“ஜெய் ஸ்ரீராம் என்பது போர்க்கால அழுகையாக மாறிவிட்டது” : கும்பல் வன்முறைகளுக்கு எதிராக திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர் கடிதம்
நாற்பதுக்கும் மேற்பட்ட திரைக்கலைஞர்கள், செயல்பாட்டாளர்கள், கல்வியாளர்கள் கும்பல் வன்முறைகளை தடுத்து நிறுத்தும்படி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர். அந்தக் கடிதத்தில் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்ற முழக்கம் தூண்டிவிடக்கூடிய போர்க்கால முழக்கமாக மாறி, நாட்டின் பல்வேறு இடங்களில் கும்பல் வன்முறைகளுக்குக் காரணமாக உள்ளது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
“முசுலீம்கள், தலித்துக்கள், மற்ற சிறுபான்மையினர் மீதான கும்பல் வன்முறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் எனவும் கடிதத்தின் மூலம் கோரியுள்ளனர். 2016-ம் ஆண்டு முதல் 840-க்கும் மேற்பட்ட தலித்துகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் கூறியுள்ளதை கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவர்கள், இந்த வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்களுக்கு மிகச் சொற்ப அளவிலேயே தண்டனை கிடைத்துள்ளதையும் கூறியுள்ளனர்.
அண்மையில் ஜார்க்கண்டில் கும்பல் வன்முறையாளர்களால் முசுலீம் இளைஞர் ஒருவர் அடித்து கொல்லப்பட்டார். இது தேசிய அளவில் பேசுபொருள் ஆன பின், மோடி நாடாளுமன்றத்தில் அதுகுறித்து வாயைத் திறந்து பேசினார். இதை விமர்சித்துள்ள கலைஞர்கள், “திரு. பிரதமர் அவர்களே நீங்கள் நாடாளுமன்றத்தில் பேசிவிட்டால் மட்டுமே கும்பல் வன்முறைகளுக்கு தீர்வு காண முடியாது. இந்தக் குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும். பிணையில் வரமுடியாத குற்றமாக இதைப் பார்க்க வேண்டும்” என தெரிவித்துள்ளனர்.
படிக்க:
♦ மேற்கு வங்கம் : தொடர்கிறது காவிக் குண்டர்களின் ‘ஜெய் ஸ்ரீராம்’ தாக்குதல்கள் !
♦ #SaveVAIGAIFromRSS : ஆர்.எஸ்.எஸ் சதியிலிருந்து வைகை நதியைக் காப்போம் !
அபர்ணா சென், அனுராக் காஷ்யப், அடூர் கோபாலகிருஷ்ணன், மணிரத்னம், ஷ்யாம் பெனகல், ரேவதி, கொங்கனா சென் சர்மா உள்ளிட்ட திரைக்கலைஞர்களும் வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குஹா, எழுத்தாளர் அமித் சவுத்ரி, கல்வியாளர் ஆசிஸ் நந்தி உள்ளிட்ட 49 பேர் இந்தக் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளனர்.
Nearly 50 celebs including Mani Ratnam, Adoor Gopalkrishnan, Shyam Benegal, Soumitra Chatterjee, Aparna Sen, Anurag Kashyap, Parambrata Chatterjee, Anupam Roy and others v written to PM @narendramodi on lynching, and how the Jai Shri Ram slogan has become a provocative war cry pic.twitter.com/C8Seb7S0uM
— Anindita Acharya (@Itsanindita) July 24, 2019
“வருத்தமளிக்கும் விதமாக ஜெய் ஸ்ரீராம் என்பது தூண்டக்கூடிய போர்க்கால அழுகையாக இன்று மாறி, சட்டம் – ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. பல கும்பல் வன்முறைகள் அதன் பெயரால் நடக்கின்றன. மதத்தின் பெயரால், இத்தனை கொடூரமான வன்முறைகள் நடப்பது அதிர்ச்சியளிக்கிறது! இது ஒன்றும் பழங்காலம் அல்ல! நாட்டின் பெரும்பான்மையினருக்கும் ராமன் என்கிற பெயர் புனிதமானது. இந்நாட்டின் உயர்ந்த அதிகாரம் படைத்த நீங்கள், ராமனின் பெயரை சீர்குலைக்கும் இதுபோன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த வேண்டும்.” என பிரதமரிடம் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.
மேலும் அதில், “எதிர்க்குரலோ, மாற்றுக்கருத்தோ இல்லாமல் ஜனநாயம் என்பது இல்லை. எனவே, மக்களை ‘தேசவிரோதி’; ‘நகர்ப்புற நக்ஸல்’ என முத்திரை குத்துவது தடுக்கப்பட வேண்டும். ஆளும் கட்சியை எதிர்ப்பது நாட்டை எதிர்ப்பது ஆகாது. ஆட்சியில் இருக்கும் கட்சி, நாடாகிவிடாது. அது நாட்டில் உள்ள ஒரு அரசியல் கட்சி அவ்வளவே. எனவே, அரசுக்கு எதிரான நிலைப்பாடு, நாட்டுக்கு எதிரான நிலைப்பாடாக சமன்படுத்த முடியாது. எதிர்ப்புணர்வுக்கான திறந்த சூழல் நசுக்கப்படக்கூடாது, அது நாட்டை பலமாக்கத்தான் பயன்படும்.” எனவும் தெரிவித்துள்ளனர்.
படிக்க:
♦ அர்னாப் கோஸ்வாமி : ஏன் இந்த தேசியக் கொலைவெறி ?
♦ தேசிய கல்விக் கொள்கை 2019 நிராகரிப்போம் ! – ஒரு நாள் கருத்தரங்கச் செய்திகள் படங்கள்
இந்தக் கடிதம் வெளியான சில மணி நேரங்களில் காவி கும்பல், கடிதம் எழுதியவர்களை ‘அர்பன் நக்ஸல்’ என முத்திரை குத்தி, வெறுப்பை சமூக ஊடகங்களில் விதைக்க ஆரம்பித்தது. மேற்கண்ட கடிதத்தில் கையெழுத்திட்டவர்களை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்களுக்கு வாய்ப்பளிக்காமல் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும் என்றும் நச்சை கக்கினர் சிலர்.
காவி கும்பலின் ஊடக தலைவரான அர்னாப், ‘வெறுப்பின்மை லாபி’ நடத்துவதாக கடிதத்தில் கையெழுத்திட்டவர்கள் குறித்து நஞ்சு கக்கினார்.
Bow bow booooww bow bow boow
😂😂 📣🐕 pic.twitter.com/ki2HAGRP6n
— Dhruv Rathee (@dhruv_rathee) July 25, 2019
அர்னாபின் வெறுப்பு பிரச்சாரத்தை திரைக்கலைஞர் அபர்ணா சென் முறியடித்தபோது, மூளை மழுங்கிய சங்கியாக அதை எதிர்க்கொள்ளும் நிலையில் அவர் இல்லை.
