மார்ச் 20, 1927 அன்று மகாராஷ்டிராவில் அம்பேத்கர் தலைமையில் திரண்ட ஆயிரக்கணக்கான தலித் மக்கள் சௌதர் குளத்தில் நீரை அள்ளிப் பருகி, பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கும் உரிமைக்காகப் போராடினர். இது அச்சமயத்தில் பார்ப்பனிய சாதியக் கொடுமைகளுக்கு எதிராக தலித் மக்களிடையே ஏற்பட்ட எழுச்சியின் துலக்கமான வெளிப்பாடாகும்.
ஒரு நூற்றாண்டு கடந்த பிறகும் இன்றும் பொதுக்குளத்தில் இறங்கியதற்காகவும் பொதுக் குடிநீரைப் பருகியதற்காகவும் தலித் மக்கள் வேட்டையாடப்படுகின்றனர்; அவர்களின் குடிநீரில் மலம் கலக்கப்படுகிறது. இந்தச் சாதி ஆதிக்கத்திற்கு எதிராகத் தமிழ்நாடு உள்ளிட்டு இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் தலித் மக்களிடையே எழுச்சி ஏற்பட்டு வருகிறது.
இந்த எழுச்சியை ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க. பாசிச கும்பலுக்கு எதிரான எழுச்சியாக வளர்த்தெடுக்க வேண்டியதும், தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான ஒவ்வொரு தாக்குதலுக்கு எதிராகவும் களமாட வேண்டியதும் பாசிச எதிர்ப்பு ஜனநாயக சக்திகளின் கடமையாகும்!

சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram, Threads











