Monday, June 15, 2026
முகப்பு பதிவு பக்கம் 244

நூல் அறிமுகம் : அமெரிக்க மக்கள் வரலாறு || உலகை கபளீகரம் செய்யும் வல்லூறு || ஹாவர்ட் ஜின்

நூல் அறிமுகம்  –  இறுதிப் பகுதி  :  அமெரிக்க மக்களின் வரலாறு

படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 1
படிக்க : நூல அறிமுகம் – பாகம் 2

படிக்க : நூல் அறிமுகம் – பாகம் 3

1850-ம் ஆண்டில் அமெரிக்க ஜனாதிபதி பி பர்ஸ் ” நமது எல்லையை தொடர்ந்து விஸ்தரிப்பது தீய செயல் என்ற கோழைத்தனவாதங்கள் நம்மை கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்திவிட அனுமதிக்கமாட்டேன். செயலற்று தேங்கி மந்தமாகிக் கிடக்கும் ஆசியாவின் உடலுக்கு உயிரோட்டமுள்ள அசைவுகள் ஏற்படுத்துவது அமெரிக்காவின் கடமையாகும்.” என்ற புதிய கோட்பாட்டை அறிவித்தார்.

அமெரிக்க பொருளாதாரம் நெருக்கடிக்கு உள்ளானது; இதன் விளைவாக அமெரிக்க முதலாளிகளுக்கு வெளிச் சந்தை உடனடியாக தேவைப்பட்டது. உள்நாட்டு நெருக்கடிகளை தணிய வைப்பதற்கு வெளிநாட்டுப் போர்கள் தேவைப்பட்டன.

இன்றளவும் உலகின் ஒவ்வொரு மூலையிலும் ஆக்கிரமிப்புச் செய்யத் தயாராக இருக்கும் அமெரிக்க கொள்கைகளின் துவக்கத்தை வரலாற்று பூர்வமாக எடுத்துரைக்கிறார் நூலாசிரியர். பொதுவான முதலாளித்துவத்தின் இலாபவெறியை பின்வருமாறு எடுத்துரைக்கிறார் மார்க்ஸ்.

இயற்கை வெற்றிடத்தை வெறுப்பது போல் மூலதனம் லாபமின்மையை வெறுக்கிறது.லாபம் 10 சதம் கிடைக்கும் என்றால் அது எங்கு வேண்டுமானாலும் முதலீடு செய்யும். லாபம் 20% கிடைக்கும் என்றால் அதன் ஆர்வம் தூண்டப்படும். 50 சதம் கிடைக்குமென்றால் வலிய திமிராய் நடந்து கொள்ளும். நூறு சதம் லாபம் கிடைக்கும் என்றால் எல்லா மனித விழுமியங்களை துவம்சம் செய்ய அது தயாராகி விடும். 300 சதம் கிடைக்கும் என்றால் குறுகுறுப்பு இல்லாமல் எத்தகைய குற்றத்தையும் அது செய்யும். (மூலதனம் – முதல் பாகம் – காரல் மார்க்ஸ்)

இலாப வெறி தலைக்கேறிய நிலையில் அமெரிக்க முதலாளித்துவம் ஆக்கிரமிப்புப் போர்களைத் துவக்கியது.

படிக்க :
♦ அமெரிக்க இளம் தலைமுறையிடம் வளரும் சோசலிச ஆதரவு !
♦ படரும் போராட்டங்கள் பற்றி எரியும் அமெரிக்கா !

புதிய எல்லையை நோக்கி அமெரிக்காவின் ஆக்கிரமிப்பு போர்கள்

புதிய எல்லையை நோக்கி என்ற முழக்கத்தின் கீழ் அர்ஜென்டினா, நிகராகுவா, ஜப்பான், உருகுவே, சீனா, அங்கோலா என்று அமெரிக்காவின் லாபவெறி படையெடுப்புப் பட்டியல் நீண்டுகொண்டே சொல்கிறது. பிலிப்பைன்ஸை அமெரிக்கா கைப்பற்றி தனது அடிமை நாடாக கொண்டது. பிலிப்பைன்ஸ் நாட்டில் காணப்படும் வளம் கொழிக்கும் பூமி அமெரிக்காவில் எங்கும் கிடையாது. நெல், காப்பி, கரும்பு, தேங்காய், புகையிலை, சணல் அபரிமிதமாக விளையும் செழிப்பான பூமி அது. உலகம் முழுமைக்கும் ஒரு நூற்றாண்டுக்கு தேவையான மரச் சாமான்களை பிலிப்பைன்ஸ் அளிக்கமுடியும். இயற்கை வளங்களைச் சூறையாட ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புப் போர்களை அமெரிக்கா அடுத்தடுத்து நிகழ்த்தியது.

பல நாடுகளையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த அமெரிக்கா இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் இரு நகரங்கள் மீது முதன்முதலாக அணுகுண்டு வீசி மிகப்பெரும் மனித குல நாசத்தை செய்தது. மூலதனத்தின் வெறியாட்டம் இன்றளவும் அடங்கவில்லை. இந்த வெறியாட்டத்தை வரலாற்றில் ஒரு குட்டி நாடு திருப்பியடித்து அதிரச் செய்து.

அசாத்தியமான வெற்றி – வியட்நாம் போர்

உலக வரலாற்றில் மிகவும் செல்வந்த நாடு ஒரு சக்திவாய்ந்த தேசம்; ஒரு சிறிய நாட்டின் புரட்சிகர இயக்கத்தை ஒடுக்குவதற்காக 1964-1972 ஆண்டுகளில் அணுகுண்டை தவிர மற்ற அனைத்து வகை கொடூரமான ராணுவ முறைகளைக் கையாண்டும், அதிகபட்ச கொலைவெறியோடு படுகொலைகளை நடத்தியும் வியட்நாமை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முயன்றது. ஆனால் ஹோ சி மின் தலைமையின் கீழ் வியட்நாம் மக்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் வீரமும் கொண்ட போராட்டத்தின் முன்பு நிற்க முடியாமல் தோல்வியுற்று பின்வாங்கியது.

உலகின் மனசாட்சியை உலுக்கிய புகைப்படம்

வியட்நாம் போரில் அமெரிக்கா பயன்படுத்திய நாபாம் குண்டுகள் எல்லாம் மிகக் கொடூரமானவை. குண்டுவெடிப்பின் போது ஒரு சிறுமி கதறிக் கொண்டு ஓடிவரும் புகைப்படம், உலகம் முழுவதும் உள்ள உழைக்கும் மக்களின் ஆத்திரத்தை அமெரிக்காவிற்கு எதிராகக் கிளப்பியது. மேலும் வியட்நாம் மக்களின் உறுதியான எதிர்ப்புப் போரில் அமெரிக்க வீரர்கள் எக்கச்சக்கமாகப் பலியாகினர். இதன் விளைவாக அமெரிக்கத் தொழிலாளி வர்க்கமும் அமெரிக்க மக்களும் ஏகாதிபத்தியவாதிகள் இதுவரை கண்டிராத யுத்த எதிர்ப்புப் போராட்டங்களை நடத்தினார்கள். தங்களது சொந்த மண்ணிலே அமெரிக்க மேலாதிக்க வாதிகள் இத்தகைய எதிர்ப்புகளை சந்தித்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளின் முகத்திரை கிழிக்கப்பட்டு அதன் கோர முகத்தை அகில உலகம் கண்டு காரி உமிழ்ந்தது. இந்த வரலாற்று விவரங்கள் இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.

“அமெரிக்க ஜனநாயகத்தின் துரோகத்தை பற்றி மக்களுக்கு யார் சொல்வார்கள் ? “ (Who will tell the people? Betrayal of American Democracy) என்ற நூலில் இது குறித்து வில்லியம் கிரயேடர் விரிவாக விளக்கியுள்ளார். சோவியத்து பூச்சாண்டியை காட்டி பயங்கரமான மிதமிஞ்சிய ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்கு ஏராளமான பணத்தை பாதுகாப்புத்துறைக்கு பாய விட்டது. அமெரிக்க வாழ்வில் இது மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியது. ஒரு நீர்மூழ்கி கப்பல் ஆயுத ஏவுகணைகள் உடன் உருவாக்க 150 கோடி டாலர் செலவிடப்பட்டது. அக்காலகட்டத்தில் இந்த 150 கோடி டாலரை வைத்துக்கொண்டு உலகம் முழுவதிலும் உள்ள குழந்தைகளுக்கு 5 ஆண்டுகால நோய்த்தடுப்பு திட்டத்திற்கு செலவு செய்திருந்தால் 50 லட்சம் மரணங்களை தடுத்திருக்க முடியும்.

ஈராக் மக்களின் அழுகுரல்

அமெரிக்கா வளைகுடா நாட்டின் எண்ணெய் வயல்களை, எண்ணெய் வர்த்தகத்தை கையகப்படுத்துவதற்காக அடாவடியாக ஈராக்கின் மீது போர் தொடுத்த வரலாற்று சூழ்நிலை இந்த நூலில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மேலாதிக்க வல்லரசின் வீழ்ச்சியின் துவக்கமாக ஈராக் மக்களின் அழுகுரல் உலகமெங்கும் உரக்கக் கேட்கிறது. யுத்தத்திற்கு எதிராக மாணவர்கள், மனிதநேயம் உள்ள அமெரிக்க மக்கள் யுத்த எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தகவல்கள், இந்த நூலின் வாயிலாக நாம் விரிவாகத் தெரிந்துகொள்ள முடிகிறது.

“தேசபக்தி – பின்னே ஒளிந்திருக்கும் வர்க்க நலன் “

தேசபக்தி – தேச நலன் என்ற போர்வைக்குள் எவ்வாறு வர்க்க நலன் ஒளிந்திருக்கிறது என்பதை இந்நூலாசிரியர் வரலாற்று ஆதாரங்களோடு நிறுவுகிறார். “யுத்தம் தொடுக்க வெகுசிலர் முடிவெடுக்கின்றனர். அந்த யுத்தத்தின் விளைவாக உள் நாட்டிலும் வெளிநாட்டிலும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கொல்லப்படுதல் அல்லது ஊனமுறுதலில் எதேனும் தேசநலன் இருக்கிறதா? யாருடைய நலனுக்காக இதைச் செய்கிறோம்? என குடிமக்கள் கேட்கக் கூடாதா? வரலாற்றை கற்க தொடங்கியதும் என்னை ஒரு விஷயம் கடுமையாக பாதித்தது. விசுவாசம், உறுதி மொழிகள் மூலமும் தேசிய கீதங்கள் இசைத்தல், தேசிய கொடிகளை அசைத்தல் மூலமும், வாய்ச்சவடால் உரைகள் மூலமும் குழந்தைப் பருவத்திலேயே புதிய உத்வேகம் ஆழமாகப் பதிய வைக்கப்படுவது என்னை மிகவும் பாதித்தது. நமது மனங்களில் இருந்து எல்லைகளைத் துடைத்து எறிந்துவிட்டால் உலகமெங்கிலும் இருக்கும் குழந்தைகள் நமது குழந்தைகள் போன்றவர்களே!”

படிக்க :
♦ பாரிஸ் கம்யூன் 150 : உலகின் முதல் புரட்சிகர அரசு || கலையரசன்
♦ சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்

“ஒரு விரிந்த சிந்தனையை மேற்கொண்டு சிந்திக்கத் துவங்க வேண்டும். அவ்வாறு சிந்திக்கத் துவங்கினால், வியட்னாமில் ‘நாபாம்’ குண்டுகளை வீச மாட்டோம்; ஹிரோஷிமாவில் அணுகுண்டு போட மாட்டோம். எங்கும் யுத்தங்களை தொடங்க மாட்டோம். ஏனென்றால் யுத்தங்கள், நமது காலத்தின் யுத்தங்கள் எப்போதும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களாகவே இருக்கின்றன” என்று அமெரிக்க ஆக்கிரமிப்பு போர்களுக்கு எதிரான தனது மனிதநேயக் குரலை இந்நூலாசிரியர் அழுத்தமாக இந்நூலில் பதிவு செய்துள்ளார்.

பொய்களும் – புரட்டுகளும் – பேராசையும் – மமதையும் – அறியாமையும் – உணர்ச்சியற்ற குணமும் – சுயநலமும் – குரூரமும் – பழிவாங்குதலும் – அநீதியும் – லஞ்ச லாவண்யமும் – சுரண்டலும் நிரம்பிய காவியம் ஆகிவிட்டது அமெரிக்காவின் வரலாறு. அமெரிக்க செல்வச் செழிப்பு, வலிமை ஆகியவற்றுடன் மனித உணர்ச்சியற்ற தன்மை; சுயநலம் ஆகியவை இணைந்து இருப்பதுதான் மனிதகுல அனுபவத்தின் மிகப்பெரும் பேரழிவு ஆயுதம் (Weapon of Mass Destruction) என்பதை அமெரிக்கா அனுபவத்தின் மூலம் மனித குலம் கற்றுக் கொண்டுள்ளது.( புஷ்பா எம் பார்க்கவா இந்து நாளிதழ் 26-6-03)

அமெரிக்க அறிஞர் நோம் சோம்ஸ்கி, “அடாவடி அரசுகள் உலக விவகாரங்களில் வன்முறையின் ஆளுமை” (Noam Chomsky – Rougue states-Rule of force in World affairs) என்ற விரிவான நூலை வெளியிட்டார். லட்சக்கணக்கான பழங்குடி மக்களை கொலை செய்தது; அவர்களது நிலங்களை திருடியது. லட்சோப லட்ச கருப்பின மக்களை ஆப்பிரிக்காவில் பிடித்துவந்து அடிமையாகி; ஈவிரக்கமில்லாமல் அவர்களது உழைப்பைச் சுரண்டியது; இனப்படுகொலை செய்தது. மனிதநேயமற்ற கொடூரங்கள் இவையே அமெரிக்காவின் அடித்தளம் என்பதை நோம் சோம்ஸ்கி இந்நூலில் நிறுவியுள்ளார். “அமெரிக்க சாம்ராஜ்யத்தின் கதிரவன் அஸ்தமித்து விடும். நிச்சயம் இது நடந்தே தீரும்; நோம் சோம்ஸ்கியின் இந்தநூல் நீடித்து நிலைக்கும்” என எழுத்தாளர் அருந்ததிராய் உறுதிபடக் கூறுகிறார்.

அமெரிக்காவைப் பற்றி இதுவரை வெளிவந்த நூல்களிலே முற்றிலும் மாறுபட்டதாக “அமெரிக்க மக்களின் வரலாறு” என்ற இந்த நூல் திகழ்கிறது. அமெரிக்க மக்களின் –  அமெரிக்க தொழிலாளி வர்க்கத்தின் – அமெரிக்க ஜனநாயக சக்திகளின் – போர்க்குணமிக்க போராட்ட மரபை புதிய கோணத்தில் இந்த நூல் நமக்கு விளக்குகிறது. சிறந்த வரலாற்று அறிஞரும் பேராசிரியருமான ஹாவார்ட் ஜின் அமெரிக்கா பற்றிய ஒரு புதிய பார்வையை நமக்கு வழங்கியுள்ளார்.

“ஆழ்ந்த தூக்கத்திற்கு பின் எழும்
சிங்கங்களை போல் எழுங்கள்!
வெல்லப்பட முடியாத எண்ணிக்கையில் எழுங்கள்!
உங்கள் விலங்குகளை தரையில் அடித்து பனித்துளி போல் உடையுங்கள்!
நீங்கள் தூங்கும்போது விலங்கிடப்பட்டவர்கள்!
நீங்கள் பலர்; அவர்களோ வெகு சிலர்.”

என்ற கவிஞர் ஷெல்லியின் கவிதை வரிகளோடு இந்த நூலை நிறைவு செய்துள்ளார் ஹாவாட் ஜின்.

அமெரிக்க மேலாதிக்க வல்லரசை எதிர்த்த போராட்டப் பேரலை அமெரிக்க மண்ணில் விரைவில் உருவாகும். அமெரிக்க உழைக்கும் மக்கள் சமத்துவ விடியலுக்கான போராட்ட திசைவழியில் வெற்றி பெறுவார்கள். இந்த சிறப்பான நூலை சிந்தன் புக்ஸ் நிறுவனத்தார் தமிழில் வெளியிட்டுள்ளனர்; இந்த அற்புதமான நூலை மொழியாக்கம் செய்த மாதவ் உள்ளிட்ட குழுவினருக்கு நமது பாராட்டுக்கள்.

இந்தியாவில் சமூக மாற்றத்திற்காக போராடும் சமத்துவ போராளிகள்; ஜனநாயக சக்திகள் இந்த நூலை படித்துப் பயன்பெற வேண்டும். மொழிபெயர்ப்பில் சில குறைகள் இருந்தாலும் இந்த நூல் நிகழ் காலத்தின் தேவைகளில் ஒன்றாகும்.

(முற்றும்)

நூல் : அமெரிக்க மக்களின் வரலாறு
நுல் ஆசிரியர் : பேராசிரியர் ஹாவாட் ஜின் (People History of USA)
தமிழில் : மாதவ்
பக்கங்கள் : 848
வெளியீடு : சிந்தன் புக்ஸ்
விலை : ரூ. 900.00
கிடைக்குமிடம் : சிந்தன் புக்ஸ்
132/251, அவ்வை சண்முகம் சாலை,
கோபாலபுரம், சென்னை – 86.
தொடர்புக்கு : 94451 23164.

நூல் அறிமுகம் : காமராஜ்

disclaimer

பாரிஸ் கம்யூன் 150 : உலகின் முதல் புரட்சிகர அரசு || கலையரசன்

0

பாரிஸ் கம்யூனிஸ்ட் அரசு உருவாகி 150 ஆண்டுகள்

1870-ம் ஆண்டு நடந்த பிரான்ஸ், ஜெர்மன் யுத்தத்தின் பின் விளைவாக கம்யூன் உருவானது. பிரான்ஸ் நாட்டின் சக்கவர்த்தி மூன்றாம் நெப்போலியன், அவரது படையினரால் சிறை பிடிக்கப் பட்டிருந்தார். அன்று பிரஷியன் என அழைக்கப்பட்ட ஜெர்மன் படைகள் பாரிஸ் நகரை சுற்றி வளைத்தன. மன்னராட்சி சரணடைந்த படியால், செப்டம்பர் 4-ம் தேதி குடியரசு பிரகடனப் படுத்தப்பட்டது. அதற்கு பாரிஸ் உழைக்கும் வர்க்க மக்களின் அழுத்தமும் ஒரு காரணம்.

ஜெர்மன் படையினரால் சுற்றிவளைக்கப் பட்டிருந்த பாரிஸ் நகரில் பல மாத கால பட்டினிக்கு பின்னர் தொழிலாளர்கள் புதிய குடியரசை ஒரு ஜனநாயகக் கம்யூனாக மாற்றும் நடவடிக்கைகளில் இறங்கினார்கள். ஆனால் அதுகுறித்து பூர்ஷுவா குடியரசு அக்கறைப் படவில்லை . 22 ஜனவரி நடந்த தொழிலாளர்களின் ஆர்ப்பாட்டம் கடுமையாக அடக்கப் பட்டது.

28 ஜனவரி, பிரான்சின் குடியரசும் ஜெர்மனியர்களிடம் சரணடைந்தது. பிரெஞ்சுப் படையினரிடமிருந்த ஆயுதங்கள் களையப் பட்டன. ஆனால் தொழிலாளர்களை பெரும்பான்மையாகக் கொண்டிருந்த பாரிஸ் இராணுவப் பிரிவு ஆயுதங்களை ஒப்படைக்க மறுத்தது.

படிக்க :
♦ மூலதனத்தின் நோயை முறியடிப்பது எப்படி ?
♦ ஒரு ஆட்சிக் கவிழ்ப்பின் திரைக்கதை – ஆவணப்படம்

18 மார்ச், வெர்சேய் நகரில் இருந்து இயங்கிய பிரெஞ்சு பூர்ஷுவா அரசு தனது இராணுவத்தை அனுப்பி பாரிஸ் பிரிவின் ஆயுதங்களை களையுமாறு உத்தரவிட்டது. ஆனால் அங்கு ஒரு மோதல் நிலையை எதிர்கொண்ட படையினர் பாரிஸ் மக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்ய மறுத்தனர். அந்தக் கணத்தில் இருந்து ஆயுதமேந்திய தொழிலாளர்கள் பாரிஸ் நகரின் அரசு அதிகாரத்தை தமது கைகளில் எடுத்துக் கொண்டனர்.

வெற்றிகரமான தொழிலாளர் புரட்சிக்கு பாரிஸ் கம்யூன் ஓர் உதாரணம். சர்வதேச சோஷலிச இயக்கங்களை பொறுத்த வரையில், பாரிஸ் தொழிலாளர்கள் தமது முதலாளித்துவ, மன்னராட்சி ஒடுக்குமுறையாளர்களுக்கு எதிரான துணிகரமான எழுச்சியை நடத்திக் காட்டினார்கள். இதைத் தான் கார்ல் மார்க்ஸ் பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் என்று சொன்னார். அதாவது உண்மையான பெரும்பான்மை மக்களின் ஜனநாயகம். மேல்தட்டு வர்க்கத்தை சேர்ந்த சிறுபான்மையினரின் ஆட்சிக்கு மாறாக, பெரும்பான்மையான சாதாரண உழைக்கும் வர்க்க மக்கள் அதிகாரத்தை கைப்பற்றுவதே உண்மையான ஜனநாயகம் ஆகும்.

பாரிஸ் கம்யூன் ஒரு குறுகிய காலம் மட்டுமே நீடித்த போதிலும் அன்று அது பல முற்போக்கான திட்டங்களை நடைமுறைப் படுத்தியது. உதாரணத்திற்கு இரவு வேலைகளும், சிறுவர்களை வேலையில் ஈடுபடுத்துவதும் இரத்து செய்யப் பட்டன. கல்வித்துறையில் கத்தோலிக்க திருச் சபை கொண்டிருந்த இரும்புப் பிடி துண்டிக்கப் பட்டது. அத்துடன் பெண்களும் கம்யூன் உருவாக்குவதில் பெரும் பங்கு வகித்தனர்.

அனைத்து மக்களுக்குமான பொது வாக்குரிமை மூலம் தெரிவு செய்யப் பட்ட உறுப்பினர்கள் கம்யூன் நிர்வாகத்தை நடத்தினார்கள். அவர்கள் எந்த நேரத்திலும் அகற்றப் படலாம். மேலும் அவர்களது வேலைக்கு தொழிலாளர்களுக்கு கொடுக்கும் அளவிற்கு சமமான ஊதியம் வழங்கப் பட்டது. போலிஸ், இராணுவம் இல்லாதொழிக்கப் பட்டு, ஆயுதபாணிகளான மக்கள் பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டனர்.

கம்யூன் நிர்வாகம் குறித்து கார்ல் மார்க்ஸ் எழுதியதாவது:
” மூன்று அல்லது ஆறு வருடங்களுக்கொரு தடவை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப் படுத்தவும், அடக்குவதற்கும் அதிகார வர்க்கத்தை சேர்ந்த எவரை அனுப்பலாம் என்பதற்குப் பதிலாக, பொதுவான வாக்குரிமை கம்யூன் ஒருங்கமைத்த மக்களுக்கு சேவையாற்றும்.”

பழைய முதலாளித்துவ அரசை அகற்றி விட்டு அதனை உழைக்கும் வர்க்கத்தின் தன்னாட்சி அதிகாரமாக மாற்றியமைப்பதில் கம்யூன் மிகப் பெரிய அடியெடுத்து வைத்துள்ளது. இருப்பினும் அது இந்த விடயத்தில் நீண்ட தூரம் செல்லாத படியால், அதுவே வீழ்ச்சிக்கான காரணங்களில் ஒன்றாகியது. உதாரணத்திற்கு முதலாளித்துவ பணப் பரிவர்த்தனையை நிறுத்தும் நோக்கில் தேசிய வங்கியை கம்யூன் பொறுப்பெடுத்திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. அது மட்டுமல்ல, கம்யூன் எதிர்ப்பாளர்களுக்கும் சுதந்திரம் கொடுக்கப் பட்டிருந்தது.

அவர்கள் எந்த விதத் தடையும் இல்லாமல் கம்யூனைக் கவிழ்க்கும் சூழ்ச்சிகளில் ஈடுபட முடிந்தது. அதே நேரம் கம்யூன் தொழிலாளர்கள், நாட்டுப்புறங்களில் இருந்து முற்றாகத் துண்டிக்கப் பட்டிருந்தனர். அங்கே வாழ்ந்த விவசாயிகள் அவர்களது கூட்டாளிகள் என்பது மட்டுமல்லாது ஒரே ஆளும் வர்க்கத்தினரால் ஒடுக்கப்பட்டு வந்தனர்.

இதற்கிடையே, யுத்த சூழ்நிலை நிலவிய போதிலும் ஜெர்மன், பிரெஞ்சு ஆளும் வர்க்கங்கள் தமக்கிடையிலான பகைமையை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்தன. இல்லாவிட்டால் அவர்களுக்கு பொதுவான வர்க்க எதிரியான பாரிஸ் கம்யூன் இலகுவாக தோற்கடிக்க முடியாது எனக் கண்டு கொண்டனர். வேர்செயில் இருந்த பிரெஞ்சு அரசு புதிய இராணுவத்தை உருவாக்குவதற்கு உதவியாக, அதுவரை காலமும் ஜெர்மன் சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த பிரெஞ்சுப் படையினர் ஜெர்மன் சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் விடுதலை செய்யப் பட்டனர்.

மே மாதம் 21 ம் தேதி, கம்யூன் கட்டுப்பாட்டில் இருந்த பாரிஸ் நகரைக் கைப்பற்றுவதற்காக புதிய பிரெஞ்சு இராணுவம் படையெடுத்து வந்தது. அப்போதும் பாரிஸ் நகரை சுற்றிவளைத்து நின்று கொண்டிருந்த ஜெர்மன் படையினர், அவர்களுக்கு வழிவிட்டனர். அடுத்து வந்த எட்டு நாட்களும், கம்யூன்வாதிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும், பிரெஞ்சுப் படையினர் ஏராளமான தொழிலாளர்களை கொன்று குவித்தனர்.

1871ம் ஆண்டு மே மாதம் 28 ம் தேதி, பாரிஸ் கம்யூன் ஒரு துயர முடிவுக்கு வந்தது. அங்கு ஓர் இனப்படுகொலை நடந்தது மட்டுமல்ல, பாரிஸ் கம்யூன் இருந்தமைக்கான தடயங்கள் அனைத்தும் அழிக்கப் பட்டன. இன்று எஞ்சியிருப்பது நிராயுதபாணிகளான கம்யூன்வாதிகளை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய ஒரு மதில் சுவர் மாத்திரமே. அந்த இடம் இன்றும் சுடுகாடாகவே காட்சியளிக்கிறது.

கலையரசன்
நன்றி : கலையகம்

disclaimer

கர்நாடக பாஜக – ஒரு பாலியல் குற்றக் கும்பல் !

பாஜக என்றாலே குற்றக் கும்பல் என்று பொருள்படும் வகையில்தான் அந்தக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களுமே இருக்கின்றன. நிதி மோசடி தொடங்கி, பாலியல் வன்முறை வரை அனைத்து விதமான குற்றங்களையும் செய்தவர்கள்தான் அந்தக் கட்சியில் குடி கொண்டிருக்கிறார்கள்.

இந்நிலையில் கர்நாடகாவில் பாஜக அமைச்சர்கள் 6 பேர் தங்கள் தொடர்பான ஆபாச வீடியோக்கள் இணையத்தில் வெளியிடப்படுவதற்குத் தடை கோரி கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கும் அவலமும் நடந்திருக்கிறது.