Most people thought it was impossible to handle Arnab's verbal assault in a news debate….but filmmaker, screenwriter and actress #AparnaSen just showed how it's done 😜🤣#TheNationNowKnows pic.twitter.com/JPoZqJGpja
— The DeshBhakt (@akashbanerjee) July 25, 2019
பிரதமருக்கு அனுப்பிய கடிதத்துக்கு அரசு ஆதரவாக பதிலளிக்கும் என்பது குறைந்தபட்ச நாகரிக நடைமுறை. கசாப்புக் கடைக்காரனிடம் ஆட்டை வெட்டாதே என மனு அனுப்பினால் பதில் கிடைக்குமா என்ன ? நாகரிகத்துக்காகக் கூட பதிலளிக்காத காவி அரசு, தனது ட்ரோல்களையும் ஊடக ரவுடிகளையும் வைத்து எதிர்ப்புணர்வை வெளிப்படுத்தியவர்களை ஒடுக்கப்பார்க்கிறது. எல்லா விதங்களிலும் தான் ஒரு பாசிச அரசு என்பதை சொல்லிக்கொண்டே இருக்கிறது இந்த அரசு.
அனிதா
நன்றி : ஸ்க்ரால்
ராமனின் பெயரை வினவு பெரியார் இயக்கங்கள் இழிவு படுத்தியதை விடவா ? ஸ்ரீ ராமனின் மீது உண்மையாகவே பற்று இருந்திருந்தால் வினவு பெரியார் கூட்டங்களை எதிர்த்து தான் இவர்கள் கடிதம் எழுதி இருக்க வேண்டும்.
வரலாற்றில் இல்லாத ஒரு போலியான கற்பனையான ராமனை வைத்துக் கொண்டு என்னென்ன அராஜகம் செய்கிறார்கள், இதனால் தான் ராமனின் படத்திற்கு செருப்பு மாலை போடுவதெல்லாம் நடக்கின்றன … இது ஒருபுறம் இருக்க, தன் மனைவியாகிய சீதையிடம் இவ்வளவு லவலேசமும் மனித தன்மை இல்ல்லாமல் கேவலமாக நடந்து கொண்ட ராமனை கடவுள் என்று கும்பிட இந்துக்களுக்கு எப்படி தான் மனம் வருகிறதோ? கம்ப ராமாயணத்தில் இருந்து சில பாடல்கள் அளிக்கிறேன் படித்து ராமனை புரிந்து கொள்ளவும்
ஊண் திறம் உவந்தனை; ஒழுக்கம் பாழ்பட,
மாண்டிலை, முறை திறம்பு அரக்கன் மா நகர்
ஆண்டு உறைந்து அடங்கினை; அச்சம் தீர்ந்து,
இவண்
மீண்டது என் நினைவு? ”எனை விரும்பும்”
என்பதோ?
பொருள்:- ஊண் திறம் உவந்தனை- அரக்கர் ஊரில் உணவு வகைகளை
உண்ண விரும்பி நெடுநாள் இருந்தாய்; ஒழுக்கம் பாழ்பட
மாண்டிலை- ஒழுக்கம் அழிந்து போகும்படி சாகாமல் உயிருடன்
இருந்தாய்; முறை திறம்பு அரக்கன் மாநகர ஆண்டு உறைந்து
அடங்கினை- நீதிநெறியும் அறமுறையும் திறம்பிய அரக்கனது
இலங்கை நகரில் நெடுநாள் தங்கி அவனுக்கு அடங்கியிருந்தாய்;
அச்சம் தீர்ந்து இவண் மீண்டது என் நினைவு?- பயம்
இல்லாமல் இவ்விடத்துக்கு இப்பொழுது திரும்பி வந்தது எது
கருதி? ‘எனை விரும்பும்’ என்பதோ? – ‘என்னை இராமன்
விரும்புவான்’ என்பது உன் நினைவா?
இதோடு நில்லாமல் எதற்காக சீதையை மீட்டான் என்று ராமன் கூறுவதை பாருங்கள், எப்பேர்ப்பட்ட இழி பிறவியும் இவ்வாறு தன் மனைவியிடம் பேசமாட்டான்.. அந்த கேவலத்தையும் பாருங்கள் …
‘உன்னை மீட்பான்பொருட்டு, உவரி தூர்த்து, ஒளிர்
மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர்அற,
பின்னை மீட்டு, உறு பகை கடந்திலேன்; பிழை
என்னை மீட்பான்பொருட்டு, இலங்கை எய்தினேன்.
பொருள்:- உன்னை மீட்பான் பொருட்டு- உன்னைச் சிறையிலிருந்து
மீட்பதற்காக; உவரி தூர்த்து- கடலை அணைகட்டி அடைத்து;
ஒளிர் மின்னை மீட்டுறு படை அரக்கர் வேர் அற-
பிரகாசிக்கின்ற மின்னலைத் தோற்கடிக்கும் படைகளை உடைய
அரக்கர்கள் அடியோடு அழியும்படி;பின்னை மீட்டு- பிறகும்
மேலும் போர் செய்து மீளச்செய்து;உறு பகை கடந்திலேன்-
மிக்க அரக்கர் பகையை வென்றேனில்லை (பின் எதற்காக
என்றால்); என்னை பிழை மீட்பான் பொருட்டு இலங்கை
எய்தினேன்- என்னைத் தவற்றிலிருந்து நீக்கிக்கொள்ள
இலங்கையை அடைந்தேன்.
அதாவது, நீ இல்லாமல் நான் அயோத்தி சென்றால் எனக்கு அவமானம் மீறும் என்பதாலேயே நான் உன்னை ராவணனிடம் போர் செய்து மீட்டேன் என்று ஸ்ரீராமர் கூறுவதை கேளுங்கள்… இவர் தான் தர்மத்தின் அவதாரம் நன்றாக போற்றி கொள்ளுங்கள் இந்துக்களே ..
‘மருந்தினும் இனிய மன்னுயிரின் வான் தசை
அருந்தினையே; நறவு அமைய உண்டியே;
இருந்தனையே? இனி எமக்கும் ஏற்பன
விருந்து உளவோ? உரை – வெறுமை நீங்கினாய்!
வெறுமை நீங்கினாய் – இல்லாமையை இல்லாதவளே!;
மருந்தினும் இனிய- தேவர் அமுதினும் இனியதாகிய; மன்
உயிரின் வான்தசை அருந்தினையே- பிராணிகளின்
புலால்களைப் புசித்தாயல்லையோ; நறவு அமைய உண்டியே-
கள்ளை நன்கு உண்டாயல்லையோ; இனி இருந்தனையே-
இவ்வளவான பிறகும் உயிரோடு இருக்கின்றாயல்லையோ;
ஏற்பன விருந்து எமக்கும் உளவோ உரை- பொருத்தமான
விருந்துணவு எனக்கும் இருக்கின்றனவா? சொல்வாயாக.
அரக்கர் உணவு என்பதால் புலாலும் கள்ளும் கூறினானாம்.
வலிந்து பழிக்க விரும்புவான் ஆதலன் கேலியாக ‘எமக்கும்
விருந்துளவோ’ என்றானாம்.
இப்பேற்பட்ட பண்பில்லாத ராமனை தங்கள் தெய்வமாக ஏற்றுக் கொன்ற மக்கள் வேறு எப்படி இருப்பார்கள், அவனை போலவே பண்பில்லாதவர்களாக தான் இருப்பார்கள், வடஇந்தியாவில் அப்படி தான் இருக்கின்றார்கள்.. ராவணன் வழிபட்ட சிவபெருமானின் வழிவந்த தமிழர்களே திருந்துங்கள்.. ராம மாயையிலிருந்து வெளியே வாருங்கள்
ஒரு பக்கம் ராமனை கற்பனை என்று சொல்ல வேண்டியது இன்னொரு பக்கம் அவன் அதை செய்தான் இதை செய்தான் என்று கிறிஸ்துவ மிஷனரிகள் சொன்ன பொய்களை அவிழ்த்து விட வேண்டியது.
முதலில் ராமன் கற்பனையா அல்லது உண்மையா என்ற முடிவுக்கு வாருங்கள் பிறகு பேசலாம்.
ஒரு கேள்வி ராமன் கற்பனை என்றால் பிறகு இராவணன் மட்டும் எப்படி உண்மை ? கிறிஸ்துவ மிஷனரிகளின் வெறுப்பு பிரச்சாரம் உங்களை போன்றவர்களின் சிந்திக்கும் திறனை கூட மழுங்கடித்து இருக்கிறது.
அது கற்பனையோ அல்லது நிஜமோ, ஆனால் ராமனை நன்றாக கம்பர் செருப்பால் அடித்தது மட்டும் நிஜம் …இங்கு ராவணனனை உண்மை என்று வாதிட வரவில்லை , அவன் வழிபட்ட சிவன் வழி வந்த தமிழர்கள் என்று தான் கூறினேன்
ராமன் உண்மையா கற்பனையா என்பது பற்றி கூட தெரியாமல் பிறகு எதற்கு ராமாயணத்தை பற்றி பேச வருகிறீர்கள் ?
ஒரு விஷயத்தை பற்றி பேசுவது என்றால் அது பற்றிய அடிப்படை அறிவு வேண்டும் ஆனால் உங்களை போன்ற ஆட்களுக்கு அந்த அடிப்படை அறிவு கூட இல்லாமல் கிறிஸ்துவ மிஷனரிகளும், பெரியார் மற்றும் அயோக்கிய கம்யூனிஸ்ட்களும் சொல்லும் திரிபுகளை உண்மை என்று நம்பி பேச வந்து விடுகிறீர்கள்.
முதலில் ராமாயணத்தை முழுதாக படித்து விட்டு பிறகு பேச வாருங்கள்…
//அவன் அதை செய்தான் இதை செய்தான் என்று கிறிஸ்துவ மிஷனரிகள் சொன்ன பொய்களை அவிழ்த்து விட வேண்டியது.//
அட முட்டாளே கம்பர் என்ன கிறிஸ்த்தவ மிஷனரியின் ஆளா …. போயி கம்ப ராமாயணத்தை படித்து விட்டு வாரும்
இது உங்களின் வக்கிர சிந்தனையை காட்டுகிறது… ராமாயணத்தின் ராமனின் உயர்ந்த குணங்களை பற்றி எவ்வுளவோ கம்பர் சொல்லியிருக்கிறார், ஆனால் தேடி கண்டுபிடித்து அதில் உள்ள குறைகளை மட்டுமே சொல்லி ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை விதைப்பது கிறிஸ்துவ மிஷனரிகளின் வேலை, அதை தான் நீங்கள் சொல்லி கொண்டு இருக்கிறீர்கள்.
இது உங்களின் வக்கிர மனநிலையின் வெளிப்பாடு.
ராமன் கிருஷ்ணன் என்பதெல்லாம் நிச்சயம் கற்பனை தான்.. அந்த கற்பனா கதா பாத்திரம் சுமந்தது வரும் அறநெறியற்ற கருத்துக்களை தான் நாங்கள் இங்கே அம்பலப்படுத்துவது … அதெல்லாம் இருக்கட்டும், இன்னும் நான் மேற்சொன்ன பாடல்களுக்கு எந்த விளக்கமும் கொடுக்கவில்லையே. அதற்கு விளக்கம் தராமல், கிறிஸ்துவ மிஷனரி, மதமாற்றம் Anti-Indian என்று மோகன் பாகவத்தின் அபான வாயுவாகவே ஓசை எழுப்பி கொண்டிருந்தால் என்ன பண்ண முடியும்.. கம்பம் ஏன் ராமனை மேற்சொன்ன பாடல்களில் செருப்பால் அடித்தான் என்பதற்கு காரணம் கூறவும் .. அவ்வளவே பெரிய இறை அவதாரம் ஏன் தன் மனைவியிடம் “லுச்சாதனமாக” நடந்து கொண்டான் என்பதற்கு விளக்கம் கொடுக்கவும்… நீங்கள் கொடுக்கும் விளக்கத்தை பொறுத்து கம்பன் ராமனுக்கு கொடுத்த அடுத்த சவுக்கடி காத்திருக்கிறது ..
ராமாயணத்தை படிக்காமல் அவர் சொன்னார் இவர் சொன்னார் என்பதை (குறிப்பாக கிறிஸ்துவ மிஷனரிகளின் பொய்களை) நம்பி நீங்கள் வெறுப்பை வளர்த்து கொண்டு இருப்பது தவறு சரியல்ல.
ஒரு உதாரணம் சொல்கிறேன், சம்பூகன் வதம் பற்றிய பல பொய்களை கிறிஸ்துவ மிஷனரி மற்றும் வினவு கூட்டங்கள் பரப்பி இருக்கின்றன. சம்பூகன் ஒரு சூத்திரன், அவன் தவம் செய்கிறான் என்று ராமன் அவனை கொன்று விட்டான் என்ற புளுகு மூட்டையை அவிழ்த்து விட்டு இருக்கிறார்கள்.
ராமாயணத்தை படிக்காத உங்களை போன்ற முட்டாள்கள் இந்த பொய்களை நம்பி ராமன் மீது வெறுப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்பது தான் அவர்களின் நோக்கம், ஆனால் இவர்கள் சொல்லிய பொய்யின் முன்பும் பின்பும் இருக்கும் விஷயம் என்ன என்பதை நீங்கள் படித்து இருப்ப்பிர்களா என்றால் நிச்சயம் இருக்காது வெந்து தான் வேதனை… உமா மஹேஸ்வரி (சிவனின் மனைவி) பேர் அழகி அவளை அடைய சம்பூகன் தவம் செய்கிறான், அதுவும் தனது உடலோடு சொர்க்கம் சென்று உமா மகேஸ்வரியை அடைய வேண்டுமாம். சம்பூகனின் வதம் இதன் அடிப்படையில் தான் அமைகிறது.
இங்கே கிறிஸ்துவ மிஷனரி, பெரியார் மற்றும் அயோக்கிய கம்யூனிஸ்ட்கள் கூட்டங்கள் சொல்லியிருப்பது என்ன ? சம்பூகன் ஒரு சூத்திரன் அவனுக்கு தவம் செய்யும் உரிமையில்லை அதனால் ராமன் கொன்று விட்டான் என்று பொய்களை பரப்பி இருக்கிறார்கள்.
ராமன் சம்பூகனை கொன்றது உண்மை
சம்பூகன் சூத்திரன் என்பதும் உண்மை
சம்பூகன் தவம் இருந்தான் என்பதும் உண்மை
ஆனால் இங்கே மறைக்கப்பட்ட விஷயம் சம்பூகனின் பெண் ஆசை.
தயவு செய்து ராமாயணத்தை முழுமையாக படித்து விட்டு பிறகு பேச வாருங்கள்.
இன்னொன்றனையும் புரிந்துகொள்ளுங்கள் உலகம் முழுவதும் கிறிஸ்துவ மிஷனரிகள் பூர்விக மக்களின் மதநம்பிக்கைகள் கலாச்சாரங்கள் மீது வெறுப்பை உண்டாக்க இது போன்ற பல பொய்களை பரப்பி இருக்கிறார்கள்.
இப்படி பொய்களை பரப்பி கடைசியில் நீங்கள் வணங்குவது சாத்தான் என்று சொல்லி மதமாற்றத்தில் ஈடுபடுகிறார்கள்.
ராமாயணத்தின் அடிப்படையே ஸ்ரீராமர் மனிதராக அவதரித்து மனிதர்கள் இந்த உலகத்தில் படும் இன்பம் துன்பங்களை மனித குணத்தோடு அனுபவிக்க வேண்டும் என்பது தான்…
இதில் முக்கிய விஷயம் பிறர் மனைவி மீது ஆசைப்படுவது தவறு, ஒருத்தியை தவிர வேறு ஒரு பெண்ணை நினைத்து கூட பார்க்க கூடாது… இதில் அரசன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று ஆரம்பித்து பல நல்ல விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். ராமாயணம் மஹாபாரதத்தில் சொல்லப்பட்டு இருக்கும் விஷயம் இன்றைய காலகட்டத்துக்கும் பொருந்தும்.
அதனால் தான் மகாத்மா காந்தி அவர்கள் இந்தியாவில் ராமராஜ்யம் அமைக்க வேண்டும் என்று சொல்லியிருந்தார்.
ஆனால் நாம் இது போன்ற பொக்கிஷங்களை படிக்காமல் அவதூறு பேச வந்து விடுகிறோம்.
//ராமாயணத்தின் அடிப்படையே ஸ்ரீராமர் மனிதராக அவதரித்து மனிதர்கள் இந்த உலகத்தில் படும் இன்பம் துன்பங்களை மனித குணத்தோடு அனுபவிக்க வேண்டும் என்பது தான்…//
இப்படி கம்பரோ வால்மீகியோ கூறி இருந்தால் அதனை ஆதாரத்தோடு காட்டவும் … கடந்த நூற்றாண்டில், திராவிட கழகத்தினர் அடித்த அடியில் வைணவர்கள் குறிப்பாக வைணவ பார்பான்கள் வலி தாங்க முடியாமல் அடித்த அந்தர் பல்டி தான் மேற்படி நீங்கள் சொன்ன சமாளிப்புகள் எல்லாம் ..
வால்மீகி ராமனை சாதாரண மனிதனாக தான் சித்தரித்து உள்ளார் , அவரை கடவுளாக்கி பூசி மெழுகியது கம்பர் தான், ஆனாலும் தவிர்க்க முடியாமல் சில இடங்களில் ராமனின் சுயரூபத்தை அவராலும் மறைக்க முடியவில்லை என்பதும் உண்மை தான்… அதனால் தான், மனிததன்மை இல்லாமல் அவன் கேவலமாக தன மனைவியிடம் நடந்து கொண்டதை எல்லாம் அவர் பதிவு செய்யவேண்டியதாகி விட்டது.. ராமனை மனிதனாக கூட ஏற்க முடியாது என்பது தான் உண்மை .. இதை எப்படி கடவுளாக ஏற்கிறார்கள் என்பது தான் தெரியவில்லை ..
//ராமன் சம்பூகனை கொன்றது உண்மை
சம்பூகன் சூத்திரன் என்பதும் உண்மை
சம்பூகன் தவம் இருந்தான் என்பதும் உண்மை
ஆனால் இங்கே மறைக்கப்பட்ட விஷயம் சம்பூகனின் பெண் ஆசை.//
சம்பூகன் பார்வதியின் மீது ஆசை பட்டு அதன் பொருட்டு தான் தவம் செய்தான் என்பதை ஆதாரத்துடன் முடிந்தால் இங்கே பதிவிடவும், பழைய நூல்களில் அவ்வாறு சொல்லவில்லை என்று நினைக்கிறேன் . இது ராமனை காப்பாற்ற இப்போது கிளப்பி விட்ட புரளி என்றே நினைக்கிறேன்.. ஆகவே ஒரு நல்ல ஸ்திரமான நாணயமான ஆதாரம் இருந்தால் அளிக்கவும் ..
காந்தியின் பெயரால் மேலும் ஒரு திரிபுவாதம், காந்தி ராமராஜ்யம் என்று சொல்வது இந்துத்துவாவாதிகள் குறிப்பிடும் ராமஜாஜியத்தை அல்ல … “ராமர் என்று கூறியது எல்லையில்லா பரம்பொருளாம் இறைவனுக்கு சிறுவயதில் இருந்தே நான் கேட்டு பழகிய ஒரு பெயரான ராம் என்பதை கூறுகிறேனே ஒழிய, மற்றபடி தசரத சக்கரவர்த்தியின் மைந்தன், அயோத்தி இளவரசனான ராமனை நான் குறிப்பிடவில்லை” என்று அன்றே தெளிவு படுத்திவிட்டார்… காந்தியின் சில மேற்கோள்கள் கீழே ,
“இந்திய சுயராஜ்யம்(ராம ராஜ்யம்) என்பது பெரும்பான்மை சமூகமான இந்துக்களும் ஆட்சியாக இருக்குமென்று சொல்லப்படுகிறது. அதைவிட பெரும் தவறு ஏதும் இருக்க முடியாது. அது உண்மையாக இருக்குமெனில், நான் அதை சுயராஜ்யம் என்று ஏற்க மறுப்பதோடு ஏன் வலிமை முழுவதையும் காட்டி அதை எதிர்ப்பேன். என்னை பொறுத்தவரையில் சுயராஜ்யம் என்பது எல்லா மக்களின் ஆட்சியாக நீதியின் ஆட்சியாக இருக்க வேண்டும். அந்த ஆட்சியின் கீழ் அமைச்சர்கள் இந்துக்களாகவோ, முஸ்லீம்களாகவோ, சீக்கியர்களாகவோ இருந்தாலும், அல்லது மக்கள் பிரதிநிதிகள் , இந்துக்கள் அல்லது முஸ்லீம்கள் அல்லது பிற சமூகத்தினரிடையே இருந்து பிரத்யேகமாக நிரப்பப்பட்டாலும் , அவர்களின் ஆட்சி சமநீதி வழங்குவதாக அமைய வேண்டும்.”
-யங் இந்தியா 16-4-1931
இது உங்களுக்கான பதில் போல தோற்றமளித்தாலும் , காந்தியை பற்றி தவறான கண்ணோட்டம் கொண்டுள்ள முற்போக்குகள் பலருக்கும் சேர்த்து தான் அளிக்கிறேன்.. மோடியின் ராமன், காந்தியின் ராமன் கிடையாது …
jaN^ghanAmA.asuraH pUrvaM girijAvaradAnataH |
babhUvashUdraH kalpAyuH sa lokaxayakAmyayA ||
tapashchachAra durbuddhirichchhan.h mAheshchvaraM padam.h |
ananyavadhyaM taM tasmAt.h jaghAna purushhottamaH || (IX-20,21)
சம்பூகன் வதம் பற்றிய சமஸ்கிரத வார்த்தைகள் இது… சம்பூகனின் நோக்கம் சிவனின் இடத்தை பிடித்து பார்வதியை அடைய வேண்டும் என்பதே…
கம்ப ராமாயணத்தில் வரும் பாடல் இது…
தேறினன் அமரர்க்கு எல்லாம் தேவர் ஆம் தேவர் அன்றே,
மாறி, இப் பிறப்பில் வந்தார் மானிடர் ஆகி மன்னேர்
ஆறு கொள் சடிலத்தானும், அயனும், என்று இவர்கள் ஆதி
வேறு உள குழுவை எல்லாம், மானுடம் வென்றது அன்றே
இராமன் மனிதனாகப் பிறந்ததால் மனித குலத்திற்கு பெருமை உண்டாயிற்று என்கிறார் கம்பர். ராமாயணத்தின் அடிப்படையே மஹாவிஷ்ணு மனிதராக (ஸ்ரீராமராக) அவதரித்து சாதாரண மனிதனை போல் இன்பம் துன்பம் போன்றவற்றை அனுபவித்து மடிவது தான்.
உங்களுக்கு ஒரு தகவல் கம்பர் ராமாயணத்தை யுத்த காண்டத்தோடு நிறுத்தி விட்டார் (வால்மீகி ராமாயணமும் யுத்த காண்டத்தோடு முடிகிறது)… கம்பருக்கு பிறகு தமிழில் உத்தர காண்டம் ஒட்டக்கூத்தரால் இயற்றப்பட்டது.
முதலில் ராமாயணத்தை முழுமையாக படித்து விட்டு பேச வாருங்கள் ப்ளீஸ்… ராமாயணம் பற்றி ஒன்றுமே தெரியாமல் அவர் இவர் சொன்னார் என்று வெறுப்பை மனதில் வளர்த்துக்கொள்ள வேண்டாம்.
நான் யார் சொல்லியும் வெறுப்பினை விதைக்கவில்லை, இந்துத்துவா பரிவாரங்கள் தான் “ஜெய் ஸ்ரீ ராம்” என்று கோஷம் போட்டு ஆங்காங்கே மக்களை தாக்குகின்றார்கள், அதனால் தான் அதனை எதிர்க்க வேண்டியதாயிற்று .. ராமனின் பெயரை சொல்பவர்களால் சமூகத்திற்கு எந்த நன்மையையும் இது வரை நடக்கவில்லை என்பது தான் வரலாற்று உண்மை.. சமூகத்தில் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்துவது, வன்முறையை உருவாக்காது போன்றவை தான் ராமர் பெயரால் நடக்கின்றன. ஆகவே அதனை முறியடிக்கவே ராமாயணத்தை தெருவில் இழுத்துவிட வேண்டி இருக்கின்றது ..
//அதாவது, நீ இல்லாமல் நான் அயோத்தி சென்றால் எனக்கு அவமானம் மீறும் என்பதாலேயே நான் உன்னை ராவணனிடம் போர் செய்து மீட்டேன் என்று ஸ்ரீராமர் கூறுவதை கேளுங்கள்… இவர் தான் தர்மத்தின் அவதாரம் நன்றாக போற்றி கொள்ளுங்கள் இந்துக்களே ..//
“அவமானம் மீறும்”
அவமானம் நேரும் என்று பாடம் கொள்ளவும்
ஒரு திருத்தம்.
War cry = கோசம்/ முழக்கம்
கம்பனே ஒரு டுபாக்கூரு..! மூல ராமாயணத்தில் வால்மீகி விவரித்திருக்கும் ராமன் ராப்பகலாய் மது போதையிலும் அந்தப்புர பெண்களுடன் சல்லாபத்திலும் திளைத்திருந்தது, சீதையுடன் மாட்டுக்கறியை நெய்யில் வறுத்து சாப்பிட்டது, சூத்திர சம்பூகனை வதம் செய்தது, சீதையின் வயிற்றில் வளரும் கரு தனதில்லை என்ற சந்தேகம் கொண்டு நிறைமாத கர்ப்பிணியை காட்டில் விட்டு வந்தது, காட்டில் இரட்டை குழந்தைகளைப் பெற்று சீதை மாண்டு போனது போன்ற விசயங்களை மறைத்து (சினிமா) எம். ஜி.ஆர் போல் கம்பன் ராமனை கதாநாயகனாக்கி பாடியிருக்கிறார்.
பார்ப்பன அடிமை கம்பனின் வடிகட்டிய ராமனின் பெருமையே இப்படி நாறுகிறதென்றால் ரெபெக்கா மேரி அக்கா வால்மீகியை எல்லாம் எடுத்துப் போட்டால்…….
Rebecca mary: //ஆட்சி சமநீதி வழங்குவதாக அமைய வேண்டும்.-யங் இந்தியா// மகாத்மா காந்தி சொல்லிய ராமராஜ்யத்தை பற்றி மாற்று கருத்து யாருக்குமே இல்லை…
பிரச்னை எங்கே ஆரம்பிக்கிறது என்றால் கிறிஸ்துவர்கள் இந்தியாவை கிறிஸ்துவ தேசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல பொய்களை பரப்பி வேண்டும் என்றே ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தி, ஹிந்து கடவுள்களை சாத்தான் என்று சொல்லும் போது இயல்பாக அங்கே பிரச்னை உண்டாகிறது. ஆனால் நாம் ஒருவருமே இது பற்றி எல்லாம் பேச மாட்டோம்.
காஷ்மீரில் அல்லாஹு அக்பர் என்று சொல்பவர்கள் மட்டுமே வாழமுடியும் என்று சொல்லி இன்றும் கூட வன்முறையில் ஈடுபடுபவர்களை பற்றி எதுவுமே பேசமாட்டோம்… இந்தியாவில் மீண்டும் இஸ்லாமிய ஆட்சியை கொண்டு வர வேண்டும் என்று இஸ்லாமிய அமைப்புகள் போர் முழக்கம் இடுவதை பற்றி நாம் வாய் திறக்க மாட்டோம்.
உங்களை போன்றவர்கள் வெகு சுலபமாக ராமனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்… சரி அதேபோல் உங்களால் ஏன் உங்களால் கிறிஸ்துவ அல்லது இஸ்லாமிய கடவுள்களை பற்றி பேச முடிவது இல்லை ? இஸ்லாமிய கிறிஸ்துவ மதங்களில் எல்லாம் பெண் அடிமைத்தனம் இல்லையா ? ஏன் இந்த போலித்தனம் ?
உங்களை போன்றவர்கள் ராமனை பற்றியும் ராமாயணம் பற்றியும் ஒன்றுமே தெரியாமல் அவதூறாக பேசும் போது என்னை போன்ற கடவுள் நம்பிக்கையாளர்களுக்கு வேதனையை உண்டாக்குகிறது, ஆனால் கோபம் கிடையாது, காரணம் ஹிந்து மதத்தின் அடிப்படையே கடவுள் இருப்பை பற்றிய கேள்விகளை கேட்டு அதன் அடைப்படையில் கடவுளை உணர வேண்டும் என்பது தான், அதனால் தான் இயல்பாகவே பெரும்பான்மையான ஹிந்துக்கள் அமைதியாக இருக்கிறார்கள் ஆனால் அந்த அமைதியை குலைப்பது கிறிஸ்துவ, இஸ்லாமிய மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.
தமிழகத்தில் ராமலிங்கத்தை கொலை செய்தது போல், இந்தியாவில் பல இடங்களில் இஸ்லாமிய கிறிஸ்துவ அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுகின்றன. ஆனால் ஒருவருமே அது பற்றி பேசுவதில்லை, அவ்வுளவு ஏன் தமிழகத்தையே எடுத்துக்கொள்வோம் இராமலிங்க கொலையை பற்றி எத்தனை பத்திரிகைகள், அரசியல் கட்சிகள் அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன????? ஒருவருமே இல்லை… இது தான் யதார்த்தம்.
என் பார்வையில் இந்த போலிமதச்சார்பின்மை தான் பிரச்சனையின் மூல காரணம்.
==============
இந்த முக்கிய விஷயத்தை யாருமே விவாதிக்காமல் ஹிந்துக்கள் அமைப்புகள் வன்முறை என்று சொல்லி மூல காரணத்தை மூடி மறைத்து கொண்டு இருக்கிறோம்.
==============
Manikandan …
//பிரச்னை எங்கே ஆரம்பிக்கிறது என்றால் கிறிஸ்துவர்கள் இந்தியாவை கிறிஸ்துவ தேசமாக மாற்ற வேண்டும் என்பதற்காக பல பொய்களை பரப்பி …//
அப்படி ஒருவேளை இந்தியாவை கிறிஸ்தவ நாடாக மாற்ற நினைத்திருந்தால் வெள்ளை காரன் இருந்த போதே அதனை செய்து முடித்திருப்பார்கள்.. சும்மா இந்த வீண் சால்ஜாப்புகள் வேண்டாம் …
//உங்களை போன்றவர்கள் வெகு சுலபமாக ராமனை செருப்பால் அடிக்க வேண்டும் என்று சொல்கிறீர்கள்… சரி அதேபோல் உங்களால் ஏன் உங்களால் கிறிஸ்துவ அல்லது இஸ்லாமிய கடவுள்களை//
எந்த கிறிஸ்தவ நாட்டிலும், இயேசு வாழ்க(Hail Jesus) என்று கூற சொல்லி யாரும் யாரையும் தாக்குவதில்லை, அதே போன்று வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் எந்த வேற்று மதத்தவரையும் அல்லாஹு அக்பர் என்று முழக்கமிடுமாறு யாரையும் வறபுறுத்துவது கிடையாது.. Norway Finland Spain போன்ற நாடுகளில் இந்தியர்கள் குறிப்பாக இந்துக்கள் நன்றாகவே வாழ்கிறார்கள் ….
//ஹிந்து மதத்தின் அடிப்படையே கடவுள் இருப்பை பற்றிய கேள்விகளை கேட்டு அதன் அடைப்படையில் கடவுளை உணர வேண்டும் என்பது தான், அதனால் தான் இயல்பாகவே பெரும்பான்மையான ஹிந்துக்கள் அமைதியாக இருக்கிறார்கள் …//
கிழித்தார்கள் .. இந்துக்கள் என்று பொத்தாம் பொதுவாக சொல்ல வேண்டாம், தமிழ்நாட்டில் மதவெறிக்கு இடமில்லை அவ்வளவே.. தமிழர்கள் எப்போதும் அறிவுபூர்வமாக சிந்திப்பவர்கள்
மத வெறியர்கள் கிடையாது, அதே போன்று ஓரளவு கேரளத்திலும் அப்படியே… அதனை கடந்து மற்ற மாநிலங்கில் உள்ள யாருக்கும் சகிப்பு தன்மை என்பதே கிடையாது. கவுரி லங்கேஷ் கல்புர்கி போன்றவர்களை படுகொலை செய்தது யார்?.. சுதந்திர இந்தியாவின் முதல் படுகொலையான காந்தியாரின் படுகொலையினை நடத்தியது யார்? 2008 ஒரிசா கந்தமால் மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது கொலைவெறி தாக்குதல் மற்றும் கும்பல் வன்முறைகளை கட்டவிழ்த்து விட்டது எந்த கும்பல்??? ஆகவே இந்துமதம் சகிப்பு தன்மை கொண்ட மதம் என்று இங்கு வந்து நீட்டி முழக்க வேண்டாம் …
உங்களை போன்றவர்களுக்கு பொய் பேசுவதற்கு கொஞ்சம் கூட மனசாட்சி உறுத்தல் இருக்காது போல… மதவாத கிறிஸ்துவர்களிடம் இருக்கும் வக்கிர மனநிலை உங்களிடமும் இருக்கிறது….
Goa inquisition பற்றி கூகிள் செய்து பாருங்கள்… இந்தியாவை கிறிஸ்துவ மயமாக்க நடத்தப்பட்ட கொடூரங்கள் உங்களுக்கு தெரியும்.
///எந்த கிறிஸ்தவ நாட்டிலும், இயேசு வாழ்க(Hail Jesus) என்று கூற சொல்லி யாரும் யாரையும் தாக்குவதில்லை/// அப்படியா… பிரேசில் ஒரு சிறந்த உதாரணம், இங்கே நீங்கள் ஹிந்து கடவுளை சாத்தான் என்று சொல்வது போல் கிறிஸ்துவ கடவுளை சாத்தான் என்று சொன்னால் நீங்கள் பிரேசிலில் உயிரோடு இருக்கவே முடியாது… மிக சமீபத்தில் சொந்த மகனே கிறிஸ்துவத்திற்கு எதிராக நடந்து கொண்டான் என்று பெற்ற தாயே மகனை கொன்று இருக்கிறார். இதன் பிறகு தான் Radical Christian பற்றிய விவாதம் சிறிய அளவில் ஆரம்பித்து இருக்கிறது.
இயேசு வாழ்க(Hail Jesus) என்று கூற வேண்டும் என்பதற்காக தான் பிரேசில் மெக்ஸிகோ வட அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும் ரத்த ஆறே ஓடியது. கிறிஸ்துவம் இங்கே நிகழ்த்திய கொடுமைகள் எல்லாம் மனித இனத்தின் இருண்ட பக்கங்கள்.
//வளைகுடா நாடுகளில் வேலை பார்க்கும் எந்த வேற்று மதத்தவரையும் அல்லாஹு அக்பர் என்று முழக்கமிடுமாறு யாரையும் வறபுறுத்துவது கிடையாது//
ஏம்மா உங்களுக்கு எல்லாம் கொஞ்சம் கூட மனசாட்சியே கிடையாதா ? அல்லாஹு அக்பர் சொல்லாத அனைவருமே இஸ்லாமிய நாடுகளில் இரண்டாம்தர குடிமக்கள் தான், பாகிஸ்தானில் பல ஆயிரம் ஹிந்து கோவில்கள் இருந்தது அவை அனைத்தும் இடிக்கப்பட்டு இன்று மொத்தமே 20 கோவில்கள் தான் உள்ளது (அதுவும் எப்போது வேண்டுமானாலும் இடிக்கப்படலாம்). அல்லாஹு அக்பர் சொல்லாத யாருமே இஸ்லாமிய நாடுகளில் ஆட்சி அதிகாரத்திற்கு வர முடியாது… எந்த ஒரு இஸ்லாமிய நாட்டிலும் அல்லாஹு அக்பர் சொல்லாத ஒருவர் அதிபராகவோ அல்லது பிரதமராகவோ வர முடியாது அவர்களின் அரசியல் சட்டமே அல்லாஹு அக்பர் சொல்வது கட்டாயம் என்று கூறுகிறது.
==============
உலகின் ஒரே உண்மையான மதசார்பின்மை நாடு இந்தியா மட்டும் தான், அதற்கு முழு காரணம் ஹிந்துக்கள்… இந்தியாவில் இஸ்லாமியர்களோ அல்லது கிறிஸ்துவர்களோ பெரும்பான்மையாக இருந்தால் மதசார்பின்மை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது… இப்போது உங்களை போன்றவர்கள் ஹிந்துக்களை தொடர்ச்சியாக சீண்டி கொண்டே இருப்பதால் தான் மதவாதம் ஹிந்துக்களிடம் வளர்ந்து கொண்டு இருக்கிறது.
இந்தியாவில் இப்போது நடந்து கொண்டு இருக்கும் மதவெறி செயல்களுக்கு போலிமதச்சார்பின்மை பேசி ஹிந்துக்களை அவமதிக்கும் கூட்டம் தான் முழு பொறுப்பு ஏற்க வேண்டும்.
===============
கவுரி லங்கேஷ் போன்றவர்கள் தொடர்ச்சியாக பல வருடங்களாக ஹிந்து கடவுள்களை அவமதித்து ஹிந்துக்களின் மனம் நோகும்படி நடந்து கொண்டார்கள் அப்போது எல்லாம் அவருக்கு ஒன்றுமே ஆகவில்லை ஆனால் கவுரி லங்கேஷ் தனது கடைசி டீவீட்டில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக ஒரு கருத்தை சொன்னார். அடுத்த நாளே அவர் கொல்லப்பட்டார்… கவுரி லங்கேஷ் போன்றவர்களின் கொலைக்கு ஹிந்து அமைப்புகள் காரணம் என்று சொல்வதை என்னால் ஏற்க முடியவில்லை, வினவு போன்றவர்கள் சாட்சி ஆதாரம் எதுவுமே இல்லாமல் எடுத்த உடனே ஹிந்து அமைப்புகள் தான் காரணம் என்று சொல்வது எதையோ மூடி மறைப்பது போல் இருக்கிறது.
நான் இந்த குற்றசாட்டை நம்பவில்லை, நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு தான் உண்மை தெரியும்.
@ Manikandan…
//அல்லாஹு அக்பர் சொல்லாத அனைவருமே இஸ்லாமிய நாடுகளில் இரண்டாம்தர குடிமக்கள் தான், பாகிஸ்தானில் பல ஆயிரம் //
//இயேசு வாழ்க(Hail Jesus) என்று கூற வேண்டும் என்பதற்காக தான் பிரேசில் //
மாட்டு மூளை சங்கிகள் என்று உங்களை சொல்வது மிக சரியாக தான் இருக்கிறது.. நான் சொன்னது என்ன, இங்கிருந்து வேலை தேடி அந்த நாட்டிலேயே Settle ஆனவர்கள் எத்தனை பேர் தாக்குதலுக்கு உள்ளானார்கள் என்று தான் .. உங்கள் பார்ப்பன அம்பிகள் பொறுக்க சென்ற அமெரிக்காவிலும் ஐரோப்பா கனடா போன்ற நாடுகளில் என்ன மத ரீதியான தாக்குதல்களை சந்தித்துவிட்டார்கள்.. அதே போன்று துபாய் கத்தார் போன்ற நாடுகளில் பணி செய்யும், அங்கேயே குடியுரிமை பெற்று வாழும் லட்ச கணக்கான இந்தியர்களை பிற மத மக்களை என்னென்ன மத ரீதியான தாக்குதல்கள் செய்துவிட்டார்கள் .. முடிந்தால் கூறவும் ..
நீங்கள் சொல்லும் நாடுகளை பாருங்கள் பாகிஸ்தான், வங்கதேசம் பிரேசில் போன்ற கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய நாடுகள் தான் அவ்வாறு செய்கின்றன .. ராமனின் பிள்ளைகள் இருக்கும் வடஇந்தியாவும் அப்படி பட்ட ஒரு முன்னேறாத பண்படாத காட்டுமிராண்டி சமூக மக்களை கொண்டது தான் என்று இதன் மூலம் ஏற்றுக் கொண்டதற்கு நன்றி..
அதெல்லாம் இருக்கட்டும் இன்னும் நான் கேட்ட 2 கேள்விக்களுக்கு பதில் வரவில்லை .. ராமன் பூமியில் பிறந்ததும் சாதாரண மனிதனாக மாறினான் என்பதற்கு என்ன ஆதாரம் இருக்கிறதுக்கு, முடிந்தால் கம்பன் வால்மீகி மூலம் நிரூபிக்கவும் … அதே போன்று சம்புகன் பெண் ஆசையினால் தான் கொலை செய்ய பட்டான் என்பதற்கும் போதிய ஆதாரம் அளிக்கவில்லை, நீங்கள் கொடுத்த சுலோகம் ஒரு டூபாக்கூரு அதில் எதுவுமில்லை … ஆகவே நேர்மையான ஆதரங்களை அளிக்கவும்
//அதெல்லாம் இருக்கட்டும் இன்னும் நான் கேட்ட 2 கேள்விக்களுக்கு பதில் வரவில்லை .. //
ஆக மொத்தம் நான் ராமனை பற்றி சொன்ன கருத்தை படிக்காமலே பேசி கொண்டு இருக்கிறீர்… விளங்கிடும், முதலில் ராமர் மனிதராக பிறந்தது பற்றி கம்பர் பாடலை பற்றி எழுதி இருக்கிறேன் அதை படித்து விட்டு வரவும்.
//கல்வியிலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய நாடுகள் தான் அவ்வாறு செய்கின்றன//
உங்கள் பொய்களுக்கு ஒரு அளவே கிடையாதா ? பிரேசிலின் தனி நபர் வருமானம் சீனாவை விட அதிகம் (கிட்டத்தட்ட 10 ஆயிரம் டாலர்) பிரேசிலின் கல்வி அறிவு 90 சதவீதத்திற்கும் மேல் அதனால் நீங்கள் பிரேசிலை பொருளாதாரம் மற்றும் கல்வியில் பின்தங்கிய நாடு என்று சொல்ல முடியாது.
நான் ஏற்கனவே சொன்னது போல் உங்களை போன்ற கிறிஸ்துவர்களிடம் ஒருவித வக்கிர மனநிலை உள்ளது… உலகம் முழுவதும் கிறிஸ்துவம் பெரும் அழிவை நிகழ்த்தியதற்கு முக்கிய காரணம் இந்த வக்கிர மனநிலை தான்.
கௌரி லங்கேஷை மட்டுமல்ல நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே என்று தொடர்ச்சியாக பலரை கொன்று குவித்துள்ளது சனாதன தீயசக்திகள்.. சுதந்திர இந்தியாவின் முதல் படுகொலையை நடத்தி முடித்ததே கோட்ஸே என்கிற ஒரு பார்ப்பன இந்து தீவிரவாதி தான் ..சகிப்புத்தன்மையை பற்றி பேசுவதற்கு, காவிகளுக்கு எந்த அருகதையும் கிடையாது ..
இது அவதூறாக இருக்கவே வாய்ப்புகள் அதிகம் என்பது என் கணிப்பு, நீதிமன்ற தீர்ப்பு வராதவரையில் இந்த அவதூறுகளை நம்ப போவதில்லை. உங்களை போன்ற கிறிஸ்துவர்களும் இஸ்லாமியர்களும் வினவு போன்ற கம்யூனிஸ்ட்களும் அவதூறுகளை பரப்ப எந்த நிலைக்கு வேண்டுமானாலும் செல்விர்கள். அதனால் உங்களின் வார்த்தைகளை நம்ப போவதில்லை, நீதிமன்ற தீர்ப்பு வரட்டும்.
//கவுரி லங்கேஷ் தனது கடைசி டீவீட்டில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக ஒரு கருத்தை சொன்னார். அடுத்த நாளே அவர் கொல்லப்பட்டார்… //
கம்யூனிஸ்ட் பத்திரிகையிலேயே மாதக்கணக்கில் கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக எழுதி வருகின்ற மணிகண்டன் இன்னும் உயிரோடுதானே இருக்கின்றது…
கவுரி லங்கேஷ் urban நக்சல், அவரின் கடைசி ட்வீட் (பொய் என்று தெரிந்தே பொய்களை பரப்பினோம்) ஒட்டுமொத்த இந்திய கம்யூனிஸ்ட்களின் நேர்மையாளர்கள் என்ற பிம்பத்தை அடித்து நொறுக்கிவிட்டது… அவர் மேலும் இது போல் பேசுவதால் இழப்பு கம்யூனிஸ்ட்களுக்கு தான்.
//கம்யூனிஸ்ட்களுக்கு எதிராக எழுதி வருகின்ற மணிகண்டன் இன்னும் உயிரோடுதானே இருக்கின்றது…//
கார்த்திகேயன் வினவு தளத்தில் கருத்து பதிவு செய்வதில் ஒரு பயத்தை உருவாக்கி இருக்கிறீர்கள் 🙁
@ Manikandan…
பொய்யை மூலதனமாக வைத்து தான் மோடி பிரதமரானார், அவரின் பக்தகோடி நீங்கள் மட்டும் என்ன உண்மையா பேச போகிறீர்கள்.. பிரேசில் வறுமை நாடு தான், வேண்டுமானால் வளருகின்ற மூன்றாம் உலக என்று கூறலாம் …மற்றபடி அது வளர்ந்த நாடெல்லாம் கிடையாது , வடஇந்தியாவை போல என்று சொல்லலாம் அவ்வளவே … பிரேசிலின் தலைநகரத்திலேயே குப்பங்களிலும் சேரிகளிலும் பெருவாரியான மக்கள் மிக மோசமான வாழ்க்கையை தான் நடத்தி கொண்டிருக்கிறார்கள் அதற்க்கு பவேலா (favela) என்று பெயர் உ.பி, பீகார், ம.பி, சட்டிஸ்கர் போன்று தான் இருக்கும். கீழே ஆதாரம் கொடுத்துள்ளேன் சென்று பார்க்கவும்.. கிட்டத்தட்ட வடஇந்தியா போன்று தான் அதுவும் …
Poverty in Brazil is most visually represented by the various favelas, slums in the country’s metropolitan areas and remote upcountry regions that suffer with economic underdevelopment and below-par standards of living. In Rio de Janeiro, about a fifth of its population of six million live in several hundred favelas, situated on steep, neglected land largely beyond the control and services of city authorities.
புகைப்பட ஆதாரங்கள்:- https://en.wikipedia.org/wiki/Social_issues_in_Brazil#/media/File:Favelas-portoalegre.jpg
https://en.wikipedia.org/wiki/Social_issues_in_Brazil#/media/File:Entrada_de_S%C3%A3o_Sebasti%C3%A3o_(DF).jpg
https://en.wikipedia.org/wiki/Social_issues_in_Brazil#/media/File:Favela_em_Teresina,_Piau%C3%AD,_Brasil.jpg
//ஆக மொத்தம் நான் ராமனை பற்றி சொன்ன கருத்தை படிக்காமலே பேசி கொண்டு இருக்கிறீர்…//
நீங்கள் கூறியதை நான் அப்போதே படித்துவிட்டேன், ஏன் கேள்வி அதுவல்ல மானிட பிறப்பு எடுத்ததால் மனித இன்ப துன்பங்களில் அவரும் சிக்கி கொண்டார் என்று எங்கே கூறி இருக்கிறார்கள் என்பதை சொல்லவும். ஏனென்றால் சாதாரண மனிதனின் காலடி பட்டு ஒரு கல் பெணுருவாக மாறாது(அகலிகை). ஆகவே, பார்ப்பன மோசடிகளை இங்கு ரொம்ப காட்ட வேண்டாம் .. ஏற்கனவே, நிறைய அம்பலப்பட்டாச்சு
ராமனை பற்றி தவறாக பேசவேண்டும் என்பது என்னுடைய எண்ணம் கிடையாது .. ராமரின் பெயரை சொல்லி நடக்கும் அநியாயங்களை பற்றி பேசும்போது ராமரையும் சேர்த்து விமர்சனம் செய்து பேச வேண்டியதாகிறது. அதன் அடிப்படையில் தான் உணர்ச்சி வசப்பட்டு பேசிய சில வார்த்தைகளும். எது எப்படி இருப்பினும் ராமனை பற்றி சில தடித்த வார்த்தைகளை நான் பேசியது தவறு தான்.. ஒருவரின் நம்பிக்கையை தரம் தாழ்த்தி பேசுவது முறையாகாது ..மோடி மற்றும் சங்கபாரிவாரங்கள் ஆட்சி அதிகாரம் கிடைத்த திமிரில் போடும் ஆட்டத்திற்காக, மக்களின் எளிய நம்பிக்கைகளை நான் கொச்சை படுத்த விரும்பவில்லை …
என்னுடைய கல்லூரி நாட்களில் என்னுடைய தோழிகள் திருப்பதிக்கு பழனி திருச்செந்தூருக்கு சென்றால் எனக்காகவும் பிரார்த்தித்து என் கையில் திருப்பதி கயிற்றை கட்டிய அன்பை என்னால் மறக்க முடியாது. அதனால் தான் எனக்கு இந்து மதத்தின் மீது மிக பெரிய அன்பும் புரிதலும் உண்டாயிற்று, இந்த விவாதத்தினூடாக அதனை நான் சிதைக்க விரும்பவில்லை. ஆகவே, ராமரை செருப்பால் அடிப்பேன் என்று பேசிய வார்த்தைக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் .. இதனால் உங்களின் மனம் புண்பட்டிருப்பின் என் வருத்தங்களை தெரிவித்து கொள்கிறேன்.
மூவுலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் தான் போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே
திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே!….
நன்றி …