Monday, June 22, 2026
முகப்பு பதிவு பக்கம் 484

லெனின் – பெரியாரை தொட்டுப் பார் பட்டுப் போவாய் !

1

லெனினும் பெரியாரும் சிலை அல்ல சிந்தனை !

லகெங்கும்
கோடிக்கணக்கான மக்களின்
தலைக்குள் இருக்கிறார்
லெனின்.

சிலைக்குள் தேடும்
முண்டங்களே
எத்தனை புல்டோசரோடு
வந்தாலும்
உங்களால்
தவிர்க்க முடியாது லெனினை.

வளர்ந்து வரும்
வர்க்கப் பகையில்
தொழிலாளி வர்க்கத்தின் மூச்சில்
கலந்துவிட்ட லெனினை
மூலதனம் அடைகாக்கும்
கோல் வால்கர் குஞ்சுகளே
உங்களால்
தடுக்கவும் முடியாது.

எத்தனை பாரதமாதாவுக்கு
நீ, ஜெய்! போட்டாலும்
சா வர்க்க(ர்) கும்பலே
உன்னால் லெனினை
புதைக்க முடியாது
ஏனெனில்
லெனின் என்றால்
எதிர்காலம்.

அன்னிய தேசத்து தலைவருக்கு
இங்கெதற்கு சிலை என்றால்
அன்னிய ‘லோகத்து’ சாமிகளுக்கு
இங்கெதற்கு சிலை?
ஆரிய குடி ராஜாவுக்கு
காரைக்குடியில்
என்னடா வேலை!

ஆரியன் நீதான்
அந்நியன்,
லெனின்
உழைக்கும் வர்க்கத்து மண்ணியன்.

பூவுக்கும் வாசத்திற்கும்
என்ன சம்பந்தம்
பூமிக்கும் காற்றுக்கும்
என்ன சம்பந்தம்
அண்டத்திற்கும்
அணுக்களுக்கும்
என்ன சம்பந்தம்
அறியாத
தறுதலைகள் கேட்கின்றன,
லெனினுக்கும் இந்தியாவுக்கும்

என்ன சம்பந்தம்!
உலகுக்கும்
மின்சாரத்துக்கும்
என்ன சம்பந்தமோ
அதுதான்
லெனினும் இந்தியாவுக்கும்
உள்ள சம்பந்தம்.

வந்தேறி
ஆரிய ஆர்.எஸ்.எஸ். கும்பலே
முதலில்
உனக்கும்
மனித இனத்துக்கும்
என்ன சம்பந்தம்?
குரங்குகள்
வாழ ஆசைப்படலாம்
ஆள ஆசைப்படக் கூடாது.

முன்னேறிய
சிந்துவெளி நாகரிகத்தை
சீரழித்த
ஆரிய சுரண்டல் கும்பலுக்கு
லெனினின் சிவப்படியும்
பெரியாரின் செருப்படியும்
இன்னும் வலிக்கிறது.
சிலையாய் பார்த்தாலும்
பூணூல் எரிகிறது
குடுமி கொதிக்கிறது.

மிச்சமிருக்கும்
எச்சு ராஜாவுக்கும்
எரியத்தான் செய்யும்,
அணு உலைக்கும்
கொடிதான
மனு உலைக்கே
வேட்டு வைத்தவர் பெரியார்.

எங்கள்
நாடி நரம்பெல்லாம்
எழுந்து நிற்கிறார் ப‍ெரியார்.
பெரியார்
சிலை அல்ல
சிந்தனை.
தொட்டுப்பார்
பட்டுப்போவாய்.

– துரை. சண்முகம்

 

ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் !

0

க்களைச் சுரண்டும் ஏகாதிபத்தியங்களுக்கும், பெருமுதலாளிகளுக்கும் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் தோழர் லெனின். திரிபுரா மாநிலத்தில், உலக பாட்டாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவர் தோழர் லெனினின் சிலையை, ஏகாதிபத்தியங்களின் அடிமைச் சேவகம் செய்யும் ஆர்.எஸ்.எஸ். – பாஜக கும்பல் சில நாட்களுக்கு முன்னர் உடைத்தது.

அதனைத் தொடர்ந்து பாஜகவைச் சேர்ந்த எச்.ராஜா தனது ட்விட்டரில் இன்று லெனின் சிலை உடைக்கப்பட்டுள்ளது, நாளை பெரியார் சிலை என பார்ப்பனக் கொழுப்பால் விசத்தை கக்கியுள்ளார்.

மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் மையக் கலைக் குழுவினர் தோழர் கோவன் தலைமையில் தங்கள் பாடலின் மூலம் எச்ச ராஜாவின் பார்ப்பனக் கொழுப்புக்கு செருப்படி கொடுக்கின்றனர்.

ஒட்ட நறுக்கணும் எச்ச நாயோட வால ! கோவன் அதிரடி பாடல் வரிகள் !

ஒட்ட நறுக்கணும்…
எச்ச நாயோட வால!
இனி விட்டா பாஞ்சிடும்…
தமிழ் மக்களின் மேல!

நீ ஆடுற ஆட்டம்..
மோடி நிழலுல!
இது அஸ்தமனம்டா..
உன் மண்டையில் ஏறல !

(ஒட்ட நறுக்கணும்)

அம்பானிகளுக்கு…
லெனின் சிம்ம சொப்பனம்!
உங்க அக்கிரகாரத்துக்கு …
பெரியார் சிம்ம சொப்பனம்!

அந்த சிலையைக் கண்டு..
ஏன் கொல நடுங்கணும்?
தமிழன் அடிக்கும் அடியில்…
காவித் திமிரடங்கணும்!

(ஒட்ட நறுக்கணும்)

 

 

 

எச்ச ராஜாவை நெருப்பாய் பொசுக்கும் தமிழ் பேஸ்புக் !

2

பார்ப்பனக் கொழுப்பும் பான்பராக் எச்சிலும் ஒழுக பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்ற எச்ச ராஜாவுக்கு தமிழகம் சரியான பாடத்தைக் கற்பித்துக் கொண்டு வருகிறது.

எச்ச ராஜாவைத் தாண்டி அவரது முன்னோர்களான ‘குருஜிகோல்வால்கர்’ வரை துடப்பக்கட்டை பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இதன் விளைவாய் அய்யோ… எனக்கே தெரியாம நடந்துடுச்சி… அட்மின் பய போட்டு வூட்டு போய்ட்டான்… அந்த நேரத்துல நான் டெல்லி ஃபிளைட்ல இருந்தேன்னு… எஸ்கேப்-ஆக முயல்கிறார் எச்சையார்.

மெய்யுலகிலே மரணஅடி என்றால் பாஜகவை புரட்டி எடுக்கும் மெய்நிகர் உலகில் சொல்லவா வேண்டும். அவற்றில் சில….. உங்களுக்காக…

*****

சிவசங்கர் எஸ்.எஸ்

பெரியார் மீது செருப்பு வீசினால், திருப்பி கருத்தை தான் வீசுவார். பெரியாரின் பெயரன்களை அது போல் நினைத்து விட்டார் போலும் ராஜா. நீ செருப்பை வீசினால், திருப்பி நெருப்பாய் வீசுவோம் என நிரூபித்து வருகிறார்கள் பெயரன்கள். இணையம் கொதிக்கிறது. ஊருக்கு ஊர் எச்.ராஜாவின் படம் எரிகிறது. ஊடகங்களில் காறித் துப்பப்படுகிறது. தன் நிலைத்தகவலை தானே நீக்கி விட்டு, தன் முகத்தில் துப்பப்பட்டதை துடைத்துக் கொள்ள முயல்கிறார். இனி உன் வாழ்நாள் முழுதும் துப்பப்படும். துடைக்க, துடைக்க துப்பப்படும்….

Arul Ezhilan

ஆஹா அதற்குள் சிபிஎம் தோழர்கள் பூணூல் அறுப்பை கண்டிக்கத் துவங்கி விட்டார்கள். தோழர்களே இந்துத்துவத்தை எதிர்க்க 30 ஆண்டுகள் பழைய அணுகல் முறையை நீங்கள் இன்னும் வைத்திருக்கின்றீர்கள். அது துருப்பிடித்திருக்கிறது அதனால்தான் அடிக்கடி உங்களுடைய கைகளை அது பழாக்குகிறது…!

Aazhi Senthil Nathan

மமதா அக்கா எனக்கு பிடிக்கிறதுக்கு காரணம் இருக்கு:

“My ideology may differ with the CPI(M) but I will not tolerate it if someone tries to destroy the statues of leaders like Lenin.”

Aazhi Senthil Nathan

பெரியாரைப் போல ஒரு அதிர்ஷ்டக்கார கெழவன் யாரும் இல்லை. அவரால் பலன்பெற்றவர்கள் அவரை மறந்துவிட்டாலும், அவரால் “பாதிக்கப்பட்டவர்கள்” அவரை மறப்பதில்லை. ஆத்திகர்களைவிட நாத்திகர்கள்தான் கடவுளைப் பற்றி அதிகம் சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் என்று கூறுவதுபோல, பெரியாரின் ஆதரவாளர்களைவிட எதிர்ப்பாளர்கள்தான் பெரியாரைப் பற்றி அதிகம் சிந்தித்துக்கொண்டிருக்கிறார்கள்.

ராஜா, நீ பேசு ராஜா! நீ ராசிக்கார ராஜா இல்லையா? இன்றைக்கு லட்சம் பேராவது வாட்ஸ்அப்பில் பெரியாரைப் பற்றி தகவல்களைப் பகிர்ந்துகொள்வார்கள்! முகநூலிலிருந்து தொலைக்காட்சிகள் வரை பெரியாரைப் பற்றி பேசுவார்கள். எதற்காக பெரியார் சிலையை நீ உடைக்கணும்னு சொன்னேங்கிறது பத்தி எல்லோரும் பேசணும். அது பத்தி நன்றிகெட்ட இந்த தமிழ்நாட்டுக்கு நல்லா தெரியணுமில்லையா? நல்ல வேலை செஞ்சிருக்க ராஜா! இன்னும் இன்னும் நீ பெரியாரைப் பத்தியும் அண்ணாவைப் பத்தியும் லெனினைப் பத்தியும் நிறைய பேசணும்னு ஸ்ரீராமபிரானை வேண்டிக்கொள்கிறேன்.

நாங்க பெரியாரையும் தன்மானத்தையும் மறந்திடும்போதெல்லாம் உன்னைப் போல ஒரு ராஜா தேவைப்படுது. இதோ பாரு. சமீபத்தில மருத்துவ மேற்படிப்பில பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு ரத்து பண்ணீங்க. தமிழ்நாட்டில எதுவும் வெடிக்கல. அங்கே ஒரு முனகல், இங்கே ஒரு முக்கல். தட்ஸ் ஆல். அந்த அளவுக்கு தூங்கிட்டிருக்காங்க எங்க ஆளுங்க. இவங்கெல்லாம் விழிப்புணர்வு அடையணும்னா நீ – சொல்லக் கூடாது – செய்யணும். போய் ரெண்டு பெரியார் சிலையாவது உடைங்க பாக்கலாம். உங்க லெவலுக்கு நீங்கலெல்லாம் ஒடச்சுட்டுத்தான் போஸ்ட் போடணும் ராஜா. போ, போய் ரெண்டு பெரியார் சிலையை உடை. போட்டோ எடுத்து போடு. நாங்க பாக்கணும்.

செய் ராஜா செய். சேவையெல்லாம் செய். ப்ளீஸ் எங்கள ஏமாத்திடாதே.

Arul Ezhilan

பூணூல் அறுக்கப்பட்டது உண்மைதான். அறுத்தவர்கள் 4 பேர் அவர்களாகவே போய் சரணடைந்திருக்கிறார்கள். எச்.ராஜா உருவாக்கிய வன்முறையின் எதிர்வினை இது. பெரியார் சிலையை அகற்றுவோம் என்று எச்.ராஜா பதிவிட்ட உடன் அவனை கைது செய்திருந்தால் இந்த நிலை உருவாகி இருக்காது. இந்த வன்முறைகளுக்கு முழு பொறுப்பும் எச்.ராஜா அந்த பொறுக்கியை குண்டர் சட்டத்தில் கைது செய்! எச்.ராஜா கைதாகும் வரை பிராமணர்கள் கொஞ்ச நாள் பூணூலை கழட்டி வைத்து விட்டு சட்டை போடாமல் வெளியே வரும் படி பிரமாணர் சங்கம் வேண்டுகோள் விடுக்க வேண்டும்.

Gopinath Kubendran

தில் இருந்தால் பெரியார் சிலையை உடைக்கட்டும், அதற்கான விளைவுகளை அவர்கள் அறுவடை செய்ய தயாராக இருந்தால். – ஆசிரியர் கி.வீரமணி.
சேதப்படுத்தும் நோக்கில் பெரியார் சிலை மீது கை வைத்தால் கை துண்டாகும் – வைகோ.
பெரியார் சிலையை உடைக்க எச்.ராஜா அல்ல அவங்க முப்பாட்டன் வந்தாலும் முடியாது. – திருமா.

எச்.ராஜாக்கு பெரியார் சிலையை தொடும் தகுதி கூட இல்லை. அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யவேண்டும். – ஸ்டாலின்.
நாளை என்ன நாளை இன்றே முடிந்தால் தொட்டு பார்க்கட்டும். – சுப.வீ
எந்த இனத்திற்காக எச்.ராஜா பேசுகிறாரோ அந்த இனத்துக்குதான் இது ஆபத்தாய் முடியும். இதை அவர்கள்தான் ராஜாவுக்கு உணர்த்த வேண்டும். – கொளத்தூர் மணி.

“எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்; இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே”. – பாவேந்தர். பாரதிதாசன்.

Suresh Kathan

லெனின் சிலை திரிபுராவில் உடைக்கப்பட்டது போல பெரியார் சிலை தமிழ்நாட்டில் உடைக்கப்படும்.

– H. ராஜா, BJP.

நான் பொதுவாக facebook ல் கெட்ட வார்த்தைகள் பேசுவதில்லை. ஆனால், கெட்ட வார்த்தைகள் பேசும்போது தான் நாம் நாமாக இருக்கிறோம் என்று நம்புகிறவன்.

ஏலே… ராஜா…புடுங்கி… டம்மி பீசு… என் டிங்கி…என் டிஸ்க்கு… டாலாலி டொங்கு…
யே…பீக்காலி… டே…சன்னாடிக் கக்கு…யே மிண்டி… சாலி மூளி… சங்கி மங்கி… போடா… கொங்கிரிக் கிண்டி… சென்னெட்டி மொண்டி…
தொட்டுப் பார்றா…

( புள்ளிகள் உங்களுக்குத்தான்… பிடித்த கெட்ட வார்த்தைகளை இட்டு நிரப்பிக் கொள்ளவும்)

Keetru Nandhan

தன்னுடைய படத்தை செருப்பால் அடிக்க விரும்புகிறவர்கள் தொடர்பு கொண்டால், தனது சொந்த செலவில் படங்களை அனுப்புவதாக அறிவித்தவர் தந்தை பெரியார். எதிர்ப்புகளை கொள்கைப் பிரச்சாரத்திற்கான வழியாகப் பார்த்தவர் அவர். ஆனால், அப்படிப்பட்டவர் (நானறிந்த வரையில்) இரண்டு தருணங்களில் வன்முறைக்குத் தயாராகுமாறு தனது தொண்டர்களை அறைகூவி அழைத்திருக்கிறார்.

  1. இராஜாஜி குலக்கல்வி திட்டத்தை அறிவித்தபோது, “பெட்ரோலும் தீப்பந்தமும் தயாராக இருக்கட்டும். ஒவ்வொருவரும் கத்தி வைத்துக் கொள்ளுங்கள். நான் நாள் குறித்து அறிவிப்பேன். அக்கிரகாரம் எரிய வேண்டும்” என்று வெளிப்படையாகவே அறிக்கை விடுத்தார்.
  1. காமராஜரைக் கொல்ல முயற்சி நடந்தபோது, அவரைப் பாதுகாப்பதற்காக இயக்கத்தவர்கள் எல்லோரும் 6 அங்குல நீளத்திற்கு கத்தி வைத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தார்.

இரண்டு முறையும் எச்சரிக்கும் முகமாக இவ்வாறு அறிவித்தாரே தவிர, அதை செயல்படுத்தவில்லை. இந்த இரண்டு தருணங்களில் மட்டும் ஏன் இவ்வளவு கோபத்துக்கு ஆளானார் என்றால், இரண்டும் தமிழர்களின் கல்வியோடு தொடர்புடையவை.

  1. குலக்கல்வித் திட்டம் நம்மை மீண்டும் நிரந்தர அடிமையாக்கிவிடும்.
  2. குலக்கல்வியை ஒழித்து, ஊர்தோறும் பள்ளிகள் திறந்து நமது கல்விக் கண்ணைத் திறந்தவர் காமராஜர்.

கல்வியறிவு கிடைத்தால், நமது மக்கள் பகுத்தறிவு பெற்று, இன இழிவுக்கு எதிராகப் போராடத் தொடங்குவார்கள் என்பதில் பெரியார் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். அதனால்தான் அதற்கு ஊறு வரும்போது துடித்து எழுந்தார். இன்று, நீட் தேர்வினால் நமது பிள்ளைகளின் மருத்துவக் கல்வி வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. அதோடு, உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடும் இரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், நாம் அமைதியாக இருக்கிறோம்.

