Monday, July 28, 2025
முகப்பு பதிவு பக்கம் 554

எழுத்தாளர் காஞ்சா அய்லய்யாவுக்கு பார்ப்பனர்கள் கொலை மிரட்டல் !

41

காஞ்சா அய்லய்யா இந்தியாவின் புகழ்பெற்ற எழுத்தாளர், தலித் அரசியல் சிந்தனையாளர், மனித உரிமை செயற்பாட்டாளர். “நான் ஏன் இந்து அல்ல”, “பின் இந்து இந்தியா”, “அய்யங்காளி” போன்ற நூல்களின் ஆசிரியர். அச்சமின்றி பார்ப்பனியத்தை எதிர்த்து பேசி வரும் அறிவு ஜீவிகளில் ஒருவர். தற்போது ஐதரபாத் மௌலானா அபுல்கலாம் ஆசாத் உருது பல்கலைகழகத்தில் சமூக நீதி ஆய்வு மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார்.

kancha-ilya-threatened-by-brahmin-thugsவிஜயவாடாவில் சி.ஐ.டி.யு ஏற்பாடு செய்த கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் ’இந்தியாவில் தொழிலாளர் வர்க்கத்தின் பரிணாம வளர்ச்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். அதில் “பார்ப்பனர்கள் உற்பத்தியில் ஒருபோதும் பங்கெடுக்கவில்லை, அவர்களுடைய சமூகம் உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் ஈடுபடவில்லை” என குறிப்பிட்டுள்ளார். ஆனால் ஊடகமோ பார்ப்பனர்கள் சோம்பேறி சமூகம் என திரித்து எழுதியது.

இதையறிந்த 15 பேர் கொண்ட பார்ப்பன கும்பல் அவருடைய அலுவலகத்தில் அவரை சூழ்ந்து கொண்டு மன்னிப்பு கேட்கும் படி மிரட்டியது. தான் தெரிவித்த கருத்துகளுக்கு அடிப்படை காரணங்களை விளக்கி கூறினாலும் அந்த கும்பல் காது கொடுக்க தயாராக இல்லை. மன்னிப்பு கேட்க அவர் மறுக்கவே, ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் தகாத வார்த்தையால் பேசியும், தொலைபேசி வாயிலாக கொலை மிரட்டல் விடுத்தும் இருக்கிறது.

அதன்பிறகு நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பில் காஞ்சா அய்லய்யா ’நான் இந்துமதத்தை விமர்சித்து கொண்டு இருப்பதால் சீர்திருத்தம் அடையும் என எதிர்ப்பார்த்தேன். ஆனால், அதன் கலாச்சாரம் இதுவென்றால், நான் இந்துமதத்தை பற்றி இனிப் பேசப்போவதில்லை” என உடைந்து போய் கூறியுள்ளார். எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நடந்தது காஞ்சா அய்லய்யாவுக்கும் தொடர்கிறது.

தெலுங்கு மொழி பேசும் எழுத்தாளர்கள், அறிவு ஜீவிகள், செயற்பாட்டாளர்கள் என 50 பேர் இந்த கொலை மிரட்டலை கண்டித்து காஞ்சா அய்லய்யாவுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கின்றனர்.

பார்ப்பனியம் வரலாற்று உண்மைகளை திரித்து எழுதுமே ஒழிய அங்கீகரிக்காது. அப்படி அம்பலபடுத்துவர்களை ஒழித்துக்கட்டும். இதுதான் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி, ரோஹித் வெமுலா உள்ளிட்ட எண்ணற்ற அறிவுஜீவிகளையும், நாத்திகவாதிகளை காவு வாங்கியதற்கான பின்புலம்.

நாத்திகவாத கண்ணோட்டத்தை அறிவியல் பூர்வமாக விளக்கினால் மத உணர்வை புண்படுத்தி விட்டதாக கூறி மதவெறியர்கள் ஆதாயம் தேட முயல்கின்றனர். இங்கு மட்டுமல்ல வங்கதேசத்திலும் இதுதான் நடக்கிறது. கடந்த 2013-ல் இருந்து இதுவரை பத்துக்கும் மேற்ப்பட்ட மதசார்பற்றவர்களும், நாத்திகவாதிகளும் இஸ்லாமிய மதவெறிக்கு பலியாகி உள்ளனர்.

சிந்தனையாளர்கள், அறிவுஜீவிகள், கலைஞர்கள் இல்லாத சமூகம் என்பது ஊனமானது. விலைமதிப்பில்லாத அவர்கள் உயிர் போவதை பார்த்து நாம் மௌனமாக கடந்தோமானால், அது நம்தேசத்தை தற்குறிகள் நிறைந்த தேசமாக மாற்றிவிடும்.

நீதிமன்ற கருப்பு அங்கிகள் காவி உடையை தரிக்கும் தருணத்தில் , இந்துத்துவ கருத்துக்களை பொதுவெளியில் பேசுவதையே ஜனநாயகம் எனப் பொழிப்புரை தருகிறது பார்ப்பனப் பாசிசம்.

அதனால் இந்த அரசு கட்டமைப்பில் நின்று கொண்டு பார்ப்பனியத்தை கூண்டில் ஏற்றிவிட முடியாது. அரசின் அனைத்து உறுப்புகளையும் பயன்படுத்திதான் மாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகள் தப்பிவிக்கப்பட்டனர் என்பது ஒரு வெள்ளிடை உதாரணம். ஆகையால் பார்ப்பன பயங்கரவாதத்துக்கு எதிரான தீர்ப்பு என்பது மக்கள் மன்றத்தில் மட்டுமே கிடைக்கும்.

-மில்ட்டன், செயலர்,
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், சென்னை

ஹிந்துஸ்தான் டைம்ஸில் வெளியான காஞ்சா அய்லய்யாவின் பேட்டியிலிருந்து சில பகுதிகள்:

kancha-ilyaமே 16 அன்று ஹைதராபாத் மவுலானா ஆசாத் தேசிய உருது பல்கலைக் கழகத்தில் ஹிந்துஸ்தான் டைம்ஸ் அய்லய்யாவை சந்திக்க போன போது அவரது அறைக்கு வெளியே இரண்டு தொலைக்காட்சி படப்பிடிப்பு குழுக்களும், மாநில பார்ப்பனர்கள் சங்கத்தைச் சேர்ந்த ஒரு ஆவேசமான கூட்டமும் இருந்தன.

கூச்சலும் குழப்பமுமாக இருந்த  அறையில் தொலைபேசி இடையிடையே ஒலித்துக் கொண்டிருந்தது. “யார் பேசுவது? நீ ஒரு பயங்கரவாதியா? நீ எந்த அமைப்பைச் சேர்ந்தவன் என்று சொல்லு” என்று பேராசிரியர் மறுமுனையில் பேசிக் கொண்டிருந்த நபரிடம் கேட்டுக் கொண்டிருந்தார்.

கேள்வி : என்ன நடந்தது?

மே 14 அன்று விஜயவாடாவில் சி.ஐ.டி.யு சார்பில் ஒரு உரை நிகழ்த்தும்படி என்னை அழைத்திருந்தார்கள். உழைப்பின் தோற்றம் பற்றியும், இந்தியாவில் உற்பத்தியின் வரலாறு பற்றியும் நான் பேசினேன். திராவிடர்களுடையதும், பழங்குடி மக்களுடையதுமான முறைப்படுத்தப்பட்ட உழைப்பு சிந்த சமவெளி நாகரீகத்தில் தொடங்கி வளர்ந்தது என்று கூறினேன். அவர்கள் களிமண்ணை செங்கல் ஆக்கினார்கள்; மரத்தைக் கொண்டு வீடுகளும், அறைக்கலன்களும் செய்தார்கள்; நுட்பமான கால்வாய்களையும், வடிகால் அமைப்புகளையும் கட்டியமைத்தார்கள்.

இந்த முன்னேற்றம் ஆரியர் படையெடுப்புக்குப் பிறகு வேத காலம் தொடங்குவதும் வரையிலும் நீடித்தது. படிப்படியாக, வேதங்களின் செல்வாக்கு அதிகரிக்க அதிகரிக்க உழைப்பின் அங்கீகாரம் பறிக்கப்பட்டது. கடவுளரின் உலகில் உழைப்பை செலுத்துபவர்கள் சண்டாளர்கள், சூத்திரர்கள், கடவுள் மறுப்பாளர்கள் என்று அழைக்கப்பட ஆரம்பித்தனர்.

உழைப்புக்கு எதிரான இந்த ஒட்டுமொத்த கோட்பாடும் பார்ப்பன எழுத்தாளர்களாலும் பின்னர் வேத மதத்தை கட்டமைத்த பூசாரிகளாலும் கட்டி எழுப்பப்பட்டது. இது 6-வது நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அப்போது புத்தர் தோன்றி, “கடும் உழைப்பு ஒவ்வொரு மனிதனின் கடமையாகும்” என்ற சிராமண தத்துவத்தை முன் வைத்தார். இந்த சிராமண கலாச்சாரம், இந்தியாவின் பெரும் பகுதிகளில் புத்த மதத்தை அழித்தொழித்த சங்கராச்சாரியாரின் எதிர்ப் புரட்சி வரை தொடர்ந்தது.

இசுலாமிய, பிற்பாடு கிருத்துவ ஆட்சியாளர்கள் காலத்தில் வேத மதம் கட்டுக்குள் இருந்தது.  1947-க்குப் பின் பார்ப்பன ஆதிக்கம் தொடர்கிறது.

வரலாற்றில் பார்ப்பனர்கள் ஒரு போதும் உற்பத்தியில் பங்கேற்றதில்லை என்பதுதான் நான் என் உரையில் பதிய வைத்த முக்கியமான கருத்து.

கேள்வி: 2010-ல் உங்கள் வீடு சூறையாடப்பட்டது. வலதுசாரி குழுக்கள் உங்களை பல ஆண்டுகளாகவே குறி வைத்து வந்திருக்கின்றனர். இப்போது என்ன மாறியிருக்கிறது?

கடந்த காலத்தில், பார்ப்பனர்களால் தலைமை தாங்கப்படும் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க போன்ற அமைப்புகளின் தாழ்த்தப்பட்ட சாதி உறுப்பினர்கள்தான் என்னை தாக்கினார்கள். இதுதான் முதல்முறையாக பார்ப்பனர்கள் வெளிப்படையாக என்னை குறி வைப்பது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுகளிடமிருந்து கிடைக்கும் ஆதரவு அவர்களுக்கு தைரியம் ஊட்டியிருக்கிறது.

ஆட்சிக்கு வந்த பிறகு சந்திரசேகர் ராவும், சந்திரபாபு நாயுடுவும் பார்ப்பனர்களின் நலனுக்காக தலா ரூ 100 கோடி ஒதுக்கினர். பார்ப்பன சாதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் தலைமையில் அந்த சாதிக்காக தனி வாரியங்கள் தொடங்கப்பட்டுள்ளன.

அவர்கள் தோளில் பெரிய கோடாரியை வைத்திருக்கும் பரசுராமனை தங்கள் சின்னமாக பயன்படுத்துகின்றனர். கோடாரியைக் காட்டி யாரையோ மிரட்ட முயற்சிக்கின்றனர். அரசு ஆதரவிலான இந்த குழுக்கள் தலித் பகுஜன்களுக்கும், சிறுபான்மையினருக்கும் அச்சுறுத்தலானவை.

கேள்வி : இந்த முறை என்ன மாதிரியான மிரட்டல்களை நீங்கள் எதிர் கொண்டீர்கள்?

மே 16 அன்று ஒருவர் என்னை தொலைபேசியில் அழைத்து, தான் ஆந்திர பிரேதச முன்னாள் தலைமை செயலர் ஐ.ஒய்.ஆர் கிருஷ்ணராவ் (இப்போது ஆந்திரா பார்ப்பனர் நலச் சங்க தலைவர்) சார்பாக பேசுவதாக கூறினார். அதே நபர் அதற்கு முந்தைய நாள் சி.ஐ.டி.யு கருத்தரங்கில் எனது உரைக்காக நான் தண்டிக்கப்பட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அவரது அறிக்கை ஹிஸ்டீரியாவை தூண்டியது, எனது கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. ஒருவர் எனது அலுவலக தொலைபேசி எண்ணை பேஸ்புக்கில் போட, வசவு பாடும் அழைப்புகள் வந்து குவிய ஆரம்பித்தன.

பார்ப்பனர்கள் உற்பத்தியில் என்ன பங்களித்தார்கள் என்று புள்ளிவிபரங்களை தரும்படி அவர்களிடம் கேட்டேன். எத்தனை பேர் செருப்பு தொழிலாளர்களாகவும், பானை செய்பவர்களாகவும், கட்டிட தொழிலாளர்களாகவும், விவசாய தொழிலாளர்களாகவும், துப்புரவு தொழிலாளர்களாகவும் உள்ளனர்? தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் அவர்களில் எத்தனை பேர் பதிவு செய்துள்ளார்கள்?

சேற்றை உணவாக மாற்றும் மக்களை அழுக்கு மனிதர்கள் என்று அழைக்கும், அவர்களை இழிவாக கருதும் ஒரு சமூகத்தில் நான் வாழ்கிறோம் என்று நான் வாதிட்டேன். இப்படி இருந்தால் நமது நாடு எப்படி முன்னேற முடியும்?

செய்தி, புகைப்படம் : நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்

ஒடிஸா நியமகிரி பழங்குடி மக்கள் போராட்டம்

0

டிஸா மக்கள் அம்மாநில அரசின் இயற்கை வள அபகரிப்பிற்கு எதிராக போராடி வருகிறார்கள். அரசு மற்றும் ருங்டா சுரங்க நிறுவனத்தின் நில அபகரிப்பிற்கு எதிராக ஒடிசாவின் கொய்டா மாவட்டத்தை சேர்ந்த  கமண்டா கிராம பழங்குடி மக்கள்  மார்ச் 23 – ம் தேதி நடந்த கிராம நிர்வாக கூட்டத்தில் தங்களது சொந்த நிலங்களை சுரங்கம் வெட்டுவதற்குக் கொடுக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர்.

odishagramsabha2௦௦9-ல் தீர்மானம் போடுவதற்காக நடந்த கூட்டத்தில் ருங்டா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி அஸ்வின் குமாரும் , நிலத்தை கையகப்படுத்தும் அதிகாரி பக்பன் சாகுவும், வட்டார வளர்ச்சி அதிகாரி பவானி சங்கர் மிஸ்ராவும் கலந்து கொண்டு இருந்தனர். அந்த கூட்டத்தில் கிராம மக்கள் 30 பேர்கள் மட்டுமே  கலந்து கொண்டதாகவும், ருங்க்டா நிறுவனத்தின் கைப்பாவை போல செயல்பட்ட அரசு அதிகாரிகள் 1௦௦ வெளியாட்களை அழைத்து வந்து அந்த தீர்மானத்தை போட்டு இருந்ததாகவும் குற்றம் சாட்டுகிறார் அந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பஞ்சாயத்தின் மூத்த தலைவரான பினோத் நாயக்.

2009-ல் போட்டத் தீர்மானத்தின் படி ஒடிஸா மேம்பாட்டு கழகம் (IdCo) 75.4 ஹெக்டேர் அளவு (186.34 ஏக்கர்) நிலங்களை அப்பழங்குடி மக்களிடம் இருந்து அபகரித்து ருங்க்டோ நிறுவனத்திடம் கொடுத்திருந்தது. அந்நிலத்தில் தான் எஃகு தொழிற்சாலை அமைப்பதாய் திட்டமிட்டு இருந்தனர் ருங்டா நிறுவனத்தினர். அந்த நிலத்திற்கு விலையாக  19.4 கோடி ரூபாய் என மதிப்பிட்டிருந்தனர்.

இதனிடையில் சுற்று சூழல் அமைச்சகம் ஒடிஸா அரசின் (ருங்டா நிறுவனத்திற்காக) நில அபகரிப்புக்கான விண்ணப்பத்தை ஏற்காத நிலையில் ருங்டா நிறுவனத்துக்காக  உச்ச நீதிமன்ற படிக்கட்டு ஏறி இருக்கிறது ஒடிஸா அரசு. உச்ச நீதி மன்றமும் ஒடிஸா அரசின் வழக்கைத தற்காலிகமாக தள்ளுபடி செய்து உள்ளது. ஏற்கனவே, பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் கிராம சபைகளின் அனுமதி கிடைக்கும் வரை சுரங்கம் வெட்டக் கூடாது என 2013-ல் உச்ச நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி இருந்தும் அதை மதியாமல் ஒடிஸா அரசு படியேறி உள்ளது. இருப்பினும் நீதிமன்ற வரலாற்றைப் பார்த்தால் உச்சநீதிமன்றம் பொதுவாக கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாகவே தீர்ப்பும் பொழிப்புரையும் அளித்து வருகிறது.

சுற்றுசூழல் அமைச்சகத்திடம் அனுமதி பெறுவதற்காக அனுப்பப்பட்ட விண்ணப்பத்தில் மொத்த தொழிற்சாலைக்கான இடம் 154.489 ஹெக்டேர் எனவும் , அதில் 111 ஏக்கர் ஏற்கனவே வாங்கப்பட்டு தொழிற்சாலை அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தனர். 186.34 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையப்படுத்தி இருக்கும் நிலையில் 22.8 ஏக்கர் தான் இன்னும் நிலுவையில் இருப்பதாக அவ்விண்ணப்பத்தில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

cm-naveen-patnayakஆனால் கிராம சபையோ அந்த 186.34 ஏக்கர் நிலத்தை ருங்டா நிறுவனம் வாங்கி விட்டதாக கூறுவது தவறு என்று அதை மறுக்கிறது. அது மட்டுமல்லாமல் அந்த 186  ஏக்கர் நிலங்களும் கமாண்டா மற்றும் குஸ்முண்டா என்ற இரு கிராமங்களை சேர்ந்த சுமார் 103 குடும்பங்களுக்கு சொந்தமானவை என்றும் அவற்றில் 23 நில உரிமையாளர்களுக்கு மட்டும் இழப்பீட்டுத் தொகை கிடைத்துள்ளதாகவும் மற்றவர்களுக்கு இன்னும் இழப்பீட்டுத் தொகைக் கிடைக்கவில்லை என்றும் கிராம சபை குற்றம் சாட்டியுள்ளது.

2003-04 ல் ருங்டா நிறுவனம் 111 ஏக்கர் நிலங்களை ஏக்கர் ஒன்றிற்கு 25,000 ருபாய் மட்டுமே கொடுத்து வாங்கியது. பதிலுக்கு நிலத்தை இழந்தவர்களுக்கு வேலை தருவதாக உறுதி கூறி இருந்தது. ஆனால் வெறும் வாக்குறுதியைத் தவிர வேறெதுவும் அம்மக்களுக்கு கிடைக்கவில்லை.

இந்த நில அபகரிப்பிற்கு எதிராய் போராட்டம் மட்டுமல்லாமல் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்ததுடன் நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்து இருக்கிறது கிராம சபை.

பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட நிலத்தை தனியாரோ இல்லை அரசாங்கமோ வாங்குவது சட்டத்திற்கு புறம்பானதாகும் என்கிறார் சுற்றுச்சூழல் அமைப்பொன்றின் உறுப்பினரான மனோஜ் சவுகான்.

186 ஏக்கரில் 117.11 ஏக்கர்கள் பழங்குடி மக்களுக்கானது. எனவே இதை வாங்குவது என்பது, ஒரிசாவின் வரையறுக்கப்பட்ட அசையா சொத்துக்களை இடம் மாற்றம் செய்வதற்கான விதிமுறைகள் 1956 க்கும், வருவாய்த் துறை சுற்றறிக்கைக்கும் (Dec,3,2013)  முரணானதாக உள்ளது. இந்த சட்டம் மற்ற எல்லா சட்டங்களையும் கடந்து பழங்குடி மக்களுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவதை பெயர் அளவிற்கேனும் உறுதி செய்கிறது.

landmineஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் கொடுமைகளுக்குத் தீர்வாக தீண்டாமை வன்கொடுமை சட்டம், பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளுக்குத்  தீர்வாக வரதட்சணைத் தடை சட்டம், குடும்ப வன்முறை சட்டம் போன்ற சட்டங்கள் எப்படி அதன் தீர்வை இந்த அமைப்பிற்குள்  செயலாக்காமல் வக்கத்து திணறி நிற்கின்றனவோ அதே போல தான் பழங்குடி மக்களுக்கான பஞ்சாயத்து மற்றும் வன உரிமை சட்டங்களும்.

இந்தியா போலியான விடுதலை அடைந்த பிறகு பழங்குடி மக்களை காத்திட பெயரளவிற்க்காகவாவது இருக்கும் இந்த சட்டங்கள்(FRA,PESA) கூட அம்மக்களை காக்க முடியாமல் இருப்பது அரசு உறுப்புகள் செயல் இழந்து நிற்பதை அப்பட்டமாக காட்டுகிறது. தனியார் நிறுவனங்களுக்காக தமது சொந்த மக்களையே காவு கொடுக்கிறது ஒடிஸா அரசு.

வேதாந்தா நிறுவனத்திற்கான மூலப் பொருளை கொடுப்பதற்காக பாக்ஸைடு சுரங்கம் அமைக்க இந்த நிலங்களை போலியாகக் கையகபப்படுத்தி இருந்தது ஒடிஸா அரசு. வேதாந்ததா அலுமினிய சுத்திகரிப்பு ஆலை நியமகிரி மலையின் அடிவாரத்தில் இருக்கிறது.

இங்கே உச்சகட்ட நகைச்சுவை என்னவெனில் காங்கிரசு கட்சி  ஓடிஸா அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து பழங்குடி மக்களுக்கு ஆதரவாய் இருக்கிறதாக காட்டிக்  கொண்டு இருக்கிறது. வேதாந்தா போன்ற பெருநிருவனங்களுக்காக காட்டு வேட்டை என்ற பெயரில் இந்தியாவின் இதயத்தின் மீது தாக்குதலை தொடுத்ததே காங்கிரசு ஆட்சியின் போது தான். ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதை தான் இது. தற்போது பா.ஜ.க எனும் முதலை கனிம வளத்தை அபகரித்து முதலாளிகளுக்கு தாரை வார்ப்பதில் தீவிரமாக இருக்கிறது.

வன உரிமை சட்டப்படி பழங்குடி மக்களின் உரிமைகளுக்குத்  தீர்வு காணப்பட்ட பிறகு, அரசுக்கு நிலம் தேவைப்பட்டால் அதற்காக பழங்குடி மக்களின் அனுமதி பெற வேண்டும் என்று வன உரிமை சட்டம் கூறவில்லை என்று ஒடிஸா அரசு கூறுகிறது. அதுமட்டுமல்லாமல், பழங்குடி மக்கள் தாம் புனிதமானதாக கருதும் இடத்திற்கு அப்பாலும் உள்ள இடங்களையும் புனித இடமாக கருதுவது எல்லை மீறும் செயலாகும் என்று ஒடிஸா அரசு கபடத்தனமாக குற்றம் சாட்டுகிறது. பழங்குடி மக்களின் நிலத்தை வெறும் புனிதம் என்று சுருக்கிவிட்டு ஏமாற்றும் தந்திரமே அன்றி இதில் வேறு எதுவும் இல்லை. மக்களோ வாழ்வுரிமைக்காக எதிர்க்கிறார்கள், அரசோ அதை பண்பாடு என்று திரிக்கிறது.

வன உரிமை(FRA) சட்டப்படி, பழங்குடி மக்களின் கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை மதிக்கப்பட வேண்டும். அம்மக்களை தவிர்த்து அரசு தனியார் உள்ளிட்ட யாரும் அவர்களின் கலாச்சார நம்பிக்கைகைளை கேள்வி கேட்க முடியாது. பஞ்சாயத்து சட்டப்படி(PESA) கிராம சபைகளே பழங்குடி மக்களின் கலாச்சார நம்பிக்கைககளை பாதுகாக்கும் மையங்களாக உள்ளன. இயற்கையோடு இயைந்து வாழும் இம்மக்களின் எளிய நம்பிக்கைகளை மதிப்பது என்பது அவர்களின் நிலத்தை பறிக்க கூடாது என்பதோடு மட்டும் தொடர்புடையது.

1997-ல் அளிக்கப்பட சமதா (அரசு சாரா நிறுவனம்) தீர்ப்பில், “எந்த ஒரு மாநில அரசும் பழங்குடி மக்களுக்கு என ஒதுக்கப்பட்ட இடங்களை பழங்குடியல்லாத வேறு யாருக்காவது கொடுப்பதற்கு அனுமதிப்பது என்பது பழங்குடி மக்களை காப்பதற்காக உருவாக்கப்பட்ட சட்ட மற்றும் அரசியலமைப்பை முழுவதுமாய் Tribal-Indiaஅழிப்பதாகும்”, என்று கூறி இருக்கிறது.

ஆனால் இங்கே பழங்குடி மக்கள், உச்ச நீதி மன்றம் கூறும் சட்டத்திற்கு உட்பட்டு தான் ஓடிஸா அரசை எதிர்த்து போராடுகிறார்கள். ஆனால் வரலாறு என்னவோ வேறுவிதமாய் இருக்கிறது. இதே சுரங்க நிறுவனங்களை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டங்களை காட்டு வேட்டை என்ற பெயரில் இந்திய அரசு நசுக்கியது. அதை உச்ச நீதிமன்றமும் வேடிக்கை தான் பார்த்துக் கொண்டு இருந்தது.

ஆகப்பெரும்பான்மையான மக்களுக்கான சட்டங்கள் அது பழங்குடி மக்களுக்கானதாக, மாணவர்களுக்கானதாக , தொழிலாளார்களுக்கானதாக மற்றும் விவசாயிகளுக்கானதாக  இருக்கட்டும்  அவை அனைத்தையும் கைக்கழுவி விட்டு ஏட்டில் இன்னும் ஏறாத முதலாளிகளின் ஆணைகளை சிரமேற்றுச் செயல்படுத்திக் கொண்டு இருக்கின்றன இந்த அரசுகள். ஆகவே, தான் எழுதிய சட்டங்களின்  படி நடந்து கொள்ளாத இந்த அரசை எதிர்த்து போராடும் நியமகிரி பழங்குடி மக்களை ஆதரிப்போம்.

– சுந்தரம்

தொடர்புடைய பதிவுகள்
Another Village In Odisha Rejects Mining
Odisha says tribals had no power to reject Vedanta bauxite mining
Odisha move on Niyamgiri hills triggers controversy
Mining in tribal Niyamgiri: SC rejects petition against local refusal consensus

வறட்சியின் புரவலர்கள் – கேலிச் சித்திரங்கள்

0
புவிவெப்பமாதல் : இந்த அழிவை உங்களுக்கு வழங்குவது முதலாளித்துவ லாபவெறி

ஏகாதிபத்தியங்களின் போருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழலியல் அழிவுக்கும் என்ன வேறுபாடு?

ஏகாதிபத்தியங்களின் போருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழியல் அழிவுக்கும் என்ன வேறுபாடு?
ஏகாதிபத்தியங்களின் போருக்கும் பன்னாட்டு நிறுவனங்களின் சூழியல் அழிவுக்கும் என்ன வேறுபாடு?

(இந்த கேலிச்சித்திரம் வியட்நாம் போரின் போது எடுக்கப்பட்ட புகழ்பெற்ற புகைப்படத்தை அடிப்படையாக கொண்டது.)

நன்றி: Cartoon Movement ஓவியர்: paolo lombardi

——————————————————-

தண்ணீர் தாகத்திற்கா லாபத்திற்கா?

தண்ணீர் தாகத்திற்கா லாபத்திற்கா?
தண்ணீர் தாகத்திற்கா லாபத்திற்கா?

குடிநீர் என்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால் குடிநீரை புட்டியில் அடைத்து விற்பதில் முன்னணியில் இருக்கும் நெஸ்லே நிறுவனம் தண்ணீரை விற்பனைக்குரிய பண்டம் என்கிறது.

நன்றி: Cartoon Movement ஓவியர்: Enrico Bertuccioli

——————————————————————-

புவிவெப்பமாதல் : இந்த அழிவை உங்களுக்கு வழங்குவது முதலாளித்துவ லாபவெறி

புவிவெப்பமாதல் : இந்த அழிவை உங்களுக்கு வழங்குவது முதலாளித்துவ லாபவெறி
புவிவெப்பமாதல் : இந்த அழிவை உங்களுக்கு வழங்குவது முதலாளித்துவ லாபவெறி

நன்றி: Cartoon Movement ஓவியர்: Popa Matumula

——————————————————————–

இந்த வறட்சியை உங்களுக்கு வழங்குவது …      முதலாளித்துவம்.

இந்த வறட்சியை உங்களுக்கு வழங்குவது... முதலாளித்துவம்.
இந்த வறட்சியை உங்களுக்கு வழங்குவது…
முதலாளித்துவம்.

நன்றி: Cartoon Movement ஓவியர்: Dario Castillejos

——————————————————————

சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மக்களின் அடிப்படை உரிமை.

சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மக்களின் அடிப்படை உரிமை.
சுத்தமான பாதுகாப்பான குடிநீர் மக்களின் அடிப்படை உரிமை.

நன்றி: Cartoon Movement ஓவியர்: Jean Gouders

———————————————————

வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரம்.

இணையுங்கள்:

தொழிலாளி : வியர்வையின் மணம் – புதிய கலாச்சாரம் ஜுன் 2016 வெளியீடு !

1

wrapper_puka12_april_16

wrapper_puka12_april_16-back

தொழிலாளி : வியர்வையின் மணம்

ரலாறு நெடுக மனித உழைப்பு கொஞ்சம் கொஞ்சமாக இயற்கையைப் புரிந்து கொண்டு மூலக்கனிவளங்களை வெட்டியெடுத்து பலவித கருவிகளை உண்டாக்கிச் சிறுகச் சிறுக உருவாகி வளர்ந்ததன் நீட்சியே இன்று நாம் காணும் உலகம். விண்ணை முட்டும் கட்டிடங்களும் தேசத்தின் குறுக்கு நெடுக்காக ஓடும் சாலைகளும் அதன் மேல் ஊர்ந்து செல்லும் வாகனங்களும் பறக்கும் விமானங்களும் மிதக்கும் பிரம்மாண்டமான கப்பல்களும் அந்த வரலாற்றின் சாட்சியங்கள் !

எங்கோவொரு சுரங்கத்தின் குறுகிய பொந்துக்குள் பிராணவாயுவைக் கோரி விம்மும் நுரையீரலுக்கு கந்தகத்தின் நெடியை சுவாசமாய் அளித்துக் கொண்டு இரத்தத்தை வியர்வையாகச் சிந்தி, புற்றுநோயை சம்பளமாகவும் மரணத்தை ஓய்வூதியமாகவும் பெற்றுக் கொண்டு ஏதோவொரு தொழிலாளி வெட்டியெடுத்து அனுப்பும் நிலக்கரியிலிருந்து உற்பத்தியாகும் மின்சாரமே நமது இரவுகளை ஒளிர வைக்கிறது.

தொழிலாளிகள் இல்லாதவொரு உலகம் எப்படியிருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள் ! நாம் பயணிக்கும் பேருந்து, இரயில், தார்ச்சாலை, தண்டவாளங்கள், எரிபொருள், கட்டிடங்கள், பாலங்கள், இரும்புக் கம்பிகள் …

சட்டென்று ஒரு நாள் இவையெல்லாம் திடீர் என்று மறைந்து விட்டால் ? மொத்த உலகின் நாகரீகமும் ஒரு நான்காயிரம் ஆண்டுகள் பின்னோக்கி ஓடிவிடும். நாம் கற்களை வைத்துக் கொண்டு மிருகங்களைத் துரத்திக் கொண்டிருப்போம்.

இயற்கையிலிருந்து மனிதகுலம் போராடிப் பெற்ற நாகரீகக் கொடை அனைவருக்கும் பொதுவானதே, எந்த தனிமனிதனுக்கும் சொந்தமானதல்ல. தனிச்சொத்துடைமையின் உச்சகட்டமான முதலாளித்துவம், இயற்கையினதும் உழைப்பினதும் பலன்களை லாபமாக ஒரே இடத்தில் குவித்துக் கொள்கிறது. செங்குத்தாய் நிற்கும் முக்கோணத்தின் தலைப்பாகமாக வீற்றிருக்கும் முதலாளித்துவம், அதன் கீழ்ப்புறத்தில் தன்னையே தாங்கி நிற்கும் உழைப்பையும் இயற்கைச் செல்வங்களையும் சுரண்டிக் கொழுக்கிறது.

ஆம். நமது நாகரீக உலகை உயிரைக் கொடுத்து உருவாக்கி பராமரிக்கும் தொழிலாளிகளின் வாழ்க்கை எப்படி இருக்கின்றது? அவர்களின் உலகிற்கு அழைத்துச் செல்கிறது இந்நூல்.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகள்:

  1. நோக்கியா : 100 மில்லியன் வெறிக்கு தொழிலாளி அம்பிகா நரபலி
  2. ஐ.டி. பிரமிடில் பாலாஜி அண்ணாவுக்கு இடமில்லை
  3. பிரெட்டும் ஜாமும் இல்லையா மம்மி ?
  4. 42 வருடங்களாக மாதம் 15 ரூபாய் சம்பளம் !
  5. உங்கள் ஷூக்களை உருவாக்குபவர்களின் கதை இது !
  6. சென்னையில் சிவப்பு தொழிலாளிகள் !
  7. சிங்கப்பூர் சிறையில் 120 நாட்கள் !
  8. உங்கள் உடைகளுக்காக உருக்கப்படும் தொழிலாளிகள் !
  9. உயிர்காக்கும் 108 ஆம்புலன்ஸ் சேவைக்குள் ஒரு சோகம் !
  10. உங்கள் நகைகளுக்காக கருகிய நுரையீரல்களின் கதை கோலார் : தங்கத்திற்காக உயிர் கொடுத்த தமிழ் மக்கள்
  11. இன்னா பண்றது ? சோறு துன்னாவணுமே !
  12. கூலித் தொழிலாள்ர்களைக் கொன்றது சுடுநெருப்பா ? இலாப வெறியா?
  13. ஒரு மெக்கானிக் தொழிலாளி பார்வையில் அரசு பேருந்துகள்

பக்கங்கள் : 80
விலை ரூ. 20.00

ஆண்டுச் சந்தா உள்நாடு:  ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

இணையம் மூலமாக ஆண்டு சந்தா செலுத்த
Paypal மூலம்(வெளிநாடு) $27


Payumoney மூலம்(உள்நாடு) ரூ.400

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

KANNAIAN RAMADOSS
AC,NO – 046301000031766
IFSC – IOBA0000463
BRANCH  IOB ASHOK NAGAR.

சந்தா தொகை அனுப்பிவிட்டு உங்களது பெயர், முகவரி விவரங்களோடு உங்களது தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி (இருந்தால்) அனுப்புமாறு கோருகிறோம்.

அலுவலக முகவரி:
புதிய கலாச்சாரம்,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
122, நேரு பூங்கா ( கு.மா.வா குடியிருப்பு )
பூந்தமல்லி நெடுஞ்சாலை
சென்னை – 600 084.

தொலைபேசி
99411 75876, 97100 82506

மின்னஞ்சல்
vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

1,500.006,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

வேலை கொடுப்பதாக எல்.&.டி இன்ஃபோடெக் மோசடி

0

வேலை கொடுப்பதாக 1,300 பொறியியல் பட்டதாரிகளை மோசடி செய்த எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம்

ல்&டி இன்ஃபோடெக் நிறுவனம் நாடு முழுவதிலுமிருந்து சுமார் 1,300 பட்டதாரி இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக ஒன்றரை வருடம் இழுத்தடித்து மோசடி செய்திருக்கிறது. 2014-ம் ஆண்டு பொறியியல் பட்டப் படிப்பை முடித்த இந்த மாணவர்களை பல கட்ட தேர்வுகளில் சோதனை செய்த பிறகு வேலை வழங்கும் கடிதத்தை (offer letter)-ஐ கொடுத்தது, எல்&டி இன்ஃபோடெக் நிறுவனம். ஆனால், வேலையில் சேர்வதற்கான தேதியை பல முறை ஒத்திப் போட்டு, 18 மாதங்களுக்குப் பிறகு இன்னும் ஒரு தகுதித் தேர்வு நடத்துவதாக போக்கு காட்டி, (offer letter)-ஐ ரத்து செய்திருக்கிறது.

l&t-infotech-recruitment-scam-posterநாடெங்கிலும் லட்சக்கணக்கான பொறியியல் முடித்த இளைஞர்கள் வேலை வாய்ப்பு தேடி அலைந்து கொண்டிருக்கும் நிலையில் எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் இந்த இளம் பட்டதாரிகளை அநியாயமான (unethical), தொழில் முறையற்ற (unprofessional), மனிதத் தன்மையற்ற (inhuman), பொறுப்பற்ற (irresponsible) முறையில் நடத்தியதை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் ஐ.டி. ஊழியர் பிரிவு வன்மையாக கண்டிக்கிறது.

  • எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் தனது தவறான, முறைகேடான செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தப் பட்டதாரிகளை உடனடியாக வேலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
  • பல லட்சம் ரூபாய் செலவில் பொறியியல் படிப்பை முடித்திருக்கும் மாணவர்களின் வளாக நேர்முக வாய்ப்பை பறித்து, ஒன்றரை வருடம் காத்திருக்க வைத்ததற்கான இழப்பீட்டு தொகையை எல்.&.டி நிறுவனம் வழங்க வேண்டும்.

கூடவே, எல்.&.டி இன்ஃபோடெக் நிறுவனம் பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

  1. “படிப்பை முடித்தவுடன் முன்னணி நிறுவனங்களில் வேலை” என்று பெரும் செலவில் விளம்பரம் செய்து மாணவர்களை சேர்க்கும் தனியார் பொறியியல் கல்லூரிகளுடன் வளாக நேர்முகத்தில் ஆள் எடுப்பது தொடர்பாக எல்.&.டி நிறுவனம் ஒப்பந்தங்கள் போட்டிருக்கிறதா?
  2. வளாக நேர்முகத்தில் வேலைக்கு ஆள் எடுப்பது தொடர்பாக, எல்.&.டி இன்ஃபோடெக் மனித வளத்துறை அதிகாரிகளுக்கும், கல்லூரி வேலை வாய்ப்பு அலுவலருக்கும் இடையே ஊழல்கள் நடைபெறுகிறதா?
  3. பணியில் அமர்த்தப்பட்ட ஊழியர்களையும், புதிதாக எடுக்கப் போவதாக சொல்லும் ஊழியர்களையும் பட்டியலில் காட்டி தனது வெளிநாட்டு வாடிக்கையாளர்களிடம் சந்தைப்படுத்தும் எல்&.டி இன்ஃபோடெக் நிறுவனம் தனது ஊழியர்களை தேவைப்படும் போது பயன்படுத்திக் கொண்டு, தேவை தீர்ந்ததும் அல்லது தேவை இல்லா விட்டால் தூக்கி எறிந்து விடும் சரக்காக மட்டுமே பார்க்கிறதா?
  4. புதிய ஊழியர் சேர்க்கையை கூட திறம்பட செய்ய முடியாமல் 1,300 இளைஞர்களின் வாழ்க்கையை குலைத்திருக்கும் எல்.&.டி நிறுவனம் வாடிக்கையாளருக்கும், முதலீட்டாளர்களுக்கும், சமூகத்துக்கும் ஆற்றுவதாக சொல்லிக் கொள்ளும் கடமைகளிலும் இதே போல், திறனற்ற, திட்டமிடாத, மோசடியான, பொறுப்பற்ற முறையில்தான் செயல்படுகிறதா?

1,300 தொழில்முறை பட்டதாரிகளுக்கு இழைக்கப்பட்ட இந்த அநீதி, அவமானம் தொடர்பான தமது கண்டனங்களை ஐ.டி துறை ஊழியர்கள் அனைவரும் எல்.&.டி நிறுவனத்திற்கு மின்னஞ்சல் மூலமாகவும், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் மூலமாகவும் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவின் 30 லட்சம் ஐ.டி ஊழியர்களும் தமது படிப்புக்கும், தகுதிக்கும், உழைப்புக்கும் ஏற்ற மதிப்பும் கௌரவமும் மறுக்கப்பட்டு, ஆரோக்கியமற்ற போட்டியின் காரணமாக உடல்நலமும், மனநலமும் பாதிக்கப்பட்டு துன்புறுத்தப்படுகின்றனர். 40 வயதுக்கு முன்பாகவே ஓய்வுபெறும் முதுமை நிலைக்கு தள்ளப்பட்டு வாழ்க்கையை இழக்கின்றனர். இந்த பிரச்சனைகளை எதிர் கொண்டு தமது வாழ்க்கையை காப்பாற்றிக் கொள்ளவும், தங்கள் உரிமைகளைப் பெறுவதற்கும் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியின் ஐ.டி ஊழியர்கள் பிரிவில் தம்மை இணைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

  • 1,300 இளைஞர்களுக்கு வேலை கொடுப்பதாக மோசடி செய்த எல்.&.டி நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும்
  • தனியார் கல்லூரி நிர்வாகங்கள் வேலை தேடிக் கொடுப்பது தொடர்பாக செய்யும் மோசடிகளை தடுத்து நிறுத்தும்படியும்
  • தனியார் கல்லூரியில் படித்து வேலை கிடைக்காத பட்டதாரிகள் கல்விக்காக செலவழித்த தொகையை கல்லூரிகள் திருப்பிக் கொடுக்கும்படி சட்டம் இயற்றும்படியும்

மத்திய மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
.டி ஊழியர்கள் பிரிவு


Career and Disappointments? Is it our fault?

We all know the anxieties one goes through during the final year studies. Where will I get placement? What kind of package I can expect? Will it provide future career potential? Will I be able to send some money to my parents? So on…..

LT-InfotechFinally, one manages to get a placement in a reputed company or not so reputed company. As in many colleges, once a guy gets the placement he/she will not be allowed to attend further interviews. So, you have to sit back and wait for proving yourself at work place.

But, in the recent past most of the recruiters defer joining date upto six months or even one year. Finally, even after the next batch of freshers come out, you still have not started working. Having no income, still depending on parents, waiting for a call from the campus recruiter. After another 6 months, the campus recruiter asks you to appear for another eligibility test. Then, you are informed that you do not qualify for the job.

