Monday, June 15, 2026
முகப்பு பதிவு பக்கம் 245

சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?

மிழக சட்டமன்ற தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு விட்டது. இனி தமிழகத்தில் வீதிக்கு வீதி ஜனநாயகம் பற்றியும் ஓட்டுப்போடுவது பற்றியும் வகுப்புகள் எடுக்கப்படும். அதாவது, ஓட்டுப்போடுவது மட்டும்தான் நமது ஒரே ஜனநாயக உரிமை என்பதாக ‘நடுநிலை’பத்திரிகையாளர்கள் துவங்கி முன்னாள், இன்னாள் நடிகர் நடிகைகள் முதல் பிரபலங்கள் வரை அனைவரும் நமக்கு வகுப்பெடுப்பார்கள்.

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசாங்கம், இந்திய அரசியல் அமைப்பை தனது கார்ப்பரேட் மற்றும் இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு மாற்றுவதில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அதற்காக, மொத்த அதிகாரங்களையும் ஒற்றை அலுவலகத்தில் குவித்து வருகிறது.

படிக்க :
♦ மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ தேர்தல் தீர்வாகுமா ? ஜார்கண்ட் அனுபவம் !

மாநிலங்களின் அதிகாரங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, அவை மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. அதே சமயத்தில், மாநில அரசுகளின் நிதியாதாரமும் வெட்டிச் சுருக்கப்பட்டுள்ளது.

மாநில சுயாட்சி என்பது ஒப்புக்குக்கூட இல்லாத இன்றைய சூழலில், இந்த சட்டமன்ற தேர்தல்களில் மாநிலக் கட்சிகள் வெற்றிபெற்றாலும், அவர்களின் அதிகாரம் என்பது மிகவும் குறுகிய வரம்புக்கு உட்பட்டதாகவே இருக்கிறது. மாநில சுயாட்சியை மீட்க வேண்டும் என வலது, இடது கம்யூனிஸ்ட் கட்சிகள், திமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் வெளிப்படையாகவே பேசி வருகின்றன.

அவ்வளவு ஏன், பாஜக எஜமானர்களுக்கு அடிமையாகச் சேவை செய்யும் எடப்பாடி, ஓ.பி.எஸ். கும்பல் கூட மாநில அரசுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி வரிப் பங்குத் தொகை தராமல் இழுத்தடிக்கப்படுவதைப் பற்றி புலம்பியிருக்கின்றனர்.

“பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு காரணம், மாநில அரசின் வரி விதிப்பு அல்ல. அவற்றின் மீதான வரியை மாநில அரசு மக்களுக்கு சாதகமாக இருக்கக் கூடிய அளவுக்கு மாற்றியது. அதன் பிறகு, அவற்றின் மீதான மத்திய அரசின் வரியை அவர்கள் கணிசமாக உயர்த்தினர். கலால் வரி என்பதை “செஸ் வரி”என்று மாற்றினர்.

கலால் வரி என்றால் மாநிலங்களுக்கு அதை பகிர்ந்தளிக்க வேண்டும். செஸ் என்று மாற்றினால் அதை மாநிலங்களுக்கு தர வேண்டியதில்லை. எனவே, இதில் மாநிலங்களுக்கு வரக்கூடிய வருவாய் கிடைக்காமல்போனது. அவர்களுக்கு 48 சதவீதம் வரி வருவாய் அதிகரித்துள்ளது. ஆனால், மாநில அரசுக்கு வரவேண்டிய வருவாயில் 39 சதவீதம் குறைந்துள்ளது.

மத்திய அரசு விதித்த வரியால், தற்போது பிரச்சினை ஏற்பட்டுள்ளது. மத்திய வரி வருவாயில் இருந்து தமிழகத்திற்கு தரவேண்டிய பங்கின் அளவு குறைகிறது. வரியில் 41 சதவீதம் அதாவது ரூபாய் 32,849 கோடியை தமிழகத்திற்கு தரவேண்டும். அதை ரூபாய் 23,039 கோடியாக மத்திய அரசு குறைத்துவிட்டது. கூடுதலாக கடன் பெற்று அனைத்து நலத் திட்டங்களையும் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது”என்று இடைக்கால பட்ஜெட் குறித்து பேசும் போது தமிழக நிதித்துறை கூடுதல் செயலாளர் கிருஷ்ணன் கூறுகிறார்.

மாநில அரசுகளின் வருவாயில் கை வைப்பதன் மூலம் மாநில அரசுகளை மக்கள் நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் இருந்து வலுக்கட்டாயமாகத் தடுத்து நிறுத்தியிருக்கிறது மத்திய அரசு.

GST வரியின் பங்கைத்தராமல், மாநிலங்களைக் கூடுதலாக கடன் பெற்றுக்கொள்ளச் சொல்கிறது மத்திய அரசு. திட்டக்கமிசன் கடன் பெறுவதற்குமான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் மீது விதித்துள்ளது. அதாவது, மாநில அரசுகளுக்கு கடன் அதிகமாக வேண்டுமெனில் மத்திய அரசின் கார்ப்பரேட்மய நிகழ்ச்சி நிரலை மாநிலங்களில் அமல்படுத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என நிர்பந்தம் கொடுக்கிறது.

நிதி விவகாரத்தில் மட்டுமல்ல, மற்றெல்லாவற்றிலும் எதேச்சதிகாரத்துடன்தான் நடந்து கொள்கிறது மத்திய பாஜக அரசாங்கம். வேளாண்மை என்பது மாநிலப் பட்டியிலின் கீழ் வருவது. ஆனால், இதை மதிக்காமல் மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியிருக்கிறது பாஜக கும்பல்.

கடந்த ஆறு ஆண்டு கால ஆட்சியில், பல்வேறு மாநிலங்களில் சட்டவிரோத வழிமுறைகளில் ஆட்சிக் கவிழ்ப்பை நடைமுறைப்படுத்தி ஆட்சியதிகாரத்தை கொல்லைப் புறமாக கைப்பற்றியிருக்கிறது பாஜக. இன்னும் வேறு சில மாநிலங்களில் ஆட்சியை கைப்பற்ற முயன்று தோற்றுப் போயிருக்கிறது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எனில் அதனைக் கவிழ்ப்பதற்கும், எம்.எல்.ஏ.க்களை விலை கொடுத்து வாங்குவதற்கும் ஏதுவான வகையில் உள்ள இந்த அமைப்பு முறைக்குள் ஜனநாயகம் என்பதும், வாக்களிப்பதன் மூலம் அந்த ஜனநாயகத்தையும் இழந்த உரிமைகளையும் காப்பாற்றிவிட முடியும் என்பதும் அப்பட்டமானக் கட்டுக்கதைகளே.

மாநிலங்களின் நிதி வருவாயை முடக்குவது, அதிகாரங்களை மத்திய அரசுக்கு கொண்டு செல்வது, எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்குவது போன்ற நடைமுறைகள் ஒருபுறமிருக்க, மற்றொருபுறத்தில், ஜனநாயகத்தின் பிற தூண்களாக சொல்லப்படும் அத்தனைத் துறைகளுக்குள்ளும் தமது இந்துத்துவ நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ற நபர்களின் கைகளுக்குக் கொண்டு செல்வதன் மூலம் மொத்த அரசுக் கட்டமைப்பையும் பாசிசமயமாக்கி வருகிறது.

இந்த அதிகாரங்களின் ஒன்றுகுவிப்பு, மையப்படுத்துதல் உள்ளிட்ட செயல்பாடுகள் அனைத்தும் இந்துத்துவ அரசியலை அமலுக்கு கொண்டுவருவதற்காக மட்டுமல்லாமல், இந்தியா முழுவதையும் கார்ப்பரேட் கொள்ளைக்கான ஒரு ஒருங்கிணைந்த சந்தையாக மாற்றுவதற்குத்தான்.

படிக்க :
♦ பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?

♦ ஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசாங்கத்தின் அத்தனை உரிமைகளையும் பறித்துவிட்டு, மாநிலங்களின் நிதி ஆதாரங்களையும் பறித்துவிட்டு நடத்தப்படும் இந்த மாநில சட்டமன்றத் தேர்தல் என்பது, மத்தியில் ஆளும் பாசிச கும்பலின் ஒடுக்குமுறையை மாநில கட்சிகளின் மூலமாக மக்களின் மீது ஒடுக்குமுறையையும் சுரண்டலையும் நடைமுறைப்படுத்தவே நடத்தப்படுகிறது.

மத்தியில் ஆளும் பாசிச பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தோற்றாலும் கூட தமிழக மக்களின் பறிக்கப்பட்ட உரிமைகளும், தமிழக அரசின் நிதியாதாரமும், சுயாட்சியும் வீதியில் இறங்கி நடத்தப்படும் ஜனநாயகத்திற்கானப் போராட்டங்களின் மூலமாகவே சாத்தியப்படுமே ஒழிய, ஓட்டுப் பெட்டியை மட்டும் நம்பி இருந்தோம் எனில், குடிக்க கஞ்சிக்கூட மிஞ்சாது என்பதுதான் எதார்த்தம் !


ராஜேஷ்
செய்தி ஆதாரம் : தினகரன் (24/2/21), The Print

நாஜிகளை நடுங்க வைத்த நெதர்லாந்து வேலை நிறுத்தப் போராட்டம் || கலையரசன்

0

ரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளாத சமூகம் மீண்டும் அதே வரலாற்றை திருப்பி செய்வதற்கு சபிக்கப்பட்டிருக்கிறது என்று சொல்வார்கள்.

ஐரோப்பாவில், இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்த அதே நிலைமைதான் இன்று இந்தியாவிலும் இலங்கியையிலும் காணப்படுகிறது. ஆனால் நாம் ஐரோப்பியர் வரலாற்றில் இருந்து எந்த பாடத்தை கற்றுக் கொண்டோம்? எதுவும் இல்லை. அந்த அளவுக்குதான் நமது மக்கள் மத்தியில் இது குறித்த தேடுதலும் ஆர்வமும் இருக்கிறது என்பது இங்கு வருத்தத்திற்குறியது.

***

இலங்கையில், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக நடந்த இனக்கலவரங்கள் பற்றி கேள்விப் பட்டிருப்போம். தமிழ்நாட்டில், கோவையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடத்தப்பட்டக் கலவரத்துக்கு பின்னர், ஆர்.எஸ்.எஸ் சங்கிகள் மீண்டும் அதுபோன்ற கலவரங்களுக்கு தூண்டி விடுவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

ஒரு காலத்தில் ஐரோப்பாவில் இது போன்ற நிலைமைதான் இருந்தது என்பதை சொன்னால் நம்பூவீர்களா?

இதே போன்ற இனக் கலவரங்களின் மூலம்தான் ஜெர்மனியில் நாஜிகள் ஆட்சியை கைப்பற்றினார்கள் என்பதையும், அவர்கள் தங்கள் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொண்டனர் என்பதையும் அவர்கள் உள்ளூர் மக்கள் மத்தியில் தமது ஆதரவை பெருக்கிக் கொண்டனர் என்பதையும் நாம் மறந்து விடுகின்றோம்.

படிக்க :
♦ கிரீசில் நாஜி வெறியர்களை எதிர்த்து மக்கள் போராட்டம்

♦ இந்திய உழவர் போராட்டம் குறித்து ஒரு டச்சு ஊடகம் || கலையரசன்

இந்தியாவில் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் கும்பல் மக்களை இந்துக்கள் முஸ்லிம்கள் என்று இரண்டாகப் பிளவுபடுத்தி வைத்திருப்பது போன்றே, அன்று ஜெர்மனியிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் நாஜிகளும் அவர்களுடன் கூட்டுச் சேர்ந்திருந்த பாசிச கும்பல்களும் மக்களை கிருஸ்துவர்கள், யூதர்கள் என்று பிளவுபடுத்தி வைத்திருந்தார்கள்.

இன்று சகிப்புதன்மை கொண்ட லிபரலிச நாடாக காட்சியளிக்கும் நெதர்லாந்து கூட அதற்கு விதிவிலக்கு அல்ல. நெதர்லாந்திலும் ஜெர்மன் நாஜிகளை பின்பற்றி வந்த என்.எஸ்.பி எனும் ஒரு இனவாத பாசிச கட்சி இயங்கி வந்தது. அன்றும் அவர்கள் யாராலும் கவனிக்கப்படாத ஒரு சிறிய கட்சியாகத்தான் இருந்தனர். யூதர்களுக்கு எதிரான இனவாத பிரச்சாரங்கள் மூலம் டச்சு மக்கள் மத்தியில் ஆதாரவை பெற்றுக்கொள்ள முயன்றனர்.

இருப்பினும் அந்த காலத்திலும் நெதர்லாந்து, சர்வதேச வணிகத்தினால் லாபம் அடைந்து வந்த நாடு என்பதாலும், அதற்கு யூதர்களின் பங்கு இன்றியமையாதது என்பதாலும், டச்சு மக்கள் மத்தியில் இந்த யூதர்களுக்கு எதிரான இனவாதப் பிரச்சாரம் பெரியதாக எடுபடவில்லை.

1940-ஆம் ஆண்டிற்கு பின்னர், அந்த நிலைமையில் மாற்றம் ஏற்பட்டது. அந்த வருடம் ஜெர்மன் நாஜி இராணுவம் நெதர்லாந்தின் மீது படையெடுத்து ஆக்கிரமித்திருந்தது. நெதர்லாந்து அரசாங்கம் அகற்றப்பட்டு அந்த இடத்தில் ஜெர்மன் இராணுவ ஆட்சியாளர்களின் நிர்வாகம் ஏற்பட்டது. அவர்களின் கீழே ஒரு நிழல் அரசாங்கம் இயங்கி வந்தது.

அதைத்தவிர மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. டச்சு அரசு அதிகாரிகளும் காவல்துறையினரும் சிவில் நிர்வாகத்தை முன்பு போலவே நடத்திக் கொண்டிருந்தனர். அரசு அலுவலகங்கள் தொழிற்சாலைகள் எல்லாம் இயங்கின. மக்கள் வழக்கம்போல வேலைக்கு சென்று வந்து கொண்டிருந்தனர்.

டச்சு கிருஸ்துவ முதலாளிகள் மட்டுமல்ல யூதமுதலாளிகள் கூட தமது தொழிலகங்களை நடத்துவதற்கு எந்தவித தடையும் இருக்கவில்லை. சமூகம் இன்றிருப்பதை போன்றுதான் அன்றும் இருந்தது. யூதர்களில் பணக்காரர்களும் இருந்தார்கள், ஏழைகளும் இருந்தார்கள். யூதர்களும் கிருஸ்தவர்களும் ஒன்று கலந்து வாழ்ந்து வந்தார்கள். யூதர்கள் மதத்தால் வேறுப்பட்டிருந்தாலும், மொழியால் கலாச்சாரத்தால், அவர்களும் டச்சுக்காரர்களாகதான் வாழ்ந்து வந்தனர்.

ஜெர்மன் நாஜிகளுடன் கூட்டுச் சேர்ந்து இயங்கிய டச்சு ஒட்டுக்குழுவான என்.எஸ்.பி கட்சியினர், மக்கள் மத்தியில் ஏற்படும் சிறு சுணக்குகளை தனக்குச் சாதகமாக பயன்படுத்தி, யூதர்களுக்கு எதிரான இனக் கலவரமாக மாற்றி விடுவதற்குக் கடுமையாக முயற்சி செய்தனர். ஆம்ஸ்டர்டாம் நகர தெருக்களில் கத்தி பொருட்களுடன் (ஆயுதங்களுடன்) ரோந்து சுற்றிய என்.எஸ்.பி காடையர்கள் (ரவுடிகள்), யூதர்களை கண்டால் அவர்களை சீண்டி வம்புக்கிழுத்து சண்டையிட முயன்றனர்.

என்.எஸ்.பி காடையர்களின் கும்பல் வன்முறையில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக யூதர்களும் ஒரு ஆயுதக் குழுவை உருவாக்கினார்கள். இதனால் இந்த டச்சு – யூத ஆயுதபாணி குழுக்களுக்கு இடையில், அடிக்கடி மோதல்கள் இடம்பெற்றன.

ஒருதடவை ஆம்ஸ்டர்டாம் நகரில் இடம்பெற்ற மோதலில் கடுமையாகக் காயமடைந்த என்.எஸ்.பி முக்கிய பிரமுகர் ஒருவர் அடுத்தநாள் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த ஜெர்மன் ஆட்சியாளர்களும் அவர்களின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த டச்சு தினசரி பத்திரிக்கைகளும் யூதர்கள் மீதே பழிபோட்டனர்.

நெதர்லாந்தில் யூத பயங்கரவாதிகளின் அட்டகாரம் அளவுக்கு மிஞ்சி சென்றுவிட்டதென்றும், அவர்களது வன்முறைக்கு ஒரு நிராயுதபாணியான அப்பாவி டச்சு இளைஞன் பலியாகி விட்டானென்றும், செய்தி வெளியிட்டிருந்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஆம்ஸ்டர்டாம் நகரம் முழுவதும் தேடுதல் வேட்டை நடத்திய ஜெர்மன் படையினர் நூற்றுக்கணக்கன யூத இளைஞர்களைக் கைது செய்தனர். 1941-ஆம் ஆண்டு பிப்ரவரி 22,23-ஆம் தேதிகளில் இடம்பெற்ற தேடுதல் வேட்டையில் 20 முதல் 35 வயது வரையிலான 427 யூத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு தடுப்பு முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர்.

அன்றைய தினம் நடைபாதையில் கல் பதிக்கும் வேலை செய்து வந்த ஒரு சாதாரண டச்சுத் தொழிலாளி, நூற்றுக்கணக்கான யூத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இழுத்துச் செல்லப்படுவதை கண்டு கொதித்தெழுந்துள்ளார். தடைசெய்யப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரான அந்த தொழிலாளி, இந்த சம்பவம் குறித்து தனது சகதோழர்களுடன் கலந்துரையாடினார்.

அவர்கள் இருவரும் கலந்து பேசி, இதற்கு எதிராக நாங்கள் ஒரு நடவடிக்கை  எடுக்க வேண்டுமென்றும் வேலை நிறுத்தப் போராட்டமே சிறந்தது என்றும் தீர்மானித்தனர். தமது முடிவு குறித்து தலைமறைவாக இயங்கி வந்த கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களுக்கும் அறிவித்தனர். கம்யூனிஸ்ட் கட்சி தலைமை பீடமூம் இந்த வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து அனுமதி கொடுத்தனர். பிப்ரவரி 25-ஆம் தேதி பொது வேலை நிறுத்தத்திற்கு அறைக்கூவல் விடுக்கும் துண்டு பிரசூரங்கள் மக்கள் மத்தியில் வினியோகிக்கப்பட்டன.

ஆம்ஸ்டர்டாம் நகரில் நூற்றுக்கணக்கான அப்பாவி யூத இளைஞர்கள் கைது செய்யப்பட்டு கொண்டு செல்லப்படுவது நேரில் கண்ட, சாதாரண டச்சு மக்கள் கூட இந்த கொடுமைக்கு முடிவு கட்டப்பட வேண்டுமென்று கம்யூனிஸ்டு கட்சியினரின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.

பிப்ரவரி 25-ஆம் தேதி ஆம்ஸ்டர்டாம் நகரில் எங்குமே டிராம்கள் ஓடவில்லை. பஸ் ஓடவில்லை. தொழிலாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. அரசாங்க ஊழியர்கள் கூட அலுவலகங்களுக்கு செல்லவில்லை. இந்த வேலை நிறுத்தப் போராட்டமானது ஆம்ஸ்டர்டாம் நகரை அன்டியிருந்த கார்லம், வில்ரேல், சான்டம் போன்ற பிற நகரங்களுக்கும் பரவியது.

பிப்ரவரி 25,26 ஆகிய இரண்டு நாட்களும் நாடு தழுவிய மக்கள் எழுச்சியாக இந்த வேலை நிறுத்தப் போராட்டம், நாஜி ஆக்கிரமிப்பு நிர்வாகத்திற்கு எதிராக நடைபெற்றது. ஐரோப்பிய நாடுகளில் நாஜிகள் அதிகாரத்திற்கு வந்த பின்னர், நடந்த முதலும் கடைசியுமான பொது வேலை நிறுத்தம் இதுதான்.

உண்மையில், இப்படியொரு மக்கள் எழுச்சியை நாஜி இராணுவ ஆட்சியாளர்களே எதிர் பார்த்திருக்கவில்லை. ஒரு குறிப்பிட்ட கட்டம் வரை அவர்களுக்கு என்ன செய்வதென்றும் தெரியவில்லை. நெதர்லாந்தை நாஜி படைகள் எதிர்த்த அடுத்த நாளே நெதர்லாந்து கம்யூனிஸ்டு கட்சி தடை செய்யப்பட்டு விட்டதாலும், அந்த கட்சியின் தலைவர்களும் உறுப்பினர்களும் தலைமறைவாக இருந்ததாலும், இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை ஒழுக்குபடுத்துபவர்கள் யாரென்றுக் கண்டுபிடிக்க முடியவில்லை.

படிக்க :
♦ ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்
♦ Stateless : ஆஸ்திரேலிய அகதிகள் தடுப்பு முகாம் பற்றிய நெட்ஃபிளிக்ஸ் தொடர் || கலையரசன்

கம்யூனிஸ்ட் கட்சி என்பது பெருமளவு மக்கள் ஆதரவு பெற்றிறாத ஒரு சிறிய கட்சி என்பதாலும் அவர்கள் அந்தக் கட்சியைக் குறைவாக மதிப்பிட்டு இருக்கலாம். ஆனால், தொழிலாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட்டு கட்சிக்கு ஒரு பலமான ஆதரவுதளம் இருந்ததையே அவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

வேலை நிறுத்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்துவது எவ்வாறு என்று தெரியாமல் தவித்த ஜெர்மன் பாதுகாப்பு படையினர், கண்டபடி சுட்டத்தில் ஒன்பது பேர் பலியானார்கள். வேலை நிறுத்தத்தை முன்னின்று நடத்தியவர்கள் கையில் அகப்பட்டால், அந்த இடத்திலேயே சுட்டுக் கொன்றார்கள். அத்துடன் நூற்றுக்கணக்கான தொழிலாளர்களை கைது செய்தனர். அது மட்டுமல்ல, தொழிலாளர்களை நடத்திய முதலாளிகள் மீதும் அழுத்தம் பிரகியோகிக்கப்பட்டது.

வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களை உடனடியாக பணி நீக்கம் செய்யுமாறும் மேலதிகமாக ஒருமாத சம்பளப் பணம் தண்டமாக அரவிடப்பட வேண்டுமென்றும் உத்தரவிடப்பட்டது. வேலை நிறுத்தம் நடைபெற்ற நகரங்களுக்கு பொருப்பான நகர சபை நிர்வாகம் ஒரு பெரும் தொகை தண்டமாக கட்ட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

அந்த வகையில் ஆம்ஸ்டர்டாம் நகர சபை மட்டுமே பதினைந்து மில்லியன் கில்டர்ஸ் தண்டப் பணமாக கட்டியுள்ளது. கில்டன் என்பது யுரோவ் வருவதற்கு முன்பிருந்த நெதர்லாந்து நாட்டின் நாணயமாகும். சம்பந்தப்பட்ட நகர சபைகளின் மேயர்கள் பதவியில் இருந்து அகற்றப்பட்டு, அந்த இடத்தில் நாஜி இராணுவ ஆட்சியாளர்களுக்கு அடிவருடும் கைக்கூலிகள் நியமிக்கப்பட்டனர்.

ஜெர்மன் நாஜிகளின் ஆக்கிரமிப்பில் இருந்த ஐரோப்பிய நாடொன்றில் இராணுவ ஆட்சியாளர்களையே நடுக்க வைக்கும் அளவிற்கு, ஒரு மக்கள் எழுச்சியாக மாறிய இந்த மாபெரும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு காரணம் ஒரு சாதாரண தொழிலாளி என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. அதுவும், இந்த தொழிலாளி ஒரு கம்யூனிஸ்ட்டு கட்சி உறுப்பினர் என்பது வரலாற்றில் பதியப்பட வேண்டும்.

