Friday, November 7, 2025
முகப்பு பதிவு பக்கம் 362

திபெத் மடாலய மர்மங்கள் | கலையரசன்

2

கலையரசன்
“தலாய் லாமா”, சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஒரு கொடுங்கோல் சர்வாதிகாரி. அவரை புத்தரின் அவதாரமாக திபெத்தியர்கள் மட்டும் வணங்கவில்லை. மேற்குலகிலும் தலாய் லாமாவின் புகழ் பரவி வருகின்றது. பல நூற்றுக்கணக்கான அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் திபெத்திய பௌத்த மதத்திற்கு மாறியுள்ளனர். மேற்குலக ஊடகங்கள் தலாய் லாமாவை கருணையுள்ளம் கொண்ட சமாதான விரும்பியாக சித்தரிக்கின்றன. திபெத்திய பிரபுக்கள் மக்களை மந்தைகளாக மேய்த்த வரலாறு பேசப்படுவதில்லை. “நாடு கடந்த திபெத்திய அரசாங்கம்” அமைந்துள்ள இந்தியாவிலும், தலாய் லாமாவின் குண்டர்கள் திபெத்திய அகதிகளை அடக்கி ஒடுக்கி வருகின்றனர். தலாய் லாமாவின் சர்வ வல்லமை கொண்ட அதிகாரத்தை விமர்சிப்பவர்கள், சீனாவின் கைக்கூலிகள் என முத்திரை குத்தப்படுகின்றனர்.

ஐரோப்பிய நாடுகளில், அரச ஆதரவு பெற்ற திபெத் ஆதரவு கண்காட்சிகள் நடத்தப்படுகின்றன. பொருட்காட்சிக்கு செல்லும் குழந்தைகளையும் அரசியல்மயப்படுத்துகிறார்கள். “திபெத்தில் இருந்து தப்பிக்கும் அகதி விளையாட்டு”, தற்போது வீடியோ கேம்களிலும் கிடைக்கிறது. திபெத் அகதி போன்ற உடையணிந்த சிறுவர்கள், இமாலய சிகரங்களின் ஊடாக, சீன எல்லைக்காவல் படையிடமிருந்து தப்ப வேண்டும். ஐரோப்பிய சிறுவர்கள் மனதில் திபெத் மீது அனுதாபத்தையும், சீனா மீது வெறுப்பையும் விதைக்கும் விபரீத விளையாட்டு. அதே போல, “அல்ப்ஸ் மலைச் சிகரங்களின் ஊடாக, ஐரோப்பிய எல்லைக்காவல் படைகளை தாண்டி வரும் இலங்கை அகதி” விளையாட்டும் தயாரிக்க இவர்கள் முன்வருவார்களா?

அமெரிக்க அரசியல்வாதிகள், ஹாலிவுட் நட்சத்திரங்கள் பலர் இன்று தலாய் லாமாவின் பக்தர்கள். பிரபல ஹாலிவுட் நடிகர் ரிச்சார்ட் கியர் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் வலதுசாரி அரசியல்வாதிகளை அழைத்து விருந்து வைக்கிறார். திபெத் அகதிகளுக்கு உதவுவதற்காக அந்தக் கொண்டாட்டம். அதே அமெரிக்காவில், திபெத் பௌத்த மடாலயத்தின் தலைமைக் குருவான “சொய்கள் ரிம்போச்சே” யின் காமலீலைகள் அம்பலத்துக்கு வந்தது. மடாலயத்திற்கு பிரார்த்தனைக்கு செல்லும் அமெரிக்க பக்தைகள் பலர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகினர். தன்னுடன் பலவந்தமாக உடல் உறவுக்கு முயன்றதாக (பௌத்தராக மாறிய) அமெரிக்க பெண்மணி போலீசில் புகார் செய்தார். “துறவியுடன் உடல் உறவு கொள்வது கடவுளின் அருட்கொடை” என்று சொய்கள் ரிம்போச்சே விளக்கம் அளித்துள்ளார்.

தலாய் லாமா ஆட்சி செய்த திபெத்தில் மதகுருக்களின் அட்டகாசம் கொடிகட்டிப் பறந்தது. சீனாவின் மக்கள் விடுதலைப் படை ஆக்கிரமிக்கும் வரை, அரச நிர்வாகம் முழுவதும் நிலப்பிரபுக்களின் எதேச்சதிகாரம் நிலவியது. பொருளாதாரத்தில் மேன் நிலையில் இருந்த நிலப்பிரபுக்கள், மதகுருக்களாகவும் இருந்தனர். பண்ணையடிமைகளாக உழைத்து ஓடாய்ப் போன மக்களை மூடர்களாக வைத்திருக்க மதம் உதவியது. விவசாயக் கூலிகளான உழைக்கும் மக்கள் குடிசைகளுக்குள், வறுமையின் துயருடன் வாழ்ந்தார்கள். அதே நேரம் அவர்களை சுரண்டிக் கொழுத்த தலாய் லாமாக்களும், மத குருக்களும் மாட மாளிகைகளில் வசதியாக வாழ்ந்தார்கள். மிகப் பெரிய மாளிகை ஆயிரம் அறைகளை கொண்டிருந்தது என்றால், அவர்களின் செல்வச் செழிப்பை புரிந்து கொள்ளலாம். அடக்குமுறைச் சின்னங்களான அரண்மனைகளும், மாளிகைகளும் திபெத் முழுவதும் காணப்பட்டன. சீனர்கள் வரும் வரை திபெத்தில் 6000 மடாலயங்கள் இருந்தன.

படிக்க:
குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !

சாதாரண திபெத் மக்களின் வாழ்க்கை நரகமாக இருந்தது. அரைப் பட்டினியுடன் காலந் தள்ளினார்கள். உணவுக்காக திருடியவர்களின் கைகள் துண்டிக்கப்பட்டன. சமூகப் படிநிலை ஒன்பது பிரிவுகளைக் கொண்டிருந்தது. பெண்களின் நிலையோ சொல்லுந்தரமன்று. இந்த ஒன்பது பிரிவுகளிலும் அவர்கள் அடங்கவில்லை. அதாவது திபெத்திய மடாதிபதிகளைப் பொறுத்தவரை, பெண்கள் “பேசும் மிருகங்கள்”. மக்களை மூடர்களாக வைத்திருக்க புராணக் கதைகள் பாராயணம் செய்யப்பட்டன. அதையும் மீறி எவராவது கேள்வி கேட்டால், பாதாளச் சிறைகளில் போட்டு வதைக்கப்பட்டனர். நிச்சயமாக சீனர்களின் படையெடுப்பு, நிலப்பிரபுத்துவ நுகத்தடியில் இருந்து அடிமைகளை விடுதலை செய்தது.

இந்தியாவில் அகதி முகாம்களில் வாழும் திபெத்தியர்கள், அங்கேயும் தலாய் லாமாவின் இரும்புக்கரத்திற்கு தப்ப முடியவில்லை. தலாய் லாமாவின் ஏக பிரதிநிதித்துவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு, அகதிகள் மிரட்டப்படுகின்றனர். திபெத்திய அகதிகள் மத்தியில் இருந்து கிளம்பும் பிற அரசியல் இயக்கங்கள் முளையிலேயே கிள்ளப்படுகின்றன. பன்முகப்பட்ட அரசியல் கலாச்சாரத்திற்கோ, அல்லது பலகட்சிகள் பங்குபெறும் பாராளுமன்றத்திற்கோ, தலாய் லாமா தயாராக இல்லை. அரசியல் வேறுபாடுகளை விட்டு விடுவோம். பிற மதங்களை, அல்லது மதப் பிரிவுகளை சகித்துக் கொள்ளும் தன்மை கூட தலாய் லாமாவிடம் கிடையாது. திபெத்தில் பௌத்த மதத்தை சேர்ந்தவர்கள் பெரும்பான்மையினர்தான். இருந்தாலும் ஷக்டன் என்ற இன்னொரு மதத்தை சேர்ந்தவர்களும் உள்ளனர். இந்தியாவில் சுமார் ஒரு இலட்சம் திபெத் அகதிகள் ஷக்டன் மதத்தை பின்பற்றுகிறார்கள். அவர்களுக்கு இந்தியாவில் கூட மதச் சுதந்திரம் கிடையாது. அவர்களின் வழிபாட்டு ஸ்தலங்கள் தலாய் லாமாவின் குண்டர்களால் இடிக்கப்பட்டன. வீடுகளுக்குள் புகுந்து கூட சாமிப் படங்களை கிழித்துப் போட்டார்கள்.

தலாய் லாமா இந்தியாவில் உள்ள தலைமையகத்தில் இருந்து கொண்டே வெளிநாட்டுத் தலைவர்களுடன் தொடர்பு கொள்கின்றார். உலகின் பிற பகுதிகளில் விடுதலைப் போராட்டங்களை ஒடுக்கிய சி.ஐ.ஏ. அவரது உற்ற நண்பன். அறுபதுகளில் ஆயிரக்கணக்கான திபெத் அகதிகளுக்கு சி.ஐ.ஏ. ஆயுதப் பயிற்சி வழங்கியது. சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்த திபெத்தினுள், சி.ஐ.ஏ. விமானங்கள் ஆயுதப் பொட்டலங்களை வீசின. தயாராக இருக்கும் விடுதலைப்படை திபெத்தை விடுவிக்க வேண்டும் என்பது ஏற்பாடு. ஆனால், சீன இராணுவம் ஈவிரக்கம் பாராமல் அடக்கியதால், கிளர்ச்சி தோல்வியுற்றது. அதற்குப் பிறகு, “கம்யூனிசத்திற்கும், முதலாளித்துவத்திற்கும் இடையிலான முரண்பாட்டை பயன்படுத்திக் கொள்ளும்” இராஜதந்திர நகர்வை மேற்கொண்டார்.

தலாய் லாமாவுக்கு நல்லவர், கெட்டவர் என்ற பாகுபாடு எல்லாம் கிடையாது. யார் உதவுகிறார்களோ, அவர்கள் எல்லாம் நண்பர்கள்தாம். ஜப்பானில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைதாகி சிறையில் இருக்கும், “ஓம்” மதக்குழுவின் தலைவர் அசஹரா கூட தலாய் லாமாவின் மதிப்புக்குரிய நண்பர்தான். அசஹாரா “நாடு கடந்த திபெத் அரசாங்கத்திற்கு” தாராளமாக நிதி வழங்கிய புரவலர். ஒரு தடவை ஒரு இலட்சம் டாலர் அள்ளிக் கொடுத்திருக்கிறார். டோக்கியோ சுரங்க ரயில்நிலையத்தில் நச்சுவாயு பிரயோகித்த குற்றத்திற்காக அசஹாரா கைது செய்யப்பட்ட பின்னர் அந்தத் தொடர்பு அறுந்தது. சீனாவிலும், ஜப்பானிலும் ஞானவாத பௌத்த மதப்பிரிவு, உத்தியோகபூர்வ மதமாக உள்ளது. திபெத்திய பௌத்தம் பல தனித்துவமான கூறுகளைக் கொண்டுள்ளது. இதனால் ஓம் மதக்குழுவுடன் தந்திரோபாய கூட்டு அமைத்ததாக தலாய் லாமா கொள்கை விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

படிக்க:
மியான்மர் முசுலீம் மக்களை கொல்லும் பவுத்த மதவெறி
திரட்சியுற்ற வெறுப்பின் ஆயுதங்கள் – ஷோமா சவுத்ரி

திபெத் ஹிட்லரைக் கூட வெகுவாக கவர்ந்திருந்தது. ஆரியர்களின் பூர்வீகம் திபெத் என்று அவருக்கு யாரோ கற்பித்திருக்கிறார்கள். நாசிக் கட்சியின் சின்னமான ஸ்வாஸ்திகா கூட திபெத்தில் இருந்து கடன்வாங்கியது தான். அப்படி சொல்லிக் கொடுத்தது வேறு யாருமல்ல. “தெயோசொபி” என்ற ஆன்மீக அமைப்பு. (சென்னை, அடையாரில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கிறது.) 1939-ம் ஆண்டு, நாசிச அரசு அமைச்சர் ஹிம்லர் ஒரு தூதுக் குழுவை திபெத்திற்கு அனுப்பினார். திபெத்திய மடாலயங்களில் வாழும் “ஆரிய பூர்வகுடிகளிடம்” இனத்தூய்மை பற்றி படிப்பது அவர்கள் நோக்கம்.

திபெத் சென்று, “மாபெரும் ஆசான்களிடம்” கற்ற தூதுக்குழுவை சேர்ந்த பெர்கர் என்பவர் ஜெர்மனிக்கு திரும்பி வந்தார். நாசி கொலைக்களங்களில் நச்சுவாயுவுக்குப் பலியான யூதர்களின் மண்டையோடுகளை வைத்து “இன உடற்கூற்றியல்” பரிசோதனை செய்தார். நாசிகளின் குழுவிலிருந்த ஆஸ்திரிய நாட்டுக்காரரான ஹைன்றிஷ் ஹாரெர் 1950 வரை திபெத்தில் தங்கி இருந்தார். தலாய் லாமாவின் நம்பிக்கைக்குரிய பரப்புரையாளராகவும், வெளிநாட்டு தொடர்பாளராகவும் கடமையாற்றினார். அவரது வாழ்க்கை வரலாற்றை வைத்து, “திபெத்தில் ஏழு வருடங்கள்” என்ற ஹாலிவுட் திரைப்படம் வெளிவந்தது. கதையின் நாயகன் ஹாரெரின் நாசிச தொடர்பு, படத்தில் எந்த இடத்திலும் காட்டப்படவில்லை. திபெத் சார்பு திரைப்படத்தை ஆவலோடு வரவேற்ற தலாய் லாமாவும், சிறு வயதில் ஜெர்மன் நாசிகளுடனான தனது உறவு குறித்து மூச்சு விடவில்லை. வருங்காலத்தில் தலாய் லாமாவும், ஹாலிவுட்டும் தம்மை நல்லவர்களாகக் காட்டுவார்கள் என்று, நிச்சயமாக நாசிகளும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.


வாங்கிவிட்டீர்களா ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

அண்ணாமலை பல்கலை : விடுதிக் கட்டண உயர்வை திரும்பப் பெறு ! மாணவர்கள் போராட்டம்

0

சிதம்பரம் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவுக்கான ஒரு தளமாக விளங்குவது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம். பெரும்பாலும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட சமூகப் பின்னணியிலிருந்து வரும் மாணவர்களே இங்கு பயின்று வருகின்றனர். இந்நிலையில் மாணவர்களுக்கான விடுதிக் கட்டணத்தை எவ்வித முன்னறிவிப்புமின்றி அதிரடியாக உயர்த்தியிருக்கிறது பல்கலைக் கழக நிர்வாகம். அதிரடியான இந்த கட்டண உயர்வைக் கண்டித்து விடுதி மாணவர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

மாணவர்களின் போராட்டம் இரவிலும் தொடர்ந்த போதிலும், பல்கலைக்கழக துணைவேந்தர் இதுவரை மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தாமல் புறக்கணித்துவருகிறார்.