பெரியார் சிலைகளைக் காப்பதில் தமிழகம் துடித்து எழுந்தது உள்ளபடியே பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அடுத்தகட்டமாக, அவர் உயிரினும் மேலாக மதித்த கல்வி உரிமையைக் காப்பதிலும் இந்தத் துடிப்பு தொடர வேண்டும்.

Aazhi Senthil Nathan

லெனின், பெரியார், அம்பேத்கர் – மூணு பேருக்கும் சேர்த்து ஓரே இடத்தில் சிலை வைக்கணும்னு ஆசையா இருக்கு. அந்த இடத்துக்கு ‘திரிபுர மைதானம்” என்று கூட பெயர்வைக்கலாம்!

Villavan Ramadoss

எச்சையார் ஒன்றும் ஏமாளியோ, லூசுக்கூமுட்டையோ இல்லை. இன்று ஊடக விவாதமாக இருந்திருக்க வேண்டியது ரஜினி மேட்டர்தான். ஆனால் சுத்தமான அய்யர் வகையறா ராஜா அசால்ட்டாக அந்த வாய்ப்பை அய்யங்கார் மருமகன் ரஜினியிடம் இருந்து பறித்துவிட்டார்.

கூட்டணி வைத்து பாஜகவுக்கு ஓரிரு சீட் கிடைத்தாலும் அது நாடார் லாபிக்கு செல்லவே வாய்ப்பு அதிகம். ஆகவே ஓவராக பேசி அதற்கும் ஆப்பு வைத்தாயிற்று. இரண்டு ஜாதிகளின் ஆதிக்கத்துக்கு ஒரே ட்வீட்டில் சங்கு ஊதும் வல்லமை வேறு யாருக்காவது உண்டா?

இதாண்டா அய்யர் வம்ச ராஜதந்திரம்

Abdul Hameed Sheik Mohamed

சிலைகளை உடை – கவிதை

உடை
சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகள் தோன்றும்
சிலைகள் இடத்தில்
சிலைகள் மீளும்

சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகள் கண் திறக்கும்
சிலைகள் பேசும்

சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகளின் கைத்தடி சுழலும்
சிலைகளின் செருப்பு உயிர்த்தெழும்

சிலைகளை உடை
சிலைகளை உடைக்க
சிலைகளின் நிழல்கள் உடையாது
சிலைகளின் குரல்கள் உடையாது
சிலைகளின் சொற்கள் உடையாது
சிலைகளின் சரித்திரம் உடையாது

சிலைகளை உடை
சிலைகளைக் கண்டால்
உனக்கு துர்கனவுகள் வருகின்றன
உன் குற்றங்கள் உன் நினைவுக்கு வருகிறது
உன் அகங்காரத்தில் விழுந்த அடியை உன்னால் மறக்க முடியவில்லை
சிலைகள் உடைந்தால்
உன் பழம்பெருமைக்கு திரும்பிவிடலாம் என்று
யாரோ சொன்னதை நீ நம்பிவிட்டாய்
சிலைகள் உன்னைப்பார்த்து சிரிப்பது
உன் காதுகளில் விழவில்லை

சிலைகளை உடை
சிலைகள் என்பது சிலைகள் அல்ல
சிலைகள் என்பது கல்லால் ஆனதல்ல
சிலைகள் என்பது உலோகத்தால் ஆனதல்ல
சிலைகள் எமக்கு கும்பிட அல்ல
சிலைகள் எமக்கு களவாட அல்ல

சிலைகளின் அடியில் ஒன்று கூடுகிறோம்
சிலையில் எங்கள் ஆயுதங்களைத்தேய்த்து
கூர் தீட்டுகிறோம்
சிலைகளில் மோதி
எங்கள் பலத்தை சோதித்துக்கொள்கிறோம்
எங்களை வழிநடத்த ஒருவன் தேவைப்படுகிறது
அந்த சிலையை உடை
அந்தச் சிலைக்குள் இருப்பவன்
துயில் கலைந்து எழுந்துவருவான்
எங்கள் படையணியை
வழி நடத்திச் செல்வான்

சிலைகளை உடை
உடைத்துவிட்டு
நீ வீடு திரும்பும் வழியில்
நாங்கள் காத்திருக்கிறோம்
சிலைகள்போல

-மனுஷ்ய புத்திரன்

_______

தந்தை பெரியாரை அவமதித்த எச்.ராஜாவை அரசு உடனடியாக கைது செய்ய வேண்டும்! -மருத்துவர் இராமதாசு அறிக்கை

திரிபுரா மாநிலத்தில் பொதுவுடைமைக் கட்சியின் முன்னோடி லெனினின் சிலைகள் அகற்றப்படுவதை சுட்டிக்காட்டி, அதேபோல் தமிழகத்திலும் தந்தை பெரியாரின் சிலைகள் அகற்றப்பட வேண்டும் என்று முகநூல் பதிவு ஒன்றில் பாரதிய ஜனதாக் கட்சியின் தேசிய செயலாளர் எச்.இராஜா கூறியிருக்கிறார். மேலும், தந்தை பெரியாரை சாதிவெறியர் என்றும் கொச்சைப்படுத்தியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.

வினாச காலே விபரீத புத்தி என்பார்கள். அதற்கான சிறந்த உதாரணம் தான் எச்.ராஜாவின் முகநூல் பதிவு ஆகும். தமிழ்நாட்டில் கோட்சேக்களின் சிலைகளை திறக்க வேண்டும் என்று கூறியவர்களிடமிருந்து இதைத் தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது. எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில் உள்ள எச்.இராஜா போன்றவர்கள் எதையாவது பேசி அரசியல் விளம்பரம் மற்றும் பரபரப்பைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தந்தைப் பெரியாரைப் பற்றிக் அநாகரிகமான விமர்சனங்களை இராஜா முன்வைப்பது இது முதல்முறையல்ல. கடந்த காலங்களில் இதேபோல் பலமுறை பேசியும் அதற்காக அவர் மீது ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்காததன் விளைவாகவே இதுபோன்று பேசும் துணிச்சல் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. எச்.இராஜாவின் இத்தகைய அநாகரிகமான செயலை இனியும் அனுமதிக்கக் கூடாது; பெரியாரால் சுயமரியாதை பெற்றவர்கள் இனி அனுமதிக்க மாட்டார்கள்.

தமிழகத்தில் உரிமைகள் பறிக்கப்பட்டு, அடக்கி வைக்கப்பட்டிருந்த பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு சுயமரியாதையையும், சமூக நீதியையும் பெற்றுத் தந்தவர் தந்தை பெரியார். அவர் போராடி இருக்காவிட்டால் தமிழகத்தில் பறிக்கப்பட்ட சமூக நீதி பறிக்கப்பட்டதாகவே இருந்திருக்கும். இந்திய அரசியல் சட்டத்தில் முதலாவது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்காது. இதற்காக தந்தைப் பெரியாரை கோடிக்கணக்கான கரங்கள் வழிபடுகின்றன; கோடிக்கணக்கான வாய்கள் வாழ்த்துகின்றன. அத்தகைய பெரியாரின் சிலையை எச்.இராஜா போன்றவர்களால் நெருங்கக் கூட முடியாது என்பதே உண்மை.

தந்தைப் பெரியார் சுயமரியாதையின் அடையாளம், சமூக நீதியின் அடையாளம், பாட்டாளி மக்கள் கட்சியின் அடையாளம். இத்தகைய வலிமை மிக்க அடையாளத்தை அழிக்க கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சியும் வெற்றி பெறவில்லை. இனியும் எந்தக் கொம்பனாலும் தந்தை பெரியாரின் சிலையை அகற்றுவதற்கு அல்ல…. அசைக்கக்கூட முடியாது. அதை பாட்டாளி மக்கள் கட்சியும், அதன் தொண்டர்களும் அனுமதிக்க மாட்டார்கள். இதை அறைகூவலாகவே விடுக்கின்றனர்.

தந்தை பெரியார் என்ற ஆலமரத்தின் விழுதுகளின் ஒன்று என்று கூறிக்கொள்ளும் அதிமுக ஆட்சி தமிழகத்தில் நடக்கிறது. பெரியாரின் வழி வந்தவர்களின் ஆட்சியில் அவரது சிலையை அகற்றுவோம் என்று கூற எச்.இராஜா போன்றவர்களுக்கு எங்கிருந்து துணிச்சல் வந்தது என்பது தான் மிகப்பெரிய வினா. அதிமுக இடம் கொடுத்ததால் எச். இராஜா போன்றவர்கள் ஆட்டம் போடுகின்றனர். தந்தைப் பெரியாரின் சிலையை அகற்றப்போவதாகக் கூறிய எச்.இராஜா அதற்காக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். தமிழகத்தில் நல்லிணக்கத்தையும், சட்டம் & ஒழுங்கையும் குலைக்கும் வகையில் தொடர்ந்து பேசி வரும் எச்.இராஜாவை தமிழக காவல்துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.

Parimala Rajan

பெரியார் சிலை மீது எவன் கை வைத்தாலும் எங்கள் குறி சங்கர மடத்தின் மீது தான் பாயும் ! ஜாக்கிரதை !

Villavan Ramadoss

எதுக்கு சொறிநாயோட சண்டைன்னு சிலர் ஒதுங்கிப் போகலாம்.
சொறிநாயோடு எப்படி சண்டை போடுவது என சிலர் பயந்து சும்மாயிருக்கலாம்.
சொறிநாய்தானே என்ன பண்ணிடும்னு சிலர் அலட்சியமாக இருக்கலாம்.
போயும் போயும் சொறிநாயோட சண்டை போடனுமா என கூச்சப்பட்டு சிலர் அமைதியாய் இருக்கலாம்.

எதிர்வினையும் உணர்வும் வேறாக இருப்பினும் எங்கள் எல்லோருக்கும் இந்துத்துவ தீவிரவாதிகள் அனைவருமே சொறிநாய்கள்தான். அந்த சொறிநாய்களை கல்லெடுத்து அடிக்கும் காலம் வரும்போது இங்கே எல்லோரும் அதனை ஆதரிப்பார்கள். சுபம்.

Umamaheshvaran Panneerselvam

பெரியார் சிலையை உடைப்பேன் என்று சொன்னதும் கொதித்தெழுந்தது பாதிக்கும் மேல் ஆத்திகர்கள்.
பெரியார் சிலையை உடைத்த கயவனை புரட்டி எடுத்ததில் பாதிக்கும்மேல் ஆத்திகர்கள்..
பெரியாரைப் போற்ற நாத்திகனாய் இருக்கவேண்டும் என்று அவசியம் இல்லை.
சமூகநீதிக்கு நன்றியுள்ளவனாய் இருந்தாலே போதும்…

இதெல்லாம் சிலையை பிடித்துக்கொண்டு சித்தாந்தம் என்றால் “கூறு எவ்வளவு ரூபாய் ?” என்று கேட்கும் அற்பர்களுக்கு புரியாது.
பெரியார் என்பவனை ஒற்றைக் கிழவனாக அவர்கள் பார்க்கிறார்கள். பெரியார் இங்கே ஏற்படுத்தியிருப்பது Nuclear Fission. சமூகநீதியின் Chain Reaction.

ஹோமகுண்ட புகையால் Radiation குறையும் என்று நம்பும் ஈத்தரைகளுக்கு ஈ.வெ.ராவை எல்லாம் புரிந்துகொள்ள முடியாது.
தமிழ்நாட்டில் சமூகநீதி தான் ஆன்மிகம்.
அதை விஞ்சிய வழிபாடு வேறில்லை.

தமிழகத்தின் அரசியல் என்பது சமூகநீதியை சுற்றி தான்.
ஆன்மிக அரசியல் என்றாலும் அது இது தான்.

Anbe Selva

பலவருடம் முன்னால் சென்னை உயர்நீதி மன்றத்தில் ராமகிருஷ்ணா மெசின் நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்தது தங்கள் நடத்தும் பள்ளியின் முன்னால் இருக்கும் பெரியார்சிலையை அகற்ற உத்தரவிடவேண்டும் என நீதிமன்றத்தில் கோரியது வழக்கானது நீதியரசர் சந்துரு முன்னால் விசாரிக்கபட்டது அப்போது நீதியரசர் சொன்ன வரிகள் இவை;

“ஏன் அவரின் உயிரில்லாசிலை உங்களை பதட்டபடவைக்கிறது அவர் வர்ணாசிரம முறைகளை அடித்து நொறுக்கியதை குழந்தைகளுக்கு கற்பியுங்கள் சாதிமதங்கள் இந்த நாட்டின் பீடித்தநோய் என அவரை அடையாளபடுத்தி குழந்தைகளுக்கு போதியுங்கள் அவர் அகற்றபடவேண்டியவரல்ல நினைவு கூற படவேண்டியவர் என வழக்கை தள்ளுபடி செய்தார் ”அம்பேத்கார் ஓளியில் என் தீர்ப்புகள் புத்தகத்தில் நீதியரசர் சந்துரு

முத்துராமலிங்க தேவரை பின்பற்றுவதாக சொல்லும் எச்ச ராஜா, முத்துராமலிங்க தேவரின் சாதி மக்களுக்கும் உரிமையான மருத்துவ படிப்பில் 27% ஓபிசி இடஒதுக்கீடு நேற்று நீக்கப்பட்டதற்கு எதிராக பேசமாட்டான், மாறாக அவர்களுக்கு அந்த உரிமையை கிடைக்காமல் தடுப்பதையே காலம்காலமாக செய்துவரும் கும்பலாகவும் இருக்கிறான்.

ஆனால் பெரியாரோ, முத்துராமலிங்க தேவரை கடுமையாக விமர்ச்சித்தவராக இருந்தாலும், தேவர் சாதி உள்ளிட்ட BC, MBC, SC, ST மக்களின் கல்வி & வேலை உரிமைக்கும் சாகிற வரைக்கும் போராடியவராய் இருக்கிறார். பார்ப்பனிய நரித்தனம் என்பது நயவஞ்சகமானது என்பதை விளங்கி கொள்ளும் இடம் இதுதான்.

தனது சனாதன தர்மத்துக்கு ஆபத்து என்றவுடன் தாங்கள் மதிக்கும் முத்துராமலிங்க தேவர் சாதியை சேர்ந்த தாயை தேவடியாள் என்று பொதுவில் திட்டியவன், வைரமுத்துவை கீழ்த்தரமாக மிரட்டியவர்கள் இப்போது பெரியார் விஷயத்தில் அரசியல் ரீதியாக கார்னர் செய்யப்பட்டவுடன் பெரியாருக்கு எதிராக தேவர் சாதி மக்களை திரும்புகிறான்.

எவ்வளவு தந்திரமான எங்களையே ஹாண்டில் செய்துட்டாரே என்றுதான் பெரியார் மீது அந்த கும்பலுக்கு வரலாற்று வன்மம்.. அந்த தந்திரத்தை நாமும் கற்றுக் கொள்வோம்..

Villavan Ramadoss

அந்த போஸ்ட் என் அட்மினுக்குத்தான் பிறந்தது. இனிஷியல் மட்டும்தான் என்னுது. – எச்.ராஜா.

அன்சாரி முஹம்மது

காவிகள் ஏதோவொரு மறைமுக சதித்திட்டத்தின் பின்னணியில்தான் விளையாடி பார்க்க நினைக்கிறார்கள். வினையை அறுவடை செய்யப்போகிறார்கள். அவர்களுக்கு மீண்டும் நினைவூட்டுகிறேன். இது குஜராத் அல்ல. இது திமுக ஆட்சியாக இருந்திருந்தால் இவன் இதுவரை குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளப்பட்டிருப்பான். ஆனால், நடப்பது காவி அடிமைகளின் ஆட்சி என்பதுதான் இந்த மண்ணின் சாபக்கேடு.

Vikkranth Uyir Nanban

யாருக்கும் தெரியாம நைட்ல சிலைகிட்ட போய் வீரத்தை காட்டுனா அந்த கல் எப்படி தடுக்கும்.. வைகோ காலைலயே சரியா சொன்னாரு யாருக்கும் தெரியாம நைட்லதான் வருவானுங்கன்னு..

அட முட்டா காவி கபோதீஸ்… இந்த சிலையை இந்த நாள்ல உடைக்க போறேன்னு சொல்லிட்டு வா.. நாங்களும் வர்றோம் பாத்துக்லாம்ன்னுதான் சொன்னோம்.. இப்போ என்னடா பொதுமக்கள்ட்ட மாட்டி அடிவாங்கியிருக்கீங்க.. இவனுங்களுக்கு கேம் ரூல்சே தெரியல… விட்டா வீட்டுல பெரியார் சிலை செஞ்சு வீட்லயே ஒடைச்சிப்பானுங்க போல..

Palani Shahan

இந்த நொடி வரை வைரமுத்து மன்னிப்புக் கேட்கவில்லை. ஆனால் ஹெச்.ராஜா வருத்தம் தெரிவிக்கவேண்டிய சூழல்… திமிறி எழுந்த கிழவனே ராஜாவின் திமிரை அடக்கினார். இப்போது தெரிகிறதா தமிழிசை, இது பெரியாழ்வார் பூமியா, பெரியார் பூமியா என்று?

