Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 511

நீட் தேர்வை ரத்து செய் ! – தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

1

நீட் தேர்வை ரத்து செய் ! அடக்குமுறைக்கு அஞ்சாது ! இது வேற தமிழ்நாடு ! தமிழகம் தழுவிய பிரச்சாரம் !

ன்பார்ந்த மாணவர்களே,

‘நீட்மாணவி அனிதா மரணம் தற்கொலையல்ல – படுகொலை. நம்பவைத்து கழுத்தறுத்த மோடி – எடப்பாடி அரசுகள்தான் கொலைக் குற்றவாளிகள்! சுமைதூக்கும் தொழிலாளியின் மகளான அனிதா மருத்துவப் படிப்பையே தனது கனவாகக் கொண்டிருந்தார். மோடி  அரசும், அடிமை எடப்பாடி கும்பலும், உச்சநீதிமன்றமும் இணைந்து ‘நீட்’ என்னும் கொள்ளி வைத்து அனிதாவின் கனவைக் கருக்கி விட்டன.

நீட் தேர்வுக்கு எதிராக அனிதா பற்றவைத்த சிறு தீப்பொறி தமிழகமெங்கும் காட்டுத் தீயாக பற்றி எரிகிறது. பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்கள் வகுப்பை புறக்கணித்துவிட்டு வீதியில் இறங்கி, சாலைமறியல், ஊர்வலம், ஆர்ப்பாட்டம் என போர்க்குணமிக்க போராட்டங்களை நடத்துகிறார்கள். நீட் எதிர்ப்பு போராட்டங்களுக்கு உச்சநீதிமன்றம் விதித்த தடையை பள்ளி மாணவிகள் தவிடுபொடியாக்கிவிட்டனர்.

ஜல்லிக்கட்டு – மெரினா  எழுச்சியைப் போல, நீட் திணிப்புக்கு எதிரான போராட்டமும் மத்திய –  மாநில அரசுகளை அச்சுறுத்துகின்றன. பி.ஜே.பி-யின் அடிமையான எடப்பாடி கும்பல், போராடும் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது, மாணவர்களை ரவுடி பட்டியலில் சேர்க்கிறது, 150 -க்கும் மேற்பட்டோரை சிறையிலடைத்துள்ளது. இதன் மூலம் போராட்டங்களை ஒடுக்கிவிடலாம் என மனக்கோட்டை கட்டுகிறது. ஆனால், நீட் தேர்வை விரட்டாமல் மாணவர் போராட்டங்கள் ஒரு போதும் ஓயாது.

நீட் : கோச்சிங் செண்டர்களின் கொள்ளைக்கு வழி!

அகில இந்திய அளவில் மருத்துவக்கல்விக்காக நடத்தப்படும் நுழைவுத் தேர்வுதான் நீட். அதாவது, தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு. இதற்கான அவசியம் என்ன என்று கேட்டால்? “தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கப்போகிறோம்” என்கிறது மோடி அரசு. திறமைக்கு இவர்கள் சொல்லும் அளவுகோல் என்ன? 700 மதிப்பெண்களுக்கான ஒரு நுழைவுத்தேர்வு.

அதுவும் சி.பி.எஸ்.இ. எனும் மத்திய பாடத்திட்டத்தில் இருந்து கேட்கப்படும் கேள்விகள் கொண்ட தேர்வு. +2 வரை படிக்கும்போது சோதிக்க முடியாத தகுதியை ஒரு நுழைவுத்தேர்வில் எப்படி சோதிக்க முடியும்? திறமையான, சீரான மருத்துவக் கல்வி, பயிற்சி மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியுமே தவிர, ஒரு நுழைவுத் தேர்வில் எப்படி தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும்?

நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டதற்குப் பிறகு தமிழகத்தில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன், சி.பி.எஸ்.இ. பள்ளிகளுடன் ஃபிட்ஜீ, ஆலென், பினாக்கிள் போன்ற மிகப்பெரிய நுழைவுத்தேர்வு பயிற்சி நிறுவனங்கள் கூட்டணி அமைத்து நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கத் தொடங்கியுள்ளன. 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதற்கு ரூ.1.52 லட்சம் கட்டணம். இதுதான் திறமையை சோதிக்கும் லட்சனம்.

நீட் : நுழைவுத் தேர்வு – தகுதி திறமை என்பதெல்லாம் மோசடி!

நாடு முழுவதும் ஒரே நுழைவுத் தேர்வு என்று கூறுகிறார்கள். ஆனால் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மத்திய மருத்துவ கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வு இல்லை. வெவ்வேறு மாநில மொழிகளில் வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. நீட் தேர்வு நடத்தி, ரிசல்ட் அறிவிக்கும் வேலை செய்யும் புரோமெட்ரிக் என்ற அமெரிக்க நிறுவனம், மருத்துவ மேற்படிப்புக்கான நீட் தேர்வில் முறைகேடு செய்துள்ளது.

போட்டித்தேர்வுகளில் நடந்த மிகப்பெரிய ஊழல் பி.ஜே.பி ஆளும் மத்தியப்பிரதேச வியாபம். கள்ளக்குறிச்சியில் எஸ்.வி.எஸ் மருத்துவக்கல்லூரியில் முறைகேடு மட்டுமல்ல, அதை எதிர்த்த மூன்று மாணவிகள் கொல்லப்பட்டனர். சில மாதங்கள் மூடப்பட்ட கல்லூரி மீண்டும் திறக்கப்பட்டுவிட்டது.

கேதான் தேசாய் MCI சேர்மனாக இருந்தபோது அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இல்லாத மருத்துவக்கல்லூரிகளுக்கு அனுமதி வழங்க டன் கணக்கில் தங்கமும், வெள்ளியும் லஞ்சம் பெற்று சிறை சென்றார். அவரைத்தான் மோடி அரசு சர்வதேச மருத்துவக்கவுன்சில் தலைவராக்கியுள்ளது.

எஸ்.ஆர்.எம், ராமச்சந்திரா, ஏ.சி.எஸ் போன்ற நிகர்நிலைப் பல்கலைக்கழகங்க விவகாரங்களில் தலையிடும்  அதிகாரம் அரசுக்கே இல்லை. இப்படி, லஞ்சமும் – ஊழலும் புழுத்து நாறும் இந்த கல்வி அமைப்பில் தகுதி, திறமையை கண்டறியத்தான் அகில இந்திய நுழைவுத்தேர்வு என்பதெல்லாம் பித்தலாட்டம்.

நீட் : தரப்படுத்தவில்லை தனியார் கல்விக் கொள்ளையை சட்டபூர்வமாக்குகிறது!

“நீட் தேர்வு தனியார் மருத்துவக்கல்லூரிகள் கட்டணக்கொள்ளையைத் தடுத்து நிறுத்தியிருக்கிறது, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு அதிக இடம் கிடைத்துள்ளது, கல்வியில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்று அளந்துவிடுகிறார் தமிழினத்தின் எதிரி தழிழிசை. கேரளாவில் நீட் தேர்விற்குப் பிறகு தனியார் கல்லூரிகளில் 5 லட்சம் என்று இருந்த கட்டணம் 11 லட்சமாக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவர் வழக்குப்போட்டால், நீதிமன்றம் முதலில் 11 லட்சத்தை கட்டு என்கிறது.

எஸ்.ஆர்.எம், ராமச்சந்திரா, போன்ற கொள்ளையர்களுக்கு இதைவிட வேறு என்ன அங்கீகாரம் வேண்டும்? தமிழகத்தில் மொத்தமுள்ள 3,534 இடங்களில் அரசுப்பள்ளியில் படித்தவர்கள் வெறும் 5 பேருக்கு மட்டுமே நீட் தேர்வின் மூலம் இடம் கிடைத்துள்ளது. மற்றவர்கள் அனைவரும் தனியார்பள்ளியில் படித்தவர்கள். பி.ஜே.பி காரர்கள் வாங்குன காசுக்குமேல் கூவுகிறார்கள்.

 நீட் : சி.பி.எஸ்.இ. எனும் சிலந்திவலையில் சிக்கவைக்கும் தந்திரம்!

“சி.பி.எஸ்.இ. தரத்திற்கு மாநில பாடத்திட்டத்தை உயர்த்த வேண்டும்’’ என்று நீட் ஆதரவாளர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். சி.பி.எஸ்.இ.  என்ன அவ்ளோ அப்பாடக்கர் பாடத்திட்டமா? அறிவியலாளர் அனில் குமார் மற்றும் IIS -இல் பணியாற்றிய டிபாகர் சட்டர்ஜி ஆகியோர் இந்தியாவில் உள்ள சில மாநிலக் கல்வி வாரியங்களை சி.பி.எஸ்.இ. -யோடு ஒப்பிட்டு ஒரு ஆய்வு செய்தனர்.

இயற்பியல், வேதியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு அறிவியல் பாடங்களிலும் மேற்கு வங்கக் கல்வி வாரிய மாணவர்களும், கணிதம் மற்றும் இயற்பியல் பாடங்களில் ஆந்திர மாநில மாணவர்களும் சி.பி.எஸ்.இ. மாணவர்களைக் காட்டிலும் சிறப்பாக உள்ளதை நிறுவினர் (ஆதாரம்;Current Science, 2009). சி.பி.எஸ்.இ. யில் படித்த மாணவர்களாக இருந்தாலும் லட்சக்கணக்கில் செலவழித்து பயிற்சி மையங்களுக்கு சென்று படிக்காமல் நீட் தேர்வில் தேர்ச்சிபெற முடியாது.

நீட்டுக்கான கேள்விகள் சி.பி.எஸ்.இ. யில் இருந்து கேட்கப்படுவதால் சி.பி.எஸ்.இ.  அடிப்படையிலான தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நுழைவுத்தேர்வு எழுத வேண்டும் என்றாலே இனி சி.பி.எஸ்.இ.  பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்ற நிலைக்கு பெற்றோர்கள் தள்ளப்பட்டுள்ளனர். போதாக்குறைக்கு நவோதயா பள்ளிகளை கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே  மூடப்பட்டு வரும் மாநிலப்பாடத்திட்ட அரசுப்பள்ளிகளை இனி அடியோடு ஒழித்துக்கட்டிவிடுவார்கள்.

நீட் : மாநிலங்களின் உரிமையைப்பறிக்கும் சதி!

தமிழ்நாட்டில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகள், 3,534 இடங்கள், 192  உயர் சிறப்பு மருத்துவக் கல்வி இடங்கள் என வேறெந்த மாநிலங்களிலும் இல்லாத கட்டுமானம் இங்கு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதைத் தட்டிப்பறிக்கத்தான் நீட்-ல் இருந்து தமிழகத்திற்கு விலக்கில்லை என்பதில் குறியாக உள்ளது மோடி அரசு.

அடுத்து, பிற மருத்துவப் படிப்புகள், பொறியியல், கலை – அறிவியல் என அனைத்து படிப்புகளுக்கும் அகில இந்திய நுழைவுத்தேர்வு வரப்போகிறது. நெருக்கடி நிலை காலத்தில் (1976 –ல்) கல்வியை மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு கொண்டு சென்றார்கள். இப்போது ‘ஒரே நாடு ஒரே தேர்வு’ என கல்வியை மையப்பட்டியலுக்கு கொண்டு செல்ல திட்டம் தீட்டுகிறார்கள்.

ஏற்கனவே ‘ஒரே நாடு ஒரே வரி’ என ஜி.எஸ்.டியை திணித்து மாநிலங்களின் பொருளாதார உரிமையை பறித்துவிட்டார்கள். அடுத்து ‘ஒரே நாடு ஒரே மொழி – கலாச்சாரம்’ என இந்தி – சமஸ்கிருத்தத்தை திணிக்க முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் ஒருபுறம், பல்தேசிய இனங்கள் கொண்ட நாட்டில் அதன் மொழி, கலாச்சாரம், இன அடையாளங்கள் அனைத்தையும் அழித்துவிட்டு, ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் என ஆர்.எஸ்.எஸ்-ன் நீண்டகால கனவான இந்துராஷ்டிரத்தை நிறுவுவது. மறுபுறம், கார்ப்பரேட் முதலாளிகளின் லாபவேட்டைக்காக நாட்டை மறுகாலனியாக்க, மாநிலங்களின் உரிமையைப் பறித்து; அனைத்தையும் மையப்படுத்துகிறது பி.ஜே.பி கும்பல்.