கர்நாடக பாஜக-விற்கென்றே ஒரு தனி பாரம்பரியம் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்னர், பாஜக எம்.எல்.ஏ ஒருவர் கர்நாடக சட்டமன்றத்திலேயே அமர்ந்து கொண்டு தனது மொபைலில் ஆபாச வீடியோவைப் பார்த்துக் கொண்டிருந்தது அம்பலமானது.

அதனைத் தொடர்ந்து அக்கட்சியின் தற்போதைய முதல்வரான எடியூரப்பா தொடர்பான பாலியல் புகார்கள் சந்தி சிரிக்கத் துவங்கின. கடந்த 2020-ம் ஆண்டில் காவிரி நீர் திறப்பு விழாவில் நடிகையும் எம்.பி.யுமான சுமலதாவுடன் எடியூரப்பா நடந்து கொண்டது முதல், சமீபத்தில் எடியூரப்பா வீட்டிலேயே எடுக்கப்பட்ட ஆபாச வீடியோக்களை கைவசம் வைத்து சிலர் மிரட்டுவதால்தான், எடியூரப்பா சம்பந்தம் இல்லாத நபர்களுக்கெல்லாம் அமைச்சர் பதவி கொடுத்திருப்பதாக அவரது கட்சியின் பிரமுகர்களே கூறியிருப்பது வரை அம்பலமாகியுள்ளது.

சமீபத்தில், கர்நாடகா பல்லாரி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜசேகர் முலாலி என்பவர், பாஜக அமைச்சர்கள் உள்ளிட்ட 19 பேரின் ஆபாச வீடியோக்கள் தன்னிடம் உள்ளதாகவும், அதை விரைவில் வெளியிடப் போவதாகவும் அறிவித்தார். அந்த வீடியோக்களை தங்களிடம் ஒப்படைக்குமாறு போலீசு கோரியது. இதைக் கேள்விபட்டு பயந்து அலறிப்போன பாஜகவை சேர்ந்த அமைச்சர்கள் 6 பேர், தாங்கள் தொடர்புடைய வீடியோக்களை சமூக ஊடகங்களில் வெளியிடக் கூடாது என பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்து தடையுத்தரவும் பெற்றனர்.

பாஜக ஒரு கிரிமினல் பாலியல் குற்றக் கும்பல் என்பதற்கு இது ஒரு வகை மாதிரி. இந்தக் கிரிமினல் கும்பல்தான், தமிழகத்தில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை இழிபுகழ் அதிமுக-வுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தே தீருவோம் என்று கூவுகிறது.

பாஜக ஒரு கட்சியே அல்ல, அது குற்றக் கும்பலின் கூடாரம். பாலியல் ஒழுக்கக்கேடு மற்றும் கொலைகார கிரிமினல்களைக் கொண்டே கட்சியைக் கட்டியமைத்து, கலவரம் செய்து பாசிச சர்வாதிகாரத்தை நிறுவத் துடிக்கும் பாஜகவை இந்தியாவிலிருந்தே துடைத்தெறிவதுதான் காலத்தின் அவசியமாக இருக்கிறது !

கருத்துப்படம் :

கருத்துப்படம் : மு.துரை

தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு? || மக்கள் அதிகாரம்

PP Letter headன்பார்ந்த உழைக்கும் மக்களே!

ஓட்டு கேட்பதும் ஓட்டுப்போடுவதும் வியாபாரமானது!
உரிமையெல்லாம் குப்பைக்குப் போனது!
இம் என்றால் சிறை, ஏனென்றால் துப்பாக்கிச் சூடு!
இனியும் தேர்தல்தான் ஜனநாயகம் என்ற மூடநம்பிக்கை எதற்கு?

நாடாளுமன்றம் முதல் ஊராட்சி மன்றம் வரை
எல்லாமே கார்ப்பரேட்டுகள் கையில்!
எதை மாற்றப் போகிறாய் நீ வைக்கும் மையில்?

கிராம சபை தீர்மானத்தை
கலெக்டர் ரத்து செய்யலாம்!
சட்டமன்ற தீர்மானத்தை
கவர்னர் செல்லாக் காசாக்கலாம்!

மாநிலங்களே சமஸ்தானங்களான பிறகு,
நாக்கு வழிக்கவா சட்டமன்றத் தேர்தல்?

சீமான்-கமலஹாசன்-சரத்குமார்-டிடிவி:
எல்லாமே ஓரணி, பா.ஜ.க.தான் பின்னணி!

தமிழகத்துக்கு ஒரு மாதத்தில் ஒரே கட்ட ‘ஜனநாயகம்’
மேற்கு வங்கத்துக்கு ரெண்டு மாத எட்டு கட்ட ‘ஜனநாயகம்’
ஆளும் கட்சிக்கு ஜால்ரா போடும் தேர்தல் கமிசன்,
பா.ஜ.க.-அ.தி.மு.க. கும்பலின் ஏஜெண்டே!

ஓட்டுக்கு பணம் கொடுப்பதையும் வாங்குவதையும்
கள்ள ஓட்டையும் தடுக்க முடியாது;
கண்டெய்னர் பணத்துக்குக் கணக்கு சொல்லமுடியாது!
நேத்துவரைக்கும் லஞ்சம் வாங்குன அதிகாரி
இன்னைக்கு நேர்மையான தேர்தல் அதிகாரியாம்!
நம்பாதே, நம்பாதே, இது நேர்மையான தேர்தல் என்று நம்பாதே!

மீத்தேன், சாகர் மாலா, எட்டுவழிச் சாலை;
ஜி.எஸ்.டி., நீட், புதிய கல்விக் கொள்கை;
வேளாண் சட்டத் திருத்தம்,
தொழிலாளர் சட்டத் திருத்தம்,
மின்சார சட்டத் திருத்தங்கள்…
எதையும் தடுக்க முடியாதென்றால், தேர்தல் எதற்கு?

கோடீசுவரர்கள், கிரிமினல்களின் கூடாரமாய்
சட்டமன்றங்களும் நாடாளுமன்றமும்!
பன்னாட்டுக் கம்பெனிகளின் பகற்கொள்ளைக்கு
கங்காணிகளாய் கலெக்டர்கள், அதிகாரிகள்!
நீதியை விலைபேசும் நீதிபதிகள்!
வல்லுறவு – கொலை – வழிப்பறிக்கு வழிகாட்டியாய் போலீசு!
அரசும் சமூகமும் அழுகி நாறுது!
அதற்கு அத்தர் பூசத்தான் தேர்தல் வருகிறது!

சென்னையிலே அரசாங்கம், டெல்லியிலே அதிகாரம்!
பார்ப்பன மயமாக்கமே தேசியக் கலாச்சாரம்!
இதற்கு சட்டமன்றத் தேர்தல் ஒரு அரிதாரம்!
காவிதான் கொள்கை என்றான பிறகு
தேர்தல் எதற்கு, வாக்கு எதற்கு?

போலி ஜனநாயகத்தை அடித்து நொறுக்கு!
மக்கள் அதிகாரத்தைக் கட்டி எழுப்பு!

அம்பானி, அதானி சொத்துக்களைப் பறிமுதல் செய்வோம்!
கல்வி, மருத்துவம், தண்ணீர், போக்குவரத்து, தொலைபேசி,
மின்சாரம் உள்ளிட்ட அனைத்து சேவைத் துறைகளிலும்
தனியார்மயத்தை ஒழித்து பொது உடமையாக்குவோம்!
வளர்ச்சி என்ற பெயரில் நீர், நிலம், காற்று உள்ளிட்ட
சுற்றுச்சூழலைச் சூறையாடி நஞ்சாக்கும்
கார்ப்பரேட் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டுவோம்!

காவி – கார்ப்பரேட் பாசிசத்துக்கான
போலி ஜனநாயகத் தேர்தலைப் புறக்கணிப்போம்!
உழைக்கும் மக்கள் அதிகாரத்தை நிறுவுவோம்!

மக்கள் அதிகாரம்
தமிழ்நாடு – புதுவை
9962366321

 

பெண்கள் மீது தொடரும் சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டல் !

ந்தியா போன்ற சாதிய சமூகத்தில், நவீன தொழிற்துறையில் ஆணாதிக்கமும் சாதியும் மூலதனமும் ஒன்றிணைந்து பெண்களின் மீது செலுத்தும் ஆதிக்கம் மிக நுட்பமானதாக இருக்கிறது. பெண்களின் விடுதலை குறித்துப் பேசும் பலரும், உழைக்கும் பெண்கள் மீதான ஆணாதிக்க சாதிய மற்றும் மூலதனத்தின் சுரண்டலைப் பற்றிப் பேசுவதில்லை.

கடந்த ஜனவரி 1-ம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் நாச்சி அப்பேரல்ஸ் என்னும் ஜவுளி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த இளம் பெண் செயஸ்ரீ என்பவர் கொலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து நடந்த விசாரணையில், அதே தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்து வந்த தங்கதுரை, செயஸ்ரீக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததும் சம்பவம் நடந்த அன்று தங்கராஜும் அவரது உறுவினர் ஜெகநாதனும் சேர்ந்து செயஸ்ரீயை கொலை செய்தது தெரிய வந்தது. அதனைத் தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால், இந்த செய்தி எந்த ஒரு தேசிய ஊடகங்களிலும் பேசப்படவில்லை.

படிக்க :
♦ உணவுக்குக் கையேந்தப் போகிறோமா ? || நெருங்கி வரும் இருள் !
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு

செயஸ்ரீ கொல்லப்பட்டதை சாதாரண கொலையாக மட்டும் கடந்து போகமுடியாது. ஏனெனில், இதுபோன்ற நிகழ்வுகள் பெண்கள் அதிகமாக வேலை செய்யும் ஜவுளி தொழிற்சாலைகளில் அடிக்கடி நடக்கக்கூடியதாக இருக்கிறது.

பெண்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்கும், இந்த ஆலைகளின் நிர்வாகங்கள், பெண்களின் பாதுகாப்புக்கு எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதில்லை. செயஸ்ரீ படுகொலையிலும் அதற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்கிறது நாச்சி அப்பேரல்ஸ் நிறுவனம்.

சர்வதேச அளவிலான ஏற்றுமதிக்காக உள்ளூர் பெண்களின், குறிப்பாக கிராமப்புற பெண்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்களில் பாதுகாப்பு கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

செயஸ்ரீ படுகொலை தொடர்பாக, தமிழ்நாடு ஜவுளி மற்றும் பொதுத் தொழிலாளர்கள் சங்கம், ஆசிய ஊதிய கூட்டமைப்பு ஆகிய அமைப்புகள் சேர்ந்து சமர்பித்த உண்மையறியும் குழுவின் அறிக்கையில், செயஸ்ரீ தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தலித் சமூகத்தை சேர்ந்த செயஸ்ரீ, நாச்சி அப்பேரல்ஸில் கடந்த 2018-ம் ஆண்டிலிருந்து வேலை செய்து வருகிறார். முதுகலை படிப்பு படித்து வந்த செயஸ்ரீ தனது படிப்பு செலவுக்காக இரவு நேர சிஃப்டில் (4.30pm – 1am) பணியாற்றிவந்தார்.

தனது வேலைப் பொறுப்பாளரான தங்கதுரை மீது வேலை நிமித்தமாக புகார் கொடுத்ததில் இருந்து தொடர்ந்து செயஸ்ரீயை சாதிய ரீதியில் சாடியும், பாலியல் துன்புறுத்தல் செய்தும் மிரட்டியுள்ளார் தங்கதுரை.

இது பற்றி ஆலையில் பணிபுரியும், பெயர் கூற விரும்பாத நபர்கள் சிலர் ஒருமித்த குரலில் சொல்வது, “தலித் பெண் என்பதால்தான் செயஸ்ரீ கொலை செய்யப்பட்டிருக்கிறார்” என்பதுதான். தங்கதுரை தங்களையுமே சாதியரீதியில் இழிவுபடுத்துவார் என்பதையும் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

1980-ள் வரை தலித் மக்கள் ஜவுளி ஆலைகளில் வேலைசெய்ய அனுமதிக்கப்படவில்லை. அவர்கள் துப்புரவு பணிக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சர்வதேச அளவில் ஏற்றுமதிக்கான தேவை அதிகமான போது, தலித் மக்களை குறைந்த கூலிக்கு வேலையில் சேர்த்துகொண்டனர். ஆனால், நிர்வாகம், மேற்பார்வை போன்ற பணிகளுக்கு ஆதிக்க சாதிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.

மறுகாலனியாக்கத்தின் தாக்கத்தால் விவசாய பொய்த்துப் போன நிலையில் மதுரை, தேனி, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பலரும் குறிப்பாக நிலமற்ற தலித்துகள் திண்டுக்கல், திருப்பூர் போன்ற ஜவுளித்துறை நகரங்களை நோக்கி அடிமாட்டுக் கூலிக்குப் பணிபுரிய அனுப்பப்பட்டனர்.

ஜவுளித்துறை நிறுவனங்களில் ஆட்களைச் சேர்த்து விடுவதையே தொழிலாகச் செய்து வரும் தரகு நிறுவனங்களும், தரகர்களும் பெண்களின் பெற்றோரிடம் துவக்கத்திலேயே, உங்கள் மகள் ஓடிப்போனால் ஆலை நிர்வாகம் பொறுப்பல்ல” என்று ஒப்பந்தம் செய்துகொள்கிறார்கள்.

படிக்க :
♦ CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

உற்பத்தியின் உலகமயமாக்கல், பெருமளவில் பெண்களை ஆலைக்கு குறிப்பாக ஜவுளி ஆலைகளுக்கு மலிவு விலை தொழிலாளர்களாக இழுத்துவந்திருக்கிறது. ஜவுளி ஆலைகளில் பெருமளவில் பெண்கள் வேலை செய்தாலும், நிர்வாகம், மேற்பார்வை போன்ற பணிகளுக்கு ஆண்கள் மட்டுமே அமர்த்தப்படுகிறார்கள்.

இப்படி அழைத்து வரப்படும் பெண்கள் அடிமாட்டுக் கூலிக்குப் பணியமர்த்தப்படுகிறார்கள். காரணம், எவ்வளவு வேலைகளைக் கொடுத்தாலும் செய்துவிடுகிறார்கள் என்பதோடு, அடிக்கடி விடுமுறை எடுப்பது என்பது போன்ற தொல்லை கிடையாது என்பதுதான்.

உழைப்புச் சுரண்டல் ஒருபுறம் இருக்க, மறுபுறத்தில் சாதியரீதியான ஏற்றத்தாழ்வு மிகவும் உக்கிரமாகவும் இங்கு நிலவுகிறது. சூப்பர்வைசர்களை எதிர்த்துப் பேசினாலோ, பாலியல் வக்கிரங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்தாலோ, சாதிய ரீதியான வசைபாடுகளும் தொடர்ந்து சொல்ல முடியாத அளவிற்கு பாலியல் துன்புறுத்தல்களும்தான் தண்டனை.

இந்த தொடர்ச்சியான துன்புறுத்தலில் மனமுடைந்து அந்தப் பெண் தற்கொலை செய்துகொண்டாலோ அல்லது கொல்லப்பட்டாலோ 10 ஆயிரம் அல்லது 20 ஆயிரம் இழப்பீடு கொடுத்து முடித்துவிடுகிறார்கள்.

கடந்த நான்கு ஆண்டுகளில் திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் மட்டுமே, 62 ஜவுளி ஆலைத் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்டிருக்கிறார்கள். அவர்களில் 90% பேர் தலித் அல்லது புலம்பெயர் இளம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Fabric of Slavery” என்று கடந்த 2016 ஆண்டு வெளிவந்த அறிக்கை, 2,286 பெண் தொழிலாளர்களை நேர்காணல் செய்தது. இந்த அறிக்கை தயார் செயவதற்காக, பெண் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பங்கேற்ற Focus Group Discussion என்னும் விவாதக்கூட்டம் நடத்தப்பட்டது. அதில், “பெண் தொழிலாளர்கள் தாங்கள் வேலை செய்யுமிடத்தில் நடக்கும் பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி புகார் செய்வதே இல்லை. அவர்களுடன் வேலை செய்யும் பெண்களிடம் மட்டுமே சொல்கிறார்கள்” என்பது தெரியவந்தது.

இந்த ஆய்வுக்கு மாதிரியாக எடுத்துக்கொள்ளப்பட்ட 743 ஆலைகளில், 64 ஆலைகளில் நடந்த பாலியல் துன்புறுத்தல்கள் பற்றி பத்திரிகை செய்திகள் வெளிவந்திருக்கின். 743 ஆலைகளில் வெரும் 10 ஆலைகளில் மட்டுமே முறையான தொழிற்சங்கங்கள் இருக்கின். அதாவது 94% ஆலைகளில் தொழிலாளர்களை பிரதிநிதித்துவம் செய்யும் எந்த அமைப்புகளும் இல்லை என்பதே நிதர்சனம்.

சொல்லிக்கொள்ளப்படும் நவீனமயமான உலகம் என்பது அதன் சமூக பிற்போக்குதனங்களை சூழலுக்கு ஏற்றாற்போல தகவமைத்து எடுத்துக்கொள்கிறது. தொழிற்சாலைகளில் இன்னும் சாதி உக்கிரமாகவே இருக்கிறது. அது குறிப்பாக தலித் பெண்களை வேட்டையாடுவதாக இருக்கிறது.

சர்வதேச நிதிமூலதனத்தின் ஆதிக்கத்தின் கீழ் பெண்கள் எப்படி வெவ்வேறு நிலைகளில் ஒடுக்கப்படுவர்களாக இருக்கிறார்கள் என்பதற்கு இந்தியாவின் ஜவுளித்துறை உழைப்புச் சந்தை ஒரு சான்று. பெண்களை பணியிடங்களில் நடக்கும் இத்தகைய சாதிய, பாலியல்ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிராக ஒன்றுதிரட்டி போராடுவதற்கான அமைப்புகள் இல்லை.

முதலாளித்துவம் பேசும் பெண் விடுதலை என்பது முழுக்க முழுக்க நுகர்வுக் கலாச்சாரத்தில் பெண்களை மூழ்கச் செய்வதற்கு இடையூறாக இருக்கும் சமூகக் கலாச்சார தடைகளை உடைப்பதைப் பற்றியதாகவே இருக்கிறதே ஒழிய, மலிவான கூலிக்கும் பாலியல் வன்முறைக்கும் பலியாகும் பெண்களுக்கான விடுதலை குறித்துப் பேசுவதாக இல்லை.

பெண் விடுதலை, பெண்ணியம் என்று பொதுவாக பேசும்போது, உழைக்கும் பெண்களின் மீதான மூலதனத்தின் ஆதிக்கம் பற்றி யாரும் பேசுவதில்லை. அதனாலே, இது வெரும் மகளிர் தினமல்ல, சர்வதேச உழைக்கும் மகளிர் தினமென்று திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கிறது. இப்படி மூலதனத்தின் உழைப்புக் கொட்டடிகளில் வதைக்கப்படும் போது பெண்களுக்கான விடுதலை பற்றி பேசாமல் இருக்கும் எந்த பெண்ணியமும் உயிரற்றதே.


ராஜேஷ்
செய்தி ஆதாரம் : Caravan magazine

யோகி ஆட்சியில் உ.பி : பாலியல் வன்முறையின் தலைநகரம் !

த்தரப் பிரதேசத்தின் ஹத்ரஸ் மீண்டும் செய்தியில் பேசு பொருளாகியுள்ளது. இந்த முறை 50 வயது மதிக்கத்தக்க அவனிஷ் குமார் சர்மா எனும் விவசாயி பட்ட பகலில் கொலை செய்யப்பட்ட நிகழ்வை ஒட்டியே பேசுபொருளாக மாறியுள்ளது ஹத்ரஸ். ஹ்ரைச் மாவட்டத்தில் வசிக்கும் கவுரவ் ஷர்மா 5 பேருடன் இணைந்து அவனிஷ் குமார் ஷர்மாவை உரிமம் பெறாத துப்பாக்கிகளால் பலமுறை சுட்டு கொலை செய்துள்ளான்.

கடந்த 2018-ம் ஆண்டு தன் 23 வயது மகளை பாலியல் சீண்டல் செய்த கவுரவ் ஷர்மாவிற்கு எதிராக அவனிஷ் தொடுத்திருந்த வழக்கை வாபஸ் வாங்க மறுத்த காணத்தினால்தான் இந்தக் கொலை நடந்திருப்பதாக இறந்தவரின் சகோதரரான சுபாஷ் சந்திர ஷர்மா, தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தார்.

அந்த 5 குற்றவாளிகளின் மீதும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் லவரத்தை தூண்டுதல், கொடிய ஆயுதங்களுடன் கலவரத்தைத் தூண்டுதல், ள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டிருக்கிறது

அந்த குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பியிருப்பது பலருக்கு அதிர்ச்சி அளிக்க கூடும். ஆனால், இந்த வழக்குகளில் போலிசு நடவடிக்கை எடுக்காமலிருப்பது இன்னும் மிகுந்த நெருடலுக்கு உரியதாக இருக்கிறது. வ்னிஷ் ஷர்மாவை வழக்கை வாபஸ் வாங்குமாறு பலமுறை கவுரவ் ஷர்மா மிரட்டிதாக பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் தி வயர் இணையதளத்திடம் தெரிவித்தனர்.

அவனிஷின் மகள் அந்த கொடூரமான நிகழ்வை விவரித்தும் இதற்கு நீதி கேட்டும் வெளியிட்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைராலானபோது, மூத்த போலிஸ் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களில் இருவரை கைது செய்தனர். எங்கள் குடும்பத்தின் இழப்பை ஈடுசெய்ய முடியாவிட்டாலும், முதன்மை குற்றவாளி கவுரவ் ஷர்மா கைதுசெய்யப்படுவதுதான் என் தந்தையின் மரணத்திற்கான நீதியை உறுதிபடுத்துவதாக இருக்கும் என்றார், அந்த 23 வயது பெண்.

படிக்க:
♦ சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்
♦ ஹத்ராஸ் வன்கொலை : பத்திரிகையாளர் மீது தேசதுரோக வழக்கு – காவல் நீட்டிப்பு !

தி வயர் இணையதளத்திடம், பாலியல் தொல்லைகளை தான் எதிர்கொண்ட 2018 –ம் ஆண்டு காலத்தில் மனம் சோர்ந்து தளர்ந்து போயிருந்ததாக அப்பெண் கூறினார். ‘’என் தந்தை ஒருவர்தான் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக வழக்கு தொடுத்து எனக்கு தைரியம் கொடுத்தார். அவர் மற்ற தந்தைகளை போன்றவர் அல்ல. அவர் கிராமப் புறங்களில் உள்ளவர்கள் போல்பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான தனது மகளுக்காக போராட பயப்படவோ, வெட்கப்படவோ இல்லை. அவருடைய நடவடிக்கை எனக்கு நம்பிக்கை அளித்தது. அதனை தொடர்ந்து வழக்கு தொடுக்க நான் முன்வந்தேன்.’’

கவுரவ் ஷர்மாவும், அந்த 23 வயது பெண்ணும் ஒரு சில அண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்ய திட்டமிட்டிருந்ததாக சில செய்திதாள் செய்தி வெளியிட்ட சமயத்தில் அந்த பெண்ணின் உறவினர் அது பொய்யான தகவல் என்று தெரிவித்துள்ளார். அந்தப் பெண்ணைத் திருமணம் செய்துகொள்ள அந்தக் குற்றவாளி விருப்பம் தெரிவித்திருந்தான். ஆனால், அப்பெண்ணின் குடும்பத்துக்கும், அப்பெண்ணுக்குமே விருப்பம் இல்லை . மறுப்பு தெரிவித்த பிறகும் அவனுடைய பாலியல் தொல்லைகள் தொடர்ந்தன”, என்றார்.

‘’என்னை முகநூலில் அவனுடைய நண்பராகுமாறு கேட்டு முதன்முதலாக தொடங்கினான். நான் மறுத்தபோது என்னை தொந்தரவு செய்ய ஆரம்பித்தான். நாங்கள் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த போது அவன் சிறைக்கு அனுப்பபட்டான். வெகு விரைவில் வெளியே வந்தான். அதே ஆண்டு அவன் அந்த வழக்கை வாபஸ்வாங்குமாறு வற்புறுத்தினான்’’ என்று நினைவு கூர்கிறார் அந்த 23 வயது பெண்.

2018 ஜூலையில் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கை இதச பிரிவுகள் 452 (காயம் ஏற்படுத்துவற்கு தயாரிப்போடு வந்து அத்துமீறி நுழைதல், தாக்குதல் அல்லது வன்முறை பிரயோகம் , 354 ( ஒரு பெண்ணின் மாண்பை கெடுக்கும் வகையில் செய்யப்பட்ட ஒரு குற்ற செயல்) மேலும் 506 ( கிரிமினல்தனமான மிரட்டல்). குற்றம் நிரூபிக்கப்பட்டால் 354 பிரிவு இரு ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வழிவகுக்கும். பிரிவுகள் 506 மற்றும் 452 ஆகியவை 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனைக்கு வழிவகுக்கும்.)

ஒரு மாதம் சிறையில் இருந்த கவுரவ் ஷர்மா நீதிமன்ற விசாரணை நிலுவையில் இருக்க பிணையில் விடுவிக்கப்பட்டான்.

தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில் உடலை தூக்கிச் செல்லும் பாதிக்கப்பட்ட பெண்

அவன் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது, அவனுக்கு மேலும் தைரியத்தை கொடுத்தது, என்கிறார் அந்த பெண். ‘’ 2019-ம் ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி அவன் என் தந்தை விவசாய நிலத்தில் வேலை செய்துகொண்டிருப்பதை கண்டு அவரை தாக்க முயற்சித்தான். அவன் மீண்டும் ஒரு முறை வழக்கை வாபஸ் வாங்க கூறி மிரட்டினான். என் அப்பா தப்பித்துவிட்டார்.’’ என்றார் அவர்.

அச்சமயத்தில் அவர்கள் போலிசிடம் புகார் அளித்தனர். அந்த நகலை தி வயர் இணையதளத்தால் பெற முடிந்தது. அவனிஷ் குமார் ஷர்மா கொடுத்த புகாரில் ‘’அவன் [கவரவ் ஷர்மா] என்னை கொல்வதற்கு துரத்திக்கொண்டு ஓடி வந்தான். தயவு செய்து விசாரணை செய்யுங்கள்,’’ என்று எழுதப்பட்டுள்ளது.

இருப்பினும், புகார் கொடுக்கப்பட்டிருந்த சசானி காவல் நிலைய அதிகாரியை தொடர்பு கொண்டு தி வயர் இணைய தளம் இதுகுறித்து கேட்டபோது, ‘’2019 லிருந்து அப்படி ஒரு புகார் அங்கே பதிவு செய்யப்படவில்லை என்றார். 2018-ல் மட்டுமே அந்த பையன் சிறைக்கு ஒரு மாதம் சென்றிருந்த வழக்கில் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது என்றார். மேலும் கூறிய அவர், அந்த கொலைக்கு பிறகு பாதிக்கப்பட்டவரின் வீட்டருகே காவலர்கள் பாதுகாப்பிற்கு போடப்பட்டுள்ளனர் என்றார். தொடர் அச்சுறுத்தலில் இருந்த போதும் ஏன் அந்த குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை தாமதப்படுத்தப்பட்டது என்று தி வயர் ஆசிரியர் கேட்டதற்கு, ‘’அப்படி ஏதும் தாமதம் இல்லை’’ என்று போலீசு கூறியுள்ளது.

அந்த பெண்ணின் குடும்பத்திற்கு பல மாதங்களாக கவ்ரவ் ஷர்மாவிடமிருந்து தொலைபேசி மூலம் மிரட்டல்கள் வந்துகொண்டே இருந்துள்ளது. அந்த குற்றவாளிக்கு 2020 ல் திருமணம் ஆகி அதன் பிறகு ஒரு பெண் குழந்தை பிறந்தபோது அவர்கள் சற்றே நிம்மதி பெருமூச்சு விட்டனர். 23 வயதான அந்த பெண் நினைவு கூர்கிறாள், ’’அவனுக்கு இப்போது திருமணம் ஆகிவிட்டது, இனி இது போல் நடந்துகொள்ள மாட்டான் என்று நான் நினைத்தேன். அவனுக்கு ஒரு ஒரு மகளும் பிறந்துவிட்டது. எனவே இனி வேறு ஒருவருடைய மகளுக்கு அவன் தொல்லை கொடுக்க மாட்டான் என்று நினைத்தேன். ஆனால் நான் அவ்வாறு நினைத்தது தவறாகிவிட்டது.’’