Shocking? That is what happened to more than 1000 young graduates at the hands of L&T Infotech. They were recruited by L&T Infotech in 2014 and after 1.5 years of suspense, were stamped unfit and thrown back in the job market. Having lost the campus placement opportunity, these 1000 young graduates are trying to find placement and start their career once again.

Luring private engineering colleges, huge fees, bank loans, financial commitments, 100% placement scams, uncertain economic conditions, uncaring managements, non-intervening government machinery – all these come to mind.

What should they do? Whom should they approach? Can we help them? How? What is the right way to look at this issue?

Let us discuss.

NDLF I.T. Employees Wing
Contact: 9003198576
combatlayoff@gmail.com

முதலாளிகளின் கையில் பூமி ஒரு பந்து – கேலிச்சித்திரங்கள்

0
வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு

வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு

வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு
வளர்ச்சி என்பது பேராசை, லாபவெறியின் விளையாட்டு


நன்றி: Cartoon Movement ஓவியர்: Fiestoforo

——————————————————–
சுரண்டல் : பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான உறவுமுறை

சுரண்டல் : பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான உறவுமுறை
சுரண்டல் : பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான உறவுமுறை

 

நன்றி: Cartoon Movement ஓவியர்: Amr Okasha

——————————————————-

முதலாளித்துவத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி

முதலாளித்துவத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி
முதலாளித்துவத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி

நன்றி: Cartoon Movement ஓவியர்: Gianfranco Uber

—————————————————————–

முதலாளிகள் அடித்து விளையாடும் பந்துதான் பூமி!

முதலாளிகள் அடித்து விளையாடும் பந்துதான் பூமி!
முதலாளிகள் அடித்து விளையாடும் பந்துதான் பூமி!

நன்றி: Cartoon Movement ஓவியர்: Eyad Shtaiwe

———————————————————

வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரம்.

இணையுங்கள்:

மாரத்வாடா : சர்க்கரை முதலாளிகள் உருவாக்கிய வறட்சி !

3

லாத்தூரின் “தண்ணீர் தூதுவன்” (ஜல்தூத்) குறித்த ஊடக பரபரப்பு அடங்கி விட்டது. மராத்வாடாவின் வறட்சியும், விவசாயிகள் தற்கொலைகளும் ஊடக விவாதங்களிலிருந்து பின்னுக்கு தள்ளப்பட்டு விட்டன. ஓரு ஈசலின் ஆயுட் காலத்துக்குள் அடங்கிப் போன மகாராஷ்டிர மாநிலத்தின் வறட்சி குறித்த செய்திகளுக்குப் பின் கோடிக்கணக்கான தொண்டைக்குழிகள் தண்ணீருக்குத் தவித்துக் கிடக்கின்றன.

imagesகடந்தாண்டு பருவ மழை பொய்த்து விட்டதே மக்கள் தண்ணீருக்குக் கையேந்தி நிற்கும் நிலை ஏற்படக் காரணம் என்கிறார்கள் வானியல் ஆய்வாளர்கள். காங்கிரசை பாரதிய ஜனதாவும், பாரதிய ஜனதாவைக் காங்கிரசும் மாற்றி மாற்றி விரல் நீட்டிக் கொள்கின்றன. சரியான நீர் மேலாண்மை செய்திருந்தால் பிரச்சினையைத் தவிர்த்திருக்கலாம் என்கின்றன என்.ஜி.ஓ மூளைகள். லாத்தூரின் தூர்ந்து போன மஞ்சீரா ஆற்றுப் படுகையை ஆழப்படுத்த மூன்று கோடி ரூபாய்களை வசூலித்து விட்டோம் என்கிறது ஆர்.எஸ்.எஸ்.

நேச்சுரல் சுகர் மற்றும் அல்லைட் சுகர் இண்டஸ்ட்ரீஸ் ஆகிய பெரும் சர்க்கரை ஆலைகளின் நிர்வாக இயக்குனராக இருக்கும் பி.பி. டோம்ப்ரே என்பவரை நிர்வாக டிரஸ்டியாக கொண்டிருக்கும் ஜல்யுக்த் லாத்தூர் டிரஸ்ட் என்கிற என்.ஜி.ஓ முன்னெடுத்திருக்கும் மஞ்சீரா ஆற்றுப்படுகையை அகழ்ந்தெடுக்கும் திட்டத்தில் கைகோர்த்துள்ளது ஆர்.எஸ்.எஸ் அமைப்பு.

அவலச்சுவை நிறைந்த கருப்புத் திரைப்படம் போல் விவரிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது மராத்வாடா மக்களின் வாழ்க்கை. கடந்த ஆண்டு மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 725 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். விவசாயக் கடன்களுக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டுக்கும் இடையே சிக்கிக் கொண்டு அல்லாடுகின்றனர் மகாராஷ்டிர விவசாயிகள். ஏற்பட்டுள்ள நிலைமைக்கு ஒவ்வொருவரும்

உண்மையான குற்றவாளிகள் யார்?

முதலில் சில புள்ளிவிவரங்களை பார்த்து விடுவோம் –

2015ம் ஆண்டு ஜூன் துவங்கி செப்டெம்பர் வரையிலான பருவமழைக் காலத்தில் மகாராஷ்டிராவில் பெய்த மழையின் அளவு (இந்திய வானியல் ஆய்வு மையத்தின் புள்ளிவிவரங்களின் அடிப்படையில்)

பொழிவு, மில்லிமீட்டரில் (2015) கொங்கன் –கோவா விதர்பா மத்திய மகா மராத்வாடா
ஜூன் முந்தைய சராசரி 663 161 140 138
இந்தாண்டு 781 254 177 119
ஜூலை முந்தைய சராசரி 1147 318.9 247.8 192.5
இந்தாண்டு 581.5 137.8 111.7 26.8
ஆகஸ்ட் முந்தைய சராசரி 759.6 305.7 289.1 188.2
இந்தாண்டு 388.7 288.9 56 112.2
செப் முந்தைய சராசரி 344.7 169 152.4 164.2
இந்தாண்டு 253.8 167.5 143.4 154
பருவகாலம் முந்தைய சராசரி 2914.3 954.6 729.3 682.9
இந்தாண்டு 2005 848.2 488.1 412.4

புள்ளிவிவரங்களின் படியே சராசரியை விட இந்தாண்டு குறைவான அளவே மழை பெய்துள்ளது. எனினும் அதே ஆண்டில் மகாராஷ்டிரத்தை விட குறைந்த அளவில் (400மிமி) மழை பொழிவைப் பெற்ற ராஜஸ்தான் மாநிலம் தண்ணீருக்காக கையேந்தி நிலையை அடையவில்லை. கடந்தாண்டு தேசிய அளவில் வேறு பல மாநிலங்களிலும் பருவ மழை பொய்த்துள்ளதுள்ளது.

waterசரி, மகாராஷ்டிராவின் நீர் மேலாண்மை எப்படி இருக்கிறது?

மகாராஷ்டிர மாநிலத்தில் தான் நாட்டிலேயே மிக அதிகளவில் பெரும் நீர்த்தேக்க அணைகள் கட்டப்பட்டுள்ளன. 60 மில்லியன் க்யூபிக் மீட்டர் கொள்ளளவு கொண்ட அல்லது பதினைந்து மீட்டர் கொள்ளளவு கொண்ட பெரிய அணைகளின் எண்ணிக்கை மட்டும் 1,845 ஆகும். இது தவிர பல்லாயிரக்கணக்கான சிறிய தடுப்பணைகளும் உள்ளன. 2013ம் ஆண்டில் மட்டும் 150 கோடி ரூபாய் செலவில் சுமார் 1,420 தடுப்பணைகள் கட்டப்பட்டன. 2014ம் ஆண்டில் சுமார் 8000 சிறிய தடுப்பணைகள் கட்டுவதற்கான நிதி ஒதுக்கப்பட்டு அதில் பெருமளவு கட்டி முடிக்கப்பட்டுள்ளன. 2001 – 2011 காலகட்டத்தில் மட்டும் சுமார் 70,000 கோடி ரூபாய்கள் நீர்மேலாண்மைத் திட்டங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது.

ஆனால், இவ்வளவு முயற்சிகளுக்குப் பிறகும் மக்களின் குடிநீர்த் தட்டுப்பாட்டைப் போக்கமுடியவில்லை என்பதோடு பாசன நிலத்தின் பரப்பளவு வெறும் 0.1 சதவீதமே அதிகரித்துள்ளது.

எங்கே போனது தண்ணீர்? எங்கே பாய்ந்தது ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள்? மக்களின் தண்ணீரைக் கொள்ளையடித்தவர்கள் யார்?

இதைப் புரிந்து கொள்ள மகாராஷ்டிராவின் மிக முக்கியமான விவசாய உற்பத்திப் பொருட்களான கரும்பின் சாகுபடி முறைகளைப் புரிந்து கொள்ள வேண்டும். மகாராஷ்டிராவில் மொத்தாம் நான்கு வகையான கரும்பு சாகுபடி முறைகள் உள்ளன. அத்சாலி, முன் பருவ முறை, ரத்தூன் மற்றும் சுரூ என்று அழைக்கப்படும் முறைகளில் தண்ணீர் தேவை எப்படி உள்ளது என்பதை கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவனை விளக்குகிறது.

Method % share Production(lakh T) Yield(t/ha) No.of std irrigations(7.5 cms) Water requirement’000 m3/ha % recovery rate Yield adjusted for recovery rate t/ha Crop duration, months Yield t/month adjusted for recovery rate
Adsali 10 122.64 120 32.5 24.38 12.30 161.14 17.00 9.48
Pre-seasonal 30 275.94 90 27.5 2063 12.00 117.9 14.50 8.13
Suru 20 143.08 70 22.5 16.88 11.45 87.50 12.00 7.29
Ratoon 40 276.94 65 22.5 16.88 10.50 74.51 11.00 6.77
Total/ weighted average 100 818.60 80.01 25 18.75 11.32 98.79 12.85 7.56

மத்திய விவசாய அமைச்சகத்தால் வெளியிடப்பட்டுள்ள இந்த புள்ளி விவரங்களின் படி, சராசரியாக ஒரு ஹெக்டேருக்கு 18750 கன மீட்டர் தண்ணீர் செலவாகிறது. இதில் கரும்பு பயிர்கள் குடித்துத் தீர்த்தது போக சராசரியாக 11.32 சதவீத தண்ணீர் மட்டுமே மறுசுழற்சியாகிறது. மீதமுள்ள சுமார் 88 சதவீத நீரை கரும்புப் பயிர்கள் கபளீகரம் செய்கின்றன. மகாராஷ்டிராவின் மொத்தமுள்ள சாகுபடிப் பரப்பில் வெறும் 4 சதவீத நிலத்தில் பயிரிடப்படும் கரும்புப் பயிர்கள் மொத்த பாசன நீரில் 71.5 சதவீதத்தை அபகரித்துக் கொள்கின்றன.

sugarcaneசர்க்கரை உற்பத்தியைப் பொறுத்தளவில் மகாராஷ்டிரா இரண்டாமிடத்திலும், உத்திரப்பிரதேசம் முதலாம் இடத்திலும் உள்ளன. உத்திரப்பிரதேசம், தனது பாசனத் தேவைகளுக்காக வற்றாத ஜீவ நதிகளை எதிர்பார்த்தும் மகாராஷ்டிரம் பருவ மழையை எதிர்பார்த்தும் உள்ளன. உத்திரபிரதேசத்தில் பின்பற்றப்படும் கரும்பு சாகுபடி முறைகளின் படி ஒரு கிலோ சர்க்கரையை உற்பத்தி செய்ய 1,044 லிட்டர் தண்ணீர் செலவாகும் அதே நேரம், மாராஷ்டிராவிலோ ஒரு கிலோ சர்க்கரை உற்பத்திக்கு 2,068 லிட்டர் தண்ணீர் செலவாகிறது . அணைகள், ஆறுகள் மற்றும் மக்களுக்கான தெற்காசிய வலைப்பின்னல் (South Asia Network on Dams, Rivers and People (SANDRP) என்கிற தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நீரியல் ஆய்வாளர் பர்நீதா தண்டேகர் செய்துள்ள இந்தக் கணக்கீட்டில் ஆலைகளில் கரும்பிலிருந்து சர்க்கரையை உற்பத்தி செய்ய செலவாகும் தண்ணீர் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து, மகாராஷ்டிராவின் பெரும்பான்மையான கரும்பு சாகுபடியானது தற்போது வறட்சியின் பிடியில் சிக்குண்டு கிடக்கும் மராத்வாடா பிராந்தியத்திலேயே நடக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் சுமார் 205 கூட்டுறவு ஆலைகளும் 80 தனியார் சர்க்கரை ஆலைகளும் உள்ளன. பாரதிய ஜனதா, தேசியவாத காங்கிரஸ், சிவ சேனா உள்ளிட்ட பிரதான அரசியல் கட்சிகளின் முக்கியப் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் சர்க்கரை முதலைகளே. 2012 – 2013 நிதியாண்டில் மராத்வாடாவில் மட்டும் சுமார் 20 தனியார் சர்க்கரை ஆலைகள் திறக்கப்பட்டுள்ளன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் என்று சொல்லப்படுவதிலும், அரசியல் செல்வாக்குள்ள தனியார் முதலைகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.

1960 ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் உருவாக்கப்பட்ட நாளில் இருந்து தொடர்ந்து மாறி மாறி அதிகாரத்தைக் கைப்பற்றிய ஓட்டுக்கட்சிகள், தமது விவசாயக் கொள்கைகளையும், நீர் மேலாண்மைத் திட்டங்களையும், சர்க்கரை முதலைகளின் நலன்களுக்கு உட்பட்டே வகுத்து வந்துள்ளனர். மாநில விவசாயத் துறையே திட்டமிட்டு சர்க்கரை சாகுபடியை முன் தள்ளுகின்றது. பாசனக் கால்வாய்களில் நீர் திறந்து விடுவதும் கூட இந்த அடிப்படையிலேயே நடகின்றது.

ஜல்யுக்த் லாத்தூர் டிரஸ்ட்
ஜல்யுக்த் லாத்தூர் டிரஸ்ட்

சர்க்கரை சாகுபடியானது மறுசுழற்சியாகும் நீரின் அளவை பெருமளவு குறைத்து விடுவதால், நிலத்தடி நீர்மட்டம் அதலபாதாளத்திற்கு விழுந்துள்ளது. லாத்தூர் பகுதியில் சாதாரணமாக நிலத்தடி நீரின் மட்டம் 900 அடிகளுக்கு வீழ்ந்துள்ளது. பெய்யும் மழை நீரை மொத்தமாக குடித்துத் தீர்க்கும் கரும்புப் பயிர்கள் அதுவும் போதாமல் மேலும் மேலும் நீரைக் கோருவதால் விவசாயிகள் ஆழ்துளாய்க் கிணறுகளை நாடுகின்றனர். நீர்பாசன நிபுணர் புரந்தரே என்பவரின் கணக்கீட்டின் படி மகாராஷ்டிராவின் ஒட்டுமொத்த விவசாய சாகுபடி நிலங்களில் 71 சதவீதம் ஆழ்துளாய்க் கிணறுகளின் மூலமாகவே நீர்ப்பாசனம் செய்யப்படுகின்றது.

மகாராஷ்டிராவின் மொத்த நீர் பயன்பாட்டில் 75 சதவீதம் விவசாயத்திற்கும், 15 சதவீதம் தொழிற்சாலைகளுக்கும், 10 சதவீதம் மக்களின் பயன்பாட்டுக்கும் செலவாகிறது என்கிறது அம்மாநில அரசு. விவசாயத்திற்கான 75 ஒதுக்கீட்டில் பருவ மழை மற்றும் ஆழ்துளாய்க் கிணறுகளை ஆதாரமாக கொண்ட நீரைப் பெரும்பகுதி கரும்புப் பயிர்களே குடித்துத் தீர்க்கின்றன. அகோரப் பசியோடு உறிஞ்சுவதால் ஆழ்துளாய்க் கிணறுகள் வெகு சீக்கிரம் வற்றித் தூர்ந்து விடுகின்றன. மீண்டும் வேறு இடத்தில் ஆழ்துளாய்க் கிணறு அமைக்க சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக செலவாகிறது. அப்படிச் செலவு செய்து துளையிட்டாலும் நீர் இருக்குமா என்பது சந்தேகமே.

கடன்வாங்கி ஆழ்துளாய்க் கிணறுகள் அமைக்கும் விவசாயிகளுக்கு தண்ணீர் கிடைக்காது போனால் கடனைத் திருப்பிச் செலுத்த வேறு வழிகளும் இருப்பதில்லை. கந்து வட்டி குண்டர்களும், வங்கிகளின் வசூல் ராஜாக்களும் அளிக்கும் சித்திரவதைகளுக்கு அஞ்சி தற்கொலையை நாடுகின்றனர். இன்னொரு புறம், அரசின் விவசாய திட்டங்கள், விவசாயத் தொழில், பாசனத் திட்டங்கள் மற்றும் நீர் மேலாண்மை கொள்கைகள் அனைத்தும் சர்க்கரை ஆலை முதலாளிகளுக்கு சார்பாகவே இருக்கின்றன. சர்க்கரையின் மீதான இறக்குமதி வரியை உயர்த்துவது, சர்க்கரைக்கான ஏற்றுமதி வரியைக் குறைப்பது என்று தொடர்ந்து முதலாளிகளுக்கே சேவையாற்றுகிறது மத்திய மற்றும் மாநில அரசாங்கங்கள்.

drought1இந்திய சர்க்கரை ஆலைகளின் கூட்டமைப்பின் (ISMA) கணக்கீட்டின் படி இந்தியாவில் 2015-16 காலகட்டத்தில் 53.58 லட்சம் ஹெக்டேர்களில் கரும்பு பயிரடப்பட்டு அதிலிருந்து 280 லட்சம் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகின்றது. இதில் உள்நாட்டுத் தேவையான 250 லட்சம் டன்களைக் கழித்து விட்டால், சுமார் முப்பது டன்கள் சர்க்கரை மிகையாக உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் 1ம் தேதி நிலவரப்படி கையிருப்பில் சுமார் 102 லட்சம் டன் சர்க்கரை தேங்கிக் கிடக்கிறது. ஆக மொத்தம் 132 லட்சம் டன் சர்க்கரை நமது தேவைக்கும் அதிகமாக கையிருப்பில் உள்ளது. 2015-16 நிதியாண்டில் மட்டும் சர்க்கரை ஏற்றுமதிக்கான அளவை 40 லட்சம் டன்களாக உயர்த்தியிருக்கும் மத்திய அரசு, அதில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த 195 சர்க்கரை ஆலைகளுக்கான அதிகபட்ச அளவை 13 லட்சம் டன்களாக நிர்ணயித்துள்ளது.

சர்வதேச சந்தையில் இந்திய சர்க்கரைக்கான விலை ஒரு டன்னுக்கு 415 டாலர்களாகும். ஆக, 13 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியின் மூலம் மட்டுமே சுமார் 3500 கோடி லாபத்தைக் குவிக்கவுள்ளனர் மகாராஷ்டிர சர்க்கரை ஆலை முதலைகள். ஏற்கனவே கையிருப்பில் உள்ள சர்க்கரையைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டாலும், இந்தாண்டு மட்டுமே சுமார் 97 லட்சம் டன் சர்க்கரையை மகாராஷ்டிரா உற்பத்தி செய்யவுள்ளது. உள்நாட்டுச் சந்தையிலும் சர்க்கரையின் விலை கூடியுள்ள நிலையில் உள்நாட்டிலிருந்து குவிக்கவுள்ள லாபத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை.

இப்படி ஒரு புறம் கொழுத்த லாபத்தைக் குவிக்கும் முதலாளிகள் மறுபுறம் விவசாயிகளுக்கு அளிக்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்காமல் இழுத்தடிக்கிறார்கள். உள்நாட்டு சர்க்கரை நுகர்வை கணக்கிலெடுக்கவில்லை என்றாலும், 13 லட்சம் டன் சர்க்கரை ஏற்றுமதியின் மூலம் மகாராஷ்டிராவிலிருந்து மட்டும் சுமார் 269 கோடி லிட்டர் நீர் மறைமுகமாக ஏற்றுமதியாகிறது. நீர் வளத்தைக் கபளீகரம் செய்வதோடு நமது விவசாயிகளின் உழைப்பையும் சுரண்டி அவர்களைத் தற்கொலைக்குத் தள்ளும் இந்தத் தரகு முதலாளிகளும் அவர்களுக்கு சேவையாற்றும் ஆளும் வர்க்கமுமே வரட்சிக்கும், விவசாயிகள் தற்கொலைக்கும் பிரதானமான காரணம்.

ஆளும் வர்க்க கைக்கூலிகளான என்.ஜி.ஓக்களோ, பழியை இயற்கையின் மீது போடுகின்றன. ஆர்.எஸ்.எஸ் கும்பலோ நேரடியாக சர்க்கரை ஆலை முதலைகளோடு கைகோர்த்துக் கொண்டு ஆற்றைத் தூர்வாறுவது, பசுமாட்டிற்கு தண்ணீர் காட்டுவது என்று பித்தலாட்டமான நாடகங்களை அரங்கேற்றி வருகின்றது. இந்த துரோகிகள் தண்டிக்கப்படாத வரை வறட்சியிலிருந்து மக்களுக்கும் நாட்டிற்கும் விடுதலையில்லை.

– தமிழரசன்.