நீட் : மாணவர்களின் பிரச்சனை மட்டுமல்ல மக்களின் சுகாதாரப் பிரச்சனை!

‘நீட்’ தேர்வின் மூலமாக மருத்துவ மாணவர் சேர்க்கை நடப்பதால், அரசு மருத்துவ சேவைக்கான உள் ஒதுக்கீடு ரத்தாகிவிடும். இதனால் அரசு மருத்துவமனைகளில் தன்னை வருத்திக்கொண்டு சேவை செய்ய யாரும் விரும்பமாட்டார்கள். அது மட்டுமல்லாமல், லட்சங்களை செலவழித்து நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளுக்குச் செல்பவர்கள், தாங்கள் போட்ட முதலீட்டை எடுக்க தனியார் மருத்துவமனைக்கும், வெளிநாடுகளுக்கும் செல்வார்களே தவிர, அரசு மருத்துவமனைகளில் மக்களுக்கு சேவை செய்ய வரமாட்டார்கள்.

ஏற்கனவே, மோடி அரசு கையெழுத்திட்டுள்ள காட்ஸ் ஒப்பந்தப்படி பொதுசுகாதாரத் துறையை முழுவதும் தனியார்மயமாக்க ஒப்புக்கொண்டுள்ளது. அதன்படி தங்குத்தடை இல்லாமல் அந்நிய நிதியை அனுமதிக்க வேண்டும். அதற்கு தடையாக உள்ள நமது பொது சுகாதாரத் துறையை கைப்பற்ற வேண்டும். அதற்காகத்தான் தரத்தின் பெயரால் நீட் திணிக்கப்படுகிறது. இது நடந்துவிட்டால், அரசு மருத்துவக் கல்வி மட்டுமல்ல, அரசு மருத்துவ சேவையும் இனி ஏழைகளுக்கு கிடைக்காது. பெருவாரியான மக்கள் நோய், நொடியிலேயே செத்துமடியும் அபாயத்தை உருவாகும்.

இதுவரை வெளிநாட்டினர், வெளிநாடுவாழ் இந்தியர்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியாது என்று இருந்தது. இனி அவர்களும் சேரலாம் என்று MCI சட்டவிதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவக்கல்வியை தரப்படுத்துவது இவர்கள் நோக்கம் இல்லை. சிறு கூட்டமான பார்ப்பனர்கள் – பணக்காரர்களில் இருந்து ‘தரமான’ நவீன கொத்தடிமைகளை உருவாக்குவது என்ற கார்ப்பரேட் நலனையும்,  பெருவாரியான ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு கல்வியை மறுக்கும் பார்ப்பன – புதிய மனுநீதியையும் இணைக்கும் புள்ளிதான் நீட்.

மோடி அரசின் இந்த புதிய மனுநீதிதான் அனிதாவை தூக்கிலேற்றியது. கோடிக்கணக்கான ஒடுக்கப்பட்ட, கிராமப்புற ஏழை மாணவர்களையும் தூக்கிலேற்ற துடிக்கிறது. அரச வன்முறைமூலம் தமிழகத்தை அடிமைப்படுத்த முயற்சிக்கிறது மோடி அரசு. இந்த வன்முறைக்கு அடங்கியாக வேண்டும் என்கிறது அடிமை எடப்பாடி அரசு. அடங்க முடியாது என்று திமிறி எழுகிறது தமிழகம்.  அனிதாவின் படுகொலைக்கு நீதி கேட்டு போராடும் அனைவரும் ஒன்றிணைவோம்!

அன்று, இந்தி திணிப்பை முறியடித்தோம்!
நேற்று
, ஜல்லிக்கட்டில் வென்றோம்!
இன்று
,எத்தனை அடக்குமுறைகள் வந்தாலும்,
எதிர்த்து நின்று நீட் திணிப்பை விரட்டியடிப்போம்!
கல்வியை மாநிலப்பட்டியலுக்கு கொண்டு வருவோம்!

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
தமிழ்நாடு.
எண்.41,பிள்ளையார் கோவில் தெரு,
மதுரவாயல், சென்னை-95,
தொடர்புக்கு : 94451 12675

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

டாஸ்மாக் போதைக்கு போட்டியாக வரும் ஆன்லைன் ரம்மி !

2

நீங்கள் இணையத்தில் ஏதேனும் பொழுதுபோக்கு வலைத்தளங்களுக்கோ அல்லது விளையாட்டு வலைத்தளங்களுக்கோ சென்றால் உங்களை நடிகர் பிரகாஷ்ராஜும், ’பாகுபலி’ ராணாவும் ரம்மி விளையாட அழைப்பதை விளம்பர வீடியோக்களில் பார்த்திருக்கலாம். அது தவிர ”நான் இணையத்தில் ரம்மி விளையாடி ரூ.2,50,000 ஜெயித்திருக்கிறேன், நீங்களும் ரம்மி விளையாடுங்க”, ”ரம்மி விளையாடி ரூ.1500 போனஸ் தொகையை உடனடியாகப் பெறுங்கள்”, ”ரம்மி சட்டப்பூர்வமானது – உடனடியாக இணையுங்கள்” என்பது போன்ற விளம்பரங்களையும் பார்த்திருக்கலாம்.

இந்த விளம்பரத் தூண்டில்களில் சிக்கி ஆயிரக்கணக்கிலும், இலட்சக்கணக்கில் பணத்தை இழந்து போதை அடிமைகளாகி வருவோரின் எண்ணிக்கை ஒவ்வொரு கணமும் அதிகரித்து வருவதை பத்திரிக்கைகளில் வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டாஸ்மாக்கிற்கு நிகராக இளைஞர்களை ஆட்கொள்ளும் இந்த சூதாட்டச் சீரழிவின் பிரம்மாண்டம் பற்றித் தெரிய முதலில் இதன் ஆண்டுச் சந்தை மதிப்பை பார்ப்போம். ஆன்லைன் ரம்மியின் நடப்புச் சந்தை மதிப்பு ஆண்டுக்கு ரூ.1,000 கோடி ஆகும். இதன் வளர்ச்சி விகிதம் ஆண்டுக்கு 50%-ஆக இருக்கிறது.

ரம்மி – சட்டவிரோதமானதல்ல – சுப்ரீம் கோர்ட்டு

இந்த பிரம்மாண்ட சந்தையின் பொருள் என்ன?

”காசு வைத்துச் சூதாடும் ‘ரம்மி’ ஆட்டம் சட்டப்பூர்வமானது தான் என இந்த ரம்மி வலைத்தளங்கள் மட்டுமல்ல, ’மாட்சிமை’ தாங்கிய உச்சநீதிமன்றமும் இது சட்டப்பூர்வமானது என்றே அறிவித்துள்ளது.

”ரம்மி , ஒரு அறிவு சார்ந்த விளையாட்டு;  அது அதிர்ஷ்டம் சார்ந்த விளையாட்டு அல்ல; ஆகவே அதில் பணம் கட்டி விளையாடுவதை சூதாட்டமாகக் கருத முடியாது” எனக் கடந்த 1967-ம் ஆண்டு, உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

இது போதாதென்று, ”இணையதளத்தில் பணம் கட்டி ’ரம்மி’ ஆடுவது சட்டவிரோதமானது அல்ல; அதுவும் சாதாரண விளையாட்டு போன்றது தான்” எனக் கடந்த 2015, ஆகஸ்ட்-13 அன்று ஓர் வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தாயக்கட்டை உருட்டி, ஒரு போரையே நடத்திய புண்ணிய ‘பாரதத்தில்’  ‘நீதி’த் துறை ஒரு சூதாட்டத்தை அறிவார்ந்த விளையாட்டாக அங்கீகரித்திருப்பதில் ஆச்சரியமில்லை.

உண்மையில் ரம்மி அறிவார்ந்த விளையாட்டு தானா? ரம்மி ஆட்டத்தின் வெற்றி தோல்விகள் எதனை அடிப்படையாகக் கொண்டது? நிகழ்தகவை (அதிர்ஷ்டத்தை) அடிப்படையாகக் கொண்டதா, அல்லது அறிவை அடிப்படையாகக் கொண்டதா ?

ரம்மி உள்ளிட்ட அனைத்து சீட்டாட்டங்களிலும், யாருக்கு எந்தெந்த சீட்டுக்கள் வரும் என்பது யாருக்கும் தெரியாது (போங்காட்டம் ஆடாத வரை). நமக்கு வாய்க்கப் பெற்றிருக்கும் சீட்டுக்கள், அந்த ஆட்டத்தில் எளிதாக வெற்றி பெறுவதற்கு உகந்த சீட்டுக்களா?, இல்லையா? என்பதைப் பொறுத்து தான் நமது வெற்றி தோல்வி பெரும்பாலும் அமைகிறது. இதில் அறிவின் பங்களிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மட்டுமே தாக்கம் செலுத்துகிறது. ஆகவே எந்த சீட்டாட்டத்தைப் பொறுத்தவரையிலும் நிகழ்தகவின் (அதிர்ஷ்டத்தின்) அடிப்படையில் தான் நமது வெற்றி, தோல்விகள் அமைகின்றன. வரும் சீட்டுக்களின் ஒரே பூவில் அடுத்தடுத்த வரிசையில் சீட்டுக்கள் வருவதோ இல்லை ஜோக்கர் கார்டுகள் வருவதோ அறிவின் அடிப்படையில் அல்ல.

மற்றவர்கள் போடும் மற்றும் எடுக்கும் சீட்டுக்களை வைத்து அவர்கள் வைத்திருக்கும் சீட்டுக்களை ஓரளவு கணிக்க முடியுமென்றாலும் அதுவும் கூட ஆட்டத்தில் நீடிக்கலாமா, தொடர்ந்து முயலலாமா என்பற்குத்தான் உதவும்.

எதார்த்தம் இப்படி இருக்கையில் உச்சநீதிமன்றமோ, ரம்மி அறிவை அடிப்படையாகக் கொண்டு விளையாடும் விளையாட்டு என்று கூறி அதற்கு அனுமதி கொடுத்திருக்கிறது.இதே ரம்மி சீட்டு போல ஆன்லனை சூதாட்டங்கள் பல நடத்தப்படுகின்றன. கிரிக்கெட்,  கால்பந்து போட்டி முடிவுகள், இன்று தங்கத்தின் விலை உள்ளிட்டு தினுசு தினுசாக பல இருக்கின்றன. இவை அனைத்தும் குருட்டாம் போக்கில் கணிப்புக்களை செய்தால் பணம் வரும் என ஒரு மாய நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

சட்டப்பூர்வமானது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைச் சுட்டிக் காட்டி தான் இன்று பல நிறுவனங்கள், ரம்மி விளையாட்டை தங்கள் வலைத்தளங்களில் நடத்துகின்றன. முகம் தெரியாத பல்வேறு பயனர்கள் ஒரே ஆட்டத்திலோ தனித்தனி ஆட்டத்திலோ, பணம் கட்டி கலந்து கொள்ளும் வகையில் இந்த வலைத்தளங்கள் வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. இதில் பணம் கட்டி விளையாடி யார் ஜெயித்தாலும், இந்த இணையதளம் தனக்கான கமிஷனை எடுத்துக் கொண்டு மீதத் தொகையை மட்டும் அவர்களிடம் கொடுக்கும்.

இது தவிர ’டோர்னமெண்டு’கள் (Tournaments), ஊக்கப்பரிசுகள் என பல்வேறு வழிவகைகளில் இணையவாசிகளை இந்த விளையாட்டில் அடிமையாகச் செய்கின்றன இந்த ’இணைய ரம்மி’ வலைத்தளங்கள். இந்நிறுவனங்களின் பெருத்த இலாபத்தைக் கண்டு பல்வேறு பன்னாட்டு நிதி முதலீட்டு நிறுவனங்கள் இவற்றில் தங்கள் முதலீடுகளைக் கொட்டுகின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் கனடாவைச் சேர்ந்த க்ளைர்வெஸ்ட் (Clairvest) என்ற முதலீட்டு நிறுவனம், ஏஸ்-டூ-த்ரீ(Ace2Three) என்ற இணைய ரம்மி நிறுவனத்தின் பெரும்பான்மைப் பங்குகளை சுமார் 474கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இது போன்று பல்வேறு இணைய ரம்மி நிறுவனங்களின் மொத்த மதிப்பைக் கணக்கில் கொண்டாலே இந்த இணையச் சூதாட்டத் தொழிலின் பரிமாணம் புரியும்.

கெல்லி நீல்ட்- இணைய சூதாட்ட விளையாட்டுக்கள் மூலம் 34இலட்ச ரூபாய் இழந்த இங்கிலாந்துப் பெண்

தமிழகத்தில் மட்டும் இணைய ரம்மி விளையாடுபவர்களின் எண்ணிக்கை மாதத்திற்கு சுமார் 1 இலட்சம். இத்தகைய வலைத்தளங்களில், தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு நாளும் செய்யப்படும் புதிய பயனர் பதிவு மட்டும் சராசரியாக 15,000 என ’தி இந்து’ நாளிதழ், ஒரு பிரபல ரம்மி இணையதளம் தெரிவித்ததாகக் குறிப்பிட்டிருக்கிறது.

மேலும், ஒரு குறிப்பிட்ட இணைய ரம்மி வலைத்தளத்தில், ஜூலை 2017-இல் மட்டும் சுமார் 4 இலட்சம் முறை ரம்மி விளையாடப்பட்டிருக்கிறது என்றும் இதில் 6% பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ’தி ஹிந்து’ நாளிதழ் தெரிவிக்கிறது.

சூதாட்டம், அதன் இயல்பிலேயே, அதில் ஈடுபடும் நபர்கள் எத்தனை முறை தோற்றாலும், அதிர்ஷ்டத்தின் மீதான அவர்களது நம்பிக்கையின் பெயரில், அவர்களை மீண்டும் மீண்டும் சுண்டி இழுக்கும் தன்மையுடையது. தமிழகத்தில், லாட்டரிச் சீட்டு, சுரண்டல் லாட்டரி, ஒரு நம்பர் லாட்டரி, குதிரை ரேஸ் என காலங்காலமாக சூதாட்டம் பல்வேறு வடிவகளில் மக்களின் தாலியை அறுத்துள்ளது. தற்போது அது இணைய வடிவம் எடுத்துள்ளது.

ஒருமுறை வெற்றி பெற்றுவிட்டால், மீண்டும் ஒரு முறை விளையாடி வெல்ல வேண்டும் என்ற நப்பாசையும், தோல்வியடைந்தால் ஒரு முறையாவது வெற்றி பெற வேண்டும் என்ற தூண்டுதலும் இணையப் பயனர்களை இந்தத் தூண்டிலில் சிக்க வைக்கிறது. இதில் இலட்சக் கணக்கில் பணம் இழந்தவர்கள் ஏராளம். அவர்களுக்கு கடன் தொல்லை உள்ளிட்ட பொருளாதாரப் பிரச்சினைகளால் மனச்சிதைவு ஏற்பட்டு, தற்கொலை வரை போக வாய்ப்புகள் உண்டு என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இத்தகைய சூதாட்டங்களில் சிக்கி பொருளாதார நெருக்கடிகளுக்கும் மனச் சிதைவுகளுக்கும் ஆட்படுவதில் முதலிடம் வகிப்பது ஆஸ்திரேலியர்கள் தான் என்கிறது  ஒரு ஆய்வறிக்கை.

இதன் தாக்கத்தைத் தொடர்ந்து, தெலுங்கானா மாநில அரசு, இணைய ரம்மி சூதாட்டத்தை ஒரு அரசாணை வெளியிட்டு தடை செய்துள்ளது. தமிழகத்திலும் இதன் தாக்கம் தொடங்கியிருக்கும் சூழலில், எடப்பாடி – ஓபிஎஸ் கும்பலோ பாஜகவின் அரசியல் சூதாட்டத்தில் தங்கள் தலைகள் வெட்டப்படாமல் தவிர்க்கவே பெருஞ்சிரத்தையோடு போராடிக் கொண்டிருக்கிறது.

ஊருக்கு உபதேசம் சொல்லும் கமலஹாசன் பங்கேற்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் இணைய ஒளிபரப்பில் கூட இந்த ரம்மி சர்க்கிள் விளம்பரங்கள் காட்டப்படுகின்றன.

லாட்டரி, குட்கா, டாஸ்மாக் ஆகியவற்றின் வரிசையில் தற்போது மக்களைச் சீரழிக்க புதியதாக களத்தில் இறங்கியிருக்கும் இந்த சூதாட்டச் சீரழிவிலிருந்து இந்தத் தலைமுறையை மீட்கவேண்டிய கடமை அரசிற்கே உண்டு. ஆனால் அரசே, சூதாட்டத்தை முன்நின்று நடத்தும் போது நாம் என்ன செய்வது? நாம் குடியிருக்கும் பகுதியில் விபச்சாரத் தொழிலை நடத்தும் ஒரு புரோக்கரை கண்டுபிடித்தால் என்ன செய்வோமோ, அதை அரசிற்கும் செய்வது தானே முறை?

மேலும் படிக்க:

__________________________________

இந்த கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

திருச்சி பாஜக பொதுக்கூட்டம் ! – தமிழ் ஃபேஸ்புக் – ட்விட்டர் வறுவல் !

19

திருச்சி தென்னூரில் உள்ள உழவர் சந்தை மைதானத்தில் கடந்த 09-09-2017 அன்று பாஜக -வின் நீட் ஆதரவுப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பிரம்மாண்டமான டிஜிட்டல் திரைகள், நூற்றுக்கணக்கான ஒளி விளக்குகள், பல்லாயிரக்கணக்கான நாற்காலிகள், இவற்றையெல்லாம் தாண்டி பிரம்மாண்டமான மேடை என அனைத்தும் பிரம்மாண்டமாக இந்த பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

இந்த பொதுக்கூட்டத்தில் தமிழிசை சௌந்திரராஜன், பொன். ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் என பாஜக -வின் ‘பெரும்’தலைவர்கள் கலந்து கொண்டனர். அதுமட்டுமில்லாமல் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், தஞ்சை, விழுப்புரம் உள்ளிட்டு ஒன்பது மாவட்டங்களைச் சேர்ந்த பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டு மேடையை அலங்கரித்தனர்.

பல்லாயிரக்கணக்கான நாற்காலிகள் குவிக்கப்பட்டு இருக்கையில், பொதுக்கூட்டம் ஆரம்பித்த அரைமணி நேரத்தில் சுமார் 1000 பேர் இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். பொதுக்கூட்டம் ஆரம்பித்து ஒவ்வொருவராகப் பேசத் தொடங்கவும் பலர் வரிசையாகக் கிளம்பத் தொடங்கினர்.

வழக்கமான ஓட்டுக் கட்சிகளின் பாணியில் பணம் கொடுத்துத்தான் இந்த பொதுக் கூட்டத்துக்கும் ஆட்களை அழைத்து வந்துள்ளனர். அவர்களிடம் குறைந்தபட்சம் என்ன கூட்டம் என்பதைக் கூட சொல்லாமல் அழைத்து வந்துள்ளனர். அப்படி இருந்தும் கூட போடப்பட்ட இருக்கைகள் அனைத்தும் நிறையவில்லை.

அதிலும் பலர் நீட் ஆதரவு கூட்டம் எனத் தெரிந்ததும் கிளம்ப ஆரம்பித்துள்ளனர். அவ்வாறு கிளம்பிய ஒரு பெண்மனியிடம் அவரை அழைத்து வந்த நபர் “இன்னும் கொஞ்ச நேரம் இருந்தா பணத்த வாங்கிகிட்டு போயிடலாம்” என்று கூறியிருக்கிறார். அவரிடம், “உன் பணமெல்லாம் வேண்டாம், ஒழுங்கா என்னை ஊருக்கு கூட்டி போய் விட்டுடு” என அந்தப் பெண்மணி கூறியிருக்கிறார்.

‘முக்கியத்’ தலைவர்களான தமிழிசை சௌந்திரராஜன், எச். ராஜா ஆகியோர் பேசும் போது படிப்படியாக கூட்டம் குறைந்து இறுதியில் பொன். ராதாகிருஷ்ணன் பேசும் போது வெறும் 150 பேர் மட்டுமே இருந்திருப்பார்கள். அதிலும் மைக் செட்காரர்கள், கேமெரா மேன்கள், எலக்ட்ரிசியன்கள், சுண்டல் விற்பவர்கள், டிஜிட்டல் திரைக்காரர்கள் எல்லாம் கழித்துவிட்டுப் பார்த்தால் கூட்டம் முடியும் சமயத்தில் மேடைக்குக் கீழே அமர்ந்திருந்தவர்களில் அதிகபட்சம் 100 பேர் தான் பாஜக அடிபொடிகளாக இருந்திருக்க முடியும்.

அக்கூட்டத்தில் தமிழிசை பேசும்போது, தமிழகத்தில் கல்வியின் ‘தரம்’ மிகவும் கீழே இருப்பதாகவும், அதற்குக் காரணம் திமுக தான் என்றும் கூறிப் பேசியுள்ளார். என்ன இருந்தாலும் தமிழிசைக்குத் தைரியம் அதிகம் தான். ஏனெனில் ஒரு பொது இடத்தில் எச்.ராஜாவை அருகில் வைத்துக் கொண்டே, ‘தரம்’ குறித்துப் பேசி அவரையே எள்ளல் செய்யகிறார் என்றால், எவ்வளவு ‘கெத்து’ வேண்டும்?

அவரைத் தொடர்ந்து பேசிய எச்.ராஜா வழக்கம் போல தனது ‘தரத்தை’ நாலாந்தர வார்த்தைகள் மூலமும், கம்யூனிச வெறுப்புப் பேச்சு மூலமும் வெளிப்படுத்தி விட்டுப் போய் அமர்ந்தார்.

சுண்டல் விற்பவர் கூட கிளம்பியிருந்த சூழலில் கடைசியில் மைக்கைப் பிடித்த பொன்னார், பாஜக அலுவலகங்களைக் குறிவைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதாகவும், அவ்வாறு செய்பவர்கள் கடும் பின் விளைவுகளைச் சந்திக்க வேண்டியது வரும் என்றும் மிரட்டி விட்டு, அந்தக் காலத்தில் நாகர்கோவிலில் கட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராடியவர்களைத் ’துண்டைக் காணோம், துணியைக் காணோம்’ என்று தாம் ஓடவிட்டதாகக் கூறினார்.  கூட்டத்தில் அமர்ந்திருந்த ஒருவர், “வடிவேலு காமெடியப் பாக்குற மாதிரியே இருக்குய்யா” என்றார். அவர் குறிப்பிட்டது “எல்லாம் அவன் செயல்” படத்தில் வக்கீல் வண்டு முருகன் மேடையில் பேசும் காட்சியைத் தான் என்பதை பொன்னாரின் பேச்சில் இருந்து புரிந்து கொள்ள முடிந்தது.

ஆவேசமாகப் ‘பொரி’ந்த பொன்னார்

ஒருவாறாக தமிழகத்தில் தனது ‘பலத்தை’ நிரூபித்துள்ளது பாஜக. பொதுக்கூட்டத்திற்கு பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள் கூட, அதன் நோக்கத்தை அறிந்ததும் காறி உமிழ்ந்து விட்டுச் சென்ற பெருமை, பாஜக -வையே சேரும்.

