ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா ஏப்ரல் 2018 காலாண்டில் மட்டும் 4,876 கோடி ரூபாய் நட்டமடைந்திருக்கிறது. இதற்கு முந்தைய காலாண்டில் (ஜனவரி – மார்ச் 2018) அவ்வங்கி அடைந்த நட்டம் 7,718 கோடி ரூபாய். அதனை ஒப்பிடும்போது நட்டம் குறைந்திருக்கிறது என்று வேண்டுமானால் ஆறுதல் கொள்ளலாமேயொழிய, அவ்வங்கி நடப்பாண்டில் கடுமையான நிதி நெருக்கடியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதைத்தான் இப்புள்ளி விவரங்கள் காட்டுகின்றன.

படிக்க :
♦ கார்ப்பரேட் வாராக்கடன் விவரங்கள் வெளியிட முடியாது – ரிசர்வ வங்கி
♦ கடன் வசூல் செய்ய வேண்டியது மாணவரிடமா ரிலையன்ஸிடமா ?

வழமை போலவே இந்த நட்டத்திற்கு முதன்மையான காரணம் வாராக் கடன்கள்தான். நடப்புக் காலாண்டில் மட்டும் வசூலாகாமல் நின்றுபோன கடன் தவணைத் தொகை 9,984 கோடி ரூபாய். இதன் காரணமாக, சந்தையில் தனது சொத்து மதிப்பு வீழ்ச்சியடைவதைத் தடுப்பதற்கு 7,718 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டிய தேவை ஏற்பட்டதால், இந்நட்டம் ஏற்பட்டதாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.

கடன் தவணைகள் நிலுவையின்றி வசூலாகி, இந்தத் தொகையை ஒதுக்க வேண்டிய அவசியம் எழாமல் இருந்திருந்தால், அவ்வங்கி நடப்புக் காலாண்டில் 2,842 கோடி ரூபாய் இலாபம் அடைந்திருக்கக் கூடும். ஆனால், மோடி ஆட்சியில் வாராக் கடன் அதிகரித்துக்கொண்டே செல்வதும், அதனை ஈடுகட்ட பொதுத்துறை வங்கிகள் தமக்குக் கிடைக்கும் இலாபம் அனைத்தையும் ஒதுக்குவதும் பொருளாதார விதி போலவே மாறிவிட்டது.

குறிப்பாக, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் மொத்த வாராக்கடன் கடந்த ஜூன் மாதம் இறுதியில், அதற்கு முந்தைய காலாண்டைவிட 0.72 சதவீதம் அதிகரித்து 10.69 சதவீதத்தைத் தொட்டிருக்கிறது. இந்த அதிகரிப்பின் காரணமாக அவ்வங்கி வாராக் கடனை ஈடுகட்ட ஒதுக்கிய தொகையும் 8,928 கோடி ரூபாயிலிருந்து 19,228 கோடி ரூபாயாக அதிகரித்துவிட்டது.

நடப்புக் காலாண்டில் நிலுவையில் உள்ள வாராக் கடன் 9,984 கோடி ரூபாயில் 3,000 கோடி ரூபாய் கார்ப்பரேட் நிறுவனங்கள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையாகும். மகாராஷ்டிரா, கர்நாடக மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடன் தவணைகளைச் செலுத்தத் தவறியதாலும் வாராக் கடன் அதிகரித்திருப்பதாக வங்கி நிர்வாகம் விளக்கம் அளித்திருக்கிறது.

அவ்விரு மாநில விவசாயிகள் கடன் நிலுவையைச் செலுத்தாமல் இருப்பதற்கு, அம்மாநில அரசுகள் அறிவித்திருக்கும் விவசாயக் கடன் தள்ளுபடிதான் காரணம். தள்ளுபடி செய்யப்பட்ட விவசாயக் கடன் தொகையை அரசு வங்கிக்குச் செலுத்தியிருந்தால், வங்கியின் வாராக் கடன் நிலுவை குறைந்திருக்கும். எனவே, நடப்புக் காலாண்டில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவைக் கடனுக்குள் தள்ளிவிட்ட குற்றவாளிகள் கார்ப்பரேட்டுகளும், மத்திய, மாநில அரசுகளும்தான்.

வாராக் கடனை வசூலிப்பதற்கு புதுப்புது சட்டங்களை இயற்றியிருப்பதாக மோடி அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும், அவற்றுக்கும் சோளக்காட்டு பொம்மைகளுக்கும் எந்த வேறுபாடும் இல்லை. மாறாக, வங்கி நிர்வாகங்கள் வாராக் கடனால் ஏற்படும் தமது நட்டத்தைச் சமாளிப்பதற்குப் பொதுமக்களைத்தான் பலியிடுகின்றன. குறிப்பாக, வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலிக்கப்படும் சேவைக் கட்டணங்கள் வங்கிகளுக்குப் பணங்காய்ச்சி மரமாகவே மாறிவிட்டது.

பொதுத் துறை வங்கிகள் கடந்த நான்காண்டுகளில் மட்டும் தமது வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்திருக்கும் சேவைக் கட்டணங்களின் மதிப்பு 3,324 கோடி ரூபாய். ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, தன்னிடமுள்ள சேமிப்புக் கணக்குகளில் குறைந்தபட்ச தொகையை வைத்திராத வாடிக்கையாளர்களிடமிருந்து மட்டும் 2017 – 18 நிதியாண்டின் முதல் எட்டு மாதங்களில் 1,771 கோடி ரூபாயைத் தண்டத் தொகையாக வசூலித்திருக்கிறது.

தரகு முதலாளிகள் பொதுத்துறை வங்கிகளைச் சட்டவிரோதமாக மொட்டையடிக்கிறார்கள் என்றால், வங்கி நிர்வாகங்களோ பொதுமக்களின் அற்ப சேமிப்பைச் சட்டபூர்வமாகக் கொள்ளையடிக்கின்றன.

புதிய ஜனநாயகம், செப்டம்பர் 2018

மின்னூல்:
புதிய ஜனநாயகம்

15.00Add to cart

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.

பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியிடப்படும்.

புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்

புதிய ஜனநாயகம்

15.00Add to cart

15.00Add to cart

15.00Add to cart

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க