விடுதிக் கட்டண உயர்வு திரும்பப் பெறும்வரை போராட்டத்தை தொடரப் போவதாக மாணவர்கள் அறிவித்துள்ளனர்.


தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சிதம்பரம்.

தேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா – 18

தேர்தல் 2019 : பொது அறிவு வினாடி வினா

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கிவிட்டது. ஊடகங்களும் பத்திரிகைகளும் “தேர்தல் திருவிழா”, “ஜனநாயகத் திருவிழா”, “தேர்தல் தீபாவளி”, “தேர்தல் சூறாவளி” என விதவிதமாகப் பெயரிட்டு, தத்தமது புரவலர்களின் புகழ்பாடத் தொடங்கிவிட்டன. மக்களின் சிந்தனையும் தேர்தல்  மயமாகிவிட்டது. சரி இந்த நாடாளுமன்றத் தேர்தல் குறித்த விவரங்கள் நம்மில் எத்தனை பேருக்கும் முழுமையாகத் தெரிந்திருக்கின்றன என்று பார்க்கலாம். கீழ்கண்ட கேள்விகளை முயற்சித்துப் பாருங்கள்.

(வினாடி வினா பகுதி, கேள்விகளுக்குக் கீழே உள்ளது. தவறாமல் பங்கெடுக்கவும்)

கேள்விகள்:

1. இந்த பாராளுமன்றத் தேர்தலோடு சில மாநில சட்டமன்ற தேர்தல்களும் நடக்கின்றன. கீழ்க்கண்ட மாநிலங்களில் அப்படி தேர்தல் நடக்கும் மாநிலம் எது?
2. இந்தியப் பாராளுமன்றத் தொகுதிகளின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
3. கீழ்க்கண்டவற்றில் எது பாராளுமன்றத்தின் அதிகாரத்தின் கீழ் வராது?
4. கீழ்க்கண்ட அரசு உறுப்புகளில் அதிக அதிகாரம் படைத்த உறுப்பு எது?
5. போதிய பிரதிநிதித்துவம் இல்லை என எந்த பிரிவினரில் இருந்து 2 பாராளுமன்ற உறுப்பினர்களை குடியரசுத் தலைவர் நியமிப்பார்?
6. மோடி அரசாங்கம் இந்திய அரசின் ஜனநாயக உறுப்புக்களை அழித்து வருகின்றது என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றன. கீழ்கண்டவற்றில் அந்தப் பட்டியலில் இடம்பெறாத உறுப்பு எது?
7. ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை பாராளுமன்றம் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஆனால் அதிகார வர்க்கமோ நிரந்தரமாக பதவியில் இருக்கிறது. அதை தெரிவு செய்யும் உரிமை மக்களிடத்தில் இல்லை. எனில் இந்த ஆட்சி முறையை எப்படி அழைப்பது?
8. மோடி ஆட்சியில் வேலையில்லாத் திண்டாட்டம் படைத்த சாதனை என்ன?
9. கீழ்க்கண்ட மாநிலங்களில் எந்த மாநிலத்தில் 25 நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன?
10. கடந்த மூன்று மாதங்களில் நடந்த கருத்துக் கணிப்பில் எந்த ஊடகம் பாஜக கூட்டணிக்கு 336 தொகுதிகள் கிடைக்குமென தெரிவித்தது?
11. அதிக பாராளுமன்றத் தொகுதிகள் கொண்ட மாநிலம் எது?
12. தொங்குநிலை பாராளுமன்றம் ஏற்படும் போது இந்திய அரசு செயல்படுமா, முடங்கி விடுமா?
13. பாராளுமன்றம், சட்டமன்றம் மூலம் தெரிவு செய்யப்படும் ஒரு கட்சியின் ஆட்சியை எப்படி அழைக்க வேண்டும்?
14. அரசு, அரசாங்கம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு என்ன?
15. ஓட்டு போட்டு தெரிவு செய்யப்படும் மக்கள் பிரதிநிதிகளை திருப்பி அழைக்கும் உரிமை மக்களுக்கு உண்டா?

நீங்கள் பங்கெடுப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் நண்பர்களையும் இந்த வினாடி வினாவில் பங்கேற்கச் செய்யுங்கள் !

ருவாங்காவின் குத்துச் சண்டை சகோதரிகள் | படக் கட்டுரை

0

.எஸ் அமைப்பின் ஆக்கிரமிப்புக்களுக்குப் பயந்து வீடு, உடைமைகளை விட்டு பாதுகாப்புக்காக ஓடி ஒளிந்த ஈராக்கிய பெண்கள் இப்போது அச்சமின்றி தங்களுக்கென ஒரு பாதுகாப்பான வசிப்பிடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.

மங்கலான வெளிச்சம் கொண்ட குறுகிய அறைதான் இவர்களின் பயிற்சிக்களம். வடக்கு ஈராக்கில் உள்ள ருவாங்கா என்ற அகதிகள் முகாமொன்றில் யாசிடி மதப்பிரிவைச் சேர்ந்த 12 பெண்கள் இங்கு குத்துச்சண்டை பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ருவாங்காவின் குத்துச்சண்டை சகோதரிகள் (Boxing Sisters) என்று தங்களை அழைத்துக்கொள்கின்றனர்.

உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக வீடு, உடைமைகள், சொந்த பந்தங்களையெல்லாம் விட்டுவிட்டு ஓடிவந்த இவர்களுக்கு அடைக்கலமாக அமைந்துள்ளது இந்த அகதிகள் முகாம். கூடுதல் பலமாக குத்துச்சண்டை பயிற்சி வகுப்புக்கள் இவர்களின் பிரதான விருப்பமாக அமைந்துவிட்டது.

“சிறுவயதிலிருந்தே, எந்த ஒரு விளையாட்டு தொடர்பான வாய்ப்புக்கள் கிடைத்தாலும் அதைத் தவறவிட மாட்டேன். பள்ளிக்காலத்தில் கூடைப்பந்து அணியில் இருந்தேன்” என்கிறார் 17 வயதான ஹஸ்னா. ஐ.எஸ் தீவிரவாதிகளால் இவரது கிராமம் தாக்குதலுக்குள்ளாக நேரிட்டபோது அனைத்தையும் விட்டுவிட்டு இவரது குடும்பம் வெளியேற வேண்டியதாகி விட்டது.

“காலை 7 மணியளவில், அருகாமை கிராமத்தில் வசிக்கும் ஒரு உறவினரிடமிருந்து, என் சித்தப்பாவுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. ஐ.எஸ் தீவிரவாதிகள் எங்கள் கிராமத்தைத் தாக்க வந்துகொண்டிருக்கின்றனர்; எனவே உடனடியாகத் தப்பித்துச் செல்லுமாறு செய்தி அனுப்பியிருந்தார் அந்த உறவினர். அந்தத் தருணத்தை இப்போது நினைத்தாலும் இதயம் படபடவென்று துடிக்கும்; மயக்கம் வரும்; மூச்சுவிடமுடியாமல் திணறுவேன்” என்கிறார் ஹஸ்னா.

குத்துச்சண்டை சகோதரிகள். யாசிடி மதப்பிரிவைச் சேர்ந்த இவர்களுக்கு லோட்டஸ் ஃபிளவர் என்ற பிரிட்டன் தன்னார்வ தொண்டு நிறுவனம் பயிற்சியளிக்கிறது. 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பயிற்சியின் நோக்கம் போரினால் பாதிக்கப்பட்டு, பாலியல் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட பெண்களின் மனநலம் மற்றும் உடல்நலத்தை மேம்படுத்துவதுதான் என்கிறது லோட்டஸ் ஃபிளவர் நிறுவனம்.

ருவாங்கா முகாமில் சுமார் 15,000 பேர் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் யாசிடி எனப்படும் மதக்குழுவைச் சேர்ந்தவர்கள்தான். 2014-ம் ஆண்டு முதல் இவர்கள் இங்கு தங்கியிருக்கின்றனர்.

பிரிட்டனைச் சேர்ந்த லோட்டஸ் ஃபிளவர் என்னும் தனியார் தொண்டு நிறுவனம், குத்துச்சண்டை வகுப்புக்களை நடத்தி வருகிறது. பெண்களுக்கென்று பிரத்யேகமாகச் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு, இங்குள்ள பெண்களின் மன நலன் மற்றும் உடல் நலம் குறித்து கவனம் கொள்வதாகத் தெரிவிக்கிறது. ஏனென்றால் இங்குள்ள பெரும்பாலான பெண்கள் போரினால் பாதிக்கப்பட்டும், பாலியல் ரீதியாகச் சித்திரவதைக்கும் உள்ளானவர்கள். இந்த முயற்சி யாசிடி இனப்பெண்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

அடுத்த கட்டப் பயிற்சி வகுப்புகளுக்காக இதுவரை 40 பெண்கள் பதிவு செய்துவிட்டனர் என்கிறார் வியான் அகமது. இவர் லோட்டஸ் ஃபிளவர் நிறுவனத்தின் பகுதி மேலாளராகச் செயல்படுகிறார். ஆண் பயிற்சியாளரைக் கொண்டு நடத்தப்படும் வகுப்புக்களைக் கூடிய விரைவில் இங்கு பயிற்சி பெறும் பெண்களையே பயிற்சியாளர்களாக மாற்றி இந்தச் சேவையைத் தொடரவேண்டும் என்கிறது லோட்டஸ் ஃபிளவர் நிறுவனம்.  ஹஸ்னா அதில் முதல் தேர்வாக இருக்க நிறைய வாய்ப்புக்கள் உள்ளன.

இங்குள்ள சக நண்பர்களுடன் பயிற்சியில் ஈடுபடும் போது மிகவும் பாதுகாப்பாக உணர்கிறேன். நாங்கள் எல்லோருமே ஏறக்குறைய ஒரே விதமான சித்திரவதைக்கும், நெருக்கடிக்கும் உள்ளாக்கப்பட்டுதான் இங்குவந்தோம். அதுதான் எங்கள் மத்தியில் உடன்பிறந்த சகோதரிகள் போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்கிறார் ஹஸ்னா.

ஹஸ்னா – வயது 17 – கேத்தி பிரவுன் என்ற பயிற்சியாளருடன் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். கேத்தி பிரவுன் ஓய்வுபெற்ற குத்துச்சண்டை பயிற்சியாளர் மட்டுமல்ல; பாதிக்கப்பட்ட பெண்களுக்கான மனநல சிகிச்சை தொடர்பான கல்வியும் பயிற்றுவிக்கிறார். ஹஸ்னா போன்ற பெண்களுக்கு சிறப்பான பயிற்சி கொடுத்து அவர்களையும் பயிற்சியாளர்களாக மாற்ற வேண்டுமென்பதே பிரவுனின் இலக்கு.

குத்துச்சண்டை சகோதரிகளுக்கு அருகாமை நகரத்திலுள்ள ஒரு குத்துச்சண்டை வீரர் மூலம் பயிற்சியளிக்கப்படுகிறது. பெண் பயிற்சியாளர் பிரவுன் மூலம் சிறப்பு பயிற்சியளிக்கப்பட்டு, இங்குள்ள பெண்களும் கூடிய விரைவில் குத்துச்சண்டை பயிற்சியாளர்களாக்கப்படுவர்.

ருவாங்கா அகதிகள் முகாமின் தெருக்கள் ஒன்றில் ஹஸ்னா. விளையாட்டின் மேல் அதிகக் கவனம் செலுத்தும் இவர் ஒரு குத்துச்சண்டை பயிற்சியாளராகப் போவது தன் வாழ்நாளின் மிக முக்கிய தருணமென்றும், அதோடன்றி நான் மிகவும் உறுதியான பெண்மணியாகவும் இப்போது உணர்கிறேன் என்கிறார் ஹஸ்னா

ருவாங்கா அகதிகள் முகாமில் சிறு கடைகள் சில உள்ளன. ஹஸ்னா 5 வருடமாக இங்கு வாழ்ந்து வருகிறார். ஆரம்பத்தில் சில எதிர்ப்புக்கள் இருந்தாலும், மக்கள் இப்போது குத்துச்சண்டை சகோதரிகள் என்னும் இந்த முன்னெடுப்பை வெகுவாக வரவேற்கின்றனர்.

பயிற்சி முடிந்து திரும்பிவரும் ஹன்னாவை வரவேற்கிறார் அவரது பாட்டி. என் குடும்பம்தான் எனது முழு பலத்திற்கும் காரணம் என்கிறார் ஹஸ்னா.

வாழ்க்கை மிகவும் இனிமையானது; நான் யாரையும் வெறுக்க விரும்பவில்லை. மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என விரும்பும் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும்; நானும் அதையே செய்ய விரும்புகிறேன் என்கிறார் ஹஸ்னா.

ஹஸ்னாவின் பாட்டியும், சித்தப்பாவும் அகதிகள் முகாமில் வசித்துவருகின்றனர். தன்னுடைய சொந்த கிராமத்திற்குத் திரும்ப வேண்டுமென்பது பாட்டியின் விருப்பம். ஹஸ்னாவுக்கோ எதிர்காலம் மிகவும் முக்கியமென்கிறார். உலகின் பல்வேறு இடங்களுக்குச் சென்று என்னை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். பிறகு என் சொந்தங்களுக்கு உதவிசெய்வேன்

எங்கள் கிராமத்திலுள்ள அனைவரும் ஐ.எஸ் தாக்குதலுக்குப் பயந்து ஓட ஆரம்பித்தோம். ஐ.எஸ் தீவிரவாதிகளின் துப்பாக்கிச்சூடும், வெடிகுண்டுத் தாக்குதலும் அவர்கள் எங்களுக்கு மிக அருகாமையில் இருக்கின்றனர் என்பதை உணர்த்தியது

ஐந்து வருடங்களாக அகதிகள் முகாமில் நாங்கள் அனுபவித்த இன்னல்களை மறக்க முடியுமா என்ன? குறிப்பாக யாசிடி குலப் பெண்களுக்கெதிராக நடத்தப்பட்ட அநீதிகளை அவ்வளவு எளிதில் மறக்கமுடியாது. ஆனாலும் எதிர்த்துப் போராடும் வழிமுறை இப்போது என் கைகளில் உள்ளது – ஹஸ்னா

அகதிகள் முகாமில் நான் சந்திக்கும் முக்கியமான பிரச்சினை பள்ளி கல்விக்கென மிகக்குறைவான நேரமே ஒதுக்கப்படுகிறது. சிறுவயதில் கணிதப்படிப்பில் நான்  தொடர்ந்து முதலிடம் வாங்கியிருக்கிறேன். இப்போது அப்படி முடியவில்லை; ஏனென்றால் முறையாகக் கற்றுக்கொடுக்க யாருமேயில்லை என்கிறார் ஹஸ்னா

சுமார் 15,000 பேர் வசித்து வரும் ருவாங்கா அகதிகள் முகாம். வடக்கு ஈராக்கின் தோஹக் மாவட்டத்தில் மட்டும் 25 அகதிகள் முகாம்கள் உள்ளன. 2014-ம் ஆண்டு முதல் அகதிகள் இங்கே தங்கவைக்கப்பட்டுள்ளனர்.