மார்ச் 1 அன்று என்ன நிகழ்ந்தது.?

கொலை நடப்பதற்கு முன்பு, மார்ச் 1 அன்று காலை நேரத்தில் 23 வயதான அந்த பெண்ணும் அவளுடைய மூத்த சகோதரியும் அருகில் உள்ள கோயிலுக்கு சாமி கும்பிட சென்றனர். அங்கே, அவர்கள் கவ்ரவ் ஷர்மாவின் மனைவி மற்றும் மாமியார் இருவரையும் எதிர்பாராத விதமாக எதிர்கொள்ள நேர்ந்தது.‘’ அவர்கள் வழக்கை வாபஸ் வாங்கக் கூறி மிரட்டினர், என்னை கெட்ட வார்த்தையால் திட்டினர். இறுதியாக நான் என்னை விடுங்கள் என்று நான் கேட்டபோது, அவர்கள் இனி இங்கு வன்முறைதான் தீர்வு என்றனர். இதன் பொருள் என்னவென்றால், ஏற்கெனவே நன்கு சிந்தித்து திட்டமிடப்பட்ட ஒரு செயல் தான் அந்தக் கொலை’’ என்று தி வயர் இணையதளத்திடம் கூறினார் அந்த பெண்.

அந்த வாய் சண்டை அந்த கோயிலிலிருந்து ஒரு சில கிலோ மீட்டர் தூரத்தில் பாதிக்கப்பட்டவரின் விவசாய நிலத்திற்கு அருகில் நிகழ்ந்தது. ‘’எனது அப்பா தலையிட்டு அமைதியான முறையில் அவர்களை செல்லவிடுங்கள் என்று கேட்டபோது, கவ்ரவ் ஷர்மாவின் மனைவி உன்னை கொன்று விடுவேன், வழக்கை வாபஸ்பெறவில்லை என்றால் சுட்டுகொன்று விடுவேன் என்றாள்,’’ என்று நினைவுகூர்கிறார் அந்த இளம் பெண்.

படிக்க :
♦ ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !

அந்த விவசாய நிலத்திலிருந்து 200 மீட்டர் தூரம் கூட இருக்காத அவருடை வீட்டிற்கு தன் மகள்களை செல்லுமாறும், சென்று கதவை உட்புறமாக கவனமாக பூட்டிக்கொள்ளுமாறும் அவனிஷ் கேட்டுக்கொள்கிறார். அவர் தனது நிலத்தில் வேலை செய்வதை தொடர்ந்தார். நானும் என் சகோதரியும் எனது அப்பாவிற்கு மதிய உணவு எடுத்து சென்ற போது, கவ்ரவ் ஷர்மா மீண்டும் 11.30 மணிக்கு அழைத்து வழக்கை வாபஸ் வாங்கவில்லை என்றால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாக அவர் எங்களிடம் சொன்னார். அவர் மிகவும் கவலையடைந்திருந்தார். கொண்டு சென்ற மதிய உணவை சாப்பிடவில்லை.’’ என்று அந்த பெண் கூறினார்.

சுமார் மதியம் ஒரு மணிக்கு அந்த இளம் பெண் சசானி காவல் நிலையத்தில் உள்ள தர்மேந்திரா என்ற நம்பகமான போலிசு அதிகாரியை அழைத்தார். அந்த காவல் நிலையம் அந்த கிராமத்திலிருந்து 7-8 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிறது. அவர், பாதிக்கப்பட்டவர்களின் அந்த இடத்தை அடைய நேரம் ஆகும் என்பதால் 112 அவசர எண்ணை அழைக்குமாறு கூறினார்.

‘’கவ்ரவ் ஷர்மா வந்து எங்களை மிரட்டினால் 112 எண்ணை அழைக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் வந்து போது எந்த ஒரு எண்ணிற்கும் தொடர்புகொள்ளும் ஒரு நிலையில் நான் இல்லை.’’ என்று தி வயரிடம் கூறினாள், அந்த பெண்.

மாலை 3.30 மணிக்கு கவ்ரவ் ஷர்மாவும் மற்ற 5 பேரும் ஒரு காரில் வந்தனர். அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு அவனிஷ்ஷூம் மற்ற தொழிலாளர்களும் வேலை செய்துகொண்டிருந்த நிலத்தை நோக்கி வந்தனர். ‘’அவர்கள் வந்து மற்ற தொழிலாளர்களை அச்சுறுத்தும் முகமாக பிஸ்டல் துப்பாக்கியால் விண்ணை நோக்கி சுட்டனர். அவர்கள் அனைவரும் ஓடிவிட்டனர். அவர்களுடைய இலக்கு என் அப்பா. அவர்கள் என் அப்பாவை பலமுறை சுடும் போது, நான் அருகில் உள்ள குழாய் கிணற்றில் ஒளிந்துகொண்டேன். அவர் நிலை குலைந்து கீழே விழுந்த பிறகு அவர்களில் ஒருவன் அவரின் இறப்பை உறுதிசெய்கிற வகையில் மிக அருகில் சென்று சுட்டான். நான் அங்கு நிகழ்ந்த எல்லாவற்றையும் பார்த்தேன். நான் அச்சத்தில் உறைந்திருந்தேன்.’’ என்று தி வயர் இணையதளத்திடம் கூறினார் அந்த 23 வயது பெண்.

அப்போது அங்கே இருந்த என் அம்மாவை நோக்கி ஒரு புல்லட் குண்டு வந்தது. அதில் என் அம்மா தப்பினாள். வந்த 6 பேரில் 4 பேர் கவ்ரவ் ஷர்மா, லலித் ஷர்மா, நிகித் ஷர்மா, மற்றும் ரோகித் ஷர்மாஎனக்கு அடையாளம் தெரியும் என்று அந்த பெண் கூறினாள்.

துப்பாக்கி சூட்டிற்கு பிறகு, ஒரு கூட்டம் கூடியது, போலிசும் வந்தது. கொலையுண்ட நபர் முதலில் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டார். பின்னர் தனியார் மருத்துவ மனைக்கு எடுத்துசெல்லப்பட்டார். அங்கு, இறந்து கொண்டுவரப்பட்டதாக அறிக்கப்பட்டது.

குடும்பத்தின் ஆதாரமானவர் :

அவனிஷ் குமார் ஷர்மாவுக்கு இரு சகோதர்களும், நான்கு சகோதரிகளும் இருந்தனர். அவர்கள் யாரும் கிராமத்தில் இல்லை. ‘’எனது பெரியப்பாவும், சித்தப்பாக்களும் கிராமத்திற்கு வெளியே வசிக்கின்றனர். என்னுடய அப்பாதான் குடும்ப வாழ்வின் முழு ஆதாரம். எங்களுக்கு நிலம் இருப்பது உண்மை. ஆனால், அவரின்றி என் அம்மாவாலோ அல்லது என்னாலோ அங்கே வேலை செய்யமுடியாது. இப்போது, எங்களையும், வீட்டையும் காப்பதற்கு யாரும் இல்லை.’’ என்று தி வயர் இணையதளத்திடம் கண்ணீர் மல்க கூறினார் அந்த பெண்.

அந்த பெண்ணின் பெரியப்பா சுபாஷ் சந்திர ஷர்மாவின் கூற்றுப்படி, கவ்ரவ் ஷர்மா அரசியல் செல்வாக்குள்ளவன், சமாஜ்வாதி கட்சியின் உறுப்பினர். ‘’ அவன் திரும்ப திரும்ப என் இளைய சகோதரனை அச்சுறுத்தியுள்ளான். கடந்த இரு ஆண்டுகளில் அவரை அவன் பத்திற்கும் மேற்பட்ட முறை அழைத்து மிரட்டியுள்ளான்.’’ என்றார், அவர். கவ்ரவ் ஷர்மாவின் ஒரு மூத்த உறவினரும் அவனிஷ் குமாரை அழைத்து வழக்கை திறும்ப்பெறுமாறு வலியுறுத்தியுள்ளார். அவர் என் தம்பியிடம்,‘’கவ்ரவ் ஒரு இளம்வயது பையன். அவன் முன்கோபி என்பதனால் அதுபோன்ற ஏதாவது செய்திருப்பான். அதை பெரிதுபடுத்தாமல் விட்டுட்டு போ.’’ என்று கூறியதாக தி வயர் இணையதளத்திடம் கூறினார்.

கவ்ரவ் ஷர்மாவை போலிசு உடனே கைது செய்யவில்லை என்றால் அவன் நேபாள் சென்று தப்பிவிடுவான் என்று சுபாஷ்சர்மா கவலை தெரிவித்தார்.

அந்த பெண்ணின் தாய், ராஜ்குமாரி ஷர்மா பாதுகாப்பற்ற நிலையில் உள்ளதாக கூறினார். ‘’எங்களுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. நாங்கள் அச்சத்தில் உள்ளோம். போலிசு பாதுகாப்பு விலக்கிகொள்ளப்பட்டதும், அவர்கள் என் கணவரைக் கொன்றது போல், மீண்டும் என் மகளுக்கு தொல்லை தருவார்கள். போலிசு வழக்கம் போல் சம்பவம் நடந்துமுடிந்த பின்னர்தான் வருவார்கள்’’ என்று தி வயரிடம் கூறினார்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களின் முன்னணி களமாக உத்திர பிரதேசம்.

2020 செப்டம்பரில், 19 வயது தலித் பெண், ஹத்ரஸ் மாவட்டம் பூல்கார்கி கிராமத்தை சேர்ந்த நான்கு ஆதிக்க சாதிவெறியர்களால் கூட்டு பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்ட ஒரு வழக்கு நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட அந்த தலித் பெண்ணை அவருடைய பெற்றோரின் ஒப்புதலின்றி விரைந்து எரியூட்டியது மற்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை என்று உறுதியாக மறுத்தது ஆகிய இரு காரணங்களுக்காக உபி போலிசு மீது அனைவரின் பார்வையும் திரும்பியது.

பின்னர் டிசம்பர் மாதத்தில் அந்த வழக்கை கையிலெடுத்த சிபிஐ, தனது குற்றப் பத்திரிகையில் அந்தப் பெண் கூட்டுபாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார் என்று கூறியது.

தேசிய குற்ற ஆவண மையத்தால் சேகரிக்கப்ட்ட 2019 ஆம் ஆண்டிற்கான தகவல்களின் படி நாட்டில் 2018-ம் ஆண்டில் 3,78,277 ஆக இருந்த பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் 2019-ம் ஆண்டில் 4,05,861 குற்ற வழக்குகளாக அதிகரித்துள்ளது. இதில் உபியில் மட்டும் 59,853 வழக்குகள் பதிவாகி பெண்களுக்கு எதிரான குற்றங்களில் .பி. முதல் இடத்தைப் பிடித்துள்ளது. இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் 41,550 என்ற எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா 37,144 என்ற எண்ணிக்கையிலும் அடுத்த இடங்களைப் பிடித்திருக்கிறது. பாலியல் பலாத்காரம் தொடர்பான வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் ஆகும் சதவீதம் 76% ஆக இருந்த போதிலும் தண்டனை கிடைக்கப்பெறும் சதவீதம் 27.8%-ல் நிற்கிறது.

‘’போலிசு விரும்பினால் குற்றங்கள் நிகழாமல் தடுக்க முடியும். அவர்கள் அதற்கு தகுந்தவாறு செய்வதற்கு போதுமான நிலையில் உள்ளனர்’’ என்கிறார் சீமா மிஸ்ரா. இவர் சமூகசட்ட அமைப்பை நடத்தும் ஒரு குற்றவியல் வழக்கறிஞர். இந்த அமைப்பின் மூலம் சட்ட முன்முயற்சிகளையும் ஆலோசனைகளையும் கொடுத்துவருகிறார். ஜார்கண்ட் ராஞ்சியில் பெண்கள் மீது நடத்தப்படும் குற்றங்களுக்கு எதிரான வழக்குகளை நடத்திவருகிறார். மேலும் லக்னோவில் பெண்களின் உரிமைகளுக்கான குழுவைச் செயல்படுத்துகிற ஒரு பெண்ணியவாதியாவும இருக்கிறார் சீமா மிஸ்ரா.

‘’அவர்களின் (போலீசின்) பெண்வெறுப்பு நடவடிக்கை காரணமாகத்தான் பிரச்சினை தோன்றுகிறது. அவர்கள் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாக இருப்பதற்குப் பதிலாக வழக்கம் போல் பாதிக்கப்பட்ட பெண்கள் மீதே குற்றம் சுமத்துகின்றனர். இது நாடு முழுதும் நடக்கிறது. ஆனால், உபியில் அதிகம். தங்களது செயலற்ற தன்மைக்கு அல்லது தங்களின் செயலுக்கு போலீசே பொறுப்பேற்க வேண்டும். ’’ என்று தி வயர் தளத்திடம் கூறினார்.

இந்த குறிப்பிட்ட வழக்கு பற்றி பேசுகையில், பிணையில் வெளிவந்த பிறகு தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு கவ்ரவ் ஷர்மா தொல்லை கொடுத்துள்ளான். அந்த பிணை ரத்துசெய்யப்பட்டு அவன் சிறைக்கு அனுப்ப ப்பட்டிருக்க வேண்டும் என்று கூறினார்.


தமிழாக்கம் : முத்துகுமார்.
நன்றி : தி வயர்

சர்வதேச உழைக்கும் மகளிர் தினத்தின் வரலாறு !! || அலெக்சாந்த்ரா கொலந்தாய்

ஒரு புரட்சியின் கொண்டாட்டம்

களிர் தினம் அல்லது உழைக்கும் மகளிர் தினம் என்பது சர்வதேச ஆதரவுக்கான நாள் மற்றும் உழைக்கும் பெண்களின் பலம் மற்றும் அமைப்பை மறுபரிசீலனை செய்யும் நாளாகும்.

ஆனால் இது பெண்களுக்கு மட்டும் உரிய சிறப்பு தினம் அல்ல. மார்ச் 8-ஆனது உலகின் அனைத்து தொழிலாளர்களுக்கும், விவசாயிகளுக்கும், ரசிய தொழிலாளர்களுக்கும், உலக தொழிலாளர்களுக்கும் நினைவுகூரத்தக்க வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாகும். 1917-ம் ஆண்டு இந்த நாளில் மாபெரும் பிப்ரவரி புரட்சி வெடித்தது. பீட்டர்ஸ்பெர்கின் உழைக்கும் பெண்கள்தான் அப்புரட்சியைத் துவங்கினார்கள். அவர்கள்தான் ஜார் மற்றும் அவரின் கூட்டாளிகளுக்கு எதிராக பதாகைகளை உயர்த்த முடிவு செயதனர். எனவே பெண்கள் தினம் நமக்கு இரட்டை கொண்டாட்டமாகும்.

ஆனால் இது அனைத்து தொழிலாளர்களுக்கான பொது தினம் எனும்பட்சத்தில் ஏன் மகளிர் தினம் என்று அழைக்கிறோம்? பிறகு ஏன் உழைக்கும் பெண்களையும், விவசாயப் பெண்களையும் மையப்படுத்தி சிறப்பு கொண்டாட்டங்களும், கூட்டங்களும் நடத்துகிறோம்? இது உழைக்கும் வர்க்கத்தினரின் ஒற்றுமையையும் ஆதரவையும் மறுதலிக்காதா? இதற்கெல்லாம் விடைகிடைக்க வேண்டுமென்றால் பெண்கள் தினம் எப்படி உருவானது என்பதையும், அது எந்த நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்டது என்ற வரலாற்றையும் நாம் பின்நோக்கிப் பார்க்க வேண்டியிருக்கிறது.

படிக்க :
♦ அவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது? – தீபா
♦ பெண்கள் மீதான வன்முறைகள் : தோற்றுப்போன சட்டங்கள் !

ஏன், எப்படி பெண்கள் தினம் உருவாக்கப்பட்டது?

மிகப்பல வருடங்கள் அல்ல, ஒரு பத்து வருடத்திற்கு (1909-10) முன்பாகதான் பெண்களுக்கான சம உரிமை என்ற கேள்வியும் மற்றும் ஆண்களோடு பெண்களும் அரசு நிர்வாகத்தில் சரிசமமாக பங்கெடுக்க முடியுமா? என்பது குறித்தும் காராசாரமான விவாதங்கள் நடத்தப்பட்டன. அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் உழைக்கும் வர்க்கம், உழைக்கும் மகளிரின் உரிமைகளுக்காக போராடியது. ஆனால் முதலாளிகள் இவ்வுரிமைகளை ஏற்கத் தயாராக இல்லை. பாராளுமன்றத்தில் உழைக்கும் மக்களின் வாக்கினை பலப்படுத்துவதென்பது முதலாளிகளின் நலன்களுக்கு எதிரானது. ஆகையால் அனைத்து நாடுகளிலும் அவர்கள் உழைக்கும் பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் சட்டங்களை நிறைவேற்றவிடாமல் தடையாக இருந்தனர்.

வட அமெரிக்க சோசலிஸ்டுக்கள் விடாமுயற்சியுடன் தங்களுடைய ஓட்டுரிமை கோரிக்கையினை வலியுறுத்தினர். 28.02.1909 அன்று அமெரிக்க பெண் சோசலிஸ்ட்டுக்கள், உழைக்கும் பெண்களுக்கான அரசியல் உரிமை கோரி நாடு முழுவதும் மிகப் பெரிய ஆர்ப்பாட்டங்களையும் கூட்டங்களையும் நடத்தினர். இதுதான் முதல் மகளிர் தினம். எனவே மகளிர் தினத்தினை துவங்கிய பெருமை அமெரிக்க உழைக்கும் மகளிரையே சாரும்.

1910-ம் ஆண்டு நடைபெற்ற உழைக்கும் மகளிரின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில், கிளாரா ஜெட்கின் அவர்கள், உலகளவிலான மகளிர் தின ஒருங்கிணைப்பு குறித்த கேள்வியை முன்வைத்தார். அம்மாநாட்டில், ஒவ்வொரு வருடமும், அனைத்து நாடுகளிலும் ஒரே நாளில் மகளிர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென்றும், அது ”பெண்களின் ஓட்டுரிமை, சோசலிசத்திற்கான போராட்டத்தில் நமது வலிமையை ஒருங்கிணைக்கும்” என்ற முழக்கத்தின் கீழ் இருக்க வேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டது.

அலெக்சாந்த்ரா கொலந்தாய்

இவ்வருடங்களில், ஓட்டுரிமையை விரிவுபடுத்துவது, குறிப்பாக பெண்களுக்கு ஓட்டுரிமை அளிப்பதின் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுடையதாக ஆக்குவதென்பது மிக முக்கிய நோக்கமாக இருந்தது. முதல் உலகப் போருக்கு முன்பே ரஷ்யா தவிர அனைத்து முதலாளித்துவ நாடுகளிலும் தொழிலாளிகள் ஓட்டுரிமை பெற்றிருந்தனர். இருப்பினும் நாட்டின் பொருளாதாரத்தில் மகளிரின் பங்களிப்பு அவசியமாயிருந்தது என்பதுதான் முதலாளித்துவத்தின் மறுக்கமுடியாத நிதர்சனமாக இருந்ததது. ஒவ்வொரு வருடமும் ஆலைகளில், தொழிற்கூடங்களில் வேலையாட்கள், பணிப்பெண்கள் என வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே சென்றது. பெண்கள் ஆண்களுக்கு இணையாக உழைத்து நாட்டின் பொருளாதாரத்தை தமது கைகளால் உருவாக்கினர் என்றாலும் அவர்கள் ஓட்டுரிமையின்றி இருந்தனர்.

போருக்கு முந்தைய வருடங்களில் காணப்பட்ட விலைவாசி உயர்வு மிகவும் அமைதியான குடும்பப் பெண்களைக்கூட அரசியலில் ஆர்வம் காட்டவும், முதலாளித்துவ பொருளாதார கொள்ளைக்கெதிராக உரத்த குரலெழுப்பவும் முந்தித்தள்ளியது. ஆஸ்திரியா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகளில் ”குடும்பப் பெண்களின் எழுச்சி” அடிக்கடி வெடித்துக் கிளம்பும் நிகழ்வாக அதிகரித்துக்கொண்டே சென்றது.

கடைத்தெருக்களில் கடைகளை உடைப்பதும், முறையற்ற வணிகர்களை மிரட்டுவதும் விலைவாசியை கட்டுப்படுத்த உதவாது என்பதனை உழைக்கும் மகளிர் புரிந்துகொண்டனர். அரசாங்கத்தின் அரசியலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமென்றும் அதனை சாதிப்பதற்கு உழைக்கும் வர்க்கம் ஓட்டுரிமையை விரிவுபடுத்தப்படுவதை உத்தரவாதம் செய்ய வேண்டுமென்பதையும் அவர்கள் புரிந்துகொண்டனர்.

உழைக்கும் மகளிருக்கான ஓட்டுரிமையை பெறும் நோக்கத்தில் அனைத்து நாடுகளிலும் மகளிர் தினத்தினை ஒரு போராட்ட வடிவமாக ஒருங்கிணைக்க முடிவு செய்யப்பட்டது. பொது நோக்கத்திற்கான போராட்டத்திற்கும், சோசலீச பாதாகையின் கீழ் உழைக்கும் மகளிரின் ஒருகிணைப்பினை மறுஆய்வு செய்வதற்கும் உலகளவிலான ஆதரவினை நல்கும் ஒரு நாளாக மகளிர் தினம் அங்கீகரிக்கப்பட்டது.

முதல் உலக மகளிர் தினம்

சோசலிச பெண்களின் இரண்டாவது சர்வதேச மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவு வெறும் காகிதத்தோடு நிற்காமல், 1911 வருடத்தின் மார்ச் 19 தேதியன்று முதல் உலக மகளிர் தினத்தினை நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.

இந்த நாள் பொத்தாம் பொதுவாக தேர்ந்தெடுக்கப்பட்டதல்ல. 1848-ம் ஆண்டு மார்ச் 19 அன்று ப்ரஷ்ய மன்னன் ஆயுதமேந்திய மக்களின் போராட்ட வலிமையைக் கண்டு, பாட்டாளி வர்க்க எழுச்சிக்கு அஞ்சி பல வாக்குறுதிகளை அளித்தான். பெண்களுக்கான ஓட்டுரிமை போன்ற பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லையென்றாலும், இந்த மார்ச் 19 நாளானது ஜெர்மன் பாட்டாளிகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஆகவேதான் இந்த நாளை உகல மகளிர் தின நாளாக தேர்ந்தெடுத்தனர்.

படிக்க :
♦ இந்தியா : உலகளவில் பெண்கள் வாழ்வதற்கு ஆபத்தான நாடு !
♦ “பாராளுமன்றத்திற்கு சென்ற பால்காரம்மா”: சோவியத் யூனியனின் அற்புதங்கள்!

ஜனவரி 11-ம் தேதிக்குப் பிறகு ஜெர்மனியிலும், ஆஸ்திரியாவிலும் பெண்கள் தினத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அந்நாளில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டங்கள் குறித்த செய்திகளை வாய்வழிப் பிரச்சாரங்கள் மற்றும் பத்திரிக்கைகள் மூலம் தெரியப்படுத்தினர். பெண்கள் தினத்திற்கு முந்தைய வாரத்தில் “ஜெர்மனியில் பெண்களுக்கான ஓட்டுரிமை” மற்றும் “ஆஸ்திரியாவில் பெண்கள் தினம்” என்ற இரு பத்திரிகைகள் கொண்டுவரப்பட்டன. மேலும் “பெண்களும் பாராளுமன்றமும்”, “உழைக்கும் பெண்களும் நகராட்சி நிர்வாகமும்”, “குடும்பப்பெண்களுக்கு அரசியலில் என்ன வேண்டியிருக்கிறது?” மற்றும் பல கட்டுரைகள் சமர்பிக்கப்பட்டன. அவைகள் அரசாங்கத்திலும், சமூகத்திலும் பெண்களுக்கான சம உரிமை குறித்து துல்லியமாக ஆய்வு செய்திருந்தன. மேலும் அனைத்து கட்டுரைகளும் பெண்களுக்கு வாக்குரிமையளிப்பதன் மூலம் பாராளுமன்றத்தை மேலும் ஜனநாயகமுள்ளதாக ஆக்க வேண்டியிருப்பதன் அவசியத்தை வலியுறுத்தின.

முதல் உலக மகளிர் தினம் 1911-ம் ஆண்டு நடைபெற்றது. அது அனைத்து எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றியது. ஜெர்மனியிலும் ஆஸ்திரியாவிலும் மகளிர் தினத்தன்று கனல் தெறிக்கும் அலைகடலென பெண்கள் திரண்டனர். கிராமங்கள், நகரங்கள் என எங்கெங்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன. அனைத்து அரங்கங்களும் நிரம்பிவழிந்தன. வேறுவழியின்றி ஆண் தொழிலாளர்களின் இருக்கைகளை விட்டுக்கொடுக்கச் சொல்லி கேட்க வேண்டிய நிலையை அது ஏற்படுத்தியது.

உழைக்கும் மகளிர் தங்களுடைய போர்குணத்தை காட்டிய முதல் காட்சியாக இவ்வுலக மகளிர்தினம் நிச்சயமாக அமைந்திருந்தது. மாற்றத்திற்காக ஆண்கள் வீட்டில் குழந்தைகளோடு இருந்தனர் மேலும் அவர்களுடைய மனைவிகள், குறிப்பாக குடும்பப் பெண்களாயிருந்த அவர்கள் கூட்டங்களுக்குச் சென்றனர். 30,000 பெண்கள் கலந்துகொண்ட மிகப்பெரிய தெருமுனை ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினர் பதாகைகளை அகற்ற முடிவு செய்தனர். பெண்கள் அதை எதிர்கொள்வதென முடிவு செய்தனர். இச்சம்பவத்தில் காவல்துறைக்கும் பெண்களுக்கும் ஏற்பட்ட மோதல் பாராளுமன்றத்தின் சோசலிஸ்ட் பிரதிநிதிகளின் உதவியோடு மட்டுமே இரத்தக் களறியாகாமல் முடிவுக்கு கொண்டுவரமுடிந்தது.

1917-ல் ரசியாவில் ஜார் ஆட்சிக்கு எதிராக நடத்தப்பட்ட சர்வதேச பெண்கள் தினப் பேரணி – பிப்ரவரி புரட்சியை பற்ற வைத்த நெருப்புப் பொறி

1913-ம் ஆண்டு உலக மகளிர்தினம் மார்ச் 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இத்தினம் உழைக்கும் மகளிரின் போராட்ட தினமாக நிலைபெற்றது.

அக்காலகட்டத்தில் சோசலிச புரட்சி குறித்த மிரட்சி முதலாளிகளுக்கு ஏற்பட்டிருக்கவில்லை. ஆகையால் எந்த முதலாளித்துவ பாராளுமன்றமும் தொழிலாளிகளுக்கு கருணை காட்டவோ, பெண்களின் கோரிக்கைகளை ஏற்கவோ அல்லது பரிசீலிக்கவோ முன்வரவில்லை. ஆனால் மகளிர்தினம் இதனை ஓரளவுக்கு சாதித்தது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளின் மகளிர் தினம் வியக்கத்தக்க பலன்களை அளித்தது. இது அரசியல் அறிமுகம் குறைவாகயிருந்த நமது சகோதரிகள் மத்தியில் போராட்ட வழிமுறையை உருவாக்கியது. அவர்களுடைய கவனம் பெண்கள் தின கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், சுவரொட்டிகள், கைப்பிரதிகள் மற்றும் செய்தித்தாள்களை நோக்கி குவிந்தது.

அரசியல் பின்புலமற்ற பெண்கள்கூட “இது நம்முடைய தினம், உழைக்கும் பெண்களின் திருவிழா“ என்று நினைத்தனர். மேலும் கூட்டங்களுக்கும் ஆர்ப்பாட்டங்களுக்கும் விரைந்து சென்றனர். ஒவ்வொரு பெண்கள் தினத்திற்குப் பிறகும் ஏராளமான பெண்கள் சோசலீச கட்சியில் இணைந்தனர். மற்றும் தொழிற்சங்கங்கள் வளர்ச்சியடைந்தன. அரசியல் உணர்வு மேம்பட்டது மேலும் அமைப்புக்கள் முன்னேற்றமடைந்தன.

உலக மகளிர் தினத்தையொட்டி ஜெர்மன் தோழர்கள் இங்கிலாந்து செல்வதும், இங்கிலாந்து தோழர்கள் ஹாலந்து செல்வதும் என பல்வேறு நாடுகளின் கட்சிகள், பேச்சாளர்களைப் பரிமாறிக்கொண்டனர். இவ்வொத்திசைவு, உலகத் தொழிலாளர்கள் ஒன்றுபடுவதற்கும், உழைக்கும் வர்க்கம் வலுப்பெறுவதற்கும் மற்றும் பாட்டாளிகளின் போராட்ட வலிமையை கூட்டுவதற்கும் வினையாற்றியது.

தீரம் மிக்க மகளிர்தினம், உணர்வு மேம்பாட்டையும், மகளிரை அமைப்பாக்குவதற்கும் உதவியாக இருந்தது. மேலும் உழைக்கும் வர்க்கத்தின் சிறந்த எதிர்காலத்திற்காக போராடுபவர்களின் வெற்றிக்கும் அது பங்காற்றியது என்பது தீரம் மிக்க ‘உலக மகளிர் தினத்தின்’ பலன்களாகும்.

ரஷ்யாவில் உழைக்கும் மகளிர் தினம்

ரஷ்ய பெண் தொழிலாளர்கள் முதன்முதலில் 1913-ம் ஆண்டு நடைபெற்ற “உழைக்கும் மகளிர் தினத்தில்“ பங்கெடுத்தனர். இது ஜார் மன்னனின் ஆட்சி உழைப்பாளிகளையும், விவசாயிகளையும் தனது இரும்புப் பிடிக்குள் வைத்திருந்த கால கட்டமாகும். திறந்தவெளி ஆர்ப்பாட்டங்கள் நடத்தமுடியாத சூழல் இருந்தபோதும், மகளிர் தினத்தை உலக தினமாக அவர்கள் சிறப்பித்துக்காட்டினர். போல்ஷ்விக் ‘பிராவ்தா’ – மென்ஷ்விக் ‘லூச்’ ஆகிய சட்டபூர்வ உழைக்கும் வர்க்க பத்திரிக்கைகள் ‘உலக மகளிர் தினம்’ குறித்த சிறப்புக் கட்டுரைகள், உழைக்கும் மகளிருக்கான இயக்கங்களில் ஈடுபடுபவர்களின் புகைப்படங்கள், பெபல் மற்றும் ஸெட்கின் போன்ற தோழர்களின் வாழ்த்துக்களை பிரசுரித்தன.

கூட்டங்கள் தடைசெய்யப்பட்டிருந்த அந்த இருண்ட காலத்திலும், கட்சியின் உழைக்கும் மகளிர் பெட்டோகிராட்டின் கலாஷ்கோவஸ்கி முனையத்தில் “மகளிர் கேள்விகள்“ என்ற ரகசிய பொது மன்றத்தை ஏற்பாடு செய்தனர். ஐந்து கோபெக்குகள் கட்டணமாக வசூலிக்கப்பட்டபோதும் அரங்கில் கூட்டம் நிரம்பி வழிந்தது. இதில் கட்சியின் உறுப்பினர்கள் உரையாற்றினர். ஆனால் இந்த உயிர்ப்பான ரகசியக் கூட்டத்தின் ஒரு கட்டத்தில் காவல்துறை தலையிட்டு, பல பேச்சாளர்களைக் கைது செய்ததால் முடிக்கப்பட்டது.

ஜார் மன்னரின் கடுமையான ஒடுக்குமுறையின் கீழிருந்த ரஷ்யாவில் “உலக மகளிர் தின“த்தில் திரளாக பெண்கள் கலந்துகொண்டதும், அந்த நாளை அங்கீகரித்த்தும் உலகத் தொழிலாளர்களுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இது ரஷ்ய எழுச்சியின் விடிவெள்ளியாகவும், ஜார் மன்னனின் சிறைகளும், தூக்குமேடைகளும், தொழிலாளர்களின் போராட்டங்களையும், போராட்ட உணர்வையும் அழிக்கவியலாமல் வலுவிழந்ததையே எடுத்துக்காட்டியது.

படிக்க :
♦ டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?
♦ CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !

1914-ம் ஆண்டு ரஷ்யாவின் ‘உழைக்கும் மகளிர் தினம்’ மிகச் சிறப்பாக ஒருங்கிணைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட இரண்டு பத்திரிக்கைளும்கூட கொண்டாட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டன. நமது தோழர்கள் ஏற்பாடுகளில் கடும் உழைப்பைச் செலுத்தியபோதும் காவல்துறையின் குறுக்கீட்டால் ஆர்ப்பாட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாமல் போனது. ஏற்பாட்டு பணிகளில் ஈடுபட்ட தோழர்கள் ஜார் மன்னனின் சிறைகளுக்கும், பிறகு பலர் கடுங்குளிர் வடக்குபகுதிக்கும் அனுப்பப்பட்டனர். இது ‘உழைக்கும் மகளிருக்கு ஓட்டுரிமை’ என்ற முழக்கத்தை ‘ஜார் மன்னனின் எதேச்சதிகாரத்தை தூக்கியெறிவோம்’ என்ற அறைகூவலாக மாற்றியது.

ஏகாதிபத்திய போரின் தருணத்தில் உழைக்கும் மகளிர் தினம்

முதல் உலகப்போர் மூண்டது. அனைத்து நாடுகளின் உழைக்கும் வர்க்கமும் போரின் இரத்தத்தில் தோய்ந்திருந்தன. 1915 மற்றும் 1916-ம் ஆண்டுகளில் பிற நாடுகளில் “உழைக்கும் மகளிர்தினம்“ சாத்தியமற்றதாக இருந்தபோதும், போல்ஸ்விக் கட்சியின் கொள்கைகளையுடைய இடதுசாரி பெண் சோசலிஸ்டுகள், மார்ச் 8-ஐ போருக்கு எதிரான உழைக்கும் மகளிரின் ஆர்ப்பாட்டமாக மாற்ற முயற்சித்தனர். ஆனால் ஜெர்மனி சோசலிச கட்சியிலிருந்த துரோகிகள் அதனைத் தடுத்து நிறுத்தினர். நடுத்தர கொள்கையுடைய நாடுகளில், முதலாளிகளின் எண்ணங்களுக்கெதிராக உலக தொழிலாளர்களின் ஒற்றுமையை பறைசாற்றும் விதத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட உலக மகளிர்தின கூட்டங்களுக்குச் செல்வதைத் தடுக்கும் நோக்கத்தில், அத்தருணத்தில் பெண் சோசலிஸ்டுகளுக்கு கடவுச்சீட்டு மறுக்கப்பட்டது.

1915-ல் நார்வே நாட்டில் மட்டுமே ஓரளவு சமாளித்து மகளிர் தினத்தில் உலகளவிளான ஆர்ப்பாட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டன, அதில் இரஷ்யா மற்றும் நடுநிலை நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அக்காலகட்டத்தில் ஜார் மன்னராட்சியின் ராணுவ ஒடுக்குமுறைக் கருவிக்கெதிராக, பெண்கள் தின ஒருங்கிணைப்பை இரஷ்யாவில் யோசிக்கக்கூட முடியாக நிலை இருந்தது.

அதன்பிறகு மிகச் சிறப்பான 1917-ம் ஆண்டு பிறந்தது. பசியும், பிணியும், போர் பயிற்சிகளும் பெண் தொழிலாளிகள் மற்றும் விவசாயப் பெண்களின் பொறுமையை உடைத்தெறிந்தன. 1917, மார்ச் 8-ம் நாள் (அன்றைய பிப்ரவரி 23) பெண்கள் தினத்தன்று பெண்கள் மிக தைரியமாக பெட்ரோகிராட் தெருக்களில் கூடினர். அப்பெண்களில் சிலர் தொழிலாளர்கள், சிலர் வீரர்களின் மனைவிகள். அவர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு ரொட்டி கோரியும் இரானுவத்திலிருந்து தங்களுடைய கணவர்களை திருப்பியனுப்பும்படி முழக்கமிட்டனர். இந்த உச்சகட்ட சூழலில் உழைக்கும் மகளிரின் போராட்டத்தில், ஜார் மன்னரின் பாதுகாப்பு படைகள் வழக்கமான ஒடுக்குமுறையை கையாளமுடியாமல், அலைகடலென திரண்டிருந்த மக்களின் கோபக் கனலை மிரட்சியுடனும் குழப்பத்துடனும் நோக்கவேண்டிய நிலை ஏற்பட்டது.

1917-ம் ஆண்டின் உழைக்கும் மகளிர் தினம் வரலாற்றில் நினைவுகூரத்தக்கதாக மாறியது. அத்தினத்தில்தான் இரஷ்ய பெண்கள் பாட்டாளி வர்க்கப் புரட்சியின் தீப்பொறியை உயர்த்தினர். அது உலகம் முழுக்க பற்றியது. பிப்ரவரி புரட்சியின் துவக்க நாளாக அது அமைந்தது.

போருக்கான நமது அழைப்பு

பத்து வருடத்திற்கு முன்பு “உழைக்கும் மகளிர் தினம்” முதன் முதலாக பெண்களுக்கு அரசியல் சமத்துவம் மற்றும் சோசலிசத்துக்கான போராட்டம் என்ற பிரச்சாரங்களை முன்வைத்து நடத்தப்பட்டது. இரஷ்ய மகளிர் இவ்வுரிமைகளைப் பெற்றனர். சோவியத் குடியரசில் உழைக்கும் பெண்களும், விவசாயிகளும் ஓட்டுரிமை மற்றும் குடியுரிமைகளை ஏற்கெனவே வென்றெடுத்துவிட்டதால் அவ்வுரிமைகளுக்காக போராடவேண்டிய தேவை எழவில்லை. இரஷ்ய தொழிலாளர்களும் விவசாய பெண்களும் சம உரிமையுள்ள குடிகளாகிவிட்டனர். அவர்களிடம் ஓட்டுரிமையும், சோவியத் மற்றும் பிற கூட்டுறவு அமைப்புக்களிலும் பங்கெடுக்கும் அதிகாரங்கள் உள்ளன. மேம்பட்ட வாழ்க்கையை எளிமையாக அடைவதற்கு உதவும் ஆயுதங்களாகிய இவைகளை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.

ஆனால் உரிமைகள் மட்டும் போதாது. அவைகளை எப்படி பயன்படுத்துவது என்பதையும் கற்க வேண்டும். ஓட்டளிக்கும் உரிமையை நம்முடைய பலனுக்கானதாக எப்படி ஆக்குவது என்பதை கற்கவேண்டும். இந்த இரண்டு வருட சோவியத் அதிகாரத்தில், நமது வாழ்க்கை முற்றிலும் மாறிவிடவில்லை. நாம் கம்யூனிசத்தை அடைவதற்கான போராட்டத்தில் இருக்கிறோம். அதே சமயத்தில் பழைய இருண்ட மற்றும் அடக்குமுறைகளைக் கொண்ட பழைமையான உலகாலும் சூழப்பட்டுள்ளோம். குடும்பச் சங்கிலி, வீட்டு வேலைகள், விபச்சாரம் போன்றவைகள் இன்னமும் உழைக்கும் பெண்கள் மீது கனத்துக்கொண்டுதான் இருக்கின்றன. உழைக்கும் பெண்களும் விவசாயப் பெண்களும் இவைகளிலிருந்து விடுபட்டு சமத்துவத்தை அடைய வேண்டுமென்றால் அது இரஷ்யாவை உண்மையான கம்யூனிச சமூதாயத்தை நோக்கி கொண்டுசெல்வதில் நம்முடைய உழைப்பைச் செலுத்தினால் மட்டுமே சாதிக்க முடியுமே தவிர வெறும் சட்டத்தால் இயலாது.

இதனை விரைந்து சாத்தியமாக்க நாம் முதலில் இரஷ்ய பொருளாதாரத்தை நேர்நிலைப்படுத்த வேண்டும். இதனைச் சாதிக்க அடிப்படையாக நம்முன் இரண்டு முதன்மைக் கடமைகள் உள்ளன. ஒன்று எஃகுறுதிகொண்ட அரசியல்படுத்தப்பட்ட தொழிலாளர் கட்டமைவை ஏற்படுத்துவது மற்றொன்று போக்குவரத்தை மறுசீரமைப்பு செய்வது. நம்முடைய தொழிலாளர்கள் துரிதமாக செயல்பட்டால் மிகவிரைவில் நீராவி எந்திரங்களைப் பெற்று மீண்டும் இரயில்களை இயக்கலாம். இதன்மூலம் உழைக்கும் ஆண்கள் மற்றும் பெண்களின் அவசியத் தேவையான ரொட்டியையும் விறகினையும் பெறலாம்.

போக்குவரத்தை மீட்பது கம்யூனிச வெற்றியை விரைவுபடுத்துவதாகும். கம்யூனிச வெற்றியுடன் பெண்களின் சமத்துவதும் வென்றெடுக்கப்படுகிறது. எனவே உழைக்கும் பெண்கள், விவசாயப் பெண்கள், தாய்மார்கள், மனைவிகள் மற்றும் சசோதரிகள் அனைவரும் இரயில்வே மற்றும் போக்குவரத்தை மறுசீரமைப்புச் செய்வதில் மற்றும் உணவு, விறகு மற்றும் மூலப்பொருட்களை கொணர்வதில் பாடுபடும் நமது தொழிலாளர்களுக்கு இருக்கும் சிரமங்களை போக்குவதற்கு அனைத்து உதவிகளையும் செய்வோம் என்பதை இந்த உழைக்கும் மகளிர்தினத்தின் செய்தியாக முன்வைக்கிறோம்.

சென்ற வருட மகளிர் தினத்தின் முழக்கம் “அனைத்தும் செம்படையின் வெற்றிக்கு!“ என்பதாகும். தற்போது நமது உழைக்கும் மகளிரை நம்முடைய உழைப்பாளிகளின் ரத்தம் சிந்தா அணிவகுப்பின் பின்னால் அனிவகுக்க அழைப்பு விடுக்கிறோம். செம்படை ஒருங்கமைக்கப்பட்டதாக, ஒழுங்கமைக்கப்படதாக மற்றும் சுயதியாகம் செய்ய தயாராக இருந்ததால்தான் புற எதிரியை தோற்கடித்தது. தற்போது நமது ‘தொழிலாளர் குடியரசு’ உள்நாட்டு எதிரிகளான போக்குவரத்து இடப்பெயர்வு, பொருளாதார சூழல், பசி, குளிர் மற்றும் நோய்கள் ஆகியவற்றை வெல்லும். “நாம் அனைவரும் தொழிலாளர்களின் இரத்தம் சிந்தா முன்னனியின் வெற்றிக்கே! அனைவரும் அதன் வெற்றிக்கே!“

உழைக்கும் மகளிர் தினத்தின் புதிய இலக்கு

அக்டோபர் புரட்சி நமது பெண்களுக்கு சமத்துவத்தையும், ஆண்களோடு சமமான குடியுரிமைகளையும் வழங்கியது. சில காலத்திற்கு முன்புவரையில் மிகுந்த துரதிஷ்டவசத்திலும், ஒடுக்குமுறையிலும் இருந்த இரஷ்ய பெண் பாட்டாளிகள் தற்போது சோவியத் குடியரசில், பிற நாட்டு தோழர்களுக்கு, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரம் மற்றும் சோவியத் அதிகாரத்தை அமைப்பதன் மூலம் அரசியல் சமத்துவத்தை அடையமுடியும் என்பதை பறைசாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

முதலாளித்துவ நாடுகளில் இன்றும் பெண்கள் உழைப்புச் சுரண்டப்படுபவர்களாகவும், வாய்பற்றவர்களாகவும் இருப்பதால் அங்கு நிலைமை வேறாக உள்ளது. நார்வே, ஆஸ்திரேலியா, பின்லாந்து மற்றும் வட அமெரிக்கா போன்ற சில நாடுகளில் போருக்கு முன்பே பெண்கள் குடிமை உரிமை பெற்றனர் என்றாலும் அந்நாடுகளில் உழைக்கும் பெண்களின் குரல் பலவீனமாகவும், உயிர்ப்பின்றியும்தான் இருக்கின்றது.

ஜெர்மனியில், கெய்சர் தூக்கியெறியப்பட்ட பின்பு, சமரசவாதிகள் தலைமையில் முதலாளித்துவ குடியரசு அமைக்கப்பட்டது. அதில் 36 பெண்கள் பாராளுமன்றத்திற்குள் பங்கெடுத்தனர். ஆனால் அதில் ஒரு கம்யூனிஸ்ட் கூட இல்லை.

1919-ம் ஆண்டு இங்கிலாந்தில் ஒரு பெண் முதன்முறையாக பாராளுமன்ற உறுப்பினராக முதன்முறையாக தேர்வுசெய்யப்பட்டார். ஆனால் அவர் யார்? ஒரு நிலச்சுவாந்தாரரும், மேல்தட்டு வர்க்கத்தைச் சோ்ந்த சீமாட்டியும் ஆவார் அவர்.

பிரான்சில் கூட பெண்களுக்கு ஓட்டுரிமையளிப்பது தொடர்பான கேள்வி எழுந்தது.

ஆனால் முதலாளித்துவ பாராளுமன்ற கட்டமைப்பில் உழைக்கும் பெண்களுக்கான இவ்வுரிமைகள் என்ன பலனைத் தரும்? அதிகாரம் முதலாளிகள் கையிலும், சொத்துடைமையாளர்கள் கையிலும் இருக்கும்போது எந்த அரசியல் உரிமையும், உழைக்கும் பெண்களை பழைமையான குடும்ப மற்றும் சமூக அடிமைத்தனத்திலிருந்து மீட்காது. இந்நிலையில் பிரான்சில் உழைக்கும் வர்க்கங்கள் மத்தியில் போல்ஸ்விக் கருத்துக்கள் மேலோங்கி வருவதால், பெண்களுக்கு ஓட்டுரிமை வழங்கும் பெயரில் உழைக்கும் வர்க்கத்திற்கு மேலுமொரு பருக்கை தர முடிவு செய்தது.

படிக்க :
♦ வீழ்ச்சியடைந்துவரும் பெண் தொழிலாளர்களின் எண்ணிக்கை !
♦ வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) – முதலாளித்துவத்தின் நவீன சுரண்டல் முகம்

திரு.முதலாளி அவர்களே – இது மிகவும் தாமதம் !

அக்டோபர் புரட்சியின் அனுபவம் பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் பிற நாடுகளின் உழைக்கும் பெண்களுக்கு, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் மட்டுமே, சோவியத் அதிகாரம் மட்டுமே, முழுமையான நிரந்தரமான சமத்துவத்தை உத்திரவாதப்படுத்த முடியும் என்பதையும், கம்யூனிசத்தின் வெற்றி பல நூற்றாண்டுகால ஒடுக்குமுறைச் சங்கிலியை அறுத்தெறியும் என்பதையும் தெளிவுபடுத்தியது. இதற்கு முன்பு உழைக்கும் மகளிர் தினத்தின் இலக்கு முதலாளிகளின் பாராளுமன்றத்திற்கு முன்பு ஓட்டுரிமைக்கான போராட்டமாக இருந்தது. தற்பொழுது உழைக்கும் பெண்களை “மூன்றாம் அகிலத்தின்“ போராட்ட முழக்கங்களை நோக்கி அணி திரட்ட வேண்டிய புதிய இலக்கு பாட்டாளி வர்க்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. முதலாளிகளின் பாராளுமன்றத்தில் உழைப்பைச் செலுத்துவதற்குப் பதிலாக, இரஷ்யாவின் அழைப்பிற்கு செவிசாயுங்கள்“.

“அனைத்து நாடுகளின் உழைக்கும் பெண்களே!
உலகைச் சுரண்டிக் கொண்டிருப்பவர்களுக்கு எதிராக ஒருங்கிணைந்த பாட்டாளிவர்க்க முன்னனியை கட்டுவோம்!
முதலாளித்துவ பாராளுமன்றத்தை புறக்கணிப்போம்!
சோவியத் அதிகாரத்தை வரவேற்போம்!
உழைக்கும் ஆண்களையும் பெண்களையும் பிடித்திருந்த வேற்றுமைகளையும் – ஏற்றத்தாழ்வுகளையும் களைந்தெறிவோம்!
உலக கம்யூனிச வெற்றிக்காக தொழிலாளிகளுடன் இணைந்து போராடுவோம்!“

இந்த அழைப்பு முதலில் புதிய முறையின் முன்னோட்டத்திற்கு மத்தியில் ஒலித்தது. பனிப்போரில் இது கேட்கும் மற்றும் இது பிறநாடுகளின் உழைக்கும் பெண்களின் இதயத்தில் சுருதிமீட்டும். உழைக்கும் பெண்கள் இந்த அழைப்பைக் கேட்டு சரியானதென நம்புவார்கள். சிறிது காலத்திற்கு முன்புவரையில் எப்படியாவது தங்கள் தரப்பிலிருந்து சிலரை பாராளுமன்றத்திற்கு பிரதிநிதிகளாக அனுப்பிவிட்டால் அவர்களுடைய வாழ்க்கை எளிமையானதாகவும், மூலதன ஒடுக்குமுறை கடக்கக்கூடிய ஒன்றாகவும் ஆகிவிடும் என்று எண்ணியிருந்தனர். தற்பொழுது உண்மை அவர்களுக்குப் புரியும்.

மூலதன ஆட்சியை தூக்கியெறிவதும், சோவித் அதிகாரத்தை நிறுவுவதுமே உலகைத் துயரிலிருந்தும், உழைக்கும் பெண்களை அவர்களின் வாழ்க்கையை கடினமாக்கும் தாழ்மை மற்றும் சமத்துவமின்மையிலிருந்தும் மீட்கும். ஓட்டுரிமைக்காக நடத்தப்பட்ட “உழைக்கும் மகளிர் தினம்“ இன்று பெண்களுக்கான முழுமையான விடுதலைக்கானதாக, அதாவது சோவியத் மற்றும் கம்யூனிசத்தின் வெற்றிக்கான போராட்டமாக மாறுகிறது.

உடைமை மற்றும் மூலதன அதிகாரம் ஒழிக !
முதலாளித்துவ உலக மரபுகளான – ஏற்றத்தாழ்வு, உரிமையின்மை, பெண்கள் மீதான ஒடுக்குமுறை ஆகியவைகளை விட்டொழிப்போம்!
ஆண் பெண் உழைப்பாளர்களின் உலக ஒற்றுமையை முன்னெடுப்போம்!
பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான போராட்டத்தில் தொழிலாளர்கள்!
பாட்டாளிவர்க்கத்தின் இருபாலினரும்!

000

கட்டுரை தலைப்பு : உலக மகளிர் தினம்
எழுதியவர் : தோழர் அலெக்சாந்த்ரா கொலந்தாய்
முதல் பதிப்பு : மெழ்துனரோதின்யி தென், 1920
ஆங்கில மொழி பெயர்ப்பு : அலிக்ஸ் ஹோல்ட் 1972
தமிழாக்கம் : ச. மீனாட்சி (சமூக ஆர்வலர்)

disclaimer

டிஜிட்டல் பாசிசம் எவ்வாறு வேலை செய்கிறது ?

பாசிசம் பற்றி பெரும்பாலான மக்களுக்கு ஏதோ ஒருவகையில் புரிதல் இருக்கலாம்.அது ஒருவகையில் எல்லாவற்றையும் கட்டுக்குள் வைத்து நாட்டில் ஒரு ஒழுங்கு முறையை கொண்டுவரும் என்று நம்பிக்கொண்டிருக்கலாம். கண்முன்னே நடக்கும் சீரழிவான மக்கள் விரோத ஆட்சிகளுக்கு மாற்றானதாகக் கூட மக்கள் நம்பலாம்.

உண்மையில்,

“*பாசிசம் ஆட்சி அதிகாரத்தில் இருப்பது என்பது நிதிமூலதனத்தின் ஆகப் படுமோசமான பிற்போக்கான ஆக அதிகமான ஆதிக்க இனவெறி கொண்ட ஆகப்படுமோசமான ஏகாதிபத்திய நபர்களின் பகிரங்கமான பயங்கரத்தன்மை கொண்ட சர்வாதிகாரமாகும்*” என்கிறார் பாசிசத்தை வெற்றிகொண்ட டிமிட்ரோவ்

பாசிசம் என்பது என்ன?

டிமிட்ரோவ் விளக்குகிறார் “*பாஸிஸம் நிதி மூலதனம் தன்னின் அதிகாரமாகும். அது தொழிலாளர் வர்க்கம் புரட்சிகரத்தன்மை கொண்ட விவசாயிகள் படிப்பாளிகள் பகுதிக்கும் எதிரான பயங்கரமான வன்முறை மிக்க பழிதீர்க்கும் ஸ்தாபனமாகும். வெளிநாட்டுக் கொள்கையில் பாஸிஸம் மிகவும் கொடூரமான வடிவத்திலான இனவெறி கொண்டதும் இதர நாடுகள் மீது மிகவும் கீழ்த்தரமான வெறுப்பை தூண்டிவிட்டு தூபம் போடுவதுமான சக்தியாகும்.*”.

1920-ல் இத்தாலியில் முசோலினியால் முதன்முதலில் பாசிசம் அரங்கேற்றப்பட்டது. 100 ஆண்டுகள் ஆகிவிட்டன. வரலாற்றில் மாற்றங்கள் ஏற்பட்டிருப்பதை போல இத்தாலியிலும் மற்றும் பாசிசத்திலும் மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. முசோலினியின் அந்தக் கால பாசிசம் இன்று டிஜிட்டல் பாசிசமாக உருமாறியிருக்கிறது.

படிக்க :
♦ ஹத்ராஸ் பாலியல் வன்கொலை – பாபர் மசூதி இடிப்பு தீர்ப்பு : நெருங்கி வரும் பாசிசம் !
♦ என்.ஐ.ஏ., உபா சட்டத் திருத்தங்கள் : சட்டப்பூர்வமாகிறது பாசிசம் !

டிஜிட்டல் பாசிசம் : பெரிமோ லெவி

பெரிமோ லெவி இவர் உலகிலுள்ள பாசிசத்தில் நிபுணத்தவம் பெற்றவர்களில் ஒருவர். இத்தாலியின் யுத ரசாயனவியலறிஞர் ஹோலோகாஸட். இவருக்கு ஜெர்மனியின் நாஜிசம் இத்தாலியின் பாசிசம் ஆகியவற்றில் முதல்நிலை அனுபவம் இருப்பதோடு அவை எவ்வாறு உள்ளிருந்து வேலை செய்யும் என்பதையும் கண்கூடாக பார்த்து அறிந்தவர். அந்த நடைமுறையை சிறந்த நுட்பத்தோடு விளக்குகிறார். பாசிசத்தின் கோட்பாடு மற்றும் நடைமுறையை மனிதாபிமான பார்வையில் விளக்குகிறார்.

பெரிமோ லெவி கூறியவற்றுள் முக்கியமான நிகழ்காலத்திற்கும் பொருந்தக்கூடிய செய்தியென்றால் அது ஒவ்வொரு காலமும் அதற்கேயுரிய பாசிசத்தன்மையை பெற்றிருக்கும் என்பதுதான். *பாஸிஸத்தின் வளர்ச்சியும் பாஸிஸ சர்வாதிகாரமும் பலவேறு நாடுகளில் பல்வேறுபட்ட வடிவங்களில் வந்திருக்கின்றன.அந்தந்த நாட்டு வரலாறு சமுதாயம் பொருளாதாரம் ஆகிய நிலைமைகளுக்கு தக்கபடி தேசிய தனித்தன்மைகளுக்கும் குறிப்பிட்ட நாட்டின் சர்வதேச ஸ்தாபனத்தை பொறுத்தும் பாஸிஸம் உருவமெடுக்கிறது.*

பாசிசத்தின் இரு வடிவங்கள் :

1920 மற்றும் 1930-களில் இத்தாலியில் பாஸிஸமாகவும் 1930 மற்றும் 1940-களில் ஜெர்மனியில் நாஜிஸமாகவும் இரு தன்மைகளில் பாசிசம் இருந்த்து.

நாஜிசம்-பாசிசத்தின் மோசமான வடிவம்

டிமிட்ரோவ் விளக்குவதை போல “*ஜெர்மன் வகை பாசிசம் மிகவும் படு மோசமான பிற்போக்கான பாசிச வகையாகும். அது தன்னை தேசிய சோசலிசம் என்று சிறிதும் வெட்கமில்லாமல் ஆணவத்துடன் கூறிக்கொள்கிறது. ஹிட்லர் பாசிசம் பூர்ஷுவா தேசியவாதம் மட்டுமல்ல அது கீழ்த்தரமான இனவெறி மிக்கதாகும். அது மத்திய காலத்து காட்டு மிராண்டித்தனமும் கீழ்த்தரமான இனவெறியும் கொண்டது*”.

100 ஆண்டுகள் கடந்தபின்னும் இப்போது இணையத்தள வலைத்தள காலத்தில் அதன் வழியாகவும் பாசிசம் தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்துகிறது என்று சொன்னால் அதன் அபாயத்தன்மையை மக்களுக்கு விளக்கி எதிர்த்து போராட தயார்படுத்த வேண்டியிருக்கிறது. ஏறத்தாழ வளர்ச்சி அடைந்த வடிவத்தில் பாசிச போக்குகளும் ஒரு பாசிச இயக்கத்தின் விஷக்கிருமிகளும் அநேகமாக எல்லா இடங்களிலும் காணப்படுகின்றன. அக்கால பாசிச சிந்தனையின் கூறுகள் இன்னும் நம்மிடையே இருக்கின்றன.

பாசிசம் அதிகாரத்தை கைப்பற்ற எத்தகைய வழிமுறைகளையும் எந்த வடிவத்தையும் எடுக்க தயங்காது.மக்களின் உரிமைகளுக்காக போராடப் போவதாகவும் ஜனநாயகத்தை காக்க போவதாகவும் நல்லாட்சி தரப்போவதாகவும் வாய்ச்சவடால் அடித்து பேசும் சில சமயங்களில் புரட்சிகர பாரம்பரியத்திற்கு சொந்தக்காரர்களென்று வாய் கூசாமல் பொய்யாய் அடித்து விடும். எனவே பாசிசத்தின் வடிவங்களை திரை கிழிப்பதில் சமரசமின்றி போராடுவது மிக மிக முக்கிய அவசர அவசிய தேவையாகும்.

டிஜிட்டல் பாசிசம் :

எங்கெல்லாம் எண்கள் (0 1) அதாவது binary form-ல் தகவல்கள் பரிமாறிக் கொள்ளப் படுகிறதோ அவையெல்லாம் டிஜிட்டல் எனப்படுகிறது. இது பூஜ்ஜியம் மற்றும் ஒன்று என்ற இரு தனி மதிப்புகள் மட்டுமே கொண்டது ஆகும். (A binary number has only two discrete values — zero or one) எலக்ட்ரானிக்ஸ் மொழியில் சிக்னல் என்றும் சொல்வார்கள். இன்றைக்கு உலகை விரல் நுனிக்கு எளிதாக கொண்டு வந்து நிறுத்துவது இதுதான். நடுத்தர குட்டிமுதலாளி வர்க்கத்தினரை ஆக்ரமித்து இருப்பதும் இதுதான்.  ஒவ்வொருவரையும் தனித்தனியாக பிரித்தெடுத்து சுற்றிஇருப்பவர்கள் கூட அறியாமல் மூளைச்சலவை செய்து ஆட்கொள்ளும் சக்திபடைத்த்து.இதிலும் ஆளுமை செலுத்த பாசிசம் எடுக்கும் வழிவகைகளை அம்பலபடுத்துவதே பெரிமோ லெவியின் கட்டுரையின் நோக்கம் என்கிறார்.

பாசிசத்தின் கொடூர கொள்கைகள்

நவீன அல்லது டிஜிட்டல் பாசிசம் இன்னமும் கூட ஆரம்பகால பாசிச கோட்பாடுகளின் ஒன்பது அம்ச கொள்கைகள் அடிப்படையில்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது.

1. மனித உரிமைகள் மனிதாபிமானம் மனிதகெளரவத்தை மற்றும் மனித வாழ்வின் மதிப்பை முற்றிலும் இகழ்ச்சிக்குள்ளாக்குவது கேவலபடுத்துவது

2. மூர்க்கமான மூடத்தனம் நாகரிகமற்றதன்மை நடைமுறையோடு(அ) இயற்கையோடு ஒத்துப்போகாமலிருப்பது.

*பாசிசம் மத்திய காலத்து நிலபிரபுத்துவ காட்டு மிராண்டித்தனமும் கீழ்த்தரமான இனவெறியும் கொண்டது.

3.வலதுசாரிகளின் தேசியத்தோடு கூடிய இனம் என்ற முறையில் வெள்ளை இன ஆதிக்கத்தை கொண்டாடுவது

4.வெள்ளைதோல் ஆண் தலைமையை அடிபணிந்து கொண்டாடுவது மற்றும் பெண்ணடிமைத்தனத்தை காக்கும் ஆணாதிக்க மனப்பாண்மையை மேன்மைபடுத்துவது

5.பாசிசம் எப்போதும் மூலதனத்தை காத்து நிற்கும் என்பதால் இயல்பாகவே கார்ப்ரேட்நிறுவனங்களின் பாதுகாவலனாக நிற்கும்

6.விமர்சன நுண்ணறிவுக்கு மேல் ஒத்திசைவான உணர்ச்சியை உயர்த்தி பிடிப்பது. பெரும்பான்மை பலத்தின் மூலம் சமூக அறிவு கண்ணோட்டத்தை ஒடுக்குவது

7.மூர்க்கத்தனமாக ஒன்றுபட்டிருப்பது தங்களுக்கு தாங்களே சலுகைகாட்டுவது மற்றும் தங்களை தவிர மற்றவர்களை முன்னேறவிடாமல் தடுப்பது

8.விமர்சனம் மாறுபட்ட கருத்து அறிவுப்புர்வமான சிந்தனை ஆகியவற்றை இகழ்ச்சிக்குள்ளாக்கி பயனற்றதாக்கிவிடுவது

9.அரசியல்ரீதியாக எதிர்ப்பவர்கள் மீது குரூரமான முறையில் வன்முறை தாக்குதலுக்கு வெளிப்படையாகவே அங்கீகாரம் தருவது

இணைய வலைத்தளத்தில் டிஜிட்டல் பாசிசம் மூன்று முக்கிய ஒன்றுக்கொன்று தொடர்புடைய கருவிகள் மூலம் வேலை செய்கிறது.

  1. மிகப்பெரிய போர்அணிவரிசையாக பிரபலபடுத்தப்பட்ட மக்களை கவரக்கூடிய அதேசமயம் இனவெறி கற்பனையான சதி பற்றிய செய்திகளை மக்கள் மத்தியில் தீவிரமாக பரவசெய்வது வலது சாரி மற்றும் நவ – பாசிச வலைத்தளங்களை அணிஅணியாக ஆன்லைனில் கொண்டுவருவது.
  2. இடைப்பட்டதன்மையுடன் கூடிய வலதுசாரி பொருட்கள் துணிவகைகைள் நினைவுப்பரிசு இசை சம்பந்தப்பட்ட பொருட்கள் இராணுவ கலைப்பொருட்கள் ஆகியவற்றை தரக்கூடிய ஆன்லைன் வணிக வியாபார வலைத்தளங்கள்
  3. ஆன்லைன் விவாத மேடைகள்

முதலில் அப்பாவிகளை போல டிஜிட்டல் பாசிசம் மிக நல்லவிதமான கருத்துக்களை பதிவிட ஆரம்பிக்கும்.தொடர்ந்து மெதுவாக எச்சரிக்கைகள் மற்றும் பொய்செய்திகள் திடுக்கிடும் வதந்திகள் கற்பனையான சதித்திட்டங்கள் உணர்வுகளை தூண்டக்கூடியவகையிலான அதேசமயம் உணர்ச்சிபூர்வமான கதைகள் மற்றும் உண்மைக்கு மாறான செய்திகளை உண்மைகளை போல சொல்வது என்று டிஜிட்டல் பாசிசம் மெதுவாக தனது பதிவுகளில் கொடுக்க ஆரம்பிக்கும்.

இந்த போக்கில் படிப்படியாக தங்களால் தங்கள் வழிக்கு கொண்டுவரமுடியும் என்ற நம்பிக்கையை தரும் நபர்களை டிஜிட்டல் பாசிசம். — ‘தங்களது சிந்தனை வளையத்துக்குள் கொண்டுவரமுடியாது என்று அடையாளம் காணப்பட்டவர்களிடமிருந்து’— படிப்படியாக பிரிக்கும் வேலையை செய்வார்கள்.

இந்த தளங்கள் வழியாக டிஜிட்டல் பாசிசம் தங்களிடம் பலியானவர்களுக்கென்று தொடர்ச்சியான தீவிரமான பிரச்சார தாக்குதலை கொண்டு சேர்க்கிறது. இதை அடுத்தடுத்து தொடர்ச்சியாக இடைவெளிக்கு காத்திருக்க வைக்காமல் அடுத்த வலதுசாரி செய்திதாள் வரும்வரை கூட அல்லது அடுத்த பிரச்சாரகரின் பிரச்சாரம் ஒளிபரப்பப்படும்வரை அல்லது அடுத்த ஆயுத பேரணி வரை காத்திருக்க விடாமல் டூவிட்களை நூற்றுக்கணக்கிலும் மெசேஜ்களை மைல் நீளத்திற்கும் தருகிறது.

இதன் மூலம் அதிக எண்ணிக்கையில் முன்பின் தெரியாத நபர்கள் கூட உங்களுக்கு நண்பர்கள் ஆகி தங்களுடைய வார்த்தைகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஆர்வம் காட்டுவார்கள்.

தங்களது பலிஆடுகளாக மாறிப்போனவர்களிடம் ஒரு சிக்கலான பிரச்னை நடக்கிறது என்றோ பேரழிவுக்கு உள்ளாகப் போகிறோம் என்றோ பெரும் ஆபத்து வரப்போகிறது என்றோ ஒரு மாய பிம்பத்தை பயத்தை கட்டுவிக்கிறது. இம்மாதிரியான கற்பனைகள் தவறான பாதைகளை நம்பி செல்வதற்கும் அவர்களை சுற்றி வலதுசாரி வளையத்தை மேலும் மேலும் இறுக்கி தங்களுக்கு முன்பான யதார்த்தமான எந்த உண்மைகளையும் உணரமுடியாதவாறு செய்வதறகும் எளிதாகிறது.

ஏனெனில் ‘உடனடி அழிவுகள் என்பது -நாம் எல்லோரும் நினைப்பது போல உலகம் முழுதும் நடைபெறும் சம்பவங்களால் சீதோஷணநிலைமை மாறுவதால் நமது நாட்டைவிட்டு வளங்கள் கொள்ளைபோவதால் மற்றும் வேலைகளை தனியாருக்கு குத்தகைவிட்டுவிடுவதன் மூலம்தான் வரமுடியும்’ என்பதை பற்றி கவலைப்படாமல் வலதுசாரி பிரச்சாரகர்களின் வாய்வீச்சில் பலியாகி அவர்கள் முன்வைக்கிற எத்தகைய கடுமையான நடவடிக்கைகளையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறார்கள். ”நமது தலைவர் மட்டுமே நம்மை காப்பாற்ற முடியும்” இதுதான்

நிஜங்களை பற்றி கொஞ்சம் கூட அலட்டிக்கொள்ளாமல் டிஜிட்டல் பாசிசம் எல்லா முக்கியமான எதிரிகளையும் உள்ளுக்குள்ளே எழுப்பி பூதாகரமாக்கி அதிலிருந்து வலதுசாரி பயங்கரவாதம் மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற மாய பிம்பத்தை கட்டுவிக்கிறது.இந்த உத்தி ஆதி பாசிசத்திற்கு மிக முக்கியமானதாக இருந்தது

இன்றைக்கு நாள் முழுதும் (24/7) தினமும் டிஜிட்டல் தளங்களில் எளிதாக கிடைக்கக்கூடியதாக மாறிவிட்டது.

டிஜிட்டல் பாசிசம் எப்போதும் அங்கே இருக்கும் எல்லா நேரத்திலும் எல்லா இடத்திலும் தனது எதிரி என கண்டுபிடிக்கப்பட்டவர்களோடு முழுகவனத்துடன் போராட தயாராக இருக்கும்.டிஜிட்டல் பாசிச உலகத்தில் எல்லாமே கறுப்பு வெள்ளை மட்டும்தான். கலர்களுக்கு இடமேயில்லை. எப்போதும் “நாம் எதிரே அவர்கள்”. அதாவது “us-vs.-them” “வெள்ளை இன மக்களுக்கு எதிராக மற்ற நிற மக்கள்”. எதை பிரச்சாரம் செய்தால் எடுபடும் என கணக்கீட்டு பிரச்சார மற்றும் வலதுசாரி ஆன்லைன் பிரச்சார வல்லுநர்கள் இவற்றை ரெட்பில்லிங் என்பார்கள்(redpilling).

மாட்ரிக்ஸ் திரைப்படத்தில் வருவதைப்போல உங்களுக்கு வாய்ப்பு என்பது நீலம் அல்லது ரெட்பில் மட்டுமே. நீல உறைக்குள் உங்களை புதைத்துக்கொண்டால் நீங்கள் ஒரு கற்பனையான பொய் உலகத்திற்குள் சஞ்சரிக்கலாம். ரெட் என்றால் உண்மையை பார்க்கச் செய்யும் அல்லது குறைந்த பட்சம் டிஜிட்டல் பாசிசம் வடிவமைத்திருக்கும் மாற்று உண்மைகளையாவது உணரச்செய்யும்.

இதுதான் மக்களின் புராண காலத்திலிருந்ததை போன்ற விருப்பங்களை பிரதிபலித்த மாற்று உண்மைதான் 6-ம் தேதி ஜனவரி 2021-ல் வாஷிங்டன் டி.சி. தலைநகர கட்டிடத்தில் நாம் பார்த்தது இதை இந்த ஒன்று கூட்டப்டட அல்லது மனித கூட்டத்தின் கோபமாக டிஜிட்டல் பாசிசம் வெளிக்காட்டியது. அமெரிக்க தலைநகரத்தை சுற்றிக்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டதை பெரும்பான்மை அமெரிக்க மக்கள் விரும்பில்லை; வலதுசாரி பயங்கரவாதத்தை ஆதரிக்கவில்லை என்றுதான் 81-74 ஆக பிரிந்த செனட், அதிபர் மீது நீக்கல் (impeachment) தீர்மானத்தை அரசியலமைப்பு படி நிறைவேற்றியது அவர்கள் ஏகமனதாகவே வலதுசாரி வேலைத்திட்டத்தை ஏற்கவில்லை என்பதையே காட்டுகிறது. மௌனமான பெரும்பான்மையின் மாயை அங்கே இருக்கவில்லை. அப்படி ஏதாவது இருந்திருந்தால் அவர்களின் பைத்தியக்காரத்தனமான காரண காரியங்களை பார்த்துக் கொண்டு சும்மா இருந்திருக்க மாட்டார்கள்.

வேலை மற்றும் வேலையிலிருந்து ஓய்வாக இருப்பது ஆகிய இரண்டும் ஒன்றுக்கொன்று அதிகரித்த அளவில் கலக்கும்போது கொரோனா வைரஸ் உலகத்தை பயமுறுத்திய காலகட்டத்தில், வீட்டை அலுவலகமாக ஆக்கிகொள்வது அதிகரித்தபோது, மிகப்பெரிய ஊக்கம் பெறுவதை பார்க்கமுடிந்த்து. அலுவலகம் அல்லது தொழிற்சாலை ஆகியவற்றிலிருந்து விட்டுக்கு போகும்போது பொழுதுபோக்கு, சமூக வலைத்தளங்கள், ஹாலிவுட் ஆன்லைன் கணினி விளையாட்டுகள் மற்றும் யூ டியூப் ஆகியவற்றை தேடும் மனப்பாங்கு உருவாகுவது எப்போதையும் விட அதிகரித்த அளவில் இருக்கிறது.

வீட்டுக்குள் இருக்கும்போது பொழுதுபோக்கு சம்பந்தமான செலவு குறைவது மற்றும் பொதுவெளி பழக்கம் குறைவதும் வாடிக்கையான அனுபவமாக பழகிவிடும். உதாரணத்திற்கு இரவு சாப்பிடும்போது செய்திகளை பார்ப்பது தொலைந்துவிடும். சமூக பழக்கவழக்கங்கள் தனிப்பட்ட அந்தரங்கமான இடங்களுக்கு மாறிவிடும். வாடிக்கையான அனுபவங்கள் கொஞ்ச கொஞ்சமாக மறைந்துவிடும்.

படிக்க:
♦ CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !
♦ இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !

சமூகத்தில் கலந்திருப்பது மற்றும் வீட்டிலிருக்கும் போது மற்றவற்றுக்கு செலவிடும் நேரம் ஆகியவை சுத்தமாக இல்லாமல் போய்விடும். இந்த சமயம்தான் டிஜிட்டல் பாசிசத்திற்கு விலை மதிக்கவொண்ணாத புதிய புதிய கதவுகளை திறந்துவிடும். உண்மைதான். இது எல்லாமே ஒற்றைத்தன்மையை மேலும் அதிகரித்து இறுக்கமாக்கும். ஜெர்மனியின் மைக்கேல் சீமன் இதனை டிஜிட்டல் பழமைவாதம் என்பார். ஒரு பொய்யான செய்தி உருவாகும் உண்மையான முறை என்பது பற்றிய கட்டுரையில் விளக்குகிறார். இந்த பழங்குடியினராக்கும் போக்கு பார்ப்பவர்களை பொதுவான ஜனநாயக நிறுவனங்களிலிருந்து விலக்கி வைக்கும் வேலையை செய்கிறது. மக்களுக்கிடையிலான உறவு வாக்களிப்பது மற்றும் ஜனநாயகம் பற்றிய கருத்துகள் மேலும் மேலும் சிதையும் போது மாற்றாக டிஜிட்டல் பாசிசத்திற்கு ஏற்ற களனாக அமைகிறது

இது நடக்க தொடங்கியவுடன் டிஜிட்டல் பாசிசம் தனது உண்மையான பாகத்தை மூடி மறைத்திருக்கும் திரைகளை விலக்கி சந்தேகப்படாத மக்கள் தொகையினரிடம் இன்னும் நிறைய பொய்ச் செய்திகளையும் உண்மையை போலவே நம்பக்கூடிய அளவு மாறான செய்திகளையும் அள்ளி விடும். டிஜிட்டல் பாசிசம் மற்றும் தீவர வலதுசாரிகளை, விரிந்த பார்வை மங்கி குறுகிய கண்ணோட்டத்திற்கு பலியானவர்கள், சரித்திரப் பூர்வமாக அணுகும் ஆற்றலை முழுவதும் இழந்து விட்டவர்கள் முழுதுமாக அனுமதித்து, அவர்கள் தங்கள் பிம்பங்களை இருப்பதைவிட பூதாகரமாக ஆக்கி காட்டுவதையும் அப்பாவியாக அங்கீகரித்து கொள்கிறார்கள். இதுக்குமேலே இருக்கவே இருக்கிறது உதிரி குழுக்கள் (Fringe groups). தங்களது சத்தத்தை அதிகப்படுத்திக் காட்ட தவறாக சித்தரிப்பதை பயன்படுத்துவார்கள். சமூக வலைத் தளங்களின் உதவி என்பது ஒரு கொள்கை பிரச்சார பீரங்கியாக செயல்பட அதனால் டிஜிட்டல் பாசிசம் தனது சொந்த, உண்மையான விஷ சுழலின் பரப்பை அதிகப்படுத்திக்கொள்ள ஆரம்பிக்கும். செயற்கையாக ஆன்லைனில் வரும் கருத்துப் பரிமாற்றங்கள் மற்றும் படைப்புகளையும் கடத்தி உயர்தரமானதாக்கிக் கொள்ள துணைபுரிகிறது.

இப்படி எண்ணிக்கையை உயர தூக்கி பிடிப்பதானது ஏற்கனவே வலதுசாரி பயங்கரவாதிகளால் கொதிநிலைக்கு கொண்டுவரப்பட்டு சுதி ஏற்றப்பட்டிருக்கும் விவாதங்கள் இன்னும் அதிகமான ஒற்றைத்தன்மை மற்றும் உணர்ச்சிகளை தூண்டிவிடக்கூடிய செய்திகளை உள்ளே கொண்டுவருவதன் மூலம் அதிகரிக்கும். ஆன்லைனில் அமைந்திருக்கும் ‘பகிர்’ மற்றும் ‘தொடர்பினை ஏற்படுத்து’ மற்றும் ‘டுவீட்களை’ மறுபடி மறுபடி வெவ்வேறு பெயர்களில் போடுவது ஆகியவை வெறுப்புணர்வை வளர்க்கும் செய்திகளை வெகு தீவிரமாக பரவச்செய்து டிஜிட்டல் பாசிஸ்டுகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள செய்கிறது. இது டிஜிட்டல் பாசிசம் தான் காட்சியளிப்பதைவிட மிக சக்திவாய்ந்த்தாகச் செய்ய வடிவமைக்கப்படுகிறது.

தொழில்நுட்பத்தால் கருத்துக்கள் சொல்லப்படும் காலத்தில் வெறுப்புணர்வை உருவாக்கும் கருத்துகளே முழுதுமாக ஆக்ரமித்து இருப்பதை போல ஒரு மாயத்தோற்றத்தை வலதுசாரி பயங்கரவாத உதிரி (fringe) அணிகள் ஏற்படுத்துகிறார்கள். செயல்பட்டுக் கொண்டிருக்கும் கணக்குகளில் 5 சதமே இருக்கக்கூடியவர்கள் வெறுப்புணர்வு தூண்டும் கருத்துக்களுக்கு போடப்படும் லைக்ஸ்-சில் 50 சதத்திற்கு மேல் போட்டுத் தள்ளுகிறார்கள். அவர்களுக்கு இல்லாத எண்ணிக்கை அளவை கூட்டி காட்டுவதற்கு அனைத்து வேலைகளையும் டிஜிட்டல் பாசிசம் அரங்கேற்றுகிறது.

ஜெர்மனியிலிருக்கும் ஒரு வலதுசாரி கும்பல் தங்களுக்கு ஒரு லட்சம் உறுப்பினர்கள் இருப்பதாக சமீபத்தில் அறிவித்துக்கொண்டது. புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் நெருக்கமாக அணுகி சோதனை செய்தபோது அந்த கும்பல் தங்களுக்கு உண்மையில் 40 உறுப்பினர்கள் மட்டுமே இருப்பதை ஒத்துக்கொள்ள வைத்தார்கள்.

ஒரு பக்கம் பெருங்கூட்டமே வெறுப்புணர்வை தூண்டும் செய்திகளை பரப்புவது போல காட்டிக்கொண்டு பாசிக கும்பல்கள் தங்களது உண்மையான குறைந்த எண்ணிக்கை உறுப்பினர்களை மறைத்து கொள்ள மற்றுமொரு வழியாக பயன்படுவது சோசியல் பாட்ஸ் (Social Pots). தானே இயங்கும் நிலையிலுள்ள செய்தி தொடர்பு சமூக ஊடகங்களில் வழமையாக காணப்படுவது தங்களது கடமையாக கொண்டிருப்பது விவாதங்களின் திசைவழி மற்றும் உட்கிடக்கையை மற்றும் வாசகர்களின் எண்ண ஓட்டத்தை செல்வாக்கு செலுத்தி தீவிர வலது பக்கம் தள்ளிக் கொண்டுபோவது.

சோசியல் பாட்ஸ் என்பது சாட்பாட்ஸ்(chat pots) உடன் தொடர்புடையது என்றாலும் குறைந்த அளவு செய்தி பரிமாற்றத்தையே பயன்படுத்துகிறது. சாட்பாட்ஸ் தகவல்கள் ‘டுவீட்டை’ போன்று எளிய அல்லது முன்னமே பின்னப்பட்ட செய்திகளை விநியோகிக்கும்.

தானியங்கி தகவல் தொடர்பைத் தவிர வலதுசாரி பயன்பாட்டாளர்கள் விதவிதமான கணக்குகளை இயக்க ஊக்குவிக்கப்படுகிறார்கள். அது மறுபடியும் தீவிர வலது என்பது உண்மையில் இருப்பதைவிட பெரிதானது என்று கபடத்தனமாக காட்ட முயல்கிறது. அதே சமயம் அனுப்புநரின் உண்மையான அடையாளத்தை மறைக்கச் செய்கிறது. இது தெளிவாக தெரியக்கூடிய எண்ணிக்கையை பல மடங்காக்குவது மட்டுமல்ல மற்றவர்களை இந்த கும்பலில் சேர வற்புறுத்தி ஊக்கப்படுத்துகிறது. இவர்கள் இந்த தொடர்பில் தொடரும்போது ஒன்று அனுதாபம் மூலம் ஒத்த கருத்துள்ளவர்களாகிறார்கள், மற்றும் ஆதரவாளர்களாகிறார்கள். இதில் மோசமான தன்மைகளில் அவர்கள் வெறுப்புணர்வை தூண்டும் செய்திகளை மொட்டை கடுதாசி போல அனுப்புவதில் மற்றவர்களுடன் போட்டி போட்டு அதிகளவு செய்கிறார்கள்.

இந்த செய்முறை வலதுசாரி சிந்தனைப் பெட்டியை உருவாக்குகிறது. இது டாக்பைலிங் என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு வகையான ஆன்லைன் கொடுமைபடுத்துதல் மற்றும் பயமுறுத்தி தொல்லைகொடுக்கும் நடைமுறையாகும். பெரும் எண்ணிக்கையிலான கணக்குகள் வலதுசாரி பதிவுகளை இழிவுபடுத்தும் கருத்துகளோடு வருவதை திடீரென பூர்த்தி செய்யும். எப்போதும் வலதுசாரிகளின் எதிரியை, அதிலும் நன்கு அறிவை வெளிபடுத்தக்கூடியவர்களைக்  குறிவைப்பார்கள். இம்மாதிரியான டாக்பைலிங்-கின் நோக்கமே பாதிக்கப்பட்டவர்களுக்கு பயபீதியை உருவாக்குவது உதவிக்கு யாருமே இல்லாததைப் போன்ற உணர்வைக் கொடுப்பது.

டிஜிட்டல் பாசிசத்தின் தீவிர வலதுசாரிகள் ஆன்லைன் தளங்களை ஒரு யுத்தகளமாக பார்த்தனர். அங்கே அவர்கள் ஒரே ஒரு முழக்கத்தினடிப்படையில் இயங்கினர். அது “உங்களால் முடிந்தால் உங்களது போர்தளத்தை தேர்ந்தெடுங்கள். அந்த ஒன்றில் வெற்றி காணமுடியும் என்பதை உறுதிபடுத்துங்கள்” என்பதுதான். டிஜிட்டல் பாசிசத்தின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்று தன்னை ஒரு முன்னணி செயல்பாட்டாளாராக ஆக்கிகொள்வது என்பதுதான். அதனால் கூகுளின் படிப்படியான வழிமுறைகள் அதன் செய்திகளை முதல்நிலைகளில் கொண்டு சென்றுவிடும். கூகுள் முடிவுகளின் முதல்பக்கத்தை மட்டுமே கூகுள் செயற்பாட்டாளர்கள் பார்ப்பார்கள் என்ற முழு அறிதலோடு இதை செய்து முடிக்கிறார்கள்.

அத்தகைய நிலைப்பாடு ஆதிக்கநிலையை அடைந்தவுடன் தீவிர வலதுசாரிகள் தாங்கள் குறிவைத்த பார்வையாளர்களை மிக எளிதாக வசப்படுத்திவிடுவார்கள். இது பாதிக்கப்பட்டவர்களை டிஜிட்டல் பாசிசத்தின் ஆன்லைன் வலைப்பின்னலுக்குள் தீவிரமாக செயல்பட வைக்கக்கூடிய ஆற்றலை பெற உதவுகிறது. இந்த பயணத்தின் ஆரம்பத்தில் இதிலிருக்கும் எல்லா தகவல் தொடர்புகளும் உள்ளர்த்தம் எதுவும் இருப்பது போல தெரியாது.

கூகுளில் தங்கள் தேடலை ஒழுங்காக முடிப்பதில் மிகவும் சுமாரான நிலையிலிருப்பதால் இம்மாதிரியான முடிவுகள் அடிக்கடி வரும். நமது திரையில் காட்டப்படுவது என்னவென்றால் இடைவிடாத தொடர்ச்சியான வெவ்வேறு பொருள் தரக்கூடிய புரியாத வார்த்தைகள் மற்றும் சந்தேகத்தை உருவாக்கும் விவரங்கள் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பொய்யான கற்பனை சதித்திட்டங்கள், முடிவில் மூலாதாரமான தவறான தகவல்கள் மற்றும் தவறான வழிக்குக் கொண்டு செல்லக்கூடிய அளவுக்கு தவறான தகவல்கள் விபரங்கள் தான் இவை.

படிப்படியாக அவர்களின் எந்த உள்ளர்த்தமும் இல்லாத, சொல்லப் போனால் குழந்தைத்தனமாக வலைத்தளங்களில் தேட ஆரம்பிப்பதை மனதை மயக்கும் பல்வேறு ஆசைகளைக் காட்டி அதன் மூலம் பலகீனமான சிந்தனை உள்ளவர்களை பலியாடுகளாக மாற்றி தங்களது டிஜிட்டல் பாசிசத்தின் வட்டத்துக்குள் கொண்டு வந்து விடுவார்கள்.

படிக்க:
♦ ஆதார் : பார்ப்பனியத்தின் டிஜிட்டல் பாசிசம் !
♦ வருகிறது மோடியின் டிஜிட்டல் பாசிசம் !

இந்த ஆட்டத்தில் என்ன நடக்கும் என்றால் பொதுவான கருத்துபரிமாற்றத்திற்கோ மற்றும் பொருள்களையோ தலைப்புகளையோ ஆராயக்கூடிய வார்த்தை பரிமாற்றங்கள் இருக்கவே இருக்காது. அதற்கு பதில் குறிவைக்கப்பட்ட பலியாடு தீவிர வலதுசாரிகளின் கொள்கை சிந்தனை கொண்டு உருவாக்கப்பட்ட வளைவுப்பாதைக்குள் தங்களின் ஆதிக்கத்துக்குள்ளான பொருளாக வருவாரா மாட்டாரா? என்பதுதான் முழு பணியாக இருக்கும்.

அநேகமாக டிஜிட்டல் பாசிசத்தின் மிகப்பெரிய வியப்புக்குரிய வெற்றியாக இருப்பது – இது பழமையான பாசிசத்திலிருந்து மிகவும் வேறுபட்ட – அனுதாபிகளும் ஆதரவாளர்களும் தங்களது ஆன்லைன் தளங்களில் வலதுசாரிகள் சொல்லக்கூடிய கற்பனையான சதிகளையும் தவறான வழிக்கு கொண்டு செல்லக்கூடிய விபரங்களையும் உன்னதமான செய்திகளாக தங்களது ஆன்லைன் தளங்களில் பதிவேற்றி தங்களை தாங்களே உருபெற்றுக்கொள்வதைதான் குறிக்கிறது.

டிஜிட்டல் பாசிசம் மேலிருந்து கீழ் செல்லும் அமைப்பாக – அதாவது மேலே இருப்பது மற்றும் பின்பற்றுபவர்களை கீழே கொண்ட அமைப்பாக – இல்லை. ஆனால் அதற்கு பதிலாக தட்டையான ஒரே அளவு பரிமாணம் கொண்ட ஒட்டுப் போட்ட பல்வேறு வலதுசாரி சிந்தனையோட்டங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.

டிஜிட்டல் பாசிசத்தில், கோயாபல்ஸ் போன்றவர்களுக்கு இங்கு வேலை ஏதும் நிச்சயம் இருக்காது மற்றும் இதற்கு கட்டாயமாக பிரச்சாரம் செய்வதற்காக ஒரு பிரச்சாரத் துறைக்கான அமைச்சகம் தேவைப்படாது. மத்திய ஒழுங்கமைப்பு இங்கு இல்லை. சுற்றி ஒளிவட்டம் இல்லை; கட்சிக்கான இயங்கு இயந்திரம் இல்லை; போர் விளையாட்டுகளுக்கான போர் அணிகளும் இல்லை. இதெல்லாம் பழமையின் சின்னங்களாகி விட்டன. டிஜிட்டல் பாசிசம் நவீன நாஜிசத்தின் வழக்கிலில்லாத சில பாரம்பரிய நிறுவன வடிவங்களை கூட தகர்த்து விட்டு, வலதுசாரி ஆன்லைன் குப்பைகளின் சக்தியால் அவற்றை மாற்றியமைக்கிறது, இது புத்திஜீவிகளுக்கு எப்போதும் ஆதரவளிக்காது.

கண்டுபிடிக்கபட முடியாத டிஜிட்டல் பாசிசத்தின் தீவிர வலதுசாரி படைப்பிரிவு ஒரு லிபரல் சமூகத்தை அழித்தொழிப்பதற்காக திறந்தவெளி சமூகத்தின் சட்டப்பூர்வ நிறுவனங்களான ஆன்லைன் தளங்கள் போன்றவற்றை சுற்றி வளைக்கின்றன.

சச்சா போரன் கோகன் சமீபத்தில் சொன்னது, “பேச்சு சுதந்திரம் என்பது அடையக்கூடிய சுதந்திரம் என்று தவறாக நினைத்து கொண்டிருக்கிறோம்”. டிஜிட்டல் பாசிசம் இரண்டையுமே பயன்படுத்தி உள்ளிருந்தே மொத்த சுதந்திரத்தையும் ஒழித்துக்கட்டுகிறது.

“முதலாளித்துவ வர்க்கத்தினுடைய பிற்போக்கு நடவடிக்கைகளையும் பாசிசத்தின் வளர்ச்சியையும் அவற்றின் தயாரிப்பு கட்டங்களிலேயே யார் யார் எதிர்த்துப் போராடவில்லையோ அவர்கள் பாசிசத்தின் வெற்றியை தடுக்கும் நிலையில் இருக்கவில்லை.அதற்கு நேர்மாறாக அதன் வெற்றிக்குத்தான் வழிவகை செய்து கொடுக்கிறார்கள்” டிமிட்ரோவ்.-

கட்டுரையாளர்கள் : தாமஸ் க்ளிகவெர் மற்றும் நார்மன் சிம்ஸ்.
சில கூடுதல் தரவுகளுடன் தமிழாக்கம் : மணிவேல்
நன்றி : Counter currents

தாமஸ் க்ளிகவ்ர், ஆஸ்திரேலியாவின் மேற்கு சிட்னி பல்கலையில் பணியாற்றுகிறார்.
நார்மன் சிம்ஸ், நியூசிலாந்தில் உள்ள வய்கடோ பல்கலையில் பணியாற்றி ஓய்வுபெற்றுவிட்டார்.

 

CJI பாப்டே : இந்திய மனுநீதி ஆணாதிக்கச் சமூகத்தின் பிரதிநிதி !

0

த்தரப்பிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டத்தில் உள்ள பண்டேடரா கிராமத்தைச் சேர்ந்தவர் சர்வேஸ் குமார். இவருக்கு மூன்று பெண் குழந்தைகள், ஒரு ஆண் குழந்தை. காய்கறி விற்பனை செய்து வந்த இவர், தனது 17 வயது மகள், தனக்கு பிடிக்காத ஒருவரை காதலித்தார் என்பதற்காக, அவருடைய தலையை துண்டித்தார். மட்டுமல்லாமல், துண்டித்த தலையோடு வீதிகளை, சாலைகளைக் கடந்து தனது ஆணாதிக்க சீழ்பிடித்த மனதின் வக்கிரத்தை ‘வீரமாக’ பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி, போலீசில் சரணடைந்தார்.

மனிதத்தன்மையற்ற இந்த கொலைவெறி செயலுக்கு பார்ப்பனியத்தில் ஊறிப் போன இந்திய ஆணாதிக்கச் சமூகம் சர்வேஸ் குமாரை கொண்டாடக்கூடும். ஏனெனில் மாண்புமிக்கதாகக் கூறப்படும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியே இந்திய ஆணாதிக்க சமூகத்தின் பிரதிநிதியாக திகழும்போது, கடைநிலையில் இருக்கும் சர்வேசின் செயல்கள் அப்படித்தானே பார்க்கப்படும்.

சர்வேஸ் தன்னை மீறி காதலித்த தனது மகளின் தலையை வெட்டினார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் தாம் விசாரித்துவரும் ஒரு வழக்கில் ஒரு சிறிமியை வல்லுறவுக்குள்ளாக்கிய கயவனையே அச்சிறுமியை திருமணம் செய்து கொள்ளுமாறு நிர்பந்தித்து அச்சிறுமியின் மாண்பை படுகொலை செய்துள்ளார்.

படிக்க :
♦ ஹதராஸ் பாலியல் வன்கொலை : நள்ளிரவில் எரிக்கப்பட்ட ‘நீதி’ !
♦ பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் எப்போது ஒழியும் ?

மகாராஷ்டிரா மாநில மின்சார உற்பத்தி நிறுவனத்தில் மோகித் சுபாஷ் சவான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் 2014-ம் ஆண்டு 9- ம் வகுப்பு படித்து வந்த 16 வயது பள்ளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் தாயார் இதுகுறித்து உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் சொல்கிறார். இதனையடுத்து மோகித் சுபாஷின் தாய் சிறுமியின் பெற்றோரை நேரில் சந்தித்து சமாதானம் பேசுகிறார். சிறுமியை தனது மகனுக்கு திருமணம் செய்து வைப்பதாகவும் சிறுமியை தனது மருமகளாக ஏற்றுக்கொள்வதாகவும் வாக்குறுதி அளிக்கிறார்.

தன்னை பாலியல் வன்கொடுமை செய்த நபரை திருமணம் செய்துக்கொள்ள சிறுமி மறுப்பு தெரிவிக்கிறார். அதன்பின்னர் நடந்த பேச்சுவார்த்தை என்கிற பெயரில் நிகழ்த்தப்பட்ட பஞ்சாயத்தில் சிறுமிக்கு 18 வயது ஆனதும் திருமணம் செய்துக்கொள்வதாக எழுத்துப்பூர்வமாக ஒப்பந்தம் போடப்படுகிறது. இதனையடுத்து அந்த நபர் மீது கொடுத்த புகாரை சிறுமியின் தரப்பு வாபஸ் பெற்றுக்கொள்கிறது. இதற்காகத்தானே இத்தனை நாடகமும் என்பதுபோல, அவன் சிறுமியை திருமணம் செய்துக்கொள்ள தற்போது மறுப்பு தெரிவிக்கிறான். அவன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

இந்த வழக்கில் தனக்கு பிணை வழங்கக்கோரி உச்சநீதிமன்றம்வரை செல்கிறான் அவன். இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்..போப்டே தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வருகிறது. அப்போதுதான், நீதிபதி எஸ்..போப்டே, வரலாற்று சிறப்பு மிக்க அந்தக் கேள்வியைக் கேட்டார்,நீங்கள் அந்தப் பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள தயாரா?”.

முன்னாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கோகோய் மீதான பாலியல் குற்றச்சாட்டு

நாங்கள் உங்களை திருமணம் செய்துக்கொள்ள கட்டாயப் படுத்தவில்லை. உங்களின் விருப்பத்தை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்” என நீதிபதி எஸ்..போப்டே தலைமையிலான அமர்வு அவனிடம் மன்றாடுகிறது. நாகரிகமான உலக சமூகம் இந்திய சமூகத்தின் இழிநிலையைப் பார்த்து உச்சுக்கொட்டுகிறது.

பாலியல் வன்கொடுமையாளனுக்கு உச்சநீதிமன்றம் எவ்வளவு பரிவு காட்டுகிறது? இந்தப் பரிவு ஆண் என்பதால் மட்டுமே காட்டப்படும் பரிவு. அல்லது மனுநீதியை தின்று செரித்த மூளையால் காட்டப்படும் பரிவு.

அனைவரும் சமமானவர்களே என்கிற அரசியலமைப்பால் இந்திய நீதித்துறை இயங்கவில்லை; மாறாக பெண்ணின் உடல் மீது ஆண்கள் நிகழ்த்தும் குற்றங்கள் குற்றங்களே அல்ல, அவை ஆண்களின் உரிமை என்கிற மனுநீதியால் இந்திய நீதித்துறை இயங்குகிறது என்பதற்கு இந்த வழக்கு மீண்டுமொரு உதாரணம்.

நீதிபதி சரத் அரவிந்த் பாப்டே (S.A. Bobde)

சமீபகாலமாக தனது அப்பட்டமான ஆணாதிக்க நீதிமன்ற நடவடிக்கைகளால், தன்னை இந்திய ஆணாதிக்க சமூகத்தின் ஏக பிரதிநிதியாய் தலைமை நீதிபதி போப்டே மீண்டும் மீண்டும் பறைச்சாற்றிக் கொள்கிறார். இந்த வழக்கின் சூடு தணிவதற்குள்ளாகவே மற்றுமொரு வழக்கில், பாதிக்கப்பட்ட பெண் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னிடம் வன்முறையாகவும் பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தினார் என சொன்னபோது, மாண்பற்ற தலைமை நீதிபதி இப்படி கேட்டார் : “இரண்டு பேர் கணவன்மனைவியாக வாழும்போது, கணவர் எவ்வளவு கொடூரமாக இருந்தாலும், அவர்களுக்கிடையில் உடலுறவை ‘பாலியல் வல்லுறவு’ என அழைக்க முடியுமா?”

மேற்கண்ட இரண்டு வழக்குகளுமே கிரிமினல் (திருத்த) சட்டம் 2013-ன் படி கடும் தண்டனைக்குரிய சட்டங்கள். ஆனால், தலைமை நீதிபதி மனு ஸ்மிருதியின் குரலாக ஒலிக்கிறார். கணவன் எப்படிப்பட்டவனாக இருந்தாலும் குடிகாரனாக, கொடூரனாக இருந்தாலும் அவனுக்கு பணிவிடை செய்து வாழ் என்கிறது மனு நீதியின் அத்தியாயம் 9-ல் உள்ள 78-வது ஸ்லோகம். அந்த மனுவின் குரலைத்தான் நீதிபதி ஒலிக்கிறார்.

கடந்த ஜனவரி மாதம் மத்தியில் ஆளும் மனுநீதி அரசின் கொடூர வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் பெண்கள் குறித்தும் இப்படித்தான் ஓர் உயரிய முத்தை நீதிபதி பாப்டே உதிர்த்திருந்தார். “பெண்கள் ஏன் போராட்ட களத்தில் இருக்கிறார்கள்? அவர்கள் வீடு திரும்புவதை உறுதிபடுத்துங்கள்!” என்றார் போப்டே.

ஆக்ஸ்போம் 2018 ஆய்வின்படி இந்தியாவின் கிராமப்புறங்களில் 85 விழுக்காடு பெண்கள் வேளாண்துறை சார்ந்த பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தங்கள் உரிமையை பறிக்கும், நேரிடையாக பாதிக்கும் வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடக்கூடாது என்கிறார் நீதிபதி பாப்டே.

வீதிக்கு வந்து போராடும் உரிமையும்கூட ஆண்களுக்கானது என்கிறார். உலகின் எந்தவொரு போராட்டமும் பெண்களின் பங்களிப்பின்றி நடைபெற்றதில்லை. பெண்களின்றி எந்தப் போராட்டமும் நடைபெறவும் முடியாது. இதை மாண்புமிகுந்த பதவியில் அமர்ந்திருக்கும் நீதிபதி போப்டே அறியாமல் இருக்க முடியாது.

இளமையில் தந்தையாலும் பருவகாலத்தில் கணவனாலும் முதுமையில் மகனாலும் காக்கப்பட வேண்டியவர் பெண்கள். ஆதலால் பெண்கள் எப்போதும் தம்மிச்சையாக இருக்கக் கூடாதவர்” என்கிறது மனுதரும சாத்திரத்தின், அத்தியாயம் 9 செய்யுள் 3.

ஆக, போப்டே இயங்குவது இந்திய அரசியலமைப்பு நீதியாலா, மனு நீதியாலா? அவரை ஆட்கொண்டிருப்பது மனு நீதியே என தெள்ளத்தெளிவாக புரிகிறது.

தொடர்ச்சியாக தன்னை ஆணாதிக்க மனுநீதியின் பிரதிநிதியாக நிரூபித்துக்கொண்டே வரும் நீதிபதி போப்டேவை பதவி விலகக்கோரி, ஜனநாயக ரீதியாக உரிமை கோரும் பெண்கள் கையெழுத்து இயக்கம் நடத்துகிறார்கள்.

படிக்க :
♦ நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!
♦ அதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக அமர்ந்துகொண்டு இப்படிப்பட்ட தீர்ப்புகளை, கருத்துகளை பாப்டே கூறுவது ஒரு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடுகிறது. இது, “பெண்களுக்கான நீதி இந்திய அரசியலமைப்பின் அடிப்படை உரிமையல்ல” என்கிற செய்தியை பிற கீழமை நீதிமன்றங்கள், நீதிபதிகள், காவலர்கள் மற்றுமல்லாமல் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு அறிவிக்கிறது. பாலியல் வன்கொடுமையாளர்களுக்கே பாதிக்கப்பட்டவரை திருமணம் செய்து வைப்பது என்பது பாலியல் வன்கொடுமைகளுக்கான லைசன்ஸ் வழங்குவதைப் போன்றது. மேலும் இத்தகைய உரிமத்தை வழங்குவதன் மூலம், பாலியல் வன்கொடுமையை நியாயப்படுத்தவோ, சட்டப்பூர்வமாக்கவோ முடியும்” என பெண் உரிமை செயல்பாட்டாளர்கள் ஆனி ராஜா, கவிதா கிருஷ்ணன், கமலா பாசின், மீரா சங்கமித்ரா உள்ளிட்டோர் கடிதமும் எழுதியிருக்கிறார்கள்.

பெண்கள் குடும்ப வன்முறைகளை சகித்துக்கொண்டு வீட்டுக்குள்ளே இருங்கள், பாலியல் வன்கொடுமை செய்தவனையே திருமணம் செய்துகொள்ளுங்கள். இந்தக் கொடுமைகளை சகித்துக்கொண்டால், அனைத்துக்கும் மேலாக இருக்கும் அரசு செலுத்தும் வன்முறைகளை உங்களால் சகிக்க முடியும்” இதுதான் தலைமை நீதிபதி உணர்த்தும் செய்தி. பெண்கள் உடைத்து தூக்கியெறிய வேண்டிய செய்தியும் இதுவே.

அனிதா
செய்தி ஆதாரம் : த கார்டியன், த வயர்.

 

செஞ்சி வழுக்கம் பாறையில் இடுகாட்டு பாதையை மறிக்கும் கவுண்டர் சாதிவெறி !

செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் உள்ளது வழுக்கம்பாறை கிராமம். இங்கு ஊருக்குள் கவுண்டர் சாதியினரும் ஊருக்கு வெளியே இருளர் இன மக்களும் வாழ்ந்து வருகின்றன. இருளர் இன மக்களின் சடலத்தை இடுகாட்டில் புதைப்பதற்கு கவுண்டர் சாதியினர் எதிர்ப்பு தெரிவித்ததை ஒட்டி, சாலையில் சடலத்தை வைத்து இன்று காலை முதல் இருளர் இன மக்கள் போராடி வருகின்றனர்.

வழுக்கம்பாறையில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இறந்தவர்களின் உடல்களை ஏரிக்கரையில் இருக்கும் புறம்போக்கு நிலத்தில் ஜந்து ஆறு தலைமுறைகளாகவே அடக்கம் செய்து வருகின்றனர்.

கடந்த ஏழு ஆண்டுகளுக்கும் மேலாகவே இருளர் இன மக்கள் இடுகாட்டிற்கு செல்லும் வழியில் கவுண்டர் சாதியை சார்ந்தவர்கள் நிலம் இருப்பதால், “நாங்கள் வழிவிடமாட்டோம். கலெக்டரிடம் மனு கொடுத்து அனுமதி வாங்கிவா, உங்கள் சடலத்தை எங்கள் வழியாக எடுத்துச் செல்ல நாங்கள் அனுமதிக்க மாட்டோம்” என்று பலமுறை பிரச்சினை செய்துள்ளனர். ஒவ்வொருமுறையும் அவர்களுடன் பிரச்சனை செய்துதான் சடலங்களை அடக்கம்செய்து வந்துள்ளனர் இருளர் இன மக்கள்.

படிக்க :
♦ திண்ணியம் – வாயில் மலம் திணித்த ஆதிக்கசாதி வெறியர்கள்
♦ தலித்துக்களின் ஜீன்சில் ஆதிக்கசாதி பெண்கள் மயங்குகிறார்களாம் !

சடலத்தை எடுத்துச் சென்றால் ஆள்வைத்து அடிப்பது, நான்கு பேர் தான் செல்லவேண்டும் என மிரட்டுவது, இழிவான வகையில் பேசுவது என தொடர்ந்து கவுண்டர் சாதியினர் இருளர் சாதியைச் சேர்ந்தவர்களின் மீது தாக்குதல் தொடுத்து வந்துள்ளனர். இந்நிலையில் நேற்று (03-03-2021) இறந்த முதிய பெண்மணி ஒருவரின் சடலத்தை அவ்வழியே எடுத்துச் செல்ல முயன்ற போது அனுமதி மறுத்துள்ளனர்.

இருளர் இன மக்களுக்கு என இடுகாட்டை அரசு ஒதுக்காத சூழலில், ஏரிக் கரையில் உள்ள புறம்போக்கு நிலத்தில்தான் இம்மக்கள் இறந்தவர்களைப் புதைத்து வந்தனர். இந்நிலையில் ஊர்ப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் அந்த நிலம் புறம்போக்கு நிலம் இல்லை என்றும் தாம் பட்டா போட்டிருப்பதாகவும் கூறி அந்த நிலத்திலும் புதைக்க அனுமதி மறுத்துள்ளார்.

தங்களது சமூக மக்களை புதைப்பதற்கு இடுகாட்டுக்குக் உடலைக் கொண்டு செல்ல ஏற்பாடு செய்யும்படியும், கவுண்டர் சாதியினரின் பகுதி வழியாகக் கொண்டு சென்றால் தாக்குதல் தொடுப்பவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் கோரி இறந்தவரின் உடலை வைத்து சாலையில் போராட்டம் நடத்தத் துவங்கினர்.

இடுகாடு பிரச்சினை தொடர்பாக பல முறை கலெக்டரிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை என்கின்றனர் இப்பகுதி மக்கள்.
“பலமுறை மனு கொடுத்துவிட்டோம். மனு கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் ஏதுவும் நடக்கப்போவதில்லை, சமிபத்திய ஆறு சாவிற்கும் எங்களுக்கு இதே போராட்டம்தான் நடக்குது, இதுக்கு ஒரு முடிவே தெரியல, சாவு இன்று ரோட்டில் அனாதையாக கிடக்கிறது நாங்கள் ஏங்கு சென்று புதைப்போம்?” என்கிறார்கள் இக்கிராமத்து பெண்கள்

“கலெக்டர் வரும் வரை நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம், ஜேசிபி எடுத்து வந்து எங்களுக்கான வழியை ஒதுக்கி நிரவித்தரும் வரை, சுடுகாட்டுக்கான நிலத்தை ஒதுக்கிதரும் வரை நாங்கள் போகமாட்டோம். காலங்காலமாக இதேக் கொடுமையை நாங்கள் அனுபவித்து வருகிறோம். எங்களுக்கு நீதி கிடைத்தே ஆகவேண்டும். போலீசை விட்டு நீங்கள் எங்களை அடித்தாலும், நாங்கள் பிணத்தை எடுக்கமாட்டோம். எத்தனை நாள் ஆனாலும் இங்கேயேதான் இருப்போம், பிணம் அழுகட்டும், நாரட்டும் இங்கேயேதான் இருப்போம், எங்களுக்கு வழிவேண்டும், நாங்கள் போவதை யாரும் தடைசெய்யக்கூடாது”என்றார் இறந்தவரின் சகோதரர்.

காலையில் தொடங்கி நடைபெற்றுவரும் இந்தப் போராட்டத்தில் போலீசு வந்து கலைந்து செல்லும்படி மிரட்டியது. அதற்கு அடிபணியாமல் உறுதியாக நின்று போராடினர் இப்பகுதி மக்கள். இன்று பிற்பகலில் அங்கு வந்த மாவட்ட கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருளர் சமூக மக்கள் தங்களுக்கு உடனடியாக இடுகாடு ஒதுக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான முறையான பாதை அமைத்துத்தரப்பட வேண்டும் என்றும் கூறினர்.

இடுகாட்டுக்கு இடத்தை ஒதுக்க உடனடியாக ஆவண செய்வதாக உறுதி செய்ததை ஒட்டி உடலை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர். வெறும் வாய்ப் பேச்சு மட்டும் பேசி இடம் ஒதுக்க மறுத்தால் மீண்டும் சாலையில் இறங்கிப் போராட தயங்கமாட்டோம் என்று கூறுகின்றனர் இருளர் இன மக்கள்.

வெறுமனே இடம் ஒதுக்கீடு செய்து இந்தப் பிரச்சினையை தீர்த்து விடுவதோடு தமது கடமையை முடித்துக் கொள்ள விழைகிறது மாவட்ட நிர்வாகம். இடுகாட்டுக்கு செல்லும் பாதையை மறித்து தாக்குதல் தொடுத்த கவுண்டர் சாதி வெறியர்களைக் கைது செய்வதோடு, இடுகாட்டு புறம்போக்கு நிலத்தை பட்டா போட்டுக் கொண்டவரையும்  அதற்குத் துணைநின்ற அதிகார வர்க்கத்தினரையும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும்.


வினவு செய்தியாளர்
திருவண்ணாமலை

 

இந்துத்துவ அதிர்ச்சித் தாக்குதல்களின் பின்னணியில் இருக்கும் கார்ப்பரேட் நலன் !

ந்தியாவின் உழைக்கும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் வழங்கப்பட்டுவந்த அனைத்து சலுகைகளையும் மானியங்களையும் படிப்படியாக மோடி அரசு பறித்து வரும் சூழலிலும் தமது உரிமைகள் பறிக்கப்படுவதை எதிர்த்து பெரும்பான்மை மக்கள் அதிருப்தி கொண்டிருக்கின்றனர். ஆனால், மேற்குலக நாடுகளைப் போல நாடு முழுவதும் ஒருங்கிணைந்த வகையில் கார்பப்ரேட்டுகளுக்கு எதிராக வீதியில் இறங்கி போராடாத சூழலே நிலவுகிறது.

இந்தியாவில் நிலவும் சாதிய அடிப்படையிலான படிநிலையைக் கட்டிக்காக்கும் பார்ப்பனிய கட்டுமானம், பெரும்பான்மையான உழைக்கும் மக்களை நாட்டின் அரசியல் சமூக பொருளாதார நிகழ்வுகளிலிருந்து காலங்காலமாக விலக்கி வைத்திருப்பது இதில் முக்கியப் பங்காற்றுகிறது. மேலும் பார்ப்பனியம் உண்டாக்கி வைத்திருக்கும் சாதிய மற்றும் மதரீதியான பிளவுகளைக் காட்டி மக்களின் கோபத்தை முளையிலேயே திசைதிருப்பி கார்ப்பரேட்டுகளின் சுரண்டலைப் பாதுகாக்கிறது இந்துத்துவக் கும்பல்.

1980-களின் இறுதியிலிருந்தே தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை ஆட்சியாளர்கள் அமுல்படுத்துவது அதிகமானதை தொடர்ந்து நாட்டின் அரசியல் பொருளாதாரத்தின் மீதான முதலாளித்துவ வர்க்கத்தின் பிடிமானம் இறுகியது. படிப்படியாக நாட்டின் அனைத்து துறைகளையும் தனியாரின் கொள்ளைக்கு திறந்து விடும் வகையில் நாட்டின் அரசியல் திசைவழியை மாற்றிக் கொண்டுவந்தது.

படிக்க :
♦ மக்களை ஒடுக்கும் கார்ப்பரேட் காவி பாசிசம் ! மோதி வீழ்த்துவோம் !
♦ பு.மா.இ.மு அறைகூவல் : கார்ப்பரேட் – காவி பாசிசம் ! முறியடிக்க ஒன்றிணைவோம் !!

கடந்த 2008 பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு அம்பலப்படத் துவங்கிய இந்த தனியார்மய தாராளமயக் கொள்கைகளுக்கு எதிரான மக்களின் போராட்டம் படிப்படியாக தீவிரமடையத் துவங்கியது. மக்களின் கோபம் கார்ப்பரேட்டுகள் மீது திரும்பியிருந்த சூழலில், அதனை திசைதிருப்பும் வகையிலும் போராடும் மக்களுக்கிடையே பிரிவினையை உண்டாக்கும் வகையிலும் செயல்படக் கூடிய அரசியல் தலைமை ஆளும் வர்க்கத்துக்குத் தேவைப்பட்டது.

இந்தத் தேவையை நிறைவு செய்யும் விதமாகவே மோடி தலைமையிலான இந்துத்வா அரசியலின் எழுச்சியை கார்ப்பரேட்டுகள் பின் இருந்து முன் தள்ளின. சாதிய மதரீதியான பிரிவினைகள் மூலம் முதலாளித்துவத்தின் சுரண்டலுக்கு எதிராக நாட்டு மக்கள் திரும்பாதவண்ணம் அவர்களுக்கு ‘அதிர்ச்சி வைத்தியம்’ கொடுக்கும் சோதனைக் களமாக இந்தியாவை இருத்தி வைத்திருக்கிறது இந்துத்துவக் கும்பல்.

புதிய தாராளமய சந்தைகளின் எழுச்சி இந்தியாவில் பன்முகத்தன்மை கொண்ட நுகர்வுத் தன்மையை சிதைவுறச் செய்து நுகர்வுக் கலாச்சார ஒற்றைத்தன்மையை ஸ்தாபித்த்து. பன்முகத்தன்மை கொண்ட நுகர்வு என்பது பல்வேறு சிறு சிறு உள்ளுர் தயாரிப்புகளை ஊக்குவித்தது. ஆனால் நுகர்வுக் கலாச்சார ஒற்றைத்தன்மை, கார்ப்ரேட் நிறுவனங்கள் சரக்கு மற்றும் சேவைகளின் தயாரிப்பு மற்றும் விநியோகத்துறைகளில் தங்களை உறுதிப்படுத்திக்கொள்வதற்கு உதவிசெய்தது.

மோடி அரசின் ஆட்சியில் சிறு குறு உற்பத்தியாளர்கள் மீதான இந்தத் தாக்குதல் உச்சத்தை அடைந்தது. விவசாய நில கையகப்படுத்துதல் சட்டம், பணமதிப்பழிப்பு, ஜிஎஸ்டி, வங்கித்துறையில் மாற்றம், தொழிலாளர் சட்டங்களில் மாறுதல், வேளாண் சட்டங்கள் என தொடர்ச்சியான தாக்குதல்களை மோடி அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகளாக காட்டிக் கொள்ளப்பட்டு அதற்கான பிரச்சாரங்களும் பொதுவெளியில் நடத்தப்பட்டன.

அதுமட்டுமல்ல, இந்திய அரசியல்சாசனம் உறுதிப்படுத்தும் பல்வேறு ஜனநாயக அம்சங்களை விரைவாக அழிப்பது, அரசியல் சட்ட நிறுவன மரபுகளை அலட்சியம் செய்து புறக்கணிப்பது என அரசியல்சாசனத்தில் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளுமே மறுக்கப்பட்டன, திரிக்கப்பட்டன.

இவை அனைத்துமே அதிகாரத்திலிருக்கும் இந்துத்துவக் கும்பல், இந்தியாவுக்கு கொடுத்திருக்கும் அதிர்ச்சி வைத்தியத்தின் பல்வேறு கட்டங்களாகும். இவை இந்திய சமூகக் கட்டமைப்பின் அரசியலில் பொருளாதாரத்தில் முதலாளித்துவத்தை ஆழமாக வேரூன்ற செய்யத் தேவையான மாற்றங்களை கொண்டு வருவதற்கான செயல்முறைகளாகும்.

சிறுபான்மையினர், முசுலீம்கள், தலித் மக்கள், மலைவாழ் மக்கள் ஆகியோர் மீதான சாதிய மதவெறித் தாக்குதல்கள் மற்றும் குடியுரிமை மறுப்பு உள்ளிட்ட வேறு பல வடிவங்களிலான வன்முறை சம்பவங்கள் அனைத்தும் ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான இந்துத்துவா கார்ப்பரேட் நட்புறவின் திட்டமிட்ட அதிர்ச்சி வைத்திய நடவடிக்கைகளாகும்.

கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, மக்கள் மீது மோடி அரசு தொடுக்கும் பொருளாதாரரீதியான தாக்குதல்களுக்கு எதிரான மக்களின் கோபத்தை திசைதிருப்பும் வகையிலேயே சங்க பரிவார் கும்பலின் மதவாத, சாதிய வன்முறைகள் அமைந்துள்ளன. ராமர் கோவில் விவகாரம் முதல் சி... சட்டம், லவ்ஜிகாத் சட்டம் வரையில் அனைத்தும் பார்ப்பனியம் இந்தியாவில் தன்னை நிலைநாட்டிக் கொள்ள எடுத்துக் கொண்ட வழிமுறைகளை அப்படியே பின்பற்றி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

இரண்டாம் உலகப் போரில் சோவியத் மக்களாலும், ஐரோப்பிய உழைக்கும் மக்களாலும் வீழ்த்தப்பட்ட ஹிட்லரின் நாஜிசம் மற்றும் முசோலினியின் பாசிசக் கொள்கைகளில் இருந்துதான் தமது கொள்கைகளை வகுத்துச் செயல்பட்டு வருகிறது இந்துத்துவக் கும்பல்.

ஹிட்லரும் முசோலினியும் தமது நாட்டின் உழைக்கும் மக்களைச் சுரண்டவும், ஒட்டுமொத்த உலகையே கொள்ளையடிக்கவும் தங்களது நாஜிச, பாசிச கொள்கைகளை தேச பக்தி என்ற பெயரில் நடைமுறைப்படுத்தி தமது நாட்டின் நிதியாதிக்கக் கும்பலின் சுரண்டலை தேச முன்னேற்றத்துக்கான நடவடிக்கைகளாக சித்தரித்து சொந்த நாட்டு மக்களை ஒட்டச் சுரண்டியதோடு உலகையும் கொள்ளையடிக்க முனைந்தனர்.

இந்தியாவிலும் நமது நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளைப் பறித்து அவர்களின் உழைப்பை ஒட்டச் சுரண்ட, தமது இந்துத்துவக் கொள்கைகளை தேச பக்தியாகக் காட்டி, அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்களின் தாராளமய, தனியார்மய, உலகமயக் கொள்கையை தேச முன்னேற்றமாகவும் காட்டி நம்மைச் சுரண்டுகின்றன.

மோடியால் முன்மொழியப்பட்டுள்ள ‘குறைவான அரசாங்கம் அதிகபட்ச ஆளுமை’ என்ற முழக்கம் தாராளமய, உலகமயமாக்கலின் அரசியல் பொருளாதார கோட்பாடுகளின் அடிப்படையிலேயே தயாரிக்கப்பட்டு ஏதோ மக்களின் நலனுக்கானது போல கபடத்தனமாக மக்களிடம் காட்டப்படுகிறது.

இந்துத்துவத்தை நடைமுறைப்படுத்தும் ஆர்.எஸ்.எஸ்ன் தேர்தல் அரசியல் பிரிவுதான் பாஜக. ஆர்.எஸ்.எஸ்.-ம் பாஜகவும் 1947-க்குப் பின்னர் சுமார் 50 ஆண்டுகளாக உள்நாட்டு தேசிய பொருளாதாரத்தை உரிமை கொண்டாடி தேர்தல்களில் பிரச்சாரம் செய்துவந்தன.

ஆனால், முதன்முறையாக வாஜ்பாய் தலைமையில் ஆட்சிக்கு வந்ததும் பொருளாதார வளர்ச்சி மற்றும் மேம்பாடு எனும் பெயரால் புதிய தாராளமய திட்டங்களை மட்டுமே அமல்படுத்தியது இந்துத்துவக் கும்பல். இதனை எளிமையாகச் செய்து முடிக்கும் வகையிலேயே நாட்டு மக்களை மதரீதியாகவும், சாதிய ரீதியாகவும் பிரித்தே வைத்திருக்கும் வகையில் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் தொடர்ச்சியாக மத, சாதிய வன்முறைகளை முன்னின்று நடத்தி வருகின்றன.

இன்றைக்கு இந்தியாவில் அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்துத்துவ வன்முறை அராஜகங்கள் எதிர்பாராத விபத்து அல்ல. அவை கொஞ்சநஞ்சம் மீதமிருக்கும் இந்திய ஜனநாயகக் கலாச்சாரத்தின் ஒவ்வொரு கொள்கைகளையும் ஒழித்துக்கட்டி விட்டு எதேச்சதிகார இந்துத்துவ முதலாளித்துவத்தை அரசு மற்றும் அரசு நிர்வாக உறுப்புகளிடம் நிலைநிறுத்துவதற்காக முறையாக திட்டுமிட்டு தயாரிக்கப்பட்டதாகும்.

முதலாளித்துவ பொருளாதாரத்தோடு ஒருங்கிணைந்த எதேச்சதிகார அரசியலுக்கு, நம்பிக்கையற்ற அச்ச உணர்வும் கீழ்படிதலுமுள்ள ஒரு இந்திய சமூகம் அவசியமானது. அதனை உருவாக்கவே இந்துத்துவாவின் அதிர்ச்சி சித்தாந்தம் உதவுகிறது. ஆகவே தற்போது நிலவும் இந்துத்துவ தாக்குதல்களும், வன்முறைகளும் எதிர்பாராத விதமாக திடிரென விபத்து போல வருவதல்ல. இந்துத்துவாகார்ப்பரேட் கும்பலால் திட்டமிட்டுக் கொண்டுவரப்பட்டவையே ஆகும்.

ஆர்.எஸ்.எஸ் பாஜக அவற்றோடு இணைந்த கார்ப்ரேட்களின் அரசியல் பொருளாதார திட்டங்களை எவ்வித எதிர்ப்பும் இல்லாமல் அமைதியாக மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு உழைக்கும் மக்களை தனது வரம்புக்குள் கட்டுபடுத்தி வைத்திருக்க இந்துத்வா சித்தாந்தம் திட்டமிட்டு உருவாக்குபவைதான் இந்த அதிர்ச்சி வைத்தியத் தாக்குதல்கள்.

இந்தியாவின் பொருளாதாரம் என்றுமில்லாத அளவு மோசமான நிலையில் இருப்பதை அறிஞர்கள் எச்சரிக்கையூட்டுகின்றனர். வேலையில்லா திண்டாட்டமும் வறுமையும் எல்லா காலங்களையும் விட இப்போது உச்சத்தை தொட்டிருப்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றனர்.

தொழில்துறை உற்பத்தி மிக குறைந்துள்ளது. மோடி எவ்வளவுதான் ஏற்றமும் இறக்குமாக பேசினாலும் இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் இறக்கத்திலேயே சரிவடைவதை மறைக்க முடியவில்லை. கொரோனா வைரஸ் மூலம் தீவிரமான சுகாதார பிரச்சினைகளை எதிர்கொள்வதில் மோடி அரசு மிக மோசமான முறையில் தோற்றுப் போயிருக்கிறது. திட்டமிடப்படாத ஊரடங்கு இந்திய பொருளாதாரத்தில், நாட்டின் உற்பத்தி விநியோகம், தேவை மற்றும் அதற்கேற்ற வழங்கல் ஆகியவற்றை சீர்குலைத்தது.

ஆனால் நாடெங்கும் மக்களின் வாழ்க்கை வறுமை, புலம்பெயர்தல், தொழில்கள் முடங்கி போதல்,பட்டினிச் சாவு ஆகியவற்றால் சிக்கி கொடுமையான முறையில் சீரழிந்து கொண்டிருந்தபோது சில கார்ப்ரேட் நிறுவனங்கள் வருமானத்தை அள்ளி குவித்து வளமாகிக்கொண்டிருந்தன.

கோடிக் கணக்கானவர்களுக்கு துயரமும், ஒரு சிலருக்கு மட்டும் செழிப்பு என்பதே அடிப்படை விதிமுறையாக இருக்கும் முதலாளித்துவத்தை காப்பாற்றவும், நிலைநிறுத்தவும் மோடியும், ஆர்.எஸ்.எஸ்.-இன் இந்துத்துவ அரசியலும் இந்தியாவையும் இந்தியர்களையும் பலிபீடத்தில் ஏற்றியிருக்கிறது.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டங்கள், சாதிய, மத ரீதியான ஒடுக்குமுறைக்கு எதிரான இந்திய அளவிலான போராட்டங்கள், இந்துத்துவ கார்ப்பரேட் நல அரசின் அதிர்ச்சி வைத்தியத் தாக்குதல்களுக்கு எதிர்தாக்குதல்களாக சமூகத்தில் எழுவது ஒரு நம்பிக்கையை அளிக்கிறது.

இந்துத்வ கோட்பாட்டையும் மோடி அரசையும் தோல்வியை சந்திப்பதை உறுதிபடுத்த இந்தியாவின் தெருக்களில் நடைபெறும் போராட்டத்திற்கு மிகப்பெரிய ஆதரவினை அனைத்து தரப்பிலும் பெறுவதற்கான முயற்சிகளை செய்வதற்கு இதுவே சரியான நேரம்.

படிக்க :
♦ முதலாளித்துவ பெருந்தொற்றிலிருந்து மீள்வது எப்படி ?
நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

அரசின் அதிகார பலம் மற்றும் வலுவான பிரச்சாரம் ஆகியவற்றை மீறி பாசிசம் நாஜிசம் மற்றும் முதலாளித்துவம் ஆகியன தோற்றுப்போகும் என்பதே வரலாறு நமக்கு உணர்த்தும் பாடம்.

இந்தியாவையும் இந்திய நாட்டு உழைக்கும் மக்களின் எதிர்காலத்தையும் முழுவதுமாக சேதப்படுத்துவதற்கு முன்னால் இந்துத்துவ பாசிசம் மற்றும் கார்ப்பரேட் முதலாளித்துவத்தின் தோல்வியை விரைவுபடுத்தும் விதமாக முற்போக்கு ஜனநாயசக்திகள், விவசாயிகள், தொழிலாளர் வர்க்கத்தினர் மாணவர்கள் இன்னும் பிற சிறுபான்மையினர், மலைவாழ் மக்கள் ஆகியோர் இணையும் புள்ளியில் எழும்பும் போராட்ட அலையை கட்டியமைத்து தீவிரபடுத்தவேண்டிய தருணம் இது.

மணிவேல்
மூலக் கட்டுரை
: பாபானி சங்கர் நாயக்
நன்றி :
Counter currents

நீங்க யாருக்கு ஓட்டுப் போட்டாலும் நாங்க தான் ஆட்சி செய்வோம் ! பாஜக ஸ்டைல் !!

0

மிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரச்சாரமும் கூட்டணி பேச்சுவார்த்தைகளும் பரபரப்பாகப் பேசப்படுகின்றன. யாருக்கு எத்தனை தொகுதி, எந்தக் கட்சியுடன் கூட்டணி, எந்தக் கட்சிக்கு எதிராக எந்தக் கட்சியை நிறுத்துவது என அன்றாடம் செய்தி ஊடகங்களும் ஆருடம் பார்க்கத் துவங்கிவிட்டன.

இந்தப் பிரச்சாரங்களோடு வாக்களிப்பது ஜனநாயகக் கடமை என்றும், தேர்தலில் பணம் வாங்காமல் நேர்மையாளர்களைத் தேர்ந்தெடுப்பதுதான் சரியானது என்றும் பிரச்சாரங்கள் தொடங்கிவிட்டன. தேர்தல் ஆணையம் துவங்கி ’பொதுநலன் கருதி’ தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வரை இந்தப் பிரச்சாரத்தைத் துவங்கிவிட்டன.

படிக்க :
♦ கர்நாடகா – 116 க்கும் 104 க்கும் இடையில் …
♦ பீகார்: நிதீஷ் குமாரின் வெற்றியும் ஜனநாயகத்தின் அழுகுணியாட்டமும்!!

தேர்தல் முடிவுகள் வரும்வரை கட்சிகள் பதைபதைக்கும் காலம் எல்லாம் மலையேறி, தேர்தலில் வெற்றி பெற்ற பிறகும் பெரும்பான்மை பெற்ற கட்சி ஆட்சியில் அமர்வதற்கு முன்னால் எம்.எல்.ஏ.க்களை சொகுசு பங்களாக்களிலும் ரிசார்ட்டுகளிலும் அடைத்து வைக்கும் உன்னத நிலைக்கு இந்திய ஜனநாயகம் கடந்த 7 ஆண்டுகளில் சந்தி சிரித்துவிட்டது.

இன்றைய நிலையில் பாஜக-வைத் தவிர எந்தக் கட்சியுமே எவ்வளவு பெரும்பான்மை பெற்றிருந்தாலும் ஆள முடியாது என்ற நிலையில்தான் நிலைமைகளை ஏற்படுத்தி வைத்திருக்கிறது பாஜக. கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் பல மாநிலங்களில் பெரும்பான்மை பெற்ற கட்சிகளின் ஆட்சியைக் கவிழ்த்து தனது கைகளில் ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

கடந்த 2014-ம் ஆண்டு அருணாச்சலப் பிரதேசத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 60 தொகுதிகளைக் கொண்ட அருணாச்சல பிரதேசத்தில் 42 இடங்களை காங்கிரஸ் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 11 எம்.எல்.ஏ.க்களை மட்டுமே கொண்டிருந்தது. 2016-ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் 40 எம்.எல்.ஏக்களுடன் அக்கட்சியில் இருந்து வெளியேறி “மக்கள் கட்சி” எனும் புதிய கட்சியை துவங்கினார் பெமா காண்டு. அந்த கட்சி பின்னர், பாஜக-விற்கு ஆதரவு என மாறியது. காங்கிரஸ் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.

இங்கு கவனிக்க வேண்டிய முக்கிய விசயம் ஒன்று இருக்கிறது. காங்கிரசும் பாஜக-வும் சம அளவில் தொகுதிகளை வென்று சரிக்கு சமமாக இருக்கும் சூழலில் இந்த ஆட்சிக் கவிழ்ப்பு நடைபெறவில்லை. 11 சீட்டுகள் மட்டுமே கொண்ட பாஜகவால் ஆட்சி அமைத்திருக்க முடியும் என காங்கிரஸ் கட்சி கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்காது. ஆனால், அது நடந்தது. இங்கு பாஜக-வுக்கு எதிராக வாக்களித்த பெரும்பான்மையான அருணாச்சலபிரதேச மக்களின் வாக்குகள் குப்பைத் தொட்டிக்கு வீசப்பட்டன.

மணிப்பூரில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் 28 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. 21 எம்.எல்.ஏக்களை மட்டுமே பாஜக கொண்டிருந்தது. நாகா மக்கள் முன்னணி, தேசிய மக்கள் கட்சி, லோக் ஜன சக்தி, சுயேச்சியுடன் கூட்டணியமைத்து குறைவாக இடங்களை பிடித்திருந்தாலும் குதிரை பேரம் நடத்தி ஆட்சியை கைப்பற்றியது பாஜக.

அடுத்தது, மேகாலயாவில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 21 இடங்களை காங்கிரஸ் வைத்திருந்தது. தேசிய மக்கள் கட்சி 19 இடங்கள் வைத்திருந்தது. வெறும் 2 இடங்களை மட்டுமே பாஜக வைத்திருந்தது. தேசிய மக்கள் கட்சியை விலை பேரத்தால் இணைத்துக் கொண்டு அங்கு ஆட்சியை பிடித்தது பாஜக.

சிக்கிம் மாநிலத்தில் கடந்த 2019-ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஆனால், சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா கட்சியுடன் விலைபேரத்தில் இணைந்து ஆட்சியை பிடித்தது பாஜக.

மத்திய பிரதேசத்தில் 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் காங்கிரஸ் 114 இடங்களை பெற்றது. 121 ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் ஆதரவுடன் கூட்டணி ஆட்சியை அமைத்தது. பாஜக 109 இடங்களை பெற்றிருந்தது. காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் 29 பேரையும் விலைக்கு வாங்கி இரண்டே ஆண்டில் காங்கிரஸ் ஆட்சியை கவிழ்த்தது பாஜக.

பீகார் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைப்பெற்றது. அதில் ஐக்கிய ஜனதா தளம் 80 இடங்களிலும், ராஷ்டிரிய ஜனதா தளம் 71 இடங்களிலும் வெற்றி பெற்று கூட்டணி ஆட்சி அமைத்தது. பாஜக 53 இடங்களை பெற்றிருந்தது. மோடி அமித்ஷா கும்பல் நடத்திய பேரம் படிந்ததும், இரண்டே ஆண்டுகளில் முதல்வர் நிதிஷ்குமார், லல்லுவுடனான தமது கூட்டணியை ரத்து செய்துவிட்டு பதவி விலகினார்.

அதன் பிறகு 53 இடங்களைப் பெற்ற பாஜக-வில் இணைந்து கூட்டணி அமைத்து பாஜக-வின் எடுபிடியாக மாறினார். பாஜகவை வெறுத்து ஒதுக்கிய பீகார் மக்களின் விருப்பத்திற்கு எதிராகவே பாஜக-வை கூட்டணி ஆட்சியில் பங்கேற்கச் செய்து மக்களுக்கு துரோகம் இழைத்தார் நிதிஷ்குமார்.

ஜம்மூ காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இதில் மக்கள் ஜனநாயக கட்சி 28 இடங்களை பெற்றது. பாஜக 25 இடங்களை பெற்றது. தேசிய மாநாடு கட்சி 15 இடங்களை பெற்றது. மக்கள் ஜனநாயக கட்சியுடன் விலைபேரத்தில் இணைந்து பாஜக கூட்டணி ஆட்சி அமைத்தது. முதலமைச்சர் 2016 ஏப்ரலில் இறந்த பிறகு அவர் மகள் மெகபூபா முப்தி முதல்வரானார். முப்தி பாஜகவிற்கு இசைவு கொடுக்காததால், கூட்டணியில் இருந்து விலகியது பாஜக. அதன்பின் முப்தி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.

கோவாவில் கடந்த 2017-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 17 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. 13 இடங்களை பாஜக பெற்றது. பிற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி 27 தொகுதிகளை கொண்ட ஆட்சியை அமைத்துள்ளது பாஜக.

இங்கு நடந்த இந்த போங்காட்டம் மிகவும் அருவெறுப்பானது. பொதுவாக ஆளுநர்கள் ஒரு மாநிலத்தில் யாரை ஆட்சியமைக்க அழைப்பார்கள்? யார் எந்தக் கட்சி அதிக இடங்களை வென்றிருக்கிறதோ அந்தக் கட்சியைத் தானே அழைப்பார்கள். எந்த ஊரிலும் இல்லாத நடைமுறையாக குறைவான தொகுதிகளை வென்ற பாஜக-வை ஆட்சியமைக்க அழைத்தார் கவர்னர்.

கர்நாடகாவில் கடந்த 2018-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. அதில் 104 இடங்களை பாஜக பெற்றது. காங்கிரஸ் 80 இடங்கள் பெற்றது. மதச்சார்பற்ற ஜக்கிய ஜனதா தளம் 37 இடங்கள் பெற்றது. மதச்சார்பற்ற ஐக்கிய ஜனதா தளமோ, காங்கிரசோ பாஜக-வுடன் கூட்டணி வைக்க விரும்பவில்லை. அதன் காரணமாக பாஜகவால் பெரும்பான்மை நிரூபிக்க முடியவில்லை. அதன் பின்னர், காங்கிரஸ் – மதசார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி அமைந்தது. அடுத்த ஒரு ஆண்டிலேயே 16 காங்கிரஸ் எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி குமாரசாமி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.

புதுச்சேரியில் 2016-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. 15 இடங்களில் காங்கிரஸ் பெற்றது. திமுக ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. 5 ஆண்டு ஆட்சி முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில், காங்கிரஸின் 6 எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி நாராயணசாமி ஆட்சியை கவிழ்த்தது பாஜக.

மக்கள் எந்தக் கட்சிக்கு ‘தாலி கட்டினாலும்’ சரி, குடும்பத்தை நான் தான் நடத்துவேன் என்று கீழ்த்தரமான அரசியலை இந்தியா முழுவதும் நடத்தி வருகிறது பாஜக. இப்படி மாநிலங்களில் தங்களுக்குச் சாதகமான ஆட்சியை கொல்லைப்புறம் வழியாக ஏற்படுத்திக் கொள்வதன் மூலம் ‘ஜனநாயகமாவது ஐகோர்ட்டாவது’ என மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ‘ஒரே உரிமையான’ வாக்குரிமையையும் கேலிக் கூத்தாக்கியிருக்கிறது.

படிக்க :
♦ மாநில தேர்தல்கள் : சுருங்குகிறதா பாஜகவின் சாம்ராஜ்ஜியம் ?
♦ ஆன்டி இன்டியன்ஸ் வாக்குகள் தேவை இல்லை | பாஜக தேர்தல் அறிக்கை

இத்தகைய ஒரு பேரம் எதுவும் அவசியமில்லாமல் வருமானவரித் துறையை வைத்தே சில பல மாநிலங்களில் ஆட்சியை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருக்கிறது பாஜக. அதில், நமது தமிழகமும் அடக்கம். அடிமை எடப்பாடி அரசு பாஜக-வின் கைப்பாவையாக இருப்பதன் மூலமே இதுவரையில் தமது இருப்பை தக்க வைத்து வந்திருக்கிறது.

ஆனால், இதில் உள்ள ஒரு கொடுமை என்ன தெரியுமா ? திரைமறைவு குதிரை பேரங்கள் தவிர்த்து பிற அனைத்து ஆட்சிக் கவிழ்ப்புகளும் மக்களின் அங்கீகாரம் பெறாத கட்சிகள் அமைக்கும் ஆட்சியும் சட்டப்படிதான் அரங்கேற்றப்படுகின்றன.

இப்படிப்பட்ட மக்கள் விரோதமான – மக்களின் ஜனநாயகத்தை மறுக்கின்ற நடைமுறைக்குப் பெயர்தான் தேர்தல் ஜனநாயகம். இதை மக்களை ஏய்க்கின்ற போலி ஜனநாயகம் என்று கூறுவதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.


சந்துரு
நன்றி :
தினகரன் 24-2-2021.

அதிகாரத் திமிரும் ஆணாதிக்கத் திமிரும் ஊறித் திளைக்கும் தமிழக போலீசு

மிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் பாதுகாப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்ட ராஜேஷ்தாஸ், பெண் ஐ.பி.எஸ். அதிகாரியின் மீது நடத்திய பாலியல் வன்முறை குறித்து தலைமைச் செயலரிடம் அளிக்கப்பட்ட புகாரை சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன் வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது நாம் அறிந்ததே.

கடந்த பிப்ரவரி மாதத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுவந்த எடப்பாடி பழனிச்சாமிக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் ராஜேஷ்தாஸ். பாதுகாப்புக்குப் போன இடத்தில் அங்கிருந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரியை சட்டம் ஒழுங்கு குறித்து ’விவாதிக்க’ காரில் ஏறச் சொல்லி ஓடும் காரிலேயே பாலியல்ரீதியில் அத்துமீறியிருக்கிறார் ராஜேஷ்தாஸ்.

இது தொடர்பாக புகாரளிக்கப் போவதாக ஐ.ஜி ஜெயராமனிடம் கூறியிருக்கிறார். அதனைத் தொடர்ந்து சக எஸ்.பி.களான ஜியாஉல்ஹக், திஷா மிட்டல் மற்றும் அபினவ் ஆகியோர் ராஜேஷ்தாஸ் மீது புகாரளிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனை மறுத்த அந்த பெண் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு புகாரளிக்க வருவதை நடுவழியில் தடுத்து நிறுத்தி காரின் சாவியைப் பறித்துள்ளார் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன். இதையெல்லாம் மீறிப் போய் தலைமைச் செயலரிடம் புகாரளித்திருக்கிறார் அந்தப் பெண் உயரதிகாரி.

படிக்க:
♦ சட்ட மன்றத் தேர்தலால் இழந்த உரிமைகளை மீட்டுத்தர முடியுமா ?
♦ பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவின் தோல்வி விவசாயிகளுக்குத் தீர்வு தருமா ?

ஒரு பெண் ஐபிஎஸ் அதிகாரியை பட்டப்பகலில் காரில் வைத்து பாலியல்ரீதியில் துன்புறுத்தியது மட்டுமல்லாமல் புகாரளிகக் கூடாது என அவரை மிரட்டவும் செய்வதெனில் எவ்வளவு அதிகாரத் திமிர் இருந்திருக்க வேண்டும்?

ஒரு பெண் உயரதிகாரிக்கே இதுதான் நிலைமை என்றால் சாதாரண பெண் போலீசாரின் நிலைமை என்ன ?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.

ஒருவேளை அந்தப் பெண் போலீசு அதிகாரியின் இடத்தில் சாதாரணப் பெண் இருந்திருந்தால் என்னவாகியிருந்திருக்கும்? ராஜேஷ்தாஸின் உத்தரவை சிரமேற்று இடைநிறுத்திய அதே போலீசு, அந்தப் பெண்ணை என்னவேண்டுமானாலும் செய்திருக்கக் கூடும்!

ராஜேஷ் தாஸ்

ஒருவேளை ராஜேஷ்தாஸ் இடத்தில் ஒரு சாதாரண நபர் அந்த இழிவான செயலைச் செய்திருந்தால், கைது செய்கையில் தப்பி ஓடும்போது சுட்டுக் கொல்லப்பட்டார் என்று செய்தி வந்திருக்கலாம். அல்லது குறைந்தபட்சம் ”பாசி படிந்த” போலீசு நிலைய பாத்ரூமில் வழுக்கி விழுந்து கைகால் எலும்பு முறிந்ததாகவாவது செய்தி வந்திருக்கும்.

ஆனால் பாலியல் துன்புறுத்தல் செய்ததோடு மட்டுமல்லாமல், அதிகாரவர்க்கத்தில் தமக்கு நெருக்கமாக இருப்பவர்களை வைத்து மிரட்டவும் செய்த ராஜேஷ் தாஸை இன்னும் கைது கூட செய்யாமல் பாதுகாத்து வைத்திருக்கிறது தமிழக அரசு.

பாதிக்கப்பட்ட பெண் போலீசு அதிகாரி தலைமைச் செயலரிடம் புகார் கொடுத்ததை ஒட்டி, ‘அதிகபட்ச’ தண்டனையாக ராஜேஷ் தாஸை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றியிருக்கிறது அடிமை எடப்பாடி அரசு. இதில் வெட்கமே இல்லாமல், பெண்கள் எந்நேரத்திலும் தனியாக பயணம் செய்யும் அளவிற்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று விளம்பரம் வேறு.

பொள்ளாச்சி பாலியல் குற்றம் ஊர் முழுவதும் அம்பலமாகி நாடே காறி உமிழ்ந்த பின்னரும் குற்றவாளிகளைப் பாதுகாத்த தமிழக அரசிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும் ?

பொள்ளாச்சி பாலியல் வன்முறையில் ஈடுபட்ட கும்பலின் தலைவனான அதிமுக துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் மகன் பிரவீன் இதில் சம்பந்தப்பட்டிருந்ததுதான் எடப்பாடி அரசு அந்தக் குற்றக் கும்பலைப் பாதுகாத்ததன் பின்னணியாகும்.

துணை சபாநாயகரின் மகனுக்கும் அவனது கும்பலுக்குமே இவ்வளவு கரிசனம் காட்டப்படும்போது இத்தகைய கிரிமினல் கும்பல்களை சட்டத்தின் பிடியிலிருந்து தப்பச் செய்து பாதுகாத்து வரும் அதிகாரவர்க்கத்தினருக்கு மட்டும் குறைவாகவா கரிசனம் காட்டப்படும் ?

ஆனால், இங்கு பாதிக்கப்பட்டவரும் அதிகாரவர்க்கத்தைச் சேர்ந்தவர்தான். இந்திய சமூகத்தில் அதிகார வர்க்கம் முதல் சாதாரண மக்கள் வரை சாதியைப் போலவே ஆணாதிக்கமும் ஊறிப் போயிருக்கிறது. அதிகார வர்க்கத்தினுள்ளும் சாதிய ஏற்றத்தாழ்வும், பாலியல் ஏற்றத் தாழ்வும் உண்டு என்பதை பல வழக்குகள் நமக்குக் காட்டியிருக்கின்றன.

டி.எஸ்.பி. விஷ்ணு பிரியா மற்றும் அவர் எழுதிய தற்கொலை குறிப்புக் கடிதம்

குறிப்பாக கோகுல்ராஜ் கொலைவழக்கில் உண்மையான குற்றவாளிகளைக் கைது செய்ய முயன்ற டி.எஸ்.பி விஷ்ணுபிரியா மரணித்தது தொடர்பான வழக்கு இதற்கு எடுப்பான உதாரணம். அப்போதைய நாமக்கல் எஸ்.பி செந்தில்குமார்தான் விஷ்ணுபிரியாவின் தற்கொலைக்குக் காரணம் என்று அவரது தந்தை குற்றம்சாட்டியதோடு, விஷ்ணுபிரியாவின் தோழியும் அப்போதைய கீழக்கரை டி.எஸ்.பியுமான மகேஷ்வரியும் வெளிப்படையாக பேட்டியளித்தார்.

மேலும் விஷ்ணுபிரியா மரணித்த பின்னர் அவர் இருந்த அறைக்குள் சென்று அனைத்து தடயங்களையும் செந்தில்குமார் அழித்துவிட்டார் என்பதும் அம்பலமானது. இவ்வளவு இருந்தும் இந்த வழக்கை விசாரிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை எனக் கைவிட்டது சி.பி..

சி.பி.யிடம் இந்த வழக்க்கை கொடுப்பதற்கு முன்னர், குற்றம்சாட்டப்பட்ட எஸ்.பி செந்தில்குமாரின் மீதான இந்த வழக்கை சிபி.சி.ஐடியில் பணியாற்றிய அவரது நண்பரிடம் ஒப்படைத்தது தமிழக அரசு. குற்றவாளி ஒருவனின் குற்றத்தை விசாரிக்க அவனது நண்பனையே விசாரணை அதிகாரியாகப் போடும் ‘துணிவு’ கொண்ட ஒரே அரசாங்கம் அடிமை எடப்பாடியின் அரசாங்கமாகத்தான் இருக்க முடியும். இதை எதிர்த்து விஸ்ணுபிரியாவின் தந்தை தொடுத்த வழக்கை முன்னிட்டுதான் இந்த வழக்கு சி.பி.யிடம் ஒப்படைக்கப்பட்டது.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியாவை தற்கொலைக்குத் தள்ளிய வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எஸ்.பி. செந்தில்குமாரையும், தற்போது பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பாலியல் வன்முறை சம்பவத்தில் குற்றம்சாட்டப்பட்ட ராஜேஷ் தாஸையும் காப்பாற்றுவதற்கே அன்றும் இன்றும் இந்த அதிமுக அரசு முயற்சித்தது.

படிக்க :
♦ எல்.ஐ.சி. தனியார்மயம் : சூறையாடப்படவிருக்கும் நம் காப்பீடு
♦ பட்ஜெட் 2021 : சுகாதாரத்திற்கான நிதியை 137% அளவிற்கு அதிகரித்ததா மோடி அரசு ?

முன்னதில் அதிகாரவர்க்கத்தில் கோலோச்சும் சாதியமும் ஆணாதிக்கமும் அம்பலப்பட்டது எனில் தற்போதைய சம்பவத்தில் அதிகாரத் திமிரும் ஆணாதிக்கமும் அம்பலப்பட்டு நிற்கிறது. அதோடு இந்த அடிமை அதிமுக அரசு எந்த அளவிற்கு அதிகாரத் திமிரெடுத்த கும்பலுக்கு ஆதரவாக நிற்கிறது என்பது இந்தச் சம்பவத்தில் அம்பலப்பட்டிருக்கிறது.

போலீசு, இராணுவம், நீதித்துறை என அதிகார வர்க்கத்தின் குற்றங்கள் குறித்து விசாரிக்க வழங்கப்படும் தனிச்சிறப்பு விதிவிலக்குகள் அதிகாரவர்க்கப் பிரிவை மக்களுக்கு மேலானதாகவும் அதிகாரத் திமிர் கொண்டதாக மாற்றிவிடுகின்றன.

அதிகார வர்க்கமானது, மக்களை ஒடுக்குவதில் ஆளும்வர்க்கத்திற்கு ஆற்றும் சேவைகளுக்கு பிரதிபலனாகவே இந்தச் சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. இத் தனிச் சலுகைகள் ஒழிக்கப்படும்போதுதான் அதிகார வர்க்கத்தின் இத்தகைய பாலியல் மற்றும் வன்முறை வெறியாட்டங்கள் முடிவுக்கு வரும். ஆனால் அது மக்களை சுரண்டுவதற்காகவே வடிவமைக்கப்பட்ட இந்த அரசுக் கட்டமைப்பில் சாத்தியமற்ற ஒன்று என்பதுதான் கசப்பான உண்மை!

கர்ணன்
நன்றி :
கலைஞர் செய்திகள்

கோட்டாபய ஆட்சியில் வீழ்ச்சியை நோக்கி இலங்கை || பு.ஜ.மா.லெ கட்சி

ஊடக அறிக்கை

நாள் : 02.03.2021

னாதிபதி கோட்டாபய தலைமையிலான பொதுஜன பெரமுனவின் ஒன்றரை வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியிலிருந்து மீட்கப்படவோ சுபீட்சம் நோக்கிக் கொண்டு செல்லப்படவோ இல்லை. அதன் காரணமாகவே அத்தியாவசிய பொருட்களினது விலைகள் மிகவும் உயர்ந்து செல்கின்றன. இவற்றால் வாழ்க்கைச் செலவு அதிகரித்து, உழைக்கும் மக்களின் வாழ்வாதாரம் மோசமாகப் பாதிப்படைந்துள்ளது.

வேலையின்மையும் வறுமையும் அதிகரித்து, அனைத்து தேசிய இனங்களையும் சேர்ந்த சாதாரண உழைக்கும் மக்கள் நெருக்கடிகளுக்கும் பிரச்சனைகளுக்கும் உள்ளாகி நிற்கின்றனர். இவற்றை மக்களின் கவனத்திலிருந்து திசை திருப்பவே கோவிட்-19 தொற்று ஊதிப் பெருப்பித்துக் காட்டப்படுவதுடன், அதன் மறைவில் இராணுவ மயமாக்கலும் முன்னெடுக்கப்படுகிறது.

படிக்க:
இலங்கை குண்டுவெடிப்பு : குற்றவாளிகளைப் பிடிக்க உதவிய இசுலாமியர்கள் !
இஸ்லாமிய மத அடிப்படைவாதமும் இலங்கை குண்டுவெடிப்புகளும் !

அதேவேளை, சிங்கள மக்கள் மத்தியில் ஆட்சி அதிகாரத்தில் இருப்போரின் மீது உருவாகி வளர்ந்துவரும் எதிர்ப்பை மடைமாற்றம் செய்வதற்கே தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ்த் தேசிய இனங்கள் மீதான இன ஒடுக்குமுறைகளை நேரடியாகவும் மறைமுகமாகவும் பெருமெடுப்பில் ஆட்சியாளர்கள் முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே, வர்க்க ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் இலங்கை முழுவதும் வாழும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களும், பேரினவாத ஒடுக்குமுறைகளை எதிர்நோக்கியுள்ள தமிழ், முஸ்லீம், மலையக மக்களும் பொதுக்கோரிக்கைகளை முன்னிறுத்தி பரந்துபட்ட வெகுஜனப் போராட்டத்தளம் ஒன்றினைத் தோற்றுவிப்பது இன்றைய அவசியமாகி உள்ளது. இத்தகைய வெகுஜன அரசியல் மார்க்கத்தில் பயணிப்பதையே எமது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி வலியுறுத்தி நிற்கின்றது.

எமது நாட்டின் பொருளாதாரம் இன்றைய நெருக்கடி நிலையில் வீழ்ச்சியடைந்து உள்ளமைக்கு அடிப்படைக் காரணமாக, எமது தேசிய வளங்களை விருத்தி செய்து, ஒரு சக்திமிக்க தேசிய பொருளாதாரத்தை, கடந்த நாற்பத்து இரண்டு வருடங்களாக ஆட்சியாளர்கள் கட்டி வளர்க்கத் தவறியதுடன், அந்நிய வல்லரசு சக்திகளின் ஆலோசனைக்கு அமைய நாட்டு வளங்களையும் மக்களின் உழைப்பையும் பல்தேசியக் கம்பனிகளுக்கும் பெரும் முதலாளிகளிற்கும் தாரைவார்த்துக் கொடுத்தமை விளங்குகிறது.

இக்காலப்பகுதியில் மாறிமாறி ஆட்சி செய்தவர்கள் எல்லோருமே தாராளமயம், தனியார்மயம், உலகமயமாதல் பாதையில் பயணித்ததன் பாரிய விளைவையே இன்று நாடும் மக்களும் அனுபவித்து நிற்கின்றோம். இதே நாசகாரப் பாதையிலிருந்து இன்றைய கோட்டாபய அரசாங்கமும் விலகத் தயாரில்லாத நிலையிலேயே பயணித்து வருகிறது. ‘சுபீட்சத்தின் நோக்கு’ vd;gJ வெறும் பெயர்ப்பலகை மட்டுமே. அதனாலேயே இன்று அந்நிய வல்லரசுகளின் ஆடுகளமாக இலங்கை மாற்றப்பட்டுள்ளது.

தேசிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பத் தவறிய அதேவேளை, நாட்டின் தேசிய இனப்பிரச்சினையை நியாயபூர்வமான அடிப்படையில் தீர்வுக்குக் கொண்டு வர மறுத்த ஆட்சியாளர்கள், சிங்கள பௌத்த பேரினவாத நிலைநின்று தமிழ், முஸ்லீம், மலையகத் தேசிய இனங்களை ஒடுக்குவதிலும், அவ் ஒடுக்குமுறையைப் போராக மாற்றுவதிலுமே எப்போதும் கவனம் செலுத்தி வந்துள்ளனர். அதனாலேயே கொடிய முப்பது வருடப் போருக்குப் பின்பும் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறைகள் நீடித்து வருவதுடன், அதனைத் தீர்வுக்குக் கொண்டு வர எந்த ஆட்சியினரும் தயாராக இல்லாத நிலை தொடர்கிறது.

இதன் அண்மைய எடுத்துக்காட்டாக நியாயமான கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து, அகிம்சையான முறையில், மக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்த, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணிக்கு எதிராகத் தற்போது பொலிசாரால் முன்னெடுக்கப்படும் விசாரணைகளை நாம் நோக்குகிறோம். இத்தகைய வெகுஜன நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் அச்சுறுதல் செயற்பாடுகளை அரசு நிறுத்த வேண்டும்.

மக்கள் நீண்டகாலமாக முன்வைக்கும் அரசியல் கைதிகளின் விடுதலை, தொல்லியல், வனவளம் ஆகிய பெயர்களில் இடம்பெறும் நில ஆக்கிரமிப்புகளை நிறுத்துதல் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் நிலங்களை விடுவித்தல், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான நீதி ஆகிய நியாயமான கோரிக்கைகளுக்குத் தீர்வினை வழங்க வேண்டும்.

அதேவேளை ஒடுக்கப்படும் தேசிய இனங்கள் மத்தியில் தீர்வுக்கான பொதுக் கோரிக்கைகளை முன்வைக்காது பாராளுமன்ற, மாகாண சபை, பிரதேச சபை ஆசனங்களுக்கான வாக்கு வங்கி அரசியலையே தமிழ் முஸ்லீம் மலையகத் தமிழ் அரசியல் தரப்புக்கள் முன்வைத்து வருகின்றன.

முஸ்லீம், மலையகத் தமிழ் அரசியல் தரப்புகளில் சிலர் தம்முள் பிரிந்து நின்று சிங்கள பௌத்த பேரினவாத ஆட்சியாளர்களுக்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முட்டுக் கொடுத்தே வந்துள்ளனர். அதற்கான அண்மைய உதாரணமாக ஜனநாயகத்தின் மீது மண் போடும் இருபதாவது திருத்தத்திற்கு இவர்களில் பலர் வழங்கிய திடீர் ஆதரவைக் குறுப்பிடலாம்.

காலங்காலமாக அத்தியாவசிய தேவைகளான காணி, வீடு உரிமை மறுக்கப்பட்டு, முகவரி அற்ற மக்களாக வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ள மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு, அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபா வழங்குவதிலும் ஆட்சியாளர்கள் தோட்டக் கம்பனி முதலாளிகளுடன் இணைந்து பெரும் ஏமாற்று இழுத்தடிப்புகளையே முன்னெடுத்து வருகின்றனர். மஸ்கெலியா ஓல்டன் தோட்டத்தில் தொழிலாளர்களுக்கு எதிராக தோட்டத் துரையால் மேற்கொள்ளப்படும் அடாவடிகளும், அடக்குமுறைகளும் காலணித்தவ கால துரைத்தனத்தின் தொடர்ச்சியாக இன்றும் இடம்பெறுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அதேநேரம் ஆதிக்க மனநிலை கொண்ட தமிழ் அரசியல் தரப்புகள் குறுகிய தமிழ்த் தேசியவாத நிலைப்பாட்டுடன் வாக்கு வங்கி அரசியலையே முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன் அடிக்கு மேல் அடிவாங்கினாலும், ஏமாற்றுக்களைத் தொடர்ந்தாலும் நீங்களே எங்களின் எசமானர்கள் என்றவாறு இந்திய, அமெரிக்க, மேற்குலகம் மீதான அடிமைத்தன அரசியல் நிலைப்பாட்டினையே தமிழர் தரப்பு தலைமைகள் முன்னெடுத்து வருகின்றன.

பெரும் அழிவுகளையும் துன்பங்களையும் அனுபவித்து, இன்றும் அவற்றில் இருந்து முழுமையாக மீண்டு வர முடியாது தவிக்கின்ற தமிழ் மக்களை, ஐ.நா. தீர்வு தரும், ஐரோப்பிய ஒன்றியம் தலையிடும், அமெரிக்கா அதற்கு உதவும், இந்தியாவே எமக்கு இரங்கவேண்டும் என்று தொடர்ச்சியாகப் பிழையான வழிகாட்டுதல்கள் மூலம் ஏமாற்றித் தமது அரசியல் இருப்பைப் பாதுகாத்து வரும் இவர்கள் தமது எசமானர்களை நோக்கி நீங்களே வந்து வடக்கு கிழக்கில் நிலை கொள்ளுங்கள் என்று கேட்கும் துரோகத்தன அரசியலுக்கு செல்லத் தயாராக இருப்பது விசனத்திற்குரியதாகும்.

படிக்க :
♦ இலங்கை : கொரோனாவின் திரை மறைவில் இடம்பெறும் அரசாங்கத்தின் மக்கள் விரோதச் செயல்கள் !
♦ பாசிச பாஜக -வின் நடவடிக்கைக்கு புதிய ஜனநாயக மாக்சிய லெனினிய கட்சி கண்டனம் !

இந்தியா, சீனா, அமெரிக்கா உள்ளிட்ட எந்த வல்லரசும் இலங்கையில் கால் ஊன்றவும் வளங்களைச் சுரண்டவும் ஆதிக்கம் செலுத்தவும் வேண்டாம் என்ற குரல் தெற்கிலும் வடக்கிலும் மேற்கிலும் கிழக்கிலும் மலையகத்திலும் ஓங்கி ஒலிக்கும் போதே இலங்கைக்குரிய விடுதலையும் சுதந்திரமும் தேசிய இனங்களுக்கான சுய நிர்ணய உரிமையும் கிடைக்க முடியும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

இவ் அறிக்கை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் மத்திய குழுவின் அரசியல் குழு சார்பாக அதன் பொதுச்செயலாளர் சி.கா.செந்திவேல் அவர்களால் வெளியிடப்படுகின்றது.

சி.கா. செந்திவேல்
பொதுச் செயலாளர்
புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி

ராஜேஷ்தாஸை காப்பாற்றும் எடப்பாடி பழனிச்சாமிதான் தமிழகத்தின் அவமானம் || மக்கள் அதிகாரம்

PP Letter headபத்திரிகைச் செய்தி

01.03.2021

பெண் மாவட்ட கண்காணிப்பாளரை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் இப்போது வரை கைது செய்யப்படவோ பணியிடை நீக்கம் செய்யப்படவில்லை. மாறாக, காத்திருப்பு பட்டியலில் அனுப்பப்பட்டு இருக்கிறார்.

இந்த வழக்கை தானாக முன்வந்து எடுத்துக்கொண்டு விசாரித்த சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதி திரு. ஆனந்த வெங்கடேஷ், இவ்வழக்கை நீதிமன்றமே கண்காணிக்கும் என்று உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே, தனக்கு கீழே வேலை செய்த பெண் டி.எஸ்.பியிடம் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட இந்த  ராஜேஷ் தாஸ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு மீண்டும் டிஜிபியாக உயர்ந்து இருக்கிறார் என்றால், இந்த கேடுகெட்ட அரசின் தன்மையை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

ஒரு பெண் எஸ்.பி-ஐ டி.ஜி.பி அந்தஸ்தில் உள்ள ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்கிறார். பாதிக்கப்பட்ட அந்த பெண் புகார் கொடுக்க கூடாது என்று இன்னொரு மாவட்ட எஸ்.பி, பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-யின் சாவியை எடுத்துக்கொண்டு தடுக்கிறார், மிரட்டுகிறார். பல உயர் அதிகாரிகளின் மிரட்டல்களை மீறித்தான் அந்த பெண் போலீஸ் அதிகாரி புகார் கொடுத்திருக்கிறார்.

இப்போது வரை டி.ஜி.பி ராஜேஷ் தாஸ் எஸ்.பி. கண்ணன் உள்ளிட்ட அனைத்து போலீஸ் அதிகாரிகளையும் எடப்பாடி பழனிச்சாமி காப்பாற்றி வருகிறார். இந்த லட்சணத்தில் வெற்றிநடை போடும் தமிழகம் என்ற விளம்பரம்  ஒரு வெட்கக்கேடு!

இப்பிரச்சினை எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் வெளிக் கொண்டு வரப்படவில்லை என்றால் அந்தப் பெண் எஸ்பியின் கதி என்ன?

ஏற்கெனவே, ஐ.ஜி முருகன் என்பவர் தன்னிடம் பாலியல் சீண்டல் செய்தார் என்று சீனியர்  எஸ்.பி ஒருவர் அளித்த புகார் என்னவானது?

வாச்சாத்தி பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை, சிதம்பரம் பத்மினி வழக்கு, கோயம்பேட்டில் ஒரு மருத்துவக் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த இன்ஸ்பெக்டர் மீதான வழக்கு என போலீஸ் மீதான பாலியல் வன்கொடுமை வழக்குகள் எண்ணி மாளாது. காவல் நிலைய கொட்டடிப் படுகொலைகளும் சித்திரவதைகளும் சொல்லி மாளாது.

ஒரு நாட்டின் குடிமகன் செய்கின்ற தவறுக்கு எப்படி சட்டப்படி தண்டிப்பதற்கு தடையேதும் இல்லையோ அதைப்போலவே அதிகார வர்க்கத்தினரும் தண்டிக்கப்பட வேண்டும்.  போலீசே,  போலீசின் தவறுகளை விசாரிக்க முடியும் என்ற திமிரின் காரணமாகத்தான் ஜெயராஜ், பெனிக்ஸ் ஆகிய இருவரையும் கடும் சித்திரவதை செய்து கொன்று விட்டு அவர்கள் குடும்பத்தினரையும் சாட்சி சொல்லக் கூடாது என்று மிரட்டவும் முடிகிறது.

சுத்தமான நிலத்தடிநீர் வேண்டும், காற்று வேண்டும் என்ற நியாயமான கோரிக்கைக்காக போராடிய தூத்துக்குடி மக்களை சுட்டுக் கொன்றுவிட்டு போலீஸ் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கவும் முடிகிறது.

படிக்க :
♦ வாச்சாத்தி வன்கொடுமை: அரசு பயங்கரவாதம்!
♦ சிவகங்கை பாலியல் வன்கொடுமை: என்கவுண்டர் எப்போது ?

சிறப்பு டி.ஜி.பி ராஜேஷ் தாஸ், மாவட்ட எஸ்.பி கண்ணன் ஆகியோர் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு கைது செய்யப்பட வேண்டும். மேலும், பாதிக்கப்பட்ட பெண் எஸ்.பி-ஐ மிரட்டிய அத்தனை அதிகாரிகளும் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட வேண்டும்.

அதுமட்டுமல்லாது போலீஸின் அக்கிரமங்களுக்கு முடிவுகட்டும் வகையில்   அனைத்து மக்களும் போராட முன்வர வேண்டும் என்று மக்கள் அதிகாரம் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்
தோழர் மருது,
செய்தி தொடர்பாளர்,
மக்கள் அதிகாரம்,
தமிழ்நாடு – புதுவை
9962366321.