Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 159

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 8 – இறுதி பாகம் | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

எட்டாம் பாகம் : இந்த தொடரின் இறுதி பாகம்

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!

மீண்டும் இந்தி: வெறும் மொழித் திணிப்பல்ல!

மோடி-அமித்ஷா கும்பல் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல், இந்திய உழைக்கும் மக்கள் மீது தொடுத்துவரும் பல்வேறு தாக்குதலில் ஒன்று, இன-மொழி அடிப்படையிலான தாக்குதலாகும். இவற்றில் முதன்மையானது இந்தி மொழித்திணிப்பாகும்.

பிரதான் மந்திரி கிஷான் பென்சன் யோஜனா, ஜன் தன் யோஜனா, ஸ்வச் பாரத், பேட்டி பச்சோ பேட்டி பதோ, உஜாலா யோஜனா என அரசாங்கத்தின் திட்டங்களையும் சட்டங்களையும் இந்தியில் குறிப்பிடுவது; ஒன்றிய அரசு அலுவலகங்களில் இந்தியை அலுவல் மொழியாக நடைமுறைப்படுத்துவது; இரயில்வே, வங்கிகள் போன்ற ஒன்றிய அரசின் நிறுவனங்களில் இந்தியில் அறிவிப்புப் பலகைகளை அமைப்பது; இரயில் நிலையங்களில் ‘தினம் ஒரு இந்தி வார்த்தை’ என இந்திப் பிரச்சாரம் செய்வது போன்ற பல்வேறு வடிவங்களில் இந்தியைத் திணித்து வருகிறது, மோடி-அமித்ஷா கும்பல்.

இவற்றின் தொடர்ச்சியாக, அண்மையில் ஒன்றிய அரசு வேலைவாய்ப்புகளில் இந்தி தெரிந்தவர்களுக்கு மட்டுமே இடமளிக்க வேண்டும், கலை-அறிவியல் கல்லூரி, தொழிற்கல்வி ஆகியற்றில் இந்தியை பயிற்றுமொழியாக்க வேண்டும் உள்ளிட்ட பரிந்துரைகளை அமித்ஷா தலைமையிலான நாடாளுமன்ற அலுவல் மொழிக்குழு குடியரசுத் தலைவரிடம் அறிக்கையாக அளித்திருக்கிறது. இது நாடு தழுவிய வகையில் ஒரே நேரத்தில் இந்தித் திணிப்பை மேற்கொள்ளும் பெரிய சதித்திட்டமாகும்.

படிக்க : இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினம் – ஆளுநர் ரவியே வெளியேறு சென்னையில் ஆர்ப்பாட்டம்!

இத்துடன், ஏற்கெனவே அரசு அலுவலங்களில் இந்தித் திணிப்பு நடைமுறையில் அரங்கேறி வருகிறது. ஒன்றிய ஆயுதப்படைக்கு அண்மையில் இந்தி மொழியில் மட்டுமே தேர்வு நடத்தப்பட்டிருப்பது இதற்குத் தக்கச் சான்றாகும். மேலும் நீதிமன்றத் தீர்ப்புகளையும் இனி இந்தி மொழியில்தான் வழங்க வேண்டும் என்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது காவி பாசிசக் கும்பல்.

இந்து-இந்தி-இந்தியா: பல்தேசிய இன ஒடுக்குமுறை!

இந்தித் திணிப்பின் அடிப்படை, அகண்ட பாரதம், பார்ப்பன வர்ணாசிரம ஆதிக்கம், சமஸ்கிருத மேலாதிக்கம் என்கிற அடிப்படையிலான ‘இந்து-இந்தி-இந்தியா’ என்ற கோட்பாடாகும்.

இந்த இந்தித் திணிப்பு என்பது தமிழகத்தின் மீது திணிக்கப்படுவதாகவும் அதனை எதிர்த்து முறியடிக்கப்பட வேண்டும் என்றும் நம்மவர்கள் பேசி வருகின்றனர்; இது முழு உண்மையல்ல. இந்தித் திணிப்பு என்பது இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் மேற்கொள்ளப்படுகிறது. மேற்கு வங்கம், கேரளா, தமிழகம், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தாலும், அதனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட வரலாறு தமிழகத்திற்கு மட்டுமே உள்ளது.

1935-லும் 1965-லும் தமிழகத்தில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் இந்தித் திணிப்பு முதன்மையாக மேற்கொள்ளப்பட்ட காலங்களாகும். அந்த முதன்மையான காலங்கள் மட்டுமின்றி, பல்வேறு சந்தர்ப்பங்களில் இந்தித் திணிப்புக்கான முயற்சிகள் நடந்துள்ளன.

தமிழ் மொழியின் மேன்மை, தமிழ்நாட்டின் பார்ப்பன-வேத ஆதிக்க எதிர்ப்பு மரபு காரணமாகத்தான் தமிழகத்தை இந்தியால் அவ்வளவு வேகமாக ஆதிக்கம் செய்ய முடியவில்லை. குறிப்பாக, சமஸ்கிருதத்திற்கு முன்பே தோன்றிய மூத்த மொழி என்பதால் மட்டுமல்ல, உயர்தனிச் செம்மொழியாக தமிழ் தனித்து விளங்குவது அதன் சிறப்பாகும்; எனவேதான் 3,000 ஆண்டுகளாகியும் ஆரிய-பார்ப்பன கும்பலால் தமிழை வெற்றிகொள்ள முடியவில்லை.

இந்த பார்ப்பன-வேத-ஆகம எதிர்ப்பு மரபை நசுக்குவதற்கு மேலிருந்து இந்தி மொழித் திணிப்பு என்ற ஒரு வடிவத்தில் மட்டுமல்ல, தமிழை சமஸ்கிருதத்தின் கிளை மொழி என்று நிறுவுவதற்கான முயற்சிகள் கீழிருந்தும் மேற்கொள்ளப்படுகின்றன. திருவள்ளுவர் உள்ளிட்ட தமிழ் புலவர்களை இந்துத் துறவிகளாகக் காட்டி வரலாற்றைத் திரிப்பது, ‘காவித் தமிழ்ச் சங்கமத்தை’ நடத்தி, ஆன்மிகம்தான் தமிழின் ஆன்மா என்று சித்தரித்தது என பல்வேறு சதி வேலைகளில் மோடி-அமித்ஷா கும்பல் ஈடுபட்டுள்ளது.

இந்தித் திணிப்புக்கு நிகராகவும் இணையாகவும் சமஸ்கிருத வாரம், பல்கலைக் கழகங்களில் சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்குவது, தமிழுக்கு நிகராக சமஸ்கிருதத்தை முன்னிறுத்துவது போன்ற பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொள்கிறது மோடி-அமித்ஷா கும்பல். கடந்த எட்டு ஆண்டுகளில், செத்தமொழியான சமஸ்கிருதத்தின் வளர்ச்சிக்கு ஒதுக்கிய தொகை மட்டும் 1,488 கோடிகளாகும்; அதேநேரம் செம்மொழியான தமிழுக்கு 7,4 கோடி அற்பத்தொகையை ஒதுக்கியுள்ளது; ஒரு செம்மொழிக்கே இந்நிலையென்றால், பிற தேசிய இன மொழிகளின் நிலை இதைவிட மோசமாக உள்ளது.

இவ்வாறு காவி பாசிசக் கும்பல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் தொகுத்துப் பார்க்கும் தமிழின அமைப்புகள், இந்தித் திணிப்பை எதிர்ப்பவர்கள் கூட, தமிழ் மொழியின் மீதான தாக்குதலாக மட்டுமே இன-மொழி கண்ணோட்டத்தில் இருந்து இதனை சுருக்கிப் பார்க்கின்றனர். ஆனால், அவ்வாறு இதனை சுருக்கிப் பார்க்க முடியாது.

ஆதிக்கமும், எதிர்ப்பும்: மொழி என்பது மொழி மட்டுமல்ல!

ஒரே நாடு, ஒரே சந்தை என்ற அடிப்படையில்தான் ஒரே மொழி என இந்தியைத் திணிப்பதும் நடைபெற்று வருகிறது. இந்தித் திணிப்பு நடத்தப்படுவது இது புதிதல்ல. இதற்கு முன்னர், பலமுறை இந்தித் திணிப்புக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

மோடி – அமித்ஷா கும்பலின் தாக்குதல் என்பது பரந்துவிரிந்தது. இந்தி-இந்து-இந்தியா என்ற இந்துராஷ்டிர, அகண்ட பாரத, பார்ப்பன-வர்ணாசிரம ஆதிக்கத்தின் பல்வேறு தாக்குதல்களில் ஒன்றுதான் மொழிகளின் மீதான இத்தாக்குதலாகும். இந்த வர்ணாசிரம கோட்பாட்டின் அடிப்படையில்தான், வெள்ளை ஏகாதிபத்தியத்தின் தயவில் இந்திய அரசியல் அமைப்பும் கட்டியமைக்கப்பட்டது. இது இந்தியாவில் இருக்கும் பல்தேசிய, இன, மொழி உரிமைகளை நசுக்கும் வகையிலேயே கட்டியமைக்கப் பட்டுள்ளது.

மக்கள் நல அரசு என்ற போர்வையில் செயல்பட்டு வந்த இந்த இந்திய அரசியல் அமைப்பானது, மறுகாலனியாக்கக் கொள்கைகளில் விளைவாக பாசிசமயமாகி வருகிறது. 2014-இல் மோடி-அமித்ஷா தலைமையிலான ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசக் கும்பல் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியதில் இருந்து, ஒரே நாடு, ஒரே வரி, ஒரே ரேஷன்கார்டு, ஒரே சந்தை, ஒரே மொழி, ஒரே மதம் என தனது இந்துராஷ்டிரக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி வருகிறது.

இந்த நோக்கத்தில் இருந்துதான், இந்தியத் தொழில்துறையில் மார்வாடி, குஜராத்தி, சிந்தி, பார்ப்பன, பனியா சாதிப் பின்னணி கொண்ட அம்பானி, அதானி, வேதாந்தா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் ஆதிக்கம் நிலைநாட்டப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளிலும் இந்த கும்பலின் ஆதிக்கம் நிலைநாட்டப்படுகிறது. அதானி துறைமுகங்கள் இதற்கு தக்கச் சான்றாகும்.

திராவிடம் பேசப்படும் தமிழகத்திலும் சரி, இடதுசாரி வேடம் பூண்டுள்ள கேரளத்திலும் சரி, அதானிக்கு மட்டும் தடை இல்லை. சேலம் இரும்பாலை முதல், சூரிய மின் தகடு அமைத்தல் என தமிழகத்திலும் கார்ப்பரேட் ஆதிக்கம் இல்லாத இடம் இல்லை. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் மூலமாகவும் தஞ்சையில் மீத்தேன் எடுக்கும் திட்டங்களின் மூலமாகவும் வேதாந்தாவின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது. இந்த கார்ப்பரேட் கொள்ளையர்களுக்காக சொந்த மாநில மக்களைச் சுட்டுத்தள்ளவும் மாநில அரசுகள் தயங்குவதில்லை.

இந்த கார்ப்பரேட் முதலாளிகளின் மறைமுக ஆதிக்கத்திற்கு துணைபோவதுதான் இந்தித் திணிப்பு! தன் வாழ்நாளில் ஜல்லிக்கட்டையே பார்த்திராதவர்கள் ஜல்லிக்கட்டு வேண்டியும், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடிக்கு வெளியிலும், டெல்டாவில் மீத்தேன் எடுப்பதற்கு எதிராக தலைநகரத்திலும் போராட்டங்கள் நடைபெறுகின்றனவே, அதற்குரிய காரணங்களில் ஒன்று தமிழ் மக்களிடையே உள்ள தேசிய இன உணர்ச்சியாகும்.

இந்தி ஆதிக்கத்தை நிலைநாட்டுவதன் மூலம், பல்தேசிய இனங்களை அழித்து ‘ஒற்றை இந்துராஷ்டிரத்தை’ அமைப்பதற்கு பின்னே உள்ளது பார்ப்பன-பனியா கார்ப்பரேட்டுகளின் லாபவெறியே ஆகும்!

ஆரிய பார்ப்பனியத்தின் பாசிச அவதாரம்!

கார்ப்பரேட் முதலாளிகள் பட்டவர்த்தனமான பயங்கரவாதத்தை தொழிற்சாலைகளில் நிலைநாட்டிக் கொள்வதற்கேற்ப, 44 தொழிலாளர் நலச் சட்டங்களை ஒழித்து, 4 தொழிலாளர் சட்டங்களாகச் சுருக்குவதைப் போலவே, மொழிகள் மீதான உரிமைகளும் நசுக்கப்படுகின்றன.

புதிய கல்விக் கொள்கை என்பது இந்தவகையிலான தாக்குதலின் ஒரு அங்கமாகும். பார்ப்பனப் புரட்டுகளை வரலாறாக மாற்றுவது, இந்தியையும் சமஸ்கிருதத்தையும் திணிப்பது மட்டுமல்ல, ஏழை எளிய மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிப்பது, அவர்களை ‘நவீன சூத்திரர்களாக’ மாற்றி ஒடுக்குவதும் இந்த இந்துராஷ்டிர சதித் திட்டத்தில் அடங்கும்.

பொதுத்துறை நிறுவனங்களைக் கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்ப்பது ஒருபுறம் நடக்கும் போதே, பொதுத்துறை நிறுவனங்களில் இந்திப் பேசுபவர்களைத் திணிப்பதும் நடக்கிறது. இது இந்தி மொழித் திணிப்பைப் போன்ற மறைமுகத் தாக்குதலாகும். ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட பிராந்திய மொழி பேசுபவர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்திப் பேசுபவர்களே ஆதிக்கம் புரிகின்றனர். இந்த இந்தி ஆதிக்கமானது பா.ஜ.க. செல்வாக்காக உள்ள குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களிலேயே கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. இன்னும் சொல்லப்போனால், குஜராத்திலும் மகாராஷ்டிரத்திலும் இனவெறியைத் தூண்டித்தான் பா.ஜ.க. செல்வாக்கைப் பெற்றுக்கொண்டது.

தேசிய இன, மொழி அடையாளங்களுக்கு அடிப்படையாக இருக்கும் விவசாயிகள், சிறுதொழில் முனைவோர், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்களின் உரிமைகள் எல்லாம் நசுக்கப்படுவதுடன் இணைந்ததுதான் இந்தித் திணிப்பாகும். குறிப்பாக, ஒரு நாடு, ஒரு சந்தை, ஒரு வரி என்ற அடிப்படையில்தான் ஜி.எஸ்.டி., செஸ் வரி விதிக்கப்படுகிறது. முன்னேறிய தமிழகத்தில் இருந்து அதிக வரி வருவாய் பெற்றுக்கொள்ளும் ஒன்றிய அரசு, தமிழகத்திற்கு உரிய பங்கை வழங்காமல் இழுத்தடிக்கிறது.

படிக்க : ஜனவரி 25: இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகளை உயர்த்திப்பிடிப்போம் ! | மக்கள் அதிகாரம் துண்டறிக்கை!

புதிய கல்விக் கொள்கை, ஜி.எஸ்.டி. போன்ற அனைத்துத் திட்டங்களும் மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் தன்மை கொண்டவையாக அமைந்துள்ளன. மொழியின் மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பவர்கள் இவை குறித்தும் பேச வேண்டும்!

வருகின்ற 2023 ஜனவரி 25, 1965-ஆம் ஆண்டு தமிழகம் நடத்திய வீரம்செறிந்த இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் 58-ஆம் ஆண்டு ஆகும்; தம் இன்னுயிரை கொடுத்தேனும் ஆரிய-பார்ப்பனியத்தின் ஆதிக்க வடிவமான இந்தி, நாட்டின் தேசிய மொழியாவதைத் தடுக்க வேண்டும் என்று போராடிய மொழிப்போர் தியாகிகளை நினைவுகூறும் நாளாகும்; ஒன்றியத்தின் ராணுவத்திற்கும் அஞ்சாமல் தமிழகத்தின் லட்சக்கணக்கான இளம்குருத்துக்கள் வீதியிலிறங்கி இந்தியை விரட்டியடித்த நாளாகும், 500க்கும் மேற்பட்டோர் இப்போரில் தியாகிகளானர்கள்!

ஆரிய-பார்ப்பனியம், ஆர்.எஸ்.எஸ்-பா.ஜ.க, அம்பானி-அதானி பாசிசமாக அவதாரம் எடுத்துள்ள இன்றைய அரசியல் சூழலில், பாசிச எதிர்ப்பு போராட்டத்திற்கு வரலாற்று உணர்வும் இன்றியமையாத் தேவை என்ற வகையில், ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு (மாநில ஒருங்கிணைப்புக் குழு), மக்கள் அதிகாரம் ஆகிய எமது தோழமை அமைப்புகள் அரசியல் பிரச்சார இயக்கத்தைத் தொடங்கியுள்ளன; உழைக்கும் மக்களும் ஜனநாயக சக்திகளும் ஆதரியுங்கள், தங்களையும் இணைத்துக் கொள்ளுங்கள்!

♦ மொழிப்போர் தியாகிகளின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!

♦ ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க., அம்பானி-அதானி பாசிசத்தை முறியடிப்போம்!


ஆசிரியர் குழு,
புதிய ஜனநாயகம்.

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 7 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

ஏழாம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 6 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

ஆறாம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

கால்பந்து : முதலாளித்துவ ஆண்டைகளுக்கான சர்வதேச களம்!

டந்து முடிந்த உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப் போட்டியில் பிரான்ஸை வீழ்த்தி அர்ஜென்டினா வெற்றி பெற்றது. அர்ஜென்டினாவின் வெற்றியும், அந்நாட்டின் முன்னணி வீரர் மெஸ்ஸியும், அந்நாட்டில் நடக்கும் கொண்டாட்டங்களும் சமூக ஊடகங்களில் பிரதான செல்வாக்கு செலுத்தின. தலைநகரான பியூனஸ் அயர்ஸில் பல லட்சக்கணக்கான மக்கள் கூடி கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.

அர்ஜென்டினாவின் வெற்றியும், மெஸ்ஸியும் உலகம் முழுக்க பல்வேறு நாடுகளில் கொண்டாடப்பட்டதை நாம் பார்த்திருப்போம்.  இந்தியாவில் குறிப்பாக கேரளத்தில் கூட கொண்டாட்டங்கள் களைகட்டின. இலவச பிரியாணி கொடுத்து இவ்வெற்றியை கொண்டாடின சில உணவகங்கள். கால்பந்துப் போட்டிக்கு தொடங்குவதற்கு முன்பே மெஸ்ஸிக்கு மிகப்பெரிய கட்அவுட், கடலுக்கடியில் கட்அவுட் என ’வெறித்தனமாக’ கால்பந்து ரசிகர்கள் கொண்டாடியதையும் பார்த்தோம்.

உலகக் கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியைப் பற்றி ஏகபோக முதலாளித்துவ நிறுவனமான கூகுளின் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை குறிப்பிடும்போது இப்படியொரு நெருக்கடியை கடந்த 25 ஆண்டுகளில் கூகுள் சந்தித்ததில்லை என்று கூறினார். அந்தளவுக்கு உலக மக்களின் கவனம் கால்பந்தின் மீது திட்டமிட்டு குவிக்கப்பட்டிருந்தது.

படிக்க : புலம்பெயர் தொழிலாளர்களின் பிணத்தின்மேல் நடக்கும் பிப்ஃபா 2022!

சரி ஏன் கால்பந்தாட்டம் இந்தளவுக்கு கொண்டாடப்படுகிறது? கால்பந்து வீரர்கள் கொண்டாடப்படுகின்றனர்? விளையாட்டு என்ற காரணத்திற்காக மட்டுமா? இயல்பாக இந்தக் கொண்டாட்டங்கள் நடக்கின்றனவா? அதெல்லாம் ஒன்றுமில்லை. கால்பந்து என்பது ஒரு உலகளாவிய அரசியல் விளையாட்டு. பல ஆயிரம் கோடிகளை அள்ளித்தரும் விளையாட்டு என்பதுதான்.

இந்த உலகக் கோப்பையை நடத்தியது கத்தார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக புதிய கால்பந்து மைதானங்கள் மற்றும் புதிய மெட்ரோ, விமான நிலையம், சாலைகள் ஆகியவற்றிற்கான பிரம்மாண்ட கட்டுமானப் பணிகள் அங்கு நடந்து வருகின்றன. இந்த வேலைகளில் லட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

இவ்வாறு ஈடுபடுத்தப்பட்டவர்களில் 6000 க்கும் மேற்பட்டோர் எந்த உரிமையுமற்ற, கடுமையான வேலைநிலைமைகளின் காரணமாக இறந்துள்ளனர். பல லட்சம் கோடிகள் மதிப்பிலான இந்தக் கட்டுமானப் பணிகளில் தொழிலாளர்களின் இரத்தம் வரைமுறையின்றி உறிஞ்சப்பட்டிருக்கிறது.

கத்தாரின் அமீர் குடும்பத்தின் செழிப்பான வாழ்க்கைக்காக புலம்பெயர் தொழிலாளர்களின் பிணங்களின் மீது இந்த கட்டுமானங்கள் எழுப்பப்பட்டன.

இது ஒருபக்கம் என்றால், உலகக் கோப்பைகளை நடத்தும் ’பாரம்பரியமிக்க’ பன்னாட்டு கால்பந்து சங்கங்களது கூட்டமைப்பான பிப்ஃபா (FIFA) எனும் ஏகபோக நிறுவனத்தின் ஊழல் வரலாறு கற்பனைக்கு அப்பாற்பட்டதாக விரிகிறது.  2015 லேயே பிப்ஃபா (FIFA) சந்தி சிரித்தது. அப்போதைய பிப்ஃபா (FIFA)-வின் தலைவரான செப் பிளட்டர்,  2010 உலகக் கோப்பையை நடத்துவதற்கு தென்னாப்பிரிக்காவிடம் 1 கோடி டாலர் லஞ்சம் பெற்றதாகவும், 2018 ல் ரஷ்யாவிலும், 2022 ல் கத்தாரிலும் உலகக் கோப்பையை நடத்த வாய்ப்பளிக்க அந்தந்த நாடுகளிடம் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மோசடி செய்தல், லஞ்சம், நிதித்துறை மோசடி மற்றும் கறுப்புப் பணத்தை வெள்ளையாக்குதல் என பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் பிப்ஃபா (FIFA)-வின் தலைமை அதிகாரிகள் மீது அப்போதே குற்றம் சாட்டப்பட்டது. 1000 கோடி ரூபாய்க்கு மேலாக லஞ்சம் பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் பிப்ஃபா (FIFA)-வின் அதிகாரிகள் ஸ்விட்சர்லாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

இவையெல்லாம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளில் ஒரு சதவீதம் கூட இல்லை. பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் ஆண்ட்ரூ ஜென்னிங்ஸ் பிஃபாவின் ஊழல் முறைகேடுகள், லஞ்ச வாவண்யம் குறித்து நூற்றுக்கணக்கான பக்கங்களில் புத்தகமாக எழுதும் அளவுக்கு நாறுகிறது பிப்ஃபா (FIFA)-வின் வரலாறு.

2015 லேயே இந்த நிலைமை என்றால் தற்போது அதைவிட பலநூறு மடங்கு ஊழல் சாம்ராஜ்யம் விரிந்திருக்கும் என்றுதானே பொருள்.

இன்னொரு பக்கம் பார்த்தால், தற்போது நடந்து முடிந்த உலகக் கோப்பையில் அர்ஜென்டினாவின் வெற்றி உலகம் முழுக்க முற்போக்கு பேசும் பலராலும் கொண்டாடப்பட்டது. ஏறக்குறைய மெஸ்ஸி கால்பந்தின் கடவுளாக வழிபடப்பட்டார். ஒரு ஏகாதிபத்திய நாட்டுக்கெதிராக அர்ஜெண்டினா பெற்ற வெற்றியைக் கொண்டாட வேண்டும், வரவேற்க வேண்டும் என்றெல்லாம் அதற்கு பொழிப்புரைகள் எழுதப்பட்டு அதில்  முற்போக்கு அம்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வியந்தோதிக் கொண்டிருந்தனர்.

உண்மையில் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு என்பதெல்லாம் ஒரு இழவும் இல்லை. நுகர்வுக்  கலாச்சார வெறியுணர்வுதான் இதன் மூலம் ஆழமாக திணிக்கப்படுகிறது. அதற்கு பலியாவதால்தான் இத்தகைய வாதங்களை வெளிப்படுத்துகின்றனர்.

அடிடாஸ், பூமா, நைக் போன்ற பன்னாட்டு ஏகபோக நிறுவனங்கள்தான் அர்ஜென்டினா உள்ளிட்ட பல நாடுகளின் வீரர்களுக்கு உடைகளையும், உபகரணங்களையும் ஸ்பான்சர் செய்கின்றன. இதன் மூலம் தங்களது அபரிமிதமான லாபத்தை உத்திரவாதப்படுத்திக் கொள்கின்றன. அதற்காகத்தான் மெஸ்ஸி, ரொனால்டோ போன்றோரை குத்தகைக்கு எடுத்துக் கொள்கின்றனர்.

கால்பந்துக் கடவுள் என கொண்டாடப்படும் மெஸ்ஸி ஒரு ஆண்டிற்கு பல ஆயிரம் கோடி கால்பந்து விளையாட்டின் மூலமும், விளம்பரங்களின் மூலமும் வருமானம் பெறுகிறார். விளையாட்டின் மூலம் சம்பாதித்த 4 மில்லியன் யூரோக்களுக்கு வரி கட்டாமல் ஏமாற்றியதற்காக 2016-ல் அவர் மீது வழக்கு தொடுக்கப்பட்டது.

ஏகாதிபத்தியங்களால் உருவாக்கப்பட்ட யுனெஸ்கோ  அறக்கட்டளையின் வருவாயில் 48 சதவீதம் மெஸ்ஸியின் நன்கொடையில் இருந்து வருகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிகப்பெரிய பொருளாதார நெருக்கடியை அர்ஜெண்டினா எதிர்கொண்டிருக்கும் இன்றைய சூழலில்,  பெரும்பாலானோர் ஏழ்மையை நோக்கித் தள்ளப்பட்டிருக்கும் ஒரு நாட்டில் இவ்வெற்றியும், மெஸ்ஸியும் வானளாவ கொண்டாடப்படுவது அந்நாட்டின் ஆளும் வர்க்கங்களின் நலனுக்கானதே ஒழிய வேறொன்றுமில்லை.

இன்று மெஸ்ஸி அர்ஜெண்டினாவின் ஆளும் வர்க்கங்களுக்கு மட்டுமல்ல, உலக ஆளும் வர்க்கங்களின், பன்னாட்டு நிறுவனங்களின் செல்லப்பிள்ளை. ஒரு விளையாட்டு வீரனை வெறும் வீரனாக மட்டும் பாருங்கள் என்று சொல்ல முடியுமா? அவன் யாருக்காக பயன்படுகிறான், யாருக்காக செயல்படுகிறான் என்பதைப் பார்க்க வேண்டுமல்லவா.

2014-ல் கால்பந்தை அதிகம் கொண்டாடும் மற்றொரு தென்னமெரிக்க நாடான பிரேசிலில் நடந்த உலகக் கோப்பை போட்டியை எதிர்த்து, இதனால் பயனடையும் ஊழல் மிகுந்த ஆட்சியாளர்களை அம்பலப்படுத்தி பரந்த அளவில் அந்நாட்டின் உழைக்கும் மக்கள் வீதியில் இறங்கி போராடியதை நாம் அறிவோம்.

நான்காம் தொழில்நுட்ப புரட்சி மற்றும் உலகமயம் என்ற ஏகபோக சுரண்டலின் காலகட்டத்தில் ஒரு விளையாட்டு என்பது விளையாட்டிற்குரிய நற்பண்புகளை இழந்து பெரும் வியாபாரமாக தலையெடுத்து நிற்கிறது.

இத்தகைய ஏகபோக முதலாளித்துவ காலகட்டத்தில் விளையாட்டு, விளையாட்டு வீரர்கள் மீதான இரசிகர்களின் வெறித்தனம் என்பது ஆளும் வர்க்கங்களால் திட்டமிட்டு வளர்க்கப்படுகிறது.

பண்டைய ரோமாபுரியில் மக்களை கேளிக்கையில் மூழ்கடிக்க கிளாடியேட்டர் எனும் அடிமைகளை சாகும் வரையில் சண்டையிட வைப்பார்கள். வருடம் முழுவதும் இந்தப் போட்டிகள் நடக்கும். இதற்காக பிரம்மாண்டமான மைதானங்களை பெரும் பொருட்செலவில் எழுப்பினார்கள். இன்றோ, முதலாளித்துவ ஆண்டைகளின் லாபத்திற்காக கால்பந்து போட்டிகள் நடத்தப்படுகின்றன.

படிக்க : உலகக்கோப்பை கால்பந்து: “அர்ஜென்டினா வென்றால் நாட்டின் அவலம் மறைக்கப்படும்!” – மெஸ்ஸி-ன் மருத்துவர்!

ஏகாதிபத்திய ஏகபோக நிறுவனங்கள், ஆளும் வர்க்கங்களின் அரசியல், பொருளாதார, சமூக ரீதியான ஆதிக்கத்திற்காகத்தான் இன்று கால்பந்து எனும் விளையாட்டு விளையாடப்படுகிறது. இதற்காகத்தான் நுகர்வு வெறி அளவு கடந்து ஊட்டப்படுகிறது. அதில் நாம் திளைத்திருக்கும் வேளையில் நமது எதிர்காலத்தை அழிப்பதுதான் அவர்களது நோக்கம்.

உலகளாவிய அளவில் மக்களின் வாழ்நிலையில் ஏற்றத்தாழ்வு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் செல்வம் குவிவதும், மறுபக்கம் ஏழ்மையும் எவ்வளவு வேகத்தில் அதிகரிக்கிறதோ அதற்கேற்ப கால்பந்து எனும் விளையாட்டை ஏகாதிபத்திய ஆளும் வர்க்கங்கள் தமது ஆதிக்க நோக்கத்திற்கேற்ப விளையாடும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் புரிந்து கொண்டு உழைக்கும் மக்களின் மீது திணிக்கப்பட்டிருக்கும் கொடூரமான ஏகாதிபத்திய சுரண்டலுக்கெதிரான போராட்டத்தை களத்தில் நடத்த வேண்டும். அதுவே முதன்மையானது. அப்படிப்பட்ட உன்னதமான போராட்டத்தின் மூலமாகத்தான் கால்பந்து விளையாட்டையும் மீட்க முடியும். உழைக்கும் மக்கள் தங்களுக்கான எதிர்காலத்தையும் அடையமுடியும். குறுக்கு வழி ஏதுமில்லை

இனியன்

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 5 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

ஐந்தாம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள்: அறிவிக்கப்படாத எமர்ஜென்சி!

0

னவரி 17, 2023 அன்று மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம் தகவல் தொழில்நுட்ப வரைவு விதிகளில் (IT Rules, 2021) புதிதாக திருத்தங்கள் செய்து வெளியிட்டுள்ளது. புதிய திருத்தங்களின்படி, மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் (Press Information Bureau – PIB) உண்மை கண்டறியும் குழு போலியானவை என்று சுட்டிக்காட்டும் செய்திகளை சமூக வலைதள நிறுவனங்கள் தங்கள் பக்கங்களில் இருந்து நீக்க வேண்டும்.

திருத்திற்கான இந்த முன்மொழிவுகள் அமலுக்கு வந்தால் சமூக ஊடகங்கள் உட்பட எல்லா ஆன்லைன் தளங்களிலும் வரும் கருத்துகள்/செய்திகள் மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் வரும். பி.ஐ.பி-க்கு அளிக்கப்படும் அதிகாரம், 2000-வது ஆண்டின் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69A-இன் கீழ் வருகிறது. இந்த வரைவில் எது ‘போலி’ என்பது பற்றிய ஒரு தெளிவான வரையறை இல்லை. இந்துத்துவத்தை எதிர்க்கும் அனைத்து கருத்துகளும் போலி என்று கூறப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

முன்மொழியப்பட்டுள்ள இத்திருத்தங்களுக்கு எடிட்டர்ஸ் கில்ட் ஆஃப் இந்தியா (Editors Guild of India), இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet freedom foundation) உள்ளிட்ட அமைப்புக்களும், காங்கிரஸ், சி.பி.ஐ, சி.பி.எம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

பி.ஐ.பி அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற முகமை ஏதேனும் செய்தியின் உள்ளடக்கத்தைப் போலி என்று சுட்டிக்காட்டினால், அச்செய்தி இணையத்தில் இருந்து நீக்கப்படும் என்று வரைவு கூறுகிறது. இதற்கு முன்னர் செய்திகளை ‘போலி’ என்று மட்டுமே பி.ஐ.பி-ஆல் சுட்டிக்காட்ட முடியும். ஆனால் தற்போது செய்திகளை நீக்கும் அதிகாரமும் அதற்கு வழங்கப்பட்டுள்ளது.

இத்திருத்தம் பி.ஐ.பி-க்கு மட்டும் செய்திகளை நீக்கும் அதிகாரத்தை வழங்கவில்லை; அங்கீகாரம் பெற்ற முகமைகளுக்கும் நீக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. “அங்கீகாரம் பெற்ற முகமை” என்ற பெயரில் எந்தெந்த நிறுவனங்களுக்கு / தனிநபர்களுக்கு அதிகாரம் வழங்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் எழுகிறது. ஆர்.எஸ்.எஸ் — பாஜக பாசிசத்தின் பரப்புரையாளர்களான அர்னாப் கோஸ்வாமி, ரங்கராஜ் பாண்டே போன்றவர்களே மத்திய அரசால் அங்கீகரிக்கப்படுவர்.


படிக்க: பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு


பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB) பொய்யான செய்திகளை மட்டும்தானா ‘போலி’ என்று முத்திரை குத்திவருகிறது? அரசை அம்பலப்படுத்தும் பல செய்திகளை போலியானவை என்று பி.ஐ.பி முத்திரை குத்தியிருக்கிறது. இத்திருத்தம் அமல்படுத்தப்பட்டால் அரசை கேள்வி கேட்கும் அனைத்து கருத்துகளும் போலியானவை என்று கூறப்பட்டு முடக்கப்படும்.

பி.ஐ.பி-யின் யோக்கியதையை அதன் உண்மை சரிபார்ப்புக் குழுவின் நடவடிக்கைகளில் இருந்து புரிந்துகொள்ளலாம். செய்தியாளர் தபஸ்யா “ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு அங்கன்வாடியில் சத்துணவு வழங்கும் திட்டத்திற்கு ஆதார் அட்டை அவசியம்” என்ற மத்திய அரசின் முடிவு குறித்து ரிப்போர்ட்டர்ஸ் கலெக்டிவில் (Reporters’ Collective) எழுதியிருந்தார். அரசை விமர்சனம் செய்திருந்த காரணத்தால் பி.ஐ.பி உண்மை சரிபார்ப்புக் குழு இந்தச் செய்தி போலியானது என்றும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்றும் கூறியது. போலி என்பதற்கான ஆவணங்கள் எதையும் வழங்கவில்லை.

தபஸ்யா இது குறித்து ஆர்டிஐ தாக்கல் செய்தபோது, ​​குழந்தைகளுக்கு ஆதார் அட்டை தேவையில்லை என்று 2022 ஆகஸ்ட்டில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தபஸ்யாவின் செய்தி ஜூன் 2022இல் வெளியிடப்பட்டது; அப்போது அமலில் இருந்தது மார்ச் 2022 வழிகாட்டு நெறிமுறைகள். பழைய மார்ச் வழிகாட்டு நெறிமுறைகளின் படி ஆதார் அட்டை கட்டாயமாகத்தான் இருந்திருக்கிறது என்பது தெரியவருகிறது. இதன் மூலம் பி.ஐ.பி-யின் பித்தலாட்டம் அம்பலமாகிறது.

அதேபோல், மே 2020-இல் கொரோனா பெருந்தொற்றின் போது, ஜோதி சி.என்.சி (Jyoti CNC) என்ற குஜராத் நிறுவனம் வெண்டிலேட்டர்களை இலவசமாக வழங்கியது. அந்நிறுவனத்துக்கு சில பாஜக தலைவர்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்பட்டது. இலவசமாக வழங்கப்பட்ட வெண்டிலேட்டர்கள் தரமற்றவையாக இருப்பதாக குஜராத் மற்றும் புதுச்சேரியில் இருந்த மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த நிறுவனத்திடமிருந்து வெண்டிலேட்டர்களை அரசு விலைக்கு வாங்குவதாக இருந்தது. இது குறித்து தி வயர்-இல் செய்தி வெளியானது. இது முற்றிலும் சரியான தகவல். ஆனால், பி.ஐ.பி இதையும் ‘போலிசெய்தி’ என்று முத்திரை குத்தியது.


படிக்க: பா.ஜ.க தலைவர் அமித் மால்வியா : பொய் செய்திகளின் ஊற்றுக்கண் !


மத்திய அரசு முன்மொழிந்துள்ள இந்த புதிய தொழில்நுட்ப வரைவு விதிகள் சாதாரணமாக கடந்து செல்லக் கூடியது அல்ல. கருத்துச் சுதந்திரத்தை நசுக்கக்கூடிய நடவடிக்கை இது. அவசரநிலை காலகட்டத்தில் செய்திகள் அனைத்தும் அரசால் தணிக்கை செய்யப்பட்ட பின்னரே வெளியிட அனுமதிக்கப்பட்டன. தற்போதைய பாசிச மோடி அரசும் அதையே செய்ய எத்தனிக்கிறது, அவசர நிலையை பிரகடனம் செய்யாமல்.

பொம்மி

இளைஞர்களே! எது கெத்து?

0

பிழைப்புவாத நடிகர்களும், வரலாற்றை மறந்த இளைஞர்கள் கூட்டமும்!

ந்தியா சுதந்திரப் போராட்டத்திலும், தமிழகத்தின் மொழிப் போராட்டத்திலும் நெஞ்சை நிமிர்த்தி களத்தில் முன் நின்று போராடிய இளைஞர்களை கொண்ட இந்த மண்ணில்தான், பிழைப்புவாத நடிகர்களுக்காக தன் உயிரையும் மாய்த்துக் கொண்டிருகிறார்கள் இன்றைய இளைஞர்கள்.

கடந்த 11-1-2023 அன்று அஜித் நடித்துள்ள துணிவு படத்தின் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க சென்ற பரத் என்ற இளைஞர், துணிவு பட கொண்டாட்டத்தின் போது ஓடும் லாரியின் மீது ஏறி நடனம் ஆடியுள்ளார். அப்போது லாரி சற்று நகர்கையில் பரத் நிலைத் தடுமாறி லாரியில் இருந்து கீழே விழுந்து லாரி சக்கரத்தில் மாட்டி உயிரிழந்துள்ளார். அதேபோன்று இன்னொரு இடத்தில் கிரேனில் மூலம் உடலில் அளவு குத்தி கொண்டு அஜித் போஸ்டருக்கு மாலையிடும் காட்சியும் நெஞ்சை பதற வைக்கிறது.

அஜித் அல்லது விஜய் படம் வருகின்றது என்றவுடன் பல்லாயிரம் செலவு செய்து போஸ்டர் வைப்பது, பால் ஊத்துவது, வெடி வைப்பது இரவு முழுவதும் காத்திருப்பது என அந்த படத்தை திருவிழா போல் கொண்டாட ஒரு இலக்கற்ற இளைஞர்கள் கூட்டமே உருவாகியுள்ளது. இவர்களுக்கு வாழ்க்கை பற்றிய கவலையோ தன்னை சுற்றி உள்ளவர்களை பற்றிய அக்கறையோ துளியும் கிடையாது. நடிகர்களே தன் வாழ்க்கை என போதையில் முழுகி கிடைக்கிறார்கள்.

அஜித் படம் வந்தால் விஜய் படத்தை கேலிச் செய்து, போஸ்டர் ஒட்டுவது, மீம்ஸ் போடுவது, விஜய் படம் வந்தால் அஜித் படத்தை கேலிச் செய்து, போஸ்டர் ஒட்டுவது, மீம்ஸ் போடுவது என யார் கெத்து என காட்டி கொள்ள முயற்சிக்கிறார்கள் ரசிகர்கள்.

படிக்க : இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

அஜித் படம் வந்தாலோ அல்லது விஜய் படம் வந்தாலோ அதை தனித்தனியாக கொண்டாடும் ரசிகர் கூட்டத்தின் மத்தியில் படத்தின் விளம்பரத்திற்காக இரண்டு படத்தையும் ஒரே நேரத்தில் விட்டு ரசிகர்கள் மத்தியில் சண்டையும் போட்டியை உருவாக்கி டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று லாபம் பார்த்து கொண்டிருக்கிறார்கள் திரைப்படங்களை வெளியிடும் முதலாளிகள். ஆனால் இதை புரிந்து கொள்ள முடியாமல் அப்பாவி இளைஞர்கள் இதில் மாட்டிக் கொள்கிறார்கள். முதல் காட்சியின் டிக்கெட் விலை ரூ.1000 முதல் ரூ.2000 வரை இருந்தாலும் அதை ரசிகர்கள் வாங்கி கொள்கிறார்கள். அதற்காக பல நாட்கள் வரிசையில் காத்து கிடக்கிறார்கள்.

திரைப்படம் என்றால் அது வணிகம் (commerical) அல்லது காதல் (romantic) அல்லது பேய் படங்கள் (Adventure) என வகைவகையான திரைப்படங்களை தினம்தோறும் எடுத்துக் குப்பைகளை போல் அள்ளிக் கொட்டி கொண்டு இருக்கின்றனர். இந்த திரைப்படங்களில் கதைகளை விட கதாநாயகர்களுக்கு தான் அதிகம் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. திரைக்கதைகளில் விஜய், அஜித் நடித்த காலம் போய் கதையே ’விஜய்’ ‘அஜித்’ தான் என்று மாறி நிற்கிறது. விஜய், அஜித்-காக மட்டுமே திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதில் திரைக்கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது கிடையாது விஜய்-அஜித் நடை, உடை அவர்கள் செய்வதை எல்லாம் கெத்தென காட்டப்படுகிறது.

இதனால் தன் திரைப்படத்தை பார்ப்பதை விட அவர்களை பார்த்து விட்டு வந்தால் போதுமென ரசிகர்கள் இரவு முழுவதும் காத்துக் கிடக்கிறார்கள். பணம் இல்லையென்றால் கூட கடன் வாங்கி கொண்டு படத்திற்கு செல்ல துடிக்கிறார்கள். அப்படி பார்க்கும் படத்தை முதல் பார்வை (status) வைப்பதும் அல்லது பிற நண்பர்கள் சொல்லி பெருமை படுவதே கெத்து என நினைக்கிறார்கள் இவர்கள். இப்படி பைத்தியம் பிடித்து இறந்து போனவர்களில் ஒருவர்தான் பரத்.

இன்று கல்வி தனியார்மயமக்கம் தீவிரமடைந்து வருகிறது. 2 கோடிக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வேலை தேடி தெருக்களில் அலைந்துக் கொண்டிருக்கிறார்கள். உலகளவில் ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள 82.8 கோடி மக்களில் இந்தியாவில் மட்டும் 22.43 கோடி மக்கள் உள்ளனர். பட்டினி குறியீட்டில் இந்தியா 107 இடத்தில் உள்ளது. வரி மேல் வரி போட்டு உழைக்கும் மக்களின் ரத்தத்தை உறிஞ்சி கொண்டிருக்கிறது மத்திய-மாநில அரசு. உழைக்கும் மக்களோ அடிப்படை உரிமைகள் அனைத்தும் பறிக்கப்பட்டு நடு தெருவில் வீசியெறிப்பட்டுள்ளனர். ஆனால் இந்த அவலங்களுக்காக போராடுவதோ, எதிர்ப்பு குரல் கூட எழுப்பாத இந்த கதாநாயகர்களுக்காகத்தான் இரவு பகலாக இளைஞர்கள் திரையரங்கு வாயில்களில் பைத்தியம் போல் திரிந்துகொண்டிருக்கிறார்கள். அவரக்ளையே தெய்வமென வழிபடுகிறார்கள்.

ஆனால் நாம் வரலாற்றை சற்று திரும்பி பார்க்க வேண்டி இருக்கிறது.

மெரினா கடற்கரையில் காற்றை கிழித்து வரும் ஈட்டியை போல திரண்ட இளைஞர்கள்-மக்கள் 7 நாட்கள் தொடர் போராட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டுக்கு தடை என்ற மோடி அரசின் பாசிச நடவடிக்கையை முறியடித்தார்கள். நீட் எதிர்ப்பு, ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டம் என எல்லா போராட்டத்திலும் களத்தில் முன் நின்றவர்கள் மாணவர்களும் இளைஞர்களும் தான்.

1937 ஆண்டு தமிழ்நாட்டின் வீதிகளில் தமிழ் மொழிக்காக்க இளைஞர்கள் திரண்டு போராடினார்கள். பல லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்கள் தங்களையும் அந்த போராட்டத்தின் இணைத்து கொண்டனர்.

இப்படி வீரம் விதைக்கப்பட்ட இந்த மண்ணில், தற்போதைய இளைஞர்கள், நடிகர்களுக்காக அடித்து கொள்வதும் நடிகர்களுக்காக தன்னுயிரை மாய்த்துக் கொள்வதென மூடர்களாக அலைந்துகொண்டிருக்கிறார்கள்.

படிக்க : புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!

இன்றைய தலைமுறை இளைஞர்கள் மற்றும் மாணவர்களிடம் அதிகம் பயன்படுத்தப்படும் சொல் யார் கெத்து என்பதும் கெத்தாக வாழ வேண்டும் என்பதுதான். வண்ண வண்ண ஆடை உடுத்தி செல்வதும், விலையுயர்ந்த வாகனங்களை சாலைகளில் ஓட்டி சாகசம் செய்வதும், பிறரை அடிப்பதும்-துன்புருத்துவதும் தான் கெத்து என நினைக்கிறார்கள். ஆனால் உண்மையில் கெத்து எது?

ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக போராடுவதும், கல்வி மறுக்கப்பட்ட ஏழை-எளிய மாணவர்களுக்காக போராடுவதே உண்மையான கெத்தாகும். அப்படி கெத்தாக நம் நாட்டில் உயிர்நீத்தவர்கள் பலர். பகத்சிங்கும் அவரது தோழர்களும் வெள்ளை ஏகாதிபத்தியத்திற்கு எதிராக வீரம் செறிந்த போரை தொடுத்தார்கள். தமிழ்நாட்டு மாணவர்கள் இந்தி மொழி திணிப்புக்கு எதிராக வீரம் செறிந்த போரை தொடுத்தார்கள்.

நாம் தொலைத்த வீரத்தையும், மறைந்து போன தியாகத்தையும் மீண்டும் இப்போது பட்டைதீட்டவேண்டிய தேவை எழுந்திருக்கிறது. திரைபடங்களும், நடிகர்களும் வாழ்க்கையென அடிமைப்பட்டு கிடக்கும் இளைஞர்களிடம் உரிமைக்காக களத்தில் முன் நின்று போராடுவதே கெத்து என்பதை தெளிவுபடுத்த வேண்டி இருக்கிறது.

பாரி

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 4 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

நான்காம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்: விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே! | மக்கள் அதிகாரம்

22.01.2023

இறையூர் தண்ணீர்த் தொட்டியில் மலம் கலந்த விவகாரம்!

தமிழ்நாடு அரசே!
விசாரணை என்ற பெயரில் தாழ்த்தப்பட்ட மக்களை துன்புறுத்தாதே!

தீண்டாமை குற்றங்களில் ஈடுபட்ட ஆதிக்க சாதி வெறியர்களின்
அடிப்படை உரிமைகளை ரத்து செய்!

பத்திரிகை செய்தி

புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி, இறையூரில் தாழ்த்தப்பட்ட மக்கள் பயன்படுத்தும் தண்ணீர்த் தொட்டியில் மனிதக் கழிவுகள் கலக்கப்பட்டு, அவ்விவகாரம் மிகப்பெரிய அளவில் வெடித்தது. மனித சமூகமே வெட்கித் தலை குனியக் கூடிய இந்த சம்பவம் நடைபெற்று ஏறத்தாழ ஒரு மாதம் ஆகியும் கூட இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை.

போலீஸ் விசாரணையில் தொடர்ச்சியாக தாழ்த்தப்பட்ட மக்கள் துன்புறுத்தப்படுவது வெளியாகி அம்பலப்பட்ட பின்னர் சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டது. ஆனாலும் இதுவரை குற்றவாளிகள் கண்டறியப்படவில்லை. இதனை மக்கள் அதிகாரம் கண்டிக்கிறது.

படிக்க : புதுக்கோட்டை தண்ணீர் தொட்டியில் மலம் கலந்த சாதிவெறி! | தோழர் யுவராஜ்

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தவுடன், தமிழ்நாடு போலீசும் தேசிய புலனாய்வு முகமையும் மேற்கொண்ட அவசர அவசர கைதுகளும் விசாரணைகளும் நடைபெற்றன. இந்த விசாரணையை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது போலீசும் அரசும் ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் உணர முடியும்.

தமிழ்நாட்டில், ஆதிக்க சாதி வெறியர்கள், தாழ்த்தப்பட்ட மக்கள் மீது ஆணவ படுகொலைகள், தாக்குதல்கள் என மேற்கொண்டு வரும் வன்முறை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகின்ற ஒன்றாகும். இந்த நிலையில்தான் அதிக்க சாதி சங்கங்கள் பலவும் ஆர்.எஸ்.எஸ் கட்டுப்பாட்டில் சென்று இருக்கின்றன. ஆதிக்க சாதி வெறியர்களுக்கு ஆதரவாக ஏற்கனவே அரசும் போலீசும் இருந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ்-ம் பி.ஜே.பி.யும் ஆதிக்க சாதி வெறியர்களை வெளிப்படையாகவே ஆதரித்து செயல்படுகின்றன.

தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தப்பட்ட எந்த ஒரு வன்முறை குற்றத்திலும் ஆதிக்க சாதி வெறியர்கள் முழுமையாகவும் நியாயமாகவும் தண்டிக்கப்படவில்லை. இப்படிப்பட்ட அரசின் செயல்பாடுகளும் தாழ்த்தப்பட்ட மக்கள் மீதான வன்முறைகள் குறையாமலிருப்பதற்கு முக்கிய காரணமாகும். ஆதிக்க சாதி வெறியர்கள், தாங்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது நடத்தும் தீண்டாமை குற்றங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காகவே பி.சி.ஆர் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் போராடி வருகிறார்கள்.

படிக்க : குடிநீர் தேக்க தொட்டியில் மலம் – ஆதிக்கசாதி திமிர்! | மருது வீடியோ

தீண்டாமைக் குற்றங்களில் ஈடுபடக்கூடிய ஆதிக்க சாதி வெறியர்களுக்கு அனைத்து அடிப்படை உரிமைகளும் பறிக்கப்பட வேண்டும். அவர்களை ஒட்டுமொத்த சமூகமே புறக்கணிப்பு செய்ய வேண்டும். அவர்கள் மீதான குற்றங்கள் உடனுக்குடன் விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட வேண்டும். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான அனைத்து குற்றங்களும் இந்த சமூகத்துக்கே எதிரான குற்றங்களாக வரையறுக்கப்பட வேண்டும். தாழ்த்தப்பட்ட மக்களுக்கென்று தனியாக பள்ளிக்கூடம் கட்டுவது, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என்று தனியாக தண்ணீர்த்தொட்டி அமைப்பது போன்றவை அடியோடு நிறுத்தப்பட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக் கொள்கின்றது.

அதே வேளையில், மேற்கண்ட கோரிக்கைகள் சமூக ரீதியாக மக்களிடத்திலே சிந்தனை மாற்றம் வரும் வகையில் புரட்சிகர, ஜனநாயக அமைப்புகள் போராட வேண்டிய அவசியத்தையும் தெளிவுபடுத்துகிறது.

தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல் செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

புர்கா அணிய தடை: பறிக்கப்படும் இஸ்லாமியர்களின் கல்வி உரிமை!

0

மீபத்தில் (ஜனவரி 18) உத்திர பிரதேசத்தின் முராதாபாத்தில் உள்ள “இந்து கல்லூரி”யில் புர்கா அணிந்து வந்த மாணவிகள் கல்லூரி வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மாணவிகள் போராட்டத்தில் இறங்கினர்.

உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் உள்ள எம்.ஜே.பி. ரோஹில்கண்ட் பல்கலைக்கழகத்தின் (Mahatma Jyotiba Phule Rohilkhand University) உறுப்புக் கல்லூரிகளில் ஒன்று தான் இந்து கல்லூரி. இக்கல்லூரி அமைந்திருக்கும் முராதாபாத் பகுதி இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும். ஆகையால் இங்கு அதிக மாணவிகள் பர்தா அணிந்து வருவது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் கடந்த புதன்கிழமை (ஜனவரி 18) புர்கா அணிந்து வந்த பன்னிரண்டிற்கும் மேலான மாணவிகள் கல்லூரி வாயிலேயே தடுத்து நிறுத்தப்பட்டனர். அம்மாணவிகள் அங்கேயே கிட்டத்தட்ட 40 நிமிடம் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து பேசிய தலைமை பிராக்டர் (chief proctor) ஏ.பி. சிங் “புதிய ஆடை விதிகள் ஜனவரி 1 முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாணவர்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டு விட்டது. ஜனவரி 14 முதல் இவ்விதிகள் தீவிரமாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. சீருடையில் இல்லாத யாரும் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள்” என்று கூறியுள்ளார்.

இந்த புதிய விதிகளின்படி கல்லூரி வளாகத்திற்குள் புர்கா அணிவது தடை செய்யப்பட்டுள்ளது. வளாகத்தின் உள்ளே வரும்போது புர்காவை அகற்றிவிட்டு வெளியே சென்றபிறகு வேண்டுமானால் அணிந்து கொள்ளலாம் என்று நிர்வாகம் சார்பில் கூறப்படுகிறது. போராட்டம் நடைபெற்ற இடத்திற்கு வந்த கல்லூரி ஆசிரியர்கள் புதிய ஆடை விதிகளுக்கு இணங்கி செல்லுமாறு மாணவிகளை கோரியுள்ளனர். ஆனால் போராடிய மாணவிகள் அதற்கு மறுத்து விட்டனர்.


படிக்க: ஹிஜாப் தடை ; இதோ இந்து இராட்டிரத்துக்கு தயாராகிவிட்டது நாடு !


சமாஜ்வாடி கட்சியின் இளைஞர் அமைப்பு இம்மாணவிகளுக்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் இறங்கியது. “சீக்கியர்கள் டர்பன் மற்றும் கிர்பன் (ஒரு குறு வாள்) வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்போது, இஸ்லாமிய மாணவிகள் மட்டும் ஏன் குறிவைக்கப்படுகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு பாதுகாப்பின்மையை ஏற்படுத்தும். இது அரசியல் காரணங்களுக்காக திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதலாகும்” என்று அவ்வமைப்பினர் கூறினர்.

இது காவிகளின் திட்டமிட்ட தாக்குதலே. முன்னதாக, டிசம்பர் 2021-இல், கர்நாடகாவின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள பி.யூ.கல்லூரியில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. கல்லூரி விதிகள் ஹிஜாப் அணிவதை தடை செய்யவில்லை என்ற போதிலும் கல்லூரி நிர்வாகம் அதை அனுமதிக்கவில்லை.

ஆர்.எஸ்.எஸ்-இன் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி குண்டர்கள் ஹிஜாபுக்கு போட்டியாக காவித்துண்டு அணிந்து கல்வி நிலையங்களுக்கு வந்து கலகம் செய்தனர். ஆளும் கர்நாடக பாஜக அரசோ “சீருடை அணிவது அனைவருக்கும் கட்டாயம்” என்று கூறி கல்வி நிலையங்களுக்குள் ஹிஜாப் அணிவதை அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டது.


படிக்க: ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!


உடுப்பியில் தொடங்கிய இப்பிரச்சினை பிப்ரவரி 2022 வாக்கில் குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி ஆகிய கர்நாடகத்தின் மற்ற பகுதிகளுக்கும் பரவியது. அதே காலகட்டத்தில் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் ஜவுன்பூர்-இல் ஒரு கல்லூரியிலும், ராஜஸ்தானின் ஜெய்ப்பூரில் ஒரு தனியார் கல்லூரியிலும் ஹிஜாபுக்கு அணிவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

ஹிஜாப் விவகாரத்தை பயன்படுத்தி கர்நாடக மாநிலத்தில் காவி கும்பல் அரசியல் ஆதாயம் அடைந்தது. அதன் தொடர்ச்சியாகவே, தற்போது உத்திர பிரதேசத்தில் தொடங்கியுள்ள புர்கா பிரச்சினையை நாம் பார்க்க வேண்டும். இஸ்லாமியர்களை மைய நீரோட்டத்திலிருந்து தனிமைப்படுத்தவே காவி பாசிஸ்டுகள் இத்தாக்குதலைத் தொடுத்துள்ளனர்.

பொம்மி

மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை | களவீடியோ

மதுரை காயாம்பட்டி சாதிய வன்முறை தொடர்பான களவீடியோவை மக்கள் கலை இலக்கியக் கழக தோழர்கள் எடுத்து தயாரித்துள்ளனர். அந்த களவீடியோவை தற்போது வெளியிடுகிறோம்.

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

“இந்தியா: மோடி மீதான கேள்வி” ஆவணப்படம்: மீண்டும் அம்பலமாகும் பாசிச மோடி!

0

பிபிசி “இந்தியா: மோடி மீதான கேள்வி” (India: The Modi Question) என்ற 2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தின் முதல் பகுதியை ஜனவரி 17, 2023 அன்று வெளியிட்டது.

குஜராத் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து பல தகவல்களை இந்த ஆவணப்படம் தொகுத்துக் கூறுகிறது. குஜராத் கலவரம் குறித்து இரகசியமாக விசாரிக்க ஒரு குழுவை பிரிட்டிஷ் அரசாங்கம் குஜராத்திற்கு அனுப்பியுள்ளது. தண்டனை பயமின்றி இஸ்லாமியர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டதற்கு அப்போதைய குஜராத் முதல்வராக இருந்த நரேந்திர மோடி தான் காரணம் என்று அக்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கை கூறுவதாக இந்த ஆவணப்படம் பதிவு செய்துள்ளது.

பிரிட்டிஷ் அர‌சு அமைத்த அந்தக் குழுவின் அறிக்கை தற்போது வரை வெளியிடப்படவில்லை என்று இந்த ஆவணப்படம் மேலும் கூறுகிறது. வெளியான அடுத்த நாளே இந்த ஆவணப்படம் யூடியூப்-இல் இருந்து நீக்கப்பட்டுவிட்டது.


படிக்க : 2002 குஜராத் படுகொலை வழக்குகளை தள்ளுபடி செய்த உச்ச நீதி(காவி)மன்றம்!


அந்த ஆவணப்படத்தில் அறிக்கையின் பல பகுதிகள் புகைப்படங்களாக வருகின்றன. அதில் “குஜராத் கலவரத்திற்கு நரேந்திர மோடி நேரடிக் காரணம்” என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பது காட்சியாகிறது. குஜராத் கலவரமானது திட்டமிட்ட வன்முறை என்றும் அப்பட்டமான இனப்படுகொலை என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசின் கணக்குகளின் படியே, குஜராத் கலவரத்தில் 790 இஸ்லாமியர்களும் 254 ‘இந்து’க்களும் உயிரிழந்துள்ளனர்.

இஸ்லாமியர்கள் மீதான வன்முறை தாக்குதல்களை தடுக்க வேண்டாம் என்று குஜராத் போலீசுக்கு மோடி உத்தரவிட்டிருந்ததாக இந்த ஆவணப்படம் கூறுகிறது. ஆனால், உச்சநீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வுக் குழு, மோடி மற்றும் 63 பேர் மீது வழக்கு நடத்த போதிய ஆதாரமில்லை என்று 2012 ஆம் ஆண்டு பிப்ரவரியில் அறிக்கையை சமர்ப்பித்தது. அவ்வறிக்கையை 2013 ஆம் ஆண்டில் நீதிமன்றமும் ஏற்றுக் கொண்டது.

சிறப்பு புலனாய்வுக் குழுவின் அறிக்கையை எதிர்த்து கலவரத்தில் கொல்லப்பட்ட முன்னாள் காங்கிரஸ் எம்.பி எஹ்ஸான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கு கடந்த ஆண்டு ஜூன் 24 அன்று தள்ளுபடி செய்யப்பட்டது.

இக்கலவரமானது, ஆர்.எஸ்.எஸ்-இன் துணை அமைப்பான விஷ்வ ஹிந்து பரிஷத்-ஆல் திட்டமிடப்பட்டு குஜராத் மாநில அரசின் துணையுடன் நடைபெற்றது என பிரிட்டிஷ் விசாரணைக் குழுவில் இடம்பெற்றிருந்த மூத்த அதிகாரி ஒருவர் இந்த ஆவணப்படத்தில் பேசி இருக்கிறார். 2002 ஆம் ஆண்டு பிப்ரவரி 27 அன்று, அன்றைய முதல்வர் நரேந்திர மோடி மூத்த போலீசு அதிகாரிகளை சந்தித்து, என்ன நடந்தாலும் போலீசு குறுக்கிட வேண்டாம் என்று கூறியதாக ஆவணப்படம் கூறுகிறது.

பதிவானதைவிட அதிக அளவிலான வன்முறை நடைபெற்றதாகவும், திட்டமிட்டு அரசியல் காரணங்களுக்காக நடத்தப்பட்ட வன்முறை இது என்றும், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பகுதிகளிலிருந்து இஸ்லாமியர்களை முற்றிலுமாக வெளியேற்றுவதற்கான முயற்சி இது என்றும் பிரிட்டிஷ் அரசின் விசாரணைக் குழு அறிக்கை கூறுகிறது.


படிக்க : 2002 குஜராத் கலவரம்: காவி பயங்கரவாதிகளின் படுகொலைகளை மறைக்க முடியாது!


குஜராத் கலவரத்தைத் தொடர்ந்து மோடியை பிரிட்டிஷ் அரசாங்கம் அக்டோபர் 2012 வரை இராஜதந்திர புறக்கணிப்பு (diplomatic boycot) செய்திருந்தது. அந்த சமயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் அமைத்திருந்த விசாரணைக் குழுவும் குஜராத் அமைச்சர்களே நேரடியாக வன்முறையில் பங்கேற்றத்தையும் போலீசு அதற்கு உடந்தையாக இருந்ததையும் தனது அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறது. அதேபோல், 2005 முதல் 2014 வரை மோடிக்கு விசா வழங்க அமெரிக்க அரசாங்கம் மறுத்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.

மோடி இந்திய பிரதமராக பதவியேற்ற பின்பு, தங்கள் சொந்த நலன் கருதி பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் மோடி மீது விதித்திருந்த தடையை நீக்கிக் கொண்டன. அப்போது வரை இனப்படுகொலை குற்றவாளியாக தெரிந்த மோடி திடீரென புனிதராக மாறிவிட்டார். தனது விசாரணை அறிக்கையைக்கூட பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிடவில்லை என்பதிலிருந்து நாம் இதைப்புரிந்து கொள்ளலாம்.

பாசிச பாஜக அரசும் மோடியும் குஜராத்தில் நடத்தப்பட்ட இஸ்லாமியர் மீதான படுகொலையில் தங்களுக்கு எந்தப் பங்கும் இல்லை என்று எவ்வளவு தான் மறுத்தாலும், அவர்களின் பங்கேற்பை உறுதி செய்யும் வகையில் பல ஆதாரங்கள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

பொம்மி

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 3 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

மூன்றாம் பாகம் :

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

ஜோஷிமத் நகர நிலச்சரிவு: வெறும் இயற்கை பேரிடரா?

த்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் அமைந்து இருக்கும் நகரம் ஜோஷிமத். மலைப்பகுதியில் அமைந்து இருக்கும் இந்த ஊர் ரிசிகேஷ் – பத்ரிநாத் ஹைவேயில் உள்ளது. இது சுற்றுலாப் பகுதியாகவும் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 6,150 அடி உயரத்திலும் அமைந்துள்ள இந்த நகரத்தில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களும் வசித்து வருகின்றன.

இமயமலை அடிவாரத்தில் இந்த ஜோஷிமத் நகரம் அமைந்திருப்பதால் இங்கு வேளாண் தொழில் பெரிய அளவுக்கு நடப்பதில்லை. மாறாக இந்நகரின் வருவாய் சுற்றுலா பயணிகளிடமிருந்துதான் கிடைக்கிறது.

சில நாட்களுக்கு முன்பாக நிலச்சரிவு மற்றும் நில வெடிப்பு காரணமாக பல சாலைகளிலும் நூற்றுக்கணக்கான வீடுகளிலும் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிகாரிகள் வந்து பார்வையிடவே கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆனது.

ஜனவரி 08, 2023 அன்று வந்த அதிகாரிகள் அதனை நிலப் புதைவு என்றும் அப்பகுதியை புதைவு பாதித்த மண்டலமாகவும் அறிவித்தனர். வழக்கம்போல் மோடியும் அடுத்த நாள் உத்தராகண்ட் முதல்வரிடம் தொலைபேசியில் நிலைமையைக் கேட்டறிந்தார். மேலும், இது வரையில் 70-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் அவ்விடத்தைவிட்டு தற்காலிகமாக இடம் பெயர்ந்துள்ளனர்.

படிக்க : உத்தரப்பிரதேசம்: அசம்கர் விமான நிலைய விரிவாக்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்!

இந்த சம்பவம் ஏதோ நேற்றோ அல்லது நேற்று முன்தினமோ திடீரென நடந்தது கிடையாது. 1970 ஆம் ஆண்டில் மேகவெடிப்பு காரணமாக அலக்நந்தா நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஏராளமான கிராமங்கள் மூழ்கின. 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 768 பேர் உயிரிழந்தனர். 1998 ஆம் ஆண்டு மால்பா பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் 255 பேர் உயிரிழந்தனர். 1999 ஆம் ஆண்டு சமோலியில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் 100 பேர் உயிரிழந்தனர். கடந்த 2013 ஆம் ஆண்டு கேதர்நாத் வெள்ளம், நிலச்சரிவுகளில் 5,700 பேர் உயிரிழந்தனர்.

ஜோஷிமத்திலுள்ள பாறைகள் வெறும் மணல் மற்றும் கல் படிவுகளால் ஆனது, அது முக்கிய பாறை அல்ல. இது பழங்கால நிலச்சரிவில் உண்டானவை. அதாவது இது காம்பிரியன் காலத்திற்கு முந்தயவை, இந்த இடம் நில அதிர்வு பகுதி 4-ஐ சேர்ந்தது எனவும் பல்வேறு வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

1976 மிஸ்ரா கமிட்டி அறிக்கையின்படி, புதிய கட்டுமானங்கள் மற்றும் 3, 4 மாடிகள் கட்டக்கூடாது என்றும் தெரிவித்திருந்தது. குறிப்பாக இந்த பகுதி குறித்து புவியியல் பேராசிரியர் ஒய்.பி.சுந்தரியால் கூறுகையில், “2013 கோதர்நாத் வெள்ளம், 2021 ரிஷி கங்கை திடீர் வெள்ளம் ஆகியவற்றிலிருந்து இந்த அரசாங்கம் எதையும் கற்றுக்கொள்ளவில்லை என்பதுதான் வெளிப்படையாக தெரிந்துள்ளது” என்கிறார்.

2022 ஆம் ஆண்டில் வாடியா இன்ஸ்டிடியூட் ஆப் ஹிமாலயன் ஜியாலஜி ஆராய்ச்சியாளர்களால் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், “ஜோஷிமத் நகரத்தில் இருக்கும் மண் குறைந்த தாங்கும் திறன் கொண்டது. குறிப்பாக அதிகப்படியான கட்டுமானத்திற்குப் பிறகு அதன் உறுதித் தன்மை மிகவும் குறையும்” என்றும் அறிவித்திருந்தது.

இவையெல்லாம் அறிந்தும் கூட ஜோஷிமத் நகரையொட்டி தேசிய அனல் மின் கழகம் (NTPC) அதாவது தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் நிலையம் தனது கட்டுமான பணிகளை கடந்த சில மாதங்களாக மேற்கொண்டு வருகிறது. கட்டுமான பணியின் ஒரு பகுதியாக சுரங்கம் தோண்டும் பணியும் நடைபெற்றுள்ளது. இந்த பணியின் போதுதான் இங்குள்ள வீடுகளில் லேசான விரிசல் விழுந்திருக்கிறது. சுரங்கம் தோண்டுவதற்காக வெடிப்பொருட்கள் பயன்படுத்தப்பட்ட நிலையில் அந்த அதிர்வுகள் காரணமாக வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனையடுத்து உள்ளூர் மக்கள் இந்த கட்டுமானப் பணிகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று எலும்பை உறைய வைக்கும் கடுமையான குளிர் சூழலிலும் வீதிக்கு வந்து போராட்டம் நடத்தியதன் விளைவாகத்தான் நீர்மின் நிலையத்தின் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன் (BRO)-இன் ஹோ ஹரே ஹெலாங் பைபாஸ் சாலை கட்டுமான பணியும் ஆசியாவின் மிக நீளமான ரோப்வேயான ஆலி ரோப்வேயின் இயக்கமும் தற்காலிகமாக  நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த விரிசல் இங்கு மட்டுமில்லாமல் உத்தரகாண்ட்-ல் உள்ள பவுரி, காந்தி நகர், சிங்தார், மனோகர் பாக், சுனில், கர்னபிராயக் பகுதிகளில் இரயில்வே பணியின் காரணமாகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொதுவாக உலகெங்கிலும் 80%-க்கும் அதிகமான நிலச்சரிவு, நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சுவதால்தான் ஏற்படுகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. அப்படி தபோவன் விஷ்ணுகாட் நீர்மின் திட்டத்திற்கான கட்டுமான பணியின்போது டிசம்பர் 2009-இல், ஒரு துளை போடும் இயந்திரம் ஏற்படுத்திய பாதிப்பை சரி செய்யும் வரை தினமும் 7 கோடி லிட்டர் நிலத்தடி நீர் வெளியேறியது.

மேலும் தனியார்மய – தாராளமய – உலகமய கொள்கையின் விளைவான நகரமயமாக்கல் காரணமாக சாலைகள் விரிவுபடுத்துவது, வரம்புக்கு மீறி கட்டிடங்கள் கட்டுவது, இயற்கை வளங்களை கொள்ளையடிப்பது, கனிம வளங்களை சுரண்டுவது போன்ற நாசகார வேலைகளை தனது கொள்ளை லாபத்திற்காக தெரிந்தே செய்து கொண்டிருந்தது இந்த ஆளும் அரசு.

படிக்க : உத்தரகாண்ட்: நீர் சடங்கு செய்ய அரசு ஊழியர்களுக்கு கட்டளையிடும் சங்கி அமைச்சர்!

மக்களின் உயிருக்கு உலை வைத்து, அவர்களை நிர்மூலமாக்கும் எந்தவிதமான மேம்பாட்டுப் பணிகளும், திட்டப்பணிகளும் இங்கு தேவையில்லை என்பதே ஜோஷிமட் மக்களின் கருத்து. இப்படி ஒரு நகரையே காவு கொடுக்கும் இந்த நிலைக்கு பொறுப்பேற்க போவது யார்?

உலகெங்கிலும் முதலாளித்துவம் மறுகாலனியாக்க கொள்கைகள் மூலம் இயற்கையை வரைமுறையின்றி சுரண்டி வருகிறது. இந்த சுரண்டலின் விளைவாக காலநிலை மாற்றம் இன்ற மனிதகுலத்தின் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

கனமழை, வெப்ப அலை, நில அதிர்வு, வெள்ளம், வறட்சி, எரிமலை வெடிப்பு ஆகியவை புதிய இயல்புநிலையாக மாறிவருகிறது. இதன் வெளிப்பாடுதான் பூகோள சொர்க்கம் என்று அழைக்கப்பட்ட ஜோஷிமத் இன்று புதையும் நகரம் என்று அறிவிக்கப்பட்டிருப்பது.

மறுகாலனியாக்க கொள்கைகளை அமல்படுத்தும் இந்த பாசிஸ்டுகளுக்கு எதிராக நாமும் போராடத் தவறினால் இந்த உலகமே அவர்கள் ஏற்கனவே வெட்டி வைத்துள்ள சவக்குழியில் வீழ்வது நிச்சயம்.

ஆசாத்