Friday, July 11, 2025
முகப்பு பதிவு பக்கம் 51

சேலம்: ஓமலூர் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை! | மக்கள் அதிகாரம்

03.05.2024

சேலம் மாவட்டம், ஓமலூர் தீவட்டிப்பட்டியில்
தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையத் தடை!

கலவரத்துக்கு காரணமான ஆதிக்க சாதி வெறியர்களை கைது செய்!
ஆதிக்க சாதி சங்கங்களை தடை செய்!

கண்டன அறிக்கை

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே காடையாம்பட்டி வட்டம் தீவட்டிப்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின்கீழ் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் போது  தாழ்த்தப்பட்ட மக்கள் கோயிலில் நுழையக்கூடாது என்று ஆதிக்க சாதி வெறியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் விழா பாதியில் நிறுத்தப்பட்டு தொடர்ந்து கோயில் மூடப்பட்டது.

இந்த பிரச்னை தொடர்பாக நேற்று ( 2.05.2024) காடையாம்பட்டி தாலுகா அலுவலகத்தில் இருதரப்பினரிடையே அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இருதரப்பு கருத்துக்களையும் கேட்டறிந்த அதிகாரிகள், கோயிலுக்குள் தாழ்த்தப்பட்ட மக்கள்  வரக்கூடாது என தடை விதிக்க முடியாது. அனைவரும் சென்று வழிபடும் வகையில்தான் அரசு வழி வகுத்துள்ளது என்றனர். இதுதொடர்பாக ஊரில் கலந்து பேசி நாளை (இன்று) முடிவு எடுப்பதாக தெரிவித்து விட்டு சென்றுள்ளனர்.

படிக்க : மே தினத்தில் சூளுரைப்போம்! | தோழர் யுவராஜ் | வீடியோ

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிப்பதை அரசு தடுக்காது என்பதை அறிந்த ஆதிக்க சாதி வெறியர்கள் திட்டமிட்டு நேற்று கலவரத்தை ஏற்படுத்தி உள்ளனர்.இதில் தீவட்டிப்பட்டியில் உள்ள பல கடைகள் எரிக்கப்பட்டும் அடித்து நொறுக்கப்பட்டும் சேதம் அடைந்துள்ளன. கலவரம் தொடர்பாக இரு தரப்பைச் சேர்ந்த 31 பேரை இதுவரை போலீசு கைது செய்துள்ளது.

இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான கோயிலில்,  தாழ்த்தப்பட்ட மக்கள் நுழையக் கூடாது என்று சொல்வதற்கு ஆதிக்க சாதி வெறியர்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது? இது நாள் வரை அப்படிப்பட்ட இழிவான ஒரு நிலைமை இருந்தது என்றால் அதற்குக் காரணமான அதிகாரிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும்.

பொருளாதாரத்தில் முன்னேறிவிட்டது, சமூக நீதியில் முன்னேறிவிட்டது என்றெல்லாம் பெருமை பொங்க பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில் தான் தீவட்டிப்பட்டியில் தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடக்கூடாது என்ற அவலமும் நிறைவேறி உள்ளது.

படிக்க : பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்

அப்பகுதியில் உள்ள  ஆதிக்க சாதிவெறியர்கள் ஒன்றிணைந்து நடத்திய இந்தக் கலவரம் என்பது திட்டமிட்டதாகும். இதற்குக் காரணமான ஆதிக்க சாதி வெறியர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் அடைக்கப்பட வேண்டும்.  ஆதிக்க சாதி வெறியை தூண்டிவிட்டு வயிறு வளர்க்கும் ஆதிக்க சாதிவெறி சங்கங்களை தமிழ்நாடு அரசு முற்றாக தடை செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

மேலும்


தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
9962366321

மே தின கவிதை | வீடியோ

மே தின கவிதை | வீடியோ

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



ரஞ்சித் vs கம்யூனிசம் | அம்பேத்கரை இழிவுபடுத்திய இளையராஜா | தோழர் மருது

ரஞ்சித் vs கம்யூனிசம் | அம்பேத்கரை இழிவுபடுத்திய இளையராஜா |
தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மே தினத்தில் சூளுரைப்போம்! | தோழர் யுவராஜ் | வீடியோ

மே தினத்தில் சூளுரைப்போம்! | தோழர் யுவராஜ் | வீடியோ

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

அமெரிக்காவை ஸ்தம்பிக்க வைக்கும்
பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மோடிக்கு காவடி தூக்கும் கோதி (Godi) மீடியா

மோடியின் பத்தாண்டு கால ஆட்சியில் பல்வேறு பொதுத்துறை நிறுவங்கள் தனியார்வசம் சென்றுள்ளன, திட்டமிட்டு அவை திவாலும் ஆக்கப்பட்டு வருகின்றன.

அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை, தேர்தல் ஆணையம், நீதித்துறை என அனைத்தும் பா.ஜ.க வுக்கு ஆதரவாக மாறிவிட்டன. இவற்றின் வரிசையில் சில இந்திய ஊடகங்களும் வந்துள்ளன. இந்த செய்தி எவராலும் மறுக்க முடியாத உண்மையாக தற்போது மாறியுள்ளது.

நாளுக்கு நாள் இந்திய மீடியாக்கள் பா.ஜ.க-வுக்கு ஆதரவாக செயல்படுவது அதிகரித்துக் கொண்டிருக்கிறது. இதனால் கோதி மீடியா (GODI MEDIA) என்ற சொல் தினமும் சமூக வலைதளங்களில் தென்படுகிறது. இதை நிறுவும் விதத்தில் வட இந்திய ஊடகங்களைப் பற்றி ”THE NEWS MINUTE” இணையதளத்தில் ஆய்வுக்கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலை ஒட்டி நடந்த முக்கியான விவதாங்களில் எந்த மாதிரியான செய்திகள் பேசுபொருளாக இருந்தன என்பதைப் பற்றியது தான் அந்த ஆய்வு.