கட்டுரையாளர்கள்: Andrea Dijkstra & Jeroen Van Loon
தமிழாக்கம்: வரதன்
நன்றி: aljazeera 

காவி பாசிசம் – எதிர்த்து நில் | Kovan | Vinavu Official Song

க்கள் அதிகாரம் அமைப்பின் ”கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில் !” திருச்சி மாநாட்டில் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் தோழர் கோவன் பாடிய “காவி பாசிசம் – எதிர்த்து நில் !” பாடல் ரீ-ரிக்கார்டிங் செய்யப்பட்டு காணொளி வடிவில் வெளியிடப்பட்டுள்ளது. பாருங்கள்… பகிருங்கள் …

#Resist #KovanSong #MakkalAthikaram

பாருங்கள் ! பகிருங்கள் !

பாடல், இசை : ம.க.இ.க கலைக்குழு
ஆக்கம் : வினவு

பாடல் வரிகள் :

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிப்போனால் மாறிடுமா? (அடக்குமுறைதான்…)

எதிர்த்து நில்… எதிர்த்து நில் !
காவி பாசிசம்… எதிர்த்து நில் !

நீ விரும்பவில்லை
நான் பேசக்கூடாது…

நீ ரசிக்கவில்லை
நான் பாடக்கூடாது …

நான் உண்ணுவதை
நீ தடுக்குற?

நான் எண்ணுவதை
நீ மறுக்குற?

அதிகாரம் இருக்கலாம்
ஆடாதே!

மக்கள் அலையாய் எழுந்தால்
காணாமல் போவாய்!
காற்றாக தேய்வாய்!
காவியே நீ ஒழிவாய்!

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிப்போனால் மாறிடுமா? (அடக்குமுறைதான்…)

எதிர்த்து நில் எதிர்த்து நில்
காவி பாசிசம் … எதிர்த்து நில் …

♦  கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

ஸ்டெர்லைட்டு எங்களுக்கு வேணாமின்னு போராடினா
சுட்டுக் கொல்லுற …
சிறையில் தள்ளுற …
பொய் கேசு போடுற …
NSA செடிசன் குண்டாஸு …
என்ன எங்க மேல அபன்ஸு ?
எங்க மண்ணை விட்டுடுனு
கேட்பது குற்றமா …
நச்சு ஆலை வேணாமுன்னு
கெஞ்சினாலும் குற்றமா?
கார்ப்பரேட்ட வாழ வைப்பதுதான்
உங்க சட்டமா?

எதிர்த்து நில் எதிர்த்து நில்
காவிபாசிசம் எதிர்த்து நில்

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிபோனால் மாறிடுமா?

பதிமூனு பேரு செத்தாங்களே
செய்த பாவம் என்ன?

பாதுகாக்க  நினைச்சாங்க
வாழவச்ச மண்ண
எங்க ஸ்னோலின்
உனக்கு மகளில்லையா?

அங்கே செத்தவரெல்லாம்
தீவிரவாதியா ?

டெல்டாவிலே ஹைட்ரோகார்பன்
பொட்டிபுரத்தில் நியூட்ரினோ
கடற்கரை எல்லாம் சாகர்மாலா
மண்ணை ஆக்குற சுடுகாடா
தமிழகம் என்ன பகை நாடா ?

நடக்காது … நடக்காது …
கார்ப்பரேட்டின் கனவு பலிக்காது …

எதிர்த்து நில் எதிர்த்து நில் !
காவிபாசிசம் எதிர்த்து நில் !!

அடக்குமுறைதான் ஜனநாயகமா
அடங்கிபோனால் மாறிடுமா?

நிலத்த பறிக்குது எட்டு வழிச் சாலை …
எதிர்த்து பேசினாலே கைது சிறைச் சாலை …
வளர்ந்த மண்ணுல விவசாயி வாழமுடியல …
இழந்த உரிமைய தொழிலாளி பேசமுடியல …

மோடிய எதிர்த்தால்…
காவிய எதிர்த்தால்…
தேசவிரோதி … தீவிரவாதி … பயங்கரவாதி…
இது என்ன நீதி ?

இது நீதி இல்லை… நீதி இல்லை… இது மனுநீதி …
இதுதான் காவி

பாசிசம், காவி பாசிசம்.
இது கார்ப்பரேட்டின் பாசிசம்

எதிர்த்து நில் ! எதிர்த்து நில் ! காவி பாசிசம் – எதிர்த்து நில் !
காவி பாசிசம் – எதிர்த்து நில்!

அதிரவைக்கும் பாஜக தேர்தல் அறிக்கையின் அட்டகாசமான முக்கிய அம்சங்கள் !

#BJPManifesto2019

அதானி அம்பானிக்கு தினந்தோறும் அதிகாலையில் ஆட்டுக்கால் சூப்.

பாபா ராம்தேவ், சத்குரு வாசுதேவ் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் தாடிகளை பராமரிக்க தனி சலூன்.

எதிர்கால நீரவ் மோடி, மல்லையா போன்ற ஏழைகள் தப்பிக்க நவீன வசதிகொண்ட ஸ்மார்ட் சுரங்க பாதை.

போராட்டத்தில் ஈடுபடும் மக்களை சுட நவீன AK74.

பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கு இலவச கள்ளிப்பால்.

வெஜிடேரியன்களுக்கு 97% இடஒதுக்கீடு.

மாட்டு மூத்திரத்திற்கு GST விலக்கு.

பொய் செய்திகளை பரப்புவதற்கு ஊக்கத்தொகை.

இணையத்தில் பெண்களை மிரட்டுவதற்கு தனிப்படை.

வாங்கிவிட்டீர்களா ?
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! மோடி ஆட்சியின் ஐந்தாண்டு தொகுப்பு ! அச்சுநூலை ஆன்லைனில் வாங்கலாம்
நாடார் வரலாறு கறுப்பா ? காவியா ? அச்சு நூலை ஆன்லைனில் வாங்கலாம்

Fake id வைத்து இருந்தால் வரி விலக்கு.

சுமந்த் சி ராமன் , மாலன் மற்றும் கோலாகல ஸ்ரீநிவாஸுக்கு தியாகிகள் பென்ஷன்.

சமூக ஆர்வலர் பானு கோம்ஸ் மற்றும் அரசியல் ஆர்வலர் ரவீந்திரன் துரைசாமிக்கு சாவர்க்கர் விருது.

பாண்டேவிற்கு தாமரை பட்டயம்.

ரஃபேல் ஊழலுக்கு முட்டு கொடுத்தால் மாதம் ஒன்றுக்கு ஜாக்கி ஜட்டி பேக்.

நடுநிலையாளர்களுக்கு உடனடி ‘மூத்திர’ லோன் .

பாஜக எதிர்ப்பு மாநிலங்களில் ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்களில் மதக் கலவரம் அமல்.

சமூக செயல்பாட்டாளர்களுக்கு வலியின்றி கருணைக் கொலை.

இந்துத்துவ பயங்கரவாதம் தேசியமயமாக்கப்படும்.

சிறுபான்மையினருக்கு கல்வி ரத்து.

‘நான் எந்த கட்சியையும் ஆதரிப்பவன் கிடையாது. ஆனால், மோடி ஜி பிரதமராக வர வேண்டும்’ என்று innocent ஆக சொல்பவர்களுக்கு வட்டியில்லா குட்டி யானை (டாடா ACE ) வழங்கப்படும்.

முகநூலில் : Thameem Tantra



நாடாளுமன்றத் தேர்தல் 2019 : வைரல் வீடியோக்கள் … தவறாமல் பாருங்கள்!

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும்

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க !

 

பாலியல் குற்றவாளி பேராசிரியருக்கு பிணை வழங்காதே – கரூர் மாணவர்கள் போராட்டம் !

0

ரூர் அரசு கலைக் கல்லூரியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான பொருளியல் துறை தலைவர் இளங்கோவனின் பிணை மனு தள்ளுபடி செய்தது மாவட்ட அமர்வு நீதிமன்றம்.

கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் இருக்கும் பேராசிரியர் இளங்கோவனுக்கு பிணை கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு 01.04.2019 அன்று விசாரணைக்கு வந்தது. பேராசிரியர் இளங்கோவனுக்கு பிணை வழங்கக்கூடாது என்ற கோரிக்கையுடன் கல்லூரி மாணவர்கள் நீதிமன்ற வளாகத்தில் திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர் முருகேசன், இ.ஜெகதீசன் மற்றும் ஆதரவான வழக்கறிஞர்கள் ஆஜராகி கடந்த 7 ஆண்டுகளாக கல்லூரியில் படிக்கும் முன்னாள் இன்னாள் மாணவிகளுக்கு பேராசிரியர் இளங்கோவன் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்தது; மதிப்பெண்ணை வைத்து மிரட்டி மாணவிகளை தன் விருப்பத்திற்கு அடிபணிய வைத்தது உள்ளிட்ட உண்மைகளை வழக்கறிஞர்கள் எடுத்துரைத்தனர். மாணவர்களின் உறுதியான போராட்டம் மற்றும் வழக்கறிஞர்களின் வாதத்தின் காரணமாக பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார், நீதிபதி.

படிக்க:
பாஜக தலைமை அலுவலகத்தில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் நடத்திய பாலியல் வன்முறை !
குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !


தகவல்:
புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி,

அரசு கலைக்கல்லூரி, கரூர்.

அரசியல் பொருளாதாரத்தின் தந்தை சர் வில்லியம் பெட்டி | பொருளாதாரம் கற்போம் – 14

0

அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம் : பாகம் 14

அத்தியாயம் மூன்று : பாராட்டுக்குரிய சர் வில்லியம் பெட்டி
அ.அனிக்கின்

லக்கியத்திலும் விஞ்ஞானத்திலும் மாபெரும் புதுமைகளை ஏற்படுத்திய ஷேக்ஸ்பியரும் பேக்கனும் தாமஸ் மானுக்கு சமகாலத்தில் வாழ்ந்தவர்கள். அரசியல் பொருளாதாரத்தில் இது போன்ற புதுமைகளை ஏற்படுத்திய வில்லியம் பெட்டி இவர்களுக்கு ஒரு தலைமுறைக் காலத்துக்குப் பிறகு தோன்றினார்.

இவர்களுக்கு இடைக்காலத்தில் புதிய, 17-ம் நூற்றாண்டு பிறந்த பொழுது தோன்றிப் புகழ்பெற்றவர்கள் இராணுவத்தினரும் மத குருக்களுமே. நடுத்தர முதலாளிகளின் தலைவரும் வீர புருஷருமான ஓலிவெர் கிராம்வெல், அவரைக் காட்டிலும் அதிகத் தீவிரமான இடதுசாரிக் கொள்கையுடையவரும் அவரோடு அரசியலில் போட்டியிட்டவருமான ஜான் லில்பர்ன் ஆகியோர் வலது கையில் வாளும் இடது கையில் பைபிள் நூலும் வைத்துக் கொண்டு போர் புரிந்தார்கள். பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல், சமூகப் புரட்சி அன்றைய வரலாற்று நிலைமைகளினால் மதத் தன்மையை மேற்கொண்டது. அது பரிசுத்தவாதத்தின் எளிமையான, கண்டிப்பான உடையை அணிந்து கொண்டது.

கிராம் வெல்லின் ஆட்சிக் காலத்திலேயே முதலாளி வர்க்கம் தனது புரட்சிகரமான வேகத்தைச் செலவழித்து ஓய்ந்து விட்டது. 1660-ம் வருடத்தில் அது புதிய மேன்மக்களோடு கூட்டணி சேர்ந்து ஸ்டுவர்ட் மரபை மறுபடியும் பதவிக்குக் கொண்டு வந்தது. கொலை செய்யப்பட்ட அரசரின் மகன் இரண்டாம் சார்ல்ஸ் என்ற பெயரில் அரியணையில் அமர்ந்தார். ஆனால் முடியாட்சி முன்பு இருந்தது போல இனிமேல் இருக்க முடியவில்லை; புரட்சி வீண் போகவில்லை. பழைய நிலப்பிரபுத்துவ மேன்மக்களுக்குப் பாதகமான வகையில் முதலாளிகள் தங்களுடைய நிலையைப் பலப் படுத்திக் கொண்டனர்.

வில்லியம் பெட்டி

புரட்சியின் இருபது வருடங்களில் (1641-1660) ஒரு புதிய தலைமுறை – தோன்றி வளர்ச்சியடைந்திருந்தது. புரட்சி அவர்களுடைய சிந்தனையை அதிகமாக -ஆனால் வெவ்வேறுவிதமாக பாதித்திருந்தது. அரசியலும் மதமும் (அவை பிரிக்க முடியாதபடி இணைந்திருந்தன) குறிப்பிட்ட அளவுக்கு ஒதுக்கப்பட்டன. நாற்பதுக்களிலும் ஐம்பதுகளிலும் இளைஞர்களாக இருந்தவர்கள் பைபிள் புத்தகத்தை அறிவின் முக்கியமான பிறப்பிடமாகக் காட்டுகின்ற மதத்தன்மை கொண்ட வாதங்களைக் கேட்டு அலுத்துப் போனார்கள். அவர்கள் புரட்சியிலிருந்து வித்தியாசமான ஒன்றை அடைந்திருந்தார்கள். அது முதலாளித்துவ சுதந்திரம், பகுத்தறிவு, முன்னேற்றம் என்பதாகும். விஞ்ஞானத்தில் மிகச் சிறந்த திறமையுடைய சிலர் வானத்தில் நட்சத்திரக் கூட்டத்தைப் போலத் தோன்றி ஒளி வீசினார்கள். இவர்களில் முதன்மையானவர்கள் பெளதிக விஞ்ஞானி ராபர்ட் பாயில், தத்துவஞானி ஜான் லாக், கடைசியாக மாபெரும் ஐசக் நியூட்டன் ஆகியோராவர்.

இந்தத் தலைமுறையையும் மக்கள் குழுவையும் சேர்ந்தவர் வில்லியம் பெட்டி. அவர் காலத்திய அறிஞர்களில் பெட்டி கெளரவமான இடத்தைப் பெற்றிருக்கிறார். மார்க்ஸ் குறிப்பிட்டது போல, இந்த ஆங்கில கனவான் அரசியல் பொருளாதாரத்தின் தந்தை. புள்ளியியலைக் கண்டுபிடித்தவர் அவர்தான் என்றும் சொல்லலாம்.

