Saturday, June 20, 2026
முகப்பு பதிவு பக்கம் 160

கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்யும் தொழில்நுட்ப நிறுவனங்கள்!

0

2023-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து நாளொன்றுக்கு (ஜனவரி 16 வரை) 1,600 ஊழியர்களை உலகம் முழுவதிலும் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்கள் பணிநீக்கம் செய்துள்ளதாக layoffs.fyi என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் அதிர்ச்சி அளிக்கும் தகவலை வெளியிட்டிருக்கிறது. கொரோனா பெருந்தொற்று துவங்கிய காலத்திலிருந்து பணிநீக்கம் தொடர்பான தரவுகளை இந்நிறுவனம் சேகரித்து வருகிறது.

இவ்வாண்டில் மட்டும் 104 தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 26,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் (2022) 1024 தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரிந்த 1,54,336 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பணிநீக்கம் செய்யப்படும் போக்கானது 2022-ஆம் ஆண்டின் முதல் காலாண்டிலேயே தொடங்கிவிட்டது. அக்காலகட்டத்தில் மட்டும் 34 தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 10,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

2022-ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் மட்டும், 400-ம் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 74,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது கொரோனா பெருந்தொற்றின் போது மேற்கொள்ளப்பட்டதைவிட, அதிலும் குறிப்பாக 2020-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 400-ம் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களைச் சேர்ந்த 60,000-ம் மேற்பட்ட ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டதைவிட, அதிகமாகும்.


படிக்க: 10000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவிருக்கும் அமேசான் நிறுவனம்!


2023-ஆம் ஆண்டில் பணிநீக்கம் செய்துள்ள 104 தொழில்நுட்ப நிறுவனங்களில் அமேசான் (Amazon), மெட்டா (Meta), ட்விட்டர் (Twitter), ஷேர்சாட் (ShareChat), ஓலா (Ola) உள்ளிட்ட பல்லாயிரம் கோடிகளில் லாபம் கொழிக்கும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்களும் இருக்கின்றன.

உலகின் நான்காவது பெரும் பணக்காரரான ஜெஃப் பெசோஸ்-இன் அமேசான் நிறுவனம் கொரோனா பெருந்தொற்றின் போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்தியது. தற்போது நிச்சயமற்ற பொருளாதார சூழல் நிலவுவதாகக் கூறி 18,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. ஏற்கெனவே கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பரில் அந்நிறுவனம் 10,000 ஊழியர்கள் வரை நீக்கப் போவதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டது என்று பெருமிதம் கொள்ளும் சமூக வலைத்தள நிறுவனமான ஷேர்சாட், இரண்டு நாட்களில் மட்டும் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுள்ளது; மொத்த ஊழியர்களில் 20 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்ததுள்ளது.

போக்குவரத்து சேவைகளை வழங்கி வரும் ஓலா நிறுவனமானது மறுசீரமைப்பு செய்வதாகக் கூறி 200 ஊழியர்களை பணிநீக்கம் செய்ததுள்ளது. கேஸ் ஃபிரீ (Cashfree) என்ற நிறுவனம் 100 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. ஆன்லைனில் மளிகை பொருட்களை விற்கும் நிறுவனமான டன்சோ (Dunzo) செலவினங்களை குறைப்பதாகக் கூறி 3 சதவிகித பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

காயின் பேஸ் (Coinbase) என்ற கிரிப்டோ எக்ஸ்சேஞ்ச் நிறுவனம் (crypto exchange firm) 950 ஊழியர்களை, அதாவது அதன் உலகளாவிய ஊழியர்களின் எண்ணிக்கையில் 8 சதவிகிதத்தினரை, பணிநீக்கம் செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தனது இந்திய ஊழியர்களில் 8 சதவிகிதத்தினரை பணிநீக்கம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: பொய்களை பரப்பும் முகநூல் மார்க்கை தொடர்ந்து ட்விட்டர் மஸ்க் | ஆர்.எம்.பாபு


மேலும், கூகுள் மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனங்களும் பணிநீக்கம் செய்ய உள்ளன. கூகுள் நிறுவனம் இவ்வாண்டில் 11,000 ஊழியர்களை நீக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தியரான சத்ய நாடெல்லா தலைமையிலான மைக்ரோசாப்ட் நிறுவனம் 10,000 ஊழியர்களை, அதிலும் குறிப்பாக இன்ஜினியரிங் மற்றும் எச்.ஆர் பிரிவிலிருந்து, பணிநீக்கம் செய்ய உள்ளதாக இன்று (ஜனவரி 18, 2023) தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஐனவரி 16 அன்று புனேவில் பேசிய மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்துறை அமைச்சர் நாராயண் ரானே, “ஜூன் மாதத்திற்குப் பிறகு இந்தியாவில் பொருளாதார மந்தநிலை (Recession) ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று கூறியுள்ளார். அமைச்சரின் பேச்சு இந்த தொழில்நுட்ப நிறுவனங்கள் செய்யும் பணிநீக்கத்தை நியாயப்படுத்துவதாக உள்ளது.

இப்பெரு நிறுவனங்கள் தங்களுக்குத் தேவை ஏற்படும்போது அதிக ஊழியர்களை பணிக்கு அமர்த்திக்கொள்வதும், அவர்களை கசக்கிப் பிழிந்துவிட்டு தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவதும் வாடிக்கையாகிவிட்டது. பணிநீக்கத்துக்கு இவர்கள் கூறும் காரணம் பொருளாதார மந்தநிலை. தங்கள் நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களை இவர்கள் ஒருபோதும் மனிதர்களாக கருதுவதில்லை. இலாபம் குறைகிறது என்றால் தூக்கி எறிந்து விடுகிறார்கள் அரசின் உறுதுணையோடு.

பொம்மி

ஒரே நாடு, ஒரே தேர்தல் – ரிமோட் வாக்களிப்பு இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள்!

ஒரே நாடு, ஒரே தேர்தல் –  ரிமோட் வாக்களிப்பு
இந்து ராஷ்டிரத்துக்கான அடுத்த நகர்வில்
ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிஸ்டுகள் !
காவி – கார்ப்பரேட் பாசிசம்  முறியடிக்காமல் நமக்கு வாழ்வு இல்லை !

17.01.2023

பத்திரிக்கை செய்தி

ஒரே நாடு – ஒரே மொழி, ஒரே நாடு  – ஒரே ரேஷன்  வரிசையில் ஒரே நாடு – ஒரே தேர்தல் என்பதற்கான முன்னோட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தான் ஆட்சி செய்யாத மாநிலங்களை கலைத்தும் , எதிர்க்கட்சிகளையும் அதன் எம்.எல்.ஏக்களையும் வளைத்துப் போட்டு வந்த பாஜக ஒரே நேரத்தில் அனைத்து மாநிலங்களை கலைப்பதற்கான ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.

ஒரே நாடு ஒரே தேர்தல் நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை தேர்தல் ஆணையம் நடத்தி இருக்கிறது. இத்திட்டத்துக்கு அதிமுக அடிமைக்கும்பலின் இரு அணிகளும் ஓடோடிப்போய் விழுந்தடித்துக் கொண்டு ஆதரவு தெரிவித்து இருக்கின்றன. பாசிச பாஜகவின் அடிமைக்கட்சிகள் தவிர மற்ற  தேர்தல்கட்சிகளும் அமைப்புக்களும் தொடர்ந்து இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன, எனினும் ஆர்.எஸ்.எஸ்- பா.ஜ.க, அம்பானி – அதானி பாசிசக்கும்பலுக்கு தனது இந்து ராஷ்டிர கனவை நனவாக்க ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டம் அவசியமானதாக இருக்கிறது.

பல்வேறு காலங்களில் நடைபெறும் தேர்தல்களால் பெரும் பொருட்செலவு ஆவதால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்று பாஜக, ஆர்.எஸ்.எஸ், தேர்தல் ஆணையம் ஆகியவை தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகின்றன. வருகின்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலுடன் 9 மாநிலங்கள் மட்டுமே  தங்களின் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்கின்றன. மற்ற மாநில சட்டமன்றங்கள் 2023,2024,2025 ஆகிய காலங்களிலேயே நிறைவு செய்கின்றன.

