பகுதியில் சீனா ஆதிக்கம் செலுத்த முயலுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் இலங்கையை அணுகி வருகிறது, அமெரிக்கா. அமெரிக்காவின் இந்த நோக்கத்திற்கு அணுசரனையாக இலங்கை அரசும் நடந்துவருவதால், அந்நாட்டுக்குச் சலுகைகளும் நிதியுதவிகளும் அளிப்பதில் தாராளமாக நடந்துவருகிறது அமெரிக்கா. இலங்கைக்கு மீண்டும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதை இந்தப் புவி அரசியல் பின்னணியிலிருந்தும் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

இதுவொருபுறமிருக்க, சமீபத்தில் ஈஸ்டர் தினத்தன்று நடந்த குண்டுவெடிப்புகளைச் சாக்காகப் பயன்படுத்திக்கொண்டு, “போர்க் காலத்தில் இருந்த கடுமையான இராணுவப் பாதுகாப்பு அம்சங்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டதால்தான், இந்தக் குண்டு வெடிப்புகள் நடந்துவிட்டதாக”க் கூறியிருக்கும் இலங்கை அரசு, இனி இது போன்ற குண்டுவெடிப்புகள் நடப்பதைத் தடுப்பது என்ற பெயரில் ஈழப் போரில் இனப் படுகொலை குற்றங்களில் ஈடுபட்ட அதிகாரிகளை முக்கியப் பதவிகளில் அமர்த்தி, அக்குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கத் தொடங்கியிருக்கிறது.

மேலும், பௌத்த மதவெறி அமைப்புகளைத் தூண்டிவிட்டுக் கலவரங்களை நடத்துவதன் மூலம், ஐ.நா. தீர்மானத்தைச் செயல்படுத்துவதற்கான சூழல் இல்லை எனக் காட்டி, ஈழத் தமிழர்களுக்கு அரைகுறையான நீதி, நியாயம்கூடக் கிடைத்துவிடாதபடிச் செய்யும் சதியிலும் இறங்கியிருக்கிறது.

திப்பு

மின்னூல்:

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

15.00Add to cart

15.00Add to cart

புதிய ஜனநாயகம் நவம்பர் 2018

15.00Add to cart