நூற்றாண்டுகளைக் கடந்து புகழோடு விளங்கும் பெட்டி

விஞ்ஞானத்தின் வரலாற்றில் சிலர் மறக்கப்படுவதும் பிற்காலத்தில் அவர்களுக்குப் புத்துயிர் கொடுக்கப்படுவதும் உண்டு. இப்படிப்பட்டவர்களில் ஒருவர் ரிச்சர்ட் கான்டில் லாக். இவர் 18-ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்த குறிப்பிடத்தக்க பொருளாதார நிபுணர். சிறப்பு மிக்க பொருளாதார நிபுணர்களான பிரான்சுவா கெனே, ஜேம்ஸ் ஸ்டுவர்ட், ஆடம் ஸ்மித் ஆகியோர் இவரிடமிருந்து அதிகமாகக் கடன் வாங்கியிருக்கிறார்கள் என்று மார்க்ஸ் சுட்டிக் காட்டினார். இவரை அநேகமாக முற்றிலும் மறந்து விட்டார்கள். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசியில் இவரை மறுபடியும் புதிதாகக் கண்டுபிடித்தார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

ஹெர்மன் ஹென்ரிஹ் கோஸ்ஸென் என்பவர் 1854-ம் வருடத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டார். அது எவ்விதமான கவனத்தையும் பெறவில்லை. எனவே ஏமாற்றமடைந்த ஆசிரியர், நான்கு வருடங்களுக்குப் பிறகு கடைகளிலிருந்து தமது புத்தகங்களைத் திரும்பப் பெற்று அநேகமாக தமது முதல் பதிப்பு முழுவதையும் அழித்துவிட்டார். இதற்கு இருபது வருடங்களுக்குப் பிறகு ஜெவோன்ஸ் தற்செயலாக அதன் பிரதி ஒன்றைப் பார்த்தார்.

ஹெர்மன் ஹென்ரிஹ் கோஸ்ஸென் வெளியிட்ட நூலை வரலாற்றின் பக்கத்தில் மீட்ட வில்லியம் ஸ்டேன்லி ஜெவோன்ஸ்

கோஸ்ஸென் மரணமடைந்து பல வருடங்களாகி விட்டன. ஆனால் ஜெவோன்ஸ் அவரைப் ”புதிய அரசியல் பொருளாதாரத்தைக்” கண்டுபிடித்தவர் என்று பாராட்டினார். இன்று பொருளாதாரப் பண்டங்களின் பயன்பாடு பற்றிய இனத்தோடு – அக நிலையான, உளவியல் கருத்து நிலையிலிருந்து சம்பந்தப்பட்ட கோஸ்ஸென் விதிகள் அரசியல் பொருளாதாரம் பற்றிய எந்த முதலாளித்துவப் பாடபுத்தகத்திலும் வரலாற்றிலும் கணிசமான இடத்தைப் பெற்றிருக்கின்றன.

பெட்டியை மறுபடியும் கண்டுபிடிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. அவர் தம்முடைய காலத்திலேயே புகழ் அடைந்திருந்தார். ஆடம் ஸ்மித்துக்கு அவருடைய கருத்துக்கள் தெரிந்திருந்தன. ”பதினேழாம் நூற்றாண்டின் மிகவும் குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவர் சர் வில்லியம் பெட்டி” என்று மாக்குலோஹ் 1845-ம் வருடத்தில் எழுதினார். உழைப்பளவை மதிப்புத் தத்துவத்தை நிறுவியர் பெட்டி என்று கூடச் சொன்னார்; அவருக்கும் ரிக்கார்டோவுக்கும் ஒரு நேர்கோடான வளர்ச்சியைக் காட்டினார்.

எனினும் மார்க்ஸ் மட்டுமே வில்லியம் பெட்டியை விஞ்ஞானத்துக்காக முழுமையாகக் கண்டுபிடித்தார். மார்க்ஸ் ஒரு புதிய அரசியல் பொருளாதாரத்தைப் படைத்து அந்த விஞ்ஞான வரலாற்றில் புதிய ஒளியைப் பாய்ச்சினார்; அதன் மூலம் இந்தச் சிறப்புமிக்க ஆங்கிலேயர் அதில் வகிக்கின்ற உண்மையான இடத்தையும் விளக்கினார். கண்ணால் பார்க்கக்கூடிய பொருளாதார நிகழ்வுகளை மட்டும் ஆராய்ந்து அவற்றை வர்ணிப்பதோடு நின்றுவிடாமல் முதலாளித்துவ உற்பத்திமுறையின் உள்விதிகளைப் பகுத்தாய்வு செய்து அதன் வளர்ச்சி விதியைத் தேடிய மூலச்சிறப்புடைய முதலாளித்துவ அரசியல் பொருளாதாரத்தின் தந்தை பெட்டி என்று கூறலாம். பெட்டி மற்றும் அவருடைய ஆதரவாளர்களின் கைகளில் இந்த விஞ்ஞானம் யதார்த்தத்தைப் புரிந்து கொள்வதற்கும் சமூக முன்னேற்றத்துக்காகப் பாடுபடுவதற்கும் ஏற்ற கருவியாக மாறியது.

பெட்டியின் குறிப்பிடத்தக்க, அசாதாரணமான ஆளுமை மார்க்சையும் எங்கெல்சையும் அதிகமாகக் கவர்ந்தது. ”பெட்டி தன்னை ஒரு புதிய விஞ்ஞானத்தின் ஸ்தாபகராகக் கருதுகிறார்…”, ” அவருடைய துணிச்சல் நிறைந்த மேதாவிலாசம்…”, ”மிகவும் தனித்தன்மையான நகைச்சுவை உணர்ச்சி . அவருடைய எழுத்துக்களில் நிரம்பியிருக் கிறது…”,(1) ”இந்தத் தவறிலும் கூட மேதாவிலாசம் அடங்கியிருக்கிறது.”(2) “அளவில் சிறிய தென்றபோதிலும் கருத்திலும் உள்ளடக்கத்திலும் இது தலை சிறந்த சாதனையாகும்”. மார்க்ஸ் தாம் எழுதிய பல புத்தகங்களில் எழுதியுள்ள மேற்கூறிய கருத்துக்கள் ”பொருளாதார ஆராய்ச்சியில் மிக அதிகமான தற்சிந்தனையும் சிறப்பும் கொண்ட”(3) பெட்டியைப் பற்றி அவருடைய அணுகுமுறையை நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

படிக்க:
♦ பொள்ளாச்சி மாணவிகளை சீரழித்த அதிமுக பொறுக்கிகளை தூக்கிலிடு ! தமிழகமெங்கும் போராட்டம் !
♦ கரூர் : காவிக் கும்பலை கதறவிட்ட மக்கள் அதிகாரம் டீ – சர்ட் !

பெட்டியின் எழுத்துக்களுக்கு ஏற்பட்ட கதி அசதாரணமானதாகும். மாக்குலோஹ் ஒரு விசித்திரமான அம்சத்தைச் சுட்டிக்காட்டினார். பெட்டி வகித்த பாத்திரம் எவ்வளவு முக்கியமானதாக இருந்தபோதிலும் அவருடைய புத்தகங்கள் ஒருபோதும் முழுமையாக வெளியிடப்படவில்லை; பழைய அரை குறையான பதிப்புக்களாகவே அவை இருந்தன. 19 -ம் நூற்றாண்டின் மத்தியிலேயே அவை அபூர்வமாகக் கிடைக்கக் கூடிய புத்தகங்களாகவே கருதப்பட்டன.

மாக்குலோஹ் பெட்டி பற்றிய தம்முடைய குறிப்பில் தமது எளிய பணிவான நம்பிக்கையை வெளியிட்டிருந்தார்:

“பெட்டியின் சொத்துக்களையும் அவருடைய திறமையையும் மரபுரிமையாகப் பெற்றிருக்கும் அவருடைய சிறந்த வாரிசுகள், அவருடைய புத்தகங்களுக்கு முழுமையான பதிப்பு வெளியிடுவதைக் காட்டிலும் அவருக்குச் சிறந்த நினைவுச் சின்னத்தை ஏற்படுத்த முடியாது.”

எனினும் பெட்டியின் “சிறந்த வாரிசுகளான” ஷெல் பர்ன் மற்றும் லான் ஸ்டௌன் பிரபுக்கள் ஒரு எளிய கைவினைஞரின் மகனாகப் பிறந்து பணமும் புகழும் சேர்த்து (அவை எல்லாமே நியாயமான வழிகளில் தான் என்று சொல்ல முடியாது), ஒரு சமீபத்திய வாழ்க்கை வரலாற்றாசிரியர் சொல்வதைப் போல, ”பகட்டான, ஓரளவுக்குச் சந்தேகிக்கப்பட வேண்டிய பெயரைக் கொண்டிருந்த தங்கள் முன்னோரைப் பொதுவாக எல்லோருடைய காட்சிக்கும் வைப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. – பெட்டியின் வாரிசுகளுக்கு இரண்டு நூற்றாண்டுக் காலம் இந்த அம்சம் பெரிதாகத் தெரிந்ததே தவிர, அவருடைய எழுத்துக்களின் விஞ்ஞான, வரலாற்று மதிப்பு முக்கியமானதாகத் தெரியவில்லை. 19-ம் நூற்றாண்டின் கடைசியில் தான் பெட்டியின் பொருளாதார நூல்களின் முதல் தொகுப்பு வெளியிடப்பட்டது. அதே சமயத்தில் அவருடைய சந்ததியினர் ஒருவர் அவரது வாழ்க்கை வரலாற்றையும் வெளியிட்டார்.

பெட்டியின் அரசியல் கருத்துக்களையும், அவருடைய சமூக, விஞ்ஞானப் பணிகளையும், அவர் காலத்திய மாபெரும் விஞ்ஞானிகளோடு அவருடைய உறவுகளைப் பற்றியும் இன்று நமக்குத் தெளிவான விவரங்கள் கிடைத்துள்ளன. அவருடைய வாழ்க்கையைப் பற்றி அதிகமான செய்திகள் இன்று தெரிய வந்துள்ளன. மாபெரும் மனிதர்களின் உருவப்படங்களைப் பொறுத்தவரை அவற்றைத் திருத்திக் காட்டுவது அவசியமல்ல; அவர்களுடைய குறைகளையும் பலவீனங்களையும் பூசிமெழுகுவதும் தேவையல்ல. இது வில்லியம் பெட்டிக்கு முழுமையாகப் பொருந்தும். மனித குல வரலாற்றில் அவர் ஒரு பெரிய ஐரிஷ் நிலவுடைமையாளராக, முன்யோசனை நிறைந்த (அவர் எப்பொழுதுமே வெற்றியடைந்த தாக ஒரு போதும் சொல்ல முடியாது) அரசவையாளராக அவர் நிலைத்திருக்க மாட்டார்; சமூகத்தைப் பற்றிய விஞ்ஞானத்தில் புதிய பாதைகளைத் திறந்து விட்ட, துணிச்சலான சிந்தனையாளர் என்ற முறையில் தான் அவர் புகழ் நிலைத்திருக்கும்.

மார்க்சியவாதிகள் மூலச்சிறப்புடைய அரசியல் பொருளாதாரத்தின் ஸ்தாபகர் என்று தான் பெட்டி யைப் பற்றி முதன்மையாக நினைப்பார்கள். பெட்டி ஒரு மாபெரும் மேதை, குறிப்பிடத்தக்க ஆளுமை கொண்டவர் என்பதை முதலாளித்துவப் பொருளாதார நிபுணர்கள் அங்கீகரித்தாலும், அவரை ஸ்மித், ரிக்கார்டோ, மார்க்ஸ் ஆகியோரின் முன்னோடி என்று ஒத்துக் கொள்வதில்லை. ஆராய்ச்சியில் புள்ளியியல் முறையை உருவாக்கியவர் என்ற அளவில் தான் இந்த விஞ்ஞானத்தில் அவருக்கு இடம் ஒதுக்கப்படுகிறது.

பெட்டியின் எழுத்துக்களில் உழைப்பளவை மதிப்புத் தத்துவம் (அல்லது பொது முறையிலாவது மதிப்பைப் பற்றிய கருதுகோள்) இல்லை; மதிப்பிடத்தக்க கூலித் தத்துவம் இல்லை; எனவே அவர் உபரி மதிப்பைப் புரிந்து கொண்டிருக்கக் கூடிய பிரச்சினையே ஏற்படவில்லை என்று ஷூம்பீட்டர் எழுதுகிறார். “பொருளாதார விஞ்ஞானத்தின் ஸ்தாபகர் பெட்டி என்று மார்க்ஸ் பிறப்பித்த ஆணையே”(4) அவர் புகழுக்குக் காரணம்; வேறு சில முதலாளித்துவ அறிஞர்களும் அவரைப் பாராட்டியிருக்கின்றனர் – இது தான் இன்னொரு காரணம்; இந்த அறிஞர்கள் தாங்கள் செய்வது என்னவென்று தெரியாதவர்கள் என்று ஷூம்பீட்டர் கோடி காட்டுகிறார்.

முதலாளித்துவ அறிஞர்களால் எழுதப்பட்ட பல புத்தகங்கள் பெட்டி வாணிப ஊக்கக் கொள்கையை விளக்கியவர் என்று மட்டுமே காட்டுகின்றன. அந்தத் தரப்பினரில் அவர் அதிகமான திறமையும் வளர்ச்சியும் கொண்டவராக இருந்திருக்கலாம்; ஆனால் அதற்கு மேல் எந்தப் புகழுக்கும் உரியவரல்ல. புள்ளியியல் முறையைக் கண்டுபிடித்ததைத் தவிர வரிவிதிப்பு, சுங்கவரி போன்ற தனிப்பட்ட பொருளாதாரப் பிரச்சினைகளைப் பற்றி அவர் விளக்கியதாக அவரை அதிகபட்சமாகப் பாராட்டுவதுண்டு.

நவீன முதலாளித்துவ விஞ்ஞானத்தில் இந்தக் கருத்தே கோலோச்சுவதாகச் சொல்ல முடியாது. மற்ற கருத்துக்களும் உண்டு; பொருளாதார விஞ்ஞானத்துக்குப் பெட்டி ஆற்றிய பாத்திரம் இன்னும் அதிகமான வரலாற்றுப் பின்புலத்தில் சரியாக கணிக்கப்படுவதும் உண்டு. எனினும் ஷூம்பீட்டர் கருத்து பிரதானமான அணுகுமுறையைக் காட்டுகிறது; இது தற்செயலாக ஏற்பட்டதல்ல.

(தொடரும்…)

அடிக்குறிப்பு:

(1) K. Marx, A Contribution to the Critique of Political Economy, Moscow, 1970, pp. 52,53.

(2) பி. எங்கெல்ஸ், டூரிங்குக்கு மறுப்பு, முன்னேற்றப் பதிப்பகம், மா ஸ்கோ , 1979, பக்கம் 403 பார்க்க .

(3) Ibid.

(4) J. Schumpeter, History of Economic Analysis, N.-Y., 1955, p. 210.