பதிவை நீக்கியுள்ளார் எச்.ராஜா. நேற்று முன்தினம் வாக்கெடுப்பு ஒன்றை நடத்தி மூக்கறுபட்ட எச்.ராஜா, அந்தப் பதிவை முகநூலில் இருந்து நீக்கினார். இன்று பெரியார் பற்றிய தனது பதிவையும் நீக்கியுள்ளார். அதுவும் சில மணி நேரத்திற்குள்.

ஒரு முகநூல் பதிவையே தாக்குப் பிடிக்க இயலாதவரெல்லாம் மத்தியில் ஆளும் கட்சியின் தேசியச் செயலாளராக இருக்கிறார். இவரையெல்லாம் நம்பி தேசபக்தர்கள் கொஞ்ச நேரத்தில் பொங்கித் தீர்த்துவிட்டார்கள். ஆனாலும் கலங்கவே மாட்டார்கள். ஏனென்றால் ‘துப்பினால் துடைத்துக்கொள்வோம்’ என்கிற ரகம்தானே பா.ஜ.க.வினர்.

Abdul Hameed Sheik Mohame

பிக் ப்ரேக்கிங் நியூஸ்:

தேசிய செயலாளர் பொறுப்பிலிருந்து எச்.ராஜா நீக்கப்பட்டு அந்தப் பொறுப்பில் எச்.ராஜாவின் அட்மின் நியமிக்கப்பட்டார். அமித் ஷா உத்தரவு

ஸ்டாலின் பெலிக்ஸ்

H Raja ஷர்மா ஜி,

லெனினுக்கும் இந்தியாவுக்கும் என்ன சம்மந்தம் என்று கேட்கும் நீங்கள், ‘ரஷ்ய தொழில் நுட்பத்துடன் கூடிய அணுவுலை நமக்கு தேவையா?’ என்று ஏன் கேட்கவில்லை? நாக்பூரில் இருக்கும் RSS விஞ்ஞானிகளை வைத்து நாம் ஏன் ஒரு அணுவுலை அயோத்தியில் உருவாக்க கூடாது!!!

AD Bala

முதல் உலகப் போர் நடந்துகொண்டிருந்தது. இந்த நேரத்தில் ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னருக்கு எதிராக 1917ம் ஆண்டு பிப்ரவரியில் புரட்சி வெடித்தது. முடியரசை வீழ்த்திய கையோடு புரட்சித் தீயை அணைத்துவிடவேண்டும் என்று முதலாளித்துவம் விரும்பியது.

ஆனால், போர் வேண்டாம், சமாதானம் வேண்டும், உழைக்கும் மக்களுக்கு அரசிலும், தொழிற்சாலைகளிலும் உரிமை வேண்டும் என்ற முழக்கத்தோடு புரட்சியின் அடுத்த கட்டத்தை திட்டமிட்டு நடத்தியவர் லெனின். அதன் மூலம் வெற்றிகரமாக உலகின் முதல் உழைக்கும் மக்களின் அரசைப் படைத்தது மட்டுமல்ல, உலகப் போரின் தீ மேலும் பரவாமல் தடுக்க உதவியவர் அவர்.

கம்யூனிசம் பரவும் என்ற அச்சமே உலகில் மக்கள் நல அரசு என்றக் கருத்தாக்கம் பரவவும், தொழிலாளர் உரிமைகளை மதிக்கவேண்டிய நிர்ப்பந்தம் உருவாகவும் காரணமானது. முதல் உலகப் போரின் போது ஜாருக்கு எதிராக நடந்த மக்கள் புரட்சி கடைசியில் கம்யூனிசப் புரட்சியாக மலர்ந்தது ஆளும் வர்க்கங்களுக்குப் பாடமானது. கம்யூனிசம் உலகம் முழுவதும் பரவும் என்ற அச்சத்தை லெனின் உருவாக்கிய ரஷ்யா தந்துகொண்டே இருந்தது.

இரண்டாம் உலகப் போர் முடிந்த நேரம். மேற்கத்திய நாடுகளின் காலனிகளில் எழுந்த நெருக்கடிகளும் அதிருப்தியும் புரட்சிக்கு வித்திட்டு இருந்தால் என்ன ஆகியிருக்கும். அப்புறம் ரஷ்யாவில் நடந்த கதைதான். அது காலனி ஆதிக்க எதிர்ப்போடு நின்றிருக்காது. கம்யூனிசப் புரட்சிகளாகி இருக்கும். இந்த அச்சமே, ஆண்ட நாடுகள் தங்கள் அடிமை நாடுகளில் சாதகமான அரசமைப்பை விட்டுவிட்டு, வெளியேறக் காரணமானது. இந்தியாவும் அப்படியே விடுதலை பெற்றது.

விடுதலை பெற்ற முந்தைய காலனி நாடுகளுக்கு ராணுவத் தொழில் நுட்பங்களையும், அறிவியல், வானியல் நுட்பங்களையும் வழங்கி ஒத்துழைத்தது லெனின் உருவாக்கிய சோவியத் யூனியன்.

முதல் முதலில் இந்தியர் ஒருவரை – ராகேஷ் ஷர்மா – விண்வெளிக்கு இட்டுச் சென்றது ரஷ்ய விண்கலம் சோயுஸ்தான். இன்று ஓங்கி நிற்கும் இந்தியாவின் விண்வெளித் திட்டங்களுக்கும், ராணுவ ஏவுகணைத் திட்டங்ககளும் கம்யூனிச ரஷ்யாவின் கைகளைப் பிடித்துக் கொண்டு குழந்தையாக நடை பழகியவைதான்.

இப்படி ஏழை நாடுகளின் அறிவியல் வளர்ச்சியில் உறுதுணையாக ரஷ்யா நிற்கக் காரணம் அது கம்யூனிச ரஷ்யாவாக இருந்ததுதான்.

நாம் பெற்றுள்ள குறைந்தபட்ச அரசியல் உரிமைகளுக்கும், பணியிடத்தில் நாம் அனுபவிக்கும் குறைந்தபட்ச தொழிலாளர் உரிமைகளுக்கும், மக்கள் நல அரசு எனும் கருத்தாக்கத்தின் சுகத்துக்கும் பின்னால் லெனின் என்னும் மனிதரின் வியர்வை கொஞ்சம் இருக்கிறது.

அவர் ரஷ்யத் தலைவர் அல்லர். உலகத் தலைவர்.

Parimala Rajan

காவிகளே,

நீங்கள் கை வைப்பது எங்கள் தலைவர்களின் சிலைகள் மீதல்ல, இந்திய ஒன்றியத்தின் இறுக்கத்தின் மீது.

“உடைந்து போகும்”

Villavan Ramadoss

இதுவரைக்கும் கலவர ரிஸ்க்கைதான் சூத்திரவாகிட்ட தள்ளிவிட்டேள்,…இப்போ கருத்தோட ரிஸ்க்கையும் சூத்திரவாகிட்ட தள்ளிவிடறேள்… அட்மின் நீக்கம் – எச்சையார்.

அழகப்பன் அப்துல் கரீம்

அழுத்தமான பதிவு!

”எச்.ராஜா எந்த இனத்திற்காக பேசுகிறாரோ அந்த இனத்திற்கே ஆபத்தாக வந்துவிடலாம் என்பதால் அந்த இனத்தை சார்ந்தவர்களை கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து எச்.ராஜாவுக்கு அறிவுரை சொல்லுங்கள், அமைதியாக இருக்கச்சொல்லுங்கள். அப்போதுதான் நீங்கள் நிம்மதியாக வாழ்வதற்கு வாய்ப்பாக இருக்கும் என்பதை அந்த இன மக்களுக்கு நான் சொல்லிக்கொள்கிறேன்.”

– தோழர் கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

Dhalapathi Raj

ஈவெரா சிலைகளை அகற்றுவோம்!
-எச்.ராஜா ட்விட்டர் பதிவு.

‘அவனுக்கு என்ன நாலு செக்யூரிட்டியோட சுத்திண்டு இருக்கன். நம்மவா நாளைக்கு ரோட்டுல நடமாடுறதா வேணாமா?’
-பார்ப்பனர்கள் பீதி!

எச்.ராஜா ட்விட்டர் பதிவு உடனடியாக நீக்கம்!
-தற்போதைய செய்தி.

பாப்பானுக்கு முன்புத்தி கிடையாது!
-பெரியார்.

Arunachalam Elagnairu

லெனின் புரட்சி செய்தார்
சிலை வைத்தார்கள்..

அம்பேத்கர் ஒடுக்கப்பட்டோரின் குரலாய் ஒலித்தார்.
சிலை வைத்தார்கள்.

பெரியார் மூடத்தனத்தை எதிர்த்தார்
சிலை வைத்தார்கள்.

காந்தி விடுதலைப்போரில் முன்நின்றார்
சிலை வைத்தார்கள்

அண்ணா திராவிட நாடு என்றார்
சிலை வைத்தார்கள்.

ஒங்க கட்சியில் இப்பிடி ஒருத்தர் இருந்தா சொல்லுங்க..சிலை வைச்சுடலாம். மசூதிய இடிச்சவன் .. பாதிரியார எரிச்சவன்.. தேசத்த காட்டிக்குடுத்தவன், பிரிட்டிஷ்காரன்கிட்ட மன்னிப்பு கேட்டவன் இப்பிடியான ஆளா இருந்தா எப்பிடிப்பா சிலை வைப்பாங்க..

போ..போயி..பெரியார் சிலையாண்ட பத்து தோப்புக்கரணம் போட்டுட்டு போ..

Syed Abdul Kadhar

நபியை கார்ட்டூன் வரைந்து இழிவு படுத்திய போது, கிளர்ந்தெழுந்த தமுமுகவும் தவ்ஹீது ஜமாதும், பெரியாரை இழிவு படுத்தும் போதும் கிளர்ந்தெழ வேண்டும் என்கிற நப்பாசை எழுகிறது. அது தேவையும் கூட.

சிறுபான்மையினர் மீதான ஆர்.எஸ்.எஸ் வன்முறைகளுக்கெல்லாம் ஒரு தடுப்பணையாக பெரியார் இருக்கிறார். அந்த தடுப்பணை உடைக்கப்படும் போது, ஆபத்து யாருக்கு என்று சொல்லித் தெரிய வேண்டுமா?

Vijayasankar Ramachandran

திரிபுராவில் லெனின் சிலையை நான் ஊரில் இல்லாதபோது அட்மின்கள் தகர்த்துவிட்டனர். அதற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.

Vijayasankar Ramachandran

அயோத்தியில் ராமர் கோவில் பிரச்சினையைத் தீர்க்காவிட்டால் இந்தியாவும் சிரியா மாதிரி ஆகிவிடும் என்று பகிரங்கமாக மதவாத அரசியல் பேசியிருக்கிறார் ஆன்மீகம் பேசும் சிரி சிரி ரவிசங்கர். இரு மதக் குழுக்களிடையே பதட்டம் ஏற்படுத்தும் இந்தக் கருத்து இந்திய தண்டனையியியல் சட்டத்தின் 153A யின் கீழ் தண்டனைக்குரியது.

Section 153A:- Promoting enmity between different groups on ground of religion, race, place of birth, residence, language, etc., and doing acts prejudicial to maintenance of harmony

பாபர் மசூதி இடிப்புக்குப் பின் சண்டே அப்சர்வர் என்கிற பத்திரிக்கைக்கு இந்த சுவாமி அளித்த பேட்டியில் தெய்வீகம் என்றால் என்ன என்று கேட்கப்பட்டது. “தெய்வீகம் எல்லா இடத்திலும் இருக்கிறது. உங்களுக்கும் எனக்கும் உள்ளேயும் இருக்கிறது” என்றார்.
இதை அடுத்து அயோத்திப் பிரச்சினையைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. சற்றும் தாமதிக்காமல், ‘ராமர் பிறந்த அந்த இடத்தை நாம் எப்படி அவர்களுக்கு விட்டுத்தர முடியும்” என்று பதிலளித்தார். தெய்வீகம எல்லா இடத்திலும் இருக்கிறதென்றால், அயோத்திதான் புண்ணிய பூமி என்று எப்படிச் சொல்லலாம் என்று நிருபர் கேட்கவில்லை.
இது வாழும் கலையா? வம்பு வளர்க்கும் கலையா?

 

விழுப்புரத்தில் பெரியார் கையால் எச்ச ராஜாவுக்கு செருப்படி ! படங்கள்

0

விழுப்புரம் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பாக, திரிபுராவில் ஆர்.எஸ்.எஸ். பாஜக கிரிமினல் கும்பல் லெனின் சிலையை இடித்ததைக் கண்டித்தும், பாஜகவின் தேசியச் செயலர் எச்.ராஜா லெனின் சிலையைப் போல் பெரியார் சிலையும் வீழ்த்தப்படும் எனத் திமிரெடுத்துக் கூறியதைக் கண்டித்தும், எச்.ராஜாவை செருப்பல் அடிக்கும் போராட்டம் நடைபெற்றது. எச். ராஜா முகமூடி  அணிந்த நபரை பெரியார் முகமூடி அணிந்தவர்கள் கயிறால் இழுத்துச் சென்று செருப்பால் அடித்தனர்.

மக்கள் அதிகாரம்
விழுப்புரம்

******************

திரிபுராவில் லெனின்  சிலை உடைப்பை கண்டித்தும், முகநூலில் லெனின் சிலை போல பெரியார் சிலையும் உடைக்கப்படும் என பதிவிட்டிருந்த எச்.ராஜாவை கண்டித்தும் விருதை BSNL அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் வரை தோழர் மணியரசன் தலைமையில் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி தோழர்கள் மற்றும் மாணவர்கள் பேரணியாக சென்றனர்.

விருதை பேருந்து நிலையம் நுழைவு வாயில் சென்றவுடன் பேரணியானது முற்றுகை ஆர்ப்பாட்டமாக நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 20- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
விருத்தாசலம்
தொடர்புக்கு : 9788808110

 

மகஇக அதிரடி – சென்னை பாஜக அலுவலகம் முற்றுகை ! கோல்வால்கருக்கு செருப்படி !

1

திரிபுராவில் பாட்டாளி வர்க்க ஆசான் தோழர் லெனின் சிலையை உடைத்து வெறியாட்டம் போட்டது பாஜக கும்பல். அதைத்தொடர்ந்து பாஜக -வின் எச்சை ராஜா தமிழகத்திலும் பெரியாரின் சிலை அகற்றப்படும் என பார்ப்பனக் கொழுப்பு வழிந்தோட பேசியுள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அமைப்புகளும் தங்களது கண்டனத்தை பதிவு செய்யும் வகையில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக ஆர்.எஸ்.எஸ். -ன் ‘குருஜி’ என அழைக்கப்படும் அதன் இரண்டாவது அகில இந்தியத் தலைவர் “கோல்வால்கர்” படத்தை எரித்தும் செருப்பால் அடித்தும் நேற்றே மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் சென்னையில் தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து இன்று (07.03.2018) பாஜக -வின் அலுவலகத்தை முற்றுகையிட்டு புரட்சிகர அமைப்புகள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். இந்த நிகழ்வினை புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் தலைவர் தோழர் முகுந்தன் தலைமையேற்று நடத்தினார்.

இப்போராட்டத்தில் மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, பெண்கள் விடுதலை முன்னணி ஆகிய அமைப்புத் தோழர்கள், மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் என நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

ஆரம்பத்தில் உங்களது கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் போராட்டத்திற்கு இடம் ஒதுக்கித் தருகிறோம் என நைச்சியமாகப் பேசியது போலீசு. ஒருபக்கம் இவ்வாறு பேசிக்கொண்டே ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகிக் கொண்டிருந்தவர்களை வலுக்கட்டாயமாக கைது செய்யச் சொல்லி  உத்தரவிட்டார் காவல்துறை அதிகாரி AC செல்வம்.

அதைத் தொடர்ந்து அங்கேயே முழக்கமிட்டு தங்களது போராட்டத்தை தொடங்கினர் தோழர்கள். போராட்டத்தில் பங்கு பெற்றவர்களை பெண்கள் கைக்குழந்தைகள் என்றும் பாராது குண்டுக்கட்டாக தூக்கிவீசியது . போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் வலுக்கட்டாயமாக வாகனங்களில் ஏற்றி அப்புறப்படுத்தியது போலீசு.

ஆன போதும் கோல்வால்கர் மற்றும் எச்ச ராஜாவின் படங்களை எரித்தும், செருப்பால் அடித்தும் இது பெரியார் மண் என்று முழங்கினர் தோழர்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்ற தோழர் முகுந்தன் பத்திரிக்கையாளர்களிடம் கூறுகையில்: “தோழர் லெனின் பற்றியும் பெரியார் பற்றியும் பேச எச்.ராஜா -விற்கு எந்த அருகதையும் கிடையாது. லெனின் இந்த நாட்டு தலைவரா? என அவர் கேட்டுள்ளார் உலகப் பாட்டாளிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் தலைவர் தோழர் லெனின். அவரது சிலையை உடைத்து அதைக் கொண்டாடுவதும், தமிழக மக்களின் சுயமரியாதைக்காகவும் பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் சிலையை அப்புறப்படுத்த வேண்டும் என சொல்வதும்ஆர்.எஸ்.எஸ். கும்பலின் பாசிச மனோபாவத்தைத் தான் காட்டுகிறது. இதனை மக்கள் ஒருபோதும் ஏற்க முடியாது” எனக் கூறினார்.

தற்போது எச்.ராஜா முகநூலில் தவறாக கருத்து வெளியிடப்பட்டுள்ளது. நான் அவ்வாறு சொல்லவில்லை எனக் கூறிய பின்னர் ஏன் போராட வேண்டும் என ஒரு ‘பத்திரிக்கையாளர்’ கேட்டதற்கு “பாஜக கும்பலின் வேலையே இதுதான் ஒருவர் கொழுப்பெடுத்து பேசுவார் மற்றொருவர் அது அவருடைய கருத்து எனக் கூறுவார், இதையே இவர்கள் நாடுமுழுவதும் செய்து வருபவர்கள்; கூசாமல் பொய் பேசுபவர்கள். ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து தனது கருத்திற்கு வருத்தம் தெரிவித்த பின்னரும் கூட ஆண்டாள் சன்னிதியில் வந்து மன்னிப்பு கேட்கவேண்டும் என திமிறாக கூறியது பார்ப்பனக் கும்பல். ஆக வைரமுத்துவிற்கு ஒரு நீதி பார்ப்பனக் கொழுப்பெடுத்த எச்.ராஜாவுக்கு ஒரு நீதியா?” என கேட்டார்.

போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் தொலைக்காட்சிகளில் கூறுகையில் இது பெரியாரின் மண் என்பதை நிரூபிப்போம் ! என்றும் அகற்றப்பட்ட தோழர் லெனின் சிலையை அங்கு மீண்டும் நிறுவ வேண்டும் என்றும் கூறினர்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி,
மக்கள் கலை இலக்கியக் கழகம்,
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி,
பெண்கள் விடுதலை முன்னணி.
தமிழ்நாடு.

 

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம் ! பென்னாகரம் – சென்னை நிகழ்வுகள் !

0

மார்ச் 8 உழைக்கும் மகளிர் தினம்!
பொதுக்கூட்டம்

நாள்: 8-3-2018 வியாழன் மாலை 5 மணி
இடம்: டெம்போ ஸ்டேண்டு அருகில், பென்னாகரம்.
தலைமை : தோழர் பழனியம்மாள், பெண்கள் விடுதலை முன்னணி, பென்னாகரம்.

பெண்கள் அடிமையாய் இருந்ததெல்லாம் அந்தக் காலம். பெண்கள் படிக்கிறார்கள், வேலைக்குப் போகிறார்கள், பி.வி.சிந்து, மிதாலிராஜ், இந்திரா நூயி போன்றவர்களைக் காட்டி பெண்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது என்கிறார்கள். ஆனால் இதே நாட்டில் தான் பெண் குழந்தை என்ற காரணத்திற்காக கருக்கலைப்பு நடக்கிறது. நம் பக்கத்து வீட்டுப் பெண் குழந்தைகள் தொடங்கி, ஐ.டி துறை, காவல்துறையில் பணியாற்றக்கூடிய பெண்கள் என பெண்கள் மீதான பாலியல் தாக்குதல்கள் அன்றாட நிகழ்வாகிவிட்டன. சாதியரீதியாகவும், மத ரீதியாகவும் பெண்கள் மீதான வன்கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

இதைவிடக் கொடுமை, பெற்ற தாயே தன் பெண்குழந்தையை வீட்டில் பூட்டி வைத்துதான் வெளியே செல்ல வேண்டும் என்ற நிலை இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு என்னாகுமோ? என்று வயிற்றில் நெருப்புக் கட்டிக் கொண்டு பயந்து பயந்து வாழ்கிறோம். இதுவா பெண் சுதந்திரம்?

ஒவ்வொரு நாளும் ஏறுகிற விலைவாசியும் நம் கழுத்தைதானே அறுக்கிறது. தண்ணிரில்லை, விவசாயம் இல்லை, அதனால் விவசாய வேலையும் இல்லை. எனவே பிழைப்பிற்காக திருப்பூருக்கும் பெங்களுரூக்கும் வேலைக்குச் செல்கிறோம். கொளுத்தும் வெயிலில் கட்டிட வேலைசெய்தாலும், கால்கடுக்க பகலில் வேலை செய்தாலும் நமது உழைப்புக்கு நியாயமான கூலிதான் கிடைக்கிறதா? இல்லையே! 10 மணி நேரம் வேலை செய்தாலும் நமக்கு கண்ணீரும், கடன்தானே மிச்சமாகிறது.

இந்தக் கூலியையும், டாஸ்மாக், பேருந்துக் கட்டண உயர்வு என்ற பெயரில் வழிப்பறி செய்கிறது எடப்பாடி அரசு. டாஸ்மாக்கை மூடு என்று போராடினால் போலீசைக் கொண்டு ஒடுக்குகிறது. இதை எல்லாம் மூடி மறைப்பதற்காகத்தான், நாள்தோறும் அரங்கேறும் பெண்கள் மீதான பாலியல் வன்முறைகளையோ, விலைவாசி உயர்வையோ, டாஸ்மாக்கையோ மூட வக்கில்லாத இவர்கள் நமக்கு 33 % இட ஒதுக்கீடு தருகிறோம் என்கிறார்கள்.

பெண் என்பவள் ஆணின் அடிமை, ஆண்களுக்கான போகப் பொருள் என்பதுதானே இந்த சமூகத்தின் பொதுப்புத்தியாக இருக்கிறது. அவ்வளவு ஏன்? ஆனானப்பட்ட சிவபெருமானே பெண் என்பவள் ஆணுக்கு அடிமை என்றுதானே கூறுகிறார் திருவிளையாடல் புராணத்தில். இதைத்தானே ராஜா ராணி, செம்பருத்தி போன்ற சீரியல்களும், அழகுப்பொருட்கள் விளம்பரங்களும் அன்றாடம் நம் மூளைக்குள் திணிக்கின்றன.

பெண்களைப் பற்றி இப்படிப்பட்ட பொதுப்புத்தியுள்ள சமூகத்தை மாற்றாமல் வெறும் 33% சதவீதத்தால் மட்டும் நமக்கு உரிமைகள் கிடைத்துவிடும் என்று கூறி நம் காதில் பூ சுற்றுகிறார்கள். இந்த ஆணாதிக்க சமூகத்தை மாற்றுவதன் மூலம்தான் நம்முடைய அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும். இதெல்லாம் சாத்தியமா? என்று நாம் நினைக்கலாம்.

ஏன் முடியாது? பெண்களுக்கு ஜனநாயகம் வழங்கிய ஐரோப்பா போன்ற நாடுகளிலும், ரஷ்யாவிலும், சீனாவிலும் நம்மைப் போன்ற பெண்கள் போராடிதான், ஆண்-பெண் பேதமற்ற, அரசியல் உரிமை, பொருளாதார உரிமைகள் கொண்ட தங்களுக்கான ஒரு புதிய சமூகத்தைப் படைத்தார்கள். நம் நாட்டிலும் தேவதாசி முறை ஒழிப்பு, பெண்கல்வி, சொத்துரிமை என அனைத்தும் பெரியார் -அம்பேத்கர் தலைமையில் பெண்கள் போராடிதானே கிடைத்தன. மூடப்பட்ட டாஸ்மாக்குகளும் பெண்களின் கடப்பாரையால் தானே மூடப்பட்டன.

இந்த சட்டத்தாலோ, போலீசாலோ இன்று நாம் அனுபவிக்கிற பாலியல் பிரச்சினை, விலைவாசி உயர்வு, டாஸ்மாக் பிரச்சினை, ஆணாதிக்க, சாதி மத ஒடுக்குமுறை என ஏதாவது தீர்ந்திருக்கிறதா? இல்லை என்பதுதானே கடந்தகால, நிகழ்கால உண்மையாக இருக்கிறது. எனவே நம்முடைய பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியது ஒரு சமூக மாற்றமே என்பதை உணர்வோம். அதற்காக இந்த மகளிர் தினத்தில் பெண்களாகிய நாம் அமைப்பாக ஒன்றிணைவோம்! வாருங்கள்.

டாஸ்மாக், விலைவாசி உயர்வா, பாலியல் பிரச்சனையா ஒரே தீர்வு சமுக மாற்றமே!

சமூக விடுதலையை முன்னெடுப்போம்! பெண் விடுதலையை சாதிப்போம்!

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

இவண்
பெண்கள் விடுதலை முன்னணி

பென்னாகரம் வட்டம்.

***

உழைக்கும் மகளிர் தினம் – மார்ச் 8

07-03-2018 மாலை 5 மணி
பார்கவுன்சில் கட்டிடம்
சென்னை உயர்நீதிமன்ற வளாகம், பாரிமுனை

மக்கள் உரிமை பாதுகாப்பு மையம்
சென்னை – 9094666320

 

லெனின் சிலை உடைத்த மோடி அரசுக்கு எச்சரிக்கை ! சென்னையில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் பட எரிப்பு ! படங்கள்

1

திரிபுராவில் லெனின் சிலை பாஜக கிரிமினல்களால் உடைக்கப்பட்டதைக் கண்டித்தும், தமிழகத்தில் பெரியார் சிலைகளை இடிப்போம் என எச்.ராஜா கூறியதைக் கண்டித்தும் சென்னை நேரு பார்க்கில் இன்று மாலை 5.30 மணியளவில் மக்கள் கலை இலக்கியக் கழகம் போராட்டம் நடத்தியது. இதில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் கோல்வால்கரின் படம் எரிக்கப்பட்டது. ம.க.இ.க. சென்னைக் கிளையின் செயலாளர் தோழர் வெங்கடேசன் இப்போராட்டத்திற்கு தலைமையேற்று நடத்தினார்.

போராட்டம் அறிவிக்கப்பட்ட உடனேயே மாலை 5.30 மணிக்கு நேரு பார்க் அருகில் சுமார் 50க்கும் மேற்பட்ட போலீசாரும் 3 போலீசு வாகனங்களும் குவிக்கப்பட்டன. லெனின் சிலை அகற்றப்பட்டதைக் கண்டித்தும், பாசிச பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். கும்பலைக் கண்டித்தும் தோழர்கள் முழக்கம் எழுப்பினர். இதில் பேசிய தோழர் வெங்கடேசன், திரிபுராவில் கிடைத்த வெற்றியில் ஆணவம் தலைக்கேறி தோழர் லெனினின் சிலையை இடித்துள்ளனர். அதே திமிரில்தான் தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைப்போம் என கூறியிருக்கிறார் எச்.ராஜா. இது பெரியார் பிறந்த மண். இங்கு பார்ப்பனியத்திற்கு சவக்குழிதான் மிஞ்சும் எனப் பேசினார்.

சிறுவர்கள், பெண்கள் என பலரும் கலந்து கொண்ட இப்போராட்டத்தில் கோல்வால்கரின் படம் எரிக்கப் பட்ட போது, பாஜகவின் அடிமைப் போலீசு, அவசர அவசரமாக தண்ணீரை தோழர்கள் மீதும், கோல்வால்கர் படத்தின் மீதும் ஊற்றியது. கோல்வால்கர் படம் தீயிடப்பட்டு, பின்னர் கிழித்தெறியப்பட்டது. உடனடியாக அங்கிருந்து தோழர்களை கைது செய்து இழுத்துச் சென்றது போலீசு.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

 

காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! புதிய கலாச்சாரம் மார்ச் வெளியீடு

0

காவிரி நடுவர் மன்றம், கடந்த 2007-ம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில் காவிரி நீரில் தமிழகத்தின் பங்காக 192 டி.எம்.சி நீரை வழங்குமாறு உத்தரவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்த வழக்கு நிலுவையிலிருந்த காலத்தில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பையோ, உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவுகளையோ கர்நாடக அரசு ஒருமுறை கூட முழுமையாக அமல்படுத்தவில்லை. உச்சநீதிமன்றமும் கண்டுகொள்ளவில்லை.

தற்போது உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், நிலத்தடி நீரைக் காரணம் காட்டி, தமிழகத்துக்கான நீர்ப்பங்கீட்டு அளவை 177.25 டி.எம்.சி.-யாகக் குறைத்துள்ளது. இதன் மூலம் டெல்டா விவசாயிகளின் எதிர்காலத்தைக் கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இத்தீர்ப்பில், காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்று ரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டு வந்திருப்பதாகக் கூறி கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது உச்சநீதிமன்றம். மேலும் தமிழகத்திற்கான நீர் அளவைக் குறைக்க, நிலத்தடி நீரைக் காரணம் காட்டிய உச்சநீதிமன்றம், கர்நாடகத்தின் நிலத்தடி நீரை மட்டும் கணக்கில் கொள்ளவில்லை.

பதினோரு ஆண்டுகளாக நிலுவையில் கிடந்த இவ்வழக்கில் கர்நாடக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் சமயத்தில் கர்நாடகத்துக்குச் சாதகமாக இத்தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. இதனாலேயே காவிரி மேலாண்மை வாரியத்தை மட்டுமல்ல, ஒப்புக்கு சப்பாணியாக ஒரு அமைப்பைக் கூட உருவாக்க மோடி அரசு விரும்பாது. பா.ஜ.க. விற்கு போட்டியாக கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் மேலாண்மை வாரியம் அமைப்பதை எதிர்ப்போம் என அறிவித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பு வெறும் வெத்து வேட்டுதான் எனக் காட்டிவிட்டார்.

கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நீட் தேர்வு அமலாக்கம் அனைத்திலும் தமிழகத்திற்கு எதிராக தீர்ப்புகளை திணித்த உச்சநீதி மன்றத்திடம் நடுநிலைமையோ, நியாயமோ கிடையாது. இழந்துபோன உரிமைகளை மீட்கும் அவசரமான காலத்தில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது. காவிரி நீரில் தமிழகத்தின் உரிமையையும், நீரின்றி அழியும் விவசாயிகளின் வாழ்வையும் ஆவணப்படுத்துகிறது, இத்தொகுப்பு.

தோழமையுடன்
புதிய கலாச்சாரம்.

காவிரி : வஞ்சிக்கப்படும் தமிழகம் ! – புதிய கலாச்சாரம் மார்ச் 2018 மின்னூல் வடிவில் வாங்குவதற்கு Add to cart அழுத்துங்கள்


அச்சுநூலாகப் பெற

30.00Read more

மின்னூலாகப் பெற

30.00Read more

30.00Read more

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு (விவரம் கீழே தரப்பட்டுள்ளது) நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

அச்சு நூல் தேவைப்படுவோர் சாதாரணத் தபாலில் பெற ரூ 30-ம் (நூல் விலை ரூ 30, தபால் செலவு இலவசம்), பதிவுத் தபாலில் பெற ரூ 60-ம் (நூல் விலை ரூ 30, பதிவுத் தபால் கட்டணம் ரூ 30) எமது வங்கிக் கணக்கில் அனுப்பிவிட்டு தபால் முகவரியுடன் மின்னஞ்சல் அனுப்பவும். வங்கி கணக்கு விவரம் கீழே தரப்பட்டுள்ளது.

(இந்நூலின் கட்டுரைகள் அனைத்தும் வினவு தளத்தில் வெளியாகியிருக்கின்றன.)

நூலில் இடம் பெற்றுள்ள கட்டுரைகள் :

  • காவிரி : கர்நாடகத்தின் அடாவடி ! மைய அரசின் நழுவும் தீர்வு !!
  • தமிழகத்தின் நெற்களஞ்சியம் பிணக்காடாகிறது !
  • அரசு கெசட்டில் காவிரி தீர்ப்பு ! ஆவதென்ன ?
  • காவிரி ஓரம் குடிநீர் இல்லா துயரம் !
  • மேக்கேதாட்டு அணை : மீண்டும் அநீதி !
  • காவிரிப் பிரச்சினையை இனவாத அரசியல் தீர்க்குமா ?
  • காவியைக் கரைக்கும் காவிரி !
  • காவிரி பிரச்சினை : மோடி அரசே முதன்மை குற்றவாளி !
  • காவிரி : தத்துவஞானி சமஸ் சாப்பிடுவது சோறா கழிவா ?
  • என்னிக்கு வயக்காட்டுல விழுந்து கிடப்பனோ தெரியலை !
  • காவிரி டெல்டா விவசாயிகள் மரணம் : தீர்வு என்ன ? – நேரடி ரிப்போர்ட்
  • சில வருடங்களில் தஞ்சையில் விவசாயம் இருக்காது – கள ஆய்வு
  • தரணிக்கு சோறிடும் தஞ்சையைக் கடல் கொள்ளப் போகிறதா ?
  • காவிரி : முதுகில் குத்திய உச்சநீதிமன்றம் ! மீண்டும் தொடங்குவோம் டில்லிக்கட்டு !
  • காவிரி நீர் மீண்டும் வஞ்சிக்கப்பட்டது தமிழகம் – பத்திரிகை செய்தி

பக்கங்கள் : 80
விலை ரூ. 30.00

ஆண்டுச் சந்தா உள்நாடு: ரூ 400

ஆண்டுச் சந்தா வெளிநாடு: ரூ 1800

 

மாதந்தோறும் தவறாமல் புதிய கலாச்சாரம் நூல் உங்களுக்கு கிடைக்கும் பொருட்டு ஆண்டு சந்தாவை உடன் அனுப்பி ஆதரிக்குமாறு கோருகிறோம். சந்தா அனுப்புவோர் கன்னையன் ராமதாஸ் பெயருக்கு டிடி, MO, அனுப்பலாம். வங்கிக் கணக்கிற்கு நேரடியாகவும் அனுப்பலாம். விவரங்கள்,

vinavu@gmail.com

அடுத்த தலைமுறையினரான மாணவர்களுக்கு அரசியல் உணர்வூட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது.

மாணவர்களிடம் புதிய கலாச்சாரம் கொண்டு சேர்க்க உங்கள் ஆதரவு தேவை.

மாணவர்களுக்கு புதிய கலாச்சாரம்

Price range: ₹1,500.00 through ₹6,000.00

SKU: N/A

தோழர்கள், நண்பர்கள், இதர முற்போக்கு அமைப்புக்களில் இருப்போர் அனைவரும் புதிய கலாச்சாரம் நூல்களை வாங்கி தமது மற்றும் தமது நண்பர்களது திருமணங்களில் பரிசளிக்கலாம்.

திருமணப் பரிசாக புதிய கலாச்சாரத்தின் புத்தகங்களை வழங்குங்கள் !

_____________

முந்தைய புதிய கலாச்சாரத்தின் மின்னூல் வெளியீடுகள்


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more


அச்சுநூலாகப் பெற

20.00Read more

மின்னூலாகப் பெற

20.00Read more

 

தஞ்சை சிண்டிகேட் வங்கி மோசடி ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

0

“தஞ்சாவூர் சிண்டிகேட் வங்கி டெய்லி டெபாசிட் வசூல் முகவர் பெர்னாண்ட்ஸ் கோடிக்கணக்கில் மோசடி !
பொருப்பேற்க மறுத்து மோசடிக்குத் துணைபோகும் வங்கி நிர்வாகம்!”
என்ற முழக்கத்தை முன் வைத்து  மக்கள் அதிகாரம் சார்பில் 03.03.2018 சனிக்கிழமை மாலை ரயிலடியில் மக்கள் அதிகாரம் தஞ்சை ஒருங்கிணைப்பாளர் தோழர் தேவா தலைமையில்  நடைப்பெற்றது.

பாதிக்கப்பட்ட சிண்டிகேட் வங்கி  வாடிக்கையாளர்கள் திருவாசகம் கிருஷ்ணன், மேனகா, தனலட்சுமி மற்றும் வழக்கறிஞர் முத்துமாரியப்பன்  ஆகியோர் வாடிக்கையாளர்களின் அவலத்தையும் பாதிக்கப்பட்டவர்களின் கையறுநிலையையும் தங்களது உரையில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தினர். உணர்ச்சிபூர்வமாக பேசிய அம்சவள்ளி பேசி முடித்தவுடன் ஆர்ப்பாட்ட இடத்திலேயே மயங்கி விழுந்தார். தோழர்கள் அவருக்கு முதலுதவி செய்து உதவி செய்தனர். நிறைவுரையாற்றிய மக்கள் அதிகார  மாநில பொருளாளர் தோழர் காளியப்பன் வங்கி மோசடிகளை அம்பலப்படுத்தி உரையாற்றினர்.

  • வாடிக்கையாளர்களின் சேமிப்பை பாதுகாப்பது வங்கியின் அடிப்படை கடமை!
  • வாடிக்கையாளர்கள் கட்டிய பணத்தை வங்கி நிர்வாகமே வட்டியுடன் திருப்பி கொடு!
  • முகவர் பெர்னான்ட்ஸ், துணைபோன அதிகாரிகள் அலுவலர்களை கைது செய்து தண்டனை வழங்கு!
  • குற்றவாளிகளின்  சொத்துக்களை பறிமுதல் செய்!

ஆகிய கண்டன முழக்கங்களை  நூற்றுக்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களும் மக்கள் அதிகாரம் தோழர்களும் எழுப்பினர்.

(படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும்)

– வினவு செய்தியாளர்.

 

தமிழை பயிற்று மொழியாக்கு ! விழுப்புரம் புமாஇமு ஆர்ப்பாட்டம் !

0

“பள்ளி ,கல்லூரி, பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு!
அரசு வேலைவாய்ப்பில்  தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு!
அலுவல் மொழியாக ,நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!
தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு !”

விழுப்புரத்தில் புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி சார்பாக 27.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்  ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது. மாணவர்கள் ,இளைஞர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் புமாஇமு அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் மனோகரன் தலைமை தாங்கிப் பேசினார்.

அவர் பேசுகையில், இன்றைக்கு மாணவர்கள் ஆகிய  நாம் படித்துவிட்டோம், வேலைக்கு போய்விட்டோம் என்றால்  வாழ்க்கை இப்படியே சுமுகமாக இருக்குமா என சிறிது யோசிக்க வேண்டும். மோடி அரசு நீட் தேர்வை திணிப்பது, காவேரி தீர்ப்பு, விவசாயத்தை அழிக்க ஹட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் திட்டம், சாகர்மாலா திட்டம் போன்ற பேரழிவு திட்டத்தை திணிப்பது, கல்வி நிலையங்களில் சம்ஸ்கிருத திணிப்பு போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. கேரளா,மேற்குவங்கம் போன்ற மாநிலங்கள் தனது தாய்மொழியை பள்ளிகளில் கட்டாயமாக்கி இருக்கின்றன என்று முடித்தார்.

கானை வட்டார மக்கள் அதிகாரம் அமைப்பாளர், தோழர் இளவேந்தன் பேசுகையில், மக்கள் பிரச்னைக்கு நாம் போராடினால் அரசும் ,போலீசும் ஒடுக்குகிறது . அது மட்டும் இல்லாமல் ஜனநாயகப்பூர்வமாக ஒரு ஆர்பாட்டம் நடத்தக் கூட அனுமதி மறுக்கும் இந்த அரசை நாம் நம்பலாமா? ஓநாய் கிட்ட போய் ஆடு நீதி கேட்டால் என்ன நடக்கும்? ஆட்டையே சாகடிக்கும். ஆகவே இந்த அரசமைப்பு மக்களுக்கு எதிராக போய்விட்டது.இதற்கு தீர்வு மக்கள் தங்கள் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொள்வதுதான் என்று பேசி முடித்தார்.

விழுப்புரம் புமாஇமு-வின் அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் திலீபன் பேசுகையில், இந்த ஒட்டுமொத்த அரசும் மக்களை நாயினும் கீழாய் நடத்துகிறது. மாணவர்கள்,இளைஞர்கள் இதை எதிர்த்து நாம் ஒரு புரட்சிகர அமைப்பாக ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்று கூறினார்.

தோழர் இரவி கார்த்திக் பேசுகையில்,  ஒரு மொழிதான் ஒரு இனத்தின் அடையாளம். ஒரு மொழியின் மூலமாகதான் நாம் தகவலையும், நம்மை சுற்றி நடக்கும் வரலாற்று நிகழ்வுகளையும் பேச முடியும். அப்பொழுது அவர்கள் கலாச்சாரம், பண்பாடு மேம்படும். ஆனால் ஒரு மொழி அழிந்தால்  ஒரு இனம் அழியும், கலாச்சாரம் அழியும். அதை நோக்கிதான் பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து வேலை செய்து கொண்டு இருக்கிறது. சமீபத்திய உதாரணம் ஆண்டாள் பிரச்சினையை தமிழகத்தில் கிளப்பி இதன் மூலம் தனது செல்வாக்கை உயர்த்த முயற்சி எடுத்தது. இந்த அபாயத்தை உணர்த்து நாம் போராட வேண்டும் என்று முடித்தார்.

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் அம்பேத்கர் பேசுகையில், இந்த ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பலுடைய இந்த விரோதம் என்பது நீண்ட நாள் பகை, குறிப்பாக இந்தி எதிர்ப்பில் தமிழகத்திடம் அடிவாங்கிய இந்த ஆர்.எஸ்.எஸ்., நச்சுப் பாம்பை அன்றைக்கே நசுக்கி இருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கு விட்டதன்,விளைவாக அடிவாங்கிய பாம்பு மீண்டும் படமெடுத்தது வருகிறது. காவேரி தீர்ப்பில் மட்டும் தமிழகத்தை வஞ்சிக்கவில்லை, தமிழ் தாய் வாழ்த்துக்கு அவமரியாதை, சென்னை IIT- யில் நடந்த நிகழ்சிகளில் தமிழ் அவமதிப்பு, தமிழகத்தில் விவசாய நிலங்களை நாசமாக்கும் அழிவுத் திட்டம் திணிப்பு, என அனைத்திலும் வஞ்சித்து வருகிறது. ஆண்டாள் விவகாரத்தில் பாஜக நடத்திய போராட்டத்தில் பார்ப்பன கும்பலை தாண்டி யாரும் பங்கேற்க வில்லை. இருந்தாலும் அதைவைத்து இந்துமதவெறியை கிளப்பி இந்துகளை திரட்ட முயற்சி செய்தது. இதை நாம்   அனுமதிக்கலாமா ? இதை முறியடிக்க ஒரு புரட்சிகர அமைப்பாக திரளவேண்டும் என்று முடித்தார்.

இறுதியாக விழுப்புரம் பு.மா.இ.மு அமைப்பாளர் தோழர் ஞானவேல் பேசுகையில், அந்த காலத்தில் ஒரு நாட்டின் மீது இன்னொரு நாடு போர் தொடுக்கும் போது இரண்டு விதமாக மனிதர்களைப் பார்க்கலாம். ஒன்று தனது நாட்டைக் காக்கவும், தனது பண்பாடு கலாச்சாரத்தை  காக்கவும், வளங்களை காக்கவும் எதிரி நாட்டு படையோடு போரிடுவது, மற்றொன்று அவனிடம் அடிபணிந்து அவன் கொடுக்கும் பதவிக்கும் ,பொருளுக்கும் விலைபோவது. இன்றைக்கு தமிழகத்தின் மீது ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி கும்பல் ஒரு போரை தொடுத்து இருக்கிறது. இந்த போரில் நாம் வெற்றி பெறவில்லை என்றால்,நமது பண்பாடு,கலாச்சாரம்,மொழி,இயற்கை வளம் எல்லாம்  அழியும். நாம் என்ன செய்ய போகிறோம்?  எதிர்த்து போரிடப் போகிறோமா? அல்லது இணங்கிப் போகப் போகிறோம். மாணவர்கள் இளைஞர்கள் எதிர்த்துப் போராட வேண்டும். புரட்சிகர அமைப்புகளில் இணைந்து கொள்ள வேண்டும் என்று பேசினார். ஆர்ப்பாட்டத்தில் திரளான மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர்

 

தந்தி டி.வி – ஆர்.எஸ்.எஸ்-ன் தொந்தி டி.வி !

10

ண்டாள் விவகாரத்தை முதலில் கிளப்பியது எச்.ராஜா. பிறகு நித்தியானந்தாவின் பெண் சீடர்கள் சமூக ஊடகங்களில் வழங்கிய நாச்சியார் திருமொழி. இந்த வரிசையில் அடுத்து வருவது தந்தி டி.வி. நடத்திய புலனாய்வு.

வைரமுத்து மேற்கோள் காட்டியிருந்த ஆய்வாளர் நாராயணனைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ”ஆண்டாளைத் தேவதாசி என்று நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்களே, என்ன சூழலில் அவ்வாறு கூறியுள்ளீர்கள்?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.

”8, 9-ஆம் நூற்றாண்டு காலங்களில் தீவிர பக்தைகளாக இருந்த இத்தகைய பெண்கள் தேவதாசிகள் பிரிவைச் சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். தங்களைப் பெருமாளின் மனைவியாக ஒப்படைத்துக் கொண்டவர்கள். அதனால்தான் ஆண்டாள் தனது உண்மை வாழ்க்கையிலும் தேவதாசியாகத்தான் இருந்திருக்க வேண்டும் என்று நான் குறிப்பிட்டிருக்கிறேன்” என்று இதற்குப் பதிலளிக்கிறார் நாராயணன்.

அடுத்து, ”இலக்கியங்களிலோ, திருப்பாவையிலோ, கல்வெட்டுகளிலோ ஆண்டாளைத் தேவதாசி என்று கூறும் வரிகள் உள்ளனவா?” என்று கேட்கிறார் அசோகவர்ஷிணி.

”அந்தக் காலகட்டம் சார்ந்த கல்வெட்டுகளே குறைவு. பாசுரங்கள் போன்றவையெல்லாம் வாய்மொழியாக வழங்கப்பட்டவை. பின்னாளில்தான் அவை எழுதப்பட்டன. ஆய்வுகள் எனப்படுபவையெல்லாம் நவீன காலத்தைச் சேர்ந்தவை. எனவே, நாம் இவற்றை ஊகிக்கத்தான் முடியும்” என்று ஒரு ஆய்வாளருக்குரிய அடக்கத்துடன் பதிலளிக்கிறார் நாராயணன்.

உடனே ஆண்டாளைத் தேவதாசி என்று சொல்வதற்கு முதன்மை ஆதாரம், Primary evidence ஏதும் இல்லை என்று நாராயணனே ஒப்புக்கொண்டுவிட்டது போல தந்தி டி.வி. பிரகடனம் செய்கிறது. நித்தியானந்தா வீடியோக்களைக் காட்டிலும் ஆபாசமானது இந்த அசோக வர்ஷிணி வீடியோதான்.

இதில் தந்தி டி.வி. இன்னொரு தில்லுமுல்லும் செய்திருக்கிறது. ஜனவரி 14-ஆம் தேதியன்று வெளியிட்ட பேராசிரியர் நாராயணன் பேட்டியில் (https://www.youtube.com/watch?v =ASUAnINMjw)
சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வாக்கியங்கள் உள்ளன. ஜனவரி 17-ஆம் தேதியன்று, ”ஆண்டாள் சர்ச்சை – ஆவணங்கள் சொல்வதென்ன?” என்று தலைப்பிட்டு மீண்டும் தந்தி டி.வி. அதனை ஒளிபரப்பியிருக்கிறது.(https://www.youtube. com/watch?v=H0vLUrn5eAA) சாய்வெழுத்தில் காட்டப்பட்டுள்ள வரிகள்தான் நாராயணன் கூறும் விளக்கத்தில் முக்கியமானவை. அவற்றை அவரது தொலைபேசிப் பேச்சிலிருந்து வெட்டியிருக்கிறது தந்தி டி.வி.

  * * *

இனி தந்தி டி.வி. எழுப்பிய பிரைமரி எவிடென்ஸ் விவகாரத்துக்கு வருவோம். பொதுவாக ஆய்வுக்குரிய காலத்தைச் சார்ந்த நூல், சுவடி, கல்வெட்டு போன்றவற்றை பிரமைரி சோர்ஸ் என்று கூறுவர்.

”ஆண்டாள் தேவதாசி என்ற முடிவுக்கு வருவதற்கு பிரைமரி எவிடென்ஸ் இருக்கிறதா?” என்று கேட்கிறார் அசோக வர்ஷிணி. ஆண்டாள் என்றொரு பெண் இருந்ததற்கோ, அவள் துளசிச் செடிக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டதற்கோ, அவள் அரங்கநாதனிடம் ஐக்கியமானதற்கோ  பிரைமரி சோர்ஸ் அல்லது கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? அல்லது வைணவர்களுக்குப் பெருமாள் சிபாரிசு செய்திருப்பது ஸ்டாண்டு வைத்த நாமம்தான் என்பதற்கு கல்வெட்டு ஆதாரம் இருக்கிறதா? இதையெல்லாம் ஜீயரிடம் தந்தி டி.வி. கேட்டதுண்டா?

எந்தக் காலத்திலும் கேட்க மாட்டார்கள். ஆண்டாள் கதை முதல் பசுமாட்டு மூத்திரத்தைக் குடிப்பது வரை அனைத்தும் நம்பிக்கை என்பார்கள். ”சரி, எதையோ குடித்து நாசமாய்ப் போ” என்று நாம் வேண்டுமானால் அவாளை விட்டுவிடலாம். ஆனால், அவாள் நம்மை விடுவதில்லை. ”நீ குடிக்காமல் இருப்பது எங்கள் மனதைப் புண்படுத்துகிறது” என்கிறார்கள்.


வேடிக்கையல்ல, நடப்பது அதுதான். ”நீ சூத்திரன் – தாசி மகன் என்பது எங்கள் நம்பிக்கை. நீ சாமி சிலையைத் தொட்டால் தீட்டுப்பட்டு, சாமியே செத்து விடும் என்பது எங்கள் நம்பிக்கை” என்றார்கள். இந்த நம்பிக்கையை உச்ச நீதிமன்றமும் அங்கீகரிக்கிறது. விளைவு – அர்ச்சக மாணவர்கள் தெருவில் நிற்கிறார்கள்.