பாஜக -விற்கு வெளியில் தான் இத்தகைய ‘தனி மரியாதை’ என்றால், முகநூலிலும், ட்விட்டரிலும் ‘வைத்துச்’ செய்திருக்கிறார்கள் இணையவாசிகள். பாஜகவின் பொதுக்கூட்டத்தின் காலி நாற்காலிகள் அணிவகுப்புப் புகைப்படத்தைப் போட்டு இணையவாசிகள் போட்டிருக்கும் பதிவுகளில் சிலவற்றை உங்கள் பார்வைக்குத் தருகிறோம்

***

முகநூலில்

“திருச்சியில் நடைபெற்ற சேர் கண்காட்சியின் ஒரு பகுதி…”

மோகன்தாஸ் மருதமுத்து.

__________

பெரியோர்களே..! தாய்மார்களே…!! மற்றும்…?! இங்கு பெருந்திரளாக கூடியிருக்கும் “நாற்காலிகளே”..

ராஜ் தேவ்.

__________

பெருமதிப்பிற்குரிய நாற்காலி அவர்களே, அந்த நாற்காலியில் படிந்திருக்கும் தூசுதும்புகளே, நீட் வேண்டும் என்பதை தவறாக புரிந்து கொண்டு ஆளரவம் இல்லாமல் நீட்டாக இருக்கும் காலி மைதானம் அவர்களே!

ஆதவன் தீட்சண்யன்.

__________

கோவையில் அண்டாவக் காணோம். திருச்சியில் ஆளையே காணோம்!

வெண்புறா சரவணன்.

__________

“ஏண்டா கொடுத்த காசுக்கு கொஞ்ச நேரமாவது  உக்கார  வேணாமாடா” ( எச்* ராஜா  மைன்ட் வாய்ஸ்)

சாருவாகன்.

__________

ஏம்பா! தனியா ஒக்காந்து இருக்கியே பயமா இருக்காது?

ஏங்க மீட்டிங் முடிஞ்சா வாடகைக்கு விட்ட சேர்லாம் எடுத்துட்டு போகனுங்க.

“நீட்டுக்கு ஆதரவாக திருச்சியை மிரட்டும் பிரமாண்ட மாநாடு”.

பெரியார் குமார்.

__________

பாஜக பொதுக்கூட்டத்த பத்தி கிண்டலடிச்சி போடுற பதிவ பார்த்தா கடுப்பாருக்கு. இதுக்கு முன்னாடி இத்தனை சேர்கள் தன்னெழுச்சியா கலந்து கொண்ட கூட்டத்த எங்கயாச்சயும் பார்த்திருக்கிங்களா?

ஜெயச்சந்திர ஹஷ்மி.

__________

பொன்னாரும், தமிழிசையும் எவ்வளவு ஆக்ரோசமாக பேசினாலும் காலி சேர்களில் இருந்து கைதட்டல் வராத காரணத்தால் கோயில்களில் மின் இயந்திரத்தின் வாயிலாக மத்தள, நாதஸ்வர இசை ஒலிக்கபடுபது போல , இனி ஒவ்வொரு பாஜக கூட்டத்திலும் இயந்திரங்கள் மூலம் கைதட்டல் ஓசை ஒலிக்கப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

யுவான் சுவாங்.

__________

மூச்சு விடுவதற்கே இடமில்லாத நெரிசலில் கடும் தள்ளு முள்ளுக்கு இடையே நடந்த பாஜக மாநாடு. ஆக்சிஜனுக்கு அரை கிலோ மீட்டர் ஓடிய தொண்டர்கள்.

வாசுகி பாஸ்கர்.

__________

வாங்கியது 12000 சேர்கள்.. பயன்படுத்தியது 120 சேர்கள்.

just “00” தான் வித்தியாசம். இந்த மானங்கெட்ட பிழைப்பு தேவையா பொரி உருண்டை?

செந்தில்குமார் நாத்திகன் சீர்காழி.

__________

கட்டுக்கடங்காத இந்த கூட்டத்த வச்சி தான் அக்கா தமிழிசை கழகங்கள் இல்லா தமிழகத்தை உருவாக்க போறாங்களாம். ஆம்வே காரன் மீட்டிங்குக்கு கூட இதவிட அதிக கூட்டம் வருமே. காலி சேர்களுக்கு மாநாடு நடத்தி அரசியல் மாநாடுன்னு சொல்லி அரசியல் மாநாடுகளுக்கு இருக்கும் மரியாதைய கெடுக்குறாங்க. ஆனா இந்த தமிழ்நாட்டு பிஜெபி காரங்களுக்கு மோடிஜி அளவுக்கு போட்டோஷாப் நாலேட்ஜும் பத்தல. சோ… சேட்….

பிரியதர்ஷினி.

__________

தமிழக மக்களே, இன்று மாலை வீடுகள், கட்டடங்கள் லேசாகக் குலுங்கியதை உணர்ந்திருப்பீர்கள்.. பொருட்கள் ஆடியிருக்கும். ஆடு மாடுகள் அலறியிருக்கும். நிலநடுக்கமாக இருக்குமோ, சுனாமி வந்திருக்குமோ என அச்சம் கொண்டிருப்பீர்கள்.

விசாரித்ததில், நீட் தேர்வை ஆதரித்துத் திருச்சி திமிறத் திமிற, கதறக் கதற, help help என கூக்குரல் இட, கோடிக்கணக்கான தொண்டர்கள் அலை அலையாகச் சங்கமிக்க, பாஜக நடத்திய மிகப் பிரமாண்டமான மா……பெரும் கண்டன பொதுக்கூட்டம் தான் தமிழகம் முழுக்க இந்த நடுக்கத்திற்கெல்லாம் காரணம் என தெரிய வருகிறது.

ஆகவே, பதற்றம் வேண்டாம்!
இந்த நூற்றாண்டின் இணையற்ற பொருளாதார மேதை ஆர்.ஜே பாலாஜியின் விழுதுகளான நாம் அவரின் புகழ்பெற்ற வாசகமான “Don’t panic!”ஐ மனதில் கொள்ள வேண்டிய தருணம் இது.

தாமரை மலர்ந்தே தீரும்.
ஜெய் ஹிந்த்!!

பாலா அருண்

__________

திருச்சியை திணறடித்த மாஆஆஆஆஆஆஆ பெரும் மாநாடு இல்ல பொதுக்கூட்டம், இல்ல இல்ல தெருமுனை பிரச்சாரம், இல்ல இல்ல இல்ல கலந்துரையாடல்…….. அய்யயோ… எப்படி பார்த்தாலும் நாளஞ்சு பேர வச்சு நடத்துற கூட்டத்துக்கு என்ன பேரு வச்சி கூப்பிடறதுன்னு கண்பூசனா இருக்கே…..!

பி.கு: அந்த நாளஞ்சு பேரும் சேர் வாடகைக்கு கொடுத்தவர், பந்தல் வாடகைக்கு கொடுத்தவர், மைக் செட் வாடகைக்கு கொடுத்தவர்களும் அவர்களது பணியாளும் என்று அய்யாசாமி சொல்லிங்.!

“ஏண்டா ஆளில்லனா” அதிமுக காரங்களையாச்சும் கூப்டிருக்கலாம்ல???

பார்ப்பனிய பாஜக அடிமைகள்!

ரீகன் நே.

__________

“மிஸ்டு கால் வழியாக பிஜேபியில் சேர்ந்த அந்த ஒருகோடி தொண்டர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட கண்கொள்ளாக் காட்சி”.

ஜோதிமணி சென்னிமலை.

__________

நீட் தேர்வினை ஆதரித்து பாஜக நீட்டி முழங்கிய திருச்சி பொதுக்கூட்டத்தில் ..? ஆர்ப்பரித்த மக்கள் கூட்டம்…. காற்று வாங்கிய நாற்காலிகள்.

சங்கரதாஸ்

__________

“அந்த கீழ உக்காந்துருக்க  20 பேரையும் கூப்பிட்டு மேடையிலேயே உட்கார வச்சிருந்தா சேர் வாடகை மிச்சம். இத சொன்னா நம்ம ஆண்டி இன்டியன்பாங்க.

பூபதி முருகேஷ்

__________

தமிழகத்தில்
பாஜகவிற்கு #நாற்காலி ஓட்டு தான் அதிகம்

சரவணன் காந்தி

__________

மேடையில இருந்தவங்கள கீழ உக்கார வச்சிருந்தாலாவது கூட்டமிருந்ததைப் போல ஒரு சீனாவது போட்டிருக்கலாம்… மொத்தமா காலியாயிருந்தது இப்போ தெரிஞ்சிப்போயிடுச்சு எல்லோருக்கும்…

மலையமான் தே.கி.

__________

#திருச்சியை_திணறடித்த……….
பாஜக பொதுக்கூட்டம்….!!!

மைக் செட் கடைக்காரர் மருதமுத்து அவர்களே
நாற்காலி கடைக்காரர் நாகராஜ் அவர்களே
சீரியல் பல்ப் கடைக்காரர் சிங்கராஜ் அவர்களே
தேனீர் கடைக்காரர் தேவராஜ் அவர்களே
சுண்டல் கடைக்காரர் சுப்புலட்சுமி அவர்களே
சமோசா கடைக்காரர் சடையப்பன் அவர்களே

#அனைவருக்கும்_வணக்க்க்கம்…..!!!!

விடுதலை வேந்தன்

__________

நாளை திருச்சியில் பா.ஜ.க. பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதால் நகரிலுள்ள அனைத்து பிரியாணி கடைகளும் நாளை ஒரு நாள் மட்டும் மூடப்படுகிறது என்று பிரியாணி உணவக உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது

ரஹீம் கசாலி

ட்விட்டரில்

உயிர் இல்லா சேர்களை பிடித்து உட்கார வைத்து பொதுக்கூட்டம் போட்டதை பார்த்திருக்கியா? இதோ திருச்சி #பாஜக பொதுக்கூட்டம் @drtamilisaibjp

ஜேகே

__________

@drtamilisaibjp உலகத்திலயே ஆளுங்கட்சிய விட்டுட்டு எதிர்கட்சிக்கு எதிரா போராட்டம் நடத்துர ஒரே கோஷ்டி நம்ம பாஜக கோஷ்டி தான் #பாஜக கரகாட்டம்.

பரத்குமார்

__________

மக்களுக்கு இடையூறு இல்லாம போராட்டம் நடத்தலாம்னு #உச்சநீதிமன்றம் சொன்னத இந்தியாவிலயே ஏன் உலகத்திலயே கடைபிடிக்கற ஒரே கட்சி #பாஜக மட்டும்தான்

பயங்கர கோபக்காரன்

__________

பூத் ஏஜென்ட் கூட இல்லாத கட்சிக்கு புத்தி சொல்லி என்ன பயன்? யாரும் இல்லாத கடையில ஏன்டா டீ ஆத்துரிங்க

நவீன்

__________

”திமுக கூட்டத்திற்கு மழை வந்தது, ஆனால் எங்கள் கூட்டத்திற்கு மழை வரவில்லை”
–  தமிழிசை

”அதுவும் வரலையா….”

க்ரிஷ்

__________

பிஜேபி பொதுக்கூட்டத்துல காத்தடிக்கும்னு தெரியும், திருச்சில என்னனா புயலே அடிக்குதுபோல #BJPKilledAnitha

கார்த்தி

__________

எவ்வுளவுதான் முக்குனாலும் செல்ப் எடுக்காது பாஸ், இது திராவிட ரத்தம் ஓடுற பூமி. நுங்கம்பாக்கத்துல மாணவிகள் கூடிய கூட்டம் கூட இல்லையே #BJPFails

நவீன்

***

இந்தப் பதிவு உங்களுக்குப் பிடித்திருக்கிறதா ?

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கௌரி லங்கேஷ் படுகொலை : பார்ப்பன பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !

15

முற்போக்காளரும் பத்திரிக்கையாளருமான கௌரி லங்கேஷ் படுகொலையைக் கண்டித்து ஓசூரில் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

கடந்த 05.09.17 செவ்வாய்க் கிழமை அன்று, மாலை 7:00 மணியளவில் பெங்களூரில் சுட்டுக் கொல்லப்பட்ட முற்போக்காளரும், பத்திரிக்கையாளரும், களப்போராளியுமான கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, 10.09.2017 ஞாயிற்றுக் கிழமை அன்று  காலை 11:00  மணியளவில் ஓசூர் ராம் நகர் அண்ணாசிலை அருகே புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் பாகலூர் பகுதி பொறுப்பாளர் தோழர் இரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். புஜதொமு -வின் மாநில துணைத்தலைவர் தோழர் பரசுராமன் கண்டன உரை நிகழ்த்தினார். இறுதியாக, தோழர் காந்தராஜ் நன்றியுரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் தலைமையுரையாற்றிய தோழர் இரவிச்சந்திரன் தனது உரையில், “கர்நாடகாவில் முற்போக்காளர்கள் கொல்லப்படுவது இது முதன்முறையல்ல. இது போன்று கர்நாடக மாநிலம் முழுவதும் முற்போக்காளர்கள், மூடநம்பிக்கைகளை எதிர்ப்பவர்கள், பார்ப்பன இந்து மதவெறியை எதிர்ப்பவர்கள் மீது தொடர்ந்து கொலைவெறித் தாக்குதல்கள் நடந்து வந்துள்ளதை பட்டியலிட்டு அம்பலப்படுத்தினார். மேலும், பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் தலித்துக்கள் அங்கப் பிரதட்சணம் செய்வது, கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டும் போது நரபலி கொடுப்பது, தலித்துக்களை இன்னும் தீண்டத்தகாதவர்களாக நடத்துவது போன்ற இந்து மதவெறியர்களின் சதிராட்டங்களை எல்லாம் யார் அம்பலப்படுத்துகின்றனரோ, அவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்துவது தான் கர்நாடகாவில் ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்கள் தங்குதடையின்றி நிறைவேற்றும் திட்டங்கள்” என அம்பலப்படுத்திப் பேசினார்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் மாநிலத் துணைத்தலைவர் தோழர் பரசுராமன் தனது கண்டன உரையில், “பார்ப்பன பயங்கரவாதம் என்று சொல்வதற்கே முற்போக்காளர்கள் அஞ்சும் வேளையில் பார்ப்பனியத்தை பெரியாருக்கே உரிய துணிவுடன் சொல்லி தோலுரித்து வந்துள்ளார். அதுமட்டுமின்றி  ரெட்டி சகோதரர்களின் கனிம வளக் கொள்ளை போன்றவற்றால் ஏற்படும் சுற்றுசூழல் முறைகேடுகளை எல்லாம் தனது எழுத்தின் மூலமும், களத்திலும் போராடி அம்பலப்படுத்தி வந்துள்ளார்.

இவ்வாறான சமரசமற்ற இவரது போராட்டத்தின் காரணமாக  பல முறை இந்து மதவெறியர்களின் மிரட்டலுக்கு ஆளாகி வந்துள்ளார். இந்நிலையில்தான் படுகொலை செய்யப்பட்டுள்ளார் பத்திரிக்கையாளர் கௌரி லங்கேஷ்.

இந்துமத வெறியர்களின் பொய்யுரைகள் மற்றும் அவர்களது பயங்கரவாத தாக்குதல்களை எல்லாம் நாம் தெருவில் இறங்கி நேருக்கு நேர் மோதி வீழ்த்த உறுதி எடுத்துக்கொள்வதும் அதற்காக இறுதிவரை உறுதியுடன் போராடுவதே படுகொலைசெய்யப்பட்ட கௌரி லங்கேஷுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்.” என்ற வகையில் பேசினார். திரளான பொதுமக்கள், வியாபாரிகள் என  பலரும் இந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஆயிரக்கணக்கில் துண்டறிக்கை அச்சிட்டு விநியோகித்தும், நூற்றுக் கணக்கில் சுவரொட்டிகள் ஒட்டியும்,  ஆலை வாயில்களில் பிரச்சாரம் செய்தும் அதன் இறுதியாக ஆர்ப்பாட்டமும் நடத்தி கௌரி லங்கேஷின் கனவை நனவாக்கும் நோக்கில் தோழர்கள் அவரது தியாகத்தை, இந்து மதவெறியர்களின் மிரட்டலுக்கு பணியாத அவரது துணிவை, அர்ப்பணிப்பை மக்களிடையே விதைத்துள்ளனர். ஆம்! கொளரி லங்கேஷ் புதைக்கப்படவில்லை, விதைக்கப்பட்டார்.

***

முற்போக்காளர் கௌரி லங்கேஷ் படுகொலை: பார்ப்பன இந்து மதவெறி பயங்கரவாதத்தை மோதி வீழ்த்துவோம் !

ன்பார்ந்த உழைக்கும் மக்களே!

சென்ற 5 -ஆம் தேதி மாலை 7:00 மணியளவில் பத்திரிகையாளரும் முற்போக்காளருமான கௌரிலங்கேஷ் அவரது வீட்டினருகே சுட்டுக்கொலை செய்யப்பட்டார். தகவல் அமைதிப் பூங்கா என்று ஆளும் வர்க்கம் பீற்றிக்கொள்ளும் கர்நாடகாவின் தலைநகரான பெங்களூருவில்தான் இந்தப் படுகொலை நடத்தப்பட்டுள்ளது. காரணம் என்ன, கொன்றவர்கள் யார் என்பதை கர்நாடகப் போலீசு ஆராய்ச்சி செய்து கொண்டுள்ளதாம்.

முற்போக்காளர்கள் கர்நாடகாவில் சுட்டுக் கொலை செய்யப்படுவதும் தாக்கப்படுவதும் இது முதல்முறையல்ல. தற்போது கௌரி கொல்லப்பட்ட அதேபாணியில்தான் 2015 -ஆம் ஆண்டில் பகுத்தறிவாளரும் மூத்த பேராசிரியருமான கல்புர்கி கொல்லப்பட்டார். மைசூரு பல்கலைக் கழகத்தில் பணிபுரிந்த வரலாற்றுத்துறை பேராசிரியர் கோவிந்த் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

சென்ற எடியூரப்பா ஆட்சியின் பொழுது மங்களூருவில் செயல்பட்டுவந்த மூடநம்பிக்கைகளை எதிர்க்கும் பத்திரிகைக்கு தடைவிதிக்கப்பட்டது. இதுபோன்று கர்நாடக மாநிலம் முழுவதும் பல வகைகளில் முற்போக்காளர்கள், மூடநம்பிக்கை எதிர்ப்பாளர்கள், பார்ப்பன இந்து மதவெறியை எதிர்ப்பவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல்கள் நடந்துள்ளன.

இந்தத் தாக்குதல்களை எப்படிப் புரிந்து கொள்வது, இதன் பின்னணி என்ன என்பதுதான் முதன்மையான கேள்வி. கர்நாடகாவில் பார்ப்பனர்கள் சாப்பிட்ட எச்சில் இலையில் தலித்துகள் உருண்டு ‘அங்கப் பிரதட்சணம்’ செய்வது; வீடு குடிபுகுவது உள்ளிட்ட பல காரியங்களுக்கு நரபலி கொடுப்பது; தலித்துகள் இன்னும் தீண்டத்தாகதவர்களாக நடத்தப்படுவது போன்ற அநீதிகள், சாதித் தீண்டாமைக் கொடுமைகள் கொடிக்கட்டி பறக்கின்றது கர்நாடகாவில்.

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. தலைமையிலான இந்து மதவெறியர்கள் லவ் ஜிகாத் என்ற பெயரில் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது; விடுதலைப் போராட்ட வீரர் திப்புவை அவமானப் படுத்துவது; ஊர்வலங்கள், கலாச்சார விழாக்கள் என்ற போர்வையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் களை நடத்துவது என்பன அன்றாட வாடிக்கையாக உள்ளன.

இரும்புத்தாது கொள்ளையர்களான ரெட்டி சகோதரர்களின் ஊழல்கள், சட்ட மன்றத்திலேயே ஆபாச படம் பார்த்த பா.ஜ.க. எம்.எல்.ஏ., மனைவி என்று சொல்லி பெண்களை வெளிநாடுகளுக்கு கடத்திய பா.ஜ.க. எம்.பி, பெல்லாரி உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை இருப்புத்தாதுக்காக ஜிண்டாலுக்கு தாரைவார்த்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா என்று பா.ஜ.க. கும்பல் ஆட்சியில் இருந்த போது அடித்த கொள்ளைகள், செய்த சமூக விரோத செயல்கள், ஊழல்கள் ஏராளம் ஏராளம்.

கர்நாடகாவில் நிலவும் இந்த மூடத்தனங்களையும் பிற்போக்கு பாசிசத்தையும் எதிர்த்து பல தளங்களில் மக்கள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இப்படி போராடிக் கொண்டிருக்கும் மக்களுக்கு ஒரு அடைக்களமாகவும், அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மையமாகவும் தான் ‘கௌரி லங்கேஷ்’ என்ற பெயரில் பத்திரிகையை நடத்தி வந்தார் கௌரி லங்கேஷ்.

பார்ப்பன பயங்கரவாதம் என்று சொல்வதற்கே முற்போக்காளர்கள் அஞ்சும் வேளையில் பார்ப்பனியத்தை பெரியாருக்கே உரிய துணிவுடன் தோலுரித்தார். ஊழல்களை தொடர்ந்து அம்பலப்படுத்தினார். தனியார்மயத்தினால் ஏற்படும் அழிவுகளைத் தொடர்ந்து விமர்சித்து வந்தார். சிறுபான்மை, தலித் மற்றும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து களத்திலும் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளார். இவரது சமரசமற்ற போராட்டத்தின் எதிர்வினையாக இந்து மதவெறியர்களால் பலமுறை மிரட்டல்களுக்கு உள்ளாகியுள்ளார். இறுதியில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்!

சமத்துவத்தையும் ஜனநாயகத்தையும் விரும்புகின்றவர்கள் இந்தப் படுகொலைக்கு எதிராக கை கோர்க்க வேண்டும். எதிரிகளான இந்து மதவெறி பயங்கரவாதிகளை மோதி வீழ்த்த வேண்டும். அந்த வகையிலான முயற்சிகள் இன்றி மென்மையான அணுகுமுறைகள் அனைத்தும் இந்து மதவெறியர்களை வளர்க்கத் தான் செய்துள்ளது என்பதற்கு மேற்குவங்கம், கேரளம் போன்ற மாநிலங்களே சாட்சி. கர்நாட காவில் கூட காங்கிரசு ஆட்சியில் இருந்தும் இந்துமதவெறியர்களின் அட்டூழியங்களை தடுக்க இயலவில்லை. கண்கண்ட இந்த உண்மையை உணர்ந்து புரட்சிகர,  மதசார்பற்ற, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஓரணியில் திரளவேண்டும்.

கௌரி, கல்புர்கி ஆகியோருக்கு முன்பு கோவிந்த் பன்சாரே, தாபோல்கர் போன்ற முற்போக்காளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். கொலைகளையும் அழித்தொழிப்புகளையும், தீவைப்புகளையும் நிகழ்த்துவதன் மூலம் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறித்து பாசிசத்தை நிலை நாட்டிவிடலாமென்ற இந்து மதவெறியர்களின் கனவு என்றுமே நனவாகப் போவதில்லை.

இந்தியா முழுவதும் உழைக்கும் மக்கள் மீது பணமதிப்பிழக்க நடவடிக்கை, ஜி.எஸ்.டி., நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்ற பல்வேறு திட்டங்களைத் திணித்துவரும் கார்ப்பரேட்டுகளின் அடிமை மோடியும் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ் -ம் மக்களைப் பிளவுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதம்தான்  பிரித்தாளும் சூழ்ச்சி – இந்து மதவெறி. இந்தப் பிரித்தாளும் சூழ்ச்சிக்கும் இந்து மதவெறி பொய்யுரைகளுக்கும் பலியாகாமல் இறுதிவரை உறுதியுடன் போராட ஒன்றிணைவோம்!

  • பார்ப்பன இந்துமதவெறி பயங்கரவாதத்தையும் ஆர்.எஸ்.எஸ். – பி.ஜே.பி. -யின் சமூக விரோத நடவடிக்கைகளையும் துணிவுடன் எதிர்த்த கர்நாடக பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் இந்துமதவெறியர்களால் சுட்டுக்கொலை!
  • முற்போக்காளர்களை அழிப்பதன் மூலம் இந்துமதவெறிக்கு எதிரான உணர்வை மாய்த்துவிட முடியாது!
  • பார்ப்பன பயங்கரவாதத்தை முறியடிக்க புரட்சிகர, ஜனநாயக சக்திகள் அனைவரும் ஒன்றிணைந்து போராடுவோம்!

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
கிருஷ்ணகிரி-தருமபுரி-சேலம் மாவட்டங்கள்
தொடர்புக்கு: 97880 11784.  

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

விரைவில் வருகிறது ! சாமியார் பட்டத்துக்கு நீட் தேர்வு !

5

ராம் ரகீம் விவகாரத்தையொட்டி, அகில பாரத அகாரா பரிசத் என்ற இந்து சாமியார்கள் சங்கம் 14 சாமியார்களின் பெயரை வெளியிட்டு அவர்களை போலிகள் என்று அறிவித்திருக்கிறது. தீபாவளிக்குப் பிறகு மேலும் 28 போலி சாமியார்களின் பட்டியலை வெளியிடவிருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

இந்த பட்டியலை மத்திய, மாநில அரசுகளுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் அனுப்ப இருப்பதாகவும், இத்தகைய போலி சாமியார்களின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும் விதத்தில் சட்டம் இயற்றுமாறு கோரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார் அனைத்திந்திய சாமியார் சங்க தலைவர் சுவாமி நரேந்திர கிரி.

ராம் ரகீம் விவகாரத்தால் சாமியார்கள் எந்த அளவுக்கு தீவிரமான மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பார்கள் என்பதை இந்த தீர்மானங்களைப் பார்க்கும்போது புரிந்து கொள்ள முடிகிறது. இந்த சாமியார் சங்க அறிக்கையை சீரியசாக அமல்படுத்துவதற்கு இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி போன்ற இயக்கங்கள் போராடவேண்டும் என்பதே நமது விருப்பம். இருந்த போதிலும் இது தொடர்பாக சில அடிப்படையான சந்தேகங்கள் இருப்பதால் அவற்றை சாமியார் சங்கத்திடம் தெளிவு படுத்திக் கொள்ள விரும்புகிறோம்.

முதலாவதாக சட்ட சிக்கல்

ராம் ரகீம் மீது விசாரணை முடிந்து “குற்றவாளி” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறார். எத்தனை சிறுமிகளை ரேப் செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு இருந்தாலும், ஆசாராம் பாபு மீது விசாரணையே இன்னும் தொடங்கவில்லை.

அவ்வாறு இருக்கும்போது அவரைப் போலி சாமியார் என்று அறிவிப்பது நியாயமா? இது சட்டவிரோதமல்லவா? ராம் ரகீம் மீது ரேப் கேஸ்கள், கொலை கேஸ்கள் இருந்த நிலையிலும் மோடிஜி, அமித்ஷா ஜி, பகவத் ஜி போன்ற பல ஜி க்களும் அவருக்கு மரியாதை செலுத்தியிருக்கிறார்கள். இவர்களெல்லாம் விவரம் தெரியாதவர்களா?
அதே நேரத்தில் நித்தியானந்தாவை போலி சாமியார் என்று அவசரப்பட்டு நீங்கள் அறிவிக்காதது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது.

தற்போது ராம் ரகீமுக்கு கீழ் கோர்ட் தான் தண்டனை விதித்திருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் ஒரு குமாரசாமி அவரை விடுதலை செய்து விட்டால், நீதிக்குத் தலை வணங்கி, ராம் ரகீம் சாமியாரை போலிகள் பட்டியலிலிருந்து எடுத்து விடுவீர்கள் அல்லவா?

இரண்டாவதாக இலக்கணச் சிக்கல்

நம் நாட்டில் இல்லறத்துக்கு இலக்கணம் உள்ளது. துறவறத்துக்குத்தான் இல்லை.

சாமியார் எனப்படுபவர் யார்? சாமியார் என்பவருக்கு மனைவி மக்கள் இருக்கலாமா? கூடாது என்பது உங்கள் கருத்தாக இருக்கும் பட்சத்தில், பிள்ளைகளுக்கு ஆடம்பரமாக திருமணம் செய்து வைத்து அமோகமாக வாழ்க்கை நடத்தி வரும், சத்குரு ஜக்கி வாசுதேவ் பெயர் உங்களுடைய போலி சாமியார் பட்டியலில் இடம் பெறவில்லையே ஏன்?

கட்டிப்புடி வைத்தியம் “ராதே மா” வை போலி என்று அறிவித்திருக்கிறீர்கள், அதே காரியத்தை செய்து வரும் அமிருதானந்த மாயியை அவ்வாறு அறிவிக்கவில்லையே ஏன்?

சாமியார் கஞ்சா குடிக்கலாமா, சரக்கடிக்கலாமா? அடிக்கலாமெனில் எந்த அளவு அடிக்கலாம்? எத்தனை வேளை சாப்பிடலாம்? ஏ.சி ரூம், ஏ.சி காருக்கு அனுமதி உண்டா? உடை உண்டா, கிடையாதா? துணி என்ன நிறம்?
முதல்வர் பதவி வகிக்கும் யோகி ஆதித்யநாத் போன்றோர் துறவிகளாகத்தான் கருதப்படுவார்களா? இதற்கெல்லாம் விளக்கம் தேவை.

மூன்றாவதாக ஒரே தேசம், ஒரே சட்டம் என்ற பிரச்சினை

சாமியார் என்ற பட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதால்,இனி யார் சாமியார் ஆக விரும்பினாலும், அவரை அனைத்திந்திய அகாரா பரிசத்தின் தேர்வை எதிர்கொள்ள வேண்டும் என்றும் அதன் பிறகுதான் சாமியார் பட்டம் வழங்கப்படவேண்டும் என்று சாமியார்கள் சங்கம் கருதுவதாக, விசுவ இந்து பரிசத்தின் இணை பொதுச்செயலாளர் சுரேந்திர ஜெயின் கூறியிருக்கிறார்.

கல்வியிலாவது சி.பி.எஸ்.இ – ஸ்டேட் போர்டு என்று இரண்டு பிரிவுகள்தான் உள்ளன. அதில் நீட் கொண்டுவருவது சுலபம். ஹிந்து மதத்தைப் பொருத்தவரை பல கடவுள்கள், பல சம்பிரதாயங்கள் உள்ளன.
வைணவத்தை எடுத்துக் கொண்டால் அதில் ஸ்டாண்டு வைத்தவர்கள், வைக்காதவர்கள் என்று இரண்டு பிரிவுகள் உள்ளன. ஜீயர் பதவி என்பது “போஸ்ட் ரிடையர்மென்ட் பெனிபிட்”டாக ஐயங்கார்களுக்கு வழங்கப்படுகிறது. இவர்களெல்லாம் தேர்வை எதிர்கொள்ள வேண்டுமா?

சைவத்தை பொருத்தவரை, காஞ்சி, சிருங்கேரி, பூரி என்று பல ஜெகத்குருக்கள் இருக்கிறார்கள். இருப்பது ஒரு உலகம். இதற்கு பல ஜெகத்குருக்கள்! ரவிசங்கர்ஜியை எடுத்துக் கொண்டால், அவர் ஒரு ஆள், ரெண்டு ஸ்ரீ போட்டுக்கொள்கிறார். அந்த ஆள் பிராணாயாமத்துக்கு பேடன்ட் வாங்கி வைத்திருக்கிறார். ராம்தேவ் பலசரக்கு கடை நடத்துகிறார். இன்னொருத்தர் நாட்டு மருந்து விற்கிறார்.

நரமாமிசம் தின்னும் அகோரியும் சைவம், தயிர்சாத சங்கராச்சாரியாரும் சைவம், இப்படி சைவமே அசைவமாக இருக்கும் போது,  இவர்கள் அத்தனை பேருக்கும் பொதுவாக என்ன ’சிலபஸ்’ வைப்பது? என்ன மொழியில் கேள்வி கேட்பது? எழுதப்படிக்கவே தெரியாத சாமியார்களுக்கு எப்படி பரிட்சை வைப்பது? ஒரே குழப்பமாக இருக்கிறது.

“யூனிபார்ம் சிவில் கோடு” கொண்டுவந்து எல்லா மதத்துக் காரனுக்கும் கல்யாணம் முதல் கருமாதி வரை ஒரே சட்டம்தான் என்று சொல்லி விடலாம். பிரச்சினை வந்தாலும் அடித்து உதைத்து சமாளித்து விடலாம்.
முற்றும் துறந்தவர்கள் விசயம் அப்படிப்பட்டதல்ல. “ஒரே தேசம் – ஒரே ஹிந்து – ஒரே சாமியார்” என்று சட்டம் கொண்டு வந்தால் திரும்பிய பக்கமெல்லாம் லிங்காயத்து பிரச்சினை போல இது கிளம்பி விடுமோ என்று பயமாக இருக்கிறது.

ஹிந்து மதத்தின் கவுரவத்தைக் காப்பாற்றுவதற்காக எடுக்கும் முயற்சியில், ஹிந்து மதமே துண்டு துண்டாக சிதறி விடும் அபாயமும் இருக்கிறது. தேசிய நீட் தேர்வு என்று அறிவித்த உடனேயே பிரச்சினை வந்து விடும் என்று பயமாக இருக்கிறது.

நான்காவதாக, சாமியார் மதிப்பு நீக்கம்

இனி புதிதாக சாமியார் ஆக விரும்புகிறவர்களுக்கு, அகில பாரத அகாரா பரிசத் நீட் தேர்வு நடத்தட்டும். இருப்பவர்களில் போலிகளை எப்படி அடையாளம் காண்பது, எப்படி களையெடுப்பது?

ஏற்கெனவே உள்ள சாமியார்களில் 14 பேரை போலிகள் என்று வெளியிட்டிருக்கிறீர்கள். தீபாவளிக்கு பிறகு ஒரு லிஸ்ட் வெளியிடுவதாக சொல்லியிருக்கிறீர்கள். இதெல்லாம் ஜுஜுபி. கும்பமேளா என்றால் பத்தாயிரக்கணக்கில் புற்றீசல் மாதிரி சாமியார் கூட்டம் வருகிறது.

இப்படி தவணை முறையில் செய்வதை விட, மோடிஜி செய்த டிமானிடைசேஷன் போல, வர இருக்கும் தீபாவளியன்றோ, விஜயதசமி அன்றோ இரவு 12 மணி முதல் தேசம் முழுவதும் உள்ள பழைய சாமியார்களெல்லாம் “செல்லாத சாமியார்கள்” என்று அறிவித்து விடலாம்.

ஒரு மாத காலத்துக்குள் அவர்களெல்லாம் அகாராவின் முன் ஆஜராக வேண்டும். தங்கள் சொத்து, மனைவி மக்கள் குறித்த விவரங்கள், நல்ல, கெட்ட பழக்கங்கள், சிஷ்யர்கள், சிஷ்யைகள் குறித்த விவரங்கள், தங்கள் மீதுள்ள கிரிமினல் வழக்குகள் போன்ற எல்லா விவரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும்.

அவற்றையெல்லாம் போலீசு – உளவுத்துறை – இன்கம்டாக்ஸ் டிபார்ட்மென்டுகள் மூலம் பரிசீலித்து கருப்பு சாமியார்களை அடையாளம் கண்டு விடலாம். அவர்கள் செய்த தப்புக்கு உரிய வரியை அகாராவுக்கு கட்டினால், அவர்களுக்கு சாமியார் லைசன்ஸ் கொடுத்து வெள்ளை சாமியார் ஆக்கி விடலாம் !

– தொரட்டி


இந்தக் கட்டுரை உங்களுக்குப் பிடித்திருக்கிறதா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

மெரினாவின் அலைகள் ஓயாது ! – கவிதை

1

இதுதான்டா தமிழ்நாடு !

போராடு!
இது தமிழ்நாடு..
அனிதாவின் உயிர் நம்மோடு
அடங்காதே மாணவனே, போராடு!

நோட்டைத் திணித்தவன்தான்
நீட்டைத் திணிப்பதும்
மாட்டைப் பறித்தவன்தான்
நம் ஏட்டைப் பறிப்பதும்…
மண்டியிட்டு வாழ்வது அவமானம்
மாணவர் போராட்டம் தன்மானம்

குடிப்பதற்கு டாஸ்மாக்கு
அடிப்பதற்கு போலீசு
தில்லிக்கு அடிபணிய
ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்.
திரும்பிய பக்கமெல்லாம்
பொய் வழக்கு, கேசு..

போராடும் மாணவர்கள் கண்ணியம் !
புடிக்க வந்த பெண் போலீசின் மேல்
ஆண் உதவி கமிசனரின் பிராக்டீசு !

அருவருப்பில் அடங்கிக்கிடக்க
அவர்களா நாம்?
அடிமைக் கருவறுக்க
களம் புகுந்த,
பூலித்தேவன், ஒண்டிவீரன், கட்டபொம்மன்
மருது, குயிலி, ஜான்சிராணி வாரிசு!

கல்புர்கி, தபோல்கர் வரிசையில்
கவுரி லங்கேஷ் படுகொலை …
சம்புகன், ஏகலைவன் வரிசையில்
அனிதாவும் படுகொலை…

பசுவுக்கு கோசாலை
பஞ்சமருக்கு சிறைச்சாலை
கொலைகார ஆர்.எஸ்.எஸ்.-க்கு
தேசிய நெடுஞ்சாலை…

துப்பாக்கியுடன் சங்கப் பரிவாரம்
துப்பட்டாவுடன் போராடும்
நம்மிடம் வந்து அரசு அதிகாரம்!

ராம ராஜியத்திற்கு எதிரான
ராவண காவியம் படைப்போம்!

எத்தனை படைகளைக் குவித்தாலும்
மெரினாவின் அலைகள் ஓயாது!
தமுக்கத்தின் ஈரம் காயாது!
வ.உ.சி. திடல் சாயாது!
உரிமையின் மூச்சு அடங்காது!

-துரை. சண்முகம்
_____________

இந்த கவிதை உங்களுக்கு பிடித்திருக்கிறதா?

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2017 மின் நூல்

0

கோபம், அன்பு, கண்ணீர், இரக்கம் – இவையெல்லாம் மனித உணர்ச்சிகள். உணர்ச்சி என்பது எந்திரங்களுக்கோ விலங்குகளுக்கோ சாத்தியமற்றது. சமூக விலங்காக மாறியதன் காரணமாக மனிதனுக்கு மட்டுமே சாத்தியமானது.

மேட்ரிக்ஸ் படத்தில் மனிதர்களின் உணர்ச்சிவயப்படுதலை முட்டாள்தனம் என்று எந்திர மனிதர்களான ரோபோக்கள் கேலி செய்யும். இன்றைக்கு நம்முடைய உணர்ச்சிகளை ஆளும் முதலாளித்துவ ஊடகங்கள், அந்த ரோபோக்களின் கூற்றை உண்மையாக்கி வருகின்றன.

ரேசன் அரிசிக்காக நடையாய் நடப்பவனை, ’கோடீஸ்வரன்’ ஆகலாம் என்று விஜய் டிவி கண் சிமிட்டி அழைக்கின்றது. பாத்ரூம் பாடகர்கள் பார் போற்றும் பாடகராகலாம் என ’சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சி நம்மை நம்பவைக்கிறது. பக்கத்து வீட்டு படுக்கையறை விவகாரங்களை எட்டிப்பார்க்க அழைக்கிறது, ’சொல்வதெல்லாம் உண்மை’.

அமீர்கானின் ’சத்யமேவ ஜெயதே’ இந்தியாவின் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்த அரங்க நிகழ்வு என்று வாசகர் கடிதங்கள் குவிகின்றன. டி.வி சீரியல்களின் குடும்பச் சண்டைகளை ஆர்வத்துடன் பின்தொடரும் அனிச்சை விலங்குகளாக மக்களை மாற்றிவிட்டன தொலைக்காட்சிகள்.

அரசியலிலும் சமூகத்திலும் பல வில்லன்கள், வில்லிகள் நம்மை அழுத்திக் கொண் டிருக்கிறார்கள். பிக் பாஸ் ஜெயலலிதா செத்துப்போனதன் விளைவாக, அவரது வாரிசுகள் போடும் சண்டையில் நாடே நாறிக் கொண்டிருக்கிறது. இது நம்மைக் கொள்ளையிடும் அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொள்வதற்காக அவர்கள் நடத்திக் கொண்டிருக்கும் யுத்தம். அரசியல் ஈடுபாடற்ற பாமரர்கள் விஜய் டிவியின் பிக் பாஸை பார்த்துக் கொண்டிருக்க, அரசியல் ஆர்வலர்கள் எல்லா சேனல்களிலும் அன்றாடம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ’யார் எந்த அணிக்கு தாவுவார்கள்’ என்ற கேவலத்தில் தம்மையும் அறியாமல் மூழ்கடிக்கப்பட்டு வருகிறார்கள்.

எதார்த்தம் சார்ந்த நிகழ்ச்சிகள் என்று அழைக்கப்படும் ரியாலிட்டி ஷோ-க்கள், நம்மை மெய்யுலகில் இருந்து துண்டிக்கின்றன. மெய்யுலகில் நடைபெறும் அ.தி.மு.க கொள்ளைக்கூட்ட மோதலோ, மெல்ல மெல்ல ஒரு ரியாலிட்டி ஷோவாக மாறிவருகிறது.

நிழலை நிஜமாகக் கருதி கண்ணீர் விடுவதற்கும், நிஜத்தை நிழலெனக் கருதி சிரிப்பதற்கும் பழக்கப்படுத்தப்படுகிறோம். மெல்ல மனிதத் தன்மையை மறந்து வருகிறோம்.

ரியாலிட்டி ஷோக்களின் உளவியலை ஆய்வு செய்து மக்களை எழுப்ப முயல்கிறது இந்த வெளியீடு!

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2017 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • கோடீஸ்வரன் மூளை தயார் முண்டங்கள் தயாரா?
  • ரோல்ப் ஹாரிஸ் : குழந்தைகளை சிதைத்த டிவி பிரபலம்
  • என்.டி.டிவி – ஏ.சி நீல்சன் : கல்லாப் பெட்டிச் சண்டை
  • சத்யமேவ ஜெயதே ! அமீர்கானின் SMS புரட்சி
  • டிவி சீரியல்கள் எப்படித் தயாராகின்றன?
  • சூப்பர் சிங்கர் : தமிழகத்தின் மாபெரும் உணர்ச்சிச் சுரண்டல்
  • சொல்வதெல்லாம் பொய்! செய்வதெல்லாம் ஃபிராடு!
  • பிக்பாஸ் வீட்டில் நீங்கள் இல்லாமலா?
  • ஒவியாதான் பத்ரி சேஷாத்ரி ! காயத்ரிதான் ஹெச்.ராஜா !

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

20.00Read more

20.00Read more

கௌரி லங்கேஷ் படுகொலை இது காவிகளின் தேசம் ! – கருத்துப்படம்

7

தாத்ரி, உனா  – உண்ணத் தடை !
நெடுவாசல், கதிராமங்கலம் – உயிர் வாழத் தடை !
நீட்,  புதிய கல்விக் கொள்கை – படிக்கத் தடை !
பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி  – சிறுதொழில் செய்யத் தடை !
எதையும் பேசாதே, எழுதாதே  தொடரும் படுகொலை !

ஓ…   இது காவிகளின் தேசம் !

நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி தொடர்ந்து கௌரி லங்கேஷ்

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்:

_____________

பார்ப்பனப் பாசிசத்திற்கெதிராக தொடர்ந்து போராடும் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அனிதா : தமிழகத்தைப் பற்ற வைத்த நெருப்புத் துண்டு ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !

1

னிதாவின் மரணத்தைத் தொடர்ந்து கடலூர் பெரியார் கல்லூரி மாணவர்கள் கடந்த  2017 செப்டம்பர் 4 மற்றும் 5 ஆகிய இரண்டு நாட்கள்  புமாஇமு ஒருங்கினைப்பாளர் தோழர் நடேசன் தலைமையில் போராட்டத்தைத் தொடங்கினர். தோழர் வெங்கடேசன் தலைமையில் வகுப்பைப் புறக்கணித்து சுமார் 500 -க்கும் மேற்பட்ட மாணவர்கள் திரண்டு அனிதாவிற்கு மவுன அஞ்சலி செலுத்தி, நீட்டுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

புதிய கல்விக் கொள்கையும், நீட்டும் வேறுவேறு அல்ல என்றும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்த்ப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமையைப் பறித்து குலத்தொழிலைக் கொண்டு வரும் திட்டம் என்றும், ஆசிரியர் மாணவர் பெற்றோர்கள் ஒன்றிணைந்த கமிட்டியின் அதிகாரத்தை நிறுவுவதே இவற்றை ஒழிப்பதற்கான தீர்வாகும் என்றும்  முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தன்னுரிமையைப் பாதுகாக்க தமிழினமே திரண்டெழு ! என்ற புமாஇமு -வின் துண்டுப் பிரசுரங்கள் போராட்டத்தின் போது வினியோகிக்கப்பட்டன. அதை மாணவர்கள் ஆர்வமாக வாங்கிப் படித்தனர். கல்லூரி ஆசிரியர்கள் சிலர் தோழர்களின் முழக்கங்கள் அருமையாக இருக்கின்றன என்று கூறினார்கள்.

போலீசு போராட்டத்தை முடிக்கச் சொல்லி மாணவர்களைக் கலைக்க முயன்றது. அதையும் தாண்டி மாணவர்கள் போராட்டத்தில் உறுதியாக நின்றனர். சுமார் ஒரு மணி நேரம் இப்போராட்டம் நடந்தது.

மேலும் கிருஷ்ணசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் மூன்றாவது நாளாக இன்றும் (06.09.2017)  புமாஇமு ஒருங்கிணைப்பில் சுமார் 400 -க்கும் மேற்பட்ட மானவர்களைத் திரட்டி உள்ளிருப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. நிர்வாகத்தின் மிரட்டலுக்கு கொஞ்சம் கூட அடிபனியாமல் மாணவர்கள் தீரத்துடன் நின்று போராடினார்கள்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
கடலூர்.

***

ருமபுரி அரசு கலைக் கல்லூரி மாணவர்களை நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்காக ஒருங்கிணைக்க முயன்ற புமாஇமு தோழர்கள் அன்பு மற்றும் மலர்கொடி ஆகியோரை (05.09.2017) நேற்று காவல்துறை கைது செய்து மாலை வரை தடுத்து வைத்ததன் மூலம் நேற்றைய போராட்டத்திற்கு தடையை ஏற்படுத்தியது போலீசு.

இன்று 06.09.2017 காலை மீண்டும் புமாஇமு தோழர்கள் மற்றும் அனைத்து கல்லூரி மாணவர்கள் சார்பில் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டு தர்மபுரி அரசு கலைக் கல்லூரி முன்பு போராட்டம் தொடங்கப்பட்டது. மீண்டும் போலீசு மாணவர்களை அணி திரள விடாமல் தடுக்க முயன்றது. அதற்காக பீதியூட்டும் வேலைகளில் இறங்கியது.

புமாஇமு என்பது தடை செய்யப்பட்ட அமைப்பு என்றும், போராட்டங்களால் உங்களுக்குத் தான் பாதிப்பு ஏற்படும் என்றும் கூறிக் கலைக்க முயற்சித்தது. கல்லூரி நிர்வாகமும் போலீசுடன் சேர்ந்து கொண்டு பிராக்டிக்கல் மார்கில் கைவைப்பேன் என மிரட்டியது. ஆனால் இந்த மிரட்டல்களுக்கு அஞ்சாமல் சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக மாணவர்கள் முழக்கங்களை எழுப்பி தங்களது உணர்வை வெளிப்படுத்தினர்.

தகவல்:
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
தர்மபுரி.

***

ண்ருட்டி அரசு ஐ.டி.ஐ மாணவர்கள் நீட்டுக்கு எதிராகவும்! மாணவி அனிதாவின் படுகொலைக்கு நீதி கேட்டும் 06.09.2017 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கடலூர்.

***

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்கள் நீட்டுக்கு எதிராக வகுப்பை புறக்கணித்து, அனைத்து பள்ளி – கல்லூரி மாணவர் ஒருங்கிணைப்பின் கீழ் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கும்பகோணம் அரசுக் கல்லூரியில் தொடர்ந்து போராடிவரும் மாணவர்களுடன் நேட்டிவ் பள்ளி மாணவர்களும், நீட்டுக்கு எதிராக வகுப்புகளை புறக்கணித்து சுமார் 1000 -க்கும் மேற்ப்பட்வர்கள் சாலையில், பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் போராட்டம் கண்டு கும்பகோணம் நகரமே போராட்ட உணர்வை பெற்றது.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கும்பகோணம்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது  வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நீட்: ”அடிபணியாதே” – அனிதா சொல்லிச் சென்ற செய்தி !

2

நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழகத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதில் நீட் எதிர்ப்பாளர்களும் கூட பல்வேறு விதமான கருத்துக்களை முன் வைக்கின்றனர். இந்த ஆண்டு (2017)  மட்டுமாவது விலக்கு அளிக்க வேண்டும் என்றும் தமிழகத்தின் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும் என்றும் பலரும் கூறி வருகின்றனர்.

இந்த வாதங்களை உடைத்து, ’நீட்’-டின் பின்னணி குறித்தும், நீட்டை ஆதரிப்பவர்கள் கூறும் ’தரம்’ குறித்தும்,  தரத்தைப் பற்றிப் பேசுபவர்களின் தகுதியைக் குறித்தும் பின் வரும் காணொளிகளில் தோலுரித்திருக்கிறார் தோழர் மருதையன்.

ஏற்கனவே வெளியிடப்பட்ட இந்த முழுமையான காணொளியையே , சமூக வலைத்தளங்களில் உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து கொள்வதற்கு ஏற்றாற் போல் ஐந்து சிறு காணொளிகளாகப் பிரித்துப்  பதிவேற்றியிருக்கிறோம் !

பாருங்கள் ! – அனைவரிடமும் பகிருங்கள் !

நீட்: பாஜக நாக்குமாறிகள்! – தோழர் மருதையன் உரை பாகம் 1

மாணவன் தகுதி பற்றிப் பேச உங்களுக்குத் தகுதி உண்டா மோடி? – தோழர் மருதையன் உரை பாகம் 2

நீதிபதிகளின் தரத்தை நிர்ணயிக்க நீட் தேர்வு உண்டா? – தோழர் மருதையன் உரை பாகம் 3

மணல் கொள்ளை போல இது மெடிகல் சீட் கொள்ளை! – தோழர் மருதையன் உரை பாகம் 4

அனிதாவும் கட்டபொம்மனும் கூறும் செய்தி – “ அடிபணியாதே! ” – தோழர் மருதையன் உரை பாகம் 5

 

இந்த வீடியோக்களை தரவிரக்கம் செய்ய கீழே உள்ள சுட்டிகளை அழுத்தவும் :

_____________

இந்தக் காணொளிகள் உங்களுக்குப் பிடித்திருக்கின்றனவா?
உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அனிதா படுகொலை : சென்னை, கோவை பள்ளி, கல்லூரி மாணவர்கள் போராட்டம் !

0

மாணவி அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டி சென்னை மதுரவாயல் பள்ளி மாணவர்கள் நேற்று (05.09.2017) வகுப்புக்களைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலையில் பேரணியாக செல்ல முயன்ற மாணவர்களை தடுத்தது போலீசு.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.

***

கோவை இன்ஃபோ பொறியியல் கல்லூரி மாணவர்கள் 05.09.2017 அன்று கோவில்பாளையம் பகுதியில் போராட்டம் நடத்தினர். பல நூற்றுக்கணக்காண மாணவர்கள் கலந்து கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும், மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மோடி – எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் முழக்கம் எழுப்பினர்.

 

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
கோவை.

***

சென்னை நந்தனம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் நேற்று (05.09.2017) மாணவி அனிதா-வை படுகொலை செய்த மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
சென்னை.
_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

நீட்டை ரத்து செய் – தமிழகம் முழுவதும் தொடரும் மாணவர் போராட்டங்கள் !

1

மாணவி அனிதாவின் மரணத்துக்கு காரணமான மோடி மற்றும் எடப்பாடி அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் மாணவர்கள் தன்னெழுச்சியாகப் போராடத்து வங்கியுள்ளனர். தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்றும் போராட்டம் தொடர்கிறது. தமிழகம் மீண்டும் ஒரு டெல்லிக்கட்டை நடத்தி வருகிறது!

சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தச் செல்லும் மாணவர்கள்.

கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களின் பேரணி மற்றும் போராட்டம்.

சென்னை லாயோலா கல்லூரி மாணவர்களின் போராட்டம்.

நந்தனம் அரசுக் கல்லூரி மற்றும் நுங்கம்பாக்கம் லயோலா மாணவர்கள் போராட்டம்.

நெல்லை அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களின் உள்ளிருப்புப் போராட்டம் !

போராட்டத்தில் ஈடுபடும் சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள்.

பெரம்பலூரில் மாணவி அனிதாவுக்காக மாணவர்கள் நடத்தும் போராட்டம்.

நெல்லை தனியார் கல்லூரி மாணவிகள் போராட்டம்.

திருவாரூர் அரசுக் கல்லூரி மாணவர்களின் போராட்டம்.

 

திருச்சி ஈ.வே.ரா. கல்லூரி மாணவர்கள் போராட்டம்.

படங்கள் – நன்றி : சன் செய்திகள், நியூஸ் 18, சத்யம் தொலைக்காட்சி, நியூஸ் 7.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

கும்பகோணம் – திருச்சியில் – தொடரும் மாணவர் போராட்டம் !

0

மாணவி அனிதாவின் படுகொலையைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று (05.09.2017) இரண்டாவது நாளாக தங்களது போராட்டத்தைத் துவங்கியுள்ளனர். இந்தப் போராட்டத்தில் மாணவிகளும் பெருமளவில் கலந்து கொண்டுள்ளனர்.

கும்பகோணம் வருமானவரித்துறை அலுவலகத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாகச் சென்றனர். ஐம்பதுக்கும் மேற்பட்ட  மாணவியரும் இந்தப் பேரணியில் பங்கேற்றனர். ஆனால் போலீசு மாணவர்களைப் பாதியில் தடுத்து நிறுத்தியது. இதனைத் தொடர்ந்து மாணவ – மாணவியர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

பேரணியில் மாணவியர்
பேரணியில் மாணவர்கள்
பேரணியில் மாணவர்கள்
சாலை மறியல்

***

திருச்சி ஈ.வெ.ரா. கல்லூரி மாணவர்கள் இன்று (05.09.2017) காலை மீண்டும் தங்களது போராட்டத்தை துவங்கினர். ஆனால் பாஜக -வின் மானவர் அமைப்பான ஏ.பி.வி.பி. -யினர் மாணவர்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் நீட் தேர்வை ஆதரித்து மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளனர். எப்படியாவது கூட்டத்தை கலைக்க வேண்டும் என முயற்சி செய்தது ஏ.பி.வி.பி. கும்பல்.

இந்நிலையில் மாணவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏ.பி.வி.பி.-யினரை விரட்டியுள்ளனர். தற்போது புமாஇமு தோழர்கள் மாணவர்கள் மத்தியில் நீட் தேர்வின் அரசியல் பற்றியும், ஏ.பி.வி.பி. காலிகளின் இந்துத்துவ அரசியலையும் அம்பலப்படுத்திவருகின்றனர்.

மேலும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் கலைக்குழு தோழர்கள் போராடும் மாண்வர்களுக்கு உணர்வூட்டும் விதமாக புரட்சிகர பாடல்களைப் பாடிவருகின்றனர்.

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி.
_____________

  • உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அண்ணாமலைப் பல்கலை – தர்மபுரியில் கைது – போலீஸ் அராஜகம் !

0

னிதாவின் ‘படுகொலைக்குக்’ காரணமான மோடி- எடப்பாடி கும்பலைக் கண்டித்தும், நீட் தேர்வை நிரந்தரமாக இரத்து செய்யக் கோரியும் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று (04.09.2017) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று மாணவர்களை கலைக்க ஜேசிபி வாகனத்தைக் கொண்டு வந்து மிரட்டிப் பார்த்தது காவல்துறை. மாணவரகள் கலைந்து செல்லாமல், எதிர்த்து நின்றனர். பின்வாங்கியது போலீசு. இன்றும் (05.09.2017) காலையில் போராட்டத்தைத் தொடங்கிய மாணவர்களைக் கலைக்க, முன்னணியாளர்கள் 6 பேரைக் கைது செய்தது போலீசு. அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் மற்ற மாணவர்களையும் மிரட்டிக் கலைக்க முயற்சித்து வருகிறது.


***

தர்மபுரியில் புமாஇமு தோழர்கள் கைது !

மாணவி அனிதாவின் மரணத்தைத் தொடர்ந்து தமிழகத்தில் மோடி – எடப்பாடி அரசை கண்டிக்கும் விதமாகவும், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும் மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில் தர்மபுரி அரசு கலைக்கல்லூரி மாணவர்களை போராட ஒருங்கிணைக்கும் வேலையை பு.மா.இ.மு. தோழர்கள் செய்து வந்தனர். அதற்காக கல்லூரி வாயிலில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த தோழர்களைத் தடுத்தது கல்லூரி நிர்வாகம், அணிதிரளும் மாணவர்களை மிரட்டிக் கலைத்ததோடு மட்டுமல்லாமல், போலீசையும் அங்கு வரவழைத்தது.

அதன் பின்னர் தோழர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலீசு, தோழர்களைத் திரும்பச் செல்லும்படி மிரட்டியது. ஆனால் அதனை மறுத்து தங்களது கருத்தைத் தோழர்கள் வலியுறுத்திப் பேசவே தோழர்கள் மலர்கொடி மற்றும் அன்பு ஆகிய இருவரையும் கைது செய்தது போலீசு.

பகத்சிங் நினைவு நாளில் மாணவர்கள் மத்தியில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் தோழர்கள் அன்பு மற்றும் மலர்கொடி ( கோப்புப் படம் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி

____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி

அனிதா படுகொலை – நெல்லை, கும்பகோணம் மாணவர்கள் போராட்டம் !

0

னிதாவை படுகொலை செய்த மோடி – எடப்பாடி கும்பலைக் கண்டித்து கும்பகோணம் அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று 04.09.2017 போராட்டத்தில் ஈடுபட்டனர்.

***

நெல்லை சட்டக்கல்லூரி மாணவர்கள் 04.09.2017 அன்று நீட் தேர்வை ரத்து செய்யுமாறும் அனிதாவை படுகொலை செய்த மோடி – எடப்பாடி கும்பலைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள்.

_____________

உழைக்கும் மக்களின் இணையக் குரல் வினவு தளத்தை ஆதரியுங்கள் – சந்தா செலுத்துங்கள்!

சந்தா செலுத்தும் நண்பர்களுக்கு அந்த காலத்திற்குரிய வார செய்திப்பதிவு – புதிய கலாச்சாரம் – புதிய ஜனநாயகம் மின்புத்தகங்கள், நிகழ்வுகள் குறித்த அறிவித்தல்கள் அனுப்பப்படும். இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் மட்டுமே சந்தா அனுப்ப இயலும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். அனுப்புவதற்கு PayUmoney பட்டனை அழுத்தவும். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். நன்றி