கேள்விகள்:

1.இலக்கியத்தில் ஷேக்ஸ்பியரும், அறிவியலில் பேக்கனும் ஏற்படுத்திய மாபெரும் புதுமைகள் எவை?

2. “பதினேழாம் நூற்றாண்டில் ஏற்பட்ட அரசியல், சமூகப் புரட்சி அன்றைய வரலாற்று நிலைமைகளினால் மதத் தன்மையை மேற்கொண்டது.” – காரணம் என்ன?

3. பெட்டியை “இந்த ஆங்கில கனவான் அரசியல் பொருளாதாரத்தின் தந்தை” என்று கார்ல் மார்க்ஸ் பாராட்டுவதற்கு காரணம் என்ன?

தொடரின் ஏனைய பாகங்களைப் படிக்க: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

நூல்: அரசியல் பொருளாதாரத்தின் இளமைக் காலம்

வெளியீடு : முன்னேற்றப் பதிப்பகம், மாஸ்கோ – 1983
ஆசிரியர் : அ.அனிக்கின்
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் நா. தர்மராஜன், எம்.ஏ

ஐரோப்பியர் பார்வையில் தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? | பொ . வேல்சாமி

தமிழர்கள் தரங்கெட்டவர்களா… ? – சீகன்பால்கு (1682-1719)

ண்பர்களே….

16, 17-ம் நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டுக்கு வந்த ஐரோப்பிய அறிஞர்களும் பாதிரியார்களும் தமிழ் மக்களை ஆப்பிரிக்க – அமெரிக்க செவ்விந்திய பழங்குடியினரைப் போன்று நாகரிகமற்ற காட்டுமிராண்டிகள் என்றுதான் நினைத்தனர். ஆனால் தமிழ்மொழியையும் நம்முடைய திருக்குறள், தொல்காப்பியம், நன்னூல், சிந்தாமணி போன்ற நூல்களை அறிந்து கொண்ட பின்னர் ஐரோப்பியர்களாகிய நாம் நினைத்ததைப் போல தமிழர்கள் தரமற்ற காட்டுமிராண்டிகள் அல்லர் என்ற முடிவுக்கு வந்தனர்.

இப்படி அவர்களுடைய எண்ணத்தை மாற்றியது பழந்தமிழ் நூல்களும் தமிழ்நாட்டுக் கலைகளும்தான் என்பதை அவர்களால் எழுதப்பட்ட பல குறிப்புகள் நமக்கு வெளிப்படுத்துகின்றன. அவற்றுள் ஒரு குறிப்பிடத்தகுந்த குறிப்பு தரங்கம்பாடியில் இருந்த சீகன்பால்கு-வால் எழுதப்பட்டது.

இந்தியாவிற்கு முதன்முதலாக வந்த பிராட்டஸ்டன்டு கிறிஸ்தவர் சீகன்பால்கு. பைபிளை முதன்முதலாக தமிழில் மொழிபெயர்த்தவரும் இவர்தான். இவர் அன்று தொகுத்து வைத்த பல தமிழ் நூல்களைப் பற்றிய குறிப்புகள் ஜெர்மனியில் இன்றும் உள்ளன.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தமிழர்களின் மேன்மையை உலகறிய செய்த தமிழ்மொழியையும் பழந்தமிழ் இலக்கியங்களையும் இன்றைய தமிழ் மக்கள் புறக்கணித்து வருவது மிகவும் இரங்கத்தக்கது. ஏனெனில் ஐரோப்பியர்களால் மனித மிருகங்கள் என்று கருதப்பட்ட தமிழர்களை மனிதர்கள்தான் என்று அடையாளம் காட்டியது நம்முடைய சிறப்புமிக்க தமிழ்நூல்கள்தான் என்பதை வரலாறு சுட்டிக் காட்டுகின்றது. அதாவது நம்மை சிந்திக்கும் மனிதர்களாக அடையாளம் காட்டிய தமிழும் தமிழ் நூல்களும் இன்று நம்மால் புறக்கணிக்கப்படுவது என்பது நாம் மனிதத் தன்மையை இழந்து கொண்டு வருகிறமோ என்ற ஐயத்தை சிந்திப்பவர்களுக்கு ஏற்படுத்தவில்லையா?

குறிப்பு :
சீகன்பால்கு எழுதிய குறிப்பை படமாகக் கொடுத்துள்ளேன். மற்றும் சீசன்பால்கு வாழ்க்கை வரலாறு பற்றிய சிறு நூலை நண்பர்கள் படிப்பதற்கு வசதியாக தரவிறக்கம் செய்து கொள்ளும் இணைப்பையும் கொடுத்துள்ளேன். 

தரவிறக்கம் செய்ய இங்கே அழுத்தவும் …

நன்றி : முகநூலில் பொ. வேல்சாமி

குருகிராம் தாக்குதல் : மோடியின் புதிய இந்தியாவின் புதிய நீதி !

4

“எங்களுடைய மூன்று அடுக்கு வீடு கட்டி முடிக்கப்பட்டபோது,  கட்டிடத்தின் உயரமான இடத்தில் தேசிய கொடியை பறக்க விட வேண்டும் என தீர்மானித்தோம்” என்கிறார் முகமது சஜீத். கடந்த ஹோலி பண்டிகையின்போது இந்துத்துவ குண்டர்களால் தாக்கப்பட்டவர் இவர். அன்றைய தாக்குதலில் கை உடைந்துபோய் கட்டுபோட்டு அவரால், இன்னமும் சரியாக நிற்க முடியவில்லை, தலையில் அடித்த அடியால் இன்னமும் மயக்கம் வருவதுபோன்ற நிலையிலே இருப்பதாகச் சொல்கிறார்.

கை முறிந்த நிலையில் முகமது சஜீத்

“ஆனாலும், அவர்கள் பாகிஸ்தானுக்கு போ என்கிறார்கள். நாங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு போக வேண்டும்? இது எங்களுடைய நாடு; இதை நாங்கள் நேசிக்கிறோம். இருந்தபோதும், பாருங்கள் அவர்கள் எங்களுக்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று”.

குருகிராமின் விளிம்பில் உள்ள பூப் சிங் நகரில் சஜீத்தின் வீடு உள்ளது.  இந்துத்துவ கும்பலால் உடைக்கப்பட்ட கண்ணாடி சில்லுகளை அந்த வீடு முழுவதும் பார்க்க முடிந்தது. இரத்தத் துளிகளின் சுவடுகள் இன்னமும் தரையில் இருந்தன. கும்பல் தாக்குதலின் அதிர்ச்சி அந்தக் குடும்பத்தினரின் முகத்தில் உறைந்து போயிருந்தது. பலர் இன்னமும் கால், தலை, கழுத்து போன்ற பகுதிகளில் கட்டுப்போட்டு படுக்கையில் படுத்திருந்தனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்குக்கூட வெளியே போகத் தயாராக இல்லை.

சஜீத்தின் மூத்த சகோதரர் தொடர்ந்து அழுதபடியே இருந்தார். “எங்கள் குடும்பத்துக்கு என்ன ஆகும் என தெரியவில்லை. எப்படி என் குடும்பத்தை காப்பாற்றுவேன்?” என அழுகிறார்.

மீண்டும் தேசியக் கொடியை பறக்கவிட்டது குறித்த பேச்சு எழுந்தது. சஜீத் சொன்னார், “நாங்கள் எங்களுடைய நாட்டுப் பற்றை நிரூபிப்பதற்காக கொடியை ஏற்றவில்லை. அது எங்களுடைய விருப்பம், வீட்டின் மிக உயர்ந்த இடத்தில் பறக்க விடவேண்டும் என்பது எங்களுடைய இதயத்தில் இருந்து எழுந்தது”.

“நாங்கள் எங்களுடைய நாட்டுப் பற்றை நிரூபிப்பதற்காக கொடியை ஏற்றவில்லை. அது எங்களுடைய விருப்பம், வீட்டின் மிக உயர்ந்த இடத்தில் பறக்க விடவேண்டும் என்பது எங்களுடைய இதயத்தில் இருந்து எழுந்தது”

குருகிராமிலிருந்து 70 கி.மீ. தள்ளியிருக்கும் உத்தரப் பிரதேச மாநிலத்தில் பக்பாட் அருகே உள்ள பாஞ்சி என்ற கிராமத்தைச் சேர்ந்த நான்கு சகோதரர்களில் ஒருவர் சஜீத். அவர்களுக்கென்று எந்த நிலமும் சொந்தமில்லை. எனவே அவர்களுக்கு வேலை அவசியத் தேவையாக இருந்தது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அவர்களில் ஒருவர் அப்போதைய நகரமயமாகி வந்த, தொழிற்சாலைப் பகுதியான குர்கானுக்கு வேலை தேடியும், சிறப்பான வாழ்க்கையைத் தேடியும் வந்தார்.  கேஸ் அடுப்பு பழுது பார்க்கும் பணியை அவர் தேடிக்கொண்டார். வாய்ப்புகள் பெருகவே, தன்னுடைய சகோதரர்களை ஒருவர் பின் ஒருவராக இங்கே அழைத்துக் கொண்டார். அவர்களுடைய மகன்களும் இங்கே வந்தார்கள்.

பகுதியளவில் உடல் குறைபாடுடைய அவருடைய மூத்த சகோதரரும் இங்கே வந்துவிட்டார். அவர் வீட்டிலேயே இருந்துகொண்டு, குழந்தைகளைக் கவனித்துக்கொண்டு அவர்களை பள்ளிக்கு அழைத்து போவார். சில நேரங்களில் அவர்களுடைய கடையிலும் அமர்ந்திருப்பார். அவர்களுடைய பணியை எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் மரச் சாமான்களை பழுது நீக்குதல் வரை நீட்டித்தார்கள். 2006-ம் ஆண்டு ஊரில் இருந்த மொத்த குடும்பத்தையும் இங்கே அழைத்து, குர்கானின் சுற்றியுள்ள கிராமப் பகுதியில் குடியமர்த்தினார்கள்.

2015-ம் ஆண்டு தன்னுடைய விவசாய நிலத்தை வீட்டுமனையாக்கிய போட்சி என்பவரிடமிருந்து சஜீத் வீடு கட்ட நிலத்தை வாங்கினார். அந்த கிராமத்தில் இவர்கள் கட்டிய மூன்று அடுக்கு வீடு மெச்சக்கூடியதாக இருந்தது.  இது அந்த கிராமத்தை சேர்ந்தவர்களுக்கு பொறாமையை ஏற்படுத்தியிருக்கலாம், அதுதான் இந்த தாக்குதலுக்கு காரணமாயிருக்கும் என தற்போது இவர்கள் கருதுகிறார்கள்.

மார்ச் 21-ம் தேதி ஹோலி பண்டிகையின் போது, நான்கு சகோதரர்கள், அவர்களுடைய மனைவிகள் மற்றும் குழந்தைகள் சஜீத்தின் வீட்டில் கூடினார்கள்.  பெண்கள் சமையலறையில் சமைத்துக் கொண்டிருந்தார்கள். ஆண்கள் பேசிக்கொண்டிருந்தார்கள், பெண் குழந்தைகள் வீட்டுக்குள் விளையாடிக் கொண்டிருந்தார்கள், பையன்கள் வெளியே கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தார்கள். இவர்களில் மூன்று வயது, ஐந்து வயது குழந்தைகளும் அடக்கம்.

கதறி அழும் சஜீத்தின் மூத்த சகோதரர்.

திடீரென்று, மூன்று இருசக்கர வாகனங்களில் முகத்தில் வண்ணங்களை பூசிய ஒன்பது நபர்கள் அங்கே வந்தார்கள். அவர்கள் வெளியே விளையாடிக்கொண்டிருந்த பையன்களை கேலி செய்தார்கள். அவர்களை முல்லாக்கள் என அழைத்து வம்பிழுத்தார்கள். ‘பாகிஸ்தானுக்கு போ’ என்றார்கள். அவர்களிடம் மூத்த பையன் விவாதம் செய்தான். அவனை இந்த கும்பல் சூழ்ந்துகொண்டது. பயந்துபோன பையன்கள், இனி இங்கே விளையாட மாட்டோம் என கெஞ்சினார்கள்.

உடனடியாக அங்கிருந்து கிளம்பிய பையன்கள் வீட்டுக்குப் போய், கதவை அடைத்துக் கொண்டார்கள்.

அரை மணி நேரம் கழித்து, கைகளில் கட்டையுடன் ஒரு கும்பலாக திரண்டு வந்து வீட்டை சூழ்ந்துகொண்டது.  ‘பாகிஸ்தானுக்கு போ’ என கத்த ஆரம்பித்தது அந்த கும்பல். சிலர் கத்தி, ஈட்டியுடனும் சில ஹாக்கி மட்டையுடனும் ஒருவர் துப்பாக்கியுடனும் வந்திருந்தனர். அவர்கள் வீட்டின் மீது கற்களால் தாக்கத் தொடங்கினர். வீட்டின் முன்புறம் இருந்த பெரிய கண்ணாடி கதவை உடைத்தனர். கண்ணாடியை உடைத்து உள்ளே வர ஆரம்பித்தனர்.

அந்தக் குடும்பம் கதற ஆரம்பித்த நிலையில், ஆண்களை கட்டையால் தாக்கத் தொடங்கிய அந்த கும்பல். வயதான பெண் ஒருவர் அந்த கும்பலின் காலில் விழுந்து ஆண்களை விட்டு விடும்படி கெஞ்சினார்கள். கத்தியைக் காட்டி, அந்தப் பெண்களை கன்னத்தில் அறைந்தார்கள். அலமாரியில் ஒளிந்துகொண்ட ஆறு வயது சிறுமியை பிடித்த அவர்கள், அந்தக் குழந்தையை கொடூரமாக அடித்தார்கள். ஒன்றரை வயது குழந்தையின் தலையை கட்டிலில் மோதி அடித்தார்கள். அந்தக் கூட்டுக்குடும்பத்தின் பெரும்பாலானவர்கள் கீழ்தளத்தில் இருந்த இரும்பு கதவுக்குள் ஒளிந்துகொண்டார்கள். அந்த கும்பல் அதை உடைக்க முயற்சித்து உள்ளே வந்தது. பிறகு, பார்த்தவரையெல்லாம் அடித்தது. ஒருவரை அடித்து ஜன்னலிலிருந்து வெளியே தூக்கி எறிந்தது.

தாக்கப்படும் இசுலாமிய குடும்பம்.

உடல் குறைபாடுடைய சகோதரர், குழந்தைகள் சிலரை அழைத்துக்கொண்டு இரண்டாம் தளத்தில் இருந்த வராந்தாவில் ஒளிந்துகொண்டார்.  தனிஷ்டா என்ற பதின்பருவ பெண், அந்த நேரத்தில் சமயோஜிதமாகவும் தைரியமாகவும் செயல்பட்டு, இந்த கும்பல் நடத்திய வன்முறை வெறியாட்டத்தை செல்போனில் படம் பிடித்தார். அதுதான் இந்தக் கொடூரமான கும்பல் வன்முறை வெளியே தெரிய காரணமாக அமைந்தது.