நாட்டை அம்பானிக்கும் அதானிக்கும் விற்பதையே நோக்கமாக கொண்டிருக்கும் மோடி   உலகம் சுற்ற வாங்கப்பட்ட விமானத்தின் விலை எட்டாயிரம் கோடி ரூபாய். இப்படி ஒன்றிய அமைச்சர்கள், பாசிச பாஜக, ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகளுக்கு மட்டுமே பாதுகாப்புக்கென பல்லாயிரம் கோடிகள் செலவிடப்படுகின்றன. இதையெல்லாம் தடுக்காமல் , செலவீனத்தை குறைக்காமல் தேர்தல் வெவ்வேறு காலங்களில் நடத்துவதால் ஏற்படும் செலவுகளை காரணம் காட்டுவது ஏமாற்றே.


படிக்க: ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்


மின்னணு ஓட்டு எந்திரத்தை ஆம்புலன்சிலும், இரு சக்கர வாகனங்களிலும் கடத்திக்கொண்டு போவதையோ பாஜக வேட்பாளர்கள் தங்கள் பொறுப்பில் மின்னணு ஓட்டு எந்திரங்களை வைத்திருப்பதையோ மின்னணு ஓட்டு எந்திரத்தை ஹேக் செய்வதையோ தடுக்க வக்கற்ற இந்திய அரசும் தேர்தல் ஆணையமும் நியாயமான முறையில் தேர்தல் நடத்துவதற்கு ஒரே நாடு ஒரே தேர்தல் உதவும் என்பது கேலிக்கூத்து ஆகும். ஏனென்றால் இப்படிப்பட்ட  முறைகேடுகளும் இந்து மதவெறி பாசிச கலவரங்களும் அராஜகங்களுமே மோடியை இருமுறை ஆட்சியில் நீடித்திருக்க வைத்து இருக்கின்றன.

இந்து ராஷ்டிரத்தை அமைப்பதற்கு பல்வேறு மாநில, இன – மொழி பேசும் மக்களின் உணர்வுகளும் பண்பாடும்  பாசிச பாஜகவுக்கு மாபெரும் தடையாக இருக்கின்றது. குறிப்பாக தென்னிந்தியாவில் உள்ள தமிழ்நாடும் கேரளாவும் வரலாற்று மற்றும் பண்பாட்டு ரீதியாக இந்து ராஷ்டிரத்துக்கு எதிரான மன நிலையில் உள்ளன. பாஜக இம்மாநிலங்களில் இதுவரை ஆட்சியை பிடிக்காமல் போனதற்கு இவையே முக்கியக்காரணங்களாகும்.

ஆகவே, அனைத்து மாநில அரசுகளையும் கலைத்து குழித்தோண்டி இவர்கள் சொல்லும் ஜனநாயகம் மீது மண்ணள்ளி போடுகின்ற வேலைதான் ஒரே தேர்தல் . இதன்மூலம் தேர்தல் நேரத்தில் பயங்கரவாதப்’ பிரச்சினையையோ எல்லைப்’ பிரச்சினயையோ உருவாக்கி  அதன்மூலம் அனைத்து மாநிலங்களையும் கைப்பற்ற பாசிச மோடி அமித்ஷா கும்பல் முயல்கிறது. தேர்தல் பங்கேற்பில் மாற்றுக்கருத்து இருப்பினும் கூட இது குறைந்தபட்ச ஜனநாயக உரிமையை மறுத்து மேற்கொள்ளப்படும் பாசிச நடவடிக்கைகளை மக்கள் அதிகாரம் வன்மையாக கண்டிக்கிறது.

புலம்பெயர்ந்தோர் ஓட்டளிப்பதற்கு ஏதுவாக ரிமோட் முறையில் வாக்களிப்பு என்ற கிரிமினல் போர்ஜரி முறையை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம். தென்னிந்திய மாநிலங்களில்  குறிப்பாக தமிழ்நாட்டில் தினமும் ஆயிரக்கணக்கான வட இந்தியர்கள், வட கிழக்கு இந்தியர்கள் பிழைப்பு தேடி வருகின்றனர். இவர்களை எளிதில் தன் வசப்படுத்த முடியும் என்ற நம்பிக்கையில் ஆர்.எஸ்.எஸ் – பாஜக பாசிஸ்டுகள் ரிமோட் வாக்களிப்பு என்ற முறையை கொண்டு வருகின்றனர். இதற்கு வழக்கம் போல எதிர்க்கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றன. தேர்தல்களில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் வெற்றிக்கும் தோல்விக்குமான வாக்குகள் வித்தியாசம் குறைந்துகொண்டே இருக்கிறது. அந்த வித்தியாசத்தை சரி செய்வதற்கான கருவியாக மோடி – அமித்ஷா பாசிசக்கும்பலுக்கு ரிமோட் வாக்களிப்பு முறை இருக்கும். கொரோனா காலத்தில் முதலாளிகளாலும் அரசாலும் கைவிடப்பட்ட லட்சக்கணக்கான வட இந்தியர்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்து சென்றார்கள். பலர் சோற்றுக்கு வழி இன்றி செத்தேபோனார்கள், அதற்கெல்லாம் வருத்தப்படாத பாசிச மோடி – அமித் ஷா கும்பல்  இப்போது புலம் பெயர்ந்தவர்கள் ஓட்டளிக்க வேண்டும் என்று  கூறுவதே மிகப்பெரிய ஏமாற்றுத்தனம். இதனை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.


படிக்க: தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்


ஏற்கனவே இருக்கக்கூடிய இந்த அரசமைப்பை பயன்படுத்திக்கொண்டே தான் ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க பாசிஸ்டுகள் தங்கள் பாசிச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே நமக்கு அளிக்கப்பட்டதாக சொல்லப்படும் அனைத்து உரிமைகளும் வாக்களிக்கும் உரிமை உட்பட அனைத்தும் வெட்டி குறுக்கப்பட்டு பாசிச இருள் நோக்கிய வண்ணம் சென்று கொண்டு இருக்கிறோம். இனிமேலும் இதன் வழியே நம்முடைய குறைந்த பட்ச உரிமைகளைக்கூடப் பெற முடியாது.  காவி – கார்ப்பரேட்டுகள் தங்களின் பொற்கால ஆட்சியான இந்து ராஷ்டிரத்தை நிறுவிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்களிடம் நாம் தேர்தல் ஜனநாயகத்திற்காக கெஞ்சிக்கொண்டிருப்பதில் எவ்விதப்பலனும் இருக்கப்போவதில்லை. ஏற்கனவே நாம் சென்றுகொண்டிருக்கும் பாசிச இருள் சூழ்ந்த பாதைக்கு நேர் எதிரான புரட்சிகரப் பாதையைத்தவிர வேறேதும் நமக்கு வழி இல்லை.

காவி – கார்ப்பரேட் பாசிசத்தை முறியடிப்பதற்கான போராட்டங்களை வலுவாக முன்னெடுப்போம். ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி –அதானி பாசிஸ்டுகளின் பாசிச நடவடிக்கைகளை களத்தில் முறியப்பதற்கான போராட்டங்களை முன்னெடுக்க வேண்டியதே தலையாயக் கடமை என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தித்தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை.
99623 66321

ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள் | பாசிசத்தை வீழ்த்த உறுதி ஏற்போம்!

17-01-2016-அன்று இந்நேரம்தான் இருக்கும் என்று தோன்றுகிறது. ஐதராபாத் பல்கலைக்கழக விடுதியில் தனது நண்பர்கள் அறையில் ஏதோ ஒரு மூலையில் அமர்ந்து துயரம் மிக்க தனது வாழ்க்கையில் இறுதி மணித்துளிகளை எண்ணிக்கொண்டு ஒரு காகிதத் தாளையும் பேனாவையும் கையில் இருக்க பிடித்துக் கொண்டு தனது வாழ்க்கையின் இறுதி வார்த்தைகளை எழுதி முடித்துவிட்டு அறையில் தூக்கு மாட்டிக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டான் ரோகித் வெமுலா. சக மாணவர்கள் யாரையும் அவனது முகத்தைக் கூடக் காண விடாமல், ஒரு அனாதைப் பிணம் போல எரியூட்டியது பல்கலைக்கழக நிர்வாகமும் போலீசும். இன்று ரோகித் வெமுலாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாள்.