வினவு ….ன்னு ஒரு கம்யூனிச விபச்சார தளம் !

147

தமிழகத்தை கலக்கும் AMMA BAR SONG

மேற்கண்ட பாடல் குறித்து ஃபேஸ்புக்கில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க ஆதரவாளர்கள் தெரிவித்துள்ள கருத்துக்கள் கீழே:

—————————————————————————–

fbRejeesh Kumar
May 14 at 12:39am

 

“வினவு”ன்னு ஒரு கம்யூனிச விபச்சார இணைய தளம், ஜெயாவோட சாராய சாம்ராஜ்யத்தை கிண்டல் செய்து, கரகாட்டகாரன் படத்தில் வரும் மாரியம்மா பாடலுக்கு, தண்ணி போட்டு ஆடுவது போல் ஒரு “பார் சாங்” வெளியிட்டிருக்குறான்.

விருந்தாளிக்கு பொறந்த “வினவு” பொறுக்கிகளே..!
நீங்க மக்கள் மத்தியில் பிரபலமாகணும்னா உங்க வீட்டு பொண்ணுங்கள அம்மணமா ஆட விட்டு, வீடியோ வெளியிடுங்க. இந்து மத கடவுளோடு ஒப்பிட்டு பார் சாங் போட வேண்டிய தேவையில்லை.

வினவு உறுப்பினர்கள் (நெ)ஞ்சுல ஆண்மையுள்ளவன்னா அல்லாவை பற்றிய பாடலுக்கு இதே “சாரய பார் சாங்” போட்டு பாருங்க. முட்டி போட வெச்சு கழுத்தறுத்துடுவானுங்க. இல்லைன்னா கூண்டுல அடைச்சு கொழுத்திடுவானுங்க.

அதற்காக இந்துக்களுக்கு வீரமில்லைன்னு தப்பா கணக்கிடாதே. சற்று விவேகமும் அதிகம்.

Draviakannan Yadav நம்ம பயலுகளுக்கு தைரியம் இல்லைனு தான். ஒத்துகனும் .

Rejeesh Kumar தைரியம் எல்லாம் இருக்கு ஜி. ஒற்றுமை இல்லை.

Draviakannan Yadav அதுவும் சரிதான் சகோ.

Singaraj Raj அந்த வினவு பக்கம் உண்டியல் குரூப்பா?

Rejeesh Kumar கம்யூனிஸ்டுல நக்சல் ஆதரவு பிரிவு.

Singaraj Raj OMG. இதை தான் நிறைய இளைஞர் கூட்டம் ஆதாரம் copy,past பண்றாங்க.

Rejeesh Kumar நம்மாளுங்களே பலர் தெரியாமல் பண்ணுறாங்க.

Singaraj Raj அந்த அளவுக்கு சமூகத்தில் கம்யூனிச சிந்தனைகள்
விதைக்க பாடுபடுகிறார்கள். நன்றி ஜீ தகவலுக்கு

Basker Mnk ஏழு பேருக்கு போறந்த அந்த நாய்க தான் தப்பு பண்ணுதுனுபாத்தா
ஹிந்துவெறி புடிச்ச நீங்க மட்டும் அந்த விசயத்தத கணௌடும்
காணாம போய்கிட்டு இருப்பது ஏன்? கோர்ட்ல முறையிட துப்பு
இல்லையா துப்பு கேட்ட கோமாளிக ளா?

Rejeesh Kumar இந்த மாதிரி நாய்களை தட்டி கேட்டு , போலீசு ஸ்டேசன் வரைக்கும் பல தடவை போனவன் நான். இன்னிக்கு கூட எங்க ஊர்ல ஒர் அனுமதியில்லாமல் ஒரு சர்ச் கட்ட ஸ்டே
ஆர்டர் வாங்கி 10 வருசமா நிறுத்தி வெச்சிருக்கோம். மண்டைகாடுன்னு கூகிள்ல தேடி பாருங்க. தமிழ் நாட்டுல சூடு சொரணையுள்ள இந்து அங்க இருந்து தான் முதன் முதலா வெளியே வந்து இந்து அமைப்புகளுக்கே அடித்தளம் இட்டு கொடுத்தான். அது தன் என்னோட ஊரு . இப்படி லூசு மாதிரி கேள்வி கேட்காமல் முதல்ல நீங்க முதல்ல கோர்ட்டுக்கு போக வேண்டியது தானே? இங்க
என்னத்த புடுங்கிட்டு இருக்கீங்க. நாங்க பதிலடியும் கொடுத்துட்டோம், தேர்தல்லையும் ஒற்றுமையை பல தடவை நிரூபிச்சிட்டோம். அடுத்தவனை துப்புகெட்டவன், கோமாளின்னு சொல்லுமுன்னாடி உங்க முகத்துல இருக்குற மலத்தை தொடச்சுக்கோங்க. முதல்ல சொந்த முகத்தோடு வந்து பேசுற நபர்ன்னு இல்லை நீங்க. மனசுல வெச்சுக்கோங்க.

Ponsankar M வினவு தளம் ஒரு விபச்சார தளம்

Saravanan Selvam Going to hack that website

Saravanan Selvam Vinavu is a nakshalight supported website …. Full of poison …

Guru Venkatesh B Karuneegapillai Court la case podunga sir avanugala pathi

____________________________________

காவி ரசிகர்களே கம்யூனிசத்தின் பலத்தை ஒத்துக்கொள்கிறார்கள், வேறென்ன?

Singaraj Raj OMG. இதை தான் நிறைய இளைஞர் கூட்டம் ஆதாரம் copy,past பண்றாங்க.

Rejeesh Kumar நம்மாளுங்களே பலர் தெரியாமல் பண்ணுறாங்க.

அம்மாவின் தவ வாழ்வு – கேலிச்சித்திரம்

2
பணத்தால் நான் ...! பணத்துக்காகவே நான் ...!
பணத்தால் நான் …!
பணத்துக்காகவே நான் …!

வினவு கேலிச்சித்திரம் – பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட கேலிச்சித்திரம்.

இணையுங்கள்:

Breaking News: அதிகாலை டாஸ்மாக் விற்பனை – படங்கள்

11

தவியேற்ற முதல் நாளிலேயே டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்து மதியம் 12 மணிக்குத்தான் விற்பனை ஆரம்பம் என்று ஜெயா அறிவித்தார். மொத்த கடைகளில் 500 கடைகளை குறைத்தும் அவர் உத்தரவிட்டதை ஊடகங்கள் மாபெரும் சாதனையாக வெளியிட்டிருந்தன.

மீனை வெறுப்பதாக பூனை என்னதான் சீனைப் போட்டாலும் கவிச்சியின்றி அம்மா கட்சியினர் வாழ முடியுமா என்ன? ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் உரிய நேரத்தை தாண்டியும், முன்னரும், விடுமுறைகளின் போதும் திருட்டுத்தனமாக அதாவது பார்களில் பகிரங்கமாக சரக்கு விற்பது வாடிக்கையான ஒன்று.

இன்று 24.05.2015 காலை சென்னையில் நடைப் பயிற்சிக்கு போன தோழர் ஒருவர், நகரின் மையப்பகுதி ஒன்றில் டாஸ்மாக் கடையருகே உள்ள பெட்டிக்கடையில் இன்று முதல் விற்பனை நேரம் குறைக்கப்பட்டிருப்பதால் விற்பனை குறையுமா?” என்று விசாரித்திருக்கிறார். கடைக்காரரோ சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு அவரது கடை அருகே உள்ள தேநீர்க்கடையைத் தாண்டி காலியாக நிற்கும் கையேந்தி பவன் வண்டி அருகே சரக்கு விற்பனை நடைபெறுவதாக தெரிவித்தார். அருகே சென்று பார்த்தால் பார் ஆசாமி கை நிறைய காந்தி நோட்டுக்களுடன் நின்று கொண்டிருக்க கீழே தண்ணீர் பாக்கெட் மூட்டை போல இருந்த வெள்ளை பிளாஸ்டிக் சாக்கில் பாட்டில்கள் இருந்தன. இந்த விற்பனை நேரம் காலை 7.00 மணி.

பிறகு விசாரித்தால் தமிழகம் முழுவதும் இன்று முழுவீச்சோடு டாஸ்மாக் விற்பனை அதிகாலையிலிருந்தே அமோகமாக நடைபெறுகிறது. திருச்சி உறையூர் பகுதியில் உள்ள இரு கடைகளில் ம.க.இ.க தோழர்கள் காலையில் சென்று விசாரித்த போது சரக்கு விற்பனை கன ஜோராக நடைபெறுவதை நேரில் கண்டார்கள். அதன் புகைப்படங்களை இங்கே தந்திருக்கிறோம். இவை எடுக்கப்பட்ட நேரம் காலை 9.30 மணி. உறையூர் பகுதியில் இருக்கும் இரு கடைகளிலும் டாஸ்மாக் விற்பனை சூடு பிடித்துக் கொண்டிருந்தது. ரெகுலர் கடையில் இருக்கும் கூட்டத்திற்கு இணையாக பாரில் நடக்கும் திருட்டு விற்பனையும் இருந்தது.

பொதுவில் காலையில் குடிப்பவர்கள் குடிக்கு அடிமையாக இ ருப்பவர்களும், காலையிலேயே வேலைக்கு குடித்து விட்டு செல்பவர்களும் என்று இரு வகையினர் இருக்கிறார்கள். போதை மீட்பு மையத்தில் இருக்க வேண்டிய இந்த பரிதாபத்திற்குரிய மக்களை இன்று பாசிச ஜெயா அரசு கொல்வதின் சாட்சிதான் இந்த பிளாக் விற்பனை.

திருச்சி உறையூர் பகுதியில் உள்ள  டாஸ்மாக் கடை
திருச்சி உறையூர் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை பூட்டப்பட்டிருக்கிறது – சும்மா ஒரு எஃபெக்ட்டுக்கு!
WhatsApp-Image-20160524(12)
காலை 9.30க்கு குடிமகன்கள் சரக்கு வாங்க நுழைகிறார்கள்!
WhatsApp-Image-20160524(4)
விற்பனை இரகசியமாக அல்ல, பகிரங்கமாக நடைபெறுகிறது. குடிமகன்கள் பலரும் நம்மை அழைத்து விதவிதமாக போட்டோ எடுக்கச் சொன்னார்கள்.
WhatsApp-Image-20160524(2)
ஆதாரம் வேண்டுமா? பாட்டிலுடன் ஒருவர்!
WhatsApp-Image-20160524(10)
முதல் நாளில் காலையிலேயே சரக்கு கிடைக்கும் என்பதற்கு இது போதுமா இன்னும் வேண்டுமா?

புரட்சித் தலைவியின் அதிரடி அறிவிப்பின் முதல் நாளிலேயே இக்கடை அதிகாலை 7.00 மணிக்கே திறக்கப்பட்டுள்ளது. மெயின் கடை பூட்டப்பட்டிருந்தாலும், பார் மட்டும் திறக்கப்பட்டு கடை விற்பனையை கவனித்துள்ளது. குடிமகன்கள் வழக்கம் போல வந்து குடித்து விட்டுப் போகிறார்கள். கடையில் சுமார் 90 அல்லது 100 ரூபாயிக்கு விற்கப்படும் குவார்ட்டர் பாட்டில் இங்கே சுமார் 130 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அம்மா தடை செய்த நேரத்தில் சரக்கு கிடைக்கிறது என்பதால் குடிமகன்களும் இந்த விலை உயர்வை சட்டை செய்வதில்லை.

இதன்படி பார்த்தால் இனி தமிழகமெங்கும் காலை விற்பனை என்பது இப்படித்தான் நடக்கும். பார்களை நடத்தும் அ.தி.மு.க ரௌடிகள் கடை வருமானத்திற்கு நிகரான வருமானத்தை இங்கு பெறுவது உறுதி. இப்படி கட்சிக்காரர்கள் எனும் குண்டர் படை பொறுக்கித் தின்பதற்கே பாசிச ஜெயா இப்படி கடை நேரத்தை குறைப்பதாக நாடகமாடி வருகிறார். இந்த அதிகாலை விற்பனைக்கு ஆதரவு தரும் பொருட்டு போலீசின் மாமூலும் கூட்டி கொடுக்கப்படுமென்று தெரிகிறது.  மதுவிலக்கை முழுமையாக கொண்டு வராத எந்த நாடகமும் இப்படித்தான் கொள்ளையை கூட்டும் என்பதும், ஆண்கள் சாவதையும், பெண்கள் சித்ரவதையில் வாழ்வதையும் இந்த நாடகம் அதிகப்படுத்தும் என்பதும் உறுதி.

டாஸ்மாக் கடைகளை படிப்படியாக குறைப்போமென்னு ஜெயா அறிவித்த உடனே அவரது ஊடக அடிமைகள் துள்ளிக் குதித்தார்கள். அவர் ஆட்சி அமைத்த பிறகு இவர்கள் செய்திகளால் கட்அவுட் நட்டார்கள்.

அம்மாவின் போங்காட்டம் ஆரம்பித்து விட்டது. அதை முறியடிக்கும்  மக்கள் அதிகாரம் போராட்டமும் ஓயாது!

பின் குறிப்பு: வாசகர்கள், நண்பர்கள், தோழர்கள் அனைவரும் தங்களது ஊரில் நடக்கும் அதிகாலை டாஸ்மாக் விற்பனை குறித்த புகைப்படங்கள், செய்திகளை அனுப்பித் தருமாறு கோருகிறோம்.

திருச்சி உறையூர் பகுதியிலே உள்ள மற்றொரு டாஸ்மாக் கடை
திருச்சி உறையூர் பகுதியிலே உள்ள மற்றொரு டாஸ்மாக் கடை – அனைவரும் வருக! எந்நேரமும் சரக்கு கிடைக்கும்!

WhatsApp-Image-20160524(15)

WhatsApp-Image-20160524(16)
புரட்சித் தலைவியின் போங்காட்டத்தை காறித்துப்புகிறது இன்று காலையில் வாங்கிய ஒரு பாட்டில்!

WhatsApp-Image-20160524(19)

WhatsApp-Image-20160524(18)

காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை முன்பு விற்பனை
காஞ்சிபுரத்தில் டாஸ்மாக் கடை முன்பு விற்பனை! மஞ்சள் தொப்பி போட்டவர் வாங்குகிறார். நடுவில் இருப்பவர் பைக்கில் வைத்து சரக்கை ஓட்டுகிறார்!

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோவில் அருகேயும், சித்ர குப்தன் கோவில் அருகேயும் உள்ள கடையில் இன்று காலை முதல் பாட்டில் விற்பனை ஜரூராக நடக்கிறது.

– செய்தி, படங்கள்: வினவு செய்தியாளர்கள்

நேபாள் : பெண்களை வதைக்கும் உலகின் “ஒரே இந்து நாடு” !

36
பாக்கு குமாரி பிஸ்தா

மாதவிடாய் குடிசைகள் – தீண்டதகாத நேபாள பெண்கள்!

மாதவிடாய் தீண்டத்தகாதது எனவே அது வந்தவர்களுக்கு அவர்களது சொந்த வீட்டிலேயே 5 நாட்களுக்கு அனுமதியில்லை;

சப்ரிதா போகட்டிக்கு இன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்;
சப்ரிதா போகட்டிக்கு இன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்!

சப்ரிதா போகட்டிக்கு அன்று மாதவிடாய் நாள். 30 வயதைத் தொட்ட இரண்டு குழந்தைகளுக்குத் தாயான சப்ரிதா போகட்டி தனக்குத் தேவையான மாற்று உடைகளுடன் ஆயத்தமாகிறாள்; ஏறக்குறைய தனிமைக்குடித்தனத்திற்கு; குளிரும் பனியுமான அந்த மலைப்பிரதேசத்தில் இனி அவளுக்கு அடைக்கலம் தரப்போவது எது? 4X3 அளவேயுள்ள அறை தான். இது மாதவிடாய் குடிசை என்று அழைக்கப்படுகிறது. உலகின் ஒரே ஒரு இந்து நாடு என்று பெயர்பெற்ற நேபாளத்தின் மத்திய மேற்கு மலைப்பகுதியில் உள்ள நிறைய கிராமங்களில் இன்றளவும் நடைமுறையில் உள்ள ஒரு கொடூர நிகழ்வு.

நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 1000 கி.மீ தொலைவில் உள்ளது அச்சாம் மற்றும் தோட்டி மாவட்டங்கள். கடல் மட்டத்திலிருந்து 1200 முதல் 3800 மீட்டர் உயரம் வரை அமைந்துள்ள இந்தப்பகுதிகள் இயற்கை எழில் சூழ்ந்த மலைப்பகுதிகளாகும். இந்தப் பகுதிகளுக்குள் வாகனங்கள் செல்வது அவ்வளவு எளிதல்ல; வாகனங்களுக்கு என்ன நிலையோ அதை விட மோசமான நிலை தான் அறிவியலுக்கும்…என்னது டிஜிட்டல் யுகமாகிக்கொண்டிருக்கும் இந்தப் புவியில் அறிவியல் நுழையாத இடமா? யார் இதற்குப் பொறுப்பு என்று பதற வேண்டாம்…. நமக்கு நன்கு அறிமுகமான அந்த ஒன்று தான் இதற்கும் மூலக்காரணம்.

mapகுடாப்பில் அடைக்கப்பட்ட கோழி போல அமர்ந்திருக்கும் சப்ரிதாவுக்கு அவருடைய உறவினரான சிறுமி ஒருவர் உணவு தருகின்றார். சில சமயங்களில் இங்கே தான் பிரசவமும் நடக்குமாம்; பிரசவிப்பதும் தீட்டாகக் கருதப்படுகிறது; மாதவிடாய் காலத்தில் பெண்கள் பால் மற்றும் மாமிச உணவுகள் உண்பது தடைசெய்யப்பட்டுள்ளது. எனவே ரொட்டி மட்டுமே தரப்படுகிறது. கொடுப்பவர் மிகவும் கவனமாகக் கொடுக்க வேண்டும், தப்பித்தவறி கைபட்டுவிட்டால் அது தீட்டாகிவிடும்.இன்னொரு விடயம் என்னவென்றால் இந்த நடைமுறைக்கு எந்தச் சாதியும் விதிவிலக்கல்ல.

இந்த 5 நாட்களும் ஏறக்குறைய ஒரு நரக வாழ்க்கை என்றே சொல்லலாம். வீட்டிற்கு அருகில் செல்லக்கூடாது, கோவிலுக்குச் செல்லக்கூடாது; பொதுவான தண்ணீரைப் பயன்படுத்தக்கூடாது.; தான் பெற்ற குழந்தைகளை மட்டுமே தொடலாம்; ஆனால் மற்றவர்களைத் தொடக்கூடாது..

இந்த 5 நாட்களும் ஏறக்குறைய ஒரு நரக வாழ்க்கை என்றே சொல்லலாம்.
இந்த 5 நாட்களும் ஏறக்குறைய ஒரு நரக வாழ்க்கை என்றே சொல்லலாம்.

ஏன் இந்த அவல நிலை?? இது காலங்காலமாகத் தொன்று தொட்டு கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு கலாச்சாரமாகும். இதை “CHHAUPADI” – “சாவ்பாடி” என்கின்றனர். “சாவ்” என்றால் “தீண்டத்தகாதது”  ‘பாடி” என்றால் “இருத்தல் நிலை” – “BEING” என்று பொருள் படும். பூப்பெய்த பெண்ணிற்கு மாதவிடாய் வரும்போது இவர்களின் மரபுப்படி அவர் ”சாவ்பாடி” ஆகிறார்; அதாவது தீண்டத்தகாதவராக….

2006-ம் ஆண்டில் நேபாள அரசு இந்த மூடப்பழக்க வழக்கத்தை ஒழிக்கும் வண்ணம் ஒரு சட்டம் கொண்டு வந்தது. ஆனாலும் இந்தப் பழக்கம் இன்னும் இந்தப் பகுதிகளில் ஆழமாக வேரூன்றியுள்ளதால் இன்னும் அப்படியே கடைபிடிக்கப்படுகிறது.

இந்த மாதவிடாய் குடிசை பெரும்பாலும் வீட்டிற்கு அருகில் அதாவது வீட்டிற்கு முன்புறம் அல்லது பின்புறம் இன்னும் குறிப்பாகச் சொல்லப்போனால் மாட்டுக்கொட்டகை அருகில் அமைகிறது.

மாட்டுகொட்டைகைக்கு அருகில் அமைந்திருக்கும் சப்ரிதாவின் மாதவிடாய் குடிசை
மாட்டுகொட்டைகைக்கு அருகில் அமைந்திருக்கும் சப்ரிதாவின் மாதவிடாய் குடிசை

மழைக்காலம், குளிர்காலம் எதுவாக இருந்தாலும் கண்டிப்பாக இந்த மாதவிடாய் கு(கை)டிசை-யில் தான் அவர்கள் தங்க வேண்டும். இந்தக் குகைக்குள் நுழைந்து காயம் படாமல் வருவது மிக மிக அரிது; கூனிக் குறுகி தான் அமரமுடியும். இதில் கொடுமை என்னவென்றால் சில நேரங்களில் மூன்று முதல் ஐந்து பேர் வரை இங்கே தங்கவேண்டியிருக்கும். ஏனென்றால் பலருக்கு இந்த மாதவிடாய் குடிசை கட்டும் அளவுக்கு வசதியில்லை. கடுங்குளிர், கும்மிருட்டு, காற்றோட்டமின்மை இன்னும் சொல்லி மாளாத துன்பங்கள் எத்தனை எத்தனை…மாதவிடாய் காலத்தில் வரும் மன அழுத்தம், சோர்வு, உடல்வலி( நாப்கின் கட்டுரை படிக்கலாம்) இதையெல்லாம் உணர்வதற்குக் கூட இவர்களுக்கு வழியில்லை.

21-ம் நூற்றாண்டிலும் இத்தனை பிற்போக்குத் தனங்களா? என்று வியக்க வேண்டாம்…பேமா லக்ரி என்று பெண்கள் நல ஆர்வலர் கூறுகிறார்… “மக்களுக்கு இங்கே மாதவிடாய் பற்றிய அறிவியல் புரிதல் வரவேண்டும்; மாதவிடாய் என்றால் இங்கே அசிங்கமானது;, அவலமானது என்ற ஒரு பொதுக்கருத்து உருவாக்கப்பட்டுள்ளது. இது முதலில் உடைத்தெறியப்பட்டால் தான் இந்த அவல நிலையை அகற்ற முடியும்.பெரும்பாலான பெண்களிடம் மாதவிடாய் ஏன் வருகிறது என்று கேட்டபோது அவர்களில் ஒருவருக்கு கூட இது குறித்து எதுவும் தெரியவில்லை” என்று கவலைப்படுகிறார்.

பேமா லக்ரி - கடந்த 10 வருடங்களாக தன்னாட்டு மக்களிடம் உள்ள பிற்போக்குத்தனங்களை அகற்ற போராடும் சமூக ஆர்வலர்
பேமா லக்ரி – கடந்த 10 வருடங்களாக தன்னாட்டு மக்களிடம் உள்ள பிற்போக்குத்தனங்களை அகற்ற போராடும் சமூக ஆர்வலர்

தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி என்பவர் நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் பேச சம்மதித்தார். மற்றவர்களைப் போலவே இவரும் இந்தியாவில் வேலை செய்கிறார். விடுமுறையை முன்னிட்டு வந்திருக்கும் இவர் பேசுகையில் “இனி என்னுடைய குடும்பத்தினர், மாதவிடாய் குடிசைக்குச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை; மாறாக வீட்டிற்குள்ளேயே ஒரு மாதவிடாய் குடிசை (பதுங்கு குழி) போன்று ஒன்றை அமைத்துள்ளேன்; ( இது 1 1/2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்டதாகும்: படத்தில் காண்க). சில சமயங்களில் 3 முதல்  4பேர் வரை இதில் தங்க அனுமதிக்கப்படுகிறது. ஆனால் அவரவர் வீட்டிலிருந்து தேவையான துணிமனிகளை எடுத்து வர வேண்டும்”.

தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி
தோட்டி மாவட்டத்திலுள்ள ரிக்காடா என்ற கிராமத்தில் உள்ள பகதூர் நேபாளி

சரி ஏன் இந்த நடைமுறை பின்பற்றப்படுகிறது என்று அவரிடம் கேட்டபோது “கடவுளை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காகவே நாங்கள் பெண்களை வீட்டை விட்டு வெளியில் அனுப்புகிறோம். மாதவிடாயின் போது இரத்தப் போக்கு இருப்பதால் அது கடவுளுக்கு எதிரானது; எனவே வீட்டிற்குள் அனுமதிப்பது சரியல்ல” என்கிறார்.

இந்து மதத்தில் புரையோடிப்போன விழுமியங்கள் இன்னும் இங்கே நடைமுறையில் இருப்பதைத் தான் நாம் காண்கிறோம். மாதவிடாய் ஏன் ஏற்படுகிறது என்பதை ஆராயாமல் அது கடவுள் விடுக்கும் எச்சரிக்கை என்ற கோட்பாட்டை நடைமுறைப்படுத்தி அதையே காரணம் காட்டி பெண்களை வீட்டை விட்டு விலக்கி வைக்கிறது இவர்களின் இந்து மதம்.

இது 1 1/2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்டதாகும்
இது 1 1/2 மீட்டர் நீளமும் 1 மீட்டர் அகலமும் கொண்ட பகதூர் வடிவமைத்த மாதவிடாய் குடிசை

இந்த ஆவணப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது எதார்த்தமாக வயல்வெளிகளில் குறுக்கிட்டுச் சென்ற சில மாணவிகளைச் சந்திக்க நேர்ந்தது; அவர்களில் ஒருவர் மட்டுமே தனிப்பாதையில் நடந்து சென்றார். என்னவென்று விசாரித்த போது தான் அவர் நடந்து சென்றது மாதவிடாய் வந்தவர்கள் உபயோகிப்பதற்கான தனிப்பாதை; மற்ற மாணவிகள் நடந்து சென்ற இடம் புனிதமான ஒன்றாகக் கருதப்படுவதால்  இவர்களுக்கென்று மாற்றுப்பாதை அமைக்கப்பட்டுள்ளது.

மாணவிகள் பேச மறுத்து விட்ட நிலையில் பாக்கு குமாரி பிஸ்தா என்பவரையும் அவரது தாயையும் சந்திக்க நேர்ந்தது; நீண்ட தயக்கத்திற்குப் பின்னர் பாக்கு குமாரி பிஸ்தா பெண்கள் நல ஆர்வலர் பேமாவிடம் பேச சம்மதித்தார்; மேலும் அவருடைய மாதவிடாய் குகையையும் காண்பித்தார்.

பாக்கு குமாரி பிஸ்தா
பாக்கு குமாரி பிஸ்தா – பலர் பேச மறுத்தனர், இவர் சிறிது தயங்கிய பின்னர், நம்மிடம் பேச தொடங்கினார். அவருடைய மாதவிடாய் குடிசையை காட்டினார்.

கேள்வி: உங்களின் வயது என்ன?
பதில்: 16

கே: பள்ளிக்குச் செல்கின்றீர்களா?
ப: இல்லை, 6 வயதிலிருந்து நின்றுவிட்டேன்

கே: ஏன் நின்றீர்கள்?
ப: ம்ம்ம்ம்ம்……..வீட்டு வேலை செய்ய வேண்டும்; எனவே நின்றுவிட்டேன்

கே: அம்மாவுக்கு உதவ வேண்டும் என்பதற்காகப் பள்ளிக்குச் செல்லவில்லையா?
ப: ஆம்

கே: சரி. என்ன வேலையெல்லாம் செய்கின்றீர்கள்
ப: புல் அறுப்பேன்; பாத்திரங்கள் கழுவுவேன், வீட்டைச் சுத்தம் செய்வேன்

கே: ஆக மாதவிடாய் காலங்களில் உன்னால் உன்னுடைய தாய்க்கு உதவ முடியாதில்லையா?
ப: ஆம்

கே: மாதவிடாய் காலங்களில் நீ வேலை செய்ய அனுமதிக்கப்படுவாயா?
ப: ஆம்

பாக்கு குமாரி பிஸ்தாவின் மாதவிடாய் குடிசை
பாக்கு குமாரி பிஸ்தாவின் மாதவிடாய் குடிசை

கே: வீட்டில் நுழைய அனுமதி உண்டா?
ப: இல்லை

கே: இது உன்னுடைய வீடு; அங்கே நுழைய அனுமதி மறுக்கப்படுவது தவறுதானே?
ப: தவறு தான்

கே: பிறகு வீட்டுக்குள்ளே செல்ல வேண்டியது தானே?
ப: நான் உள்ளே சென்றால் கெட்டது நடக்கும்!

கே: என்ன விதமான கெட்டது நடக்கும்?
ப: பாம்பு வரும், மேலும் ஏதாவது ஒரு கெட்ட செயல் நடக்கும்

கே: மற்ற சிறுமிகளும் இதே போலத்தான் இருக்கின்றார்களா?
ப: ஆம்

கே: இந்த நிலை மாற வேண்டும் என்று நினைக்கிறாயா?
ப: ஆம்

பெரும்பாலான பெண்கள் இந்த மூடப்பழக்கவழக்கத்தை விரும்பவில்லை என்றாலும் இது தங்கள்மேல் திணிக்கப்பட்ட ஒன்று என்பதாலும் இதற்கு மூலக்காரணம் மதம் சம்பந்தப்பட்ட ஒரு வகையான புனிதக் கருத்து என்பதாலும், மேலும் இதை மீறும் பட்சத்தில் குடும்ப உறுப்பினருக்கோ, உடைமைகளுக்கோ, ஊருக்கோ, ஏன் நாட்டுக்கே கூட இழப்புக்கள் கடுமையாக இருக்கும் என்ற பயம் காரணமாகவும் இதை வெளிப்படையாக எதிர்க்கும்  மனநிலையில் இவர்கள் இல்லை.

சமீலா புல் - மாதவிடாய் குடிசையில் மர்மமான முறையில் இறந்த சிறுமி
சமீலா புல் – மாதவிடாய் குடிசையில் மர்மமான முறையில் இறந்த சிறுமி

இந்தப் பயத்திற்கான சாட்சியாக அந்தக் கிராமத்தில் வாழும் யாக்கியராஜ்  புல் என்பவரின் மூத்த மகளான சமீலா புல் என்ற சிறுமியின் மரணம் உள்ளது. அவருடைய தாயார் இதுகுறித்துக் கூறுகையில் “ நாங்கள் மாதவிடாய் சமயங்களில் வீட்டிற்குள்ளேயே உறங்கினோம்; இதனால் என் கணவர் ஊராரால் கடுமையாகத் தூற்றப்பட்டு குடிப்பழக்கத்திற்கு ஆளானார். இதைக் கண்டு பயந்த என் மூத்த மகள் என்னிடம் “ அம்மா! நான் மாதவிடாய் காலங்களில் வெளியிலேயே படுத்துக்கொள்கிறேன்! இல்லாவிட்டால் ஊராரின் பழிக்கு ஆளாக வேண்டியிருக்கும்” என்று பிடிவாதமாகக் கூறி மாதவிடாய் குடிசைக்கு ஒரு நாள் இரவு சென்றுவிட்டாள். மறுநாள் காலை நான் அவளை எழுப்பச்சென்ற போது ஒரு கை வயிற்றைப் பிடித்தவண்ணம் குப்புறப் படுத்து கிடந்தாள்; இன்னொரு கையைத் தலைமேல் வைத்திருந்ததைப் பார்த்த போது அமைதியான ஆழ்நிலை உறக்கத்தில் இருப்பது போன்று தோன்றியது; ஆனால் நான் நீண்ட நேரம் அழைத்தும் அவள் எழுந்திருக்கவில்லை; எனவே சிறிது பதட்டத்துடன் சென்று அவளைத் நேராகத் திருப்ப முயற்சித்த போதுவாயில் நுரை தள்ளியிருந்தது கண்டு மீள முடியாத அதிர்ச்சியில் நொறுங்கி விட்டேன்.”…

சமீலா புல்லின் மாதவிடாய் குடிசை
சமீலா புல்லின் மாதவிடாய் குடிசை

இதுவரை அவர் எதனால் இறந்தார் என்பது தெரியவில்லை என்றாலும் அவளின் பெற்றோர் கூற்றுப்படி மிகவும் குளிராக இருந்ததால், காற்று புக முடியாமல் அந்த அறையை முழுவதுமாக மூடிவிட்டதால் மூச்சுத்திணறி இறந்திருக்கவேண்டும் என்று நம்புகின்றனர். யாக்கியராஜ் இந்த முறை தெளிவாக உள்ளார். இனிமேல் யாரையும் வீட்டை விட்டு வெளியே தங்க அனுமதிக்கப்போவதில்லை என்கிறார்; ஏனென்றால் அவருக்கு இன்னும் 6 பெண் குழந்தைகள் உள்ளன.

நேபாள தினசரி செய்திகளில் வந்துள்ள தகவல்களின்படி பெரும்பாலானவர்கள் கடுங்குளிரினாலோ அல்லது பாம்புகடித்தோ இறப்பதாகவும், மேலும் பலர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாவதாகவும் தெரிகிறது. இதை முன்னிட்டே நேபாள அரசாங்கம் 2006ம் ஆண்டு “சாவ்பாடியை” ஒழிக்க சிறப்புச் சட்டம் இயற்றியது. நிறைய கிராமங்களில் “சாவ்பாடி” முறை ஒழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் கூட இன்னும் இந்த அவல நிலை தொடர்கிறது. சில இடங்களில் மாதவிடாய் குடிசை இடித்து நொறுக்கப்பட்ட பிறகும் தொடர்கிறது; இந்த நிலையில் பெண்களின் நிலை இன்னும் மோசமாக மாறுகின்றது; ஏனென்றால் உடைத்தெறியப்பட்ட மாதவிடாய் குடிசை மீண்டும் எழுப்பப்படவேண்டும் இல்லாவிடில் வெட்ட வெளியில் உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.

சரி! மீண்டும் சப்ரிதா போகட்டியிடம் வருவோம், தீண்டத்தகாதவராக அறியப்பட்டவர்; எப்படி மீண்டும் புனிதப்படுத்தப்படுகிறார்; இருக்கவே இருக்கின்றது இந்து மதத்தின் புனிதப்பசு…ஐந்தாம் நாள் முடிவில் சப்ரிதா குளிக்கவேண்டும்; அதோடன்றி தான் பயன்படுத்திய அத்தனை துணிகளையும் தானே துவைக்க வேண்டும்; பிறகு அவருடைய உறவினரோ அல்லது அந்தக் கிராமத்தைச் சேர்ந்த கன்னி கழியாத பெண் ஒருவர் இந்து மதத்தில் புனிதமாக ஒன்றாகக் கருதப்படும் பசுவின் மூத்திரத்தை ஒரு டப்பாவில் பிடித்து அதை சப்ரிதா கைகளில் ஊற்ற, சப்ரிதா அதைப் பருகிவிட்டு தலையில் தெளித்துக் கொள்கிறார். பிறகு அந்தச் சிறுமி அவள் வீட்டையும் அடுத்ததாக சப்ரிதா துவைத்து வைத்த துணிகளின் மீதும் புனித மூத்திரத்தைத் தெளித்து தூய்மைப்படுத்துகிறாள். இனி அவள் புனிதமடைந்து வீட்டிற்குள் அன்று முதல் அனுமதிக்கப்படுகிறாள், அடுத்த மாதவிடாய் வரும் வரை…..

திருமணமாகாத பெண்ணைக்கொண்டு எடுத்துவரப்படும் மாட்டு மூத்திரத்தால் தூய்மைப்படுத்தும் முறை
5 நாட்களுக்கு பிறகு, திருமணமாகாத பெண்ணைக்கொண்டு எடுத்துவரப்படும் மாட்டு மூத்திரத்தை கொண்டு தூய்மைப்படுத்தும் முறை

 

மீண்டும் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்ய மாட்டு மூத்திரத்தை குடிக்க வேண்டும்.
மீண்டும் தன்னுடைய அன்றாட வேலைகளை செய்யவதற்கு மாட்டு மூத்திரத்தை குடித்து புனிதமான பின்பே வீட்டிற்குள் நுழைய வேண்டும்.

தொகுப்பு, தமிழாக்கம்: வரதன்.

தொடர்புடைய பதிவுகள்:

மதுரவாயல் – மீஞ்சூர் டாஸ்மாக் முற்றுகை – வீடியோ

2

 மதுரவாயல் நொளம்பூர் டாஸ்மாக் முற்றுகை – போலிஸ் தாக்குதல் வீடியோ:

சென்னை மதுரவாயில் டாஸ்மாக் முற்றுகைப் போராட்டத்தில் போலிசின் தாக்குதல்கள் குறித்து ஏற்கனவே எட்டு தோழர்கள் தமது அனுபவங்களை பகிர்ந்திருந்தார்கள். இந்த வீடியோவில் அந்தப் போராட்டத்தின் முழுமையான காட்சிகள் இடம்பெறுகின்றது. பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் எவ்வித தொந்தரவும் இல்லாமல் நடந்த இந்த போராட்டத்தை இவ்வளவு பெரிய தாக்குதலுடன் ஒடுக்கிய போலிசின் நோக்கத்திலிருந்து பாசிச ஜெயா அரசின் டாஸ்மாக் வெறியைப் புரிந்து கொள்ளலாம்.

———————————————————————-

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் – நாப்பாளையம் டாஸ்மாக் முற்றுகை போராட்டம்!

சென்னை மதுரவாயிலைப் போலவே மீஞ்சூரில் நடந்த போராட்டத்தையும் போலிசு கொடூரமாக தாக்கியது. தமிழகத்தின் மற்ற பகுதிகளைப் போலவே இங்கும் அனைத்து குடும்பங்களும் டாஸ்மாக்கிற்கு ஆண்களை பலி கொடுத்திருக்கின்றன. போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் குறிப்பாக பெண்கள் தமது அனுபவங்களை யதார்த்தமாக பகிர்ந்து கொள்கின்றனர். அவர்களை கலைத்து விட்டு அச்சுறுத்தும் பணியினை உள்ளூர் அ.தி.மு.கவினர் செய்கின்றனர். அப்படி ஒரு அ.தி.மு.க பிரமுகரின் நேர்காணலும் வீடியோவில் உள்ளது. இந்த கிராமத்தில் பிரச்சாரம் செய்யச் சென்ற மக்கள் அதிகாரம் தோழர்களை தடுக்கும் போலிசின் காட்சிகளும் உள்ளன. முக்கியமாக டாஸ்மாக் மூடும் போராட்டத்தை ஆதரிக்கும் மக்களை போலிசு மிரட்டுகிறது.

கார்கள் : வளர்ச்சியின் அறிகுறியா ? முதலாளித்துவ அழிவின் குறியா ?

26
டெல்லி போக்குவரத்து நெரிசல்: தானியங்கி வாகனங்களின் ‘வளர்ச்சியால்’ ஏற்பட்ட நெருக்கடி

“மனித மூளை தற்போதுள்ள அளவிற்குப் பெரிதாக வளர்ச்சி அடைவதை நடத்தல், ஓடுதல், உழைப்பு ஆகியவைதான் தூண்டியிருக்கின்றன” என்று கூறினார் பிரடெரிக் எங்கெல்ஸ். பின்னாளில் பரிணாம உயிரியல் விஞ்ஞானி டானியேல் லிபர்மேன் இதனை உறுதி செய்தார். இன்றோ காரில் அமர்ந்திருத்தல் என்பதையே ஒரு செயல்பாடாக ஆக்கியிருக்கிறது முதலாளித்துவம். இது இன்றைய முதலாளித்துவத்தைச் சித்தரிக்கும் பொருத்தமானதொரு உருவகம்.

கார் என்பது முதலாளித்துவத்தின் இதயத்தோடு இணைந்தது. அது மிகப்பெரிய ஒரு தொழில் துறை மட்டுமல்ல, மூலதனத் திரட்சிக்கான மிக முக்கியமானதொரு ஆதாரம். அதே நேரத்தில் நமது வாழ்க்கையையும் சூழலையும் அது முற்று முழுதாகச் சிதைத்திருக்கிறது.

டெல்லி போக்குவரத்து நெரிசல்
டெல்லி போக்குவரத்து நெரிசல்: தானியங்கி வாகனங்களின் ‘வளர்ச்சியால்’ ஏற்பட்ட நெருக்கடி

நமது சமூகத்தின் எளிய ஒரு மனிதன் காரினால், அதன் ஒலியால் அவமானப்படுத்தப்படுகிறான், புகையால் தாக்கப்படுகிறான், நெட்டித்தள்ளி ஒதுக்கப்படுகிறான், ஆதிக்கம் செய்யப்படுகின்றான், கடைசியாகக் கொல்லவும் படுகிறான். சாலை என்பது இன்றைக்கு ஜனநாயகமே இல்லாத ஒரு பிரதேசமாக ஆகியிருக்கிறது.

முதலாளித்துவ கலாச்சாரம் ‘வேகத்தை’ப் போற்றுகிறது. ஃபெராரி மற்றும் ஃபார்முலா ஒன் கார் பந்தயங்களின் வேகத்தை கிரிக்கெட் நட்சத்திரங்களான தோனியும் டெண்டுல்கரும் கொண்டாடுகிறார்கள். வேகமாகப் பறக்கும் கார்கள், முன்னேற்றத்தின் அடையாளமாகச் சித்தரிக்கப்படுகின்றன. சாலையில் வேகத்துக்கு இடைஞ்சலாக இருக்கும் யாரும் முன்னேற்றத்தின் தடைக்கற்களாகப் பார்க்கப்படுகிறார்கள். இத்தகைய அதிவேகத்தை சமாளிக்கும் ஆற்றலைப் பரிணாம வளர்ச்சியானது மனிதனுக்கு வழங்கவில்லை என்ற அறிவியல் உண்மையை வேக வெறியர்கள் மறந்து விடுகிறார்கள். அதி வேகம் என்பது மனிதக் கண்ணின் பார்க்கும் ஆற்றலை முடக்குகிறது என்ற உண்மையை பிரபல நரம்பியல் விஞ்ஞானி வி.எஸ்.ராமச்சந்திரனும், ஆர்.எல்.கிரெகோரியும் நிறுவியிருக்கிறார்கள்.