இந்த ஆய்வுக்கட்டுரையின் தொடக்கத்தில், ஊடக சுதந்திரத்தைப் பற்றிய 180 நாடுகளின் பட்டியலில் இந்தியா 161-வது இடத்தில் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.


படிக்க: பாசிஸ்டுகளின் அதிகாரப்பூர்வ ஊதுகுழலான “காவி” டிடி நியூஸ்


பிப்ரவரி 1 ஆம் தேதியில் இருந்து ஏப்ரல் 12 ஆம் தேதி வரையில் ஆறு சேனல்களையும், அதில் இருந்து ஆறு நெறியாளர்களையும் தேர்வு செய்து, அவர்கள் நடத்திய விவாதங்கள் ஆய்வு செய்யப்பட்டன. ”கோதி மீடியாக்களில்” (GODI MEDIA) நடந்த விவாதங்களை ஆறுவகையாக பிரித்துள்ளனர்.

  • எதிர்க்கட்சிகளுக்கு எதிரான விவாதங்கள்
  • அரசுக்கு ஆதரவான விவாதங்கள்
  • இந்து-முஸ்லீம்கள் பற்றியது
  • பிரிவினைவாத அரசியல்
  • அரசுக்கான கேள்விகள்
  • கல்வி மற்றும் வேலைவாய்ப்பு

இந்த ஆய்வுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட கோதி மீடியாக்களின் (GODI MEDIA) நெறியாளர்கள்

  1. ரிப்ப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி
  2. நியூஸ் 18 இந்தியாவில் இருந்து அமிஷ் தேவ்கன்
  3. ஆஜ் டக் சேனலில் இருந்து சுதிர் சௌத்ரி
  4. டைம்ஸ் நவ் பாரத் என்ற சேனலில் இருந்து சுசாந்த் சின்கா
  5. சிஎன்என் நியூஸ் 18 சேனலில் இருந்து ராகுல் சிவ்சங்கர்
  6. டைம்ஸ் நவ் சேனலில் இருந்து நவிகா குமார்

இவர்களின் செயல்பாடுகள் கீழே விளக்கப்பட்டுள்ளன.

  1. ரிபப்ளிக் டிவியின் அர்னாப் கோஸ்வாமி, ரிபப்ளிக் வோல்ட் ஷோ என்ற விவாத நிகழ்வில் 137 விவாதங்களை நடத்தியுள்ளார். அதில் 73 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், அரசுக்கு ஆதரவாக 32 விவாதங்களும் நடத்தியுள்ளார். 12 விவாதங்கள் பாகிஸ்தானை மையப்படுத்தி செய்துள்ளார். அதில் பாகிஸ்தானில் நடக்கும் தேர்தல் முறையைப் பற்றியும், அந்நாட்டு இராணுவத்திற்கு குண்டு வைக்க வேண்டும் என்றும் கூட தனது வெறுப்பை கக்கியுள்ளார்.
  2. நியூஸ்18 இந்தியாவில் நடைபெற்ற, ஆர் பார் (Aar Paar) நிகழ்ச்சியில், அமிஷ் தேவ்கன் 49 விவாதங்களை நடத்தினார். அதில் 25 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 15 விவாதங்கள் மோடி அரசுக்கு ஆதரவாகவும், 4 விவாதங்கள் மதவாத பிரச்சனைகளைப் பற்றியும், 2 விவாதங்களில் எதிர்க்கட்சியைப் பாராட்டியும், 3 விவாதங்கள் மற்ற பொதுவான விசயங்கள் குறித்தும் நடத்தியுள்ளார்.
  3. சுதிர் சௌத்ரி, தனது ஆஜ் டக் (Aaj Tak) நிகழ்ச்சியில் பிளாக் அண்ட் ஒயிட் நிகழ்ச்சியில், எதிர்க்கட்சிகளுக்கு எதிராக 27 விவாதங்களையும், மோடி அரசுக்கு ஆதரவாக 15 விவாதங்களையும், மதப் பிரச்சினைகள் தொடர்பாக 2 விவாதங்களையும், பாகிஸ்தானைப் பற்றி ஒரு விவாதத்தையும், மற்ற தலைப்புகளில் 8 விவாதங்களையும் நடத்தியுள்ளார்.
  4. சுஷாந்த் சின்ஹா (டைம்ஸ் நவ் பாரத்) தனது நியூஸ் கி பாத்ஷாலா நிகழ்ச்சியில், 50 விவாதங்களை நடத்தியிருக்கிறார். அதில், காங்கிரஸிலிருந்து விஜேந்தர் சிங் வெளியேறியதை “முக்கா-மார் ஜாட்கா” என்று வர்ணித்து, எதிர்க்கட்சிகளைத் தாக்கி பேசியுள்ளார்.
  5. ராகுல் ஷிவ் சங்கர் (CNN News18) தனது ஹார்ட் ஃபேக்ட்ஸ் (Hard Facts) நிகழ்ச்சியில் 90 விவாதங்களை நடத்தியுள்ளார். இதில், 37 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 27 விவாதங்கள் அரசுக்கு ஆதரவாகவும், 12 விவாதங்கள் இந்து-முஸ்லிம் மதப் பிரச்சினைகள் பற்றியும், 12 விவாதங்கள் மற்ற தலைப்புகளைப் பற்றியும் இருந்தன. ஒரே ஒரு நிகழ்ச்சியில் மட்டுமே அவர் பாஜக அரசை கேள்வி எழுப்பி, தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக வெளிவந்துள்ள செய்திகள் பா.ஜ.க கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்று பேசினார்.
  6. நவிகா குமார் (டைம்ஸ் நவ்) தனது நிகழ்ச்சியான தி நியூஷூரில் (The Newshour) மொத்தம் 51 விவாதங்களை நடத்தியுள்ளார். அதில் 33 விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 12 விவாதங்கள் மோடி அரசாங்கத்தை பாராட்டியும் இருந்தன.