பார்ப்பன இந்துமதவெறியின் மீது கடும் வெறுப்பு கொண்டு அதை வேரறுக்க துடிதுடித்துக் கொண்டிருந்த ஒரு மாணவன் தான் ரோகித் வெமுலா. ஐதராபாத் பல்கலைக்கழக அம்பேத்கர் மாணவர் சங்க நிர்வாகிகளில் ஒரு மாணவர் யாகுப் மேமன் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்தார்; முசாபர்நகர் கலவரம் குறித்த “முசாபர்நகர் பாக்கி ஹே” எனும் ஆவணப்படத்தை, இம்மாணவர்கள் கூட்டமைப்பு பல்கலைக்கழக வளாகத்திற்குள் திரையிட விதிக்கப்பட்டிருந்த தடையை மீறி திரையிட்டது. வளாகத்தில் நடைபெறும் கலாச்சார விழாவில் மாட்டுக்கறி பிரியாணி வழங்கியது, அன்றாட உணவாக விடுதியிலேயே மாட்டுக்கறி வழங்க வேண்டும் என்ற அளவிற்கு வெமுலா தலைமையிலான மாணவர்கள் கோரிக்கை வைத்தது பல்கலைக்கழக நிர்வாகத்தை நெருக்கடிக்கு உள்ளாக்கியது.

மேலே, கோடிட்டு காட்டிய சம்பவங்கள் ஐதராபாத் மத்தியப் பல்கலைக்கழக்தில் இயங்கி வரும் அகில பாரதிய வித்யார்த்தி பரிசத் (ABVP) என்ற ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பினருக்கும், பார்ப்பன வெறி பிடித்த பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும்  பெரும் இடையூறாக அமைந்தது.


படிக்க: ரோகித் வெமுலா கொலை – ஏ.பி.வி.பி அவதூறுகளுக்குப் பதில்


டிசம்பர் 16-ஆம் தேதி வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. காரணம், “ஐதராபாத் பல்கலைக்கழகம் தேசத்துரோக, சாதிய பயங்கரவாதிகளின் கூடாரமாகிவிட்டது” என்று மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு எழுதிய கடிதங்கள். இதன் தொடர்ச்சியாக அமைச்சர் ஸ்மிருதி இரானி, அம்மாணவர்கள் யாரும் விடுதியில் தங்கக்கூடாது என்று நடவடிக்கை எடுத்தார். இதன்மூலம் ஊர் விலக்கம் செய்வது என்ற தீண்டாமை நடவடிக்கை பல்கலைகழக வளாகத்தில் வெமுலா உட்பட ஐந்து மாணவர்கள் மீது தொடுக்கப்பட்டது. அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிறு (17-01-2016) அன்று இரவு தற்கொலை செய்து கொண்டார் ரோகித் வெமுலா.

“இந்தத் தருணத்தில் நான் புண்பட்டவனாக உணரவில்லை. என் மனம் துயரில் மூழ்கவில்லை. வெறுமையானவனாக, என்னைப் பற்றியே அக்கறையற்றவனாக உணர்கிறேன். இது பரிதாபத்துக்குரிய நிலைதான். அதனால்தான் இதைச் செய்கிறேன். எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள். இவ்வுலகில் வாழ்வதைவிடச் சாவது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்பதை அறிந்து கொள்ளுங்கள்.” இவை ரோகித் வெமுலா தன் இறுதிக் கடிதத்தில் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு எழுதிய வரிகள்.

பார்ப்பனிய சனாதன தர்மத்தையும், ஏகாதிபத்தியங்களுக்கு நாட்டைக் கூறு போட்டு விற்கும் தங்களது ‘கரசேவை’களையும் எதிர்த்தால், ஒன்று கொன்றொழிக்கப்படுவீர்கள் அல்லது உளவியல் ரீதியான சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு தற்கொலைக்குத் தள்ளப்படுவீர்கள் என்பது தான் கல்புர்கி, பன்சாரே தொடங்கி ரோஹித் வெமுலா வரை நடத்தப்பட்ட கொலைகளின் மூலம் ஆர்.எஸ்.எஸ் கும்பல் உலகிற்கு உணர்த்த விரும்பும் பாடம்.


படிக்க: ரோகித் வெமுலா தற்கொலை : ஆர்.எஸ்.எஸ் கும்பலை துரத்தியடிப்போம் !


ரோகித் வெமுலா ஏதோ இந்துமதவெறி தாக்குதலுக்கு பலியாகி உயிர் நீத்த முதல் மாணவரோ அல்லது கடைசி மாணவரோ அல்ல. அவருக்கு முன்பும் அவருக்கு பின்பும் பல மாணவர்கள் சாதி – மத வெறி ஒடுக்குமுறையால் உயிரிழந்துள்ளனர். ஐ.ஐ.டி உள்ளிட்டு இந்தியா முழுவதும் உள்ள பல கல்லூரிகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சாதிய மதவாத ஒடுக்குமுறைகள் இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறன. மேலும், இந்தியாவில் உள்ள அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆர்.எஸ்.எஸ் -இன் கட்டுப்பாட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் முடிவென்ன?

“எனக்காக கண்ணீர் சிந்தாதீர்கள்..” ரோகித் வெமுலாவின் கடைசி வரிகள் இது. ஆம், அவருக்காக நாம் கண்ணீர் சிந்துவதை வெமுலா விரும்பவில்லை. அது பயணற்றதும் கூட. ரோகித் வெமுலா எதிர்கொண்டதை விட, இப்பொழுது பார்ப்பன இந்து மதவெறி பாசிச ஒடுக்குமுறைகள்  முன்னெப்போதும் இல்லாதவாறு அதிகரித்துள்ளன. இதை எதிர்கொள்ள ரோகித் வெமுலவை  நெஞ்சில் ஏந்துவோம். பாசிசத்துக்கு எதிரான போராட்டங்களை கட்டி அமைப்போம்.

ஊமைத்துரை

Enjoying on Tamilnadu’s Tax Money! Shameless Ravi Get Out! | People’s Power

11.01.2023

Enjoying on Tamilnadu’s Tax Money!
Shameless Ravi Get Out!

Press release

RN Ravi, Governor of Tamil Nadu, is acting as a spy for the Hindu Rashtra which is being established by saffron – corporate fascists. That’s why, he talks about Tamil pride and Thiruvalluvar’s pride but engages in anti-Tamil activities.

He said it would be appropriate to call Tamil Nadu as Tamilagam. He skipped some portions of the text of his customary address, which the Cabinet had written for him. When Tamil Nadu Chief Minister M.K.Stalin brought a resolution against his act, he condemned it and walked out of the Assembly.

He threatens the IAS and IPS officers in Tamil Nadu to listen only to what the central government says.


Also read: Conspiracy to reopen the murderous Sterlite! Let’s support the struggling Tuticorin people! | People’s power


Now ‘Aryan’ Ravi hadn’t used the name Tamil Nadu and the emblem of Tamil Nadu in the invitation for the Pongal festival which is to be held at the Governor’s Residence (Raj Bhavan)

Does it hurt for Ravi, who is getting fattier on the tax money of the people of Tamilnadu, to utter the word Tamilnadu? All the basic facilities provided to the Governor’s Residence, which works constantly against the interests of Tamil Nadu, should be stopped immediately and ‘Aryan’ Ravi should be expelled.

Ravi has launched such attack on Tamil Nadu and the Tamil people in the month of January, i.e., the month of commemoration of the (anti-Hindi) Language Martyrs. We, the people of Tamil Nadu, should not allow this anymore. Tamil Nadu, which had chased Modi with ‘Go Back Modi’, should continue its militant protests.


Also read: R.N. Ravi – The hand-picked spy of the fascist invasion


It was in response to his atrocities in Nagaland that Ravi was ousted by the people there. Even his farewell programme was not attended by any media; the media reflected the sentiments of the people of Nagaland.

Similarly, Ravi, who is constantly working against Tamil, Tamilnadu and Tamils, has no right to hold the Pongal festival. Therefore, People’s Power requests the media to boycott the Pongal festival which is to be conducted by Ravi.