இந்த குடும்பத்தையும் அது காப்பாற்றியுள்ளதோடு, தங்களுடைய பாதிப்புகளை உலகத்துக்கு காட்டவும் அது உதவியது. இரண்டாம் தளத்தில் இருந்த இரும்பு கதவை அவர்களால் உடைக்க முடியவில்லை. ஆனாலும் தனிஷ்டா வன்முறையை படமாக்கிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்த்தனர்.  துணிவுமிக்க அந்தப் பெண், கேமராவை மறைத்து வைத்தார். அவர்களை மிரட்டியதோடு, அவரை நோக்கி சுடவும் செய்திருக்கிறார்கள்.

தனிஷ்டா படம் பிடித்ததாலேயே அந்த கும்பல் அந்தக் குடும்பத்தினரை கொல்லாமல் விட்டிருக்கிறது. அடுத்த 15 நிமிடங்களில் அந்த கும்பல் இடத்தை காலி செய்திருக்கிறது. “இரண்டரை நிமிட வீடியோவைத்தான் நீங்கள் பார்த்தீர்கள், அதுவே பார்ப்பதற்கு உங்களுக்கு பயங்கரமாக இருக்கும்” என்கிறார் வீட்டில் உள்ள ஒருவர். “அனுபவித்த எங்களுக்கு இது எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பாருங்கள்”.

இதையெல்லாம் அண்டை வீட்டார் பார்த்துக்கொண்டிருந்தனர். அந்த குடும்பத்தை காப்பாற்றும் விதமாக எவரும் அந்த கும்பலை தடுத்து நிறுத்தவில்லை. “அவர்கள் ஏழைகள். அவர்களும் பயந்திருக்கலாம்” என்கிறார் சஜீத்.  அருகில் வசிக்கும் சிலர், பக்கத்தில் வசிப்பவர்களும் கும்பலுடன் சேர்ந்து வீட்டின் மீது கல்லெறிந்ததாக கூறுகின்றனர்.

குடும்பத்தினர் காவல் உதவி மையத்தை அழைத்ததோடு, இருவர் எட்டு கி.மீ. தள்ளியிருக்கும் காவல் நிலையத்துக்கும் சென்றனர். ஆனாலும் கும்பல் கிளம்பிச் சென்ற ஒன்றரை மணி நேரம் கழித்துதான் போலீசு அங்கே வந்திருக்கிறது. கிரிக்கெட் விளையாட்டால் ஏற்பட்ட பிரச்சினை என்றுதான் ஆரம்பக்கட்டத்தில் இந்தத் தாக்குதலை போலீசு அணுகியிருக்கிறது. இது ஒரு வெறுப்பு குற்றம் என வீடியோ ஆதாரம் சொன்னது. சமூக ஊடகங்களில் பரவலாக பகிரப்பட்ட இரண்டாவது வீடியோவில், நீண்ட இரும்பு கம்பி மற்றும் கட்டைகளுடன் அக்கும்பல் வீட்டை சூழ்ந்துகொண்டது. இந்த தாக்குதல் குருகிராமில் மதக்கலவர சூழலை உருவாக்க திட்டமிடப்பட்டது என்பதை அது வெளிப்படுத்தியது.

எலும்புகள் உடைக்கப்பட்ட நிலையில், கழுத்து திருகப்பட்ட நிலையில் காயம்பட்ட ஆண்களை போலீசு மருத்துவமனையில் அனுமதித்திருக்கிறது. ஒரே ஒருவர் மட்டும் ஆறு நாட்கள் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தார். ஆனால், பலர் இன்னமும் வலியுடன் வீட்டில் அவதிபட்டு வருவதை பார்க்க முடிந்தது.

இது மதரீதியிலான தாக்குதல் அல்ல, கிரிக்கெட்டால் வந்த பிரச்சினை என்பதைக் காட்டும்வகையில் இந்த முசுலீம் குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களை அடித்தார்கள் என காட்டுவதற்காக, கலவர கும்பலைச் சேர்ந்த சிலர் வேண்டுமென்றே மருத்துவமனையில் சேர்ந்திருப்பதாக வதந்திகள் பரவிக்கொண்டிருப்பதாக இந்த குடும்பம் சொல்கிறது.

இந்த குடும்பத்தின் உறவினர்கள் சிலர், இந்த இடத்தை விட்டு, முசுலீம்கள் சூழ்ந்த தங்களுடைய கிராமத்துக்கே திரும்பி விடும்படி சொல்லியிருக்கிறார்கள்.  அங்கே ஒரு வேலையும் இல்லை. குழந்தைகள் பள்ளியை விட்டு நின்றுவிடுவார்கள். ஆனாலும் முசுலீம்களுடன் வசிப்பது பாதுகாப்பானது என கருதுகிறது இந்த குடும்பம். இந்த வீட்டை விற்கவும் இவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள்.

“எங்களுக்கு நீதி கிடைத்தால், நாங்கள் ஏன் இந்த இடத்தை விட்டு போகப்போகிறோம்? இது எங்களுடைய நாடு. எங்களுக்கு இங்கே வாழவும் பணியாற்றவும் எங்களுடைய எதிர்காலத்தை உருவாக்கவும் எங்களுக்கு உரிமை உள்ளது. எங்களை ஒரு கும்பல் பயமுறுத்த முடியாது. நாங்கள் இங்கே எங்களுடைய குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்க வந்தோம். நாங்கள் இங்கிருந்து வெளியேற மாட்டோம்” என்கிறார் சஜீத்.

சில நாட்கள் கழித்து, இந்த முசுலீம் குடும்பத்தில் உள்ள இருவர் மீது குற்ற வழக்கு பதிந்திருக்கிறது போலீசு. இந்த கும்பல் வெறியாட்டத்தை தலைமையேற்று நடத்திய ராஜேந்திரா என்பவன், இந்த இருவரும் தன்னை தலையிலும் வயிற்றிலும் அடித்ததாக சொல்லியிருக்கிறான்.  அடிபட்டவர்கள் மீதே வழக்கு போட்ட போலீசு தங்களுடைய ‘கடமை’யை ஆற்றியிருப்பதாக கூறுகிறது.

கும்பல் கொலைகள் குறித்து நாங்கள் விசாரித்து அறிந்த அனைத்து வழக்குகளிலும் தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீதே வழக்குப் பதிவது என்பது படுமோசமான ஒரே மாதிரியான முறையாக இருக்கிறது. மாட்டை வெட்டினார்கள் என்றும், விலங்குகளை கொடுமைப்படுத்தினார்கள் என்றும் மோசமாக வண்டி ஓட்டினார் என்றும்கூட பாதிக்கப்பட்டவர்கள் மீது குற்றம் சுமத்தினார்கள். பாதிக்கப்பட்டவர்கள் சிறையிலும்கூட அடைக்கப்பட்டார்கள்.

எனவே, பாதிக்கப்பட்டவர்கள் நீதி கேட்டு போராடுவதற்கு பதிலாக, தங்களை தாங்களே இந்த வழக்குகளிலிருந்து காப்பாற்றிக்கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். சில நேரம் போலீசும் கிராமத்தின் பெரிய மனிதர்களும், நீதிமன்றத்துக்கு வெளியேயான ‘சமரசத்திற்கும்’ ஆளாக வேண்டியுள்ளது. அதாவது பாதிக்கப்பட்டவர் தன்னை அடித்தவர்கள் யார் என அடையாளம் தெரியவில்லை என சொல்வார்; எனவே, போலீசு அவர்கள் மீது கிரிமினல் வழக்கு பதியாமல் கைவிடும்.

இதே போன்ற இழிவான உத்தி குருகிராமிலும் பயன்படுத்தப்படுகிறது. இதுதான் புதிய இந்தியாவின் புதிய நீதி!

இந்தக் குடும்பம் நீதிமன்றம் செல்லவும் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது. அவர்கள் உடைந்து போயிருக்கிறார்கள். குருகிராமில் தொடர்ந்து வாழ்வது என்கிற அவர்களது தீர்மானம் பலவீனமடையலாம். அவர்கள் இந்த இடத்தை விட்டுப் போவது, வருந்தத்தக்க முடிவாக அமையலாம். வேறுபட்ட மத நம்பிக்கை உடையவர்கள் ஒருங்கிணைந்து நட்புடனும் நம்பிக்கை, மரியாதையுடனும் வாழ்வதே இந்தியா என்கிற கருத்தாக்கம். அதன் மீது செலுத்தப்பட்ட மற்றொரு தாக்குதல் இது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் அரங்கேறிய கும்பல் வெறியாட்டத்தை, முசுலீம் படுகொலையை நாடு முழுவதும் நடத்திப் பார்க்க இந்துத்துவ கும்பல் திட்டமிடுகிறது. யாருக்கோ நடக்கிறதென பொது சமூகம் கையைக் கட்டி வேடிக்கை பார்த்தால், நாளை இந்த கும்பல் வன்முறை நம் மீதும் திரும்பும் ஆபத்து இருக்கிறது.

https://youtu.be/RwsEV_GdI30


கட்டுரையாளர் : Harsh Mander
தமிழாக்கம் : அனிதா

நன்றி: Scroll

கருத்துக் கணிப்பு : பாஜக-வின் நம்பர் ஒன் அடிமையாக போட்டி போடும் கட்சி எது ?

பாஜக-விடம் நல்ல பெயர் எடுப்பதற்கு அதிமுக, பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டி போடுகிறார்கள். ஒருவேளை மத்தியில் பாஜக ஆட்சியைப் பிடித்து விட்டால் ஏதாச்சும் மந்திரி-கிந்திரி பதவி கிடைத்து பிழைப்பை ஓட்டலாமே என்பது அந்தப் போட்டியின் அடிநாதம். செல்லுமிடமெல்லாம் மத்தியில் ஆண்ட மோடி ஆட்சியின் வேதனைகளை சாதனைகளாகச் சொல்லி “மோடி எங்கள் டாடி” என்றெல்லாம் ’படுத்தி’ எடுக்கின்றன இக்கட்சிகள்.

இன்றைய கேள்வி:
பாஜக-வின் நம்பர் ஒன் அடிமையாக போட்டி போடும் கட்சி எது?
♦ அதிமுக
♦ பாமக
♦ தேமுதிக
♦ புதிய தமிழகம்
♦ அனைத்தும்

டிவிட்டரில் வாக்களிக்க:

யூ-டியூப் :

வாக்களிக்க இங்கு அழுத்தவும்

சென்னை : மக்கள் அதிகாரம் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் !

கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்! என்ற அரசியல் முழக்கத்தின்கீழ் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி திருச்சியில் மக்கள் அதிகாரம் அமைப்பு சார்பில் பத்தாயிரக்கானோர் கலந்த கொண்ட மிக பெரிய மாநாடு பொதுமக்களிடையே நல்ல ஆதரவை பெற்றது. அதன் தொடர்ச்சியாக அந்த மாநாட்டின் அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் கடந்த 30-ம் தேதி சென்னை தி.நகரிலுள்ள முத்துரங்கன் சாலையில் நடைபெற்றது. இந்த விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு சுமார் ஆயிரம் பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.

மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டத்தை, மக்கள் அதிகாரம் அமைப்பின் சேத்துப்பட்டு பகுதி ஒருங்கிணைப்பாளர் புவனேஸ்வரன் அவர்கள் தலைமையேற்று நடத்தினார். “பல தடைகள்மீறி இந்த பொதுக்கூட்டத்தை இன்று நடத்திக் கொண்டிருக்கிறோம். கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் என்கின்ற மாநாட்டின் முழக்கத்தை தொடர் இயக்கமாக தமிழகம் முழுவதும் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருப்பதால் இந்த பொதுக்கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளோம்.

தோழர் புவனேஸ்வரன்.

ஜனநாயக சக்திகள், முற்போக்கு எழுத்தாளர்கள் அனைவரின் குரல்வளையை நசுக்குகிறது கார்ப்பரேட் – காவி பாசிசம். இதனை எதிர்க்கவில்லை என்றால் பாசிசம் நம் அனைவரின் வாழ்க்கையிலும் தலையிடும். தற்போதுள்ள எல்லா பிரச்சினைகளுக்கும் இந்த கட்டமைப்பினுள் தீர்வு இல்லை. ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடுவதே தீர்வு” என தலைமை உரையில் பேசினார்.

தோழர் சி. ராஜூ.

சிறப்புரையாற்றிய மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர், சி. ராஜூ அவர்கள், “கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்” என்ற முழக்கத்தை தமிழகம் முழுவதும் பட்டித்தொட்டியெங்கும் கொண்டு செல்கிறோம். நாம் எப்படிப்பட்ட எதிரியோடு மோதவிருக்கிறோம், எப்படிப்பட்ட எதிரியை எதிர்த்துப் போராடப் போகிறோம் என்பதை மக்களுக்கு புரியவைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு பிறகு இப்பொழுதுதான் சென்னையில் கூட்டம் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. மக்கள் அதிகாரம் தேர்தலில் நிற்கலாம் என்கின்றனர். தேர்தல் முடிந்து புதிய ஆட்சி வந்தால் பள்ளிக்கூட கட்டணம் குறையுமா, மருத்துவ செலவு, மின்சார கட்டணம், வீட்டு வாடகை, விலைவாசி குறையுமா? விவசாயி, தொழிலாளி, சிறுகுறு வியாபாரிகளின் பிரச்சினை தீருமா? எந்த மாற்றம் நம் வாழ்க்கையில் வரும்? மக்களின் அன்றாட பிரச்சினைக்கு இந்த அரசு கட்டமைப்பில் எந்தத் தீர்வுமில்லை; ஒட்டுமொத்த அரசு கட்டமைப்பும் தோற்று திவாலாகிவிட்டது. இப்படியிருக்கையில் மக்கள் அதிகாரம் மட்டும் எப்படி தேர்தலில் நின்று பிரச்சினைகளை தீர்க்க முடியும். ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் மக்கள்தான் எஜமானர்கள், அப்படிப்பட்ட மக்களிடம்தான் அதிகாரம் இருக்க வேண்டும்” என்றும்; “பேருந்து ஒன்று பழுதடைந்துவிட்டது என்றால் அந்த பேருந்தைதான் மாற்றவேண்டுமேயன்றி ஓட்டுநரை மாற்றுவதால் எந்தப் பயனுமில்லை” என்று தன் சிறப்புரையை முடித்தார்.

தோழர் திலகவதி.

