90 மில்லி பாக்கெட் சாராயம் அறிமுகம்: திமுக அரசின் தாலியறுப்பு திட்டம்!

குவாட்டருக்கு காசு இல்லாமல், பார்ட்னருக்காக காத்திருக்கும் குடிமகன்களுக்கு, 90 மில்லியில் பாக்கெட் சாராயம்.

கட்டிட வேலை போன்று கடுமையான பணி செய்பவர்களை கவனத்தில் கொண்டு, காலை 7.00 மணிக்கே கடையைத் திறப்பது பற்றி யோசித்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அமைச்சர் முத்துசாமி.

ஏழை அடித்தட்டு குடும்பப் பெண்களின் தாலியறுத்து, அரசு கஜானாவை நிரப்பிக்கொள்ள நினைக்கிறது திமுக அரசு!

ஒரு பக்கம் 500 டாஸ்மாக் கடைகள் மூடல் என விளம்பரம்; இன்னொரு பக்கம் தானியங்கி விற்பனை இயந்திரம், பாக்கெட் சாராயம்…

“ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக்கை மூடுவோம்” என சொல்லிவிட்டு, நாங்கள் சொல்லவே இல்லை என நாக்குமாறி நாடகமாடும் திமுக அரசு இதற்கு மேலும் செய்யும்!

மக்கள் போராட்டங்களே, டாஸ்மாக்கை மூடும்!
“மூடு டாஸ்மாக்கை” என மீண்டும் வீதிக்கு வருவோம்!

புதிய ஜனநாயகம்
11.07.2023

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க