Friday, August 1, 2025
முகப்பு பதிவு பக்கம் 160

கள்ளக்குறிச்சி போராட்டம்: வன்முறைக்கு காரணம் போலீசும், நிர்வாகமும்தான் | மருது வீடியோ

டிஜிபி, முதலமைச்சர் போன்ற உச்சபட்ச அதிகாரம் படைத்தவர்கள் இந்த கள்ளக்குறிச்சி மரண விவகாரத்தில் தலையிடவேண்டிய அவசியம் ஏன் நேர்ந்தது. இதற்கு, சாதாரண ஓர் பிரச்சினையை முடிமறைக்க நினைக்கும் மாவட்ட நிர்வாகம்-போலீசு துறையின் செயல்பாடுகள்தான் அடிப்படையாக அமைகிறது.

அந்த பள்ளி நிர்வாகத்தின் சாந்தி என்பவர் திமிர்தனமாக வீடியோ வெளியிடுகிறார். அதாவது இறந்து போன மாணவிக்கு பொறுப்பு பள்ளிக்கூடம் கிடையாது. ஆனால் வன்முறையில் எரிக்கப்பட்ட பொருட்களுக்கு மாணவியின் அம்மாதான் பொறுப்பு என்கிறார்.

இந்த கள்ளக்குறிச்சி வன்முறைக்கு காரணம் மக்கள் அல்ல; மாறாக இந்த போலீசும் மாவட்ட நிர்வாகமும்தான் அவர்கள்தான் கைதுசெய்யப்படவேண்டும். அவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு IBC தமிழ் யூடியூப் சேனலுக்கு இந்த பேட்டி வீடியோவில் பதில் அளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொளியை பாருங்கள் ! பகிருங்கள் !!

அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா 2022 – பத்திரிகை துறையின் மீதான பாசிச நடவடிக்கை!

0

நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜூலை 18 அன்று தேசிய பத்திரிகையாளர்களின் கூட்டமைப்பு (NAJ) மற்றும் டெல்லி யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்டுகள் (DUJ) ஆகியவை கூட்டாக செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டன.

சுயாதீன பத்திரிகை மற்றும் டிஜிட்டல் செய்தி ஊடகங்கள் மீதான அதிகரித்து வரும் தடைகள் “நிரந்தர அவசரகால நிலையை பிரதிபலிக்கிறது” என்று அறிக்கை கூறுகிறது.

மழைக்கால கூட்டத்தொடரின்போது, நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாகக் கூறப்படும் அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா-2022 குறித்து அறிக்கை குறிப்பிடுகிறது.

இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், 1867-ம் ஆண்டின் பத்திரிகை மற்றும் புத்தகப் பதிவுச் சட்டம் சட்டத்தை மாற்றியமைக்கும் மற்றும் அதன் வரம்பு டிஜிட்டல் ஊடகத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

2019-ம் ஆண்டில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தால் அதே பெயரில் ஒரு வரைவு மசோதா வெளியிடப்பட்டது. இது டிஜிட்டல் செய்தி ஊடக வெளியீட்டாளர்கள் (இணையம் அல்லது கணினிகள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் மூலம் அனுப்பக்கூடிய செய்திகள் என சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது) இந்திய செய்தித்தாள்களின் பதிவாளரிடம் தங்களைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.


படிக்க : யோகி ஆதித்யநாத்-ஐ எதிர்த்து சமூக ஊடகங்களில் கருத்து பதிவிட்டாலே கைது !


இந்த அறிக்கை, Alt News இணை நிறுவனர் முகமது ஜுபைரைப் பற்றி குறிப்பிடுகிறது. அவருக்கு எதிரான அரசின் நடவடிக்கை மற்றும் பல முதல் தகவல் அறிக்கைகள் (FIR) “அப்பட்டமாக இலக்கு வைக்கப்பட்ட நடவடிக்கை” என்று விவரிக்கிறது.

1983-ம் ஆண்டு பாலிவுட் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை ட்விட்டரில் பகிர்ந்ததற்காக கடந்த மாதம் கைது செய்யப்பட்டார். யதி நரசிங்கானந்த், பஜ்ரங் முனி மற்றும் ஆனந்த் ஸ்வரூப்; முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறைக்கு அழைப்பு விடுக்கும் அவர்கள் அனைவரும் “வெறுக்கத்தக்கவர்கள்” என்று அவர் பதிவிட்டதற்கான குற்றச்சாட்டுக்கு ஆளானார். அடுத்தடுத்த மாதங்களில், உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் இருந்து அவருக்கு எதிராக மொத்தம் 6 FIR-கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

2002 குஜராத் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மற்றும் அமைதிக்கான குடிமக்கள் (CPJ) என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் தொடர்ந்து போராடி வரும் தீஸ்டா செதல்வாட் மீதான அரசின் நடவடிக்கையை அந்த அறிக்கை கண்டிக்கிறது.

2002-ம் ஆண்டு குஜராத்தில் நடந்த கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் நரேந்திர மோடிக்கு க்ளீன் சிட் வழங்கியதை எதிர்த்து, மறைந்த காங்கிரஸ் எம்.பி எஹ்சான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரியின் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் செதல்வாட் கைது செய்யப்பட்டார்.

அறிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ள மற்றொரு பத்திரிகையாளர் கேரளாவைச் சேர்ந்த சித்திக் கப்பன் ஆவார். அவர் 2020-ல் ஹத்ராஸுல் பாலியல் வன்கொலைக்கு செய்திக்காக கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் தேசத்துரோகம் போன்ற கடுமையான சட்டங்களின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்து வருகிறார்.


படிக்க : சமூக மற்றும் இணைய ஊடகங்களை முடக்கி வரும் மோடி அரசு !


ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டதைக் குறிப்பிட்டு, ஊடகவியலாளர்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகள் அல்லது பதிவுகளுக்காக தன்னிச்சையான கைதுகளில் இருந்து ஊடகவியலாளர்களைப் பாதுகாக்க சிறப்புச் சட்டம் தேவை என்று அந்த அறிக்கையில் கோரப்பட்டுள்ளது.

2020-ல் மத்திய அரசு இயற்றிய தொழிலாளர் சட்டங்கள் தொழிலாளர்களை தொழிற்சங்கம் அமைப்பது, வேலைநிறுத்தம் செய்வது மற்றும் ஊதியம் கோருவது ஆகியவற்றை கடினமாக்கியது. அவற்றை “தொழிலாளர் விரோத கொத்தடிமைகள்” என்று கூறும் அந்த அறிக்கை, பத்திரிகையாளர்களுக்கு தொழிற்சங்கங்களை அமைக்கும் உரிமையை மறுக்கின்றன என்று கூறியது.

பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவிற்கு பதிலாக மீடியா கவுன்சில் ஆஃப் இந்தியா மற்றும் தன்னாட்சி மீடியா கமிஷன் ஆகியவை தொழில்துறையின் வளர்ந்து வரும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை அறிக்கை முன்வைக்கிறது. “இதுபோன்ற நேர்மறையான முன்முயற்சிகள் இப்போது தேவை, பத்திரிகை சுதந்திரம் மற்றும் பத்திரிகையாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் மீதான அரசாங்கத் தடைகள் அல்ல” என்று அறிக்கை முடிவடைகிறது.

பத்திரிகையாளர்கள் – ஊடகவியளாளர்கள் மீது தொடர்ந்து நடத்தப்படும் அரசின் அடக்குமுறைகள் அதிகரித்து வரும்நிலையில், அதனை நிரந்தர அவசர நிலையில் வைத்திருக்கவே இந்த அச்சகங்கள் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதா-2022 கொண்டுவரப்படுகிறது. இது பத்திரிகை – ஊடகத்துறையினர் மீதான ஓர் பாசிச நடவடிக்கையாகும். இம்மசோதா நிறைவேற்றப்பட்டால் பெயரலவிளான ஜனநாயகமும் இனி குழித்தோண்டி புதைக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.


சந்துரு

தனியார் கல்விக்கு எதிராக கள்ளக்குறிச்சி மக்கள் போராட்டம் : கேள்விகளும் பதில்களும் | மருது வீடியோ

கள்ளக்குறிச்சியில் உள்ள கொலைகார சக்தி பள்ளி தொடங்கப்பட்டது முதல் தற்போது வரை மாணவர்கள் படிக்க வேண்டும் என்று துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள். பொதுவாக இதுபோன்ற தனியார் பள்ளிகள் போலீசுடன் கூட்டில் இருக்கும்; ஏதேனும் பிரச்சினை வந்தால் போலீசு வெளியே தெரியாமல் சரிசெய்து முடிக்கும்.

உதாரணமாக, ஜேப்பிஆர் கல்லூரியில் ஒரு மாணவி இறந்துவிடுகிறார். ஆனால், அவருக்கு உடம்பு சரியில்லை என்று முதலில் கூறுகிறார்கள். பிறகு மிகவும் சீரியஸ் ஆக இருக்கிறார் எனகிறார்கள். அதன் பிறகு சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் இறந்துவிட்டார் என்கிறார்கள். நியாயப்படி செங்கல்பட்டு மருத்துவமனைக்குதான் அழைத்து சென்றிருக்க வேண்டும். இதில், செங்கல்பட்டு எடுத்து சென்றால் சட்டம்&ஒழுங்கு பிரச்சினை வரும்; எனவே நீங்கள் அந்த மாணவியை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்புங்கள்; உறவினர்கள் வர தாமதம் ஆகும் என்று போலீசு ஐடியா கொடுக்கிறது.

அதைப்போலத்தான், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஜூலை 13-ஆம் தேதி இறந்து போகிறார். இறந்த மாணவி உடலை தாய் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இங்கிருந்துதான் மரணம் சந்தேக மரணமாக மாறுகிறது.

அடுத்து இந்த மரணத்தில் போலீசின் அணுகுமுறை. கள்ளக்குறிச்சியில் வன்முறை நடந்து கொண்டிருக்கும்போது டிஜிபி பேசுகிறார்; உடனே அனைவரும் நிறுத்திக்கொள்ள வேண்டும். இல்லையேல் வீடியோவை வைத்து அனைவர் மீதும் நடவடிக்கை எடுப்போம் என்கிறார். பள்ளி நிர்வாகத்தில் கைது செய்தீர்களா? என்று கேட்கும்போது ஆசிரியர் பெருமக்களை கைது செய்ய முடியாது என்கிறார். இதை சொன்ன எட்டுமணிநேரத்திற்கு பிறகு மூன்று ஆசிரியர்கள் கைது செய்யப்படுகிறார்கள். எப்படி இப்போது மட்டும் கைது செய்யமுடிந்தது. எனவே இங்கு பிரச்சினை என்ன… மாணவின் தாய் இவர்கள் மீதுதான் சந்தேகம் என்று கூறும்போது, சம்மந்தபட்ட ஆசிரியர்களை கைது செய்து எஃப்.ஐ.ஆர் போட்டிருந்தால் இந்த வன்முறை ஏன் நடந்திருக்கிறது என்பதை பற்றி பேசலாம்.

அப்போ மீண்டும் மீண்டும் எப்படி அந்த பள்ளி நிர்வாகம் மரணத்தை மூடி மறைந்ததோ, அதைபோலவே இந்த போலீசும் – மாவட்ட நிர்வாகமும் பள்ளிக்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதன் விளைவாகத்தான் மக்களுக்கு கோவம் வருகிறது.

ஏனெனில், மூன்று நாள் மக்கள் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இறந்த மாணவியின் அம்மாவும் அமைதியாகத்தான் அழுத்துகொண்டிருக்கிறார். ஆனால் மூன்று நாட்களுக்கு பிறகு, என் மகள் இறந்துவிட்டார்; இந்த பள்ளியில் ஏற்கனவே ஏழு பேர் இறந்துள்ளார்கள்; இங்கு அநியாயம் நடக்கிறது, அக்கிரமம் நடக்கிறது என்று ஏன் தாய் கதறி அழுகிறார். நீதி கேட்க ஆள் இல்லை. தட்டிக்கேட்க ஆள் இல்லை என்பதற்காகத்தான். அனைத்து கட்சிகளும் போய் ஆறுதல் தெரிவிக்கிறார்கள் ஆனால் பிரச்சினை தீர்க்கப்படவில்லை.

அவர்கள் கேட்பது ஓர் சாதாரண கோரிக்கை! சம்மந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும். இதை தவிர வேறு எதுவும் கேட்கவில்லை. இதை ஏன் செய்ய மறுக்கிறார்.

கள்ளக்குறிச்சி மாணவியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை ஆதன் தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த இப்பேட்டி வீடியோவில் விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

#justiceforsrimathi #Kallakurichi #KallakurichiStudentDeath #Srimathi

பாஜகவை சமூக வலைதளங்களில் விமர்சித்த இளைஞரை மிரட்டும் பஜ்ரங் தள்!

0

முஸ்லீம் மதத்தைச் சேர்ந்த ஷம்ஷீனா (22), இந்து மதத்தைச் சேர்ந்த காவ்யா (21) ஆகிய இருவரும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு துணிக் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது நண்பர்கள் ஆனார்கள். அவர்கள் கர்நாடகாவின் தட்சிண கன்னடா மாவட்டத்தில் கோல்தாடி மற்றும் ராம்நகர் கிராமங்களில் முறையே 20 கிமீ தொலைவில் வசிக்கின்றனர்.

ஈத் பண்டிகையின் இரண்டாவது நாளான ஜூலை 12 அன்று, ஷம்ஷீனா காவ்யாவை பிரியாணி விருந்துக்கு அழைத்தார். வழக்கமாக, காவ்யாவின் சகோதரர் அவளை ஷம்ஷீனாவின் வீட்டில் விடுவார். ஆனால் அன்று அவருக்கு வேறு சில வேலை இருந்ததால் காவ்யாவை நடுவழியில் உப்பினங்கடி நகரில் விட்டு சென்றார். ஷம்ஷீனா அவளை அங்கிருந்து அழைத்துச் செல்ல வந்தாள். ஒரு பேருந்தில் ஏறி ஆத்தூர் நகருக்கு பயணித்த அவர்கள், கோழி வாங்குவதற்காக இறங்கினர். பின்னர் வீட்டிற்கு செல்ல ஆட்டோ ரிக்‌ஷாவின் ஏறினர்.

வீட்டிற்கு வரும் வழியில் மற்றொரு ஆட்டோ தங்களை பின்தொடர்ந்து வருவதை கவனித்தனர். அவர்களது வீட்டிலிருந்து சுமார் ஐந்து நிமிட தூரத்தில், அவர்கள் ஆட்டோவில் இருந்து இறங்கினர். பயணிகள் இல்லாத இரண்டாவது ஆட்டோ அவர்களைப் பின் தொடர்ந்து சென்றது. இருசக்கர வாகனங்களில் சிலர் பின்தொடர்வதையும் அவர்கள் கவனித்தனர். அவர்கள் ஒரு கடையில் நின்றபோது, ஒரு நபர் அவர்களை “விநோதமாக” பார்ப்பதைக் கண்டார்கள்.


படிக்க : ஹிஜாப் அணிபவர்களை கொலை செய்ய அழைப்பு விடுத்த பஜ்ரங் தள்!


அவர்கள் ஷம்ஷீனாவின் வீட்டை அடைந்ததும், பஜ்ரங் தளத்துடன் தொடர்புடைய 20-30க்கும் மேற்பட்டவர்கள் சில மீட்டர் தொலைவில் திரண்டனர்.

மதியம் 1 மணியளவில், மூன்று போலீஸ் அதிகாரிகள் (இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு பெண்) ஷம்ஷீனாவின் வீட்டிற்கு வந்தனர். அவர்கள் அவளது சகோதரர் ஜியாத்தை கேட்டார்கள். அவர் அங்கு இல்லை என போலீசாரிடம் தெரிவித்தனர். ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போலீசாருக்கு இடையே தொடர் வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டுக்கு வெளியே திரண்டிருந்த இந்துத்துவா கும்பலிடமும் போலீசார் பேசியதாக ஷம்ஷீனா கூறினார்.