மனிதக்குல வரலாறு முழுவது சாதாரண உழைக்கும் மக்களே வரலாற்றை மாறி எழுதியுள்ளனர். ஆனால், அவர்களின் பெயர்கள் எந்த ஒரு சரித்திர புத்தகத்திலும் குறிப்பிடப்படுவதில்லை. வில்லம் கிரான் என்ற ஒரு பெயரையுடைய கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு தொழிலாளிதான் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை தொடங்கியவர் என்பதை அன்றைய நாஜி ஆட்சியாளர்கள் ஏதோ ஒருவகையில் கண்டுபிடித்து விட்டார்கள்.

நெதர்லாந்து முழுவதும் வில்லம் கிரானை வலைவீசி தேடிக் கொண்டிருந்த நாஜிப் படையினர் நவம்பர் மாதம் 16-ஆம் தேதியளவில் கைது செய்துள்ளனர். சரியாக, ஒரு வருடத்திற்கு பின்னர் அதாவது, 1942-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ஆம் தேதி 33-வயதுடைய வில்லம் கிரான் ஒரு இராணுவ முகாமில் சுட்டுக் கொல்லப்பட்டார். சாவதற்கு முன்னர், அவர் தங்கள் மகளுக்கு எழுதிய கடிதத்திலும் தனது கொள்கைப்பற்றை வெளிபடுத்தியுள்ளார்.

“நான் எனது கொள்கைக்காக மரணிக்கிறேன். அது அர்த்தமற்றதாகி விடாது என்று நம்புகிறேன்” என்று அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். வில்லம் கிரானின் மரணத்திற்கு பின்னர், அவரது மனைவியும் மகளும் மிகவும் கொடுமையான வறுமைக்குள் வாழ்ந்தனர். இன்று, ஒவ்வொரு வருடமும் நடக்கும் பிப்ரவரி வேலை நிறுத்த நினைவுக் கூறளுக்கு சம்பிரதாயப் பூர்வமாக கலந்துக் கொள்ளும் அரசியல்வாதிகள் யாரும் வில்லம் கிரானின் பெயரை உச்சரிப்பதே இல்லை.

அவரது பெயர் நெதர்லாந்து நாட்டில் எந்த ஒரு பாடப் புத்தகத்திலும் குறிப்பிடப்படவில்லை. ஏனென்றால், அவர் ஒரு சாதாரண தொழிலாளி, அது மட்டுமல்ல அவர் ஒரு கம்யூனிஸ்ட்.

முகநூலில் : கலையரசன்
(தோழர் கலையரசனின் யூடியூப் காணொலியின் எழுத்துருவாக்கம் )

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

பிரிட்டிஷ் ஆட்சியைக் கலங்கச் செய்த 1946 பிப்ரவரி கப்பற்படை எழுச்சி !

1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்குப் பிறகு, விடுதலைப் போராட்ட இயக்கம் சொல்லத்தக்க பெரிய அளவிலான மக்கள் இயக்கங்களை திட்டமிடவில்லை. அநேகமாக காங்கிரஸ் இயக்கம் முடங்கிப்போனது என்றே சொல்ல வேண்டும்.  ஆனால், 1947-ல் தேச விடுதலை, இது எப்படி சாத்தியம் ஆனது?

1939-ல் இரண்டாவது உலகப்போர் தொடங்கியது. ஹிட்லர் தொடங்கி வைத்த இந்தப் பேரழிவு, 1945-ல் முடிவுக்கு வந்தது. 20 கோடி சோவியத் மக்களில் 2 கோடி மக்கள் இந்த உலகப்போரில் தம் உயிரை  ஈந்தனர். போரின் தொடக்க காலத்தில் அமெரிக்காவுக்கு ஒரு கனவு இருந்தது. அதாவது, ஜெர்மானிய ஹிட்லர், இத்தாலிய முசோலினி, கிழக்கே ஜப்பான் ஆகியோர் இணைந்து ஒரு வேளை சோவியத் யூனியனை அழித்தால் மவுனமாக நாம் அதை அனுமதிப்போம் என்பதே அக்கனவு.

படிக்க :
♦ வரலாறு : 1946 மும்பை கடற்படை எழுச்சியைக் காட்டிக் கொடுத்த காந்தி – காங்கிரசு !

♦ The Battleship Potyomkin (1925) போர்கப்பல் பொதம்கின்! (ரசியத் திரைப்படம்- வீடியோ)

1941-ம் ஆண்டு ஜூன்-22 அன்று ஹிட்லர் சோவியத்தின் மீது தாக்குதல் தொடங்கினான். ஆனால், வரலாறு அமெரிக்காவின் கனவை மண்ணாக்கியது. சோவியத் படைகள் ஒருவேளை ஹிட்லரை அழித்திடாமல் இருந்திருந்தால், ஹிட்லர் அமெரிக்காவையும் அழித்திருப்பான் என்பதே உண்மை.

இங்கே, இந்தியாவில் உலகப்போரின் பின்னணியில் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டது என தோழர் பசவ புன்னையா பிற்காலத்தில் எழுதினார். கட்சி பாசிச யுத்த எதிர்ப்பு நிலை எடுத்தது. இந்த நிலைப்பாடு மக்களிடையே அதிருப்தியை உருவாக்கியது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து, இன்னும் கூட சற்று நீக்குப்போகுடன், தந்திரோபாயமாக நிலைமையை கையாண்டு இருந்திருக்கலாம் என பின்னாட்களில் கட்சி தன் விமர்சனம் செய்துகொள்ள வேண்டியிருந்தது.

கட்சியின் இந்த நிலைப்பாட்டை, காங்கிரஸின் பெரும் செல்வந்தர்களும் தலைவர்களும் தம் மோசமான கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரத்துக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், அதே காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த முற்போக்கு சிந்தனையாளர்கள், பாசிசம் தோல்வி அடைய வேண்டும் என்றே ஆசைப்பட்டார்கள். காரணம், போரின் போக்கும் போரின் முடிவும் இந்தியாவின் விடுதலையை பாதிக்கும் என்பதை அவர்களும் உணர்ந்து இருந்தார்கள்.

குறிப்பாக சோவியத் வெற்றி பெறுவதும் சரி, வீழ்வதும் சரி, அது சோவியத்துடன் நின்று விடப்போவதில்லை, மாறாக உலகப் பாட்டாளி வர்க்கத்தின் நலனையும், உலகெங்கும் பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வரும் மக்கள் இயக்கங்களையும் நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ பாதிக்கும் என்ற கம்யூனிஸ்டுகளின் நிலைப்பாட்டை, அத்தகைய முற்போக்காளர்களும் அறிவுபூர்வமாக சிந்திக்கும் மக்களும் மட்டுமே அன்று புரிந்து கொண்டு இருந்தனர்.

இப்பின்னணியில்தான் 1942-ஆம் ஆண்டு “வெள்ளையனே வெளியேறு இயக்கம் – Quit India” தொடங்கியது. ஆகஸ்ட் 9-ஆம் தேதி அன்று காந்தியும் பிற தலைவர்களும் பிரிட்டிஷ் ஆட்சியால் கைது செய்யப்பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பி.சி.ஜோஷி, பிரிட்டிஷ் அரசின் இந்த அடக்குமுறையைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டார்.

கூடவே, கம்யூனிஸ்ட்டுக்கள் மீது ஏவப்பட்ட அடக்குமுறை, துப்பாக்கிச்சூடு ஆகியன குறித்தும் காந்திக்கு எழுதிய கடிதத்தில் ஜோஷி குறிப்பிட்டு, கம்யூனிஸ்டுகள் மீதான அவதூறு தவறு என்று சுட்டிக்காட்ட வேண்டியிருந்தது. “…இந்த இரண்டு வருடங்களில் எங்கள் தோழர்கள் நான்கு தோழர்கள் (கேரளாவில் கையூர் தியாகிகள்) பிரிட்டிஷ் ஆட்சியால் தூக்கில் இடப்பட்டார்கள். 400 தோழர்கள் வரை இன்னும் சிறையில் உள்ளனர். 100 தோழர்கள் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். பிரிட்டிஷ் சர்க்கார் எங்களுக்கு செய்யும் உதவியை பார்த்தீர்களா?” என்று எழுதினார்.

பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கிரீடத்தின் மிக உயர்ந்த ஜொலிக்கின்ற வைரம் இந்தியாவே என்று சொன்ன பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை, இனிமேலும் நாம் இந்தியாவில் காலம் தள்ள முடியாது என்று புலம்ப வைக்கும் அளவுக்கு, அவர்களுக்கு இறுதி நெருக்கடியை கொடுத்தது 1946 கப்பற்படை புரட்சிதான்.

1942-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 13-ஆம் தேதி அன்று உத்தரபிரதேசம், மதுபங்கா காவல் நிலையம் முற்றுகை, பிகார், வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் நடந்த போராட்டங்களில்,  பல நூறு மக்களை போலீசும் ராணுவமும் சுட்டுக் கொன்றது, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்தது. இடையில் வந்ததுதான் வங்கப்பஞ்சம், அது அன்றைய பிரிட்டிஷ் பிரதமர் சரச்சில் திட்டமிட்டு உருவாக்கிய செயற்கையான பஞ்சம். இந்தியாவில் இருந்த, இந்தியாவுக்கு பிற நாடுகளில் இருந்து வந்து கொண்டிருந்த அனைத்து உணவுப் பொருட்களையும் பிரிட்டனுக்குக் கொண்டு சென்று, இந்தியாவில் பல லட்சக்கணக்கான மக்கள் செத்து மடியக் காரணமாக இருந்தவர் சர்ச்சில்.

****

1946-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி அன்று, பம்பாயில் பிரிட்டிஷ் கப்பற்படையில் இருந்த இந்திய மாலுமிகள், HMIS தல்வார் என்னும் போர்க்கப்பலில் இருந்து பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஏற்றிப் பறக்கவிட்டனர். பிரிட்டிஷ் ராணுவ அதிகாரிகளின் மோசமான, கொடூரமான நடத்தையைக் கண்டித்தும் தங்களது பிற கோரிக்கைகளை முன்வைத்தும் இந்தப் போராட்டம் தொடங்கப்பட்டாலும், பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிரான உணர்வே மேலோங்கி இருந்தது. தொடர்ந்து மேலும், பல கப்பல்களுக்கும் போராட்டம் பரவியது. போராட்டம் கராச்சி, சென்னை தூத்துக்குடி என இந்தியா எங்கும் பரவியது.

போராடும் மாலுமிகளுக்கு ஆதரவாக, லட்சக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள் வேலை நிறுத்தங்கள், ஊர்வலங்களை நடத்தினார்கள். மக்கள் தம் வீடுகளில் சப்பாத்தி, ரொட்டிகளை சுட்டு பழங்களுடன் சுமந்து சென்றுப் போராடும் கப்பற்படை வீரர்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். ராணுவ வீரர்களை ஏவி, மாலுமிகளை சுடுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டார்கள். ஆனால், சக வீரர்களை சுட மறுத்த நிகழ்வு வரலாற்றில் மிக முக்கியமானது. அதிகாரிகளின் உத்தரவை படை வீரர்கள் மீறியதை நவீன காலத்தில் அநேகமாக முதல் முறையாக அங்கேதான் பார்க்க முடிந்தது.

போராடும் வீரர்கள், தங்களுக்கு ஆதரவு அளிக்குமாறு வேண்டியபோது, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் ஆதரவு தர மறுத்தனர். கட்டுக்கோப்பான ராணுவ வீரர்கள் தம் உறுதிமொழிக்கு மாறாகப் போராட்டத்தில் இறங்கியதை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றும், நாளை விடுதலை பெற்ற இந்தியாவிலும் அவர்கள் இப்படித்தான் அரசை எதிர்த்துப் போராடக்கூடும் என்றும், இதைக் காண 125 வயது வரை வாழ வேண்டுமா என்றும் வெளிப்படையாகவே பேசினார் காந்தி. கம்யூனிஸ்டுகளும் மக்களும் ஆதரிக்க, காங்கிரசும் முஸ்லிம் லீக்கும் கைவிட, மகத்தான ஒரு புரட்சி சில நாட்களில் கைவிடப்பட்டது.

****

1905-ம் ஆண்டில் சோவியத் புரட்சியை தொடங்கி வைத்த பொட்டெம்கின்னும், 1917-ல் ஜார் மன்னனின் குளிர்கால அரண்மனை மீது குண்டு வீசிப் புரட்சி துவங்கியதை அறிவித்த அரோரா என்ற கப்பலும், பிற்காலத்தில் சோவியத் அரசால் பாதுகாக்கப்பட்டன. தல்வார் கப்பல் எங்கே ?

முகநூலில் : இக்பால் அகமது

disclaimer

ஓட்டுப் பெட்டியிலிருந்து தோன்றும் சர்வாதிகாரம் || பேராசிரியர் முரளி || காணொலி

மோடி தலைமையிலான மத்திய அரசு, சமூக வலைத்தளங்கள் மற்றும் ஓ.டி.டி தளங்களுக்கான கட்டுப்பாட்டு விதிகளை நேற்று வெளியிட்டுள்ளது. மோடி அரசின் கட்டுப்பாட்டுக்குக் கீழ் வராத ஊடகங்களாக சமூக வலைத்தளங்களும் (அதிலும் ட்ரோல் படையைக் கொண்டு மிரட்டி முடக்குகிறது) பண்பாட்டு ஊடகங்களாக ஓ.டி.டி தளங்களும் இருந்து வருகின்றன.

இந்தியாவை இந்துராஷ்டிரமாகத் துடிக்கும் சங்க பரிவாரத்திற்கு இந்த ஓ.டி.டி தளங்களும் சமூக வலைத்தளங்களும் புதிய தலைவலியாகியிருப்பதை ஒட்டியே அதனையும் கட்டுப்படுத்த கட்டுப்பாட்டு விதிகளைக் கொண்டுவந்திருக்கிறது மோடி அரசு.

இந்நிலையில் இந்தியாவில் பெயரளவிற்காவது இருந்துவந்த ஜனநாயக விழுமியங்கள் எல்லாம் என்னவாகின ? ஜனநாயகத்தின் முதுகெலும்பாக அறியப்படும் ஊடகங்கள் என்னவாகின ? அறிவுத்துறையினர், செயல்பாட்டாளர்கள் நிலை என்ன ?

இது குறித்து விரிவாக “ஜனநாயகம் சரிகிறதா?” என்ற தலைப்பில் 30 நிமிட காணொலியில் பேசியிருக்கிறார் பேராசிரியர் முரளி அவர்கள். அதில், இந்தியாவில் சமீப காலமாக பத்திரிகையாளர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், கல்வியாளர்கள், அறிவுத்துறையினர் ஆகியோரின் மீது நடத்தப்பட்டு வரும் ஒடுக்குமுறைகள் குறித்தும் சர்வதேச அளவில் இந்தியாவின் ஜனநாயக நிலைமை எவ்வாறு இருக்கிறது என்பது குறித்தும் விரிவாகப் பேசியுள்ளார்.

படிக்க :
♦ எல்கார் பரிஷத் முதல் டெல்லி கலவரம் வரை : அறிவுத்துறையினரைக் குறிவைக்கும் மோடி அரசு !
♦ அறிவுத்துறைகளின் மீதான மோடியின் ‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ !

இந்தியாவில் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்படுவது, கொல்லப்படுவது மற்றும் நேர்மையான ஊடகங்கள் எப்படியெல்லாம் மிரட்டப்படுகின்றன என்பதையெல்லாம் விரிவாக விவரிக்கிறார்.

உலகளாவிய அளவில் ஒரு நாட்டில் ஜனநாயகம் சீரழிந்து போவதை அடையாளப்படுத்தும் 8 அளவுகோல்களைப் பற்றியும் விரிவாக விவரிக்கிறார் பேராசிரியர் முரளி. அவை,

1. ஜனநாயக விதிகள் மறுக்கப்படுதல்
2. எதிர்க் கட்சிகள், அரசியல் எதிரிகளின் உரிமைகள் மறுக்கப்படுதல்
3. வன்முறையைத் தூண்டுதல் / ஆதரித்தல்
4. குடிமை உரிமைகள் மறுப்பு
5. குடிமைச் சுதந்திரத்தை நசுக்கும் சக்திகளை ஆதரித்தல்
6. ஒரு குறிப்பிட்ட சாரரின் மாண்பை உதாசீனப்படுத்தி இழிவுபடுத்துதல்
7. இன அழிப்பிற்கு ஆதரவு தெரிவித்தல்
8. பன்மைத் தன்மைக்கு எதிர்ப்புத் தெரிவித்தல்

இவை அனைத்தும் இந்தியாவில் எந்த அளவிற்கு இன்று பரவலாகக் காணப்படுகின்றன என்பதை நாமே ஒப்பிட்டு இன்று இந்தியா எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளலாம்.

இந்தியாவில் ஜனநாயகத்தின் நிலைமை குறித்து அறிந்து கொள்ள இந்தக் காணொலியைப் பாருங்கள் !

 

பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?

விவசாய விரோத வேளாண் சட்டத் திருத்தங்களை நடைமுறைப்படுத்தி ‘விவசாயிகள் இல்லாத விவசாயத்தை’ உருவாக்க நினைக்கும் பா.ஜ.க.வை, உள்ளாட்சித் தேர்தலில் படுதோல்வி அடையச் செய்து ‘பா.ஜ.க இல்லாத பஞ்சாப்பை’ உருவாக்கும் முயற்சியைத் தொடங்கியிருக்கிறார்கள் பஞ்சாப் மக்கள்.

கடந்த பிப்வரரி 14-ம் தேதி நடந்து முடிந்த பஞ்சாப் மாநில உள்ளாட்சித் தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சி படுதோல்வி அடைந்திருக்கிறது. மொத்தமுள்ள எட்டு மாநகராட்சிகளில் ஏழில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதர உள்ளாட்சி அமைப்புகளிலும் பெரும்பான்மையாக காங்கிரசே வென்றிருக்கிறது. முதல்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஆம் ஆத்மிக்கும், சுயேட்சைகளுக்கும் கிடைத்த அளவுக்குக் கூட பா.ஜ.க.வுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை என்பதுதான் சிறப்புச் செய்தி.

பஞ்சாப்பில் சுமார் 40 சதவீத அளவுக்கு இந்துக்கள் இருக்கிறார்கள். குறிப்பாக நகர்ப்புறங்களைச் சேர்ந்த வியாபாரிகள் பெரும்பாலும் பி.ஜே.பி. ஆதரவாளர்களாக இருந்துவந்தனர். ஆனாலும் கூட உள்ளாட்சித் தேர்தலில் பி.ஜே.பி.யால் அவர்களது வாக்குகளைப் பெற முடியவில்லை.

படிக்க :
♦ டெல்லி சலோ : பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை வீழ்த்திய நிலமற்ற தலித் கூலி விவசாயிகள் !
♦ தொழிலாளி வர்க்கத்தைத் தூக்கிலேற்றுகிறது புதிய தொழிலாளர் நலச் சட்டத் தொகுப்பு !

காரணம், கடந்த 8 மாதங்களுக்கும் மேலாக, பஞ்சாப் மாநிலம் முழுவதுமே, வேளாண் சட்டத் திருத்தங்களுக்கு எதிரான போராட்டங்களால் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. விவசாயிகள் நடத்தி வரும் இப்போராட்டங்களின் நியாயத்தை அனைவருமே உணர்ந்திருக்கிறார்கள் என்பதாலும், விவசாயிகளுக்கு ஆதரவான நிலை எடுத்தால்தான் அரசியல்ரீதியாக தாக்குப்பிடிக்க முடியும் என்பதாலும்தான் பஞ்சாப்பை ஆளும் காங்கிரஸ் அரசு, மாநில அளவில் விவசாயிகளுக்கு ஆதரவாக சட்டங்களை இயற்றியது.

விவசாயத்தில் கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கம் அதிகரிப்பதும், உணவுப் பொருள் சந்தையை அவர்கள் கட்டுப்படுத்துவதும் விவசாயிகளை மட்டுமல்ல வியாபாரிகளையும் ஒழித்துக் கட்டிவிடும் என்ற உண்மையை வியாபாரிகள் உணரத் தொடங்கியுள்ளனர். இந்த நிலையில்தான், விவசாயிகளின் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக மோடி விசுவாசிகள், போராடிக் கொண்டிருப்பவர்கள் விவசாயிகளே அல்ல, அவர்கள் அனைவரும் கமிஷன் ஏஜெண்டுகள் – இடைத்தரகர்கள் என்ற பொய்ப்பிரச்சாரத்தை அவிழ்த்துவிட்டனர்.

இடைத்தரகர்களை ஒழிக்கிறோம் என்ற பெயரில் விவசாயிகளையும், வியாபாரிகளையும் ஒழித்துவிட்டு கார்ப்பரேட்டுகளின் ஆதிக்கத்துக்கு வழிவகுப்பதே ஆட்சியாளர்களின் திட்டம் என்பதை மக்கள் உணர்ந்திருக்கிறார்கள். அதன் வெளிப்பாடு தான், பஞ்சாப்பில் பி.ஜே.பி வாங்கியிருக்கும் அடி.

மக்கள் எந்தளவுக்கு பிஜேபியை வெறுக்கிறார்கள் என்பதற்கு ஓர் உதாரணமாக பின்வரும் சம்பவத்தைச் சொல்ல முடியும். குர்தாஸ்பூர் நகராட்சியின் 12-வது வார்டில் பிஜேபி சார்பாக போட்டியிட்ட கிரண் கவுர் என்ற பெண்மணியின் குடும்பத்தினருக்கே 20 ஓட்டுக்கள் உள்ள நிலையில் 9 ஓட்டுகள் மட்டுமே அவருக்கு கிடைத்துள்ளன. அவரது குடும்ப உறுப்பினர்களே பிஜேபிக்கு ஓட்டு போட விரும்பவில்லை. ஆனால் அவரோ, காங்கிரஸ்காரர்கள் ஓட்டு மெசினைக் கைப்பற்றி ஏமாற்றி விட்டதாக புலம்பிக் கொண்டிருக்கிறார்.

இத்தனைக் காலமாக சிரோமணி அகாலிதளத்துடன் கூட்டு வைத்துக்கொண்டும், நகர்ப்புற மேட்டுக்குடி இந்துக்களின் வாக்குகளை வைத்துக் கொண்டும் பஞ்சாப்பில் ஆளும்கட்சி போல அலட்டிக் கொண்டிருந்த பிஜேபி, தனித்து நின்று தேர்தலை சந்தித்த பிறகு நோட்டாவிடம் தோற்றுப்போன தமிழக பிஜேபி போல ஆகியிருக்கிறது.

அரியானா – ஊருக்குள் நுழையத் தடை!

பஞ்சாப் இந்துக்கள்தான் பிஜேபியை வெறுக்கிறார்கள் என்றால், இந்துக்கள் பெரும்பான்மையாக இருக்கும் அரியானாவின் நிலைமை இதைவிட மோசமாக இருக்கிறது. கடந்த முறை அனைத்து மக்களவைத் தொகுதிகளிலும், சட்டசபைத் தேர்தலிலும் பா.ஜ.க.தான் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றிருந்தது. அரியானாவில் பெரும்பான்மையாக இருக்கும் ஜாட் சாதியினர் உள்ளிட்ட இந்துக்கள் மத்தியில் இசுலாமியர்களை எதிரிகளாகக் காட்டி, மதவாத அடிப்படையில் தன்வசம் திருப்பி வைத்திருந்த பா.ஜ.க.வுக்கு எதிராகவே இப்போது அவர்கள் திரும்பிவிட்டனர்.

ஜாட் சாதியைச் சேர்ந்தவர்கள் தமது சாதிப் பெருமையைக் காக்கவும், தமது வாக்கு யாருக்கு எனத் தீர்மானிக்கவும் இத்தனை ஆண்டுகளாக காப் அல்லது மகா பஞ்சாயத்துக்களைக் கூட்டுவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். இந்துக்கள் என்று சொல்லிக்கொண்டு இவற்றைத் தனக்கு சாதகமாக பி.ஜே.பி பயன்படுத்தி வந்தது. ஆனால், இம்முறை ஜாட்டுகள் விழித்துக் கொண்டுவிட்டார்கள். தாங்கள் இந்துக்களாக இருப்பதை விடவும் விவசாயிகள் என்ற வகையில் மிக மோசமான பாதிப்புக்கு ஆளாகி வருவதையும், அந்தப் பாதிப்புகளுக்குக் காரணமே இப்போது பிஜேபி தான் என்பதையும் உணரத் தொடங்கி இருக்கிறார்கள்.

அதனால்தான், அடுத்தடுத்து பல்லாயிரம் பேர் பங்கேற்கும் மகா பஞ்சாயத்துக்களைக் கூட்டி “வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறு!” என மோடி அரசுக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றி வருகிறார்கள். நூற்றுக்கணக்கான கிராமங்களில் ஆளும்கூட்டணியில் உள்ள பிஜேபி-ஜேஜேபி கட்சிக்காரர்களை ஊருக்குள் நுழையக் கூடாது என்றும், இவர்களை திருமணம் உள்ளிட்ட எந்த நிகழ்வுக்கும் அழைக்கக் கூடாது என்றும் ஊர்க்கட்டுப்பாடு விதித்து பா.ஜ.க.வினர் தூக்கத்தைக் கெடுத்திருக்கிறார்கள் விவசாயிகள்.

விவசாயிகள் போராட்டத்தை எதிர்ப்பதாக இருந்தால் ஜேஜேபி கட்சியில் நீடிக்க முடியாது – ஊருக்குள் நடமாட முடியாது என்ற நிலைக்கு பல எம்.எல்.ஏக்கள் வந்திருக்கிறார்கள். இத்தனை நாட்களாக பிஜேபிக்கு ஆதரவாக இருந்த இரு சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் தமது ஆதரவை விலக்கிக் கொண்டிருக்கிறார்கள்.
மதம் – சாதி ஆகியவற்றைச் சொல்லி தம்மை ஏமாற்றி வந்த பி.ஜே.பி, கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே சேவை செய்கிறது – விவசாயிகளுக்கு எதிரானது என்ற உண்மையை மூன்று வேளாண் சட்டங்களும், அவற்றைத் திரும்பப் பெற மறுக்கும் மோடி அரசின் திமிரும் விவசாயிகளுக்கு முகத்தில் அறைந்தாற்போல உணர்த்தியிருக்கின்றன. மதம் – சாதி ஆகியவற்றுக்கு அப்பால் வர்க்கம் என்ற வகையில் விவசாயிகள் தமது பாதிப்புகளை உணரும் நிலையை பிஜேபி உருவாக்கியிருக்கிறது.

படிக்க :
♦ உலக வர்த்தகக் கழகத்தை அடித்து ஓட விடுவாரா சச்சின் ?
♦ அமெரிக்க வர்த்தகப் போரை சீனா எதிர் கொள்வது எப்படி ?

வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்றால் கார்ப்பரேட்டுகள் கடிந்து கொள்வார்கள் என்கிறது பி.ஜே.பி; இதன் மூலம் பெரும்பான்மை இந்துக்களான விவசாயிகள் பிஜேபியையே வெறுக்கும் நிலையை அது உருவாக்கிக் கொண்டிருக்கிறது. கொள்ளையடிப்பவன், பறிகொடுப்பவன் என இருதரப்புக்குமே ஒருவன் நல்லவனாக இருக்க முடியாது; அவ்வாறு இருப்பதாக நடித்தால் அந்த நாடகம் நீண்ட நாள் நடக்காது என்பதற்கு பிஜேபியே சாட்சி.

புதிய வேளாண் சட்டத்தில் காங்கிரசின் நிலைப்பாடு என்ன ?

கார்ப்பரேட்டுகளை ஆதரிப்பதில் பிஜேபிக்கும் காங்கிரசுக்கும் என்ன வித்தியாசம்? காங்கிரஸ் கொண்டுவரத் திட்டமிட்ட சட்டங்களைத்தானே பிஜேபி நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. எனில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் வித்தியாசம் இல்லையா ?

உலக வங்கி, உலக வர்த்தகக் கழகம் உள்ளிட்ட ஏகாதிபத்திய சார்பு நிதியாதிக்கக் குழுமங்களின் ஆணைக்கு இணங்க இந்தியா நடக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் நரசிம்மராவ் ஆட்சிக் காலம் துவங்கி வாஜ்பாய், மன்மோகன் சிங் மற்றும் தற்போதைய மோடி அரசு வரை ஆட்சி செய்து வருகிறது.

தற்போது மோடி அரசால் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் அனைத்தும் மேற்கூறிய ஏகாதிபத்திய நிதியாதிக்கக் குழுமங்களால் திணிக்கப்பட்டவையே. ஏகாதிபத்தியங்களின் இத்தகைய மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக மூன்றாம் உலக நாடுகளின் உள்நாட்டு தரகு முதலாளிகள் கிளர்ந்தெழாத வண்ணம், ஏகபோக பன்னாட்டு நிறுவனங்களோடு கூட்டுச் சேர்ந்த மக்களைச் சுரண்டத் தக்க வகையில் உள்நாட்டு தரகு முதலாளிகளுக்கும் வாய்ப்புகளை அள்ளி வழங்குகின்றன இந்தச் சட்டங்கள்.

கார்ப்பரேட்டுகளின் ஆதரவுக் கட்சிகளான பாஜக காங்கிரஸ் இரண்டுமே இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்திவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்ல. ஆனால் இரண்டு பேருக்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் தான் தற்போது காங்கிரஸ் பரவாயில்லை என்ற எண்ணத்தை பலருக்கும் ஏற்படுத்தியிருக்கிறது.
காங்கிரஸ் ஆட்சியில் இத்தகைய மக்கள் விரோத சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகையில் எழும் எதிர்ப்புகளை முடக்க காங்கிரஸ் அரசு முயற்சித்தாலும், இறுதியில் மக்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்தது. மக்களை கார்ப்பரேட்டுகளுக்கு எதிரான போராட்டத்தில் இருந்து திசை திருப்புவதற்கான தேசிய வெறி அல்லது மதவெறியை மக்கள் மத்தியில் தூண்டும்படியான அமைப்புகள் காங்கிரஸ் கட்சியிடம் இல்லை.

ஆனால் பாஜக தேர்தல் அரசியலில் எடுக்கும் கார்ப்பரேட் ஆதரவு நடவடிக்கைகளிலிருந்து மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் வேலைகளைச் செய்வதற்கு ஏற்ற வகையில் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்க பரிவாரக் கும்பல் மதவெறி மற்றும் தேசிய வெறியைத் தூண்டி மக்களை திசை திருப்புகின்றன.
இது பாஜகவை தான் எடுத்த நிலைப்பாடுகளில் உறுதியாக நிற்பதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. மேலும் காங்கிரஸ் ஆட்சியில் வெறுமனே சி.பி.ஐ மட்டும்தான் காங்கிரசின் கைப்பாவையாக இருந்தது. ஆனால் பாஜக ஆட்சியில் நீதித்துறை துவங்கி அரசின் அனைத்து உறுப்புகளிலும் ஊடுறுவி தனது அதிகாரத்தை நிலைநாட்டியிருக்கிறது சங்க பரிவாரக் கும்பல்.

இதுதான் தற்போது இந்தியா எதிர்கொண்டிருக்கும் அபாய நிலைமை. பாஜகவை வீழ்த்த விவசாயிகளின் போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய நிலைமை காங்கிரசுக்கு ஏற்பட்டிருக்கும் சூழலில் இந்த கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை காங்கிரஸ் எதிர்க்கிறது. இதன் காரணமாகவே தாம் ஆளும் மாநிலங்களில் வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் இயற்றுகிறது. ஒருவேளை நாளை காங்கிரஸ் கட்சியே மத்தியில் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றினாலும் இந்தச் சட்டத்தை வேறு வழிகளில் நைச்சியமாக நடைமுறைப்படுத்த காங்கிரசும் எத்தனிக்கலாம். ஏனெனில் உலக வர்த்தகக் கழகம், உலக வங்கி ஆகியவற்றின் நிர்பந்தமும், உள்நாட்டில் அவர்களின் கட்சிக்கு படியளக்கும் கார்ப்பரேட்டுகளின் நிர்பந்தமும் தான்.

ஆகவே தற்போது பஞ்சாப் அரியானாவில் பாஜக தோல்வியுற்றது வேளாண் சட்ட மசோதாவின் ஒரு பகுதிதான். இந்த கண நேர மகிழ்ச்சியை கொண்டாடிவிட்டு அப்படியே விட்டுவிட முடியாது. தனியார்மய தாராளமய உலகமயக் கொள்கைகளை அமல்படுத்துவதில் காங்கிரஸ் கட்சியும் மாற்றுக் கருத்து கொண்ட கட்சியல்ல. ஆகவே, உழைக்கும் வர்க்கத்தினரின் – அதாவது தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், சிறு குறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்கள் உள்ளிட்ட பிரிவினரின் – வர்க்கரீதியான ஒற்றுமையும் ஒன்றுபட்ட போராட்டமும்தான் கார்ப்பரேட்டுகளின் அரசாட்சியை ஒழித்துக் கட்டி நமது உரிமைகளைப் பாதுகாக்கும் வல்லமை கொண்டது.


தமிழ்ச்சுடர்

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || அடிமைகளின் கிளர்ச்சி || ஹாவாட் ஜின்

நூல் அறிமுகம் – பாகம் 2 : அமெரிக்க மக்கள் வரலாறு

படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 1

டிமைகளின் எதிர்ப்பு நடவடிக்கைகள் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டன. ஹேர் பர்ட் அப்தேகர் அமெரிக்காவில் அடிமைகள் எதிர்ப்புகளைப் பற்றி விரிவாக ஆராய்ந்த தனது அமெரிக்க நீக்ரோ அடிமை கிளர்ச்சிகள் (American Negro Revolts) என்ற நூலில் குறைந்தபட்சம் 10 பேர் சம்பந்தப்பட்ட 250 கிளர்ச்சிகள் அல்லது சதிகளை பட்டியலிடுகிறார். சுரண்டல் கொடுமைக்கு இலக்கான அதிருப்தி அடைந்த வெள்ளையர்கள், கறுப்பின அடிமைகள் உடன் சேர்ந்து நிலவுகின்ற, இந்த சுரண்டல் சமூக அமைப்பை தூக்கி எறிந்து விட முனைவார்கள் என்ற பீதியின் காரணமாக நிறவெறியை ஒரு கோட்பாடாகவே உருவாக்கினார்கள்.

வர்ஜினியா ஆளும் வர்க்கம் வெள்ளை இனத்தவர்கள் அனைவரும் கருப்பர்களை விட மேலானவர்கள் என்பதை அறிவித்தது. சமூகத்தின் அடித்தட்டில் இருந்த வெள்ளையர்களுக்கு சலுகைகளை வழங்கியது. வெள்ளையின உழைக்கும் மக்களையும் கருப்பின அடிமைகளையும் ஒரு பொது நோக்கத்திற்கு ஒன்றுபடவிடாமல் செய்வதற்கான ஒரு சிக்கலான வரலாற்று வலைப்பின்னலை அமெரிக்காவில் காணலாம்.

இதனை தனது நூலில் சிறப்பாக விவரித்திருக்கிறார் ஹாவாட் ஜின்

கிறிஸ்துவ இனத்தார் எனப்படுவோர், உலகின் எல்லா மண்டலங்களிலும் தம்மால் அடிமைப்படுத்த முடிந்த எல்லா மக்கள் சமூகங்கள் மீதும் காட்டுமிராண்டி செயல்களும், வெறித்தனமான அட்டூழியங்களும் புரிந்துள்ளனர். வேறு எந்த இனத்தாரும், அவர்கள் எவ்வளவுதான் மூர்க்கர்களாகவும், நெறி புகட்டப் படாதவர்களாகவும், கருணை வெட்கம் பற்றி எல்லாம் கவலைப் படாதவர்களாகவும் இருந்தாலும் சரி, உலக வரலாற்றின் எந்த காலத்திலும் இவற்றுக்கு ஒப்பான அட்டூழியங்களை புரிந்ததில்லை. (வில்லியம் ஹோவிட் எழுதிய குடியேற்றமும் கிறிஸ்தவ சமயமும்) – காரல் மார்க்ஸ் – மூலதனம்.

படிக்க :
♦ அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !
♦ பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு : அமெரிக்காவின் நாட்டாமை !

பேகன் கிளர்ச்சி

பேகன் கிளர்ச்சி 1676-ஆம் ஆண்டு வர்ஜீனியா உருவாக்கப்பட்டு 70 ஆண்டுகளுக்குப் பின் நடந்த, அமெரிக்கப் புரட்சியின் நூறு ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த மாபெரும் கிளர்ச்சி. வெள்ளையர்கள் மற்றும் கருப்பின அடிமைகளுடன் பணியாளர்கள் இணைந்த கிளர்ச்சி. இந்தக் கிளர்ச்சியின் வெம்மை தாங்காமல் தலைநகர் ஜேம்ஸ் டவுனை விட்டு கவர்னர் ஓட வேண்டி வந்தது. கிளர்ச்சியை அடக்க ஆயிரம் பேர் கொண்ட ராணுவத்தை இங்கிலாந்து அனுப்பியது. அந்த கிளர்ச்சியின் தலைவர் பேகன் இறந்துவிட்டார். அவருடைய தளகர்த்தர்கள் தூக்கிலிடப்பட்டனர்.

1676-ஆம் ஆண்டு பேகன் வெளியிட்ட மக்கள் பிரகடனத்தைப் பற்றியும் பேகனின் கிளர்ச்சி பற்றியும் நேரடியாக அந்தச் சூழலுக்கு நம்மை அழைத்துச் சென்று விவரிக்கிறார் ஹாவாட் ஜின்.

வர்க்கப் பிரிவினை காலனிய காலத்தில் கெட்டிபட்டது. ஏழைப் பணக்காரன் வேறுபாடு கூர்மை அடைந்தது, 1700-ஆம் ஆண்டுவரை வர்ஜீனியாவில் 50 பணக்கார குடும்பங்கள் இருந்தன. அவர்களுடைய செல்வ வளம் ஐம்பதாயிரம் பவுண்டுகளுக்கு சமமானதாக (அந்த காலத்தில் இது மிகப்பெரிய தொகை) இருந்தது. கருப்பின அடிமைகளின் உழைப்பையும் வெள்ளை பணியாளர்களின் உழைப்பையும் சுரண்டிக் கொழுத்து சுகபோகங்களில் திளைத்தனர். இந்த செல்வ சீமான்களே கவர்னர் கவுன்சில் உறுப்பினர்களாக, நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர். ஆங்கிலேய மன்னரால் உரிமை வழங்கப்பட்ட உரிமையாளரால் ஆட்சி செய்யப்பட்டு வந்தனர். 1650-ஆம் ஆண்டு முதல் 1689-ஆம் ஆண்டு வரை இந்த காலனிய ஆட்சியின் உரிமையாளரை எதிர்த்துப் போராட்டங்கள் நடந்தன.

அடிமை உழைப்பாளிகளும் – வெள்ளை பணியாளர்களும்

அமெரிக்க அமைப்பு முறையின் முன்னோர்களின் தத்துவத் தந்தை என்று கருதப்பட்ட ஜான் லாக் அவர்களால் 1600-ம் ஆண்டுகளில் அரசியலமைப்பு சட்டத்திற்கான அடிப்படைகள் எழுதப்பட்டன. நிலவுடமை உயர்குடி சீமான்கள், ஊக பேர நிலப்பிரபுக்கள் ஆகியோரின் நலன் காக்கும் வகையில் இந்த சட்ட அமைப்பு உருவாக்கப்பட்டது. பாஸ்டன் தலைவர்கள், மதகுருமார்கள் உடன் இணைந்து அமெரிக்க சமூகத்தை தாய் நாடான இங்கிலாந்தின் சமூக ஏற்பாடுகளை போலவே அமைத்து பாதுகாக்க ஆர்வமாக செயல்பட்டனர். தேவாலயம் மற்றும் நகர கூட்டங்களின் மூலம் குடியானவர்கள் மீது தமது அரசியல் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்டனர்.

1630-ஆம் ஆண்டில் காலனி ஆட்சியின் துவக்கத்திலேயே கவர்னர் ஜான் விந்த் ரோப், தங்களது ஆட்சிமுறை கோட்பாட்டை அறிவித்தார். சிலர் பணக்காரர்களாகவும் சிலர் ஏழைகளாகவும், சிலர் அதிகாரத்தில், அந்தஸ்த்தில் முக்கியமானவர்களாகவும் உயர்ந்தவர்களாகவும் சிலர் கீழானவராகவும் கீழ்படிந்தவராகவும் இருக்கும் நிலை எல்லா காலங்களிலும் இருக்கும் என்றார்.

அடிமை உழைப்பாளர்களின் உதிரத்தை அட்டைபோல் உறிஞ்சிய பணக்கார வியாபாரிகள், உயர்குடியினர் ஒய்யாரமாய் கையில் மதுக் கோப்பைகளை வைத்துக் கொண்டு, உயர் வகை உணவுகளையும், கேக்குகளையும் உட்கொண்டனர். எல்லா இடங்களிலும் ஏழைகள் உயிர் வாழ்வதற்குப் போராடிக் கொண்டிருந்தனர். கடும் குளிரில் உறைந்துசாகாமல் உயிர் வாழ்வதற்காக ஜீவ மரணப் போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தனர்.

கருப்பின அடிமைகளை கண்காணிக்க ஏழை வெள்ளையர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அடிமைத்தனமும் நிறவெறியும் மேன்மேலும் அதிகமாக நடைமுறைக்கு வந்தது. எட்மன்ட் மோர்கன் என்பவர், வர்ஜினியாவின் அடிமை முறையை ஆராய்ந்து “நிறவெறி என்பது கருப்பு-வெள்ளை வித்தியாசங்களை ஒட்டி இயல்பானது அல்ல, வர்க்க இழிவிலிருந்து வந்த ஒரு விஷயமாக இருந்தது என்கிறார்”. அமெரிக்க வரலாறு முழுமையிலும் உயர்குடி ஆட்சி தொடர மிக முக்கியமான விளைவுகளை ஏற்படுத்த வழிவகை செய்யப்பட்டது. இதனை தனது நூலில் துலக்கமாக விளக்கியிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர்.

அடிமைகளை படுகொலை செய்வது தெய்வ குற்றம் அல்ல

அமெரிக்க மேல்தட்டு வர்க்கம் தமது செல்வத்திற்கும் அதிகாரத்திற்கும் சுக போகத்திற்கும் பாதிப்பு ஏற்படாத வண்ணம் ஆட்சி செய்வதற்காக நடுத்தர வர்க்கத்திற்கு சில சலுகைகளை வழங்கியது. அடிமைகள் மற்றும் ஏழை வெள்ளையர்கள் உழைத்து உருவாக்கிய உபரியை செல்வ வளங்களில் சில பங்கை நடுத்தர வர்க்கத்திற்கு வழங்கியது.

1610-ஆம் ஆண்டு அருட்தந்தை ஜான் டேவல் அமெரிக்காவிலிருந்து ஐரோப்பாவிற்கு இத்தகைய அடிமை வணிகம், அடிமைமுறை கிறிஸ்துவத்திற்கு ஏற்புடையதா? என்று கேட்டு கடிதம் எழுதினார். அதற்கு கிறிஸ்துவ பாதிரியார் லூயிஸ் பிராண்டன் பதில் எழுதினார். அடிமைகளை வாங்குவதும் விற்பதும் தெய்வ குற்றமாகாது என்று எழுதினார். இந்த கொடுமை மத அங்கீகாரத்துடன் 200 ஆண்டுகள் தொடர்ந்தது. ஹிட்லரின் நாஜிகளின் சித்திரவதைக் கூடத்தை விடக் கொடூரமானது  அமெரிக்க சித்திரவதைக் கூடங்கள். அடிமை முறையை எதிர்த்து பல கலகங்கள் கிளர்ச்சிகள் எழுந்தன.

அமெரிக்க வரலாற்றில்  இருட்டடிப்பு செய்யப்பட்ட இந்தப் பகுதியின் மீது ஒளிவெள்ளம் பாய்ச்சுகிறது இந்நூல்.

கருப்பின அடிமைகளின் தலைவர் பிரடரிக் டக்லஸ்  “நமக்கான விடுதலையைப் பெறும்வழி என்ன? எந்த மனிதனின் உரிமையும் தரப்படுவதில்லை, போராடிப் பெறுவது. போராட்டம் அமைதியான அறவழியில் நடத்துவதா? அல்லது வலிமையும் ஆயுதமும் கொண்ட வழியிலா? எப்படி இருந்தபோதும் கேட்காமல் எதுவும் கிடைக்காது, எப்போதும் இதுவே உண்மை” என்றார்.

நீதிமன்றத்தில் உரிமை முழக்கம்

கருப்பின அடிமைகளுக்காகப் போராடிய தியாகி ஜான்  பிரவுன் ஒரு வெள்ளையர். தென்பகுதி முழுவதும் அடிமைகளை எழுச்சி பெறச் செய்தார். கோரியட்டூப்மன் என்ற வீரம் மிகுந்த கருப்பினப் பெண், அந்தப் போராளிக்கு துணை நின்றார். கைது செய்யப்பட்டு வர்ஜீனியா நீதிபதி முன் நிறுத்தப்பட்ட ஜான் பிரவுன் “நீதிபதி அவர்களே இந்த பிரச்சனைக்கு நீங்கள் தீர்வு காணுங்கள், என்னை முடித்து விடுவது எளிதானது, எனது முடிவு நெருங்கிக் கொண்டிருப்பதை நான் அறிவேன். ஆனால் நீக்ரோக்கள் குறித்த தீர்வு என்ன என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை” என்று தூக்குமேடை முன்பு நின்று துணிந்து முழக்கமிட்டார்.

தூக்கிலிடுவதற்கு முன் அந்த மகத்தானப் போராளி “நான் நிச்சயமாக நம்புகிறேன். இந்த நாட்டின் பாவக் கரையை, ரத்தம் கொண்டு மட்டுமே கழுவ முடியும்” என்று தீர்க்கதரிசனத்துடன் கூறினார். “ஜான் ப்ரவுன் அவர்களை கொன்ற கழுமரம் சிலையைப் போல் புனிதமானது” என்கிறார் ரால்ப் எமர்சன் என்ற பிரபல எழுத்தாளர்.

சரித்திரத்தில் மறக்க முடியாத அமெரிக்க மக்களின் உரிமை போராட்ட வரலாற்றுப் பயணத்தை சுவைபட தமது நூலில் விவரித்துள்ளார் ஆசிரியர். அமெரிக்காவில் அடிமை முறை சட்டப்படி மட்டும் ஒழிக்கப்பட்டது குறித்து அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

(தொடரும்…)

நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

பிப் 26 : இந்திய வர்த்தகக் கூட்டமைப்பின் பொது வேலை நிறுத்தம் || மக்கள் அதிகாரம் ஆதரவு

PP Letter headபத்திரிகைச் செய்தி

25.02.2021

ரக்கு மற்றும் சேவை வரி (GST) யை கண்டித்தும் மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்திற்குப் பொருட்கள் எடுத்து செல்லும் போது மின்னணு முறையில் செலுத்தவேண்டிய இ-வே பில்லை ரத்து செய்ய வலியுறுத்தியும் பெட்ரோல், டீசல் விலையை கண்டித்தும் நாளை பிப்ரவரி 26 தேதியன்று (26.2.2021) அனைத்து இந்திய வர்த்தக கூட்டமைப்பு சார்பாக. ஏறத்தாழ 40,000 வர்த்தக அமைப்புக்களும் எட்டு கோடி வர்த்தகர்களும் பங்கேற்க உள்ள அகில இந்திய அளவில் பொது வேலை நிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிக்கிறது.

தொடர்ச்சியாக பெட்ரோல்- டீசல் – சமையல் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. தமிழகத்தில் சமையல் எரிவாயு விலை ரூ.25 விலை உயர்ந்து ஒரே மாதத்தில் ரூ.100 அதிகரித்துள்ளது.

பெட்ரோல், டீசல் உயர்வால் போக்குவரத்திற்கான செலவு அதிகளவில் அதிகரித்தும் அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் ஏறியுள்ளது. சாதாரண ஏழை, எளிய மக்களின் அன்றாடம் பயன்படுத்தும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்து பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இதனால் பொதுமக்கள் தங்கள் வயிற்றைச் சுருக்கி வாழ வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ரூ. 30-க்கும் குறைவாக அடக்கவிலை உள்ள பெட்ரோல் கிட்டத்தட்ட நூறு ரூபாய் வரை விற்கப்படுவது அம்பானிக்காக பொதுமக்கள் மீது மோடி அரசு நடத்தும் போர். கார்ப்பரேட்களுக்கு பல்லாயிரம் கோடி வரி சலுகைகளை வாரி வழங்கும் மோடி-அமித்ஷா கும்பல் மக்களின் மீது வரி சுமையை மட்டுமே ஏற்றுகிறது.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ மோடியின் நா தழுதழுத்தது ஏன் ? || டெலிகிராபின் “ சரியான விடையை தேர்ந்தெடு” !

விவசாயிகளின் வேளாண் சட்டத்தை ஆதரித்தார் என்பதற்காக தீஷா ரவி என்ற இளம் பெண் கைது செய்யப்படுகிறார். மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் ஊபா போன்ற தடுப்பு சட்டங்களால் கைது செய்யப்படுகிறார்கள் . மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராகப் போராடுபவர்கள் மீது கடுமையான சட்டங்களைப் பயன்படுத்தி கைது, சிறை என அடக்குமுறையை ஏவி விடுகிறது மோடி, எடப்பாடி கும்பல்.

கார்ப்பரேட்டுகளின் லாபத்திற்காக மக்களை வாழ விடாமல் செய்யும் இந்த அரசு மக்களுக்காக போராடுகின்றவர்களை கருப்பு சட்டங்களால் வதைக்கிறது. இந்த அநியாய, அக்கிரமத்துக்கு முடிவு கட்டியாக வேண்டும் எனில் மோடி அரசுக்கு எதிராக நாடு தழுவிய ஒருங்கிணைந்த போராட்டங்கள் கட்டியமைக்கப்பட வேண்டும்.

உள்நாட்டு வணிகர்களையும் பொதுமக்களையும் ஒழித்துக்கட்டும் மோடி அரசின் திட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள வர்த்தக சங்கங்கள் ஒருங்கிணைக்கக் கூடிய இந்த மிகப்பெரிய வேலைநிறுத்தத்தை மக்கள் அதிகாரம் ஆதரிப்பதுடன் அனைத்து பிரிவு மக்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறது.

தோழமையுடன்
தோழர் சி.வெற்றிவேல் செழியன்
மாநில ஒருங்கிணைப்பாளர்
மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
99623 66321

உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

ஒருவேளை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குச் செல்ல தயாராகிறோமா ? – பாகம் 2

பாகம் 1: விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள்: பின்னணி என்ன?

லகளாவிய அளவில் நடைபெறும் நில கையகப்படுத்துதல் பன்னாட்டு கார்ப்பரேட்களின் லாப நோக்கத்தை முன்வைத்தே நடத்தப்படுகிறது. ஒட்டுமொத்த உணவு சங்கிலியையும் தனது பிடிக்குள் கொண்டு வருவதன் மூலம் நீண்டகால லாபத்தை அறுவடை செய்ய முடியுமென்று நினைக்கிறார்கள் கார்ப்பரேட்கள்.

இன்று உலகளவில் எண்ணெய் வித்துகள், உணவு தானியங்கள் வர்த்தகத்தில் வெறும் நான்கு கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் ஏகபோகமாக ஆதிக்கம் செய்கிறது. அவை, Archer-Daniels-Midland, Burge, Cargill, Louis Dreyfus ஆகியவைதான். இவற்றை ABCD நிறுவனங்கள் என்றும் சொல்வார்கள்.

இந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் இனிமேலும் விவசாய நிலங்களுக்கு தூரமாக இருக்கப்போவதில்லை. விவசாயிகளின் விளைச்சலை வெறுமனே சந்தைப்படுத்தும் நிறுவனங்களாக இல்லாமல், இனி ஒட்டுமொத்த விவசாயத்தையும் தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வருவதுதான் இவர்களின் இலக்கு. இத்தகைய கார்ப்பரேட் நிறுவனங்களை மையமாகக் கொண்டு ஒட்டுமொத்த விவசாய உற்பத்திப் பண்டங்களும் இணைக்கப்பட உள்ளன.

படிக்க :
♦ சிறப்புக் கட்டுரை : உலக வங்கியின் ஆணைப்படி தண்ணீர் தனியார்மயம்
நூல் அறிமுகம் : உலகமயமாக்கலும் தமிழக விவசாயிகள் மீதான தாக்குதலும்

நிலத்தின் மீதான சொத்துரிமை, விவசாய இடுபொருட்கள், விவசாயம் சார்ந்த அறிவியல் அறிவுரைகள், காப்பீடு, ஒப்பந்த விவசாயம், கொள்முதல், சேமிப்பு, பதப்படுத்துதல், போக்குவரத்து, சில்லறை விற்பனை, இவையனைத்திற்கும் தேவையாக உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்கும் கட்டுமானப் பொறுப்பு என பல்வேறு வகைகளில் ஒட்டுமொத்த விவசாய உற்பத்தியையும் கைபற்றிக் கொள்வதுதான் இவர்கள் இலக்கு.

இன்றைய காலத்தின் முக்கியமான குணாம்சங்களில் ஒன்று, ஒழுங்கமைப்பட்ட சில்லறை விற்பனை சந்தை (Organised Retail Market). இதுபோன்ற ஒழுங்கமைப்பட்ட கார்ப்பரேட் சில்லறை விற்பனை முதலைகள் ஒரு நாட்டின் மேட்டுக்குடி மக்களின் உணவு சந்தையை குறிவைத்து இதை முன்னெடுத்தார்கள். ஆனால், தற்போது பெரும்பான்மையான மக்களையும் இந்த ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைக்குள் கொண்டு வருவதை இலக்காக வைத்து செயல்படுகிறார்கள்.

இந்தியாவில் Reliance, சிறு நகரங்களில் கூட தங்களின் சங்கிலித் தொடர் விற்பனைக் கூடங்களை நிறுவியிருக்கிறார்கள். இதன் மூலம் உயர்நடுத்தர வர்க்கத்தை மட்டுமின்றி மக்கள் தொகையில் கணிசமாக இருக்கும் கீழ்நடுத்தர வர்க்கத்தையும் தங்களது சங்கிலித் தொடர் விற்பனைக் கூடங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

2008-ஆம் ஆண்டின் உலக வளர்ச்சி அறிக்கையின்படி, பதப்படுத்தப்பட்ட பழங்கள், காய்கறிகள், இறைச்சி, மீன், பூக்கள் போன்றவைதான் வளரும் நாடுகள் செய்யும் ஏற்றுமதியில் 47 சதவீதமாக இருக்கிறது. வளரும் நாடுகள் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருப்பதை, “உலக பொருளாதார கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான ஒழுங்கமைப்பு” கண்டிக்கிறது. வளரும் நாடுகள் தங்கள் உணவு தானிய தேவையை இறக்குமதியின் மூலமாகவே பூர்த்தி செய்ய வேண்டுமென்று நிர்பந்திக்கிறது.

இப்படி, உணவு தானிய உற்பத்தியை மையமாகக் கொண்டிருக்கும் இந்திய விவசாயத்தை, ஏற்றுமதி சார்ந்த விவசாயமாக மாற்ற வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்தை கணக்கில் கொண்டு இந்தியாவில் தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள மூன்று வேளாண் சட்டங்களும் பார்க்கப்பட வேண்டும்.

2021 செப்டம்பர் மாதம், ஐக்கிய நாடுகள் சபையின் (UN), உணவு பற்றிய மாநாடை Food Systems Summit என்னும் பெயரில் நடத்த விருக்கிறது. அதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின் 2030-ஆம் ஆண்டுக்கான இலக்கான “நிலையான விவசாயம்” என்பதற்கு முக்கியத்தும் கொடுக்கப்படவுள்ளது. இந்த நோக்கத்திற்கு ஒத்திசைவது போலவும், கடந்த 12 ஆண்டுகளாக உலகப் பொருளாதார மன்றம் (World Economic Forum) நிர்பந்தித்து வரும் விவசாய சீர்திருத்தங்களையும் நிறைவேற்றிக் கொடுக்கும் வகையில்தான் இந்தியாவின் வேளாண் சட்டத் திருத்தங்கள் அமைந்திருக்கிறது.

இந்த விவசாய சீர்திருத்தங்களை செயல்படுத்தும் விதமாக New Vision for Agriculture India Business Council என்ற அமைப்பு சர்வதேச ரீதியில் வேலை செய்து வந்துள்ளது. இதில் உலகின் மிகப்பெரிய கார்ப்பரேட்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். அதில் அதானி குழுமமும் அடங்கும்.

Klaus Schwab என்னும் உலகப் பொருளாதார மன்ற குழுவின் இயக்குனர்களில் அம்பானியும் ஒருவர். இப்படி உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட்கள் திட்டமிட்டுள்ள வகையில் விவசாயத்தையும், ஒட்டுமொத்த உணவு உற்பத்தி வலைப்பின்னலையும் தங்களுக்கு ஏற்றவகையில் மாற்றிக் கொள்வதற்காகதான் இந்த சீர்த்திருத்த சட்டங்களை கொண்டு வந்திருக்கிறார்கள்.

தற்போது இந்திய அரசு அமல்படுத்தியிருக்கும் வேளாண் சட்டங்களால்,

  • வேளாண் உற்பத்தி சந்தை குழுவின் (Agricultural Produce Market Committee) மண்டிகளை மூடுவதன் மூலம், உணவு தானியத்தில் அரசு கொள்முதல் பெருமளவில் வீழ்ச்சியடையும். உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருட்களை குறைந்தபட்ச ஆதார விலைக்கு விற்க முடியாமல் போகும். இதனால், அவர்கள் உணவு தானிய உற்பத்தியில் இருந்து வெளியேறுவார்கள்.
  • இதனால், இந்தியாவின் உணவு தானிய தேவைக்காக பன்னாட்டு கார்ப்பரேட்களிடமிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலையேற்படும். இவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் சேமித்து வைத்து விலையை உயர்த்தி லாபம் ஈட்டுவதை உறுதிபடுத்தும் விதமாக, உணவு பொருட்களை பதுக்குவதை, அதிக விலைக்கு விற்பதை தடைசெய்யும் “அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தை” திருத்தியிருக்கிறார்கள்.
  • உணவு தானிய உற்பத்தி சிதைந்துபோனதால், விவசாயிகள் ஏற்றுமதி சார்ந்த பணப்பயிர்கள், காய்கறி, பழங்கள் உற்பத்தியில் ஈடுபட வேண்டிய நிலையேற்படும். இந்த வகையில் ஏற்றுமதிக்கான பணப்பயிர்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியில் முன் அனுபவமில்லாத விவசாயிகளை ஒப்பந்த விவசாயத்தின் மூலம் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகள்  சுரண்ட அனுமதி வழங்கும் விதமாக ஒப்பந்த விவசாயச் சட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது.
  • கார்ப்பரேட்டுகளின் கைகளில் விவசாயமும், உணவு தானியக் கொள்முதலும் சென்றால் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக உயருவதோடு, பணம் உள்ளவன் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலை உண்டாகும்.

இந்தச் சட்டங்களின் பின்னணியில் உள்ள கார்ப்பரேட் நலனைப் பார்க்கலாம். விவசாயம் கார்ப்பரேட்டுகளுக்கு நல்ல வருவாய் அளிக்கக் கூடிய துறை. ஏனெனில் நாம் இருசக்கர வாகனத்தில் போகாமலோ, வங்கியைப் பயன்படுத்தாமலோ கூட வாழ்ந்துவிடலாம். ஆனால் உணவின்றி உயிர்வாழ முடியாது.

“விவசாயம் என்பது மிகக்குறைந்த வருமானம் தரக்கூடிய தொழில் என்ற நிலை சமீபத்திய ஆண்டுகளில் மாறியுள்ளது. விவசாயம், உணவுத்துறை ஆகியவை நீண்டகால வளர்ச்சியளிக்கக் கூடிய துறையாக பார்க்கப்படுகிறது”, என்று ஒரு ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. அமெரிக்காவின் பெரும் பணக்காரர்கள் விவசாய நிலங்களை வாங்குவதில் ஈடுபட்டு வருகிறார்கள். அதுவும் குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளின் நிலங்களை வாங்குகிறார்கள். ஒரு தனிநபர் என்ற வரையறையில் பார்க்கும் போது, அமெரிக்காவிலேயே அதிகமான விவசாய நிலங்களுக்கு சொந்தக்காராக இருப்பவர் பில் கேட்ஸ் (Bill Gates) தான் என்றால் நம்ப முடிகிறதா ?

சில்லறை விற்பனை சந்தையை கார்ப்பரேட்கள் கைபற்றிக் கொள்வதால், உற்பத்தி பொருட்களின் தரத்தை கார்ப்பரேட்கள்தான் தீர்மானிப்பார்கள். கார்ப்பரேட்கள் நிர்ணயிக்கும் தரத்திலான உற்பத்தியை செய்ய விதை, பாசனவசதி, சேமிப்பு கிடங்கு என நிறைய வசதிகள் தேவைப்படும். இது இயல்பிலே சிறு, குறு விவசாயிகளை விவசாயத்தில் இருந்தே விரட்டியடிக்கும். இப்போது, அவர்களின் நிலங்களை குறைவான விலைக்கு கார்ப்பரேட்டுகள் கைப்பற்றிக் கொள்வது எளிதாக இருக்கும்.

இந்தியாவில் விவசாயம் ஏற்கனவே மிகுந்த நெருக்கடியில் இருக்கிறது. விவசாயத்தின் மூலம் வரும் வருமானம், விவசாயிகளின் அடிப்படை நுகர்வுக்கே போதுமானதாக இல்லை; தேசிய மாதிரி கணக்கெடுப்பு (2012-2013)-ன் படி, ஒரு விவசாய குடும்பத்தின் சராசரி மாத வருமானம் ரூபாய் 6,400 மட்டுமே. ஒரு குடும்பத்திற்கு நான்கு நபர்கள் என்று எடுத்துக் கொண்டாலும், ஒரு நபரின் சராசரி மாத வருமானம், ரூபாய் 1,600 மட்டுமே. 2016-2017-ஆண்டு கணக்கெடுப்பின்படி, 53 சதவீத விவசாய குடும்பங்கள் கடன்பட்டிருக்கிறார்கள். இதுவுமே ஒரு குறைமதிப்பீடுதான் என்று அறிஞர்கள் சொல்கிறார்கள்.

விவசாயிகளின் நிலை இப்படியிருக்கையில், இந்த மூன்று வேளாண் சட்டங்களும் அமலுக்கு வந்தால், விவசாயிகள் தங்கள் நிலங்களை விட்டு வெளிவேறும்படி நிர்பந்திக்கப்படுவார்கள். கார்ப்பரேட் பிடியில் ஒட்டுமொத்த உணவுப் பொருள் உற்பத்தியும் செல்கையில் பசியும் பட்டினியும் மீண்டும் தலைவிரித்தாடும்

படிக்க :
♦ அம்பானி – அதானி கொழுக்கவே வேளாண் சட்டத் திருத்தம்!

♦ வேளாண் சட்டத் திருத்தம் : சந்தை ஒரு பிணம் தின்னும் கழுகு !

உள்ளூர் முதல் உலக அளவிலான கார்ப்பரேட் எஜமானர்களின் கட்டளைக்கு கட்டுப்பட்டுதான் இந்த வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு கொண்டு வந்திருக்கிறது. இந்த சட்டங்களை திரும்பப்பெற முடியாது என்ற பாஜக-வின் ஆணவ பேச்சுக்குப் பின்னால் இந்த பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தரகு கார்ப்பரேட்டுகளின் நலன் ஒழிந்துள்ளது. இந்தக் கார்ப்பரேட் கும்பலை புறக்கணித்து அடி பணியச் செய்வதுதான் தற்போது கொண்டுவரப்பட்டுள்ள மக்கள் விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறச் செய்ய முடியும்.


ராஜேஷ்

உதவிய கட்டுரைகள்:
♦ The Indian Farmers are Right : Their Land is at Stake (Part 1)
♦ The Indian Farmers are Right : Their Land is at Stake (Part 2)
♦ The WEF Agenda behind modi farm reform

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || கொடுங்கோலன் கொலம்பஸ் || ஹாவாட் ஜின்

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || பாகம் 1

லக மேலாதிக்க வல்லரசான அமெரிக்கா உலகம் முழுவதும் பயங்கரவாதத்தை, அட்டூழியங்களை, ஆக்கிரமிப்புகளை, ஈவு இரக்கமற்ற கொடுங்கோன்மைகளை, பச்சைப் படுகொலைகளை நடத்தி வருவது நாம் அறிந்ததே.

அமெரிக்க ஏகாதிபத்திய மேலாதிக்க சக்திகளையும், அந்நாட்டு உழைக்கும் மக்களையும் நாம் வேறுபடுத்திப்  பார்க்க வேண்டும். அமெரிக்காவின் வரலாறு என்பது அங்கு நடந்த வர்க்கங்களுக்கு இடையிலான போராட்டத்தின் வரலாறுதான். நாம் அமெரிக்க மக்களின் வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. “ஏடறிந்த காலம் தொட்டு இதுவரையான வரலாறு அனைத்தும் வர்க்கப் போராட்ட வரலாறே” என்றார் மாமேதை கார்ல் மார்க்ஸ்.

படிக்க :
♦ அமெரிக்க கருப்பின மக்கள் மீது தொடரும் நிறவெறித் தாக்குதல் !
♦ அமெரிக்க பயங்கரவாதத்தின் வரலாறு – சிறப்புக் கட்டுரை

அடிமை மக்களின் துயரம் மிகுந்த வரலாறு, கருப்பின உழைக்கும் மக்களின் ரத்தம் தோய்ந்த வரலாறு, வெள்ளைப் பணியாளர்களின் உரிமைப் போராட்ட வரலாறு என்று உழைக்கும் மக்களின் தரப்பிலிருந்து, அவர்களின் சார்பில் நின்று, அமெரிக்காவின் வரலாற்றை இந்த வரலாற்று நூல் விவரித்து சொல்கிறது.

“அமெரிக்க மக்கள் வரலாறு” என்ற இந்த நூல் 25 தலைப்புகளில் கட்டுரைகளாக பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு முழுமையான வரலாற்று ஆய்வுக் கண்ணோட்டத்தோடு எண்ணற்ற தரவுகள் ஏராளமான சான்றாதாரங்களை முன்வைத்து மிகச்சிறப்பாக இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

“கொலம்பஸ் – இந்தியர்கள் – மனித முன்னேற்றம்”

அமெரிக்க மக்களின் வரலாற்றுப் பயணம் அடுக்கடுக்கான சோகங்கள் நிறைந்தது. ஏதுமறியாத அப்பாவி உழைக்கும் மக்களின் ரத்தமும் சதையும் அமெரிக்காவை நிர்மாணித்து உள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கொலம்பஸ், ஸ்பெயின் நாட்டு மன்னனிடமும் மகாராணியிடமும் தங்கத்தை கொண்டு வருவதாகப் பேராசைக் காட்டி தங்கத்தைக் கண்டறிய தனது கடல்வழிப் பயணத்தை துவக்கினான்.

தங்கத்தையும், வாசனைத் திரவியங்களையும் கொண்டு வருவதற்குப் பிரதிபலனாக லாபத்தில் பத்து விழுக்காட்டையும், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட நிலப் பகுதிகளில் கவர்னர் பதவியும் “அட்மிரல் ஆப் தி ஓசியன்” என்ற புகழ்மிக்க விருதையும் வழங்குவதற்கு, ஸ்பெயின் அரசு வாக்குறுதி வழங்கியது. மூன்று கப்பல்களில் 39 மாலுமிகளுடன் பயணத்தை மேற்கொண்டான்.

“பூர்வகுடி மக்களை கொன்றொழித்தக் கொடுங்கோலன் கொலம்பஸ்”

1492-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தின் முற்பகுதியில் கடல் பயணத்தைத் துவக்கிய 32-வது நாள் கடல் தண்ணீரில் மரக்கிளைகளும் பறவைகளின் இறகுகளும் மிதப்பதை கொலம்பஸ் குழுவினர் பார்த்தனர். இந்த அறிகுறிகள் அருகாமையில் நிலப்பரப்பு இருப்பதை தெரிவித்தன. அவர்கள் நிலப்பகுதியில் இறங்கியவுடன் அரவாக்குகள் என்ற பழங்குடியின மக்கள் அவர்களை வரவேற்றனர். அரவாக்குகள் மக்காச்சோளம், மரவள்ளிக்கிழங்கு இதர பயிர் வகைகளை விளைவிக்கும் ஒரு வளர்ச்சியடைந்த விவசாய முறையைக் கொண்டிருந்தனர்.

உணவும், தண்ணீரும், பரிசுப் பொருட்களையும் வாரி வழங்கி உபசரித்த அரவாக்கு பழங்குடியின மக்களை முதுகில் குத்தி ஈவிரக்கமில்லாமல் படுகொலை செய்த கொலம்பஸ், அந்த அப்பாவி பழங்குடி மக்களை நர வேட்டையாடினான். 1495-ஆம் ஆண்டு மிகப்பெரிய அடிமை வேட்டைகள் நடந்தன. சுமார் 1500 அரவாக்குகளை (பழங்குடி இனமக்களை) பட்டியில் அடைத்து, ஸ்பானியர்களையும் நாய்களையும் கொண்டு காவல் காத்தான். நீண்ட தூர கடல் பயணத்தில் 500 பேரில் 200 பேர் வழியிலேயே இறந்து விட்டனர். உயிருடன் ஸ்பெயினை அடைந்த அடிமைகளை நகரத் தந்தை விற்பனைக்கு நிறுத்தினான்.

அடிமைகள் ஆடைகளின்றி நிறுத்தப்பட்டனர். “புனித கடவுளின் (Holy Trinity) பெயரால் நாம் அடிமைகளை மொத்தமாக அனுப்பி கொண்டே இருப்போம், அடிமைகள் அனைவரும் விற்பனை ஆகட்டும்” என்றான் கொலம்பஸ். “நான் திரும்பி வரும்போது தேவையான அளவு தங்கத்தையும் அடிமைகளையும் கொண்டு வருவேன் என்றென்றும் நிலை பெற்றிருக்கும்”, “நமது கர்த்தர் அவரது பாதையில் நாம் செல்ல நமக்கு வெற்றிகளை தருவார்”, தனது மனிதாபிமானமற்ற கொடுங்கோன்மைக்கு கடவுளைத் துணைக்கு அழைத்து கொலம்பஸ் செய்தி அனுப்பினான்.

தங்கத்தைக் கொண்டு வரவேண்டும் என்கின்ற அசாத்தியமான பணி செவ்விந்தியர்களுக்கு வழங்கப்பட்டது. நீரோடையில் உருளும் துகள்கள் மட்டும்தான் அங்கு இருந்த ஒரே தங்கம். அடிமைகளில் பலர் தப்பி ஓடினர். வேட்டை நாய்களின் துணையோடு அடிமைகளை வேட்டையாடிக் கொன்றனர்.

அடிமைகளை விற்கலாம் வாங்கலாம் கொலை செய்யலாம் என்ற முறையை கடுமையாக நடைமுறைப்படுத்தியவன் கொலம்பஸ். கொடுங்கோன்மையின் தீவிரம் தாங்க முடியாமல் அடிமை மக்கள் விஷத்தன்மை உள்ள கிழங்கு உட்கொண்டு கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டனர். “பரலோகத்துபிதா நமது கடவுள் அவருடைய வழியைப் பின்பற்றுபவர்களுக்கு வெற்றியை தருவார்” என்று கொக்கரித்தான் கொலம்பஸ்.

தப்பிப் பிழைப்பதற்காக முயற்சி செய்த அரவாக்குகள் ஸ்பானியர்களின் ஆயுதங்களையும் துப்பாக்கிகளையும் குதிரைகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கைதிகளாகப் பிடித்த அடிமைகளை தூக்கிலிட்டனர். உயிருடன் கொளுத்தினர். உடல் உறுப்புகளை துண்டித்தனர். இரண்டரை லட்சம் செவ்விந்தியர்களின் பாதிபேர், இதன் விளைவாக இறந்து விட்டனர்.

அடிமைகளின் உழைப்பை சுரண்டி உல்லாசமாக வாழ்ந்து வந்த ஸ்பானியர்கள் ஆணவம் பிடித்தவர்களாக வளர்ந்தனர். சிறிது தூரம் நடக்கக் கூட மறுத்து அடிமைகளின் முதுகில் சவாரி செய்தனர். நாற்காலியில் அமர்ந்து கொண்டு அடிமைகளை சுமக்கச் செய்தனர். மனிதகுல வரலாற்றின் கண்டும் கேட்டிராத அக்கிரமச் செயல்களை அரங்கேற்றினர். சிறுவர்களின் தலையை வெட்டி வீசி விளையாடினார்கள். தங்களது கொலைவாள் கூர்மையானதாக இருக்கிறதா என்பதை சோதித்து அறிய அடிமைகளின் உடம்பில் பதம் பார்த்தனர். ஆயிரமாயிரம் அடிமைகள் சுரங்கங்களில் துன்புற்று இறந்தனர்.

“கொலம்பசின் அமெரிக்க கண்டுபிடிப்பு மாபெரும் வரலாற்றுப் புரட்டு”

அடிமைகளும் தங்கமும் என்ற இலக்கை நோக்கி பயணித்த கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடித்ததாக சொல்வதில் கூட சந்தேகத்துக்கு இடம் உண்டு. கொலம்பஸ் தரையிறங்குவதற்கு முன்பே நீக்ரோக்கள் அமெரிக்க மண்ணில் நுழைந்தவர்கள். வெள்ளையர்களின் வரலாறு இந்த வரலாற்று உண்மையை இருட்டடிப்பு செய்து விட்டது. லட்சக்கணக்கான பழங்குடி மக்கள் இந்த நிலப்பரப்பில் வாழ்ந்து வந்தனர்.

நிறவெறியும் ஆதிக்க வெறியும் பண வெறியும் கொண்ட ஒரு கடல் கொள்ளைக்காரன்தான் கொலம்பஸ். அரவாக்குகள், செவ்விந்தியர்கள், கரீபியர்கள் போன்ற பழங்குடி மக்கள் தங்கள் மண்ணை இழந்து, பூர்வீகத்தை இழந்து, தங்கள் வரலாற்றை இழந்து விரட்டப்பட்டனர். அடிமை மக்களின் அவல வாழ்விலிருந்து நிர்மாணிக்கப்பட்டதுதான் இன்றைய அமெரிக்கா. 25,000 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை அப்புறப்படுத்திவிட்டு அமெரிக்கா என பெயர் சூட்டி குடியேறினார்கள்.

அமெரிக்காவை நிர்மாணித்தவர் யார்? இந்த நாட்டை உயிர்த்துடிப்பு ஆக்கியவர் யார்? அமெரிக்க பேரரசை அட்லாண்டிக் துவங்கி பசிபிக் கடல் வரை விரிவு படுத்தியவர்கள் யார்? எல்லையற்ற வசதி வாய்ப்புகளை அங்கு உருவாக்கியவர்கள் யார்? “சபிக்கப்பட்ட அந்த தாழ்ந்த மனிதர்களால்தான் இந்த அமெரிக்கா உருவாக்கப்பட்டது என்ற அந்த ஒப்பற்ற உண்மையை உலகமெங்கும் பரப்புவோம்” என்றார் மார்ட்டின் லூதர் கிங்.

இதனை வரலாற்று வரிசைப்படி விவரிக்கிறது இந்நூல்.

“கப்பலில் வந்த மர்மமான சரக்கு”

அடிமைகள் பண்டங்கள் போலவும் ஆடு, மாடுகள் போலவும் விற்பனை செய்யப்பட்டனர். அடிமை விற்பனையில் திருடனும், மொழிபெயர்ப்பாளரும், விற்பனையாளரும் முக்கியமானவர்கள். 1619-ஆம் ஆண்டு அமெரிக்க கடற்கரையை வந்தடைந்த டச்சு கப்பலில் தொடங்கியது அடிமைகளின் வணிகம். வர்ஜினியாவின் ஜேம்ஸ் டவுன் என்னும் ஐரோப்பிய குடியிருப்பை எட்டியது டச்சு கப்பல். வந்தது-வணிகம்-செய்தது-திரும்பி சென்றது. அதுவரை எந்த கப்பலும் ஏற்றி வராத மர்மமான சரக்கை இந்தக் கப்பல்  ஏற்றி வந்தது. அது 20 அடிமைகள். இவ்வாறு முதல் அமெரிக்க அடிமை வியாபாரத்தை சாண்டர்ஸ் ரீடிங் வர்ணிக்கிறார்.

அடிமைகளின் இந்த அவல வாழ்க்கையை தெளிவான சித்திரம் போல், இந்த நூல் படம் பிடித்துக் காட்டுகிறது. உள்ளத்தை உருக்கும் உணர்ச்சிமிகு சோக நிகழ்ச்சிகளை எண்ணிப் பார்த்து மனம் வேதனை அடைகிறது. “பணம் பிறவியிலேயே கண்ணத்தில் ரத்தக்கரை படிந்ததாய் உலகில் பிரவேசித்தது” என்றார் மாமேதை காரல் மார்க்ஸ். எல்லையற்ற லாப வெறி, நிற வேற்றுமை அடிப்படைகள், வெள்ளையன் எஜமானனாக கருப்பினத்தவர் அடிமையாக நடத்தும் கொடூரமான அமெரிக்க அடிமைமுறை உலகில் வேறு எங்கும் இல்லாதது.

ஆப்பிரிக்க கருப்பின அடிமைகளை ஏற்றிக் கொண்டு சென்ற கடல் பயணங்கள் சில நேரங்களில் ஆயிரம் மைல்கள் தூரம் கொண்டவையாக இருந்தன. கருப்பினத்தவர் கழுத்தில் சங்கிலிகளை மாட்டி துப்பாக்கி, சாட்டைகள் கொண்டு அடித்தபடி நடத்திக் கொண்டு செல்லப்படும் பயணங்கள் அவை. கப்பலில் சென்ற அடிமைகளில் ஐவருக்கு இருவர் பயணங்களில் இறந்துவிடுவர். தரையில் அவர்கள் விற்கப்படும் வரை கூண்டுகளில் அடைத்து வைக்கப்பட்டனர்.

கப்பலில் அமைக்கப்பட்ட அந்த இருட்டு அறை திறக்கப்படும் போது, மல நாற்றமும் இறந்து கிடக்கும் அடிமைகளின் உடலின் அழுகல் வாடையும் மாலுமிகளை மூச்சுத்திணற செய்யும். கப்பலின் மேல் தளத்தில் வெள்ளை மனிதர்களின் குடியும் கேளிக்கையும் கர்த்தரின் ஆசி பெற்றவையாக தொடரும். அடிமைகளில் மூன்றில் ஒருவரே உயிர் தப்பி கரை இறங்கினர்.

அடிமைகள் மீது தொடுத்த கொடுங்கோன்மை, கொலைபாதக செயலை ஜான் பார்பட் என்பவர் இவ்வாறு வர்ணிக்கிறார் “அடிமைகள் கடற்கரை அருகில் உள்ள சிறைச்சாலை போன்ற பட்டியில் அடைத்து வைக்கப்படுவார்கள். அவர்களை வாங்குவதற்கு அரேபியர்கள் வரும்போது விசாலமான திறந்த வெளிக்கு கொண்டு வரப்படுவார்கள். அங்கு, கப்பல் அதிகாரிகள் அவர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு உறுப்பாக சோதனை செய்வார்கள்.

குழந்தைகள், ஆண்கள், பெண்கள் அனைவரும் நிர்வாணமாக சோதனையிட்ட பின் நல்ல உடல் கட்டுடன் ஆரோக்கியமாக இருப்பவர்களை ஒருபக்கமாக ஒதுக்குவார்கள் அவர்கள் மார்பில் பிரஞ்சு இங்கிலீஷ் டச்சு என கம்பெனிகள் முத்திரைகளை பழுக்க காய்ச்சிய இரும்பால் சூடு போடுவார்கள் முத்திரையிட்ட அடிமைகள் மீண்டும் அவரவர் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு கப்பலில் ஏற்றும் வரை அடைத்து வைக்கப்படுவார்கள்.

கழுத்திலும் கால்களிலும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு கப்பல் தளத்தில் பூட்டப்பட்டு இருப்பார்கள். மூத்திர நாத்தமும், மூச்சுத் திணறலும், துயரமும் தாங்க முடியாதது. அந்த நிலை நீக்ரோ அடிமைகளுக்கு பைத்தியம் பிடிக்கச் செய்தது”.

வர்ஜீனியார்களுக்கு உணவு தேவையை இருந்தது. அமெரிக்க இந்தியர்களை வேலை செய்யவைக்க முடியவில்லை. அவர்களை அடக்கவோ அழிக்கவோ முடியவில்லை. அவர்கள் மண்ணில் அவர்களை வெல்வது அவ்வளவு எளிதல்ல, என்ற நிலையில் வேலை செய்ய போதுமான வெள்ளை பணியாளர்கள் இல்லை. அதற்கு கருப்பர்களை இருந்தனர். 1619-ஆம் ஆண்டு 10 லட்சம் கருப்பர்கள் அடிமைகளாக அமெரிக்காவில் கொண்டுவந்து இறக்கப்பட்டனர்.

அவர்கள் மண்ணிலிருந்து பண்பாட்டில் இருந்தும் பிரித்து எடுத்து வரப்பட்ட கறுப்பின மக்கள், தங்கள் மொழி-கலை-பண்பாடு-குடும்பம் என அனைத்தையும் இழந்து வேற்று மண்ணுக்கு அடிமைகளாகப் பெயர்த்து எடுத்து வரப்பட்டனர். இந்த கொடுங்கோன்மையின் வரலாற்றை ஈடு இணையற்ற நம் பேராசான் கார்ல் மார்க்ஸ் அவர்கள் கீழ்கண்டவாறு தனது மூலதனம் நூலில் அற்புதமாக பதிவு செய்துள்ளார்.

படிக்க :
♦ கருப்பின மக்களின் வாழ்வும், அமெரிக்கா எனும் ஜனநாயக சோதனையும் !

♦ கருப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு : பற்றி எரியும் அமெரிக்கா !

“அமெரிக்காவில் தங்கமும் வெள்ளியும் கண்டுபிடித்தது, அந்த கண்டத்து பூர்வகுடிமக்களை அழித்து, அடிமைப்படுத்தியது, சுரங்கங்களில் சமாதி செய்து, அவர்களை நாசமாக்கியது, கிழக்கிந்திய பகுதிகளைப் (East Indies) பிடித்து சூறையாடத் தொடங்கியது, கருப்புத் தோல் மானிடரை வாணிப வேட்டையாடுவதற்காக வேட்டைகாடாய் ஆப்பிரிக்காவை மாற்றியது, இவையெல்லாம் முதலாளித்துவ பொருளுற்பத்தி சகாப்தத்தின் அருணோதயக் காட்சிகளாய் அமைந்தன” என்று அன்றைய நிலையை தெளிவாக படம் பிடித்துக் காட்டுகிறார்.

ஒடுக்கப்படும் அடிமைகள் கிளந்தெழாமல் போய் விடுவார்களா என்ன ? ஐரோப்பியர்களின் ஒடுக்குமுறைக்கு அடிமைகளின் எதிர்வினை என்ன என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்…

(தொடரும்…)

 

நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

விரைவுபடுத்தப்படும் விவசாய சட்ட சீர்திருத்தங்கள் : பின்னணி என்ன ?

ஒருவேளை உணவுக்குக் கையேந்தும் நிலைக்குத் தயாராகிறோமா ? – பாகம் 1

ந்தியாவின் விவசாயத்தையும், உணவுப் பாதுகாப்பையும் கார்ப்ரேட்களின் கைகளில் தூக்கிக் கொடுக்கும் வகையில் மூன்று வேளாண் சட்டங்களை பாஜக அரசாங்கம் கொண்டுவந்துள்ளது. இதை எதிர்த்து 80 நாட்களுக்கும் மேலாக விவசாயிகள், டெல்லியின் எல்லைப் பகுதிகளில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தியும் சட்டத்தை ரத்து செய்ய முடியாது என்று ஆணவமாக இருக்கிறது பாஜக அரசாங்கம்.

இப்படி விடாபிடியாக இந்த சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதை பாஜக ஏன் முன்னெடுக்க வேண்டும்? என்ற கேள்வி இயல்பாகவே எழும். காரணம் மிக எளிமையானது. தங்கள் உள்நாட்டு, வெளிநாட்டு கார்ப்பரேட் எஜமானர்களின் நீண்டகால ஆசையான இந்திய விவசாயத்தையும், விவசாய நிலங்களையும் கைபற்றிக் கொள்வதற்கு சாதகமான சட்டங்களை பாஜக நிறைவேற்றிக் கொடுக்கிறது.

படிக்க :
♦ வெங்காய விலை உயர்வு : வேளாண் திருத்தச் சட்டத்தின் முன்மாதிரி !
♦ வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற கார்ப்பரேட்டுகளின் அடிமடியில் கை வைப்போம் !

சர்வதேச நிதியாதிக்க கும்பல், மூன்றாம் உலகநாடுகளின் உணவு உற்பத்தியை கைபற்றிக் கொண்டு, நீண்ட கால இலாபம் ஈட்டுவதற்கு இந்த சட்டங்களை வழிவகை செய்து கொடுக்கிறது. இந்த சட்டங்களுக்கு பின்னால் இருக்கும் நிதியாதிக்க கும்பல்களின் நலன்களையும், இவர்களுக்கு கட்டுப்பட்டு நடக்கும் மூன்றாம் உலக நாடுகளின் ஆட்சியையும் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய தேவையிருக்கிறது. ஏனெனில், இந்திய விவசாயத்திற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் வந்துள்ள இந்த நெருக்கடி ஒரு தனி நிகழ்வல்ல. இது அனைத்து வளரும் நாடுகளும் சந்தித்து வரும் சர்வதேச அளவிலான நிகழ்வுப்போக்கு.

“விவசாயிகள் தவறாக வழி நடத்தப்படுகிறார்கள்” என்று ஆளும் கும்பல் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது. ஆனால், விவசாயிகள், தங்கள் நிலம் பறிக்கப்படும் அபாயத்தில் இருப்பதை சரியாகவே புரிந்து வைத்திருக்கிறார்கள். டெல்லியில் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகள், “எங்கள் நிலத்தையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்றிக் கொள்ளப் போராடிக் கொண்டிருக்கிறோம்” என்பதை திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

அம்பானி, அதானி போன்ற உள்நாட்டு தரகு முதலாளிகளும், பன்னாட்டு கார்ப்பரேட் முதலாளிகளும் தங்கள் நிலங்களை, வாழ்வாதாரத்தை கைபற்றிக் கொள்ள நினைக்கிறார்கள் என்ற புரிதல், போராடும் ஒவ்வொரு விவசாயிக்கும் உள்ளது.

கடந்த மே மாதம் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை பற்றி, மோடி பேசும் போது, “தன்னிறைவு பெற்ற இந்தியாவின் உறுதியை நிரூபிக்க, நிலம், தொழிலாளர்கள், பணம், சட்டம் என்ற அனைத்து மட்டத்திலும் திருத்தங்கள் வலியுறுத்தப்படும்” என்றார்.

தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி, “நிலமும் தொழிலாளர்களும் தான் சந்தை சீர்திருத்தங்களின் முக்கிய கூறுகள். ஏனெனில், நிலமும் தொழிலாளர்கள் நலனும் தான் தொழில் சார்ந்த செலவுகளைப் பாதிக்கக்கூடிய அம்சமாக இருக்கிறது. சமீபத்தில், சில மாநிலங்களில் நிலம், தொழிலாளர் நலச்சட்டங்களில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் அடிப்படை தொழிலாளர் நலச்சட்டங்களில் சீர்திருத்தங்களை அறிவித்துள்ளார்கள்.

இதனை தொடர்ந்து மற்ற மாநிலங்களும் இதைப் பின்பற்றும்.  கர்நாடகா ஒருபடி மேலே போய், தொழிற்சாலைகளுக்காக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தை திருத்தி இருக்கிறது. இந்த மாநிலத்தில் விவசாயிகளிடமிருந்து முதலாளிகளால் நேரடியாக நிலங்களை வாங்க முடியும். மற்ற மாநிலங்களும் இந்த முறைக்குள் சிறிது சிறிதாக உள்ளிழுக்கப்படும்” என்றார்.

கர்நாடகாவில் விவசாயிகளிடம் இருந்து பலவந்தமாகவும், ஏமாற்றியும் நிலத்தை தனியார் முதலாளிகள் பறிக்காமல் தடுக்கும் பொருட்டு நிலத்தை தனியார் நிறுவனங்கள் நேரடியாக கையகப்படுத்துக் கூடாது என்று சட்டமிருக்கிறது. அதை கடந்த டிசம்பர் 2020-ல் திருத்தியிருக்கிறார்கள். தங்களுக்கு மிகவும் சாதகமான இந்த சட்டத்தை பெருமுதலாளிகள் வரவேற்கிறார்கள்.

கொரோனா பிரச்சினை உச்சத்தில் இருந்தபோது, மோடி அரசாங்கம் இரண்டு முக்கியமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஒன்று, கிராமப்புறங்களில் இருக்கும் குடியிருப்பு நிலங்களை ட்ரோன்(Drone) மூலம் விவரணையாக்கம் (Mapping) செய்தது; இரண்டு, நிலங்களின் மீதான இறுதி சொத்துரிமை பத்திரத்தை (Conclusive Land Titling) தீர்மானிப்பது பற்றிய மாதிரி சட்டத்தை உருவாக்குமாறு மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக சர்வதேச முகமைகளும், இந்திய அரசாங்கமும் ஏழை விவசாயிகளின் நிலங்களை முதலாளிகளுக்கு மாற்றிக் கொடுப்பதற்கான வேலைகளை வெளிப்படையாகவே செய்து கொண்டிருக்கிறார்கள். இதன்மூலம், “தங்களின் வாழ்வாதாரத்தை சிறு துண்டுநிலத்தின் மூலமாக காப்பாற்றிக் கொள்ள சிரமப்படும்” விவசாயிகளின் நிலங்களை முன்வைத்து ”நல்லவொரு நில விற்பனை சந்தையை” உருவாக்க நினைத்தார்கள்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றும் பொருட்டு, நிலத்தின் மீதான தனிச்சொத்துடமையை (எவ்வித தடங்கலுமின்றி விற்பனை செய்வதை) உறுதிசெய்வதை அரசாங்கம் விரைவுபடுத்தியது. இதன் பொருட்டு, நிதி அயோக், நிலத்தில் தனிச்சொத்துரிமையை உறுதி செய்யும் சட்டத்தை நிறைவேற்றும்படி மாநில அரசுகளை நிர்பந்தித்து வருகிறது. நிலத்தின் மீதான தனிச்சொத்துரிமை நிலைநாட்டப்பட்டால்தான், நிலம் ஒரு விவகாரமில்லாத பண்டமாக மாறும். அப்போதுதான் நிலச் சந்தையில் நிறைய லாபம் பார்க்க முடியுமென்பது முதலாளிகளின் கணக்கு.

இந்தியாவில் நிலம்தான் பெரும்பான்மையான மக்களுக்கு அடிப்படை வாழ்வாதாரமாக இருக்கிறது. அதனால், நிலத்தின் மீதான உரிமைகள் சமூக ரீதியாகதான் பார்க்கப்பட வேண்டும். வெறுமனே நிர்வாக ரீதியாக நிலத்தின் சொத்துரிமைகள் தீர்மானிக்கப்படும் போது, இந்த நிலத்தையே வாழ்வாதாரமாக கொண்டு வாழும் பெரும்பகுதி மக்களை நிலமற்றவர்களாக மாற்றப்படும் அபாயமிருக்கிறது. இந்த நிலம் சபந்தமான எந்த நடவடிக்கைகளும், சட்டங்களும் ஏழை விவசாயிகளின் தேவைகளுக்கானது அல்ல. கார்ப்ரேட் முதலாளிகளுக்கானது தான்.

உற்பத்தித் துறை, இயற்கை வளம், பொதுத்துறை நிறுவனங்கள் என அனைத்தையும் கபளீகரம் செய்த நிதியாதிக்கக் கும்பலின் அடுத்த இலக்காக விவசாயம் இருக்கிறது.  மூன்றாம் உலக நாடுகளின் விவசாயத்தையும் விவசாய நிலங்களையும் கைபற்றுவதன் மூலம் தங்கள் லாபங்களை உறுதிபடுத்திக்கொள்ள கார்ப்பரேட்டுகள் முனைகிறார்கள்.

மூன்றாம் உலக நாடுகளின் பொருளாதாரம் பன்னாட்டு மூலதனத்திற்கு எந்த தடையுமில்லாமல் திறந்துவிடப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, வெளிநாட்டு மூலதனத்திற்கு கட்டுப்படத்தக்க வகையிலான ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனை வியாபாரம் பெரிதும் வளர்ந்திருக்கிறது. இப்படி ஒரு நாட்டின் சில்லறை விற்பனை வெகுசில கார்ப்பரேட்களின் கைகளில் குவிக்கப்படுவது  உலகளாவிய அளவில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு விவசாயமும் சில்லறை வர்த்தகமும் ஒட்டுமொத்தமாக கார்ப்பரேட்டுகளின் கைகளில் குவிக்கப்படுவதன் மூலம் நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது கார்ப்பரேட்களின் வியாபார நலன்களுக்கு கீழ்ப்படுத்தப்படுகிறது.

கடந்த 30 ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட புதிய தாராளவாத கொள்கையால், இந்தியாவின் விவசாயம் சீரழிந்து போயிருக்கிறது. 1990-களில் இருந்து தற்போதுவரை ஏறக்குறைய 3 லட்சத்துக்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருகிறார்கள்.

மூன்றாம் உலகநாடுகளின் விவசாயம் என்பது அந்தந்த நாடுகளின் உள்நாட்டு தேவைக்கான தானிய உற்பத்தி என்ற நிலை மாறி, ஏகபோகங்களுக்கு ஏற்றுமதி செய்வதற்கான உயர்தர காய்கறிகள், பழங்கள், பணப் பயிர்கள் ஆகியவற்றின் உற்பத்தியை நோக்கியதாக மாற்றப்பட்டு இருக்கிறது. இப்படி, மூன்றாம் உலக நாடுகளின் விவசாயமும் உணவு உற்பத்தியும் சிதைக்கப்பட்டு, அந்நாட்டு விவசாயிகளின் வாழ்வு ஏகபோகங்களின் நலன்களுக்குக் கீழானதாகக் கொண்டுவரப்பட்டது. அதற்கேற்றாற் போல சட்ட சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டதோடு, விவசாயிகளுக்கான மானியங்கள் அனைத்தும் படிப்படியாக வெட்டப்பட்டன.

விவசாயத்திலிருந்து கிடைக்கும் வருமானம், விவசாயிகளின் அடிப்படை நுகர்வுத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை. ஆனாலும், தங்கள் நிலங்களை விட்டுப்போக விவசாயிகள் தயாராக இல்லை. ஏனெனில், மாற்று வாழ்வாதாரம் என்று எதுவுமே அவர்கள் முன்பு இல்லை. விவசாயத்தில் நசிந்துபோன விவசாய தொழிலாளர்களை, உள்ளிழுத்துக்கொண்டு வேலைவாய்ப்புகளை அளிக்கும் அளவுக்கு இந்தியாவில் தொழிற்துறையின் வளர்ச்சியும் இல்லை. அதனால், தாம் உயிருடன் இருப்பதற்காவது, குறைந்தபட்ச வாழ்வாதாரத்தை அளிக்கும் நிலங்களை விட்டு வெளியேற விவசாயிகள் முன்வருவதில்லை.

புதிய தாராளவாத பொருளாதாரத்தில் நிலம் கார்ப்பரேட்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்பது முக்கியமான அம்சமாக இருக்கிறது. இதை செய்து கொடுக்க மோடி அரசாங்கம்  முதலிலே நிலம் கையகப்படுத்தும் சட்டத்தின் (2013) சரத்துகளை நீர்த்துப்போக அல்லது அதை ஒட்டுமொத்தமாக ஒழிக்க முயற்சி செய்தது. ஆனால், விவசாயிகள் மற்றும் நாடாளுமன்ற கட்சிகளின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த சட்டத்திருத்தத்தை கைவிட்டது.

ஆனால், இப்போது பிரதமரின் பொருளாதார ஆலோசனைக்குழுவின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ”நவம்பர் 2020 ஆளும் கட்சிக்கு சாதகமான நிலையில் இருக்கும் என்பதால், இப்போது மீண்டும் நிலம் சம்பந்தமான மசோதாவை அறிமுகப்படுத்தலாம்” என்கிறார்.

இதுபோன்ற சட்டங்களின் வாயிலாக விவசாயிகளை நிலங்களை விட்டு விரட்டப்படுவதற்கான காரணம், தொழிற்சாலைகள், உள்கட்டுமானம், சுரங்கம் போன்றவைகள் மட்டுமல்ல; நிலங்களைக் கையகப்படுத்தி இந்திய விவசாயத்தை கார்ப்பரேட் ஏகபோகத்திற்கு ஏற்றாப்போல மறுகட்டமைப்பு செய்வதற்கும்தான்.

இதை செய்வதற்காக, நிலத்தின் மீதான உரிமை பற்றிய சமூகமயமான கேள்வியை, வெறும் நிலத்தை முறையாக நிர்வாகம் செய்வது பற்றிய கேள்வியாக சுருக்கியிருக்கிறார்கள். விவசாயத்தின் அவசியத்தை மனதிற் கொண்டு விவசாய நிலங்களை கொள்முதல் செய்வதற்கு அரசு ஏற்கெனவே விதித்துள்ள கட்டுப்பாடுகளை தளர்த்துவதுதான் இந்தச் சட்டத் திருத்தங்களின் அடிப்படை. அதுமட்டுமின்றி, சிறு குறு விவசாயிகள் தங்கள் நிலங்களை பெரும் கார்ப்பரேட்களுக்கு குத்தகைக்கு விடுவது பற்றிய சட்டமும் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

கடந்த 2001-ம் ஆண்டு McKinsey என்னும் சர்வதேச நிறுவனம் கொடுத்த அறிக்கையின் படி, “இந்தியாவில் 90% நிலச் சொத்துரிமை பற்றிய பத்திரங்கள் தெளிவற்றதாக இருக்கிறது”, என்று தெரிவிக்கிறது. இந்தியாவில் வரலாற்று ரீதியாக, நிலத்தில் உழைப்பவர்கள் ஒரு வர்க்கமாகவும், அதன் பலனை அனுபவிப்பவர்கள் மற்றொரு வர்க்கமாகவும் இருக்கிறார்கள். இதனால், “உழுபவர்களுக்கே நிலத்தின் மீதான உரிமை” என்ற சமூக உரிமையை ஒடுக்கப்பட்ட விவசாயிகள் மிகக்கடுமையான போராட்டத்தின் மூலமாகவே வென்றெடுத்தார்கள். இப்படி வரலாற்று ரீதியாக நிலத்தின் மீது நிலவும் சமூக உரிமையைதான் McKinsey நிறுவனம் “தெளிவற்ற சொத்துரிமை” என்று சொல்கிறது.

“நில உச்சவரம்பு போன்ற சீர்திருத்தங்கள் எல்லாம் தோற்றுவிட்டது என்றும், அதற்கு பதிலாக, நிலங்களை அளவீடு செய்து அதை ஒழுங்குபடுத்தி, கனிணிமயமாக்கப்பட்ட ஆவணங்கள் மூலம் நிலப் பத்திரங்களை கொண்டுவருவது, இதை செய்ய தனியார் நிறுவனங்களையும் அனுமதிப்பது” என்ற பரிந்துரைகளை உலக வங்கி கொடுத்துள்ளது. இந்த பரிந்துரைகளை அமல்படுத்தி, நிலத்தை ஒரு சந்தை சரக்காக மாற்றி, நிலச் சந்தையில் (Land Market) இருக்கும் குறுக்கீடுகளை நீக்கி விவசாயமல்லாத காரணங்களுக்காக நிலத்தை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும்.

இதுதான் மூன்றாம் உலக நாடுகளுக்கு உலக வங்கி “பரிந்துரை” என்னும் பெயரில் விடுத்துள்ள கட்டளை. இதற்காக, 2008-ம் ஆண்டு நிலத்தின் மீதான சொத்துரிமையை அரசால் உறுதிபடுத்தப்பட்ட பத்திரமாக கொண்டுவருதற்கு, “தேசிய நில ஆவணங்களை நவீனமயமாக்கும் திட்டம்” அறிமுகப்படுத்தப்பட்டது.

2020-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் கொரோனா பெருந்தொற்றால் நாட்டின் பெரும் பகுதி மக்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்தபோது, “இந்த நெருக்கடியை வீணாக்க வேண்டாம்; இந்த நெருக்கடி அரசாங்கத்திற்கு நிலம், தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை திருத்த ஒரு நல்ல வாய்ப்பை கொடுத்திருக்கிறது”, என்றார் 2014-ம் ஆண்டு நிதி அயோக்கின் தலைவராக நியமிக்கப்பட்ட பனகாரியா. இதே கொரோனா ஊரடங்கு காலத்தில், SVAMITVA (Survey of Villages and Mapping with Improvised Technology in Village Areas) என்னும் திட்டத்தையும் கொண்டு வந்தது அரசாங்கம்.

இதன்படி, கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளை தொழில்நுட்பத்தை கொண்டு விவரணையாக்கம் (Mapping) செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. இது முடிவடைந்த உடன் குடும்பங்களுக்கு சொத்துரிமை அட்டைகள் வழங்கப்படும். வீடுகள் மட்டுமின்றி பஞ்சாயத்து மற்றும் சமூக சொத்துகளான சாலைகள், குளங்கள்,ஓடைகள், பள்ளிகள், அங்கன்வாடிகள் ஆகியவற்றையும் விவரணையாக்கம் செய்திருக்கிறார்கள். இவையெல்லாம் நிலத்தை சந்தை சரக்காக மாற்றுவதற்கான செயல்பாடுகள்தான் என்று அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ளது. இப்போது குடியிருப்பு பகுதிகளுக்கு செய்யப்பட்டது, விரைவில் விவசாய நிலங்களுக்கும் செய்யப்படும்.

படிக்க :
♦ மூன்று புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராட வேண்டும் ஏன்?
♦ வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் : முட்டுக்கட்டையிட்ட கேரள கவர்னர் !

இந்திய சமூக வரலாற்றில், நிலம் என்பது ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு மறுக்கப்பட்டதாகவே இருக்கிறது. அரசாங்கம் தற்போது செய்துவரும் சொத்துரிமையை இறுதிசெய்யும் திட்டத்தில் இவர்கள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுவார்களா? என்பதே கேள்வி. ஒடுக்கப்பட்ட மக்கள் நிலத்தில் உழைத்தாலும் நிலம் அவர்களுக்கு சொந்தமானதாக இல்லை.

1970-களில் தொடங்கப்பட்ட நிலச் சீர்திருத்தம், அதாவது தனிநபர்கள், பண்ணையார்களிடம் ஏகபோகமாக இருந்த நிலங்களுக்கு உச்சவரம்பு நிர்ணயித்தல், நிலத்தில் இல்லாத நபர்களின் சொத்துரிமையை பறித்தல் (Abolition of Absentee Land Lordism) போன்ற நடவடிக்கைகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட இந்த சீர்திருத்தங்கள் இன்னும் நிறைவடையவில்லை. சொல்லப் போனால், பிரித்தளிக்கப்படுவதற்காக கொண்டுவரப்பட்ட சீர்திருத்தம் வெறும் கண் துடைப்பாகத் தான் இருக்கிறது.

ஆனால், இன்றைய தேதியில் “சீர்திருத்தங்கள்” என்ற பெயரில் கொண்டுவரப்படுவது எதுவும், நிலங்களை பகிர்தளித்தல் என்னும் அர்த்தத்தில் கொண்டு வரப்படுவதில்லை. மாறாக, சர்வதேச அளவிலான நிதி ஆதிக்கத்தின் கீழ் விவசாய நிலங்களை கொண்டு சேர்ப்பது என்ற நோக்கத்தோடுதான் செய்யப்படுகிறது. இப்படி பிற நாடுகளின் வளங்களை சூறையாடுவது ஏகாதிபத்தியத்தின் உள்ளியல்புதான் என்றாலும், அது சமீபத்தில் புதிய நிலையை அடைந்திருக்கிறது.

சமூக அமைதியின்மை, எதிர்ப்புகள் இவற்றை பற்றியெல்லாம் கவலைப்படாமல் பிற நாடுகளின் காடு, நிலம், தண்ணீர் போன்ற வளங்களை ஏகபோக நிதியாதிக்கக் கும்பல்களின் கையில் ஒப்படைக்கும் வேலையை செய்ய அந்தந்த நாடுகளின் அரசுகளை நிர்பந்தித்து வருகிறார்கள்.

இந்த நிலைமைகள் இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தவிருக்கின்றன ? அடுத்த பகுதியில் (இறுதி) பார்க்கலாம்.

(தொடரும்)

பாகம் 2 : உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !

ராஜேஷ்

ஆப்பிரிக்காவில் சீனாவின் நவகாலனித்துவமும் இனவாதமும் || கலையரசன்

0

லங்கை சீனாவின் காலனி ஆகிறது” என்று சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவிக்கும் பலருக்கு ஆப்பிரிக்காவில் என்ன நிலைமை என்பது தெரியாது. இலங்கையை விட பல மடங்கு அதிகமாக ஆப்பிரிக்காவில், சீனாவின் நவகாலனித்துவப் பாதிப்புகள் மிகத்தெளிவாக உணரப்படுகின்றன. அதுமட்டுமல்ல, ஆப்பிரிக்கர்கள் சீனர்களின் இனவாதப் பாகுபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிசய படத் தக்கவாறு பல ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்கள் மத்தியில், சீனாவின் நவகாலனித்துவ ஆதிக்கத்திற்கு எதிர்ப்புணர்வு அதிகமாக இருந்தபோதிலும், ஆப்பிரிக்கர்கள் சீன மொழியை கற்று தேர்ச்சி பெறுவதும் அதிகரித்து வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகளில் ஆரம்பப் பாடசாலைகளில் சீன மொழி கற்பிக்கப்படுகின்றது. அங்கு, சீன மொழிப் படிப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. இந்த முரண்பாட்டை நாம் எப்படி புரிந்து கொள்வது? அது குறித்து ஒரு சிறிய ஆய்வு.

படிக்க :
♦ மத்திய ஆப்பிரிக்கா : இங்கே படிப்பது சித்திரவதையைப் போன்றது – பெனிசியா டொய்னா
♦ நைல் நதி: ஆப்பிரிக்காவின் நீளமான இரத்த ஆறு

கானா நாட்டின் தலைநகர் ஆக்ராவில் ஒரு ஊடகவியலாளர் ஒரு தடவை சீன உணவு விடுதிக்கு சாப்பிட சென்றிருந்தார். அப்போது, அந்த ரெஸ்டாரண்ட்டின் சீன உரிமையாளர், ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்று கூறி அவர்களை அனுமதிக்க மறுத்துவிட்டார். “எவ்வாறு கானா நாட்டில் விருந்தினராக தங்கியுள்ள ஒரு சீன நாட்டு ரெஸ்டாரன்ட் உரிமையாளர், உள் நாட்டவரை அனுமதிக்க மறுக்க முடியும்?” என்று கேள்வி கேட்ட ஊடகவியலாளர் உடனடியாக சில இளைஞர்களை கூட்டி வந்து வாயில் கதவை அடைத்துப் போராட்டம் நடத்தினார். அன்றிலிருந்து அந்த ரெஸ்டாரண்ட் உரிமையாளர் அனைவரையும் உள்ளே வந்து சாப்பிட அனுமதித்தார்.

கென்யாவின் தலைநகர் நைரோபியிலும் இதே போன்ற பல முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இங்கும் பல ரெஸ்டாரண்டுகள் சீனர்களையும் ஐரோப்பியர்களை மட்டும் அனுமதிப்பதாகவும் ஆப்பிரிக்கர்களை உள்ளே விடுவதில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. கென்யாவில் சீன நிறுவனங்களின் ரயில் பாதை கட்டுமானப் பணியில் வேலை செய்யும் ஆப்பிரிக்க தொழிலாளர்கள் சீன தொழிலாளர்களுடன் ஒன்று சேர முடியாமல் இருப்பதாகவும், அது மட்டுமல்ல சீனர்கள் பாவிக்கும் கழிவறையைக் கூடப் பாவிக்க முடியாமல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒரு தடவை சீனா தொழில் வழங்குனர் உடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், அவர் ஆப்பிரிக்கர்களை குரங்குகள் என்று திட்டியதால் கென்யா முழுவதும் சீனர்களுக்கு எதிரானப் போராட்டம் நடந்ததது.

புலமைப்பரிசில் கிடைத்து சீனாவுக்கு படிக்க சென்ற ஆப்பிரிக்கர்கள் கூட, அங்கு தாம் மூன்று வருடங்களுக்கு மேலே வாழ்ந்த போதிலும், சீன மொழியை சரளமாகப் பேசினாலும் சீன மாணவர்களுடன் ஒன்று கலக்க முடியாமல் இருந்ததைத் தெரிவித்துள்ளனர். சீனாவில் குவாங்சவ் மாநிலத்தில் மட்டும் 2 லட்சம் ஆப்பிரிக்கர்கள் வாழ்கிறார்கள். சீனாவில் கொரோனா வைரஸ் பரவிய காலத்தில் அங்கிருந்த ஆப்பிரிக்கர்கள் தான் வைரஸை கொண்டு வந்து பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்டனர்.

இவையாவும் சீனர்கள் ஆப்பிரிக்கர்கள் மீது காட்டிய இனவாதப் பாகுபாட்டுக்கு சில உதாரணங்கள். அதற்காக, சீனர்கள் எல்லோரும் இனவாதிகள் என்று ஒரேயடியாக சொல்லிவிட முடியாது. உலகில் எல்லா சமூகங்களிலும் நல்லவர்களும் கெட்டவர்களும் இருக்கிறார்கள் இனவாதிகளும் இருக்கிறார்கள். இனவாதமற்றவர்களும் இருக்கிறார்கள். தமிழர்கள் மத்தியில் கூட இனவாதிகள் இருக்கிறார்கள். பெரும்பாலான இனவாதிகள் தாம் பேசுவது இனவாதம் என்பதை உணர்வதில்லை. இதுதான் உலக வழக்கம் என்று நினைத்துக் கொள்கிறார்கள். தமிழர்களில் சிலர் கூட ஆப்பிரிக்கர்கள் விடயத்தில் இனவாதிகள் ஆக நடந்து கொள்வதைக் காணலாம். ஆப்பிரிக்கர்களை “காப்பிலிகள்” என்று ஒதுக்கி வைப்பது மாத்திரமல்லாது, அவர்களைப் பற்றிய தவறான எண்ணங்களையும் கொண்டுள்ளனர்.

பஞ்சம், பசி, பட்டினி என்றால் ஆப்பிரிக்க நாடுகளில் இருக்கும் நிலைமை என்றுதான் நினைத்துக் கொள்கிறார்கள். இவையாவும், மேற்கத்திய ஊடகங்களினாலும், ஹாலிவுட் திரைப்படங்களினாலும் உலக மக்கள் மனதில் ஆழமாகப் பதிய வைக்கப்பட்டுள்ளன. சீனர்களும் இந்த ஒரு பக்க சார்பான உலகப் பார்வைக்கு பலியானவர்கள்தான். ஆப்பிரிக்கர்களின் கருப்பு நிற மேனியை பஞ்சம், பசி, பட்டினி, வறுமை முட்டாள்தனம் போன்றவற்றுடன் சேர்த்துப் பார்க்கிறார்கள். ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக சீனர்கள் காட்டும் இனவாதப் பாகுபாடும், அத்தகைய மனநிலையில் இருந்துதான் உருவாகின்றது. ஆப்பிரிக்கர்கள் தொடர்பாக எமது தமிழர்களில் சிலர் எத்தகைய இனவாத கருத்துக்களைக் கொண்டிருக்கிறார்களோ, அதையேதான் சீனர்களும் கொண்டிருக்கிறார்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

சீன நிறுவனங்களில் நிலவும் இனவாதம் தொடர்பாக ஆய்வு செய்த கானா நாட்டு பேராசிரியர் ஒருவர், இது குறிப்பிட்ட தனிநபர் சார்ந்த நடத்தையாக மட்டுமே இருப்பதாகக் கண்டறிந்தார். அதாவது, எல்லா சீன மனேஜர்களும், பணியாளர்களும் இனவாதப் பாகுபாடு காட்டுவதில்லை. அதிகபட்சம் 6 அல்லது 7 சம்பவங்களை மட்டுமே அவரால் இனவாதமாக நிரூபிக்க முடிந்தது. இதிலிருந்து தெரிய வருவது என்னவென்றால், ஐரோப்பியர்கள் போன்று சீனர்கள் மத்தியில் இனவாதம் நிறுவன மயப்படுத்தப்பட்டதாக இருக்கவில்லை. அதாவது ஐரோப்பியர்கள் இனவாதத்தை ஒரு கொள்கையாகவே பின்பற்றி வந்தனர். ஆனால், சீனர்களை பொறுத்தவரையில் அது அந்த தனிநபர் சார்ந்த விடயமாகவே உள்ளது.

சமூக வலைத்தளங்கள் இதை ஊதிப் பெருக்கி வருகின்றன. அத்துடன், முன்னாள் காலனியாதிக்கவாதிகளான மேற்கத்திய நாடுகளும், இதை தமக்கு கிடைத்த ஒரு சந்தர்ப்பமாக கருதுகின்றன. தமது  ஊடகங்களைப் பயன்படுத்தி சீனர்களின் இனவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிடுகின்றனர். அதற்குப் பின்னால் இரண்டு நோக்கங்கள் உள்ளன.

முதலாவதாக, பொருளாதார ரீதியாக மேற்கத்திய நாடுகளுக்குப் போட்டியாக வந்துள்ள சீனாவை எதிர்ப்பதற்கு இதை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றனர். அதற்காக, அவர்கள் ஆப்பிரிக்கர்களை, ஏன் தமிழர்களையும் கூட தமக்கு ஆதரவாகப் பயன்படுத்தி சீனாவுக்கு எதிரானப் பிரச்சாரங்களை முடுக்கி விடுகின்றன.

இரண்டாவதாக ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் தாம் கடந்த காலத்தில் செய்த காலனியாதிக்கக் கொடுமைகளையும் இனவெறிப் பாகுபாட்டையும் மூடி மறைக்க முயல்கின்றனர். அதைப் பூசிமெழுகி வெள்ளை அடிப்பதற்கும் முயற்சிக்கின்றனர். சீனர்களுக்கு எதிராக கம்பு சுற்றும் தமிழர்கள், ஐரோப்பியர்களுக்கு எதிராக ஒரு வார்த்தைக்கூட எதிர்மறையாக சொல்ல மாட்டார்கள்.

சீனாவுடனான உறவுகளில் பல ஏமாற்றங்கள் கிடைத்திருந்த போதிலும் இன்றைக்கும் ஆப்பிரிக்க நாடுகள் சீனாவை தமது பிரதானமான வணிகக் கூட்டாளியாக கருதுகின்றனர். இதுவரை இருந்த காலங்களில் மேற்கத்திய நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளின் அபிவிருத்திக்கு உதவுவதென்றால் பல நிபந்தனைகள் விதித்து வந்தனர். “மனித உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் ; ஜனநாயகம் பேணப்பட வேண்டும்” என்று அந்த நிபந்தனைகள் இருக்கும். ஆனால், சீனா இவ்வாறு எந்த நிபந்தனையும் விதிப்பதில்லை. இது சர்வாதிகார ஆட்சி நடத்தும் ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்களுக்கு வாய்ப்பாக அமைந்து விடுகின்றது.

மறுபக்கத்தில் 54 நாடுகளைக் கொண்ட ஆப்பிரிக்கக் கண்டமானது சீனாவுக்கு ஒரு மிகப் பெரியதொரு முதலீட்டுக்கான வாய்ப்பைக் கொடுத்துள்ளது. நெடுஞ்சாலைகள் அமைப்பது, ரயில் பாதைகள் அமைப்பது போன்ற கட்டுமான பணிகளில் மட்டும் அல்லாது எண்ணை அகழ்வு, சுரங்கத்தொழில், கடற்தொழில் போன்றவற்றிலும் சீனா முதலிட்டு வருகின்றது. ஆப்பிரிக்க நாடுகள் அதற்கு ஒரு மிகப்பெரிய விலை கொடுக்கின்றன. பெரும்பாலும் இந்த முதலீட்டுக்கான கடன் தொகை அதிகம் மட்டுமல்லாது, அதைத் திருப்பிச் செலுத்த வேண்டிய காலமும் மிகக் குறைவு.

கூட்டாக முதலிட்டாலும் சீன நிறுவனங்களுக்கு பெருமளவு விட்டுக் கொடுக்க வேண்டும். வாங்கிய கடனை திருப்பிக் கட்ட முடியாத காரணத்தினால் கென்யா தனது துறைமுகத்தை சீனாவுக்கு இழக்கப் போகிறது என்ற வதந்தி அந்த நாட்டில் உலாவுன்றது. இந்த கடன் பொறி காரணமாக, ஆப்பிரிக்கர்கள் சீனாவையும் மேற்கத்திய நாடுகள் போன்றதொரு நவகாலனித்துவ வல்லரசாக பார்க்கின்றனர்.

ஆப்பிரிக்க நாடுகளுடன் ஒப்பிடும்போது, சீனா பொருளாதார ரீதியாக மிகப்பெரிய வளர்ச்சி அடைந்த நாடாக உள்ளது. இந்தப் பொருளாதார ஏற்றத்தாழ்வு காரணமாக வேலை நிமித்தம் ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் சீனர்கள் அந்நாட்டு மொழிகளை கற்க மறுத்து வருகின்றனர். இதுவும், முன்பு ஐரோப்பிய காலனி ஆதிக்கவாதிகள் நடந்துக்கொண்ட முறையைத் தான் எடுத்துக்காட்டுகின்றது.

இது போன்றுதான் முன்பு இலங்கையிலும் இந்தியாவிலும் குடியேறி வாழ்ந்த ஆங்கிலேயர்கள் தமிழ் மொழியை அல்லது ஏதாவதொரு உள்நாட்டு மொழியை கற்றுக் கொள்ள மறுத்து வந்தார்கள். அதற்குப் பதிலாக தமிழர்கள்தான் ஆங்கிலேயர்களின் மொழியை கற்றுக் கொண்டு அதை இப்போதும் பயன்படுத்தி வருகின்றனர். இதே மாதிரியான நிலைமைதான் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படுகின்றது.

படிக்க :
♦ சோவியத் யூனியனுக்கு வேலை தேடிச் சென்ற அமெரிக்கர்கள் ! | கலையரசன்
♦ ஹாங்காங் போராட்டம் – நடந்தது என்ன ? | கலையரசன்

சீன மொழியை தாமாக விரும்பிப் படிப்பவர்களின் எண்ணிக்கை அங்கு அதிகரித்து வருகின்றது. சீன மொழி கற்பிக்கும் தனியார் கல்வி நிறுவனங்கள் மூலைக்கு மூலை வந்துவிட்டன. ஆரம்பப் பாடசாலையில் இருந்து சீன மொழி ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. பல்கலைக் கழகங்களில் சீன மொழி கலாச்சாரம் தொடர்பாக சிறப்புக் கவனம் செலுத்தப்படுகின்றது. உள்ளூர் தரகு முதலாளிகளும் இந்த போக்கை ஊக்குவித்து வளர்த்து வருகின்றனர்.

இலங்கையிலும் இந்தியாவிலும் ஆங்கில மொழியில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைப்பது போன்று, இன்று ஆப்பிரிக்க நாடுகளில் சீன மொழியில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு பெருமளவு வேலை வாய்ப்புகள் கிடைத்து வருகின்றன.

கலையரசன்

கலையரசன் புலம் பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். வரலாறு, அரசியல், பண்பாடு ஆகியன குறித்து மார்க்சிய நோக்கில் கலையகம் தளத்தில் தொடர்ந்து எழுதி வருபவர். வெகுசன ஊடகப் பிரச்சாரத்தின் விளைவாக முதலாளித்துவக் கண்ணோட்டத்திற்கு தம்மையறியாமல் ஆட்பட்டிருக்கும் வாசகர்களை மீட்பதில் இவருடைய எழுத்தின் பாத்திரம் குறிப்பிடத்தக்கது.

சகாயமும் அப்துல் கலாமும் யாருக்கு சேவை செய்ய முடியும் ?

ழலின் ஊற்றுக்கண் முதலாளித்துவ சமூகமே. கார்ப்பரேட்டுகளின் நலன் பொருட்டும் சொத்து சேர்ப்பதன் பொருட்டும் ஊழலைக் கட்டிக்காப்பது ஆட்சியில் இருக்கின்ற அரசியல்வாதிகள்+துணை போகும் அதிகார வர்க்க கூட்டணிதான். சகாயம் போன்றவர்கள் தம் பதவிக்காலத்தில் லஞ்ச லாவண்யங்களுக்கு அடிபணியாமல் நேர்மையாக இருந்திருக்கலாம்.

அப்துல்கலாம் என்ற தனி மனிதர் கூட அப்படித்தான் இருந்தார். மக்கள் பணத்தில் ஊதியம் பெற்ற, நேர்மையான ஒரு அரசு அதிகாரியாக இருந்த வரை எல்லாம் சரிதான். அவருடைய அந்த க்ளீன் அடையாளத்தை மக்கள் மத்தியில் தனக்கான முதலீடாக்கி ஆர்.எஸ்.எஸ். கும்பல் (ஜனாதிபதி தேர்தலில்) அரசியல் சித்து விளையாட்டை நடத்த முற்பட்டதை புரிந்துக்கொள்ள முடியாத ஒரு மனிதராக அவர் இருந்தது எதை காட்டியது?

படிக்க :
அப்துல் கலாம் கனவை நிறைவேற்ற அமலா பால்!
சகாயம் : சட்டவாதப் போலி போர்வீரன் !

கனவு காண சொன்னார். 2020-ல் இந்தியா வல்லரசு நாடாகும் என்றார். தம் சொந்தப் பணத்தை எடுக்க ஏ.டி.எம் முன்னால் மணிக் கணக்கில் நின்ற மக்களை போலீஸ் அடித்து விரட்டியதையும் கொரோனா காலத்தில் 1,000 – 2,000 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தம் கிராமங்களுக்கு செருப்பு இல்லாமல் பட்டினி வயிற்றுடன் மக்கள் நடந்து செத்ததையும்தான், இந்த தேசம் கண்டது.

வெறும் தொழிநுட்ப அறிவும் புத்தக அறிவும் மட்டுமே அறிந்த ஒருவர், மாத ஊதியம் பெறும் ஒரு அரசு ஊழியராக மட்டுமே இருக்க தகுதி படைத்தவர், அவ்வளவே. ஒரு விஞ்ஞானி என்பவனுக்கு சமூகம் குறித்த அறிவும் சமூக அறிவியல், பொருளாதாரம், வர்க்க அரசியல் குறித்த தெளிவான பார்வையும் இருக்க வேண்டும், இல்லையேல் அவன் வெறும் தொழிநுட்பாளன், பொறியாளன், அவ்வளவே.

சகாயத்துக்கும் இது பொருந்தும். கலாம், சகாயம் போன்றவர்கள், ஐன்ஸ்டீன் போன்ற மேதைகளின் வரலாற்றை ஊன்றிப் படிக்க வேண்டும். வாய்ப்பந்தல் வேலைக்கு உதவாது. பேரழிவை உண்டாக்க வல்ல ஒரு புதிய ஆயுதத்தை அமெரிக்கா கண்டுபிடித்து இருப்பதாக அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமன் சோவியத் ரஷ்யாவின் தலைவர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதுகின்றார். அது என்ன ஆயுதம் என்று வெட்ட வெளிச்சம் ஆக்க வேண்டும் என வலியுறுத்தி ஐன்ஸ்டீன், ருதர் போர்ட், டால்டன், ஃபெர்மி, வானவர் புஷ் ஆகிய மகத்தான விஞ்ஞானிகள் ட்ருமனுக்கு கடிதம் எழுதுகின்றனர். அணு ஆயுதங்களுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்கின்றனர்.

மாத ஊதியம் பெற்று வந்த அப்துல்கலாம், அணு ஆயுதங்களின் காதலராக மட்டுமே இருக்கும் அளவுக்குத்தான் அவர் சிந்தனை மட்டம் இருந்தது. அதற்கு மேல் சிந்திக்க வல்லமை இல்லாமல் இருந்ததால்தான், எரிந்து புகைந்துக் கொண்டு இருந்த, சாமானிய மக்களின் ரத்தம் ஆறாக ஓடிக்கொண்டு இருந்த குஜராத்துக்கு சென்று ஒரு வார்த்தையும் பேசாமல் விருது வாங்கிக்கொண்டு திரும்ப முடிந்தது. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது என்று பேச வைத்தது.

வரலாறு குறித்த அறிவும் சமூக விஞ்ஞானம் பற்றிய அறிவும் இல்லாமல் போனதால்தான் காந்தியின் உருவப்படத்துக்கு நேர் எதிராக சவர்க்காரின் படத்தை திறந்து வைக்கும்போது மனதில் சிறிதும் சஞ்சலம் இல்லாமல் இருக்க முடிந்தது. வரலாறும் சமூக விஞ்ஞானமும் அறிந்து இருந்ததால்தான் சவர்க்காருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும் என்ற பரிந்துரையை கே.ஆர்.நாராயணன் அவர்களால் குப்பையில் எறிய முடிந்தது.

அணுகுண்டு இருந்தாப்போதும், நாடு வல்லரசு ஆகிவிடுமென்று கலாம் சொன்னது எவ்வளவு கேலிக்குறியதோ அதேபோல்தான் ‘ஊழலுக்கு எதிராக’ என்று கிளம்புவதும். இந்தியன் படத்தில் ரேஷன் கடை ஊழியர்களையும் ஆர்.டி.ஓ. ஆபீஸ் ஏஜெண்டுகளையும் வர்மத்தில் முறுக்கி வாயை கோணலாக்கி ஸ்பெஷல் கத்தியால் குத்தி சங்கரின் சேனாபதி ஊழலை ஒழித்த கதைக்கும், அம்புலிமாமாவில் சர்க்கார் மேஜிக் கதைக்கும் கலாம் சகாயம், அன்னா ஹசாரே போன்றோர் வெறும் வாயில் சுடும் வெத்து வேட்டு வல்லரசு வடைக்கும் பெரிய வேறுபாடு ஒண்ணும் இல்லை.

படிக்க :
♦ அண்ணா ஹசாரேவுக்காக சென்னையில் போங்காட்டம்! நேரடி ரிப்போர்ட்!!

♦ அணு உலையை ஆதரிக்கும் வல்லுநர்களின் பொய்யுரைகள்!

அன்னா ஹசாரேயின் ‘ஊழலுக்கு எதிரான’ போரில் அவர் மேடையில் தேசியக்கொடியை கையில் ஏந்தி வீசிக்கொண்டு இருந்த முன்னாள் போலீஸ் அதிகாரிக்கு கவர்னர் பதவி கொடுத்தது யார் என்பதையும், பதவிக்கு வந்த பின் மேற்படி ஜனநாயகம் அவர் கையில் சிக்கி என்ன பாடுபட்டது என்பதையும் மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.

முகநூலிலிருந்து : Iqbal Ahamed

disclaimer

செளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பு ஆண்டாக நினைவுகூர்வோம் !

செளரி செளரா நூறாம் ஆண்டு : ஏகாதிபத்திய எதிர்ப்பை நெஞ்சிலேந்தி மறுகாலனியாக்கத்தை முறியடிப்போம்!

டந்த பிப்ரவரி 04, இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் மிகவும் முக்கியமான நிகழ்வான செளரி செளரா சம்பவத்தின் நூற்றாண்டு தொடக்கமாகும். செளரி சௌரா அமைந்துள்ள உத்திரபிரதேச மாநிலத்தில் இந்த வரலாற்று சம்பவத்தின் நூற்றாண்டை ஒட்டி ஆண்டு முழுவதும் கொண்டாட்டங்கள் நடத்த மோடி-யோகி அரசு முடிவு செய்திருக்கிறது. இச்சம்பவத்தை நினைவுகூரும் விதமாக தபால்தலை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார் மோடி.

பன்னாட்டு நிறுவனங்களுக்கு நாட்டை பட்டா போட்டுக்கொடுக்கும் ஏகாதிபத்திய தாசர்கள், ஒரு ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தைக் கொண்டாடுவதும் போற்றிப் பேசுவதும் ஏன்? என்பதை நாம் கவனிக்கவும், அதே நேரத்தில் இந்திய மக்களின் விடுதலையை நேசிப்போர் இந்த நூற்றாண்டை கொண்டாடவும் சௌரி சௌரா தியாகிகளிடமிருந்து கற்றுக்கொள்ளவும் வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ ஜாலியன்வாலா பாக் படுகொலையின் நாட்குறிப்புகள் !
♦ ‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!

இந்திய மக்களின் எழுச்சியும் ஏகாதிபத்திய ஒடுக்குமுறையும்

1920-களின் இந்தியா ஒரு கொந்தளிப்பான சூழலில் இருந்தது, ஏகாதிபத்திய நாடுகளின் உலக மறுபங்கீட்டுக்காக ஒரு யுத்தம் (முதல் உலகப்போர்) நடந்து முடிந்திருந்தது. பசி, பஞ்சம், நோய் என அவை தோற்றுவித்த நெருக்கடிகளின் சுமை தாளாமல் உலகம் முழுக்க மக்களின் போராட்டங்கள் அலையாய் எழும்பின. 1917-ல் ரஷ்யப் பாட்டாளி வர்க்கம் தனது நாட்டில் முதலாளித்துவத்தை தூக்கி எறிந்து தனக்கான சோசலிச அரசை கட்டி எழுப்பி உலக மக்களுக்கே கலங்கரை விளக்கமாக இருந்தது. இத்தகையதொரு சூழல் காலனி நாடுகளில் தேச விடுதலை போராட்டங்களை உக்கிரமடையச் செய்திருந்தது.

இந்தியாவில் வீச்சாக வெடித்துக் கிளம்பியிருந்த தேச விடுதலைப் போராட்டங்களை ஒடுக்க 1919-ல் ‘ரெளலட்’ எனும் அடக்குமுறை சட்டத்தை மக்கள் மீது ஏவியது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். விசாரணை இல்லாமலே ஒருவரை கைது செய்து சிறையிலடைக்கும் அதிகாரத்தை இச்சட்டம் காலனி அரசுக்கு கொடுத்தது. பஞ்சாப் மாநிலம் அமிர்த சரசில் உள்ள ஜாலியன் வாலாபாக்கில் இந்த சட்டத்துக்கு எதிராக கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களின் மீது ஜனரல் டயர் என்ற இராணுவ அதிகாரி  துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் 400 பேர் வரை கொல்லப்பட்டதாகவும், ஆயிரக்கணக்கானவர்கள் படுகாயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ அறிக்கைகளே தெரிவிக்கின்றன. உண்மையில் இதைக்காட்டிலும் அதிகமானவர்களே கொல்லப்பட்டிருந்தனர்.

இத்தகைய அடக்குமுறைகள் மூலம் இந்திய மக்களின் எழுச்சியை அடக்கிவிட முடியும் என நினைத்தது பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம். ஆனால், ஜாலியன் வாலாபாக் படுகொலையோ ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்திற்கு மேலும் எண்ணெய் வார்த்தது. தேசவிடுதலைப் போராட்டத் தீ நாடெங்கும் பற்றி எரிந்தது.

காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் :

குமுறி எழுந்து கொண்டிருந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தை ‘ரௌலட்’ போன்ற அடக்குமுறை சட்டங்களைக் கொண்டு ஒடுக்க முடியவில்லை. மக்களின் போராட்டம் ஆளும்வர்க்கத்தின் அரசாளும் உரிமையைக் கேள்விக்குட்படுத்திய சமயத்தில், ஆளும் பிரிட்டிஷ் அரசுக்கு நோகாத வகையிலான போராட்ட வழிமுறைகளை காந்தி துவங்கி வைத்தார். அதுவே அஹிம்சை வழியிலான ஒத்துழையாமை இயக்கம்.

அனைத்து தரப்பு மக்களும் இதில் தீவிரமாகப் பங்கெடுக்கத் தொடங்கினர். அரசுப் போக்குவரத்து மற்றும் வெளிநாட்டு துணிகளைப் புறக்கணித்தல், மாணவர்கள் கல்வி நிலையங்களுக்கும் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்திற்கும் செல்லாமல் புறக்கணித்தல், என நாட்டு மக்கள் அனைவரும் பிரிட்டிஷ் அரசுக்கு தங்கள் ஒத்துழைப்பை வழங்க மறுத்தார்கள்.

போராட்டங்கள் புரட்சிகர திசைவழியில் செல்லாமல், தங்களது இருப்புக்கு ஆபத்தற்ற காங்கிரசால் தலைமை தாங்கப்படாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இவற்றை நினைத்து கலங்காமல் இருக்க முடியவில்லை. இந்த நிலையில்தான் பிரிட்டிஷ் அரசை நிலைகுலையச் செய்த அந்தச் சம்பவம் சௌரி சௌராவில் நடந்தது.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் சௌரி சௌரா எனும் இடத்தில் அஹிம்சை வழியில் ஆர்ப்பாட்டம் செய்த மக்களின் மீது போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் மூன்று பேர் அநியாயமாக கொல்லப்படுகிறார்கள். ஆத்திரமடைந்த மக்கள் போலீசு குண்டர்களை துரத்தியடிக்கிறார்கள், திரண்டு நின்ற மக்களின் கோபாவேசத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் போலீசு நிலையத்திற்குள் ஓடிய 22 போலீசுகளையும் தீ வைத்து கொளுத்துகிறார்கள் மக்கள்.

மக்களின் தியாக உணர்வுமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை காந்தி மற்றும் காங்கிரசின் அஹிம்சை போராட்ட வழிமுறைகள் மோசடி செய்தன. மக்களுக்கான நிரந்தரத் தீர்வை அவை வழங்கமறுத்ததோடு, மக்களின் இயல்பன போர்க்குணமிக்க போராட்டங்களை நீர்த்துப் போகச் செய்தன. 2012க்குப் பின்னர் இந்தியாவில் ஆரம்பித்த அன்னா ஹசாரே போராட்டங்களைப் போல் வரம்புக்குட்பட்ட போராட்டங்களாகவும், அன்றைய ஆளும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு நோகாத போராட்டங்களாகவும் இருந்தன. அதை உடைத்தது சௌரி சௌரா.

சௌரி-சௌராவின் தீ இந்தியா முழுமைக்கும் பரவும் ஆபத்து இருந்ததை உணர்ந்த காந்தி, இதையே சாக்கிட்டு ஒத்துழையாமை இயக்கத்தை நிறுத்தினார். 22 போலீசாரை கொன்ற வழக்கில் ஒத்துழையாமை இயக்க போராளிகள் 228 பேர் கைது செய்யப்பட்டனர். அதில், 19 பேருக்கு தூக்கு தண்டனையும் 110 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

சௌரி சௌரா நூற்றாண்டை ஏகாதிபத்திய தாசர்கள் கொண்டாடுவது ஏன்?

சௌரி சௌரா சம்பவத்தின் நூற்றாண்டு கொண்டாட்டத்தை தொடக்கி வைத்த மோடி, உரையாற்றுகையில் “நாடு சுயசார்பு அடைவதும், வளர்ச்சி அடைவதும் ஒவ்வொரு போராட்ட வீரருக்கும் நாடு செலுத்தும் அஞ்சலியாகும்”, “சௌரி சௌரா நூற்றாண்டை நாம் மக்களின் வளர்ச்சிக்காக நமது கனவுகளை நனவாக்குவதற்கு பல்வேறு உறுதிகளை மேற்கொள்ளும் ஆண்டாகக் கொள்ள வேண்டும்” என்றெல்லாம் பேசியுள்ளார்.

உண்மையில், ஏகாதிபத்தியங்களின்  நலனுக்காகவும்  அவர்களின் உள்ளூர் பாதந்தாங்கிகளான அம்பானி-அதானி உள்ளிட்ட தரகுப் பெருமுதலாளிகளின் நலனுக்காகவும் தனியார்மயம்-தாராளமயம்-உலகமயம் என்ற மறுகாலனியக் கொள்கைகளைத் தீவிரமாக அமுல்படுத்தும் மோடி அரசு இதனை எதிர்த்துப் போராடும் மக்களையும் ஜனநாயக சக்திகளையும் தீவிரமாக ஒடுக்கி வருகிறது.

உலக வர்த்தக கழகத்தின் உத்தரவின்பேரில் பன்னாட்டு-உள்நாட்டு கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக, இந்திய விவசாயத்தின் சுயசார்பை அழிக்கும் மூன்று புதிய வேளாண் சட்டங்களை கொண்டுவந்த மோடி அரசு. அதை, எதிர்த்து போராடும் டெல்லி விவசாயிகள் போராட்டத்தை அணுகும் முறை இதற்கு எடுப்பான உதாரணம்.

படிக்க :
♦ அகிம்சையின் துரோகம் வன்முறையின் தியாகம்
♦ தேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் !

அன்று பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போராடிய மக்களை ஒடுக்க “ரௌலட் சட்டம்”, இன்றோ ‘சுதந்திர நாடான’ இந்தியாவில், கார்ப்பரேட்-காவி பாசிச கொள்கைகளை எதிர்த்துப் போராடும் மக்களை ஒடுக்க ஊஃபா சட்டம், என்.ஐ.ஏ, போன்ற பல கொடூர அடக்குமுறைக் கருவிகள். சமீபத்தில் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து, அவர்களுக்கான ஆலோசனைகளாக உருவாக்கப்பட்ட “டூல்கிட்”டை சமூக வலைதளங்களில் பகிர்ந்த திஷா ரவி எனும் 21 வயது இளம்பெண், தேச விரோத சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுகிறார். இப்படி மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், மக்கள் போராட்டங்களை ஆதரித்தும் மூச்சுவிடுவதை கூட ‘தேச’ விரோதமாக்குகிறார்கள் பாசிஸ்டுகள்.

இப்படி மக்கள் போராட்டத்தை ஒடுக்குவதில் அன்றைய பிரிட்டிஷ் அரசுக்கு நிகராக ஒடுக்குமுறையைக் கட்டவிழ்த்துவிடும் மோடி கும்பலால் சௌரி சௌரா நூற்றாண்டை ஏன் கொண்டாடுகிறது ? எப்படி கொண்டாட முடிகிறது ?

பகத் சிங் உள்ளிட்ட மக்களின் நெஞ்சில் நிறைந்த தவிர்க்க முடியாத விடுதலைப் போராட்ட வீரர்களின் போராட்டத்தின் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் வர்க்கப் பார்வை ஆகிய உள்ளடக்கத்தை உருவி விட்டு அவர்களை வெறும் ‘தேச’பக்தர்களாகக் காட்டி தங்களோடு இணைத்துக் கொள்வதில் வல்லவர்கள்தான் இந்துமத வெறிப் பாசிஸ்ட்டுகள்.

சமீபத்தில் கூட மாவீரன் பகத் சிங் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பற்றி பேசும் வரிசையில் பச்சைத் துரோகி சாவர்க்கரையும் இணைத்துப் பேசியிருந்தார் மோடி. அதைப் போலவே, ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒத்துழையாமைப் போராட்டத்தில் நடந்த அரசு வன்முறைக்கு மக்கள் கொடுத்த தக்க பதிலடியை வெறும் தேசபக்தப் போராட்டமாகக் காட்டி, தங்களது ‘தேச’பக்தியோடு இணைத்துக் காட்டிக் கொள்ளத் துடிக்கிறது மோடி அரசு.

இந்த சூழலில் சௌரி சௌரா தியாகிகளின் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வை நெஞ்சிலேந்தி காவி பாசிஸ்டுகளின் ஏகாதிபத்திய ஆதரவு சட்டங்களுக்கு எதிராகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் மறுகாலனியாதிக்கத் திட்டங்களுக்கு எதிராகவும் மக்களை அமைப்பாக திரட்டி போராடுவதுதான் சௌரி சௌரா நூற்றாண்டு நிறைவை நாம் கொண்டாடுவதற்கான பொருள் !!


பால்ராஜ்

ஹிட்லரால் கொல்லப்பட்ட சோபி ஸ்காலும் மோடியால் கொல்லப்படும் ஜனநாயகமும் !

ழுபத்தெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில் (22-02-1943) ஹிட்லரின் ஜெர்மனியில் சோபி ஸ்கால் எனும் 23 வயது இளம்பெண் கில்லெட்டினில் தலை வெட்டப்பட்டு கொல்லப்பட்டார். அவர் செய்த குற்றம் என்ன தெரியுமா ? போரில் இருந்து ஜெர்மனி வெளியேற வேண்டும் என்ற கோரிக்கையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான ஒரு “டூல் கிட்”டை தயாரித்தது தான்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக அமெரிக்க பாடகர் ரிஹானா குரல் கொடுத்தத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதும் பல்வேறு சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்தனர். அச்சமயத்தில் இதனை அன்னிய சதி என்று கூறி ஒரு புரளியை சங்கிகள் கிளப்பிவிட்டனர்.

ஒன்றுமில்லாத விசயங்களையெல்லாம் பூதாகரமாக்கி கலவரம் நடத்துவதில் கைதேர்ந்தவர்களான சங்கிகள், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக சூழலியல் செயற்பாட்டாளர் “க்ரேட்டா தன்பர்க்” கூகுள் ட்ரைவில் பகிர்ந்த தரவுத் தொகுப்புகளையே (டூல் கிட்) பெரிய சதியாகக் காட்டி அதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இங்கும் அதே “டூல் கிட்”தான் பிரச்சினை.

அதனைத் தொடர்ந்து அந்த கூகுள் தரவுத் தொகுப்புக்கு பங்களிப்பு செய்த இந்தியாவைச் சேர்ந்த சூழலியல் செயற்பாட்டாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து, அதில் ஒருவரான திஷா ரவியை மோடி அரசு கைது செய்து சிறையிலடைத்தது நாம் அறிந்ததே.

தீஷா ரவி ஒரு சூழலியல் செயற்பாட்டாளர். “Fridays For Future” எனும் சூழலியல் அமைப்பின் இந்தியப் பிரிவின் துடிப்பான செயல்பாட்டாளர். 23 வயதான தீஷா ரவி பெங்களூருவில் படித்துக் கொண்டிருக்கிறார்.

படிக்க :
♦ திஷா ரவி கைதும் “டூல் கிட்”டுகளின் வரலாறும் !
♦ அதானி அவதூறு வழக்கு : பத்திரிகையாளர் பரஞ்சோய் குகா தாக்குர்தாவுக்கு கைது வாரண்ட் !

தேச விரோதிகள் பட்டியலில் பாஜக குறிப்பிடும் எந்தப் பிரிவுக்கும் இவர் துளியும் நெருக்கம் இல்லாதவர். இவர் இசுலாமியரோ, காஷ்மீரியோ, காட்டில் திரியும் மாவோயிஸ்ட்டோ, அர்பன் நக்சலோ இல்லை. அமைதியான முறையில் சூழலியல் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்துப் போராடியவர்.

விவசாயிகள் போராட்டத்தை நாட்டின் கோடிக்கணக்கான மக்கள் ஆதரிப்பது போல அவரும் ஆதரித்திருக்கிறார். அதனை பரப்புரையாகக் கொண்டு செல்லும் தமது ஜனநாயக உரிமையின் அடிப்படையில் கூகுள் ட்ரைவில் இருந்த தரவுத் தொகுப்பில் தமது பங்களிப்பைச் செய்திருக்கிறார்.

இங்கு நன்கு குறித்துக் கொள்ள வேண்டியது என்னவெனில் தீஷா ரவி அறவழியில் மட்டுமே போராடியுள்ளார். அதுவும் பிரச்சாரத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட தரவுகளில் தமது சிறிய பங்களிப்பைச் செய்துள்ளார். அவர் எந்த ஒரு பொதுச் சொத்தையும் சேதப்படுத்தவில்லை. இந்த அரசுக் கட்டமைப்பை தகர்த்தெறிய வேண்டும் என்று பிரச்சாரம் செய்யவில்லை . (அப்படி பிரச்சாரம் செய்தாலும் அதற்கான உரிமையையும் வழங்குகிறது இந்திய அரசியல் சட்டம்).

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக கருத்துப் பிரச்சாரத்தை மட்டுமே செய்தார். ஒரு ஜனநாயக அரசு, ஆயுதங்களைக் கண்டு பயப்படலாம். கருத்துக்களைக் கண்டு அஞ்சி அதனை வெஞ்சினம் கொண்டு முடக்கினால் அது ஜனநாயக அரசாக இருக்க முடியுமா? அதிலும் தேசப் பற்றைக் காரணம் காட்டி ஜனநாயக உரிமையைப் பறிக்கிறது எனில் அது சந்தேகமின்றி ஒரு பாசிச அரசாகத்தான் இருக்க முடியும்.

இதற்கு அப்பட்டமான சாட்சியாக நிற்கிறது ஹிட்லரின் பாசிச ஆட்சி. ஜெர்மனியில் தேசிய சோசலிச அரசு என்ற பெயரில் இனரீதியிலான பாசிச அரசை நிலைநாட்டிய ஹிட்லரின் ஆட்சியின் இறுதிக் கட்டமான போர்க்காலச் சூழலில் இந்தியாவில் நிகழும் தற்போதைய அரசு ஒடுக்குமுறை சம்பவங்களை ஒத்த பல்வேறு சம்பவங்கள் நடந்துள்ளன. அதனை இங்கு பார்ப்பதன்மூலம், நம் நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள அபாயத்தைப் பற்றிப் புரிந்து கொள்ள முடியும்.

பாசிச வெறி தலைகேறிய நிலையில், இரண்டாம் உலகப் போரைத் துவக்கி ஹிட்லர் உலகம் முழுவதையும் கபளீகரம் செய்யத் துவங்கிய போது, அது ஜெர்மனிய முதலாளிகளின் விருப்பமாக மட்டுமே இருந்தது. அங்கிருக்கும் பெருவாரியான மக்கள் அதனை வெறுத்தனர். ஆனால் அரசின் உளவாளிகளும் கண்காணிப்பும் வீதிக்கு வீதி நிரம்பியிருந்த காலகட்டத்தில் யாரும் எவ்வித எதிர்ப்பையும் காட்டத் துணியவில்லை.

தீஷா ரவி (இடது) சோபி ஸ்கால் (வலது)

இளைஞர்கள் கட்டாய இராணுவப் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். ஒரு லிபரல் அரசியல்வாதியான ராபர்ட் ஸ்கால் என்பவருக்கு மகளாகப் பிறந்த சோபி ஸ்கால் என்ற 22 வயது இளம்பெண் அச்சமயத்தில்தான் முனிச் பல்கலைக்கழகத்தில் படிப்பிற்காகச் சேர்கிறார். அங்கு ஏற்கெனவே பயின்று கொண்டிருந்த அவரது அண்ணன் ஹன்ஸ் ஸ்கால் படித்துக் கொண்டிருந்தார். தத்துவம் மற்றும் இறையியலின் மீது ஆர்வம் கொண்டிருந்த சோபி ஸ்கால் அது தொடர்பான நூல்களை வாசிப்பதோடு அதனை விவாதித்தும் வந்தார்.

சோபி ஸ்காலின் தந்தையான ராபர்ச் ஸ்கால், (ஒரு நகரின் கவர்னராகப் பணியாற்றியவர்) ஹிட்லர் குறித்து தனது விமர்சனத்தைப் பதிவு செய்ததன் காரணமாக சிறையில் அடைக்கப்பட்டார்.

பல்கலையில் தனது அண்ணனின் நண்பர்களுடன் கிடைத்த அறிமுகத்தின் அடிப்படையில் வெள்ளை ரோஜா எனும் அமைதியான இயக்கம் ஒன்றில் இணைந்து செயல்பட்டார். வெள்ளை ரோஜா அமைப்பின் கோரிக்கை ஹிட்லரையோ, பாசிசத்தையோ தூக்கியெறிய வேண்டும் என்பது அல்ல. அவர்களது கோரிக்கை எளிமையானது, ஜெர்மனி போரில் இருந்து வெளியேற வேண்டும். அவ்வளவுதான். ஆனால் இதனை வெளிப்படையாகப் பேச முடியாது என்பதை நன்கு அறிந்திருந்தனர்.

சோபி ஸ்காலின் இறுதி நாட்கள் குறித்து வெளிவந்த திரைப்படம்

அந்த வகையில் அங்கு அவர்கள் அனைவரும் இணைந்து போருக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் துண்டுப் பிரசுரங்களை மக்கள் மத்தியில் இரகசியமாக விநியோகிப்பது என முடிவெடுத்து நடைமுறைப்படுத்தினர். அவர்களைப் பொறுத்தவரையில் அந்தப் பிரசுரங்கள் தான் அவர்களது ஆயுதக் கிடங்கு. அதாவது “டூல்கிட்”. அப்படி கிட்டத்தட்ட 5 பிரசுரங்கள் எழுதப்பட்டு விநியோகிகப்பட்டன. இரகசியமாக விநியோகிக்கபப்ட்ட அந்தப் பிரசுரங்கள் மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றன.

ஆறாவது பிரசுரத்தை பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கையில் ஒவ்வொரு வகுப்புகளின் வாசலிலும் யாருக்கும் தெரியாமல் வைத்து விட்டு செல்வதுதான் வேலை. சோபி ஸ்காலும் வெள்ளை ரோஜா அமைப்பினரும் இந்த வேலையைச் செய்து முடித்த பின்னர், மீதமுள்ள சில பிரசுரங்களையும் வீணாக்காமல் அனைவரின் பார்வைக்கு கிட்டும்படி செய்ய வேண்டும் என்றெண்ணி சோபியும் அவரது அண்ணன் ஸ்காலும் மாடிக்குச் சென்று அங்கிருந்து மீதமுள்ள பிரசுரங்களை இறைந்துவிடும்போது பல்கலைக் கழக ஊழியனால் பிடிக்கப்பட்டு உடனடியாக ஹிட்லரின் ரகசிய போலீசின் வசம் ஒப்படைக்கப்படுகிறார்.

சோபி ஸ்காலின் சிலை

சோபி ஸ்கால் விநியோகித்த பிரசுரம் வெறுமனே போரில் இருந்து அரசு பின்வாங்க வேண்டும் என்பதைத்தான் கூறியதே தவிர நாட்டிற்கு எதிராகவோ ஹிட்லருக்கு எதிராகவோ எதுவும் இல்லை. ஆனால் அவர் மீதும் அவரது அண்ணன் ஸ்கால் மற்றும் மற்றொரு வெள்ளை ரோஜா உறுப்பினரான கிரிஸ்டோப் ப்ரோப்ஸ்ட் மீதும் தேச துரோக வழக்கு பதிவுச் செய்யப்பட்டது.

இன்றைய மோடியின் இந்தியாவில் தேச துரோக வழக்கு தொடுக்கப்பட்டால், பல ஆண்டுகள் விசாரணையை இழுத்தடித்து சிறையிலேயே வைத்து அடிப்படை வசதிகள், மருத்துவ வசதிகள் கொடுக்காமல் இழுத்தடித்து மன உளைச்சலுக்கு உள்ளாக்கி படிப்படியாகக் கொலை செய்வதைப் போல் அல்லாமல், அன்றைய ஹிட்லரின் ஜெர்மனியில், சிரச் சேதம் தான் தண்டனை.

ஆம், கில்லெட்டினால் தலை வெட்டப்படும். விசாரணை நடந்தபோது, ஹன்ஸ் ஸ்கால் தமது ‘குற்றத்தை’ ஒத்துக் கொண்டதை ஒட்டி, சோபி ஸ்காலும் ‘குற்றத்தை’ ஏற்றுக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. மேலும் தமது அமைப்பைச் சேர்ந்த பிறர் சிக்கக் கூடாது என்பதற்காக அனைத்துப் பொறுப்புகளையும் தாமே ஏற்றுக் கொண்டார் சோபி ஸ்கால்.

விசாரணையின் போது சோபி ஸ்கால் தீர்க்கமாக ஒன்றைச் சொல்கிறார், “ எல்லாவற்றுக்கும் மேலாக யாராவது ஒருவர் துவக்கிவைக்க வேண்டியது இருக்கிறது. நாங்கள் எழுதியதும் கூறியதும் இன்னும் பலரது எண்ணஓட்டமாகவும் இருக்கிறது. அவர்கள் நாங்கள் செய்ததைப் போல தங்களது எண்ணத்தை தெரிவிப்பதற்கு தைரியமாக இல்லை.” என்று குறிப்பிட்டார்.

தமிழிசையைப் பார்த்தால் “பாசிச பாஜக ஒழிக” என்று கூறுவதற்கு நம்மில் பெரும்பாலானோருக்கு விருப்பம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அன்று ஒரே ஒரு சோபியா தானே வானூர்தியில் வைத்து நேருக்கு நேர் தமிழிசையை பார்த்து பாசிச பாஜக ஒழிக என முழக்கமிட்டார்.

படிக்க :
♦ தோழர் வரவர ராவிற்கு 6 மாத நிபந்தனைப் பிணை ! எல்கார் பரிஷத் வழக்கிலிருந்து அனைவரையும் விடுவி !
♦ மோடி – ஆதித்யநாத் பற்றி பேசிய 293 பேர் மீது தேச துரோக வழக்கு !

இத்தகைய முதல் முன்னெடுப்பைத்தான் அன்று ஜெர்மனியில் சோபி ஸ்காலும் அவரது நண்பர்களும் செய்தனர். இறுதியில் அந்த மூவரும் குற்றவாளிகள், தேச விரோத நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் என்று கூறி சிரச் சேத தண்டனை அறிவிக்கப்பட்டது.

சரியாக 78 ஆண்டுகளுக்கு முன்னர் இதே நாளில், அதாவது பிப்ரவரி 22, 1943, அன்று ஷோபியா ஸ்காலின் தலை கில்லெட்டினில் வெட்டப்பட்டது. சோபியின் மரணம் என்பது ஜெர்மனியில் இது போன்ற எதிர்க் கருத்தைத் தெரிவித்த ஆயிரக்கணக்கானவர்களின் மரணங்களுல் ஒன்றுதான்.

வெறுமனே போரில் இருந்து வெளியேறு என்று கூறிய – ஒரு சிறு எதிர்ப்பைக் காட்டிய – சோபி ஸ்காலின் தலையை அன்று ஹிட்லர் கில்லெட்டினில் வெட்டினான். நமக்கு வாய்த்த ஹிட்லரான மோடியோ, திஷா ரவிக்களையும், நோதீப் கவுர்களையும், வரவர ராவ்களையும், ஆனந்த் தெல்தும்டேக்களையும் இன்னும் நூற்றுக்கணக்கான போராளிகளையும் கொடுஞ்சிறை மூலம் வெட்டி வீழ்த்திக் கொண்டிருக்கிறார்.

இது மிகச் சிறப்பான நாள்.. நான் செல்ல வேண்டும்.. எங்கள் மூலமாக ஆயிரக்கணக்கான மக்கள் விழித்தெழுந்து, நடவடிக்கையில் ஈடுபடும் வகையில் கிளர்ந்தெழுவார்கள் எனில், எனது மரணம் ஒரு பொருட்டல்ல” இவை அன்று கில்லெட்டினில் வெட்டப்படுவதற்கு முன்னர், சோபி ஸ்கால் கூறிய கடைசி வரிகள். கொடுஞ்சிறையில் தள்ளப்பட்ட நம் நாட்டுப் போராளிகளின் உள விருப்பமும் இதுதான். அதனை நிறைவேற்றுவது நமது கடமை !


கர்ணன்

செய்தி ஆதாரம் : Wikipedia

நூல் அறிமுகம் : தூப்புக்காரி || மலர்வதி || சு.கருப்பையா

தூப்புக்காரி என்ற இந்த நாவல், ஒரு துப்புரவுத் தொழிலாளியின் துயரம் நிறைந்த கதையைச் சொல்கிறது. ‘தூப்புக்காரி’யான கனகத்தின் மகள் பூவரசியும், சூழ்நிலை நிர்பந்தத்தின் காரணமாக ‘தூப்புக்காரி’யாகவே வாழ வேண்டிய சூழலை இந்தச்சமூகம் அவளுக்கு கொடுக்கிறது என்பதை இந்த நாவலில் மிகவும் எதார்த்தமாக சொல்லியிருக்கிறார் நாவலாசிரியர் மலர்வதி.

கனகம், பூவரசி, ரோஸ்லின் மற்றும் மாரி ஆகிய பாத்திரப் படைப்புகளின் மூலம் துப்புரவுத் தொழிலாளிகளின் துயர வாழ்க்கையை நம் மூளைக்குள் செலுத்தி விடுகிறார் மலர்வதி. குறிப்பாக, மாரி மலக்குழிகளுக்குள் இறங்கும் போதும், கழிவறைகளில் மலத்தை சுத்தப்படுத்தும் போதும் ஏற்படும் நாற்றம் நமது நாசித்துவாரத்திற்குள் நுழைந்து விடுகிறது. மலர்வதியின் வார்த்தைகளில் உயிர் இருப்பதை நாவலை வாசிக்கையில் உணரமுடியும்.

நாடார் சாதியைச் சேர்ந்த கனகம், தனது கணவனின் மருத்துவச் செலவிற்காக ஏற்பட்ட கடனை அடைப்பதற்காக அந்த மருத்துவமனையில் துப்புரவுத் தொழிலாளியாக சேருவதும், அவளுடைய மருத்துவச் செலவினை அடைக்க பூவரசியும் துப்புரவுத் தொழிலாளியாக மாறுவதும் விளிம்புநிலை மக்களின் துயரத்தை வெளிப்படுத்துகிறது. சக்கிலிய சமூகத்தில் பிறந்த மாரி, தன் பெண்ணைக் கேட்டதற்காக வருந்தும் கனகம், பிறகு தங்களுக்கு அவனே துணை என்று புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்ளும்போது உயர்ந்து நிற்கிறாள்.

படிக்க :
♦ நூல் அறிமுகம் : தியாகி களப்பால் குப்பு || வாய்மைநாதன் || சு.கருப்பையா
♦ நூல் அறிமுகம் : வாட்டாக்குடி இரணியன் || சுபாஷ் சந்திரபோஸ் || சு. கருப்பையா

மனோவிற்கும், பூவரசிக்குமான காதல் இயல்பாக வந்து, அவர்கள் இணைந்து, பின்பு உதிர்ந்து விடுகிறது. அழகான மனோவின் மீது ஏற்பட்ட காதலால் பூவரசிக்கு அழுக்கானவனாகத் தெரியும் மாரி, மனோ அவளைக் கைவிட்ட பின்னரும் அவளை ஏற்றுக்கொள்ளும் போது மனதிலும் செயலிலும் பேரழகனாக உயர்ந்து நிற்கிறான்.

இந்த நாவலுக்கு மாரியே உயிர் கொடுக்கிறான்.

காதலனால் கைவிடப்பட்டு கர்ப்பவதியாகி கலங்கி நிற்கும் பூவரசியின் குழந்தைக்கு தந்தையாகி, அவளை ஏற்றுக் கொள்ளும்போது நாம் நெகிழ்ந்து விடுகிறோம். அந்தக் குழந்தையை, நன்றாக படிக்க வைத்து கழிவுகளை நீக்கும் இயந்திரம் கண்டுபிடிக்க வைத்து, தம் போன்ற துப்புரவுத் தொழிலாளிகளின் இழிந்த வாழ்க்கையை போக்குவோம் என்று வைராக்கியம் கொள்வது அவனின் அழகான கனவு. ஆனால், கனவு நிறைவேறாமலே மரித்துப் போகிறான் மாரி.

மாரியின் இறப்பு பூவரசிக்கு துன்பத்தைத் தந்தாலும், அவனது தன்னம்பிக்கை தரும் வார்த்தைகளின் மூலம் அவள் வாழ்கிறாள்; அவனது கனவை நினைவாக்கும் விதமாக தமது மகளை வளர்க்க வேண்டும் என்று உறுதி கொள்கிறாள்.

இந்த நாவல் என்னுள் மறைந்திருந்த பல நினைவுகளைக் கிளறிவிட்டு வேதனையை உருவாக்கிவிட்டது. 1985-ம் ஆண்டில், நான் பணிபுரிந்த ஒரு நடுத்தரமான கிராமத்தில் நவீன கழிப்பறைகள் கிடையாது; மலத்தை கையில் எடுத்து சுத்தப்படுத்தும் கழிப்பறைகளே இருந்தது. தினமும், காலை வேளையில், துப்புரவுப் பணியாளர்கள் வீட்டின் பின்புறமாக வந்து, “ஐயா, தோட்டி வந்திருக்கிறேன்” என்று சத்தம் கொடுத்து மலத்தைக் கூடைகளில் அள்ளிக் கொண்டு செல்வதும், சாப்பிட ஏதாவது கொடுங்கள் என்று கூக்குரலிட்டதும் ஞாபகம் வந்து என காதுகளுக்குள் இப்போது வலிகளைத் தருகிறது. அந்த குரல்கள் கனகத்தின் குரலாகவே எனக்குத் தெரிகிறது.

மனித மலத்தை கைகளால் அள்ளும் அவலம் இந்தக் கேடுகெட்ட சமூகத்தில் இன்றும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது

இது ஒரு “காத்திரமான தலித் நாவல்” என்று எழுத்தாளர் பொன்னீலன் தனது முன்னுரையில் கூறியிருக்கிறார். இதை கடுமையாக மறுக்கிறேன். எழுத்தில், தலித் இலக்கியம், தலித் எழுத்தாளர்கள் என்றெல்லாம் எதுவுமில்லை. அப்படி அழைப்பது அவர்களை தலித் இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று சுட்டிக் காட்டுவதாகவே கருதுகிறேன்.

அப்படியென்றால், எழுத்தாளர்களின் சாதியை அடையாளப்படுத்தும் விதமாக இது பிராமணிய இலக்கியம்; இது முதலியார் இலக்கியம்; இது வேளாளர் இலக்கியம்; பிள்ளைமார் இலக்கியம் மற்றும் நாயக்கர் இலக்கியம் என்று பெயரிட்டு அளிப்பதில்லையே ஏன்?. தலித் இலக்கியம் என்று அழைப்பதும், ஒரு வகையில் சாதியத்தின் வெளிப்பாடுதான் என்று நம்புகிறேன்.

மலர்வதி, இந்த நாவலின் மூலம் “துப்புரவுத் தொழிலாளிகள்” என்ற விளிம்புநிலை மக்களின் வாழ்க்கையை மிகச் சிறப்பாக பதிவு செய்திருக்கிறார் என்று உறுதியாக கூறலாம். மனித மலத்தை மனிதனே அள்ளும் இந்தத் துயர் துடைக்க மலம் அள்ளும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதன் அவசியத்தை மாரியின் மூலம் நேர்மறையாக பேசுகிறார் நாவலாசிரியர்.

அறிவியல் வளர்ச்சியடைந்துள்ள இந்த காலகட்டத்திலும் கழிவறையை சுத்தம் செய்வதற்கும் , மலக்குழியை அள்ளுவதற்கும் இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படாமலும், நடைமுறைக்குக் கொண்டுவரப்படாமலும், நம் சகமனிதனின் உயிரை பணயம் வைப்பதற்குள் சாதீயம் ஒளிந்திருக்கிறது. தமது இழிநிலையைச் சுமந்து கொண்டும், உயிரைப் பணயம் வைத்தும் இத்தொழிலில் ஈடுபடும் சக மனிதர்களை பலரும் மதிப்பது கூட இல்லை.

மலர்வதியின் வார்த்தையிலிருந்து சொல்வதென்றால், “இந்த ஒலகத்தைச் சுத்தப்படுத்துறதுனாலே தானே நீ அழுக்காகி போகிற. சாக்கடையில எறங்கி, எறங்கி நாத்தம் பிடிச்சி போறியே, ஓங்காலில் யாரங்கிலும் இன்னிக்கும் வரைக்கும் விழுந்துருப்பாங்களா மாரி. மதிப்புமிக்க ஒன் பாதங்களை யாராவது தொட்டாங்களா. இந்த ஒட்டு மொத்த ஒலகம் சார்பா ஓங்காலில் நான் விழுறேன்னு நினைச்சுக்க. ஒதுக்கி ஒதுக்கி அழுக்கன் அழுக்கன் என புறந்தள்ளி போட்டிருக்கே முழு உலகம் சார்பா ஒங்காலிலே விழுறேன்னு நினைச்சிக்க ..” என்று குறிப்பிடுகிறார். அவரின் வார்த்தைகளில் வசீகரம் இருக்கிறது; கவித்துவம் இருக்கிறது; போலித்தனம் இல்லை, சொல்வதை தெளிவாகச் சொல்கிறார். அதனால், தமிழ் இலக்கிய உலகில் இவருக்கான தனித்த இடம் காத்திருக்கிறது.

துப்புரவுத் தொழிலாளர்களின் வாழ்க்கையை பேசிய தகழியின் “தோட்டியின் மகன்”, அறிவழகனின் “கழிசடை” ஆகிய நாவல்களின் தொடர்ச்சியாகவே இந்த நாவலைப் பார்க்கிறேன். ஆனால், அந்த நாவல்கள் சொல்லாத பெண் மனதின் வலியை இந்த நாவல் சொல்கிறது. நேசித்தவனை கரம்பிடிக்க முடியாமலும், அரவணைத்தவனை இழந்தும் வலிகளைச் சுமந்த பூவரசி, ஒரு வலிமையான பெண்ணாக உருமாறுகிறாள்.

தூப்புக்காரி.. உங்களை அழவைக்கிறாள்; சிந்திக்க வைக்கிறாள்; மனதை பக்குவப்படுத்துகிறாள்.

சாகித்திய அகாடமியின் யுவபுரஷ்ஹார் விருது பெற்ற நாவல்

நூல் : தூப்புக்காரி
நூல்ஆசிரியர் : மலர்வதி
வெளியீடு : மதி வெளியீடு
பக்கங்கள் :147
விலை : ரூ 120/-

நூல் அறிமுகம் : சு. கருப்பையா 

 

disclaimer