”40 ஏக்கர் நடராசர் கோயிலும் அதன் சொத்துகளும் எங்களுடையதென்பது எம் நம்பிக்கை” என்றார்கள் தீட்சிதர்கள். அந்த நம்பிக்கையை ஏற்றுக்கொண்டு மக்கள் சொத்தான கோயிலை அரசிடமிருந்து பிடுங்கி தீட்சிதனுக்கே எழுதிக்கொடுத்து விட்டது உச்ச நீதிமன்றம். பாபர் மசூதி இருந்த இடத்தில்தான் ராமன் பிறந்தான் என்பது எங்கள் நம்பிக்கை என்றார்கள். மூன்றில் இரண்டு பங்கு மசூதியைக் கொடுக்கச் சொல்லி முஸ்லிம்களுக்கு உத்தரவிட்டது அலகாபாத் உயர்நீதிமன்றம்.

அதாவது அவாளுடைய நம்பிக்கையை அவாளுடன் வைத்துக் கொள்வதில்லை. அதை நம் மீதும் ஏவுகிறார்கள் என்பதுதான் பிரச்சினை. ஆண்டாளை அவர்கள் என்னவாக வேண்டுமானால் கருதிக்கொள்ளட்டும். அவர்களுடைய கருத்துக்கு நாம் அடங்க வேண்டும் என்பதுதான் அவர்கள் போடும் உத்தரவு.

நாச்சியார் திருமொழியின் வரிகளில் சொட்டுவது பக்திரசம் என்பது அவர்கள் நம்பிக்கை. அந்த வரிகளுக்கு தமிழ் அகராதியில் பொருள் தேடிச் சொல்ல முயன்றாலே, நீங்கள் ஹிந்து மத உணர்வைப் புண்படுத்திய குற்றத்துக்கு ஆளாவீர்கள்.

இதைத்தான் புதிய தலைமுறை டி.வி. பேட்டியில் எஸ்.வி. சேகர் செந்திலிடம் சொல்கிறார். ”இந்தப் பேனா தெய்வம் என்று சொன்னால், இது தெய்வம். இதை விமரிசிக்க உனக்கு அருகதை கிடையாது. இது பேனா, இதுக்குள்ள இங்க் இருக்கு என்ற வாதமே வேண்டாம்” என்கிறார் எஸ்.வி.சேகர்.

டி.கே. நாராயணண்

அதாவது, ஆண்டாள் பிராமணரின் பெண், கோமியம் புனிதம் என்பதெல்லாம் அவாள் நம்பிக்கைகள்.  ஒருவேளை, மாட்டு மூத்திரத்தில் என்ன இருக்கிறது என்பதை லேப் சர்டிபிகேட், கல்வெட்டு ஆதாரம் உள்ளிட்ட பிரைமரி எவிடென்ஸ்களுடன் அசோக வர்ஷிணியிடம் சமர்ப்பித்தாலும், நீங்கள் தண்டனையிலிருந்து தப்பிக்க முடியாது.

பாண்டே வருவார். ”நீங்க சொல்றா மாதிரி இது மாட்டு மூத்திரமாகவே இருந்தாலும், அதை நீங்க மனசில வச்சிக்கலாம் சார். இப்படி மேடையில பேசுவதன் மூலமா இந்துக்களின் மத உணர்வைப் புண்படுத்த உங்களுக்கு யார் உரிமை கொடுத்தாங்க? செக்சன் 153-அ பிரிவுல இது தண்டனைக்குரிய குற்றம்னு உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்பார்.

எனவே, அவாளுடைய நம்பிக்கையை நீங்கள் ஆய்வுக்கு உட்படுத்தும் பட்சத்தில், அவாளுக்கு திருப்தி ஏற்படும் விதத்தில் நீங்கள் எவிடென்ஸ் தரவேண்டும். அதே நேரத்தில உங்களுடைய எவிடென்ஸ் அவாளுடைய உணர்வைப் புண்படுத்தாமல் இருக்கும்படியும் பார்த்துக் கொள்ளவேண்டும்.

ஜீயர் அல்லது சின்ன பெரியவாள் போன்ற அறிஞர்களை ரிசர்ச் கைடாக வைத்துக் கொண்டால் தண்டனையிலிருந்து நாம் தப்பலாம். உண்மையிலிருந்து அவாள் தப்புவார்கள்.

   – தொரட்டி

* * *

பெட்டிச் செய்தி

“குலசேகர ஆழ்வார் மகள் தேவதாசியாம்!
பெரியாழ்வார் மகள் ஆண்டாள் தாயாராம்!!”

தந்தி டி.வி.யின் புலனாய்வுப் புலிகளின் காமெரா, வைரமுத்து மேற்கோள் காட்டிய எம்.ஜி.எஸ். நாராயணனின் கட்டுரையில் ஆண்டாளைப் பற்றிக் குறிப்பிடும் வரிகளை வட்டமிட்டுக் காட்டுகிறது. அந்த வட்டத்திற்குள் இருக்கும் மற்ற வரிகள் என்ன கூறுகின்றன என்பதை அவர்கள் கவனிக்கவில்லை போலும்!

”பக்தி இயக்கத்தின் குறிப்பிடத்தக்க நடவடிக்கை தேவதாசிகளை ஊக்குவித்ததாகும். கோயிலுக்கு மக்களின் செல்வாக்கைக் கூட்டுவதில் தேவதாசிகளின் பாடலும் அழகும் நடனமும் பெரும் பங்காற்றியிருக்கின்றன. சுந்தரமூர்த்தி நாயனாருக்கு ஒரு தேவதாசியுடன் தொடர்பு இருந்தது. திருக்கைலாயத்தின் வீதிகளில் ஊர்வலம் சென்றபோது தேவதாசிகள் சிவபெருமானுக்கு அளித்த வரவேற்பைத் தான் கண்டதாக சேரமான் பெருமாள் குறிப்பிடுகிறார். மேலும், ஆண்டாளும் ஸ்ரீரங்கம் கோயிலில் வாழ்ந்து மறைந்த ஒரு தேவதாசிதான். குலசேகர ஆழ்வார் தன் மகள் நிலாவைத் தேவதாசியாக ஸ்ரீரங்கம் கோயிலுக்கு அளித்தார் என்றொரு மரபும் உள்ளது. அவள் சேரகுல நாச்சியார் என்றழைக்கப்பட்டு, அவள் பெயரில் இக்கோயிலில் ஒரு சந்நிதியும் இருக்கிறது” என்று தந்தி டி.வி.யின் காமெரா காட்டுகின்ற நாராயணனின் கட்டுரை குறிப்பிடுகிறது.

பவுத்தத்தையும் சமணத்தையும் வீழ்த்துவதற்கு எப்பேர்ப்பட்ட அறிவாயுதங்களைப் பார்ப்பனியம் பயன்படுத்தியிருக்கிறது என்பது இதைப் படிக்கும்போது நமக்குத் தெரியவருகிறது. அது ஒருபுறமிருக்கட்டும்.

பெரியாழ்வார் வளர்த்த மகள் ஆண்டாளுக்காகப் பொங்கிய ஜீயர், எச்.ராஜா போன்றோரின் ஹிந்து உணர்வு, அடுத்த வரியிலேயே குலசேகராழ்வார் தனது சொந்த மகளைத் தேவதாசியாக அரங்கனுக்குக் கொடுத்ததாகக் கூறுகிறதே, அதற்காக ஏன் பொங்கவில்லை? குலசேகராழ்வார் தன் மகளை அரங்கனுக்கு கொடுத்தால், அவளைத் தேவதாசி என்று அழைக்கலாம். ஆனால், பெரியாழ்வார் தன் மகளைக் கொடுத்தால், அப்படிச் சொல்லக்கூடாதா? குலசேகராழ்வாரின் மகள் நாச்சியார் ஆக இருக்கும்போது, பெரியாழ்வாரின் மகள் மட்டும் தாயார் ஆகிவிடுவது எப்படி?

இதற்குப் பெயர் ஹிந்து உணர்வா, சாதி உணர்வா? ஆண்டாள் விவகாரத்தில் தலைவிரித்தாடுவது பார்ப்பன வெறிதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன பிரைமரி எவிடென்ஸ் வேண்டும்?

***

புதிய ஜனநாயகம் – பிப்ரவரி 2018 இதழ்

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

காவிரி தீர்ப்பு: இன்னொரு வகை போர்!

1

கை நாடுகளை அழிக்கத் தண்ணீரை மறிப்பது, போர்களில் கடைப்பிடிக்கப்படும் தந்திரோபாயம். அது போன்று தமிழகத்திற்குக் கிடைக்க வேண்டிய நீரைத் தட்டிப்பறித்துவிட்டது, உச்ச நீதிமன்றம்.

காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில், ஓராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் கொண்ட  தஞ்சை டெல்டா விவசாயத்தின் அழிவைத் துரிதப்படுத்தும் நோக்கில் தீர்ப்பளித்திருக்கிறது உச்ச நீதிமன்றம். காவிரி டெல்டா பகுதியைப் பெட்ரோலிய மண்டலமாக மாற்றத் துடிக்கும் மைய அரசின் திட்டத்தை எதிர்த்துப் போராடி வரும் தமிழகம், குறிப்பாக டெல்டா பகுதி விவசாயிகள் இந்தத் தீர்ப்பை வேறெப்படிக் கருத முடியும்?

ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, குறுவைச் சாகுபடிக்கு உடனடியாகத் தண்ணீர் திறந்துவிட கர்நாடக அரசிற்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது தமிழக அரசு. குறுவைச் சாகுபடிக்கு ஜூன் 12 அன்று மேட்டூரிலிருந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்பது தமிழகத்தில் நிலவிவரும் நடைமுறை மட்டுமல்ல, அறிவியல்பூர்வமான அணுகுமுறையும்கூட. ஆனால், உச்ச நீதிமன்ற நீதிபதிகளோ, இதற்கு இப்பொழுதென்ன அவசரம் எனக் கேட்டு, அந்த வழக்கை ஒத்தி வைத்தார்கள். டெல்டா விவசாயம் குறித்து உச்ச நீதிமன்றம் கொண்டிருக்கும் அக்கறையை மட்டுமல்ல, அவர்களின் அறிவையும் இந்த வழக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. இப்படிப்பட்ட நீதிமன்றத்திடமிருந்து காவிரி நதி நீர்ப் பங்கீட்டு வழக்கில் தமிழகத்திற்கு நியாயம் செய்யக்கூடிய தீர்ப்பு கிடைத்திருக்க ஒருக்காலும் வாய்ப்பு இல்லை.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமித்வராய், தீபக்மிஸ்ரா, கான்வில்கர்

காவிரி நடுவர் மன்றம் கர்நாடக அரசு தனது அணைகளிலிருந்து ஆண்டொன்றுக்கு 192 டி.எம்.சி. தண்ணீரைத் தமிழகத்திற்குத் தர வேண்டும் என அளித்த தீர்ப்பில், 14.75 டி.எம்.சி. நீரைப் பிடுங்கி கர்நாடகாவிற்குக் கொடுத்துவிட்டு, இது சமநிலையான தீர்ப்பு என நாக்கூசும் பொய்யைக் கூறியிருக்கிறார்கள் உச்ச நீதிமன்ற நீதிபதிகள். காவிரி டெல்டா பகுதியில் 20 டி.எம்.சி. அளவிற்கு நிலத்தடி நீர் இருக்கிறதென்றும், அதில் 10 டி.எம்.சி. நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியும் எனக் கூறி, இத்திருட்டை  நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.

”காவிரி கிடைக்காது; கடல் தண்ணிய வாங்கிக்க..”  என சுப்பிரமணிய சுவாமி  கொழுப்பெடுத்துப் பேசியதற்கும், ”காவிரிக்குப் பதிலாக நிலத்தடி நீரைப் பயன்படுத்துங்கள்” என உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிகாரத்தோடு உத்தரவிட்டிருப்பதற்கும் அதிக வேறுபாடில்லை. தமிழகத்தை வஞ்சிப்பதில் சு.சாமியைப் போலவே உச்ச நீதிமன்ற நீதிபதிகளும் சிந்திக்கிறார்கள்.

காவிரி டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் நிலத்தடி நீர்மட்டம் தரைமட்டத்திலிருந்து 21.5 மீட்டருக்குக் கீழும், கடலூர் மாவட்டத்தில் 25.5 மீட்டருக்கும் கீழும் சென்றுவிட்டது. இம்மட்டம் நாகை மாவட்டத்தில் 6.5 மீட்டருக்குக் கீழும், திருவாரூர் மாவட்டத்தில் 9.2 மீட்டருக்கும் கீழும் உள்ளது. தஞ்சை, கடலூர் மாவட்டங்களைவிட நாகை, திருவாரூர் மாவட்டங்களில் நிலத்தடி நீர் தரைமட்டத்திலிருந்து அதிக ஆழத்தில் இல்லையென்றாலும், இம்மாவட்டங்களில் கடல் நீர் உட்புகுந்து நிலத்தடி நீர் விவசாயத்திற்குப் பயன்படுத்தத் தகுதியற்ற நிலையை எட்டியிருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆழ்குழாய் மூலம் சாகுபடி நடந்துவந்த தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த திருவிடைமருதூர், திருப்பனந்தாள் பகுதிகளில் தற்பொழுது நிலத்தடி நீர் உவராகிவிட்டது. வெண்ணாற்றுப் பாசனப் பகுதியில் அமைந்துள்ள நன்னிலம், திருமருகல், திருவாரூர், திருத்துறைப்பூண்டி வட்டாரங்களிலும்; கல்லணைக்கு அருகேயுள்ள பூதலூர், மாரனேரி, விண்ணமங்கலம், கள்ளப்பெரம்பூர், சக்கரசாமந்தம் வட்டாரங்களிலும் கிடைக்கும் நிலத்தடி நீரைச் சாகுபடிக்குப் பயன்படுத்த முடியாது.

கல்லணை கால்வாய் பாசனப் பகுதிக்கு உட்பட்ட பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசமுத்திரம் உள்ளிட்ட வட்டாரங்களில் நிலத்தடி நீர் 120 மீட்டருக்குக் கீழாகச் சென்றுவிட்டது. இப்பகுதிகளில் ஒரு ஆழ்குழாய் கிணறைத் தோண்டுவதற்கு ஏறத்தாழ 8 இலட்சம் வரை செலவு செய்ய வேண்டுமென்பதால், குறு, சிறு விவசாயிகள் ஆழ்குழாய் கிணறு தோண்டுவதை நினைத்துக்கூடப் பார்ப்பதில்லை.

இதுதான் காவிரி டெல்டா மாவட்டங்களில் நிலவிவரும் எதார்த்த நிலை. டெல்டா மாவட்டங்களில் நிலத்தடி நீரை எடுத்துச் சாகுபடிக்குப் பயன்படுத்தக்கூடிய வாய்ப்பு இருக்குமானால், 2016-ஆம் ஆண்டு வறட்சியின்போது அம்மாவட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஏன் தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும்?  இந்த உண்மைகளை ஒரேயடியாக ஒதுக்கித்தள்ளிவிட்டு, சாகுபடிக்கு நிலத்தடி நீரை எடுத்துக்கொள்ளுங்கள் என உத்தரவிடும் நீதிபதிகளின் மண்டையில் இருப்பது மூளையா அல்லது களிமண்ணா?

தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் (இடமிருந்து) தஞ்சை செல்வராஜ், திருவாரூர் கோவிந்தராஜ்

சாகுபடிக்கு நிலத்தடி நீரைப் பயன்படுத்தக் கூறும் இத்தீர்ப்பு அறமும், அறிவும் அற்றது மட்டுமல்ல, ஒருபக்கச் சார்பான ஓரவஞ்சனை கொண்டதாகும். தமிழகத்திற்கு ஒதுக்கும் நீரைக் குறைக்க வேண்டும் எனக் கோரிய கர்நாடகா அரசுதான் தமிழகத்தின் டெல்டா பகுதியில் ஏராளமான நிலத்தடி நீர் இருப்பதாக வாதாடியது.  நடுவர் மன்றத்தால் ஒதுக்கித் தள்ளப்பட்ட கர்நாடகா அரசின் இந்த வாதத்தை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள், கர்நாடகா மாநிலத்தில் கிடைக்கும் நிலத்தடி நீர் இருப்பைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவேயில்லை.

கர்நாடக அரசு நிலத்தடி நீர் குறித்து 2016-ஆம் ஆண்டில் வெளியிட்ட அறிக்கையொன்றில், அம்மாநிலத்தில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் 66 சதவீதம் உயர்ந்திருக்கிறது; 97 சதவீத நிலத்தடி நீர்க் குடிப்பதற்கு உகந்தது எனக் கூறியிருக்கிறது. இதில் ஒரு சதவீதம்கூட எடுத்துப் பயன்படுத்துமாறு உத்தரவிடாத நீதிபதிகள், தமிழகத்திடமிருந்து 14.75 டி.எம்.சி. நீரைத் தட்டிப் பறித்து, இந்த ஓரவஞ்சகமான நடவடிக்கையை பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவை என்ற பெயரில் நியாயப்படுத்தியிருக்கிறார்கள்.

பெங்களூரு நகரின் குடிநீர்த் தேவைக்கு ஏற்கெனவே தினமும் 140 கோடி லிட்டர் நீர் காவிரியிலிருந்து எடுக்கப்படுகிறது. இப்படி எடுக்கப்படும் நீரில் 52 சதவீத நீர் தேவையற்ற விதத்தில் வீணடிக்கப்படுவதாக பெங்களூரு சமூகப் பொருளாதார ஆய்வுக் கழகம் கூறியிருக்கிறது.