அடுத்ததாக மக்கள் அதிகாரம் அமைப்பின் உறுப்பினர் திலகவதி அவர்கள், கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில் மாநாட்டு பிரச்சாரத்தின்போது மக்கள் அதிகாரம் அமைப்பு சந்தித்த இன்னல்களையும், பிரச்சாரத்திற்கு தடையாக இருந்த காவல்துறையை, பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ். சங்கிகளை, மக்களுடனும் இதர ஜனநாயக சக்திகளுடனும் இணைந்து எப்படி எதிர்த்து நின்று வென்றனர் என்று விளக்கினார்.

தோழர் பிரின்ஸ் என்னாரசு பெரியார்.

திராவிட மாணவர் கழகத்தின் மாநிலச் செயலாளர் பிரின்ஸ் என்னாரசு பெரியார் அவர்கள், “பா.ஜ.க. ஆட்சியில் அமர்ந்த ஐந்தாண்டுகளில், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், தொழில்முனைவோர் என அனைத்து தரப்பு மக்களையும் ஆட்டிப்படைத்துள்ளது. மக்களுக்கு எதிராக இருக்கும் இந்த கார்ப்பரேட் – காவியை எதிர்த்தால் ஆண்டி இந்தியன், தேசத்துரோகி என முத்திரைக் குத்துகிறது. இந்த மண்ணை மதவெறி மண்ணாக மாற்றத் துடிக்கும் மதவெறி கும்பலையும், சாதிவெறி கும்பலையும் நாம் அனைவரும் கரம் கோர்த்து எதிர்த்து நிற்கவேண்டிய தருணம் இது” என்றார்.

தோழர் சி.மகேந்திரன்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினரும், தாமரை இலக்கிய இதழின் ஆசிரியருமான சி.மகேந்திரன் அவர்கள், “மக்கள் அதிகாரம் அமைப்பு காவி பாசிசத்தின் அபாயத்தை தமிழகம் முழுவதிலும் கொண்டு சென்று, வீரம் செரிந்தப் போராட்டத்தை நடத்தி வருகிறது. வெறிப்பிடித்த இந்த காவி பாசிசத்தை விரட்ட தேர்தலை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஒன்றிணைய வேண்டும். கொள்கை மாறுபாடு, சித்தார்ந்த வேறுபாடு இருந்தாலும் பாசிசத்தை எதிர்க்கும் போராட்டக்களத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மக்கள் அதிகாரம் அமைப்புடன் ஒன்றுப்பட்டு நிற்கும்” என்றார்.

தோழர் தியாகு.

உரிமைத் தமிழ் தேசத்தின் ஆசிரியர் தியாகு அவர்கள், “இந்த அரசு பெரும் குழுமங்களின் நலன்களை காக்கும் அரசு. 10% பணக்காரர்களின் சொத்து மதிப்பு 75%  மக்களின் சொத்து மதிப்பிற்கு சமம். இந்த தேர்தலில் தேனீர் கடைக்காரரோ அல்லது ஒரு தொழிலாளியோ போட்டியிட்டு வெல்ல முடியுமா? ஜனநாயகம் என்பது பணநாயகமாக மாறிவிட்ட போது இதிலே எப்படி எங்களை போட்டியிட சொல்கிறீர்கள். இந்திய பாசிசத்தின் இரட்டை முகங்கள் ஒன்று நரேந்திர மோடி, மற்றொன்று ராகுல் காந்தி, அதாவது பி.ஜே.பி.யும் காங்கிரசும். திருச்சி மாநாட்டில் அருந்ததிராய் அவர்கள் மிக அழகாக சொன்னார், 80-களில் இரண்டு பூட்டுகள் திறக்கப்பட்டது ஒன்று பாபர் மசூதியின் பூட்டு மற்றொன்று இந்திய சந்தைக்கான பூட்டு. வேலையிழந்தவர்களுக்கு வேலை கொடுக்கும் கொள்கையோ, அனைவருக்கும் கல்வி அனைவருக்கும் வேலை கொடுக்கும் கொள்கையோ இந்த அரசு வைத்திருக்கவில்லை. மாறாக, பெரும் குழுமங்கள் வளர்ப்பதற்காகதான் கொள்கை வைத்திருக்கிறது. அதே கொள்கையை வைத்திருக்கும் மற்ற கட்சிகளுக்கு எப்படி ஓட்டுப் போட்டு நம் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியும்” என்றார்.

தோழர் மருதையன்.

இறுதியாக, சிறப்புரையாற்றிய மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மாநில பொதுச்செயலர் மருதையன் அவர்கள், “கார்ப்பரேட் – காவி பாசிசம் எதிர்த்து நில்” என்ற மக்கள் அதிகாரத்தின் மாநாட்டை பல தடைகளையும், அடக்குமுறைகளையும் கடந்து திருச்சி நகரில் பெருந்திரளான மக்களும் தோழர்களும் கூடியிருக்க வெற்றிகரமாக நடந்து முடிந்திருக்கிறது. எதிர்த்து நில் என்ற இந்த முழக்கம் யாருக்கு போய் சேர்ந்ததோ இல்லையோ நிச்சயமாக எதிரிகளுக்குப் போய் சேர்ந்திருக்கிறது. பிரச்சாரத்தின்போது பல்வேறு இடங்களில் அவர்கள் ஏற்படுத்திய தடைகள், பிரச்சாரம் செய்த தோழர்களுக்கு எதிராக அவர்கள் தொடுத்த தாக்குதல்கள் இவை மக்கள் அதிகாரம் அமைப்பிற்கும் தோழர்களுக்கும் வழங்கப்பட்ட சான்றிதழ்கள், என்றும், பெரிய கட்சிகள், ஆளும் கட்சிகள், இலட்சக்கணக்கான உறுப்பினர்களை வைத்திருப்பதாகச் சொல்லக்கூடிய கட்சிகள் இவர்களை கண்டு பார்ப்பன பாசிஸ்டுகள் அஞ்சவில்லை. சிறிய இயக்கம், அவர்கள் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் Fringe Element என்று சொல்லக் கூடியவர்களைக் கண்டு பாசிஸ்டுகள் அஞ்சுகிறார்கள். இந்த முழக்கம் தமிழக மக்களிடையே செல்வாக்கு பெற்றுவிடுமோ என்று அஞ்சுகிறார்கள். அதன் விளைவாகத் தான் இந்தத் தாக்குதல். என்றார். எதிர்த்து நில் என்ற இந்த முழக்கத்தை இந்த அரசு கட்டமைப்பிற்குள் மாற்ற முடியாது. மக்களை போராடுபவர்களாக, போராடும் சிந்தனையுடையவர்களாக மாற்றியமைப்பதன் மூலமே சாத்தியம். வெறுமனே வாக்குச் சீட்டு மாற்றிவிடாது, என்றார்.

விளக்கப் பொதுக்கூட்டத்திற்கு இடையிடையே நடந்த மக்கள் கலை இலக்கிய கழகத்தின் பாடல்கள் பாடப்பட்டது.


தகவல்:
மக்கள் அதிகாரம்,
சென்னை – மண்டலம்.


இதையும் பாருங்க …

தருமபுரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்க அரங்கக் கூட்டத்திற்கு தடை !

பேச்சுரிமை, கருத்துரிமை போராடுகிற உரிமை எல்லாம் சட்டப்படியே ஜனநாயக உரிமை என்று பீற்றிக் கொள்ளும் இந்த அரசமைப்பில் ஒரு அரங்கத்தில் கூட்டத்தை நடத்துவதற்கு கூட பல போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது.

தருமபுரியில், “கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் !” என்ற தலைப்பில் மார்ச் – 31 அன்று அரங்கக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரி தேர்தல் அதிகாரியிடம் கடந்த மார்ச் 18-ம் தேதி மனு கொடுத்தோம். அரசு அதிகாரிகளோ 27-ம் தேதி பதில் மனு கொடுத்தனர். அதில் போலீசாரை அணுகுமாறு தெரிவித்தனர். அதன்படி தருமபுரி மாவட்ட கண்காணிப்பாளரை அணுகினோம். அங்கிருந்த ஆய்வாளர் ”நீங்கள் நடத்திக் கொள்ளுங்கள்” என்று வாய்மொழியாக தெரிவித்தார். ”பதிலை எழுத்துப் பூர்வமாக கொடுக்க வேண்டும்” என்று கூறினோம். ”அது தேவையில்லை நான் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்பி விடுகிறேன்” என்றார்.

இதனைத் தொடர்ந்து கூட்ட வேலைகளை செய்து வந்தோம். அனுமதி இல்லை என்று கடைசி வரையில் தேர்தல் ஆணையமோ, போலீசோ தெரிவிக்காமல் கூட்டம் நடத்துவதற்கு ஒரு மணிநேரத்திற்கு முன்பாக வந்து அனுமதி இல்லை என மண்டப நிர்வாகிகளை தொடர்பு கொண்டு தெரிவிக்கிறார் போலீசு ஆய்வாளர்.

தருமபுரி பெரியார் மன்றம் எதிரில் தடையை கண்டித்து கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது.

”இது ஜனநாயக உரிமை பறிப்பு” என்று தேர்தல் நடத்தும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்தோம். தருமபுரி தேர்தல் நடத்தும் அலுவலர் ”தேர்தல் முடிந்த பிறகு வாருங்கள் அனுமதி தருகிறோம்” என்றார். ”ஏன் எங்களுக்கு ஜனநாயக உரிமை இல்லையா? நீங்கள் ஏன் சட்டப்பூர்வமாக நடக்க மறுக்கிறீர்கள்?” என்றதற்கு ”எனது வாய் கட்டப்பட்டு இருக்கிறது” என்றார்.

”உங்கள் வாய் கட்டியே இருக்கட்டும் எங்கள் வாயை ஏன் கட்டுறீங்க?” என்று கேட்டதற்கு திமிராக ”இவ்வளவு தான் பதில் சொல்ல முடியும்” என்று பதிலளித்தார். ”எங்களுக்கு ஜனநாயக உரிமை என்பது நீங்கள் போடும் பிச்சையல்ல” என்று கூறியதும் உடனே, ”போலீசை கூப்பிடு” என்றார் தேர்தல் அதிகாரி

படிக்க:
தேர்தல் 2019 : கட்சிகளை மாற்றுவது தீர்வல்ல ! கட்டமைப்பை மாற்றுவதே தீர்வு !
அடக்குமுறைதான் ஜனநாயகமா ? அடங்கிபோனால் மாறிடுமா | கோவன் பாடல்

தேர்தல் அதிகாரி, போலீசாரை தொடர்பு கொள்ளச் சொல்வதும், போலீசார் தேர்தல் அதிகாரியை தொடர்பு கொள்ளச் சொல்வதுமாக அலைக்கழித்தனர். தலைவர் சிலைக்கு மறைப்பு கட்டுவதுத் தொடங்கி, அங்கு போகாதே இங்கு வராதே, அதை செய்யக் கூடாது, இதனை பேசக்கூடாது என்று எண்ணற்ற உத்தரவுகளைப் போட்டு ஆட்டு வியாபாரிகூட ஆட்டை விற்க முடியாத நிலையை உருவாக்கிவிட்டு, ஜனநாயகத்தைப் பாதுகாக்கத்தான் இதைச் செய்வதாக தெரிவிக்கிறார். ஜனநாயகம் என்பது என்ன? அதனை ஒரு குடிமகனுக்கு எப்படி வழங்க வேண்டும் என்பதைப் பற்றி சட்டம் ஒன்றை சொல்கிறது, அரசு அதிகாரிகள் ஒன்றை நடைமுறைபடுத்துகிறார்கள்.

ஆட்டு வியாபாரியை வழி மறித்து கணக்கு கேட்கும் அதிகாரிகள், ஓட்டுக் கட்சிகள் தினந்தோறும் நடைபெறும் பிரச்சாரக் கூட்டங்களில் மக்களுக்கு பண வினியோகம் செய்து வருவதைத் தடுப்பதில்லையே. சொல்லப் போனால் அதிகாரிகளும் போலீசும் இந்த செயலை பாதுகாத்து வருகின்றனர் என்பதே மறுக்க முடியாத உண்மை. இவர்களைப் போன்ற ஜனநாயாக விரோதிகளை அம்பலப்படுத்தி பேசிவிடுவார்கள் என்பதாலேயே மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளுக்கு அனுமதி கொடுப்பதில்லை.

ஒரு அரங்கக் கூட்டத்தை நடத்துவதற்கு தாம் பொறுப்பில்லை எனக் கைகழுவும் அதிகாரிகள், ஜனநாயக ஆட்சி என்ற பெயரில் போலீசின் ஆட்சியைத்தான் நடத்துகிறார்கள்.

ஜனநாயகத்தைக் காப்பதற்காகவே நடத்தப்படுவதாக சொல்லப்படும் தேர்தலை நடத்துகின்ற தேர்தல் ஆணையத்திடம் ஒரு அரங்கக் கூட்டத்துக்கான கருத்துச் சுதந்திரம் படும்பாடே, இந்தக் கட்டமைப்பின் தோல்விக்கு உதாரணம்!


தகவல்:
மக்கள் அதிகாரம்,
தருமபுரி மண்டலம்.
தொடர்புக்கு: 9790138614.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும்

 

சிவாஜி பட்டாபிஷேகம் … வேத நாசம் … தடுத்தே ஆக வேண்டும் !

சந்திரமோகன் | சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | பாகம் – 6


காட்சி – 9
இடம் : வீதி
உறுப்பினர்கள் : கேசவப்பட்டர், பாலச்சந்திரப்பட்டர், வீரர்கள்.

கேசவப்பட்டர் : ஒய் ஒய்! வாரும் இப்படி… காலம் எவ்வளவு தலைகீழா மாறிண்டு போறது பார்த்தீரோ?

பாலச்சந்திரப்பட்டர் : என்ன! நேக்குப் புரியல்லையே?

கேசவப்பட்டர் : வேதம், சாஸ்திரம், ஆச்சாரம், அனுஷ்டானம், நேமம், நிஷ்டை எல்லாம் பாழ். பாழாகிப் போச்சுங்காணும். தலையை வெளியே நீட்ட முடியாது போலிருக்கு இனி.

பாலச்சந்திரப்பட்டர் : ஏன் ஒய்! விஷயத்தை விளக்கமா, சாவதானாமா, சாந்தமா சொல்லுமே! வறட்டுக் கூச்சல் போட்டுண்டே இருக்கறேள்?

கேசவப்பட்டர் : ஆமாம், ஒய்! இனி நம்ம வேத சத்தமே இந்த மராட்டிய மண்டலத்துக்கு வறட்டுக் கூச்சலாகத்தான் தோணப் போறது. தலைக்குத் தீம்பு வர்றது . தெரியாமெ, சாஸ்திரம் அழிக்கப்படுகிறது. அறியாமெ அவாள் அவாள் வயிறு நெறைஞ்சா போதும்னு இருந்தா என்ன ஆறது ஒய்? நம்ம குலம், கோத்திரம், பூர்வபெருமை சகலமும் பாழகிறது சர்வேஸ்வரா!

பாலச்சந்திரப்பட்டர் : ஆத்திரமாப் பேசினா ஆயாசமாத்தான் இருக்கும். நிதானமாய்ப் பேசும் ஒய்!

கேசவப்பட்டர் : முடியலை ஒய் நிசமாச் சொல்றேன். மனது பதறிண்டு இருக்கு. பதறாமலிருக்குமோ, மகாபாவம் நடக்க இருக்கும் போது நமக்குத் தெரியறது. தெரிந்தும் நாம் அதைத் தடுக்காமல் இருக்கிறதுண்ணா , ஒண்ணு , நாம் மரக்கட்டேண்ணு அர்த்தம். அல்லது நாமும் அந்தப் பாவத்துக்குச் சம்மதிக்கிற சண்டாளர்கள்ணு அர்த்தம். சம்மதிக்குமோ மனசு? சம்மதிக்குமோண்ணு கேக்கறேன்.

பாலச்சந்திரப்பட்டர் : சம்மதிக்காது! சாஸ்திரம் அழிக்கப்படுவதைப் பார்த்துண்டு, சகிச்சிண்டு இருக்கத்தான் முடியாது.

கேசவப்பட்டர் : முடியாதுண்ணு சொல்லிண்டு மூக்காலே அழுதுண்டிருந்தா போதுமா?

பாலச்சந்திரப்பட்டர் : வேறே என்ன செய்யிறது? என்ன செய்ய முடியும் நம்மாலே..?

கேசவப்பட்டர் : மண்டு மண்டு! ஏன் ஒய் முடியாது? ஏன் முடியாதுண்ணு கேக்கறேன்.

பாலச்சந்திரப்பட்டர் : சும்மா இரும் ஒய்! இது என்ன மாடா போ. மரமா போ, பூச்சியா போ, புழுவாய் போ-ன்னு சாபங் கொடுக்கிற காலமா? இல்லே. நம்ம கையிலே அக்கினி இருக்குண்ணு சொன்னா ஊரார் கேட்டு பயப்படற காலமா? காலத்தை அறிஞ்சுண்டு பேசும். கர்ச்சனை செய்யணும்னா சிங்கமா இருக்க வேணுமோ?

கேசவப்பட்டர் : காலத்தை அறிஞ்சிண்டு மட்டுமில்லெ ஒய் காலம். இன்னும் வரவர எவ்வளவு கெட்டுப் போகப் போறதுண்ணும் தெரிஞ்சுண்டுதான் பேசறேன்.

(வீரர்கள் கொடி ஏந்தி முழக்கத்துடன் வருதல்)

அடே கொஞ்சம் நில்லு! என்ன, ஒரே கூச்சல் போட்டுண்டு போறேளே. என்ன விசேஷம்?

வீரன் : மகாராஷ்டிர வீரன், மாவீரத் தலைவன் சிவாஜி மகாராஜாவுக்குப் பட்டாபிஷேகம் நடைபெறப்போவது உங்களுக்குத் தெரியாதா?

கேசவப்பட்டர் : ஆமாம்! கேள்விப்பட்டோம். என்ன அதுக்கு?

வீரன் : பட்டாபிஷேகத்தன்று சிவாஜி பவனி வருவதற்காக பாஞ்சாலத்திலிருந்து தருவிக்கப்பட்ட பஞ்சகல்யாணி ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறது. நாங்கள் போகிறோம். சிவாஜி மகாராஜாவுக்கு … ஜே.

கேசவப்பட்டர் : எவ்வளவு துணிச்சல் இந்த சிவாஜிக்கு இவன் என்ன குலம்? இவன் குலத்துக்கு சாஸ்திரம் என்னவிதமான தருமத்தைக் கூறியிருக்கிறது, என்பதைத் துளிகூட யோசிக்காமப்படிக்கு, இவன் ராஜ்யாபிஷேகம் செய்து கொள்ளப் போகிறானாமே. அடுக்குமோ! சாஸ்திரம் சம்மதிக்குமோ?

(எதிரே மோரோபந்த் வருகிறார்)

பாலச்சந்திரப்பட்டர் : ஒய்! அதோ மோரோபந்த் வருகிறார். அவரிடம் கூறுவோம்.

கேசவப்பட்டர் : எந்த மோரோபந்த்?

பாலச்சந்திரப்பட்டர் : நம்மவர்தான் ஓய்!

கேசவப்பட்டர் : நம்ம குலந்தான். ஆனால், அவர் இப்போ சிவாஜியினிடமல்லவா வேலை செய்துண்டிருக்கிறார்? முதன் மந்திரி ஸ்தானமல்லவோ வகிச்சிண்டிருக்கிறார். அவர் சிவாஜியின் சார்பாகத்தான் பேசுவார். அவன் பட்டாபிஷேகம் செய்து கொள்வது சாஸ்திர சம்மதமான காரியம்ணு பேசுவார்.

பாலச்சந்திரப்பட்டர் : அசட்டுத்தனமான முடிவுக்கு அவசரப்பட்டு வராதீர். மோரோபந்த் சிவாஜியிடம் பெரிய உத்தியோகம் பார்த்துண்டு வருபவரானாலும், நம்ம அவர் குலம். நம்மவா எங்கே இருந்தாலும் குல ஆச்சாரத்தையும், அவர் அந்த ஆச்சாரத்துக்கு ஆதாரமாய் இருக்கிற சாஸ்திரத்தையும் ஒருநாளும் அழிஞ்சு போகப் பாத்திண்டிருக்க மாட்டா. வேணுமானாப் பாரும். அதோ, அவரே வந்துவிட்டார். வரணும். வரணும்

மோரோபந்த் : ராம் ராம் என்ன பாலச்சந்திரப்பட்டர் வாள் . ஓகோ! கேசவப்பட்டர்? ஆமாம், என்ன கோபமாகப் பேச்சுக்குரல் கேட்டதே?

கேசவப்பட்டர் : பேச்சுக் குரல்தானே? இனி அதிக நாளைக்கு இராது. நிர்ச்சந்தடியாகிவிடும். ஸ்மசான சந்தடி இருக்கும். கவலைப்பட வேண்டாம்.

மோரோபந்த் : என்ன, கேசவப்பட்டர்! ஏதோ வெறுப்படைந்தவர் போலப் பேசறேளே?

கேசவப்பட்டர் : வெறுப்பில்லை ஸ்வாமி, வெறுப்பில்லை! வேதனை தாங்க முடியாத வேதனை. வேதம் நாசமாகிறது. வேதியர்கள் வகுத்த விதிமுறைகள் நாசமாகின்றன. சாஸ்திரம் அழிகிறது; தர்மம் அழிகிறது, வேதனை இல்லாமலிருக்குமோ?

மோரோபந்த் : எதைக் குறித்துப் பேசுகிறீர், இவ்வளவு ஆக்ரோஷத்தோடு?

கேசவப்பட்டர் : ஆக்ரோஷமா? இதுவா? மோரோபந்த்! மோரோபந்து நீர் ஞானசூன்யரல்ல. நமது குலதர்மம், குலப்பெருமை அறியாதவரலல்ல.

மோரோபந்த் : அறிந்திருக்கிறேன். அதனால் என்ன ஸ்வாமி, அடேடே! அதைச் சொல்கிறீர்களா?

கேசவப்பட்டர் : அதென்ன ஸ்வாமி, அவ்வளவு சாதாரணமாகப் பேசுகிறீர், சர்வ நாசம் சம்பவிக்கும் காரியமல்லவா அது. சிவாஜி என்ன குலம்? அந்தக் குலத்துக்கு என்ன கடமை? க்ஷத்திரிய குலமல்லவா அரசாளலாம். ராஜ்யாபிஷேகம் உண்டு.

மோரோபந்த் : க்ஷத்திரியனுக்குத்தான் சிவாஜி முயற்சிக்கிறான்.

கேசவப்பட்டர் : நீர் பார்த்துக் கொண்டு இருக்கிறீர். மார்பிலே முப்பிரியும் இருக்கிறது. அறிந்து பயன்? செந்தாமரை நிறைந்த தடாகத்திலே முரட்டு எருதுகள் இறங்கி தாமரையைத் துவம்சம் செய்வதைப் பார்த்தும், அதைத் தடுக்காமல் இருந்து கொண்டே, தாமரையின் அழகு நேக்கு நன்னா தெரியுமேன்னு பேசிண்டிருந்தா போதுமா? புத்திமான் செய்கிற காரியமா இது?

மோரோபந்த் : நீர் எதைக் குறிப்பிடுகிறீர்?

கேசவப்பட்டர் : உம்ம கண் எதிரிலேயே நம்ம சாஸ்திரம் – நாசமாவதைத்தான் குறிப்பிடுறேன். சிவாஜி பட்டாபிஷேகம் செய்துக் கொள்ளப் போறானாமே?

மோரோபந்த் : பைத்தியக்காரர் பார்த்துக் கொண்டு சும்மாவா இருப்பேன்? நேக்கு தெரியாதா, வேதாச்சாரம் கெடக்கூடாது என்கிற விஷயம்.

கேசவப்பட்டர் : அப்படியானா தடுத்தீரோ?

மோரோபந்த் : கண்டிப்பாக பட்டாபிஷேகத்தை சாஸ்திர விதிப்படி செய்துக் கொள்வது மகாபாவம். அந்தப் பாவகாரியத்துக்கு நான் உடந்தையாய் இருக்க முடியாது. தடுத்தே தீருவேன். எதிர்த்தே தீருவேன் என்று தெளிவாக, தீர்மானமாகக் கூறியாகிவிட்டது.

பாலச்சந்திரப்பட்டர் : பார்த்தீரா, ஒய்… நான் சொன்னேனல்லவா. (கேசவப்பட்டர் மேரோவைத் தழுவி)

கேசவப்பட்டர் : க்ஷமிக்கணும் ஸ்வாமிகளே! ஆத்திரமாகப் பேசிவிட்டேன். தங்கள் குலப்பெருமையை உணராமல். தடுத்தீரோ? ஆரிய குல ரட்சகர் நீர். வேதாகம பாதுகாவலர் நீர்.

மோரோபந்த் : இது கலிகாலம். கலிகால தருமப்படி இப்போது பூலோகத்திலே க்ஷத்திரிய குலமே கிடையாது என்று கூறினேன்.

கேசவப்பட்டர் : ஆதாரம் என்ன கூறினீர்?

மோரோபந்த் : ஏன், அந்தக் காலத்திலேயே பரசுராமர் க்ஷத்திரியப் பூண்டையே அழித்து விட்டாரே . க்ஷத்திரியர் ஏது இப்போது என்று கேட்டேன். சிவாஜிக்குப் பட்டம் சூட்டுவது என்பதற்கு எந்த சனாதனியும் சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டேன். ஆகையாலே ஆத்திரப்பட்டு ஏதேதோ கூவிண்டிருக்க வேண்டாம். நமது ஆரிய சோதராளிடம் பேசி இது விஷயமாக, அனைவரையும், ஒன்று திரட்டும். சிவாஜி சம்மதம் கேட்டு அனுப்புவான். முடியாது’ என்று ஒரேயடியாய்க் கூறிவிடும்.

படிக்க:
முதியோர் கல்வி குறித்து முதல் அகில ரஷ்யக் காங்கிரசை வாழ்த்தி ஆற்றிய உரை !
மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! சென்னை மக்கள் கருத்து

கேசவப்பட்டர் : ஆஹா! இப்போதே கிளம்புகிறேன்! நம்ம சோதராளிடம் சொல்கிறேன் விஷயத்தை. சூட்சமமா இரண்டொரு வார்த்தை சொன்னாக்கூட புரிந்து கொள்வாளே நம்மளவா.

மோரோபந்த் : செய்யும் ஸ்வாமி! முதலில் போய் அந்தக் காரியத்தைச் செய்யும். நான் பட்டாபிஷேகத்தை நடக்க ஒட்டாதபடி என்னாலான காரியமெல்லாம் செய்துண்டு இருக்கேன்.

கேசவப்பட்டர் : மனம் நிம்மதியாச்சு. மனுமாந்தாதா கால ஏற்பாடு சாமான்யமா? நான் வர்ரேன். வாரும் ஒய், பாலச்சந்திரப்பட்டர் சந்திரரே வாரும், போய்க் காரியத்தைக் கவனிப்போம்.

(தொடரும்)

நன்றி: Project Madurai

முந்தைய பகுதி:

பகுதி 1 : சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாடகம் | சி. என். அண்ணாதுரை
பகுதி 2 :
சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் | நாட்டை மீட்கப் போரிடும் மாவீரன் அல்லவா நீ !
பகுதி 3 : யுத்த வெறியனுக்கு மனைவி மக்கள் மீது எப்படி அன்பு ஏற்படும் ?

பகுதி 4 : என்னதான் சொன்னாலும் சண்டைன்னா அதிலே நடப்பது கொலைதானே !
பகுதி 5 :
ஒரு விருந்துக்குத் தலைமை தாங்க குல தர்மம் தடைவிதிக்கிறது !

புதுச்சேரி : மக்கள் அதிகாரம் மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம் | நிகழ்ச்சி நிரல்

கார்ப்பரேட் – காவி பாசிசம் – எதிர்த்து நில்!
திருச்சி மாநாட்டு அறைகூவல் விளக்கப் பொதுக்கூட்டம் – கலைநிகழ்ச்சி!

02.04.2019 செவ்வாய், மாலை 5 மணி
சுதேசி மில் எதிரில், புதுச்சேரி.

தலைமை:

தோழர் சாந்தகுமார்,
ஒருங்கிணைப்பாளர்,
மக்கள் அதிகாரம், புதுச்சேரி.

உரை:

தோழர் மங்கையர் செல்வம்,
அமைப்பாளர்,
மீனவர் விடுதலை வேங்கை,
புதுச்சேரி.

தோழர் தீனா,
அமைப்பாளர்,
பெரியார் சிந்தனையாளர் இயக்கம்,
புதுச்சேரி.

தோழர் முருகானந்தம்,
பொதுச் செயலாளர்,
மனித உரிமைகள் மற்றும்
நுகர்வோர் பாதுகாப்பு இயக்கம்,
புதுச்சேரி.

தோழர் மருது,
தலைமை குழு உறுப்பினர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

சிறப்புரை:

தோழர் காளியப்பன்,
மாநில பொருளாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு.

நன்றியுரை:

தோழர் EK சங்கர்,
மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி.

ம.க.இ.க. கலைநிகழ்ச்சி நடைபெறும்.

அனைவரும் வாரீர் !


மக்கள் அதிகாரம்,
புதுச்சேரி,
தொடர்புக்கு: 87542 05589.


இதையும் பாருங்க …

மலர்ந்தே தீரும் … தாமரை மலர்ந்தே தீரும் – கோவன் பாடல்

மோடியா…? அந்த ஆளைப் பத்தி பேசாதீங்க ! மக்கள் கருத்து

கோயம்பேட்ல மலராத தாமரை கோட்டையில எப்டி மலரும்? – மக்கள் கருத்து