With Comradeship,
Comrade Vetrivel Chezhian,
State Secretary,
People’s Power,
Tamil Nadu – Puducherry.
Contact : 99623 66321

இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை

0

2021-ஆம் ஆண்டு நிலவரப்படி, வெறும் 1 சதவிகித பெரும்பணக்காரர்களிடம் இந்திய நாட்டின் மொத்த சொத்தில் 40.5 சதவிகிதத்திற்கும் அதிகமான சொத்துகள் இருப்பதாக இன்று (ஜனவரி 16, 2023) வெளியாகியுள்ள ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை (Survival of the Richest: The India Supplement) கூறுகிறது. அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்களிடம் வெறும் 3 சதவிகிதத்திற்கும் குறைவான சொத்துகளே உள்ளன. உலக பொருளாதார மன்றம் (World Economic Forum) டாவோஸ்-இல் நடந்ததும் மாநாட்டின் முதல் நாளான இன்று இவ்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், முதல் 100 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு ₹54.12 லட்சம் கோடி ஆகும். மேலும், முதல் 10 பெரும்பணக்காரர்களின் சொத்து மதிப்பு மட்டும் ₹27.52 லட்சம் கோடி ஆகும்; இது கடந்த 2021 ஆம் ஆண்டில் இருந்ததைவிட 32.8‌ சதவிகிதம் அதிகமாகும்.

2020 ஆம் ஆண்டு, இந்தியாவிலுள்ள பெரும்பணக்காரர்களின் (billionaires) எண்ணிக்கை 102-ஆக இருந்தது. அது 2021 ஆம் ஆண்டில் 142 ஆகவும், 2022-இல் 166 ஆகவும் உயர்ந்துள்ளது. பெரும்பணக்காரர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, மற்றொருபுறம் 22.89 கோடி பேர் இந்தியாவில் வறுமையில் வாடுகின்றனர். உலகிலேயே அதிக வறியவர்களைக் கொண்ட நாடு இந்தியா என்பது குறிப்பிடத்தக்கது.

வருமானத்தின் அளவிற்கு ஏற்ப வருமான வரி நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் மறைமுக வரிகளோ (indirect taxes) ஏழை பணக்காரன் என்ற வேறுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வசூலிக்கப்படுகிறது.


படிக்க: ஆக்ஸ்ஃபாம் அறிக்கை 2022 : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு


“மதிப்பு கூட்டு வரி (Value Added Tax – VAT) போன்ற நுகர்வு வரிகள் அதிகம் விதிக்கப்படுவதால் ஏழைகள் அதிக அளவில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அவர்களின் வருமானத்தின் பெரும் பகுதியை மறைமுகவரியாக செலுத்த வேண்டி இருப்பதால் ஏற்றத்தாழ்வு அதிகரிக்கிறது” என்று அவ்வறிக்கை கூறுகிறது.

வருமானத்தின் அளவையும் அவர்கள் செலுத்தும் வரியையும் ஒப்பிடும்போது, அடித்தட்டில் உள்ள 50 சதவிகித மக்கள் மேல்தட்டில் உள்ள 10 சதவிகித மக்களை விட 6 மடங்கு அதிகமாக மறைமுக வரி செலுத்துகிறார்கள். 2021 — 2022-இல் வசூலான மொத்த ஜிஎஸ்டி-யில் அடித்தட்டு 50 சதவிகித மக்களின் பங்களிப்பு 64.3 சதவிகிதம் ஆகும்; மேல் தட்டில் உள்ள 10 சதவிகிதத்தினரின் பங்களிப்பு வெறும் 3 சதவிகிதமே ஆகும்.

இவ்வறிக்கை பணக்காரர்கள் மீதான சொத்து வரியை அதிகரிக்க பரிந்துரை செய்கிறது. 2017 – 2021 ஆண்டுகளில் மட்டும் அதானியின் விற்பனை செய்யப்படாத சொத்துகளின் மதிப்பு (unrealised gains) ₹1.79 லட்சம் கோடி அதிகரித்துள்ளது. இத்தொகையை கொண்டு 50 லட்சம் ஆரம்பக் கல்வி ஆசிரியர்களை ஒரு வருடத்திற்கு பணிக்கு அமர்த்தலாம்.

“இந்தியாவின் 166 பெரும்பணக்காரர்களின் (billionaires) மொத்த சொத்துகளின்மீது ஒருமுறை 2 சதவிகிதம் வரி விதித்தால், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்கத் தேவையான நிதியை (அதாவது ஆண்டிற்கு ₹40,423 கோடி) பெறமுடியும். முதல் 10 பெரும்பணக்காரர்களுக்கு ஒருமுறை 5 சதவிகித வரி விதித்தால், 2022 – 2023 ஆம் ஆண்டில் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் (₹86,200 கோடி) மற்றும் ஆயுஸ் அமைச்சகம் (₹3,050 கோடி) ஆகியவற்றின் தேவையை விட ஒன்றரை மடங்கு அதிக நிதி கிடைக்கும்” என்று அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.

அத்தியாவசிய பொருட்களின் மீதான ஜிஎஸ்டி-யை குறைத்து, சொகுசு பண்டங்கள் மீதான வரியை கூட்ட வேண்டும் என்று ஆக்ஸ்ஃபாம் பரிந்துரைக்கிறது.


படிக்க: ஆக்ஸ்பாம் அறிக்கை : வெடித்துச் சிதறக் காத்திருக்கும் அரசியல் பொருளாதாரக் கட்டமைப்பு !


இவ்வறிக்கை குறித்து பேட்டி அளித்த ஆக்ஸ்ஃபாம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் பெஹர் (Amitabh Behar)‌ “பணக்காரர்கள் செழிப்பதற்கான இந்த அமைப்பால் தலித்துகள், பழங்குடிகள், முஸ்லீம்கள், பெண்கள், முறைசாரா தொழிலாளர்கள் ஆகியோர் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஏற்றத்தாழ்வுகளை சரி செய்ய சொத்து வரி, வாரிசுரிமை வரி போன்ற வரிகள் விதிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.

ஏற்றத்தாழ்வையே உயிர் மூச்சாகக் கொண்டு இயங்கி வரும் இந்த பொருளாதார அமைப்பை அப்படியே வைத்துக் கொண்டு, அதில் சில மாறுதல்களை மட்டும் செய்து பிரச்சினைகளை சரி செய்து கொள்ளலாம் என்று நினைப்பது மூடத்தனம். ஏற்றத்தாழ்வை ஒழித்துக்கட்ட இந்த பொருளாதார கட்டமைப்பையே ஒழித்துக் கட்டுவது அவசியமாகிறது.

பொம்மி

சென்னை: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போராட்டம்!

1

னவரி 9, 2023 அன்று, தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஆவின் தலைமை அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. தீவன விலைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பால் கொள்முதல் விலையை உயர்த்த அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.

கடந்த 2022 ஆம் ஆண்டு, நவம்பரில் ஆவின் பால் கொள்முதல் விலையை அரசு உயர்த்தியது. பசும்பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ₹3 உயர்த்தி ₹35 ஆகவும், எருமை பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ₹4 உயர்ந்தி ₹44 ஆகவும் விலை நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் கோரியிருந்த விலை உயர்வோ லிட்டருக்கு ₹10.

போராட்டம் குறித்து பேசிய பால் உற்பத்தியாளர் சங்கத் தலைவர் கே. முகமது அலி “2019 ஆம் ஆண்டில் இருந்ததை விட கால்நடை தீவனத்தின் விலை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது. மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. வெறும் ₹3 விலை உயர்வு என்பது ஏற்கத்தக்கது அல்ல” என்று கூறினார்.

அண்டை மாநிலமான கேரளத்தில் பசும்பாலின் கொள்முதல் விலை லிட்டர் ₹42 என்பது குறிப்பிடத்தக்கது.


படிக்க: பால் விவசாயிகளைக் கொல்லும் கார்ப்பரேட் நிறுவனங்கள்!


பேராட்டத்தில் பசும்பால் விலையை லிட்டர் ₹42 ஆகவும், எருமைப்பால் விலையை லிட்டர் ₹51 ஆகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.

“4.3 சதவிகிதம் கொழுப்பும் (fat) 8.2 சதவிகிதம் கொழுப்பற்ற பால்திண்மங்களும் (solid non-fat SNF) கொண்டிருந்தால் மட்டுமே அது தரமான பாலாக கருதப்படுகிறது. ஆனால் தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 90 சதவிகித பால் 4 சதவிகிதம் கொழுப்பும் 8 சதவிகிதம் கொழுப்பற்ற பால்திண்மங்களும் கொண்டதாக இருப்பதால் லிட்டருக்கு ₹2 அல்லது ₹3 குறைவாகவே கிடைக்கிறது. சில பகுதிகளில் பாலின் விலை ₹24 என்ற அளவிற்கு குறைந்து விடுகிறது” என்றும் “ஈரோடு, ஆம்பூர், மதுரை போன்ற இடங்களில் உள்ள கால்நடை தீவன உற்பத்தி ஆலைகள் முழு அளவில் இயங்க வேண்டும்” என்றும் பால் உற்பத்தியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பெருமாள் கூறினார்.

மேலும், “தனியார் நிறுவனங்கள் ஆவின் வழங்குவதை விட லிட்டருக்கு ₹5 முதல் ₹10 வரை கூடுதலாக வழங்குவதால், தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் பாலில் வெறும் 10 சதவிகிதம் மட்டுமே ஆவினுக்கு வழங்கப்படுகிறது. நாள் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் 2 கோடி லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 42 லட்சம் லிட்டர் பால் மட்டுமே ஆவினால் கொள்முதல் செய்யப்படுகிறது. அதுவும் தற்போது 34 லட்சம் லிட்டராகக் குறைந்துவிட்டது. அண்டை மாநிலமான கர்நாடகத்தில் உற்பத்தியாகும் 75 சதவிகிதம் பால் அரசு கூட்டுறவு நிறுவனமான ‘நந்தினி’யால் கொள்முதல் செய்யப்படுகிறது” என்று கூறினார்.

கலவை தீவனத்திற்கு (நிலக்கடலை புண்ணாக்கு, தவுடு, பருத்திக்கொட்டை இன்னும் பலவற்றை கலந்து உற்பத்தி செய்யப்படுவது) 50 சதவிகித மானியம் வழங்க வேண்டும்; மற்ற வேளாண் உற்பத்திப் பொருட்களைப் போல பாலின் விலையையும் வருடாவருடம் நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் பால் உற்பத்தியாளர் சங்கத்தால் முன் வைக்கப்பட்டது.


படிக்க: இரட்டிப்பாவது விவசாய வருமானமா? விவசாயிகள் சாவா?


மேலும் ஆவின் நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டிய பால் பணப்பாக்கி சுமார் ₹500 கோடியை பொங்கலுக்கு முன்னதாக வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் கோரப்பட்டது.

பால் விவசாயிகளுக்கு இப்படி பாலுக்கான பண பாக்கியை வழங்காமல் இழுத்தடிப்பதும், தனியார் நிறுவனங்களை விட குறைவான விலையில் பாலை கொள்முதல் செய்வதும் அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் கூட்டுறவு நிறுவனமான ஆவினை ஒழித்துக் கட்டும் நடவடிக்கைகள் ஆகும். பால் விவசாயிகளை தனியாரை நோக்கித் தள்ளுவதாகும். பால் கொள்முதலில் இருந்து படிப்படியாக விலகி, கொள்முதல் முழுவதையும் தனியார் வசம் ஒப்படைக்க அரசு கையாளும் வழிமுறைகள்தான் இவை!

பொம்மி

இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு | பாகம் 1 | வீடியோ

மாபெரும் இந்தி மொழி எதிர்ப்பு போராட்ட வரலாறு பற்றி புத்தகங்கள் ஏதுமில்லை… ஆனால் அந்த மொழிப்பேரின் உணர்ச்சி மிகுந்த வரலாற்றை நாம் கற்க வேண்டியது அவசியம்.

அதனடிப்படையில், இந்தி மொழி எதிர்ப்பு போரின் வீரம் செறிந்த வரலாற்றை பல்வேறு பாகங்களாக வெளியிடவிருக்கிறோம்.

முதல் பாகம்:

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

தமிழ்நாட்டு மக்களை மதிக்காத ஆளுநர் | மக்கள் நேர்காணல்

ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டையும் தமிழ் மக்களையும் தொடர்ந்து இழிவுபடுத்தியும், மதிக்காமலும் செயல்பட்டுவருகிறார்.

தமிழ்நாட்டு மக்களை மதிக்காமல் திமிராக நடந்துகொள்ளும் ஆரிய ரவியை கண்டிக்கும் மதுரை மக்கள்.

காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!

கேரளா: திரைப்பட கல்லூரி மாணவர்கள் போராட்டம்!

0

கேரளாவின் கோட்டயத்தில் கே.ஆர். ​​நாராயணன் நேஷ்னல் இன்ஸ்டிடியூட் ஆப் விஷுவல் சயின்ஸ் அண்ட் ஆர்ட்ஸ் (KR Narayanan National Institute of Visual Science and Arts) திரைப்படக் கல்லூரி இயங்கி வருகிறது. அங்கு, கல்லூரி நிர்வாகத்தால் சாதிய ஒடுக்குமுறையும் பாகுபாடும் காட்டப்படுவதாக குற்றம்சாட்டி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். டிசம்பர் 5, 2022 அன்று துவங்கிய போராட்டம் நேற்றுடன் (ஐனவரி 13, 2023) 40 நாட்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இக்கல்லூரியின் இயக்குநர் சங்கர் மோகன் அங்கு படிக்கும் மாணவர்களையும் பணியாளர்களையும் சாதிய அடக்குமுறைக்கு ஆளாக்குவதற்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இயக்குநர் சங்கர் மோகன் மற்றும் அந்நிறுவனத்தின் தலைவரான பிரபல திரைப்பட இயக்குநர் அடூர் கோபாலகிருஷ்ணன் ஆகியோரை பதவிநீக்கம் செய்யக்கோரி மாணவர்கள் போராடி வருகின்றனர்.


படிக்க : பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!


அடூர் கோபாலகிருஷ்ணன் குற்றம் சாட்டப்பட்ட சங்கர் மோகனை ஆதரிப்பதோடு மட்டுமல்லாமல் சாதிய பாகுபாடு காட்டப்படுவதாக புகார் அளித்த பெண் ஊழியர்களை இழிவாகவும் பேசியுள்ளார். மேலும், படிக்க விருப்பம் இருக்கும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளார்.

இக்கருத்துகளுக்கு மாணவர்கள் கடமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நிர்வாகத்தை கண்டித்து கல்லூரி கலையரங்கத்திலும் கல்லூரிக்கு வெளியே அரங்குகளை ஏற்பாடு செய்தும் வகுப்புகளை நடத்தி வருகின்றனர். மாணவர்கள் போராட்டத்தை ஆதரிக்கும் திரைத்துறை பிரமுகர்களும் பிரபலங்களும் அங்கு நேரடியாக வந்தும் இணைய வழியாகவும் மாணவர்களுக்கு வகுப்பெடுக்கின்றனர்.

போராடும் மாணவர்கள் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “இதுவரை வகுப்புகளை தொடர்ந்து நடத்தி விட்டோம்; இதற்குமேல் தொடர நிதியுதவி தேவைப்படுகிறது” என்று உதவி கோரியுள்ளனர்.

“இயக்குநர்கள் ஆனந்த காந்தி, ராஜீவ் ராஜி, குர்விந்தர் சிங், ‘தி கிரேட் இந்தியன் கிச்சன்’ இயக்குநர் ஜியோ பேபி, நடிகரான சுஜித் சங்கர், சமூக செயற்பாட்டாளர் மைத்ரேயன், ஊராளி இசைக்குழுவினர் என பலரும் கலந்துகொண்டு எங்களுக்கு வகுப்பு எடுத்தனர். அதில் சிலர் எங்கள் அழைப்பை ஏற்று வந்தனர்; சிலர் தாமாகவே முன்வந்தனர்” என்று மாணவர் குழுவின் (students’ council) தலைவர் ஸ்ரீதேவ் சுப்பிரகாஷ் கூறினார்.


படிக்க : தேனி நெசவாளர்கள் கூலி உயர்வு கோரி போராட்டம்!


மாணவர்களுக்கு வகுப்பெடுக்க வருபவர்களை கல்லூரி நிர்வாகம் வகுப்பறைக்குள் அனுமதிப்பதில்லை. மாணவர்கள் மற்றும் கல்லூரியை சேர்ந்த ஆசிரியர்கள் ஆகியோரை மட்டுமே வகுப்பறைக்குள் அனுமதிக்க முடியும் என்று கூறி மாணவர்களுக்கு தடையை ஏற்படுத்தினர். ஆனால் மாணவர்களோ கலையரங்கில் வைத்து வகுப்புகளை ஏற்பாடு செய்தனர்.

கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற கேரளாவின் சர்வதேச திரைப்பட விழாவில் (IFFK) மாணவர்கள் மேற்கொண்ட போராட்டத்தால் இப்பிரச்சினை வெளிச்சத்திற்கு வந்தது. அத்திரைப்பட விழாவிலேயே மாணவர்கள் போராட்டத்தை ஆதரித்து பல திரைத்துறை இயக்குநர்களும் நடிகர்களும் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொம்மி

ஜனவரி 25: மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi இயக்கம் | மக்கள் அதிகாரம்

#getoutravi இயக்கம்

ஜனவரி 25 அன்று இந்தி எதிர்ப்பு மொழிப்போர் தியாகிகள் தினத்தில் சமூக வலைத்தளங்களில் #getoutravi என்பதை நிரப்புவோம்! 

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்று இம்மாதம் உளறத் தொடங்கிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சரவை எழுதி கொடுத்ததற்கு மாற்றாக தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர் கருணாநிதி ஆகிய வார்த்தைகளை பேச மறுத்தார். கிண்டி ஆளுநர் மாளிகையில் நடந்த பொங்கல் விழாவில் தமிழ்நாடு இலட்சினையை திட்டமிட்டு புறக்கணித்தார். இப்பொழுது, ஆரிய – பார்ப்பன – வேத எதிர்ப்பையே உயிர்நாடியாக கொண்ட தமிழ்நாட்டில் தான் சனாதனம் தோன்றியது என்று பொய் புரட்டு பேசிக்கொண்டு திரிகிறார்.

ஆக, தமிழ்நாட்டுக்கும் தமிழனத்துக்கும் தொடர்ந்து எதிராக செயல்படும் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து, வருகின்ற 2023 ஜனவரி மாதம் 25 ஆம் தேதி மொழிப்போர் தியாகிகள் தினத்தில் #getoutravi என்ற இயக்கம் எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்.

ஜனவரி 25 ஆம் தேதி தமிழ்நாட்டு மக்கள் அனைவரும் ஆளுநர் ரவிக்கு #getoutravi என்று எழுதப்பட்ட அஞ்சல் அட்டையை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஒவ்வொருவரும் குறைந்தபட்சம் 25 அஞ்சல் அட்டைகளை அனுப்பி தமிழின எதிரி ஆர்.என்.ரவிக்கு நம்முடைய எதிர்ப்பை பதிவு செய்வோம்.

மேலும் அன்றைய தினம் #getoutravi என்று எழுதப்பட்ட கைத்தட்டிகளை பிடித்து தமிழ் மக்கள் தங்களுடைய படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றும் அன்றைய தினம் #getoutravi என்பதை சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை,
9962366321.
Fb : makkal Athikaram

This slideshow requires JavaScript.

பகிருங்கள் ! பரப்புங்கள் !!

ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு | தோழர் அமிர்தா வீடியோ

தமிழ்நாட்டு அரசின் தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உண்டு கொழுத்த ரவிக்கு, தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் கசக்கிறதா என்ன? தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் மாளிகைக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு ஆரிய ரவி வெளியேற்றப்பட வேண்டும்.

ஆர்.என்.ரவியே தமிழ்நாட்டை விட்டு வெளியேறு | தோழர் அமிர்தா வீடியோ

காணொலியை பாருங்கள்! பகிருங்கள்!!

காப்புக்காடுகளை ஒழித்துக் கட்ட எத்தனிக்கும் திமுக அரசு!

0

மீபத்தில் தமிழ்நாடு அரசு கனிமச் சுரங்கங்கள் அமைப்பது தொடர்பாக தமிழ்நாடு சிறுகனிம சலுகை விதிகளில் (Tamil Nadu Minor Mineral Concession Rules, 1959) திருத்தங்களை மேற்கொண்டது. இது தமிழ்நாட்டின் காப்புக்காடுகளை (Reserve Forests) ஒழித்துக் கட்டுவதாக அமைந்துள்ளது.

இந்த திருத்தத்திற்கான அரசாணை தொழில், முதலீடு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சகத்தால் டிசம்பர் 14, 2022 அன்று வெளியிடப்பட்டது. தமிழ்நாடு சிறு கனிம சலுகை விதிகள் பிரிவு 36 உட்பிரிவு 1(A)-இன் படி காப்புக்காடுகளின் எல்லையிலிருந்து ஒரு கிலோமீட்டர் சுற்றளவுக்குள் கனிமச் சுரங்கங்கள் அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இவ்விதியைத் திருத்தி காப்புக்காடுகளின் அருகில் சுரங்கங்கள் அமைப்பதற்கான தடையை நீக்கிவிட்டது திமுக அரசு.

நவம்பர் 3, 2021 அன்று தமிழ்நாடு அரசு பிறப்பித்த அரசாணையின் படி காப்புக்காடுகள், காட்டுயிர் சரணாலயங்கள் (Wildlife sanctuaries), தேசியப் பூங்காக்கள் (National Parks), புலிகள் காப்பகங்கள் (Tiger reserves) மற்றும் யானைகளின் வலசைப் பாதைகள் (Elephant corridors) ஆகியவற்றிலிருந்து ஒரு கி.மீ தொலைவுவரை கனிமச் சுரங்கங்கள் அமைக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது, அந்தப் பட்டியலில் இருந்து ‘காப்புக்காடுகள்’ மட்டும் நீக்கப்பட்டுள்ளது.


படிக்க: சத்தீஸ்கர் அரசு : காடுகளை அழிக்க காத்திருக்கும் கழுகு !


2021ஆம் ஆண்டு தடையால் 200க்கும் மேற்பட்ட குவாரிகளின் பணிகள் பாதிக்கப்படுவதாக நீர்வளம் மற்றும் கனிம வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வருத்தப்படுகிறார். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறதாம்!

இப்பிரச்சினை குறித்துப் பேசிய திமுக அமைச்சர் துரைமுருகன், “உச்சநீதிமன்ற ஆணையும், ஒன்றிய அரசின் வழிகாட்டுதல்களும் காப்புக்காடுகளுக்கு அருகில் குவாரிகள் இயங்குவதை தடை செய்யவில்லை” என்று கூறினார். மேலும், டி.என். கோதவர்மன் திருமுல்பாட் (TN Godavarman Thirumulpad vs Union Of India & Others) வழக்கின் தீர்ப்பை சுட்டிக்காட்டி, “தேசியப் பூங்காக்கள், காட்டுயிர் சரணாலயங்கள், யானைகளின் வலசைப் பாதைகள் ஆகியவற்றை சுற்றி 1 கி.மீ தொலைவிற்கு சுரங்கங்கள் அமைக்கக் கூடாது என்றுதான் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. காப்புக்காடுகள் குறித்து அத்தீர்ப்பில் கூறப்படவில்லை” என்று சட்ட விளக்கம் வேறு கூறுகிறார்.

காப்புக்காடுகளில் இருந்து 60 மீட்டர் தொலைவில் குவாரிகள் செயல்படலாம் என்று திமுக அரசின் அரசாணை கூறுகிறது. கல் குவாரி மாஃபியாக்கள் லாபம் அடைவதற்காக முன்னர் இருந்த 1 கி.மீ தொலைவு என்பதை தற்போது 60 மீட்டர்-ஆக மாற்றி உள்ளார்கள்.

“ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 35 சதவிகிதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் மொத்த வனப்பகுதியின் பரப்பளவு 23.71 சதவிகிதம்தான். எனவே காடுகளின் பரப்பளவை அதிகரிக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். இப்படியான சூழலில் தமிழக அரசு செய்திருக்கும் இந்த சட்டத்திருத்தத்தின் பின்னணியில் எந்த நியாயமான காரணமும் இல்லை” என்று பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச்செல்வன் கூறுகிறார்.


படிக்க: பிரேசில் அமேசான் காடுகளை அழித்து கார்ப்பரேட் விவசாயப் பண்ணைகள் !


இந்த சட்டவிதி திருத்தங்களை ரத்துசெய்யக் கோரி விசிக, மதிமுக, சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட அரசியல் கட்சிகளும், சூழலியல் அமைப்புகளும் தமிழ்நாட்டு முதல்வர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியுள்ளன. ஆனால் அமைச்சர் துரைமுருகனின் பேச்சு, திமுக அரசு இம்முடிவில் இருந்து பின்வாங்காது என்பதையே உணர்த்துகிறது. அதாவது கல்குவாரி மாஃபியாக்களின் நலன்களை பாதுகாப்பதில் இருந்து திமுக அரசாங்கம் பின்வாங்கப் போவதில்லை என்பதையே அமைச்சரின் பேச்சு நமக்கு உணர்த்துகிறது.

பாசிச எதிர்ப்பு என்பது வெறும் காவி எதிர்ப்பு மட்டுமல்ல என்பதை ஜனநாயக சக்திகள் உணர்ந்து கொண்டு, திமுகவின் கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளை எதிர்த்து களத்தில் நின்று சமரசமின்றி போராட வேண்டும்.

பொம்மி

தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை! வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு ! | மக்கள் அதிகாரம்

11.01.2023

தமிழ்நாட்டு வரிப்பணத்தில் உல்லாச வாழ்க்கை!
வெட்கங்கெட்ட ரவியே வெளியேறு !

பத்திரிகை செய்தி

காவி – கார்ப்பரேட் பாசிஸ்டுகள் நிறுவிக் கொண்டிருக்கும் இந்து ராஷ்டிரத்திற்கான உளவாளியே தமிழ்நாட்டின் ஆளுநர் ரவி. அதனால்தான் தமிழ்ப்பெருமை, திருவள்ளுவர் பெருமை என்று பேசிக்கொண்டே தமிழினத்திற்கு எதிரான அனைத்து செயல்களையும் செய்து வருகிறார்.

தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும் என்றார். தமிழ்நாட்டு சட்டசபையில் அமைச்சரவை எழுதி கொடுத்ததற்கு மாறாக உரையாற்றினார். அதற்கு எதிராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானத்தை கண்டித்து சட்டசபையில் இருந்து வெளியேறினார்.

தமிழ்நாட்டில் உள்ள ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை அழைத்து மத்திய அரசு சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும் என்ற மிரட்டுகிறார்.

படிக்க : தமிழ்நாட்டை தமிழகம் என்று சொல்வதா? ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கண்டனம் | தோழர் மருது வீடியோ

இப்போது ஆளுநர் மாளிகையில் பொங்கல் விழா நடைபெறும் என்று அறிவிக்கும் அழைப்பிதழில் தமிழ்நாடு என்ற பெயரையும் தமிழ்நாட்டின் லட்சினையையும் நீக்கி இருக்கிறார் ஆரிய ரவி.

தமிழ்நாட்டு அரசின் தமிழ்நாட்டு மக்களின் வரிப் பணத்தில் உண்டு கொழுத்த ரவிக்கு, தமிழ்நாடு என்று சொன்னால் மட்டும் கசக்கிறதா என்ன? தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் மாளிகைக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டு ஆரிய ரவி வெளியேற்றப்பட வேண்டும்.

மொழிப்போர் தியாகிகள் போராடிய இம்மாதத்தில் தமிழ்நாடு, தமிழ் இனத்தின் மீது இப்படிப்பட்ட ஒரு தாக்குதலை தொடுத்திருக்கிறார் ரவி. தமிழ்நாட்டு மக்களாகிய நாம் இதை இனியும் அனுமதிக்க கூடாது. கோ பேக் மோடி என்று மோடியை விரட்டியடித்த தமிழ்நாடு, தன்னுடைய போர்க்குணமான போராட்டங்களை தொடர வேண்டும்.

படிக்க : தமிழ்நாட்டின் பெயரை மாற்ற வேண்டுமா? ஆரிய ரவியை விரட்டியடிக்க வேண்டுமா? தமிழ்நாடே முடிவெடு! | மக்கள் அதிகாரம்

நாகாலாந்திலே ரவி நடத்திய அக்கிரமங்களுக்கு எதிர்வினையாகத்தான் அந்த மக்களாலேயே அவர் விரட்டியடிக்கப்பட்டார். அவருடைய பிரிவு விழாவில் கூட எந்த ஒரு ஊடகமும் கலந்து கொள்ளாமல் நாகாலாந்து மாநில மக்களின் உணர்வை பிரதிபலித்தன.

அதைப்போலவே தொடர்ந்து தமிழ், தமிழ்நாடு, தமிழினத்திற்கு எதிராக செயல்படும் ரவிக்கு பொங்கல் விழா நடத்த எவ்வித உரிமையும் தகுதியும் இல்லை. ஆகவே ரவி நடத்தவுள்ள பொங்கல் விழாவினை  ஊடகங்கள் புறக்கணிக்க வேண்டும் என்று மக்கள் அதிகாரம் கேட்டுக்கொள்கிறது.


தோழமையுடன்,
தோழர் சி.வெற்றிவேல்செழியன்,
மாநிலச் செயலாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321

பருவநிலை மாற்றத்தில் சிக்கித் தவிக்கும் ஆஸ்திரேலியா!

லகின் பல்வேறு நாடுகள் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இயற்கை சீற்றங்களால் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் தற்போது ஆஸ்திரேலியா நாடு கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் பருவநிலை மாற்றத்தால் பல்வேறு இயற்கை சீற்றத்தை எதிர்கொண்டு வருகிறது. தீவிர வெப்ப காற்று வீசுவது, ஒரே நாளில் ஒரு மாதத்திற்கான மொத்த மழையும் பெய்துவிடுவது, அதனால் அதீதவெள்ளம் வருவது, உடல் விரைத்து போகும் அளவிற்கு கடுங்குளிர் என பல்வேறு இயற்கை பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர் ஆஸ்திரேலிய மக்கள்.

இப்படி மாறுபட்ட காலநிலையால் மக்கள் ஒருபக்கம் பாதிப்பை எதிர் கொண்டுவரும் நிலையில், அந்நாட்டிற்கு பொருளாதார பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மக்கள் தொகையில் 60 சதவிகிதம் பேர் விளையாட்டில் ஆர்வமாக இருப்பதால் ஆஸ்திரேலியா நாடு 30 சதவிதம் வருமானத்தை விளையாட்டின் மூலம் ஈட்டி வருகிறது அரசு. விளையாட்டு பொருட்கள் விற்பனை என அனைத்திலும் மிகப்பெரும் வருமானம் ஈட்டப்படுகிறது.

படிக்க : இந்தியா: காலநிலை பேரழிவு-வறுமையால் பாதிக்கப்படும் 222 மில்லியன் குழந்தைகள் !

இந்தியாவில் மக்கள் பொழுது போக்கிற்கு சுற்றுலா, சினிமா என செல்வார்கள். ஆஸ்திரேலிய மக்கள் பொழுது போக்கிறகாகக் கூட மைதானத்தில் தான் அதிகம் விளையாட செல்வார்கள். கிரிக்கெட், டென்னிஸ், ஹாக்கி, கால்பந்து என அனைத்து விளையாட்டுகளையும் தவறவிடமாட்டார்கள். கடன் வாங்கியாவது மைதானம் சென்றுவிடுவார்கள்.

இந்த மோசமான காலநிலை மாற்றத்தால் தற்போது ஆஸ்திரேலியாவில் வெளியரங்க போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலிய நேரப்படி மதிய நேரத்திலேயே மேகமூட்டத்தால் வானம் இருண்டது. சூரியன் உச்சத்தில் நிற்கும் மதிய நேரத்தில் எப்படி வானம் இருட்டாகும். இதுதான் காலநிலை மாற்றத்தின் புதிய சர்ச்சை. இதே நிலை தொடர்ந்தால் ஆஸ்திரேலியாவில் இனி வெளியரங்கில் விளையாட்டுப் போட்டிகள் நடத்த முடியாத சூழல் உருவாகி பொருளாதார ரீதியாக மிகப்பெரிய பின்னடைவு சந்திக்ககூடும் என எச்சரிக்கின்றனர் ஆஸ்திரேலியா  பொருளாதார நிபுணர்கள்.

கடந்த 2019 மற்றும் 2020 ஆண்டு கோடைகாலத்தில் மட்டும் 2.84 கோடி ஏக்கர் பசுமைக் காடுகள் கடும் காட்டுத் தீ-ஆல் நாசமானது. இதில் 300 கோடி விலங்குகள் இடம்பெயர்ந்தும் இறந்தும் போனதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த விபத்தில் பொதுமக்கள் 30 பேர் இறந்துள்ளனர். இது பருவநிலை மாற்றத்தால் ஆஸ்திரேலியா எதிர்கொண்டுவரும் அபாயகரமான நிலையை நமக்கு உணர்த்துகிறது.

இதேபோன்று அமெரிக்கா மௌனா லோவா தீவில் அமைந்துள்ள ஹவாய்  எரிமலை, நாற்பது ஆண்டுகளுக்கு பிறகு பயங்கரமாக வெடித்து நெருப்பு குழம்புகளை அதிக அளவில்  வெளியேற்று வருகிறது. இதனால் அங்கு வாழும் மக்களுக்கு சுவாசப் பிரச்சினை ஏற்படக்கூடும், எனவே அனைவரும் மாற்று இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்படுகிறார்கள். அந்நாட்டு அரசு எரிமலையை தீவிரமாக கண்காணித்து வருகிறது.

மேலும் அமெரிக்க கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்படும் காட்டு தீ  என்பது 1972 முதல் 2018 வரை இருப்பதைக்காட்டிலும் தற்போது 5 மடங்கு அதிகரித்து உள்ளது. இந்த காட்டு தீயினால் வெளியேறும் கரும்புகை மற்றும் சாம்பல்களினால் அந்த நகரமே இருள் சூழ்ந்தது போன்று மாறியுள்ளது.

படிக்க : பருவநிலை மாற்றம்: அழிந்து வரும் உயிரினங்கள் பட்டியலில் பென்குயின்கள்!

அதை தொடர்ந்து ஆசிய கண்டத்தின் பருவநிலை மாற்றத்தின் வெளிப்பாடாக இதுவரை கண்டிராத அளவுக்கு பாகிஸ்தான் நாட்டின் நிலப்பகுதி 3 பங்கில் 1 பங்கு முழுவதும் வெள்ளத்தில் முழ்கியுள்ளது. அதிலிருந்து அந்நாட்டை மீட்க பல்வேறு நாடுகள் பலகட்ட உதவி செய்கின்றன. கடுமையாக பாதிப்பட்ட அந்நாட்டு மக்கள் தன் உயிரை காப்பற்றிக் கொள்ள கடும் சவாலை சந்தித்து வருகின்றனர்.

இப்படி உலகம் முழுவதும் பருவநிலை மாற்றத்தால் மிகப்பெரும் இயற்கை சீற்றப்பாதிப்பை மனிதகுலம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். இதிலிருந்து உலகத்தை காப்பாற்றி மனிதகுலத்தை அழிவிலிருந்து மீட்க என்ன செய்யப்போகிறோம் என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி. இயற்கைக்கும் மனிதனுக்குமிடையே உள்ள பிணைப்பு அறுந்து இயற்கையை சூறையாடும் ஏகாதிபத்திய முதலாளித்துவ லாபவெறியை எதிர்ப்பதை தவிர வேறேன்ன இருக்கிறது நமக்கு.

டேவிட்

பணி நிரந்தரம் கோரி செவிலியர்கள் மாநிலம் முழுவதும் தொடர் போராட்டம்!

கொரோனா பெருந்தொற்றில் தற்காலிகமாக பணியாற்றிய செவிலியர்கள் தங்களது பணியை நிரந்தரம் செய்ய கோரி தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் கொரோனா பெரும்தொற்று மிகப்பெரும் அழிவை உண்டாக்கியது. இதையொட்டி அன்று இருந்த அதிமுக அரசு மருத்துவமனையில் ஆறு மாதம் தற்காலிகமாக செவிலியர்கள் பலரை பணியமர்த்தியது. அப்பணி தொடர்ந்து பலமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு தற்போது டிசம்பர் 31, 2022 ஆம் தேதியுடன் முடிவடைந்தது.

இந்த பணி நீட்டிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, பணிநீக்கம் செய்யப்போவகதாக அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்த்து, தங்களுக்கு நிரந்தரமாக பணி வழங்கக்கோரி தமிழ்நாட்டு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தி வருகின்றார்கள் செவிலியர்கள்.

படிக்க : செவிலியர்கள் முதல் மருத்துவர்கள் போராட்டம் வரை – நம்மிடம் கோருவது என்ன? ஒன்றினைந்த போராட்டமே !

சென்னையில் நடைபெற்றப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் ஒருவர், “திமுக தேர்தல் அறிக்கையின் 356-வது வாக்குறுதியின் படி ஒப்பந்தப் பணியாளர்களை நிரந்தரப் பணியாளர்களாக பணி நியமனம் செய்யப்படுவார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் திமுக அரசு தனது வாக்குறிதியை நிறைவேற்றாமல் எங்களை வஞ்சித்து கொண்டிருக்கிறது” என்று கூறினார்.

கோவையில் கடந்த பத்து நாட்களாக செவிலியர்கள் தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜனவரி 10 அன்று கையில் குழந்தைகளுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களில் ஒருவர் கௌசியா, “நான் கடந்த இரண்டரை ஆண்டுகளாக பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறேன். கொரோனா காலத்தில் பணியாற்ற வேண்டும் என்ற நிர்பந்தத்தின் அடிப்படையில் நாங்கள் பணியில் சேர்ந்தோம். இப்பணிக்கு பல்வேறு சலுகைகள் தருகிறோம் என்று அரசு கூறியது. எனினும் மக்களை காப்பாற்றுவதற்காகத்தான் நாங்கள் கொரோனா மீட்பு பணியை மேற்கொண்டோம். கடந்த ஆறு மாதமாக எங்களுக்கு சம்பளமோ, ஊக்கத்தொகையோ வழங்கப்படவில்லை. நான் கருவுற்றிருந்த போது விடுப்புக்கூட எடுக்காமல் மக்களுக்காக கொரோனா மீட்பு பணியை செய்தேன். தற்போது எங்களின் போராட்டத்தை அரசு அதிகாரிகள் யாருமே கண்டுகொள்ளவில்லை. எங்களுக்கு பணி நிரந்தரமும் பணிப் பாதுகாப்பும் வழங்க வேண்டும் என்பதே எங்களது கோரிக்கையாகும்” என்றார் வேதனையுடன்.

இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக தமிழ்நாடு முதல்வருக்கு அஞ்சல் அனுப்பும் போராட்டம் விழுப்புரம், கிருஷ்ணகிரி, சென்னை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மற்றும் சேலத்தில் கண்ணில் கருப்பு துணி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

படிக்க : மறுகாலனியாக்க சுரண்டலுக்கு நவீன பண்ணை அடிமைகளாக மாற்றப்படும் செவிலியர்கள் !

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய மா.சுப்ரமணியம் “போராடும் செவிலியர்கள் ஜனநாயக ரீதியாக போராடுவது சரி, ஆனால் பணிப் பாதுகாப்பை உறுதி செய்து நிரந்தரம் செய்ய வேண்டும் என்று செவிலியர்கள் போராடுவதை காரணம் காரியம் அறிந்து போராட வேண்டும்” என்று கூறுகிறார்.

போராடக் கூடிய செவிலியர்கள், கொரோனாவில் மக்களுக்காக சேவை மனப்பான்மையுடன் உயிரை பனையம் வைத்து சேவை செய்தார்கள். அவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் வேலை முடிந்ததும் வெளியேற்றப் பார்க்கிறது திராவிட மாடல் அரசு! செவிலியர்கள் போராட்டத்திற்கு துணைநிற்கவேண்டியதே நம் அனைவரின் கடமை.

ரோகித் வெமுலா