படிக்க: ஒளிபரப்பு சேவை (ஒழுங்குமுறை) மசோதா 2023: கருத்து சுதந்திரத்திற்கு கட்டப்படும் கல்லறை!


பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 12 வரை மொத்தம் 429 விவாதங்கள் நடத்தப்பட்டுள்ளன. இதில் 52 சதவீத விவாதங்கள் எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும், 1.1 சதவீத விவாதங்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பை பற்றியும், 27 சதவீத விவாதங்கள் மோடியை பாராட்டுவதாகவும், 5.6 சதவீத விவாதங்கள் மத பிரிவினைவாதத்தைப் பற்றியும், 12.5 சதவீத விவாதங்கள் பிற விசயங்களைப்பற்றியும், 1.4 சதவீத விவாதங்கள் மோடி அரசை கேள்வி எழுப்புவதாக அமைந்துள்ளன.

எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடைபெற்ற 52 சதவீத விவாதங்களில் இந்தியா கூட்டணியில் உள்ள பிரச்சினைகளையும், மதுபான முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பற்றியும், ராகுல் காந்தியின் கருத்தை திரித்தும் பேசப்பட்டுள்ளன.

பா.ஜ.க என்ற ஒரு கட்சி மட்டுமே 6000 கோடி மதிப்பிலான தேர்தல் நிதிப்பத்திரங்களை கார்ப்பரேட்டுகளிடமிருந்து பெற்றுள்ளதைப் பற்றி பேசாமல், எதிர்க்கட்சிகள் வாங்கியுள்ள தேர்தல் பத்திரங்களைப் பற்றி மட்டுமே திட்டமிட்டு இந்த ஊடகங்கள் பேசியுள்ளன. இந்த ஊடகங்கள் ஞானவாபி மசூதி பற்றிய முஸ்லீம்களுக்கு எதிரான நீதிமன்ற தீர்ப்பை வரவேற்றும், சனாதன தர்மத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் இருக்கின்றன என்றும் கூறியும் தனது ”கோடி மீடியா“ பட்டத்தை நிலைநாட்டியுள்ளன.

ஆக மொத்தத்தில் கோதி மீடியாக்கள், எதிர்க்கட்சிகளுக்கு எதிராகவும் மோடி அரசுக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகிறார்கள் என்பதை இந்த ஆய்வு ஆணித்தனமாக நிரூபிக்கிறது. நாட்டின் நான்காவது தூண் என்று கருதப்படும் ஊடகமானது எந்த அளவிற்கு மோடி அரசுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை இந்த ஆய்வு திரைகிழித்து நமக்கு காட்டியுள்ளது.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



மே தினத்தில் சூளுரைப்போம்!

மே தினத்தில் சூளுரைப்போம்!

தொழிலாளி வர்க்கம் ரத்தம் சிந்தி, உயிரைத் துறந்து நிலைநாட்டிய 8 மணி நேர வேலை உரிமை பறிக்கப்பட்டு வருகிறது. இந்திய தொழிலாளி வர்க்கம் போராடிப் பெற்ற 44 தொழிலாளர் சட்டங்களும் 4 தொகுப்பு விதிகள் என சுருக்கப்பட்டு காலாவதியாகி வருகின்றன.

பணி நிரந்தரம், வேலைக்கேற்ற ஊதியம், சம வேலைக்கு சமஊதியம் உள்ளிட்ட அனைத்து  அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு தொழிலாளர் வர்க்கமே நாடோடியாக்கப்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்து விட்டது, விலைவாசிக்கு இணையாக ஊதியம் மட்டும் உயரவில்லை. ஆனால் கல்வி, மருத்துவம், இருப்பிடம் குடிநீர் ஆகிய அனைத்து சேவைகளும் விலை பொருளாகிவிட்டது. தொழிலாளி வர்க்கம் மொத்த உரிமைகளையும், வாழ்வுரிமையையும் பறிகொடுத்து விட்டு நவீன கொத்தடிமைகளாக்கப்பட்டு வருகிறது.

வாழ்வாதாரம் இழந்த உழைக்கும் மக்கள் காண்டிராக்ட்- நீம் என்கிற அத்துக்கூலியாகவும், கட்டிடத் தொழிலாளி, தூய்மைப் பணியாளர், ஜிக் தொழிலாளர்கள், என பல்வேறு வகைப்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்களாக எந்த  உரிமைகளும் இல்லாமல் இருக்கிறார்கள்.

நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விவசாயிகள் போண்டியாகி விவசாயத்தை விட்டு  தலைதெறிக்க ஓடுகிறார்கள். விவசாயிகள் தற்கொலை என்பது சாதாரண ‘செய்தி’ யாகி விட்டது. சிறு தொழிலும், சிறுவணிகமும் நூலிழையில் பிழைப்பை நடத்திக் கொண்டிருக்கின்றன.

மறுபுறத்தில் கார்ப்பரேட்டுகள் தொழிற்சாலை கட்ட நிலமும், கடனும் வழங்கப்படுகிறது. இயற்கை வளத்தையும், மனிதவளத்தையும் இரக்கமின்றி சுரண்ட அனைத்து கதவுகளும் அகலமாகத் திறக்கப்பட்டுள்ளது.


படிக்க: வேலையில்லாத் திண்டாட்டம் – யார் காரணம்: வட மாநிலத் தொழிலாளியா? முதலாளித்துவ இலாபவெறியா?


நாட்டின் செல்வத்தை உருவாக்குகின்ற உழைக்கும் மக்கள் தனது உழைப்பின் பலனை நுகர்வது சொற்பமாகிவிட்டது.

கார்ப்பரேட் முதலாளிகள் நாட்டின் செல்வத்தை உறிஞ்சிக் கொள்வது தொடர்ந்து அதிகரித்து வருவதால் செல்வத்தை படைக்கும் உழைக்கும் மக்களுக்கும் அதனை சுரண்டி கொழுக்கும் கார்ப்பரேட்டுகளுக்கும் இடையிலான சமத்துவமின்மை அதிகரித்து வருகிறது.