காவ்யாவை தங்களுடன் வருமாறு போலீசார் கூறினர். இதற்கு காவ்யா, ஷம்ஷீனா மற்றும் அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இனி அங்கேயே இருந்தால் ஷம்ஷீனாவின் குடும்பம் பிரச்சினைக்கு ஆளாக நேரிடும் என்று நினைத்ததால் அவள் சென்றாள்.

உப்பினங்கடி நகரில் உள்ள ஆதித்யா ஓட்டலுக்கு தனி காரில் போலீசார் அழைத்துச் சென்றனர். அவளை அங்கிருந்து கூட்டிச் செல்ல அண்ணனை அழைத்தனர். அவளுடைய பெயர், வயது மற்றும் தொலைபேசி எண் மற்றும் அவளுடைய சகோதரனின் தொலைபேசி எண் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களை அவர்கள் சேகரித்தனர்.

அதன்பிறகு, பல்வேறு இடங்களில் இருந்து தனக்கு தெரியாத எண்களில் இருந்து அழைப்புகள் வருவதாக காவ்யா கூறுகிறார். சிலர் மங்களூருவைச் சேர்ந்தவர்கள் மற்றும் சிலர் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர் தனது எண்ணை காவல்துறையிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டதாகவும், தனது எண் எப்படி கசிந்தது என்று தெரியவில்லை என்றும் கூறினார். பஜ்ரங் தளத்தைச் சேர்ந்த சிலர் ஜூலை 13 அன்று தனது குடும்பத்தினருக்கு போன் செய்து மிரட்டியதாக அவர் கூறினார்.

ஷம்ஷீனாவின் குடும்பத்தினர் தங்கள் வீட்டிற்கு வெளியே கூடியிருந்த இந்துத்துவா ஆட்கள் மீது போலீசில் புகார் அளித்தனர். அவர்கள் நான்கு பேரின் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். போலீஸார் வழக்குப் பதிவு செய்யவில்லை என்று குடும்பத்தினர் கூறினர்.

ஷம்ஷீனா, “இது எனது சகோதரர் மீது நடத்தப்பட்ட திட்டமிட்ட தாக்குதல் என்பது எங்களுக்கு தெரியவந்தது. அவர் வழக்கமாக சமூக வலைதளங்களில் பாஜகவுக்கு எதிரான பதிவுகளை வெளியிடுவதால் இந்துத்துவா குழுக்கள் அவரை குறிவைக்க விரும்புகின்றன” என்றார். முகமது இர்ஷாத் ஒரு சுதந்திர ஊடகவியலாளர். அவர் @shaad_bajpe இல் ட்வீட் செய்கிறார்.


படிக்க : கர்நாடகா : குடகில் ஆயுதப் பயிற்சி அளிக்கும் பஜ்ரங் தள் !


“எனக்கு இப்போது உயிருக்கு பயம். பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள், ‘ஜியாத் ஊருக்கு வரட்டும், அவரை விட மாட்டோம்’ என்று கூறுவதாக செய்திகள் பரவி வருவதாக எனது சகோதரி கூறினார். சமீபத்தில் பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகள் குறித்து கேள்வி எழுப்பும் கட்டுரைகளை முகநூல் மற்றும் எனது வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் பதிவிட்டிருந்தேன். இதனால் எனது ஊரில் உள்ள ஒரு இந்துத்துவா குழு என்னை குறிவைத்து என் மீது புகார் கொடுக்கவும் முயற்சிக்கிறது. அது பலனளிக்காதபோது, இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்தி என்னை சிக்க வைக்க முயன்றனர்” என்று ஷம்ஷீனாவின் சகோதரர் ஜியாத் கூறினார்.

போலீஸ் வரும்போதுதான் ஊரில் இருந்திருந்தால் கதை வேறுவிதமாக முடிந்திருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்துத்துவா குழுக்கள் கடலோர கர்நாடகாவில் செயல்படுகின்றன. அவர்கள் இருவேறு சமூகங்களுக்கிடையிலான உறவுகளை வெறுக்கிறார்கள். கடந்த காலங்களில், காவ்யா மற்றும் ஷம்ஷீனாவின் நட்பு சாதாரணமாக கருதப்பட்டிருந்தாலும், வகுப்புவாத முனைவாக்கம் இந்த உறவுகளை தடுக்க முயற்சிக்கிறது என்று கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் – பாஜக இந்துத்துவா குண்டர்களை எதிர்த்து சமூகவலைதளங்களில் பதிவிட்டால், அவர்களால் வெறுப்பு பிரச்சாரத்திற்கு ஆளாக்கப்படுவார்கள். அவர்களது குடும்பத்தினரின் மதநல்லிணக்க உறவுகளை முறிக்க முற்படுவார்கள். மிரட்டல் விடுவார்கள். இந்த மனிதத்தன்மையற்ற பாசிச குண்டர்களை நாம் ஒன்றியணைந்து அடித்து விரட்ட வேண்டியது அவசியம்.

புகழ்

பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி அடிப்படையிலான கேள்வி: பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையின் நீட்சி!

0

16.07.2022

பெரியார் பல்கலைக்கழகத்தில் சாதி அடிப்படையிலான கேள்வி:
பாசிச உளவாளி ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கையின் நீட்சி!

சேலத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில் ஜூலை 14 அன்று நடைபெற்ற முதுகலை வரலாறு முதலாம் ஆண்டு தேர்வுக்கான வினா தாளில் சாதி தொடர்பாக ஒரு கேள்வி  இடம் பெற்றிருந்தது. இதில், எம்.ஏ வரலாறு பாடத்திற்கான முதலாம் ஆண்டு இரண்டாவது செமஸ்டர் தேர்வு வினா தாளில், “இதில் எது தமிழ்நாட்டுக்குரிய தாழ்ந்த சாதி” என்ற கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கான விருப்ப பதில்களாக மஹர், நாடார், ஈழவர், ஹரிஜன் ஆகிய நான்கு சாதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.

பெரியார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஜெகநாதன், “சம்பந்தப்பட்ட வினாத்தாள் பெரியார் பல்கலைக்கழகத்தில் தயாரிக்கப்படவில்லை. பிற பல்கலைக்கழகங்களில் உள்ள பேராசிரியர்களால் தயாரிக்கப்பட்டது. தேர்வு வினா தாள் வெளியே கசிந்து விடுவதை தவிர்க்கவே அதை படித்துப் பார்க்கும் வழக்கம் பல்கலைக்கழகத்தில் இல்லை, இது குறித்து எந்த புகாரும் எனக்கு வரவில்லை. அப்படி வந்தால் அதன் மீது உரிய விசாரணை நடத்தப்படும்” என்றும் தெரிவித்தார்.

இன்று பல்கலைக்கழகங்களில் கேள்வித்தாள் தயாரிப்பதற்கான நடைமுறைகள் பற்றி பேராசிரியர்கள் கூறும்போது, பல்வேறு கட்ட பரிசீலனைகளை கடந்துதான் கேள்வித்தாள் தயாராகிறது என்பதை பார்க்க முடிகிறது. குறிப்பாக என்ன பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்க வேண்டும் என்பதற்கு வரையறைகள் உண்டு. மேலும், ஒருவர் எடுக்கும் கேள்வித்தாளை இரண்டு பேர் வரை திரும்பவும் பார்ப்பார்களாம்; அதன் பிறகுதான் தேர்வு செய்வார்களாம். அப்படி தேர்வு செய்து மூன்று கேள்வித்தாள்கள் வரை தயார் நிலையில் வைத்துக் கொள்வார்கள் என்கிறார்கள். இதில் தேர்வுக்கு முன்பு கடைசி நேரத்தில் ஏதாவது ஒரு கேள்வித்தாளை எடுத்துக்கொண்டு மாணவர்களுக்கு தருவார்கள் என்பதுதான் நடைமுறையாம்.


படிக்க : “பிஎம் ஸ்ரீ பள்ளிகள்”: புதிய கல்விக் கொள்கையின் ‘விசக் குஞ்சுகள்’ | புமாஇமு


இதிலிருந்து பார்க்கும்போது துணைவேந்தர் ஜெகநாதன் கூறுவது அப்பட்டமான பொய் என்பதும் திமிராக பேசுவதும் அப்பட்டமாக தெரிகிறது.

பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் பயிலும் மாணவர்கள் பல்வேறு அமைப்புகள் பெயரில் அரசியல் சார்ந்த பரப்புரைகளை, விவாதங்களை நடத்த தடை என உத்தரவு பிறப்பித்ததும் இதே துணைவேந்தர் தான். அதற்கு முன்பே வேதசக்தி என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்-ன் புராண குப்பைகளையும் பிற்போக்கு குப்பைகளையும் பரப்புவதற்கு ஒரு கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்தார். அந்தக் கருத்தரங்கம் கலைஞர் ஆய்வு மையத்துடன் இணைந்து நடத்துவதாக இருந்தது. இது பல்வேறு தரப்பினராலும் கண்டிக்கப்பட்டது. அத்துடன் அந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. இப்படி தொடர்ச்சியாக தனது காவி நடவடிக்கை அரங்கேற்றி வருகிறார் துணைவேந்தன் ஜெகநாதன்.

இதற்கெல்லாம் சிகரம் வைத்தார்போல் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க-வின் பாசிச உளவாளியாக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க சார்ப்பு நபர்களை துணைவேந்தர்களாக நியமித்து வருகிறார். பல்கலைக்கழக பேராசிரியர்களையும் துணைவேந்தர்களையும் சந்தித்து உரையாடுகிறார். புதிய கல்விக்கொள்கை போன்ற நவீன குலக்கல்விக்கொள்கையை பல்கலைக்கழகங்களில் திணிப்பதற்கு பரப்புரை செய்கிறார்.

இந்த கேள்வி இவ்வளவு தூரம் தணிக்கைகளையும் கடந்து வந்துள்ளது என்றால் அதை இந்த பின்புலத்தில் இருந்துதான் பார்க்க முடியும்.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க பா.ஜ.க-வின் எல்.முருகனை அழைத்தார்கள். இதுவரை கௌரவ விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் ஏதாவது ஒரு துறை சார்ந்த வல்லுனராகத்தான் இருப்பார்கள். இப்போது புதிதாக இந்த ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க கும்பலை கௌரவ விருந்தினர்களாக அழைக்கிறார்கள். இதை எதிர்த்து கேள்வி கேட்ட தமிழக உயர் கல்வித்துறை அமைச்சருக்கு ஆளுநர் அலுவலகம் கொடுத்த பதில்தான் பாசிசத்தின் உச்சம்.

“அப்படித்தான் செய்வோம் உன்னால் என்ன செய்ய முடியுமோ அதை செய்துகொள்!” என பேசினார்கள். இதற்கு தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் பட்டமளிப்பு விழாவை புறக்கணித்ததை தாண்டி வேறு என்ன செய்ய முடிந்தது.

இப்போது குழு அமைத்து விசாரித்து நடவடிக்கை எடுக்கப்போவதாக அறிவித்துள்ள தமிழக அரசின் நடவடிக்கைக்கும் மேற்கண்ட ஆளுநர் மாளிகையின் பதில்தான் வரப்போகிறது. கூடவே திமுக அரசு திராவிட மாடல் என்று சொல்லி ஒருபுறம் கார்ப்பரேட் மாடலை அமல்படுத்திக் கொண்டே இந்த காவி கும்பலுடன் சமரசமாக போகிறார்கள்.

ஆகவே ஆளுநர் ரவியின் பல்வேறு பாசிச நடவடிக்கைகளை களத்தில் நின்றுதான் போராடி முறியடிக்க முடியும். அதற்காக இன்று பேராசிரியர்கள் மாணவர்கள் ஜனநாயக முற்போக்கு சக்திகள் அனைவரும் ஓரணியில் திரண்டு இந்த காவி – கார்ப்பரேட் பாசிச கும்பலின் நடவடிக்கைகளை அம்பலப்படுத்தி போராட முன் வர வேண்டும்.


தோழர் ரவி,
மாநில ஒருங்கிணைப்புக் குழு,
புமாஇமு, தமிழ்நாடு.
94448 36642.

Communal attacks during Hindu festivals: The next leap of saffron terrorism!

By utilizing a series of Hindu festivals celebrated in North India such as the Hindu New Year (Nav Samvatsar), Ram Navami and Hanuman Jayanti, the RSS saffron mob has resorted to fascistic rampages against Muslims in different parts of the country.

A riot which broke out during the Hindu New Year celebrations in Rajasthan’s Karauli town on April 2 was the beginning of a series of rampages. On that day, saffron goons took out a motorcycle rally into an area populated with Muslims. The saffron mob attacked Muslims and set ablaze shops and vehicles of Muslims in the area by alleging that the Muslims pelted stones at them.

In a similar fashion, on the occasion of Ram Navami on April 10, Muslims were attacked in different states of the country – Uttarakhand, Delhi, West Bengal, Gujarat, Madhya Pradesh, Jharkhand, Bihar, Maharashtra, Goa and Karnataka. On April 16, on Hanuman Jayanti, anti-Muslim riots were also staged in Delhi’s Jahangirpuri.

At least 20 houses were set on fire in a riot in Madhya Pradesh’s Khargone area. Ibris Khan, a 30-year-old youth, was beaten to death by a saffron gang. More than 24 Muslims were also injured in the riots.

In Khambhat town of Gujarat’s Anand district and Himatnagar in Sabarkantha district, Muslims were attacked and shops were set on fire. A 65-year-old man was killed in the riots.


Also Read : A Revolutionary Party with a mass base: The need of the hour for Sri Lankan Liberation


At least 10 Muslims were injured in the violence in West Bengal’s Howrah. A Muslim man was killed in a riot in Jharkhand’s Lohardaga district and 12 Muslims were seriously injured.

The Sangh Parivar gang has mostly used the same method to carry out such terrorist attacks. In the procession, they shout “Jai Shri Ram” and carry murderous weapons like knives, swords and guns. All those processions deliberately go into areas inhabited by Muslims in large numbers. They stand together in front of the mosques there, and abuse Muslims on loudspeakers and raise slogans that incite violence. At the height of this, the ‘anti-Hindu’ demonstrators organized by them will throw stones at the procession. Thereafter, violent rampages against Muslims will begin.

This is the usual method adopted by the saffron gang to stage riots. These may remind us of rath yatras and Ganesh Chaturthi processions. But so far, there is no history of riots erupting in more than 10 states on any Ram Navami occasion. This is a new trend.

While there are no new differences in the manner in which the riots are being staged, the series of saffron rampages on Hindu New Year, Ram Navami and Hanuman Jayanti is a qualitative change that was never seen before in the RSS’s fascistic terror activities.

In states where saffron fascists have a foothold, several small-scale riots against the minorities often ouucr. In addition to this, widespread riots and fascist lynchings across the country on Ganesh Chaturthi processions, rath yatras have rarely been carried out from time to time.

But now the trend of fascistic rampages and massacres against minority Muslims has been initiated. The saffron gang is going to use every Hindu festival as a pretext for it.

Cultural imposition of saffron terrorists

In Delhi, on Ram Navami, the ABVP goons staged a protest and quarreled at the Kaveri hostel of the JNU and demanded that meat should not be cooked. The ABVP mob has not only beaten up the shopkeeper who was carrying meat but also threatened the hostel secretary not to cook non-vegetarian food.

Around 7:30 pm, the hostel students were surrounded and assaulted by the ABVP for allegedly eating non-vegetarian food. More than 60 students were injured in the attack.

On the campus of the Hyderabad University, the ABVP has built a Ram temple by stacking some stones. A saffron flag was hoisted on top of it and the pictures of Lord Rama and Hanuman were placed on it and pujas were conducted. The Vice-Chancellor of the University had also participated in the Ram Navami Puja organized by the ABVP at the Gurbaksh Singh Maidan of the University campus.

From these two events, one can understand the danger that the educational institutions are becoming a den of saffron terrorists. Moreover, the saffron party’s attack on meat eaters on Ram Navami is an attack on the right to food of the majority of the people. Even if we leave out the non-Hindus, the majority of Hindus do not avoid meat on Ram Navami.

Meanwhile, saffron fascists have banned the sale of meat on Ram Navami in the eastern and southern districts of Delhi, Ghaziabad in Uttar Pradesh and Bengaluru in Karnataka.

A mob deciding what we should eat, dress, speak, and like is a gruesome attack on privacy. The saffron parties have been systematically imposing brahmanical culture on the majority of the people in the name of ‘Hindu culture’ for ages. The students in the JNU are mostly Hindus. This is a proof that the Hindu Rashtra is against the majority of Hindus.

The bulldozer that demolished the democratic illusions

In a series of riots on the eve of the festivals, it was not just the saffron goons who hurled rampages on the Muslims. The state administration has also done its part in the ‘kar seva’.

Around 3 am, the day after the Ram Navami riots (April 11), the local administration landed with a bulldozer, claiming that it was an ‘eviction drive’ to demolish the houses and shops of Muslims in the Khargone area. Houses and shops of more than 50 Muslims were demolished.

First, they started breaking the gate of the Bilal Mosque there. When an elderly woman, who was living near the mosque, tried to stop them, the khaki goons (police) attacked her violently.

They did not pay any heed to the Muslims who begged, “Let us take our belongings out, at least the Quran out of the house”.

Home Minister Narottam Mishra openly spewed venom of hatred that “houses from where the stones were thrown will be turned into heaps of stones”. However, the Khargone district administration said that this was a legally binding exercise to remove encroachments. It said that it had nothing to do with the riots. Some of the demolished houses were built under the Modi government’s Awas Yojana scheme. From this, it can be clearly understood that ‘encroachment’ is just an excuse – a lie.

After Madhya Pradesh, shops and houses of Muslims were also demolished in Khambhat town of Gujarat’s Anand district. The Anand district collector also claimed that it was a step towards removing encroachments, just as the Khargone collector had said.


Also Read : Let’s get on the field against saffron fascist bulldozers! Let’s give a shoulder to the Islamic people! | People power


Delhi BJP Leader Adesh Gupta wrote to the North Delhi civic body to raze ‘illegal construction of rioters’ similar to that of Jahangirpuri demolition drive. Subsequently, on the morning of April 20, without any prior notice, houses and shops of Muslims in the area were demolished by bulldozers.

While the houses were being demolished, advocate Dushyant Dave hurriedly raised these issues in the Supreme Court and obtained a stay order. The municipality demolished more than 20 houses and shops for more than two hours after the court order was received. When asked to stop the demolition drive, it said ‘we have not received any notice’. The attack of the saffron goons which is fascistic is on the one hand while the attack of the state administration is on the other. The minorities face a dual attack.

Removal of encroachment is a blatant lie. Not only the BJP leaders had demanded that the houses of Muslims should be targeted and demolished, but also the Sanghis shared the slogan “If stones are thrown, bulldozers will come to the houses” across the social media. According to law, even if they are rioters, as the BJP says, demolishing their homes and driving them away as refugees is an indigestible anti-democratic act and a violation of human rights. This is the true face of the so-called ‘democratic country’.

It was Yogi Adityanath who launched the terror attack of demolishing the houses of those protesting against the Citizenship Amendment Act in Uttar Pradesh. That model is currently being replicated by Madhya Pradesh’s BJP Chief Minister Shivraj Singh Chouhan. Hence, the Sangh parivar calls Yogi ‘Bulldozer Baba’ and Shivraj Singh Chouhan as ‘Bulldozer Mama’.

The bulldozer itself has become the symbol of fascist terrorists who threaten the minorities. Bulldozers demolished not only buildings, but also democratic illusions.

The duality of the parties is cooperating to the fascists

While the fascist tendency is emerging across the country, we have consistently criticized the soft adherence to the BJP’s Hindutva policy by the parties that claim to be opposed to the BJP. This has been actively expressed among many parties during Ram Navami celebrations as well.

In West Bengal, it is customary for the Trinamool Congress and the BJP to compete and indulge in Ram Navami celebrations. This year too it has continued. Rallies organized by the Vishwa Hindu Parishad, Bajrang Dal and Durga Vahini across West Bengal were attended by TMC leaders too.

Ram Navami is being celebrated in a grand manner on behalf of the Bhupesh Baghel-led Congress government in Chhattisgarh. A special scheme has been announced by the Government under the name of ‘Ram Van Gaman Tourism’. The aim of Ram Van Gaman Tourism Project is to renovate nine places in the state of Chattisgarh, where Lord Ram is said to have lived during his 14-year exile, and connect these ‘holy’ pilgrimage sites.

Speaking after inaugurating the Shivrinarayan temple, which is part of the project, on Ram Navami, Bhupesh Baghel said, “We are planning to develop Shivrinarayan temple on the lines of Ayodhya”. Some of us are saying that Congress President Rahul Gandhi’s criticism of the RSS is appreciable. But the question we are raising is why he didn’t condemn the Chattisgarh Chief Minister.

In the aftermath of these riots, 13 opposition leaders, including the Congress, Trinamool Congress, DMK, CPI and CPM, issued a joint statement condemning Modi’s “silent watch” of the communal violence. Apart from issuing statements, no leader could be seen on the ground when riots were being staged against the Muslims and their houses were demolished.

It was Comrade Brinda Karat, a member of the CPM politburo, and Hannan Mollah, general secretary of the All India Kisan Sabha, who came to the field during the demolition drive in Jahangirpuri. That’s the real opposition. The soft Hindutva of the other parties and the verbal opposition after the riots are just tacit collaborations with the fascists.

Towards an Islamic genocide

The opposition parties and the majority of the democratic forces have been claiming that the riots that took place during the Hindu festivals are being orchestrated by the BJP to win the upcoming elections. They have been repeatedly saying this every time whenever communal riots occur.

The customs, culture, thinking, etc., of the people of the country are being remodelled in accordance with the Hindu Rashtra during every riot. It is very bad to narrow down the process by which the RSS-BJP is distorting and transforming society with electoral limitations. For other vote parties, electoral victories could be everything. But for the RSS-BJP, which dreams of a Hindu Rashtra, elections are not the only ones that matter and are not the main ones.

In the first step to the genocide of the Jews, Hitler adopted a system called ‘ghettoization’. He confiscated the property of the Jews, destroyed their settlements, oppressed them economically and forced them to live in ‘ghettos’ (a slum where people of particular races/religions live in close isolation). He thereby isolated them from the public.


Also Read : Our revolutionary greetings to the working people of Sri Lanka!


The Jews who lived there were treated as bonded labourers. The elderly and children fell ill and died in the ghettos, which had no basic amenities such as food and sanitation.

The saffron fascists are creating a trend similar to ghettoization in our country. The agendas that the saffron party has been pushing forward in the recent past such as the hijab ban, halal jihad, the ban on Muslims from doing business at festivals and the ban on the use of loudspeakers in mosques are pointing towards that. After the demolition of their houses with bulldozers in Madhya Pradesh, four Muslim families settled in the cowshed with no other place to stay. This is an example for the aforementioned trend. What happened to some Muslim families today could happen to most of the Muslims tomorrow.

All this is being done in the name of the religious beliefs of the majority of the Hindus. It is not possible to tolerate any more when the saffron mob subjects Muslims, who lived together like brothers, to such a cruel situation. It is also not humane for the Hindus to celebrate their religious festivals happily, while the Muslims are spilling their blood.

It is time to understand that the silence of the majority of the religious Hindus, act as an impetus to the communal mob. It is time to stand together with the Muslims and oppose the saffron fanatics. It is the responsibility of the revolutionary and democratic forces to mobilize the people and build struggles to chase away the fascists.


Tamil Editorial

கள்ளக்குறிச்சியா… காஷ்மீரா? பள்ளியை காப்பாற்றும் டிஜிபி – மூடிமறைக்கப்படும் உண்மை! | வீடியோ

கள்ளக்குறிச்சியா… காஷ்மீரா? பள்ளியை காப்பாற்றும் டிஜிபி
– மூடிமறைக்கப்படும் உண்மை! | வீடியோ

அனைத்து தனியார் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பொதுவாகவே மாணவர்கள் படிக்கவில்லையென்றால் அடிப்பது, படிக்க வைப்பதற்காக அடிப்பது  பல்வேறு சம்பவங்கள் நடந்திருக்கிறது. அப்படிதான் இந்த பள்ளியிலும் நடந்திருக்கிறது.

தற்போது ஸ்ரீமதி என்கிற மாணவி இறந்திருக்கிறார். இதற்கு மறுகூறாய்வு செய்யவேண்டும் என்பதுதான் மாணவியின் பெற்றோர் கேட்கும் நியாயமான கேள்வி. ஆனால், அதை செய்யாமல் ஏன் நீதிமன்றத்திற்கு போ என்கிறார்கள். அரசு தரப்பில் இருப்பவர்களை வைத்துக்கொண்டு உடல்கூறு ஆய்வு செய்யவேண்டும் என்கிறார்கள் இது ஓர் நியாயமான கோரிக்கை. இதற்கு ஏன் நிர்வாகம் மறுக்கின்றது.

இறந்த மாணவின் உடலை பெற்றோர்கள் பார்க்க அனுமதிக்கப்படவில்லை. உடலை பார்க்கவே பல்வேறு போராட்டங்கள் நடத்தியுள்ளனர். இன்றைக்கு வன்முறை என்று கூறும் போலீசு, அன்றைக்கே பிரச்சினையில் தலையிட்டு சரி செய்திருக்க வேண்டும் அல்லவா? இதை ஏன் செய்யாமல் பிரச்சினையை மூடி மறைக்கிறார்கள்.

என் மகள் எப்படி இறந்தாள் என்று தெரியவேண்டும் என்று பெற்றோர்கள் கேட்கிறார்கள்; இதை கூட செய்யாமல் மூடி மறைக்க இந்த பள்ளி நிர்வாகம் ஏன் முயற்சிக்கிறது. ஆசிரியர் பெருமக்களை அப்படியெல்லாம் கைது செய்யமுடியாது என்று டிஜிபி சொல்கிறார். ஆஹா! இப்படி ஒரு கன்னியமிக்க மனிதநேயம் மிக்க போலீசுத்துறையை நாம் எங்கேயும் பார்க்க முடியாது. வீரப்பனை பிடிக்கிறேன் என்று சென்று அங்கு இருந்த பழங்குடியின பெண்களை போலீசு செய்த சித்திரவதையின் யோக்கிதை நமக்கு தெரியாதா?

ரெட் பிக்ஸ் செய்தி சேனலுக்கு அளித்த நேர்காணல் வீடியோவில், கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரணம் பற்றிய பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து விளக்குகிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில செய்தித்தொடர்பாளர் தோழர் மருது அவர்கள்…

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

மாணவர்களின் உரிமையையும், அரசின் விதிமுறைகளையும் காலில் போட்டு மிதிக்கும் திருவாரூர் வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளாளர்கள்!

மாணவர்களின் உரிமையையும், அரசின் விதிமுறைகளையும்
காலில் போட்டு மிதிக்கும் திருவாரூர் வ.சோ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தளாளர்கள்!
அரசே பள்ளியை ஏற்று நடத்த போராடுவோம்!

திருவாரூர் நகர மையத்தில் சுமார் 2500 மாணவர்கள் பயிலும் வ. சோ. ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் (VHBHSchool), நடப்பு கல்வியாண்டில் (2022 -2023) இருந்து +1 வகுப்பு வரலாற்றுப் பாடப் பிரிவை தன்னிச்சையாக நீக்கியுள்ளனர். இச்செயல் மாணவர்கள், பெற்றோர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், முன்னாள் மாணவர்கள், ஜனநாயக சக்திகளின் மத்தியில் அதிர்ச்சியையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

1916-ஆம் ஆண்டு அன்றைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட இப்பள்ளி, அக்காலத்தில் “கழகப் பள்ளி” என்றும் ஆங்கிலத்தில் “Board High School” என்றும் பெயரிடப்பட்டது. முன்னாள் முதலமைச்சர் திரு.மு. கருணாநிதி, முன்னாள் அமைச்சர்கள் க.அன்பழகன், முரசொலி மாறன், புகழ்பெற்ற பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி ஆகியோர் பயின்ற இப்பள்ளி நூற்றாண்டைக் கடந்து புகழ்பெற்று இயங்கிக்கொண்டிருக்கிறது.

அரசு பள்ளியாக இருந்த இப்பள்ளி திரு.காமராஜர் தமிழக முதலமைச்சராக இருந்தப்பொழுது 1961 – 1962 கல்வியாண்டில் V. S. தியாகராஜ முதலியாரிடம் கொடுக்கப்பட்டது. அதாவது அரசு பள்ளி, அரசு உதவிப்பெறும் தனியார் பள்ளியாக மாற்றப்பட்டது. V S தியாகராஜ முதலியாரின் வளர்ப்பு தந்தையாகிய “வடபாதிமங்கலம் சோமசுந்தரம் முதலியார்” பெயரில் இப்பள்ளி இயங்கி வருகிறது. 1978-79 கல்வியாண்டில் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளி நகரத்தின் மையத்தில் இருப்பதால் ஆண்களுக்கு வேறு அரசு பள்ளிகள் எதுவும் தொடங்கவில்லை.

திருவாரூர் நகரம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் வசிக்கும் நடுத்தர, ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் கல்வி தேவையை இப்பள்ளி பூர்த்தி செய்து வருகின்றது. அத்தகைய இப்பள்ளியில் தற்போது தாளாளர்களாக இருப்பவர்கள் மாணவர்கள் நலன், சமூக நலனில் இருந்து செயல்படாமல் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தன்னிச்சையாக அடாவடியாக நடந்துக்கொள்வதையே வரலாற்று பாடப் பிரிவை நீக்கியதில் இருந்து தெரிந்துக்கொள்ள முடிந்தது.


படிக்க : 13000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க உத்தரவு: இது பள்ளிக்கல்வித்துறையின் ‘அக்னிபாத்’


அரசு பள்ளி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்று பின்னணி:

பல்லாயிரம் ஆண்டுகளாக பெரும்பான்மை மக்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட சமூகமாகவே நம்நாடு இருந்து வந்தது. பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் கல்வி கற்க முடியாத நிலையிலே “மனுதர்மம்” இந்நாட்டை ஆண்டு வந்தது.

ஆங்கிலேயர்கள் இந்நாட்டை காலனியாக்கியப் பிறகு பல்வேறு துறைகளாக நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டனர். அதேசமயத்தில் கல்வி அறிவு பெற்றால் தமக்கு எதிராக போராட தொடங்கிவிடுவார்கள் என்பதையும் கவனத்தில் கொண்டு மெக்காலே என்பவரின் ஆலோசனையின் அடிப்படையில் 1835-ல் ஆங்கில கல்வி சட்டம் இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

இதன் நோக்கம் எண்ணத்தால், கலாச்சாரத்தால் ஆங்கிலேயனாகவும் (அதாவது ஆங்கிலேயனுக்கு சேவகம் செய்வது), நிறத்தால், உடலால் இந்தியராகவும் இருக்க வேண்டும் என்பதை முன்னறிவித்தே கொண்டுவரப்பட்டது. தனது நிர்வாகத்தில் “குமாஸ்தாக்களை” உருவாக்குவதற்குதான் அக்கல்வியின் நோக்கம், ஆகவே சாதி, மதம் போன்றவை தடையில்லை என்பதை ஒதுக்கி தள்ளிவிட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது.

1947 போலியான சுதந்திரததிற்கு முன்பும், பின்பும் இன்று வரை பல்வேறு கல்வி கொள்கைகள் வகுக்கப்பட்டு நடைமுறைப்படுத்தி வருகின்றன. 1960களில் அனைவருக்கும் கல்வி கொடுக்க வேண்டியது ஆளும் வர்க்கங்களின் தேவைக்கு அவசியமாகியது. அதுவரை ஜமின்தார்களின் பண்ணைகளில் பணிபுரந்த பண்ணையடிமைகளுக்கு கல்வி அவசியமாக இருக்கவில்லை. உள்நாட்டில் தொழில்கள் வளர்ச்சியடைய தொடங்கிய காலகட்டத்தில், தொழிற்சாலைகளில் பணிபுரிய கல்வியறிவு அவசியம் ஏற்பட்டது.

உதாரணமாக பெரும் பண்ணையாராக இருந்த வடபாதிமங்கலம் தியாகராஜ முதலியார் போன்றோர்கள் தொழிற்சாலைகள் தொடங்கினர். “திரு ஆரூரான் சுகர்ஸ்” அதற்கான ஒரு எடுத்துக்காட்டு. பண்ணையார்கள், தொழிற்துறை முதலாளிகளாக மாறத்தொடங்கிய உடன், அவர்களது மில்கள், தொழிற்சாலைகளில் கல்வி அறிவு பெற்றவர்கள் தேவைபட்டனர். இந்த ஆளும் வர்க்கங்களின் தேவையை  அரசே முன்னின்று அனைவருக்கும் கல்வி கொடுக்க பல்வேறு முயற்சிகளை தொடங்கியது.

இதுவரை பெரும் பண்ணைகள், ஜமீன்தார்களாக இருந்தவர்கள் தங்களின் ‘பெருந்தன்மை, கௌரவம், வள்ளல்’ தன்மையை வெளிப்படுத்துவதற்காக பள்ளிகளை தொடங்குவது, பள்ளிகளுக்கு நிலங்களைக் கொடுப்பது, பொருளுதவி செய்தது போன்றவை நடந்தன.

அத்தகைய சூழலில் அரசும் -குறிப்பாக காமராஜர் முதலமைச்சராக இருந்த காலகட்டம்- பல்வேறு சலுகைககளை செய்துக்கொடுத்தது. இத்தகைய பின்னணியில்தான் அரசு பள்ளியாக இருந்த இப்பள்ளி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது.

எனினும் 1986-க்குப் பிறகு தனியார்மயம் தாராளமயம் உலகமயம் கொள்கைக்கு ஏற்ப குறைந்தபட்சம் சேவையாக இருந்த கல்வி, வியாபார பண்டமாக்கப்பட்டு, இன்று கார்ப்பரேட்டுகளின் கைகளில் சென்றுவிட்டது. இன்றைய தனியார் கல்விக்கும், அன்றைய குறைந்தபட்ச சேவை என்கிற நிலையில் இருந்த தனியார் (அரசு உதவிப்பெறும்) கல்விக்கும் வேறுபாடு உள்ளதை நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

வரலாற்று பிரவு பாடத்தை நீக்கியது பற்றி கல்வியாளர்களின் கருத்துகள் என்ன?

“அரசு மற்றும் அரசு உதவிப் பெறும் பள்ளிகளில், வரலாற்றுப் பாடப் பிரிவையோ, வேறு எந்த பாடப்பிரிவையோ மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (Cheif Education officer) ஒப்புதல் இன்றி நீக்கவோ, புதிதாக சேர்க்கவோ கூடாது.

வரலாற்றுப் பாடப்பிரிவை நீக்குவதற்கு கூட தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளதை தெரிவித்து, அதாவது 10 மாணவர்களுக்கு கீழ்தான் சேர்க்கை நடந்துள்ளது என்பதை முறையாக தெரிவித்துதான் அப்பாடப் பிரிவை CEO ஒப்புதலுடன் நீக்க முடியும்.

ஒருவேளை மாணவர்கள் சேர்க்கை அதிகரித்தால், மாணவர்கள் கோரும் பட்சத்தில், அதற்காக புதிய ஆசிரியர் பணியிடங்களை நியமிக்க CEO-விடமிருந்து கேட்டு பெற வேண்டியது அவசியம்” என்று கூறியுள்ளனர்.

ஆனால் இப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை இருந்தும், மாணவர்கள் கோரியும் தன்னிச்சையாக யாருடைய அனுமதியும் இன்றி இப்பாடப்பிரிவை இப்பள்ளி நிர்வாகம் நீக்கியுள்ளது.

அரசாணை (GO) எண் 101 -ன் படி பள்ளிகளை நிர்வகிக்கும் அதிகாரம் CEOவிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இப்பள்ளி தாளார்களோ, வரலாற்றுப் பாடப் பிரிவை எடுக்கக்கூடாது என்று திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர் ஆணையிட்டும் அவற்றை கொஞ்சமும் மதிக்காமல் அடாவடியாக நடந்துக்கொள்கின்றனர்.


படிக்க : மாதிரிப் பள்ளிகளில் மெரிட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை : காசு இல்லாதவனுக்கு கல்வி இல்லை !


மாணவர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள், பல்வேறு ஜனநாயக இயக்கங்கள், கல்வியாளர்களின் கோரிக்கையையும் இப்பள்ளி தாளாளர்கள் மதிக்கவில்லை, மாவட்ட ஆட்சியர், முதன்மைக் கல்வி அலுவலர் ஆணைகளையும் பொருட்படுத்தவில்லை, அரசின் விதிமுறைகளையும் மதிக்கவில்லை.

உதாரணத்திற்கு அனைத்து அரசு உதிவிப்பெறும் பள்ளிகளும் தங்களின் பள்ளி பெயரின் அருகில் “அரசு உதவிப் பெறும் பள்ளி” எனப் பெயரிட உத்தரவிட்டும் இப்பள்ளி மதிக்கவில்லை.

போராடும் இயக்கங்கள், மக்கள் இப்பள்ளியை அரசு திரும்பவும் எடுத்துக்கொள்ள வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைத்து போராடுவது சரியென்பதே நடந்துக்கொண்டிருக்கும் நிகழ்வுகள் காட்டுகின்றன. சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நிதிநெருக்கடியில் சிக்கியப்பொழுது அரசு தனது பொறுப்பில் எடுத்துக்கொண்டது. இப்பள்ளியும் அரசின் விதிமுறைகளை காலில் போட்டு மிதித்துள்ளது.

1961-1962-ன் ஆண்டுகளில் அரசு இப்பள்ளியை தனியாரிடம் கொடுக்க வேண்டிய சூழல் இருந்திருக்கலாம், ஆனால் தற்போது அத்தகைய சூழல் இல்லை. அரசே இப்பள்ளியை ஏற்று நடத்துவது ஒன்றும் தவறில்லை. ஆகவே தமிழக அரசு உடனடியாக இப்பிரச்சினையில் தலையிட வேண்டும், தமது கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டத்தை தொடருவோம்.


ஆசாத்
மக்கள் அதிகாரம்,
திருவாரூர். (9943494590)

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 2

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 1

இலங்கையை குலுக்கிய உழைக்கும் மக்களின் பேரெழுச்சி ! – பாகம் 2

தொழிலாளர் வர்க்கத்தைக் கண்டு அஞ்சிய இராஜபக்சே

காலி முகத்திடலில் மட்டுமல்லாது, ஏப்ரல் மாதம் முழுவதிலும் குறுக்கும் நெடுக்குமாக இலங்கை முழுவதும் மக்கள் போராட்டங்கள். தொழிலாளர்கள், வணிகர்கள், அரசு ஊழியர்கள், மருத்துவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், கிறித்தவ பாதிரிமார்கள், புத்த துறவிகள் என எல்லாத் தரப்பு மக்களும் சொந்த முறையில் தங்களை அரசு எதிர்ப்பு போராட்டங்களில் இணைத்துக் கொண்டிருந்தார்கள்.

சில இடங்களில், போராட்டத்தை ஒடுக்குவதற்காக போலீசாரால் துப்பாக்கிச் சூடுகளும் நடத்தப்பட்டது. குறிப்பாக ரம்புக்கனை என்ற இடத்தில் எரிபொருட்களின் விலையேற்றத்தை கண்டித்து ஏப்ரல் 19-ஆம் தேதி பொதுமக்கள் நடத்திய இரயில் மறிப்பு போராட்டம் சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. போராட்டத்தை கலைப்பதற்காக போலீசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலியானார். 12 பேர் படுகாயமுற்றனர்.

காலி முகத்திடல் போராட்டம் தொடங்கி ஒருமாத காலம் வரையில், “தான் பதவி விலகுவதற்கு வாய்ப்பே இல்லை” என்று நாற்காலியை இறுக்கிப் பிடித்துக் கொண்டிருந்த மஹிந்த இராஜபக்சேவிற்கு, குலைநடுக்கத்தை ஏற்படுத்திப் பணியவைப்பதற்காக தொழிலாளி வர்க்கம் நேரடியாக களமிறங்க வேண்டியிருந்தது.

பலதரப்பட்ட தொழிற்சங்கத் தலைவர்களின் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஏப்ரல் 29 அன்று ஆயிரம் தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நாடுதழுவிய ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்தன. ஆளும் கட்சியான, இலங்கை பொதுஜன பெரமுனக் கட்சியின் தொழிலாளர் சங்கம்கூட வேலைநிறுத்தத்தில் இணைந்துகொண்டது.


படிக்க : இலங்கை மக்கள் எழுச்சி : உலகம் முழுவதும் உள்ள பாசிஸ்டுகளுக்கு பீதியூட்டும் போராட்டம்! | வீடியோ


அஞ்சல்துறைத் தொழிலாளர்கள், வங்கி ஊழியர்கள், பல்கலைக் கழக பேராசிரியர்கள், பள்ளி ஆசிரியர்கள், இரயில்வே தொழிலாளர்கள், பேருந்து ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் என அனைத்து தரப்பு உழைப்பாளர்களும் இலங்கையின் இயக்கத்தை ஒருநாள் நிறுத்திவைத்திருந்தார்கள் என்றே கூற வேண்டும்.

வியாபாரிகளின் பங்கேற்பால், எப்போதும் கூட்டம் அலைமோதும் கொழும்பு திறந்தவெளிச் சந்தை காலி மைதானமாக காட்சியளித்தது. அத்தியாவசிய பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் முழுநாள் வேலைநிறுத்தத்தில் பங்கெடுப்பது சாத்தியமில்லை என்பதால், தங்களது உணவு இடைவேளைகளைப் பயன்படுத்தி, 2 இரண்டு மணிநேர ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்தனர்; இதன் மூலம் பொது வேலைநிறுத்தத்திற்கு தங்களது ஆதரவையும் வழங்கினர்.

வெற்றிகரமான ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு பிறகு, “கோத்தபய மற்றும் மஹிந்த இராஜபக்சே ஆகியோர் உனடியாக பதவி விலக வேண்டும்; இல்லையெனில், மே 6 முதல் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுவோம்” – என கெடு விதித்து எச்சரித்தார்கள் தொழிலாளர்கள். சொன்னபடி, இலங்கையை மீண்டும் முடக்கினார்கள்.

அனைத்து தொழிற்சாலைகளின் வாயில்களிலும் கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டங்கள் ஆரவாரமாக நடைபெற்றன. தொழிலாளர் எழுச்சியைக் கண்டு நடுங்கிய அரசு மீண்டும் அவசர நிலையை அறிவித்தது. அப்பொழுதே மஹிந்த இராஜபக்சே பதவி விலகப்போவதை அரசியல் வட்டங்கள் கிசுகிசுக்கத் தொடங்கின.

பதிலடி தந்த மக்கள், உயிர்தப்பி ஓடிய மஹிந்த

ஆத்திரமுற்ற மஹிந்த இராஜபக்சே, மே 9-ஆம் தேதி பதவி விலகலை அறிவிப்பதற்கு முன்பு, ‘கட்சிக்கூட்டம்’ என்ற பெயரில் பேரணியாகவும் பேருந்துகள் வாயிலாகவும் 3,000 குண்டர்களை அலரி மாளிகைக்கு வரவழைத்தார்; அடியாட்களாக கொண்டுவரப்பட்டவர்களில், அம்பாந்தோட்டை சிறைச்சாலை கைதிகளும் இருந்தனர். அனைவருக்கும் பணத்தைக் கொடுத்ததோடு, மதுவை ஊற்றி வெறியூட்டி, காலி முகத்திடலில் போராடிக் கொண்டிருந்த மக்கள் மீது வன்முறையை ஏவினார் மஹிந்த.

போராட்ட முகாம்களுக்குள் புகுந்த குண்டர்கள் கூடாரங்களை தீ வைத்து எரித்தனர். இரும்பு கம்பிகள், உருட்டுக் கட்டைகள் போன்ற கொடூர ஆயுதங்களால் போராடிய மக்களை தாக்கினர். அமைதி வழியில் போராடிக் கொண்டிருந்த மக்களோ இந்த தாக்குதலை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. தாம் தொடங்கிவைத்ததைவிட, பலமடங்கு கூடுதலாக பெற்றது இராஜபக்சே கும்பல்.

திரண்டெழுந்த மக்கள் இராஜபக்சே கட்சியினர் ஒவ்வொருவரையும் தேடித்தேடி சரமாரியாக அடித்து உதைத்தனர். அவர்கள் பயணித்து வந்த பேருந்துகளை ஜேசிபி இயந்திரம் கொண்டு நொறுக்கினர்; தீ வைத்து எரித்தனர்.

நாட்டின் பல பகுதிகளிலும் பொதுஜன பெரமுன கட்சி அமைச்சர்கள், எம்.பி.கள், மேயர்கள் ஆகியோர் வீடுகளை முற்றுகையிட்டு போராடினார்கள் மக்கள்; அதன்மீது கல்லை விட்டெறிந்து தங்களது ஆத்திரத்தை வெளிப்படுத்தினார்கள். குருணாகலில் உள்ள மஹிந்தவின் வீட்டை போராட்டக்காரர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். பெரமுன கட்சியைச் சேர்ந்த அந்நகரத்தின் மேயர் வீடும் எரிக்கப்பட்டது. கொழும்புவில் இருந்த பிரதமரின் அதிகாரப் பூர்வ இல்லத்தை சூறையாடுவதற்காக மக்கள் பலமுறை உள்ளே செல்ல முயன்றனர். போராட்டக்காரர்களிடம் மாட்டிக்கொண்டதால் பயபீதியடைந்த ஆளுங்கட்சி எம்.பி அமரகீர்த்தி அத்துகொரல, காருக்குள் இருந்தபடி தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டார்.

இப்படியொரு பதிலடி கிடைக்கும் என்று இராஜபக்சே கும்பல் கனவிலும் எதிர்ப்பார்க்கவில்லை. பதவி விலகி ஓடிய மஹிந்த இராஜபக்சே, இராணுவத்தின் உதவியுடன் திரிகோணமலை கடற்படையினரின் முகாமில் தஞ்சமடைந்து உயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் நிலை ஏற்பட்டது. தகவலறிந்த அங்கு திரண்ட மக்கள், “அந்த கொள்ளையனை பாதுகாக்காதீர்கள், வெளியே விடுங்கள்” என்று முகாமுக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இனவாத இழிவரலாற்றை துடைத்தொழித்த வர்க்க ஒற்றுமை

எல்லாவற்றிற்கும் மேலாக, பல்லாண்டுகாலம் ஆளும் வர்க்கம் திட்டமிட்டே உருவாக்கிய பேரினவாத வெறியால் மூழ்கடிக்கப்பட்ட சிங்கள உழைக்கும் மக்கள், தங்களுடைய எதிரி யார் என்பதை அனுபவத்தால் உணர்ந்துகொண்ட பின், நொடியில் அதை உதறியெழுந்துவிட்டதும்; சிங்களர்கள், தமிழர்கள், முசுலீம்கள், கிறித்தவர்கள் என அனைத்து இன, சமயத்தைச் சேர்ந்த உழைக்கும் மக்களும் ஒன்றுதிரண்டு வெளிப்படுத்திய வர்க்க ஒற்றுமையிலும்தான் போராட்டங்களின் சிறப்பே அடங்கியிருந்தது.

2019 ஆம் ஆண்டு தான் பதவியேற்றபோது, “சிங்களர்களின் பேராதரவால், அவர்களின் ஓட்டுக்களால்தான் பதவிக்கு வந்திருக்கிறேன்” – என அப்பட்டமாக இனவாதம் பேசிய மஹிந்த இராஜபக்சேவை இன்று அதே சிங்கள மக்கள் விரட்டியடித்துள்ளார்கள். அதிபர் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பெற்று ஆட்சிக்கட்டிலில் ஏறிய கோத்தபய, “தான் சகிப்புத்தன்மையற்றவன் அல்ல” என்று விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக காலி முகத்திடல் மைதானத்தை ஆர்ப்பாட்ட இடமாக அறிவித்தார். இன்று அதே காலி முகத்திடலைக் கைப்பற்றி, அவரைத் தேர்ந்தெடுத்த அதே பெரும்பான்மை மக்கள், “கோட்டா கோ கம” என்ற பெயரில் ஒரு சிறு நகரத்தையே உருவாக்கியுள்ளார்கள். ஆகா, என்னே ஒரு இலக்கியச் சுவை மிக்க பழிவாங்கல்!

***

மே 9 அன்று மக்களைத் தாக்கிய இராஜபக்சே ஆதரவு குண்டர்களை, வலைவீசித் தேடிக் கொண்டிருந்த சிங்கள போராட்டக்காரர்கள், ஒரு தமிழ் குடும்பம் பயணம் செய்த காரை பல இடங்களில் வழிமறித்து சோதனையிட்டுள்ளனர். பயணித்தவர்கள் தமிழர்கள் என்று தெரிந்தபோது அவர்களிடம் போராட்டக்காரர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். ஓரிடத்தில், வாகனத்தை வழிமறித்த போராட்டக்காரர் ஒருவர், ஓட்டுநரிடம் 500 ரூபாய் பணம் கேட்டுள்ளார். இதைப் பார்த்த மற்ற போராட்டக்காரர்கள் அவரைக் கண்டித்து பணத்தை திரும்பக் கொடுக்கச் சொல்லியிருக்கிறார்கள். “நாங்கள் ரௌடிகள் அல்ல, புரட்சியாளர்கள்” என்றும் அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

மேற்கூறிய உண்மைச் சம்பவத்தை டிவிட்டரில் பதிவிட்டவர் சிங்களர்களை வெறுக்கும் தீவிர தமிழினவாதி என்று கூறப்படுகிறது. ஆனால், இது அவரது உறவினர்களின் சொந்த அனுபவம்; சிங்களர்கள் தமிழர்களிடம் மதிப்புடன் நடந்துகொண்டார்கள் என்று அவர்கள் கூறிய அனுபவத்தைக் கேட்டு நெகிழ்ந்துபோய், அவரே சமூக ஊடங்களில் பதிவிட்டுள்ளார். (தகவல்: கலையகம் வலையொளி)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாளான மே 18, வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் இலங்கை அரசால் இராணுவ வெற்றி தினமாக கொண்டாடப்படும். அதிபர் மாளிகை அமைந்துள்ள காலி முகத்திடல் மைதானம் விழாக்கோலம் பூண்டிருக்கும். இன்று அதே மைதானத்தில், ஈழத்தமிழர்களுக்காக நினைவஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள் சிங்கள மக்கள். 13 ஆண்டுகளில் வடக்கு-கிழக்கு மாகாணங்களைத் தவிர்த்து, சிங்களர்கள் பெரும்பான்மையாக வாழும் தென்னிலங்கையில் தமிழினப் படுகொலைக்காக அஞ்சலிக் கூட்டம் நடப்பது இதுவே முதல்முறை.

“தமிழினப் படுகொலைகளுக்காக மன்னிப்பு கோருகிறோம்”, “இராஜபக்சே அரசே, தமிழினப் படுகொலைக்கு பதில் சொல்” போன்ற முழக்கங்கள் தாங்கிய பதாகைகளை சிங்கள மக்கள் ஏந்திக் கொண்டிருந்தனர்.

இலங்கையின் மூத்த பத்திரிகையாளர் ஏ.ஆர்.வி. லோஷன் கூறுகையில், எனது வாழ்க்கையில் முதல் முறையாக சிங்கள மக்கள் நடத்தும் போராட்டம் ஒன்றில், தமிழர்களின் பிரச்சனைகள் பேசப்படுவதை பார்க்கிறேன்; காலி முகத்திடலில் நடக்கும் போராட்டத்தில், “போர்க் குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்”, “காணாமல் போனவர்களுக்கு நீதி வேண்டும்”, “முள்ளிவாய்க்கால் படுகொலைகளுக்கு நீதி வேண்டும்” – போன்ற வாசகங்களை கண்டேன் என்கிறார்.


படிக்க : தமிழா, இலங்கையை பார் – வர்க்க உணர்வு கொள்!


“சிங்கள மக்களையே இவ்வளவு தூரம் கொடுமைப்படுத்தும் அரசு, தமிழ் மக்களுக்கு என்னவெல்லாம் செய்திருக்கும் என இப்போது நினைத்து பார்க்க முடிகிறது” – என்று தனது அனுபவத்தை பிபிசி தமிழ் ஊடகத்திடம் பகிர்ந்துகொண்டார் ஒரு சிங்களவர்.

தமிழினப் படுகொலையையொட்டி மட்டுமல்ல, 2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புக்கு காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க கோரியும், தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூர்ந்தும் மௌனப் போராட்டம் ஒன்று, ஏப்ரல் 17 ஆம் தேதி (இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை நாள்) நடைபெற்றிருக்கிறது. அதைப் போல, மே 3 ஆம் தேதி ரமலான் பண்டிகையை ஒட்டி, போராட்டத்தில் ஈடுபடும் முஸ்லீம் மக்கள் நோன்பு திறப்பதற்காக தமிழர்களும் சிங்களர்களும் இணைந்து உணவு சமைத்திருந்தார்கள்.

சிங்களர்களோ, தமிழர்களோ, முஸ்லீம்களோ, கிறித்தவர்களோ ஒருவருக்கொருவர் எதிரி அல்ல. மாறாக மதவெறியும் இனவெறியுமே அனைத்து தரப்பு உழைக்கும் மக்களுக்கும் எதிரி என்பதை வர்க்கப் போராட்டத்தின் வழியே புரிந்துகொண்டுவிட்டார்கள் இலங்கை உழைக்கும் மக்கள்.

இந்த புரிதலுடன் கூடிய வர்க்க ஒற்றுமையும் போராட்டங்களுமே இனவாத பாசிஸ்டுகளை அச்சம் கொள்ள வைத்துள்ளது. பாசிஸ்டுகள் வெல்லப்பட முடியாதவர்கள் அல்ல. இலங்கை உழைக்கும் மக்களின் பேரெழுச்சியானது, இந்தியாவில் காவி பாசிசத்தை ஒழித்துக் கட்டுவதற்கு காத்திருக்கும் நமக்கும் தெம்பூட்டுகிறது.

(முற்றும்)


பூபாலன்

புராணக் குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!

விஞ்ஞான அறிவியலை குடுமிக்குள் சொருகிக்கொண்டு,
புராண குப்பைகளை அறிவியல் என்று கூறும் சங்க பரிவார கும்பல்!

புதிய கல்வி கொள்கையை கர்நாடகாவில் அமல்படுத்துவதற்காக அம்மாநில அரசு அமைத்த குழு கொடுத்த அறிக்கையில், “பித்தாகரஸ் தோற்றம் நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்தது எல்லாம் போலி செய்திகள். இவை குறித்து வேத காலத்து கணிதத்தில் உள்ளது. கூகுளில் இவற்றை பற்றிய தரவுகள் உள்ளன” என்று கூறப்பட்டுள்ளது.

கடந்த 2021-ம் ஆண்டு கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க ஆட்சியில் அமர்ந்த பிறகு, அங்கு நாட்டிலேயே முதன் முறையாக அதிகாரப்பூர்வமாக தேசிய கல்வி கொள்கை அமல்படுத்தப்பட்டது. அதன் பிறகு தொடர்ச்சியாக அங்குள்ள கல்வியிலும் பாட புத்தகங்களிலும் மாற்றம் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த மே மாதம், 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான சமுக அறிவியல் பாடபுத்தகங்களிலும், 1 முதல் 10-ம் வரையிலான கன்னட மொழி பாடப் புத்தகங்களிலும் திருத்தம் செய்யப்பட்டது. அத்திருத்தத்தில் அம்பேத்கர், பகத்சிங், திப்புசுல்தான்,  பசவண்ணா, பெரியார், நாராயண குரு போன்ற புரட்சியாளர்கள், காலனியாதிக்க எதிர்ப்பு வீரர்கள், சீர்திருத்தவாதிகளின் பாடங்கள் பாடத்திட்டத்தில் இருந்து நீக்கப்பட்டன. இதற்கு பதிலாக, ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் கேசவ் பலிராம் எட்கேவாரின் உரை 10-ம் வகுப்பு கன்னட பாடப் புத்தகத்தில் இடம் பெற்றது. இதற்கு எதிராக பல இடங்களில் ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெற்றது. பலர் தாங்கள் வகித்த முக்கிய பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.


படிக்க : புராணங்களை உதாரணம் காட்டி வகுப்பெடுத்த அலிகர் பல்கலைக்கழக பேராசிரியர் இடைநீக்கம் !


இந்நிலையில் தேசிய கல்வி கொள்கையை அமைப்பதற்காக கர்நாடக அரசு அமைத்த குழுவின் அறிக்கையில், புராண குப்பைகளை பாடப்புத்தகத்தில் சேர்க்கும்படி முன்மொழியப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில், நியூட்டன் மீது ஆப்பிள் விழுந்ததும், பித்தாகரஸ் தியரமும் போலி செய்திகள் என்றும் இவையெல்லாம் வேத காலத்து கணிதத்திலேயே இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேபோல் மூன்றாவது மொழியாக சமஸ்கிரதத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

கர்நாடக பாடப்புத்தகம் மட்டுமல்ல, பா.ஜ.க ஆட்சியில் இருக்கும் அனைத்து மாநிலங்களிலும் இதுதான் நிலை. மத்தியப்பிரதேசத்தில் புதிய கல்விக் கொள்கைப்படி பொறியியல் படிப்புகளில் ராமாயணம், மகாபாரதம் ஆகிய காப்பியங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், கடந்தாண்டு மத்தியப்பிரதேசத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் மோகன் யாதவ் பேசுகையில், பொறியியல் மாணவர்கள் இனி ராமர் பாலம் பற்றி படிப்பார்கள் என்றார். இது மட்டுமின்றி ராமர் பாலம் ராமன் கட்டியது என்று நாசா நிரூபித்துள்ளதாகவும் தன் வாய்க்கு வந்த கதையை எல்லாம் கட்டிவிட்டார். இந்த நிலை உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான் என ஒவ்வொரு மாநிலங்களிலும் தொடர்ந்து கொண்டே உள்ளது.

இவ்வாறு பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் கும்பல் மாணவர்களின் பாடங்களை மாற்றம் செய்வது மட்டுமின்றி, கிடைக்கும் மேடைகள் தோறும் தனது முட்டாள்தனமான கதைகளை எல்லாம் ஜோடிக்கிறது.

அதிலும் குறிப்பாக இந்நாட்டின் ‘பெருமைக்குரிய’ பிரதமரான மோடி இந்து புராணங்களைப் பற்றி குறிப்பிடுகையில், “பிளாஸ்டிக் சர்ஜரியின் முதல் உதாரணம் விநாயகருக்கு யானை தலையை வைத்தது” என்று தான் நம்புவதாகக் கூறியிருந்தார். இதே கருத்தை அவர் 2014-ம் ஆண்டு அக்டோபர் மாதம் மும்பையில் மருத்துவ நிபுணர்களின் கூட்டத்தில் உரையாற்றியபோது மீண்டும் குறிப்பிட்டார்.

மேலும் 2006-ம் ஆண்டு ஆயுஸ் துறை இணை அமைச்சர் ஸ்ரீபாத் நாயக் யோகா பயிற்சியின் மூலம் புற்றுநோய் உள்ளிட்ட பெரிய நோய்களை குணப்படுத்த முடியும் என்று கூறினார். பெங்களூரில் உள்ள சுவாமி விவேகானந்தா யோகா அனுசந்தனா சம்ஸ்தானா [s-vyasa] இன்ஸ்டிடியூட், புற்றுநோயைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்கும் யோகா நுட்பத்தை கண்டறிந்துள்ளது என்று நாயக் கூறினார்.

இவ்வளவு ஏன் தற்போது நியூட்டன் புவி ஈர்ப்பு விசையை கண்டறியவில்லை என்று கார்நாடகாவில் தேசிய கல்வி கொள்கையை அமல்படுத்துவதற்காக அமைத்த குழு சொல்வதற்கு முன்பு, இவர்களின் மூதாதையர்களான ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் சொல்லிவிட்டார்கள். குறிப்பாக கடந்த 2018-ம் ஆண்டு ராஜஸ்தானின் கல்வித்துறை அமைச்சர் தேவ்னணி புவி ஈர்ப்பு விசையை கண்டுபிடித்தது இரண்டாம் பிரம்மகுப்தா தான் என்றும் நியூட்டன் இல்லை என்றும்  கூறினார்.


படிக்க : குஜராத் 2002 படுகொலை : பாடத்திட்டத்தில் இருந்து நீக்கிய NCERT – காவிமயமாகும் கல்வி !


இதேபோன்று, கொரோனா பெருந்தொற்றின் போது அவர்கள் மாட்டு கோமியத்தையும் மாட்டு சானத்தையும் சாப்பிட்டால் கொரோனா சரியாகிவிடும் என்று கூறினார்கள். இன்னும் விட்டால் சலி, இருமல், தலைவலி போன்ற பிரச்சினைக்கு கூட இதையெல்லாம் சாப்பிட சொல்லுவார்கள்.

காலம் நெடுக மூடநம்பிக்கை கட்டுகதைகளை வைத்து மக்களை அடிமைப்படுத்தி வைத்திருந்த பார்ப்பன கும்பல், தற்போது தனது இந்துராஷ்டிர கனவை நிறுவி கொள்வதற்காக அதே ஆயுதத்தை கையாண்டு வருகிறது.

அதிலும் குறிப்பாக மாணவர்களின் பாடபுத்தங்களை தொடர்ச்சியாக மாற்றி வருவதில் பா.ஜ.க – ஆர்.எஸ்.எஸ் பெரும் நோக்கம் உள்ளது. தெரு தெருவாக அலைந்து திரிந்து மாணவர்களிடம் வேலை செய்து அவர்களை ஷாக்கா-களாக மாற்றி, அதன் பிறகு தன் நஞ்சு கருத்துகளை விதைப்பதை விட, நேரடியாக பாடங்களின் மூலம் அதனை நிறைவேற்றிகொள்வது எளிமையான வழி.

இதன்மூலம் தனக்கான அடியாள் கூட்டத்தையும், தாங்கள் சொல்வதையே வேதவாக்கு என நம்பும் அடிமை கூட்டத்தையும் உருவாக்குவதற்காக முனைப்பாக வேலை செய்து வருகிறது பாசிஸ்ட் கூட்டம்.

இதுபோன்ற குப்பைகளை மக்கள் மீது திணித்து மக்களை யோசிக்கவிடாமல் அவர்களை ஆர்.எஸ்.எஸ் அடிமைகளாக மாற்றுவதே இவர்களின் நோக்கம். இதற்கு எதிராக புரட்சிகர சக்திகள் தெருவில் இறங்கி மக்களிடம் புரட்சிகர பிரச்சாரம்  செய்வதே உடனடி தீர்வாகவும் ஒரே தீர்வகாவும் இருக்க முடியும்.


ஆதி

A Revolutionary Party with a mass base: The need of the hour for Sri Lankan Liberation

A regime change occurred in Sri Lanka. The Sinhala chauvinistic fascist Mahinda Rajapaksa was replaced with Ranil Wickremesinghe. But Ranil, who is the stooge of the US led imperialism and Indian ruling classes is not an alternative for Mahinda, who mortgaged the country to China.

Ranil is trying to solve the foreign exchange crisis by borrowing from the IMF and the World Bank. But getting loan from the IMF will not permanently solve the crisis. From 1950, i.e., since when Sri Lanka became a member of the IMF, it has borrowed 16 times from the IMF. It is now trying for the 17th time.

The IMF imposes certain conditions, such as reducing the spending on public welfare schemes, raising the taxes and levies and privatizing the public sector units, while providing loans. These conditions are pushing Sri Lanka rapidly towards recolonization. This time, Ranil is ready to fulfill the conditions imposed by the IMF. It is not a way of resolving the crisis; it is making the crisis permanent.

We are saying that the current economic crisis in Sri Lanka is a result of implementing the recolonizing policies of liberalization-privatization-globalization and the fight for hegemony of US and China. If we need to speak about resolving the Sri Lankan crisis, then we can’t neglect the two aforementioned issues.


Also Read : LET THE STRUGGLE OF THE SRI LANKAN PEOPLE WIN! FASCISTS WILL FALL!! PEOPLE WILL WIN!!!


Even from the time when Sri Lanka remained as a colony of British, its economy was built-up paving the way for exploitation of the imperialists. After change of rule, the remnants of the self-sustained economy were buried in the graveyard after the implementation of the policies of recolonization.

Sectors which contribute to national production such as micro-small scale industries and agriculture were relegated and the entire economy of Sri Lanka was tuned for the production of goods required for the global market. As a result of this, Sri Lanka was made to import even the basic food items required.

For example, Sri Lanka’s primarily produced goods such as tea, rubber, porcelain products, readymade garments were all produced solely for exporting to the imperialist countries. The country’s economy depends wholly on the foreign exchange earned from these exports. Other than this, tourism acts as a source of foreign exchange. The production for domestic market has almost vanished. The ongoing economic crisis emerged as a result of the impact of corona lockdown on the manufacturing sector, exports and tourism.

The dependency of Sri Lankan economy on imperialism has helped the US-led imperialism to stop Sri Lanka from fully aligning towards China. The nerve centre of Sri Lankan economy is under the control of imperialists.

We had mentioned that the US and the European Union are two major importers of Sri Lankan goods. So, the US-led imperialism can create a collapse in the Sri Lankan economy through economic embargo and by cancelling the concession for Sri Lankan goods. The EU did this by curtailing the concessions provided under GSP (Generalized System of Preferences).

To escape permanently from this servitude, Sri Lanka needs to build a self-reliant economy. The economy which was built for the hegemony of the imperialists for a long time can’t be transformed overnight through magic.

In the current situation, the food crisis can’t be solved without importing the basic needs such as rice, pulses and vegetables. Generation of electricity and operation of public transport won’t be possible without importing petrol and diesel. The raw materials are needed for operating the industries. For all these, foreign exchange – dollar – is required.

The loans provided by the IMF or by countries such as India, Japan, US, China are for asserting their hegemony by imposing certain conditions. They don’t provide loans on humanitarian grounds.

So borrowing loans from these countries to resolve the foreign exchange crisis by accepting their conditions is conforming to their hegemony. In order to assist the oppressed countries without any conditions, there is no socialist camp such as the Soviet Union or the Socialist China.

Above all these, by keeping intact the system which serves the imperialists, it is not possible to build a national economy. The IMF, World Bank and other imperialist countries should cancel the loans provided by them without any conditions. The unequal politico-economic relations with those countries should be broken up; only by overthrowing the existing pro-imperial State and establishing a revolutionary State will help to achieve this. There is no other shortcut or any interim solution.

Establishing a revolutionary State and constructing a national economy and strengthening it requires some time. Till that, it is the obligation of the international proletariat to assist Sri Lanka economically and politically.

Anti-imperialist – struggle for national liberation, democratic or socialist revolutions – can’t succeed without the support of the international proletariat. This is the general rule. This rule applies to Sri Lanka too.

At least the working people of the South Asian region should pressurize the governments of their nations to help the then formed revolutionary State of Sri Lanka without imposing any conditions. They should voice against the hegemony of their ruling classes on Sri Lanka. Particularly, the revolutionary forces of India have an additional responsibility. The migrant Sri Lankans living across the world should also voice for the liberation of their homeland.

We can’t just stop only by speaking the aforesaid in our imagination. To achieve this, the Sri Lankan people should be organized for a revolutionary struggle under a revolutionary party.

People from all walks of life have hit the streets in opposition of the government. The ethic-religious divide cultivated by the ruling class has been shattered and the people are protesting with class unity. They retaliated in the same manner against the violence by the Rajapaksa mob. It is a saddening thing that even though the crisis gave rise to an uprising, it could not give birth to a revolution.

The reason for this is the absence of a revolutionary party with a mass base in Sri Lanka. This situation exists throughout the world.

The economic crisis has questioned the subsistence of the people. The people are angry towards the ruling party and other vote bank political parties. But without a revolutionary party, the people can’t understand spontaneously the reason for the economic crisis and the solution for the crisis.


Also Read : Our revolutionary greetings to the working people of Sri Lanka!


If there is no revolutionary party which is the vanguard of the working people, that too without a mass base, then the ruling classes will be harmed in any way as a result of the crises.

The spontaneous protests of the people can bring a regime change, can get some concessions, can temporarily make the ruling classes to take a back step. But the ruling classes will continue to be the deciding authority. The lessons from the Arab Spring in Tunisia, Egypt, Libya and Yemen against the autocratic regimes teach us the same.

Though the people’s uprising in Sri Lanka yielded some favourable outcomes, it failed to go beyond the resignation of Rajapaksa. The primary objective of the ongoing protests is also limited to the resignation of Gotabaya. The US-led imperialists used the political crisis caused by the uprising of the people in their favour to overthrow the pro-China Rajapaksa mob and bring in their puppet government.

So, the primary objective of the revolutionary-democratic forces of Sri Lanka and the patriots is to focus on establishing a revolutionary party with a mass base. This party will act as the political vanguard and will lead the people and liberate Sri Lanka from the clutches of imperialism.


Chandraseker

தீட்சிதப் பார்ப்பனர்களின் குடுமிக்கு அஞ்சுவதுதான் திராவிட மாடலா?

டந்த 2014-ம் ஆண்டு, தில்லைக் கோயில் தீட்சிதர்களுக்கே சொந்தம் என தீர்ப்பளித்தது உச்சிக்குடுமி மன்றம். அதனையடுத்து 40 ஏக்கர் பரப்பளவுள்ள கோயிலும், சுமார் 2,700 ஏக்கர் நிலமும், பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளும் கோயில் அர்ச்சகர்களான தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் போய்விட்டது. அதன் பிறகு தில்லைக் கோயிலில் கேட்பாரற்று கொட்டமடித்து வந்தது தீட்சிதக் கும்பல்.

இதற்கிடையில் கொரோனாவை காரணம் காட்டி பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடும் உரிமையை தடுத்து நிறுத்திய தீட்சிதக் கும்பல், கொரோனா தளர்வுகள் அறிவிக்கப்பட்ட பிறகும் பக்தர்கள் கனகசபை மீது ஏறி வழிபடும் உரிமையை ஒன்றுகூடி தீர்மானம் போட்டு தடுத்து வந்தது.

இந்நிலையில், கடந்த பிப்ரவரி  மாதம் பட்டியல் சமூகத்தைs சேர்ந்த ஜெயசீலா என்ற பெண், தீட்சிதக் கும்பலை புறந்தள்ளிவிட்டு கனகசபை மீது ஏறி வழிபட சென்றபோது, தீட்சிதக் கும்பல் அவரை சூழ்ந்துக்கொண்டது. ‘பறைச்சி’ என்று சாதி பெயரை சொல்லி இழிவாக திட்டி, அவரை தாக்கிய காணொளி சமூக வலைத்தளங்களில் பரவி கடும் எதிர்ப்புக்குள்ளாகியது.

இதனைத் தொடர்ந்து பல்வேறு முற்போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகள் தீட்சிதர்களை கண்டித்து போராட்டம் நடத்தினர். தீட்சிதக் கும்பலை எதிர்த்து உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டது. முற்போக்கு மற்றும் ஜனநாயக அமைப்புகளின் தொடர் போராட்டத்தின் விளைவாகதான் உயர்நீதிமன்றம் சாதகமாக தீர்ப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழக அரசும் அரசாணை வெளியிட்டது. கனசபை மீதேறி வழிபடும் உரிமை மீண்டும் நிலைநாட்டப்பட்டது.


படிக்க : தில்லையில் தொடரும் தீட்சிதர் ஆதிக்கம் : தன்மானத் தமிழன் இனியும் சகிக்க மாட்டான் !


தீட்சிதர்கள் வசம் உள்ள கோயில் நிர்வாகத்தில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாக  தொடர்ந்து புகார்கள் வரவே, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கோயிலில் ஆய்வு நடத்த வருவதாக தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பினர். அதற்கு பதில் அளித்த தீட்சிதக் கும்பல் உச்சநீதிமன்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி, கோயில் நிர்வாகத்தில் இந்து சமய அறநிலையத்துறை தன்னிச்சையாக விசாரணை நடத்த முடியாது என வாதிட்டு ஆய்வுக்கு உடன்பட மறுத்தது.

இந்து சமய அறநிலையத் துறைச் சட்டம் 1959, சட்டப்பிரிவு 23 மற்றும் 28-இன் படி ஆய்வு செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என்பது அரசின் வாதம். ஆனால் எந்த சட்டமும் தங்களைக் கட்டுப்படுத்தாது என்பது பார்ப்பனர்கள் தங்களுக்குத் தாங்களே எழுதி வைத்துக் கொண்ட சட்டம். இந்த சட்டத்தை மாற்ற எந்த அரசுக்கும் அதிகாரம் கிடையாது என்பது அவாளின் எழுதப்படாத விதி!

தில்லை கோயில் தீட்சிதர்கள் ஆய்வுக்கு உடன்பட மறுத்து இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் நோட்டீஸ் அனுப்பியதால், அதிகாரிகள் ஆய்வு செய்ய செல்வதற்கு முதல் நாளே இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தில்லைக் கோயிலுக்குச் சென்றார். ஆனால், அவர் சட்டப்படி நடக்க வேண்டும் என தீட்சிதர்களை எச்சரிக்கை செய்ய செல்லவில்லை, மாறாக, பவ்யமாக கோயிலில் சாமி தரிசனம் செய்து, பிரசாதம் வாங்கிக் கொண்டு, அடக்க ஒடுக்கமாக தரையில் அமர்ந்து தீட்சிதர்களுடன் பேசிவிட்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் தில்லைக் கோயிலுக்கு ஆய்வுக்காக சென்றனர். தீட்சிதக் கும்பலோ அதிகாரிகளை ஆய்வு செய்ய விடாமல் தடுத்து நிறுத்தியது. இரண்டு நாட்கள் ஆய்வு செய்ய சென்ற அதிகாரிகள், தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று கூறி வெளிநாட்டிற்கு சுற்றுலா செல்வதைப் போல, கோயிலைச் சுற்றிப் பார்த்துவிட்டு திரும்பி வந்துவிட்டனர்.

இதுவே சாதாரண உழைக்கும் மக்கள் பிரிவினர் யாராவது தீட்சிதர்களைப் போல அதிகாரிகளைத் தடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அதிகாரிகளைப் பணி செய்ய விடாமல் தடுக்கிறார்கள் என்று போலீசு என்ற ஏவல் நாய் அவர்கள்மீது பாய்ந்து குதறியிருக்கும். ‘சட்டத்தின் ஆட்சி’ நிலைநாட்டப்பட்டிருக்கும்.

தீட்சிதர்கள் ஆய்வுக்கு ஒத்துழைக்க மறுத்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சேகர் பாபு, இந்து சமய அறநிலையத்துறையின் நோக்கம் கோயிலைக் கைப்பற்றுவதல்ல என்றும் ஆய்வு மட்டும் செய்து கொள்கிறோம் என்றும் கெஞ்சினார். அதற்கு ஒத்துழைப்பு தருவதுதான் நீதி, மனுநீதி, மனுதர்மம் என்று பார்ப்பான் காலில் படுத்தேவிட்டார்.

எந்த மனுநீதியை எதிர்த்து ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகம் போராடிக் கொண்டு இருக்கிறதோ, அந்த மனு நீதியின் படி நடந்து கொள்ளுங்கள் என்று கெஞ்சுகிறார் சேகர்பாபு. ஆனால், இந்தக் கெஞ்சலை எல்லாம் மயிரளவும் மதிக்கவில்லை தீட்சிதக் கும்பல்.

இதனை சேகர்பாபுக்கும் தீட்சிதர்களுக்கும் இடையேயுள்ள பிரச்சினை என்றோ; அல்லது, இந்து சமய அறநிலையத்துறைக்கும் பார்ப்பனர்களுக்குமான பிரச்சினை என்றோ சுருக்கிப் பார்த்துவிட முடியாது. இது பார்ப்பனியத்திற்கும் நீண்ட நெடிய பார்ப்பனிய எதிர்ப்பு மரபைக் கொண்ட தமிழக மக்களுக்கும் இடையேயான போராட்டம். இதில் தமிழக மக்களின் உரிமையை பார்ப்பனியத்திடம் அடகு வைக்க எந்தக் கொம்பனுக்கும் உரிமை கிடையாது.

தில்லை கோயில் விவகாரத்தில் மட்டுமல்ல, இதற்கு முன்னால் நடந்த தருமபுர ஆதினப் பல்லக்கு தூக்கும் பிரச்சினை உள்ளிட்ட பார்ப்பனர்களுக்கு எதிரான எல்லா பிரச்சினைகளிலும் தி.மு.க. அரசானது அவர்களிடம் மண்டியிட்டுதான் கிடக்கிறது.

***

தில்லைக் கோயில்மீது பொதுமக்கள் இதற்கு முன்பு கொடுத்த புகாருக்கே நடவடிக்கை எடுக்க தி.மு.க. அரசுக்கு துப்பில்லை. அதிகாரிகளை ஆய்வு செய்யவிடாமல் தடுத்து திருப்பி அனுப்பியது தீட்சிதக் கும்பல். ஆனால், தற்போது மீண்டும் புகார் மனுக்களை கொடுக்க சொல்கிறார்கள் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள். தீட்சிதக் கும்பலின்மீது சட்டத்தை நிலைநாட்டும் தி.மு.க. அரசின் யோக்கியதை இதுதான். இதுவே சாதாரண மக்கள் என்றால் தி.மு.க. அரசு சட்டத்தை எப்படி நிலைநாட்டிருக்கும்?

சென்னை வடபழனி முருகன் கோயிலில் ஐந்து தலைமுறைகளாக பூ கட்டி வியாபாரம் செய்யும் பெண்கள் மீண்டும் தங்களுக்கு பழைய இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதி வழங்குமாறும், அங்கே நின்று கொண்டே கூட தாங்கள் வியாபாரம் செய்து கொள்கிறோம் என்றும் கோரிக்கை வைத்தபோது, “நீங்கள் சொல்வதை எல்லாம் கேட்கிற ஆள் நான் கிடையாது. இப்போது இப்படி சொல்வீர்கள், பிறகு பெட்டி வைத்து ஆக்கிரமிப்பு செய்து விடுவீர்கள்” என்று அவர்களிடம் திமிர்த்தனமாக பேசினார் சேகர்பாபு.

உழைக்கும் மக்கள் சிறிய பெட்டி வைத்து வியாபாரம் செய்வதைக்கூட ஆக்கிரமிப்பு என்று சீறும் சேகர்பாபு, பெரும்பாண்மை உழைக்கும் மக்களுக்கு சொந்தமான கோயிலையும், கோயில் சொத்துக்களையும் ஆக்கிரமிப்பு செய்துள்ள தீட்சிதக் பார்ப்பனக் கும்பலிடம் கெஞ்சுகிறார்.


படிக்க : பெண் பக்தையை தாக்கிய தீட்சிதனின் பார்ப்பனக் கொழுப்பு !


ராஜா அண்ணாமலைபுரத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக உழைக்கும் மக்கள் வாழ்ந்த வீடுகளை பக்கிங்காம் கால்வாய் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்துத் தள்ளியது தி.மு.க. அரசு. அதனை உயர்நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தினோம் என்று நியாயப்படுத்தியது. இப்படி வீடுகளை இடிப்பதை தமிழக அரசானது சட்டத்தை நிலைநாட்டுகிறது என்று யாராவது கருதினால், நம்முடைய கேள்வி இதுதான். அதே சட்டம் தில்லைக் கோயிலின் உள்ளே பாய மறுப்பதேன்?

தில்லை கோயிலுக்குள் நுழைந்து முறைகேடுகள் ஏதாவது நடந்துள்ளதா என்று ஆய்வு நடத்தக்கூட வக்கற்று, தீட்சிதக் கும்பலுக்கு அடிப்பணிந்துப் போயுள்ள தி.மு.க.வைதான், பா.ஜ.க.வை வீழ்த்தும் ஆயுதம் என தி.மு.க. அடிவருடிகள் உயர்த்திப் பிடிக்கின்றனர். முட்டு கொடுப்பதற்கும் ஒரு எல்லை உண்டு, அதையும் மீறிவிட்டார்கள் நம்முடைய தி.மு.க. அடிவருடிகள்.

தி.மு.க. என்பது தி.க. அல்ல. இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது என்கிறார் மதிமாறன். அனைத்து மதநம்பிக்கையுள்ள மக்களையும் அனுசரித்துப் போவது தான் தி.மு.க. என்கிறார். யாருடன் அனுசரித்துப் போவது.

இந்த அரசு ‘திராவிட ஆன்மிக அரசு’ என்கிறார் சேகர்பாபு. திராவிடத்தோடு ஆன்மிகமாம். அரவணைப்பு அதிகமாகிவிட்டது போல. சந்தர்ப்பவாதிகளிடம் இதைத் தவிர நாம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும். தீட்சிதப் பார்ப்பனர்களின் கொட்டத்தை அடக்க வேண்டுமானால், புரட்சிகர ஜனநாயக இயக்கங்களின் சமரசமற்ற களப்போராட்டத்தால் மட்டுமே முடியும்.


சங்கர்

Our revolutionary greetings to the working people of Sri Lanka!

On July 9, the hearts of the revolutionary forces around the world are full of joy after seeing the uprising of the working people of Sri Lanka. The stomachs of the fascists around the world, like the Rajapaksa gang, would have churned on thinking about their future.

On 09-07-2022, on the occasion of the 90th day of the Galle Face protest, the protestors had given a call for a nationwide protest. Based on that, as part of the nationwide protest held on July 9, tens of thousands of people gathered and besieged the Presidential Secretariat. They have kept it under their control till now. At the same time, Prime Minister Ranil Wickremesinghe’s house in Colombo was also besieged by the people and was set on fire. Gotabaya escaped from the Presidential Secretariat with the help of the army. His whereabouts is still unknown.

The events that took place at the time of the capture of the Presidential Secretariat and Gotabaya’s official residence, the Allari Palace, were soothing.

People who entered the Allari Palace enjoyed jumping and swimming in the swimming pool. They went inside the kitchen and ate the stored food. They sat on chairs. They tried lying on the luxurious bed. It is important that the people who displayed their triumph in this way did not damage any of the property there.

Moreover, the people recovered the currency notes (1.78 crore Sri Lankan Rupees) stashed in the house of Gotabaya and handed it to the security units. It is a whack to the propaganda of the ruling classes which portrayed the struggling masses as aimless, violent and anarchic tyrants.


Also Read : Sri Lankan people longing for a Revolutionary Party !


Gotabaya Rajapaksa has officially announced that he will be resigning on the 13th due to the pressure created by the popular uprising. Moreover, Ranil Wickremesinghe has also announced that he will also resign to assist the formation of an all-party government. The ministers who had taken charge under his leadership have been announcing their resignations one by one.

On 05-07-2022, ahead of the 90th day of the Galle Face protest, the protestors had issued a six-point action plan. The primary demand was that the Gotabaya-Ranil government should resign. Sri Lankan people have achieved this through the uprising.

Just as the working people and revolutionary forces of countries like England, Australia and the Netherlands participated in demonstrations in support of the Sri Lankan people’s uprising and welcomed it, we are also heartily welcoming it. We extend our heartfelt greetings to the working people of Sri Lanka and the revolutionary forces there.

***

However, decisive victory in the revolutionary struggle can be accomplished only through the seizure of political power. In that aspect, the working people of Sri Lanka are at a critical juncture of ensuring their success.

Sri Lanka is shaking due to the popular uprising. At the same time, hegemonic vultures including the US, India and China are encircling Sri Lanka. They are preparing an alternative plan to sustain their hegemony.

The US has demanded to work quickly to identify and implement solutions that will achieve long-term economic stability and address the Sri Lankan people’s discontent.

The International Monetary Fund has said that it was continuously and closely monitoring Sri Lanka’s economic progress and is ready to assist Sri Lanka.

Indiscriminate firing is being carried out on the struggling people. Journalists covering the protests have been severely beaten up by the police. Army Chief appeals to the protesting people to come forward to cooperate with the police and the army in order to establish ‘peace’.

We must make note that the political power is still under the control of the ruling classes. On one hand, the ruling classes are oppressing the struggling people with the police and the army. While on the other hand, they are trying to save the existing State structure that serves them by disguising in the name ofall-party government’ and ‘elections’.

The revolution has to move forward in the direction of establishing the political power of the working people by overcoming these oppositions, recognizing the autonomy of the nationalities, abolishing imperialist plunder and building a self-reliant economy. In the meantime, the diversions, manipulations and phony solutions of the ruling classes have to be exposed and defeated. This duty belongs to the Sri Lankan revolutionary forces.

In that way, the new democratic Marxist-Leninist party operating in Sri Lanka has conducted various opinion campaigns among the people. The party and its mass gatherings have participated in mass protests in support of the Galle Face declaration. We welcome the party’s continuous efforts to involve the Tamil people of the Northern Province in this movement.


Also Read : Sri Lanka reeling under debt : Western imperialists desperate to dominate by intensifying the crisis!


The recolonizational policies of privatization-liberalization-globalization advocated by the ruling classes had miserably failed. A path towards socialism is the only path of deliverance for the people of Sri Lanka. In order to move towards that direction, the working class must focus on conquering the political power.

Another ‘saviour’ may be proposed by the ruling classes, as Ranil was proposed as an alternative to Mahinda. The working people must reject such bogus solutions. An interim government dominated by the revolutionary classes including workers and peasants should be formed immediately. Then only the struggle can further advance.

The Galle Face declaration issued on 05-07-2022 has made demands including an ‘interim government’ and a ‘new Constitution with people’s participation’. The active intervention of the revolutionary forces is necessary to overcome the distractions of the ruling classes and to fight for the firm implementation of this declaration.


Editorial Team,
New Democracy.
10.07.2022

கும்பகோணத்தில் இளந்தம்பதியினர் ஆணவப்படுகொலை: சிறப்புச் சட்டம் தீர்வாகுமா?

கும்பகோணம் அருகே சாதி மாறி காதலித்து திருமணம் செய்துகொண்ட மோகன்-சரண்யா என்ற இளந்தம்பதியினர், விருந்துக்கு அழைக்கப்பட்டு கொடூரமான முறையில் பட்டப்பகலிலேயே ஓட ஓட வெட்டி படுகொலை செய்யப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பேரதிர்ச்சியை உருவாக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் இதுபோன்ற ஆணவப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருந்தாலும், இப்படுகொலை சற்று வேறுபட்டதாக இருக்கிறது. கொலை செய்தது, தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த சரண்யாவின் அண்ணன். கொலையுண்டது ஆதிக்கசாதியைச் சேர்ந்த மோகன். ஆதலால், ஆதிக்கசாதி வெறியர்களைப் போல ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியிலும் சாதிமாறி திருமணம் செய்தால் சுயசாதி பெருமைக்காக படுகொலை செய்யும் கலாச்சாரம் வளர்ந்து வருகிறதா என்ற பொருளில் பல விவாதங்கள் எழுகின்றன.

***

கும்பகோணம் மாவட்டம், துலுக்கவேலி ஆண்டவர் நகரை சேர்ந்த சேகர் – தேன்மொழி தம்பதியினருக்கு ஒரே மகள் சரண்யா. இவருக்கு சக்திவேல், சரவணன், சதிஷ் மூன்று சகோதரர்கள். இவர்கள் மூவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. சரண்யா பி.எஸ்.சி நர்சிங் முடித்துவிட்டு சில ஆண்டுகள் சென்னையில் செவிலியராக பணியாற்றி வந்துள்ளார்.

சரண்யாவின் மூத்த அண்ணன் சக்திவேல், அவருடைய மனைவியின் தம்பியான ரஞ்சித்துக்கும் சரண்யாவுக்கும் திருமணம் செய்து வைக்கலாம் என பேச்சை துவங்கியுள்ளார்.


படிக்க : சேலம் : மல்லி குந்தம் பகுதி பாமக-வின் சாதிவெறியால் ஒடுக்கப்படும் ஆசிரியர் !


“ரஞ்சித்தின் சேர்க்கை மற்றும் நடத்தை சரியில்லை. அவனைத் திருமணம் செய்துகொண்டால் நீ நல்ல வாழ்க்கை வாழ முடியாது”, என சரண்யாவிடம் சகோதரர்களான சரவணன் மற்றும் சதீஷ் அறிவுறுத்தியிருக்கின்றனர். சரண்யாவும் ரஞ்சித்தின் மோசமான நடவடிக்கை தெரியவந்து ஒதுங்கியிருக்கிறார்.

இந்நிலையில், சரண்யா தன்னுடைய தாயை மனநல சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். சரண்யாவின் தாய், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நேரத்தில்தான் மோகனின் தாயும் மனநல சிகிச்சைக்காக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இருவரின் தாயாரும் மருத்துவமனையில் அருகருகே அனுமதிக்கப்பட்டு இருந்ததால், மோகனும் சரண்யாவும் அறிமுகமாகி நாளடைவில் காதலித்து வந்துள்ளனர்.

சரண்யாவின் காதலுக்கு சக்திவேல் எதிர்ப்பு தெரிவிக்கவே, சரண்யா மற்றும் மோகன் கடந்த 9-ஆம் தேதி காஞ்சிபுரம் அருகே உள்ள கோவில் ஒன்றில் திருமணம் செய்து கொண்டனர். சரண்யாவின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்ட அவருடைய பெற்றோர் மற்றும் சகோதரர்களான சரவணன் மற்றும் சதீஷ், திருமணத்திற்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து உள்ளனர். சக்திவேலின் மனைவி, “உன் தங்கையால் தான் என் தம்பி வாழ்க்கை இழந்து நிற்கிறான்”, என்று சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் சக்திவேல், சரண்யாமீது கடுங்கோபத்தில் இருந்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு, சக்திவேல் சரண்யாவை தொலைபேசி மூலமாக அழைத்து. “நீங்கள் திருமணம் செய்துகொண்டதால் எங்களுக்கு எந்த கோபமும் இல்லை. உன் பெயரில் நகையை அடகு வைத்திருக்கிறோம். நீ வந்தால்தான் மீட்க முடியும். அதை மீட்டுக் கொடுத்துவிட்டு சென்று விடு. இருவருக்கும் விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம்”, என கூறி அழைத்துள்ளார்.

சரண்யாவும் மோகனும் கும்பகோணம் வந்து நகைகளை மீட்டு சக்திவேலிடம் ஒப்படைத்துவிட்டு, துலுக்கவேலியில் உள்ள தாய் வீட்டிற்கு விருந்துக்கு சென்றுள்ளனர். இச்சூழலைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சக்திவேல் மற்றும் ரஞ்சித், மோகன் மற்றும் சரண்யாவை ஓட ஓட வெட்டிக் கொன்றுள்ளனர். பட்டப்பகலிலேயே நடந்த இக்கொடூரக் கொலையை தடுப்பதற்கோ, சம்பந்தப்பட்ட நபர்களை காப்பாற்றுவதற்கோ யாரும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. பலர் கண்முன்னாலேயே இந்த கோரச்சம்பவம் நடந்தேறியுள்ளது.

***

சரண்யா மற்றும் மோகன் படுகொலை செய்யப்பட்ட பின் ஆதிக்கசாதி வெறியர்கள் எல்லாம் “மோகன் சரண்யாவுக்கு நீதிவேண்டும்” (#justice_for_mohan_saranya) என்ற பெயரில் டிவிட்டரில் பொங்கி எழுந்து, “நாங்கள் செய்தால் ஆணவப்படுகொலை என்றால் தலித்துகள் செய்யும் படுகொலைக்கு என்ன பெயர்?”, “சாதிக்கு ஒரு நீதியா!”, “போராளிகள் எல்லாம் கண்டனம் தெரிவிக்க மறுப்பது ஏன்?”, என தங்கள் வியாக்கியானங்களைப் பேசுகின்றனர்.

ஆதிக்கசாதி இளைஞர் தலித் பெண்ணை திருமணம் செய்தாலோ அல்லது ஆதிக்க சாதி  பெண்ணை தலித் இளைஞர் திருமணம் செய்தாலோ ஆதிக்க சாதிவெறியர்களால் ஒடுக்கப்பட்ட  சாதியை சேர்ந்தவர் அல்லது தம்பதியர் இருவரும் படுகொலை செய்யப்படுவார்கள். இதுவரை நடைபெற்ற சாதிவெறி ஆணவப்படுகொலைகள் யாவும் பெரும்பாலும் மேற்கூறியவாறே நடந்துள்ளன.

விதிவிலக்காக ஒடுக்கப்பட்ட  சமுதாயத்தை சேர்ந்தவர்களுக்குள்ளேயும் சாதிவெறி ஆணவப் படுகொலைகள் நடந்துள்ளன. உதாரணத்திற்கு, 2019 இல் தூத்துக்குடியில் பேச்சியம்மாள் – சோலைராஜ் என்ற பள்ளர், பறையர் சாதியைச் சேர்ந்த இணையர்கள் திருமணம் செய்துகொண்ட காரணத்திற்காக பள்ளர் சாதியை சேர்ந்த உறவினர்களால் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டனர். ஆதிக்கசாதி வெறியர்கள் கூறுவதைப் போல், அப்படுகொலையை சாதிவெறிப் படுகொலை இல்லை என்று யாரும் மறுத்து பேசவில்லை.

ஆனால், சரண்யாவின் குடும்பமானது சாதி மாறி திருமணம் செய்து கொள்வதை பெரிய பிரச்சினையாக எடுத்துக்கொள்ளும் குடும்பம் அல்ல என்பதற்கு சரியான சான்று, சரண்யாவின் தம்பி சதீஷ், வன்னிய சாதிப் பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளதை அக்குடும்பமானது ஏற்றுக்கொண்டுதான் உள்ளது. ஆக சாதி மாறி திருமணம் செய்ததற்காக இப்படுகொலை செய்யப்படவில்லை என திட்டவட்டமாக தெரியவருகிறது.

அப்படியென்றால், இப்படுகொலைக்கு என்ன காரணம்? சரண்யாவின் அண்ணன் சக்திவேல் மற்றும் ரஞ்சித்தின் ஆணாதிக்க வெறிதான். சரண்யாவையும் மோகனையும் கொலை செய்வதற்கு இருவருக்குமே காரணங்கள் இருந்தன. தான் கைக்காட்டிய தனது மச்சினன் ரஞ்சித்தை திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது சக்திவேலின் பிரச்சினை. ரஞ்சித்துக்கோ தன்னை ஒதுக்கிவிட்டு இன்னொருவனை திருமணம் செய்துகொண்டு விட்டாள் என்பது பிரச்சினை. இருவருமே சரண்யா என்ற பெண்ணின் சுய விருப்பங்களையும் தெரிவுகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்த ஆணாதிக்கவெறியின் உச்சக்கட்டமே சரண்யா மோகன் படுகொலை.

இந்த ஆணாதிக்கப் படுகொலையும், ஆணவப் படுகொலை என்ற வரம்பிற்குள்தான் வருகிறது. ஆணவப் படுகொலை என்றால் வெறும் சாதிவெறி ஆணவப் படுகொலை மட்டும் கிடையாது. ஆணவம் என்ற வரம்பிற்குள் சாதி, ஆணாதிக்கம், வர்க்கம், அந்தஸ்து, பாலினம், இனம், மொழி, தொழில் மற்றும் எல்லை போன்றவைகளும் வருகின்றன. எனவே இப்படுகொலையை ஆணாதிக்க ஆணவப் படுகொலை என்று நாம் கூறுகிறோம். சாதி ஒழிப்பு முன்னணி தோழர் ரமணி, எவிடென்ஸ் கதிர் ஆகியோரும் இப்படுகொலையை ஆணாதிக்க ஆணவப்படுகொலை என்றே குறிப்பிடுகின்றனர்.

***

சமூகத்தில் இதுபோன்ற ஆணவப்படுகொலைகள் தொடர்ச்சியாக நடந்துகொண்டு இருக்கின்றன. எனவே இப்படுகொலைகளை தடுக்க, ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக தனிச்சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்கள் எல்லாம் தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கின்றன.

சட்டம் இயற்றப்பட்டால், இப்பிரச்சினையானது தீர்ந்துவிடும் என்ற அடிப்படையில் இவ்வமைப்புகள் எல்லாம் பேசுகின்றன. ஏற்கெனவே உள்ள வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை இந்த அரசானது பயன்படுத்தி பிரச்சனைகளை கையாண்ட விதத்தை பார்த்தாலே இச்சட்டங்களின் யோக்கியதைகளை நம்மால் புரிந்துக்கொள்ள முடியும்.

சான்றாக சங்கர்-கௌசல்யா ஆணவப்படுகொலையில், கௌசல்யா கண் முன்னாலேயே சங்கர் துடிதுடிக்க கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்படுகொலைக்கு முக்கிய காரணமான கௌசல்யாவின் பெற்றோர்களான சின்னசாமி மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் குற்றமற்றவர்கள் என்று நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர்.

சங்கர் கௌசல்யா வழக்கானது, ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல இந்த அரசுக் கட்டமைப்பானது இதுபோன்ற ஆணவப்படுகொலை வழக்குகளில் தன்னுடைய “நீதியை” நிலைநாட்டியதற்கு ஒரு சான்று.

படிக்க : கும்பகோணம் : சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்ட காதல் தம்பதிகள் சாதி ஆணவப்படுகொலை !

ஆகவே, சங்கர்-கௌசல்யா மற்றும் தற்போது கொல்லப்பட்ட மோகன்-சரண்யா ஆகியோரது ஆணவப் படுகொலைகளுக்கு மையக் காரணமானது, ஈராயிரம் ஆண்டுகளாய் மக்கள் மத்தியில் புரையோடிப்போயுள்ள சாதிவெறி மற்றும் ஆணாதிக்க வெறி மனநிலையே.

இப்பிரச்சினைகளுக்கு எல்லாம் மூலக்காரணமான சமூகக் கட்டமைப்பை மாற்றாமல், எவ்வளவு சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை எல்லாம் வெறும் கழிவறைக் காகிதங்களே.

மக்களிடையே சாதிவெறி மற்றும் ஆணாதிக்க சிந்தனையை தீவிரப்படுத்தும் விதமாக ஆதிக்கசாதி மற்றும் மதவெறி அமைப்புகள் எல்லாம் தீவிரமாக வேலை செய்துக் கொண்டிருக்கின்றன. இதனிடையே ஆதிக்கசாதி அமைப்புகளால் ஒடுக்குமுறைக்கு உள்ளாகும் ஒடுக்கப்பட்ட மக்களிடையே, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கு போராடுகிறோம் என்று சொல்லிக்கொள்ளும் சில அமைப்புகளால் சுயசாதி பெருமை ஊட்டப்படுவது எல்லாம் கொடுமையிலும் கொடுமை.

இவ்வமைப்புகள் எல்லாம் ஒழித்துக்கட்டப்பட வேண்டும் என்பது ஒருபுறம் இருந்தாலும், பெரும்பான்மை உழைக்கும் மக்களின் சாதிவெறி மற்றும் ஆணாதிக்க மனநிலையை மாற்றியமைக்க முற்போக்கு மற்றும் ஜனநாயக இயக்கங்கள் என்ன செய்துள்ளன என்ற கேள்வி எழுகிறது.

பெரும்பாண்மை உழைக்கும் மக்களிடம் பிற்போக்கு சாதிவெறி மற்றும் ஆணாதிக்க பண்பாட்டை முறியடித்து, புதிய முற்போக்கு பண்பாட்டை நிறுவ, முற்போக்கு, ஜனநாயக அமைப்புகள் அனைத்தும், சாதி மறுப்பு திருமணங்கள், சாதிவெறி மற்றும் ஆணாதிக்க கொடுமைகளுக்கு எதிரான பிரச்சாரங்கள், போராட்டங்களை தீவிரமாக முன்னெடுக்கவேண்டும். இவைதான் இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான தொடக்கமாக அமையுமே ஒழிய, சிறப்புச் சட்டங்களால் அல்ல.


குயிலி

விக்ரம்  திரைப்பட வசூல் : மக்கள் அளித்த பணம் கவர்ச்சிக்கா? கருத்துக்கா?

மல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா என பல நட்சத்திர பட்டாளங்களின் தேர்ந்த நடிப்பு, சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் பங்களிப்பு ஆகியவை தன்பால் மக்களை கவர்ந்திழுத்ததில் கொஞ்சமும் ஆச்சரியமில்லைதான்.

இங்கிலீஷ் படம் மாதிரி இருக்கு! அனியோட மியூசிக் சூப்பரா இருக்கு! சூர்யா வேற லெவல்! இப்படி வகை வகையான விமர்சனங்கள், ரசிகர்களின் குதூகலிப்புகள், இவையெல்லாம் தயாரிப்பாளர் கமலஹாசனின் கல்லாவை நிரப்பி இருக்கிறது.

தன்னுடைய கடன்களை எல்லாம் அடைத்து விடுவேன் என்று கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் கமல். நாளே நாட்களில் தனக்கு இதன்மூலம் 75 கோடி ரூபாய் ஷேர் வந்திருப்பதாக விநியோகஸ்தர் உதயநிதி கூறுகிறார். பாகுபலி வசூலை தாண்டி  400 கோடி வரை வசூலிக்கும் என்றும் கூறுகிறார்கள். இது அனைத்தும் மக்களின் பணம் என்று சிலாகிக்கிறார் கமல்ஹாசன்.

இவ்வளவு தேர்ந்த தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், திரைக்கதை, வசனம் இருந்தாலும் கூட இத்திரைப்படம் தான் சொல்ல வரும் கருத்தை பார்வையாளர்களுக்கு கடத்திச் செல்ல முடியவில்லை. ஏன் அப்படி சொல்கிறோம் என்றால் படம் பார்த்த ஒருவர் கூட வெளியில் வந்து போதை பொருள் பற்றியோ அதை ஒழிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பது பற்றியோ பேசவில்லை. ஒரு சினிமாவாக நடிப்பு இசை இயக்கம் இன்னபிறவற்றில் விக்ரம் வெற்றி பெற்று இருக்கலாம். ஆனால் கருத்தளவில் என்ன செய்தது என்றால், பூஜ்ஜியம்தான்.


படிக்க : முஸ்லீம் வெறுப்பு விஷத்தை கக்கும் ’தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ திரைப்படம் !


இது என்ன ஒரு பைத்தியக்காரத்தனம். ஒரு சினிமாவை அனைத்தும் கலந்த கலவையாகத் தான் பார்க்க முடியுமே ஒழிய, கருத்து என்கிற ஒற்றை தளத்தில் மட்டும் அணுகக்கூடாது என்று சிலர் சொல்லக்கூடும். ஒரு கலை பிரச்சாரமாகாது என்பதே இவர்களின் வாதம்.

ஒரு பிரச்சாரமே கலையாக மாறும் அற்புதத்தை எமது தோழர்கள் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்கள். அண்மையில், மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கும் காவி –  கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்போம்! என்கிற தலைப்பில் நாங்கள் பேருந்துகளில் நோட்டீஸ் விநியோகித்து நிதி வசூல் செய்தோம். அரசு பள்ளியை மீட்பது நம் கடமை என்கிற இந்த பிரச்சாரம் சொகுசுப் பேருந்துகளை விட சாதாரண உழைக்கும் மக்கள் பயணிக்கும் டவுண் பஸ்களில் மக்களை வெகுவாக சென்றடைந்தது. பேருந்து கட்டணம் போக டீ குடிக்கவோ, பிள்ளைகளுக்கு பண்டம் வாங்க வைத்திருந்த பணத்தையோ நமது உண்டியலில் போட்டார்கள் மக்கள்.

உழைக்கும் மக்கள் தமது கூலியில் இது தனக்கு, இது விக்ரமுக்கு என ஒதுக்கியதாக கமல் கூறினார். அது வெறும் ஒரு நாள் கூத்துதான். ரசிகனின் நாடி பார்த்து, அவன் இதயத்து நரம்பின் ரசனை அறிந்து 50 சீன்களில் 50 முறை அட! போட வைத்தால் போதும். அவன் சட்டைப்பை பணம் தயாரிப்பாளரின் கல்லாவுக்கு வந்துவிடும் மாயம் நடந்து விடும். ஆனால், நம்முடைய பிரச்சாரம் மக்களின் வாழ்க்கை முழுவதும் உடன் வரக்கூடியது. அவர்களின் பிரச்சினைக்கு தீர்வு சொல்ல முயல்வது. அவர்களது பிள்ளைகளின் இருண்ட எதிர்காலத்தின் மீது வெளிச்சத்தைப் பாய்ச்சக் கூடியது.

இது ஒன்றும் மிகையானது அல்ல. நோட்டீஸ் பெற்றுக் கொண்ட ஒரு அம்மா கண்டிப்பாக உங்க நம்பருக்கு போன் பண்ணுவேன் எடுக்கணும், ஆமா! என உரிமையோடு கேட்டதில் அவரின் பிரச்சினைகளை நமது பிரச்சாரம் தொட்டு விட்டதை உணர்ந்தோம். பிரச்சாரத்தில் பேருந்துக்கு கீழே நின்று நோட்டீஸ் வாங்கிய பெரியவர், தன் மகளின் பி.எஸ்.சி நர்சிங் படிப்புக்கு 2 இலட்சத்து 90 ஆயிரம் கல்விக் கடன் வாங்கியது இன்று வட்டியோடு 9 இலட்சம் ஆகிவிட்டது என்றும், தன்னால் அவ்வளவு பணம் கட்ட முடியாது. தற்போதுதான் நீதிமன்றம் போய்விட்டு வருகிறேன் உங்களது பிரச்சாரம் கேட்டு இங்கே நிற்கிறேன் என்று கூறிவிட்டு கண்ணீர் வடித்தார். நமது தொடர்பு எண்ணை வாங்கிக் கொண்டு சென்றவர், சில நாள் கழித்து மீண்டும் நம்மை தொடர்பு கொண்டார். நான் அன்று பேருந்து நிலையத்தில் சிந்திய கண்ணீர் எனது வேதனைக்கு சிந்தியதல்ல. இப்படிப்பட்ட பிரச்சினையை பேசவும் இங்கே உங்களை போன்ற ஆட்கள் இருக்கிறார்களே என்று நினைத்ததால் வந்த கண்ணீர் அது என்று விளக்கம் கூறினார்.

மாணவர்கள் கைகொடுத்து வாழ்த்தினார்கள். பள்ளி மாணவர்கள் காசு இல்லை என்றாலும் நோட்டீசைக் கேட்டு வாங்கிக் கொண்டார்கள்.


படிக்க : திரை விமர்சனம் : வசூலுக்காக அரசியல் நியாயம் பேசும் சர்கார் !


தன் கிராமத்தில் இருக்கும் பணக்கார வீட்டு பையன் மேல்படிப்புக்காக கனிமொழி வரை சிபாரிசுக்குப் போய் அமைச்சர் கீதாஜீவனிடம் ஒரு இலட்சம் வரை பணம் கொடுத்து குறிப்பிட்ட கல்லூரியில் சேர்ந்து இருக்கிறார். நாமெல்லாம் அப்படி போய் படிக்க முடியுமா என்று ஒரு பெரியவர் ஆதங்கத்தோடு நம்மிடம் கேட்டார். இப்படியாக மக்கள் தமது எண்ணங்களை, உணர்வுகளை நம்மோடு பகிர்ந்து கொண்டார்கள். நம்முடைய பிரச்சாரம் அவ்வாறிருக்க அவர்களைத் தூண்டியது.

நாம் பேசும் ஒவ்வொரு வார்த்தையும் மக்களை சென்றடைகிறது. மக்களின் எதிரி யார் என்பதை சுட்டிக்காட்டுகிறது. கயவர்களை ஒன்றுமே செய்யமுடியாது என்கிற அவர்களின் கற்பிதங்களை புரட்டிப் போடுகிறது. வாழ்வின் மீது புதிய நம்பிக்கையை பாய்ச்சுகிறது. நட்பு, நம்பிக்கை, அழுகை, உரிமை என ஏதோ ஒரு வகையில் நம்மிடம் அவர்கள் நெருக்கமாகிறார்கள். நம்முடைய பிரச்சாரம், கலையாக மாறும் தருணம் இதுவே.

பல கோடிகள் செலவில் எடுக்கப்பட்ட விக்ரம் திரைப்படம் மேலும் பல கோடிகள் மக்களிடமிருந்து வசூலிக்கிறது. ஒரு மயிரளவு மாற்றத்தைக் கூட மக்கள் வாழ்வில் ஏற்படுத்தவில்லை. ஆனால் நம்முடைய மலிவான காகிதத்தாள் பிரச்சாரமும், அதன் கருத்தும் மக்களின் வாழ்க்கைப் பாதையையே திசைதிருப்பும் வல்லமையோடு இருப்பதை, மக்களுடனான நமது அனுபவத்தில் நம்மால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

மக்கள் அதிகாரம்,
நெல்லை மண்டலம்.