வேகமாக கார் ஓட்டுதல் ஒரு வகை ஆதிக்க மனோபாவத்தையும், போட்டி போடும் வெறியையும், சமூக விரோத உணர்வுகளையும் ஓட்டுனருக்குத் தோற்றுவிக்கிறது. “சாலையில் நடந்து செல்லும் பாதசாரிகளையும் குழந்தைகளையும் சைக்கிளோட்டிகளையும் ஒழித்துக் கட்டப்பட வேண்டிய புழு பூச்சிகளாகக் கருதி வெறுக்கும்படி காரின் அதிவேக எஞ்சின் அதன் ஓட்டுனரைச் சிந்திக்கத் தூண்டவில்லையா?” என்று கேள்வி எழுப்புகிறார் அறிஞர் அடோனோ.

புதுவகையான நில அபகரிப்பு
பொதுப் பாதை-இடங்களை ஆக்கிரமித்திருக்கும் தனியார் வாகனங்கள்: புதுவகையான நில அபகரிப்பு

கார்களை வைத்து வளர்ச்சியை மதிப்பிடும் பார்வை வலதுசாரி அரசியலுக்கே உரியது. “25 வயதான பின்னரும் ஒரு கார்கூட வாங்க முடியாத இளைஞன் தோற்றுப்போனவன் என்றே நாம் மதிப்பிடவேண்டும்” என்றார் மார்கரெட் தாட்சர். வேகம்- பாசிசம்- கார் ஆகியவற்றுக்கு இடையே ஒரு வரலாற்று ரீதியான தொடர்பு இருக்கிறது. அமெரிக்க தொழிலதிபர் ஃபோர்டும் ஹிட்லரும் ஒருவரை ஒருவர் பெரிதும் விரும்பினர். ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் தலைமையில் பல ஆண்டு காலம் இருந்த மாக்ஸ் மோஸ்லி வெளிப்படையான பாசிச ஆதரவாளர். அவருடைய தந்தை நாடறிந்த பிரிட்டிஷ் பாசிஸ்ட்.

கார்களுக்கான விளம்பரங்கள் ஆண்மை, அதிகாரம், பாலியல் ஆதிக்கம் சார்ந்த பிம்பங்களைத் தொடர்ந்து தோற்றுவிக்கின்றன. கார் முதலாளிகளின் குழுமம், ஏழை எளிய மனிதர்களையும், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும், முற்போக்கான அரசியல் கருத்துக்களையும் எப்போதுமே வெறுப்புடனும் பகையுணர்ச்சியுடனும்தான் பார்க்கிறது. அமெரிக்காவைப் பற்றிக் கூறும்போது, “அங்கே பாதசாரிகள் நாய்களைப் போலத்தான் நடத்தப்படுகிறார்கள்” என்கிறார் பிரஞ்சு மெய்யறிவாளர் ழான் பொதிலேர்.

ஷாஜி புருஷோத்தமன்
குடித்துவிட்டுப் பேய் வேகத்தில் காரை ஓட்டிச் சென்று, சென்னை-எழும்பூரில் நடைபாதையில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த 13 வயது சிறுவனைக் கொன்று போட்ட ஷாஜி புருஷோத்தமனைக் கைது செய்து அழைத்துச் செல்லும் போலீசு. (கோப்புப் படம்)

எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்கா நடத்தும் போர்கள், மதவெறிக் குழுக்களை உருவாக்கும் அதன் நடவடிக்கைகள், இராணுவவாதம், வெறித்தனம் போன்ற உலக மேலாதிக்க நடவடிக்கைகளுக்கும் எஸ்.யு.வி. (ஸ்கார்ப்பியோ போன்ற கார்கள்) எனப்படும் வாகனங்களுக்கும் இடையிலான உளவியல் ரீதியான உறவினை அறிஞர்கள் பலர் அம்பலப்படுத்தியிருக்கின்றனர்.

இந்தியச் சாலைகளில் இன்று நடந்து கொண்டிருக்கும் வர்க்கப்போரில், விலை உயர்ந்த கார்களில் குடிபோதையில் வெறித்தனமாக வண்டி ஓட்டும் பணக்கார இளைஞர்கள்தான் கொலைகாரர்கள். இந்தப் போரில் பலியாகிறவர்களோ பெரும்பாலும் ஏழை மக்கள். இப்படிப் பணக்கார இளைஞர்களால் பாதசாரிகளும் நடைபாதைவாசிகளும் கொலை செய்யப்பட்ட சம்பவங்கள் பல. சல்மான்கான் வழக்கு, நந்தா வழக்கு, கார்ட்டர் சாலையில் 7 நடைபாதைவாசிகள் கொல்லப்பட்ட வழக்கு – இவை சில எடுத்துக்காட்டுகள் மட்டும்தான். கார் என்ற வாகனமும் பணக்காரர்களின் கிரிமினல்தனமும் ஒட்டிப்பிறந்த இரட்டைகள் போலும்!

பிரெஞ்சு இயக்குநர் கோடார்டு, “வீக் எண்ட்” என்ற தனது திரைப்படத்தில், போக்குவரத்து நெரிசலை முதலாளித்தவத்தின் தோல்விக்கான குறியீடாகச் சித்தரிக்கிறார். முதலாளித்துவ நுகர்வியச் சமூகத்தின் அழிவுப் பார்வையை அந்தத் திரைப்படம் சித்தரிக்கிறது.

போக்குவரத்து நெரிசலைச் சமாளிப்பதற்காக மென்மேலும் அதிகமான சாலைகளை அமைப்பதென்பது தீயை அணைக்க எண்ணெய் வார்ப்பதைப் போன்ற அறிவீனம். இருப்பினும் மேலை நாடுகளின் தவறுகளிலிருந்து பாடம் கற்றுக் கொள்வதற்குப் பதிலாக, இந்தியாவும் சீனாவும் அவர்கள் சென்ற அதே அழிவுப்பாதையில்தான் செல்கின்றன.

உலகிலேயே எங்கும் இல்லாத அளவுக்கு நமது நாட்டின் சாலைகளில் ஏழைகள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். பாலியல் குற்றவாளிகளிடமிருந்து குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டுமென்று நாம் கூறுகிறோம். ஆனால், அதைப் போல பத்துமடங்கு குழந்தைகள் வெறித்தனமாக விரையும் மோட்டார் வாகனங்களால் கொல்லப்படுகிறார்கள். 2014 ஆம் ஆண்டில் மட்டும் இந்தியாவில் 1,40,000 பேர் மோட்டார் வாகனங்களுக்குப் பலியாகியிருக்கிறார்கள். உலகிலேயே இதுதான் மிகவும் அதிகம். சாலை விபத்துகள் மேலை நாடுகளில் குறைந்து வருகின்றன. நமது நாட்டிலோ இது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ரோஸா பார்க்ஸ்
அமெரிக்காவில் பொதுப் பேருந்துகளில் கடைப்பிடிக்கப்பட்ட வெள்ளை நிறவெறியை எதிர்த்துக் குரல் கொடுத்து ஒரு பெரும் சமூக மாற்றத்தைத் தொடங்கி வைத்த ரோஸா பார்க்ஸ். (கோப்புப் படம்)

பொதுப் போக்குவரத்துக்கான முதலீடு குறையக்குறைய மக்கள் உயிரற்ற சரக்குகளைப் போலப் பந்தாடப்படுகிறார்கள். 1953-இல் கொல்கத்தாவில் ஒரு போராட்டம் நடந்தது. டிராம் வண்டிகளின் கட்டணம் ஒரு பைசா உயர்த்தப்பட்டதற்கு எதிராக ஒரு மாத காலம் இடதுசாரிக் கட்சிகள் அன்று போர்க்குணமிக்க போராட்டத்தை நடத்தின. துப்பாக்கிச் சூட்டில் சிலர் கொல்லப்பட்டனர். ஆனால், இப்போராட்டத்தின் விளைவாக, டிராம் சேவையை நடத்தி வந்த பிரிட்டிஷ் கம்பெனி கட்டண உயர்வைத் திரும்பப் பெறவேண்டியதாயிற்று. அன்று இந்தப் போராட்டத்தின் தலைவர்களுள் ஜோதிபாசுவும் ஒருவர். பின்னாளில் அவர்தான் டாடாவின் நானோ கார் திட்டத்தை ஆதரித்தார்.

அறிவுபூர்வமான போக்குவரத்து கொள்கை என்பது நகர்ப்புறத் திட்டமிடலின் ஒரு அங்கமாகும். தொழிலாளர்களின் குடியிருப்புகள் அவர்களது தொழிலகங்களுக்கு அருகாமையில் இருப்பதுதான், நகர்ப்புற நிலங்களைச் சமூகரீதியில் நியாயமான முறையில் பயன்படுத்தும் கொள்கையாகும். இதுதான் தொழிலாளிகள் பயணம் செய்வதற்கான தேவையை இல்லாமல் ஆக்கும்; அல்லது குறைக்கும். ஒரு பயணம் என்பதற்கு சமூகக் கண்ணோட்டத்தில் ஏதேனும் நோக்கம் இருக்க வேண்டும்.

இன்று பணக்காரர்கள்தான் தமது தொழிலகங்களுக்கு அருகில் வசிப்பது போன்ற சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள். சமீபத்திய ஆதர்ஷ் அடுக்குமாடிக் கட்டிட ஊழல் விவகாரத்தை எடுத்துக் கொள்வோம். அங்கே முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கும், முன்னாள் முதல்வர்களுக்கும் வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. மும்பையின் கஃபே பரேடு என்ற மிக மையமான பகுதியில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு அமைந்திருக்கிறது. இதற்கான நிலம், மும்பை பெருநகர போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து நிலையத்துக்குச் சொந்தமானது. பணக்காரர்களுக்கான ஆடம்பரக் குடியிருப்புக்கு அது தாரை வார்க்கப்பட்டுவிட்டது.

2012-ம் ஆண்டில் டில்லியில் ஒரு தனியார் பேருந்துக்குள் நடந்த வல்லுறவும் கொலையும் (நிர்பயா படுகொலை) வெளிப்படுத்திய மிக முக்கியமான உண்மை என்ன? நகரங்களில் பாதுகாப்பான, எளிதான பொதுப்போக்குவரத்து வசதி இல்லை என்பதுதான் அது. ஆனால், நிர்பயா பிரச்சினை குறித்த விவாதம் முழுவதும் “குற்றவாளிகளுக்குப் போதுமான தண்டனை விதிக்கும் வகையில் சட்டம் வேண்டும்” என்ற வரம்புக்குள் நிறுத்தப்பட்டு விட்டது.

டெல்லியின் பரந்த ஆளரவமற்ற குடியிருப்புப் பகுதிகளும், விரிவடைந்து செல்லும் புறநகர்ப் பகுதிகளும், திரும்பிய இடங்களிலெல்லாம் பெருகியிருக்கும் மதுபானக்கடைகளும் மோட்டார் வாகனம் சார்ந்த வன்முறைக்கான களத்தை ஏற்படுத்தி தருகின்றன. வல்லுறவுக் குற்றங்களுக்குத் தேவையான தனிமையையும், தப்பிச் செல்வதற்கான வாய்ப்பையும் குற்றவாளிகளுக்கு வழங்குகின்ற அபாயகரமான களங்களாக கார்கள் மாறி வருகின்றன. உலகிலேயே அதிகமான விபத்துகள் நடக்கின்ற, விபத்துகளின் தலைநகரமாகவும் டெல்லி இருக்கிறது.

சாலைகள், பாலங்கள் போன்ற உள் கட்டுமானங்களை நிறுவுவதற்கான செலவுகள் உள்ளிட்டுப் பல்வேறு வகைகளிலும் கார்களுக்காக தமது வரிப்பணத்தை அளிப்பவர்கள் சாதாரண மக்கள்தான். காரை நிறுத்துவதற்கான இடத்துக்காகக்கூட பணக்காரர்கள் தம் பணத்தை அவிழ்ப்பதில்லை. மக்களின் வரிப்பணத்தை வைத்துத்தான் பல மாடி கார் பார்க்கிங் கட்டிடங்கள் கட்டப்படுகின்றன. பணக்காரர்கள்தான் நகர்ப்புறச் சாலைகளின் ஓரமாக தங்களது காரை நிறுத்தி, மென்மேலும் அதிகமான இடத்தை ஆக்கிரமிக்கிறார்கள். அதே நேரத்தில் இந்தப் பணக்காரர்கள்தான் இவர்களைக் காட்டிலும் பன்மடங்கு குறைவான இடத்தைப் பயன்படுத்தும் நடைபாதை வியாபாரிகளையும், குடிசைவாசிகளையும் அப்புறப்படுத்த வேண்டும் என்று பிரச்சாரம் செய்கிறார்கள்.

“மோட்டார் வாகனங்கள் அமெரிக்காவைக் கைப்பற்றியது எப்படி? அதை நாம் திரும்பப் பெறுவது எப்படி?”- இது ஜேன் ஹோல்ட்ஸ் கே என்பவர் எழுதிய அற்புதமான ஒரு நூலின் தலைப்பு. இது இந்தியாவுக்கு அப்படியே பொருந்தும். நம்முடைய நகரங்களையும் நம்முடைய வாழ்க்கையையும் இந்த கார் கலாச்சாரம் விழுங்கி அழிப்பதற்கு முன்னதாக, நாம் நமது சாலைகளையும் வாழ்க்கையையும் மீட்க வேண்டியிருக்கிறது.

அமெரிக்காவின் ஆட்டோமொபைல் முதலாளிகள் தங்களுடைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலைக்கு அமெரிக்க மக்களைக் கொண்டு வருவதற்காக கோடிக்கணக்கான டாலர்களை வாரியிரைத்து ஊடகங்களையும் கல்வியாளர்களையும் விலைக்கு வாங்கி, அவர்களைத் தமது கூலிப்படையாக்கிக் கொண்டார்கள். நமது அன்றாட வாழ்வை அச்சுறுத்தி இடையூறு செய்யும் கார் என்ற வாகனம் நவீனத்தின் அடையாளமாக மாற்றப்பட்டது இப்படித்தான்.

நியூயார்க் நகரில் கார் ஓட்டுனர்கள் காரை நடைபாதையின் மீது ஏற்றினாலும், பாதசாரிகளைக் கொன்றாலும் அந்த மாநகரப் போலீசு ஓட்டுனர்கள் மீது வழக்கு போடுவதில்லை. “வெர்சோ புக்ஸ்” என்ற பிரபல நூல் வெளியீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான ஜேக்கப் ஸ்டீவன்ஸின் மனைவி 2011-இல் கார் மோதி இறந்தார். இந்த மரணம் குறித்து மிகவும் அலட்சியமான முறையில், ஒப்புக்கு விசாரணை நடத்திய நியூயார்க் மாநகரப் போலீசுக்கு எதிராக ஜேக்கப் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

வெகு நீண்ட காலமாக கார் கலாச்சாரத்துக்கு ஆட்பட்டிருந்த முன்னேறிய நாடுகளிலேயே இன்று கார்களுக்கு எதிரான கலாச்சாரம் தோன்றி வருவதைக் காண முடிகிறது. மோட்டார் வாகனங்கள் இன்னமும் அங்கே ஆதிக்கம் செலுத்திய போதிலும், கார்மயமாக்கம் என்ற முட்டாள்தனம் தோற்றுவித்த பிரச்சினைகளின் காரணமாகவும், பொதுக்கருத்தின் வலிமை காரணமாகவும் சைக்கிளோட்டிகளுக்கு சாலையில் உரிய வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தமும், பாதசாரிகளுக்கு இடம் ஒதுக்க வேண்டிய நிர்ப்பந்தமும் பொதுப்போக்குவரத்தை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயமும் முன்னேறிய நாடுகளிலேயே ஏற்பட்டிருக்கிறது.

பிரேசில் நாட்டிலும் கூட கார்களுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. கொஞ்ச நாட்களுக்கு முன்னால் சாவ் போலோ நகரில் சைக்கிளோட்டி ஒருவரின் மீது மோதிய கார், அவரது கையைப் பிய்த்தெறிந்து விட்டது. இந்தச் சம்பவம் கார்களின் ஆதிக்கத்துக்கு எதிரான பொதுக்கருத்தைப் பெருமளவில் தோற்றுவித்தது. அதன் விளைவாக, அந்த நகர் முழுதும் உள்ள சாலைகளில் சைக்கிள்களுக்கென அற்புதமான தனிப்பாதை அமைக்கப்பட்டிருக்கிறது. ஜெர்மனியிலும் நியூயார்க்கிலும் கார்களின் ஆதிக்கத்தை எதிர்த்து சைக்கிளோட்டிகள் போர்க்குணமிக்க முறையில் போராடுகிறார்கள். நெதர்லாந்து, டென்மார்க் போன்ற நாடுகளில் அரசின் ஆதரவின்றி, மக்களே ஒரு சைக்கிள் புரட்சியை தோற்றுவித்திருக்கிறார்கள்.

“வலிமை குன்றிய மக்களின் ஆயுதம்” என்ற நூலின் ஆசிரியரான ஜேம்ஸ் ஸ்காட், எதிர்ப்புகள் இல்லையென்றால் ஆதிக்கம் எப்படி வேர் விட்டு விடுகிறது என்பதை ஒரு எடுத்துக்காட்டு மூலம் கூறுகிறார். எந்த வாகனமும் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்ததாம் ஒரு சாலை. இருந்த போதிலும் அந்த சாலையைக் கடக்க விரும்பிய சிலர் பாதசாரிகள் கடப்பதற்கான பச்சை விளக்கு எரிவதற்காக அமைதியாகக் காத்துக் கொண்டிருந்தார்களாம்.

ஆதிக்கத்துக்கு பணிதல் என்பது ஆழ்மனதில் பதிந்து விடுவதை இந்த எடுத்துக்காட்டின் மூலம் விளக்கி, பாதசாரிகள் இத்தகைய ஜனநாயக விரோதமான கட்டுப்பாடுகளை ஆரவாரமின்றி மீறவேண்டும் என்கிறார் ஸ்காட். அப்படிப்பட்ட சின்னச் சின்ன எதிர்ப்புகள் இல்லாமல், ஆதிக்க சக்திகளுக்கு எதிரான பெரிய போராட்டத்துக்கு நாம் ஒருபோதும் தயாராக மாட்டோம் என்று அவர் கூறுகிறார்.

சாலைகளில் பாதசாரிகளுக்கு கூடுதல் உரிமை வேண்டும் என்ற கோரிக்கை முன்னேறிய முதலாளித்துவ நாடுகளிலேயே வலுத்து வருகிறது. நகரச் சாலைகளில் சரிபாதியாவது பாதசாரிகளுக்கு ஒதுக்கப்படவேண்டும் என்கிறார் கொலம்பியத் தலைநகர் பகோடாவின் மேயர் என்ரிக் பெனெலோசா.

சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர்ச்சூழலின் பேரழிவிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டுமானால், தனியார் தானியங்கி வாகனங்களுக்கு எதிராக வர்க்கப் பார்வையிலான ஒரு எதிர்ப்பை நாம் உடனே தொடங்கியாக வேண்டும் என்கிறது கார்களும் முதலாளித்துவமும் என்ற நூல். தானியங்கி வாகனங்களின் செல்வாக்கும் ஆதிக்கமும் அதிகரிப்பது என்பது முதலாளித்துவத்துடன் பிரிக்க முடியாத வண்ணம் பிணைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் இந்த நூலின் ஆசிரியர்கள். கார்ப்பரேட் மோசடிகள், அரசியல் சதிகள், இலஞ்சம், ஊடகங்களை விலைபேசுதல், நிறவெறி, கல்வித்துறை ஊழல், ஏழை நாடுகளின் ஆட்சிக் கவிழ்ப்புகள், இரகசிய இராணுவங்கள், சுற்றுச்சூழல் பேரழிவு, போர் ஆகிய அனைத்தும் தனியார் தானியங்கி வாகனங்களுடன், குறிப்பாக கார்களுடன் இணைந்திருக்கிறது. எனவே கார்களின் ஆதிக்கத்தை நாம் எதிர்க்கிறோம் என்றால், முதலாளித்துவத்துக்கு நாம் சவால் விடுகிறோம் என்றே பொருள்.

“நடத்தல் என்பது ஒரு அரசியல் நடவடிக்கை” என்றான் கவிஞன் வேர்ட்ஸ்வொர்த். உண்மைதான். நடை என்பது அரசியல் எதிர்ப்பின் சிறந்த வடிவமாக அமைய இயலும். 17, 18, 19, 20-ஆம் நூற்றாண்டுகளில் மிகப்பெரிய புரட்சிகளெல்லாம் இலண்டன், பாரிஸ், செயின்ட் பீட்டர்ஸ்பர்க் போன்ற நகரங்களின் வீதிகளில் நடந்தவைதான்.

அதேபோல, பொதுப்போக்குவரத்து என்பதும் எதிர்ப்பையும் கிளர்ச்சியையும் நடத்துவதற்கான மிக முக்கியமான களமாகும். கருப்பின மக்களுக்கும் வெள்ளையர்களுக்கும் பேருந்துகளில் தனித்தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டிருந்த காலத்தில், ரோஸா பார்க்ஸ் என்ற கருப்பினப் பெண், “வெள்ளைக்காரனுக்காகத் தனது இருக்கையை விட்டு எழுந்திருக்க முடியாது” என்று எதிர்ப்புக்குரல் எழுப்பினாள். இந்தச் சிறு பொறிதான் நிறவெறிக்கு எதிரான சிவில் உரிமை இயக்கம் எனும் தீயை அமெரிக்காவில் பற்ற வைத்தது.

வீதிகள் வாழத்தக்கவையாக மாற்றப்பட வேண்டும். தோழமைக்கும் கூடிப்பழகுவதற்குமான களமாக வீதிகள் இருக்க வேண்டும். பல நூற்றாண்டுகளாக அவை அப்படித்தான் இருந்தன. வீதிகள் நம்முடையவை. அவற்றை நாம் மீட்டெடுத்தாக வேண்டும்.

***

வித்யாதர் ததே, மூத்த பத்திரிகையாளர். பருவநிலை மாற்றத்தின் சகாப்தத்தில் போக்குவரத்து – நடை, சைக்கிள், பொதுப்போக்குவரத்துக்கு முன்னுரிமை – என்ற நூலின் ஆசிரியர். ரூபே இணைய தளத்தில் வெளிவந்திருக்கும் இவரது கட்டுரையின் சுருக்கப்பட்ட மொழியாக்கம் இது.
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

பொது நுழைவுத் தேர்வு : ஏழைக்கு எதற்கடா மருத்துவக் கனவு ?

19

ரு வழக்கில் விசாரணையைத் தொடங்குவதற்கு முன்பே தீர்ப்பைக் கூறும் விந்தையை நிகழ்த்திக் காட்டியிருக்கிறது, உச்சநீதி மன்றம். தரம், தகுதி என்ற மோசடியான வாதங்களுக்குப் பின்னே ஒளிந்துகொண்டும், தனியார் கல்வி முதலாளிகள் அடிக்கும் கொள்ளை குறித்து முதலைக் கண்ணீர் வடித்தும் “விசாரணைக்கு முன்பே தீர்ப்பு” என்ற இந்த முறைகேடைத் தமது கட்டளையில் புகுத்தியுள்ளனர்,உச்சநீதி மன்ற நீதிபதிகள்.

நீதிபதி அனில் ஆர்.தவே
பொது நுழைவுத் தேர்வு குறித்த மறுசீராய்வு மனுவை விசாரித்துத் தீர்ப்பு வழங்கும் முன்பாகவே, அத்தேர்வை உடனடியாக இந்த ஆண்டு தொடங்கியே நடத்துமாறு முறைகேடாக உத்தரவிட்ட அரசியல் சாசன அமர்வின் தலைமை நீதிபதி அனில் ஆர்.தவே

பொது மருத்துவம், பல் மருத்துவம் மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்களைச் சேர்ப்பதற்குத் தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை (National Eligibility cum Entrance Test) நடத்தும் அறிவிக்கையை கடந்த 2010-ஆம் ஆண்டில் அப்போது ஆட்சியிலிருந்த காங்கிரசு கூட்டணி அரசு வெளியிட்டது. இதற்கு எதிராகத் தமிழ்நாடு, ஆந்திரா உள்ளிட்ட சில மாநில அரசுகளும், வேலூர் கிறித்தவ மருத்துவக் கல்லூரி உள்ளிட்ட சிறுபான்மை மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் வழக்கு தொடுத்தன. அப்பொழுது இவ்வழக்கை விசாரித்த உச்சநீதி மன்றத் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு, “மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கைக்கு நாடெங்கும் ஒரே மாதிரியான தேர்வை நடத்துவது மாநில அரசுகளின் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையில் தலையிடுவதாகும்; இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு இத்தேர்வை நடத்துவதற்கான அதிகாரம் கிடையாது” எனப் பெரும்பான்மை அடிப்படையில் தீர்ப்பளித்து, மைய அரசின் அறிவிக்கைக்குத் தடைவிதித்தது. நீதிபதிகள் அல்தாமஸ் கபீரும், விக்கிரமஜித் சென்னும் நுழைவுத் தேர்வுக்கு எதிராகவும்; நீதிபதி அனில் ஆர்.தவே இத்தேர்வை ஆதரித்தும் தீர்ப்புக் கூறியிருந்தனர்.

தேர்வைத் தடை செய்த பெரும்பான்மை தீர்ப்புக்கு எதிராக காங்கிரசு கூட்டணி அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இம்மனுவைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு, ஆந்திர மாநில அரசுகள் விடுத்த கோரிக்கையை காங்கிரசு கூட்டணி அரசு ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை. அதற்குப் பின் வந்த பா.ஜ.க. கூட்டணி அரசும் அம்மனுவைத் திரும்பப் பெறவில்லை. தகுதித் தேர்வுக்கு ஆதரவாகத் தீர்ப்பளித்த அனில் ஆர்.தவே தலைமையில் அமைந்த ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்விடம் இச்சீராய்வு மனு பரிசீலனைக்கு வைக்கப்பட, அவ்வமர்வு இம்மனுவை விசாரணைக்கு அனுமதித்த கையோடு, தகுதித் தேர்வுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டிருந்த தடையை ரத்து செய்து, தகுதித் தேர்வை நடத்தும் அனுமதியையும் இந்திய மருத்துவ கவுன்சிலுக்கு வழங்கி உத்தரவிட்டது.

உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்
நாடெங்கும் ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வை நடத்துவது மாநில அரசுகள் மற்றும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களின் உரிமையைப் பறிப்பதாகும் எனக் குறிப்பிட்டு, தேசிய தகுதி-நுழைவுத் தேர்வுக்குத் தடை விதித்த உச்சநீதி மன்ற முன்னாள் தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர்

இந்த ஆண்டு தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்தும் வாய்ப்பில்லை எனத் தமிழக ஆட்சியாளர்கள் நொண்டிச் சமாதானம் கூறிக் கொண்டிருந்த வேளையில், சங்கல்பம் என்ற தன்னார்வ அமைப்பு, “நுழைவுத் தேர்வுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்த பிறகும் மைய அரசு அத்தேர்வை நடத்தாமல் மெத்தனம் காட்டுவதாக”க் கொளுத்திப் போட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவையும், நுழைவுத் தேர்வு உத்தரவுக்கு எதிராகத் தமிழ்நாடு, உ.பி., தெலுங்கானா உள்ளிட்ட மாநில அரசுகளும், தனியார் மருத்துவக் கல்லூரி சங்கமும் தாக்கல் செய்த மனுக்களையும் விசாரித்த உச்சநீதி மன்றம், நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே இரண்டு கட்டங்களாக நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

எந்த வழக்கிலும் இறுதித் தீர்ப்பு வழங்கப்பட்டு மறுஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டால், அதனை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டு அந்த விசாரணையின் முடிவில்தான் தீர்ப்பு வழங்குவது நீதியான, சட்டரீதியான நடைமுறை. ஆனால், இந்த வழக்கில் மறுஆய்வு மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட கையோடு, நுழைவுத் தேர்வை ரத்து செய்தது தவறு, நுழைவுத் தேர்வு தொடர வேண்டும் என உத்தரவிட்டுவிட்டு, வழக்கை பிறகு விசாரிக்கிறோம் எனக் கூறியிருப்பது வலிந்து திணிக்கப்பட்டுள்ள முறைகேடு, கயமைத்தனம்.

“தகுதி மற்றும் நுழைவுத் தேர்வைத் தடை செய்து வழங்கப்பட்ட முந்தைய தீர்ப்பு அவசரகதியில் வழங்கப்பட்ட தீர்ப்பு” என விமர்சித்துள்ள அரசியல் சாசன அமர்வு, விசாரணை நடத்துவதற்கு முன்பாகவே தகுதித் தேர்வை நடத்துவதற்கு அனுமதி அளித்ததற்கான காரணத்தைக் கூற மறுத்துவிட்டது. காரணமே கூறாமல் ஜெயாவிற்குப் பிணை வழங்கியதைப் போல, காரணமே கூறாமல் தகுதித் தேர்வுக்கு அனுமதி வழங்கி கட்டப் பஞ்சாயத்தைச் செய்திருக்கிறது, உச்சநீதி மன்றம். ஆதிக்க சாதி, மேல்தட்டு நலன் சார்ந்த வழக்குகளில் உச்சநீதி மன்றம் சட்டரீதியான நடைமுறைகளைக் கடாசிவிட்டு, கட்டப் பஞ்சாயத்து செய்து வருவதற்கு இந்த வழக்கு இன்னுமொரு உதாரணம்.

* * *

நீதிபதிகள் அல்தாமஸ் கபீரும் விக்கிரமஜித் சென்னும் பொது நுழைவுத் தேர்வைத் தடை செய்து வழங்கிய பெரும்பான்மை தீர்ப்பில், “சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மாணவர்களைச் சேர்த்துக் கொள்ளுவதற்கு வழங்கப்பட்டுள்ள அரசியல் சாசன உரிமையைத் தகுதித் தேர்வு ரத்து செய்துவிடும்” என வாதிட்டபொழுது, “தகுதித் தேர்வு மருத்துவக் கல்விக்கு மாணவர்களைச் சேர்ப்பதில் காணப்படும் ஊழலை ஒழிக்கும்” என நீதிபதி அனில் ஆர்.தவே தனது சிறுபான்மை தீர்ப்பில் கூறியிருந்தார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
தேசியத் தகுதி–நுழைவுத் தேர்வை நடத்த அனுமதித்த உச்சநீதி மன்ற உத்தரவைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தினர் புதுச்சேரியில் நடத்திய ஆர்ப்பாட்டம்

“பொது நுழைவுத் தேர்வு கவர்ச்சிகரமானது என்றாலும், அது நகர்ப்புற மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு இடையே காணப்படும் பிளவை, தகுதி என்ற பெயரில் மேலும் ஆழப்படுத்தும்” என அல்தாமஸ் கபீர் தனது தீர்ப்பில் குறிப்பிட்டபொழுது, “சாதி, மதம், இனம், பாலினம், சமூக ஏற்றத்தாழ்வுகள் என எந்தவொரு சலுகைக்கும் இடம் கொடுக்காமல், தகுதியான மாணவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டார், அனில் ஆர்.தவே.

தகுதித் தேர்வு குறித்த முந்தைய வழக்கில் நீதிபதி அனில் ஆர்.தவே தனது சிறுபான்மை தீர்ப்பில் கூறியிருந்த கருத்துக்களை, அவர் தலைமையில் அமைக்கப்பட்ட அரசியல் சாசன அமர்வு ஒருமனதாக ஏற்றுக் கொண்டு, தகுதித் தேர்வு நடத்துவதற்கு அனுமதி அளித்துவிட்டு, இச்சீராய்வு மனுவை உச்சநீதி மன்றத்தின் வேறொரு அமர்வு விசாரித்து இறுதித் தீர்ப்பை வழங்கும் எனக் கூறியிருக்கிறது. இது, “மாப்பிள்ள அவருதான், ஆனா, சட்ட என்னுது” என்ற நகைச்சுவையைத்தான் நினைவுபடுத்துகிறது.

“மருத்துவக் கல்லூரிகளில் சேர விரும்பும் மாணவர்கள் இனி ஏகப்பட்ட மருத்துவ நுழைவுத் தேர்வுகளை எழுத வேண்டிய கட்டாயத்திலிருந்து விடுவிக்கப்பட்டுவிட்டனர். தனியார் மருத்துவக் கல்லூரிகள் நடத்தும் கொள்ளைக்கு முற்றுப்புள்ளி விழுந்துவிட்டது. மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் இனி தகுதியும் திறமையும் மட்டும்தான் அளவுகோலாக இருக்கும்” என்ற நியாய வாதங்களை முன்வைத்து இத்தீர்ப்புக்குப் பட்டுக்குஞ்சம் கட்டப்படுகிறது.

இட ஒதுக்கீடு காரணமாகத்தான் தகுதி, திறமை வாய்ந்த மாணவர்கள் மருத்துவக் கல்வியில் சேர முடியவில்லை என்ற காரணத்தைக் கூறி, அக்கல்வியில் தனியார்மயம் புகுத்தப்பட்டதை ஆதரித்த பார்ப்பன-ஆதிக்க சாதிகளைச் சேர்ந்த நகர்ப்புற நடுத்தர வர்க்கக் கும்பல், இப்பொழுது கட்டணக் கொள்ளை என்ற தீமையை ஒழிக்கப் பொது நுழைவுத் தேர்வு என்ற இன்னொரு தீமையைச் சமூகத்தின் மேல் திணிக்கிறது. வியாபம் ஊழல் சந்தி சிரித்த பிறகும், பொது நுழைவுத் தேர்வு மருத்துவக் கல்வியில் காணப்படும் ஊழலை, கொள்ளையை ஒழித்துவிடும் எனப் பேசுவபவர்கள் ஒன்று, கற்பனையில் மிதக்கும் கேணையர்களாக இருக்க வேண்டும்; இல்லையென்றால், மோசடிப் பேர்வழிகளாகத்தான் இருக்க முடியும்.

இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்
தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிப்பதற்குக் கோடிக்கணக்கில் இலஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மருத்துவக் கவுன்சிலின் முன்னாள் தலைவர் கேதான் தேசாய்

தனியார் மருத்துவக் கல்லூரிகளில் ஊழலும் கொள்ளையும் தலைவிரித்தாடுவதற்கு இந்திய மருத்துவ கவுன்சில்தான் காரணம் எனக் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, இப்பிரச்சினையை ஆராய்ந்த நாடாளுமன்ற நிலைக் குழு. சில ஆண்டுகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேதான் தேசாய் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக கோடிக்கணக்கான ரூபாய் கைப்பற்றப்பட்ட விவகாரம், இந்திய மருத்துவக் கவுன்சில் என்பது ஊழல் பேர்வழிகளின் கூடாரம் என்பதை அம்பலப்படுத்திக் காட்டியது. இந்நிலையில் தேசிய தகுதி-பொது நுழைவுத் தேர்வை நடத்தும் பொறுப்பை இந்திய மருத்துவ கவுன்சிலிடம் உச்சநீதி மன்றம் ஒப்படைத்திருப்பது திருடன் கையில் பெட்டிச் சாவியைக் கொடுத்திருப்பதற்கு ஒப்பானது.

* * *

மிழகம் உள்ளிட்டு மாநில அரசுகளால் நடத்தப்படும் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மொத்த இடங்களில் 15 சதவீத இடங்கள் மைய அரசுக்கு ஒதுக்கப்பட்டு, அந்த இடங்கள் மத்திய பள்ளிக் கல்வி வாரியம் நடத்திவரும் பொதுநுழைவுத் தேர்வு மூலம் இட ஒதுக்கீடு இன்றி நிரப்பப்படும் நடைமுறை ஏற்கெனவே இருந்து வருகிறது. இப்பொழுது உச்சநீதி மன்றம் அனுமதித்திருக்கும் பொது நுழைவுத் தேர்வு மூலம் மாநில அரசுகளுக்குச் சொந்தமான மருத்துவ கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்களையும் மத்திய அரசு அபகரித்துக் கொள்ளும்.

இதனாலும், பொது நுழைவுத் தேர்வு சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தின்படி இந்தி, ஆங்கில மொழிகளில் நடத்தப்படுவதாலும் தமிழக மாணவர்களுக்குத் தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைப்பது இனி குதிரைக் கொம்புதான். தமிழகத்திலுள்ள ரயில்வே உள்ளிட்ட மைய அரசு அலுவலங்களில் இந்தி பேசும் மாநிலங்களைச் சேர்ந்த ஊழியர்கள் திணிக்கப்படுவதைப் போன்ற நிலை தமிழக மருத்துவக் கல்லூரிகளிலும் ஏற்படும். ரயில்வே ரிசர்வேஷன் கவுண்டர்களில் இந்தி தெரியாத பயணிகள் திண்டாடுவதைப் போல், இந்தி தெரியாத நோயாளிகள் அரசு மருத்துவமனைகளில் திண்டாடும் நிலைமையும் உருவாகக்கூடும்.

இது மட்டுமின்றி, தமிழ் அல்லது தாய்மொழி வழியில் மாநிலப் பாடத் திட்டங்களைப் பயிலும் ஏழை, கிராமப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு இருந்துவந்த கொஞ்சநெஞ்ச வாய்ப்பும் முற்றிலுமாகப் பறிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஆங்கிலம் மற்றும் தனியார் கல்வி மோகத்தில் ஏற்கெனவே சிக்கிக் கொண்டுள்ள பெற்றோர்கள், மாணவர்களிடம் தாய்மொழி வழிக் கல்வி, மாநிலப் பாடத் திட்டம் ஆகியவையெல்லாம் இனி கதைக்கு உதவாது என்ற நஞ்சை உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவு இன்னும் ஆழமாகப் பாய்ச்சுகிறது.

neet-politics-5தமிழக அரசின் விதிகளின்படி இளங்கலை பொது மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு முற்பட்ட, பிற்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களும்; மிகப் பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மாணவர்கள் 55 சதவீத மதிப்பெண்களும்; தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்கள் 40 சதவீத மதிப்பெண்களையும் பிளஸ் டூ தேர்வில் எடுத்திருக்க வேண்டும். பொது நுழைவுத் தேர்வு நடைமுறைக்கு வரும்பொழுது இந்த விதி செல்லாக்காசாகிவிடும்.

உச்சநீதி மன்றம் அனுமதித்திருக்கும் பொதுநுழைவுத் தேர்வை எழுதுவதற்கு இக்குறைந்தபட்ச மதிப்பெண்கள் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 65 சதவீதம் என்றும்; மற்றவர்களுக்கு 75 சதவீதம் என்றும் அதிகரித்து நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இந்த மதிப்பெண்கள்கூட பொது நுழைவுத் தேர்வு எழுத விண்ணப்பிக்க மட்டும்தான். மருத்துவக் கல்வி சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வில் கிடைக்கும் மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு தர வரிசை நிர்ணயிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்படியான குறுக்குவழியில் நுழைவுத் தேர்வை முழுமையான தகுதித் தேர்வாக மாற்றிவிட்டது, உச்சநீதி மன்றம்.

தமிழகத்தில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழிற்படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டபொழுது, மாணவர்களைத் தரவரிசைப்படுத்துவதற்கு நுழைவுத் தேர்வு மதிப்பெண்களோடு, பிளஸ் டூவில் அவர்கள் எடுத்த மதிப்பெண்களும் கணக்கில் கொள்ளப்பட்டன. 2007-ஆம் ஆண்டு தமிழகத்தில் பொது நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட பிறகு, பிளஸ் டூவில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டும் தரவரிசைப் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. மத்தியப் பள்ளிக் கல்வி வாரியத்தால் தற்பொழுது நடத்தப்படும் பொதுநுழைவுத் தேர்வில் பிளஸ் டூ மதிப்பெண்களுக்கு 40 சதவீத வெயிட்டேஜ் கொடுக்கப்படுகிறது.

இந்த நடைமுறையை முற்றாகக் கைகழுவிவிட்டதன் மூலம், பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ படிப்பை இரண்டாம்பட்சமாக மாற்றி, பொது நுழைவுத் தேர்வு எழுதுவதற்குத் தனியார் பயிற்சிப் பள்ளிகளில் நடத்தப்படும் கோச்சிங் வகுப்புகளை முதல் இடத்திற்குக் கொண்டுவந்துவிட்டது, உச்சநீதி மன்றம். தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நடக்கும் கொள்ளையைத் தடுக்கப் போவதாகச் சொல்லிக் கொண்டு பொது நுழைவுத் தேர்வைத் திணிக்கும் உச்சநீதி மன்றம், அதன் வழியே தனியார் பயிற்சிப் பள்ளிகளின் கொள்ளையைத் தேசியமயமாக்கியிருக்கிறது.

சமச்சீர் கல்வியால்தான் தமிழகப் பள்ளிக் கல்வியின் தரமே பாழ்பட்டுவிட்டதாக வீண்பழிபோட்டு வரும் தனியார் மெட்ரிக் பள்ளி முதலாளிகள், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு மாறுவதன் மூலம் அல்லது மருத்துவக் கல்வி தகுதித் தேர்வுக்கு ஏற்ப நாங்கள் எக்ஸ்ட்ரா பாடங்களை நடத்துகிறோம் என்ற பெயரில் கட்டணக் கொள்ளையை அதிகப்படுத்தத் துணிவார்கள். மருத்துவக் கல்வி மயக்கத்தில் கிடக்கும் நகர்ப்புற நடுத்தர வர்க்கப் பெற்றோர் இந்த வலையில் சிக்க வைக்கப்படுவார்கள். உச்சநீதி மன்றம் அனுமதித்துள்ள தகுதித் தேர்வு இப்படி புதுப்புது வழிகளில் தனியார் பள்ளி முதலாளிகளும், தனியார் பயிற்சிப் பள்ளிகளும் கொள்ளையடிப்பதற்கான வாசல்களைத் திறந்துவிடுமே தவிர, கட்டணக் கொள்ளையை ஒழிப்பதற்குப் பயன்படப் போவதில்லை.

இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் மருத்துவக் கல்வியிலும் 69 சதவீத இட ஒதுக்கீடு முறை பின்பற்றப்படுகிறது. மேலும், முசுலீம்களுக்கு மிகப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலின் கீழ் இட ஒதுக்கீடு அனுமதிக்கப்பட்டிருக்கிறது. பொது நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இச்சமூக உரிமையெல்லாம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. இட ஒதுக்கீடை உடனடியாகக் கைவிட ஆளுங்கும்பல் தயாராக இல்லையென்றாலும், பத்தாயிரக்கணக்கில் பணத்தைக் கட்டி ஆங்கில வழிப் பள்ளிகளிலும், தனியார் பயிற்சிப் பள்ளிகளிலும் படித்தால்தான் மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்ற நிலை, மருத்துவக் கல்வியில் இட ஒதுக்கீடைப் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கும் சலுகையாக மாற்றிவிடும்.

தனியார்மயம்-தாராளமயத்திற்குப் பிறகு மாநில அரசுகளின் அதிகாரங்களை ஒவ்வொன்றாகப் பறித்து, அவற்றை முனிசிபாலிட்டி ஆபீசைப் போல மாற்றும் சதித் திட்டத்தைப் படிப்படியாக அரங்கேற்றி வருகிறது, மைய அரசு. மாநில அரசுகளின் வரி விதிக்கும் அதிகாரத்தைப் பறித்து, நாடெங்கும் ஒரேமாதிரியான பொது சரக்கு சேவை வரியைக் கொண்டுவருவது, மாநில அரசுகளின் மோட்டார் வாகனச் சட்டம், சாலை வரிச் சட்டங்களைப் பறித்து ஓட்டுநர் உரிமம் வழங்குதை மையப்படுத்துவது என்ற வரிசையில் மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கை உரிமையும் மாநில அரசுகளிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

உயர் கல்வித் திட்டத்திலும், மாணவர் சேர்க்கையிலும் மூக்கை நுழைப்பதன் பின்னே, இட ஒதுக்கீடு, மாநில அரசுகளின் பாடத் திட்டங்கள் ஆகியவற்றை ஒழிக்கும் நோக்கமும் மறைந்திருக்கிறது. எம்.பி.,பி.எஸ்., மாணவர் சேர்க்கையில் இதுகாறும் நடைமுறையில் இருந்து வந்த அகில இந்திய ஒதுக்கீடு மற்றும் முதுகலை மருத்துவப் படிப்புகள், சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைகளில் ஏற்கெனவே இட ஒதுக்கீடு ஒழித்துக் கட்டப்பட்டிருப்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.

மாநில அரசுகளின் உரிமை பறிப்பு, மாநில பாடத் திட்டங்கள் ஒழிப்பு, இட ஒதுக்கீடு ஒழிப்பு இவற்றின் வழியாக “ஏக இந்தியா” என்ற தனது பார்ப்பன-பாசிச நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ள முனைகிறது, காங்கிரசு, பா.ஜ.க. பின்னுள்ள ஆளுங்கும்பல். தரம், தகுதி, கட்டணக் கொள்ளையைத் தடுப்பது என்ற மயக்கு வார்த்தைகளைக் காட்டி அறிமுகப்படுத்தப்படும் தேசிய தகுதி-நுழைவுத் தேர்வின் பின்னே மறைந்துள்ள தீய நோக்கங்கள் இவைதான்.

– திப்பு
___________________________
புதிய ஜனநாயகம், மே 2016
___________________________

தந்தி டி.வி யின் பங்குச் சந்தை கருத்துக் கணிப்பு மோசடி !

13

pandey

தேர்தல் முடிவில் பாசிச ஜெயாவின் கன்டெய்னர் வெற்றி குறித்து எழுதுவதற்கு நிறைய இருக்கின்றன. இங்கே அந்த வெற்றியை தந்தி டி.வி பாண்டே கொண்டாடுவதில் உள்ள அழுகுணி ஆட்டத்தை மட்டும் பார்ப்போம்.

சுற்றுச் சூழல் என்.ஜி.ஓ அருண் கிருஷ்ணமூர்த்தியை வைத்து தந்தி டி.வி எடுத்திருக்கும் கருத்துக் கணிப்பு கிட்டத்தட்ட அப்படியே பலித்திருப்பதாக பாண்டேயும், அருணும் குதூகலிக்கிறார்கள். அநேர்மைக்கு புகழ்பெற்ற பாண்டே இந்த கணிப்பு நேர்மையாகவும், நடுநிலைமையுடனும் எடுக்கப்பட்டதாக மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்.

சில நாட்களுக்கு முன்பாக நாளொன்றுக்கு பத்து தொகுதி வீதமும் பின்பு ஐ.பி.எல் ஃபைனல் நெருங்க நெருங்க இருபது முப்பது என்று விறு விறுப்பை கூட்டியது தந்தி டி.வி. அந்த நாட்களில் என்.ஜி.வோ கிருஷ்ணமூர்த்தி ஒவ்வொரு தொகுதியிலும் கடந்த கால வரலாறு, வாக்களிக்கும் பாணி, நிரந்தர பிரச்சினைகள், கட்சி சார்பு, சாதி, மதம் போன்ற சமூக பிரிவுகள், ஆளும் கட்சி குறித்த பார்வை, அந்தந்த வட்டார பிரச்சினைகள் என்று யோகேந்திர யாதவ் போலவே பொளந்து கட்டினார்.

இங்கே ஒரு உண்மையை பதிவு செய்வோம். தம்பி அருண் கிருஷ்ணமூர்த்தி, தந்தி பாண்டே போல முட்டாள்களையும் சந்தர்ப்பவாதிகளையும் மடக்கும் புத்திசாலியான முட்டாளோ, உளறுவாயரோ, கத்துபவரோ இல்லை. கண்டிப்பாக தான் சொல்வது முழு உண்மைதான் என்று நம்பவைக்ககூடிய ‘புத்திசாலி’தான். ஒரு முதலாளித்துவக் கல்வியின் அதிகபட்ச சாத்தியங்களோடு கொட்டிக் கிடக்கும் விவரங்களை பல்வேறு காம்பினேஷ்ன்களில் கூட்டிக் கழித்து வகுத்து பெருக்கி குறைந்த பட்சமாக கூட மக்களின் வாக்களிக்கும் திசையை யூகித்து சொல்லமுடியும் என்பதற்கேற்ப அவர் முயற்சி செய்கிறார். எனினும் இதை ஏதோ கணித சூத்திரம் போல மக்களின் மனங்களை அப்படியே படம்பிடித்துக் காட்டும் என்பதல்ல. அதனால்தான் இதை குறைந்த பட்சம் என்கிறோம்.

அநீதிகளை ஏற்றுக் கொண்டே ஆகவேண்டிய ‘நீதியாக’ முன்வைப்பது பாண்டேயின் உத்தி என்றால் அதே ‘நீதியை’ சமூகப் பொருளாதார விவரங்களாக மாற்றுவது அருண் கிருஷ்ணமூர்த்தியின் உத்தி.

இதில் அருண் கிருஷ்ணமூர்த்தி தொகுதி வாரியாக விளக்கமளிக்கும் போது குறிப்பிட்ட தொகுதியின் வெற்றி தோல்வி குறித்த பாண்டேவின் குறுக்கீடு அ.தி.மு.கவின் சாணக்கியத்தனமாகவோ இல்லை தி.மு.கவின் பரிதாபமான நிலையாகவோ புரிந்து கொள்ளலாமா என்று இருக்கும். ஆனால் அருண் கிருஷ்ணமூர்த்தி அப்படி விளக்குவதில்லை. அதே நேரம் முதலாளியான பாண்டேவின் மனம் புண்படக்கூடாது என்பதால் தலையாட்டிக் கொண்டு அமைதியாகி விடுகிறார். மேலும் இதில் அவர் சமரசமாக நடந்து கொள்வதில்லை பாண்டே போலவே நடந்து கொள்கிறார் என்பதை எளிதில் கண்டு பிடிக்க முடியாது. இதுதான் வேறுபாடு.

தந்தி டி.வி-யின் கருத்துக் கணிப்பு துல்லியமாக வெற்றி பெற்றிருப்பதாக இலையடிமை புதிய தலைமுறை மாலன் பாண்டேவுக்கு பாராட்டு மழை பொழிகிறார். ஆங்கில ஊடகங்கள் அஞ்சிய தமிழக தேர்தல் கருத்துக் கணிப்பை தைரியமாக ஏற்றுக் கொண்டு சரியாக கணித்திருப்பதாக தந்தி டி.வி பாண்டே மற்றும் அருண் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவர்களின் குழுவினருக்கு மாலன் பாராட்டுவது ஒரு அறிவுத் துறை சாதனையை பார்த்து வியந்து அல்ல. சாமர்த்தியமாக அ.தி.மு.க வெற்றியை கணித்திருக்கும் அந்த ‘திறமை’ மாலனது சொந்த மகிழ்ச்சிக்குரியது.

இனி இந்த கருத்துக் கணிப்பின் மோசடிக்கு வருவோம்.

தமிழகத்தின் சட்டமன்றத் தேர்தல்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் என இருமுனைப் போட்டிதான் பிரதானம் என்பதை அறிவதற்கு பெரிய அறிவு தேவையில்லை. மூன்றாவது அணி அ.தி.மு.கவின் பி டீம் என்பதாலாயே தந்தி புதிய தலைமுறை, குமுதம், தினமணி, தமிழ் இந்து போன்ற ஊடகங்கள் புரட்சி அண்ணிக்கு பெரிய கவரேஜ் கொடுத்தன. அடுத்து ஆளும் கட்சியை எதிர்த்து இங்கே எதிர்க்கட்சிகளோ இல்லை எதிர்க்கட்சிகள் அமைக்கும் கூட்டணியை வைத்து  ஆளும் கட்சியோ கூட்டணி அமைக்கவில்லை என்பதாலும் இங்கே அ.தி.மு.கவுக்கு ஆதாயம் என்பதை அறிவதற்கு பெரிய அல்லது சிறிய அறிவு தேவையில்லை.

விஜயகாந்தின் முடிவுக்கு தி.மு.க காத்திருந்ததைப் போலவே ஜெயலலிதாவும் காத்திருந்தார். தே.மு.தி.க மக்கள் நலக்கூட்டணிக்கு போனதால் தி.மு.கவுக்கு கிடைத்த பாதகத்தை விட அ.தி.மு.கிற்கு கிடைத்த சாதகம் அதிகம். இந்நிலையில் தொகுதிகளுக்கு போகிறார் அருண் கிருஷ்ணமூர்த்தி.

போனவர் மேற்கண்டவாறு அந்தந்த தொகுதிகளின் சமூக, பொருளாதார நிலைமைகளை அலசி ஆராய்கிறார். அந்த அலசலை தொகுத்து யாருக்கு வெற்றி, தோல்வி, இழுபறியா என்று முன்வைக்கிறார். இதுதான் நிரூபணமாயிருக்கிறது என்று பாண்டேவும், அருணும் குதுகலிக்கிறார்கள். எனினும் அ.தி.மு.கதான் அசுரப் பெரும்பான்மை பெறும் என்று அவர்கள் சொல்லவில்லை. அ.தி.மு.கவிற்கு  மார்ஜின் பெரும்பான்மை  எனுமளவுக்கு இடங்கள், தி.மு.கவிற்கு பெரும்பான்மைக்கு சற்று குறைவான இடங்கள், மீதி இழுபறி என்று நின்றார்கள்.

இதுவரை பார்த்த விசயங்கள் ஜெயலலிதாவுக்கும் தெரியும். இதற்கு மேல் தேர்தல் முடிவுகளை தீர்மானிக்கும் ஒரு முக்கியமான விசயம் – அதன் அளவை ஜெயலலிதா மட்டும்தான் முடிவு செய்தார். அது பணம். எந்தெந்த தொகுதி பலவீனம், அவைகளுக்கு எவ்வளவு பணம், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளுக்கு எவ்வளவு பணம், இது போக அந்தந்த தொகுதிகளின் அமைச்சர் வேட்பாளர்கள் அள்ளி விடும் பணம் – இவை குறித்து நமது மேதகு அருண் கிருஷ்ணமூர்த்தி வாயைத் திறக்கவே இல்லை. இவையெல்லாம் தேர்தல் முடிவுகளில் தாக்கம் செலுத்தாதா யுவர் ஆனார்?

தேர்தல் அரசியல் தமது வாழ்வை தீர்மானிப்பதில்லை என்பதைப் போலவே தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும் என்ற கண நேர வேலைக்கு பணத்தை வைத்து முடிவு செய்வதும் மக்களிடையே நிலைபெற்றுவிட்டது. அ.தி.மு.க அளவு இல்லாவிட்டாலும் தி.மு.கவிலும் வேட்பாளர்களைப் பொறுத்து பணம் வினியோகித்ததாக நக்கீரன் இதழே தெரிவிக்கிறது. அ.தி.மு.க மையப்படுத்தப்பட்ட அளவின் பண வினியோகத்தை செய்திருக்கிறது. தி.மு.க அப்படி செய்யவில்லை என்றாலும் அந்தந்த வேட்பாளர்கள் அவர்களது வசதிகளுக்கேற்ப அதை ஏற்பாடு செய்து கொண்டார்கள்.

இதனால் தமிழக மக்கள் அனைவரும் பணத்திற்கு சோரம் போனார்கள் என்பதல்ல. 78% வாக்குகளில் முப்பது முதல் முப்பந்தைந்து சதவீதம் வரை வெற்றிக்கு போதுமானது. அதிலும் மும்முனை நாற்முனைப் போட்டி என்றால் வெற்றி சதவீதம் இன்னும் குறையும். இந்நிலையில் வெற்றி தோல்வியின் இடைவெளி என்பது 1 முதல் ஐந்து சதவீதம் என்றால் மொத்த தொகுதி மக்களில் அதாவது வாக்களிப்போரில் அதிகபட்சம் 20 சதவீதம் பேருக்கு பணம் கொடுத்தால் போதுமானது. அடுத்து இந்த பணத்தை அந்தந்த தொகுதிகளில் எந்தந்த பொருளாதார பிரிவினர், சாதியினர், ஆண், பெண் என்று முடிவு செய்ய வேண்டும். தற்போதைய நிலவரங்களின் படி அ.தி.மு.க மற்றும் தி.மு.கவின் வாக்கு வித்தியாசம் மூன்றிலிருந்து நான்கு சதவீதங்களுக்குள் இருக்கிறது.

தி.மு.க-விற்கு 38 என்ற அளவிலும், அ.தி.மு.க-விற்கு 42 என்ற அளவிலும் வாக்கு சதவீதம்  இருப்பதால் மீதம் இருபது சதவீதம் மற்ற கட்சிகளுக்கு போய்விட்ட படியால் வெற்றியைத் தீர்மானிக்கும் அந்த நான்கு சதவீத வாக்குகளையும் உள்ளடக்கி இருபது சதவீத வாக்குகளுக்கு குறி வைத்தால் போதும். அ.தி.மு.கவைப் பொறுத்த வரை இது முப்பதாகவும் இருக்கும். இத்தகைய நாற்முனைப் போட்டியில் சிதறும் வாக்குகளால் வெற்றியைத் தீர்மானிக்கும் அளவு குறைந்தால் அது வெற்றியைக் குறிவைத்து வீசப்படும் பணத்தின் இலக்கை கண்டுபிடிப்பதற்கு மிகவும் உதவியாகவே இருக்கும். ஆகவே பணம்தான் இந்த வெற்றியின் அடிப்படை என்பது வெள்ளிடை மலை.

அடுத்து அம்மா ஆட்சி நடைபெறும் காலத்தில், அம்மாவின் தேர்தல் ஆணையமே நீதிபதியாக இருக்கும் நேரத்தில் அ.தி.மு.கவினர் இதை திட்டமிட்டும், வெளிப்படையாகவும் செய்திருக்கிறார்கள். தி.மு.கவினரோ கொஞ்சம் பயந்து பயந்து செய்திருக்கிறார்கள். இது போக பல கிராமங்களில் மக்களே முடிவு செய்து ஊர் பஞ்சாயத்து நடக்கும் இடத்தில் மொத்தமாக வாங்கியிருக்கிறார்கள். சில இடங்களில் தடுக்க நினைத்த தி.மு.கவினரை விரட்டியும் இருக்கிறார்கள். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் இந்த உண்மைகளை நேரடி அறிக்கையாக தருகிறோம்.

இப்போது அருண் கிருஷ்ணமூர்த்தி தனது ஆய்வுகளில் இந்த அம்சத்தை புறக்கணித்திருப்பார் என்றா கருதுகிறீர்கள்? நிச்சயம் இல்லை. இல்லை பாண்டேவுக்கு இது தெரியாதா என்ன? இன்னும் சொல்லப் போனால் தந்தி நிர்வாகம் அ.தி.மு.கவிற்கு ஆதரவாக இருப்பதால் மன்னிக்கவும் அடிமையாக இருப்பதால் இந்த பண வினியோகம் எவ்வளவு இருக்கும், எவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது புள்ளிவிவரங்களாகவே வந்து கொட்டியிருக்கவும் கூடும்.

ஆக மேற்கண்ட சமூக நிலைமைகளை ஆய்வும் செய்யும் அறிஞர் அருண் கிருஷ்ணமூர்த்தி இந்த வைட்டமின் ப குறித்தும் நிச்சயம் ஆய்வு செய்திருப்பார். ஒரு வேளை இந்த வைட்டமின் ஊழலுக்கு மக்கள் எவ்வளவு பலியாகியிருப்பார்கள் அல்லது மாட்டார்கள் என்று ஒரு குழப்பம் வரலாம். நல்லது, நேரடி விசாரிப்பில் ஒரு கிராமத்தின் பெரிய மனிதர்களிடம் இது குறித்து கேட்டால் முடிந்தது விசயம். இது போக பொதுவான அரசியல் சூழலிலேய ஊடகங்கள், நீதிமன்றம், போலீசு என அனைத்தும் ஊழல்மயமாக மாறியிருக்கும் போது மக்களில் கணிசமான பேரும் பணத்தை வைத்து ஓட்டுப் போடமாட்டார்கள் என்று முடிவு செய்யும் நிலைமை தமிழகத்தில் இல்லை. பாம்பின் கால் பாம்பறியும் போது பாண்டேவுக்கு மட்டும் தெரியாதா என்ன?

தற்போதைய நிலவரப்படி தி.மு.க நூறையும், அ.தி.மு.க நூற்றி முப்பதையும் எட்டி விட்டிருக்கிறது. இதன்படி அ.தி.மு.க பணத்தை அள்ளி வீசிய அளவிற்கு வெற்றி கிடைக்க வில்லை என்பதும் நிச்சயம். இதனால்தான் பாண்டே அருண் குழுவினர் கருத்துக் கணிப்பின் போது கொஞ்சம் அடக்கி வாசித்தார்கள். அந்த அளவுக்கு அவர்கள் கிரிமினாலாஜியில் தோய்ந்திருக்கிறார்கள், வாழ்த்துக்கள்! அதே நேரம் பணம் வாங்காத மக்களும் அரசியல் ஆய்வுகளோடு வாக்களிக்கிறார்கள் என்றால் அதுவும் அப்படி முழுமையாக நடப்பதில்லை.

சென்னையில் ஐ.டி நண்பர்களிடம் விசாரித்த போது படித்தவர்கள் வாக்களிக்கும் கதையைக் கேட்டால் மயக்கமே வரும். ஒரு நண்பர் குழு சீமானுக்கு வாக்களிப்பாதாக கூறினார்கள். சீமானின் கொள்கை என்ன என்று கேட்டால் தெரியவில்லை ஆனார் புதியவர் என்றார்கள். இறுதியில் தேர்தல் அன்று ஒரு நண்பரின் கல்யாணத்திற்கு செல்ல வேண்டியிருப்பதால் வாக்களிக்க இயலாது என்றார்கள். தரைத்தள வீடும் பொருட்களும் முழுகியவர் ஒருவர் இரட்டை இலைக்கு வாக்களித்தார். ஏனென்றால் எல்லாத் தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு வாக்களித்துத்தான் பழக்கம் என்றார். தி.மு.கவிற்கு வாக்களித்தாக சொன்னவர் சிலரும் இதையே கூறினார்கள். அதாவது இவையெல்லாம் ஒரு பழக்கம். இவை விடுத்து கொள்கை அடிப்படையில் வாக்களிப்போரின் சதவீதம் ஐந்து முதல் பத்திற்குள் இருந்தால் மிக அதிகம்.

சாரமாகப் பார்த்தால் நமது மக்கள், தேர்தலை கொள்கை, அரசியல், மாற்றம், பொருளாதாரம், உரிமை, ஜனநாயகம் போன்றவற்றில் இருந்து பார்த்து அலசி வாக்களிப்பதில்லை. கற்பனையாக அப்படி ஒரு நிலை வந்தால் கருத்துக் கணிப்புகள் இப்போது போல சுலபமாக நடத்த முடியாது. எனவே ஏழைகளாகவும், அரசியல் தற்குறிகளாவும், அடிமைகளாவும் வாழும் தமிழக மக்களிடம் பணம் எனும் காரணம் என்ன விளைவை ஏற்படுத்தும் என்பதறிய நாசா விஞ்ஞானியாக இருக்க வேண்டியதில்லை.

தந்தி டி.விக்காக கருத்துக் கணிப்பு எடுத்த அருண் கிருஷ்ணமூர்த்தி தமிழக மக்களிடம் பணம் குறிப்பாக அ.தி.மு.க பணம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்துவிட்டு அதிலிருந்து முடிவுகள் எடுத்துக் கொண்டே தனது மதிப்பீட்டை முன்வைத்திருக்க வேண்டும். ஆனால் விளக்கமளிக்கும் போது வைட்டமின் ப வை பேசாமல் வேட்பாளர் பலம், சாதி, மதம், பொருளாதாரம் போன்ற டீசன்டான விசயங்களை முன்வைத்தார். கள்ளச்சிரிப்புடன் அதை ஆமோதிக்கும் பாண்டேவுக்கும் தெரியும் – பணம்தான் ரிசல்ட் என்று!