75 ஆண்டு கால ‘ஜனநாயக’ ஆட்சியில் சட்ட உரிமைகள் பறிப்பு, இயற்கை வளக் கொள்ளை ஆகிய அட்டூழியங்களுக்கு ராஜபாட்டை போட்டுள்ள தனியார்மய- தாராளமய – உலகமயக் கொள்கை என்பது கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கானது  என்பது இன்றைய நிதர்சனம். குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வரும் ஆர்.எஸ்.எஸ். – பா. ஜ. க ஆட்சி அப்பட்டமான முறையில் கார்ப்பரேட்டுகளின் அடியாளாக செயல்பட்டு வருகிறது. இந்த அயோக்கியத்தனத்தை மூடிமறைத்து திசை திருப்புவதில் பார்ப்பன ( இந்து ) மதவெறியும், சாதிவெறியும் காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகளின் முக்கிய ஆயுதமாக இருக்கின்றன.

நம்மை தலையெடுக்க விடாமல் நவீன கொத்தடிமைகளாக வைத்திருக்கும் இந்த அவலத்தை ஒழித்துக்கட்ட உழைக்கும் வர்க்கமாக ஒன்றிணைந்து வீதியில் இறங்கி போராடுவதை தவிர வேறு வழி இல்லை.

போர்வெறியும், பாசிச அடக்குமுறையும் ஏகாதிபத்திய முதலாளிகளின் சர்வதேச கொள்ளைக்கு வழிவகுக்கிறது. இந்த கேடுகெட்ட முதலாளித்துவத்தை வீழ்த்தும் வர்க்கப்போராட்டத்துக்கு தலைமையளிப்பது தொழிலாளி வர்க்கத்தின் சர்வதேச கடமையாகும்.  முதலாளித்துவத்துக்கு மாற்று சோசலிசம் தான் என்பதை  இந்த 138 – வது மே தினம் நினைவூட்டுகிறது.

சோசலிசமே தீர்வு என்கிற உணர்வோடு இந்திய நாட்டில் புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுக்க தொழிலாளி வர்க்கத்தை அறைகூவி அழைக்கிறோம்.

முதலாளித்துவம் கொல்லும்!
கம்யூனிசமே வெல்லும்!

இவண்,
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி
(மாநில ஒருங்கிணைப்புக் குழு)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பாசிசத்தின் உச்சம் தொட்ட தேர்தல் ஆணையம் | தோழர் ரவி

பாசிசத்தின் உச்சம் தொட்ட தேர்தல் ஆணையம் | தோழர் ரவி

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



பேரிடர் நிதி, பிச்சை அல்ல! தமிழ்நாட்டின் உரிமை!

பேரிடர் நிதி, பிச்சை அல்ல!
தமிழ்நாட்டின் உரிமை!

தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்காத பாசிச பாஜக வேண்டாம்!

28.04.2024

கண்டன அறிக்கை

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி உதவித்தொகையாக கோரியிருந்த நிலையில் தமிழ்நாட்டுக்கு மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்கு உதவித்தொகையாக ரூ.275 கோடி மட்டுமே ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. இதனை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிப்பதுடன் தமிழ்நாடு அரசு கேட்ட பேரிடர் உதவித்தொகையை உடனடியாக ஒன்றிய அரசு விடுவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

அதே நேரத்தில், இரண்டாம் கட்டத்தேர்தல் நடைபெற உள்ள கர்நாடகத்துக்கு ரூ.3,454 கோடி வறட்சி உதவித் தொகையாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. கர்நாடகத்தில் வறட்சி உதவித் தொகை கோரி காங்கிரஸ் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் இந்த நிதி விடுவிக்கப்பட்டுள்ளது. கடும் வறட்சி நிலவுவதால் ரூ.35,162 கோடி கோரியிருந்தது கர்நாடக அரசு.

கர்நாடகத்தில் நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலை முறைகேடாக எதிர்கொள்வதற்காகவே திட்டமிட்டு இந்த நிதி இப்பொழுது விடுவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இல்லாத விஷயத்தில் கூறியதாக சொல்லி மதவெறுப்புப் பேச்சுக்களை உமிழ்ந்து கொண்டிருக்கும் மோடியின் மீது நடவடிக்கை எடுக்கவில்லை தேர்தல் ஆணையம். மோடியின் மோசடி மற்றும் வெறுப்பு பேச்சுக்கள் தேர்தல் ஆணையத்தின் விதிமீறல்களில் ஒருபோதும் வரப்போவதில்லை. ஏனென்றால் இந்தத் தேர்தலே ஒரு மேட்ச் பிக்சிங் தேர்தல் தான்.


படிக்க: மோடியின் வெறுப்பு பேச்சு: செவிடாகிப் போன தேர்தல் ஆணையம்


கடந்த 10 ஆண்டுகளில் ஒட்டுமொத்த நாட்டையே பேரழிவுக்கு உள்ளாக்கிய மோடி – அமித்ஷா பாசிச கும்பல், மக்கள் போராட்டங்களின் முன்பு தோற்றுவிட்டது. இப்போது தேர்தலிலும் அம்பலப்பட்ட பிறகு சில ஆயிரம் கோடிகளை வீசி வெற்றி பெற்று விடலாம் என்று மனப்பால் குடித்துக் கொண்டிருக்கிறது.

ரூபாய் 38 ஆயிரம் கோடி உதவித்தொகையாக கேட்ட நிலையில் தமிழ்நாட்டுக்கு வெறும் ரூ.275 கோடியை பிச்சை காசு போல வீசி உள்ளது பாசிச பா.ஜ.க அரசு.

கார்ப்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடிகள் வாரிக் கொடுத்த மோடி – அமித்ஷா பாசிச கும்பல், நிதி விடுவிக்க மறுப்பதன் மூலம் தமிழ்நாட்டின் கழுத்தை அறுக்கிறது.

தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தை எல்லாம் பிடுங்கி வைத்துக் கொண்டு பேரிடர் காலங்களில் கூட எவ்வித உதவியும் செய்வதில்லை என்றால் எதற்காக இந்த ஒன்றிய அரசு என்ற கேள்வியை நாம் எழுப்ப வேண்டும். கிழக்கிந்திய கம்பெனியின் ஆட்சியை விட மிகக் கொடூரமான ஆட்சியயை அல்லவா இந்த மோடி – அமித்ஷா பாசிச கும்பல் நடத்திக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டினைத் தொடர்ந்து வன்மத்துடனும் எதிரியாகவும் கருதி செயல் பட்டுக் கொண்டிருக்கும் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க தமிழ்நாட்டில் இருந்து முற்றாக துடைத்தெறியப்பட வேண்டும்.

தமிழ்நாட்டுக்கு நிதி கொடுக்காத பாசிச பா.ஜ.க நமக்கு வேண்டாம் என்ற முழக்கம் தெருவெங்கும் வீடுகள் தோறும் ஒலிக்கட்டும்!

வேண்டாம் பி.ஜே.பி வேண்டும் ஜனநாயகம் என்ற முழக்கத்தை முன் வைப்போம்! ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி -அதானி பாசிசத்தை வீழ்த்துவோம்!


தோழமையுடன்
தோழர் சி. வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அமெரிக்க மாணவர்களின் போராட்டம்! இன அழிப்புக்கு எதிரான இன்னுமொரு ஒளிக்கீற்று!

பாலஸ்தீனியர்களுக்கு எதிரான இஸ்ரேலின் இன அழிப்பு போரானது, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் மற்றும் அரசுகளின் தீவிர எதிர்ப்புக்கு மத்தியில் 200 நாட்களுக்கும் மேலாக பாலஸ்தீனியர்களை கொன்று வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நடத்திவரும் போருக்கு எதிராக அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவர்களின் போராட்டம் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. அரசின் பல்வேறு ஒடுக்குமுறைகளையும் கடந்து நடைபெற்று வரும் இப்போராட்டமானது, இஸ்ரேலின் இன அழிப்புப் போருக்கு எதிராக போராடும் மக்களுக்கும் பாலஸ்தீனிய மக்களுக்கும் நம்பிக்கையளிக்கக்கூடிய ஒளிக்கீற்றாகும்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7–இல் துவங்கிய காஸாவின் மீதான இஸ்ரேலின் இன அழிப்பானது ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. இதுவரை 14,500 குழந்தைகள் 8,400 பெண்கள் மற்றும் 141 பத்திரிக்கையாளர்கள் உட்பட 34,000-க்கும் அதிகமான பாலஸ்தீனிய மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 77,000 பேர் மேல் காயமடைந்துள்ளனர். 8,000-த்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர்.

காஸாவிற்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்தக் கோரி உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் மக்கள் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் காஸாவிற்கு எதிரான இஸ்ரேலின் போர் மற்றும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தக்கோரி அமெரிக்காவின் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளதானது முக்கிய நிகழ்வாகக் கருத்தப்படுகிறது.

ஏனெனில், இஸ்ரேலின் இந்தப் போரானது அமெரிக்காவின் பதிலிப் போர். எனவே, அமெரிக்காவிலேயே இதற்கு எதிராக உறுதியான போராட்டம் வெடித்திருப்பது இந்த இன அழிப்புப் போருக்கு எதிரான முத்தாய்ப்பான நடவடிக்கையாகும்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது மட்டுமல்லாமல், அமெரிக்கா தொடர்ந்து இஸ்ரேலுக்கு அளித்து வரும் ஆதரவை நிறுத்தக் கோரியும் போராட்டப் பதாகைகளை ஏந்தியுள்ளனர். இந்தப் போரின் துவக்கம் முதல் அமெரிக்காவானது மிகப்பெரிய அளவில் இராணுவ உதவிகளை இஸ்ரேலுக்குச் செய்து வருகிறது. அமெரிக்கா அனைத்து வகையான இராணுவ உதவிகளையும் நிறுத்த வேண்டும், இந்தப் போரில் இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்கி வரும் நிறுவனங்கள் மற்றும் இந்தப் போரினால் ஆதாயம் அடையக் கூடிய நிறுவனங்களில் அமெரிக்கா செய்துள்ள முதலீடுகள், பத்திரங்கள் ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும் போன்ற கோரிக்கைகளை அம்மாணவர்கள் முன்வைத்துள்ளனர்.


படிக்க: அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பற்றிப் படரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்


மேலும், இப்போராட்டத்தை மட்டுப்படுத்தும் நோக்கில், இப்போராட்டத்தின் மையமாக விளங்கும் கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்; யேல் பல்கலைக்கழகத்தில் 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுமட்டுமன்றி, அமெரிக்கா முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்களுக்கு எதிராக கைது மற்றும் பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகளை ஜோ பைடன் அரசு மேற்கொண்டு வருகிறது. இதனைக் கண்டித்து, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எதிரான நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும் என்பதற்காகவும் அம்மாணவர்கள் போராடி வருகின்றனர்.

இந்தப் போராட்டமானது, அங்குள்ள இஸ்லாமிய ஆதரவு மற்றும் யூத எதிர்ப்பு கொண்ட மாணவர்களால் நடத்தப்பட்டு வருகிறது என்று அமெரிக்க வெள்ளை மாளிகையும், முதலாளித்துவ ஊடகங்களும் மற்றும் அமெரிக்காவிலுள்ள இஸ்ரேல் ஆதரவு குழுக்களும் அவதூறு செய்து வருகின்றனர்.

இதனை மறுக்கும் வகையில் அப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர் பிபிசி-க்கு அளித்துள்ள பேட்டியில், “நாங்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக நிற்கிறோம், அனைத்து மக்களுக்கும் ஆதரவாக நிற்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.

1960-களில் நடைபெற்ற வியட்நாம் போருக்கு எதிராகவும், வளைகுடா போருக்கு எதிராகவும், அமெரிக்காவில் நடைபெறும் நிறவெறித் தாக்குதலுக்கு எதிராகவும் மற்றும் பிற இன அழிப்புப் போருக்கு எதிராகவும் தொடர்ச்சியாக போராடியவர்கள் அமெரிக்க மாணவர்கள். அவற்றுடன் ஒப்பிடுகையில் தற்போது நடைபெறும் போராட்டங்களின் அளவும் வீச்சும் குறைவே என்கிறார் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர் ஒருவர். இம்மாணவர்களின் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் வகையிலும் கொச்சைப்படுத்தும் வகையிலும் ஜோ பைடன் அரசு அவதூறு செய்தும் போராட்டத்தை ஒடுக்கியும் வருவது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

காஸாவில் நடக்கும் போர் தொடர்பான துயரச் செய்திகளும், புகைப்படங்களும், காணொளிகளும் ஒவ்வொரு நாளும் நம் மனதை உலுக்குகின்றன, மனித மாண்பைக் கேள்விக்குள்ளாக்குகின்றன. உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்காவின் இந்த பதிலிப் போரானது, நமது சம காலத்தில் ஒரு இனத்தையே அழிவை நோக்கி இட்டுச் சென்றுள்ளது. அநாதையாக்கப்படும் குழந்தைகளின் கதறல்களும், தாய்மார்களின் குமுறல்களும் சொல்லி மாளாதவை. இத்தகைய உணர்வுகளின் வெளிப்பாடுகளில் ஒன்றுதான் அமெரிக்க மாணவர்களின் போராட்டங்கள். நமது நாட்டிலும் இது போன்ற போராட்டங்களைக் கட்டியெழுப்புவதும், அவற்றை இஸ்ரேலின் இன அழிப்புக்கு எதிரான உலகப் பேரியக்கத்துடன் இணைத்துக் கொள்வதுமே, காஸாவிற்கு எதிரான போரை நிறுத்துவதற்கான முயற்சியாக இருக்கும்.


பாரி

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பற்றிப் படரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்

1. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரின் டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மெரிக்காவின் சிகாகோ, கலிபோர்னியா, நியூயார்க், பிரான்சிஸ்கோ உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காசா மீதான இனப்படுகொலைப் போரை நிறுத்தக்கோரி பாலஸ்தீனத்தை ஆதரித்து அமெரிக்க மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டம் அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கும் பற்றிப் படர்ந்துள்ளது.

ஏப்ரல் 17 அன்று பாலஸ்தீனத்தை ஆதரித்து நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏப்ரல் 18 அன்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹார்வர்டு, யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது.

இஸ்ரேலுக்கான அமெரிக்க ராணுவ உதவியை நிறுத்துதல், போர்நிறுத்தம், ஆயுத விநியோகம் மற்றும் போரினால் பயனடையும் நிறுவனங்களில் இருந்து பல்கலைக்கழக முதலீடுகளைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை போலீசு கைதுசெய்து வருவதாலும், போராட்டத்தைக் கலைக்கும் வேலையில் போலீசு ஈடுப்பட்டு வருவதாலும் மாணவர்களுக்கும் போலீசுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

ஏப்ரல் 22 அன்று யேல் பல்கலைக்கழகத்தில் மொத்தம் 47 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், ஏப்ரல் 23 அன்று இரவு நியூ யோர்க் பல்கலைக்கழகத்தில் 150 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் 24 அன்று, எமர்சன் கல்லூரி மாணவர்கள் 108 பேரை போலீசு கைது செய்துள்ளது. அதேபோல் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் டெக்சாஸிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பாலஸ்தீனிய சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, 34,300 க்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் இஸ்ரேல் அரசால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். காசாவில் உள்ள பாலஸ்தீனர்களுக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தும் விதத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக போராடும் மாணவர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஆஸ்டின் நகரின் டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காசா மீதான இஸ்ரேலின் போருக்கு ஆதரவளிக்கும் முதலீடுகளை நிறுத்த வேண்டும் என்ற ஒருமித்த கோரிக்கையுடன் கூடாரங்களை அமைத்து போராடி வரும் மாணவர்கள்.
டெக்சாஸ் மாநில துருப்புக்களின் வரிசையை முறைத்துப் பார்க்கும் பாலஸ்தீன ஆதரவு மாணவர்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் கூடாரங்களை எடுத்துச் செல்லும் மாணவர்கள்.
நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தில் ஒரு ஆர்ப்பாட்ட முகாமுக்கு அருகிலுள்ள வேலியில் பாலஸ்தீனிய கொடிகள் வரிசையாக காணப்படுகின்றன.
ஆஸ்டினில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழக வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பாலஸ்தீன ஆதரவு மாணவர்களை கலைக்க முயலும் டெக்சாஸ் மாநில துருப்புக்கள்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் பூங்காவில் (Alumni Park) பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் செய்த மாணவர்களை லாஸ் ஏஞ்சல்ஸ் போலீசார் சுற்றி வளைத்தனர்.
கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் இரவைக் கழிக்க தயாரான மாணவர்கள்.
பறிமுதல் செய்யப்படுவதைத் தடுப்பதற்காக கூடாரத்தை சுற்றி எடுத்துச் செல்லும் தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக மாணவர்கள்.
தெற்கு கலிபோர்னியா பல்கலைக்கழக வளாகத்தில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஆக்கிரமிப்பைத் தொடங்கியதை அடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

புகைப்படங்கள்: அல் ஜசீரா


ராஜேஷ்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube



தோல்வி பயத்தால் மதவெறுப்பை கக்கும் மோடி | தோழர் ரவி

தோல்வி பயத்தால் மதவெறுப்பை கக்கும் மோடி | தோழர் ரவி

 

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



அர்ஜெண்டினா: கல்வி உரிமையை பாதுகாப்பதற்காக திரண்ட மக்கள்

பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் தென் அமெரிக்க நாடான அர்ஜெண்டினாவில் உள்ள 57 அரசு பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் இணைந்து, “இலவசமாக வழங்கப்பட்டு வரும் பல்கலைக்கழகக் கல்வியைப் பாதுகாப்பதற்காக” நேற்று (23-04-2024) போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொழிலாளர் சங்கங்கள், எதிர்க்கட்சிகள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவை இணைந்து ப்யூனஸ் அயர்ஸ் (Buenos Aires) மற்றும் பிற முக்கிய நகரங்களான கோர்டோபா (Cordoba) போன்றவற்றில் நடந்த போராட்டங்களுக்கு தங்களுடைய ஆதரவை ஆதரவளித்துள்ளன. இது டிசம்பரில் பதவியேற்ற அர்ஜெண்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலேக்கு எதிரான மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்களில் ஒன்றாகும்.

அர்ஜெண்டினாவின் தலைநகரில் மட்டும் சுமார் 1,00,000 பேர் வந்ததாக போலீசு தெரிவித்தது, ஆனால் போராட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் 5,00,000 மக்கள் பங்குபெற்றதாக தெரிவித்தனர். ஆசிரியர் சங்கம் ஒன்று நாடு முழுவதும் பத்து இலட்சம் போராட்டக்கார்ர்கள் போரட்டத்தில் கலந்து கொண்டனர் என்று தெரிவித்துள்ளது. தலைநகரையே இந்த போராட்டம் முடக்கியது. பல நகரங்கள் மக்கள் போராட்டத்தால் ஸ்தம்பித்தன.

போராட்டத்தில் கலந்து கொண்ட மூன்றாம் ஆண்டு மருத்துவ மாணவர் பாப்லோ விசென்டி (22) புவெனஸ் அயர்ஸில் உள்ள ஏஜென்ஸ் பிரெஞ்சு-பிரஸ் செய்தி நிறுவனத்திடம், ”பல்கலைக்கழக அமைப்பின் மீது இந்த அரசு மிருகத்தனமான தாக்குதலை நடத்தியுள்ளது தான் எங்களது இந்த போராட்டத்திற்கு காரணம்” என்று கூறினார்.

மேலும் ”பணம் இல்லை என்ற பொய்யான கதையை சொல்லி அதன் மூலம் இலவச கல்வியை தடுக்கப்பார்க்கிறார்கள். அரசிடம் பணம் இருக்கிறது அதை பொதுக் கல்விக்காக செலவிட வேண்டாம் என்று நினைக்கிறது” என்றார்.

கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த தேர்தலில் ஜேவியர் மிலே வெற்றி பெற்றார். பட்ஜெட் பற்றாக்குறையை பூஜ்ஜியமாகக் குறைப்பதாக உறுதியளித்தார்.

ஆனால் ஜேவியர் மிலே மக்களின் அடி மடியில் கைவைத்துள்ளார். போக்குவரத்து, எரிபொருள் மற்றும் எரிசக்திக்கான மானியங்களை அவரது அரசாங்கம் குறைத்து மக்களை நெருக்கடிக்கு தள்ளியுள்ளது.

ஏப்ரல் 23, 2024 அன்று, லட்சக்கணக்கான அர்ஜெண்டினா மக்கள் தங்கள் பாடப்புத்தகங்களை கையிலேந்தி தேசிய கீதத்தைப் பாடினார்கள்.
மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அர்ஜெண்டினாவின் சக்திவாய்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் இடதுசாரி அரசியல் கட்சிகளுடன் ஒருங்கிணைந்து போராடினார்கள்.
டிசம்பரில் ஜேவியர் மிலே ஆட்சிக்கு வந்ததில் இருந்து தலைநகரை உலுக்கிய மற்ற போராட்டங்களை விட, பியூனஸ் அயர்ஸ் நகரத்தில் நடந்த இந்த போராட்டம் மிகப்பெரியது.
பட்ஜெட் நெருக்கடியை காரணம் காட்டி பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நிதியை நிறுத்தியதை கண்டித்து பதாகைகளை ஏந்தி நிற்கும் மக்கள்.
“நீங்கள் ஏன் பொதுக் கல்விக்கு மிகவும் பயப்படுகிறீர்கள்?” “பல்கலைக்கழகம் தன்னை தற்காத்துக் கொள்ளும்!” என்று மாணவர்கள் முழங்கினார்கள்.
ஒரு மாணவர் அணிவகுப்பின் போது, “அறிவியல் இல்லாமல் எதிர்காலம் இல்லை” என்று எழுதப்பட்ட பலகையை வைத்திருந்தார்.
ஜேவியர் மிலே தனது ஜனாதிபதி மாளிகையில் இருந்து பல்கலைகழகங்களுக்கான பட்ஜெட் குறைப்பை அறிவித்த சில மணி நேரங்களுக்குப் பிறகு, மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் தொழிலாளர்கள் புவெனஸ் அயர்ஸின் தெருக்களில் திரண்டனர்.
தலைநகரில் மட்டும் 5 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் போராட்டத்தில் கலந்து கொண்டதாக பியூனஸ் அயர்ஸ் பல்கலைக்கழகம் கூறுகிறது.
சுமார் 22 இலட்சம் மக்கள் அர்ஜெண்டினாவின் பல்கலைக்கழக அமைப்பில் படிக்கின்றனர்.


ஆதன்

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



ஷர்மிளா தற்கொலை – போலீசே காரணம் | தோழர் மருது

பள்ளிக்கரணை சாதிய வன்மம்
| ஷர்மிளா தற்கொலை – போலீசே காரணம் | தோழர் மருது

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube,



இம்முறை மகளிர் தினத்தில் கொண்டாட்டம் இல்லையே, ஏன்?

பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

டந்த மார்ச் மாதத்தில் பொதுவெளியில் விவாதிக்கப்பட்ட, பேசுபொருளாக இருந்த நிகழ்வுகள் குறித்தும் அரசியல் பிரச்சினைகள் குறித்தும் வாசகர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு புதிய ஜனநாயகம் ஆசிரியர் குழு சார்பாக அளிக்கப்பட்ட பதில்கள்.

கேள்வி: இந்தாண்டு மகளிர் தினத்தில் சமூக வலைத்தளங்களில், ‘‘எங்களால், மகளிர்தின வாழ்த்து கூற முடியவில்லை மன்னித்துவிடுங்கள்’‘ என்ற கோணத்தில் நிறைய பதிவுகளை காண முடிந்தது. இதிலிருந்து மகளிர்தின கொண்டாட்டத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தோன்றுகிறது. இதை எப்படி பார்ப்பது?

ர்வதேச உழைக்கும் மகளிர் தினம் என்பது கொண்டாட்டமாக இருக்கக் கூடாது, போராட்ட வடிவமாக இருக்க வேண்டும் என்று புரட்சிகர சக்திகள் பல ஆண்டுகளாக கூறி வருகின்றனர். அதற்கேற்ப இந்தாண்டு மகளிர் தினம் பெண்கள் மீதான பாலியல் வல்லுறவு, பாலஸ்தீனத்தில் பெண்கள் கொல்லப்படுவது குறித்தெல்லாம் பேசும் அரசியல் சார்ந்த நிகழ்வாக அனுசரிக்கப்பட்டதை பல நிகழ்வுகளில் காண முடிந்தது. முன்பெல்லாம் அரசியல் சக்திகள் மட்டுமே, பெண்கள் மீதான அநீதிகளுக்கு எதிராக குரல் கொடுக்கும் நாளாக மகளிர் தினத்தை கடைப்பிடித்துவந்த நிலையில் இந்தாண்டு மாணவர்கள், இளைஞர்கள் என பல தரப்பினர் அவ்வாறு அணுகினர்.

குறிப்பாக, இந்த ஆண்டு மகளிர் தினமான மார்ச் 8 -க்கு சில நாட்களுக்கு முன்புதான் ஜார்கண்ட் மாநிலத்தில் ஸ்பெயின் நாட்டை சேர்ந்த பெண்மணி அவரது கணவன் முன்னிலையிலேயே கொடூரமாக பாலியல் வல்லுறவு செய்யப்பட்ட சம்பவமும் புதுச்சேரியை சேர்ந்த ஆர்த்தி என்ற 9 வயது குழந்தை கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டு கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவமும் நடந்தேறியது. அதேபோல் சர்வதேச அளவில், காசா பகுதியில் வாழும் பாலஸ்தீன மக்கள் மீது பாசிச இஸ்ரேல் அரசு நடத்திவரும் இனஅழிப்பு போரில் 25,000-க்கும் மேற்பட்ட பெண்களும் குழந்தைகளும் படுகொலை செய்யப்பட்டுள்ளது போன்றவை, மகளிர் தினத்தில் கொண்டாட என்ன இருக்கிறது? என்ற கேள்வியை இளைஞர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்ததை காண முடிந்தது.

இதனால்தான், சமூக வலைதளங்களில் மகளிர் தினத்தன்று பலர், ‘‘எவ்வளவு முயன்றாலும் எங்களால் மகளிர் தினத்திற்கு வாழ்த்து தெரிவிக்க முடியவில்லை’‘ என்று வேதனையுற்றனர்.

ஆனால், இந்த மாற்றம் மகளிர் தினத்தில் மட்டும் ஏற்படவில்லை, சமீப காலங்களாகவே முன்பு கொண்டாட்டமாக பார்க்கப்பட்டுவந்த பல சிறப்பு நாட்கள் தற்போது சமூகத்தின் அநீதிகளை அம்பலப்படுத்துவதற்கான நாளாகவும் போராட்ட நாளாகவும் மாறிவருகிறது. சான்றாக, கடந்தாண்டு ஜுலை மாதம் மணிப்பூரில் குக்கி இன பெண்கள் இருவரை, மெய்தி இன வெறியர்கள் கொடூரமான முறையில் நிர்வாணமாக்கி அடித்து இழுத்துச்செல்லும் காட்சிகள் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கியது. அதற்கு அடுத்ததாக ஆகஸ்ட் மாதத்தில் ‘சுதந்திர தினம்’ அன்று இளைஞர்கள் பலரும் மணிப்பூர் நிகழ்வை மேற்கோள் காட்டி, ‘‘இந்த நாட்டிற்கு சுதந்திர தினம் ஒரு கேடா’‘? என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்ததைக் காண முடிந்தது. மோடியின் கொடூரமான பாசிச பேயாட்சியில் மக்கள் தங்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் அனைத்திற்கும் எதிராக உறுதியாக போராட வேண்டும் என்ற உணர்வை பெற்று வருகிறார்கள் என்பதையே இவைக் காட்டுகின்றன.

அதேப்போல், உலகம் முழுவதுமே மக்கள் இந்நிலைக்கு வந்துள்ளனர். கடந்தாண்டு தொழிலாளர் தினத்தை எடுத்துகொள்வோம், உலகம் முழுக்க செங்கொடிகள் ஏந்தி தொழிலாளர்கள் போராட்டங்களையும் பேரணிகளையும் நடத்தினர். சமூகத்தின் அநீதியும் சுரண்டலும் ஒடுக்குமுறையும் தீவிரமடையும்போது, அதற்கு எதிராக கிடைக்கும் சிறு விசயங்களை கூட மக்கள் ஆயுதமாக கையிலெடுக்கின்றனர். அதற்கான சான்றுதான் இந்தாண்டு மகளிர் தினம்.


பு.ஜ. உடன் ஓர் உரையாடல்

(புதிய ஜனநாயகம் – ஏப்ரல் 2024 இதழ்)

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube