பாசிசத்தை வீழ்த்த லெனினியம் கற்போம்! | மெய்யப்பன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
பாசிசத்தை வீழ்த்த லெனினியம் கற்போம்! | மெய்யப்பன்
காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!
மத்திய பிரதேச மாநிலத்தின் ஜபுவா மாவட்டத்தில் நான்கு தேவாலயங்களில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று முழக்கமிட்டு வந்த வானரப்படை காவிக்கொடியை ஏற்றியுள்ளது. தேவாலயத்தின் மீதிருந்த சிலுவையில் காவிக் கொடியை காவிக்கும்பல் ஏற்றும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது. அந்த காவிக்கொடியில் அயோத்தி ராமன் கோவிலின் படமும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற கோஷமும் பொறிக்கப்பட்டிருந்தது. இந்தச் சம்பவம் ஜனவரி 21-ஆம் தேதி ராமன் கோவில் திறப்பிற்கு ஒரு நாள் முன்னர் நடந்துள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய அந்த தேவாலயத்தின் பாதிரியார் நர்பு அமலியார், ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 21) தொழுகை முடிந்தவுடன் அந்த கும்பல் கோஷங்களை எழுப்பியபடி வந்ததாக கூறுகிறார்.
“நாங்கள் ஞாயிற்றுக்கிழமை பிரார்த்தனையை முடித்திருந்தபோது, மாலை 3 மணியளவில் இந்த சம்பவம் அரங்கேறியது. ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று கூச்சலிட்டபடி எங்கிருந்தோ அவர்கள் வந்தனர். குறைந்தது 25 பேர் இருந்தனர். அவர்களில் சிலர் கொடியுடன் தேவாலயத்தின் மேல் ஏறினர்” என்று பாதிரியார் கூறினார்.
அவர்கள் பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களை அடையாளம் கண்டுகொண்டதாகப் பாதிரியார் கூறுகிறார்.
“நான் அவர்களை அடையாளம் கண்டுகொண்டேன். அவர்களில் சிலரின் பெயர்களும் எனக்குத் தெரியும். இது சரியல்ல என்று அவர்களிடம் சொல்ல முயன்றேன். நாங்கள் இங்கு வழிபாடு செய்கிறோம், எங்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று நான் அவர்களிடம் சொன்னேன். ஆனால் அவர்கள் கேட்க மறுத்துவிட்டார்கள். என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை, இதற்கு முன் இதுபோல நடந்ததில்லை” என்றும் அவர் கூறுகிறார்.
படிக்க: என்னை போன்ற முஸ்லிம்களுக்கு ராமன் கோவில் சொல்லும் செய்தி! | ஸியாவுஸ் சலாம்
காவிக் கொடியை ஏற்ற அனுமதிக்காவிட்டால் மதமாற்றம் செய்ய முயன்றதாகக் கூறி பொய் வழக்கு பதிவுசெய்ய வைத்து அரசு சலுகைகள் அனைத்தையும் பறித்து விடுவோம் என்று காவி பயங்கரவாதிகள் பாதிரியார்களை அச்சுறுத்தியுள்ளனர்.
பாதிரியார் ஒருவர் மட்டும் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை. இது ஒரு தேவாலயம் இல்லை, வீடுதான் என வழக்கு பதிவு செய்யாமல் இருந்ததற்கு போலீஸ் காரணம் கூறுகிறது.
ஆனால் இதை அந்த பாதிரியார் மறுத்துள்ளார். “இது 2016-ஆம் ஆண்டில் நான் தொடங்கிய தேவாலயம். ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும், 30-40 பேர் பிரார்த்தனைக்காக இங்கு வருகிறார்கள். இது ஒரு வழிபாட்டுத்தலம். என் வீடு தனியாகத்தான் உள்ளது” என்றார். இருப்பினும், அவர் இதுவரை புகார் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார்.
ராமன் கோவில் திறப்பு என்ற பெயரில் நாடுமுழுவதும் காவிக்கும்பல் வெறியாட்டம் போட்டுக்கொண்டிருக்கிறது. அரசு இயந்திரத்தின் உதவியுடன் சிறுபான்மை மக்களுக்கு எதிரான மதவெறியாட்டங்களை காவி பயங்கரவாதிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
![]()
ரித்திக்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாசிஸ்டுகளின் ராமனைப் புறக்கணிப்போம்! | ஊடகங்களில் வெளியான வீடியோக்கள்
Times of India:
Kingwoods News:
TheIndianExpress:
புதிய தலைமுறை TV:
காணொளிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

“தி இந்து” பத்திரிகையில் இணை ஆசிரியராக உள்ள ஸியாவுஸ் சலாம் (ZIYA US SALAM), “இந்து இந்தியாவில் முஸ்லிமாக இருப்பது” (Being Muslim in Hindu India) என்ற நூலை எழுதியுள்ளார். பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் ஆட்சிக்கு வந்தது முதல் இந்தியாவில் முஸ்லிம் மக்கள் இரண்டாம்தர குடிமக்களாக்கப்பட்டுவருவது குறித்தும், ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு இந்துத்துவ வெறியர்களால் முஸ்லிம் மக்கள் எந்தளவிற்கு அச்சுறுத்தல்களுக்குள்ளாகிறார்கள் என்பது குறித்தும் ஸியாவுஸ் சலாம் பகிர்ந்த அனுபவத்தின் மொழியாக்கம்.
இந்துமதவெறியர்களை கொண்ட இந்தியாவில் ஒரு முஸ்லிமாக இருப்பது அந்நியமாகவும் மனசோர்வாகவும் இருக்கிறது. முஸ்லிம்கள் 20 கோடி பேர் இருக்கலாம். ஆனால், இன்றைய இந்தியாவில் முஸ்லிம்கள் காணாமலாக்கப்பட்டிருக்கிறார்கள். வட இந்தியாவின் சில பகுதிகளில் ஒரு முஸ்லிமாக இருப்பது பாதுகாப்பானது அல்ல.
1527 முதல் 1992 வரை இருந்த பாபர் மசூதி, இந்துத்துவ கரசேவகர்களால் சுக்குநூறாக்கப்பட்ட இடத்தில், இன்று (ஜன. 22) அயோத்தியில், ராமன் கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சமீப நாட்களில் கிராமங்கள் மற்றும் நகரங்களில் இதுதான் பேசுபொருளாக இருக்கிறது.
பாபர் மசூதி இடித்து நொறுக்கும் வரை போலீசும் அரசும் ஒதுங்கியே நின்று வேடிக்கைப் பார்த்தது. இதற்கு அடுத்தடுத்த நாட்களில் பல்வேறு இடங்களில் இந்துமதவெறியர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர். இக்கலவரத்தில் 2,000-க்கும் மேற்பட்ட முஸ்லிம் மக்கள் கொல்லப்பட்டனர். 2019-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டது “சட்டத்தின் ஆட்சியின் அதிர்ச்சிக்குரிய மீறல்” என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதிலும், நிலத்தை இந்து தரப்பினரிடம் ஒப்படைத்தது.
இன்று இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் மீது ராமனுக்கு பிரம்மாண்டமான கோவில் கட்டியெழுப்பப்படுகிறது. பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தார் என்றும் 16 முதல் 19-ஆம் நூற்றாண்டு வரை இந்தியாவின் பெரும்பகுதியை முகலாயர்கள் ஆண்டபோது, இந்து கோவில்களை இடித்துவிட்டனர் என்றும் இந்துத்துவவாதிகள் நியாயவாதம் கற்பிக்கின்றனர்.
முஸ்லிம்களுக்காக பேச இந்திய அரசில் யாரும் இல்லை. 1947-ஆம் ஆண்டு ‘சுதந்திரத்திற்கு’ பின்னர், முதல்முறையாக முஸ்லிம் அமைச்சரவை அமைச்சரோ அல்லது ஒரு பாராளுமன்ற உறுப்பினரோ கூட ஆளும் கட்சியில் இல்லை. இந்தியாவின் 28 மாநிலங்களில் ஒரு முஸ்லிம் முதல்வர்கூட இல்லை. அயோத்தி அமைந்துள்ள உ.பி-யில் காவி உடை அணிந்து இந்து சாமியார் ஆட்சி செய்கிறார். தனது சமூக ஊடகத்தில் முஸ்லிம் பண்டிகைகளுக்கு வாழ்த்துகள்கூட தெரிவிக்காதவர் அவர்.
படிக்க: ராமன் கோவில் திறப்பு: பாபர் மசூதி இடிப்பை நினைவுகூரும் முஸ்லீம்கள்!
சமீப காலமாக, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா, மத்தியப் பிரதேசம் ஆகிய வட மற்றும் மத்திய இந்திய மாநிலங்களில் முஸ்லிம்களிடையே புதிய பயம் தொற்றியுள்ளது. எங்கும் காவியில் அலையும் ராம பத்கர்களின் முகங்களில் ஆவேசமும் காணக்கிடக்கிறது.
டெல்லியில் வரலாற்று சிறப்புமிக்க ஜமா மசூதியில் இருந்து சில அடி தூரத்தில், கட்டா மசூதியின் வழியாக காவி உடை அணிந்து, ஜெய்ஸ்ரீராம் என கோஷமிட்டவாறு, மோட்டார் பைக், டிரக்குகள், ஜீப்களில் பேரணி செல்கின்றனர். வெற்றிக் களிப்புடன் கூடிய இக்கூச்சலில் மதிய தொழுகை சீர்குலைகிறது.
கான் சந்தையில் நான் சென்றுகொண்டிருந்தபோது, காவி பந்தலில் ராம பக்தி பாடல் ஒலித்து கொண்டிருந்தது. இதனால், இதற்கு அருகாமையிலுள்ள பண்டாரா சாலையில் இருக்கும் மசூதிக்கு முஸ்லிம்கள் வருவது குறைந்துவிட்டது, வீடுகளில் இருந்தே தொழுகை நடத்தி வருகிறார்கள்.
இது போன்றுதான் மற்ற இடங்களிலும், குறிப்பாக இந்துத்துவவாதிகள் அதிகமுள்ள வட இந்தியாவிலுள்ள நகரங்கள், கிராமங்களில் முஸ்லிம்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். உத்தரகாண்டின் டேராடூனில், பழைய கடிகார கோபுரத்தின் மேலிருந்து கீழாக ராமன் படம் தொங்கவிடப்பட்டுள்ளது. அதே உத்தரகாண்டில், புரோலா எனும் பகுதியில் முஸ்லிம் கடைகளுக்கு வெளியே முஸ்லிம் கடைகள் என அடையாளங்காணும் விதமாக “X” என்ற குறியீடு இந்துத்துவவாதிகளால் வரையப்பட்டிருக்கிறது. இதனால் அச்சமடைந்த முஸ்லிம் மக்கள் பலர் அவ்விடங்களை விட்டு வெளியேறினர்.
படிக்க: பாபர் மசூதிக்கு அடியில் ராமர் கோயில் இருந்ததா? | மீள்பதிவு
மேற்கு உத்தரப் பிரதேசத்தின் மீரட்டில், ஜனவரி மாத தொடக்கத்தில் சிறு வணிகர்கள் உள்ளிட்ட பலர் தங்களது ரயில் முன்பதிவுகளை ரத்து செய்து, பயணத்தை நிறுத்திவிட்டனர். திருமணங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை ஒத்திவைத்தனர்.
குருகிராம், நொய்டா உள்ளிட்ட உயர்தர நகரங்களில் இந்து பண்டிக்கை கொண்டாட்டம் உள்ளிட்ட இந்துத்துவவாதிகளின் நடவடிக்கைகளால் முஸ்லிம்கள் தங்கள் வீடுகளிலேயே முடங்கி போயுள்ளனர். இந்நகரங்களில் அதிகாலையில் காலை வணக்கம் என்ற சொல்லாடலுக்கு பதிலாக ஜெய் ஸ்ரீராம் என்பது வழக்கமாகிவிட்டது.
இதற்கிடையில், முஸ்லிம்கள் மாட்டிறைச்சி உண்ணுகிறார்கள் என்றும் முஸ்லிம் பாகிஸ்தானியரின் அடையாளத்தில் இருப்பதாகவும் முஸ்லிம் மாணவர்கள் கேலிக்குள்ளாக்கப்படுகின்றனர். “ஒரு இந்திய முஸ்லிம் இந்தியனே அல்ல” என்பதுதான் மோடியின் இந்தியாவில் உள்ள இளம்பிஞ்சுகளின் மனதில் விதைக்கப்பட்டிருக்கிறது.
கோவில் கும்பாபிஷேகத்தைப் பற்றிய செய்தியை சேகரிக்க அயோத்திக்கு சென்ற முஸ்லிம் பெண் பத்திர்கையாளர் ஒருவர், இந்துக்கள் போல பொட்டு வைத்திருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டதாகவும், கோவில் திறப்பு விழாவிற்கு முன்பு அங்கிருந்து தான் திரும்பிவிட நினைப்பதாகவும் கூறினார். அந்நிய உணர்வு, பயம் என்பது ஒரு முஸ்லிமுடன் நிரந்தரமாக பின்னிபிணைந்திருக்கிறது. முஸ்லிம் தனிமையில் இருப்பதை உணர்கிறான்.
2014 இல் மோடியும் இந்துத்துவவாதிகளும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து இந்திய முஸ்லிம்கள் அச்சுறுத்தலுக்குள்ளாகி வருகின்றனர். இன்று ராமன் கோவில் திறப்பு விழாவிற்கு பிறகு இந்த நிலை மேலும் மோசமாகிவிடுமோ என்ற அச்சம் அதிகமாக உள்ளது.
![]()
மொழிபெயர்ப்பு: ஆதினி
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ராமர் கோவில் திறப்பு இந்துராஷ்டிரத்தின் திறவுகோல்
| செய்தியாளர் சந்திப்பு | தோழர் வெற்றிவேல் செழியன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அயோத்தி ராமனும் அதானியின் ராமனும் | வெற்றிவேல் செழியன் | அமிர்தா
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

பாசிஸ்டுகளின் ராமனைப் புறக்கணிப்போம்!
சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ராமன் இந்துமதவெறியின் அடையாளம்! | தோழர் ஜனார்த்தனன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அதானியின் ராமன் யார் தெரியுமா? | தோழர் மருது
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

ராமன் கோவில் திறப்பு என்ற பெயரில் பாசிசக் கும்பல் மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அனைத்தும் சகித்துக்கொள்ள முடியாதவையாக உள்ளன. அரசு இயந்திரத்தைக் கையில் வைத்துக்கொண்டு நாடு முழுவதும் மதவெறியைக் கிளப்பி வருகிறது இக்கும்பல். பா.ஜ.க ஆளும் மாநிலங்கள் அனைத்தும் காவி பாசிஸ்டுகளுக்கு சேவகம் புரிவதற்கான ஏற்பாடுகளை முனைப்பாக செய்து வருகின்றன. ஆனால், எப்போதும் போல இவர்களின் நடவடிக்கைகளால் பாதிக்கப்படுபவர்களாக உழைக்கும் மக்கள்தான் உள்ளனர்.
மருத்துவமனைகளுக்கு அரை நாள் விடுமுறை
அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளும் ராமன் கோவில் திறப்பு காரணமாக 22-ஆம் தேதி 2:30 மணி வரை மூடப்படும் என்று ஜனவரி 20-ஆம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டது. எதிர்ப்புகள் எழுந்ததன் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் இந்த முடிவை திரும்ப பெற்றுள்ளது.
மருத்துவமனைகள் மூடப்படுவதால் டெல்லியில் உள்ள நான்கு மருத்துவமனைகளில் மட்டும் புறநோயாளி பிரிவில் சிகிச்சை பெறும் 32,000 நோயாளிகள் பாதிக்கப்படுவார்கள் என “தி வயர்” இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மக்களின் உயிரை காவிக்கும்பல் எப்படி பார்க்கிறது எனபதற்கு இது சிறந்து சான்று.
அரசு ஊழியர்களுக்கு அரை நாள் விடுமுறை
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 22-ஆம் தேதி அரை நாள் விடுமுறை அளிக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். ஊழியர்கள் மதியம் 2.30 மணிக்கு முன் உள்நுழைய தேவையில்லை என அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.
சில மாநிலங்களில் முழு நாள் விடுமுறை
பா.ஜ.க ஆளும் உத்தர பிரதேசம், கோவா, ஹரியானா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், உத்தராகண்ட், திரிபுரா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், அசாம் ஆகிய மாநிலங்களில் முழு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்கள் என அனைத்தும் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள புதுச்சேரி மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசங்களின் நிர்வாகங்களும் இதே போன்ற உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளன. இதற்கிடையில், நவீன் பட்நாயக் தலைமையிலான ஒடிசா அரசும் விடுமுறை அளித்துள்ளது.
இவையெல்லாம் ஒட்டுமொத்தமாக மக்களை மதவெறிக்குள் மூழ்கடிப்பதற்கான ஏற்பாடுகள்தான்.
படிக்க: உழைக்கும் மக்களை அழித்து ராமன் கோயில் திட்டம்!
பணம் மற்றும் பங்குச் சந்தைகள் மூடப்படும்
இந்திய ரிசர்வ் வங்கியும் ஜனவரி 22-ஆம் தேதி பண சந்தைகள் மூடபடும் என்று அறிவித்துள்ளது. அரசாங்கப் பத்திரங்கள் (முதன்மை மற்றும் இரண்டாம் நிலை), அந்நியச் செலாவணி, பணச் சந்தைகள் மற்றும் ரூபாய் ஆகியவற்றில் எந்தவிதமான பரிவர்த்தனைகள் மற்றும் செட்டில்மென்ட்கள் இருக்காது என்று ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. கூடுதலாக, தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தையும் ஜனவரி 22 அன்று மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுத்தம் செய்யப்படும் கோவில்கள்
ஜனவரி 22-ஆம் தேதி ராமன் கோவில் திறப்பை முன்னிட்டு ’தூய்மை இயக்கம்’ ஒன்றை மோடி தொடங்கி வைத்துள்ளார். இது நாடு முழுவதும் உள்ள கோவில்களை சுத்தம் செய்வதற்கான இயக்கம். மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள கலாராம் கோவிலில் சுத்தம் செய்வது போல வீடியோ எடுத்து தன் அதிகார்பூர்வ பக்கத்தில் வெளியிட்டிருந்தார் மோடி.
அதைத்தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் மற்றும் பா.ஜ.க. முதல்வர்கள், ஆளுநர்கள் என ஒட்டுமொத்த காவிக்கும்பலும் இதேபோன்ற ”துடைத்த தரையை துடைப்பது” போன்ற படங்களைப் பதிவேற்றத் தொடங்கியது.
மும்பை நகரத்தின் உலகின் பணக்கார குடிமை அமைப்புகளில் ஒன்றான பிரஹான் மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன், கோவில் வளாகங்களைசுத்தம் செய்யும் இதேபோன்ற இயக்கத்தில் பங்கேற்க மக்களையும் அழைத்துள்ளது. ஆனால் உண்மையில் மும்பை நகரம் 10 மில்லியன் மெட்ரிக் டன் கழிவுகளுடன் உலகின் 10 அசுத்தமான பெரிய நகரங்களில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த குப்பையெல்லாம் அவர்கள் கண்களுக்கு தெரியாது போலும்.
இறைச்சிக் கடைகள் அடைப்பு
ராஜஸ்தான் பா.ஜ.க அரசு, ஜனவரி 22-ஆம் தேதி மாநிலம் முழுவதும் இறைச்சிக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்து பண்டிகைகளையொட்டி இறைச்சிக் கடைகளை மூட வேண்டும் என அடிக்கடி வன்முறைகள் நடைபெறுவதே இந்த அறிவிப்புக்கான காரணம் என்று சப்பைக்கட்டு கட்டுகிறது பா.ஜ.க அரசு. வன்முறைகளில் ஈடுபடுவதும் இதே பா.ஜ.க-வின் குண்டர்படை தான் என சொல்லித்தெரிய வேண்டியதில்லை.
மின்சார சேவை
மத்திய எரிசக்தித் துறை அமைச்சர் ஏ.கே சர்மா, ராமன் கோவிலில் நடைபெறும் விழா தொடர்பான அனைத்து நிகழ்ச்சிகளின் போதும் “தடையின்றி உயர்தர மின்சாரம் வழங்கப்படுவதை” உறுதி செய்யுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் எந்த இடையூறும் ஏற்படாத வகையில் ஒத்திகை நடத்திக்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் அதேசமயம், நாடு முழுவதும், குறிப்பாக ஜம்மு காஷ்மீர் மற்றும் தென் மாநிலங்களில் மின்வெட்டு அதிகரித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தெலுங்கானா முழுவதும் குறிப்பாக ஹைதராபாத்தில் திட்டமிடப்பட்ட மின்வெட்டு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில், ராமன் கோவில் திறக்கப்படும் அதே உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டா செக்டார் 53-இல் மின்வெட்டு காரணமாக கடுமையான குளிரில் சிக்கித் தவிக்கும் மக்கள் ஹீட்டர்களை இயக்க முடியாமல் தவிப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 5 முதல் 6 மணி நேரம் வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதால், நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
இலவச ரயில் சேவை
சத்தீஸ்கர் பா.ஜ.க. அரசு அயோத்தி யாத்திரைக்கு ஆர்வமுள்ள மக்களுக்கு இலவச ரயில் பயணத்திற்கான அனுமதியை அளிப்பதாக அறிவித்துள்ளது. சத்தீஸ்கரின் புதிய முதல்வர் விஷ்ணு தியோ சாய் ஜனவரி 10-ஆம் தேதி இந்த முடிவை அறிவித்தார்.
ஆனால் இதே இந்த இந்திய ரயில்வே துறைதான் இதற்கு முன்னர் குளிர்சாதனப் பெட்டிகளை அதிகரிப்பதற்காக, பொதுப்பெட்டிகளை குறைத்தது. இதனால், முக்கியமாகப் புலம்பெயர் தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்கள் அதிகளவில் பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். கழிவறைகளில் அமர்ந்து வர வேண்டிய அவலநிலைக்குக் கூட மக்கள் தள்ளப்பட்டனர். இப்போது ராமன் கோவில் செல்ல மட்டும் இலவச ரயில் சேவை வழங்கப்போகிறார்களாம்.
![]()
ரித்திக்
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

இஸ்லாமியரின் ரத்தம் குடித்து
மசூதியை இடித்துவிட்டு ராமனுக்கு கோயிலா?
மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் சார்பாக ராமன் கோவில் திறப்பை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இது தமிழ்நாட்டில் நடைபெற்ற முதல் ஆர்ப்பாட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு 1
இணைப்பு 2
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

தோழர் லெனின் நினைவுரை…. | தோழர் ராமலிங்கம்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

அயோத்தியின் இராமனும்
அதானியின் இராமனும்
இதோ
இப்போது வந்திருப்பது
அயோத்தியின் இராமன் அல்ல இது
இராமன் 2.0
இரண்டு இராமன்களும் மனைவியோடு வாழவில்லை
அன்று ஒரு வானரம் இலங்கையை எரித்தது
இன்று பல்லாயிரம் வானரங்கள் நாட்டை எரித்துக் கொண்டிருக்கின்றன
அந்த இராமனுக்காக சூர்ப்பனகையின் முலையறுத்து
பெருமிதம் கொண்டான் இலக்குவன்
இந்த இராமனுக்காக கர்ப்பிணியின்
வயிற்றைக் கிழித்து
சிசுவை அறுத்து
வன்புணர்வு செய்தார்கள் நவீன இலக்குவன்கள்
விவசாயத்தின் வயிற்றைக்கிழித்து
கனிம வளங்களை அதானிகளுக்கு படையல் போடுகிறார்
2.0 இராமன்
அசுவமேத யாகத்தில் பிறந்தது அந்த இராமன்
அதானிகளின் யாகத்தில் பிறந்தது இந்த இராமன்
***
சூத்திரன் வழிபடுவதா
சம்பூகனின் தலையைக் கொய்து மனுநீதியை
நிலை நாட்டினான்
அயோத்தியின் ராமன்
சூத்திரரும் பஞ்சமரும் போராடுவதா?
பீமா கோரேகான் வழக்கில்
ஸ்டேட் சாமியை கழுவேற்றி
மனுநீதியை நிலை நாட்டினார் அதானியின் இராமன்
இராஜராஜ சோழன்
பெருவுடையார் கோயிலை கட்டினான்
இராஜேந்திர சோழன்
கங்கைகொண்ட
சோழபுரத்தை கட்டினான்
இதோ பாருங்கள்
அதானியின் இராமன்
அயோத்தியில் இராமனுக்கு கோயில் கட்டினார்
முன்னவர்கள் எந்த மசூதியையும் இடித்து விட்டு கோயில் கட்டவில்லை
அந்த வகையில்
பின்னவர் செய்தது
சாதனை தான்
பெருஞ்சாதனை தான்
***
அந்தணர் குலம் காக்க வாளேந்தியது அயோத்தியின் ராமன் எனில்
கார்ப்பரேட்டுகளின் – பார்ப்பனர் குலம் காக்க
திரிசூலம் ஏந்துவது
அதானியின் இராமன்
வேளாண் சட்டத் திருத்தம்
தொழிலாளர் நல சட்டத் திருத்தம்
குடியுரிமை சட்டத் திருத்தம்
இன்னும் பல ….
திருத்தங்களின் பெயரால் திருத்தப்படுகிறது நாடு
இனி, ஜனநாயகம்
உரிமை
போராட்டம்
எதற்கும்
இங்கே வேலை இல்லை
இஸ்லாமியருக்கு இழைக்கப்பட்ட அநீதி மறக்கப்படுகிறது
மறைக்கப்படுகிறது
ராமனுக்கு அட்சதை போடுவதற்கு முன்பு
ஒரு கணம் நில்லுங்கள்
இராமனுக்கா அர்ச்சனை போடுகிறீர்கள் ?
இந்துக்களின் பெயரால் உங்களின் பெயரால்
மோடி மேற்கொண்ட அனைத்து பாசிச நடவடிக்கைகளுக்கும் அல்லவா
அட்சதை போடுகிறீர்கள்
அது
உங்களுக்கு நீங்களே
போட்டுக் கொள்ளும் வாய்க்கரிசி
அழைப்பிதழை வாங்கும் நீங்கள்
அழைப்பிதழை மட்டும் வரவேற்கவில்லை
இஸ்லாமியர்
தலித் மக்கள் உள்ளிட்டோரின் மீது நடத்தப்படும் தாக்குதல்களையும்
அல்லவா வரவேற்கிறீர்கள் ?
பார்ப்பனரும் பனியாவும்
இராமனும் இலக்குவணனும்
ஆர்எஸ்எஸ்-ம் பாஜகவும்
மோடியும் அதானியும்
ஒட்டிப் பிறக்காத இரட்டையர்கள்
தனித்தனியே பிரிக்கவும் முடியாது
தனிப்பட்ட முறையில் ஒழிக்கவும் முடியாது
அங்கே கட்டப்பட்டிருப்பது அயோத்தி இராமனுக்கான கோயில் அல்ல
தனக்குத்தானே
மோடி கட்டிக் கொண்ட கோயில்
அங்கே நீங்கள் சென்று இராமனை ஒருபோதும்
வழிபட போவதில்லை
மோடியைத் தான் வழிபட போகிறீர்கள்
கோயில் திறப்பு விழா அல்ல
இந்த ராஷ்டிரத்துக்கான திறவுகோல்
இப்போதும் நாம்
வழிபட்டுக் கொண்டிருந்தால்
நாளை நம் உரிமைகளை , நம்மை பேசுவதற்கு கூட யாரும் இருக்க மாட்டார்கள்
நினைவில் கொள்ளுங்கள்
இப்போது இருப்பது
அயோத்தி இராமன் அல்ல
அதானி இராமன்.
![]()
மருது
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

மோடியின் 10 ஆண்டுகால பேய் ஆட்சிதான் ராமராஜ்யம்! | தோழர் வெற்றிவேல் செழியன்
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube

வருகின்ற ஜனவரி 22 அன்று அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்படவுள்ளது. இது ‘இந்து’ மத மக்களின் உணர்வாக அன்றி பாசிசக் கும்பலின் கொண்டாட்ட நாளாகவே அமைந்துள்ளது. இந்நாளுக்காக பல ஆண்டுகளாக காத்திருந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க. பாசிச கும்பலும் அதன் சங்கப்பரிவார அமைப்புகளும் ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக அதற்கான நாசகர வேலைகளை பார்த்துவந்துள்ளன. அதேசமயம் இன்று ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளதற்கு பின்னால் வரலாறு நெடுக இந்திய நீதிமன்றங்களின் செய்துவந்த கரசேவை ஒளிந்துள்ளது.
1950-களில் பாபர் மசூதியில் வழிபட ’இந்து’க்கள் அனுமதிக்கப்பட்டது; 1986-இல் மசூதிக்குள் சென்று வழிபட கட்டிடத்தின் பூட்டுகள் திறக்கப்பட்டது; 2019-இல் பாபர் மசூதி நிலத்தை ராமர் கோவில் கட்ட தாரைவார்த்தது என இஸ்லாமிய மக்களுக்கு இழைக்கப்பட்டுவந்த தொடர் அநீதியில் இந்திய நீதிமன்றங்களின் துரோகங்களின் பங்கு முக்கியமானது. 1949-இல் மசூதிக்குள் ராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது முதல் பாபர் மசூதி இருந்த இடம் ராமர் கோவில் கட்ட தாரைவார்க்கப்பட்டது வரை பாபர் மசூதி மீதான இந்துமதவெறியர்களின் ஆதிக்கத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் நீதித்துறையால் அது அங்கீகரிக்கப்பட்டது என்பதே உண்மை.
பைசாபாத் சிவில் நீதிமன்றத்தின் கரசேவை:
1949 டிசம்பர் 22 அன்று, பைசாபாத் மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் நகர மாஜிஸ்திரேட் ஆகியோரின் ஒத்துழைப்போடு பாபர் மசூதிக்குள் இந்து மதவெறி கும்பலால் ராமர் சிலை திருட்டுத்தனமாக வைக்கப்பட்டது. இந்நிகழ்வுதான் பாபர் மசூதி தரைமட்டமாக்கப்பட்டதற்கும் கலவரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கும் தொடக்கப்புள்ளியாக அமைந்தது.
கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்தில் திருட்டுத்தனமாக வைக்கப்பட்ட ராமர் சிலையை அப்புறப்படுத்திவிட்டு காவி குண்டர்களை தூக்கி சிறையில் வைப்பதற்கு பதிலாக, அயோத்தியில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகக்கூறி நிர்வாக மாஜிஸ்திரேட்டின் உத்தரவின்பேரில் மசூதி வளாகம் முனிசிபல் வாரியத்தின் பாதுகாப்புப் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டது.
இதனையடுத்து, ஜனவரி 1950-இல் மசூதியின் நுழைவாயில் நகராட்சி வாரியத்தால் பூட்டப்பட்டது. இந்நாளில்தான், பாபர் மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்வதற்கு முடிவுரை எழுதப்பட்டது. அதன்பிறகு மசூதியில் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்த வாய்ப்புகள் வழங்கப்படவே இல்லை.
1950-களில் மசூதி வளாகத்தில் ராமரை வழிபட அனுமதிக்கப்பட வேண்டும் என்றும் உள்ளே இருக்கும் சிலைகளை அகற்றுவதைத் தடுக்க வேண்டும் என்றும் பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. 1951-ஆம் ஆண்டில் காவி குண்டர்களுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கிய பைசாபாத் சிவில் நீதிமன்றம், சிலைகளை அகற்றக்கூடாது என்றும் மசூதியின் வெளிப்புற முற்றத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யலாம் என்றும் அயோக்கியத்தனமாக உத்தரவிட்டது. இந்த தீர்ப்பை 1955-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றமும் உறுதி செய்தது. இத்தீர்ப்பு பாபர் மசூதியை இஸ்லாமிய மக்களிடமிருந்து பிடுங்கி காவி பாசிஸ்டுகளின் கரங்களில் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியது.
1959-ஆம் ஆண்டில், நிர்மோஹி அகாரா என்ற இந்து மதவெறி பிரிவினரும் சாமியார் ரகுநாத் தாஸும் பாபர் மசூதி நிலத்தின் உரிமையைக் கோரியும் அதனை கோயிலாக நிர்வகிக்கக் கோரியும் வழக்குத் தொடர்ந்தனர். 1961-ஆம் ஆண்டில், நிலத்தை ஒப்படைக்க வேண்டும் என்றும் கட்டடத்தை மசூதியாக அறிவிக்க வேண்டும் என்றும் சன்னி மத்திய வக்ஃப் வாரியம் கோரியது. அடுத்த இரண்டரை தசாப்தங்களுக்கு மேலாக பைசாபாத் சிவில் நீதிமன்றத்தில் இந்த வழக்குகள் நிலுவையில் இருந்தன.
1986-ஆம் ஆண்டில், மேற்கண்ட வழக்குகள் தொடர்பாக உத்தரவு பிறப்பித்த பைசாபாத் மாவட்ட நீதிமன்றம் மசூதியின் கதவுகளைத் திறக்க உத்தரவு பிறப்பித்து வளாகத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ய மசூதியை திறந்துவிட்டு இஸ்லாமிய மக்களுக்கு துரோகமிழைத்தது. இதற்காக, கடந்த 35 ஆண்டுகளாக மசூதி வாயிலில் இந்துக்கள் பிரார்த்தனை செய்ததையும் அந்தக் காலகட்டத்தில் (மசூதி பூட்டப்பட்டு வெளிப்புற முற்றத்தில் இந்துக்கள் வழிபட அனுமதிக்கப்பட்ட காலம்) முஸ்லிம்கள் தொழுகை நடத்தவில்லை என்பதையும் கூறி மசூதி வளாகத்தில் இந்துக்கள் வழிபட அனுமதித்த தனது தீர்ப்பை நியாயப்படுத்த முயன்றது நீதிமன்றம். மேலும், மசூதியின் பூட்டைத் திறப்பது சட்டம்-ஒழுங்கு பிரச்சினைக்கு வழிவகுக்காது என்றும் மசூதி பூட்டப்பட்டிருப்பது கடவுள் சிலையிடருந்து பக்தர்களைப் பிரிக்கிறது என்றும் கரசேவை புரிந்தது.
பாபர் மசூதி இடிப்பும் உச்சநீதிமன்றத்தின் 1994 தீர்ப்பும்
இதற்கிடையே, டிசம்பர் 1990-ஆம் ஆண்டு ஆர்.எஸ்.எஸ். பாசிஸ்டுகளால் பாபர் மசூதி இடித்து தள்ளப்பட்டு அவ்விடத்தில் தற்காலிக கோவில் அமைக்கப்பட்டது.
இதனையடுத்து 1993-ஆம் ஆண்டில் பாபர் மசூதி நிலத்தை கையகப்படுத்த நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு அவசரச் சட்டம் இயற்றியது. அதே ஆண்டில் நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்ட இந்த அவசர சட்டம், பாபர் மசூதி இருந்த இடத்தில் இந்துக்கள் பிரார்த்தனை செய்யும் தற்போதைய நிலை பராமரிக்கப்பட வேண்டும் மற்றும் சொத்து தொடர்பான அனைத்து வழக்குகளும் குறைக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இந்தச் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியல் சாசன அமர்வு 1993-இல் 3:2 பெரும்பான்மையுடன் வழங்கிய தீர்ப்பில், நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட சட்டத்தை உறுதிப்படுத்தியது. ஆனால், நிலுவையில் உள்ள வழக்குகளைத் தடுக்கும் விதியை ரத்து செய்தது. இதன் விளைவாக, நிலம் தொடர்பான வழக்குகள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டன.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு
இதற்கிடையே பாபர் மசூதி நிலம் தொடர்பான அனைத்து வழக்குகளும் 1989-இல் அலகாபாத் உயர்நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டன. அவ்வழக்குகளையொட்டி 2010-இல் அலகாபாத் உயர்நீதிமன்றம் மோசடியான ஒரு தீர்ப்பை வழங்கியது. நிலத்தை மூன்றாகப் பிரித்து, சன்னி வக்ஃப் வாரியம், நிர்மோஹி அகாரா (இந்துமதவெறி அமைப்பு) மற்றும் ராமர் சிலையை பிரதிநிதித்துவப்படுத்தும் உரிமையாளரான ராம் லல்லா விராஜ்மான் ஆகியோருக்கு தலா ஒரு பங்கைக் கொடுத்தது. இடிக்கப்பட்ட மசூதியின் பிரதான குவிமாடத்தின் கீழ் உள்ள நிலம் இந்துக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. நிலத்தின் வெளிப்புற முற்றமே வக்ஃப் வாரியத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.
இந்த முடிவை பலரும் விமர்சித்து எதிர்த்தனர். இத்தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பலராலும் வழக்குகள் தொடரப்பட்டன. இதனையடுத்து, 2011-இல் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது. அடுத்த பல ஆண்டுகளுக்கு இவ்வழக்கு உச்சநீதிமன்றத்தால் இழுத்தடிக்கப்பட்டு வந்தது.
உச்சநீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு
ஜனவரி 2019-ஆம் ஆண்டு இவ்வழக்கை தூசிதட்டி எடுத்த அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த மோடி அரசின் சேவகனான ரஞ்சன் கோகோய் இவ்வழக்கை விசாரிக்க ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வை அமைத்தார்.
2019 மார்ச் மாதத்தில், இவ்விவகாரத்தில் தீர்வை எட்டுவதற்கு மத்தியஸ்தம் செய்ய முயற்சிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதற்காக, ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எஃப்.எம்.ஐ. கலிஃபுல்லா, மூத்த வழக்கறிஞரான ஸ்ரீராம் பஞ்சு மற்றும் ஆன்மீகத் தலைவர் என்ற பெயரில் திரியும் மோசடிக்காரனும் சங்கியுமான ரவிசங்கர் ஆகியோர் அடங்கிய மூன்று பேர் கொண்ட மத்தியஸ்த குழுவை நீதிமன்றம் அமைத்தது. உச்சநீதிமன்றத்தின் இந்த ஏமாற்று முயற்சி பலராலும் விமர்சிக்கப்பட்டது.
இதனையடுத்து, ஆகஸ்ட், செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நீதிமன்றம் தினசரி விசாரணையைத் தொடங்கியது. இறுதியாக நவம்பர் மாதத்தில் தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்றம், 1949-இல் மசூதிக்குள் ராமன் சிலையை வைத்தது மற்றும் 1992-இல் பாபர் மசூதியை இடித்தது ஆகிய இரண்டும் சட்டவிரோதமானது என்று கூறிவிட்டு, நிலத்தின் உரிமையை ராம் லல்லா விராஜ்மானுக்கு நீதிமன்றம் வழங்கி காவி பாசிஸ்டுகளுக்கு தங்களது உச்சக்கட்ட கரசேவையை புரிந்தது. அதேசமயம் இஸ்லாமியர்களின் எதிர்ப்பை மட்டுப்படுத்த அயோத்தியில் மசூதி கட்டுவதற்கு சன்னி வக்பு வாரியத்துக்கு மாற்று இடம் ஒதுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு நாடகமாடியது உச்சநீதிமன்றம்.
உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பல்வேறு தரப்பினராலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பாபர் மசூதியை இடித்தது குற்றம் என்று கூறிவிட்டு குற்றம் நடந்த இடத்தில் கோவில் கட்ட அனுமதி அளிக்கப்பட்டது அயோக்கியத்தனமானது என்றும் பாபர் மசூதியை இந்துமதவெறியர்கள் அபகரித்ததை உச்சநீதிமன்றம் சட்டப்பூர்வமாக்கிவிட்டது என்றும் பலரும் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். இந்தியாவில் உள்ள இஸ்லாமிய மக்கள் உச்சநீதிமன்றத்தின் மீதிருந்த தங்களது கடைசி துளி நம்பிக்கையையும் இழந்தனர்.
மேலும், சட்ட ரீதியாகவும் இந்த தீர்ப்பில் பல்வேறு ஓட்டைகளும் குளறுபடிகளும் இருந்தன. இந்திய வரலாற்றில் தீர்ப்பு எழுதியவரின் பெயர் குறிப்பிடப்படாத ஒரே தீர்ப்பு இந்த தீர்ப்பேயாகும். மேலும், நீதிபதிகள் அமர்வில் பெயர் குறிப்பிடாத நீதிபதி ஒருவரின் கூடுதல் சேர்க்கையும் இத்தீர்ப்பில் இருந்தது. இதனை இந்தியாவிலுள்ள கணிசமான சட்ட வல்லுநர்கள் அம்பலப்படுத்தி எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த தீர்ப்பையடுத்துதான் தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்துராஷ்டிரத்தின் திறவுகோலாக கட்டப்பட்டுள்ள இந்த ராமர் கோவில் இந்தியாவில் உள்ள ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் மத்தியிலும் ஒருவித அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சம் ஏற்படுத்தப்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். பாசிச கும்பலின் இந்துமதவெறியாட்டங்களோடு பாசிச கும்பலுக்கு கரசேவையாற்றிய நீதிமன்றங்களின் துரோகமும் அயோக்கியத்தனங்களும் இணைந்துள்ளன.
![]()
தியா
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube
