ஒக்கி புயல் : குமரி மீனவர்களின் உள்ளக் குமுறல் – வீடியோ
ஒகியின் தாண்டவம் குமரி மாவட்ட விவசாயத்தை நசுக்கி நசமாக்கி விட்டது. இன்னொரு பக்கம் அரபிக்கடலோரத்தை அண்டி வாழ்ந்த மீனவர்களின் வாழ்வை துடைத்து அழித்து விட்டுச் சென்றிருக்கிறது.
போர்னோ : இருளில் சிக்கும் இளமை – புதிய கலாச்சாரம் மின்னூல்
மெரினா போராட் டம் போன்ற பல சமூக நடவடிக்கைகளுக்கான பயனுள்ள கருவியாக கிடைத்த இணையம் மற்றும் சமூக வலைத்தளங்களின் இருண்ட பக்கம் போர்னோ. இணையத்தில் உலவுவோரை திட்டமிட்டு ஈர்க்கும் போர்னோ தளங்கள், அதில் சிலரையாவது அடிமைப்படுத்துகின்றன.
ஆய்வு செய்வது அறிவியல் – ஆராயாதே என்கிறது மதம் – கருத்துப் படம்
இந்த உலகின் இயக்கத்தை ஆய்வு செய்யும் இயல் அறிவியல் !
இந்த உலகை ஆய்வு செய்யாதே எனும் கட்டளையே மத நம்பிக்கை !
துயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் !
இப்போது கூட தூத்தூர் கிராம இளைஞர்கள், வக்கற்ற இந்த அரசை முழுமையாக நம்பவில்லை. தங்களின் சொந்த முயற்சியில் GPS - VHF கருவிகளின் மூலம் வெளிநாட்டுக் கப்பல்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை !
“ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் இதுவரை பணியாளர்களுக்கு குறைந்தது 3,243 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் கொடுக்கவில்லை. வரவிருக்கும் காலங்களில் இந்த அளவு அதிகரிக்கும்”
பாகிஸ்தான் வரலாற்றில் மறைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டம்
ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மலைப் பிரதேசத்தில், நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயக் கூலிகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். அஷ்ட நகர் பகுதியில் நடந்த போராட்டம் பற்றிய முழுமையான ஆவணப் படம்
நேரடி ஒளிபரப்பு: PRPC சென்னை கூட்டம் – அனைத்து சாதி அர்ச்சகர்
சென்னை, தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் 02-12-2017 சனிக்கிழமை மாலை 5:மணியளவில் நடைபெறும் கருத்தரங்கத்தை நேரடியாக வினவு தளத்திலிருந்து (Youtube, Facebook) ஒளிபரப்பு செய்கின்றோம்.
மோடியின் தில்லிதான் குற்றங்களில் நம்பர் ஒன் !
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தில்லியில் மட்டும் 13,803 எண்ணிக்கையில் நடந்திருக்கின்றன. அதாவது தினசரி 38 குற்றங்கள் நடக்கின்றன. தில்லிக்கு அடுத்த படியாக மும்பையில் 5,128 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன.
உயர் நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம் : செவிலியர் போராட்டத்திற்கு தடை !
போராட்டத்தை கைவிட்டால் தான் உங்கள் தரப்பு வாதங்களை கேட்க முடியும் என்றும், “ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லாம். ஆனால் போராட்டம் நடத்தக் கூடாது” என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.
வீ – அலைக்கற்றை (V – Band) முறைகேடு !
தொலைத் தொடர்புத்துறை 2015 -ம் ஆண்டு உரிமம் இல்லாமல் அலைக்கற்றை வழங்குதல் தொடர்பாக ஒரு பரிந்துரையை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) கேட்டிருந்தது. அனால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலையே ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருந்தது.
குடிநீர் இல்லை கழிப்பறை இல்லை ! போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு !
மெரினா போராட்டம் போல முடிவு தெரியும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம் என்று போராடும் அந்த செவிலியர்களுக்கு உணவு கொடுக்கவோ, கழிப்பறை ஏற்பாடுகளை செய்து தரவோ, போராட்டத்திற்கு ஆதரவு தரவோ அங்கு யாருமில்லை.
மோடி ஆட்சியில் வளர்ந்த ஒரே துறை தனியார் மருத்துவம் !
இந்தியாவில் உள்நோயாளிக்கான சராசரி செலவு 18,268/- ரூபாய் என்கிறது தே.மா.ஆ அலுவலகத்தின் 2014 -ம் ஆண்டு ஆய்வறிக்கை. ஆயினும் கிராமம் - நகரம் மற்றும் அரசு - தனியார் என்று பகுத்து பார்க்கும் போது அதில் பாரிய வேறுபாட்டை நாம் காணலாம்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா ? டிசம்பர் 2 PRPC கூட்டம்
கூட்டத்தற்கு அனைவரும் வாருங்கள் - சிறப்புரை தோழர் மருதையன், ராஜு, நாள்: 02.12.2017, சனிக்கிழமை மாலை 5.00 மணி, இடம்: தக்கர் பாபா வித்யாலயா சமிதி, வெங்கட நாராயணா சாலை தி.நகர். சென்னை.
நவம்பர் 7 – இங்கு வரும் ! ம.க.இ.க கலை நிகழ்ச்சி வீடியோ
ம.க.இ.க. மையக் கலைக் குழுவினரின் புரட்சிகரப் பாடல்களும், இசை சமர் பறையிசைக் குழுவின் தப்பாட்டமும், சிலம்பாட்டமும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.
ஒப்பந்த செவிலியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு !
காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களை விட அதிக நேரம் பணியாற்றும் படியும் இவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த செவிலியர்களை வஞ்சித்து வருகிறது.

























