Friday, July 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 52

இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!

இஸ்லாமியர் மீதான வெறுப்பு பிரச்சாரம்,
சூரத் தொகுதியில் மோசடித் தேர்தல்!

இது ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல்!

”வேண்டாம் பிஜேபி; வேண்டும் ஜனநாயகம்”
என்ற முழக்கம் வீதி தோறும் ஒலிக்கட்டும்!

22.04.2024

பத்திரிகை செய்தி

ந்த நாடு விடுதலை அடைந்ததாக சொல்லப்படுகின்ற 77 ஆண்டு கால வரலாற்றில், 1952 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை நடைபெறுகின்ற 72 ஆண்டு காலத்தில் தேர்தல் வரலாற்றில் இதுவரை எப்போதும் இல்லாத மாபெரும் மோசடிகளும் வெறுப்பு பிரச்சாரங்களும் தலைவிரித்தாடுகின்றன. தோல்வி பயத்தால் பாசிச மோடி – அமித்ஷா கும்பல் மேற்கொண்டு வரும் இந்த நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் முதல் கட்ட தேர்தல் நடந்து முடிந்தவுடன் கலவரங்களை உருவாக்குவதற்கான வெறுப்பு பேச்சுகளையும் மோசடிகளையும் நொடிக்கு ஒரு முறை அரங்கேற்றி வருகிறது பாசிச பா.ஜ.க.

“காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகளை பறித்து இஸ்லாமியர்களுக்கு கொடுத்து விடுவார்கள் என்றும் ஊடுருவியவர்கள், அதிக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள்” என்று பேசி இருப்பதெல்லாம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் தொண்டர் அல்ல. இந்த நாட்டின் பிரதமர் என்றும் மாபெரும் தலைவர் என்றும் தன்னைத்தானே வர்ணித்துக் கொள்கின்ற நரேந்திர மோடி தான் இப்படிப்பட்ட அருவருக்கத்தக்க வெறுப்பு பேச்சை பேசிய நபர்.

திட்டமிட்டு பொய்யை வெறுப்பு பிரச்சாரமாக கிளப்புவதன் மூலம் கலவரங்களை உருவாக்கி அதன் மூலம் இந்து முனைவாக்கத்தை ஏற்படுத்தி ஓட்டுகளை அறுவடை செய்ய வேண்டும் என்பதே பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் நோக்கம்.

கலவரங்களை உருவாக்குவதை அடிப்படையாக வைத்து பேசக்கூடிய நரேந்திர மோடி போன்றோரின் பேச்சுகளையும், அண்மையில் தெலுங்கானா பா.ஜ.க-வின் வேட்பாளர் ஒருவர் மசூதி மீது வில்லெறிவது போன்று செய்கை செய்தது போன்ற மத வெறி தூண்டும் நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் ஒருபோதும் தடுத்து நிறுத்துவதில்லை.


படிக்க: தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!


குஜராத் மாநிலம் சூரத் தொகுதியில் போட்டியிட மனு தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளரின் மனு கையெழுத்து இல்லை என்று சொல்லி நிராகரிக்கப்படுகிறது. சுயேட்சை வேட்பாளர்கள் அனைவரும் சொல்லி வைத்தாற்போல் ஒரே நாளில் வேட்பு மனுவை திரும்ப பெறுகிறார்கள். ஆக சூரத் தொகுதியில் பா.ஜ.க வேட்பாளரின் வேட்பு மனு மட்டும் ஏற்கப்பட்டு அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். எதற்கு இந்த நாட்டில் தேர்தல் நடத்த வேண்டும்? பா.ஜ.க-வே அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவித்து விட்டு செல்வது தான் பாக்கி.

கடந்த மாதம் 31ஆம் தேதி தில்லியின் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, இது மேட்ச் பிக்சிங் தேர்தல் என்றார். இது மேட்ச் பிக்சிங் தேர்தல் தான் என்பதை ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பாசிச நடவடிக்கைகள் துலக்கமாக எடுத்துக்காட்டுகின்றன. பாசிச ஆர்எஸ்எஸ் – பாஜகவின் உறுப்புகளாக செயல்படும் அனைத்து துறைகளுக்கும் இந்தத் தேர்தலை நடத்துவதற்கான தகுதி இருக்கிறதா என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும்.

வெறுப்பு பிரச்சாரங்களையும் மோசடிகளையும் முதலீடாக வைத்து மேற்கொள்ளப்படும் பாசிச ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வுக்கு எதிரான பரப்புரைகளை எதிர்க்கட்சிகள் மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

”வேண்டாம் பி.ஜே.பி;
வேண்டும் ஜனநாயகம்”
என்ற முழக்கம் ஒலிக்கட்டும். பாசிச பி.ஜே.பி-யின் அடக்குமுறை கோட்டை நொறுங்கட்டும்!


தோழமையுடன்,
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
99623 66321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ஓட்டுக்கு பணம் கொடுப்பது – வாங்குவது சரியா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: கட்சிகள் ஓட்டுக்குக் காசு கொடுக்கிறார்கள், மக்கள் காசுக்கு ஓட்டுப் போடுகிறார்கள் இந்த நிலைமை மாற வேண்டும் என்று பல ஜனநாயக சக்திகள் கருதுகின்றனர். ஓட்டுக்குக் காசு கொடுப்பதால் மட்டுமே பல ஆயிரம் கோடி செலவிடப்பட்டும் தமிழ்நாட்டின் தேர்தல் அரசியல் களத்தை வடநாட்டு ஊடகங்களும் பா... உள்ளிட்ட பார்ப்பன கட்சிகளும் இழிவாகப் பேசுகின்றன. ஓட்டுக்குக் காசு கொடுக்கும் நிலைமை எப்போது மாறும்?

ந்தப் பிரச்சினையிலும், கேள்வியிலும் பலவிதமான பார்வைகள் அணுகுமுறைகள் உள்ளன. ஆகையால், தமது கட்சிக்கு ஓட்டுப் போட கட்சிகள் காசு கொடுப்பது, மக்கள் அதை வாங்குவது என்ற இந்தப் பிரச்சினையை பொதுவாக மதிப்பீடு செய்வது தவறாகும்.

இன்று, ஓட்டுக்குக் காசு கொடுக்கமாட்டோம் என்று சீமான் சொல்கிறார். ஒரு காலத்தில் இராமதாசும் அப்படி சொன்னவர்தான். கமல்ஹாசன், இப்போது விஜய் போன்ற பலரும் அவ்வாறு சொல்கிறார்கள். இது ஒரு ஃபேஷனான வார்த்தையாகத்தான் இருக்கிறதே தவிர, தேர்தல் நேர்மையாக நடக்க வேண்டும் என்ற உணர்வில் இருந்து வருகின்ற கருத்துகள் அல்ல. இதனை மக்களும் நன்கறிவார்கள்.

இந்திய தேர்தல் அரசியலில், ஓட்டுக்குக் காசு கொடுக்க மாட்டோம் என்று சொல்கின்ற தலைவர்களை நேர்மையான தலைவர்களாகக் கருதுவதும் ஓட்டுக்குக் காசு வாங்கும் மக்களைப் பிழைப்புவாதிகளாகக் கருதுவதும் தவறாகும். ஒட்டுக்குக் காசு கொடுப்பதன் பின்னணியை புரிந்துக்கொள்வதன் மூலம்தான் இதை முழுமையாக புரிந்துக்கொள்ள முடியும்.

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் நமது நாட்டைக் கொள்ளையிடுவதற்கேற்ப இந்திய நிலப்பிரபுக்கள், தரகு அதிகார வர்க்க முதலாளிகளுக்கு அதிகாரம் வழங்குகின்ற வகையில் உழைக்கும் மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக உருவாக்கப்பட்டதுதான், நமது நாட்டின் அரசியல் கட்டமைப்பு. 1947 அதிகார மாற்றத்திற்குப் பின்னர், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மட்டும் கொள்ளையிடும் வகையில் இருந்த இந்தக் கட்டமைப்பானது பல ஏகாதிபத்தியங்களும் கொள்ளையடிப்பதற்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது.

நிலப்பிரபுக்கள், தரகு அதிகார வர்க்க முதலாளிகள் தங்களுக்கிடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ள உருவாக்கப்பட்ட இந்திய நாடாளுமன்றத்திற்கான தேர்தல் என்பது எந்தக் காலத்திலும் ஜனநாயகமாக இருந்ததில்லை. அன்று முதல் இன்றுவரை, தேர்தலின் போது, நாட்டை முன்னேற்றுவது குறித்து கட்சிகள் பேசினாலும், ஓட்டு வாங்குவது என்பது இந்த ஜனநாயக வழிமுறை அல்லாத பல்வேறு வழிமுறைகளில் நடந்தேறி வருகிறது.

இதில், முதன்மையானது, உள்ளூரில் அதிகாரம் செலுத்தும் நிலப்பிரபுக்கள், பண்ணையார்கள், ஜமீன்தார்கள் சொல்பவர்களுக்குத்தான் ஏழை மக்கள், தலித் மக்கள் ஓட்டு போட வேண்டும், மாற்றி வேறொருவருக்கு ஓட்டுபோட்டால் தலித் மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படும், தலித் குடிசைகள் எரியும், அவர்கள் மீது கும்பல் வன்முறைகள் நடந்தேறும் என்கிற நிலைமையாகும். இதுதான், சுதந்திர இந்தியாவின் தேர்தல் நிலைமை. நிலப்பிரபுக்களின் கூலிப்படைகளால் தலித் மக்கள் மீது அடுத்தடுத்த படுகொலைகள் நடத்தப்படும் பீகாரில், 1989-இல் தலித் கூலி விவசாயிகள் தங்களது உரிமைகளைப் பெறுவதற்கு, ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டதையடுத்து, தன்வார்-பிட்டா கிராமத்தில் வாக்களிக்கச் சென்ற 22 தலித் கூலி விவசாயிகள் ரஜபுத்திர நிலப்பிரபுக்களால் படுகொலை செய்யப்பட்டது இதன் உச்சமான நடவடிக்கைகளில் ஒன்று. இன்றைக்கும் தலித் அமைப்புகள் பல கிராங்களில் கொடியேற்ற முடியாது என்பதுதான் எதார்த்தமான நிலை.

தலித் மக்களின் பிரதிநிதித்துவம் தேர்தல் அரசியல் அரங்கில் எதிரொலிப்பதை தடுக்க முடியாத நிலைமை உருவானதுடன் இணைந்ததுதான் ஆதிக்கச் சாதியினர் கட்சி தொடங்கி தங்களது சாதி வாக்குகளைத் தக்கவைத்துக் கொள்ள முனைவதாகும். ஒவ்வொரு பகுதியிலும் அதிகமான மக்கள் எந்த சாதியைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனரோ அதற்கேற்ப கட்சிகள் வேட்பாளர்களைத் தீர்மானிக்கின்ற நிலைமைதான் இன்றும் செல்வாக்கு செலுத்துகிறது.


படிக்க: உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா?


அதிகார பலமும், சாதி பலமும் செல்வாக்கு செலுத்த முடியாத பொதுவான மக்களுக்குத்தான் ஓட்டுக்குக் காசு கொடுக்கும் முறை ஆரம்ப காலங்களில் மேற்கொள்ளப்பட்டது. 1990-களுக்கு முன்பு டீ-வடை கொடுத்ததும்,  சாராயம் கொடுத்தும் ஓட்டுவாங்கியதானது படிப்படியாக வளர்ந்து இலவசப் பொருட்கள் கொடுப்பது, காசு கொடுப்பதாகப் பரிணமித்து, இப்போது 10,000-20,000 ரூபாய் வரை கொடுக்கும் நிலைக்கு உயர்ந்துள்ளது.

இதில், தமிழ்நாட்டிற்கும் பிற மாநிலங்களுக்கும் இடையிலான வேறுபாடு என்பது கொடுக்கப்படும் பணத்தின் அளவு மட்டுமே. மற்றபடி அனைத்து மாநிலங்களிலும் ஓட்டுக்குக் காசு கொடுக்கும் முறை உள்ளது.

என்னதான் இருந்தாலும் காசுக்காக ஓட்டுப் போடுவது இழிவானதல்லவா என்று நம்மில் பலருக்கு கேள்வியெழலாம்?

ஆனால், நம்மில் பலரும், படித்தவர்களும், நடுத்தர வர்க்கப் பிரிவினரும் காசு வாங்கி ஓட்டுப் போடுவதில்லை, நேர்மையான அரசியல்வாதிகள் காசு கொடுத்து ஓட்டு வாங்குவதில்லை என்று கருதுகிறோம். அப்படியெனில், உரிமையை நிலைநாட்டுவதற்குதான் தேர்தல் என்று புரிந்து கொண்டு மக்கள் ஓட்டுப் போடுகிறார்கள் என்று சொல்ல முடியுமா?

விவசாயிகள், தொழிலாளர்கள், அரசு ஊழியர்கள் போன்ற உழைக்கும் மக்களில் ஒரு சிறு பிரிவினர், அதிகபட்சம் 10-20 சதவிகித வாக்காளர்கள்தான், கட்சிகள் அறிவிக்கும் வாக்குறுதிகளையும் அவர்களது கடந்தகால நடைமுறைகளையும் பார்த்து வாக்களிக்கின்றனர். இதில் கூட கடன் தள்ளுபடி, ஊதிய உயர்வு, வேலைவாய்ப்பு போன்ற சில உடனடி நலன்களை மட்டுமே கருத்தில் கொள்கின்றனர்.

மற்றபடி, காசு வாங்காமல் ஓட்டுப் போடுவதாகக் கருதப்படும் பெரும்பான்மையான மக்கள் சாதி, மதம், ஆதிக்கம் ஆகியவற்றைப் பார்த்துதான் ஓட்டுப் போடுகின்றனர்.

சீமான் கும்பலும், பார்ப்பன ஊடகங்களும் சொல்வதைப்போல, மக்கள் காசுக்கு ஓட்டுப் போடுவதால்தான் நாட்டைக் கொள்ளையடிக்க விரும்புகிறவர்கள், ஊழல் அரசியல்வாதிகள் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்வதெல்லாம், பிரச்சினையை தலைகீழாக விளக்குவதாகும்.

தேர்தல் என்பது எந்தவகையிலும் மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில்லை, அடக்குமுறைகளைத் தடுக்கப் போவதும் இல்லை என்ற நிலையில், தங்களைக் கொள்ளையடிப்பவர்களைத் தேர்வு செய்வதுதான் தேர்தல் என்றாகிவிட்ட நிலையில், காசு கொடுக்காமல் ஓட்டு வாங்குவதன் இன்னொரு வடிவம்தான், பா.ஜ.க-வின் இந்துத்துவ அரசியல். தேர்தலில் ஓட்டு வாங்குவதற்காக இந்துமத போதையை ஏற்றிவிடுகிறது, சங்கப் பரிவார கும்பல்.

அதாவது, இனத்தைச் சொல்லி ஓட்டுவாங்குவது, சாதியைச் சொல்லி ஓட்டு வாங்குவது, இந்து மதவெறியூட்டி ஓட்டுவாங்குவது, அதிகாரத்தைப் பயன்படுத்தி மிரட்டி ஓட்டுவாங்குவது ஆகியவை நிலப்பிரபுத்துவ-பண்ணையாதிக்க அடிமைத்தனமாகும். காசு கொடுத்து ஓட்டு வாங்குவது தனியார்மய-தாராளமயத்தினால் உருவான காரியவாதமாகும். இவை இரண்டிற்கும் ஜனநாயகத்திற்கும் தொடர்பில்லை.


படிக்க: எதிர்க்கட்சிகள் இல்லாமல் தேர்தல் நடத்த மோடி திட்டமா?


ஆகையால், சாதி, அதிகாரம், மதம் ஆகியவற்றைக் காட்டி ஓட்டு வாங்குபவர்களும் இந்திய அரசியல் அமைப்பும் தேர்தலும் ஜனநாயகமானவை என்று இன்னமும் கருதிக் கொண்டிருப்பவர்களும்தான் ஓட்டுக்கு காசு கொடுப்பதைக் குற்றம் சொல்கிறார்கள்.

இப்படிக் கூறுவது, ஓட்டுக்குக் காசு வாங்குவதை நியாயப்படுத்துவதாக தோன்றலாம். ஆனால், இந்திய தேர்தல் முறையில் எது நியாயம், எது அநியாயம் என்பதுதான் நமது முதன்மையான கேள்வி.

மேலே குறிப்பட்டதுபோல, இந்திய ஜனநாயகம் என்பதே கார்ப்பரேட் முதலாளிகள் மக்களைக் கொள்ளையடிக்க உருவாக்கப்பட்டதாகும். எந்தக் கட்சிக்கும் இதில் கொள்கை வேறுபாடு கிடையாது. அதிகார பலம், பண பலம், சாதி ஆதிக்கம் ஆகியவற்றைப் பாதுகாக்கும் இந்த அரசியலின் அடிப்படையில் நடக்கும் தேர்தலில் அவை அனைத்தும் வெளிப்படத்தானே செய்யும். அதனால்தான், சமூகத்தில் நிலவும் ஊழல், முறைகேடுகள், போலித்தனம், ஏமாற்று, மோசடி, பாலியல் வக்கிரங்கள், சாதி ஆதிக்கங்கள் அனைத்தும் தேர்தலிலும் வெளிப்படுகிறது.

இதில், ஓட்டுக்கு காசு வாங்குவதை மட்டும் குற்றம் என்று சொல்வதன் மூலம் என்ன சொல்லவருகிறார்கள் என்பதுதான் நமது கேள்வி. அப்படியெனில், மதவெறியைத் தூண்டி ஓட்டுக் கேட்பதையோ, சாதிவெறித் தூண்டி ஓட்டுக் கேட்பதையோ ஏன் இதே அளவிற்கு எதிர்ப்பதில்லை என்பதையும் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அப்படியெனில், காசு, சாதி, மதம் ஆகியவற்றுக்காக ஓட்டுப் போடும் நிலைமை எப்போதுமே மாறாதா? நேர்மையான தேர்தல் எப்போதுதான் நடக்கும்? என்று கேட்டால், நாட்டின் அரசியல் அதிகாரத்திற்காக நடப்பதுதான் தேர்தல். இப்போது இருக்கும் தேர்தல்முறை என்பது கார்ப்பரேட் அரசியலுக்குத்தான் உகந்ததாக உள்ளது. இதன் மூலம் கார்ப்பரேட் முதலாளிகள், ஏகாதிபத்தியங்கள், அவர்களுக்கு துணைபுரிகின்ற உள்ளூர் ஆதிக்கச் சக்திகளுக்கானதாக உள்ளது.

விவசாயிகள், தொழிலாளர்கள், நெசவாளர்கள், மீனவர்கள், சிறு தொழில்முன்வோர், வியாபாரிகள் உள்ளிட்ட நாட்டின் கோடான கோடி மக்களுக்கான கட்டமைப்பாக இந்தியாவின் அரசியல் கட்டமைப்பும் அதற்கான தேர்தலும் இல்லை. இவர்களது பிரதிநிதிகள் பங்கேற்கும் வகையில் அரசியல் கட்டமைப்பு இல்லை.

அவ்வாறு உழைக்கும் மக்களுக்குத் தேவையான உரிமைகளை நிலைநாட்டுகின்ற வகையிலான அரசியல் அமைப்பை உருவாக்கும் போது, அதற்காகப் போராடும் போது, அந்த அரசியல் அமைப்புக்கான தேர்தலில்தான் சாதி, மதம், காசு, அதிகாரம் ஆகியவற்றிற்கு இடமில்லாத, உண்மையில் ஜனநாயக பூர்வமான தேர்தலை நடத்த முடியும். இன்றைக்கு இருக்கும் அரசியல் கட்டமைப்புக்கான தேர்தலில் இந்த ஜனநாயக வழிமுறைகளை எதிர்ப்பார்ப்பது சாத்தியமில்லை.

ஆகையால், தேர்தல் ஜனநாயகமாக நடக்க வேண்டும் என்பதைவிட, அரசியல் அமைப்பு ஜனநாயகமானதாக இருக்க வேண்டும் என சிந்திப்பது பொருத்தமாக இருக்கும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே கட்சி | | லெனின் 154

தோழர் லெனினுடைய 154 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு “லெனினியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள்” நூலில் இருந்து இந்த கட்டுரையை வெளியிடுகிறோம்.

ட்சியானது, தொழிலாளர் வர்க்கத்தினுடைய அமைப்பு ரீதியாக திரட்டப்பட்ட படைப்பிரிவாகும். ஆனால், கட்சியானது தொழிலாளர் வர்க்கத்தின் ஒரே அமைப்பு அல்ல. இன்னும் எண்ணற்ற பிற அமைப்புகளையும் பாட்டாளி வர்க்கம் கொண்டுள்ளது. அவை: தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், தொழிற்சாலைகளில் உள்ள அமைப்புகள், நாடாளுமன்றக் குழுக்கள், கட்சி சாரா மகளிர் அமைப்புகள், பத்திரிகையாளர் குழுக்கள், கலாச்சார அமைப்புகள், கல்வி அமைப்புகள், இளைஞர் கழகங்கள்; பகிரங்கமான புரட்சிகர நடவடிக்கை காலங்களில் அமைக்கப்படும் புரட்சிகரமான போரிடும் அமைப்புகள், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்திலிருக்குமானால் அரசு அமைப்பின் வடிவமான சோவியத் பிரநிதிகள் அமைப்பு – இன்னும் பிற. இந்த அமைப்புகள் இல்லாமல் பாட்டாளி வர்க்கமானது மூலதனத்தின் ஆளுகையை எதிர்த்து வெற்றிகரமாகப் போரிட முடியாது.

இவற்றுள் மிகமிகப் பெரும்பான்மையான அமைப்புகள் கட்சி சாராதவை. இவற்றுள் சில அமைப்புகளே கட்சியைப் பின்பற்றுபவை. மிகச் சிலவே கட்சியிலிருந்து உதித்த அமைப்புகளாக உள்ளன. குறிப்பிட்ட சில நிலைமைகளில், இந்த அமைப்புகள் தொழிலாளர் வர்க்கத்திற்கு முற்றிலும் அவசியமானவையாக இருக்கின்றன. ஏனென்றால், அவை இல்லாமல் போனால், போராட்டத்தின் பலவகைப்பட்ட அரங்குகளில் பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க பலாபல நிலைகளை உறுதிப்படுத்துவது சாத்தியமில்லாமல் போய்விடும். அவை இல்லாமல் போனால், முதலாளித்துவக் கட்டமைவிற்குப் பதிலாக சோசலிசக் கட்டமைவை நிறுவுவதைத் தனது இலட்சியமாகக் கொண்டுள்ள பாட்டாளி வர்க்கத்தை எஃகுறுதிமிக்கதாக்குவது சாத்தியமில்லாமலே போய்விடும்.

ஆனால் இத்தகைய அமைப்புகள் பல்கிப் பெருகியுள்ள நிலைமைகளில் அந்த அமைப்புகளின் மீது கட்சியின் ஒரே தலைமையை எவ்வாறு செல்வாக்கு பெறும்படி செய்வது? இந்த அமைப்புகள் எண்ணற்றவையாகப் பெருகியுள்ள காரணத்தால், தலைமையில் வெவ்வேறான போக்குகள் தோன்றுவதற்கு இட்டுச் செல்லாதா? இப்படி நடக்காமலிருக்க உத்திரவாதம் என்ன? இந்த அமைப்புகள் ஒவ்வொன்றும் அவற்றிற்குரிய தனிச்சிறப்பான துறையில் அவற்றின் வேலைகளைச் செய்து கொண்டிருக்கின்றன. ஆகவே, இந்த அமைப்புகளின் வேலைகள் மற்றதன் வேலைகளைத் தடங்கல் செய்யாது என்று வாதிக்கப்படலாம். அது உண்மை என்பது நிச்சயம். ஆனால், இந்த அமைப்புகள் எல்லாம் ஒரே வர்க்கத்திற்காக, பாட்டாளி வர்க்கத்திற்காக இருப்பவை. ஏனென்றால், இவை அனைத்தும் ஒரே வர்க்கத்திற்குச் சேவை செய்பவை. இதனால் அவை அனைத்தும் ஒரே திசைவழியில் வேலை செய்பவையாக இருக்கவேண்டும் என்பதும் உண்மைதான். அப்படியானால் பின்வரும் கேள்விகள் நம்முன் எழுகின்றன: இந்த அமைப்புகளுடைய வேலைகள் எல்லாம் எந்த வழியில் செல்வது என்பதைத் தீர்மானிப்பது யார்? தேவையான அளவிற்கு தனக்கு அனுபவம் உண்டு என்ற காரணத்தால், தன்னால் இத்தகைய பொதுவழியை வகுத்துத் தர முடியும் என்பதோடு மட்டுமல்லாமல், தனக்குப் போதிய செல் வாக்கும் அந்தஸ்தும் உண்டு என்ற காரணத்தால், தலைமையின் ஒற்றுமையைச் சாதிப்பதற்கும், ஒவ்வொன்றும் மற்றொன்றுக்குத் தடங்கல் ஏற்படாமல் தடுக்கவும், இந்தப் பொது வழியை நடைமுறையில் நிறைவேற்றும்படி இந்த அமைப்புகளையெல்லாம் தூண்டிவிடவும் தகுதியுடைய மைய அமைப்பு எங்கே? அது எது?

அந்த அமைப்புதான் பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சி என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.


படிக்க: மே தினம் குறித்து தோழர் லெனின்


இவற்றைச் செய்வதற்கான எல்லா தகுதிகளும் கட்சியிடம் உள்ளன. இந்த தகுதிகள் அதற்கு இருப்பதற்கான காரணங்களை இனி நான் கூறுகிறேன்.

முதல் காரணம்: தொழிலாளர் வர்க்கத்தினால் சோதித்து தெரிவு செய்யப்பட்ட தலைசிறந்த தொழிலாளர்களின் அணிதிரளும் மையமாக கட்சி விளங்குகிறது. பாட்டாளி வர்க்கத்தினுடைய கட்சிசாரா அமைப்புகளுடன் இதற்கு நேரடியான பிணைப்புகள் உள்ளன. இதுமட்டுமல்லாமல், கட்சியானது வழக்கமாக அந்த அமைப்புகளை வழிநடத்திச் செல்வதாகவும் இருக்கின்றது.

இரண்டாவது காரணம்: தொழிலாளர் வர்க்கத்தில் சோதித்து தெரிவு செய்யப்பட்ட தலைசிறந்த தொழிலாளர்களின் அணிதிரளும் மையம் என்ற முறையில் கட்சி இருக்கிறது. இதனால் தமது வர்க்க அமைப்புகளின் ஒவ்வொரு வடிவத்திலுமானவற்றை வழிநடத்திச் செல்லும் ஆற்றலுடைய தலைவர்களுக்கான பயிற்சிப் பள்ளியாக கட்சி விளங்குகிறது.

மூன்றாவது காரணம்: தொழிலாளர் வர்க்கத்தின் தலைவர்களுக்கான தலைசிறந்த பயிற்சிப் பள்ளி என்ற முறையில் இருப்பதற்குக் காரணம் அதனுடைய அனுபவமும் செல்வாக்கும்தான். இதனால், பாட்டாளி வர்க்கத்தினுடைய போராட்டத்தின் தலைமையை மையப்படுத்தும் ஆற்றலுடைய அமைப்பாக கட்சியால் மட்டுமே இருக்க முடிகிறது.

இவ்வாறான மையப்படுத்தலின் மூலம், தொழிலாளர் வர்க்கத்தினுடைய கட்சிசாரா அமைப்புகள் அனைத்தையும் ஒன்று பாக்கியில்லாமல் கட்சியின் துணை அமைப்புகளாக மாற்றும் ஆற்றலுடையதாக கட்சி விளங்குகிறது. இத்துடன், இந்த கட்சி சாரா அமைப்புகளை, கட்சியை வர்க்கத்துடன் இணைக்கும் இடமாற்றி அனுப்பும் வார்பட்டையாகவும் (transmission belt) திகழ்கிறது.

இதனால்தான், பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே கட்சி என்று நான் வலியுறுத்திக் கூறுகிறேன்.


படிக்க: பாட்டாளியை புரட்சியாளனாக வளர்த்தலின் அவசியம் பற்றி ! – லெனின்


கட்சிசாரா அமைப்புகளான தொழிற்சங்கங்கள், கூட்டுறவுச் சங்கங்கள், இன்னும் இதுபோன்ற அமைப்புகளை அதிகார பூர்வமாக கீழ்ப்படுத்தி வைக்கவேண்டும் என்று நிச்சயமாக இதற்குப் பொருள்படாது. அப்படியானால், இதன் பொருள் என்ன? இந்த அமைப்புகளைச் சேர்ந்தவர்களும், இந்த அமைப்புகளில் சந்தேகத்திற்கே இடமின்றி செல்வாக்குள்ளவர்களாக விளங்குபவர்களுமான கட்சி உறுப்பினர்கள், இந்தக் கட்சிசாரா அமைப்புகளை அவையவற்றின் வேலைகளைச் செய்கையில், பாட்டாளி வர்க்க கட்சியை நெருங்கிவரும்படி ஈர்க்க வேண்டும் என்பதும், கட்சியின் அரசியல் தலைமையை மனமுவந்து ஏற்றுக் கொள்ளும்படி அவற்றைச் செய்ய வேண்டும் என்பதும்தான். இதற்காக, தங்களால் இயன்றதனைத்தையும் கட்சி உறுப்பினர்கள் செய்ய வேண்டும் என்பதுதான்.

கட்சி என்பது “பாட்டாளி வர்க்கத்தினுடைய வர்க்க அமைப்பின் அதிஉயர் வடிவமே” என்றும், மற்றெல்லா பாட்டாளி வர்க்க அமைப்பு வடிவங்கள் இடையேயும் அதன் அரசியல் தலைமையை விரிவுபடுத்தியே தீரவேண்டும் என்றும் லெனின் சொல்வது இதனால்தான். (தொகுதி 25, பக் 194; “இடதுசாரி கம்யூனிசம்- ஒரு இளம் பருவக்கோளாறு” என்ற நூல் )

இதனால்தான், கட்சிசாரா அமைப்புகளின் “சுயேச்சை, நடு நிலைமை” என்பனவற்றை முன்னிறுத்தும் சந்தர்ப்பவாதக் கோட்பாடானது, லெனினியத்தின் கோட்பாட்டிற்கும் நடைமுறைக்கும் முழுக்க முழுக்க ஒவ்வாததாக இருக்கிறது. ஏனென்றால், இந்தச் சந்தர்ப்பவாத கோட்பாடுதான் கட்சியிலிருந்து தனிமைப்பட்டுள்ள சுயேச்சையான நாடாளுமன்ற உறுப்பினர்களையும் பத்திரிகை யாளர்களையும் உருவாக்குகிறது. ஏற்கெனவே சூன்யவாதிகளாகவும் கட்சி மறுப்பியல்வாதிகளாகவும் தரங்குறைந்துவிட்ட குறுகிய மனப்பான்மையினரான தொழிற்சங்கத் தலைவர்களையும் கூட்டுறவுச் சங்க நிர்வாகிகளையும் உருவாக்குகிறது.

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!

சிறையில் உள்ள தில்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு
இன்சுலின் மருந்து வழங்க மறுக்கும் பாசிச மோடி அரசு!

22.04.2024

கண்டன அறிக்கை

துபானக் கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் மருந்து வழங்கவும் கூட தடைவிதித்து இருக்கிறது பாசிச மோடி அரசு. இதற்கு எதிராக திகார் சிறைக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியின் தொண்டர்கள் போராடி வருகிறார்கள்.

கெஜ்ரிவாலுக்கு இன்சுலின் கொடுப்பதை மறுத்துவிட்டு சர்க்கரை அளவைக் கூட்டுவதற்கு அவர் மாம்பழங்கள் அதிகம் உண்கிறார் என்ற பச்சை பொய்யை நீதிமன்றத்தில் தெரிவித்தது அமலாக்கத்துறை.

சிறையில் உள்ள ஒரு மனிதனுக்கு மருத்துவ உரிமை மறுப்பது என்பது அந்த மனிதனைக் கொல்வதற்கு சமம். ஆக விசாரணை இன்றி தனக்கு எதிரானவர்களை கொன்று கொண்டிருக்கிறது பாசிச மோடி -அமித்ஷா கும்பல் என்பதே உண்மை.

பீமா கோரேகான் வழக்கில் பொய்யாகக் கைது செய்யப்பட்ட ஆனந்த்தெல்தும்டே, வரவரராவ் உள்ளிட்ட பல்வேறு அறிவு ஜீவிகளுக்கும் சிறையில் எவ்வித மருத்துவமும் செய்ய அனுமதிக்காமல் அவர்களை குற்றுயிராக்கியது.

அதே வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்பார்கின்சன் என்ற நடுக்கு வாத நோயால் பாதிக்கப்பட்ட பாதிரியார் ஸ்டேன்ஸ்வாமிக்கு ஸ்ட்ரா கொடுக்காமல் பலிவாங்கியது இதே மோடி அரசுதான்.


படிக்க: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது! || மக்கள் அதிகாரம் கண்டனம்


இந்த நாட்டின் மக்களுக்காக போராடுபவர்களையும் தனக்கு கீழ்படியாதவர்களையும் பொய் வழக்கில் கைது செய்து அவர்களுக்கு பிணை வழங்காமல் இருப்பதும் சிறையில் அவர்களுக்கு மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகளை மறுத்து சித்திரவதை செய்வதன் மூலம் மோடி – அமித்ஷா பாசிச கும்பல் தனது பாசிச நடவடிக்கைகளை மேலும் மேலும் கொடூரமாக்குகிறது.

இந்தக் கொடூரச் செயல்பாடுகளை நீதிமன்றங்கள் உட்பட யாரும் கேள்வி கேட்க முடியாத வகையில் அரசுக் கட்டமைப்பை பாசிசமயமாகிக் கொண்டிருக்கிறது.

இது அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்பான பிரச்சனை அல்ல; தங்களின் அரசுக்கு எதிராக போராடுபவர்களுக்கும் அரசுக்கு கீழ்படிய மறுப்பவர்களுக்கும் இதுதான் கதி என்று அறிவிக்கிறது பாசிச கும்பல்.

இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் உடனடியாக உச்ச நீதிமன்றம் தலையிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு தேவையான மருத்துவ உதவிகள் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறது.

மேலும் மோடி – அமித்ஷா பாசிசக் கும்பலின் இந்த பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக மாபெரும் மக்கள் இயக்கங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | வீடியோ

அமெரிக்க – இந்திய சதுரங்க ஆட்டத்தின் கீழ் இலங்கை! | வீடியோ

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



 

ராமர் கோவில் பக்தியா? கலெக்‌ஷன் கட்டும் உத்தியா? | வீடியோ

ராமர் கோவில் பக்தியா?
கலெக்‌ஷன் கட்டும் உத்தியா?

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



 

உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: சமீப காலமாக உச்சநீதிமன்றம் வழங்கிவரும் தீர்ப்புகள் மோடி அரசுக்கு நிர்பந்தம் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளன. இவற்றை எப்படிப் பார்ப்பது?

ண்டிகர் மேயர் தேர்தல், தேர்தல் நிதிப் பத்திரம் போன்ற வழக்குகளில் அடுத்தடுத்து உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்புகள் மோடி அரசுக்கு நெருக்கடி கொடுத்ததாக பலராலும் பார்க்கப்படுகிறது. உண்மையில், இத்தீர்ப்புகள் மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதா? என்றால், ‘‘ஆம்’‘ என்பதுதான் பதில். ஆனால், அது பாதி பதில் மட்டுமே.

பத்தாண்டுகால பாசிச மோடி ஆட்சியில் நீதித்துறை பாசிசமயமாகி வருகிறது. பாசிஸ்டுகளுக்கு எதிரான தீர்ப்பு என்பதே காண்பதற்கரிய காட்சியாகிவிட்டது. அதனால்தான் சாதாரணமான சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தின் தீர்ப்பானது பிரமிக்கதக்கதாக தோற்றமளிக்கிறது என முதலாளித்துவ ஊடகவியலாளர்கள் சிலரே அம்பலப்படுத்தியிருந்தனர்.

மேலும், சண்டிகர் மேயர் தேர்தல் விவகாரத்தைப் பொறுத்தவரை, பாசிச பா.ஜ.க-வின் கையாளாக செயல்பட்ட தேர்தல் அதிகாரி அனில் மசிக் தேர்தல் வாக்குச் சீட்டுகளில் ‘‘எக்ஸ்’‘ குறியிட்டு, அவற்றை செல்லா வாக்குகளாக மாற்றும் சி.சி.டி.வி. காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, இந்திய ‘தேர்தல் ஜனநாயத்தின்’ இழிநிலை பேசுபொருளானது. அப்படியிருந்தும் இந்த தேர்தல் முடிவுக்கு ஹரியானா உயர்நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துவிட்டது.  இந்நிகழ்வு, வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தல் நியாயமான முறையில்தான் நடக்குமா? என்ற கேள்வியை பலரிடத்திலும் ஏற்படுத்தியது. எனவே, நிலவுகின்ற போலி ஜனநாயகக் கட்டமைப்பின் மீதும் தேர்தல் முறையின் மீதும் மக்களுக்கு உள்ள நம்பிக்கையை உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற நோக்கமும் உச்சநீதிமன்ற தீர்ப்பில் உள்ளது.

இதேப்போல், தேர்தல் நிதிப் பத்திரம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு, பாசிச பா.ஜ.க-விற்கு சில நெருக்கடிகளைக் கொடுத்திருப்பது உண்மைதான். ஆனால், 2018-ஆம் ஆண்டு தேர்தல் நிதிப் பத்திரம் அறிமுகம் செய்யப்பட்டு ஆறு ஆண்டுகள் கழித்து இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் நிதிப் பத்திர முறை ரத்து செய்யப்பட்டது சரியானதுதான் என்றாலும், அது மிகவும் காலதாமதமாக செய்யப்பட்டுள்ளது என்பதும் இத்தீர்ப்பு பாசிச பா.ஜ.க-விற்கு தற்போது நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்திவிடாத வகையில் வழங்கப்பட்டுள்ளது என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

நவம்பர் 2, 2023 அன்றே தேர்தல் நிதிப் பத்திர வழக்கின் விசாரணை முடிவு பெற்று தீர்ப்பு ரிசர்வ் செய்யப்பட்டுவிட்டது. ஆனால், பிப்ரவரி 15, 2024 அன்றுதான் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதற்கு இடைப்பட்ட காலத்தில், ஜனவரி 2 முதல் 11 வரையிலான தேதிகளில், தேர்தல் நிதிப்பத்திரம் விநியோகிக்கப்பட்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தேவையான தேர்தல் நிதியை பா.ஜ.க. முற்றிலுமாக வசூல் செய்து கொண்ட பின்புதான் இத்தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல், உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை கழிவறைக் காகிதமாக கூட மோடி அரசு மதிப்பதில்லை என்பது கவனிக்கப்பட வேண்டியது. சான்றாக, டெல்லி அரசின் நிர்வாக அதிகாரம் தொடர்பான வழக்கிலும், தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான வழக்கிலும் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்புகளை, நாடாளுமன்றத்தில் சட்டங்களை இயற்றி செல்லாக் காசாக்கிவிட்டது பாசிச பா.ஜ.க. அரசு. உச்சநீதிமன்ற உத்தரவை கணக்கில் கொள்ளாமல் மேற்குறிப்பிட்ட வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றம் அடக்கியே வாசித்து வருகிறது.

பாபர் மசூதி இடிக்கப்பட்ட அவமானகரமான வரலாற்று நிகழ்விற்குப் பின்னரும் கூட, ஞானவாபி மசூதியில் இந்துக்கள் வழிபாடு நடத்த வாரணாசி மாவட்ட நீதிமன்றம் அனுமதி வழங்கியதை உச்சநீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. ஏன், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதத்தில் இம்மசூதியில் இந்திய தொல்லியல் துறை ஆய்வு நடத்த தடைக் கோரிய வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் ஆய்வுக்கு அனுமதியளித்து சங்கப் பரிவார கும்பலின் நிகழ்ச்சிநிரலுக்குத் துணைப் புரிந்தது.

2019 பாபர் மசூதி இடிப்பு வழக்கு, காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து தொடங்கி தற்போது வரை மோடிக் கும்பலின்  இந்துமுனைவாக்கத்திற்கும், பாசிச சர்வாதிகாரத்திற்கும் சட்ட அங்கீகாரத்தை உச்சநீதிமன்றம் வழங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



உலக நாடுகள் மோடி அரசை கண்டிப்பது ஏன்?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: அரவிந்த் கெஜ்ரிவால் விவகாரத்தில் ஜெர்மனி கண்டனம் தெரிவித்துள்ளது. இது உள்நாட்டு விவகாரம் என்று சொல்லி மோடி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினையை எப்படிப் பார்ப்பது?

டெல்லி முதல்வர் அரவிந்த் கைது விவகாரத்தில் நேர்மையான முறையில் விசாரணை நடைபெற வேண்டும் என்று ஜெர்மனி கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து, இந்தியாவின் உள்விவகாரங்களில் ஜெர்மனி தலையிடுவதாகக் கூறி இந்திய அரசு ஜெர்மனிக்குக் கண்டனம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது அமெரிக்காவும் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் நேர்மையான வெளிப்படையான அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளது.

பாசிச மோடி அரசு எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் இந்த அணுகுமுறைக்கெதிராக உலக நாடுகள் கண்டனம் தெரிவிக்கும் அளவிற்கு மோடி அரசு சட்டவிரோதமான அணுகுமுறைகளை மேற்கொள்வதுதான் காரணம். இன்னொருபுறம், பெரும்பாலான அரசியல் கட்சிகள் கார்ப்பரேட் கட்சிகளாக இருக்கின்றன. அனைத்து மாநில அரசுகளும் அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகளைத் தத்தமது மாநிலங்களில் முதலீடு செய்ய அழைத்து வருகின்றன. அந்தவகையில், பல மாநிலங்களில் அன்னிய பன்னாட்டுக் கம்பெனிகள் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களைக் கைது செய்து, எதிர்க்கட்சிகளை வேட்டையாடும் அணுகுமுறையானது தங்களது நாடுகளின் முதலீடுகளுக்கு நெருக்கடி ஏற்படுமோ என்ற அச்சமும் இணைந்துள்ளது.

பாசிசம் என்பது உழைக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, ஆளும் வர்க்கங்களின் பெரும் பிரிவினருக்கே எதிரானது என்பது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



குடியுரிமை திருத்தச் சட்டம் பாசிசக் கோழைகளின் பயங்கரவாதம்!

டந்த 2019-ஆம் ஆண்டு டிசம்பரில் குடியுரிமை திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்கியது மோடி அரசு. ஆனால், மக்களின் கடும் எதிர்ப்பு காரணமாக உடனே நடைமுறைப்படுத்தவில்லை. அதே சமயத்தில், சட்ட விதிமுறைகளை வகுப்பதற்கான காலக்கெடுவை ஆறு மாதத்திற்கு ஒருமுறை நீட்டித்துக் கொண்டதன் மூலம் இச்சட்டம் காலாவதி ஆகாமல் உறுதிசெய்தும், மக்கள் மீது ஏவுவதற்கான தருணத்தை எதிர்நோக்கியும் காத்திருந்தது. தற்போது, 2024 நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிப்பதற்கு சில நாட்கள் முன்பாக, மார்ச் 11-ஆம் தேதி முதல் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக அறிவித்துள்ளது. இதன் மூலம், நாடெங்கிலும் மோடி அரசுக்கெதிராக வெடித்துக் கிளம்பும் மக்கள் போராட்டங்களைத் திசைதிருப்பவும், மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்துவதன் ஊடாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெறவும் முடியும் என நம்புகிறது பாசிசக் கும்பல்.

மக்கள் போராட்டங்களும் பாசிசக் கோழைகளும்!

2019-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்ட உடனே அதற்கெதிரான போராட்டங்களும் துவங்கி விட்டன. போராட்டம் நடத்திய டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது டிசம்பர் 15 அன்று போலீசு தாக்குதல் நடத்தியது. இதைக் கண்டித்து டெல்லி – ஷாஹீன்பாக் பகுதியில் இசுலாமியப் பெண்கள் துவங்கிய போராட்டமானது நாட்டிற்கே முன்னுதாரணமாக அமைந்தது. அதைத் தொடர்ந்து நாடு முழுவதும் ஏராளமான பகுதிகளில் ஷாஹீன்பாக் போராட்டங்கள் துவங்கின. சுமார் மூன்று மாதங்களுக்கும் மேலாக தீவிரமாக நடந்த இப்போராட்டங்களில், இதுவரை இல்லாத வகையில் இலட்சக்கணக்கான இசுலாமியப் பெண்களும் இதர உழைக்கும் மக்களும் பங்கெடுத்தனர்.

அனைத்துத் தரப்பு உழைக்கும் மக்களின் ஆதரவையும் பெற்ற இப்போராட்டத்தை, கொரோனா ஊரடங்கைக் காரணம் காட்டியும் காவி கும்பலை வைத்து கலவரம் நடத்தியும் ஒடுக்கியது மோடி அரசு. குறிப்பாக டெல்லியில், போலீசின் துணையோடு காவி குண்டர்கள் கொடிய தாக்குதலைக் கட்டவிழ்த்து விட்டு பெரும் கலவரத்தை நடத்தினர். இசுலாமிய மக்களின் வீடுகளும், கடைகளும் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. காவி கும்பலின் தாக்குதல் மற்றும் போலீசு துப்பாக்கிச் சூட்டில் டெல்லியில் 53 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 25 பேரும் கொல்லப்பட்டனர். எனினும், நாடெங்கிலும் நடந்த மக்களின் உறுதியான போராட்டங்களைக் கண்டு அஞ்சிய மோடி அரசு, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தற்காலிகமாகப் பின்வாங்கியது.

ஆனால், தற்போது தனது இரண்டாவது ஆட்சிக்காலம் முடியும் தருவாயில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து சுமார் 236 வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள போதிலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மோடி அரசு நடைமுறைப்படுத்தியிருக்கிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியான உடனே அசாம், தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் எதிர்ப்புப் போராட்டங்களும் துவங்கிவிட்டன. அதே சமயத்தில், போராட்டங்கள் நடக்காமல் தடுப்பதில் மோடி கும்பல் கவனம் செலுத்தியது. டெல்லி மற்றும் ஜாமியா மிலியா பல்கலைக்கழகங்களின் மாணவர்கள் மீது மிருகத்தனமான ஒடுக்குமுறையை செலுத்தியது போலீசு. டெல்லி, உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் கடந்த முறை தீவிரமாக போராட்டங்கள் நடைபெற்ற பகுதிகளில், போலீசு மற்றும் துணை இராணுவப் படைகளை குவித்து அப்பகுதி மக்களை அச்சுறுத்தியது. சமூக ஆர்வலர்கள் பலரையும் தொடர்பு கொண்டு போராட்டங்களில் ஈடுபட கூடாது என்று மிரட்டியது. கடந்த முறை போராட்டத்திற்கு தலைமை தாங்கியவர்களை வீட்டுக் காவலில் சிறை வைத்தது என ஒடுக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டுதான் சி.ஏ.ஏ.வை இம்முறை நடைமுறைப்படுத்தியிருக்கிறது மோடி அரசு.


படிக்க: CAA-வுக்கு எதிராக பேசியதாக மருத்துவர் கஃபீல் கான் மீது தேசத்துரோக வழக்கு !


இரட்டை நாக்குபாசிஸ்டுகளின் இயல்பு!

அடக்குமுறைகள் செலுத்தினாலும் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்தால் தங்களுக்குப் பிரச்சினையாகிவிடும் என்பதை உணர்ந்துள்ள பாசிஸ்டுகள், சி.ஏ.ஏ – என்.ஆர்.சி தொடர்பாக வெவ்வேறு வகைகளில் வியாக்கியானம் செய்து கொண்டிருக்கின்றனர்.

2019-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தின்படியே தற்போதும் விதிகள் வெளியிடப்பட்டுள்ளன. இசுலாமிய மக்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்குவது குறித்து பேசாமல், இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோருக்கு மட்டும் குடியுரிமை வழங்குவதற்கான விதிமுறைகளை மோடி அரசு அறிவித்துள்ளது.

1955-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில் 1987 மற்றும் 2004-ஆம் ஆண்டுகளில் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் மதத்தின் அடிப்படையில் மேற்கொள்ளப்படவில்லை. ஆனால் 2019-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட திருத்தமானது, இந்தியாவில் குடிபெயர்ந்து வாழ்ந்துவரும் முஸ்லீம் மக்களை மட்டும் குறிவைத்து தவிர்த்துள்ளது. இதன் மூலம் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் இந்துத்துவ சித்தாந்த அடிப்படையிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதியே குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது அம்பலமாகிவிட்டது.

கடந்த காலங்களில், குடியுரிமை திருத்தச் சட்டம் என்பதே இசுலாமியர்களுக்கு எதிரானது தான் என்பதை எவ்விதத் தயக்கமும் இன்றி அறிவித்து வந்தது பாசிசக் கும்பல். “முதலில் குடியுரிமை திருத்த மசோதா (CAB) வரும். அகதிகள் அனைவருக்கும் குடியுரிமை கிடைக்கும். அதன் பிறகு என்.ஆர்.சி.. வரும். அதனால் அகதிகள் கவலைப்பட வேண்டாம், ஆனால் ஊடுருவுபவர்கள் கவலைப்பட வேண்டும். காலவரிசையைப் புரிந்து கொள்ளுங்கள்.” என்றும் “நாடு முழுவதும் தேசியக் குடிமக்கள் பதிவேடு (NRC) அமல்படுத்தப்படுவதை உறுதி செய்வோம். பவுத்தர், இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள் தவிர்த்த ஒவ்வொரு ஊடுருவல்காரரையும் நாட்டிலிருந்து அகற்றுவோம்” என்றும்  2019 ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரங்களின் போது அமித் ஷா வெளிப்படையாகப் பேசி வந்தார்.

இந்நிலையில், கடந்த மார்ச் 11-ஆம் தேதி சி.ஏ.ஏ.வுக்கான விதிகளை அறிவித்த பின்னர் அமித் ஷா உள்ளிட்ட பாசிசக் கும்பலின் பேச்சில் சுதி மாறியிருக்கிறது. சி.ஏ.ஏ எதிர்ப்புப் போராட்டங்களை ஒடுக்க பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருந்தாலும், முன்பு போல சி.ஏ.ஏ – என்.ஆர்.சி இடையிலான தொடர்பை வெளிப்படையாகக் கூறாமல், எதிர்க்கட்சிகள் இசுலாமிய மக்களை தவறாக வழிநடத்துவதாகப் பேச ஆரம்பித்துள்ளனர்.


படிக்க: வலுக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள்!


இந்தியா டுடே ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, “தேசிய குடிமக்கள் பதிவேட்டிற்கும் (என்.ஆர்.சி) குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என்றும் “குடியுரிமை திருத்தச் சட்டத்தில் என்.ஆர்.சி.யின் மரபணு கூட இல்லை என்பதை நான் மிகத் தெளிவாகக் கூற விரும்புகிறேன். குடியுரிமை திருத்தச் சட்டத்தில் மக்களின் உரிமைகளைப் பறிப்பதற்கான விதிகள் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் நாட்டின் சிறுபான்மையினரைத் தூண்டிவிடுகின்றன. முஸ்லீம் சகோதர சகோதரிகள் அவர்களை நம்ப வேண்டாம் என்று பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். அவர்கள் மீண்டும் அரசியல் செய்கிறார்கள். மூன்று அண்டை நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கு மட்டுமே குடியுரிமை திருத்தச் சட்டம் குடியுரிமை வழங்க முடியும்” என்று பேசியிருக்கிறார். இன்னொரு பேட்டியில், “இப்போது என்.ஆர்.சி இல்லை, சி.ஏ.ஏ பற்றி மட்டுமே பேசுங்கள்”, “இரண்டு சிக்கல்களையும் கலக்க வேண்டாம்” என்றும் கூறியிருக்கிறார்.

இசுலாமிய எதிர்ப்பை மையப்படுத்தியே தமது அரசியலை அமைத்துக் கொண்ட பாசிஸ்டுகள் திடீரென, சகோதர சகோதரிகளே அஞ்சாதீர்கள் என்று பேசுகிறார்கள்; நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டம் – தேசிய குடிமக்கள் பதிவேடு – தேசிய மக்கள்தொகை பதிவேடு ஆகியவற்றை (CAA-NRC-NPR)கொண்டு வருவதை இலக்காகக் கொண்டிருந்தவர்கள், இப்போது அதைப்பற்றி பேச ஏதுமில்லை, இவற்றுக்கு இடையே எந்தத் தொடர்புமில்லை என இரட்டை நாக்கில் பேசுகிறார்கள். காரணம் வேறொன்றுமில்லை, இந்தச் சூழலுக்கு இப்படிப் பேசினால் தான் நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் இசுலாமியர்களின் போராட்டங்களை மழுங்கடிக்கவும், இந்துக்களின் வாக்குகளைப் பெறவும் முடியும் எனக் கணக்கு போடுகிறார்கள். என்.ஆர்.சி பற்றி இப்போது பேசினால் இந்துக்களிடையேயும் பிரச்சினை எழும் என்பதை உணர்ந்தே இருக்கிறார்கள்.

இந்துக்களுக்கும் எதிரானதே என்.ஆர்.சி!

2019-ஆம் ஆண்டு துவங்கிய சி.ஏ.ஏ எதிர்ப்பு போராட்டங்களில், சி.ஏ.ஏ – என்.ஆர்.சி – என்.பி.ஆர் என்ற மூன்றையும் சேர்த்து எதிர்த்ததை அனைவரும் அறிவோம். ஆனால், தற்போது குடியுரிமை திருத்தச் சட்டத்தை மட்டும் மோடி-அமித்ஷா கும்பல் அமல்படுத்தியிருக்கிறது. இதன் மூலம் வெளிநாட்டில் இருந்து அகதிகளாக வந்துள்ள இந்துக்களின் பாதுகாவலன், உள்நாட்டு இசுலாமியர்களுக்குத் தொந்தரவு தர விரும்பாத சகோதரன் போன்ற வேடங்களைப் புனைந்துகொள்ள முடியும் என நம்புகிறது பாசிசக் கும்பல். ஆனால், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு அடுத்து தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகிய பாசிச சட்டங்களை நடைமுறைப்படுத்தி தனது இந்துராஷ்டிர கனவை நோக்கி நகர்வதே அதன் உண்மையான நோக்கம்.

தேசிய குடிமக்கள் பதிவேடானது இந்து, முஸ்லீம், கிறித்தவர் உள்ளிட்ட அனைத்து இந்திய மக்களும் தாங்கள் இந்தியாவை பூர்விகமாகக் கொண்டவர்கள் என்று தங்கள் குடியுரிமையை நிரூபிக்கக் கோருகிறது. மக்களிடம் உள்ள இந்திய அரசால் வழங்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையிலேயே குடியுரிமையைச் சோதிக்கிறது. அதன்படி பார்த்தால், ஆவணங்கள் இல்லாத எந்த ஒரு நபரையும் சட்டவிரோதக் குடியேறியாக மோடி அரசால் முத்திரை குத்த முடியும். தங்களின் பாசிச நோக்கத்திற்கேற்ப முறையாக ஆவணங்களைக் கொண்டுள்ள எந்த ஒரு நபரையும் சட்டவிரோதக் குடியேறியாக முத்திரை குத்த முடியும்.


படிக்க: சி.ஏ.ஏ. அமல்: கோழைகளின் பயங்கரவாதம்!


ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தும் கணவனோ அல்லது மனைவியோ மட்டும் என்.ஆர்.சி.யில் இடம்பெற முடியாமல் தடுப்பு முகாம்களில் அடைக்கப்படுவது, வாக்காளர் அட்டையில் – பான் கார்டில் பெயரில் உள்ள குழப்பம் காரணமாக என்.ஆர்.சி.யில் விடுபட்டிருப்பது என ஏராளமான துயர நிகழ்வுகள் அசாம் மக்களிடையே குவிந்து கிடப்பதே என்.ஆர்.சி.யின் பயங்கரத்தன்மைக்குச் சான்று.

ஏனென்றால் சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி.யானது யாருக்கு எப்பொழுது குடியுரிமை வழங்க வேண்டும் அல்லது வழங்கக்கூடாது என்பதைத் தீர்மானிக்கும் அதிகாரத்தை மோடி அரசின் கொடுங்கரங்களில் கொண்டுபோய் சேர்த்துவிட்டது. எந்தச் சூழலில் எந்தப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதை தங்களின் பாசிச நோக்கத்திற்கேற்ப ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. கும்பலே தீர்மானிக்கும். வெள்ளைத்தாளிலோ 10 ரூபாய் மதிப்பிலான நீதிமன்ற ஸ்டாம்ப் ஒட்டிய தாளிலோ உள்ளூர் பூசாரி கையெழுத்திட்டு கூட சி.ஏ.ஏ.வுக்கான தகுதிச் சான்றை வழங்கலாம் என விதிமுறை வகுத்துள்ளது தற்போது அம்பலமாகியுள்ளது. மக்கள் சமர்ப்பிக்கும் ஆவணங்களை ஏற்கும் அல்லது நிராகரிக்கும் முழு அதிகாரமும் அதிகாரிகளிடம் உள்ளதால் அதிகார மட்டங்களில் ஊடுருவியுள்ள ஆர்.எஸ்.எஸ் ஊழியர்களைக் கொண்டே அதை நிறைவேற்றிக் கொள்ளும்.

அசாம் மாநிலத்தில் நிகழும் சம்பவங்களே மேற்சொன்ன நிகழ்வுகள் நிச்சயம் நடக்கும் என்பதற்குச் சான்று. அசாம் மாநிலத்தில் 2019-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி தேசிய குடிமக்கள் பதிவேட்டின் இறுதிப் பட்டியல் வெளியிடப்பட்டது. அசாம் மக்கள் மத்தியில் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய அனைவரையும் தங்கள் மாநிலத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக உள்ள போதிலும், கடந்த நான்கு ஆண்டுகளாக என்.ஆர்.சி.யில் இடம்பெற முடியாத, வங்கதேசத்தில் இருந்து குடியேறிய பல இலட்சம் இந்து மக்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு அவர்களின் வாக்குவங்கியை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற பா.ஜ.க. கும்பலின் நலனே காரணம் ஆகும்.

ஆனால், ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையிலான மாநில அரசோ, சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அகற்றுவது என்ற பெயரில் ஆயிரக்கணக்கான இசுலாமியக் குடியிருப்புகளை புல்டோசர்களை வைத்து இடித்து வருகிறது. இவர்கள் வங்கதேசத்தில் இருந்து குடியேறிய முஸ்லீம் மக்கள் என்பது மட்டுமே காரணமாக இருக்கிறது. சோனிட்பூர் மாவட்டத்தில் காஸிரங்கா வனப்பகுதிக்கு அருகில் குடியிருந்த மக்கள், வனப்பாதுகாப்புச் சட்டத்தின் படி நில உரிமைக்கான ஆவணங்களை வைத்திருந்த போதும் வலுக்கட்டயாமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.


படிக்க: வதைக்கப்படும் ஷர்ஜீல் இமாம்!


இன்னொரு பக்கத்தில், என்.ஆர்.சியில் விடுபட்டவர்களை அடைத்து வைப்பதற்கான தடுப்பு முகாம் ஒன்றையும், ஒன்றிய உள்துறை அமைச்சக நிதியுதவியுடன் புதிதாகக் கட்டியிருக்கிறது அசாம் மாநில அரசு. இம்மாநிலத்தில் ஏற்கெனவே ஆறு சிறைச்சாலை வளாகங்களுக்குள் இத்தடுப்பு முகாம்கள் இயங்கி வருவதும் குறிப்பிடத்தக்கது. ஆயிரக்கணக்கான மக்களை இந்த முகாம்களுக்குள் ஆண், பெண் என தனித்தனியே பிரித்து அடைத்து அவர்களின் மைய சமூகத் தொடர்புகளை அறுப்பதும், பிறரை பீதியூட்டுவதும் இதன் நோக்கமாக இருக்கிறது.

இவ்வாறு அசாம் மாநில அரசானது என்.ஆர்.சி.யை மக்கள் மத்தியில் இந்து முனைவாக்கத்தை தீவிரப்படுத்தி தன்னுடைய அடித்தளத்தை விரிவுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற பாசிச நோக்கத்திற்கு ஏற்ப சாதகமாகப் பயன்படுத்தி வருகிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிப் பெற்று மோடி கும்பல் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஒவ்வொரு மாநிலத்திலும் தங்களின் குறிப்பிட்ட பாசிச நோக்கத்திற்கேற்ப என்.ஆர்.சி.யை செயல்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. கும்பலானது சி.ஏ.ஏ மற்றும் என்.ஆர்.சி. மூலம் மக்களின் குடியுரிமையைத் தீர்மானிக்கும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, வருங்காலங்களில் கிறித்துவ மக்கள் மீதும், தனது இந்துராஷ்டிர நோக்கத்திற்கு அடிபணியாத பெரும்பான்மை இந்து மக்கள் மீதுமே தாக்குதல் தொடுக்கும் என்பதே இதன் பின்னணியில் உள்ள பேரபாயமாகும். அதற்கேற்ப சி.ஏ.ஏ. மற்றும் என்.ஆர்.சி.யில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அதிகாரமும் மோடி அரசிடம் உள்ளது. இதன் மூலம், கார்ப்பரேட் நலன்களுக்காக தமது வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக உழைக்கும் மக்கள் அணிதிரண்டு விடாமல் தடுப்பதும் பாசிசக் கும்பலின் இலக்காகும். ஒரு குடிமகனின் அடிப்படைக் குடியுரிமையைப் பிரச்சினைக்கு உள்ளாக்கி விட்டால் அவரால் வேறு எதைப் பற்றியும் சிந்திக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளுவதை இலக்காகக் கொண்டே இத்தகு சட்டங்களை இயற்றி வருகிறது மோடி – அமித் ஷா கும்பல்.

அனைத்திற்கும் பின்னே அம்பானிஅதானிகளின் நலன்!

குடியுரிமை திருத்தச் சட்டம், என்.ஆர்.சி மற்றும் என்.பி.ஆர் போன்ற பயங்கரவாதச் சட்டங்களை மோடி அரசு தீவிரமாக அமல்படுத்துவதற்கான காரணம் காவி கும்பலின் இந்துராஷ்டிரக் கனவு என்று சுருக்கிப் பார்க்க முடியாது. காவிகளின் இந்துராஷ்டிரம் என்பது அம்பானி-அதானிகளின் ஏகபோக நலனுக்காக சர்வாதிகாரமே. அம்பானி-அதானி கும்பல் இந்திய நாட்டையும், அதன் இயற்கைவளங்களையும் வரைமுறையின்றி சுரண்டுவதற்கான ஏற்பாடுகளையே மோடி அரசு செய்து வருகிறது, இந்துக்கள்-முஸ்லீம்கள்-கிறித்துவர்கள் என ஒட்டுமொத்த இந்திய மக்களின் குடியுரிமையைக் கேள்விக்குள்ளாக்கி, ஒரு பகுதி மக்களை சட்டவிரோதக் குடியேறிகள் என்று முத்திரை குத்தி முகாம்களில் அடைப்பது, பிற மக்களை அச்சுறுத்தி நாட்டையே திறந்தவெளி முகாம்களாக மாற்றுவது, இதன் மூலம் எந்தவித எதிர்ப்புமின்றி கார்ப்பரேட்டுகள் கொள்ளையைடிக்க வழிவகை செய்வதே பாசிசக் கும்பலின் நோக்கமாகும். இதற்கான சோதனை முயற்சியாகவே மணிப்பூரில் குக்கிகளுக்கு எதிரான கலவரத்தை நடத்தியது. அம்மக்களை வந்தேறிகள் என முத்திரை குத்தி ஒடுக்குவதும், மலைப்பகுதிகளைக் கார்ப்பரேட்டுகள் வசம் ஒப்படைப்பதும் இதன் பின்னுள்ள நோக்கங்கள். இதற்காக என்.ஆர்.சி – சி.ஏ.ஏ மூலம் அம்மக்கள் மீது சட்டப்பூர்வமாகத் தாக்குதல் தொடுக்கும் நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. அதற்கான முன்னோட்டமாகவே குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் நடைமுறைப்படுத்தியிருக்கிறது.


படிக்க: Implementation of CAA: Cowards’ Terrorism


பாசிசக் கும்பலின் இந்து முனைவாக்கமும் தோல்விமுகமும்!

2019 நாடாளுமன்றத் தேர்தலில் வென்ற பிறகு, ஜம்மு காஷ்மீரின் சிறப்புரிமைக்கான 370-வது சட்டப்பிரிவு நீக்கம், பாபர் மசூதி இடிப்பு வழக்கில் வெற்றி, குடியுரிமை திருத்தச் சட்டம், மூன்று வேளாண் சட்டங்கள் என்று தனது இந்துராஷ்டிரக் கனவை நோக்கிய நடவடிக்கைகளைத் தொடர்ந்து முன்னெடுத்தது பாசிசக் கும்பல். எனினும், சி.ஏ.ஏ.வுக்கு எதிரான எழுச்சிமிகு போராட்டங்களும், விவசாயிகளின் டெல்லி முற்றுகைப் போராட்டமும் பெரும் திருப்புமுனையாகவும், பாசிசக் கும்பலுக்கு அரசியல்ரீதியில் பெரும் அடியாகவும் அமைந்தன. மணிப்பூரில் குக்கி பழங்குடிகளுக்கு எதிரான கலவரத்திலும் பாசிஸ்டுகள் அம்பலப்பட்டுப் போயினர்.

அதன் பிறகும் கூட மூன்று குற்றவியல் சட்டங்கள் திருத்தம், அயோத்தியில் இராமன் கோவில் திறப்பு, உத்தரகாண்டில் பொது சிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது என இந்து முனைவாக்கத்தை மீண்டும் நிகழ்ச்சிநிரலாக்குவதில் பாசிஸ்டுகள் முன்னேறிச் சென்றனர். ராஜஸ்தான், சத்திஸ்கர், ம.பி ஆகிய மாநிலங்களில் கிடைத்த தேர்தல் வெற்றியும் இதற்கு சாதகமாக இருந்தது. ஆனால், மோடி அரசின் புதிய தண்டனைச் சட்டத்திற்கு எதிரான லாரி ஓட்டுநர்கள் போராட்டமும், விவசாயிகளின் டெல்லி சலோ 2.0 போராட்டமும் இம்முறை திருப்புமுனையாக அமைந்தன. கடந்த பத்தாண்டுகளில் மோடி அரசால் தங்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை என்பதோடு, மிச்சமிருக்கும் வாழ்வாதாரங்களும் பறிக்கப்பட்டு வருவதைப் பொறுக்க முடியாத நிலைக்கு மக்கள் வந்துள்ளதையே நாடெங்கிலும் தொடர்ந்து நடக்கும் மக்கள் போராட்டங்கள் வெளிப்படுத்துகின்றன.

2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால் வளர்ச்சி நாயகன் என்ற பிம்பம் வடக்கே எடுபடாது என்பதையறிந்த மோடி – அமித் ஷா கும்பல், குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவதன் மூலம், மக்களைத் திசைதிருப்பவும், இந்து முனைவாக்கம் செய்யும் நடவடிக்கையிலும் இறங்கியுள்ளது. எனினும், அசாமில் என்.ஆர்.சி ஏற்படுத்திய பாதிப்பானது, கடந்த 2019-ஆம் ஆண்டில் இவர்கள் சொன்ன பொய்களை எல்லாம் நம்பிய அசாம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் வாழும் வங்கதேசத்து அகதிகளான இந்து மக்களுக்கு உண்மை நிலவரத்தைத் தோலுரித்துக் காட்டிவிட்டது. எனவே தான் வழக்கமான முறையில் ஏறியடித்து இந்துமத வெறியைக் கிளப்பிவிட முடியாமல் தவிக்கிறது பாசிசக் கும்பல்.

ஒருபுறம் மக்கள் போராட்டங்களைக் கண்டு அஞ்சும் கோழையான மோடி – அமித் ஷா கும்பல்; மறுபுறம் இப்போராட்டங்களை எல்லாம் ஒருங்கிணைத்து பாசிசக் கும்பலை வீழ்த்தும் கண்ணோட்டமில்லாத எதிர்க்கட்சிகள் என்ற அவலநிலையே இன்றைய எதார்த்தம். தேர்தல் களத்திலும் கூட இதுவே பிரதிபலிக்கிறது. மணிப்பூர் கலவரத்தால் அம்பலப்பட்டு, வட கிழக்கு மக்களிடம் தனிமைப்பட்டுள்ள நிலையில் மணிப்பூர், நாகாலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. நேரடியாகப் போட்டியிட அஞ்சி பின்வாங்கியுள்ளது.

மக்கள் எழுச்சியில்லாமல் பாசிசத்தைத் தேர்தல் களத்திலும் கூட எதிர்கொள்ள முடியாது என்பதற்கு மக்கள் போராட்டங்களும், அவற்றைக் கண்டு பாசிசக் கும்பல் அஞ்சுவதும் சான்றாக உள்ளன. சி.ஏ.ஏ எதிர்ப்பு, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்ட மோடி அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களை ஆதரிப்பது, உடனிருந்து போராடுவது மட்டுமன்றி, இப்பிரச்சினைகளுக்குப் பொருத்தமான மாற்றினை முன்வைத்து மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பது மட்டுமே தேர்தல் களத்தில் கூட எதிர்க்கட்சிகளுக்கு உதவும். இனிவரும் காலம், பாசிசக் கும்பலுக்கு எதிரான மக்கள் போராட்டங்களும், எழுச்சிகளும் நிறைந்த காலமாக இருக்கட்டும்.


அமீர்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மக்கள் போராட்டங்களைப் பற்றி பேசுவதற்கு பாசிஸ்ட்டுகளுக்கு தகுதியுள்ளதா? | வீடியோ

மக்கள் போராட்டங்களைப் பற்றி பேசுவதற்கு பாசிஸ்ட்டுகளுக்கு தகுதியுள்ளதா?

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



 

உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா? | வீடியோ

உச்சநீதிமன்றத்தால் மோடி அரசுக்கு நெருக்கடியா? | வீடியோ

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



 

அம்பானி வீட்டு திருமணம்: “சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா | வீடியோ

அம்பானி வீட்டு திருமணம்:
“சுற்றுலா விபச்சாரம்” மோடியின் புதிய இந்தியா

 

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வந்தால் ஏழைகள் வாழ முடியாது! | மக்கள் நேர்காணல்

பி.ஜே.பி. ஆட்சி மீண்டும் வந்தால்
ஏழைகள் வாழமுடியாது! | மக்கள் நேர்காணல்

பி.ஜே.பி. ஆட்சி வந்தால் ஏழைகளான எங்களால் வாழ முடியாது. நாற்பது வருடங்களாக ஏறாத பெட்ரோல் விலை பத்து வருடத்தில் பாதிக்கு பாதி ஏறியுள்ளது. ஆனால் வருமானம் ஏறவில்லை. பத்து ரூபாய்க்கும் பதினைந்து ரூபாய்க்கும் இருந்த ரீசார்ஜ் தற்போது முந்நூறு ரூபாயாக மாறிவிட்டது. மோடிக்கு இந்த முறை வாய்ப்பு தரமாட்டோம் என்று மக்கள் தங்களுடைய கருத்துக்களை காணொளியில் தெரிவித்துள்ளனர்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயத்தில் ட்ரோன்: மோடியின் சதி | வீடியோ

விவசாயத்தில் ட்ரோன்: மோடியின் சதி | தீவிரமாகும் கார்ப்பரேட்மயம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



விவசாயத்துறையில் “ட்ரோன்”: தீவிரமாகும் கார்ப்பரேட்மயமாக்கம்!

டந்த மார்ச் மாதம் 11-ஆம் தேதி, டெல்லியில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தில் “நமோ ட்ரோன் சகோதரி” (Namo Drone Didi) என்ற திட்டத்தைத் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.

இத்திட்டத்தின் முதல்கட்டமாக ஹரியானாவில் நடைபெற்ற பயிற்சி வகுப்பில், மிகப்பெரிய ரசாயன உரங்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் சார்பில், சுய உதவிக்குழுக்களில் இருக்கும் 300 பெண்களுக்கு ட்ரோன்கள் மூலம் விவசாய நிலங்களில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதற்கான பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியில் இந்தியா முழுவதும் பல மாநிலங்களில் இருந்து பெண்கள் கலந்து கொண்டனர்.

ஆளில்லா விமானங்களை இயக்க பயிற்சி பெற்ற இப்பெண்களுக்கு 30 கிலோ எடையுள்ள ட்ரோன்களும் அவற்றைக் கொண்டு செல்வதற்கு பேட்டரியில் இயங்கும் வாகனங்களும் இலவசமாக வழங்கப்பட்டன.

நாடுமுழுவதும் 15,000 சுய உதவிக்குழுக்களில் இருக்கும் பெண்களுக்கு பயிற்சி கொடுப்பதுதான் இத்திட்டத்தின் நோக்கமாம். மகளிர் சுய உதவிக் குழுக்களில் இருக்கும் தகுதியான பெண் ஒருவருக்கு 15 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியானது சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தால் (Directorate General of Civil Aviation) அங்கீகரிக்கப்பட்ட ரிமோட் பைலட் பயிற்சி அமைப்பால் நடத்தப்படும். பயிற்சியளிக்கும் இத்திட்டத்தில் நாட்டில் இருக்கும் இதர முன்னணி உர நிறுவனங்களும் இணைந்துள்ளன.


படிக்க: WTO-வின் துணையோடு கார்ப்பரேட்மயமாகும் இந்திய விவசாயம்!


இந்த சுய உதவிக் குழுக்களுக்கு மூன்று ஆண்டுகளில் 15,000 ட்ரோன்கள் வழங்கப்படும். இதில் 500 ட்ரோன்கள் முன்னணி உர நிறுவனங்கள் மூலமும் மீதம் 14,500 ட்ரோன்கள் “நமோ ட்ரோன் சகோதரி” திட்டத்தின் கீழும் விநியோகிக்கப்படும்.

விவசாயத்தில் ட்ரோன் பயன்பாட்டை புகுத்தும் வேலையில் மோடி அரசு ஈடுபடுவது புதிய நிகழ்வல்ல. கடந்த 2022-ஆம் ஆண்டில் இருந்து விவசாயப் பயன்பாட்டிற்கான ட்ரோன் உற்பத்தி நிறுவனங்களுக்கும், அதை வாங்குபவர்களுக்கும் மானியங்கள் வழங்குவது; ட்ரோன் பயன்பாட்டிற்கான விதிமுறைகளை (Liberalized Drone Rules 2021) தளர்த்துவது; ட்ரோன் பைலட் உரிமத்திற்கான தேவையை நீக்குவது என பல ஆண்டுகளாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இந்திய விவசாயத்தில் ட்ரோன் பயன்பாட்டை புகுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

விவசாயத்துறையில் ட்ரோன் பயன்பாட்டை புகுத்தும் மோடியின் இந்த திட்டம் குறித்து, ஆங்கில ஊடகங்களில், “இந்திய விவசாயத்தை மாற்றும் ட்ரோன்கள்”; “ட்ரோன் புரட்சியை உருவாக்குகிறது”; “நவீன தொழில்நுட்பத்துடன் வருங்கால விவசாயத்துறை” என்ற தலைப்புகளில் கட்டுரைகள் வெளிவந்த வண்ணமுள்ளன.

ஆனால், உண்மையில் ட்ரோன் பயன்பாடு என்பது  சிறு, குறு விவசாயிகளையும், விவசாய கூலித் தொழிலாளர்களையும் ஒட்டுமொத்தமாக துடைத்தெறிந்து விட்டு, விவசாயத் துறையில் கார்ப்பரேட்மயமாக்கத்தைக் கொண்டுவரும் அபாயகரமான நடவடிக்கையின் அடுத்தக்கட்டமாகும்.

தற்போது பெண்களுக்கு இலவசமாக ட்ரோன் வழங்கியது என்பது வேளாண் துறையில் பெண்களின் பங்களிப்பை ஊக்கப்படுத்த அல்ல. பெண்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து ட்ரோன்களை வழங்குவதன் மூலம் ட்ரோன் பயன்பாட்டை வழக்காமான நடைமுறையாக மாற்றத் துடிக்கிறது பாசிச மோடி அரசு.


படிக்க: இமாச்சலப்பிரதேசம்: செயற்கை நுண்ணறிவுடன் இணைக்கப்பட்ட ஆப்பிள் விவசாயம்!


விவசாயத்துறையில் ட்ரோன் பயன்பாடு:

விளை நிலத்தில் உரம், பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பது தொடங்கி ட்ரோன்களில் பொருத்தப்பட்டிருக்கும் உயர்தர கேமராக்கள் மூலம் பயிரின் ஆரோக்கியம், வளர்ச்சி, மகசூல் பற்றி குறிப்பான தகவல்களை பெறுவது; வானிலை மாற்றத்தை தெரிந்து கொள்வது; நீர் பயன்பாட்டை கண்காணிப்பது, நீரை சிக்கனமாக உபயோகிப்பது; பெரிய மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகளை கண்காணிப்பது; பண்ணைகளில் இருந்து சந்தைகளுக்கு விளைப்பொருட்களை எடுத்து செல்வது போன்ற பல வேலைகளை ட்ரோன்கள் மூலம் செய்ய முடியும் என விஞ்ஞானிகள் பட்டியிலிடுகின்றனர்.

குறிப்பாக, “ட்ரோன் சகோதரி திட்டத்தின்” கீழ் ட்ரோன் பயன்பாட்டில் பெண்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என்கின்றனர்.

இவற்றைக் கேட்க புரட்சிகரமானதாக தோன்றலாம் ஆனால் உண்மை என்ன?

ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் முறையில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள்தான் உரம், பூச்சிக்கொல்லி போன்ற மருந்து தெளிக்கும் வேலையில் ஈடுபடுவார்கள். ஒரு ஏக்கர் நிலத்தில்  இக்கூலித் தொழிலாளி ஒருவரைக் கொண்டு மருந்து தெளிக்க, ஏழு அல்லது எட்டு மணிநேரமாகும் என்றால், அதுவே ட்ரோன் கருவி மூலம் இரண்டரை ஏக்கருக்கு 12 முதல் 15 நிமிடங்களிலேயே மருந்து தெளித்துவிட முடியும் என்கிறார் பெங்களூரு வேளாண் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி.

இதனால் ட்ரோன் பயன்பாடு அதிகரிக்கும், இது ட்ரோன் தொழில்நுட்பத்தில் பயிற்சி பெற்ற ஒருவரால்தான் இனி இந்த பணியில் ஈடுபட முடியும் என்ற நிலையை உருவாக்கும். நவீன தொழில்நுட்பத்தால் கிராமப்புற பெண்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும் என்ற கூற்றே இங்கு உடைகிறது. பெண்கள் சிலருக்கு வேலை கிடைக்கலாம் ஆனால், அதைவிட பன்மடங்கு விவசாய கூலிகள் இந்த நவீன தொழில்நுட்பத்தால் உரம், பூச்சுக்கொல்லி மருந்து தெளிக்கும் வேலைகள் கிடைக்காமல் ஏதுமற்றவர்களாக துரத்தியடிக்கப்படுவார்கள்.


படிக்க: நூல் அறிமுகம்: மறுகாலனியாக்கத்தின் இரும்புப்பிடியில் இந்திய விவசாயம்!


அதேபோல், சாமானிய சிறு, குறு விவசாயிகள் ட்ரோனை வாங்குவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. பேட்டரியில் இயங்கும் ட்ரோனின் விலை கிட்டத்தட்ட 6 லட்சம்; பெட்ரோலில் இயங்கும் ட்ரோனின் விலை சுமார் 12 லட்சம். இந்த செலவீனங்கள் காரணமாக ட்ரோன்கள் அதிகளவில் இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை. எனினும், ஒருசில நடுத்தர, பணக்கார விவசாயிகள்தான் தற்போது ட்ரோனை வாங்கி பயன்படுத்திவருகின்றனர்.

தமிழ்நாட்டில், காவிரி டெல்டா பகுதியின் ஒருசில இடங்களில் ட்ரோன் பயன்பாடு வந்துள்ளது. “அடுத்த மூன்று முதல் ஐந்து ஆண்டுகளில், ட்ரோன்களைப் பயன்படுத்தாமல் விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்படும்” என்கிறார் காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.தனபாலன். 2030-ஆம் ஆண்டிற்குள் இந்திய விவசாயத் துறையில் ட்ரோன் கருவியின் பயன்பாடு 38.5 சதவிகிதமாக உயரும் என அமெரிக்காவில் இயங்கும் ஆலோசனை நிறுவனம் ஒன்று கணித்துள்ளது.

ட்ரோன் பயன்பாடு, சுற்றுச் சூழலுக்கு பேராபத்து:

ட்ரோன் பயன்பாட்டின் மற்றொரு மோசமான விளைவு பூச்சிக்கொல்லி மருந்தை வான்வழியாக தெளிப்பதால் ஏற்படவிருக்கும் சுற்றுச்சூழல் பேராபத்து.

அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட அறிவியல் ஆய்வுகளில் ட்ரோன்கள் மூலம் பூச்சிக்கொல்லி மருந்து தெளிப்பதால் காற்று வீசும் திசையில் ரசாயன மருந்து பல பகுதிகளுக்கு பரவும் அபாயம் உள்ளதாக கண்டறியப்பட்டிருக்கிறது. இதனால் மண் மற்றும் நீர்நிலைகள் மாசுபடுவதோடு, மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்று எச்சரிக்கின்றனர் சுற்றுச்சூழல் நிபுணர்கள்.

ஆக, ட்ரோன்கள் மூலம் மருந்தை தெளிக்கும்போது ட்ரோன் பறக்கும் உயரம், வேகம் உள்ளிட்டவை கவனத்தில் கொள்வது அவசியம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஆனால், இத்தகைய வழிகாட்டுதல்கள் சரியாக பின்பற்றப்படுகிறதா என்று கண்காணிக்க தற்போது எந்த வழியும் இல்லை என்கிறார் விவசாய சங்கத் தலைவர் ஒருவர்.


படிக்க: விவசாயம் சார்ந்த தேர்தல் வாக்குறுதிகள் சாத்தியமானவையா ?


மேலும், ட்ரோன்களை பறக்கவிடுவதன் மூலம் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பறவைகளும் பூச்சி இனங்களும் வராமல், இயற்கையான வளர்ச்சி என்பது தடைப்பட்டு போகும் அபாயமும் ஏற்படும். ட்ரோன்கள் பறக்கும்போது ஏற்படும் சத்தத்தால் பறவைகள் அச்சமடைகின்றன. அதிக உணர்திறன் கொண்ட பறவைகளின் இனப்பெருக்கத்தையே ட்ரோன் பாதிப்படைய செய்யும் என்றும் கூறப்படுகிறது.

ஆக, விவசாயத் துறையில் இருந்து மனித உழைப்பை விரட்டியடிக்கும் அதேவேளையில் இயற்கைக்கும், விலங்குகள் மற்றும் மனிதர்களின் உடல்நலத்திற்கும் மாபெரும் ஆபத்தை விளைவிக்கிறது.

கார்ப்பரேட்மயமாக்கமே நோக்கம்

மேலே குறிப்பிட்டிருப்பதை போல ட்ரோன்கள் மூலம் மருந்து தெளிப்பது மட்டுமல்ல,  நிலம் சம்பந்தமான விஷயங்கள் குறித்தும் உரம் பூச்சிக்கொள்ளி மருந்து எந்தளவிற்கு உபயோகிக்கப்படுகிறது; என்ன மாதிரியான விதைகள் பயன்படுத்தப்படுகிறது; என்பது குறித்தும் தரவுகள் சேகரிக்கப்படும். இதன் மூலம் மிகப்பெரிய தரவு களஞ்சியம் உருவாக்கப்பட்டு விவசாயத் துறையில் எவ்வித மாறுதல்களை கொண்டுவரலாம் என்ற திட்டமிடலை கார்ப்பரேட் நிறுவனங்கள் செய்து கொள்ளும்  முடியும். முக்கியமாக, விவசாயிகள் பெருமளவில் கண்காணிப்பு வளையத்திற்கு கொண்டுவரப்படுவார்கள். விவசாயிகளின் தனிநபர் பாதுகாப்பு கேள்விக்குள்ளாக்கப்படும் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது டெல்லியில் விவசாயிகள், குறைந்தபட்ச ஆதார விலைக்காகவும் விவசாயித்துறையில் கார்ப்பரேட்மயமாக்கத்தை எதிர்த்தும போராடி வரும் சூழலில் விவசாய மேம்பாடு, விவசாய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு, விவசாயத்தில் நவீன தொழில்நுட்பம் என பல்வேறு நாடகமாடி, விவசாயத் துறையில் கார்ப்பரேட்மயமாக்கத்தை தீவிரமாக நடைமுறைப்படுத்தி வருகிறது பாசிச மோடி அரசு.


வெண்பா

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube