
அரசுப் பள்ளிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமனம் செய் || புமாஇமு அறிக்கை
காலியான ஆசிரியர் பணியிடங்களை நிரப்பி, பணி நிரந்தரம் செய் ! அரசு பள்ளிகளில் அதிகமாக மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றுள்ள இந்த புதிய சூழ்நிலையில், கூடுதல் நிதி ஒதுக்கி பள்ளிகளின் தரத்தை மேம்படுத்து !
பள்ளி மேலாண்மை குழு என்றால் என்ன? இக்குழுவில் 80 சதவிகிதம் பேர் பெற்றோர்கள் இடம் பெற்றிருக்க வேண்டும். அவர்களில் 50 சதவிகிதம் பெண்கள் இடம் பெறவேண்டும். மீதமுள்ள 20 சதவிகிதம் பேரில் கல்வியாளர்கள், அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பள்ளி ஆசிரியர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வாலர்கள் உறுப்பினர்களாக இருக்க வேண்டும். அவர்களிலும் 50 சதவிகிதம் பெண்கள் இடம்பெற வேண்டும், இந்தக் குழு மாதம் ஒருமுறை கூட வேண்டும் அதில் பள்ளி மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்துவது, மாணவர்களுக்குத் தேவையானதைப் பூர்த்திசெய்து கொடுப்பது ஆகியவற்றை கவனிக்க வேண்டும். குறிப்பாகப் பெற்றோர்கள் பார்வையில் பள்ளி நடைபெற வேண்டும் என்பதுதான் பள்ளி மேலாண்மை குழுவின் நோக்கம்…
கல்வியாளர்கள் இதில் பங்கெடுத்து முன்நிற்கின்றனர்.களப்பணிக்கு இதையும் கணக்கிலெடுக்கவும்.
////www.minnambalam.com/politics/2021/11/29/15/surya-agaram-foundation-tamilnadu-govt-school-education-department-school-management-committee////