இந்தக் குற்றத்தைச் செய்யும் கயவர்கள் யார்? பெங்களூருவைச் சுற்றி அமைந்துள்ள ஷாப்பிங் மால்கள், நீர்ப் பூங்காக்கள், கோல்ஃப் மைதானங்கள், குதிரைப் பந்தய மைதானங்கள், செயற்கை கடல்கள், ஆடம்பர ரிசார்ட்டுகள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள். இக்கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டும் பெங்களூரு குடிநீர்த் தேவையின் பெயரில் எடுக்கப்படும் நீரில் 50 சதவீதத்திற்கும் மேலாக, 72 கோடி லிட்டர் நீரைப் பெறுகிறார்கள்.

இந்த கார்ப்பரேட் கும்பல் அடைந்திருக்கும் வளர்ச்சியைத்தான் பெங்களூரு நகர உலகத்தர அந்தஸ்தாக நீதிபதிகள் காட்டுகிறார்கள். இவர்களின் நீர்த் தேவைக்காகத் தமிழக விவசாயிகளின் நீர்த் தேவையைப் பலியிட்டிருக்கிறார்கள்.

* * *

உச்ச நீதிமன்றத்தின் ஓரவஞ்சனை இதோடு மட்டும் நின்றுவிடவில்லை. காவிரி நீரைப் பகிர்ந்துகொள்வதில் கர்நாடகத்திற்கு வரலாற்றுரீதியாகவே அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது எனத் தீர்ப்பில் எழுதி, கன்னட இனவெறியர்களின் குரலை எதிரொலித்திருக்கிறது. கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரிப்பதற்கு விதிக்கப் பட்டிருந்த வரம்பை ரத்து செய்துவிட்டது. இத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய முடியாது என உத்தரவிட்டு தமிழகத்தின் மீது இரட்டைத் தாக்குதலை நடத்தியிருக்கிறது.

கர்நாடக இனவெறியர்களின் குரலில் உச்சநீதிமன்றம் பேசுகிறது

கர்நாடகத்தின் இழப்பு குறித்து மூக்கைச் சிந்தியிருக்கும் உச்ச நீதிமன்றம், 1974 தொடங்கி தமிழகத்திற்கு கர்நாடகம் இழைத்து வரும் அநீதி குறித்து வாய்திறக்கவில்லை. தமிழகத்தின் ஒப்புதல் இன்றி மூன்று அணைகளைச் சட்டவிரோதமாகக் கட்டி இயக்கிவருகிறது, கர்நாடகம். நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, அதன் இறுதித் தீர்ப்பு, உச்ச நீதிமன்ற உத்தரவுகள் இவை எதனையும் நடைமுறைப்படுத்தாமல், தமிழகத்தின் டெல்டா பகுதியை உபரி நீரை வெளியேற்றும் வடிகால் பகுதியாக மாற்றிவிட்டது. கர்நாடகம் இழைத்துவரும் இந்த அநீதிகளுக்கு உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பிலாவது முடிவு வரும் என எதிர்பார்த்திருந்த தமிழக மக்களின் முதுகில் குத்தியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.

கர்நாடகம் தனது பாசனப் பரப்பை அதிகரித்துக் கொள்வதற்கு விதிக்கப்பட்டிருந்த வரம்பை நீக்கியதன் மூலமும், கர்நாடகத்திற்கு 14.75 டி.எம்.சி. நீர் அதிகரித்துக் கொடுக்கப்பட்டிருப்பதாலும், அம்மாநிலத்தில் மேலும் 1 இலட்சம் ஏக்கர் நிலப்பரப்பு காவிரி பாசனப் பரப்பின் வரும் எனக் கூறப்படுகிறது. அதேபொழுதில் தமிழகத்தின் பங்கு குறைக்கப்பட்டிருப்பதன் காரணமாக ஏறத்தாழ 88,500 ஏக்கர் நிலப்பரப்பு தரிசாகும் அபாயம் எழுந்து நிற்கிறது.

சாகுபடி பரப்பு குறைவதோடு, காவிரியின் கடைமடை பகுதிகளில் கடல் நீர் உட்புகுவது மேலும் அதிகரித்து, சுற்றுப்புறச் சூழலுக்கும் கேடு ஏற்படும் என எச்சரிக்கிறார், நீரியல் நிபுணர் ஜனகராஜ்.

இந்த வஞ்சனைகளை மூடிமறைத்துத் தமிழகத்திற்கு ஏதோ நியாயம் வழங்கிவிட்டது போலக் காட்டுவதற்காகவே, காவிரி நீர்ப் பங்கீடு தொடர்பாக காலனிய ஆட்சிக் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட இரு ஒப்பந்தங்களும் செல்லத்தக்கவைதான், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் மைய அரசு ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் உதார்விட்டிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.

சொத்துக்குவிப்பு வழக்கில் முதன்மைக் குற்றவாளி ஜெயா இறந்துபோனதைச் சாக்காகக் கொண்டு அவரை வழக்கிலிருந்தே விலக்கிவைத்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஊழல் குறித்து தத்துவஞான உபதேசமொன்றைப் பொளந்து கட்டியிருந்தார், நீதிபதி அமித்வா ராய். அதே நீதிபதி காவிரி வழக்கை விசாரித்த அமர்விலும் இருந்ததால், காவிரி நதி எந்தவொரு மாநிலத்திற்கும் சொந்தமானதல்ல, அது தேசியச் சொத்து என்ற உபதேசம் தமிழகத்திற்கு இலவச இணைப்பாகக் கிடைத்திருக்கிறது. இலவசங்கள் என்பதே வாடிக்கையாளனை ஏமாற்றும் வியாபாரிகளின் தந்திரம்தானே.

* * *

இத்தீர்ப்பை நடைமுறைப்படுத்த ஆறு வாரங்களுக்குள் ஓர் அமைப்பை உருவாக்க வேண்டும் எனத் தீர்ப்பில் சொல்லப்பட்டிருப்பதற்கு, ஆறு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும், ஊடகங்களும் பொழிப்புரை எழுதுகின்றன. இந்தப் பொய்யுரையின் மூலம் வஞ்சனை நிறைந்த இத்தீர்ப்பைத் தமிழக மக்களும் விவசாயிகளும் ஏற்றுக் கொள்ளும் மனோநிலையை உருவாக்க முயலுகின்றன.

கடந்த ஆண்டில் இவ்வழக்கு விசாரணையின்போது காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்குமாறு மோடி அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டபோது, அதனை மறுத்து, ”அதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது, நாடாளுமன்றத்தில் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்” என வாதிட்டு, கர்நாடகாவிற்குச் சாதகமாக நடந்து கொண்டது பா.ஜ.க. கூட்டணி அரசு. மைய அரசின் இந்த அடாவடித் தனத்தைக் கேள்விக்குள்ளாக்காமல் உச்ச நீதிமன்றமும் சமரசமாகிப் போனது.

இதனையடுத்து காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதை நிரந்தரமாகவே முடமாக்கும் நோக்கில், ஒவ்வொரு நதி நீர்ப் பிரச்சினைக்கும் தனித்தனி மேலாண்மை வாரியங்களை அமைப்பதற்குப் பதிலாக, அனைத்திற்கும் பொதுவான பல்மாநில நதி நீர் மேலாண்மை வாரியம் அமைக்கும் சட்டவரைவை தயாரித்து, அதனை நிறைவேற்றிவிடத் திட்டம் போட்டது மோடி அரசு.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி ஒரு ஒப்புக்குச் சப்பாணி அமைப்பை உருவாக்கக்கூட மோடி அரசு விரும்பாது. மேலும், கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தீர்ப்பில் உள்ள உத்தரவை  முடக்குவதற்குத்தான் பா.ஜ.க. முயலுமேயொழிய, அதனை அமல்படுத்த ஒருபோதும் சம்மதிக்காது.  இன்னொருபுறமோ, கர்நாடக முதல்வர் சித்தராமையா, ”மேலாண்மை வாரியம் அமைப்பதை நாங்கள் எதிர்ப்போம்” என அறிக்கைவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவு வெறும் வெத்துவேட்டு எனக் காட்டிவிட்டார்.

உச்ச நீதிமன்ற உத்தரவின் மீது கர்நாடகத்தை ஆண்ட, ஆளும் முதல்வர்கள் சாணியடிப்பது இது முதன்முறையல்ல. நடுவர் மன்றம் தனது இடைக்கால உத்தரவை அறிவித்த காலந்தொட்டு இதுதான் நடந்துவருகிறது. நீதிமன்ற உத்தரவுகளை கால் தூசுக்கும் கீழாக மதித்து, அவற்றை மலக்காகிதம் போலத் துடைத்த போட்ட கர்நாடக மாநில முதல்வர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகூட உச்ச நீதிமன்றம் எடுத்ததில்லை. எனவே, இப்பொழுதும் தமது உத்தரவின் மீது வீசப்பட்டிருக்கும் சாணியைத் துடைத்துவிட்டு, மேலும் அவகாசம் கொடுப்பார்கள் அல்லது கண்டிப்பது போல நடிப்பார்கள். உச்ச நீதிமன்றம் நடத்திவரும் இந்த நாடகத்தைத் தமிழகம் இன்னும் எத்தனை காலத்துக்கு சகித்துப் போவது?

கெயில் குழாய் பதிப்பு, கூடங்குளம் அணு உலை, ஸ்டெர்லைட் ஆலை, நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் தொடுத்திருந்த வழக்குகளிலெல்லாம், தமிழத்துக்கு எதிராகத் தீர்ப்பெழுதி, அதனை அதிகாரத்தோடு தமிழகத்தின் மீது திணித்த உச்ச நீதிமன்றம், காவிரி பிரச்சினையில் தனது உத்தரவுகளை மதிக்காத கர்நாடக அரசிடம் மென்மையாக நடந்துகொண்டிருப்பதோடு, இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்திற்கு அபரிதமான சலுகைகளை வாரி வழங்கியிருக்கிறது. தமிழகத்தின் நலன் தொடர்பான வழக்குகள் என்றாலே, அதனைக் காழ்ப்புணர்ச்சியோடும், ஓரவஞ்சனையோடும்தான் உச்ச நீதிமன்றமும் அணுகி வருகிறதே தவிர, அதனின் தீர்ப்புகளில், உத்தரவுகளில் நேர்மையோ, நியாயமோ, நடுநிலையோ இருந்ததே கிடையாது.

தமிழக விவசாயிகள் வறட்சியால் நட்டமடைந்தால் அதற்குரிய இழப்பீடு வழங்க மாட்டார்கள், தமிழக மீனவர்கள் இலங்கையால் சுடப்படுவதை, தாக்கப்படுவதை, கைது செய்யப்படுவதை வேடிக்கை பார்ப்பார்கள், நீட் தேர்வின் மூலம் தமிழகத்திலுள்ள மருத்துவக் கல்லூரி இடங்களை அபகரித்துக் கொள்வார்கள், ஜி.எஸ்.டி. மூலம் தமிழகத்தின் உரிமையைத் தட்டிப் பறிப்பார்கள், மைய அரசின் நிறுவனங்களிலும், அலுவலகங்களிலும் தமிழகத்துக்குரிய பங்கைத் தர மறுப்பார்கள், இந்தியைத் திணித்துத் தமிழை இரண்டாம்பட்சமாக்கி இழிவு செய்வார்கள், தமிழகத்திலிருந்து மின்சாரம், நிலக்கரி, மீத்தேன் உள்ளிட்ட இயற்கை வளங்களைக் கொள்ளையடித்துச் செல்வார்கள். இவை அனைத்தையும் தமிழகம் சகித்துக்கொண்டு இருந்துவருவதைப் பார்த்துதான், துணிந்து காவிரித் தீர்ப்பில் தமிழகத்துக்கு மாபெரும் அநீதியை இழைத்திருக்கிறார்கள்.

காவிரி நீரில் தமிழகத்தின் பங்கைப் படிப்படியாகக் குறைப்பது, அதனையும்கூட  வழங்காமல் டெல்டாவைப் பாலைவனமாக்குவது, அதன் மூலம் டெல்டாவை பெட்ரோலிய மண்டலமாக மாற்றியமைப்பது என்ற திட்டத்தின் ஒருபகுதியாகவே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

தேசிய ஒருமைப்பாடு என்ற பெயரில் தமிழகத்தின் மீது திணிக்கப்படும் அநீதிகளை இனியும் பொறுத்துக் கொண்டிருக்கக் கூடாது. தமிழகத்தின் உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறிகொடுத்துக்கொண்டே, ஒருமைப்பாட்டுக்கு ஜே போட்டுக்கொண்டிருக்க முடியாது என்பதை இந்திய ஆளும் வர்க்கங்களுக்கு, அவர்களுக்குப் புரியும் மொழியில் சொல்ல வேண்டிய தருணத்தில் தமிழகம் நின்று கொண்டிருக்கிறது.

மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

கோவில்கள் மதவெறியர்களின் கூடாரமாகிவிடக் கூடாது !

3
மிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கீழ் 36,435 கோயில்கள் உள்ளன. இவற்றுக்கும் மடங்களுக்கும் சேர்த்து மொத்தம் 4,78,000 ஏக்கர் நிலமும் 22,000 கட்டிடங்களும் உள்ளன. இவற்றைக் கைப்பற்றிக் கொள்வதுதான் சங்க பரிவாரத்தின் நோக்கம்.
கேரளத்தில் திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலின் பரம்பரை அறங்காவலர்கள் திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர். 2011-இல் அங்கே கோயிலுக்கடியில் இருந்த சுரங்கங்களில் பல லட்சம் கோடி மதிப்பிலான தங்க நகைகளும் தங்கப்பாளங்களும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை மக்கள் சொத்து என்றும் அவற்றை அரசுடைமையாக்க வேண்டுமென்றும் கோரிக்கை எழுந்த போது அதனை பா.ஜ.க. கடுமையாக எதிர்த்தது. அவை மன்னரின் கட்டுப்பாட்டில்தான் இருக்க வேண்டும் என்று கூறியது.
ஆனால் உச்ச நீதிமன்றம் நியமித்த குழு, மன்னர் குடும்பம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை களவாடியிருப்பதைக் கண்டுபிடித்தது. மறைக்கவோ மறுக்கவோ முடியாமல் மன்னர் குடும்பம் சிக்கிக் கொண்ட காரணத்தினால், மன்னர் குடும்பத்தை நிர்வாகப்பொறுப்பிலிருந்து வெளியேற்றி விட்டு மாவட்ட நீதிபதி தலைமையில் ஒரு குழுவை நியமித்தது உச்ச நீதிமன்றம். இது சமீபத்திய எடுத்துக்காட்டு.
சாலையோரக் கோயில்களின் கடவுளர்கள் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை காசில் தான் கஞ்சி குடிக்கிறார்கள். பழைய கடவுளற்க்கு மட்டும் எதற்கு சொத்து?

தமிழக கோயில்களின் பல லட்சம் ஏக்கர் நிலமோ, திருவனந்தபுரம் கோயிலின் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்கமோ எப்படி வந்தன? மன்னராட்சிக் காலத்தில் விவசாயிகளை கசக்கிப் பிழிந்து வரியாக வசூலித்தும், வரி கட்டாதவர்களின் சொத்துகளை பறிமுதல் செய்தும் பெறப்பட்டவை அல்லது மக்களைச் சுரண்டிச் சேர்த்த பணத்திலிருந்து நிலவுடைமையாளர்களும், வணிகர்களும் காணிக்கையாக கொடுத்தவை அல்லது போர்களின் போது ஆக்கிரமிக்கப்பட்ட நாட்டு மக்களிடம் கொள்ளையிடப்பட்டவை.

கோயில்களின் சொத்துகள் மட்டுமல்ல, மசூதிகளின் சொத்துகளும் இத்தகையவைதான். தேவாலயங்களின் சொத்துகள் எனப்படுபவை காலனியாதிக்கவாதிகளால் அவர்களுக்கு வழங்கப்பட்டவை. அரசியல் சட்டத்தின் பிரிவு-26 தான் மத நிறுவனங்களின் இந்த சொத்துகளுக்குப் பாதுகாப்பு அளிக்கிறது.

கடவுளுக்கும் முற்றும் துறந்த சாமியார்களின் மடங்களுக்கும் எதற்கு சொத்து என்பதுதான் நாம் எழுப்ப வேண்டிய கேள்வி. சாலையோரக் கோயில்களின் கடவுளர்கள் பக்தர்கள் செலுத்தும் காணிக்கை காசில் தான் கஞ்சி குடிக்கிறார்கள். இது புதிதாக கட்டப்படும் தேவாலயங்களுக்கும் பொருந்தும். அவ்வாறிருக்க பழைய கடவுளற்க்கு மட்டும் எதற்கு சொத்து?

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை அரசு பராமரிக்கட்டும். மற்றப்படி கோயில்கள் மதநிறுவனங்களின் நிலங்களாகட்டும், மனைகளாகட்டும் அவை நிலமற்ற விவசாயிகளுக்கும் வீடற்ற மக்களுக்கும் வழங்கப்படவேண்டும் என்பதே நமது கோரிக்கையாக இருக்க வேண்டும். கோயில் சொத்துகளை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருப்பதால் அந்த வருவாய் சிறிதளவேனும் மக்களுக்குப் பயன்படுகிறது. அதுவும் கூடாது. எல்லா சொத்துக்களையும் எங்களிடம் ஒப்படை என்று கோருகிறது சங்க பரிவாரம்.

