பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் : பாகம் – 1

வீட்டு நிர்வாகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டிருக்கிறார். வருகிற வருமானத்தில் பெரும்பகுதியை அவருடைய மேக்அப் செலவுக்கு, வாசலில் வைரம் பொதித்த பெயர் பலகை வைப்பதற்கு, உல்லாச பயணங்களுக்கு, தன்னுடைய ஆடை ஆபரணங்களுக்கு செலவு செய்கிறார். இன்னொரு பக்கம் வீட்டின் மற்ற உறுப்பினர்கள் எல்லாம் சோத்துக்கே வழியில்லாமல் திண்டாடுகிறார்கள்.

உடல்நலமில்லாமல் கிடக்கும் ஒருவருக்கு அவசரசிகிச்சைக்குக் கூட பணமில்லாமல் தவிக்கிறார்கள். மருத்துவத்துக்கு பணம் கேட்டால் பாக்கெட்டை விரித்து இருந்தால் தரமாட்டேனா என்கிறார் நிர்வாகி. ஆனால், இன்னொரு பக்கம் இந்த நிர்வாகி கலர் கலராக பல ஆயிரங்களுக்கு சொக்காய் வாங்கி மாட்டிக்கொண்டு திரிந்தால் குடும்பத்தினருக்கு கடுப்பாகும்தானே…

படிக்க:
கார்ப்பரேட் – காவி பாசிசம் ! எதிர்த்து நில் : மார்ச் 30 சென்னையில் விளக்கப் பொதுக்கூட்டம் !
மோடி எடப்பாடியை காட்டுக்கு அனுப்புவோம் – பொளந்து கட்டும் சென்னை மக்கள் | காணொளி

கடந்து ஐந்தாண்டுகால மோடி ஆட்சி அப்படித்தான் இருந்தது.

இந்த அரசு கடந்து ஐந்தாண்டுகளில் செய்த விளம்பர செலவு மட்டுமே 4800+ கோடிகள். பிரதமர் உலகம் சுற்றிப்பார்க்க ஆன செலவுகள் மட்டுமே 2000+ கோடிகள். இதில் அவருடைய பர்சனல் விமான பராமரிப்பு செலவு 1088 கோடி.

(இவை எல்லாம் ஆர்டிஐ போட்டு வாங்கப்பட்ட தகவல்கள்)

இப்படி உலகம் சுற்றியதால் கடந்த ஐந்தாண்டுகளில் மூன்றில் ஒருநாள் அவர் வெளிநாட்டில் இருந்திருக்கிறார். இப்படி இருந்ததால் என்ன பிரயோஜனம். நாட்டுக்கு அந்நிய முதலீடுகள் வந்து குவிந்தனவா… நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருந்ததா… இல்லை. சொல்லப்போனால் அந்நிய முதலீட்டாளர்கள் இந்த ஐந்தாண்டுகளில் ஆளைவிட்றா என சுவர் ஏறி குதித்து தப்பித்துதான் சென்றிருக்கிறார்கள்.

விவசாயிகலின் வாழ்வை அழிக்க போடும் திட்டம் புல்லட் ரயில்

அடுத்து மும்பை தொடங்கி அகமதாபாத் வரை ஓடுகிற புல்லட் ரயில் ப்ராஜெக்ட். நாட்டில் அவன் அவனுக்கு சோத்துக்கே வழியில்லை என்னும் போது வெறும் 500 கிலோமீட்டர் தூரத்திற்கு பயணிக்க எதுக்கு ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடியில் புல்லட் ரயில். அப்படியே இந்த புல்லட் ரயில் ஓட ஆரம்பித்தாலும் யாருக்காக ஓடும்… ஏழை ஜனங்களுக்காகவா… இல்லை எலைட் ஜனங்களுக்காகவா?

இப்படித்தான் ஒன்றுக்கும் உதவாத விஷயங்களுக்காக மக்கள் பணத்தை வாரி இரைத்திருக்கிறது இந்த அரசு…

மோடி என்கிற ஒருவருடைய பிழை என்று ஐந்தாண்டுகால மத்திய அரசின் ஆட்சியை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு முட்டாள் அரசனை முன்னால் நிறுத்திக்கொண்டு திரைமறைவில் வியாபாரிகளும் சாமியார்களும் கார்ப்பரேட் திருடர்களும் கூத்தடித்திருக்கிறார்கள்.

பொய் பரப்புரைகளால் ஆட்சியை பிடித்தவர்களின் ஐந்தாண்டுகால ஆட்சி இந்தியாவை சிதைத்திருக்கிறது. இப்போதும் அவர்களுடைய பொய்கள் தீரவில்லை. இன்னும் அதிக வீரியத்தோடு இன்னும் கூட மோசமாக பொய்களை விற்று மீண்டும் அரியாசனத்தில் அமரும் முனைப்பில் இருக்கிறார்கள் பாஜகவினரும் அவர்களுடைய அயோக்கித்தனமான கூட்டாளிகளும்.
நாம் உண்மைகளை பேச வேண்டியிருக்கிறது.

நிறைய உண்மைகளை… இன்னும் சத்தமாக பேசுவோம் …

பாஜக மீது ஏன் இவ்வளவு கோபம் : பாகம் – 2

Lynching… இப்படி ஒரு சொல்லை கடந்த ஐந்தாண்டுகளாகத்தான் நாம் அதிகமாக பயன்படுத்துகிறோம். இது அமெரிக்காவில் ஏற்கனவே புழக்கத்தில் இருந்த சொல்தான்… கறுப்பினத்தவர்களை அச்சுறுத்த வெள்ளை மேலாதிக்க எண்ணங்கொண்டவர்கள் கூட்டு சேர்ந்து பண்ணுகிற கொலைகளை இப்படி குறிப்பிடுகிறார்கள். அதை இந்தியர்களுக்கு அறிமுகப்படுத்திய பெருமை பாஜகவையே சாரும்.

அங்கே கறுப்பின மக்கள் என்றால் இங்கே இஸ்லாமியர்களை, தலித்துகளை அச்சுறுத்த பசு பாதுகாவலர்கள் எனும் இந்து அடிப்படைவாதிகள் பண்ணுகிற கூட்டுக்கொலைகளை லின்ச்சிங் என ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. இப்படியொரு சொல்லை நமக்கு அறிமுகப்படுத்தியதோடல்லாமல் மாதந்தோறும் யாரையாவது போட்டுத்தள்ளிக் கொண்டிருந்தவர்களுக்கு துணையாக நின்ற பெருமைமிகு ஆட்சிதான் பாஜகவின் ஆட்சி.

படிக்க:
பொள்ளாச்சி : குற்றவாளிகளைப் பாதுகாக்கும் சௌக்கிதார்கள் | மருதையன் நேர்காணல் | காணொளி
பொள்ளாச்சி : ஃபேஸ்புக் பயன்பாடுதான் பெண்களுக்கு பிரச்சினையா ?

சும்மா சொல்லவில்லை… கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த இவ்வகை கும்பல் தாக்குதல்களுக்கென்றே ஒரு மேப் போட்டு வைத்திருக்கிறார்கள் இங்கே விபரங்களோடு பார்க்கலாம். மொத்தம் நடந்த 300-க்கும் அதிகமான தாக்குதல்களில் 90 பேர் செத்துப்போயிருக்கிறார்கள். அத்தனை பேரின் படங்களும் விபரமும் இருக்கின்றன. ஒவ்வொரு முகத்தையும் பார்க்கும் போது பதற்றம் வருகிறது. இதில் எந்த அம்பானியும் அதானியும் இல்லை. எல்லோருமே சாதாரண விவசாயிகள், கூலிவேலை செய்கிறவர்கள். சில இந்துக்களும் கூட இருக்கிறார்கள்… ஆனால் தலித்துகள்!

ஆனால் இந்தக்கொலைகளுக்கெல்லாம் பாஜக தரப்பிலிருந்து என்னமாதிரியான எதிர்வினைகள் வந்திருக்கின்றன என்பதை பார்க்கும்போது அதிர்ச்சியாக இருக்கிறது. `இதையெல்லாம் தவிர்க்கமுடியாது, கொலையெல்லாம் நடக்கவில்லை, பசுக்களை கடத்துகிறார்கள், செத்துப்போனவர்கள் திருடர்கள், தானாகவே நோயால் இறந்துபோய்விட்டார்கள்’ என விதவிதமான பொறுப்பற்ற பதில்களையே முன்னணி பாஜக தலைவர் கொடுத்தார்கள்.

பிரதமர் மோடி கூட எத்தனையோ கொலைகள் நடந்த பிறகு 2017ன் இறுதியில்தான் மயலிறகால் வருடுவது போல ”மக்கள் தங்கள் கைகளில் சட்டத்தை எடுத்துக்கொள்ள கூடாது. சட்டத்திடம்தான் ஒப்படைக்கவேண்டும்” என்றார். அதற்கு மேல் அவருக்கு இதை கண்டிக்கவோ தடுக்கவோ எந்த ஆர்வமும் இருக்கவில்லை. கடந்த டிசம்பரில் இந்த கும்பல் கொலைகாரர்களை தட்டிக்கேட்ட ஒரு காவலரையே போட்டுத்தள்ளியதெல்லாம் நடந்தது. பசுபாதுகாப்பின் பேரால் நடந்த அத்தனை கொலைகளையும் இந்த அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டும், அதை திரைமறைவில் தூண்டிக்கொண்டும்தான் இருந்திருக்கிறது.

ஒருகட்சிக்கு ஏன் வாக்களிக்கிறோம். இவரால் நாம் பாதுகாப்பாக இருப்போம், நிம்மதியாக சாலைகளில் நடமாட முடியும். நம் வீட்டிற்குள் யாரும் புகுந்து அடிக்க மாட்டார்கள் என்கிற நம்பிக்கையில்தான்… ஆனால் அந்த பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டிய அரசே வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுகிறவர்களுக்கு எரிபொருள் தந்து உதவிக்கொண்டிருந்தால் என்னாகும்.

“இந்தியாவில் கடந்த ஐந்தாண்டுகால ஆட்சி அப்படித்தான் நடந்திருக்கிறது” என்று ஐநாவின் மனித உரிமைகள் அமைப்பின் செயலாளர் மிசேல் சமீபத்தில் பேசியிருந்தார். மிகமோசமான அளவில் வன்முறைகள் நிகழ்ந்திருப்பதையும் அவை முறையாக விசாரணைக்கும் கூட உட்படுத்தப்படுவதில்லை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

கடந்த ஐந்தாண்டுகளில் மனித உரிமைகள் மீறல்கள் நாம் நினைத்துப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்திருக்கின்றன. எத்தனை எத்தனை படுகொலைகள் மதத்தின் பேரால், உணவில் பேரால், நம்பிக்கைகளின் பேரால், சாதியின் பேரால் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன. அதிலும் குறிப்பாக இஸ்லாமியர்களும் தலித்துகளும் பெருமளவில் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். ஏராளமானோர் கொலையும் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

படிக்க:
♦ தமிழிசையால் நிர்மலா சீதாராமனாகிவிட முடியுமா ? | காணொளி
♦ பட்டணத்து நாயும் கிராமத்து மாடும் | தோழர் துரை சண்முகம்

அரசே கொடுக்கிற எண்ணிக்கையின் அடிப்படையில் கடந்த ஐந்தாண்டுகளில் இவ்வகை சாதி ரீதியிலான, மத ரீதிலியான குற்றச்செயல்களின் எண்ணிக்கை எட்டு மடங்கு அதிகரித்திருக்கின்றன என்கிறார்கள். கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வழக்குகள் இவ்வகையில் பதிவு செய்யப்பட்டுள்ளன. பதிவு செய்யப்படாதவை எத்தனையோ… 2017ஆம் ஆண்டில் மட்டுமே இந்தியா முழுக்க 822 மதம் சார்ந்த மோதல்கள் நடந்திருக்கின்றன. இதில் இறந்து போனவர்கள் எண்ணிக்கை 111. கௌரி லங்கேஷ் மாதிரியான எண்ணற்ற எழுத்தாளர்களும் பத்திரிகையாளர்களும் அரசை விமர்சித்து எழுதியதற்காக்க கொல்லபட்டிருக்கிறார்கள். உத்திர பிரதேசத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு போலி என்கவுண்டர்களின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்திருக்கிறது. 1038 என்கவுண்டர்களை நடத்தியிருக்கிறார் யோகி.

தன்னை சௌகிதார் என்றும் காவலன் என்றும் பீத்துக்கொண்டால் மட்டும் போதாது. அதானிக்கும் அம்பானிக்கும் மட்டுமல்ல அப்பாவிகளுக்கும் சௌகிதார்கள் பாதுகாப்பை உறுதிசெய்திருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. இனி எப்போதும் செய்யவும்மாட்டார்கள். அதனால்தான் பாஜகவை விரட்டவேண்டியிருக்கிறது.

முகநூலில் : Athisha


இதையும் பாருங்க :