இது சொத்துக்களைக் கைப்பற்றும் பிரச்சினை மட்டுமல்ல. மக்களின் மனங்களைக் கைப்பற்றும் பிரச்சினை. கோயில்களைத் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டால் மக்களின் பக்தி உணர்வை எளிதில் மதவெறியாக மாற்றிவிட முடியும் என்பதுதான் இவர்களது திட்டம். விநாயகர் ஊர்வலத்தை ஆர்.எஸ்.எஸ். எப்படி மாற்றியிருக்கிறது என்பதை நாம் கண்ணெதிரே காண்கிறோம். எல்லாக் கோயில்களும் அப்படி மாற்றப்படும் சூழலை எண்ணிப்பாருங்கள். எனவேதான் இந்தப் பேரபாயத்தை அலட்சியப்படுத்தக்கூடாது என்று எச்சரிக்கிறோம்.
 மின்னூல்:

மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். உங்களுக்கான பணம் செலுத்தும் முறையை தெரிவு செய்து பணத்தை செலுத்துங்கள்.

இந்தியாவில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, நெட்பேங்கிங் மூலம் பணம் அனுப்பலாம். பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம். வெளிநாடுகளில் வங்கிக் கணக்கு வைத்திருப்போர் எமது வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பிவிட்டு, விவரத்தை உடன் அறியத்தரவும். உடன் உங்களுக்கு மின் நூல் அனுப்பி வைக்கப்படும்.

Mobile – (91) 97100 82506, (91) 99411 75876
Email – vinavu@gmail.com
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!

தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம்,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.ஃகே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024

தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் puthiyajananayagam@gmail.com

 

தமிழை ஆட்சி மொழியாக்கு ! திருச்சி – குடந்தை மாணவர் போராட்டம் !

0

தன்னுரிமையை நிலைநாட்ட தமிழகமே திரண்டெழு!  திருச்சியில் பு.மா.இ.மு தோழர்கள் ஆர்ப்பாட்டம்!

“பள்ளி ,கல்லூரிகளில்,பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!”

ஆகிய முழக்கங்களை முன்வைத்து 27.2.18 அன்று திருச்சியில் மாலை 5.00 மணி அளவில் தன்னுரிமைக்காக தமிழகமே திரண்டெழு, என்ற முழக்கத்துடன் மத்திய பேருந்து நிலையம்,விக்னேஷ் ஹோட்டல் அருகில் 80 க்கும் மேற்பட்ட மாணவர்களுடன் ஆர்ப்பாட்டம் துவங்கியது. இதில் பல்வேறு மாணவர் அமைப்பு தோழர்களும் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் துவக்கமாக தமிழரின் பாரம்பரிய கலையான சிலம்பாட்டத்துடன் துவங்கியது. ஆர்ப்பாட்டத்தில் கண்டன உரையாக முதலில் AISF தோழர் சூர்யா “இன்று ஆளும் மத்திய அரசினால் நீட் தேர்வு திணிக்கப்பட்டு தமிழ்வழியில் படிக்கும் மாணவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்து – இந்தி – இந்தியா என்ற கொள்கையை அமல்படுத்த தீவிரமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. வேலையில்லா திண்டாட்டத்துடன் இப்போ இருக்கிற வேலையும் உறுதியில்லாமல் இருக்கிறது. இந்த பி.ஜே.பி அரசு தொடர்ந்து கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு ஆதரவாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. பெரியார் பிறந்த மண் நம் தமிழ்நாடு ஆதலால் தொடர்ந்து நம் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்” என்று கூறினார்.

அடுத்ததாக ஆக்ஸ்ஃபோர்ட் கல்லூரி மாணவர் தர்மராஜ், “தமிழ்நாட்டில் மாணவர்களின் போராட்டம் தொடந்து நடந்து கொண்டே இருக்கிறது. இது மேலும் அதிகரிக்கும். மீனவ மக்களின் வாழ்வாதாரங்களை பறிக்கும் விதமாக சாகர் மாலா திட்டம் மத்திய அரசினால் திணிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. சென்னை ஐஐடி யில் அறிமுக நிகழ்ச்சியில் தமிழ்மொழி அவமானப்படுத்தப்பட்டது.

சங்கராச்சாரிகளும், காவி மையங்களும், இந்த BJP கும்பலும் தமிழ்மொழியையும், தமிழ் பண்பாட்டையும் அழிக்க கூடிய வேலையை செய்கிறார்கள். இதை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும்” என கூறினார்.

அடுத்ததாக முற்போக்கு மாணவர் கழகம் தோழர் மதன், “இன்று மொழி உரிமையை நிலைநிறுத்த வேண்டிய போராட்டம் நடைபெறுகிறது. சமீபத்தில் அரசானை 92 -ன் படி கல்வி உதவித் தொகையை இந்த அரசு நிறுத்தியுள்ளது. இதனால் 1 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தமிழகமே போராட்ட களமாக மாறியுள்ளது. பெரியார் மண்ணில் காவி கும்பலை அனுமதிக்க முடியாது. இது போன்ற புரட்சிகர மாணவர்கள் உள்ளவரை தொடந்து எல்லா பிரச்சனைக்கும் எதிராக போராடுவோம்” என்று கூறினார்.

போராசிரியர் ஸ்டீபன் என்பவர் கலந்து கொண்டு மொழி உரிமைக்கான நமது கோரிக்கைகளை நிறைவேற்ற நாம் எவ்வாறு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்பதே முக்கியம். சமூக நீதி, சமூக பொருளாதாரம், இந்தியாவின் அனைத்து இனங்களுக்கும் சமமாக கொடுக்கப்பட வேண்டும் என்கிற சட்டம் உள்ளது. ஆனால் இது இப்போது இல்லை. அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள் ஆகிய ஆகியோர்களிடம் நமது கோரிக்கைகளை அழுத்தத்தை கொடுக்க வேண்டும் என கூறினார்.

அடுத்ததாக பு.மா.இ.மு தோழர் சுரேந்தர் “தமிழ்நாட்டில் நவோதயா பள்ளி திணிப்பு, NEET அனிதா கொலை, GST -யால் சிறு தொழில் வீழ்ச்சி என அனைத்து திட்டங்களும் மக்களுக்கு எதிராக உள்ளது. எடப்பாடி தன்னுடைய சொத்துக்களை பாதுகாக்க மோடி காலை நக்கி பிழைக்கிறார். இங்கு மக்களுக்காக அரசா? அரசிற்காக மக்களா? அதிகாரிகள், அரசியல்வாதிகள் மக்களின் சேவர்கள், ஆனால் அப்படியா உள்ளது. ஆகையால் இந்த பிரச்சனைகளுக்கான தீர்வு இந்த அரசு கட்டமைப்பில் இல்லை. இந்த அரசு கட்டமைப்பு அழுகி நாறிக் கொண்டிருக்கிறது. மக்கள் போராட வீதியில் இறங்கினால் மட்டுமே பிரச்சனைகளை சரி செய்ய முடியும்” என்று கூறினார்.

கடைசியாக பு.மா.இ.மு தோழர் மணிமாறன் “இன்றைக்கு ஆளும் BJP அரசு 16 மாநிலங்களின் வெற்றியையும் அதன் அனுபவங்களையும திரட்டி, தமிழ்நாட்டை நோக்கி வந்துள்ளனர். இதை நாம் ஒன்று சோ்ந்து முறியடிக்க வேண்டும். அதிகார வர்க்கம், என்பது கண்ணுக்கு தெரிந்தவா்கள் மட்டுமல்ல. அரசு துறை அதிகாரிகள், பல்கலைகழகங்கள், NGO போன்று பல்வேறு வடிவங்களிலும் நம்முடன் கலந்துள்ளனர். பல்வேறு போராட்டங்கள் நடக்கின்றன. ஆனால் போராட்டத்திற்காக தீர்வு ஏன் கிடைக்கவில்ல என்று மாணவர்கள் கேட்கின்றனர். போராட்டத்தை ஒடுக்க முயற்சிக்கும் போலிஸ்காரர்கள், போராசிரியர்கள் போன்றவர்களையும், கண்ணுக்கு தெரியாத பகட்டான பொறுக்கிகளையும் அடையாளம் காண வேண்டும். அரசியல்வாதிள் பேருந்தில் உள்ள டயரே. அடிக்கடி காற்று அடிச்சு கொஞ்ச காலம் ஓடும். ஆனால் வண்டியில் உள்ள இன்ஜின்தான் முக்கியம். அதுதான் அரசு அதிகார வர்க்கம். அதைத்தான் நாம் மாற்ற வேண்டும். ரஜினி, கமல் போன்ற கோமாளிகள் எல்லாம் இங்கே தேவையில்லை. மேலும் நாம் போராடுவதில் உற்சாகம் குறையாமல், தொடர்ச்சியாக போராட வேண்டும், மெரினா போன்ற எழுச்சியை மீண்டும் நாம் நிகழ்த்திக் காட்டுவோம்” என்று கூறினார்.

மகஇக தோழர்கள் கல்வி சார்பாகவும் பார்ப்பனியத்திற்கு எதிராகவும் பாடல்கள் பாடியது மாணவர்களுக்கு மேலும் உற்சாகம் அளித்தது.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
திருச்சி.

*****

குடந்தை காந்தி பூங்கா அருகில் பு.மா.இ.மு சார்பாக தோழர் பகத் தலைமையில் 27, பிப்ரவரி காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை “பள்ளி ,கல்லூரிகளில்,பல்கலைக்கழகங்களில் தமிழை பயிற்றுமொழியாக்கு! அரசு வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவருக்கு முன்னுரிமை வழங்கு! அலுவல் மொழியாக, நீதிமன்ற மொழியாக தமிழை நிலைநாட்டு!” என்ற கோரிக்கையை முன்வைத்து   கண்டன ஆர்ப்பாட்டம்நடைபெற்றது….

தோழர்கள் தமிழ் அமுதன், எழிலன், தஞ்சை அமைப்பாளர் குஸ்த்தினா ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.

( படங்களைப் பெரிதாகப் பார்க்க அவற்றின் மீது அழுத்தவும் )

தகவல் :
புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி
குடந்தை, தொடர்புக்கு : 96297 01560.

 

ஜகத்குரு மரணமும், காலா திரைப்பட டீசர் ஒத்திவைப்பும்! கருத்துக் கணிப்பு

7

‘‘மரியாதைக்குரிய ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யர் மறைவின் காரணமாக காலா திரைப்படத்தின் டீசர் நாளை மார்ச் 2 (நாளை) வெளியிடப்படும். டீஸருக்காக ஆர்வமாக காத்திருந்த அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்புக் கோருகிறேன்”

– இது காலா படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் டிவிட்டரில் கூறிய அறிவிப்பு!

காமாட்சி அம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு

ரஜினி நடிக்கும் “காலா” படத்தை இயக்குநர் ரஞ்சித் இயக்குகிறார். “காலா” திரைப்படம் ஏப்ரல் 27 ஆம் தேதி திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில் காஞ்சியில் ஜெயேந்திரர் இறந்து போக இன்று வெளியாக இருந்த டீசர் ஒரு நாள் தள்ளி நாளை வெள்ளிக்கிழமை வெளியாகிறது. அதற்கு மன்னிப்பும் கேட்கிறார் தனுஷ்.

ரஜினி ஒரு சூப்பர் ஸ்டார் என்றாலும் அவரது கிச்சன் கேபினட் முழுவதும் துக்ளக் சோ, குருமூர்த்தி, லதா ரஜினி காந்த், ஒய்.ஜி.மகேந்திரன்,  பாஜக, மோடி, என பார்ப்பனிய மாந்தர்கள் நிறைந்திருக்கின்றனர். அவரது அரசியல் பிரவேசம் பாஜகவின் பி, சி, டி பிளான் என்றால் அவரது சொல்லும் செயலும், படமும், அதன் வெளியிடலும் கூட பார்ப்பனியத்தின் ஆசிர்வாதத்தோடு கூடவே நடைபெறும்.

காஞ்சியில் ஜெயேந்திரன் இறந்து போனதால், சங்கர மட பள்ளிகளுக்கு விடுமுறை, சங்கர மட கோவில்களின் சடங்குகள் ரத்து, சங்கர மட தெருவில் கடைகள் விடுமுறை போன்றவற்றை புரிந்து கொள்ள முடிகிறது. இவையெல்லாம் கம்பெனியின் தயவில் நடப்பவை. இதைத்தாண்டி காலா படம், ரஜினி ரசிகர்கள் எல்லாம் சங்கர மடத்தின் எல்லையில் எப்படி வரும்? இவ்வளவிற்கும் ஜெயேந்திரனது மரணத்திற்காக காஞ்சிபுரத்தில் சுமார் 2000 பேர் திரண்டிருந்தால் அதிகம். அதில் பார்ப்பனரல்லாதோரின் சதவீதம் பத்தைத் தாண்டாது. எனினும் லோககுருவின் மரணத்திற்கு லோகமே சோகம் கொண்டிருப்பதைப் போன்று ரஜினி எண்ணுகிறார் போலும்.

ஆன்மிக ஜெகத்குருவும் சினிமா ஜெகத்குருவும்

ரஜினியின் பாபா படத்தின் ஆன்மீகத்திற்கு ரசிகர்கள் கொடுத்த அடி பலமாக இருக்கும் போது ஜெயேந்திரன் மரணமெல்லாம் எப்படி ஐயா கணக்கில் வருகிறது? எந்த ரஜினி ரசிகர் ஜெயேந்திரனை “மரியாதைக்குரிய ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்யர்” என்று விளிக்கிறார்?

ரஜினி படத்தின் டீசர் வெளியாகும் போது ரஜினி குடும்பமும், ரஜினியின் பார்ப்பனிய சுற்று வட்டமும் பரிதவித்திருக்கிறது என்றால் அந்த உண்மையை வெளிப்படையாக கூற வேண்டியதுதானே?

கொல்லப்பட்ட மரியாதைக்குரிய சங்கர்ராமனோ, இல்லை பாலியல் துன்புறுத்தலுக்குள்ளான எழுத்தாளர் மரியாதைக்குரிய அனுராதா ரமணனோ இவர்களெல்லாம் மரியாதைக்குரியவர்கள் இல்லையா? ஜெயேந்திரனது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என்று மோடியோ எஸ்.வி.சேகரோ கூறுவது போல நடிகர் தனுஷ் கூறியிருக்கிறார்.

காலா படத்தில் அம்பேத்கர் குறியீடு, தலித் மக்களின் வாழ்க்கை, போராட்டம், அரசியல் எல்லாம் இருப்பதாக ஏற்கனவேயும், இனியும் பேசும் சில ஃபேஸ்புக் புரட்சிப் போராளிகள் இனிமேலும் திருந்துவார்களா?

சென்ற மாதத்தில் மட்டும் எத்தனை கொலைகள், கொடூரங்கள் நடந்திருக்கின்றன? கேரளாவில் செஃல்பி வெறியர்களால் ஒரு பழங்குடி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார். விழுப்புரத்தில் ஒரு தலித் குடும்பம் சூறையாடப்பட்டிருக்கிறது. இன்னும் பல தற்கொலைகள், ஒரு தலைக் காதல் கொலைகள்… இவையெல்லாம் அசைக்காத உள்ளத்தை ஜெயேந்திரனது சாவு உலுக்கியிருக்கிறது என்றால் அந்த உள்ளத்தை வியந்தோதும் அற்பத்தனத்தை எப்படிக் கண்டிப்பது?

ரஜினியின் மகள் ஐ.நா சபையில் கோமாளி ஆட்டம் ஆடும் வாய்ப்பு பெறுவதையோ, ரஜினியின் கட்சி பாஜகவின் ஆசிர்வாதத்தோடு ரிலீஸ் செய்யும் காலத்தையோ, காலா படத்தின் டீசர் ஜெயேந்திரனது சாவிற்காக ஒத்தி வைக்கப்படுவதையோ,  காலா படமே ஏப்ரலில் வெளியாவதையோ வேறு வேறு விசயங்கள் என்று எண்ணமுடியுமா?

இன்றைய கருத்துக் கணிப்பு கேள்வி:

ஜெயேந்திரன் மறைவை ஒட்டி காலா திரைப்பட டீசர் ஒத்திவைக்கப்பட்டது எதைக் காட்டுகிறது?
(மூன்று பதில்களைத்  தெரிவு செய்யலாம்)

  • ரஜினியின் பார்ப்பனிய பாசம்
  • சங்கராச்சாரியார் மறைவை மதிக்கும் நாகரீகம்
  • ரசிகர்களை இந்துத்துவா பக்கம் திருப்பும் முயற்சி
  • ரஞ்சித் பேசும் தலித் அரசியல் பாஜக-விற்கு பயன்படும் அவலம்
  • இந்துக்களின் அபிமானத்தை கவரும் நடவடிக்கை
  • இதற்கு எந்த முக்கியத்துவமும் இல்லை